1925-Preface-ocr

Collection: Kolathur Mani – Kudi Arasu Collection

கும அ௱௬ 1925 வாரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ தொகுதி 1 பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌ சென்னை - 600041 5 விளக்கம்‌ நூலின்‌ பெயர்‌. பொருள்‌. மொழி பதிப்பாளர்‌. பதிப்பு உரிமை தாள்‌ வகை: நூல்‌ அளவு எழுத்து அளவு பக்கங்கள்‌. அட்டை வடிவமைப்பு கணினியாக்கம்‌. விலை வெளியீடு குடி அரசு 1925 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ தமிழ்‌ கொளத்தூர்‌ தாசெ.மணி இரண்டாம்‌ பதிப்பு, 2008 பதிப்பாளருக்கு நேச்சுரல்‌ ஷேட்‌ 1/ 8 டெம்மி புள்ளி 488 ட்ராட்ஸ்கி மருது, செம்பட்டி இராசா அகரன்‌ ஊடகம்‌, திண்டுக்கல்‌ உர. 200 / - பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌. 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌ சென்னை - 600 041 2.குடி அரசு1926 டு B வி க 1925 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கப்பட்டு 1949 நவம்பர்‌ முடிய வெளிவந்த குடி அரசு' வார ஏடு தமிழக வரலாற்றுப்‌ போக்‌ கையும்‌ அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப்‌ போக்கை யும்‌ சமூகப்புரட்சிப்‌ பார்வையில்‌ புரிந்து கொள்ளவும்‌; பெரி யாரின்‌ பொதுவாழ்வில்‌ நிகழ்ந்த இயங்கியல்‌ மாற்றங்களையும்‌, கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப்‌ போக்குகளையும்‌ வெளிப்‌ படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்‌. பெரியார்‌ காங்கிரசில்‌ பணியாற்றிய கால கட்டம்‌ நெடு கிலும்‌ தொய்வின்றி வலியுறுத்தி வந்த வகுப்புரிமை கோரிக்கை கள்‌: சூழ்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்ததன்‌ உச்சமாய்‌ 1925 நவம்பர்‌ 21, 22 நாள்களில்‌ காஞ்சிபுரத்தில்‌ நடைபெற்ற மாநில மாநாட்டில்‌ கட்சி விதிகளுக்கு இணங்க உரிய எண்ணிக்கை உறுப்பினர்களுக் கும்‌ மேலதிகமாய்‌ ஒப்புதல்‌ பெற்று முன்‌ வைத்த வகுப்புரிமைத்‌ தீர்மானம்‌ விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல்‌ புறக்கணிக்கப்பட்டதால்‌ தன்‌ நண்பர்களுடன்‌ வெளியேறி சுயமரியாதை இயக்கம்‌ கண்டார்‌. சுயமரியாதை இயக்கம்‌ சுடர்விட்டுப்‌ பரவி காட்டாற்று வெள்ளம்போல்‌ சமுதாயக்‌ கசடுகளை அடித்துச்‌ சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர்‌ இறுதி நாட்களில்‌ சென்னையில்‌ நடைபெற்ற மாநாட்டில்‌ நீதிக்கட்சி என்னும்‌ தென்‌ இந்திய நலஉரிமைச்‌ சங்கத்தின்‌ தலைவராக இந்தி எதிர்ப்புக்காய்‌ சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார்‌ தேர்ந்தெடுக்கப்‌ பட்டார்‌. முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம்‌, பகுத்தறிவுப்‌ பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமை யான காலகட்டம்‌ 1925 முதல்‌ 1938 வரையிலான காலமாகும்‌. 3.குடி அரசு1925. இந்தக்‌ கால இடைவெளியில்‌ குடி அரசு' ஏட்டில்‌ வெளி வந்துள்ள பெரியாரின்‌ எழுத்துகளையும்‌ பேச்சுகளையும்‌ தொகுத்து வெளியிட வேண்டுமென பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ விரும்பியது. 2001 ஜுன்‌ மாதத்தில்‌ புதிய அமைப்பாகத்‌ தோன்றிய *தந்தை பெரியார்‌ திராவிடர்கழகம்‌' (தற்போது “பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌”) 2003 ஆம்‌ ஆண்டு நவம்பரில்‌ குடி அரசு 1925” என்ற முதல்‌ தொகுதியை வெளியிட்டது. 2005 ஆம்‌ ஆண்டின்‌ இரு நிகழ்வுகளில்‌ 1926 ஆண்டின்‌ தொகுப்புகளை இரண்டு தொகுதி களாக வெளியிட்டது. 2006 ஆம்‌ ஆண்டில்‌ பெரியாரின்‌ நினைவு நாளாம்‌ டிசம்பர்‌ 24 இல்‌ 1927 ஆம்‌ ஆண்டின்‌ இரண்டு தொகுப்புகளை வெளியிட எல்லா முன்னேற்பாடுகளும்‌ முடிந்த நிலையில்தான்‌ சரங்கத்தில்‌ திராவிடர்‌ கழகத்தால்‌ நிறுவப்பட்ட பெரியாரின்‌ சிலையை இந்து மத வெறியர்கள்‌ சிதைத்த சம்பவம்‌ நிகழ்ந்தது. அதைத்‌ தொடர்ந்து பெரியார்‌ திராவிடர்‌ கழகத்தினர்‌ நிகழ்த்திய எதிர்வினைகளுக்காக 30 க்கும்‌ மேற்பட்ட தோழர்கள்‌ தளைப்படுத்தப்பட்டதும்‌ குறிப்பாக, ஏழு தோழர்கள்‌ மீது விசாரணை இன்றி ஓராண்டு சிறைவைக்க அதிகாரமளிக்கும்‌ தேசியப்‌ பாதுகாப்புச்‌ சட்டப்‌ பிரிவுகளின்‌ கீழ்‌ சிறைப்படுத்தப்பட்டதுமான நிகழ்வுகள்‌ வெளியீட்டு முயற்சியைத்‌ தள்ளிப்போடச்‌ செய்து விட்டன. ஒருவாறு வழக்குகளை வென்று தோழர்கள்‌ விடுதலையான பின்னர்‌ 1938 ஆம்‌ அண்டு வரையிலான குடி அரசு' தொகுப்பு களை ஒரே முறையில்‌ வெளியிட்டுவிடலாமே என்ற சிந்தனை பல்வேறு தரப்புகளிலிருந்து கிளம்பி, இறுதியில்‌ அவ்வாறே வெளியிட்டுவிடலாம்‌ என்று தீர்மானித்தோம்‌. 1983, 1984 ஆண்டுகளில்‌ தொகுத்து எழுதியவற்றை படி எடுத்து வைத்திருந்த பெரியார்‌ மையத்தின்‌ முன்னணி உறுப்பினர்‌ களான தஞ்சை வழக்குரைஞர்‌ பாண்டியன்‌, திருச்சி சமுத்திர ராசன்‌, இலால்குடி நாகராசன்‌ ஆகியோர்‌ கழகத்தின்‌ மீது நம்பிக்கை வைத்து தங்களிடமிருந்த தொகுப்புகளை கையளித்த மையே இத்தொகுப்புப்‌ பணியின்‌ தொடக்கமாயிற்று. இம்‌ முயற்சி கள்‌ தொடர்ந்த போது, இடையில்‌ தான்‌ திரட்டி வைத்திருந்த குடி அரசு இதழ்களின்‌ தொகுப்புகளையும்‌ கூடுதல்‌ தரவுகளாய்ப்‌ 4.குடி அரசு1925 பயன்படுத்தி இந்தத்‌ தொகுப்புப்‌ பணியை மேலும்‌ சிறப்பாக வெளிக்கொணர துணை நிற்பதாக வாக்களித்து இணைந்‌ தார்‌ தஞ்சை தோழர்‌ இரத்தினகிரி. நாமும்‌ ஆர்வமிக்க பல பெரியா ரியல்‌ பற்றாளர்களும்‌ இப்பணிக்காக மூன்றரை இலட்சம்‌ ரூபாயை தோழர்‌ இரத்தினகிரி அவர்களிடம்‌ தந்தோம்‌. அதன்‌ பின்னர்‌ அவர்‌, தான்‌ திரட்டிய குடி அரசு இதழ்களைப்‌ பயன்படுத்‌ துவதற்காகவும்‌ தனது கடந்த கால உழைப்பு, செலவினங்களுக் காகவும்‌ அய்ந்து இலட்ச ரூபாய்‌ கேட்டதற்கு நாமும்‌ இணங்கி னோம்‌. பின்னர்‌ கேட்புத்‌ தொகை பல மடங்குகள்‌ உயர்ந்தது. அதன்‌ பொருந்தாமையையும்‌ இயலாமையையும்‌ எடுத்துக்‌ கூறினோம்‌. நாங்கள்‌ அளித்த தொகையின்‌ ஒரு பகுதியைக்‌ கொண்டு ஓளி அச்சு செய்திருந்த 1931, 1933 - 1938 அகிய ஏழு ஆண்டுகளுக்கான குறுந்தகடுகளை எங்களிடம்‌ கொடுக்காமல்‌ இழுத்தடித்தபடியே இருந்தார்‌. 2008 ஜுலை இறுதிவரை இந்த இழுத்தடிப்பு தொடர்ந்தது. இனி அவரிடமிருந்து குறுந்தகடுகள்‌ கிடைக்கவே கிடைக்காது என்பதைப்‌ புரிந்துகொண்ட நிலையில்தான்‌ ஏற்கனவே ஈடுபட்டு நிறுத்தி வைத்திருந்த குடி அரசு இதழ்களை திரட்டும்‌ பணியில்‌ தொகுப்புக்குழு முழுவீச்சில்‌ இறங்கியது. இந்த முயற்சிக்கு உதவிட முன்வந்த நல்ல உள்ளங்களை நன்றியுடன்‌ நினைவு கூர்கிறோம்‌. முதலில்‌, திராவிடர்‌ இயக்க மூத்த எழுத்தாளர்‌ ஏ.எஸ்‌.வேணு அவர்களின்‌ நூல்களை பொறுப்புடன்‌ பராமரித்துவரும்‌ காஞ்சிபுரம்‌ திரு. கே.பி.திருஞான சம்பந்தம்‌ அவர்களை அணுகி 1936, 1938 ஆகஸ்ட்‌ - டிசம்பர்‌ முடிய உள்ள குடி அரசு மற்றும்‌ பகுத்தறிவு இதழ்களைப்‌ பெற்றோம்‌. அதைத்‌ தொடர்ந்து மதுரை யாதவர்‌ கல்லூரியின்‌ தமிழ்த்துறையில்‌ பாதுகாத்து வைத்திருந்த 1936 இன்‌ பிற்பாதி, 7937 முழுதும்‌, 1938 முதல்‌ ஏழு மாத கால குடி அரசு இதழ்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்‌ நாடகத்‌ துறைத்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ மு.இராமசாமி அவர்களின்‌ வழி காட்டுதலில்‌ யாதவர்‌ கல்லூரி தமிழ்த்துறையில்‌ பணியாற்றும்‌ பேராசிரியர்‌ மோகன்‌ அவர்களின்‌ கனிவு மிகுந்த ஒத்துழைப்பால்‌ படி எடுத்துப்‌ பெற்றோம்‌. 5.குடி அரசு1925 புகழ்பெற்ற பட்டிமன்ற உரையாளர்‌ மதுரை பேராசிரியர்‌ சாலமன்‌ பாப்பையா அவர்கள்‌ தான்‌ போற்றிப்‌ பாதுகாத்து வைத்திருந்த 7928, 19:37, 1932, 1933 ஆகிய ஆண்டுகளுக்கான குடி அரசு இதழ்களைக்‌ கொடுத்து அருளினார்‌. அதன்பின்‌ “நாடார்‌: குல மித்திரன்‌” எனும்‌ சுயமரியாதை இயக்க ஆதரவு ஏட்டினை நடத்தி வந்த மதுரை சூ.அ.முத்து நாடார்‌ அவர்கள்‌ திரட்டி வைத்திருந்த 1934, 1935, 1939, 1940 ஆண்டுகளுக்கான குடி அரசு இதழ்களை அவரது மகன்‌ திரு. முத்துமுருகன்‌ அவர்களின்‌ மகள்‌ மு. அல்லிராணி, மருமகன்‌ சக்தி வடிவேல்‌ ஆகியோர்‌ கொடுத்து உதவினர்‌. அதோடு நாடார்குல மித்திரன்‌ ஏடு வெளியான பத்து ஆண்டுகளுக்கான இதழ்களை குறுந்தகடுகளாக்கியும்‌ அளித்தார்‌. அது மட்டுமின்றி கிடைத்தற்கரிய அறுபதுக்கும்‌ அதிகமான பழைய சுயமரியாதை இயக்க வெளியீடுகளை தானே படி எடுத்‌ தும்‌ கொடுத்தார்‌. கழகத்தின்‌ கோவை வடக்கு மாவட்டத்‌ தலைவராக நெடுங்‌ காலம்‌ பணியாற்றியவரும்‌ ஓய்வு பெற்ற நலகருமான தோழர்‌ மேட்டுப்பாளையம்‌ இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ 1927, 1929, 1930 ஆகிய மூன்றாண்டுகளுக்கான குடி அரசு இதழ்களைத்‌ தந்தார்‌. முழுவீச்சில்‌ தொகுப்புப்‌ பணிகளும்‌, அச்சுப்பணிகளும்‌, முன்‌ வெளியீட்டுத்‌ திட்டப்பணிகளும்‌ நடந்து வந்த நிலையில்‌ திராவிடர்‌ கழகத்‌ தலைவர்‌ டாக்டர்‌ கி.வீரமணி அவர்கள்‌ பெரியா நின்‌ அனைத்து நூல்களும்‌ தங்களது அறிவுசார்‌ சொத்து எனவும்‌, யாரும்‌ வெளியிடலாகாது எனவும்‌ அறிக்கை வெளியிட்டார்‌. இவ்வறிக்கைக்குப்‌ பின்னரே கழகத்தின்‌ வெளியீட்டு முயற்சிகளை அறிந்த ஆத்தூர்‌ திரு.மவுலானா சாகிப்ஜி அவர்‌ களும்‌ சென்னை திரு.ஞாலன்‌ சுப்பிரமணியம்‌ அவர்களும்‌ அவர்க ளாகவே தொடர்புகொண்டு தங்களிடமிருந்த குடி அரசு இதழ்‌ களையும்‌ சில தொடக்ககால சுயமரியாதை இயக்க நூற்‌ தொகுப்பு களையும்‌ மனமுவந்து அனுப்பிவைத்தார்கள்‌. நாகை சிறுதும்பூர்‌ தென்னவன்‌ அவர்களின்‌ புதல்வரும்‌, தஞ்சை தமிழ்ப்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியருமான வெற்றிச்‌ செல்வன்‌ தனது தந்தையாரின்‌ நூல்‌ சேமிப்புகளிவிருந்து நமக்கு அனுப்ப குடி அரசு இதழ்களைத்‌ தேடி எடுத்த போது அவை 6.குடி அரசு1925 சிதைந்தும்‌ நொறுங்கியுமே கிடந்தன. பெரியார்‌ இயக்கத்தின்‌ வரலாற்றுப்‌ பதிவான குடி அரசை உண்மையான பல பெரியார்‌ தொண்டர்கள்‌ காலம்‌ காலமாக பாதுகாப்பதில்‌ காட்டிய உறுதி யும்‌ ஆர்வமும்‌ எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. என்றென்றும்‌ பயன்படும்‌ நிரந்தரப்‌ பதிவான இவைகள்‌ அச்சேற்றப்படாமல்‌ இவ்‌ அவலத்துக்கு உள்ளாகி விட்டனவே என்ற உணர்வு இந்தப்‌ பணிகளைச்‌ செய்து முடிப்பதற்கு எங்களை மேலும்‌ உந்தித்‌ தள்ளியது. ஒரு கட்டுரையை முழுமையாகப்‌ பெற மூன்று நான்கு இதழ்களோடு ஓப்பிட்டே இறுதியாக்க வேண்டியிருந்தது. இதழ்கள்‌ கிழிந்தும்‌ சில இடங்களில்‌ சிதைந்தும்‌ எழுத்துகள்‌ மறைந்துமே இருந்தன. எண்பது ஆண்டுகள்‌ கடந்த நிலையில்‌ வேறு எப்படித்தான்‌ அவை இருக்க முடியும்‌? விடுபட்ட பல கண்ணிகளை முமுமையாக்குவதில்‌ தொடக்க முயற்சியிலிருந்து உதவிக்கரம்‌ நீட்டியவை ரோஜா முத்தையா ஆய்வு நூலகமும்‌ மறைமலை அடிகள்‌ நூலகமுமே ஆகும்‌. தங்கள்‌ பெயரை வெளிப்படுத்த விரும்பாத ( திராவிடர்‌ கழகத்‌ தொடர்புடன்‌ இருப்பதால்‌ ) சில பேருள்ளங்கள்‌ புரட்சி, குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளின்‌ படிகளைத்‌ தந்து உதவியதும்‌ நன்றியுடன்‌ சுட்டிக்காட்டப்பட வேண்டும்‌. இவற்றையெல்லாம்‌ தேடிப்போய்‌ படி எடுத்து வந்து உதவிய தோழர்கள்‌ சென்னை தபசி.குமரன்‌, மதுரை முருகேசன்‌, செம்பட்டி இராசா, வின்சென்ட்‌, நக்கீரன்‌ செய்தியாளர்‌ சிவ சுப்பிரமணியன்‌, தஞ்சை பசு.கவுதமன்‌ ஆகியோரின்‌ பங்களிப்பு அளப்பரியது. தஞ்சை நாவலர்‌ நா.மு.வேங்கடசாமி நாட்டார்‌ திருவருள்‌. கல்லூரி நிர்வாக அறங்காவலர்‌ பேராசிரியர்‌ பி.விருத்தாசலனார்‌, முதல்வர்‌ முனைவர்‌ கு.திருமாறன்‌, தஞ்சை பெ.மருதவாணன்‌, குப்பு.வீரமணி, முனைவர்க.நெடுஞ்செழியன்‌, முனைவர்‌ இரா. சக்குபாய்‌, முனைவர்‌ கு.மா.இராமாத்தாள்‌, கோவை திரு. நடராசன்‌, பொள்ளாச்சி மா.உமாபதி, புலவர்‌.வீர. பிராட்லா, பொறினர்‌ முத்துமணிவண்ணன்‌, முனைவர்‌ வி.பாரி, முனைவர்‌ வி.துமிழ்ச்செல்வன்‌, பொறிஞர்‌ வி.விடுதலைவேந்தன்‌ ஆகியோர்‌ குடி அரசு தொகுதிகள்‌ வெளிவர வேண்டும்‌ என்ற பெரும்‌ 7.குடி அரசு1925 வேட்கையோடு இப்பணிகளில்‌ காட்டிய ஆர்வமும்‌ கொடுத்த ஒத்துழைப்பும்‌ தொகுப்புக்‌ குழுவுக்கு பெரும்‌ ஊக்கமாய்‌ அமைந்தது. தஞ்சை நாட்டார்‌ திருவருள்‌ கல்லூரியில்‌ இப்‌ பணி யில்‌ ஈடுபட்ட திருவாளர்கள்‌ வெவரதராசன்‌, நாஅருண்குமார்‌, முனைவர்‌ மு.இளமுருகன்‌, முனைவர்‌ வி.தமிழகன்‌, முனைவர்‌ நா.பெரியசாமி, கோபி ஆனந்த. கவுதமன்‌, மயிலாடுதுறை இர. இரசீத்கான்‌ போன்றோரும்‌ நாட்டார்‌ கல்லூரி மாணவர்களும்‌ ஆற்றிய அரும்பணிகள்‌ நன்றிக்கு உரியன. தஞ்சை தோழர்‌ இரத்தினகிரி உருவாக்கிய இடர்ப்பாடு களால்‌ தஞ்சையிலிருந்து விடுவித்துக்கொண்டு மீண்டும்‌ மேட்டூரி விருந்து பணிகளைத்‌ தொடர வேண்டியதாயிற்று. மேட்டூர்‌ அணை தாய்த்தமிழ்ப்‌ பள்ளியில்‌ முதற்கட்ட மெய்ப்பு பார்க்கும்‌ பணிகள்‌ 2008 மே மாதத்தில்‌ தொடங்கின. சுமார்‌ ஒருமாத காலம்‌ இப்பணி தொடர்ந்தது. கழகத்‌ தலைவர்‌ தோழர்‌ கொளத்தூர்‌ மணி தொகுப்புக்‌ குழுவுக்குத்‌ தலைமை ஏற்று முழுவீச்சில்‌ செயல்பட்டார்‌. பிழை திருத்தல்‌, ஒப்பிட்டு சரிபார்த்தல்‌ என்று மே மாதம்‌ அவர்‌ தொடங்கிய பணி இதழ்‌ தயாரித்து முடியும்‌ காலம்‌ வரை தொடர்ந்தது. ஓளி அச்சு செய்யும்‌ பணியில்‌ தோழர்கள்‌ ச.சம்பத்‌ குமார்‌, நந்தகுமார்‌, ஆரோக்கியசாமி, ஜோசப்‌, பார்த்‌ தீபன்‌ ஆகியோர்‌ கடுமையாக உழைத்தனர்‌. மெய்ப்புப்‌ பார்த்தல்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளில்‌ கழகத்‌ தோழர்கள்‌ மே.கா.கிட்டு, இரா.ஃமுத்துக்குமார்‌, இலக்கம்பட்டி அ.குமார்‌, மே.கா.காந்தி, சா. ஐஸ்டின்ராசு, கொளத்தூர்‌ ஆசிரியர்‌ செ.செல்வேந்திரன்‌, பெ.அசைத்தம்பி, பொறியாளர்‌ சி. கோவிந்தராசு, மாணவத்‌ தோழர்கள்‌ பா.அறிவுச்செல்வன்‌, மா.பிரபாகரன்‌ ஆகியோர்‌ முழுநேரமும்‌ தொடர்ந்து பணியாற்றினர்‌. இடையில்‌ மெய்ப்புப்‌ பணியில்‌ உதவிட புலவர்‌ செந்தலை ந. கவுதமன்‌, சூலூர்‌ கே.தேவ ராக, கோபி நேதா. ஆசைத்தம்பி ஆகியோர்‌ சிலநாள்கள்‌ மேட்டூர்‌ பள்ளியிலேயே தங்கி வசதிக்குறைவுகளையும்‌ பொருட்படுத்தாது மனநிறைவோடு பங்களிப்பை வழங்கினர்‌. தொகுப்புப்பணியின்‌ ஒருங்கிணைப்பாளராக தோழர்‌ படுமிழ்க்குரிசில்‌ செலுத்திய உழைப்பும்‌ சிந்தனையும்‌ அளப்பரிய தாகும்‌. கண்டிப்பு நிறைந்த ஆசிரியராக அவர்‌ வழி நடத்தினார்‌. கடமையாற்றிய கழகத்தினர்‌ ஏதேனும்‌ ஒருநாள்‌ விடுப்போ 8.குடி அரசு1926 அல்லது சில மணி நேர தாமத வருகைக்கோ பள்ளி மாணவர்‌ களைப்போல்‌ தயங்கித்‌ தயங்கி அவரிடம்‌ அனுமதி கேட்பதும்‌ அவரோ கோரிக்கையில்‌ பாதியை அதுவும்‌ தயக்கத்துடன்‌ அனு மதித்ததை யெல்லாம்‌ இப்போது நினைத்தால்கட நகைப்பை ஏற்படுத்தக்‌ கூடியவை. மேட்டூர்‌ தாய்த்தமிழ்ப்‌ பள்ளியில்‌ விடு முறை காலம்‌ முழுதும்‌ தொடர்ந்த இப்பணிகள்‌ பள்ளி திறப்‌ பிற்குப்‌ பிறகு கொளத்தூர்‌ பெரியார்‌ படிப்பகத்திற்கு இடமாற்றம்‌ செய்யப்பட்டன. ஒளி அச்சுப்‌ பணிகளை மீண்டும்‌ புதிதாக மேற்கொள்ள வேண்டி இருந்ததால்‌ அந்தப்‌ பணிகள்‌ சேலம்‌, கோவை நகர்‌ களிலும்‌ நடந்தன. 1931, 1933 ஆண்டுகளுக்கான ஒளி அச்சுப்‌ பணிகளை சேலத்தில்‌ தோழர்கள்‌ அடல்‌ வரைகலை சரவணன்‌, இரவி, கண்ணன்‌ ஆகியோர்‌ செய்து முடித்தனர்‌. கொளத்தூருக்‌ கும்‌ சேலத்துக்கும்‌ இடையே நடந்த இப்பணிகளின்‌ இணைப்பாள ராக அங்கிருந்து இங்கும்‌ இங்கிருந்து அங்குமாக படிகளை வாங்கித்‌ தந்து இரண்டாம்‌ திருத்தம்‌, மூன்றாம்‌ திருத்தம்‌ என்று பணி முடியும்வரை சலிப்பின்றி செயல்பட்டவர்‌ சேலம்‌ நகர கழகத்தின்‌ செயலாளர்‌ தோழர்‌ இரா.டேவிட்‌ ஆவார்‌. 1934, 1935, 1936, 1937, 7938 ஆண்டுகளுக்கான ஒளி அச்சுப்‌ பணிகளை கோவை *அய்ரீஸ்‌ கிராபிக்ஸ்‌” நிறுவன உரிமையாளர்‌ தோழர்‌ இராசாராம்‌- சீதா இணையர்‌ மேற்கொண்டனர்‌. தோழர்‌ இராசாராம்‌ பெரியாரியலாளர்‌, பெரியார்‌ மையத்தில்‌ செயல்பட்‌ டவர்‌. கோவை விடியல்‌ பதிப்பக உரிமையாளர்‌ தோழர்‌ சிவா இந்தப்‌ பணிக்காக தமது அலுவலகத்தையே தந்து உதவினார்‌. தோழர்கள்‌ கொளத்தூர்‌ மணி, ப.தமிழ்க்குரிசில்‌, இராமுத்துக்‌ குமார்‌, கோவை சட்டக்‌ கல்லூரி கழக மாணவத்‌ தோழர்கள்‌ பன்னீர்செல்வம்‌, சேகர்‌ ஆகியோர்‌ இரவும்‌ பகலுமாக மெய்ப்புப்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. அப்போது தோழர்களுக்கான உணவை தங்கள்‌ இல்லத்தில்‌ தயாரித்துக்கொண்டு வந்து தோழர்‌ களுக்கு வழங்கிய விடியல்‌ விஜயா அவர்களின்‌ துணைவர்‌ தோழர்‌ தண்டபாணியை மறக்கமுடியாது. இணையர்களின்‌ ஆதரவும்‌ அன்பும்‌ பணிச்‌ சுமைகளால்‌ எழுந்த சோர்வுகளைக்‌ களைந்து உற்சாகத்தை தந்தபோது அதிர்ச்சியான ஒரு செய்தி வந்து சேர்ந்தது. முதல்‌ நாள்‌ இரவு 12 மணிவரை எங்களுடன்‌ இருந்து 9.குடி & 1925 உணவு பரிமாறி இல்லம்‌ திரும்பிய தோழர்‌ தண்டபாணி விடியற்காலை மாரடைப்பால்‌ முடிவெய்திய அதிர்ச்சி செய்தி எங்களைக்‌ கலங்கச்செய்து விட்டது. முதல்‌ நாள்‌ எங்களிடம்‌ அவர்பெற்ற விடை நிரந்தர விடையாகு மென்று நாங்கள்‌ நினைத்துப்பார்க்கவே இல்லை. கொளத்தூர்‌ பெரியார்‌ படிப்பகத்தில்தான்‌ கணினியாக்கம்‌ மற்றும்‌ தொகுப்புப்‌ பணிகள்‌ முழுமையாக நடந்தன. கீழ்த்தளத்‌ திலும்‌ முதல்‌ தளத்திலும்‌ பணிகள்‌ எப்போதும்‌ சுறுகறுப்பாக நடந்துகொண்டே இருக்கும்‌. காலை பத்து மணிக்குத்‌ தொடங்கும்‌ பணிகள்‌ மறுநாள்‌ அதிகாலை 2 மணி வரை நீடிக்கும்‌. அதையும்‌ தாண்டி 4 மணி வரை நீடித்த நாட்களும்‌ உண்டு. சுமார்‌ மூன்று மாத காலம்‌ பணிகள்‌ தொய்வின்றித்‌ தொடர்ந்தன. தோழர்கள்‌ கொளத்தூர்‌ மணி, ப.தமிழ்க்குரிசில்‌, இரா.முத்துக்குமார்‌, மே.கா.கிட்டு, கொளத்தூர்‌ தா.செ.பழனிச்சாமி, சா.ஐஸ்டின்ராஜ்‌, மே.கா.காந்தி, ஆசிரியர்‌ செ.செல்வேந்திரன்‌, காவலாண்டியூர்‌ ஈ. கனிகாச்செல்வன்‌, மேச்சேரி ஆசிரியர்‌ ரமேசு, இளம்பிள்ளை கோகுலக்‌ கண்ணன்‌, காவலாண்டியூர்‌ கண்ணன்‌, த.விசுவநாதன்‌ ஆகியோர்‌ முழுமையாகப்‌ பணியாற்றினர்‌. தோழர்‌ சூலூர்‌ வீரமணி, தோழியர்கள்‌ சீமா, கலைச்செல்வி, மாதவி ஆகியோரும்‌ அவ்வப்‌ போது வந்து பணியாற்றிச்‌ சென்றனர்‌. பள்ளி, கல்லூரி மாணவர்‌ கள்‌ பலரும்‌ ஆர்வத்துடன்‌ உதவிட முன்வந்தனர்‌. தஞ்சை தோழர்‌ பகு.கவுதமன்‌ தொகுப்புப்‌ பணிக்கு பல்வேறு: வழிகளில்‌ உதவிய தோடு அன்றாடம்‌ தொலை பேசியில்‌ தொடர்பு கொண்டு செய லூக்கியாய்‌ கடமையாற்றினார்‌. கணினியாக்கப்‌ பணிகளை அதுவரை திருச்சியில்‌ தனது இல்லத்திலிருந்தே செய்து வந்த தோழர்‌ தாமரைக்கண்ணன்‌ நிரந்தரவாசம்‌ புரிய கொளத்தூர்‌ வந்து சேர்ந்தார்‌. மின்சாரம்‌ இல்‌ லாத வேளையில்‌ பணிகள்‌ தடைபடக்‌ கூடாது என்பதற்காக மின்னாக்கி ( ஜெனரேட்டர்‌) எப்போதும்‌ தயார்‌ நிலையில்‌ இருந்‌ தது. இதற்கான பொறுப்பை ஓவியர்‌ மூர்த்தி, கராத்தே குமார்‌ இரு வரும்‌ ஏற்றனர்‌. இறுதிக்‌ கட்டப்பணி நெருங்கிய போது கழகத்‌ தோழர்களே தங்களது சொந்தக்‌ கணினிகளைக்‌ கொண்டு வந்த னர்‌. நான்கு கணினிகளில்‌ இரவும்‌ பகலும்‌ வேலைகள்‌ நடந்தன. கணினியாக்கத்தில்‌ தோழர்‌ தாமரைக்கண்ணனுக்கு உதவியாக 10.குடி அரசு1925 சென்னை தபசி. குமரன்‌, திருப்பூர்‌ இராவணன்‌, மேட்டூர்‌ வானவில்‌ சம்பத்‌, கொளத்தூர்‌ சூர்யா அச்சக உரிமையாளர்‌ சுப்பு, காவ லாண்டியூர்‌ சசி, கபிலன்‌ ஸ்டுடியோ விஜயகுமார்‌ ஆகியோர்‌ செயல்பட்டனர்‌. படிப்பகத்தில்‌ இருபது தோழர்கள்‌ எப்போதும்‌ முழு நேரமும்‌ பணியில்‌ இருப்பார்கள்‌. இவர்கள்‌ அனைவருக்கும்‌ உணவகங்கள்‌ வழியாக உணவு ஏற்பாடு செய்வது கூடுதல்‌ நிதிச்சமையுமாகுமே என்று கவலையோடு சிந்தித்த தோழர்கள்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒரு கழகக்‌ குடும்பம்‌ உணவு வழங்குவதென முடிவு செய்தனர்‌. கழகத்‌ தோழர்கள்‌ மாவட்டச்செயலாளர்‌ டைகர்‌ பாலன்‌, ப.சூரியக்குமார்‌, அருள்சுந்தரம்‌, பெரியசாமி, நகரச்‌ செயலாளர்‌ பெ௫ளஞ்செழியன்‌, காவலாண்டியூர்‌ ஈசுவரன்‌, ஆகியோர்‌ இந்த ஏற்பாடுகளுக்குப்‌ பொறுப்பேற்றனர்‌. கழகக்‌ குடும்பத்தினரும்‌, ஆதரவாளர்களும்‌ வகை வகையாக உணவு தயாரித்து, தலைவியும்‌, தலைவனும்‌, குழந்தைகளுமாய்‌ வந்து அன்புடன்‌ பரிமாறிய தோழமையும்‌ பாசமும்‌ பெரியார்‌ குடும்பங்‌. களின்‌ நல்லுறவையும்‌ பாசப்பிணைப்பையும்‌ உறுதியாக்கி நெகிழச்‌ செய்தன. தொலைதூரக்‌ கிராமங்களில்‌ இருந்து கழகக்‌ குடும்பத்தினர்‌ உணவு தயாரித்து பாத்திரங்களில்‌ நிரப்பி பேருந்து களிலும்‌ வாகனங்களிலும்‌ கொண்டுவந்து பரி மாறிய நாள்களின்‌ எண்ணிக்கை அதிகமாகும்‌. கழகத்‌ தோழர்‌ இராமமூர்த்தி தனது ஆயுள்காப்பிட்டு முகவர்‌ பணிகளுக்கிடையே நேரம்‌ தவறாது உரிய நேரத்தில்‌ உணவும்‌ தேநீரும்‌ வழங்‌ கினார்‌. தொடக்ககால செலவுகளுக்காக தேவைப்பட்ட பெருந்‌ தொகையை வழங்கி உதவிய மேட்டூர்‌ தொழிலதிபர்‌ சி. இரத்தின சாமி, தோழர்கள்‌ கொளத்தூர்‌ இராநல்லதம்பி, கும்பகோணம்‌ சிற்பி இராசன்‌, மேச்சேரி கோ. தமிழரசன்‌ ஆகியோரின்‌ பேருள்‌ ளத்துக்கு நெஞ்சார நன்றிகூறி மகிழ்கிறோம்‌. இத்திட்டத்திற்கு நிதிதிரட்டும்‌ வழியாக நாம்‌ முன்‌ வெளி யிட்டுத்‌ திட்டத்தை அறிவித்தபோது அதை ஆர்வத்துடன்‌ வர வேற்று முன்பணம்‌ அனுப்பி பதிவு செய்துகொண்ட அனைத்துத்‌ தோழர்களுக்கும்‌ வெளியீட்டுநிதியாக ஒரு இலட்சம்‌ ரூபாய்களை வழங்கிய தஞ்சை மாவட்டக்கழகம்‌, ஐம்பதினாயிரம்‌ ரூபாய்களை 11.6% அரசு1925 மேட்டூர்‌ ஆர்‌.எஸ்‌ கிளைக்கழகத்துக்கும்‌ நன்றி செலுத்தக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌. இதன்வழியாகக்‌ கிடைத்த நிதிதான்‌ இத்‌ தொகுப்புகள்‌ வெளிவருவதை சாத்தியமாக்கியது. முன்‌ பதிவிற்கான விளம்பரங்களை தோழமையுடன்‌ வெளியிட்ட தமிழின உணர்வுள்ள இதழ்களுக்கும்‌ இணையத்தளங்களுக்கும்‌ நெஞ்சார்ந்த நன்றிகளைத்‌ தெரிவிக்கிறோம்‌. எந்த சிறு தவறும்‌ வரலாற்றுப்‌ பிழையும்‌ நிகழ்ந்துவிடக்‌ கூடாது என்பதில்‌ முழுக்கவனம்‌ செலுத்தி இத்தொகுப்பின்‌ ஒவ்வொரு பக்கத்திலும்‌, ஒவ்வொரு வரியிலும்‌ கூர்மையான பார்‌ வையைக்‌ குவித்து பல மாதங்கள்‌ இரவு பகலாக உழைத்து தொகுப்‌ புக்கு உருக்கொடுத்த பெருமை தோழர்‌ ப.தமிழ்க்குரிசிலைச்‌ சாரும்‌. இந்த அரும்பணி வழியாக குடி அரசின்‌ முழுமையான வரலாற்றுப்‌ புமையாளராக அவர்‌ உயர்ந்து நிற்கிறார்‌. அதே போல்‌ பல மாதங்கள்‌ நானொன்றுக்குக்‌ குறைந்தது பதினைந்து மணி நேரம்‌ அமர்ந்து பணியாற்றி உடலுக்கும்‌ கண்‌: களுக்கும்‌ அயர்ச்சிதரும்‌ பணியை அயராது செய்து கணினிக்கு அருகில்‌ படுத்துறங்கி, உறக்கம்‌ கலைந்தவுடன்‌ மீண்டும்‌ பணி தொடங்கி இத்தொகுப்பு உருப்பெற முழு உழைப்பை நல்கிய தோழர்‌ தாமரைக்கண்ணனின்‌ பங்களிப்பு மகத்தானது. இத்தொகுப்புப்‌ பணிகள்‌ நடந்த காலம்‌ முழுவதும்‌ நிதி திரட்டல்‌ முதற்‌ கொண்டு அனைத்து நிலைகளிலும்‌ உரிய ஆலோ: சனைகளை வழங்கி, பணியாற்றிய தோழர்களை அவ்வப்போது நேரில்‌ சந்தித்து உற்சாகமூட்டி, தொகுதிகளுக்கு இறுதிவடிவம்‌ கொடுத்த கழகப்‌ பொதுச்செயலாளர்‌ விடுதலை.க. இராசேந்திரன்‌ அவர்களின்‌ பணி மிக முக்கியமானது. *குடி அரசு' தொகுப்பை கொண்டு வர வேண்டுமென்று கழகம்‌ முடிவு செய்த நாளில்‌ தொடங்கி தொகுப்பு வெளிவரும்‌ வரை இதையே முதன்மையான முதற்பணியாக்கிக்கொண்டு, தொகுப்புக்கான நிதி திரட்டல்‌, குடி அரசு ஏடுகளைத்‌ தேடி சேகரித்தல்‌, மெய்ப்புப்‌ பார்த்தல்‌, கணினியாக்கம்‌, அச்சாக்கம்‌, பணிகளை ஒருங்கிணைத்தல்‌ என ஒவ்வொரு கட்டத்திலும்‌ தன்னை ஈடுபடுத்திக்‌ கொண்டு மாதங்கள்‌ பலவாய்‌ நள்ளிரவுவரை 12.குடி அரசு1925 பங்காற்றியதோடு, பணிமுடித்த அதிகாலைப்‌ பொழுதிலும்‌ பங்காற்றிய தோழர்களை தனது வாகனத்தில்‌ கொண்டு போய்வீடு சேர்க்கும்‌ வாகன ஓட்டியாய்‌ செயல்பட்டு பெரியார்‌ திராவிடர்‌ கழகத்தின்‌ வரலாற்றில்‌ புகழ்‌ சேர்த்த கடமையைச்‌ செய்து முடித்த பெருமை தலைவர்‌ தோழர்‌ கொளத்தூர்‌ மணியையே சாரும்‌. எத்தனையோ தோழர்களின்‌ உழைப்பு, ஊக்கம்‌, ஆதரவு சக்தியோடு உருவாகி இருப்பதுதான்‌ இந்த குடி அரசு தொகுப்பு. இதில்‌ பங்களிப்பை வழங்கிய அத்தனை தோழர்களும்‌ சமுதாயக்‌ கடமை ஓன்றை ஆற்றிய மன நிறைவைப்‌ பெற்றுள்ளார்கள்‌ என்பதை உறுதியாகக்‌ கூறமுடியும்‌. இதில்‌ எவரும்‌ எவருக்கும்‌ நன்றி கூறும்‌ கடப்பாடுகள்‌ ஏதும்‌ இல்லை. இது கூட்டுழைப்பின்‌ விளைச்சல்‌. நன்றி பாராது தொண்டாற்றிய வரலாற்று நாயகனின்‌ சிந்தனைகளை மக்களிடம்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ என்ற ஏக்கத்தோடு அந்தப்‌ புரட்சியாளரின்‌ தொண்டால்‌ தலைநிமிர்ந்த தமிழர்கள்‌ நன்றியுடன்‌ மேற்கொண்ட ஒரு முயற்சி. இத்‌ தொகுப்பின்‌ நிறைகுறைகளைச்‌ சுட்டிக்‌ காட்டும்‌ பெரியாரியல்‌ சிந்தனையாளர்களின்‌ கருத்துகளைப்‌ பரிச?லிக்கவும்‌, மறுபதிப்புகளில்‌ சரியானவற்றை ஏற்று திருத்திக்‌ கொள்ளவும்‌ தயாராகவே இருக்கிறோம்‌. தமிழர்‌ சமுதாயத்தின்‌ முன்‌ இத்தொகுப்புகளை மிகுந்த பூரிப்புடன்‌ சமர்ப்பிக்கிறோம்‌. ஆனூர்‌. கோ. செகதீசன்‌ கோவை. கு. இராமகிருட்டிணன்‌ துணைத்‌ தலைவர்‌: பொதுச்‌ செயலாளர்‌ வழக்கறிஞர்‌ செ.துரைசாமி திருவாரூர்‌.கே.தங்கராசு தலைமைக்‌ குழு தலைமைக்‌ குழு பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 13.குடி அரசு1925 காவைரிசைத்‌ தாகுப்பு : காகத்தின்‌ தேவை வரலாறு என்பது ஆட்சியாளர்களின்‌ காலவரிசைப்‌ பட்டியல்‌ அல்ல; அதைவிட ஆழமானது. வரலாறு என்பது மனித வாழ்வு பற்றியது; மனித சமூகத்தின்‌ வாழ்வியக்கம்‌ பற்றியது: வேறு மொழியில்‌ சொல்ல வேண்டு மானால்‌, சமூக மாற்றங்களின்‌ தொகுப்பே வரலாறு. வரலாற்றுப்‌ பொருள்முதல்வாத நோக்கில்‌ சமுதாயமானது புராதனப்‌ பொதுவுடைமை, அடிமை உடைமை, நில பிரபுத்துவம்‌, முதலாளித்துவம்‌, சோஷலிசம்‌ என்ற படிநிலைகளில்‌ மாற்றம்‌ பெறுவதாக சொல்லப்படுவது உண்டு. ஆனால்‌, இந்தியச்‌ சமுதாயமானது இப்படிப்பட்ட படி நிலைகளை கடந்து வந்தது என்பதை வரலாற்றுச்‌ சான்றுகள்‌ அடிப்படையில்‌ நிர்ணயிக்க இயலாது என்று மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர்‌ டிடி.கோசாம்பி கூறுகிறார்‌. இதைத்தான்‌ காரல்‌ மார்க்சும்‌, “ இந்தியாவின்‌ கடந்த காலத்தில்‌ அரசியல்‌ அம்‌ சத்தில்‌ எவ்வளவு மாற்றங்கள்‌ நிகழ்ந்திருந்தாலும்‌ மிகத்‌ தொல்‌ பழங்காலம்‌ முதல்‌ 19 ஆம்‌ நூற்றாண்டின்‌ துவக்க காலம்‌ வரை அதன்‌ சமுதாய நிலை மாற்றமின்றி தேக்க நிலையில்‌ இருந்து வந்துள்ளது” என்று கூறினார்‌. (116 British Rule in India - Karl Marx ) இதையே பெரியார்‌, “ நமது நாட்டு அடிமைத்‌ தனம்‌ எத்தனை காலமாய்‌ இருந்து வருகிறது என்பதை நினைத்துப்‌ பாருங்கள்‌. தர்ம ராஜ்யம்‌, இராம ராஜ்யம்‌, சத்தியமூர்த்தி அரிச்சந்திர ராஜ்யம்‌ முதலிய அவதார ராஜ்யம்‌ முதல்‌, தெய்வீகத்‌ தன்மை பொருந்திய மூவேந்தர்‌ முதலிய சரித்திர ராஜ்யம்‌ வரை இந்திய மக்கள்‌ நிலையை சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையைக்‌ கண்டு பாருங்கள்‌” ( குடிஅரசு- 2091931) என்று குறிப்பிட்டார்‌. இந்தத்‌ தேக்கமான சமுதாய அமைப்பில்‌ தனி அம்சமாக சாதி அமைப்பு இருந்தது. 1901 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ கணக்கெடுப்பு அறிக்கை சென்னை மாகாணத்தில்‌ அன்று நிலவிய சாதியம்‌ பற்றிக்‌ கூறுகையில்‌,“ ஒரு மனிதனின்‌ வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை, பெயரை, உடையை சாதியே தீர்மானிக்கிறது” என்று சுட்டிக்காட்டியது. பிரிட்டிஷார்‌ வருகைக்குப்‌ பிறகுதான்‌ பார்ப்பன மேலாண்மையை நிலைநிறுத்தும்‌ சாதி யமைப்பு சமூகத்தின்‌ உற்பத்தி உறவுகளில்‌, மாற்றங்களுக்கான அறிகுறிகள்‌. தோன்றின தேக்கங்கள்‌ அசையத்‌ தொடங்கிய அக்காலகட்டத்தில்‌ பார்ப்பன 14.குழி அரசு1925 ரல்லாதார்‌ இயக்கங்களின்‌ உரிமைக்‌ குரல்களும்‌ கேட்கத்தொடங்கின.எதிர்‌. அணியில்‌ பார்ப்பனப்‌ பிடியில்‌ காங்கிரசும்‌ - இந்து மகாசபையும்‌- “தேசபக்தி” என்ற முகத்திரையோடு வெளியே வந்தன. இப்படி சமூக முரண்பாடுகள்‌. செயல்படத்‌ தொடங்கிய வரலாற்றுச்‌ சூழலில்‌ - பார்ப்பனரல்லாத சூத்திர, தீண்டப்படாத மக்களின்‌ உரிமைக்கான முழக்கங்களோடு - பெரியாரும்‌ அவரது இயக்கமும்‌ களத்துக்கு வருகிறது. வரலாற்றுப்‌ போக்கில்‌- இது ஒரு முக்கிய காலகட்டமாகும்‌. தற்போது நூற்றாண்டு விழா காணும்‌ அறிஞர்‌: அண்ணா இதைத்தான்‌ “பெரியார்‌ ஒரு சகாப்தம்‌; ஒரு காலகட்டம்‌; ஒரு திருப்பு முனை” என்று படம்‌ பிடித்தார்‌. உற்பத்தியில்‌ பரம்பரை அடிப்படையிலான குலத்‌ தொழிலையும்‌, மறு உற்பத்தியில்‌ ஒரே சாதிக்குள்‌ நடக்கும்‌ அகமண முறையும்‌ தீவிரத்துடன்‌ நிகழ்த்திய செயலாக்கத்தின்‌ மீதும்‌, அதன்‌ காரணிகள்‌ மீதும்‌ பெரியார்‌ அடித்த அடி “இரும்பு உலக்கையாக' வீழ்ந்தது. பார்ப்பனர்களும்‌ ஆதிக்க சக்திகளும்‌ அலறின; சாதியமைப்புக்கான கருத்தியலையும்‌ செயல்‌ திட்டங்களையும்‌ வழங்கிக்‌ கொண்டிருந்த வேத மதமாகிய பார்ப்பன மதத்தின்‌ ஆணிவேரைப்‌ பெரியார்‌ அசைக்கத்‌ தொடங்கினார்‌. அந்த அசைப்புக்குள்ளே வேதம்‌, புராணம்‌, சாஸ்திரம்‌,மதம்‌, சம்பிரதாயம்‌ மட்டுமல்ல, “கடவுளும்‌ சிக்கிக்‌ கொண்டது. வீரியத்துடன்‌ - வீறுகொண்டெழுந்த - அந்த “கலகத்தின்‌” காலப்‌ பதிவுகளாய்‌ சாட்சியங்களாக இன்னும்‌ நிற்பவை, பெரியாரின்‌ எழுத்தையும்‌ பேச்சையும்‌ கொண்டிருந்த அவர்‌ நடத்திய ஏடுகள்‌ தான்‌ என்பதில்‌, இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. பெரியார்‌ காங்கிரசுக்குள்‌ இருந்த காலம்‌ 5 ஆண்டுகள்தான்‌. அந்த அய்ந்தாண்டுகளில்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கட்சியின்‌ தலைவராகவோ அல்லது செயலாளராகவோதான்‌ செயல்பட்டு வந்திருக்கிறார்‌. “குடிஅரசு” ஏட்டை காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கு 6 மாதம்‌ முன்பே காங்கிரஸ்‌ கட்சிக்குள்‌ இருந்த காலத்திலேயே தொடங்கிவிடுகிறார்‌.அப்போதே அவர்‌ *குடிஅரசி£ல்‌ எழுதினார்‌. “ஒவ்வொரு வகுப்பும்‌ முன்னேற வேண்டும்‌. இதை அறவே விடுத்து தேசம்‌, தேசம்‌ என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின்‌ நோக்கமன்று. மக்களுக்குள்‌ தன்மதிப்பும்‌, சமத்துவமும்‌, சகோதரத்துவமும்‌ ஓங்கி வளர: வேண்டும்‌. இப்படி காங்கிரசில்‌ இருக்கும்‌ போதே முதல்‌ *குடிஅரசில்‌” தனது நோக்கத்தை பெரியார்‌ பதிவு செய்துள்ளார்‌.காங்கிரஸ்‌ முன்‌ வைத்த “தேசியம்‌ - காலனியம்‌” என்ற வட்டத்துக்குள்‌ சுழன்று கொண்டிராமல்‌, அதற்கு வெளியே நின்று சமூகப்‌ பிரச்சினைகளை பெரியார்‌ முன்‌ வைத்தார்‌ என்ற உண்மையை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காங்கிரஸ்‌ கட்சிக்குள்ளேயே அதிகாரப்‌ பசிக்காக உருவான பார்ப்‌ பனர்‌ கூடாரமான சுயராஜ்யக்‌ கட்சியையும்‌, பார்ப்பனரல்லாத உரிமைக்காக 15.குடி அரசு1925 அரசியலில்‌ இறங்கிய தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தையும்‌ (நீதிக்கட்சி! பெரியார்‌ ஒப்பீட்டு அளவில்‌ திறனாய்வு செய்தார்‌. சுயராஜ்யக்‌ கட்சியை முழுமையாகப்‌ புறக்கணித்த பெரியார்‌ - நீதிக்கட்சிக்கான ஆதரவை நிபந்‌ தனைகளுடன்தான்‌ முன்‌ வைக்கிறார்‌. “காலரும்‌, டையும்‌, பூட்சும்‌, சராயும்‌, ஆங்கிலத்‌ தொப்பியுமுள்ளவர்கள்‌ பிராமணரல்லாதார்‌ நன்மையைப்‌ பற்றி பேசினாலாவது தலைமை வைத்து நடத்தினாலாவது, அதோடு ஒரு பயனும்‌ விளையாது. அரசாங்கத்தின்‌ தயவிருந்தால்தான்‌ பிராமணரல்லாதார்‌. முற்போக்கடைய முடியும்‌ என்ற எண்ணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்‌” என்று பெரியார்‌ இடித்துரைக்கிறார்‌. (“குடி அரசு” 311926) பார்ப்பனரல்லாதார்‌ யார்‌ என்பதற்கு தெளிவான விளக்கத்தையும்‌, அவர்‌ வரையறை செய்கிறார்‌. “ பார்ப்பனரல்லாதார்‌ என்றால்‌, பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்தில்‌ 100க்கு 90 பேர்களாயிருக்கும்‌ பாமர மக்களையும்‌ ஏழை மக்களையும்‌ குறிக்குமே யல்லாமல்‌,100க்கு 5 பேர்கூட இல்லாத இராஜாக்களையும்‌, ஜமீன்தார்களையும்‌ மாத்திரம்‌ குறிக்காது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌”. (*குடி அரசு” 26.12.1926 ) காங்கிரஸ்‌ கட்சிக்கு முழுக்குப்‌ போட்டு விட்டு, வெளியேறிய பிறகும்‌ கூட பெரியார்‌ காந்தியாரின்‌ தீண்டாமை ஒழிப்பையும்‌, கதர்‌ பரப்ப லையும்‌ தீவிரமாக ஆதரித்து வந்ததோடு, தென்னிந்திய நலஉரிமைச்‌ சங்க மான நீதிக்கட்சியும்‌, இந்தக்‌ கொள்கைகளை, தமது வசமாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்றே வலியுறுத்துவதிலிருந்து கட்சிகளைத்‌ தாண்டி சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்‌ அவரது கொள்கைப்‌ பார்வை கோலோச்‌ சியதைப்‌ புரிந்து கொள்ள முடியும்‌. 1926 இல்‌ சென்னை மாகாணத்தில்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ மறைமுக ஒத்துழைப்புடன்‌ சுப்பராயன்‌ தலைமையில்‌ சுயேச்சை அமைச்சரவை அமைந்தபோது, முதலில்‌ சுப்பராயனை ஆதரித்த சுயராஜ்ய கட்சி, பிறகு, சுப்பராயன்‌ அமைச்சரவையைக்‌ கவிழ்க்கும்‌ முயற்சிகளில்‌ இறங்கியபோது, பெரியார்‌ மேற்கொண்ட அணுகுமுறைகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்கவை. மாகாணங்களுக்கு கூடுதல்‌ அதிகாரங்களை வழங்குவதற்காக ராயல்‌ கமிஷன்‌ (சைமன்‌ குழு) வருகை புரிந்த காலமும்‌ அதுதான்‌. அந்தக்‌ குழுவைப்‌ புறக்‌ கணிக்கும்‌ முடிவையே காங்கிரசுடன்‌ சேர்ந்து நீதிக்கட்சியும்‌ எடுத்திருந்தது. அப்போது பெரியார்‌ குரல்‌ மட்டும்‌ தனித்து ஒலித்தது. சைமன்‌ குழுவைப்‌ புறக்கணிக்கக்‌ கூடாது என்று வலியுறுத்திய பெரியார்‌, புறக்கணிப்பாளர்‌. வைத்த வாதங்களை தகர்த்து எறிந்தார்‌. மீண்டும்‌ நீதிக்கட்சி ஆதரவோடு சுப்பராயன்‌ அமைச்சரவையை நீட்டிக்கச்‌ செய்து உறுதியான ஆதரவு தந்து, தடுமாற்றத்திலிருந்த நீதிக்கட்சித்‌ தலைவர்‌ பனகல்‌ அரசரை இடித்துரைத்து, சைமன்‌ குழுவை பார்ப்பனரல்லாத மக்களின்‌ உரிமைக்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌ சூழலை உருவாக்கிக்‌ காட்டியவர்‌ பெரியார்‌. 15.குழி அரசு1925 1926 இல்‌ நீதிக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில்‌ அடுத்த தேர்தல்‌ வரை துக்கம்‌ கொண்டாடப்‌ போகிறீர்களா? அல்லது பார்ப்பன ஆதிக்கத்தை அழித்து பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றப்‌ போகிறீர்களா? என்று நீதிக்‌ கட்சியினரைப்‌ பார்த்து, வினா எழுப்பியதோடு. பார்ப்பனரல்லாதார்‌ மாநாடு ஒன்றைக்‌ கூட்டி, செயல்‌ திட்டங்களை உருவாக்‌ கும்‌ யோசனையை முன்வைத்தார்‌. அக்காலகட்டத்தில்‌ நாடு முழுவதும்‌ சுற்றுப்‌ பயணம்‌ செய்து, பார்ப்பனரல்லாதாரை எழுச்சிப்‌ பெறச்‌ செய்தார்‌. துவண்டு கிடந்த நீதிக்கட்சியை நிமிர்ந்து நிற்கச்‌ செய்தார்‌. பெரியாரின்‌ ஆலோசனையை ஏற்றுத்தான்‌ 1926 டிசம்பர்‌ 26 ஆம்‌ தேதி மதுரையில்‌ நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதார்‌ மாநாட்டை கூட்டியது. அதற்கான வேலைத்‌ திட்டங்களையும்‌, பெரியாரே முன்‌ வைத்தார்‌. “ பார்ப்பனரல்லாதார்‌ சுயமரி யாதைச்‌ சபைகள்‌” மாவட்டம்‌, வட்டம்‌, கிராமங்கள்‌ தோறும்‌ தொடங்கப்‌ பட வேண்டும்‌ என்று வலியுறுத்தியதோடு, பார்ப்பனரல்லாத காங்கிரசு கட்சி யினரையும்‌ மாநாட்டில்‌ பங்கேற்க அழைத்தார்‌. “ இந்த மாநாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பனரல்லாதாருக்கும்‌ பொதுவானதென்றே சொல்லுவோம்‌” (குடி அரசு” 19:121926) என்று பெரியார்‌ சுட்டிக்‌ காட்டுவதை: குறிப்பிட்டுச்‌ சொல்ல வேண்டும்‌. கட்சி எல்லைகளுக்கு அப்பால்‌ சுய மரியாதை கொள்கைகளுக்கான தளத்தை விரிவுபடுத்தும்‌ பெரியாரின்‌ செயல்‌ உத்தியை இதில்‌ காண முடிகிறது. தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கமான நீதிக்கட்சி நடத்தி வந்த “திராவிடன்‌” நாளேட்டை அவர்களால்‌ நடத்த முடியாதபோது பெரியாரிடம்‌ அதன்‌ பொறுப்பு வந்தது. பெரியாரும்‌ அதற்கு ஒப்புக்கொண்டார்‌. அப்போது பெரியார்‌ எழுதினார்‌: “ திராவிடன்‌” கொள்கை *குடி அரசு” க்‌ கொள்கைப்படியே தான்‌ இருக்கும்‌” என்று அறிவித்த பெரியார்‌, “ இதற்கு “திராவிடன்‌” சொந்தக்‌ காரர்கள்‌ சம்மதிக்காத போது நாம்‌ விலகிவிடுவோம்‌ என்பது உறுதி” என்று அறிவித்து விட்டே, “திராவிடன்‌” பொறுப்பை ஏற்றார்‌. சொல்லியவாறே செயல்பட்டார்‌. நீதிக்கட்சியில்‌ பார்ப்பனர்களையும்‌ சேர்த்துக்‌ கொள்ளலாம்‌ என்ற முடிவை அக்கட்சி எடுத்தபோது அதே ¢ திராவிடன்‌” ஏட்டில்‌ பெரியார்‌, நீதிக்‌ கட்சியை கடுமையாக கண்டிக்கத்‌ தயங்கவில்லை. கடும்‌ விமர்சனங்களைத்‌ தாங்க முடியாத நீதிக்கட்சி தலைவர்கள்‌ “ திராவிடனை' பெரியாரிடமிருந்து திரும்பப்‌ பெறும்‌ முயற்சிகளில்‌ இறங்கினர்‌. பொருள்‌ இழப்போடுதான்‌ பெரியார்‌ “திராவிடன்‌” ஏட்டின்‌ பொறுப்பிலிருந்து விலகினார்‌. சில மாதங்‌ களில்‌ அலர்மேலு மங்கைத்தாயார்‌ எனும்‌ அம்மையாரை ஆசிரியராகக்‌ கொண்டு, “திராவிடன்‌” நாளேட்டை நீதிக்கட்சி வெளிக்கொண்டு வந்தது. அதில்‌ இப்படி ஒரு அறிவிப்பு இடம்‌ பெற்றது. “திராவிடன்‌ மதவேறுபாடு, வகுப்பு வேறுபாடு காட்டாமல்‌ இனி வெளியிடப்படும்‌.” இந்த அறிவிப்பே, 17.குடி அரசு 1925 பெரியாரிடமிருந்து “திராவிடன்‌” மீண்டும்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டதன்‌ நோக்கத்தை சுட்டி நிற்கிறது. இவற்றை எல்லாம்‌ நாம்‌ இங்கே சுட்டிக்காட்டுவதற்கு முக்கியக்‌ காரணங்கள்‌ இருக்கின்றன. பெரியாரையும்‌ அவரது இயக்கத்தையும்‌ பற்றிய எந்த ஒரு சரியான புரிதலுக்கு பெரியார்‌ இயங்கிய வரலாற்றுச்‌ சூழல்களோடு. இணைத்துப்‌ பார்க்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்துகிறோம்‌. அச்‌ சூழலோ டும்‌, சூழலுக்குள்ளும்‌ பெரியாரைப்‌ பொருத்திப்‌ பார்க்கும்போதுதான்‌ முழு மையான பெரியாரியலின்‌ வெளிச்சத்தைப்‌ பெறமுடியும்‌. காலவரிசைப்படி, பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ தொகுக்கப்படவேண்டும்‌ என்பதில்‌ பெரியார்‌. திராவிடர்‌ கழகம்‌ உறுதி காட்டி வருவதற்கும்‌ இதுவே அடிப்படையான நோக்கம்‌. நாம்‌ தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியதுபோல்‌ வரலாற்று நிகழ்வு களை வரிசைப்படுத்திப்‌ பார்ப்பதல்ல இதன்‌ நோக்கம்‌. வரலாறுகளோடு பெரியார்‌ இயக்கத்தை இணைத்தும்‌ பொருத்தியும்‌ பெரியாரியலின்‌ முழுமை யான பரிமாணத்தை புரிதலுக்கு உட்படுத்தும்‌ முயற்சியே இதன்‌ நோக்கம்‌. இந்த நோக்கம்தான்‌ பெரியார்‌ எழுத்து - பேச்சுகளின்‌ காலவரிசைத்‌ தொகுப்பை நிர்ப்பந்தப்படுத்துகிறது. 1925 இல்‌ தனது பயணத்தைத்‌ தொடங்கிய சுயமரியாதை இயக்கம்‌ 1938ம்‌ ஆண்டு வரை முழுமையான வீச்சோடு சூறாவளியாக சுழன்றடித்தது.. சுயமரியாதை இயக்கத்தின்‌ வரலாற்றில்‌ உன்னதமான இக்காலக்கட்டத்தை உள்ளடக்கிய பெரியார்‌ எழுத்துகளையும்‌, பேச்சுகளையும்‌ முழுமையாக ஒரே நேரத்தில்‌ வெளியிட பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ திட்டமிட்டது. இக்‌ கால கட்டங்களில்‌ பெரியார்‌ காந்தியத்தை ஆதரித்துள்ளார்‌; எதிர்த்துள்ளார்‌; நீதிக்கட்சியை ஆதரித்துள்ளார்‌: எதிர்த்துள்ளார்‌: கட்சிகளைக்‌ கடந்து பார்ப்பனரல்லாதார்‌ ஒற்றுமைக்கு களம்‌ அமைத்திருக்கிறார்‌. கொள்கைப்‌ பார்வையில்‌ கடும்‌ வார்த்தைகளால்‌ - கண்டித்தவர்களையும்‌ - பிறகு - அதே. கொள்கைக்காக அரவணைத்துமிருக்கிறார்‌; தனது சுயமரியாதை கொள்கை களைக்‌ கொண்டு செல்ல சிறு வெளி கிடைத்தாலும்‌ கூட அதையும்‌ தவறாமல்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌; அடக்கு முறைகளுக்கு அவர்‌ ஒரு போதும்‌ அஞ்சியதில்லை.அரிமாவாக எதிர்‌ கொண்டிருக்கிறார்‌. எப்படியாவது - இந்த மக்களை மானமும்‌ அறிவும்‌ உள்ள மக்களாக மாற்றியே தீருவதற்கு அவர்‌ கொடுத்த விலைகள்‌ ஏராளம்‌; அவரது கருத்துப்‌ போர்க்களங்களான ஏடுகள்‌. - சந்தித்த அடக்குமுறைகள்‌ : ஒவ்வொரு முறையும்‌ ஜாமீன்‌ பணம்‌ கட்டச்‌ சொல்லி அரசின்‌ கெடுபிடிகள்‌: இவ்வளவு தியாகத்‌ தழும்புகளுக்குமி டையே பார்ப்பனர்களும்‌, பார்ப்பன ஏடுகளும்‌ வழங்கிய பட்டம்‌ “பிரிட்டிஷ்‌ விசுவாசி” அடக்குமுறைகளை எதிர்கொள்வதில்‌ கூட சொந்தப்‌ பெருமைக்‌ கும்‌, புகழுக்குமின்றி கொள்கைக்காகவே சந்தித்த அவரது நேர்மைப்‌ பண்பு வியக்க வைக்கிறது. 15.குடி அரசு1925 பெரியார்‌ வரலாற்றை தமிழர்களுக்கு படைத்தளித்த சாமி.சிதம்பரனார்‌. பெரியார்‌ பற்றி கூறும்‌ போது “ இவர்‌ இந்தியாவிலேயே பெரியார்தான்‌. மனித இயற்கைக்கு மாறு பட்டவர்‌. தோல்வி என்பது அவருடைய வீரத்தையும்‌ அறிவையும்‌ போட்டு காய்ச்சும்‌ நெருப்பு. இத்தீயில்‌ வைத்துக்‌ காய்ச்ச காய்ச்ச அவருடைய இவ்‌ விரண்டு பண்புகளும்‌ ருசியில்‌ அதிகப்‌ பட்டுக்‌ கொண்டே இருக்கும்‌. இதைப்‌ போலவே வெற்றி கிடைத்தாலும்‌ அதற்கு மேல்‌ செய்ய வேண்டியதைப்‌ பற்றியும்‌, அதனால்‌ ஏற்பட்ட அதிகப்‌ பொறுப்பைப்‌ பற்றியும்‌ தான்‌ கவலைப்‌ படுவார்‌. சில இழி மக்களைப்‌ போல்‌ வெற்றி மயக்கத்தால்‌ கூத்தாடும்‌ சிறுமைக்‌ குனம்‌ அவரிடமில்லை. சுருங்கக்கூறினால்‌, பெரியார்‌ ஒரு பிறவிப்‌ போர்‌. வீரர்‌” என்று துல்லியமாகப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறார்‌. 7 சதவீதம்‌ பேர்‌ மட்டுமே எழுதப்‌ படிக்க தெரிந்த காலக்கட்டத்தில்‌ (இதில்‌ 5 சதவீதத்துக்கும்‌ மேற்பட்டவர்கள்‌ பார்ப்பனர்கள்‌) வாரம்‌ தோறும்‌ 10000 “குடி அரசு' பத்திரிகைகளை அச்சேற்றிய பெரியார்‌, பணம்‌ கிடைக்கக்‌ கூடிய விளம்பரங்களைக்கூட அதிகம்‌ வெளியிட முடியாது என்ற அறிவிப்‌ பையும்‌ வெளியிட்டு, வருவாயையும்‌ இழக்கத்‌ தயாராகியிருக்கிறார்‌. விளம்‌ பரத்துக்கு கூடுதல்‌ பக்கங்கள்‌ ஒதுக்குவதால்‌, கருத்துக்களை சொல்ல முடியா மல்‌ போய்விடுகிறது என்று வருவாயையும்‌ ஒதுக்கித்‌ தள்ளியிருக்கிறார்‌. _..“கொஞ்ச நாளைக்கு “குடி அரசு 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டு விட்டது. என்றாலும்‌ இதனால்‌ வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும்‌ பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும்‌ சுமார்‌ 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்‌ களுக்கு அதிகப்‌ படாமல்‌ செய்துவிட்டு சற்றேறக்குறைய 2 அல்லது 13 பக்கங்‌ களுக்கு குறையாத விஷயங்கள்‌ வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம்‌. இதனால்‌ ஒரு சமயம்‌ விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்‌ கலாம்‌”. ( “குடி அரசு” - 23.12.1928 ) பெரியாரின்‌ இந்தப்‌ புரட்சிகர “எழுத்தும்‌ பேச்சும்‌” புதைகுழிக்குள்‌ புதையுண்டு போய்விடக்‌ கூடாது என்ற கவலையோடு, இவை சமுதாய மாற்றத்துக்கான “படைக்கலன்களாக' மாற்றப்பட்டாக வேண்டும்‌ என்ற ஒரே நோக்கத்தோடுதான்‌ கொள்கை உணர்வுள்ள தொண்டர்களின்‌ வலிமையில்‌ மட்டுமே செயல்படும்‌ பொருளாதார வலிமை ஏதுமற்ற பெரியார்‌ திராவிடர்‌: கழகம்‌ “குடிஅரசு” 27 தொகுதிகளையும்‌ *ரிவோல்ட்‌” வார ஏட்டில்‌ வெளி வந்த முக்கிய கட்டுரைத்‌ தொகுப்புகளையும்‌ தமிழ்கூறும்‌ நல்லுலகத்தின்‌ முன்‌ பணிவுடன்‌ சமர்ப்பிக்கிறது: இதில்‌ பெருமையடைகிறது. உன்னதமான கடமையைச்‌ செய்தோம்‌ என்ற உணர்வில்‌ தலை நிமிர்ந்து நிற்கிறது. 19.குடி அரசு1925 2003 ஆம்‌ ஆண்டு பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ வெளியிட்ட “குடி அரசு” 1925 முதல்‌ தொகுப்புக்கான வெளியீட்டாளர்‌ உரையில்‌ சுட்டிக்‌ காட்டியதையே மீண்டும்‌ குறிப்பிடுகிறோம்‌: “ தமிழர்‌ உரிமை மீட்பர்‌ பெரியார்‌.......... “ அந்தத்‌ தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில்‌ அந்தப்‌ பணி செய்ய யாரும்‌ வராததினால்‌ நான்‌ அதை மேற்போட்டுக்‌ கொண்டு தொண்‌: டாற்றி வருகிறேன்‌”... என்று கூறுவது போலவே தான்‌ எங்கள்‌ முயற்சியும்‌ என்பதைத்தான்‌ இந்த நிலையில்‌ நாங்கள்‌ கூறிக்கொள்ள முடியும்‌”. - தொகுப்புக்குழு 20.குடி அரசு1925 குழு அரசு : ஒரு பார்வை முதலில்‌... .- 1925 - 1938 காலகட்டம்‌ வரை பெரியாரின்‌ எழுத்துகளையும்‌ பேச்சு களையும்‌ குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்து தொகுத்திடும்‌ பணியில்‌ பின்பற்றிய நெறிமுறைகளை விளக்கிட விரும்புகிறோம்‌. பெரியாரின்‌ எழுத்துகளையும்‌ பேச்சுகளையும்‌ எந்த மாற்றமும்‌ இன்றி வெளியிடுவதில்‌ அல்லது அப்படியே வெளியிடுவதில்‌ முழுமையான கவனமும்‌ கவலையும்‌ செலுத்தினோம்‌. பெரியாரின்‌ எழுத்துகள்‌ குறித்து திருநெல்வேலியில்‌ 28111927 இல்‌ நடைபெற்ற மாவட்ட சுயமரியாதை சங்க மாநாட்டில்‌, மாநாட்டைத்‌ திறந்து வைத்து உரையாற்றிய தமிழறிஞர்‌ இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்‌ பேசியதையும்‌ அதற்கு பெரியார்‌ தந்த பதிலையும்‌ இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்‌ என்று கருதுகிறோம்‌. “ குடி அரசுக்கு இன்றிருக்கும்‌ யோக்கியதை உங்கட்க்குத்‌ தெரியும்‌. அதில்‌ மக்கள்‌ மனதை கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக்‌ காரணம்‌ அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்‌? அவர்‌ உள்ளக்கிடக்கிலுள்ளதை அப்படியே எடுத்துச்‌ சொல்லுவது, அதுவும்‌ மிகச்சாதாரண தமிழிலேயே தான்‌ இருக்கிறது.நாயக்கர்‌ படிப்பில்‌ பட்ட தாரி அல்ல. எத்தகைய கல்வியாளரும்‌, கோடிக்கணக்கான ஜன சமூக மும்‌ திகைக்கத்தக்க வன்மையுடைய பத்திரிகையை இவர்‌ கொடுத்தது நமது பூர்வ புண்ணியமேயாகும்‌.” (குடி அரசு 04.12.1927, ப. 6) என்று டி.கே.சிதம்பரநாத முதலியார்‌ குறிப்பிட்டதற்கு பெரியார்‌ இவ்வாறு பதிலளித்தார்‌. “ குடி அரசைப்‌ பற்றி மிக அதிகமாகக்‌ கூறினார்கள்‌. அதில்‌ உள்ள குற்றமெல்லாம்‌ எனக்குத்‌ தெரியும்‌. அதில்‌ உள்ள மெல்லின வல்லினம்‌ போன்ற பல இலக்கணப்‌ பிழைகளும்‌, மற்றும்‌ பல பிழைகளும்‌ 21.குடி அரசு 1925. எனக்குத்‌ தெரியும்‌. இதற்காக நான்‌ இலக்கணம்‌ கற்கப்‌ போவதில்லை.” (குடி அரசு 04.12.1927, ப.6 ) பெரியாரின்‌ மொழிநடை பற்றி அவரது வாழ்க்கை வரலாற்றை “தமிழர்‌ தலைவர்‌” என்ற தலைப்பிட்டு நூலாக எழுதிய தமிழறிஞர்‌ சாமி.சிதம்பரனார்‌ குறிப்பிடுவதையும்‌ சுட்டிக்காட்ட வேண்டும்‌. “இவர்‌ எதைப்பற்றியும்‌ அஞ்சாமல்‌ எழுதுவார்‌. இவருக்கு இலக்கணம்‌ தெரியாது. எழுதுவதில்‌ எழுத்துப்‌ பிழைகளும்‌ மலிந்திருக்கும்‌. சொற்‌ பிழைகள்‌ நிறைந்திருக்கும்‌. ஒரு வாக்கியம்‌ எப்படி இருக்க வேண்டும்‌ என்பதே இவருக்குத்‌ தெரியாது. இவர்‌ எழுதுவதில்‌ காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. “ கிணர்‌” “வயிர்‌” “சுவற்றில்‌” “ஆக்ஷி' “சூக்ஷி' “ஆருதல்‌” * பொருமை” போன்ற பிழை கள்‌ தாராளமாகக்‌ காணப்படும்‌. சாதாரணமாகப்‌ பேசுந்‌ தமிழில்தான்‌ எழுதுவார்‌. அதிலும்‌ எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கே. யிருக்கிறது என்று தேடினாலும்‌ சில சொற்றொடர்களில்‌ அகப்படா. ஒரு வாக்கியம்‌ நான்கு முழம்‌ அய்ந்து முழம்‌ நீண்டிருக்கும்‌. இவ்‌ வளவு பிழைகள்‌ மலிந்திருந்தாலும்‌ படிப்போரை தன்வசமாக்கும்‌ சக்தி இவர்‌ எழுத்துக்கு மட்டும்‌ தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற்‌ சொல்ல முடியாது.” (தமிழர்‌ தலைவர்‌”.ப. 169 என்று குறிப்பிடுகிறார்‌. இப்படி மொழி இலக்கணங்களுக்கு அப்பால்‌, அவற்றினுள்‌ முடங்கிக்‌ கொள்ளாமல்‌ ஆயிரமாயிரம்‌ ஆண்டுகளாய்‌ அடிமைப்‌ பட்டுக்கிடந்த தமிழினத்தை விடுதலை செய்யும்‌ எதிர்நீச்சல்‌ தொண்டுக்கே முன்னுரிமை தந்த அந்த சமூகப்‌ புரட்சியாளரின்‌ எழுத்துகளையும்‌ பேச்சுகளையும்‌ உள்ளது உள்ளபடியே வெளிக்கொணர வேண்டும்‌ என்ற கவலையோடு இத்‌ தொகுப்‌ புப்‌ பணிகள்‌ நடந்தன. எடுத்துக்காட்டாகக்‌ குறிப்பிட வேண்டுமானால்‌ பெரியார்‌ சில வேளை ஒரே பத்தியில்‌ அனுகூலம்‌ - அநுகூலம்‌ அன்னியர்‌ - அந்நியர்‌ தகரார்‌ - தகறாரு நீச்சல்‌ - நீச்சம்‌ சோம்பேறி - சோம்பேரி கட்சி - க்வி கேட்கிறோம்‌. - கேள்க்கிறோம்‌- கேழ்க்கிறோம்‌ சூழ்ச்சி - சூட்சி- குக்ஷி கடைசி - கடசி 22. குடி அரசு1925 தவிற - தவிர நாணயம்‌. - நாணையம்‌ ஒருபுறம்‌ - ஒருபுரம்‌ பழைய - பழய பறித்து - பரித்து எவரும்‌ - யெவரும்‌ முஸ்லீம்‌ - முஸ்லிம்‌ தேசீய - தேசிய முத்தையா - முத்தய்யா - முத்தய்ய வரதராஜுலு - வரதராஜலு கல்யாணசுந்தர முதலியார்‌ - கலியாணசுந்திர முதலியார்‌ ரெங்கசாமி - ரங்கசாமி ஜெயவேலு - ஜயவேலு பந்தலு - பந்துலு ஜெயகர்‌ - ஜயகர்‌ என்று பலபட எழுதியுள்ளார்‌. அவற்றை ¢ குடி அரசு” இதழ்களில்‌ உள்ள வாறே கொடுத்திருக்கின்றோம்‌. ஆண்டு ,மாதம்‌,தேதி ஆகியவற்றைக்‌ குறிக்க முறையே ஹு. 5 ௨ என்ற குறியீடுகளும்‌ “மேற்படி” என்பதைக்‌ குறிக்க ரெ என்ற குறியீடும்‌ ரூபாய்‌, அணா, பைசா எனும்‌ அன்றைய நாணயமுறைக்‌ கணக்குகளையும்‌ அப்படியே கொடுத்திருக்கின்றோம்‌. பெரியார்‌ முதல்‌ முதலாக எழுத்துச்‌ சீர்திருத்தத்தை குடி அரசில்‌ அறிமுகப்படுத்த எண்ணினாலும்‌ அறிமுகப்படுத்தியது 06.011935 பகுத்தறிவு வார இதழில்தான்‌. இதற்கான அறிவிப்பு 30.12.1934 பகுத்தறிவு இதழில்‌ (துணைத்‌ தலையங்கம்‌) வெளிவந்திருக்கிறது. “இன்னமும்‌ தமிழ்‌ பாஷை எழுத்துகளில்‌ அனேக மாறுதல்கள்‌. செய்ய வேண்டி இருந்தாலும்‌ இப்போதைக்கு இந்த சிறு மாறுதலை அனுபவத்திற்குக்‌ கொண்டு வரலாம்‌ என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல்‌ பிரசுரிக்கப்போகும்‌ *குடிஅரசு' பத்திரிகையைப்‌ பிரசுரிக்கலாம்‌ என்று இருக்கிறோம்‌”... (பகுத்தறிவு 30121934, ப.) எழுத்துச்‌ சீர்திருத்தத்தை, நின்றுபோய்‌ மீண்டும்‌ வெளிவந்த குடி அரசில்‌ நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டாலும்‌ 05.011935 சனிக்கிழமை வரை அஞ்சலகத்தின்‌ ஆணை கிடைக்காததால்‌ 06011935 இதழ்‌ பகுத்தறிவு என்ற பெயரிலேயே வெளிவருகிறது. இங்கே 23.குடி அரசு 1925. ஒன்றைக்‌ குறிப்பிட வேண்டும்‌. 1935 க்குப்‌ பிறகுதான்‌ பெரியார்‌ எழுத்துச்‌ சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்தினார்‌ என்றாலும்‌ இத்தொகுப்பு முழுமையிலும்‌ சீர்திருத்த எழுத்து முறையே தவிர்க்க முடியாமல்‌ பயன்படுத்‌ தப்பட்டிருக்கிறது. பழைய எழுத்துவடிவங்களைப்‌ பயன்படுத்துவதில்‌ உள்ள. நடைமுறைச்‌ சிக்கல்களே இதற்குக்‌ காரணம்‌. ஆனாலும்‌ பழைய எழுத்து முறையை பெரியார்‌ கடைசியாகப்‌ பயன்படுத்திய 30.12.1934 பகுத்தறிவு இதழில்‌ வெளிவந்த துணைத்‌ தலையங்கம்‌, 06.011935 பகுத்தறிவு இதழில்‌ வெளிவந்த அறிக்கை, இவற்றை மட்டும்‌ இளந்‌ தலைமுறையினர்‌ அறிந்து கொள்வதற்காக பழைய எழுத்து வடிவத்திலேயே கொடுத்துள்ளோம்‌. பெரியார்‌ பல்வேறு புனைப்‌ பெயர்களில்‌ கட்டுரைகளை எழுதியுள்‌ ளார்‌. இவற்றில்‌, “சித்திரபுத்திரன்‌”, *பழைய கருப்பன்‌” என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும்‌. எனவே அப்பெயரில்‌ வெளிவந்த கட்டுரைகளை தொகுப்பில்‌ சேர்த்துள்ளோம்‌. இதைத்தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார்‌ எழுதினாலென்ன, எவர்‌ எழுதினா லென்ன, ஒரு நிருபர்‌, நமது அரசியல்‌ நிருபர்‌, பொதுநலப்பிரியன்‌, குறும்பன்‌, உண்மை காண்போன்‌, நம்பிக்கையிழந்தவன்‌, பார்ப்பனரல்லாதான்‌, உண்மை விளம்பி, வம்பளப்போன்‌, பழைய காங்கிரஸ்காரன்‌, வம்பன்‌ என்ற புனைப்‌ பெயர்களில்‌ வெளிவந்த கட்டுரைகள்‌ பெரியாரால்‌ எழுதப்பட்டவை என்‌ பதை உறுதிப்படுத்த முடியவில்லையானாலும்‌ கட்டுரையின்‌ முக்கியத்துவம்‌ கருதி இத்தொகுப்பில்‌ இணைத்துள்ளோம்‌. அதே போன்று சில இதழ்களில்‌ பல காரணங்களால்‌ பிறரும்‌ தலையங்கம்‌ எழுதியுள்ளனர்‌. அவ்வாறான குடி அரசு தலையங்கங்கள்‌ ஈ.வெ.கி., சா.கு., SR. மா.வா., சா.மா., யம்‌.வீ என்ற பெயர்க்குறிப்புகளோடு வெளிவந்துள்ளன. இவற்றை வேறு சிந்தனையாளர்‌. கள்‌ எழுதியிருந்தாலும்‌ அக்காலகட்ட நிகழ்வுகளை அறியத்‌ தரும்‌ நோக்‌ கோடு அவையும்‌ இத்தொகுப்பில்‌ அப்பெயர்க்‌ குறிப்புகளுடனேயே இணைத்துள்ளோம்‌.13121931 அய்ரோப்பிய சுற்றுப்பயணம்‌ மேற்கொண்டது முதல்‌ 1111932 ஈரோடு வந்த சேர்ந்த நாள்‌ வரையிலான காலத்தில்‌ குடி அரசில்‌ எழுதப்பட்டுள்ள தலையங்கங்களும்‌, துணைத்‌ தலையங்கங்களும்‌ தொகுப்‌ பில்‌ இடம்பெற்றுள்ளன. தலையங்கம்‌, கட்டுரைகள்‌ இவைகளை முழுமையாகப்‌ புரிந்து கொள்‌: வதற்கு உதவியாக இயன்றவரையில்‌ அடிக்குறிப்புகளைத்‌ தந்துள்ளோம்‌. உதாரணமாக, ஒரு மாநாட்டுத்‌ தீர்மானம்‌ பற்றி தலையங்கம்‌ தீட்டும்‌ போது அத்தீர்மானம்‌ முழுமையாக அடிக்குறிப்பில்‌ தரப்பட்டுள்ளது. பெரியார்‌ நிகழ்த்திய சொற்பொழிவுகள்‌ வெளிவந்த குடி அரசு இதழின்‌ தேதியுடன்‌ அந்த சொற்பொழிவை நிகழ்த்திய ஊர்‌, தேதி முதலிய விவரங்களும்‌ தரப்பட்டுள்ளன. இது தவிர குடி அரசில்‌ இதழ்‌ ஆசிரியரின்‌ கருத்துக்கள்‌ பத்திராதிபர்‌ குறிப்பு என்ற தலைப்பில்‌ வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக்‌ 24.குடி அரசு1925 குறிப்பைப்‌ புரிந்து கொள்வதற்கு உதவிடும்‌ தகவல்களும்‌ சேர்த்துத்‌ தரப்‌ பட்டுள்ளன. சான்றாக ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ கொண்டுவந்த லோக்கல்‌ போர்டு சட்ட திருத்த மசோதா பற்றி பத்திராதிபர்‌ குறிப்பு எழுதப்பட்டுள்ளது. குறிப்பைப்‌ புரிந்துகொள்வதற்கு உதவிட அந்த சட்டதிருத்த மசோதாவின்‌ விவரங்களும்‌ கொடுக்கப்பட்டுள்ளன. குடி அரசில்‌ இந்தியச்‌ சிந்தனையாளர்கள்‌, மேலைநாட்டு அறிஞர்கள்‌ ஆகியோரின்‌ கட்டுரைகளும்‌ இயக்கங்களின்‌ அறிக்கைகளும்‌ மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்புக்கு முகவுரையாகவும்‌ பத்திராதிபர்‌ குறிப்புகளாகவும்‌ எழுதியுள்ள குறிப்புகளும்‌ தொகுப்பில்‌ இடம்‌ பெற்றுள்ளன. அவற்றில்‌ இரண்டு முக்கிய மொழிபெயர்ப்புக்களைக்‌ குறிப்‌ பிட்டாக வேண்டும்‌. ஒன்று, 1931 இல்‌ வெளிவந்துள்ள “ சமதர்ம அறிக்கை” (Communist Manifesto) 04101931 குடி அரசில்‌ தொடங்கி 01111931 முடிய 5 இதழ்களில்‌ “சமதர்ம அறிக்கையின்‌ முதல்பாகம்‌ தொடர்ந்து வெளிவந்துள்ளது. அறிக்‌ கையின்‌ மொழிபெயர்ப்பு முகவுரையாக, “ .சமதர்மக்‌ கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில்‌ வெளியான ஒரு அறிக்கையை மக்கள்‌ உணரும்படியாக வெளிப்படுத்தலாம்‌ என்று நாம்‌ கருதுவதால்‌ அதை மொழிபெயர்த்து வெளியிடலாம்‌ என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம்‌. ( குடி அரசு - 04.10.1931) என்று பெரியார்‌ குறிப்பிடுகிறார்‌. மற்றொன்று, பேரறிஞர்‌ அம்பேத்கரின்‌ 1936 இல்‌ லாகூர்‌ ஜாட்‌- பட்‌- தோடக்‌ மண்டலத்தார்‌ ( ஜாதி ஒழிப்புச்‌ சங்கத்தார்‌ ) ஆண்டு மாநாட்டு தலைமையுரை (மாநாடு நடக்காததால்‌ அவரது உரை நூலாக அச்சிட்டு வெளி யிடப்பட்டது? “ஜாதி யொழிய வேண்டும்‌” என்ற தலைப்பில்‌ மொழி பெயர்க்‌ கப்பட்டு வெளிவந்துள்ளது. ( குடி அரசு - 19.07.1936 ) “சமதர்ம அறிக்கை,” “ஜாதி யொழிய வேண்டும்‌” இவையிரண்டும்‌ இந்தியமொழிகளில்‌ தமிழிலும்‌, ஏடுகளில்‌ “குடி அரசி”லும்‌ தான்‌ முதலில்‌ வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்‌. தொகுக்கப்பட்ட எழுத்து, பேச்சுகளை தலையங்கம்‌, துணைத்‌ தலையங்கம்‌, கட்டுரை, சொற்பொழிவு, உரையாடல்‌, மதிப்புரை, பயணக்‌ கடிதங்கள்‌, பெட்டிச்செய்தி, செய்திவிளக்கம்‌, செய்திக்‌ குறிப்பு. இரங்கல்‌ செய்தி, இரங்கலுரை, அறிவிப்பு, பத்திராதிபர்‌ குறிப்பு, செய்தி விமர்சனம்‌ என்று வகைப்படுத்தி குறிப்புகளுடன்‌ தரப்பட்டுள்ளன. 25.குடி அரசு 1925. “குடிஅரசு இதழில்‌ மட்டுமல்லாது “புரட்சி”, “பகுத்தறிவு' இதழ்களில்‌ வெளிவந்த பெரியாரின்‌ கட்டுரைகளும்‌ இத்தொகுப்பில்‌ இடம்‌ பெற்றுள்ளன. ஒரே காலத்தில்‌ “விடுதலை” நாளேடும்‌ “குடி அரசும்‌ வெளிவந்த போது குடி அரசில்‌ மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள விடுதலை தலையங்கங்களும்‌ தேவை கருதி சேர்க்கப்பட்டுள்ளன. குடி அரசு வெளியிட்ட தலைப்புகளில்‌ மாற்றம்‌. எதுவும்‌ செய்யவில்லை. தலைப்பின்றி வெளி வந்த பெரியார்‌ சொற்பொழி வுகளுக்கு மட்டும்‌ அதன்‌ பொருள்‌ குறித்த தலைப்புகள்‌ தரப்பட்டுள்ளன. கிடைத்த இதழ்கள்‌ கிழிந்து அரித்த நிலையில்தான்‌ இருந்தன. சிலவற்‌ றில்‌ கட்டுரையின்‌ வரிகள்‌ மறைந்துபோய்விட்டன. இதை நிரப்புவதற்கு முழுமையான பக்கங்கள்‌ கிடைக்க பெரும்‌ முயற்சிகள்‌ மேற்கொண்டும்‌ கிடைக்கவில்லை. எனவே விடுபட்ட வரிகளைக்‌ குறிக்க ... என்ற குறியீட்டைப்‌ பயன்படுத்த வேண்டியிருந்தது. கட்டுரையில்‌ இடம்பெற்றுள்ள சொற்கள்‌ காலத்தால்‌ பழைமை யானவை. தற்காலத்தில்‌ புழக்கத்தில்‌ இல்லாதவை. எனவே அவற்றின்‌ பொருள்‌ புரிவதற்கு அருஞ்சொல்‌ பொருள்‌ விளக்கம்‌ ஒவ்வொரு தொகுதி யின்‌ இறுதியிலும்‌ இணைக்கப்பட்டுள்ளது. குடி அரசு : எதிர்நீச்சல்‌ பயணம்‌. 1922 ஆம்‌ ஆண்டு கள்ளுக்கடை மறியலில்‌ ஈடுபட்டு, கோவை சிறையில்‌ பெரியார்‌ அடைக்கப்பட்டபோது, அவரும்‌ அவருடன்‌ சிறையில்‌ உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம்‌ வழக்கறிஞர்‌ தங்கபெருமாள்‌. பிள்ளையும்‌ இணைந்து சிந்தித்த திட்டத்தின்‌ விளைச்சல்தான்‌ * குடிஅரசு. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன்‌, 1923 ஆம்‌ ஆண்டிலேயே * குடி அரசை' பதிவுசெய்த பெரியார்‌. 02051995 ஈரோட்டில்‌ ஞானியார்‌ அடிகளைக்‌ கொண்டு வெளியிட்டார்‌. ஞாயிறுதோறும்‌ ஓரணா விலையில்‌ வெளிவரத்‌ தொடங்கியது குடி அரசு. முதலில்‌ அட்டையில்‌ பாரதத்‌ தாய்‌, இராட்டை சுற்றும்‌ காந்தியார்‌, நெசவு செய்யும்‌ பெண்‌, உழவு செய்யும்‌ விவசாயி, சுத்தி யால்‌ அடிக்கும்‌ தொழிலாளி, மூட்டை சுமக்கும்‌ பாட்டாளி படங்களோடும்‌, “எல்லோரும்‌ ஓர்குலம்‌, எல்லோரும்‌ ஓர்‌ இனம்‌,” ¢ சாதிகள்‌ இல்லையடி பாப்பா” என்ற பாரதி பாடல்களோடும்‌ குடி அரசு வெளிவரத்‌ தொடங்கியது. தொடக்கக்‌ காலங்களில்‌ வார இதழின்‌ 12 பக்கங்களையும்‌ தாமே எழுதி வந்ததாய்‌ பெரியார்‌ குறிப்பிடுகிறார்‌. (குடிஅரசு 18.04.1926) பின்னர்‌, ம.சிங்கார வேலர்‌, சாமி.சிதம்பரனார்‌, கைவல்ய சாமியார்‌, மயிலை.சீனி. வேங்கடசாமி, சா.குருசாமி, சந்திரசேகர பாவலர்‌, ஈழத்து சிவானந்த அடிகள்‌, பண்டிதர்‌ முத்து சாமி, கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர்‌, அ.இராகவன்‌, ஆர்‌.நீலாவதி, அ.அன்னபூரணி போன்ற சிந்தனையாளர்களின்‌ கட்டுரை 26.குடி அரசு1925 களும்‌ பாரதிதாசன்‌, ஜீவானந்தம்‌ போன்ற கவிஞர்களின்‌ கவிதைகளும்‌ இடம்‌ பெற்றுள்ளன. 1925 இல்‌ தொடங்கிய “குடி அரசு” 1933 ஆம்‌ ஆண்டில்‌ அரசின்‌ அடக்குமுறைக்கு உள்ளானது. “இன்றைய ஆட்சி ஏன்‌ ஒழிய வேண்டும்‌?” என்ற தலைப்பில்‌ பெரியார்‌ எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ்‌ ஆட்சி பெரியார்‌ மீது அரசு துரோகக்‌ குற்றச்சாட்டுகளின்‌ கீழ்‌ வழக்கு தொடர்ந்தது. 9. மாத சிறை தண்டனையும்‌ ரூ.300 அபராதமும்‌ விதிக்‌ கப்பட்டு பெரியார்‌ சிறை யேகினார்‌. * குடி அரசி*ன்‌ பதிப்பாளர்‌ பெரியாரின்‌ தங்கை கண்ணம்மாளும்‌. 6 மாத சிறைத்‌ தண்டனைக்கு உள்ளானார்‌. ரூ.100 அபராதமும்‌ விதிக்கப்படு. கிறது. இந்த நிலையில்‌ 1911933 - லிருந்து “ குடி அரசு' தற்காலிகமாகநிறுத்தப்‌ பட்டு மீண்டும்‌ 13.011935 - லிருந்து வெளிவரத்‌ தொடங்குகிறது. தொடர்ந்து 29.121940 வரை வெளிவந்த “குடி அரசு' மீண்டும்‌ நிறுத்தப்பட்டு 16.10.1943 - லிருந்து வெளிவரத்தொடங்கி,1949 ஆம்‌ ஆண்டில்‌ மீண்டும்‌ அரசின்‌ ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும்‌ ரூ.3000 ஜாமீன்‌ தொகை கேட்கவே * குடி அரசு' விடைபெற்றுக்‌ கொண்டது. “பார்ப்பனீயத்தின்‌ வலையில்‌ வீழ்ந்து நாம்‌ இன்னதுதான்‌ செய்‌ கிறோம்‌ என்பதை அறியாமலேயே, ஒன்றன்‌ மேல்‌ ஒன்றாகப்‌ புசு புசுத்த அம்புகளைப்‌ பாய்ச்சும்‌ சுயராஜ்ய சர்க்காரே! உங்களுக்குச்‌ சிற்‌ தித்துப்‌ பார்க்கும்‌ போக்கு சிறிதாவது உண்டா? ¢ விடுதலை'க்கு ரூ.1000 என்கி நீர்கள்‌! * திராவிட நாட்டு”க்கு 3000 என்கிறீர்கள்‌. இதற்கு இந்த நாட்டு மக்கள்‌ அளிக்கும்‌ பதில்‌ என்ன? இரண்டணா, நான்கணாவாக எத்தனை ஆயிரம்‌ பாட்டாளிமக்கள்‌ வீசி எறிந்து உங்கள்‌ உத்தரவை எவ்வளவு கேவலமாகத்‌ துளைத்து விட்டிருக்கிறார்கள்‌ என்பதை ஏன்‌ நீங்கள்‌ சிந்திக்கக்‌ கூடாது? இந்த ஜாமீன்‌ கூத்தைக்‌ கண்டு எத்தனை ஆயிரம்‌ ஏழைகள்‌ வயிறெரிந்து “வாழ்த்து'கிறார்கள்‌ என்பதை ஏன்‌ நீங்கள்‌ எண்ணிப்பார்க்கவில்லை?' இதுதான்‌ நாம்‌ உங்களுக்குக்‌ கூறும்‌ புத்திமதி!” (குடி அரசு 0207.1949) *குடி அரசு” 1933 ஆம்‌ ஆண்டில்‌ அடக்குமுறைக்குள்ளாகிய சூழ்நிலையில்‌,“ அடுத்தவாரம்‌ “குடி அரசு” பத்திரிகை வரத்‌ தவறும்‌ பட்சத்‌ தில்‌ வேறு பத்திரிகை வெளிவரும்‌” என்ற அறிவிப்பு 1911933 ஆம்‌ நாளிட்ட * குடிஅரசு” இதழிலேயே வெளிவந்து விடுகிறது. அறிவித்தது போலவே *குடி அரசின்‌ அடுத்த இதழ்‌ வெளிவரவேண்டிய 26.11.1933 ஆம்‌ நாள்‌. *குடி அரசுக்கு பதிலாக * புரட்சி” என்ற பெயரில்‌ இதழ்‌ வெளிவருகிறது. “ குடிஅரசை ஒழிக்கச்‌ செய்த முயற்சியால்‌ * புரட்சி” தோன்ற வேண்டியதா யிற்று. உண்மையிலேயே பாமர மக்களின்‌ - அதாவது பெரும்பான்மையான மக்களின்‌ ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில்‌ இடமில்லையானால்‌, 27.குடி அரசு 1925. கண்டிப்பாகப்‌ புரட்சி தோன்றியேதான்‌ ஆகவேண்டும்‌” என்ற அறிவிப்‌ போடு *புரட்சி” வெற்றிநடைபோடத்‌ தொடங்கியது. “ புரட்சி”யும்‌ அடக்கு முறைக்குத்‌ தப்பவில்லை. ஆசிரியர்‌ பெயர்‌ இல்லாமல்‌ “புரட்சி” வெளி யிட்டதற்காக வெளியீட்டாளர்‌ சா.ரா. கண்ணம்மாள்‌ மீது வழக்கு தொடரப்‌ பட்டு 1000 ரூபாய்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டது. 1934 ஆம்‌ ஆண்டில்‌ மட்டும்‌ 3 வழக்குகள்‌ அடுக்கடுக்காய்‌ தொடரப்பட்டன. அரசால்‌ ஜாமீன்தொகை ரூ.2000 கேட்கப்பட்டது. ரூ.5000-த்துக்கும்‌ மேல்‌ இழப்பை சந்தித்த * புரட்சி” ஏடு 17.061934 இதழோடு நிறுத்தப்படும்‌ நிலைக்கு வந்தது. “புரட்சி” ஏடுவெளிவரும்போதே 15.04.1934 முதல்‌ “பகுத்தறிவு” எனும்‌ நாளிதழைத்‌ தொடங்கினார்‌.ஆனால்‌, அது வெளிவந்தது குறுகிய காலம்தான்‌. 27.051934 ஆம்‌ நாளோடு அந்த நாளேடு நின்று போனது. பெரியார்‌ ஓய வில்லை. புரட்சி நின்றபின்‌ சுமார்‌ 2 மாத இடை வெளி யில்‌ 26.08.1934 முதல்‌ “பகுத்தறிவு” வார இதழ்‌ வெளிவரத்‌ தொடங்கியது.1934 மே 20 இல்‌ பெரியார்‌ சிறையிலிருந்து விடுதலையானார்‌. பகுத்தறிவு வார ஏட்டைத்‌ தொடங்கும்‌ போதே பெரியார்‌ எழுதினார்‌. “முடிவாய்க்‌ கூறுமிடத்து, “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச்‌ செல்லுமேயொழிய எக்காரணம்‌ கொண்டும்‌ மக்கள்‌ பின்‌ நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில்‌ உயிர்‌ வாழாது என்பதேயாகும்‌.” (பகுத்தறிவு - தலையங்கம்‌ - 26.8.1930 06.01.1935 இல்‌ பகுத்தறிவு வார ஏடு நின்றுபோய்‌ விடுகிறது. “பகுத்‌ தறிவு” ஏட்டையும்‌ அரசு விட்டுவைக்கவில்லை. பகுத்தறிவு வார இதழ்‌ நின்று, மாத இதழாகவும்‌ காலணா தினசரிப்‌ பதிப்பாகவும்‌ நடத்த முயன்றபோது பகுத்தறிவு இதழுக்கும்‌ உண்மை விளக்கம்‌ அச்சகத்துக்கும்‌ இரண்டாயிரம்‌. ரூபாய்‌ பிணையத்‌ தொகை கட்டவேண்டும்‌ என்று 29.01.1935 இல்‌ அரசு ஆணை பிறப்பித்தது. பிறகு மாத ஏடாக வெளிவரத்‌ தொடங்கியது. 1935 இல்‌ தொழிலாளர்‌ தினமான மே முதல்‌ நாளிலிருந்து பகுத்தறிவு மாத இதழாக பகுத்தறிவு நூற்பதிப்புக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வெளிவரத்‌ தொடங்கியது. 01.06.1935 முதல்‌ வாரம்‌ இருமுறை இதழாக “விடுதலை” வெளிவரத்‌ தொடங்கியது. அப்போது “குடி அரசும்‌” வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. 29.051937 இதழோடு விடுதலை வாரம்‌ இருமுறை பதிப்பு நிறுத்தப்படுகிறது.01.07:1937 முதல்‌ “விடுதலை” நாளேடாக வெளிவருகிறது. அதற்குமுன்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி சார்பில்‌ “விடுதலை” ஏடு வெளி வந்து பிறகு நின்றுபோய்‌ இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியார்‌ இவ்வளவு அடக்கு முறைகளை எதிர்கொண்டே பத்திரிகைகளை நடத்தியுள்ளார்‌. 28.குடி அரசு1925 குடி அரசு : தோற்றத்தில்‌ நிகழ்ந்த மாற்றங்கள்‌ பெரும்புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின்‌ “குடி அரசு' தொடக்க காலங்‌ களில்‌ பச்சை நிற அட்டையுடனே வெளிவந்தது. எனவே பச்சை அட்டைக்‌ *குடி அரசு” என்ற செல்லப்‌ பெயரையும்‌ வாசகர்கள்‌ சூட்டினர்‌. “குடி அரசு” *கொங்கு நாடு” எனும்‌ பெயர்களில்‌ பெரியார்‌ 19.011923 லேயே பத்திரிக்‌ கைக்கான பதிவை செய்துள்ளார்‌ என்றாலும்‌ சுமார்‌ இரண்டு ஆண்டுகள்‌ கழித்து 02.05.1925 அன்றுதான்‌ முதல்‌ இதழ்‌ வெளிவந்தது. ( 2-5-25 சனிக்கிழமை. இனி ஞாயிறுதோறும்‌ வெளிவரும்‌ -அட்டை) தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்‌ இதழ்‌ வெளிவருகிறது. ஆண்டின்‌ முதல்‌ இதழ்‌, ஆசிரியர்‌ பெயர்‌ மாற்றம்‌ பெற்றவை, மாற்றம்‌ பெற்ற முகப்பு அட்டைகள்‌ அந்தந்தத்‌ தொகுதியில்‌ இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு “மாலை” என்றும்‌, இதழுக்கு “மலர்‌” என்றும்‌ பெயர்‌ சூட்டப்‌ பட்டிருக்கிறது. முதல்‌ பக்க அட்டையில்‌ பாரதியார்‌ பாடல்‌ வரியுடன்‌ தான்‌ இதழ்‌ தொடங்கியது. “எல்லோரும்‌ ஓர்‌ குலம்‌, எல்லோரும்‌ ஓர்‌ இனம்‌” “சாதிகள்‌ இல்லையடி பாப்பா” என்ற பாடல்கள்‌ அட்டையில்‌ இடம்‌ பெற்றுள்ளன. 08111925 இதழ்‌ அட்டை யில்‌ பாரதி பாடல்‌ வரிகள்‌ நீக்கப்பட்டு, பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ்‌ சிறப்பொவ்வா செய்தொழில்‌ வேற்றுமை யான்‌. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய்‌ விடும்‌. என்ற குறள்கள்‌ இடம்பெறுகின்றன.18.04.1926 இதழில்‌ குறள்கள்‌ நீக்கப்பட்டு “மகாத்மா காந்தி வாழ்க! * என்ற முழக்கம்‌ இடம்பெறுகிறது. அதே இதழில்‌ அட்டையில்‌ மாலை, மலருக்கு குறிக்கப்பட்ட தமிழ்‌ எண்கள்‌ நீக்கப்பட்டு நடைமுறையில்‌ உள்ள எண்கள்‌ குறிக்கப்பட்டுள்ளன. பக்கத்தின்‌ எண்கள்‌ மட்டும்‌ தமிழ்‌ எண்களால்‌ குறிக்கப்பட்டுள்ளன. 20111927 இதழில்‌ “மகாத்மா காந்தி வாழ்க!” முழக்கம்‌ போய்‌ “கதர்‌ வாழ்க! ” முழக்கம்‌ வருகிறது. 25121927 இதழ்‌ அட்டையில்‌ எந்தப்‌ படமும்‌ இல்லாமல்‌ வெளிவருகிறது. 25.12.1938 இதழ்வரை இந்நிலையே தொடர்கிறது. * குடி அரசு” எழுத்து வடிவம்‌ மட்டும்‌ மாறி மாறி வருகிறது. ஈரோட்டில்‌ தொடங்கப்பட்டு வெளிவந்த குடி அரசு 16.06:929 நாளிட்ட இதழிலிருந்து 29121929 இதழ்வரை சென்னையிலிருந்து வெளி வருகிறது.16.061829 இதழிலிருந்து பக்கத்தின்‌ எண்களும்‌ நடைமுறை எண்களாக குறிக்கப்படுகின்றன.19011930 முதல்‌ மீண்டும்‌ ஈரோட்டில்‌ இருந்து 29.குழு அரசு 1928. வெளிவரத்‌ தொடங்குகிறது. 19.11.1933 இதழோடு *குடி அரசு' நிறுத்தப்‌ படுகிறது. மீண்டும்‌ 15.01.1935 இல்‌ இருந்து குடி அரசு” வெளிவருகிறது. 13.011935 குடி அரசின்‌ அட்டையில்‌, எப்பொருள்‌ யார்யார்‌ வாய்க்‌ கேட்பினும்‌ - அப்பொருள்‌ மெய்ப்‌ பொருள்‌ காண்பதறிவு எப்பொருள்‌ எத்தன்மைத்‌ தாயினும்‌ - அப்பொருள்‌ மெய்ப்‌ பொருள்‌ காண்பதறிவு என்ற குறள்கள்‌ இடம்பெற்றுள்ளன. 25.12.1938 இதழ்வரை மேற்சுட்டிய குறள்கள்‌ இடம்‌ பெற்றுள்ளன. குடி அரசு : ஆசிரியர்‌, பதிப்பாளர்‌ மாற்றங்கள்‌ *குடி அரசு” முதல்‌ இதழின்‌ ஆசிரியர்கள்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌, வா.மு.தங்கப்பெருமாள்‌ பிள்ளை ஆகியோர்‌ஆவர்‌. 07.06.1925 இதழில்‌ வா.மு.தங்கப்பெருமாள்‌ பிள்ளையின்‌ “சாதி”ப்‌ பட்டம்‌ நீங்குகிறது. 26.071925 இதழிலிருந்து ஈவெ.ராமசாமி நாயக்கர்‌ மட்டுமே ஆசிரியராகிறார்‌. 25121927 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌ பெயரிலுள்ள *சாதி”ப்பட்டம்‌ நீங்குகிறது. 1931 இல்‌ பெரியார்‌ உலகப்பயணம்‌ மேற்கொண்டதால்‌ 0111931 முதல்‌ சாமி.சிதம்பரனார்‌ ஆசிரியராகப்‌ பொறுப்பு ஏற்கிறார்‌. பயணம்‌ முடிந்து ஈரோடு திரும்பும்‌ வரையில்‌ அப்பொறுப்பில்‌ இருக்கிறார்‌. 2911931 குடிஅரசு முதல்‌ 19111933 குடி அரசு வரை அட்டையில்‌ ஆசிரியர்‌ பெயர்‌ இல்லாமல்‌ இதழ்‌ வெளிவருகிறது.19.11953 இதழோடு இதழ்‌ தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும்‌ 13011935 முதல்‌ வெளிவரத்‌ தொடங்குகிறது. அப்போது ஆசிரியர்‌. ஈவெகிருஷ்ணசாமி.25.12:1938 வரை அவரே ஆசிரியராக நீடிக்கிறார்‌. முதல்‌ இதழின்‌ பதிப்பாளரான க. அப்பையா 20.09.1925 இதழ்வரை: பதிப்பாளராக இருக்கிறார்‌. 27.09.1925 முதல்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்‌ 18.04.1926 முதல்‌ சா. ராமசாமி நாயக்கரும்‌ பிறகு 09.01.1927 முதல்‌ ஈ.வெ.ரா. நாகம்மாளும்‌ பதிப்பாளர்‌ ஆகிறார்கள்‌. குடிஅரசு அலுவலகம்‌ சென்னைக்கு மாறியது முதல்‌ 16.06.1929 இதழில்‌ இருந்து ஜே.எஸ்‌.கண்ணப்பர்‌ பதிப்பாளர்‌. மீண்டும்‌ ஈரோட்டுக்கு அலுவலகம்‌ மாறியதும்‌ 19.011930 இதழில்‌ இருந்து ஈவெரா.நாகம்மாள்‌ பதிப்பாளர்‌ ஆகிறார்‌. அவரது மறைவு வரை அவர்தான்‌ பதிப்பாளர்‌.16.07:1933 இதழ்‌ முதல்‌ சா.ரா.கண்ணம்மாள்‌ (பெரியாரின்‌ சகோதரி பதிப்பாளர்‌ ஆகிறார்‌. 19.71:1933 வரை இவரே நீடிக்கிறார்‌. 13.011935 இதழில்‌ இருந்து ஆசிரியர்‌ மற்றும்‌ பதிப்பாளராக ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரியாரின்‌. சகோதரர்‌! வருகிறார்‌. “குடி அரசு” இடையில்‌ நிறுத்தப்பட்டதைத்‌ தொடர்ந்து வெளிவந்த. “புரட்சி” வார ஏட்டுக்கு 2611933 லிருந்து 28.011934 வரை சா.ரா.கண்ணம்மாள்‌ 30.குடி அரசு1925 அவர்களே பதிப்பாளராகத்‌ தொடர்கிறார்‌. முதல்‌ நான்கு புரட்சி” இதழ்கள்‌ அட்டையில்‌ ஆசிரியர்‌ பெயர்‌ இல்லாமலேயே வெளி வருகிறது. 24121933 ஒரு இதழில்‌ மட்டும்‌ ஆசிரியர்‌ ஈ.வெ.ராமசாமி. 31.12.1934 முதல்‌ ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆசிரியராகிறார்‌. 04.02.1934 முதல்‌ 17.06.1934 வரை: ஈவெ.கிருஷ்ணசாமி பதிப்பாளராகிறார்‌. பெரியார்‌ தொடங்கிய “பகுத்தறிவு” 26.081934 முதல்‌ வார இதழாகவும்‌, பிறகு மே 1935 முதல்‌ மாத இதழாகவும்‌ வெளிவருகிறது. பகுத்தறிவு வார இதழுக்கு ஆசிரியராகவும்‌ பதிப்பாளரா கவும்‌ ஈ.வெ.கிருஷ்ணசாமியே நீடிக்கிறார்‌. பகுத்தறிவு மாத இதழுக்கு பொறுப்‌ பாசிரியராக ஈ.வெ.கிருஷ்ணசாமியும்‌ முதன்மை ஆசிரியராக பண்டிதர்‌ சாமி. சிதம்பரனாரும்‌ இருக்கின்றனர்‌. பதிப்பாளர்‌ பொறுப்பில்‌ ஈ.வெ. கிருஷ்ண: சாமியே நீடிக்கிறார்‌. தலையங்கப்‌ பக்கம்‌ மாற்றங்கள்‌ தொடக்கத்தில்‌ தலையங்கங்கள்‌ இதழ்களின்‌ நடுப்பக்கத்தில்‌ வெளிவந்‌ துள்ளன. 10.021935 (மாலை 9 - மலர்‌ 27) முதல்‌ 09.06.1935 (மாலை 9 - மலர்‌. 40) முடிய உள்ள குடிஅரசு இதழ்களில்‌ மூன்றாம்‌ பக்கத்தில்‌ தலையங்கங்கள்‌. வெளி வந்துள்ளன. 02.05.1925 மாலை 1- மலர்‌ ) முதல்‌ இதழ்‌ தலையங்கப்‌ பக்கத்தில்‌ கை. இராட்டினமும்‌ பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ்‌ சிறப்பொவ்வா செய்தொழில்‌ வேற்றுமை யான்‌. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய்‌ விடும்‌. வேலன்று வென்றி தருவது மன்னவன்‌ கோலதூஉங்‌ கோடா தெனின்‌ (குறள்‌) என்ற மூன்று குறட்பாக்களும்‌ இடம்‌ பெற்றுள்ளன. 23.08.1925 இதழி லிருந்து குறள்கள்‌ எடுக்கப்பட்டு கை இராட்டினத்துடன்‌ அனைத்துயிர்‌ ஒன்றென்‌ றெண்ணி அரும்பசி யெவற்கும்‌ ஆற்றி மனத்துளே பேதா பேதம்‌ வஞ்சம்‌ பொய்‌ களவு சூது சினத்தையும்‌ தவிர்ப்பா யாகில்‌ செய்தவம்‌ வேறொன்‌ றுண்டோ உனக்கிது உறுதியான உபதேசம்‌ ஆகும்‌ தானே. 31.குடி அரசு 1925. என்ற பாடல்‌ இடம்‌ பெறுகிறது. 08.05.1927 இதழில்‌ “அனைத்துயிர்‌ ஒன்றென்றெண்ணி” எடுக்கப்பட்டு கை இராட்டினம்‌ மட்டுமே இடம்‌ பெறுகிறது. 13111927 இதழில்‌ மீண்டும்‌ “அனைத்துயிர்‌ ஒன்றென்றெண்ணி” பாடல்‌ இடம்‌ பெறுகிறது. அவ்வப்போது “அனைத்துயிர்‌ ஒன்றென்றெண்ணி” என்ற பாடல்‌ மட்டும்‌ இடம்‌ பெற்றும்‌, கை இராட்டினம்‌ மட்டும்‌ இடம்‌ பெற்றும்‌, இராட்டினம்‌ - பாடல்‌ இரண்டும்‌ இல்லாமலும்‌ இதழ்கள்‌ வெளி வந்துள்ளன. 10.08.1930 குடி அரசு இதழிலிருந்து “அனைத்துயிர்‌ ஒன்றென்‌ றெண்ணி” பாடலும்‌ கை இராட்டினமும்‌ தலையங்கப்‌ பக்கத்தில்‌ இடம்‌ பெறவில்லை.25121938 இதழ்‌ வரை இந்நிலை தொடர்கிறது. வெளிவந்துள்ள இதழ்கள்‌ (அ) குடி அரசு (வார இதழ்‌) மாலை - 1 02.05.1925 (மாலை 1 - மலர்‌ 1) முதல்‌ 25.04.1926 மாலை 1- மலர்‌ 48) முடிய 48 வாரம்‌ மட்டுமே இதழ்‌ வெளிவந்துள்ளது. 1.04101925 இல்‌ வெளிவரவேண்டிய இதழ்‌ அச்சுக்கூடம்‌ மாற்றியக்‌ காரணத்தால்‌ வெளிவரவில்லை. 2.2102.1926 இல்‌ வெளிவரவேண்டிய இதழ்‌ அச்சு இயந்திரம்‌ ஒடிந்து போனதால்‌ வெளிவரவில்லை. 3.04.04.1926 மற்றும்‌ 11.04.1926 ஆகிய நாள்களில்‌ வெளிவரவேண்டிய இதழ்கள்‌ புதிய அச்சுக்கூடம்‌ ஏற்பாடு செய்வதில்‌ ஏற்பட்ட கால நீட்டத்‌ தால்‌ வெளிவரவில்லை. மாலை - 2 02.05.1926 (மாலை 2 - மலர்‌ 1) முதல்‌ 24.04.1927 மாலை 2 -மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. மாலை - 3 01.05.1927 (மாலை 3 - மலர்‌ 1) முதல்‌ 22.04.1928 (மாலை 3- மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. மாலை - 4 29.04.1928 (மாலை 4 -மலர்‌ 1) முதல்‌ 28.04.1929 (மாலை 4-மலர்‌ 53) முடிய 53 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. 32. குடி அரசு1925 மாலை - 5 05.05.1929 (மாலை 5 - மலர்‌1) முதல்‌ 27.041930 ( மாலை 5 - மலர்‌ 48) முடிய 48 வாரம்‌ மட்டுமே இதழ்‌ வெளிவந்துள்ளது. 1.05.011930 மற்றும்‌ 12.011930 ஆகிய நாள்களில்‌ வெளிவரவேண்டிய இதழ்கள்‌ “குடிஅரசு அலுவலகம்‌ சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப்‌ பட்டதால்‌” வெளிவரவில்லை. 2.26.011930 இல்‌ வெளிவரவேண்டிய இதழ்‌ “குடி அரசு அலுவலகம்‌ சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப்பட்டு ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பதிவு (டிக்ளரேஷன்‌! ஆணை பெறுவதில்‌ ஏற்பட்ட கால நீட்டத்தால்‌” வெளி வரவில்லை... 04.05.1930 (மாலை 6 - மலர்‌ 1) முதல்‌ 26.04.1931 மாலை 6 -மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. மாலை - 7 03.05.1931 (மாலை 7 - மலர்‌ ) முதல்‌ 24.041932 (மாலை 7- மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. 01051932 மாலை 8 - மலர்‌ 1) முதல்‌ 23.04.1933 (மாலை 8 -மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. மாலை - 9 30.04.1933 (மாலை 9 -மலர்‌ 1) முதல்‌ 11.08.1935 மாலை 9 - மலர்‌ 53) முடிய 53 வாரமும்‌ இதழ்‌ வெளிவந்துள்ளது. 1.21051933 முதல்‌ 09.07.1833 முடிய எட்டு வாரம்‌ திரு. ஈவெரா. நாகம்‌ மாள்‌ மறைவுக்குப்பின்‌ பதிவு (டிக்ளரேசன்‌) மாற்ற வேண்டியதில்‌ ஏற்பட்ட கால நீட்டத்தால்‌ இதழ்கள்‌ வெளிவரவில்லை. 2.19.111933 இதழோடு குடி அரசு நிறுத்தப்பட்டு 13.011935 இல்‌ தான்‌ குடிஅரசு மீண்டும்‌ வெளிவருகிறது. மாலை - 10 *குடி அரசு” ஒன்பதாவதாண்டு மாலை மாலை 9) க்குப்பின்‌ பதினோ ராவதாண்டு பதினோராவது மாலையாக (மாலை 1 வெளிவருகிறது.பத்தாவது 33.குடி அரசு 1925. ஆண்டில்‌ “குடி அரசு' வெளிவராத நிலையில்‌ அக்காலத்தில்‌ புரட்சி, பகுத்தறிவு இதழ்கள்‌ வெளிவந்ததை பத்தாவதாண்டு பத்தாவது மாலையாக வைத்துக்‌ கொண்டு பதினொராவது மாலை வெளிவருகிறது. மாலை - 11 18.08.1935 மாலை 11 - மலர்‌ 1) முதல்‌ 09.08.1936 மாலை 11 - மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவருகிறது. மாலை - 12 16.081936 மாலை 12 - மலர்‌ 1) முதல்‌ 08.08.1937 மாலை 12 - மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவருகிறது. மாலை - 13 15.08.1937 மாலை 13 - மலர்‌ 1 முதல்‌ 14.08.1938 (மாலை 13 - மலர்‌ 52) முடிய 52 வாரமும்‌ இதழ்‌ வெளிவருகிறது. 28111957 இல்‌ வெளிவரவேண்டிய இதழ்‌ - விடுதலை நாளேட்டுக்கு புதிய அச்சு இயந்திரம்‌ பூட்டப்படுவதால்‌ வெளிவரவில்லை. மாலை - 14 21.08.1938 மாலை 14 - மலர்‌ 1) முதல்‌ 25121938 (மாலை 14 - மலர்‌ 19) முடிய 19 வாரமும்‌ இதழ்‌ வெளிவருகிறது. (ஆ) புரட்சி (வார இதழ்‌) மாலை - 1 26.11.1933 (மாலை 1- மலர்‌ 1) முதல்‌ 17.06.1934 (மாலை 1- மலர்‌ 30) முடிய 30 வாரம்‌ மட்டுமே இதழ்‌ வெளிவருகிறது.17.061934 இதழோடு “புரட்சி” நின்றுவிடுகிறது. (இ) பகுத்தறிவு (வார இதழ்‌) மாலை - 1 26.08.1934 (மாலை 1- மலர்‌ 1) முதல்‌ 06.01.1935 (மாலை 1- மலர்‌ 20) முடிய 20 வாரம்‌ இதழ்‌ வெளிவருகிறது. 06.01.1935 இதழோடு “பகுத்தறிவு” நின்றுவிடுகிறது. 34.குடி 561925 (ஈ) பகுத்தறிவு (மாத இதழ்‌) 1935 மே மாதம்‌ முதல்‌ தேதியிலிருந்து “பகுத்தறிவு” மாத இதழாக வெளிவருகிறது. 1935 மே 1 (மலர்‌ 1- இதழ்‌ 1) முதல்‌ 1938 திசம்பர்‌ 1 (மலர்‌4 - இதழ்‌ 8) முடிய எல்லா மாதமும்‌ 44 இதழ்‌ வெளிவந்துள்ளது. 1925 - 1938 வெளிவந்துள்ள இதழ்கள்‌ மொத்தம்‌ குடிஅரசு - 637 புரட்சி - 30 பகுத்தறிவு வா) - 20 பகுத்தறிவு மா? - மொத்தம்‌ - 731 கிடைக்கப்பெறாத இதழ்கள்‌ 1.10.021925 (மாலை 1 - மலர்‌ 2) இரண்டாவது இதழின்‌ முக்கிய ஆறு பக்கங்கள்‌ கிடைக்கவில்லை. 2. 28.03.1926 (மாலை 1- மலர்‌ 46) இதழின்‌ இரண்டு பக்கம்‌ மட்டுமே கிடைத்துள்ளது. 3.27.041930 மாலை - 5 மலர்‌ 48) இதழின்‌ முக்கிய இரண்டு பக்கங்கள்‌ கிடைக்கவில்லை. முடிவாய்‌... *குடிஅரசு' தொடங்கி 83 ஆண்டுகள்‌ உருண்டோடி விட்டன.பத்தா யிரத்துக்கும்‌ அதிகமான “குடி அரசு” இதழ்கள்‌ வாரந்தோறும்‌ வெளிவந்து தமிழகத்தில்‌ அதிர்ச்சி அலைகளை உருவாக்கின. சமூக வரலாற்றில்‌ விடி வெள்ளியாய்‌ வந்து உதித்த அந்த வரலாற்றுப்‌ பெட்டகத்தை காலவரிசைப்படி தொகுப்பதற்கு நான்கு தலைமுறை இடைவெளி தேவைப்பட்டுள்ளது. இந்தக்‌ கனவு நிறைவேறுமா என்ற கவலையுடன்‌ தமிழின உணர்வாளர்கள்‌, பெரியாரியலாளர்கள்‌ எழுப்பி வந்த கேள்விக்கு இப்போதுதான்‌ விடை கிடைத்துள்ளது. எத்தனையோ தடைகள்‌, முட்டுக்கட்டைகள்‌, மிரட்டல்களைக்‌ 35.குடி அரசு 1925. கடந்து பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ களத்தில்‌ இறங்கியது. குடி அரசு இதழ்‌ களை தமிழகம்‌ முழுதும்‌ தேடத்‌ தொடங்கியது. இடைவிடா முயற்சிக்குப்‌ பின்னும்‌ எல்லா இதழ்களும்‌ கிடைக்கப்பெறவில்லையே என்ற வேதனை நமக்கு உண்டு. எவ்வளவோ முயற்சித்தும்‌ கிடைக்க பெறாத மூன்று இதழ்‌ களின்‌ சில பக்கங்களைத்‌ தவிர அனைத்து குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்தும்‌ பெரியாரின்‌ கருத்துக்‌ கருஷலங்களை முழுமையாகத்‌ திரட்டி தொகுத்து நூலாக்கி எதிர்கால இளம்‌ தலைமுறையிடம்‌ பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ ஒப்படைத்து இவ்‌ வரலாற்றுக்‌ உமையை ஆற்றியதில்‌ பெரும்‌ மனநிறைவு கொள்கிறது. - தொகுப்புக்குழு 36.குடி அரசு1925 முதற்‌ பதிப்பிண்‌ ஊவாணியிட்டாணர்‌ உரை 1925 மே திங்களில்‌ பெரியார்‌ “குடி அரசு” இதழை தனது நண்பர்‌ ஈரோடு வா.மு.தங்கப்பெருமாள்பிள்ளையையும்‌ ஆசிரியராக உடன்‌ இணைத்துக்கொண்டு தொடங்குகிறார்‌. உடல்‌ நலம்‌ சீர்கெட்ட வா.முத9.71925 இதழுடன்‌ விலகிட பெரியார்‌ மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்‌. 251925 இல்‌ திருப்பாதிரிப்புலியூர்‌ ஞானியார்‌ அடிகளைக்கொண்டு “குடி அரசு” இதழை வெளியிட்ட பெரியார்‌, சோவியத்‌ புரட்சி நாளான நவம்பர்‌ 7 ஆம்‌ நாளைத்‌ தேர்ந்தெடுத்து 1928 இல்‌, *ரிவோல்ட்‌” ( Revolt) என்ற ஆங்கில வார ஏட்டைத்‌ தொடங்கி 55 இதழ்கள்‌ வரையும்‌ வெளி யிட்டுள்ளார்‌. 20111933 இல்‌ “புரட்சி” என்ற வார ஏட்டைத்‌ தொடங்கி சிறிது காலம்‌ நடத்தியுள்ளார்‌. அதன்பின்‌ 15.31934 இல்‌“பகுத்தறிவு' என்ற நாளேட்‌ டைத்‌ தொடங்கி இரண்டு மாத காலத்தில்‌ நிறுத்தி, அதையே தொடர்ந்து வார ஏடாகவும்‌ 151935 முதல்‌ மாத ஏடாகவும்‌ ஏறத்தாழ நான்கு ஆண்டுகள்‌ நடத்தியுள்ளார்‌. 161935 இல்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ என்னும்‌ நீதிக்கட்சியால்‌ வாரம்‌ இருமுறை ஏடாகத்‌ துவங்கப்பட்ட “விடுதலை” இரண்‌: டாண்டுகள்‌ கழித்து நாளேடாக மாற்றம்‌ பெற்று இன்று வரை வெளிவருகிறது. 1970 ஜனவரியில்‌ மாத ஏடாகத்‌ தொடங்கப்பட்ட “உண்மை” ஏடு இன்றுவரை: மாதம்‌ இருமுறை ஏடாக வெளிவருகிறது.1971 செப்டம்பரில்‌ துவங்கப்பட்ட "ட Modern Rationalist’ என்ற ஆங்கில மாத ஏடும்‌ இன்று வரை வெளி வருகிறது. இவ்விதழ்களில்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்கது குடி அரசு” ஆகும்‌. தமிழ்‌ இதழியல்‌ வரலாற்றில்‌ பெரும்‌ சிந்தனைப்‌ புரட்சியையும்‌, தமிழ்நாட்டு மக்கள்‌ வாழ்வியலில்‌ பெரும்‌ தாக்கத்தையும்‌ உண்டாக்கிய பெருமை “குடி அரசுக்கு உண்டு. குடி அரசு ஏடு துவங்கப்பட்டபோது எல்லோரும்‌ ஓர்‌ குலம்‌ எல்லோரும்‌ ஓர்‌ இனம்‌”, “சாதிகள்‌ இல்லையடி பாப்பா” போன்ற பாரதி பாடல்களும்‌, தலையங்கப்‌ பகுதியில்‌ “பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌”, “ஒழுக்கமுடைமை குடிமை,” “வேல்‌அன்று வென்றி தருவது” ஆகிய குறள்களும்‌, 37.குடி அரசு1925. அனைத்துயிர்‌ ஒன்றென்‌ றெண்ணி அரும்பசி எவர்க்கும்‌ ஆற்றி..... என்ற பாடலும்‌ வெளியிட்டது.மக்கள்‌ அனைவரும்‌ சமம்‌ என்னும்‌ கோட்பாட்டை அவ்வேடு வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. முகப்பின்‌ ஒரு பக்கத்தில்‌ மசூதி, மாதா கோயில்‌, இந்துக்கோயில்‌ மூன்றும்‌ பொறிக்கப்‌ பட்டிருந்தாலும்‌, 'குடி அரசு” துவங்கிய சில இதழ்களிலேயே மத மூட நம்பிக்கைகளை விமர்சனம்‌ செய்யும்‌ பகுத்தறிவுக்‌ கட்டுரைகள்‌ இடம்பெறத்‌ துவங்கியுள்ளன. ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய குடி அரசு” இதழ்கள்‌ நமக்கு முழுமையாகக்‌ கிடைப்பது அரிதாகவே உள்ளது. அவை அச்சேறி வெளிவந்தால்தான்‌ பெரியாரைச்‌ சரியாகப்‌ புரிந்து கொள்ள முயல்வோ ருக்கும்‌, பெரியார்‌ ஆய்வாளர்களுக்கும்‌, பெரியார்‌ ஆர்வலர்களுக்கும்‌ பெரியாரின்‌ உருமலர்ச்சி - வளர்ச்சியை மட்டுமின்றி, அன்றைய சமுதாய, அரசியல்‌ சிக்கல்களையும்‌ புரிந்துகொள்ளப்‌ பேருதவியாக இருக்கும்‌.1983 இல்‌ பல பெரியார்‌ பற்றாளர்கள்‌ ஒரு குழுவாக இணைந்து, தொடர்ந்து மூன்று கோடைவிடுமுறைகளில்‌ பணியாற்றி, “குடி அரசு” இதழ்களில்‌ இருந்து, பெரியார்‌ எழுதியதாக அவர்கள்‌ கருதிய கட்டுரைகள்‌, இதழில்‌ வெளிவந்த பெரியாரின்‌ சொற்பொழிவுகள்‌, இரங்கலுரைகள்‌ ஆகியவற்றைத்‌ தொகுத்து கையெழுத்துபடி எடுத்து, திராவிடர்கழகத்‌ தலைமையிடம்‌ ஒப்படைத்துள்‌. ளனர்‌. ( காண்க : பிற்சேர்க்கை 1,11, 1) ஆனால்‌, என்ன காரணத்தாலோ அவை இதுவரை அச்சேற்றப்‌ படாம லேயே கிடந்து போய்விட்டது. இந்நிலையில்‌ தொகுக்கப்பட்ட அக்கட்டுரைகளின்‌ படிகள்‌ எங்களுக்‌ குக்‌ கிடைத்தன. கிடைத்த கட்டுரைகளில்‌ சில முழுமையாக இல்லாதிருந்‌ ததையும்‌ நாங்கள்‌ உணர்ந்தோம்‌. எப்படி இருப்பினும்‌ அவற்றை அச்சு வடிவில்‌ வெளிக்கொணர வேண்டும்‌ என்ற ஆவல்‌ எங்களிடம்‌ மேலோங்கி நின்றது. எழுதியவர்‌ பெயர்‌ குறிப்பிடாமல்‌ எழுதப்பட்டிருந்த அக்கட்டுரை களில்‌ எவை எவை பெரியாரால்‌ எழுதப்பட்டவையாக இருக்கலாம்‌ என்பதை நாங்களாகவே எழுத்து நடை, வாதிடும்‌ முறை, வெளிப்படும்‌ உணர்வு ஆகிய வற்றை வைத்து ஊகித்து, தொகுத்து எழுதப்பட்டிருந்தவற்றில்‌ சிலவற்றை நீக்கி விட்டோம்‌. மற்றபடி தொகுத்து எழுதியிருந்தவற்றை அப்படியே அச்சேற்றியதன்றி நாங்கள்‌ எவ்வித ஒப்பீடும்‌, ஆய்வும்‌ , தேடலும்‌ செய்யவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்கிறோம்‌. “அரசியல்‌ நிலை” என்ற தலைப்பில்‌ எழுதப்பட்டுள்ள மூன்று தலையங்‌ கங்கள்‌, “ஸ்ரீமான்‌ பி.தியாகராயச்‌ செட்டியார்‌ மரணம்‌” என்ற இரங்கல்‌ செய்தி 38.குடி அரசு1925 ஆகியவற்றின்‌ எழுத்து நடையையும்‌, பொருளடக்கத்தையும்‌ கருதிப்பார்க்‌ கிறபோது யார்‌ எழுதியது என்பதில்‌ அய்யமுள்ளது. மேலும்‌ “குடி அரசு” இதழ்‌ தொடக்க விழாவில்‌ திருப்பாதிரிப்புலியூர்‌ ஞானியார்‌ அடிகள்‌ ஆற்றிய உரையையும்‌, இதழியல்‌ அறநெறியைச்‌ சுட்டிக்காட்ட, சுதேசமித்திரனுக்கு எழுதி அதில்‌ வெளியிடப்படாத கோவை திரு.ஏ.சண்முக சுந்தரம்பிள்ளை என்பாரின்‌ மறுப்புக்‌ கடிதத்தையும்‌ படிப்போர்‌ அறியவெனத்‌ தந்துள்ளோம்‌. எனவே, தொகுப்பு முழுமையான தொகுப்பு என்று எங்களால்‌ உறுதிபடக்கூறமுடியாவிட்டாலும்‌, எங்களின்‌ இம்முயற்சி ஒரு முழுமையான தொகுப்பில்‌ முடியாதா என்ற ஏக்கமும்‌, முடியவேண்டும்‌ என்ற ஆசையும்‌, முடியும்‌ என்ற நம்பிக்கையும்‌ எங்களுக்கு உறுதியாக உண்டு. ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ்‌ நூல்களெல்லாம்‌ அழிந்‌ தொழி வதைக்‌ கண்டு அவற்றை அச்சு வடிவில்‌ கொண்டுவர வாழ்நாள்‌ முழுவ தையும்‌ ஒப்படைத்துக்கொண்டவரும்‌, உவே.சாமிநாத அய்யர்‌ பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே தமிழிலக்கியப்‌ பதிப்புகளை வெளிக்‌ கொண்டு வரத்‌ தொடங்கிவிட்டவருமான அறிஞர்‌ சி.வை. தாமோதரனார்‌. “ நல்ல தமிழ்‌ நூல்களுக்கு வந்த விதியையும்‌, கையெழுத்துப்‌ பிரதிகளின்‌ கதியையும்‌ அவை அடைந்திருக்கும்‌ ஸ்திதியையும்‌ பார்த்துச்‌ சகிக்க முடியாமையொன்றே என்னை இத்தொழிலில்‌ வலிப்பது” _... ஆதலால்‌, பண்டிதர்‌, கவிராஜபண்டிதர்‌, மகாவித்துவான்‌, புலவர்‌ என்றின்ன பெரும்‌ பட்டச்சுமையைத்‌ தலைமேலேற்றிக்‌ கொள்ளாது இன்னும்‌ பலகால்‌ தமிழ்‌ படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும்‌ என்‌ போலியரே இதில்‌ கையிடுவது பேரவசியமாயிற்று”என்று ஓர்‌ பதிப்புரையில்‌ கூறியிருப்‌ பதுவும்‌, தமிழர்‌ உரிமை மீட்பர்‌ பெரியார்‌ “....... அந்தத்‌ தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ. இந்த நாட்டில்‌ அந்தப்பணி செய்ய யாரும்‌ வராததினால்‌, நான்‌ அதை மேற்போட்டுக்‌ கொண்டு தொண்‌: டாற்றி வருகிறேன்‌...” என்று கூறுவது போலவேதான்‌ எங்கள்‌ முயற்சியும்‌ என்பதைத்தான்‌ இந்த நிலையில்‌ நாங்கள்‌ கூறிக்கொள்ள முடியும்‌. 1925 நவம்பர்‌ இறுதிவரை பெரியார்‌ காங்கிரஸ்‌ கட்சியில்‌ - தமிழ்நாடு காங்கிரஸ்‌ கட்சியின்‌ செயலாளராக இருந்தார்‌ என்பதை மனதில்‌ நிறுத்திக்‌ கொண்டு படித்தால்‌ பெரியாரை இன்னும்‌ சரியாகப்‌ புரிந்துகொள்ளமுடியும்‌. “குடிஅரசு” ஏட்டிலிருந்து இவற்றை எடுத்து எழுத தங்களது மூன்று கோடை விடுமுறைகளை எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல்‌ செலவிட்டு பெரியார்‌ சிந்தனைகளை வெளிக்கொணர்வது மட்டுமே தங்கள்‌ எதிர்பார்ப்பு என்ற உயரிய நோக்கத்தோடு உழைத்த அந்த உயர்ந்த உள்ளங்களுக்கும்‌, 39.குடி அரசு 1925. (காண்க : பிற்சேர்க்கை) எடுத்து எழுதப்பட்ட “குடி அரசு” கட்டுரைகளின்‌ படியை, அணுகிக்கேட்டவுடன்‌ தயங்காது எங்களுக்குக்‌ கொடுத்துதவிய தஞ்சை வழக்குரைஞர்‌ தோழர்‌ இரா.பாண்டியன்‌ அவர்களுக்கும்‌, கணினி யாக்கம்‌ செய்துகொடுத்த சின்னாளப்பட்டி தோழர்‌ தி. தாமரைக்கண்ணன்‌ அவர்களுக்கும்‌, கட்டுரைகளை வகைப்படுத்தி முழுவடிவமாக்கியும்‌, மெய்ப்பு பார்த்து பிழை திருத்தியும்‌ இரவுபகல்‌ பாராது உழைத்துதவிய மேட்டூர்‌ தோழர்‌ ப. தமிழ்க்குரிசில்‌ அவர்களுக்கும்‌, அவருக்குதவிய மேட்டூர்‌. கழகத்‌ தோழர்களுக்கும்‌, மேலட்டையை வடிவமைத்துக்‌ கொடுத்த தோழர்‌ யாக்கன்‌ அவர்களுக்கும்‌, அழகுற அச்சிட்டுக்கொடுத்த மதுரை அன்பு அச்சகத்தாருக்கும்‌ எங்கள்‌ மனமார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்‌ கிறோம்‌. இதையொத்த தொகுப்புகளைத்‌ தொடர்ந்து வெளியிடத்‌ திட்டமிட்‌ டுள்ள எங்களுக்குப்‌ பெரியாரின்‌ எழுத்துக்கள்‌, சொற்பொழிவு ஒலிப்‌ பேழைகள்‌ உள்ளவர்கள்‌ அனுப்பியும்‌, குறைகளைச்‌ சுட்டியும்‌, நூல்களை: வாங்கியும்‌ ஊக்குவிக்குமாறு அன்புடன்‌ வேண்டுகிறோம்‌. தோழமையுடன்‌, நாள்‌ : 29.11.2003 கொளத்தூர்‌ தா. செ. மணி தலைவர்‌, தந்தை பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 40.குடி 2561925 கும அரசு தோற்றம்‌ ககாண்ட காலம்‌ 1925 மே மாதம்‌ டிசம்பர்‌ வரை எட்டு மாதங்கள்‌ அந்த இதழ்‌ பதிவு செய்துள்ள பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ அடங்கிய தொகுப்புதான்‌ உங்கள்‌. கரங்களில்‌ தவழ்கிறது. இதே போன்று ஒரு தொகுதியை 2003 ஆம்‌ ஆண்டிலேயே பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ சேலத்தில்‌ நடத்திய தமிழர்‌ வழி பாட்டுரிமை மாநாட்டில்‌ வெளியிட்டதைக்‌ குறிப்பிட விரும்புகிறோம்‌. பெரியாரின்‌ எழுத்து பேச்சுக்களை காலவரிசைப்படி தொகுத்து வெளிச்‌ சத்துக்குக்‌ கொண்டுவந்து விட வேண்டும்‌ என்ற எமது பெரும்‌ வேட்கையில்‌ எழுந்த முதல்‌ முயற்சி என்றே கூறலாம்‌. தொடர்ந்து 2005 ஆம்‌ ஆண்டில்‌ 1026 ஆம்‌ ஆண்டு குடிஅரசு பதிவுசெய்த பெரியாரின்‌ எழுத்து, பேச்சுகளை இரண்டு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்தோம்‌. அதன்‌ பிறகே மற்றொரு புதிய சிந்தனைக்கு வந்தோம்‌. ஒவ்வொரு ஆண்டாக அவ்வப்போது தொகுதி களை வெளியிடுவதை விட ஒரு காலகட்டத்தை நிர்ணயித்து பெரியாரின்‌ எழுத்துப்‌ பேச்சுகளைத்‌ தொகுத்து காலவரிசைப்படி ஒரே நேரத்தில்‌ வெளி யிடலாம்‌ என்பது தான்‌ அந்த சிந்தனை. அதன்படி சுயமரியாதைக்‌ கொள்கை: களைப்‌ பரப்புவதில்‌ பெரியார்‌ முழுவீச்சில்‌ களமிறங்கிய 1925 முதல்‌ 1938 வரையிலான காலத்தைத்‌ தேர்வு செய்தோம்‌. இந்தப்பணியின்‌ சுமை எங்களுக்குத்‌ தெரிந்தே இருந்தது. ஆயினும்‌ கடமையில்‌ இறங்கினோம்‌. வரலாற்றின்‌ போக்கினைத்‌ திருப்பிய ஒரு தலைவருக்கு முறையான வரலாற்றுப்‌ பதிவுகளே இல்லாத அவல - சோகச்‌ சூழலில்‌ எங்களின்‌ தேடுதல்‌ முயற்சிகள்‌ தொடங்கின. எங்கெங்கே எவரிட மெல்லாம்‌ இந்த வரலாற்றுப்‌ புதையல்‌ புதைந்திருக்கிறதென்பதைக்‌ கண்டறிய முயற்சித்த போது நம்பிக்கை ஒளி பளிச்சிட்டது. உண்மைப்‌ பெரியாரியலா ளர்கள்‌ பலரும்‌ காலம்‌ காலமாகப்‌ பாதுகாத்து வைத்திருந்த அந்த அறிவுச்‌ சொத்துக்களை ஆர்வமுடன்‌ கையளித்து எங்கள்‌ பணிக்கு ஊக்கமும்‌ உற்சாகமும்‌ அளித்தபோது நாங்கள்‌ அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சேலத்தில்‌ 2003 இல்‌ நாங்கள்‌ வெளியிட்ட குடி அரசு முதல்‌ தொகுப்‌ பில்‌ இடம்‌ பெற்றிராத பல கட்டுரைகள்‌ இந்தத்‌ தொகுப்பில்‌ இணைக்கப்பட்ட ருப்பதைச்‌ சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்‌. எங்கள்‌ முதல்‌ முயற்சியில்‌ இடம்பெற்ற கட்டுரைகள்‌ அனைத்தும்‌ 1980 களில்‌, பெரியாரியல்‌ சிந்தனை 41.குடி அரசு 1925. யாளர்கள்‌ பலரின்‌ கூட்டுழைப்பால்‌ அவர்களுக்கு அப்போது கிடைத்த குடி அரசு இதழ்களிலிருந்து மட்டும்‌ தொகுத்தவைதான்‌. அதன்பிறகு தேடி சேகரிக்கப்பட்ட பல குடி அரசு இதழ்களிலிருந்து கிடைத்த கட்டுரைகளை: இந்தத்‌ தொகுதியில்‌ இணைத்திருப்பதால்‌ இதன்‌ பக்கங்களும்‌ கட்டுரைகளும்‌ அதிகரித்துள்ளன. 2003 இல்‌ வெளியிட்ட முதற்‌ பதிப்பின்‌ பக்கங்கள்‌ 248 இப்போது உங்கள்‌ கரங்களில்‌ தவழும்‌ இந்தத்‌ தொகுப்பின்‌ பக்கங்கள்‌ 488 விடுபடுதல்‌ இருந்துவிடக்கூடாது என்ற துடிப்போடு எம்மால்‌ இயன்றவரை: ட திரட்டிய கட்டுரைகள்‌ இதில்‌ அடங்கியுள்ளன. ஹொருனடக்கம்‌ தமிழின உணர்வாளர்களும்‌,சிந்தனையாளர்களும்‌, ஆய்வாளர்களும்‌ காலவரிசையில்‌ வெளிவரும்‌ இக்காலப்பெட்டகத்தைக்‌ கால வரலாற்றுச்‌ 1 “குடிஅரசு” சூழலோடு இணைத்துப்‌ பரிசீலிக்கப்‌ பெரிதும்‌ உதவும்‌ என்று நம்புகிறோம்‌. நமதுபத்திரிகாலயத்‌ திறப்புவிழா 6 - பதிப்பாளர்‌ 3. நமது பத்திரிகாலயத்‌ திறப்பு விழா ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின்‌ சொற்பொழிவு 4. ஸ்ரீமான்‌ பி.தியாகராய செட்டியாரின்‌ மரணம்‌. 9 8. இயந்திரமும்‌ கை இராட்டினமும்‌ 11 6 “நூல்வலை” 16 7. கருங்கல்பாளையம்‌ வாசகசாலை 18 8. பூச்சாண்டி 21 9 அஞ்சுதல்‌ ஒழிக 22 10. ஒரேதிட்டம்‌ 23 11. நமது அரசியல்‌ நிலை (1) 25 12. நமது அரசியல்‌ நிலை (1) 30. 13. ஈரோட்டில்‌ நாடக வரி 35 14. திருச்சி தீர்மானம்‌ 37 15. காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல்‌ மகாநாடு. 38 16. இந்துக்களின்‌ கொடிய வழக்கம்‌ 40 17. காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல்மகாநாடு 44 18. வைக்கம்சத்தியாக்கிரகம்‌ 49 19. தமிழ்நாடு 51 20. புறப்பாடு வரி 54 21. துக்கம்‌கொண்டாடும்‌ வகை 56 22. தியாகமூர்த்தியின்‌ இறுதித்‌ தியாகம்‌ 57 2.0 A58 1925 43.6 அரசு1925 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. தாசர்‌ தினம்‌ வைக்கம்‌ காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல்‌ மகாநாடு காரைக்குடிஜில்லா முதலாவது அரசியல்‌ மகாநாடு சத்தியாக்கிரகம்‌ ராஜிக்கு உட்படாது. சர்மா சாய்ந்தார்‌. அரவிந்தருக்கு அழைப்பு சென்னை முனிசிபல்‌ ஓட்டர்களுக்கு எச்சரிக்கை இந்தியத்‌ தொழிலாளர்‌ நிர்மாண திட்டம்‌ கோபுரத்து மீதிருந்து கூவுவேன்‌ தமிழர்‌ கதி ஈரோடு நகரசபை நிர்வாகம்‌ பர்க்கன்ஹெத்‌ பிரபுவின்‌ பரீட்சை குருகுலம்‌. ஒவ்வொரு மாகாணத்திலும்‌ தேவஸ்தான சட்டம்‌ தேவை லஞ்சம்‌ சென்னைத்‌ தேர்தல்‌ தேர்தல்களின்‌ யோக்கியதையும்‌ புதுச்சட்டத்தின்‌ பலனும்‌ திருவாங்கூர்‌ ராஜ்யத்தில்‌ சாதிக்‌ கொடுமை ஊழியன்‌ தெய்வ வரி சுதேசமித்திரனின்‌ மதுவிலக்குப்‌ பிரசாரம்‌ ஈரோடு முனிசிபல்‌ நிர்வாகம்‌. குரோதன வருஷத்தின்‌ பலன்‌ காவேரிஅணை ஸ்ரீசிவம்‌ மறைந்தார்‌ சாஸ்திரியாரின்‌ தேசாபிமானம்‌. அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி 44.குடி 561925 61 61. 62. & நான்கு சித்திரங்கள்‌ லஞ்சம்‌ நவரத்தினம்‌ இதற்குப்‌ பெயரென்ன? சீனர்களின்‌ கதி உலகம்‌ போற்றும்‌ மகாத்மா மலையாளச்‌ சம்பிரதாயம்‌ மாஜிஸ்டிரேட்டின்‌ மயக்கம்‌ ஒரு கோடிரூபாயும்‌, இருபத்தோரு நாள்‌ உண்ணாவிரதமும்‌ முப்பதினாயிரம்‌ பேர்‌ சிறைவாசமும்‌ சுரேந்திர நாதரின்‌ மறைவு திராவிட சங்கம்‌ அந்தணர்ப்பேட்டை மதுபானம்‌ பெரிய வக்கீல்கள்‌ பிராயச்சித்தம்‌ கள்ளுக்கும்‌ விஷத்திர்க்கும்‌ வாக்குவாதம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பஞ்சாயத்து கோயமுத்தூர்‌ வாக்காளர்களுக்கு ஓர்‌ வேண்டுகோள்‌ தேர்தல்‌ பேய்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு கருவேப்பிலை வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ வக்கீல்கள்‌ வாய்தா வாங்குவது சுயராஜ்யக்‌ கட்சியும்‌ ஸ்ரீமான்‌ படேலின்‌ உத்தியோகமும்‌ சென்னையில்‌ சர்வகலாசாலைப்‌ பட்டமளிப்பு விழா வேம்பு இனிக்குமா? மதுரையில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ கூற்று ஜஸ்டிஸ்கட்கி மகாநாடு 45.குடி அரசு 1925. 136 138 142 144 146 147 148 150 155 157 158 159 161 165 168 169 170 175 177 181 183 184 185 189 192 197 198 200 81. 82. & 28 தஞ்சையில்‌ பிராமணரல்லாதார்‌ மகாநாட்டுக்குப்‌ போட்டியான தேசீய பிராமணரல்லாதார்‌ மகாநாடு எல்லா இந்திய காங்கிரஸ்‌ கமிட்டி 28.12.24 தேதியின்‌ ஆறாவது தீர்மானத்தின்‌ உண்மை சுயராஸ்ரீயக்‌ கட்சியின்‌ முக்கிய வேலை ஸ்ரீமான்‌ ஆதிநாராயணன்‌ செட்டியாரின்‌ கூற்று பதவியா? பொதுஜன சேவையா? பலநாள்‌ திருடன்‌ ஒருநாள்‌ அகப்படுவான்‌ கோவைத்‌ தேர்தல்‌ கும்பகோணம்‌ பிராமணர்களின்‌ தேர்தல்‌ தந்திரம்‌ தேர்தல்‌ போர்‌ கண்ணியமற்ற ஒத்துழைப்பு காஞ்சீவரம்‌ மகாநாட்டுத்‌ தலைர்‌ ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்‌ உண்மையான தீபாவளி கோயமுத்தூர்‌ ஜில்லாவில்‌ பஞ்சம்‌ ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்‌ ஸ்தல ஸ்தாபனங்களில்‌ லஞ்சம்‌ தமிழ்நாடு பத்திரிகையின்‌ வம்புச்‌ சண்டை பரமசிவனுக்கும்‌ பார்வதிக்கும்‌ நடந்த சம்பாஷணை பாட்னாத்‌ தீர்மானம்‌ ஆரியாவின்‌ அபிப்பிராயம்‌ . அனுப்பபாளையம்‌ . தென்‌ ஆப்பிரிக்கா தினம்‌ . அம்பலத்து அதிசயம்‌ . “சுயராஜ்யக்கட்சியின்‌ பரிசுத்தம்‌” . சுதேசமித்திரனின்‌ ஜாதி புத்தி . சென்னை லோகல்‌ போர்டு சட்டம்‌ . நமது பத்திரிக்கை 46.குடி 561925 201 203 205 206 211 213 214 217 218 220 224 226 228 234 238 240 243 245 249 252 255 259 261 262 268 273 275 277 108. 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 117. 118. 119. 120. 121. 122. 123. 124. 125. 126. 127. 128. 129. 130. 131. 132. 1383. 134. 135. சுதேசமித்திரனின்‌ ஜாதிப்‌ புத்தி ஈரோடு முனிசிபாலிட்டி மீண்டும்‌ சத்தியமூர்த்தியின்‌ அட்டகாசம்‌ தமிழர்‌ மகாநாடு தீண்டாமை காஞ்சீபுரம்‌ மகாநாட்டுத்‌ தலைவர்‌ காஞ்சீபுரம்‌ தமிழர்‌ மகாநாடுகள்‌. சுதேசமித்திரனின்‌ சின்னபுத்தி சுயராஜ்யம்‌ ஈரோடு சேர்மனின்‌ அடாத செய்கை தமிழ்‌ தினைரி பத்திரிகை சுயராஜ்யக்‌ கட்சியும்‌ அதன்‌ தலைவர்களும்‌ தேவஸ்தான மசோதா தீண்டாமைக்கு யார்‌ பொறுப்பாளி குமரனும்‌ ஊழியனும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ காஞ்சீபுரம்‌ மகாநாடுகள்‌ காஞ்சீபுரம்‌ இராஜீய மகாநாடு காஞ்சீபுரம்பிராமணரல்லாதார்‌ மகாநாடு வைக்கம்‌ சத்தியாக்கிரக வெற்றிக்‌ கொண்டாட்டம்‌ ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி காஞ்சீபுரம்பிராமணரல்லாதார்‌ மகாநாடு ஸ்ரீமான்‌ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின்‌ 10 கற்பனைகள்‌ இந்து மகாசபையும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமும்‌ தியாகராயர்‌ திருநாள்‌ காஞ்சீ மகாநாட்டுத்‌ தலைவர்‌ சேலம்‌ தியாகராய நிலையம்‌ திறப்பும்‌ கதர்ச்சாலை திறப்பும்‌ மநுநீதி கண்டமுறை 47.குடி அரசு 1925. 281 283 287 294 300 303 306 307 310 316 320 324 327 332 335 338 341 344 347 349 351 358 360 366 370 371 378 380 136. 137. 137. 138. 139. 140. 141. 142. 143. 144. 145. 146. 147. 148. 149. 150. 151. 152. 153. 154. 155. 156. கொல்லை வழிப்பிரவேசம்‌, சாக்கடை வழிப்பிரவேசத்தை விட மோசமானதா? சுயராஜ்யக்‌ கக்ஷிக்கு சாவுமணி ஈரோடு முனிசிபாலிட்டி சுகோதயம்‌ பத்திரிக்கை காங்கிரஸ்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தரமுதலியார்‌ கல்பாத்தி சென்னை தேர்தல்‌ கலவரம்‌ நம்பிக்கை துரோகம்‌ ஒத்துழையாமையே மருந்து ஸ்ரீமான்‌ திரு. வி. கலியாணசுந்திர முதலியார்‌. சுயராஜ்யக்‌ ககஷியின்‌ பேராசையும்‌ அதன்‌ முயற்சியும்‌ ஜமீன்தார்கள்‌ வீட்டில்‌ பிராமண எலிகள்‌ கோயமுத்தூர்‌ ஸ்ரீ. தியாகராய செட்டியார்‌ முனிசிபல்‌ ஆஸ்பத்திரி திறப்புவிழா கோயமுத்தூரில்‌ தென்னிந்திய நலஉரிமைச்‌ சங்க கிளை ஸ்தாபனம்‌ திறப்புவிழா கோயமுத்தூரில்‌ 17-ந்தேதி மாலைடவுண்‌ ஹாலில்‌ பொதுக்கூட்டம்‌ புது ஆண்டு சன்மானம்‌ பிராமணரல்லாதார்‌ மகாநாட்டைப்பற்றி பிராமணப்‌ பத்திரிக்கைகளின்‌ ஓலம்‌ பெரியார்‌ கருத்துக்கருஷலம்‌ மகத்தான தொகுப்புப்பணி பிற்சேர்க்கை 11 பிற்சேர்க்கை 17 அருஞ்சொற்பொருள்‌ 48.குடி அரசு1926 382 384 386 388 389 393 394 396 397 401 404 408 410 412 414 417 421 422 431 433 435 437