Thoughts of Periyar E.V.R. — Vol. 3, Part 3
Anaimuthu's Periyar Collection
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
Thoughts of Periyar E.V.R.
போன்: 0422 - 2572635
செல்: 9362970121
பொறியாளர் கு.ம. சுப்பிரமணியன் பி.ஈ., எம்.பி.ஏ., எஃப்.ஐ.ஐ.
(மருத நாடன்)
தலைமைப் பொறியாளர் மி.வா. (ஓய்வு)
தலைவர்: சிந்தனையாளர் கழகம்
தமிழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
அமைப்பாளர்: தொழில் நுட்ப வல்லுநர் குழுமம்
18/127, அண்ணாநகர், ஆறுமுகம் லேআউட்,
பூளைமேடு (அஞ்சல்), கோயம்புத்தூர் - 641 004.
இன்று கோவையில் பொறியாளர் கு.ம. சுப்பிரமணியன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவர் மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் திரு. வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும் பெரியாரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு ஆகும். பெரியாரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும் இந்த நூல் போற்றப்படுகிறது.
பொறியாளர் கு.ம. சுப்பிரமணியன் எழுதிய கவிதை நூலை இணையத்தில் வலையேற்றுவதற்காக அவரைச் சந்தித்தபோது பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற நூலைப்பற்றி அவரிடம் பேசினேன். அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர் விளக்கினார். நூல் வெளியீட்டிற்காகப் பட்ட பாடுகள் என் கண்முன் நிழலாடியது. அவர் காட்டிய தந்தை பெரியாரின் உருவம் என் முன் நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத் தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்த அவரது உறுதி தெரிந்தது.
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் தொகுப்பினை இணையத்தில் வலையேற்றினால் உலகமக்கள் வலைஇறக்கிப் படித்து மகிழ்வார்களே என்று சொன்னபோது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர் கழகத்தின் தலைவர் திரு. கு.ம. சுப்பிரமணியம் அவர்கள் மகிழ்வோடு தன் கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப் படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்.
இணையத்தில் வெளியிடுங்கள், அய்யாவின் கருத்துகள் உலகம் முழுவதும் பரவட்டும் என்று அவர் கொடுத்தபோது நான் பெருமகிழ்வு அடைந்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது, தாராபுரம் நூலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாகப் படித்து நெஞ்சில் பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான் படவடிவக் கோப்பாக்கும் வாய்ப்பு கிடைத்தது கண்டு நெஞ்சு நெகிழ்ந்தேன்.
ஆனைமுத்து அய்யா அவர்கள் பெருமுயற்சியில் திரட்டிச் சேகரித்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற இந்த மூன்று தொகுதிகளும் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மக்களுக்கும் இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும் என்று நம்புகிறேன்.
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
(பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்)
மூன்றாம் தொகுதி
பதிப்பாசிரியர்
வே. ஆனைமுத்து
வெளியீடு:
சிந்தனையாளர் கழகம்
தெப்பக்குளம்
திருச்சிராப்பள்ளி-2
THOUGHTS OF PERIYAR E. V. R.
(Speeches and Writings of Periyar E. V. Ramasami)
VOLUME III
Compiled and Edited by
V. ANAIMUTHU
Published by
THINKERS' FORUM
Teppakulam
Tiruchirappalli-2
Thoughts of Periyar E. V. R.—Volume 1
First Edition, Published on 1-7-1974
All rights reserved
Kabeer Printing Works, Madras--600005
www.thamizham.net - Free E book No 3046
பகுதி V
செய்திகள்
www.thamizham.net - Free E book No 3046
as the miser who would not lend a coin to another, never losing sight of increasing his own hoard. But science, properly appropriated by superiors from this, has been established that characters are not inherited. A genius is born of his contemporaries in ability or in moral worth. Errors are both caught. The mighty edifice of Varnashrama by cards, or the awe of science.
G. R is giving to render:
G. R is no blue-blooded of the work. And has come to love with 'Sah', his mug for 'Sah' is a fine valid. But his sally on Committee presumption has not done him or him any wrong with all electorates in separate desire of our. We did not bit human wrongly suppose we did, this the best! representative. Joint synonymous with 000006. But electorates with communal separate electorate. The separate electorate need not be a communal one.
பெரியார் ஈ. வெ. ரா. அவர்களால் 7-11-1928-ல் நிறுவப்பெற்ற 'Revolt' ஆங்கில வார ஏட்டின் 6-ம் இதழின் முகப்பு அட்டை
Reg. No. M. 2426,
NO. 3.
NEVER-NEVER GIRLS
Twenty young women who have vowed never to wed have formed themselves into the "Never, Never Club," the one and only rule of which is that they shall remain spinsters till the end of their days!
"You may think we are joking," said Miss May Gridley, the founder and Secretary, in an interview, "but we are in deadly earnest."
"Don't think that we are man-haters, or scared spinsters, or have been crossed in love. Not at all," Miss Gridley explained that all the members were in good positions, from College. The supporting and likely to continue on, and they sing of ladies and gentlemen, an opinion that marrying of members, workers, leaders and other followers is such a girl admirers of the self-respect movement of their chance of happiness.
"After all," marriage conducted methods, there are something like two million methods, there must the women. It is the duty of those of us who can find for ourselves, of Secretaries and clerks, in orthodoxy and and the of birth, names an inter-caste and are competent certain of regular with the opportunity of among those who sent messages of putting away for a tiny day."
of "O membership is
R oy M 5 G.
உலகத்
The Dewan of Mysore, Hon. Dr. P. business," familiar.
b Bahadur, Home similar, Health Minister, Dr. P.
iber. Hon.
- =
b
Naidy. Editor, Tamil Nadu
THE CHIVALROUS HUSBAND
Principal Queen Mary's College—The world finds accustomed to reading of men who, in wills, insert: a monument for widows. Should any Chidombaranatha Mudalia, __, __.
T, Haiborne Road,
ing
lived
many
written
the
bottom
of
Mr.
Mengen's will, reads as follows—
In the event of my wife marrying again, I wish it to be known to all my friends and
பெரியார் ஈ. வெ. ரா. அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'Revolt' ஆங்கில வார ஏட்டின் தொகுதி 2, இதழ் 9-ன் முகப்பு அட்டை
www.thamizham.net - Free E book No 3046
1. அறிக்கை செய்திகள்
1. 'Revolt'? (1928)
'Revolt'? என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றைச் சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சவுந்தரபாண்டிய நாடார் அவர்களைக்கொண்டு திறப்புவிழா நடத்தி, 7-ஆம் தேதி புதன்கிழமை முதல் இதழ் வெளிப்படுத்திவிட்டோம்.
இனி அதை ஆதரிக்க, அதன் கொள்கைகளை வெற்றிபெறச் செய்து வைக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும்.
'Revolt'? பத்திரிகையின் ஆரம்பத்தின் உദ்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ்மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும்.
நமது நிலைமை சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக்கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால்--வெளி மாகாணங்களுக்கும், வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்?
உதாரணமாக, ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி. எம். நாயர் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 'சென்னை பார்ப்பனரல்லாதாரளுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்படவில்லை?' என்று சொன்னபோது, திரு. எஸ். எம். சர்மா என்பவர் இந்திய அரசாங்கத்தில் நிர்வாகசபை மெம்பராயிருந்து 6,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே, அது போதாதா?' என்று இந்திய மந்திரி சொன்னாராம். அதற்கு திரு. டாக்டர் நாயர் அவர்கள், 'நான் இந்தியாவைவிட்டுப் புறப்படும் வரை திரு. எஸ். எம். சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார். நான் புறப்பட்டபிறகு, அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய்விட்டரே என்னவோ எனக்குத் தெரியவில்லை. ஆதலால், தயவுசெய்து அவர் பார்ப்பனரல்லாதாராக ஆகிஇருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியைக் காட்டுகிறீர்களா?' என்று கேட்டாராம். அதன்பிறகு அந்த இந்திய மந்திரி திடுக்கிட்டு, 'நான் இதுவரை அவரைப் பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்து வந்திருந்தேன். இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது?' என்று சொன்னாராம்.
அதுபோலவே, சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரஸுக்கு, கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி என்கிறவரோடு நாம் பேசிக்கொண்டிருந்தபோது, 'சென்னை மாகாணத்தில் தெருவில் நடக்கக்கூடாதவர்களும், கோயிலுக்குள் போககூடாதவர்களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல்பட்டக்கூடாதவர்களும் இருக்கின்றார்களே, அவர்களைப்பற்றித் தாங்கள் அரசியல் திட்டத்தில் என்ன கவலை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, அவர் ஆச்சரியப்பட்டு, 'அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. இது உண்மையா?' என்று பக்கத்தில் இருந்த திரு. ஆர். கே. சண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு. சண்முகம் செட்டியாரவர்கள் சிரித்துக்கொண்டே, 'இதற்குச் சாட்சிக்க அதிக தூரம் போகாதீர்கள். நானே சில கோயிலுக்குள் போககூடாத சாதி என்பதைச் சேர்ந்தவன். ஐக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்தக் கோயிலுக்குள் போகக்கூடாத சாதியிலேயே சேர்த்துத் தீர்ப்புப் பெற்றுவிட்டார்கள். எனவே, இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகமுண்டா?' என்று கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இதுபோலவே, பல உதாரணங்கள் எடுத்துக்காட்டலாம். எனவே, நம் நிலையையும், தேவையையும் வெளிநாட்டாரளுக்கு, உள்ளங் கைநெல்லிக் கனிபோல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாட்சண்யமும், பயமும், சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படக்கூடிய ஒரு சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக்கொண்டே, 'Revolt'? ஐ ஆரம்பிக்கவிட்டோம். அதன் கொள்கையைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன் கவலையல்ல. ஆனால், அரசியல் அயோக்கியத்தனங்களையே தைரியமாயும், தாராளமாயும் வெளியாக்கி விட வேண்டுமென்பதே, 'Revolt'?-டின் பெருங் கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே, சாமியைப்பற்றியும் சமயத்தைப்பற்றியும் அதற்குச் சிறிதும் கவலையில்லை. ஆனால், அவற்றின் பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும் அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லாவற்றையும்விட முக்கியமானதாகும். சுருக்கமாகவும், முதல்மாகவும் கூறுமிடத்து, இதற்கு முன் ஒரு தடவை--அதாவது 'Revolt'? பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்துகொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்பதாக அரசாங்கத்தார் அறிய விரும்பியபோது தெரிவிக்கப்பட்டதையே மறுமுறையும் தெரிவித்து முடிக்கிறோம்.
அதாவது 'Revolt'? என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் 'குடிঅரசு' என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க்கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 'Revolt'? என்கின்ற வார்த்தைக்கு நாம் எடுத்துக்கொண்ட அர்த்தம் 'கட்டுப்பாட்டை உடைத்தல்' என்பது. அதாவது, மனித தர்மத்திற்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலில் ஆனாலும் சரி, மத கொள்கையில் ஆனாலும் சரி, அதिकாரியலில் ஆனாலும் சரி, முதலாளி இயலில் ஆனாலும் சரி, ஆண் இயலில் ஆனாலும் சரி, மற்றும் எவைகளிலான ஆனாலும் சரி; அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும், மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாதியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.
இதற்கு முக்கிய பதிரோதிபராக திரு. எஸ். இராமநாதன் எம்.ஏ., பி.எல். அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம். எனவே, இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். எம் வாலிப நண்பர்களும் ஆங்காங்கு உள்ளவர்களும் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன், ஒவ்வொருவரும் இந்த சமயம் மூன்று சந்தாதாரர்களுக்குக் குறையாமல் சேர்த்திவிட்டு மறுகாரியம் பார்ப்பது என்கின்ற உறுதியைக்கொள்ள வேண்டுகின்றோம்.
[குடிஅரசு - அறிக்கை--11-11-1928]
2. முன்னேற்றம்
'முன்னேற்றம்' என்னும் பத்திரிகை திரு. வெ. சி. நாரயணசாமி அவர்களை ஆசிரியராகவும், திரு. ஜி. எஸ். சாரங்கபரணி அவர்களை வெளியிடுவோராகவும் கொண்டு மலாய் நாட்டில் சிங்கப்பூரிலிருந்து வெளிவருவதாகும். இப்ப பத்திரிகையின் எட்டு மலர்களைப் பார்த்ததில் இதன் கொள்கைகள் முற்றிலும் மக்களைத் தொன்றுதொட்டுள்ள மூடப் பழக்க வழக்கங்களாகிற படுகுழியினின்றும், சாதி மதங்கள் என்கின்ற கொடிய விலங்குகளினின்றும், பார்ப்பனீயக் கொள்ளைக்காரர்களின் பெருந்துன்பங்களினின்றும் மீட்டு வாழ்விக்கும்படியானதும், ஒப்பற்ற சுயமரியாதைத் தத்துவங்களையும் கொண்ட தரக வேயிருக்கின்றன. இப்ப பத்திரிகையானது தன் பெயருக்கேற்ப மக்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களையே கொண்டு விளங்குவதால், இப்ப பத்திரிகையானது நம் மக்களுக்கு இன்றியமையாத நற்றுணையாகும் என்பது எமது அபிப்பிராயம்.
ஆனால், தற்காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்களெல்லாம் 'பத்திரிகை, பத்திரிகை?' என்பதாக ஏற்படுத்திக்கொண்டு மக்களை உபத்திரவிக்கிறார்கள் என்று சிலர் எண்ணவோ, சொல்லவோ செய்யலாம். ஆனால், நாம் அதைப் புத்திசாலித்தனமானவைகளென்று மதிக்க மாட்டோம். ஏனெனில், ஒரு நாடோ, ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், அதன் பரப்பெங்கும் பத்திரிகைகளும், பாடசாலைகளுமாகவே மிளிர வேண்டும். இதை உத்தேசித்ததான், சில அறிவிற்சிறந்த பெரியாரகள் எந்தச் சமூகத்தையேனும், எந்த நாட்டையேனும் முன்னேற்றமடைந்திருக்கிறதா, இல்லையா--எனத் தெரிந்துகொள்ள வேண்டுமானால்--அவர்கள் அந்த நாடு முழுவதும் பத்திரிகைகளைப் பயனிக்குவதேயாகும்.
நாம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத்திற்குத் தடை நீக்கம், ஆரியத்தில் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக-மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை, நெருப்போடு பழகுவதுபோல், பாமர மக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆக வேண்டும். இதற்கு நல்ல பிரசாரம் வேண்டும், ஒதுக்கற்குழைப்பு வேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுசேர்த்து, யாவரும் பலத்தையும் ஒன்றாய்த் திரட்டி ஒருமூச்சுப் பாய்ந்ததாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழ மாட்டோம் என்பதே நமது இலட்சியச் சொல் - நமது மூச்சு.
வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்குள் உண்டு.
[திரு. வெ. ரா. அண்ணாதுரையின் 'இலட்சிய வரலாறு' நூலுக்கு முன்னுரை]
5. ஓர் வேண்டுகோள்
சுமார் 40, 50 வருஷத்திற்கு முன் பதிப்பிக்கப்பட்டும், இந்துமத ஆச்சார ஆபாச தரிசினி என்ற பெயர் கொண்டதும், 762 பாடல்களை உடையதும், கிரவுன் ஒன்றுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ்ப் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத
யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்கின்றோம்.
ஏனெனில், அப் புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்குமுன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால், அது மிக்க பழையதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும், சில பக்கங்கள் கிழிந்து சரிவர தெரியாமலும் இருப்பதால் கிழியாத புத்தகம் ஒன்று வேண்டி இருக்கின்றது. அப் புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன.
[குடி அரசு - 23-1930]
6. 'வெடி குண்டு'
சுயமரியாதை இயக்கக் கொள்கையை ஆதரித்து மதுரையில் 'வெடிகுண்டு' என்னும் பத்திரிகை தோன்றி, தொண்டாற்றி வருவது யாவரும் அறிந்ததேயாகும். வியாபார முறையை விட்டும், சமயத்திற்குத் தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும், தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும் இல்லாமல் 'பரிசுதமாய்' இருக்கும் நிலையைவிட்டும் நடைபெறும் பத்திரிகைகள் நமது நாட்டில் அதாவது, பகுத்தறிவற்று பாமரத்தன்மை பூண்டு கருக்கும் ஜனங்கள் மலிந்த நாட்டில், கவலையற்று நடைபெறுவது என்பது மிகமிகக் கஷ்டமான காரியமாகும். இந்தக் காரணத்தால் இதுசமயம் 'வெடிகுண்டு' பத்திரிகை மிக்க நெருக்கடியில் நடைபெறுகிறது என்றும் நாம் கேள்விப்படுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இருந்தபோதிலும், மதுரை சுயமரியாதை சங்கத்துக்கு மிகுதியும் ஆதரவளித்து வரபவரும், முனிசிபல் கவுன்சிலரும், செல்வாக்கும், செல்வமும் பொருந்திய வருமான தோழர் ஆ. அ. ஆறுமுகம் அவர்களது உதவியாலும், ஆதரவாலும் ஒருவாறு நடத்தப்பட்டு வருகிறது என்றாலும், சதா சர்வகாலமும் ஒரு பத்திரிகை ஒருவரின் ஆதரவையும் உதவியையும் கோரி நிற்காமல், தன் காலிலே தைரியமாய் நிற்கவேண்டுமாதலால், சுயமரியாதை இயக்க அன்பர்களும், அபிமானிகளும் அதை ஆதரிப்பது மாத்திரமல்லாமல், அது கிராமங்கன் மூலை முடுக்குகள் தோறும் செல்லும்படியான அளவுக்கு உதவிசெய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.
['குடி அரசு' - வேண்டுகோள் - 27-8-1933]
7. 'புரட்சி'
'குடி அரசை' ஒழிக்கச் செய்த முயற்சியால் 'புரட்சி' தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்கவின், அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆக வேண்டும்.
அந்த அய்தைப்படியே 'புரட்சி' தோன்றி இருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் 'புரட்சியை' வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை.
நமது முதலாளிவர் ஆட்சியானது தனது காவலாளியாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் 'குடி அரசை' அதன் முதுகுப் புறத்தில் குத்தி விட்டது. இந்தக் குத்தான்து; 'பாதிரி வர்க்கத்தை ஒழித்தால் தான், முதலாளி வர்க்கத்தை அழிக்கமுடியும்' என்ற ஞানபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.
ஆதலால், நமது 'புரட்சியானது' 'குடி அரசைக்' காட்டிலும் பதின்மடங்கு அதிக மாய் பாதிரி வர்க்கத்தை--அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க்கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது.
இதன் காரணமாய் 'புரட்சி' எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம், எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம். ஆனால், 'சுயமரியாதைப் புரட்சி' யானது இனி ஒருநாளும் மறையாது; அது வெற்றிபெறும்வரை ஒரு க্ஷணமும் ஓய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி.
காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவகர்லால் அவர்கள் தான் இதுவரை மத விஷயமாய்ப் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும், மத விஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்ததாகிவிட்டது என்று வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார். மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி; மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி; மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி; மதமே மனித சமூக சமதர்மத்திற்கு விரோதி; மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை; மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்; மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு; மதமே உழைப்பவனை தாழ்வுகீற்றில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி--என்கின்ற முடிவின் பேரிலேயே 'புரட்சி' தோன்றியிருக்கிற து என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.
ஆதலால், மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாகவேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவகர்லால் அவர்கன் இப்போ தாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மை யிலேயே மகிழ்ச்சியடைகின்றோம்.
சோம்பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக் கருதி சுயமரியாதை இயக்கப் போர்வை போட்டுக் கொண்டிருந்தவர்களுடையவும் ஆதரவு நம் 'புரட்சிக்கு' இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே 'புரட்சி' தோன்றியிருக்கிறது.
ஆதலால், பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டு பட்டினியாயும் சமூக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே 'புரட்சி' எதிர்பார்த்து நிற்கிறது.
வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கறுப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று 'புரட்சி' சம்மதவில்லை. அல்லது, வெள்ளை ஆட்சியை ஒழித்து கறுப்பு ஆட்சியை ஏற்படுத்த 'புரட்சி' தோன்றவில்லை. அதுபோலவே, இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப 'புரட்சி' தோன்றியதல்ல.
அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து, இந்து மதத்தை நிலைநிறுத்த 'புரட்சி' வெளிவரவில்லை.
சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே 'புரட்சி' தோன்றியிருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும்.
ஆதலால், புரட்சியில் ஆர்வமுள்ள மக்கள் 'புரட்சியை' ஆதரிக்க வேண்டுகிறோம்.
['புரட்சி' - தலையங்கம் - 26-11-1933]
8. 'பகுத்தறிவு'
'பகுத்தறிவு' வாரப் பத்திரிகையின் முதல் மாளை-முதல் மலர் 26-8-1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கைகளைப்பற்றி 'குடி அரசு', 'ரிவோல்ட்', 'புரட்சி', 'பகுத்தறிவு' (தினசரி) ஆகிய பத்திரிகைகவின் அபிமானிகளுக்கும், வாசகர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டியதில்லை.
சுருக்கமாக, ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட வேண்டுமானால், 'பகுத்தறிவு' தோன்ற லானது, இன்றைய உலக வழக்கில் இருந்துவரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றியமையாதனவாகவும் கருதப்படும்:
'எங்கும் நிறைந்த இறைவனை' வழுத்தவோ,
'எல்லாம் வல்ல மன்னனை' வாழ்த்தவோ,
'யாதினும் மேம்பட்ட வேதியனை' வணங்கவோ,
'ஏதும் செய்யவல்ல செல்வவானை' வாழிய செப்பவோ கருதி அல்ல என்பதேயாகும்.
மேலும், மனித சமூகத்தில் மூடத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாய கடவுள், சாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமানத்தையும், ஒற்றுமையையும் பிரதானமாய்க் கருதி உழைத்துவரும் என்றும் சொல்லுவோம்.
ஆக தொண்டரற்றுவதில் 'பகுத்தறிவு' வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரிதிரத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ புதுமைக்கோ அடிமையாகாமல், கொள்வனகொண்டு தள்வன தள்ளி; தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி, தனது அறிவையும் ஆற்றலையுமே துணையாக்கொண்டு தன்னாலான தொண்டாற்றிவரும்.
முடிவாய்க் கூறுமிடத்து, 'பகுத்தறிவு' மனித ஜீவாபிமனத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய, எக் காரணம் கொண்டும் மக்கன் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.
['பகுத்தறிவு' - தலையங்கம் - 26-8-1934]
9. 'விடுதலை'
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து, தமிழ் பத்திரிகை ஒன்று, 'விடுதலை' என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையிலிருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஏனெனில், 2,3 வருடங்களாகவே பரிசுத வீர கரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இரவும் பகலுமாய் 'தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!' என்கின்ற தாகத்துடன் அலைந்துகொண்டிருந்ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் 'தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!' என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல.
அப்படிப்பட்ட நிலையில் 'விடுதலை' என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாகி இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு 'பாக்கியம்' கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, 'இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது?' என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால், நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், 'வந்து விட்டது, தமிழ்ப் பத்திரிகை!!' என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
'விடுதலை' பத்திரிகை இன்று வாரம் இரு முறையாக வெளிவந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்கன் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
பத்திரிகையானது நல்ல மாதிரியில்--பார்ப்பன விஷமப் பிரசாரங்களுக்கு மார்பைக் காட்டும் முறையில் சரியான விஷயங்களைக் கொண்டு வெளிவரக்கி வருவதால், அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாகக் காணப்படவில்லை என்றே சொல்லுவோம்.
இப் பத்திரிகைக்கு உண்ண கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப்பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட தொல்லைகளுக்கிடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும். இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை.
எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்தரம் ஆவதற்குள்--ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டியது, அல்லது, மறைந்துபோக வேண்டியது என்கின்ற நிலையில்தான் இருந்துவந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் 'குடி அரசு' ஏதோ பாஷாணத்தில் புழுதி புழு போல் உயிர் வைத்துக்கொண்டு வருகின்றது. என்றாலும், அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனி புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. இப்படிப் பட்ட நிலையில் 'விடுதலை' தோன்றி இருக்கின்றது என்பது ஒருவிதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிடத்தில் அதற்கு ஆபத்து வரப்போகின்றதேர என்று பயப்படவேண்டியதாகவே இருக்கிறது.
எப்படியோ ஒருவிதத்தில் தமிழ் மக்கள் எதிர்திற்கும் மனிதத் தன்மைக்கும் கேடாக இருக்கும் தன்மைகளைப் பற்றிக் கவலையற்று, தங்கள் நலனையே பார்த்துக் கொண்டு வாழ்வை நடத்துவது என்பது.
மற்றொன்று, தங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இன்றைய இந்த இழி நிலையைப் போக்கத் தம்மாலானதைச் செய்வது, செய்யும் முயற்சியில் முடிவெய்துவது, அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்பது என்பதாகும்.
இவற்றுள் முன்னையவர்களில் கரண்டு பிரிவினர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுள் ஒரு சாரார், எதிரிகளுடன் சேர்ந்து திராவிடர்களுக்கு கிடரையும் தடையையும் செய்யத் துணிந்து, ஆரியர்களுக்கு உடந்தையாயும் அடிமையாயும் இருந்துவரும் வழுக்கி விழுந்த திராவிட சகோதரர்கள்;
மற்றொரு சாரார், அவர்களுடனும் சேராமல், நம்மோடும் சேராமல் நடுநிலைமை காட்டிக்கொண்டு, சமயம்போல் நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின் தொண்டிலும் பங்கு பெற்றுத் தங்கன் சொந்த வாழ்வை மாதிரி கவனித்து, அதற்காக எதுவும் செய்யத் துணிவு கொண்ட திராவிடர்கள், இவர்கள் தங்களை, மற்ற யாரையும் விட மேதாவிகள்-மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுயநல வேட்டை ஆடுகறவர்கள் ஆவார்கள்.
இத்தகைய எந்தப் பிரிவும் ஆரியர்களுக்கு தில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.
எனவே, திராவிடமக்கன் மேற் குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி-மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர் போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமான தும்--தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகுமென்பதல்லாமல், இந்தச் சமயம் மிகவும் அவசரமானது என்போம்.
அதற்கு முக்கியமான-இன்றியமையாத ஆயுதம் பத்திரிகையாகும். அதை உद்தேசித்தே இந்தக் காரியத்திற்குமகூட நமக்கு இருக்கும் பல வித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள், கஷ்ட நஷ்டங்கள் ஆகியவைகளைக் கூட இலட்சியம் செய்யாமல்--விடுதலையை துவக்கி விட்டோம், பெரிதும் பாமர, பொதுமக்களையும் இளைஞர்களையும் நம்பியே இதில் இறங்கி இருக்கின்றோம்.
இது நீடித்து நடந்தாலும் சரி, அல்லது முன்போல் சில நாட்களில் ஒழிந்தாலும் சரி, நம் கடமையைக் கருதியும் இச் சிலர் செல்வி, அறிஞர்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையுடனும் இறங்கிவிட்டோம்.
இச் சமயம் நம் எதிரிகளின் ஏகபோக ஆதிக்கத்தில் அரசியலும் இருக்கும்படியான சமயமாகும். அதனால், அவர்கள் விடுதலையை எப்போது வேண்டுமானாலும்-என்ன வேண்டுமானாலும் செய்துவிடக் கூடும் என்றாலும் நமக்கு ஆசை-நமது முக்கிய கடமை-நம் மக்களிடத்தில் உள்ள நம்பிக்கை-நம் இளைஞர்கள் நம் மாணவர்கள், நம் தாய்மார்கள், நமக்கு ஊட்டிவரும் ஊக்கம், உன் நம்பிக்கை ஒத்துழைப்பைத் தருவதாய்க் காட்டும் அறிகுறி, அவர்களது வாக்குத்தம் ஆகியவைகளைக் கொண்டும் தொடங்கிவிட்டோம்!
இதே தொண்டில் இதற்குமுன் இரண்டு மூன்று தடவை வரை முயன்று தோல்வியுற்றாலும் அதைப்பற்றிச் சிந்தியாமல், மறுமுறையும் துணிந்து இறங்கி விட்டோம்.
ஆகவே தோழர்களே! தாய்மார்களே! செல்வர்களே! அறிஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே! இனி உங்கன் கடமை என்ன?
[விடுதலை-தலையங்கம்-6-6-1946]
11. திராவிட நாடு
ஈ. வி. ராமசாமி
ஈரோடு
தேதி: 1-4-1943
பத்திரிகைக்கு உதவி வேண்டுகோள்
காஞ்சிபுரத்தில் தோழர் கே. அண்ணாதுரை M.A., அவர்களால் நடத்தப்பட்டு வரும் "திராவிட நாடு" பத்திரிகை தமிழர்களின் விடுதலைக்கு உண்மையுடனும் உறுதியுடனும் உழைந்து வருவது தமிழர்கள் அறிந்ததேயாகும்.
அப் பத்திரிகை தடைக்கமின்றியும் நிலையாகவும் நடந்து வருவதற்கு அதற்குச் சொந்தத்தில் ஒரு அச்சு இயந்திரம் வேண்டியிருக்கிறது. அதை உத்தேசித்தே ரூபாய் 1200-0-0-ல் ஒரு டবுள் கிரவுன் சிலிண்டர் மிஷின் பேசி இருக்கிறது.
ஆதலால், தமிழ் மக்கள் இந்தத் தொகையைக் கொடுத்து உதவ வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ஈ. வெ. ராமசாமி
உதவியோர்: தொகை:
ஈ. வெ. ராமசாமி 100-00
கோபி, தோழர்கள் 69-00
[திராவிட நாடு-அறிக்கை--18-8-1943]
12. தோழனுக்கு வாழ்த்து
"தோழன்" என்கின்ற பெயரில் தோழர் ஜனார்த்தனம் அவர்களால் ஒரு மாதப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அனேகமாக தம் நாட்டில் பார்ப்பனரல்லாதார் (திராவிடர்கள்)பொதுத் தொண்டுக்காக என்று பத்திரிகைகள் துவக்கி, திராவிடர்கள் ஆதரவு சரிவரக் கிடைக்காததால், அது கடைசியில் வயிற்றுப் பிழைப்புக்காக என்று மாறி, துவக்கிய கருத்து மறைந்து, கொள்கையும், வாழ்வும் நாணயமற்றதாக ஆகிவிடுவதை மலிந்து கிடக்கப் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட திராவிடநாட்டு மக்களிடையில் தோழர் ஜனார்த்தனம் அவர்கன் பத்திரிகை நடத்துகிறார் என்றால், மற்றபடி மேற்கண்ட மலிவுத் தன்மையை இதுவும் அடைந்துவிடுமேோ என்று எந்தத் திராவிட மகனும் அஞ்சவேண்டியதில்லை; அய்யுற வேண்டியதில்லை என்று நான் உறுதி கூறி சிபாரிசு கூடச் செய்வோம்.
ஏன் என்றால், தோழர் ஜனார்த்தனம் அவர்கள் "தோழனை" ஆயுதமாகக்கொண்டு மக்களை நடத்துவாரே தவிர; மக்கள் பின் செல்லமாட்டார் என்கின்ற நமது உறுதியால் தான்.
ஆகவே, திராவிட மக்கள் "தோழனை" ஆதரிக்கவேண்டியது நீங்காக் கடன் என்பதாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
"தோழன்" நீண்ட நாள் தோழர்களுக்குத் தொண்டாற்றி, திராவிடர்களுக்கு இருந்துவரும் குறைகளையும் கேடுகளையும் நீக்கி, உண்மை ஆருயிர்த் தோழனாக விளிர விழைகிறேன்.
[தோழன் 9-11-1947]
13. உண்மை
"உண்மை" என்னும் பெயரால் ஒரு மாதப் பத்திரிகையை 1970-ஆம் ஆண்டு முதல் இவற்றுகிறேன். அதற்குக் கொள்கை-மக்களைப் பகுத்தறிவாளிகளாக ஆக்கவேண்டும் என்பதாகும்.
இன்று நம் நாட்டிலுள்ள நம் மக்களில் 100-க்கு 85 மக்கன் சுத்தக் காட்டுமிராண்டி-மூடநம்பிக்கைக் கருத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மற்றும், இந்த 100-க்கு 85 வீதம் கொண்ட மக்களும் சமுதாயத்தில் இழிபிறவிகளாக, கீழ்ச் சாதியர்களாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஆக்கப்பட்டிருப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆதாரம் என்னவென்றால் கடவுள், மதம், வேத சாஸ்திரங்கள், மத தர்மங்கள், அரசியல், ஆட்சிச் சட்டம் என்பவை களாக இருந்துவருதல் ஆகும்.
இந்த நிலை இன்று நேற்று என்றில்லாமல், சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலம் முதலே இருந்துவருகின்றது. ஒரு நாட்டின் நிலை இந்தப்படியாகவும், மக்கள்நிலை அதற்கேற்ற தன்மையுடைய அறிவைக்கொண்டதாகவும் இருந்துவந்தால் இதற்குப் பரிகாரம் என்பதே இல்லையா?
மனிதன் என்றாலே உலகிலுள்ள மற்ற ஜீவப் பிராணிகன் எல்லவற்றையும்விட அதிகமான அறிவுகொண்டவன் என்பதே பொருளாகும்.
மனிதனுடைய இந்த உயர்ந்த அறிவின்தன்மை அவணை இழிமகனாக, கீழ்மகனாக, மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவனாக இருக்க்தாரான் பயன்பட்டு வருகிறதென்றால் அறிவுள்ள மனிதன் என்பவனெல்லாம் வெட்கப்படவேண்டிய விஷயமல்லவா இது!
எனவேதான், இந்த நிலையை மாற்றவே - மக்களைப் பகுத்தறிவாளிகளாக, மானமுடையவர்களாக ஆக்குவதற்குகாகவே- "உண்மை" என்னும் பெயரால் இப் பத்திரிகை துவக்குப்படுகிறது என்று திரும்பவும் கூறுகிறேன்.
மக்களை அறிவாளிகளாக்கும் துறையில், மூடநம்பிக்கைகளை ஒழிக்குும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொதுமக்களால் வெறுக்குப்படவும், நாதிகர்கன் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆனாக்கப்படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்துவருகிறபோது, அந்த நிலை நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் யோக்கியதையில் ஏற்படாமல் இருக்கமுடியுமா?
ஆதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்தே தொண்டாற்றி வருகிறேன்.
இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன்.
இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாலோ, அரசாங்கத்திலுள்ள மேல் சாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலேோ எனது முயற்சியைத் தடுக்கவும் ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூ. 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று "இன்கம்டாக்ஸ்" (வருமான வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன், நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்போல் இன்கம்டாக்ஸ் போடப்பட்டுவருகிறது.
இவை தவிர, நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன்; மேல் சாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள்-என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப் படுகிறேன்.
இவை மாதிரிமா! 100-க்கு 90 கிறிஸ்தவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களால் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால், ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது.
யாராவது சிலர் அவர்கள் சொந்த-சுயநல காரியங்களுக்கு வருவார்கள்; அவ்வளவுதான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால், "என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாக பெரும்பாலான மக்கள் கிடையாக" என்பதைக் காட்டுவதற்காகவேயாகும்.
இதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடையத் தகுதும், குறிப்பிடத் தக்கதுமான காரியம் என்ன வென்றால், என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப்பாடும் அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன்.
இயக்கத் தோழர்கள் யாராயிருந்தாலும், பிடிக்கா விட்டால் அவர்கள் வெளியே போய்விடுகிறார் கன் என்பதுதான்.
ஆகவே, "உண்மை"யின் தொண்டு எதிர்நீச்சல் தொண்டேயாகும். "குடி அரசு"த் காலம் கிதைவிட மோசமாக இருந்தது.
"அரசை" ஒழிப்பதற்கு இந் நாட்டுக் கிறிஸ்தவர்கள் அமெரிக்காவிற்கு எழுதி, அமுது பணம் தருவித்துப் பிரமாத வேலை செய்தார்கள். பார்ப்பனர் பணம் கொடுத்து எதிர்ப்புப் பத்திரிகைகன் ஆரம்பிக்கச் செய்து காலிகளை ஏவிவிட்டு எதிர்ப்புக் காட்டினார்கள்.
ஆனால், "குடி அரசு" என்னும் வாரப் பத்திரிகை "விடுதலை" பேரால் தினப் பத்திரியாக ஆகி, அதே தொண்டுடன் வேறு பல தொண்டுகளும் செய்து வருகிறதே ஒழிய, ஒழிந்துவிடவில்லை.
இப்போது இப் தொண்டுக்காக, பகுத்தறிவுத் தொண்டுக்காக, சமுதாய இழிவு மடமை நீக்கும் தொண்டுக்காக என்றே பாடுபட இந்த "உண்மை" பிறந்திருக்கிறது.
"உண்மை" நாதிகப் பத்திரிகைதான்; முக்காலும் நாதிகப் பத்திரிகைதான். அதற்காக யாரும் பயப்படாதீர்கள்.
சாக்கிரட்டீஸ் நாதிகர்; பெர்ட்ராண்ட் ரஸல் நாதிகர்; பெர்னாட் ஷா நாதிகர்; மற்றும் இயேசுநாதரும் "நாதிகர்" என்றே சொல்லப்பட்டுக் கொலையுண்டார்.
முகமது நபியும் "நாதிகர்" என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப் பட்டார். பவுத்தர்களும், சமணர்களும் நாதிகர்கள் என்றே சொல்லப்பட்டு அவர்கள் வீடுகள், மடங்கள், கோளுத்தப்பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கமுவேற்றப்பட்டு, அவர்களது பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டு அல்லலுற்றனர்.
இவர்கள் தவிர அமெரிக்காவில் பல நாதிகச் சங்கங்களில் மூன்று கோடிக்குமேல் வெளிப்படையான நாதிகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக் கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 40 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக் கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.
இப்படியாக, நூற்றுக்கணக்கான கோடி மக்கள் உலகில் நாதிகர்களாக இருக்கிறார்கள். பல தேசங்கள் நாதிக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.
இந்தியாவில் தமிழ் நாட்டில் இன்றைய அரசாங்கமே "நாதிக" அரசாங்கமாக இருந்துவருகிறது.
கேரளாவில் நாத்திக அரசாங்கம் என்பதோடு-மூன்றில் ஒரு பங்குக்கு மேற்கொண்ட மக்கள் நாத்திகர்கள், இவர்கள் இன்று கோயிலை இடிக்கிறார்கள், சாமி சிலையை உடைக்கிறார்கள்.
மற்றும் பல நாடுகளில் நாதிகர்கள் தாராளமாக இருக்கிறார்கள், நமது பார்லிமெண்டில் கடவுள் இல்லை என்று தீர்மானம் கொண்டுவருகிறார்கள்.
இவர்களால், இவற்றால் உலகம் முழுகிப்போய் விட்டா? ஆகவே, நாத்திகம் கூடாததல்ல; இல்லாததல்ல; நடக்க வேண்டாததுமல்ல.
மற்றும் நமது
40
தொண்டர்களோடு மேஜிஸ்ட்ரேட்டால் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசமிருந்தார். சிறையினின்று வெளிவந்ததும் அதிமும் மூரமாக ஜில்லா முழுவதும் சுற்றும்படியான வேலையில் தனது மெல்லிய சரீரத்தின் சவுகரியங்களையும், தனது வாழ்க்கை போகத்தின் பழக்கங்களையும் கொஞ்சமும் கவனியாமல் கிராமம் கிராமமாய் திரிந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ஜில்லா தலைவராகவும் மாகாண காரியதரிசியுமானார். இதன் பலனாய் மாகாணமெல்லாம் சுற்றவும் திருச்சியில் மாகாண கமிட்டிக் காரியாலயத்திற்கு தன் மனைவி சகிதமாய்ப் போய் மாதக் கணக்காய் குடியிருக்கவும் செய்துவந்தார். இராஜீய நிலைமாறி நிலைகுலைந்ததின் பலனாய் காங்கிரஸ் நிருவாகத்தில் கலந்துகொள்ள இஷ்ட மற்றவராகி சகலவித நிருவாகத்தினின்றும் விலகிக்கொண்டு, "குடிஅரசு" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்த முற்பட்டார்.
இதுசமயம் கதர் போர்டு காரியதரிசி பதவியையும் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டதாலும், உடல் நலிவு ஏற்பட்டு படுக்கையில் கிடக்க வேண்டிய அசவுகரியத்தோடு இருந்ததாலும், "குடிஅரசு" நிருவாகத்தை நாயக்கரிடம் ஒப்புவித்துவிட்டு விலகினார். அடுத்தாற்போல் உடல்நலம் செய்துகொள்ள சென்னைக்குப் போகவேண்டியிருந்ததால், கதர் போர்டு காரியதரிசி பதவியையும் நீமான் நாயக்கரிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்னைக்குப் போனார். அங்கும் ஒன்றிரண்டு மாதம் இருந்து சிகிச்சை செய்துகொண்டார். பின் வைத்தியர்கள் அனுமதியின் பேரில் ஊருக்கு வந்து 8 மாத காலம் படுக்கையிலேயே இருந்து சிகிச்சை செய்து வந்தார்.
என்ன செய்தும் அதிசாரக் கழிச்சல் என்னும் அவருக்கு ஏற்பட்ட வியாதி குணப்படாமல் அவரது முடிவுக்கே கூற்றுவனாயிருந்து கொண்டைகொண்டுவிட்டது. படுக்கையில் இருக்கும்போதும் எழுதுவதும், படிப்பதும், சவுகரியமான பிறகு தேசத்திற்கு என்ன செய்வது என்று வேலை திட்டம் போடுவதிலும் காலத்தைக் கழிப்பார். யாரிடமும் கடினமாகப் பேசமாட்டார். ஒருவருக்கும் மனவருத்தம் ஏற்படும்படி நடக்கமாட்டார். தான் சொல்லுவது உண்மையானாலும் அதனால் யாருக்காவது சலிப்பு ஏற்படும் என்று பட்டால் பயந்து நிறுத்திக் கொள்ளுவார். தாராளக் கையர், தமிழ்நாட்டுத் தொண்டர்கள் என்போர் அனேகர் அவரிடம் வந்து அடிக்கடி ஏதாவது பெற்றுப்போவார்கள். நண்பர்களுக்குச் சமயங்களில் அவரைப்போல் உதவி செய்பவர்கள் மிகச் சிலர்தானிருப்பார்கள். "இல்லை" என்று சொல்லுவதானால் தனக்குள் ஒரு பெரிய பாவத்தைச் செய்கிறோமே என்று நடுங்குவார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் அனேக புத்தகங்கள் வாசித்தவர். தமிழ்நாட்டிலுள்ள தமிழாராய்சிக்கரர்களில் நமது பின்ளையும் ஒரு முக்கியமானவர் என்று சொல்லவேண்டும். அவர் காரியாலயம் ஒரு புத்தகாலயம்போல இருக்கும். "ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி" என்று எப்போது பார்த்தாலும் இதே வேலைதான். நமது நாட்டில் மக்கள் உயர்வு-தாழ்வு என்பது எப்படி ஒழியும் என்ற கவலை அவருக்குள்ள மற்ற எல்லாக் கவலைகளையும்விட முன்னின்று கொண்டேயிருந்தது.
முடிவாயக் கூறுமிடத்து, தன்னலத் தியாகத்தில் ஒரு ஈடற்ற தேசபகீதர், உண்மைத் தொண்டர், அஞ்சா நெஞ்சர், ஆருயிர்த் தோழர், தமிழ்நாட்டின் ஒரு முக்கிய உரு, கோவை ஜில்லாவின் வலக் கண், ஈரோட்டின் முடி மறைந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.
[குடிঅரசு தலையங்கம் 7-3-1926]
**2. பாஞ்சாள சிங்கம்**
நமது பத்திரிகை முடிந்து கடைசித் தாள் அச்சுகுப் போகும் நிறுவாயில், பாஞ்சாள சிங்கம்--முடிசூடா மன்னர்--உண்மைத் தலைவர் லாலா லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தாரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கு கிட்டுப் போனோம்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் இருந்த--இருக்கிற தலைவர்களில் லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு என்னும் அவரது எதிரியாலும் கற்பிக்க முடியாத உதீம வீரர் இவர் ஒருவர்தான் என்றே சொல்லவேண்டும். இவரது மரணத்தால், தனது மனதிற்குப் பட்டதைத் தைரியமாயும் ஒளிவைக்க மல்லாமல் வெளியிடக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் இந்தியாவில் இல்லை என்று சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது.
சுயராஜ்ய க் கட்சியாரைப் பார்த்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எல்லாத் தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன்; யாராவது வந்து என்னுடன் போட்டி போடுவதாயிருந்தால் வாருங்கள், ஒருகை பார்க்கலாம் என்று சொன்ன தீரர். திரு மோதிலால் நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்கு அடிக்கவிடாமல் செய்த தனி வீரர்.
சமீபத்தில் தமிழ்நாட்டையும் மலையாளத்தையும் பரந்துவிட்டுப் போன பிறகு தமிழ்நாட்டின் நிலையைப் பயப்படாமல்--சிறிதும் ஒளிக்காமல் வெளியிட்டவர். தமது ஆயுட் காலமெல்லாம் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் மகாகல்ககுக்கு ஒதுக்கி வைத்து விட்ட உண்மைத் தியாகி, தேசத்திற்காக முதல் சீர்திருத்தத்தின்போது 20 வருஷத்திற்கு முன் நாடு கடந்தப்பட்டவர், இரண்டாவது சீர்திருத்தத்தின்போது 15 வருஷத்திற்கு முன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரவிடாமல் தடை செய்யப்பட்டவர், ஒத்துழையாமையின்போது 2 வருடம் சிறை சென்றவர், 3-வது சீர்திருத்தம் வரப்போக்கு முன் சர்க்காரால் அடியும் பட்டவர் (அதாவது அதனாலேயே உயிர்விட நேர்ந்ததோ என்று எண்ணத்தக்க அளவு அடியும்பட்டவர்), இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஒரு மகான் உண்மைத் தியாகி இறந்தது ஈடுசெய்ய முடியாத நஷ்டமாகும்.
[குடிஅரசு தலையங்கம் 18-11-1928]
**3. நமதருமைத் தலைவர்**
தேடற்கரிய, ஒப்புயர்வ அற்ற நமதருமைத் தலைவர் பனகால் ராஜா சாஹேப் இராமராய நிங்கவாரு திடீரென்று நம்மைவிட்டு சனிக்கிழமை கரவு 1 மணிக்குப் பிரிந்துவிட்டார் என்கின்ற செய்தியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும்--சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது.
ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவுபெற்றதால், பெரிய்தும் திறமையான்துமான ஒரு யுத்தம்--முனைந்து வெற்றிக் குறியோடு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், போர்வீரர்கள் சேனாதிபதியின் ஆகீனையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்துபோய்விட்டார் என்கின்ற செய்தி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர்வீரர்களின் மனம் எப்படித் துடிக்குமோ அதுபோல், நமது தமிழ் மக்கள் ஆடித்திருப்பார்கள் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை.
திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மையான தலைவர்கள் என்பவர்களைப்போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டு, பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க்கொண்டு, வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும் அழகாகவும் பேசுவதும் எழுதுவதும், சமயம் சந்தர்ப்பம் அவசியம் ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும் கண்டித்தும் பேசுவதுபோல் காட்டுவதும் ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும் கீர்த்தியும் பெருமையும் பெற்று வாழக்கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக் கொண்டு தலைவரானார் என்று யாரும் சொல்லிவிடமுடியாது.
அன்றியும், மற்றொரு விதமாகவும்--அதாவது பத்திரிகைக்காரர்களது தயவால்--அதாவது பத்திரிகைக்காரர்களைத் திருப்திசெய்து அவர்களது இலட்சியங்களுக்கு ஆயுதமாய் இருந்து அவர்களால் கைதூக்கிவிடப்பட்டுத் தலைவரானவரும் அன்று. அன்றியும் மற்றொரு விதமாகவும்--அதாவது ஆங்காங்கு கூலி ஆட்கள் பிடித்துக் கூலிக்கொடுத்து அவர்களைக்கொண்டு நாடு முழுவதும் தங்களைத் தலைவர்கள் எனக் கூசிசலிடச்செய்து, அதனாலேயே தலைவரானவரும் அன்று. வன்றியும், பார்ப்பனர்களின் அடிமையாய் இருந்து உலக நலத்தின்பேரால்--கலை நலத்தின்பேரால்--மோட்டம் நலத்தின் பேரால் சுயராஜ்யத்தின் பேரால் என்று பார்ப்ணாதிக்கத்திற்கும் நலத்திற்கும் ஆளனாயிருந்து அவர்களால் தலைவர்பட்டம் பெற்றவரும் அன்று.
மற்றென்னையோவெனில், தாழ்த்தப்பட்ட--ஒடுக்கப்பட்ட--இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டாதார்--கீழ் சாதியார்--என சாதியாத--சூத்திரர் என்பவனாகிய "பிறவி இழிவும்", "பிறவி அடிமைத்தனமும்" சுமக்கப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சயமரியாதைக்கும் விடுதலைக்கும், சமத்வத்திற்கும் மனிততன்மைக்குமாகவேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர்நீச்சு செய்வதுபோன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். அவ்வேலையில் அவர் பட்ட கஷ்டத்தை யார் அறிவர் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது.
இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவு மல்லாமல் மதிக்க தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின்மேல் நின்றுகொண்டு வேலை செய்வதுபோல் வெரு கஷ்டமான துறையில் வேலை செய்தவர், இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.
அது மாத்திரமல்ல; நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாக வாவு, உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவரைக் கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது.
இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர் நாயர், சர் தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப் பூர்வமாய்ப் பின்பற்றுகின்றவர்கள் அனேகர் இருந்தார்கள். ஆனால், நமது கிராஜாவுக்கு யார் இருந்தார்கள் ஒருவரும் இல்லை என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல், உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக்கொண்டும், பழி சுமத்திக் கொண்டும், அவரது தலைமையைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்துகொண்டும் அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள்.
பின்னை எப்படி இராஜாவுக்குக் கட்சியும் ஆள் பலமும் இருந்தது என்று யாராவது கேட்பிர்களானால், அதற்குப் பதில்—அவருடைய தனிச் சாமர்த்தியத்தால், புத்திசாலித்தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரைத் தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில் வைத்துக்கொண்டிருந்ததால் என்றுதான் சொல்லவேண்டும். அன்றியும், பார்ப்பனரல்லாத படிப்பவர் என்னும் கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ—ஏமாற்றமடையாதவர்களோ அவர்மீது வெறுப்புக் கொள்ளாதவர்களோ ஒருவர் இகுவரதவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிடமுடியாது. ஏனெனில், அவர் ஒரு அருமையான சாதனத்திற்குப் பாடுபட்டதினால் அது ஏதாவது கடுகளாவது பயன் அவிப்பதானாலும் அந்தப் பலன் அனுபவிப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும் அபிப்பிராய பேதங்களும் ராஜா சாஹேபை அனேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி கொள்ளவேண்டியவராகவும் செய்துவிடுகின்றன.
இந்த நிலையில் அவர் மேற்கண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர்புரிந்தார் என்றுதான் சொல்லியாக வேண்டும்.
அப்படியிருந்தாலும், எதிரிகளால் அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளிப்பதில் வழிதவறிப் போயாவது—மனிததன்மைக்கு விரோதமாகவாவது ஒரு சிறு காரியத்தையும் செய்யாமல் ஒரு சுவர் வீரனைப்போலவே நின்று கருமம் ஆற்றியவர். எந்தச் சமயத்திலும் மனம் கலங்கியோ அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்லர். உதாரணமாக, அவரது தலைமை வாழ்வு இந்த 10 வருஷத்திற்குள் மூன்று விதப் பரீட்சைக்கும் ஆளாயிற்று. அதாவது, ஒரு சமயத்தில் முதல் மூன்று வருஷத்தில் அவருக்கு அதிகாரமும் செல்வாக்கும்—அதாவது மந்திரி அதிகாரமும் கட்சிச் செல்வாக்கும்—இருந்தது. இரண்டாவது மூன்று வருஷத்தில் உள்ளுக்குள்ளாகவே கட்சி ஏற்பட்டதால் செல்வாக்கு இல்லாத மந்திரி அதிகாரம் மாத்திரம் இருந்தது. மற்றொரு சமயத்தில் மூன்றாவது மூன்று வருஷத்தில் உள் கலகத்தை எதிரிகள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக்கொண்டதால் அதிகாரம், செல்வாக்கு இரண்டும்—அதாவது கட்சிச் செல்வாக்கும் மந்திரி அதிகாரமும்—இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும், முக் காலத்திலும் அவர் செய்யவேண்டியதைத் தைரியமாகவும் ஒரே மாதிரியாகவுமே செய்துவந்தார் என்று சொல்லியாக வேண்டுமே ஒழிய, எப்போதாவது களைத்துப்போயோ மனமுடைந்துபோயோ விட்டார் என்று சொல்லமுடியாது. மேலும், அதிகாரமும் செல்வாக்கும் இல்லை என்று சொல்லும்படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில் மந்திரி வேலையுமில்லாமல் கட்சிச் செல்வாக்கும் இல்லாமல் இருந்துங்கூட நமது ஈனநிலைக்கு இவரும் தாம் என்கிற ஞானங்களும், நாம் மனிதர்களாவது—என்பது போன்ற ஞானங்கள் உதயமாவதற்கு இதுவே தகிக சமயம் என்று கூசாமல் சொல்லுவோம். ஏனெனில், இந்தச் சமயத்தில் நாம் நிலைகொள்ளவில்லை யானால் இனி நமக்கு வெகு காலத்திற்கு விமோசனம் இல்லை என்றுதான் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும்.
தந்தையை இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையை இனி தந்தை இல்லாமல் எந்த விதமாய் நடத்து வது என்கின்ற யோசனை கொண்டு, மார்க்கம் கண்டு நடக்க முயற்சிப்பார்கள், ஒழிய "வேறு தந்தை யார்" என்று நினைத்துக்கொண்டு தேடித் திரியமாட்டார்கள்.
அதுபோலவே, நாமும் இனித் தலைவரைத் தேடிக்கொண்டு திரிவதைப்போன்ற பைத்தியக் காரத்தனம் வேறில்லை என்று நினைக்கவேண்டும்.
உண்மையில், நமக்கு இப்போது என்ன குறை? தலைவர் இல்லாத குறையா, நமக்குப் போதிய கவலையும் உணர்ச்சியும் பொறுப்பும் இல்லாத குறையா—என்பதை ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்கவேண்டும். உண்மையைப் பேசவேண்டுமானால், தமது மக்களுக்கு கனிய உணர்ச்சி ஏற்படவில்லை; பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. சுயநலம் அளவுக்கு மேல் தாண்டவம் ஆட விட்டுவிடுகின்றோம். இத்தியாதி குணங்கள் உள்ள சமூகம் ஆயிரம் ஆயிரம் நாயர்களையும்—தியாகராயர்களையும்—பனகாள் வீரர் களையும் "சிரஞ்சீவிகளாக" வைத்துக்கொண்டிருந்தாலும் முற்போக்கடையை முடியவே முடியாது என்று சொல்லுவதற்காக மன்னிக்கவேண்டுகிறோம். நமது ஈனநிலைக்கு நமது மக்களில்—பாமர மக்களைவிடப் படித்தவர்கள் என்பவர்களும் பணக்காரர்கள் என்பவர் களுமே மிகுதியும் காரணஸ்தர்களாய் இருந்து வந்திருக்கின்றார்கள் என்று சொல்லலும் பொறுத்த வர்களுக்கு நாம் மன்னிக்கவேண்டும்.
நமது மேற்கண்ட தலைவர்களால் இதுவரையில் பாமர மக்களைவிட முக்கியமாய்ப் படித்தவர்கள் என்பவர்களும் சிறிது பணக்காரர்கள் என்பவர்களுமே பயன்பெற்றுவந்திருக் கின்றார்கள். அதற்கு உதாரணமாக, அனேக படித்தவர்கள் பெற்றிருக்கும் உத்தியோகங் களையும் பணக்காரர்கள் பெற்றிருக்கும் பதவிகளையும் கவனித்துப் பார்த்தால் விளங் காமல் போகாது. ஆனால், இப் படித்தவர்களினுடையவும்—பணக்காரர்களினுடையவும் உணர்ச்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால், வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகின்றோம்—ஆனால், கோபிப்பதில் பயன் இல்லை. ஒரு சாதாரணமான—25 அடி உயரமுள்ள பையன், அதுவும்—அரை டிக்கட்டுக்கு அருகதையில்லாதவன் என்று சொல்லக்கூடிய முதற்கொண்டு, பெரிய ஆசாமி என்கிற வர்கள் வரையில் இரண்டு கோணல் எழுத்து அறியவோ அல்லது ஏதாவது ஒரு சர்வகலா சாலி பட்டமோ பெற்றுவிட்டால்—உடனே, தன்னை ஒரு பெரிய முக்கியமான பார்ப்பனரல்லாதார் என்று நினைத்துக்கொள்வதும், "பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ன செய்து விட்டது; யாருக்குச் சாதியூட விட்டது? எனக்கு இன்னமும் யாதொரு உத்தியோகமும் கொடுக்கவில்லை; அவனுக்குக் கொடுத்தார்கள், இவனுக்குக் கொடுத்தார்கள் எல்லாம். அவரவர்கள் சுயநலத்திற்காகப் போடும் வேஷமே ஒழிய—இது பார்ப்பனரல்லாதார் இயக்கமல்ல?" என்கூறி சவடால் அடிப்பதும், "பனகாலைத் தெரியாதா? நாயரைத் தெரியாதா? செட்டியாரைத் தெரியாதா எல்லாம் கூட்டுக்கொள்ளை?" என்று சொல்லுவதும்; "பார்க்கப் போனால் பார்ப்பனர்களே நல்லவர்கள்?" என்று சொல்லுவதும்; "என்ன இருந்தாலும் காங்கிரசைக் குற்றம் சொல்லலாமா? ஆதலால்தான் இவர்களோடு இருக்கமுடியவில்லை?" என்பதும்; "எல்லாம் சரி, எனக்கு அந்தப் பெயர் தான் பிடிக்கவில்லை!" என்பதுமான தத்துவம், ஆயிரத்தெட்டு அசந்தர்ப்பமும் அசம்பாவிதமான வார்த்தைகளை உளறிக்கொண்டு திரிவதும்—இவ்வளவையும் சகித்துக்கொண்டும் தலைவர்கள் ஏதாவது உத்தியோகமோ பதவியோ கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டவுடன் நேரு விरுद्ध களாகவும் அலட்சியப் புத்தியுடையவர்களாகவும் இருந்துக்கொண்டு, "பனகால் இப்படி நடக்கவேண்டும், அப்படி நடக்கவேண்டும்?" என்று அவருக்கே புத்தி சொல்லுவதும் பார்ப்பனர்களுக்கு உள் ஆளாயிருப்பதும், இயக்கத்தைக் குறை கூறுவதுமான வேலையிலேயே காலங்கழிப்பதுமாய் இருக்கின்றார்கள். பணக்காரர்களும் தங்களுக்குப் பதவி கேட்பதும், கிடைத்துவிட்டால் இயக்கத்தை மறந்துவிடுவதும், கிடைக்காவிட்டால் இயக்கத்தையும் தலைவர்களையும் குற்றம் சொல்லிக்கொண்டு எப்படியாவது இந்த இயக்கத்தை ஒழிக்காலொழிய நாட்டுக்கு மோட்சமில்லை என்று பிதற்றித் திரிவதுமான வேலையில் ஈடுபடுவதைத் தவிர வேற ஒரு நன்மையுமே செய்யாமல் இருந்துவருகின்றார்கள்.
இதற்கு வெளிப்படையான சாட்சி பார்ப்பனரல்லாதார் பெயர் சொல்லிக்கொண்டு பெரிய பெரிய உத்தியோகம் பெற்றவர்கள்—ஜில்லா ஜட்ஜ, கலெக்டர் முதல் சாதாரண பெரிய உத்தியோகம் வரை பெற்றவர்கள்—இயக்கப் பத்திரிகை வாங்க மாட்டார்கள், வாங்கச் சொன்னால் அதில் குற்றம் சொல்லுவார்கள். மீறி வாங்கினாலும், பணம் கொடுக்க மாட்டார்கள். கேட்கப் போனால் "அந்தப் பணம் என்ன ஆச்சு, இந்தப் பணம் என்ன ஆச்சு?" என்று கேட்பதன் மூலம் பழிசுமத்த வருவார்கள். அதோடு எதிரிகளின் பத்திரிகைகளை முன்பணம் கொடுத்து வாங்கிப் படிப்பார்கள். அன்றியும், இவர்கள் தங்களைப் பார்ப்பனரல்லாத இயக்கத் தலைவர்கள் என்றும், அவ் வியக்கத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள்.
சாதாரணமாக, அவ்வியக்கம் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இருந்ததான 1927-ஆம் வருஷம் வரையில் "ஜஸ்டிஸ்" பத்திரிகை—1200-ம் "திராவிடன்" பத்திரிகை—700-ம் தான் அச்சாகிக்கொண்டு வந்தன. இதற்கும் மந்திரிகள் மாதம் 2000 ரூபாய்போல் கொடுத்து வந்தார்கள். மற்றபடி, சில ஜமீன்தாரளும் பெரிய பணக்காரர்களும் உதவிவந்தார்கள். ஆனால், இயக்கத்தால் உத்தியோகம் பெற்றவர்களில் பணங் கொடுப்பதையோ, பத்திரிகை படிப்பதையோ தங்கள் கடமை என்று நினைத்தவர்கள் யார் என்று சொல்ல முடியாமலே இருந்தது. இன்றையத் தினமும் 3000-4000 மேற்பட்ட "ஜஸ்டிஸ"ும் 6000-கு மேற்பட்ட "திராவிடன"ும் வெளியாகின்றதானாலும் "ஜஸ்டிஸ"க்கு மாதம் 1-க்கு 1500 ரூபாய் நஷ்டமும், "திராவிடனுக்கு" மாதம் 1-4-க்கு 500 ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டு வருவதன் மூலம் "ஜஸ்டிஸ்", "திராவிடன்" பத்திரிகைகள் 25000 ரூபாய் கடனிலும் அது இன்னமும் பெருகும் படியான நிலையிலும் இருக்கின்றன. தியாகராயர் மெமோரியல் கட்டிடத்திற்கு 40000 ரூபாய் கடனும் வட்டியும் ஏறிக்கொண்டு வருகின்றது. எனவே, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் நன்மை அடைந்தவர்களின் யோக்கியதையும், ஒப்பற்ற அருமையான மூன்று தலைவர்களால் அவ்வளவு தியாக புத்தியுடனும் சமர்த்துடனும் நடத்தப்பட்ட மக்களின் நன்றியறிதலற்ற தன்மைக்கும் வேற என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
மற்றும், இவ்வியக்கமானது, தன்னிடமிருந்து வெறும் உத்தியோகத்தையும் பதவி யையும் மாத்திரம் எதிர்பார்க்கும் மக்களைக் கொண்டிருக்கின்ற வரையிலும்—இயக்கத்தின் இலட்சியமே வெறும் உத்தியோகங்களை சர்க்காரிடமிருந்தும் பார்ப்பனர் களிடமிருந்தும் பிடுங்கிக்கொள்வதுதான் என்று கருதும் மக்களைக் கொண்டிருக்கும் வரையிலும்—இனியும் எதுனை தலைவர்கள் தோன்றினாலும் உண்மை இலட்சியம் கைகூடும் என்று நம்மால் சொல்லமுடியாது. பதவிப் போட்டியாலும் அதிகாரப் போட்டியாலும் உத்தியோகப் போட்டி யாலும் மக்களுக்குள் கட்சிப் பிரிவும், விரோதமும், வெறுப்பும் ஏற்படும் நிலைமை மாறும்படி செய்யவேண்டும். உத்தியோகம், பதவி, அதிகாரம் முதலியவைகள் எல்லாம் சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தக்க வழியில் கைப்பற்றவும் உபயோகப்படுத்தவு மான மாதிரியில் நிர்வகிக்க ஏற்பாடு செய்யவேண்டும். பெரிய சம்பளமுள்ள மந்திரி போன்ற பொறுப்புள்ள அதிகாரப் பதவிகள் இயக்கத்தின் பிரதிநிதித்துவமாக அனுபவிக்கவேண்டும். அதன் வருமானம் முழுவதும் இயக்கத்திற்குச் சேரவேண்டும். வேலை பார்ப்பவரின் செலவுக்காக இயக்கத்திலிருந்து ஏதாவது கொடுக்கப்படவேண்டும். கவுரவ உத்தியோகங்களும் பொது நன்மையைக் கருதுபவர் களுக்கே—ஒரு குறிப்பிட்ட நிபந்தனைப்படி நடப்பவர் களுக்கே கொடுக்கப்படவேண்டும்.
அன்றியும், சாதாரணமாக இதுசமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் உண்மை யிலேயே கொள்கைகளுக்காக அபிப்பிராயபேதம் இருப்பதாக யாரும் சொல்லமுடியாது. சுய நலத்தை முன்னிட்டு ஏற்பட்ட விரோததினால் விலகி நிற்கவும், எதிர்த்து நிற்கவும் வேண்டி—வேண்டுமென்றே சில மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கற்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே ஒழிய வேறில்லை.
இந்த நிலைமை அடியோடு ஒழிய வேண்டும். இன்னும் இன்னோரன்ன பல விஷயங் களைக் கவனித்து மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளச் சம்மதிப்பார்களானால் தலைவர் மறைந்த நஷ்டம் நம்மை ஒன்றும் செய்துவிடாது. மற்றும், அவர்களின் உயிர் நீக்குதால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டது என்றுகூடச் சொல்லத்தக்க ஒரு பெருமையும் மறைந்த தலைவர்களுக்கு ஏற்படும். இந்தச் சமயத்தில் முடிவாகவும் சுருக்கமாகவும் நாம் இவற்றைச் சொல்லி, இந்த நமது துயரத்தையும் ஆசையையும் படித்த மக்களைவிட சாதாரணப் பொது மக்களிடமே தெரிவித்துக்கொண்டும்—அவர்களையே நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஆதலால், இந்தச் சகித்தற்கரிய துக்கத்தால் யாரும் தங்கள் பிற்கால கதியைப்பற்றி உடைந்து போகாமல், நம்பிக்கையோடு ஒற்றுமைப்பட்டு—கட்டுப்பாடாக முனைந்து வேலை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
மக்கள் எல்லோரும் நாயராக!எல்லோரும் தியாக
தியாகராயராக !
எல்லோரும் பனகாள் வீரரகு !
[குடி அரசு—தலையங்கம்—12-12.1928]
www.thamizham.net - Free £ book No 3046
1914
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
4. உண்மைத் தோழர்
சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் 26-2-1933-ந் தேதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய்விட்டோம். நாம் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ளவரும் இச் செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டிருப்பர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தோழர் இராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் இராமச்சந்திரனைப்போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் அணிந்த தீரமும், மனதில் உள்ளதைச் சிறிதும் எவ்வித தாட்சண்யத்திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறுகொண்டிருந்த காலத்தில் தோழர் இராமச்சந்திரன் அவர்கள் தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "கினி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை" என்று ஒரு உறுதிமொழி கூறி, அதை ஒரு விரதமாய்க் கொண்டிருப்பதாக விளம்பரப்படுத்தினார்.
மற்றும், அவரது திருநெல்வேலி சுயமரியாதை மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ஆம் வருஷத்தில்) வருங் காலத்தில் சுயமரியாதை இயக்கத்தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப்பிட்ட சமயத்தில்,
"உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்;
உலகம் எல்லாம் ஒரு ஐக்கிய ஆட்சி நாடாகும்;
உலகத்திலுள்ள சொத்துக்கள், பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமாகும்.
வேலை செய்யாத சோம்பேறிகள் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்; குறைகள் குறைந்துவிடும்; நோய்கள் அகன்றுவிடும்; மனித ஆயுள் இரட்டித்துவிடும்; மக்களின் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமைகள் நீங்கி, ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டவமாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள்?" என்று கர்ஜித்த துடன், தீண்டாமை என்பது மதக் கொள்கையைச் சேர்ந்தது என்பது முழுப் புரட்டென்றும் அது முழுவும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப்படையைக் கொண்டது என்றும் பேசி இருக்கிறார்.
இந்தத் துத்துவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சுயமரியாதை இயக்கம் வேலைசெய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும், தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் சவுகரியமும் இருந்தும் அவைகளை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலைகொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்துவந்த உண்மைச் சுயமரியாதை வீரரே யாவர். இவரது வயது 48; அதாவது 1888-ல் பிறந்தவர். இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர் நீதமைக்கு யாரே வருந்தாமல் இருக்கமுடியும்? இவருக்கு 4 ஆண் மக்களும், 3 பெண் மக
இந்தச் சமயம் 2, 9 குழந்தைகள் பிறந்து, கிற நீதுவிட்டன. இந்த நிலையில், அந்தக் கடையில் நல்ல கலாபம் கிடைத்தாலும் பிறகு போட்டி ஏற்பட்டதால் அதை விடுத்து, அந்தக் கடையை அப்படியே மற்றொருவருக்கு விற்றுவிட்டு கலாபப் பணத்தையும், கைமுதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக்கடை வைத்தார்.
அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்லச்சு வெங்கட்டன் என்ற பெயர் மாறி, வண்டிக்கார வெங்கட்ட நாயக்கன் ஆகி, பிறகு அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கட்டினாகி, பிறகு அதுவும் மாறி மளிகைக்கடை வெங்கட்ட நாயக்கர் ஆனார். அதில் மூன்று வருடத்தில்ஸே மற்றவர்கள் பொறாமைப்படும்படியான இலாபம் அடைந்தார்.
ஒரு சிறு குச்சு-- அதாவது, கதவு இல்லாமல் தட்டி வைத்து, இரவு முழுவதும் நாயை விரட்டிக்கொண்டிருக்க வேண்டிய குடிசை மாறி, ஓட்டு வில்லை கட்ட வீடும், கரண்டு ஏக்கர் விস்தீரணம் முன்ன நல்ல வயல் நிலமும் உடையவர் ஆனார்.
இது சமயம்தான், அம்மையாருக்கு முன்பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து போய் ஸ்தலயாত்திரைகன், தவங்கள் செய்து, வறட்டிக்கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டுப் பிசைந்து சாப்பிட்டு, சன்னியாசிகளின் ஈட சாப்பிட்டு, வரன் பெற்று ஈட வெ. கிருஷ்ணசாமியையும், ஈ. வெ. இராமசாமியையும் பெற்று எடுத்த காலம் என்றாலும், அம்மையாருக்குள்ள பிள்ளை ஆகையால், மூத்த பின்னை ஒன்றே தனக்குப் போதும் என்று கருதி, அதற்கே தனது முலைப்பால் முழுவதும் கொடுக்க ஆசைப்பட்டு, இளைய பிள்ளையாகிய கிராமனை மற்றொரு குழந்தை இல்லாத அம்மையாருக்கு-- அதாவது, தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும், சிறிது நிலமும் இருந்த காரணத்துக்காக அவர்களையே வளர்த்துக்கொள்ளும்படி இனமாய்க் கொடுத்துவிட்டார்கள்.
அந்தக் காரணத்தாலேயே இராமன் (ஈ. வெ. இராமசாமி) பள்ளிக்கு அனுப்பப் படாமல், தெருத் தெருவாகச் சுற்றவும், கேள்வி கேட்பார் இல்லாமல் அலையவும் கைம் பெண் வளர்ப்பது கழுதைக்குட்டிதான் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு உதாரணமாக இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய்ச் செல்வமாய் வளர்க்க வுமான நிலை ஏற்பட்டது.
ஆனால், அந்தச் சமயந்தான்-- அதாவது, அந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயந்தான் வெங்கட்ட நாயக்கருக்குப் பெரிய செல்வம் பெருகச் சந்தர்ப்பமும் பெருகிவந்த காலமாகும். அதாவது, கடைசியில் சொன்ன மளிகைக்கு கடை வியாபாரமானது வலுத்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள், கேட்போர் மனமும் பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமாய் இருந்ததால், எப்படியாவது அந்த மளிகைக்கடை நடக்கும் கட்டடத்தைப் பிடுங்கிக்கொண்டால் தங்களுக்கு அந்த இலாபம் கிடைக்கும் என்று கருதிச் சிலர் அந்தக் கடையைக் கட்டடக்காரனிடம் அதிக வாடகை வைத்துக் கேட்க ஆரம்பித்தார்கள்.
அம்மையாரும், புருஷனும் யோசித்து, கடையைச் சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்ளுபவர்களுக்குக் கொடுத்துவிடுவதாய் விலை கூறினார்கள். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது, மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார். புருஷன் உடனே மண்டி வெங்கட்ட நாயக்கர் ஆனார்.
சின்னத் தாயம்மையாருக்கும், மண்டி வெங்கட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்டதோடு, எப்படியோ நாணயமும் ஏற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக்கொள்வதில் இருவரும் சமர்த்தர்கள்.
அந்தக் காலங்களில் பணம் படைத்தவர்களுக்குப் பணம் போட்டுவைக்க பாங்கி (Bank) இல்லாததால் நாணயத்தில் பெர்பெற்ற சின்னத் தாயம்மாளும், வெங்கட்ட நாயக்கரும் ஒரு சேவிங்ஸ் பேங்க் ஆகிவிட்டார்கள். பணம் ஏராளமாய்த் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும் தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கிவிட்டார்கள்.
மண்டி வெங்கட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால், சின்ன த் தாயம்மான் வீட்டில் நெல்குற்றும் கொட்டணம், துவரை, உளுந்து உடைக்கும் வேலை, விளக்க ெண்ணெய் காய்ச்சி ஊற்றும் வேலை முதலியவைகளில் எப்பொழுதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில்செய்து; புருஷனைப் போலவே தானும் வருஷம் முழுவதும் சிறிதாவது பணம் சம்பாதித்துப் புருஷனுக்குக் கொடுத்தே வருவார்கள்.
பணம் சேர்ந்த வுடன் மதபக்தி, மதச் சின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தாமாகவே தேடி வருவது வழக்கம் அல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தியுடையவர் ஆனார். விரதங்களை அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார்.
மண்டி வெங்கட்ட நாயக்கருக்கும் நாணம் பலமாக-- பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இதன் மதியில் வீட்டில் செல்வமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பரகவதராக ஆகிவிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், அதாவது மண்டி வைத்து மண்டிக் கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததற்கும்மல் கலாபம் வர ஆரம்பித்த வுடன், சின்னத் தாயம்மாள் சின்னப்பிள்ளை கிராமனை (ஈ. வெ. இராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக, இனரமாக (தத்தக்) கொடுத்துவிட்ட அம்மானிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள்.
இராமனை வளர்த்த அம்மான் ஊர்ப் பஞ்சாயதுக்கு கூட்டினார். மண்டி வெங்கட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்லமுடியவில்லை. சின்னத் தாயம்மாள் "இரண்டு கண்கள்தான் எனக்கு இருக்கின்றன. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ?" என்று சொல்லிவிட்டார்கள்.
முடிவில் இராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும், அவன் விதவை வளர்த்த பிள்ளையாய் ஊர்சுற்றியாய், லோலனாய் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் இலாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான். இருந்தபோதிலும், பள்ளியில் வைத்துவிட்டு, வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள்.
வாத்தியாருடன் சண்டை; பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி. கடைசியாய் "வாத்தியாரை வைவதில்லை, பிள்ளைகளை அடிப்பதில்லை" என்கிற வாசகம், ஆயிரம் தடவை-- அய்யாயிரம் தடவை தண்டக் காப்பி எழுதுவதே வேலையாய் இருந்ததால், கிராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டு, மண்டிக்கடையில் அதாவது-- தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய் ஏலம் கூறும் வேலையில் போட்டார்கள்.
இருந்தாலும், இராமன் எங்கு வளர்த்த தாயாரிடம் போய் விடுவானோ என்று சின்னத் தாயம்மான் சின்ன மகனுக்குச் சிறிது சலுகை காட்டி, பொய் அன்பாவது காட்டியே வருவார்கள்.
எப்படியோ பணம் சேர்நீதுக்கொண்டேவரும். இந்தச் சந்தர்ப்பந்தான்-- வெங்கட்ட நாயக்கர் என்கிற பெயர் மாறி நாயக்கர் ஆனதும், சின்னத் தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கம்மாள் என்கிற பெயர் ஏற்பட்டதுமாகும்.
அம்மையாருக்குத் தெய்வபக்தி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாக வேண்டும். பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்டவிடமெல்லாம்-- காடுமேடெல்லாங்கு கோவில், சதிரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகமுரைகளுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
ஒவ்வொரு கலியரணத்தின் போதும், தருமக் கலியாணங்கள் செய்வார்கள். நன்றாய் இருக்கும். கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால், "நீங்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை, என் பணத்தில் செய்யுங்கள்" என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடுவார்கள்.
வீட்டில் ஒருவாரம் காலட்சேபம், இராமாயண; பாரத வாசகம், எங்கெங்கோ திரியும் சன்னியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும் சதாசர்வ காலம் உலையில் நீர் கொதித்தவண்ணமாய் இருக்கும்படியான தண்டச் சோற்றுச் சதிரம்போல் வீட்டை நடத்திவந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தக்கது. இளைய மகன் இராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும், அம்மையார் இராமன் தொட்ட சொம்பு-- டம்ளர் ஆகிய வைகளைக் கமுவியே வைப்பார்கள். இராமனைச் சமையல் வீட்டுக்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் "சரதிகெட்ட" பயலாய் விளங்கினான்.
இராமனுக்காகவே சமையல் வீட்டுக்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த இலட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். இராமனுக்குத் தினமும் மாமிசம் வேண்டும்; ஆதலால், இராமனுக்குக் கலியாணம் ஆனவுடன் அவனுடைய "அனாசாரத்துக்கு" ஆகவே அம்மையார் திராமனை "வேறு குடும்பம்" வைத்து விட்டார்கள்.
சதாசர்வகாலம், தன் வயிற்றில் இப்படிப்பட்ட பிள்ளை-- இராமன் பிறந்ததற்குத் துக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய்ச் சம்பாதித்து, நன்றாய்ச் செலவு செய்தவர்கள்; பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அமுதவர்கள். அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள்.
எத்தனையோ பேரைத் திருத்திய இராமனால், அம்மையாரிடம் தன் கொள்கையைச் சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடங்கொடுக்கவில்லை.
கடைசி வயதில்கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம், "என் மகன் இராமனைச் சிறிது பார்த்துக் கொள்ளுங்கள். இளங்கன்று பயமறியாது என்பதுபோல் கண்டபடி திரிகிறான்" என்று ஆவலாகச் சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலானாக்கள் ஷவ்கத் அலி, முகம்மது அலி ஆகிய இருவரும் அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்டவைத்து வாழ்த்தும்படி கேட்டபோது, தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தைச் சுளிக்கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக்காட்டிக் கேலிசெய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படி செய்தேன்.
அதனால் அரசியல் தலைவர்கள்--காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னைத் தொட்டுவிடுவார்களோ என்று பயந்து, ஒடுங்கி, ஒரு மூலையிலே நின்றுதான் அவர்களுடன் பேசுவார்.
மூடநம்பிக்கைகளுக்கும், குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்நாள் முடிவெய்திவிட்டார்.
எனக்கு அவர் முடிவெய்தியதுபற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை--எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திவிடவேண்டுமென்பதே!
என் இஷ்டம் நிறைவேறியது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!
[குடி அரசு - 2.8.1936]
7. சர். ஏ.வி. பன்னீர்செல்வம்
நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர்செல்வம் அவர்களை; இன்று, காலம் சென்ற பன்னீர்செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது!
நெஞ்சு திக்கு திக்கென்று அடிக்கொள்ளுகிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடில்லை! கண் கலங்கி மறைக்கிறது! கண்ணீர் எழுத்தைக் களை அழிக்கிறது!
பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தியோகம் வந்ததும்போதும், அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும்போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்துவிட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது.
அவருக்கடுத்தாற்போல்--யார், யார் என்று மனம் ஏங்குகிறது! தேடுகிறது! தேடித்தேடி ஏமாற்றமடைகிறது!
என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை.
என் தாயார் இறந்தபோதும்--இயற்கைதானே; 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசை அல்லவா என்று கருதினேன்!
10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பப் படிக்கவைத்த ஒரே அண்ணன் மகன், படித்துவிட்டு இந்தியா வந்துசேர்ந்து சரியாக 20 வயதில் கிறந்துபோனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை!
பன்னீர்செல்வத்தின் மறைவு மனதைத் வாட்டுகிறது.
தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும்--தமிழர் நிலையை எண்ணுந் தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது!
காரணம், முன் சொல்லப்பட்ட மனைவி, தாயர், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்துபோகும்.
பன்னீர்செல்வம் உண்மையில்,பிராமண (பார்ப்பன) சாதி என்பதாக ஒரு சாதி--அந்தச் சாதியின் நலனுக்காக--அதுவும், மற்ற சாதிகளை இழித்து அழுத்திக் கசக்கிப் பிழிந்து, தாங்கள் மாத்திரம் நல்வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கின்ற கருத்துக்காக மாத்திரம் அல்லாமல், மற்றபடி வேறு எந்தக் காரியத்திற்கும் அந்தச் சாதி உலகத்துக்குத் தேவையே இல்லாத சாதியாகும். அப்படிப்பட்ட சாதியை அது இழிய போகும் தருணத்தில் காப்பாற்றி அந்தச் சாதியாருக்குப் பொருந்தாத ஏற்றத்தைத் தந்து, நிரந்தரமாய் இல்வாழ்வு வாழ வகையவகுத்த.
அப்படிப்பட்ட அந்தச் சாதிப் பாதகரே, அதற்குப் பிரతி உபகாரமாக இப்படிப்பட்ட பழிபாவத்திற்கு அஞ்சாத மகா பாதகமான காரியம் செய்தார் என்பது--இது, அவருடைய அவ்வொருவருடைய செய்கையாக மாத்திரம் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் முடியவே முடியாது. இதைச் 'சாதி தர்மம்' என்றுதான் சொல்லவேண்டும்.
புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டுச் சமணர்கள் கழுவேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும் வஞ்சனையானதுமாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும் சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவைகள்?
இவைபோன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ--சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்காக பார்ப்பனச் சாதியைக் குறை கூறுவது முற்றும் சரியான தாகிவிடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதக் கற்பனைகளே இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளைநிலமாக இருந்து வருகிறது.
உண்மையிலேயே மத மாற்றரியம், வகுப்பு மாற்றரியம், கின மாற்றரியம் முதலிய இவேஷங்களுக்குப் பார்ப்பன மதம் தவிர--மற்றபடி, இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்லமுடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக்கூடும் என்று கேட்கிறோம்.
நன்றாக ஆழ்ந்து நிதான முடிவியுடன் கூர்ந்து சிந்திப்போமானால், 'வெள்ளையன் ஆட்சி கூடாது, முஸ்லிம் ஆட்சி கூடாது!' என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு ஏதாவது கொள்கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால், வெள்ளையன் ஆட்சியும் முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன. இந்துஸ்தான் சுய ஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும் இந்து-முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால்--இந்த ஒரு ஆண்டு காலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு காரணம் என்று யாராவது, எதையாவது சொல்ல முடியுமா?
திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிட-ஆரியர் நாடு பிரிவினைப் போராட்டங்களுக்கும் பார்ப்பன மதம் காரணம் என்பதல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மத தர்மம் காந்தியாரைக் கொன்றதில் அதிசய மென்ன என்று திரும்பவும் கேட்கிறோம்.
பார்ப்பனீய மதக் கொடுமைக்குத் திராவிட நாட்டில் எப்படியோ ஒரு விதத்தில் இதுவரை இப்படிப்பட்ட பாதகங்களுக்கு இடமில்லாமல் பலரால் பல காரியங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றாலும், பார்ப்பனர்கள் இனிச் சும்மா இருக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் தமது பார்ப்பன மதத்தைக் காப்பாற்ற அரசியலில் கலந்துகொண்டும், பத்திரிகைகள் நடத்திக்கொண்டும், காந்தியார் போல் ஆஷாட பூதி வேஷம் போட்டுக்கொண்டு 'தகளி' சுற்றுவதும், கதர் கட்டிக்கொள்வதும், கோணல் குல்லாயைப் போட்டுக்கொள்வதும், தேசியக் கொடி பிடித்துக்கொண்டு காங்கிரஸ் பித்தர்கள் போல் நடிப்பதுமாய் இருந்துவந்தார்களே ஒழிய--நாட்டுப் பற்றால் என்றோ, மக்களுக்கு விடுதலை ஏற்படவேண்டும் என்ற விடுதலை வேட்கையால் என்றோ, எந்தப் பார்ப்பனரையாவது அவர்களது எந்த நடவடிக்கைகளையாவது சுட்டிக் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.
வடநாட்டில் காந்தியைவீழ்த்தியதன் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஆக்கோபம் ஒரு அளவுக்கு இந்த நாட்டிலும் கிনிக்குக் குறைந்துதான் தீரும் என்பதோடு, இந்து-முஸ்லிம் போராட்டமும் பெரும் அளவுக்கு அடங்கிதான் தீரும் என்பதை உணர்ந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள், இங்கு திராவிட மக்கள்மீது அவ் வஞ்சகத் தன்மையைத் திருப்ப இப்போதே துவங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
முதலாவதாக, தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரைச் சுட்டவன் பார்ப்பனன் என்பதை வேண்டுமென்றே மறைத்து--மக்கள் முஸ்லிமன் மீதும், காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் மீதும் பாயும்படியான மாதிரியில் அயோக்கியத்தனமாக மறைத்தும் திரித்தும் பிரசரித்தார்கள். அது மாத்திரமா என்று பார்த்தால், திராவிடர் கழகத்தார் மீதும் துவேஷம் ஏற்படும்படி கரட்டை அயோக்கியத் தனமாக, 'கருப்புச் சட்டைக்காரர்களின் கலாட்டா?' என்ற தலைப்புக்கு கொடுத்து மக்களை அவர்கள்மீது கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்தக் காரியத்தைச் 'சுதேசமித்திரன்' பத்திரிகையே முதன்முதலாகத் தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மையாக இந்த நாட்டில், 'இந்து', 'சுதேசமித்திரன்' என்ற இந்த இரண்டு பேயாட்ட, வெறி கிளப்பும் விஷமப் பத்திரிகைகள் இல்லாமல் இருந்திருக்குமானால்--இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவேரும் அன்னியோன்னிய பாவமடைந்து ஞானமும், செல்வமும் ஆறாகப் பெருகும் நன்னாடாக ஆகிப் பல்லாண்டுகள் ஆகியிருக்கும். இன்றையக் கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000-ல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும்.
இப் பத்திரிகைகள் தங்கள் சாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களையெல்லாம் 'பொது மக்கள் ஆத்திரம்' என்று போட்டுவிட்டு, (கருப்புச் சட்டைக்காரர்கள் செய்தாரகளோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது, 'கருப்புச் சட்டைக்காரரீகள் கலாட்டா?' என்று போடுவதன் காரணம், அதுவும் இந்தச் சமயத்தில் போடுவதன் காரணம் வேறு என்னவாய் இருக்கமுடியும்? இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும், 'இந்து', 'சுதேசமித்திரன்' என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றுகளும் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷநோய்கள் நீங்கப்போவதில்லை என்று உறுதியாய்க் கூறுவோம். இந்தச் சமயத்தில் பார்ப்பனர் செய்யும் அயோக்கியத் தனங்கள் ஏராளமாக இருக்கும்போது, அவைகளை மறைத்து--சுட்டவன் சாதியைக்கூட மறைத்துவிட்டு, 'கருப்புச் சட்டைக் காரர்கள் கலாட்டா?' என்று எழுதுவதானது சர்க்கார் அடக்குமுறையைப் பார்ப்பனர் பக்கம் திருப்புவதை விட்டு--கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்புவதற்கல்லாமல் வேறு எதற்காக இருக்கமுடியும்? இத்தப்படி செய்த மற்றக் கூட்டத்தினருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசுரித்ததா?
இப்படிப்பட்ட அயோக்கியர்கள் உள்ள நாட்டில்--எப்படி சாதி, வகுப்பு ஒற்றுமை இருக்கமுடியும்? மேலும் மேலும் துவேஷம், பிரிவு ஏற்படாமல் எப்படி இருக்கமுடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் 'கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா?' என்று எழுதினால் அதன் உள் மர்மம் என்னவாய் இருக்கமுடியும்?
எனவே, பார்ப்பனிய விஷ மதம் அழிக்கப்பட்டால் ஒழியச் சாந்தியும், சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகதான் இருக்கும். வருணாசிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும்.
பண்டித நேருவும், இராஜகோபாலாசீசாரியாரும் எவ்வளவு தியாகிகளாகவும், யோக்கியர்களாகவும், புதிசாலிகளாகவும் இருந்தாலும் அவர்கள் இந்த வருண தர்மத்தை வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட நல்லாட்சியைக் கொண்டு வந்தாலும், அதில் கரந்தி யாருக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும்--ஏன் நமக்கும் கூட ஏற்பட்டுதான் தீரும். பார்ப்பன மதம் அவ்வளவு விஷத்தன்மை கொண்ட மதமாகும்!
ஏன் இப்படிச் சொல்கிறோமென்றால், பர்மாவில் சுயராஜ்யம் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்து விட்டது. எப்படிச் செய்ய முடிந்ததென்றால்--அங்கு வருணாசிரம சாதி முறை இல்லை; பார்ப்பான் இல்லை. இந்துக்கள் நாட்டில்--இந்துஸ்தானில் சுயராஜ்யம் வந்து என்ன செய்தது? காந்தியார் உயிரைப் பலி வாங்கிவிட்டது. ஏன் என்றால், இங்கு வருண சாதியும், பார்ப்பானும் உண்டு. இனியும் என்ன என்ன செய்யப்போகின்றனவோ இவை? இன்றைய சுயராஜ்ய ஆட்சி மந்திரிகளில்--ஒருவர் மீது மற்றொரு மந்திரி சந்தேகப்பட்டுக் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்; அதாவது, போதுமான பாதுகாப்பு முயற்சி எடுத்துக் கொள்ளாததாலேயே உன் நாட்டுக்கு கலகமும் காந்தியார் கொலை பாதகமும் ஏற்பட்டது என்று--பாதுகாப்பு மந்திரிமீது பண்டிதநேரு, குற்றமேற்படும்படிச் சொல்கிறார். நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன், அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே, இதை--அதாவது 'பாதுகாப்பு மந்திரி (சர்தார் பட்டே
பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாக்காவுக்குத் தகுதி அற்றவர்' என்று சொல்லுகிறார். பொது மக்களும் இந்தக் கொலைக்குச் சர்தார் மீதும் பழிபோட இடம் இருக்கிறது என்றே கருதுகிறார்கள். காந்தியாரும் உயிருடன் இருக்கும்போது, 'எனக்கும் பட்டேலுக்கும் ரோதம் இருப்பதாகக் கருதாதீர்கள்' என்று சொல்லி, அவர்மீது மக்களுக்கு உள்ள தப்பப்பிப்பிராயத்தை மாற்ற முயன்று இருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும், 'காந்தியார் பட்டினியின்போதே செத்து இருந்தால் நன்மையாக இருந்திருக்கும்' என்று தனது துக்கச் சேதியில் நுழைத்துச் சொல்லியிருக்கிறார். இதன் காரணமாய் மந்திரிகளுக்குள்ளும் அபிப்பிரய பேதம் வலுதான், மந்திரி சபையில் மாற்றமோ, கோளாறோ ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
ஆகவே, பண்டித நேரு அவர்களும், இராஜகோபாலாசீசாரியார் அவர்களும் அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்கு முன்போ, இல்லையானால் இனி இப்படி நேராமல் இருக்கப் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவதற்கு முன்போ, 'காந்தியார் பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாசிரம தர்ம முறை அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது; வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்தச் சுயராஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்படமாட்டாது. இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்' என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால்--இந்த நாட்டைப் பிடித்த எந்த விதமான கேடும், ஒரே அடியாயுத் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஒரு உத்தரவு போட்டுவிடலாம். அதாவது, 'பிறவி சாதி முறை எடுபட்டுவிட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்புச் சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னியகுல க்ஷத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் மகாஜன சங்கமோ, வாணிய வைசியர் சங்கமோ, மருதுவர் சங்கமோ, அருந்ததியார் சங்கமோ; மற்றும் இப்படிப்பட்ட பல பல சாதி-வகுப்புச் சங்கமோ எதுவும் இனிச் சட்ட விரோதமாகக் கருதப்படும். அதனதன் தலைவர் களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்படும்' என்று உத்தரவு போட்டுவிடலாம்.
பிறகு நமக்கு என்னதான் வேண்டும்? தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும், தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும்.
இந்தப்படி சர்க்கார் செய்யாமல், வேறு எவ்வி முயற்சி செய்தாலும் அடுத்த பலிக்கு மந்திரிமார் உன்பட நாம் யாவரும் தயாராய் இருக்கவேண்டிய துதான். இந்த நல்ல சமயத்தில் இதைச் செய்யாமல் இந்து மகாசபை ஒழிக்கப்பட்டாலும் சரி. ராஷ்ட்ரிய சுய சேவக் சபை ஒழிக்கப்பட்டாலும் சரி--மாறுதல் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது நமது கல்லுப்போன்ற உறுதியாகும்.
திராவிடர் கழகத்தார் முக்கியமாக இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களமீது எவ்விதமான குற்றமும் குறையும் எவரும் கூறுவதற்கு கடமில்லாமல்--அடக்கமாய், அமைதியாய் உண்மையாய், நிரபராதியாய் நடந்துகொண்டு, தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்.
[குடிஅரசு 8-தலையங்கம்--7-2-1948]
340. ஜின்னா இழப்பு
தோழர்களே!
காந்தியாரின் மறைவைப்போன்றே துக்கம் தரக்கூடிய வேறொரு மறைவு சில நாட்களுக்கு முன் நம் நாட்டில் ஏற்பட்டுவிட்டது. அதாவது,
ஒவ்வொருவரும் எந்த வேலையில் இருந்தாலும் தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை, உழைப்பின் ஒரு பகுதியை, ஊதியத்தின் ஒரு பகுதியை, பொதுத்தொண்டிற்காக, ஏனைய மக்களுக்காகச் செலவிடவேண்டும். அதுதான் தனக்கென்று செய்துகொள்வதாகும்) மறைந்த பிறகும் தன் பெயர் நிலைத்து நிற்கச்செய்துகொள்வதாகும். என் தமையனார் இந்த வகையில் தொண்டாற்றி உங்களுடைய பற்றுதலைப் பெற்றிருக்கிறார். எனவேதான் அவருடைய மறைவுக்காக நீங்கள் வருகிறீர்கள், ஒரு நாளைக்குத் தம் ஆஸ்பத்திரிக்கு ஒரு 150 பேர் வந்துவிட்டார்கள் என்றால், அவ்வளவு பேருக்கு உதவ வாய்ப்பு கிடைத்ததே? என்று அவர் அவ்வளவு பூரிப்படைவார். அவர் அரிய பெரிய காரியம் ஏதும் செய்துவிடவில்லை என்றாலும் அவருடைய எண்ணம் கருதி அதுவாகவே பொதுநலத் தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆர்வமாகவே இருந்தது. நீங்களும் அம் மாதிரியான ஆர்வம்பெற்று எல்லோருடைய வாழ்வும் சிறக்கப் பாடுபடவேண்டும். உங்களுடைய அனுதாபமும் புகமுரைகளும் எங்களுக்கு மிக ஆறுதலைத் தந்திருக்கின்றன. இதற்காகவும் நாங்கள் நன்றி செலுத்திக்கொள்ளுகிறோம்.
(விடுதலை 9-7-1950)
13. ஸ்டாலின் மறைவு
ஸ்டாலின் முடிவெய்திய செய்தி கேட்டுத் திடுக்கிடாத, துக்கப்படாத ஏழை மக்கள் உலகத்திலேயே இருக்கமாட்டார்கள்.
ஸ்டாலின், உலகத்தில் ஒரு கொள்கையாகக் காட்சியாய் வந்தார்) ஸ்டாலின் உலகப் பெரியார்களில் கடைசிப் பெரியாராக இருந்தவர்.
இனி உலகில் கொள்கைக்காக வாழும், கொள்கைக்காக இருக்கவேண்டிய பெரியார்கள் இல்லை.
அது மாதிரமல்லாமல், உலக இராதீனர் தம்ஈயாய் தோன்றவேண்டிய பெரியார்களும் இனித் தோன்றப்போவதில்லை.
நாம் பெரியார் என்று சொல்வதன் கருத்து, செயற்கரிய செய்வார் பெரியர் என்ற கருத்திலேயேயாகும்.
நாம் ஸ்டாலின் கடைசிப் பெரியார் என்று ஏன் சொல்லுகிறோம் என்றால்,
இன்று மதத்து றையில் பெரியார் யாருமிலர்) பொருள் துறையில் பெரியார் யாருமிலர்) கல்வித் துறையில் பெரியார் யாருமிலர்) அறிவுத் துறையில் பெரியார் யாருமிலர்; கொள்கைத் துறையில் பெரியார் யாருமிலர்.
ஸ்டாலின் கொள்கைத் துறையில் பெரியாராக இருந்தவர். மற்ற துறைப் பெரியார்கள் முடிவெய்தியதின் பலனாய், அந் துறையில் ஒன்றும் மோசமாய்ப் போய்விடவில்லை. அவர்களது கொள்கைகளால் மக்கள் ஏமாந்துவந்தது நின்றுபோய் விட்டது என்றுதான் சொல்லலாம்.
ஆனால், ஸ்டாலின் முடிவு மக்கன் விளக்கம் பெற்று, பயனடைந்து வரும் வருகிற கொள்கைகள் வலுக் குறையக் கூடுமென்று பயப்படக்கூடிய, கவலைப்படக்கூடியதாய் ஏற்பட்டது.
அமுல் நடத்தப்பட்டு வந்த ஸ்டாலின் கொள்கையைச் சுயநலத்திற்குப் பயன் படுத்திக்கொண்டு (Exploit செய்து) வருகிறவர்கள் இனி யோக்கியமாய், நாணயமாய் நடந்து மக்களிடம் அனுதாபத்தையும் அன்பையும் பெறும் மாதிரியில் உழைத்துவந்தால், அல்லது அப்படிப்பட்டவர்கள் விலகிக்கொண்டால், அல்லது விலகிக்கப்பட்டால் தான் உலகில் ஸ்டாலின் கொள்கைக்கு இடமுண்டு.
ஸ்டாலின் முடிவானது உலக ஏழைப் பாட்டாளி மக்கின் ஒரே இரட்சகர் முடிவு எய்தினார் என்பதேயாகும்.
இது போன்ற நஷ்டம் உலகிற்கு ஏற்பட்டதில்லை.
நஷ்டம்! நஷ்டம்! ஏழைப் பாட்டாளி மக்களுக்கு மாபெரும் நஷ்டம்!
(விடுதலை - அறிக்கை - 7-5-1953)
14. திரு. வி. கலியாணசுந்தரனார்
திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்கள் தமது 70-வது வயதில் முடிவெய்தினார். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஆனால், 75 வயதுள்ளவர்களாகிய நானும், என்னைப்போன்ற பலரும் சாகாமல் (கெட்டியாக) இருக்கும்போது 70 வயதுக்காரர் முடிவெய்தியது அதிசயம்தான்.
வயது சிறிது குறைவாய் இருந்தாலும், அவரது உணர்ச்சிப் புலன் தவிர்த்து மற்ற புலன்கள் பெரிதும் அதனதன் கடமையைச் (கர்மத்தை) செய்யமுடியாமல் போனபின்பு, உணர்ச்சிப் புலன் மாத்திரம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதனால் அவருக்கு ஒவ்வொரு வினாடியும் துக்கமும் அதிருப்தியுமே தாண்டவமாட முடியுமே தவிர, மகிழ்ச்சிக்கு; திருப்திக்குச் சிறிதும் இடம் இருப்பது என்பது முடியாத செயலாகும்.
ஆனதால், கடமையைச் செய்ய வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் முடிவெய்துவது அவரவர்களைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்கது) மற்றவர்களுக்கும் ஏமாற்றமோ, சங்கடமோ அடையவேண்டியதல்லாதகுமேயாகும்.
திரு. வி. க. அவர்கள் தம் சொந்தத்திற்குப் பெறவேண்டிய பேற்றைப்பெற்ற ஒரு வாழ்க்கை வெற்றிவீரர் ஆவார்.
எப்படியென்றால், திரு. வி. க. முடிவானது அவரைத் தவிர்த்து, அவரை அறிந்த, அவருக்கு அறிமுகமான அவரைத் தவிர்த்து மற்ற எல்லா மக்களுக்கும் குறைபாடாகவும், கவலை தருவதாகவும், ஏன், தக்கம்கூட தர தகீகவுமான பலனைக்கொடுத்து இருக்கிறது) உடன், ஒருவருக்காவது மகிழ்ச்சியையோ திருப்தியையோ கொடுக்கக்கூடாதது மாகும்.
மனிதன் தனது வாழ்வில் பெறவேண்டியதில் உயர் நிலை இலட்சியமாய் இருக்கவேண்டியது இதுதான்.
இதைத்தான் வள்ளுவர், "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த (1. இன்பமல்லாதவை, 2. தனக்குப் பயன்படாதவை, 3. கூடாதவை) என்று சொல்லலாம்) (1, மனிதனுக்கும், மிருகத்திற்கும் பேதமில்லாத தன்மையது, 2. தோன்றாதிருத்தலே நன்று என்று சொல்லலாம்)" என்பதாகக் கூறியுள்ளார்.
இதிலிருந்து நாம் என்ன காண்கிறோம் என்றால், ஏராளமான செல்வத்தையும், எவராலும் தட்டிப் பேசமுடியாத சர்வாதிகார நிலையும், எப்பேற்பட்டவனும் ஏமாந்து போகும்படியான தந்திரத்தையும், கெட்டிக்காரத்தையும், எவ்வளவோ சாமர்த்தியமான விளம்பரத்தையும் பெற்று இருந்தாலும் அவை புறத்து (அவனுக்குப் பயன்பட்சததே) என்று காணக்கிடைக்கிறது.
நல்லோர் எனப்படுபவரது முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினை இதுதான்.
பணமும், ஆணவமும், சர்வாதிகாரமும், மற்றவர்களை ஏமாற்றிச் செல்வம் குவித்தலும், விளம்பரம் பெறுவதுமே மனிதன் கடமை என்று கருதிக்கொண்டிருப்பவர் களுக்கு, கலியாணசுந்தரனார் முடிவு கண்களைத் திறக்கச்செய்யத் தக்கதாகுக!
இந்த துறையில் நாம் அறிந்தவரை, இன்றைவரை இவருக்கு மிக்கார் இல்லை என்பது மாதிரமல்லாமல் ஒப்பாருமிக்கில்லை என்று கூறுவதில் நான் மிகுதியும் உவப்படைகிறேன்.
(விடுதலை - அறிக்கை - 20-9-1953)
15. டாக்டர் அம்பேத்கார் மறைவு
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கார் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால், டாக்டர் அம்பேத்காருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடான து எந்த விதத்திலும் சரிசெய்யமூடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச்சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரண மாக மதிப்பூடன், அவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மிக் கவிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்துமதம் என்பதான ஆரிய-ஆதீத கொள்கைகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருகும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார். உதாரணம் சொல்லவேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, "முட்டாளின் உளறல்கள்" என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.
இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அரைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம்பேத்கார் முடிவ எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவ வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.
அம்பேத்காரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கார் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.
(விடுதலை - அறிக்கை - 8-12-1956)
16. டாக்டர் வரதராஜுலு
இன்று (23-7-1957) காலை 1-40க்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் காலமாகி விட்டார்கள் என்ற செய்தி கேட்டு, மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தேன். அவர் எனக்குச் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாய்த் தெரிந்து, நெருங்கிப் பழகிக்கொண்டுவந்த அருமையான நண்பர் ஆவார்.
நாங்கள் காங்கிரசில் தோளோடு தோல் பிணைந்து, அதை எங்கள் செந்த ஸ்தாபனம்போல் கருதிப் பல ஆண்டுகள் தொண்டாற்றினோம்.
நான் காங்கிரசைவிட்டுப் பிரிந்து காங்கிரஸ் கொள்கைகளுக்கு மாறாகத் தொண்டாற்றி வருகிற சமயத்திலும், டாக்டர் நாயுடுவும், நானும், திரு. வி. ஈ. அவர்களும் நண்பர்களாகவே இருந்து வந்தோம். ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து அதைத் தலையெடுக்காமல் செய்து, இந்நாட்டின் அரசியலில் பார்ப்பனர்களுக்குப் பூரண ஆதிக்கம் ஏற்படுத்திக்கொடுத்த "பாபமான" காரியத்தில் மற்றெல்லோரையும்விட எங்களுக்கு அதிகப் பங்குண்டு. அதில் என்னைவிட அதிகப் பங்கு டாக்டர் நாயுடு அவர்களுக்கு உண்டு. ஏனெனில், ஒரு வியாபாரியாய் இருந்து சமுதாயத் தொண்டைப் பொதுத் தொண்டாகக் கருதி ஆற்றி வந்த என்னை; அரசியல் முழுநேரப் பொதுத்தொண்டனாக, பார்ப்பன தாசனாக 1920-ஆம் ஆண்டிலேயே ஆக்கியவர் டாக்டர் நாயுடு அவர்கள்தான். நண்பர் இராஜாஜி அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் டாக்டருக்கு அதிகப் பங்குண்டு. பொது வாழ்வில் நாயுடு அவர்கள் அடையவேண்டிய நிலையை அடையமுடியாமல் போய்விட்டது. அவருக்கு அடுத்தவர்களாகவும், ஜூனியர்களாகவும் உள்ளவர்கள் பெரிய பெரிய நிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்கள் வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் அவர் ஒரு பார்ப்பனரல்லாதவராக இருந்ததும், அடிக்கடி பார்ப்பனரை எதிர்த்ததும்தான்.
எப்படியிருந்தாலும், நான் காங்கிரசில் தொடர்ந்து இருந்திருந்தால் டாக்டர் நாயுடுவைக் கண்டிப்பாக மந்திரியாகப் பார்த்து இருப்பேன்.
சராசரி மனிதத் தன்மையை எடுத்துக்கொண்டால், பொதுவாழ்விலுள்ள எதையோ பேரைவிட டாக்டர் மேலானவர் என்றே சொல்லுவேன். டாக்டர் நாயுடுவுக்கு தேசப் பற்று அதிகம், அவர் 1920, 1921, 1922-ஆம் ஆண்டுகளில் மாதம் 2000, 3000 ரூபாய் வரும்படி உள்ளவராக இருக்கக் கண்டேன். பணத்தையெல்லாம் தேசத்தின் பெயரால் கண்டபடி செலவழித்து விட்டார் என்றாலும் அதைப்பற்றிக் கவலையில்லாமல் திருப்தியாகவே வாழ்ந்துவந்தார். சில நாட்கள் தவிர, கடைசிவரை காங்கிரஸ்காரராகவே இருந்து வந்தார். பழைய காங்கிரஸ்காரர் என்கின்ற தன்மையிலும், காங்கிரஸ் தன்மையில் முதலாவது தலைவர் என்கின்ற தன்மையிலும் இருந்தவர்களில் இன்றுவரை உயிரோடு இருந்தவர் டாக்டர் நாயுடு அவர்கள்தான். இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் டாக்டருக்கு அடுத்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். காங்கிரசினால் பலனடைந்த வராக இல்லாதிருந்தவரும் அவர்தான்.
அவருக்கும் எனக்கும் சினேகமான காங்கிரஸ் நண்பர்கள், தலைவர்கள் பலர் இன்றும் இருக்கிறார்களென்றாலும், அவர்களில் பார்ப்பனரல்லாத தலைவர் டாக்டர்தான்.
அவரும் காலமாகிவிட்டார், இனித் தலைவர் கிடையாது.
டாக்டர் நாயுடு அவர்களது அருமை மனைவியார் திருமதி ருக்மணியம்மான் அவர்களுக்கும் அவர்களது மக்களுக்கும் மற்றும் எங்கள் பொது நண்பர்களுக்கும் எனது மனப் பூர்வமான அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
(விடுதலை - அறிக்கை - 29-7-1957)
17. நேரு மறைவு
தாய்மார்களே! தோழர்களே!
இன்றையதினம் நாட்டுக்கு இதுவரை ஏற்பட்டிருக்காத மாபெரும் கேடு ஏற்பட்டு விட்டது என்று சொல்லும் வண்ணம் நமது நேரு அவர்கள் முடிவு செய்திக் கேட்டுள்ளது. பூகம்பம், கடல், புயல் முதலியன ஒரே சமயத்தில் வருவதைவிடக் கொடுமையானது. அவை வந்தால், வந்த பாகத்திற்குத்தான் கேடு விளையும். ஆனால், நேரு அவர்களின் முடிவானது—
அதாவது, நான் தி. மு. க-வுக்கு—அது தேர்தலில் வெற்றி பெறும் வரை நான் அக் கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன், தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப் பெருந்தன்மையோடு நட்புகொள்ள ஆசைப் பட்டு—என்னை அவர் பிரிவதற்கு முன்பு கொண்டிருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும் மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன் என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூடச் சொல்லலாம். அதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும் என் கடமையாகிவிட்டது.
இதன் பயன் தி.மு.க-வை என்றென்றும் பகுத்தறிவுக் கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு, அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் தி.மு.க-வுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுதவிடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்குத் தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கின்றேன். அதற்கேற்ற தன்மைகளை அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஏற்பட்ட அண்ணாவின் இந்த முடிவு இந்த நாட்டில் மற்ற எவருக்கும் எளிதில் கிடைக்க முடியாத உயர்தர முடிவேயாகும். அண்ணா நல்ல பதவியில், நல் வாழ்வில் எல்லா மக்களாலும் கொண்டாடி, புகழ்ந்து, பாராட்டி, முடிவைப்பற்றித் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின் போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே, அண்ணா அடைந்த புகழ் மிகமிகப் பாராட்டுதற்குரியதாகும்.
மற்றும், இனியும் அவர் புகழ் ஓங்க வேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பதுபோலவே காரியங்கள் நடைபெற்று வருகின்றன? என்று சொல்லப்படும் நிலையால்தான் முடியும். தி.மு.கழகத் தோழர்கள் யாவரும் எனது நண்பர்களும் அரும் பெரும் கூட்டுப் பணிக்காரரீகளுமாக இருப்பதால் நான் அவர்களை எனது சொந்த தி.மு.க தோழர்களைப் போல, கூட்டுப் பணியாளர்களைப் போலவே கருதுகின்றேன்.
கடைசி நேரத்தில் அண்ணா உடல் நிலை தேறி அவர் பிழைத்துக் கொள்வார் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கடவுள் பிரார்த்தனைகளும், பூசைகளும் வளர்ந்த இடத்தில் ஜோசியர்கள் எல்லாம் ஜோசியம் நல்ல நம்பிக்கையுடன் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், அவர்களும் ஏமாற்றம் அடையும்படி முடிவு ஏற்பட்டு விட்டதானது மிக்க பரிதாபத்திற்குரியதாகும்.
பொதுமக்கள் எல்லோரும் மாற்றுக் கட்சியானர்கள் உட்பட இந்த மாபெரும் நட்டத்திற்குப் பரிகாரமாக அந்தத் (தி.மு.க) தலைவர்களுடன் ஒத்துழைத்து, அதனால் மக்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும் பெற பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
[விடுதலை—தலையங்கம்—3-2-1969]
அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணர் கொள்கை வாழ்க!! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், கக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும். என்றாலும், இவ் விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்று விட்டார்.
யான் அறிந்தவரை; சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய அக் கொண்டாட்டத்தில் 4-ல், 8-ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.
அந்த அளவுக்கு அண்ணா தமிழ்மக்கள் உள்ளத்தில் இடம்பெற்று விட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ் விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்கமுடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை, பெருமைக்கு இதற்குமேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.
இன்றும் மக்களுக்கு உள்ள கவலையெல்லாம்—நான் அறிந்தவரை அண்ணா முடிவடைந்துவிட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான். நான் சொல்லுவேன்; அண்ணா இறந்துவிட்டார். அண்ணா வாழ்க! என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் திருப்பமும் இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்து ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, அதன்படி நடநடுக்கொள்வார்கன் என்றே கருதுகின்றேன். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச்செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்படவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். அண்ணா நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் மேன்மைதங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும், சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதலிய வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்துகொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும் பத்திரிகைக் காரர்களும் விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்துவந்த நேர்மையும் மிகமிகப் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.
தமிழ்மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே, இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்துகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
[4-2-1969 வானொலி உரை—விடுதலை—5.2.1969]
20. ரஸ்ஸல் மறைவு
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் மறைவு, நாத்திக உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
தந்தை பெரியார்
[விடுதலை—4-2-1970]
21. தி. பொ. வேதாசலனார்
வக்கீல் அய்யா என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த நண்பர் தி. பொ. வேதாசலம் அவர்கள் காலமானார் என்ற செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியையும் தீராத அக்கத்தினையும் தரக்கூடிய செய்தியாகும்.
இந்தத் திருச்சி நகரத்தில் நமது இயக்கத்திற்குத் தூண் போன்றவர் அவர். நான் இந்தத் திருச்சி நகரத்தில் வந்து இதையே என் செந்த ஊராகக் கொள்வதற்கு முழுமுதற் காரணம் நண்பர் திரு. வேதாசலம் அவர்கள் ஆவார்கள்! நமது இயக்கத்தின் பேரிலும் என் பேரிலும் மிகுந்த பற்றுக்கொண்டு உழைத்தவர், இடையிலே ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் என்னிடம் கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்க நேரிட்டபோதிலும் இயக்கத்திற்கும் நம் கொள்கைக்கும் அவர் ஆற்றிய பணியும் தொண்டும் அளவிடற்கரியது.
[விடுதலை—11-10-1971]
தோழர்களே!
நமது அருமை நண்பர் திரு. வேதாசலம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவர் நமது சமுதாயப் பணியில் பங்குகொண்டு சிறப்பாகப் பணியாற்றியவர். எனக்கு 35 ஆண்டுகளுக்குமேல் தெரியும், நமது திராவிடர் கழகத்திற்குத் தலைவராக இருந்தவர்.
நான் முதலில் திருச்சிக்கு வந்தால் கலியபெருமான் அவர்கள் வீட்டில் தங்குவேன், பின் நண்பர் விசுவநாதன் அவர்கள் வீட்டில் தங்குவேன், பிறகு நீண்ட நாட்கள் நண்பர் வேதாசலம் அவர்கள் வீட்டில்தான் இங்கு வந்தால் தங்கி, இயக்கக் காரியங்களைக் கவனிப்பேன். அவருடைய வீட்டிலுள்ளவர்கள் மிக அன்போடு நடந்துகொள்வார்கள். நமது இயக்கம் வளர்ச்சியடைய மிகவும் பாடுபட்டார். நமது இயக்கத் தூண்களில் ஒருவர் என்று சொல்லலாகூடியவர். மிக நேர்மையானவர், சாந்தமான குணமுடையவர். 35 ஆண்டுகளுக்குமேல் அவருடன் பழகியிருக்கிறேன் என்றாலும் அவர் ஒரு முறைகூட கோபமடைந்து நான் பார்த்ததில்லை. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுமைக்கும் பணியாற்றியவர். நேற்றுப் பொதுக்கூட்டத்தில்தான் அவர் காலமான செய்தி கிடைத்தது. மிகவும் அதிர்ச்சியுற்றேன். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உடல் நலமற்றிருந்தார் என்றாலும், இயற்கை எய்தும்படியான அளவிற்கு உடல் கோளாறு இல்லை என்றாலும், இருதய நோயால் திடீரென்று இயற்கை எய்திவிட்டார்.
இயற்கை எய்துவது என்பது எல்லோருக்கும் நேரக்கூடியதேயாகும். அதற்கு நம்மால் என்ன செய்யமுடியும்? நாம் மூடநம்பிக்கைக்காரரல்லர், அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று சொல்வதற்கு.
இயற்கை எய்துவது என்பது எல்லோருக்கும் நேரக்கூடியதேயாகும். நண்பர் வேதாசலம் அவர்கள் இயற்கை எய்தியதானது நம் சமுதாயத்திற்குப் பெருநஷ்டம். அதனை நாம் உணருகின்றோம், அதற்காக வேதனைப்படுகின்றோம். நமது மனம் நிறை
# সমুদ্রযাত্রা
நிறைந்த அனுதாபத்தை அவர்கள் குடும்பத்திற்குத் தெரிவிதுக்கொள்கிறேன்.
பெருமைக்குரிய மாண்புமிகு வேதாசலம் அவர்கள் நமது இயக்க வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். அவர் மறைந்துவிட்டார். அவர் மறைவின் பயனாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்—பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம், அவரைப் போல நாமும் பொதுத் தொண்டிற்காக ஏதாவது செய்யவேண்டும்—பொதுத்தொண்டு செய்வதுதான் கடமை என்கத் கருத வேண்டும் என்பதே. மேல்நாட்டில் பதவியைவிடப் பொதுத் தொண்டைத்தான் மதிக்கின்றார்கள். மனிதன் தனக்குரக வாழ்வது என்றில்லாமல் மனித சமுதாயத்திற்கு என்று வாழ வேண்டும்.
[தென்னூர் இடுகாட்டில், 11-10-1971-ல் சொற்பொழிவு—விடுதலை—14-10-1971]
22. இராஜாஜி
நண்பர் இராஜாஜி அவர்கள் முடிவெய்திய நிகழ்ச்சி எல்லையற்ற அக்கத்திற்குரிய நிகழ்ச்சியாகும். சம்பிரதாயத்திற்கல்ல! உண்மையாகவே சொல்லுகிறேன், இராஜாஜி அவர்கள் ஒப்பற்றவர்; இணையற்றவருமாவார். கொள்கைக்காகவே வாழ்ந்து, கொள்கைக்காகவே தொண்டாற்றி முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாத இழப்பாகும்.
தமிழ் நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி 95-ஆம் வயதில் முடிவெய்தி மறைந்துவிட்டார். அவரது பெருமைக்கு ஒர் எடுத்துக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால், இராஜாஜி இல்லாது இருந்தால் மகாத்மா காந்தியே இருந்திருக்கமாட்டார், அதுமாத்திரமல்ல, இந்திய தேசிய காங்கிரஸே இருந்திருக்க மாட்டாது.
தமிழ் நாட்டில் பார்ப்பனருக்கு எதிராகத் தோன்றிய ஓர் எரிமலையை, மகாத்மர் காந்தி என்னும் ஒரு புயல் மழையைக்கொண்டு தான் அவித்து, பார்ப்பனரை இருக்கச் செய்தார். இவை இன்றைக்கு அதாவது, சுமார் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்குத் தெரியாத செய்திகளாகும். இராஜாஜி அவர்களால்தான் திராவிட நாட்டில் சமபந்தி போஜனம் என்பதும், அதைவிடத் தீவிரமான சாতிபேதம் என்பதே இல்லாமல் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மையும் ஏற்பட்டது. நான் அறிய இராஜாஜி அவர்கள் 1910-லேயே பார்ப்பனரல்லாத மக்களுடன் சமபந்தி போஜனம் செய்வார், 1915-ல் பார்ப்பனரல்லாத மகனின் வீட்டில் உணவு அருந்துவார். இது அவருக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்ட சாதனை என்றாலும், காங்கிரசிலேயே எல்லாப் பார்ப்பனர்களும் சமபந்தி போஜனம் அருந்தும்படி செய்தவர் இராஜாஜி அவர்களே ஆவார்.
காந்தியாருக்கும்கூட சமபந்தி போஜனத்தில் நம்பிக்கை இல்லாத காலத்திலேயே, யார் வீட்டிலும் யாருடனும் இருந்து உணவு கொள்ளும் தன்மையை ஏற்படுத்தினார்.
காங்கிரசில் பெரிய தீவிர தேசபக்தர், மகா தியாகி என்று செல்லப்பட்ட வ. வே. சுப்ரமணிய அய்யர் என்கிற (போலி) தேசபக்தர் வருணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்தில், காங்கிரசில் தான் மாத்திரம் அல்லாமல் அனேக பார்ப்பனரையும், பார்ப்பன இளைஞரையும் யாருடனும் யார் வீட்டிலும் உணவு அருந்தச் செய்தார் இராஜாஜி. எது எப்படி இருந்தாலும், சமுதாயத் துறையில், இம் மாபெரும் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத்தான் உண்டு.
அதுமாত்திரம் அல்ல, கலப்புத் திருமணம் என்னும் தன்மையைத் தணிந்து ஆதரித்தவர் இராஜாஜி அவர்களே ஆவார். 1920-ல் என்று கருதுகிறேன், அருண்டேல் ருக்குமணி அம்மையார் விவாகத்தைப் பார்ப்பனச் சமுதாயமே கட்டுப்பாடாக எதிர்த்த காலத்தில் இராஜாஜி அவர்கள் அதை ஆதரித்தார், மற்றும் தம் பெண்ணையே பார்ப்பனரல்லாதவருக்கு மணம் செய்து கொடுத்தார். ஆகவே, சமுதாயத் துறையில் மாபெரும் சீர்திருத்தம் செய்தவர் இராஜாஜியே ஆவார்.
இந்தக் காரணங்களால் இராஜாஜி அவர்கள் சென்னைப் பார்ப்பனர் களான கஸ்தூரி ரங்க அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சதியமூர்த்தி அய்யர் முதலிய—பார்ப்பன ஆதிக்
பொதுவாகச் சொல்லப்படவேண்டுமானால், நாட்டில் மனித சமுதாயத்தில் இன்று நிலவி வாழ்ந்து வளர்ந்து பெருகிவரும் எல்லாக் கூடாத ஒழுக்கங்களுக்கும், பொய், பித்தலாட்டம், நாணயக் குறைவு, துரோகம், சதி, நன்றிகெட்டதனம் முதலான ஈனக் காரியங்களுக்கும் இந்தவகைப் பொதுத்தொண்டே காரணம் என்பேன்.
பொதுத்தொண்டின் இலட்சணம் இந்த மாதிரியாக அடைந்துவிட்டதாலேயே பொதுவாக மனித சமுதாய ஒழுக்கம், நேர்மை, நாணயம் முதலிய தன்மைகள் ஒழிந்து நேர் மாறான தன்மைகள் வளர்ந்துகொண்டே வருகிறது.
உதாரணமாக; கடவுள் தன்மை என்பது பொது அயோக்கியத் தன்மைகளின் தஞ்ச மடையப் பாதுகாப்பு ஸ்தலமாகிவிட்டது. தண்டனை (ஜெயில்) தன்மை—அயோக்கியர்கள், காலிகள் இளைப்பாறி உடலைத் தேற்றிக்கொண்டு திரும்பும் சகவாச ஸ்தலமாகி, சுகாதார ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
கோர்ட்டு, நீதிஸ்தலத் தன்மை—மனிதனை எப்படி எப்படி நேர்மையைக் கேடுசெய்யும் காரியம் செய்யலாம், செய்துவிட்டு எப்படித் தப்பித்துக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக ஆகிவிட்டது.
பத்திரிகைகள் தன்மை—காலிப் பயல்களையும், அயோக்கியர்களையும், மக்கள் துரோகிகளையும் மடையர்களையும் பெரிய மனிதர்கள், மகான்கள், தேச பகீர்தர்கள், மேதாவிகள் ஆகிய சலவைச் சாலைகளாக ஆகிவிட்டது.
ஜனநாயகம் என்பது காலிகள், அயோக்கியர்கள் எப்படியாவது பணம், பதவி சம்பாதிக்கும் ஒழுக்கமற்ற செல்வர்கள், பதவியாளர்கள் ஸ்தாபனமாக ஆகிவிட்டது.
பொதுத்தொண்டு போனபோது இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாமல் போய்விட்டது. முன்பு தலைவர், தலைவர்கள் என்றால் அது தானாகவே மக்கள் உள்ளத்தில் புகுந்து யாரையாவது தலைவர் என்று கருதச் செய்யும். அந்தப் பதவியையும் யாரோ சிலர்—வெகு சிலரீ தான் விரும்புவார்கள், அவர்களும் நாடொப்பிய தலைவர்களில் ஒருவராக இருப்பார். மக்களும் தலைவராகக் கருதுவார்கள்; மதிப்பார்கள்.
இப்போது ஒவ்வொருவனும் தனது வாழ்க்கைப் பிழைப்பை மாத்திரம் முன்னிட்டே கௌரவத்தைக்கூடக் கருதாமல் தலைவனாக முயற்சித்து, கூலி ஆட்களைப் பிடித்து தன்னைத் தலைவனாக ஆக்கச் சொல்லுகிறான் செய்துகொள்ளுகிறான். அதற்கேற்ற கீழ் மக்களும் எவ்வளவு கீழானவனையும் சுயநல, பதவி, பணத் தாசைக்காரனையும் தலைவனாகக் கூப்பாடு போடுகிறார்கள். பத்திரிகைகாரர்களும் இந்த இழிதன்மைக்கு முழு முயற்சியோடு ஒத்துழைக்கிறார்கள். ஆனதினாலேயே, நாட்டில் உண்மைத் தலைவர்களே இல்லாமல் போய்விட்டார்கள்.
நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமற் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்கவேண்டும் என்பதல்லாமல் நாட்டுப் பொதுமக்கள் நலனுக்கு என்று ஒன்றுகூட ஏற்படவில்லை; நாட்டில் ஏற்பட்டதில்லை.
இன்றுள்ள பொது ஸ்தாபனங்கள் என்பவைகள் சூதாடுமிடமாகவே—மேஜைக்கு காசு வரங்க ஏற்பாடு செய்யப்பட்ட சூதாடுமிடங்கள் போலவே இருந்துவர வேண்டியவைகளாக அமைக்கப்பட்டுவிட்டன. இவை மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்கள் நலத் துக்கு முன்னேற்றத்திற்குமான வாழ்வுக்கு—அறிவு வாழ்வுக்கு ஏற்ற கொள்கைகளோ, லட்சியங்களோ இந்நாட்டில் யாராலும் கையாளப்படுவதில்லை. எவரும் அந்தத் துறையை அணுக பயப்படக்கூடியவர்களாகவே, அதாவது—அந்த கொள்கைகளிடம் சென்றால், அணுகினால் நமது வாழ்வே போய்விடுமே, பிழைக்கவே முடியாதே? என்று பொதுத் தொண்டு செய்பவர்கள் எல்லாம் பயப்படவேண்டியவர்களாகிவிட்டாரீகள்.
ஆகவே; இதுவரை பொதுத் தொண்டு என்பது மக்கள் சுயநல வாழ்வுக்காக இந்த நாட்டில் இருந்துவரும் பல தொழில்கள், மார்க்கங்கள் என்பவைபோலவே பிழைப்பு மார்க்கமதான் என்றும் இதற்கு எந்தப் பொதுத்தொண்டரும் விலக்கு இல்லை என்றும் ஏதோ ஒரு அளவுக்கு என் 83 ஆண்டு அனுபவத்தைக்கொண்டு விளக்கினேன். அதோடு கூடவே, இதற்கு மாறாக பொதுத் தொண்டு இருக்குமானால் அது இயற்கைக்கு மாறுபட்டது என்றும் கூறினேன்.
இந்தக் கருத்து நான் வெகுநாளாகச் சொல்லிக்கொண்டு வரப்பட்ட கருத்தே ஒழிய இன்று புதிதாகச் சொல்லப்படுவதல்ல.
மற்றும், உண்மையான பொதுத் தொண்டு செய்ய மக்களில் ஆன் கிடைப்பதும் மிகக் கஷ்டம்—மிகமிகக் கஷ்டம் என்றே சொல்லுவேன். யாராவது இருப்பார்களேயானால், அப்படிப்பட்டவர் மனிதனின் இயற்கை அமைப்புக்கு மாறுபட்டவர்களாகதான் இருக்க முடியும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால்:
முதலாவது, பொதுத்தொண்டனுக்குச் சோற்றுக்கு, குடும்ப வாழ்க்கைக்கு வகைதேட வேண்டிய அவசியமில்லாத வசதி இருக்கவேண்டும்.
வசதி இல்லாவிட்டாலும், பொதுத் தொண்டையே கொண்டு பிழைக்க வேண்டிய அவசியமில்லாத ஒரு மார்க்கமாவது இருக்கவேண்டும். தனக்கு மாத்திரமல்லாமல் தன்னால் போஷணை செய்யவேண்டிய, பாதுகாக்கவேண்டிய நபர்கள் பளுவுகள் இருக்கவே கூடாது.
தன்னால் பாதுகாக்க, பெருக்கவேண்டிய பெரிய தொழிலில் பெரிய சொந்த சொத்தும் இருக்கக்கூடாது. இருந்தால், எதிரிகளுக்குப் பயந்து இலட்சியத் தை விட்டுக்கொடுக்க நேரும். மனைவி, பின்ளைகுட்டிகள் இருக்கக்கூடாது—இருக்கவே கூடாது.
காணப்படும் பொருள்களில் உயிர் பிரியமாம். உயிரினும் மக்கள் பிரியமாம். இவற்றைப் பாதுகாக்க ஏதுவும் செய்யலாம்?—ஆய்ந்த பழமொழி.
ஏனெனில், அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே, வளர்க்கவேண்டுமே, படிக்க வைக்க வேண்டுமே, உத்தியோகம் தேடிக்கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணத்தினால் எப்படிப் பட்டவனும் பொதுத்தொண்டுக்கு அயோக்கியனாகியே விடுவான். பொதுத்தொண்டன் அல்லாத; சுயநலத் தொண்டனான மனிதன் எவனும் பின்ளைகுட்டிகள் இருந்தால் சுயநல வாழ்விலேயே, அவனுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் அயோக்கியனாகிவிடுகிறான். அப்படி இருக்கும்போது, வசதி இல்லாதவன் அவற்றின் (பின்ளைகுட்டிகள்) வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு அயோக்கியத்தனம் செய்யமுடியாமல் எவனாலும் இருக்கவே முடியாது.
பொதுத் தொண்டுப் பணியில் இருந்து தன் வயிற்றுக்கு—வாழ்வுக்கு மாத்திரம் வகை செய்து கொள்பவனையே கூட இரண்டாந்தரம், விலக்கு அளிக்கப்படவேண்டிய தொண்டன் என்று தான் சொல்லுவேன்.
எந்தப் பொதுத் தொண்டனுக்கோவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்கவேண்டும். அல்லது, அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத்தொண்டர்களாக இருக்கவேண்டும். பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்திற்கும் மேல் வாழக்கூடாது—வாழவே கூடாது.
வாழவேண்டுவதால் வாழ்நீது கொள். ஆனால் "நான் பொதுத்தொண்டன்—தியாகி—கஷ்ட நஷ்டப்பட்டவன்" என்று சொல்லாதே. சொல்லுவதற்கு வெட்கப்படு. உன் மனதிலும் நீ நினைத்துக்கொள்ளாதே. அப்படி நினைப்பவனேயானால், சொல்லுவாயேயானால்—நீ மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றுவிட்டவன் என்றுதான் சொல்லவேண்டும்.
மற்றும், இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல் சுயநலத்தொண்டனாக ஆகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம், அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத் தைக்கொண்டு உண்மையாய் நினைத்துப் பார், உன் பொதுத்தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்யச் செய்ததா, அல்லது உன் தகுதிக்கு மேற்பட்ட செல்வத்தையும் வாழ்க்கை வசதியையும் அந்தஸ்தையும் தேடிக்கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார்.
இந்த முறையில் எண்ணிப் பார்த்தால், நாட்டில் எவனாவது பொதுத்தொண்டன், தன்னலத்தை வெறுத்தவன், தியாகி என்பதாக எங்காவது இருக்கின்றானா என்பது தெரியும்.
நான் வெகு பொதுத் தொண்டர்களோடு பழகியிருந்த பழக்கத்தையும், வெகு பேருக்குத் தலைவனாக இருந்து அவர்கள் நடத்தையையும் அவர்களால் அடைந்த பலனையும் அவர்களது போக்கையும், அவர்கள் எதிர்ப்பையும், அவர்கள் இன்று எதிர் பார்ப்பதையும் இலட்சியத்தையும் உணர்ந்தே இதைச் சொல்லுகிறேன்.
எனது பொதுத் தொண்டு வாழ்விலே நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள் இராஜாஜி, கண்ணப்பர், இராமநாதன், கே. ஏ. பி. விஸ்வநாதன், பொன்னம்பலம், அண்ணாதுரை, சவுந்தரபாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், எஸ். குருசாமி—முதலியவர்களுடைய பொதுத் தொண்டு தன்மையை அனுபவித்தும், உணர்ந்துமே எழுதுகிறேன். மற்றும், இவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவாக, நண்பர்களாக இருந்த தாலேயும், இவர்களுக்கு நான் தலைவனாக? அவர்களாலேயே கருதப்பட்டதினாலேயும் நானும் இவர்களைக் குறிப்பிடுகிறேன்.
இதிலிருந்து பொதுமக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப் படுகிறேன் என்றால்; பொதுத் தொண்டு என்பதாக ஒன்று, ஒரு தொண்டு இல்லை—பொதுவாக இல்லவே இல்லை.
எவன் அந்தப் பெயரால் தொண்டு செய்வதாகக் காணப்பட்டாலும் சுயநலத்துக்காகத் தெரிந்தெடுக்கும் தொண்டுகளில் (பொதுத் தொண்டு என்பது) அது ஒன்று என்றுதான் கொள்ளவேண்டும். சிலருக்குத் துவக்கத்தில் சுயநலம் கருதாமல் பொதுத் தொண்டுக்கு வர எண்ணமேற்பட்டிருக்கலாம். பெண்டு பின்புள ஏற்பட்டால் எவனும் சுயநலப் பிறவிதான்.
என்னைப் பற்றி நீங்கள் "நீயும் அப்படித்தானே?" என்று கேட்கலாம். ஆம்; நானும் அப்படித்தான். என் தொண்டும் உண்மையில் சுயநலத் தொண்டுதான். என்ன சுயநலம்? அவரவர் சொந்தப் பிள்ளைக் குட்டி, மனைவி வாழ்க்கை சுயநலம் அல்லாமல், எனக்கு ஒரு திருப்தியையும் இன்பத்தையும் கொடுக்கத் தக்கதும், கம்பீரத்தோடு நானே பெருமைப் படத் தக்கதுமான நலத்தை அளிக்கிறது. அவற்றை நானும் அனுபவிக்கிறேன். இதுதான் என் சுயநலம்.
செல்வத்தைப் பற்றியும், மற்றவர்களையெல்லாம் விட எனக்குப் பேராசையுண்டு—மற்றச் சமுதாய சகோதரர்களைவிடச் செல்வத்தில் நான் பொதுத் தொண்டின் பேரால் அதிகமான பணம், சொத்து சம்பாதித்தவன் ஆவேன். எனது முயற்சியில், தொண்டின் சரிபக்கபாகம் பணம் சேர்ப்பதிலே செலவழிக்கிறேன். சிறு வயதுமுதலே வாழ்க்கையின் இலட்சணம் பணம் என்றே பழக்கப்பட்டவன் நான்.
இப்படிப்பட்ட நான், பொதுத் தொண்டனாக ஆனபின்பு உண்மையான பொதுத் தொண்டுக்கு என்றே சற்றேறக்குறைய 15 இலட்சம் ரூபாய் மதிப்பிடத் தக்க பொதுச் செல்வம் சேமித்து இருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும்படியாகவே சம்பாதித்தே சேர்த்து இருக்கிறேன். இதில் என்னுடைய சொந்தச் சொத்து, அதாவது எனக்கு உரிமையான என் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு உதவியவகையில் பெரும்பாகம் கூட் சேர்க்கப்பட்டதால் இந்த மதிப்பு ஏற்பட்டதென்றே சொல்லுவேன். (எனதல்லாத) மற்றெல்லாம் பொதுமக்களிடம் இருந்து மாநாடு, கூட்டத்துக்கு அழைப்புக்குச் செல்லுதல், கொள்கைப் புத்தகம் விற்றல், கழகத்திற்கு நன்கொடை என்னும் பேரால் பெற்ற, அவிக்கப்பட்ட—வசூல் செய்யப்பட்ட வகையிலும் அவற்றை நானும் பெருக்கியவகையிலும் சொத்துக்களுக்குப் பொதுமதிப்பு ஏறியவகையிலும் சேர்க்கப்பட்ட செல்வம், சொத்துக்களெல்லாம் இந்த சுமார் பதினைந்து இலட்சரூபாய் மதிக்கக்கூடிய சொத்தாகும்.
இந்தச் சொத்திலும் என் இஷ்டப்படி—வேறுயாரும் கேள்வி கேட்கமுடியாதபடி, யாருக்கும் கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லாத சொத்தாக; ஒரு நல்லபாகம் பொதுத் தொண்டுக்கு இருக்கிறது என்னலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இவ்வனவு செல்வ வசதி இருந்தும் எனது வாழ்வானது மக்களின் சராசரி வாழ்வுதான். எனக்கு உணவுச் செலவு மாதம் ரூ. 50க்குள் தான் ஆகும். எனது துணிமணி செலவு ஆண்டுக்கு ரூ. 50க்குள் தான் ஆகும். அதிலும் பெரும்பகுதி ஓசியில் நடக்கும். இதற்குச் செலவு செய்யவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது—(எதனால்) பிள்ளைக்குட்டி கிடையாது. மனைவி உண்டு என்றாலும் அவர்கள் மாதம் ரூ. 200 போல் சம்பளம் கொடுத்து வாங்கக்கூடிய வேலையை இயற்கைக்கு இந்த 5 ஆண்டுகளாகச் செய்துவந்ததோடு, அதற்கு முன்பாகப் பதினைந்து ஆண்டாக பல ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை மூலம் கழகத்திற்குப் பணவருவாயும் அவர்களால் ஏற்பட்டது என்று சொல்லுவேன். அந்த அம்மையாருக்கும் உணவுச் செலவு மாதம் 50 ரூ. உடை செலவு வருஷம் 150 ரூபாய்க்குள் ஆகும்.
எனது பிரயாணம் சிம்சன் கம்பெனியின் பங்காளித் தோழர் ஆரோக்கியசாமி அவர்கள் சொன்னதுபோல், ஒரு லாரிக்குச் சமமான—சாமான் ஏற்றத் தக்க மோட்டார் வண்டியில்தான் பிரயாணம் முக்கால் பாகம் இரவில்.
மாதத்தில் 20 நாள்போல் சராசரி சுற்றுப் பிரயாணம். சதா கழகத்திற்குக் கட்டடவேலை. கழகச் செல்வத்தைப் பெருக்கும் கணக்கு வேலை. இது அதிசயமான வேலை.
4. கிறிஸ்தவர்களாக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன.
இந் நால்வரும் ஏற்கெனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள்.
மற்றும், இந் நான்கில் மூவர், தம்தம் சமுதாயத் துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல், பொருளாதார இயல், கல்வி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ் பவர்கள் என்று சொல்லத் தக்கவர்கள் ஆவார்கள்.
ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழி நிலை பற்றியும் ஏன்--தங்களுடைய இழிநிலை பற்றியுங்கூடக் கவலை இல்லாமல் சோறு-சீலை-காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால், ஒரு சிறு நலத்துக்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆகையால், நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள்--இந் நான்கு குழுவினர் களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
1952
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
இந் நிலை நம் வளர்ச்சியையும் நம் இன்றைய நல்வாழ்வையும் சிதைத்துவிடும் என்றே கருதவேண்டி இருக்கிறது.
இந் நிலை இன்று ஏற்படக் காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர் ஆட்சி காரணமாகத் தமிழ் மக்களாகிய நாம் பெரும் அளவுக்கு முன்னேறி வருகிறோம். இதைச் சிதைக்கவேண்டிய அவசியம் பார்ப்பனருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் (பார்ப்பனர் கூட்ட) தனித்து நின்று நம்மை எதிர்த்து அழிக்க முடியாது. ஆதலால், துணைதேட முயல் நார்கள். அம் முயற்சியில் ஏனைய மூன்று குழுவினர் அவர்களுக்குக் கிடைத்துவிட்டார்கள்--ஏனெனில், இவர்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. யாரை அண்டியாவது எப்படி நடவாவது தங்கள் நலன் ஒன்றே இலட்சியமாகும். நாம் வகுப்புவாரி உரிமை கேட்கும் போது அந்தப்படி நாம் அடைந்துவிட்டால் இவர்கள் நலம் கெடும் என்கின்ற குறை, அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால், இவர்கள் எளிதில் பார்ப்பனர் வலையில் பட்டுவிட்டனர்.
மற்றும், ஆச்சாரியார் முஸ்லிம்களை ஈர்ய்ய காஷ்மீரை முஸ்லிம்களுக்கு (பாகிஸ்தानுக்கு) கொடுத்துவிட வேண்டியது நியாயம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முஸ்லிம்கள் நன்றி காட்டும் முகத்தால் இராஜாஜிக்கு இந்தியப் பிரதமர் பதவி கொடுக்க வேண்டும். அவர்தான் அதற்குத் தகுதி உடையவர் என்று பாகிஸ்தான் தலைவர் அয்யூப் கான் சொல்லி, இந்நாட்டு முஸ்லிம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கச் செய்துவிட்டார்.
மற்றும், நமது பகுத்தறிவுக் கிளர்ச்சியும், நேருவின் சோஷ்யலிசக் கொள்கையும் இஸ்லாம், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு--அவர்கள் மத்திற்குக் கேடுவரும் என்ற புரளியைப் பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள். இதனாலேயே முஸ்லிம்-கிறிஸ்தவ சமூக தலைவர்கள் திரு. இஸ்மாயில் அவர்களும் திரு. ரதீந்திரசரமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் இராஜாஜியை ஆதரிக்கவேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்கள். ஆகவே, இனிவரும் தேர்தல்களில் இம்மூன்று குழுவினரும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும், நம்மில் இருந்து கொண்டே தங்கள் சுய நலத்துக்கு, நம் இனத்துக்கு கேடு செய்து வாழ்வது என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் (கண்ணீர் துளிகளை) தான் ஆதரிக்க வேண்டும் என்று (எப்படியாவது காமராசரைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதன்பயன் என்ன ஆகும் என்றால், இனிமும் தேர்தல்களில் இரண்டு கட்சிதான் போட்டி! அப் போட்டியில் காமராசர் (காங்கிரஸ்) கட்சி தமிழர்களின் ஓட்டுகளை அதிக மாய் (மெஜாரிட்டியாய்) பெற்றாலும்கூட இந்த பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று குழுவும் எந்தக் கட்சிக்கு ஓட்டு செய்வார்களோ அந்தக் கட்சிதான் ஜெயிக்க முடியும். திருவண்ணாமலைத் தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது. நம் தமிழ் மக்களின் ஓட்டு நமக்கு அதிகமாய் கிடைத்திருந்தும் இந்த மூன்று குழுவினர் ஓட்டுகளாலேயே காமராசர் (தமிழர் கட்சி) தோல்வி அடைய வேண்டியதாயிற்று. அதுபோலத்தான் இனியும் அவர்கள் 3 பேர்கள் நமக்கு எதிரிகளாகி, நம் எதிர்கட்சிக்கு ஓட்டுச் செய்தால் அது நமக்கு பெருங்கேடாகவே முடியும்.
இதற்காகத்தான் இராஜாஜி காங்கிரஸ் மெஜாரிட்டி சமுதாயக் கட்சி ஆனதால் அதனால், மைனாரிட்டி சமுதாயத்திற்குக் கேடு ஏற்படாமல் உறுதி செய்துகொள்ள, மைனாரிட்டி சமுதாயம் ஒன்றாகச் சேர்ந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறி, கூட்டுச் சேர்த்துக்கொண்டு அணிந்து எதிர்க்கிறார்.
இதற்குப் பரிகாரம் தேடவில்லையானால், நாம் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், கட்சியைப் பலப்படுத்தினாலும், வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும் ஆகி விடலாம். ஆனதால், மைனாரிட்டி முழுவோட்டினால் மெஜாரிட்டி கெடாமல் இருக்க, அவர்களைத் தேர்தலில் ஒதுக்கி விடுவதுதான் நாம் இத்தொல்லையில் இருந்து விலகத்தக்க செய்திகள் 1953
மார்க்கமாகும். குறைந்தது, அவ்விரு சமுதாயத்திற்குமாவது தனித் தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால் பெரும் அளவிற்குத் தொல்லை ஒழியும் என்பது எனது கருத்து. அதோடுகூடவே, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் தமிழர், பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்கின்ற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திற்குள் எல்லாத் துறையிலும் இவ்வாறு பிரிந்துவிட்டால், தமிழ் நாட்டை, தமிழ் மக்களைப் பிடித்த எல்லாக் கேடுகளும் ஒழிந்தே போகும். ஆகவே, இதைத்தான் எனது 85-வது ஆண்டுத் திட்டமாக நான் கொண்டிருக்கிறேன்.
இவற்றிலும் முதலாவது, நம்நாட்டு ஆட்சியில் நாம் அடையவேண்டிய வகுப்பு உரிமைக்குக் கிளர்ச்சி செய்வதை உடனடித் திட்டமாய்க் கொண்டிருக்கிறேன்.
நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்கவேண்டிக் கொள்ளுகிறேன்.
[பிறந்த நாள் விழா மலர் 85--17-9.1963]
8. சமதர்மம் தழைக்க உதவுக
நான் இப் புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன்.
இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக் காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டுகள் வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்றுகொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக்கொண்டு திரிந்த நான் 85 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா?
என்ன செய்து சாதித்துவிட்டாய் என்று நீங்கள் கேட்கலாம், அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்துகொண்டேன். என் நடப்பையில் பல தவறுதல்கள்; தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக்கொண்டு எனக்குச் சரி என்று பட்டதையும், தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவுமறைவு இல்லாமல் செய்துவந்தேன்.
வாழ்வில், செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும், அதையே ஒரு படிப்பினையாகக்கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்துகொண்டுதான் வருகிறேன்.
நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்துவரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயமாக இருந்துவந்தது.
இப்படிப்பட்ட எனது வாழ்நாள்பற்றிய விளக்கம் என்னவென்றால், 1964 செப்டம்பர் 17-ந்தேதி வியாழக்கிழமை சரியான குரோதி வருஷம் புரட்டாசி மாதம் 1-ம் தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறது என்றால் அது நான் பிறந்து ஓராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன்; நான் பிறந்து இன்றைக்கு (17-9-1964-க்கு) முப்பத்து மூவாயிரத்து நாற்பது நாட்கள் வாழ்ந்துவிட்டேன் என்று ஆகிறது.
மற்றும், நான் 1034 ஓராயிரத்து முப்பத்து நான்கு அமாவாசையையும் 1034 பவுர்ணமியையும், 1034 பிறையையும் கண்டுவிட்டேன் என்று ஆகிறது.
6 ஆயிரம் பிறை கண்டவன் முழு ஆயுள் வாழ்ந்தவனாவன் என்று சொல்லுவார்கள், அதுபோல் முழு வாழ்நாள் வாழ்ந்துவிட்டேன்.
எனவே கிரமப்படி பார்த்தால், உங்களிடம் நான் பயணம் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான் எனது நேர்மையான கடன்.
அதற்கேற்ப எனக்குப் புத்திக் கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞாபகக் கோளாறு அதிகமாகிவிட்டது. பேசப்பேச பேச்சுத் தொடர் மறந்துபோகிறது. வெகு கெட்டிக்காரத் தனமாய்ச் சமாளிந்துகொள்கிறேன். காது 100-க்கு 40 சதவிகிதம் (செவிடு) சப்தம் கேட்பதில்லை. கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் பைக்கா 12 பாயிண்ட் எழுதுக்கு)க்கு மேல
படிக்க முடிவதில்லை. கண்களில் கண்ணீர் வந்து மறைந்துவிடுகிறது. நடை 10 அடி, அதாவது 15 அடி தூரத்துக்குமேல் நடந்தால் நெஞ்சுத் தடிப்பு அதிகமாகிக் களைப்பு வந்துவிடுகிறது, அதுவும் துணைப் பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை. ஹெர்னியா என்னும் நோய் (குடல் வாதம்) இருப்பதில் உட்கார்ந்து திருக்கும்போது ஒரு இளநீர் அளவு பரிமாணம் குடல் இறங்கி சிறுவலி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நின்றால் ফুட்பால் (உதைபந்து) அளவுக்குப் பெருகி பெருவலி கொடுக்கிறது.
இந்தக் காரணங்களால் நானே என்னை 'கண்ডেம்ட் மேன்'--வேலைக்குப் பயன்பட முடியாத தள்ளப்பட்ட மனிதன்--என்றே கருதி வாழ்ந்து வருகிறேன். இவ்வளவு குறைபாடுகளும் இயலாமையும் இருந்தும் மக்கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் ஜன்மி வந்தவனுக்கு ஏற்படும் பலம், சகிப்புத் தன்மையாக என் நிலை அறியாத அளவுக்கு வேலைகளையும், பொறுப்புகளையும் நானாக மேற்போட்டுக்கொண்டு தொந்தரவடைந்து வருகிறேன். இந்த, இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவஸ்தைப் படாமல் இருக்கத்தக்க வண்ணம், நோய் தெரியாமல் இருப்பதற்கு டாக்டர் கன் குளோர অபாரம் (மயக்க மருந்து) கொடுப்பதுபோல், பணம், பண்டம் தாராளமாய்க் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறார்கள். ஆதலாலேயே, உடல் நிலையைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தொண்டாற்றிவர முடிகிறது என்று சொல்லுவேன். நல்ல அளவுக்கு என் தகுதிக்கு ஏற்பப் பணம் தேடி விட்டேன். அதுவும் யாரையும் ஒரு காசு அளவுகூட தயவாய்க் கேட்காமல் வேண்டுகோள் விடுவதும், கட்டளை இடுவதும், விகிதம் ஏற்படுத்துவதும் மக்கள் தாங்களாகவே மேல்விழுந்து கொடுக்க வருவதுமான தன்மையிலேயே இயக்கத்திற்குப் பணம் சேர முடிந்தது. அதைக்கொண்டு இயக்க நடப்புக்கும், பிரச்சாரத்திற்கும், காரியாலயக் கட்டடங்களும், இடமும், வயலும், தோப்பும், காலி மனைகளும், வீடுகளும், மண்டபங்களும், பள்ளிகளும், பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயன்படும் தங்குமிடங்களும், செலவுக்கு வருவாய் வரத்தக்க வீடுகளும் ஒரு அளவு ஏற்பாடு செய்துமிருக்கிறேன். இவைகளையெல்லாம்விட குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று என்னவென்றால்,
திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்று கரண்டு ஆண்டுக்கு முன் முயற்சித்து, சென்ற ஆண்டில் பெண்கள் கல்லூரியாக ஏற்படுத்த அரசாங்கத்தில், யுனிவர்சிட்டியில் அனுமதி பெற்றுச் செயலில் இறங்கும்போது அதற்கு மேலும் கட்டடம், நில ஆர்ச்சிதம் முதலிய காரியங்களும், துவக்கியதில் அதிகச் செலவு மாத்திரமல்லாமல் பல தொந்தரவுகளும் ஏற்படுவதாயிருந்தது பற்றிச் சிந்தித்து, செயல்பட இருக்கும்போது இதை அறிந்த திருச்சித் தோழர்கள் பலர் திருச்சிக்கு இப்போது அவசரமாய் வேண்டி இருப்பது ஆண்கள் கல்லூரி என்று பல காரணங்களைச் சொல்லி முறையிட்டார்கள். எனது 10, 15 வருஷ திருச்சி வாசத்தில் நான் கண்ட அனுபவம் அம் முறையீடுகளை உண்மைப்படுத்தியதால், பெண்கள் கல்லூரி விஷயம் பின்னால் கவனிக்கலாம். இப்போது அவசரமாக ஆண்கள் கல்லூரி விஷயம் கவனிக்க வேண்டியதாகும் என்பதாக எனக்குத் தோன்றியதால் அரசாங்கக் கல்வி அதிகாரியை அணுகி இதற்கு யோசனை கேட்டதில் அவர்கள் "அங்கு ஏற்கனவே மூன்று காலேஜ்கள் ஆண்களுக்காக இருக்கின்றன. இரண்டு காலேஜ்கள் பெண்களுக்காக இருக்கின்றன. மேற்கொண்டு இப்போது அவசரமில்லை என்று சர்க்கார் நினைக்கிறது" என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு மேலும் அவர்களை வேண்டிக்கொண்டதன்மீது "5 இலட்சம் ரூபாய் பொருளாதவி செய்தால், அரசாங்கம் கவனிக்கும்" என்று சொல்லிவிட்டார்கள். நாம் சொந்ததில் வைப்பதானால், 50 ஏக்கர் இடமும், 4,5 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டிய கட்டடமும், 2, 3 இலட்சம் ரூபாய்க்கு மேலாக தளவாடச் சாமான்கள், இவை தவிர காலேஜ் ஏற்பட
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்னவென்றால், என் தொண்டுக்கு ஆதரவாகச் சேர்த்து எடுத்து அணைத்துப் பக்குவப்பட்ட தோழர்கள் எல்லாம் 100க்கு 100 பேரும் பக்குவம் அடைந்தவுடன்; விளம்பரம் பெற்றுப் பொதுமக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனைபேரும் எதிரிக்குக் கையாளாக (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்குப் பலவழிகளிலும் பயன்படுபவர்களாகிவிட்டதோடு, எனக்கும் எனது தொண்டிற்கும் எதிரிகளாக; முட்டுக்கட்டைகளாகப் பலர் விளங்கவேண்டியவர்களாகிவிட்டார்கள். இதற்குக் காரணம் (பிரகலாதன், விபீஷணன் போல்) நமது சாதிப் பிறவித் தன்மையே என்று சொல்ல வேண்டியதைத் தவிர, எனது 40 வருட பொதுத்தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்லமுடியவில்லை.
இந்த நிலையில், நான் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றிவந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும், நிலையும் இருக்கிறதென்றால் என்னைப்பற்றி அறிஞர்கள் தரம் விலைமதிக்க வேண்டும்.
என்னைவிட்டு விலகி எதிரிகளானவர்கள், எதிரிகளின் கையாளாய்ப் போனவர்கள்—ஒழுக்கத்தில் என்மீது குற்றம் இருந்து என் நடத்தையில் கோனாறு இருந்து விலகி இருப்பார்களே, அப்படியானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டிய தாகத் தான் நியாயமாகும். ஆனால், விலகிய வர்கள் அத்தனைபேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல், எந்தக் கொள்கைக்காக என்னுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு, நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்கமளித்தும் எனக்கு முட்டுக் கட்டை போட்டு வருவதுதான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்ப்பாகும் என்று மறுபடியும் சொல்லவேண்டி இருக்கிறது. இந்த நிலை ஒரு புறமிருக்க,
இந்தியாவிற்குச் சமீபத்தில் வந்திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரை ஒரு பார்ப்பனர், "இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராசீசாரியாரைப் பார்த்துவிட்டுப் போவதுதான் முக்கிய காரியம்" என்று சொல்லி, சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம்! அந்த ரஷ்யர் சங்கராச்சாரியாரிடம் பல விஷயங்களைப்பற்றிப் பேசிவிட்டுக் கடைசியாக, "உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் உங்கள் சம்பிரதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்திக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார் "ஆமாம். அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ளவேண்டிய அளவுக்கு நடந்திருக்கிறது. ஆனால், இந்தப் பதினேழு வருடமாக (1948-ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை" என்று சொன்னாராம்.
"இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?" என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும்போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில்: அது ஒரு நல்ல அளவுக்கு உண்மையே. எப்படியென்றால்,
நம் நாட்டிற்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமேயாகும் என்பதோடு, அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப்பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில், பார்ப்பனர்கள் கிழந்ததை எல்லாம் பெற்றுக்கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.
இதுமாத்திரமல்லாமல், நானும் இப்படிப்பட்ட பார்ப்பன சுதந்திரத்தை எதிர்க்கும் வேலையை விட்டுவிட்டு, இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றிவிட்டோம் என்ற ஆணவத்தாலும், காமராசரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் சுதந்திரத்தை, காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக நிபந்தனையற்றுப் பாடுபட்டு வந்ததாலும், காமராசர் ஆட்சியை விட்டுப்போய்விட்டதாலும், அதற்குப் பிறகு "அசல் பார்ப்பனிய" ஆட்சியே தங்குதடையின்றி நடந்து வருவதாலும் இதன் பயனாய்ச் சமுதாயத் துறையிலும், மதத் துறையிலும், உத்யோகத் துறையிலும், கல்வித் துறையிலும் யாதொரு குறைவு இல்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பார்ப்பனர்கள்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும், இன்றைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தி அடையக்கூட வாய்ப்பில்லாத நிலையில், நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது" என்று பதில் சொன்னேன். ரஷ்யப் பிரமுகர் இதுகேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.
நிற்க, இன்றைய சுதந்திர ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதைப் பயனளிக்கும்படியான அளவுக்குக் கிளர்ச்சி செய்யவோ, கண்டிக்கவோ, தக்கபடி எதிர்ப் பிரச்சாரம் செய்யவோகூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிகைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனஃ ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே
செய்திகள் விளம்பரம் செய்யும் சாதனங்களாக; ஒன்றுகூட விலகாமல், எல்லாப் பத்திரிகைகளும் விளங்குகின்றன. இராஷ்ட்ரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பகதி பிரச்சாரம் செய்துவருகின்றார்கள். அதிகாரிகள் நியமனம் பெறவும், தங்கள் குற்றங்களை மறைக்கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையே தான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிரஸ்காரர்களுள் 100க்கு 90க்கு மேற்பட்ட வர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைக்கொள்ள மந்திரிகளைப் பின்பற்றுவதுடன் பக்தர்கள்
விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக்கட்ட, தோல்வியடையச்செய்யப் பாடுபட்டாலும், அப் பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக்கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களும் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை—மந்திரிகளை—அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு? என்பதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக்கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஆறுதல் என்னவென்றால், இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்குச் சாதனமாகவிருக்கும் சுய மரியாதை இயக்கத்திலும், திராவிடர்கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்விதப் பிரতिबिrயोजन த்தையுப் எதிர்பாராமல், ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து ஒருசிறிதும் வழுவாமல், தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டுவதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றுவதுதான் எனக்கு உயிரூட்டி, சலிப்படையாமல் உழைக்கச் செய்துவருகிறது. மேலும், நமது இயக்கத்தால், உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் பெருவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். மற்றும், நம் எதிரிகளான பார்ப்பனர் "எங்கள் நிலைமை இப்போது சீரடைந்துவிட்டது. இனிப் பயப்படத் தேவை இல்லை" என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
இன்று என்றுமில்லாத அளவுக்குக் கோவில் திருப்பணி, கோவில் உற்சவம், கோவில் கும்பாபிஷேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப் பிரச்சாரம் செய்தல், கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தலயாத்திரை செய்யச் செய்தல்; இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல் பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரச்சாரம், கடவுள் கதைப் பிரச்சாரம், மதப் பிரச்சாரம், சாஸ்திர தர்மப் பிரச்சாரம், பஜனை, கால அச்சேபம் செய்தல் முதलிய காரியங்களில் எப்போதையும்விட அதிகமாக—மிகமிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அரசாங்கத்திலும், கூறு மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள் தனத்தால் சமுதாயத்தில் மிகமிகச் சிறுபான்மையராகிய "பெரிய சாதியாரும்" பணக்காரர்களும் "பெரிய படிப்புக்காரர்" என்பவர்களுமே சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஓட்டுச் செய்பவர்கள் இவர்களைப்போல் 30 பங்கு அதிகமான சமுதாயத்தில் கீழ்நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள். ஆனதால், மக்களை மூடநம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து, மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி, இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால், மேல் நிலையிலுள்ள சிறுபான்மையோருக்குப் பயம் வந்துவிட்டது; பயத்தால் துடிக்கிறார்கள் என்றுதானே ஏற்படுகிறது.
நாட்டில் படிக்காத—நல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள், அதுபோலவே உழைப்பாளி, ஏழை மக்கள் 100க்கு 80 பேர் இருக்கிறார்கள்.சமுதாயத்தில் கீழ்சாதி மக்கள் எனப்படுவோர் 100க்கு 90க்கு மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மேல்சாதிக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்திரமென்றால், மேலே குறிப்பிட்டபடி இதற்கு மக்களின் முட்டாள் தனமும் மூடநம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும்? ஆதலால்தான்; மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகிவிட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்கக்காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லிதான் வேண்டும். என்றாலும், செய்ய வேண்டிய அளவுக்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டியால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்குப் போர்த்துகிறவனைப்போல், நாம் காங்கிரசைக் "காப்பாற்றுகிற" வேலையில் ஈடுபட்டு, சமயத் துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை—மாறுதலை கிழந்துவிட்டோம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் வேண்டும்.
நாம் காங்கிரசைக் "காப்பாற்றும்" தொண்டில் இறங்காமலிருந்து, 10, 12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து கரண்டு மூன்று முறை பதினாயிரக் கணக்கில் சிறை சென்றிருந்தால் "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ" முறையில் கண்டிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித் துறையில் மேலும் முன்னேறி இருப்போம். சமுதாயத் துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்படியாகவும், முழு ஆலய ப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகள் பெற்றிருப்போம். நிதித் துறையில் வக்கீல்களின் தொல்லையை நல்ல அளவுக்குக் குறைத்துக் கொண்டிருப்போம். இந்தக் காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம், நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக்கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்கு—18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குன் நமது நலம் வெகுதூரம் பாதிக்கப்பட்டு, எதிரிகள் மிகவும் வளர்ந்துவிடுவார்களே என்று அச்சப்படவேண்டியவர்களாகதான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு—நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றி காட்டாவிட்டாலும் நமது இலட்சியத்திற்குக் கேடுபயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால், அப்படிக்கல்லாமல், நம்மால் காங்கிரசுக்கு—ஆட்சிக்கு "ஒரு பயனுமே ஏற்பட வில்லை; தொல்லைகள் தாம் ஏற்படுகிறது" என்று காங்கிரஸ் கட்சி கருதுகிற்போது, நமது நினர்த்தி இல்லாத முட்டாள் தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர, வேறு என்ன செய்யமுடியும்?
இன்று காங்கிரசுக்கு எதிராக, எப்படியாவது காங்கிரசை—காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும் ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும், துரோகங்களையும், நாசங்களையும், நட்டத்தையும் கொடுத்துவரும் எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்க்கும்போது, தமிழ்க் குடும்பம் ஒன்று சேரவேண்டும் என்பதுப் பெரிய கர்தவ்யமாகத் தெரிகிறது.
அரட்டை அடிப்பதில் பழக்கம் அதிகமாகி, யாரும் என்னை விரும்பும்படி ஆகிவிட்டேன்.
கடை, வியாபாரம் என்றால் அது தரகுமண்டி வியாபாரம். அதாவது, கிராமம் தீது மக்கள், மிளகாய், மஞ்சள், மற்றும் விளைந்த தானியங்கள் முதலியவைகளைக் கொண்டுவந்து எங்கள் கடையில் போட்டு விற்றுக்கொடுக்கச் சொல்லுவார்கள். இதுபோலவே, சில கிராம வியாபாரிகளும், கிராமங்களிலும், கிராமச் சந்தைகளிலும் வாங்கிய சரக்குகளை எங்கள் கடையில் போட்டு விற்றுக்கொடுக்கச் சொல்லுவார்கள். இப்படியாக ஒருநாளைக்குச் சராசரி இருபது பேர், முப்பது பேர் வருவார்கள். சிலநாளைக்கு ஐம்பது பேரும் வருவார்கள்.
இவர்களிடம் அரட்டை அடிப்பதுதான் என் ஒழித்த வேலை. இந்த அரட்டை எங்கள் கடைக்கும், வீட்டிற்கும் காசுபெற வரும் பக்தர்கள், புலவர்கள், பாகவதர்கள், சன்னியாசிகள் இவர்களிடமும் அவர்களின் வேஷத்தையும், அவர்கள் பேசும் விஷயங்களையும் பற்றிக் கேலி செய்யும்படியும் வளர்ந்துவிட்டது.
இப்படிப்பட்ட அரட்டையும், வாதமுமதான் 1900-லேயே அதற்கு முன்பே என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கிவிட்டது. அப்படியிருந்தாலும், ஆதிக்கமான காரியங்களில் கலந்துகொள்வதில் நான் பின்வாங்குவதில்லை. அதில் ஏற்படும் அதனால் வரும் பெருமைகளை அடைவதில் நான் தவறுவதில்லை.
காரணம், அக் காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடைதான் பெரிய கடை. எங்கள் வீடு தான் பெரியவீடு. எங்கள் தகப்பனார்தான் ஊருக்குப் பெரிய மனிதர், ஒரு அளவுக்குப் பணக்காரருங்கூட.
இந்த நிலையில் எல்லாக் காரியங்களிலும் கலந்துகொள்வதுபோல் ஆதிக்க காரியங்களிலும் கலந்து கொள்வேன்.
நான் தேவஸ்தான கமிட்டி செக்रெட்டரியாக, தலைவனாக 15 ஆண்டு போல் இருந்திருக்கிறேன். அந்தக் கடமைகளிலும் நான் தவறவில்லை, ஆனாலும், மக்கள் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு. இதற்குக் காரணம், ஆத்திகத்தினால் (கடவுள், மதநம்பிக்கை ஆதிக்கத்தால்) தான் இந்த நாட்டில் சாதி (பார்ப்பான் பிராமணனாய் வாழ்வதும்) அரசியல், மத ஆதிக்கத்தில் பார்ப்பான் இருந்துகொண்டு சமுதாய வளர்ச்சியையும், அறிவு (விஞ்ஞான) வளர்ச்சியையும் தடைசெய்துகொண்டு இருக்கிறான் என்பதும் எனது உறுதியான எண்ணம் என்பதோடு, நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும், எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும், யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம்.
இப்போதும் காங்கிரஸ்காரர் பலரை வெறுக்கிறேன் என்றாலும் தி.மு.க.காரர் பலரை நேசிக்கிறேன் என்றாலும் இதுவேதான் காரணம்.
இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை ஆத்திகர் எதிர்க்கலாம். ஆனால், பகுத்தறிவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன?
அரசியல் குற்றம் குறை என்பது யாருடைய ஆட்சியிலும் எந்த அளவுக்காவது நடந்துதான் தீரும்.
அக் காலத்தில் ஜஸ்டிஸ் (திராவிடர் கழக) ஆட்சியைக் காங்கிரஸ்காரர்கள் எப்படி, யெப்படி எல்லாம் எதிர்த்தார்களோ (தாலியறுத்தார் இராமசாமி முதலியார் என்று சொல்லி) அப்படி எல்லாம் இப்போதும் சொல்லுவார்கள், எதிர்ப்பார்கள், தப்புப் பிரச்சாரம் செய்வார்கள், நல்ல காரியம் எதையும் செய்துவிடாமல் தடுப்பார்கள், கலகம், குழப்பம் செய்வார்கள். நமது மக்களுக்கு அவற்றை உணரும் சக்தியில்லை; இருக்காது. என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார்—திராவிடர் கழகத்தார் கடமை என்ன என்பதை நல்ல வண்ணம் சிந்தித்து நடந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவில் சரிபகுதி காங்கிரசுக்கு எதிர்ப்பாகிவிட்டது. என்றாலும், காங்கிரஸார் மக்களைத் தங்கள் பக்கம் திருப்ப மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப் பாடுபடுகிறார்கள். இது தும்பை விட்டுவிட்டு, வாலைப் பிடிக்கிற கதை ஆகதான் முடியும். காங்கிரஸார் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று காட்டிக்கொள்ளாதவரை நாம் எப்படி கிறது காங்கிரஸை ஆதரிக்க முடியும்?
தி.மு.க.காரரும் என்ன செய்தாவது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டு மென்கிற ஆர்வத்தில், தாங்கள் இருக்கும் படகில் ஓட்டை ஏற்படும்படி செய்துகொள்வதும் ஒரு வழியென்று நினைப்பார்களானால் அது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவதாகாது. மூழ்கடித்துக் கொள்வதுதானாகும். அவர்கள் முயற்சியில் கூடியவரை சுயமரியாதைக்காரரையும் திராவிடர் கழகத்தாரையும் விரோதித்துக் கொள்ளாமல்பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் மக்களுக்கு அடக்கத்தைப் போதிக்கவேண்டும். சிறு தகராறு, கோளாறுகளைச் சிறிது விட்டுக்கொடுத்தாவது பொறுமை காட்டி சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் இக்கூட்டத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் விரோதிகள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அது தவறு.
இன்று பார்ப்பனரும் காங்கிரஸாரும் ஒன்றாகிவிடவில்லையா? ஒருவருக்கொருவர் எவ்வளவு சிபாரிசு! எவ்வளவு ஆதரவு! அந்தப் புத்தி நமக்கு வரவேண்டாமா?
தலைவர்களுக்கு மிக்க பொறுப்பு வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் அடக்கிக்கொண்டுதான் வருகிறேன். ஒருநாள், இரண்டு நாள் அலை. இன்னும் நாலரை வருடம் இருக்கிறது. அடுத்த எலக்ஷன் எப்படி ஆனாலும் எனக்குக் கவலையில்லை. அதுவரை தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கவேண்டும். பல அரிய காரியங்களைச் செய் வேண்டும். கட்டுப்பாடு, ஒற்றுமை, எதிர்க் கட்சியாரிடம் பொறுமை, அடக்கம் வேண்டும். நமது தோழர்கள் இனி பகுத்தறிவுப் பிரச்சாரத்தில்தான் கவலை கொள்ளவேண்டும். மக்களிடம் இலட்சக்கணக்கில் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கையொப்பம் வாங்க வேண்டும். கையொப்பம் வாங்க அலவன்ஸ் கொடுத்து தொண்டர்களை நியமிக்க வேண்டும். தங்களுக்கு வேலை இல்லை என்று யாரும் நினைக்கக்கூடாது. இதுதான் நமது நிர்மாணத் திட்டம். எனது காயா சற்றுக் கடினமான தான். எளிதில் குணமாகாது. முற்றியவழியில் கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது. உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்.
[பிறந்த நாள் விழா மலர் 09-19-1967]
7. கழகத் தோழர்களுக்கு
சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க.விலும், காங்கிரசில் உள்ளவர்களும் பகுத்தறிவு, தமிழர் இன உணர்ச்சி உள்ளவர்களும், அரசியல் அதिकாரிகளாய், குமஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும், தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில், வாகனங்களில் உள்ள கடவுள் மத, புராண, இதிகாச கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப் படங்கள் எதுவானாலும், அவைகளை அப்புறப்படுத்திவிட வேண்டும். கண்டிப்பாய் அப்புறப்படுத்தி விடவேண்டும் என்று மிக்க மரியாதையாய், வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறேன்.
அரசாங்கப் பணிமனையில் தொங்கும் படங்களை எடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது! நீங்கள்தான் பார்ப்பனர்களே, இராஜாஜி மிரட்டுகிறார். மித்திரன், தினமணி, இந்து, மெயில், எக்ஸ் பிரஸ் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் மிரட்டுகின்றன, விஷமப் பிரச்சாரங்கள் செய்கின்றன. இந்த ஒரு பிரச்சினையைக் கொண்டே தி.மு.க. ஆட்சியையே கவிழ்க்கப் பார்க்கின்றனர். ஏன்?
தங்கள் சாதி உயர்வும், நம் சாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர் வாழ்கின்றன. அவை (படங்கள்) போய்விட்டால் உயர்வு-தாழ்வு போய்விடுமே என்கிற கவலைதானே? மற்றபடி அப் படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர
அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.
நமக்கு பुத்திமான் இன உணர்ச்சி இருக்கவேண்டாமா? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும் நமது ஈன நிலை, இழிவு நிலை பார்ப்பான் உயர்வுநிலை அதில் இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது அரசியல் பணிமனைகளிலிருந்தும், அதைவிட நமது வீடுகளிலிருந்தும், தொழில் ஸ்தாபனங்களிலிருந்தும் எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.
தோழர்களே! இனியாவது செய்து நீங்கள் இழி சாதி மக்கள் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாமா?
உங்கள் தாயார், சகோதரி, மனைவி, மகள்கள் பார்ப்பானனுக்கு வைப்பாட்டி, காமக் கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆகவேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாமா?
இதற்காக நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இது (இந்தப் படங்களை அப்புறப்படுத்தவரவும்?) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா?
நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும்படி செய்தீர்கள் ஆனால் பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நானும் இனியும் (90-க்கு மேல்) வாழமுடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள்? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குத்தான் போகவேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள்; செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இது கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படிதீ (திருத்தம்: படித்து) காட்டுங்கள்.
[பிறந்த நாள் விழா மலர் 90--17-9-1968]
8. எனது நிலை
எனது 90-வது ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் "எனது நிலை" என்கிற கட்டுரை எழுதும்போது, 91-வது ஆண்டு "பிறந்த நாள் விழா" மலருக்கு எனது நிலை என்பதுபற்றி எழுதவேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91-வது ஆண்டு "பிறந்த நாள் விழா" மலருக்கும் எனது நிலை என்பதுபற்றி எழுதும்படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90-வது ஆண்டு "பிறந்த நாள் விழா" மலரில் எனது நிலை என்ற கட்டுரையில் "எனக்கு வயது 90, உடல் நிலை மிகவும் மோசம், கைகால் நடுக்கம் அதிகம், சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக்கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது, அவ்வளவு வலி, தூக்கம் சரியாய் வருவது இல்லை.
நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரণமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எந்தக் காரியம் பற்றியும், மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது.
எதைப்பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.
சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்துகொள்ளமாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச்செலவுத் தொகையை ரூ. 100-இல் இருந்து 150 ஆக ஏற்படுத்திவிட்டேன்.
ரூ. 100 எனக்கு வண்டிச்செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதலியவை களுக்கு அனாயாசமாகச் சரியாய்ப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி, பிரச்சாரத்திற்குப் பயன்படும்.
எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை.
ஒரு வாரப் பத்திரிகை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. மற்றும் வெளியாக்கப்பெற வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.
இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்றுகூட எண்ணுகிறேன்.
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்கமுடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை. இருந்தவரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம். பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ?
இந்தப்படி எழுதி இருக்கிறேன். அதை ஊன்றிப் படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.
இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91-வது ஆண்டு நடக்கிறது என்றாலும், 90-வ
மானாபிமানத்தைக் காட்டாதவரையில் வேறு எந்தக் காரியத்தில் நாம் வெற்றிபெற்ற போதிலும் அதன் பயனை நாம் அனுபவிக்கவே முடியாது என்பது மாத்திரமல்லாமல் நம்முடைய நாட்டிலே, அதிலும் மொத்த ஜனத்தொகையில் 100-கு 90-க்கு மேற்பட்ட வர்களாக இருக்கும் நமது நாட்டிலே 100-கு 3 பேராய் இருப்பவரும், நமது பிறவி எதிரியும், நமது கேட்டிற்கும், அழிவிற்கும், இழிவிற்குமாகவே உழைத்துவரும் வெகு வெகு சிறு சிறு சசதமாரான இன தீதாரிடம் நமது நாட்டுப் பத்திரிகைகளும் பத்திரிகைகளின் ஆதிக்கமும் இருந்துவருவது என்றால், இது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவானநிலை என்பதும் யோசிக்கத் தகுதாகும்—என்பதோடு இது (நம்) போன்ற இழிவான; மானங் கெட்ட சமுதாயம் போன்ற வேறு ஒரு சமுதாயம் நான் அறிந்தவரை உலகத்தில் வேறு எங்குமே இருப்பதாகத் தெரியவே இல்லை।
அது மாத்திரமா? நமது பத்திரிகை என்பவைகளை நமது மக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் நமது எதிரிகளான பார்ப்பனருடையவும், அவர்கள் அடிமைகளுடையவும், அவர்கள் ஆதரவால் தான்—அவர்களுக்கு நல்ல பிள்ளையாய் இருந்தால் தான் வாழ முடியும் என்று கருதுபவர்களுடையவும் ஆன பத்திரிகைகளை லட்சக் (1,00,000) கணக்கில் நமது மக்கள் வாங்கிப் படித்து ஈனமக்களாக ஆகிவருகிறார்கள்.
சாதாரணமாகச் சொல்லுவோமானால் தமிழர் நல்வாழ்வுக்காகவே, மான வாழ்வுக் காகவே, வளர்ச்சிக்கவே என்று 45 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுயமரியாதை (சமூக முன்னேற்ற) இயக்கம் என்பது ஆரம்பிக்கப்பட்டு, மூலை முடுக்குகளெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தும், நம் எதிரிகளை "பிரமணாள்" "சாமி" என்று அழைப்பது 100-கு பதி.துவீதமான மக்களால் கூட நிறுத்தப்படவில்லை என்பதோடு, பத்திரிகை படிப்பவரீகளில் 1000-கु ஒருவரால் கூட நம் எதிரிகள் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பது நிறுத்தப்படவில்லையென்றால் நம் மக்களின் தன்மைக்கு எந்தக் குணத்தை உதாரணமாகக் கூறுவது என்பது நமக்குப் புரியவில்லை.
அது மாத்திரமா? நமது கேட்டிற்கும் இழிவிற்கும், வளர்ச்சித் தடைக்கும் என்பதற்कு காகவே நடத்தப்படும் நம் எதிரிகளுடைய பத்திரிகைகளால் எதிரிகள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று-ஏன், ஐந்து இலட்ச ரூபாய்கள் வரை இலாப வருவாய் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
ஆகவே, நமது கிழ் நிலையானது நமது எதிரிகள்—மேல் சாதியார், பிரமணர் என்று, சாமி என்று நம்மாலேயே அழைப்பவர்களாகவும், நமது செல்வத்தையே ஆண்டு ஒன்றுக்கு ஒன்று முதல் ஐந்து இலட்ச ரூபாய் வரை இலாப வருவாய் உள்ளவர்களாக இருப்பதற்கு நாம் இடம் கொடுத்து வருகிறோம், நாம் ஆளாக இருந்து வருகிறோம் என்றால் மறுபடியும் நமது நிலை எவ்வளவு இழிவானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
எனவே, நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாக இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகிஷ்கரிக்கும்படி செய்யும்படியான ஒரு இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன், ஆதரித்துப் படுகிறேன்.
இதற்காக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்யச் செய்வது, கூடுமானவரை ஒவ்வொரு கிராமங்களிலும் "நம் எதிரிகளின் பத்திரிகை பகிஷ்கார சங்கம்" என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும், இந்தக் காரியத்திற்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதி திரட்டி, பல தொண்டர்களை முழுநேர வேலைக்காரர்களாக ஏற்படுத்தி, நாடெல்லாம் தொண்டாற்றச் செய்யவும் செய்ய வேண்டும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.
நன்கொடையாளர்கள் பெயர்கள் தெரிவிக்கப்படமாட்டா து. கண்டிப்பாய் ஒவ்வொரு வரும் இதற்கு நன்கொடை அளித்தாக வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.
அதிகாரிகளும், அமைச்சர்களும் உதவவேண்டும். அவர்களுக்கு இதனால் ஏற்பட்ட மான பலனுண்டு. மற்ற தலைவர்களும், வியாபாரிகளும் அவசியம் உதவவேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன். பொது மக்களும் இதற்கு நல்ல வண்ணம் ஆதரவளிக்க வேண்டும்.
இந்தப் பணியானது கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியைவிட, கோவில்களை இடிக்கும் பணியைவிட முக்கியமானதும், பயன் அளிக்கத் தக்கதுமான பணி என்பது எனது உறுதியான எண்ணமாகும்.
எனவே, மளமளவென்று நன்கொடை வரவேண்டுமென்றும்—என்றும் உறுதியும் தகுதியும் உள்ளவர்கள் முன்வரவேண்டுமென்றும் வேண்டிக்கொள்வதோடு, நன்கொடை அளிப்பவர்களை நண்பர் வீரமணி அவர்களிடம் கொடுத்தருளவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். விஷயம் மிக முக்கியமானதும், செய்து தரப்படவேண்டியதுமான இன்றியமையாத பணி என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
இந்தக் காரியத்தை நான் செய்வதால் எனது வாழ்நாளில் ஒரு பயனுள்ள காரியத்தைச் செய்ததாக நான் கருதிக்கொண்டு முடிவடைவேன்.
[பிறந்த நாள் விழா மலர் 92 — 17-9-1970]
11. எனது வேண்டுகோள்
சென்ற ஆண்டுக்கு முன் வரையில் எனது நிலை எனக்கே பெரும் வெறுப்புக் கொடுப்பதாகவே இருந்துவந்தது. உலகத்தை வெறுத்துத் துறவியாய் விடுவேனோ என்று கூட, எனது வாழ்வு நாட்டுக்கு மனித சமுதாயத்திற்குப் பயன்படவில்லையே என்ற கவலையுடன்—மக்களிடம் வெறுப்பு இருப்பது போலவே எனக்குக் காணப்பட்டது. எனது வாழ்க்கைச் சலிப்பைப் பற்றி என்னிடம் அன்புகொண்ட உயர்திரு. காமராசர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும், குன்றக்குடி அடிகளாரும் நான் சலிப்படையவேண்டியதில்லை என்றும், என் உழைப்பு வீணாகவில்லை என்றும், நல்ல அளவுக்குச் சமுதாயம் திருந்தி வருகிறது என்றும் கூறி, எனக்கு உற்சாகமூட்டினார்கள். என்றாலும், நான் ஒரு நல்ல அளவுக்குச் சலிப்படைந்துதான் இருந்தேன்.
அறிஞர் அண்ணா மறைந்தவுடன் தி. மு. க. ஆட்சி என்ன ஆகுமோ என்று பயந்து, கோபுரம் தாங்கும் பொம்மை போல்—எல்லாப் பொறுப்பும் என் மேலேயே இருப்பது போல நானே நினைத்துக்கொண்டு, எப்படியோ என்று நாம் போய் விடக்கூடாதே, இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டு, துறவற ஆசையை மறந்து, பெரிய குடும்பஸ்தனைப் போல் கவலை கொண்டு வாழ ஆசைப்பட்டுவிட்டேன்; ஆசைப்பட்டாலும் முடிவு சமீபித்துக்கொண்டு வருகிறது. அதற்கும் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற
www.thamizham.net - Free book No 3046
1972 பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
பேராசையோடு சற்றுத் தீவிரமான சொற்களை, கருத்துக்களை துணிவாகப் பேசவும், எழுதவும் துவக்கினேன்.
அப்போதுதான் பொதுமக்கள் நிலையும், நமது கழகத் தோழர்கள் நிலையும் எனக்கு நல்ல வண்ணம் துலங்கியது. அதாவது, தீவிரமான கருத்து வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்ததோடு, மாறுபாடு கருத்துக் கொண்டவர்களாக இருந்த பொதுமக்கள் இடையிலும் எனிதில் மாற்றம் ஏற்பட்டு வருவதையும் அறிய முடிந்தது.
அது மாத்திரமல்லாமல், பல காரணங்களால் விரிந்து கிடந்த தமிழ் மக்கள் தங்களது பிரிவை உணர்ந்து ஒன்றுசேர வேண்டுமே என்ற உணர்ச்சி கொண்டு, ஊடலில் வேறுபட் டவர்கள் உணர்ச்சி வசத்தால் "யார் முதலில் நெருங்குவது?" என்ற "மানத் தன்மை" பாரசமல் ஆளுக்கு ஆள் முந்தி ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்ள முயற்சிப்பவர் போல் நம் மக்கள் ஒன்றுசேர ஆர்வம் கொள்வது எனக்கு நன்றாய்த் தெரிந்தது.
இதிலிருந்து நம் மக்களில் ஒன்றுசேர, ஒற்றுமைப்பட ஆசைப்பட்ட மக்களில் அத்தனைபேருக்கும் என்றில்லாவிட்டாலும் பெரும்பாலோருக்கு "பகுத்தறிவ உணர்ச்சியும் தாரான நோக்கமும்" இல்லாததால் தான் நாம் இன உணர்ச்சி அற்றுப் பிரிந்து இருக்க நேர்ந்தது? என்று கருதவும் முடிந்தது. இந்த முடிவை நான் கலந்துகொண்ட அதிகாரிகள் கூட்டம், படித்தவர்கள் கூட்டம், பெரிய செல்வவான்கள் கூட்டம், பல பல பாமர மக்களின் கூட்டம் முதலியவைகளில் பல பெண்களிடத்திலும் உள்பட அறிந்தேன்.
இந்த நிலை எனக்குப் பெரிய தெம்பையும் ஊக்கத்தையும் கொடுத்ததோடு, இன்னும் கொஞ்ச காலத்திற்கு நாம் வாழ்ந்திருக்க வேண்டும். இது "வெண்ணெய் திரளுகின்ற" பருவமாயிருக்கிறது என்று பேராசை ஏற்பட ஏற்பட்டதாயிருக்கிறது.
ஐக்கோர்ட் நீதிபதிகள் பலர் உட்பட, பெரிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட, மற்ற பெரிய அதிகாரிகள் என்பவர்களும், என்.ஜி.ஓ-க்கள் என்பவர்களும் 100-கு 75 பேர்களுக்கு மேல் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லத்தக்க நிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பெரிய நகரங்களிலும், பொது மக்களும், மாணவர்களும், அதிகாரிகளும், பெரிய பண்டிதர்கள் என்பவர்களும் முன்வந்து "பகுத்தறிவு சங்கம்" என்றும், "சிந்தனையாளர் கழகம்" என்றும், மற்றும் பல பெயர்களால் அரசியல் சம்பந்தமற்ற சங்கங்களை ஏற்படுத்திக்கொண்டு, மாதந்தோறும் கூடுவதும், சிலர் வாரந்தோறும் சொற்பயிற்சி நடத்துவதுமாய் இருப்பதோடு, கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து "சுயமரியாதை குடும்ப விருந்து" என்னும் பேரால் விருந்து நடத்தி, விருந்துண்டு; பகுத்தறிவுச் சொற்பொழிவு நடத்தி மகிழ்வதுமாக இருக்கிறார்கள். இவை எல்லாம் எனது சலிப்பு, வெறுப்பு உணர்ச்சியைப் பெரும் அளவுக்கு மாற்றிவிட்டதோடு, மேலும் மேலும் உழைக்க வேண்டுமென்கிற உற்சாகத்தை உண்டாகட்டிவிட்டது என்று திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.
மேலும், இந்த நிலையில் நான் நமது தமிழர் சமுதாய மக்களிடம் காணுவது என்ன வென்றால், அரசியலில் போதிய அளவு இல்லாவிட்டாலும் நல்ல அளவுக்கு நம் மக்கள் அதிகாரிகளாகவும் நல்ல பதவிகளில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நம் பிள்ளைகள் தாராளமான அளவுக்குப் படிக்கிறார்கள்; படித்தவர்களாகவும் இருக்கிறார்கள். பெண்களும் ஒரு அளவுக்கு மனித உணர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அரசாங்கமும் துணிந்து பல முற்போக்கான காரியங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, மேலும் நமக்கு வேண்டியதெல்லாம் மேலும் பகுத்தறிவும் ஒற்றுமையும், இன உணர்ச்சியும் என்பதோடு அதிகாரிகளும், ஆட்சிச் சிப்பந்திகளும் பொதுமக்களும் தங்கள் சுயநலங்களில் சிறிது விட்டுக்கொடுத்தாவது ஆட்சிக்கு நிர்வாகிகளாக இருந்துதமிழர்க்கான பொதுவான நல்வாழ்வுக்காக ஆட்சியை ஆதரிக்க வேண்டியது என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
நாடு முற்றும் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் தமிழர்களில் ஒற்றுமை ஏற்படுத்துவது என்பதாகப் பகுத்தறிவு சங்கம் ஏற்படுத்தி, மூட கொள்கைகளை ஒழிக்கவும் இன உணர்ச்சி ஏற்படவும் பாடுபட வேண்டும்.
இயக்கத் தோழர்கள் இவை ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்.
[பிறந்த நாள் விழா மலர் 92—17.9.1970]
42. எனது சிந்தனை
எனது 99-வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு. வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் செய்தி கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக—ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.
நான் சமுதாய சமத்வத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன், சாதி அமைப்பு என்பது "கடவுள், மதம்" மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்துவருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக்கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.
நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப் படுத்தி, இழிவ படுத்திச் செய்கையாலும் காட்டிக்கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கையில் பட்டது என்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, "கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி" நான் சொல்லும் அளவுக்கு ஆளாக இருக்கின்றேன்.
இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றி விட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா?என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து—அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், "கடவுளாவது வெங்காயமாவது!" என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனால், இந்த மடமைக்கு ஆதாரம் இன்றைய தினத்திலேயே நம்மில் 100-கு 90-க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்வான், மহামहোपाधि, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம்கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே இந்த காட்டு மிராண்டிக்கு காலதீதியான கற்பனையை நம்புவதும், நடிப்பதும், அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி, பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக, காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கமாட்டார்கள்.
அவ்வளவு ஏன், கிரகங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்றுகூட சாதாரணமாகச் சொல்லவேண்டுமானால், இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால், நெருப்புக்கு குச்சி ஏது? இரயில், கார், கப்பல், ஆகாயக் கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்வானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படி இருக்கமுடியும்.
பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்துகொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பனவாகிய வைகளை நம்புவதும்; அழிக்காமல் ஒழிக்காமல் இருப்பதும், பின் பற்றுவதுமே முட்டாள்தனமான காட்டு மிராண்டித்தனமான துணிவுகொண்ட தன்மை யாகும் என்று சொல்லலாம்.
நிற்க, மேலேகண்ட எனது துணிவான கருத்துக்களால், பிரச்சாரதீதால் இவ்வைம்பது ஆண்டுகளுக்கப்பால் நம் நாட்டாருக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன, கேடு என்ன என்று பார்த்தால், ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால், ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு, மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாது.
அது மாதிரிமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவை களால் நாட்டுக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே, நான் 93 ஆண்டுகள் வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை. என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.
இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண்; காது சரியாக இல்லை. கால்கள் நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம்.
இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.
காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழிக்கக்கட்டாததால், சமுதாய விஷயத்தில், சாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில், எப்படி நடந்துகொண்டார்கள், என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரியவரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளைச் சிந்திக்கப்பட்டால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.
[பிறந்த நாள் விழா மலர் 98—17.9.1972]
14. சுதந்திரமும் சமுதாயமும்
நம் தேசம் நாடு சுதந்திரம் பெற்று இன்றைக்கு இருபத்தைந்து (25) ஆண்டுகள் ஆகின்றன என்றாலும், இந்தக் கால்நூற்றாண்டில் அரசியலில்தான் மாறுதல் பெற்று வருகிறோமேயொழிய, சமுதாய அமைப்பில், கல்வியில், கீழ் நிலையில், மிக மிகக் கீழ் நிலையில் இருந்துவருகிறோம்.
அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது கெட்டதிலிருந்து மேலும் கெட்டதுக்கு (From bad to worse) சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்ல வேண்டுமானால், "அவன் போனால் கலகமாகிவிடும், நான் போய்ச் செருப்பாலடித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று ஒரு சமாதானம் செய்யவருகிற வன் சொன்னானாம். அதுபோல் இருக்கிறது நமது அரசியல் வளர்ச்சி.
நம் நாட்டு அரசியலில் வளர்ந்துவரும் மானங்கெட்ட, அயோக்கிய கால்கள், கூலித்தன்மைகளும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மைகளும் வேறு எங்கும், எந்த நாட்டிலும் இல்லை என்கிற தன்மையில்தான் இருந்தும், வளர்ந்தும் வருகிறது. நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்று சொல்லுவதற்கு ஒரு ஆண் கூட நமது தேசத்தில், நாட்டில் இல்லாமல் செய்துவிட்டது. அது மாத்திரமா?
நம் நாட்டில் கால்கள், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள், தன்மைகள் இல்லாத மக்களையோ, அரசியல் கட்சிகளையோ, தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ காண முடியவே முடியாதபடி செய்துவிட்டது. பெரிய பித்தலாட்டம், துரோகம், வஞ்சனை இவைகளில் தேர்ச்சிபெற்றவர்கள்தான் தலைவர்களாகிறார்கள்; தேசியவாதிகளாகிறார்கள்; தேசபக்தர்களாகிறார்கள்.
இவை வரவர நம் நாட்டுப் பெண்களையும் தமுவிக்கொள்ளும் நிலை வளர்கிறது. அவ்வளவு மாத்திரமா? மாணவர்களையும் இழுத்துக்கொள்ளும் என்பதோடு அதிகாரிகளையும், அரசியல் சிப்பந்திகளையும் சூழ்த்துக்கொள்ளும் என்று உறுதிகொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்துவருகிறது.
பொதுவாகச் சொல்லவேண்டுமானால், மக்களுக்கு இருக்கவேண்டிய மானம், அவமானமற்ற தன்மை, கண்ணியம், நேர்மை முதலிய சாதாரண குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இந்தச் சுதந்திரம் உள்ளவரை நேர்மையுள்ள யோக்கியன் இருக்கமாட்டான் என்பதோடு, தோன்றவேமாட்டான் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்தச் சுதந்திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள், நாணயமற்றவர்கள், மக்களை ஏமாற்றி, வஞ்சித்து பழக்கப்பட்டு தேறினவர்கள், பொறுப்பற்ற கால்கள் முதலியவர்களது முயற்சியினால், தந்திரதினால் என்றால் இதில் யோக்கியம், நேர்மை, உண்மை எப்படி இருக்கமுடியும்.
ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு கல்லூரிக்கும் அயோக்கியத்தனங்களைப் பரப்பும் ஸ்தாபனமான ஒரு கோயிலுக்கும், ஒரு மடத்திற்கும், ஒரு சபையாருக்கும், ஒரு சாமியாருக்கும், சங்கராச்சாரியாருக்கும் ஒரு கோடி ரூபாய் வருமானம் இருந்தாலும், சொத்து இருந்தாலும், வரவு-செலவு இருந்தாலும் அனுமதிக்க வேண்டியது, கணக்கு; வரி கேட்கக்கூடாது.
ஆனால், உழைத்துப் பாடுபட்டு, திருடாமல், ஏமாங்காமல் தேடிய சொத்துக்களுக்கு அளவு, அதாவது ஒருவனுக்கு இவ்வளவுதான் உரிமை என்பது ஆட்சிக் கொள்கைத் திட்டம் என்றால், இந்த ஆட்சியின் தன்மை எப்படிப்பட்டது? மூன்னவன் செல்வம் எப்படி நாசமாகிறது? யாருக்குப் பயன்படுகிறது? பின்னவன் செல்வம் யாருக்குப் பயன்படுகிறது?
கার்த்திகை என்கிறான். குடம் குடமாய், பீப்பாய் பீப்பாயாக நெய், வெண்ணெய், எண்ணெய் பாழாகிறது. இலட்சதீபம் என்கிறான், டின் ஒன்னாக எண்ணெய் பாழாகிறது. அபிஷேகம் என்கிறான், நெய், எண்ணெய், பால், தயிர் படிபடியாக ஜலதாரைக்குப் போகிறது. மற்றும் கவை போன்ற வைகளுக்கெல்லாம் கேள்வி கேட்பாரே கிடையாது.
இந்தப் பார்ப்பனர் வாழும் நாட்டைவிட வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட பழக்கமோ, வழக்கமோ, சர்க்கார் அனுமதியோ கிடையாதே. இங்கு சுதந்திரத்தில் கேள்வி கேட்பாரும் கிடையாது. ஆனால், மனித சமுதாயத்தில் உலகத்திற்கே மாறுதலாக நம் நாடு, தேசம் தவிர வ
வேறு எந்த நாட்டிலும் தேசத்திலுமில்லாத மாதிரி மனிதனில் முதல்வன் (பார்ப்பான்), நாலாதவன் (சூத்திரன்), ஐந்தாமவன் (பஞ்சமன்) என்கிற பிரிவு கடவுளின் மதத்தில் உள்ள ஆதாரங்களின் பெயரால், அதாவது சமுதாயத்தில் 100-க்கு 97 பேர் 4ஆம் 5ஆம் சாதி, 100-கு மூன்றே பேர் ஒன்னாம் சாதி என்று பிரிக்கப்பட்டு, அதைக் காப்பாற்றுவதே சுதந்திரத்தின் சட்டம் என்றும் ஏற்பாடு செய்து, சுதந்திர ஆட்சியும் சட்டமும் அமுல் செய்து ஆதரித்து வருகிறது. இதற்குப் பெயர் சுதந்திர ஆட்சியா, கொடுங்கோன்மை ஆட்சியா என்று கேட்கிறேன்.
அது மாதிரிமா? கீழ்மக்கள் என்று சொல்லப்படுகிற சமுதாயத்தில் 100-க்கு 97 பேர் இருக்கும் நாட்டில், மேன் மக்கள் என்று சொல்லப்படுகிற 100-க்கு 3 பேரையே கொண்ட முதலாவது சமுதாயமாகிய ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஆட்சியில் சமுதாய அமைப்பைக் காப்பாற்றுகிற சட்டத்தை வைத்து ஆளுகிற ஆட்சியில் குடிகளாயிருப்பது என்பது சுதந்திர ஆட்சியா? கொடுங்கோன்மை ஆட்சியில் மானங்கெட்டு, ஈனத்தனமாகக் குடிகளாக இருக்கிறோம், இருக்கவேண்டும் என்பதும் ஈன அடிமைத்தன்மை ஆட்சியா, இல்லையா என்று கேட்கிறேன்.
சுதந்திரம் கிடைத்தவுடனே பார்ப்பான் சட்டம் செய்தான். அந்தச் சட்டப்படியே தேர்தல் வைத்தான். யார் வெற்றி பெற்றாலும் அந்தச் சட்டப்படியே ஆளவேண்டும் என்று அமுல்படுத்தி விட்டான், பரம்பரையாய்ப் பார்ப்பானே ஆட்சித் தலைவராய் வரும்படி ஆட்சி அமைப்பைச் செய்துகொண்டான்.
தேசத்தில் உள்ள மற்ற மக்கள் ஒன்றுசேர முடியாத நிபந்தனைகளைக் கட்டாயச் சட்டமாக ஆக்கிக்கொண்டான். 50 கோடி மக்கள் உள்ள தேசம் ஒன்றுசேராதபடி 16 பிரிவுகளாகப் பிரிதை, இது உலகம் உள்ளவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்கவேண்டும் என்று நிர்ப்பந்தமும், பிரிந்துகொள்ள விரும்புகிறவனுக்குப் பிரதिनिধित्व உरिमை இल்ले என்றும் கிरिमिनल் तண्डனै என्றும் ஆக்கிக்கொண்டு, மேல் சாதியானுடைய சர்வாधिकार ஆட்சியை ஏற்படுத்திக்கொண்டு, பரம்பரை உरिმैபோல் नटप्पட्टुवरुम् आட्सिऱle. इरुkkिരōm्. इतैयै अडिमै आट्सि एন्nrō, अन्नियर आट्सि एन्nrō सॉllakkूडाय निलैyil इरुkkिरōm्.
मृत्तुम्, इतिल् குरिप्पिडत्तक्क विषयम् एन्नवेन्n्रāl्, सುतन्तिरम् किडैत्तु 25 आण्डु आन पिन्पुम् नम् नाट्टिल् एझुतप् पडिक्तु तेरिन्त मक्काल्, वेरुम् काय्येझुत्तु मaTरुम् पōडत्तक्क मक्कलैyुम् सेर्त्तु एण्णिप् पार्तāl्, 100-क्कु 39 मक्कनै इरुkkिरārgaḷ्. अतāव्, इन्नुम् 100-क्कु 61 मक्कалुkkु एझुत्तु वāсनैyै इल्lै, अतāव्, इन्n नगरवāсikāḷ्नै āttāin्, पेरumen्nōṃ пеण्ණ् самuдāytil् 100-क्कु 27 पेण्ṇāḷ् tāin् पडिkkатिӯ тेриñ्डварkaḷ्. अप्पडियānāl्, इनियuм् नमत्नāट्टиḷ् पेण्ṇāḷ् 100-क्कु 73 पेर् पडिккат् तेरिय वেण्डियवrgāḷ्. इवrgāḷुм् किrāмángāḷиḷ् 100-क्कु 90-क्कु मेरpāṭ्ṭ पेण्ṇāḷ् एझुतap् पडिккат् तेरiyāडавrgāḷ् एन्nāe सॉlalām्.
इन्त इlṭsणतil्, इन्न nāṭ्ṭu makkāḷāgiy nām्, намккु वेणडiy ōr् निティpādigāy निyаmittukॊḷḷ् uriмै ilḷai्. pārppаᴅनāgavuм्, pārppанukkā वेणडiyavnāgavuм् мūḍ nамpиkkаyиḷ् идupṭṭup् pārppānukkā aḍimайāy िरuppvanāgavuм् дāin् нiyаmиккappadumudiyuм्
udāraṇām् वेणdum्ānaḷ्, इन्नाṭ्ṭu नीтipаDigāḷиḷ् pārppаᴅрukkु nаmpiккаі ilḷāмalै pōy्viṭ्ṭаdu. توṭ्ṭатiṭ्ṭаḷukkelḷām् суprīм् gōṛ्ṭ्ṭukkе pōy् prādu koḍukkiṛāḷ्. वेरu māḥāṇатīṭ्ṭukkु māṛ्ṛutiḷ् kеṛkiṛāḷ्, yār् एn्n्rāl् sāди, мtaм् मuтḷiy मūḍ nамpиккаіс् सalukkaīyāl् vāḷbvarg्aḷ्.
enyonam्, нám् nāṭ्टиṇ् suтантirаttиṇ् yogyатai इन्n nilaiỹіḷ் इрukkiṛатu. एn्pаṭu नamkkु उnмaiyān suтантiraм् वेṇdumānāl्, pārppаnаᴅ् karuttuvатu पōḷave, таміḻ नāḍु тaniтī एḳapōḳ āṭsiŷāy् िрuккavеṇḍuм्. अppадikkु ilḷai्. yānāl्, aтuмuḍiyātu एn्pატdālā अn्ніy तēsattāin् āṭsiḍāin् वеṇḍuм् एn्n్ ninaikkak् kṭṭāyppṭuttappadugirōm्. कi.тu āin् наmatu इnṛай sутантирам्.
[पिṛnтa nāl् விழā maḷаᴅ् 94—17.9-1972)
163
18. नमatu इḷṭsiyаm्
एnátु 95āм् आṇ्डu पिṛnтa नāl् tuṛākkātukkु वझmaiпōl् āṇḍu мalaᴅiḷ् ōr् kṭṭuraі एzhutavеṇḍiy इрukkiṛatu. атai мunniṭṭu इk् kṭṭuraі ezḥuguṛеn्. अppаḍi एzhuṭppḍuм् इk् kṭṭuraі एn्nāl् ennāl् āṇḍu мalaᴅargāḷukkु एzhutppḍuм् kṭṭuraі kaḷиḷ् इтuvē kаḍaiсiynа kṭṭurаyyāg इрunt्āluм् irukkalāम्. ēn् иppṭi ezḥugirеn् एn्n्rāl्, аḍuttā āṇḍu мalaᴅ् ezḥuttappḍavеṇḍiy kālattиḷ् nān् iruppеnō? ilḷayе एn्kir prасsinai мāттiram् illāмal्, ezḥuttum्paḍiyān vāyppु किरukuмō irukkaмō एn्pатuve мukkiy kāryamāguм्.
ēnеñ्сil्, इn्num् nām् иruppатupōḷavē атāvum्,
இந்தச் சூழ்ச்சிகளை யாராவது வெளிப்படுத்தக் கிளம்பி விட்டாலோ, உடனே அப்படிப்பட்ட காரியத்தை—நாத்திகம் என்றும், மதத் துரோகம் என்றும், தேசத் துரோகம் என்றும், தேசியத்திற்கு விரோதமென்றும் சிலர் சொல்லி அடக்கிவிடப் பார்க்கிறார்கள். இப்படிச் சொல்லி அடக்குகின்றவர்கள் யார் என்று பார்த்தாலோ, அவர்கள் பெரிதும் மேல் நிலையிலிருந்து கொண்டும், சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல் சோம்பேறி வாழ்க்கையில் இருந்து கொண்டும் அன்னியன் உழைப்பில் சுகமனுபவிக்கும் ஒரு சிறு கூட்டத்தாரும், மற்றும் அவர்களால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்கொள்ளவதற்காக என்று ஏற்படுத்தி தப்பட்டிருக்கும் அவர்களது கூலி பிரச்சாரகர்களுமேயாவார்கள். அதோடு, ஈன சாதியாராயும், ஏழைகளாயும், தொழிலாளர்களாயும், கூலிகளாயும் கருதப்பட்டும், கீழ் நிலையிலிருந்து வெகுகாலமாய் தலைமுறை தலைமுறையாக இழிவு படுத்தப்பட்டும் அரைப் பட்டினி கிடந்து உழலும் மக்களிலும் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மேற்கண்டபடி கூப்பாடு போடுவதையும் பார்க்கலாம். இதற்குச் சமாதானம் சொல்லுவதென்பது சிலருக்குச் சற்று கஷ்டமான தாகக் காணப்பட்டாலும், கூர்ந்து கவனித்தால் மேற்கண்ட உயர்நிலையை நிரந்தரமாய்க் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கின்ற கருத்தின்மீது செய்துகொண்டிருக்கும் ஏற்பாடுகளான கடவுள், மதம், தேசியம், தேசம் ஆகியவற்றின் ஸ்தாபனங்களும், அவற்றுக்குள்ள கவசமும், காப்பும் அவை சம்பந்தமான பிரச்சாரங்களுமேதான் காரணம் என்பது தெளிவாய் விளங்காமல் போகாது.
ஆகையால், மேற்கண்ட கஷ்டப்படும் மக்களுக்கு விடுதலையும் சமத்துவமும் வேண்டுமானால் முதலில் அக் கவசங்களையும், காப்புகளையும் உடைத்தெறியவேண்டும். அவற்றின் பிரச்சாரங்களையும் முறியடித்துத் தூரவেண்டும். அதில்லாமல் வேறு எவ்வளவு பாடுபட்டபோதிலும், கஷ்டப்படும் மக்கள் ஒரு நாளும் விடுதலை அடைய முடியாது. இக் காரியம் செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. செய்பவர்களுக்கு மகத்தான உறுதியும், தன்னல மறுப்பும் வேண்டும். அனேक துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும், பழிப்புகளுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாக தயாராயிருக்கவேண்டும். "ஊரார் நம்மைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள்—சொல்லுவார்கள்
# சிந்தனைகள்
என்பதைப்பற்றிச் சிறிதும் சிந்திக்கக்கூடாது. போலி மானாபிமானங்களையும், கவுரவங்களையும், வசவுகளையும் துச்சமாய்க் கருதவேண்டும். பாமர மக்களால், சுயநல சூழ்ச்சிக்காரர்களால் வசவு கேட்கவும், உயிர் விடவும் கூட தயாராயும் இருக்கவேண்டும். இந்த நிலையில் உன்னவர்களால் அல்லாமல் வேறு யாராலும் இக் காரியங்கள் ஒரு சிறிதும் செய்ய முடியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
தோழர்களே! கடவுள், மதம், சாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக—தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல। சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்களன் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இவ்வாறு புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார சுயநிலையும், அன்னியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற சுயநிலையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.
ஆதியில், மனிதர்கள் காடுகளில் தனிமையாய், சுயேச்சையாய்த் திரிந்து—இயற்கை வாழ்விலிருந்து சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது, அவனவன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்துகொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வாங்கிக்கொண்டும் ஒரே சமூகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே நடந்தானே ஒழிய—மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக்கொண்டு ஏய்ய, அவனை உலக சுகபோகங்களில் பட்டினி போட்டு, தான் மாதிரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்துகொண்டு எல்லர் சகபோகங்களையும் தானே அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கோ, அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டுவிட்டு, தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமாகும்.
ஆனால், நான் எற எற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க—இவற்றிலிருந்து செல்வனும், அரசனும், குருவும் ஏற்பட்டுப் பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகர்ஷிகள் ஆகியவைகளைக் கற்பித்து—பிறகு அவைகள் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம், தீர்ப்பு, மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்கப்படவேண்டியதாய்விட்டது.
இந்தக் கற்பனைகளின் பயன்தான் பெரும்பான்மையான மக்கள் பரமறியாக்களாகவும், ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும்—மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினி கிடந்து உழல்வதைப் பொறுமையுடன் பொறுத்துக்கொள்ளவுமான காரியங்கள் நடந்துவருவதுடன் அவை எங்கும், என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிய வேண்டும். அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், சாதியம் என்பவைகளும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்சம், நரகம், பாவ புண்ணியம் ஆகியவைகளாகிய போலி உணர்ச்சிகளும், அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெறியப்பட வேண்டும்.
கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய், நாணயமாய் நடந்தும் இழிவாய், கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன்ஜென்ம கர்ம பலன்—தலைவிதி—கடவுள் செயல் என்பதாகக் கருதிக்கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு, தங்கள் நிலைமையைப்பற்றிச் சிறிதும் அதிருப்திகூட அடையக் கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றித் தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்துகொள்ளுகிறார்கள்। வெளியில் சொல்லிக்கொள்ளக்கூட வெட்கப்படுகிறார்கள். ஏனெனில், கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் மதமும் கிதைத்தான் போதிக்கின்றது. எப்படியென்றால்:
"ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே! கஷ்டப்பட்டும் பட்டினி கிடக்கின்ற, இளைத்த ஏழை மனிதனே! நீ உனது முன் ஜென்ம பாப கர்ம பலத்தினால்—தலைவிதி—கடவுள் சித்தத்தால், இம் மாதிரித் துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜென்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையைப் பொறுமையுடன் ஏற்றுச் சமாதானமும் சாந்தமும் அடைந்திருப்பாயாகில், அடுத்த ஜென்மத்தில் சுகப்படுவாய়; மேலான பிறவி பெறுவாய்; அல்லது மேல் உலகில் மோட்சம் என்னும் மேன்மையை அடைவாய்—கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.
இந்தப் பொறுமை உபதேசமும், சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும்—மக்களைக் கோழைகளாகவும், முற்போகற்றவர்களாகவும் செய்து, அவர்கள் கஷ்டத்திலிருந்தும் இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும், சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து, உயிர் வாழும்படி செய்து வந்திருக்கின்றன.
இவ்வளவு மாதிரியானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும்—செல்வந்தர்களுக்கும், மிராசுதார்களுக்கும், மற்றும் உத்தியோகம், வியாபாரம், லேவாதேவி என்ற பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளைகொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டுப் பெரும் பணம் சேர்க்கும் பணக்கார்களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ—அது:
"ப் பிரபுக்களே! செல்வவான்களே! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்கார்களே! இலக்ஷ்மி புத்திரர்களே! நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால்—கடவுள் உங்கள்மீது வைத்த கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக்கிறீர்கள்! இவ்வேராளமான பணவருவாய்கள், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச் சுகபோகம் உங்களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால், நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும், கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலமும் கடவுள் பக்தர்களான பாதிரி, குரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதைசெய்து சத்திரம், மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி, இந் நிலையை நிலை நிறுத்திக்கொள்வதுடன்—மோட்சம் லோகத்திலும் சுலபமாக இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்!" என்பதேயாகும்.
ஆகவே, தோழர்களே! இந்தக் காரணங்களாலேயே மக்களில் உயர்வு-தாழ்வும், எஜமான்-அடிமையும், முதலாளி-தொழிலாளியும், அரசன்-குடிகளும், குரு-சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
உலகிற்கு அரசன் அரசாட்சி என்பதாக ஒருவகை இருந்துவருவதின் காரணமெல்லாம் கூட, செல்வவான்களின் செல்வங்களைக் காப்பாற்றவும், சோம்பேறி வாழ்க்கைகளையும், அவர்களது தத்துவங்களையும் பிறர் இகழாமல் இருக்கவுமே ஒழிய—மற்றபடி மக்கள் சமூகம் துன்பப்படாமலோ, மற்றவர்களால் கொடுமைப்படுத்தப்படாமலோ, சகல துறைகளிலும் உயர்வு தாழ்வு கொடுமை இல்லாமலோ, இருப்பதற்காக அல்லவே அல்ல என்பதை நீங்கள் உறுதியாய் நம்புங்கள்.
இதுபோலவேதான், முன் குறிப்பிட்ட கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும்—ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம்பேறிகளின் தத்துவங்களும் என்பதை உணராமல் இருப்பதற்காகவே ஒழிய வேறில்லை.
உதாரணம் வேண்டுமானால், இன்றைய தினம் கஷ்டப்படுபவராகவும், இழிவு படுத்தப்பட்டவராகவும், பட்டினி கிடந்து துன்பப்படுபவர்களாகவும், ஏழைகளாகவும், காணப்படும் மக்களில் அனேகரை அணுகி, அவர்களது இவ்விதக் கஷ்ட நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். உடனே, அவர்கள் சற்றும் தயக்கமின்றி, தங்களின் கஷ்ட நிலைக்குக் காரணம் தங்கள் "தலைவிதி" என்றும், "முன்ஜன்ம கர்ம பலன்" என்றும், "கடவுள் சித்தம்" என்றும், "ஆண்டவன் கட்டளை" என்றுந்தான் பதில் சொல்லுவார்களே ஒழிய, பிற மனிதர்களால்—அரசாங்கச் சட்டத்தால்—செல்வவான்களின் சூழ்ச்சியால், சோம்பேறிகளின் தந்திரத்தால், தாங்கள் ஏமாற்றப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, அவதிப் படுவதாக ஒரு நாளும் சொல்லமாட்டார்கள். அதனால்தான், ஏழைகளின் கஷ்டங்களை விலக்க வேண்டுமென்பவர்கள் முதலில் அதற்கு அஸ்திவாரமான காரணகாரியங்களைக் கண்டுபிடித்து அழித்தெறிய வேண்டும் என்று சொல்லவேண்டி இருக்கின்றது.
கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும், அது, மனித சமூகத்தில் 100க்கு 99 மக்களைப் பிடித்துத் தன்வயப்படுத்தி, மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகியிருத்தபோதிலுங்கூட, "கடவுள் என்பது இன்னது?" என்று குறிப்பாக, குளறுபடி இல்லாமல்—தெளிவுபட உணர்ந்தவர்களோ, உணர்ந்தவர்களோ, இதுவரையில் காணக் கிடைக்கவில்லை. பொதுவாக அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி, அவர்களைப் பயப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவசியத்தினால் அதற்கு என்று வேறொரு (மानस) உலகத்தையும், பாவ புண்ணியத்தின் பயனையும், மோட்சம் நரகத்தையும், கற்பித்து அதைப் பரப்ப பலவித ஸ்தாபனங்களையும் உண்டாக்கி—அதன் பிரச்சாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து, அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்திவிட்டதால் வெகு சுலபமாகவும் செல்வாக்கு அளாகவும், அதன் பிரச்சாரம் நடக்கவும் மக்களைத் தன்வயப்படுத்தவும் ஆன காரியங்கள் நடந்துகொண்டே வருகின்றன. "கடவுள் என்றால் என்ன?" என்பதை உணருவதற்கு இல்லாமல்—உணர வேண்டும் என்று நினைப்பதற்கு இல்லாமலும் இருந்துவருகிறது.
யாராவது, கடவுளைப்பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும் செய்கைகளையும் கொண்டிருப்பதும், ஆளுக்கொருவித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறுவிதமாய், குறிப்பான பதில் கிடைப்பது என்பது அரிதாகவே இருக்கிறது.
கடவுள் என்பது सर्व வல்லமையும், सर्व வியாபகமும், सर्व சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனிப்பொருளென்று சொல்லப்பட்டுவிட்டு—உடனேயே, "அது கண்ணுக்குத் தெரியாதது!" என்றும், "மனத்திற்குத் தோன்றாதது!" என்றும் சொல்லப்படுவதோடல்லாமல்—அதற்கு உருவம் இல்லையென்றும், குணம் இல்லையென்றும் சொல்லப்படுவதை நோக்கினால், கடவுள் நம்பிக்கையாளர்கள் சொல்லுவதெல்லாம் பகுத்தறிவுக்குப் புறம்பாகவே காணப்படுகிறது.
எல்லா மதங்களும் கடவுளின் அருளால், கடவுள் அம்சம் பெற்றவர்களால், அவரால் அனுப்பப்பட்டவர்களால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு மததிற்கும், மற்றொரு மதத்திற்கும் நடப்பு, வேஷங்கள், சடங்குகள் ஆகியவைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் சிறிதாவது காணப்படுகின்றன என்பதைப் பார்த்தால், மதங்களைத் தோற்றுவித்த கடவுள் ஒன்றா? பத்து மதங்கள் இருந்தால்—அவற்றுள் ஒன்று உண்மையாக—பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகதான் இருக்கவேண்டும்! அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாக இருக்கவேண்டுமே ஒழிய—ஒரே கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்காது.
எப்படியிருந்தாலும், சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள ஒரு கடவுள் அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்கும், விவகாரத்திற்கும் நிற்காத காரியமேயாகும். அன்றியும், ஒரே மதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்று சொல்வதற்கோ, அல்லது மத சக்தியானது மக்கள் யாவரும் ஒரே மாதிரி நடப்படப் பயன்படுகின்றது என்று சொல்லுவதற்கோ இடமில்லை. மாறாக, எல்லா மதங்களும் இருந்து வருகின்றன. ஏனெனில், ஊருக்கு ஒருவிதம், வருப்புக்கு ஒருவிதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே—ஒரே ஊரில் ஒரே மதக்கொள்கைக்குப் பலவித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நடப்புகளும், எண்ணங்களும் வேறுபட்டிருக்கின்றன.
ஒருசமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூடமக்கன் என்றும், மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாயிச் சொல்லிவிடலாம். ஆனாலும் அந்த மதத்தை நம்பி, அதைத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வந்த மக்களின் கதி அதுதானா என்பதும், அம் மததிற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா என்பதுமாவது யோசிக்கவேண்டிய முக்கிய விஷயமல்லவா என்று கேட்கிறேன்.
எது எப்படியிருந்த போதிலும், முன் குறிப்பிட்ட—அதாவது, சர்வசக்தி-சர்வ வியாபகம்-சர்வ தயாயத்துவம் கொண்ட கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாகவும் சர்வ சமரசம் கொண்ட மதத்தைப் பின்பற்றியவர்களாகவும் உள்ள மக்களுக்குள் ஒருவன் ரிக்ஷா வண்டி இழுக்க கஷ்டப்படவும், ஒருவன் அதன்மேல் சுகமாய் உட்கார்ந்து சவாரி செய்யவும்; ஒருவன் கிரீடையை அணிந்து பல்லக்கில் சவாரி செய்யவும், பதினாறு பேர்கள் முகப்பு முக்கி அதனைச் சுமந்து செல்லவும் அக் கடவுளும் மதமும் எப்படி அனுமதித்தன என்ற கேள்விக்கு— அது நமக்குத் தெரியாது; சர்வசக்தி உள்ள கடவுளின் செயல் என்பதைத் தவிர, இதுவரை எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரரும், மத நம்பிக்கைக்காரரும் வேறு பதில் சொன்னதாகத் தெரியவில்லை.
ஒரு சமயம் இச் செயலுக்கு முறையே, ஒருவனின்—அதாவது, ரிக்ஷா வண்டியிழுப்பவனின் முட்டாள்தனமும், சவாரி செய்பவனின் அயோக்கியத்தனமும் காரணமாகும் என்று பதில் சொல்லக் கூடுமானாலும், சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் சர்வ தயரபரத்துவமும் உள்ள கடவுளுக்கும்—சர்வ மனித சமூக சமத்துவ மாகிய மததிற்கும் தம்மை ஏற்றித் துதிப் பின்பற்றும் மக்களின் இம் மடமையையும், அயோக்கியத்தத்தையும் நிறுத்த முடியவில்லை என்பதாவது விளங்குகின்றதா, இல்லையா என்பதைப் பொறுமையோட-பகுத்தறிவுடன் நடுநிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
தோழர்களே! இங்குச் சற்றுக் கவனியுங்கள். மேற்சொன்ன கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும்—மேற்சொன்ன மடமையையும், அக்கிரமத்தையும் ஒழிப்பதற்குச் சிறிதும் பயன்படாமலிருப்பதோடு, அம் மடமையையும், கொடுமையையும் நிலைநிறுத்துவதற்கும், அனுமதித் நடத்துவதற்கும் பயன்பட்டு வருகின்றனவா, இல்லையா என்பதைப் பரிசுத்த நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவ வாழ்விற்கும், இவ்வளவு இடையூறுகளுக்கும், தாரதம்மியங்களுக்கும் இடந்தராதிருக்குமானால்—நான் அவைகளைப்பற்றி இவ்வளவு கவலை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மதப் பிரச்சாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் பரிதாபத்திற்காகவாவது நான் சும்மா விட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில், ஒரு மனிதன் அனாவசியமாய்—அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக, பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக்கொண்டிருக்க முடியாது. ஆனால், அதனால் பாமர மக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதியைப் பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுள்ளவன் அதை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது.
கடைசியாக, "உலக உற்பத்திக்கும், இயற்கைத் தோற்றங்களுக்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்கவேண்டாமா?" என்று கேட்பதின் மூலம்—எப்படியாவது; "ஒரு சக்தி உண்டு?" என்பதை ஒப்புக்கொள்ளச் செய்து, அதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே சர்வ சக்தி-சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக்காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக வைத்துப் பெரிய ஆகாயக் கோட்டைகள் கட்டுவதையும் பார்க்கிறன். உலக உற்பத்திக்கும், அதில் காணப்படும் தோற்றங்களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் 'சைன்ஸ்' தொடர்ந்துகொண்டே போனாலும், சமாधानம் கிடைக்கலாமானாலும் பிறகு, 'சைன்ஸ்' என்பதுக்கு யார் கர்த்தா? என்கிற கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டுபிடிக்கவில்லை என்று பதில் சொன்னால், 'அதுதான் கடவுள்?' என்று சொல்லித் திருப்தி அடைவார்கள்.
அப்படியானால், 'அந்தக் கடவுளுக்கு யார் கர்த்தா? அவர் எப்படி உண்டானார்? அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?' என்பதான கேள்விகளை, முன்னைய விஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்விகளைப்போலவே போட்டோமானால், அப்படிப்பட்ட கேள்வி கேட்கக் கூடாது என்றும், கடவுளும் சக்தியும் தானாக உண்டானவை என்றும், அதற்குக் காலவரை இல்லை என்றும் சொல்லுவார்கள். அச் சमाधानத்தால் நாம் திருப்தியடையாவிட்டாலோ அல்லது, 'இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டால் அல்லது, 'கடவுள் தானாக உண்டாகும்போது இயற்கை தானாக உண்டாகாதா?' என்று கேட்டால்—உடனே; நம்மை, 'நாதிகன்?' என்று சொல்லிவிடுவார்கள்.
இந்த மாதிரி நிலையில்தான், ஏதோ யூகத்தின்மீது, அதுவும் 'ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா?' என்கிற யூகத்தின்மீது 'இதுவாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம்?' என்கிற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.
ஆனால், அப்படிப்பட்டதன்மீது, மனித வாழ்க்கையின் பொறுப்புக்களைச் சுமத்துவதும், அதை வணங்குவது, தொழுவது, பிரார்த்தனை செய்வது என்பதும்; அதை வணங்கினால், பிரார்த்திக்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம் என்பதும்; பிரতिफल உண்டென்பதும், பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுயநலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியத்திற்காகவும் பிறருக்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத்திற்கும் கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்றுவதைப் பார்த்தால்—பிறகு எப்படிப்பட்ட கடவுளின் உணர்ச்சியானாலும் அது எங்கிரு
எங்கிருந்தபோதிலும் அதை அழித்தே தீரவேண்டியிருக்கிறது.
அன்றியும், திருடப் போகிற ஒரு திருடன், தான் திருடப் புறப்படுமுன் தனக்கு, நல்ல திருட்டு கிடைக்கவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திப்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன், அதில் ஒரு பாகத்தைக் கடவுளுக்கும், அதன் திருப்பணிகளுக்கும் செலவுசெய்து, கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இதுபோலவே; ஒரு கொலைகாரனும் தான் விடுதலை அடையக் கடவுளைத் துதி, விடுதலையடைந்தவுடன் கடவுளுக்குப் பூசை, அபிஷேகம் முதலியவை செய்து நன்றி செலுத்துகிறான். இது போலவே, சொத்துக்களை வைத்திருக்கும் உடைமைக்காரனும் தனது சொத்துக்களைத் திருடர்கள் கொள்ளை கொள்ளக்கூடாது என்று கடவுளைப் பிரார்த்திப் நன்றி செலுத்துகிறான்.
இதுபோலவே, கடவுள் நம்பிக்கை உள்ள சகல சோம்பேறிகளும், செல்வவான்களும் கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள்.
ஆகவே, கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்கக் குறைவுக்கும், அநீதிக்கும் இடம் தருகின்றன என்று பாருங்கள்! அவை, இதைத் தவிர வேறு எதற்காவது பயன்படுகின்றனவா என்றும் பாருங்கள்!
'மதம் என்றால் என்ன?' என்கிற விவகார காலத்தில் மதவாதிகள், மனித சமூக வாழ்க்கை ஒழுங்காகவும், ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும் நடைபெறுவதற்காக—அனுபவ ஸ்தர்களால் வகுக்கப்பட்ட திட்டங்களே மதம் என்றும், மதக் கொள்கைகள் என்றும், அவை, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றவாறு திருத்திக்கொள்ளக்கூடியவை என்றும் சொல்லுவதுடன், அதற்கு உதாரணமாக அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் தோன்றிப் புதிய திட்டங்கள் ஏற்படுத்தி சீர்திருத்தி இருக்கிறார்கள் என்றும் ஒரு சிலரால் சொல்லப் பட்டு—கிதான் மதம் என்பதின் அர்த்தம் என்று சொல்லி—அதனிடம் நமக்குத் தகராறு இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படியானால், அக் கொள்கைகளின் குணதோஷங்களைப் பொறுத்தும், அதனால் ஏற்படும் பயன்களைக் குறித்தும் யோசிக்கவும் திருத்தவும் ஒவ்வொருவருகும் உரிமை உண்டு என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
அப்படிக்கில்லாமல், மதம் என்பது மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியையுடைய மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும்; அதன் கொள்கைகள் எல்லாம் எங்கும் எக் காலத்திற்கும் ஒரே மாதिরியாய் இருக்கக்கூடியவை என்றும்; அவைகளில் எக் காலத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும்; அதனால் யாருக்கு-எவ்வளவு கெடுதி இருந்தபோதிலும், பயனில்லாத போதிலும் பின்பற்றித் தானாக வேண்டுமென்றும் சொல்லப்படுமானால்—அப்படிப்பட்ட மதத்தை நாம் சிறிதும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதுடன், அவ்வித மூட-அடக்குமுறை உணர்ச்சியைக் கொண்ட மதத்தை என்ன விலை கொடுத்தாவது அழித்தாக வேண்டும். ஏனெனில், அவை மனித சமூக முற்போக்கைத் தடைசெய்வதுடன், மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் சம உரிமைக்கும் இடையூறாய் இருக்கின்றன.
மற்றும், மததின் பேரால் அனேக அற்புதங்களும், இயற்கைக்கும், மனித சக்திக்கும் மீறிய காரியங்களும் பலர் செய்ததாகவும் கதைகள் கட்டி மக்கள் மூடர் களாகவும், மூட நம்பிக்கைக்காரர்களாகவும் ஆக்கப்பட்டு வருகின்றதுடன், ஏராளமான பொருளும் முயற்சியும் நேரமும் மனித சமூக நன்மைக்கும் சமத்துவத்திற்கும் உபயோகப்படாமல் பாழாகீகப்படுகின்றன. அன்றியும், அறிவும் ஆராய்ச்சியும் கட்டுப்படுத்தப்பட்டு அடிமையாகீகப்படுகின்றன. இவ்வளவு கேட்டை எப்படிச் சகித்துக்கொண்டிருக்க முடியும், ஏன் சகிக்கவேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்!
தேசியம், தேசியம் என்பதும் முற்கூறியவைகளைப் போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள்—அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்துவரும் மக்கள் தொழில் இன்றியும்; தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் அவசிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும், மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்றுசேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்துவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால்—அதிகாரப் பிரியர்களால்—சோம்பேறி வாழ்க்கைச் சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும், வெறியும் உண்டாகும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தேசம் என்றால் எது? உலகப் பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன। ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன। ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவை தவிர, ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதिരியான பிறவிகளும், பல சாதிகளும் பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பழக்க வழக்கங்களும் இருக்கின்றன.
இவை அவரவர்களுக்கு—'தெய்வக் கட்டளை?' என்றும், 'மதக் கட்டளை?' என்றும், 'தேசியக் கொள்கை?' என்றும், 'தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்றமுடியாதவை?' என்றும்—இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பதாகும். இவற்றின் பயனாய், மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாயப் பார்க்கின்றோம். அன்றியும், உலகத்திலுள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த சாதி-தாழ்
# சிந்தனைகள்
* அன்னிய ஆட்சி, சுயாட்சி? என்பதெல்லாம் அறவே ஏழை மக்களுக்குப் பயனற்றதும், சூழ்ச்சி நிறைந்ததுமேயாகும். சுயாட்சி உள்ள நாட்டிலும், சுயராஜ்யம் உள்ள ஊரிலும், இராஜாவே இல்லாத குடிঅரசு தேசத்திலும் பணக்காரனின் கொடுமையும், பாதிரியின் சூழ்ச்சியும், ஏழைகளின் கஷ்டமும், பாமர மக்களின் மடமையும் இருந்துதான் வருகின்றன.
கடவுள் பக்தியும், மத பக்தியும், தேசாபிமானமும் நிறைந்து ததும்பும் நாடுகளிலும் இக்கொடுமைகள் இருந்துதான் வருகின்றன. கடவுளுக்காகவும், மதத்துக்காகவும் கோடানுகோடி ரூபாய் செலவழித்துப் பலிகொடுத்து பக்தி செலுத்திவரும் நாட்டிலும் இக்கொடுமைகள் இருந்துதான் வருகின்றன.
ஆனால், கடவுள், மதம், தேசியம் ஆகியவைகள் அழிக்கப்பட்டு, அடியோடு இல்லாத இடங்களில் மாத்திரம் பணக்காரக் கொடுமையும், சோம்பேறி வாழ்க்கையும், பட்டினிக் கஷ்டமும், உயர்வு தாழ்வு நிலையும் காணப்படவில்லை.
அவ்வூராருக்குக் கடவுள்-மத-தேச அபிமானம் இல்லை. மனித சமூக சமத்துவ அபிமானம் மாத்திரமே பிரதானமாய்க் காணப்பட்டது. அங்கு பணக்காரன்-ஏழை, முதலாளி-தொழிலாளி, அதிகாரி-குடிஜனங்கள் என்கின்ற வித்தியாசமே காணப்படவில்லை.
அங்குள்ள சகல சொதுவிற்கும் அங்குள்ள சகல மக்களும் சம சுதந்திரம் உள்ளவர்களாய் இருந்துவருகிறார்கள். எல்லா மக்களுக்கும் சரியளவு வேலையும், போதுமான ஆகாரமும், சவுகரியமும் இருந்து சமமாய் அனுபவிக்கப்பட்டு வருகின்றன. நாளைக்கு என்செய்வது? என்ற கவலையே இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். கடவுளும், மதமும் இல்லாததால் அந்த நாடு பூமிக்குள் அமிழ்ந்துபோகவில்லை.
அந்த நாட்டு மக்கள் ஆண், பெண் அடங்கலுக்கும் ஏற்பட்ட தைரியமும், உயிருக்குதி அணிந்த வீரமும், சமத்துவ உணர்ச்சியும் கடவுளையும் மதத்தையும் நம்பிய தேசாபிமான முள்ள எந்த நாட்டாரிடமும் காணமுடியாததாயிருக்கிறது. நமது நாட்டிலோ சகல பொறுப்பையும் கடவுள்மீது போட்டுவிட்டுச் சோம்பேறி ஞானம் பேசுபவர்களே மலிந்து இருக்கிறார்கள். நமது தலைவர்கள் என்பவர்களோ—'இதைச் சாதிக்கிறேன், அதைச் செய்கிறேன்? என்று பேசி மக்களை ஏமாற்றப் பயணடைவதும், முடியாவிட்டால் கடவுள்மீது பழியைப் போட்டு நழுவிக்கொள்வதுமான வர்கள். கடவுள் மீது நம்பிக்கை உள்ள நமது மக்களின் வீரமோ—ஒரு சிறு உண்மைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டாலும்—'நான் எதற்கும் தயாரே தான். ஆனால், எனக்கு ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளுக்குென்ன கதி?' என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது! என்ற அளவோடு நிற்கக் கூடியதாகும்.
கடவுளை நம்பாதவர்களும், கடவுள்மீது எவ்விதப் பொறுப்பும் போடாதவர்களுமாய் இருக்கிற வர்களும், கடவுள் உணர்ச்சியை அடியோடு ஒழித்துக்கொண்டவர்களுமான மக்கள் உள்ள நாட்டில்—'நாளைக்கு என்ன கதி!' என்கின்ற பேச்சே கிடையாது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே தான் காணப்படுகிறார்கள்.
அந்த நிலைமைதான் நம் நாட்டுக்கும், மற்றும் உலகமெங்கும் வேண்டும். அதற்காகவே வாலிபர்கள் எல்லோரும் உழைக்க வேண்டும். அதுவே இப்போது நமது முன்னிலையில் இருக்கும் வேலையாகும்.
[ஐரோப்பா, ஆப்பிரிக்கா தேசங்களில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு இலங்கைக்கு 17-10-1932-ல் திரும்பிவந்த தோழர் ஈ.வெ. இராமசாமிக்கு இலங்கையில் பல இடங்களில்—அதாவது கொழும்பு, கண்டி, நாவல்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை ஆகிய இடங்களிலும் இந்தியாவில் தத்துக்கடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல ஸ்தாபனங்களின் பேரால் அளித்த சுமார் 20 வரவேற்பு விழாக்களிலும், பொதுக் கூட்டங்களிலும் செய்துள்ள உபந்நியாசங்களைத் திரட்டி எழுதப்பட்டது.—'குட அரசு?', 20-11-1932]
## 2. நாகரிகம்
உலகில் மக்கள் அடைந்துவரும் நிலைமையைக் காட்டுமிராண்டித் தன்மையென்றும், அநாகரிக வாழ்வென்றும், அரை நாகரிக நிலைமையென்றும், நாகரிக நிலைமையென்றும் வகுத்து வருகின்றார்கள்.
காட்டுமிராண்டித்தன்மையில் மக்கள் விலங்கினங்களைப்போல் வீடு, வாசல் இன்றி, நாளைக்கு வேண்டுமென்ற பகுத்தறிவின்றி மிருகங்களைப்போல் அங்குமிங்கும் இரை தேடி வாழ்ந்துவந்த வாழ்க்கையாகும். இவ் வாழ்க்கையில் இன்றைக்கும் சில மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இலங்கையிலிருக்கும் வேடர்களும், ஆப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டுமனிதர்களும், ফிஜி தீவில் சில காலத்திற்கு முன் வாழ்ந்துவந்த மக்களும் இன்றைக்கும் காட்டுமிராண்டித் தன்மையிலேயே இருந்துவருகின்றனர். இந்த நிலைமையிள்ள மக்களுக்குக் கல்யாணமென்ற கூட்டுறவு கிடையாது. பெண்களைச் சட்டிபானை களைப்போல் ஆண்டனுபவித்து வருகின்றார்கள்.
இதற்கு மேற்பட்ட மக்கள் நிலைமையில் மனிதசமூகம் சிறுசிறு கிராமங்களில் வசிந்துவர தீடுத்தது. கிராமத் தலைவர்களென்றும், கிராமச் சங்கங்களென்றும் சமூக வாழ்க்கையை உண்டாக்கிக்கொண்டு தம் கிராமங்களில் சிலகாலம் தங்கியிருந்து, வேற பிரதேசக் கிராமங்களைக் கைக்கொண்டு, ஏகதேசமாக நிலங்களையும் பயிர்செய்து வந்த காலம் அநாகரிக காலமென்று சொல்லப்படும். ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திவந்த காலமிதுவே, அடுத்தடுத்து ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரோடு போர்புரிந்துவந்த காலமிதுவே. இந்த அநாகரிகக் காலத்தில் அம்பு, வில், ஆயுதங்களும், எலும்பு, தோல், சக்கிமுக்கிக் கற்களை ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் தரித்து வந்திருக்கின்றார்கள். மனிதர் இறந்தால் அவருடைய ஆன்மா உலகில் திரும்பு உலவுமென்ற எண்ணமும் இக்காலத்தில் தோன்றியதாக ஊகிக்கலாம். அந்த வாழ்க்கையில் பொருளை வாங்குவதும் விற்பதும் கிடையாது. இவ்வித வாழ்க்கையில் அரேபியர், நமது நாட்டில் குறவர், மறவர் இன்னும் அனேக ஆப்பிரிக்க மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.
அரை நாகரிக வாழ்க்கையில் மக்கள் நகரங்களிலும், பட்டணங்களிலும் சில ஆயிரம் பேர்கள் தங்கிவாழ ஆரம்பித்தனர். பயிர்த்தொழில் முக்கியமாக உயிர் வாழ்விற்கு அத்தியாவசியமாக ஏற்பட்டது. தலைவனை அரசன் என்றும், பாதுகாப்பிற்கு வீரர்களென்றும், நீதிரிபி பிரதானியென்றும் இந்த அரை நாகரிக காலத்தில் ஏற்பட்டன. சொதுவுரிமையும் இந்தக் காலத்தில் உண்டாகியது. போக்குவரத்திற்கு வண்டிகளும் ரதங்களும் ஏற்பட்டன. பண்டைக் கால பண்டமாற்றுக்குப் பதிலாக, நாணயச் செலாவணி ஏற்பட்டது. பண்டைக் கால அடிமைகளும் இந்த வாழ்க்கையிலிருந்து வந்தனர். பெண்களுக்குச் சிறிதும் தந்திரம் ஏதுமில்லாமலே புருஷனுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்ற மனப்பான்மையும் இந்த யுகத்தில் ஏற்பட்டது. கல்விக்கும் கேள்விக்கும் சில ஸ்தாபனங்களும் உண்டாயின. காட்டுமிராண்டித் தன்மையில் வீட்டிற்கு வீடு, கிராமத்திற்குக் கிராமம் சண்டைபோட்டுக் கொண்டு வந்ததுபோய், தேசத்திற்காகச் சண்டைபோடும் நிலைமை உதித்தது. சில பண்டங்களில் வர்த்தகமும் செய்துவந்தார்கள். நாடு, நகரங்களில், ஆயிரம் பதினாயிரக் கணக்காக வாழ ஆரம்பித்தனர். மதங்களும், புராணங்களும் உற்பத்தியாயின. குற்றவாளிகள் கொடூரமாக நடத்தப்பட்டு வந்தனர். ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள் மனிதனுக்கு உபயோகப்படுமளவாகப் பழகப்பட்டும் வந்தன. சில நீதி ஸ்தலங்களும் ஏற்படுத்தப்பட்டன. அநாகரிக காலத்திலுண்டான தலைவன் இந்த (செமி) அரை நாகரிகத்தில் அரசனாக மாறினான். அவனுக்குத் தெய்வத் தன்மையும் ஏற்பட்டது. மக்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்துவர ஆரம்பித்த காலமிது.
இந்தக் காலம் பாரத-ராமாயண வாழ்க்கை நடந்துவந்ததாகச் சொல்லும் காலமாகும். தற்போது கிந்த அரைநாகரிகத்தில் அபிசீனியர்களும், தென் அமெரிக்க வாசிகளும், சில பசிபிக் தீவிலுள்ள மக்களும், பெரும்பான்மை இந்திய மக்களும் வாழ்ந்துவருகின்றனர். பூர்வ காலத்தில் தமிழர்கள் அடைந்த நாகரிகமும் இந்த அரைநாகரிகமென்றே கருதப்படும். பண்டைக் கால ஈஜிப்ட் தேச நாகரிகமும், அபிசீனியன், கார்டியன், பாபிலோனிய நாகரிகங்களும் இந்த அரை நாகரிகத்ைச் சேர்ந்தவை. மத்திய கால ஐரோப்பிய நாகரிகமும் இந்த அரை நாகரிகத்திலே மூழ்கிக் கிடந்தது. கிரிக்-கிரீஸ், ரோமாபுரி நாகரிகமும் இந்த நாகரிக காலத்ைச் சேர்ந்தவை.
இந்த அரை நாகரிகத்திலிருந்து பெறப்பட்ட நாகரிகமே தற்கால நாகரிகமாகும். இதன் முக்கிய இலக்கணமென்னவெனில், இலட்சக் கணக்கான மக்கள் நாடு, நகரங்களில் வாழ்ந்து வர ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் சண்டைசெய்து கொள்ளாமல், நியாய ஸ்தலங்களை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் விவகாரங்களைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். அவரவர்களின் அபிப்பிராயங்களை முரட்டுத்தனத்தில் அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு, விவாத மூலமாகப் பகுத்தறிவைக்கொண்டு மாற்றிக்கொள்ள ஏற்பட்ட காலமிதுவே. பொதுஜன வாக்கு, ஓட்டுரிமை ஏற்பட்ட காலமிதுவே. அரசன் செய்வ தெல்லாம் ஓதுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத் திட்டத்தை மாற்ற ஏற்பட்ட காலமிதுவே. உலகிலுள்ள பொருள்கள் சரிசமத்துவமாக உலகில் உழைப்பவர்களுக்கும் உரியது என்ற எண்ணம் முளைத்தும் இந்தக் காலமாகும். கொடூரத் தண்டனைகளால் அடக்குவது மிருகத் தன்மை என்ற மனப்பான்மை ஏற்பட்டதும் இக் காலத்திலே. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் உலக மக்கள் யாவருக்கும் உரியது என்ற பேரிரைச்சல் எழுந்ததும் இக் காலமே. பெண்கள் ஆண்களுடன் உலக வாழ்க்கையில் சரிசமத்துவ உரிமையுடையவர்கள் என்ற மனப்பான்மை உண்டான காலமும் இந்த நாகரிக காலமே. ஏகதேசமாக சில்சிலரே சர்வஞானத்ைப் பெற்றுவந்த காலம்போய், சர்வ மக்களும் பெற வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டுவரும் காலம் இந்த நாகரிக் காலமே! எவ்வித அடிமைத்தனமும் மக்கள் வாழ்க்கையினின்றும் நீக்கப்பட வேண்டுமெனக் கட்டாயப் படுத்தப் படுவதும் இந்தத் தற்கால நாகரிக் காலத்திலே.
தற்கால நாகரிகம் பண்டைக்காலக் காட்டுமிராண்டி, அநாகரிக் காலங்களிலிருந்து பெறப்பட்டு வந்தமையால் அந்நாடக காலத்துப் பழக்க வழக்கங்களும், நீதி நெறிகளும், நம்பிக்கைகளும், கோட்பாடுகளும் மாறி வருகின்றன. கால தேச வர்த்தமானப்படி. மேற்கண்ட சட்டதிட்டங்களும் விலக்கு விதிகளும் மாறுகின்றன. ஆனால், அப்படி மாறி வந்தும் கால தேச வர்த்தமாணங்களுக்கு உதவாத உபயோகமற்ற பலவித கொள்கைகளும், கோட்பாடுகளும் சிதறுண்டுவந்தபோதிலும், முழுமையும் நாசமடையவில்லை. அவைகள் நாசமடைய வேண்டின் அவைகள் எவை எவை என்று பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது, அரசுகின் ஏகாதிபத்தியமும் காட்டு மிராண்டியின் வாழ்க்கையினின்றே தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. ஆதிகாலக் காட்டு மிராண்டியின் தலைவன் தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களையும், சுற்றியுள்ள மக்களையும் அடக்கி ஆண்டு வந்தான். அதைப்போலவே, இன்றைக்கும் ஏகாதிபத்திய அரசுகளும் எல்லா உலக சுக போகங்களையும் தங்களுடையதென்று கோடானுகோடி மக்களை அடக்கி ஆண்டுகொண்டு வருகின்றனர்.
காட்டுமிராண்டி புலித் தோலையும், கோரப் பற்களையும், எலும்புகளையும், மண்டை ஓடுகளையும், அம்பு விற்களையும் கொண்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டு கிராம மக்களைப் பயப்படுத்தி வந்ததைப்போல், தற்கால அரசுகளும் சேவகர்களையும், சிப்பந்திகளையும், இராணுவத்தையும் இராணுவத் தலைவர்களையும் கொண்டு பல கோடி மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர். மந்திரங்களையும், தந்திரங்களையும் கொண்டு காட்டு மிராண்டித் தலைவன் தனது குடிமக்களைப் பயமுறுத்தி வந்ததைப்போல், தற்கால ஆட்சியாளர்களும், மூட மதங்களையும் புராண இதிகாசங்களையும் கொண்டு, பல கோடி மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர். பண்டைக் காலத்துக் காட்டுமிராண்டிகள் பெண்களையும் பிள்ளைகளையும் கொடூரமாய் நடத்தி வந்ததைப்போல, இன்றைக்கும் கோடானுகோடிப் பெண்களும் சிறுவர்களும் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். அந்தக் காலத்தில் உழைப்பவனுடைய உழைப்பையும், அதன் பயன்களையும் ஆதிகால அநாகரிக் தலைவன் தனது சுகபோகத்திற்கு விரயமிட்டு வந்ததைப்போல், இன்றைக்கும் முதலாளிகளென்றும், நிலச்சுவான்களென்றும் பெயர் பெற்ற பல்லாயிரம் பேர் பல கோடி பல்லாயிரம் மக்களின் உழைப்பையும் அதனால் பெறும் பயனையும் அபகரித்துக்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அந்தக் காலத்து தந்திரத்தையும் சூழ்ச்சியையும் தெரிந்துகொண்டால், தனது ஆதிக்கத்திற்கு அபாயம் வருமென்று அநாகரிக் தலைவன் எண்ணிவந்ததைப்போல், இன்றைக்கும் நாகரிகமடைந்தவனென்று சொல்லும் அரசனும் பொதுமக்கள் விஞ்ஞான மடைந்தால் தனது ஆதிக்கத்திற்கே அபாயம் வருமென எண்ணி வருகிறான். ஆதிகால அடிமைத்தனம் தற்காலத்தில் பல்வேறு ரூபமாகச் சமூக வாழ்க்கையில் நிறைந்துள்ளது.
முக்கியமாக, மந்திர தந்திரங்களால் கட்டுண்டு கிடக்கும் மக்களின் அடிமைத்தனம் அறவே ஒழியவேண்டும்.இப்போது மக்களில் ஒரு சிலர் மேற்கண்ட ஆதிமாந்திரம் முதலிய சூட்சுமங்களில் உள்ள கவலையையும் மூடநம்பிக்கையையும் விட்டு தம் அறிவையும் அனுபவத்தையுமே நம்பி சிந்திப்பதின் காரணமாகவே பல அற்புதங்களும் அதிசயங்களும் காண முடிந்தபின், மேல்நாடுகளிலே அதிகம் பேர் அந்தப்படி சிந்திக்க முன்வந்துவிட்டார்கள்.
பழைய உலகம் இனி நிலைக்காது என்று முடிவுகட்டுகிறார்கள். புதிய உலகத்தைப்பற்றியே சிந்திப்பதும் சித்திரிப்பதும், எதிர்பார்ப்பதும் கூட இன்று பல அறிஞரின் கவலையாகப் போய்விட்டது.
ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களும் உள்ள இப் பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்சினைகளாக இருந்தவை. இன்று அவை தெளிவாகப்பட்டு பரிகாரம் தேடப்பட்டும் வருகிறது.
இந்தப் போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கியிதான் தீரும். அப்போதுதான், நான் முன்சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது; அரச ஆட்சி இருக்காது; கடினமான உழைப்பு என்பது இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத் தன்மை இருக்காது; ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல், கட்டுப்பாடு, பாதுகாப்பு என்பவை அவசியம் இருக்காது.
கணையாரைப் போலவும், மடாதிபதிகளைப் போலவும், அரசர்கள், ஜமீந்தார்கள் முதலிய பெரும்பெரும் செல்வவான்கள், போகபோக்கியம் அனுபவிப்போர்கள் போலவும், பார்ப்பனர்கள் போலவும், உலக மக்கள் யாவரும் உயர்வாழ்வு வாழவேண்டுமானாலும் அவ்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சவுகரியங்கள் ஏற்படவும், நிலைக்கவுமான காரியங்கள் ஏற்பட ஒரு மனிதனுக்கு ஒருநாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலைசெய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், "எனக்கு வலிக்கிறது" என்று சொல்லுவதுபோல், உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளையும், ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டதுபோல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டுவாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.
உலகில் எந்தப் பாகத்திலும் இன்றைய மாதிரியான பேர் நடக்காது; மக்கள் மக்களால்—யுத்தம், கொள்ளை, கொலை முதலியவற்றின் பேரால் மடியாமல் மாட்டார்கள். உணவுக்காக வேலைசெய்ய வேண்டிய வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. மக்கள் உடல் பயிற்சிக்காக வேலைசெய்ய வேண்டுமே, என்கின்ற கவலைகொண்டு உடலுழைப்பு வேலைக்காக அலைவார்கள்.
அதிசயப் பொருள்களும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். லேவாதேவிக்காரர்கள், தனிப்பட்ட வியாபாரிகள், தொழிற்சாலை, இயந்திரசாலை முதலாளிகள், கப்பல்—இரயில்—பஸ் சொந்தக் காரர்கள், கமிஷன் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், தரகர்கள், விளம்பரங்கள், மற்றும் வேறு எவ்விதமான தனிப்பட்ட இலாபடையும் மக்களும் தொழில்களும் எவையுமே இருக்காது. சண்டைக் கப்பல், யுத்தப் படை, யுத்த தளவாடங்கள் வேண்டி இருக்காது என்பதோடு, மக்களைக் கொன்று குவிக்கும் சாதனமோ, அவசியமோ, எதுவுமே இருக்காது.
வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச் சிறிய அளவுக்கு வந்துவிடும். சுகம் பெறுவதிலும் போகபோக்கியம் அடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்துகொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக, மக்கள் முன்பு கொஞ்சமான உடை அணிந்துகொண்டிருந்தார்கள். அக் காலத்தில் துணி நெய்பவர்கள், ஒரு நிமிடத்திற்குச் சுமார் 150 இழைகள்தான் கோத்து வரங்கி (நெய்ய) முடிந்தது. இன்று மக்கள் முன்னைவிடப் பலமடங்கு அதிகமாக துணியை அணிகிறார்கள் என்றாலும் அவ்வளவும் கிடைக்கும்படியான அளவுக்கு மேலே நெசவுத் துறையில் விஞ்ஞானம் அபிவிருத்தி அடைந்து, ஒரு நிমிஷத்திற்கு 45,000 இழைகள் கோத்து வாங்கும்படியான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
சிகரெட்டுகளைப் பற்றிச் சிந்திப்போமானால் அக் காலத்தில் ஒரு நிமிடத்துக்கு இரண்டு மூன்று சிகரெட்டுகள்தான் சுற்ற முடிந்திருக்கும், ஆனால், இன்று ஒரு நிமிடத்துக்கு 2,500 சிகரெட்டுகள் ஒரு இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் ஒரு பக்கம் புகையிலையைப் போட்டால் மறுபக்கம் இரயிலில் ஏற்றும்படியான மாதிரியில் சிகரெட்டுப் பேக்குகள் கொண்ட பெட்டிகள் கட்டாக் கட்டப்பட்டு விழுகின்றன என்பதோடு, அந்தச் சிகரெட்டுக் கம்பெனியின் பெயர் அந்த ஒவ்வொரு சிகரெட்டின்மீதும் சரியாய்ப் பதியவில்லையானால், பதியாத சிகரெட்டை இயந்திரம் கீழே தள்ளிவிடுகிறது. இப்படிப்பட்ட நுட்பமான இயந்திரங்கள் இப்போதே கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்போது, இனி வருங்கால இயந்திர உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா! இம் மாதிரியாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத் தேவைகள் துறைகளிலும் இயந்திர சாதனங்கள் பெருகும்போது, நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் வருஷத்திற்கு இரண்டு வாரம் வேலை செய்வதினாலேயே மக்களுக்கு அவசியமான எல்லாத் தேவைகளும் பூர்ணமாகி விடலாம்.
ஆகவே, ஒரு ஆண்டில் மீதி உள்ள 50 வாரங்களும் மக்களைச் சும்மா, சோம்பேறிகளாய் இருக்கச் செய்யுமே என்று யாரும் பயப்ப
பயப்பட வேண்டியதில்லை.
வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும் யோசனையும் கண்டுபிடிப்புகளும் தேவையாக இருக்கின்றனவோ, அதுபோலவே--மக்களின் ஓய்வுக்கும், உடல்பயிற்சிக்கும் மகிழ்ச்சிக்கும், போகபோக்கியத்துக்கும்--யோசனைகளும், ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவைகளைச் சுலபமாகச் செய்ய வசதிகளும் கண்டுபிடிப்பதும் அவை நாளுக்கு நாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாட்கள் செலவழிக்கப்பட வேண்டியிருக்கும்.
அக் கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் கொண்டிருக்குமென்று சொல்லுவது மிகைபடச் சொன்னதாக ஆகாது. ஆதலால், மக்கள் குறிப்பாக அறிவாளிகள்--சிந்தனையாளர்கள்--முற்போக்கில் கவலை உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இவற்றின் மூலம் சதா வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளதுபோல் கூலிக்கு வேலை செய்வதுபோலவோ; இலாபத்துக்கு வேலைசெய்வது போலவோ கல்லாமல் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்துமுடித்து உலகுக்குப் பயன்படச் செய்துகொள்ளுவது என்ற கருத்தே வளரும்.
"இப்படியானால், சோம்பேறிகள் வளர்ந்துவிடமாட்டார்களா?" என்று கேட்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் சோம்பேறிகள் இருக்கமுடியாது. இருப்பார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், இவர்களால் சமூகத்துக்குத் தேவையான எந்த வேலையும் குறைந்து போகாது; அதனால் ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால், அப்படிப்பட்ட அவர்கள் வேலையில் ஈடுபடுவதைவிடச் சும்மா இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமாயிருக்கும். பொதுவாகவே அந்தக் காலத்தில் மனிதர்கள் உண்மையிலேயே தங்களுக்கு வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே; வீணாக நேரம் கழிகிறதே! என்று கருதி வேலைக்குப் போராடிக்கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு சோம்பேறிகளால் அனுகூலம் ஏற்படுமே தவிர, யாருக்கும் கவலை இருக்காது. எல்லா மக்களுக்கும் அவர்கள் ஆசை தீர வேலை கொடுக்கமுடியாத காலமாக இருக்குமே ஒழிய, அந்தக் காலம் வேலைக்கு ஆண்டேட வேண்டியதாகவோ, "அவன் வேலை செய்யவில்லை, இவன் வேலை செய்யவில்லை" என்று கருதுவதாகவோ, குறை கூறுவதாகவோ இருக்காது.
"இழிவான வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா?" என்று கேள்வி பிறக்கலாம். இழிவான வேலையென்று வருங்கால் நிலையில் இருக்க முடியாது. சரீரத்தால் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் அனேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும். கக்கூசு எடுக்கவேண்டியதும், துலக்கவேண்டியதும், வீதி கூட்டவேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும். மனிதன் பாரம் எடுக்கவேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது. அக் காலத்தில் கவுரவம் வேண்டும் என்பவர்கள் பொதுஜன நன்மை, சவுகரியம் ஆகியவைகளைச் செய்যযேண்டி இருக்கும் என்பதோடு, அதில் ஏற்படும் போட்டியினால் "இழிவான" வேலைக்கும் எப்போதும் கிராக்கி இருந்துகொண்டே இருக்கும்.
கவிகளும், இதர சித்திரக்காரர்களும், நாவலர்களும், சிற்பிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாக்குபவர்களாகவே இருப்பார்கள். திறமையுடையவர்களுக்குதான் வேலையும் மதிப்பும் கிடைக்கும். மற்றவர்கள் அலட்சியப்படுத்தப் படுவார்கள்.
அக் காலத்தில் "ஒழுக்கக் குறை" என்பதற்கு இடமே இருக்காது. ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்கப்படாத ஏதாவது இலாபமோ, திருப்திதயோ, ஆசைப் பூர்த்திதயோ ஏற்பட வேண்டும். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைகளும் தனிப்பட்டவர் மனக் குறைக்கும், ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது. தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாக் கொண்டோ, வேறொருவன் இருக்கிறான்--அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்போதுதான், அதிருப்திக்கும் மனக்குறையும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குதான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய், நியாய விரோதமாய், கட்டுத் திட்டத்துக்கு மீறி நடக்கவேண்டியவனாகலாம். பொதுவாக, இன்று ஒழுக்கம், நியாயம், கட்டுத்திட்டம் என்பவைகளே--பெரிதும் உயர்வு, தாழ்வுகளையும் தனிப்பட்டவர்கள் உரிமைகளையும் சவுகரியங்களையும் நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவைகளேயாகும். ஆகையால், கீவை இரண்டும் இல்லாத இடத்தில் அவை இரண்டுக்கும் இடமிருக்காது. அதுபோலவே திருட்டுக்கும் இடமிருக்காது.
கங்கைக் கரை ஓரத்தில் குடியிருப்பவர்கள் கங்கை நீரைத் திருடவேண்டிய அவசியம் ஏற்படுமா? அல்லது அவர்களது தேவைக்கு மேல் அதிகமாக எடுப்பார்களா? அல்லது, "நாளைக்கு வேண்டுமே" என்று சேகரித்து வைக்க முயற்சிப்பார்களா? ஆதலால், தேவை உள்ள சாமான்கள் தாராளமாய் வழிந்தோடும்போது, திருட்டுக்கு கிடமே இருக்காது; அதிகமாய் எடுத்துக்கொள்ள அவசியமும் இருக்காது; பொய் பேசவேண்டிய அவசியமும் இருக்காது. அதற்கும் ஏதாவது இலாபம் இருந்தால்தானே பொய் பேச நேரிடும்! குடியினால் மக்களுக்கு எவ்விதக் கெடுதியும் ஏற்பட இடமிருக்காது. கொலை செய்யும்படித் தூண்டக் தக்க காரியமும் இல்லாமல் போய்விடும்; சூது ஆடுவது என்பதும், பந்தயப் போட்டியாய் இருக்கலாமே தவிர, பண நஷ்டமாக இருக்காது.
விபச்சாரம் என்பதும் இருக்க நியாயமில்லை. ஏனெனில், பண தேவைக்காகவும், பண்ட தேவைக்காகவும் விபச்சாரம் என்பது அடியோடு மறைந்தே போகும். மக்களுக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண் முடியாது. ஒருவர் தயவைக் கோரி ஒருவர் கிணங்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர்--அதாவது, ஆணும் பெண்ணும் மனப்பூர்வமான சமவிருப்பமின்றிக் காதல் அனுபவிக்கமாட்டார்கள். கல்வி விஷயத்தில் யாவருக்கும் தேர்நீல அறிவும், கல்வியும் ஏற்படும். ஆனால், மனமொத்த உண்மைக் காதல் வாழ்க்கை என்பதைத் தவிர, புதுமைக்காக, மாறுதலுக்காக, அடிக்கடி மாறும் தன்மை சுலபத்தில் ஏற்பட்டுவிடாது. அன்றியும், உடல் நலம் பற்றிய அறிவும் கவலையும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் தன்மான உணர்ச்சியும் இருக்கும்.
"விருப்பமில்லாத இடத்தில், சம்பந்தமில்லாத இடத்தில் கச்சை வைப்பது தனது சுயமரியாதைக்குக் குறைவு" என்றே ஆண் பெண் இருபாலரும் கருதுவார்கள். பெண் அடிமையோ ஆண் ஆதிக்கமோ இல்லாமலும், பலாதிகாரமோ வற்புறுத்தலோ, உடல் நலத்திற்குக் கேடோ இல்லாமலும், ஒத்த காதல், ஒத்த இன்பம், ஒன்றுபட்ட உள்ளம் கொண்ட கலவியால் சமுதாயத்துக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால் விபச்சாரம் என்பதற்கு கிடம்இல்லாது போகும்.
மூளைக் கோளாறான குணங்கள் என்பவைகளை இயற்கையாக உடையவர்கள் யாராவது இருந்தால், அதற்கு மாதிரியாக பரிகாரம் தே
வாலிபர்களுக்கும் வயோதிகர்கள் என்பவர்களுக்குமுள்ள பேதமாகும். அதாவது, வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டுப் போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப்பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால்—முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்படவேண்டும்) அவைகள் சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்துபோயிருக்கும்.
இதைத்தான் வைதீகம் என்றும், பிடிவாதம் என்றும், காலதீதிற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியாமை என்றும் பெரிதும் சொல்லுகிறோம்.
[இராஜபாளையத்தில், 6-12-1944-ல் சொற்பொழிவு—4 குடிஅரசு! 16-12-1944]
5. நான் நோக்கும் முறை
பேராசிரியர்களே! மாணவர்களே!
நான் மற்றவர்களைவிட விஷயங்களை முதலில் நன்கு உணர்ந்து, அதன் பிறகு எடுத்துச் சொல்லுபவன். எந்த விஷயத்தையும் நிர்வாணமாகப் பார்த்துத்தான் பின் விளக்குவேன்; இப்படி நிர்வாணமாக உணர்ந்து விளக்குவது நாகரிகக் குறைவு என்று சிலர் எண்ணுவார்கள்!
ஒரு மனிதனை வருணிப்பது என்றால், சொகாய், நாமம், பட்டை, உருமாலை, தலைப்பாகை இவைகளை வருணித்தால் போதாது. அவனுடைய உடலமைப்பு, உடல் அங்க அவயவங்கள் ஆகியவைகளைப் பற்றியும் உணர்ந்து வருணிக்கவேண்டும். அப்போதுதான் வருணனை பூரணதுவமானது என்று கூறமுடியும்.
நாடகத்தில் வருகின்ற நடிகையைப் பார்த்து அவளுடைய முகத்தில் பூசிய சாயம், அணிந்துள்ள கில்டு-கண்ணாடி நகைகள், சடை இவைகளைப் பார்த்து அழகாக இருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? அந்தச் சாயத்தைக் கலைத்து, கில்டு நகை, கூந்தலில் ஒட்ட வைத்துள்ள ஒட்டு மயிர் முதலியவைகளை எடுத்துவிட்டுப் பார்த்தால்தான் அவள் அழகியா இல்லையா என்பது விளங்கும்.
இந்த முறை எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் கருதுவதில்லை என்றாலும், உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும்! இந்த வேலையைச் செய்ய வேறு ஆளே இல்லையே!
[மதுரை தியாகராசர் கலலூரியில், 13-3-1961-ல் சொற்பொழிவு—6 விடுதலை? 44&1961]
www.thamizham.net - Free E book No 3046
2010
8. பகுத்தறிவாளர்க்கு
தோழர்களே!
உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்றவைகளுக்குக் கிடையாது.
எனவே, பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்பதுதான் பொருள். இதுவரை மனிதனுக்குப் பகுத்தறிவ் இல்லையா? இப்போதும் இருக்கிறது? என்று கேட்கலாம்.
மனிதனுக்குப் பகுத்தறிவ் இருந்தும், அதுபற்றிய சிந்தனா சக்தி இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்து வந்தோம். அந்த நிலையை மாற்றி, மக்களைப் பகுத்தறிவ் கொண்டு எதையும் சிந்திக்கத் தூண்டவே நாம் முற்படுகின்றோம். பகுத்தறிவ் கொண்டு சகல துறைகளிலும் சிந்தனையைச் செலுத்தி நமது மடமை, உணர்ச்சி இன்மை இவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றோம்.
நாம் 1000, 2000 ஆண்டுகளாக அறிவைப் பயன்படுத்தாமல், மான அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து வந்துவிட்டோம். இனி, பகுத்தறிவைப் பயன்படுத்தி இதிலிருந்து விலகவேண்டும் என்கின்றோம்.
நாம் எதனாலே இழி மக்களாக, மான அவமானமற்ற மக்களாக ஆக்கப்பட்டோமோ அவைகளையெல்லாம் ஒழிக்கவேண்டும். நம்மைக் கீழான நிலைக்கு, கழி நிலைக்கு ஆளாக்கியது கடவுளும், மதமும், சாஸ்திரமும் முன்னோர்கள் நடப்பும் என்று காண்கின்றோம். இவைகளையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றோம்.
இன்றைக்கு அடிக்கட்டையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் மான உணர்ச்சி இல்லை என்று கூறமுடியுமா? இருக்கிறது. அதனைத் தூண்ட எவரும் முற்படவில்லையே. அவனை அடக்கிவைக்க வேண்டுமானால் பலர் தோன்றினார்கள். நாங்கள்தானே, நீ ஏன் இழிமகன், தாழ்த்தப்பட்டவன், பஞ்சமன், பறையன் என்று கேட்டு உணர்வுபெறச் செய்தோம்!
சமுதாயத்தில் ஒவ்வொரு சாதிக்காரனும் தமக்குள்ள சாதி இழிதன்மையினைப் பற்றிச் சிந்திக்காமல், ஒழிக்கப் பரிகாரம் காணாமல் அவனவன் தாங்கள் மற்றவனைவிட உயர்ந்த சாதி, மேலான சாதி என்று கூறிக்கொள்ள முற்படுகின்றானே ஒழிய, சாதி இழிவை ஒழிக்க, சாதி முறையையே ஒழிக்க எண்ணமாட்டான் என்கின்றார்களே!
ஆதிதிராவிடர்களை எடுத்துக்கொண்டால் பள்ளர்கள் தாங்கள் தேவேந்திர குலம் என்கின்றார்கள். சக்கிலியர்கள் அருந்ததியார் குலம் என்கின்றார்கள். கம்மாளர் தாங்கள் விஸ்வ பிராமணர் என்கிறார்கள். சிலர் தேவாங்கப் பிராமணர் என்கின்றார்கள். கோமுட்டிகள் தங்களை ஆரிய வைசியர்கள் என்கின்றார்கள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் தனவைசியர் என்று கூறிக்கொள்ளுகிறார்கள்; படையாட்சிகள் தங்களை வன்னிய குல சத்திரியர் என்று கூறிப் பூணூல் உருவுகிறார்கள். நாடார்கள் தங்களை சத்திரியர் என்று கூறிக்கொண்டு பூணூலும் போட்டுக்கொண்டு, சில இடங்களில் சந்தியா வந்தனமும் கூடச் செய்கின்றார்கள். இராஜுக்கன் என்ற கூட்டம் தாங்கள் தாமே அசல் சத்திரியர் என்று கூறிப் பூணூல் போட்டுக்கொண்டு திரிகின்றனர்.
இப்படியாக, ஒவ்வொருவனும் தங்கள்தங்கள் சாதிதான் உயர்வு என்று கூறிக் கொள்ளப் போலியான கட்டுக்களை ஏற்படுத்திக்கொண்டு, பெருமை பாராட்டுகின்றார்கள். பொதுவாக எல்லோரையும் பார்ப்பான் இழிமகன், சூத்திரன், பஞ்சமன், பறையன் என்று தானே கூறுகின்றான்! சாத்திரத்தில், ஆதாரங்களில் எழுதிவைத்து இருக்கின்றானே—இதுபற்றி எவனுக்காவது எண்ணமே இல்லையே!
www.thamizham.net - Free E book No 3046
உலகம் 2011
மனித சமுதாயம் மடமையானது கடவுளினால்தான். மனித சமுதாயம் இழிதன்மை அடைந்ததும் கடவுளினால்தான். இந்தக் கடவுளும் மதமும் சாஸ்திரங்களும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்டவை யாகும்.
மனிதன் இன்றைக்கு இந்தக் கடவுள் மதம், சாஸ்திரங்களைத் தவிர மற்ற சங்கதி எல்லாவற்றிலும் எவ்வளவோ மாற்றிக்கொண்டு இருக்கின்றான். உணவிலே, உடையிலே, நடை உடை பரவனைகளிலே நாகரிகத்திலே எவ்வளவேச் சங்கதिய மாறுதல்கள் எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றான். ஆனால், கடவுள், மதம், சாஸ்திரங்களில் மட்டும் மாற்றிக்கொள்ள மறுக்கின்றானே!
பகுத்தறிவைப்பற்றி நாம் சிந்திக்காததன் காரணமாக என்ன என்ன கேடுகள் ஏற்பட்டனவோ, என்னென்ன இன்னல்கள் ஏற்பட்டனவோ அவற்றை நிவர்த்திக்கப் பகுத்தறிவ் இயக்கம் தோற்றுவித்து இருக்கின்றோம்.
நாம் குழந்தைகளிடம் பேசுவதில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது தேவை இல்லை. அது காரணமாக நமக்கோ, மற்றவர்களுக்கோ கேடு ஏற்படாது. ஆனால், மற்ற விஷயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்தாவிட்டால் பல கேடுகள் ஏற்பட்டே தீரும். இத்தனை நான் 'சிந்திக்கக்கூடாது?' என்ற தலைப்பில் வந்த காரியங்களை இப்போது மாற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம்.
பகுத்தறிவ் என்றால் இன்று நாம் முதலில் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவைகளின் கேடுகள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றோம். இதற்கு முன்பு இந்தக் காரியங்களில் யாரும் ஈடுபடவே இல்லை.
பகுத்தறிவிற்கு இந்த நாட்டில் ஏற்பட்ட தடை காரணமாகவே நமது வளர்ச்சியில் தடை ஏற்பட்டுவிட்டது. மற்றைய நாட்டுக்காரர்களுடன் போட்டிபோட முடியாதவர்களாக ஆகிவிட்டோம்.
இனி, நம் வளர்ச்சிக்கும், நமது கேடுகள் ஒழிவதற்கும் மேல் நாட்டார்கள் போல முன்னேறுவதற்கும் இந்தப் பகுத்தறிவை, சிந்தனையைப் பயன்படுத்தவேண்டும்.
நாம் முதலாவதாக சமுதாயத் துறையில் பகுத்தறிவைச் செலுத்தி இப்போது சிந்திக்க வேண்டும். பிறகு விஞ்ஞான வளர்ச்சிக்கும், அதிசய அற்புதங்களைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்தவும் வேண்டும்.
முதலில் சமுதாய மாற்றம் ஏற்பட்டால்தான், நாம் மனிதர்களாக ஆவோம். நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனித சமுதாயத்திலும் ஒழுக்கம் நாணயம் ஏற்படும். மனிதனுடைய கடமை சமுதாயத் தொண்டுதான். ஒருவருக்கு உதவி செய்வது என்பதான உயரிய நிலை ஏற்படும். மனித சமுதாயமே பரிசுத்தமாகும்.
மேல் நாடுகளில் சமுதாய பேதங்கள், மேல், கீழ் என்ற வேற்றுமைகள் இல்லை. பிறருக்குத் தொண்டு செய்வதைத் தங்கள் கடமையாகவும் கொள்வார்கள்.
சாதாரணமாக, நமக்கு ஒருவன் ஒரு பொருளைக் கொடுத்தால் பேசாமல் வாங்கிக் கொள்ளுகிறோம். ஆனால், மேல்நாட்டுக்காரன் அப்படி அல்ல. ஒருவன் ஒருவனுக்கு ஒன்று கொடுத்தாலோ, சிறு உதவி பண்ணினாலோ, 'நன்றி' என்று சொல்லுவான். இப்போதுதான் நாம் வெள்ளைக்காரனைப் பார்த்துப் பழகி இருக்கின்றோம். சமுதாயத் தொண்டு, 'சோஷியல் சர்வீஸ்' என்பது மேல்நாட்டில்தான் உண்மையாகவே நடக்கின்றது.
மனித சமுதாய வளர்ச்சிக்கும், மரியாதைக்கும் பகுத்தறிவ் உதவி செய்யும். பகுத்தறிவுவாதிகளிடம் குறைபாடுகள் பேதங்கள் இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை ஏற்படவேண்டும். நாம் இன்று நமது நிலையில் இருந்து மாறப் பகுத்தறிவ் ஒன்றைத் தவிர வேறு எதையுமே சொல்லமுடியாது.
எது எது நமது பகுத்தறிவுக்குக் கேடான காரியம், மாறான காரியம் என்று கருதுகின்றோமோ அவைகள் எல்லாம் மனிதன் மடையனாக—காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாகும்.
1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்கு எந்த அளவு அறிவு இருந்திருக்க முடியும்? அதிசய அற்புதங்களைச் சிந்திக்க அவனுக்கு எப்படி வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்! என்று கேட்டால் எவனும் பதில் சொல்லமுடியாது. நமது பாட்டன் கட்டை வண்டியில் போனான். குச்சுவீட்டில் இருந்தான். ஆகவே, நானும் கட்டைவண்டியில்தான் போவேன். குச்சு வீட்டில்தான் இருப்பேன். மோட்டாரோ, இரயிலோ, மச்சுவீடோ மாடிவீடோ வேண்டாம் என்று எவன் சொல்லுகின்றான்! தோழர்களே! மேல்நாடுகளில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பே—நாத்திகர்கள் சங்கம், சிந்தனையாளர்கள் சங்கம், தாராள நோக்காளர்கள் சங்கம், கடவுள் மறுப்பாளர் சங்கம் என்று பல பெயர்களில் பல சங்கங்கள் தோன்றி வேலைசெய்துகொண்டு வருகின்றன.
நான் பாரிசில் ஒரு பகுத்தறிவுப் பத்திரிகையைப் பார்த்தேன். அதில் சிலுவையை ஒரு காலில் மிதித்துக்கொண்டு இரண்டாகப் பிளப்பதாகப் போடப்பட்டு இருந்ததைக் கண்டேன்.
தோழர்களே! இந்தப் பகுத்தறிவ், சிந்தனை வளர்ச்சி எங்கு கொண்டு விடுமோ சொல்லவே முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டுப் போலச் சொல்லி உள்ளேன். அதை 'இனி வரும் உலகம்?' என்ற புத்தகத்தைப் பார்த்தால் தெரியும். அதிலே பலவற்றைச் சொல்லி இருக்கின்றேன். அவைகளில் பாதிக்குமேல் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன.
'மனிதன் இப்போது சாப்பிடுவதுபோல நிறையச் சாப்பிடக் தேவையில்லை, அவரை மொசீசைக்கொட்டைப் பெரிதோ ஒரு மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டால் போதும். 14 நாளைக்குப் பசிக்காது?' என்று எழுதியிருக்கின்றேன். அது இன்றைக்கு நடைமுறைக்குச் சாத்தியம் என்று கண்டுள்ளார்கள்.
இன்னும் 10, 15 ஆண்டுகள் போனால்; மனிதன் சாப்பாடே குறைந்து குளிகை முறைக்கு வந்துவிடும். தான் அப் புத்தகத்தில் மற்றும் ஒன்று கூறியுள்ளேன். அதில் 'குழந்தை உற்பத்திக்கு ஆண்—பெண் சேர்க்கை தேவையில்லை. இருவர் இந்திரியத்தையும் எடுத்து ஒரு குழாயில் போட்டு அதிலேயே குழந்தையை உற்பத்தி பண்ணும்படியான நிலை வரும்?' என்று கூறியுள்ளேன்.
அந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே ஒருவர் ஒரு சோதனைக் குழாயில் குழந்தையை உற்பத்தி பண்ணுவது போன்ற படமும் வெளியிட்டுள்ளேன்.
இப்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு வந்த பத்திரிகைச் செய்தியில் 'டெஸ்ட் டியூப் பேபி' (சோதனைக் குழாயில் குழந்தை) என்பதாக ஆண்—பெண் சேர்க்கை இன்றிக் குழந்தையை உற்பத்தி செய்யமுடியும் என்பதைச் செய்து காட்டிவிட்டார்களே!
இந்த முறை, கொஞ்ச காலமாகக் கால்நடைக்குச் செய்யப்பட்டுதான் வந்தது. பசு, எருமை இவைகளுக்குக் காளை சேர்க்காமல் கருத்தரிக்கள் செய்யப்பட்டு வருகின்றது. மாடும் செயற்கைக் கருத்தரிப்புக் கன்று போடுவதைப் பார்த்து இருக்கின்றோம்.
அடுத்து, கோழிப் பண்ணைகளில் கோழி அடை காகாமலே, பெட்டிகளில் முட்டைகளை அடுக்கிச் செயற்கை உஷ்ணத்தின்மூலம் குஞ்சு பொரிக்கச் செய்கின்றார்களே!
கால் நடைகளுக்கும், பறவைகளுக்கும் இருந்து வந்தது இன்று மனிதருக்கும் பொருந்தும் என்று செய்து காட்டிவிட்டார்கள்.
www.thamizham.net - Free E book No 3046
உலகம் 2013
எனவே, பகுத்தறிவ்—மனிதனை உன்னத அறிவினைப் பெறச் செய்யும் அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடிக்கச் செய்து, மனித சமுதாயத்தின் தொல்லைகளை, குறைபாடுகளைப் போக்க உதவும்.
(மானாமதுரை; சிவகெங்கை, தேவகோட்டையில், 9, 10, 31-11-1971-ல் சொற்பொழிவு)
இந்த அதிசய காலத்தில் எனது தாய்மொழி; எனது தாய்நாடு) இதற்காக எனது உயிரை விடுவேன் என்று மூட்டான் தனமாகப் பிடிவாதம் பிடித்தால் நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளாகநான் நமக்கு நெருக்கமாக வந்துகொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? மனிதன் முன்பு கஞ்சிதான் குடிப்பான். எனது 25-வது வயது வரைக்கும் நான் கஞ்சிதான் குடித்தேன்.என் கடைக்குக் கஞ்சி செம்பிலே வரும்.
www.thamizham.net - Free E book No 3046
2016
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
எனக்கு இந்தக் கதி என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமா? இன்று காபி சாப்பிடாதவர்கன் யார் இருக்கின்றார்கள்?பொருளாதாரக் குறைவு காரணமாக யாரும் காபி குடிக்காமல் இல்லையே!அதுபோல, எல்லா மக்களுக்கும் எல்லா விதமான சவுகரியமும் ஏற்பட்டே ஆகவேண்டும். (ஏற்பட்டே தோகிறது) ஏற்பட்டே ஆகவேண்டும். நாம் நமது சில்லரை எண்ணங்களை மாற்றிக் கொண்டு, உலகம் எல்லாம் ஒன்றாக வேண்டும் என்பதற்கும் ஏற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லாம் ஒன்றாக ஆக, பேதங்களை ஒழிக்கவேண்டும்.பேதம் கிறிக் நிலைக்கவும் முடியாது. பொருளாதார பேதமும், சாதி பேதத் தன்மையும் ஒழிக்கப்பட்டு விடுமானால், மற்றுள்ள பேதங்கள் எல்லாம் நிலைகற்றுமாட்டா; உலகம் ஒன்று என்ற தன்மைக்குக் கொண்டு வந்துவிடும்.
ரஷ்யாவில் பொருளாதார பேதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதன் காரணமாக அந்த நாடு என்ன கெட்டுப்போய்விட்டது? பதவி காரணமாகக்கூட அங்கு உயர்வு, தாழ்வு பாராட்டுவது இல்லையே! நமது நாட்டில் பேதங்களை வளர்க்க—கோயில், மதம், மத குருக்கள், மற்றும் ஏராளமான சாதனங்கள் இருக்கின்றன. நாம் எண்ணத்তில் மாற்றம் அடைந்திருக்கிறோமே ஒழிய, காரியத்தில் மாற்றம் அடையவே இல்லை. மாட்டுக் கறி, பன்றிக் கறி சாப்பிடக்கூடாது என்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும் என்று இப்படி விருந்து ஏற்பாடு செய்கின்றோமே—இதுபோல, மற்ற மூடநம்பிக்கைகள் ஒழியவும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். தோழர்களே!நம் முயற்சி ஒன்றும் வீண்போகவில்லையே! பல மாறுதல்களை அடையச்செய்துள்ளதே!இன்றைக்குத் தமிழ் நாட்டில் யார் பெரிய மனிதர்கள் இருக்கின்றார்கள்?விரல் விட்டுக் கூறுங்களேன், பார்ப்போம்!முன்பு எதற்கெடுத்தாலும் பெரியவர்கள், பெரிய வீட்டுக்காரர்கள் என்று பெருமையாகக் கூறுவர்கன்; மதிப்பார்கள். இன்று அது அடி ஓடு போய்விட்டதே!முன்பு பணக்காரர் என்பதற்காகச் சமுதாயத்தில் உயர்வும் மதிப்பும் இருந்தது. இன்றைக்குக் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர் ஆனாலும், யார் அவரை உயர்வாக மதிக்கின்றார்கள்? அவன் ரோட்டில் போனால்'கொள்ளைக்காரன்—திருட்டுப் பயல், போகின்றான்?'என்கிறார்கள்.
அடுத்து, இன்று படித்தவன், மேதை என்று யாரை மதிக்கின்றார்கள்? பி.ஏ, எம்.ஏ, பி. எஸ்ஸி., டாக்டர் போன்ற படிப்புப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். இவர்களை எல்லாம் அறிவாளிகள் என்று யார் ஒதுக்குக்கொள்கிறார்கள்? இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இனி எதை வளர ஒட்டாமல் மூடிவைத்தால்ம் அறிவை மூடிவைத்து வளர்ச்சியைத் தடுக்க முடியாது.
50 வருடத்திற்கு முன்பு வைணவன்—வீர வைணவன் என்று கூறிக்கொண்டு சைவனைக் கண்ணால்கூடப் பார்க்கக் கூசுவார்கள். சைவனும்—வீர சைவன் என்று கூறிக்கொண்டு, வைணவனைப் பார்க்கமாட்டான்;பேசமாட்டான். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று நமது இயக்கத்தின் காரணமாக ஏற்படும் மாறுதலைக் கண்டு பயந்து ஒன்று சேர்ந்து விட்டார்களே!இன்று போராட்டம் என்பது மாறுதல்காரர்களுக்கும், மாறுதல் வேண்டாதவர்களுக்கும்தான் ஆகும்.
[கோவையில் 4-11-1972-ல் சொற்பொழிவு. விடுதலை! 14.11.1972]
தோழர்களே!இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே, ஆணுக்குப் பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதான்தான் திருமணம்!இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்?இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய பொது நலத்துக்கு அல்லவே!புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும் இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அதனை இரண்டு பேருமே சேர்ந்து காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லையே!அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். ஒரு வாவி தண்ணீர் கொடுப்பான். ஆனால், அது தன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவேயாகும்!
ஆண்களும் பெண்களும் இதுகைய தொல்லைகளில் மாட்டிக்கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா?
அதனைவிடுத்து; புருஷன் பெண்டாட்டியாகி, தனிக் குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொதுநல உணர்ச்சியற்றவர்களாகவே ஆகின்றார்கள்.
உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லை இல்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமான
வேண்டுமானால் திருமணம் என்பதை
கிரிமினல் குற்றமாக்கிவிட
வேண்டும்.
இன்று
இல்லாவிட்டாலும்
பிறகு
வந்தே தீரும்,
நான் சொன்னது
நடக்காமல் இருக்க
வில்லையே |
எனவே, திருமணத் துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.
சம எண்ணிக்கை
உடையதும், சம உரிமைகளைப் பெறவேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்:
படுத் துவது மிகவும் அக்கிரமமாகும்.
பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க
வேண்டும்.
பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே திருமணதீதைப்பற்றிப் பேச
வேண்டும்.
அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்தீது
ஓர் ஆணைத் தெரிந்து எடுத்துக்
கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கே நிற்கக்கூடாது.
[சென்னை எழும்பூர் பெரியார் திடலில், 27-8-1973-ல் சொற்பொழிவு”! விடுதலை ? 3-9-1973)
மனித
சமுதாயதீதில்
நாம்
சூதீதிரர்--நாலாம்
சாதி--இழிமக்கள்
என்கின்ற
பட்டியலில் இருக்கின்றோம்.
இவை மாதீதிரமா ₹ பார்ப்பணனின் தாசி மகனாகவும், கத
இந்து மத சாஸ்திரங்களின்படி மாத்திரமல்லாமல்,
¢ இந்து லா? என்கின்ற சட்டதீதின்படியும்
நமக்கு இருந்து வருகிறது.
இது மாத்திரமா ₹ வாழ்தாள் நடப்பிலும் நாம் அயோக்கியர்களசகவே இருக்கிறோம்.
அக்கிரமங்கள்
செய்வதிலும்
நரம்
பயப்படுவதில்லை.
நாம்
ஏன்
பாவிகளாக
கருக்க
வேண்டும் i
இவற்றிற்குக் காரணம் நமது மதமும், கடவுள்களுமேயாகும்,
நம்மை நாம் சிறிது
கூட அறிவு மானம், வெட்கம் இல்லாமல் இந்துக்கன் (6 இந்து?) என்று சொல்லிக் கொள்ளு
கிறோம்.
இந்து என்கின்ற
மதத் தலைப்பில்தான்
நாம்
இருந்து
வருகிறோம்.
இந்து
என்றால் பார்ப்பனர் தவிர, மற்ற நாம் யாவரும் சூதீதிரர்கள் என்று தானே ஆகிறோம்?
சூத்திரன் என்றால் இந்து, இந்து என்றால் சூத்திரன்.
இது சாஸ்திரப்படி என்பது
மாத்திரமல்லாமல்,
* இந்து
லா?
என்னும்
சட்டப்படியும்தானே
ஆக்கப்பட்டிருக்கிறது
|
www.thamizham.net - Free £ book 14௦ 3046
2018
பெரியார் ®. வெ. ரா. சிந்தனைகள்
சூதீதிரன் என்றால், சாஸ்திரப்படியும், 'இந்து லா? சட்டப்படியும் தாசிபுதீதிரன் என்றுதானே
இருந்து வருகிறது! ஆகவே, நம்மை நாமே இந்து என்று சொல்லிக்கொண்டால் அல்லது
நாம்
இந்துவாக இருக்கும்வரை
நாம்
நாலாம்
சாதி என்பது மாத்திரமல்லாமல்,
தாசி.
புதீதிரன்
என்பதையும்
சொல்லிக்
கொள்ளுகிறவர்கன்
ஆகிறோம்.
இது
மாத்திரமா ₹
நடவடிக்கைகளிலும் நாமாகவே சூதீதிரனாகதீதானே நடந்து கொள்ளுகிறோம் 1! அதாவது
நாம்
கர்ப்பக் கிரகம்
செல்லக்கூடாத,
நாம்
தொடக்கூடாத,
எந்தக்
கோவிலுக்குப்
போனாலும், எந்தச் சாமியைக் கும்பிட்டாலும், நாலாம்
சாதி, தீண்டப்படாத ஈன சாதி,
சூதீதிரன், தாசிமகன் என்பதை நேரடியாகக் கொண்டு நடத்தையில் நடந்து வருகிறோம்
என்பதில் சந்தேகமென்ன ₹ ஆட்சேபணை என்ன i ஆகவே, இந்து மக்கள் என்பவர்கள்
இடையில் சாதி ஒழிப்புப் பிரச்சாரம் நாம் எவ்வளவு செய்தாலும் அது எப்படி நமகீகுப் பயன்
படக்கூடும்?
நம்மை
நாம்
இந்து
என்று
சொல்லிக்
கொள்ளும்
வரையிலும்,
கோவிலுக்குச்
செல்லும் வரையிலும், அங்குள்ள
கடவுன் என்பவைகளை
வணங்கும்! வரையிலும்
நாம்
சூத்திரனாக-பார்ப்பானின் தாசிமகனாக, நாலாம்
அய்ந்தாம் சாதியானாக இருந்துதான்
தீருவோம்.
மற்றும்,
இந்து
என்றால்,
கருப்பு என்பது
பொருளாகும் என்பதோடு,
இந்து
என்றால், திருடன் என்பது (பார்சி மொழியில்)
பொருளாகும்.
இதை உணராத மக்கள்
யாரானாலும் அவர்கள் மானமும்; அறிவும் அற்றவர்களனே ஆவார்கள்.
மற்றும், கடவுள் நம்பிக்கை உன்ள எவருமே
யோக்கியராய்
இருக்க வேண்டிய
அவசியமே இல்லாமல் போய்விட்டதற்குக் காரணம், மனிதன் வணங்கும் கடவுன்கன் யாவுமே
யாம்.
எத்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும்,
எந்த மததீதைச் சேர்ந்த கடவுவ்களா
னாலும்
ஜபம்
செய்தால், தொழுகை செய்தால், வணங்கினால், ஸ்தல யாதீதிரை, தீர்த்த
யாத்திரை
செய்தால் மன்னித்து விடும்படியானவைகளாய் இருப்பதால், அப்படிப்பட்டவை
இருக்கும்வரை
மனிதன்
யோக்கியனாகவோ
அயோகீ்கியனாகவேர
இருக்கமுடியாது.
கிறிஸ்தவ மத தர்மப்படி,
* மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள்.
ஏசு
மூலம்
ஐபம், பிரார்தீதனை செய்தால் மன்னிக்கப்பட்டுவிடுவார்கள் ? என்பது கட்டளையாகும்.
இதனால்தான் மற்ற மதங்களை விட, கிறிஸ்தவ மததீதில் நேரீமையற்றவர்கள் அதிகமான
பேர்கள் இருக்க வேண்டியதாகிவிட்டது.
இஸ்லாமியர்களும் தொழுகையினால், வேண்டு
கோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருகீகிறார்கள்.
இந்துக்கள் என்பவர்களே எல்லாவிதமான பாவத்திற்கும், அவை ஒழிய கோயில், குளம்,
ஸ்தலம் யாதீதிரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும்.
இந்த நிலையில் எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க
முடியும்?
மனிதன்
எதற்காக யோகீகியனாக இருக்க வேண்டும் 1
ஆகவேதான்; மனிதன் என்றால் அயோக்கியன், சுயநலதீ துக்காக எதையும் செய்ய
வசதி
உன்னவன்
என்பதாக
ஏற்பட்டுவிட்டது.
ஆகவே,
மனிதன்
இழிமகனாகவும்,
அயோகீகியனாகவும்
நேர்மை
அற்றவனாகவும்
இருப்பதற்குக்
கடவுள்,
மதம்
ஆகிய
வைகளே காரணமாகும்.
கடவுள்,
மதம்,
வேதம்; சாஸ்திரம்
ஆகியவைகள் உள்ளவரை;
இவற்றின்
மீது
மக்களுக்கு நம்பிக்கை உன்னவரை
மக்களுக்கு
மான உணர்ச்சி
வராது
என்பதோடு,
மனிதர்கள் நேர்மையானவர்களாக, யோகீகியர்களாக இருக்கமுடியாது என்பது உறுதி!
உறுதி ! உறுதியாகும் !
[உ விடுதலை -தலையங்கம்--3--1973]
www.thamizham.net - Free £ book 14௦ 3046
பகுதி VII
நன்னைப்பற்றி
www.thamizham.net - Free £ book No 3046
www.thamizham.net - Free E book No 3046
1. நள் விளக்கம்
1. நான் இந்துவல்ல
தோழர்களே!
எனகீகு
மோட்சதீதிலோ,
பாவ மன்னிப்பிலோ,
கடவுள்
ஆட்சியிலோ
சிறிதும்
நம்பிக்கை கிடையாது.
ஆதீமா என்பதோ,
ஜீவன் என்பதோ ஒன்று இருப்பதாக நான்
நம்புபவனே
அல்லன்.
அது
விஷயதீதில்
எல்லா மதங்களும்
ஒன்றுபோல்தான்
இருக்
கின்றன.
உலகிலுள்ள சகல மதங்களுக்கும், ஒரு சர்வசகீதியுள்ள கடவுளும், மோட்சமும்,
நரகமும், ஆதீமாவும்,
ஜீவனும் உண்டு.
பிரார்தீதிப்பதன்
மூலம் எல்லா மதங்களிலும்
பாவ மன்னிப்பு
உண்டு.
அவற்றில்
ஒன்று
பெரிது)
மற்றது
சிறிது
என்று
சொல்வதற்கில்லை.
பாவ
மன்னிப்பில்
இந்துமதமே
அதிக
மேலான
மதமாகும்.
எவ்வளவு
அயோக்கியனானாலும், கொடுமைக்காரனானாலும் ஒருதடவை ராமா ! என்றோ
¢ சிவர!
என்றோ
சொல்லிவிட்டால்
சகல
பாபங்களும்
போய்விடும்
என்று
சொல்லப்படுகிறது.
அதுகூட வேண்டாம், ஒரு சிட்டிகை சாம்பல் நம்மை அறியாது நம்மீது பட்டிருந்தாலும்
போதும் ! அதைவிடச்
சீக்கிரமாகவும்,
சுலபமாகவும்
மற்ற
மததீதில்
பாவ மன்னிப்பு
இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
ஆதலால், ஆதீமார்தீதம், பாவ மன்னிப்பு என்ப
தற்காக நமக்கு இப்போது மதவிசாரணை தேவையில்லை.
பொதுவாக, மதங்கள் யாரால் சிருஷ்டிக்கப்பட்டிருநீதாலும், அதனால் என்ன பயன்:
இருநீ.துவந்தாலும் இனி நாம் அவற்றை ஆதரிக்கமுடியாது.
அதை உண்டாக்கினவர்கள்
பெரியவர்களாய், விவேகிகளாய், பரோபகாரிகளாய் இருந்திருக்கலாம்.
அவர்கவிடத்திலும்
எனக்குச்
சண்டையில்லை.
அவரவர்கள்
அந்தந்தக்
கால நிலைமைக்கு
ஏற்றபடி.
அனுகூலிதீதவர்களாய் இருந்திருக்கலாம்.
ஆனால், கின்றைகீகு அவை ஒரு விதத்திலும்
பயன்படா.
உலகப்
பிரயாணதீதில்
அந்தந்தக் காலத்துக்கு ஏற்ற
கால அட்டவணையைப்
(டைம் டேபிள்) பார்க்கவேண்டும்.
போன மாததீது இரயில்வே கால அட்டவணையைக்
கொண்டு மணிபார்தீ.து கிரயி.லுக்குப் போனால் இரயில் தவறிவிடும். இப்போது மாததீதுக்கு
ஒரு கைடு? ஏற்படுகிறது.
கிறிஸ்துநாதர்தான்
ஆகட்டும்,
முகமது நபிதான்
ஆகட்டும், னீ.நாராயண
குரு
ஸ்வாமிதான் ஆகட்டும்--அந்தக்
காலதீதுக்கு அவரவர்கள் சரியானவர்களா யிருக்கலாம்.
எப்போதைக்கும்
எந்தெந்தக்
காலத்துக்கும்
அவர்கள்தாம்
வழிகாட்டிகள்)
அவர்கள்
சொன்னதுதான் எல்லாக் காலதீதுக்கும் பொருந்தும்
என்றால் அதை
நாம் ஒத்துக்கொள்ள
முடியாது.
காலம்
மாறிவருகிறது)
அறிவும்
ஞானமும்
பெருகிவருகிறது)
இனியும்
அபாரமாய் மாறிவரும்.
இந்தச் சமயதீதில் 5000 வருடம், 2500 வருடம், 2000 வருடம், 1500
வருடங்கட்கு
முந்திய
விஷயங்களைப் பார்தீ துக்கொண்டு, அப்போது
இருந்தவர்கள்.
சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அவைகளில் எதுமேல்,
எ.துகீழ்,
யார் பெரியவர் என்று
பார்ப்பது பயனற்ற செயல்.
இந்து
மதம்
என்பது
ஒன்று
இல்லையானாலும்,
அதற்காகச்
சொல்லப்படும்
கொள்கைகள் மகா புராதனமானவை,
அதைவிட
புதீதர் உபதேசம் சிறந்ததாக இருக்க
நியாயம் உண்டு.
அய்யாயிர வருடதீது நிலையைவிட 2500 வருடத்து நிலை மேலானது
தானே!
அதைவிட கிறிஸ்து மதம்-2000 வருடத்திற்கு முன் ஏற்பட்டது -மேலானதாய்
இருக்க நியாயம் உண்டு.
புதீதரை அனுசரித்தே சில கற்பனைகளை கிறிஸ்து அப்போ
1686—254
www.thamizham.net - Free E book No 3046
2022
பெரியார் ஈ, வெட ரா. சிந்தனைகள்
தைக்கு அனுபவ சாதீதியமாய்ச் சொல்லிப் போனார். அதைவிட முகமது மதம்-1500 வருடங்
கட்கு முன் ஏற்பட்டது--மேலானதாக
இருக்கக் கூடுமல்லவா?
முகமது நபி பாலைவன
அக்கிரமங்கள் சகிக்கமாட்டாமல் புதீதர் சொன்னதையும் கிறிஸ்து சொன்னதையும் அலசிப்
பார்தீ.து, கால தேசதீதுக்கு ஏற்றமாதிரி திருத்தினார்.
இவர் அவர்கள் இருவரையும்விட
மேலானவராய் இருக்கலாம். அந்தக் காலதீதில் அவர்கள் மேதாவிகளாய் இருந்திருக்கலாம்.
அந்தக் காலப் புத்திக்கும் மேதாவித் தனதீதுக்கும் தக்கபடி வாழ்க்கைத் திட்டங்கள் ஏற்
படுதீதி யிருக்கலாம்.
அவ்வனவோடு அம்
மதங்களுக்கும்,
அம் மதத் தலைவர்களுக்கும்
மதிப்புக்கொடுப்பதுதான் சரி.
ஒரு மதமும் வேண்டாம் என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும் ஆகும். எனக்கு
மததீதிலும், தெய்வ பகீதியிலும், தியானதீதிலும் நம்பிக்கையில்லை.
சாதி, மதம்,
தெய்வம்,
தியானம் என்கின்ற நான்கு
தத்துவங்களும்
அழிந்தாக
வேண்டும்.
அவை அழியாமல் மனித
சமூகத்துக்குச்
சாந்தியும்,
திருப்தியும்,
௬கமும்
கிடையா,
அதே நிலை அடைந்துதான் ஆகவேண்டும்,
அதுவே எனது கொள்கை
மதம் மக்களுக்கு அபினி (மது) என்றார் ஒரு பெரியார்.
ஆனால்,
நான்
மதம்
மக்களுக்கு விஷம் என்கிறேன்.
மதக்காரனுக்குச் சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை.
மனிதன் முற்போக்கையும் ஒற்றுமையையும் தடுப்பது மதம்.
மனிதனுக்கு மற்ற
ஜீவன்:
களைவிட அதிக புத்தி இருந்தும், மனிதன் அடிமையாய் இருப்பதற்குக் காரணம் மதம்.
ஆகையால், நான் எந்த மததீதிற்கும் விரோதிதான்.
மதங்கள் இந்த நாட்டிலிருந்து
விரட்டப்பட
வேண்டும்.
அவைகள்
ஒழிய,
ஒழிக்கப்பட
வேண்டும்
என்கின்ற
கருதி
துடையவன் நான்.
இதை
நான்
1926-ல்
சொல்லியிருக்கிறேன்.
* குடி அரசில்? எழுதியிருக்கிறேன்.
1926-ல்,
நான் இந்துவாய் இறக்கப் போவதில்லை?
என்று
கூட்டத்தில்
சபதம் செய்து
மிருக்கிறேன்.
1922-ல் நான்
இந்துமத
சசஸ்திரங்களைக்
கொளுதீதவேண்டும்
என்று
காங்கிரஸ் மேடையிலேயே பேசினேன்.
1927-ல்
மனுதர்மம்
முதலிய
சாஸ்திரங்களைக்
கொளுதீதினேன்.
அவைகளை
யெல்லாம் இப்போது 10 வருடம் பொறுத்து இந்தியத் தீண்டாத சமூகத் தலைவர்களும், தீண்டாமைக்கு ஆட்பட்ட சமூகமும் சொல்லி, அவற்றைத் தீர்மானம் மூலமாகச் செய்யும் காலம் வந்துவிட்டது.
அதே மாதிரியாக, கடவுள் நம்பிக்கையும் சமீப காலத்தில் ஆட்டம் கொடுக்கப் போகிறது என்கிற விஷயத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. பிறகு பணம், தனி உடைமை விஷயத்திலும் இந்தக் கதியே ஏற்படும்.
ஆதலால், பிற்கால வாழ்வில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், புத்திசாலித்தனமாய், காலதேச சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி படிப்படியாய், அனுபவ சாரதीயமாய் நடந்துகொள்ள வேண்டும்.
[கொச்சி, மட்டாஞ்சேரியில் சொற்பொழிவு--4 குடி அரசு 8 31-5-1936]
8. என் அனுபவம்
சாதாரணமாக, சிந்திக்கத் துவங்கிவிட்டோமானால், எந்தச் சங்கதியையும் ஆராயிந்து பார்க்க வேண்டும் என்கிற பழக்கத்துக்கு வந்துவிட்டோமானால் அப்புறம் தானாக எல்லாச் சங்கதிகளின் குறைகளையும் போக்கிக்கொள்ள முடியும். என்னைப்பற்றியே எடுத்துக்கொண்டால் நான் சிறு வயதிலேயே 10, 11 வயதிலேயே வியாபாரத்துக்கு வந்துவிட்டேன். இயற்கையிலேயே, சிறு வயதிலிருந்து நான் கொஞ்சம் தடுக்காயும், எந்தச் சங்கதியையும் ஏன், எப்படி என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுமாய் இருந்ததோடு, வியாபாரத் துறையில் வேறு இருந்ததால் பலரிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் பல அனுபவங்களும், உண்மைகளும் தெரியவந்தன. சாதாரணமாகச் சொல்லுவார்கள், "பையன் நீதிமாய் இருந்தால், அவனை வியாபாரத்தில் போட்டால் புத்திசாலியாகிவிடுவான்; இல்லாவிட்டால் சுங்கக்கேட்டில் போட்டால் திருந்திவிடுவான்?"என்று. ஏன் என்றால், இவைகளில் பலதரப்பட்ட மனிதர்களுடன் அவன் பழகவும், அவர்களிடம், அவரவர்களுக்குத் தகுந்த மாதிரியான காரியம் செய்துகொள்ளவும், சமாளித்துக் கொள்ளவும் வேண்டும்.
அப்படியிருக்கிறபோது, அவனுக்குத் தானாக அறிவு வந்துவிடும் என்கிற கருத்தில் சொல்லுவார்கள். இன்னும் தேவடியாள் வீட்டுப் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களும் பல ரகமான மனிதர்களிடம் பழகவும், காரியம் சாதித்துக்கொள்ளவும் வேண்டியிருப்பதனால் இயற்கையாகவே அறிவு வந்துவிடுகிறது.
எதற்குச் சொல்லுகிறேன் ஆனால்? "இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம்?" என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்தி விட்ட காரணத்தினால் இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராயமுடியாமல் போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப் பகீகம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.
இப்போது நாம் வாழ்கிற இந்தக் காலம் மிகவும் புரட்சிகரமான காலமாகும். கடந்த 50 வருட காலத்துக்கும் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
[மாயவரத்தில், 6-6-1954-ல் சொற்பொழிவு--6 விடுதலை11-6-1954]
8. எதிர்ப்பும் இன்னலும்
தோழர்களே!இங்கு எதிரிகள் கல் போட்டார்கள் என்று கூறினார்கள். இப்படிக் கல் போட்டது காலிகளின் கூலிகளின் செயல் என்றும், எதிர்க் கட்சிக்காரர்கள் தூண்டிவிட்டுப் போடச் சொன்னது என்றும் மட்டும் எண்ணிவிடாதீர்கள். பத்திரிகைக்காரர்கள் ஆட்களைக் கூடவே கூட்டிக்கொண்டு வந்து கல் போடச் செய்துவிட்டு, நாளைக்குப் பத்திரிகையில் "பெரியார் கூட்டத்தில் இன்ன ஊரில் கல் விழுந்தது, கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது!" என்று பத்திரிகையில் பெரிதாக எழுதவே இப்படிச் செய்கின்றார்கள். ஒரு ஊரில் கல் போட்டதாகச் செய்தி வெளியே வந்தால், எல்லா ஊர்களிலும் கல் போட்டுக் கலவரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்றே செய்கின்றார்கள்.
அடுத்து, கொஞ்ச நாளைக்கு முன்பாக சேலம் கல்லூரியில் பேசுவதற்கு அழைக்கப் பட்டுச் சென்று இருந்தேன். யானையைவிட்டு மாலை போடச் செய்து, சிறந்த முறையில் வரவேற்று, ஊர்வலமாக மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். 3500-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நகரப் பொது மக்கள் முதலானவர்களும் குழுமி இருந்தார்கள்.
நான் பேசிக்கொண்டு வரும்போது இரண்டொரு ஜனசங்க மாணவர்கள்"கடவுளை, மதத்தை, சாதியைப்பற்றிப் பேசக்கூடாது!" என்று எங்கோ ஒதுக்கில் இருந்து சதீதம் போட்டு இருக்கின்றார்கள். அதனைக் கண்ட மாணவர்களில் பலர் "சாதியை, மதத்தை, கடவுளைப் பற்றிப் பேசுங்கள்!" என்று சதீதம் போட்டார்கள். இப்படித் திடீர் என்று சதீதம் கேட்டதும் மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கடவுளை, மதத்தை, சாதியைக் கண்டித்துப் பேசாதே? என்று சத்தம் போட்டவர்கள் நழுவிவிட்டார்கள். அவ்வளவுதான்.ஒருசமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோல் கார்வைக்குக் கொள்ளாத காலம் அது. இருட்டு அதிகம் இருந்த ஓர் கிடத்தில் இருந்து ஒருவன் என்மீது செருப்பினை வீசினான். அது எனது ரிக்ஷாவின் முன் விழுந்தது. அதனை எடுக்கச் சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது -- செருப்பு நல்லதாக இருக்கிறது! ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்!"திருப்பி ரிக்ஷாவை விடு அந்த இடத்திற்கு, இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக் கொள்ளலாம்?" என்று ரிக்ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த கடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான்."மிக்க நன்றி!இரண்டு செருப்பையும் வீசியமைக்கு?" என்று சொல்லிவிட்டு ஜாக்கிரதைக்குத் திரும்பினேன்.
தோழர்களே!எந்தக் கடலூரில் என்மீது எந்த இடத்தில் செருப்பு வீசப்பட்டதோ, அதே கடலூரில் அந்த கிடத்திலேயே இன்று எனது சிலை அங்கு எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில்"இந்த கிடத்திலேயே தான் கடந்த வருஷம், மாதம், தேதியில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது?"என்று குறிப்புள்ளார்கள்.
சிவகங்கையில் ஓர் ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலம் வரும் வழியில் காங்கிரஸ் காரர்கள் என்னை அவமானப் படுத்த செருப்புக்களால் தோரணம் கட்டி இருந்தார்கள்;அதுவும் மிகத் தாழ்வாகக் கட்டி இருந்தார்கள். சாரட்டில் ஊர்வலம் வரும் எனது தலையில் அது தட்ட வேண்டும் என்று எண்ணியே செய்தார்கள். பிறகு கூட்டத்தினர் ஆயுதங்கொண்டு தோரணத்தை அறுத்தெரிந்தார்கள்.
இப்படிப் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களின் கூலிகளும், காலிகளும் கல்லெறிவதோ, காலித்தனம் செய்வதோ, எனது பொது வாழ்வில் புதிதல்ல! இங்கு கூட்டத்தில் ஓர் மூலையில் கல் போட்டான். தோழர்களே!நான் கல்லடியே வாங்கியிருக்கிறேனே! அழுகிய முட்டையால் அடிப்பார்கள்,மலத்தைவாரி அடிப்பார்கள்;இதுகள் என்ன செருப்படியே வாங்கியிருக்கிறேனே!
அடுத்து ஒரு சம்பவம். மதுரை மாவட்டம் சின்னாளப்பட்டி என்ற பெரிய ஊருக்குக் கூட்டத்திற்குப் போய் இருந்தேன். காங்கிரஸ்காரர்கள் கல்லெறிந்து களாட்டா செய்து கூட்டம் நடத்த முடியாத மாதிரியில் காலித்தனம் செய்தார்கள். பாதுகாப்புக்கும் போதிய அளவுக்குப் போலீஸ் இல்லை. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்,"கலவரம் அதிகரிக்கிறது போல் உள்ளது,கூட்டத்தைக் கலைத்துப் போடுங்கள்?"என்று கேட்டார்கள். நான் அதற்கு,"நானாக ஒன்றும் கலைக்க மாட்டேன். நீங்கள் வேண்டுமானால் உங்களால் சமாவிக்க முடியவில்லை என்று கலைத்துப் போடுங்கள்?" என்று கூறிவிட்டுப் பேசத் தொடங்கினேன். கல்வீச்சு குறைந்த பாடில்லை!கல்வீச்சினால் மின்சார விளக்குகள் உடைந்து நொறுங்கின. ஒரு கல் வந்து எனது கையில் பலமாகப் பட்டது. அந்த அடியின் காரணமாக எனது கை இன்று சற்று வளைந்தும் பலகீனம் உள்ளதாகவும் இருக்கிறது.
நிலைமை மோசமானதைக் கண்ட போலீஸ் அதிகারி மேடை ஏறி,"கூட்டம் கலைக்கப்பட்டது?" என்று கூறி, என்னைப் பாதுரக்ষமாக ஊருக்கு அனுப்பிவைக்க ஓர் மாட்டு வண்டியில் ஏற்றி, அம்பாசமுறை என்ற இரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார்கள். எதிரிகள் கல்லெறிவதை அப்பொழுதும் நிறுத்தவில்லை. ஸ்டேஷனுக்குப் போனோம். வண்டி வர நேரமாகும்போல் இருந்தது. எங்கு இங்கும் வந்து கலவரம் செய்யப் போகின்றார்களோ என்று எண்ணி, போலீஸார் ரோட்டில் சென்ற லாரியினை நிறுத்தி அதில் ஏற்றிக் கொண்டு போய் திண்டுக்கல் ஸ்டேஷனில் இரயில் ஏற்றிவிட்டார்கள்.
தோழர்களே!அப்படிப்பட்ட ஊர் இன்று எப்படி மாறிஉள்ளது! கல்லெறிந்த கையாலே மாலை போட்டல்லவா வரவேற்றார்கள்!இன்றைக்கு வருடத்திற்கு இரண்டு தடவைக்குக் கட்டாயமில்லாமல் அல்லவா அழைத்து எனது பேச்சைக் கேட்கின்றார்கள்!
இத்தகைய அவமானம், அவமதிப்புக்கள் எல்லாம் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கிற எனக்குப் புதிதல்ல! அதன் காரணமாக எனது பெருமையோ, மதிப்போ இழந்துபோய்விடவில்லையே! வேண்டுமானால் அதிகரிக்கத்தான் செய்தது என்றுதான் கூற வேண்டும்.
பொதுத்தொண்டில் ஈடுபடுகிற வர்கள், அந்தத் தொண்டில் ஈடுபட்டுச் செயல் புரிவது காரணமாக மான அவமானம் ஏற்பட்டால் அதுபற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க கூடாது. தனிமனித வாழ்வுக்குத்தான் மானம் முக்கியமே யொழிய, பொதுவாழ்வில் மானம் பார்த்தால் பொதுத்தொண்டில் விளையக்கூடிய பலன் பிரயோசனம் அற்றதாக ஆகிவிடும்.
எனவே, எனது பொது வாழ்வில் பலவித எதிர்ப்புக்களுக்கும் இன்னல்களுக்கும் இடையேதான் வளர்ந்து வருகிறேன்.
[நெல்லையில் 1-2-1973-ல் சொற்பொழிவு விடுதலை 1-24-3-1973]
4. நான் யார்?
எனது குடும்பம் ஒரு வைதிகக் குடும்பமாகும்!குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சதீதிரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதிவைத்திருக்கிறார்கள், என்ற போதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மகளால் ஒரு புரட்சிக் காரன் என்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம், வேதம், இதிகாசம் முதலியவைகளையும் நம்பிப் பின்பற்றிக்கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம் மாதிரி, அவைகளில் இருந்து வெளியேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்த வர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சி செய்தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக்கொண்ட வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லிவருகிறேன்.
[கான்பூரில் 29, 30, 31-12-1948 சொற்பொழிவு! குடி அரசு! 13-1-1945]
7. வே. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையே, இந் நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறபற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத் தொண்டுக்குத் தகுதியுடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.
(கையெழுத்துப் படி : ஆதாரம்)
www.thamizham.net - Freebook No 3046
2026
5. நான் எப்படி?
தலைவர்களே! தோழர்களே!நான் ஒரு சுதந்திர மனிதன்! எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்கள் சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைதள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமைவிரும்பிகளானாலும் இதற்கு கடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.
[திருப்பூரில் சொற்பொழிவு- புரட்சி17-12-1933]
8. நான் சொல்லுவது கட்டளையா?
சகோதரர்களே!நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்வித தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசி அல்லன். ஆகையால், தனி மனிதன் என்கிற முறையில்தான் எனது அபிப்பிராயங்களையும் நான் பறர்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கிறேன். "ஒரு
பெரியார்
உரைதீதுவிட்டார்!
என
நீங்கள்
கருதி
அப்படியே
அவைகளைக்
கேட்டு
நம்பிவிடுவீர்களானால்,
அப்பொழுது--நீங்கன்
யாவரும்.
அடிமைகளே 1
* நான் உரைப்பதை
நீங்கள்
நம்பாவிட்டால்,
£ பாவம்?
என்றாவது,
¢ தோஷம்? என்றாவது அல்லது
¢ நரகதீதுக்குத்தான் போவீர்கள் ? என்றாவது சொல்லிப்
பயமுறுதீதவில்லை.
யார் உரைப்பதையும்
நாம் கேட்டு,
¢ வேத வாக்கு ? என அப்படியே
நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
ஆகவே,
நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள் ! உங்களுக்கு அவைகள்:
உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக்கொள்ளுங்கள் ) இல்லாவிட்டால் தன்னி
விடுங்கள்.
உண்மையெனப்
புலப்படுமாகில்
அவைகளை
உண்மையென
ஒப்புக்
கொள்வதில்
மட்டும்
பிரயோசனம் இல்லை] அவைகளை
அனுஷ்டானதீதில்
கொண்டு
வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள்.
எனது சொந்த அனுபவங்கனை
நானறிந்து
உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை.
அவைகளை
ஆராய்ந்து அறிவது,
அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
(¢ விடுதலை 8-கட்டுரை--8-10-1951.
7.
என் துணிவு
தோழர்களே 1
¢ நான் ஒரு அதிசயமான மனிதன்)
மகான் 1 அப்படி,
இப்படி!
என்றெல்லாம்
கூறுபவன் அல்லன் ] ஆனால், துணிவு உடையவன் ] கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத்
தணிந்து
அப்படியே
கூறுபவன்,
மற்றவர்கள்--சுயநலதீதுக்காக,
சுயநலத்துடன்:
பாடுபடுகின்றார்கள் $ அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக
மாட்டார்கள் ] அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள்.
நான் கண்டதை--அறிந்ததை மகீகள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் $ மக்கன்
எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புதீதான் கிடைக்கும்) சுயநலம் கெட்டுப்போகும்.
[சாமிமலையில், 24-1-1960- சொற்பொழிவு- விடுதலை? 51-1-1960]
www.thamizham.net - Free £ book 14௦ 3046
2027
8. நான் ஒரு தொண்டன்
தோழர்களே !
நான் ஒரு பிறவித் தொண்டன்) தொண்டிலேயேதான் எனது உற்சாகமும் ஆசையும்
இருந்து வருகிறது.
தலைமைத் தன்மை
எனக்குத் தெரியாது.
தலைவனாக இருப்பது
என்பது, எனக்கு
இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையான.துமான காரியம்.
ஏதோ
சில நெருக்கடியை உத்தேசிதீதும், எனது உண்மைத் தோழரும்
கூட்டுப் பொறுப்பாளரு
மான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப்
பதவியை
ஏற்றுக்கொண்டிருக்கிறேனே
யொழிய,
இதில்
எனக்கு
மனச்
சாநீதியோ,
உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைகிகும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து
வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.
[சென்னை கன்னிமரா ஓட்டலில், 6-10-1940-ல் சொற்பொழிவு” குடிஅரசு? 18-10-1940]
9. நான் மாறுவது ஏன்?
அக்கிரசனரவர்களே !
சகோதரிகளே!
சகோதரர்களே 1
நரன்
அடிக்கடி
கொள்கையில்
மாற்றமடைபவன்
என்று
சொல்லப்படுகிறது.
உண்மையாக இருக்கலாம்,
நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ! ஒரு மனிதன், அவன்:
பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்சொண்டே
இருக்கின்ற ஒரே நிலைக்காரன்
என்று
சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா₹
எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்க
வேண்டும்
என்று
நீங்கள்
ஏன்
ஆசைப்படுகிறீர்கள்₹
அதனால்
உங்களுக்கு
என்ன
இலாபம் ?
மாறுதல்
முற்போக்குள்ளதா,
பிற்போக்குள்ளதா?
அதனால்
மக்களுக்கு
நன்மையா, தீமையா ₹ என்பன போன்றவைகளைக் கவனிக்கவேண்டியதுதான் அறிவாளி
களின் கடமையாகும்.
மற்றும்,
பொது நன்மையை
உதீதேசிதீது-கஷ்டப்படுகிற
மக்கள் நன்மையை
உத்தேசித்து மாறினானா ₹ அல்லது, சுயநலதீதிற்கு-அக்கிரமமான இலாப மடைவதற்கு
மாறினானா என்று பார்க்கவேண்டும்.
யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்
பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம்.
அதைப்பற்றிய கவலை
ஏன்?
யார் எப்படி மாறினாலும்
பார்கீகின்றவர்களுக்குப்
புத்தியும்
கண்ணும் சரியாய்
இருந்தால், மாற்றத்தைப்பற்றி ஒன்றும் ஆபதீது வந்துவிடாது.
நான் பலதடவை
மாறி இருக்கலாம் ] பல
குட்டிக் கரணங்கள் போட்டிருக்கலாம்;
சயநலதீதிற்காகவும்
போட்டிருக்கலாம்)
பச்சோந்தியாயும்
இருக்கலாம்.
அதனால்
உங்களுக்கென்ன
கெடுதி?
நாடகக்
கொட்டகையில்
நாடகம்
பார்க்கின்றபோது
ஒரு
மனிதன் எத்தனை
வேடம்
மாறிமாறிப்
போட்டு நடிப்பதை
நீங்கன்
காசு
கொடுத்துப்
பார்தீ.துவிட்டு, நடிதீதவனையும் புகழ்ந்துகொண்டு போகின்றீர்களா, கில்லையா ?
கோயில்
கட்டிய
மக்கன்,
கோயிலை
இடிக்கவேண்டியவர்களாகி
விடுவார்கள்
அகிம்சை பேசுபவர்கள் பலாதீகாரத்தைப் பேசவேண்டியவர்களாகி விடுவார்கள்.
கராஜ
விசுவாசிகள் கிராஜதீ துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளை
யடிக்கச்
சொல்வார்கள்.
இப்படியாக;
அபிப்பிராயங்கள்
மாறிக்கொண்டு
போகலாம்.
இவற்றையெல்லாம்,
அபிப்பிராயங்கள்
மாறியதாலேயே
குற்றம்
என்று
செசல்லிவிட
முடியாது.
தங்களை
* நல்ல
சூத்திரர்கள்?
என்று
சொல்லிக்கொண்டு,
பார்ப்பனர்கள்.
கால்களைக்
கழுவிய
தண்ணிருக்குப்
பவுன்
கொடுத்துச்
சாப்பிட்டவர்கள்
இன்று
6 சூத்திரன் என்றால்
ஆதீதிரம் கொண்டு அடி? என்றும்,
* பார்ப்பனர்கள் ஜாக்கிரதை?
என்றும்
ஏன்
சொல்லுகிறார்கள்?
இந்த
மாற்றத்தால்
இப்படிச்
சொன்னவர்கள்:
www.thamizham.net - Free £ book No 3046
2028
பெரியார் ஈ, வெ, ரா. சிந்தனைகள்
அயோக்கியர்கள் ஆக முடியுமா? தவிர, *சூதீதிரன் பணம் வைதீதிருநீதால், பிராமணர்கள்:
பலாதீகாரதீதால்
அதைப்
பறிதீ.துக்கொள்ளலாம்?
என்று
மனு தரீம
சாஸ்திரத்தில்
இருந்தது மாறி இப்பொழுது
வெள்ளையர்
தர்மதீதில்,
¢ தந்திரங்கவினாலும்
சூழ்ச்சி
யினாலும்
மாதீதிரந்தான்
பறிதீதுக்கொள்ளலாம்?
என்கின்றதான
மாறுதல்
ஏற்பட்டு
விட்டது.
நாளை,
ஒரு
சமயம் சமதர்ம
காலதீதில், பிராமணர்கள்
(சரிரதீதால் பாடு
படாதவன்) சொதீது வைதீதிருந்தால், மற்றவர்கள் பலாதீகாரதீதில் பிடுங்கிக்கொள்ளலாம் ?
என்று
ஏற்பட்டாலும்
ஏற்படலாம்.
இந்தமாதிரி
மாறுதல்கள்
காலத்திற்கும், பகுத்தறி
விற்கும், நாட்டின் முற்போச்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும்.
எனவே, நான்.
மாறுதலடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை.,
நாளை நான்
எப்படி மாறப்போகின்றேன் என்பது எனக்கே தெரியாது.
ஆகையால், நான் சொல்வதைக்
கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.
[நாகையில், 8-10-1952-ல் சொற்பொழிவு--4 குடி அரசு? 11-10-1931]
சுயமரியாதை
இயகிகதீதிற்கு
அரசியல் பிரதானமல்ல,
ஆனால்,
சுயமரியாதை
இயக்கதீதின்
கொள்கை
நலத்துக்கும்,
திட்டங்களின்
வெற்றிக்கும்
கேடு
செய்யவே
காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக்கொண்டு சூழ்ச்சி செய்
கிறார்கள்
என்று நாங்கள்
கருதுகிறவரை--அக் காங்கிரசை
ஒழிக்கும் அளவுக்குச் சுய
மரியாதை இயக்கம்
அரசியலைப்பற்றிப் பேசவும்,
அரசியலைப் பிரதானமாய்க்கொண்ட
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவனிக்கவும் கடமைப்பட்டிருக்கிறது. ஆதலால்தான், இன்று நாங்கள்
ஜஸ்டிஸ்
கட்சித்
தலைவர்கள்
கவலையற்றேோ
தைரியமற்றோ,
எதிரிக்கு ஆளாகியோ,
அயர்ந்து போயோ, கட்சிக்குத் துரோகம் செய்துகொண்டோ இருக்கிறார்கள். என்றாலும்--
நாங்கள் அதை இலட்சியம் செய்யரமல்
அக்
கட்சிக்கு
உழைக்கின்றோம்.
அக்
கட்சி
மறுபடியும் வெகு
சீக்கிரதீதில் தனது உசீசஸ்தான நிலைக்கு வரப்போகிறது என்பதில்
உறுதியான நம்பிக்கை கொண்டே உழைதீதுக்கொண்டிருக்கிறோம்.
[சேலம், ராசிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் 7, 8, 9-11-1937-ஃ சொ, ற்பொழிவு-
¢ குடி அரசு? 14-11-1937]
40. என் திருமணம்
பெரியோர்களே ! தோழர்களே 1
எனது
சொற்பொழிவை
முடிக்கும்
முன்பு
எனது
திருமணம்
பற்றிச்
சில
வார்த்தைகள்
கூற
நான்
ஆசைப்படுகிறேன்.
என்-இதீ திருமணதீதால் இயக்கத்திற்கு
ஏதோ
பெரிய
குறைபாடு
ஏற்பட்டுவிட்டதாகச்
சிலர் தவறான
பிரச்சாரம்
செய்துவரு
கிறார்கள் $
சிலர்
இதே
காரணதீதால்
இயக்கத்தைக்
கைப்பற்றித் தங்கள்
இஷ்டப்படி
திருப்பிப் பயன் பெறலாம் என்று கருதி விஷமம் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி நான்
ஏதாவது பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆதலால், அதுபற்றிப் பேசுவதும்
சற்று அவசியமாக இருக்கிறது.
நான்
எந்தக்
காரியத்தையும்
இரகசியமாகச்
செய்வதில்லை,
ஒரு
ஆண்டாகச்
சொல்லிக்கொண்டு வந்த
காரியதீதைதீதான்,
திருமணம் என்பதாக--என்
கருத்துக்குப்
பொருந்த,
சட்டப்படி--அதாவது
பதிவுச்
சட்டப்படி
வாரிசு
உரிமை
பதிவு
செய்து
கொண்டிருக்கிறேன்.
அதோடு; அப்படிச் செய்துகொள்ள நேர்ந்த அவசியத்தையும், மூன்
கூட்டியே விளக்கிச் சொல்லியிருக்கிறேன் ) பல அறிக்கைகள் மூலம் விளக்கி இருக்கிறேன்.
மனைவி வேண்டும்
என்பதற்காக நான்
திருமணம் செய்து கொள்ளவில்லை
என்றும்
தெவிவாய் விளக்கியிருக்கிறேன்.
ஏனெனில்,
மனைவி வேண்டுமென்றிருந்தால்
சுமார்
www.thamizham.net - Free £ book 14௦ 3046
தன்னைப்பற்றி
2029
15 வருடங்களுக்கு
முன்பு, எனது மனைவி இறந்த தருவாயிலேயே--என் பெற்றோரும்,
சுற்றத்தாரும் என்னை மறுமணம் புரிந் துகொள்ளும்படி வற்புறுத்திய்போதே திருமணம்
செய்துகொண்டிருப்பேன் ] அப்போது
பிடிவாதமாக
மறுதீதுவிட்டவன்
என்பதோடு,
மனைவி
இறந்து போனபோது நான் மகிழ்ச்சியும் தெரிவித்து இருக்கிறேன்.
ஆனால்,
தற்போது
பதிவு
செய்து
கொண்டதானது
எனது
தொண்டிற்கு
வசதியும்,
நல்ல
நம்பிக்கையான பாதுகாப்பும், வாழ்க்கைக்கு ஆதரவும், மற்றும் பல வசதிகளையும்) எனது
வயது முதிர்நீத தள்ளாத நிலையையும் உத்தேசித்து இந்தப்படிச் செய்துகொள்ளவேண்டி
ஏற்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தேன்.
எனக்கு
நம்
மக்களிடதீதுச்
சுமார்
60 வருட காலம் அனுபவம் உண்டு.
இநீத
60 வருட காலத்தில்
மக்களின் யோக்கியதை, நாணயம், ஒழுக்கம் அப்போது இருந்ததை
விடக் கொஞ்சம்கூட மேம்பாடு அடையவில்லை. மக்களுடைய யோக்கியதை மேம்பாட்டை விட மட்டுமல்ல—கொஞ்சம் கொஞ்சமாக ஒழுக்கம், நாணயம் குறைந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை எனது பொதுநல வாழ்வில், தொண்டில் நான் எடுத்துக்கொண்ட வேலையைத் தொடர்ந்து நடত்திவர எவ்வளவோ தேடியும் எனக்கு ஒரு உற்ற தோழர்—கூட்டு வேலைக்குத் தகுதியான, நம்பிக்கையான தோழர் இன்று வரை கிடைக்கவே இல்லை. நான் யார் யாரை ஏற்றவர் என்று கருதினேனோ அவர்கள் மீதெல்லாம் சந்தேகம் கொள்ளும்படி ஏற்பட்டது. சந்தேகம் கொள்ளும்படி ஏற்பட்ட சில நாட்களுக்குள்ளாக—அதை அவர்கள் தெரிந்துகொண்டவுடன் அவர்களாலேயே நான் வஞ்சிக்கப்படவும், அவர்களுடைய ஏமாற்றுக்கும் நயவஞ்சகத்திற்கும் ஆளாகவும் ஏற்பட்டது. யாரையும் நம்பமுடியவில்லை; உயிருக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்பதோடு, நான் சாப்பிடும் சரப்பாட்டில் எங்கு விஷம் கலந்திருக்கக் கூடுமோ என்று சந்தேகப்படக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் இயக்கத்தின் கவலை இவைகளைப் பற்றி அலட்சியமாக இருக்கவும் என் மனம் விருப்பப் படவில்லை। ஒரு வேளை வயதாகிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்ததே போதும் என்று இதுவரை திருப்தி அடைந்திருந்தாலும், இயக்க நிலையை உத்தேசித்து இயற்கை சாவு வரும்வரையில் கொஞ்சம் காலம் உயிருடன் இருந்தால் தேவையாகப் போல் தோன்றுகிறது. மேலும், தமது தொண்டின் பயனை மக்கள் இப்போதுதான் உணர்ந்து, போற்ற ஆரம்பித்திருக்கிறார்களாதலால், இந்தச் சமயத்தில் நாம் தற்கொலை செய்துகொள்வதுபோல் அலட்சியமாக இருந்து, இயற்கைக்கு முரணான முடிவுக்கு ஆளாகாமல்—வாய்ந்த காலம் இருந்து பணிசெய்தால் நமது இலட்சியம் சீக்கிரம் கைகூட வசதியாயிருக்குமே என்று தோன்றுகிறது. இதோடு இத்தொண்டு, மக்களின் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாத தொண்டாதலால், இது நமக்குப் பின் என்ன ஆகுமோ என்ற அச்சத்தால், நமக்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற்றுவர ஏதேனும் ஏற்பாடு செய்துவிட்டுப் போகவேண்டும் என்ற ஆசையும் கலநீது கொண்டு விட்டது.
இதற்காக நான் நம்பின ஆண்கள், எதிர்பார்த்த ஆண்கள் என்னை வஞ்சித்து மோசம் செய்ததைக் கண்டும், நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குப் பெரிதும் முட்டுக்கட்டை போடும் சதிவேலைகளால் தோல்வியுற்றேன். யாரையாவது தத்து எடுத்துக்கொண்டு அந்த வாரிசின் மூலம் எனது தொண்டு தொடர்ந்து நடைபெற்றுவர ஏற்பாடு செய்யலாம் என்றும் நினைத்தேன். அந்தத் தத்துக்கும் ஏற்பாடுசெய், நாள் குறிப்பிட்டு, பதிரம் வாங்கி நகலும் எழுதிச் சம்பந்தப்பட்ட வர்கள் அனுமதியும் பெற்றேன். அந்த 'சாப்' (chappa) காகிதம்—அந்த நகல் இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. கடைசியாக இன்றைய எனது எதிரிகளான துரோகிகள் சிலர், அதை நடைபெற ஒட்டாமல் செய்து அச் சிறுவனின் புத்தியைக் கெடுத்து, சதிக் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு என் கருத்தை நிறைவேற்றவொட்டாமல் செய்து, என்னை ஏமாற்றமடையச் செய்துவிட்டார்கள். ஆகவே, மறு ஏற்பாடு செய்யவேண்டியதாகிவிட்டது.பிறகு நட்பின் முறையில் யாராவது கிடைப்பார்களா என்று தேடினேன். அதிலும் ஏற்ற ஆள் கிடைக்கவில்லை. சிலர் நம்பக்கூடியவர்கள் ஆனாலும், நான் நம்பிய ஆட்கள் அவ்வளவு பொறுப்புடையவர்களாகவோ, செய்கை உறுதி சம்பந்தமாகப் பகுதிறிவுடையவர்களாகவோ, பொறுப்புடைய முழு நேரத் தொண்டாற்ற வசதியுடையவர்களாகவோ இருப்பவர்களாகக் கருதமுடியவில்லை. அதனாலேயே நான் இந்த கரண்டு ஆண்டுகளாக'எனக்கு நம்பிக்கையான ஆள் யாரும், இயக்கத் தொண்டுக்குக் கிடைக்கவில்லையே!'என்கின்ற என் கவலையைத் தெரிவித்துக் கொண்டு வந்திருக்கிறேன்.
இதெல்லாம் இன்றைய என் எதிரிகளுக்கு—எதிர்க் கிளர்ச்சிக்காரர்களுக்கு நன்கு தெரியுமென்றாலும், அவற்றைத் தங்கள் விஷம, துரோகப் பிரச்சாரத்திற்குத் திரித்துக் கூறிப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். நான் யாரையும் நம்பவில்லையென்று—பொறுப்பும் அறிவுமற்ற மக்களிடம் சொல்லி, என் மீது கெட்ட எண்ணம் ஏற்படச் செய்துவிட்டனர். உங்களில் யாரேனும் ஒருவருக்கு ஒரு பொறுப்புள்ள ஆள் வேண்டுமென்றால், ஒரு நம்பிக்கையுள்ள ஆள் வேண்டுமென்றால் உங்களிடம் பழகிக்கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமானவர்கள் யாரோ, அவர்களைப் பற்றித்தானே நீங்கள் நினைப்பீர்கள்!அப்படி நினைக்கப்பட்டவர்மீது உங்களுக்குப் பூரண நம்பிக்கை ஏற்படவில்லையானால் நம்பிக்கையான ஆள் கிடைக்கவில்லை என்றுதானே நீங்களும் குறிப்பிடுவீர்கள்!அப்படி நம்பிக்கையான ஆள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டால் உலகத்திலுள்ள யார்மீதுமே நம்பிக்கை இல்லை என்றா அர்த்தப்படும்?நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! நான் அப்படிக் கூறியதன் உண்மை அர்த்தத்தைக் கண்டு தெளியுங்கள்.
நான் எனக்கு நம்பிக்கையான ஆள் கிடைக்கவில்லை என்பதைத் திருமணத்தின் போது மட்டுமே சொல்லவில்லை; அதற்கு முன்பே இரண்டாண்டுக்கு மேலாகவே பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். சுற்றியுள்ள ஆட்கள்மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக நான் தெரிவித்துவிடவே, சுற்றியிருந்த நபர்களும் வெளிப்படையாகவே தம் கிளர்ச்சியைத் துவங்கினர். கடைசியாக திருவண்ணாமலையில் நான் தோழர் ராजகோபாலாசாரியாரைச் சந்தித்ததையொட்டி, கோவை மாநாட்டிலேயே தவறான பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த விஷமப் பிரச்சாரம்—தஞ்சை மாணவர் மாநாட்டில் வளர்ந்து காட்டியது. தஞ்சையில் அவர்கள் செய்த விஷமப் பிரச்சாரம் எனது பத்திரிகையிலும் நான் இல்லாதபோது தைரியமான வஞ்சக புத்தியுடன் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. நான் அதைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் நான் மாவூரில்'மாணவர் பிரச்சார வகுப்பு'நடத்திக்கொண்டிருந்தேன். அங்கு நான் சர் சர்மா அவர்கள் வீட்டில் தங்கி இருந்து பிரச்சார வகுப்பு நடத்தியதையும், தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக்கிக்கொண்டு, குற்றம் கூறினார்கள். கோவை குறிப் மாநாட்டில், திரு. இரத்தினசபாபதி முதலியார் அவர்களைக் கலத்து கொள்ளச் செய்ததைப்பற்றியும், நான் அவர்கள் வீட்டில் தங்கியதைப்பற்றியும் குற்றம் கூறினார்கள். மற்றும்,'என்னைப் பார்ப்பனத் தலைவர்கள் சிலர் காண ஆசைப்படுகிறார்கள். அவர்களுடன் கலந்து பேசப் போகிறேன்?' என்று வெளியிட்டதையும்—தங்களுக்கு அனுகூலமான சாதனமாக ஆக்கிக்கொண்டு, நான் பார்ப்பனர்களுடனும், பணக்காரர்களுடனும் கூடிக் குலாவ ஆரம்பித்துவிட்டேன் என்று குற்றம் கூறினார்கள். இவற்றை ஆதாரமாக வைத்துக்கொண்டே என்னை ஒழித்துவிடலாம் என்று பெரிய கோட்டை கட்டி, அதன்படிக்கேதான் பிரச்சாரத்தையும் துவங்கினர்.
இதை அறிந்த நான் உடனே சதிவேலை துவங்கிவிட்டதென்றும், சதிவேலை அவர்களுக்குத் தொடர்புடைய சம்பந்தப்பட்டவர்கள் இன்னின்னார் என்றும், அவர்களுடைய யோக்கியதை இன்னதென்றும் விளக்கி—இனி, மக்கள் ஜாக்கிரதையாக இவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென்றும்,இவர்களை நம்ப வேண்டாமென்றும்,இனி இவர்கள் பெயர் நம் பத்திரிகையில் வராது என்றும்—ஒரு குறிப்பு எழுதி நம் பத்திரிகைக்கு அனுப்பினேன். அதை எனது பத்திரிகையில் போடாமல் அந்தச் செய்தி உடனே அந்த நபர்களுக்குத்தெரிவிக்கப்பட்ட துடன், எதிரிகளுக்கு வேண்டிய உளவுகள், ஆதாரங்கள் எனது பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து தாராளமாகக் கிடைத்துமேவ ஆரம்பித்துக் கிட்டிவிட்டது. அது என் பத்திரிகையில் போடப்படவில்லை என்றும், அது எப்படி எதிரிக்கு உடனே தெரிவிக்கப் பட்டது என்றும், காரியாலயத்திலுள்ள பொறுப்புள்ளவர்களைக் கேட்டதில் யோக்கியமற்ற பதிலும், பொய்யான பதிலும் கிடைத்தது. வேறு சில சங்கதிகளும் நடந்தன. அதாவது, ஆசிரியர் பொறுப்பிலிருப்பவர் தான் மட்டுமே அதற்குப் பொறுப்பாளி அல்ல என்றும், அதைப் போடவேண்டாமென்று கூறியதாகவும்,மானேஜர் தான், உடனே ஃபோனில் எதிரிக்குச் செய்தி தெரிவித்ததாகவும் சொன்னார். நான் சங்கடத்தோடு மானேஜர் பொறுப்பிலிருந்தவரைக் கேட்க, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று ஒரேயடியாய் மறைத்துவிட்டார். உடனே, நான் ஸ்தம்பித்துப் போனேன். இப்படி முழுப் பொய் கூறும் ஒருவரை எப்படி இனியும் நம்புவது?'எதிரிகள்—இவ்வளவுக்கும் வந்துவிட்டார்களே!'என்று பெரிதும் மனவேதனைப் பட்டேன். நான் சிறிதாவது நம்பலாமே என்று கருதிப் பொறுப்பை ஒப்புவித நபர்கள், இப்படிச் செய்துவிட்டதால் மனமொடிந்து அவசரமாக வேறு ஏற்பாடு செய்யத் துணிந்து, உடனே பதிவுத் திருமண முறைப்படி வாரிசு ஏற்படுத்த முடிவு செய்துகொண்டு, பதிவு ஆபீசுக்குச் சென்று, பதிவுப் பாரம் வாங்கிவந்து, பாரத்தைப் பூர்த்திசெய்து அனுப்பினேன். அது சரியாகப் பூர்த்திசெய்யப்படவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதைப் பூர்த்திசெய்து என்னுடன் கூடவே இருந்த மிக நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் மூலம்—'இரகசியக் கடிதம்' என்று கூறி ரிஜிஸ்ட்ராருக்கு அனுப்பினேன். இரகசியக் கடிதம் என்றால் யாருக்கும் பிறிதுப் பார்க்கவே தோன்றும், அவரும் அப்படியே பிறிதுப் பார்த்தார்போல் இருக்கிறது. அவர் இன்றைய எதிரிகளில் ஒருவராக இருந்திருந்தவர்ஆ, ஆனதால், உடனே மற்ற எதிரிகளுக்கும் அச் சங்கதியைத் தெரிவித்துவிட்டார். என் காரியாலயத்தில் என் சொந்தக் காரியஸ்தர்களாக இருந்தும்—எனக்கு நண்பர்களாகப் போல் இருந்தும் வந்த 100 ரூபாய் சம்பளத்திற்கு மேற்பட்டவர்கள் 5, 6 பேர்கள் உட்பட, பலர் தைரியமாக என் மவுண்ட் ரோடு வீட்டிலேயே கூடிக் கண்டித்து, மற்றும் பல ஆட்களைச் சேர்த்து என்னைக் கண்டபடி வைது, இழித்துக் கூறிக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றினர். தடுத்துப் பேசினவர்களை மிரட்டி அந்தச் சமயத்திலேயே சம்பந்தமான மற்ற சில ரிக்கார்டுகளையும் கடிதங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று தங்கள் எதிர்ப்பு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். பத்திரிகைகளிலும் கண்டிப்புப் பல பொய்ச் சங்கதிகளை 'ஜோடி' அறிக்கை விட்டனர், கட்டுப்பாடான எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்ய முற்பட்டனர்.
என் வீடு தேடி பலாதிகாரம் வருமளவுக்கு—நான் கவலையும் பயமும் அடையும் அளவுக்கு எதிர்ப் பிரச்சாரம் உச்சநிலை அடைந்துவிட்டது. ஊருக்கு ஊர் அறிக்கை—ஆட்கள் பறந்தனர். இவைகள் என் கருத்துக்களில் பூரண உறுதியும் நினைத்த காரியத்தை உடனே முடிக்காவிட்டால் உயிர்ச்சேதம் ஏற்படலாமோ என்ற அபாயமும் தோன்றச் செய்தன. என் சொந்தக் காரியத்தில் பிரவேசித இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளுபவர்கள் என்ன செய்யத் துணியமாட்டார்கள்?ஆதலால், முடித்துவிடுவோம் காரியத்தை என்று முடித்துவிட்டேன்,பயமற்று உலவுகிறேன்.
எதிர்ப்புக்கு ஏமாந்த பொதுமக்கள் 100-ற்கு 75 பேர்—இப்போது அறிவு பெற்று விட்டதைக் காணுகிறேன். சிலர் வெட்கப்படுவதையும், வேதனைப்படுவதையும் காணுகிறேன், அறிகிறேன். தினமும் பல கடிதங்களில் படிக்கிறேன். நான் வாரிசாகச் செய்துகொண்ட மணியம்மை 31 வயதினரும், படித்தவரும், என்னுடன் கூடவே ஆறு ஆண்டுகள் இயக்கப் பணி புரிபவரும், என் நம்பிக்கைக்கு ஆளாகப் பத்திரிகை உரிமை, நிர்வாக உரிமை ஏற்று நடத்துபவரும், பணம் காசு விஷயத்தில் நம்பிக்கையாகப் பொறுப்பாக நடப்பவருமான அப்பேர்ப்பட்டவரை, நான் சட்டப்படியான வாரிசாக—வாழ்க்கைத் துணையாகஆக்கினால் இதில் யாருக்கு, என்ன குறைவு, கெடுதி, நட்டம், ஒழுக்கக்கேடு என்று யோசித்துப் பாருங்கள்!இந்தக் காரியத்தால் ஏற்பட்டது தின்ன தவறென்று கூற, குற்றமென்று கூற ஏதேனும் காரணம் காட்டவேண்டுமே, இந்தப் பகுதிறிவுவாதிகள்! இயக்க நலனை—பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டுமென்று, என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக—உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்ளுகிறேன். இதில் யாருக்குத் தான் தலையிட உரிமை இருக்க முடியும்? யாருக்குத்தான் தகராறு இருக்கமுடியும்?அப்படி நான் மணந்துகொண்ட பெண் 14 வயதுச் சிறுமியா, அல்லது 15 வயதுச் சிறுமியா? ஏதும் மறியாத பெண்ணை ஏமாற்றிச் செய்த காரியமா? வேறு யாருக்காவது உரிமையா?யாருடைய பாதுகாப்பிலாவது இருந்தவரா? தனது நலத்தை, தனது வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியாத, தகுதியில்லாத சிறு பெண்ணா?அல்லது, காசு பணம் காட்டி ஏமாற்றப் பட்டதா? என்னை அறியாததா?அல்லவே.
தம் வீட்டாராலேயே ஆறு ஆண்டுக்கு முன் கொண்டுவந்து ஒப்புவிக்கப்பட்ட பெண் ஆயிற்றே! சொந்த வீட்டிலேயே பூப்படைந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருமணம் செய்துகொள்ளாமல், திருமணம் செய்துகொள்வதில்லை என்று பிடிவாதம் செய்துகொண்டிருந்த பெண், தன் இளமையிலேயே தன் தகப்பனா
தகப்பனாரோடு இயக்க மாநாடு
களுக்கெல்லாம் வந்து, இயக்கம்-கொள்கைகளில் பற்றுதல் ஏற்படுத்திக் கொண்டு தனது
வீட்டிலும்
இயக்கப் பணி செய்துகொண்டிருந்த
பெண்)
வேலூருக்கு
நானும்,
மற்றும்
இயக்கத் தோழர்களும் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போதெல்லாம்--இயக்கப் பற்று
தலால் யாவருக்கும் ஏற்ற பணிவிடை செய்து வந்த பெண்;
1938ஆம் ஆண்டு
* இந்தி
எதிர்ப்பில்?
வேலூர் சிறை சென்றவர்களுக்கெல்லாம் பணிவிடை செய்த
பெண்,
தன்
தகப்பனார் இறந்த பிறகு கறந்த மூன்றாவது மாதமே (1943-ல்) இருந்து, என்னோடு ஆறு
வருட காலமாகப் பழகிச் சுற்றுப் பிரயாணத்தில் கூடவே இருந்து பிரச்சாரம், காரியதரிசி
வேலை, ரிப்போர்ட்டர் வேலை செய்து வரும் பெண்) என்னால் பல தடவை வற்புறுதீதப்
பட்டும், அவர் பெற்றோரால் வற்புறுதீதப்பட்டும்--திருமணம் வேண்டாம் என்று மறுத்து,
தனது இயக்கத் தொண்டே பிரதானம் என்று கருதித் தொண்டாற்றி வந்தபெண்.
அப்படிப்பட்ட ஒரு பெண்ணை--ஆறு வருடம் பழகி எனது முழு நம்பிக்கைக்கும்
பாதீதிரமான ஒரு பெண்ணை-நான் துணைவியாக, நட்பாக; நம்பிக்கைக்கு ஏற்ற வாரிசாக
ஏற்றுக்கொள்ளுகிறேன்
என்றால்,
ஒரு
கூட்டம்
ஏன் ஆத்திரப்பட
வேண்டும்?
அதில்
மற்றவர் பிரவேசிக்க உரிமைதான் ஏது!
கூட இருந்து ஒத்து ஊத ஒரு பத்துப் பேர்கள்
கிடைத்து
விட்டார்கள்
என்பதற்காகவே,
எனக்குத்
தொல்லை
கொடுக்கவேண்டுமா ₹
தொல்லை கொடுக்க ஏதேனும் நியாயமான காரணம் காட்டவேண்டுமே ₹ திருமண
சேதி
விளம்பரமாவதற்கு
முன் தேதிவரை--என்மீது துதிபாடிக் கொண்டிருந்துவிட்டுதீ தமக்கு
வசதி கிடைதீதவுடனே, இவர்கன் என்னை
ஒழிக்க முற்படுகிறார்கன் என்றால்--இவர்கள்
நாணயத்தில், நல்லெண்ணத்தில் எவருக்கும் சந்3தகம் ஏற்படதீதானே செய்யும்? எவ்வளவு
கீழ்நிலைக்கு இவர்கள் வந்துவிட்டார்கள் ? எவ்வளவு துரோகம் செய்ய இவர்கள் துணிந்து
விட்டார்கள் என்பதைத்தானே இச்செயல் காட்டுகின்றது T
இப்படிப்பட்ட
சதிகாரக்
கூட்டத்தை மூன்றாண்டாகவே
உள்ளதீதில்
நம்பிக்கை
வைக்காமல் இருந்துகொண்டு, எனக்கு நம்பிக்கையான ஆள்கிடைக்கவில்லை--எனக்கூப்
பின்னாலே சதிகாரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவந்தது எப்படித் தவறாகும் ₹
நம்
இயக்கத்தின் இன்றைய
நிலை என்னவென்று
:உணர்தீது
பார்தீதாலன்றோ
தெரியும்?
மேல்சாதி,
கீழ்சாதி
என்கின்ற
பேதாயபதம்
ஒரு
அளவுக்காவது
குறைந்
திருக்கிறகுட
பார்ப்பானும் சூதீதிரனும் இன்னும் இருக்கிறார்கள் என்றாலும்--* சூத்திரன்
*
www.thamizham.net - Free £ book 14௦ 3046
தன்னைப்பற்றி
2033
என்று
நம்
காதில்
படும்படிப்
பேச,
இன்று
ஒரு
மேல்சாதிப்
பார்ப்பான் அஞ்சவே
செய்கிறான்.
நாடு
அந்த
நிலைக்குக்
கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பதவிகள்
பல
கைப்பற்றப்பட்டுவிட்டன.
என்றாலும், இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா! இன்னும்
எவ்வளவோ காரியம் நம்மால் சாதிக்கப்படவேண்டி யிருக்கின்றனவே 1 இன்னும் சூத்திரன்.
என்பதற்கான ஆதாரங்கள்
சாஸ்திரங்களிலும் புராணங்களிலும்,
சட்டத்திலும் இருந்து:
கொண்டுதானே
இருக்கின்றன 1
இன்னும்
உதீதியோகங்கவில்
நமக்குச்
சரியான
விகிதாச்சாரம்
கிடைக்காமல்தானே
இருந்துவருகிறது?
சாமி,
மதம், புராணம்
பற்றிய
முட்டாள் தனம் இன்னும் ஒழியவில்லை.
இப்போதுதான்
காங்கிரஸ்காரர்கள்
நம் தொண்டின்
பயனைச்
சிறிது
உணர
ஆரம்பிதீதிருக்கிறார்கள் ) இப்போதுதான்
காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோர் உள்ளங்.
களில் சற்று மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில நம் கழகத்தைச் சேர் நீதவர்கள்
நம்மீது
கல்லெடுதீதுப் போட முன்வருவது?
நம் இயக்கம் நல்ல நிலைக்கு வந்துகொண்:
டிருக்கும் இந்த நேரதீதிலா, நம்மவரே நமக்கு நேர் எதிரிகளாவது? கழகத்தை ஒழிக்கத்
ரோகம்
செய்வது?
நீங்களே சிந்திதீதுப் பாருங்கள்.
நமகீகு இதுவரை
எதிரிகளாக
இருந்துவந்த பார்ப்பனரீகளே,
¢ இன்னும்
இந்தப் பார்ப்பனரீ--திராவிடர் போராட்டத்தை
வளரவிட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகாது.
இருசாராரும் கலந்து பேசி ஒரு
முடிவுக்கு வருவதே நல்லது! என்து ஆலோசிதீதுவரும் இந்த நேரதீதிலா, இத்தகைய சதி
வேலைகள் நமகீகுன்ளாக நடப்பது?
நம் மக்களும் அதை அனுமதிதீதுக் கொண்டிருப்பது?
திருவண்ணாமலைக்குப் பாதாளலிங்கக் கோயிலைத் திறகீக வரும் கவர்னர் ஜெனரல்,
என்னை அங்குவந்து
சந்திக்கும்படி
தந்தி கொடுக்கிறார் என்றால்,
அதற்குக் காரணம்
என்னவாக இருகீகமுடியும் ? தனிப்பட்ட காரணம் எவ்வளவு இருந்தாலும்,
¢ தென்னாட்டில்
விரைவாகச் செல்வாகீகுப்
பெற்றுவரும்
நம் கழகதீதிற்குதீ தான் எதிரி அல்லர்? என்று
காட்டிக்கொள்ளும்
எண்ணமும்
இருந்துதானே இருக்கும் !
சர். சர்மா
அவர்கள்
தன்:
பங்களாவுக்கு வரும்படி என்னை அழைக்கிறார் என்றால் அவருக்கென்ன உள் காரணம்
இருக்கமுடியும் ₹ என்னால்
அவருக்கு
ஆகக்கூடிய
காரியம்தான் என்ன
இருக்கிறது?
நம்
இயக்கம்பற்றி
அவருக்குள்ள
மதிப்புதானே 1
நான் பார்ப்பனியம்
ஒழியவேண்டும்
என்று தினநீதான் பேசிவருகிறேன்.
என்றாலும், பார்ப்பனர்களின் திருமண அழைப்புகள்:
இன்னும்
வந்துகொண்டுதானே
இருக்கின்றன ₹
இதற்கெல்லாம்
நம்
இயக்கத்தின்
வளர்ச்சியும் நேர்மையும்தானே காரணம் ? பார்ப்பனர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுவரும்
மாறுதல்தானே காரணம் ₹ இவ்வளவு வசதியும்
ஏற்பட்டுவரும்
இந்தச்
சந்தர்ப்பத்தில்,
இவ்வளவு
வசதி
ஏற்படவும்
முக்கிய தொண்டனாக
இருந்த என்னை ஒழித்துத்தான்.
ஆகவேண்டுமென்றால்,
அதற்குக்
காரணம் என்னவாக
இருக்கமுடியும் ? QRECsurs
வேண்டும் என்று கூறப்பட்ட நான், என்ன அப்படிப்பட்ட துரோகம்-இயக்கதீதுக்கு, பொது
நலனுக்குச் செய்துவிட்டேன் ₹ எனக்குதி தெரியும்படியகவே துரோகம் செய்தவர்களை
யெல்லாம் நான் கழகதீதில் சேர்தீதுக்கொண்டிருக்க, என்னையேவா இந்ததீ துரோகிகள்.
ஒழிக்கப்
பார்ப்பது?
இந்தத்
துரோகிகளே
இன்னும்
சொல்கிறார்களே,
¢ அய்யாவை
ஏமாற்றவா எங்களுக்குத் தெரியாது? நினைதீதால் ஒரு நிமிஷத்தில் எங்களால் ஏமாற்ற
முடியும்
? என்று.
இவ்விதமே கூறிப் பெருமையும் அடிதீதுக் கொள்ளுகிறார்கள்.
யாருக்கு
என்ன கெடுதி செய்துவிட்டேன், நான், இத்தகைய துரோகத்திற்கு ஆளாக்கப்பட i கெடுதி
செய்கிறார்கள்--செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று
தெரிந்தும்,
என்னுடன்
இருக்க
இவர்களை
அனுமதித்துக்
கொண்டிருந்தேனே ! பலதடவை
இவர்களை
மன்னிதீது
இவர்களது சரணாகதியை ஒதீதுக்கொண்டிருக்கிறேன்.
நான் இவர்களை
மன்னிப்புக்
கேட்டுக்கொள்ள வேண்டுமாமே! எதற்கு? இவர்களை மன்னிதீததற்காகவா i அதுகூடப்
போதாதாமே,
திருமணத்தை
ரத்து
செய்ய
வேண்டுமாமே?
இதில்
எவ்வளவு
பெரிய
கொலை பாதகக் கருதீது அடங்கியிருக்கிறகு, பாருங்கள்.
இதில் விளங்கவில்லையர இவர்
www.thamizham.net - Free £ book No 3046
2034
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
களது
அரோகதீதிற்கு-சதிக்குக்
காரணம் 8 இதை
அனுமதிதீதுக் கொண்டிருக்கலாமா-
பொதுமக்களாகிய நீங்கள்? துளியேனும் ஆதரவு இிருக்கலாமா-இதீ தகைய சதிகாரர்களுக்கு?
தோழர்களே!
! நான் உண்மையில் எனது பொதுப்பணி தொடர் நீது நடைபெற்றுவர
வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன் ) இன்னும் சில ஏற்பாடுகளும் செய்ய
உத்தேசித்திருக்கிறேன். யார் என்ன நினைதீதுக்கொண்டாலும் சரி 3 யார் என்ன சொல்லிக்
கொண்டிருந்தாலும்
சரி)
நான் கடமையிலிருந்து
அணுவளவும்
தவறமாட்டேன்.
என்
தொண்டுதான் எனக்குப் பெரிது ; மற்றவர்கள் அதைப்பற்றி என்ன கூறுகிறார்கள்--என்ன
நினைக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிதல்ல.
எனவே, அது
தொடர்ந்து நடைபெற்று
வரும்
வண்ணம்
மற்றவரின்
விருப்பு;
வெறுப்புப் பாராமல் எனக்குச் சரியென்று படும் எதையும் செய்து கொண்டுதான் வருவேன்.
எனது 30 ஆண்டு பொது வாழ்வில் ஒருபோதும் எதிர்ப்புக்கு அஞ்சி எனது கொள்கையை
மாற்றிக்கொண்டதில்லை; எதீதகைய ஒழுக்கக்கேடான காரியத்தையும் நான் செய்ததில்லை.
ஏதேனும்
அப்படிச்
செய்ததாக
என்னுடைய
எதிரிகளான
பார்ப்பனர்களே
கூடக்
கூறவில்லை.
காங்கிரஸ்காரர்கள்தாம்
என்மீது வெறுப்பேற்பட,
காங்கிரசிலிருநீது நான்
ஏதோ பணம் திருடிக்கொண்டு
போய்விட்டதாகக் கூறினார்கள்.
ஆனால்,
அவர்களே
பிறகு நான் செய்த தொண்டுக்காக என்னைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றித் தாம்
செய்த
தவறுக்காகப்
பிராயச்சித்தம்
செய்துகொண்டு
விட்டார்கள்.
அதாவது,
கோயமுதீதூரில் நடந்த மாகாண காங்கிரஸ் கரன்பரன்சில், எனது காங்கிரஸ் தொண்டைப்
பாராட்டிதீ தீர்மானம் போட்டார்கள்.
அவ்வளவு ஒழுக்க மேம்பாட்டுடன் வாழ்ந்து வந்த
எனக்கு
இப்போதொன்றும்
ஒழுக்கக்
கேடாக
நடந்து
கொள்ளவோ,
பொதுமக்களை
மோசம் செய்துவிட்டுப் பணத்தை மற்றொருவருகீகுக்
கொடுத் துவிடவோ, கொள்கைகளில்
இருந்து நழுவவோ எவ்வித அவசியமும் ஏற்பட்டு விடவில்லை.
யாரேனும்
இவ்வேற்பாட்டிற்காக
உள்ளத்
தூய்மையுடனேயே
வருதீதப்படுவ
தென்றால் எனக்குப்
பின்
இந்தப் பெண் தனிவாழ்க்கை நடத்தவேண்டி ஏற்பட்டுவிடுமே
என்று வேண்டுமானால் வருதீதப்படலரம் ; கொஞ்சம் பரிதாபப்படலாம். ஆனால், அதற்குக்
கூட அவசியமில்லை.
ஏனென்றால்,
நான் இறந்த
மறுநாளேகூட; இந்த அம்மையார்
தனக்கு இஷ்டப்பட்ட வேறு ஒருவனை மண நீதுகொண்டு விடலாம்.
இந்துமத தர்மப்படி
செய்யப்பட்ட--ரதீது செய்து கொள்ள முடியாத-ஜென்மதீ தீர்ப்பான திருமணம் அல்ல $
பதிவு முறைப்படி செய்துகொள்ளப்பட்ட திருமணம் $ எந்த
நேரதீதிலும் ரதீது செய்து
கொண்டு
வேறு
மணம்
செய்து
கொள்ளலாம்.
நான்
இன்றும்
இந்தப்
பெண்ணை
அனாதையாக வைத்திருக்கவில்லை;$ நான் திடீரென்று இறந்துவிட்டாலும் சுகமாக வாழக்
கூடிய
அளவுக்குச்
சிறிது
பொருளாதார
வசதியும்
உண்டு.
*டிரஸ்டு?
காரியத்தில்
துரோகம் செய்யாது என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அன்றியும், அந்த அம்மையார்
சில டிரஸ்டிகளுடன் ஒருவராகதீதான் இருப்பார்.
என்ன கேடு செய்யமுடியும்?
ஆகவே,
இந்தப் பெண்ணுக்ீகாகப் பரிதாபப்படவோ; அவநம்பிக்கைப்படவோ கிடமோ, அவசியமோ
இல்லை |
தோழர்களே !
இந்தச் சதிகாரர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இவர்கள் செய்துவரும் தவறான பிரச்சாரத்திற்காகவும் நான் கவலைப்படவில்லை. இந்த தவறான பிரச்சாரத்தால் பாமர மக்கள் ஏமாந்து போய்விடுகிறார்களே என்பதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது; சதிகாரர்களின் நியாயமற்ற அநாகரிகப் பிரச்சாரத்திற்குப் பாமர மக்கள் ஆனாகிவிடுகிறார்களே என்பதுதான் கவலையாக இருக்கிறது. இவர்கள் செய்த பிரச்சாரத்தால், பலருக்குக் கழகம் நிலைதீர்ந்திருக்குமோ என்ற சந்தேகம்கூட வந்துவிட்டது. பெரிய அधिکாരிகள்கூட வருதல்பட்டதாகக் கேள்விப்பட்டேன். தங்களுக்குப் பெரிய பாதுகாப்பாக இருந்துவரும் கழகம், தரங்கள் மேல் உயர்வடைக்குக்கு வரவும், தங்களைப் பார்ப்பனர்களாக மதிப்பு நடக்கவும் பெரும் காரணமாய் இருந்துவரும் கழகம்--எங்குண் கந்தக் கிளர்ச்சியால் செல்வாக்கு இழந்துவிடுமோ என்று ரொம்பவும் கவலைப்பட்டார்களாம். இவர்களின் எதிர்ப் பிரச்சாரம் அவ்வளவு கீழான நிலைக்குப் போய்விட்டது."கழகமே, இந்த ஏற்பாட்டால் மாய்ந்துவிடும்?" என்று பிரச்சாரம் செய்துவிட்டனர். அதிகாரிகள் கவலைப்படக் காரணம் கிருந்தது) நமது கழகம் சர்க்காரால் எவ்வளவு மதிக்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியும். நாம் ஒரு குறைபாட்டை எங்காவது ஒரு பொதுக் கூட்டத்தில் எடுத்துச் சொன்னால், அது உடனே கவனிக்கப்படுவது அவர்களுக்குத் தெரியும். ஜில்லா கலெக்டர்மீது ஒரு குறைபாடு நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டால், உடனே போர்ட் மெம்பர் அதுபற்றி நமக்குத் தெரியாமலே விசாரணை நடத்தி ஆவன செய்வது அவர்களுக்குத் தெரியும். ஏன் நாம் எடுத்துக்காட்டும் குறைபாடுகளை உடனே சர்க்கார் கவனிக்கின்றது? நம்மிடம் சர்க்காருக்கு நம்பிக்கையுண்டு. நாம் உண்மை யிருந்தாலொழிய வெளியில் எடுத்துச் சொல்லமாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான்; சர்க்கார் உடனே இவ்வளவு கவனிக்கிறார்கள். நல்ல நிலைக்கு நம் இயக்கம் வந்துவிட்டது. இனி இதை யாராலும் ஒழிக்க முடியாது. நாம் இன்னும் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவே, சூத்திரர்களாகவே இருந்து வருகிறோம். நம் நாடு மேலும் மேலும் வடநாட்டவரால் சுரண்டப்பட்டே வருகிறது. வடநாட்டு ஆதிக்கம் வரவர வளர்ந்து கொண்டேதான் போகிறது.
எனவே, நாம் நம் வேலையைக் கைவிடுவதற்கில்லை. எதிர்க்கைய எதிர்ப்பு வந்த போதிலும் சமாளித்துத் தொடர்ந்து பாடுபட்டு வர வேண்டியதுதான். எவ்வளவு துரோகிகள் தோன்றினாலும் பொதுமக்கள், அறிஞர்கள், நடுநிலையாளர்கள் ஆதரவ நமக்குதான் இருக்கும். இது என்ற சொந்த அனுபவம். நாம் சூத்திரத் தன்மையிலிருந்து விடுதலை பெற, வடநாட்டார் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற, திராவிடத் தனி நாட்டைய முயற்சி செய்தல் வேண்டும். அதற்குப் போதிய சக்தி, வசதி, வாய்ப்பு மக்களின் ஆதரவ எனக்கு உண்டு.
என்றாலும், இதற்குக் காங்கிரஸ் திராவிதர்கள் உட்பட, பார்ப்பனத் தோழர்கள் உட்பட மற்றும் எல்லோருடைய ஆதரவும் பெறவே நாம் முயற்சிக்க வேண்டும்) அயராது தொண்டாற்ற வேண்டும்.
[திருவாரூர் மாநாட்டில், 2-10-1949-ல் சொற்பொழிவு--* விடுதலை 8 10-10-1949]
13. தன்னைப்பற்றி
வெகு வீராவேசத்துடன் கண்டன நாள் கொண்டாட தேதி குறிப்பிட்ட நான், அரசாங்கத்தில் தடை உத்தரவு கொடுக்கப்பட்டால் அவ்வுத்தரவுக்குக் கீழ்படியுங்கள் என்று கழகத் தோழர்களை நான் வேண்டிக்கொண்டதுபற்றி, என்னைப்பற்றியும், கழகத்தைப் பற்றியும், கழகத் தோழர்களைப்பற்றியும் பொதுமக்கள் பரிகாசம் செய்வார்களே என்று கருதலாம்.
ஆம், பரிகாசம் செய்வார்கள்! நமக்கும் அது கொஞ்சம் மானக்கேடாகத்தான் தோன்றும். உண்மையாகவே அது மானக்கேடாகவும் இருக்கலாம். அந்த மானக்கேட நடத்தை நானோ, நீங்களோ நமது தனிப்பட்ட சுயநலத்திற்காக அல்ல, சமுதாயப் பொது நலத்திற்காகவே அடைகிறோம். நாம் நமது சமுதாய நலத்திற்காக உயிரைத் தியாகம் செய்வது என்பது எப்படியோ, அப்படித்தான் உயிரிலும் சிறந்தது என்று சொல்லும் படியான மானத்தைத் தியாகம் செய்வது ஆகும்.
உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதைத் துணிவுடன் ஏற்க முன்வரவேண்டும். குடிநலத் தொண்டர்கள்"மானம் பார்க்கில் கெடும் என்ன கெடும்? லட்சியம் கெடும்"என்பது நமக்கு முன்னாலும் சொல்லப்பட்ட அறிவுரையாகும். அப்படி மானத்தைக் கருதாதவன் தான் இலட்சியவாதியாவான், மற்றவன் சுயநலவாதியேயாவான்.
ஆதலால், நான் பயந்துவிட்டதாகக் கருதாதீர்கள்,நீங்களும் உங்களுக்கு அந்தப் பேர் வருமே என்று கருதாதீர்கள்.
இப்போது தோழர்களே!உங்களைப் பல ஆயிரக்கணக்கில் சிறைக்கு அனுப்ப என்னால் முடியும், அதனால் நான் பெரிய தலைவனாக ஆகிவிட்டால் போதுமா! சங்கராச்சாரிகள் விஷயம் அற்ப விஷயம். அவர்களை நாம் பெரிதாகக் கருதுவதில்லை."பார்ப்பனியம்" என்னும் நாடகத்தில் அவர் ஒரு முக்கிய ராஜபார்ட்காரர்;பார்ப்பனீய நாடகம் முடிந்தால் அவர் சாதாரண மனிதர்தான்!அவர் உங்களுக்கோ, மற்ற மக்களுக்கோ, உலகத்திற்கோ எதில் சிறந்தவர்?என்ன பயன் அளிப்பவர்?அவர் பேச்சை எவன் மதிக்கிறான்?எவன் ஒப்புக்கொள்ளுகிறான்?அவர் காலில் விழுந்து பிரசாதம் பெற்ற மந்திரிமார்களாவது சங்கராச்சாரி சொல்லுவது போல் தங்களைச் சூத்திரர் என்றும், சூத்திரர் தர்மத்திற்கு ஏற்றவர்கள் என்றும் ஒப்புக்கொள்ளுகிறார்களா? சூத்திரத் தர்மப்படி நடந்து கொள்கிறார்களா? எல்லாம் பிজினஸ் (Business) வியாபாரமுறை)ஓட்டுக்காகத்தான்!ஆனதால், சங்கராச்சாரியை ஒரு மதிக்கத் தக்க மனிதன்தான் என்று கருதி பெரிய காரியத்தில் இறங்காதீர்கள்!நான் கண்டன நாள் குறிப்பிட்டது மக்களுக்கு ஓர் உணர்ச்சியை ஊட்டத்தான்; இதை வேறு வழியாலும் செய்யலாம். இதற்காக 1000, 2000, 10,000 பேர் சிறைக்குப்போக வேண்டாம், போகவேண்டிய காரியம் பல இருக்கின்றன. எலெக்ஷன் சமயத்தில் இவை எதிரிகளுக்குப் பலமாகி விடுமே!தேர்தல் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்துங்கள்; தேர்தலுக்குப்பின் நமக்கு அதிக வேலை இருக்கிறது! ஆகையால், உங்களுக்கு இந்த யோசனை தவறு என்று தோன்றினாலும் என்னை மன்னித்து அடுத்த காரியத்தை எதிர் பாருங்கள்.
[* விடுதலை -அறிக்கை--20-11-1966]
பெரியோர்களே!நண்பர்களே!தோழர்களே!சில விஷயங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். நான் செய்துவந்த தொண்டும் செய்துவருகின்ற தொண்டும் நீங்கள் அறிந்ததேயாகும்.
அந்தத் தொண்டு யாருக்காக என்பதும், அதனால் நான் ஏதாவது நன்மை, சுயநலம் அடைந்தேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை--பொதுநலத் தொண்டுக்குக் கொடுத்தேனா அல்லது எனது பொதுத் தொண்டால் எனது நலத்தை; செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டேனா என்பது உங்களுக்குத் தெரியும்!இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், ஒரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும், கேட்டுக்கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப் பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்.
இன்னும் இனியும் நண்பர்களால், பெரியோர்களால் புகழுரை பெற்றதைத் தவிர யாராலும் ஒரு நலனும் பெற்றதில்லை, விரும்பியதுமில்லை!
எனக்குப் பொதுத்தொண்டு வரும்படி என்பது--என் சொந்தக் காசில் பிரயாணம் செய்து 1930-ல் கூட்டமொன்றுக்கு 50 ரூபாய் வாங்கி, 1950-ல் 100 ரூபாய் வாங்கி, 1960-ல் 150 ரூபாய் வாங்கி, 1970-ல் 200 ரூபாய் வாங்கினதுதான். மற்றும், மாநாடுகள் நடத்தியதில் சுமார் 1,00,000 ரூபாய் மீதமிருக்கும். மற்றபடி, எனக்கு இன்றுள்ளவ்வளவும், மற்றும் இயக்கத்தின் பேரில் இருந்த சொத்துக்கள், செல்வங்களின் அவ்வளவும் என்னால்--என்தகப்பனாரைக்கொண்டு செய்யப்பட்ட"ட்ரஸ்ட் தர்ம சாசனம்" ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தே அல்லாமல் பிறர் சொத்து, ஒரு காசளவும் இல்லை.
அப்படி இருந்தாலும் நான் அவைகளில் இருந்து பொதுநலத்திற்கு என்று-- திருச்சியில் காலேஜுக்கு 5 இலட்சமும், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஒரு இலட்சமும், ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு--குழந்தைகள் வார்டுக்கு ஒரு இலட்சமும், மற்றும் இந்த 50, 60 வருஷகாலமாக 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 10,000 ரூபாய் என்கிற கணக்கில் பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2, 3 இலட்ச ரூபாய்க்கும் குறையாது.
இயக்கத்திற்கு நான் வாங்கி இருக்கின்ற சொத்துக்கள் இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்க்கும் குறையாமல் பெறும், எங்கள் ட்ரஸ்ट் சொத்துக்கள் சுமார் 20,00,000 ரூபாய், 30,00,000 ரூபாய் பெறும். இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும், தலைவன் என்கிற முறையில் "என்ற" ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன. இதனால் இயக்கத்திற்கு இலாபம் என்ன என்றால்--வருமானம் பெருகுகின்றது; சொத்து வளருகின்றது; அவ்வளவுதான்.எனக்கென்ன பயன் என்றால் கவலை; தொல்லை அதிகமாக இருப்பதுதான். ரொக்கமும் பல இலட்சம் இருக்கின்றது.
சர்க்கார் சட்டத்தால்,"இன்கம்டாக்ஸ்"கொடுமையால் இவற்றில் எவ்வளவு குறைந்தாலும் குறையலாம்.
இனி எனது தொண்டினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை நீங்கள் நெரிந்து கொள்ளுங்கள்!மற்றும் எனது தொண்டில் எனக்கு உதவியாய் இருந்தவர்கள் பலர்--அவர்களால் கனவில்கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும் செல்வாக்கையும் அடைந்தார்கள், அடைந்தும் வருகிறார்கள். இந்த நிலையில்கூட நான் யாரையும் ஒரு காசு அளவுகூடக் கேட்காமலும், எவரிடத்திலும் நானாகக் கை நீட்டாமலும் இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறேன். எந்த நிலையிலும் எனது நிலை ஒரு சிறிதுகூடத் தாழாமல் ஏதோ சிறிதாவது வளர்ந்துகொண்டேதான் வருகிறது.
நண்பர்களே!இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகின்றேன்?யாரிடத்திலும்--எவ்வித உதவியையும் கேட்பதற்கல்ல. மற்று எதற்கு? மன்னிப்புக் கேட்பதற்கு--என்ன மன்னிப்பு என்றால், நான் இனிச் சுற்றுப் பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவெல்லாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்.
சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்துகொண்டு இண்டுப் பிரசுரம், "வாள் போஸ்டர்",சிறு சித்திரப் புத்தகம் முதலியவை பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம், அலையவேண்டாம் என்று கருதுகிறேன்.
ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது; செப்டம்பர் பிறந்தால் 94-வது ஆண்டு பிறக்கின்றது. யாரு தயவையும் விரும்பாமல், யாரு விஷயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.
நான் சென்னைக்கு வந்தால்"உண்மை" மாத கிதையையும் சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.
சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன;பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப்போகின்றது. ஈரோட்டில் ஒன்றுஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டிடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் கிருக்கவேண்டி இருக்கிறது.
நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்கமாட்டார்கள்;அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டால், திருச்சி நடப்புக்கள் பாதிக்கப்பட்டுவிடும்.
இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாகவேண்டியிருக்கிறது.
எனது உடல் நிலை, மன நிலையைப் பொறுத்துத்தான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன. தமிழ்ப் படிப்புள்ள புலவர் ஒருவர் எனக்கு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில் இருக்கின்றவைகளை எழுத்தில்--புத்தகத்தில் ஏற்படுத்திவிட்டுப் போகவேண்டும் என்று கருதுகின்றேன். ஆகவே, தோழர்களே!என்னைக் கூப்பிடாதீர்கள்! கூப்பிட்டால்--அது மாநாடாக இருக்கவேண்டும், பணம் ரூ. 500 கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றேன்.
மன்னியுங்கள்!நாடு பூராவும் நல்ல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். நான் எதையும் குறைவில் விட்டுவிட்டுப் போகவில்லை, மக்களின் நல்ல உணர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் காரியத்தில் இறங்கவில்லை. அதற்குத் இண்டுப் பிரசுரம் செய்யலாம் என்று இருக்கின்றேன்.
மற்றொரு முக்கிய விஷயம்; நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு, சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்
ஆரம்பிக்கவேண்டும்,
* கோவில் பகிஷ்காரம் சாதிதீதுவிட்டாயா 43 என்று கேட்பார்கள்,
அது
எனக்கு
அவமானம்தான்.
ஆனாலும், நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை
என்றாலும், கலைஞர் தடையை நீக்கும்போது ஆரம்பிப்பேன்.
ஆனால், சினிமா பகிஷ்.
காரத்திற்கு
யாருக்கும்
ஆட்படமாட்டேன்.
அது அண்மையில் துவக்கப்படும்,
இவை
பற்றிய திட்டங்களை அடுத்து வெவியிட இருக்கிறேன்.
வணக்கம்.
[ விடுதலை -தலையங்கம்--19-7-1972]
www.thamizham.net - Free £ book No 3046
பகுதி VIII
இறுதிச் சொற்பொழிவுகள்
www.thamizham.net - Free E book No 3046
t
முண்பன்ள ல pensPEe dPnped மறுமீகஙிள §eg/6T-6=0¢
*ஓரமஉ ஈதறுரிஸ் ஸல wepyn ஓடுன fimyny FegF—(FOn ல)
திருச்சி மாவட்டம் கிருஷ்ணராயபுரதீதில் 18-7-1973-0, தந்தை பெரியார் அவர்களுடன்
சிந்தனையாளர் கழகப்-புரவலர் அமைச்சர் அன்பில் பெ; தருமலிங்கம்.
த
i B
]
3
G
www.thamizham.net - Free £ book 14௦ 3046
www.thamizham.net - Free E book No 3046.
1, சிந்தனையாளர் கழகதீறில்
பெருமைக்குரிய தலைவர் அவர்களே !
மாண்புமிகு
அய்யா அமைச்சர்பெருமான்
அவர்களே ! தாய்மார்களே ! பெரியோர்களே ! சட்டசபை அங்கதீதினர்களே |
இன்றைய தினம் என்னுடைய தொண்ணூற்றய்ந்தாவது பிறந்த நாள் விழா என்னும்
பேரால் இம் மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் அனேக நண்பர்கள்
(என்னைப் பற்றிச்) சொன்னார்கள்.
நான் அவைகளைக்
கேட்டுத்தான் ஆகவேண்டும் ;
வேறுவழி இல்லை.
அவர்களுக்கு நான் என்னுடைய
மனப் பூர்தீதியான நன்றியறிதலை:
உளன்ளன்போடு--மனதோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தோழர்களே
! எனக்கு உடல்நலமில்லை; மூன்று நாளாய் விடாமல் வயிற்றுப்போக்கு.
இரண்டுநாளாய்ச்
சாப்பாடு இல்லை)
இன்றைக்குத்தான்
ஒரு
இட்டிலி சாப்பிட்டேன்;
ஆனாலும்
கலநீதுகொள்கிறேன்.
இம் மாதிரியான
மகிழ்ச்சியைப்
பார்க்கிறபோது
அடிக்கடி வந்தால் தேவலாம் என்கிறமாதிரி--ஆண்டுவிழா வரணும் என்று தோன்றுகிறது.
ஆனால், உடல்நிலையைப் பார்க்கிறபோது இது எனக்குப் பெரிய தொந்தரவு மாதிரித்தான்.
காணப்படுகிறது.
எப்படி இருந்தாலும் சரி:
அடுத்த வருஷதீது விழாவுக்கு நான் இருப்பேனோ, இல்லையோ!
இருந்தாலும்
விழா இருக்கும்படியான வாய்ப்பு--நடைபெறும்படியான வாய்ப்பு இருக்குமோ கில்லையோ$
உண்மையைச் சொல்லுகிறேன்.
இதிலே ஒன்றும் பெருமைகீகாகசி சொல்லவில்லை.
ஏன்
அப்படிச் சொல்லுகிறேன் என்றால், ஏதோ வாழ்ந்த நாளெல்லாம், ஏதோ ஓர்
அளவுக்கு மகீகளுகீகாகதீதான் தொண்டு செய்தேன் என்று இருந்தாலும் மன திருப்தியோடு
காலம் முடிவுபெறுவதற்கு
வாய்ப்பு இல்லாத
நிலையிலே
இருக்கிறேன்.
ஏன் என்றால்,
ஏறக்குறைய அய்ம்பது வருஷகாலம் பொதுத்தொண்டு என்று நான் செய்தாலும், அதன்:
பயனாக ஏறக்குறைய பெரும்பாலான மக்களுடைய
அன்பும், அவர்களுடைய பாராட்டு
தலும் பெறும்படியரன வாய்ப்புப்
பெற்றிருந்தாலும் பெரிய மனக் குறையோடுதான் வாழ
வேண்டியவனாக இருக்கிறேன்.
என்னுடைய
தொண்டின்
காரணமாக
ஏற்பட்ட
பல
காரியங்கள் பாராட்டுதலுக்
குரியவை என்றே வைதீதுக்கொள்ளலாம்.
நம் மக்கள் எல்லாம் ஏதோ நல்ல அநீதஸ்திலே
இருக்கிறார்கள்.
பெரும்பாலோருக்கு
வெளிப்படையாய்
இருந்த
இழிவுகள்
எல்லாம்
நீங்கியும், நீங்கிக்கொண்டும் இருக்கிற ஒரு நல்ல வாய்ப்பிலேதான் இருக்கிறோம்.
அது
யாராலே ஏற்பட்டிருந்தாலும் சரி--நல்ல வாய்ப்பிலே இருக்கிறோம்.
ஆனால்,
ஒன்று
சொல்லுகிறேன்.
நம்முடைய
சமுதாயம்
ஏறக்குறைய
இந்த
நாட்டிலே--பார்ப்பனர்,
முஸ்லிம்கள்,
கிறிஸ்தவர்கள் நீங்கிய மற்ற மகீகன், தாய்மார்கள்:
எல்லோரும்
பார்ப்பனனுடைய
வைப்பாட்டி
மக்களாக--தாசி மக்ீகளாக-சூதீதிரர்கனாக
இருக்கிறோம்.
நம் தாய்மார்கள் எல்லாம் பார்ப்பன னுடைய
தாசிகளாக இருக்கிறார்கள்,
எதிலே இருக்கிறார்கள் 8 எவனோ கண்டவன் பேசிக்கொண்டு போகிறான் என்று
நான் சொல்லவில்லை) ஏதோ சாஸ்திரதீதிலே இருக்கிறது, சம்பிரதாயதீதிலே இருக்கிறது
என்று
நான்
சொல்லவில்லை.
பின்னே
எதிலே
இருக்கிறது
என்றால்,
சட்டதீதிலே
இருக்கிறது.
பொறுமையாகக் கேளுங்கள் ! நமக்கு இருக்கிற சட்டம்
* இந்து லா? என்பதிலே
இந்துக்கள் என்ற சமுதாயதீதிலே--பார்ப்பானைதீ தவிர்தீத
மற்ற
மக்கன் சூதீதிரர்கள்$
www.thamizham.net - Free £ book No 3046
2042
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
அவர்களுடைய தாய்மார்கள், மனைவிமார்கள்,
சகோதரிகள்,
மக்கள் ஆகிய பெண்கள்
எல்லாம்
பார்ப்பானுக்குத் தாசிகள் என்று
சட்டத்திலே இருக்கிறது;
தப்புவதற்கே வழி
கல்லை.
நான் இருக்கிறேன் ) என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்) நான் தொண்டாற்றிய
காலத்திலே அனேக
தோழர்கள்
இருக்கிறார்கள்)
அவர்களுக்கு
இந்துமதம்
இல்லை
அவர்களுக்கு இந்துமத
சம்பந்தமான
கடவுள்,
புராணம்,
சாஸ்திரம்
ஒன்றும்
சம்பந்த
மில்லை. பின்னே அவர்கள் யார் என்றால்--பகுதீதறிவரளர்கள் ) கடவுள்கூடகீ கிடையாது.
அப்படிப்பட்டவர்களும் சூதீதிரர்கள், பார்ப்பானைதீ தவிர்த்து என்று சொல்லிவிட்டார்கள்.
என்பது அந்த சாஸ்திரம்--அந்தச் சட்டம், தப்பவே முடியாது.
தோழரிகளே !
சாதாரணமாகச்
சொல்லுகிறேன்.
ஒன்றும்
வீம்புக்காகவோ,
உங்களுக்கு
ஒரு
எழுச்சி
உண்டாகீனுகிறதற்காகவோ
நான்
சொல்லுகிறேன்
என்று
நினைக்காதீர்கள்.
நம்முடைய நாட்டிலே,
நம்
மகீகன் நூற்றுக்கு
97 பேராய் இருக்கிற
நிலையிலே,--இந்த நாட்டு வாழ்வுக்கெல்லாம் காரணஸ்தர்களாக--அடிப்படை மக்களாக
இருக்கிற நிலையிலே உள்ள இவ்வளவு பெரிய சமுதாயம்--ஈன சாதி மாதீதிரம் அல்ல
மக்களாலே
இழிவான கருதீதாகப் பேசிக்கொள்ளப்படுகிறதான விபச்சாரி மக்கன்)
தாசி
மக்கள்.
ஏன் இப்படி இருக்கவேண்டும் ? நானும் ஏதோ
தொண்டாற்றினேன்;)
இதில்
இருந்து
மக்களை
விலக்குவதற்காக, எல்லாரையும் பகுதீதறிவாளர்கனாக ஆகிவிடுங்கள்
என்று சொன்னேன்.
என் பேச்சைக்
கேட்டு வெகுபேர் பகுதீதறிவாளராகிவிட்டரர்கள் ;
ஆகியும்--பகுதீதறிவாளர்
ஆனாலும்,
நாத்திகர்
ஆனாலும்,
மதமே
இல்லாதவன்
ஆனாலும்--4இந்து? என்கிற பட்டியலிலே வந்தால் அவன் சூதீதிரன் ) பார்ப்பானுக்குதீ தாசி
மகன்.
எவன் ? ஒரேயடியாகச்
சொல்லிப்போட்டான்--முஸ்லிம்,
கிறிஸ்தவன்
தவிர்தீத
எல்லாரும் இந்து; இதீ.துவிலே, பார்ப்பனரல்லாதவன் சூதீதிரன்-தாசிமகன்,
என்றைக்கு 8
எதுவரைக்கும் ? இந்த நாட்டுக்கு என்றைக்குப் பார்ப்பான் வந்தானோ--அவன் என்றைக்கு
இந்த
நாட்டில்
வெற்றிபெற்றானோ
அன்றைய
முதற்கொண்டு--இந்த
இந்துக்களாக
இருக்கிறவரைகீகும், இந்துமதப் பாதுகாப்பு இருகீகிறவரைகீகும், அல்லது இந்த ஆட்சி
இருக்கிறவரைக்கும்--இன்றையதினம் இருக்கிற ஆட்சி இருக்கிறதே, அரசாங்கம் சம்பந்த
மான ஆட்சி,
காங்கிரஸ் ஆட்சியராக இருக்கலாம், வேறு எந்த ஆட்சியாக இருக்கலாம்--
இந்த ஆட்சி இருக்கிறவரைக்கும் நாம் எல்லாம் சூதீதிரர்கள்--தாசிமக்கள் 1
இது சம்மதம்தானா 8 இப்படியே இருக்கவேண்டியதுதானா
? மந்திரியாக
ஆனால்
போய்விடுகிறதா ? இல்லை, கோடீஸ்வரன் ஆனால் போய்விடுகிறதா 8 இல்லை, பண்டார
சன்ன தி--வெங்காயம் ஆனால் போய்விடுகிறதா ¥ என்ன ஆனால் போகிறது ? இந்த ஆட்சி
ஒழிகிறவரைக்கும்
போகாது.
அல்லது,
* இந்து என்கிற மதம் ஒழிக்கப்பட்டது; இந்து
மதம் என்பதாக ஒன்று கில்லை ? என்று சொல்கிறவரைக்கும் போகாது.
அப்புறம், என்ன,
உங்களுக்கு நான் தொண்டு செய்தேன்--வெங்காயம் செய்தேன் |
நான் பிறக்கிறதற்கு முன்னேயே தேவடியாள் மக்கள் நீங்கள் ] நான் பிறக்கிறதற்கு
முன்னேயே சூதீதிரர்கன்
நீங்கன்--நான்காவது
சாதி நீங்கள்)
இப்போது நாளைக்குச்
சாகப்
போகிறேன்--சூதீதிரணாய்
விட்டுவிட்டுத்தானே
சாகிறேன் 8
அப்புறம்
என்ன
என்னுடைய தொண்டு?
சிந்திக்கணும் நீங்கள்!
கொஞ்சம் கவலையோடு சிந்திக்கணும் !
நானும் போய்விட்டேன் (என்றால்)--அப்புறம் கிதைப்பற்றிப் பேசுவதற்கு ஆன் எங்கே?
யார் வருவார் ₹ வந்தால் இவ்வனவுகீகுக்கூட விட்டுக்கொண்டிருக்க மாட்டானே, அரசாங்கம்
“இவ்வளவு
பேசவிட
மாட்டானே 1! நானாக
இருக்கிறதினசலே
கொஞ்சம்
சும்மா
இருக்கிறான் ) இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழிதீதுப் போடுகிறான்.
இப்போதே
நம் அரசாங்கதீது மேலே கண் வைத்திருக்கிறான். அது தெரிந்துவிட்டது நம் தலைவருக்கு
முதல்வருக்கு,
அவர் என்கிட்டே வந்தார்,
¢ இப்படி இருக்கிறது நிலைமை $ வேலையை
ஒழிதீதுப் போடுவான் போலத்தான் இருக்கிறது--எந்தச் சாக்காவது சொல்லி,
இல்லை,
www.thamizham.net - Free £ book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்:
2043
நானே விலகிக்கொள்ளட்டுமா?
என்ன சொல்கிறீர்கள் Y என்று கேட்டார்.
நான் சொன்:
னேன்,
¢ விலக வேண்டாம்--அவனாக
விலக்குகிற வரைக்கும்.
அவனாக விலக்கினால்,
இன்னும்
கொஞ்சம்
ஆள்
சேருவார்கள்
நமக்கு,
விலகாதீர்கள்,
இருங்கள்?
என்று
சொன்னேன்.
அது இன்னும் கொஞ்ச நாளிலே நடக்கும் )
சீக்கிரத்திலே.
இப்போதே
சி. அய், டி. ஆங்காங்கே வந்து ரிப்போர்ட் பண்ணுகிறான்.
இப்போது அய்யா அமைச்சர்
அன்பில் இங்கே வந்தது எல்லாம் உடனே இப்போது போயிருக்கும்
டில்லிக்கு--* இவர்
இங்கே
இந்தக்
கூட்டத்திலே
இருந்தார்)
இவரை வைதீதுக்கொண்டுதான் இராமசாமி
பேசினான் ? என்று.
எனக்கும் இவருக்கும் இந்தப் பேச்சிலே ஒன்றும் சம்பந்தமில்லை.
மற்றப் பேச்செல்லாம் இருக்கலாம், அதே மாதிரியே ஒப்பந்தம் எங்களுக்குன்னே--ர் நீங்கள்
இதிலே
கலந்துகொள்ளக்
கூடாது.
நானும்
உங்களை
எதிர்பார்க்கவில்லை?
என்று.
ஆனாலும், அவன் புள்ளி போட்டுக்கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரியான
ஒரு நிலை
இருக்கிறது
சரி; அப்படி வந்தாலும் நான் அதற்காக ஒன்றும் கவலைப்படவில்லை,
நம்மாலே
வரக்கூடாது என்கிற எண்ணம் ]
வந்துவிட்டது,
வேறே அவர்களுக்கு
நாதி இல்லை $
என் கிட்டேதான் வந்தாகணும்,
மந்திரி சபையை ஒழிதீதுவிட்டார்கள் என்றால் அவர்கள்.
எங்கே
போவார்கள்?
வந்தாகணும் )
அப்புறம்
இன்னும்
நன்றாக
நடக்கவேண்டும்.
இப்போது அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை) இந்த நிலையிலே இருக்கிறோம்.
நாம் என்ன பண்ணுவது இப்போது? அவரவர்களுக்கு வேலை இருக்கிறது இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் பெண்டாட்டி, பிள்ளை, குடும்பம், வேலை, வர்த்தகம், விவசாயம், உத்தியோகம், பெரிய வேலை எல்லாம் இருக்கின்றன. எல்லாரும் வெறும் காலி ஆட்கள் அல்ல--என்னைப்போல. அவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறது? இலேசிலே விட்டுவிட்டு வர முடியுமா?பெண்டு, பிள்ளை, குடும்பம்--அதை வைத்துத் திட்டப்படி ஏற்பாடெல்லாம் இருக்கிறபோது, என்மாக, நான் சொன்னேன் என்றால்--ஆதீதிரப்பட்டு வந்திட முடியுமா? வரவில்லை. ஆள் ஒருவரும் வரவில்லை என்று நான் சும்மா இருக்கமுடியுமா?உள்ளபடி ஒரு அளவிலே நான் திருப்தியாக இருந்தது--நாம் அதிலே இல்லை; மற்றவர்களுக்குச் சொல்லலாம் என்று நினைத்தேன். பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மதமற்றவர்கள், இந்துக்கள் அல்ல என்று சொல்லிக்கொள்பவர்கள் இருக்கலாம். இந்த இழிவிலே சம்பந்தமில்லை என்று அப்படி நினைத்தேன் நான், ஆனால், சட்டம்--நண்பர் ஆனைமுத்து வந்து படித்துக் காண்பித்தார்--இந்தியாவிலே இருக்கிற கிறிஸ்தவன் தவிர, முஸ்லிம் தவிர மற்றவன் எல்லாம் இந்து, அவன் யாராயிருந்தாலும்--என்று.
என்னை இல்லை என்றாலும், எனக்கு அநீதப் பொறுப்பு போகவில்லை. அப்படி நினைத்தேன்; அப்படி இல்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது நாம் தாசி மக்கள், இதை நீக்குவதற்காக நாம் பாடுபடவேண்டாமோ?சும்மா நாம் உத்தியோகத்துக்கு காகச் சண்டை பிடித்தோம்;உத்தியோகம் வந்துவிட்டது; பார்ப்பான் கிட்டே இருந்ததெல்லாம் இப்போது நம்கிட்டே வந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பானே சம்பந்தப்படாத மந்திரிசபை இருக்கிறது; வேறு என்ன வேண்டும் நமக்கு?அரசியலிலே போராடினதிலே எல்லையைக் கண்டுபிடித்துவிட்டோம்;நாமேதான் இருக்கிறோம் இப்போது, போகிற வரைக்குமோ, இல்லை அதை விட்டுவிட்டு வருகிறவரைக்குமோ, வேறே ஒருவன் நம்மை ஒழிக்கிற வரைக்குமோ நாம்தான் அந்த ஆட்சியிலே (இவ்வளவு) இருந்தும் சூதீரனாக--பார்ப்பானின் தாசி மகனாக இருக்கவேணும் என்று இருந்தால், பதவி வந்து--பட்டம் வந்து--பார்ப்பானை ஒழிக்க பலன் என்ன?நம்முடைய உணர்ச்சி இருக்கிறது, இப்போது நான் இருக்கிறதினாலே--நான் ஒழிந்தேன் என்றால் கந்த உணர்ச்சி--முகுமாலவாசி போய்விடும். இந்தப் போட்டிவலுக்கும் ஆளுக்கு ஆள் பேரட்டிபோட்டுப் பதவியைக் கைப்பற்றுகிறதிலேதான் வரும். முன்னே, கொஞ்சம் பணக்காரன் பெரிய மனுஷன் என்கிறவன் எல்லாம் ஒழிந்துபோய் விட்டார்கள்; அவனாகக் கொஞ்சம் ஒழிந்தான்; பொதுஜனங்களாலேயும் கொஞ்சம் ஒழிக்கப் பட்டார்கள், இப்போது இருக்கிறதெல்லாம், சாதாரண மக்களாலே. இவர்களுக்கு எவ்வளவு தூரம் இருக்கப்போகிறது அந்த உணர்ச்சி. அப்புறம், இப்போது எவ்வளவு மறைத்தோமோ அதை எல்லாம் இனிமேல் வருகிறவன் திருப்புவான்.
இப்போது நாம் சமுதாயத் தீதுப் பேரைச் சொல்லி மாற்றி--பார்ப்பானை ஒழித்து நாம் பதவிக்கு வந்துவிட்டோம். நமக்கு அப்புறம் வருகிற வாழ்வு--மாற்றிக்கொள்வான்?பழையபடி பார்ப்பான் ஆதிக்கம் வருவதற்கு என்னென்ன வேணுமோ அதுதான். நம்மிலே இருக்கிறார்கள் அனேகம் பேர்--காட்டிக்கொடுக்கவும், மற்ற காரியம் செய்யவும், என்ன அவமானம் வந்தாலும் லட்சியம் இல்லாமல் பதவிதான் பெரிது என்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே தலைவர் ஆனதினாலே மறுபடியும் அவர்கள் கிட்டே போய்ச் சேருவான். அவன்கிட்டே சேர்ந்தால் என்ன?பழையபடி ஆக்குகிறது (என்பது தான்).அப்புறம் நம் கதி என்ன ஆகும்? இப்போது எவ்வளவு கைப்பற்றினோமோ--இப்போது எவ்வளவு பெருமைக்கு, நன்மைக்கு ஆளானோமோ இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் இடமாகுமே தவிர; இதோடு இன்னும் நன்மை தேடுவதற்கு இடமாகாது.
யார் இருக்கிறார்?சொல்லுங்கள்!நாம் தானே இருக்கிறோம்!முன்னேற்றக் கழகம் ஒன்று--இருநூறு பேர்.எல்லாரும் இருக்கிறார்கள்;அவர்கள் வந்துவிடுவார்கள்.
கம்யூனிஸ்ட்--எவன் காலை நக்கியாவது வயிறு வளர்ப்பிக்கிறதுதான் அவன் வேலை. இன்னானோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே;பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன் கிட்டே; உலகத்திலே கொள்கையே கல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்டுதான்.
அதற்கு அடுத்தாற்போல காங்கிரசு--என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன், அவனோடு போட்டிபோடுகிற இன்னொரு காங்கிரசு; இந்த இரண்டிலேயும் வசதிபோலப் பண்ணிக்கொள்ளப் பார்ப்பனர். நமக்கு யார் இருக்கிறார்கள்?இப்போது அவக்கின ஒரு கட்சி இருக்கிறது. நம்மை ஒழிக்கிறதுக்குத்தான் அந்தக் கட்சி வேலை செய்கிறது--அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு என்ன வேலை? அவர்களுக்குச் சொந்ததில் ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிக்கிட்டே பேசிக்கொண்டு,"காலிகளை ஒழித்துவிட்டு வருகிறேன், எனக்கு ஏதாவது இசல்கலை போடுகிறாயா?"என்று கேட்கிறார்கள்.
அதாவது; ஒன்றாக, ஒரு கட்டுப்பாடாக ஒரு காரியம் செய்கிறதா என்றால் இல்லை. அது என்னமாக முடியும்? அதனாலே, அது ஒன்றும் பிரயோசனமாக இல்லை;பேசுகிற தற்கே தகுந்ததல்ல. அப்புறம் நம் கதி என்ன? அதைத்தான் கேட்கிறேன். இப்படியே சாகவேண்டியதுதானா? உலகம் உள்ளவரைக்கும் நாம் நாலாவது சாதியாகவே இருக்க வேண்டியதுதானா? உலகம் உள்ளவரைக்கும் நம் பெண்டுகள் எல்லாம் பார்ப்பானுடைய "வைப்பாட்டிகள்" என்றுதான் இருக்கணுமா? இப்போது நமக்குப் பயந்துகொண்டு சூதீரன் என்று சொல்லாமல் இருக்கிறான்;நம் பெண்டுகளை "சூதீரசீசி", "தாசி" என்று கூப்பிடாமல் இருக்கிறான்--அவனுக்குப் புதியது வந்தல்ல (பயத்தினால்). இந்தப் பயம் போய்விட்டால்...அருமைத் தோழர்களே!இது நமக்கு ஒரு கடைசி முயற்சி என்று நினைக்கணும்.நினைக்கணும். இப்படியே சாகிறதைவிட ஈனத் தனம் வேறே இல்லை. ஆனதினாலே, ஏதோ ஒரு கிளர்ச்சி செய்கிறேன் இப்போது; நான். உங்களுக்கெல்லாம் தெரியும்--சமுதாய இழிவுநீக்க மாநாடு என்று, சென்னையிலே, அடுத்த மாதம் (கூட்டுகிறேன்).ஒன்றும் ஆட்சியைக் கைப்பற்றுகிறதல்ல;பெரிய இலாபம் அடைகிறதற்கு அல்ல--நமக்கு இருக்கிறஅவமானம் போகணும், இழிவு போகணும். சுதந்தரமோ, சுயராஜ்யமோ, வெங்காயமோ--நம் நாட்டை நாமே ஆள்கிறது என்றால் அந்த மாதிரியான முட்டாள் தனமான கருத்தே அதிலே இல்லை. நம் நாட்டை நாம் ஆள்வது என்கிறது முட்டாள் தனந்தான். இப்போது யார் ஆள்கிறார்கள்? நாம் தான் ஆட்சி செய்கிறோம். என்ன செய்ய முடிந்தது?(எனக்கு) எவன் ஆண்டாலும் சரி; எவனைக் கூப்பிடுவது என்று இன்னும் யோசனை பண்ணுகிறேன்; எவனுக்கு வாய்ப்பு இருக்கும் என்று யோசனை பண்ணுகிறேன்.
நம்முடைய இயக்கத்தினுடைய லட்சியம் இந்த (டில்லி) ஆட்சியை ஒழிக்கவேண்டியது; எவன் வந்தாலும் சரி. ஏன்?வேறு எவன் வந்தாலும் இந்த இந்துவைக் காப்பாற்ற வேணும்--இந்து மதத்தைக் காப்பாற்ற வேணும்--இந்த மக்களை எல்லாம் தேவடியாள் மகன் என்கிற தலைப்பிலே வைக்கவேணும் என்கிற எண்ணம் எவனுக்கும் இருக்காது--நீக்ரோ வந்தாலும் கூட இருக்காது.
இந்த ஆட்சி உள்ளவரைக்கும், அதுதான் கடைசி. அவன் பசையாக எழுதிக் கிட்டானே--இந்த ஆட்சியைப்பற்றி--இதிலிருந்து விலகணும் என்று எவனாவது நினைத்தால்--இது ஒழியணும் என்று எவனாவது நினைத்தால் ஏழு வருஷம் தண்டிப்பேன் என்று போட்டுவிட்டான், (சட்டம்). யாருக்காக? நமக்குப் பயந்துதான்;அண்ணா குரைக்கும், எனக்கும் பயந்து அந்த மாதிரி போட்டான்.
நான்;"தமிழ்நாடு தமிழருக்கே"என்று சத்தம் போட ஆரம்பித்தபிறகுதான் அவன் சட்டம் போட்டான்--இந்திய ஆட்சியிலிருந்து விலகவேணும் என்றால் ஏழு வருஷம் என்று. அண்ணாதுரை அப்போதே சொல்லி இருக்கிறார்--நீங்கள் இந்த மாதிரிச் சட்டம் போடுவீர்கள் என்று. சட்டம் போட்டதற்கு அப்புறம், "அவர் சொன்னதற்காகத்தான் போட்டு இருக்கிறீர்கள்?" என்று அவர் சொல்லிவிட்டார். அதுதான் அவன் செய்வான். இந்த இழிவுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணுகிறேன் என்கிற வார்த்தை அவன்கிட்டே (இருந்து) வராது, எப்படி வரும்? இழிவுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணுகிறேன் என்றால்--இந்து மதம் என்கிறது ஒரு மதம் அல்ல; மகன் எல்லாம் இந்துக்களல்ல--மனிதர்கள் என்று சொல்லவேணும். (இப்படிச்) சொல்லிவிட்டால் அவனுக்கு ஏது கடம்?"இந்து" என்கிறதினாலேதானே அவர்கள் வாழ்கிறார்கள், இந்த நாட்டிலே இந்துக்களாய் இருக்கிறதினாலே அவன் வாழ்கிறான். எப்படி வாழ்கிறான்?பிராமணனாக வாழ்கிறான். இந்துவாய் இருக்கிறதினாலே, நம்மைத் தேவடியாள் மகன் என்று சொல்லுகிறான்."இந்து" போய்விட்டால் அவன் சாதாரண மனிதன்;நாமும் சாதாரண மனிதன். ஆனதினாலே இந்த ஆட்சி உள்ளவரைக்கும் நாம் தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும்--சூதீரனாகத்தான் இருக்கணும். ஆனதினாலேதான் கேட்கவேண்டியதாய் இருக்கிறது--"என்னடா, அப்பா!இதை மாற்றுகிறாயா, இல்லை உன்னை ஒழிக்கிறதா?"என்று. அதுதான் நாளைக்கு நடக்கப்போகிற மாநாட்டிலே பிரச்சினை. நியாயமா, அல்லவா? நீங்களே சொல்லுங்கள். இல்லை ஓட்டுக்காகக் கேட்கிறேனா?நான் ஓட்டுக்கு நிற்கிறவன் அல்ல; எங்கள் கட்சியும் ஓட்டுக்கு நிற்கிற கட்சி அல்ல; எங்களுக்கும் ஓட்டு பெரிதல்ல. நான்தான் எப்போதே சொன்னேனே--"எவன் ஆண்டாலும் சரி; எங்களை மனிதனாக மதிக்கணும்"என்று.
ஆனதினாலே இன்றைய தினம் நாம் பெரிய முயற்சியிலே இருக்கிறோம்--ஈடுபட்டு ஆகணும்.தமிழனாய் இருக்கிறவன் எல்லாம் உயிருக்கும், மானத்துக்கும் போட்டு இழுக்கணும், உயிர் பெரிதா, மானம் பெரிதாஎன்று.
அவனவனுக்கு இருக்கும் வேலை--கண்டபடி (பிள்ளைகளைப்) பெற்றுக்கொண்டான்; என்ன பண்ணியாவது பிழைக்கணும் என்கிறான்;தப்பு என்று சொல்ல முடியாத. நூற்றுக்குத் தொண்ணூறு மக்களுக்கு அதே கருத்தாய் இருக்கிறபோது எவனைப் போய்க் குறிப்பிட்டு தப்பு என்கிறது?அவனவன் மாட்டிக்கிட்டான், வாழ்விலே.பார்ப்பானா?அவனுக்கு இன உணர்ச்சி உண்டு. ஒருவன் ஒன்று சொன்னான் என்றால் அந்தப்படிக்குக் கேட்பான்--எப்படியாவது நம் பெருமை நமக்கு நிலைத்தால் போதும் என்று. நமக்கு என்ன இருக்கிறது? அவனவன் ஒவ்வொரு சாதியை வைத்துக் கொண்டான்;அவன் சாதியே பெரிய சாதியாக வைக்குத் கதை கட்டிக்கிட்டான். அவனவன் இன்னொருவனுக்கு மேலே இருக்கணும் என்று போட்டியிட்டுக்கிட்டான். (இந்த) அடிப்படைக் கெட்டைப் போக்குகிறதற்கு ஆள் யார்?எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது? நம் பிள்ளைகள், நம் குழந்தைகள், நம் தாய்மார்கள், இன்னும் பின்னாலே தோன்றக்கூடிய சந்ததிகள் எல்லாரையுமே தேவடியாள் மக்கள் என்றால்--உலகத்திலே எங்கே இப்படி இருக்கிறார்கள்?இங்கே, நம் இந்தியாவை விட்டுவிட்டால்--உலகம் பூராவும் சுற்றினால், இந்த மாதிரி இழிமக்கள்எங்கே இருக்கிறார்கள்?நீக்ரோக்கள்கூட இழிமக்கள் அல்லவே! நீக்ரோக்களைத் தொடக் கூடாது என்கிறதற்கு ஆள் இல்லை. நீக்ரோ வெள்ளைக்காரனுக்கோ, வேறு ஒருவனுக்கோ பிறந்தவன் என்று சொல்வதற்கு ஆள் தில்லை. என்னமோ கறுப்பாக இருக்கிறது--அவர்கள் பெண்களை அனுபவித்தால், அப் பெண்களுக்குக் கருத்தரித்தால் பிள்ளைகள் கறுப்பாய்ப் பிறக்கின்றன. இதுதான் அவனுக்கு வேதனையே தவிர, நீக்ரோக்களுக்கு வேறு ஒன்றுமே இல்லை.
ஆனதினாலே, உலகத்திலே எங்கேயும் இப்படிப்பட்ட ஒரு இழிவுக்கு ஆளான மக்கள் இல்லவே இல்லை. தமிழர்கள் நாம், இந்தியாவிலேயே நமக்குத்தான் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி இருக்கிறது என்று பெயர். இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் வரை பாருங்கள்! மலையாளத்தை எடுத்துக்கிட்டீர்களானால் அங்கே பார்ப்பானுக்குப் பிறந்தவனுக்குத்தான் மரியாதை ஜாஸ்தி;சில பெண்டுகன் போனால், பார்ப்பான்கிட்டே போகலாம்; இல்லை என்றால் சும்மா இருக்கலாம் என்று இருக்கிறார்கள், அப்புறம் அதுக்கு இந்தப் பக்கம் என்ன? ஒன்றுமே இல்லை. மைசூரோ, ஆந்திராவோ--இந்த உணர்ச்சி அவர்களுக்கு இல்லை. நாம் ஏன் சூதீரன் என்கிற உணர்ச்சி ஆந்திராவிலே எவனுக்கும் இல்லை; மைசூரிலேயும் அப்படிதான்--ஏதோ சிலபேருக்கு கருக்கும். இந்த இரண்டையும் தாண்டிவிட்டால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாய் இருப்பது ஒரு பெருமை. பம்பாய் ஆகட்டும், பஞ்சாப் ஆகட்டும்--இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ஒருவன்கூட சூத்திரன் என்கிறதற்கு வெட்கப்படுகிறவனே இல்லை. ஆனதினாலேதான் நம் அரசாங்கத்துக்குத் தைரியம்--"இவன் ஒருவன் தானே கதிர் குகிறான். அடக்கலாம்?" என்று.
நாம் என்ன பண்ணணும் இப்போது? நம் ஆயுளிலே நாம் இந்த இழிவை ஒழி
ஒழிக்கவேணும்
என்று விரும்பினோம் என்றாவது இிருக்கவேண்டாமோ?
எனவே, இந்த மாநாடு தீர்மானமான மாநாடுதான் ) இரண்டிலே ஒன்று
பார்க்கிற
மாநாடுதான்.
அதை முன்னிட்டுத்தான், அதை
வைத்துத்தான் சொன்னேன்--அடுத்த
வருஷம்
நான் இருப்பேனோ,
கிருக்கமாட்டேனோ என்று,
உலகதீதிலே
இருப்பேன்
என்கிறது வேறே; உங்களோடு இருக்கமுடியுமா என்பது வேறே--முடியாது.
நாம் அதை
மாற்றியே
ஆகணும்,
மாற்றவில்லை
என்றால்
நம்மை
எல்லாம்
ஒழித்தே
தீருவான் $
ஜெயிலிலே வைதீதாகணும்--எல்லோரையும் இல்லாவிட்டாலும், சில பேரையாவது.
என்னுடைய
ஆசையெல்லாம்
ஜெயிலிலே
செதீதால்
மோட்சம் அடைவேன்
மோட்சம்
என்றால் இன்பம் அடைவது,
பின்னே எனக்கு ஒன்றும் இல்லை, வெளியிலே
இருக்கிறதினாலே.
நாம் செய்யவேண்டிய வேலை
எல்லாம் செய்தாகிப்போச்சே ! இனி
அவன்கிட்டேதானே
இருக்கிறது-சட்டத்தை
மாற்றணும் ) மதத்தை
ஒழிக்கணும்--
இல்லை அவன் ஒழிக்கப்படணும். முடியா.து-சண்டை போடலாம்.
நாம் கொஞ்சம் வெற்றி
பெற்றோமோ, நம்கூட இரண்டொரு நாடுகள் சேரும்--கொஞ்சம் கொஞ்சமாக; இப்போது
சேராது.
எல்லாம் பயந்துக்கிட்டு இருக்கிறது--என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று:
www.thamizham.net - Free £ book No 3046
கிறுதிச் சொற்பொழிவுகள்
2047
ஆகவே அருமைத் தோழர்களே ! இது நமகீகு ஒரு பரீட்சைக் காலம்.
இப்படியே
நாம்
இருப்பது ரொம்ப அவமானம் $ ஏதாவது செய்யணும்,
இரண்டாவது, இப்போது
நம்முடைய
சமுதாயதீதிலே,
நம்மிடதீதிலே
எல்லாம்
ஒரு
மாறுதல் ஏற்படவேண்டும்.
சமுதாய இழிவு நீங்கவேணும் என்கிற எண்ணம் நம் ஒவ்வொருவரிடதீதிலேயும் இருக்கிறது
என்கிற அடையாளம் காட்டிக் கொள்ளவேணும்.
வேறு ஒன்றும் நமக்கு இல்லை.
மற்றவனுக்கு
எல்லாம்
லட்சியம்
இருக்கிறது--பதவிக்கு
வரணும்
என்று;
அவ்வளவுதான்.
முன்னேயே சொன்னேன்.
பழைய காங்கிரசுக்கு என்ன? பழையபடி
காமராஜர் எப்படியாவது மந்திரியாகணும்--எவன் காலிலே விமுநீதாவது மந்திரியாகணும் 1
காட்டிவிட்டாரே ! தோற்றார் என்று தெரிந்தவுடனே, வேறு வழி இல்லை என்று சொன்ன
வுடனே;
பார்ப்பான்
வீட்டுக்கே
போய்விட்டாரே, ராஜாஜிகிட்டே!
இப்போது எனக்குப்
பயந்துகொண்டு பார்ப்பானுக்கு விளம்பரம் கொடுக்காமல் இருக்கிறார்,
நான் செத்துப்போய்
விட்டேன் என்றால்--நான் மறைந்தேன் என்றால்--என் செல்வாக்குக் குறைந்தது என்றால்
காமராஜுக்கே
தலைவன்
பாரீப்பான்தான்!
எவனாவது ஒரு காலிப் பயலைப் போட்டுக்
கொண்டு பார்ப்பான் தயவை எதிர்பார்கீகிறார்.
ஏன் என்றால், அவன்கிட்டே பத்திரிகை
இருக்கிறது)
ஆட்கள்
இருக்கிறார்கள்)
வினம்பரம் இருக்கிறது.
சரி]
அந்த
அம்மான்
இந்திரா காந்திக்கு என்ன வேலை? அவருக்கும் பார்ப்பான் ஆதிக்கம் இருக்கிறது) என்ன
வேண்டுமானாலும் செய்வார்கள் ? யாருக்கு என்ன
வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.
அவர்கள் இரண்டு பேரையும்
விட்டால்
பேருக்கு கம்யூனிஸ்டுகள்--மக்கனிடத்திலே ஒரு
செல்வாக்கும்
கிடையாது)
அவர்கள்
தனித்து
நின்றால்
5 ஓட்டுகூட வாங்கமுடியாது ;
அவர்கள்
ஒரு
கட்சி
மாதிரி அவர்களுக்கும் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
அப்புறம் பார்ப்பான் கட்சி--சுதந்தராக் கட்சி, ஜனசங்கக் கட்சி, வெங்காயக் கட்சி. வேறே
யார் வருவார்? தமிழரசுக் கட்சி--எவன் ஜெயிக்கிறானோ அவனோடு சேர்ந்து கொள்கிறது)
முன்னேற்றக் கழகம் ஜெயித்தால் இவர்களோடே)
வேறு ஒன்று என்றால் அவர்களோடே,
அதனாலே இந்த ஒன்றைத் தவிர வேறு இல்லை--இந்த உணர்ச்சியோடு,
இந்த
உணர்ச்சிக்காரனும் துணிந்து காட்டிக்கொள்ளவேணும், முன்னேற்றக் கழகதீதுக்காரரோடு
ஏதோ மக்கள் இருந்தாலும் முகீகியமானவர்களெல்லாம் ஜாக்கிரதையாக இருந்துகொண்டு
கூடுமானவரைக்கும்
மற்றவர்களுகீகு
உதவி
பண்ணவேணும்.
சர்க்கார்
அதிகாரிகள்
இதிலே ஒன்றும் கலநீதுகொள்ளவேண்டியதில்லை ; இதைப் பற்றியே அவர்கள் சம்பந்தம்
வைதீதுக்கொள்ளக்கூடாது) ஏனென்றால் மேலே இருந்து ஏதாவது வரும்.
எனவே, தோழர்களே
! இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியிலே இருக்கிறோம் ] கடைசி
முயற்சியாக ஆரம்பிதீது இருக்கிறேன்) முடியுதோ இல்லையோ என்கிறதைப்பற்றி லட்சியம்
இல்லை;
நம் கடமையைச் செய்தோமா இல்லையா என்கிறதுதான்,
சும்மாவே இருந்தால்
என்ன ஆகிறது? நான் உறுதியாய்ச் சொல்லுகிறேன்--நமக்கு அப்புறம் ஏதோ இந்த ஆட்சி
இருக்கிறது)
இந்த
ஆட்சிக்குப்
பலம் வேணுமே !
இதையும்
எப்படியாவது
ஒழித்து
விடுவார்கள்.
அப்புறம்
வருகிறவன்
எல்லாம்
காந்தி வாழ்க?
என்று
ஆரம்பிப்பான்.
இப்போதே
எந்தெந்த மடையன்
* காந்தி வாழ்க,
* காங்கிரசுகீகு ஜே? என்கிறானோ
அவன் எல்லாம்
¢ பார்ப்பானுக்குப் பிறந்தேன்? என்கிறதை ஒதீதுக்கொனள்கிறவன்
தானே $
தான்
* ஈனசாதி? என்கிறதை ஏற்றுக்கொன்கிறவன்தானே !
பார்ப்பானுகீகு அதுதானே
மநீதிரம்--6
எவனெவன்
நமகீகுப் பிறந்தவன்? என்கிறதைப் பார்ப்பதற்கு ] எவனெவன்
*காந்திக்கு ஜே ! என்கிறானோ அவனை எல்லாம் பார்ப்பான் புள்ளி போட்டுக்கொள்வான்)
அது
வளர்ந்துகொள்ளும்.
அப்புறம் ₹ ஓட்டு
என்றால்
எல்லாரும்
அதைச்
சொல்ல
ஆரம்பித் துவிடுவார்கள்.
நாம் நினைக்கணும்) வெட்கத்தோடு நினைக்கணும்--நம் நாடு,
நம் ஆதிக்கம், எல்லா வசதியும் நம்கிட்டே இருக்கிறது; 100-க்கு 97 பேர்--என்னதீதுக்காக
விய்யா இப்படிப்பட்ட கதி, என்று.
www.thamizham.net - Free £ book No 3046
2048
பெரியார் ஈட வெ. ரா, சிநீதனைகள்:
தோழர்களே! மற்றும் என்னை எல்லாரும் வாழ்தீதினீர்கள்) ரொம்பப் பாராட்டினீர்கள்.
நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்--இந்த மாநாட்டிலே வேறுவிதத் தடை இல்லாத
வர்கள்
எல்லாம்
கலந்துகொள்ளுங்கள்]
பெயரைக்
கொடுங்கள் $
விளம்பரம் பண்ணிக்
கொள்ளுங்கள்.
ஏன் என்றால், அதெல்லாம் சேர்ந்துதான் வெற்றிக்கு வழி. எத்தனைப்பேர்
இருக்கிறார்கள் ) எவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்றால், எதிரிக்குக் கொஞ்சம் புரியும்.
இது எளிதிலே
ஆகுமா? முடியுமா? என்பீர்கள்,
இந்த
டில்லி ஆட்சி ஒழியும்படியான
வாய்ப்பு இருக்கிறது; கந்த ஆட்சிக்கு ஒரு நாட்டிலேயும் செல்வாக்கு இல்லை.
உண்மை
யாகச் சொல்லுகிறேன்--தெலுங்கு நாட்டிலே செல்வாக்கு இல்லை; மலையாள நாட்டிலே
செல்வாக்கு இல்லை; தமிழ்நாட்டிலே செல்வாக்கு இல்லை; வங்காளதீதில செல்வாக்கு
இல்லை.
டில்லிக்கு
அதிகாரம்
இருக்கிறது
என்னு அவனவன் அடங்கிக் கிடக்கிறான்
நேரத்தைப் பார் தீ.துக்கொண்டிருக்கிறான்.
அதனாலே
சீக்கிரம்
கவிழும்.
எலக்ஷனிலே
நாம்
வழிகாட்ட
வேண்டியவர்கள்.
ஏனென்றால், அந்த அம்மாள்
நடந்துகொள்ளுகிற
மா திரி-ஜனங்களுக்குள்ளே ஒரு உணர்ச்சியை ஊட்டிவிட்டு, பார்ப்பனைப் பாதுகாக்கிறார்)
பார்ப்பானுக்கே எல்லாப் பதவியும் கொடுக்கிறார்) லட்சம் லட்சமாக-கோடிகோடியாகதீ திருடி
மகனுக்குக் கொடுக்கிறார் என்கிற பேரெல்லாம் வந்துவிட்டது--இது பொய்யோ, நிஜமோ !
அப்புறம் பார்ப்பானாகப் பார்தீது சுப்ரீம் கோர்ட்டிலே ஜட்ஜாகப் போட்டுக்கொண்டார்.
பின்னே முதன் மந்திரிகளை
நியமிக்கிறபோதெல்லாம் பார்ப்பானாகப் பார்தீதே நியமிக்
கிறார்.
சுத்த
அடிமையாய்
இருக்கிற
நம்மவர்களைதீதான்
சேர்தீதுக்கொள்கிறார்---
சுப்ரமணியத்தைப்போல -மற்ற
ஆட்களைப்போல.
ஆனதினாலே, உலகத்துக்கு
கிது
எல்லாம்
தெரிந்துபோயிற்று.,
சமயம்
வந்தால்
கவிழ்க்கிறதற்குதீதான்
தயாராய்
இருக்கிறார்கள் )$ ரொம்ப நாளைக்கு
வாழ்வார் என்று சொல்வதற்கு இல்லை. அடுதீதாற்
போல எலகீஷன் வந்தால் பகுதியாய்ப் போய்விடும் ) அடுத்த எலகீஷன் வந்தால் ஒழிந்தே
போய்விடும்.
நாம் என்ன செய்யவேணும்
என்கிறதற்கு நான் சொல்லணும்.
நமக்கு ரொம்பக்
கவலை இருக்கணும்$
நம் இளைஞர்கள் எல்லாம்
துணியணும் ) கல்யாணம்
பண்ணி
னவன், பெண்டு பிள்ளையோடு இருக்கிறவன், மற்ற வசதியும்
இருக்கிறவன் ஒரு பக்கம்
இருந்தாலும்--திளைஞனசக,
வாழ்க்கையிலே
மாட்டிக்கொள்ளாமல்
தண்டுமுண்டு
இல்லாத மாதிரியாக இருக்கிற ஆட்கள் எல்லாரும் இதிலே புகுந்து கொள்ளணும். அப்போது
தான் பயப்படுவான்--ஆதரவு இல்லை என்றால்
யார் பயப்படுவார்கள் 8 நான் ஒருவன்:
கதீதினால் எஃலாரும் பயந்துகொள்வார்களா 1 நான் சொன்னால் சிலபேர் கேட்கிறார்கள்
அல்லவா?
செய்யணும்.
மாதாடு நடந்தால் சும்மாவா இருப்போம் 8 நடத்தினால் வேலை
ஆரம்பிக்கணும் ) வட நாட்டானை எல்லாம் இந்த நாட்டைவிட்டு விரட்டணும்;)
* உனக்கு
என்னடா இங்கே வேலை?! என்று ஆரம்பிக்கணும்,
அதிலே இருந்து வடநாட்டு அதிகார
முள்ள ஆபீசு எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் போய்க் கலவரம் பண்ணவேணும்,
வேலை இல்லை
என்று சொல்லாதீர்கள்)
இருக்கிறது
நமக்கு,
வேலை
செய்ய
வில்லையா நாம்--சட்ட எரிப்பிலே,
இந்தி எதிர்ப்பில, வடநாட்டான் மறியல்
கிளர்ச்சி
லே எல்லாம், பண்ணினோமே ! அந்த மாதிரியான கிளர்சீசிகளைதீ தொடர்ந்து கங்கே
செய்யணும்,
இல்லாவிட்டால்,
அவன்
வழிக்கு
வரட்டுமே?
என்னப்பா
வேணும்,
என்னப்பா சங்கதி?
என்று வரட்டுமே ! இலேசிலே
அவன் இணங்குகிற மாதிரியான.
கொள்கை இல்லை நம் கையிலே.
இந்து
மததீதை
ஒழிகீகணும்
என்றால்,
அரசியல்
சட்டத்தை
ஒழித்தாகணும்.
அரசியல்
சட்டத்துக்கு
மாநாடு
கூட்டி,
சட்டத்தை,
பார்லிமெண்டிலே-' மதத்தைக்
காப்பாற்றுகிறது என்கிறது இல்லை, கொள்கை.
ஆனால் அவர்கள் இஷ்டம்போல் செய்து
கொள்ளலாம்]
அவனவன்
என்ன
சொல்லுகிறானோ
அதுதான்
மதம்.
பிறந்திட்டது
என்கிறதினாலே இந்து மதம் என்று இல்லை! என்று அரசியல் சட்டத்தைத் திருதீதட்டுமே!
www.thamizham.net - Free £ book 14௦ 3046
¢ பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள் ? கையெழுத்துப் படியினைப்
படித்துக் காண்பித்து நோபிள் கு. கோவிந்தராசலு, வே. ஆனைமுதீக,
௪ சோமு) ஆகியோர், தந்தை பெரியார் அவர்களிடம் 3-9-1973-ல்
கையெரப்பமும், பதிப்புரிமையும் பெற்றனர்.
www.thamizham.net - Free E book No 3046
* பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்? கையெழுத்குப்படியில்
நோபிள் கு, கோவிந்தராசலு, @ ம, சுப்பிரமணியன், பி, இ. ஆகியோர்,
தந்தை பெரியார் அவர்களிடம் கையொப்பம் பெறுகின்றனர்.
‘www.thamizham.net - Fi
இறுதிக் சொற்பொழிவுகள்
2049
சட்டதீதிலே எல்லாவற்றையும்
கட்டிப் போட்டுவிட்டு,
6 அது சொன்னால்
தப்பு;
இது சொன்னால் தப்பு)
அதைச் சொன்னால் ஏழு வருஷம்? என்று சொல்லிவிட்டால்--
நிபந்தனையும்,
நிணைக்க முடியாத
அளவுக்குப்
போட்டு,
உலகம் உள்ளவரைக்கும்
நீ தேவடியாள் மகன்தான் என்றால், அப்புறம் என்ன இருக்கிறது மனுஷனுக்கு?
எப்படி இது ஒரு நாடாகும்?எப்படி மனித சமுதாயமாகும்? எப்படி மக்கள் எல்லாம் மான உணர்ச்சி உள்ளவர்கள் ஆவார்கள்?எனவே, அவரவர் வீட்டிலே இருக்கிற கிளைஞர்களை எல்லாம் விரட்டுங்கள்!கல்யாணம் பண்ணாத பசங்களை எல்லாம்போ என்று அனுப்புங்கள்.பெண்டுகளையும் கூடுமான வரைக்கும் அனுப்பிவிடுங்கள்.பெரிய கிளர்ச்சி நடந்தால்தான் விஷயங்களைச் சரிப் பண்ணிக்கொள்ள முடியும், வேறொருவன் நினைக்கமாட்டான்—இவ்வளவு கடினமான சங்கதியை!எப்படி நினைப்பான்? நினைதீதானால் அவன் பிழைக்கிறதற்கு வழி ஏது? இவ்வளவையும் சொன்னேன்; தெளிவாகவே சொல்லுகிறேன்—முன்னேற்றக் கழகத்துக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லை; இந்த நிகழ்ச்சிக்கும், இந்தக் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை; எப்போது சம்பந்தம் என்றால் அவர்களாக (டெல்லியாக) பார்த்து விரட்டி அடித்துவிட்டால் சம்பந்தம். அதுவரைக்கும் நாம்தான், இந்தக் கிளர்ச்சி நடக்கிறபோது ஆட்சி மாறியது என்றால் தொந்தரவு இன்னும் ரொம்ப ஆகும். அவர்கள் நமக்கு உதவி செய்கிறதற்காகப் பதவியிலே இருக்கவேணும்;இல்லாவிட்டால் கண்டவன் வருவான்—கண்ட மாதிரி நடத்துவான். இந்தி ஒழியணும் என்று சொல்கிறபோது, இந்தி இருக்கவேணும் என்று மந்திரிகள் சண்டை போடவில்லையா?அவினாசிலிங்கம் செட்டியார், மற்றும் இப்படிச் சில மந்திரிகள் எல்லாம் இந்தி இருக்கணும் என்று சண்டைபோடவில்லையா?அப்படி எத்தனையோ இருக்கிறது தமிழர் சாதியிலே! அதனாலே, இப்போது தமிழர் என்கிற அடிப்படையிலே இருக்கிற நிலையைக் காப்பாற்றிக்கொள்ளவேணும்;அவரவர்கள் வந்திடவேணும்.
அவசியம் இருக்கிறபோது
நம் இயக்கத்திலே உள்ளவர்களும் ஒவ்வொருவரும் ஆதரவுகொடுக்கணும்! கூடுமானவரை வெளியே வந்திடவேணும்.
இந்தக் கிளர்ச்சி, நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை—இந்தக் கிளர்ச்சியை ஆரம்பிக்கிற கிடந்தான் தமிழ்நாடே தவிர, ஏறக்குறைய இந்தியாவிலே பகுதி நாட்டுக்கு மேலே ஒரு வருஷத்துக்குள்ளே நெருப்புப் பிடிக்கொள்ளும்—ஒரு வருஷத்துக்குள்ளே.
அலகாபாதிலே, கான்பூரிலே, கன்னும் லக்னோவிலே நம் உணர்ச்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள்!அவர்கள் ஆதரவ அளிப்பார்கள்!அப்புறம், அப்படியே பெருகும், ஏனென்றால், அங்கே உள்ள ஜனங்களுக்கு'சூத்திரன்' என்றால் அவமானம்? என்று தெரியாது. அது ஒரு பெருமை என்று நினைக்கிறார்கள். என்னிடமே அங்கே களைபாய் பண்ணினான்—இராமாயணத்தைப் பார்த்துவிட்டு, அப்புறம் அதே ஊரிலே இராமாயணம் இங்கிலீஷிலே போட்டு இரண்டாயிரம் பிரதிகள் செலவாயிற்று; விஷயம் தெரிந்தால் ஒத்துக்கொள்ளுகிறார்கள். அங்கங்கே இந்தப் பார்ப்பனர்கள் கொஞ்சம் பேர்—நம் நாட்டுப் பார்ப்பனர்கள் அங்கே போய் உட்கார்ந்துகொண்டு, அங்கே கூட்டம் சேர்க்கிறார்கள். நம் ஆட்கள் எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதெல்லாம் நிலைத்து இருக்காது. இங்கே ஒரு ஆயிரம், ஐயாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனோம் என்றால் மற்த நாடெல்லாம் (நெருப்பு) பிடிக்கொள்ளும், ஐயாயிரம் பேர் கூடவா போகமாட்டார்கள் ஜெயிலுக்கு—இவ்வளவு பெரிய கிளர்ச்சிக்கு? ஒன்றும் இல்லாத கிளர்ச்சிக்கு எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு போனார்கள் என்றால்—சாதியை மாற்றுகிறது, நம்முடைய பெண்களுடைய நிலைமையை மாற்றுகிறது என்கிற கிளர்ச்சிக்கு ஐயாயிரம் பேர்கூட வர போகமாட்டார்கள்!www.thamizham.net - Freebook No 3046
2050 பெரியார் இ. வெ. ரா. சிந்தனைகள்
ஆனதினாலே, அருமைத் தோழர்களே!நீங்கள் எல்லாம் நன்றாக நினையுங்கள். உங்கள் குடும்பமோ, உங்கள் பிழைப்பே, கலந்துகொள்ள இடம்கொடுக்கவில்லை என்றாலும்—நம்மாலான உதவி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். அதைச் செய்யுங்கள். நீங்கள் ஆட்களைச் சேர்க்கலாம்; நிகழ்ச்சி நடந்த உடனே—மாநாடு நடந்த உடனே ஒரு லட்ச ரூபாய் சேர்க்கவேணும். மாண்புமிகு அன்பில் பதினாயிரம் ரூபாய் கொடுக்கணும், கொடுக்கணும். எல்லாம் சேர்க்க ஆரம்பிக்கணும்.
எல்லாம் பெண்களே ஜெயிலுக்குப் போகணும்—ஏனென்றால், இது சமுதாய சம்பந்தமான து. பார்ப்பானாக இருந்தால் அவன் எவ்வளவு செய்கிறான்—எத்தனைப் பார்ப்பன சாதிகள், எவ்வளவு கூட்டம்!இது நம்முடைய மானை பாதிக்கிற காரியம் ஆனதினாலே நாம் கலந்துகொண்டால் தப்பென்ன?தோற்றுப் போனால்தான் தப்பென்ன?இதற்குத் தோல்வியே இருக்காதே! அதை மாற்றுகிற வரைக்கும்—அந்த நிலைமையை மாற்றுகிற வரைக்கும் பணி இருக்குமே தவிர தோல்வியே இருக்காது. நான் சொல்லுகிறேன், நீங்கள் விளையாட்டாக நினைக்காதீர்கள்—இது மாறினால்தான் நாம் மனுஷன் ஆவோம்; நம்நாட்டு மனிதத் தன்மை நமக்கு வரும். இது முடியவே இல்லையே—என்ன தான் சுதந்தரம் என்று இருந்தாலும்.
நான் சொல்லுகிறேன், இந்தியாவில் 56 கோடி ஜனங்கள்.இதிலே 100-க்கு 3 பேர் பார்ப்பான். அவனே இந்தியரை ஆளுகிறது என்றால்—நினைத்துப் பாருங்கள், எவ்வளவு அவமானம்!ஜவகர்லால் நேருவாவது கொஞ்சம் வேஷம் போட்டுக்கொண்டிருந்தார், எல்லாப் பிறசாட்டமும் பண்ணுவார்;பார்வைக்குச் சமதர்மம் என்பார். எனக்குத் தெரியும்—நான் அப்போதே சொல்லி இருக்கிறேன்.
இந்த இந்திரா காந்தி அம்மாளாலே வேஷம் போடக்கூடத் தெரியவில்லை. பார்ப்பனையே கொண்டுவந்து வைத்துக்கொண்டார் அந்த அம்மாள், முதலாவது. இன்றைக்கு அந்த அம்மான் பதவியிலே இருக்கிறது நமக்கெல்லாம் அவமானம் இல்லையா—பெண் என்பதற்காகச் சொல்லவில்லை—ஒரு பார்ப்பனதி என்பதால்தான். என்ன; அப்புறம்,
நாம் என்ன மானத்தோடு வாழ்கிறோம்?இந்திய மக்களுக்கு என்ன தொல்லை இருக்கிறது?இந்தியாவில் 56 கோடி ஜனங்களில் 50 கோடிப்பேர் பார்ப்பான் அல்லாதவர்கள்—ஆனால் பார்ப்பனதி ஆனாகிறாள் என்றால்?இதை எல்லாம் நீங்கள் நினைக்கணும்.
எனக்கு இன்று புதிய சுவாதீனம் இல்லை என்றுகூடச் சொல்லுவேன்.எல்லாம் மறந்துபோயிற்று; என்ன பேசவேணும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது. ஏனென்றால் இரண்டு நாளாய்ப் பட்டினி கிடந்தேன்.நேற்றுத் தான் காலையிலே ஒரு கப் கஞ்சி, இராத்திரி 9 மணிக்கு ஒரு தடவை கஞ்சி, முன்தாநான் பூராவும் ஒன்றும் இல்லை. தண்ணீர்கூட குடிக்கவே இல்லை. இன்றைக்குக் காலையில் வந்தேன்;ஒரு இட்டிலி கொடுத்தார்கள்.இன்னொரு இட்டிலி கொடு என்றேன், முடியாது என்று சொல்லிவிட்டார்கள்—நாசமாகப் போகட்டும் என்று வந்துவிட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்க்கிறபோது—மறுபடியும் இன்னும் 8 நாட்களுக்குப் பேசுவதற்கு இல்லையே என்று, மனதிலே இருக்கிறதைச் சொல்லுகிறேன்.
இப்போது நீங்கள் எல்லாம் பொறுப்போடு வெளியே போகணும்;நீங்கள் வந்து அந்த மாநாட்டிலே கொடுக்கிற உற்சாகம்தான், மக்களுக்கெல்லாம் நல்லது ஆகும். சும்மா மாநாடு நடத்திவிட்டுப் போகிறதில்லை. நடந்த உடனே கிளர்ச்சி ஆரம்பிப்போம். நாம் அவர்களுக்கு நோட்டீஸ் விடணும்—'என்ன, இதை மாற்றுகிறதற்கு வழி பண்ணுகிறாயா?இல்லை உன்னை ஒழிக்கிறதா?'—என்று. மாநாட்டுத் தீர்மானம் அதுதான் வரும்.அதிலே டைம் போடுவோம்.அது ஆன உடனே ஆரம்பித்துவிடுவோம்.
அதற்குன்னே ஆங்காங்கே கமிட்டி கட்டவேண்டும். மறுபடியும் சொல்லுகிறேன்—வடநாட்டான் எங்கெங்கு இருக்கின்றானோ அங்கெல்லாம் மறியல்,'இங்கே என்ன வேலைஉனக்கு?'என்று. அப்புறம் வடநாட்டுக் கச்சேரி, போஸ்டாபீஸ், அதிகாரி அங்கே எல்லாம் மறியல். அவனுக்குத் தெரியணுமே, அதற்காக.
இங்கே, இருக்கிற இடத்திலே (மறியல்) செய்தால் இவர்களுக்குத் தொந்தரவு. இவர்களாலே ஏதாவது தப்பு இருந்தால் அல்லவா இவர்கள் இடத்திலே செய்யலாம்.இன்னும் உங்களுக்குத் தோன்றுகிறதெல்லாம் செல்லுங்கள்—என்னென்ன காரியங்கள் செய்யலாம் என்று. அதைச் செய்வது. நான் ஒன்றும் சும்மா இருந்துகொண்டு அதிகாரம் பண்ணுகிறாற்போல இல்லை—முதல் பலி நான். என்னைக் கொடுத்துவிட்டுத்தான் அப்புறம் உங்களைக் கூப்பிடுவேன். சும்மா நாங்கள் உபதேசம் பண்ணிக்கொண்டு இருக்கிறதில்லை.
அருமைத் தோழர்களே!கொஞ்சம் சீரியஸாக, கொஞ்சம் தீவிரமாகச் சிந்தியுங்கள். தமிழர்களுக்கேஒரு பரீட்சை—தமிழருக்கு மானம் இருக்கிறதா இல்லையா என்கிற தைப் பார்க்கிற ஒரு பரீட்சை என்றெல்லாம் வேண்டிக்கொண்டு என்னுடைய இஷ்டத் தை எடுத்துச் சொன்னேன் நான்.
நான் இப்போதும், கடைசியாகவும் வேண்டிக்கொள்கிறேன்—மந்திரிகளோ, முன்னேற்றக் கழகக் ஆரோரோ இதிலே கலந்துகொள்ளாமல் இருக்கணும். மற்த உதவிக்கு இருப்பது, அதுவேறு விஷயம்.காரிய சம்பந்தமாக இதிலே கலந்துகொள்ளாமல் இருக்கவேண்டியது. நல்ல உத்தியோகம், பதவியிலே இருக்கிறவர்கள் கண்டிப்பாகக் கிட்டேயே வரக்கூடாது. ஏதோ அவர்களாலே ஆன உதவியைச் செய்யட்டும்.
ஏன் என்றால், நான் முன்னமேயே சொன்னேன்;கடைசியாகவும் சொல்லுகிறேன்—இது கடைசி முயற்சி, கடைசி முயற்சி, கடைசி முயற்சி!
வணக்கம்.
(திருச்சியில், 4-11-1973 ஞாயிறு அன்று, சிந்தனையாளர் கழகச் சார்பில் நடந்த பிறந்தநான் விழாவில் பெரியார் ஆற்றிய நன்றி உரை. பெரியார் அவர்கள் சிந்தனையாளர் கழகத்தில் இறுதியாக உரையாற்றிய நிகழ்ச்சியாக, இது அமைந்துவிட்டது.)
[ஆதாரம்:Tape Recorder—Akai, Track 14 & 15/16 Speed, 1798]
2. மாநாட்டில்
பேரன்புமிக்க தாய்மார்களே!பெரியோர்களே!தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந்துருளியிருக்கும் பிரதிநிதிகளே!சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!இப்பொழுது நல்ல சொற்பொழிவுகளைக்கேட்டு ரொம்ப உணர்ச்சியோடு பக்குவமான நிலையிலே இருக்கிறீர்கள், நான் பேசுவதன்மூலம் எங்கே இது கலைந்துபோய் விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக யாருக்கும் விளங்கும்படியும், ஒவ்வொருவர் மனமும் உடனே காரியத்தில் இறங்கும்படியான உணர்ச்சி ஏற்படும்படியும் நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந்திருக்காத அனேக அருமையான விஷயங்களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம்—ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்ல வண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிரதாயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டி இருக்கிறது.
தோழர்களே!நான் இந்த மாநாடு கூட்டி இருப்பதன் நோக்கம் போராட்டத்தை உத்தேசித்து அல்ல. அல்லது இந்த ஆட்சியிலே இருந்து விலகவேண்டும் என்கிற எண்ணத்தை உத்தேசித்து அல்ல. மனித சமுதாயமாகிய நாம், சமுதாயத்திலே ஈனப் பிறவிகளாக—அசிங்கப்படும்படியாக வரும்படியான கருத்திலே, இன்னொரு சாதியரனுக்கு,அதுவும் நம் நாட்டிலே பிழைக்க வந்த ஒரு சிறு கூட்ததீதானுக்குக் கீழ்மக்களாக—அடிமைகளாக—அவனுடைய தாசிகளாக இருக்கவேண்டும், இருக்கிறோம், இருந்துவருவது தான் ஆட்சியினுடைய தன்மை என்று கருதும்படியாக—திழிவான நிலைமையிலே இருக்கிறோம். அதிலிருந்து மாறவேண்டும் என்று கேட்கிறோம். இது இயற்கை.
எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் இவைகளை எல்லாம் சொல்கிறபோது வெட்கப் படத்தான் செய்வான்.இதிலேயிருந்து கொஞ்சம் மாறினால் தேவலாம் என்றுதான் இருப்பான். நாம் தாசிகள் இல்லை. நிஜமாகத் தாசிகளாக இருக்கிறவர்கள்கூட, ஏதோ அமைப்பினாலே—காரியத்தினாலே இருக்கவேண்டி ஏற்பட்டது என்று இருந்தாலும்,'என்னடா, இப்படி ஒரு பழிப்புக்கு ஆளானேரமே!'என்று வருத்தப்படுவான். அப்படிப் பட்ட ஒரு நிலையிலே நம் நாட்டை, நம் சமுதாயத்தை, நம் மக்களை, நம் தாய்மார்களை எல்லாரையும் உட்படுத்தி அமுல் நடத்தி ஆட்சி வகிக்கிறார்கள் என்றால்—உண்மையிலேயே சொல்லுகிறேன்—இத்தனைநாம் பொறுத்துக் கொண்டிருந்ததே நமகீக்குப் பெரிய அவமானந்தான்.
முதலிலேயே இதற்கெல்லாம் பகீஸ்வம் பண்ணி ஆகி இருக்கணும்.முடியவில்லை. ஆனால் இதைப்பற்றி வருத்தப்பட்டு இருக்கிறோம். செய்கிற முறை சரியாக வரவில்லை. உணர்ச்சியும் நிலைமையும் வாய்ப்பாக இல்லை; இப்பொழுது ஏதோ ஒரு வாய்ப்பாக வந்தது. அதுவும் இப்போது வந்த வாய்ப்பு, இந்தத் தீண்டாமை ஒழிப்பு என்கிற விஷயத்திலே, தீண்டாமை ஒழிந்ததாகச் சொல்லியும், இன்னமும் நம்மைத் தீண்டப்படாதவன் என்று கருதும்படி கடவுளிலே, கோயிலிலே இந்த மாதிரிச் சில இடங்களிலே வைத்துக் கொண்டிருக்கிறார்களே என்ற எண்ணம் வந்ததினாலேதான்—இதை மாற்றவேண்டும் என்கிற ஒரு உணர்ச்சி வந்தது.
இப்போது, நண்பர் நமது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 'இந்தக் கோயில் அர்ச்சகர் வேலை யாரும் செய்யலாம்'என்று தீர்மானம் பண்ணி, அதை இந்த அரசாங்கம் சட்டம் செய்ததாக செல்லாது என்று பண்ணி, நம் இழிநிலைமையைச் சட்டத்தின்மூலம
உறுதிப்படுத்திவிட்டதினாலே,
கொஞ்சம்
ஆத்திரம்
அதிகமாய்ப்
போயிற்று,
இதை
இப்படியே விட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகிறது?
இல்லாவிட்டால் நமக்கு கிவ்வளவு
ஆதீதிரம்கூட வந்திருக்காது ) நமக்கு ஆத்திரம் வந்தது, வந்ததினாலே நல்லவிததீதிலே
வந்திருக்கிறோம்.
உணர்ச்சி வந்தது) அதற்குவேண்டிய காரியமெல்லாம் பண்ணினோம்;
மாநாடு போட்டோம்.
இது
ஒரு
திருப்திகரமான
மாநாடு]
ஒன்றும்
குறைசொல்லுகிறதற்கு
இல்லை$
எவ்வளவுபேரை எதீர்பார்தீதோமோ அதற்கு
ஒன்றும்
குறைச்சல் இல்லை]
எவ்வளவு
ஆதரவு எதிர்பார்த்தோமோ அதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
பொருளாதார விஷயத்
திலே நம் இயக்கம் நடகீகிறதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று நினைத்தோமோ
அதிலேயும்
ஒன்றும் குறைச்சல்
இல்லை,
ஒருவிததீதிலேயும்
நம் மாநாட்டைக்
குறை
சொல்லுகிறதற்கு இல்லாமல் இருக்கிறது) நம்முடைய ஆசைப்படி நல்ல வண்ணம் நடந்து
இருக்கிறது.
இப்போது நல்ல தீர்மானங்களைப் போட்டுவிட்டோம்)
அழகுகீகாகதீ தீர்மானம்
போடவில்லை.
கண்டிப்பாக இழிவு தீரவேணும் ) இது போகாவிட்டால் நம் கதி என்ன
ஆகும் என்கிற நிலைமையிலே இந்ததி தீர்மானங்களைச் செய்து இருக்கி3றாம், இப்போது
இந்தத் தீர்மானங்களிலே எனக்கு ஒரு பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள், எப்போது
செய்கிறது என்கிறதைப்பற்றித் தலைவர் சொல்லுவார் ) அவர் சொற்படி கேட்கவேண்டும் ?
என்று.
என்னென்ன
செய்யவேண்டும்
என்கிறதைப்பற்றிப்
பொறுப்பசகக்
கேட்டிருக்
கிறது)
அதற்குப்
பரிகாரம்
சொல்லணும்)
உண்மைதான்.
எனக்கும், ஒரு
பெரிய
காரியத்தை ஆரம்பிக்கிறோம்--சும்மா அலட்சியப் புத்தியோடு ஆரம்பித்து அல்ல, மென்ன
www.thamizham.net - Free £ book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்
2053
உறுதியான எண்ணத்தோடு
sdrglursd
காரியம்
நடக்கும்படியான
தன்மையிலே
செய்யவேணும் ! என்கிற எண்ணந்தான் இருக்கிறது.
முதலாவதாக,
நான்
தெரியப்படுதீதிக்
கொள்ளுகிறேன்.
இந்தக்
கிளர்ச்சியை
எப்போது ஆரம்பிக்கலாம் என்றால், இந்த மாநாடு முடிந்த உடனே, மாநாட்டுத் தீர்மரனங்
களை மந்திரிகள், குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதம மந்திரி இந்திரா அம்மான் அவர்:
களுக்கும் ) மற்றும்
பார்லிமெண்ட்
மெம்பர்களுக்கோ,
நம்
அரசாங்கதீதுக்கோ,
யார்
யாருக்கோ--முக் யமாக இந்திய அரசாங்கதீதுகீகு அனுப்பி அவர்கள் நம் சேதிகளைப்
பற்றி என்ன முடிவு கூறுகிறார்கள் என்பதையும் ) அவர்கள் ஆதரவான பதிலை எங்களுக்கு
அனுப்பிவைகீகவேணும் என்றும் கேட்கப்போகிறோம்.
அது வந்தபிறகு நம் மக்களுக்குட
நமக்கு அனுகூலமாக இல்லாவிட்டால் கிளர்ச்சியிலே இிறங்குகிறோம் என்று திட்டம்போட்டு
இருக்கிறோம்.
அது பெரிய காரியந்தான்.
கிளர்சிசி ஆரம்பிக்கிறபோது, அரசாங்கத்துக்கு, அது விரோதமாகதீதான் இருக்கும்.
அரசாங்கம்,
எப்படியாவது
அடக்கவேண்டும்
என்று அவர்களால் கூடுமான அளவுக்கு
வேலை
எல்லாம்
செய்துதான்
திருவார்கள்,
கிளர்ச்சியும்,
அதைச்
சமானிதீதால்தான்
முடியும்)
முடியாதுபோயிற்று
என்றால்
தோல்விதான்.
ஆனதினாலே,
ரொம்பப்:
பொறுப்பான வேலையாய் இருக்கிறது)
செய்யவேண்டும்.
இப்போது
எனகீகு இங்கே
உள்ள கூட்டத்தையும், மக்களையும், உங்களுடைய பேச்சையும் இதனுடைய அவசியதீ
தையும்
எல்லாம்
கேட்கிறபோது--இதற்கு
ஆட்சியினுடைய
எதிர்ப்பைவிட,
இதற்கு
ஆதரவு அதிகமாக
இருக்கும்) நினைக்கிறபடி காரியங்கள் முடியும் ) முடியசவிட்டாலும்
நம்முடைய கடமையைச் செய்தோம் என்கிற நிலைமையாவது குற்றமற; யாகும் பழிதீதுச்
சொல்லுகிறதற்கு கிடமில்லாத தன்மையிலே அதற்கு வாய்ப்பு ஏற்படும் ) கி.துதான்.
தோழர்களே ! நான் நினைக்கிறேன்--இவ்வளவு பெரிய காரியதீதிற்கு நிபந்தனை
போட, நாம் எழுதி அதற்குள்ளாக எங்களுக்குப் பதில் எழுதவேண்டும் என்று கேட்பதற்குகீ
கொஞ்ச நான் வாய்தா கொடுதீதுதீதான் ஆகணும்; பதீதுநாள், 15 நாள் என்றால் பற்றாது;
அவர்களும் யோசிக்கணும்.
அதுமாதீதிரம் அல்ல, நாமும் நல்லவண்ணம் பிரசாரம் செய்து
மக்களை எல்லாம் பக்குவப்படுத்தணும்.
அதனாலே அவர்களுக்கு நாம் ஞாயமான வாய்தா
கொடுத்தோம் என்றும், நாமும் கிரமமாகச் செய்யவேண்டிய கடமைக்கு ஏற்பாடெல்லாம்
செய்தோம் என்றும் ஆகும்,
ஆகையினாலே, நான் யோசித்தவரையிலும் என்ன தேதி,
எப்போது வாய்தா கொடுக்கலாம் என் றால்-வருகிற ஜனவரி மாதம் 26-ம் தேதி--குடியரசு
நானாகிய 26-ம் தேதிவரைக்கும் வாய்தா தரலாம். அடுத்த மாதம் ஒரு 26 நான் இருக்கிறது?
இந்த மாதம் ஒரு 20 நாள் இருக்கிறது)
10 நரட்களாகும் (நாம்) தயார்பண்ணி அனுப்ப.
கிட்டத்தட்ட ஒரு மாதம் தாராளமாய் இருக்கிறது) அது கிரமமாகக் கொடுக்கவேண்டிய
வாய்தா
என்கிறதல்லாமல்,
நாமும்
கொஞ்சம்
நல்ல
பிரசாரம்
எல்லாம்
செய்யணும்.
இன்னும் ஒருமாதம் 10 நாளைக்குள்ளாக ஒவ்வொரு மாவட்டதீதிலேயும், வட்டதீதிலேயும்
நம்முடைய இயக்கத் தோழர்கள் ஆங்காங்கே கூட்டம்கூட்டி கமிட்டிபோட்டு மக்களுடைய
ஆதரவு பெற்று நல்லவண்ணம் பிரசாரம் செய்து, எல்லா மக்களுக்கும் நல்ல தெளிவான
உணர்ச்சியும், முயற்சியும் ஏற்படும்படிச் செய்யவேணும்.
அதற்கு நாள் வேண்டியதுதான்.
ஜனவரி மாதம் 26-ம் தேதி என்கிறது ரொம்ப அதிக நாளல்ல) அதற்குள்ளே நம்மமக்களுகீகு
உணர்ச்சி
ரொம்ப
மறநீதுபோகாது.
அதற்குள்ளே
அவரவர்கள்
தங்களைத்
தயார்
படுதீதிக்கொள்ளப் பிரயதீதனப்படுவார்கள்.
அதைதீதான் நான் சொல்லுகிறேன்.
அத்தோடு, நம்முடைய கடமையைச் செலுதீதுகிறதிலே, கிதனுடைய அவசியத்தைப்
பற்றிச் சொல்லவேண்டியதில்லை--முதலிலேயே ஆரம்பித்தோம்.
எல்லாருக்கும் துடிதீதுகி
கொண்டிருக்கிறது, காரணகாரியத்தை எடுத்துச் சொல்லுகிறபோது.
1686--258
www.thamizham.net - Free £ book 14௦ 3046
2054
பெரியார்
ஈட, வெ. ரா. சித்தனைகள்
சுருக்கமாய்ச் சொல்லுகிறேன், இந்த மாதிரியான ஒரு நிலைமை நமகீகு ஏற்பட்டது
ஒரு மோசடிதான் ) இயற்கையால் ஏற்பட்டதல்ல. எல்லாம் முன்னேற்பாடு செய்துகொண்டு;
நிறைய நம்மையெல்லாம் அடக்கி இழிவுபடுத்தி ஆன்வதற்கு வேண்டிய வசதிக்குதீ திட்டம்
இட்டு ஏற்பாடுசெய்த காரியம்.
அதனாலே இது சரியான வாய்ப்பாக வந்துவிட்டது என்று
யாரும் சொல்லமுடியாது. ஏதோ, நாம் அதற்கு முன்னே இருந்தே நம் குறையையெல்லாம்
சொல்லிக்கொண்டுதான்
வருகிறோம்--சாதியைப்பற்றி,
மதத்தைப்பற்றி
இன்னும்
மற்ற
மற்றக்
காநியத்தைப்பற்றி.
அதை
ஒன்றும்
லட்சியப்படுதீதவில்லை.
லட்சியப்படுதீத
வில்லையென்றால் அவர்கள் செய்த காரியம் எவ்வளவு மோசடி என்கிறதை நல்லவண்ணம்
எடுத்துச் சொன்னார்கள் ) நம் நண்பர் ஆனைமுத்து அவர்கள் நன்றாகவும் சொன்னரர்கள்.
நானும் ஆரம்பகாலந்தொட்டு,
¢ இது ஒரு மோசடி, மோசடி? என்று--* ஏமாற்றுதல்தான் ?
என்று சொல்லிக்கொண்டேதான் வந்திருக்கிறேன்.
சுதந்தரம் வந்தது--* சுதந்தர நாள்?
என்றபோதே, நான் சொன்னேன்--6 இது சுதந்தர நாள் அல்ல; துக்கநாள், மோசடி, நம்மை
ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள் ? என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான்.
அதை,
நாளுக்குநாள் அதற்குண்டான காரணங்களை விளக்கியும் அந்த அபிப்பிராயதீதைப் பலப்
படுதீதிக்கொண்டுந்தான் வந்திருக்கிறேன்.
ஆனால்
அவர்கள்--அவர்கள்
என்றால்
யார் ₹
பார்ப்பனர்கள் 1!
அவர்கள்
கையானாய்ப் பேோனவர்களே அவர்களுக்கு
நம் எல்லாருடைய
கருத்தோ--அதைச் சரி
என்றோ, அதனாலே என்னென்ன ஏற்படுகிறது என்கிறதையோ கருதினவர்களே இல்லைஃ
ஆகையினால், அவர்கள் தக்க ஏற்பாட்டோடு மோசடியாய்தீதான் செய்தார்கள்.
அதற்குண்
டான
காரணம், நல்ல காரணமாகச் சொன்னார்களே ! நம்ஆன்
ஒருவரைக்கூட
கமிட்டி
யிலே போடவில்லை ; எலகீஷனிலே வந்தவன் எவனையும்கூட லட்சியம் பண்ணவில்லை $
யாரே சிலபேரை; எப்படியோ வாய்ப்பு வந்தவர்கள் என்று வைதீது, அவர்கள்
இஷ்டம்
போல் பொறுக்கி எடுதீதவர்களைப்போட்டார்கள்.
அதை விளகீகுவதற்காக--தயார் செய்
வதற்காகப்போட்ட
கமிட்டியில்கூட
6 பேர்
என்றால்--நாலுபேர்
பார்ப்பனர்,
ஒருவர்
அம்பேத்கார், இன்னொருவர் சாயபு.
இந்த இரண்டுபேருக்கும் கவலை இல்லாத நிலைமை
யரய்ப் போயிற்று.
முதலிலே அவர்களுக்குத் தேவை வசதியாய் இருந்தபோது பொது
வான கவலை அவர்களுக்கும் இருந்தது.
ஏற்பாடுபண்ணுகிறதிலே நல்லவாய்ப்பு
அவர்.
களுக்கு
இருந்தது--அம்பேத்காருகீகு
அவர்
நினைக்காத
அளவுக்கு
வச௪திகொடுதீது
விட்டார்கள்.
நீ ஏனய்யா சதீதம் போடுகிறாய் ₹ உங்களிலே எத்தனைப் பேர் உண்டோ
அதீதனைப்பேருக்கு உத்தியோகம் எடுதீதுக்கொள் ) என்றார்கள்--தீர்
ந்தது அவருக்கு ;
வேறே
உணர்ச்சி
வருவதற்கு
அவசியம்
இல்லை;
கேட்டால்,
* நீங்களும்
முயற்சி
பண்ணுங்களேன்,
அது
மாதிரிதான் £ என்று
கூறிவிட்டார்.
நானும்
நேரிலேகூடக்
கேட்டேன்-- ஏனய்யா,
எங்களுக்கு
நாதி இல்லையா?
என்று.
* யரர
சொன்னார் $
நீங்களும் முயற்சி பண்ணுங்களேன்.
நாங்கள் என்ன பண்ணமுடியும்?
என்கிற மாதிரி
அவர்
சொன்னார்.
* முதலிலே
நாம்
அப்படி எல்லாம் பேசவில்லையே 1!
நாமெல்லாம்
ஒன்றாகதீதானே கலந்தோம்? என்றேன்.
¢ நிலைமை அப்படி ஆகிப்போயிற்று.
நான்
என்ன
பண்ணுகிறது?
என்று
அவர்
கூறிவிட்டார்.
சாயபுமாரும்
அப்படித்தான் 5
அவர்களுக்கு நம்மைப்பற்றிக் கவலை இல்லை. அவரவர்கள் காரியதீதிற்குதீ திருப்தி ஆகிப்
போயிற்று,
நமக்கு
நாதி இல்லாது போய்விட்டது)
உண்மையாகவே
சொல்லுகிறேன்,
நமக்கு
நாதி இல்லை.
ஒரு ஆளாவது நாதியோடு கவலை எடுதீதிருநீதால் ஏதோ
சில
மாறுதல்களாவது வந்திருக்கும் ) ஒன்றுகூட கில்லைஃ
அதனாலே, அவர்கள் இஷ்டம்போல எழுதிவிட்டார்கள்.
இருந்தாலும் அதற்காக
ரொம்ப வருதீதப்பட்டிருக்கிறார் டாக்டர் அம்பேதீகார் )$ ஆனால், காரியம் ஒன்றும் செய்ய
முடியவில்லை.
அன்றைய முதற்கொண்டே சொல்லிக்கொண்டேதான் வருகிறோம்--அது
ஒரு மோசடி, மோசடி; அது ஒரு மனுதர்ம சாஸ்திரம்)
அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு
www.thamizham.net - Free £ book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்
2055
ஏற்ற
காரியம்
என்றெல்லாம்
ரொம்பச்
சொல்லிக்கொண்டு
வந்திருக்கிறேன்,
யார்
கவனிக்கிறார்கள் ? அரசியல் வந்துவிட்டது என்றாலே, அவனவன் ஓட்டுக்கும்--பதவிக்கும்
மந்திரி வேலைக்கும் கவலையோடு இருந்தானே தவிர, சமுதாயதி துறையிலே நமக்கு கந்தக்
கேடு இருக்கிறது என்று இன்றைக்கு யாருக்குக் கவலை இருக்கிறது T
இன்றைக்கு நான் சொல்லுவேன்--நம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சரியாக இருக்கிறார் என்று சொல்லமாட்டேன்(ஏதே சிலபேருக்கு இருக்கலாம்;மற்றவர்களுக்கு ஏதோ அவர்கள் பதவி, பட்டம் அது, இது அந்த மாதிരி ஆகிப்போயிற்று நிலைமை.
இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாயப் போனதினாலே அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல்லாமல்--அது மூலமாக ஒரு பரிகாரமும் செய்கிறதற்கு இல்லை.
இப்போது நாங்கள் தான் ஏதோ கடுமை கொண்டிருக்கிறோம். நமக்கும் அவ்வப்போது சரி பண்ணிக்கொள்ளத் தான் முடிகிறதே தவிர நிரந்தரமாய் இல்லை.
என்னமோ, முன்னே சென்னாற் போல இந்தக் காலம் வந்ததினாலே ஆரம்பித்தோம்(கொஞ்சம் வசதியாய் இருக்கிறோம். மந்திரிமார்களிலேயும் சிலபேருக்குக் எல்லாம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது) உண்மையைக் கூடச் சொல்லுகிறேன். சாதாரணமாக சிலபேர்,"பதவியைவிட்டு வந்துவிடுகிறேன்"என்றுகூடச் சொன்னார்கள் $ பொய்யல்ல. எல்லாரும் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை--சில பேர்தான். நண்பர்கள் போகட்டும்--மந்திரிபதவி பார்த் தீதுவத்தது) இனி ஆகப்போகிறது ஒன்றும் இல்லை. உள்ளபடியே நமக்கு வேண்டிய ஆதரவெல்லாம் வந்திருக்கிறது கொஞ்ச நாளாய்.
இப்பொழுது நாம் செய்யவேண்டிய வேலையை ரொம்பத் தெளிவாய் ஏற்பாடு பண்ணிக்கொண்டோம் $ தீர்மானம் பண்ணி எல்லா விஷயத்தையும் விளக்கிவிட்டோம், ஜனங்களுக்குள்ளேயும் நல்ல உணர்ச்சி இருக்கிறது. இதுவரைக்கும் நமக்குப் பெயர் கொடுதிருக்கிறவர்கள் ஒரு இரண்டாயிரம் பேருக்கும்மேல இருக்கும்;இன்னும் கேட்டால் தினம் வரும் கற்றை கற்றையாக$ அது பற்றாது. நாம் வேறுவிதத்திலே இன்னும் மக்கள்விடத்திலே உறுதிவாங்கப் போகிறோம்.
காரியத்தை ஆரம்பிக்கப் போகிறோம். போராட்டம் ஒன்றும் தகராறுக்காக அல்ல; வேறே எந்தவிதமான சுயநலப் பலாபத்திற்கரகவும் அல்ல; அரசியல் உணர்ச்சியைக் கொண்டல்ல."இழிவு ஒழியவேணும்" என்கிற மான உணர்ச்சிக்காகப் போராடுகிறோம். இதற்கு எதிர்ப்பு கிருக்காது. ஏதே! சட்டசபையிலே, அங்கே, இங்கே இருக்கிறது என்றால்--அவர்களுக்கு வேறே வேலை என்ன? ஏதாவது பண்ணித் தீரவேணும். அவர்களுக்கே வெட்கமாகத் தான் இருக்கும்--இதெல்லாம் நாம் இப்படிச் செய்கிறோமே என்று, அவர்கள் நிலைமை அப்படி, ஆனால் நமக்குப் போதிய ஆதரவ இருக்கிறது$ ஆட்கள் இருக்கிறார்கள்;வசதி எல்லாம் இருக்கின்றது) பொருளாதார வசதி இருக்கிறது? உதவிபண்ணுகிறதற்கு வேண்டிய உணர்ச்சியுள்ள இளைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஒன்றும் குறைச்சல் இல்லை. நல்ல முறையிலே நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்)வெற்றிபெறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இரண்டாவது, இந்தக் காரியத்திலே, ஒரு காரியம் என்று அல்ல--நம் இழிவு நீங்குகிறது என்கிறது மாதிரம் கிதிலே இல்லை. நாம் வெற்றிபெற்றோமானால் மற்ற நம் காரியங்களும், பகுத்தறிவ சம்பந்தமான காரியங்களும், சாதியைப் பொருத்து இல்லாவிட்டாலும்--கடவுள், மதம், சாஸ்திரம் என்ற முட்டாள்தனமான சில கருத்துகளும் ரொம்பத் தெவிவாகும். இந்தியாவிலே மாதிரம் அல்ல உலகத்திலேயே--நாம் ஒரு பகுத்தறிவ உள்ள சமுதாயம், பகுத்தறிவுள்ள ஆட்சி என்கிற மாதிரியில் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். நமக்கு மாத்திரம் தைரியம் வேணும், உணர்ச்சி வேணும், முடிவு பண்ணிக்கணும்.
நம் பங்கு இதிலே இன்னது;என்ன ஆனாலும் நம் பங்கு இன்னது என்கிற உணர்ச்சி வந்து இதைப் பொறுத்து உற்சாகம் ஏற்படும்படியாக நடந்துகொள்வதன் மூலம்கிளர்ச்சியைப் பலப்படுத்த வேணும்)பயன்படுத்த வேணும். இப்போது நான் சொல்லுகிறதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்"பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று இதை வைত்துக்கொள்ளணும்") நம் ஆட்களோடு போராடுகிறதில்லை$
யாரும் நினைக்கமாட்டான். வெளியூர்க்காரன் மற்ற என்னமாகவாவது நினைப்பானோ என்னவோ--மற்ற மாகாணக்காரன் ) கொஞ்சநாள் ஆனால் அவனும் ஓதுக்கொள்வான். இந்தக் கிளர்ச்சி ஏற்பட்டு ஒரு ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர், மூவாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனார்கள்;இன்னின்ன விதமான தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்ற நிலைமை வருகிறபோது அனேகமாக இது மற்ற மாகாணத்திற்கும் பரவும்; ஏனென்றால், இது சமுதாயத்தைப் பொறுத்தது--எல்லா மக்களையும் பொறுத்தது அவ்வளவு துணிவாக அலட்சியமர இருக்கமாட்டார்கள், நமக்குப் பின்பலம் அதிகம் ஏற்படுமே தவிரக் குறையாது.
முன்னமேயும் சொன்னேன்--பொது அறிவ, இந்தக் கடவுள், மதம் முதலியவை பற்றிய எண்ணம் எல்லாம் கொஞ்சம் மாறும். இதில் எவ்வளவு வெறுக்க வேணுமோ, எவ்வளவு ஒழிக்க வேணுமோ அதிலேயிருந்து ஒதுங்கும்படியான ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு ஏற்படும்.
அனேகமாக, நான் சொல்லுகிறேன், கிது ஒரு கடைசிப் போராட்டம் என்றுதான் நினைக்கிறேன். இதிலே வெற்றிபெறவில்லையானால் அப்புறம் நமக்கு வாய்ப்பே இல்லை ஆட்களும் கஷ்டமாகத்தான் தெரியும்.
இப்போது அவர்கள் ரொம்பத் திட்டம் போடுவார்கள், எப்படி இதை அழிக்கிறது? எப்படி இதை அடக்குகிறது? என்பதைப்பற்றி எல்லாம் பலமான திட்டம்தான் போடுவார்கள். நாம் எவ்வளவு உறைப்பாக--துணிச்சலாக--கஷ்டத்தை ஏற்றுக்கொள்கிற த்யாக உணர்ச்சியோடு இருக்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் இதற்கு ஏற்படுகிற மதிப்பு இருக்குமே தவிர, சும்மா வேஷத்தினாலே மதிப்பு ஏற்படும் என்று நினைக்க முடியாது. அந்த மாதिरு உணர்ச்சியோடு நமக்கு இதிலே வாய்ப்பு வந்து, சாதாரணமான முறையிலே அவர்கள் அடக்குமுறை வருகிறது என்றால்--நமகு வெற்றியைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. வேறு என்ன காரணம் சொல்லி நம்மை அடக்குவார்கள் $
நாளைக்கு நாம் ஆரம்பிக்கிறோம்; ஏதா ஒன்று சொல்லுவோம்;திட்டம் போட்டு இருக்கிறோம், என்னென்ன திட்டம் என்று. பகிஷ்காரமோ அல்லது தடை வேலையோ அல்லது எரிக்கிற வேலையோ அல்லது ஏதோ ஒன்று செய்தோமானால்--சட்டத்தைச் சொல்லுவார்களே தவிர காரியத்தை என்ன சொல்லுவார்கள் 8 என்ன அக்கிரமம் பண்ணுகிறார்கள்] எதற்காகப் பண்ணுகிறார்கள் ? என்று யாராவது பேச முடியுமா? சட்ட விரோதம், பிடித்துப் போடுவான் என்று தெரிந்துதானே பண்ணுகிறான் ) அப்புறம் நாம் ஏன் வேதனைப்படப் போகிறோம் $ நமக்கு அனுகூலம் ஆகிற சங்கதிதான் இரண்டு பேரும் சொல்லுவார்கள்
இரண்டாவது $ நாம் கூடுமான வரைக்கும் பெண்களை இதிலே பூதவைக்கணும்$ஆண்கள் ரொம்பப் பேர் வரமுடியும்) இருந்தாலும் 100-க்கு 10 வீதமாவது பெண்கள் வரணும்) ஆயிரம் பேர் போனார்கள் என்றால் அதிலே 100 பெண்கள் இருக்கணும். கிளர்ச்சிக்கு அது ரொம்பத் தூண்டுகோலாய் இருக்கும்.
இயக்கத்திற்கு இறங்குகிறவர்கள், மன்னிக்கவேணும், ரொம்ப ஒழுக்கமாக இருக்க வேணும். சும்மா வேடிக்கையாய் உற்சாகத்திலே பேசிக்கொண்டு ஏதோ தந்திரமாக வரலாம் என்று திறில்லை. அந்த மாதிரி இருக்கிறவர்கள் வெளியே இருக்கட்டும் 5 அதனாலே ஒன்றும் குற்றம் இல்லை. சும்மா வம்புக்கு, மற்றவன் பரிகாசம் பண்ணுவானே என்று-- தான் கெடுகிறதும் இல்லாமல் காரியத்தையும் கெடுக்கிறதற்கு ஏதாவது உள்ளே புகுந்து கொண்டு கலகம் பண்ணச் சொல்லும், சிலபேரை ! ஏனென்றால், வேறே விதி இல்லை$தாங்களும் தோற்றுப்போய் விட்டார்கள் ) தங்களை மரியாதை பண்ணமாட்டார்கள் என்று எண்ணம் வருகிறபோது ஏதாவது கலாட்டா பண்ணலாமா என்று தோணும். அந்த மாதिरु வரக்கூடாது. அதனாலே அவர்களைப்பற்றி ஒரு குறையும் சொல்லமாட்டோம். கலக்க வேணும் என்று நாம் விரும்புகிறதெல்லாம், மனதார அவர்களுக்காக உணர்ச்சி வந்து செய்யவேணும்."சகலவிதமான வசதியும் இருக்கிறது, அதனாலே அவர்களுக்கு ஒன்றும் கெடுதி இல்லை" என்கிறவர்களைத்தான் நாம் விரும்புகிறோம். பல பேர் இருப்பார்கள். முக்கியமானவர்களெல்லாம் இருப்பார்கள்--ரொம்ப நமக்கு வேண்டியவர்களாகவும் இருப்பார்கள்) வாய்ப்பு இல்லாவிட்டால் அதற்காக ஏதாவது குறை சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் ஏதாவது தந்திரம் பண்ண ஆரம்பிப்பார்கள். அதை எல்லாம் பெரி துபண்ணிசி சொல்லவேண்டியதில்லை. காரியம் பண்ணுகிறேன், அவர்களாக வந்தவர்களைப் பார்த்துத்தான் நாம் அழைப்போமே தவிர, நாங்களாக ஒருவரை அழைக்கமாட்டோம். "நீ இதைச் செய் அப்பா; நீ இதைச் செய் அப்பா" என்று எதற்காகச் சொல்லுகிறேன் $ அந்தக் கிளர்ச்சிக்கு ஒரு கவுரவம் இருக்கவேணும்)நாணயம் இருக்கவேணும் $ பார்க்கிறவன் எல்லாம்கூட அதை மதிக்கணும்) அதிலே ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொண்ணவேணும்--அதற்குத் தகுந்தபடிதான் சொல்லுகிறேன்.
கதை எந்தவிதமாக; எப்படி எப்படி என்கிறதை, அந்தந்த மாவட்டங்களிலே, அந்தந்த வட்டங்களிலே உள்ள நிலைமையைப் பார்த்து, அந்தத் தலைவர்கள் எப்படிக் கருத்துத் தெரிவிக்கிறார்களோ அதை அனுசரித்து ஒரு இடத்திலா, இரண்டு இடங்களிலா, பல இடங்களிலா என்று நாம் தீர்மானமாக ஒரு முடிவு பண்ணமுடியும்.
முக்கியமாக இதிலே இழிவு நீங்குகிறது ஒன்று) மடமை ஒழிகிறது என்கிறது ஒன்று) இது இரண்டையும்விட, விடுதலைக்கு நமக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே என்கிறது ஒன்று. ஏன் அப்படிச் சொல்லுகிறோம்--விடுதலைக்கு வாய்ப்பு ஏற்படும், பிரிவினைக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று $ அதற்கு நாம் ஆசைப்பட்டால், அவன் இணங்கமாட்டான் இலேசிலே; $ யாரோடு போராடுகிறோமோ, யாரை மாற்றிக் கொள்ளச் சொல்லுகிறோமோ அவர்கள் இலேசிலே இணங்கமாட்டார்கள். அவர்கள் கிணங்கினார்கள் என்றால், செத்துப் போனார்கள் என்றுதானே அர்த்தம்|
"சாதி இல்லை" என்று சொன்னால், பார்ப்பான் எவனையும் கொல்லவேண்டியது இல்லையே; பார்ப்பான் எல்லாம் செத்தான் என்றுதானே அர்த்தமாகிவிடும்? அந்த அளவுக்கு அவர்கள் சுலபமாக ஒதுக்கொள்ளமாட்டார்கள்) ரகளைதான் பண்ணுவார்கள். அதனாலே நமக்கு அந்தப் பிரிவினை" என்கிற உணர்ச்சி வலுக்கும்; வலுதால் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு ஏற்படும். நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும் பிரிவினைக்கு விரோதிகள் இருக்கவே மாட்டார்கள்--இருக்கவே மாட்டார்கள்! ஏதோ காரியத்துக்குச் சில பேர், வரமுடியாதவர்கள், வாயை மூடிக்கொண்டாவது இருப்பார்களே தவிர, எதிலே இருந்து வந்துகொண்டு,"இந்தக் காரியம் செய் அப்பா","அந்தக் காரியம் செய் அப்பா" என்று வரமாட்டார்கள். வந்தான்--அவனுக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமோ அவ்வளவு மதிப்புத்தான் 1 அப்புறம் அவன் தலையெடுக்க முடியாது, எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும். அதனாலே அவன் தன்னுடைய சுயநலத்தை முன்னிட்டே இதற்கு வராமல் ஜாக்கிரதையாய் இருந்துகொண்டிருப்பான்.
நாம் வெற்றிக்கு, நம் லட்சியத்திற்கு வந்துவிட்டோமானால், கூட அவனும் சேர்ந்து கொண்டாலும் சேர்ந்து கொள்வான்.
அடுத்து நம் மக்கள் எடுத்துக் கொள்கிற முயற்சி--எந்த விதமான விரோத உணர்ச்சி அல்ல, குரோத உணர்ச்சி அல்ல, யார் பேரிலேயும் வருத்தம் இல்லை நம் காரியத்துக்காகத்தான் நாம் செய்கிறோம் என்கிற மாதிரியாகவே இருக்கவேணும்--நடை, காரியம் எல்லாம், அந்தரங்கம், சிறைக்குச் சிலபேருக்கு விரோதம் இருக்கும்)அது ஏற்படுமேதவிர, அதை ஏற்படுத்தவேணும் என்கிறதற்காக நாம் அதை ஆரம்பிக்கவில்லை. எல்லாப் பார்ப்பானுக்கும் விரோதமாகச் செய்யவேண்டும் என்று இல்லை; அவனுக்கு இது விரோதமாக இருக்கும். ஆனதினாலே அவன் கூடுமான அளவுக்குக் கேடுபண்ணத்தான் வருவான். அவ்வளவே தவிர நாம் ஒன்றும் அந்த விரோத உணர்ச்சியோடு காரியம் ஆரம்பிக்கணும் என்று இல்லை. மக்களுக்கு, இந்தக் காரியத்திலே இறங்குகிறபோது அந்தவிதமான உணர்ச்சி இருக்கக்கூடாது.
நமக்கு ஞாயம் இருக்கிறது, இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற) நமக்கு ஞாயம் இருக்கிறது, நம் அரசாங்கத்தை அமைக்க) அடியோடு இந்தியா மாற்றாவிட்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் தனிச் சுதந்தர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. அந்த விஷயத்தை எடுத்து நண்பர் ஆனைமுத்து அவர்கள் நல்லவண்ணம் உங்கவிடத்திலே சொன்னார். உலகத்திலே எந்த நாடும், எங்கேயுமே இப்படி இல்லை] அதனாலே இது ஒரு அக்கிரமம்தான் என்கிறது யாருக்கும் படும். அந்தக் காரியத்தைத்தான் செய்கிறோம். ஆனதனால் நாம் பிரிந்துகொள்ளுகிறோம் என்கிறதனால்--பிரிவினை ஏற்படுத்துகிறதினால்ே நமக்கு ஒன்றும் தவறு அல்ல; நாம் செய்த காரியமும் தவறான காரியம் அல்ல.
இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே--முன்னே நான் சொன்னாற்போலே, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே !"இந்தியா என்கிற ஒரு தேசம் ஆகணும் $ அதிலே நாம் ஒரு நாட்டானா
நாட்டானாக இருக்கணும்--
இதற்கு ஒரே தேசம் ? அப்படி என்று நாம் ஆரம்பிக்கவில்லையே ! ஆரம்பிக்ிகிறபோதே
ஒவ்வொரு
நாட்டுக்கும்
கடைசியாக
எண்ணுகிறபோதுகூட ஒரு இரண்டு
மாகாணம்,
ஒரு மூன்று மாகாணம் என்று இந்தியாவை அய்நீதாறு மாகாணம் பண்ணி, நம் மாகாணம்
தமிழ்நாடு,
ஆந்திரநாடு
கேரளநாடு,
கன்னடநாடு
இந்த
மாகரணங்களும்,
இதோடு
இன்னும் ஒன்றோ, இரண்டோ சேர்தீது By ஒரு யூனியனாக இருக்கணும் என்று அப்படி
எல்லாம் திட்டம் இருந்தது.
அம்பேத்கார் போட்ட திட்டமே இருக்கிறது--இன்னின்னது
இன்னின்னது என்று.
¢ கூட்டு? என்று எப்படியோ இந்தமுறை வந்து சேர்ந்ததேதவிர,
வேறல்ல.)
ஆதலினாலே இது ஒரு மோசடியான காரியநீதான் ; உள்ளபடியே ஒரு மோசடியான
காரியந்தான் ) இப்போது
நடக்கிறதும்
அப்படித்தான்.
மற்ற
நாட்டோடு
நாம்
கூடி
இருக்கிறதனாலே
என்ன ஆகுது?
மற்ற நாட்டினாலே
நாம் என்ன
பலன் அனுபவிக்
கிறோம் ? நம் நாட்டினாலேயாவது அவனவன் பலன் அனுபவிதீதுக்கொள்ள உபயோகப்
படுதீதிக்கொள்கிறானே தவிர; நாம்
100-க்கு 90 பாகம் மற்ற நாட்டோடு
நாம்
இருக்கிற
தினாலே
நமக்கு என்ன சவுகரியம் சொல்லுங்கள் ! கில்லை--நாளைக்குப் பணம்
காசு
என்றால் என்ன?
எங்கிருந்து வந்தது8 நம்கிட்டே வாங்குகிறதைதீதான் நம்மிடதீதிலே
கொடுக்கிறானே தவிர, எங்காவது சம்பாதிதீது நமக்காக ஒன்றும் நஷ்டப்படுகிறாற்போல
நமக்கு ஒன்றும் கொடுகிகிறதில்லை] இதற்கு ஒரு அவசியமும் இல்லை.
ஒன்றாகதீதான்.
இருக்கணும் ) அதனாலே
இன்னின்ன இலாபம்
அடையலாம் என்று சொல்லுகிறதறீகு
ஒரு காரியமுமே இல்லை.
சுயநலமில்லாத எவனும்-உணர்சீசி உள்ள எவனும் நம் காரியம்
ஞாயம் என்றுதான் சொல்லுவான்.
அதனாலே நாம் செய்கிற காரியம் ஞாயமான காரியம் $
முன்னமேயே செய்திருக்க வேண்டியது ) நமகீகுன்ள பல காரணங்களாலே, என்னமோ
நாம் அலட்சியமாக இருந்துவிட்டோம்.
இதை நாம் கண்டிப்பாகச் செய்வோம்.
மனதிலே
வெற்றி பெறுகிறோமா, தோல்வி அடைகிறோமா என்கிற எண்ணமே இருக்கக்கூடாது.
நம் கடமையைச் செய்கிறோமா ₹ அதைப்
பொறுத்துத்தான்
இருக்கிறது
அந்த
எண்ணம்.
சும்மா, அனாவசியமாக, தோற்றால் என்ன பண்ணுகிறது?
வெற்றியரனால்
என்ன ஆகிறது? என்றெல்லாம் நினைக்கக்கூடாது.
₹ அடிமையாய்
இருக்கிறோம் ] இழி
www.thamizham.net - Free £ book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்.
2059
வுக்கு ஆளாகி இருக்கிறோம்; இது மாறுவதற்கு நாம் ஏதாவது செய்யணும்--செய்யலாம்?
என்று நினைக்கணும்.
முன்னமேயே சொன்னேன்--இழிவு நீங்குகிறது ஒன்று ] மடமை
நீங்குகிறது ஒன்று, ஆக இரண்டு வரும்.
அது உலகத்துக்கு ரொம்பப் பயன்படக்கூடிய
காரியம்,
ஆன தினாலே, எல்லா மக்களும் அருள்கூர் நீது முடிவு பண்ணிக்கொண்டு, தம்மால்
ஆன உதவியைச் செய்யணும் ) தம்மாலான அளவுக்குப் பங்கு எடுத்துக் கொள்ளணும்,
எல்லாரும் ஜெயிலுக்குப் போகணும் என்றே இல்லை ; நிர்வாகம் பண்ணுகிறதற்கும் நிறைய
ஆட்கள் வேணும் ) பல இடங்களிலே ஆரம்பித்தோமானால் ரொம்பப் பெரிய நிர்வாகிகள்
எல்லாம் வேணும் $ அப்புறம் பணம் வேணும் ) பணம் இருக்கிறது) பணம் இல்லை என்று
நம்
இயக்கம்
நின்றுபோகா.து--இல்லை,
கேட்டாலும்
வராமல்
போகாது;
கூடுமான
வரைக்கும் நமகீகு வரும்.
இன்றைய தினம்கூடச் சொல்லுவேன், கிட்டத்தட்ட நான் ஆரம்பிக்கிறபோ.த, ஒரு
இருபதாயிரம் ரூபாய் வந்தால் பரவாயில்லை--பதீது மாவட்டத்துக்காரர்கள் 1000 ரூபாய்
வீதம் கொடுதீதுவிட்டு, வசூலிலே ஒரு பத்தாயிரம் பண்ணிவிட்டால் பரவாயில்லை என்று
நான் நினைத்தேன் ;
யார் கிட்டேயும் சொல்லவில்லையானாலும்
திட்டம் அவ்வளவுதான்
போட்டேன் ] அதிகமாக ஒன்றும் பிரயதீதனப்படவில்லை--நிறையப் பணம் வந்துவிட்டது)
ஒரு முப்பது, நாற்பதாயிரம் ரூபாய் போல நம்பிக்கையாய் இருக்கிறது.
அரிசி வேணும்
என்று கேட்டேன்,
ஒருவர்
10 மூட்டை கொடுத்தார் ) இன்னொருவர்
5 மூட்டை கொடுத்
தார்) இன்னொருவர் நான் 3 மூட்டை அனுப்புகிறேன்,
5 மூட்டை அனுப்புகிறேன் என்று
அய்யா
வீரமணியிடம்
வாக்குக் கொடுத்து
இருக்கிறார்கள்.
ஏறக்குறைய
30,
40,
50
.
மூட்டை அரிசி வரும்) மக்களுக்குப் பயன்படுத்தணும்.
ஏன்? எதற்கு இதைச் சொல்லு
கிறேன் ₹ மக்கள் தாராளமான மனப் பான்மையோடு, வேண்டிய உதவி செய்யவேண்டும்
என்று இருக்கிறாச்களே தவிர, இதை ஒரு தொந்தரவாக நினைகீகிறவர்கள் ஒருவர்கூட
இல்லை; ஒருவர்கூட இல்லை.
ஆனதினாலே,
அருமைத் தோழர்களே !
வீட்டுக்குப்
போனதினாலே
விஷயம்
முடிநீதுவிடாது, செய்யணும், நம்மாலான உதவி எல்லாம்,
இந்த நிர்வாகிகளுக்கு எப்படி
உற்சாகம் ஊட்டவேணும் $ நீங்கன்
ரொம்பப் பாடுபட்டு விஷயங்களைத் தெரிந்து ஆதர
வாகக் கொடுக்கவேணும்.
வேறே நான் ஒன்றும் சொல்லவில்லை.
மனதிலே நினைத்துக்
கொள்ளூங்கள்--நாம்
ஒன்றும்
தப்புப் பண்ணவில்லை; செய்யவேண்டிய
காரியத்தைச்
செய்கிறோம் ) முன்னாடியே செய்திருக்கவேண்டியதை இப்போது செய்கிறோம்.
இதைச்
செய்யாததினாலே நாம் இன்ன இழி நிலையிலே இருக்கிறோம் ; இது நம் வாழ்வுக்குக்கேடு-
என்கிற தலைப்பை வைத்துக்கொண்டு மற்றக் காரியங்களைச் சிந்திக்கவேண்டும் என்பது
தான்.
ஆகவே, நான் அனேகமாக ஒன்றும் சொல்லவில்லை; எல்லாம் அவர்கள் சொன்ன
தைதீதான் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறேன்.
அருமைதி தோழர்களே !
நான்
உண்மையாகவே
கேட்கிறேன்.
உங்களுகீகுதீ
‘
தோன்றுகிற யோசனையைச் சொல்லுங்கள் ) இங்கே சொல்லவேணும் என்றில்லை. நாளை
முதற்கொண்டே வேலை
ஆரம்பிக்கிறோம்.
என்னென்ன காரியம்
செய்தால் தேவலை;
|
'
நாம்
எப்படி எப்படி நடக்கணும்
என்கிற வேலையை
எங்களுக்கே
விட்டுவிடாதீர்கள்.
நீங்களும் கவலை எடுதீ.துக்கொண்டு எப்படி எப்படி நடக்கணும் என்கிறதைப்பற்றி நல்ல
விளக்கம்
கொடுங்கள்.
ஏனென்றால்,
இது பொதுக் காரியம்)
நல்ல எண்ணதீதோடே
செய்கிறது ] அவசியம் செய்து தீரவேண்டியது.
ஆனதால், இது ஒருவருகீகுசி சம்பந்தப்
பட்டது அல்ல$
திருப்பிதீதிருப்பி--ஜிதைச்
செய்யாததினாலே
முட்டாள்தனம்
என்று
சொல்லலாமே தவிர, வேறே ஒரு ததீ.தவமும் இல்லை.
எல்லாருக்கும் பங்கு இருக்கணும் ;
எல்லாரும்
இதற்கு
உதவிசெய்யணும் ) எல்லாருடைய
ஒதீதுழைப்பும்,
யோசனையும்
வேணும். ஜனங்கன்--பாமர மக்கள் இருக்கிறார்கள் ; எல்லாருமே தயாராய் இருக்கிறார்கள்
என்று சொல்லவில்லை.
சிலபேர் இருக்கிறார்கன்-- என்னடா,
இப்படி 1 என்று நினைக்
www.thamizham.net - Free E book No 3046
2060
பெரியார் ஈ, வெ, ரா. சிந்தனைகள்
கிறவர்கள்.
அவர்களெல்லாம் திருநீதும்படியாக நாம் ஒற்றுமையாக; நல்ல எண்ண தீதோடு,
நம்மை நாமே ஆளாக்கிக்கொண்டு, கஷ்டநஷ்டங்களுக்கு ஆட்பட்டுப் பாடுபடத் தயாராய்
இருக்கிறோம் என்று
ஆரம்பித்தால்,
கொஞ்சம் மாறுபட்டவர்களுக்குக்கூடக்
கொஞ்சம்
புதீதி மாறிவிடும்; காரியம் நமக்கு அனுகூலமாகதீதான் இருக்கும்) நம் நாட்டுக்கே து ஒரு
பெரிய காரியம் ] நம் சமுதாயதீதிற்கே இது ஒரு பெரிய திருப்பம் $--ஒரு திருப்பந்தான்.
சாதி கில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், எவ்வளவு பெரிய காரியம் என்று
நிங்கள் நினைக்கிறிர்கன்₹ ஆனதனாலே ஒன்றும் வேஷமான காரியமாக முடியாது. மற்றும்
நாம் செய்யவேண்டிய வேலை ரொம்ப இருக்கிறது.
அவைகளை நாளாவட்டதீதிலே நாம்
கலந்துகொள்கிறோம் ] சொல்கிறோம்.
நமக்கு
ஒரு
பத்திரிகை
இருக்கிறது.
இன்னும்
ஏதாவது பதீதிரிகை அனுகூலமாக இருக்கலாம்.
பதீதிரிகை நடதீதுகிறதென்றால் ரொம்பக்
கஷ்டம் ) பேப்பர் கிடைக்கிறதில்லை ) விலை ரொம்ப ஆகிறது ; கட்டுகிறதில்லை. ஆனாலும்
என்ன நஷ்டம்
வந்தாலும் இயக்கம் நடதீதுகிறபோது, ரொம்பத் தெளிவாக,
பதீதிரிகை
நடத்துகிறோம்.
பிரசாரமும், தினமும் ஒவ்வொரு
இடத்திலேயும் பண்ணிக்கொண்டு,
ஜனங்களுகீகுப்.போதிதீ துக்கொண்டு வரணும் ; இன்றைக்கு அங்கே, நாளைக்கு தின்னொரு
இடத்திலே
என்று
விஷயங்களைப்
போட்டுக்கொண்டு
வரணும்
என்றால்
ரொம்பப்
பொறுப்பு இருக்கணும். ஆகையினாலே--மன்னிக்கவேணும் நீங்கள்--என் மனதிலே இருக்
கிறதைசி சொன்னேன் ] எல்லா விஷயத்தையும் எல்லாரும் சொன்னார்கள் ] உங்களுடைய
ஆதரவெல்லரம்
நிறைய
இருக்கிறது
என்று
நான்
உண்மையாகவே
நினைக்கிறேன்.
ஆதலினாலே,
நமக்கு யோசனை
சொல்லவும் உற்சாகம்
ஊட்டவும்,
இன்னும்
என்ன
தேவையோ அதற்கு உதவி பண்ணவும் நாமெல்லாம் இருக்கவேணும்.
நம்முடைய சமுதாயதீதிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு;
தமிழர் சமுதாயதீதிற்கு து
ஒரு திருப்புமுனை:
ஏனென்றால், எவ்வளவு இழிவாக இருக்கிறோம், பாருங்கள் ! 100-க்கு
90 பேராய் இருந்துகொண்டு--நாம் இழிவான மக்கள் என்று நெடுநானாய் இருந்துகொண்டு
வருகிறோம் என்று சொன்னால், எவ்வளவு கீழ்நிலையிலே நாம் இருக்கிறோம் என்று பேர்!
இது மாறும்படியான வாய்ப்புவருகிறது--நாம் புதியதொரு சமுதாயத்தை உண்டாகீகினாற்
போலத்தான் ஆகும்,
அதிலே நமக்கு நல்ல பெருமை எல்லாம் இருக்கிறது.
மனதிலே
வைதீதுக்கொள்ளுங்கள்-- அனேகமாக நாம் பிரிநீதுகொன்வோம் ; நாம் பிரிநீதுகொள்வோம்!
ஏனென்றால், அவன் நம்வசதிக்கு வரமாட்டான்.
பிரியா விட்டாலும் ரொம்ப உணர்ச்சி நம்
மக்களுக்கு உண்டாகும்.
எல்லாரைப் போல நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
அப்படி,
நம் ஆட்களுக்குள்ளே எதிரிகள் அதிகமாக வரமாட்டார்கள்.
ஏதோ அரசியலில்
இருக்கிறவன் கதீ.துவானே தவிர, நம் முயற்சியைக் குறைசொல்லி நம் காரியத்தைச் சறுக்கி
விடும்படியாக
யாரும் இருக்கமாட்டார்கள்.
இந்தப்
பார்ப்பனப் பதீதிரிகைக்காரர்களும்,
அவர்களும்
தங்களின்
சுயநலத்தை
உதீதேசித்தாவது
யோக்கியமாய் நடந்துகொள்ள
வேண்டியது.
இன்னமும்
இப்படியே
இருக்கவேணும்
என்று
அவர்கள்
நினைத்தார்
களானால் அது அவர்கள் தப்புத்தான்
) நாளாவட்டதீதிலே அப்படியே போய்விடும் என்று
கருதவேண்டாம் என்று விஷயங்களை எல்லாம்
உங்களுக்கு எடுத்துச் சொல்லி, நான் என்
பேச்சை முடிதீதுக்கொள்கிறேன்.
இப்போது நேரம் இரவு 8 மணி ஆகிறது; முடிக்கிறேன்.
நான்,
தயவுசெய்து
நீங்கள்
எல்லாம்
நன்றாக
மனதிலே
உற்சாகமாக,
எங்களுக்கு
உற்சாகம் ஏற்படும்படியான மாதிரியிலே, நீங்கள் மற்றும் தினம் அங்கங்கே நடைபெறும்
காரியங்களிலிரு நீது, கிதற்கு ஒரு நல்லநேரம் என்று கருதிச் செய்யணும் ) வேறே ஒன்றும்
நான் அதிகமாகச் சொல்லவில்லை.
நாம் உண்மைக்குத்தான் போராடுகிறோம்--பொய்க்குப் போராடவில்லை;பொது நலத்துக்குத்தான் போராடுகிறோம்; 4 கோடி மக்களுடைய நன்மைக்காகத்தான் போராடுகிறோமே தவிர, எங்களுக்காக ஆகவேண்டிய காரியம் ஒன்று இல்லை. அதனாலே இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்--மக்களுக்கெல்லாம் உணர்ச்சி ஏற்படும்படியான திறையிலே
www.thamizham.net - Free e-book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்
2061
"சமுதாயத்திற்கே ஒரு நல்ல வாழ்வு மாதிரி ஏற்படுகிறது என்பது ரொம்பக் கஷ்டம்.
இந்தச் சமயத்தை நாம் நல்லவண்ணம் உபயோகப்படுத்திக்கொள்ளவேணும்.
நான் சொல்ல வருவது, நாம் ஜெயித்தோமா, தோற்றோமா என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கக்கூடாது;எனக்குத் தைரியம் இருக்கிறது, ஆனால் அதை மனதிலே வைக்கக்கூடாது. நம் கடமையைச் செய்கிறோமா இல்லையா என்கிறதைத்தான் மனதிலே வைத்துக்கொண்டு அணிந்து தொண்டாற்ற வேணும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
மற்றபடி நீங்கள் இவ்வளவு நேரம் காதுகொடுத்ததற்கும், கரண்டு நாளாக நீங்கள் உங்களுடைய வேலைவெட்டி எல்லாம் விட்டுவிட்டு வந்து நீங்கள் உற்சாகமூட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், மற்றும் பொதுமக்கள் இதற்கு ஆதரவாய் என்னென்ன உதவி பண்ணவேணுமோ அவைகள் எல்லாம் செய்ததற்கும், தோழர்கள் சிலர் நம் இயக்கத்திற்காக ஒவ்வொரு காரியத்திற்கும் தங்கள் பணியை ஏற்றுக்கொண்டு ரொம்ப உற்சாகமாக அவர்கள் உதவி செய்ததற்கும் நான் அவர்களுக்கெல்லாம் நன்றிசெலுத்துகிறேன் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். அதிகமாகச் சொல்லவில்லை. வணக்கம்.
(சென்னையில், பெரியார் திடலில் 1973 டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்றதமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடுகளில் 9-ம் தேதி, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை முடிவுரை. இது அவர்தம் வாழ்நாளில் கடைசி மாநாட்டு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.)
[ஆதாரம் Tape Recorder--Akai, Track 14, Speed 15/16, 146, 800]
3. இறுதிச் சொற்பொழிவு
(மரண சாசனம்)
பேரன்புமிக்க தலைவர் அவர்களே!தாய்மார்களே!பெரியோர்களே!இன்றைய தினம் இந்த இடத்திலே, சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக சென்னையில் 10 நாட்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி பேரறிஞர்கள் பலர் அத் தீர்மானத்தை விளக்கியும், மற்றும் பல அரிய விஷயங்களையும் நல்லவண்ணம் எடுத்து விளக்கினார்கள்;எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக இதிலே குறிப்பிட்டு இருக்கிறபடியினாலே நானும் சில வார்த்தைகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தோழர்களே!இந்தத் திரையுரநகர் என்னும் மாபெரும்--பிரபலமான இந்த நகருக்கு இதற்கு முன்னால் நான் வந்து--நண்பர்கள் சொன்னார்கள், 10 ஆண்டுக்கு மேலாகும் என்று, இருக்கலாம்--எனக்கு ஞாபகம் வரவில்லை, பக்கத்திலே இப்போது நான் வந்ததாக. சென்னையில் அடிக்கடி--அடிக்கடி பேசுகிறேன். என்ன காரணமோ இங்கே வரும்படியான வாய்ப்பு இப்போதுதான்வந்திருக்கிறேன். வரும்படியான வாய்ப்பு ஏற்பட வில்லை என்றால், அதனாலே சில காரியங்களும் குறைவாய் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் இவ்வளவு தூரம் எட்டுவதற்கு இல்லாததினாலே, மக்கள் பலருக்குத் தெளிவுபட்டு இருக்கா து--என்ன விஷயம்!நம் கழகம் என்ன;காரியம் என்ன என்று. ஆனாலும் பலருக்குத் தெரிந்து இருக்கலாம். என்றாலும், அண்மையிலே நடக்கப் போகிற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் பல பாகங்களிலேயும், அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படி பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. என்னமோ, இது ஒன்று இரண்டுதான் நடந்தது; கின்னமும்நடக்கலாம்;ஜனவரி 26-ம் தேதிக்குள்ளே மற்ற பாகங்களிலும் நடக்கலாம்;நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.தோழர்களே!நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள் தம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள்;நானும் விளக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அதிலே, நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும், பகுத்தறிவைப்பற்றிக் கவலைப்படாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம்,"என்னடா, கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான்?என்று, கடவுளைச் சொல்லுகிறதோடு இருக்காமல் கடவுளை நம்புகிறவர்களைக்கூட முட்டாள் பயல் என்று சொல்லுகிறானே--இது என்னடா என்று சில பேருக்குக் கோபம் வரலாம்.
கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கு ஒருவன்--நம்பிக்கைக்காரனும், நம்பிக்கை இல்லாதவனும்--அவனை இவன் முட்டாள் என்றுதான் சொல்லியாகணும்; இவனை அவன் முட்டாள் என்று சொல்லித்தான் ஆகணும். ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசுகிறதினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்;மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாய்த்தான் பேசுவார்கள்--நம்மைவிட மோசமாக.
உதாரணமாகச் சொல்லுவேன்: நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள்--தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள்--இந்தப் பயல்கள் சொன்னதைவிட நாங்கள் அதிகமாய்ச் சொல்லுகிறதில்லை, அதை மனதிலே வைத்துக்கொள்ளுங்கள். நாம் இவனைத் தான் திட்டுகிறோமே தவிர--இவனுடைய புத்திக்களைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பயல்கள் சொன்னாற்போல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை. நீங்கள் நினைக்கணும்!என்னடா, இப்படிச் சொல்லுகிறானே என்று சில பேருக்குக் கோபம் இருக்கும்.
ஆனால், நாலாயிரப் பிரபந்தம் பாடியிருக்கிறவன்,"கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் கொல்ல வேணும்;அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம்" அப்படியென்று பாடி இருக்கிறான். தேவாரம் பாடினவன், "கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக்கு கிட்டேயெல்லாம் நான் படுக்கணும், கடவுளே, எனக்கு அந்த வசதி பண்ணிக்கொடு"என்று கேட்டு இருக்கிறான். யார் என்று கேட்பீர்கள்?பேர்கூடச் சொல்லுவேன்--சம்பந்தர் என்கிற ஒரு பகீதன்--பகீதனாம் அந்த அயோக்கியப் பயல்!அவன் சொல்லி இருக்கிறான்,"கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக்கிட்டேயெல்லாம் நான் படுக்கணும்"என்று கடவுளைக் கேட்கிறான்;"இசைத்து வை" என்று கேட்கிறான்.
நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார்--தொண்டரடிப்பொடி என்கிறவன்--"கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு, வெட்டு!"என்கிறான். இது பாட்டிலே நடந்தது. காரியத்திலே எவ்வளவு நடந்திருக்கிறது தெரியுமா?"கடவுளைப்பற்றி அறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்; சிந்தியுங்கள்" என்று சொன்னான்--அவ்வளவு பச்சையாகக்கூடச் சொல்லவில்லை, புத்தன்."நம்பி விடாதீர்கள், சிந்தியுங்கள்" என்றான். கடவுள் நம்பிக்கைக்காரப் பயல்கள் அவர்களை என்ன பண்ணினார்கள்?வெட்டினார்கள்!வெட்டி, வெட்டி தலை ஒரு பக்கம், முண்டம் ஒரு பக்கம் குவித்தார்கள். கிந்த வெட்டினதும், குவித்ததும் கோயிலிலே எல்லாம் இன்னும் சித்திரமாக இருக்கிறது, கல்லிலே அடித்து வைத்திருக்கிறான்--ஒருவன் காலைப் பிடித்து இருக்கிறான், ஒருவன் தலையைப் பிடிக்கிறான், ஒருவன் வெட்டுகிறான். இன்னொரு கூட்டம், சைவக் கூட்டம்--அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவேற்றினார்கள். கம்பு நிறுத்தி நிர்வாணமாக ஆக்கி--ஆசனத்திலே இட்டு, மூலை (முனை) தலைக்கு மேலே வருகிற போலக் கழுவேற்றினார்கள். எத்தனைப் பேரை? 8000 பேரை. இன்றைக்கு அது உற்சவமாக நடக்கிறது--தினமும்!(இதநீகு) புராணம் இருக்கிறது; சரித்திரம் இருக்கிறது. ஆனதினாலே, கடவுள் இருக்கிறது என்று சொல்லுகிற அயோக்கியப் பயல்களைப்போல, நாங்கள் அவ்வளவு அசிங்கமாகப் பேசவில்லை."முட்டாள்;மடையன்"என்று சொல்லுகிறோம். அதை நாங்கள் நீதிப் பண்ணுவோம். நம் ஜனங்களுக்குப் புரியாததினாலே,"என்ன, இந்தப் பயல்கள் இப்படிப் பேசுகிறார்கள்!" என்று நினைப்பீர்கள். அது, புரியாதது என்று சொல்லமாட்டேன்--மானமில்லாத தன்மை என்றே சொல்வேன். மற்றும் நண்பர்கள்--முன்னே பேசியவர்கள், மற்ற தோழர்கள், நம் தங்கராஜ் அவர்கள், வீரமணி அவர்கள் ஆகியோர் ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டினார்கள்.
நாம் வாயிலே சொல்லிவிட்டுப் போகிறோம். இன்றைய தினம், அரசியலிலே இருக்கிற அயோக்கியர்கள், அரசியல் சட்டம் செய்த காலத்திலே, நம்மையெல்லாம் தாசிமகள் என்று அதில் எழுதினார்கள். இதற்குமேலே என்னவேணும்--கடவுள் நம்பிக்கைக்காரர்கள் அயோக்கியப் பயல்கள் என்று சொல்லுகிறதற்கு? சட்டம் எழுதி இருக்கிறார்கள்--தமிழ்நாட்டில் உள்ள மக்கள், நண்பர் வீரமணி சொன்னாற்போல, கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர மற்றவன் எல்லாம் இந்து; இந்துவிலே 100-க்கு 28 பயல்களாய் இருக்கிற பார்ப்பான் தவிர பாக்கி 97 சில்லரைப் பேர், தேவடியாள் மக்கள்--பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன?திருப்பிச் சொல்லாத காரணம்; அவர்களைக் கண்டிக்காத காரணம். பார்ப்பானைக் கண்டால்,"வாப்பா, தேவடியாள் மகனே!எப்போது வந்தாய்?"என்று கேட்கணும்."ஏணடா அப்படிக் கேட்கிறாய்?"என்றால்--"நீ எழுதி வைத்தாயடா, என்னைத் தேவடியாள் மகன் என்று! நான் நிஜமாகவே சொல்லுகிறேன், நீ தேவடியாள் மகன் என்று!"என்று கூறணும். இதில் என்ன தப்பு?
நம் பெண்டுகளிடத்திலே போய்ச் சொல்லணும்--"அம்மா, விளக்குமாறு எடுத்துக் கொள், இந்த அரசியல் சட்டத்தை எடுத்துக்கொள், தெருவிலே வை, போடு சீவுகட்டையரலே--அதைக் குத்திக் குத்தி" என்று."ஏனம்மா, அரசியல் சட்டத்தை விளக்குமாற்றாலே போடுகிறாய்?"என்று கேட்டால்--"அதை எழுதின அயோக்கியப் பயல்கள், என்னைப் பார்ப்பானுக்குத் தேவடியாள் என்று எழுதி இருக்கிறான்;பின்னே என்ன; அதனைக் கொஞ்சட்டுமா?"என்று கேட்கச் சொல்லுகிறேன்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்த மாதிரியான--பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததனாலே, நாதி இல்லை நம்மைப்பற்றிப் பேசுகிறதற்கு,கேன்வி இல்லை நம்மைப்பற்றிப் பேசுகிறதற்கு, நாளைக்குக்கூட நம் ஆள் சிரிதுக்கிட்டுப் போவான்--"நேற்று வந்தான்; நாலு அடி அடித்தான்; நன்றாகப் பேசினான்?" என்று அவ்வளவோடுதான் நின்று கொள்வான். பார்ப்பான் சொல்லுவான்,"நேற்று வந்தான் பரர்த்தாயா, நாய்க்கன்! அவன் என்னென்ன சொன்னான்?நான் என்ன பண்ணுவேன்?"என்று கவலைப்படுவான்;பெண்டாட்டிக்கிட்டே சொல்லிக்கிட்டு அழுவான், "நமக்கு மான ஈனம் ஒன்றும் இல்லை; நாம் சிரிதுக்கிட்டுப் போய்விடுவோம்".
ஏன் சொல்கிறேன் என்றால், பழக்கத்திலே நம்மை ஈனசாதி என்கிறான்)"ஏனடா!" என்றால்,"நீ கோயிலுக்குள்ளே வர வேண்டாம்; நீ வந்தால் சாமி தீட்டாய்ப் போய்விடும்"என்கிறான். என்ன அர்த்தம்?"கல்லைத் தொட்டால் தீட்டாகிவிடும்?" என்றால், நம்மை எவ்வளவு கீழ்ச்சாதி என்கிறான்!சாஸ்திரத்திலே, தேவடியாள் மகன் என்கிறான்;பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்கிறான்; சூத்திரனுக்குப் பெண்டாட்டியே கிடையாது என்கிறான்;சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான். (இதை எல்லாம்) யார் கவனிக்கிறாரீகள்? இன்னும் அதேமாதிரிப் பல ஆதாரங்கள்.
எத்தனை வருஷமாக இது இருக்கிறது?2000 வருஷமாக இருக்கிறது--மேலேயே சொல்லலாம்;நாசமாய்ப் போகட்டும். சுயராஜ்யம் என்கிறார்களே, இதிலே சட்டத்திலேஇருக்கிறது--அரசியல் சட்டத்திலே இருக்கிறது, நம்மைத் தேவடியாள் மகன் என்கிறது. அப்புறம், நமக்கு என்னதான் கதி? நாம் எப்போதுதான் மனுஷராகிறது?நாடு நம் நாடு; பார்ப்பான் எல்லாம் பிழைக்க வந்தவன் இங்கே!இந்த இழிவிலே இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம், இந்த 1973-லே, சட்டப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால், சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால்--அனுபவத்திலே ஈனசாதி, நாலாஞ் சாதி, தீண்டாத சாதி என்று இருந்தால்--யார்தான் இதற்குப் பரிகாரம் (படுக்கு)? வேறே நாட்டான் நம்மைப்பற்றி என்ன சொல்லுவான்--நம் சங்கதியைச் சொன்னால்?
உலகத்திலே, தமிழர் இருக்கிறதைப்போல எவ்வளவோ பங்கு முஸ்லிம் இருக்கிறான்; அவர்களுக்குள்ளே தேவடியாள் மகனே கிடையாது, ஈனசாதியே கிடையாது, எல்லோரும் சகோதரர்கள், ஒருவனுக்கொருவன் தொட்டுக்கொள்ளுவான், ஒருவன் சாப் பிட்டதை இன்னொருவன் சாப்பிடுவான், ஒருவன் இலையிலே இன்னொருவன் சாப்பிடுவான்--எச்சில்கூடப் பா
பிள்ளை உண்டாக்கிக்கொள்ளலாம்,
சாப்பிடு
வான்--எச்சில்கூடப் பார்கீகமாட்டான்.
அதாவது, என்ன 1 அவ்வளவு சகோதரதீதுவம்
அந்த மததீதின் தன்மை ! அதமாதிரி, பார்ப்பான்.
கிறிஸ்தவன், கவலைப்படமாட்டான் $
சாதி என்று ஒருவனைக் குறை சொல்லமாட்டான்.
பார்ப்பசனும் அதேமாதிரி
தங்களுக்
குன்னே
மேல்,
கீழ்ச்சாதி கிடையாது)
எல்லாரும்
ஒஸ்தி--நாம்
எல்லாம்
அவனுக்குத்
தேவடியாள் மக்கள்.
இப்படி இருக்கக் காரணம் என்ன?
நண்பர்கள் சொன்னார்களே, அதுபோல, 50 வருஷமாய் உழைதீததிலே ஏதோ
கொஞ்சம்
மாறுதல்,
அதுவும், எதிரிலே நம்மைப் பார்தீது,
சூத்திரன்
என்று சொல்ல
மாட்டான் ] வீட்டிலே
எல்லாம்
பேசுவான்--* இந்தச் சூத்திரப் பயல்கள்?
என்றுதான்
பேசுவான்.
இந்த இழிவிலே இருந்து நீங்கணும்.
ஏதோ
சட்டம்,
சமதீதுவம்,
கடவுள் என்று சொன்னால் ஏதோ அதை
உதைக்
கிறோம் ) கடவுளை நாளைக்குச் செருப்பரலே அடிக்கச் சொல்கிறோம், பலதடவை நன்றாக
அடித்தாயிற்று,
நாளைக்கும்
அடிக்கச்
சொல்கிறோம்,
நம்
தாய்மார்களையும்
விளக்கு
மாற்றாலே போடச் சொல்கிறோம். சட்டதீதிலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ
நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம் ) இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு
இருக்கிறான்.
நாளைக்குக்
காங்கிரஸ்காரண்
வந்துவிட்டான்
என்றால்
நாளை
அன்றைக்குப் பார்ப்பான் வந்துவிட்டான் என்றால் ₹ இல்லை, இந்தக் கம்யூனிஸ்டே வந்து
விட்டான் என்றால்--அவன்
காசுக்கு என்றால் என்னவேணுமானாலும் பண்ணுவரனே--
அவனல்லவா சதீதம்போடணும் எனக்குப் பதிலாக?
எங்களைத்
தவிர,
நாதிகில்லையே
இந்த நாட்டிலே ! எத்தனை நாளைக்கு; நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம் ?
எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இங்கு இருக்கிற ஆட்சியை
ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழிதீதுவிட்டுப்போ, எனக்கு ஒன்றும் கவலை இல்லை.
அப்புறம்
என்ன ?
இன்றைக்குதீ
திருட்டுத்தனமாக--மறைவாகப்
பேசுகிறபேசீசை,
நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான் ; பேசுகிறவனைப் பார்ப்பான் மாலைபோட்டு
வரவேற்கிறான், அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே
! நம்முடைய
நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமை; இரண்டாயிரம் வருஷமாக
இருக்கிற முட்டாள்
தன தீதைவிட,
இந்தச் சட்டதீதிலே இருக்கிறதே--* இந்து லா !விலேயும்,
மற்ற அரசியல் சட்டதீதிலேயும்--அது பெரிய முட்டாள்தனம்.
அதைவிட, இதைச்சொல்லி
மாற்றச் செய்யாமல் இந்த ஆட்சியிலேயே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா
மானங்கெட்டதீதனம்.
பொறுக்கித்
தின்கிறவனுக்கு இந்த
ஆட்சி வேணும்-வேண்டாம்
என்று சொல்லவில்லை. மானதீதோடு பிழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே
ஆகணும் ! என்னடா
என்றால்,
உன்னாட்டம்
நான்,
என்னாட்டம்
நீ) என்னை
நீ தேவடியாள் மகன்
என்று சொல்கிறாய்) இதை மாற்றுகிறாயா $ (அல்லு) மூட்டை
கட்டுகிறாயா
₹?
என்று
கேட்டுத்தானே
ஆகணும்.
இல்லாவிட்டால்,
விதி 1
இன்னும்
www.thamizham.net - Free £ book No 3046
இறுதிச் சொற்பொழிவுகள்
2065
எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது?
இப்படியே இருப்போம் என்றுதான், என்ன
நிச்சயம் 1
நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான்-மாற்றினானே !
நம்முடைய
கலைஞர் கருணாநிதி அவர்கள்,
¢ கல்தான்] யார்வேண்டுமானாலும்
பூசைபண்ணலாம் ] ஆனால் முறைப்படி செய்யணும் ? என்று
யாவருக்குமே அனுமதி
கொடுதீதார். பார்ப்பான் கோர்ட்--சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்றுபேர்,
சிரிக்காதீர்கள், அதிலே தமிழனுக்கு கடமே கில்லை; (அப்படிப்) போனாலும் அவனுடைய
அடிமைதான் போவான் ; அவன் சாஸ்திரத்தைப் பார் தீதுதீதான் தீர்ப்புப் பண்ணுவான்.
சொல்லிப்போட்டானே--6 கோயிலுக்குள்ளே போகிறது தப்பு--சாஸ்திரவிரோதம் ? என்று
!
அட
முட்டாள்களா!
சாஸ்திரம்
என்றால்
எது?
எப்போது
எழுதினது?
எவன்:
எழுதினான் ₹ எவனாவது சொல்லட்டும் !
! ஆகமதீதின்படி?
என்று எழுதினான்,
ஒரு
அய்கீகோர்ட் ஐட்ஜ்--ஒருவனோ, இரண்டு மூன்று பேரோ அவர்கள்; பார்ப்பான் ஆதிக்கம்
உள்ளது, பார்ப்பன தீதியாலே நியமிக்கப்பட்டவர்கள்.
என்றைக்கு எழுதினான், ஆகமம் 8
ஒரு
அக்கிரமம்,
ஒரு
அயோக்கியத்தனம்
இதற்குமேலே
உலகத்திலே
உண்டா?
என்றைக்கோ, எவனோ பேர்தெரியாத அனாமதேயம்--எவனாலேயும் சொல்லமுடியாது.
ஆகமத்தை எழுதினவன் எவனடா என்றால், அவன் சொல்லுவான், 'வசிஷ்டன் எழுதினான்,
நாரதன்
எழுதினான்,
யக்ளுவல்கியர்
எழுதினான்,
மனு
எழுதினான்,
வெங்காயம்
எழுதினான் ? என்று,
இந்தப் பயல்களுக்கு வயது என்ன ₹
கவனிக்கணும் தோழர்களே ! நாரதன்
5 கோடி வருஷதீதுக்கு முன்னே பிடித்து
இருக்கிறான்.
5 கோடி
வருஷம்--ஒவ்வொரு
கற்பதீதிலேயும்
!
ஒரு
கற்பம்
என்றால்
3 கோடி,
4 கோடி,
5 கோடி வயதாம்,
அப்படி
10 வருஷத்திற்குப் பின் கன்றைக்கே பண்ணிக்கொள்ளவேண்டியதில்லை.
கற்பம்--அப்போதெல்லாம் இருக்கிறான்
நாரதன்
| அப்படி என்று ஒருவன் கிருந்தானா ? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்புப்
பண்ணுகிறானே, கோர்ட்டிலே, அதனுடைய அர்தீதம் என்ன ₹
¢ ஆளுகிறவர்கள் எதீதனை
அயோக்கியர்கள் ; ஆனப்படுகிறவர்சள் எத்தனை மானங்கெட்ட பதர்கள்? (என்பதுதானே)!
இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? இதை எல்லாம்விட
அக்கிரமம்,
அய்யா
வீரமணி இப்போது சொன்னாரே,
¢ இந்து? என்கிறானே, அது.
யார் இந்து?
6 இந்து? என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்
கொண்டு,
* இந்து?
வந்தான்?
நம்முடைய
தமிழர்க்கு
இலக்கியம்
என்னென்னமோ
இருக்கிறதே) எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது ¢ பார்ப்பானுடைய இலக்கியங்களே ஏராள
மாக இருக்கின்றன--கிராமாயணம்,
பாரதம்,
விஷ்ணுபுராணம்,
கந்தபுராணம்,
அந்த
புராணம், இந்த புராணம் என்று,
நம் புலவர்களுக்கும் ஏராளமாய் இருகீகிறது--பஞ்சகாவி
யம், அய்ந்து
க்கணம், அது, இது என்று.
எதிலேயாவது
¢ இந்து? என்கிற வார்த்தை
இருக்கிறதா ? நம் நாட்டிலே எந்தப் புதீதகதீதிலேயாவது உண்டா?
' இந்து? என்கிறவன்
எப்படி வந்தான்
என்கிறதற்கு அவன் சொல்லுகிற கதையே, அசிங்கமாய் இருக்கிறதே
சிந்து நதியின் காரணமாக
¢ இந்து? ஆகி--இந்து? என அழைக்கப்படான் என்று.
சிந்து
நதிக்கும்
நமக்கும்
எப்போது
சம்பந்தம் ? ஆரியன் வந்தபோதுதானே,
சிந்துநதி என்கிறது.
அதை, இந்த நாட்டுப் பழங்குடி மக்களுக்கு,
* இந்து? என்று பேர்
என்றால், சொல்லிவிட்டு மரியாதையாகவாவது போகலையே !
¢ இந்து என்றால் இரண்டு
சாதி) அதிலே ஒருவன் பார்ப்பான், ஒருவன் சூத்திரன் ) பார்ப்பான் எல்லாம் மேல்சாதி,
சூத்திரன் என்றால் கீழ்ச்சாதி ; சூதீதிரன் பெண்டாட்டி என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி.
இது சட்டதீதிலே--சாஸ்திரதீதிலே--பழக்கதீதிலே? என்று சொன்னால்--நமக்கு விடிகிறது
தான் எப்போது ஒரு மனுஷனை;
¢ என்னடா, அடே உன் பெண்டாட்டியை... அப்படி
என்று சொன்னால், கத்தியை எடுதீதுக்கொள்கிறானே ! தனிப்பட்ட மனுஷனே,;
* உன்
பெண்டாட்டியை...
?! என்று
சொன்னால்,
கதீதியை
எடுத்துக்கொள்கிறான்--இத்தனை
பேரையும் தேவடியாள் மகன் என்கிறான்--ஒரு பயலுக்கும் மானம் இல்லை என்றால் 1
www.thamizham.net - Free £ book No 3046
2066
பெரியார்
ஈட. வெ. ரா. சிந்தனைகள்
மானம் இருந்தால் இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா ₹ இருக்கமுடியுமா ?
ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு
நம் எதிரிலே வருவானா i என்னடா அர்தீதம், இந்தப்
பயலுக்குப் பூணூல் இருக்கிறது) ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம் ₹ நீ பிராமணன்,
நான் சூதீதிரன் என்று அர்தீதம்;)
அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி
மகன் என்று அர்தீதம்.
போடு உன்னைச் செருப்பாலே --அப்படி என்று ஆதீதிரமல்லவா
வரும்-- நமக்கு மானம் இருந்தால் ? இன்னொருவன்,
¢ பெண்டாட்டியை...? என்றால் என்ன
ஆத்திரம்
வருமோ அதற்குமேலே அல்லவா
ஆதீதிரம் வரணும்,
உன்னைச்
சூதீதிரன்
என்று இன்னொருவன் சொன்னால்
நாதி இல்லையே; சொல்கிறதற்கு ஆள் இல்லையே;
சிந்திக்க
ஆள் இல்லையே !
ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான் * பெண்டாட்டியைத்தவிர
மற்றதை
எல்லாம்
கொடுக்கிறானே--ஓட்டு வாங்குகிறதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே!
முன்னேற்றக்
கழகதீதுக்காரன் மற்றவனை
எல்லாம்--என்னை
எல்லாம்
வைவரான்--
* இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு; Bfs வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்
13
என்று.
அவனுக்கு
ஓட்டுதான்
பெரிது)
அவன்
பெண்டாட்டி,
பிள்ளையைப்பற்றி
அவனுக்குக்
கவலை
இல்லை.
இன்னும்
கொஞ்சநான்
போனால்,
வழக்கத்திலேயே
வந்துவிடும்-பெண்டாட்டியைக்கூடக் கொடுதீது ஓட்டு வாங்குகிறாற்போல.
ஏனென்றால்
அந்த உத்தியோகமும், அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போய்விட்டன.
நாம் மிகப்பெரிய
சமுதாயம்,
நாம் எவ்வளவு
முன்னுக்கு
வரவேண்டியவர்கள் ₹
நாதியற்றுப்போய்க் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம் ? சொல்லுங்கள் ! வெளி
நாட்டுக்காரனைப் பார்--வெள்ளைக்காரனைப் பாரய்யா ! நீ
வேட்டி கட்டிக்கிட்டு கிருந்த
போது, அவர்கள் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் அம்மணமாக இருந்தவர்கள்;
நீ
உன் பெண்டாட்டி,
மகன்,
அக்காள், தங்கை என்று முறை வைதீதிருநீதபோது, அவர்.
களுக்கு
அக்காள் தங்கை முறை
கிடையா து--அவ்வனவு
காட்டுமிராண்டியாய்
இருந்த
வர்கள்.
இன்றையதினம், அவர்கள் ஆகாயதீதுக்கல்லவா பறக்கிறார்கள்--ஆகாயதீதுக்கு
மேலேயல்லவரா போய்விட்டு வருகிறார் கள்--சநீதிரன் இருக்கிற இடத்திலே அல்லவா போய்
உட்கார் நீ.துவிட்டு வருகிறார்கள் ) அது
2 இலட்சதீது
30 ஆயிரம் மைல் i 1 மணிக்கு 5000
மைல் வீதம் அல்லவா பறக்கிறார்கள் ) இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப்
பார்தீதீர்கன் என்றால் உங்களுக்குப் புரியாதே !
அமெரிக்காவிற்குப்போய் ஆண் பிள்ளையுடைய
இந்திரியம்
கொண்டுவருகிறான்;
இங்கே சைனாவிலே, ஐப்பானிலே போய் பெண் பிள்ளையினுடைய இந்திரியம் கொண்டு
வருகிறான்--இரண்டையும் இங்கே கலக்கி, 'பிள்ளை ஆக்குகிறானே ! இப்போது நேற்று,
முந்தாநான்
வந்த விஷயத்திலே,
அவசரப்பட
வேண்டியதில்லை--8ரண்டு பேருடைய
இந்திரியத்தையும் டப்பியிலே
வாங்கி:
வைதீதுகிகொள்ளலாம் ) நமக்கு வேண்டியபோது
பிள்ளை உண்டாக்கிக் கொள்ளலாம், 10 வருஷதீதுக்கு அப்புறம்--கன்றைக்கே பண்ணிக்
கொள்ளவேண்டியதில்லை.
இப்படியாக அவன் பண்ணுகிற அதிசயம் (ஏராளம்), அமெரிக்காவிலே இருக்கிறான், அது 10 ஆயிரம் மைல்; நாம் இங்கே இருக்கிறோம்,போனை எடுத்து இப்படி, காதிலே வைத்தான் என்றால் "ஹலோ?" என்றால், அப்போதே நமக்கு இங்கே காதில் கேட்கிறதே—அந்த உதடு ஒட்டுகிறதற்குள்ளே காதில் கேட்குதய்யா, 10 ஆயிரம் மைலிலிருந்து!
அவர்களிலே அரைவாசிப்பேருக்குத்தான் கடவுள், அரைவாசிப்பேருக்கு ஒரு கடவுள், அதுவும் சந்தேகம்!ஆனால், நம்பணும் என்கிறவன். (இங்கு) இந்த முட்டாள் பயல்களுக்கு 1000, 2000, 5000 கடவுள்கள்—ஒரு காரியமும் பண்ணமுடிய வில்லை இந்தக் கடவுளாலே. காரியம் பண்ணமுடியவில்லை என்றால் சம்மாவரை இருக்கிறோம்?
அவைகளுக்கு எவ்வளவு கோயில், எத்தனைப் பெண்டாட்டி, வைப்பாட்டி,கல்யாணம், கருமாதிச் செலவு? எத்தனைப் பேருக்குச் சேற? எவ்வளவு உற்சவம்?அரசாங்கம் வரி வாங்குகிறது? என்று சொல்கிறானே தவிர, மடப் பயல், இது குட்டிச் சுவராகப் போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே!www.thamizham.net - Free E book No 3046
2067
இறுதிச் சொற்பொழிவுகள்கோயிலுக்குப் போகாது எவன் இருக்கிறான்?கோயிலுக்குப் போகணும் என்கிறான்.குளிக்கிறான், முழுகுகிறான்; பட்டு கட்டிக்கிறான்;எட்டிக் குதிப்பாக்கிட்டுப்போகிறான்—
"ஏனடா?" என்றால்,"தீட்டாகிறது?" என்கிறான். (ஆனால்) கோயில் கிட்டேபோனதும், ஆடகிக்கென்று வெளியே நின்று கொள்கிறானே, வாசற்படிக்கிட்டே!"ஏனடா, மடையா அங்கே நிற்கிறாய்?" என்றால்,"நான் சூத்திரன், உள்ளே போகலாமா?"என்கிறான். எப்போது? 1973-லே!நாம் ஒரு நாடு—நாம் ஒரு சமுதாயம்—நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது என்று சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே—யார் பாடு படுகிறார்கள், நாங்கள் தானே; 33 பேர்!மற்றவன் எல்லாம் வேறுவேறு கட்சி.
ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றிப் பேசவேமாட்டான். ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான்,அவனுக்கு முதல் வேலை, கடவுளை ஒழித்தான்,கோவிலை கிதித்தான், பாதிரியை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான்? பொறுக்கித்தின்கிறான்.மற்ற நாட்டுக்காரன் எல்லாம் என்ன பண்ணுகிறான்?(இங்கு) மனுஷனைப்பற்றி எவனுமே பேசுகிறதில்லையே!"சொன்னால் வரும் படியா"—அதைத்தானே கேட்கிறான்;அதைத்தானே பண்ணுகிறான். நாங்கள் இவ்வளவு பண்ணினோம்,இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மாநாடு எல்லாம் நடத்தினோம்—எவன் எங்களை ஆதரித்தான்?பயப்படுகிறானே—ஆதரித்தால் ஓட்டுப் போய் விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ என்று.
அருமைத் தோழர்களே!இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்,நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும்,அப்புறம் மேலே போகலாம், போகணும். மனிதனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா?மனிதனுக்கு இருக்கிற சக்தி, உரிமை—ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம், 500 வருஷம் இருக்கலாம்.இப்போது இல்லையே, 52 வயதுதான் இருக்கிறோம் சராசரி. என்னைக்கு இப்போது 953. இன்னும் எவனாவது ஒரு சிலப் பேர் இருப்பான் 100 வயது ஆனவன்; இருக்க முடிய வில்லையே!வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம்.
வெள்ளைக்காரன் வருகிறதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்கூட நமக்கு 10 வயது, இல்லை—7 வயது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, சுகாதாரம் இவையெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம் இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 97 வயது இருக்கிறான். ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்;வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்குப் போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம்.
அதற்கு மேலே வேறே என்ன வரணும்?இருக்கிறது ஒன்றும் கஷ்டமல்ல—சரகிறதுதான் கஷ்டம்!அவ்வளவு வசதி எல்லாம் பண்ணியிருக்கிறான் நம் நாட்டுக்கு, அவ்வளவு அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியான் மக்களாய் இருந்ததனாலே.
நாங்கள் வராதிருந்தால் படிப்பு எங்கு? சொல்லுங்கள்!சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபேது நாம் 100-க்கு 10 பேர்கூடப் படிக்கவில்லையே. அது வந்ததற்கு அப்புறம் ஆரம்பித்தோம் அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமா? ஐந்து கொள்கைகள். என்ன கொள்கைகள்?1. கடவுள் ஒழியணும்.
2. மதம் ஒழியணும்.
3. காந்தி ஒழியணும்.
4. காங்கிரஸ் ஒழியணும்.
5. பார்ப்பான் ஒழியணும்.
அன்றைய முதற்கொண்டு கின்றைய வரைக்கும் இந்த ஐந்து கொள்கைகள்தான் நடக்கின்றன. காந்தியை ஒழித்தான், ஒழிந்துவிட்டான், நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழித்துப்போட்டான்."காந்தி? நம் பேச்சைக் கேட்டு நம் பக்கம் திரும்பினார். ஆனால்,'இன்னமும் கடவுள் என்று சொல்கிறாயே, முட்டாள்'என்றோம். உடனே காந்தி;'கடவுளுக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை; காங்கிரஸ்காரன் கடவுளை இப்போது சேர்க்க வேண்டியதில்லை?'என்று சொல்லிவிட்டார். சொன்ன 30 நாளிலே, கொன்று போட்டானய்யா அவரை!"இவன் ராமசாமி ஆகிவிட்டான்! அவனுக்கு நாதி கில்லை? இவன்—கந்தி என்றால் இந்தியாவுக்கே பெரியவன்!எல்லாரும் நம்பிவிடுவார்கள்?"என்று சட்டென்று கொன்று போட்டான் அவரை.
அடுத்தாற்போல, ஒழியவேண்டியது காங்கிரஸ். காங்கிரஸ் ஒழிந்தது! இனிமேல் அது ஒன்றும் உருப்படியாகாது—உருப்படியாகாது;கிப்போதே இரண்டு பேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்து, ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரிகிறது! இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்கலாம் என்று (நினைக்கிற கு). சேர் நீதால்—இனி என்ன மரியாதை இருக்கப்போகிறது?என்ன ஆகப்போகிறது?இனி எவன் காங்கிரசை ஆதரிப்பான்? பொறுக்கித்தின்கிறவனைத் தவிர, காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்று, ஒருவன் சேருவான்?இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே"சாதியை ஒழிக்கணும்"என்று ஒரு வார்த்தை வருமா? சொல்ல முடியுமா? செரன்றால், அவர் காங்கிரசிலே கிருக்கக்கூடாதே!காங்கிரஸ் வேலையே, சாதியைக் காப்பாற்றுகிறது தானே; முதலிலே எடுத்ததும்பார்ப்பனாலே உண்டாயிற்று—அவன் நன்மைக்கு அதை அவன் பண்ணிக்கொண்டான்.போகிறவன் அதை ஓதிக்கிட்டுத்தானே ஆகணும்?
காமராசர் தம்மோடு சேர்ந்தார்;கொஞ்சம் காரியம் செய்தார்."சாதி ஒழியணும்?"என்று பக்தவத்சலம் வாயிலே வருமர?இல்லை, சி. சுப்ரமணியம் வாயிலே வருமா? செரன்றால், அவர் காங்கிரசிலே இருக்க முடியாதே!அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறார்கள்.அது இனிமேல் உருப்படியாகுமா?முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும்,"காங்கிரஸ் ஒழிக, சாதி ஒழிக," என்கிற ஓர் சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்களதாம் இனி வருவார்கள். ஆனதினாலே இனி (அவை) வளம்பெற முடியாது—காந்தியும் போய்விட்டார், காங்கிரசும் ஒழிந்து போயிற்று,கடவுளும் தெருவிலே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அதுதான் வீரமணி சொன்னாரே, செருப்பாலே அடித்தார்கள் கடவுளை என்று. என்ன ஆயிப்போயிற்று?கடவுளை செருப்பாலே அடித்தான்.அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம் என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்கள்.(ஆனால்) என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வநீதுவிட்டார்களே!
முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கன் 20 பேர்; காங்கிரஸ், காந்தி, கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே!சாமியைத் திட்டுகிறான் என்று சொல்லுகிறீர்களே—புதீதி இல்லாமல் சொல்லுகிறோமே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த பிரசினையை மேலே 200 பேர் வநீதுவிட்டார்களே!ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும்—தெரியாது வெகுபேருக்கு.
எனவேதான் இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்,மேலே வருகிறதற்கு முன்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்,அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன?நாலாவது சாதி, ஐந்தாவது சாதி, தீண்டப்படாத சாதி, பார்ப்பனுடைய வைப்பாட்டி மகன்—இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்;மாறாது மேலே போக முடியுமோ?
(இதை) யாரும் கவனிக்கவில்லை. கவனிக்காமல் போனால், நாங்கள் ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டே இருக்கிறோம்;நாளுக்கு நான் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது? இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமை. வேறு எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை; இவர்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய் விடுமே என்று பார்க்கிறான்—மானம் போகிறதைப்பற்றி அவனுக்கு வெட்கமில்லை.
ஆகவே நாம் மாநாடு போட்டோம். இந்த மாநாடு போட்டதற்குக்கூடக் காரணம் சொன்னாரே."தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப்போட்டான்,எந்தவிதத்திலேயும் தீண்டாமை கல்லை?" என்று சொல்லிவிட்டான்."ஆனால் மதத்திற்கு மாதிரம் உண்டு?"
www.thamizham.net - Free E book No 30462069
என்று அதில் ஓர் அடையாளம் வைத்துவிட்டான்—நிபந்தனை. இல்லாதிருந்தால் நாம் அந்தத் தீர்மானத்தின்மீதே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம். அதுதான் சொன்னேனே—"(எல்லாரும்) கோவிலுக்குப் போகலாம்?"என்று சட்டமே பண்ணினால்—அந்தச் சட்டம் செல்லாது என்று ஆயிப்போயிற்றே!
அதே மாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது (என்று வரும்), இனிமேல் நாம் இழிமகன். எனவேதான் மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம், அவைகளையெல்லாம் பார்த்தோம்; மாற்றி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே முதலிலே அதைக் கேட்கிறோம். சட்டத்திலே இருக்கிறது. ஒழிய வேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. சட்டத்திலே ஒழிக்கவில்லையென்றால், ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு—அவ்வளவுக்கு நாம் இப்போது பக்குவமாகணும்.
ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான்; தனியாக இருந்தால் எவனும் ஒன்றும் பண்ணமாட்டான்—கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்று 15, 16 நாடுகளாகப் பிரித்தான். அந்தந்த நாட்டை, மற்ற நாட்டோடு, அந்தந்த நாட்டோடு சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டான்; அவனைப்பற்றி இவன் கவனிக்கக்கூடாது, கிவனைப்பற்றி அவன் கவனிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான்.
16 மாகாணங்களிலே ஜனங்கள் இருக்கிறார்கள்—ஒருவற்குக் ஒருவர் சம்பந்தம் இல்லையே! அவனும் நானும் தாராளமாகப் பேசிக்கொள்ள முடியாதே! அவன் மொழி வேறே—இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் மலையாளம் பேசுவான்; இந்தப் பக்கம் இருந்து வந்தால் தெலுங்கு பேசுவான்; இந்தப் பக்கம் இருந்து வந்தால் கன்னடம் பேசுவான், இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் குஜராத்தி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்தி; அப்புறம் வங்காளி.
அந்தந்த பாஷை ஒன்று சேராமல் இருக்கிறதற்கு என்னென்ன பண்ணணுமோ அதை எல்லாம் பண்ணிவிட்டான். தனித்தனி யாக இருந்தால் ஒன்று சேர்ந்துவிடுவான் என்று 15-ம் 1-ம் 16 என்று சொல்லிவிட்டான்—நாதி இல்லையே!
இப்போது நாம் ஏற்பாடு பண்ணினோம்—சூத்திரன் என்கிறதை ஒழிக்கணும் என்று. நாம் மாத்திரமா சூத்திரன்?இந்தியாவிலே உள்ள 56 கோடி மக்களிலே, தமிழ்நாட்டிலே உள்ள 4.5 கோடி மக்களில் ஏறக்குறைய 3 கோடி மகள் சூத்திரர்களதானே—முஸ்லிம், கிறிஸ்தவன் தவிர; அவர்கள் இரண்டுபேரும் சேர்ந்தால் இன்று ஒரு 50 இலட்சம்கூட இருக்காதே;கிறிஸ்தவர் ஒரு 8 இலட்சம் இருக்கலாம், முஸ்லிம் ஒரு 20, 22 இலட்சம் இருக்கலாம், இரண்டும் சேர்ந்தால் 30 இலட்சமாகும், மற்றவன் எல்லாம் சூத்திரன். பார்ப்பான் ஒரு 3 இலட்சம்தான் இருப்பான்.
அவ்வளவு பெரிய நம் சமுதாயம் இந்த மாதிரி இருக்கிறதே என்று சிந்திக்கமுடியவில்லை. ஆகவே; இதை மாற்றியாகணும். பெரிய விஷயம்தான்,பெரிய முயற்சி பண்ணணும்—பெரிய முயற்சி பண்ணணும். என்ன அவசியம்? அரசியல் சட்டம் அரசாங்கம் நடத்துகிறதற்கு வேணும்.ஓர் அரசாங்கம் நடக்கவேணும் என்றால் ஒரு சட்டம் இருக்கணும். ஒத்துக்கொள்கிறேன்—அரசாங்கம் நடக்கிறதற்கு சூ
#
பார்ப்பான்
இருக்கிறானா?
சூதீதிரன்
இருக்கிறானா
பறையன்
இருக்கிறானா?
யரர்
இருக்கிறான் அங்கே?
ஆனதினாலே, அவன் வைதீதிருக்கிற பாதுகாப்பெல்லாம்--ஒன்று சேரக்கூடாது--
அவர்களை உள்ளே கட்டிப்போட்டு வைத்திருக்கிற கயிற்றை அறுத்துப்போடக்கூடாது ;
அடிமையாகவே இருக்கணும், அப்படி அடிமையாய் இருந்தால் 100-க்கு 90 பேரை 3 பேர்
ஆளலாம்.
அதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்துகொண்டான்.
இப்போது நாங்கள்தான்.
அதைப்பற்றிக் கவலைப்படுகிறோம் ) மாற்றியாகணும் என்கிறோம்.
S
நேற்று நடந்த மாநாட்டுக்கு வேறே கட்சிக்காரர்களுடைய ஆதரவு
ஒன்றும்
வர:
வில்லையே, வரலாம் அல்லவா? அவனவன் சக்தி அனுசாரம், எங்களுக்கு வந்து, உதவி
1686—260
www.thamizham.net - Free E book No 3046
2070
பெரியார் ஈட வெ: ரா. சிந்தனைகள்
பண்ணலாம் அல்லவர 8 ஒருவரும் வரவே இல்லை-எங்கள் ஆட்கன்தான். அவன்--டெல்லிக்
காரன்
ஸி.
அய். டி.யைப்போட்டுவிட்டான்--வேறே
கட்சிக்காரன் எவனாவது
உன்ளே
வருகிறானா பார் என்று.
அதைப் பார்தீ.து ஒருவனுமே வரவில்லை--மந்திரிகளா, அவனா,
மற்றக் கட்சிக்காரனா, மற்றவனா--உம், வரவில்லை,
இழிவு ஒழிய
வேணும் என்றால்
இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவி செய்யணுமே--(இல்லை) நாங்கள்
தான் | ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது--மாறியே ஆகணும், மாறாவிட்டால்
சாகணும் ) அந்த உணர்ச்சி
உள்ளவன் தான் மிஞ்சுவான்.
மாறியாகவில்லை என்றாலும்
சோறு
தின்கணும்,
என்ன
செய்தாவது
வயிற்றை
ரெப்பணும்
அப்படி
என்றால்--
அவனோடே என்ன ஆகும் 1 நினையுங்கள் நீங்கள் ! தம்மை அப்படிப் பண்ணிவிட்டான்.
நமக்கு,
¢ மதம்? என்றான்
;)
¢ மதம்? என்றால் என்னவென்று
தெரியாது.
நமக்குக்
S கடவுன்? என்றான் )
¢ கடவுன் ? என்றால் என்ன என்று தெரியாது.
நமக்குச்
¢ சாஸ்திரம் ?
என்றான் ) * சாஸ்திரம்?
என்றால் என்ன
என்று
தெரியாது.
நமக்கு 'மனுதர்மப்படி”
என்றான்)
* மனுதர்மம்?
என்றால்
ரூபாய்க்கு
எதீதனைப்படி
என்றுதான்
தெரியும்
ஒன்றுமே தெரியாது--ஆனால் அதற்கெல்லாம் நாம் அடிமை.
நான் கேட்கிறேன், பெரிய மதகீகாரனையே கேட்கிறேன்--* இந்து மதம்? என்றால்
என்ன
அர்தீதம்8
எப்போது
வந்தது? எவன்
அதற்குத் தலைவன் 1 என்ன அதற்குக்
கொள்கை? அதற்கென்று இருக்கிற சாஸ்திரம் என்ன §
கிறிஸ் துமதம் என்றால்,
அதற்கு
கிறிஸ்து
தலைவன்,
2000
வருஷம் ஆயிற்று
ஏற்பட்டு, பைபின்
வேதம்.
இஸ்லாம்
மதம் என்றால், முகமது நபி தலைவர், ஆயிரத்து
நரனூற்றுச் சில்லரை வருஷமாயிற்று,
குரான்
இருக்கிறது,
சட்டம்--வேதம்.
உனக்கு
என்ன
இருக்கிறது?
யார்
தலைவன்?
யார் 4 எவனோ
ஒரு காலிப் பயலைப்
பிடித்துக்
கொள்கிறாய், அவனை ரிஷி
என்கிறாய், அவனை முனி என்கிறாய், அவனை மகாதீமா
என்கிறாய், அவனை வெங்காயம் என்கிறாய்.
உனக்கு யார் இருக்கிறான் ₹ * யார் உன்.
மதத் தலைவன்
1 என்றால் வசிஷ்டன் என்கிறாய், நாரதன் என்கிறாய், விசுவாமித்திரன்:
என்கிறாய், இன்னும் எவன் எவனையேர சொல்லுகிறாய்.
¢ அவனுக்கு வயது என்னடா?
என்றால்,
3 கோடி வருஷம், 5 கோடி வருஷம் என்கிறாய்.
* உன் சாஸ்திரம் எப்படிடா
எழுதினது ₹ என்றால்,
* அது மனுஷனரலே எழுதப்படவில்லை--கடவுளாலே.
எழுதப்
பட்டது? என்கிறாய்.
எது நமக்கு என்று இருக்கிறது --ஒரு ஆதாரம் சொல்லுங்களேன்.
¢ கடவுள் ? என்று சொன்னான்.
நாம் செல்கிறோம், இப்போது,
¢ கடவுளை உண்
டாக்கின
பயல் முட்டாள் பயல் ? என்கிறோம் ;$ மடப்பயல் என்று சொல்கிமறம்.
மற்ற
வனைப்பற்றிக் கவலைப்படரதீர்கள்--துலுக்கனைப்பற்றி, கிறிஸ்தவனைப்பற்றி அப்புறம்
பேசலாம்.
உன் கடவுளை உண்டராக்கினவன் யார் ₹ உனகீகு எங்கே கடவுன்
இருக்கிறரன் ₹
கடவுள் தன்மை என்று ஒன்றைச் சொன்னாயசனால்--கடவுளுடைய யோக்கியதை என்று
ஒன்றைச் சொல்லிவிட்டாயானால்--அந்தகீ கடவுள் தன்மைப்படி, கடவுளுடைய யேகீகிய
தைப்படி
எந்தக்
கடவுன் இருக்கிறான் உனக்கு?
கடவுளுக்கு உருவமில்லை என்றான்;
எல்லாக்
கடவுளுக்கும்
உருவம்.
கடவுளுக்கு
ஒன்றும்
வேண்டாம்
என்றாய்,
உன்
கடவுளுக்குப் பெண்டாட்டி; பின்னை, வைப்பாட்டி, சோறு, கலியாணம், கருமாதி
எல்லாம்
வேணும்--மனுஷன்
தானே அவன் | மனுஷனுக்குப் பிறக்காத கடவுள் எது அய்யா உன்
கிட்டே
இருக்கிறது?
மனுஷனுக்குக்கூடப்
பிறக்கவில்லை
என்று
சொல்லவில்லை
எருமைக்குப்
பிறக்காதவன்,
கமுதைக்குப்
பிறக்காதவன்,
ஆனைக்குப்
பிறக்காதவன்,
குதிரைக்குப் பிறக்காதவன், கண்டவனுக்குப் பிறகீகாதவன் எவன் உன் கடவுள் ₹
சிவனும்
கடவுன்
என்றால், கந்தன் எப்படிடா வந்தான் என்றால், ¢ சிவனும் அவன்
பெண்டாட்டியும்
லட்சம் வருஷம்
6 வேலை? பண்ணினார்கள் ;
* சினை?
ஆகவில்லை,
www.thamizham.net - Free £ book 14௦ 3046
இறுதிச் சொற்பொழிவுகள்
2071
பிடுங்கிக்கொண்டார்கள்,
இந்திரியம் ஒழுகிறீறு, அதிலேயிருந்து வந்தான் ? என்கிறான்.
என்ன தைரியமாக, அவன் கடவுளைச் சொல்லுகிறான்--நம்மையெல்லாம் மனிதன் என்றா
நினைதீதுச் சொல்லுகிறான் 8 சிவன் என்றால், அப்புறம் அவனுக்குப் பெண்டாட்டி என்னதி
அக்கு, கடவுளுக்கு ₹ பெண்டாட்டி, கலவி, படுதீதுக்கிட்டான் ! படுதிதால், சாதாரணமாக,
மனுஷன் ஒரு நாள் பூரரவுமா போவான் 1 ஏதோ ஒரு மணி நேரம் போவான், இரண்டு மணி
நேரம் போவான். அதற்கே ரொம்பக் குவிகை சாப்பிடவேணும் ! இவன் என்னடா என்றால்,
10000 வருஷம்--20
ஆயிரம் வருஷம், தேவ வருஷம்
¢ வேலை?
விட்டான், சினையாக
வில்லை அவள்.
தேவர்கள் எல்லாம் வந்து பிடுங்கி விட்டுவிட்டார்கள், அது கீழே சொட்டி
விழுந்தது--அப்படி என்று ஒரு புராணம், கிராமாயணம்.
அப்புறம் கின்னொரு புராணம் ௨
தேவர்கள்
எல்லாம் வந்தார்கள்,
* சும்மா இப்படியே பண்ணுகிறாயே அய்யா ! இன்னும்
இதிலே ஒரு பிள்ளை வந்தால் உலகமே கெட்டுப் போகும், வேலையை நிறுத்து! என்று
சொன்னார்கள்.
¢ நடுவிலே எப்படியடா வேலையை நிறுத. துவேன்?
என்றான்,
சிவன்.
¢ நாங்கன்
எல்லாம்
பிழைக்கவேண்டாமா 1
என்று
தேவர்கள்
எல்லாம் அமுதார்கள்
* அப்படியானால், அது போகுமடா வாய்கீகாலாட்டம், எவனடா பிடிக்கிறது 1
என்றான்.
¢ நாங்கள் பிடிதீதுக்கொன்கிறோம் ? என்றார்கள். பிடுங்கினான் ] எல்லாருக்கும் கையிலே
ஊற்றினான் சிவன்--விஷ்ணு தேவர்கள் எல்லாம் குடித்தார்கள். இந்தமாதிரிக் கதை எழுதி
அல்லவா கடவுளை உண்டாக்குகிறான் 1 சிரித்தோம் நாம்--இப்படி
உண்டாக்கிதீதானே,
கடவுளை உண்டாக்கினான் ; அதிலே உண்டானவன்தானே கந்தன்.
நமச்குக் கடவுள் ஏ.துங்க? கடவுள் என்றால் அப்பா இல்லை, அம்மா இல்லை, உருவ
மில்லை; கண்ணுக்குத் தெரியாது ; கைக்குச் சிக்காது--அப்படியெல்லாம் சொல்லிவிட்டான்;
சொல்லுகிறான்.
அப்படி ஒரு கடவுள் கூட இல்லையே | ஒன்றும் வேண்டாம் என்கிறரன்--
ஆறு வேளை சோறு என்கிறான், கல்யாணம் என்கிறான், வருஷா வருஷம் கல்யரணமடா-
என்கிறான்.
கலியாணமிருநீதும் அதற்கு ஒரு வைப்பாட்டி என்கிறான்--நம்மை ஏதாவது
மனுஷன்
என்று நினைத்து அவன் சொன்னானோ?
¢ சொன்னதைக்
கேட்டுக்கோடர
மடப் பயலே? என்றான் ; சும்மா ஊட்டிவிட்டான்.
கடவுன்
ரொம்ப
அன்பானவர்,
கருணையே
வடிவானவர்-அப்படி
என்கிறான்.
கடவுளைப் போய்ப் பார்தீதால் அந்தக் கடவுள் கையிலே அரிவாள், கொடுவாள், வேலாயுதம்,
சூலாயுதம், ஈட்டி--கொலைகாரப் பயல்களுகீகு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள்
கையிலே
இருக்கிறது!
கடவுன் கருணையே உடையவர் என்கிறான்.
எந்தக்
கடவுள்:
மனுஷனைக் கொல்லாதவர் i (கடவுள்) அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார்,
மனிதனைக் கொன்றார்,
3 கோடிப் பேரைக் கொன்றார்,
5 கோடிப் பேரைக் கொன்றார்
என்று
கசாப்புக்கடைகீகாரன்
மாதிரிப் பண்ணிப்போட்டு, அவரைக் கருணை
உள்ளவர்
என்றால் எப்படி ¥ இப்படி எல்லாம் சொல்லி நம்மைக்
கழுதையாகீகிப் போட்டான் ) ஒரு
உணர்ச்சியும்
இல்லாதவனாகீகிப்
போட்டான்.
கடவுள்
என்றால்
கல்லைக்
கும்பிட
வேண்டியது, பார்ப்பான் காலிலே விழவேண்டியது, அவனுக்குக் காசு கொடுக்கவேண்டியது
இப்போது
நாங்கள்
வந்து,
இந்தப் பிரச்ிசினையிலே, கடவுளைக் கும்பிடாதீர்கள்
என்று சொல்லவில்லை) நன்றாக நினைதீதுக்கொள்ளுங்கள்--இந்தப்
பிரச்சினையிலே,
நாங்கள், கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை;
கடவுன்
இருக்கிறது என்று
நினைக்காதீர்கள் என்று சொல்லவில்லை.
¢ கடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள்?
அவ்வளவுதான்
நாங்கள்
சொல்லுகிறோம்.
ஒன்றுமே இல்லாமல், எந்த முட்டாளாவது
சொன்னான் என்றால், நினைதீததெல்லாம்--அரசமரம் கடவுள், வேப்பமரம் கடவுள், பல்லி
கடவுள், முடகீகரன் கடவுள், பாம்பு கடவுள், அப்புறம் நினைத்ததெல்லாம் கடவுள்,
அது
கடவுள் சங்கதியர 1 அது முட்டாள்தனம்.
பைதீதியகீகாரச் சங்கதியா 8 இந்தப் பைதீதியக்
காரதீதனதீதுகீகு நம் வேதம், நம் பணம், நம் அறிவு எவ்வளவு நாசமாகிறது.
இவ்வளவும்
பண்ணியும், ¢ தேவடியாள் மகன் ? என்கிற பட்டமல்லவா நம் தலைமேலே இருக்கிறது?
www.thamizham.net - Free £ book 14௦ 3046
2072
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும் இப்போது நாம் ஆரம்பிதீ துள்ள
இழிவு
ஒழிப்புக் கிளர்ச்சிக் காரியம்
மிகவும் ஞாயமானது என்கிறதற்கு ஒரு உதாரணம்
உங்களுக்கு வேண்டுமானால், என்ன இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 8ந்தேதி மாநாடு;
இன்றைக்கு
எத்தனை
நாளாகிறது 8
10 நாளாகிறது)
கவனிக்கணும்.
இரகசியமாக
இல்லை-பதீதாயிரம் பேருக்குமேலே வந்தார்கள் $ 30 பதீதிரிகைக்காரர்கள் வந்தார்கள் $
எல்லாதீ தீர்மானத்தையும் அவரவர் பதீதிரிகையிலே போட்டார்கள் $ இந்தியா
பூராவும்
பரவி விட்டது; அடுத்தநாளே பரவி விட்டது.
நான் சொல்லுகிறேன்; கவனியுங்கள் ! இந்த
10 நாளாக ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்தீ.துப் பேசினானா ? எந்தப் பத்திரிகை
யிலேயாவது சேதி வந்ததா?
ஏன் சொல்லுகிறேன்--நரம் பண்ணினது அவ்வளவு நேர்மை
யான
காரியம் ) எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை.
எவன்
சொல்லுவான்--* நீ
தேவடியாள் மகனாகதீதான் இருக்கணும்? என்று 9 அவ்வளவு நேரிமையான காரியத்த
நாம் செய்திருக்கிறோம், பண்ணிப் போட்டோம்.
இதிலேயே நாம் வீரனாக மாட்டோம்;நாளைக்கு இதற்குப் பரிகாரம் பண்ணுகிறதற்குக் கிளர்ச்சி பண்ணுகிறோமே--அதிலேதான்'
நாம் யார் என்று காட்டிக்கொள்ள வேணும்.பண்ணணும்.
நாளைக்குக் கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம்;பிடிக்க
ஆரம்பித்தானால் நாம் 5000, 10000 என்று ஜெயிலுக்குப் போகணும்.நாம் தயாராய்
இருக்கிறோம்--காரியம் முடிகிறவரைக்கும். ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய்
இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்துக்கு வரணும். வரவில்லை
என்றால் இந்தச் சாக்கை வைத்துக்கொண்டு,"நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும்
என்ன சம்பந்தம்?நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறாய்;
உன் பேச்சு எனக்குப்
புரியாது, என் பேச்சு உனக்குப் புரியாது; உன் பழக்கம் வேறே, உன் வழக்கம் வேறே;
உன் நடப்பு வேறே(அம்மா, அம்மா. அம்மா... ஆம்... அம்மா.அம்மா.அம்மா.
ஆ...ஆ...ஆ...ஆஹா) நோய்க்கு கொடுமையால் துடிக்கிறார்(பின் தொடர்ந்து பேசுகிறார்)
எனக்குப் புரியாது.மரியாதையாகப் போ, ரகளை வேணாம்.
என்ததற்காக இவ்வளவு
தூரத்திலே இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாக வேணும்?
நீ இல்லா விட்டால் எங்களுக்கு
என்ன நஷ்டம்?
எங்களுக்கு என்ன
உப்பு
இல்லையா, தண்ணீர்
இல்லையா,
மலை
இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா?இல்லை--நெல் விளையவில்லையா,
கம்பு விளையவில்லையா--என்ன
இல்லை
எங்களுக்கு?
உன்னாலே
எனக்கு
என்ன
ஆகிறது?
தேவடியாள்
மகன் என்னும் பட்டத்தைத் தவிர,
நீ எங்களுக்குப் பண்ணின
நன்மை என்ன?மரியாதையாகப் போ! அவ்வளவுதானய்யா நாம் கேட்கிறோம்!இது
எப்படி அய்யா தப்பாகும்?இதனாலே நாம் எப்படிக் கெட்டவனாவோம்?இதனாலே நாம்
எப்படி
அரசுக்கு
விரோதமாவோம்?கவனியுங்கள்,
தாய்மார்களே!தோழர்களே!இப்போது விஷயங்களை எல்லாம் முதலிலேயே சொன்னோம், இது நம் கடமை.25ந்தேதி
ஆரம்பிப்போம்.மளமளவென்று வரணும்.என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும்.
சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுகிறது முதற்கொண்டு இன்னும்
பல காரியங்கள் திட்டம்போட்டுச் செய்கிறோம்.
நாம்
கலகத்துக்குப்
போகமாட்டோம், எவனையும்
கையாலே
தொடமாட்டோம்,
எவனாவது அடித்தாலும் பட்டுக்கொள்வேம்--திருப்பி அடிக்கமாட்டோம்.
ஞாபகத்திலே
வைத்துக்
கொள்ளுங்கள்!நான்,
நீ என்று மீசையை முறுக்கக் கூடாது.
அடித்தான் என்றால்
பட்டுக்கணும்--போலீஸ்காரன்
இருப்பான்; அதிகமாக
அடிக்காமல்
பார்த்துக்
கொள்வான்.
அப்புறம் என்ததற்கு நாம் ஒருவனை அடிக்கப்போகணும், நாம் யாரோடு
சண்டைப் பிடிக்கிறோம்?நான் தேவடியான் மகனாய் இருக்கக்கூடாது, உன் ஆட்சியிலே--உன் சட்டத்திலே
அப்படித்தான் இருக்கணும் என்றால் உன் ஆட்சியை மாற்ற உன் சட்டத்தை
நெருப்பு
வைத்துக் கொளுத்துகிறேன்--முன்னையே நான் கொளுத்தினவன்
தான். ஆனதினாலே,
அருமைத் தோழர்களே, பக்குவம் அடையணும் நாம்.
எதற்காக? இங்கே நான் நாத்திகப்பிரசாரம் பண்ண வரவில்லை;
கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்கிறதற்காக
நான்
வரவில்லை--அது
வேறே.
நாங்கள்
பண்ணிக்கிறோம்.அவனவன்
நம்பட்டும்,
ஆராயட்டும்,
இருக்கட்டும்--முட்டாள்தனமான
காரியங்கள்,
பகுத்தறிவுக்கு
ஒவ்வாத
காரியங்கள்,
மানத்துக்குக் கேடான
காரியங்கள் செய்கிறதற்கு
நாம் இடம் கொடுத்துக் கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?
மந்திரி
ஆகணும் என்றால் வாழமுடியாது--ஆகிறவன்
ஆகிவிட்டுப்போகிறான்.
சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் முடியாது--ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்று
விட்டுப்போகிறான். இது இரண்டும் வேணாம் என்கிறவன் நான்--உறைத்து இருக்கலாமா?இல்லையா?இத்தனைப் பேருக்கும்ஆ மானம் இருக்காது! ஆனதினாலே, தயவு செய்து
நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும், ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும்,
ஜெயித்தே ஆகணும்!நான்
சொல்கிறேன் என்று கேலி பண்ணாதீர்கள்--"நீ என்ன,
நாளைக்குச் சாகப் போகிறவன்தானே; துணிந்து வந்திருப்பாய்!"என்று. நானே பண்ண
வேணும் என்று இல்லை. நீங்கள் பண்ணவேண்டிய காரியத்தையே தானே நான் செய்கிறேன்?
ஆனதினாலே எல்லோரும் துணியணும்.மளமளவென்று வரணும், ஆண் பிள்ளைகள் வர
முடியலை என்றால் அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை அனுப்புங்கள்.அனுப்ப முடிய
வில்லை என்றால் வேலைக்கு இரண்டு ஆளைப் பிடித்து அனுப்புங்கள்--"நீ போ எனக்காக?"
என்று.
நாம் எல்லாருமாகப் பாடுபட்டோம் என்று தெரியணும்.
நான் என்ன செய்கிறேன்?"இந்தச் சாக்கிலேயே நம் நாடு நமுடையதாக ஆகி
விடாதா? அவ்வளவுதான்? நாம் விட்டது தப்பு.
அயோக்கியப் பயல்களுக்கு--காங்கிரஸ்
காரப் பயல்களுக்கு இடம் கொடுத்தோம், அவன் பார்ப்பான்.
அதிலே பெரிதுக்கித் தின்னப்
போனவன்,
நம் ஆள், அதிலே முக்கால்வாசிப் பேர் பார்ப்பனுடைய வைப்பாட்டி மகன்
என்று
ஒதுக்கிக்கொள்கிறவன்." அவர்களாலே கோளாறாய்ப் போயிற்று--கலகம் பண்ண
முடியவில்லை அப்போது.
நானும் என்னாலானவரைக்கும்தான் கலகம் பண்ணினேன்; ஒரு நாட்டுக்காரனாகப்
போய்விட்டேன் நான்.
16 நாடுகளிலே தமிழ்நாடு ஒரு நாடு, அதிலே பத்துக் கட்சிகளிலே
திராவிடர் கழகம் ஒரு கட்சி.
என்ன ஆகும் எங்களாலே? மற்ற நாட்டுக்காரன் எல்லாம்
புரியவே இல்லை அவனுக்கு--"சூத்திரன் என்றால் என்ன தப்பு?" என்கிறான்."சூத்திரன்
இல்லாமல் பின்னே நாம்
யார்?" என்கிறான்.
"பிராமணன் என்றால்"மகாராஜ்?"" என்கிறான்,"தேவர்?"
என்கிறான்,
அதிலே
ஊறி
இருக்கிறான்.
இப்போது
அவன்
எல்லாம்
மாறி
விட்டான் என்று சொல்லமுடியாது.
நாம்
செய்கிற
த்யாகத்தினாலே,
நாம் எடுத்துக் கொள்கிற முயற்சியினாலே,
மற்றவன்
வருவான் நம்கூட,
5000 பேர் ஜெயிலிலே இருக்கிறார்கள், 10
ஆயிரம்
பேர்
ஜெயிலிலே
இருக்கிறார்கள்
என்றால்"ஏனடா
இருக்கிறார்கள்?"
என்று
கேட்பான்
அல்லவா?"பார்ப்பனுடைய
தேவடியாள்
மகன்
என்று
இருக்கிறதற்கு இஷ்டமில்லை" என்று ஜெயிலில் இருக்கிறார்கள்என்றால்-- "அடே, அப்போது நாமும் என்ன சம்பந்தம்?" என்று (நினைத்துக்) கவனிப்பானல்லவா?அதனாலே கட்டாயம் கவனிப்பான்.
ஒருவனும்
கவனிக்காவிட்டாலும்
தெலுங்கனும்,
கன்னடியனும்,
மலையாளிய்ம்
கவனிப்பான்.
மலையாளிகளிலே
பெரும்பாலும்
பார்ப்பனுடைய
தேவடியான்
மகன்தான்,
அதிலே
ஒன்றும்
ஆட்சேபணை
இல்லை,
திருட்டுத்தனமல்ல-
அவனே
பெருமை
பேசிக்
கொன்வான்--"நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன்?
நான்
அந்தப் பிராமணனுக்குப் பிறந்தேன்!"என்பான்.காசுகொடுத்துப் போவான்.
இப்போது
அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது, எங்களோடு சேர்ந்து பேசுகிறான்; "நானும் சேர்ந்து
கொள்கிறேன்" என்று எழுதி இருக்கிறான். அப்போது, மானம் என்றால், ரொம்ப ஒவ்வொரு
வனுக்கும்
உணர்ச்சி
வந்துதான்
தீரணும். தெலுங்கனும்
இருக்கிறான். நாளைக்குக்
கன்னடியனும் வருவான், அப்புறம் அடுத்தவன், அடுத்தவன், அடுத்தவன் வரமுடியும்.
சம்பந்தம் தெரியாது அவர்களுக்கு--எவ்வளவு இழிவு என்பது புரியாது. நம் இயக்கத்தினாலே
புரியும், எல்லாரும் இருட்டடிக்கமாட்டான். இதிஆயிரம் பேர் ஜெயிலுக்குப் போனார்கள்,
அடி தின்றார்கள், இதைப் பண்ணினார்கள் என்று அதை எழுதுகிறபோது--"அடே, நான்
என்றால் என்ன?"என்று கவனிப்பானல்லவா?எல்லாரும் ஏககாலத்திலே வருவார்கள் என்று
சொல்லமுடியாது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வருவார்கள்.கவனித்தாகணும்."தமிழ்நாடு? தனியாகப்
பிரிந்தாலும்
10 வருஷத்துக்குள்ளாக
நாம் எல்லாம்
100
வருஷம் இருப்போம். ஆகாயத்திலே ஒவ்வொருவரும் பறப்போம்.
எப்படிப் பறப்போம்
என்று உங்களுக்குத் தெரியாது; இப்போது
400 பேரை, 500 பேரைத் தூக்கிக்கொண்டு
பறக்கிறதல்லவா
ஆகாயக்
கப்பல்--ஒரு மனுஷனை ஏன்
தூக்கிக்கொண்டு
பறக்காது?
தனித்தனியாக வாங்கி முதுகிலே கட்டிக்கொண்டால் - ஏறுகிறது மேலே,
"விர்!"என்று;
இறங்கு என்கிற பகம் இறங்குகிறது.
இப்போதே--10 வருஷத்துக்குள்ளேயே நமக்கு
10 வருஷம் உயர்ந்து போயிற்றே.
அருமைத் தோழர்களே!1952-லே
நம் சராசரி வயசு 25, இன்றைக்கு 52 சராசரி வயது.
1952-க்கும்
1972க்கும்
20 வருஷம்தான். இந்த
20 வருஷத்திலே 20 வருஷம்
உயர்த்து
விட்டது
நம்
ஆயுள்.
(கி.பி.) 2000 வயது வருகிறபோது, நாம்
75 வயது இருப்போம்.
வெள்ளைக்காரன்
100 வருஷத்துக்கு
மேலே
இருப்பான். மனிதன்
சாகமாட்டான், சாகிறதற்கு அவசியம் இல்லை; எல்லா நோய்க்கும் மருந்து வந்துவிட்டது, ஏதோ
2, 3
நோய்க்கு இல்லை. அதுவும் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
ஆனதினாலே,
நல்ல வளர்ச்சியான
காலத்திலே
இருக்கிறாம்
நாம்.உலகம்
வளர்ந்து கொண்டே போகிறது. கொஞ்சநேரத்துக்கு முன்னே சொன்னேன் பாருங்கள்--
நேற்று, முந்தாநான் வந்த பத்திரிகையிலே, குழந்தைகளை உண்டாக்குகிறான். முட்டையை
எடுத்து
வைத்தாலும்
10,
20 நாளிலே
அது
குஞ்சு
பொரித்துவிடும். மனுஷனின்
முட்டையை எடுத்து வைக்கிறான்--10
வருஷத்துக்கு
அப்புறம்
குஞ்சு
பொரிக்கணும்
என்றால் பொரிக்கிறது அது; இன்றைக்கே பொரித்து ஆகணும் என்று கில்லை. பெண்கள்
இந்திரியம் கொஞ்சம், அதை ஒரு டப்பியிலே--ஆண்கள்
இந்திரியம், அதை ஒரு டப்பியிலே
பாதுகாக்கிறான்."பேங்க்?"
என்று
பேர்
அதற்கு.அந்த"பேங்கிலே
வைத்துப்
பாதுகாக்கிறான்.என்றைக்குப் பின்னைவேணுமோ அன்றைக்கு இரண்டையும் எடுத்து
வைத்துக் கொள்கிறான்--"கியா, கியா?" என்று கத்துகிறது (பின்ளை)!
இதெல்லாம் பொய் என்று
சொல்லமுடியாது. பெரிய
பிரசிद்தியான
பத்திரிகையிலே
போட்டோவோடு
வருகிறது.
அப்புறம்
5000 மைல் பறக்கிறான்,
10000 மைல்
வீதம் பறக்கிறான். சமுத்திர
மண்டலத்துக்கெல்லாம் போய்விட்டுவந்தான்.
இதெல்லாமா பொய்?
ஆனதினாலே,
நாம்
முதலாவது
இப்போது
மானத்துக்காகப்
போராடுகிறோம்,
வேறே எதற்காகவும் இல்லை. இழிவு--தேவடியாள்
மகன், பார்ப்பனுடைய வைப்பாட்டி
மகன், தாசி புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது--இது ஒழிந்து ஆகணும் என்று
போராடுகிறோம்.
இது ஒருவனுடைய மானமே
அல்ல,
பார்த்தாலும்,
எல்லோருக்கும்
இதிலே உணர்ச்சி வரணும், வரணும் அவனவன் தேடிக்கொண்டு! என்ன?ஜெயிலுக்குப்
போனால் பட்டினியாகவ போடுவான்?இல்லை. இந்தக் கிளர்ச்சி நடந்தால் கிளர்சிக்கு
வருகிறவர்களைப் பட்டினியாகா போடுவோம்--ஜெயிலுக்குப் போகிறவரைக்கும் சேறு
போடுவோமே.நிறைய அரிசி
10 மூட்டை,
5 மூட்டை இப்படி அனுப்பியிருக்கிறார்கள்;பணம் கொடுத்திருக்கிறார்கள்--40, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும்.
லட்சம் பேரை ஜெயிலுக்கு அனுப்பலாம்--அவ்வளவு வசதி இருக்கிறது.இன்னும் கொடுப்பார்கள், "யார்
மாட்டோம்?" என்பார்கள்.
"யார் ஜெயிலுக்குப் போகப் பயப்படுகிறானோ, போக முடியவில்லையோ?"என்றால் சொன்னதை
வைத்துவிடுவார்கள்.ஜனங்களுக்கும்
பயன்படும். உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாவோம்
நாம்,
நம் சமுதாயமே புது உலகமாகும்.தமிழன் இந்தியாவிலேயே முதல்
நம்பராக இருப்பான்;இந்தியாவுக்கே வழிகாட்டக்
கூடிய சக்தி உடையவனாக விடுவான். அனேகக் கோளாறுகள் இருக்கின்றன;அதெல்லாம்
சுலபமாய் மாறிவிடும்.
அது செய்கிறவனுடைய லட்சியத்தைப் பொறுத்து இருக்கிறது;
செய்கிறவனுடைய துணிவைப் பொறுத்து இருக்கிறது. தாய்மார்கள் ரொம்ப நமக்கு உதவி
பண்ணுவார்கள்,"அம்மா, இப்போது இந்தச் சண்டை உங்களுக்காகத்தான், உங்களைத்
தான் பார்ப்பனுடைய
வைப்பாட்டி
என்று சொல்லிவிட்டான். ஆனதினாலே,
நீங்கள்
ஏதோ உங்களால் ஆனதை இந்தக் காரியத்திலே செய்யுங்கள்?"என்று நாம் சொன்னால்.
எனவே, தோழர்களே!நாம் இப்போது அதிசயமாக ஒன்றும் போராடவில்லை.
மதம் என்கிறது இல்லை; யாராலேயும் இப்போது எடுத்துச் செல்ல முடியவில்லை. கடவுள்
என்கிறதும் தப்பு;எவனும் கடவுளுக்கு அர்த்தம் சொல்லுகிறவனும் இல்லை.
இன்றைக்கு
நாம் கும்பிடுகிற ராமன், கிருஷ்ணன், சிவன், பிரம்மா, மற்றக் கடவுள் அது, இது
இந்தக்
குப்பைக்
கூளமெல்லாம்
கடவுனே
அல்ல--பார்ப்பானாலே
உண்டாகீகப்பட்டவையே.
அவைகளை; அவன் முட்டாளாயிருக்கிறபோது உண்டாக்கினதினாலே, அதற்கு மனுஷதி
தன்மை கொடுக்கிறதற்கே இல்லை--சும்மா குடிகாரன் எப்படி எழுதுவானோ அப்படித்
தான் எழுதினான்.
சாதாரணமாக இப்போது கிராமனைப்பற்றி--இராமாயணதீதைப்பற்றி மனுஷனிலே
சிந்திக்கதவன் எவனும் இல்லை; வெகுபேர் கடவுள் என்றுதான் நினைக்கிறான்.
அந்த
இராமாயணதீதிலே
எழுதி
இருக்கிறான்--இரரமன்
யாருக்குப்
பிறந்தான்
என்றால்,
அவனுடைய அப்பனுக்குப் பின்ளை இல்லாமல் போய், அவன் பெண்டாட்டிகளைப்
பார்ப்
பானுகீகு விட்டுக்கொடுத்து, அந்தப் பார்ப்பானே ¢ வேலை? பண்ணினான் என்று சொல்ல
வில்லை--முதலிலே குதிரை ¢ வேலை? பண்ணி அவளுக்கு உணர்சீசி ஊட்டி,
அப்புறம்
இவன் ¢ வேலை? பண்ணினான். பாலகாண்டதீதிலே பாருங்கள்--யாகம் பண்ணினவுடனே
அந்தப்
பெண்டுகளைக்
குதிரையோடு
விட்டான்)
உயிராண
குதிரையாக
இருந்தால்
ஏதாவது உதைதீதுப்போடும் என்று, சாகடித்து, அதனுடைய ஆண் குறியை
எடுத்து
இராமனின் அம்மாளுடைய பெண் குறிக்குள்ளே விட்டு ஆட்டி, அவளுக்கு உணர்ச்சியை
ஊட்டினான் )
அப்புறம் பார்ப்பானை விட்டான்,
அவன் சினை பண்ணினான்; பணம்
வாங்கிக்கொண்டு போனான் என்று இருக்கிறது.
¢ ஞான சூரியன் ? என்கிற ஒரு புத்தகம்
இருக்கிறது, அதை வாங்கிப் படியுங்கள், தெரியும்.
ஆகவே, கடவுளை மனுஷன் என்று அவன் எழுதவில்லை--தேவடியாள் மகனாக--
விபச்சாரி மகனாக உண்டாக்கினான்,
இதாவது பின்னிப் பின்னிச் சொல்ல வேண்டியதாய்
இருக்கிறது--கிராமன் பெண்டாட்டியை என்ன பண்ணினான்?
இரரவணன்
¢ சினை?
பண்ணி,
4 மாத சினையோடு
புருஷன்
வீட்டுக்கு அனுப்பித்தான்,
புருஷனும் ஒத்துக்
கிட்டான் ) அவளும் ஒதீதுக்கிட்டாள்--*
அங்கே போனேன்,
அவன் பண்ணிவிட்டான்,
நான் என்ன பண்ணுகிறது?
என்று சொல்லிவிட்டாள்.
* நீ அந்த மாதிரிப் போனவன்,
போடி காட்டுக்கு )
என்று அனுப்பிவிட்டான்.
இரகசியமாய்
ஒன்றும் இல்லையே-சரமி
பெண்டரட்டியைப் பற்றித்தானே அப்படி எழுதி
இருக்கிறான்!
மற்றக்
கடவுள்களைப்
பற்றிச் சொல்லணுமா 1 நிறைய இருக்கிறது.
ஆகவே, நாங்கள் சொல்வது சுயநலதீதுக்காகச் சொல்லவில்லை; உங்களை .ஏய்கீகிற
தற்காகப் பொய்யையும், பிதீதலாட்டத்தையும் இட்டுக்கட்டிப் பேசவில்லை ) எல்லா ஆதாரங்
களையும்
கையிலே
வைத்துக்கிட்டுத்தான்
பேசுகிறோம்.
உள்ளபடியே,
அவர்களுக்கு
வாய்ப்பு கில்லை--மடையனாய் இருதீதரன் 2000, 8000 வருஷதீதுக்கு முன்னே] அன்றைக்கு
உண்டாக்கினான் இந்தக் கதைகளை.
அன்றைக்கு அவனுக்கு அக்காள், தங்கை என்று
இல்லை $
அம்மாள்,
மகன்
என்று
கல்லை-சரிசமமாகப் புழங்கினான்--அதற்கேற்றாற்
போலே கடவுளையும் உண்டாக்கிவிட்டான்.
www.thamizham.net - Free £ book No 3046
2076
பெரியார் ஈட வெ. ரா. சிந்தனைகள்
பிரம்மா
உண்டாக்கினான்
என்றால் என்ன என்று எழுதி இருக்கிறான் ₹ பிரம்மா
அப்பன், அவன் பெண்டாட்டி சரஸ்வதி அவனுடைய மகள், இரண்டுபேரும் சேர் ந்தார்கள்,
இப்படிக்
கற்பனை
பண்ணி
இருக்கிறான்.
இதுவெல்லாம்
உண்மையாய்
இருக்காது;
அந்த மானங்கெட்ட காலத்திலே--அறிவில்லாத,
காட்டுமிராண்டிக் காலத்திலே உற்பதீதி
பண்ணிய
சாதனங்கள்,
நம்
முட்டான்தனதீதினாலேயும்
அவன்
கெட்டிக்காரதீதனதீ
தினாலேயும் இதைப் பாதுகாதீதுக்கொண்டே வந்துவிட்டான்.
* எவனாவது நாளைக்கு
வந்தால்
என்ன
பண்ணுகிறது?
என்று
நினைத்து
நிறையக்
கோயிலைக்
கட்டிப்
போட்டான்,
நிறையச்
₹ சாமிகளை வைதீதுவிட்டான் ] மறந்திடாமல் கருக்கிறாற்போல
நித்தமும்
4 வேளை,
5 வேளை பூசை என்கிறான்.
வாரதீதிற்கு இரண்டுநான் உற்சவம்
என்கிறான்,
வருஷதீதுக்ீகு
ஒரு தடவை,
இரண்டு
தடவை
கல்யரணம்
என்கிறான்.
மனிதனைச்
சரியாக அதிலேயே
முட்டிக்கிட்டு இருக்கிறாற்போலே ஏற்பாடு பண்ணிச்
செலவு பண்ண வைக்கிறான் ) (இப்படிப்) பாதுகாக்கிறார்கள்.
இவ்வளவு பாதுகாப்போடு
செய்தால் ஒரு கழுதை£யைக்கூட சாமி ஆக்கிவிடலாமே! அவ்வளவு முயற்சி பண்ணுகிறான்,
அவன்,
நம்
ஜனங்கள்
அதற்கு
ஏமாந்து
போகிறார்கள்--அந்த
முயற்சியிலேயே
பல உணர்ச்சிகன்--சாமிக்கு என்று போகாவிட்டாலும், வேடிக்கை பார்க்கிறதற்கு என்று
போகிறான்.
கட்டிப்போட்டு இருக்கிற பெண்பின்ளைகள் எல்லாம் உற்சவம் என்றால்தான்
கோவிலுக்குப் பார்க்கப் பேசகமுடிகிறது.
அங்கே போனால்தான் 4 ஆண்பின்ளைகளோடு
உராய முடிகிறது)
வீட்டிலே இருந்தால் என்ன வேலை என்று மிரட்டுவான் புருஷன்;
அங்கே போய்விட்டால்--* வா ? என்பான் புருஷன்--* வரமுடியலையே,
நசுக்குகிறாணே,
நசுக்குகிறானே ? என்பாள் அவள் $
* வா, வா,
வா முட்டிக்கிட்டு வா? என்பான் அவன்.
அந்தச் சுகமெல்லாம், பெண்டாட்டியைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போனால்தான்
அவன் அங்கே அடைகிறான்)
௮
பழகீகமாய்ப்போயிற்று) எல்லாருடைய பெண்டாட்டியும்
அந்தக் கதி ஆனதினாலே எவனும் பரிகாசம் பண்ணுகிறதற்கு
இல்லை.
இப்படிப்பட்ட
காரியங்கனினாலே,
அது
உயிரைப்
பிடித்துக்கொண்டு
இருக்கிறது.
நாம்
அதற்குதி
தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம் பண்ணினால் பெண்டுகள் திரும்பிவிடுவார்கள்.
எனவே, அருமைத் தோழர்களே ! நேரமாயிற்று, மணி 10-க்குமேல் ஆகிவிட்டது.
ஏதோ
எனக்குத்
தோன்றினதைச்
சொன்னேன்.
முக்கியமாய்சி
சொன்னதினுடைய
கருத்தெல்லாம், நாளைக்கு நடகீகப்போகிற கிளர்ச்சியைப்பற்றி--அதனுடைய
ததீதுவம்
என்ன ₹ அவசியம் என்ன i என்கிறதை விளக்கினோம்.
நம் கடமை என்ன என்கிறதை
நீங்கள் சிந்திக்கவேணும்.
ந
உங்கள் கடமை
என்றால்,
உங்கள் ஒருவரைப் பொறுதீததல்ல )
தமிழர் என்று
சொல்லுகிற
நாம் இதீதனைக்கோடி
மக்களையும்
பொறுத்தது.
பிறகு
நாம்
வட்டியும்,
முதலுமாய்
உயரலாம்--ஒன்றும்
தேங்கிப்போகாது
நம்
நாட்டு
முன்னேற்றம்
என்று
உங்களை வணக்கதீதோடெல்லாம் கேட்டுக்கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு
நேரம்
பொறுமையாய்
இருந்ததற்கெல்லாம்,
என்னைக்
காதுகொடுத்துக்
கேட்டதற்கு
என்னுடைய
மனப் பூர்த்தியான நன்றியறிதலைதீ தெரிவித்துக்கொண்டு
என்
பேச்சை
முடிதீதுக்கொன்கிறேன்.
வணக்கம் !
[சென்னை தியாகராயநகரில் சிந்தனையாளர் மன்றச் சார்பில் 19-12-1973-ல் தந்தை பெரியார் அவர்கள்.
ஆற்றிய பேருரை--பெரியார் அவர்களின் வாழ்நாளில் அவர் ஆற்றிய
¢ இறுதிச் சொற்பொழிவு --6 மரண:
சாசனம் 9 என்பதாக இப் பேருரை அமைந்துவிட்டது.
ஆதாரம் $ Tape Recorder, Akai, Track
No. 3,
Speed 15/16, 260 feet,]
www.thamizham.net - Free E book No 3046
*முடுபட SYCeY pTun ழும் மவறில wefrie பழட எமக
Yhugdin லாாகைசதஙிஉ மீறிக் @-g/6T-6-08 முறுமடள
s
-
ந டைத
௨௨௮
JERie (G2 Dipe ஓவாது மலரு மழலை
மு மலராட மறற $Tue இறங்கும்
PUSPIOW
நா முள முடுத்ற மதன @810 woipsy பீம புலை
g முலற 21-99 மக்ஸ் புட
ந லள
8௭-11 இதத [மாத qrEsmtuey கரக ‘QEIMue® Fho@e s முழுக fomyng மறல
<
E & & 5
E &
s
iz
ம்
©
க s
° z <
8 3
ய
ஓ
f IMMIE , மகஜ லம முழுமதி மழை மில்ல Dudguphsn மமக பப்ப
ப்ப
FEFOL முழுத் geidy ¢IE மீமாழாடு “CFDEEFN
மள நமம அலமு s பழக frsie பழட நகக்
“முனை ந லள 8/6-21-90-
ந மலழுதமுமரு முழிதமங
[க GOy DupIsopanSy தடட MK ,
தந்தை பெரியார் அவர்களின் உடல் 24-12-1978 மாலை 505 மணிக்கு
சென்னை பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டு,
சலவைகீகல்லால் மூடப்பெற்றது.
PART IX
RELIGION
www.thamizham.net - Free E book No 3046
am.net - Free E book No 3046
1. DUTIES OF A REVOLUTIONARY
Mr. E. V. Ramasami Naicker in the course of his presidential address
at the South Indian Social Reformers’ Conference, held on the 26th of
November (1928) at Madras, said :
It would have been more appropriate if you could have chosen as
your president one who is a firm believer in social reform.
I am fast
loosing my faith in social reform as an agency for the regeneration of our
country.
The advancement of the country can only be through social
revolution born of invincible courage and undaunted boldness.
I have
arrived at this conclusion after long and patient deliberations.
I beg to
tell you that I am endeavouring to serve the country by destroying the use-
1௦88 and harmful overgrowth that is threatening its very life.
Society in
my humble opinion, has degenerated to an extent which it is impossible
to remedy by social reform.
The much talked of social reform of the
present day is one of the crafty weapons of the educated and the wealthy
classes who are competing with one another
in an
attempt
to
gain
popularity and influence over the peoples.
Such methods of social reform
are not intended to confer any benefit on those for whose welfare they are
apparently intended.
These methods are adopted
to serve the selfish
interest of the so-called social reformers themselves.
But those whose lot
requires tobe bettered always believe in the genuineness of these reformers.
And the result of it all is that day by day, their condition is growing
worse, they are degenerating into
a state from which they cannot be
reformed and uplifted easily.
The chief reason for this is the fact that
those set of people whose attitude of mind towards society brought about
the degeneration of
certain classes which need reformation at present,
those class of people to whose selfish activities much
of the unsettled
condition of our society is due—it is these men who are now working and
benefitting by their work in the department of social amelioration.
The most important
௦8 the
evils that stare us
in our face
is that
which
is responsible for the division of the people into superiors and
inferiors in society on the baais of birth.
These evils have come to exist
in our country on account of the fact that they have been established in
the name
of religion, God and heaven.
The anxiety toreform society
and purge it of its evils was in the minds of men of long ago.
It might be
said that Buddha, Ramanuja and Tiruvalluvar were the foremost in their
age to attempt something in this direction.
But it cannot be said that in
these directions there has been the least progress which redounded to the
benefit of society from the efforts made from that time onwards till now.
It is impossible
for
our
people
to
effect
anything by
social
reform,
because the sentiments of religion end the veneration of God have been so
www.thamizham.net - Free E book No 3046
iv
THOUGHTS OF PERIYAR E.
V.
R.
inextricably connected with these superstitious ideas and beliefs. But this state of things is advantageous to some sets of people, and that is the reason, I think, for the failure of the efforts to improve the condition of the people.
It is not an easy task to enunciate more wise theories or do more strenuous work than was done by Buddha, Kapila, Tiruvalluvar, Ramanuja and others. That is the reason why the opponents of social reform have strong belief in their obstructive propaganda. The feelings towards religion and the attitude towards God have been built on the foundations of ignorant belief and blind faith. Worshipping God out of blind belief, man has come to accept and live according to many of the purblind conceptions of religion.
To say that ignorant belief and blind faith should be destroyed is national service destined for the benefit of humanity. People have for a very long time been carrying on this propaganda with caution, patience, love, sympathy, good words and persuasive arguments. What has been the result of their attempts?How long we are going to be experimenting like this? We find that such propaganda is done by people who are anxious to ingratiate themselves into the good looks of the opponents of social reform and gain popularity and prestige as reformers. It is also due to a lack of courage to push onward on the part of such reformers. Some people might quote the opinions of Swami Vivekananda, Gandhiji and others to disprove my contentions. I frankly accept that my opinions are opposed to theirs. Some people say,"Do not destroy the old symbolisms, the ancient pictures and the hoary traditions and culture." Such things which these people want to foster are responsible for the degeneration of our country and demoralisation of our people, and this we must impress on the mind of every reasonable man by our propaganda work. Otherwise, a state of things will come into existence from which it will be well nigh impossible to obtain liberation and salvation.
For instance, Ramanuja with a view to reform society and at the same time preserve the old symbols, caught hold of many of those who were called"Pariahs" and put the "namam" on their foreheads and invested them with the sacred thread so as to bring about equality in society. The old symbols were no doubt preserved, but did the people get equality? Were the followers imbued with the feelings of fraternity?Let us take the temples of the land. Instead of being a symbolical abode of the supreme being, they have degenerated into dens of all kinds of iniquity and hotbeds of vice. Even in the case of the ancient culture, the art and the paintings, it will be clear that they also stand in the way of social reform. What benefit have the Vedas and the Puranas conferred on mankind? What have the people gained by reading the Bharatham, the Ramayane, Siva Puranam, Vishnu Puranam, Thiruvilayadal Puranam,et hoc genus omne? Consider whether you do not find in these books doctrines which go against the principles of human conduct and human character, and do you think that some of the worst books and worst set of people could be guilty of graver wrongs and more serious crimes than some of those mentioned in these books? Also seriously consider the fact whether these old books do not stand in the way of social reform. Do not the social reactionaries quote from these texts and these scriptures and cite authorities to support their position? It is said that there are some passages in those books which support the standpoint of the reformers. In my opinion, this is empty talk to deceive gullible people. I feel that so long as the people want to hug to these scriptures, so long will they be unable to achieve success in their efforts to reform society. I have not come here to speak about God. I think the less we speak about Him, the better it will be for us.
So far as religion is concerned, there is no paucity of propaganda and publicity. Every man believes that it is only through his religion that salvation could be reached. Why should there be so much competition between religions? When we deeply consider all this, it would be clear that religion is an absurdity. But if it is conceded that religion is an institution brought into existence so as to define certain rules and draft certain regulations for the better functioning of society, then it may be entitled to some consideration. But then religion should change according to the needs and requirements of the times, but if the word of God or the preachings of the sons of God or the doctrines of the messenger of the Almighty are as sacred and sacrosanct as God himself then the paramount duty of social reformers is to abolish and destroy those religions. The principle of social reform is the principle of adoption to the changing conditions of the times. And so the social reformer should not flinch in destroying at once the things which would not change according as the changed conditions of the world require.
The next thing that the social reformers should devote their attention to is that of the relationship between man and woman. In our society women are being treated worse than untouchables. Women are considered to be slaves of men. If such a system has been made by God, the first thing that we should do is to destroy that God. It is a great pity that so many things should be foisted upon the devoted head of poor God. Especially in our country, the position of our womenfolk is the worst that could be thought of. Chastity is considered to be the foremost duty of women. The gods that men worship have been symbolised as having their wives on their heads, tongue or shoulders.
(Speech, "Revolt"—Volume 1, No. 5. Dated 5th December 1928, Erode)
But the people have not learnt chivalry from their Gods and do not treat their women with decency. As a result of the slavery of women,children are bred up as slaves and the whole country is enslaved. If we are to be free, we must free our women who must be allowed the same liberty and the same privileges as our men. Women must depend upon themselves for their emancipation from slavery and should boldly come forward and break their bonds. Turkey, Afghanistan and China are standing examples of women achieving their freedom.
I would next draw your attention to the most inhuman institution of widowhood by which our sisters are subjected to untold hardships. We fail to understand why the ancients created this institution. It could not be because there was surplus womanhood in our country in those days. For our Gods had not less than two wives each, and our kings married a thousand, a ten thousand, and a sixty thousand wives at a time! Probably our forefathers intended the institution of widowhood in order to make provision for the needs of the Sanyasis and the guests to whom hospitality had to be extended as a religious duty. Whatever be the reason, this institution has done incalculable harm to the womanhood of the country, and deserves to be abolished without a moment's delay. In this connection, I would appeal to the widows themselves to take courage in both their hands and work out their own salvation. They should not be deterred by the shame and obloquy that society may heap upon them, and should come forward to choose husbands and publish their choice before the world. An exhibition of courage in this matter, even by a few widows, would serve as an object lesson for the others, and would pave the way for the coming generations. I would also appeal to those women who are not widows to lend a helping hand to their suffering sisters who are unfortunate enough to be widowed. The wives should help the widows to secure husbands for the latter and lend a hand at the purification of society and the creation of a healthy moral atmosphere for their husbands and their children.
Distinctions of caste were created in our country at a time when the strong man oppressed the weak. The continuance of these distinctions is evidence of the fact that we have not advanced from the stage of barbarism. No reasons have so far been urged to prove the superiority of one man to another by the right of his birth alone. Morality and intellect are not the outcome of one's birth. The division of caste by birth has been condemned by almost all the reformers and the concomitant evils of caste system have been condemned for many years. All has been in vain. I strongly believe that this monstrosity cannot be wiped off by means of preachings to the masses. The only way to get rid of the scourge is by legislation and communal representation in the services. This may seem paradoxical to you. I shall explain my position. If communal representation is granted, there will be no chance for the privileged classes to ride rough shod over the oppressed. Politicians object to the idea of communal representation in services urging that it would disunite the people. When we express our wish to gather theconflicting elements of society into a harmonious whole there is the rub. The religionists raise their hue and cry. If we attempt to remove the obstacles of religion from our path by means of legislation, the so-called religious teachers and Achariyas raise their vehement protestations. If we heed to the voice of religion and desist from amalgamating the communities but keep them separate there is enough justification for communal representation.
Now to the curse of untouchability. Our country has the monopoly for see-me-not-isms and touch-me-not-isms. A country where there is a class of people who are not entitled to walk in public streets, who are not allowed to worship God in their own temples, who are prevented from using the common wells and tanks—such a country may as well be destroyed by an earthquake, burnt out by a volcano, or submerged by the ocean. If God is All-Merciful, He should have obliterated our country long ago. Is it not shameful on the part of such a country to aspire for Swaraj, Dominion Status or complete Independence? Politicians may say that untouchability will go if we get Swaraj. To them I say not merely Swaraj but Dharma Raj, Rama Raj, Harischandra Raj and the Raj of the very Gods—these were responsible for originating and organising this blot on humanity. If these governments come to life once again, I fear the position of this class would become unredeemable. I appeal to the reformers both social and political to carry on the mission of removing the sin of untouchability and cleanse our society of the dirt that has accumulated for centuries.
Another important thing that needs mention is education. True education is that which imparts knowledge on human nature. Tiruvalluvar says, "however educated one may be, if one does not adjust himself to the world current, he is worse than an illiterate." The education that is now obtained in schools and colleges is useful to produce slaves, who are helping the foreign domination. It is sheer nonsense that devotion to God, devotion to religion and devotion to king should be taught in schools. If they deserve any devotion at all let them earn it by displaying their intrinsic merit. My ardent wish is that no education be imparted to the communities from which the intelligentia of the land have sprung up. I like to see the existing schools and colleges closed at least for a period of fifteen years and the ladies and the illiterate communities imparted the true education referred to above. This is the first duty of any good Government and all sincere reformers.
(Speech, "Revolt"—Volume 1, No. 6, Dated 12th December 1928, Erode)2. CASTE
Among the many conferences that were held under the auspices of the Indian National Congress at Lahore, the Jat Pat Torak Conference held under the auspices of the Jat Pat Torak Mandal, Lahore (Society for breaking caste) deserves our closer attention. This Conference whose proceedings we shall publish in detail later on, and whose resolutions appear elsewhere in this issue, is certainly the most important of the conferences held during the Congress session. When we say this is an important one, we mean it isnot merely because its creed of the destruction of caste is also the chief creed of our Self-respect movement, but there is a general feature in the Conference itself which should not be passed over by us. It is almost a hackneyed saying that "a man is known by the company he keeps."It was only two years back that the same"All India Congress," during its session at Madras saw its own votaries holding a Varnashramite Conference at Madras. The same Congress, with a mere change of place from our"cultured" presidency to northernmost Lahore, has changed its"colour"(Varnam) so suddenly, and so wonderfully that it has allowed the holding of a conference (Jat Pat Torak) entirely opposed to the principle of"Varnam,"i.e., caste. This event will give some idea to our North Indian comrades of the peculiar condition in the South, and of the way in which the wind is blowing in South India.
We remember in this connection, Mrs. Sarojini's (Naidu) famous tribute to the"pioneers of liberty"here, that"the South Indian Brahmin is as proud and arrogant as the Englishman."We are sure our renowned poetess had in her mind nothing but the"pride and arrogance"of caste and colour. The Jat Pat Torak Conference reveals another truth, namely, that more depends upon the manipulators of events than upon the events themselves. If the Madras Congress had only shown its disapproval of its votaries holding the Varnashramite Conference, then there would have been no Congress at all. Similarly it is no wonder, if the Lahore Congress had not allowed the Jat Pat Torak Conference, there would have been no Congress at all in Lahore. This is why we observed that the event is important from many aspects.
Before proceeding to the resolutions, we wish to make a few observations to our readers in the South, about the working of the Jat Pat Torak Mandal itself. The Mandal is working wholeheartedly for the destruction of caste, which it believes, and rightly believes to be the only way to national unity and solidarity. This mission it carries mainly through its Urdu monthly"The Kranti," (of which we hadoccasion to write in these columns more than once) which is published with impressive illustrations and instructive articles, and through the publication of frequent pamphlets in English and Urdu. In practical achievements, the Mandal, under the able guidance of its President and the Secretary seeks to carryout its noble mission by the encouragement of inter-caste marriages and inter-dining. As such, it is needless further to point out to our readers the importance of the Mandal in general, to our country, and in particular, to our movement. With the full assurance of writing more upon the Mandal and its achievements, on a future occasion, we wish to make a few observations upon the resolutions.
The second resolution"calling upon all kinds of Hindu organisations to include in their programme of work the discouragement of present caste system and encouragement of inter-caste marriages," is one that needs the careful attention of all the various Leagues and Associations. In this connection we cannot but refer to the shameful action of the "biggest political organisation in India,"in not having allowed Mr. R. K. Shanmugham to table a similar resolution in the Subjects Committee of the Congress, held at Madras. That the caste system has been the"generous gift" of the priestly class and that it is still being nurtured by the same community with the help of the numerous puranas and religious texts, needs no repetition here. So it is evident for the reformer wherein the caste has its origin, and where exactly the axe of reform is to be laid.
The third resolution"calling upon all unmarried young men and women to give up the consideration of caste while entering into matrimonial alliances,"is a wholesome advice that should be immediately taken up by the younger generation of India. For, the responsible work of breaking up the barriers of caste has devolved upon the shoulders of the young, for it is they who are going to reap the consequences of the past actions of their forefathers. It is time therefore, that the voice of youths gives a ready response to the call of the motherland, in getting rid of the untold social evils existing in our country.
The next resolution of forming a Committee to"introduce a Bill in the Legislative Assembly for legalising inter-caste marriages"is fundamentally the most important of the resolutions passed in the Conference. For, very recently we heard in some quarters vile attempts made by the interested and affected few for illegalising inter-caste marriages conducted under Self-respect methods. To legalise such marriages which are increasing in numbers, it is essential that a law is immediately enacted in order to save the worry of undergoing the tedious and undesirable task of registration.
The fifth and the sixth resolutions"advising Hindus of all classes to abstain from mentioning their caste at the time of the census operation and urging upon the Government the necessity of framing the Census Law in such a way as not to make it obligatory on any person to give his caste at the time of census operations"are resolutions ventilating more or less our own opinion on the matter. For we have a mind not only to ask the Self-respectors, as far as possible, not to give their castes in the forthcoming Census, but also to declare that they are not Hindus but that theyare either Self-respectors, Rationalists or Free-thinkers. We insist upon giving up the name"Hindu" because, it is in the first place a fabulous name, having no sane origin or meaning behind it. Then secondly, the term"Hindu"itself is synonymous with the divisions of caste, and so inseparable are both, that the one vanishes of its own accord, when the other is done away with. Hence we not only applaud such resolutions but also wish the Jat Pat Torak Mandal co-operates with us in bringing about the above aims to practical achievement. While extending our hearty congratulations to the founders of the Mandal and the organisers of the Conference, we promise our warm support also in the noble and generous task that they have pledged themselves to do.
("Revolt"—Volume 2, No. 3, Dated 19th January, 1930, Erode)
பிறை—திருத்தம்
திருத்தம்—பிழை
பக்கம்—வறி
எழுதியதெல்லாம்—இல்லையா
எழுதியதெல்லாம்—இல்லை
1356 39—1368 8
உணர்ச்சிக்கும்—உணர்ச்சிக்கும்
1370 24
கடவுள்—கடவுள்
1400 2
கடவுள்—கடவுள்
ஏமாற்றுதலுக்கும் மக்கள் வாழ்க்கை—1409 44
ஏமாற்றுதலுக்கும் மக்கள் வாழ்க்கை—செய்கிறான் தந்தையாள
1421 1
செய்கிறான்—தந்தையான
1434 3
செய்கிறான்—தந்தையாள
1445 14—1492 15
அற்புதங்கள் கடவுளன்றி—வற்புதங்கள் கடவுளன்றி1501 6—1526 10
இவனும் கொழுத்த இராகுகாலம்—இன்னும் கொழுத்த இராகுகாலம்
தொட்டிலிலிடவும் எவ்வளவு—1537 12
தொட்டிலிலிடவும் எவ்வளவு
1525 22
1572 36
ஓய்வுக்கு குலங்களிருக்கின்றன ஆகவேண்டும்
ஒய்வுக்கு குலங்கவிருக்கின்றன ஆக வேண்டு
1580
7
1605
20
1608
17
முடியும் வேண்டியவனாகிறான் ஆறு அங்குல சமாதானப்படுத்தியோ ஏஜெண்டும் சூழ்ச்சியை
மூடியும் வேண்டியனாகிறான்
1644
98
1656
17
1695
81
ஆறு அங்குள சமாதனப்படுத்தியோ எஜெண்டும் சூழச்சியை
1723
28
1746
5
1777
17
5. வாழ்ந்தால் வாழ்வோம்
6. வாழ்ந்தால் வாழ்வோம்
1790
கட்டுரை
8. இந்தி அழிப்புக்கு கிளர்ச்சி: முயற்சித்த உதவித் தொகையும்
8. இந்தி அழிப்புக்கு கிளர்ச்சி
1819
கட்டுரை
1823
12
முயற்சித்த உவித் தொகையும்
1840
9
பொசுக்கப்
போசுக்கப்
1860
82
www.thamizham.net - Free E book No 3046
www.thamizham.net - Free E book No 3046
பொருட்குறிப்பு அகராதி
*
பொருட்குறிப்பு அகராதி
www.thamizham.net - Free E book No 3046
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க்குறிப்பு அகராதி
அக்கினி பகவான் 1267, 1268, 1313, 1432, 1500, 1541, 1585
அகதீதியன் 547, 968, 1122, 1253, 1460, 1461, 1469, 1482, 1483, 1492, 1497, 1559
அகல்யா 1473, 1474
அகலிகை 123, 212, 1085, 1267
அங்கதன் 1437, 1439, 1488
அங்கேரி 1715
அசப் அலி 1809
அசமுகி 1483, 1487, 1488
அசோகன் 794, 1027, 1161, 1964
அண்ணங்கராச்சாரியார், பிரதிவாதம் பயங்கரம் 1447
அண்ணாதுரை, டாக்டர் சி. என், 447, 550, 611, 692, 850, 853, 1045, 1526, 1780, 1794, 1895, 1902, 1937, 1947, 1967, 1971, 1974
அண்ணாதுரை அய்யங்கார் 272, 273
அண்ணாமலை, ஈ. எம் 529
அண்ணாமலை செட்டியார், ராஜா 92, 284, 837, 1274-1276, 1277, 1712
அண்ணாமலைப் பிள்ளை 358, 859
அப்துல் கரீம், கான் பகதூர் 27, 28
அப்துல் மஜீத் 1814
அப்துல் ரகீம், சர், 481
அப்பாசாமி (செங்கற்பட்டு) 762
அப்போலோ 1326
அபராஜிதை 1431
அபிதான சிந்தாமணி 1461, 1598
அபிதான கோசம் 1598, 1599
அபிபுல்லா, முகம்மது 902
அம்பேத்கார், டாக்டர் பி. ஆர். 31, 32, 93, 200, 317, 445, 446, 644, 680, 711, 785, 802, 813, 1008, 1010, 1033-1036, 1611, 1616, 1619, 1852, 1857, 1860, 1862, 1934, 2054, 2058
அம்மன் 111
அம்மாயி 135
அம்முசாமிநாத அய்யர் 552
அமானுல்லா 481
அமீத்கான் 354
அமீர் (ஆப்கானிஸ்தானம்) 255, 1108, 1697
அமெரிக்கா 40, 53, 60, 232, 453, 474, 492, 662, 700, 703, 741, 934, 977, 989, 1110, 1186, 1310, 1412, 1679, 1689, 1710, 1738, 1771, 1904
அய்யப்பன் 93
அய்யாமுத்து, கோவை அ. 90, 528
அய்யாறு 1177, 1179
அய்ரோப்பா 53, 112, 117, 453, 481, 492, 650, 655, 700, 742, 781, 898, 1188, 1196, 1197, 1420, 1442, 1679, 1680, 1771
அயக்கிரீவாசுரன் 1483
அயர்லாந்து 656, 710, 1196
அயூப்கான் 1952
அயோமுகி 1439
அர்ச்சுனன் 211
அர்த்த சாஸ்திரம் 1265
அரங்கநாதர் 314
அரங்கன் 1329
அரம்பை 1070, 1326
அரவிந்தர் 697
அரிச்சந்திர புராணம் 10
அரிச்சந்திரன் 65, 211, 1150, 1281, 1283அரிஸ்டாட்டில் 1557
அருண்டேல் 1942
அருணகிரி நாதர், சுவாமி 1780
அருணகிரியார் 1492
அருணாசல புராணம் 1497
அருந்ததி 132, 1585
அரேபியா 1420, 1549
அரோரா 1316
அல்லா 32
அலமேலு மங்கைத் தாயார் 328
அலி சகோதரர்கள் 1415
அவ்வையார் 11, 119, 120, 466, 1259
அவினாசிலிங்கம் செட்டியார், டி. எஸ் 30, 33, 382, 685, 1765, 1796, 1803, 1804, 1825, 2049
அழகிரிசாமி, கே. வி, பட்டுக்கோட்டை 41
அளகேசன், ஓ. வி. 1822
அற்புதர்கன் 1471
அற்புதான ந்தா, சாமி 1176, 1178, 1179
அன்சாரி, டாக்டர் 904, 1824
அன்னி பெசன்ட் 253, 288, 353, 390, 407, 420, 422, 424, 497, 520, 948, 1754
அளந்தசயனம் அய்யங்கார், எம் 278, 810
அனுசூயா 209, 210
www.thamizham.net - Free E book No 3046
2082
பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள்
அனுமான் 29, 33, 38, 236, 237, 239, 265, 283, 1436, 1439, 1440, 1443, 1446, 1449, 1455, 1157, 1461, 1475, 1488-1490, 1695
அஸ்வதீகாமா 1253
அஸ்வினி 1470
சாரியார், எம். கே. 131, 132, 133, 373, 374, 408, 532, 625, 755, 1145, 1551
ஆசியா 338, 1424, 1442
ஆசைத் தம்பி. ஏ. வி. பி, 1632
ஆண்டான் 141, 1093
ஆதாம் 113, 1129
ஆதி (பகவன்) 119
ஆதிநாராயணன் செட்டியார் 360, 401, 755, 757, 906
ஆப்கானிஸ்தானம் 53, 474, 475
ஆப்பிரிக்கா 742, 1412, 1420
ஆபிரகாம் 113
ஆபே டூபாய் 939, 940
ஆர்தர் ஹோப், சர் 743
ஆரியா-பார்க்க, சுரேந்திரநாத் ஆரியா
ஆரோக்கியசாமி 1947
ஆலாசியம் அய்யர் 356, 360
ஆவுடையார் 5
ஆறுமுகம், ஆ. வ. 1896
ஆறுமுகன்-பார்க்க, கந்தன்
ஆனந்தாச்சார்லு 863
ஆனைமுகி, வே, திருச்சி 1292, 2043, 2051, 2058
ஆஜாத், மவுலானா அபுல்கலாம் 1809
அஷ் (கலெக்டர்) 262
ஆஸ்திரேலியா 53
இங்கிலாந்து-பார்க்க, பிரிட்டன்
இத்தாலி 652, 781, 1710
இத்திரசித் 1487, 1491
இந்திரன் 37, 212, 260, 283, 295, 296, 598, 1313, 1326, 1335, 1437, 1457, 1470, 1474, 1478, 1491, 1494, 1498, 1500, 1522, 1541, 1567, 1595, 1610
இந்திரா காந்தி 2048, 2050, 2053
இந்திராணி 1488, 1489, 1491, 1522
இந்து மத ஆச்சார ஆபாச தரிசினி 1895, 1905
இந்துமத பரிபாலனச் சட்டம் 6, 15, 246
இந்து லா (இந்துக்களின் சட்டம்) 25, 197, 218, 249, 2041, 2064
இயற்பகை நாயனார் 211, 1266, 1493
இயேசு கிறிஸ்து-பார்க்க, கிறிஸ்து
இர்வின், வார்டு 418, 1192
இரண்யாட்சன் 234, 236, 1578, 1581
இரணியகசிபு 234
இரணியன் 21, 42, 281, 282, 285, 946, 1169, 1278, 1282, 1283, 1337, 1481, 1483, 1526, 1626, 1627, 1695
இரத்தின சபாபதி முதலியார், சி.எஸ் 625, 2030
இரத்தினசபாபதி முதலியார், மயிலை 912
இரத்தினசாமி, எம் 623, 1952
இராகவய்யங்கார், உ. வே. மு. 24
இராகவய்யங்கார், மு. 638
இராகவய்யங்கார், ரா. 638
இராகு 1163, 1166, 1169
இராசகோபாலாச்சாரி, சி. (இராஜாஜி, சாரியார்) 39, 44, 45, 80, 87-93, 207, 248, 249, 260, 267, 269, 275, 276, 278, 285, 319, 349, 352, 354, 356, 357, 359, 360, 361, 362, 363, 365, 368, 369, 370, 377, 381, 382, 383, 408, 428, 434, 461, 464, 532, 548, 552, 576, 578, 579, 586, 599, 603, 607, 610, 611, 622, 630, 631, 638, 641, 642, 643, 644, 651, 653, 655, 680, 701, 702, 712, 715, 717, 719, 729, 732, 734, 743, 758, 797, 810, 815, 822, 828-834, 838, 842, 854, 855, 859, 860, 862, 866, 876, 877, 904, 905, 906, 913, 925, 950, 951, 955, 988, 989, 995, 1005, 1007, 1034, 1036, 1037, 1121, 1143, 1144, 1226, 1229, 1230, 1392, 1461, 1540, 1618, 1627, 1629, 1631-1633, 1654, 1693, 1744, 1746, 1765, 1767, 1774-1781, 1787, 1800, 1806-1809, 1822-1832, 1834, 1840, 1844, 1852, 1857, 1858, 1876, 1881, 1927, 1928, 1935, 1941, 1947, 1952, 1958, 1965, 1969, 2030, 2033, 2036, 2047
இராசகோபாலாச்சாரி, பி. எஸ் 638
இராசமாணிக்கனார், டாக்டர் எம் 1002
இராசேந்திர பிரசாதீ-பார்க்க, பிரசாத்
இராதா, நடிகவேள் எம் ஆர் 1284, 1526
இராதாகிருஷ்ணபிள்ளை, எம் 1814
இராதாகிருஷ்ணன், டாக்டர் எஸ் 318, 1001, 1121, 1428
இராதை 1494, 1522
இராமகிருஷ்ணம்மாள் (ஆனைமலை) 530, 873
இராமகிருஷ்ணர் 1492
இராமச்சந்திர ராவ் 638, 1648
இராமசந்திரன், எஸ் 1759
இராமச்சந்திரன், வி. 530
இராமசந்திரன் செட்டியார், டாக்டர் 360
இராமச்சந்திரன் சேவை, எஸ் 1916
இராமசாமி, வி. வி. 382, 529, 629, 1814
இராமசாமி அய்யர், என் எஸ் 360
இராமசாமி அய்யர், சர் சி. பி. 93, 249, 431, 453, 468, 532, 548, 624, 625, 638, 751, 758, 760, 761, 902, 940, 998, 1150, 1911, 1912
இராமசாமி நாடார், ஓ. 1179
இராமசாமி முதலியார், சர் ஓ. 32, 284, 382, 383, 439, 498, 561, 607, 617, 618, 623, 626, 629, 639, 745, 754, 770, 771
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க்குறிப்பு அகராதி
2089
இராமானுஜர் 335, 445, 452, 457, 1313, 1541
இராவணன் 21, 42, 236, 237, 239, 281, 282, 285, 547, 805, 946, 1147, 1148, 1329, 1338, 1414, 1431-1433, 1437, 1439, 1443, 1445, 1446, 1448-1457, 1461, 1468, 1472, 1475, 1476, 1479, 1482, 1483, 1487-1491, 1536, 1593, 1626, 1627, 1695, 1841, 1845, 1850, 2075
இராஜகோபால அய்யங்கார், நீதிபதி 278
இராஜகோபாலன் 1798
இராஜமன்னார், பி. வி. 617, 638
இராஜலட்சுமி, டி. பி. 638
இராஜன், டாக்டர் டி. எஸ் எஸ் 28, 349, 356, 357, 360, 377, 408, 789, 797, 798, 906, 1781
இராஜன், சர் பி. டி. 439, 442, 493, 1603
இராஜ கிராமநாதபுரம் 1783
இராஜா, எம் சி. 419, 757, 902
இராஜா, தஞ்சாவூர் 1554
இராஜா, திருவாங்கூர் 87, 89-93
இராஜாராம் மோகன்ராய் 139, 1708
இராஜாஜி-பார்க்க, இராசகோபாலாச்சாரி, சி
இலங்கை 320, 324, 650, 656, 695, 740, 1310, 1996
இலட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஏ. 17, 1793
இலட்சுமணன் 239, 602, 1414, 1148, 1471, 1435, 1437, 1438, 1443, 1445, 1448, 1450, 1453, 1455, 1475, 1476, 1479, 1487, 1488
இலட்சுமி (மகாவிஷ்ணু) 209, 1329, 1330,1403, 1458, 1476, 1482, 1492, 1645
இன்னா நாற்பது 1259
இனியவை நாற்பது 1259
இஸ்தர் 1325
ஈசுவரன் (இந்திய காங்கிரஸ்) 92
ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர் 139
ஈஸ்வரம் பிள்ளை 1783
ஈஸ்வரி 1325
உபயதுல்லா 859
உமை-பார்க்க, பார்வதி
உஷா 1326
ஊர்வசி 1070, 1122, 1559
எகிப்து 39, 474, 1182, 1187, 1206
எஞ்செல்ஸ், பிரெடெரிக் 1678
எட்வர்டு, ஏழாம் (மன்னர்) 345
எடிசன், தாமஸ் ஆல்வா 203, 972, 1120
எத்திராஜ், பாரிஸ்டர் 618
எம்பரஸ் ஆப் பிரிட்டன்கப்பல் 1183, 1184, 1185
எமன் 283, 598, 1326, 1470, 1480, 1500,
இராமசாமி ரெட்டியார், ஓ. பி. 261, 356, 360, 561-563, 565, 578, 579, 587, 589, 608, 617, 618, 620, 789, 794, 802, 804, 810, 817, 831, 834, 862, 1456, 1796, 1803-1805, 1812, 1825
இராமநாதன், எஸ் 79, 349, 356, 358, 360, 365, 505, 529, 833, 834, 1178, 1187-1191, 1507, 1612, 1461, 1654, 1852, 1892, 1947
இராமநாதன் செட்டியார் 639
இராமமூர்தி, பி. 828, 834, 1740, 1746
இராமராவ் 360, 639
இராமலிங்க சுவாமி (வடலூர்) 1328
இராமலிங்கம், குரு 1905, 1906
இராமலிங்கம் செட்டியார், டி. ஏ. 639
இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் வெ. 921, 1290
இராமன் 21, 32, 65, 107, 133, 203, 210, 215, 237, 239, 253, 265, 283, 303-305, 310, 319, 323, 325, 335, 389, 442, 445, 574, 600, 602, 605, 610, 650, 815, 843, 1011, 1029, 1035, 1148, 1150, 1168, 1169, 1178, 1208, 1261, 1326, 1329, 1335, 1336, 1363, 1364, 1366, 1382, 1403, 1414, 1431-1441, 1443, 1445, 1450, 1452, 1461, 1463-1469, 1471, 1472, 1475, 1476, 1479, 1485-1491, 1593, 1620, 1621, 1693, 1696, 1827, 1839-1844, 1846, 1847, 1934, 2075
இராமன், சர் சி. வி. 1001
இராமாயணம் 10, 20, 38, 103, 120, 236, 243, 265, 269, 304, 305, 316, 317, 319, 322, 335, 377, 441, 442, 445, 481, 651, 653, 655, 804, 814, 843, 857, 1014, 1033, 1100, 1104, 1199, 1147, 1161, 1162, 1168, 1254, 1257, 1265-1268, 1279, 1283, 1329, 1335, 1336, 1363, 1403, 1414, 1428, 1431-1433, 1444-1446, 1448, 1449, 1453, 1454-1458, 1460, 1463-1465, 1468-1470, 1476, 1478, 1479, 1481-1483, 1485, 1486, 1499, 1575, 1628, 1631, 1664, 1773, 1794, 1843, 1875, 1887, 1931, 2049, 2065, 2071, 2075
இராமாயணம், கம்ப 977, 984, 1245, 1271, 1476, 1479, 1765, 1875
இராமாயணம், அரண்மனை 1431
இராமாயணம், பௌத்த 1431, 1432
இராமாயணம், மவுட்கலிய 1433
இராமாயணம், யவன 1431
இராமாயணம், வால்மிகி 239, 1011, 1335, 1336, 1431, 1432, 1443-1446, 1454, 1460, 1475, 1479, 1875
இராமாயணம், ஜைன 1431
இராமானுஜ அய்யங்கார் 277
இராமானுஜ ஆச்சாரியார் 249
3
www.thamizham.net - Free E book No 3046
2084
பெரியார் ஈ. வெ. ரா, சிந்தனைகள்
கருப்பன் (தேவதை) 1259, 1400
கலிபுல்லா சாயபு 1776, 1779, 1784, 1785
கலியபெருமாள் நாயுடு, டி. வி. (திருச்சி)
எலிசபெதி ராணி (இங்கிலாந்து) 1753
ஏகாம்பரர் 314
ஏவாள் 1129
ஒட்டக்கூத்தன் 1467, 1870
ஓடின் 111
கக்கன், பி. 1002
கச்சியப்ப சிவாசாரியார் 1486
கசேரு 1578
கண்ணகி 123, 228, 310, 311, 972, 1267, 1268
கண்ணப்பர், ஜே. எஸ் 475, 529, 550, 762, 1507, 1947
கண்ணம்மாள், ஈரோடு எஸ் ஆர் 90
கண நாதர் 1253
கணபதி (பிள்ளையார், விக்னேசுவரர், விநாயகர்) 284, 317, 325, 600, 613, 1035, 1208, 1226, 1326, 1329, 1330, 1332-1334, 1470, 1561, 1562, 1628, 1826, 1827, 1835, 1839, 1842, 1846, 1847
கணபதி அய்யர் 1648
கணபதி அய்யர், வக்கில் 115, 1819
கத்தேரங்கையy நாயுடு 4
கிருஷ்ணன் செட்டியார், ப த மணி மு. 129
கதிரைவேற் பிள்ளை, நா. 984
கந்தசாமி செட்டியார், ஓ. 755, 757, 913
கந்தபராணம் 20, 42, 236, 305, 1333, 1336, 1399, 1403, 1457, 1458, 1460, 1472, 1478, 1481-1486, 1499, 1575, 1631, 1875, 2065
கந்தன் (ஆறுமுகன், காங்கேயன், கார்த்திகேயன், சரவணபவன், சுப்பிரமணியன், முருகன், ஸ்கந்தன், ஷண்முகன்) 209, 228, 284, 303, 305, 314, 325, 573, 973, 1106, 1261, 1278, 1283, 1326, 1329, 1330, 1333, 1335-1336, 1403, 1457, 1458, 1477, 1478, 1484-1488, 1490, 1491, 1563, 1585, 1629, 1631, 1633, 1696, 2070
கபிலர் 11, 327, 452, 457, 466, 560, 1259
கபீர்தாசர் 212
கம்ப ரரமாயணம்-பார்க்க, இராமாயணம், கம்ப
கம்பன் 120, 327, 602, 653, 989, 1271, 1446, 1449, 1455, 1456, 1439, 1460, 1463, 1464, 1479, 1486, 1870
கமலா
3தவி சட்டோபாதீதியாயா 552
கமால் பாட்சா (கருக்கி) 52, 255, 338, 472,
633, 974,
1108, 1697
கர்ணன் 601, 1500
கரன் 239, 1437, 1443
கருணாகர மேனன், சி. 903
கருணாநிதி,
டாக்டர்
மூ.
985,
1038,
1045,
1429,
1759,
1974, 2038,
2042,
2652, 2065
கருப்பண்ணன் (தேவதை) 1329
கலியாணசுந்தர
முதலியார்,
திரு.
(திரு.
வி. ௧.) 87,
88,
352,
356, ந
350, 362, 365, 401, 402,
404, 407, 408,
400, 461, 464, 468, 483, 757, 756, 759,
761, 797, 802, 803, 805,
806, 833, 834,
903, 905, 906, 909, 912, 983, 992, 1002,
1021,
1106,
1290,
1296,
1460,
1722,
1754, 1793, 1794,
1814,
1841,
1907,
1933, 1934
கலிலியோ 1128, 1557
கலைக்கோட்டு முனி 1122, 1253
கவுசிகர் 1122
கவுடல்யர் 1122
கவுதமர் 212, 1122, 1253, 1474
கனகசபை, புலவர் (வை. பொன்னம்பலம்),
கனடா 669
கஸ் தூரி ரெங்கய்யங்கார்
88,
249,
3856,
423, 639, 904, 1942
காங்கேயர் 1122, 1253
காங்கேயன்-பார்க்க, கந்தன்
காசீராஜன் 1798
காஞ்சிபுராணம் 305
காட்டேரி 1329
காட்டோ 111
காண்டர் போல்வஸ் 1326
காந்தாராம் 650
காந்தி, எம். கே. (மகாதீமா, காந்தியார்) 11,
31, 65, 66, 68-70, 73. 75—81, 84, 86,
87, 91-93, 97 137, 241. 258, 259, 262,
269, 288, 338, 341, 343, 348 —351,353—
355, 357, 3௦1, 362, 364, 376—379, 382,
383, 386, 388—3
4, 396—400,
413, 405,
409-412,
434,
448,
449,
461,
465,
468, 470, 473, 482, 491, 506, 520, 541,
560, 567, 568, 570, 571, 574, 586, 593,
693, 604, 627, 628 633,
637, 649, 651,
669,
686,
701,
702,
717
792.
73
749-752, 758,
759, 761, 763,777, 782,
788, 790, 791, 796, 797, 803, 839, 842,
859, 863, 883. 884, 892,
906, 909, 911,
927,
1005-1008,
1022-1034,
1037,
1077, 1150,
1153,
1178, 1192,
1230,
1303, 13:8—1340, 1369, 1388, 1404—
1409, 1415,
1461, 1492,
1538, 1540,
1546, 1603, 1630, 1641, 1654, 1657,
1658, 1659, 1660, 1662, 1664, 1655,
1667, 1681, 1701, 1723, 1767, 1768,
1769, 1771, 1777, 1785, 1821, 18.3,
1841, 1851—1+60,
1876,
1-07, 1922,
1924, 1929, 1934, 1941, 1942, 1961,
2003, 2067, 2068
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க் குறிப்பு அகராதி
2085
குசேலர் 1480
குஞ்சிதம் குருசாமி, டி, எஸ். 523
குப்புசாமி, கோடையிடி 859
குப்புசாமி, பாவலர் 912
குப்புசாமி சாஸ்திரி 995
குபேரன் 1326
குமரன், திருப்பூர் 1798, 1838, 1839
குமாரசாமி பிள்ளை, ம. ரா. 17
குமா சாமி முதலியார் (மேடை தளவாய்)
காபூல் (ஆப்கானிஸ்தானம்) 650, 720
காமாரசர், கு. 43,
261,
359,
361,
447,
£65, 586, 611,
618,
641—641,
681,
729,
735,
798,
828—8 6,
841—843,
846-848,
855,
860- 862, 866,
878,
922, 925, 926, 1002, 1540, 1542, 1632,
1634, 1693-1696, 1801,
1822,
1834,
1835,
1837,
1838,
1878, 1936,
1937,
1949, 1952,
1956,
1958,
1962, 1967,
1969, 1971, 1974, 2047, 2068
கார் தீத வீரியன் 1595
கார்தீதிகேயன்- பார்க்க, கந்தன்.
கால சிதீகன் 1490
காளி 1250, 1325, 1481
காளியப்பன் 1176, 1177, 1179
காளேஸ்வர ராவ், ஏ. 154
கிட்டப்பா அய்யர் 638
கிரி, வி. வி. 1740, 1746
கிரிப்ஸ், சரீ. ஸ்டாபோர்டு 677
கிரீஸ் 650, 710, 1186
கிருபான ந்தவாரி 851
கிருஷ்ணசாமி,
ஈ. வெ. 529, 1919, 1920,
1930
கிருஷ்ணசாமி, எஸ். ஒய், 272
கிருஷ்ணசாமி, டாக்டர் ஏ. 440, 727, 1814
கிருஷ்ணசாமி, ராவ்பகதூர் சே. 762
கிருஷ்ணசாமி அய்யர், அஃலாடி 552, 638,
813, 833, 1150, 1809, 1860, 1862
கிருஷ்ணசாமி அய்யர், வி. 431, 624, 638
கிருஷ்ணசாமிப்பிள்ளை, மணம்பூண்டி 17
கிருஷ்ணசாமி பாரதி, எல். 810
கிருஷ்ணமாச்சாரி, ஒ. 356, 360
கிருஷ்ணமாச்சாரி, டி டி. 552, 810, 819,
1860, 1862
கிருஷ்ணமாச்சாரி, வி. டி, 638
கிருஷ்ணமூர்தீதி, டாக்டர் 1940
கிருஷ் ணமூர் தீதி, ர (கல்கி) 1774
கிருஷ்ணராவ், அமைச்சர் 1428, 1740, 1746
கிருஷ்ணன் 32,
80, 203, 209, 215,
228,
252, 295, 296, 303, 304, 305,
319, 324,
325, 335, 445, 482, 574, 600, 601, 602,
1011,
1035,
1169,
1207, 1261,
1283,
1326, 1329,
1330,
1366,
1418,
1458,
1462, 1469,
1470,
1480,
1434,
1495,
1522—157154, 1576,
1631, 1693, 166,
1708, 20:
&@?fisflrdr,
என். எஸ்.--மதுரம்,
டி. ஏ.
354
கிருஷ்ணன்
நாயர்,
எம். 493,
498,
936,
949, 1779
கிறிஸ்து, கியேசு
4, 82. 114, 287, 318,
321, 389, 390, 453, 476, 593, 609,
702,
1006, 1056, 1062, 1090,
1100,
1108,
1155, 1178,
1302,
1384, 1385,
1389,
1418, 1420, 1515, 1697, 1708, 1304,
2021, 2070
குமாரசாமி ராஜா, பி. எஸ். 382, 830
குமாரசாமி
ரெட்டியார்,
சர்.
எஸ்.
439,
4
குரான் (குர்-ஆன்) 316
குருசாமி, எஸ். 1740, 1746
குருசாமி,
விடுதலை
சா.
92,530,
883,
960, 1612, 1846, 1947
குரூச்சாவ் 1212
குன்றச்குடி
அடிகளார்--பரர்க்க,
தெய்வ
சிகாம:
குன்ஸ்ரூ 1785
கூன்பாண்டியன் 327
கூனி 1454
கெய்ரோ 1182, 1183
கெர், பி. ஜி. 996, 1880
கென்னடி, ஜான் எப். 1212
கேகய மன்னன் 1434, 1459, 1465, 1466
கேசவப்பிள்ளை, பி. 364, 903
கேசவ மேனன், கே. பி.
88
கேசவ மேனன், பாரிஸ்டர் 89
கேசவலு நாயுடு 342
கேது 1163, 1166, 1169
கேஸ்கர், பி. வி. 373, 374
கைகேயி 602,
1431, 1433-1440,
1453,
1454, 1459, 1455-1467, 1479
கைவல்ய சுவாமி 500, 1146
கொன்றைவேந்தன் 1259
கோசலை 304,
604, 1433,
1434, 1439,
1440, 1445, 1459, 1487
கோசிஜின் 842
கோட்சே, நாதுராம் 262, 586, 791, 1022,
1771
கோபாலகிருஷ்ண கோகலே 1007
கோபாலசாமி அய்யங்கார், என், 552, 638,
810, 1860, 1862
கோயங்கா 800
கோர், டாக்டர் 174
கோரா கும்பா 1404
கோவலன் 228, 310, 311, 1267, 1268
கோவிந்தசாமி (மலேயா) 1179
கோவிந்த தாஸ் 1411
கோஷன்; லார்டு 1911
கோஸ்வாமி 1891
சக்கரவர் தீதி அய்யங்கார் 249
சக்கரைச் செட்டியார் 408, 905, 912, 913
சகஜானந்தம், சாமி 83
www.thamizham.net - Free £ book No 3046
2086
பெரியார் ஈட வெ. ரா, சிந்தனைகள்
சங்கர் (அரத் துவாரம்) 1195
சங்கரதாஸ், சாமி 983
சங்கரர் 335, 445, 1313, 1541
சங்கரன் நாயர், கர். சி. 400, 758
சங்கராச்சாரியார் 1121, 1149, 1991, 1392,
1541-1543, 1549, 1672, 1840, 1918,
1958, 2036
சங்கராசி சாரியார்,
சிருங்கேரி 502,
1040,
1041, 1693
சங்கராச்சாரியார், பூரி 1538, 1539, 1693
சசங்கியர் 1122
சஞ்சீவி அய்யா, நீலகிரி 499
சடையாண்டி 1250
சண்மூகம், ட. எம்.) சென்னை 1634
சண்முகம், டி. கே. 1526
சண்முகம், வை. ௬. 529
சன்முகம் செட்டியார், சரீ ஆர், கே. 32,
226, 284, 382, 383, 411, 436, 442, 468,
493,518, 529, 607, 617, £18, 639, 661—
667, 715, 78+, 802, 837, 842, 906, 1274~
1277, 1712, 1808, 1891
சண்முகம் பிள்ளை, ஈரோடு 1754
சண்முகவேலாயதன், ப, ஈரோடு 1287
சதீதியபாமை 141, 1576, 1577
சரோஜினி அம்மான்-407, 638
சரோஜினி
தேவி சட்டோபாதீயாயா
249
சவர்க்கார், வீர 660
சவுக் திரபாண்௩யள், டபிள்யூ, பி. ஏட 493,
494, 529, 577, 1891, 1947
சவுனகர் 1122, 1253
சன் யாட் சன் 338
சனத் குமாரர் 1483
சாக்ரடீஸ் 287, 1155, 1904
சாட்டர்னஸ் 1326
சாணக்கியம் 654
சாணக்கிபள் 1265
சாத்தான் 1317
சாதி விளக்கம் 1598
சாந்தாராம் (பஞ்சாப்) 445
சாப்ரு, சர் பி. என். 249
சாம்பமூர்
தீதி அய்யர் 639
சாம்பு பிரசாத் (உ. பி) 276
சாமி, கே.
வி. 8. 596
சசமி அய்யங்கார் 278
சாமி சிதம்பரனார் 529, 1041, 1612
சாமிநாத அய்யர், உ. வே. 638, 983, 1785
சாமிநாத சாஸ்திரி 859, 360
சாமியப்ப முதலியார், என். ஆர், 41, 1603
சாமி வெங்கடாசலம் செட்டி 382, 755, 770,
71
சாமுண்டீஸ்வரி 1397
சாயிபாபா 1492
சாரங்கடாணி,
ஜி. எஸ். (மலேயா) 1177,
1179, 1892
சால மான் 113
சாவித்திரி
123, 138, 1480
சாஸ்திரி, டாக்டர் (1924) 356
சாஸ்தீரி, டி. வி. எஸ். 349
சிங்கமுகன் 1487, 1490
சிங்காரவேலு செட்டியார்,
எம். 960, 905,
1722
சித்தர் 10, 1497
சித்தார் தீதர்--பார்க்க, புத்தர்
சித்திரசேனன் 1595
சித்திரபுத்திரன் 1512
சிதம்பரநாத
முதலியார்,
ge
கே. 1290,
41
சிதம்பரநாதன்
செட்டியார்,
டாக்டர் ௮.
1002, 1470
சிதம்பரம் (சி. டி. என்.) 1923
சிதம்பரம் செட்டியார--ரங்கம்மான் 218
சிதம்பரம் பிள்ளை, பி. (நாகர் மீகாவில்) 513,
1841
சிதம்பரம் பிள்ளை, வ: 2. 88, 362, 401,
465, 904, 905
சிரத்தான ந்தா, சுவாமி 91
சிரஸ் 1126
சிரியா 1325
சிலப்பதி காரம் 228, 310, 984, 1266, 1267,
1268, 1627
சத் கியம் தீகி, எஸ். 249, 185, 356, 357, 374, 377, 382, 990, 408, 423, 425, 502, 532, 626, 610, 621, 638, 749, 701, 755, 797, 833, 834, 906, 1150, 1365, 1540, 1723, 1754, 1780, 1781, 1786, 1823, 1942
சத்தியவான் 1480
சத கருக்கனன் 602, 1431, 1434, 1438-1410
சதாசிவம், டாக்டர் 1937, 1940
சந்தனராஜன் 65
சந்தானம், கே. 28, 349, 356, 360, 552, 810, 1148, 1778, 1942
சந்திர சகர், டாக்டர் எஸ். 1012
சந்திரசேகர திவ்வேதி 1539
சந்திரசேகரப் பாவலர் 304
சந்திரமதி 210, 211
சந்திரன் 1326, 1563-1571
சம்பந்தம், என். எஸ். 530, 1225, 1228, 1229
சம்பரான் 239, 1443, 1483
சம்புகன் 602, 797, 1029, 1472
சம்புவந்தன் 1488
சயந்தன் 1187, 1489
சயாம் 320, 650, 1310, 1904
சயோனஸ் 1326
சர்மா, பி. என். 902, 1891
சர்மா, மாவூர் சரீ. 2030, 2033
சரவணபவ அனார்க்க, கந்தன்
சரஸ்வதி 11, 209, 1093, 1160, 1326, 1329, 1559-1561, 2076
சரஸ்வதிப சையர் 638
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க் குறிப்பு அகராதி 2087
சிலோன்-பார்க்க, இலங்கை
சிவசண்முகம் பிள்ளை, ஜே. 685
சிவசாமி அய்யர், பி. எஸ். 289, 431, 532, 638, 711, 1150
சிவ சின்னக்கண்ணு பிள்ளை 1783
சிவஞானம், ம. பொ. 991, 1770, 1814
சிவஞானம் பிள்ளை, சரீ. 751, 760
சிவஞான யோகிகள்; சுவாமி 466
சிவதாணுப் பிள்ளை 513
சிவபுராணம் 1333, 1399, 1628
சிவ ரகசியம் 1485
சிவராவ், பி, 552, 1722
சிவராஜ், என். 446, 529, 812
சிவலிங்கச் செட்டியார் 1543
சிவன் (சிவபெருமான், பரமசிவன்) 32, 209, 210-212, 215, 216, 235, 217, 218, 283, 305, 309, 325, 533, 547, 598, 600, 609, 766, 770, 792, 968, 973, 977, 1106, 1119, 1309, 1325, 1326, 1329, 1330-1333, 1335, 1336, 1361, 1387, 1389, 1392-1395, 1398, 1399, 1403, 1404, 1412, 1454, 1461,1469, 1477, 1478, 1481-1484, 1486, 1487, 1491-1494, 1496, 1498-1500, 1502, 1522, 1524, 1559, 1561-1567, 1586, 1589, 1590, 1628, 1631, 1656, 1746, 1780, 2070, 2071, 2075
சின்னத் தாயம்மான்-ஈரோடு வெங்கட்டப்ப நாயக்கர் 1918
சின்ஹா, நீதிபதி (உ. பி.) 276, 278
சின்ஹா, பிபி. 999
சீத்தாராம ரெட்டி 639
சீலை 123, 133, 141, 210, 211, 215, 228, 237, 239, 282, 602, 772, 1085, 1261, 1267, 1283, 1329, 1363, 1365, 1403, 1414, 1431-1434, 1436, 1437, 1439, 1441, 1443, 1445-1454, 1456-1458, 1460, 1464, 1467, 1472-1476, 1479, 1487-1491, 1839, 1840
சீனா 320, 324, 338, 474, 475, 492, 662, 741, 1110, 1310, 1323, 1715
சீனி ராவுத்கர் (மலேயா) 1179
சீனிவாச அய்யங்கார், என். 402
சீனிவாச அய்யங்கார், எஸ். 91, 219, 349, 352, 356-358, 361, 403, 408, 423, 483, 532, 638, 751, 753, 755, 758, 797, 833, 834, 905, 913, 1551, 1722, 1774, 1942
சீனிவாச அப்யங்கார், கே. 431, 638
சீனிவாச அய்யங்கார், சி. ஆர். 1431-1433, 1435, 1437, 1446, 1451
சீனிவாச அய்யங்கார், பி. டி. 24
சீனிவாச அய்யங்கார், வி. வி. 249, 1785
சீனிவாச சாஸ்திரி, ரைட் உபரஸ் வி. எஸ். 362, 363, 431, 532, 638, 711, 913, 1150, 1551, 1785
சீனிவாச முதலியார், டி. (ஈரோடு) 761
சீனிவாசாசாரியார், என். 249, 250
சீனிவாசாசாரியார், கொ.1447
சுகரீவன் 239, 1436, 1437, 1439, 1440, 1443, 1461, 1488
சுகர् 1253
சுந்தரம्, (திருச్சி) எம्. எம्. 530
சுந்தరုமูర్్్్称్్०့००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००့००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००።።።································००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००።።።००००००००००००००००००००००००።።
சுந்தராவ्ୁ நாயுடు, டி. சென்னை 438
சுந்தरराஜ அय्યங்कार्, டீ. கே. 27
சுந்तරराஜ अम्बर्, கே 27
सुন्दోपসुन्दன् 1483
छुப्பरायலु रेट्टियार्, செन்னைப् प्రધानमंत्री 831
सुप्पणयन्, टाक्टर् पी. 493, 495, 499, 562, 585, 586, 606, 611, 760, 761, 810, 829, 831, 835, 1880
سுப్ पेन్ செட్టियార్ (போடி) 1783
सुप्पा رાल్ (চैलৎમ) 360
सুप្пிราமणिय अयॅर्, एम्. एस్. 262, 377
सुプ्పीראมणिய अयॅर्, पी. টि. 1817
సుப్పīરामణिय अपयर्, வ. வེ. (வ. வೆ. కె.) 351, 356, 360, 402, 833, 1907, 1942
సుप్pीराමణిយ अய్యర್, ఱీ. 363
सुप్pੀරामणిய చાস్్్్థీని (ఆरणీ) 360
సుप్pీరामణीয పారตി, కवी. 638, 833, 1038, 1039, 1907
సుप్పीరामణిയ పिळ्ళை, కా. (எמ్. எल్. पिळ्ळै) 770, 1296
సుप్్్పīरામણiய०९०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००።።።························०००००००००००००००००့००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
சுப்பிரமணிய பிள்ளை, வி. பி. 1841
சுப்பிரமணியம், சி. 829, 1822, 2068
சுப்பிரமணியம் (மலேயா) 1178, 1179
சுப்பிரமணிய முதலியார், எம். டி. 629
சுப்பிரமணியன்--பார்ச்க, கந்தன்
சுப்பையா, சி. பி. 432, 859
சுப்பையா பாகவதர் 638
சுப்ரபோதகம் 1598
சுப்ரபை 1431
சுபத்திரை 1523, 1524
சுபாஷ் சந்திர போஸ் 1855
சுமத்திரை 602, 1431, 1438-1440
சுமந்திரன் 1434, 1439, 1440
சுரேந்திரநாத் ஆரியா 402-401, 408, 409,
மண்டி
சுரேந்திரநாத் பானர்ஜி 139, 345, 363
சவாகா தேவி 1585
சுவாமிநாதன்,
டி. எஸ். 272
சுவிட்சர்லாந்து 710
சுவீடன் 650, 710
சூதர் 1483
சூயஸ் கால்வாய் 1181
சூயஸ் நகரம் 1180
சூர்ப்பனகை 237, 239, 772, 1438, 1439,
1443, 1453, 1455, 1487, 1488
சூரபத்மன்
42,
285,
1487,
1488,
1536,
1616, 1627
www.thamizham.net - Free E book No 3046
2088
பெரியார் ஈ, வெ. ரா, சிந்தனைகள்
சூரன் 238, 239, 573, 1457, 1460, 1483,
1489-1491
சூரியன் 1326, 1432, 1470, 1500
செட்டியார்-பார்க்க,
தியாகராயச் செட்டி
யார், சர் பி.
செஞ்சையா 913
சேக்கிழார் 1271, 1493, 1522
சேகுப் பிள்ளை, டாக்டர் ஆர். பி. 1470
சேதுரத்தினம் அய்யர் (மண தீதட்டை) 499
சேவு (நாகர் கோயில்) 91
சேஷயங்கார் 374
சேஷாசல நாயடு 983
சைபெல்வி 1326
சொக்கப்பா, ஆர். 530
சொக்கலிங்கர் 1366
சொக்கன் 64
சொரகீகாய்ச் சாமியார் 1492
சோம்நாத், சர்தார் 1195
சோமசுந்தர பாரதியார், ௪. 904, 906, 1779
சோமசு நீதரம் பிள்ளை 904
சோல் 1326
ஞானசூரியன் 765, 2075
ரனியார் சுவாமிகள்
(சிவஷண்முக
மெய்ஞ்ஞான சிவாசாரியார்) 462
டப்ரின், லார்டு 363
டமர், ஜெனரல். சர் ஓ. 423
டல்ஹவுசி, லார்டு 690
டாட்டா 735, 1618, 1694, 1714, 1883
டார் வின், சார்லஸ் 1128
டால்மியா 1618, 1883
டால்ஸ்டாய், லியோ 396, 1681
டிசே, புரபசர் 1615
டெர்ட்டூலியன் 114
டென்மார்க் 650, 710
தக்கன் 1333
தக்கயாகப் பரணி 1333
தங்கப்பெருமாள் பிள்ளை, வச.
மு. 356,
360, 461, 1906
தங்கராஜ், கே. திருவாரூர் 2063
தங்கையா, ரெவரண்ட் அருள் 1814
தசரதன் 103, 203, 228,
239,
304,
440,
602, 1169, 143136, 1438, 1440, 1415,
1453,
1454, 1458, 1460, 1463—1468,
1471, 1479, 1593
தண்டடாணிப் பின்ளை, என்.
408, 409,
904-906
தணிகாசலம் செட்டியார், ஓ. 625
தத்தர், கே. 844
தமயந்தி 138, 212
தயான
ந்த சரஸ்வதி, சுவாமி 135, 1708
தர்மலிங்கம், அன்பில் பெ. 2043, 2050
தன்வந்திரி 1497
தனுஷ்கோடி நாடார், வி. வி. 596
தாகூர், ரவீந்திரநாத் 1855
தாடகை 239,
1147,
1148, 1439,
1443,
1454, 1455, 1471
தாமோதரன் (மலேயா) 1179
தாரை 211. 228, 1085, 1267, 1473, 1474,
1563—1565, 1567—1570
தாளமுதீது--நடராசன் 1824, 1839
தாஸ், சி
ஆர், 357, 487, 904
பெத் 320
தியாகராயச் செட்டீயார்,
சர்
பி,
10,
87,
357, 358, 411, 459, 637, 694, 903, 912,
938, 944, 949, 1037, 1228, 1910, 1913—
1915
தியாகராஜன், என். ஆர். 858
'திரவுபதை-பார்க்க, துரோபதை
திருக்குறள் 116,
118,
984,
988,
1151,
1220,
1228,
1229, 1257, 1259-1266,
1269,
1442, 1452, 1456, 1458, 1460—
1463, 1470, 1499
திருஞானசம்பந்தர் 253, 1312, 2062
திருநாவுக்கரசு, ஈ. 530,1874
திருநீலகண்டர் 1404
திருமங்கை ஆழ்வார் 320
திருமலை ராவ் 813
திருமால்--பார்க்க, விஷ்ணு
திருவள்ளுவர்
11, 35, 116, 118, 119, 120,
1:41, 122, 178, 179, 313, 318, 329, 324,
338, 457, 466, 560, 603, 970, 983, 989,
1038,
1019,
1065,
1066, 1089,
1090,
1151, 1229,
1234,
1259--1266,
1274,
1455, 1458, 1460, 1463, 1523
திருவாசகம் 1257, 1399, 1428, 1470, 1814
திருவிளையாடல்
புராணம்
1139,
1279,
1428, 1524, 1575, 1664
திருவேங்கட ஆச்சாரியார் 272
லகர,
லோகமான்ய
பாலசங்காதர
3,
249, 288, 353, 374, 432, 487
Stdos 1326
*ரியோதனன் 601, 1169
இருக்கி 33, 53, 232, 338, 474, 475, 492,
710, 974,977, 1187, 1206
துரைசாமி முதலியார், ஒ. 442
துரோபதை
(திரவுபதி)
103,
123,
132,
141, 210, 221, 228, 440, 592, 601, 1085,
1267, 1473, 1474
துளசிதாஸ், (துளசிதாசர்) 653
அளசிராம், எல். கே. 913
ஆஷ்யந்தன் 388
தெய்வசிகாமணி (குன்றக்குடி அடிகளாரீ)
1043,
1229, 1543,
1626-1628, 1631,
1632, 1841—1843, 1971
தெய்வானை 141
தேசிகாச்சாரியார், சர் டி. 625
தேசிகரசீசாரியார் தாத்தா 1452
தேவதாஸ் காந்தி 1005
தேவ நாகய்யா 859
தேவாரம் 1257, 1312, [1999, 1400, 1428,
1470, 1507, 1814, 2062
தேவேந்திரன்--பார்க்க, இந்திரன்
www.thamizham.net - Free £ book 14௦ 3046
பெயர்க் குறிப்பு அகராதி
2089
தொண்டரடிப்பொடியாம்வார் 1312, 2062
தொல்காப்பியம் 178, 310, 1269, 1442
நடராசர் 920, 1277, 1329
நடராசன், என். வி. 1732
நடராசன், டி. என். (தஞ்சை) 1283
நடராசன்-தாளமுதீது 1824, 1839
நடராஜ அய்யர் 1778
நடராஜ முதலியார் 382
நடராஜன், கே, 1785
நடேசம் பிள்ளை, பாலகீகாடு 1146
நடேசய்யர் (உரையாசிரியர்) 1447, 1448
நந்தனார் 64, 1279, 1283, 1404, 1610
நந்தா, ஜி எல். 1694
நந்தி 1109, 1471, 1483, 1497
நபி, முகமது 4, 32, 149, 287, 300-303,
316, 318, 321, 390, 453, 593, 792, 1062,
1090,
1108, 1155, 1178,
1303,
1375,
1379, 1380, 1384, 1385, 1389,
1420,
1462, 1515, 1546, 1697,
1708,
1904,
2021, 2022, 2070
நம்பியாண்டார் நம்பி 1522
நம்பியார், எம். கே. 273
நம்பியார், கே. கே. 953
நம்பூதிரிபாட், ஈ. எம். எஸ், 1618
நமச்சிவாய முதலியார், கா. 995
நரகாசுடன் 352, 1572, 1576-1578, 1581,
1583, 1597, 1827
நரசிம்ம அய்யர், பி. வி. 1594
நரசிம்மர்
தீதி (அவதாரம்) 234
நா சிம்மன், ஏ. என், ஆனைமலை 530
நரசிம்மாச்சாரியார், டி. எம். 625
நல்லதங்காள் 123, 1480
நவாபு, ஹைதராபாத் நைஜாம் 779
'நளகூபன் 1849, 1469
நாகப்பன் (தெ. ஆப்பிரிக்கா) 80
நாகம்மையார், அன்னை ஈ. வெ. ரா, 90,
145, 634, 1013, 1041, 1076, 1107, 1917
நாகராஜன் (புராணம்) 1342
நாதன், டி. ஏ. வி. 1899
நாயகம், சி. டி. 529, 1780, 1923
நாயர், டாக்டர்
டி.எம். (தர்வாடு மாதவன்:
நாயர்) 10, 87, 358, 400, 401, 411, 459,
637, 694, 903, 912, 913, 938, 944, 949,
1017, 1018, 1228, 1504, 1891, 1910,
1913—1915
நாயுடு, டாக்டர் எம். இ. 91
நாயுடு, ஜி. டி. 623, 1220
'நார்ட்டன் 1817
நார்வே 650
நாரண துரைக்கண்ணன்
1814
நாரதர் 25, 209, 210, 215, 218, 283, 601,
711,
1102,
1122,
1253, 1326,
1432,
1433, 1463, 1487,
1492,
1495, 1497,
2065, 2070
நாராயண குரு; சுவாமி 86, 2021
நாரரயணசமமி, ஈரோடு 1648
நாராயணசாமி, லஸ்கர் 280
நாராயணசாமி, வெ. சி. (சிங்கப்பூர்) 1892
நாராயணசாமி பிள்ளை, டி. எம். 1456
நாலடியார் 1259
நாலாயிர திவ்யபிரபந்தம் 377, 814, 1257,
1312, 1400, 1428, 1814, 2062
நானக், குரு 1388, 1708
நானா சாயபு 691
நியூட்டன், சர். அய்சக் 972
நீதி மஞ்சரி 1259
நீ கிமாணிக்கம் (தூத்துக்குடி) 596
நீலமேகம், கே. கே. 530
நீலன் (அசுரன்) 1488
நீலன் (ஆங்கிலேயர், சிலை) 1856
நெடுஞ்செழியன், டாக்டர் வி. ஆர், 692
நெதர்லாந்து 781
நெப்டியூன் 1326
நெல்லையப்பப்
பிள்ளை
(பிரம்மஞான
சங்கம்) 252, 253
நேபாளம் 650
நேரு, மோதிலால் 873,
422, 487,
1821,
1824, 1908
நேரு, ஜவஹரீலால் 39, 45, 243, 249, 265,
267, 348, 383, 497, 565, 580, 620, 649,
651, 691, 715, 721,729, 734-739, 741,
742, 810, 884, 1145, 1212, 1517, 1631,
1632, 1634, 1694, 1746, 1767, 1794,
1809, 1830, 1831,
1837,
1839, 1840,
1855, 1856, 1866-1871,
1883, 1897,
1927, 1928, 1935, 1952, 2050
நோயேல் (புதுவை) 1180
பக்த லீலாமிருதம் 1403, 1492, 1493, 1522
பக்தவத்சலம்,
எம், 277, 278, 611,
685,
829,
844, 850, 862,
883,
925, 1002,
1634, 2068
பக்தவத்சலம், பி. இ. (சென்னை) 1634
பகவத் கீதை (கீதை) 69, 319, 335,445, 651,
814, 1034, 1035, 1139, 1265, 1456, 1458,
1461—1463, 1604, 1701, 1934
பகவன் (ஆதிபகவன்) 119
பங்கிம் சந்திர சட்டர்ஜி 354, 636
பஞ்சாபகேச அய்யர், ஏ. எஸ். 1774
பஞ்சாபகேச பாகவதர் 638
பட்டக்காரர்
(பழையகோட்டை
நல்ல
சேனாபதி) 499
பட்டாபி சீதீதாராமய்யா 552, 1428
பட்டின தீதாரீ 1270, 1492
பட்டேல், சர்தார் வல்லபாய் 31, 565, 579,
ந 620, 665, 667, 686, 715, 834, 1809,
பட்டேல், விதீதல்பாய் 431, 624, 625, 1824
பத்திரகிரியார் 1492
பத்மநாபசாமி 1397
பதீமாசூரன் 946, 1489
பதஞ்சலி சாஸ்திரி, சீப் ஜஸ்டிஸ் 998
பகு.மபுராணம் 1493
ரா, சிந்தனைகள்
2090
பெரியார்
ஈ, வெ.
பிரகலாதன் 1695, 1957
பிரகஸ்பதி 1474, 1563—1565, 1567, 1568,
1570
பிரகாசம், ஆந்திர கேசரி
டி. 405,
631,
632, 794, 828, 831, 834, 862
பிரசாத்,
டாக்டர்
இராசேந்திர 39,
721,
741,
999,
1145, 1809,
1830,
1831,
1880
பிரபாவதி (இராமாயணம்) 1432
பிரம்ம புராணம் 1598
பிரம்மா 111,
209, 210, 241, 283,
598,
1011,
1309,
1325, 1326, 1329-1332,
1335, 1317, 1389,
1393,
1395, 1469,
1470, 1482,
1486, 1491, 1502,
1559,
1585, 2075, 2076
பிரான்ஸ் 1186,
1310, 1677, 1678, 1710,
1755, 1904
பிரிக்கா (தவதை) 112
பிரிட்டன் 33, 232,
649,
650, 652, 656,
692, 664, 698, 703, 781, 783, 931, 989,
1110, 1154, 1186,
1196,
1197, 1310,
1359,
1676, 1689,
1710, 1739, 1755,
1904
பிருகு, முனிவர் 1471
பிருதிவி 1326
பிலிப்பைன் 712
பிள்ளை, கே. பி. 649, 651, 652, 653
பிள்ளையார்--பார்க்க, கணபதி
புத்தர்,
கவுதம
(சிதீதார்தீதர்)
4,
11, 32,
287,
303,
305--307,
311-324,
327,
335, 338, 411, 445, 452, 453, 466, 598,
603, 604, 613, 1027, 1028, 1075, 1076,
1106, 1108, 1155, 1254, 1342,
1375,
1384,
1396,
1418, 1468, 1469, 1515,
1619,
1697, 1708, 1827, 1828, 1850,
1961, 2021, 2022, 2062
புதன் (சந்திரன்) 1570, 1571
புல்லா ரெட்டி, சர் ஓ. 884
புளூட்டஸ் 1326
பூடான் 650
பூபேந்திரநாதீ போஸ் 345
gurésa 1577, 1578, 1596
மிதேவன் 1313, 1541
பெண் ட்லண்ட், லார்டு 345
பெதீதண்ணா (தாசில்தார்) 343
பெரியபுராணம் 20,
25,
38,
63, 481, 984,
1245, 1257,
1261, 1265, 1403,
1428,
1491-1493, 1522, 1575, 1664
பெருமாள் நாயுடு, எம். எம், 91
பெரோஸ் சண்ட் 1680
பெல்ஜியம் 650, 710, 781
பேச்ச! (ராம 8தவதை) 1400
பொப்பிலி ராஜா 284, 572, 631, 633, 835
பொன்னம்பலம், அ, பூவாளூர்
92, 529,
பதுமை (சூரன் மனைவி) 1491
பந்துலு அம்யர் 359, 906
பர்கஸ்
1326
பர்மா 320, 324, 650, 656, 740, 782, 799,
1206, 1310, 1904
பரசுராமன் 1595
பரஞ்சோதி (வாதாபி) 600
பரதன் 323, 388, 602, 946, 1168, 1431
1441, 1447, 1448,
1453, 1454,
1459,
1465-1467, 1471, 1479
பரவஸ்து
(Aprelsrurew)
ஆச்சாரியார்
1785
பராசரர் (ஸ்மிருதி) 25, 38,
63, 218, 481,
533, 602, 711, 1122.
1470
பரிமேலழகர் 1259, 1263
பலராமன் 1523. 1524
பவானி சிங் 906
பழனியப்பச் செட்டியார் (மயா) 1179
பன்னீர் செல்வம், சர் ஏ. டி.
24, 493,576,
577, 657, 941, 942, 1042, 1180, 1922
பனகால்
அரசர்--பார்க்க, ராமராய
நிங்கவாரு
பஜாஜ் 685, 1694
[1773
பாகவதம் 235, 1139, 1265, 1499, 1575,
பாகிஸ்தான் 661, 720, 740
பாச்சோபின் (நூலாசிரியர்) 112
பாண்டு, மகாராஜா 1500
பாண்டுரங்கன், ஏ. ஈரோடு) 844
பாணன் 64, 1610
பாத்ரோ, சர் ஏ. பி. 151, 439, 751, 937
பாப்ளி, எச். ஏ. 966
பாம்பன் சாமியார் 1492
பாய்ச்சலூரார் 11
பார் தீதசாரதி அய்யங்கார், எஸ். 954
பார்வதி (உமை) 141, 209, 211, 215, 975,
547, 600, 601, 1330—1333, 1315, 1336,
1403, 1484, 1487, 1492, 1494, 1561,1562
பாரசீகம் 658
பாரதம்--பார்கீக, மகா பாரதம்
பாரதிதாசன் (கனக
சுப்புரக்தினம்) 35,
1038, 1039, 1180, 1181, 1283
பால், செயின்ட் 114
பாலகிருஷ்ண அய்யர், நீதிபதி 277
பாலசுப்பிரமணியம், கே. எம். 1780
பாலசுப்பிரமணியம், சே. மூ. அ. 1874
பாலசுப்பிரமணியம், பி. 442, 1947
பால்ட்வின் (இங்கிலாந்து பிரதமர்) 1192
பாலாம்பாள் (தேசீய காங்கிரஸ்) 249
பானர்ஜி எஸ்.
என்.--பார்க்க, ௬ரேத்திர
நாத் பானர்ஜி
|
பானுகோபன் 1487, 1490, 1491
பாஷ்யம் அய்யங்கார், கே. 377, 638, 1785.
பாஷ்டீம் அய்யங்கார், விட 400, 1785
பிட் (திருவாங்கூர்) 89
பிர்லா 318,
392,
685,
788,
998,
1618,
1694, 1714, 1883
www.thamizham.net - Free £ book No 3046
பெயர்க் குறிப்பு -௮கராதி
2091
மாண்டவியர் 1122, 1253.
மாண்டேகு-செம்ஸ்போர்டு (சீர்திருத்தம்)
50
மாணிக்க நாயக்கர், பாட வே.
280,
594,
795, 924, 975
மாணிக்கவேலு நாயக்கர், எம். ஏ. 816, 822
மாணிக்ஜி தாதாபாய் (இந்திய இப்பீரியல்
சட்டசபை) 174
மாத்துவர் 1313, 1541
மாதவன், டி. கே. (வைக்கம்) 88, 89
மாதவன், வக்கீல் (வைக்கம்) 87, 89
மாதவாசீசாரியார், ஆர். 27
மாதவி 310, 311, 1267
மாதவியம் 1598
மாபலி, சக்கரவர்த்தி 42, 739, 1169
மார்க்கோனி 972
மர்கஸ், கார்ல் 708,
1678,
1679,
1745,
746
மார்ஸ் 1326
மாரி, மாரியம்மன் 1400, 1594, 1595
மாரீசன் 239, 1443, 1450
wrf ஸ்டோப்ஸ், டாக்டர் 158
மாளவியா, மதன்மோகன் 249, 373,
482,
927, 928, 1033, 1415
மாறன் வானொலி) 1213—1224
மிண்டோ-மார்லி (சீர்திருத்தம்) 750
மில்லர், டாக்டர் (எழுத்தாளர்) 952
மினர்வா 1326
மீனாட்சி 141, 1366, 1714
மீனாட்சிசுந்தரம்
பிள்ளை,
வரன் 983
மீனாட்சி
சுந்தரனார்,
தெ. பொ.
1002,
1290, 1470
முகமது இஸ்மாயில், எம். 1952
முகமது உஸ்மான்;
சரீ.
751,
902,
936,
9
முகமது
சாதுல்லா
(அரசியல்
நிர்ணய
சபை) 1862
முகமது நபி-பார்கீக, நபி
முகமது யூசுப் (மலேயா) 1179
முகமது ராவுத்தர், (மலேயா) 1179
முத்கசாமி அய்யர் (அய்க்கோர்ட் நீதிபதி)
போகர் 1497
போப் ஆண்டவர் (ரோம்)
540, 1122, 1615
போர்ச்சுகல் 650, 974, 1755, 1904
போர்ட் சைட் 1181, 1182
போலந்து 1715
மகமது அலி 651, 1415, 1922
மகமது யாகூப், சர். 1785
மகாதேவ அய்யர் (திருநெல்வேலி) 359
மகாபார
கம் 10,
38, 265, 283,
377, 481,
651, 814, 1011, 1139, 1161, 1162, 1168,
1257, 1265—1268,
1414,
1428, 1456,
1457, 1460, 1469.
1470,
1478, 1485—
1500, 1575, 1615, 1664, 1773, 1875,
2065
மகா ராணி, திருவாங்கூர் 84, 92
மகோதரன் 1490
மச்சகந்தி 1470
மண்டோதரி 123, 1473, 1474, 1476
மணி அய்யர் (காங்கிரஸ்) 249, 758
மணி அய்யர் (நீ திபதி) 638
மணியம் மையார்,
ஈ. வெ. ரா, 530, 1873,
1874,.1965, 2038
மணிலால், பாரிஸ்டர் 1177
மதீதாய் (நேருவின் செயலாளர்) 1883
மதங்கர் 1122
மதுததீதன் 1447
மரை வீரன் 1400
மந்தரை 1440
மரேஷியா (ரோம்) 111
மல்லலசேகரா, டாக்டர் 315, 316, 921
மலேயா நாடு 650, 1173-1176, 1179, 1206
மலையப்பன், ஆர். எஸ்.
278
மவுண்ட் பேட்டன்; லார்டு 687
மறைமலை அடிகள்
(சுவாமி வேதாசலம்),
32, 618,
769,
983,
992,
1002,
1106,
ம 1429, 1470,
1766,
1779, 1814,
41
மன்மதநாத ததீதர் 304, 1435
மன்மதன் 1583
மனு (மனுதர்மம்) 25, 28, 29, 31, 35, 38,
59. 63, 114,
123,
124, 153, 154, 209,
218, 219, 240, 241, 242, 244, 249, 259,
271, 317, 338, 376, 450, 471, 481, 533,
541, 575, 602, 614, 620, 637, 651, 653,
676, 711, 736, 776.
777, 811, 843, 845,
880, 894, 922, 927, 937, 1011, 1113,
1122, 1259,
1266, 1270, 1387, 1438,
1462, 1477, 1482, 1601, 1603—1605,
1618, 1626, 1627, 1632, 1633, 1641,
1667, 1669, 1773, 1784, 1860, 1866,
1875,
1880, 1900, 2022, 2028, 2054,
2065, 2070
மனுநீதிச் சோழன் 1169
மஜும்தாரி, ஆர். சி, 844
மாசானன் 1488
மாடன் 1400
மகாவிதீது
முத்.துசாமிக் கவிராயர் 983
முதீ.துரங்க முகலியார், சி. என், 382, 424,
701, 757, 1775, 1778, 1779
முதீதுலட்சுமி ரெட்டி, டாக்டர் 173, 174,
176, 425
முத்தய்யா செட்டியார்,
டாகீடர் ராஜா சர்.
எம். ஏ. 226, 439, 565, 577, 618, 657,
799, 810
முத்தய்யா பாகவதர் 638
முதிதய்ய£
முதலியார்,
எஸ்.
429,
499,
606, 623, 628, 835, 935-937.
முதோல்கர்
(இந்திய
இம்பிரியல்
. சட்ட
சபை) 174
4
www.thamizham.net - Free £ 5௦011௦ 3046
2092
பெரியார் ஈட வெ. 7௪ சிந்தனைகள்:
முநீதிரா, ஹரிதாஸ் 1618, 1883
முருகப்பச் செட்டியார், அ. மு. 1551
முருகன்-பார்க்க, கந்தன்.
முல்லா, டாகீடர் டி. எப். 1616
முன்ஷி, கே.எம். 318, 319, 810, 813, 998,
1121, 1483, 1860, 1862
முஜுசசமி நாயுடு பி. (சென்னைப் பிரதம)
Qw;;:anfl
அய்யங்கார்,
கே.
வி.
873,
ரெங்கசாமி ரெட்டியார், பி. (திருச்சி) 275—
8
ரெங்கராஜன், நீதிபதி எஸ். 877
ரெங்காசீசாரியார், டி. 403
ரெங்காசீசாரியார், டி. டி. (முன்சீப்) 1817
ரெட்டி, எம். கே. (செங்கற்பட்டு) 475, 493,
497, 499, 639
ரெட்டி,
சர்
கே. வி. 439, 493, 561, 940,
941, 1779
ரெத்தினசாமிக்
கவுண்டர்
(புதுப்பாளை
யம்) 360
ரேணு காதேவி-ஐமதக்கினி முனிவர் 1594,
155
லட்சுமணசீசார்லு,
பண்டித
(தெலுங்கு
இரமாயணம்)
304
லண்டன் 474, 1424, 1677, 1678
லாட் (பைபின்) 113
லாமெத்து (பைபிள்) 113
லால்பகதூர் சாஸ்திரி 1936
லால்ஜான் (தேசிய காங்கிரஸ்) 354
லாலா லஜபதிராய்
342,
363,
409,
904,
928, 1908
லான்ஸ்பரி (இங்கிலாந்து) 1191, 1192
லிங்கம் (சிவலிங்கம்) 5
லிங்கன், ஆபிரஹாம் 338
லிதுவேனியா 710
லூனாஸ் 1326
லெனின், வி. இ. 708, 060. ந் 1746
லோகநாதன், மயிலை த.
வங்காளம் 650, 652
வச்சிர சூசிப் பிரமாணம் 1122
வசிஷ்டர்
132,
283,
1122,
1253,
1434,
1434, 1440, 1453, 1463, 1464,
1169,
1470, 1479, 1585, 2065, 2070
வடிவேல் செட்டியார் (த நக்கோலிலூர்) 17
வரகுண மகாராஜன் 1270
வரதராசர் (வர தராசப்பெருமாள்) 314
வரதராஜுலு நாயுடு, டாக்டர் பி. 87, 88,
952, 356, 357, 360, 362, 365, 382, 383,
401, 402, 408, 409, 421, 432, 436, 461,
46% 467, 468, 483, 502, 503, 639, 752-
759, 76L, 797, 834, 903, 905, 906, 912,
1178,
1505, 1718, 1754, 1841—1843,
1907, 1934,
வரதராசனார், டாகீடர் மு. 1002, 1470
வரதாச்சாரி, என். எஸ். 349, 356, 360
வரிஷிபன் (சமணர்) 588.
வருணன் 1313, 1326, 1500, 1541
வல்லாள மகாராஜன் 1270
வ. வே. ௬- அய்யர்-பார்க்க, சுப்பிரமணிய
அய்யர், வ. வே.
வலனிடகத்தன் .41, 1261, 1278,
1283,
முனுசாமிப் பின்னை
(அரசியல்
நிர்ணய
சபை) 810
மூஞ்ச, 373, 482
மெய்வழி ஆண்டவன், சாலை 1492
மெர் கரியன் 1326
மேட்கித் (இந்திய இம்பீரியல் சட்டசபை)
மேயோ, மிஸ். 133, 1365, 1591
மேரி ராணி, (ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி) 53
மேனன், கே. வி. 475
மைனாஸ் 1326
மொகஞ்சதாரோ 1442
யக்ஞவல்கியர் 25, 218, 602, 711, 1122, 2065
ரகுநாத ராவ் (தேசிய காங்கிரஸ்) 363
ரங்கம்மான்-சிதம்பரம் செட்டியார் 218
ரதினிபा (இராமாயணம்) 1432
ரமணரிஷி 620, 697, 804, 1492
ரஷ்யா, சோவியெத் 116, 147, 216, 232, 233, 474, 475, 659, 652, 652, 717, 741, 974, 977, 989, 1108, 1100, 1186, 1192, 1195, 1207, 1284, 1310, 1380, 1643, 1653, 1677, 1678, 1681, 1697, 1710, 1715, 1717, 1746, 1755, 1771, 2067
ரஸ்செல், பெர்ட்ரண்ட் 1904, 1940
ராகவய்யா, திவான் பகதூர் உ. 505
ராகவன் அய்யங்கார் (வக்கீல்) 272, 273
ராகவேந்திர ராவ் நாயுடு (மத்திய மாகாணம்) 499
ராமச்சந்திர ரெட்டியார், பி. (ஜஸ்டிஸ் கட்சி) 442
ராமராய நிங்கவாரு (பனகால் அரசர்) 426, 439, 497-499, 550, 751, 761, 995, 1365, 1550, 1909
ராமு, ஈரோடு 1188
ராமுன்னி மேனன், கே. 953
ராய் சவுதிரி, எச். சி. 844
ராஜகோபால் நாயுடு, சி. பி. 134
ராஜு, எல். எஸ். (வக்கீல்) 278
ரிஷ்य சிருங்கர் 103, 1469
ருக்குமணி (கிருஷ்ணன்) 141, 1494, 1522
ருக்மணி, அருண்டேல் 227, 638, 1942
ருக்மணியம்மாள், டாக்டர் பி., வரதராஜுலு நாயுடு 1935
ரெங்கசாமி அய்யங்கார், எம். 423
ரெங்கசாமி அய்யங்கார், ஏ. 249, 356-358, 360, 362, 373, 374, 377, 401, 408, 625, 639, 751, 758, 797, 1722, 1754, 1942
வல்ணியம்மை (தென் ஆப்பிரிக்கா) 80
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க் குறிப்பு அகராதி
2093
வாசுதேவய்யா, எம். ஜி. (தேசிய காங்கிரஸ்) 402, 1455
வாஞ்சிநாதன் (மணியாச்சி) 262
வாடியா, பி. பி. 1754
வாதாபி-வில்வலன் 547, 1460, 1483
வாயு (வாயুதேவன்) 1313, 1326, 1470, 1500, 1541
வாரன் ஹேஸ்டிங்ஸ், லார்டு 135
வால்மீகி 120, 237, 239, 304, 602, 621, 653, 1011, 1122, 1433, 1436, 1443, 1444, 1450, 1461, 1464, 1476, 1479, 1841
வாலி 283, 1436, 1437, 1439, 1440, 1450, 1454, 1461, 1472
விக்டோரியா மகாராணி (இங்கிலாந்து) 66, 1753, 1856
விக்னேசுவரர்-பார்க்க, கணபதி
விசாலாட்சி அம்மையார் (நாகரசம்பட்டி) 1873
விசுவசர்மா 1326
விசுவநாகம், கி. ஆ. பெ. 529, 985, 1629, 1632, 1780, 1814, 1941, 1947
விசுவாமித்திரர் 239, 283, 1122, 1335, 1336, 1443, 1487, 2070
விநாயகர்-பார்க்க, கணபதி
விபீஷணன் 29, 33, 34, 38, 358, 621, 686, 804, 1148, 1436, 1437, 1439, 1454, 1461, 1487, 1490, 1695, 1957
வியாசர் 318, 1122, 1470, 1483
விராதன் 1418
விருத்திகர் 1483
வில்சன் (வரலாற்று ஆசிரியர்) 304
வில்லிங்டன், லார்டு 379
வில்வலன்-வாதாபி 547, 1460, 1483
வினோபா பாவே 1011
விஜயராகவாச்சாரி, சி. 364, 401, 627, 638, 758, 1033, 1817
விஜயலக்ஷுமி பண்டிட் 227, 1428, 1807
விஷ்ணு (மகாவிஷ்ணு, திருமால்) 32, 37, 42, 209, 210, 216, 234, 235, 237, 238, 282, 283, 285, 309, 312, 325, 345, 346, 354, 363, 390, 532, 533, 573, 574, 598, 739, 792, 817, 973, 1011, 1122, 1278, 1309, 1325, 1326, 1329, 1330, 1331, 1336-1338, 1366, 1387, 1389, 1392, 1393, 1395, 1403, 1404, 1442, 1458, 1464, 1469, 1471, 1476-1478, 1482, 1485, 1486, 1491, 1494, 1500, 1502, 1522, 1523, 1572, 1577, 1578, 1581, 1582, 1586, 1596, 1628, 1629, 1631, 1696, 1698, 1746, 2071
விஸ்வநாத சாஸ்திரியார், நீதிபதி 1778
விஸ்வநாத சாஸ்திரி, சி. வி. 1785
விஜ்ஞானம், தென்னேட்டி ரா. 670
வீரபாகு 1457வீரமணி, விடுதலை கி. 1973, 2059, 2063, 2065, 2068
வீரய்யன், ஆர். 757, 902
வீரன் 1250
வீனஸ் 1326
வெங்கட்டநாயகீசர், ஈரோடு மண்டி 458, 1040, 1819, 1919-1921
வெங்கட்டரமண சாஸ்திரி, டி. ஆர். 403
வெங்கட்டரமணன், சி. டி. 278
வெங்கட்ராம அய்யர், டி. வி. 359வெங்கட்ராம சாஸ்திரி, டி. ஆர். 483, 638, 711, 1150, 1785
வெங்கட்ராம சாஸ்திரி, மாஜி (பாரத இதிகாச சமிதி) 318
வெங்கட்ராமன், ஆர். 1002, 1740
வெங்கட்ராமன், எஸ். ஏ. 272
வெங்கடகிரி ராஜா 550
வெங்கடசுப்பையா, கொண்டா 1031
வெங்கிட்டரமணய்யங்கார் 628, 755
வெங்கிட்டகிருஷ்ண பிள்ளை, தஞ்சை (வெங்கிட்சாமி பிள்ளை) 350, 358வெங்கிடசாமி நாயுடு, கே. 1461
நீலை நாயக்கர் (அத்திப்பசகீகம்) 905
வெட்ஜ்வுட், கர்னல் 749
வெல்லிங்டன், லார்டு 391, 1856
வென்லக், லார்டு 952
வேங்கடசாமி நாட்டார், நா. மு. 1907
வேதாசலம், திருச்சி தி. பொ. 27, 31, 314, 530, 1806, 1873, 1940
வேதாசலனார் (செங்கற்பட்டு - வேதாசல முதலியார்) 762
வேல்ஸ் 656
வேலாயுதம், சென்னை 1634
வேவல், லார்டு 785
வைகாநசம் 1598
வைத்தியநாத அய்யர், ஏ. 359, 798, 906
வையாபுரிப் பிள்ளை, எஸ். 1470
வோகளி ஆர்யா, டாக்டர் 328
கந்லலாதம் (பூரி) 15
இந்த 299, 1443, 1151
ஐப்பான் 32, 232, 920, 324, 453, 474, 492, 700, 702, 703, 741, 781, 928, 989, 1310, 1323, 1546, 1710, 1771
ஐம்புகர் 1122, 1253
ஜம்புநாதயियர் (வக்கீல்) 1818, 1819
ஜமதகீனி 1594, 1595
ஜவஹர்லால்-பார்க்க, நேரு
ஜனகன் 1431-1434
ஜனார்த்தனம், ஏ. பி. 1902
ஜனுபீட்டர் 112
ஜாம்பவந்தர் 1253
ஜாம்பவான் 283
ஜர். (சக்கரவர்த்தி-ரஷ்யா) 896, 1653, 1677, 1682
ஐந்தாம் சக்கரவர்த்தி 345www.thamizham.net - Free E book No 3046
2094
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
ஜார்ஜ், ஆறாம் (மன்னர்) 97, 687, 1753
ஜார்ஜ் ஜோசப், பாரிஸ்டர் (வைக்கம்) 89, 91, 461, 468
ஜான்சன், சாமுவேல் (இங்கிலாந்து) 380
ஜிபூட்டி (பிரான்ஸ்) 1180
ஜின்னா, முகமது அலி 31, 34, 952-954, 651, 660, 661, 676-678, 680, 696, 700-702, 711, 712, 720, 740, 741, 783, 785, 1008-1010, 1033, 1042, 1852, 1929
ஜீவன்லால் காபூர் 1680
ஜீவானந்தம், ப. 303, 517, 828, 834
ஜூப்பிட்டர் 1326
ஜெனனஸ் 1326
ஜீனோ 112, 1326
ஜெய பிரகாஷ் நாராயண் 1740, 1746, 1928
ஜெயராம நாயுடு, ஜி. (செங்கற்பட்டு) 475
ஜெயவேலு (தேசிய காங்கிரஸ்) 757
ஜெர்மனி 92, 147, 179, 265, 652, 703, 928,1154, 1186, 1196, 1197, 1310, 1689, 1710, 1755
ஜெருசலம் 1549
ஜேக்கப் (பைபிள்) 113
வியாசர் (புராணநூல் கர்த்தா) 1493
ஜீதாமா (இராமாயணம்) 1432
ஜீனிவாச ராகவன் (உத்சுமிபுரம்) 36
ஷண்முகம் (தூத்துக்குடி) 536
ஷண்முகன்-பார்க்க, கந்தன்
ஷண்முகாநந்த சுவாமி 1780
ஷவ்கத் அலி 651, 1415, 1922
ஷா, ஜார்ஜ் பெர்னார்டு 823, 1769, 1904
ஷாபி முகமது 358
ஷேக்ஸ்பியர், வில்லியம் 1769
ஸ்கந்தன்-பார்க்க, கந்தன்
ஸ்காட்லாந்து 656
ஸ்ட்ரேபோ 111
ஸ்டாலின், ஜோசப் 639, 1777, 1932
ஸ்பெயின் 1677, 1755, 1904
ஸ்வீடன் 1669
ஹரப்பா 1442
ஹரி பவன் (லாகூர்) 445
ஹார்ட்டன்சியா (ரோம்) 111
ஹாலண்டு 650
ஹிட்லர், அடாஃப் 259, 667
ஹெரோடோடஸ் (ரோம் ஆசிரியர்) 112
Gandhi, M. K. vol. i, pt. iii-iv, vi, xx;vol. ii, pt. ix-iv;vol. iii, pt. ix-iv
Gita-See Bhagavat Gita
God in Tirupathi-See Venkateswara, Lord
Goenka vol. ii, pt. ix-vii
Griffiths, Mr vol. ii, pt. ix-iv
Guruswami, S. vol. i, pt.
Harishchandra vol. i, pt.
Hindu Law vol. ii, pt. ix-iv
Hindu Religious Endowments Act vol. i, pt. iii-vi
'Hindu, The' vol. ii, pt. ix-iii
Hirachand vol. ii, pt. ix-vii
Hitler (Nazi leader) vol. ii, pt. ix-vii
Japan vol. i, pt. iii-xxx
Jat Pat Torak Mandal vol. iii, pt. ix-viii, ix, x
Afghanistan vol. i, pt. iii-v, xxiii; vol. iii, pt. ix-vi
Akber vol. ii, pt. ix-vii
America vol. i, pt. iii-xxx
Arogyasami Mudaliar vol. i, pt. iii-x
Asoka vol. ii, pt. ix-vii
Bobin Chandra Pal vol. i, pt. iii-iii
Bhagavat Gita vol. i, pt. iii-v, xxx
Birla vol. ii, pt. ix-vii
Buddha vol. i, pt. iii-xx, xxx; vol. iii, pt. ix-iv
Burma vol. i, pt. iii-v, xiii; vol. iii, pt. ix-vii, viii
Ceylon vol. i, pt. iii-xiii; vol. ii, pt. ix-vii, viii
China vol. i, pt. iii-v, xxiii, xxx; vol. iii, pt. ix-vi
Chota Gandhi-See Rajagopalachari
Dalmia vol. ii, pt. ix-vii
Das, C. R. vol. i, pt. iii-x
Dravida Kazhagam vol. iii, pt.
Dravidasthan vol. iii, pt. ix-viii
Dravidasthan Movement vol. ii, pt. ix-iv
Europeans vol. i, pt. iii-xxix
French Republic vol. i, pt. iii-xii'Justice' vol. ii, pt. ix-iii
Kalyanasundaram, T. V. (Thiru Vi Ka) vol. i, pt. iii-vii
Kapilar vol. i, pt. iii-xix; vol. iii, pt. ix-iv
Kranti, The vol. iii, pt. ix-viii
Krishna vol. i, pt. iii-xxx
www.thamizham.net - Free E book No 3046
பெயர்க் குறிப்பு அகராதி
2095
Shanmugem, Sir R. K. vol. iii, pt. ix-ix
Shudras vol. ii, pt. ix-iv, vii
Siddhas vol. i, pt. iii-xviii, xix
Simon Commission vol. i, pt. iii-xi; vol. ii, pt. ix-iv
Sincere vol. i, pt. iii-xx; vol. iii, pt. ix-iv
South Africa vol. i, pt. iii-v
South Indian Liberal Federation (S.I.L.F.) vol. i, pt. iii-xiii; vol. ii, pt. ix-v, vi
Srinivasa vol. i, pt. iii-ix
Srinivasa Sastri, C. S. vol. i, pt. iii-ixvol. i, pt. iii-x-xxx
Krishnasami Iyer, V. vol. i, pt. iii-ix
'Kudi Arasu' vol. i, pt. iii-v, xv, xvii
Kunjitham, T. S. vol. i, pt. iii-v
Lala Lajpat Rai vol. i, pt. ii
MadrasPresidency Association vol. ii, pt. ix-vi
Mahabharata vol. i, pt. iii-xx; vol. iii, pt. ix-iv
Malaviya, Pandit vol. i, pt. iii-i, xxvi; vol. ii, pt. iv, v, vi, vii
Narayanan Iyer vol. i, pt. iii-ix
Manu vol. i, pt. iii-xxx
Meppadi Mudaliar, S. vol. i, pt. iii-x, xi
Nachchiar vol. i, pt. iii-xxxi
Nair, Dr. T. M. vol. ii, pt. ix-v
Nationalist Association vol. ii, pt. ix-vi
Nehru Committee vol. ii, pt. ix-iv
Nehru, Jawaharlal vol. ii, pt. ix-vi
Nehru, Motilal vol. i, pt. iii-v
Periyapuranam vol. i, pt.
Pillayar vol. i, pt. iii-x
Rajagopalachari, C. (Rajaji) vol. i, pt. iii-iv, xiv; vol. ii, pt. ix-vi
Rama vol. i, pt. iii-vi, xxiv, xxviii, xxx
Ramanujar vol. i, pt. iii-xvi, xvii, xx; vol. iii, pt. ix-iii, iv
Ramasami Iyer, Sir C. P. vol. i, pt. iii-ix
Ramaswami Mudaliar, Sir A. vol. i, pt. iii-vii
Sivapurenam vol. i, pt.
Srinivasa Iyengar, S. vol. i, pt. iii-ix
Subbaroyan, Dr. P. vol. i, pt. iii-vi
Subramanya vol. i, pt. iii-x
Switzerland vol. ii, pt. ix-viii
Tata vol. ii, pt. ix-vii
Temple Entryvol. ii, pt. ix-iv
Thevaram vol. i, pt. iii-x
Thirukkural vol. i, pt. iii-xx, xxx
Thiruvalluvar vol. i, pt. iii-xix, xxx; vol. iii, pt. ix-iv
Thiruvilayadalpuranam vol. iii, pt. ix-iv
Turkey vol. i, pt. iii-v, xvi, xxi; vol. iii, pt. ix-vi
Turner, Mr vol. ii, pt. ix-iv
Tyagaroya Chettiar, Sir P. vol. ii, pt. ix-v
Varadarajulu Naidu, Dr. P. vol. i, pt. iii-vi
Varnashramite Conference vol. iii, pt. ix-viii
vol. ii, pt. ix-iii, iv
Ramayana vol. i, pt. iii-xx; vol. ii, pt. ix-vii; vol. iii, pt. ix-iv
Rangachari, T. vol. i, pt. iii-ix
Ranganatha Mudaliar vol. i, pt. iii-x
Rangasami Iyengar vol. i, pt. iii-ix
'Revolt' vol. i, pt. iii-xv, xvi
Russia vol. i, pt. iii-v, xv, xvi
Sankaracharyas vol. i, pt. iii-xxx
Sarojini Naidu, Mrs vol. iii, pt. ix-viii
Self-Respect League vol. i, pt. iii-xi, xii, xvii
pt. ix-viii
Vedas vol. i, pt. iii-xx, xxvii, xxx; vol. iii, pt. ix-iv
Venkateswara, Lord vol. i, pt. iii-xxxi
Vijayaraghavachari, C. vol. i, pt. iii-ix
Vinayakar-See Pillayar
Vishnupuranamvol. i, pt. iii-xx; vol. iii, pt. ix-iv
Vivekananda, Swami vol. i, pt. iii-iii, iv, xx; vol. ii, pt. ix-vii; vol. iii, pt. ix-iv
www.thamizham.net - Free E book No 3046
பொருட் குறிப்பு அகராதி
அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும் 644
அச்சுக் கலை1291
அண்ணா1937
அதிசயப் பிறவிகள், நம் புலவர்களேஅபாயச் சங்கு
அம்பலத்து அதிசயம்
அமைச்சர் எஸ். சந்திரசேகர் வானொலிப் பேட்டி
அய்ந்தக்கு இரண்டு பழுதில்லை
அயல் நாட்டு அனுபவங்கள்
அயல்நாட்டு நடப்புக்கான
அரக்கர்கள் யார்?அரசர்களின் இழிசெயல்
அரசியல் கிளர்ச்சி அல்ல
அரசியல் சட்ட எரிப்பு ஏன்?அரசியல் சட்டத்தை எரிப்போம் ஏன்?
அரசியல் சட்டம் ஒழிக
அரசியல் நிர்ணய சபை
அரசியல் புரட்சி இல்லை
அரசியல் வாழ்வு
அரசியலில் ஒழுக்கக் கேடு
அல்லாதார்கள் மகா நாடுகள்
அவசியமான காரியங்கள்
அவதாரங்களின் இரகசியம்
அழகிரிசாமி
அறிவுச் சுதாந்திரம்
அறிவும் படிப்பும்அறிவும் மானமும் கெட்டது524
அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம்
அன்னியன் யார்?
ஆச்சாரியார் கல்விதீ திட்ட எதிர்ப்பு
ஆச்சாரியாரும் நானும்
ஆசிரியர் களுக்கு
ஆட்சிக் காலங்களும் ஆதித் திராவிடர் நிலையும்
ஆட்சி முறை
ஆத்திகம்-நாத்திகம்
ஆத்மா
ஆத்மா, மோட்சம், நரகம்
ஆதாரமற்ற நம்பிக்கைகள்
ஆதித் திராவிடர்
ஆதித் திராவிடர் நிலை
ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி
ஆரியத் தரசர்கள்
ஆரியர் இயல்பு
ஆரியர்களின் தன்மை
ஆரியரும் திராவிடரும்
இங்கிலாந்தில் ஈ. வெ. ரா. சொற்பொழிவு
இதிகாசங்களும் ஒழுக்கமும்
இது சுதந்தர நாடா?இதுதானா தேசியம்?இந்தி அழிப்புக் கிளர்ச்சி
இந்தி-இ. திர்யப் பொது மொழியா?
இந்தி எதிர்ப்பின் பயன்கள்
இந்தி எதிர்ப்பு ஏன்?இந்தி எதிர்ப்புப் படை
இந்திக் கிளர்ச்சி
இந்தி கட்டாயமா?
இந்தித் திணிப்பு
இந்தி தேசிய மொழியா?
இந்திப் புரட்டு
இந்திய சுதேச சமஸ்தானங்கள்
இந்தியப் பெண்கள்
இந்தியப் பொருளாதாரம்
இந்திய ஜன நாயகம்
இந்தியா ஒரு நேஷனா?
இந்தியும் நானும்
இந்து மகா சபையும் வகுப்புவாரி உரிமையும்
இந்துமத ஆசார ஆபாச தர்சன் மதிப்புரை
இந்துமத ஆபாசம்
இந்துமதக் கொடுமை
இந்துமதத் தத்துவம்
இந்து மதம்
இந்து மதம் ஒழிக!இந்து முஸ்லிம் பிரசினை
இம்சையும் அம்சையும் கிரியக்கத்தைப் பரிச தீதப்படுத்த வேண்டும்
595
இயக்க நடப்புகள்
515
www.thamizham.net - Free E book No 3046
2098
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள்
இயந்திர முறைத் தொழில்1670
எதிர்ப்பும் இன்னலும்2023
இரண்டு வகை மா
சீர்திருத்தம्
சீர்திருத्तமா ₹ அழிவு
வேலையை
सुकाตार वाżवु
सुсीन्दिरम् सत्तியाक्किरम्
सुतन्दराक् कट्सि
सुतन्दरत् तमिжनाडु
सुतन्दरत्तал् पारप्पनर्
इलापक् कोळ्लै
सुतन्दर नाळ्
सुतन्दर नाळा?
सुतन्दरप् पोरात्तमा?
साति मतस् सण्डैया
सुतन्दरमूम् समुताय मुम्
सुतेसि
सुप्पिरमणियन् पिरप्पु
सुयनलम्-पिरनलम्
सुयमरियरै
सुयमरियातै इयक्कत्तिन्
सातनैकळ्
सुयमरियातै इयक्कत्तिन्
पलन्
सुयमरियातै इयक्कत्तिन्
मुडिवान इलट्सियम्
सुयमरियातै इयक्कम्
सुयमरियातै इयक्कम् एन्?
सुयमरियातै इयक्कमुम्
तिरावि दर् कझकमुम्
सुयमरियातैक् कारणुम् मतमुम्
सुयमरियातै स् सङ्कक्कोन्कै
सुयमरियातै समतर्मम्
सुयमरियातैत् तोण्डन्?
सुयमरियातैत् तोण्डु
सुयमरियातै नोक्कम्
सुयमरियातैप् पोतुस्चेवै
सुयमरियातै-पुररण मरियातै
सुयराज्य अाटि एतु ₹
सुयराज्यत्तिन् तन्मै
सुयराज्यम्
सुयराज्यमा? सुयमरियातैया?
सेङ्करत्तु मा नाट्टिन्
तीर्मानङ्कळ्
सेयरकरिय सेय्तार्
1133
நிறுத்தம்
1729
என் அனுபவம்
2022
இராமன்
1452
என் ஆதரவு
847
இராமன் படஎரிப்பு ஏன்
1846
என் திருமணம்
2028
இராமனைக் கொளுத்தியது
என் துணிவு
2026
குற்றமல்ல
1841
என் நிலை
859
இராமாயண ஆராய்ச்சி
1441
என் பழக்கங்கள்
1231
இராமாயணத்தை எரியுங்கள்
1875
என் பிறந்த நாள் விழா
308
இராமாயணப் பாத்திரங்கள்
1433
என் மாற்றங்கள்
447
இராமாயண பக்தர்களுக்கு
1463
என் வாரிசு யார் ₹
1230
இராமாயணம்
w1431
என்னைப்பற்றி ஆச்சாரியார்
820
இராமாயணம் புனைந்ததன்
எனது அச்சம்
1975
இலட்சியம்
1454
எனது சிந்தனை
1973
இராவணன்
246
எனது திட்டம்
434
இராஜாஜி
1036
எனது தொண்டு
1957
இராஜாஜி
w
1981
எனது நிலை
1966
இராஜாஜி உண்மையைக் கக்கி
எனத விண்ணப்பம்
1963
விட்டார்
842
எனது விருப்பம்
1961
இலங்கை உபந்யாசம்
1985
எனது வேண்டுகோள்
1971
இலட்சியம்
1690
எஸ். முத்தையா முதலியார்
இவர்கள் மனிதர்களா
1596
வாழ்க
935
இழிநிலை நீக்க மாநாடு
1887
ஏழைகன் துயரம் நீங்க
1689
இழிவு நீக்கக் கிளர்ச்சி
1884
ஏன் காங்கிரசிலிருந்து
இழிவு நீங்க ஒரு மருந்து
w27
வெளியேறி னன்
§
356
ளம் வயது விவாக விலக்கு
ஏன் தோற்றார் 1
378
மசோதா
w
130
ஒருதார மணம்
153
இறுதிச் சொற்பொழிவு
ஒரு யுக்தி ஆராய்ச்சி
1477
(மரணசாசனம்)
2061
ஒருவர் பேரால் விழா
299
இன்று உண்மையான
ஒழிக்கப்பட வேண்டியவைகள்
623
சுதந்தரமா i
w
873
ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்
1413
இன்று நடப்பது 1857-ன்
ஒழுக்கம்
1079
சிப்பாய்க் கலகமே
.
843
ஒழுக்கம் கெட்டுவரக காரணம்
1086
இன்றும் இராமாயண
ஒழுக்கம், பக் தி, இன்பம்
1085
சம்பிரதாயமா
8
1455
ஓர் உண்மைச் சம்பவம்
280
இன்றைய கழிநிலை
869
ஓர் வேண்டுகோள்.
1895
இனப் பெயர்கள்
242
ஓவியம், சிற்பம்
w1270
இனி, கைத்தறி ஏன்1
1665
கட்டாய கிந்தி ஒழிந்தது
1787
இனி வரும் உலகம்
2000
கடவுன்
1056
ஈ, வெ, கிருஷ்ணசாமி
1930
கடவுள் என்பது.
1308
ஈஜிப்ட் கடிதம்
1183
கடவுள் ஒழிப்பு
1306
உண்ணா விரதம்
1538
கடவுள் கதை
1313
உண்மை?
1903
கடவுள்கள்:
3226
உண்மைத் தோழர்
1916
கடவுள்களின் நாசவேலைகன்
ஃ
1322
உதவாக்கரை &லக்கியங்கன்
ஃ.
1266
கடவுள்களின் பிறப்பு
w1329
உலகம் ஒன்றாக வேண்டும்
.
2014
கடவுல் சர்வசக்தி உள்ளவரா?
...
1295
உலகம் வளர்ச்சி அடையா
கடவுள் நம்பிக்கைக்காரர்கள்
ததற்குக் காரணம்
2013
பற்றிய என் கருத்து
1311
உலகமே பொய்
1540
கடவுள் பக்தி
1318
உறவு முறை
194
கடவுள்-பிறரும் நாமும்
1323
உஷார்
260
கடவுள் புரட்டை உணர
எங்கள் தியாகம்
1634
வேண்டாமா
8
3012
எங்கள். போராட்டம்
1874
கடவுள்--மதம், நாட்டிற்குக்
எத்தனைக் காலத்துக்கு 8
w465
கேடே
)
w1502
www.thamizham.net - Free E book No 3046
पोरुट् कुरिप्पु अकरातி
तिरावि दमोमि तमिजे
तिरावि दर् एन्
तिरावि दर्कु नेरि उण्डा?
तिरावि दर् कडमै
तिरावि दर् कझकम्-तोझिलालर्
निरुवनम्
तिरावि दर् कझकर्-पेयर् एन्!
तिरावि दर् कझकमुम् तिरावि दरुम्
तिरावि दरीकळ्
निरावि दर्-तिरावि द नाडु
तिरावि दर्-पारप्पनर्
तिरावि दरे ओन् रुपडुवीर्
तिरावि द स्तापनङ्कळ्
वेण्डुम्
तप्पट्ट उ. म.
वेलैति
तिरुत्तप्पड
तिरुमणम्
तिरुमणम्-उलक सितीतानीतम्
तिरुमणम् एन् ₹
तिरुमणम् सोतीतुकीकाकवे
तिरुमणम् तेवैया?
तिरुमणम् वेण्डातु
तिरुमणमुम् ओप्पन्तमुम्
तिरुमण मुरैकळ्
तिरुमण मुरैयुम् नामुम्
तिरु. वि. क.
तिरु दवि.क
तिरुविझा एन्
ति वि. तो. सङ्कम् एन्?
तीण्डातार् तेरे वझि एन्न?
तीण्डामै
तीण्डामै विलकीकु
तीपावळि
तेन् आप्पिरिक्का तिनम्
तेन्नाट्टिल् अरसियल् किलरच्सि
तेसप् पडत्तैक् कोळुत्तुङ्कळ्
तेसापि मानम्
तेसियक् कोडि एरिप्पु
तेसियक् कोडि को
म्
त्र्मानम्
सुत्तु
तेसियम्
तेसिय वातिकळ्
तेसिय विय्यापारम्
तेर्तल् पडिप्पिनै
तेवतासि ओझिप्पुस् सट्टम्
तेवर्कळिन् मुरैयीडु
तोण्डर्कळिन् कन्मै
तोझिलालर् किलरच्सि
तोझिलालर् सङ्कम् एन्?
तोझिलावर् सत्तियाक्किरम्
तोझिलालर् निलै.
तोझिलालर् प्रच्सिनै:
तोझिलालरुम् नामुम्
नगर अमैप्पु
नगरात्सिन् तन्मै
नबि विझा:
नम् अायुतम्-- विडुतलै?
नम् इन उणर्च्सि
नम् सि. डि. नायकम्
नम् काझ्मैक्कु काररणम्
नम् तोझर्कळुक्कु
नम्पिक्काय्यलरुम् नम्पिक्कै
मरुप्पालरुम्
नम् पोरात्त नेर्मै
नमतरुमैत् तलैवर्
नमतु आरायच्सि मनप्पान्मै
नमतु कियक्कमुम् कम्यूनिसमुम्
नमतु इलक्कियम्
नमतु लट्सियम्
नमतु किझिनिलै
नमतु कडमै
नमतु कोडि
नमतु तलैवर्कळ्--इरणियन्
नमतु नडैमुरै
नमतु पत्तिरिकै:
नमतु पोर् मुरै
नमतु पोरात्टम्
नमतु मलायनाट्टु विजयम्
नमतु मुन्नेरप्पम्
नमतु वेरच्सि
नमतु वेलै
नवीन नाडकम्
नागम्माळ् अरिक्कै
नागम्मान् मरैवु
नागरिकम्
नागरिकम् एतु?
नाट्टु नलम् वेरु; वकुप्पु नलम्
वेरा?
नाट्टुप् प्रिविनै
नाडकक् कलै
नाडु केट्पतु तेसत् तुरोकमा?
नात्तिकम्
नात्तिकमुम् समतरीममुम्
नात्तिकर् अाटि
नाम् अञ्ञानिकळ्
नाम् इन्दुक्कळा!
नाम् वेकप्पडुत्तुकिरोम्
नामम्--विभूति
नामुम् पिरकट्सिनरुम्
नामुम् पिररुम्
नामुम् पिररुम्
*नान्
नान् इनीतुवल्ल
नान् एप्पडि?
नान् ओरु तोण्डन्
नान् काङ्किरसिल् सेरन्तु
किट्टेना?
* तोझर्! एनि विळियुङ्कळ्.
तोझर्कळे, वारुङ्कळ्
கற்பு
கற்பொழுக்கம்
க
கறுஞ் ட்டை அணியுங்கள்
கஷ்டமான பிரச்சினை
காங்கிரசில் சேர ஆலோசனை
காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம்
காங்கிரசில் மனக் கசப்பு
காங்கிரசும் சுயமரியாதையும்
காங்கிரசும் நானும்
காங்கிரசும் ஜஸ்டிஸ் கட்சியும்
we
காங்கிரஸ்--ஒரு வகுப்பு
ஸ்தாபனம்
காங்கிரஸ் மடிவதே மேல்
காங்கிரஸ்-முஸ்லிம் லீல்-ஜஸ்டிஸ்.
பார்களா 1
கேள்வி கேட்கும் பழுக்கம்
கொடி எரிப்பு ஒத்திவைப்பு
கொள்கை ஆதரவு மாற்றம்
கோயில் ஒழிப்பு
கோயில் நுழைவு ஏன் 9
கோயில் வழிபாடு
கோவில்
சகிக்கமுடியாத அக்கிரமம்
சங்கீதம்
சட்டசபை அங்கதீதினரீகளுக்கு
சட்டசபை நுழைவும் நாட்டுப்
பிரிவினையும்
சட்டத்தைக் கொளுதீதங்கள்
சதியை முறியடிப்போம்.
சமதர்ம அறிக்கை
சமதர்ம இயக்கம்
சமதர்ம எண்ண வளர்சீசி
சமதர்மப் பிரசார உண்மை
விளக்கம்
சமதர் மம்
சமதர்மம் தழைக்க உதவுக
சமதர்மவா தியின் கடமை
சமயம்
சமரச சன்மார்க்கம்
சமஸ்கிருகம் ஏன் 9
சமுதாயமும் அரசியலும்
சமூகத்தொண்டும் அரசியல்
தொண்டும்
1838
155
1170
1159
1612
197
573
1965
115
110
582
1383
837
359
357
345
343
625
352
342
634
180
198
400
1851
1854
389
1022
1027
1025
1924
1029
காதல் மணம்
காந்தி
கை
காந்தி பட எரிப்பு ஏன் 9
|
नान्
सोल्लुवतु कट्टलैया 8...
तान् नोक्कुम् मुरै
காந்தி பொம்மை உடைப்பு
ட
காந்கீயத்தின் கதி
e
காந்கியார்.
க
காந்தியார் நினைவாக
காந்தியார் மரணம்
காந்தியார் மறைவு
காந்தியார் மறைவு பற்றி
காந்தியார் மாற்றமும்
சர். ஆர். கே. எஸ்ஃ
சர். ஏ. டி. பன்னீர் செல்வம்
சர். பன்னீர் செல்வம் கடிதம்
சரஸ்வதி பூசை
சாதி
சாதி இருக்கலாமா T
சாதி ஒழிக!
சாதி ஒழிய வழி
சாதிகள் நடைமுறை
சாதித் தொழிலாளி-கூலிதீ
தொழிலாளி
சாதி வ்கிதப் பங்கு.
சாமியும், சமயமும், சமயாசீசாரி
களும்
1031
397
1026
351
1005
1032
1324
828
கொலையும்
க
காந்தியாரின் விஷம்
* तोझनुक्कु वाझ्त्तु
नान् मारुवतु एन् !
नान् यार् !
नाणुम् काङ्किरसुम्
नानुम् नणपर्कळुम्
निति वसूल्
नियायम् वझङ्कुम् मुरै
निनैवु नाळ् एन् *
नीति क् कट्सि निलैक्क वझि
नीति केट्टतु यारल्
नूल्कळ्
मुन्नुरै
ख्यान् एतिर्प्पु इल्लै.
नेरु मरैवु
नेरुविन् मुट्टाळ् तनम्
पक्त लीामिरुकम्
पकुत्तरिवालर्कु
पकुतीतरिवावर् कळुक्कु
पकुत्तरिवु
पकुत्तरिवु
पकुतीतरिवुक्कुति तडैकळ्
पडत् तिरप्पु
पडत् तिरप्पु विझा
पत्तिरिकैकळ्
पत्तिनि-पतिविरतै
पतविया, तनि नाडा !
परिकारम् एन्न ¢
पवुत्तर्कळिन् सडङ्कुकळ्:
पझङ्कुडि मक्कळ् इझीवुक्कु
काररणङ्कळ्
पझन् तमिझिन् परुमै
परैयरुम् सूत्तिररुम्
पाञ्चाल सिङ्कम्
पाट्ना तीर्मानम्
पारप्पन अकराति
पारप्पन अाटि.
पारप्पन आतिक् क ओझिप्पुनान्
पारप्पन ती एतझुर्कळुक्कु
पारप्पन तर्मम्
पारप्पनर्--अन्रुम् इन्रुम्
पारप्पनर् उयर् वाझ्वु
पारप्पनर् एतरक्कु?
पारप्पनर् कळिन् तेसियम्
पारप्पनर् तिमिर् .
पारप्पनरल्लात तलैवर्:
कळुक्कु विण्णप्पम्.
पारप्पनरल्ला
तार् इयक्कमुम्
तेसत् तुरोकमुम्
पारप्पनरुम् ति.क.वुम्
पारप्पनरुम् तोझिलालरुम्
पारप्पनीय एतिर्प्पु
पारप्पनियम्
पारप्पनिवाम् ओझिय
पा] प्पनियम्--तडैक् कल्
पारप्पान्
£ पणक्कारन्
₹
परिय मनितन्.
पारप्पान् पणकीकारनानाल्?
पारप्पाने, वेळिएरु
परर् वति-परमसिवन् उरयातल्
पारवैक् कुरिप्पु
पारतक् कताै मेय्या?
पारत नेसम्
पारतिता सन्
पाराट्टु
प्रम्भञान सङ्कमुम्
पारप्पनरल्लातारुम्
प्रामणन् एन अझैयातीर् !
प्रामणाळ् अझिप्पु
प्रार् त्तनै
प्रिविनै एण्णम् एन्?
पिन्ळैयार्
पिरन्त नाळ् अरिक्कै
पिरन्त नाळ् सेय्ति
पिडप्पडेरिमैयुम् तडैकळुम्
पिरवि मुतलाली
पुण्णिय स्तलङ्कळ्
पुत्तेरि अझिकप्पट्टतु
पुत्तम्
पुत्तम् ओरु कोळ्कैये
पुतीतम्, वळ्लुवम् अझिवु
पुत्कमुम् नामुम्
पुत्तर्
पुत्कर् यार् ₹
पुत्तर् विझा
पुत्तर् विझा
पुत्कररुम् नामुम्
पुतिय सकाप्तम् काण वारीर् !
पुरट्सि!
पुरट्सिक्कु अझैप्पु
पुरट्सि वेण्डुम्
पुरानङ्कळ्.
पु?राकित अाटि
पुसोकित पकिष् सारम्
पुरोकितरुम् तितियुम्--
उरयातल्
पुलवर्कळिन् तन्मै
पूतेवर्कळिन् तेव पातुकाप्पु
मानाडु
-
पूर्व जेन्म पलन्
पेण्कळ् पोकप् पोरुल्कळा?
पेण्कळ् विडुतलै
पेण्डिर् कडमै
पेयर् सूट्टु विझा
परिय पुरानम्
परिय़ार् अरिक्कै
परिय़ार् ई. वे. रा. अवरसट्कु
कुन्ररक्कुडि अडिकळ् विडुत्त
मडल्:
परिय़ार् कोर्ट्टु वाक्कु मूलम् ..
परिय़ार् सुयमरियातैप् प्रि सार
स्तापनम्
परिय़ार्-विनेबा परवे
www.thamizham.net - Free £ book 14०ः 3046
पोरुट् कुरिप्पु अकराति
2103
मुतल्वर् करुणानिति येन्
कडिकम्
मुतलाली-सोझिलालि तोल्लै
मुन्कल नडप्पु
मुन्नेरप्पम्?
मुस्लिम्कळे, किरिस्तवर्कळे
सिन्तियुङ्कळ्.
मूलस्तानप् प्रवेसम्
मेट्टीरियलिसम्
मे तिनम्
मेल्नाडुम् कीझ्नाडुम्
मैनारिट्टि समुताय मुम्
मोझि
मोझि-एझुत्तु
मोझित् तोल्लै
मोझिवारिप् प्रि विनै एन् 8
मोक्सम्-०रकम्-कर्मपलन्
यार् तमिझर्कळ् 8?
योक्कियमान अाटि
रष्यक् ईडुम्ब मुरै
रष्य नीति
रससेल्.
राय़ल् कमिषन्
राय़ल् कमिषनुम् सुयमरिय़र
तैयुम्
*रिवोल्ट्?
वकुप्पु उरिमैयै ओझिक्कस् सति
वकुप्पु मा नाडु
वकुप्पुरिमै-तोन्रिय वरलारु.
वकुप्पुरिमैया!
वकुप्पुति
'तुवेषमा
§
वकुप्पु वातम्
एty वातमा? समूक वातमा
१.
वकुप्पुवारि उरिमै
वकुप्पुवारिप् प्रि तिनितीतुवम्
वकुप्पुवारिप् प्रि ति.निति.तुवम्
एन्?
वडनाडुम् तेन्नाडुम्
.
वडवर् मोझि नमक्कु वेण्डाम्...
वरतराजुलु अरिक्कैक्कु
समातानम्
वरवेरप्पक्क
तक्कतु
वरुणाश्रम मानाडु
वरुषप् प्रिप्पु
वळ्लुवरुम् करप्पुम्
वाल्मीकीयिन् सीतै
वाझ्क्कैत् तुणै नलम्.
वाझ्त्तुम् अासीर्वातमुम्!
वाझ्नतल्
मान तीतोडु
वाझ्वोम्
वाझ्वु अल्लतु सावु
विडुतलै
वितवा विववाकम्
विनायकर् सकुर्ति
विपच्चारम्
विववाक रत्तु
परिय़ार्-जिन्ना-अम्बेतीकार्
सन्तिप्पु
परिय़ारिन् पतिल्कळ्
परिय़ारुडन् पेट्टि
पेत उणर्च्सिकळ् मरैय वझि
पेतस् सिन्न तीतैै अकरुक्
पोकत्तोण्डु
पोकुत्तोण्डु
पोतुनल उणर्च्सि
पोतुनल वाझ्वु
पोतुमोझि इरून्तेत्का?
पोतुवुडैमै
पोतुवुडैमैकीकु विरोति या ..
पोतुवुडैमैया ₹ पोतु
उरिया
पोर् वीररकळे वेण्डुम्
पोलि उरिमैकळ्
मक्कळ् तुयरम् नीङ्क वझि
मक्कळ् प्रिविनिनै:
मक्कळैप् पक्कुवप् पडुत्त
केण्डुम्
मकाअ अ$य्याक्कियर्
मकातीमावुम्
वनुणाश्रममुम्
मकामक तीर्तम्
मतस् सारपरप्पु अरसु.
मतत्तल् पयन् एन्न?
मतप् पुरट्टु
मतप् डोट्टि.
मतम्
मतम्
मतम् विलैतीत केडुकळ्
मतम् वेण्डुमा 1
मतुविलक्कु
मन्त्रिकळ् सिन्तनैक्कु
मन्त्रिमार्कळुक्कु वेण्डु
कोन्
मलेया इन्तियरीक्कु
मरुत्तलुम् पकुतीतरिवुम्
मममणम् तवरल्ल
मन्नर्कळुम् इलक्कियमुम्
मनितरासि उयर्वानतا 1
मनितवाझ्क् इलटिय
मरच्च्तु
मनिितन् एतरकाकक् कडवुलै
वणङ्कुकिरान्
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு
வ
தமிழ் மொழி
தமிழ் வருடங்கள்
தமிழர்க்கு நெறி உண்டா
தமிழர் களின் தலையாய கடமை
e
தமிழர் களின் முக்கிய
கவன த்திற்கு
தமிழர் திருநான்
தமிழர் நிலை மாறவேண்டும்
தமிழர் மாநாடுகள்
தமிமரும் பத்திரிகைகளும்
தமிழிசை
தமிழிசையும் நாடகமும்
தரீமம் அல்லது பிச்சை
தர்மமும் பாவபுண்ணியமும்
தரகர்கள்
தலைவர் அறிக்கை
தலைவிதி
ன்னைப்பற்றி
க
ியுடையையும் பெண்ணடி
மையும்
தாய்ப் பால் பைதீதியம்
தாய்மார்களுக்கு
தாரா சசாங்கம்
தாழ்த்தப்பட்டோர் ஈடேற வழி
தி.க. தொழிலாளர் நிறுவனமே!
தி. பொ. வேதாசலனாரர்
தியாகம்
ர
ராவிடத்
தொழிலாளர்
என்ப,
தி
ந்
தாழி,
து w1752
ராவிட
நாடா? தமிழ் நாடா?
?
मनिितन् कडवुलै नम्बुकिराना? ..
मनुतर्म सास्त्िरम्
मानवर्कळुक्कु
मानाडट्टिल्
मानिल सुयाट्सि
मारियम्मन् पण्डिकै
मारुतल्.
मारुतलुक्कु एतिर्प्पु
मुट्टुक् कट्टैकळ्:
मुतल् मागानक सुयमरिय़तै
मकानाडु
694
திராவிட மொழிகள்
w
978
சீர் திருத்தம்
சீர்திருத்தமா ₹ அழிவு
வேலையை
சுகாதார வாழ்வு
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
சுதந்தராக் கட்சி
சுதந்தரத் தமிழ்நாடு
சுதந்தரத்தால் பார்ப்பனர்
இலாபக் கொள்ளை
சுதந்தர நாள்
சுதந்தர நாளா?
e
சுதந்தரப் போராட்டமா ?
சாதிமதச் சண்டையா 8
சுதந்தரமூம் சமுதாயமும்
சதந்தரமும் சமுதாயமும்
சுதேசி
சுப்பிரமணியன் பிறப்பு
சுயநலம்-பிறநலம்
சுயமரியரை
சுயமரியாதை இயக்கத்தின்
சாதனைகள்
சுயமரியாதை இயக்கத்தின்
பலன்
சுயமரியாதை இயக்கத்தின்
முடிவான இலட்சியம்
.
சயமரியரதை இயக்கம்
க
சுயமரியாதை இயக்கம் ஏன்?
w
சுயமரியாதை இயக்கமும்
திராவிடர் கழகமும்
க
சயமரியாதைக் காரரும் மதமும்
e
ச௬யமரியரதைச் சங்கக்கொன்கை e
சுயமரியாதை சமதர்மம்
க
* சுயமரியாதைத் தொண்டன்?
..
சுயமரியாதைத் தொண்டு
கை
சுயமரியாதை நோக்கம்
சுயமரியாதைப் பொதுச்சேவை
.
சுயமரியாதை-புரரண மரியாதை .
சுயராஜ்ய ஆட்சி எது ₹
சயராஜ்யத்தின் தன்மை
சுயராஜ்யம்
சுயராஜ்யமா ? சுயமரியாதையா? ..
செங்கற்டட்டு மா நாட்டின்.
தீர்மானங்கள்
.
செயற்கரிய செய்தார்
o
www.thamizham.net - Free E book No 3046
विझावुम् नामुम्
विष्णुविन् अापासम्
ैसटिस् कट्सि सातिती क एन्न?
जस्टिस् कट्सियुम् सुयराज्यक्
कट्सियुम्
ैसटिस्--पारीप्पनरल्लात
इयच्कम्
जिन्ना इझप्पु
जिन्ना पाराट्टु
जीवकारुण्य
मुम् याकमुम्
जीमुकम्
* वेडिकुण्डु?
वेळिनाट्टु अनुभवम्
वेलैत् तिट्टक् कूट्टम्
वेलैक् तिट्टम्
वैक्कम् सत्तियाक्किरम्
वैकुण्ड एकातसि-पूसम्
जन नायकम्
जननायकम्
जस्टिस् कट्सि सतनै
स्टालिन् मरैवु
Volume-II
309
திராவிடர் கடமை
w48
திராவிடர் கழகம்-தொழிலாளர்
நிறுவன3ம !
.
1732
திராவிடர் கழகர்-பெயர் ஏன் !
.
549
திராவிடர் கழகமும் திராவிடரும்.
616
திராவிடரீகள்:
w240
நிராவிடர்-திராவிட நாடு
w682
திராவிடர்-பார்ப்பனர் wrt
244
திராவிடரே ஒன் றுபடுவீர்!
w802
திராவிட ஸ்தாபனங்களே
வேண்டும்
e
w
615
தப்பட்ட ௬. ம.
வேலைதீ
திருத்தப்பட
507.
திருமணம்
திருமணம்-உலக சிதீதாநீதம்
திருமணம் ஏன் ₹
திருமணம் சொதீதுகீகாகவே
திருமணம் தேவையா?
திருமணம் வேண்டாதது
திருமணமும் ஒப்பந்தமும்.
திருமண முறைகள்
திருமணமுறையும் நாமும்
திரு. வி. &
திருட வி.க
திருவிழா ஏன்
தி வி. தொ. சங்கம் ஏன்?
தீண்டாதார் தேற வழி என்ன?
தீண்டாமை
தீண்டாமை விலகீகு
தீபாவளி
தென் ஆப்பிரிக்கா தினம்
தென்னாட்டில் அரசியல் கிளர்ச்சி ...
தேசப் படத்தைக் கொளுத்துங்கள்
தேசாபிமானம்
தேசியக் கொடி எரிப்பு
தேசியக் கொடி கொ
ம்
த்ர்மானம்
சுத்து
தேசியம்
தேசிய வாதிகள்
தேசிய வியாபாரம்
தேர்தல் படிப்பிணை
தேவதாசி ஒழிப்புச் சட்டம்
தேவர்களின் முறையீடு
தொண்டர்களின் கன்மை
தொழிலாளர் கிளர்ச்சி
தொழிலாளர் சங்கம் ஏன்?
தொழிலாவர் சத்தியாக்கிரகம்
தொழிலாளர் நிலை.
தொழிலாளர் பிரச்சினை:
தொழிலாளரும் நாமும்
நகர அமைப்பு
நகராட்சியின் தன்மை
நபி விழா:
நம் ஆயுதம்-- விடுதலை?
நம் இன உணர்ச்சி
நம் சி. டி. நாயகம்
நம் காழ்மைக்குக் காரணம்
நம் தோழர்களுக்கு
நம்பிக்கையாளரும் நம்பிக்கை
மறுப்பாளரும்
நம் போராட்ட நேர்மை
நமதருமைத் தலைவர்
நமது ஆராய்ச்சி மனப்பான்மை
நமது கியக்கமும் கம்யூனிசமும்
நமது இலக்கியம்
நமது லட்சியம்
நமது கிழிநிலை
நமது கடமை
நமது கொடி
நமது தலைவர்கள்--இரணியன்
நமது நடைமுறை
நமது பத்திரிகை:
நமது போர் முறை
நமது போராட்டம்
நமது மலாய்நாட்டு விஜயம்
நமது முன்னேற்றம்
நமது வெற்றி
நமது வேலை
நவீன நாடகம்
நாகம்மாள் அறிக்கை
நாகம்மான் மறைவு
நாகரிகம்
நாகரிகம் எது?
நாட்டு நலம் வேறு; வகுப்பு நலம்
வேறா?
w929
நாட்டுப் பிரிவினை
680
நாடகக் கலை
4283
நாடு கேட்பது தேசத் துரோகமா? ...
765
நாத்திகம்
ட
1108
நாத்திகமும் சமதரீமமும்
1697
நாத்திகர் ஆட்சி
857
நாம் அஞ்ஞானிகள்
1123
நாம் இந்துக்களா1
w24
நாம் வேகப்படுத்துகிறோம்
539
நாமம்--விபூதி
w1521
நாமும் பிறகட்சியினரும்.
w629
நாமும் பிறரும்
w612
நாமும் பிறரும்
w
1513
*நான் 1
1095
நான் இநீதுவல்ல
2021
நான் எப்படி?
2026
நான் ஒரு தொண்டன்
2027.
நான் காங்கிரசில் சேர்ந்து
o
கிட்டேனா?
365
* தோழர் ! என விளியுங்கள்.
தோழர்களே, வாருங்கள் |
iy
நான்
சொல்லுவது கட்டளையா 8...
2026
தான் நோக்கும் முறை
5
2009
* தோழனுக்கு வாழ்த்து
394
1902 ;
www.thamizham.net - Free £ book No 3046
2102
பெரியார் ஈ, வெ. ரா. சிநீதனைகளன்
நான் மாறுவது ஏன் 1
w2027
நான் யார் 1
2725
நாணும் காங்கிரசும்
961
நானும் நண்பர்களும்
1188
நிதி வசூல்
399
நியாயம் வழங்கும் முறை
774
நினைவு நாள் ஏன் *
286
நீதிக் கட்சி நிலைக்க வழி
438
நீதி கெட்டது யாரால்
270
நூல்கள்
1287
ஃ
முன்னுரை
1894
க்யான் எதிர்ப்பு இல்லை.
1841
நேரு மறைவு
1935
நேருவின் முட்டாள் தனம்
1866
பக்த லீாமிருகம்
1493
பகுத்தறிவாளர்க்கு
2010
பகுதீதறிவாவர் களுக்கு
1213
பகுத்தறிவு
1114
பகுத்தறிவு
1897
பகுதீ தறிவுக்குதீ தடைகள்
1129
படத் திறப்பு
307.
படத் திறப்பு விழா
பத்திரிகைகள்
பத்தினி-பதிவிரதை
பதவியா, தனி நாடா 1
பரிகாரம் என்ன ¢
e
49
பவுத்தர்களின் சடங்குகள்:
w315
பழங்குடி மக்கள் இழீவுக்குக்
காரணங்கள்
93
பழந் தமிழின் பெருமை
1251
பறையரும் சூத்திரரும்
54
பாஞ்சால சிங்கம்
1908
பாட்னா தீர்மானம்
341
பார்ப்பன அகராதி
246
பார்ப்பன ஆட்சி.
258
பார்ப்பன ஆதிக் க ஒழிப்புநான்
429
டார்ப்பன தீ எதழுர்களுக்கு
43
பார்ப்பன தர்மம்
1391
பார்ப்பனர்--அன்றும் இன்றும்
285
பார்ப்பனர் உயர் வாழ்வு
39
பார்ப்பனர் எதற்கு?
35
பார்ப்பனர் களின் தேசியம்
376
பார்ப்பனர் திமிர்.
w42
பார்ப்பனரல்லாத தலைவர்:
களுக்கு விண்ணப்பம்.
w459
பார்ப்பனர
லாத வாலிபர் கடல...
411
பார்ப்பனரல்லா
தார் இயக்கமும்
தேசத் துரோகமும்
கை
943
பார்ப்பனரும் தி.க.வும்
36
பார்ப்பனரும் தொழிலாளரும்
1721
பார்ப்பனீய எத்ர்ப்பு
8
பார்ப்பனியம்
248
பார்ப்பனிவாம் ஒழிய
257
பா] ப்பனியம்--தடைக் கல்
w253
பார்ப்பான்
£ பணக்காரன்
₹
பெரிய மனிதன்.
w536
பார்ப்பான் பணகீகாரனானால்?
.
பார்ஃபானே, வெளி3யறு
பரர் வதி-பரமசிவன் உரையாடல்
பார்வைக் குறிப்பு
பாரதக் கதை மெய்யா?
பாரத நேசம்
பாரதிதாசன்
பாராட்டு
பிரம்மஞான சங்கமும்
பார்ப்பனரல்லாதாரும்
பிராமணன் என அழையாதீர் 1
பிராமணாள் அழிப்பு
பிரார் த்தனை
பிரிவினை எண்ணம் ஏன்?
பின்ளையார்
பிறந்த நாள் அறிக்கை
பிறந்த நாள் செய்தி
பிடப்டரிமையும் தடைகளும்
பிறவி முதலாளி
புண்ணிய ஸ்தலங்கள்
புத்தெறி அழிஃகப்பட்டது
புத்தம்
புத்தம் ஒரு கொள்கையே
புதீதம், வள்ளுவம் அழிவு
புத்கமும் நாமும்
புத்தர்
புத்கர் யார் ₹
புத்தர் விழா
புத்தர் விழா
புத்கரும் நாமும்
புதிய சகாப்தம் காண வாரீர் !
புரட்சி!
புரட்சிக்கு அழைப்பு
புரட்சி வேண்டும்
புராணங்கள்.
பு?ராகித ஆட்சி
புசோகித பகிஷ் சாரம்
புரோகிதரும் திதியும்--
உரையாடல்
புலவர்களின் தன்மை
பூதேவர்களின் தேவ பாதுகாப்பு
மாநாடு
-
பூர்வ ஜென்ம பலன்
பெண்கள் போகப் பொருள்களா?
பெண்கள் விடுதலை
பெண்டிர் கடமை
பெயர் சூட்டு விழா
பெரிய புராணம்
பெரியார் அறிக்கை
818
பெரியார் ஈ. வெ. ரா. அவர்சட்கு
குன்றக்குடி அடிகள் விடுத்த
மடல்:
1043
பெரியார் கோர்ட்டு வாக்கு மூலம் ..
1870
பெரியார் சுயமரியாதைப் பிர சார
ஸ்தாபனம்
பெரியார்-வினேபா பரவே
www.thamizham.net - Free £ book 14௦ 3046
பொருட் குறிப்பு அகராதி
2103
முதல்வர் கருணாநிதியின்
கடிகம்
முதலாளி-சொழிலாளி தொல்லை
முன்கால நடப்பு
முன்னேற்றம்?
முஸ்லிம்களே, கிறிஸ்தவர்களே
சிந்தியுங்கள்.
மூலஸ்தானப் பிரவேசம்
மெட்டீரியலிசம்
மே தினம்
மேல்நாடும் கீழ்நாடும்
மைனாரிட்டி சமுதாயம்
மொழி
மொழி-எழுதீது
மொழித் தொல்லை
மொழிவாரிப் பிரி வினை ஏன் 8
மோட்சம்-௩ரகம்-கர்மபலன்
யார் தமிழர்கள் 8
யோக்கியமான ஆட்சி
ரஷ்யக் ஈடும்ப முறை
ரஷ்ய நீதி
ரஸ்ஸல்.
ராயல் கமிஷன்
ராயல் கமிஷனும் சுயமரியர
தையும்
*ரிவோல்ட்?
வகுப்பு உரிமையை ஒழிக்கச் சதி
வகுப்பு மா நாடு
வகுப்புரிமை-தோன்றிய வரலாறு.
917
வருப்புரிமையா !
வகுப்புதி
'துவேஷமா
§
912
வகுப்பு வாதம்
20
ety வாதமா? சமூக வாதமா
1.
931
வகுப்புவாரி உரிமை
வருப்புவாரிப் பிர திநிதிதீ துவம்
வகுப்புவாரிப் பிர தி.நிதித.துவம்
ஏன்?
w907
வடநாடும் தென்னாடும்
.
443
வடவர் மொழி நமக்கு வேண்டாம்...
1769
வரதராஜுலு அறிக்கைக்கு
சமாதானம்
w752
வரவேற்கக் தக்கது
வருணாசிரம மாநாடு
வருஷப் பிறப்பு
வள்ளுவரும் கற்பும்
வால்மீகீயின் சீதை
வாழ்க்கைத் துணை நலம்.
வாழ்த்தும் ஆசீர்வாதமும்!
வாழ்ந்தால்
மான தீதோடு
வாழ்வோம்
வாழ்வு அல்லது சாவு
விடுதலை
விதவா விவாகம்
விநாயகர் சகுர்த்தி
விபச்சாரம்
விவாக ரத்து
w146
பெரியார்-ஜின்னா-அம்பேதீகார்
சந்திப்பு
w1008
பெரியாரின் பதில்கள்
1217
பெரியாருடன் பேட்டி
1225
பேத உணர்ச்சிகள் மறைய வழி
671
பேதச் சின்ன தீதை அகற்றுக
41
பொகத்தொண்டு
1142
பொகுத்தொண்டு
1913
பொதுநல உணர்ச்சி
1139
பொதுநல வாழ்வு
1140
பொதுமொழி இருந்ததா?
1
பொதுவுடைமை
பொதுவுடைமைகீகு விரோதியா ..
1714
பொதுவடைமையா ₹ பொது
உரியா
8
w
1711
போர் வீரர்களே வேண்டும்
௮
593
போலி உரிமைகள்
w1680
மக்கள் துயரம் நீங்க வழி
153
மக்கள் பிரிவிணை:
மக்களைப் பக்குவப் படுத்த
கேண்டும்
மகா அ$யாக்கியர்
மகாதீமாவும்
வநுணாசிரமமும்
மகாமக தீர்த்தம்
மதச் சார்பற்ற அரசு.
மதத்தால் பயன் என்ன?
மதப் புரட்டு
மதப் டோட்டி.
மதம்
மதம்
மதம் விளைதீ த கேடுகள்
மதம் வேண்டுமா 1
மதுவிலக்கு
மந்திரிகள் சிந்தனைக்கு
மந்திரிமார்களுக்கு வேண்டு
கோன்
835
மலேயா இந்தியரீக்கு
w
1175
மறுத்தலும் பகுதீதறிவும்
w
1120
மமமணம் தவறல்ல
149
மன்னர்களும் இலக்கியமும்
1266
மனிதராசி உயர்வானதா 1
டபக்
மனிதவாழ்க்ீகை இலட்சிய
மற்றது
w
1135
மனிதன் எதற்காகக் கடவுளை
வணங்குகிறான் ?
w
1720
மனிதன் கடவுளை நம்புகிறானா? ..
1511
மனுதர்ம சாஸ்திரம்
மாணவர்களுக்கு
மாநாட்டில்
மாநில சுயாட்சி
மாரியம்மன் பண்டிகை
மாறுதல்.
மாறுதலுக்கு எதிர்ப்பு
முட்டுக் கட்டைகள்:
முதல் மாகாண சுயமரியரதை
மகாநாடு
w492
www.thamizham.net - Free E book No 3046
2104
பெரியார் ஈ, வெ. ரா, சிநீதனைகள்
விழாவும் நாமும்
விஷ்ணுவின் ஆபாசம்
ஐஸ்டிஸ் கட்சி சாதிதீத க என்ன?
ஜஸ்டிஸ் கட்சியும் சுயராஜ்யக்
கட்சியும்
ஐஸ்டிஸ்--பாரீப்பனரல்லாத
இயச்கம்
ஜின்னா இழப்பு
ஜின்னா பாராட்டு
ஜீவகாருண்ய
மும் யாகமும்
ஜீ முகம்
* வெடிகுண்டு?
வெளிநாட்டு அனுபவம்
வேலைத் திட்டக் கூட்டம்
வேலைக் திட்டம்
வைக்கம் சத்தியாக்கிரகம்
வைகுண்ட ஏகாதசி-பூசம்
ஜன நாயகம்
ஜனநாயகம்
ஜஸ்டிஸ் கட்சி சதனை
ஸ்டாலின் மறைவு
Yolume-§
PART-III
Communal Conference
iii
The Chota Gandhi
w
Xiv
Our North Indian Leaders..
iii
Ourselves
e
XV
The Pandit again
w
vi
मो Achievements
o
xvii
Is this Nationalism
viii
Social Revolution
xviii
The Self Respect League
ड
xi
Caste and Hinduism
xxviii
Fight to the Last
एั
Xii
Caste and Conduct
e
XXXi
Volume-II
PART-IX
Separate Electoratea
ममम्
Dravidasthan Separation..
1०
Volume-IlI
PART-IX
Duties of a Revolutionary..
iii
Caste
w
viil
ओलै
www.thamizham.net - Free E book No 3046