EVRT-Vol-2-Part-3---pp-1046-1292,-English-i-viii

Collection: Anaimuthu's Periyar Collection

போன்‌ : 0422 - 2572635 செல்‌: 936 2970121 st @10 சுப்பிரமணியன்‌ மடவ o மருத நாடன்‌) தலைமைப்‌ பொறியாளர்‌ மி.வா, (ஓய்ஷ்‌ தைவர: சிந்தனையரார்‌ கழகம்‌ மிழ்‌ தமிழர்‌ ஒருங்கிணைப்பாளர்‌ அப்பா) தொழில்நுட்ப லல்றர்‌ குழும 181267, அண்ணாநகர்‌, ஆறுமுகம்‌ லே-அவுட்‌, பூனைமேடு இஞ்சலி, கோயழுத்தூர்‌ - 641 004. இன்று கோவையில்‌ பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ அவர்களை அவரது இல்லத்தில்‌ சந்தித்தேன்‌. இவர்‌ மின்வாரியத்தில்‌ தலைமைப்‌ பொறியாளராகப்‌ பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்‌. தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம்‌ முழுவதும்‌ பகுத்தறிவுக்‌ கருத்துகளைப்‌ பரப்பியவர்‌. திருச்சி சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவராக இருந்தவர்‌. இவரது முயற்சியால்‌ திரு.வே: ஆனைமுத்து அவர்கள்‌ தொகுத்த பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும்‌ பெரியாரின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌ அடங்கிய தொகுப்பு ஆகும்‌. பெரியாரின்‌ பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும்‌ இந்த நூல்‌ போற்றப்படுகிறது. பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ எழுதிய கவிதை நூலை இணையத்தில்‌ வலையேற்றுவதற்காக அவரைச்‌ சந்தித்தபோது பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ என்ற நூலைப்பற்றி அவரிடம்‌ பேசினேன்‌. அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர்‌ விளக்கினார்‌ நூல்‌ வெளியீட்டிற்காப்‌ பட்டபாடுகள்‌ என்‌ கண்முன்‌ நிழலாடியது. அவர்‌ காட்டிய தந்தை பெரியாரின்‌ உருவம்‌ என்‌ முன்‌ நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத்‌ தன்வாழ்நாளின்‌ இறுதிவரை பேசியும்‌ எழுதியும்‌ வந்த அவரது உறுதி தெரிந்தது. பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ தொகுப்பினை இணையத்தில்‌ வலையேற்றினால்‌ உலகமக்கள்‌ வலைஇறக்கிப்‌ படித்து மகிழ்வார்களே என்று சொன்ன பொழுது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திரு. கு.ம. சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ மகிழ்வோடு. தன்‌ கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப்‌ படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்‌. இணையத்தில்‌ வெளியிடுங்கள்‌, அய்யாவின்‌ கருத்துகள்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவட்டும்‌ என்று அவர்‌ கொடுத்தபோது நான்‌ பெருமகிழ்வு அடைந்தேன்‌. நான்‌ பத்தாம்‌ வகுப்பு படித்தபோது, தாராபுரம்‌ நூலகத்தில்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொரு பக்கமாகப்‌ படித்து நெஞ்சில்‌ பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான்‌ படவடிவக்‌ கோப்பாக்கும்‌ வாய்ப்பு கிடைத்தது கண்டு. நெஞ்சு நெகிழந்தேன்‌ ஆனைமுத்து அய்யா அவர்கள்‌ பெருமுயற்சியில்‌ திரட்டிச்‌ சேகரித்த பெரியார்‌ ஈ.வெ.ரா சிந்தனைகள்‌ என்ற இந்த மூன்று தொகுதிகளும்‌ உலகம்‌ முழுவதும்‌ உள்ள நம்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ இனிவரும்‌ அடுத்த தலைமுறையினருக்கும்‌ வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும்‌ என்று நம்புகிறேன்‌. bghs shrpp ௭௮; (09-06-201) JkiHK;t iy (www.thamizham.net) www.thamizham.net - Free E book 14௦ 3031 டுபறியார்‌ . வெ ரா. சிந்தனைகள்‌ (பெரியார்‌ ஈ. வெ. கிராமசாமி அவர்களின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌) இரண்டாம்‌ தொகுதி பதிப்பாசிரியர்‌ வே. ஆனைமுத்து L éQ; @ OHiimoi s மனைச ன 5. வெளியீடு: சிந்தனையாளர்‌ கழகம்‌ ன தெப்பக்குளம்‌ திருச்சிராப்பள்ளி-2 ன e www.thamizham.net - Free E book No 3031 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ (இரண்டாம்‌ தொகுதி) முதற்‌ பதிப்பு, வெளியீடு 1-7-1974 பதிப்புரிமை பெற்றது கபீர்‌ அச்சகம்‌, சென்னை--600005 www.thamizham.net - 88 £ 9௦௦1 14௦ 3031௨௭ ECOUGHTS OF "RERRIARTE. V. 'R, (Speeches and Writings of Periyar E. V. Ramasami) VOLUME II Compiled and Edited by V. ANAIMUTHU Published by THINKERS' FORUM Teppakulam Tiruchirappalli-2 www.thamizham.net - Free E book No 3031 Thoughts of Periyar E. V. R—Volume II First Edition, Published on 1-7-1974 All rights reserved Kabeer Printing Works, Madras—£00003 www.thamizham.net - 1௪௯௨6௦௦11௦ 3031 www.thamizham.net - Free E book No 3031 ‘www.thamizham.net - Free E book 14௦ 3031 1. பிரகிருதிவாதம்‌ 1. மெட்டீரியலிசம்‌ (பிரகிருதிவாதம்‌) சுயமரியாதை இயக்கம்‌ நாட்டில்‌ பரவ ஆரம்பித்த பிறகு, அதிலும்‌ அவ்வியக்கம்‌ நாட்டில்‌ சற்றுச்‌ செல்வாக்குப்‌ பெறத்‌ தொடங்கிய பின்பு, மக்களுக்குள்‌ தானாகவே ஒருவிதக்‌ குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம்‌ நன்றாய்‌ உணர்ந்து வருகின்றோம்‌. அதோடு கூட பார்ப்பனர்களும்‌, பார்ப்பனரல்லாதார்களில்‌ அரசியல்‌ தேசியம்‌ ஆகியவைகளின்‌ பேரால்‌ பிழைக்கும்‌ பிழைப்புக்காரர்களும்‌, சமயம்‌, புராணம்‌, பிரசங்கம்‌ ஆகியவைகளின்‌ பேரால்‌ பிழைக்கும்‌ பிழைப்புக்காரர்களும்‌ இவ்வியக்கத்தை எதிர்ப்பதற்கு, கடவுளையும்‌ மதத்தையும்‌ பற்றிய பொதுமக்களின்‌ குழப்பத்தைத்‌ தங்களுக்கு ஆதாரமாய்‌ வைத்துக்‌ கொண்டும்‌, மற்றும்‌ திரித்துக்‌ கூறிக்கொண்டும்‌ விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்து வருவதனாலும்‌, நமது இயக்கதீதில்‌ உண்மையான பற்றுக்கொண்ட உண்மை நண்பர்களிற்‌ சிலர்‌ இவ்‌ விஷமப்‌ பிரச்சாரதீதைக்‌ கண்டு பயப்படுவதாகத்‌ தெரிவதாலும்‌, மற்றும்‌ சில பெரியோர்‌ களும்‌ சமய சம்பந்தமாக மனதீதுடிப்புக்‌ கொள்வதாலும்‌ நமது நிலையையும்‌ கடவுள்‌, மதம்‌ என்பது பற்றி நாம்‌ கொண்டுள்ள கருத்தின்‌ நிலையையும்‌ சற்று விளகீகிவிட வேண்டு மென்பதாகக்‌ கருதி இதனை எழுதப்‌ புகுந்தோம்‌. இவைகளைப்பற்றி இதற்குமுன்‌ பல தடவைகள்‌ பேசியும்‌, எழுதியும்‌ இருக்‌ கின்றோம்‌. ஆயினும்‌, அவைகளைவிட இது சற்றுத்‌ தெளிவாக இருக்கலாம்‌ என்கின்ற எண்ணத்தின்‌ மீதே இதை எமுதுகின்றோம்‌. வாசகர்கள்‌ தயவு செய்து இதைச்‌ சற்று நிதானமாகவும்‌, கவனமாகவும்‌ படிதீதுப்‌ பார்க்கும்படி வேண்டுகிறோம்‌. இந்த முதல்‌ பகுதியானது, இதே தலைப்பின்கீழ்‌ திருநெல்வேலி ஜில்லா இரண்‌: டாவது சுயமரியாதை மாநாட்டின்‌ முடிவுரையின்போது நம்மால்‌ எடுத்துச்‌ சொல்லப்‌ பட்டதை அனுசரிதீதும்‌, சில நண்பர்கள்‌ அதை விளக்கி எழுதும்படி சொன்னதை ஆதரித்தும்‌ எழுதப்பட்டதாகும்‌. முதலாவதாக); நமக்குக்‌ கடவுளைப்‌ பற்றியாவது, மதத்தைப்‌ பற்றியாவது சிறிதும்‌ கவலை இல்லை என்பதாகவும்‌, கஷ்டப்படும்‌ மக்களின்‌ துன்பம்‌ நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல்‌, இன்பம்‌ ஆகியவைகளில்‌ உள்ள கட்டுப்பாட்டை உடைதீது, விடுதலையை உண்டாக்கவேண்டும்‌ என்பதே முக்கிய கவலை என்பதாகவும்‌ அனேக தடவைகளில்‌ வெளியிட்டு இருக்கிறோம்‌. அதுவும்‌, பலர்‌ நம்முடைய இம்முயற்சியில்‌ கடவுளையும்‌ மததீ தையும்‌ கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான்‌ நாம்‌ அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய, உண்மையில்‌ கடவுளையும்‌ மதத்தையும்‌ பற்றிப்‌ பேச வேண்டும்‌ என்கின்ற அவசியத்தையோ, ஆசையையேோ கொண்டு நாம்‌ அதில்‌ பிரவேசிக்க வில்லை. அதுபோலவேதான்‌, சைவ சமயத்தைப்‌ பற்றியும்‌ நாம்‌ பேசவேண்டிய அவசியம்‌ ஏற்பட்டதும்‌ என்போம்‌. எப்படியெனில்‌, சில சைவத்‌ தலைவர்கள்‌ நமக்கு எதிராகத்‌ தம்மால்‌ கூடிய சூழ்ச்சிகளெல்லாம்‌ செய்து பார் தீதும்‌ ஒன்றிலும்‌ பயன்‌ தராததால்‌, கடைசியாகச்‌ சமயமென்றும்‌ சமயப்‌ பெரியார்‌ என்றும்‌ கூறிக்கொண்டு, அவ்‌ வார்த்தைகளையே தமது ஆயுதமாகவும்‌, சமய சம்பந்தமான சில பைதீதியக்காரர்களைதீ தமக்குப்‌ படையாகவும்‌ வைத்துக்கொண்டு, அவர்களைத்‌ தெருவில்‌ இழுத்து நம்மீது உசுப்பிவிட்டுச்‌ சூழ்ச்சிப்‌ போர்‌ தொடுக்க ஆரம்பித்ததன்‌ பலனாய்‌, சைவ சமயம்‌ என்பதும்‌ சமயாச்சாரியர்கள்‌ என்பவர்களும்‌ சந்திக்கு வரவேண்‌ டியவர்களானதோடு சைவப்‌ பெரியார்கள்‌ என்பவர்‌ கவின்‌ சாயமும்‌ வெளுக்கவேண்டியதாய்விட்டது. 1686—132 www.thamizham.net - Free E book 14௦ 3031 1050 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ இன்றையதினம்‌ பெரிய புராணம்‌, திருவிளையாடற்புராணம்‌, இராமாயணம்‌, பாரதம்‌ ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி, முக்கிய கதாநாயகர்களைக்‌ கடவுள்களாக மதித்து வணக்கம்‌, பூஜை, உற்சவம்‌ செய்ய எவனெவன்‌ சம்மதிக்கின்றானோ அவன்‌ மாத்திரமே கடவுன்‌ நம்பிக்கையும்‌, சமயப்‌ பற்றும்‌ கொண்டவன்‌ என்றும்‌, மற்றவர்கள்‌ நாதீதிகர்கள்‌, சமயத்‌ இரோகிகள்‌ எனவும்‌ தீர்மானிக்கப்பட்டு, அதுவே முடிந்த முடிவாகவும்‌ சொல்லப்‌: பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும்‌, கடவுள்‌-மதம்‌ என்பது என்னவென்பது பற்றியும்‌, இவை எப்படி உண்டாயின என்பதுபற்றியும்‌, இவற்றை உண்டாக்கியவர்கள்‌' கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா, அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்‌ கினார்களா, அல்லது அறியாமையினால்‌ உண்டாக்கினார்களா என்பவைகளைப்பற்றியும்‌, இவற்றில்‌ நமது, அதாவது மக்கள்‌-கடமை என்ன என்பதுபற்றியும்‌ சற்று ஆலோசித்தப்‌ பார்க்கக்‌ கடமைப்‌ பட்டிருக்கின்றோம்‌. அதைப்பற்றி முதலாவதாக, இங்கு குணம்‌, உருவம்‌, பெயர்‌ அற்ற தன்மைகளையுடைய கடவுள்‌ என்பதைப்‌ பற்றியும்‌, மக்களின்‌ வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்‌ தான்‌ மதம்‌ என்று சொல்லப்படும்‌ மதத்தைப்‌ பற்றீயுமே இங்கு விவரிக்கக்‌ கருதியுன்ளோமே தவிர, மற்றபடி பல கடவுள்களின்‌ தன்மை யையும்‌, மதப்‌ பிரிவுகளசன கிறிஸ்துவ, இஸ்லாமிய ஜைன; பவுத்த, சீக்கிய, சைவ, வைணவ, ஸ்மார் தீத, சாக்கிய, வாம முதலிய பல உன்‌ மதங்களைப்‌ பற்றியும்‌ நாம்‌ கிங்கு தனித்‌ தனியாகப்‌ பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை, ஏனெனில்‌, அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள்‌ தாரால மாய்‌ வெளிப்பட்டு, ஒருவருக்கொருவர்‌ பதில்‌ சொல்ல முடியாமல்‌ ததீது வார்த்தம்‌ என்கிறதற்குன்‌ அடைக்கலம்‌ புகுந்தும்‌, நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌ என்கின்ற நிர்ப்பந்தத்திற்குள்‌ புகுந்துமேதான்‌--ஒவ்வொருவரும்‌. அவரவர்கள்‌ கடவுளையே, கடவுள்‌ தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்‌்களையேோ;, சமயாசீசாரியர்களையோ--- காப்பாற்றிக்‌ கொள்ள முடிந்ததே ஒழிய, அறிவின்‌ மீதோ, நியாயதீதின்‌ மீதோ நிலைநிறுத்த முடியாமற்‌ போய்விட்ட விஷயம்‌ உலகம்‌ அறிந்ததாகும்‌. ஆதலால்‌, இப்‌ பகுதியில்‌ நாம்‌ அவற்றில்‌ பிரவேசிக்கவில்லைஃ முதலாவது, மக்களுக்குக்‌ கடவுள்‌ எப்பொழுது, எப்படி ஏற்பட்டது என்பதைப்பற்றி ஆராய்வோம்‌. மனிதன்‌ பிறந்து, வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான்‌ கடவுள்‌ என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம்‌ செய்யப்பட்டு கருக்க வேண்டும்‌. அதை யாரும்‌ மறுக்க முடியாது. ஏனெனில்‌, கிப்பொழுஆகூட மக்களுக்குப்‌ பிறர்‌ சொல்லிக்‌ கொடுத்த பிறகுதான்‌ கடவுள்‌ என்கின்ற பேச்சும்‌, நினைப்பும்‌ ஏற்படுகின்றதே தவிர), தானாக ஏற்படுவதில்லை. எப்படியெனில்‌, சிறு குழந்தைகளை நாம்‌ கட்கதீதில்‌ இடுக்கிக்கொண்டு-ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி, சரமியென்றும்‌ அதைக்‌ கைகூப்பிக்‌ கும்பிடு என்றும்‌ சொல்லிக்கொடுத்த பிறகே குழந்தை சாமியைக்‌ கும்பிட அறிகன்றது. அது போல, ஆதியிலும்‌ மனிதன்‌ பிறந்த பிறகுதான்‌ அவன்‌ மனத்திற்குக்‌ கடவுள்‌ நினைப்புத்‌ தோன்றியிருக்க வேண்டும்‌. அது எப்படி என்றும்‌ எப்போதென்றும்‌ பார்ப்போமானால்‌, சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும்‌ ஆராய்ச்சி வளர்ச்சியும்‌ இல்லாத காலத்தில்‌ தான்‌ கடவுள்‌ நினைப்புத்‌ தான்‌ றிகிருக்கவேண்டும்‌. கடவுன்‌ என்பது--கடவுள்‌, ஸ்வாமி, அல்லா; ¢ காட்‌? என்ற--தமிழ்‌, சமஸ்கிநதம்‌, அரபி, ஆங்கிலம்‌ முதலிய பல பாஷைகளில்‌ பல சொற்களாக இருந்தாலும்‌, குறியில்‌, அர்த்தத்தில்‌ உலகத்‌ தோற்றத்திற்கும்‌, நடப்‌ பிற்கும்‌, அழிவிற்கும்‌ காரணமாலிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும்‌, அதாவது சிலரால்‌ இயற்கை என்று சொல்லப்ப மானால்‌ அவ்வியற்கையின்‌ இயங்கு தலுக்கும்‌, பஞ்ச பூதக்‌ கூட்டு என்று சொல்லப்படுமானால்‌ அக்‌ கூட்டின்‌ சேர்க்கைக்கும்‌ ஏதவது ஒரு சக்தி இருந்துதானே ஆகவேண்டும்‌ என்பதும்‌--அந்த சக்திதான்‌ கடவுன்‌, எல்லாம்வல்ல: ஆண்டவன்‌; அல்லா, * காட்‌! என்று சொல்லப்படுகற தென்று சொல்லுவதானாலும்‌, அந்த சக்தி என்னும்‌ கடவுளே எப்படி மக்கன்‌ மனத்திற்கு வந்தார்‌ என்பதுதான்‌ இங்கு விசாரிக்கத்தக்கதாய்‌ இருக்கிறது. www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1051 ஆகவே, அந்த சகீதி மனிதனுக்குத்‌ தோன்றிய காலம்‌ எது என்பதாகவும்‌, அது நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரை எப்படி இருந்தது என்பதாகவும்‌ பார்க்க வேண்டுமானால்‌, நம்‌ நாட்டில்‌ உள்ள கடவுள்களைக்‌ கொண்டுதான்‌ அதைத்‌ தாராளமாய்‌ உணரமுடியும்‌. அதாவது, இப்பொழுது நமது நாட்டில்‌ உள்ள கடவுள்கள்‌ எவை என்றால்‌ பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன்‌, சநீதிரன்‌, நட்சத்திரம்‌, மழை, இடி, மின்னல்‌, மேகம்‌, நோய்கள்‌, பயங்கரமான மிருகங்கள்‌ ஆகியவைகளெல்லாம்‌ கடவுள்களாகக்‌ கருதப்படு கின்றன. இவைகளெல்லாம்‌, இவற்றின்‌ உண்மையை அறிய ஆற்றல்‌ இல்லாத காலத்தில்‌ கடவுன்‌ என்று ஒப்புகீகொள்ளப்பட்டவைகள்‌. அதிலும்‌ இமயமலையே ¢ கயிலயங்கிரி ? யாகவும்‌, அதுவும்‌ வெள்ளி மலையாகவும்‌, அங்குக்‌ கடவுளிருப்பதாகவும்‌, அங்கிருந்து வரும்‌ நீர்‌ அம்‌ மலையில்‌ உள்ள கடவுளின்‌ தலையிலிருந்து வருவதாகவும்‌ கருதப்‌ பட்டதோடு, இமயமலைக்கு அப்பால்‌ ஒரு நாடும்‌ கண்டுபிடிக்க முடியாதிருந்ததும்‌ ) மேல்‌ லோகம்‌ என்றும்‌, கீழ்‌ நாட்டைப்‌ பாதாளலோகம்‌ நரகலோகம்‌ என்றும்‌ இப்படிப்‌ பல வாறாகக்‌ கடவுள்‌ தன்மையைச்‌ சொன்னதற்குக்‌ காரணம்‌ என்ன என்று பார்க்கும்போது, அவற்றின்‌ உண்மையை அறிய முடியாததாலேயே அவைகளைக்‌ கடவுள்‌ என்றும்‌, அவற்றின்‌ இயங்குதலைக்‌ கடவுள்‌ சக்தி என்றும்‌ சொல்லவேண்டிய அவசியம்‌ தானாகவே ஏற்பட்டது. இப்போதும்‌ மனிதன்‌ தன்னால்‌ முடிந்தவைகள்‌ போக, முடியாதவைகளுக்கே கடவுள்‌ சக்தி என்று சொல்லி விடுகின்றான்‌, உதாரணமாக; சிறு குழந்தைகள்‌, ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும்‌, தெய்வ சக்தி என்றும்‌, உபாசனா சக்தி என்றும்‌ கருதுகிறார்கள்‌. சிறுவனாய்‌ இருக்கும்போது நாமும்‌ அப்படியே கருதி இருந்தோம்‌. இப்போது அறிவு வளர்ச்சி பெற்ற பின்‌ அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல்‌ தந்திரம்‌, கைதீதிறம்‌ என்று சொல்லுகின்றோம்‌, மற்றும்‌, அந்த ஜால வேடிக்கைக்காரன்‌ செய்யும்‌ ஜாலதீதின்‌ வழி இன்னதென்று நமக்குத்‌ தெரியா விட்டாலும்‌ கூட, நாம்‌ அவற்றை ஒருக்‌ காலமும்‌ மந்திர சக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ சொல்லாமல்‌, * இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை $ ஆனால்‌, அது இன்னது என்று கண்டுபிடிக்க நம்மால்‌ முடியவில்லை? என்று சொல்லி விடுகிறோம்‌. எனவே; ஒரே காரியம்‌ நமக்கே ஒரு காலத்தில்‌ மந்திரமாகவும்‌ தெய்வ சக்தியாகவும்‌ தோன்றியது. பிறகு, அது தந்திரம்‌ என்று தோன்றக்‌ காரணம்‌ என்ன வென்றால்‌, அது அறிவு வளர்ச்சியும்‌, ஆராய்ச்சியின்‌ பலனுமேயாகும்‌. அதுபோலவே, நமக்கு இப்பொழுது தெய்வ சக்தி, கடவுள்‌ சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம்‌, மேல்‌ நாட்டாருக்குக்‌ கடவுள்‌ சக்தி என்று தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய-சந்திர கிரகணம்‌ இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலதீதில்‌ நாம்‌ அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக்‌ கண்டு பிடித்து, சூரியன்‌ என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும்‌, அது சூரியன்‌: என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம்‌ என்றும்‌ சொல்லி, அச்‌ சாபம்‌ தீர நாம்‌ மந்திரங்கள்‌ ஜெபித்து அத்‌ தோஷம்‌ தீர ஸ்நானமும்‌ செய்து வருகின்றோம்‌. இது வரண: சாஸ்திரம்‌ தெரியாத காலத்தீல்‌ ஏற்படுத்திக்கொண்ட கருத்தாகும்‌. இப்பொழுது வான சாஸ்திரம்‌ தெரிந்தவர்கள்‌, பூமி-சூரியன்‌ இவற்றின்‌ இயங்குதல்‌, அதன்‌ கால்‌ அளவு ஆகிய வைகளைக்‌ கண்டுபிடி தீத பின்‌, சூரியனைப்‌ பாம்பு கடிப்பதில்லை என்பதையும்‌ ஒருவாறு நன்றாய்‌ உணர்ந்து இருக்கிறோம்‌. அதுபோலவே, எங்கிருந்து எப்படி மழைத்‌ தண்ணீர்‌ வருகிறதென்பது தெரிந்தவுடன்‌ நதிக்‌ கடவுளும்‌, மேகக்‌ கடவுளும்‌, வருண பகவானும்‌ சிறிது சிறிதாக நம்‌ மனத்தை விட்டு மறையத்‌ தொடங்கி விட்டன. அதுபோலவே, வியாதிகள்‌ எப்படி வருகின்‌ றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும்‌, உடற்‌ கூற்று ஆராய்ச்சியும்‌ நமக்குத்‌ தெரியவந்த பின்பு, பேதி, மாரி, அம்மை முதலிய தெய்வங்களின்‌ உணர்ச்சியும்‌ மதிப்பும்‌ சிறிது சிறிதாக மறையத்‌ தலைப்பட்டன. இதுபோலவே, காற்று, நெருப்பு, பேய்‌ முதலியவைகளும்‌ மறைத்,துவருகின்‌ றன. துப்பாக்கி, பீரங்கி முதலிய www.thamizham.net - Free £ book No 3031 1052 பெரியார்‌ ஈ, வெ. ரா சிநீதனைகள்‌ ஆயுதங்கன்‌ கண்டுபிடிதீத பின்‌ யானை; புலி, சிங்கம்‌ முதலிய தெய்வங்களைப்பற்றிய பயமூம்‌ மறைய ஆரம்பித்துவிட்டன, இந்த முறையில்‌ இனியும்‌ நமக்குள்‌ மீதி இருக்கும்‌ கடவுள்‌ உணர்ச்சிகள்‌ எவை என்று பார்ப்போமேயானால்‌, காரண காரியம்‌, ஆதாரம்‌ முதலிய விவரங்கள்‌ கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள்‌ செயல்‌ என்றும்‌, கடவுள்‌ சக்தி என்றும்‌ சொல்லி வருகின்றோம்‌. இவைகளும்‌ நாளுக்குநாள்‌ மனிதன்‌ அறிவு வளர்ச்சியும்‌, ஆராய்ச்சியும்‌ மூதிர முதிர மறைந்துகொண்டேதான்‌ வரும்‌. மேலும்‌, இப்பொழுது ஒருவருக்குக்‌ கடவுள்சக்தி என்று தோன்றப்படும்‌ காரியங்கள்‌, மற்றொரு வருகீகுக்‌ கடவுள்சகீதி என்று தோன்றப்படாமலிருப்பதையும்‌ பார்க்கின்றோம்‌. அது அவ்விருவருடைய அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றின்‌ விதீதியாசமேயாகும்‌. இப்பொழுதும்‌ நம்‌ மனத்திற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார்‌ செய்யும்போது நாம்‌ அதிசயப்பட்டாலும்‌, அதை மந்திர சக்தி என்று நாம்‌ சொல்லத்‌ துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம்‌ தைரியம்‌ பெற்றுவிட்டோம்‌ என்றாலும்‌ நமக்குப்‌ பூரண அறிவும்‌, ஆராய்ச்சி முடிவும்‌ ஏற்படும்‌ வரை கடவுள்‌ உணர்ச்சி நம்மை விட்டு விலகமுடியா து. அன்றியும்‌, வாழ்கீகையில்‌ பக்குவமடையாதவர்களுகீகுக்‌ கடவுள்‌ உணர்சீசி சிறிதுகாலம்‌ வரை இருந்தே தீருகிறது. அதாவது, கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுகீகும்‌, ஈடு செய்ய முடியாத நஷ்டம்‌ அடைந்தவனுக்ீகும்‌ கடவுள்‌ செயல்‌ என்பதைச்‌ சொல்லி ஆறுதலையும்‌ திருப்தியையும்‌ அடையச்‌ செய்கிறார்கள்‌. நல்ல அறிவும்‌ ஆராய்ச்சியும்‌ உடையவர்களும்‌ தங்களுக்குக்‌ காரண காரியம்‌ எட்டாத கிடத்ீதிலும்‌ ஈடு செய்ய முடியாத இடத்திலும்‌ கடவுள்‌ செயல்‌ என்பதைக்‌ கொண்டு திருப்தி அடைகின்றார்கள்‌. அப்பொழுது தங்கள்‌ அறிவுக்கு மேல்‌ ஒன்று இருப்பதை எண்ணிதீ தீர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்‌. ஆனால்‌, உறுதியான பக்குவம்‌ அடைந்தவர்கள்‌, எந்த விஷயத்திற்கும்‌ தங்களுக்குத்‌ தெரிந்த காரண தீதைக்கொண்டு சமாதானம்‌ அடைவதும்‌, தெரியாததாய்‌ இருநீதால்‌, ¢ நமக்கு எட்ட வில்லை? என்றோ அல்லது ¢ இதுதான்‌ இயற்கை? என்றோ கருதித்‌ திருப்தி அடைவது மாய்‌ இருக்கின்றார்கள்‌. எனவே, சாதாரண மக்களின்‌ கடவுளுக்கும்‌, சற்று அறிவு உடைய மக்களின்‌ கடவுளுக்கும்‌, ஆராய்ச்சிக்காரர்களின்‌ கடவுளுக்கும்‌, பக்குவமடைந்தவர்கள்‌ எண்ணதீதிற்கும்‌ வித்தியாசங்கள்‌ உண்டு. ஒருவருக்கொருவர்‌ கடவுள்‌ வணக்கத்திலும்‌ கடவுள்மீது சுமதீ.தும்‌ பொறுப்பிலும்‌ வித்தியாசங்கள்‌ உண்டு. [ @ அரசு?-கட்டுரை---16-4-1949] கடவுள்‌ என்கின்ற உணரீச்சி மக்களுக்கு எப்பொழுது, எப்படி உண்டாயிற்று என்பதைப்பற்றியும்‌, அவ்வுணர்சீசி மக்களுக்கு எ.துவரையும்‌ இருக்கமுடியும்‌ என்பதைப்‌ பற்றியும்‌ சுருக்கமாக இதன்‌ முன்னர்‌ எழுதியிருந்தோம்‌. அதாவது, மனிதன்‌ உலகத்‌ தோற்றத்திற்கும்‌, நடப்பிற்கும்‌, சம்பவங்களுக்கும்‌ காரணம்‌ கண்டுபிடிக்க முடியாத நிலையில்‌, கடவுள்‌ சகீதி என்றும்‌, கடவுன்‌ செயல்‌ என்றும்‌ நினைதீதுக்கொள்வதும்‌, உதா ரணமாக; அவற்றிற்குக்‌ காரண காரியம்‌ தோன்றிய பின்பு, அந்‌ நினைப்பு கொஞ்சம்‌ கொஞ்சமாக மாறிவிடுவதும்‌ சகஜம்‌ என்பதாகக்‌ குறிப்பிட்டு இருக்கிறோம்‌. இந்த முறை யிலேதான்‌ கொஞ்ச காலதீதிற்குமுன்‌, அனேக விஷயங்கள்‌ கடவுள்‌ செயல்‌ என்று எண்ணி யிருந்த மக்கள்‌, விஞ்ஞான (சயின்ஸ்‌) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணதீதை மாற்றிக்கொண்டு, அனேக விஷயங்களை மனிதன்‌ செயல்‌ என்று சொல்லத்‌ தைரியம்‌ கொண்டுவிட்டார்கள்‌. உதாரணமாக; கம்பியில்லாத்‌ தந்தி விஷயத்தை எடுத்துக்‌ கொள்ளுவோம்‌. கம்பியில்லாதீ தந்தி ஏற்படுத்தி இருக்கும்‌ விஷயமும்‌, அது எப்படிச்‌ செய்யப்படுவது என்கின்ற சயின்ஸ்‌? உணர்ச்சியும்‌ நமக்குதீ தெரியாமல்‌ இருக்குமானால்‌, நாம்‌ இன்னமும்‌ அதை ¢ ஒரு தெய்வீகச்‌ சக்தி? என்றும்‌, பழைய காலத்து ரிஷிகள்‌ பேசிக்‌ கொண்டு இருந்ததாய்ச்‌ சொல்லப்படும்‌, ¢ ஞான சிருஷ்டிச்‌ சம்பாஷணை? என்றுமே சொல்லித்‌ தீருவோம்‌. ஆதலால்‌, மக்களுக்கு அறிவும்‌ ஆராய்ச்சியும்‌ வளர, வளர கடவுள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1053 உணர்ச்சியின்‌ அளவும்‌ குறைந்துகொண்டே போகும்‌ என்பது திண்ணம்‌, அது போலவே, அறிவும்‌ ஆராய்ச்சியும்‌ குறையக்‌ குறைய கடவுள்‌ உணர்ச்சி வளர்ந்துகொண்டே வரும்‌ என்பதும்‌ ஒப்புக்கொண்டாக வேண்டும்‌. இப்பொழுதும்‌ பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான்‌ அனேகமாக, தொட்டதற்கெல்லாம்‌ கடவுளும்‌, அவர்தம்‌ செயல்களும்‌ தாண்டவ மாடுவதைப்‌ பார்க்கின்‌ றோம்‌, அவர்கள்‌ மேலேயே * கடவுள்‌ வருவதை க்கூடப்‌ பார்க்‌ கின்றோம்‌. காட்டுமிராண்டிப்‌ பகீகுவமுடையவர்களிடமே அனேகமாகக்‌ கடவுளைப்பற்றிய கதைகள்‌ என்பவைகளும்‌ புராணங்கள்‌ என்பவைகளும்‌ மதிப்புப்‌ பெற்று இருப்பதையும்‌ பார்க்கின்றோம்‌. . கொஞ்ச காலதீதிற்கு முன்‌ அக்‌ கதைகளை அப்படியே--அதாவது, கடவுன்‌ சகீதியில்‌ நடைபெற்றது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள்கூட இப்பொழுது அப்படியே நம்புவ தற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத்‌ தன்மையை மறைதீ.துக்கொண்டு, ¢ சயின்ஸ்‌ ! மூலம்‌ அக்‌ கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்‌ கொண்டு கஷ்டப்படுகின்றார்கள்‌. இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால்‌, மக்கள்‌ வரவர இப்பொழுது ¢ சயின்‌ ஸுக்கு?ப்‌ பொருதீதமில்லாதவைகளை ஏற்க மறுகீகக்கூடிய நிலைமைக்கு வந்துகொண்டு இருக்கின்றார்கள்‌ என்பது விளங்குகின்றது. மழையை வரச்செய்வதும்‌, செத்தவனை மறுபடியும்‌ பிழைக்கச்‌ செய்வதும்‌, பேச்சுக்களையும்‌, நாட்டியங்களையும்‌ இயந்திரங்களில்‌ பிடித்துக்‌ காட்டுவதும்‌ போன்ற காரியங்கள்‌ மனிதனால்‌ செய்யக்கூடும்‌ என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு, மிக்க பாமர ஜனங்களுக்குக்கூட இவையெல்லாம்‌ கடவுன்‌ செயல்‌ என்கின்ற குருட்டு நம்பிக்கை குறைந்துவருவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றும்‌ இல்லை. எனவே, ஒரு காலத்தில்‌--அறிவு வளர்ச்சியும்‌, ஆராய்ச்சிக்‌ கவலையும்‌ இல்லாதபோது ஏற்பட்ட கடவுள்‌ சம்பந்தமான எண்ணங்கள்‌, இனியும்‌ இருநீதுதான்‌ தீரவேண்டுமா என்றால்‌, அது இருந்து தான்‌ வருகிறது. எப்படியும்‌ அது ஒரு அளவுக்காவது--கொஞ்சமாவது இருந்துவரக்கூடும்‌ என்றே சொல்லுவோம்‌, ஏனெனில்‌ மனிதன்‌; தான்‌ எல்லாம்‌ அறிந்தவன்‌ என்கின்ற ஆணவத்தை உடையவ னரதலால்‌ (தன்‌ புத்திக்கு எட்டாததைத்‌ தனக்குத்‌ தெரியவில்லை என்று கண்ணியமாய்‌ ஒப்புக்கொள்ளச்‌ சுலபதீதில்‌ சம்மதிக்க இஷ்டப்படமாட்டானாகையால்‌, அங்கு--அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப்‌ போனபோது--அவனுக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கையும்‌, கடவுள்‌ செயலும்‌ வந்துதான்‌ தீரும்‌. இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல) பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான்‌ முடியும்‌, அன்றியும்‌, சிலர்‌ உண்மையை அறிந்திருந்தாலும்‌, சுயநலமோ மூடப்பிடிவாதமோ காரணமாகத்‌ தங்களுக்கே புரியாதவற்றைப்‌ பேசிப்‌ பாமர மக்களை மயக்கிக்கொண்டும்‌ இருப்பார்கள்‌. ஏனெனில்‌, மக்களுக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கை இருப்பதாலேயே, அவர்கள்‌ பிழைகீகக்‌ கூடியவர்களாய்‌ இருப்பதனால்தான்‌. எது எப்படி இருந்தபோதிலும்‌, உலகத்தில்‌ கடவுள்‌ சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைநீ.துவிட்டதால்‌, கடவுள்‌ உணர்ச்சியும்‌ எப்படியும்‌ மக்களுக்கு வரவரக்‌ குறைந்து கொண்டுதான்‌ போகும்‌ என்பதில்‌ சந்தேகமே இல்லை. அதற்காக வருதீதப்படுவதிலோ, யார்‌ மீதாவது குற்றம்‌ சொல்வதிலோ பயனில்லை. ஆனால்‌, அவ்விதக்‌ குருட்டு நம்பிக்‌ கையும்‌ மூடப்பிடிவாதமும்‌ ஒழிந்த காலத்தில்தான்‌, உலகத்தில்‌ ஒழுக்கமும்‌ சமதீதுவமும்‌ இன்‌ பமும்‌ நிலைபெறும்‌ என்பது மாத்திரம்‌ உறுதி. [8 குடிஅரசு 8-கட்டுரை--23-4-1949] www.thamizham.net - Free £ book 14௦ 3031 1054 2. மதம்‌ மதம்‌ என்னும்‌ விஷயமும்‌ ஆராயத்‌ தகுந்ததே ஆகும்‌. மனித வரீகீகம்‌ விலங்கு களைப்போல்‌ தனித்தனியே காடுகளில்‌ வாசஞ்செய்துவந்க நிலைமை மாறி, குடிசைகள்‌ கட்டிக்கொண்டு குலாவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்குச்‌ சில கொள்கைகள்‌ தேவை யாகிவிட்டன: எப்படி யெனில்‌, எப்படித்‌ தனியே இருக்கும்‌ மக்கள்‌ ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து, தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால்‌, உடனே அதற்குக்‌ கொள்கைகள்‌ நிர்ணயிக்கவேண்டிய அவசியம்‌ ஏற்பட்டுவிடுகிறதோ, அதேபோல்‌ மனிதர்களின்‌ கூட்டு வாழ்க்கைக்குக்‌ கொள்கைகளை நிர்ணயிக்கவேண்டும்‌ என்ற அவசியம்‌ ஏற்பட்டுவிடுகின்றது)] அதேபோல்‌ தீர்மானிக்க வேண்டியதாகிவிட்டதுஃ அக்‌ கொள்கைகள்‌ தாம்‌ இட்பொழுது மதம்‌ எனப்படுவதாக இருக்கிறது. அம்‌ மாதிரியான: கொள்கை நிர்ணயங்களை மீறக்கூடாது என்பதற்கு நிபந்தனைகள்‌ ஏற்படுத்திட அந்‌ நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைதீ தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்கவேண்டாம்‌ என்று தோன்றிய சமயதீதிலோ, அல்லது சிலரின்‌ சுயநலதீதிறி காகவோ வேறு விததீதில்‌ ஏமாற்றிப்‌ பிழைப்பதற்காக வேண்டியோ, அக்‌ கொள்கைகளைக்‌ கடவுள்‌ என்பவற்றுடன்‌ சம்பந்தப்படுத்‌துவதனால்தான்‌ மக்கள்‌: ஏமாறுவார்கள்‌ என்கின்ற எண்ணங்கொண்டோ, அவற்றைக்‌ ¢ கடவுள்‌ உண்டாக்கினார்‌ ? என்றும்‌, அவற்றிற்கு மீறி நடந்தால்‌, * கடவுள்‌ தண்டிப்பார்‌! என்றும்‌ சொல்லவேண்டியதாய்விட்டது. (இந்த இடந்தான்‌ முதன்‌ முதலாக மனிதன்‌ தவறு செய்த இடமாகும்‌.) ஆனால்‌, இந்தக்‌ கொள்கைகள்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டது எப்படி, எந்த ஆகாரங்‌ களைக்‌ கொண்டு என்று பார்ப்போமேயானால்‌, அது அந்தக்‌ காலத்திய நிலைமை, சிததோஷ்ண ஸ்திதி, மக்களின்‌ அறிவு நிலை--அதாவது பாமர மக்களின்‌ அறிவீனம்‌, சிலரின்‌ சூழ்ச்சித்‌ திறம்‌ ஆகிய நிலையில்‌--அ தாவது கால தேச வர்த்த மானதீதிற்கு ஏற்பச்‌ செய்யப்பட்டவைகள்‌ என்றே சொல்லவேண்டும்‌. மேலும்‌, ஒரு குறிப்பிட்ட கொள்கை, பிற்கால தேச வர்த்தமான தீதிற்கோ, சிலரின்‌ சுயநலதீதிற்கோ ஏற்றதாயில்லாவிட்டால்‌, யாராவது அறிஞர்‌, அல்லது தந்திரக்காரர்‌ அதை மாற்ற நினைக்கும்போது பாமர மக்கள்‌ மூட நம்பிக்கையின்‌ பலனாய்‌, தங்கள்‌ பிடிவாதத்தைக்‌ காட்டி மாற்றச்‌ சம்மதிக்காத காலதீதில்‌ பிரிந்துபோய்ப்‌ புதிய கொள்கைகளை வகுதீது--அதாவது முன்னையதைதி திருத்ிதியோ, அல்லது சிலவற்றை. மாற்றியே, அல்லது சில புதியனவற்றைச்‌ சேர்த்தோ ஏதாவது ஒன்றைச்‌ செய்ய நேரிடும்போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுவதும்‌ உண்டு. இதனால்‌ பாமர மக்கள்‌-அதாவது குருட்டூப்‌ பிடிவாதமுன்ளவர்கள்‌, * என்‌: மதம்‌ பெரிது உன்‌ மதம்‌ சிறிது? என்கின்ற மதச்‌ சண்டைக்கு ஆளாகிவிடவும்‌ நேரிட்டு விடுகின்றது. இந்தச்‌ சண்டையில்லாமல்‌ திருத்தப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியோர்கள்‌, அக்‌ கொள்கைகளை மாற்றாமல்‌, பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கி யானங்களைச்‌ செய்து, திருப்திசெய்ய முயற்சித்து இருக்கின்றார்கள்‌. ஆனாலும்‌, அம்‌ முயற்சிகளின்‌ பலனும்‌, முடிவில்‌ உட்சமயங்களாகவும்‌, சார்புச்‌ சமயங்களாகவும்‌ மாறிற்றே யொழிய, கொள்கைகளின்‌ முக்கியங்கள்‌ திருத்தப்பட முடியாமலேயே போய்விட்டன. இப்படியேதான்‌ மதங்கள்‌ வெகுகாலமாய்‌ மாறி மாறியும்‌, திரிந்து திரிந்தும்‌, பெருகிக்‌ கொண்டும்‌ வந்ததனாலேயே, மதங்களின்‌ உண்மைத்‌ ததீ.துவமும்‌ அவசியம்‌ அறிவதிற்‌ கிலலாமல்‌ போனதோடு, அதை ஒரு சடங்காகவே கொள்ளவேண்டியதாகியும்‌ விட்டது இன்றைய தினம்‌ எந்த மதக்காரனையாவது கண்டு; ¢ உன்‌ மதம்‌ என்ன? அதன்‌ ததீகவம்‌ என்ன 1 என்றால்‌, சில சடங்குகளையும்‌ குறிகளையும்‌ மாதீதிரநீதான்‌ சொல்லுவான ஒழிய, அதன்‌ உண்மைத்‌ தத்துவம்‌--அதாவது, எந்தக்‌ கருத்தைக்‌ கொண்டு ஆதியில்‌ மதத்தை உண்டாக்கினார்களோ அதைக்‌ கூறமாட்டான்‌ $ அறிந்திருக்கவும்‌ மாட்டான்‌. அதோடு, ௮ம்‌ மூலக்‌ கொள்கைக்கு நேர்விரோதமாக அறியாமையும்‌ ஒழுக்க ஈனங்களும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1055 புகுந்‌துவிட்டதன்றி, சிலர்‌ அவற்றைதீ தங்கன்‌ சுயநலதீதிற்கு உபயோகப்படுத்திக்‌ கொள்ளும்‌ கருவியுமாய்விட்டது. சிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள்‌ என்று சொல்லப்படுபவைகள்‌ எல்லாம்‌ பாமர மக்களை ஏமாற்றிக்‌ கொடுமைப்படுத்திப்‌ பணம்‌ பறிதீ.து, புரோகிதக்‌ கூட்டமும்‌ அரசாங்கமும்‌ செல்வந்தனும்‌ பிழைக்கும்‌ மார்க்கங்களாக இருக்கின்‌றனவேயன்றிப்‌ பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்விதப்‌ பலனும்‌ இல்லாமற்‌ போய்விட்டது. மற்றும்‌, மததீதினால்‌ ஏற்பட்டுவரும்‌ கெடுதிகள்‌ என்ன என்று பார்ப்‌ 3ur மானால்‌, முதலாவது, மதம்‌ மனிதனின்‌ அறிவையே அடியோடு கெடுதீதுவிடுகிறது. எப்படி எனில்‌, ஒவ்வொரு மதகீகாரனும்‌ தனது மதப்படி கடவுள்‌ உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தைக்‌ கடவுன்‌ உண்டாக்கினார்‌ என்று நம்புவதாகக்‌ காணப்பட்டாலும்‌, மற்றொரு மதக்காரனும்‌ அப்படி தீதானே சொல்லுகிறான்‌ | ஆதலால்‌, அவர்களுக்கு வேறு மதத்தையும்‌, நமக்கு வேறு மததீதையுமா கடவுள்‌ செய்து இருப்பார்‌ என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம்‌ மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியே அவர்‌ மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரா? அப்படியானால்‌, இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால்‌, மத ஆச்சார்‌ யார்கள்‌, மத அபிமானிகள்‌ என்பவர்கள்‌ முதலாக எவருமே கரு.துவதில்லைஃ இந்த ஒரு காரணத்தாலேயே, மதம்‌ மக்களின்‌ அறிவை எவ்வளவு தூரம்‌ கெடுத்து இருக்கின்றது என்பது விளங்கும்‌. இரண்டாவது, மனிதர்களின்‌ ஒற்றுமைக்குப்‌ பதிலாக மனிதனை மனிதன்‌ பிரிதீதுக்காட்டவே மதம்‌ உதவுகிறது. மூன்றாவதாக, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தி அடையச்செய்கின்றதே ஒழிய, ஒழுக்கதீதில்‌ சிறிதும்‌ கவலை செலுத்த நிர்ப்பந்திப்பதில்லை. நான்காவது, எந்த மதத்திலும்‌ பகுதீதறிவுக்குச்‌ சிறிதும்‌ இடம்‌ இல்லை. ஏனென்றால்‌, எவ்வளவு நல்ல மதமானாலும்‌, முதலில்‌ ஏதாவ தொன்றை--அதாவது நமது அறிவிற்கும்‌, பஞ்சேந்திரியத்திற்கும்‌ எட்டாததைக்‌ குருட்டுத்‌ தனமாய்‌ நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌ என்று சொல்லாமல்‌ இருப்பதில்லை. அப்படியானால்‌, அம்முறையில்‌ ஒன்றை நம்பிவிட்டு, அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக்‌ காரணமுமில்லை. அய்நீதாவது, மதமானது கடவுளுக்கும்‌ நமக்கும்‌ இடையில்‌ தரகர்களை உண்டாக்கி, அதீ தரகர்களின்‌ நடவடிக்கையையும்‌, வார்தீதையையும்‌--அது எவ்வளவு அசம்பாவிதம்‌ ஆனாலும்‌, சொந்த அறிவைவிட, பிரதீதியட்ச அனுபவத்தைவிட மேலான தாக நினைக்கச்செய்கிறது. அன்றியும்‌, மதமானது பணச்செலவு செய்யும்‌ அளவுக்கு மோட்சமும்‌ பாவமன்னிப்பும்‌ இருப்பதாகவும்‌, எவ்வித அக்கிரமங்களுக்கும்‌ வணக்கத்தின்‌ மூலம்‌ மன்னிப்பு இருப்பதாகவும்‌ நம்பச்‌ செய்வதால்‌, மனிதனை அக்கிரமம்‌ செய்யவும்‌, அவ்வாறு செய்வதன்மூலம்‌ பணம்‌ சம்பாதிக்கவும்‌ தூண்டுகிறது. சோரம்பேறிப்‌ பிழைப்புக்குதி தாராளமாய்‌ மதம்‌ இடம்‌ கொடுக்கின்றது. மதம்‌ மக்களைக்‌ கோழைகளாக்குகின்றது. மதத்தினால்‌ இவ்வளவு அறிதிகள்‌. ஏற்பட்டும்‌, உலக சம்பவங்களின்‌ உண்மைக்‌ காரண காரியங்கள்‌ உணர்வதற்கு இல்லாமல்‌: நிர்ப்பந்தமாய்‌ மக்கள்‌ மதத்தினால்‌ தடுக்கப்படுகின்றார்கள்‌. இவ்வனவும்‌ தவிர, ஒருவ னுடைய உழைப்பில்‌ மற்றும்‌ ஒருவனை வாழும்படி செய்கின்றது. நிற்க, உண்மைச்‌ சைவன்‌ என்பவன்‌ ஒருவன்‌ எவ்வளவு அயோகீகியனானாலும்‌ ஒரு துளி சாம்பல்‌ அவண்‌. மேல்‌ பட்டுவிட்டால்‌ உடனே அவனுடைய சகல பாவமும்‌ தீர்ந்து, நேரே ¢ கயிலயங்‌ கிரி£க்குப்‌ போய்விடலாம்‌ என்கிறான்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌, வக்கீல்‌ தொழில்‌ செய்ப வனும்‌, பொய்ப்‌ புராணப்‌ பிரசங்கம்‌ செய்பவனும்‌ விபூதி பூசிக்‌ கொள்ளுகிற காரணத்தி னாலேயே தன்னை ஒரு சைவன்‌ என்று எண்ணிக்கொண்டு இருக்கிறான்‌. பிறரும்‌ அப்படியே எண்ணவேண்டுமென்றும்‌ ஆசைப்படுகிறான்‌ என்றால்‌, சைவனின்‌ யோக்கியதி திற்கும்‌, சைவ சமயத்தின்‌ பெருமைக்கும்‌ வேறு சாட்சியம்‌ தேவையா 1 அதுபோலவே, ஒரு உண்மை வைணவன்‌ என்பவனும்‌ ஒரு தடவை ராமா என்று சொல்லிவிட்டால்‌ சகல: பாவமும்‌ தீர்நீ.துவிட்டது என்கிறான்‌. கிராமனைவிட உலகில்‌ வேறு தெய்வம்‌ இல்லை www.thamizham.net - Free £ book 14௦ 3031 1056 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ என்கிறான்‌. அதுபோலவே, ஒரு உண்மைக்‌ கிறிஸ்தவன்‌ என்கிறவனும்‌ ¢ ஏசுவை அடைந்‌ தால்‌ சகல பாவமும்‌ தீர்ந்துவிடும்‌ ? என்கின்றான்‌. அன்றியும்‌, ¢ ஏசுவின்மூலம்‌ அல்லாமல்‌ பாவமன்னிப்பு என்பது கிடையவே கிடையாது? என்கிறான்‌, அதுபோலவே, ஒரு முஸ்லிம்‌, * குர்‌-ஆனில்‌ சொல்லப்பட்டதெல்லாம்‌ கடவுள்‌ வாக்கு) அது எந்தத்‌ தேசத்திற்கும்‌ எந்தக்‌ காலதீதிற்கும்‌ பொருந்தியது. அதில்‌ உள்ள ஒரு கோடாவது மாறினால்‌ இஸ்லாம்‌ மதமே போய்விடும்‌ ? என்கின்‌ றான்‌. இப்படியே ஒவ்வொரு மததீதிற்கும்‌ ஒவ்வொரு பெருமையைக்‌ கூறி, அதுவேதான்‌ உண்மையான மதம்‌ ) முறையே கடவுள்‌ அவதாரம்‌, கடவுள்‌ குமாரன்‌, கடவுள்‌ தூதன்‌ ஆகியவர்களால்‌ ஏற்பட்டது என்றும்‌ சொல்லுகின்றார்கள்‌. [6 குடி அரசு £-கட்டுரை--23-4.1549] 8. கடவுள்‌ தலைவரவர்களே ! பெரியோர்களே ! தோழர்களே *கடவுள்‌? என்னும்‌ விஷயம்‌ அற்பமானதாகவும்‌ கருதப்படலாம்‌) பிரமாத மான தாகவும்‌ கருதப்படலாம்‌. எப்படி எனில்‌, சாதாரண மக்களுக்குக்‌ கடவுள்‌, மதம்‌, அரசியல்‌ விஷயங்களின்‌ ததீதுவம்‌ மிகவும்‌ அலட்சியமானதாகும்‌. பெரிய அறிஞர்களுக்கு இந்த விஷயங்கள்‌ அபாரமானதும்‌ மிக நுணுக்கமாக அறிந்து பேசதீ தகீகதுமாகும்‌. நான்‌ எனது ததீதுவதீதை எடுதீ.துச்‌ சொல்லப்‌ பயப்பட்டால்‌, அல்லது பித்தலாட்டம்‌ செய்தால்‌ நான்‌ என்னையே வெறுதீதுக்கொள்ள வேண்டியவனாவேன்‌. ஆகவ, என்னை நாஸ்திகன்‌, மதத்‌ துவேஷி என்று ஆஸ்திகன்‌ சொல்லுவது மகா மகா அறியாமையும்‌ அலட்சிய புதீதியும்‌ ஆகும்‌. இதை ஓர்‌ உதாரணம்‌ காட்டி விளக்குகிறேன்‌. ஓர்‌ ஊரில்‌ ஒரு பிச்சைப்‌ பிழைப்புப்‌ பார்ப்பனன்‌ £, ஒரு நல்ல காரியம்‌ நடந்ததற்காகப்‌ பிச்சை கொடுக்கும்‌ ஒரு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான்‌. அவ்‌ வீட்டுக்காரர்‌ மற்றவர்களுக்குக்‌ கொடுத்த துபோல்‌ இவனுச்கும்‌ 4 அணா கொடுதீதார்‌, அதற்கு அந்தப்‌ பிச்சைக்காரப்‌ பார்ப்பான்‌ அந்த வீட்டுக்காரரைப்‌ பார்த்துக்‌ கோபித்துக்கொண்டு, ஏ! ஓய்‌! தற்பெருமை, அன்னியர்களைக்‌ குறை கூறுதல்‌, பணத்தாசை ஆகிய மூன்றையும்‌ துறந்து 4 வேதம்‌, 6 சாஸ்திரம்‌, 18 புராணம்‌, தர்க்கம்‌ மீமாம்சம்‌, ததீ.துவஞானம்‌ ஆகியவைகளைக்‌ கற்ற மிக மேதாவியும்‌, மகா பண்டிதனுமான எனக்கும்‌ 4 அணா, இந்த ஒன்றும்தெரியாத முட்டான்‌ கழுதைக்கும்‌ 4 அணாவா? வெகு யோக்கியமாய்‌ இருக்கிறதே உம்முடைய தர்மம்‌! என்று கேட்டான்‌. அதுபோல்‌ இருக்கிறது ஓர்‌ ஆஸ்திகன்‌ என்பவன்‌ ஒருவனைப்‌ பாரீதீது நாஸ்திகன்‌ என்று சொல்லுவது என்கிறேன்‌. ஏனெனில்‌, இந்த ஆஸ்திகன்‌ கடவுளை எப்படி அறிநீதிருக்கிறான்‌ என்றால்‌, * கடவுள்‌ சர்வ வல்லமை உள்ளவர்‌; சர்வ வியாபி ) சரீவதீதையும்‌ நடதீதுகிறவர்‌ $ அவருக்கு மேம்பட்டவர்‌ எவரும்‌ இல்லை; அவர்‌ அன்றி ஒரு காரியமும்‌ நடைபெறுவதில்லை? என்பதாக அறிந்திருப்பதாகச்‌ சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கடவுளை நான்‌ இல்லை என்பதாகவோ, மறுப்பதாகவே சொல்லுகிறார்‌ என்றால்‌ இது அந்தப்‌ பார்ப்பனன்‌ சொன்னதற்கே சமமானதாகும்‌. அந்தப்‌ பார்ப்பனன்‌ முதலில்‌ தன்னிடம்‌ ஆதீமஸ்துதி, பரநிந்தை, திரவிய அபேட்சை இல்லை என்றும்‌ தான்‌ அவைகளை வெறுதீகவிட்டவன்‌ என்றும்‌ சொல்லிவிட்டு, உடனே, * நான்‌ 4 வேதம்‌, 6 சாஸ்திரம்‌ முதலியவைகளைப்‌ படித்துக்‌ கரைகண்ட மேதாவி யாகிய மகா பண்டிதன்‌ ? என்கிறான்‌, இதில்‌ அவன்‌ தற்பெருமையை வெறுத்த யோக்கியதை தெரிகிறது. www.thamizham.net - Free £ book No 3031 தத்துவம்‌ 1057 அதுபோலவே, பரநிந்தை-அன்னியனை இழிவாக்குவது, வைவது தன்னிடம்‌ இல்லை என்று சொல்லிவிட்டு, * இந்த ஒன்றும்‌ தெரியாத முட்டாள்‌. மடையனுகீகுமா நாலணா? என்கிறான்‌. அடுத்தபடியாகதீ தனக்குப்‌ பண ஆசையே இல்லை என்று சொல்லிவிட்டு, *இந்த 4 அணாதானா கொடுப்பது P என்கிறான்‌. எனவே, தன்னைப்பற்றி அவன்‌. சொன்னது அத்தனையும்‌ பொய்‌ என்பதும்‌, கற்பனை என்பதும்‌ பின்னால்‌ சொல்லியதிலிருந்து வெளியாகிவிட்டன. அதுபோலவே, எல்லாம்‌ வல்ல, எங்கும்‌ நிறைந்த, யாவற்றையும்‌ செய்விக்கிற கடவுளை--ஒரு மனிதன்‌ இல்லை என்று சொல்லுகிறான்‌ என்று சொன்னால்‌, ஒன்று அந்த ஆஸ்திகன்‌ கடவுளுக்கு மேற்கண்ட குணங்கள்‌ இருப்பதாகச்‌ சொன்னது பொய்யாகவும்‌, கற்பனையாகவும்‌ இருக்கவேண்டும்‌) அல்லது, மற்ற மனிதனைப்‌ பார்தீகு, நாஸ்திகன்‌, கடவுள்‌ இல்லை என்பவன்‌! என்று சொன்னது தவறாக, அறியாமையாக, யோசனை அற்றதாக இருக்கவேண்டும்‌. இருக்கிற கடவுளை--இல்லை என்று சொல்வதில்‌, சொல்பவனுக்கு என்ன இலாபம்‌ 2 அல்லது, சர்வத்தையும்‌ செய்விக்கிற-சொல்லச்‌ செய்கிற ஒரு கடவுள்‌ இப்படியாக ஒருவனைச்‌ சொல்லவும்‌, நினைக்கவும்‌ செய்வதில்‌ கடவுளுக்குதீதானாகட்டும்‌ என்ன. கலாபம்‌ வரும்‌ 1 ஆகவே, ஒரு மனிதன்‌ இப்படி முட்டாள்தனமான காரியத்தைச்‌ செய்வானா ! அல்லது, ஒரு கடவுள்‌ இப்படிப்‌ பைதீதியக்காரத்தனமான. காரியத்தைச்‌ செய்விப்பாரா என்பதையாவது ஒருவன்‌ கடுகளவு நினைதீதாலும்‌, சிந்திக்கும்‌! சக்தியைப்‌ பயன்‌ படுத்தினாலும்‌ மற்றவனை--நாஸ்திகன்‌, கடவுளை, மறுக்கிறவன்‌ என்று குறையோ, குற்றமோ சொல்லமாட்டான்‌. ஒருவனைப்‌ பார்த்து, * அவன்‌ நாஸ்திகன்‌) கடவுள்‌ இல்லை என்று சொல்லு கிறவன்‌ ? என்று சொல்லுவதே நாஸ்திகமாகும்‌) கடவுளைச்‌ சரியாக அறியாததேயாகும்‌. அந்த வார்திதையை உண்டாக்கினவர்களே நல்ல நாஸ்திகர்களாவர்‌. கடவுள்‌ இருந்தால்‌, ஒரு மனிதன்‌ ¢ கடவுள்‌ கில்லை? என்று சொல்லமுடியுமா 8 அல்லது, ஒருவன்‌ இல்லை என்று சொல்லுகிறான்‌ என்று, மற்றவன்‌ நினைக்கவாவது முடியுமா? ஆகவே, நாஸ்திகம்‌, நாஸ்திகன்‌ என்பன கடவுள்‌ வியாபாரக்காரர்கள்‌ தங்கள்‌ வியாபார தீதிற்கு ஆதரவாகக்‌ கண்டு பிடிதீத உப கருவிகளேயாகும்‌. கடவுள்‌ வியாபாரக்காரனுக்கு அல்லாமல்‌ மற்ற வனுக்கு இந்தக்‌ கவலையே இருக்க நியாயமில்லை. கடவுள்‌ பற்றிய ததீ.துவ விளக்கம்‌ என்றால்‌--கடவுள்‌ நிர்வாணமாய்‌, பட்டாங்கமாய்க்‌ காணப்படும்‌ வரையில்‌ ஆராய்ச்சி செய்வது என்பதாகும்‌. ஒரு விஷயத்தைத்‌ தத்துவ விசாரணை செய்ய முதலில்‌ என்ன; ஏன்‌, எதற்காக, எப்படி, எங்கே, எப்போது என்பன போன்ற கேள்விகளைப்‌ போட்டு திருப்தியான பதில்‌ பெறவேண்டும்‌. தயவு தாட்சண்யமற்ற கேள்வி போடவேண்டும்‌. ததீதுவ விசாரணை என்பதும்‌, தர்க்க வாதம்‌ என்பதும்‌ ஒன்றுக்‌ கொன்று சம்பந்த முடையவையாகும்‌. ஆகையால்‌ சர்வ சக்தி, சர்வ வியாபகம்‌, சர்வதீ தையும்‌ நடத்துதல்‌ ஆகிய அபார குணங்களைக்‌ கொண்ட ஒரு ¢ பரம்பொருளை ப்‌ பற்றித்‌ இதிதுவ விசாரணை செய்கிறவர்கள்‌ இந்த 6) 7 கேள்விகள்‌ மாதீதிரமல்லாமல்‌ இன்னும்‌ 60, 70 சோதனைகள்‌ செய்து பார்க்கவேண்டும்‌. பக்தனுக்கு இது தேவை இருக்காது; தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமாகும்‌. கடவுள்‌ மூட பகீதியால்‌, குருட்டு நம்பிக்கையால்‌ விளங்குபவராக இருக்கக்கூடாது. வேறு யாருக்காகிலும்‌ அப்படி விளங்கினாலும்‌, பகுத்தறிவுள்ள மனிதனுக்கு--அதிலும்‌ தத்துவ விசாரணைக்காரனுக்கு அப்படிக்‌ குருட்டு நம்பிக்கையில்‌ விளங்கக்‌ கூடாது என்பேன்‌. 1686-33 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1058 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ எதற்காகக்‌ கடவுள்‌ ? ஏன்‌ கடவுள்‌ | எது கடவுள்‌! என்கின்ற விளக்கம்‌ அவசியம்‌ ஒவ்வொரு ததீதுவ விசாரணைகீகாரனுக்கும்‌ விளங்கியாகவேண்டும்‌. மனிதனுக்குப்‌ பகுதி தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர கண்மூடித்தனமான மிருகதி தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன்‌ தப்பாகப்‌ பயன்படுத்தி, அதிகமான தொல்லையில்‌ மாட்டிக்கொண்டிருக்கிறான்‌. இந்தத்‌ தொல்லைக்குப்‌ பரிகாரமாகக்‌ கடவுளைச்‌ சிருஷ்டிதீதுக்கொண்டான்‌. அரசன்‌ ஏன்‌ 1 குடிகள்‌ ஏன்‌ 1 ஏழை, பணக்காரன்‌ ஏன்‌ T மேல்‌ சாதி, கீழ்சாதி ஏன்‌? உழைப்பாளி அடிமையும்‌, சோம்பேறி எஜமானும்‌ ஏன்‌ ? பிச்சைக்‌ காரன்‌; பிரபு ஏன்‌ § இந்தத்‌ தன்மைகளை ஏற்படுத்தவும்‌, நிலைநிறுத்தவும்‌ பாதுகாக்கவும்‌ அள்லாமல்‌: கடவுளால்‌ கண்ட வேறு பயன்‌ என்ன 1 அவர்‌ செய்த நல்ல காரியம்‌ என்ன 1 இந்த வேலை களுக்குக்‌ கடவுள்‌ வேண்டுமா 2 பகுத்தறிவு கொண்ட மனிதன்‌ சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல்‌, கவலை இல்லாமல்‌, அதிருப்தியில்‌ குறையோடு சாவதற்குக்‌ காரணம்‌, கடவுள்‌ அல்லாமல்‌ வேறு என்னவாய்‌ இருக்கக்கூடும்‌ ₹ அவனவன்‌ முட்டாள்‌ தனம்‌ காரணம்‌ என்றால்‌, பகுத்தறிவு இருப்பது எதற்காக 8 முட்டாள்‌ தனத்தை உண்டாக்கவா1 பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள்‌, கவலைகள்‌, குறைபாடுகள்‌, இனவெறுப்புகள்‌, துரோகங்கள்‌, பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்‌ i பகுத்தறிவற்ற துஷ்ட ஜஐந்துக்களிடம்‌ இல்லாத கெட்ட குணங்கள்‌ பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில்‌ இருப்பானேன்‌ % கடவுளைக்‌ கண்ட தாலா கடவுளைக்‌ கற்பித்‌ துக்கொண்டதாலா? கடவுள்‌ தன்மையை, கடவுள்‌ சகீதியைதீ தவறாகக்‌ கொண்டதாலா? எதனால்‌ என்பது; பகுதீதறிவுக்குக்கூட எப்படிப்‌ பரிகாரம்‌ செய்து கொள்வது என்பது முடியவில்லையானால்‌, பகுத்தறிவின்‌ பயன்‌ தான்‌ என்ன ? கடவுளின்‌ தன்மைதான்‌ என்ன? கடவுள்‌ எதற்காக? அது மனிதனுக்குத்‌ தானாகத்‌ தோன்றியதா 1 அல்லது, வேறு மக்களால்‌ தோற்றுவிக்கப்பட்டதா? தானாகத்‌ தோன்றியிநுகீகுமானால்‌ ஏன்‌ எல்லோருக்கும்‌ தோன்றவில்லை 1 தோன்றியவர்களுக்கும்‌ ஏன்‌ பலவிதமாய்தீ தோன்றவேண்டும்‌ ? அதன்‌ தன்மைகளும்‌ சக்திகளும்‌ கூட பலவிதமாய்தீ தோற்றப்படுவானேன்‌ ₹ தோற்றுவிக்கப்பட்டவையானால்‌, எதற்காகத்‌ தோற்றுவிக்கப்பட்டன 1 எந்தக்‌ காரணத்துக்காகத்‌ தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தக்‌ காரணம்‌ நிறைவேறிற்றா ? தோற்று வித்தவர்ஃள்‌ வெற்றி கண்டார்களா? கடவுள்‌ காணப்பட்டும்‌ அல்லது கடவுள்‌ கற்பிக்கப்‌ பட்டும்‌ மனிதன்‌ ஏன்‌ கடவுள்‌ தன்மைக்கு--கடவுள்‌ விரும்புகிற தன்மைக்கு மாறாக நடக்கிறான்‌ 8 கடவுளால்‌ சர்வமும்‌ நடைபெறுகின்றன. கடவுள்‌ சர்வ வல்லமை; சர்வ வியாபகம்‌ உள்ளவர்‌ என்பதாக இருந்தும்‌ கடவுளால்‌ என்ன காரியம்‌ நடக்கிறது? எதையும்‌ கடவுள்‌ பெயரைச்‌ சொல்லி மனிதன்‌ தான்‌ செய்கிறான்‌ ) கடவுளை அலட்சியப்படுததிவிட்டு, கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம்‌ என்பதைக்கூட மனிதன்‌ செய்கிறான்‌. மனிதனுக்கு வேண்டாததும்‌, மனிதனுக்குக்‌ கேடான காரியமும்‌ நடந்தவண்ணமாய்‌ இருக்கின்றன. ஒரு காரியமாவது கடவுள்‌ உணர்ச்சி உள்ள உலகில்‌ பூரணதீதுவம்‌-அதாவகு) திருப்தி உள்ளகம்‌ குறை இல்லாத துமான காரியம்‌ என்பதாகக்‌ காணக்கூடியதாகவே &ல்லைஃ மனித எதீதனப்‌ பாதுகாப்பு இல்லாவிட்டால்‌, வாழ்க்கையில்‌ ஒரு காரியமும்‌ பத்திரப்படாது என்பதோடு-கடவுளுக்குக்கூடப்‌ பத்திரமில்லை என்‌ றே சொல்லலாம்‌. [சேலம்‌ கல்லூரியில்‌ ஆற்றிய சொற்பொழிவு குடிஅரசு? 23-11-1986] www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1059 கடவுள்‌ விஷயமாய்‌ D4 கட்டுரையின்‌ நோக்கம்‌ என்னவென்றால்‌, கடவுள்‌ என்பதைப்‌ பற்றி--கடவுள்‌ என்பதற்காக, மனிதர்கள்‌ இன்று நடந்துகொள்ளும்‌ தன்மை, பான்மை சரியா, அவை அவசியமா என்பதேயாகும்‌. முதலாவது, இக்‌ கட்டுரையின்‌ நோகீகம்‌--கடவுளைக்‌ காப்பாற்ற, கடவுள்‌ ஒருவரோ பலரோ உருவமாகவோ, அருவமாகவோ; மற்றெப்படியாகவோ கடவுள்‌ இருக்கிறார்‌. என்பதாக மக்களுக்கு மக்கள்‌ எடுத்துச்‌ சொல்லவேண்டியதும்‌ பிரச்சாரம்‌ செய்ய வேண்டியதும்‌ அவசியம்தானா 1 இரண்டாவதாக, கடவுள்‌ எண்ணம்‌ மகீகளுக்கு மறைநீதுபோய்விட்டது. அதை ஞாபகப்படுத்த பிரசீசாரக்காரர்களைசி சம்பளத்திற்கு வைதீது-பசதிரிகளை; குருமார்களை ஏற்படுத்தி, கடவுள்‌ தத்துவத்தைப்‌ போதிக்க ஸ்தாபனங்கள்‌ ஏற்படுத்தவேண்டியது அவசியந்தானா 4 மற்றும்‌, நாத்திகர்கள்‌ பலர்‌ தோன்றி, கடவுள்‌ இல்லை என்று நாதீதிகப்‌ பிரச்சாரம்‌ செய்குவருவதால்‌ கடவுள்‌ கரைந்கு வருகிறார்‌. ஆதலால்‌, கடவுளைக்‌ காப்பாற்ற2வண்டியது மிக மிக அவசியம்‌ என்று பலர்‌ கருதி, ஆத்திகப்‌ பிரச்சாரம்‌ செய்து கடவுளைக்‌ காப்பாற்ற வேண்டியது அவசியந்தானா i மற்றம்‌, கடவுளுக்குக்‌ கோயில்‌ வேண்டுமா 1 கடவுளுக்குப்‌ பெண்டாட்டி வேண்டுமா ¢ கடவுளுக்குக்‌ காம விகாரம்‌ உண்டா 1 கடவுளுக்குக்‌ குழந்தைகள்‌ வேண்டுமா? கடவுளுக்குத்‌ தாசி, போக மாதர்கள்‌ வேண்டுமா $ கடவுளுக்குப்‌ படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம்‌, உற்சவம்‌, ஊர்வலம்‌ வேண்டுமா இவை ஒருபுறம்‌ இருக்க, கடவுள்‌ சகீதிகீகு-செய்கைகீகு ஏதாவது அளவு உண்டா 1 அல்லது, அவர்‌ எல்லாம்‌ வல்லவரும்‌ எல்லாவற்றிற்கும்‌ பொறுப்பானவருமா ₹ அவருடைய சக்திக்கும்‌ செயலுக்கும்‌ எல்லை உண்டா ₹ இல்லையா? கடவுள்‌ சகீதியை உணர்ந்தவன்‌ கடவுளைக்‌ காப்பாற்றக்‌ கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே, * சர்வ சக்தியுள்ள கடவுள்‌ ஒருவர்‌ இருக்கிறார்‌] அவனன்றி ஒரு அணுவும்‌ அசையாது? என்று மனப்பூர்வமாய்‌ நம்பி இருக்கும்‌ ஒருவன்‌ கடவுளைக்‌ காப்பாற்ற முற்படுவானா? கடவுள்‌ இல்லை என்று ஒருவன்‌ சொன்னால்‌ அவன்மீது பாய்ந்து கோபிப்பானா ₹ இந்தப்படி கடவுளைப்பற்றிக்‌ சவலைப்படுகிறவர்‌, கடவுன்‌ பிரச்சாரம்‌ செய்கிறவர்‌ களில்‌ யாராவது தங்களது எண்ணதீதில்‌, நடத்தையில்‌ கடவுள்‌ சிதீதப்படி நடப்பவர்‌ களாகவோ; கடவுளுக்குப்‌ பயந்து நடப்பவர்களாகவோ, அல்லது கடவுன்‌ தன்மையில்‌ மதிப்பும்நம்பிக்கையும்‌ பயமும்‌ கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படுகிறார்களா 1 கடவுன்‌ நம்பிக்கை உடையவன்‌ எஉனாக இருந்தாலும்‌ அவன்‌ கடவுளைத்‌ தொழ வேண்டுமா ¢ பூசிக்க வேண்டுமா i தொழுதாலும்‌, பூசிதீதாலும்‌ அதற்கு ஒரு நேரம்‌, ஒரு கிடம்‌, ஒரு உருவம்‌, ஒரு வாக்கியம்‌, பாட்டு வேண்டுமா? மற்றும்‌, அதற்குப்‌ பண்டம்‌ படைப்பு வேண்டுமா? உண்மையாகக்‌ கடவுள்‌ இருப்ப தானாலும்‌, இருப்பதாக நம்புவதானாலும்‌ பல மதக்காரர்களும்‌ இன்று கடவுள்‌ சம்பந்தமாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1060 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நடந்துகொள்ளும்‌ நடதீதைகள்‌ அவசியமா $--என்பனவாகியவைகள்‌ ஒருபுறம்‌ இருக, தங்களைப்‌ பெருத்த அறிவாளிகள்‌ என்றும்‌, எல்லாம்‌ அறிந்த மேதாவிகள்‌ என்றும்‌ கருதிக்‌ கொண்டிருக்கும்‌ சிலர்‌ கூறுகிறபடி, அதாவது--* கடவுள்‌ இருக்கிறதோ, இல்லையோ அது வேறு விஷயம்‌ $ கடவுன்‌ என்பதாக ஒரு சர்வ சக்தி உள்ளவர்‌ ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று மக்கள்‌ நம்பும்படி செய்தால்தான்‌ மக்கள்‌ யோகீகியமாய்‌, பிறருக்குத்‌ தீங்கிழைக்காமல்‌ நடந்துகொள்ளுவார்கள்‌ ] ஆதலால்‌, கடவுள்‌ பயம்‌ மக்களுக்கு இருக்கவேண்டும்‌; அந்தப்‌ பயத்தைத்‌ தெளியவைக்கக்கூடாது? என்று சொல்லுகிறார்களே-அதைப்பற்றிச்‌ சிறிது சிந்தித்தால்‌, அவர்கள்‌ கருதுவதுபோல்‌, கடவுள்‌ உணர்ச்சியையும்‌) கடவுள்‌ தன்மை களையும்‌) நியாயத்‌ தீர்ப்புகளையும்‌) பயப்படதீதக்கக்‌ கொடூர ரூபம்‌ உள்ள நரக வேதனைகள்‌, செக்கில்‌ போட்டு ஆட்டுதல்‌ முதலிய பலமான தண்டனைகளையும்‌) பின்‌ ஜென்மத்தில்‌ பல கஷ்டமான இழிவுகளையும்‌ துன்பங்களையும்‌ தரத்தக்க தலைவிதி களையும்‌) மற்றும்‌ பலவித மோட்ச சுகங்களையும்‌, உயர்‌ பிறவிகளையும்‌, சுக3பசகங்‌ களையும்‌ தரதீதக்க முன்‌ ஜென்ம புண்ணிய கருமங்களையும்‌ ) அவைகளுக்கு ஏற்ற கடவுள்‌ வாக்கு, வேதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌ முதலிய கற்பனைகளையும்‌ எவ்வளவோ கெட்டிக்‌ கார த்தனமாய்‌ கற்பனைசெய்து மக்களுக்குன்‌ பல ஆயிரம்‌ ஆண்டுகளாகப்‌ புகுத்தி வந்தும்கூட, இன்று வரையில்‌ மக்களில்‌ பெரும்பாலோர்‌--ஏறக்குறைய எல்லச மக்களும்‌ யோக்கியமாய்‌, மனிதனை மனிதன்‌ ஆட்கொல்லாமல்‌, சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல்‌ இருக்கமுடியவில்லைய-அது ஏன்‌ என்றும்‌, கடவுள்‌: உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம்‌ மக்களுக்குள்‌ ஊட்டியதால்‌ ஏதாவது பயன்‌ ஏற்பட்டு இருக்கிறதா என்றும்‌ பார்தீதால்‌, ¢ மனிதன்‌ ஒழுக்கதீதிற்குக்‌ கடவுள்‌ உணர்ச்சி வேண்டும்‌ ? என்கின்ற வாதமும்‌ அடிபட்டுப்போகின்றதே 1 ஏன்‌ எனில்‌, உலகில்‌ அறிவில்லாத பாமர ஏழை மக்கன்‌ மாதீதிரநீதான்‌ ஒழுக்கமற்று, நாணயமற்று, உண்மையற்று நடந்துகொள்கிறார்கள்‌ என்பது அல்லாமல்‌, கற்ற மக்கள்‌, செல்வவான்கள்‌, பெரும்‌ பதவியில்‌ உள்ளவர்கள்‌, மிகமிகப்‌ பகீதிமான்கள்‌, குருமார்கள்‌ உட்பட எல்லோருமே பெரிதும்‌ விதிவிலக்கு இல்லாமல்‌, கீழ்மக்கள்‌ தன்மையாய்‌ நடந்து கொள்கிறதைப்‌ பார்க்கிறோமே ! ஆகவே, கடவுள்‌ உணர்ச்சிக்கும்‌, ஒழுக்கதீதிற்கும்‌, உயர்‌ குணத்திற்கும்‌ சிறிதும்‌ சம்பந்தமில்லை என்று தெளிவாகிவிடவில்லையா 1 கடவுளுக்கு உருவம்‌ எதற் ஐ என்றால்‌ அதற்கு ஒரு சமாதானம்‌ கூறப்படுகிறது) அது என்னவென்றால்‌, * பாமர முட்டான்‌ ஜனங்களுக்கு, கடவுளின்‌ அருவ-(உருவமற்ற) தன்மை விளங்காது. ஆதலால்‌, கடவுளை ஒரு உருவமாககீ காட்டி, அந்த உருவம்‌ மக்கள்‌ உள்ளத்தில்‌ பய ரூபமாய்‌, அடிமை ரூபமாய்‌ விளங்க; கடவுள்‌ உருவங்களுக்குப்‌ பல கோர கொடூரச்‌ செயல்களைக்‌ கற்பித்து, அதோடு கடவுளை மேல்சாதியாகக்‌ கற்பித்து, அவைக ளிடதீதில்‌ பக்தி உண்டாகும்படி செய்வதற்காக, கடவுளுக்கு உருவம்‌ அறிவாளிகளால்‌ கற்பிக்கப்பட்டதாகும்‌ ? என்று சொல்லப்படுகிறது. இதையும்‌ சிறிது சிந்தித்தால்‌ கிதன்‌ பயனற்ற தன்மையும்‌ அறியாமையும்‌ சூழ்ச்சியும்‌ விளங்காமல்‌ போகாது. சாதாரணமாக, நம்‌ நாட்டில்‌ கடவுளுக்கு உருவங்கள்‌ ஏற்படுதீதி, வழிபாடு செய்யத்‌ துவங்கிய காலம்‌ 2000, 8000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம்‌. அதாவது, ஆரியர்‌ நம்‌ நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப்‌ புகுதீதி, அதன்‌ மூலம்‌ கடவுள்களைக்‌ கற்பித்து, அவற்றிற்கு உருவங்கள்‌ ஏற்படுத்தின காலத்தில்‌ இருந்‌ 2, நம்‌ நாட்டில்‌ உருவக்‌ கடவுள்கள்‌ காட்சியளித்துவருகின்‌றன எனலாம்‌. அதற்கு ஆதாரம்‌ என்னவெனில்‌, எந்தக்‌ கடவுளது உருவத்தை எடுதீதுக்கொண்டாலும்‌ ஆரிய மதக்‌ கதை சம்பந்தமும்‌, ஆரியத்‌ தோற்ற சம்பந்தமும்‌ இல்லாமல்‌ காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுசளாகக்‌ கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக்‌ “காட்டி, கடவுள்‌ தன்மை ஊட்டிவந்தும்‌, இன்றைக்கும்‌ பாமர மூடஜனங்கள்‌ மாத்திரம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1061 அல்லாமல்‌ பண்டு தர்கள்‌, ஞானிகள்‌ என்பவர்கள்‌ முதல்‌, பெரும்‌ மேதாவிகள்‌ என்பவர்‌ களுகீகுக்கூட உண்மையான கடவுள்‌ பக்தி, அவரவர்‌ நடப்பில்‌ கடவுள்‌ தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால்‌,-மூடர்களுக்குக்‌ கடவுள்‌ பக்தி ஏற்படுவதற்காக உருவம்‌ (விக்கிரகம்‌) கற்பிக்கப்பட்டது என்பதில்‌ ஏதாவது உண்மையோ, பலனோ, அறிவுடை மையோ உண்டு என்று யாராவது கொள்ளமுடியுமா § மற்றும்‌, நித்தியமாண சர்வ சக்தியும்‌, சர்வ வியாபகமும்‌ உள்ள கடவுள்‌ ஒருவர்‌: இருக்கிறார்‌ என்றால்‌, கடவுள்‌ என்பதாக ஒன்று உண்டா இல்லையா என்பதாக மக்களுக்குச்‌ சந்தேகம்‌ ஏற்படுவானேன்‌ ? சிலருகீகுக்‌ கடவுள்‌ இல்லை என்றும்‌--இருக்க முடியாதென்றும்‌ தோன்றுவானேன்‌ I ஏதோ ¢ அறிவிலிகளுக்கு இப்படித்‌ தோன்றுகிறது என்று கொள்வ தானாலும்‌, * அறிவாளி!களுக்குக்‌ கடவுளைக்‌ காப்பாற்றவேண்டும்‌, கடவுள்‌ பிரச்சாரம்‌ செய்யவேண்டும்‌ என்கின்ற எண்ணம்‌ தோன்றவானேன்‌ ? கடவுள்‌ ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று குழந்தைகளுக்கும்‌, பள்ளிப்‌ பின்ளைகளுக்கும்‌ கற்பிக்க முயற்சிசெய்வானேன்‌ § அவைதாம்‌ போகட்டும்‌ என்றாலும்‌, கடவுள்‌ அவதாரம்‌ என்றும்‌, கடவுள்‌ தன்மை அடையப்பெற்ற பெரியார்கள்‌ என்றம்‌, கடவள்‌ மனித ரூபமாய்‌, பன்றி ரூபமாய்‌, மற்றும்‌ ஏதேதோ ஆபாச ரூபமாய்க்‌ காணப்படுவானேன்‌ ? கடவுளுக்குக்‌ குமாரரும்‌, தூதுவரும்‌, அசரீரியும்‌, மக்கள்மீது மருளும்‌--அதாவது சாமியாடுதலும்‌ ஏன்‌ 2 இப்படிப்பட்ட நடவடிக்கைகள்‌ மெய்யாய்‌ இருந்தாலும்‌, பொய்யாய்‌ இருந்தாலும்‌, இவைகள்‌ கடவுள்‌ கிருப்பதை ஊர்ஜிதம்‌ செய்யவோ அல்லது மக்களுக்குக்‌ கடவுளால்‌ பயன்‌ ஏற்படவோ;, அல்லது உலக நடப்புக்காவத, மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன்‌ ஏற்படுமா என்பது மிகவும்‌ சிந்திக்கவேண்டியதாகும்‌. இதுவரையில்‌ காலம்‌ எப்படிக்‌ கழிந்து இருந்தாலும்‌, இனிமேலாவது மனித சமுதாயம்‌ பயமும்‌ கவலையுமற்று, சாந்தியாய்‌, திருப்தியாய்‌ நல்வாழ்வு வாழவேண்டியது அவசியமாகும்‌. அதற்கு ஏற்றவண்ணம்‌ இனி சமுதாய ஒழுங்குகள்‌; ஒழுக்கங்கள்‌ அமைக்கப்படவேண்டும்‌. வருங்காலம்‌ பயங்கரமான ஆபதீதுகீகுன்ளாகும்‌ காலம்‌. எப்படி எனில்‌, மகீகள்‌ இனி சுலபத்தில்‌ சாக மாட்டார்கள்‌. கிதுவரை நம்‌ மக்களுக்கு சராசரி ஆயுள்‌ 25 என்றால்‌, இனி, மக்கள்‌ சராசரி ஆயுள்‌--வயது 50-க்கு மேற்பட்டுத்தான்‌ இருக்கமுடியும்‌. சுகாதாரம்‌ அதிகம்‌) வைத்திய வசதி அதிகம்‌. மனிதன்‌ நோய்களையும்‌ இன்பங்களையும்‌ கடவுள்மீது பாரத்தைப்‌ போட்டுவிட்டு அற்பாயுளாகப்‌ போய்க்கொண்டு இருந்தவன்‌, தன்‌ முயற்சியில்‌ நம்பிக்கை வைத்துப்‌ பரிகாரம்‌ தேடி மீளுகிறான்‌. மனித னுக்குப்‌ பல துறைகளில்‌ அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக்கொள்ள வசதி பெற்றுவிட்டான்‌. இதுபோலவே, மக்கள்‌ பிறப்பும்‌ அதிகமாகிவிட்டது. கர்ப்பச்‌ சிதைவு, A% மரணம்‌, பிரசவ மரணம்‌ இனி சுலபத்தில்‌ ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள்‌, பரிகாரங்கள்‌ ஏற்பட்டு விட்டன. இனி மலடும்‌ இருப்பதற்கு கல்லாமல்‌ நிவர்தீதி மார்க்கங்கள்‌ ஏற்பட்டுவிட்டன. இனி விதவைகளாகவும்‌ எவரும்‌ காலம்‌ கழிக்க முடியாமல்‌ விதவை மணம்‌, சுதந்திர காதல்‌ முதலியன செல்வாக்குப்‌ பெற்று, சாதாரணமாய்‌ நடப்பில்‌ வருவதின்மூலம்‌ அவற்றாலும்‌ பிறப்பு அதிகமாகின்றது. பொதுவாக, பிறப்பு விகிதங்களும்‌ பலவகை சவுகரியங்களால்‌ நபர்‌ 1-க்கு 2, 3, 4 என்பதாகக்‌ குழந்தைகள்‌ திருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர்‌ ஒன்றக்கு 6, 5, 10, 12 என்பதாகக்‌ குழந்தைகள்‌ பிறப்பதும்‌, அவைகளும்‌ நீண்ட நான்‌ வாழ்வதுமாக இருக்‌ கின்றன. இவர்களுக்கு எல்லாம்‌ உணவு, போக போக்கியப்‌ பொருள்‌, பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன்‌ உணவுப்‌ பஞ்சம்‌ ஏற்பட்டே தீரும்‌. இவைகளில்‌ பெரும்‌ போட்டியும்‌ அதன்‌ பயனாய்‌ வெறுப்பு, வஞ்சம்‌, துரோகம்‌, கொள்ளை, கொலை முதலிய www.thamizham.net - Free £ book 14௦ 3031 1062 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ வைகள்‌ மலிநீ.துவிடும்‌. சாதுவும்‌ யோக்கியமுமான மக்கள்‌ மிகமிகத்‌ துன்பமடைய நேரிடும்‌. அயோக்கியர்களும்‌ கராலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள்‌. அதற்கேற்ற அரசாங்கந்தான்‌ ஏற்படமுடியும்‌. [ஞு அரசு -கட்டுரை--7-5-1949] மதம்‌ என்பது ஒரு கட்டுப்பாடு. மததீதில்‌ ஈடுபட்ட ஒரு மனிதன்‌ அவன்‌ எவ்வளவு அறிவாளியாய்‌ இருந்தாலும்‌ அந்தக்‌ கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும்‌ என்பதைதி தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும்‌ ஏற்படப்‌ போவதில்லை. ஒரு மத வாதிக்கு மதம்‌ காரண தீதால்‌ ஏற்பட்ட கடவுள்‌, மோட்சம்‌, நரகம்‌, வேதம்‌, மததரீமம்‌ மததீ தலைவன்‌ என்பனவெல்லாம்‌ அந்த அதாவது, அவன்‌ சார்ந்திருக்கிற மதக்கட்டுப்‌ பாட்டினால்‌ ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப்‌ பொருளோ, உண்மைத்‌ ததீதுவமோ அல்ல என்பதோடு, அவை எல்லாம்‌ செயற்கையே ஒழிய இயற்கையுமல்ல. ஒரு மதவாதிக்கு அவன்‌ எந்த மததீதைச்‌ சேர்‌ நீதவனாக இருந்தாலும்‌, அவனுக்கு கடவுள்‌, அது எப்படிப்பட்ட கடவுளானாலும்‌ அது செயற்கைக்‌ கடவுளே ஆகும்‌. இதில்‌ இயற்கை, செயற்கை என்பதற்கு என்ன விளக்கம்‌ என்றால்‌, இயற்கை என்பக உணவு உட்கொள்வது, மலஜலம்‌ கழிப்பது, பார்ப்பது, கேட்ப.க, மூச்சுவிட்டு இழுப்பது, பேசுவது, வலி காண்பு, பசி தோன்றுவது, தூங்குவ.ு, விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம்‌, சகம்‌, சூரியன்‌, சந்திரன்‌, வெளிச்சம்‌, இருட்டு, பஞ்ச பூதங்கள்‌ முதலியவை இயற்கை ஆகும்‌. இவை எல்லா மக்களுக்கும்‌ பொது என்பதோடு யாராலும்‌ மறுக்க முடியாதவை. மற்றபடி, கித்‌ தன்மையவை அல்லாத கடவுள்‌, மதம்‌, மோட்சம்‌, நரகம்‌, சன்மானம்‌, கண்டனை; செல்வம்‌, பெருமை, சிறுமை, பக்தி, பிரார்த்தனை, வேதம்‌ முதலியவை அடியோடு கற்பனை யேயாகும்‌. இந்த இயற்கை, செயற்கைகள்‌ அறிபப்படுவதற்கு ஆதாரம்‌ முறையே பிரதீதியட்ச அறிவும்‌-பிரதீதியட்ச அறிவுக்குப்‌ புறம்பான நம்பிக்கையுமேயாகும்‌. ஆகவே, இன்று உலகில்‌ உள்ள எப்படிப்பட்ட மதகீகாரனும்‌ கடவுள்‌ உணர்ச்சிக்‌ காரனும்‌ நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவேமாட்டான்‌. உதாரணமாக, £ கிறிஸ்து? என்றால்‌ *பைபிள்‌? என்றால்‌, கிறிஸ்துவை ஏற்று அவரில்‌ நம்பிக்கை வைத்து பைபிளை ஒப்புக்கொண்டவருக் குதீதான்‌ ¢ கிறிஸ்‌ துவே? தவிர-* பைபி ளன? தவிர) அவை நம்பிக்கையில்லாதவருக்கு உண்மையாய்‌, ததீ.துவமாய்‌ இருக்கமுடியாது. அதுபோலவே * முகம்மது நபி? என்றால்‌ * குரான்‌! என்றால்‌, முகம்மது நபியை ஏற்று, அவரின்மீது நம்பிக்கை வைத்து குரானை ஒப்புக்‌ கொண்டவருக்குத்தான்‌ நபியே தவிர-குரானே தவிர, நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி நபியாகவும்‌, குரானாகவும்‌ இருக்க மூடியும்‌? இப்படியேதான்‌ மற்ற மதங்களும்‌ வேத சாஸ்திரங்கள்‌ முதலியவையு மாகும்‌. ஆகவே நம்பாதவனுக்கு; ஏற்காதவனுக்கு எது எது கில்லையோ அவை எல்லாம்‌ பெரிதும்‌ செயற்கையே ஆகும்‌. கடவுளும்‌, கடவுள்‌ நம்பிக்கையும்‌ அதிஃ பட்டதுதான்‌. ஒரு மனிதனை மற்றொரு மனிதன்‌ ¢ நீ கிறிஸ்துவை நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌ ) பைபிளை நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌) இல்லாவிட்டால்‌ நரகத்தில்‌ அமுந்‌ துவாய்‌! என்று சொல்‌லுபவனும்‌, ¢ நீ நபியை நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌] இல்லாவிட்டால்‌ எரி நரகில்‌ அழுந்துவாய்‌? என்று சொல்லுபவனும்‌ எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு அறிவற்றவனே ஆவசன்‌--ஒரு மனிதனைப்‌ பார்த்து, * நீ கடவுளை நம்பித்தான்‌ ஆக வேண்டும்‌) மோட்ச- நரகத்தை நம்பித்தானாகவேண்டும்‌. இல்லாவிட்டால்‌ நீ நரகத்தில்‌ அமுத்தப்படுவாய்‌? என்‌,று சொல்லுகிறவனும்‌, என்பதை மதவாதிகளும்‌ உணரவேண்டும்‌. கடவுளும்‌ மதமும்‌ அறிவற்றவனைத்தான்‌ ஆட்டும்‌ என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும்‌, பைத்தியக்கரரனாகவும் கூட ஆக்கிவிடும்‌. www.thamizham.net - Free £ book No 3031 தத்துவம்‌ 1063 ஆனால்‌, எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும்‌ மதமும்‌ பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம்‌ எட்டிக்கூடப்‌ பார்‌ க்கமுடியா து. எப்போதுமே நான்‌ கடவுளையும்‌ மததீதையும்‌ அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ¢ வெங்காயம்‌? என்றுதான்‌ சொல்லுவேன்‌. வெங்காயம்‌ என்றால்‌ வித்து இல்லாதது) வெறும்‌ சதை. அச9சொல்லின்‌ பொருள்‌ வெங்காயம்‌--வெறும்‌ காயம்‌ ; உயிரற்ற உடல்‌ ) விதை இல்லாதது) உரிக்கஉரிக்கத்‌ி தோலாகவே--சதையாகவே வந்து முடிவில்‌ சூனியமாய்‌--விதை இல்லாத தன்மையதாய்‌ முடிவது என்பது பொருள்‌. ஆகவே, விதை, விதீது இல்லாத காரணதீதாச்‌ தான்‌ அதற்கு வெங்காயம்‌ என்ற பெயர்‌ உண்டாயிற்று. அது போன்றவை கான்‌ கடவுளும்‌ மதமும்‌ ஆகும்‌, இச்சொற்‌ களுக்கு இயற்கைப்‌ பொருளே இல்லை ; கற்பிகீகிறவர்கள்‌ சொல்லும்‌ பொருள்தான்‌. ஆனால்‌, சூரியன்‌, சந்திரன்‌ முதலானவைகளை அப்படிச்‌ சொல்லமுடியுமா? முடியாக. ஏன்‌ என்றால்‌, அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும்‌, எப்படிப்‌ பட்ட பகுதீதறிவுவாதியும்‌ அவைகளை மறுக்கமாட்டான்‌ என்பதோடு எனக்கு அவை இல்லை) என்‌ கண்ணுகீகு--என்‌ புத்திக்கு அவை தென்படவில்லை. ஒப்புக்கொள்ள மாட்டேன்‌? என்று சொல்லவேமாட்டான்‌. இதுதான்‌ இயற்கைக்கும்‌- உண்மைப்‌ பொருளுக்கும்‌ ) செயற்கைக்கும்‌--கற்பனைகீ கும்‌ ஏற்ற உதாரணமாகும்‌. மற்றும்‌, கடவுள்‌: மதவாதியாக இருப்பவர்கள்‌ ஒரு மனிதன்‌ மதத்தை ஏன்‌ மறுக்கிறான்‌ ¥ என்பதைப்‌ பற்றிச்‌ சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. அதுபால S, ஒரு மனிதன்‌ கடவுளை ஏன்‌ மறுக்கிறான்‌ ¥ என்பதையும்‌ (கடவுள்‌ வாதி) சிந்தித்துப்‌ பார்க்க 3வண்டும்‌. மற்றும்‌, கடவுள்‌ மதவாதிகள்‌, கடவுள்‌-மத மறுப்பாளர்களைவிட எந்தவிதத்தில்‌ உயர்நீதவர்கள்‌ 1 எந்த விதத்தில்‌ அறிவாளிகள்‌ i எந்த விதத்தில்‌ உயர்ந்த இந்திரியங்களை: (மெய்‌, வாய்‌, கண்‌; மூக்கு, செவி ஆகியவைகளை) உடையவர்களாக இருக்கிறார்கள்‌ 8. என்பதையும்‌ சிந்திதீ.துப்‌ பார்க்க வேண்டும்‌. மனிதனுக்கு மிக அருமையான்‌ அறிவும்‌ பகுதீதறியும்‌ சக்தியும்‌, ஆழ்ந்து சிந்திக்கும்‌ தன்மையும்‌, அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும்‌ உரிமையும்‌, இருக்கும்போது கடவுள்‌ எதற்கு ஆக வேண்டும்‌ ! என்பதையும்‌ நல்லவண்ணம்‌ சிந்திதீதுப்‌ பார்க்கவேண்டும்‌. கடவுள்‌ என்ற பொருளுக்கு மனிதன்‌ கற்பித்து இருக்கும்‌ குணம்‌ என்னவென்றால்‌, கடவுள்‌ யாவற்றையும்‌ படைத்து (படைதீததோடல்லாமம்‌) யாவற்றையும்‌ நடத்து கிறவன்‌ என்பதாம்‌. அதாவது, ¢ நன்றோ செய்வேன்‌, தீதோ செய்வேன்‌, நானா அதற்கு நாயகன்‌, நீ நடதீதகிறபடி நடத்தப்படுகிறவன்‌ தானே ₹ என்பதுதான்‌ கடவுள்‌ நம்பிக்கைக்காரர்கள்‌ கடவுளைப்பற்றி மக்களுக்குச்‌ சொல்லும்‌ இலட்சணம்‌. இந்தக்‌ கருதீது ஒரு கடுகளவாவது மனிதனுக்குப்‌ பயன்படுகிறதா ? மற்ற மனிதர்‌ களுக்குத்தான்‌ சொல்லப்படு றதே ஒழிய, எவனுக்கு ஆவது தன்‌ விஷயத்தில்‌ நம்பவோ, நம்பி நடக்கவோ வாழ்க்ீகையில்‌ கொள்ளவோ பயன்படுகிறதா மக்கள்‌ மடையர்களாக இருந்தவரையிலும்‌, அதாவது சிந்திக்கும்‌ தன்மை இல்லாதவர்‌ களாக இருந்தவரையில்‌-- இருக்‌ ிறவரையில்‌ கடவுளுக்கு சர்வ சக்தி சர்வ செயல்‌ ¢ இருந்‌ திருக்கலாம்‌.? இன்று--அறிவாளிக்கு அறிவுவாதிக்கு, அந்த எண்ணம்‌ சரி என்று தோன்ற முடியுமோ § www.thamizham.net - Free £ book 14௦ 3031 1068 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ தவிரவும்‌, கடவுளும்‌ மதமும்‌ மனிதனுக்கு பல ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌: கற்பிக்‌ கப்பட்டவை அல்லது தோன்றியவை என்பதை யாரும்‌ மறுக்க முடியாது. அக்‌ காலக்‌ கற்பனையானது காலக்‌ கிரமத்தில்‌ மாறுதலடைந்து கொண்டே வந்திருக்கிறது. என்பதையும்‌ யாராலாவது மறுக்க முடிகிறதா 1 இந்த நிலையில்‌ 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்தவ மதமும்‌, கிறிஸ்தவகீ கடவுளும்‌, 1500 ஆண்டுக்கு முந்தைய நபி மதமும்‌, முகம்மது நபி கடவுளும்‌ மாத்திரம்‌ சீர்திருந்தி மாற்றமடைந்துள்ளபோது;, பலப்‌ பல ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னைய ஆரியக்‌ கடவுள்களும்‌ ஆரிய மதமும்‌ மாற்றமடையக்கூடாது என்றால்‌ அது எப்படிப்‌ பகுதீ தறிவுக்குப்‌ பொருத்தமாக இருக்கமுடியும்‌ ? இவைகள்‌ எல்லாம்‌ மனிதர்களால்‌ அமைகீகப்பட்டனவே அன்றி மனிதப்‌ பிறவியில்‌ மனிதத்‌ தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்ட ஒரு மனித உருவால்‌ அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால்‌, அது பெரும்‌ புரட்டாகதீதான்‌ இருக்கமுடியுமே ஒழிய, அப்படிச்‌ சொல்லுவதில்‌ சிறிதாவது உண்மையோ அறிவுடைமையோ இருக்காது என்பதுடன்‌, அதில்‌ யோக்கியப்‌ பொறுப்பும்‌ இருக்கமுடியாது என்று வலியுறுத்திக்‌ கூறுவேன்‌. ஏன்‌ என்றால்‌, இன்றைய மக்கள்‌ தன்மை, இன்றைய விஞ்ஞான அறிவு சக்திதீ தன்மை 10000, 5000, 2000, 1500 ஆண்டுகளுக்கு முன்‌ இருந்ததைவிட எத்தனையே? மடங்கு அதிகமானது. அக்காலக்‌ கடவுளும்‌ மதமும்‌, கவைகளைக்‌ கற்பிதீதவர்களும்‌, அக்கால மனிததீ தன்மைக்கு மேற்பட்டவர்களும்‌ ' ஏழைகளுக்கு உதவி செய்தால்‌ உனக்கு மோட்சம்‌, சன்மானம்‌ கிடைக்கும்‌? என்று சொன்னார்கள்‌. அவர்களால்‌ சொல்லப்பட்ட வேதசாஸ்‌ திரங்களும்‌ அப்படியே சொல்கின்றன. இன்றைய வெகு சாதாரண விஞ்ஞான அறிவு, ஏழைகள்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ ? அவர்கள்‌ பிறப்பிக்கப்பட என்ன அவசியம்‌ | அவர்கள்‌. யாரால்‌ எதனால்‌ பிறப்பிக்கப்பட்டாலும்‌ சரி, கின்று அவர்கள்‌ கண்டிப்பாக மனிதஉலகதீதில்‌ இருக்கக்கூடாது? என்று கூறுகிறது. இதற்கு யாரால்தான்‌, எந்தத்‌ தெய்வீக புருஷனால்‌: தான்‌ ஆகட்டுமே என்ன பதில்‌ சொல்லமுடியும்‌ 8 ஆகவே, கடவுள்‌, மதம்‌, தெய்வீகப்‌ புருஷர்கள்‌ என்பவற்றை எப்படிப்பட்டவர்களானாலும்‌ பாதுகாக்க வேண்டுமானால்‌ அவரவர்களைப்‌ பொறுத்தவரை அடக்கமாக வைத்திருந்தால்‌ காகீகப்பட்டவர்கள்‌ ஆவரர்கள்‌. அப்படிக்கின்றி, தான்‌ பெரிய கடவுள்‌ பக்தன்‌, மத பக்தன்‌ என்கின்ற கரீவங்‌ கொண்டு அவற்றைக்‌ காப்பாற்ற வெளிக்கிளம்புவானேயானால்‌, அவன்‌ கண்டிப்பாக அவை களை ஒழிக்க, அவற்றின்‌ * பெருமை யை அழிக்கப்‌ புறப்பட்டவனே ஆவான்‌. கடவுள்‌, மதம்‌, தெய்வீகப்‌ புருஷர்கள்‌ என்பவற்றில்‌ கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்‌ கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும்‌. மதத்தைவிட, மக்களுக்கு மடமையையும்‌ அகம்பாவத்தையும்‌ உண்டாக்குவது தெய்வீக சக்தி. அதாவது, மனிதத்‌ தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன்‌, மனிதப்‌ பிறவி என்பதாகும்‌. எனவே, பெரிய ஆட்கள்‌, அதாவது 30 வயதுகீகு மேற்பட்டவர்களிடம்‌ இந்தக்‌ கடவுன்‌ மத உணர்ச்சி இருந்தாலும்‌, 24 அல்லது 30 வயதிற்கு உட்பட்ட மக்களிடம்‌ கண்டிப்‌ பாக இந்த உணர்சீசி கிருக்கவே கூடாது என்பது என்‌ ஆசை. அப்படி; கந்தக்‌ கடவுள்‌ மத உணர்ச்சி இல்லாமல்‌ கிருந்தால்தான்‌ மனிதப்‌ பண்பு, மக்கள்‌ யாவரையும்‌ ஒன்றுபோல்‌ கருகும்‌ உணர்ச்சி, நேர்மை, நல்லதைப்‌ போற்றவும்‌ தீயதைக்‌ கண்டிக்கவுமான துணிவு, யாவரையும்‌ ஒன்றுபோல்‌ கருதிச்‌ செய்யும்‌ பொதுத்‌தொண்டு உணர்ச்சியும்‌ ஏற்படமுடியும்‌. இன்று கிவை சுத்தசுத்தமாய்‌ இல்லாததற்குக்‌ காரணம்‌-இந்தக்‌ கடவுள்‌, மதம்‌; மனிததீ தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்‌ பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான்‌ என்பது எனது தாழ்மையான முடிந்த முடிபு! www.thamizham.net - Free £ book 14௦ 3031 ஆத மேம்‌, ஐம்‌ கழுட்ட. கற்கலாம்‌ லைகளைக்‌ ஐம்பநதவன்‌ இகயாக்தீல்ன்‌ மம்புதலவன்‌ மலபயன்‌ ஸ்‌ O ட மக ட அலாக்கைட பெரியார்‌ ஈட வெ. ரா. வழங்கிய நாதீதிகக்‌ கட்டளை 1065 4. ஆத்மா ஆதீமா என்னும்‌ விஷயதீதைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைப்‌ பார்க்கும்‌ நமது நண்பர்கள்‌ பலர்‌--* இது ஒரு தத்துவ விசாரணை விஷயம்‌ ) இதைப்பற்றிப்‌ பேசவோ எழுதவோ வேண்டிய அவசியம்‌ சமுதாய சீர்திருதீதக்காரருக்கு எதற்கு ? சுயமரியாதைக்‌ காரர்கள்‌ அனாவசியமாய்‌ கண்டகண்ட விஷயங்களில்‌ எல்லாம்‌ தலையிட்டுச்‌ சீர்திருத்ததீ அறையைப்‌ பாழாக்கிக்கொள்வானேன்‌ 7 என்று கூசாமல்‌ பேசுவார்கள்‌. ஆனால்‌, இப்படிப்‌ பட்ட நண்பர்கள்‌ சமுதாய சீர்திருத்தம்‌ என்பது என்ன என்பதைச்‌ சரிவர உணராதவர்கள்‌ என்று நினைதீதுவிட்டு, நம்‌ பாட்டுக்கு நாம்‌ மேலே செல்லக்கூடிய நிலையிலேயே இருக்கின்‌ றோம்‌. ஏனெனில்‌, சமுதாய சீர்திருத்தம்‌ என்றால்‌ ஏதோ அங்கும்‌ இங்கும்‌ ஆடிப்போன, சுவண்டுபோன; கிடிந்துபோன பாகங்களைச்‌, சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக்‌ குழைத்துச்‌ சந்துபொநீதுகளை அடைத்துப்‌ பூசி மெழுகுவது என்றுதான்‌ அனேகர்‌ கருதி யிருக்கின்றார்கள்‌ ஆனால்‌, நம்மைப்‌ பொறுதீதவரை; நாம்‌ ௮ம்‌ மாதிரித்‌ துறையில்‌ உழைக்கும்‌ ஒரு சமுதாய சீர்திருதீதக்காரனல்ல என்பதை முதலில்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌. மற்றபடி நாம்‌ யார்‌ என்றால்‌, என்ன காரணத்தினால்‌ மகீகள்‌ சமுதாயம்‌ ஏன்‌ சீர்திருதீதப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும்‌ அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால்‌ இயன்‌ நதைச்‌ செய்யும்‌ முறையில்‌, அடியோடு பேர்தீது அஸ்திவாரதீதையே புதுப்பிப்பது என்கின்றநான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடி யால்‌, சமுதாய சீர்திருத்தம்‌ என்பதைப்பற்றி மற்ற மக்கன்‌ அனேகர்‌ நினைதீதிருந்ததற்கு நாம்‌ மாஐபட்ட கொள்கையையும்‌ திட்டத்தையும்‌, செய்கையையும்‌ உடையவராய்க்‌ காணப்‌ படவேண்டிய நிலைமையில்‌ இருக்கின்றோம்‌. இதனாலேயேதான்‌, பலவற்றில்‌ உலக மக்கள்‌ உண்டு என்பதை இல்லை என்றும்‌ 5 சரி என்பதைதி தப்பு என்றும்‌) தேவை என்பதைத்‌ தேவையில்லை என்றும்‌ ) கெட்டது என்பதை நல்லது என்றும்‌; நல்லது என்பதைக்‌ கெட்டது என்றும்‌; காப்பாற்றப்படவேண்டும்‌ என்பதை ஒழிக்கவேண்டும்‌ என்றும்‌ ) மற்றும்‌ பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக்‌ கூறுவோராக; செய்வோராகக்‌ காணப்படவேண்டிய நிலையில்‌ இருக்கின்றோம்‌. ஆனால்‌ நம்போன்ற இப்படிப்பட்டவர்‌ கள்‌ உலகில்‌ நல்ல பெயர்‌ சம்பாதிப்பதும்‌, மதிக்கப்படுவதும்‌ பழிக்கப்படாமல்‌-குற்றம்‌ சொல்லப்படாமல்‌ இருப்பதும்‌ அருமை என்பது மாதீதிரம்‌ நமக்கு நன்றாய்த்‌ தெரியும்‌. உதாரணமாக, இது விஷயமாய்‌ நாயனார்‌ தம்‌ குறவில்‌, ¢ உலகதீதார்‌ உண்டென்பது இல்‌ என்பான்‌ வையத்து அலகையா வைக்கப்படும்‌? என்று ஒரு குறன்‌ காணப்படுகிறது. இதன்‌ பொருள்‌ அக்‌ குறளில்‌ காண்கின்றபடி பார்தீதால்‌ * உலகதீதாரால்‌ உண்டு என்று சொல்லப்பட்டதை, இல்லை என்று சொல்லுபவன்‌, உலகில்‌ பிசாசாக மதிக்கப்படுவான்‌ ? என்பது பொருளாகும்‌. இதிலிருந்து, * உலகதீதார்‌? என்பது யாரைக்‌ குறிப்பிடுகின்றது ? உலகத்தார்‌: என்றால்‌ ¢ உயர்ந்தோர்‌? என்று சொல்வதானால்‌ * உயர்ந்தோர்‌? என்பதற்கு இலட்சண: மென்ன? பிசாசு என்றால்‌ அர்தீதமென்ன? * வையத்து அலகை? என்பதற்குதீ திருவன்ளுவர்‌ கருத்தென்ன ? அவர்‌ பிசாசை நம்பி இருந்தாரா? என்பனபோன்ற பல தர்க்க விவகாரங்கன்‌ அக்‌ குறளுகீகுப்‌ பொருள்‌ கூறுவதில்‌ சிலருக்கு ஏற்பட்டாலும்‌, அதன்‌: அதிகாரத்தின்‌ தலைப்புப்படி அக்‌ குறளின்‌ கருதீது, * அனேக மக்களால்‌ உண்டு என்று சொல்லப்படும்‌ விஷயத்தை, இல்லை என்று சொல்லுபவன்‌ அறிவில்லாதவன்‌? என்று பொருள்படுவதாகவே வைதீதுக்கொள்ளுவோம்‌. இப்படி இருந்தாலும்‌, கிதிலிருந்து அவன்‌ 1686—134 www.thamizham.net - Free E.book 14௦ 3031 1066 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ அதாவது, உலகதீதாரால்‌ உண்டு என்று சொல்வதை இல்லை என்பவன்‌ எதனால்‌ அறிவில்லாதவன்‌ 8 எவ்வாறெனில்‌, உண்டு என்பதை இல்லை என்று சொல்லுவதற்காக அவன்‌ கொண்ட கருத்து குற்றமுடையதா$ அல்லது, பலர்‌ அனேகர்‌, மற்றவர்கள்‌ எல்லோரும்‌ உண்டு என்று சொல்லப்பட்ட ஒரு அபிப்பிராயதீதிற்கு-அது எப்படி இருந்‌ தாலும்‌ கண்மூடிதீதனமாய்ப்‌ பின்பற்றாமல்‌, தனது சொந்த அபிப்பிராயத்தைத்‌ துணித்து சொல்ல வநீதுவிட்டானே, அந்த அடங்காத; கீழ்ப்படியாத, ஊருடன்‌ ஒத்துப்போகாத, ஆணவமான தன்மையுடைய அந்தச்‌ செய்கை குற்றமுடையதா? என்று யோசிக்க வேண்டியது இங்கு முக்கியமான காரியமாகும்‌, ஆகவே, உலகதீதார்‌ உண்டு என்பதை மறுத்துக்‌ கூறியதற்கு ஆதாரமாக அவன்‌ கொண்ட அபிப்பிராயம்‌ குற்றம்‌ என்று ஏற்படு மானால்‌, இங்கு உலகத்தார்‌ சொல்வதெல்லாம்‌ சரியானதாய்தீதான்‌ இருக்கும்‌ என்று பொருள்‌ கொண்டு, நாயனார்‌ சொல்லியிருக்க வேண்டும்‌. அல்லது, அப்படி உலகத்தார்‌ அபிப்பிராயதீதிற்கு விரோதமாக அபிப்பிரயப்பட்டதை ஒருவன்‌ தனித்து எடுத்துச்‌ சொல்வது என்கின்ற தன்மை குற்றமானதென்று கருதி நாயனார்‌ சொல்லி இருந்தால்‌, மனிதனுக்கு அவனவன்‌ அபிப்பிராயத்திற்குச்‌ சுதந்திரமில்லை என்று வள்ளுவர்‌ கருதி அப்படிச்‌ சொல்லி இருக்கவேண்டும்‌. ஆகவே, அக்‌ குறளான.து உலக மக்களில்‌ பொது வாகப்‌ பெரும்பான்மையேரரையோ---அல்லது அறிவாளிகளாகிய பெரும்பான்மையர ரையோ--யாரைக்‌ குறிப்பில்‌ வைதீ.துசீ கொண்டு நாயனார்‌ சொல்லி இருந்தாலும்‌, இக்குறள்‌: பொதுவில்‌ குற்றமுடையது என்பதே நமது அபிப்பிராயம்‌. ஆதலால்‌, ஆதீமா என்கின்ற விஷயத்தைப்பற்றி யார்‌ என்ன சொல்லி இருந்தாலும்‌ உலகமே என்ன கருதீதுக்கொண்டிருந்தாலும்‌ அதை இலட்சியம்‌ செய்யாமல்‌ நாம்‌ நம்முடைய அபிப்பிராயத்தைச்‌ சொல்லுகின்றோம்‌. அதாவது, ஆதீமா என்பது ஒரு பொருள்‌ அல்ல. அது சுதநீதிரம்‌, அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும்‌ அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்குக்‌ காணப்படுகிறது. இங்கிலீஷ்‌ - தமிழ்‌ அகராதியில்‌ பார்‌ தீதாலும்‌ ஆதீமா என்பதற்கு இங்கிலீஷில்‌ (Soul) * சோல்‌? என்றும்‌, ¢ சோல்‌ ? என்றால்‌ அறிவு - யோசனை - ஆசை பிறகீகுமிடம்‌, ஊக்கம்‌, உள்‌ சக்தி, மனித வர்க்கம்‌, உயிர்‌ என்ற பொருள்கள்‌ காணப்படுகின்றன. தமிழ்‌ அகராதிகளிலும்‌ அதுபோலவே ஆதீமா அல்லது ஆன்மா என்றால்‌ காற்று, அறிவு, உடல்‌, உயிர்‌, பிராணன்‌, மூளை; முயற்சி, பிரம்மன்‌, சுபாவம்‌ என்கின்ற பொருள்கள்‌ காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளில்‌ இருந்து விளக்கப்படவேண்டியது ஒரே ஒரு வார்தீதைதான்‌ ஆகும்‌. பிராணன்‌ அல்லது உயிர்‌ என்பதற்குத்தான்‌ அர்த்தம்‌ விளங்கவேண்டியிருக்கின்‌ றது. மற்ற வார்திதைகள்‌ எல்லாம்‌ தானே அர்த்தம்‌ புரியும்படியா யிருக்கின்றன. ஆகவே, பிராணன்‌ என்பது என்னவென்று பார்தீதால்‌, அது ஒரு காற்று-பிராண: வாயு, இருதயத்தில்‌ இயங்கிக்கொண்டிருப்பது என்பதாகத்தான்‌ அகராதியில்‌ காணப்‌ படுகிறது இது இங்ஙனமிருக்க, கிப்போது பழக்கதீதில்‌, ஆதீமா என்றால்‌ அது சரீரதீதிற்குன்‌ இருக்கும்‌ ஒரு நித்திய வஸ்து என்றும்‌) அது சூட்சும வஸ்து என்றும்‌) அதற்குப்‌ பிறப்பு, இறப்பு இல்லை என்றும்‌) அது மனிதன்‌ கிறந்தபின்பு வெளிப்பட்டு மறுபடியும்‌ சரீரம்‌ எடுப்பது என்றும்‌ ) மற்றும்‌ அது சரீரத்தில்‌ இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன்‌ பயனை--சரிரதீதை விட்டுப்பிரிந்த பின்பு கடவுள்‌ மூலம்‌ அனுபவிக்கிறதென்றும்‌ ; மற்றும்‌ எத்தனையோ விதமாக அதைப்பற்றீப்‌ பல மதங்களில்‌ பலவிதமாய்சீ சொல்லப்‌ பட்டிருக்கின்‌ றதாய்‌ அறிகின்றோம்‌. உதாரணம்‌ என்னவென்றால்‌, அது மனிதனுக்குள்‌ இருந்து மனித சரீரத்திற்கு வேறாய்‌ ¢ என்‌ சரீரம்‌? என்று சொல்வதன்‌ மூலம்‌-சரீரதீதிற்கும்‌ வேறுபட்டதென்றும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1067 சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள்‌ காட்டி, அந்த ஆதீமா சரீரம்‌ விட்டுப்‌ பிரிந்த பிறகு அடையவேண்டிய, அடையக்கூடிய பலன்‌ ஆகியவைகளைப்‌ பிரதானமாகக்‌ கருதி அதற்குத்‌ தகுந்தபடி, அதற்காகவே மனிதன்‌ வாழ2வண்டியது அவசியமென்று சொல்லப்‌ பட்டு--அந்த மாதிரி, ஆதீமாவுக்கும்‌ கடவுளுக்கும்‌ உள்ள சம்பந்தத்தையே மதங்கள்‌ போதிக்கின்றன என்றும்‌, அதற்காகவே உலகத்தில்‌ மனிதகோடிகளுக்கு மதம்‌ அவசிய மென்றும்‌ சொல்லப்படுகிறது. ஆகவே பவுதீதம்‌, இஸ்லாம்‌, கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில்‌ பவுத்தம்‌ தவிர மற்ற முகீகியமான மூன்று மதங்களும்‌ ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான்‌ ஆதீமாவையும்‌, ஆத்மாவுக்கும்‌ கடவுளுக்கும்‌ உள்ள சம்பந்தத்தையும்‌ பற்றிய விஷயங்களை வைத்துக்‌ கொண்டிருக்கின்றன. மேற்கண்ட ஆதீமா என்பதில்‌ (1) மனித ஆதீமா மாதீதிரம்தான்‌ மேற்கண்ட மத சம்பந்தங்களுக்கு-௮ தாவது, கடவுளுக்கும்‌ ஆதீமாவுக்குமுன்ள சம்பந்ததீதிற்காக ஏற்பட்ட மதங்களுக்குச்‌ சேர்‌ நீததா--அல்லது, புல்‌, பூண்டு, அணு, ஜந்து, ஊர்வண, பறப்பன, நகரீவன; நீர்வாழ்வன முதலிய ஜந்துக்களின்‌ ஆதீமாக்கன்‌ என்பவைகளும்‌ அதில்‌ சேர்ந்தவைகளா ? (3) இந்தப்படி மனித ஆதீமாவுக்கும்‌ மற்ற ஆதீமாக்களுகீகும்‌ வித்தியாசங்கள்‌ உண்டா i அல்லது, எல்லாம்‌ ஒரே தன்மையானதுதானா? (3) மனித ஆதீமா மனித சரிரதீதில்‌ இருக்கும்போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை சரீரதீதைவிட்டுப்‌ பிரிந்த பிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே, மற்ற புல்‌ பூண்டு, நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, அணு, ஜந்துக்கள்‌ முதலியவைகவின்‌ ஆதீமாக்களும்‌ சரிரதீதைவிட்டு விலகிய பிறகு அவைகளின்‌ வினைக்குதீ தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா? (4) இந்த ஆதீமாகீகளில்‌ மேற்கண்ட ஜந்துக்கள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ சிறிது சிறிது வித்தியாசங்கள்‌, குணங்கள்‌, தன்மைகள்‌ முதலியவைகள்‌--அதாவது, புலன்‌ விதீதியர சங்கள்‌, அறிவு வித்தியாசங்கள்‌ உன்ளதுபோலவே, மனித ஜீவனும்‌ மற்ற ஆதீமாக்கள்‌ போலவே இருப்பதோடு புலன்‌ அறிவு விஷயத்தில்‌ சற்றுக்‌ கூடுதல்‌ வித்தியாசம்‌, மாறுதல்‌ முதலியவைகள்‌ உடைய ஐந்துவா₹ (5) உலகத்தில்‌ உள்ள மேற்கண்ட ஜந்துக்கள்‌ எல்லாம்‌ வேறு, மனித ஐந்து மாதீதிரம்‌ வேறு என்று சொல்லும்படி வேறுபாட்டை உடைய ஐந்துவா மனிதன்‌? என்பன போன்ற--இன்னும்‌ அனேக கேள்விகள்‌ இருந்தாலும்‌ மனிதன்‌ என்ன என்பதை நாம்‌. முதலில்‌ ஆராய்வோம்‌. மனிதன்‌ என்பதின்‌ தன்மை விளக்கம்‌ ஆங்கிலதீதில்‌ (Self), என்பதான ¢ தான்‌ 7. ¢ நான்‌ ?, * என்‌? என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும்‌. அக்‌ குறிப்புகளில்‌ ஒரு மனிதன்‌. தன்னை; ¢ நான்‌ ? என்று சொல்லிக்‌ கொள்ளும்போதும்‌, * எனக்கு, * என்னுடைய? என்று சொல்லிக்‌ கொள்ளும்போதும்‌ ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகிறது? என்பதைக்‌ கவனித்தால்‌ ஆதீமத்‌ தன்மை என்பது தானாகவே விளங்கும்‌. அதாவது; ஒரு மனிதன்‌ ¢ நான்‌? என்பதில்‌ அந்த மனித சரீரதீதின்‌ எந்தப்‌ பாகம்‌ தனித்து இருந்து நான்‌ என்கின்றது அல்லது, அந்த உடல்‌ மொத்தமுமா: அல்லது சரீர மில்லாமலா ? சரீரதீதில்‌ எதுவரை ¢ நான்‌? என்கின்ற உணர்ச்சி இருக்கிறது? சரிரத்தி லிருந்து எது பேசய்விட்டால்‌ ¢ நான்‌? என்பது போய்விடுகின்றது? என்கின்ற கேன்வி களுக்குப்‌ பதில்‌ கிடைத்தால்‌ ஒழிய ¢ நான்‌ ? என்பது விளங்காது. இந்த முறையில்‌ நான்‌ என்பதைக்‌ கவனிக்கும்போது என்‌ சரீரம்‌, என்‌: உயிர்‌, என்‌ ஆத்மா, என்‌ ஆவி, என்‌ ஜீவன்‌, என்‌ மனம்‌; என்‌ அறிவு, என்‌ புத்தி, என்‌ எண்ணம்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 1068 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ என்‌ சித்தம்‌, என்‌ கடவுள்‌, என்‌ ஆண்டவன்‌, என்‌ பிராணன்‌, என்‌ பிராணவாயு, என்‌ சூட்சம சக்தி என்பன போன்ற--அதாவது, மனிதன்‌ அல்லது ஆதீமா அல்லது ஜீவன்‌ என்பவைகளாகிய எது எதை நாம்‌ மனிதனாக; ஆத்மாவாக இருக்கக்கூடும்‌ என்று கருது கின்றோமோ அவைகளை எல்லாந்தன்னில்‌ இருந்து தனிப்படுத்தி அவைகளோடுகூட (என்‌? என்பதைப்‌ பேசுவதைப்‌ பார்க்கின்றோம்‌. ஆகவே, என்‌ (நான்‌) வேறு; மேற்கண்ட மற்ற வைகள்‌ எல்லாம்‌ வேறு--என்பதாக நினைக்கும்படியாக இருக்கின்றது. ஆதலால்‌, இவைகள்‌ எல்லாம்‌ மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய ¢ நான்‌? என்பது அல்ல என்றே செல்லவேண்டி யிருக்கின்றது. இந்த நிலையில்‌ மனிதனாகிய நான்‌ என்னும்‌ தன்மை உணர்ச்சி செய்த காரியங்‌ களுக்காக--நான்‌ அல்லாத அதாவது என்‌ ஆதீமா என்பதாகிய ஒரு வஸ்துவோ, ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ, ஆகிய சூட்சம ஜீவன்‌ என்பது எப்படி அந்தப்‌ பயனை அனுபவிக்க முடியும்‌? அனுபவிப்ப.துதான்‌ எப்படி நியாயமாகும்‌? நான்‌ செய்த காரியத்திற்கு என்‌ ஆதீமாவைத்‌ தண்டிப்பதோ, கண்டிப்பதோ, சன்மானமாகியவைகளைக்‌ கொடுப்பதோ எப்படிக்‌ கடவுளின்‌ நீதியாகும்‌? என்கின்‌றதான விஷயம்‌ மிகவும்‌ யோசிக்கத்‌ தக்கதாகும்‌. இந்த மாதிரியான பிரச்சினைக்குச்‌ சமாதானம்‌ சொல்பவர்கள்‌ பெரிதும்‌ ஒரே சமாதான நீதான்‌ சொல்வார்கள்‌, அதாவது, £இம்‌ மாதிரியான பிரச்சினை வெகு ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னமேயே பலரால்‌ கேட்கப்பட்டாய்விட்டதுஃ இவை சாதாரண மகீக ளுக்குப்‌ புரியும்படியானவைகள்‌ அல்ல, சொன்னாலும்‌ உங்களைப்‌ போன்றவர்களால்‌ கிரகித்துக்‌ கொள்ளமுடியாது, வேண்டுமானால்‌ கைவல்யம்‌, ஞானவெட்டி; வாசிஷ்டம்‌, கீதை, வேதாச்சாரம்‌, ததீ.துவ கீதை முதலியவைகளைப்‌ பாருங்கள்‌. அதற்கு வேறுபல பக்குவங்கள்‌ வேண்டும்‌! என்பது போன்ற பதிலைச்‌ சொல்லிவிடுவார்கள்‌. சாதாரணமாக; கிறிஸ்தவர்களும்‌, முஸ்லிம்களும்‌ அனேகர்‌ இந்த விஷயதீதில்‌ கவலைப்படாமல்‌ தீர்ப்பு நானை உத்தேசித்து, தாங்கள்‌ இந்த சரீரத்‌துடனேயே ஒரு காலதீதில்‌ மறுபடியும்‌ எழுப்பப்பட்டு ஏதோ ஒரு பலனை அடையக்கூடும்‌ என்கின்ற அளவோடு விட்டுவிட்டார்கன்‌. ஆதலால்‌, அவர்களிடம்‌ அதிக சிக்கலோ; புரட்டோ கிடையாது. பவுத்தர்கள்‌, * ஆத்மா என்பதே கிடையாது, நித்திய வஸ்து என்பதே கிடையாது? என்பதாக முடிவு கட்டிவிட்டார்கள்‌. ஆதலால்‌ அவர்களுக்குன்ளும்‌ இந்தக்‌ கசமுசாக்கன்‌ கிடையாது ஆனால்‌, இந்து மதகீகாரர்கள்‌ ஆதீமா, சூட்சும சரீரம்‌, மோட்சம்‌, நரகம்‌, மறுபிறப்பு, அதுவும்‌ பலவிதமாய்‌, அதாவது புல்லாகி, பூண்டாகி என்று படிப்படியாய்‌ ஏற்பட்டது என்றும்‌ $ இவைகள்‌ எல்லாவற்றையும்விட வேறொரு விதமாய்‌, அதாவது ஆதீமாகீகள்‌, பிதிர்த்‌ தேவவதைகள்‌ ஆக பிதிர்லோகம்‌ என்பதில்‌ இருந்துகொண்டு பிள்ளைகள்‌, சந்ததி யார்கன்‌ முதலியவர்களால்‌ இந்த உலகதீதில்‌ பிராமணனுக்குக்‌ கொடுக்கப்படுவதை அவர்களது மந்திர சக்தியின்‌ மூலமாய்ப்‌ பெற்று அடைந்து வாழ்நீது வருகின்றார்கள்‌ என்றும்‌ இன்னும்‌ பலவிதமாய்ச்‌ சொல்லப்படுகின்றன. ஆகவே, கவை தாமாகவே ஒன்றுக்‌ கொன்று முரண்படுகின்‌றனவாக உன்ளன. (¢ குடி அரசு?-தலையங்கம்‌--3-5-1931] 5. மோட்சம்‌--நரகம்‌--கர்மபலன்‌ மனிதன்‌ உடல்‌, உயிர்‌, மாயை என்னும்‌ முப்பொருளாக ஆக்கப்பட்டு இருக்கிறான்‌ என்று சைவர்களும்‌, பிரம்மமே மாயா சம்பந்தப்பட்டு இவ்வுலகில்‌ ஜீவர்களாய்தீ தோன்றி யிருக்கிறது என்று ஸ்மார்தீதர்களும்‌, ¢ ஆன்மா? என்றொரு பொருளை இறைவன்‌ சிருஷ்டித்து மனித உடலுக்குள்‌ புகுத்தி இருக்கிறான்‌ எனச்‌ சில மதங்களும்‌, இவ்வாறு www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1069 ஒன்றிற்கொன்று முரணாக நாம்‌ விளக்கிக்‌ காட்டியபடி கூறிவருகின்‌றன. ஆனால்‌, எல்லா: மதங்களும்‌ ¢ ஆன்மா? செய்த நன்மை தீமைக்குத்‌ தகுந்தவாறு மோட்சமும்‌ நரகமும்‌. எய்தும்‌ என்பதை அபிப்பிராய பேதம்‌ இன்றி ஒதீதுக்கொள்ளுகின்றன. ஆனால்‌ மோட்சமும்‌ நரகமும்‌ எவ்வாறு இருக்கும்‌ என்றால்‌, ஒவ்வொரு மதமும்‌ ஒவ்வொரு விதமாகவே வர்ணிக்கின்‌றன. எந்த நாட்டான்‌ நரகதீதைப்பற்றி எழுதி இருந்தாலும்‌, தம்தம்‌ நாட்டில்‌ உள்ள கொடிய பிராணிகளும்‌, பயங்கர உருவங்களும்‌, கஷ்டமான அனுபவங்களும்தாம்‌ நரகத்தில்‌ இருப்பதாகவும்‌, அவ்வாறே மோட்சதீதிலும்‌ தம்தம்‌ நாட்டில்‌ உள்ள உயர்ந்த பிராணிகளும்‌, மரம்‌, செடி, கொடி, பழவர்கீகம்‌, உணவு, பெண்கள்‌ முதலிய போகபோக்கியங்களும்‌ இருப்பதாகவே எழுதிவைத்து இருக்கிறான்‌. நரகமும்‌, மோட்சமும்‌ பணம்‌ பறிப்பதற்குப்‌ புரோகிதர்களால்‌ கட்டப்பட்ட ஒரு கற்பனை உலகம்‌ என்றே யாம்‌ கருதுகின்றோம்‌. சிறு பிள்ளைகளை, அய்ந்து கண்ணன்‌ வருகிறான்‌ ) பூச்சாண்டி வருகிறான்‌ அழாதே ! அப்படிச்‌ செய்யாதே) இப்படி நடவாதே? என்று ஏமாற்றுவதுபோலவே, மனிதர்களை நரகதீதைக்‌ காட்டிப்‌ புரோகி தர்கள்‌ மிரட்டுவதும்‌, சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய்‌, சாக்லெட்‌ முதலியவைகளைக்‌ காட்டி ததீதம்‌ வழிக்குத்‌ திருப்புவதுபோல, மக்களிடம்‌ மோட்சதீதைக்‌ காட்டி பணம்‌ பறிதீது வருகிறார்கள்‌. மேலும்‌, முதலாளிகள்‌ தொழிலாளிகளையும்‌, அரசன்‌ குடிகளையும்‌ விளித்து, ¢ ஜாக்கிரதை, நீ எஜமானதீ துரோகம்‌, கிராஜதீ துரோகம்‌ செய்தால்‌, என்றும்‌ மீளாத கொடு நரகிலே வீழ்ந்து, என்றும்‌ துன்புறுவாய்‌ ? என்று மிரட்டி, அவர்களுக்குதீ தங்களின்‌ நியாயமான உரிமைகளைப்‌ பெறவேண்டும்‌ என்ற எண்ணம்‌ உதிக்காமலே ஏமாற்றிவிடுவதற்குத்‌ தக்க பேராயுதமாய்‌ நரகம்‌ விளங்கி வருகின்றது. பொதுவாக எம்‌ மததீதை உற்றுநோக்கினாலும்‌ மோட்சத்தை, பணம்‌, சாம்பல்‌ (விபூதி), சிலுவை, குருபகீதி, பிரார்‌தீதனை முதலியவைகவினால்‌ எளிதில்‌ பெற வழி காணலாம்‌. மக்களுலகில்‌ வறுமையும்‌, ஏமாற்றும்‌, அக்கிரமங்களும்‌ இந்த மோட்ச-நரகப்‌ பைதீதியதீதினாலும்‌, பிராயச்சித்தம்‌ என்னும்‌ பித்தலாட்டத்தாலும்‌ பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்‌. மோட்சமும்‌ சுவர்க்கமும்‌ கன்ளுச்சாராயக்‌ கடைகளைவிட, தாசிவேசிகள்‌ வீடுகளை விட மோசமானவை என்பதை மக்கள்‌ உணரும்படி செய்யவேண்டும்‌. மோட்சம்‌, நரகம்‌ என்பது எப்படித்‌ திருடர்கள்‌ பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்குத்‌ தனிவழியில்‌, ஆள்‌ அடையாளம்‌ தெரியாத வகையில்‌ வேஷம்‌ போட்டுக்கொண்டு வந்து வழி மறித்த, மண்டையை உடைக்க, தடிகீ கம்பையும்‌ ஈட்டியையும்‌ ஆயுதமாகக்‌ கொண்டு பொருள்‌. பறிதீதுச்‌ செல்கிறார்களோ, அதுபோலவே பகல்‌ வழிப்பறிக்காரர்கள்‌ மக்களின்‌ வாழ்க்கைப்‌ பிரயாணத்தில்‌ வழி மறிதீதுப்‌ பொருள்‌ பறிதீதுப்போகச்‌ செய்துகொண்ட ஆயுதங்களே ஆகும்‌. ஆகையால்‌, அதை மனிதன்‌ முதலில்‌ மறந்தாகவேண்டும்‌. இந்த உலக வாழ்க்கை யையும்‌, ஒழுக்கத்தையும்‌, மக்களுக்கு உதவி செய்வதையும்‌ தனது அளவுக்கும்‌ தேவைக்கும்‌ மேற்பட்டதை அடைய ஆசைப்படாமலிருக்க வேண்டியதையே மோட்சம்‌ என்றும்‌ மகீகள்‌ கருதவேண்டும்‌. இந்தப்படி அளவுக்கும்‌ தேவைக்கும்மேல்‌ மக்களை அடையச்‌ செய்யாமல்‌ பார்‌ தீ.துக்கொள்வதையே மகீகளை * மோட்சத்திற்கு அனுப்பும்வேலை? என்று நாம்‌ கருத வேண்டும்‌. மனிதன்‌ இந்த நாட்டில்‌ எப்படித்‌ தனது தேவைக்கும்‌, அளவுக்கும்‌ தகுதிக்கும்‌ மேல்‌ அடைய ஆசைப்படுகின்‌றானோ, அதற்கு ஆதரவாய்‌ இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல்‌ உலகதீதில்‌ அவர்களது தகுதிக்கும்‌, அளவுக்கும்‌, தேவைக்கும்‌ மேலாக அனுபவிக்க ஆசைகாட்டி, இங்கு தட்டிப்‌ பிடுங்கிக்‌ கொள்கிறார்கள்‌. மூடர்களும்‌ பேராசைகீகாரர்களும்‌ தாம்‌ மோட்சத்தை விரும்புவதை நாம்‌ பல உதாரணங்களால்‌ காணலாம்‌. மோட்சத்தையும்‌ தேவலோகதீதையும்‌ பற்றிப்‌ பாமர மக்களுக்குச்‌ சொல்லப்படும்‌ கருத்துக்களைச்‌ சற்று www.thamizham.net - Free £ book 14௦ 3031 1070 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ கவனிதீதுப்‌ பாருங்கள்‌. மனிதனுக்கு எதெதில்‌ சாதாரணமாய்‌ ஆசை வரக கூடுமோ, அதையேதான்‌ மோட்சதீதில்‌ சிருஷ்டி தீது இருக்கிறார்கள்‌, அதாவது, இங்கு உள்ள மனிதனுக்குப்‌ பொருள்‌ வேண்டும்‌ ; பெண்‌ வேண்டும்‌ ; தேவையானவை எல்லாம்‌ நினைதீத மாத்திரத்தில்‌ கிடைக்கவேண்டும்‌] நல்ல வாலிபப்‌ பருவம்‌ வேண்டும்‌ $ சதா இடைவிடாத போக்கியம்‌ பெறவேண்டும்‌ ) சாகாமல்‌ இருக்க வேண்டும்‌. இந்த விஷயங்கள்‌ மனிதனுக்குச்‌ சாகும்‌ வரையிலும்‌, செத்த பிறகும்‌ அனுபவிக்கக்‌ கூடியதாய்‌, ஆசைப்படக்‌ கூடியதாய்‌ இருக்கின்றன என்பது யாரும்‌ அறிந்ததே. ஆகவே, இந்தக்‌ காரியங்களையே மேல்‌ உலகதீதில்‌ இருப்பதாகவும்‌, அதை அடையக்கூடும்‌ என்னும்‌ ஆசை உண்டாகும்படி, அதாவது மேல்‌ உலகதீதில்‌ எங்கு பார்தீதாலும்‌ பொன்னும்‌, இரதீதினங்களும்‌ நிறைந்து கிடக்கும்‌ என்றும்‌, உலகமே பொன்‌ இுலகம்‌ என்றும்‌, அங்கு அரம்பை, ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகள்‌ என்பவர்கள்‌ என்றைக்கும்‌ வாலிபமாய்‌ நம்‌ பக்கத்தில்‌ இருந்துகொண்டு நமக்கு சதா போகங்‌ கொடுதீ இக்கொண்டிருப்பார்கள்‌ என்றும்‌, காமதேனு, கற்பக விருட்சங்கள்‌ நமக்கு எது தேவையோ அதை உடனேயே கொண்டுவந்து கொடுக்கும்‌ என்றும்‌, நரை, திரை, மூப்பில்லை. என்றும்‌, நாம்‌ சாகாமல்‌ சிரஞ்சீவியாய்‌ இருப்போம்‌ என்றும்‌ சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால்‌, அவைகளை மனிதன்‌ நிதீதியமாய்‌ நம்பி, இந்த உலகத்தையும்‌, இங்குள்ள போக போக்கியங்களையும்‌, அநித்தியமாய்‌ எண்ணி, கஷ்டப்பட்டுச்‌ சம்பாதித்த பொருள்களை எல்லாம்‌ இந்த மோட்சத்திற்கு என்றே செலவு செய்வதுடன்‌ நில்லாது, இதற்காக என்று பலவித அக்கிரமமான வழிகளிலும்‌, மற்ற மக்களை வஞ்சிதீதும்‌, பட்டினி போட்டும்‌ பொருள்‌ பறிதீதும்கூட இதற்காகச்‌ செலவு செய்யவேண்டி இருக்கின்றது. உதாரணமாக; ஏழை மக்கன்‌ கஞ்சிக்கு அலையும்போது, குடம்‌ குடமாய்ப்‌ பால்‌ குடங்‌ களைதீ தினமும்‌, கல்லின்‌ தலையில்‌ கொட்டி அவற்றை நாற வைப்பதன்‌ கருதீது என்ன என்று பாருங்கள்‌ ! குடி இருக்க நிழல்‌ இல்லாமல்‌ மக்கள்‌ திரியும்போது மலைகளையும்‌ பாறைகளையும்‌ உடைத்துக்‌ கோட்டைகள்‌ போல்‌--மக்கள்‌ கோவில்கள்‌ கட்டுவதன்‌ கருதீது என்ன என்று பாருங்கள்‌! எவ்விதத்‌ தொழிலும்‌ செய்வதற்கு மூலதனம்‌ இல்லாமலும்‌, தொழில்‌ இல்லாமலும்‌ மக்கள்‌ வயிறு வளர்க்கக்‌ கப்பலேறி வேற்று நாட்டிற்குக்‌ கூலிகளாய்ப்‌ போய்‌ சொத்துப்‌ பொத்தென்று மாண்டு மடிநீ துகொண்டிருக்கும்போது, பொம்மைகளை வைத்து உற்சவம்‌ செய்வதும்‌, அவற்றிற்குப்‌ பதீ.து கிலட்சம்‌, ஒருகோடி, பதீதுக்‌ கோடிக்கணக்காக நகைகளும்‌, பாதீதிரங்களும்‌, வாகனங்களும்‌, துணிகளும்‌, சொத்துக்களும்‌ சேர்தீது வைப்பதன்‌ கருதீது என்ன என்று பாருங்கள்‌ | நாளுக்கு நான்‌ வாழ்கீகை அுன்பகரமாக மாறி, ஏழைகள்‌ மலிந்து வரும்போது ஆயிரக்கணக்காய்‌, ஏன்‌ இலட்சக்கணகீகாய்‌ ரூபாய்‌ செலவு செய்து கும்பாபிஷேகங்கள்‌ செய்வதன்‌ கருத்து என்ன என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ ! பூமியை உழுது கஷ்டப்பட்டூப்‌ பயிர்‌ செய்யும்‌ குடியானவர்கள்‌ அரை வயிற்றுக்‌ குக்கூடப்‌ போதுமான ஆகாரம்‌ இல்லாமல்‌ கஷ்டப்படும்போது குழவிக்‌ கள்லுக்கும்‌, செம்பு, பித்தளைப்‌ பொம்மைகளுக்கும்‌ தினம்‌ பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிபோட்டுப்‌ பொங்கி, நைவேத்தியம்‌ செய்து, பாடுபடாத சோம்பேறி களுக்குக்‌ குடும்பத்துடன்‌ போட்டுக்கொண்டு இருக்கும்‌ கருத்து என்ன என்பதை எண்ணிப்‌ பாருங்கள்‌ ! மகீகளில்‌ 100-க்கு 5 பேர்களுக்குக்கூட அதாவது சராசரி படிப்பு-- எழுத்து வசனைகூட இல்லாமல்‌ இருக்கும்போது வேத பாடசாலை, தேவாரப்‌ பாடசாலை முதலியவைகளுக்கும்‌, கல்லுகள்‌-பொம்மைகள்‌ பின்னால்‌ நின்றுகொண்டு, ஆயிரத்திற்கு ஒருவருக்‌ தக்கூடப்‌ புரியாத வேத பாராயணம்‌ முதலியவைகள்‌ செய்யப்படுவதற்கும்‌ இலட்சக்கணகீகாய்‌ செலவு செய்ததையும்‌, செய்யப்படுவதன்‌ நோக்கம்‌ என்ன என்பதையும்‌ யோசிதீதுப்‌ பாருங்கள்‌ ! இப்படியாக நமது நாட்டில்‌ இதுபோலவே எவ்வளவு காரியங்கள்‌ நடைபெறுகின்றன என்பதை நோக்கினால்‌, மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுதீதியாவது, www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1071 அவர்கள்‌ எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தாலாவது சிறிதும்‌ இலட்சியம்‌ செய்யா து- நாம்‌ மோட்சதீதிற்குப்‌ போகவேண்டும்‌ ; நாம்‌ பிரபுவாய்‌ இருக்க வேண்டும்‌ ] இலட்சுமி புதீதிரராய்‌-ஐராஜாவாய்‌-நிர நதர செல்வனாய்‌-சிரஞ்‌ சீவியாய்‌ இருக்கவேண்டும்‌ என்கின்ற பேராசையல்லாமல்‌, வேறு ததீதுவம்‌ அதில்‌ என்ன இருக்கிறது என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌! இந்த மாதிரி மோட்சம்‌ கற்பிக்கப்பட்டு, அதை அடைவதே மனிதனின்‌: முக்கிய இலட்சியம்‌ என்று போதிக்கப்பட்டிருக்கின்ற, பேராசையுள்ள ஜனங்கள்‌ மலிந்து இருக்கும்‌ இந்த நாட்டில்‌ இந்த உணர்ச்சியை அழிக்காமல்‌ என்ன காரியம்‌ நம்மால்‌ செய்ய முடியும்‌ என்பதையும்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆதலால்தான்‌, முதலில்‌ மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்‌ என்று கருதுகின்றோம்‌. இந்த மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப்போலவே, நரக உணர்ச்சியும்‌ அழிக்கப்படவேண்டும்‌. மோட்ச உணர்ச்சி எப்படிப்‌ பேராசையின்‌: பிரதிபிம்பமோ அது போலவே நரக உணர்ச்சியும்‌ அடிமைத்‌ தனதீதுடையவும்‌, பயங்காளித்‌ தனதீதினுடைய வும்‌ பிரதிபிம்பமாகும்‌. நரகத்திற்குப்‌ பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன்‌ ஆளாகிறான்‌ $ தைரியம்‌ இல்லாத கோழையாய்‌ இருக்கிறான்‌, இவைகளை எல்லாம்விட மனிதன்‌ சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால்‌, சிறிதாவது இயற்கையின்‌ இன்‌ பத்தை நுகரவேண்டுமானால்‌ எல்லாவற்றையும்விட மனிதனுக்கு விதி, கர்மபலன்‌: என்கின்‌றதான உணர்ச்சிகள்‌ கண்டிப்பாய்‌ ஒழிய வேண்டும்‌. விதி, கர்மபலன்‌ என்கின்ற வைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டு இருக்கவில்லையானால்‌, இன்றைய தினம்‌ இந்நாடு அனேக விஷயங்களில்‌: ரஷியர்களுக்கு-ஏன்‌, இந்த உலகத்தில்‌ உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின்‌ நிலைமைக்கும்‌ மேலாக இருந்து, அனேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும்‌, சம இன்பத்தையும்‌, இயற்கை இன்ப நுகரீச்சியையும்‌ கொடுத்து, சர்வ சுதந்திர தீதுடன்‌. வாழச்‌ செய்திருக்கும்‌ என்று தைரியமாய்ச்‌ சொல்லுவேன்‌ , ஆகையால்‌, இந்தக்‌ கர்ம பலனின்‌ உணர்ச்சி, மோட்ச, நரச நம்பிக்கைகள்‌ மனிதத்‌ தன்மைக்கு மிகவும்‌ கேடான எதிரிகள்‌ என்பதை நீங்கள்‌ நன்றாய்‌ ஞாபகதீதில்‌ வைக்க வேண்டும்‌. நான்‌ மேலே காட்டிய இந்தக்‌ காரணங்கள்‌ தாம்‌ இந்த உலகதீதில்‌ நமது நாட்டை மாதீதிரம்‌ இந்த கிழிவான நிலையிலும்‌, மீளா அடிமைதீதனதீதிலும்‌ வைத்திருக்‌ கின்றன. இவைகள்‌ ஒழிந்தால்‌ தாமாகவே இந்த நாடு சுயமரியாதை பெற்றுவிடும்‌ ] சதநீதிரம்‌ பெற்றுவிடும்‌ ) மனிதத்‌ தன்மை அடைந்துவிடும்‌. ஆகையால்‌ சகோதரர்களே ! நீங்கள்‌ இந்‌ நாட்டின்‌ முற்போகீகிற்கும்‌, உண்மை விடுதலைக்கும்‌ மனிதத்‌ தன்மைக்கும்‌ பாடுபடவேண்டுமானால்‌, மேற்கண்ட காரியங்களில்‌ உங்கள்‌ கவனத்தைச்‌ செலுத்த வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌, [ குடிஅரசு 1-கட்டுரை--25-1-1949] 8. ஆத்மா, மோட்சம்‌, நரகம்‌ தோழர்களே ! நாம்‌ செத்த பிறகு ஒன்றுமில்லை. நாம்‌ வைத்த பெயர்‌ செதீ.துப்போய்விட்டது என்பதேயாகும்‌. மரம்‌, செடி, கொடி செத்துப்போயிற்று என்கிறோம்‌. அதாவது, இவை களுக்குச்‌ சதீதுப்‌ போய்விட்டது என்பதாகும்‌. மரம்‌ செதீதுப்போனால்‌ அடுப்பிற்கு இரண்டு வண்டி விறகாவது ஆகிறது. மனிதன்‌ செதீதுப்போனால்‌ ஒன்றும்‌ பிரயோசன: மில்லை. இரண்டு நாள்‌ அப்படியே வைத்திருந்தால்‌ நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்‌ ; அவ்வளவு கேவலமானவன்‌ மனிதன்‌, புதைதீதுவிடவேண்டும்‌ ! அல்லது நெருப்பு வைத்துக்‌ கொளுதீதிவிட வேண்டும்‌ ) இதுதான்‌ சரியான காரணம்‌. செத்துப்‌ பேோய்விட்டதென்றால்‌, மனிதனுக்குதீதான்‌ இந்தவிதச்‌ சடங்கு. மற்றபடி, காட்டிலே வசிக்கின்ற புலி, சிங்கம்‌, கரடி மற்ற விலங்கினங்கள்‌ ஆகியவற்றிற்கெல்லாம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1072 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இப்படிச்‌ செய்ய ஆளில்லை, சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌, நாம்‌ பிறந்து, வளர்ந்து வாழ்ந்து மடிகிறோம்‌. ஏன்‌ மடமையில்‌ மூழ்கிக்கொண்டு,! சுயநலதீதையே பிரதானமாகக்கொண்டு, சாதாரணமாகத்‌ தன்ளவேண்டிய சடங்குகளை; கரரியங்களைதீ திரும்பத திரும்பச்‌ செய்துகொண்டு, தப்பான முறையில்‌ வைத்துக்கொண்டு அலைகிறோம்‌. நான்‌ நிர்வாணமாகச்‌ சொல்லுகிறேன்‌. அதாவது, மறைவில்லாமல்‌, அப்படியே மனதீதில்‌ பட்டதைப்‌ பசீசையாகப்‌ பார்தீதால்‌ எப்படித்‌ தோன்றுகிறதோ, அப்படியே உள்ளது உள்ளபடியே கூறுவதுதான்‌ நிர்வாணமாக என்பதன்‌ அர்த்தம்‌, அந்த நிர்வாணதீதைதீதான்‌ சிலர்‌ முத்தி என்றும்‌, ஞானம்‌ என்றும்‌ கூறுவார்கள்‌. அதற்குமேல்‌ எ.துவுமில்லாததால்‌ முக்தியடைந்து விட்டார்‌ என்பது. அதாவது, நிர்வாணசக்தியடைந்து விட்டார்‌ என்பது. நிர்வாணசக்தி என்றால்‌ முடிவு அடைந்துவிட்டார்‌ என்பது: வேதாந்தம்‌ அல்லது வைகுந்தம்‌, மோட்சம்‌ அடைந்துவிட்டார்‌ என்பது முட்டான்‌தனம்‌. அதுபோல்‌ தமிழ்மொழியில்கூட இல்லை. நிர்வாணம்‌ என்பது நம்‌ உள்ளத்தில்‌ தோன்றிய உண்மை யரன காரணங்களை எடுத்துக்கூறும்‌ நிலை-ஸ்தானமாகும்‌. புதீதநெறியினர்‌ கூட நிர்வாண ஸ்தாபனம்‌ என்‌ பார்கள்‌. செதீதுப்போனார்‌, முடிவெய்திவிட்டார்‌ என்பதுபற்றி நிர்வாணமாகப்‌ பேசுகிறோம்‌ ) அது சம்பந்தமாய்ப்‌ பல காரியங்களை எப்படிச்‌ செய்ய வேண்டுவது என்பனவற்றைச்‌ சொல்கிறேன்‌. இம்‌ முறையென்றால்‌, இதுபோல உலகத்தில்‌ ஒன்றுகூடக்‌ கிடையாது. ஒரே மாதிரிக்‌ காரியத்தில்‌ பல கருதீதுக்களைப்‌ பல மதக்காரர்கள்‌ முட்டாள்‌ தனமாகக்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஒருவன்கூடச்‌ சரியாகக்‌ கூறவில்லை. மரம்கூடச்‌ சாகவேண்டியதுதான்‌ $ புலி, சிங்கம்‌, கரடி இவைகளும்‌ மற்ற விலங்கினங்களும்‌ சாக வேண்டியவைதான்‌) மனிதனும்‌ சாகவேண்டியவன்‌ தான்‌. இப்படி எங்கும்‌ நிறைந்து எங்கும்‌ நடந்துவரும்‌ ஒரு காரியதீதில்‌ ஒன்றாவது ஒற்றுமையான கருதீ தில்லை. நிர்வாண மாக உள்ளவர்களைதீதவிர மற்றவனெல்லாம்‌, மத சம்பந்தக்காரனெல்லாம்‌ ஆளுக்கொரு மாதிரிக்‌ கூறுவான்‌. செத்துப்‌ போவதென்றால்‌ என்ன i செதீதுப்போனால்‌, உயிர்‌ போய்விட்டால்‌ கீழே மண்ணில்‌ போட்டுப்‌ புதைதீதுவிடுவான்‌. அதைப்‌ பாதுகாப்பதாக அவனது நினைப்பு. ஆனால்‌, அது மூன்று நானில்‌ மக்கி மடிந்து அழிந்துவிடும்‌. முஸ்லிமும்‌ இம்‌ மாதிரியே பாதுகாப்பதாக நினைதீதுக்கொண்டிருக்கிறான்‌. மற்றும்‌ சிலர்‌ உடலை ஒரு மண்டபத்தில்‌ மேலே கொண்டுபோய்‌ நிர்வாணமாகப்‌ போட்டுவிடுவார்கள்‌- பக்கத்தில்‌ தண்ணிரும்‌ வைதீதிருப்பாகன்‌. காக்கை, கழுகுகள்‌ கொத்தித்‌ தின்றுவிட்டுப்‌ போய்விடும்‌. புதைதீதவனுடைய கருதீது கொஞ்ச நாள்‌ கழித்து எழுந்திருக்கும்‌. கொஞ்ச நான்‌ போய்‌ ஆண்டவன்‌ விசாரித்துத்‌ தண்டனை தருவான்‌ என்பது முஸ்லிம்‌, கிறிதஸ்வர்கன்‌ பழக்கம்‌. ஆண்டவன்‌ தணிக்கை பார்தீதுத்‌ தண்டிப்பான்‌ என்றும்‌ இதற்குத்‌ தணிக்கை பார்க்கிற நாள்‌ இருப்பதாகவும்‌ கருதீ.துஃ நம்மவன்‌, என்ன தீதைதீதான்‌ செய்வது என்ற விதியொன்றும்‌ கிடையாது. செத்துப்‌ போய்விட்டான்‌ என்றால்‌ அது எங்கேயோ போய்விட்டது என்று கூறுகிறான்‌. பார்ப்பான்‌ மதப்படி இன்றைய மக்களுக்கு என்ன காட்டுகிறானென்றால்‌, ஜீவன்‌ அல்லது மனிதன்‌ செத்துப்‌ போய்விட்டான்‌ என்றால்‌, அப்படிச்‌ செத்துப்‌ போனதற்கு ஆதாரம்‌ உள்ளே உள்ள ஆதீமா பிரிந்து போய்விட்டது $ வேறு கடம்‌ தேடிக்கொண்டது* இதிலுள்ள ததீ.துவப்படி பார்த்தோமானால்‌ இந்த உடம்பிலிருந்து பிரிகிற ஆதீமா சும்மா பிரிவதில்லை) இன்னொரு உடம்பைப்‌ பிடித்துக்‌ கொண்டு அதில்‌ இந்த ஆத்மாவை விடுவான்‌ என்பான்‌. அங்கொரு காலை வைத்துக்‌ கொண்டுதான்‌ இங்கிருந்து அது பிரிந்து போகும்‌. சும்மா போவது, பிறகு இடமின்றித்‌ திண்டாடுவது என்பதில்லை. சும்மா பிரிந்திருக்கிறதென்றால்‌ எங்கே போயிருக்கிறது ¥ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1073 - செத்தும்‌ சும்மா விடூவதில்லை. அது பண்ணின தப்புக்குதி தண்டனை தர வேண்டும்‌. செதீதபிறகு நரகத்திற்கோ, மோட்சத்திற்கோ போகிறதாம்‌. அது அவர்கள்‌. செய்த புண்ணிய தர்‌ மப்படி நடக்கிறதாம்‌. பார்ப்பானுக்குதீ தங்கதீதால்‌ தட்டு, வெள்ளியால்‌ தட்டு செய்து தநீதால்‌ அவ்வப்போது சுடச்சுட தோசை கிடைக்கும்‌. பக்கத்திலே வயகுவந்த பெண்‌ பிள்ளைகள்‌ இருப்பார்கள்‌, என்றைக்கும்‌ இருப்பதைப்போல்‌ சொர்க்கத்தில்‌ சுகமாக இருக்கலாம்‌ என்பர்‌. நரகம்‌ எங்கு பார்தீதாலும்‌ மலமாகதீதானிருக்கும்‌. எத்தனை முனிசிபாலிடியில்‌ வாங்கியிருப்பானோ தெரியவில்லை, தேள்‌, நண்டு, பாம்பு முதலிய பயங்கர ஜந்துக்கள்‌ இருக்கும்‌. அதில்‌ போட்டுத்‌ தினம்‌ துன்பப்பட வைப்பதுடன்‌, அங்கு செக்கில்‌ போட்டு ஆட்டுவான்‌; நெருப்பால்‌ ௬டூவான்‌, ஈட்டியால்‌ குதீ.துவான்‌, கழுவேற்றுவான்‌. இது ஒரு பக்கம்‌ நடக்கும்‌, உயிர்‌ அங்கு திண்டாடும்‌. அதற்காக நீ என்னென்ன தானம்‌ எப்படியெப்படி செய்யவேண்டும்‌ என்று ஒரு முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்ன துதான்‌ செய்வது என்று கிடையாது. எங்கம்மாவுக்கு நானும்‌ என்‌ அண்ணனுமாக இரண்டு பிள்ளைகள்‌. எங்கம்மாவுக்கு என்மேல்தான்‌ அதிக ஆசை. ஆனால்‌ என்னைத்‌ தொடமாட்டார்கள்‌. தொட்டு விட்டால்‌ குளிப்பரர்கள்‌. காரணம்‌, நான்‌ கண்ட இடத்தில்‌ சாப்பிடுகிறேன்‌ என்பதால்‌. ஆசையுடன்‌ என்னை ராமு என்று கூப்பிட்டு, எட்ட நின்று சோறு போடுவார்கள்‌. அத்தனைக்கும்‌ என்மேல்தான்‌ ஆசை. என்‌ அண்ணனைக்‌ கண்டால்‌ பிடிக்காது. அண்ணனும்‌ அதை இலட்சியம்‌ பண்‌ ணுவதில்லை. அந்தம்மாளுக்குக்‌ காசு.2மல்‌ நிரம்பக்‌ குறி. சாப்பிடாமல்கூட சேர்தீதுவைப்பார்கள்‌. வருடம்‌ எப்படியும்‌ ஆயிரம்‌ ரூபாயாவது மீதமிருக்கும்‌. அண்ணனுக்குப்‌ பணம்‌ தேவையாயிருக்கும்‌. அம்மாவிடம்‌ போய்‌ உட்கார்ந்து கொண்டு பணம்‌ கேட்பார்‌. அம்மாவோ, ¢ என்னிடம்‌ ஏ.து பணம்‌ P என்பார்கள்‌. என்னவெல்லாமோ கூறிப்‌ பார்ப்பார்‌. பணம்‌ தரமாட்டார்கள்‌. கடைசியில்‌ இந்தாம்மா நீ செத்தால்‌ நான்‌ தான்‌ கருமம்‌ செய்யணும்‌. அவன்‌ கொள்ளிவைக்கமாட்டான்‌. மூனிசிபாலிடி நாய்‌ மாதிரி உன்னைச்‌ செய்துவிடுவான்‌. நான்தான்‌ உனக்கு எல்லாம்‌ செய்யணும்‌. நீ பணம்‌ கொடுத்தால்தான்‌ செய்வேன்‌, இல்லாவிட்டால்‌ நீ செத்தவுடன்‌ நான்‌ எங்கேயாவது ஊருக்குப்‌ போய்விடுவேன்‌ * என்பார்‌. உடனே எங்கம்மா, * ஏதோ ஒரு பிள்ளைதான்‌ அப்படிப்‌ பிறந்துவிட்டது. நீ அப்படியெல்லாம்‌ போகக்கூடாது? என்று கூறிப்‌ பணம்‌ கொடுதீதுவிடுவார்கள்‌. எங்கய்யாவிற்கு நோய்‌ வந்தால்‌ சர்வ பிராயச்‌ சிதீதம்‌--அதாவது, உயிர்‌ போய்விடும்‌ என்று நினைத்து மாடு வாங்கி, பார்ப்பானுக்குச்‌ சடங்குகள்‌ செய்து தருவார்கள்‌, அவன்‌ வாங்கிக்கொண்டு போனவுடன்‌ இங்கு பிழைத்துக்கொள்வார்‌, சாதாரணமான நெஞ்சுவலி; சில பேர்‌ உயிர்‌ போய்விட்டதென் றால்‌ கணக்குப்‌ பார்த்துத்‌ திருப்பியனுப்பிவிட்டான்‌. என்பார்கள்‌. இப்படி 2, 3 மாடு2வறு;) தனியாகக்‌ காசுவேறு கொடுத்திருக்கிறார்கள்‌. எப்போதும்‌ தனியாக ரூபாய்‌ அய்ம்பது தந்து, ₹ ஒரு மாடு வாங்கிக்‌ கொடு அப்பா? என்று கூறித்‌ தருவார்கள்‌. இதை 16-ஆம்‌ நாள்‌ செய்வோம்‌. அதையெங்கள்‌ வீட்டில்‌ தப்பாது செய்வார்கள்‌. எங்கள்‌ பார்ப்பான்‌ என்ன செய்வான்‌ தெரியுமா ₹ சும்மா அவனுக்கு மாடு வாங்கிக்‌ கொடுத்தால்‌ என்ன செய்வது நாங்கள்‌ கொடுத்த மாட்டை விற்றுவிட்டால்‌ ஏசுவோம்‌;) கோபிதீதுக்கொள்வோம்‌. அதனால்‌, அவன்கிட்டே ஒரு மாடிருந்தால்‌ அதை எவனையாவது ஒருவனைப்‌ பிடிதீதுக்‌ கொண்டு போய்விடும்படி செய்வான்‌, பிறகு எங்க ளிடம்‌ வந்து இது நல்ல மாடு; இதைதீதான்‌ வாங்கித்‌ தந்து விடுங்களேன்‌ ! என்பான்‌, நாங்களும்‌ சரியென்று வாங்கிக்கொடுத்து விடுவோம்‌. அவன்‌ மாடும்‌ அவனுக்கே வந்து விடுகிறது) பணமும்‌ ரூபாய்‌ அய்ம்பது கிடைக்கிறது ! பித்தலாட்டம்‌ செய்திருப்பான்‌, 1686—135 www.thamizham.net - Free E book 14௦ 3031 1074 பெரியார்‌ ஈ, வெ: ரா, சிந்தனைகள்‌: இதிலிருநீது தப்ப மோட்சம்‌ வேண்டும்‌. அதற்கு வேண்டியது செய்‌ என்பான்‌. மாடு தருவது எதற்காக என்றால்‌, இந்த ஆள்‌ மோட்சதீதிற்குப்‌ போகும்‌ வழியில்‌ ஒரு ஆற்றைத்‌ தாண்டுவதற்காக. அதாவது, நெருப்பு ஆறு ஒன்று இருக்கிறது. அதன்மேல்‌ மயிர்ப்‌ பாலம்‌ கட்டியிருக்கிறது. அந்த மயிர்ப்‌ பாலத்தின்மேலே, சர்க்கஸ்காரப்‌ பெண்‌ பிள்ளைகள்‌: கம்பியிலே நடக்கிறார்களே, அதுமாதிரி இந்த ஆதீமா மயிர்ப்‌ பாலத்தின்‌ மேல்‌ போகணும்‌. ழே நெருப்பு) மேலே மயிர்ப்‌ பாலம்‌, தனியாகப்‌ போகமுடியாது. அதற்காக இவன்‌ கொடுத்தனுப்புகிற மாடு அந்த மயிர்ப்பாலதீதின்‌ மீது செல்லும்‌. அப்படி அந்த மாடு செல்லும்போது அந்த மாட்டின்‌ வாலைப்‌ பிடித்துக்கொண்டே ஆத்மா போகணும்‌. சாவகற்குச்‌ சற்றுமுன்‌ கொடுத்தால்தான்‌ இது உதவும்‌) செத்த பிறகு வேண்டுமானால்‌ இரண்டு மாடுகள்‌ தரவேண்டும்‌. இது எவ்வளவு பித்தலாட்டமான காரியம்‌ £ நெரூப்‌ 9ன்மேல்‌ மயிர்‌ கருகிப்‌ பொசுங்கிவிடாதா? தனி மனிதன்‌ போகமுடியாத மயிர்ப்‌ பாலதீதின்மீது மாடும்‌ மனிதனும்‌ சேர்ந்து எப்படிப்‌ போகமுடியும்‌ | மடத்தனத்திற்கு அர்த்தம்‌ வேண்டாமா? என்று கேட்டால்‌, இவணை வெளியில்‌ போகச்‌ சொல்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? இது எத்தனை முட்டாள்‌ தனம்‌ 1 காட்டு3ராண்டிதீதனம்‌ 8 முதல்‌ பித்தலாட்டம்‌ ஆதீமா என்பது. இது இல்லாவிட்டால்‌ மற்ற பிதீதலாட்டங்களுகீ கெல்லாம்‌ இடமேயில்லை. இந்த மனிதனை உண்டாக்கிய சக்தியின்‌ வேலை என்ன வென்றால்‌, மனிதனைக்‌ கவனிப்பது) தண்டனை தருவது என்பது போன்றவையாம்‌. சாதாரணமாக ஒரு வரிவசூல்செய்யும்‌ தாசில்தாரைக்கண்டு யாராவது பயப்படுகிறொர்களா ?₹ ஆனால்‌ இது ஒரு மாஜிஸ்ட்ரேட்‌, ஒரு சர்க்கிள்‌ இன்ஸ்பெக்டர்‌ இருந்தால்‌ கொஞ்சம்‌ பயப்‌ படுகிறோம்‌; நடுக்‌ குகி3றாம்‌. காரணம்‌, அதிகாரம்‌ இருக்கிறது. தப்பும்‌ தவறுமாகக்‌ கேஸ்‌ கொண்டுவந்து தண்டி தீ துவிடுவார்கன்‌ என்பதால்‌, காலிப்‌ பசங்களை விட்டுத்‌ திட்டச்‌ சொல்வது) நான்‌ பார்த்துக்‌ கொள்கிறெனென்று சொல்லி கேசில்‌ வரும்‌ லாபத்தில்‌ பங்கு பெறுவது என்றால்‌ என்ன நியாயம்‌? எங்கள்‌ ஊரில்‌ ஒரு மாஜிஸ்ட்ரேட்‌ இருந்தார்‌. நூறு ரூபாய்தான்‌ சம்பளம்‌, இருந்தும்‌ நல்ல வசதி, சில காலிப்‌ பசங்களைக்‌ கையில்‌ வைத்திருப்பார்‌. அவர்கள்‌ ஊரில்‌ சென்று வீண்‌ வம்பு செய்து கேஸ்‌ கொண்டு வருவார்கள்‌. இவர்களை வீட்டிற்கு வரச்சொல்லுவார்‌ தன்‌ பெண்டாட்டியை விட்டு தோசை, பலகாரம்‌ கொடுக்கச்‌ சொல்லுவார்‌. அவர்கவில்‌ ஒருவனுக்கு மொட்டையன்‌ என்று பெயர்‌. * ஏண்டா ! மொட்டையா, இந்த வாரத்தில்‌ ஒரு கேஸ்கூட வரவில்லையே! என்பார்‌ மாஜிஸ்ட்ரேட்‌. ¢ நானும்‌ போய்தீதான்‌ பார்க்கிறேனுங்க, மாட்டமாட்டேங்குறான்‌க. எப்படியும்‌ கொண்டு வருகிறறேன்‌? என்பான்‌. இவன்‌ எப்படி யாவது நாலுபேரை வம்புக்கிழுதீது கலாட்டா செய்துகொண்டு வந்து விடுவான்‌, இவரும்‌, *வா, ரொம்பநாளாய்‌ நீ தப்பிதீதுக்கிட்டிருந்தாயா ₹ என்று கேட்பார்‌. அதாவது கா௬௯ கொடுக்காமல்‌ ரொம்பநாள்‌ தப்பித்துக்‌ கொண்டிருந்தாய்‌ என்பது பொருள்‌. ஓரிநுதடவை வாய்தா போட்டு, ஏதாவது பணம்‌ வந்தவுடன்‌, *£ சரி, இனி நீ கிப்படியெல்லாம்‌ செய்யக்‌ கூடாது? என்றுகூறி கிருவரையும்‌ கண்டிப்பது போல்‌ கூறி அனுப்பிவிடுவார்‌. காசு வரச விட்டால்‌ ஏதாவது காரணங்காட்டி இழுதீதடித்துக்‌ கொண்ட போவார்‌. இத்‌ தொல்லை யெல்லாம்‌ சீக்கிரம்‌ விட்டால்போதும்‌ என்று கா௯ கொடுத்‌ துவிட்டுப்‌ போய்விடுவான்‌, அந்த வரும்படியில்‌ காலிப்‌ பசங்களுக்குச்‌ சிறிது கொடுதீ துவிடுவரரி, இம்‌ மாதிரி விரட்டியே, பெண்‌ பிள்ளைகளைக்‌ கடவுளைகீகாட்டிப்‌ பயமுறுதீதகி றான்‌, கடவுள்‌ தாசில்தாரைப்‌ போலிருந்தால்‌ யார்‌ கவனிப்பார்கள்‌ ₹ அவன்‌ பிடிப்பான்‌, நாசம்‌ செய்வான்‌, கண்டிப்பான்‌ என்றால்தான்‌ பயப்படுவார்கள்‌, இல்லாவிட்டால்‌ அதுவும்‌ ஒரு கல்லுதான்‌) இருக்கும்‌ வரைதானே என்றால்‌ என்ன செய்வது? எதற்காக உடம்பு செய்தது என்று கருதாமல்‌ ஆதீமா செய்தது என்று கருதி, இதைச்‌ செக்கில்போட்டு ஆட்டு வான்‌) கமுமரதீதி3லற்றுவான்‌ ) மலத்தைத்‌ தின்னும்படி செய்வான்‌) நெருப்பில்‌ போட்டுப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1075 பொசுசீகுவான்‌ ) நண்டு, தேன்‌, பாம்பு இவற்றின்மீது படுத்துத்‌ தூங்கவைப்பான்‌ என்பது? ஆதீமா எது? உயிர்தான்‌ செத்து விடுகிற 8தயென்றால்‌, * உனச்குத்‌ தெரியாது) உன்னிட மிருந்து அதுபோகும்‌) போனவுடன்‌ பகவான்‌ உன்னுடைய உடம்பைப்டோல்‌ செய்து அதிலிருந்த உயிரை உள்ளே செலுத்திக்‌ கொடுமைப்‌ படுத்‌. துவான்‌. அதற்காக, நீ கிதெல்‌ லாம்‌ செய்துதான்‌ தீரவேண்டும்‌! என்பான்‌. யானை; நாய்‌, பூனை; கரடி இவையெல்லாம்‌ செத்தால்‌ என்ன செய்கிறோம்‌ 8 கருமாதியா செய்கிறோம்‌ ₹ இவனுக்கும்‌ ஆதீமா இருக்கிறது; இவைகளுக்கும்‌ ஆதீமா இருக்‌ கிறது. ஏன்‌ மனிதனுக்கு மட்டும்‌ கருமாதி! மற்றவைகளுக்குக்‌ கிடையாது! நல்லது கெட்டது தெரிந்துதான்‌ இவனைத்‌ தண்டிப்பார்‌. பார்ப்பானுடைய மததீதைதீதவிர ஆத்மா என்ற சொல்‌ வேறு மததீதில்‌ கிடையாது. கிறிஸ்து மதம்‌, முஸ்லிம்‌ மதம்‌, தமிழ்‌ மதம்‌ ஆகிய எந்த மதங்களிலும்‌ ஆதீமா என்பதே கிடையாது. ஆனால்‌, இந்தப்‌ பார்ப்பனர்‌: வந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை வசதிகளுக்காக ஏற்படு தீதிக்சொண்ட ஏற்பாடே இந்த ஆத்மா என்பதாகும்‌. புத்தர்கூட ஆதமா என்பது ஒன்று இல்லை, அதற்கு எஜமான்‌ என்று ஒரு கடவுளில்லை என்றுதான்‌ கூறியிருக்கிறார்‌. பார்ப்பனர்கள்‌ கூறும்‌ ஆதீமாவுக்கு ஆபுசே கிடையாது. எத்தனையோ ஜன்மங்கள்‌ எடுதீதிநக்கிறது. அதற்கு வயது எல்லையே இல்லை. இங்கு நாம்‌ பார்ப்பனர்களுக்குதி தானம்‌ கொடுக்காவிட்டால்‌ அங்கு சரியானபடி சாப்பாடு தரமாட்டார்கள்‌. இங்கு நாம்‌ என்னென்ன தருகிறோமோ அதுவெல்லாம்‌ அங்கு தருவார்கள்‌, சிலர்‌ செருப்பு வாங்கித்‌ தருவார்கள்‌. ஏனெனில்‌, அங்கு கரடுமுரடான பாதையில்‌ நடக்கச்‌ சொல்லுவ ரீகளாதலால்‌ அதற்காக, செருப்பு இங்கு தந்தால்‌ அது அங்கும்‌ அவனுக்குக்‌ கிடைக்கும்‌. அங்கு வசதி யான வீடு வேண்டுமானால்‌, தனக்கு இங்கு ஒரு நல்ல வீடு தந்தால்‌ அங்கு அவனுக்குதீ கிடைக்கும்‌ என்று கூறி வாங்கிக்‌ கொள்கிறான்‌. வெள்ளித்தட்டு கல்யாணப்‌ பெண்ணைதி தானம்‌ கேட்கிறான்‌. என்னடாவென்றால்‌, இதெல்லாம்‌ அங்கு உனக்கு& கிடைக்கும்‌ என்கிறான்‌. சிலர்‌ இதற்காக ஒர இலட்சம்‌ வரை செலவு செய்கிறார்கள்‌. இப்படி ஒரு சிறு கூட்டம்‌ வாழ வழி வகுதீதுக்‌ கொண்டிருக்கிறது காலமான பிறகு ஒரு வருடம்‌ கழித்துத்‌ திவசம்‌ செய்யாதவரை, பெயரெல்லாம்‌ கேட்டுக்‌ ‘ குடி அரசி!ல்‌ போட்டோம்‌. ஏராளமாகதீ தொடர்ந்து வந்தது. அதில்‌ எங்காவது ஒரு குமாஸ்தா இருந்திருப்பான்‌. அதைக்‌ கண்டுபிடித்து, நீ என்ன திவசம்‌ செய்யமாட்‌ டேன்‌ என்று குடி அரசி?ற்குப்‌ பெயர்‌ கொடுத்தாயா ₹ என்பான்‌, அய்யய்யே, அது நானில்லை வேறு யாரோ என்று கூறிவிடுவான்‌, 1926-27லேயே இப்படி மகுரையில்‌ இந்தக்‌ கருத்தைக்‌ கூறித்‌ துவக்கினோம்‌. பத்து சதவீதம்‌ பேர்தான்‌ திருந்தினார்கள்‌, மீதி தொண்‌: ணூறு சதவீதம்‌ பேர்கள்‌ திருந்தவில்லை. சிந்திக்கவேண்டும்‌. கடவுள்‌, மத, சாஸ்திர சம்பிரதாயப்படி, உலக வழகீகப்படி போகிறது என்கிற மாதிரி முட்டாள்‌ தன தீதிலும்‌ அ உிமுட்டாள்‌ தனதீதிலுமாக நடந்தால்‌ என்ன அர்த்தம்‌ ₹ எப்படிச்‌ செத்து எப்படி வருகிறோம்‌ ? என்பது தனி நிர்வாணமாக இருந்து சிந்திக்க வேண்டும்‌. எந்தவிதமான பற்றும்‌ சவலையும்‌ இருக்கக்கூடாது. நம்‌ ஆராய்ச்சி அறிவைக்கொண்டு நாம்‌ சிறிது சிந்திக்கவேண்டும்‌. சிந்திக்க ஆரம்பித்தால்‌ தான்‌ உண்மை தெரியும்‌, சிந்திக்காததுதான்‌ குறை. 2500 வருடங்களாக புதீதர்‌ கூறினாரே *யார்‌ எதைக்‌ கூறுகிறார்கள்‌ என்பதற்காக எதையும்‌ நம்பாதே ! சிந்தித்துப்பார்‌ ! பகுதீதறிவு கொண்டு ஆராய்ந்து பார்‌ ! உன்‌ புதீதி என்ன சொல்லுகிறதோ அதன்படி நட! என்றார்‌. புதீதிப்படி நட என்றதால்தான்‌ அவருக்கு புதீதர்‌ என்று பெயர்‌ வந்ததுஃ . ‘www.thamizham.net - Free E book 14௦ 3031 1076 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ புதீதியால்‌ சிந்தித்துப்‌ புத்தியின்படி நட! என்றதால்தான்‌ புதீதர்‌ எனப்பெயர்‌ என்று வெள்ளைக்காரன்‌ எழுதி வைத்திருக்கிறான்‌. நமது தமிழ்‌ அகராதியிலும்‌ புதீதியை ஆதாரமாகக்‌ கொண்டவன்‌ புத்தன்‌ என எழுதியிருக்கிறது. புதீதர்‌ சொன்னபடி சிந்தித்தால்‌ இது விளங்குமே தவிர, நம்மிரு மதமும்‌ என்ன கூறுகிறது என்று பார்தீது, மதத்தில்‌ கூறியிருக்கிறது என்று கூறி நடப்பானேயானால்‌ அவன்‌ மடையன்‌ ; பதீதிப்படி நடந்தால்‌ மட்டும்‌ எல்லாம்‌ நன்மையாகும்‌. அதற்குமேல்‌ அவன்‌ ஆராய்ச்சி வேறு இருக்கிறது மனிதன்‌ பிறசீகும்போதே பெரிய மனிதனாகப்‌ பிறப்பதில்லை. சின்னக்‌ குட்டியாகதீ தான்‌ பிறக்கிறான்‌. சிறிகாகப்‌ பிறந்து பிறகு பெரியவனாக வளருகிறான்‌. பெரியதாகதீ தோன்றும்‌ யானையும்‌ பிறக்கும்போதே பெரிதாகப்‌ பிறப்ப தில்லை. சிறிதாகதீதான்‌ பிறக்‌ கிறது. பெண்டாட்டி சினையாகிறாள்‌ ) பிள்ளை பெறுகிறான்‌. யானை சினையாக வேண்டு மானால்‌ அதற்கு விதை கடுகத்தனையாகும்‌. பெண்‌ சினையாவதற்கு, அத்த சினை (யானை) உருவதீதிற்கு ஆகும்‌ ஒரு கடுகத்தனையிலே நான்கில்‌ ஒரு பங்குதான்‌. அவ்வளவுதான்‌ $ அதிலிருந்து வருவது சிறு உருவமாகும்‌. அப்புறம்‌ உணவு உண்டு வளர்ந்து மனிதனாகிறான்‌. இதுதான்‌ மனிதன்‌) இதில்‌ எப்படி ஆதீமா என்பது பொருந்தும்‌ 1 சாதாரணமாக, ஒரு மரதீதை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. 10டன்‌ எடை இருகிறது. ஒரு ஏகீரா அளவு ஒரு ஆலமரம்‌ இருந்தது. விழுது எங்கும்‌ இறங்கியிருந்தது. இதெல்லாம்‌ எங்கிருந்து வருகிறது? ஒரு சிறு கடுகத்தனை முனையிலிருந் துதான்‌. மற்றபடி காற்று, தண்ணீர்‌, மண்ணின்‌ சாரம்‌, இவையெல்லாம்‌ சேர்ந்து மளமளவென்று வளருகிற க சிலது நூறு, இருநூறு, அய்நூறு வருஷம்‌ இருக்கிறது. பட்டுப்‌ போய்விட்டால்‌ பகவான்‌ சீட்டுக்‌ கிழித்து விட்டான்‌ என்பான்‌. எதீதனை நாளைக்கு இருப்ப து, வாழ்வது என்பன சுற்றுப்புறச்‌ சார்புப்படி தான்‌. மனிதனும்‌ அப்படித்தான்‌. வயிற்றிலேயே இறப்பதுமுண்டு ; பிறந்ததும்‌ இிறப்பதுமுண்டு. பள்ளியில்‌ படிக்கும்‌ போதும்‌ இறப்பான்‌. திருகணமான பிறகும்‌ இறப்பான்‌. இப்படி எந்தச்‌ சமயத்திலும்‌ மனிதன்‌ சாகிறான்‌. சுற்றுப்புறச்‌ சார்புப்படி சிற்சில சிகிச்சைகள்‌ செய்வதை முன்னிட்டு விபதீ குக்களைதீ தவிர்ப்பதுமுண்டு. வளப்பமான முறையிலிருந்ததால்‌ இந்தக்‌ குறைகள்‌ அதிகமில்லை. எனகீகு வயது 80 ஆகிறது. எந்த விததீதிலும்‌ உணவு மற்ற விஷயங்களிலும்‌ கவலைப்படுவதில்லை. ஏதா வாய்தீதபடி, நினைத்தபடி, பிடி தீததைச்‌ சாப்பிடுவேன்‌. நேற்று ஒரு பண்டத்தை தின்று அது ஜீரணிக்காமல்‌ கஷ்டப்பட்டிருப்பேன்‌. இன்று அது கிடைத்துவிட்டால்‌ சாப்பிட்டு விடுவேன்‌. பத்து நாளைக்கொருதரம்‌ குளிப்பேன்‌. அகுவும்‌ யாருடையவாவது தொந்தரவினால்தான்‌. எண்ணெய்‌ தேய்த்துக்‌ குளிப்பதென்றால்‌ அது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவை கூட கஷ்டம்‌. அதுவும்‌ லேசிஃ தேய்க்கவிட மாட்டேன்‌. இதற்காக என்‌ முதல்‌ மனைவி நாகம்மையாரும்‌ என்‌ தங்கையும்‌ சேர்ந்து பேசிக்‌ கொள்‌ வார்கள்‌. நான்‌ பேச்சுக்‌ சொடுத்துக்‌ கொண்டேயிருக்கி றன்‌. நீ பின்னால்‌ வந்து எண்ணெயைத்‌ தலையில்‌ ஊற்றித்‌ தேய்தீ துவிடு! என்று; அதன்படி என்‌ மனைவி என்‌ னிடம்‌ ஏதாவது பேசிக்சொண்டிருப்பார்கள்‌. என்னுடைய தங்கை பின்னால்‌ வந்து தலையில்‌ எண்ணெய்‌ ஊற்றி விடுக. நான்‌, அட நாசமாபோறவங்களே; என்று திட்டி விட்டுப்‌ பின்னால்‌ திரும்புவேன்‌. தங்கையா உ இருக்கும்‌, கோபம்‌ வரா ௮. சரியாகதீ தூங்கு வது கிடையாது. மற்றபடி ரொம்பப்போனால்தான்‌ டாகீடரைக்‌ கூப்பிடுவேன்‌, கொடுக்கும்‌. மருந்தைக்‌ குடிப்பேன்‌. மனிதனாகப்‌ பார்தீது நல்லதாக அமைப்பதும்‌ உண்டு) தானாக அமைவதும்‌ உண்டு. எல்லா வசதிக்கும்‌ அபாயம்‌ என்பது உண்டு. இயற்கை நிகழ்ச்சிகள்‌ | www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1077 ஒரு நல்ல கெட்டியான வீடு 100 வருஷம்‌ இருப்பதும்‌ உண்டு. நாலு வருஷம்‌ இருப்பதும்‌ உண்டு. நல்ல கெட்டியான வீடு இது; நூறு வருஷ? வரை தாங்கும்‌ என்‌ கிறோம்‌. ஆனால்‌ நான்கு வருஷத்திலே நெருப்புப்‌ பிடித்‌துக்கொண்டு இடி நீது விடுகிறது. 100, 150 வருஷம்‌ இருக்கும்‌ என்றாயே, 4 வருஷதீ தில்‌ போய்விட்டதே என்றால்‌ என்ன அர்தீதம்‌ T எப்படியெப்படியிரு ந்தால்‌ இருக்குமோ அப்படியிருந்தால்‌ இருக்கும்‌. ஒரு By அதன்மேல்‌ விழுந்தாலோ அல்லது ஒரு லாரி வந்து வீட்டின்‌ 3மல்‌ மோதினாலோ அது இருக்குமா ? சாதாரணமாக இருந்தால்‌ 100, 150 வருஷம்‌ இருக்கும்‌. காந்தி கூடத்தான்‌ 150 வருஷம்‌ இருப்பேன்‌ என்றார்‌. என்னவாயிற்று? அதற்‌ கேற்ரபடி சாப்பிட்டு வந்தார்‌. எனக்கு அதைப்பற்றியெல்லாம்‌ நன்கு தெரியும்‌, அவருடன்‌ நெருங்கிப்‌ பழகியவர்களில்‌ நானும்‌ ஒருவன்‌. எத்தனை பாதாம்‌ கொட்டை, எத்தனை பழம்‌ என்று எண்ணித்தான்‌ சாப்பிடுவார்‌. என்ன டாலில்‌ என்ன சதீது என்று பார்த்துச்‌ சாப்பிடுவார்‌. உடல்‌ வளர்ச்சிக்கானவற்றை உண்பார்‌. இதற்காகப்‌ பட்டினியுமிருப்பார்‌, ஆனால்‌, அதே சமயத்தில்‌ அந்தப்‌ பட்டினியைக்‌ காட்டிக்‌ காரியமும்‌ சாதிதீகுக்‌ கொள்வார்‌, என்ன ஆயிற்று ₹ 80 வயதிலேயே தீர்ந்து போனார்‌. என்னைவிட பதீது வயது முந்தி, அவ்வளவுதான்‌. என்ன நடந்தது 1 சாகவில்லையா 1 ஏதோ பார்ப்பனர்களுக்கு அபாயம்‌ வந்தது) எனவே, பார்க்காமல்‌ சுட்டான்‌. செத்துப்போனார்‌. நான்கு தென்னங்‌ கன்றுகளை நட்டால்‌ எல்லாம்‌ தன்றாகவா பயன்‌ தருகிறது? இல்லை; ஏன்‌ 5 எல்லாம்‌. ஒரு விதை தானே | மனிதனாக இருந்தால்‌ ஜாதகம்‌ சொல்லுவார்கள்‌. மரதீதிற்கு என்ன காரணம்‌ சொல்லுவார்கள்‌ ? என்னமோ, அது அவ்வளவதான்‌ என்பார்கள்‌. அயோக்கியன்‌ என்று ஒரு பின்னை பிறப்பதில்லை. சுற்றுப்புறச்‌ சார்புகளின்படி, பழகீகப்படிதான்‌ கெட்டவனாக, பிதீதலாட்டக்காரனாக, கொலைகாரனாக மாறுகிறான்‌. இதன்படி உடம்பு அமைப்பு ஏற்பட்டுவிடுகிற து. வயிற்றிலிருச்கிறபோதே, உருவ வளர்ச்சி யடைகிறபோது காற்று, உஷ்ணம்‌ வந்து ஒவ்வொரு அவயங்களையும்‌ தாக்குகிறது. அதனால்தான்‌ சிலர்‌ நொண்டியாகவும்‌, முடமாகவும்‌ மற்றும்‌ பலர்‌ அங்க ஈனமாகவும்‌ பிறக்‌ கிறோம்‌. நம்‌ உடம்பில்‌ சிரிக்க, கோபப்பட, சிந்திக்‌, நடக்க, ஆத்திரப்பட என்று ஒவ்வொரு அவயவம்‌ இருக்கிறது. இது சுற்றுப்‌ புறதீதிற்குதீ தகுந்தபடி நடந்து கொள்ளும்‌, முன்கோபக்காரன்‌ ஒருவன்‌, நண்பன்‌ ஒருவனைப்‌ பலர்‌ முன்னிலையில்‌ முன்‌ கோபத்தால்‌ திட்டினால்‌, அது ஆணவத்தால்‌ வருவது இல்லை. உள்ளேயுள்ள அவய வத்தால்‌ வருவது. கார்‌ ஓடுகிறது) ஒன்று கோளாறாக இருந்தால்‌ வண்டி கோளாறு காண்பிக்கிறது. ஒரு மடையனுக்குப்‌ படிக்கும்போதே மறந்துவிடுகிறது. வரிசையாக எண்ணிக்‌ கொண்டே வரும்போது 59, 60 என்று கூறிவிட்டுப்‌ பின்‌ 09 என்று கூறுவான்‌. அவயவத்தி லுள்ள ஒரு கூட்டுச்‌ சக்திதான்‌ காரணம்‌. செத்துப்‌ போய்விட்ட து, சாறு போச்சு) சதீதுப்போய்விட்ட து என்கிறோம்‌. என்ன அர்த்தம்‌? எதன்மூலம்‌ எப்படிப்‌ பார்‌ தீது செத்துப்‌ போயிற்று என்கிறோம்‌. எப்படிப்‌ பார்க்‌ கிறார்கள்‌ ? நாடி பிடிதீதா$ பெண்களும்‌ பாட்டிகளும்‌ போயிட்டது என்கிறார்கள்‌. எப்படி ¢ மூக்கில்‌ கை வைத்துப்‌ பார்க்கிறார்கள்‌. மூசீசு எழும்பவில்லையா? உடனே செத்துப்போச௯ என்பார்கள்‌. எப்படி? காற்றை வாங்கிவிடுகிற இயந்திரம்‌ இருந்து, அதன்‌ வேலை தீர்ந்து போச்சு. மற்ற எந்த அவயவமும்‌ நன்றாக இருந்தாலும்‌ பயனில்லை. சாற்றை வாங்க முடியவில்லை, விடமுடியவில்லை என்றால்‌ சத்துப்‌ போய்விட்டது ; அதுதான்‌ காரணம்‌, நல்லா உடம்பு குண்டா கதீதானிருக்கும்‌. வண்டியிலேறி கோர்ட்டுக்குப்‌ போவார்‌. போகும்‌ வழியில்‌ இறந்து விடுவார்‌. இறங்கும்போது பார்த்தால்‌ இறந்து கிடப்பார்‌. காற்றை விடுகிற, வாங்குகிற சக்தி குறைந்தால்‌ தீர்ந்தது. பிறகு எரித்து விடுகிறோம்‌. அதில்‌ சேர்ந்திருந்த பொருட்கள்‌ காணாமல்‌ போய்விடாது. அதுவெல்லாம்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1078 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ வெளியில்‌ பாய்‌ அதுகளுடன்‌ சேர்நீதுவிடுகிறது. என்னுடம்பில்‌ 1000 எடை தண்ணீர்‌ இருக்கிறதென்றால்‌ உடம்பை எரிக்கும்போது தண்ணீர்‌ ஆவியாகிறது. மூலப்பொருளுடன்‌ சேர்ந்து கொள்கிறது. முன்பு கூறுவார்கள்‌? ஒரு மெழுகுவர்த்தி எரிவதால்‌ ஒன்றும்‌ நஷ்டமில்லை என்று. மெழுகுவர்த்தி எரி8றது. புகைச்சலாக வந்து காற்றுடன்‌ சேர்ந்து அது அதன்‌ மூலப்பொருள்‌ களுடன்‌ சேர்ந்து கொள்ளுகிறது. பிறகு நாம்‌ அந்த மூலப்‌ பொருளை எடுத்துக்‌ கொள்ளுகிறோம்‌. இப்படி அதன்‌. மூலப்பொருள்‌ நஷ்டமாவதில்லைஃ ஒரு அண்டா நிறைய தண்ணீர்‌ சுடவைக்கிறறாம்‌. எரிய எரிய தண்ணீர்‌ குறைந்து ஆவியாகி, அது கனம்‌ குறைந்த வஸ்துவாக ஆகிறது. மேலே போக, காற்றாகிப்‌ பின்‌ குளிர்‌ நீது மழையாகப்‌ பெய்கிறது. அது எங்கயும்‌ போகவில்லை. மூலப்பொருளாகிய தண்ணீரோடு தண்ணீராகச்‌ சேருகிறது. தண்ணீர்‌ ஆவியாகி, ஆவி தண்ணீராக மாறு நெது. அது உயிரோடுதான்‌ இருக்கிறதே தவிர எங்கேயும்‌ போய்விடவில்லை. எத்தனை தடவை அப்படித்‌ தண்ணீர்‌ மாறி மாறி வருகிறதோ, அதுபோல்தான்‌ மனிதன்‌ உயிரும்‌ என்பர்‌. எனவேதான்‌, இந்த ஆகீமா என்பதும்‌, மோட்சம்‌, நரகம்‌ என்பவைகன்‌ எல்லாம்‌ இந்தப்‌ பார்ப்பனர்‌ நம்மை ஏமாற்றி நம்மிடம்‌ பணம்‌ பறிப்பதற்சாக ஏற்படுதீநப்பட்டது என்பதுதான்‌ கருத்தே தவிர, இதில்‌ உண்மை இருக்கிறது என்று கூற இடமில்லை. இதையெல்லாம்‌. எடுதிதுக்கூற நாதியில்லை, எங்களைத்‌ தவிர. ஏமாற்றிப்‌ பிழைக்கத்தான்‌ வசதியிருக்கிறதே தவிர, உண்மையை எடுத்துக்கூற வாதியில்லை, இந்தப்‌ பதீதிரிகைக்காரன்‌ யோக்கியமாக நடப்பதில்லை. மக்களையும்‌ யோக்கியமாக நடக்க விடுவதில்லை, தன்‌ சுயநலத்திற்காகப்‌ பித்தலாட்டம்‌ செய்கிறான்‌, ஒரு பக்கம்‌ ஜோதிடம்‌ போடுகிறான்‌. உள்ளபடி அவன்‌ பக்தனாக திருந்தால்‌ அந்த ஜோதிடத்தை அவன்‌ நம்புகிறானா 8 அதன்படி நடக்க சம்மதிக்‌றொனா 8 எனவே, தோழ கள நீங்கள்‌ நன்‌ முறையில்‌ சிந்தித்துப்‌ பார்தீ.து நடக்க வேண்டும்‌. [சரழ்யி௰, 29-3-195%- செற்பொழிவு--! விடுதலை 9-4-1959) 7. தலைவிதி தோழர்களே ! இன்று இவ்வூர்‌ யூனியன்‌ போர்டார்‌ அழைப்புக்கு இணங்கி வநீதசமயம்‌ e prad கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம்‌ கூட்டவேண்டுமென்று சொன்னதால்‌ இங்குப்‌ பேச ஒப்புக்கொண்டேன்‌. கடவுளைப்பற்றிய எண்ணங்களும்‌ பகீதிசளும்‌ நமகீகு என்ன பலனைக்‌ கொடுக்‌ கின்றன?! அதிக பக்திக்காரன்‌ தனக்கு வேண்டியதெல்லாம்‌ கடவுள்‌ கொடுப்பார்‌ என்று எண்ணுகிறான்‌. கடவுளைப்பற்றி அதிகமாய்‌ அறிந்‌ தவன்‌ சகலமும்‌ அவன்‌ (கடவுள்‌) செயல்‌ ; அவனன்றி ஓர்‌ அணுவும்‌ அசையாது என்று எண்ணுகிறான்‌. மனிகனது முற்போக்கையும்‌ அவனது கஷ்டத்தையும்‌ கொடுமையையும்‌ நிவர்தீதிசெய்துகொள்ளுவதையும்‌ இந்த எண்ணங்கள்‌ தடைப்படுத்தகின்‌ றன. பல ஆயிரம்‌ வருஷங்களாக ஒறாவன்‌ கீழ்ச்‌ சாதியாய்‌ இருப்பதற்கும்‌, கல்வி அறிவு பெறாமல்‌ இருப்பதற்கும்‌, சதா உழைத்து உழைத்துப்‌ பாடுபட்டும்‌ பட்டினியாய்ப்‌ போதிய ஆகாரமும்‌ வசதியும்‌ இல்லாமலும்‌ இருப்பதற்கும்‌ கிந்த எண்ணங்களே காரணமாகும்‌. இதுபோலவே பாடுபடாத சோம்‌ 3பறிகள்‌ சோடீஸ்வரர்களாகவும்‌, தலைமுறை தலைமுறை யாய்ப்‌ பிரபுக்களாகவும்‌ மேல்சாதிக்காரர்களாகவும்‌ இருப்பதற்கும்‌ இந்த எண்ணங்கள்‌ தாம்‌ காரணம்‌. இந்த எண்ணங்கள்‌ பணக்காரனுக்கும்‌ சோம்பேறிக்கும்‌ (பார்ப்பானுக்கும்‌) தாம்‌ அனுகூலம்‌ $ தொழிலாவிக்கும்‌, கூலிக்காரனுக்கும்‌, பண்ணையாளுக்கும்‌ கெடுதி3ய ஆகும்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1079 ஏழைகள்‌ தங்கள்‌ தரிதீதிரதீதிற்கும்‌ கஷ்டதீதுக்கும்‌ கடவுளும்‌, தலைவிதியும்தாம்‌ காரணம்‌ என்று சொல்லிவிடுவானேயாகிஃ அவர்கள்‌ எப்படித்‌ தரித்திரத்தை நீக்கி/கொள்ள முடியும்‌ ? அவன்‌; தன்‌ பாட்டின்‌ பயனை எவன்‌ அனுபவிக்கிறான்‌ 8 ஏன்‌ அனுபவிக்கிறான்‌ 8 என்று பார்த்து அவைகளைத்‌ தடுக்கவேண்டும்‌. இந்தக்‌ காரியம்‌ செய்ய ஒரு கடவுளும்‌ ஒப்பாது. ஏனென்றால்‌, கடவுளையும்‌ தலைவிதியையு& பணக்காரனும்‌, சோம்பேறியும்‌ தாம்‌ உண்டுபண்ணுகிறார்கள்‌. ஆகையால்‌, அவைகளைதி தங்களுக்குத்‌ தகுந்தமாதிரி யாகதீதான்‌ உண்டுபண்ணிக்கொள்வார்கள்‌. இதில்‌ உங்களுக்குச்‌ சந்தேகம்வேண்டாம்‌. இங்கு மாத்திரமல்லாமல்‌ எல்லாத்‌ தேசங்களிலும்‌ பணக்காரர்கள்‌ தங்கள்‌ நன்மைக்கும்‌, அது ஸ்திரமாய்‌ இருப்பதற்கும்‌ இந்த மாதிரியாகத்தான்‌ கடவுளைச்‌ சிருஷ்டித்து, அதைப்‌ பிரச்சாரம்‌ செய்யப்‌ பாதிரிகளை ஏற்படுத்தி--அவர்களுக்குப்‌ பணம்‌ கொடுத்துக்‌ காப்பாற்றி வருகிறார்கள்‌. இந்தப்‌ புரட்டுகளை உலகிஃ வெகுபேர்‌ அறிந்திருந்தாலும்‌, ரஷியா தேசதீதார்கள்தாம்‌ முதன்முதலில்‌ இதை அழித்து நிர்த்தூனியாக்கி, பணக்சாரதீ தன்மையையும்‌, பாதிரித்தன்மையையும்‌ ஒழிதீசார்கள்‌. ரஷியா தேசமானது இந்தியாவைப்‌ போலவே பணக்காரனுடையவும்‌ பார்ப்பனர்‌ (பாதிரி) களுடையவும்‌ ஆதிக்கத்தில்‌ இருந்து ஏழை மக்களை வாட்டி வதைதீது வந்தது. ஆனால்‌, அவர்கள்‌ அதற்குக்‌ காரணம்‌ கடவுள்‌ புரட்டும்‌ மதப்புரட்டும்‌ என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும்‌ ஒழிக்கத்‌ தொடங்கி, இன்று எல்லோரும்‌ சமமாய்‌ வாழுகின்றார்கள்‌. அங்கு சோம்பேறி3யா, பிரபுவோ, பணக்‌ காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரா கிடையாது. எல்லோரும்‌ பாடுபட வேண்டியது. அதன்‌ பயனை எல்லோரும்‌ சமமாய்‌ அனுபவிக்கவேண்டியது;) ஒருவனை ஒருவன்‌ ஏய்க்ீகவோ, ஒருவன்‌ பாடுபட்டதை ஒருவன்‌ அனுபவிக்கவோ அங்கு முடியாது. [சென்னிமலை ஸ்கூலில்‌) 9-2:933-ல்‌ சொற்பொழிவு-- குடி அரசு! 19-2-1933] 8. ஒழுக்கம்‌ தோழர்களே | வாழ்க்கையில்‌ ஒழுக்கத்தில்‌, புருஷனுக்கு வேறு சட்டம்‌, பெண்ணுக்கு வேறு சட்டம்‌ வைதீதிருக்கிறோம்‌. ஆனால்‌, ஒழுக்கதீதைப்பற்றி சதாகாலமும்‌ பேசுகிறோம்‌] ஒழுக்கம்‌ என்பதை எழுதீதில்‌, சப்தத்தில்‌ பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில்‌ பார்ப்பதே இல்லை. விபச்சாரித்‌ தனம்‌ என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம்‌. அதற்கு எவ்வளவேர நிபத்தனைகள்‌; நிர்ப்பந்தங்கள்‌ சட்ட மூலமாய்‌, சமூக மூலமாய்‌, சாஸ்திர மூலமாய்‌, இயற்கை மூலமாய்‌ எல்லாம்‌ வைத்திருக்கிறோம்‌. அப்படி எல்லாம்‌ இருந்தும்‌, அதை இருவருக்கும்‌ சமமாய்‌ வைக்கவில்லை. ஆண்‌ விபச்சாரதீதைப்பற்றிப்‌ பேசுவோரே கிடை யாது. அப்படி இருந்தாலும்‌ அதற்குப்‌ பெயர்‌ பலக்‌ குறைவு (Weakness) என்று சொல்லி விடுகிறோம்‌. பெண்‌ விபச்சாரத்தை நாணயக்‌ குறைவு, ஒழுக்கக்‌ குறைவு, கெட்டகுணம்‌, இகழதீ தக்கது, கண்டிக்கத்‌ தக்கது, வெறுக்கத்‌ தக்கது என்றெல்லாம்‌ சொல்லுகிறோம்‌. ஆணும்‌ பெண்ணும்‌ சேர்ந்தால்தான்‌ விபச்சாரமாகுமே தவிர ஒரு பெண்ணும்‌ மற்றொரு பெண்ணும்‌ சேர்ந்து விபச்சாரம்‌ செய்துவிட முடியாது, இதை யாரும்‌ விபச்சாரம்‌ என்று சொல்லவும்‌ மாட்டார்கள்‌. ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலதான்‌ உலகில்‌ பெரிதும்‌ விபச்சாரம்‌ இருந்து வருகிறதே தவிர, பெண்களின்‌ கெட்ட குணங்களால்‌ இருந்து வருவதாகச்‌ சொல்லி விட முடியாது. அன்றியும்‌, இவ்வளவு தூரம்‌ மததீதாலும்‌, சட்டதீதாலும்‌, சமூகதீதாலும்‌, நிபந்தனை யாலும்‌, வெறுக்கப்பட்ட விபச்சாரம்‌ என்பது ஏன்‌ இன்று உலகில்‌ சர்வ சாதாரணமாய்‌ இருந்துவருகின்‌ றது. திதற்கு என்ன காரணம்‌ என்பதை யாராவது யோசிக்கிறார்களா ₹ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1080 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஒவ்வொருவரும்‌ விபசீசார தோஷத்திற்கு ஆளாகிவிட்டே மற்றவர்களைக்‌. குறை கூறுகிறார்கள்‌ என்பது அவரவர்கள்‌ நெஞ்சில்‌ கையை வைதீது-குழந்தைப்‌ பருவமுதல்‌ தாங்கள்‌ நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுதீதிப்‌ பார்த்தால்‌ தங்களுக்கு விளங்கும்‌. நம்முடைய கடவுள்கள்‌ என்று சொல்லப்படும்‌ பிரம்மா, விஷ்ணு, சிவன்‌ மூதலிய வைகள்கூட விபச்சார தோஷத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகதீ தெரியவில்லை, அவர்‌ களுடைய பெண்சாதிமாரீகளைக்கூட விபச்சார தோஷத்திலிருந்து விலக்கவில்லை. ஏன்‌ இப்படி இருக்கவேண்டும்‌ 1 விபச்சாரம்‌ மக்களுக்கு இயற்கையா என்று பாருங்கள்‌. ஒரு நாளும்‌ அல்லவே அல்ல, செயற்கைக்‌ குணங்களாலேயே விபசீசாரம்‌ நடக்‌ கின்றது. அதாவகு, கலியாணங்களே பெரிதும்‌ விபசீசாரதீதிற்குச்‌ சமானமானவையா கும்‌, தனகீகு இஷ்டமில்லாமல்‌, காதல்‌ இல்லாமல்‌, பணம்‌, காசு, சொத்து, வேறுவித நிர்ப்‌ பந்தம்‌ ஆகியவைகளுக்காக இணங்குவதே விபச்சாரம்‌ ஆகும்‌ நமது மணமகீகள்‌ பெரும்பாலோர்‌ தாய்‌ தகப்பன்மார்கள்‌ தங்களை ஜோடி சேர்தீது விட்டார்கனே என்பதற்காகவே இணங்கி இருக்கிறார்கள்‌, மற்றும்‌ பலர்‌ தங்களுக்குள்‌. வேற்றுமை உணர்ச்சியும்‌ (அன்பு) ஆசை இன்மையும்‌ ஏற்பட்டும்‌ பிரிந்து கொள்ள முடிய வில்லையே என்பதற்த ஆகவே இணங்கி இருப்பதுபால்‌ இருக்கிறார்கள்‌. இதுபோன்ற வைகள்‌ எல்லாம்‌ நிர்ப்பந்த விபச்சாரங்களேயாகும்‌. மற்றும்‌ பலர்‌ செல்வத்தையே பிரதான: மாய்க்‌ கருதி, இன்ப உணர்ச்சியைப்‌ பறிகொடுத்து இணங்கி இருக்கிறார்கள்‌. இது போன்றவை காசு, பணம்‌, சொத்துக்களுக்காகச்‌ செய்கின்ற விபச்சாரங்களேயாகும்‌. இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில்‌ இருக்கின்ற விபச்சாரத்‌ தன்மைகள்‌ தாம்‌ ஆகட்டும்‌ ஏன்‌ ஏற்படவேண்டும்‌ என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. பால்ய மணங்களை: ஒழித்துக்‌ காதல்‌ மணம்‌, கல்யாண ரத்து, விதவை மணம்‌, சமஉரிமை ஆகியவைகள்‌ ஒரு சமூகதீதில்‌ இருக்குமானால்‌, இன்றுள்ள விபசீசாரங்களில்‌ 100-க்கு 90 பாகம்‌ மறைந்து டோகும்‌ என்றே சொல்லுவேன்‌. /(அதோடு, பெண்மக்களை நன்றாகப்‌ படிக்கவைத்து, அவர்‌ களுக்குச்‌ சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையையும்‌ வழங்கிவிடுவோமானால்‌ விபச்சாரம்‌ என்பது எப்படி தேரும்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌, [கீழையூர்‌, திருபுவனம்‌, திருச்சி ஆகிய இடங்களில்‌ 9-6-1935 முதல்‌ 13-6-1935 முடிய சொற்பொழிவுகள்‌ * குடிஅரசு? 16-6-1933] தாய்மார்களே ! தோழர்களே | சென்னை சுயமரியாதை இளைஞர்‌ மன்ற இவ்வாண்டு துவக்க விழாவிற்குதீ தலைமை வகிதீது நடதீதும்‌ பெருமையை எனக்களித்ததற்கு நான்‌ மனப்பூர்வமாய்‌ நன்றி செலுத்துகிறேன்‌. ஒழுக்க விஷயங்களிலும்‌, அதுபோலவே மக்களிடம்‌ மக்கன்‌ நடந்து கொள்ளுகிற ஒழுக்கத்தைப்‌ பற்றித்தான்‌ சுயமரிமாதைகீகாரருக்குக்‌ கவலையே ஒழிய--எப்படிக்‌ குடுமி வைப்பு, எப்படி வேட்டி கட்டுவது, எப்படிப்‌ பொட்டுப்‌ போவது ;$ எப்படிப்‌ பிரார்த்‌ தனை செய்வது, யாரைத்‌ தொடுவது, யார்‌ வீட்டில்‌ சாப்பிடுவது, எது சாப்பிடலாம்‌, எது சாப்பிடக்‌ கூடாது, எத்தனை கடவுள்கள்‌, எந்தக்‌ கடவுளைக்‌ கும்பிடுவது, எதைக்‌ கும்பிடக்‌ கூடாது, எது வேதம்‌, எது சாஸ்திரம்‌-என்பனவாதிகளில்‌ சுயமரி யாதைக்காரருக்குக்‌ கவலை இல்லை. சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌, எந்த மனிதனும்‌ அன்னியனுக்கு உபகாரியாயும்‌, கடைசிப்‌ பட்சம்‌ அன்னியனுக்குத்‌ தன்னால்‌ இன்பம்‌ கொடுக்காதவனாகவும்‌ இருப்பதே பெரிய ஒழுக்கம்‌ என்று சுயமரியாதை யக்‌ கத்தார்‌ கருதி இருக்கிறார்கள்‌. www.thamizham.net - Free £ book 146 3031 தத்துவம்‌ 1081 சுயமரியாதைகீகாரர்களாகிய நாமும்‌ தனிப்பட்ட எநீத வகுப்பாருடையவும்‌, சுய நலத்துக்கு மாத்திரம்‌ பயன்படும்‌ எந்த ஒழுக்கத்தையும்‌, தனிப்பட்ட மதவா திகளுக்கு மாத்திரம்‌ பயன்படும்‌ எந்த ஒழுக்கத்தையும்‌ ஒப்புக்கொள்ளாமல்‌ எல்லா மக்களுக்கும்‌. எந்த வகுப்பாரானாலும்‌, எந்த நிலையிலுள்ளவர்களானாலும்‌, எந்த மதக்காரரானாலும்‌ யாவருக்கும்‌ ஒன்‌ றுபோல்‌ பயன்படும்படியான காரியங்களையே நாம்‌ ¢ ஒழுக்கம்‌ ? என்கிறோம்‌. இதனால்‌ சுயநலத்தையே பிரதானமாய்க்‌ கருதிக்‌ கற்பித்துக்கொண்ட ஒழுக்கங்களை உடைத்தெறிவது சுயமரியாதைக்காரர்கள்‌ கடமை என்பது விளங்கும்‌. தாசிக்கு ஒழுக்கம்‌-ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடதீதிலேயே காதலாய்‌ இருக்கக்‌ கூடாது என்பதாகும்‌. *குல ஸ்திரி? என்பவளுக்கு ஒழுக்கம்‌-அயோகீகியனானாலும்‌, குஷ்டரோகியா னாலும்‌ அவனைத்‌ தவிர வேறு ஒருவனை மனதீதில்கூடச்‌ சிந்திக்கக்கூடாது என்பதாகும்‌, இதுபோலவே, முதலாளிக்கு ஒழுக்கம்‌ - எப்படி வேண்டுமானாலும்‌ யாரையும்‌ ஏமாற்றலாம்‌ என்பதாகும்‌. | தொழிலாளிக்கு ஒழுக்கம்‌ - ஒரு விநாடி நேரம்கூட வேலை செய்யாமல்‌, முதலாளிக்‌ குத துரோகம்‌ செய்யலாகாது என்பதாகும்‌. இந்துவுக்கு ஒழுக்கம்‌ - பசுவை இரட்சிக்க வேண்டும்‌ என்பதாகும்‌, முஸ்லிமுக்கு ஒழுக்கம்‌ - பசுவைப்‌ புசிக்கலாம்‌ என்பதாகும்‌. இந்து வட்டி வாங்‌ கலாம்‌. முஸ்லிம்‌ வட்டி வாங்கக்கூடாது என்பவை ஒழுக்கம்‌. சைவனுக்கு ஒழுக்கம்‌ - விபூதி பூசவேண்டும்‌ என்பதாகும்‌. வைணவனுக்கு ஒழுக்கம்‌ - நாமம்‌ போட வேண்டும்‌ என்பதாகும்‌, மாதீ.துவனுக்கு ஒழுக்கம்‌ - முத்திரை அடிதீ.துக்கொள்ள வேண்டும்‌ என்பதாகும்‌. இந்துவுக்கு - அக்காள்‌ மகளை, அத்தை மகளைக்‌ கட்டிக்கொள்வதும்‌ ; சிற்றப்பன்‌. மகள்‌ தங்கை என்பகும்‌ ஒழுக்கம்‌, முஸ்லிம்‌, சிற்றப்பன்‌ மகளைக்‌ கட்டிக்கொள்வது ஒழுக்கம்‌] அக்காள்‌ மகளைக்‌ கட்டக்கூடாது என்பது ஒழுக்கம்‌. ஆகவே, இன்று உள்ள ஒழுக்கங்கள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ சட்டம்போல்‌- சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப்‌ பொருந்தியவைகளே தவிர, எல்லோருக்கும்‌ பொருந்‌ தியவைகள்‌ அல்ல. ஆதலால்‌, சுயமரியாதைகீகாரர்கள்‌ பொதுவாக மனித சமுதாயதீதிற்கும்‌, சமூக சமதீ.துவ வாழ்வுக்கும்‌ ஏற்றதையே ஒழுக்கமாகக்‌ கொண்டு--முக்கியமாய்‌ மனித சமுதாயத்‌ திற்கு ஏற்ற வண்ணம்‌ அன்னியனுக்கு உதவி செய்தும்‌, அன்னியனுக்குத்‌ தொந்தர வில்லாமல்‌ நடந்துகொள்வதையே ஒழுக்கமாய்கீ கருதுவார்கள்‌. [சென்னனயில்‌, 17-11-1940-6 சொற்பொழிவு- குடி அரசு! 28.11.1940] உலகில்‌ கற்பு, காதல்‌ என்பன. போன்ற வார்தீதைகள்‌ எப்படிப்‌ பெண்களை அடிமைப்‌ படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப்‌ பயன்படுத்தப்பட்டு வருகின்றன வ, அது போலவேதான்‌ ஒழுக்கம்‌ என்னும்‌ வார தீதையும்‌-எளியோரையும்‌, பாமர மக்களையும்‌ ஏமாற்றி, மற்றவர்கள்‌ வாழப்‌ பயன்படுத்திவரும்‌ ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல்‌, அதில்‌ உண்மையோ சதீதோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல்‌, சத்தியம்‌, நீதி, ஒழுக்கம்‌ என்பன எல்லாம்‌ ஒரே தாயின்‌ பிள்ளைகள்‌, அதாவது, குழந்தைகளைப்‌ பயமுறுதீதப்‌ பெரியவர்கள்‌, * பூச்சாண்டி, பூச்சாண்டி! என்பது போல்‌, இவை எனியோரையும்‌ பாமர 1686—136 ‘www.thamizham.net - Free E book 14௦ 3031 1082 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மக்களையும்‌ வலுதீதவர்களும்‌ தந்திரக்காரர்களும்‌ ஏமாற்றச்‌ செய்த ஒரு பெரும்‌ சூழ்ச்சியே ஆகும்‌. எப்படிக்‌ குழந்தைப்‌ பருவம்‌ உள்ளமட்டும்‌ பூசீசாண்டிக்கு மக்கள்‌ பயப்பட வேண்டி யிருக்கிற3 தா, அதுபோலத்தான்‌ அறிவும்‌, சக்தியும்‌ மக்களுக்கு ஏற்படும்வரை--மேற்கண்ட ஒழுக்கம்‌ முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள்‌ பயப்பட்டுதீதீர வேண்டியிரு8 கிறது. உலகில்‌ ஒழுக்கமான காரியம்‌ அல்லது ஒழுக்க ஈனமான காரியம்‌ என்பனவெல்லாம்‌ அவைகளைச்‌ செய்கின்ற ஆட்களின்‌ வலிமையையும்‌, அறிவையும்‌ கொண்டு மதிக்கப்‌ படுகிறதேயல்லாமல்‌, வெறும்‌ காரியத்தைப்பற்றி மாத்திரம்‌ முடிவு செய்யப்படுவதில்லைஃ சாதாரணமாக; உலகில்‌, * விபச்சாரம்‌, பொய்‌? * களவு Y, * ஏமாற்றம்‌ ? முதலிய காரியங்கள்‌ ஒழுக்கங்கெட்ட காரியங்கள்‌ என்று சொல்லப்படுகிறது. என்றாலும்‌, இந்தக்‌ காரியங்கள்‌ யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர்‌ எவரையும்‌ D வரையில்‌ உலகதீதில்‌ காண முடியவே இல்லை. ஒரு சமயம்‌ நம்‌ கண்ணுக்குத்‌ தென்படவில்லை என்று சொல்வதானால்‌, அப்படிச்‌ சொல்லும்‌ மக்கள்‌ ஒவ்வொருவரும்‌ முதலில்‌ தங்களைப்‌ பற்றிய நினைத்துப்‌ பார்த்துத்‌ தங்களுடைய சிறுபிராயம்‌ முதல்‌ இன்றுவரை உள்ள பல பக்குவ வாழ்நாளில்‌ மேற்கண்ட 6 ஒழுக்கங்‌ கெட்ட? காரியங்கள்‌ என்பவைகளில்‌ எதையாவது ஒன்றை மனோ வாக்குக்‌ காயங்களால்‌ செய்யாமல்‌ இருந்திருக்க முடிந்ததா, அல்லது செய்யாமல்‌ இருக்கிறா/களா என்று நினைத்துப்‌ பார்த்தால்‌ உண்மை விளங்கிவிடும்‌. மற்றும்‌, தங்களுடைய சுற்றத்கார்‌, நண்பர்‌, சுற்றியுள்ள அறிமுகமான ஜனங்கள்‌, நன்றாய்த்‌ தெரிந்த அன்னியர்‌ முதலாகியவர்‌ களில்‌ யாராவது ஒழுக்கதீ.துடன்‌ கற்புடன்‌ நடந்து வந்ததுண்டா என்று சிந்தித்துப்‌ பாருங்கள்‌. இந்த &ருவித முடிவைக்‌ கண்டுகொண்ட பிறது உலகத்தை நினைத்துப்‌ பாருங்கள்‌ மற்றும்‌, உலகில்‌ மக்கள்‌: வாழ்கீகைக்கென்று இருநீதுவருகின்ற தொழில்களில்‌ முக்கியமானவைகளாகக்‌ காணப்படு வன விவசாயம்‌, வியாபாரம்‌, கைத்தொழில்‌, கூலி, வக்கீல்‌, உத்தியோகம்‌) வைத்தியம்‌, விலைமாதர்‌ தொழில்‌ ஆ யவைகள்‌ முதல்‌, குருதீதுவம்‌, சன்னியாசம்‌, துரைத்தனம்‌, தேசியம்‌ ஈறாக உன்ள அனேக துறைகளாகும்‌. விவற்றின்‌ மூலமே மக்கள்‌ பெரும்பாலும்‌ வாழ்கிறார்கள்‌ என்பதை நாம்‌ பிரத்தியட்சத்தில்‌ பாரக்‌ இன்றோம்‌. இந்த மக்களில்‌ யாராவது ஒருவர்‌; ஒழுக்கமாக நடந்துகொள்வதை நாம்‌ பார்க்கிநோமா 1 ஒழுக்கம்‌ என்நால்‌ என்ன, அது எது என்கின்ற விஷயத்தில்‌ நாம்‌ இப்போது பிரவேசிக்கவில்லை;) அதற்கு இந்த வியாசதீதில்‌ இடம்‌ வைக்கவும்‌ கில்லை. மற்றபடி, நாம்‌ ஒழுக்கம்‌! என்பதாக உலக வழக்கில்‌ எதை எடுத்துக்கொண்டு பேசு கிறோமோ, மேற்கண்ட வாழ்க்கைத்‌ துறைகளில்‌ ஈடுபட்டிருப்பவர்கன்‌ அந்தந்தத்‌ இறைக்கும்‌ எதை எதை ஒழுக்கம்‌ என்று அவர்களாகவே சொல்லிக்கொல்கிறார்க2வர அதையும்‌, அவரவர்கள்‌ மற்றவர்களைப்‌ பார்தீது எதை எதை ஒழுக்கம்‌ கெட்ட காரியம்‌ என்று சொல்கிறார்களோ அதையும்‌ மாத்திர3ம-இங்கு ஒழுக்கம்‌ என்பதாக வைத்துக்‌ கொண்டு யாரிடமாவது இந்த * ஒழுக்கத்தைக்‌ கண்டுபிடிக்க முடிகிறதா என்றுதான்‌. கேட்கிறோம்‌. ஒரு வேலைக்காரன்‌ செய்யும்‌ ஒழுக்கங்கெட்ட காரியத்தை அந்த வேலைக்காரன்‌ முன்னிலையிலேயே எஜமான்‌ செய்துவ்ட்டு, வேலைக்காரனை மாத்திரம்‌ ஒழுக்கங்‌ கெட்டவன்‌ என்று சொல்லுகிழான்‌ ஒரு குமாஸ்தா செய்யும்‌ ஒழுக்கங்கெட்ட காரியதீதை, மேல்‌ அதிகாரி அந்தக்‌ குமாஸ்தா முன்னிலையிலேயே பல தடவைகள்‌ செய்துவிட்டு, குமாஸ்தாவை ஒழுக்கங்‌ கெட்டவன்‌ என்று கூறுகிறான்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1083 ஒரு மகன்‌ செய்யும்‌ ஒழுக்கங்கெட்ட காரியத்தைத்‌ தகப்பன்‌ செய்துவிட்டு, மகனை ஒழுக்கங்கெட்டவன்‌ என்று சொல்லுகிறான்‌. இது போலவே, எல்லாத்‌ தொழில்‌ அறையிலும்‌ உள்ள மக்களும்‌, அவரவர்கள்‌ வாழ்‌ நாட்களில்‌ ஒழுக்க ஈனமாச நடந்துகொண்டே மற்றவர்களை ஒழுக்க ஈனர்கள்‌ என்று சொல்லி வருகிறார்கள்‌. இவை நாம்‌ ஒரு குறிப்பிட்ட ஒரு சிலரிடம்‌ மாத்திரம்‌ இருப்பதாய்ச்‌ சொல்ல வரவில்லை. ¢ ஒழுக்கமாய்‌ ? மக்கள்‌ யாராலும்‌ நடக்க முடியாது என்றும்‌ ; ஒழுக்கம்‌ என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும்‌; ஒழுக்கம்‌ என்று சொல்லி வருவதெல்லாம்‌ எளியோரையும்‌, பாமர மக்களையும்‌, அடிமைத்தனதீதில்‌ இருத்தி வரப்‌ பயன்டடுதீதக்கூடிய சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள்‌ சமதர்‌மதீதிற்குப்‌ பயன்‌ படகீகூடியது அல்லவென்றும்‌ சொல்லுவதற்காகவே எடுதீதுக்காட்டுகின்றோம்‌. உண்மையிலேயே *₹ ஒழுக்க ஈனம்‌? என்பது ஒன்று உண்டு என்றும்‌) அது திருட்டு, பொய்‌, ஏமாற்றம்‌ டோன்‌ றதாகிய குணங்கள்‌ தாம்‌ என்றும்‌ சொல்வதாய்‌ இருந்தால்‌, அந்தக்‌ குணங்கள்‌ பெரிதும்‌ நிலையாய்க்‌ குடிகொண்டிருக்கும்‌ இடங்கள்‌ அரசர்கள்‌, குருமார்கள்‌, வியாபாரிகள்‌, வக்கீல்கள்‌, தேசியவாதிகள்‌ போன்ற கூட்டத்தார்‌ களிடமே ஆகும்‌. மனிதர்களுகீகுதி அன்பம்‌ இழைத்து, அவர்களது அமரிக்கையைக்‌ கெடுத்து ஏமாற்றி வஞ்சித்து வாழும்‌ கூட்டங்கள்‌ மேற்கண்ட கூட்டங்களே ஆகும்‌. இது அந்தந்தத்‌ துறையைக்‌ கைக்சொண்ட ஆட்களை மாத்திரம்‌ அல்லாமல்‌, அந்தந்தத்‌ துறைகளுக்கே இரத்தமும்‌, சதையும்‌, எலும்பும்‌ போலக்‌ கலந்து இருக்கும்‌ காரியங்களுமாகும்‌. இந்தக்‌ கூட்டதீசாரைக்‌ கண்டு எந்த மகனும்‌ அசூசைப்படுவதே இல்லை. இவர்க ளிடதீதில்‌ மக்கள்‌ வெறுப்புக்‌ காட்டுவகும்‌ இல்லை. அதற்குப்‌ பதிலாக, இந்தக்‌ கூட்டதீ தாருக்குத்தான்‌ நாட்டிலே மக்களிடம்‌ செல்வாக்கும்‌, மதிப்பும்‌ இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதி போன்ற இந்தக்‌ கூட்டம்‌, மக்களிடம்‌ ஆதிக்கம்‌ செலுத்தி வருவது என்பது மக்களின்‌ அறிவீனதீதையும்‌ பலமற்ற தன்மையையும்‌ காட்டு வதேயல்லாமல்‌ வேறில்லை. வாழ்க்கைத்‌ துறையின்‌ ஒழுக்கம்தான்‌ இம்‌ மாதிரி இருக்கிறதென்றால்‌ மற்றபடி, பகீதி, பரமார்‌ தீதிகம்‌, ஆதீமார s, ஆசாரத்துவம்‌, மகாதீமாதீ துவம்‌ என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம்‌ என்பதைக்‌ காணமுடிகின்றதா என்பதைச்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌ | அவையும்‌ இப்படிதீதான்‌ இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்‌. [குடிஅரசு ?-கட்டுரை--4.6-1949] பெரியோர்களே ! தோழர்களே | மேல்நாட்டில்‌ ஒருவனைப்‌ பார்த்துப்‌ பாதை கேட்டால்‌ அவன்‌ சம்மா இருக்க மாட்டான்‌. நாம்‌ எங்கே போக விரும்டுிகிறோமோ அகுவரை நம்கூடவே வந்து காண்‌ பித்துப்‌ போவான்‌, இதை அன்றி அவன்‌ நாம்‌ கேட்பதற்குச்‌ சரியாகப்‌ பதில்‌ கூறவில்லை என்றால்‌, அதைப்‌ பார்தீதுக்‌ கொண்டிருக்கும்‌ மற்றவன்‌ அவனைப்‌ பார்தீது * உனக்கு சென்ஸ்‌ இருக்கிறதா! ஒழுக்கம்‌ கெட்டவனே 1? என்று தூற்றுவான்‌. இம்முறையில்கூட மேல்நாட்டில்‌ ஒழுக்கத்திற்கு ஒவ்வொருவரும்‌ மதிப்புக்‌ கொடுச்கின்றனர்‌. இங்கு அப்படி இல்லை. ஒழுக்கமுன்ளவன்‌ மூலையில்‌ கிடட்பான்‌. ஒழுக்கம்‌ கெட்டவன்‌ பலராலும்‌ போற்றப்படுவான்‌. தனிப்பட்ட ஒவ்வொருவனும்‌ ஒழுக்கத்தைப்‌ பின்பற்றுவதில்லை. முதலில்‌ ஒழுக்கத்திற்கு மதிப்பிருந்தால்‌ அல்லவா ஒவ்வொருவரும்‌ ஒழுக்கத்தைக்‌ கடைப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1084 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பிடிக்க ஆசையாகவும்‌ இருக்கும்‌? எனவெ, இப்படிப்பட்டவர்கள்‌ நிறைந்த நாட்டின்‌ தலை வனாக வருபவன்‌ எப்படி ஒழுக்கசீலனாக இருக்கமுடியும்‌ ! அதுவும்‌, ஒழுக்கமற்ற மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ ஜன நாயகத்தின்‌ தலைவன்‌ பித்தலாட்டத்தில்‌ கைதேர்ந்தவனாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, எனக்கு மட்டும்‌ உண்மை யின்மீது மிகப்பற்று உண்டு. ஒழுக்கதீதுக்கே மதிப்பளிப்பேன்‌. ஒழுக்கத்திற்கு மரியாதை கொடுக்க நான்‌ தவறுவது இல்லை. இன்றைக்கில்லையானாலும்‌ என்றைக்காவது உண்மையின்‌ மேன்மையை மக்கன்‌ உணரதீதான்‌ போகிறார்கள்‌. எனவ, என்னைப்‌ பொறுதீதமட்டிலும்‌ நான்‌ ஒழுக்கமுடன்‌ நடந்தால்‌, உண்மையை ஒளிக்காமல்‌ எதையும்‌ நேர்மையுடன்‌ கடைப்பிடி த்தால்‌ அதற்குத்‌ தனி சக்தி உண்டு என்பது என்‌ நம்பிக்கை. அதைப்‌ போன்றே ஓரளவு பலன்‌ கிடைத்துக்‌ கொண்டும்‌ வருகிறது நான்‌ என்னுடைய மனதீதிற்குத்‌ தோன்றியவைகளை யாருடைய தயவு தாட்சண்யத்‌ திற்கும்‌ பயப்பட்டுக்‌ கூறுகிறவன்‌ அல்லன்‌, எது உண்மை என்று தோன்றுகிறதோ அவைகளை மறைக்காமல்‌ அப்படியே வெளியிட்டு வீடுவேன்‌. என்‌ நோக்கங்கள்‌ அவ்வளவும்‌ பல பேர்களுக்கு இடையூறாக இருக்கலாம்‌, பல பேர்களின்‌ வாழ்க்கைக்கே வழி இன்றிச்‌ செய்துவிடலாம்‌. அதனால்தான்‌, ஆரம்பதீதில்‌ பெரும்‌ எதி/ப்புகள்‌ எல்லாம்‌ இருந்து, இப்போது ஓரளவு யாவரும்‌ நம்பி ஆதரவு தரும்‌ அளவுக்கு வந்துவிட்டது. [அண்ணாமலை நகரில்‌, 19-2-1956-ல்‌ சொற்பொழிவு---* விடுதலை ? 10-3-1955] ஆசிரியப்‌ பெருமகீகளே ! மாணவ ஆசிரியர்களே 1 மனித வாழ்க்கை மற்ற ஜீவன்களைப்‌ போல்‌ தனித்‌ துவாமும்‌ தன்மை கொண்டதல்ல. சமுதாய வாழ்க்கையை அடிப்படையாகக்‌ கொண்டது. மனிதன்‌ கூடிவாமும்‌ வாழ்க்கை யைக்‌ கொள்வது இயல்பும்‌ அவசியமும்‌ ஆனதாகும்‌. இதற்கு மனிதன்‌ ஒழுக்கத்தைப்‌ பின்பற்றுவது மிக அவசியமாகும்‌. மனிதனிடம்‌ சுலபத்தில்‌ ஒழுக்கத்தைப்‌ புகுத்த வேண்டுமானால்‌ மாணவப்‌ பருவதீதில்தான்‌ முடியும்‌. மாணவப்‌ பருவம்‌ தாண்டியபின்‌: இவன்‌ மாணவனாக இருந்தபோது பின்பற்றியவைகளையே பிறகும்‌ பின்பற்றி நடக்கிறான்‌. எனவே, இப்‌ பருவத்திலேயே நல்லொழுகீகதீதைப்‌ புகட்டவேண்டும்‌. அதற்கு ஆசிரியர்கள்‌: மிகவும்‌ அக்கறை எடுத்துக்கொண்டு முயற்சிக்கவேண்டும்‌. நல்லொழுக்கம்‌ என்பது மிகவும்‌ கஷ்டமான காரியம்‌ இல்லை. ஒருவன்‌, மற்றவன்‌ தன்னிடம்‌ எப்படி நடந்துகொள்ள வேண்டும்‌ என்று விரும்புகிறானோ அதைப்போன்றே அவனும்‌ மற்றவனிடம்‌ நடந்து கொள்வதுதான்‌ ஒழுக்கமாகும்‌. மற்றவன்‌ தன்னிடம்‌ நடந்துகொள்வதால்‌ தனக்கு மனக்‌ கஷ்டமும்‌, மனவேதனையும்‌, துன்பமும்‌ உண்டாகுமானால்‌, அதனைப்போன்று தானும்‌ மற்றவனிடம்‌ நடந்துகொள்வானாகில்‌ அதுவே தீயொழுக்கம்‌ ஆகும்‌. பிறர்‌ தன்னிடம்‌ நடந்துகொள்ளும்‌ முறையில்‌, தான்‌ இன்பமும்‌, மன சந்தோஷமும்‌, நிம்மதியும்‌ அடைவானாகில்‌ அதைப்போன்றே மற்றவனிடம்‌ நடந்தால்‌, M35 நல்லொழுக்கதீதின்பால்‌ பட்டதாகும்‌. எனவே, தமது வாழ்க்கையால்‌ பிறர்‌ துன்பம்‌ அடையாவண்ணம்‌ நடந்து கொள்ளவேண்டும்‌. இதையே மனித வாழ்க்கையின்‌ இலட்சியமாகக்‌ கொண்டு ஒவ்‌. வொருவரும்‌ வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்‌. [திருச்சி பெரியார்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌, 17-3-1956- சொற்பொழிவு--* விடுதலை? 21-35-1956] தோழர்களே 1 மனிதனுக்கு ஒழுக்கத்தைப்‌ பரப்பவேண்டும்‌. ஒழுக்கத்தில்‌ ஏற்படும்‌ இலாப நஷ்டங்களை அவன்‌ மனத்தில்‌ படும்படியாகச்‌ சொல்லவேண்டும்‌. மேல்நாடுகளில்‌ வழிதெரியாமல்‌ விழித்துக்கொண்டு போனால்‌, நம்‌ அருகில்‌ வந்துட ‘May Lhelp yout Which way you wish 6௦ ௨௦ ¥ என்று கேட்கிறான்‌. ¢ நான்‌ வழிகாட்டட்டுமா ₹ எங்கே www.thamizham.net - Free £ book 14௦ 3031 நமி றை க Jumyny ஒட இது Ywiemsg [ஙமமல்‌ Fowe sEFIT லள மூழுரன்‌ முழம்‌ கியாதகதலழைதமுகி மண்டல்‌ miss மை எத ஒஸ்‌ Yoing 861 ததீ.துவம்‌ 1085 போகவேண்டும்‌; கூறுங்கள்‌ ! என்று கேட்கிறான்‌, இதெல்லாம்‌ எதனால்‌ வருகிறது? மததீதினாலா 1 ஒழுக்கதீதினாலா? அறிவுப்‌ பெருக்கத்தினாலா? பண்பாட்டினாலா! என்பதை நாம்‌ யோசிக்கவேண்டும்‌. [திருப்பத்தூரில்‌, 80-5-1556-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை ? 6.6-1956] தோழர்களே ! சீதை, திரவுபதை, அகலிகை, தாரை இவர்கள்‌ எல்லாம்‌ பதீதினிப்‌ பட்டியலில்‌ சேர்ந்துவிட்டார்கள்‌ ! நம்‌ பெண்களை, * என்னம்மா இப்படி நடக்கிறாயே? என்று கேட்டால்‌ திரவுபதை போனாளே ! தாரை படிக்க வந்தவனுடன்‌ கூடினாளே? அவர்கள்‌ எல்லோரும்‌ பத்தினிப்‌ பட்டியலில்‌ சேர்ந்து இருக்கிறார்களே?! என்று திருப்பி நம்மைக்‌ கேட்கமாட்டார்களா ? இது எவ்வளவு ஆபாசம்‌ § இதைவிட மோசமாக இருந்த நாடுகள்‌ இலலை என்று சொல்லவில்லை, கிறிஸ்த வர்களும்‌, இஸ்லாமியரும்‌ திருந்திவிட்டனர்‌. கிறிஸ்தவர்கள்‌ இன்று நாகரிகமானவர்களாக ஆகிவிட்டார்கள்‌. முற்காலத்தில்‌ கிறிஸ்தவர்‌ தங்கள்‌. அக்கான்‌-தங்கைகளைத்தானே கட்டிக்கொண்டார்கள்‌ ? வேட்டி கட்டத்‌ தெரியாதே அவர்களுக்கு ! பசீசை மாமிசம்‌ தின்று இருந்தவர்கள்‌ தாமே அவர்கள்‌ | இ2யசு தோன்றிய பிறகு அவர்களை முடிந்த அளவு சீர்திருத்தினார்‌. அதுபோலவே, 1500 வருடங்களுக்கு முன்‌ இஸ்லாமியர்கள்‌ அராபிய நாட்டில்‌ எப்படி இருந்தார்கள்‌ 8 காட்டூமிராண்டிகளாக வாழ்ந்கார்கள்‌. நாம்‌ எப்படிப்‌ பெண்களை வெறுக்கிறோமோ அதுபோலவே அவர்களும்‌ வெறுத்தார்கள்‌. நாம்‌ குழவிக்‌ கல்லைக்‌ கும்பிட௭வதுபோல அவர்களும்‌ கல்லைக்‌ கும்பிட்டார்கள்‌. பிறகு, முகமத நபி தோன்றி ஒரே கடவுள்‌, அதுவும்‌ உருவம்‌ இல்லாதவர்‌ என்று சொல்லிச்‌ சீர்திருத்தம்‌ செய்தார்‌ ; சாதிகளை: அழித்தார்‌. [பெத்துநாயக்கன்‌ பேட்டையில்‌, 22-8-1956-ல்‌ சொற்பொழிவு--1 விடுதலை? 51-8.1936] 9. ஒழுக்கம்‌, பக்தி, இன்பம்‌ தோழர்களே | நம்மிடத்தில்‌ ஒழுக்கம்‌ இருக்கவேண்டும்‌) பக்தி இருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌ ஒழுக்கம்‌ இருக்க வேண்டும்‌. பகீதி தனி மனிதனைப்‌ பொறுத்தது, ஒழுக்கம்‌ இல்லாது ஒருவன்‌ இருந்தால்‌, அது பிறரையும்‌ பாதிக்கும்‌ ; ஒழுக்கமில்லாதவனால்‌ அயலானுக்குதீ தொல்லை ஏற்படும்‌. எனவே, சமுதாய வாழ்க்கையில்‌ ஒழுக்கம்‌-பக்தியைவிட முதன்மை யானது) இன்றியமையாதது. ஒழுக்கம்‌ என்றால்‌ என்ன மற்றவர்களிடமிருந்து நாம்‌ எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர்‌ நமக்கு எதைச்‌ செய்யவேண்டுமென்று கருது கிறோமோ, மற்றவர்‌ நம்மிடம்‌ எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதன்படியே நாம்‌ மற்றவரிடதீதில்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. அதுதான்‌ ஒழுக்கம்‌. தனக்குப்‌ புகழ்‌ வேண்டும்‌) தன்னை மற்றவர்கள்‌ பெருமையாகக்‌ கருதவேண்டும்‌ என்று கருதுவது மனித இிபற்கை, இதற்காகவே மற்றவருக்கு உதவுவது, மற்றவருக்குப்‌ பயன்படுவது, பொ.துத்தொண்டு ஆற்றுவது என்பன எல்லாம்‌, சமுதாயத்தில்‌ தன்‌ கடமையை உணர்‌ ந்து பிறருக்குப்‌ பயன்படுதலே அறம்‌); அந்த அறதீதால்‌ வருவது இன்பம்‌. [பொன்மலையில்‌, 22-9-1956-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை? 26-9-1956) www.thamizham.net - Free E book 14௦ 3031 1086 40. ஒழுக்கம்‌ கெட்டூவரக்‌ காரணம்‌? தோழர்களே 1 சடவுளும்‌, மதமும்‌ நன்மைக்கென்றே ஏற்பட்டவையாயினும்‌ ஒழிக்கப்பட வேண்டி யவையே. சமுதாயத்‌ தொண்டை வலியுறுத்தவும்‌, அதில்‌ உண்மையையும்‌, அன்மபயும்‌, ஒழுக்கத்தையும்‌ ஏற்டடுதீதவும்‌ என்பதாகச்‌ சொல்லிக்கொண்டே, மேற்கண்டவைகள்‌ (கடவுள்‌, மதம்‌, பாரீப்பான்‌, சாதி முதலியன) ஏற்பட்டு, இப்போது அவை தேவை இல்லாத வைகளாக ஆகிலிட்டதோடு, ஒழிக்கப்பட வேண்டியவையாகவே ஆகிவிட்டன. மிருகப்‌ பண்புகளே தெய்வீகப்‌ பண்புகளாய்‌ அமைந்தன. கடவுள்‌, சமயம்‌, பார்ப்பான்‌ முதலியவை களாலேயே மனிதனுக்கு, சமுதாயத்திற்குத்‌ தேவை இல்லாதவைகள்‌ எல்லாம்‌ கடமை ஆக்கப்பட்டு, மனிதனை மனிதன்‌ இம்சிப்பகு, வஞ்சிப்பது முதலிய துஷ்ட ஐந்துக்கள்‌ குணமே தெய்வீகக்‌ குணங்களால்‌ அமைந்துவிட்டன. மத சாஸ்திர பராண இதிகாசதி ததீதுவங்களைப்‌ பார்த்தால்‌ இவை விளங்கும்‌. நெறியற்ற வாழ்வே மலிந்து காணப்படு கிறது. உயிர்‌ வாழ்வில்‌ எனக்கு 78 ஆண்டு அனுபவமுண்டு (1956). 65 ஆண்டுகளாக உலக நடப்பும்‌ மனித வாழ்வின்‌ தன்மையும்‌ எனக்குத்‌ தெரியும்‌. அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றாலும்‌, மனித வாழ்வு மிகமிகக்‌ கீழான நிலைக்குப்‌ போய்விட்டது. வஞ்சகதீதிற்கும்‌, துரோகதீதிற்குமே அன்பு, ஒழுக்கம்‌ என்னும்‌, திருட்டுக்கும்‌ பரட்டுக்கு3ம நாணயம்‌ என்றும்‌ அகராதிகளில்‌ விளக்கம்‌ எழு தவேண்‌டய நிலைக்கு மனிதன்‌ வந்து விட்டான்‌. இதில்‌ என்ன அதிசயம்‌ என்றால்‌, இந்த விதிக்கு விலக்களிக்க இன்று இந்த நாட்டில்‌ ஒரு ஆளைக்கூடக்‌ சாண முடியவில்லை என்பதுதான்‌. கடவுளும்‌ சமயப்‌ பிரசாரங்‌ களும்‌ நற்பயனளிக்கவில்லையே ! கடவுள்களுக்கும்‌, சமயங்களுக்கும்‌-இவைகளுக்குக்‌ கோவில்களுக்கும்‌, உற்சவங்களுக்கும்‌ குறைவில்லை; சமயப்‌ பிரசாரகர்களுக்கும்‌ கடவுள்‌, சமயம்‌ பற்றிய ஆதாரங்களுக்கும்‌ குறைவில்லை) இவைகளில்‌ தேர்ந்த புலவர்களுக்கும்‌ குறைவில்லை மற்றும்‌ கடவுள்‌ சமய நம்பிக்கைக்காரர்களுக்கும்‌, பக்தர்களுக்கும்‌, பக்தி செலுத்துபவர்‌ களுக்கும்‌ குறைவில்லை. இந்‌ நிலையில்‌ மனிதனிடம்‌ அன்பு, ஒழுக்கம்‌, நாணயம்‌, நம்பிக்கை இல்லாமல்‌, துரோகதீதினால்‌, ஒழுக்கக்‌ கேட்டால்‌, நாணயக்‌ குறைவால்‌, ஏமாற்றுதலால்‌ அல்லாமல்‌ வேறு வழியில்‌ மனிதன்‌ வாழ முடியவில்லை என்கின்ற நிலை மக்களுக்கு ஏற்பட்ட காரணம்‌ என்ன ? மனிதனின்‌ வாழ்க்கைத்‌ திட்டத்தையே ஏமாற்றுதல்‌ மீதும்‌, துரோகதீதின்‌ மீதும்‌ அன்னியன்‌ உழைப்பின்‌ பயனை அநியாயமாய்‌ அனுபவிப்பதன்‌ அஸ்திவாரதீதின் மிது. அமைத்துக்‌ கொள்ள வேண்டிய அவசியமென்ன ₹ துரோகிகள்‌, போலிகள்‌, ஏமாற்றுக்காரர்‌: களுடன்‌ இணைந்திருட்பதெப்படி i இவைகள்‌ எல்லாம்‌ இரண்டாவது குணம்‌ என்கின்ற தன்மையில்‌ கொள்ளும்படியான அளவுக்கு, அ?யாக்கியர்களையும்‌ துரோகிகளையும்‌ நாணயக்‌ குறைவானவர்களையும்‌ நம்பிக்கை மோசம்‌ செய்பவர்களையும்‌ வெளிப்படையான போலிகளையும்‌ வெறுக்காமல்‌, அவர்களிடம்‌ வெறுப்புக்‌ காட்டாமல்‌, மக்கள்‌ அப்படிப்பட்ட காரியங்களில்‌ நிபுணர்களிடம்‌ இணைந்தாவது வாழ வேண்டும்‌ என்று கருதுவதும்‌, அவர்‌: களோடு இணைந்திருப்பதில்‌ வெட்கப்படாமல்‌ இிருப்பதுமான நிலையில்‌, மனிதன்‌ இருக்கக்‌ காரணம்‌ என்ன & கடவுள்‌ சமயதீதுறை ஒழுக்க ஈனங்களும்‌, வியாபாரம்‌ நிர்வாகத்துறை ஒழுக்க ஈனங்களும்‌ நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாக சமய. வியாபாரத்துறை ஆதாரங்‌ களில்‌ காணப்பட்டாலும்‌, இப்போது அரசியல்‌ துறைபின்‌ நடப்புக்கள்‌ ஒழுக்கக்‌ கேட்டின்‌ துரோகத்தின்‌ எல்லையை அடைந்து விட்டன. அமோக்கியர்களுக்கும்‌, துரோகிகளுக்கும்‌. முதலிடமா 8 இவைகள்‌ எல்லாம்‌ மனித சமுதாயத்திற்கு எவ்வளவு கேடு பயக்கிள்றன 8 பயக்க இருக்கின்றன 1 என்பதை எண்ணினால்‌, நெஞ்சம்‌ பிளக்கும்படியான வேதனை ஏற்படுகின்‌ றது அயோக்கியர்களும்‌ துரோகிகளும்‌ நாட்டில்‌ தைரியமாய்‌ உலாவவும்‌ அவர்‌: களை மக்கன்‌ வெறுக்காமல்‌ இருப்பதையும்‌ பார்‌ தீதால்‌, இக்‌ கூட்டத்தில்‌ நாம்‌ வாழ்வதே ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1087 ஒழுக்கக்கேடு என்று தோன்றுவதுடன்‌, அப்படியாவது ஏன்‌ வாழவேண்டும்‌ என்றே தோன்றுகிறது. ஒழுக்கக்‌ கேட்டைக்‌ களைந்தே ஆகவேண்டும்‌. ஆகவேதான்‌, நாம்‌ இனி ஒரு வினாடி வாழ்வதானாலும்‌ இதற்கு ஒரு பரிகாரம்‌ செய்து வாழவேண்டுமே யொழிய, மற்றபடி வாழ்வது இழிவு என்றே தோன்றுகிறது. இவ்வித பரிகாரதீதிற்கு இனி எந்த விதத்திலும்‌ கடவுளும்‌ சமயமும்‌ பயன்படாது என்றும்‌ தோன்றுகிறது. ஒழுக்கக்‌ கேட்டிற்கு கி தவரை காரணமாக இருந்தவை களை, ஒழுக்க வளர்ச்சிக்குப்‌ பயனில்லாமல்‌ இருக்கின்‌றவைகளை ஒழிதீ அவிட்டு, ஒழுக்கப்‌ பிரசாரமும்‌, ஒழுக்க ஈனராய்‌ துரோகிகளாய்‌ இருப்பவர்‌ களை ஒழிக்கும்‌ பிரசாரமும்‌ செய்ய வேண்டியதுதான்‌ தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும்‌ முதன்‌ மையுமான கடன்‌ என்றே கருதுகிறேன்‌. ஒழுக்கமும்‌ அன்பும்‌ இல்லையானால்‌ மனித சமுதாயமே வேண்டாம்‌ என்று தோன்றுகிறது. [குன்றக்குடியில்‌, 6-6-1956ல சொற்பொழிவு. விடுதலை? 20-6-1956] 11. தர்மம்‌ அல்லது பிச்சை தரீமம்‌--அதாவது, ஏழைகளுக்குப்‌ பிசீசை இடுதல்‌ முதல்‌, மற்றவர்களுக்குப்‌ பல உதவிகள்‌ செய்வது என்பதுவரை அனேக விஷயங்கன்‌ தர்மத்தின்கீழ்‌ சொல்லப்பட்டிருக்‌ கின்றன. இந்த மாதிரி தரீமதீதைப்பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம்‌, கிறிஸ்துவம்‌ முதலிய மதங்களில்‌ இந்தத்‌ தர்மதீதை- பிச்சை கொடுத்தலை மிக நிர்ப்பந்தமாகக்‌ கட்டாயப்படுத்திச்‌ சொல்லப்பட்டிருக்கிறது. எப்படியெனில்‌, தர்மம்‌ கொடுக்காகவன்‌ பாவி என்றும்‌, அவன்‌ நரகதீதுகீகுப்‌ போவான்‌ என்றும்‌, கடவுள்‌ அவனைத்‌ தண்டிப்பார்‌ என்றும்‌, இப்படியெல்லாம்‌ பயமுறுதீதிசி சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள்‌ வாக்கெனவும்‌ கூறப்பட்டிருக்கிறதுஃ இந்து மதம்‌ என்பதில்‌ தர்மத்தை 32 விதமாகக்‌ கற்பித்து, 32 தர்மங்களையும்‌ ஒருவன்‌ செய்யவேண்டும்‌ என்றும்‌, அந்தப்படி செய்தால்‌ அவனுக்கு இன்னின்ன மாதிரிப்‌ புண்ணியம்‌ கிடைக்கும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டிருக்கிற து. அதாவது, அறம்‌ 32. ஒரு மனிதன்‌--சரித்திரம்‌ படிப்பவர்களு£குச்‌ சாப்பாடு, சதீதிரம்‌ கட்டுதல்‌, பக்தர்களுக்கு உணவு, பசுவுக்கு வாயுறை, கைதிகளுக்குச்‌ சாப்பாடு, இரப்பவர்‌ களுக்குப்‌ பிச்சை, தின்‌ பண்டம்‌) அனாதைகளைக்‌ காதீதல்‌, பிள்ளைப்‌ பேறக்கு மருதீதுவம்‌ செய்தல்‌, அனாதைப்‌ பிள்ளைகள்‌ வளர்தீதல்‌, தின்பண்டம்‌, பிள்ளைகளுக்குப்‌ பால்‌ வார்த்தல்‌, அனாதைப்‌ பிணம்‌ ௬டுதல்‌, ஏழைகளுக்கு ஆடை கொடுத்தல்‌, வழிப்போக்‌ கர்களுக்குச்‌ சுண்ணாம்பு கொடுத்தல்‌, வைத்தியம்‌ செய்தல்‌, வண்ணான்‌ உதவல்‌, நாவிதன்‌ உதவல்‌, கண்ணாடி காட்டுதல்‌, கா3தாலை கொடுத்த, கண்ணுக்கு மருந்து செய்தல்‌, தலை மூழுக்காட்ட எண்ணெய்‌ தருதல்‌, பெண்‌ போகம்‌ வேண்டுவோருக்கு போகப்பெண்‌ உதவுதல்‌, கஷ்டத்தில்‌ சிக்குண்டவர்களுக்கு உதவி செய்து விடுவித்தல்‌, தண்ணீர்ப்‌ பந்தல்‌ வைதீதல்‌, மடம்‌ கட்டுதல்‌, ரோடு போடுதல்‌, சாலை மரம்‌ வைதீதல்‌, மாடு-எருமை ஆகியவை தங்கள்‌ தினவுகளைதி தீர்தீதுக்கொள்ளச்‌ சொரி கல்‌ நடுதல்‌, மிருகங்களைக்‌ காதீதல்‌, கக்கூ௯ கட்டல்‌, விலை கொடுத்து உயிர்‌ மீட்டல்‌, பெண் தானம்‌ செய்தல்‌ ஆகிய 82 தருமங்கள்‌ செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதனின்‌ கடமை என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அதுபோலவே, இஸ்லாம்‌ மதம்‌ என்பதிலும்‌ அன்னியனுக்குப்‌ பிச்சை கொடுத்தாக வேண்டும்‌ என்றும்‌, அது ஒருவனுடைய வருஷ வரும்படியில்‌ அவனுடைய செலவுபோக மீதி உள்ளதில்‌ 40-ல்‌ 1 பரகம்‌ வநஷந்தோறும்‌ பிச்சையாகப்‌ பணம்‌, சாப்பாடு, துணி www.thamizham.net - Free £ book 14௦ 3031 1088 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ முதலியவைகளாய்க்‌ கொடுக்க வேண்டும்‌ என்றும்‌ சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால்‌ மதத்‌ துரோகம்‌ என்றும்‌, இந்தப்படி செய்யாதவன்‌ கிஸ்லாம்‌ ஆக மாட்டான்‌ என்றும்கூடக்‌ கூறப்படுகிறது. அதுபோலவே, கிறிஸ்துவ மததீதிலும்‌ தர்மம்‌ கொடுக்க வேண்டியது மிக முக்கிய மானதென்றும்‌, தர்மம்‌ செய்யா தவனுக்கு மோட்சமில்லை என்றும்‌,--உதாரணமாக ஓர்‌ ஊசியின்‌ காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம்‌ நுழைந்தாலும்‌ நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன்‌ ஒரு காலமும்‌ மோட்சதீதுக்குப்‌ போகமாட்டான்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. இதீதப்படிக்குதி தர்மங்கள்‌ செய்யவேண்டிய அவசியங்களை வற்புறுதீதி அந்த வற்புறுத்தல்‌ களைப்‌ பகவான்‌ சொன்னான்‌, ஆண்டவன்‌ சொன்னான்‌ என்று வேதங்கள்‌: என்பவைகளிலும்‌ எழுதிவைக்கப்பட்டிருக்கின்‌ றன. இந்த தர்மங்கள்‌ எல்லாம்‌, இருக்கிறவர்கள்‌ - அதாவது செல்வவான்கள்‌-- இல்லாதவர்‌ களுக்கு, ஏழைகளுக்குக்‌ கொடுக்கவேண்டும்‌ என்பதுதான்‌ இதன்‌ தாதீபரியமாகும்‌, செல்வவான்‌ களுக்குச்‌ செல்வம்‌ கடவுளால்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதுதான்‌ இதன்‌ தாதீபரியமாகும்‌. * செல்வவான்களுகீகுச்‌ செல்வம்‌ கடவுளால்‌ கொடுக்கப்பட்டதாகும்‌. ஆகையால்‌ கடவுள்‌ கொடுதீததைக்‌ கடவுளின்‌ சிருஷ்டியாகிய-கடவுளின்‌ பிள்ளைகளாகிய ஏழை மக்களுக்குக்‌ கொடுக்க வேண்டியது அவசியமாகும்‌? என்பதே அந்ததீ தாதீபரியதீதின்‌ உள்கருதீதாகும்‌. செல்வவரன்களுக்குக்‌ கடவுள்‌ செல்வங்களைக்‌ கொடுத்தார்‌. என்றால்‌, செல்வமில்லாத ஏழை தரித்திரவான்களுக்குச்‌ செல்வமில்லாமல்‌ செய்ததும்‌ கடவுள்தான்‌. என்பதை எந்த மதவாதியும்‌ ஆஸ்திகனும்‌ மறுக்கமாட்டான்‌ என்றும்‌, மறுக்க முடியாது என்றும்‌ சொல்வேன்‌. செல்வம்‌ என்பது உலகதீதின்‌ பொதுச்சொத்து. அதை யார்‌ உண்டாக்கி இருந்தாலும்‌, உலகதீதில்‌ உள்ளவரை எந்த ஜீவனுக்கும்‌, அது பொதுச்‌ சொதீதாகும்‌. ஆனால்‌, அந்தப்‌ பொதுச்‌ சொதீதானது, பலாதீகாரத்தாலும்‌, சூழ்ச்சியாலும்‌, ஆட்சியாலும்‌, கடவுள்‌ பேராலும்‌ .ஒருவனுக்கு அதிகமாய்ப்‌ போய்ச்‌ சேரவும்‌, மற்றொருவனுக்குச்‌ சிறிது கூட இல்லாமல்‌ தரித்திரம்‌, பசி முதலியவை அனுபவிக்கவும்‌ ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய மற்ற எந்தக்‌ காரணத்தாலும்‌ எவனுக்கும்‌ இல்லாமல்‌ போக நியாயமே இல்லை. ஆனபோதிலும்‌, கடவுளே ஒருவனைச்‌ செல்வவானாக ஆக்கினார்‌ என்றும்‌, கடவுளே ஒருவனை ஏழையாக ஆக்கினார்‌ என்றும்‌ வைத்துக்‌ கொள்வதானாலும்‌ தர்மம்‌-பிச்சை கொடுக்கிற அதிகாரத்தை மாத்திரம்‌ ஏன்‌ பணக்காரனுக்குக்‌ கொடுத்‌ தட அவனுக்கு இஷ்ட மிருந்தால்‌ பிறத்தியானுக்குப்‌ பிச்சைபோட்டு மோட்சதீதுக்குப்‌ போகும்படியும்‌, அவனுக்கு இஷ்டமில்லையானால்‌ பிச்சை கொடுக்காமல்‌ இருந்து நரகதீதுக்குப்‌ போகும்படியும்‌, எதற்‌ காகக்‌ கற்பிக்க வேண்டுமென்‌ பது நமக்குப்‌ புலப்படவில்லை. அன்றியும்‌, ஏதோ இரண்டொரு பணக்காரன்‌, பிச்சை கொடுத்து, தர்மம்‌ செய்து மோட்சதீதிற்குப்‌ போவதற்காகவும்‌--பலர்‌ பிச்சை கொடுக்காமலிருந்து நரகத்திற்குப்‌ போவதற்காகவும்‌ எத்தனையோ கோடிக்‌ கணக்கான பிச்சைக்காரர்களை ஏன்‌ சிருஷ்டித்தார்‌ என்பதும்‌ நமக்கு விளங்‌ கவில்லைஃ செல்வம்‌ கடவுளால்‌ உண்டாக்கப்பட்டதானால்‌ ஏழையும்‌ பணக்காரனும்‌ கடவுளால்தான்‌ உண்டாக்கப்பட்டி ௬க்க வேண்டும்‌. இந்தப்படி ஒரு கடவுன்‌ மூன்றையும்‌ படைத்து ஏழைக்கும்‌, பணக்காரனுக்கும்‌ வாங்கும்‌--கொடுக்கும்‌ உத்தியோகம்‌ கொடுத்து, இதற்குக்‌ கணக்கு எழுதி வைத்து, அவனவனுக்குத்‌ தகுந்த மோட்ச-நரகதீதுக்கு அனுப்பும்‌ வேலையில்‌ கடவுள்‌ ஈடுபட்டிருக்கிறார்‌ என்றால்‌, கடவுள்‌ பக்தர்கள்‌ கடவுளைப்‌ பரம முட்டா எாகவும்‌ பரிசுதீத மடையனாகவும்‌ சிருஷ்டிக்கிறார்களா i அல்லத, கடவுளைப்‌ பரம கருணா: www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1089 நிதியாகவும்‌, பாரபட்சமற்ற தந்தையாகவும்‌ சிருஷ்டிக்கிறார்கனா ₹ என்று கேட்கிறேன்‌. ஏழையைச்‌ சிருஷ்டிப்பானேன்‌ ? பணக்காரனைச்‌ சிருஷ்டிப்பானேன்‌ ₹ ஏழைமைப்‌ பணகீ காரனிடம்‌ போய்க்‌ கெஞ்சும்படி செய்வானேன்‌ ? பணக்காரன்‌ தனக்கு இஷ்டமிருந்தால்‌ கொடுப்பதும்‌ இஷ்டமில்லாவிட்டால்‌ கொடுக்காமல்‌ ஆளைவிட்டுக்‌ கழுத்தைப்‌ பிடித்துதி தள்ளச்சொல்வதும்‌ ஏன்‌ 1 என்பவைகலை யோசித்துப்‌ பார்தீதால்‌ முதலில்‌ இந்தத்‌ தத்துவம்‌ உண்மையாய்‌ இருக்குமா என்பதே பெரிய சந்தேகமாய்‌ கிருப்பதோடு, பரிசுத்த ஆஸ்திகத்‌ தன்மையுடன்‌ கடவுளைச்‌ சிருஷ்டிதீதுப்‌ பிரச்சாரம்‌ செய்கின்ற மக்கன்‌ எவ்வளவு முட்டான்‌ களாய்‌ இருக்கிறார்கள்‌ என்பதும்‌ வெள்ளிடை மலையாகும்‌. கடவுள்‌ பார்‌ தீது ஓர்‌ உத்தரவில்‌ அல்லது ஒரு சங்கற்பதீதில்‌, ¢ எல்லாப்‌ பொருளும்‌, எல்லா மக்களுக்கும்‌ பொதுவாய்‌ இருக்கதீதக்கது? என்று செய்துவிட முடியாதா என்று கேட்பதோடு, எல்லா ஜீவன்களையும்‌ தானே சிருஷ்டித்து தானே நடதீதுகின்‌ றவனாய்‌ இருக்கிறபடியால்‌-- ஒன்றை ஒன்று துன்புறுத்தவோ, ஒன்றை ஒன்று கொன்று தின்னவோ கூடாது என்று நிர்ணயிதீதுவிட முடியாதா என்று கேட்கின்றேன்‌. உண்மையாகவே ஒரு யோக்கியமான கடவுள்‌ இருந்தால்‌ இதைச்‌ செய்திருக்க மாட்டாரா என்றும்‌ கேட்கின்‌ றேன்‌? இந்தப்படி செய்வது முடியாத காரியம்‌ என்று யாராவது சொல்லுவார்களானால்‌ ரஷ்யாவில்‌ லெனின்‌ என்ற ஒரு மனிதன்‌ இந்தப்படி உத்தரவு போட்டுப்‌ பணக்காரரும்‌, பிச்சைக்காரரும்‌ இல்லாமல்‌ செய்துவிட்டாரே, இவர்‌ கடவுளுக்கும்‌ பெரியவரா என்று கேட்கிறேன்‌. ஆதலால்‌ தரீமம்‌--பிறதீதியானுக்குப்‌ பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகன்‌ எல்லாம்‌ பணக்காரத்‌ தன்மைக்கு அனுகூலமானதே தவிர-- பணக்காரத்‌ தன்மையைக்‌ காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும்‌ ஏழைகளுக்கும்‌ பிச்சைக்காரர்களுக்கும்‌ அனுகூலமானவையல்ல. ஏனெனில்‌, பிச்சைகொடுப்பது, மற்றவர்களுக்கு உதவிசெய்வது என்கின்ற காரியங்‌ களால்தாம்‌, இல்லாத ஏழை மக்களை--தரித்திரவாசிகளான மக்களைப்‌ பிரிதீதாளமுடியும்‌ஃ ஏழைமக்கள்‌ பிரிந்திருநீதால்தான்‌ பணக்காரர்கள்‌ வாழமுடியும்‌, அன்றியும்‌, பணக்கார மக்கள்மீது ஏழை மக்களுக்குக்‌ குரோதமும்‌ வெறுப்பும்‌ இல்லாமல்‌ இருக்கவேண்டும்‌ என்கின்ற காரியத்திற்காகவே தர்மம்‌ என்பதும்‌, * ஜக்காத்‌? என்பதும்‌, பிச்சை என்பதும்‌ கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவிசெய்வதற்கோ அவர்களைக்‌ காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல. பிச்சைக்காரர்‌ இருப்பதும்‌ அவர்கள்‌ பிச்சை எடுப்பதும்‌ ஜன சமூகதீதுக்கு ஒரு பெரும்‌ தொல்லையும்‌ இழிவுமாகும்‌ என்பதோடு, ஒரு கடவுள்‌ இருந்தால்‌--அக்‌ கடவுளுக்கு மிகுந்த அவமானமும்‌, அயோக்கியத்தனமான காரியமுமாகும்‌. இந்தக்‌ கருதீதைவைத்தே திருவன்ளுவரும்‌ பிச்சை எடுத்து வாழவேண்டிய மனிதனைக்‌ கடவுள்‌ சிருஷ்டித்திருப்பானேயானால்‌, அக்‌ கடவுள்‌ இல்லை என்றுதான்‌ அர்த்தம்‌. அவன்‌ இருந்தாலும்‌ ஒழியவேண்டியதே அவசியம்‌? என்று சொல்லி இருக்கிறாரி- திருவள்ளுவர்‌ நூலில்‌ முன்னுக்குப்பின்‌ மூரண்கள்‌ பல இருந்தாலும்‌, அவர்‌ ஒரு தனியுடைமைக்காரரேயானாஜலும்‌ இந்த ஒரு விஷயத்தில்‌ தைரியமாய்ச்‌ சொல்லி இருக்கிறார்‌ ஆனாலும்‌, இதற்கு முரணாக, மற்றொரு கிடதீதிலும்‌ சொல்லியிருக்கிறார்‌. அதாவது, தர்மம்‌ செய்தவனையும்‌ பாவியையும்‌ பார்க்கவேண்டுமானால்‌-பல்லக்கில்‌ போகிறவனையும்‌, பல்லகீகுச்‌ சுமப்பவனையும்‌ பார்‌ ? என்று சொல்லி இருக்கிறார்‌. ஆகவே, இதிலிருந்து தர்மம்‌ செய்ததனாலேயே பல்லக்கில்‌ போகும்படியான செல்வவானாகப்‌ பிறந்தான்‌ என்றும்‌, தர்மம்‌ செய்யாததனாலேயே பல்லக்குத்‌ தூக்கும்‌ தரித்திரனாகபி பிறந்தான்‌ என்றும்‌ சொல்லுகிறார்‌. 1686—137 www.thamizham.net - Free E book 14௦ 3031 1090 பெரியார்‌ ஈ, வெ. ரர்‌. சிந்தனைகள்‌ அப்படியானால்‌, ஏழை-பணகீகாரத்‌ தன்மையை திருவள்ளுவர்‌ ஆதரிக்கிறார்‌ என்ப தாக ஒருபுறத்தில்‌ விளங்குகிறது. இந்த முரணும்‌ மயக்கமும்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌. இவருக்குக்‌ கடவுள்‌ தன்மையில்‌, ஆதீமார்தீததீதில்‌ இருக்கும்‌ நம்பிக்கையேயாகும்‌. கடவுள்‌ தன்மை அதாவது, *மனிததீ தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது--அதற்கும்‌ உலக .நடவடிக்கைகளுக்கும்‌ சம்பந்தம்‌ உண்டு! என்று எவன்‌ கருதினான்‌ ஆனாலும்‌ அப்படிப்‌ பட்டவன்‌ முன்னுச்குப்பின்‌ முரணாகவும்‌, தனிஉடைமைக்காரனாகவும்‌, உயர்வு தாழ்வுகளை ஆதரிக்கிறவனாகவும்‌ இருந்துதான்‌ தீருவான்‌. எது எப்படி இருந்தபோதிலும்‌, உலகதீதில்‌ மனித சமூகம்‌ தொல்லை இல்லாமல்‌ வாழவேண்டுமானால்‌ பிச்சை கொடுப்பதும்‌, பிச்சை எடுப்பதும்‌ சட்டவிரோதமான காரியங்களாய்க்‌ கருதப்படவேண்டு3. அப்படியானால்தான்‌, மனிதன்‌ சுயமரியாதையோடு வாழமுடியும்‌. பிச்சை கொடுக்கும்‌ வேலையை சர்க்காரே ஏற்றுக்கொண்டு, அதற்குப்‌ பணம்‌ வேண்டுமானால்‌ பணக்காரரிடமிருந்து ¢ பிச்சை வரி? என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, முகமதுநபி சொன்ன சணக்குப்படியோ சர்க்கார்‌ வரூலிதீது, அதற்கு ஒரு இலாக்கவை வைதீது வினியோகிக்கவேண்டும்‌. அந்தப்‌ பிச்சையை சர்க்கார்‌ தொழிற்சாலைகள்‌ வைத்து அதன்மூலம்‌ பிச்சைக்காரர்களிடம்‌ வேலையை வாங்கிக்கொண்டு வினியோகிக்கவேண்டும்‌. அந்தக்‌ காரியதீதுக்காகச்‌ சர்க்கார்‌ எந்ததி தொழிற்சாலையை வைக்கிறார்களோ ௮ம்‌ மரதிரித்‌ தொழிற்சாலையை மற்றவர்கள்‌. வைக்காமல்‌ தடுதீதுவிடவேண்டும்‌. இப்படிச்‌ செய்தால்‌, பணக்காரர்கள்‌ ஏற்பட்டு நாசமாய்ப்‌ போனாலும்‌, பிச்சைக்‌ காரர்கள்‌ தொல்லையாவது இல்லாமல்‌ போய்விடும்‌. பணக்காரத்‌ தன்மை ஆட்சி இல்லாத தேசம்‌ எதிலும்‌ இந்தக்‌ காரியம்‌ சுலபமாய்‌ நடத்தலாம்‌. ஆகவே, தர்மம்‌ செய்வது அக்கிரமம்‌ என்றும்‌, ஜனசமூகதீதுக்குத்‌ தொல்லை என்றும்‌, பணக்காரர்களின்‌ அயோக்கியதீதனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும்‌ சொல்லுகி3றன்‌. [£ குடி அரசு-£ட்டுறை--21-8-1945] 12. தர்மமும்‌ பாவ புண்ணியமும்‌ உலகிலுள்ள எல்லா மதங்களையும்விட இந்து மததீதில்தான்‌ தர்மம்‌ என்பது D g, இது என்று தெளிவாய்‌ வரையறுத்துக்‌ கற்பிக்கப்பட்டிருப்பதனால்‌, கண்மூடிதீதனமான: செய்கைகள்‌ இன்னும்‌ செழித்து வருவதற்கிடமாய்‌ இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்து மதமும்‌, கோட்பாடுகளும்‌, தர்மமும்‌ ஒரு எல்லை ஏற்படுத்தியிருட்பதனால்‌, அவ்வளவுக்குச்‌ செய்யத்தான்‌ யாருக்கும்‌ மனம்‌ வருமே தவிர, அதைதீ தாண்டிப்போக யாருக்கும்‌ மனம்‌ வராது. ஒரு அடியாருக்கு அன்னமளித்தால்‌ இவ்வளவு புண்ணியம்‌ என்று கணக்குவாரியாக--அதன்‌ பலனாய்‌ இவ்வளவு காலத்திற்கு மோட்சதீதிலிருக்கலாம்‌. என்று வகுத்து எழுதி வைத்திருக்கிறார்கள்‌. இதைக்‌ கேட்டபிற குதான்‌ இத்தகைய தர்ம சம்பந்தமான எண்ணம்‌ வருகிறதே தவிர வேறல்ல, இம்‌ மாதிரியான காரியங்களினால்‌ உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக்‌ குந்தகம்‌ ஏற்படுகின்றது என்பதை நீங்கள்‌ நன்றாய்க்‌ கவனிக்க வேண்டும்‌. இவற்றால்தான்‌, நாடு முன்னுக்கு வருங்‌ காரியங்கள்‌ தடைப்படுகின்றன. எந்தத்‌ தேசத்திலும்‌ தர்மம்‌ இல்லாமலிருக்கவில்லை. வெள்ளைக்காரதீ தேசத்தின்‌ தர்மம்‌ நம்‌ நாட்டுத்‌ தர்மத்தைவிடப்‌ பன்மடங்கு உதீதமமாயும்‌, தேசத்திற்கும்‌, சமூகத்திற்கும்‌ உண்மையான நன்மையளிப்பதாயும்‌ இருக்கின்றது வெள்ளைக்கார நாட்டுத்‌ தர்மம்‌, கிணறு நிரம்பி வழிவதுபோல, அவன்‌ இராஜ்யம்‌ நிரம்பி நம்‌ நாட்டிலும்‌ வழிந்தோடுகின்றது. அதீதகைய தர்மம்‌ நிறைந்த நாட்டில்‌ என்ன வழக்கம்‌ என்றால்‌, ஒருவன்‌ தெருவில்‌ பிச்சைக்கு வந்தால்‌ உடனே போலீஸ்காரன்‌ பிடித்துக்‌ கொண்டுபோவான்‌. அங்கு www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1091 பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும்‌ முறை என்பதை நன்கு அறிந்து கொண்டார்‌ கள்‌, வெள்ளைக்காரன்‌ நாட்டில்‌ படிக்காதவன்‌ என்றால்‌ அவன்‌ வெட்கித்‌ தலை குனிந்‌துவிடுவான்‌. நம்‌ நாட்டிலோ தர்மம்‌ என்று வந்தால்‌ ¢ நமக்கென்ன நம்மாலான. சாப்பாடு போட்டுவிடு3வாம்‌ ) பிறகு அவன்‌ தலைவிதி போலாகிறது) சரஸ்வதி அவன்‌ நாக்கில்‌ இருந்தால்‌ எப்படியும்‌ படி தீ.துவிடுவான்‌ ? என்ற தர்மம்தான்‌ நமக்குக்‌ கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள்‌ முன்னேறும்போது நாம்‌ இக்‌ கதிக்கு ஆளாகி இருக்கக்‌ காரணம்‌ என்ன 1 நமது மதங்கள்‌, தர்மங்கள்‌ என்ற பல ததீதுவங்கள்தாம்‌ நம்மை இந்நிலையில்‌ வைத்திருக்கின்றன. அவர்கள்‌ முன்னேற்றதீதிற்குப்‌ பலமும்‌, பீரங்கியும்‌ மட்டும்‌ காரணமல்ல. சென்னை மாகாணத்தில்‌ உயர்ந்த குஷ்டரோக, க்ஷ்யரோக மருத்துவ ஆஸ்பதீதிரிகளும்‌ உயர்ந்த கலாசாலைகளும்‌, கல்லூரிகளும்‌ அவர்களுடையதாகதீதான்‌. இருக்கக்‌ காண்கிறோம்‌. தப்பான வழிகளில்‌ பிள்ளைகளைப்‌ பெற்று கள்ளியில்‌ போட்டு விட்டால்‌, அவற்றை எடுத்து வளர்தீது சம்ரக்ஷிக்கும்‌ அனாதை ஆஸ்ரமங்களும்‌ அவர்‌ களுடையதாகதீதான்‌ இருக்கின்றன. தெருவிலும்‌ நடக்கக்கூடாது) அருகிலும்‌ வரக்‌ கூடாது என்று மிருகங்களிலும்‌ கேவலமாய்‌ நம்மால்‌ நடதீதப்படுபவர்‌ களையும்‌, அவர்கள்‌ சேர்த்துக்‌ கல்வி அளிதீது, சமத்துவம்‌ பாராட்டி, மாக்களெனக்‌ கரு தப்பட்டவர்களையும்‌ அவர்கள்‌ மக்களாக்கி வருவதையும்‌ காண்கின்றோம்‌, இவற்றையெல்லாம்‌ நாம்‌ எளிதில்‌ மறக்கமுடியாது $ அல்லது மறைக்கவும்‌ முடியாது. அவர்கள்‌ நொண்டியை, முடத்தை, குருடர்களைக்‌ கொன்றுவிடுகிறார்களா ? அத்‌ தகையவர்களுகீகும்‌ தம்‌ சய உதவியினால்‌ எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத்‌ தேடிக்கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கு உதவிபுரிந்து வழிகாட்டி வரு8ன்றார்கள்‌. இதனால்‌ வெள்ளைக்காரன்‌ தான்‌ புத்திசாலியா 1 நமது முன்னோர்கள்‌ என்ன முட்டான்களா ¥ என்ற கேள்வியும்‌ கிளம்பக்கூடும்‌. இதற்காக நாம்‌ நமது முன்னோர்கள்‌ பேரிலும்‌ சுலபமாகக்‌ குற்றம்‌ சொல்லிவிடமுடியாது. எந்தக்‌ கொள்கையும்‌, நீதியும்‌, தர்மமும்‌, காலத்திற்கும்‌, இடத்திற்கும்‌, சந்தரீப்பத்திற்கும்‌ ஏற்ற வாறுதான்‌ இருக்கும்‌. இராமேசுவரதீதில்‌ ஒரு செட்டியார்‌ தர்மம்‌ செய்வதற்காகச்‌ சாணியும்‌, பாலும்‌, சுக்கும்‌ மட்டும்‌ கொடுக்கிறார்‌ என்றால்‌, அதுபோல நாமும்‌ இங்கு சாணியைக்‌ குவியலாகக்‌ கொட்டிக்கொண்டு வாரிக்கொடுப்பது தகுதி ஆகுமா 1 அவ்விடதி திற்கு அவசியதீதிற்கு ஏற்றவாறு அது முக்கியமான தர்மமாக இருக்கலாம்‌, அதற்காக நாம்‌ அவன்மீது குறைசொல்ல முடியுமா ! முன்னூறு, நானூறு வருடகாலத்துக்கு முந்திய காலத்துத்‌ தர்மம்‌ என்ற காரியங்கள்‌ இப்பொழுது செய்யமுடியாதவைகளாகத்தான்‌. கருக்‌ கின்றன. அப்போது அவை அவசியமாகச்‌ செய்யவேண்டியனவாகதீதான்‌. இருந்திருக்கும்‌. அக்காலத்தில்‌ தற்போது இருப்பதைப்‌ போன்று துரிதமான போகீகுவர தீதுச்‌ சாதனங்களோ மற்ற வசதிகளோ கிடையாது. அந்த நாட்டு மக்களுக்கு அந்தந்த ஊரே சொர்க்கம்‌. அக காலத்தில்‌ அவர்கள்‌ கிணற்றுத்‌ தவளைகளைப்‌ போலத்தான்‌ இருந்திருக்க முடியும்‌, அப்பேர்ப்பட்ட வர்களுக்கு விளைச்சலும்‌ அபரிதமாய்‌ விளைநீதுகொண்டிருந்தது. அக காலத்தில்‌ மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால்‌ பருவ மழைகள்‌ தப்புவதில்லை. இதனால்‌ உழுதாலும்‌ உழாமல்விட்டாலும்‌ அறுவடைக்குக்‌ குறைவில்லை. அப்பொழுது அதிகமாக விளைந்தாலும்‌ தற்போதைப்போல விளைந்த தானியம்‌ முழுவதையும்‌ வெளியூருக்குக்‌ கொண்டுபோகப்படாமல்‌ பெரும்‌ குழிகள்‌ வெட்டி, அவற்றில்‌ புதைதீது வைப்பதும்‌ வழக்கமாய்‌ இருந்துவந்தது. அன்றியும்‌, அக்‌ காலத்தில்‌ பிச்சைக்காரர்களும்‌ மிக அரிதென்றே சொல்லலாம்‌. எவ்வளவு விளைந்தாலும்‌ வாரி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற முறை அக்‌ காலத்தில கிடையாது. அதற்குச்‌ சாதனமும்‌ கிடையாது. அதனால்தான்‌, இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால்‌ இவ்வனவு புண்ணியம்‌ என்றும்‌ எழுதிவைக்க இடம்‌ இருந்தது. அதனால்‌ நம்‌ நாட்டில்‌ காலக்‌ கிரமத்தில்‌ பிச்சை எடுக்கும்‌ சாதிகள்‌ என்றே பல சாதிகளும்‌ தோன்றிவிட்டன. ஏதோ சாம்பலையும்‌ மண்ணையும்‌ பூசிக்கொண்டு வந்தாலும்‌, சாமி என்று விழுந்து கும்பிடும்‌ மூட்டாள்கன்‌ அதிகமாய்‌ இருக்கிறார்கள்‌ என்பதை அறிந்துதான்‌. பிச்சைக்காரர்‌ www.thamizham.net - Free £ book No 3031 1092 பெரியார்‌ ஈ., வெ. ரா, சிந்தனைகள்‌ களும்‌ நாளுக்கு நாள்‌ விருதீதியாகிக்கொண்டு வரு8ன்றனர்‌. இத்தனை கோயில்‌ இருக்‌ கையில்‌ இன்னும்‌ புதிதாகக்‌ கோயில்‌ கட்டுவது அவசியமா என்று கேட்டால்‌, * பாவி தடுக்‌ கிறான்‌. அவன்‌ சொல்லைக்‌ கேட்ட காதை ¢ லோஷன்‌ ? போட்டுக்‌ கழுவவேண்டும்‌? என்‌: கிறார்கள்‌. அக்‌ காலதீதில்‌ செல்வ மிகுதியினால்‌ செலவிடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம்‌ செய்து கொண்டிருந்தார்கள்‌, தங்கள்‌ விளைபொருள்களுக்குச்‌ செலவு வேண்டும்‌ என்ற முறையில்‌ ஒருவரோடு ஒருவர்‌ போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும்‌ தர்மம்‌ என்னும்‌ பெயரால்‌ பலவாறு செலவிட்டு வந்தார்கள்‌. அக்‌ காலதீதில்‌ எத்தனை கடவுள்‌ இருந்தாலும்‌ பூசை போட்டு--எவ்வளவு பேர்‌ வந்தாலும்‌ சோறு போடும்‌ செல்வமும்‌ செழிப்பும்‌ இருந்தது. அதனால்‌ இவ்வளவு கடவுள்களும்‌ அடியார்களும்‌ ஏற்பட இடம்‌ இருந்தது. ஆனால்‌, இப்போதைய கொள்கையும்‌, மதக்கோட்பாடுகளும்‌ காலதேச வர்தீதமானத்திற்கு ஏற்றபடியும்‌ மனிதன்‌ அறிவுக்கும்‌ தன்மைக்கும்‌ ஏற்றவாறும்‌ இருக்கவேண்டும்‌. முஸ்லிம்‌. களும்‌, கிறிஸ்தவர்களும்‌, இந்துக்களும்‌ எல்லா மததீதவர்களுநீதாம்‌ பாவம்‌ செய்யக்‌ கூடாதென்கிறார்கள்‌. ஆனால்‌, பாவம்‌, சுதீதம்‌ முதலான ததீ.துவங்களுக்கு அந்தந்த மதத்தினருக்கு அர்த்தம்‌ வேறாகதீதானிருக்கிறது. பாலைவனதீதில்‌ தோன்றிய இஸ்லாம்‌ மததீதில்‌, சுத்தம்‌ என்றால்‌ மூன்று வேளையும்‌ குளிப்ப,துதான்‌ சுத்தம்‌ என்று எழுதிவைக்க முடியாது. அங்கு மணலை, உடம்பில்‌ தேய்த்துக்கொண்டாலும்‌ குளித்துச்‌ சுத்தம்‌ ஆவதற்கு ஒப்பாகத்தான்‌ கருதப்படக்கூடும்‌, அதனால்‌, அந்தச்‌ சுத்தம்‌ தப்பு என்று சொல்லிவிட முடியாது. நமக்குள்‌ வெளிக்குப்போனால்‌ நான்கு செம்பு தண்ணீர்‌ விட்டுக்‌ கழுவுபவர்களும்‌ போதாக்‌ குறைக்குத்‌ தலை முமுகுபவர்களும்‌ இருக்கிறார்கள்‌. அவ்வாறு செய்தால்தான்‌ அதனைச்‌ சுத்தம்‌ எனக்‌ கருதப்படுகிறது ஆனால்‌, இவர்களைவிடப்‌ பன்மடங்கு கடுமையான சுகாதாரமுடைய வெள்ளைக்‌ காரன்‌--* காகிதத்தில்‌ பாதியும்‌ கால்‌ சராயில்‌ பாதியுமாக £தீ துடைத்துவிட்டுப்‌ போகிறான்‌. அவன்‌ நாட்டில்‌ அவ்வளவுதான்‌ வசதி. இங்கு குளிக்காவிட்டால்‌ பாவி என்கிறான்‌. அங்கு குனித்தாயா என்று கேட்பதே மரியாதையல்ல எனக்‌ கருதப்படுகிறது. இங்கு வியர்வை யினால்‌ குளிக்கவேண்டிய அவசியம்‌ உண்டு. அங்குக்‌ குளிரினால்‌ அத்தகைய அவசியம்‌ இல்லை. அவ்வாறே இந்து மதத்தில்‌ எறும்பை மிதிதீதுவிட்டாலும்‌ பாவம்‌) அவன்‌ சங்கதியோ அதைப்பற்றிக்‌ கவலையே இல்லை. இங்கு நாம்‌ பசுவை அடித்தாலும்‌ மகா பாவம்‌ என்கிறோம்‌. அங்கு அவன்‌ அதைக்‌ கொன்று தின்னாவிடில்‌ வேறு மார்க்கம்‌ இல்லை. ஒருவன்‌ சிற்றப்பன்‌ மகளைக்‌ கட்டலாம்‌ என்கிறான்‌ ) மற்றவன்‌ அதைப்‌ பாவம்‌ என்கிறான்‌. இப்படி, சவுகரியதீதிற்கும்‌ பழக்கத்திற்கும்‌ ஏற்றவாறுதான்‌ கொள்கைகளும்‌, கோட்‌ பாடுகளும்‌ இருக்கக்‌ கூடும்‌. ஆதலால்‌, அனைத்தும்‌ கால தேச வர்தீதமானதீதிற்‌ கேற்றவாறு இருக்க வேண்டும்‌ என்பது நன்கு விளங்கும்‌. அன்றியும்‌, அந்த அந்தக்‌ காலதீதில்‌ திறமைக்கு ஏற்றவாறு ஏமாற்ற ஏதேதோ எழுதி வைத்திருக்கலாம்‌. அவற்றைக்‌ குறித்து இப்போது கவலை இல்லை. ஆனால்‌, நாம்‌ முகீகியமாய்க்‌ கவனிக்க வேண்டியது இன்றைய நிலைமையில்‌ எப்படி இருக்கவேண்டும்‌ என்பதேயாகும்‌. அதிலிருந்து தப்ப வழி உண்டா என்றும்‌ பார்கீகவேண்டும்‌. நாம்‌ நமது செல்வம்‌, அறிவு, ஒழுக்கம்‌ முதலியவை பிரயோஜனமான வழியில்‌ செலவிடப்பட வேண்டும்‌ என்பதனால்‌, அது தர்மத்திற்கு விரோதமானது என்று சொல்லிட முடியாது: இப்பொழுது நாம்‌ இருக்கும்‌ நிலையில்‌ தர்மத்தின்‌ பேரால்‌ சதீதிரமும்‌, சாவடிகளும்‌ கட்டிக்கொண்டு போவோமானால்‌ நம்‌ சமூகத்தின்‌ கதி என்ன ஆகும்‌ நமது நாட்டின்‌ நிலைமைக்கும்‌ மக்களின்‌ தேவைக்கும்‌ ஏற்றவாறுதான்‌ எந்தத்‌ தர்மமும்‌ ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌. இனி நமக்குப்‌ புதிதாகச்‌ சாமிகள்‌ வேண்டியதில்லை. இப்பொழுது நமது நாட்டில்‌ 22 கோடி இந்துக்கள்‌ இருக்கின்றார்கள்‌. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ கடவுள்‌ களோ புராணங்களின்‌ கணக்குப்படி 33 கோடி கடவுள்கள்‌ இருக்கின்றன. இதனைப்‌ பங்கிட்டால்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1093 ஒரு ஆசாமிக்கு ஒன்றரைக்‌ கடவுள்‌ வீதம்‌ வரும்‌, உலகிலே மதங்களைவிட கடவுள்கள்தாம்‌ அதிகமாய்‌ இருக்கின்‌றன, இவ்வளவு கடவுள்களை நாம்‌ காப்பாற்றினால்‌ போதும்‌ | நாட்டின்‌ பெருமையை வளர்க்க, மக்கள்‌ கஷ்டத்தைப்‌ போக்க, அறிவை வளர்க்க கல்வி அத்தியாவசியம்‌. அவர்கள்‌ சுயமரியாதையுடனும்‌ சுகமாயும்‌ வாழ்வதற்குதி தொழில்‌ அபிவிருத்தி அவசியம்‌. எந்தத்‌ தேசத்திலும்‌ இவை இரண்டும்‌ இன்றியமையாத அவசிய மான அம்சங்கள்‌. நம்‌ நாட்டிலோ நூற்றுக்கு 93 பேர்‌ படிப்பில்லாத தற்குறிகளாய்‌ இருக்கிறார்கள்‌. இதைவிட அவமானமான காரியம்‌ ஒரு தேசத்திற்கு வேறு என்ன இருக்கிறது8 அதுபோலவே சாப்பாட்டு கு& கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்குப்‌ பிழைப்புக்‌ காகத்‌ துறைமுகங்கன்தோறும்‌, கப்பல்கள்‌தோறும்‌ ஆயிரக்கணக்கான ஜனங்கள்‌ பெண்டு பிள்ளைகளுடன்‌ ஏற்றுமதி செய்யப்படுவதான கோரக்‌ காட்சியைத்‌ துறைமுகங்களுக்குச்‌ சென்று பார்தீதால்‌ தெரியும்‌. இவ்வாறு பிழைப்பின்றியும்‌ சாப்பாட்டுக்கு வகை இன்றியும்‌ கடல்‌ கடந்து ஜீவிக்கச்‌ செல்லும்‌ ஏழை மக்கள்‌ தொகைகளை, இச்‌ சென்னை மாகாணத்தில்‌ மட்டும்‌ (1949ஆம்‌ ஆண்டு) மாதம்‌ ஒன்றுக்கு இலட்சதீதுக்கு அதிகமாகக்‌ காணலாம்‌, இவர்கள்‌ குழந்தை குட்டிகளுடனும்‌, வயோதிகர்களுடனும்‌, கர்ப்பிணிகளுடனும்‌ செல்வ தான பரிதாபத்தை என்னவென்று சொல்வது! இங்குள்ள கஷ்டதீதைவிட அங்கு போய்சி சாகலாம்‌ என்றுதான்‌ மனம்‌ முறிந்து போகிறார்கள்‌. இக்‌ கொடுமைகளைக்‌ கவனித்துப்‌ பரிகாரம்‌ தேடப்படுவதில்லை. இதீதகைய நாட்டில்‌ நடக்கும்‌ விஷயங்களே விபரீ தமாகதீ தான்‌ இருக்கின்‌ றன. இங்கு சரமிகளுக்கும்‌, சடங்குகளுக்கும்‌, உற்சவ வேடிக்கைகளுகீகும்‌, சதிர்‌ ஆட்டங்‌ களுக்கும்‌ இலட்சக்கணக்காகதீதான்‌ செலவிடப்படுகின்றது. திருப்பதி போன்ற தேவஸ்‌: தானங்களுக்கும்‌, முக்கியமான மடங்களுகீகும்‌ சுமார்‌ 20 இலட்சதீதிற்கும்‌ அதிகமாக மாதா மாதம்‌ வருமானம்‌ கிடைக்கிறது. ஒரு சாமிக்கு ஒரு வேளைச்‌ சாப்பாடாகிய ஒரு சட்டி அரணைப்‌ பூசைகீகுச்‌ சுமார்‌ 20 ரூபாய்க்கு அதிகம்‌ செலவிடப்படுகிறது. இவ்வாறு இருக்க அச்‌ சாமியின்‌ பிள்ளைகள்‌-சாமியே கதியென இருக்கும்‌ மக்கள்‌ கஞ்சிக்கு அலைந்து கொண்டு-பிழைக்க வழி இல்லாது ஆயிரக்கணக்காகக்‌ கப்பலேறி வெளிநாடு சென்று ஆன்‌ புறுகிறார்கள்‌. கிவை இரண்டினையும்‌ சேர்த்துப்‌ பார்த்தால்‌, அந்தச்‌ சாமிக்குதீதான்‌. அதிக அவமானம்‌ என்பது நன்கு விளங்கும்‌. அத்தகைய சாமிகளுக்கிருக்கும்‌ சொத்துக்‌ களுக்கும்‌, ஆடம்பரங்களுக்கும்‌, வாணவேடிக்கைகளுக்கும்‌, சதிர்க்‌ கச்சேரிகளுக்கும்‌ ஒரு விதமான அளவில்லை. இராஜாவுக்குக்கூட அவ்வளவு ஆடம்பரம்‌ இல்லை. இராஜா வாயினும்‌--கொடுங்கோன்மையினால்‌, அந்த சுகங்களை ஜனங்கள்‌ படும்‌ கஷ்டத்தைப்‌ பாராமல்‌ அனுபவிக்கிறான்‌ என்று சொல்லலாம்‌. ஆனால்‌, கருணை வள்ளல்‌ என்ற கடவுன்‌ இப்படி வீணாக்குவதற்கு இடம்‌ கொடுத்துக்‌ கொண்டிருக்கலாமா ? சாமிக்கு இன்றைக்கு யாராவது தங்கக்‌ காரைக்‌ போட்டால்‌, பேசாமல்‌ போட்டுக்‌ கொள்கிறது. யாராவது கழற்றிக்கொண்டு போனாலும்‌ கல்‌லுபோல்‌ பேசாமல்‌ சும்மா இருக்‌ கிறது ! சமீபத்தில்‌ ஆண்டான்‌ தாலியையும்‌ யாரோ கழற்றிக்‌ கொண்டு போய்விட்டதாயும்‌ பத்திரிகையில்‌ வாசிதீதிருப்பீர்கள்‌. ஏன்‌ இந்த நாட்டில்‌ நூற்றுக்கு 93 வீதமானவர்கள்‌. தற்குறிகளாய்‌ இருக்கவேண்டும்‌ | இதற்கும்‌ வறுமைக்கும்‌ காரணம்‌ என்ன ₹ ஆனால்‌, நான்‌: உங்களைச்‌ சந்தோஷப்படுத்த ஒரு வார்த்தையில்‌ பதில்‌ சொல்லிவிடலாம்‌ வெள்ளைக்கார நீச அரசாங்கத்தார்‌ நம்‌ பணத்தைக்‌ கொள்ளையிட்டுப்‌ போனதாகக்‌ கூச்சலிடுகின் றார்கள்‌. அந்த நீச அரசாங்கத்தால்தான்‌ ¢ சரஸ்வதியும்‌ நம்‌ நாட்டைவிட்டு ஓடி விட்டான்‌ ? என்‌: கின்றனர்‌; மற்றும்‌ சிலர்‌. ஆனால்‌, நம்‌ நாட்டைவிட்டு ஓடிய சரஸ்வதி அந்த நீச நாட்டுக்குதீ தான்‌ போய்ச்சேர்ந்திருக்கிறாள்‌. வெள்ளைக்காரன்‌ கொள்ளையிட்டுப்‌ போவதையும்‌, சாமிகளுகீகும்‌ சடங்குகளுக்கும்‌ செலவிடுவதையும்‌ கணக்குப்‌ பார்‌ தீதால்‌, சாமிகளுக்குச்‌ செலவான துதான்‌ பன்மடங்கு அதிகமிருக்கும்‌. சாமிகள்‌, மதம்‌, சடங்குகள்‌ முதலியவற்றின்‌ பெயரால்‌ செலவாகும்‌ பணமும்‌, கஷ்ட நஷ்டமும்‌, அசவுகரியங்களும்‌ கணக்கிடமுடியாது. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1094 பெரியார்‌ ஈ, வெ. ரா; சிந்தனைகள்‌ பணம்‌ சம்பாதிப்பதில்‌ எத்தனையோ தந்திரமும்‌ சூழ்சீசியும்‌ செய்யும்‌ அறிவாளி களுங்கூட இவ்வாறு செலவிடுவதில்‌, அந்ததீ தந்திரம்‌ ஒன்றும்‌ இல்லாமல்‌ முட்டாள்களாகத்‌ தான்‌ நடந்துகொள்கின்றனர்‌. அபிஷேகதீதில்‌ ரூபாய்‌ 150 கொடுத்தால்‌ என்ன; 10 ரூபாய்‌ கொடுத்தால்‌ என்ன! வித்தியாசம்‌ என்னவென்று யாராவது சிந்திப்பது உண்டா? சென்னை சர்க்காரின்‌ கணக்குப்படி சாமிக்கு வருமானம்‌ (1949) 2 கோடிக்கு அதிகமாகிறது. இது தவிர, கணக்கில்‌ வராத கொள்ளைகளும்‌, போக்குவரதீகு, தரகர்‌ செலவும்‌, சொல்ல வேண்டியதில்லை. கணக்குப்‌ பார்த்தால்‌ சாமிகளுக்கு நாம்‌ கொடுப்பது சர்க்கார்‌ வருமான வரியைவிட அதிகமேயன்றி ஒருவிதத்திலும்‌ குறையாது. * தர்மம்‌ என்றால்‌ சாப்பாடு போடுவ.துதானா ¥ என்று கேட்டால்‌, * அப்படிக்‌ கேட்பது பாவம்‌? என்ற தர்ம முறை தான்‌ நமச்குக்‌ கற்பிக்கப்படுகிறது. இத்தகைய வீணுக்குச்‌ செலவாகும்‌ பணம்‌ மூன்று ஜில்லாவுக்குச்‌ சாப்பாட்டுடன்‌ கல்வி போதிக்கப்‌ போதுமானதாகும்‌. இந்த மாதிரி சுமார்‌. 25 வருடங்களுக்கு நம்‌ சுவாமிகள்‌ சிறிது வயிற்றை இழுத்துக்‌ கட்டிக்கொண்டு சும்மா இருந்தால்‌, பிறகு நம்நாட்டில்‌ ஒருவன்கூட மருந்துக்கும்‌ தற்குறியாய்‌ இருக்கக்‌ காண முடியாது என்பது திண்ணம்‌. உள்ளது உள்ளபடி உண்மையைச்‌ சொன்னால்‌, ¢ அவன்‌ தப்பு சொன்னான்‌ ] இவன்‌ நாதீதிகம்‌ பேச்சுப்‌ பேசுகிறான்‌ * என்று வீண்‌ கூச்சலிடும்‌ கூட்டதீதாருக்குக்‌ குறைவில்லை. மேடைமீதேறி வெள்ளைக்காரர்களை தீ குரதீதிடு3வாம்‌ என்று பயமுறு தீதலாம்‌. மிரட்டி னாலும்‌ அர்தீதத்தோடல்லவா மிரட்டவேண்டும்‌? * ஜேபியில்‌ எலிக்குஞ்சு இருக்கிறது; எடுதீ.துவிட்டால்‌ செதி.அப்‌ போவாய்‌! என்றால்‌ எவன்‌ பயப்படுவான்‌ ! * எடுத்துவிடு! ஒரு கை பார்ப்போம்‌ ? என்‌.றுதான்‌ சொல்லுவான்‌. மார்க்கதீதுக்கும்‌ தகுந்த வழிக்கும்‌ நமது அறிவையும்‌, செல்வத்தையும்‌ செலவிடாமல்‌ நாம்‌ யாரையும்‌ வெல்லமூடியாது. ஒரு கூட்டத்தார்‌ நம்மைத்‌ தாழ்ந்த நிலையிலே அடக்கி வைத்துக்கொண்டு. இருக்க முயல்வது சரித்திர பூர்வமாய்‌ நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மத விஷயத்திலும்‌ மற்ற விஷயங்களிலும்‌. வெள்ளைக்காரன்‌ நம்மைவிடக்‌ சேவலமாக இருந்திருப்பதை அவர்கள்‌ தேச சரித்திரமே நன்கு விளக்குகின்றது. அங்கு இருந்த புரோகிதமும்‌, சாமிகளும்‌ இப்பொழுது எங்கு போயின ₹ எல்லாம்‌ இங்குவந்து சேர்ந்தன. அவர்கள்‌ எல்லாவற்றையும்‌ இங்கு மூட்டை கட்டி அனுப்பிச்‌ செலவுக்குப்‌ பணமும்‌ கொடுத்துவிட்டு, அங்கு விஞ்ஞான ஆராய்ச்சியில்‌ இறங்கி இருப்ப தால்‌, நாளுக்கு நான்‌ அந்‌ நாட்டார்‌ முன்னேற்றம்‌ அடைந்துவருகிறார்கள்‌. அவர்கள்‌ சாமிக்கு உற்சவம்‌ இல்லை; தேர்‌ இல்லை) திருவிழா இல்லை. அப்படி இருந்தும்‌ அந்தச்‌ சாமி அவர்கள்‌ பல அற்புதங்கள்‌ கண்டுபிடிக்க வழியாய்‌ இருக்க, நம்‌ சாமிகளுக்கு இலட்சக்கணக்கான பணம்‌ செலவிட்டு, தேர்தீ திருவிழா நடத்தியும்‌ நாம்‌ இந்தக்‌ கதியில்‌ இருக்கிறோம்‌. நம்‌ நாட்டுப்‌ பொருள்கள்‌ வெளிநாட்டிற்குப்‌ போகின்றன என்று கூசீசலிடுவதனால்‌ பயன்‌ என்ன ₹ கடுகளவாவது நாம்‌ முன்னேற முயற்சி செய்வதில்லை, அண்மையில்‌ ரஷ்யாவில்‌ செத்தவர்களைப்‌ பிழைக்கவைக்கும்‌ நாதன முறையை ஒருவர்‌ கண்டு பிடித்த தாகப்‌ பத்திரிகையில்‌ படித்து இருப்பீர்கள்‌. இத்தனைக்கும்‌ அது நாத்திகம்‌ நிறைந்த நாடு. நாதீதிகருக்கு நரகம்‌ வேண்டுமானால்‌ ரஷ்யாவில்‌ இருப்பவர்களுக்கே இருப்பிடம்‌ சரியாய்ப்‌ போய்விடும்‌. ஆதலால்‌, வேறு எந்த நாத்திகர்களுக்கும்‌ நரகதீதில்‌ இடமிரா அ. அவ்‌ வளவு நாதீதிகமாய்‌ இருக்கும்‌ ஊரில்‌ செதீதவனைப்‌ பிழைக்கவைதீது, சாமியோடுபோட்டி போடுகிறார்கள்‌. வெள்ளைக்காரன்‌ நாட்டில்‌ சாமிக்கு முக்கால்‌ துட்டுகூட செலவு இல்லை. முஸ்லிமும்‌ அப்படித்தான்‌. வெள்ளைக்காரன்‌ கோயிலுக்குப்‌ போனால்‌ துணி அழுக்கை வெளுப்பதற்குச்‌ செலவிடுவதைவிட வேறு செலவு இல்லை. விவசாயத்திலும்‌ அவர்கள்‌. எந்தப்‌ பழதீதை-எந்த நிறதீ.துடன்‌-எந்தச்‌ சுவையில்‌ பயிரிடவேண்டும்‌ என்று ஆராய்ச்சி செய்து, அதற்குத்‌ திராவகங்கள்‌ ஊற்றிப்‌ பயிரிட்டு வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்‌. நாம்‌ உழவுகட்ட வேண்டுமானாலும்‌ பார்ப்பனைக்‌ கூப்பிட்டு நல்ல வேளை: பார்‌ தீது, www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1095 அந்தந்த ஏருகீகும்‌ மாட்டுச்கும்‌ பூசைபோட்டு உழுவதனால்தான்‌ நாம்‌ இந்தக்‌ கதியில்‌ இருக்கின்றோம்‌. நமக்கு இவ்வளவு கோடி சாமிகளும்‌, இவ்வளவு பணச்‌ செலவுமிகுந்தும்‌ நாம்‌ கடுகளவாவது முன்னேறமுடியாமல்‌ இருக்கின்‌ றோம்‌. பூகோள சாஸ்திரம்‌ போதிக்கும்‌ ஆசிரியரின்‌ தகப்பனும்‌, கிரகணதீதன்று தர்ப்பையை எடுத்துக்கொண்டு சமுத்திரக்‌ கரைக்குத்‌ தர்ப்பணம்‌ செய்து வைக்க வந்து விடுகிறான்‌, இவன்‌ பேச்சைக்‌ கேட்டுக்‌ குளிக்கப்‌ போனால்‌ நம்மை முதலை இழுதீதுகீ கொண்டு போய்விடுகிறது. கிரகண ஸ்நானதீதிற்குப்‌ போவோம்‌ என்று சொல்லும்‌ எம்‌. ஏஃகீகளும்‌, பி. ஏ.க்களும்‌ இன்னுமில்லாமல்‌ போகவில்லை, இக்‌ காலதீதிலும்‌ சந்திர சூரியனை ராகு, கேது என்ற பாம்புகள்‌ விழுங்கும்‌ கதைகளும்‌, அதன்‌ மூலமான: புரட்டுகளும்‌, பணம்‌ பறிக்கும்‌ சூழ்ச்சிகளும்‌ ஒழிந்தபாடில்லை. தேச முன்னேற்றத்‌ திற்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, ஒழுக்கத்திற்கோ முட்டுக்கட்டையாய்‌ இருக்கும்‌ எவற்றையும்‌ ஒழிக்க முயலவேண்டும்‌. ௮ம்‌ மாதிரி செய்யும்‌ தேசமும்‌, மதமும்‌, சமூகமுந்‌ தான்‌ முன்னுக்கு வரும்‌, கிலாபதி மதப்பித்துப்‌ பிடித்து இருந்த அரக்கி, தற்போது அதனை இருந்த கிடம்‌ தெரியாமல்‌ மூட்டை கட்டி அனுப்பிவிட்டு, முன்னேற்றதீதுக்கு வழி தேடியதனால்தான்‌ தற்போது அய்ரேரப்பாவில்‌, மற்றைய நாடுகளைப்போல்‌ நல்ல நிலைமையை அடைந்துவருகிறது. நம்‌ மததீதில்‌ உள்ள அர்தீதமற்ற ததீ.துவங்களை ஒழித்து, பிறருக்கு எவ்விததீதில்‌ உபகாரமோ அதைச்செய்து, மக்களுக்குள்‌ சமதீதுவமும்‌, சகோதர தீ.துவமும்‌, சத்தியமும்‌, ஜீவகாருண்ணியமும்‌ பரவச்செய்வதற்கு வழிதேட வேண்டும்‌ என்றுதான்‌ நாம்‌ சொல்லு &3prd. வீண்‌ செலவிடும்‌ பணங்களை உண்மையாகக்‌ கஷ்டப்படுகிறவர்களுக்குக்‌ கொடுதீது உபகாரம்‌ செய்வதில்‌ செலவிடுங்கள்‌ என்றுதான்‌ சொல்கி3றாம்‌, பழைய குருட்டு நம்பிக்கைகளைத்‌ தம்‌ சூழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக்‌ கொண்டு சுகமாய்‌ இருந்த கூட்டத்தார்‌ இப்பொழுது கூலிகளையும்‌ குறும்புப்‌ பிரசார தீதில்‌ ஏவி விடுகின்றனர்‌. எந்தக்‌ காலத்திலும்‌ நன்மைக்கும்‌ பரோபகாரதீதிற்கும்‌ விரோதமாக நம்‌ . நாட்டில்‌ ஒரு கூட்டத்தார்‌ இருந்‌ திருப்பது சரித்திர மூலமாகவும்‌ நன்கு அறியப்படும்‌. அர்த்தமற்ற கொள்கைகளை ஒழித்து ஒழுக்கமே பிரதானம்‌ என்றும்‌ சீர்‌ திருத்தி, மற்றவனுக்கு உபகாரம்‌ செய்வதுதான்‌. * மோட்சம்‌ ? என்று புகட்டவேண்டுவது அவசியமாகும்‌. கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி அளித்துத்‌ திருப்தி செய்வதுதான்‌ மேலான * புண்ணியம்‌, இவற்றைச்‌ சொன்னால்‌ என்ன நாத்திகம்‌ வந்து விட்டது 8 வீணாக மக்களைக்‌ குழப்பி அவர்கள்‌ அறிவைக்‌ கட்டிப்‌ போட்டு, ¢ நான்‌ சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால்‌ பாவம்‌ ! என்று நான்‌ சொல்ல வில்லை. எதிலும்‌ உண்மையைக்‌ கண்டுபிடிக்க வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ நம்‌ நாடு முன்னேற்றமடையுமே யன்றி, ¢ என்னுடைய பாட்டன்‌, முப்பாட்டன்‌ போன வழியில்தான்‌ போகி$றன்‌ ! என்ற மூடக்கொள்கையினால்‌ நாடு நாளுக்கு நாள்‌ நாசமடைவது திண்ணம்‌, என்‌ புத்திக்கு எட்டியதை எடுதீதுக்‌ காட்டினேன்‌. அதில்‌ சரியானது எனத்‌ தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்‌ கொள்கி3றன்‌. நான்‌: சொல்லுவதில்‌ பிசகிருந்தால்‌ என்‌ அறியாமைக்குப்‌ பரிதாபப்படும்படியும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. [ குடிஅரசு ?-கட்டுரை--28-5-1949] 44. நான்‌? இப்பொழுது மனிதன்‌ தன்னை உணர்த்தும்‌ வகையில்‌ ¢ நான்‌? என்று சொல்லிக்‌ கொள்வது எது என்பதே இப்பொழுது விளக்கப்படவேண்டிய விஷயமாகும்‌. முன்பு ஆத்மா என்பதைப்பற்றி சொன்ன துபோலவேதான்‌ இப்பொழுது * நான்‌? என்பதைப்‌ பற்றியும்‌ சொல்லவேண்டி இருக்கிறது. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1096 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மனிதன்‌ தன்னை ¢ நான்‌ ? என்று சொல்லிக்கொள்வது எதனால்‌, அது எது என்னும்‌ ஆராய்சீசியான து, இந்துமதம்‌ என்பதின்‌ கடைசி--அதாவது வேதாந்த? ததீதுவமாகப்‌ பாவிக்கப்பட்டு, 6 அதைக்‌ கண்டுபிடிப்பதே? கடவுளைக்‌ கண்டுபிடிப்பதாகும்‌ என்று சொல்லப்பட்டு வருகின்றது. உதாரணமாக, ¢ தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனாவான்‌ ? என்றும்‌, ¢ தன்னைத்‌ தான்‌ அறிந்தால்‌ கடவுளை அறியவேண்டியதில்லை,” ¢ தன்னை அறிந்தவனே ஞானி? என்றெல்லாம்‌ சொல்லப்படுவதை நாம்‌ கேட்டிருக்கின்றோம்‌. ஆகவே, இந்தப்படி சொன்னவர்கள்‌ எல்லாம்‌ ஒரு மனிதன்‌ தன்னை நான்‌? என்று சொல்லிக்‌ கொள்கிறானே, அது எது என்று கண்டுபிடிக்கும்‌ விஷயத்தில்‌ ஏதோ ஒரு பெரிய கஷ்டம்‌ இருப்பதாக நினைத்தோ, அது சுலபத்தில்‌ மனதீதுக்கு எட்டாதது என்று கருதியோ இப்படிச்சொல்லி இருக்கக்கூடும்‌ என்பதாகவும்‌, மற்றும்‌ ¢ நான்‌? என்பதைக்‌ கண்டுபிடிக்க முயற்சி செய்து ஒருவன்‌ அதைக்‌ கண்டுபிடித்து விட்டானேயானால்‌, பிறகு அவன்‌ *ஞானி!யாகவும்‌, ¢ துறவியாகவும்‌ அல்லது கடவுளைப்பற்றிக்‌ கவலைப்பட வேண்டியவனல்லாத-இலட்சியம்‌ செய்யப்பட வேண்டியவனல்லாத ¢ நாத்திகனாகவும்‌ ? ஆகி விடக்கூடும்‌ என்று கருதிச்‌ சொன்னதாகவும்‌ இருக்கக்கூடும்‌ என்பதாகவும்‌ முடிவுசெய்து கொள்ள வேண்டியிருக்கின்றது. எப்படி இருந்தாலும்‌, ஒரு மனிதன்‌, தான்‌ யார்‌? தனகீகுன்‌ இருக்கும்‌ ¢ நான்‌ 2 *என்‌? என்று வரும்‌ உணர்ச்சி எது$ அது எப்படி உண்டாகின்றது? எ.துவரையில்‌ அவ்‌ வுணர்சீசி இருக்கின்றது? என்பதான உண்மையை உணர்ந்தால்‌, அவன்‌ நாதீதிக அபிப்‌ பிராயதீதை-அதாவது ஆதீமாவேோ கடவுளோ இருக்கின்றது என்பதை நம்பாத கொள்கையையே கொள்ளவேண்டியவனாகி விடுவான்‌ என்று சொல்லப்படுவதில்‌ உண்மை உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகின்றோம்‌. உலகத்தில்‌ பெயரும்‌ உருவமும்‌ உள்ள பொருள்கள்‌ எல்லாம்‌ ஒருவித சேர்க்கையால்‌ அதாவது பல கூட்டுப்‌ பொருள்களால்‌ சேர்ந்து இருக்கும்‌ வடிவத்தையே பெரிதும்‌ உணர்தீ.துவதாகும்‌. ஏனெனில்‌, உலகதீதில்‌ உள்ள எந்தப்‌ பெயருக்கும்‌ மாறுதலையடையாத ஒரு தனி வஸ்து என்பது கிடையவே கிடையாது. ஏனெனில்‌, எந்தப்‌ பெயரும்‌ ஒரு தோற்றத்திற்கு, உபயோகிக்கப்பட்டு அல்லது ஒரு உருவத்திற்கு அல்லது ஒரு வடிவத்திற்குத்தான்‌. சொல்லப்பட்டு வருகின்றதே அல்லாமல்‌ வஸ்துவுக்குப்‌ பெயர்‌ சொல்லப்படுவதில்லை என்பதேயாகும்‌. உதாரணமாக, நாம்‌ ஏதாவது ஒரு வஸ்து என்பதை எடுத்துக்கொண்டு அதற்குப்‌ பெயர்‌ என்ன என்று ஒரு மனிதனைக்‌ கேட்டு, அவன்‌ சொன்ன பெயரையே திருப்பிச்‌ சொல்லி, அந்தப்‌ பெயருக்குண்டான வஸ்‌ துவைதீ தொட்டுக்‌ காட்டும்படி அம்‌ மனிதனையே கேட்டால்‌, அந்த மனிதன்‌ தொட்டுக்காட்டும்‌ பாகத்தில்‌ இருக்கும்‌ வஸ்துவானது அந்தப்‌ பெயரை---அதாவது அவன்‌ முன்சொன்ன பெயரை உடையதாக அது காணப்படாததை நாம்‌ நன்றாய்ப்‌ பார்கீகலாம்‌, அதாவது, ஒரு லாந்தர்‌, ஒரு மேசை, ஒரு கடிகாரம்‌, ஒரு புதீதகம்‌ என்பது போன்ற பெயர்களை உடைய வஸ்துக்கள்‌ என்பவைகளில்‌ ஏதாவது ஒன்றை எடுத்‌. துக்கொண்டு அவற்றின்‌ பெயர்‌ என்ன என்று கேட்டால்‌ முறையே முன்சொன்ன பெயர்களைதீதான்‌ சொல்வான்‌. ஆனால்‌, ஒரு லாந்தர்‌ என்பது எது என்று தொட்டுக்காட்டச்‌ சொன்னால்‌ லாந்தர்‌ என்பதில்‌ அவன்‌ தொட்டுக்காட்டிய பாகம்‌ ஒரு சிம்ணியையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோதான்‌ தொட்டுக்‌ காட்டப்பட்டதாய்‌ இருக்கும்‌. அதுபோலவே, ஒரு மேசையைத்‌ தொட்டுக்‌ காட்டச்‌ சொன்னால்‌ தொட்டுக்‌ காட்டியபாகம்‌ ஒரு பலகையோ; www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1097 அல்லது கர்லையேோ, ஆணியையோ, குமிழையோ, கைப்பிடியையோதான்‌ தொட்டுக்‌ காட்டியதாய்க்‌ காணப்படும்‌. இப்படியேதான்‌ ஒரு கடிகாரம்‌, புதீதகம்‌ ஆகிய பொருள்‌ களிலும்‌ ஒரு பாகதீதையே தொடருடியும்‌. இப்படியே மற்றும்‌ அதன்‌ உட்பிரிவுப்‌ பெயர்களும்‌--அதாவது மேல்‌ சொல்லப்பட்ட பெயர்களும்‌ சரியானபடி தொட்டுக்‌ காட்டப்பட்டதாகவும்‌ இருக்கமுடியாது. ஏனெனில்‌, அவன்‌ லாந்தர்‌ என்பதாகக்‌ காட்டியது கம்பி என்பதானாலும்‌, கம்பி என்பதாக ஒன்றைத்‌ தொட்டுக்காட்டியதாக இல்லாமல்‌, இரும்பைத்‌ தொட்டுக்‌ காட்டியதாகதீதான்‌ காணப்படும்‌. இரும்பு என்பதைக்‌ காட்டும்போது ஏதோ ஒரு வகையான மண்ணின்‌ சேர்க்கையைக்‌ காட்டியதாகதீதான்‌ காணப்படும்‌. இப்படியே நமகீகுக்‌ காணப்படும்‌ வஸ்துக்கள்‌ எல்லாம்‌ ஏதோ ஒரு ரூபமாத்திரதீதிற்கு--ஒரு உருவத்திற்கு--ஒரு மாதிரியான தோற்றதீதிற்கு அந்தப்‌ பெயர்‌ சொல்லப்படுவதாகக்‌ காணப்படுமே அன்றி, அந்தப்‌ பெயருக்கு அந்த வஸ்து கட்டுப்பட்டு, அந்த வஸ்துக்கள்‌ வேறு எந்த ரூபத்தை அடைந்தாலும்‌, வேறு எந்தக்‌ குணத்தை அடைந்தாலும்‌, அந்தப்‌ பெயரையே உடையதாகக்‌ காணும்படியான ஒரு வஸ்துவும்‌ காணப்படமுடியாது என்பது இவற்றிலிருந்து நன்றாய்‌ உணரக்‌ கிடக்கின்றது. ஆகவே லாந்தர்‌, மேசை, கடிகாரம்‌, புத்தகம்‌ என்றதும்‌ ஒருவித வடிவத்தில்‌ காணப்‌ படும்‌ ஒரு தோற்றத்தின்‌ பெயரே தவிர ஒரு வஸ்‌.துவின்‌ பெயர்‌ அல்ல என்பதும்‌ இதனால்‌ உணரதீதகீகதாகும்‌. எப்படியெனில்‌, மேசை, நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல்‌ என்று சொல்லப்படுவதான. வஸ்துக்கள்‌ மரம்‌ என்னும்‌ ஒரே மூலப்பொருளாலும்‌, இரும்பு என்னும்‌ ஒர உபமூலப்‌ பொருளாலும்‌ செய்யப்பட்டிருந்தாலும்‌--தனித்தனி வடிவத்‌ தோற்றதீதினால்‌ தனித்தனி பெயரை உடையதாகி இருப்பதுபோலவே, உலக வஸ்துக்கள்‌ வடிவம்‌, உருவம்‌, சாயல்‌, குணம்‌, நிலை முதலாகிய பேதத்தால்‌ பலவிதப்‌ பெயர்களை உடையதாக இருந்து பலப்பல: காரணங்களால்‌ அதே வஸ்துக்கள்‌ வேறுபல பெயர்களையும்‌ அடைந்தாலும்‌ முடிவில்‌ அவற்றின்‌ மூலப்பொருள்களின்‌ பெயர்‌ எல்லாவற்றிற்கும்‌ ஒரே (தாது) பெயருடைய வஸ்து வரகவேதான்‌ இருக்கும்‌ | இதுபோலவேதான்‌, ஜீவன்கள்‌ என்கின்ற உயிர்‌?ப்பிராணிகன்‌ எல்லாம்கூட உருவதீி தில்‌, தோற்றத்தில்‌ வேறுவேறு வகையாய்‌--பெயராய்ச்‌ சொல்லப்பட்டாலும்‌ அவற்றின்‌ மூலப்‌ பொருள்களும்‌ ஒன்றேயாகும்‌. அதாவது, மரதீதையே மூலப்பொருளாய்க கொண்ட மேசை நாற்காலி, பெஞ்சு முதலிய பல பெயர்களுக்கு உருவம்‌, தோற்றம்‌ ஆகியவைகளே காரணமாய்‌ இருப்பது போல, அணுக்‌ கிருமி, பூச்சி; புழு, பட்சி, மிகுகம்‌, குரங்கு, மனிதன்‌ முதலாகிய பல ஜநீ.துக்களுக்கும்‌ உருவம்‌, தோற்றம்‌, குணம்‌ முதலிய காரணமாய்ப்‌ பல பெயர்கள்‌ சொல்லப்பட்டாலும்‌, தொட்டுக்காட்டும்‌ பாகங்களானவை எல்லா ஜீவ வர்க்கதீ திற்கும்‌ ஒரே மாதிரியான, ஒரே பெயர்‌ கொண்டதான மூலப்பொருளாகதீதான்‌ இருக்கும்‌. ஆகவே, ஜீவ வர்க்கங்கள்‌ என்பனவாகிய சகல ஜீவப்பிராணிகளும்‌ சாயல்‌, உருவம்‌, தோற்றம்‌, குணம்‌ முதலியவை தவிர அவற்றின்‌ மூலப்பொருள்களும்‌, ததீ.துவமும்‌ ஒன்றே யாகும்‌. எனவே, எதீதனையோ கோடிவித ஜீவப்பிராணிகள்‌ என்பதில்‌ மனிதன்‌ என்பதும்‌ ஒருவிதமான தோற்றமுடைய உருவத்திற்குச்‌ சொல்லப்படும்‌ பெயரேயொழிய-மனிதன்‌ என்கின்ற ஒரு ததீ.துவத்‌ தனிப்பொருள்‌ இல்லை என்பதை கிதனால்‌ ஒருவாறு உணரலரம்‌. ஏனெனில்‌, மனிதன்‌ என்று குறிப்பிடுவதற்குத்‌ தொட்டுக்காட்டக்கூடிய ஒரு வஸ்து மனித சரீரத்தின்‌ எந்.ப்‌ பாகத்திலும்‌ கிடையாது என்பதாலேயேயாகும்‌. உதாரணமாக; ஒரு மனித உருவத்தைக்‌ காட்டி அவனை மற்ற ஒரு மனிதனைத்‌ தொட்டுக்காட்டச்‌ சொன்னால்‌ அவன்‌ ஒரு மனிதன்‌ என்பவனின்‌ சரீரம்‌ என்பதில்‌ ஏதாவது ஓர்‌ அவயவதீதைதீதான்‌ தொட்டுக்காட்டுவான்‌. அந்த அவயவதீதிற்கு ஏற்கனவே பெயர்‌ கை, கால்‌, வயிறு, மார்பு; 1686—138 www.thamizham.net - Free E book No 3031 1098 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ முதுகு, தோள்‌ என்பவை முதலாகிய ஏதாவது ஒரு பெயரையுடைய அவயவமாகதீதான்‌ இருக்கமுடியும்‌, அந்தப்‌ பெயருக்குடைய அவயவ வஸ்துவையும்‌ கவனித்துப்‌ பார்க்க ஆரம்பித்தால்‌ அது தசை, தோல்‌ முதலாகிய பெயர்ீகளையுடைய பொருளாகதீதான்‌ காணப்‌. படும்‌. இப்படி எல்லாம்‌ இருந்தாலும்கூட, அப்படிக்‌ காட்டப்பட்ட மனிதனும்‌ இயங்குதல்‌-- அதாவது; அசைகின்ற சக்தி இருக்கும்போதுதான்‌ அந்தத்‌ தோற்றத்திற்கு மனிதன்‌. என்கின்ற பெயரையுடையதாகவும்‌--அதாவது, அசைகின்ற சகீதி இல்லாது போய்விட்டால்‌ மனிதன்‌ என்ற பெயரையுடைய அதேதோற்றம்‌ பிணம்‌ என்னும்‌ பெயரையுடையதாகவும்‌ ஆகிறது. அன்றியும்‌, மனிதன்‌ அசையும்‌ சகீதியை உடைதீதாயிருக்கும்வரை அந்த சரீரதீதில்‌ எந்தப்பாகம்‌--அதாவது முன்சொல்லப்பட்ட அவயவங்களாகிய கண்‌; காது; வாய்‌, கால்‌, கை முதலாகிய எந்தப்‌ பாகம்‌ போய்விட்டபோதிலும்‌ மனிதன்‌ என்றே சொல்லப்படுகின்றது. எனவே; அசையும்‌ சக்தி உள்ள ஒருவிதத்‌ தோற்ற உருவிற்குதீதான்‌ இங்கு மனிதன்‌. என்று சொல்லப்படுவதாய்‌ வருந்து வருவதைப்‌ பார்க்கின்றோம்‌. இந்தப்படியான மனிதன்‌ அசையும்‌ சக்தியையுடைதீதாய்‌ இருக்கும்வரை தான்‌; அவனுக்குள்‌ உயிரோ, ஜீவனோ, ஆத்மாவோ ஒன்று இருக்கின்றது என்று கருதுகின்றார்களே ஒழிய வேறில்லை. இந்த அசையும்‌ சகீதியிருக்கின்ற ஜீவன்கள்‌ எல்லாவற்றிற்குமேதான்‌ ¢ ஆத்மா? என்பதாக ஒன்று இருக்கின்றது என்பது ஆதீமவாதிகளின்‌ கொள்கையாகும்‌. அதாவது, சரீரத்தில்‌ இருந்து ஆத்மா பிரிந்துவிட்டால்‌ அசைவு நின்றது விடும்‌ 1) அதாவது, மனிதன்‌ செத்துப்போவான்‌ என்று சொல்லுவார்கள்‌. எப்படி இருந்தாலும்‌, * சரீரத்திற்கு அசையும்‌ சக்தியைக்‌ கொடுப்பதுதான்‌ ஆத்மா? என்பது ஆதீமவாதிகன்‌ கொள்கை என்பதும்‌ இதனால்‌ புலப்படும்‌. ஆகவே, இந்த அசையும்‌ சகீதி சரீரதீதுக்கு எப்படி உண்டாகின்றது? இது எப்படி நின்று போகின்றது ₹ என்பதைச்‌ சரிவர உணர்ந்தோமானால்‌ ஆத்மாவின்‌ யோக்கியதை இன்னதென்று ஒருவாறு விளங்கிவிடும்‌. இதற்குமுன்‌ ஆதீமாவைப்‌ பற்றிச்‌ சில கேள்விகள்‌ எழுகின்றன. அதாவது, சரீரத்திற்குள்‌ ஆத்மா எப்படி வந்தது! ஏன்‌ வந்தது 8 சரீரத்தை விட்டுவிட்டு ஆத்மா எப்படி வெளியேறுகின்றது ? அது ஏன்‌ வெளியேறிவிடுகின்றது 8 எந்த மாதிரி ஆத்மா மனித சரீரதீதிற்குன்‌ வருகின்றது எந்த மாதிரி ஆதீமா--கமுதை முதலிய மிருக சரீரதீதிற்குள்‌ வருகின்றது 8 எந்த மாதிரி ஆத்மா அணுக்‌ கிருமி முதலிய சரீரதீதிற்குள்‌ நுழைகின்றது 2 ஜீவன்களின்‌ அசைவு, பலம்‌, குணம்‌ முதலிய பலவித மாறுதலான நடவடிக்கைகளுக்கு ஆதீமா காரணமா ₹ அல்லது, அதனதன்‌ சரீர அமைப்பு காரணமா ₹--என்பன போன்ற கேள்விகள்‌ எழுகின்றன. இவை ஒருபுறம்‌ நிற்க, கினி எடுதீதுக்கொண்ட விஷயமாகிய * நான்‌ ? என்பதைப்பற்றிப்‌ கவனிப்போம்‌. ஒரு மனிதன்‌ தான்‌ ¢ நான்‌ ? என்று சொல்லுவது அந்த மனிதனுக்குள்‌ இருக்கும்‌ அசையும்‌ சகீதியாகிய ¢ ஆதீமா ? என்பதா ¥ அல்லது வேறு பொருளா? என்று பார்ப்பதனால்‌ அது வேறு பொருளா அல்லவா என்பதைக்‌ கண்டுபிடிப்பதற்கு முன்னாலேயே ஆதீமா என்பது ¢ நான்‌? என்று சொல்வதல்ல என்பதானது சீக்கிரத்தில்‌ கண்டுபிடிக்கக்‌ கூடியதாக இருக்கின்றது. எப்படியெனில்‌, ஒரு மனிதன்‌ பேசும்போது, * என்‌ ஆதீமா? என்றும்‌, ¢ நான்‌ என்‌ ஆத்மாவை விடமாட்டேன்‌ ? என்றும்‌, இந்தமாதிரி ¢ நான்‌? * என்‌? என்பது வேறு என்றும்‌, ¢ ஆதீமா? என்பது வேறு என்றும்‌, பிரித்துப்‌ பேசுவதையும்‌, பேசும்படி இருப்பதையும்‌ பார்க்கின்றோம்‌. ஆகவே, சரீரதீதின்‌ அசையும்‌ சகீதி *ஆதீமா ? என்றால்‌, இந்த ¢ நான்‌? என்பது அதைவிட்டு வேறுபட்ட மற்றொரு விஷயமாக இருக்கும்‌ என்று: கருதவேண்டியதாக இருக்கின்‌ றது என்பது இதனால்‌ ஒருவரறு புலப்படும்‌. www.thamizham.net - Free £ book No 3031 ததீ.துவம்‌. 1099 ஆனால்‌, ஒரு மனித சரீரத்தில்‌ ¢ ஆத்மா? என்பதாக ஒரு வஸ்‌துவும்‌, * உயிர்‌ 9 என்பதாக ஒரு வஸ்துவும்‌ ¢ நான்‌? என்பதான தன்மையை உணர்தீத ஒரு வஸ்‌.துவும்‌ ஆக மூன்று வஸ்துக்கள்‌ இருக்கும்‌ என்று நினைப்பது சரியான நினைப்பாகாது என்பதோடு அப்படி நினைத்தாலும்‌ அவைகளில்‌ எது மனிதனை நடத்துகின்றது அல்லதுமனிதனுடைய நடத்தைக்கு ஐவாப்தாரிதீதனமுடையது என்னும்‌ விஷயம்‌ மயக்கத்தையும்‌ முரண்களையும்‌ விளைவிக்கக்‌ கூடியதாகிவிடும்‌. ஆதலால்‌, ¢ நான்‌? என்று சொல்லப்படுவதும்‌, எண்ணப்‌ படுவதும்‌ தனிப்பட்ட ஒரு வஸ்‌.துவல்ல என்றுதான்‌ எண்ண வேண்டியிருக்கின்றது. மற்றபடி பின்னே அது என்னமாய்தீதான்‌ இருக்கக்கூடும்‌ ? என்ற கேள்விக்கு நமது அபிப்பிராயதீதைதீ தெரிவிக்கின்றோம்‌. அது பிசகாய்‌ இருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, அந்தப்‌ பிசகானது ஆதீமா, ஜீவாத்மா, பரமாதீமா என்று பிரித்துச்‌ சொல்லுகின்றது போன்ற அவ்வளவு பெரிய பிசகாகவும்‌, ஆதீமாவுக்குக்‌ குணங்கள்‌ கற்பிக்கின்ற அளவு பிசகாகவும்‌ இருக்காது என்பது மாதீதிரம்‌ உறுதி. திருத்துவதற்கு யாவருக்கும்‌ உரிமை கொடுத்தே நமது அபிப்பிராயத்‌ தைத்‌ தெரிவிக்கின்றோமேயொழிய, இதுவே சரியான அபிப்பிராயம்‌ என்பதாக நாம்‌ ஒன்றும்‌ கிவ்‌ விஷயத்தில்‌ சொல்ல வரவில்லை. ஆகவே, ¢ ஆதீமா என்பதாகத்‌ தனித்துப்‌ பிரித்து உணர்தீதக்கூடிய வஸ்து ஒன்று இல்லை ? என்றே சொல்லுகிறோம்‌. [8 குடி அரசு -கட்டுரை--17-5-1931] 315. ஆத்திகம்‌--நாத்திகம்‌ பெரியோர்களே | இளைஞர்களே | ஆதீதிக-நாதீதிகத்தைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகையில்‌ இது ஒரு பயனற்ற விஷயம்‌ என்றே தெரிகிறது. ஏனெனில்‌, ஆதீதிகமும்‌ நாதீதிகமும்‌ 100-க்கு 90 பேர்களின்‌ அபிப்‌ பிராயங்கள்‌, பழக்க வழகீகங்களால்‌, பிறர்‌ சொல்லிக்கொடுப்பதால்‌, சேர்க்கையால்‌ ஏற்படுவதே ஒழிய, ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல, அன்றியும்‌ பசி, தூக்கம்‌, பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப்போல்‌ இயற்கையால்‌ ஏற்படும்‌ எண்ணமல்ல. அதைப்பற்றி மனிதன்‌ கவலைப்படவேண்டியதேயில்லை$] அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி நாகரிக விஷயமாகவும்‌ பேசப்பட்டு வருகின்றது. மனிதனுக்குக்‌ கட்டும்‌, காவலும்‌, சட்டமும்‌, போலீசுமாகதீதான்‌ இருக்கின்‌றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக்‌ கரப்பாற்றிவிடவில்லை) அனுபவத்திலும்‌ எவனும்‌ அவற்றின்மீது எவ்வித பொறுப்பையும்‌ சுமதீதுவதுமில்லை. ஆதலால்‌, ஆதீதிக-நாதீதிகம்‌ என்பது ஒரு பயனற்ற பிரச்சினையாகும்‌, மற்றும்‌, அது அவனுடைய சொந்த புதீதி, யோசனையைப்‌ பொறுத்ததாரும்‌. ஆதலால்‌ நமது வாழ்வில்‌ ஏற்படவேண்டிய இன்ப- துன்பங்களுக்கும்‌, முறி போக்குக்கும்‌, மாறுதலுகீகும்‌ ஆத்திக-நாதீதிகத்தைக்‌ கொண்டுவந்து குறுக்கே போட்டுக்‌ கொண்டு யாரும்‌ கஷ்டப்படவேண்டியதில்லை. நம்மைப்‌ பொறுதீதவரை எந்த அளவில்‌ ஆதீதிகதீதில்‌ பிரவேசிக்கின்றோம்‌ என்று தினைப்பீர்களானால்‌ வாழ்க்கையின்‌ நலன்களைக்‌ கடவுளின்மிது பொறுப்பேற்றுவதும்‌, கடவுளுக்காகச்‌ செல்வங்களை, மக்களின்‌ வாழ்க்கைக்குரிய பொருள்களைப்‌ பாழாக்கு: வதையும்‌ பொறுத்த அளவில்தான்‌ பிரவேசிக்கின்‌ றோம்‌. மற்றபடி, எவன்‌ எதீதனை கடவுளை எந்த விதமாக நினைத்துக்‌ கொண்டாலும்‌, வணங்கினாலும்‌, அவற்றோடு பேசினாலும்‌, அதுவாகவே ஆய்விட்டாலும்‌ நமக்கு அக்கறை இல்லை; www.thamizham.net - Free £ book 14௦ 3031 1100 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ உலகதீதைப்‌ பொது என்றும்‌, உலகப்பொருள்கள்‌ போக போக்கியங்கள்‌ யாவருக்கும்‌ சமம்‌ என்றும்‌ மனிதன்‌ எண்ணவேண்டும்‌. இதற்குக்‌ கடவுள்‌ குறுக்கிடாமல்‌ இருந்தால்‌ கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை$ அதைப்பற்றிய கவலையும்‌ நமக்கில்லை. ஆகையால்‌, அதை ஒரு பெரிய பிரச்சினையாக வைத்துக்கொண்டு எவரும்‌ கஷ்டப்படவேண்டியதில்லைஃ புதுக்கோட்டையில்‌, 7-10-1934-d செரற்பொழிவு--* பகுத்தறிவு ? 14-10-1938] தோழர்களே 1 மக்களுகீகு ஆத்திகம்‌ - நாத்திகம்‌ என்பதற்குப்‌ பொருள்‌ தெரிவதே இல்லை, நாத்திகன்‌ என்றால்‌ கடவுள்‌ இல்லை என்று சொல்லுகிறவன்‌ அல்ல $ நான்‌ கடவுள்‌ இல்லை என்று சொல்கிறவன்‌ அல்ல ;$ இருக்கிறது என்று ஒப்புகீகொள்ளவும்‌ இல்லை. என்னால்‌ கடவுள்‌ என்பது என்ன? எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள இன்றைக்கும்‌ முடிய வில்லை. புரிநீதுகொண்டிருப்பதாகக்‌ கரு துபவரிடதீதில்‌ எனக்கு ஏன்‌ சண்டைவேண்டும்‌ ? நான்‌ (1956) கண்டிப்பதெல்லாம்‌--பேசுவதெல்லாம்‌ கடவுள்களைப்பற்றிய சேதியே அன்றி, கடவுளைப்பற்றிய சேதியல்ல. போலிக்‌ கடவுள்களை மக்களிடத்தில்‌ புகுதீதிவிட்டார்கள்‌ $ போலிக்‌ கடவுள்களால்‌ மக்கள்‌ சீரழிகிறார்களே என்பதுதான்‌ என்‌ கவலை. நாதீதிகன்‌: என்பதற்குக்‌ கடவுன்‌ இல்லை என்பவன்‌ என்று பொருள்‌ இல்லை. புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களையே--அவற்றைப்‌ பகுதீதறிவைக்‌ கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே-பார்ப்பனர்கள்‌ நாத்திகர்‌ என்று குறிப்பிட்டிருக்கின்‌ றனர்‌. இராமாயண தீதில்‌, பகுதீதறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கும்‌ புதீதர்‌ முதலானவர்களை பகுத்தறிவைப்‌ பயன்படுத்தியதற்காக--நாதீதிகர்‌ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்‌. இவை இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. யார்‌ ஒருவன்‌ பார்ப்பன ஆதாரங்களில்‌ கை வைக்‌ கிறானோ அவனுக்கு நாத்திகப்‌ பட்டம்‌ சூட்டியிருக்கின்றார்கள்‌. இராவணன்‌ பெரிய சிவபக்தன்‌. ஆனால்‌, பார்ப்பன ஆதாரங்களை எதிர்தீததால்‌ நாதீதிகன்‌ எனப்பட்டிருக்‌ கிறான்‌. அப்படியே இரணியனும்‌, குறைபாடுகளை நீக்கப்‌ பல முறைகன்‌ உண்டு. பல வைதீதியங்கன்‌ உண்டு) அதில்‌ ஒரு வகையே சமுதாய இிழிதன்மையையும்‌ சாதியையும்‌ ஒழிக்க நாங்கள்‌ கையாளும்‌ முறை. மததீதின்‌ மேல்‌ குற்றமில்லை) மதத்தைச்‌ சாநீதவர்கள்‌ மேல்தான்‌ குற்றம்‌ என்று கூறுகிறார்கள்‌. சார்ந்தவர்களைதீ திருத்தும்‌ பொறுப்பு மதத்தினுடையது இல்லையா $ சார்‌ ந்தவரைத்‌ திருத்த முடியாத மதத்தை எப்படி நல்ல அமைப்புடையது என்று சொல்ல முடியும்‌? மதத்தில்‌ காலத்துக்கு ஏற்ற மாறுதல்‌ வேண்டாமா ₹ ஏசு, ஒரு கன்னத்தில்‌ அடித்தால்‌ மற்றொரு கன்னத்தையும்‌ திருப்பிக்‌ காட்டு? என்று சொல்லியிருக்கிறார்‌! ஐது இன்று சாத்தியப்படுமா? * மேல்‌ துணியைக்‌ கேட்டால்‌ இடுப்புத்‌ துணியையும்‌ கொடுதீ.துவிடு ? என்று சொல்லி இருக்கிறார்‌. இப்படி இக்‌ காலத்தில்‌ இருக்க முடியுமா? அப்படிச்‌ செய்தால்‌ எல்லோரும்‌ நிர்வாணமாய்‌ இருக்க வேண்டியதுதான்‌. இப்படிக்‌ காலப்போக்குக்குப்‌ பொறுதீதமில்லாத வற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்‌ ; திருத்தி அமைத்துக்‌ கொள்ளவேண்டும்‌. [பென்மலையில்‌, 22-9-1956-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை ? 26-9-1956] தலைவரவர்களே 1 தோழர்களே 1 சாதாரணமாக, மகீகன்‌ முடிவெய்திய காரியங்களில்‌ தங்கன்‌ தங்கள்‌ சாதிமத சம்பிர தாயங்களை அனுசரித்துக்‌ காரியம்‌ செய்வார்கள்‌, அதற்குப்‌ பல பெயர்கள்‌-தீட்டுக்‌ கழிப்பது, கருமாதி-இப்படி ஏதேதோ உண்டு: இங்கே அந்தப்‌ படியான காரியம்‌ நடைபெறவில்லை. மறைந்தவர்‌ முடிவெய்திய நாளை நினைவில்‌ வைத்து அறிவுரை கூறும்‌ நாளாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்‌. இது: www.thamizham.net - Free £ book No 3031 தத்துவம்‌ 1101 போன்ற சந்தர்ப்பங்களில்‌ சாதாரணக்‌ கூட்டமாக இருந்தாலும்‌ அங்குதான்‌ ததீதுவம்‌ முழங்கும்‌. 6 அவர்‌ இப்படி வாழ்ந்தார்‌ $ அப்படி வாழ்ந்தார்‌. இப்போது என்னத்தைக்‌ கொண்டு போய்விட்டார்‌ ) வாழ்வே அநித்தியம்‌? என்று இப்படித்‌ ததீதுவம்‌ பேசுவார்கள்‌. ஆனால்‌, இதைப்‌ பிறகு மறந்.துவிடுவார்கள்‌. இதை வேடிக்கையாக-- மயான வைராக்‌ கியம்‌? என்று சொல்லுவார்கள்‌ 5 ¢ பிரசவ வைராக்கியம்‌? என்று சொல்லுவார்கள்‌. அதாவது, ஒருவர்‌ இறந்துபோனதும்‌ மயானத்தில்‌ * வாழ்வு மாயம்‌, அநிதீதியம்‌? என்று பேசுகிற ததீதுவம்‌-பின்னால்‌ மறந்துபோகிறது. அதேபோல்‌, பிரசவ வேதனைப்படுகின்ற சமயதீதில்‌, ¢ இனிமேல்‌ குழந்தையே வேண்டாம்‌ ! என்று கருதுவார்கள்‌. குழந்தை பிறந்து சந்தோஷமானவுடனேயே, * எல்லோரும்‌ இங்கேயே கூடிக்கொண்டிருக்கின்றீர்களே | அவரைக்‌ கவனித்தீர்களா ? சாப்பிட்டாரா ? போய்ப்‌ பாருங்கள்‌? என்று சொல்லுவார்கள்‌. ஆனால்‌ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்‌ பேசப்படும்‌ ததீ. துவம்‌ உண்மை. ஆனால்‌, அப்படிப்‌ பேசப்படும்‌ தத்‌.துவங்களுக்கு வலிமை இருப்பதில்லை. ஒருவர்‌ இறநீதுபோகிறார்‌ என்றால்‌--கட்டை மண்ணுக்குதீதான்‌ போகப்போகிறது என்று நன்றாகத்‌ தெரியும்‌. என்றாலும்‌ குளிப்பாட்டி, * நல்ல வேஷ்டியாகப்‌ போடு) இதைச்‌ செய்‌--அதைச்‌ செய்‌? என்பதெல்லாம்‌ எதற்காக? அந்தந்த மத, சாதி சம்பிரதாயப்படி *வெள்ளிக்குடம்‌ வைதீதாயா 1 616 இலை போட்டாயா 2 ¢ தானம்‌ கொடுதீதாயா P என்ப தெல்லாம்‌--அவனவன்‌ அனுஷ்டிக்கும்‌ சாதி மத சம்பிரதாயப்படியும்‌, சாஸ்திர சம்பிரதாயப்‌ படியுமே தவிர, வேறு ஒன்றும்‌ கட்டாயம்‌ இல்லை. அவன்‌ சார்ந்துள்ள மத, சாஸ்திர சம்பிரதசயப்படி இவற்றையெல்லாம்‌ செய்யவேண்டும்‌. * ஏன்‌ செய்கிறாய்‌? என்றால்‌, இது எங்கள்‌ சாதிப்‌ பழக்கம்‌) சாஸ்திரம்‌ சொல்லுகிறது; புராணம்‌ சொல்லுகிறது? என்பார்கள்‌. இதைத்‌ தவிர வேறொன்றும்‌, செய்பவனும்‌--செய்யச்‌ சொல்லுகிறவனும்‌ சொல்லமாட்டார்கள்‌. இந்தக்‌ காரியங்களெல்லாம்‌ ஏறக்குறைய ஒரு கூட்டதீதாரிடம்‌-- கட்டாயம்‌ எந்தக்‌ கூட்டத்தார்‌ என்றால்‌ ஆத்திகர்கள்‌ என்ற கூட்டதீதாரிடம்‌, அவர்கள்‌: சாயபுவாக இருந்தாலும்‌, கிறிஸ்தவனாக இருந்தாலும்‌ கண்டிப்பாக உண்டு) ஏதோ ஒரு விததீதில்‌ நடக்கும்‌. மற்ற ஒரு கூட்டத்தார்‌ ஆதீதிகரல்லாதார்கள்‌--நாதீதிகர்‌ என்று சொல்லலாம்‌ ; அவர்களிடம்‌ இந்தக்‌ காரியம்‌ இருக்காது. வேறுமுறையில்‌ மனதி திருப்திக்காக சில காரியங்கள்‌ செய்வார்கள்‌. நாம்‌ ஆத்திகம்‌ என்றால்‌ என்ன; நாத்திகம்‌ என்றால்‌ என்ன என்பதை விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இந்தச்‌ சொற்கள்‌ மக்களை மயக்கி வருகின்றன. ஏன்‌ ₹ பொருள்‌. சரியாகத்‌ தெரிவதில்லை; அது விளங்கி விட்டால்‌ கருத்து வேற்றுமைகள்கூட சகிக்கக்‌ கூடியதாக ஆகிவிடும்‌. இப்போது சாயபு ஒரு காரியம்‌ செய்கிறார்‌. அதைப்‌ பார்த்து மற்றவர்கள்‌ ஏதோ அவர்‌ மதப்படி அவர்‌ காரியம்‌ செய்கிறார்‌ என்று சகிதீதுக்‌ கொள்‌ கிறார்கள்‌. அதேபோல, சாயபு மற்றவர்கள்‌ ஒரு காரியம்‌ செய்யும்போது, * ஏதோ, அவர்கள்‌ சாஸ்திரப்படி செய்கிறார்கள்‌? என்று கருதிப்‌ போவாரே தவிர, கோபிப்பதில்லை. அதுபோலத்தான்‌, ஆதீதிக-நாதீதிகம்‌ விளங்கிவிட்டால்‌ கருதீது வேற்றுமை சகித்துக்‌ கொள்ளக்‌ கூடியதாகிவிடும்‌. ஆதீதிகம்‌ என்பது வெறும்‌ நம்பிக்கையின்பேரில்‌, நம்பிக்கையையே அடிப்படை யாகக்கொண்ட காரியம்‌. இப்போது ஒருவர்‌ சந்தைகீகுப்‌ போய்விட்டு வந்து குளிகீகிறார்‌. * ஏன்‌ 4 என்று கேட்டால்‌, * சந்தைக்குப்‌ போய்விட்டு வந்தேன்‌) பறையன்‌ என்மேல்‌ பட்டிருப்பான்‌ ; அதனால்‌ குளிக்கிறேன்‌ ? என்பார்‌. பறையன்‌ தொட்டிருந்தால்‌ என்ன? அதற்கு ஏன்‌ குளிக்க வேண்டும்‌ P என்றால்‌, ¢ இதென்னப்பா, இப்படிக்‌ கேட்கிறாய்‌ ) சாஸ்திரத்தில்‌ சொல்லியிருக்கவில்லையர 8 பெரிய வர்கன்‌ சொல்லியிருக்கிறார்கள்‌$ அதன்படி குனிக்காமல்‌ வீட்டிற்குப்‌ போனால்‌ தீட்டு? www.thamizham.net - Free £ book No 3031 1102 பெரியார்‌ ஈட, வெ. ரா, சிந்தனைகள்‌ என்று சொல்லுவார்‌. அதேபோல ஒரு நாதீதிகர்‌ என்பவர்‌ சந்தைக்குப்‌ போய்விட்டு வந்து குளிக்கிறார்‌. ¢ ஏன்‌ குளிக்கிறாய்‌ ! என்றால்‌, ¢ சந்தைக்குப்‌ போனேன்‌ ; அங்கு எவ்வளவு அசிங்கம்‌, தூசி )$ பல கொடுமையான நோயாவிகளெல்லாம்‌ முட்டியிருப்பார்கள்‌ ) அதனால்‌ குனிக்கிறேன்‌ ? என்பார்‌. காரண காரியத்தைத்‌ தெரிந்து அதன்படி நடப்பவன்‌ நாதீதிகன்‌. வெறும்‌ நம்பிக்கையை ஆதாரமாக வைதீது--சாஸ்திரம்‌ சொல்லுகிறது, பெரியோர்கள்‌ சொல்லுகிறார்கள்‌ என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன்‌ ஆதீதிகன்‌. * சாஸ்திரம்‌ சொல்லுகிறது) பெரியவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌ என்றாயே--அதை நிஜம்‌ என்று தெரிந்துகொண்டாயா ¥ என்றால்‌, * பெரியவர்கள்‌ சொல்லுகிறார்கள்‌ ; சாஸ்திரம்‌ சொல்லுகிறது என்றால்‌ நிஜமில்லாமல்‌ வேறென்ன 4 என்பான்‌. ¢ நிஜமென்று கண்டு பிடிதீதாயா 11 என்றால்‌ ¢ பெரியவர்கள்தாம்‌ சொல்லிவிட்டார்‌ களே--பிறகு என்ன கண்டு பிடிப்பது என்பான்‌, இன்னும்‌ ஏதாவது கேட்டால்‌, * பார்‌ தீதாயா, பெரியவர்கள்‌ சொல்வதை நம்பமாட்டேன்‌ என்கிறாய்‌) நீ நாதீதிகன்‌ £ என்பார்கள்‌. அவ்வளவுதான்‌--அதாவது என்ன சொல்லியிருக்‌ கிறதோ அதை அப்படியே- கண்ணைமூடிக்‌ கொண்டு நம்பி அதன்படி நடப்பவன்‌ ஆத்திகன்‌. அந்தக்‌ காரியங்களை அறிவைக்‌ கொண்டு ஆராய்ந்து பார்தீதுக்‌ காரண காரியங்‌ களைத்‌ தெரிந்து நடப்பவன்‌ நாத்திகன்‌. உதாரணமாக, ஆதீதிகர்‌ என்பவர்களில்‌ ஒருவர்‌ செதீது விட்டால்‌ பந்தோபஸ்தாகப்‌ புதைகீகிறார்கள்‌. * மறுபடியும்‌ உயிர்பெறும்‌ நாள்‌ வரும்‌) அதுவரையில்‌ பந்தோபஸ்தாக இருக்கவேண்டும்‌? என்கிறான்‌. இது என்ன நம்பிக்கை? அதுபோல சாயபு பதீதிரமாகப்‌ புதைக்கிறான்‌. ¢ ஜட்ஜ்மெண்ட்‌ நான்வரும்‌ ; அப்போது ஆண்டவன்‌ அவர்களை எழுப்பித்‌ தண்டனை தருவான்‌ $ அதனால்‌ புதைக்கவேண்டும்‌--எரிக்கக்‌ கூடாது ? என்கிறான்‌. நம்மிடம்‌, ¢ அவர்‌ உடல்தான்‌ அழிந்தது) அவர்‌ நேரே மோட்சதீதிற்குப்‌ போயிருக்‌ கிறார்‌, அங்கே அவர்‌ சவுக்கியமாக நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க எதை எதைச்‌ செய்யவேண்டுமோ அதைச்‌ செய்யவேண்டும்‌. நம்மைப்‌ பெற்று வளர்தீததற்கு இதைக்கூடச்‌ செய்யவேண்டாமா ₹ இப்படி இன்னும்‌ சிலர்‌ கூறுவர்‌ ¢ அவர்‌ எங்கும்‌ போய்விடவில்லை ; இன்னொரு உடலில்‌ புகுந்து உடனே எங்காவது பிறநீதிருப்பார்‌ ! என்பர்‌ சிலர்‌. இன்னும்‌, ¢ அவர்‌ அனாதையாகதி தொங்கிக்‌ கொண்டிருக்கிறார்‌ ) குறைபாடுகளை நீக்கி, மோட்சதீதிற்கு அனுப்பவேண்டும்‌? என்று கூறிச்‌ சிலர்‌ வருஷா வருஷம்‌ துணி, அரிசி, செருப்பு கொடுக்கிறார்கள்‌--பார்ப்பனர்‌ சாப்பிட்டுச்‌ சந்தோஷமாயிருக்க 1 நீங்கள்‌ சந்திக்கவேண்டும்‌. கொடுக்கும்போது பார்ப்பானுக்குக்‌ கொடுப்பதாகவே கருதவில்லை] அவனிடம்‌ கொடுதீதால்‌ அங்குபோய்ச்‌ சேரும்‌ என்று கருதிக்‌ கொடுக்‌ கிறார்கள்‌. தபால்‌ ஆபீஸ்‌ மாதிரி பார்ப்பான்‌ ! இவனிடம்‌ கொடுத்தால்‌ அங்கு போய்ச்‌ சேர்ந்துவிடும்‌ ! ¢ ஏனப்பா, இதற்கெல்லாம்‌ ஏதாவது ௬ஜு உண்டா 1 பெற்றுக்கொண்டதாக ரசீது வந்ததா? அட! கனவிலாவது வந்து பெற்றுக்கொண்டேன்‌ என்பதாகச்‌ சொன்ன துண்டா P என்றால்‌, ¢ நீ என்னப்பா, புராணத்தில்‌ சொல்லியிருக்கிறது ) அப்புறம்‌ என்ன B என்பார்‌. புராணம்‌ யார்‌ சொன்னது $--பார்ப்பான்‌ சொன்னான்‌) ரிஷிகள்‌ சொன்னார்கள்‌? என்பார்‌. யார்‌ அந்த ரிஷிகள்‌ i ¢ நீ என்னப்பா, தெரியாததுபோல்‌ கேட்கிறாய்‌ 8 அவர்கள்‌. தெய்வீக சகீதியுடையவர்கள்‌ ] அதெல்லாம்‌ என்ன இலேசு என்று நினைத்தாயா ! பெரிய புராணதீதில்‌ இருக்கிறது) காசி புராணத்தில்‌ இருக்கிறது) காசி புராணதீதில்‌, ஒரு சொட்டுத்‌ தண்ணீர்‌ மேலே பட்டுவிட்டால்‌ எப்படிப்பட்ட பாவமும்‌ நிவர்தீதியாகி மோட்சதீதிற்குப்‌ போகலாமென்றிருக்கிற?த ! என்பான்‌. * என்னப்பா இதெல்லாம்‌ நிஜமாக இருக்குமா 1 என்றால்‌, ¢ நீ என்ன இப்படிக்‌ கேட்கிறாய்‌ ? கரசி புராணம்‌ நாரதர்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1103 சொல்லி நந்தி எழுதியது--தெரியுமா ? என்பான்‌. ¢ நீ பார்த்தாயா 1 என்றால்‌, நம்‌ முதுகை; நாம்‌ பார்க்க முடிகிறதா? அதனால்‌ முதுகு கில்லையென்றா அர்தீதம்‌ !? என்பான்‌ ¢ இவற்றையெல்லாம்‌ அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டாமா ₹! என்றால்‌, * கரசி புராணதீதில்‌, இதை அறிவைக்கொண்டு ஆராய்ந்தால்‌ காராம்‌-பசுவைக்‌ கொன்ற பாவதீதிற்கு ஆளாகவேண்டும்‌ என்று போட்டிருக்கிறதே! என்பான்‌. இப்படி, பகுதீதறிவைக்‌ கொண்டு ஆராயப்‌ பயப்படுகிறவன்‌ எல்லாம்‌ ஆதீதிகன்‌. ஆராய்வது பாவம்‌ என்று சொல்லிவிட்ட தால்‌ பெரும்பாலான மக்கள்‌ நம்பி, அந்த நம்பிக்கையில்‌ வாழ்வதே வாழ்வாகி விட்டது. அவைகன்‌ ¢ ஆர்கீயூமெண்டிற்கு £-விவாததீதிற்கு-அறிவு ஆராய்ச்சிக்கு ஒத்துக்‌ கொள்ள முடியாதவை ; வெறும்‌ நம்பிக்கையை மாதீதிரம்‌ அடிப்படையாகக்‌ கொண்டவை; அதுதான்‌ ஆதீதிகம்‌. அதுபோல, இன்னொரு கூட்டம்‌ தங்கள்‌ சொந்த அறிவு ஆராய்சீசிமேல்‌ நம்பிக்கை கொண்டவர்கள்‌, அவர்கள்‌ இந்த மாதிரிக்‌ காரியங்களில்‌ தேவையில்லாத-தங்கள்‌ அறிவுக்கு அவசியமென்று தோன்றாத சடங்குகளைச்‌ செய்யமாட்டார்கள்‌, நான்கும்‌ நான்கும்‌ எட்டு என்று புரிகிறபோது, நான்கும்‌ நான்கும்‌ ஒன்பது என்று புராணத்தில்‌ எழுதி யிருப்பதாலேயே நம்பி, நாமும்‌ ஒன்பது என்று சொல்லவேண்டுமா என்று கேட்பவர்கள்‌. அறிவைக்‌ கொண்டு எதையும்‌ செய்பவர்கள்‌) அறிவுதான்‌ அவர்களுக்கு ஆதாரம்‌ ; அவர்களே நாத்திகர்கள்‌. ஒரு பிரிவு--பெரியவர்கள்‌ சொன்னார்கள்‌, புராணம்‌ சொல்லுகிறது. என்ற நம்பிக்கையை ஆதாரமாகக்‌ கொண்ட ஆத்திகம்‌) மற்றொரு பிரிவு--தன.து சொந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக்‌ கொண்ட நாத்திகம்‌. ஆத்திகர்கள்‌ ஆராய்ச்சி செய்வதே பாபம்‌ என்று சொல்லுபவர்கள்‌. ஆராய்ச்சி செய்தால்‌ உலகமே மூழ்கிப்‌ போய்விடும்‌ என்று, நம்பிக்கைக்கு ஆதாரமான. தங்கள்‌: கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்‌. நம்‌ நாட்டில்‌ மாத்திரமல்ல, உலகெங்கும்‌ அப்படி வலியுறுதீதப்பட்டு வருகிறது. உலகெங்கும்‌ நம்பிக்கை போதிக்கப்பட்டு ஆராய்ச்சிக்‌ காரர்கள்‌ வலுப்பதற்கில்லாமல்‌ பார்த்துக்‌ கொள்ளுகிறார்கள்‌. அதனால்‌ ஒரு அறிவு ஆராய்ச்சிக்காரனைப்‌ பார்‌ தீதால்‌ மட்டம்தட்ட நினைக்கிறார்கள்‌. * நான்கும்‌ நான்கும்‌ ஒன்பது என்று சொல்லுவதை--இவன்‌ ஆராய்ச்சியால்‌ மறுதீது, நான்கும்‌ நான்கும்‌ எட்டு என்பது-தப்பு. அப்படி ஆராய்ச்சி செய்வது கடவுளுக்கு விரோதம்‌ ; சாஸ்திர விரோதம்‌ ? என்று சொல்லி அவனை மதிப்பதில்லை, ஒருவன்‌ நீட்டாக நாமம்‌ போட்டிருக்கிறான்‌ ; கொட்டை கட்டி இருக்கிறான்‌. ¢ ஆகா; ஆதீதிகன்‌ ! கவுரவிக்கதீ தகுந்தவன்‌ ? என்கிறார்கள்‌. ¢ இவன்‌ கருப்புச்‌ சட்டைக்காரனா 5--நாதீதிகன்‌ ! என்று வெறுக்கிறார்கள்‌. * இவன்‌ இந்து மகா சபைக்காரனா ஃஃஃஃட வகா வதீதிகனாயிற்றே! யார்‌ இரதீதினசாமி முதலியாரா? ஆதீதிக சிகாமணியாயிற்றே ! எழும்போதும்‌ சிவசிவா ; உட்காரும்போதும்‌ சிவசிவா--என்பாரே ! என்பர்‌. அவன்‌ *சாதகித்தைப்‌ பார்தீதால்‌ | 7, 8 கொலைகள்‌ செய்திருப்பான்‌. இருந்தாலும்‌ ஆத்திகன்‌) அதனால்‌ மதிகீகதீதான்‌ வேண்டும்‌. ஆராய்ச்சிக்காரர்களை மட்டம்‌ தட்ட வேண்டுமென்பதில்‌ பலருக்குச்‌ சொந்தத்தில்‌ கவலை (Personal Interest) இருக்கிறது. பார்ப்பான்‌ மேல்சாதிக்காரன்‌ $ முதல்‌ தரக்கூடாது என்கின்றான்‌. ரீ வெற்றிலை பாக்கு மரியாதை அவனுக்குத்தான்‌. அவனைப்‌ பார்தீது, * நீ எதனால்‌ உயர்‌ நீதவன்‌ ) உன்‌ உடம்பில்‌ ஓடுவது இரத்தம்‌--எங்கன்‌ உடம்பில்‌ ஓடுவது சீழா? நீ f என்ன, மூதீதிரம்‌ பெய்தால்‌ பன்னீர்‌ வாசனையா வீசுகிறது P என்று கேட்டால்‌, உடனே. | அவன்‌, * அட, நாதீதிகப்‌ பயலே !? என்பான்‌. ஏன்‌? அந்த ஏற்பாடு ஒழிந்தால்‌ தனது / இலாபம்‌, மேல்‌ சாதிக்‌ கவுரவம்‌ போய்விடும்‌. அதனால்‌, அந்த அறிவு ஆராய்ச்சிக்கு கடம்‌. ! { www.thamizham.net - Free E book 14௦ 3031 1104 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ அதுபோல, ஒரு பணகீகாரன்‌ கன்ள மார்கெட்டில்‌ இலட்சம்‌ கிலட்சமாகசி சாம்பாதிதீ திருப்பான்‌ $ கேட்டால்‌ என்ன சொல்வான்‌-- எல்லாம்‌ பகவான்‌ கொடுதீதார்‌? என்பான்‌. * எதற்காக உன்னிடம்‌ மாத்திரம்‌ கொடுக்கிறார்‌ 4 என்றால்‌, ¢ போன ஜென்மத்தில்‌ செய்த புண்ணியம்‌ I என்பான்‌, இப்படிச்‌ சொல்ல வாய்ப்பிருந்தால்தான்‌--செரல்வதை நம்பும்‌ மக்கள்‌ இருந்தால்தான்‌--வெளியில்‌ வரும்போது வெறுப்பு இருக்காது. அறிவு ஆராய்ச்சிக்‌ காரர்கள்‌ அதிகமாய்‌ விட்டால்‌-6 இதோ பார்‌ மோசடிக்காரன்‌ !? என்று கூறக்கூடிய நிலைமை வந்துவிடும்‌. அதற்காக அறிவு ஆராய்ச்சி பெருகாமல்‌ பார்‌தீதுக்கொள்வதில்‌ அவர்களுக்குக்‌ கவலையிருக்கிறது. இன்னொன்று நீங்கள்‌ தெரிந்து கொள்ளவேண்டும்‌) ¢ ஆஸ்திகம்‌?, ¢ நாஸ்திகம்‌? என்பவை தமிழ்ச்‌ சொற்கள்‌ அல்ல, தமிழில்‌ அதீதப்‌ பொருளுடைய சொல்லும்‌ கிடையாது. அந்த இரு சொற்களும்‌ ஆரிய மொழி, பார்ப்பன மொழிச்‌ சொற்கள்‌, அதில்‌--அதாவது வடமொழியில்‌, ¢ ஆஸ்தி? என்றால்‌--6 உடையது? என்று பொருள்‌. நாம்‌, * அவன்‌: ஆஸ்திக்காரன்‌ ? என்பதில்லையா ₹--அதாவது பொருளுடையவன்‌ என்பது. அதுபோல, 6 நாஸ்தி? என்றால்‌ ¢ இல்லாமை ?-- அவன்‌ நாஸ்தியாகப்‌ போய்விட்டான்‌? என்றால்‌ என்ன ? ஒன்றும்‌ இல்லாதவனாகிவிட்டான்‌ என்று பொருள்‌. இப்படி £ உடையது 3, * இல்லாதது? என்ற பொருளை உணர்தீத வடமொழியில்‌ ஏற்பட்ட சொற்கள்‌ தாம்‌. 6 ஆஸ்திகம்‌?, * நாஸ்திகம்‌? என்பவை, இந்தச்‌ சொற்களை எப்படிக்‌ கடவுளுச்குசி சம்பநீதப்படுத்தினார்களோ தெரியவில்லை. புராண இதிகாசங்களில்‌ ராமாயணத்தை எடுத்‌ துக்கொண்டால்‌, கிராமன்‌ வாயி னாலே$ய வரும்படியாக, ஒரு ஆளைப்பற்றிக்‌ குறிப்பிடும்போ து--அதாவது பவுதீதனைப்‌ பற்றியும்‌ இன்னும்‌ இரண்டொருவரைப்பற்றியும்‌ குறிப்பிடும்போது, * பவுதீதனா? சார்வாகனா? அவன்‌ நாஸ்திகனாயிற்றே !! என்று சொல்லுவதாகக்‌ காட்டியுள்ளார்கள்‌ஃ இன்னும்‌ பரதனிடம்‌ நாட்டைப்பற்றிப்‌ பேசும்போது, * பவுதீதரீகளை நாட்டில்‌ வைத திருக்கக்‌ கூடாது? என்று கூறுவதுபோல்‌ சொல்லும்போது, ¢ நாஸ்திகன்‌ ? என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. பெரியோர்கன்‌ சொன்னதை-புராண இதிகாசங்களை அறிவைக்கொண்டு தர்க்கம்‌ செய்கிறவன்‌ நாஸ்திகன்‌. அது தவிர, * கடவுள்‌ உண்டு 7) ¢ இல்லை? என்கின்ற பிரச்சினையே அங்கில்லை, இதேபோல்‌, பாரததீதிலும்‌ இரண்டொரு இடங்களில்‌ இதே அர்தீததீதில்தான்‌ வருகிறது. * ஏனப்பா, கும்பகோண தீதிற்குப்‌ போய்‌, அந்த மூத்திரக்‌ குட்டையில்‌ மூழ்க வேண்டும்‌? கடவுள்‌ அந்த கிடத்தில்‌ வந்துதானா தீர்தீதம்‌ கொடுக்கவேண்டும்‌? அது எப்படிப்‌ பொருதீதம்‌ ₹ என்றால்‌ உடனே, * உனக்கு யார்‌ பதில்‌ சொல்லுவது? நீ நாஸ்திகன்‌ ? என்று--அதாவது ¢ கடவுள்‌ இல்லை என்பவன்‌ ? என்கிற அர்தீததீதில்‌ சொல்லி விடுகிறான்‌. * கடவுன்‌ இல்லையென்பவன்‌? என்கிற ஆயுதத்தை உபயோகித்துதீ தப்பிதீ.துக்கொள்கிறான்‌.. எங்கேயும்‌, ¢ கடவுள்‌ உண்டா i இல்லையா?! என்கிற விவகாரதீதிற்கு கடம்‌ இருக்க முடியாது. இன்றுகூட யார்‌ சொன்னாலும்‌ நான்‌ ஏற்றுக்கொள்கிறேன்‌--* கடவுள்‌ உண்டா g இல்லையா? என்று சொல்ல, தமிழில்‌ வார்தீதையே இல்லை. தமிழ்‌ மூதீதமொழி ) அதுகூட வேண்டாம்‌--நமக்கென்று இருக்கிற சொந்த மொழி. கடவுள்‌ என்பது உலகத்துக்கே பொதுவான ஒன்று. அதைக்‌ குறிப்பிட--* கடவுன்‌ உண்டா? இல்லையா? என்று சொல்ல ஒரு சொல்‌ தமிழில்‌ இருக்க வேண்டுமா, இல்லையா? தமிழில்‌ இல்லை. ¢ ஆஸ்திகம்‌?, * நாஸ்திகம்‌ 7, ¢ நிரிச்சுர வாதம்‌ £, 6 உலகாயத வாதம்‌ £ என்று கிப்படி வடமொழி வார்‌ தீதை கன்தாம்‌ உண்டே தவிர, தமிழில்‌ வார்தீதை கில்லை. இதைப்‌ பிடிதீ.துக்கொண்டே போனால்‌ தமிழனுக்கே கடவுன்‌ இருந்ததா, கில்லையா என்பதே சந்தேகம்தான்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1105 * கடவுள்‌ என்பவர்‌ எங்கும்‌ உள்ளவர்‌) வல்லவர்‌] எல்லா சக்தியும்‌ படைத்தவர்‌; எதையும்‌ அசைப்பவர்‌ ) வாயை அசைப்பவர்‌ கூட அவர்தான்‌? என்பதாகச்‌ சொல்லு கிறார்கள்‌. அப்படிச்‌ சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கடவுளை ஒருவன்‌ இல்லைஎன்கிறான்‌. என்றால்‌ அந்த வார்தீதையே பொருத்தமாக இல்லையே 1 உள்ளே இந்த அறையில்‌ 200 ¢ கேண்டில்‌ பவர்‌? உள்ள விளகீகு இருக்கிறது; உள்ளே போய்ப்‌ பார்தீதால்‌ கண்ணுக்குத்‌ தெரியவில்லை என்றால்‌ என்ன அர்த்தம்‌! இந்தப்‌ பெட்டி நிறைய சாமான்‌ இருக்கிறது) கையை விட்டுப்‌ பார்த்தால்‌ கைக்கு ஒன்றும்‌ சிக்க வில்லை என்றால்‌ அர்த்தம்‌ என்ன? * உள்ளே 200 கேண்டில்‌ பவர்‌ விளக்கு இருக்கறது? என்பது பொய்யாக இருக்க வேண்டும்‌) * பெட்டியில்‌ நிறைய சாமான்‌ இருக்கிறது? என்பதும்‌ பொய்யாக இருக்க வேண்டும்‌) அல்லது கைக்குச்‌ சிக்கவில்லை? என்பது பொய்‌ யாக இருக்கவேண்டும்‌. கடவுளை; * எல்லாம்‌ வல்லவர்‌, எல்லா சகீதியும்‌ படைத்தவர்‌, அவர்தான்‌ எல்லா வற்றையும்‌ அசைக்கிறார்‌ ? என்று சொல்லிவிட்டு- கடவுள்‌ இல்லை என்கிறான்‌? என்றால்‌ என்ன அர்தீதம்‌ ? புதீதியுள்ளவனாக இருந்தால்‌, ¢ அட கடவுள! என்‌ மனத்தில்‌, என்‌ கருத்தில்‌ கடவுள்‌ உண்டு என்று தோன்றும்படி செய்கிறாய்‌-- அவன்‌ கருத்தில்‌ கடவுள்‌ இல்லை என்று கருதும்படி செய்கிறாயே;) என்னே உன்‌ திருவிளையாடல்‌ 13 என்று கடவுளைப்‌ பார்தீதல்லவோ கேட்க வேண்டும்‌ ? அதை விட்டுவிட்டு மனிதன்மேல்‌ கோபித்தக்‌ கொண்டால்‌ என்ன நியாயம்‌ § சூரியனை; பகல்‌ 12 மணிக்கு நின்றுகொண்டு, ஒருவன்‌ பார்தீது * ஆகா எவ்வளவு பிரகாசம்‌) கண்ணைக்‌ கூசுகிறதே?! என்கிறான்‌. பக்கத்தில்‌ நிற்பவன்‌, சூரியனா? எங்கே இருக்கிறது! காணோமே ! என்று கேட்க முடியுமா 8 கேட்டால்‌ புதீதியில்லை;$ பைத்தியம்‌ என்றுதானே சொல்வார்கள்‌. ஏன்‌ 1 இருக்கிறது என்று சொல்கிற பண்டம்‌- அதாவது சூரியன்‌--அவ்வளவு தெளிவாக இருக்கிறது. அதைவிட அதிகச்‌ சக்திவாய்ந்த கடவுள்‌ கண்ணுக்குப்‌ படாவிடினும்‌, கருதீ.துக்காவது படவேண்டாமா 8 கடவுள்‌ இருக்கிறது என்பதுகூட ஒரு எல்லைக்குதீதான்‌ ! இன்னின்னாருக்குதீதான்‌ கடவுள்‌ உண்டு என்ற எல்லை இருக்கிறது. ஞானிக்குக்‌ கடவுள்‌ இல்லை; பகுதீதறிவுவாதிக்குக்‌ கடவுள்‌ இல்லை. சங்கராசீசாரியைக்‌ கேளுங்கள்‌] அவர்‌ லோக குரு) அவருக்குக்‌ கடவுள்‌ இல்லை. அவரைப்‌ பார்‌ தீ.து, ¢ கடவுள்‌ உண்டா 5 என்றால்‌, ¢ கடவுள்‌ எப்படியிருக்கும்‌ 6) ரூபாய்க்கு எத்தனைபடி P என்பார்‌. ஏன்‌ 1 அவர்‌ உயர்ந்தவர்‌, ஞானியாகிப்‌ போனவர்‌ $--* நான்தான்‌. கடவுள்‌ ? என்பார்‌. அவரது ததீகுவப்படி அவருக்குக்‌ கடவுள்‌ கிடையா.து--அவரேதான்‌ கடவுள்‌. அவ்வளவு உயர்நிலைக்குப்‌ போனவர்களுகீகுக்‌ கடவுள்‌ கிடையாது. D& சங்கராச்சாரியின்‌ ததீ.துவம்‌ $ அவர்கள்‌ ததீதுவப்படி கடவுன்‌ இருக்கிறதா என்றால்‌-- இல்லை. ஆளுக்குதீ தகுந்தமாதிரி கடவுள்‌ ! உனகீகுக்‌ காளி அது, இது கடவுள்‌ ! ஏன்‌ ₹ உன்‌ பக்குவதீதிற்குத்‌ தகுந்தாற்போல்‌-புதீதிக்குத்‌ தகுந்தாற்போல்‌, இன்னும்‌ கொஞ்சம்‌ சாதாரண புதீதியுள்ளவனுக்கு உருவம்‌ உள்ள கடவுள்‌) நீ உருவத்தையே கும்பிடு 1 இன்னும்‌ பெரிய புத்திக்காரனுக்கு அவனேதான்‌ கடவுள்‌ ! நிலைமைக்குத்‌ தகுந்தாற்போல்‌ இப்படிச்‌ சில தந்திரங்களைச்‌ சொல்லிக்‌ கொள்ளை அடிக்கிறான்‌ ; அவ்வளவுதான்‌ | நினைவுநாள்‌ காரியம்‌ ஒரு பணக்காரன்‌ வீட்டில்‌ நடப்பதானால்‌ எவ்வளவு கூதீதடிப்‌ பார்கள்‌ ₹ ¢ இன்று எட்டாம்‌ நாள்‌) இன்று சோடசம்‌, வெள்ளி இலை போட்டாயா ¥ வெள்ளிக்‌ குடம்‌ வைதீதாயா ₹ பார்ப்பானுக்குத்‌ தானம்‌ எத்தனை! என்று கூறி என்னென்ன காரியம்‌ நடக்கும்‌ இலட்சாதிபதிகள்‌ வீட்டில்‌ ஒரு காரியம்‌ என்றால்‌ எவ்வளவு நடக்கும்‌? பதீது இலட்சம்‌ ! இருபது இலட்சம்‌ ! எதற்காக என்று சிந்திப்பதே இல்லை. பணம்‌ இருக்கிறது-- 1686—139 www.thamizham.net - Free E book No 3031 1106 பெரியார்‌ ஈ, வெ. ரர்‌, சிந்தனைகள்‌: ஜம்பமாகச்‌ செலவழிக்கிறார்கள்‌, இவர்கள்‌ செலவழித்து நாசமாகப்‌ போகட்டூம்‌ $ இவர்களைப்‌ பார் தீது எத்தனையோ பேர்‌ கெட்டுப்போகிறார்களே | மேல்‌ நாடுகளில்‌ பகுத்தறிவாளர்‌ சங்கம்‌) சிந்தனையாளர்‌ சங்கம்‌ ] உண்மை நாடுவோர்‌ சங்கம்‌ என்பன போன்ற சங்கங்களும்‌ உண்டு. அவர்கள்‌ வேதம்‌, சாஸ்திரம்‌, அவதாரம்‌ இவற்றையெல்லாம்‌ நம்புவதில்லைஃ தமிழ்நாட்டிலும்‌ சரிதீதிரப்படி ஆரியர்கள்‌ வருவதற்குமுன்‌ தமிழர்கள்‌ பகுத்தறிவு வாதிகளாகவே இருந்திருக்கிறார்கள்‌. பாரீப்பான்‌ வருவதற்குமூன்‌, தமிழன்‌ என்‌ பவனுக்கு ஒரு கடவுளும்‌ இருந்ததில்லை. ஆரியம்‌ வருமுன்‌ அந்த எண்ணமும்‌ கருத்தும்‌ கிடையாது. அன்று மாதீதிரமல்ல) இன்றும்‌ தமிழனைப்‌ பொறுத்தவரையில்‌ ஏதாவதொரு கடவுள்‌ இருக்கிறதென்று சொல்லச்‌ சொல்லுங்கள்‌, பார்க்கலாம்‌ ! கோவில்‌, குளம்‌, பொம்மையைக்‌ காட்டினால்‌ போதாது. கடவுள்‌ என்கிற ததீ.துவப்படி, தமிழனுக்கு அன்றும்‌ இன்றும்‌ எது கடவுள்‌ ₹ பார்ப்பதற்கு மாய்கையில்‌ இருப்பதாகத்‌ தோன்றுமே தவிர, உண்மையில்‌ கடவுள்‌ கிடையாத: மறைமலையடிகளாருகீகும்‌, எனக்கும்‌ ஒரு போராட்டம்‌. இவராவது வாதாடி; * தமிழனுக்கு ஒரு கடவுள்‌ இருக்கிறார்‌ ) அது இன்னதுதான்‌ ? என்று சொன்னவர்‌ அல்லர்‌ திரு. வி. கலியாணசுந்தர முதலியார்‌, ¢ நீங்கன்‌ சொல்லுவது சரி) ஆனால்‌, என்றுமே இருந்ததில்லை என்று சொல்லாதீர்கள்‌ 1 தமிழர்கள்‌ இயற்கையைக்‌ கடவுன்‌ என்றனர்‌. இயற்கை என்றால்‌ அழகு, அழகு என்றால்‌ முருகு? என்றாரி சரி 5) அந்த முருகன்‌ எங்கே போய்விட்டான்‌ 1 இன்றுள்ள முருகன்‌ அந்த அழகு முருகன்‌ அல்லன்‌ ] கொழுக்கட்டை--கல்‌ முருகன்‌. இந்த முருகன்‌ தமிழனின்‌ முருகனல்லன்‌ | சிவன்‌ மகன்‌ என்ற முறையில்‌--ஆரியப்‌ புராணப்படி கற்பனை செய்யப்‌ பட்ட ஒரு உருவம்‌. இன்னொருவர்‌, ₹ சிவன்‌ தமிழர்‌ கடவுள்‌? என்கிறார்‌. * அது அன்பின்‌ உருவம்‌ $ அன்பே சிவம்‌ ; அன்பே உருவானவன்‌ சிவன்‌ ? என்றெல்லாம்‌ சொல்லுகிறார்கள்‌ ] இன்று இருக்கும்‌ சிவன்‌ அன்பு சிவனா ? அன்பே உருவான சிவன்‌ கையில்‌ ஏன்‌ அரிவாள்‌, கொடு வான்‌; வேலாயுதம்‌, சூலாயுதம்‌ எல்லாம்‌ { கேட்டால்‌, காலப்போக்கில்‌ கெட்டுப்‌ போய்விட்டது) ஆரியர்‌ வந்ததால்‌ தமதாக்கிக்கொண்டார்கள்‌ என்பார்கள்‌, பின்‌, நீ ஏன்‌ கும்பிடு போடு கிறாய்‌ ₹ அன்றும்‌ இன்றும்‌ கடவுள்‌ என்பது ஆரிய ஆதீகீகத்தினால்‌ ஏற்பட்ட கற்பனை. இதைப்பற்றி யார்‌ கவலைப்பட்டார்கள்‌ 1 முதல்‌ முதல்‌ சரிதீதிரச்‌ சான்றுப்படி புதீதர்கள்தான்‌ அறிவைக்கொண்டு ஆராய்ந்து சொன்னவர்‌) அறிவைக்கொண்டு பார்‌ தீததனரலேயே பெரிய நாதீதிகரானவர்‌: புதீதர்‌ அறிவு வாதி) ஆராய்ச்சிவாதி. அதனால்தான்‌ அவர்‌ கொள்கைகளையும்‌ முயற்சிகளையும்‌ பார்ப்‌: பனர்கள்‌ அழிதீதுவிட்டார்கள்‌. புதீதர்‌ மக்கன்‌ உள்ளத்தில்‌ விதைத்த விதை முளைதீது வளர்ந்து கொடி படர ஆரம்‌ பித்தது. ஆழ்வார்கள்‌, நாயன்மார்கள்‌ அதை எதிர்த்துக்‌ கொடுமை செய்து ஒழித்து விட்டார்கள்‌. உலகில்‌ அறிவுவளர்ச்சி, வாழ்க்கை முயற்சிக்கு ஏற்ப &ப்‌பாது புத்தருடைய கொள்கையே செலாவணியாகிறது. இப்போது மக்களிடம்‌ பொறுமையிருப்பதால்‌ சகித்துக்‌ கொள்ள முடிகிறது. இதுதான்‌ இன்று ஏற்பட்டுள்ள நிலை. முன்போல இன்று நாதீதிகம்‌ அவ்வளவு கொடுமையான தாகக்‌ கருதப்படவில்லை. அதனால்தான்‌, இன்றைய தினம்‌ மற்றவர்கள்‌ செய்கிற முறைப்படி கருமாதிச்‌ சடங்குகள்‌ செய்யாமல்‌ நினைவு நாள்‌ காரியத்தை மறைந்தவருடைய நடத்தை, பண்பைப்பற்றிச்‌ சொல்லி நடத்தும்‌ நினைவு விழாவாக; ஏதோ அவர்கள்‌ இஷ்டப்படி நாம்‌ நடக்கிறதென்கிற முறையில்‌ நடதீத முடிந்தது www.thamizham.net - Free £ book No 3031 ததீதுவம்‌ 1107 எனது தாயார்‌ உடம்பு சவுக்கியமில்லாமல்‌ படுக்கையில்‌ இருந்தார்கள்‌. அப்போது வடஆர்க்காடு பகுதியில்தான்‌ 4, 5 கூட்டங்கள்‌ ஏற்பாடு செய்துகொண்டு வரவேண்டி யிருந்தது. தாயாரிடம்‌ போய்வர அனுமதி கேட்டேன்‌. * மகராசனாகப்‌ போய்விட்டு வா? என்றார்கள்‌. எனது அண்ணார்‌ நாடி பிடிதீதுப்‌ பார்‌ தீதுவிட்டு இன்னும்‌ ஒரு வாரதீதிற்குப்‌ பயமில்லை என்றார்‌. ஜோலார்பேட்டை வந்து படுத்தேன்‌. உடனே ஊரில்‌ இருந்து ஆள்‌ வந்து எனது தாயார்‌ இறந்துபோய்விட்டதாகச்‌ சொன்னான்‌ $ ஊருக்குப்‌ போய்‌, காரியதி தைப்‌ பார்‌ தீதுவிட்டு அன்று சாயந்திரமே வந்துவிட்டேன்‌. அதுபோலத்தான்‌ நாகம்மையார்‌ இறந்தபோதும்‌ ) அவருக்குக்‌ காய்ச்சலாக ஆஸ்பத்‌ திரியில்‌ தடபுடலாக இருந்தது) வியாழக்கிழமை நாளில்‌ வெளியூருக்குப்‌ புறப்பட்டுப்‌ போனேன்‌ ) வெள்ளிக்கிழமை இறந்துவிட்டதாக ஆள்‌ வந்தது. வெள்ளிக்கிழமை இரவு 4 மணிக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தேன்‌. காரியத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு திருச்சியில்‌ ஒரு திருமணம்‌ நடதீதிவைக்கப்‌ போய்விட்டேன்‌. அது கிறிஸ்தவர்கள்‌ திருமணம்‌. பாதிரிமார்கள்‌ ரகளை செய்தார்கள்‌. முதலில்‌ குறிப்பிட்ட இடத்தைக்‌ கொடுக்கமாட்டேன்‌ என்றார்கள்‌. வேறு இடத்தில்‌ திருமணம்‌ நடந்தது. முடிதீ.துவிட்டு இரவு சாப்பிட்டுக்‌ கொண்டிருக்கும்போது, போலீசார்‌ வந்து என்னைக்‌ கைது செய்திருப்பதாகச்‌ சொன்னார்கள்‌. மணமக்களையும்‌ கைக செய்தனர்‌, மறுநாள்‌ பேப்பரில்‌ நான்‌ கைதான செய்தியும்‌ நாகம்மையார்‌ இறந்த செய்தியும்‌ ஒன்றாக வெளிவந்தது. பிறகு போலீஸில்‌ £ ஸ்டேட்மெண்ட்‌? கொடுத்தோம்‌. திருமணம்‌ செய்து கொண்டவர்கள்‌ —¢ நாங்கள்‌ இரண்டு வருடங்களுக்கு முன்பே கிறிஸ்துவ மததீதைவிட்டு வெளியேறிவிட்டோம்‌? என்று சொன்னார்கள்‌. போலீஸ்காரர்கள்‌ பாதிரியுடன்‌ ¢ டெலி போனில்‌ ? பேசினார்கள்‌ ) பிறகு எங்களை விட்டுவிட்டோம்‌ என்று சொல்லிவிட்டார்கள்‌. 1910-ல்‌ எங்கள்‌ தகப்பனார்‌ உடம்பு சவுக்கியமில்லாமல்‌ இருந்தார்‌. அவர்‌ உயிருட னிருக்கும்போதே நானும்‌ என்‌ அண்ணனும்‌ அவர்‌ உடலைப்‌ புதைப்பதா எரிப்பதா என்ற விவாததீதில்‌ இறங்கினோம்‌. நான்‌ ஊருக்குள்‌ புதைதீது சமாதி கட்ட கலெக்டருக்கு மனு: கொடுத்து, முனிசிபாலிடியில்‌ ப?மிஷன்‌ வாங்கி வைத்திருந்தேன்‌. என்‌ அண்ணன்‌, * புதைப்பது வைணவ சம்பிரதாயத்திற்கு விரோதம்‌ ] ஆதலால்‌ எரிக்கத்தான்‌ வேண்டும்‌? என்றார்‌. நான்‌ வைணவர்களிலேயே பெரிய ஆட்கள்‌ புதைக்கப்பட்டிருக்‌ றொர்கள்‌ என்று ஆதாரம்‌ காட்டி வாதாடினேன்‌. மதீ்தியஸ்தர்கள்‌ எங்கன்‌ அய்யாவையே கேட்டுவிடலாம்‌ என்று கூறி அவரையே கேட்டார்கள்‌. பிறகு ஒரு சாமியார்‌ வந்தார்‌. ¢ சன்னியாசம்‌ வாங்கிக்‌ கொண்டால்‌ புதைகீகலாம்‌! என்றார்‌. சன்னியாசம்‌ வாங்குவதென்றால்‌ கோவிலில்‌ கொண்டு போய்க்‌ காஷாய வேட்டிகளை வைத்து ஏதேதோ செய்து சாமியே காஷாயம்‌ கொடுப்ப தாகச்‌ சம்பிரதாயம்‌, அதற்கு 300 ரூபாய்‌ செலவு ஆகும்‌ என்றார்கள்‌, 300 ரூபாய்‌ கொடுத்‌ தோம்‌. காஷாயம்‌ வாங்கிக்‌ காவி வேட்டியைக்‌ கட்டிக்கொண்டு எங்கள்‌ தகப்பனார்‌ இரண்டு நான்‌ படுத்திருந்தார்‌) இறந்தார்‌ ] புதைத்தோம்‌. எனது அண்ணியார்‌ செத்தபோதும்‌ மறுநான்‌ யாருக்கும்‌ வேலையில்லை. ததீ.துவ விசாரணையோடு இந்தக்‌ காரியங்களைச்‌ சிநீதிதீதுப்‌ பார்தீதால்‌ விளங்கும்‌. இன்று மாத்திரம்‌ சொல்லவில்லை) நான்‌ காங்கிரசில்‌ இருந்தபோதே 1329-ல்‌ செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில்‌ ¢ இறந்து போனவர்களுக்கரகத்‌ திதி, திவசம்‌ கொடுப்பதில்லை? என்று தீர்மானம்‌ போடப்பட்டிருக்கிறத [திருப்பத்தூரில்‌, 29-12-1956-ல்‌ சொற்பொழிவு வீடுதலை? 4-1-1557] www.thamizham.net - Free £ book 14௦ 3031 1108 16. நாத்திகம்‌ அக்கிராசனரவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே ! என்னை நாதீதிகன்‌ என்று சொல்கிறவர்கள்‌ * நாத்திகம்‌? என்பதற்கு என்ன அர்த்தம்‌ கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில்‌ நான்‌ நாத்திகன்‌ என்று வலியுறுத்திச்‌ சொல்கிறேன்‌. நாதீதிகதீதிற்குப்‌ பயநீதவனால்‌ ஒன்றும்‌ செய்யமுடியாது. அதிலும்‌ சமதர்மகீ கொள்கையைப்‌ பரப்ப வேண்டுமானால்‌ நாதீதிகனால்தான்‌ முடியும்‌. அதனால்‌ ரஷ்யாவையும்‌ நாதீதிக ஆட்சி என்கிறார்கள்‌. புதீதரை அப்படிச்‌ சொல்லுவதற்குக்‌ காரணம்‌ அவர்‌ சமதர்மக கொள்கையைப்‌ பரப்ப முயன்றதால்தான்‌. நாதீதிகம்‌ என்பதற்கு அர்த்தம்‌ சமதர்மக்‌ கொள்கை மாத்திரமல்ல. சீர்திருதீதம்‌--அதாவகு, பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால்‌ அந்த மாற்றத்தையும்‌, ஏன்‌-எவ்வித சீர்‌. திருதீதத்தையுமே நாதீதிகம்‌ என்று யதாப்‌ பிரியர்கள்‌ சொல்லிதீ திரிவார்கள்‌. எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமதீதுவத்திற்கு இடமில்லையோ--அங்கெல்லாம்‌ இருந்துதான்‌ நாதீதிகம்‌ முளைக்கிறது. கிறிஸ்‌. துவையும்‌, நபியையும்கூட நாஸ்திகர்கள்‌ என்று யூதர்கள்‌ சொன்னதற்கு-- அவர்களது சமதர்மமும்‌ சீர்‌ திருத்தமுந்தான்‌ காரணமாகும்‌. துருக்கியில்‌ பாட்சரவும்‌, ஆப்கானிஸ்தானில்‌ அமீரும்‌ நாஸ்திகர்கள்‌ என்று அழைக்கப்பட்டதற்கும்‌ அவர்களது சீர்திருத்தந்தான்‌ காரணம்‌. ஏனென்றால்‌, இப்போது வழக்கத்தில்‌ இருக்கும்‌ கொள்கை களும்‌ பழக்கங்களும்‌ எல்லாம்‌ கடவுள்‌ செய்ததென்றும்‌, கடவுள்‌ கட்டளை என்றும்‌, கடவுளால்‌ சொல்லப்பட்ட வேதங்கள்‌, சாஸ்திரங்கள்‌ ஆகியவைகளின்‌. கட்டளைகள்‌ என்றுமேதான்‌ யதாப்‌ பிரியர்கள்‌ சொல்லுகின்றார்கள்‌. ஆகவே, நாம்‌ இப்போது எதை எதை மாற்றவேண்டுமென்கிறோமோ அவைகள்‌ எல்லாம்‌ கடவுள்‌ செய்ததாகவும்‌, அல்லது கடவுள்‌ தனது அவதாரங்களையோ தூதுவர்‌ களையே செய்யச்‌ சொன்னதாகவுமே சொல்லப்படுவதால்‌-அவைகளைதீ திருத்தவோ அழிக்கவோ புறப்படுவது கடவுள்‌ கட்டளையை மீறின--அல்லது கடவுன்‌ கட்டளையை மறுதீததேயாகும்‌. உதாரணமாக, மகீகளில்‌ நாலு சாதிகள்‌ கடவுளால்‌ உற்பதீதி செய்யப்பட்டன என்று சொல்லப்படுகையில்‌, மேற்படி சாதி ஒழிய வேண்டுமென்றால்‌ அவன்‌ கண்டிப்பாகக்‌ கடவுளை மறுத்தோ, அலட்சியம்‌ செய்தோதான்‌ ஆகவேண்டும்‌. எல்லா மதங்களும்‌ மதக்‌ கொள்கைகளும்‌ கடவுளாலோ;, அவதாரங்களாலோ, கடவுன்‌ தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படுகையில்‌, அம்‌ மத விதீதியாசங்கள்‌ ஒழியவேண்டும்‌ என்றும்‌, மதக்‌ கொள்கைகள்‌ மாற்றப்பட வேண்டுமென்றும்‌ சொல்லும்போது அப்படிச்‌ சொல்பவன்‌ அந்தக்‌ கடவுள்களை, அலட்சியம்‌ செய்தவனேயாகின்றான்‌. அதனால்தான்‌, கிறிஸ்தவர்‌ அல்லாதார்‌ அஞ்ஞானி? என்றும்‌, முகமதியர்‌ அஃலாதவர்‌ * காபிர்‌? என்றும்‌, இந்து அல்லாதார்‌ ¢ மிலேச்சர்‌? என்றும்‌ சொல்லப்படுகின்றனர்‌. அன்றியும்‌, கேவலம்‌-புளுகும்‌, ஆபாசமும்‌ நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக்‌ கொள்கைப்படி நாத்திகம்‌? என்று சொல்லப்படும்போது, சாதியையும்‌ கர்மத்தையும்‌ மற ப்பதை ஏன்‌ நாதீதிகம்‌ என்று சொல்லமாட்டார்கள்‌ ? சாதி உயர்வு-தாழ்வு, செல்வம்‌-தரித்திரம்‌, எசமான்‌-அடிமை ஆகியவைகளுக்குக்‌ கடவுளும்‌ கர்மமும்தான்‌ காரணம்‌ என்று சொல்லுவதானால்‌, பிறகு, மக்களுக்கு விடுதலையும்‌ முன்னேற்றமும்‌ எங்கே இருக்கின்றன 8 கடவுளையும்‌ கர்மத்தையும்‌ ஒழித்தாலொழிய அதற்காக மனிதன்‌ எப்படிப்‌ பாடுபடமுடியும்‌ ₹ மேடும்‌, பன்னமும்‌ கடவுன்‌ செயலானால்‌, மேட்டை வெட்டிப்‌ பன்ளதீதில்‌ போடுவது கடவுள்‌ செயலுக்கு விரோதமான கரரியமேயாகும்‌. மனிதனுக்கு முகதீதில்‌-தலையில்‌ மயிர்‌ முளைப்பது கடவுள்செயலானால்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1109 சவரம்‌ செய்வது கடவுள்‌ செயலுக்கு எதிராகவே ஆகும்‌--அதாவது, ஓரளவு£கு நாதீதிகமே யாகும்‌, அதிலும்‌, செய்யச்‌ செய்ய மறுபடியும்‌ மயிர்‌ முளைப்பதைப்‌ பார்த்துச்‌ சவரம்‌ செய்வது வடிகட்டின நாதீதிகமேயாகும்‌. பிச்சைக்காரனுக்குச்‌ சோறு போடுவதும்‌ நாத்திகமேயாகும்‌. ஏனெனில்‌, கடவுள்‌ பார்த்து ஒருவனை அவனது *கரீமத்‌?திற்காகப்‌ பட்டினி போட்டிருக்கும்போது நாம்‌ அவனுக்குச்‌ சோறுபோடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும்‌. அதாவது, கடவுளை நம்பாத-கடவுன்‌ செயலை நம்பாத செயலேயாகும்‌. இப்படியே பார்தீ துக்கொண்டுபோனால்‌, உலகதீதில்‌ ஆதீதிகர்‌ என்பதாக ஒருவரும்‌ இருக்கமுடியாது. ஆதலால்‌, நம்மைப்‌ பொறுத்தவரை நாம்‌ பல மாறுதல்‌ ஏற்பட விரும்புவ தால்‌ அவை கடைசியாய்‌ நாத்திகமேயாகும்‌. நாத்திகமும்‌ சாத்திர விரோத மம்‌, தர்மதீ திற்கு விரோதமும்‌ செய்யாமல்‌ யாரும்‌, ஒரு சிறிதும்‌ உண்மையான சீர்திருத்தம்‌ செய்ய முடியவே முடியாது. [திருச்சியில்‌, 1-9.-1930-ல்‌ சொற்பொழிவு--1 குடி அரசு? 7-9-19301 உலகதீதிலேயே நாத்திகம்‌ என்று சொல்லப்படும்‌ வார்‌ தீதையானது அனேகமாய்‌ பெரும்பான்மையான மக்களால்‌ வெறுக்கப்படக்‌ கூடியதாக இருந்து வருகின்றது. காரணம்‌ என்னவென்று பார்ப்போமானால்‌, அவ்வார்தீதையில்‌ ¢ கடவுன்‌ என்பது இல்லை? என்கின்ற பொருன்‌ அடங்கி இருப்பதாகக்‌ கொள்வதேயாகும்‌. மக்கள்‌, கடவுள்‌ இல்லை என்று சொல்வதைப்பற்றி மாதீதிரமே ஆதீதிரப்படவும்‌ வெறுப்புக்‌ கொள்ளவும்‌ புரோகிதர்கள்‌, பாதிரிகள்‌, மவுல்விகள்‌, பண்டிதர்கள்‌ என்பவர்‌ களால்‌ கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர, கடவுள்‌ என்பதைப்‌ பற்றிய விளக்கம்‌ யாருகீகும்‌ தெளிவாக்கப்படாமல்‌ இருப்பதோடு, அது மனத்திற்கும்‌ புத்திக்கும்‌ எட்டாதது என்ப தாகவும்‌ அப்படிப்பட்ட ஒன்றை. நம்பித்தான்‌ ஆகவேண்டும்‌ என்றும்‌ நிர்ப்பந்தப்‌ படுத்தப்பட்டு விட்டது. இப்படி இருந்த போதிலும்‌, என்றைய தினம்‌ கடவுள்‌ என்கின்ற வஸ்து உண்டு என்று கற்பிக்கப்பட்டதோ அன்று முதலே கடவுள்‌ இல்லை என்கின்ற வாதமும்‌ ஏற்பட்டு, வெகு காலமாகவே இவ்‌ வாதப்‌ பிரதிவா தம்‌ நடந்து வருவதோடு, நாளது வரை முடிவுபெற முடியாமலே இருந்‌, துவருகின்றது. உதாரணமாக, கடவுள்‌ இல்லை என்று சொல்லும்படியான பல மதங்களும்‌ கூட, உதாரணமாக சூனிய மதம்‌, நிரீஸ்வர மதம்‌, உலகாயத மதம்‌, நாதீதிக மதம்‌ என்பவை போன்ற பல உண்டு என்றாலும்‌, கடவுள்‌ என்பதாக ஒன்று இல்லை என்‌ ன்ற கிளர்ச்சி வலுத்து, அதை அமுலுக்குக்‌ கொண்டுவந்து, மற்றும்‌ உலகமெங்கும்‌ அக்கொள்கையைப்‌ பரப்பப்‌ பிரச்சாரமும்‌ செய்ய ஏற்பாடுகள்‌-சாதாரணமாக, இந்த இருபதாவது நூற்றாண்டில்‌ தான்‌ தைரியமாகவும்‌, பலமாகவும்‌ செய்ய முடிகின்றது. ஏனெனில்‌, இதுவரை உலகத்தில்‌ எந்த நாடும்‌ பெரிதும்‌ புராகிதகீ கூட்டத்தாரின்‌ ஆதிக்கதீதிலும்‌ கடவுள்‌ பிரசீசாரதீதின்பேரால்‌ கவுரவமும்‌ வயிற்றுப்பிழைப்பும்‌ நடத்தி வந்தவர்களின்‌ ஆதிக்கதீதிலும்‌ இருந்து வந்ததாலும்‌, உலகத்திலுள்ள அரசாங்கங்களும்‌ மதத்துடனும்‌ கடவுளுடனும்‌ பிணைக்கப்பட்டே இருந்ததாலும்‌, கடவுளை மறுக்கும்‌ அபிப்பிராயத்திற்கோ, கூட்டத்திற்கோ நாட்டில்‌ ஆதரவு இல்லாமல்‌ போனதோடு, அவர்கள்‌ மீது தோஷமும்‌ கற்பிக்கப்பட்டு, அந்த அபிப்பிராயம்‌ வலுக்க முடியாமலும்‌ பரவ முடியாமலும்‌ போய்விட்டது. ஆனால்‌, இந்த நூற்றாண்டில்‌ கடவுள்‌ மறுப்பு என்பது பாமர மக்களுக்குள்‌ ஒருவித வெறுப்பும்‌ அதிருப்தியும்‌ தரக்கூடியதாபிருந்தாலும்‌, மற்றும்‌ கடவுள்‌ பேரால்‌ அல்லது கடவுள்‌ சம்பந்தமான மோட்சம்‌, சாஸ்திரம்‌, கதை, புராணம்‌, பிரச்சாரம்‌ ஆகியவைகளின்‌ பேரால்‌ வாழ்க்கை ஏற்படுத்தி கொண்டவர்களுக்கு மிகுதியும்‌ ஆத்திரத்தைக்‌ கொடுக்கக்கூடியதாயிருந்தாலும்‌ நடுவு இலையுள்ள அறிஞர்களால்‌ இவ்‌ விஷயம்‌ ஆராய்ச்சி செய்யப்படத்‌ தொடங்கி ஆ சலோசிக்கப்பட்டு வருவதும்‌, அவ்வித www.thamizham.net - Free £ book 14௦ 3031 1110 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ அபிப்பிராயகீகாரர்களைப்‌ பெரிதும்‌ அறிவாளிகள்‌ என்றும்‌, ஞானவான்கள்‌ என்றும்‌ சொல்லுவதும்‌ மதிட்பதுமாய்‌ இருந்து வருகின்றன. மேல்நாட்டு அறிவாளிகள்‌ என்று சொல்லப்படபவர்களுக்குள்‌ இன்றும்‌ அனேகர்கள்‌ நாத்திகரகளாகதீதான்‌. இருந்து வருகிறார்கள்‌, ௮ தமாதீதிரமல்லாமல்‌, இங்கிலாந்து, அமெரிக்க ஜெர்மனி, ரஷ்யா சைனா முதலாகிய இடங்களின்‌ முக்கிய பட்டணங்களில்‌ கடவுளை நிலைப்படுத்தும்‌ மதங்களை எதிர்ச்கவும்‌ நாதீதிகத்தைப்‌ பரப்பவும்‌ என்றே பல ஸ்தாபனங்கள்‌ ஏற்படுத்தப்‌ பட்டு, அவற்றிற்காகப்‌ பத்திரிகைகள்‌, துண்டுப்‌ பிரசுரங்கன்‌ முதலியவைகள்‌ வெளியிடப்‌ பட்டும்‌ வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில்‌ நியூயார்க்‌ என்கின்ற பட்டணத்தில்‌ ¢ நாத்திகத்தை உலக மெங்கும்‌ வியாபிக்கச்‌ செய்வதற்கான சங்கம்‌? என்னும்‌ பெயரால்‌ ஒரு ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்து, அதன்மூலம்‌ 3, 4 வருடங்களாக நல்ல வேலைகள்‌ மும்முரமாகச்‌ செய்யப்‌ பட்டுவருகின்‌ றன. அங்கிருந்து நமக்கு அனுப்பப்பட்டிருக்கும்‌ அறிக்கையின்படி, அச்‌ சங்க மானது பிரசீசாரதீதிற்காகவும்‌, துண்டுப்‌ பிரசுர வினியோகதீதிற்காகவும்‌ வருடம்‌ ஒன்றகீகு 50 ஆயிரம்‌ ரூபாய்க்கு மேலாகவே செலவு செய்து வந்திருக்கின்றது. இப்போது இந்த வருடத்தில்‌ 6 கிறிஸ்துவ மதம்‌ வெடிப்புக்‌ கண்டுவிட்டது --என்கின்ற பேராலும்‌ * மதம்‌ என்றால்‌ என்ன1 கடவுள்‌ என்றால்‌ என்ன? கடவுன்‌ இல்லாத முற்‌3பாக்கு? ஆய இவை போன்ற தலைப்புக்களிலும்‌ பல இலட்சக்‌ கணக்கான துண்டுப்‌ பிரசுரங்கள்‌ அச்சிட்டு வெளியாக்கப்பட்டிருக்கின்‌றன. சங்க அங்கத்தினர்கள்‌ வருடத்திற்கு வருடம்‌ 100-க்கு 50 வீதம்‌ உயர்‌ நீதுகொண்டு வருவதுடன்‌ பல இடங்களில்‌ கிளை ஸ்தாபனங்கள்‌ ஏற்பட்டு வெளிநாடுகளிலும்கூட பிரச்சாரங்கள்‌ செய்யப்பட்‌ வருவதாய்க்‌ காணப்படுகின்றது. வேறு மொழிகள்மூலமும்‌ சைனா முதலிய இடங்களுக்கு ஆட்களை அனுப்பி இதுபோன்ற பிரச்சாரமும்‌ நடைபெறுவதுடன்‌, ஒவ்வொரு கனவானும்‌ ஒவ்வொரு வேலையை ஏற்றுக்‌ கொண்டுள்ளதால்‌ திருப்தி தரத்தக்க அளவு பிரச்‌ சாரம்‌ செய்யஃபடு9றது. இதன்‌. தலைமைக்‌ காரியாலயம்‌ நியூயார்க்‌ 8ல்‌ 14-வது வீதி 307-E என்ற கட்டிடத்தில்‌ நிறுவப்‌ பட்டிருக்கிறது. இதில்‌ சேரவிரும்பும்‌ அங்கதீதினருக்கு வருட சந்தா ஒரு டாலர்‌ அதாவது மூன்று ரூபாயாகும்‌. இப்படியே லண்டனிலும்‌ ¢ தாராள நினைப்புகீகாரரீகள்‌ சங்கம்‌, ¢ அறிவாளிகளின்‌: சங்கம்‌, 6 உண்மை நாடுவோர்‌ சங்கம்‌? என்றும்‌ பல சங்கங்கள்‌ ஏற்படுத்கப்பட்டு அது போலவே பிரச்சாரமும்‌ செய்யப்பட்டு வருகின்ற து. இச்‌ சங்கங்களின்‌ வயது 40, 50-க்கு3மல்‌ ஆயிருந்த போ திலும்‌, அவைகள்‌ இப்போதுதான்‌ மிக்க பிரபலமாயும்‌ செல்வாக்காகவும்‌ நடைபெற்று வருகின்‌ றன என்று அறிவிக்கப்படுகின்றது. இவற்றில்‌ கலந்துள்ள நபர்களில்‌ உலகத்திலேயே மிக்க அறிவாளிகள்‌, இராஜ தநீதிரிகள்‌ என்று சொல்லப்பட்ட பெரியார்கள்‌ அதிகமாக இருக்‌ £றார்கள்‌, ஆகவே, நாத்திகப்‌ பிரச்சாரம்‌ உலகில்‌ சகஜமாகவும்‌ செல்வாக்காகவும்‌ நடைபெறுகின்றது இனி; அதனால்‌ ஏற்படும்‌ நன்மை என்ன, கெடுதி என்ன எனப்‌ பார்ப்போம்‌. சாதாரணமாக; மனிதன்‌ நாதீதிகனாயிருந்தால்‌ ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்க மாட்டான்‌ என்றும்‌, திருட்டு, பொய்‌, மோசம்‌, ஒருவன்‌ சொத்தை ஒருவன்‌ அபகரித்தல்‌, முறை தவறிக்‌ கலதீதல்‌, மக்களை இம்சிதீதல்‌ முதலாகிய காரியங்கள்‌ செய்யப்‌ பயப்பட மாட்டான்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. இதைப்பற்றிக்‌ கவனிக்குமூன்‌, உண்மையான கருத்தில்‌ இந்தக்‌ கடவுன்‌ நம்பிக்கை உள்ள மனிதன்‌ எவனாவது உலகில்‌ இருக்கிறானா என முதலில்‌ யோசிப்போம்‌. கடவுள்‌ என்கின்ற பததீதிற்கு மக்களில்‌ பெரும்பான்மையோர்‌ கருதிக்‌ கொண் டிருக்கும்‌ கருத்து என்னவெனில்‌--சர்வ சக்தியும்‌, அதாவது ஜீவராசிகள்‌ புல்‌, பூண்டு, தாவரங்கன்‌ யாவும்‌ தனது இச்சையால்‌ உண்டாக்கப்பட்டு, தனது சக்தியால்‌ இயங்கச்‌ www.thamizham.net - Free £ book No 3031 தத்துவம்‌ 13111 செய்கின்றதானதும்‌, எங்கும்‌ வியாபிதீதிருப்பதும்‌, சர்வ ஜீவராசிகளையும்‌ இரட்சிக்கும்‌ தன்மையுடையதானதும்‌, எல்லாவற்றையும்‌ சமமாய்ப்‌ பார்ப்பதானதும்‌-சுருக்கமாய்ச்‌ சொல்வதானால்‌ அவனன்றி ஓர்‌ அணுவும்‌ அசையாததான சக்தியுடையதானதும்‌ ஆன ஒரு கடவுள்‌ உண்டு என்று கருதிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இது சரியா, தவறா என்று யோசிப்பதற்கு முன்னும்‌, இப்படி மக்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருப்பதானது உலகத்திற்கு நன்மையா, தீமையா என்று முடிவு செய்வதற்கு முன்னும்‌, இந்தப்படி உலகத்தில்‌ எந்த மனிதனாவது உண்மையில்‌ நம்பிக்கொண்டிருகீ கின்‌ றானா, அந்தப்படி நம்பி இருப்பதற்குத்‌ தகுந்தபடி அவனது மனம்‌, மெய்‌, மொழி ஆகியவைகளால்‌ ஏற்படும்‌ நடவடிக்கைகள்‌ காணப்படு கன்‌ றனவா, அதாவது எந்த மனித னுடைய நடவடிக்கையில்‌ இருந்தாவது மேற்கண்ட சகீதியும்‌ குணமும்‌ கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின்‌ நடவடிக்கைகள்‌ இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா என்பதை யோசிப்‌போடானால்‌, இதுவரை ஒரு மனிதனையாவது அம்‌ மாதிரி நம்பிக்கையின்‌ மீது நடக்கின்றான்‌ என்பதாகக்‌ கண்டுபிடிக்க முடியவில்லை என்றும்‌, அந்தப்படி ஒரு கடவுள்‌ இருப்பதாக ஒரு மனிதன்‌ கூட தனது வாழ்க்கையில்‌ எண்ணி இருக்க முடிவதில்லை என்றுந்தான்‌ சொல்லவேண்டி இருக்கின்றது. இப்படிச்‌ சொல்வதான து, சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல்‌, கடவுள்‌: பிரசீசாரம்‌ செய்பவரீகளிலாவது, கடவுளைக்‌ கண்டவர்களாகச்‌ சொல்லப்பட்டவர்களிலாவது, கடவுளுக்குச்‌ சமமாகக்‌ கருதும்‌ சமயாசீசாரிகள்‌, மதத்தைக்‌ காப்பாற்றும்‌ ஸ்தாபனத்‌ீ தலைவர்கள்‌ முதலியவர்களுக்குள்ளாவது, நாத்திகத்தைக்‌ கண்டு பயந்து நடுநடுங்கித்‌ இயரப்பட்டுக்‌ கண்ணீர்‌ வடிக்கும்‌ ஆதீதிகப்‌ பண்டிதர்கள்‌, சாஸ்திரிகள்‌, வைதீகர்கள்‌ முதலாகியவர்களுக்‌ குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்ததாகவோ இருப்பதாகவோ சொல்லுவதற்கில்லை: ஒவ்வொரு மனிதனும்‌ தன்னை ஒருதனி மனிதனென்றும்‌, தனக்காகதி 6 தான்‌? செய்யவேண்டிய காரியம்‌ பல உண்டு என்றும்‌, அவற்றைத்‌ தினமும்‌ செய்வ தாகவும்‌--அவனவன்‌ இஷ்டப்‌ பட்டபடி செய்து கொண்டும்‌, அதனதன்‌ பலனை அடைந்து கொண்டும்‌, அதுபோலவே மற்றவர்‌ களையும்‌ செய்யும்படி தூண்டிக்கொண்டும்‌, மற்றவர்கள்‌ செய்வதில்‌ குணதோஷல்‌ கற்பிதீ துச்‌ சொல்லிக்கொண்டும்‌, அதற்காக விருப்பு-வெறுப்புக்‌ காட்டிக்கொண்டும்‌, மகிழ்சீசிடதுக்கம்‌ அடைந்து கொண்டுந்தான்‌ இருக்கின்‌ றானே ஒழிய கடவுளின்‌ சர்வ சக்தியைப்‌ பற்றியோ, சர்வ வியாபகத்தைப்‌ பற்றியோ, சர்வ தயாபரதி தப்பற்றியோ, சர்வ சமதீதுவத்தைப்‌ பற்றியோ நம்பி இருப்பவன்‌ ஒருவனும்‌ இல்லை. ஆகவே, இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை என்றும்‌, இருப்பதாகவும்‌ யாரும்‌ நம்பி இருக்கவில்லை என்றும்தான்‌ முடிவுகட்ட வேண்டியதோடல்லாமல்‌, அப்படி ஒன்று இருப்பதாகக்‌ கற்பிதீ.து நம்பச்‌ செய்வதனாலாகிலும்‌ காரியத்தில்‌, அதாவது கடவுள்‌ நம்பிக்கையினால்‌ ஏற்படக்கூடும்‌ என்று கருதுகின்ற முன்சொன்ன காரியங்களாவது | நடக்கின்றதா என்று பார்‌ தீதால்‌-திருடாதவன்‌, பொய்‌ சொல்லாதவன்‌, பிறர்‌ பொருளை வஞ்சிக்காதவன்‌, முறைதவறிக்‌ கலவி செய்யாதவன்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ தராதவன்‌: முதலிய காரியங்கள்‌ செய்யாதவன்‌ ஒருவனைக்கூடக்‌ காணமுடிவதில்லை, அன்றியும்‌, திருட்டு, வஞ்சகம்‌, பொய்‌, முறைதவறிக்‌ கலத்தல்‌ முதலாகிய காரியங்கள்‌ எவை என்று தீர்மானிப்பதே கஷ்டமான காரியமாயிருக்கின்றது என்றாலும்‌, மக்கள்‌ எதை, எதை மேற்கண்டமாதிரி குணங்கள்‌ என்று கரு.துகின்றார்களோ அதைச்‌ செய்யாமலிருக்க இந்த எண்ணத்தையும்‌ நம்பிக்கையையும்‌ உண்டாக்குவதாலோ நிலை நிறுத்துவதாலோ முடி கின்றதா i - இது ஒருபுறமிருக்க, மேற்கண்ட--அதாவது கடவுள்‌ என்பதற்குக்‌ கற்பிக்கப்பட்ட குணங்கன்‌ உடையதான ஒரு கடவுள்‌ என்பது இல்லை என்றும்‌, அல்லது இருக்க முடியாது என்றும்‌ கரு துகின்‌றவர்களிடத்திலாவது- அந்தப்படி கருதிக்கொண்டிருக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1112 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ கின்றார்கள்‌ என்று பிறரால்‌ கருகப்படுகின்றவர்‌ களிடதீதிலாவது-முன்‌ சொல்லப்பட்ட திநட்டு, பொய்‌, வஞ்சகம்‌ இம்சிப்பது முதலிய குணங்கள்‌ கடவுள்‌ நம்பிக்கைக்காரர்‌: களைவிட அதிகமாக இருட்ப தாகவாவ.து; அல்லது பிறமக்களுக்கு ஆஸ்திகர்களைப்போன்ற நன்மை செய்யவில்லை என்றாவது சொல்ல முடியுமா என்று பார்தீதால்‌, அதுவும்‌ முடியாத காரியமாய்தீதான்‌ காணப்படுகின்‌ ற 8த ஒழிய வேறில்லை. மக்களில்‌ பலருக்கு ஆராய்ச்சியும்‌, முயற்சியும்‌, பகுத்தறிவும்‌ கல்லாத சாரணதீதால்‌ கடவுள்‌ என்னும்‌ விஷயத்தில்‌ மேற்கண்ட விதமான காரியங்களைப்‌ பற்றியெல்லாம்‌ யோசனைசெய்து பார்ப்பதை விட்டுவிட்டு, தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்‌ கொண்டு, ¢ கடவுள்‌ உண்டா? இல்லையா 1 என்று கேட்பதும்‌, ¢ கடவுளை ஒப்புக்கொள்ளு கின்றாயா£ இல்லையா 13 என்று கேட்பதும்‌, * கடவுள்‌ இல்லாமலிருந்தால்‌ மக்களில்‌ ஒருவருக்கொருவர்‌ ஏன்‌ வித்தியாசமாக இருக்கவேண்டும்‌ ? ஒருவர்‌ பணக்காரனாகவும்‌ ஒருவர்‌ ஏழையாகவும்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ 8 ஒருவர்‌ கூன்‌, குருடு, நொண்டி, குஷ்டரோகியாகவும்‌ ) ஒருவன்‌ திடகாதீதிர உருவமாகவும்‌ ஏன்‌ இருக்கவேண்டும்‌ ? ஒருவனுக்கு ஏன்‌ பத்துப்‌ பின்ளைகள்‌? ஒருவனுக்கு ஏன்‌ பிள்ளை இல்லை? இருவர்‌ ஒரே காலதீதில்‌ தனித்தனியாக வியாபாரம்‌ ஆரம்பித்தால்‌ ஒருவர்‌ இலாபமும்‌ இன்னொருவர்‌ நட்டமும்‌ ஏன்‌ அடையவேண்டும்‌ ₹--என்பன போன்ற கேன்விகள்‌ கேட்டு, அதன்மூலம்‌ மேற்கண்ட குணங்கள்‌ கொண்ட கடவுள்‌ என்பதாக ஒன்று உண்டென்றும்‌ மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள்‌. இம்‌ மாதிரிக்‌ கேள்விக்காரர்களைப்‌ பகுத்தறிவு இல்லாதவர்கள்‌ என்றுதான்‌ சொல்லவேண்டு2ம தவிர வேறு ஒன்றும்‌ சொல்லமுடிவதில்லை. இவற்றிற்கெல்லாம்‌ ஒரே விடை-அதாவது, இம்‌ மாதிரியாகத்‌ தோற்றங்களில்‌ ஒன்றுக்‌ கொன்று வித்தியாசங்கள்‌ காணப்படுவதாலேயே கடவுள்‌ என்பதாக ஒன்று இல்லை என்று சொல்லிவிடலாம்‌. எப்படியெனில்‌, சரீவ வல்லமையுடைய கடவுள்‌ ஒருவர்‌ இருந்து, சர்வதீதிலும்‌ புகுநீக சர்வதீதையும்‌ ஒன்று போலப்‌ பார்ப்பவராயிருந்தால்‌ சர்வத்தையும்‌ ஒன்று போலவே சிருஷ்டிக்கலா மல்லவா? வேறு வேறாகக்‌ காணப்படுவதாலயே சர்வ சக்தியும்‌, சர்வ வியாபகமும்‌, சமத்துவமும்‌ கொண்ட கடவுள்‌ என்பதாக ஒன்றும்‌ இல்லைஃ ஏனெனில்‌, நொண்டிக்கும்‌, முடவனுக்கும்‌, நல்லவனுக்கும்‌, கஷ்டப்படுபவனுக்கும்‌ கஷ்டப்படுத்‌ துகிறவனுக்கும்‌ கடவுளே காரணஸ்தனாயிருந்தால்‌ கடவுளை சர்வ தயாபரதீ துவமுடையவனென்றும்‌ பாரபட்சமில்லாத சர்வசமதீ,துவ குணமுடையவனென்றும்‌ எப்படிச்‌ சொல்லமுடியும்‌? இந்தப்படி பகுதீதறிவைக்கொண்டு சொல்லக்கூடிய சமாதானங்கள்‌ ஒருபுறமிருக்க, ஆராய்ச்சியைக்‌ கொண்டு அறியக்கூடிய சமாதானங்களைப்‌ பற்றிச்‌ சற்று கவனிப்போம்‌. ஒரே கையால்‌ கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய்வைதீது, ஒவ்வொரு தடவை அள்ளிய அரிசியைத்‌ தனித்தனியாய்‌ எண்ணிப்‌ பார்த்தால்‌, அவற்றுள்‌ ஒன்றுக்கொன்று எண்ணிக்கை விதீதியாசமாயிருப்பானேன்‌ அதே மனிதன்‌ அதே கையால்‌ அதே நிமிஷத்தில்‌ அதே குவியலிலிருந்து அன்ளினவைகள்‌ ஏன்‌ விதீதியாசப்படுகின்றன ? ஒரே பூமியில்‌ ஒரே வினாடியில்‌ விதைக்கும்‌ ஒரேமாதிரி விதைகள்‌ சில முளைத்தும்‌, சில முளைக்காமலும்‌, முளைத்தனவைகளில்‌ சில வளராமல்‌ கூழையாகவும்‌, சில அதிக உயரமாகவும்‌, சில அதிக மணிகள்‌ கொண்டவையாகவும்‌, சில குறைவான மணிகள்‌ கொண்டவையாகவும்‌, சில முளைதீது நன்றாய்த்‌ தழைதீதும்‌ ஒரு மணிகூட இல்லாத வெறும்‌ கதிராகவும்‌ இருக்கக்‌ காரணம்‌ என்ன? ஒரு வினாடியில்‌ ஒரு பூமியில்‌ நட்டசெடிகன்‌ ஒன்று பல கிளைகளுடனும்‌, ஒன்று சொற்பக்‌ கிளைகளுடனும்‌ வளருவதும்‌, ஒன்று பதினாயிரக்‌ கணக்காகக்‌ காய்ப்பதும்‌, ஒன்று நூற்றுக்‌ கணக்காகக்‌ காய்ப்பதும்‌, ஒன்று பூவிட்டு எல்லாம்‌ கருகி உதிர்ந்.துவிடுவதும்‌, ஒன்று பூவிடாமலும்‌ பிஞ்சுவிடாமலும்‌ வறடா www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1118 யிருப்பதும்‌ என்ன காரணம்‌? கடவுள்‌ ஒருவர்‌ இருந்தால்‌ இவைகள்‌ எல்லாம்‌ அதனதன்‌. இனத்தில்‌ ஏன்‌ ஒன்றுபோல்‌ இருக்கக்கூடாது? ஒரு சமயம்‌ கடவுள்‌ இந்தப்படி செய்திருப்பாரானால்‌ அம்‌ மரம்‌, செடி, தானியம்‌ முதலானவைகள்‌ இப்படிப்‌ பலன்‌ அடைவதற்குக்‌ காரணம்‌ என்ன? என்பதுபோன்ற கேள்வி களுக்கு எது சமாதானமோ அதுதான்‌ மனிதர்‌ களைப்‌ பற்றிய - மனிதர்‌ சம்பந்தமான கேள்விகளுக்குச்‌ சமாதானம்‌ என்பது தானாகவே புலப்படும்‌. (குடி அரசு -தலையங்கம்‌--28-9-1930] கடவுள்‌, மதம்‌, ஆதீமா, நான்‌, பாவ-புண்ணியம்‌, மோட்சம்‌, நரகம்‌, ஒழுக்கம்‌ என்பனவெல்லாம்‌ மனிதனால்‌ கற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டுக்‌ கதையே யொழிய வேறல்ல. இன்னும்‌ தெளிவாகக்‌ கூறவேண்டுமானால்‌ ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒருசில சுயநலக்‌ கூட்டதீதார்‌-ஊரார்‌ உழைப்பில்‌ உடல்நோவாது உண்டு வாழவேண்டுமென்று விரும்பும்‌ மனிதப்‌ புல்லுருவிகள்‌-புரோகிதர்கள்‌ இத்‌ தகைய கற்பனைகளைச்‌ செய்து மக்களை மூடர்களாக்கி, அறிவிற்குப்‌ பகைவர்களாக்கி, தன்னம்பிக்கையை இழக்கும்படி செய்து, இவ்வுலக வாழ்க்கையின்‌ இன்பத்தை மக்கள்‌ வெறுக்கும்படி தூண்டி, தாங்கள்‌ இவ்வுலக வாழ்க்கையில்‌ பூரண இன்பம்‌ குய்தீதுக்கொண்டு, மற்ற மக்களுக்கு மறு உலக வாழ்க்கையில்‌ மோகங்கொள்ளும்பட செய்துவிட்டனர்‌. எனவே, பகுதீதறிவுவா திகள்‌ மனிதஜீவ அபிமானிகள்‌ தங்கள்‌ பகுத்தறிவினால்‌, சுயநலப்‌ புராகிதர்களால்‌ கட்டப்பட்ட இந்த மறு உலக நம்பிக்கைகளைத்‌ தகர்த்தெறிந்து, மக்களை இவ்வுலக வாழ்க்கையில்‌ பற்றுள்ளவ? களாகச்‌ செய்யவேண்டு3்‌. விஞ்ஞான அறிவு நாளடைவில்‌, லோகாயதவாதி களுக்கு (Materialist) அனுகூலமாக வளர்ந்துகொண்டே வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி என்னும்‌ சம்மட்டியினால்‌ கடவுள்‌, ஆதீமா, மோட்சம்‌, நரகம்‌, பாவ-புண்ணியம்‌, ஒழுக்கம்‌ என்னும்‌ கற்பனை கள்‌ நிர்தீதூளி செய்யப்பட்டுக்கொண்‌ டேதான்‌ வருகின்றன. ஆனாலும்‌, நாம்‌ ஒவ்வொருவரும்‌ இவ்விஞ்ஞான முறையைக்‌ கைக்கொண்டு சுயநலப்‌ புரோகிதர்களால்‌ நிறுவட்பட்ட மறு உலக வாழ்க்கையின்‌ நம்பிக்கையை விரைவில்‌ உலகைவிட்டோட்டி இவ்வுலக வாழ்க்கையை இன்பமாய்ச்‌ செய்ய முயலுவோமாக ! [6 குடிஅரசு -கட்டுரை--11-6-1949] பெரியோர்களே ! தோழர்களே 1 மனிதனுக்கு ஆறறிவு இருக்கின்றது. பகுத்தறிவுவாதி என்றும்‌, மனித இலட்சணம்‌ உடையவன்‌ என்றும்‌ கூறவேண்டுமானால்‌ அவன்‌ புத்தியை ஆராய்ச்சித்‌ துறையிலேயே செலுத்தவேண்டும்‌. அவன்தான்‌ பகுத்தறிவுவாதி. £நாதீதிகோ வேதநிந்தகா? என்று வடமொழி கூறுகிறது. அதாவது, புராணத்‌ தையும்‌, சாஸ்திரத்தையும்‌, வேதத்தையும்‌, மனுதமம்‌, வருணாசிரமம்‌ முதலியவை களையும்‌ குறை சொல்லுபவன்‌--தர்கீகம்‌ செய்பவன்‌ ¢ நாத்திகன்‌ £ என்று எழுதி வைக்கப்‌ பட்டு இருக்கின்றது [மீயிலையில்‌, 3-9-1951-ல்‌ சொற்பொழிவு! விடுதலை ? 12.9.1951) 1686—140 www.thamizham.net - Free E book 14௦ 3031 1114 2. பருந்தறிவு 1. பகுத்தறிவு பெரியோர்களே ! தோழர்களே 1 பகுத்தறிவு என்றால்‌ என்ன 8 ஜீவப்‌ பிராணிகளின்‌ சிந்தனா சக்தியும்‌ சிந்திப்பின்‌ உணர்ச்சியுந்தான்‌ அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்‌ சிந்திக்கும்‌ தன்மையின்‌ கூர்மை யைப்‌ பகுத்தறிவு என்று சொல்லலாம்‌. ஆனால்‌, அப்‌ பகுத்தறிவைப்‌ பெரிதும்‌ மனிதனுடைய சிந்திக்கும்‌ தன்மைக்கும்‌ சிந்திப்பின்‌ கூர்மைக்குமே குறிப்பிட்டுச்‌ சொல்லப்படுகின்ற துஃ உலகில்‌ உள்ள பல கோடி ஜீவராசிகளில்‌ மனிதன்‌ என்கின்ற ஜீவப்‌ பிராணியும்‌. ஒன்று என்பது மக்கன்‌ யாவரும்‌ ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகும்‌. மரம்‌, புல்‌, பூண்டு, செடி, கொடி ஆகியவைகளும்‌ ஜீவ வர்க்கத்தில்‌ சேர்ந்தவை என்பது நவீன ஆராய்ச்சியால்‌ மெய்ப்பித்துக்‌ காட்டப்பட்டுள்ளது. மற்றும்‌ மண்‌, கல்‌, மலை ஆகிப அ?சதனப்‌ பொருள்கள்கூட வளருவதும்‌ சேதிக்கப்பட்டால்‌ வளர்ச்சி தடைப்படுவதும்‌ முதலிய கரரணங்களால்‌ அவைகளின்‌ இயங்குதல்கள்‌ விளங்குகின்றன. இப்படிப்பட்ட காரியங்கள்‌ மனிதன்‌ நேரே காணமுடியாமலும்‌, மிக மிக மந்த கதியிலும்‌ இயந்திரங்கள்‌ மூலமல்லாமல்‌ அறியமுடியாததாகவும்‌ இருப்பதால்‌ மக்கள்‌: அவற்றைச்‌ சுலபத்தில்‌ ஒப்புக்கொள்ள முடியாதவர்களாக இருந்துவருகிறார்கள்‌. அவ்‌ வறிவின்‌ மேலான தன்மைகீகுப்‌ பகுதீதறிவு என்ற பெயர்‌ கொடுத்து--அது மனிதனுக்கே உரித்தானது என்றும்‌, அதனால3ய மனிதன்‌ ஜீவப்‌ பிராணிகனிலெல்லாம்‌ உயர்‌ ந்தவன்‌ என்றும்‌ சொல்லுகிறார்கள்‌. அறிவின்‌ தன்மையும்‌ அவற்றின்‌ படிகளும்‌ எப்படி இருந்தாலும்‌ பரிணாம வாதக்‌ கொள்கைப்படி (அதாவது, ஒன்று மற்று ஒன்றாக மாறிக்கொண்டிருப்பத) பிரபஞ்சத்‌ தோற்றங்கள்‌ எல்லாம்‌-ஒவ்வொரு வஸ்‌ வின்‌ ஆரம்பத்‌ தோற்றமே இன்றிருப்பது. போன்றல்ல. ஒன்னு மற்றொன்றாக மாறி மாறி வ நவதாலேயே பல்‌ 8வறு தோற்றங்கள்‌. காணப்பட்டு, நானடைவில்‌ ஜீவப்‌ பிராணிகன்‌ என்று சொல்லப்படுவனவாகக்‌ காணப்‌ 'படுகின்‌ றன ஜீவராசிகளில்‌ ஊர்வனவற்றில்‌ பாம்புக்கு இல்லாத கால்கள்‌ எப்படி பல்லி, ஓணான்‌, பாம்பரணை முதலியவைகளுக்கு இருக்கின்றாவோ அதுபோலும்‌--நாய்‌, கமுதைகளுச்கு இல்லாத கை சவுகரியங்கள்‌, விரல்கன்‌ முதலியவை எப்படிக்‌ குரங்கு, தேவாங்கு முதலிய சாதிகளுக்கு கிருக்கின்றனவோ அதுபோலும்‌--மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின்‌ சிந்தனாசக்தி மனிதனுக்கு இருக்கின்றது--என்கின்ற அளவு வித்தியாசம்‌ மாத்திர ந்தான்‌ உண்டே தவிர, மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏ.தும்‌ சொல்லுவதற்கில்லை. ஏனெனில்‌, மனிதனுக்கு இல்லாத பல சக்திகள்‌, விசசஷ குணங்கள்‌ முதலியவை மற்ற ஜீவராசிகளிடம்‌ இருப்பதைக்‌ காணலாம்‌. அதுபோலவே, மற்ற ஜீவராசிகளிடம்‌ இல்லாத சில கெட்ட குணங்களும்‌, பல அசவு கரியங்களும்‌, *ன்பங்களும்‌, கவலைகளும்‌, திருப்திஅற்ற தன்மைகளும்‌ பகுதீதறிவுடைய மனிதனிடத்தில்‌ இருப்பதையும்‌ காணலாம்‌. உதாரணமாக; மனிதனுடைய ஆசை எல்லையநீறது$ அவசிய மில்லாதது) வெறும்‌ கற்பனையையும்‌, மூடநம்பிக்கையையும்‌, பொறாமையையும்‌ பலவீனத்தையும்‌ அஸ்தி ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1115 வாரமாகக்‌ கொண்டதாகும்‌) தனது தேவைக்கு மேலும்‌ எவ்வளவு இருந்தாலும்‌ தனது பின்‌ சந்ததிக்கும்‌, தான்‌ இறந்த பிறகு மோட்சலோகம்‌ என்பதில்‌ பயன்படவும்‌ வேண்டும்‌ என்கின்ற அவிவேகமான ஆசையுமாகும்‌. உதாரணமாக, நாடுபிடித்து ஆட்சிசெய்ய வேண்டும்‌ என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும்‌, உலகமே அவனது ஏக சகீகராதிபதீதிய சர்வாதிகாரதி தன்மைக்குக்கீழ்‌ வந்து விட்டாலும்கூட மேல்‌ லோகமும்‌ கீழ்‌ லோகமும்‌ தனது ஆட்சிக்குள்‌ வந்தால்‌ நல்லது என்று முட்டான்‌ தனமான கற்பனைக்கு அடிமையாகி, திருப்தியற்றவனா கிறான்‌. எவ்வளவு பூமி இருந்தாலும்‌, சமுத்திரப்‌ பரப்பெல்லாம்‌ பூமியாகி அதற்கும்‌ தானே மிராசுதாரனாக இருந்தால்‌ நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி, குறைபாட்டுக்குக்‌ கட்டுப்பட்டவனாகிறான்‌. அதுபோலவே, செல்வம்‌ எவ்வளவுதான்‌ கோடிகீகணக்காக இருந்தாலும்‌, எண்ணிக்‌ கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ அதுபோல்‌, எவ்வளவு பெருகீனாலும்‌ மேலும்‌ மேலும்‌ சொத்து சேரவேண்டும்‌ என்‌ ன்ற ஆசையிலிருநீது விலக முடியாதவனாகி, போத வில்லையே, போதவில்லையே என்கின்ற தரித்திரத்திற்கு அடிமை ஆகிறான்‌, இந்தக்‌ குணங்களைப்‌ பகுதீதறிவில்லாத ஜீவராசிகள்‌ என்பவைகளிடம்‌ காணமுடியாது: தன்‌ பிள்ளை குட்டி, பேதீது, பிதிர்‌ ஆகிய பின்‌ சந்ததிகளைப்‌ பற்றிய முட்டாள்‌ தனமான கவலை ப குதீதறிவுள்ள மனிதனுக்குத்‌ தான்‌ இருக்கிற3த ஒழிய, பரூத்தறிவில்லாத வைகளுக்கு இல்லை. அனேக ஜீவராசிகள்‌ தம்‌ பிள்ளை குட்டிகளைக்‌ கவனிப்ப3த இல்லை; அனேக ஜீவராசிகள்‌ தம்‌ பிள்ளை குட்டிகள்‌ தனிய இரை தேடிக்கொள்ளும்‌ பருவம்‌ வந்தவுடன்‌ வெறுதீதுதீ தன்னி விடுகின்றன. எவையும்‌ அவைகளைப்பற்திச்‌ சதா கவலைப்‌ படுவதில்லை. பகுதீதறிவில்லாத எந்த ஜீவராசியும்‌ தன்‌ இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தலீ இனத்தைக்‌ கீழ்மைப்‌ படுத்‌ துவதில்லை;$ தன்‌ இனத்தின்‌ உழைப்பாலேயே வாழ்வதில்லை $ தன்‌ இனத்தின்மிது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன்‌ தன்‌ இனத்தைக்‌ கீழ்மைப்படுத்‌துகிறான்‌. வாகனமாய்‌ உபயோகப்படுத்‌ தகிறான்‌. சேரம்பேறியாயிருந்து தன்‌ குலத்தின்‌ உழைப்பிலேயே வாழ்‌ கிறான்‌. பாடுபட ஒரு கூட்டமாகவும்‌-பயன்‌ அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும்‌ பிரிந்து கொள்ளுகிறான்‌. உதாரணமாக, நாய்‌, கமுதை, பன்றி என்கின்ற ¢ இழிவான ? மிருகக்‌ கூட்டத்தில்‌, பார்ப்பன சாதி, பறை சாதி, நாயுடு சாதி, முதலி சாதி என்கின்ற பிரிவுகள்‌ கிடையாது: ஆனால்‌, மனித வர்க்கத்தில்‌ தன்‌ இனத்தையே பிரித்து கிழிவுபடுத்தப்படுகின்‌ றது மனிதன்மீ.து மனிதன்‌ சவாரி செய்கிறான்‌. மனிதன்‌ உழைப்பை மனிதன்‌ கொள்ளை கொள்கிறான்‌. மனிதனை மனிதன்‌ வஞ்சிக்‌ றான்‌ பகுத்தறிவின்‌ பயன்‌ இதுவாயிருக்கும்போது, பகுத்தறிவு கிருப்பதாலேயே மனிதன்‌ மேன்மையானவன்‌ என்று எப்படிச்‌ சொல்ல முடியும்‌ பொதுவாகவே, மனித வாழ்க்கையின்‌ தன்மை மிக்க குறைபாடும்‌ கவலையும்‌ அதிருப்தியும்‌ கொண்டதாகவே இருக்கறது. இந்தக்‌ குணம்‌ எல்லா தேசத்திலும்‌ எல்லா மனிதர்களிடையும்‌ அரசன்‌, குடிகள்‌, பணக்காரன்‌, ஏழை, மேல்‌ சாதிக்காரன்‌, கீழ்‌ சாதிக்‌ காரன்‌, முதலாளி, தொழிலாளி என்கின்ற பெதங்களாக, தாரதம்மியங்களாக இல்லாமல்‌ எல்லா மக்களிடமுமே இருந்‌ துவரு8ன்‌ றது, அறிவில்லாதவன்‌ கஷ்டப்படு8றான்‌ என்று சொல்வதற்கு இல்லாமல்‌, பகுத்தறிவு என்பது திருந்தும்‌ மனிதன்‌ ஏன்‌: இத்தன்மையில்‌ இருக்கவேண்டும்‌ ₹ மனிதன்‌ காட்டு ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1116 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ மிராண்டியாயும்‌ சமூக வாழ்க்கை இல்லாமலும்‌ காட்டில்‌ தனிதீதனியாய்த்‌ திரியும்போது இல்லாத கஷ்டங்கள்‌-கெட்ட எண்ணங்கள்‌ எல்லாம்‌, சமூக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக்கின்‌ றவனாகவும்‌ உடையவனாகவும்‌ இருந்துவருகிறான்‌. மனிதன்‌ காட்டுமிராண்டித்தன வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும்‌ சமுதாய வாழ்க்கையில்‌ ஒருவனுக்கொருவன்‌ உதவி செய்து, வாழ்க்கை நிலையை மேம்‌ படுதீதிக்கொள்ளலாம்‌ என்று கருதி வந்திநுப்பானே ஒழிய, மற்ற மனிதனைக்‌ கொடுமைப்‌ படுத்தி, இழிவுபடுத்தி, கஷ்டப்படுத்தி அதன்‌ பயனாய்தி தான்‌ வாழலாம்‌ என்று கருதி இருக்கமாட்டான்‌. அப்படிக்‌ கருதியிருந்தால்‌ சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது. பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமூக வாழ்க்கை; பரஸ்பரத்‌ தொல்லைக்கும்‌ உபதீதிர வதீதுகீகும்‌ ஆளாக ஏற்பட்டுவிட்டது. சமுதாயத்‌ துறையில்‌ இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம்‌, இழிவு, தரித்திரம்‌, மடமை முதலிய குணங்கள்‌ மனிதன்‌ அறிவுக்‌ குறைவினால்‌-பகுத்தநிவு இல்லாததினால்‌ அல்லது பகுத்‌ தறிவைச்‌ செவ்வனே பயன்படுத்தாததினால்‌ ஏற்பட்டவை என்றுதான்‌ சொல்லவேண்டுமே ஒழிய, காலக்‌ கொடுமையாலோ, கடவுள்‌ தன்மையரலோடி அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும்‌ சொல்லிவிட முடியாது. ஏனெனில்‌, சமூக வாழ்க்கையின்‌ சரித்திர ஆரம்ப காலம்‌ எதுவோ அக்‌ காலத்தி லிருந்தே இக்‌ குணங்கள்‌ மனித சமூகதீதில்‌ இருந்துவந்திருப்பதைச்‌ சரித்திர ஆதாரங்கவில்‌ பார்க்கலாம்‌. கடவுள்‌ தன்மை என்பதிலும்‌, எப்படிப்பட்ட கடவுள்‌ காலதீதிலும்‌ அவதாரங்களின்‌: காலத்திலும்‌, கடவுள்‌ தன்மை பெற்ற தூதர்கள்‌, ஆழ்வார்கள்‌, ஆசீசாரியார்கள்‌, சமய குரவர்கள்‌ என்பவர்கள்‌ காலதீதிலும்‌ கிக்‌ கொடுமைகளும்‌ குறைகளும்‌ கஇழிகுணங்களும்‌ நிலவி வந்திருக்கின்‌ றன. அதுபோலவே, அரசாங்க விஷயத்திலும்‌, இன்றுள்ள அன்னியர்‌-வெள்ளைக்‌ காரர்‌ வியாபார உணர்சீசியோடும்‌ பொறுப்பில்லாமலும்‌ ஆளுகின்ற ¢ ஆட்சி? என்பது மாத்திரம்‌ அல்லாமல்‌, கடவுள்‌ அவதார ஆட்சி, தர்ம தேவதைகள்‌ ஆட்சி, மனுநீதி ஆட்சி, மற்றும்‌ சேர, சோழ, பாண்டியர்‌, பார்ப்பனர்‌, நாயக்கர்‌, முகமதீயர்‌ ஆகிய எல்லா ஆட்சிக்‌ காலதீதிலும்‌ கிருந்துவந்த குறைகளேதான்‌ இன்றும்‌ காணப்படுகின்‌ றனஃ எந்தக்‌ காலத்திலும்‌ எப்படிப்பட்ட கடவுளாலும்‌ யாருடைய ஆட்சியிலும்‌ இக்‌ குறை பாடுகள்‌ நீங்கி இருந்ததாகவோ, நீக்கப்பட்டதாகவோ காணமுடியவில்லை. ஆகவே, இதற்கு என்ன காரணம்‌ என்று கண்டுபிடிப்பதாய்‌ இருந்தால்‌, கரண்டு காரணங்களைச்‌ சொல்லலாம்‌. ஒன்று, மனிதனுக்குப்‌ பகுத்தறிவு ஏற்பட்டதனாலேயே மனிதன்‌ இத்தியாதி கொடு மைக்கும்‌ துகீகதீதுக்கும்‌ இழிவுக்கும்‌ ஆளானா s என்று சொல்லவேண்டும்‌. இதை அறிஞர்‌ ஒப்புக்கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்னவென்றால்‌, மனிதன்‌ அறிவைத்‌ தப்பாம்ப்‌ பயன்படுத்தி, இயற்கையையும்‌ மனித சுபாவத்தையும்‌ தவறுதலாகக்‌ கற்பித்‌ துக்கொண்டு, மனித ஜென்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்ட தென்றும்‌ மனித ஜென்மமே துக்கம்‌ அனுபவிக்கவும்‌ கவலையால்‌ மூழ்கவும்‌ ஏற்பட்ட தென்றும்‌ மனிதனது சமூக வாழ்கீகையே (சம்சாரம்‌, சாகரம்‌) அுகீகம்‌ என்றும்‌ கருதி, அதையே இயற்கையாக்கிவிட்டதால்‌ இந்நிலையில்‌ இருக்கிறான்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. மனித வாழ்கீகைநிலை முழுவதையும்‌ கட்டூப்படுத்திக்‌ கட்டுப்பாட்டுக்கு அடிமைப்‌ படுத்திக்கொண்டான்‌. மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையுங்கூட கட்டுப்படுத்தி www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1117 விட்டான்‌. இயற்கைக்கு மாறாக இன்னின்னபடிதான்‌ நடக்கவேண்டும்‌) இன்னின்ன படிதான்‌ சிர்திக்கவேண்டும்‌. என்கின்ற கட்டுப்பாட்டுக்குங்கூட ஆளாகிவிட்டான்‌, மனிதன்‌ தனக்கு என்று ஏற்படுத்திக்கொண்ட கடவுள்‌ மதம்‌, மதக கட்டளை கடவுள்‌ கட்டளை என்பவைகன்‌ எல்லாவற்றையும்‌ பெரிதும்‌ இயற்கைக்கும்‌ உண்மைக்கும்‌ விரோதமாகவும்‌, அனுபவத்திற்கு முடியாததாகவுமே கற்பிதீதுக்கொண்டான்‌. இந்தத்‌ தவறுதலோடு மாதீதிரம்‌ நிற்காமல்‌ மனித சமூகதீதையே தேசம்‌, மொழி, மதம்‌, சாதி என்பவைகளால்‌ பிரித்து வேற்றுமைப்படுத்திக்கொண்டான்‌. அதோடு நிற்காமல்‌, பல மதங்கள்‌, பல கடவுள்கள்‌, பல வேதங்கள்‌ என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன்‌ கற்பித்துக்கொண்டான்‌. இவற்றில்‌ ஒன்றுக்காவது பகுத்தறிவைச்‌ சுதந்திரமாய்ப்‌ பயன்படுத்த உரிமை இல்லாதவனாகிவிட்டான்‌. வஸ்துக்களை உன.க-எனது எனப்‌ பிரிதீதுக்கொண்டான்‌. மனிதனின்‌ ஓய்வு எல்லாம்‌ மனிதனின்‌ பகுத்கறிவைபி பாழ்படுத்தி, அடிமைத்தன தீதிற்குப்‌ போவகற்கே பயன்பட்டதே தவிர, பகுத்தறிவால்‌ பயன்படவோ மேன்மை அடையவோ முடியவில்லை. மனிக சமூக நன்மைக்காக-அதாவது மக்கன்‌ சமூகம்‌ சரீர உழைப்பினின்றும்‌, காலதாமததீதில்‌ இருந்தும்‌ காப்பாற்றப்படவும்‌ அதிகப்‌ பயன்‌ அடையவும்‌ கண்டுபிடிக்கப்‌ பட்ட இயந்திரங்கள்‌ எப்படி முதலாளிமார்கள்‌ ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி பாட்டாளிகளுக்கும்‌ பட்டினியாக இருக்கப்‌ பயன்படுன்‌றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும்‌ திருப்தியையும்‌ கவலையற்ற தன்மையையும்‌ உண்டாக்கி தரவேண்டிய பகுத்தறிவான து, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத்‌ இக்கத்தையும்‌ கவலையையும்‌ தரித்திரத்தையும்‌ கொடுக்கப்‌ பயன்பட்டுவரகிறது. இவற்‌ நாலும்‌, இன்னும்‌ இவை போன்ற காரணங்களாலேயும்‌ மனிதன்‌ பகுத்தறிவு பெற்றதால்‌ மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையும்‌, கவலையும்‌, குறைவும்‌, அதிருப்தியும்‌, தரித்திரமுூம்‌ அடையக்‌ காரணமாகிவிட்டான்‌ என்றுதான்‌ சொல்லவேண்டியிருக் கிறது. எனவே, மனிதன்‌ இப்படிப்பட்ட கீழ்மைநிலையில்‌ இருந்து மேம்பாடு அடைய வேண்டுமானால்‌ முதலாவதாசத்‌ தன்னம்பிக்கை உடையவனாகவும்‌, தனது சக்தி என்ன. என்பதை உணர்ந்தவனாகவும்‌ இருக்கவேண்டும்‌. இன்று மனிதனிடம்‌ தன்னம்பிக்கை இல்லை. தன்னைதி தான்‌ நடத்துவதாக அவன்‌ நினைப்பதில்லை. தனது காரியதீதிற்குத்‌ தானேதான்‌ பொறுப்பாளி என்பதில்‌ நம்பிக்கையில்லை. மனிதன்‌ தான்‌ கற்பித்துக்கொண்ட கடவுளையும்‌, கடவுள்‌ கட்டளை: யையும்‌, கடவுள்‌ சிதீதாந்தத்தையும்‌ வெகு குளறுபடி ஆக்கிக்கொண்டான்‌. அூதாடு மாத்திரமல்லாமல்‌, தனது சவுகரியதீதிற்கு ஏற்றபடியெல்லாம்‌ மாற்றிக்‌ கொள்கிறான்‌. பெரிதும்‌ சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளைப்‌ பயன்படுத்‌ துகிறான்‌ இவ்வளவோடு அல்லாமல்‌ தலைவிதி, முன்‌ ஜென்மம்‌, கர்மபலன்‌ என்பவைகளைக்‌ கற்பிதீ.துக்கொண்டு தனது முட்டாள்‌ தனதீதுக்கும்‌ அயோக்கியதீதன தீதுக்கும்‌ பரிகார மாக்கிக்கொண்டான்‌. மனிதன்‌ முதல்‌ முதல்‌ தவறிப்போன கடம்‌ இதுவேயாகும்‌. கடவுளும்‌ கருமமுமே மனிதனின்‌ பகுத்தறிவைப்‌ பாழ்படுத்தி, பகுத்தறிவற்ற ஜீவராசிகளைவிடக்‌ கேவலமாக்கி, இன்று மனிதனை தக்க ரூபகமாகவும்‌ கவலைக்‌ களஞ்சியமாகவும்‌ ஆகீ விட்டன. பகுதீதறிவுக்குக்‌ கடவுளும்‌ கருமமூம்‌ நேர்‌ விரோதிகளாகும்‌. ஏனெனில்‌, கடவு ளுக்கும்‌, கருமதீ துக்கும்‌ அடிமைப்பட்டவனிடம்‌ சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன்‌ மரக்கட்டை, தண்ணீர்‌ அலையில்‌ அலைவது போன்றவனே ஆவான்‌, ஆதலால்‌, இந்த உணர்ச்சிகவிலிருந்து விடுபடுவதே பகுத்தறிவின்‌ வெற்றிக்கு முதல்‌ படியாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1118 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இந்தப்படி சொல்லுவதை மக்கள்‌ நாஸ்திகம்‌ என்‌9றார்கள்‌. இதனாலேயே பகுத்‌ தறிவுவா திகள்‌ நாஸ்திகர்கள்‌ என்று உலகமெங்கும்‌ பழிக்கப்படுகறார்கள்‌. பகுத்தறிவு மேம்டாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கமான து நாஸ்திகப்‌ பழிப்புக்குப்‌ பயன்படக்கூடா து. [தீண்டிவன த்தில்‌, 18-5-1935-ல்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 25-5-1935] 2. அறிவுச்‌ சுதந்திரம்‌ தலைவரவர்களே 1 பெரியோர்களே ! தாய்மார்களே 1 மனிதன்‌ என்பதற்கே பொருள்‌, விஷயங்களை ஆராய்நீது; நன்மை தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும்‌ மேலும்‌ மேலும்‌ வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன்‌ என்பதேயாகும்‌. மற்ற ஜீவப்‌ பிராணிகளை எடுதீதுக்கொண்டால்‌, ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னால்‌ அவை எப்படி இருந்தனவோ அப்படியேதான்‌ இன்னும்‌ இருக்கின்றன. பட்சீ-காகத்தை எடுதீதுக்கொள்ளுங்கள்‌, ஆயிரம்‌ ஆண்டுகளுக்‌ கு முன்‌ எப்படி இருந்ததோ அதேமாதிரி யாக $ன்னும்‌ இருக்கிறது. அதேமாதிரி ஆடு, மாடு, குதிரையை எடுத்‌ தக்கொள்ளுங்கள்‌- ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு மூன்‌ எப்படி இருந்தனவோ அரத மாதிரித்தான்‌ அவைகளின்‌ சுபாவமும்‌ தன்மையும்‌ இருக்கின்றன. ஆனால்‌, மனிதன்‌ அப்படி அல்லன்‌. மனிதன்‌ ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌ இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்‌ திருக்கிறான்‌ ) நூறு ஆண்டுகளுக்கு மூன்‌ இருந்ததைவிட எவ்வள வோ மாற்றமடைந்திருக்‌ பொன்‌) இன்னும்‌ சொல்லப்போனால்‌, அய்ம்பதாண்டுகளுக்கு முன்னால்‌ இருந்ததைவிட எவ்வளவோ மாறுதல்‌ அடைந்திருக்கிறான்‌ $ அறிவிலே, வளர்சீசியிலே, அற்புதங்களைக்‌ கண்டுபிடிப்பதிலே எவ்வளவோ முன்னேற்றம்‌ அடைந்திருக்கிறான்‌. அதற்கு எல்லாம்‌ காரணம்‌ மனிதனுக்ரு உண்டான அறிவு மேன்மைதான்‌. அப்படிப்பட்ட மனிதன்‌ சில துறையிலே முன்‌2னற்றமடைந்து, வேறு சில துறை களிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக்‌ கொஞ்சம்கூட முன்னேற்றம்‌ அடையாத நிலையிலேதான்‌ இருக்கிறான்‌. ஒரு சில துறைகளிலே முன்னேற்றம்‌ ஏற்படுவானேன்‌ ? சில துறைகளிலே முன்னேற்றம்‌ அடையாமல்‌ இருப்பானேன்‌ ? சக்கிமுக்கிக்‌ கல்லிலே இருந்தவன்‌ முதலிலே திரிவிளகீகு, பிறகு ¢ காஸ்‌? விளக்கு; அதன்‌ பிறகு * எலக்டிரிக்‌? விளக்கு என்று-சில ஆயிரம்‌, பத்தாயிரக்கணக்கான விளக்கி னுடைய வெளிச்சம்‌ ஒரு சிறு கம்பியில்‌ தெரியும்படி, அவ்வளவு முன்‌ 3னற்றம்‌ எப்படி அடைந்தான்‌ ¢ அறிவைக்கொண்டு ஆராய்ச்சி செய்ததனாலேதான்‌ | மணிக்கு மூன்று மைல்‌ நடந்துகொண்டிருந்த மனிதன்‌ முதலிலே மாட்டு வண்டி, குதிரை வண்டி; சைக்கிள்‌, மோட்டார்‌ இவைகளில்‌ சென்று இன்றைய தினம்‌ மணிக்கு 600 மைல்‌ பறக்கும்படியான ஆகாயக்‌ கப்பலை எப்படிக்‌ கண்டுபிடித்தான்‌ 1 அறிவி னாலேசான்‌ ய ஒரு மைல்‌, இரண்டு மைல்‌ கேட்கும்படியான ஒலிபெருக்கியை எப்படிக்‌ கண்டுபிடி தீதான்‌ 1 அறிவினாலே ! அய்ந்தாயிரம்‌, பத்காயிரம்‌ மைலுக்கட்பால்‌ இருந்து பேசினால்‌, அதைக்‌ கேட்கும்படியான தொலை பேசியை எப்படிக்‌ கண்டுபிடித்தான்‌ 8 அறிவினாலே! மனிதனுடைய அறிவு அவ்வளவு வேலைகளைச்‌ செய்து இருக்‌ £ன்றது. இது எல்லாம்‌ கதை அலை-நாம்‌ நேரிலே அனுபவிக்கின்‌3றாம்‌. நாளைக்கு வேண்டு மானாலும்‌ பம்பாயில்‌ புறப்பட்டால்‌ மறுதினம்‌ சீனாவுக்குப்‌ போய்விடலாம்‌) அடுத்த நாள்‌: இங்கு வந்து சேரலாம்‌; இது எல்லாம்‌ இன்று நடக்‌ றது. சாதாரணமாக ஒரு மனிதன்‌. கக்கூசுக்குப்‌. போய்‌, கால்‌ கை கழுவி சுத்தமாக்‌ க்‌ கொண்டு குளித்துவிட்டு வரு ற: நேரத்திற்குள்‌ காசிக்குப்‌ போய்‌ வந்துவிடலாம்‌) அவ்வளவு வேகமாகப்‌ போக முடியும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1119 அப்படி அறிவினாலே அவ்வளவு அதிசயங்கள்‌, அற்புதங்கள்‌ ஏற்பட்டு இருக்கின்றன. அதை நாம்‌ அனுபவிக்கின்றோம்‌, அப்படிப்பட்ட அறிவுடைய மனிதன்‌ எல்லாதீ துறைகளிலும்‌ அறிவு பெற்று இருக்‌ கின்றானா என்றால்‌, சில துறைகளில்‌ மாத்திரம்தான்‌ பெற்றிருக்‌ றான்‌. ஆனால்‌, சில துறைகளிலே பயன்படூதீதமாட்டான்‌. பயன்படுத்தினால்‌ பாபம்‌ என்று சொல்லிவிட்டனர்‌. அதனால்‌ பயந்து சில துறைகளில்‌ பயன்படுத்தவே மாட்டான்‌) பயன்‌ படுத்தவே இஃலை. அந்தக்‌ காரண தீதினாலேதான்‌ நாம்‌ சூதீகிரர்களக; பஞ்சமர்களாக--கீழ்மக்கள்‌, பிற்பட்ட மக்கள்‌ என்று சொல்லும்படியாக இருக்கி றாம்‌. அந்தத்‌ துறையில்‌ நாம்‌ ஆராய்வது இர்லை$ ஆராய்ந்தால்‌ பாபம்‌ என்று சொல்வார்கள்‌. அப்படி ஆராய்வதாலே தண்டனை ஏற்பட்டுவிடும்‌) தண்டனை கிடைத்துவிடும்‌ என்று நம்பி ஆராயாமல்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌, மனிதனுக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடயுமா? அறிவு இருக்கிறது சில காரியங்களிலேதான்‌ அந்த அறிவைப்‌ பயன்படுதீதுகிறார்கள்‌ $ சில காரியங்களில்‌ பயன்படுத துவ?த இல்லை. விருந்துக்கு அழைக்கப்பட்டவன்‌ கால்‌ கைகளைக்‌ கழுவிக்கொண்டு இலையில்‌ உட்காரீ ந்ததும்‌, சாணி உருண்டையை உருட்டி வைத்துச்‌ சாப்பிடுங்கள்‌ என்று சொன்னால்‌ அவன்‌ என்ன செய்வான்‌ 8 என்ன, அயோகீகியப்‌ பயல்‌! நம்மை மடையன்‌ என்று நினைத்தானா ? அல்லது, அவன்‌ மடையனா? என்று ஆதீதிரம்‌ அடைந்து எழுந்து போய்‌ விடுவான்‌. ஏன்‌? அவனுக்கு அறிவு இருக்கிறதனாஜே எந்த மடையனாவது சாணியைச்‌ி சாப்பிடுவானா என்று கருதியே ஆகும்‌. ஆனால, அதே மனிதனிடத்தில்‌ அ$த சாணியை கொழுக்கட்டை மாதிரிப்‌ பிடி தீது வைத்து, அதன்‌ தலையிலே அருகம்‌ புல்‌ குதீதி வைத்து, குங்குமத்தை இட்டு, *விழுந்து கும்பிட்டுவிட்டு வா, சாப்பிடப்‌ போகலாம்‌! என்றால்‌, உடனே கும்பிடுவான்‌. சாணியைச்‌ சோறாக வைத்தபோது கோபம்‌ அடைந்த மனிதன்‌-- அதைச்‌ சாமியாக வைதீதால்‌ விழுந்து கும்பிடுகிறான்‌ ; தலையில்‌ குட்டிக்கொள்கிறான்‌. இது ஏன்‌1 அவனுக்கு அறிவு இல்லையா! அறிவு இருக்கது. அந்த அறிவைச்‌ சோற்றுக்‌ சங்கதியில்‌ செலுத்தலாம்‌-- ஆனால்‌, கடவுள்‌ சங்கதியில்‌ செலுத்தினால்‌ அ.இந்தே போய்‌ விடுவோம்‌ என்கிற பயம்‌ உண்டா89 இருப்பதால்‌, அவன்‌ சிந்திப்பது இல்லை. இரண்டும்‌ அறிவதான்‌. ஆனால்‌, சிந்தித்தால்‌ பாபம்‌, தோஷம்‌ என்கிற தடைகள்‌ குறுக்கே நிற்கின்றன. ஏன்‌ நெற்றியில்‌ சாம்பல்‌ அடிதீதுக்கொள்கிறாய்‌? என்றால்‌ கோபம்‌ வநீதுவிடுகிறது. * அது சிவபிரானை வணங்கும்‌ பகீதிச்‌ சின்னம்‌ $ முன்னோர்கள்‌ காலம்‌ முதற்‌ கொண்டு செய்த வருகிறோம்‌. அது மேலே பட்டால்‌ பாபம்‌ போம்‌) அதைக்‌ குற்றம்‌ சொல்லுகிறாயே !? என்று கேட்பார்கள்‌. அந்தச்‌ சாம்பலை அடப்பிலிருந்து முறத்தில்‌ வாரி வந்து தெருவிலே நின்று அவன்‌ முகத்திலே வாரி அடிதீதால்‌--உடனே,; ¢ என்ன என்‌ முகத்தைக்‌ குப்பைத்‌ தொட்டி என்று நினைதீதுக்கொண்டாயா 8 என்று சண்டைக்கு வந்துவிடுவான்‌. மற்றும்‌, அதே சாம்பலை ஒரு தட்டிலே வைதீதுக்கொண்டு, ¢ இந்தப்‌ பெண்ணுக்குப்‌ பேய்‌ பிடிதீதிருக்கிறது) பேய்‌ ஓடக்‌ கடவது ! என்று சொல்லி ஒரு பெண்ணின்‌ முகத்தில்‌ அடித்தால்‌, பக்கத்தில்‌ யாராவது பாட்டிகள்‌ இருந்தால்‌, ¢ இன்னும்‌ கொஞ்சம்‌ போடுங்கள்‌ £ என்று சொல்லுவார்கள்‌. வெறும்‌ சாம்பலை ஒருவனுக்குத்‌ தெரியாமல்‌ அள்ளி வந்கு, 6 இது சாமி பிரசாதம்‌? என்று கொடுத்தால்‌ பக்தியோடு இரண்டு கைகளையும்‌ நீட்டி வாங்‌ வாயிலும்‌ போட்டுக்கொள்கின்றான்‌) அதற்காக விழுத்தும்‌ கும்பிடுகிறான்‌) தட்டிலே தட்சிணையும்‌ போடுகிறான்‌. ஆனால்‌, இவற்றைப்பற்றிச்‌ சிந்திக்‌ சிறதே இல்லை. ஆனால்‌, நான்‌ சொல்வதென்னவென்றால்‌-எந்தச்‌ சங்கதியாக இருந்தாலும்‌ நன்றாகச்‌ சிந்திக்க வேண்டும்‌ $ ஆராய்ந்து பார்கீக வேண்டும்‌. இது கடவுளாச்சே; இது சாஸ்திர www.thamizham.net - Free £ book 14௦ 3031 1190 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ மாசீசே) இது பகவான்‌ வாயில்‌ இருந்து வந்ததாசீசே ] பெரிய புராணம்‌ சொல்லுகிறதே; சின்னபுராணம்‌ சொல்லுகிறதே; கழறுகிறதே--என்று எல்லாம்‌ நினைக்கக்கூடாது. நமகீகு அறிவு இருக்கிறது? அனுபவம்‌ இருக்கிறது) ஆராயும்‌ திறன்‌ இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச்‌ சங்கதி ஆனாலும்‌ ஆராய்ந்து பார்‌ தீ.துத்தான்‌ ஒப்புக்கொள்ள வேண்டும்‌ என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்‌. [பெரம்பூரில்‌ 21-5-1951-ல சொற்பொழிவு--1 விடுதலை ! 27.3.1951] o o ° o 8. மறுத்தலும்‌ பகுத்தறிவும்‌ நாம்‌ மாறுதலுக்குக்‌ கட்டுப்பட்டவர்களும்‌, ஆசைப்பட்டவர்களும்‌ ஆவோம்‌. ஆதலால்‌, அந்த மாறுதலேதான்‌--அதுவும்‌ அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக்‌ கொண்டு இந்தத்‌ திருமண முறையில்‌ காணப்படுகிற மாறுதல்கள்‌ ஏற்பட்டவைகளாகும்‌. பகுதீதறிவு என்று சொல்வதும்‌ மாறி மாறி வருவதாகும்‌. இன்று நாம்‌ எவை எவைகளை அறிவுக்குப்‌ பொருத்தமானவை என்று எண்ணுகி3றறாமோ அவை நாளைக்கு மூடப்‌ பழக்க வழக்கங்கள்‌ எனத்‌ தள்ளப்படலாம்‌. நாம்கூட பல பொருள்களை, ஏன்‌ மகான்கள்‌ என்று புகழப்படுபவர்கள்‌ சொன்னவற்றையே ஒ.துக்கிவி வோம்‌. அதுபோலதி தான்‌; நமது பின்னோர்கள்‌ என்னைக்‌ குறித்‌ தக்கூட, ஒரு காலதீதில்‌, ¢ இராமசாமி என்ற மூடக்‌ கொள்கைக்காரன்‌ இருந்தான்‌ ? என்று கூறலாம்‌. அது இயற்கை) மாற்றத்தின்‌ அறிகுறி) காலத்தின்‌ சின்னம்‌, பழைய காலத்தைச்‌ சேர்ந்தவை என்பதற்காக நாம்‌ குறை கூற வில்லை. அவர்கள்‌ காலதீதிற்கு அவர்கள்‌ செய்தது சரி என்பதானாலும்‌, அப்பொழுது அவ்வளவுதான்‌ முடிந்தது என்பதானாலும்‌ இன்று மாறித்தான்‌ ஆகவேண்டும்‌. சக்கிமுக்கிக்‌ கல்லால்‌ முதலில்‌ நெருப்பை உண்டாக்கியவன்‌ அந்தக்‌ காலத்து * எடிசன்‌ 1, அப்புறம்‌ படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில்‌ நெருப்பைக்‌ காண்கி றாம்‌ ! எனவே, மாற்றம்‌ இயற்கையானது அதைத்‌ தடுக்க யாராலும்‌ முடியாது. எத்தகைய வைதிகமும்‌ மாற்றதீதிற்‌ குள்ளாகிதீதான்‌ தீர வண்டும்‌. இப்பொழுது நாம்‌ எவ்வளவு மாறி' இருக்க3றாம்‌ 8 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம்‌-- தெய்வீக சக்தி படைதீதவர்கள்‌, பெரிய மனிதர்கள்‌ என்பவர்களைப்பற்றிய. எண்ணம்‌-வீடு, வாசல்‌, உடை, உணவு, தெருக்கள்‌, வண்டி, குடுமி வைத்தல்‌ ஆய எண்ணங்களில்‌, பொருள்களில்‌ பெரிய மாற்றத்தைக்‌ காண்கிறோம்‌. பெண்களின்‌ புடவை, இரவிக்கை, நகைகள்‌, புருஷன்‌-பெண்சாதி முறை ஆகியவற்றில்‌ ஏற்பட்ட மாறுதல்களைப்‌ பாருங்கள்‌ | அடுத்தபடியாக பொருட்‌ செலவும்‌ அதிகமில்லை; நேரமும்‌ பாழாவதில்லை! மனிதனுடைய அறிவுப்‌ பெருக்கமும்‌ அனுபவ முயற்சியும்‌ இந்த அதிசயங்களுக்குக்‌ காரணம்‌ என்றும்‌, அதனாலேயே அக்கால மனிதர்களைவிட இக்கால மனிதர்கள்‌ அறிவு, அனுபவம்‌ பெற்றவர்கள்‌ என்றும்‌ சொல்ல வேண்டியிருக்‌ றது. இப்படிப்பட்ட நிலையில்‌ உள்ள இந்தக்‌ காலத்தில்‌ நாம்‌ மற்ற காரியங்களில்‌ ஏற்பட்ட அறிவுத்‌ திறனையும்‌, அதிசய சக்திகளையும்‌ அனுபவித்துக்‌ கொண்டு, இந்தக்‌ கேடுகெட்ட-மானம்‌ கெட்ட இழிநிலைக்குக்‌ காரணமான அ] தீதமற்ற, சூழ்ச்சிகரமான, காட்டுமிராண்டிக்‌ காலத்தில்‌ ஏற்பட்ட மதம்‌, கடவுள்கள்‌, சாத்திரம்‌, சடந்கு, சாதி, மதக்குறி, உயர்வு-தாழ்வு பேதம்‌, அறிவுக்குப்‌ பொருந்தாத அ] தீத பற்ற கொள்கைகள்‌ ஆகியவற்றைக்‌ கடைப்பிடி தீதுக்‌ கொண்டு கண: வாழ்வு வாழ்வது, எப்படி அறிவுடையவர்‌ ஒப்புக்கொள்ளக்கூடிய காரியமாகும்‌ ? அறிவுதான்‌ கடவுள்‌ என்பான்‌ பண்டிதன்‌, ஆனால்‌, அவன்‌ கற்பிக்கிற-வணங்குகிற கடவுள்‌, உலகில்‌ உள்ள எல்லா அ$யாக்கியத்தனங்களும்‌ கொண்டதாக இருக்கும்‌. அழகுதான்‌ கடவுள்‌ என்பான்‌, ஆனால்‌, அவலட்சணமான தோற்றங்கள்‌ எல்லாம்‌. அவன்‌ கற்பிதீ.துன்ள கடவுள்களில்‌ பிரதிபலிக்கும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1121 உயர்ந்த மக்கட்கு வழிகாட்டும்‌ நல்ல நடதீதைகளும்‌ உபதேசங்களும்‌ நிறைந்தனவே புராணங்கள்‌, சாதீதிரங்கன்‌ என்று கூறுவான்‌. ஆனால்‌, அவைகளில்‌ கூடா ஒழுக்கங்களும்‌ இழி தன்மைகளும்‌ ஏராளமாக இருக்கும்‌. அவைகளுக்குக்‌ காரணம்‌, அவைகள்‌ ஏற்பட்ட காலத்தைச்‌ சிந்திக்காமல்‌-ஏற்படுத்தியவர்களின்‌ தன்மைகளை அறியாமல்‌, தங்களின்‌ பெருமைகளைக்‌ காட்டிக்கொள்ளவும்‌, தங்கள்‌ பிழைப்புக்கு வழி தேடவும்‌ அவைகளைப்‌ பயன்படுத்த வேண்டியதாகிவிட்டதால்‌ அவர்களின்‌ நிலைமை பரிதபிக்கத்‌ தக்கதாகி விட்டத. [புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது] &. முட்டுக்‌ கட்டைகள்‌ இன்று தமிழர்‌ சமுதாயம்தான்‌ உலகிலேயே காட்டுமிரரண்டி வாழ்வு வாழ்நீது வருகிற சமுதாயமாக இருக்கிறது ! உலகிலுள்ள 280 கோடி மக்களில்‌ யாரும்‌ இவ்வளவு பிறவி இழிவான நிலையில்‌ - முட்டாள்‌ தனமாக வாழ்பவர்களில்லைஃ நமது நாட்டைப்‌ பிடிதீதுள்ள * பேய்கள்‌? மூன்று. அவை: 1. கடவுள்‌-மதம்‌- சாஸ்திரங்கள்‌, 2. சாதி, 3. ஜனநாயகம்‌ என்பன. நம்மை அரிதீதுவரும்‌ நோய்கள்‌ : 1. பார்ப்பான்‌, 2. பத்திரிகைகள்‌, 3. அரசியல்‌ கட்சிகள்‌, 4. தேர்தல்கள்‌, 5. சினிமா-- ஆகிய இவைகள்‌ ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான்‌ இங்கு மட்டுமல்ல--வடநாட்டிலும்‌, கன்னட, கேரள மாநிலங்களிலும்‌ இலட்சக்கணக்கான பொது மக்கன்‌ கூடிய கூட்டங்களில்‌ ஆண்டுக்‌ கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்‌ அதுபோலவே, நமது வளர்சீசிக்கும்‌ வாழ்வுக்கும்‌ தடையாக மேலும்‌ முட்டுக்‌ சட்டை களாக மேலும்‌ மூன்று சாதனங்கள்‌ இருக்கின்றன என்பதையும்‌ எடுத்துக்காட்டி வருகிறேன்‌. அவை - ௮ம்‌ மூன்று முட்டுக்‌ கட்டைகள்‌ ₹ 1. முன்னோர்கள்‌ சொன்னபடி நடக்கவேண்டும்‌ ; 2. முன்னோர்கள்‌ (பெரியவர்கள்‌) எழுதியபடி நடக்கவேண்டும்‌ ; 8. பெரியவர்கள்‌ நடந்தபடியே நாமும்‌ செல்லவேண்டும்‌ என்பவைகளாகும்‌. இவை, * முட்டுக்‌ கட்டைகள்‌? என்று சுமார்‌ 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர்‌ சொன்னார்‌ என்றாலும்‌, அதற்குப்‌ பிறகு, இன்று-இந்த * இருபதாம்‌ நூற்றாண்டின்‌: புதீதர்களாக ? விளங்கும்‌ கருஞ்சட்டைக்காரர்கள்‌ தாம்‌ சொல்லுகிறார்கள்‌. ஆனால்‌, இந்த நாட்டிலுள்ள பெரும்‌ ( பிரபல? பார்ப்பனத்‌ தலைவர்கள்‌--டாகீடர்‌ எஸ்‌. இராதாகிருஷ்ணன்‌, திரு. கிராசகோபாலாசீசாரியார்‌, கே. எம்‌. முன்ஷி, சங்கராச்‌ சாரியார்‌ போன்றவர்கள்‌ எங்கு--எநீத நிகழ்ச்சிக்குப்‌ போனாலும்‌, இம்‌ முட்டுக்கட்டைகளை ஆதரிதீது, வலியுறுதீதி--அதாவது ¢ நாம்‌ எக்‌ காரியத்திற்கும்‌ நமது முன்னோர்‌ சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்கவேண்டும்‌ ? என்று பேசிவருகிறார்கள்‌. இப்படி இவர்கள்‌ பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள்‌ எக்‌ காலதீதிற்கும்‌-எந்த நிலைமைக்கும்‌ பொருந்தக்கூடிய வகையில்‌ சர்வரோக நிவாரணி ? தயாரிதீ.து வைத்துள்ள. தைப்போன்று சொல்லி வருகிறார்கள்‌. மக்களுக்குச்‌ சிந்தனாசகீதியும்‌, அறிவும்‌, விஞ்ஞான உணர்வும்‌ ஏற்பட்டுவிடக்‌ கூடாது என்பதுதான்‌ இவர்கள்‌ இப்படிப்‌ பேசிவருவதன்‌ உள்நோக்கமாகும்‌. 6 முன்னோர்கள்‌, பெரியவர்கள்‌ என்று யாரைக்‌ குறிப்பிடுகிறீர்கள்‌ 59 என்று: கேட்டால்‌---6 ரிஷிகள்‌, மகான்கள்‌, தெய்வீக புருஷர்கள்‌, ஆதர்சன ஆச்சாரியர்கள்‌ இவர்கள்‌. தாம்‌ ? என்பார்கள்‌ $ மற்றும்‌ அவதாரங்களையும்‌ குறிப்பிடுவார்கள்‌ஃ 1686—141 www.thamizham.net - Free E book No 3031 1122 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இவர்களெல்லாம்‌ யார்‌? எப்போதிருந்தார்கள்‌ ? எங்கிருந்தார்கள்‌? அதற்கென்ன ஆதாரம்‌? சரிதீதிரதீதிற்கும்‌ இவர்களுக்கும்‌ ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம்‌ ஆராய்ந்தால்‌ இது மாபெரும்‌ புரட்டு--அதுவும்‌ இமாலயப்‌ புரட்டு என்பது தெவிவாக விளங்கும்‌. இஸ்லாமியர்களின்‌ முன்னோர்கள்‌ என்றால்‌ அவர்களுக்குக்‌ காலம்‌ உண்டு$ சரித்திரம்‌ உண்டு. கிறிஸ்தவர்களின்‌ முன்னோர்‌ என்றால்‌ அவர்களுக்கும்‌ காலம்‌ உண்டு ; சரித்திரம்‌ உண்டு. அதுபோல்‌ இந்த ரிஷிகள்‌, தெய்வீ கர்கள்‌, மகான்கள்‌ ஆகியவர்களுக்கு ஏதாவது உண்டா ஆதாரம்‌ என்றால்‌--புரரணங்கள்‌, வேதங்கள்‌, ஸ்மிருதிகள்‌, சுருதிகள்‌ என்று ஏதோ கறையான்‌ பிடித்த சிலவற்றைக்‌ காட்டக்கூடும்‌. அதை நுணுகி ஆராய்ந்தவர்‌: களுக்குதீதான்‌ தெரியும்‌, அதி.லுள்ளவைகளன்‌ எல்லாம்‌, ¢ பைத்தியக்காரனுக்குக்‌ கள்‌ ஊற்றி னால்‌ அவன்‌ எப்படியெப்படி உளறுவசனோ அப்படியே இருக்கின்‌றன?வென்று. உதாரணமாக; ரிஷிகளில்‌ பெரியவரான நாரதர்‌, மும்மூர்தீதிகளில்‌ ஒருவரான விஷ்ணுவைக்‌ (ஆணும்‌ .ஆணும்‌) கூடிப்‌ பெற்றெடுத்த குழந்தைகள்தாம்‌ இன்றைய 60 * தமிழ்‌? வருடங்கள்‌ என்பவை. இதற்குப்‌ பாகவதம்‌, புராணம்‌, இதிகாசம்‌ ஆகியவை கவில்‌ ஆதாரம்‌ உண்டு என்றால்‌, கிது எவ்வளவு பெரிய ஆபாசம்‌ ? முட்டான்‌தனமான: கருத்து 8 கிதை நம்புவதைவிடக்‌ கடைந்தெடுத்த காட்டுமிராண்டி தீதனம்‌ வேறு இருக்க முடியுமா? இப்படி முன்னோர்கள்‌ சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும்‌ வாயினால்‌ மாதீதிரம்‌ பார்ப்பனர்கள்‌ கூறிக்கொண்டிருக்கவில்லை. இந்‌ நாட்டில்‌ 100-க்கு 84 பேராக உள்ள ¢ இந்துக்களுக்கு? உரிய சட்டமாகிய இந்து ¢ லா?விலும்‌ நுழைதீதுப்‌ பலப்‌ படுத்திப்‌ பாதுகாத்து வருகிறார்கள்‌. இந்து *லா£வின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று, சுமார்‌ 20 ரிஷிகன்‌ (Smirithikaras—svlpPéarried) சென்னதாகும்‌. நாரதர்‌, பராசரர்‌, யாக்ஞவல்கியர்‌, விஸ்வாமிதீதிரர்‌, வசிஷ்டர்‌, மனு போன்றவர்கள்‌ என்ன கருதீ.துக்கொண் டார்களோ--அதைக்‌ காட்டிதீதான்‌ இன்று அய்க்கோர்ட்‌, சப்ரீம்‌ கோர்ட்‌ போன்ற நீதிமன்‌றங்கவில்‌ தீர்ப்புகள்‌ எழுதப்படுகின்‌றன. இந்த ரிஷிகள்‌ சுதீத அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே $ இவர்களைப்பற்றி ஆதாரங்கள்‌ உண்டா என்று தேடினால்‌, அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக்‌ களஞ்சியங்‌ களாகவே இருக்கின்றன. *வச்சிர சூசிப்‌ பிரமாணம்‌? என்ற நூலிலுள்ளபடி--கலைக்கோட்டு முனி மான்‌ வயிற்றிலும்‌, கவுசிகர்‌ காதிராஜாவுக்கும்‌, ஜம்புகர்‌ நரி வயிற்றிலும்‌, கவுதமர்‌ பசு வயிற்றி லும்‌, வால்மிகி வேடனிடத்திலும்‌, அகஸ்தியர்‌ குடத்தினிடத்திலும்‌, வியாசர்‌ செம்படச்சி வயிற்றிலும்‌, வசிஷ்டர்‌ ஊர்வசி என்ற தாசி வயிற்றிலும்‌, கவுடல்யர்‌ முண்டச்சி வயிற்றிலும்‌, நாரதர்‌ வண்ணாத்தி வயிற்றிலும்‌, மதங்கர்‌ சக்கிலிச்சி வயிற்றிலும்‌, மாண்டவியர்‌ தவளை வயிற்றிலும்‌, சசங்கியர்‌ பறைச்சி வயிற்றிலும்‌, காங்கேயர்‌ சுழமுதை வயிற்றிலும்‌, சவுனகர்‌ நாயின்‌ வயிற்றிலும்‌ பிறந்திருக்கிறார்கள்‌. ¢ இப்படி--நாய்‌, நரி, கமுதை, தவளை; குடம்‌ கிவைகளின்‌ வயிற்றிலிருந்து எங்கள்‌ முன்னோர்கள்‌ பிறந்தார்கள்‌ $ அவர்கள்‌ வாக்குதீதான்‌ எங்களுக்குச்‌ சட்டம்‌? என்று நாம்‌ செொன்னால்‌--செயற்கை நிலா செய்து பறக்கவிடும்‌ மற்ற நாட்டுக்காரர்கள்‌ நம்மைக்‌ காட்டு மிராண்டித்தனதீதின்‌ சின்னம்‌ என்று கருதமாட்டார்களா? இத்தனை ரிஷிகள்‌, முனிவர்கள்‌, தெய்வீக புருஷர்கள்‌, ஆண்டவனின்‌ அவதா ரங்கள்‌, ஆழ்வார்கள்‌, நாயன்மார்கள்‌; மகாத்மாக்கள்‌ தோன்றி ¢ மகிமைகள்‌ * புரிநீதிருநீதுங்‌ கூட, நாம்‌ இன்றைக்கு வளையாத குண்டுசி செய்யக்கூடக்‌ கற்றுக்கொள்ளவில்லையே, ஏன்‌-என்றால்‌ என்ன பதில்‌ கூறமுடியும்‌ ₹ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1123 எனவே, பெரியோர்கள்‌ சொன்னது, பெரியோர்கள்‌ எழுதியது, பெரியோர்கள்‌ நடந்தது என்பதாகிய பிரசீசாரம்‌ செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச்‌ செய்வதற்குதீதானேயொழிய, வேறில்லை. ஆகவே, இம்மூன்று முட்டுக்‌ கட்டைகளை ஒழித்தாலொழிய நாம்‌ முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில்‌ தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும்‌-- அதில்‌ புரண்டு இன்பங்‌ காணும்‌ பன்றிகளாக நம்‌ மக்களும்‌ இருக்கவேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக்‌ கட்டைகளை ஒழிக்கவேண்டியது தமிழ்‌ மக்கவின்‌ முக்கிய-- முதற்‌ பணியாகும்‌ என்பதைதி தெரிவித்துக்கொள்ளுகிறேன்‌. [4 விடுதலை 8-தலையங்கம்‌--22-5-1959] 5. நாம்‌ அஞ்ஞானிகள்‌ ஞானம்‌ என்றால்‌ அறிவு என்று பொருள்‌) அஞ்ஞானம்‌ என்றால்‌ (பகுதீது அறியும்‌) அறிவற்ற தன்மை என்பது பொருள்‌. இன்றைய மக்களாகிய நாம்‌ பெரும்பாலோர்‌ (பகுதீதறிவற்ற) அஞ்ஞானிகளேயாவோம்‌. இதன்‌ காரணம்‌, நாம்‌ கியற்கைத்‌ தன்மையைப்‌ பற்றிச்‌ சிறிதும்‌ சிந்திக்காமல்‌, இயற்கைக்கு மாறுபாடான கடவுள்‌, மதம்‌, தெய்வீகம்‌, தெய்வீக முன்னோர்‌ கண்ட முடிவு என்பனவாகியவற்றிற்கு அடிமைகளாகிவிட்ட காரணதீதால்‌ மெய்ஞ்ஞானம்‌ என்பது நம்மை அணுகரமலே போய்விட்டது. மெய்ஞ்ஞானம்‌, அஞ்ஞானம்‌ என்ற சொற்களுக்கு உண்மையான பொருள்‌ என்ன வென்று பரர்தீதால்‌ மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும்‌ அஞ்ஞானி கவலை கொண்ட வனாகவுமே இருப்பான்‌ என்பதுதான்‌. கவலை என்பதன்‌ பொருன்‌--பேத நிலை. கவலையற்ற என்பதன்‌ பொருள்‌--பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்‌. மனிதன்‌ பகுதீதறிவு உரிமையுடையவனானதால்‌ அவன்‌ கண்டிப்பாக-கட்டாயமாக அபேத நிலையில்‌ உள்ள மெய்ஞ்ஞானியாகவே இருக்கவேண்டியவன்‌ ஆவான்‌. ஆனால்‌, அப்படிக்கில்லாமல்‌ பேத நிலைக்கு ஆளாகி அஞ்ஞானியாக இருந்.துவருகிறான்‌. மனிதருக்குள்‌ (சமுதாய வாழ்வில்‌ வாழ்ந்துவரும்‌) மனித சமுதாய ஜீவியத்தில்‌ பேதநிலை ஏன்‌ இருக்கவேண்டும்‌ என்பது சிந்திக்கத்‌ தக்கதாகும்‌. அதிலும்‌ மனித சமுதாயத்தை அடக்கி ஆட்சிபுரியும்‌ அரசு என்ற ஆட்சிக்கு உட்பட்ட மக்களிடையில்‌ பேத நிலை ஏன்‌ இருக்கவேண்டும்‌ i ஏன்‌ இருக்கிறது ¢ என்று சிந்திப்போமானால்‌, அதன்‌ விடை என்னவென்றால்‌, மனித சமுதாயத்தை அடக்கி ஆளும்‌ ஆட்சி அஞ்ஞான ஆட்சியாய்‌ இருக்குமானால்‌, அது கண்டிப்பாய்ப்‌ பேதநிலை: உள்ள ஆட்சி யாய்தீதான்‌ இருக்கும்‌. மனித சமுதாயத்தை அடக்கியாளும்‌ ஆட்சி மெய்ஞ்ஞான (பகுதீதறிவு) ஆட்சியாய்‌ இருக்குமானால்‌, அது கண்டிப்பாய்‌ வாழ்வில்‌ பேதநிலை அற்ற அபேதநிலை ஆட்சியாகத்‌ தான்‌ இருக்கவேண்டும்‌, இருந்துதான்‌ தீரும்‌. நம்‌ நாட்டில்‌ இதுவரை இருந்துவந்த ஆட்சி முறையானது அஞ்ஞான ஆட்சி; அதாவது, பேதத்தை நிலை நிறுதீதுவதும்‌ மக்கள்‌ 100-க்கு 100 பேரையும்‌ கவலைக்கு, போதாமைக்கு உட்படுத்‌ துவதுமான ஆட்சியே நடந்து வந்திருக்கிறது. இன்று ஒவ்வொரு மனிதனும்‌ மற்றவனைவிட மேலான நிலையில்‌ இருக்கவேண்டும்‌ என்ற அவரவினால்‌ போட்டி போடுவோனாகி, சதா கவலைகீகுன்ளாகி, பல தொல்லை களுக்கும்‌ ஆட்பட்டவனாகவே இருந்து வருகின்றான்‌. இதுதான்‌ பகுதீதறிவு? ஆறறிவு உடைய மகனுக்கு அழகு. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1124 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ மற்றும்‌, திதி தொல்லைக்கு ஆக்கம்‌ கொடுத்து, மேலும்‌ மேலும்‌ மனிதனை கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கு அரசாங்கம்‌ கடவுளைப்‌ பயன்படுதீதிக்கொண்டால்‌, அதற்காகவே அரசாங்கம்‌ கடவுளைக்‌ காப்பாற்றினால்‌, பிரச்சாரம்‌ செய்தால்‌ ௮து அஞ்ஞான ஆட்சி என்பதையே தெலிவுபடுதீதுவதாகும்‌. இதனால்‌ மக்களுக்குக்‌ கவலையும்‌, கேடும்‌, போட்டியும்‌, போராட்டமும்‌ மாதீதிர மல்லாமல்‌ ஆட்சிக்கும்‌ பல தொல்லையும்‌, தொந்தரவும்‌ ஏற்பட வழியாகிறது. நாடு வளர்ச்சி பெறாமல்‌ போனதற்கும்‌, மக்கள்‌ கீழ்மக்களரகவும்‌, ஒழுக்கம்‌, நாணயம்‌ அற்றவர்களாகவும்‌ ஆனதற்கும்‌ இதுவே காரணமாகிறது. உண்மையான நல்ல ஆட்சி, சமநிறை ஆட்சி என்றால்‌, துலாக்கோல்‌ முள்ளும்‌ தட்டும்‌ போல்‌, ஒவ்வொரு மனிதனும்‌ மற்ற மனிதனுக்கு சமநிறை போல்‌ ஆக்கப்படும்‌ ஆட்சியாக இருக்கவேண்டும்‌. மனிதன்‌ பிறக்கும்போது மேல்‌ சாதிப்‌ பிறவியாய்ப்‌ பிறப்பதில்லை ] மனிதன்‌ பிறக்கும்போது செல்வவானாகப்‌ பிறப்பதில்லை. அதுபோல்‌ மனிதன்‌ பிறக்கும்போது கீழ்‌ சரதியானாகவும்‌, தரித்திரனாகவும்‌ பிறப்பதில்லை. அப்படியிருக்க; மனிதரில்‌ கீழ்சாதி, தரிதீதிரன்‌, மேல்சாதி, செல்வவான்‌ என்பதாக ஏன்‌ இருக்கவேண்டும்‌ 9 மற்றும்‌, மக்களை சமமாய்‌, நீதியாய்‌ ஆட்சி புரிய ஒரு அரசாங்கம்‌ இருந்தும்‌ இப்படிக்‌ கீழ்‌-மேல்‌ நிலை ஏன்‌ இருக்கவேண்டும்‌ ? ஏன்‌ இருக்க விடவேண்டும்‌ ₹ பேதமற்ற நிலையுடைய மக்களையும்‌, பேதமற்ற தன்மையுடைய மக்களையும்‌ கொண்ட ஒரு ஆட்சியையும்‌ காணவேண்டுமானால்‌ அரசர்களையும்‌, கடவுள்களையும்‌, தரகர்களையும்‌ கொன்று குவிதீதுதீதான்‌ காணமுடிந்திருக்கிறது. என்ற நிதர்சனமான எடுத்துக்காட்டுதனை இப்படிப்பட்ட நிலையைக்‌ கண்ட நாடுகளில்‌ காண்கிறேரம்‌. இப்படிப்பட்ட நிலையைக்‌ காண்பதும்‌ குற்றமல்ல என்று தோன்றும்படியாகவே அதாவது, இம்‌ மாதிரிப்‌ பேத நிலையை உண்டுபண்ணியவர்களுக்கும்‌, அதை ஆதரிப்பவர்‌ களுக்கும்‌, அதனால்‌ நலம்‌ அனுபவிப்பவர்களுக்கும்‌ தண்டனை கொடுப்பதை ஒக்குமே தவிர, கொன்று குவித்தல்‌ என்பது கொலைபாதகமானது என்ற கருதீதில்தான்‌, இம்‌ மாதிரி மரண தண்டனைகள்‌ நடைபெற்றிருக்கிறது என்றுதான்‌ கருதவேண்டியிருக்கிறது. ஆதலால்‌, அஞ்ஞான ஆட்சியை ஒழிதீதுக்கட்டி, பேதமற்ற மெய்ஞ்ஞான ஆட்சியை ஏற்படுத துவது என்பது வியாதிக்கரரன்‌ பிழைக்க, அவனுக்கு இரண சிகிச்சை (ஆபரேஷன்‌) செய்வது போன்றுதான்‌ ஜீவகாருண்ய செய்கையாக ஆகுமே ஒழிய, ஒரு நரனாம்‌ இம்‌ முயற்சிக்குத்‌ தவறான காரியமாக ஆகாது என்பது நமது கருத்து. இந்தக்‌ கருதீதில்தான்‌ இந்நிலை அடைய பல நாடுகளில்‌ பெரும்‌ பெரும்‌ புரட்சிகள்‌ ஏற்பட்டிருக்‌ கின்றன என்று சொல்லலாம்‌ ) ஏற்படக்கூடும்‌ என்றும்‌ சொல்லலாம்‌. மக்கன்‌ ஞானிகளாக, பகுதீதறிவுவாதிகளாக ஆக்கப்பட்ட நாடுகளில்‌ இம்‌ முயற்சிகள்‌ துவகீகப்படுமானால்‌ இம்சைக்கு இடமில்லாமல்‌ இஷ்டபூர்வமான முறையில்‌ வெற்றியடையலாம்‌. ஏன்‌ அஞ்ஞான ஆட்சியில்‌ பேதம்‌ ஏற்பட்டது என்று சொல்லவேண்டியதாகிறது என்றால்‌, ஆட்சியின்‌ அனுமதியினாலும்‌, பாதுகாப்பினாலும்தான்‌ மேல்சாதியானும்‌ செல்வவரனும்‌ வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு-நீதிக்கு-சமதீ துவதீதிற்கு விரோத மான நிலை தானாக ஒரு விநாடியும்‌ வாழமுடியாது. பேதநிலை எதற்காக இருக்கவேண்டும்‌ 1 பகுத்தறிவு காரணமாக துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, உள்ளதைக்‌ கொண்டு திருப்தியடைந்து வாழவேண்டிய உரிமை உடையவர்களே ஆவார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1125 இந்தப்படி மக்கள்‌ கவலை, தக்கம்‌, குறைவற்று வாழ்கிறார்களா என்பதை மேற்‌ பார்வை செய்வதுதான்‌ மெய்ஞ்ஞான ஆட்சி என்பதாகும்‌. [விடுதலை -தலையங்கம்‌--21.9-1964 ; 8-2-1969] 8. நம்பிக்கையாளரும்‌ நம்பிக்கை மறுப்பாளரும்‌ ஒருவனை ¢ நாதீதிகன்‌ ! என்று அழைப்பதனால்‌ அவன்‌ நன்னெறியற்றவன்‌ என்று பிறர்‌ கருதவேண்டும்‌ என்பது அழைப்பவர்களின்‌ கருத்து. கொஞ்ச காலதீதுக்குமுன்‌ ¢ நாதீதிகர்‌? எனப்படுவோர்‌, * சமுதாயப்‌ பிரஷ்டர்‌! களாகக்கூட மதிக்கப்பட்டனர்‌. அதற்கும்‌ கொஞ்ச காலதீதிற்குமுன்‌ நாத்திகர்‌ எனப்படுவோரை அரசர்கள்‌ இம்சிதீ.தும்‌ வந்தனர்‌. அதற்கும்‌ வெகு காலத்திற்குமுன்‌ நாத்திகர்‌ எனப்படுவோருக்‌ கெல்லாம்‌ சித்திரவதையும்‌, மரண தண்டனையும்‌ விதிக்கப்பட்டுவந்தனஃ இப்பொழுதோ அந்த நிலைமை முற்றிலும்‌ மாற்றம்‌ அடைந்துவிட்டது என்றாலும்‌, சாமான்ய ஜனங்களால்‌ மதம்‌ என்று கூறப்படுவதை மறுப்பவர்களையெல்லாம்‌ தூஷித்துச்‌ சமுதாயப்‌ பிரஷ்டர்களாகக்‌ கருதுவதும்‌, அறிவு வளர்ச்சிக்கும்‌, ஆராய்ச்சி ஞானமுன்னேற்‌ றதீதுக்கும்‌ தடை உண்டுபண்ணி, வைதிகத்துக்ீகு ஆதரவளிப்பதுமாயிருநீது வருகிற தானது யாவராலும்‌ ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. நிற்க, வேதங்களெல்லாம்‌ தெய்வ வாக்கென்றும்‌, வேதங்களை மறுப்பது ¢ கடவுள்‌ இல்லை? என்று மறுப்பதற்கு ஒப்பாகும்‌ என்றும்‌ மக்கள்‌ பொதுவாகக்‌ கருதி இருக்கும்‌ நம்பிக்கையே, சாமான்ய மதக்‌ கோட்பாடுகளை மறுப்பவனைக்கூட நாத்திகன்‌ என்று பழிக்கப்படுவதற்கு மூலகாரணமாய்‌ இருக்கிறது. ஆனால்‌, வேதங்களெல்லாம்‌ தெய்வத்தின்‌ செந்த வாக்கென்று நம்புவதென்பது நாதீதிகனுக்கு மிகவும்‌ கஷ்டமாயிருக்கிறது. ஆகவே, நாதீதிகன்‌ கடவுள்‌ வார்‌ தீதைகளையாவது, கடவுள்‌ கட்டளைகளையாவது ஒருபோதும்‌ மதுக்கவில்லையென்பதும்‌, மனிதனுடைய வார்தீதைகளையும்‌ கட்டளை களையும்‌ மட்டுமேதான்‌ அவன்‌ மறுக்கிறான்‌ என்பதும்‌ யோசித்துப்‌ பார்தீதால்‌ நன்றாய்‌ விளங்கும்‌. சர்வ சக்தியும்‌, சரீவ வியாபகமும்‌, சர்வமும்‌ அறியும்‌ தன்மையும்‌, சர்வ தயாபரதீ தவமும்‌ உடைய கடவுள்‌ என்பதாக ஒன்று உண்டென்று நம்பின--அறிந்த எவனும்‌ அப்படிப்பட்ட கடவுன்‌ ஒருவர்‌ இல்லை என்று மறுக்க முன்வரவே மாட்டான்‌, இதை ஒவ்வொருவரும்‌ ஞாபகதீதில்‌ வைதீதுக்கொள்ளவேண்டும்‌. ஏனெனில்‌, அப்படிப்பட்ட கடவுளை இல்லையென்று மறுப்பதால்‌ அவனுக்கு என்ன. இலாபம்‌ $ கடவுள்‌ தண்டனையை அலட்சியம்‌ செய்தாவது இப்படிச்‌ சொல்லவேண்டும்‌ என்கின்ற அவசியம்‌ அவனுக்கு என்ன வந்தது ? அன்றியும்‌, வேதங்களெல்லாம்‌ கடவுளாலேயே கூறப்பட்டன என்று மனப்‌ பூர்வமாக அறிந்த எவனும்‌-சந்தேகதீதுக்கவது ஆளான எவனும்‌, ¢ வேதங்கள்‌ கடவுன்‌ வாக்கல்ல? என்று மறுக்கவும்‌ துணியமாட்டான்‌. வேதங்கள்‌ எல்லாம்‌ தெய்வ வாக்கு என்று கூறுவதற்கு வெறும்‌ குருட்டு நம்பிக்கையும்‌ நிர்ப்பத்தமூமே ஆதாரமாக இருக்கின்‌றனவே ஒழிய, எவ்வித ருசுவோ, பிரதீதியட்சப்‌ பிரமாணமோ ஒன்றும்‌ கில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1126 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ எனவே, ஆதீதிகனுக்கும்‌ நாதீதிகனுக்கும்‌ வித்தியாசம்‌ என்ன என்று பார்ப்பா மானால்‌--முதலாவது, ஆத்திகன்‌ புராணங்கள்‌ கூலுபவையெல்லாம்‌ உண்மை என்று நம்ப வேண்டும்‌ என்கின்றான்‌. நாதீதிகன்‌ அவைகளை அப்படியே ஒப்புக்கொள்ள மறுக்கிறான்‌. இவ்வளவுதான்‌ ஆதீதிகனுக்கும்‌ நாதீதிகனுக்கும்‌ உள்ள உண்மையான வித்தியாசம்‌. ஒருவன்‌ ஒன்றை உண்டு என்று நம்புவதனரலே உயர்ந்த நெறியுடையவனாக ஆகிவிடமாட்டான்‌ ) இல்லை என்று மறுப்பதனால்‌ அதனாலேயே நெறிகெட்டவனும்‌ ஆக மாட்டான்‌. ஏனெனில்‌, நம்பிக்கையும்‌ அவநம்பிக்கையும்‌ அதனதன்‌ ருசுவைப்‌ பொறுத்தது. வேதங்களெல்லாம்‌ கடவுள்‌ வாக்கென்றெண்ணி ஆத்திகன்‌ அவைகளை நம்புகிறான்‌ என்றாலும்‌, யாரோ சிலர்‌ வேதங்களெல்லாம்‌ கடவுள்‌ வாக்கு என்று சொன்னதை நம்பித்தான்‌ அவனும்‌ வேதங்களைக்‌ கடவுள்‌ வாக்கென்று நம்புகிறானே அல்லாமல்‌ தனக்குத்‌ தேவையான ரசு வெல்லாம்‌ கிடைதீது விட்டது என்று அல்ல, ஆனால்‌, அவன்‌ அவ்‌ விஷயத்தைச்‌ சற்று நுட்பமாக ஆராய்ந்து பார்‌ தீதால்‌, * வேதங்கள்‌ கடவுள்‌ வாக்கு? என்று கூறுவது கடவுள்‌ அல்ல என்பதும்‌, மனிதன்தான்‌. என்பதும்‌) வேதங்களுக்கும்‌ கடவுளுக்கும்‌ ஒரு சம்பந்தமும்‌ கில்லை என்பதும்‌ அவனுக்கு நன்கு புலனாகாமல்‌ போகாது ஏனென்றால்‌, என்‌ ஆத்திக நண்பர்களில்‌ எவரும்‌ ஒருபொழுதும்‌ கடவுளைக்‌ கண்டதே கிடையாது. கடவுளிடமிருந்து வாய்மொழியாகவோ, எழுதீது மூலமாகவோ யாதொரு செய்தியும்‌ அவர்களுக்கு வந்ததும்‌ கில்லை. வேதங்கள்‌ எல்லாம்‌ ¢ கடவுள்‌ வாய்ப்‌ பிறப்பு? என்பதற்குக்‌ கடவுளிடம்‌ இருந்து நேர்முகமான தெளிவு எதுவும்‌ அவர்களுக்குக்‌ கிடையவும்‌ கிடையாது. எல்லாம்‌ கடவுள்‌ வாய்மொழி என்று நம்புவதற்கு ஆதாரமாய்‌ இருப்பதெல்லாம்‌, ரிஷி வாக்கியங்கள்‌? என்பவைகளும்‌, புராணங்கள்‌ என்பவைகளும்‌, கடவுள்‌ அருள்‌ பெற்றவர்கள்‌ என்பவர்கள்‌ சொன்னார்கள்‌ என்று எழுதிவைக்கப்பட்டவைகளும்தாம்‌. ஆனால்‌, அவை நம்‌ கண்ணெதி3ர மனிதர்களாலேயே எழுதப்பட்டு, மொழிபெயர்க்கப்‌ பட்டு, அச்சிடப்‌ பெற்றதையும்‌, பெறுவதையும்‌ பார்க்கிறோம்‌. ஓ! ஆதீதிக நண்பனே ! வேதங்கள்‌ எல்லாம்‌ கடவுள்‌ ரிஷிகளுக்கு உபதேசம்‌ செய்ததாக நீ நம்புகிறாயே ஒழிய, கடவுன்‌ அவ்வாறு உபதேசம்‌ செய்ததாகக்‌ கடவுள்‌ உன்னிடம்‌ நேரில்‌ சொன்னது கிடையாதே ! நீ பார்த்ததும்‌ கிடையாதே ) வேதங்கள்‌ எல்லாம்‌ கடவுன்‌ வார்தீதை என்று யாரோ சொன்னதைதீதானே நீ நம்பிக்கொண்டு இருக்கிறாய்‌? ஆனால்‌ உண்மையில்‌, ¢ ரிஷிகள்‌ ? யாரென்று உனக்குத்‌ தெரியாது! வேதங்களை எழுதியவர்‌ யாரென்றும்‌, எப்பொழுதென்றும்‌ நீ அறிவாயா? வேதங்களை மொழி பெயர்தீததும்‌, தொகுதீததுங்கூட இன்னார்‌ என்றும்‌ உனக்கு நேரில்‌ தெரியாது எனவே, உனக்குத்‌ தெரியாத--யாரோ சிலர்‌ சொல்வதை ஆதாரமாகக்‌ கொண்டு; € வேதங்கள்‌ எல்லாம்‌ தேவ வாக்கு ? என்று நீ நம்புகிறாய்‌. ஆகவே, வேதங்கள்‌ தேவ வாக்கு அலல என்று நான்‌ மறுப்பதனால்‌ அது தேவ வாக்கை நான்‌ மறுதீததாக எப்படி ஏற்படும்‌ ₹ ஒருக்காலும்‌ ஏற்படவே மாட்டாது) மனித வாக்கை மறுப்பதாகவேதான்‌ ஏற்படும்‌. ஆனால்‌, நாதீதிகர்கள்‌ வேண்டுமென்றே ஏதோ தர்‌எண்ணத்தின் பேரில்‌ வேத சாஸ்திரங்களை மறுப்பதாக ஆத்திகர்கள்‌ பழிசுமதீ.துகிறார்கள்‌, அதிலுள்ள உண்மை என்னவெனில்‌, நாத்திகன்‌ தனது பகுதீதறிவுக்குச்‌ சரி என்றும்‌, உண்மை என்றும்‌ பட்டதை மாதீதிரந்தான்‌ நம்புகின்றான்‌. மற்றபடி, சாமான்ய ஜனங்கள்‌ கைக்கொண்டொழுகும்‌ “மதங்கள்‌? அவனது பகுதீதறிவுக்குப்‌ பொய்‌ என்னு தோன்றுவதனாலும்‌, அந்தப்படி www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1127 தோன்றும்‌ மதம்‌ மக்களுக்கு எவ்வித நன்மையும்‌ பயக்காது என்றும்‌, தீமையே பயக்கும்‌ என்றும்‌ அவன்‌ நம்புவதாலும்‌, அனுபவத்தில்‌ காண்பதாலும்‌, நாத்திகன்‌ அவற்றை அடியோடு மறுப்பதோடு எதிர்க்கவும்‌ செய்கிறான்‌. அன்றியும்‌, தன்‌ பகுதீதறிவுக்குச்‌ சரி என்று தோன்றுபவைகளை வெளிப்படையாகக்‌ கூறி, அவைகளைப்‌ பகிரங்கமாய்ப்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ நாத்திகன்‌ மிக ஒழுங்காகவே நடக்கிறான்‌. இவ்விஷயத்தில்‌ ஒரு ¢ போப்‌ !புக்கோ அல்லது ஒரு மதாசீசாரிக்கோ உள்ள பெருமை அவனுக்கும்‌ உண்டு. தவிர; நாத்திகர்கள்‌ எல்லாம்‌ சுயநலக்காரர்கள்‌, நெறியற்றவர்கள்‌ என்று குறை கூறுவதானது சிறிதும்‌ புதீதியற்றவர்கள்‌ கூறும்‌ கூற்றாகும்‌. ஏனெனில்‌, அப்படிச்‌ சொல்லுதலானது ¢ அபேதவாத (சோஷியலிஸ்ட்‌) தலைவர்கள்‌: எல்லாம்‌ சுயநலக்காரர்கள்‌, நெறியற்றவர்கள்‌? என்று குறைகூறுவதற்கு ஒப்பாகவே இருக்கிறது. உண்மையில்‌, நாதீதிகர்களையும்‌, சோஷியலிஸ்ட்‌ தலைவர்களையும்‌ ஜனங்கள்‌. ஆதரிப்பதில்லை $ மதிப்பதும்‌ கில்லை ;$ அன்றியும்‌ பழிக்கவும்‌ வெறுக்கவும்‌ செய்கிறார்கள்‌. ஆகவே பொதுஜன மதிப்பில்லாத இந்தப்‌ பழியினாலும்‌, வெறுப்பினாலும்‌ நாதீதிகர்களுக்கு. என்ன விதமான சுயநலமோ; கிலாபமோ, பெருமையோ இருக்க முடியும்‌ ₹ * ஜாதிப்‌ பிரஷ்டனாகவோ, பொதுஜன மதிப்பை கிழக்கவோ பொருள்‌ நஷ்ட மடையவோ,; கிழக்கப்படவோ நீ கஷ்டப்பட்டால்‌ மாதீதிரம்‌ நாத்திகன்‌ அல்லது சோஷி யலிஸ்ட்‌ எனப்‌ பெயர்‌ எடுப்பாயாக ! என்று ஒரு பெரியார்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி. யிருக்க, இதில்‌ ஒரு மனிதனுக்கு சுயநலம்‌ இருக்குமா? எனவே, நாதீதிகதீதினால்‌ ஒருவன்‌ எதீதகைய இலாபமும்‌ அடையமாட்டான்‌ $ நாத்திகன்‌ எனப்‌ பெயர்‌ எடுப்பது ஒரு மனேகரமானதும்‌ கீர்‌ தீதி அளிப்பதுமான செயலும்‌ அல்லஃ * வேத உண்மை யை மறுப்பவர்களுக்கெல்லாம்‌ நாதீதிகப்‌ பட்டம்‌ சூட்டுவது, தன்‌ நீங்காக்‌ கடமையென ஆத்திகன்‌ நம்புகிறான்‌. கடவுளைக்‌ காப்பாற்றுவதும்‌, நாதீதிகர்களைப்‌ பழி வாங்குவதும்‌ தன்‌ கடமையென ஆத்திகன்‌ கருதுகிறான்‌. எல்லா மதக்காரர்களும்‌ அவ்வாறே எண்ணுகிறார்கள்‌. இந்தக்‌ குரூர நம்பிக்கையினால்‌ உண்டான போர்கள்‌ எத்தனை 1 கடவுளைக்‌ காப்‌ பாற்றப்‌ புறப்பட்டவர்களால்‌ கொல்லப்பட்டவர்கள்‌ எதீதனை ! சிதீதிரவதை செய்யப்பட்ட வர்கள்‌ எத்தனை | இம்சிக்கப்பட்டவர்கள்‌ எதீதனை | இந்த * மூடச்‌ சாம்பிராணி களின்‌ பாதுகாப்பை விரும்புமாறு ¢ கடவுள்‌! அவ்வளவு பலவீனமானவரா? தன்னை எதிர்‌ தீதவர்களைக்‌ கொல்லவும்‌ பழிவாங்கவும்‌ கியலாது--கூலி களை நியமிக்க வேண்டியவாறு அவர்‌ அவ்வளவு சகீதியற்றவரா ? கடவுளைக்‌ காப்பாற்ற ஆத்திரம்‌ கொள்ளும்‌ ஆத்திக நண்பனே ! நாத்திகிடத்திலும்‌ அவிசுவாசிகளிடத்திலும்‌ நீ கொண்டுள்ள வெறுப்பு எவ்வளவு கொடுமையானது என்று நீ எப்பொழுதாவது சிந்தித்துப்‌ பார்த்ததுண்டா உலக நாகரிகத்தின்‌ உண்மைச்‌ சரிதீதிரநீதான்‌ யாது? அவிசுவாசிகளுடையவும்‌, நாதீதிகர்களுடையவும்‌ வெற்றியே உலகத்தின்‌ உண்மைச்‌ சரிதீதிரமாகும்‌. அவர்கள்‌ பொய்‌ நம்பிக்கைகளை மறுதீததினாலேயே உண்மை வெவியாகி உலகம்‌ நாகரிகம்‌ பெற்று: வருகிறது. www.thamizham.net - Free £ book No 3031 1128 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌: அக்‌ காலதீதில்‌ வாழ்ந்த ஆதீதிகக்‌ கொன்கை உடைய * புண்ணிய சீலர்கள்‌? உண்மையை வெளியாகீகப்‌ பாடுபட்ட அவிசுவாசிகளையும்‌ நாதீதிகர்களையும்‌ நிந்தனை செய்தார்கள்‌ ] சித்திரவதை செய்தார்கள்‌ ] இம்சிதீதார்கள்‌) கன்னெஞ்சத்தோடு கழுவேற்றினார்கள்‌ ) கொலை புரிந்தார்கள்‌. அந்த ஆதீதிகர்களின்‌ சந்ததிகளோ கர்ண. பரம்பரைச்‌ செய்திகளை யெல்லாம்‌ உண்மையென நம்பினார்கள்‌. ஆனாலும்‌, அவைகளைதீ தைரியமாய்‌ மறுதீதுக்கூறி இறந்துவிட்ட 6 அவிசுவாசிகளை! யெல்லாம்‌ இப்பொழுது வாழ்தீதுகிறார்கள்‌. ஆனால்‌, இப்பொழுது உண்மையை விளக்குவதற்குப்‌ பாடுபட்டுக்‌ கொண்டு உயிருடன்‌ இருக்கும்‌ ¢ அவிசுவாசிகளை?யெல்லாம்‌ குற்றம்‌ சொல்ல முயற்சிக்‌ கிறார்கள்‌. சூரியமண்டல உண்மைகளை முதன்முதலில்‌ வெளியிட்ட கோபர்நிக்கஸ்‌ சமுதாயப்‌ பிரஷ்டரானார்‌. இப்பொழுதோ பூமி சூரியனைச்‌ சுற்றிவருகிறதென்று எல்லா மக்களும்‌ நம்புகிறார்கள்‌. முன்‌ நிந்திக்கப்பட்ட கோபர்நிக்கஸ்‌ பெயரும்‌ இப்பொழுது போற்றப்‌ படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும்‌ உண்மையில்‌ ஒவ்வொரு சூரியனுக்கு ஒப்பானது என்று முதன்முதலில்‌ கூறிய புரூனோ தீக்கிரையாக்கப்பட்டார்‌. வானசாஸ்திர உண்மைகளை வெளியிட்டு, பாதிரிகளின்‌ குருட்டு நம்பிக்கைகளை யொழிதீத கலிலியோ சிறையில்‌ சித்திரவதை செய்யப்பட்டார்‌. இப்பொழுது அதே கிறிஸ்தவர்கள்‌ கலிலியோ கூறியவைகள்‌ எல்லாம்‌ உண்மை யென்று ஒப்புக்கொள்கிறார்கள்‌. அவரது பெயரும்‌ இப்போது உலகதீதில்‌ மதிப்புப்‌ பெற்றிருக்கிறது இவ்வண்ணம்‌ ஆராயப்‌ புகுந்தால்‌ அவிசுவரசிகன்‌--நாதீதிகர்கள்‌ என்பவர்கள்‌ கூறியவைகளே உண்மையென்றும்‌ ] விசுவாசிகள்‌--ஆதீதிகர்கள்‌ என்பவர்கள்‌ கூறுப வைகன்‌ பொய்யென்றும்‌ விளக்கப்‌ பதினாயிரக்‌ கணக்கான திருஷ்டாநீதங்கன்‌ எடுத்துக்‌ காட்டலாம்‌. இப்பொழுது நாளுக்குநான்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக வைதிகர்கள்‌ பின்னோக்கிச்‌ சென்றுகொண்டிருக்கின்றனர்‌. காலம்‌ செல்லசி செல்ல சாத்திர உண்மைகளை (சயின்ஸ்‌) ஆதீதிகர்களும்‌ வைதிகர்‌ களும்‌ ஒப்புக்கொண்டுதான்‌ வருகிறார்கள்‌. எனினும்‌, உண்மை நம்பிக்கையுடையவர்கள்‌ ? அல்லது ஆதீதிகர்கள்‌, நாத்திகர்‌ களை வெறுக்கிறார்கள்‌ ) நாதீதிகர்களைத்‌ தூற்றாமல்‌ இருப்பதில்லை) தூற்றுவதைதீ தம்‌ முக்கிய கடமையென்றும்‌ நம்புகிறார்கள்‌. டார்வின்‌ கொள்கைகளை நாத்திகக்‌ கொள்கை, மூடக்கொள்கை என்று வெறுதீ தவர்கள்‌ இப்போது அந்தப்‌ பரிணாம வாதத்தைச்‌ சந்தோஷமாக ஒப்புக்கொள்ளுகிறார்கள்‌. உண்மை ஆராய்சீசியானரை 200 வருஷங்களாகச்‌ சித்திரவதை செய்தும்‌, கொலை புரிந்தும்‌ வந்த ஆத்திகன்‌ இன்னும்‌ திருப்தி அடையவில்லை. மதப்‌ புரட்டுகளையும்‌, வேதப்‌ புரட்டுகளையும்‌, புராணப்‌ புரட்டுகளையும்‌ ஒழிக்க முன்‌ வருகின்றவர்களை நாதீதிகர்கள்‌ என்று ஆத்திகன்‌ இப்பொழுதும்‌ கூறிக்கொண்டே தான்‌ இருக்கிறான்‌. உதாரணமாக); ¢ கிறிஸ்தவர்‌ அல்லாத பெண்களும்‌ புருஷர்களும்‌ எரி நரகதீதிலாழ்தீ.து தவிப்பார்கள்‌ ? என்று கிறிஸ்தவர்கள்‌ கூறுவது வழக்கமாக இருந்தது. அது மூடநம்பிக்கை என்று எடுதீதுக்‌ காட்டினால்‌ அவர்களுக்குப்‌ பிடிக்கவில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1129 ¢ ஞான ஸ்நானம்‌ பெறாத குழந்தைகள்‌ எல்லாம்‌ நரகம்‌ புகுவார்கள்‌? என்று கிறிஸ்த வர்கள்‌ நம்பி இருந்தார்கள்‌. அது மூடநம்பிக்கை என்று கூறினால்‌ அவர்களுக்குக்‌ கோபம்‌ வருகிறது. மநீதிரவாததீதிலும்‌ சூனியத்திலும்‌ அவர்களுக்கு நம்பிக்கையிருநீதது. ஆயிரக்‌ கணக்கான மந்திரவாதிகளையும்‌, சூனியக்காரர்களையும்‌ அவர்கள்‌ நெருப்பில்‌ இட்டுக்‌ கொளுத்தினார்கள்‌. இப்பொழுது மந்திரவாதத்தைப்‌ பற்றிப்‌ பேசினால்‌ அதே கிறிஸ்தவர்களுக்கு வெறுப்புண்டாகிறது $ மநீதிரவாதிகளை அஞ்ஞானிகள்‌: என்கிறார்கள்‌. ¢ ஆதாம்‌ 3, * ஏவான்‌ 7, * பிரளயம்‌? முதலிய புராணக்‌ கதைகளை அவர்கள்‌ நம்பி னார்கள்‌. இப்பொழுதோ அவைகள்‌ எல்லாம்‌ உபமான கட்டுக்கதை என்றுகூற முன்வந்து விட்டார்கள்‌. ஆறுநாட்களில்‌ உலகம்‌ உண்டுபண்ணப்பட்டதென்று அவர்கள்‌. நம்பினார்கள்‌. இப்பொழுது பூகர்ப்ப சாத்திரக்‌ கொள்கைகளை மெல்ல மெல்ல ஒப்புக்கொள்கிறார்கள்‌. ஓ! ஆதீதிக நண்பர்களே! நாத்திகம்‌ எனப்பட்டவைகளே இப்பொழுது ¢ வைதிகமாக ? இருக்கின்றன என்று நீங்கள்‌ உணரவில்லையா 8 நாத்திகன்‌ என இம்சிக்கப்‌ பட்டவர்கள்‌ கூறியவைகள்‌ எல்லாம்‌ இப்பொழுது உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டுவிட வில்லையா ₹ இன்று அவைகளைப்‌ பள்ளிப்‌ பிள்ளைகளுக்குப்‌ பாடமாகப்‌ பாதிரிகளாலேயே கற்பிக்கப்படவில்லையா ? தற்காலம்‌ உண்மையென நம்பப்படுபவைகள்‌: முன்னூறு வருடங்களுக்கு முன்‌ யார்‌ கூறியிருந்தாலும்‌ அவர்கள்‌ அப்பொழுது கொல்லப்பட்டே இருப்பார்கள்‌ அல்லவா ? எனினும்‌, ஒரு நூற்றாண்டுக்குப்‌ பின்‌ உண்மையென ஒப்புக்கொள்ளப்படுபவைகளை முன்னாடியே கூறுவோரை நீ நாத்திகன்‌ என்று அழைக்கிறாய்‌ ! சரிதீதிரதீதிலிருந்தும்‌, விஞ்ஞான சாஸ்திரதீதிலிருந்தும்‌ நீ ஒரு படிப்பினையும்‌ கற்றுக்கொண்டாயில்லை | நேற்று நம்பத்‌ தகாததாய்‌ இருந்தது இன்று நம்பத்‌ தக்கதாய்விட்டதை நீ உணர்கிறாயில்லை ! இன்று நம்பத்‌ தகாததாய்‌ இருப்பது நாளை நம்பத்‌ தகீகதாவதும்‌ நிச்சயம்‌, சுதந்திரமாகச்‌ சிந்தனை செய்து சுதந்திரமாகப்‌ பேசிய ¢ அவிசுவாசிகளாலே?யே உலக நாகரிகம்‌ உருப்பெற்று இருக்கிறது ) உருப்பெற்றும்‌ வருகிறது. அவர்கள்‌ உயிருடன்‌ இருந்தபோது அவிசுவாசிகள்‌ என்றும்‌, நாதீதிகர்‌ என்றும்‌ வெறுக்கப்பட்டனர்‌. ஆனால்‌, இப்பொழுதோ அவர்கள்‌ எல்லாம்‌ உலக நன்மைக்காக உழைத்த * புண்ணியாதீமாக்களாக? மதிக்கப்படுகிறார்கள்‌. இன்றைய நாத்திகர்களும்‌ பெரிதும்‌ அப்படித்தான்‌ ஆனவர்கள்‌. [6 குடிஅரசு: 3-கட்டுரை--28-7-1949] 7. பகுத்தறிவுக்குத்‌ தடைகள்‌ பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும்‌. ஜீவராசிகளில்‌ மனித அக்குதீதான்‌ பகுத்தறிவு உண்டு, இதில்‌ மனிதன்‌ எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்தநிலையில்‌ இருக்கிறானோ: அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்‌. பகுத்தறிவு பெறும்படியான சாதனம்‌ நமக்கு நீண்டநாட்களாகவே தடைப்படுத்தப்‌ பட்டு வந்துள்ளது நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம்‌ செலுத்திய பார்ப்பனர்கள்‌. நாம்‌ 1686—142 www.thamizham.net - Free E book 14௦ 3031 1130 பெரியர்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ பகுதீதறிவு அடையமுடியாமல்‌ தடை செய்துகொண்டு வந்தார்கள்‌. மக்களிடையே பகுதீ தறிவைதீ தடைப்படுத்த கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌ முதலியவைகளைப்‌ புகுத்தி, அவை களை மக்கள்‌ நம்பும்படி செய்‌.துவிட்டார்கள்‌. கடவுள்‌ என்றால்‌ ஒதீதுக்கொள்ளவேண்டும்‌. எங்கே? ஏன்‌ ? எப்படி 8 என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள்‌. இதைப்‌ பாலவே மததீதிற்கும்‌-என்ன ₹ எப்படி ? என்று சிந்திக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள்‌, கதைப்‌ போலத்தான்‌ சாஸ்திரமும்‌. இதில்‌ நாம்‌ பகுத்தறிவு என்றால்‌ என்ன என்பதற்கு விளக்கம்‌ காண்கிறோம்‌. பகுத்‌ தறிவு என்பது ஆதாரத்தைக்கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல்‌ ஏற்றுக்கொள்வது என்பது பொருள்‌. நமது கிழிநிலை, நமது முட்டாள்தனம்‌ மாறவேண்டு மானால்‌ நாம்‌ ஒன்றும்‌ பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்யவேண்டியதில்லை, பகுதீதறிவு கொண்டு தாராளமாகச்‌ சிந்தித்தால்‌ போதும்‌. நமது கொள்கை பகுத்தறிவு) பகுத்தறிவு என்றால்‌ நாத்திகம்‌ என்பது பொருள்‌. அறிவுகொண்டு சிந்திப்பதுதான்‌ நாத்திகம்‌ ஆகும்‌. கடவுள்‌ மனதுக்கும்‌; வாக்குக்கும்‌ எட்டாதது என்று கூறப்பட்டாலும்‌ அதுதான்‌ உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம்‌ நடத்துகின்றது) எல்லாவிதமான சர்வசகீதிகளும்‌ உடையது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள்‌ நம்மைத்‌ தவிர்தீது மற்ற உலகுக்கு ஒன்றுதான்‌. ஆனால்‌ நமக்குதீதான்‌ ஆயிரக்கணக்கில்‌ கடவுள்கள்‌ 1 நம்மைத்‌ தவிர்தீத மற்ற உலகிற்கு,--கடவுளுக்கு உருவம்‌ கில்லை) நமது கடவுள்‌ களுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்‌. மற்ற நாட்டுக்‌ கடவுள்களுக்கு ஒன்றும்‌ வேண்டியதில்லை ; நமது நாட்டுக்‌ கடவுள்களுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்‌. மற்ற நாட்டுக்காரர்கள்‌ கடவுள்‌-யோக்கியம்‌, நாணயம்‌, ஒழுக்கம்‌ உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள்‌. நமது நாட்டுக்‌ கடவுள்களுக்கோ இந்த ஒழுக்கம்‌, நாணயம்‌ எதுவும்‌ கிடையாது. மனிதனில்‌ கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள்‌ இருக்குமோ அவைகள்‌ அத்தனையும்‌ கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள்‌. இப்படி ஏராள மான பேதங்களையும்‌ நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும்‌, காரியத்திற்குக்‌ கேடான குணங்களையும்‌ கடவுளுக்குக்‌ கற்பிதீதிருக்கிறார்கள்‌. இவைகளை எல்லாம்‌ நம்புவதுதான்‌ மூடநம்பிக்கை, நல்லவண்ணம்‌ சிந்திதீது ஆராய்ந்து, ஏற்கவேண்டியதை ஏற்றுக்கொண்டு) மற்றதைத்‌ தள்ளிவிடுவதுதான்‌ பகுதீதறிவு. நாம்‌ பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார தீதால்‌, பகுதீதறிவுக்கு ஏற்ற கடவுள்‌ இருக்‌ கிறதா என்று சிந்தித்துப்‌ பார்‌ தீதால்‌, இல்லவே இல்லை; உண்மையில்‌ ஒரு கடவுள்‌ இருக்கு மானால்‌ நமக்குத்‌ தெரியாமல்‌ இருக்கவேண்டிய அவசியம்‌ என்ன ? அந்தக்‌ கடவுள்‌ தரம்‌ இருப்பதாக நமக்காவது ஏன்‌ தெரியப்படுத்தக்கூடாது ₹ ஆகவே, மக்கள்‌ இவற்றை எல்லாம்‌ அறிவுகொண்டு சிந்தித்தல்‌ வேண்டும்‌. அறிவு கொண்டு சிநீதிப்பதுதான்‌ பகுத்தறிவு. பகுதீதறிவுக்குத்‌ தடையாக இருப்பதும்‌, சிந்திக்க வெட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும்‌ கடவுன்‌ பற்றிய மூடநம்பிக்கைதான்‌ என்‌: பதையும்‌ இவற்றிற்கெல்லாம்‌ முன்னோடிகளான பார்ப்பனர்களின்‌ சதியையும்‌ மக்கள்‌: உணரவேண்டும்‌ சிந்திக்கவேண்டும்‌. சிந்தனைதான்‌ அறிவை வளர்கீகும்‌ ) அறிவுதான்‌ மனித வாழ்வை உயர் தீதும்‌. [8 விடுதலை -தலையங்கம்‌--20-6-1978] www.thamizham.net - Free £ book 14௦ 3031 1131 3. மனித வாழ்க்கை 1. மனிதராசி உயர்வானதா ? உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும்‌ தன்தன்‌ சரீரதீதில்‌ பற்றுக்கொண்டவைகளாகவே இருந்‌.துவருகின்றன. அந்தச்‌ சரீரப்பற்று என்பது, சரிரமானது ஜீவிதீதிருப்பதற்கு ஆதார மானது என்கின்ற ததீ.துவத்தினாலேயே ஏற்பட்டதாகும்‌. தன்னைக்‌ காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்காத ஜீவன்‌ கிடையவே கிடையாது எனலாம்‌. ஆனால்‌, எல்லா ஜீவராசிகளும்‌ என்றைக்காவது ஒருநாள்‌ ஜீவிதப்பற்று அற்று செதீதேபோகும்‌ என்பது மாதீதிரம்‌ அனுபவ சிந்தாநீதமாகும்‌. உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளைப்‌ போலவே மனித வர்க்கம்‌ என்னும்‌ ஜீவராசியும்‌ ஒன்றாகும்‌. ஒரு மனிதனும்‌; ஒரு யானையும்‌, ஒரு எறும்பும்‌, ஒரு சிறு பேனும்‌; பூதக்‌ கண்ணாடி மூலம்‌ பார்தீதறியத்தக்க அதிநுட்பமான ஒரு கிருமியும்‌ எல்லாம்‌ ஒரே ததீதுவத்தைக்கொண்ட ஜீவராசிகளேயாகும்‌. ஆனால்‌, அவை தோற்றதிலும்‌, செயலிலும்‌ வேறுபட்டிருக்கலாம்‌. ¢ அப்படியானால்‌ மனிதனுக்கும்‌ கழுதைக்கும்‌ விதீதியாசமில்லையா1 என்று ஒருவர்‌ கேட்கலாம்‌. ஜீவ ததீதுவதீதில்‌ வித்தியாசமில்லை என்றுதான்‌ பதில்‌ சொல்லுவேன்‌. ஏதாவது வித்தியாசம்‌ உண்டு என்று சொல்லவேண்டுமானால்‌, ஒரு நாய்‌ ஜீவனுக்கும்‌, ஒரு கமுதை ஜீவனுக்கும்‌ என்னவிதமான விதீதியாசமோ அந்தவிதமான வித்தியாசம்தான்‌ உண்டு என்று சொல்ல லாம்‌. ஆனால்‌, அவ்விதீதியாசம்‌ அளவில்‌ டிகிரியில்‌ (Degree) ஜாஸ்தியாகவோ கம்மியா கவோ இருக்கலாம்‌ என்றுதான்‌ கொள்ளவேண்டும்‌. இன்னும்‌ பேசப்போனால்‌, தாவர வர்கீகங்களும்‌, ஜீவ வர்க்கங்களும்கூட ததீது வத்தில்‌ அதாவது--உற்பதீதித்‌ ததீ.துவத்திலும்‌, வாழ்வுத்‌ ததீ.துவதீதிலும்‌, அழிவுத்‌ தத்து வத்திலும்‌ ஒரே ததீ.துவதீதை ஆதாரமாகக்கொண்டு இருந்துவருகின்றன என்றுதான்‌ சொல்லவேண்டியிருக்கிறது. வித்தின்‌ மூலம்‌ எப்படி மரம்‌, செடிகள்‌, புல்‌ பூண்டுகள்‌, உற்பதீதியாகின்‌றனவோ அதுபோல ஆண்‌-பெண்‌ சேர்க்கை விநீதுமூலம்‌ ஜீவப்‌ பிராணிகள்‌ உற்பதீதியாகின்‌ றன. விதீதில்லாமல்‌ எப்படி சில தாவர வர்க்கங்கள்‌ உற்பதீதியாகின்‌றனவோ, அதுபோல்தான்‌, ஆண்‌-பெண்‌ சேர்க்கையில்லாமல்‌ பல ஜீவ வர்க்கங்களும்‌ உற்பதீதியாகின்றனஃ தாவர வர்க்கங்களில்‌ ஒன்றுக்கொன்று வித்தியாசமும்‌, மாறுபட்ட சகீதியும்‌ இருப்பது போலவே, ஜீவ வர்க்கதீதினிடமும்‌ ஒன்றுக்கொன்று வித்தியாசமும்‌, மாறுபட்ட சகிதியும்‌ இருந்‌,துவருகின்றது. மனித ஜீவ வர்கீகதீதிடமுள்ள சில குணங்கள்‌ எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையோ, அதுபோன்றே--மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள்‌ மனித ஜீவ வர்க்கதீதிற்கு இல்லாமல்‌ இருப்பதை நாம்‌ பார்க்கிறோம்‌. ஒரு கழுதைக்கும்‌ ஒரு குரங்குக்கும்‌ உள்ள வித்தியாசத்தைக்‌ கணக்குப்‌ பார்தீது, ஒரு குரங்குக்கும்‌ ஒரு மனித னுக்கும்‌ உள்ள விதீதியாசதீதுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்ப்போமேயானால்‌, பின்‌ கண்ட விதீதியா சதீதின்‌ அளவு அதிகமாய்க்‌ காணமுடியாது. ஆகவே, மனித ஜீவன்‌; ஜீவப்‌ பிராணிகளி லெல்லாம்‌ மேலானதென்றும்‌, தனிப்பட்டதென்றும்‌, அதற்கு மாத்திரமே சில தனித்‌ ததீதுவங்‌ களுண்டு என்றும்‌, கருமம்‌, மதம்‌, மேல்‌ லோக வாழ்வு, கடவுள்‌, கடவுள்‌ தண்டனை, மன்னிப்பு, சன்மானம்‌ ஆகியவை சொந்தமென்றும்‌, மனிதனுக்கே சில ததீதுவங்கள்‌-- கடமைகள்‌; பிரார்தீதனைகள்‌ முதலியவை உண்டென்றும்‌ சொல்லுவதில்‌ ஏதாவது அர்தீத மிருக்க இடமுண்டா என்று பார்தீதால்‌, கவை வெறும்‌ கற்பனைகளென்றே விளங்கும்‌. மற்றும்‌, கடவுளுக்கும்‌ மனிதனுக்கும்‌ இருக்கும்‌ சம்பந்தமும்‌, பொறுப்பும்‌ மற்ற ஜீவராசி www.thamizham.net - Free £ book 14௦ 3031 1132 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ களுக்கு கில்லை என்று சொல்லமுடியுமா என்பதும்‌ விளங்கும்‌. அதுபோலவே, பாவமும்‌ புண்ணியமும்‌, சொர்க்கமும்‌, கடவுள்‌ பதத்தை அடையக்கூடிய தன்மையும்‌ மற்ற ஜீவ ராசி களுக்கு இல்லையென்று சொல்லமுடியுமா என்பதும்‌ விளங்கும்‌. ஒரு பூச்சியின்‌ செய்கைக்குப்‌ பாவம்‌, புண்ணியம்‌ உண்டானால்தான்‌ ஒரு மனித னின்‌ செய்கைக்குப்‌ பாவம்‌, புண்ணியம்‌ உண்டாக முடியும்‌, மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால்‌ தனிப்பட்ட காரியதீதுக்காகக்‌ கொடுக்கப்பட்டது என்றால்‌, ஒரு யானைக்‌ குள்ள தும்பிக்கை, ஒரு நாரைக்குன்ள நீண்ட மூக்கு, ஒரு முன்ளம்பன்றிக்கு இருக்கும்‌ செதில்‌ முட்கள்‌, தேளுக்குள்ள கொடுக்கு, பாம்புக்குள்ள விஷம்‌ போன்றவைக ளெல்லாம்‌ கடவுளால்‌ தனிப்பட்ட காரியங்களுக்காகக்‌ கொடுக்கப்பட்டவை என்றுதானே சொல்லவேண்டும்‌? ஆதலால்‌, ஒரு யானைக்குதீ தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும்‌ நீண்ட அவயவமாகவும்‌ இருப்பதுபோலவே, மனிதனுக்குப்‌ பகுதீதறிவுகீகுள்ள நரம்புக்கூட்டும்‌ மூளையின்‌ பரிமாண-அதாவது அதிக சிந்தனா சக்திக்குள்ள உறுப்புக்கள்‌ என்பவை விசேஷ உறுப்பாகவோ விசேஷ சகீதியாகவோ இருக்கின்றதென்பதே யல்லாமல்‌, அதற்கு மாதீதிரம்‌ ஒரு தனி விசேஷதீதுவம்‌ இல்லை என்பதே எனது அபிப்பிராயம்‌. உதாரணமாக, ஜீவப்‌ பிராணிகளுடைய இந்திரியங்களின்‌ விசேஷதீதை எடுத்துக்‌ கொள்வோமானால்‌ ஒரு எறும்புக்கு இருக்கும்‌ மூக்கு மோப்ப சக்தி ஒரு மனிதனுக்குக்‌ கிடையாது. உதாரணமாக, சர்க்கரையோ, பிஸ்கோதீதோ, ஒரு பெட்டிக்குள்‌ இருக்கு மானால்‌ அதை மனிதனால்‌ மோப்பதீதின்‌ மூலம்‌ கண்டுபிடிக்க முடியாது. ஆனால்‌, ஒரு சிறு எறும்பு கண்டுபிடிதீ.துவிடும்‌. அதுபோலவே, பட்சிகளின்‌ (கண்‌)பார்வை சக்தி ஒரு மனிதனுக்குக்‌ கிடையாது. உதாரணமாக, சமீப தூரதீதில்‌ இருந்தும்‌ மனிதனுக்குதீ தென்படாத ஒரு வஸ்‌ துவானது, பூமிக்குமேல்‌ ஒரு மைல்‌, இரண்டு மைல்‌ உயரத்தில்‌ பறக்கும்‌ பட்சியின்‌ மிகச்‌ சிறிய கண்களுக்குத்‌ தென்பட்டு, அப்‌ பட்சியால்‌ அது தூக்கிச்‌ செல்லப்படுகின்றது. மீனுக்கு இருக்கும்‌ நீந்தும்‌ சகீதி மனிதனுக்கு இல்லை. உடும்புக்கு இருக்கும்‌ பிடிதீ.துக்கொள்ளும்‌ அவயவ சக்திமமனிதனுக்கு இல்லை. இது போலவேதான்‌, ஒரு விஷயதீதில்‌ மனிதனுக்குன்ன மூளை அவயவதீதின்‌ சக்தி மற்ற ஐந்துக்களுக்கு இல்லையென்று சொல்லவேண்டும்‌. இந்த விதீதியாசங்களெல்லாம்‌ அமைப்பில்‌ ஜீவனுக்கு ஜீவன்‌ மாறுபட்டிருப்பது போன்ற ஒரு வித்தியாசமே தவிர, மனிதனுக்கு மாதீதிரம்‌ ஏற்பட்ட ஒரு தனித்‌ ததீதுவ உயர்‌ குணம்‌ என்று சொல்லிவிடமுடியாதஃ பகுதீதறிவு என்பது மனிதனுக்கு மாதீதிரந்தான்‌ உண்டு. அது தனிக்‌ காரியத்‌ திற்காககீ கடவுளால்‌ கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால்‌, பகுத்தறிவு இருக்‌ கின்றது என்கிற காரணத்திற்காக மனிதன்‌ எந்த விதத்தில்‌ மேலான நிலையில்‌ உள்ளவனாய்‌ இருக்கிறான்‌ என்பதை யோசித்துப்‌ பார்க்க வேண்டும்‌. மற்ற பகுத்தறி வில்லாத ஜீவனுக்கு உள்ள என்ன குறைகள்‌, பகுத்தறிவுள்ள மனிதனிடம்‌ இல்லாமல்‌ இருக்கிறதைகீ காண்கின்றோம்‌ ? ஆகாரம்‌, நிதீதிரை, ஆண்‌-பெண்‌ சேர்க்கை ஆகிய தேவைகளில்‌ மற்ற ஜீவன்‌: களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும்‌ காணப்படுகின்றன. இன்னும்‌ பேசப்போனால்‌ மற்ற ஜீவன்களைவிட அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. ஆசை என்கிற ஒரு கெட்ட குணம்‌ மற்ற ஜீவன்களைவிட மனித ஜீவனிடம்‌ அதிகமாகவே காணப்படுகின்றது. அதிருப்தி என்கிற கெட்ட குணம்‌ மனிதனிடமே அதிகமாய்‌ இருக்கின்றது. கவலை என்கின்ற கெட்ட குணமும்‌ மனிதனுக்கே அதிகமாய்‌ உண்டு. தன்‌ இனத்தை அடிமைப்படுத்தி அதைக்‌ கொடுமைப்படுத்தி வாழும்‌ கெட்ட குணம்‌ மனித ஜீவனிடதீதிலேயே அதிகமாய்‌ இருந்து வருகின்றது. மற்ற ஜீவன்களுக்கு உள்ளது போன்ற வஞ்சகம்‌, ஏமாற்றம்‌ முதலிய குணங்கள்‌ மனிதனிடதீதிலேயே அதிகமாய்‌ இருந்து வருகின்றன. தனக்குத்‌ தெரியாத தையும்‌, புரியாததையும்‌ பற்றி நம்புதல்‌, பேசுதல்‌, நம்பச்‌ செய்தல்‌ முதலிய ¢ மூடதீதன்மை www.thamizham.net - Free £ book No 3031 தத்துவம்‌ 1133 குணம்‌? மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய்‌ இருந்து வருகின்றது. நம்பிக்கைக்கும்‌, நடவடிக்கைக்கும்‌ சம்பந்தமில்லாத குணம்‌ மனித ஜீவனிடமே இருந்து வருகின்றது. ஒரே விஷயத்தை இரண்டுவிதமாய்‌ நம்பும்‌ சுயபுத்தியற்ற தன்மையும்‌ மனிதனிடமே இருந்து வருகின்றது. இதுபோன்ற எதீதனையோ கெட்ட! குணங்கள்‌ மனித ஜீவன்‌ தனது பகுதீதறிவின்‌ பயனாகவே உடையதாயிருக்கின்றது. ஆகையால்‌ பகுத்தறிவின்‌ ¢ மேன்மையால்‌? மனித ஜீவன்‌ சிறந்தது என்று எப்படிச்‌ சொல்லிக்கொள்ள முடியும்‌ என்பதே நமது கேள்வியாகும்‌. மேலும்‌, மேற்கண்ட சாரணங்களாலும்‌ மற்றும்‌ பல காரணங்களாலும்‌ மனித ஜீவன்களில்‌ பெரும்பான்மையான வை, மற்ற ஜீவராசிகளைவிட இழிவுத்‌ தன்மையுடையவை என்பதும்‌ நமது அபிப்பிராயமாகும்‌. சாதியின்‌ பேரால்‌ உயர்வு-தாழ்வு, மததீதின்‌ பேரால்‌ வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின்‌ பேரால்‌ குரோததீ தன்மை முதலான இழிகுணங்கள்‌: மனிதனிடமே அதிகமாகக்‌ காண்கிறோம்‌. மற்றும்‌, கடவுளின்‌ பேரால்‌ மேல்‌-கீழ்நிலை முதலாகிய அ $யாகீகியதீ தன்மைகள்‌ மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின்‌ காரணமாக மனித ஜீவன்‌ உயர்ந்தது என்று சொல்லவேண்டுமானால்‌ மேற்கண்ட கெட்ட-தீய-இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ மனிதனிடம்‌ இல்லாமல்‌ இருக்க வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ மற்ற ¢ பகுதீதறிவில்லா ! ஜீவராசிகளைவிட மனித ஜீவன்‌ மூளை விசேஷம்‌ முதலிய அவயவதீதை நன்மைக்காகப்‌ பிரயோகித் துக்‌ கொண்ட ஜீவன்‌ என்று சொல்லப்படும்‌. அதில்லாத நிலையில்‌, எவ்விததீதிலும்‌ மனித ஜீவன்‌ மற்ற ஜீவப்‌ பிராணிகளைவிட உயர்நீததல்ல என்பதோடு--பல விதத்திலும்‌ தாழ்ந்தது என்றும்‌ சொல்ல வேண்டியிருக்கிறது. [4 குடிஅரசு -கட்டுரை--9-9-1933] 2. எப்படிப்பட்ட மனிதன்‌ உயந்ந்தவன்‌ ? தலைவரவர்களே ! பெரியோர்களே ! தோழர்களே ! பணத்தால்‌ ஒரு மனிதனை மதிப்பதென்றால்‌-ரிசர்வ்‌ பேங்கைதீதான்‌ மதிக்க வேண்டும்‌. படிப்பால்‌ ஒரு மனிதனை மதிப்பதென்றால்‌--பெரிய ¢ லைப்ரெரி?யைத்தான்‌. மதிக்கவேண்டும்‌. அறிவால்‌ ஒருவனை மதிக்கவேண்டுமானால்‌--* என்சைகீகிளோபீடியா ?, * ரேடியோ? ஆகியவற்றை மதிக்கவேண்டும்‌. இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லா தவைகளிலும்‌ காணலாம்‌. ஆதலால்‌, நாம்‌ மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம்‌ இவைகளை உதீதேசிதீதல்ல. உலகிலுள்ள எல்லா ஜீவப்‌ பிராணிகளுக்கும்‌-மனிதர்கள்‌ என்பவர்கள்‌ உட்பட உருவத்தில்‌ பேதம்‌ இருந்தாலும்‌, குணதீதில்‌ பேதம்‌ இருந்தாலும்‌ நடப்பும்‌ பயனும்‌ அனேகமாய்‌ ஒன்றுதான்‌. ஜீவன்‌ என்றால்‌ பிறத்தல்‌, தன்‌ நலனுக்காக வாழ்தல்‌, இனத்தைப்‌ பெருக்குதல்‌, இறத்தல்‌ ஆகியவைகளைக்‌ கொண்டதேயாகும்‌. இந்தத்‌ ததீ.துவங்களைப்‌ பார்தீதால்‌ செத்த மனிதர்களும்‌, இருக்கும்‌ மனிதர்களும்‌ ¢ முக்காலே மூன்று வீசம்‌ முக்காணி அரைக்காணி ? பேரும்‌ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும்‌, மேற்கண்ட குணங்களை யுடைய ஜீவப்‌ பிராணி என்பதில்‌ சேர்‌ நீதவர்களாகாமல்‌--அவைகளினின்றும்‌ உயர்ந்தவர்‌ களாகக்‌ கருதப்பட வேண்டிய மனிதத்‌ தன்மை உடையவர்களாக இருக்க நியாயம்‌ எங்கே இருக்கிறது 9 ஜீவன்‌ என்றால்‌ சுய உணர்ச்சி என்றுதான்‌ கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப்பற்றிய தன்‌ வாழ்வைப்பற்றிய, தன்‌ பாதுகாப்பைப்‌ பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான்‌ முடியும்‌. கித்‌ தன்மையை உடையவர்களை ஜீவப்‌ பிராணிகளில்‌ நத்தை, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1134 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ சங்கு, ஈ, எறும்பு; பாம்பு, தேள்‌; குயில்‌, கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை; ஆடு, மாடு; - குரங்கு, மனிதன்‌ என்பதாக-மனிதனை மற்றவைகளோடு சேர்தீதுசீ சொல்லு வதற்கு அல்லாத தனிக்‌ குணம்‌ வேறு என்ன பெரும்பாலான மனிதரிகளிடம்‌ இருக்கிறது என்று கருதிப்‌ பாருங்கள்‌. மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்லுவது மனிதனை ஜீவப்‌ பிராணி களிடமிருந்து பிரிப்பதற்குப்‌ போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம்‌ எல்லா ஜீவப்‌ பிராணிகளிடமும்‌ இருக்கிறது. * ஜீவத்‌ தன்மை? எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ அவற்றிற்கெல்லாம்‌ சிந்திக்கும்‌ தன்மை உண்டு. ஆனால்‌, அதில்‌ அளவு விதீதியாசம்‌ இருக்கிறது உண்மை. அதனால்‌ எதுவும்‌ வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன்‌ பலனாலும்‌ ஏதும்‌ உயர்ந்ததாக ஆகிவிடாது. தேன்‌ ஈக்கனால்‌, மக்கள்‌ தேன்‌ சாப்பிடுகிறார்கள்‌. மாடுகளால்‌, மக்கள்‌ பால்‌ சாப்பிடு கிறார்கள்‌. ஆடு, கோழிகளால்‌-மக்கள்‌ ஆகாரம்‌ அடைகிறார்கள்‌, நாய்களால்‌ காக்கப்‌ படுகிறார்கள்‌ ; கமுதை, குதிரை முதலியவற்றால்‌ பொதி சுமக்க வைதீதும்‌ சவாரி செய்தும்‌ பயனடைகிறார்கள்‌. இப்படி எத்தனையோ ஜீவன்களால்‌ எத்தனையோ பலன்‌ அடைகி நார்கள்‌. இவற்றால்‌ இவை உயர்ந்த ஜீவனாகக்‌ கருதப்படுன்றனவா ? இல்லை. அப்படித்தான்‌, மனித ஜீவனும்‌, பல வழிகளில்‌ பல காரணங்களால்‌, வேறுபட்ட தன்மை களால்‌ ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிட மாட்டான்‌. மற்றபடி, எதனால்‌ மனிதன்‌ மற்ற ஜீவப்‌ பிராணிகளுடன்‌ சேராத உயர்ந்தவ னாகலாம்‌ என்று கேட்கப்படலாம்‌. அதைச்‌ சொல்லத்தான்‌ இவ்வளவும்‌ சொன்னேன்‌, ஜீவசுபாவ உணர்ச்சியான--தன்மை உணர்ச்சியும்‌ தன்னல உணர்ச்சியும்‌ உள்ள மனிதன்‌ இவற்றை (தன்னலத்தை) அலட்சியம்‌ செய்து-அதாவது தன்னைப்‌ பற்றிய கவலையும்‌ தனது நலத்தையும்‌, தன்‌ மேன்மைபற்றிய கவலையும்‌, தனது மேல்வாழ்வின்‌ தன்மை என்பதையும்‌ அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின்‌ மேன்மைக்காகப்‌ பணியாற்றவே மற்ற மனித ஜீவன்களுக்கு இருக்க முடியத வசதி என்னும்‌ தன்மை, தொண்டாற்றும்‌ சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி--தன்னலதீதையும்‌ தன்‌ மானாபிமானதீதையும்‌ விட்டு, எவன்‌ ஒருவன்‌ தொண்டாற்றும்‌ பணியை வாழ்வாகக்‌ கொண்டிருக்கிறானோ, அவன்தான்‌ மற்ற ஜீவப்‌ பிராணிகவிடமிருநீது வேறுபட்ட மனிதத்‌ தன்மை கொண்ட மனிதனாவான்‌. மனித உர ஜீவப்பிராணி என்பதில்‌ எந்த மனிதனை மதிப்பதானாலும்‌, நினைவு நாள்‌ கொண்டாடுவதானாலும்‌ இந்தக்‌ குணதீதிற்காகதீதான்‌. இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும்‌ ஆக இருக்கமுடியாது. [திருச்சி தஞ்சை, கும்பகோணம்‌ ஆகிய இடங்களில்‌ 1945 மார்ச்‌, ஏப்ரல்‌ மாதங்களில்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 14-4-1945] ஒரு மனிதனுக்கு அவனது மலமும்‌ மூத்திரமும்‌ உயர்நீத நறுமணமுன்ளவையரக இருந்தாலும்‌, அதனால்‌ மனிதன்‌ மேன்மையானவனாகவோ, மதிக்கத்‌ தகுந்தவனாகவோ ஆகிவிட மாட்டான்‌. சிற்சில புல்‌ பூண்டுகளுக்கு நறுமணம்‌ உண்டு. சில ஐநீதுக்கனின்‌ மலங்களுக்கு நறுமணமுண்டு. அவற்றை நாம்‌ மதிக்கிறோமா ? போற்றுகிறோமா ₹ அரசர்களை மதிக்கிறோமா 8 பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா ₹ அல்லது, தெய்வங்கள்‌ என்பவர்களையாவது மதிக்கிறோமா 8 மகான்கள்‌ அல்லது ஆச்சாரி யரர்களை--மடாதிபதிகளை மதிக்கிறோமா ₹ இவர்களையெல்லாம்‌ அவரவர்களிடத்ீதில்‌ சம்பந்தமும்‌ தனிப்பட்ட நலமும்‌ பெறுகிறவர்கள்‌ தாம்‌ மதிப்பார்கள்‌ ) மற்றவர்கள்‌ ஏன்‌: மதிப்பார்கள்‌ ? ஏன்‌ என்றால்‌, வியாபாரம்‌ செய்து கலாபம்‌ சம்பாதிப்பவனை யார்‌ எதற்காக மதிப்பார்கள்‌ 9 www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1185 ஓட்டல்காரன்‌--அன்னதானப்‌ பிரபு ஆவானா? சம்பள உபாதீதியாயர்‌--குருநாத ளரவானா ? தாசி--காதலியாவாளா 8 என்பதுபால்தான்‌ தன்தன்‌ நலனுக்கு, தன்தன்‌. பொறுப்புக்கு ஆகக்‌ காரியம்‌ செய்யும்‌ எவனுடைய காரியம்‌--எப்படிப்பட்டதாயினும்‌ அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றகீகூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள்‌--அதாவது தன்னைப்‌ பற்றிய கவலையில்லாமல்‌, பிறருக்கு என்று தன்னை ஒப்படைதீதுக்கொண்டு தொண்டாற்றுகிறவன்‌ மதிக்கப்பட்டே தீருவான்‌. அத்‌ தொண்டால்‌ பாதகமடையும்‌ தனிப்பட்டவர்கள்‌--தனிப்பட்ட வகுப்புகள்‌, கும்பல்கள்‌ அவனை மதிக்காமல்‌ இருக்கலாம்‌) அவமதிக்கலாம்‌. அது, பொதுவாக மதிக்காததாகாது. [6 விடுதலை 1-கட்டுரை--8-4-1950] 8. மனித வாழ்க்கை இலட்சியமற்றது பெரியோர்களே ! ஆசிரியப்‌ பெருமக்களே ! மாணவ ஆசிரியர்களே ! என்னைப்‌ பொறுதீதவரை நான்‌ கூறுவேனாகில்‌, மனிதப்‌ பிறவியான து ஒரு கலட்சிய மற்ற பிறவி என்றே கூறுவேன்‌. மனிதன்‌ பிறக்கிறான்‌ ] பற்பல எண்ணங்களை எண்ணு கிறான்‌ ) பல வகைகளை இச்சிக்கிறான்‌ ) எவ்வளவோ காரியங்களில்‌ விருப்பம்கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்‌. ஒரு சிலவற்றில்‌ ஆசை நிறைவேறுகிறது $ மற்றவைகளில்‌ ஏமாற்றம்‌ அடைகிறான்‌) இறுதியில்‌ செதீதுப்போகிறான்‌. மனிதன்‌ பிறந்ததுமுதல்‌ செதீ துப்போகும்வரை இடையில்‌ நடைபெறுகிறவைகள்‌ எல்லாம்‌ அவனின்‌ சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம்‌ இவைகளைப்‌ பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என்‌ கருத்து. இதை அனேக அறிஞர்களும்‌ ஒப்புக்கொண்டிருப்பதைப்‌ பார்க்கிறேன்‌. மேலும்‌, கக்‌ கருத்து யாராலும்‌ மறுக்க முடியாததும்‌ ஆகும்‌. பிறப்பும்‌ இறப்பும்‌ இயற்கையே, மனிதன்‌ ஏன்‌ பிறக்கிறான்‌ என்று யாராவது கூறமுடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான்‌, எதற்காக கிறநீதுபோகிறான்‌-என்று யார்‌ கூறமுடியும்‌ ? இதைக்‌ கேட்டால்‌, ¢ அது கடவுள்‌ செயல்‌; கடவுள்‌ பிறப்பிக்கிறார்‌$ காப்பாற்று கிறார்‌) சாகடிக்கிறார்‌? என்ற தான்‌ கூறமுடியுமே தவிர, வேறு சரியான காரணம்‌ கூற முடியுமா 1 அவன்‌ எந்தக்‌ குறிப்பிட்ட இலட்சியதீதின்மீது பின்ளை வேண்டுமென்று பிள்ளையைப்‌ பெறுகிறான்‌ என்றால்‌--எதற்காகப்‌ பிள்ளை வேண்டும்‌ என்பதைக்‌ கூற முடியுமா? அவன்‌ எந்தக்‌ குறிப்பிட்ட இலட்சியதீதின்மீது தனக்குப்‌ பிள்ளை வேண்டும்‌ என்று முயற்சிக்கிறான்‌ என்று அவனைக்‌ கேட்டால்கூடத்‌ீ தெரியாது. குழந்தையை அடைந்ததும்‌ அதை ஏன்‌ காப்பாற்றவேண்டும்‌, அதற்கு ஏன்‌ கல்வி புகட்டவேண்டும்‌- என்ற இலட்சியத்தைக்‌ கூறமுடியாது. ஏதோ, தம்‌ பிள்ளை படிக்கவேண்டும்‌ என்பார்களே தவிர, எதற்காகக்‌ கல்வி கற்கவேண்டும்‌ என்றே தெரியாது. எல்லோரும்‌ படிப்பதற்கு விரும்புகிறார்கள்‌. அவரவர்கள்‌ தங்கள்‌ மக்களைப்‌ பள்ளிக்கு அனுப்பிக்‌ சுல்வி கற்க வைக்கிறார்கள்‌. அந்தப்‌ பெற்றோர்களுக்கே தமது மக்கள்‌ ஏன்‌ படிக்கவேண்டும்‌ என்பதற்குச்‌ சரியான பதில்‌ கூறமுடியாது. படிக்கும்‌ பின்ளையோ நாம்‌ எதற்காகப்‌ படிக்கிறோம்‌ என்பதைத்‌ தெரிந்துகொள்ளாமலே படிக்கிறான்‌. அவனை; *நீ ஏன்‌ படிக்கிறாய்‌ P என்று கேட்டால்‌ அவனுக்கே பதில்‌ கூறமுடியாது. அப்படி எதாவது பெற்றோர்களோ அல்லது பையன்களோ கூறுவார்களேயானால்‌ * படிப்பது பணம்‌ சம்பரதிக்க? என்று கூறுவார்கள்‌. படிப்பானது பொருன்‌ திரட்ட வழிதேடுவதற்கு என்பதாகமட்டும்‌ கூறுவர்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1136 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ஆனால்‌, அந்தப்‌ பணம்‌ எதற்காக என்றால்‌, அதுவும்‌ குறிப்பிட்ட இலட்சியதீதின்மீ.து சேர்க்கப்படுவதில்லை. ஏதோ செல்வத்தை மென்மேலும்‌ சம்பாதித்து அதைச்‌ சேர்த்து வைத்துக்கொண்டே போகவேண்டும்‌, அதற்கு அளவே கிடையாது. நாளுக்குநாள்‌ மென்‌ மேலும்‌ சொத்துக்களைச்‌ சேர்தீதுக்கொண்டே போகவேண்டும்‌ என்ற ஆசைமட்டும்‌ உண்டே தவிர; அது எந்த அளவுக்குப்போய்‌ நின்றால்‌ போதும்‌ என்ற அளவே கிடையாது. இப்படிச்‌ சொத்துச்‌ சேர்ப்பது என்பதும்‌ குறிப்பிட்ட இலட்சியதீதின்மீதோ, குறிப்பிட்ட எல்லையின்மீதோ சேர்ப்பதில்லை. ஆசைக்கும்‌ எல்லையில்லையே ! படிதீதுப்‌ பாஸ்செய்த பின்‌ வேலைக்குத்‌ திண்டாட்டம்‌. வேலை ஏதாவது கிடைதீதுவிட்டால்‌, அந்த வேலை கொஞ்சம்‌ கொஞ்சமாகப்‌ பெரிய வேலையாக வரவேண்டும்‌) மென்மேலும்‌ பிரமோஷன்‌ கிடைத்துக்கொண்டே போகவேண்டும்‌ என்ற ஆசை இருக்கிறது. அந்த வேலை கிடைத்‌ தாலும்‌ அதில்‌ திருப்தி கிடையாது, அதற்கும்‌ மேலான ஸ்தானதீதைதி தாவிப்‌ பிடிக்க வேண்டும்‌ என்ற ஆசை தோன்றுகிறது. அதையும்‌ தாவிக்‌ குதிதீது எப்படியோ பிடித்து விட்டால்‌, அடுத்தபடியாக மேலே உள்ள உதீதியோகம்‌ வேண்டும்‌. அதற்காகப்‌ பலவழி' களிலும்‌ முயற்சிக்க ஆரம்பிக்கிறான்‌. இப்படியே ஒரு குறிப்பிட்ட இலட்சியதீதின்மீ துதான்‌. உத்தியோகம்‌ அடைதல்‌ என்பது இல்லாமல்‌ போய்விடுகிறது. இவ்விதமே--எல்லாம்‌ ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக்‌ கொண்டிராமல்‌ இருக்கின்றன. வாழ்கீகை என்ற ஏணியின்‌ அடிப்படையில்‌ கால்வைகீகும்பொழுது நாம்‌ எங்கே ஏறுகிறோம்‌, கடைசியாக எங்கே போவோம்‌ என அறியக்கூடவில்லை. நாம்‌ ஏறிமுடிதீதால்‌ போதும்‌ என்பதைக்‌ கொண்டிராமல்‌, ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகவேண்டும்‌ ; அதற்குமேல்‌ என்ன தெரிகிறதோ அதைப்‌ பிடிக்கவேண்டும்‌ ] அதைப்‌ பிடித்தவுடன்‌ அதற்குமேலே என்ன தெரிகிறதோ அதைப்‌ பிடிக்கவேண்டும்‌-என்று எல்லையே இல்லாமல்‌ இலட்சியமற்ற முயற்சியிலேயே காலத்தைக்‌ கடதீதுகிறோம்‌. இறுதியில்‌ காலம்‌ முடி வடைத்து இறந்து போகிறோம்‌. இப்பேர்ப்பட்ட வாழ்க்கையில்‌ ஒருவிதப்‌ பலனும்‌ கிடையாது. சமுதாயத்துக்குப்‌ பயன்தரும்‌ வாழ்க்கையே சிறந்த இலட்சியம்‌, மனிதன்‌ பிறந்து இறக்கும்வரை இடையில்‌ உள்ள காலத்தில்‌ ஏதாவது பயனுள்ள காரியம்‌ செய்ய வேண்டும்‌. அவன்‌ வாழ்க்கை மற்றவர்களின்‌ நலனுக்கும்‌, சமுதாயதிதின்‌ சுகத்திற்கும்‌ பயனுள்ளதாக இருக்கவேண்டும்‌. ஒருவன்‌ வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால்‌ பிறர்‌ நன்மையடைந்தார்கள்‌ ) மற்றவர்கள்‌ ௬கம்‌ கண்டார்கள்‌ என்று அமையவேண்டும்‌. இதுதான்‌ முக்கியமானதாகும்‌. இதுவே அவசியமும்‌ பொருத்தமும்‌ ஆனதுமன்றி மனித வாழ்கீகை என்பதன்‌ தகுதியான இலட்சியம்‌ இது என்றும்‌ கூறலாம்‌. ஆனால்‌, நாம்‌ இதை யாரிடமும்‌ காண்பது கிடையாது. கண்டுபிடிப்பதென்றால்‌ விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரைக்‌ காண்பதே மிகக்‌ கஷ்டமான காரியமாகும்‌. நாம்‌ மட்டும்‌ வாழ்ந்தால்‌ போதாது நமது சமுதாயமும்‌ வாழவேண்டும்‌) மற்றவர்களின்‌ பிள்ளைகளும்‌ வாழவேண்டும்‌. நம்‌ பிள்ளைகள்‌ மட்டும்‌ சுகம்‌ அடைந்தால்‌ போதாது) ஏனையவர்களின்‌ வாழ்வு சுகம்‌ அடைய வேண்டும்‌. இதற்கு ஏதாவது நம்மால்‌ ஆனமட்டிலும்‌, நம்‌ வாழ்க்கை அவர்‌ கவின்‌ நன்மைக்கு அமையும்‌ முறையில்‌ நாம்‌ நடந்துகொள்ள வேண்டும்‌ என்பதே முக்கியமானது. இந்த வேலையைச்‌ செய்பவர்கள்‌ மிகக்‌ குறைவு ; காண்பதும்‌ அரிது. [இருச்சி, பெரியார்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌, 17-8-1956-ல சொற்பொழிவு. விடுதலை! 21-3-1956] www.thamizham.net - Free £ book No 3031 1137 4. பொதுநலம்‌ 1. சுயநலம்‌-பிறநலம்‌ சுயநலதீதுக்கு அறிவே தேவை இல்லை. உணவுக்கு அலைவதும்‌, உயிரைக்‌ காப்பதும்‌ எந்த ஜீவனுக்கும்‌ இயற்கை ஒவ்வொரு ஜீவனிடதீதிலும்‌ சில அருமையான, அற்புதமான குணங்கள்‌ உண்டு என்றாலும்‌ அவையெல்லாம்‌ அந்தந்த ஜீவனின்‌ சுயநலதீதுக்கேதான்‌ பயன்படுகின்‌றன. மனித ஜீவன்‌ என்பது மற்ற ஜீவப்‌ பிராணிகளை விட அறிவில்‌ பெரும்‌ பேதம்‌ உடையதாகும்‌ $ அதாவது, பகுத்தறிவு உடைய ஜீவன்‌ என்று சொல்லப்படுவதாகும்‌. என்றாலும்‌--அதாவது மனித ஜீவன்‌ பகுதீதறிவுடையது ஆனாலும்‌, அதுவும்‌ கூட சுய நலத்தையும்‌, புகழையும்‌, தன்‌ உயிர்‌ வாழ்வையுமே முக்கியமாய்க்‌ கொண்டதாகும்‌. மனிதன்‌ தன்‌ சுயநலம்‌ என்பது மாதீதிரமல்லாமல்‌ தன்‌ தாய்‌, தகப்பன்‌, பெண்டு, பிள்ளை முதலிய மனித ஜீவன்களின்‌ நலதீதைப்பற்றியும்‌ கவலை கொள்ளுகிறான்‌. என்றால்‌, அதுவும்‌ பெரிதும்‌ சுயநலத்தை உத்தேசித்தே ஆகும்‌. மனிதன்‌ தான்‌ பயன்‌: படுத்தும்‌ மாடு கன்றுகளின்‌ நலத்தை எதற்காகக்‌ கவனிக்கிறான்‌ 2 தன்‌ மனைவியை எதற்காக அழகுபடுதீதுகிறான்‌ 1 தனது நாய்க்கு எதற்காக நல்ல போஷணை கொடுக்‌ கிறான்‌ ? எதற்காகத்‌ தான்‌ குடியிருக்கும்‌ வீட்டைப்‌ பா,துகாக்கிறான்‌ i எதற்காகத்‌ தனது பணத்தை, பொருளை; பதீதிரப்படுதீதிப்‌ பெருக்குகிறான்‌ ? ஓட்டல்காரன்‌ எதற்காக வாடிக்கைகீகாரர்களுக்கு நல்ல சாப்பாடு போடுகிறான்‌ ? பதீதிரிகைக்காரன்‌ எத, ற்காக நல்ல, அதிசய, புதிய செய்திகளைக்‌ கண்டுபிடித்துப்‌ பிரசுரிக்கிறான்‌ ? வைத்தியர்கள்‌ எதற்காகதி தன்னிடம்‌ வரும்‌ நோயாளிகளையெல்லாம்‌ சவுக்கியப்படுத்த வேண்டுமென்று கவலைப்படு கிறார்கள்‌ 8 வக்கீல்கள்‌ தங்களிடம்‌ வரும்‌ கட்சிக்காரர்களுக்கு அனுகூலம்‌ ஏற்பட வேண்டு மென்று பலவழிகளிலும்‌ பாடுபடுவது எதற்கு? எதற்காகதீ தாசிகள்‌ தங்களிடம்‌ வருபவர்‌ களுக்கு எல்லாம்‌ தங்களுக்குக்‌ காமம்‌ இல்லாவிட்டாலும்‌ மேல்‌ விழுந்து இன்பமளிக்‌ கிறார்கள்‌ ₹ இவர்கள்‌ எல்லோரும்‌ பிறர்‌ நலத்தைப்‌ பேணுவதாக நமக்குக்‌ காணப்‌ பட்டாலும்‌, அவற்றின்‌ பயனாய்‌ சுயநலம்‌ அடைவதற்கேயாகும்‌ என்பதில்‌ அய்யமுண்டோ 8 இது தெனிவாய்தீ தெரிகிறதல்லவா 1 ஆதலால்‌, ஜீவனின்‌ சுபாவமே சுயநலநீதான்‌ என்பதில்‌ சந்தேகமே இல்லை. சாதாரணமாக; எவ்வளவு பகுத்தறிவு உள்ள மனிதனாக இருந்தாலும்‌ அவன்‌ அறிவின்‌ பிரயோகம்‌ எல்லாம்‌ தன்‌ நலதீ.துக்காகதீதானே ஒழிய, மற்றபடி அதில்‌. எவ்விதத்‌ தனிப்‌ ¢ பிறநலம்‌ ? என்பது இருக்கவே மாட்டாது. ஆனால்‌, ஏதோ தனிப்பட்ட மக்களிடம்‌ ¢ பிறநலம்‌ ? என்பதைதீ தவிர வேறு ஒன்றும்‌ காணமுடியாமல்‌ இருக்கலாம்‌. அல்லது, சுயநலதீதைவிட அதிகமான பிறநலம்‌ இருப்‌ பதைக்‌ காணலாம்‌. இது இப்படி இருப்பது நமக்கும்‌ பிறநலமாகக காணப்படலாமே ஒழிய உண்மையில்‌ அது அப்படி நடப்பவருக்குச்‌ சுயநலமாகவே இருக்கும்‌, எப்படியெனில்‌, அவன்‌ பிற நலத்துக்காக உழைப்பதும்‌, தொல்லைப்படுவதும்‌, அல்லற்படுவதும்‌. அவனுடைய சுயநலதீதுக்காகவே முடிவுறும்‌. அந்த இரகசியம்‌ அவனுக்குத்தான்‌ தெரியும்‌. சுயநலம்‌ என்பது பணம்‌ சேர்ப்பது, உயர்வாழ்வு வாழ்வு, பிரபலமடைவது ஆகியவை மாதீதிரமே அல்ல. இவையெல்லாம்‌--இவற்றிற்கு எதிரான.தும்‌ மாலுபட்டதும்‌ கூட சுயநலமாகும்‌, மனிதனுக்கு நலம்‌ என்பவற்றுள்‌'எல்லாம்‌ தலைசிறந்த நலம்‌ அவன்‌ மனதி திருப்தியே யாகும்‌, அவனுடைய மனதீதிற்குப்‌ பூரண திருப்தி அளிக்கக்கூடியது எதுவோ அதுதான்‌ அவனுக்கு (சுய) நலமாகும்‌. 1686-19 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1138 பெரியார்‌ #. வெ. ரா. சிந்தனைகள்‌ பிற நலதீதுக்காகச்‌ செய்யப்படும்‌ காரியம்‌ என்பது, செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக்கூடுமானால்‌, அவனுடைய ஆசை நிறைவேறுமானால்‌ அது சுயநலத்தின்‌ தன்மையேயாகும்‌. ஒரு மனிதன்‌ அவனுடைய ஆசை நிறைவேற அவனது மனம்‌, வாக்கு, காயங்களால்‌ பாடுபடுவது சுயநலம்‌, அதில்‌ அதிக சுயநலம்‌; சிறிது சுயநலம்‌ என்று இருந்தாலும்‌ பேராசை, சாதாரண ஆசை; மித ஆசை, நிராசை என்று இருந்தாலும்‌ அவைகளுக்கு மூலம்‌ அல்லது காரணம்‌ மனத்‌ திருப்தியே ஆகும்‌. ஒரு மனிதன்‌ ஒரு தெருவில்‌ நடக்கிறான்‌, அதீ தெருவின்‌ ஓரத்தில்‌ ஒரு அழிந்த வேலிக்குள்‌ பூஞ்செடியில்‌ 6 அங்குல சுற்று வட்டமும்‌ பல இதழ்களும்‌ கொண்ட ஒரு ரோஜா மலர்‌ இருக்கிறது. 'அது அவனுக்கு அதிசயமும்‌ அழகும்‌ கொண்ட காட்சியாகக்‌ காணப்படுகிறது. அந்த மனிதன்‌ அதைப்‌ பறித்துக்கொண்டு போனால்‌ யாரும்‌ கேட்கமாட்டார்கள்‌ $ யாரும்‌ அங்கு இல்லை. பறித்துக்கொண்டு போய்த்‌ தன்‌ காதலிக்குக்‌ கொடுத்து மகிழலாம்‌. ஆனால்‌, அவன்‌ நினைக்கிறான்‌ : ¢ இதைப்‌ பறிதீதுக்கொண்டு போனால்‌ நானும்‌ காதலியுநீ தானே மகிழ்வோம்‌? இந்தச்‌ செடியிலேயே இதை அப்படியே விட்டுவிட்டு, இதை வேறு யாரும்‌ பறிக்க முடியாதபடி வேலியையும்‌ செப்பனிட்டு விட்டுப்‌ போய்விட்டால்‌, இந்ததீ தெருவில்‌ நடக்கும்‌ பதினாயிரக்கணக்கான மக்கன்‌ இதைக்‌ கண்டு மகிழ்வார்கள்‌ அல்லவா 9 என்று கருதி அப்‌ பூவைப்‌ பறிக்காமல்‌, வேலியை நன்றாய்‌ அடைதீதுவிட்டுப்‌ போய்‌ விடுகிறான்‌, இதில்‌ அவன்‌ இவ்வளவு கஷ்டப்பட்டு வேலியை அடைத்துவிட்டு வெறுங்‌ கையுடன்‌ சென்றதான து, பல பேர்‌ அப்‌ பூவைக்‌ கண்டு மகிழ்வதைக்‌ கண்டு அவன்‌ இன்பம்‌ அனுபவிப்பதான து, சுயநலம்‌ அனுபவிதீததாகிவிடவில்லையா ₹ ஒரு மனிதன்‌ பசியால்‌ கஷ்டப்படுகிறான்‌. அவனுக்குத்‌ தனது--அதாவது, தனகீகுப்‌ போதுமானதாக மாத்திரம்‌ இருக்கும்‌ உணவில்‌ பகுதி கொடுதீதுப்‌ பசியாற்றிவிட்டுத்‌ தான்‌ சிறிது பசிக்‌ கஷ்டத்தை அனுபவிதீதுக்கொண்டு கருத்தாலும்‌, ¢ ஒரு மனிதனின்‌ பசியை ஆற்றினோம்‌ ? என்று ஒரு இன்பத்தை அடைவதில்‌ திருப்தி அடைகிறான்‌. இதில்‌ சுயநலம்‌ இல்லையா ₹ ஒரு மனிதன்‌ இரயிலில்‌ போகும்போது, கதவை மற்றொருவன்‌ மூடும்போது பக்கத்தில்‌ இருந்த வேறு ஒருவனின்‌ விரல்கள்‌ அதில்‌ சிக்கி நசுங்கி விடுகின்றன. இவன்‌: அதைப்‌ பார்தது மனம்‌ பதறி, வேதனை அடைந்து, அவன்‌ பக்கத்திற்குச்‌ சென்று தனது நல்லதொரு வேட்டியை--மற்றவரீகள்‌ துணி கொடுப்பதற்குள்‌--கிழித்து விரலுக்குச்‌ சுற்றி, தான்‌ குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரையெல்லாம்‌ ஊற்றி நனைத்துக்‌ கட்டி விடுகிறான்‌. இவன்‌ யார்‌ என்று அவனுக்குத்‌ தெரியாது, அவன்‌ யாரென்று இவனுக்குத்‌ தெரியாது. அடுத்த ஸ்டேஷனில்‌ வண்டி நின்றதும்‌ இவன்‌--அதாவது வேட்டியைக்‌ கிழித்துக்‌ கட்டியவன்‌ பயணம்‌ சொல்லிக்‌ கொள்ளாமல்‌ இறங்கித்‌ தான்‌ போகவேண்டிய இடத்திற்குப்‌ போய்விடுகிறான்‌. போனவுடன்‌ வேட்டியைப்‌ பார்க்கும்போதெல்லாம்‌ அது பயன்பட்ட நல்ல காரியத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான்‌. இதில்‌ சுயநலம்‌ இல்லையா ₹ இன்பமடைவது;, மனதி திருப்தி அடைவது, கியற்கை உணர்சீசிகள்‌ சக்தி அடைவது), பழிவாங்குவது, எதிரியைத்‌ தண்டிப்பது மூலம்‌ திருப்தி அடைவது முதலியவை எல்லாம்‌ சுயநலமேயாகும்‌. மனிதன்‌ தன்னலம்‌ அல்லாத காரியத்தை மேல்‌ விழுந்து செய்து திருப்தி அடை கிறான்‌. திருட்டு என்பது கெட்ட காரியமாகும்‌. இதனால்‌ பணம்‌, பொருள்‌ கிடைக்கிறது. அதனால்‌ திருடுகிறான்‌ என்று வைதீதுக்கொள்வோம்‌. ஆனால்‌, எந்த விதத்திலும்‌ கலாபம்‌ இல்லாத காரியமாகிய தாசி வீட்டிற்குச்‌ செல்லுகிறான்‌ ) அதற்குப்‌ பணம்‌ செலவழிக்கிறான்‌ 3 குடும்பத்திற்குத்‌ தொல்லை விளைவிக்கிறான்‌ ) தன்‌ காரியத்தையும்‌ கெடுதீதுக்கொள்ளு கிறான்‌ ] உடலையும்‌ கெடுத்து நாணயத்தையும்‌ கெடுத்துக்‌ கொள்ளுகிறான்‌. மேலும்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1139 இதற்காக முறை தவறின காரியத்தை எல்லாம்‌ செய்கிறான்‌. அதாவது, ஒரு மிக மிகச்‌ சுயநலக்காரன்‌ செய்யும்‌ காரியத்தை எல்லாம்‌ செய்கிறான்‌. இதனால்‌ அவனுக்கு ஏற்படும்‌ நலம்‌ என்ன என்று பார்தீதால்‌, அவன்‌ இன்பம்‌ அடைகிறான்‌, அதனால்‌ அவனுக்குத்‌ திருப்தி ஏற்படுகிறது. ஆகவே, மனத்‌ திருப்திதான்‌ சுயநலமாகிறது இன்பமும்‌ திருப்தியும்‌ ஏற்படுகிற காரியம்‌ எல்லாம்‌ சுயநலமாகிறபடியால்‌, இவை இல்லாத காரியம்‌ எதையும்‌ மனிதன்‌ தானாகச்‌ செய்வதில்லை; செய்யவும்‌ முடியாது. ஆதலால்‌, மனிதனுக்குப்‌ பிற நலம்‌ பேணி தன்னலம்‌ இல்லாமல்‌ செய்யும்‌ காரியம்‌ எதுவும்‌ இல்லை. [புத்தகம்‌ உ ¢ சுயநலம்‌-பிறநலம்‌ 2—1971] 2. பொதுநல உணர்ச்சி மக்களின்‌ நன்மைக்கான காரியம்‌ என்பதாக ஏதாவது ஒன்றைக்‌ கண்டுபிடித்து அதைச்‌ செய்யலாமா என்கின்ற கவலையோ இலட்சியமோ இல்லாமல்‌, வெறும்‌ கலாட்டாவில்‌! பத்திரிகைகளில்‌ பிரமாதப்படுத்தப்படுகின்‌றனவே அல்லாமல்‌, உருப்படியான காரியம்‌ எதையும்‌ காண எவராலும்‌ முடியவில்லை. வீணான வழியில்‌ ஊக்கமும்‌ உணர்ச்சியும்‌ போய்க்கொண்டிருக்கின்‌ றன. படிதீதவர்கள்‌, படிக்காதவர்கள்‌, தேச பக்தர்கள்‌, அரசியல்‌ வாதிகள்‌ ஆகியவர்களின்‌: காரியங்கள்தான்‌ இப்படி இருக்கின்றன என்று பார்தீதால்‌, இவர்களைத்‌ தவிர மற்றவர்‌. களான; பொது நலதீதில்‌--ஜீவகாருண்யத்தில்‌-தர்ம காரியத்தில்‌ கவனம்‌ கொண்ட மற்ற கனவான்களின்‌ செயல்களும்‌ இதைவிட மோசமான காரியங்களாகவே இருக்கின்றன. பொதுக்‌ காரியம்‌ என்பதே நமது நாட்டில்‌ கோவில்‌ கட்டுவது, கும்பாபிஷேகம்‌ நடதீ.துவது, பழைய கோவில்களைப்‌ புதுப்பிக்கும்‌ திருப்பணி செய்வது, அந்த சாமிகளுக்கு வாகனம்‌, இரதம்‌, தேர்‌, உற்சவங்கள்‌ செய்வது, சத்திரங்கள்‌ கட்டி--வருகின்ற பகீதர்‌ களுக்கும்‌ பார்ப்பனர்‌ களுக்கும்‌ சாப்பாடு போடுவது, வேத பாடசாலை, தேவார பாடசாலை முதலியவை கட்டுவது, இலட்ச பிராமண சமாராதனை, இலட்சதீ தீபம்‌ மூதலியவைகளைசி செய்விப்பது ஆகிய காரியங்களே பொதுத்‌ தர்மங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது மக்களுக்குப்‌ பிரசீசாரம்‌ செய்வது என்றாலோ, ஆடு மீன்‌ கோழி சாப்பிடக்‌ கூடாது--சாப்பிட்டால்‌ நரகம்‌ என்றும்‌ ) திருநீறு பூசினால்‌ பாவமெல்லாம்‌ போம்‌ என்றும்‌. மற்றும்‌ இதுபோல்‌ பிரச்சாரம்‌ செய்வதும்‌ ) பொதுமக்களுக்கு ஏதாவது ஒழுக்கம்‌ கற்பிக்க வேண்டுமானால்‌ இராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌, திருவிளையாடல்‌ புராணம்‌ முதலிய புராணங்கள்‌ படிப்பதன்மூலம்‌ ஒழுக்கங்கள்‌ கற்பிப்பதும்‌ ஆகிய காரியங்களே மற்றவர்கள்‌, பிரபுக்கள்‌, நாகரிகமடைந்தவர்கள்‌ ஆகியவர்களின்‌ ¢ பொதுநல சேவை யாக இருக்கின்றன. இந்த நிலையில்‌ இந்தியாவுக்கு கின்று வேண்டியது கின்னது என்று அறிந்தவர்கள்‌ யாராவது இருக்கின்றார்களா என்பதை வாசகர்களையே யோசித்து உணரவிட்டு விடுகின்‌. றோம்‌. ஆகவே தேச பகீதியும்‌, கடவுள்‌ பக்தியும்‌ மணிதனை சுயநலஸ்தனாகவும்‌, கண்‌ மூடித்தனமாய்ப்‌ பின்பற்ற வேண்டியதாகவும்‌ செய்கின்றதே தவிர, மனித சமூகதீதின்‌-- நாட்டின்‌ முன்னேற்றதீதின்‌ ஏ, பி, சி, டி-யைக்கூட காணச்‌ செய்ய முடிவதில்லை. தேசபகீதி என்கின்ற வார்தீதையே வெள்ளைக்காரன்‌ இராச்சியத்தில்‌ உத்தியோகம்‌ சம்பாதிப்பதற்கு ஏற்படுதீதப்பட்டதல்லாமல்‌ வேறு எதற்காகவாவது ஏற்படுத்தப்பட்டு வேறு ஏதாவது பலன்‌ கொடுதீதது என்று யாராவது ஒற்றை விரலை நீட்ட முடியுமா? தேச பக்தியும்‌, கடவுள்‌ பக்தியும்‌ மனித சமூகதீதிற்கு என்ன பலனைக்‌ கொடுக்கக்‌ கூடியதாய்‌ இருக்கின்றன; அல்லது கொடுத்தன என்றாவது யாராவது சொல்ல முடியுமா? மற்ற தேசத்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1140 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ தாரெல்லாம்‌ விடுதலையடைய, சுதநீதிரமடைய இந்த மாதிரிதான்‌. நடந்தார்களா ₹? மக்கன்‌: முன்னேற்றம்‌ அடையவும்‌ அவர்களது கஷ்டமும்‌ சரீரப்‌ பிரயாசையும்‌ அடிமைத்தனமும்‌ ஒழியவும்‌, மனிதத்‌ தன்மை இன்னது மனிதனுடைய இயற்கைத்‌ தன்மை இன்னது என்ப வைகளை உணர்த்தி அவைகளை அடையச்‌ செய்து கவலையற்று வாழச்‌ செய்வதற்கு இதுவரை யார்‌ என்ன கவலை எடுதீது என்ன காரியம்‌ செய்திருக்கின்றார்கள்‌ 2 ஒவ்வொரு மனிதனும்‌, ₹ பொது நலதீதிற்குப்‌ பாடு படுகின்றேன்‌? என்கின்ற ஏணியின்‌ மூலம்‌ சுயநலதீதிற்குப்‌ போகின்றானேயல்லாமல்‌, உண்மையான பொது நலதீ அக்காக வேலை செய்வதற்கு யார்‌ இருக்கின்றார்கள்‌ ₹ இருந்தார்கள்‌ i அல்லது அதற்காக வேண்டியது என்ன என்றாவது யார்‌ அறிந்தார்கள்‌? வீணே சுய நலமும்‌ குருட்டு நம்பிக்‌ கையும்‌ கொண்டவர்கள்‌ செய்கையானது பல வழிகளிலும்‌ இன்றைய தினம்‌ நம்‌ நாட்டை-- ஜன சமூகதீதைப்‌ பாழாக்கிக்கொண்டு வருகின்றதைதீி தவிர வேறு ஒரு காரியமும்‌ காண முடிவதில்லை. இந்த இலட்சணதீதில்‌ யாராவது உண்மையைச்‌ சொல்ல வந்தால்‌ அவர்களை--தேசதீ துரோகி என்றும்‌ நாத்திகன்‌ என்றும்‌ மூளாவண்ணம்‌ பேசுவதிலும்‌ குறைவில்லை. [6 &8 அரசு ?-தலையங்கம்‌--21-12-1930] 8. பொதுநல வாழ்வு இது, பொதுநல வாழ்வு என்று சொல்லப்படுவதை, அதாவது ஒரு மனிதன்‌ தனக்கென: வாழாமல்‌ பிறர்‌ நலதீதுக்காக வாழுந்‌ தன்மை என்பதைப்பற்றி ஒருவாறு ஆராயும்‌ பொதுக்‌ கட்டுரையரகும்‌. மனிதன்‌ என்பவன்‌ ஒரு ஜீவப்‌ பிரணியேயரவான்‌. ஜீவப்‌ பிராணிகள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ சுபாவத்தில்‌ தன்னலமுடையவைகளேயரகும்‌. எப்படியெனில்‌, ஒவ்வொரு ஜீவனும்‌ தான்‌ உயிர்வாழவேண்டும்‌, தன்னைக்‌ காப்பாற்றிக்கொள்ளவேண்டும்‌ என்பதையே முக்கிய நோக்கமாகக்‌ கொண்டதாகும்‌. அப்படிப்பட்டவையுள்‌ மனிதனும்‌ ஒரு ஜீவனாகும்‌. ஆனால்‌, மனிதவாழ்வு என்பது சமுதாயவாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வதாயும்‌, அப்படிப்பட்ட மனிதவாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும்‌ தன்‌ ஒருவனாலேயே செய்துகொள்ளகீகூடியதாய்‌ இல்லாமல்‌ மற்றவர்களது கூட்டுமுயற்சியால்‌, கூட்டுச்செயலாலேயே முடிக்கக்கூடியதாயும்‌ இருக்கிறபடியால்‌ மனிதவாழ்வு என்பது தனக்‌ கெனவே என்பதாயில்லாமல்‌ பிறருக்காகவும்‌ பாடுபட்ட வாழவேண்டிய வாழ்வாக இருக்கிறது. ஆகவே, மனிதன்‌ மனம்‌ ஒப்பி பிறர்‌நலனுக்காக உழைப்பது என்பது இன்றி யமையரத இயற்கை விதியாக இருநீதுவருகிறது. ஏதோ ஒரு சிலர்‌ திருட்டு, விபச்சாரம்‌ முதலிய கூடாத தொழிலில்‌ ஈடுபட்டவர்கள்‌ இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்‌ என்றாலும்‌, பொதுவாக எல்லா மனிதர்களின்‌ வாழ்வும்‌, தொழிலும்‌ பிறருக்குப்‌ பயன்படுவதற்குச்‌ செய்யப்படுவதாக இருந்‌ துவருகின்றன. அதன்‌ பயனாய்தீ தானும்‌ வாழ்கிறான்‌ என்பது உண்மைதான்‌. ஒரு விலை மாது, வக்கீல்‌, வியாபாரி, உத்தியோகஸ்தன்‌, விவசாயி, கூலியான்‌ முதலியவர்கள்‌ எல்லோரும்‌ தங்கன்‌ சுயநலதீதிற்கே வாழ்கிறார்கள்‌. என்றாலும்‌ அவர்கள்‌ செய்யும்‌ பணி பிறருடைய நலதீதிற்கே, பிறருடைய தேவைக்கே, பிறருடைய திருப்திக்கே அல்லாமல்‌ தமக்காகவேதான்‌ என்று சொல்லுவதற்கில்லை. - இந்ததி ததீ.துவத்தை விட்டுவிட்டு மற்றும்‌ ஒரு மனிதன்‌ உமுகிறான்‌, நூற்கிறான்‌, நெய்கிறான்‌; வீடு கட்டுகிறான்‌, ரோடு பேரடுகிறான்‌, கிணறு வெட்டுகிறான்‌, கணக்கு ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீதுவம்‌ 1141 எழுதுகிறான்‌, பலகாரக்‌ கடை, ஓட்டல்‌ வைக்கிறான்‌, பத்திரிகை நடதீதுகிறான்‌ ] மற்றும்‌ பல பணிகள்‌ உடலுழைப்பாலும்‌ மூளை உழைப்பாலும்‌ செய்கிறான்‌. இவைகள்‌ யாருக்குப்‌ பயன்படுகின்‌றன? அவனுக்கேயா ? இல்லை) மற்ற மக்களுக்கும்‌ பயன்படுகின்றன. ஆனால்‌, அதனால்‌ செய்பவனின்‌ குடும்பமும்‌ உயிர்வாமுகின்றது. மற்றும்‌, இன்றைய பிரதீதியட்ச நடப்பையும்‌, அனுபவத்தையும்கொண்டு பொது நலப்‌ பணியில்‌ ? ஈடுபட்டிருப்பவர்களது தன்மையைப்‌ பார்ப்போமேயானால்‌, அவை 100-க்கு 90 சுயநலதீதிற்காகச்‌ செய்யப்படும்‌, அதாவது முன்னால்‌ கூறப்பட்டவர்கள்‌ செய்வதுபோல செய்யப்படும்‌ ஒருமாதிரி வியாபாரம்‌, வாழ்வுக்கான தொழில்‌ என்பதாகதீதான்‌ பெரிதும்‌ காணப்படுமேயல்லாது, சுயநலமற்றது என்று காணுவதற்கு எளிதில்‌ முடியாததாகவே இருந்‌ துவருவதைக்‌ காணலாம்‌. சுமார்‌ 80, 40 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மக்களுக்குப்‌ போதிய தெளிவு இல்லாத காலத்தில்‌ ¢ பொதுநலம்‌ ? என்பது வேறு துறையில்‌ வாழ்கிறவர்கள்‌ அதீதுறையைப்‌ பெருக்கிக்கொள்ள, பெருமைபெற ஒரு சாதனமாகப்‌ பயன்படுதீதப்பட்டு வந்தது. இப்போது மக்களுக்கு ஓரளவு தெளிவு ஏற்பட்டபின்பு மனத்‌ அணிவும்‌, பிறர்‌ பழிப்பை இலட்சியம்‌ செய்யவேண்டிய அவசியமில்லாத தன்மையும்‌ ஏற்பட்டபிறகு தன்‌ வாழ்வுக்‌ காகவும்‌, தன்‌ தகுதிக்கு, நிலைமைக்கு மேற்பட்ட வாழ்வு வாழவேண்டும்‌, பொறுப்பற்ற, கவலையற்ற, பாடுபடாத வாழ்வு வாழவேண்டும்‌ என்று கருதுகிறவர்களுக்கெல்லாம்‌ முதல்‌ தோற்றமாயும்‌ நிலவுவது ¢ பொதுவாழ்வில்‌ இறங்கிவிடுவது ? என்பதேயாகிவிட்டது. தன்‌ தொழிலை, உழைப்பை ₹ பொதுநல வாழ்வு? என்பதில்‌ பயன்படுத்தி இருக்கிற தாகச்‌ சொல்லிக்கொள்ளுபவர்கள்‌, அதில்‌ ஈடுபட்டிருக்கிறவர்கள்‌ என்பவர்கள்‌: இன்று பெரிதும்‌ சுகவாழ்வும்‌, சுகபோகமும்‌, மேன்மையான வாழ்வும்‌ வாழுகிறார்கள்‌. அதாவது, கைமுதல்‌ இல்லாமலும்‌, உடலுழைப்பு இல்லாமலும்‌ மேலும்‌ சொல்வ தானால்‌, ஒழுக்கம்‌, நாணயம்பற்றிய கவலை இல்லாமலும்‌ சுகஜீவியாய்‌ இருந்து வருகிறார்கள்‌. மற்றும்‌, தெனிவான, உதாரணம்‌ வேண்டுமானால்‌ இன்று ¢ பொதுவாழ்வு? என்பதில்‌ ஈடுபட்டுள்ளவர்களாகக்‌ காணப்பட்ட, காணப்படுகின்ற மக்களில்‌ 100-க்கு 90 பேர்களுக்கு மேம்பட்ட மக்களை எடுதீதுக்கொண்டு தனித்‌ தனியாக அருவிப்‌ பார்தீது வருவோமே: யானால்‌, அவர்களில்‌ 89 பேர்களும்‌ தங்களைப்‌ ' பொதுநல வாழ்வில்‌? ஈடுபடுதிதுவதற்கு முன்‌ தாங்கள்‌ இருந்துவந்த நிலையைவிடப்‌ பன்மடங்கு பணத்தில்‌, அந்தஸ்தில்‌, வாழ்வில்‌, போக போக்கியங்களில்‌ வளர்சீசிபெற்றவர்களாகவே காணப்படுவர்‌ என்பதோடு தங்கள்‌. தேவைக்குமேல்‌, தகுதிக்குமேல்‌ அடைந்து அனுபவிப்பவர்களரகவே காணப்படுவரர்கள்‌. அதிலும்‌, பொதுநலவாழ்வில்‌ இறங்குபவர்களுக்கு மான அவமானம்‌ பார்க்கவேண்டிய அவசியம்‌ இல்லாத அளவுக்குப்‌ பொதுமக்கள்‌ கணிப்பு ஆகிவிட்டதால்‌, அதற்கேற்றாற்‌ பேரலவே மதச்‌ சேவையும்‌, அரசியல்‌ சேவையும்‌, சமுதாயச்‌ சேவையும்‌ ஆகிவிட்டதால்‌ எவ்வளவு கிழிதன்மையும்‌, ஒழுக்கக்‌ குறைவும்‌, 0TS தன்மையும்‌ உள்ளவனுக்கும்‌ * பொதுநல வாழ்வு ? என்பது வாழ்க்கை வளர்சீசிக்குப்‌ பயனளிக்கக்கூடியதாக ஆகிவிட்டது. இப்படிப்பட்ட * பொதுநல வாழ்வு? என்பது, ஈடுபட்டவர்களுக்கு வாழ்க்கை வளர்ச்சியும்‌, சுகபோக வாழ்வும்‌ அளிதீதுவருவது ஒருபுற மிருந்தாலும்‌, இது மனித சமுதாயத்தில்‌ பொது ஒழுக்கம்‌, நாணயம்‌, நம்பிக்கை ஆகியவைகளைப்‌ பெரிதும்‌ கெடுத்து விட்டது. எப்படியெனில்‌, * பொதுநல வாழ்வு? என்பதானது எப்படிப்பட்டவரும்‌ அதில்‌ ஈடுபட்டுவிட்டால்‌ அவருக்கு இவ்வளவு மேலான வாழ்வு அளித்து வருவதால்‌-அவர் களுக்கு மானஅவமானம்‌, ஒழுக்கம்‌, நாணயம்‌, நம்பிக்கை தேவை இல்லாமலிருப்பதால்‌-மேலும்‌, www.thamizham.net - Free £ book No 3031 1142 பெரியார்‌ ஈ. வெ. ரா சிந்தனைகள்‌ இதனால்‌ மானஅவமானம்‌ இழிவுகூட அவர்கள்‌ பார்க்கவேண்டிய அவசியமில்லாதிருப்ப தால்‌-இனி வாழ்க்கையில்‌ பிரவேசிக்கவேண்டிய வயது வந்தவர்களும்‌, அவசியமூடையவர்‌ களும்‌ இந்தப்‌ ¢ பொதுநல வாழ்வு £க்காரர்களைப்‌ பார்தீது திவர்களைப்‌ பின்பற்ற முனைந்து விடுகிறார்கள்‌. பொதுமக்களையும்‌ இத்தன்மை ஆட்கொண்டுவிடுகிறது. * பொதுநல வாழ்வு? என்பதுபற்றி இப்படிக்‌ கூறுவதானது யாரோ ஒரு சிலரை மாத்திரம்‌ கண்டு கூறுவதாக யாரும்‌ கருதிவிடக்கூடாது. பொதுவாகவே, முன்‌ கூறியபடி ¢ பொதுநல வாழ்வில்‌ ? ஈடுபட்ட 100-க்கு 90 மக்களைக்‌ கண்டும்‌, 30 ஆண்டு அனுபவதீதைக்கொண்டும்‌ * மதிப்பிற்குரிய--பெரிய பெரிய ஆட்கள்‌ என்பவர்களது உள்ளும்‌ புறமுமான கருத்து, நடத்தை ஆகியவைகளை உணர்ந்தும்தான்‌: 6 பொதுநல வாழ்வு? என்பதற்கு இந்த விளக்கம்‌ தர நேர்ந்தது. இதற்கு விலக்கான ₹ பொதுநல வாழ்வுக்காரர்கள்‌? இருக்கலாம்‌ என்பதை இந்த விளக்கம்‌ மறுக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள்‌ மரியாதைக்கு உரியவர்களேயாவார்கள்‌. ஆனால்‌, அரிது; மிகமிக அறிது. [6 விடுதலை 1-கட்டுரை--17-1-1954] 4. பொதுத்‌ தொண்டு ஊராட்சிதீதலைவர்‌ அவர்களே ! தாய்மார்களே ! பெரியோர்களே | ஏதோ மனிதனாகப்‌ பிறந்தோம்‌ ) சுயநலத்திற்கு ஏற்ப வாழாமலிருக்க வேண்டு மென்று கருதுகிறோம்‌. நம்‌ வாழ்வின்‌ பயனாகத்‌ தொண்டு செய்ய வேண்டுமென்ற எண்ணதீதில்‌ தொண்டாற்றி வருகிறேன்‌. பலர்‌ கருதுகிறார்கள்‌--நான்‌ பொதுமக்களுக்‌ காகத்‌ தொண்டாற்றுகிறேன்‌ என்று $ ஒரு மாதிரியில்‌ அந்தக்‌ கருதீது சரி. இந்த நாட்டில்‌ பார்ப்பானைத்‌ தவிர மற்றவர்களெல்லாம்‌ பொதுமக்களுக்குப்‌ பாடுபடுகிறவர்கள் தாம்‌. உலகத்தில்‌ மனிதனாக உள்ள அனைவரும்‌, பார்ப்பானை தீ தவிர மற்றவர்கள்‌ அனைவரும்‌ பொதுமக்களுக்குதீ தொண்டாற்றுகிறவர்கள்தாம்‌. சாதாரணமாக அருவருப்பாகத்‌ தோன்றும்‌ கக்கூஸ்‌ சுதீதம்‌ செய்யும்‌ (மலம்‌ எடுப்பது) வேலை முதல்‌, அரசனாக இருந்து ஆட்சிபுரிகிற வரையில்‌ எல்லோருடைய வேலையும்‌ பொதுத்தொண்டுதான்‌. சக்கூஸ்‌ எடுக்கிறான்‌ என்றால்‌ தனக்கு மட்டுமா எடுக்கிறான்‌ 8 வேலைகள்‌ எல்லா வற்றையும்‌ எடுத்துக்கொள்ளுங்கள்‌. உத்தியோகம்‌ செய்பவன்‌, விறகு: வியாபாரம்‌ செய்‌ பவன்‌, மற்றும்‌ பல வியாபாரிகள்‌, தொழில்‌ செய்வோர்கள்‌ இவர்களை எடுத்‌ துக்கொண்டால்‌ அவனவன்‌ செய்கிறதெல்லாம்‌-அது அவனுக்கு மட்டுமல்ல. உயர்வு-தாழ்வு என்ன வென்றால்‌, அதன்‌ மூலம்தான்‌ தன்‌ வாழ்வை வளப்படுத்திக்‌ கொள்கிறான்‌ என்கிறோமே தவிர வேறு வகையில்‌. அதுதொண்டுதான்‌. மற்றவனுக்குன்ள வசதி வாய்ப்பு, அமைப்பு இவற்றைப்‌ பயன்படுத்திக்கொண்டு, இலாபம்‌ பார்‌ தீ.துகீ கூலி பார்தீதுச்‌ செய்கிறார்கள்‌ என்று சிலரைக்‌ கூறலாமே தவிர, அவர்கள்‌ இறக்கும்போது எடுத்துக்கொண்டா போகிறார்கள்‌ ₹ அவைகளை விட்டுவிட்டுதீதான்‌ போகிறார்கள்‌ ) மற்றவர்கட்குதீதான்‌ ) அது நம்‌ மகனுக்கு?, அல்லது நம்‌ மனைவிக்கு? என்று நினைப்பார்கள்‌. கணக்குப்‌ பார்த்தால்‌ அவர்களும்‌ (மனைவி; மக்களும்‌) மற்றவர்கள்‌ தாம்‌. தனக்கு என்று ஒன்றும்‌ கில்லை. பொதுதீ தொண்டில்‌, தனகீகு என்று ஒன்றைச்செய்கிறவர்கள்‌ சிலர்தான்‌. தேடி வைதீதவர்கள்‌ யாரென்றால்‌, மற்றவர்களை தீ தேடாமல்‌--எதிரீபாராமல்‌ தொண்‌ டாற்றிப்‌ போகும்‌ அத்தனைபேரும்‌ ; அவர்கள்தாம்‌ தமக்கென்று புகழைத்‌ தேடிக்கொண்டு போகிறார்கள்‌:$ பிரதியுபகாரம்‌ இல்லாமல்‌ தொண்டு செய்பவர்கள்‌ என்ற பெயரைத்‌ தம்மோடு www.thamizham.net - Free £ book No 3031 ம ணம்‌ அது தத்துவம்‌ 1143 எடுதீதுப்‌ போகிறார்கள்‌. உலகத்தில்‌ அது இருக்கிற வரையில்‌ தம்‌ பெயர்‌ நிலைகீகும்படி செய்துவிடுகிறார்கள்‌. நிலம்‌, காணி இவையெல்லாம்‌ எவ்வளவுதான்‌ சேர்த்து வைத்திருந்‌ தாலும்‌ அவன்‌ செத்துப்‌ போனதும்‌ அவனது என்று சொல்லமாட்டார்கள்‌, இவனுடைய மகனது என்றுதான்‌ கூறுவார்கள்‌ ) இது இயல்பு. தனது என்று கூறும்படியானது தொண்டு ஒன்றுதான்‌. மற்றவர்‌ களுக்காகப்‌ பலனை எதிர்பாராமல்‌ தொண்டு செய்வதுதான்‌. [தேரெழுந்தூரில்‌, 31-8-1959-ல சொற்பொழிவு--* விடுதலை 1 114-1959] 5. தியாகம்‌ தியாகம்‌ என்பதுபற்றி அறிஞர்‌ ஆச்சாரியார்‌ தமது கிராமநாதபுரம்‌ சொற்பொழிவில்‌ ப்பிட்டு இருக்கும்‌ கருதீதான.து மிகவும்‌ சரியானதும்‌, பொருத்தமான துமாகும்‌. கு ருக்கு 5 ௫, ஏனென்றால்‌, எனக்கு இது சுமார்‌ 30 ஆண்டுகளாக இருந்துவரும்‌ கருதீதாகும்‌. மக்களிடையில்‌ மூடநம்பிக்கை காரணமாகவும்‌, சுயநலம்‌ காரணமாகவும்‌ யோசனையும்‌, பொருளுமற்ற அனேக சொற்கள்‌ பழகீகதீதில்‌ இருந்‌. துவருகின்‌றனஃ * தியாகம்‌? என்ற சொல்லைப்பற்றி ஆச்சாரியார்‌ அவர்கள்‌ குறிப்பிடுகையில்‌, 6 தியாகம்‌ என்பது பதீதிரிகைகள்‌ ஏதோ அவசரதீதில்‌ சிருஷ்டித்த வார்த்தை $ பத்திரிகைகள்‌ எவ்வளவோ பதங்களை இப்படிச்‌ சிருஷ்டிதீதிருக்கின்றன ? என்று கூறி இருக்கிறார்‌. இதைக்‌ குறிப்பிடும்போது இதற்கு முன்னும்‌ பின்னாலும்‌ கூறியிருப்பவை எப்படி இருந்தாலும்‌, தியாகம்‌ என்பதைப்பற்றிக்‌ கூறியது மிகவும்‌ சரியான ததீ.துவக்‌ கொள்கைக்‌ கருத்தாகும்‌. நான்‌ சில மரணவர்களுக்கு எனது கையெழுத்தைப்‌ போட்டுக்கொடுக்கும்போ து, அவர்கள்‌ அதில்‌ ¢ ஏதாவது இரண்டு வார்த்தைகளை எழுதிக்‌ கொடுங்கள்‌ ? என்று கேட்கப்‌ பட்ட காலத்தில்‌, * கடவுள்‌ என்பதும்‌, தியாகம்‌ என்பதும்‌, நிஷ்காமிய கர்மம்‌ என்பதும்‌, மோட்சம்‌, நரகம்‌ என்பதும்‌ பொருளற்றதும்‌, விளக்கமுடியாததுமான சொற்கள்‌ ? என்று எழுதிக்‌ கொடுதீது வந்திருக்கிறேன்‌. மற்ற சொற்களை விட்டுவிட்டு-* தியாகம்‌ ? என்பதைப்‌ பற்றியே இதில்‌ எழுதுகிறேன்‌. தியாகம்‌ என்றால்‌ தமிழ்‌ அகராதிகவில்‌ கொடுப்பது, கொடை, (உரிமையை) விடுதல்‌, விட்டுக்‌ கொடுத்தல்‌, உபகாரம்‌ என்பன போன்ற பொருள்கள்‌ குறிக்கப்பட்டிருக்கின்‌ றன. ஆங்கில அகராதிகளில்‌ ¢ சரக்ரிபைஸ்‌ (Sacrifice) ? என்ற சொல்லுக்கு பலி, தியாகம்‌, பரித்தியாகம்‌ என்ற பொருள்கள்‌ காணப்படுகின்றன. இவை எப்படி இருந்தாலும்‌, தியாகம்‌ என்பதற்குச்‌ சுயநலம்‌ இல்லாமல்‌ தொண்டாற்றுதல்‌, கஷ்டநஷ்டம்‌ அடைதலோடு தானே பெரிய காரியங்களைச்‌ சாதிதீதல்‌, பரிகரிக்கமுடியாத துன்பம்‌, தொல்லையை மனப்பூர்வமாக ஏற்றல்‌ என்பதைத்தான்‌ பொருளாகக்‌ கொண்டு மக்கள்‌ அச்சொல்லைப்‌ பயன்படுத்து கிறார்கள்‌ என்று கருதிக்கொண்டு அந்தப்‌ பொருள்களைப்‌ பற்றிச்‌ சிந்திப்போம்‌. மனிதனுக்குச்‌ சுயநலம்‌ என்பது என்ன? மண்‌, பெண்‌, பொன்‌ ஆசை என்பது மாதீதிரநீதானா i மனிதன்‌ சுயநலதீதிற்காக மேற்கண்டவைகளையும்‌ விட்டுக்‌ கொடுக்கச்‌ சம்மதிக்கிறானே என்று பரர்தீதால்‌, கிவற்றையும்விட சுயநலம்‌ என்பதாக வேறு ஒன்று இருக்கிறதாகதீ தோன்றுகிறதா, இல்லையா 1 சாப்பிடுவது, தூங்குவது, போக போக்கியம்‌ அனுபவிப்பது என்றால்‌ சுயநலதீதிற்கு ஆக இவைகளையும்‌ விட்டுவிட்டுப்‌ பட்டினி, ஏழ்மை, துறவிவாழ்வு வாழ்கின்றானே அப்போதும்‌ இவைகளைவிடச்‌ சுயநலம்‌ என்பதாக வேறு ஒன்று இருப்பதரகதி தோன்றுகிறதா, இல்லையா? சில * பெரியவர்களும்‌ ¢ சிறியவர்களும்‌ ? நரகம்‌ . புகதீ துணிந்து சில காரியங்களைச்‌ செய்திருக்கிறார்கள்‌. என்பதாக அறிகிறோம்‌. அதன்‌ கருத்தென்ன ¥ www.thamizham.net - Free £ book No 3031 1144 பெரியார்‌ ஈட வெ: ரா. சிந்தனைகள்‌ எவ்வளவு இம்சையை; மிடிமையை அனுபவித்துக்‌ கொண்டாவது வேறு ஒரு காரியதீதைச்‌ செய்ய முன்வருகிறான்‌ என்றால்‌ அப்போது அவனுக்கு வேறு ஏதோ ஒரு சுயநல உணர்ச்சி இருக்கிறது $ அதற்காகதீதான்‌ இந்தக்‌ காரியதீதில்‌ ஈடுபட்டு இருக்கிறான்‌. என்றுதானே அறியக்‌ கிடக்கிறது ₹ சுயநலம்‌ இல்லாவிட்டால்‌ மனிதன்‌ ஒரு ஜீவனாகவே இருக்கமுடியாது. ஆகவே, இங்கு சுயநலம்‌ என்றால்‌ என்ன என்பது தெளிவுபடுதீதிக்கொள்ள வேண்டியதாகும்‌. இது ₹ ததீதுவ? ஆராய்ச்சி அல்ல--அறிவு ஆராய்ச்சி; மக்களை மயக்கதீதிலிருநீது, ஏமாற்றதீதிலிருநீது தெளிவிக்கும்‌ ஆராய்சீசியேயாகும்‌. இதை ஒரு வரியில்‌ ஆச்சாரியார்‌ சொல்லிவிட்டார்‌ என்றாலும்‌, விளக்கினால்‌ மக்களுக்குள்‌ இருக்கும்‌ அகம்பாவமாண: தியாககீ கருத்து மாற்றமடையலாம்‌. அதாவது, ¢ மனிதனுக்குச்‌ சுயநலம்‌ என்பது அவனது மனத்துக்குதீ திருப்தி ஏற்படுத்துவதும்‌ இன்பமளிப்பதுமேயாகும்‌, சுயநல காரியம்‌ என்பது ¢ தியாக மானாலும்‌ ¢ பாக்கிய?மானாலும்‌ செய்பவனுக்கு மனதி திருப்தி ஏற்படுவதுதான்‌. அதுதான்‌ தூக்குக்‌ கயிற்றைக்‌ கழுத்தில்‌ தானாக மாட்டிக்கொள்ளுவதானாலும்‌ அவனுக்கு இன்பம்‌ பயப்பதாம்‌. மனித வாழ்வில்‌ வெற்றி என்னவென்றால்‌ அவனவன்‌ மனதி திருப்தியோடு வாழ்வதுதான்‌. 30 ரூபாய்‌ சம்பளதீதிலுள்ள ஒரு குடும்பஸ்தன்‌ தன்‌ அயலான்‌ வீட்டுப்‌ பிள்ளை படிக்க மாதம்‌ 5 ரூ. கொடுதீதுவிட்டு, தான்‌ 25 ரூபாயில்‌ கஷ்டஜீவனம்‌ செய்து வருகிறான்‌ என்றாலும்‌, அந்த அயலான்‌ பின்ளை நன்றாகப்‌ படிப்பதையும்‌ அயல்‌ வீட்டார்‌ இவனை (மாதம்‌ 5 ரூ. கொடுதீது உதவுபவனை) சதா பேரற்றிப்‌ புகழ்ந்து ஆசி கூறுவதையும்‌ கேட்டுக்கொண்டிருப்பதில்‌ அவனுக்கு எவ்வளவு இன்பம்‌ உண்டாகும்‌ 8 ஆகவே, அந்த 5 ரூ. செலவில்‌ அவன்‌ மனம்‌ எவ்வளவு திருப்தியடையும்‌ என்பதைச்‌ சிந்தித்தால்‌--5 ரூபாய்‌ தியாகம்‌ அவனுக்கு எவ்வனவேர திருப்தியும்‌ இன்பமும்‌ தரும்‌ பாக்கியத்தை அளிதீததா, கஷ்டத்தை அளித்ததா என்பது விளங்காமல்‌ போகாது. ஒரு மனிதன்‌ ஒரு கோயில்‌ உற்சவதீதிற்குப்‌ போவதற்காக இரயிலில்‌ இடமில்லாமல்‌ மக்கள்‌ நெருக்கதீதில்‌ உட்கார்‌ ந்து கொண்டு நசுங்கிக்கொண்டு தொல்லைப்படுகிறான்‌. இது தியாகமா ₹ அவன்‌ புண்ணியம்‌ பெறப்போகிறோம்‌? என்ற மனத்‌ திருப்தியினால்‌ நசுங்கப்‌ படுகிறான்‌ ) அவ்வளவுதானே ! இதில்‌ தியாகம்‌ என்ன? இது ஒரு விபாபாரம்‌ தானே 1 அதுபோல்‌ அவன்‌ ஏறியிருக்கும்‌ இரயில்‌ வண்டியில்‌ ஒரு பெரியார்‌ வந்து ஏறுகிறார்‌. அவன்‌: முன்னமேயே நெருக்கத்தில்‌ கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தாலும்‌ பெரியாரைக்‌ கண்ட வடன்‌, தான்‌ எழுந்து பெரியாரை உட்காரவைதீதுவிட்டு, நின்றுகொண்டே மேலும்‌ நெருக்‌ கப்பட்டுக்கொண்டு வருகிறான்‌. இந்த நிலையில்‌ அவன்‌ மனம்‌ வழிந்தோடும்படியான திருப்தியடைந்து எல்லையற்ற இன்பத்தை அனுபவிக்கிறான்‌, என்ன திருப்தி? என்ன இதயம்‌ 8 கிட்ட நெருங்கிப்‌ பார்தீதறியாத, வெகு காலமாகப்‌ பார்க்கக்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருந்த ஒரு பெரியாரை, தான்‌ கைதொட்டு உட்காரவைத்து, பக்கதீதிலேயே நின்று கொண்டு அவருக்கு வேண்டியதைத்‌ தன்‌ கைகளால்‌ வாங்கிக்கொடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ படியான ஒரு வாய்ப்பைப்‌ பெற்றோமே என்று ஆனந்தக்‌ கூதீதாடுகிறான்‌. இதில்‌ அந்த நெருக்கடி பட்டது ¢ தியாகமா? ¢ பாக்கியமா 1? எந்த மனிதன்‌ எவ்வளவு பெரிய ¢ தியாகம்‌ ? என்பதைச்‌ செய்தாலும்‌ அவனுடைய திருப்திக்கு, இன்பதீதிற்குதீதான்‌ செய்கிறானே ஒழிய; நட்டதீதிற்கு அல்ல ; அதிருப்திக்கு அல்ல, சிலர்‌ தனக்கு இஷ்டமில்லாமலும்‌, துக்கதீ.துடனும்‌, நட்டக கருதீ.துடனும்‌ சில *,தியரகம்‌ ? செய்தார்கள்‌ என்று சொல்லப்படுவதாலும்‌ அவர்கள்‌ தங்கள்‌ மானத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொன்னவேண்டுமே: என்கின்ற ஆசைக்கும்‌, திருப்திக்கும்‌--அதாவது, தான்‌: www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1145 அந்தப்படி அந்தக்‌ கஷ்டத்தை, நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால்‌ அவனை மற்றவர்கள்‌ இழிவாய்க்‌ கருதுவார்கள்‌ என்று பயந்து செய்கிறார்களே ஒழிய பலன்‌ எதிர்பாராத முட்டாள்‌ தன; பைதீதியப்‌ புதீதியால்‌ அல்ல. கடுகளவு புதீதி உள்ளவனும்‌ பலன்‌ இல்லாத--ஏதாவது ஒருவகையில்‌ தனக்கு திருப்தி அல்லது பெருமை, அல்லது புகழ்‌, அல்லது மானம்‌ கெடாமல்‌, இழிவு ஏற்படாமல்‌ தப்பித்‌துக்கொள்ளுதல்‌ என்ற கருத்துக்கள்‌ இல்லாத காரியத்தைச்‌ செய்யவே மாட்டான்‌. அது முட்டாள்‌ தனமாகவும்‌ இருக்கலாம்‌. அல்லது புதீதிசாலிதீதனமாகவும்‌, கெட்டிக்காரதீ தனமாகவும்‌ இருக்கலாம்‌ ] அதுவேறு விஷயம்‌. நான்‌ மந்திரி வேலை கொடுக்கப்பட்டும்‌, 6 வேண்டாம்‌? என்று சொன்னதாக வைதீதுக்‌ கொள்ளுங்கள்‌. இது தியாகமா? புதீதிசாலித்தனமா$ வேலை ஏற்பதைவிட ஏற்காமலிருப்பதால்‌ திருப்தியும்‌ இன்பமும்‌ அல்லது தொல்லை இல்லாத தன்மையும்‌ இருக்‌ கிறதாகக்‌ கருதித்தான்‌ மறுதீதிருப்பேன்‌. நான்‌ கோயில்‌ கட்ட இலட்ச ரூபாய்‌ கொடுக்கிறேன்‌. இது வியாபாரமா, தியாகமா? தர்மம்‌, பிச்சை கொடுப்பது, மோட்சதீதிற்கு இல்லா விட்டால்‌, பெருமைக்கு இல்லாவிட்டால்‌--மனதீ திருப்திக்கு, இன்பத்திற்கு ஆகவாவது “தொல்லை சகிக்கமாட்டாமலரவதுதான்‌ இருக்கும்‌. இதில்‌ தியாகம்‌ என்ன இருக்கிறது ₹ அதுபோல்‌, சில இளைஞர்கள்‌ ஆவேசத்தில்‌ சுற்றுச்சார்பு சகவாசதீதில்‌ தனது பெரு மைக்கு, புகழுக்கு, திருப்திக்கு என்று ஏதாவது குருட்டாட்டம்‌, நல்ல ஆட்டம்‌ ஆடிவிட்டு, * நான்‌ தியாகி-எனகீகுக்‌ கூலி என்ன 4 என்றால்‌, இதைவிட முட்டாள்‌ தனமான காரியம்‌-- என்ன இழிவான காரியம்‌ வேறு இருக்க முடியும்‌? ஆனால்‌ இந்த முட்டாள்‌ தனமான வியாபார வேண்டுதலாலேயே பண்டித ஜவகர்லால்‌ முதல்‌ மந்திரி பதவியும்‌, அவர்‌ குடும்பம்‌ பெரும்‌ பெரும்‌ சம்பளமுன்ன பதவியும்‌, பாபு இராஜேந்திர பிரசாதி சர்வாதிகாரதீி தலைவர்‌ பதவியும்‌ பெற்றிருப்பதைக்‌ கண்ட சிறு ¢ தியாகிகள்‌ ?--தங்களுகீகும்‌ ஏதாவது ஒரு வழியில்‌ பங்கு கேட்பதில்‌ தவறு என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரஸ்‌ பதவி, பெருமை, பண இலாபம்‌ ஆகிய காரியங்களுக்கு இவர்கள்‌ (தியாகிகள்‌) செய்தது போன்ற காரியங்கள்தாமே பல இளைஞர்களுக்கும்‌ பண்ட மாற்றாக இருந்துவருகிறது ₹ '* விபூதி பூசி இருப்பவர்களுக்கெல்லாம்‌ கோயில்‌ பிரசாதம்‌ கொடுக்கப்படும்‌ ? என்று ஆன பிறகு, விபூதி பூசினவன்‌ எல்லாம்‌ கையை நீட்டினால்‌, நெருக்கடி சமாளிக்க முடியாமல்‌, 6 உனக்கு வெட்கமில்லையா? இப்படி மேலே விழுந்து கையை நீட்டுகிறாயே !? என்றால்‌ இதில்‌ வெட்கமென்ன ? முன்னால்‌ இருநீதவனுக்குக்‌ கிடைத்துவிட்டது; கொடுகீகப்பட்டாய்விட்டது என்றால்‌, பின்னால்‌ இருப்பவன்‌ வேறு என்னதான்‌ சொல்லிக்‌ கையை நிட்டுவது ? ஆனால்‌, இந்த நிலைக்குத்‌ தியாகம்‌ என்பது பொருளற்றதும்‌, முட்டாள்தன. மானதும்‌, மானமற்றதுங்கூடதீதான்‌, ஆனால்‌, மற்றவர்கள்‌ பெரியவர்கள்‌ ¢ தியாக பலன்‌ ? அனுபவிக்கும்போது இவர்களுக்கு மாதீதிரம்‌ எப்படி இந்ததீ தன்மைகள்‌ பொருதீத மற்றவையாகும்‌ ? விஷயப்‌ பொருதீதம்‌, சந்தர்ப்பம்‌ எப்படி இருந்தாலும்‌, ¢ தியாகம்‌? என்ற சொல்‌ பொருளற்றது) பித்தலாட்டமானது ; சுயநலதீதிற்கு வழியானது. ஆச்சாரியார்‌ சொன்னபடி * பதீதிரிகைக்காரர்கள்‌ (பார்ப்பனர்‌ கள்‌) சிருஷ்டித்த சொல்‌? என்பதை நான்‌ மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்‌. இப்படி இன்னும்‌ பல சொற்களைச்‌ சிருஷ்டிதீது மக்களை ஏயிக்கிறார்கள்‌. என்பதையும்‌ ஆதரிக்கிறேன்‌. என்னுடைய வெகுநாள்‌ கருதீதும்‌ திதுவே. 1686—144 www.thamizham.net - Free E book 14௦ 3031 1146 பெரியார்‌ ஈட வெ: ரர்‌. சிந்தனைகள்‌ சுமார்‌ 45 ஆண்டுகளுக்கு முன்பே நானும்‌ கைவல்ய சாமியும்‌ சேர் நீது பாலக்காடு வித்வான்‌ நடேசம்‌ பிள்ளை என்ற ஒரு பெரும்‌ புலவரிடம்‌, ¢ நிஷ்காமிய கர்மம்‌ என்பதே பொருள்‌ அற்ற, அல்லது பித்தலாட்டம்‌ ஆன சொல்‌? என்று வாதாடி இருக்கிறோம்‌. அதாவது, பலனை எதிர்பாராமல்‌ அல்லது இலட்சியம்‌ இல்லாமல்‌ தியாகம்‌--கர்மம்‌-- வினை--செயல்‌ செய்வது என்பதைப்பற்றி வாதாடி இருக்கிறோம்‌. இதைப்பற்றி மற்றொரு சமயம்‌ விளக்கலாம்‌. [ விடுதலை -தலையங்கம்‌--2-7-1953] 8. ஜீவகாருண்யமும்‌, யாகமும்‌ தலைவரவர்களே | தோழர்களே 1 ஜீவகாருண்யம்‌ என்ற வரர்தீதைக்ீகு ஒவ்வொருவர்‌ ஒவ்வொரு விதமாக அர்த்தம்‌ கொண்டிருகீகிறார்கள்‌, சிலர்‌ மாமிசம்‌ சாப்பிடாமல்‌ இருந்தால்‌ அதுவே பெரிய ஜீவகாருண்யம்‌ என்றும்‌, மற்றபடி ஜீவனுக்கு எவ்வித மனவிருதீததீதையும்‌, உடல்‌ வருத்தத்தையும்‌ செய்தால்‌ குற்றமில்லை என்றும்‌ கருதியிருக்கிறார்கள்‌, சிலர்‌ ஜீவன்களை இம்சைப்படுதீதாமல்‌ இருந்தால்‌ போதும்‌ என்றும்‌, மாமிசம்‌ சாப்பிடுவதைப்‌ பற்றிக்‌ குற்றமில்லை என்றும்‌ கருதி யிருக்கிறார்கள்‌, சிலர்‌ சில ஐந்‌ துக்களை மாத்திரம்‌ இம்சைப்‌ படுத்தக்‌ கூடாதென்றும்‌, மற்ற ஜநீதுக்களைப்‌ பற்றிக்‌ கவலை இல்லை யென்றும்‌ கருதி யிருக்கிறார்கள்‌. ஜீவகாருண்யதீதுக்கு கிந்தப்படி எத்தனையோ விதமான கருத்துக்களும்‌ தத்துவங்களும்‌ இருக்கின்றன. விவரமாய்ச்‌ சொல்ல வேண்டுமானால்‌, ஜீவகாருண்யம்‌ என்பது ஒவ்வொரு தேசத்‌ துக்கும்‌, ஒவ்வொரு மததீதுக்கும்‌, ஒவ்வொரு சாதிக்கும்‌ ஒவ்வொரு விதமாய்‌ கருதப்படு கின்றது. இந்துக்கள்‌ என்பவர்கள்‌ பசுவை வணங்குவார்கள்‌ ; அதனிடத்தில்‌ அளவுக்கு மீறிய மரியாதையும்‌, ஜீவகாருண்யமும்‌ காட்டுவார்கள்‌ $ யாராவது பசுவைக்‌ கொன்றால்‌-- சாப்பிட்டால்‌ அவர்களிடம்‌ குரோதமும்‌, வெறுப்பும்‌ கொள்ளுவார்கள்‌. இந்தக்‌ காரணதீதி னாலேயே, இந்துக்களுக்கு முகமதியர்கள்‌ மீது வெறுப்பும்‌ அசூசமும்‌ இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில்‌ இந்து-முஸ்லிம்‌ கலகங்களும்‌ கட்சிகளும்‌ உண்டாகின்‌ றன. இந்துக்களிலேயே பறையர்‌, சக்கிலியர்‌ என்று அழைக்கப்படும்‌ வகுப்பார்‌ மாட்டு மாமிசம்‌ உண்பதினாலேயே அவர்களைக்‌ கீழ்‌ சாதிக்காரர்கள்‌ என்று கருதுவதாகவும்‌, அதனாலேயே அவர்களைத்‌ தொடுவதற்கு அஞ்சுவதாகவும்‌ சொல்லப்படுகின்றது. கிதை அனுசரித்து பல சாஸ்திரங்களும்‌ எழுதிவைக்கப்பட்டிருக்கின்‌றன ஆனால்‌, இப்படிப்பட்ட இந்துக்கள்‌ பசுமாடு விஷயத்தில்‌ எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்‌ என்று பார்தீதால்‌ வண்டியிலும்‌, உழவிலும்‌, ஏற்றதீதிலும்‌, செக்கிலும்‌ கட்டி அதைச்‌ சரகும்‌ வரை உபதீதிரவிக்கிறார்கள்‌. மாட்டை நல்ல காளைப்‌ பருவத்தில்‌ கட்டிப்‌ போட்டு, விதர்களை நசுக்கிக்‌ கொட்டாப்‌ பிடியால்‌ தட்டிக்‌ கரைத்துக்‌ கொடுமைப்படுத்து கிறார்கள்‌. பசுவின்பாலை அதன்‌ கன்றுகீகுக்‌ கொடுக்காமல்‌, அதற்கு வெறும்‌ புல்லைப்‌ போட்டுவிட்டு, தாங்கள்‌ சாப்பிடுகிறார்கள்‌. இப்படி அர்தீதமற்ற ஜீவகாருண்யம்‌ பலப்‌ பல ஜீவர்கள்‌ பெயரால்‌ எத்தனையோ விததீதில்‌ உலகத்தில்‌ வழங்கிவருகிறது. பறவை, மிருகம்‌, ஊர்வன ஆகிய விஷயங்களில்‌ காட்டப்படும்‌ ஜீவகாருண்யதீதில்‌ ஒரு சிறு பாகம்கூட, மனித ஜீவனிடத்தில்‌ மக்கள்‌ காட்டுவது அருமை என்றே சொல்லலாம்‌. மக்கள்‌ சமூக வாழக்கைதி திட்டதீதின்பயனாய்‌ ஒருவரை ஒருவர்‌ எவ்வளவு கொடுமைப்படுதீதுகிறார்கள்‌, எவ்வளவு கொடுமைக்கும்‌ துகீகதீதுக்கும்‌ ஆளாக்குகிறார்கள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ B 1147 என்று பார்‌ தீதால்‌ நடைமுறையிலுள்ள ஜீவகாருண்யங்கள்‌ L garwrarmatusdCp சொல்லலாம்‌. நான்‌, ஏன்‌ இங்கு இந்த ஜீவகாருண்யக்‌ கூட்டத்திற்கு வந்தேன்‌ என்று சிலர்‌: கேட்கலாம்‌. உண்மையிலேயே இங்கு கடலாடியில்‌ நடக்கும்‌ யாகதீதில்‌ ஏதோ சில அய்ந்தோ, பத்தோ ஆடுகள்‌ கொல்லப்படுவதை நான்‌ பிரமாதமாகக்‌ கருதி இங்கு வரவில்லை, இலட்சக்‌ கணக்கான ஆடுகள்‌ மாடுகள்‌ மற்றும்‌ சில ஜீவர்கள்‌ தினமும்‌ கொல்லப்படுவது எனக்குத்‌ தெரியும்‌. அப்படி இருக்க பின்‌ ஏன்‌ நான்‌ இங்கு வந்தேன்‌ என்றால்‌, யாகதீதின்‌ புரட்டையும்‌- அது செய்யப்படுவதன்‌ உள்‌ எண்ணதீதையும்‌-அதனால்‌ ஏற்படும்‌ பலன்களையும்‌, உயர்ந்த சரதியார்‌-அகிம்சா தர்மமுன்ன அந்தணர்‌? என்று கர்வமுடன்‌ தங்களைச்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ பார்ப்பனர்களின்‌ யோக்கியதையையும்‌ பொதுமக்களுக்கு எடுதீதுகீகாட்டவும்‌, கொல்லப்படும்‌ பிராணிகள்‌ யாகத்தின்‌ பேரால்‌ எப்படிக்‌ ொல்லப்படுகின்றன என்பதையும்‌ ஜனங்களுக்கு அறிவித்து, இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனி நிகழாமல்‌ இருக்கும்படி செய்ய சர்க்ீகாரைத்‌ தூண்டுவதற்காகவுமே வந்திருக்கிறேன்‌. முதலில்‌, கொலைக்‌ கொடுமைகளைப்பற்றிச்‌ சொல்லுகிறேன்‌. யாகதீதில்‌ கொல்லப்‌ படும்‌ ஆடுகள்‌ எப்படிக்‌ கொல்லப்படுகின்‌றன என்பது தங்களுக்குச்‌ சிலருக்காவது தெரிந்‌ திருக்குமென நினைக்கிறேன்‌. நான்‌ அறிந்தமட்டில்‌ ஆட்டைக்‌ கால்களைக்‌ கட்டிக்‌ கீழே தள்ளி, கொம்பைப்‌ பிடிதீது ஒருவர்‌ அமிழ்தீதிக்கொண்டு வாய்க்குள்‌ மாவைதீ திணித்துக்‌ கொண்டிருக்க--ஒருவர்‌ நன்றாகக்‌ கட்டி மூச்சுவிடாமல்‌ சப்தம்‌ போடாமல்‌ செய்து--ஒருவர்‌ விதர்களைக்‌ கிட்டிபோட்டு நசுக்க--மற்றவர்‌ வயிற்றில்‌ ஆயுதங்களால்‌ கிடிதீதுக்‌ கிழித்து அதன்‌ சிற்சில உறுப்புகளைதி தனித்‌ தனியாய்‌ அறுதீது எடுப்பதன்‌ மூலம்‌ கொல்லப்படு கிறது. இது சகிக்ககீ கூடியதா ₹ உயிர்கவிடதீதில்‌ அன்பு காட்டக்கூடிய சாதியார்‌ செய்யக்‌ கூடியதா ? அகிம்சைக்காரர்களுக்கு ஏற்றதா ? இப்படிப்பட்டவர்கள்‌ மேல்‌ சாதிக்காரர்களா 9 இவர்களுக்கு பிராமணர்கள்‌ என்று சொல்லிக்கொள்ள உரிமையுண்டா? யோசித்துப்‌ பாருங்கள்‌ 1! ஆடு, கோழிகளைத்‌ தலைகீழாகப்‌ பிடிப்பதையும்‌, தரதரவென்று இழுப்‌ பதையும்‌ ஜீவ இம்சை என்று சட்டஞ்செய்து அம்‌ மனிதர்களைத்‌ தண்டிக்கும்‌ சர்கீகார்‌-- இவர்களை என்ன செய்யவேண்டும்‌ ? ஆலையிலிட்டு நசுகீகும்படி சட்டம்‌ செய்தால்‌ அதைத்‌ தப்பு என்று செரல்லமுடியுமா? யோசித்துப்‌ பாருங்கள்‌ 1 இந்த யாகம்‌ ஆட்டுக்கு மாதீதிரமில்லையாம்‌. மாடு, மனிதர்‌, குதிரை முதலியவை களுக்கும்‌ உண்டாம்‌. இப்படியே விட்டுவிட்டால்‌ நாளைக்கு இந்த ஆடுகளின்‌ கதி3யதான்‌ மனிதர்களுக்கும்‌ ஏற்படும்‌. மத சம்பந்ததீதில்‌ அரசாங்கம்‌ நுழைவதில்லை என்று சொல்லி அரசாங்கம்‌ சுலபமாய்தீ தப்பித்துக்கொள்ளலாம்‌. ஆனால்‌, நாளைக்கு நாமே தியாகம்‌ செய்து 10, 20 மனிதர்களை இநீதப்படி சிதீ்திரவதையான கொலைபாதகம்‌ செய்தால்‌, மததீதில்‌ பிரவேசிக்காமல்‌ அரசாங்கம்‌ பார்தீ துக்கொண்டு இருக்குமா i அதுபோலவே இப்‌ போது கருதி, இப்படிப்பட்ட மூர்கீகதீதனமான சிதீதிரவதைக்‌ கொலைகளையும்‌, இம்சை களையும்‌ அரசாங்கம்‌ ஏன்‌ நிறுத்தக்கூடாது? பார்ப்பனர்களுகீகுப்‌ பயந்தோ, மததீதிற்குப்‌ பயந்தோ தாங்கள்‌ சும்மா இருப்பதாகச்‌ சொல்வார்களானால்‌, இப்படிப்பட்ட கொலையும்‌ சித்திரவதையும்‌ தங்கள்‌ மததீ.துக்கு விரோதம்‌ என்று கருதி அதற்காக வேதனைப்படும்‌ ஐயின மததீதினுடையவும்‌, ஐயினர்களுடையவும்‌ கொள்கையும்‌ மரியாதையும்‌ உணர்ச்சி யும்‌ காப்பாற்றப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்‌. தோழர்களே ! இந்தக்‌ கொடுமைகளை உருவகப்படுதீதிப்‌ பார்கீகும்போது இராமா: யணக்‌ கதையின்‌ ததீதுவம்‌ இதில்‌ தாண்டவமாடுகின்றது. இிராவணனையும்‌ அவன்‌ குடும்பத்தையும்‌ ஆரியர்கள்‌ கிழிதீதுப்‌ பழிதீதுக்கூறி, அவன்‌ அரசை நாசமாக்கியதாகக்‌ காணப்படும்‌ கதையை இப்போது நினைத்துப்‌ பாருங்கள்‌ ! கிராமாயணக்‌ கதைக்கு அஸ்தி வாரமே இந்தச்‌ சிதீதிரவதைக்‌ கொலைபாதகச்‌ செயல்களான யாகமேயாகும்‌. தாடகை www.thamizham.net - Free £ book 14௦ 3031 1148 Quflurg ஈட வெ. ரா. சிநீதனைகன்‌' என்கின்ற ஒரு பெண்‌ யாகத்தைக்‌ கெடுத்ததற்காகதீதானே கொல்லப்பட்டிருக்கிறான்‌ 8 இந்த மாதிரிக்‌ கொலைபாதக யாகதீதை யார்தான்‌ கெடுக்கதீ துணியமாட்டார்கள்‌ ₹ யாகத்தைக்‌ கண்டு மனம்‌ வருந்தி, பரிதாபப்பட்டு, அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல்‌ அந்த அம்மான்‌ செய்த கெடுதி என்ன? நமக்குச்‌ சகீதியில்லாததாலும்‌, நம்‌ உணர்சீசிகீகு அனுகூலமான ஆட்சி இல்லாத தாலும்‌ நாம்‌ எல்லோரும்‌ இங்கு வந்து கதீதுகிறோம்‌. சகீதியும்‌ ஆட்சி உரிமையும்‌ இருக்கு மானால்‌ நாம்‌ தாடகையைப்போல்தானே நடந்துகொண்டு தீருவோம்‌ ? யாகத்தை வெறுத்த தற்காக அந்த அம்மாளைக்‌ கொன்று விட்டதுமல்லாமல்‌ அந்த அம்மாளை இழித்துக்கூறும்‌ முறையில்‌-அந்த அம்மாள்‌ மூதீதிரம்‌ பெய்து யாக நெருப்பை அணைதீதுவிட்டாள்‌ என்றும்‌ 3 மிருகங்களையும்‌, பறவைகளையும்‌ பச்சையாய்ச்‌ சாப்பிட்டாள்‌ என்றும்‌, பொருத்த மற்றதும்‌, போக்கிரித்தனமுமான ஆபாசக்‌ கதைகளையும்‌ கட்டிவிட்டார்கள்‌. இதிலிருந்தே இராமாயணத்தை ஜீவகாருண்யம்‌ காரணமாய்‌ ஏற்பட்ட ஆரியர்‌-திராவிடர்‌ கலகம்‌ என்றும்‌ ] ஆரியர்‌ தங்களை உயர்தீதியும்‌ திராவிடர்களைதீ தாழ்த்தியும்‌, திராவிடர்களுக்கு என்றும்‌ பழி இருப்பதற்காக எழுதிவைதீதுக்‌ கொள்ளப்பட்டது என்றும்‌ ] இராம-இட்சும ணர்கள்‌ ஆரியகீகூட்டத்தைச்‌ சேர்நீதவர்களென்றும்‌) இராவணாதியோர்‌ திராவிட- அதாவது ஜீவகாருண்யக்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ என்றும்‌ விளங்கவில்லையா என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌ 1 அக்‌ கதையில்‌ மிருகங்களையும்‌ ஜீவர்களையும்‌ கொல்லும்‌ விஷயங்களிலும்‌, மது மாமிசம்‌ சாப்பிடும்‌ விஷயங்களிலும்‌, சூது வாது செய்த விஷயங்கவிலும்‌, பெண்களை இழிவாய்‌ நடத்திக்‌ கொடுமைப்படுத்தின விஷயங்களிலும்‌ சிறிதும்‌ தயங்காத இராம- இலட்சுமணக்‌ கூட்டங்களை இவ்வளவு தூரம்‌ புகழ்ந்திருப்பதுமல்லாமல்‌, அவர்களைக்‌ கடவுளாகக்‌ கருதச்‌ செய்து, திராவிட மக்களைக்‌ கொண்டே பூஜிக்கவும்‌ வணங்கவும்‌ புகழவும்‌ செய்து விட்டார்கள்‌. அதுபோலவே இராவணாதியர்கள்‌ இந்த யாகதீதை வெறுதீத தல்லாமல்‌ வேறொரு கெடுதியும்‌--இிராம-இலட்சுமணான்‌ செய்த அளவுகூடச்‌ செய்யாத வர்களை-திராவிட மக்களைக்‌ கொண்டே ககழச்‌ செய்துவிட்டார்கள்‌. ஒரு வயிற்றில்‌ பிறந்த இருவரில்‌ ஒருவன்‌ (இராவணன்‌) இராட்சதனாம்‌ ; ஒருவன்‌ (விபீஷணன்‌) தேவ கணதீதைச்‌ சேர்ந்தவனாம்‌ (ஆழ்வானரம்‌) ! என்ன புரட்டு 8 யோசித்துப்‌ பாருங்கள்‌ ! ஒரு பெண்ணின்‌ மூக்கையும்‌ முலையையும்‌ அறுத்த பாவிகள்‌ கடவுளின்‌ அவதாரங்களாம்‌ ! ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள்‌ தேவர்களாம்‌ ! இதிலிருநீது கடவுள்கள்‌, தேவர்கள்‌, பிராமணர்கள்‌ ஆகிய வர்களின்‌ யோக்கியதைகளைச்‌ சற்று நினைதீதுப்‌ பாருங்கள்‌. திராவிட மக்களின்‌ யோகீகிய தைகளையும்‌ ஏமாளித்தன தீதையும்‌ எண்ணிப்‌ பாருங்கள்‌ | இது நிற்க) இந்த யாகங்கள்‌ புண்ணிய காரியங்களாம்‌ ! சொர்கீகத்திற்குக்‌ காரண மானவைகளாம்‌ ! புண்ணியம்‌ சொர்க்கம்‌ என்கின்ற புரட்டைப்‌ பாருங்கள்‌ ! ஜீவர்களைச்‌ சித்திரவதை செய்தல்‌ புண்ணியமாகவும்‌, சொர்க்க லபிதமாகவும்‌ இருந்தால்‌ இனி பாவதி துக்கும்‌ நரகதீதுக்கும்‌ காரணமான காரியம்‌ என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. தமக்குப்‌ புண்ணியம்‌ சொர்க்கம்‌ வேண்டுமானால்‌ நமக்கு திஷ்டமானவர்களைப்‌ பிடிதீதுகீ கால்‌ கைகளைக்‌ கட்டிப்போட்டு, வாயில்‌ மண்ணை அடைத்து, விதரைப்பிடிதீது நசுக்கிக்‌ கொன்றுபோட்டால்‌--புண்ணியமும்‌ சொர்க்கமும்‌ கிடைத்து விடும்போல்‌ இருக்கிறது ! வேண்டுமானால்‌ சில மந்திரங்களையும்‌ சொல்லிவிடலாம்‌, இதீல்‌ நமக்கு இரண்டுவித இலாபம்‌ போலும்‌ ! சொர்க்கம்‌ நரகம்‌ என்பவைகள்‌ சேரம்பேறிகளின்‌ வயிற்றுப்‌ பிழைப்புச்‌ சாதனங்கள்‌ என்று பல தடவைகன்‌ நான்‌ சொல்லி வந்திருக்கிறேன்‌. பாடுபட்டு உழைதீதவன்‌ பொருளைக்‌ கையைத்‌ திருகிப்‌ பிடுங்கிக்‌ கொள்வதற்குப்‌ பதிலாக, சொர்க்க நரகங்கள்‌ எனும்‌ பூசீசாண்டிகளைக்‌ காட்டிப்‌ பயப்படுத்திப்‌ பிடுங்கிக்‌ கொள்ளப்படுகின்றது. www.thamizham.net - Free £ book 14௦ 3031 ததீ.துவம்‌ 1149 இப்படிப்பட்ட சொர்க்க நரகதீதிற்கு உண்மையான அர்‌ தீதம்‌ நல்ல விததீதில்‌ செய்யவேண்டு மானால்‌, மனிதனின்‌ மூர்க்க சுபாவமும்‌, பழிவாங்கும்‌ தன்மையும்‌ சொர்க்கம்‌ நரகம்‌ என்னும்‌ வார்தீதைகளால்‌ கற்பனைகளாகப்‌ பிரதிபலிக்கின்‌றன என்பதாகும்‌. இப்படிப்பட்ட சொர்க்க நரகதீதைப்‌ பிரச்சாரம்‌ செய்யவே யாகங்கள்‌ முதலியன செய்யப்படுகின்‌ றன. யாக சம்பந்தமான வேத சாஸ்திர ஆதாரங்கள்‌ நமக்குப்‌ பொருத்தமானவைக ளாகுமா ₹ நாம்‌ அவற்றை ஏற்றுக்‌ கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட கொடுமைக்கும்‌ கொலைபாதகத்துக்கும்‌, சிதீதிரவதைக்கும்‌ ஒரு கடவுள்‌ சொர்க்ீகதீதைக்‌ கொடுப்பதாக இருந்தால்‌ கடவுவின்‌ தன்மையாகக்‌ கூறப்படும்‌ கருணை என்று சொல்வது உண்மையாய்‌ இருக்க முடியுமா? கடவுளால்‌ உண்டாக்கப்பட்ட ஒரு ஜீவனை மற்றொரு ஜீவன்‌ சிதீதிரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக்‌ கடவுன்‌ விரும்புகிறார்‌ என்றால்‌-ஜீவர்களை எல்லாம்‌ கடவுன்‌ உற்பத்தி செய்தார்‌ என்பது உண்மையாக இருக்க முடியுமா? கடவுள்‌ பேராலேயே இப்‌ பேர்ப்பட்ட காரியங்கள்‌ நடப்பதை ஒரு கடவுளோ--அரைக்‌ கடவுளோ அணுவளவு கடவுளோ இருந்தால்‌ பார்தீதுக்கொண்டு இருக்க முடியுமா 8 அல்லது, கடவுளுக்கு கிது தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? இவைகளெல்லாம்‌ பாமர மக்களை ஏமாற்றுவதற்குச்‌ செய்யப்படும்‌ சூழ்ச்சிப்‌ பிரச்சாரமே யொழிய வேறில்லை. இப்படிப்பட்ட யாகங்களுக்குச்‌ சங்கராச்சாரி சுவாமியார்‌ என்பவரும்‌ அனுமதியளிக்கிறாராம்‌ ] பணம்‌ கொடுக்கிறாராம்‌. இதிலிருந்து சங்கராச்சாரிகள்‌ என்பவர்களுடைய யோக்கியதைகளையும்‌ உணர்ந்து கொள்ளுங்கள்‌. இந்த யாகங்கள்‌ இப்பொழுது ஏன்‌ செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குதீ தெரியுமா ¢ சனாதன தர்மங்கள்‌ கெட்டுப்போய்‌ விட்டனவாம்‌ | எதனால்‌ என்று கேட்டீர்‌ களானால்‌, சாரதா சட்டம்‌ செய்யப்பட்டு விட்டதாம்‌. தீண்டாமை ஒழிப்புச்‌ சட்டமும்‌, கோவில்‌ பிரவேசச்‌ சட்டமும்‌ இப்போது இந்திய சட்டசபையில்‌ இருக்கின்‌ றனவரம்‌ ! அவை நிறைவேறிவிடும்‌ பட்சதீதில்‌ சனாதன தர்மதீதுக்குப்‌ பெரிய ஆபத்து வந்துவிடுமாம்‌ ! ஆதலால்‌, யாகங்கள்‌ செய்வதன்‌ மூலம்‌ அவைகளைத்‌ தடுத்து, சனாதன தர்மத்தை நிலை நாட்டவேண்டுமாம்‌ | ஆகவே, சனாதன தர்மங்கள்‌ என்பவை பார்ப்பனரல்லாத மக்களுக்கு, பார்ப்பனர்‌ ஒழிந்த மற்ற மனித சமூகதீதிற்கு எவ்வளவு மோசமானதும்‌, கெடுதியான.தும்‌, சுயமரியாதைக்கு விரோதமான காரியம்‌ என்பதை நான்‌ உங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இதிலிருந்து பார்ப்பனர்‌ புரட்டுகளை நீங்கள்‌ தெரிந்து கொள்ளக்கூடும்‌ என நினைக்‌ கிறேன்‌. சில பார்ப்பனர்கள்‌ தீண்டாமை ஒழியவேண்டும்‌ என்பதும்‌, சில பார்ப்பனர்கள்‌. கோவில்‌ பிரவேசம்‌ எல்லோருக்கும்‌ இருக்க வேண்டும்‌ என்பதும்‌) மற்ற பார்ப்பனக்‌ குருமார்கள்‌, மடாதிபதிகள்‌, சாதித்‌ தலைவர்கள்‌ ஆகிய எல்லோரும்‌ சேர்ந்து-சட்டம்‌ ஒழியவும்‌, பிரயன தீதப்படுபவர்கள்‌ ஒழியவும்‌ யாகம்‌ செய்வதும்‌, யாகத்தை ஆதரிப்‌ பதுமாயிருந்தால்‌ இதற்கு என்ன அர்தீதம்‌ சொல்லுவது என்று உங்களையே கேட்கிறேன்‌ | i நான்‌ இங்கு வரப்போவதாய்ப்‌ பத்திரிக்கையில்‌ தெரிந்துகொண்டவுடன்‌, இரண்‌ டொரு பார்ப்பன நண்பர்கள்‌ என்னைப்‌ பரிகாசம்‌ செய்தார்கள்‌, அது என்னவென்றால்‌, ¢ நீங்கள்‌ இப்பொழுது உலக மக்கள்‌ பொது விஷயங்களில்‌ சம்பந்தம்‌ வைத்துக்‌ கொண்டிருக்கும்போது, எங்கோ இரண்டொரு பார்ப்பனர்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்பிற்காக ஏதோ ஒரு வியாபாரமாய்‌ யாகம்‌ செய்து பிழைக்கிற காரியத்தைப்‌ பிரமாதமாய்க்‌ கருதி, அதற்காக நீங்கள்‌ போகலாமா P என்று கேட்டார்கள்‌. இந்த யாகங்களை யாரேர இரண்டொரு பார்ப்பனர்களின்‌ வயிற்றுப்பிழைப்பு வியாபாரம்‌ என்று எண்ணிவிட முடியுமா? இதற்கு எல்லாப்‌ பார்ப்பனரும்‌ பணம்‌ கொடுதீதிருக்கிறார்கள்‌. சங்கராச்சாரி. www.thamizham.net - Free £ book No 3031 1150 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ முதலியவர்கள்‌ ஆதரவவிதீது இருக்கிறார்கள்‌. அய்யங்கார்ப்‌ பார்ப்பனர்களுகீகு யாகம்‌ விரோதமானது என்று கேன்விப்பட்டிருக்கிறேன்‌. ஆனால்‌, இப்போதைய யாகத்தில்‌ அய்யங்கார்ப்‌ பார்ப்பனர்களும்‌ கூடச்‌ சேர்ந்து ஆதரவளிதீதும்‌ இருக்கிறார்கள்‌ என்று தெரிகிறது. அப்படியிருக்க, இரண்டொரு பார்ப்பனர்கள்‌ என்று எப்படிச்‌ சொல்லிவிட முடியும்‌ ¥ அப்படியானால்‌, இவ்வளவு கூச்சல்‌ ஏற்பட்ட பிறகாவது சில முக்கியமான பரர்ப்பனரீகள்‌ ஏன்‌ ஒன்றுகூடி ஒரு அறிக்கையை வெளியிடக்‌ கூடாது? 66 இந்த யாகம்‌ பார்ப்பன சமூகதீதின்‌ சார்பாகவோ, மததீதின்‌ ததீதுவப்‌ பிரகாரமோ நடப்பதல்ல) நாங்கள்‌ அதை ஆதரிப்பதில்லை: என்பதோடு வெறுக்கவும்‌ செய்கிறோம்‌? என்று தோழர்கள்‌. மகாகனம்‌ சாஸ்திரியாரும்‌, சர்‌. சிவசாமி அய்யரும்‌, சரீ. சி. பி. இராமசாமி அய்யரும்‌, டி. ஆர்‌. வெங்கிட்டராம சாஸ்திரியாரும்‌, சர்‌. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும்‌ ஒரு அறிக்கை வெளியிடட்டுமே? இவர்களெல்லாம்‌ தங்களைப்‌ பெரிய சீர்திருத்தவாதிகளென்றும்‌, தாங்களே இந்தியமக்களின்‌ பிரதிநிதிகள்‌ என்றும்‌, எல்லா விஷயங்களுக்கும்‌ தாங்களே அபிப்பிரரயம்‌ கொடுப்பவர்கன்‌ என்றும்‌ தாராளமாய்‌ விளம்பரம்‌ செய்ய ஏற்பாடு செய்ததுடன்‌ போதிய விளம்பரமும்‌ பெற்றிருக்கிறார்கள்‌. ஏன்‌ இவர்கள்‌ வாய்திறக்கக்‌ கூடாது என்று கேட்கிறேன்‌. காங்கிரஸ்கட்சிப்‌ பார்ப்பனராவது ஏன்‌ அறிக்கை வெளியிடக்‌ கூடாது? தோழர்‌ சதீதியமூர் தீதி சாஸ்திரியார்‌ முந்திரிக்கொட்டைபோல்‌ உலக விஷயங்களுகீ கெல்லாம்‌ முன்னால்வநீது அபிப்பிராயம்‌ கொடுப்பவர்‌--இதற்கு ஏன்‌ வாய்மூடிக்கொண் டிருக்கிறார்‌ என்று கேட்கிறேன்‌. தீண்டாமைவிலக்கு மசோதாவையும்‌, கோயில்‌ பிரவேச மசோதாவையும்‌ காங்கிரசின்‌: சரர்புடைதீததல்லவா என்றும்‌, தோழர்‌ காந்தியார்‌ இம்‌ மசோதாக்கள்‌ நிறைவேறவேண்டி கவலை எடுதீதுக்கொண்டு, இந்திய சட்டசபை அங்கதீதினர்களிடம்‌ பிரச்சாரம்‌ செய்து, ஆதரவும்‌ தேடிவருகிறார்களா இல்லையா என்றும்‌ கேட்கிறேன்‌. இப்படிப்பட்ட காங்கிரஸ்‌ அனுமதிபெற்ற--காங்கிரஸ்‌ சார்பான மசோதாகீகளை ஒழிப்பதற்கு யாகம்செய்தால்‌ கரங்கிரஸ்வாதியான தோழர்‌ சதீதியமூர்‌ தீதியின்‌ கடமை என்ன என்று கேட்கின்‌ றேன்‌. தஞ்சை ஜில்லா பார்ப்பனர்கன்‌ வருணாசிரமகீகாரர்கள்‌] அவர்கள்‌ தீண்டாமை விலகீகு மசோதாவுகீகும்‌ கோயில்‌ பிரவேச மசோதாவுகீகும்‌ எதிராகவும்‌, சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கும்‌ தகுதியுடையவர்களையும்‌ அந்தப்படி செய்வதாக வாக்களிப்பவர்களையும்‌ தான்‌ தேர்ந்தெடுப்பார்கள்‌. அப்படியிருக்க, தோழர்‌ சதீதியமூர்தீதி சாஸ்திரி அவர்கள்‌ அந்தத்‌ தொகுதியில்‌ நிற்பதென்றால்‌ அவர்கள்‌ எப்படிப்பட்டவராய்‌ இருக்கக்கூடும்‌ என்று யோசித்துப்‌ பாருங்கள்‌ ! தோழர்‌ சதீதியமூர்தீதி அவர்கள்‌ இந்த இரண்டு மூன்று மசோதாக்களையும்‌ ஆதரிப்பதாக இதுவரை எங்கும்‌ செொரல்லவே இல்லை. அன்றியும்‌ தீண்டாமை விலக்கு, கோயில்‌ பிரவேசம்‌ ஆகிய காரியங்களுக்குச்‌ சட்டம்‌ செய்யக்கூடாது என்று தஞ்சை, திருச்சி ஜில்லாவில்‌ பேசியிருக்கிறார்‌. இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தாம்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ மாதீதிரமல்லாமல்‌, தோழர்‌ காந்தியால்‌ பாராட்டப்பட்டவர்களுமாய்‌ இருக்கிறார்கள்‌. இவர்களைப்‌ போன்று சில பார்ப்பனரல்லாதாரும்‌ இருக்கிறார்கள்‌. உழைதீதவன்‌ உழைப்பின்‌ பயனை அடைய வேண்டுமானால்‌--இப்படி யாகம்‌, சரஸ்திரம்‌, வேதம்‌, மோட்சம்‌, கர்மம்‌, முன்ஜென்மம்‌, கடவுள்‌ செயல்‌ என்கின்ற பித்த லாட்டங்களுக்கு அடிமைப்படக்‌ கூடாது. எதீதனையோ வருஷ காலமாய்‌ யாகம்‌ செய்யப்பட்டு வருவதாய்‌ அறிகிறோம்‌. உலகதீதில்‌ என்ன அக்கிரமம்‌ மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கி இருக்கிறது? யாகம்‌, எக்கியம்‌ கிரமமாய்ச்‌ செய்யப்பட்டு வந்த தெய்வீக அரசர்களான இராமன்ட அரிச்சந்திரன்‌ ஆகியவர்கள்‌ காலத்தில்‌ இருந்த அக்கிரமம்‌, அயோக்கியத்தனம்‌, கொலை www.thamizham.net - Free £ book 14௦ 3031 தத்துவம்‌ 1154 பாதகம்‌ எல்லாம்‌ இன்னும்‌ இருந்துதான்‌ வருகின்றன. எவ்வித மாறுதலும்‌ ஏற்படவில்லை. ஆகையால்‌, நீங்கள்‌ இப்படிப்பட்ட மிரட்டுதல்களைக்‌ கண்டு பயந்துவிடாதீர்கள்‌ ! ஏமாந்து விடாதீர்கள்‌ ! [சென்னையில்‌, 8-6-1938-ல்‌ சொற்பொழிவு--* புரட்சி ? 10-6-1934] 7. நாகரிகம்‌ எது? தலைவரவர்களே ! தோழர்களே 1 மாணவர்களே 1 நாகரிகம்‌ என்ற வார்தீதைகீகுப்‌ பொருளே பிடியில்‌ சிக்காத ஒரு விஷயமாகும்‌. ஒவ்வொருவரும்‌ ¢ நாகரிகம்‌? என்பதற்கு ஒரு தனிப்‌ பொருள்‌ கூறிவருகிறார்கள்‌, ¢ கண்‌: கோட்டம்‌ ? என்ற தலைப்பின்‌ கீழ்‌, குறளில்‌ நாகரிகம்‌ என்ற வார்த்தை வள்ளுவரால்‌ உபயோகிக்கப்பட்டிருப்பதாக நான்‌ 10, 20 வருஷங்களுக்கு முன்‌ பார்த்ததாக ஞாபகம்‌, அது தாட்சண்ணியம்‌, அடிமை என்கின்ற பொருளில்‌ உபயோகப்பட்டிருப்பதாகவும்‌ எனக்கு ஞாபகம்‌ நாகரிகம்‌ என்கின்ற வார்‌ தீதைக்கு எந்தக்‌ கருதிதை வைதீதுக்கொண்டு பேசினாலும்‌ மக்கள்‌, சமூகம்‌, நடை, ஆகாரம்‌ மற்றும்‌ எல்லா பாவனைகளிலும்‌ பெரிதும்‌ மாறுபட்‌ டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால்‌ இவைகள்‌ வேறுபட்டிருக்கின்‌றனவென்று கூறமுடியாது. எப்படியோ; எல்லாம்‌ மாறுதலில்தான்‌ போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள்‌ முன்பு முழங்கைக்குக்‌ கீழும்‌ ரவிக்கை அணிந்துவந்தார்கள்‌. பின்பு மேலேறியது. மறுபடியும்‌ கீழே கிறங்கியது. இப்பொழுது மறுபடியும்‌ மேலேயே போய்க்கொண்டிருக்கிறது. மேல்‌ நாட்டுப்‌ பெண்களும்‌ தெருக்களில்‌ தெருக்‌ கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணித்துவநீதார்கள்‌. அந்தக்‌ காலத்தில்‌, அணிகளைதீி தூக்கிப்‌ பிடித்துக்கொள்ள, பணம்‌ படைத்தவர்கள்‌ ஆட்களை நியமித்துக்கொண்டிருந்‌ தார்கள்‌. அது அக்கால நாகரிகம்‌. இப்பொழுது என்னவென்றால்‌ ஆடை விஷயத்தில்‌ மேல்நாட்டுப்‌ பெண்களும்‌ எல்லாம்‌ ௬ருக்கிக்கொண்டு விட்டார்கள்‌. அதை நரம்‌ இப்பொழுது நாகரிகம்‌ என்றுதான்‌ கருதுகிறோம்‌. நாம்‌ இவைகளைப்‌ பற்றியெல்லாம்‌ பேசும்பொழுதும்‌ யோசிக்கும்போதும்‌ எந்தவித மாறுதலும்‌ இல்லாமல்‌--அதாவது சாதி, மதம்‌, தேசம்‌ என்ற பற்றுதல்களை விட்டு விட்டு, Freewrs சுயேச்சையாகச்‌ சீர்‌ தூக்கிப்‌ பார்த்தால்தான்‌ விஷயங்களை நன்றாகத்‌ தெரிந்து கொள்ளலாம்‌. அதன்‌ உண்மையும்‌ அப்பொழுதுதான்‌ விளங்கும்‌. ஒரு காலத்தில்‌ சாம்பலைப்‌ பூசிக்கொண்டு * சிவ, சிவ, ! என்று ஜெபிப்பதுதான்‌. யோக்கியமாகக்‌ கருதப்பட்டது. இன்றைய கால தேச வரீத்தமானங்கள்‌ மேற்சொன்ன விஷயத்தைக்‌ கேலி செய்கிறது. கணவன்‌, மனைவி என்கின்ற இரு சாரார்கனை எடுதீதுக்கொண்டாலும்‌, முன்பு கல்‌ என்றாலும்‌ கணவன்‌; புல்‌ என்றாலும்‌ புருஷன்‌ என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமை என்று நடந்‌ துவந்த பெண்களைப்பற்றிப்‌ பெரிதும்‌ மதித்து வந்தார்கள்‌. ஆனால்‌, கின்றோ, கணவனிடம்‌ மனைவியானவன்‌, ₹ நான்‌ உனக்கு வேலைக்காரியா? அடிமைப்‌ பட்ட மாடா? ஜாக்கிரதையா யிருந்தால்‌ சரி) இல்லாவிட்டால்‌ எனக்குச்‌ சம அந்தஸ்தும்‌, சம உரிமையும்‌, சரீவ சுதந்திரமும்‌ உண்டு ! என்று கர்ஜனை செய்யும்‌ பெண்களையே நாகரிகம்‌ வாய்ந்தவர்கள்‌ என்று கருதுகிறோம்‌. முன்பு புராணதீதைப்பற்றியும்‌ மதத்தைப்பற்றியும்‌ பேசுவதுதான்‌ விதீவதி தன்மையாக இருந்தது. ஆனால்‌, அது இன்று குப்பையாகி பரிகசிக்கதீ தக்கதாக ஆகி விட்டது. புத்திக்கும்‌ அறிவிற்கும்‌ பொருதீதமில்லாத முரட்டுப்‌ பிடிவாததீதில்‌ மூன்பு www.thamizham.net - Free £ book 14௦ 3031 1152 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நம்பிக்கையிருநீததை சிலாகித்துப்‌ பேசினோம்‌. ஆனால்‌ இன்றையதினம்‌ பிரதீதியட்சமாக எதையும்‌ எடுதீதுக்காட்டித்‌ தெனிவுபடுதீதுவதையும்‌ விஞ்ஞானம்‌ போன்ற அறிவியக்க நூல்களைக்‌ கற்றுணரீந்த வல்லுநர்களையுமே நாம்‌ பெரிதும்‌ மதிதீதுவருகிறோம்‌. நாகரிகம்‌ என்பது நிலைமைக்கும்‌, தேசதீதுக்கும்‌, காலப்போக்கிற்கும்‌ தக்கவாறு விளங்குகிறது. கால தேசவர்தீதமான வழகீகதீதையே ஒட்டி நாகரிகம்‌ காணப்படுகிறது. காலப்போகீகானது எந்தவிதத்‌ தேக்கதீதையும்‌ உண்டாகீகுவதில்லை; ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்‌ புரட்சி ஏற்படவும்‌ செய்கின்றது. மீசை; தலைமயிர்‌ இவைகளைப்பற்றிப்‌ பலர்‌ பேசினார்கள்‌. எது நாகரிகம்‌ என்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீரணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும்‌ அந்த நிலைமையான து மாறிக்கொண்டு போகத்தான்‌ செய்கின்றது. ஒரு விஷயமானது வாய்ச்‌ சாமறீதீதியதீதினால்‌ செலாவணியாகிவிடும்‌, அது மெய்யோ பொய்யோ-சரியோ தப்போ எப்படியும்‌ இருக்கலாம்‌. நாம்‌, ஏன்‌ எதற்காக உழைத்துப்‌ பாடுபடவேண்டும்‌ பகுத்தறிவு படைதீத நாம்‌ பாடுபட்டுத்தான்‌ ஆகவேண்டுமா $ நாகரிகம்‌ என்பது சதா உழைதீதுதீதான்‌ உண்ண வேண்டுமா? என்ற கேள்விகள்‌ எழுந்து மக்கள்‌ சமூகம்‌ கஷ்டம்‌, தியாகமின்றி-- நலம்பெற முயற்சிக்கலாம்‌. இது நாகரிகமாகக்‌ கருதப்பட்டு பயன்‌ அடைந்தாலும்‌ அடையலாம்‌. இன்றைய அரசியல்‌ விஷயதீதில்‌ இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப்‌ பாவிக்கப்பட்டிருந்தது ; பின்பு குப்பையில்‌ தள்ளப்பட்டது. பிறகு அது மீண்டும்‌ வெளிப்படுதீதப்பட்டு, அதற்குக்‌ கொஞ்சம்‌ மதிப்புக்‌ கொடுக்கப்பட்டு, கிராட்டை சுற்றுவதும்‌ தகீளி நூல்‌ நூற்பதும்‌ நாகரிகமாகக்‌ கருதப்பட்டது. ஆனாலும்‌ அதுவும்‌ ஒழிந்துபோயிற்று என்றே சொல்லலாம்‌. இவைகளையெல்லாம்‌ எந்த விதமான (தேசம்‌, மதம்‌, சாதி) பற்றுகளுமில்லத பொது மனிதன்‌ பொது நோக்கோடு கவனித்தால்‌ உண்மை விளங்காமல்‌ போகாது. நாம்‌ ஒரு காலதீதில்‌ தேசம்‌, தேசியம்‌, தேசப்‌ பற்று என்பதை நாகரிகமாகக்‌ கருதி வந்திருக்கிறோம்‌. ஆனால்‌, இன்றோ அவைகளையெல்லாம்‌ உதறித்தள்ளி மனித ஜீவகாருண்யம்‌, உலக சகோதரதீ.துவம்‌, மக்கள்‌ அபிமானம்‌ (Citizen of the World Humanism) என்று கருதுவதையே பெரிதும்‌ நாகரிகமாகக்‌ கருத முன்வநீதுவிட்டோம்‌. ஒரு காலத்தில்‌ நாகரிகமாகக்‌ கருதிவந்ததை இன்று நாம்‌ பரிகசிதீது வருகிறோம்‌. ஒரு மனிதன்‌ தான்‌ நாயக்கன்‌, முதலி, வைணவன்‌, சைவன்‌ என்று சொல்லிக்‌ கொள்வதில்‌ பெருமைப்பட்டுக்கொண்டு, ஒவ்வொருவரும்‌ தாங்கள்‌ அதிக மேல்சாதிக்காரனாவதற்குச்‌ சைவ, வைணவப்‌ போக்கைப்‌ பற்றிக்கொண்டு, பூஹாலையும்‌ நாமத்தையும்‌ போட்டுத்‌ தங்கள்‌ மதத்தைச்‌ சிலாகித்துப்‌ பிதற்றிக்கொண்டும்‌ வந்தான்‌. ஆனால்‌, இன்றைய தினம்‌ 'இவைகளையெல்லாம்‌ புதீதிகெட்டதனமென்றும்‌, முற்போக்குக்கு முரணான செயல்‌ என்றும்‌ கூறி, வெகுவாகக்‌ கண்டனம்‌ செய்து வருவதைக்‌ காண்கிறோம்‌. ஒரு காலதீதில்‌ தனிதீ தனித்‌ ததீ.துவம்‌ நாகரிகமாகக்‌ கருதப்பட்டது. உதாரணமாக, ஒரு தனித்‌ தனிச்‌ சரதி நன்மையும்‌, தேச நன்மையும்‌ சிலாக்கியமாகக்‌ கருதப்பட்டது. ஆனால்‌, ஒரு சாதியின்‌ அனுகூலம்‌ பிறசாதியானுக்குப்‌ பாதகம்‌ என்பதையும்‌, ஒரு தேச நன்மை மற்றொரு தேசதீதுக்குப்‌ பொல்லாங்கு என்பதையும்‌ நாம்‌ இன்று நன்கு உணர ஆரம்பிதீது விட்டோம்‌. தோழரீகளே ! நான்‌ குறிப்பாக ஒரு விஷயத்தைப்‌ பற்றி வற்புறுத்தி இங்குகூற விரும்புகிறேன்‌. அதாவது, நாம்‌ அனுபவ முதிர்ச்சியால்‌, அறிவு ஆராய்சீசியால்‌ நாம்‌ www.thamizham.net - Free £ book No 3031 ததீ.துவம்‌ 1153 முற்போகீகாகிக்‌ கொண்டு வருகிறோம்‌ என்பதேயாகும்‌. நாம்‌ எல்லா மனிதர்களையும்‌ அறிவின்‌ உணர்ச்சியால்‌ ஆழ்ந்து கவனிக்கிறோம்‌. உதாரணமாக, வியாபாரிகளை மக்கள்‌ சமூகத்தின்‌ நலனைக்‌ கெடுத்து இலாபமடையும்‌ கோஷ்டியைச்‌ சேர்ந்தவர்களென்றும்‌, லேவா தேவிக்காரர்களை மனித சமூக நாச கர்தீதாக்களென்றும்‌, மத ஆதிக்ீகங்கொண்ட வர்கீகதீதினரீகளை மனித சமூக விரோதிகவென்றும்‌ கண்டிக்கிறோம்‌. நாகரிகம்‌ என்பது பிடிபடாத விஷயம்‌ என்று முன்பே கூறினேன்‌. நம்‌ நாட்டுப்‌ பெண்கள்‌ எப்படி (816 பெல்ட்‌) கட்டாமல்‌ சேலை கட்டுகிறார்கள்‌ என்றும்‌, அது இடுப்பில்‌ எவ்வாறு தங்கி இருக்கிறது என்றும்‌, தலைக்கு ஊசி இல்லாமல்‌ பெண்கள்‌ எவ்வாறு மயிர்‌ களைச்‌ சேர்த்து முடிந்து கொள்கிறார்கள்‌ என்றும்‌, நாம்‌ சாப்பாட்டுக்குத்‌ தினம்‌ ஓர்‌ இலை (Plate) எப்படி செலவு செய்கின்றோம்‌, என்ன மகதீதான நஷ்டம்‌ என்றும்‌ மேனாட்டார்‌ ஆச்சரியப்பட்டு நம்மவர்களைக்‌ கேட்பதையும்‌ கேட்டிருகீகிறோம்‌. ஒவ்வொருவரும்‌ அவர்‌: கவின்‌ செய்கையைச்‌ சரியாக உணராததினால்‌, சிலதை ஆச்சரியமாகக்‌ கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம்‌, சொந்தக்கார அபிமானம்‌, பாஷாபிமானம்‌, தேசாபிமானம்‌ எல்லாம்‌ தொலைய வேண்டும்‌. இல்லாவிட்டால்‌ எந்த நல்ல விஷயதீதிலும்‌ நாம்‌ முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது. காந்தியார்‌ மேனாட்டில்‌ முழங்கால்‌ துண்டோடு--போதிய ஆடையின்றிப்‌ போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர்‌ குறிப்பிட்டார்‌. இது எவ்வளவு தூரம்‌ புத்திசாலிதீதன மாகும்‌? சவுகரியதீதிற்காகவும்‌--நன்மைக்காகவும்‌ அங்கு அதிக ஆடைகளை பந்தோ பஸ்துக்காக அணிந்து கொள்ளாமல்‌ பிடிவாதத்தோடு--கேவலம்‌, இந்திய தர்மம்‌ என்ற வெறும்‌ எண்ணதீதிற்காகக்‌ குனிரால்‌ விரைத்துப்போக இங்கிலாந்து வாசம்‌ செய்தது எவ்வளவு தூரம்‌ நியாயமான செய்கையாகும்‌ ¥ புதிய எண்ணங்களும்‌, புதிய எழுசீசிகளும்‌, புதிய காரியங்களும்‌ நிகழ்கின்றன. நீங்களும்‌ காலப்‌ போக்கின்‌ உயரிய பலனை வீணாக்காது, பகுதீதறிவை மேற்போட்டுக்‌ கொண்டு, ஜனசமுதாய நன்மையைத்‌ தேடிப்‌ பாடுபட முன்வாருங்கள்‌. உங்களுடைய முயற்சிக்கு எல்லாம்‌ வெற்றியே உண்டு. [ஈரோட்டில்‌ சொற்பொழிவு- புரட்சி 3--31.12-1933] 8. மக்கள்‌ துயரம்‌ நீங்க வழி தலைவரவர்களே ! தோழர்களே 1 இந்த நாட்டில்‌ ஏற்பட்டிருக்கும்‌ மக்கன்‌ சமூக அமைப்பின்‌ அஸ்திவாரமே சரியில்ல. மல்‌ இருக்கிறது. இந்த அஸ்திவாரதீதின்மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும்‌ மக்கள்‌: சமூகதீதுக்கு நன்மையளிக்ககீகூடியது அல்ல. ஒரு தகப்பன்‌ வயிற்றில்‌ பிறந்த பின்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும்‌, சம்‌ உரிமையும்‌ உண்டோ அப்படியே ஒரு தேசதீதில்‌ பிறந்தவர்களுக்கும்‌ இருக்கவேண்டியது அவசியமாகும்‌. அப்போதுதான்‌, மக்கன்‌ சுகமாக வாழமுடியும்‌. ஏதோ தான்‌ பிறந்த வேளையின்‌ பலன்‌ கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான்‌, மற்றொருவன்‌ சுகத்தை அனுபவிக்கப்‌ பாதீதியதை உடையவன்தான்‌ என்னும்‌ சோம்பேறி எண்ணமே மக்களை: அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய்‌ இருக்கிறது. கந்த எண்ணம்‌ மாறுபடவேண்டியது அவசியமாகும்‌. இதற்காக எவ்வனவு தியாகம்‌ செய்தாலும்‌ அது வீணாகாது. மக்களின்‌ மனோபாவமும்‌ வாழ்க்கை நடதீதும்‌ முறையும்‌ மாறினால்‌ ஒழிய வேறொரு முறையாலும்‌ நன்மையுண்டாகாது என்பது திண்ணம்‌. தற்போதிருக்கும்‌ 1686—145 www.thamizham.net - Free E book 14௦ 3031 1154 பெரியார்‌ ஈட வெ. ரா. சிநீதனைகளன்‌ நிலைமையில்‌ சுயராஜ்யம்‌ வந்தால்‌ குருட்டு நம்பிக்கையும்‌ வைதிகமும்தான்‌ வலுக்கும்‌. தற்போது சுயராஜ்யம்‌ அனுபவிக்கும்‌ தேசங்களை எடுதீ.துக்கொள்ளுங்கள்‌ ; ஏழைகள்‌ நிலைமை அங்கு எப்படியிருக்கிறது 8 அமெரிக்க ஜனநாயக ஆட்சியுடையதாகதீதான்‌ இருக்கிறது. அங்கே இலட்சக்கணகீகானவர்கள்‌ வேலையில்லாமல்‌ திண்டாடுகின் றார்கள்‌. அமெரிக்கா உலகின்‌ செல்வதீதிற்கே இருப்பிடமாய்‌ இருந்தும்‌-அங்கே ஏழைகள்‌ நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றிதீ தவிக்கிறார்கள்‌. ஜெர்மனி நிலைமை என்ன ₹ சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யதீதை உடைய தென்று சொல்லும்‌ இங்கிலாநீது சுயராஜ்ய தேசமேயாகும்‌. ஆனால்‌, அங்கு ஏழைகன்‌ படும்‌ துயரம்‌ கொஞ்சநஞ்சமல்ல. சுயராஜ்யமுன்ன ஒவ்வொரு தேசமும்‌ இப்படித்தான்‌ இருக்கிறது. சுயராஜ்யமோ, அன்னிய ராஜ்யமோ, குடியரசோ, முடியரசோ எந்தவிதமான முறையாலும்‌ மக்கள்‌ சுகம்‌ பெறமுடியாத நிலைமையில்‌ உலகம்‌ இன்று கிருநீதுவருகின்றது. ஆகையால்‌, ஏழைகள்‌ துயரத்தைப்‌ போக்க இந்திய சுயராஜ்யம்‌ இப்போது சிலரால்‌ கருதப்‌ படும்‌ முறையில்‌ யாதொரு நன்மையும்‌ கொடுக்கப்‌ போவதில்லை என்பது நிச்சயம்‌. சம தர்மத்தையும்‌ பொதுவுடமையையும்‌ அஸ்திவாரமாகக்‌ கொண்ட அமைப்பு ஒன்றே மக்கள்‌ சுகவாழ்க்கைக்குரிய வழியாகும்‌, இதற்காக ஏன்‌ நாம்‌ தியாகம்‌ செய்யத்‌ தயாராய்‌ இருக்கக்‌ கூடாதென்று கேட்கிறேன்‌. உலகதீதில்‌ பல வகைகளில்‌ ஜீவராசிகன்‌ மரணமடைகின்றன. பல நோய்களால்‌ இறக்கிறவர்களின்‌ தொகை சாதாரணமல்ல. மததீதின்‌ பெயரால்‌ யாதொரு விவேகமு மில்லாமல்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்தீ.துக்கொள்கிறார்கள்‌. இன்னும்‌ பல வழிகளில்‌ மரணம்‌ அடையும்போது மக்களின்‌ உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசிக்கச்‌ சிலரோ, பலரோ உயிரைத்‌ தியாகம்‌ செய்வதுகூட பெரிய காரியமாகுமோ? மனிதனுக்கு மனிதன்‌ எதற்காக வித்தியாசம்‌ காண்பிக்கப்படவேண்டும்‌ ₹? அறிவுள்ள எவரும்‌ இனி இந்‌ நிலைமையைச்‌ சகித்துக்கொண்டு ஒருகணமாவது வாழமுடியாது பலாத்காரம்‌ கூடாது. &ம்‌ முறைகளை மாற்ற பலாத்காரம்‌ ஒருபொழுதும்‌ வெற்றியடைய முடியாது. பலாத்காரம்‌ பலாத்கார தீதையே பெருக்கும்‌. உண்மையை மறைத்துவிடும்‌. ஆகையால்‌, மக்களுடைய மனத்தை மாற்றப்‌ பாடுபடவேண்டிய துதான்‌ முறையே ஒழிய, பலாத்கார தீதினால்‌ சாதித்‌ துவிடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்‌. இந்தத்‌ தேசத்திலும்‌ முன்னேற்றமுன்னவர்களென்றும்‌, பிற்போக்கானவர்க ளென்றும்‌ இரண்டு கட்சிகளே இருக்கமுடியும்‌, இப்படிப்‌ பிரிக்கப்பட்டால்‌ ஒழிய மக்கன்‌ அபிவிருதீதியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய LGS தறிவு விருதீதியடைந்தால்‌ ஒழிய மற்ற எந்த ராஜ்ய முறையாலும்‌ ஒரு நன்மையும்‌ விளைந்‌.துவிடப்‌ பேரவதில்லைஃ [குடந்தையில்‌ 8-7-193&-ல்‌ சொற்பொழிவு--* பகுத்தறிவு ? 9-9-1934] 8. மாறுதல்‌ தலைவரவரீகளே 1 தோழர்களே 1 ஒவ்வொரு நாட்டிலும்‌ ஒவ்வொரு மனிதனும்‌ அவனவன்‌ வாழ்வில்‌ முற்போக்கும்‌, மாறுதலும்‌ அடைந்துகொண்டே வருகின்றான்‌. இதற்காகத்‌ தனி இலட்சியம்‌ தேவை யில்லை. மரக்கட்டைபோல்‌ உணர்சீசியற்‌றவனாய்‌ இருந்தாலும்‌ அவன்கூட காலப்போக்கில்‌ தானாகவே மாறுதலும்‌ முற்போக்கும்‌ அடைந்துதான்‌ தீருவான்‌. ஆனால்‌, அப்படிப்பட்ட விஷயங்களில்‌ நம்போன்றவர்கள்‌ செய்யும்‌ விசேஷ காரியம்‌ என்னவென்றால்‌, எப்டிப்பட்ட மாறுதல்‌--எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம்‌ என்பதில்‌ செலுதீதும்‌ கவனமேயாகும்‌. www.thamizham.net - Free £ book No 3031 Py 1185 தானாகப்‌ போய்கீகொண்டிருகீகும்‌ முற்போகீகுகீகும்‌ மாறுதலுக்கும்‌ தடையாயிருநீது அவற்றை வேறு வழியில்‌ திருப்புவதனால்‌ சில சமயங்களில்‌ பெருதீத கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு எதிர்ப்பும்‌ பழிப்பும்‌ பலமாய்‌ ஏற்பட்டுவிடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில்‌ சிலர்‌ பழமையை--யதாஸ்திதியைக்‌ குரங்குப்‌ பிடியாய்ப்‌ பிடிதீ துக்கொண்டு உபதீதிரவப்படுகிறார்கள்‌ ) தொல்லைகளை வினைவிக்கிறார்கள்‌] இத்‌ தொல்லையும்‌ உபதீதிரவமும்‌ தங்கன்‌ அறியாமையால்‌ செய்வதுண்டு. எப்படியிருநீதாலும்‌ அபாயமான வழியில்‌-கெடுதி உண்டாக்கும்‌ வழியில்‌ மாறுதலும்‌ முற்போக்கும்‌ ஏற்படாமல்‌ பார்தீ துக்கொள்ளவேண்டியது மக்கள்‌ கடமையாகும்‌. மாறுதல்‌ வரும்போது அதைக்‌ கையாளுபவர்கள்‌ துன்பதீதுகீகும்‌ பழிப்புக்கும்‌ ஆளாவது என்பது புதிதல்ல ] சரிதீதிரகால இயற்கையாகும்‌. சாக்ரடீஸ்‌, புதீதர்‌, கிறிஸ்து, முகமதுநபி ஆகிய பெரியார்கன்‌ இன்று எவ்வளவோ மக்களின்‌ வணக்கத்திற்கும்‌ மதிப்பிற்கும்‌ உரியவர்களா: னாலும்‌, அவர்கள்‌ காலத்தில்‌ எவ்வளவோ தொல்லைக்கும்‌, இழிவுகீகும்‌ பழிப்புக்கும்‌ ஆளானதாகச்‌ சரிதீதிரங்கள்‌ சொல்லுகின்றன. அதுபோலவே, சில மாறுதல்கன்‌ தற்கால மக்களுக்குக்‌ கசப்பாய்‌ இருந்தாலும்‌, பிற்கால மகீகளால்‌ மதிப்பும்‌ பெருமையும்‌ பெறும்‌ என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின்‌ பேரில்தான்‌ நாம்‌ எந்த மாறுதலையும்‌ திருதீததீதையும்‌ செய்யத்‌ துணிய வேண்டுமே ஒழிய, நாம்‌ இன்றே பாராட்டப்படவேண்டும்‌ என்று கருதிக்கொண்டு செய்வது பயன்படாது. கலியாணம்‌, இழவு, வாழ்வு முதலிய துறைகளில்‌ பல மாறுதல்கள்‌ ஏற்பட்டிருப்ப தற்குக்‌ காரணம்‌ சுயமரியாதை இயக்கநீதான்‌ என்று முழுவதும்‌ கூறுவது தகாது. கால தேச வர்தீதமானம்‌ மகீகளை அப்படிக்‌ காலத்திற்குத்‌ தகுந்தாற்போல்‌ மாற்றிக்கொள்ளச்‌ செய்கின்றது. அதில்‌ சிலவற்றிற்குச்‌ சயமரியரதை இயக்கம்‌ துணை புரிந்தது என்று சொல்லலாம்‌. [புதுக்கோட்டையில்‌ 7-10-1988-ல்‌ சொற்பொழிவு--- பகுத்தறிவு? 14-10-1934) www.thamizham.net - Free £ book 14௦ 3031 www.thamizham.net - Free E book 14௦ 3031 பகுதி VII அறிவு வளர்ர்சி www.thamizham.net - Free £ book 14௦ 3031 Free E book No 3031 1. கல்வி 1. கல்வி விடுதலை அக்கிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே 1 சகோதரர்களே 1 விடுதலை என்பதை நாம்‌ அடையவேண்டுமானால்‌, அதற்கு நாம்‌ எப்படி உழைக்க வேண்டும்‌? எந்தெந்தத்‌ துறையில்‌ முன்னேறியிருக்க வேண்டும்‌ 8 முற்போக்குக்கு: எவ்வாறு பாடுபடவேண்டும்‌ என்பதைப்பற்றி நாம்‌ அவசியம்‌ அறியவேண்டும்‌. மக்கள்‌ விடுதலையடைவதற்குரிய மார்க்கங்கள்‌ என்று யோசித்தால்‌ பல இருக்‌ கின்றன என்பது விளங்கும்‌. பொதுவாக மகீகன்‌ வளர்சீசிக்கும்‌ முன்னேற்றதீதிற்கும்‌ அவசியம்‌ வேண்டியிருப்பவைகள்‌ கல்விச்‌ செல்வம்‌, தொழில்‌, சமூக சமதீதுவம்‌, பெண்கள்‌ சமதீ.துவம்‌, பெண்கள்‌ விடுதலை ஆகியவைகளிலேயே நமக்கு முதன்முதலாக விடுதலை வேண்டியிருக்கின்றது. மற்ற தேசதீதாருடைய கல்விச்‌ செல்வம்‌, தொழில்‌ சமதீதுவம்‌, விவாகம்‌, விவாகரதீ.து ஆகியவைகளுடன்‌ நமது தேசதீதையும்‌: ஒப்பிட்டுப்பார்தீதால்தான்‌ நமது நாட்டின்‌ தன்மை நமக்குச்‌ சுலபமாக விளங்கும்‌. அ3தாடு நமது நிலை இவ்வாறு இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன என்பதையும்‌ அறிந்து அவைகளினின்று விடுதலையடையும்‌ படியான மார்கீகங்களைத்‌ தெரிந்து அதற்கெனப்‌ பாடுபட்டோமானால்‌ நமகீகு நிச்சயமாக வெற்றி ஏற்படும்‌. தற்காலம்‌ கல்வியானது நமது நாட்டில்‌ மிக்க மோசமான நிலைமையில்‌ இருக்கிறது. புன்னிவிவரங்களின்படி 100-க்கு 10 பேரே படிதீதவர்கள்‌. இவர்களிலும்‌ பிரமணர்களைதீ தள்ளி, பிரமணரல்லா தார்கள்‌ 100-dg எதீதனை படித்த மக்கள்‌ இருக்கின்றார்கள்‌ என்றால்‌ 100-கீகு 5 பேர்கூட படித்தவர்கள்‌ இருக்க மாட்டார்கள்‌. அரசாங்க அறிக்கையிலும்‌ பார்ப்பனரல்லாதாரில்‌ அனேக வகுப்பார்‌ கல்வியில்‌ பின்னடைந்திருப்பதால்‌, அவர்களுக்‌ கென்று கல்விசி சம்பளம்கூடக்‌ குறைதீதிருக்கிறார்கள்‌. பெண்களுக்குச்‌ சம்பளமே இல்லை என்றும்‌ ஏற்பாடு செய்திருக்கிறார்கள்‌. ஆனால்‌, மற்ற நாடுகளில்‌ 100-க்கு 50, 60, 70 வீதமும்‌, இன்னும்‌ சில நாடுகளில்‌, நமது நாட்டுப்‌ பார்ப்பன சமூகம்‌ போல 100-க்கு 100 பேர்‌ படிதீதவர்கள்‌ உள்ளார்கள்‌. நமது நாட்டில்‌ மட்டும்‌ 100-கீகு 90 பேர்‌ தற்குறிகளாக இருப்பதேன்‌? அதுவும்‌ பார்ப்பனரல்லாத சமூகம்‌ 100-க்கு 95-ம்‌, தீண்டாதார்‌ சமூகம்‌ 100-கீகு 99-ம்‌, பெண்கள்‌ 100-க்கு 993-ம்‌ தற்குறிகளாக இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன ? இதற்கு அரசாங்கமா காரணம்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌ ! இதற்குக்‌ காரணம்‌ கண்டுபிடிக்க கிதுவரை நாம்‌ என்ன செய்திருக்கிறோம்‌ 8 என்ன செய்கிறோம்‌? அரசாங்கம்‌ நமக்குக்‌ கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா 1 அல்லது, அரசாங்கத்தில்‌ பணமில்லையா ? அல்லது, மக்களுக்குக்‌ கல்வி கற்க வேண்டுமென்கின்ற ஆசை இல்லையா ! என்பவைகளைக்‌ கவனிதி தோமானால்‌ ஏன்‌ மக்கள்‌ கல்வி கற்கவில்லை என்பது விளங்கும்‌. சகோதரர்களே ! நமது சமூகம்‌ இதற்குமுன்‌ என்றைக்காவது கல்வி அறிவுடன்‌: இருந்ததாகச்‌ சொல்லக்கூடுமா என்பதை யோசித்துப்‌ பார்த்தால்‌ உண்மை விளங்கும்‌. சர்க்காரார்‌ பார்ப்பனர்‌ களுக்கு மட்டுந்தானா படிப்பு சொல்லிக்‌ கொடுக்கின்றார்கள்‌ 8 இல்லவே இல்லையே ) எல்லோரையும்‌ ஒன்றாய்தீதானே பாவிக்கிறார்கள்‌? ஆதலால்‌ இதிலுள்ள சூழ்ச்சியை அறிந்தீர்களானால்‌ விடுதலையின்‌ உண்மைதீ ததீதுவம்‌ விளங்கும்‌. நமது மதத்‌ ததீ.துவப்படிக்கு ஆதிகாலத்தில்‌ இன்னின்ன சாதிதான்‌ கல்வி கற்கவேண்டு மென்று சட்டங்களிருந்தன. படிக்க ஒருசாதியும்‌, படிப்புச்‌ சொல்லிக்கொடுக்க ஒருசாதியும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1160 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இருந்து வந்ததோடு--அதிலும்‌ கின்னது இன்னதுதான்‌ படிக்கவேண்டுமென்பது ஆகிய திட்டங்களும்‌ ஆதியிலிருந்தன. கிவைகளை நாம்‌ வெளியில்‌ எடுத்துரைதீதால்‌ எல்லோரும்‌. ஒதிதுக்கொள்ளுகிறார்கள்‌ ) ஆட்சேபணை செய்பவர்கள்‌ ஒருவருமில்லை. ஆண்‌ மகனின்‌ நிலையைவிடப்‌ பெண்‌ மகளின்‌ நிலைமை படிப்பு விஷயத்தில்‌ மிக்க மோசமானதாகவே திருக்கின்றது. இதிலும்‌ தீண்டாதார்‌ எனப்படுவோர்‌ நிலைமையே இன்னும்‌ இதைகீகாட்டிலும்‌ மிக்க மோசமான தாகவேயிருக்கிறது. மக்களுகீகுக்‌ கல்வி அவசிய மென்பதை அறிந்து மக்கள்‌ ஒத்துக்‌ கொண்ட போதிலுங்கூட, மேல்‌ சாதிக்காரர்கள்‌ என்ப வர்கள்‌ மற்றவர்கள்‌ படிக்காமலிருப்பதற்குரிய பல தந்திரங்கள்‌ இன்னமும்‌ செய்துகொண்டு தானிருக்கிறார்கள்‌. சில இடங்களில்‌ தீண்டப்படாதாருக்குப்‌ பள்ளிக்கூடங்களே இல்லை $ அப்படிச்‌ சில இருந்த போதிலுங்கூட, போதுமான உபரதீதியாயர்கள்‌ அப்‌ பன்ளிக்கூடங்‌ களுகீகு அகப்படுவதில்லை. அப்படியொருசமயம்‌ பள்ளிக்கூடமும்‌ உபாதீதியாயரும்‌ இருந்த போதிலுங்கூட தீண்டாதாரின்‌ மக்கள்‌-சில தெருக்களில்‌ நடந்து அப்‌ பள்ளிக்கூடங்களுகீகுச்‌ செல்ல உரிமை இல்லை. அவர்கள்‌ அதீ தெருக்களில்‌ நடமாடக்கூடாதெனத்‌ தடுக்கப்படு கின்றார்கள்‌, இவ்வளவு கஷ்டங்களையும்‌ அவர்கள்‌ மீறிப்‌ படிக்க ஆரம்பித்தாலோ அவர்கள்‌ படிப்பதற்குப்‌ போதிய பணம்‌ இல்லை. அவர்களுக்குப்‌ போதுமான சரப்பாடு இல்லை. இத்தகைய கஷ்டங்களை நாம்‌ எப்படி நீக்கவேண்டும்‌ என்று பார்த்தால்‌, நமது சமூகத்திற்கு மத விஷயத்தில்‌ உள்ள முட்டுக்‌ கட்டைகளை முதலில்‌ நீக்குவதுதான்‌ எல்லோரும்‌ படிக்க முயற்சி செய்வதாகும்‌. மதத்தைக்‌ காப்பாற்றிக்கொண்டு எல்லோகும்‌ படிக்க வேண்டுமென்பது அறியாமையேயாகும்‌. ஆதலால்‌, மதக்‌ கட்டுப்பாட்டை ஒழிக்க முதலில்‌ முயற்சிக்கவேண்டும்‌. அவ்வாறு முயற்சிப்பதற்கும்‌ நமக்குத்‌ தைரியம்‌ வேண்டும்‌, அவ்வித தைரியம்‌ நமக்கு ஏற்பட்டால்தான்‌ கல்வி விடுதலையுமேற்படும்‌. இவைகளைவிட்டு, சரஸ்வதி கடாட்சமில்லை) பணமில்லை $ அரசாங்கதீதார்‌ கல்வி கற்பிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால்‌ நாம்‌ விடுதலை அடையதீ தகுந்த புத்தி யில்லாதவர்கள்‌ என்றுதான்‌ சொல்லிக்கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, பிராமணர்களும்‌ இந்த அரசாங்கத்தில்‌ இருந்துகொண்டும்‌, சாதாரண வரும்படியுள்ளவர்களுமாயிருப்ப தோடல்லாமல்‌, வேறு அரசாங்கத்தில்‌ உன்ள பணக்காரர்களல்லர்‌. அவர்கள்‌. குமாஸ்தாகீ களாகவும்‌, காபி கிளப்புக்காரர்களாகவும்‌, புரோகிதர்களாகவும்‌, தட்சணை வாங்குபவர்‌ கனாகவும்‌ சோம்பேறிகளாகவும்‌ இருந்தும்கூட அவர்களில்‌ 100-க்கு 99 பேர்‌ எப்படி வாசிக்க முடிந்தது. என்பதை யோசித்தோமானால்‌, அப்பொழுதுதான்‌ சூட்சுமம்‌ புலப்படும்‌, ஆகவே, நம்‌ நாட்டில்‌ இப்பொழுது இருந்துவரும்‌ மத தர்மங்கள்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்குமானால்‌ சிலரைத்‌ தவிர்தீதுப்‌ பெரும்பாலான மகீகள்‌ படிக்கவே முடியாது. நமது மத தர்மப்படி கன்னின்னவர்கள்‌ கற்றுக்கொடுக்க வேண்டுமெனவும்‌ இருக்கிறது. அந்த முறையை அஸ்திவாரமாக வைத்தே இன்றைய உபசதீதியாயர்கள்‌ எல்லாம்‌ பார்ப்பனர்‌. களாக இருக்கிறார்கள்‌. இவர்களிடத்தில்‌ படிக்கும்‌ பின்ளைகள்‌: 100-க்கு 90 பேர்கள்‌ தலை எடுக்கமுடியாமல்‌ போகின்றது. ஆகையால்‌, இந்த முறைகள்‌ நடைபெறும்படி அனுமதித்துக்‌ கொண்டிருப்பதா, அல்லது இவைகளை அழிப்பதுதான்‌ நமக்கு விடுதலையை அளிக்குமா § [மதுரை மாவட்டம்‌, சித்தையன்‌ கோட்டையில்‌, 22-6-1931-ல்‌ சொற்பொழிவு--* குடிஅரசு 2 28-6-1931] கல்வி விஷயதீதில்‌ நம்நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விஷயம்‌ கையாளப்பட வேண்டியது அவசியம்‌ என்பதை எவரும்‌ மறுக்கமுடியாது. ஒன்று, சுல்வியால்‌ மக்களுக்குப்‌ பகுதீதறிவும்‌ சுயமரியாதை உணர்ச்சியும்‌ ஏற்படவேண்டும்‌. மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத்‌ தொழில்‌ செய்யவேர அலுவல்‌ பார்கீகவோ பயன்படவேண்டும்‌. [8 குடி அரசு -தலையங்கம்‌--22-8-1987] www.thamizham.net - Free £ book No 3031 1161 2. குழந்தைகள்‌ கல்வி இநீநாட்டுதீ தமிழ்ப்‌ பெருங்குடி மக்களாகிய நாம்‌, நம்மைப்‌ பற்றித்‌ தெரிந்துகொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா என்று பார்ப்போம்‌. நாம்‌ எப்படித்‌ தெரிந்துகொள்ளுவது? பள்ளியில்‌ படிக்கும்போது ஏதாவது தெரிநீதுகொள்ளலாமா என்றால்‌ அங்கு தமிழர்‌ களைப்‌ பற்றி ஒரு சேதியும்‌ கிடையாது) எவ்விதப்‌ பாடப்‌ புத்தகமும்‌ கிடையாது, * அரிவரி? பாலபாடம்‌ படிச்கும்போதும்‌ 'அய்யர்‌?-பிராமணன்‌? போன்ற வார்தீதைகள்தாம்‌ காணப்படுகின்றனவே அன்றித்‌ தமிழர்‌-திராவிடர்‌ என்கின்ற வார்தீதைகளுக்கு அங்கு இடமோ, அவகாசமோ கிடையவே கிடையாது. மேல்‌ வகுப்புக்கு வந்து அங்கு ஏதாவது தெரிந்துகொள்ளலாம்‌ என்றாலோ அதற்கும்‌ இடம்‌ இல்லை. தமிழ்‌ நாட்டுக்குச்‌ சரித்திரமே கில்லை. இந்து தேச சரித்திரம்‌ என்பதை எடுத்‌. துக்கொண்டால்‌ இராமாயண-பார தமும்‌, அசோகன்‌-மவுரியன்‌ ஆட்சியும்‌, முஸ்லிம்‌- வெள்ளையர்‌ ஆட்சியும்தான்‌ விளகீகப்படுமே ஒழிய சேர, சோழ, பாண்டியரைப்‌ பற்றியோ, திராவிடர்‌-தமிழர்‌ என்கின்ற ஆட்சியைப்‌ பற்றியோ காண்பது மிகவும்‌ அருமையேயாகும்‌. அவைகள்‌ எந்த வகுப்புகீகும்‌ பாடமாக கில்லை. அப்படி ஏதாவது எங்காவது காண முடிந்தாலும்‌ அது பெரும்‌ பிதீதலாட்டமும்‌, மோசடியுமாகதீதான்‌ காணப்படலாமே தவிர, யோக்கியமாய்‌, சரித்திர ஆதார முறையாய்க்‌ காண்பதற்கு இடமே இல்லை. ஆகவே, நமது பிள்ளைகள்‌ நம்மைப்பற்றித்‌ தெரிந்துகொள்ள இடமும்‌ இல்லை, வசதியும்‌ இல்லையென்றுதான்‌ சொல்லவேண்டும்‌. இன்றும்‌, சொல்லுகிறோம்‌--தமிழன்‌ ஆரியருக்கு மூன்‌ என்ன சமயதீதவனாய்‌ இருந்தான்‌, அவன்‌ கடவுள்‌ எப்படிப்பட்டது, அவனது வாழ்க்கை முறை எப்படிப்பட்ட து-- என்பன போன்றவைகளைக்‌ காட்ட, சரியான சரித்திர ஆதாரம்‌ ஒன்றும்‌ காணப்‌ படுவதில்லை. ¢ தமிழர்கள்‌ காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள்‌! என்பதற்கே ஆதாரங்கள்‌ கற்பிக்‌ கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பன்ளிக்கூடத்திலோ, சரிதீதிரங்களிலோ நம்மைப்பற்றிதீ தெரிந்கொள்ள ஆதாரங்கள்‌ இல்லை என்பதோடு-தமிழ்‌ நூல்கன்‌ என்பவைகளிலாவது தனித்‌ தமிழர்‌ நிலை எப்படி இருந்தது என்றும்‌, அனுபவ பூர்வமான அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்றும்‌ தெரிந்துகொள்ளப்‌ போதிய ஆதாரங்கள்‌ கிடையாது. இன்று நம்‌ கண்முன்‌ காணப்படும்‌ தமிழர்‌ வாழ்க்கை என்பதெல்லாம்‌ ஆரியரைப்‌ பார்தீது அதுபோல்‌ வேஷம்‌ போட்டுக்கொண்டு, அவர்களது சாதனங்களை ஏற்றுக்‌ கொண்டு, அவர்களைப்‌ பின்பற்றுவது என்பதல்லாமல்‌, வேறுஒன்றும்‌ காண்பதற்கு இல்லை. ஆரியர்‌ கடவுள்கள்‌, அவர்களது சமயங்கள்‌, அவை சம்பந்தமான ஆரியர்‌ கதைகள்‌, அவர்‌: களது ஆகமங்கள்‌, அவர்கள்‌ சாஸ்திரங்கள்‌, அவர்களது நீதி நூல்கள்‌ ஆகியவைகளை நம்‌ பண்டிதர்கள்‌ கற்றுக்கொண்டு, அவை நமக்குப்‌ போதிக்கப்படுவனவாக இருக்கின்றன. இவைகளை மாற்றித்‌ தமிழர்களுக்கு என்று மற்ற நாட்டாரையும்‌ மற்ற இனதீதாரையும்‌ போல்‌ ஏதாவது பாடங்கள்‌, சரித்திரங்கள்‌ முதலியவை கண்டுபிடித்து அல்லது உண்டாக்கி நம்‌ பின்ளைகளுக்குப்‌ பாடமாகக்‌ கீழ்வகுப்பில்‌ இருந்தே படிப்பிக்கப்‌ பட்டால்‌ ஒழிய, எப்படி அவர்கள்‌ தங்களைப்பற்றிதீ தெரிந்துகொள்ளமுடியும்‌ என்பதைச்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌. அந்தப்படி இில்லாததாலேயே, நம்மைப்பற்றித்‌ தெரிந்‌ துகொள்ள நம்‌ பண்டிதர்களே வழிகாட்டிகளாய்‌ இருந்துகொண்டு--அவர்கள,து உச்சிக்‌ குடுமியையும்‌ சாம்பல்‌ மண்‌ பூச்சுக்‌ களையும்‌--அவர்கன்‌ பாராயணம்‌ செய்யும்‌ புராணக்‌ கதைகளையும்‌ நாம்‌ பின்பற்றிக்‌ கடைந்தெடுத்த முட்டாள்களாக நேர்‌ ந்ததோடு ஆரியருக்கும்‌) ஆரியதீதுக்கும்‌ மீள அடிமை களாக ஆஅகியிருக்கும்படி நேர்ந்திருக்கிறது. 1686-46 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1162 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: தமிழர்‌ கவின்‌ படிப்புக்குக்‌ கீழ்வகுப்புகளிலாகட்டும்‌, இராமாயண-பாரதக்‌ கதைகள்‌ ஏன்‌ சேர்க்கப்படவேண்டும்‌--அதுவும்‌ தேச சரித்திரத்தில்‌ ஏன்‌ சேர்கீகப்படவேண்டும்‌ ₹ பஞ்ச காவியங்களைவிட இராமாயணம்‌, பாரதம்‌ எப்படிச்‌ சரித்திர சம்பந்தமான கதைகளாகும்‌ 8 பாடப்‌ புதீதகக்‌ கமிட்டியில்‌ உள்ள தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால்‌ இரரமாயண-பாரதக்‌ கதைகள்‌ சரிதீதிரதீதிலும்‌, வசன பாடத்திலும்‌ சேர்க்கச்‌ சம்மதித்து கிருப்பார்களா1 பண்டிதர்கள்‌, உபாதீதியாயர்கள்‌, தமிழ்ச்‌ செல்வர்கள்‌ இக்‌ குறைகளை எடுத்துக்‌ காட்டுவதற்காக நம்மீது பாய்கின்றார்கனே தவிர, புராண இதிகாசங்கள்‌--அதுவும்‌ தமிழர்களுக்குச்‌ சம்பநீதமில்லாததும்‌, தமிழர்‌ களுக்கு இழிவைத்‌ தரக்கூடியதும்‌, தமிழர்‌ முற்போக்கைதீ தடுக்கக்‌ கூடியதும்‌, பகுதீ தறிவுக்கு ஒவ்வாத துமான விஷயங்கள்‌ கொண்ட புராண இதிகாசங்கள்‌--சமய ஆதாரங்கள்‌ போலவும்‌, புண்ணிய சரிதீதிரங்கன்‌ போலவும்‌, தேச சரித்திரங்கள்‌ போலவும்‌ நம்‌ குழந்தை களுக்குக்‌ கற்பிக்கப்படுவதைப்‌ பற்றிக்‌ கவலைப்படுவதே இல்லை. இவ்விஷயத்தில்‌ இனியாவது தமிழ்ப்‌ பண்டிதர்கள்‌, தமிழ்‌ உபாதீதியாயர்கள்‌, உண்மைத்‌ தமிழ்ப்‌ பெற்றோர்கள்‌ ஒன்று கூடி மாநாடு கூட்டி--இம்மாதிரி விஷயங்கள்‌ பன்ளிப்‌ படிப்பில்‌ நுழையாமல்‌ இருக்கும்படி செய்யக்கூடாதா என்று கேட்கின்றோம்‌, தமிழிலே, தமிழ்‌ மொழி இலக்கியத்திலே, தமிழர்‌ நல்வாழ்விலே, தமிழர்‌ தன்மானத்‌ திலே, தமிழர்‌ தனி ஆட்சியிலே கவலையுள்ள நம்‌ செல்வர்களுக்கு--இந்தக்‌ கரரியமெல்லாம்‌. முக்கிய கடமை அல்லவா என்றும்‌ கேட்கிறோம்‌. தலைமுடி எடுதீதுக்கொண்டு, காவடி தூக்கி ஆடி, பழனிக்கும்‌ திருச்செந்தூருக்கும்‌ சென்று வந்துவிட்டால்‌ தமிழர்களுக்குச்‌ செய்யவேண்டிய கடமைகளைச்‌ செய்தாய்விட்டது என்று அர்த்தமா--அல்லது, தாங்கள்‌ பிறந்ததற்குப்‌ பயன்‌ ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தமா ₹ பட்டம்‌, பதவி, நிர்வாகப்‌ பெருமை பெற்றுவிட்டால்‌ தமிழர்களுக்குச்‌ செய்ய வேண்டிய கடமைகளைச்‌ செய்தாய்விட்டது என்று அர்த்தமா 1 நிலை குலைந்த தமிழர்களைத்‌ தட்டி எழுப்பி, உணர்ச்சி ஊட்டி, அவர்களுக்குதீ தன்மான உணர்வும்‌ ஊட்ட வேண்டாமா? தமிழ்‌ மக்களை--அவர்கள்‌ படித்தவர்‌ களானாலும்‌, பண்டிதர்களானாலும்‌, மந்திரி, கவர்னர்‌-வைசிராய்‌ நிர்வாகசபை மெம்பர்‌: ஆனாலும்‌ பகுத்தறிவு விஷயத்தில்‌ மரக கட்டையாக்கிவிட்டு, தமிழரல்லாதவர்‌ அடிமைப்‌ படுத்திச்‌ சுரண்டிக்‌ கொள்ளைகொள்வதைத்‌ தடுக்கவேண்டாமா$ தமிழ்‌ மக்களின்‌ நலத்தில்‌ கவலை உள்ளவர்கள்‌ எ.து எதற்கு என்றுதான்‌ அழுவது தமிழர்க்குத்‌ தொண்டாற்றுவது என்றால்‌ என்னதான்‌ அர்த்தம்‌ ₹ ஆகவே, பன்னிகளில்‌ உள்ள சதீததீ தமிழாசிரிய்களை, இனியாவது இப்படிப்பட்ட புத்தகங்களைப்‌ பாடமாக வைக்காமல்‌ இருக்கக்‌ கேட்டுக்கொள்வதோடு, பாடப்‌ புத்தகக்‌ கமிட்டியில்‌ உள்ளவர்கள்‌ இனியரவது இவ்விஷயங்களைக்‌ கவனித்து, புதீதகங்களை அனுமதிக்க வேண்டுமாய்‌ வேண்டிக்‌ கொள்கிறோம்‌, நமக்குச்‌ சுதந்திரம்‌ வந்த இலாக்காக்‌ கவின்‌ கதியே இப்படி இருக்குமானால்‌, இதீ தமிழர்கள்‌ எந்த முகதீதைக்‌ கொண்டு எல்லா இலாக்காக்கவிலும்‌ முழுச்‌ சுதந்திரம்‌ கேட்க முடியும்‌ என்று யோசித்துப்‌ பார்க்க வேண்டு கிறோம்‌. [ குடிஅரசு 3-தலையங்கம்‌---12-2-1944] www.thamizham.net - Free £ book 14௦ 3031 1163 8. அறிவும்‌ படிப்பும்‌ அக்கராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1 கல்வி என்பதைப்‌ பற்றி நமது மக்கள்‌ பெரும்பாலும்‌ புதீதகப்‌ படிப்பையும்‌, குருட்டு உருப்போட்டுத்‌ தேர்வுகளில்‌ தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக்கொண்டிருக்‌ கின்றனர்‌. உதாரணமாக, ஆங்கிலத்தில்‌ பி.ஏ, எம்‌. ஏ. படித்துப்‌ பட்டம்‌ பெற்றவர்களையும்‌ தமிழ்ச்‌ சங்கத்தில்‌ படிதீது வித்துவான்பரிட்சை பாஸ்பண்ணி பட்டம்‌ பெற்றவர்களையும்‌ கல்வியாளர்‌ என்று சொல்லிவிடமுடியாது. அவர்கள்‌ ஏதோ ஒரு வித்தையில்‌, அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்‌ கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில்‌ தேர்ந்தவர்கள்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. அதாவது, அலமாரியில்‌ உள்ளபுத்தகங்களைப்‌ போல்‌, இவர்களும்‌ தங்கன்‌ மனத்தில்‌ பல விஷயங்களைப்‌ பதியவைதீதிருக்கும்‌ ஒரு நகரும்‌ அலமாரி ? என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகதீதில்‌ பதீதிரமாய்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம்‌ வேண்டுமானாலும்‌ சொல்ல லாம்‌. உதாரணமாக; பூகோள சாஸ்திரத்தில்‌ எம்‌. ஏ. பட்டம்பெற்ற ஒரு உபாத்தியாயர்‌ பிள்ளைகளுக்குச்‌ சூரிய, சந்திர கிரகணதீதைப்‌ பற்றி வானசாஸ்திர பாடம்‌ சொல்லிக்‌ கொடுக்கும்போது, ¢ பூமியும்‌ சூரியனும்‌, சந்திரனும்‌ ஒன்றுக்கொன்று சுற்றுவதன்‌ பயனாய்‌ ஒன்றால்‌ ஒன்று மறைக்கப்படுவதால்‌ அதன்‌ ஆகுருதியும்‌ ஒளியும்‌ மறைவுபடும்‌. அதைத்‌ தான்‌ சந்திரகிரகணம்‌ என்றும்‌ சூரியகிரகணம்‌ என்றும்‌ சொல்லுவது? என்று பாடம்‌ சொல்லிக்கொடுப்பான்‌. ஆனால்‌, சநீதிரகிரரணமோ, சூரியகிரகணமோ வந்துவிட்டால்‌, *சூரியன்‌ என்கின்ற ஒரு தேவதையை இராகு; கேது என்கின்ற தேவதைகள்‌ துன்பப்படுதீது வதாகவும்‌, இது அவைகளுக்கு ஏற்பட்ட சாபதீதீடு என்றும்‌, அதற்காக மக்கன்‌ தோஷ பரிகாரம்‌ செய்யவேண்டுமென்றும்‌ சொல்லிக்கொண்டு, கிரகணம்‌ பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும்‌, விடும்போது ஒரு ஸ்நரனமும்‌ மதீதியில்‌ மந்திரங்களும்‌ ஐபங்களும்‌ செய்வான்‌? சாப்பிடாமல்‌ பட்டினியாகவும்‌ இருப்பான்‌. மற்றும்‌ தான்பிறந்த நேர கிரக நட்சத்திரமும்‌ கிரகண நேர நட்சதீதிரமும்‌ ஒன்றாயிருநீதால்‌ நெற்றியில்‌ பட்டங்‌ கட்டிக்கொண்டு முழுகுவான்‌. ஆகவே, அவனது படிப்பு வானசாஸ்திரப்‌ பரிட்சையில்‌ தேறதீதான்‌ உபயோகப்பட்டதே தவிர; அந்த எம்‌. ஏ. பட்டம்‌ பெற்றவனுக்கு அது அறிவுக்குச்‌ சற்றும்‌ பிடிக்கவேயில்லை. ஆனால்‌, நமது தமிழ்ப்‌ பண்டிதர்கள்‌ நிலையோ அப்படிக்கூட இருக்க முடிவதில்லை. அவர்களுக்கு உள்ள படிப்பே முட்டாளாவதற்கு முதல்‌ தர மருந்து போன்றது. புராணங்களைத்‌ீ தவிர; அவர்களுக்கு வேறுபடிப்பே கிடையாது. இலக்கணமீ, நீதிநூல்‌ என்று சிலவற்றைப்‌ படிப்பார்கள்‌. ஆனால்‌, அவைகளும்‌ ஆரம்பமும்‌ மூடத்தன மாகவே இருக்கும்‌ ) முடிவும்‌ மூடதீதனமாகவே இருகீகும்‌. மத்திய பாகமோ உலக வாழ்க்கைக்குப்‌ பயன்படாததாகவும்‌ அயோக்கியர்கவின்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கு ஆதாரமான தாகவுமிருக்கும்‌, ஆங்கிலம்‌ படிதீத பட்டதாரிகள்‌ என்பவர்களுகீகாவது அறிவாளர்களாவ தற்கு ஏற்ற பல நூல்கள்‌ உண்டு. தமிழ்ப்‌ பட்டதாரிகளுக்கோ மடையர்களாவதற்கேற்ற நூல்களே உண்டு. அதாவது, அவை பெரிதும்‌ வேதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌, இதிகாசம்‌ என்பன போன்றவைகளைத்‌ தவிர இலக்கணம்‌, இலக்கியம்‌ என்று சிலவும்‌ கூட்டி இவை களை உருப்போட்டு ப்‌ பரீட்சை கொடுதீதவரீகளாவார்கள்‌. ஆகவே, ஆங்கிலப்‌ பட்டதாரி. களிடம்‌ எதிர்பார்க்கும்‌, அதாவது அறிவியல்‌ புதீதகங்கள்‌ படிக்கக்கூடிய சந்தர்ப்பம்‌ கிடைத்த அளவுகூடத்‌ தமிழ்ப்‌ பட்டம்பெற்ற பண்டிதர்கள்‌ என்பவர்களிடம்‌ எதிர்பார்க்கமுடியாதுஃ ஆகவே, மனிதன்‌ முழுமூடனாக வேண்டுமானால்‌ புராணங்களையும்‌ இதிகாசங்களையும்‌ படிதிதுப்‌ பண்டிதனாகவேண்டியதுதான்‌ என்பதற்கிணங்கிதீதான்‌ நமது படிப்பும்‌, அறிவும்‌ இருக்கின்றது. தமிழ்ப்‌ பண்டிதர்கள்‌ என்பவர்களுடைய யோக்கியதையை நான்‌ பார்தீத பிறகு, மக்களை அறிவுக்காக--தமிழைப்‌ படி என்று சொல்லுவது மிக்க மோசமான: காரியம்‌ என்றே எனக்குத்‌ தோன்றுகின்றது. ஏனென்றால்‌, அவர்களுக்குப்‌ பொது அறிவு www.thamizham.net - Free £ book No 3031 1154 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ ஏற்படும்படியான படிப்புக்குதி தமிழில்‌ ஆதாரங்களே கல்லை என்பதுதான்‌. வடமொழி ஆதாரங்களேதான்‌ தமிழில்‌ மொழிபெயர்கீகப்பட்டுப்‌ பல வேஷங்களுடன்‌ திகழ்கின்றனவே யன்றி, மக்களுக்கு அறிவும்‌ சுயமரியாதை உணர்ச்சியும்‌ உண்டாகும்படியானவைகள்‌ அல்ல ஆகவே, மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்படவேண்டுமானால்‌, உலக இயலை அறியச்‌ சந்தர்ப்பங்கள்‌ அவிக்கப்‌ படவேண்டும்‌. அதற்கு ஆதாரங்கள்‌ பத்திரிகைகள்‌ படிக்கவும்‌, பல மக்களிடம்‌ சேர்ந்து பழகிப்‌ பேசவும்‌ சவுகரியமுூன்னதுமான வாசகசாலைகளேயாகும்‌. [கொடைக்கானலில்‌, 20-7-1930-ம்‌ நரள்‌ காஸ்மாபாலிட்டன்‌ வரசகசாலைத்‌ திறப்புவிழாவில்‌ சொற்பொழிவு--* குடி அரசு 1 27-7-1930] அக்கிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே ! கல்வி விஷயதீதில்‌ தற்போ துள்ளவர்கள்‌ மிகவும்‌ மேன்மை பெற்றவர்கள்‌. ஏனெனில்‌, முநீதிய சகாப்ததீதிற்கும்‌ பிந்திய சகாப்ததீதிற்கும்‌ கல்வி கற்பிப்பதில்‌ எவ்வளவோ வித்தியாசங்கள்‌ உண்டு. நம்‌ சகாப்பதீதிற்கு முந்தைய காலதீதில்‌, இன்னார்‌ இன்னார்‌ தான்‌ கல்வி கற்பிக்க உரிமையுடையவர்கள்‌ என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன: இன்ன விஷயநீதான்‌ கற்பிக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ இருந்தது: இதோடு மாத்திர மல்லாமல்‌, இன்ன இன்னார்தான்‌ கல்வி கற்பிக்கப்பட உரிமையுடையவர்கன்‌ என்கின்ற. நிபந்தனையும்‌, இன்ன இன்னவர்களுக்கு எழுத்து வாசனையே கற்பிக்கப்படக்‌ கூடாது என்கின்றதான நிர்ப்பந்தமும்‌ இருந்துவந்தது. இந்த மாதிரியான நியமங்களினாலும்‌, நிர்ப்பந்தங்களினாலும்‌ கல்வி என்பது * மூடுமந்திரம்‌? போன்று ஒரு இரகசியப்‌ பொருளாகவே இருந்துவந்தது. இந்தக்‌ காரணங்களினால்‌ முற்காலங்கவில்‌ ஆயிரத்தில்‌ ஒருவர்‌ இருவரே கல்வி கற்றவர்கள்‌ என்று சொல்லும்படியான மாதிரியில்‌ இருந்து வந்ததோடு, கல்வி கற்றவர்கள்‌ என்பவர்களே எல்லா மக்கள்மீதும்‌ எல்லாக்‌ காரியத்திலும்‌ ஆதிக்கம்‌ செலுதீதுபவர்களாய்‌ இருந்துவந்தார்கள்‌, அன்றியும்‌, மேல்‌ சொல்லப்பட்ட இந்த நிபந்தனைகளும்‌ ஆதிக்கங்களும்‌ எல்லாம்‌ மக்கன்‌ பிரிவில்‌ ஒரு தனிப்பிரிவார்‌. மாதீதிரம்‌--அதுவும்‌ பிறவி காரணமாய்‌ உரிமைகொண்டாடத்‌ தக்கதாய்‌ இருநீதுவந்ததே அல்லாமல்‌, மற்றபடி பொ.துதீ தகுதியைக்‌ கொண்டதாகவோ, எல்லோருக்குமே சம உரிமை கொண்டதாகவோ சிறிதும்‌ இருந்துவரவில்லை. சாதாரணமாய்‌ நமது இந்தியாவை முழுவதும்‌ எடுத்துக்கொண்டு, பழைய கல்வி போதனாமுறை என்பதை ஒரு முறையாக வைத்துப்‌ பார்ப்போமானால்‌, இந்தியாவில்‌ உள்ள 35 கோடி (1931) மகீகவில்‌ 173 கோடி மகீகளான பெண்களுக்கு எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ கல்வி கற்பிக்க முடியாததாகும்‌. மற்றொரு பிரிவில்‌ 7 கோடி தாழ்தீதப்பட்ட மக்கள்‌ விஷயதீதிலும்‌ படிப்பு என்பது நினைப்பதற்கே முடியாத காரியமாய்‌ இருக்கும்‌. மற்றும்‌ பார்ப்பனர்கள்‌, அரசர்கள்‌, வியாபாரிகள்‌ என்கின்ற வெகு சிறிய கூட்டதீதார்கள்‌ மாதீதிரம்‌ கல்வி கற்க உரியவர்களாவார்கள்‌. அவர்களிலும்‌ கல்வி கற்பிப்பதில்‌ பிரிவுக்குப்‌ பிரிவு வித்தியாசம்‌ இருக்கும்‌. ஆனால்‌, இன்றைக்கு இவ்வித விதீதியாசங்கன்‌ ஏதுமில்லாமல்‌ யாருக்கும்‌, யாவராலும்‌ கல்வி கற்பிக்கப்படலாம்‌. ஆனபோசதிலும்‌, கல்வியின்‌ இன்றைய இலட்சியமும்‌, கற்பிக்கும்‌ போதனாமுறையும்‌ பாராட்டதீதக்கவையாக இல்லை. ஏனெனில்‌, கல்வி என்பது ஒரு மனிதனுக்குக்‌ கற்பிக்கப்படவேண்டிய அவசிய மெல்லாம்‌, ஒருவன்‌ தனது வாழ்நாளில்‌ சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுதீதுவது என்பதேயாகும்‌. அல்லது, உலகில்‌ நல்வாழ்கீகை வாழத்‌ தகுதியுடையவனாக்குவது என்பதாகும்‌. அதாவது, ஒவ்வொரு காரியதீதிற்கும்‌ மற்றவர்களை எதிர்பார்தீதோ, மற்றவர்கள்‌. ஆதிக்கத்தில்‌ இருந்தோ அல்லது தனக்கு. மற்றவர்கள்‌. வழிகரட்டக்கூடிய, நிலையிலோ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்சீசி 1165 மனிதன்‌ இல்லாமல்‌ சுதநீதிரதீதோடு--சுய அறிவோடு வாழதி தகுதியுடையவனாக வேண்டும்‌. அன்றியும்‌, கல்வி கற்பிக்கும்‌ கடமையில்‌ இருக்கும்‌ ஒவ்வொருவரும்‌, கல்வியின்‌ அவசியதீதிற்கு . இந்தக்‌ காரணங்களைதீதான்‌ சொல்லுகின்றாரீகள்‌. கற்பிக்கப்படுபவர்‌ களும்‌ அந்த எண்ணத்தின்மீ துதான்‌ தாங்கள்‌ கற்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌, கல்வியின்‌ பயன்‌ இந்த இலட்சியதீதிற்கு அனுகூலமாக இருக்கின்றதா 8 பொதுவாக எந்ததீ தேசதீதிலுமே மக்களுக்குக்‌ கல்வி கற்பிக்கும்‌ பொறுப்பில்‌ இருப்‌ பவர்கள்‌ எல்லோரும்‌ கல்வி போதிக்கும்‌ விஷயதீதில்‌ ஒருவிதமான உள்கருத்தை வைத்துத்‌ தான்‌--அதைக்‌ி கல்வியின்‌ மூலம்‌ போதிக்கும்‌ முயற்சியில்‌ இருந்து வருகின்றார்கள்‌. அந்த மாதிரியான உள்கருத்தைப்‌ போதிப்பதில்‌ கல்வியானது மக்களுக்கு அறிவுக்கும்‌, வாழ்க்கையில்‌ சுதந்திரமாய்‌ வாழ்வதற்கும்‌ பயன்படுகின்றது. என்பதைவிட--தாங்கள்‌. கொண்ட உள்‌ எண்ணத்தையே மிக முக்கியமாய்க்‌ கருதுகின்றார்கள்‌. உதாரணமாக, ஒரு தேசத்தார்‌ தேச பக்திக்கு ஏற்ற கல்வி இருக்கவேண்டும்‌ என்று கருதுகிறார்கள்‌. மற்றொரு தேசத்தார்‌ மத பக்திக்கான கல்வி வேண்டும்‌ என்றும்‌, மற்றொருவர்‌ வீரம்‌ ஏற்பட வேண்டு மென்றும்‌, இன்னொருவர்‌ அந்த நாட்டுப்‌ பழமையான பழக்கவழக்கம்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌, மற்றும்‌ சிலர்‌ கடவுள்‌ பக்தி புகட்டுவதற்கு அனுகூலமாய்‌ இருக்கவேண்டும்‌. என்றும்‌ பார்க்கிறார்கள்‌. இப்படியாகவே, பல உட்கருதீதுக்களைப்‌ பிரமாதமாய்க்‌ கருதிக்‌ கல்விமுறை ஏற்படுத்‌, துவதில்‌ கல்வியின்‌ உண்மையான பிரயோசனம்‌ ஏற்படாமலே மறைந்‌ துபோய்‌ விடுகின்றது. இந்தக்‌ காரணங்களால்‌ கல்வி கற்றவர்கள்‌ எல்லாம்‌ அறிவாளிகளாய்‌ இருக்க முடியாமல்‌, எந்த உள்‌ காரணத்தை வைத்துக்‌ கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு மாத்திரமே பயன்படுகின்‌ றவர்‌ களாக ஆகிவிடுகிறார்கள்‌. கல்வி கற்பிப்பதில்‌ இக்‌ குறைபாடுகள்‌ தவிர, மற்றொரு பலமான கெடுதி என்னவென்றால்‌, கல்வி கற்பிப்பதில்‌ மதத்தின்‌ ஆதிக்கம்‌ வந்து புகுநீது--அறிவுக்காகக கல்வி என்பது மாறி--முட்டாள்‌ தனமும்‌, விசாரணையற்ற தன்மையும்‌ வருவதற்கே கல்வி பயன்படும்படியாக ஆகின்றது. இது இன்று உலகத்தில்‌ சில தேசங்கள்‌ தவிர மற்ற தேசங்களிலெல்லாம்‌ நடந்துவரும்‌ சம்பவமேயாகும்‌. இதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, கல்வியின்‌ பொறுப்பு எல்லாம்‌ மத ஸ்தாபனங்‌ களிடையே சிக்கி, மதபோதகர்கள்‌ ஆகியவர்களால்‌ நடத்தப்பட்டு வருகின்றவைகளாய்‌ இருப்பதே காரணமாகும்‌. மததீதிற்கும்‌ உலக இயற்கைக்கும்‌ எப்போதும்‌ சம்பந்தம்‌ இருப்பதில்லை. ஏனெனில்‌, அனேகமாய்‌ எல்லா மதங்களுமே உலக இயற்கையின்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்தி அதை வழி மறித்துத்‌ திருப்புவதையே ஜீவநாடியாய்க்‌ கொண்டிருக்கின்றன. அதனால்‌ மதம்‌ கலந்த படியால்‌ இயற்கை அறிவுக்கும்‌ ஆராய்ச்சிக்கும்‌ இடமில்லாமலே போய்விடுகின்றது. எப்படி எனில்‌, மதங்கள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்‌ இருந்தே காணப்படுபவை ஆகும்‌. ஆகவே, மத சம்பந்தமான கொள்கைகள்‌, அபிப்பிராயங்கள்‌ முதலியவைகள்‌ எல்லாம்‌ அந்தக்‌ காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகிய வைகளுக்கு ஏற்றவைகளாகவே இருக்கும்‌. ஆதலால்‌, அவை இந்தக்‌ கால அறிவு, ஆராய்ச்சி, சவுகரியம்‌ முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்தக்‌ குறைபாடானது உலகதீ தோற்றதீதில்‌ மனித வாழ்க்கையில்‌ ஒவ்வொரு தன்மையிலும்‌ இருக்க வேண்டியதாகி விட்டது. ஆகையால்‌ கல்வியும்‌ மதமும்‌ கலந்தால்‌ அறிவு சூன்யமாக வேண்டியதே தவிர வேறில்லை. உதாரணமாக, தற்கால ஆராய்ச்சி சவுகரியதீதைக்‌ கொண்ட ஒரு வான சாஸ்திரி, கிரகணத்திற்குக்‌ காரணம்‌ சொல்லுவதாய்‌ இருந்தால்‌ அவன்‌, பூமியுடையவும்‌ சூரிய www.thamizham.net - Free £ book 14௦ 3031 1166 பெரியார்‌ ஈட வெ. ரர, சிந்தனைகள்‌ னுடையவும்‌ நடப்பைக்‌ கொண்டு கணக்குப்‌ போட்டுப்‌ பார்தீ.து, ஒன்றின்‌ நிழலால்‌ மற்றொன்றின்‌ ஒளி இன்ன காலதீதில்‌ இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான்‌. இதே விஷயத்தைப்பற்றி மத சாஸ்திரியைக்‌ கேட்டால்‌ அவன்‌ சூரியன்‌, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின்‌ பயனாய்‌ இராகு, கேது என்ற இரண்டு கெட்ட கிரகங்‌ களால்‌ ஏற்படும்‌ பீடைகள்‌ என்று சொல்லுவான்‌. இதில்‌ இருக்கும்‌ மற்றொரு ஆச்சரியம்‌ என்னவென்றால்‌, ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய்‌ இருந்து பாடம்‌ கற்பிக்கும்போது பூமியின்‌ நிழலால்‌ சந்திரன்‌ மறைக்கப்‌ படுகிறதென்றும்‌, மத சாஸ்திரியாய்‌ இருந்து பாடம்‌ கற்பிக்கும்போது சூரியன்‌, சந்திரன்‌ என்கின்ற தேவர்களை இராகு, கேது என்ற பாம்புகள்‌ விழுங்குகின்றன என்றும்‌ சொல்லுவான்‌. இது மாதீதிரமல்லாமல்‌, வானசாஸ்திரியாய்‌ இருந்து சூரிய கிரகணத்‌ தன்மையைப்‌ பிரதீதியட்சப்‌ பாடமாக சில சாதனைகளைக்‌ கொண்டு பிள்ளைகளுக்குப்‌ பாடம்‌ கற்பிதீது விட்டு, வீட்டுக்குப்‌ போனவுடன்‌ இராகு, கேது என்கின்ற, பாம்புகள்‌ விழுங்குகின்‌ றன: என்பதற்குத்‌ தகுந்தபடி * தோஷப்‌ பரிகாரதீதிற்கு? ஸ்நானம்‌ செய்யவும்‌, தர்ப்பணம்‌ செய்யவும்‌, சங்கல்பம்‌ செய்து கொள்ளவும்‌, சாந்தி செய்யவுமான காரியதீதில்‌ ஈடுபடுகின்றான்‌. ஆகவே, கல்வியுடன்‌ மதத்தையும்‌ கலப்பதால்‌ மனிதனுடைய பகுதி தறிவும்‌ எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்துவிட்டது ! இன்றையக்‌ கல்வியில்‌ முக்கியமாக நமது நாட்டுக்‌ கல்வியில்‌ இருக்கின்ற ஆபத்தும்‌ பயனற்ற தன்மையும்‌ எதனால்‌₹ நமது கல்வி போதகர்கன்‌ எல்லாம்‌ மததீதின்‌ சாக்கினால்‌ மேன்மையடைந்து வருகன்றவர்களாகவே ஏற்பட்டுவிட்டதேயாகும்‌. மதம்‌ என்னும்‌ உலோகதீதினால்‌ ஒரே அச்சில்‌ உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான்‌ இன்று பெரிதும்‌ உபாதீதியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள்‌, இம்‌ மாதிரி உபாதீதியாயர்களிடம்‌ படிக்கும்‌ பிள்ளைகளுக்குக்‌ கல்வியினால்‌ எப்படி அறிவும்‌, சுதந்திர அறிவும்‌ உண்டாக முடியும்‌ அறிவு வேறு; மதம்‌ வேறு என்று பிரிதீ துவிடவேண்டும்‌. அறிவை உண்டாக்கி விட்டு, பிறகு அந்த அறிவின்‌ மூலம்‌ மதத்தைக்‌ கொள்ளும்படி செய்யவேண்டும்‌. அப்படிக்‌ கில்லாமல்‌, மதத்தைப்‌ புகுதீதி அதன்மூலம்‌ அறிவை வளரவிடாமல்‌ செய்துவிட்டால்‌ சுதந்திர ஞானம்‌ எப்படி ஏற்படும்‌ ₹ இரண்டும்‌ இரண்டும அய்ந்து என்றால்‌, ¢ எப்படி அய்ந்து P என்று கேள்வி கேட்கக்‌ கூடிய உரிமை இல்லாத முறையில்‌ கல்வி கற்பித்தால்‌, கணக்கில்‌ ஒரு மனிதன்‌ தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே, இயற்கை விஷயங்களில்‌ காட்டுமிராண்டிக்‌ காலம்‌ முதல்‌ கர்ண. பரம்பரையாகக்‌ கேட்டுவதந்த செய்தியையே சொல்லிக்கொண்டு, அதையே போதித்து வந்தால்‌ அதன்மூலம்‌ எப்படி இயற்கை அறிவை ஏற்படுத்த முடியும்‌ ? பின்ளைகளுக்காகச்‌ சரித்திர ஞானம்‌ பரவச்‌ செய்யும்‌ கல்விக்காகச்‌ சில தப்புகள்‌ செய்யவேண்டி வந்தாலும்‌ அனுமதிக்கத்தான்‌ வேண்டும்‌. ஆனால்‌, அதி தப்பிதத்தை அனுமதிக்கும்‌ முறையில்‌ வேண்டுமானால்‌ நாம்‌ சற்று. ஜாக்கிரதையில்‌ இருந்து அதீ தப்பிதத்தினால்‌ ஏற்பட்ட பயனைக்‌ கொண்டு, பிரதீதியட்ச அனுபவ அறிவு பெறத்‌ தகுதி யாக்க வேண்டும்‌. உபாதீதியாயர்களின்‌ புதீதிசாலித்தனதீதை இங்குதான்‌ பார்க்க வேண்டுமேயொழிய, எதிரொலிபோல்‌ கூப்பாடு போட்டு உருப்போடவும்‌, கண்மூடித்‌ தனமாய்‌ விஷயங்களைப்‌ பதியவைக்கவும்‌ சிறிதும்‌ இடம்கொடுக்கக்கூடாது. ஆகவே, நமது கல்வியின்‌ ஜீவநாடி எல்லாம்‌ இலட்சியத்திலும்‌, போதனா முறையிலுந்தான்‌ இருக கின்றது. உபாதீதியாயர்கள்‌ பகுதீதறிவாளர்களாய்‌ இருக்கவேண்டும்‌. அறிவின்‌: முடிவின்படி நடப்பவர்‌ களாய்‌ இருக்கவேண்டும்‌. _ www.thamizham.net - Free £ book 14௦ 3031 வறிவு வளர்ச்சி 1167 கடவுள்‌, பகீதி, பிராரீதீதனை முதலியவை எல்லாம்‌ எவ்வளவு முகீகியமானதாகவும்‌ உண்மையானதாகவும்‌ இருக்கவேண்டும்‌ என்று சொல்லி வருகின்றீர்களோ, அந்த முறை யெல்லாம்‌ பிரார்தீதனையில்‌ நடைமுறையில்‌ உன்ளனவா 1 சாதாரணமாக கிராமபோன்‌ போன்று சிறுவர்கள்‌--அவர்களுக்கும்‌, இந்தப்‌ பிரார்த்தனைப்‌ பாட்டைச்‌ சொல்லிக்‌ கொடுப்பவர்களுக்கும்‌ புரியாத பாட்டை நாடகத்தில்‌ வந்து சொல்விட்டுப்போவது என்றால்‌ இதற்குச்‌ சமமாக எதைச்‌ சொல்லுவது ? அனேகமாக நமது பிரார்த்தனைகள்‌ என்பதெல்லாம்‌ புரியாத மொழி, புரியாத சொற்கள்‌, புரியாத கருதீதுக்களன்‌ கொண்ட பாடல்களாகவும்‌, வாக்கியங்களாகவும்‌ இருக்‌ கின்றன. எந்த பக்திப்‌ பாட்டும்‌, சங்கீதப்‌ பிரதானியத்திலும்‌, இலக்கண இலக்கியப்‌ பிரதானியத்திலும்‌, வேஷப்‌ பிரதானியதீதிலும்‌, சடங்கு பிரதானியதீதிலும்‌ இருக்கின்‌றனவே தவிர, உண்மைப்‌ பிரதானியதீதில்‌ சிறிதாவது இருக்கிறதா? இந்த மாதிரி வேஷமுறையில்‌ இவ்வளவு சிறுகுழந்தைப்‌ பருவத்தில்‌ இருந்தே புகுத்தப்பட்ட இந்த பக்திக்கு, ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கியதையாவது இவர்கள்‌ பிற்கால வாழ்வில்‌ உண்டாகிறதா? மற்றும்‌, இதிலிருந்து அக்‌ குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டதீதையும்‌ நாணயக்‌ குறைவையும்‌ பகீதி என்னும்‌ பேரால்‌ புகட்டினவர்களானோமா, இல்லையா---என்று யோசித்‌ துப்‌ பாருங்கள்‌. இந்த மாதிரியான மதம்‌ கலந்த கல்வியானாலும்‌, வேஷதீ தன்மையானாலும்‌ இதனால்‌ நமது பெண்கள்‌ நிலையும்‌ மிகவும்‌ மோசமாகிவிடுகின்றது. அவர்கள்‌ மததீதையும்‌ பக்தியையும்‌ வாழ்க்கையில்‌ பிரமாதப்படுத்தி, அதனால்‌ பெண்‌ சமூகம்‌ முன்னேறவே மார்க்கம்‌ கல்லாமல்‌ செய்துகொள்ளுகின்றார்கள்‌. பெண்களை இன்றைய தினம்‌ ஒரு உபாதீதியாயராகவாவது இருக்கக்கூடிய நிலைக்குக்‌ கொண்டுவந்தது மதமும்‌ பக்தியும்‌ அல்லவே அல்ல. ஆனால்‌, மதமும்‌ பகீதியுந்தான்‌ அவர்களை இதுவரை அடிமைகளாக்கி வைதீதிருந்தன. அவையெல்லாம்‌ மாறி, அவர்களுக்குச்‌ சிறிதளவாவது சுதந்திரம்‌ ஏற்படக்‌ காரணம்‌, மததீதை அலட்சியம்‌ செய்து செய்யப்பட்ட சீர்திருதீதப்‌ பகுத்தறிவு உணர்ச்சி அல்லவா ₹ . அப்படிப்பட்ட பெண்மக்கள்‌ இப்போது சிறிது விடுதலை பெற்று உபாதீதி யாயரான பிறகு, தங்கள்‌ அடிமைதீ தனதீதிற்குக்‌ காரணமாய்‌ இருந்த மததீதை-பின்ளை களுக்குக்‌ கல்வியுடன்‌ புகுதீ.துவார்களானால்‌--அவர்களை மத சம்பிரதாயத்தில்‌ ஈடுபடுத்து வார்களேயானால்‌--நமது பிள்ளைகளை ஒப்புவிக்கலாமா என்பது பயமாகவேயிருக்கின்றது. இப்‌ பெண்கள்‌ கண்மூடித்தனமாய்‌ மததீதில்‌ ஆழ்ந்து கல்வியோடு அதைக்‌ கலக்கிக்‌ குழப்புவதிலிருநீது, அவர்கள்‌ மறுபடியும்‌ அடுப்பூதவும்‌ சட்டிசுரண்டவுமான உலகதீதிற்குப்‌ போக ஆசைப்படுகிறார்கள்‌ என்றுதான்‌ விளங்குகிறது. இனிப்‌ பிள்ளைகளுக்குக்‌ கல்வி போதிக்கும்‌ வேலை முழுவதும்‌ பெண்களுக்கே கொடுக்கவேண்டும்‌ என்று எண்ணிய என்‌ போன்றவர்கள்‌ மனதெல்லாம்‌ பெண்‌ உபரதீதியாயர்கள்‌ நிலைமையைப்‌ பார்த்ததும்‌ பயப்படுகிறது. ஆகவே, பெண்‌ உபாத்தியாயர்கள்‌ பகுதீதறிவுக்கு மதிப்புக்‌ கொடுக்கவேண்டுமே யொழிய ஆண்‌ உபராதீதியாயர்களைப்‌ பின்பற்றக்‌ கூடாது. இந்த இலட்சண தீதில்‌ உள்ள கல்வியோடு இப்போது வரவர தேசபக்தி என்பதாக ஒன்று புகட்டப்பட்டுவிடுகின்றது. இது அறிவு வளர்ச்சிக்கு மற்றொரு ஆபத்தான காரிய மாகும்‌. கடவுள்பகீதி, மதபக்தி ஆகியவைகள்‌ போலவே, இந்தத்‌ தேசபக்தியும்‌ மனிதனின்‌ அறிவு வளர்ச்சியை நாசமாக்கிவிடுகின்றது. அதிலும்‌ நமது நாட்டுத்‌ தேசபகீதியோ நினைப்பதற்கே பயங்கரமானதாக இருக்கின்றது. தேசபகீதியும்‌, தேசியமும்‌ பழமையைப்‌ பார்‌ தீதுக்கொண்டு பின்னால்‌ போகப்‌ பார்க்கின்‌றனவே தவிர முன்புறம்‌ பார்ப்பதற்கில்லை. தேசியத்துக்கும்‌ புதுமைக்கும்‌ ஜென்மப்‌ பகையாய்‌ இருந்து வந்திருக்கின்றது. தேசியம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1168 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ என்றாலே பழமை என்று கருதப்பட்டுவிட்டது. புதுமை என்றாலே தேசத்‌ துரோகம்‌ ஆகிவிட்டது. ஆகவே, கல்வி என்று பெயர்வைதீது, அதன்‌ சாக்கில்‌ மதத்தைப்‌ போதிதீ.து, தேசியம்‌ என்ற உணர்ச்சியையும்‌ அதன்‌ மூலமாகவே ஏற்றிவிட்டால்‌, குரங்குகீகுக்‌ கள்‌ வார்தீதது போல்தான்‌ ஆகுமே தவிர, அங்கு பகுதீதறிவுக்கும்‌, ஆராய்ச்சிக்கும்‌, முற்போகீகுக்கும்‌, சுதந்திரதீதிற்கும்‌ இடமே இல்லாமற்‌ போய்விடும்‌. இந்தக்‌ காரணத்தால்தான்‌ உலகதீதில்‌ இந்தியாவுக்கு மாதீதிரம்‌ கீழ்ப்படியில்‌ முதலிடம்‌ கிடைத்திருக்கிறது. ஆகவே, கல்வி கற்பிப்பதைவிடக்‌ கல்வியின்‌ இலட்சியத்தையும்‌ போதனையின்‌ தன்மையையும்‌ மாற்றவேண்டியது இந்தியாவுக்கு மிகவும்‌ அவசியமானதாகும்‌. [ஈரோடு மகாஜன ஸ்கூலில்‌, 17-9-1931-b சொற்பொழிவு குடிஅரசு? 27-9-1951- ற்‌ தலைவரவர்களே | பெரியோர்களே ! தோழர்களே ! முதலாவது, உங்கள்‌ படிப்புக்கு இலட்சியமே இல்லை. இலட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம்‌ இருந்தாலும்‌, என்ன படிப்புப்‌ படிப்பதென்பது பள்ளிக்கூடதீதாருக்கும்‌ ஆசிரியருக்கும்கூட சம்பந்தமற்றதாகும்‌. இதனால்‌, இப்‌ படிப்பினால்‌ ஏற்படும்‌ பயன்‌: என்ன என்றாலோ, அதுவும்‌ தானாக ஏதாவது ஏற்பட்டால்‌ அதுதான்‌ பயனேயொழிய மற்றபடி நிச்சயமான பயன்‌ என்ன? என்ன ஏற்படும்‌? என்பதைக்‌ கரு துவதற்கில்லை, படிப்பது என்பது வெறும்‌ பேசீசளவிற்கு, ¢ அறிவுக்காக, அறிவு விருத்திக்காக? என்று சொல்லப்படுகிறது. ஆனால்‌, படிதீதவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா 2 படிதீதவர்கள்‌ அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால்‌, ஆம்‌ என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அர்தீததீதிற்குக்‌ கட்டுப்பட்டதாய்‌ இல்லாமல்‌ எதைப்‌ படிதீதானோ அதில்‌ அறிவுள்ளவன்‌ என்றுதான்‌ சொல்லக்கூடியதாய்‌ இருக்கிறது. அந்தக்‌ குறிப்பிட்ட படிப்பில்‌ அதாவது படித்த படிப்பின்‌ அறிவாவது சரியாக இருக்கிறதா என்றால்‌, அதுகூட சரியாக இல்லாமல்‌, ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும்படியாக இரண்டு கருதீதுள்ள-௭- அதாவது முரண்பட்ட கருதீதுன்ள படிப்பதான்‌. கொடுக்கப்படுகின்றது. எந்ததி துறையை எடுதீதுக்கொண்டாலும்‌ மாணவர்களுக்கு அறிவுப்‌ படிப்பும்‌, மூடநம்பிக்கைப்‌ படிப்பும்‌ இரண்டும்‌ தரப்படுகின்றன. இதனால்‌ மாணவர்கள்‌ பகுத்தறிவும்‌, அதற்கு மாறான மூடநம்பிக்கையும்‌--இரண்டும்‌ கொண்டவர்களாகி விடுகறொர்கள்‌. மாணவர்கள்‌ மாத்திரமல்லாமல்‌, படிப்பைமுடிதீத பெரியவர்களும்‌, உபாதீதியாயர்களும்‌ கூட மூட நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள்‌. உதாரணமாக, சரிதீதிரம்‌, பூகோளம்‌, விஞ்ஞானம்‌, வானசாஸ்திரம்‌, உடற்கூறு, உலோக விஷயம்‌ முதலியவைகளில்‌ படிதீதுதீ தேறியவர்களில்‌, யாருக்காவது இது சம்பந்த மான மூடநம்பிக்கைக்‌ கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா 8 சரிதீதிரம்‌ படிதீதவன்‌ இராமாயண-பாரதம்‌ முதலிய புராணக்‌ கதைகளையும்‌ சரிதீதிரதீதில்‌ சேர்தீதுப்‌ படித்து, கிராமனும்‌ பரதனும்‌ இந்த நாட்டை ஆண்டார்கள்‌ என்றும்‌, அது இன்னகாலம்‌ என்றும்‌, இந்த நாட்டுக்குப்‌ பாரததேசம்‌ என்பது பெயர்‌ என்றும்‌ கருதிக்கொண்டு, அனுபவதீதிலும்‌-அதற்கு ஏற்றவண்ணம்‌ பாரதமாதாவை வணங்கிக்கொண்டு நிற்கிறான்‌. நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள்‌, நிஜமான: போர்கள்‌, நபர்கள்‌, அதன்‌ காலங்கன்‌ ஆகியவை சரிதீதிரம்‌ படிதீதவர்களுக்குச்‌ சரியாய்தீ தெரிவதில்லை. நடவாததும்‌, நடந்ததாக நம்பமுடியாததும்‌, அதற்கும்‌ காலம்நிர்ணயிக்க முடியாத துமான-அறிவுக்குப்‌ பொருந்தாத காரியங்களுக்கு அதிக விவரம்‌ தெரிகிறது. ஆனால்‌, நடந்தவைகளுக்குச்‌ சரியான விவரம்‌ தெரிவதில்லை, சேர; சோழ, பாண்டியர்‌, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1169 நாயக்கர்‌ ஆகிய மன்னர்களும்‌ அவர்களது வாரிசு, அண்ணன்‌ தம்பிகளும்‌, மனைவி மக்களும்‌ ஆண்ட நாட்டு எல்லைகளும்‌, முறைகளும்‌ சரிதீதிரம்‌ படி தீத 100-க்கு 90 மாணவர்‌ களுக்கு விவரம்‌ சொல்லதீ தெரியாது. தசரதனுக்கும்‌, இராமனுக்கும்‌, கிருஷ்ணனுக்கும்‌, பாண்டவருகீகும்‌, தரியோதனாதியர்களுக்கும்‌, கிரணியனுக்கும்‌, பலிச்‌ சக்கரவர்தீதிக்கும்‌, மனுநீதி கண்ட சோழனுக்கும்‌ அண்ணன்‌ தம்பிமார்கள்‌, மனைவிமார்கள்‌, அவர்கள்‌ கணவர்கள்‌ இவ்வளவு என்று 100-கீகு 99 மாணவர்களுக்குதீ தெரியும்‌. பூகோளம்‌ படிதீதவனுகீகு உலகப்‌ பரப்பு, அதன்‌ பிரிவுகள்‌ சரியாக ஞாபகத்தில்‌ இருக்காது. ஆனால்‌ இல்லாததும்‌--இருக்க முடியாததுமான மேல்‌ ஏழுலோகம்‌, கீழ்‌ ஏழு லோகம்‌, அதன்‌ வர்ணனை; பலன்‌, தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகதீ தெரியும்‌. வான சாஸ்திரம்‌ படிதீதவனுக்கு சூரிய, சந்திரனின்‌ உண்மைத்‌ தன்மை, கிரகணங்களின்‌. உண்மைத்‌ தன்மை, இயக்கம்‌, அதன்‌ சீதோஷ்ண நிலைக்குக்‌ காரணம்‌ ஆகியவை சரிவரதீ தெரியாது. ஆனால்‌, சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக்‌ கலை வளரவும்‌ தேயவும்‌ சாபம்‌, இவர்களது மனைவி மக்கள்‌, அவர்களது விபச்சாரம்‌, இராகு, கேது விழுங்கு: வதால்‌ கிரகணம்‌, அதற்குப்‌ பரிகாரம்‌--என்பது போன்ற கற்பனைக்‌ கதைகள்‌ யாவருக்கும்‌ உண்மை என்ற எண்ணமும்‌, அதை அனுசரித்த அனுபவமும்‌, அதற்கு ஏற்ப நடப்பும்‌ தெரியும்‌. விஞ்ஞானதீதைப்பற்றிச்‌ சொல்லவே வேண்டியதில்லை, உதாரணமாக, விஞ்ஞானப்‌ படிப்பின்‌ இன்றைய நிபுணர்களைப்‌ பார்தீதாலே விஞ்ஞானப்‌ படிப்பின்‌ தன்‌ மையும்‌ பயனும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. இப்படியாக, படிப்புக்கும்‌ அறிவுக்கும்‌ பெரும்‌ பாலும்‌ உண்மைக்கும்‌, நடப்புக்கும்‌ சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புதான்‌ இன்று பள்ளிப்‌ படிப்பாகப்‌ போய்விட்டது. இது தவிர, இனிப்‌ படிப்பினால்‌ ஏதாவது ஒழுக்கம்‌, நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம்‌ முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா அல்லது, படிதீத மக்களிடம்‌ இவை ஏதாவது இருந்து வருகிறதா என்றால்‌, அதுவும்‌ சிறிது சரியானபடி இல்லாமல்‌ வெறும்‌ கற்பனைக்‌ குணங்களும்‌, பற்றுகளுநீதான்‌ பெரிதும்‌ காணப்படுகின்‌ றனவே தவிர, உண்மை யானும்‌ இிருக்கவேண்டியதுமானவைகள்‌ அருமையாகவே இருக்கின்றன. [ஈரோட்டில்‌ 9.7-1945-ல்‌ செற்பொழிவு--4 குடிஅரசு ? 14-7-1945] தலைவரவரீகளே ! தோழர்களே ! தாய்மார்களே | ஒருவன்‌ எவ்வளவோ படிதீதிருக்கலாம்‌. பட்டம்‌ படிப்பு எல்லாம்‌ படிதீதிருக்கலாம்‌. பலே அறிஞன்‌, புத்திசாலி என்று பேசப்படலாம்‌. எல்லாம்‌ அனுபவப்‌ படிப்பைவிட மட்ட ரக மானவைகளே: வக்கீல்‌ படிப்புப்‌ படிதீது விட்டால்‌ அறிவாளி என்று கூறமுடியாது. வக்கீலுக்கு எதை எதை எப்படி எப்படிப்‌ புளுகினால்‌ கேஸ்‌ ஜெயிக்கும்‌ என்பதில்மட்டும்தான்‌: சாமர்த்தியம்‌ இருக்கலாம்‌. ஒரு வழக்கு பொய்யானது என்று தனகீகே தெரியும்‌, அந்த வழக்கை மெய்‌ என்று தீர்ப்புக்‌ கூறும்படி என்னென்ன தில்லுமுல்லுகள்‌; புரட்டுகள்‌ செய்ய வேண்டுமோ அவைகளைமட்டும்‌ கற்றிருநீதால்‌ போதும்‌. பொய்‌ கூறுவதைத்‌ துணிந்து ஓங்கி அடித்து உண்மையைப்போல்‌ கூறுகிற வகீகீல்கள்தாம்‌ பெரிய வழக்கறிஞர்கள்‌ என்று போற்றப்படுகிறார்கன்‌. ஆதலால்‌, வக்கீல்களும்‌ அறிவாளிகள்‌ என்று கூறுவதற்கில்லை. அதேஃபால்‌, பள்ளிக்கூடங்களிலும்‌ கலாசாலைகளிலும்‌ வாதீதியார்களும்‌ புரொபசர்களும்‌ இருக்கிறார்கள்‌. இவர்கள்‌ அறிவும்‌--ஏட்டுக்குள்‌ இருப்பதைமட்டும்‌ தெரிந்திருப்பார்கள்‌ ] உலக விஷயம்‌ தெரியாது ! உலக அறிவே முக்கியமானது. உலகதீ.துடன்‌ பழகியவர்கீகுதீதான்‌ பொது அறிவு வளரமுடியும்‌, [சிதம்பரம்‌ அண்ணாமலை நகரில்‌, 19.2-1956-ல்‌ சொற்பொழிவு--! விடுதலை ? 10-3-1956] 1686—147 www.thamizham.net - Free E book 14௦ 3031 1170 4. கல்வித்‌ திட்டம்‌ பெரியோர்களே | மாணவத்‌ தோழர்களே | இப்போதுள்ள கல்விக்கூடம்‌ எதற்காக இருக்கிறது? மக்கள்‌ அறிவு பெற வேண்டும்‌, ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும்‌ என்பதற்குக்‌ கல்வி கற்கவில்லை; கல்வித்‌ திட்டமும்‌ இவைகளைப்‌ போதிப்பதாக இல்லை; அவர்கள்‌ படிப்பதெல்லாம்‌ பிழைப்பதற்கு, மண்வெட்டி எடுக்காமல்‌ ஓரளவு பேனா பிடித்தெழுதிச்‌ சம்பாதிக்கும்படியான வழியைதீ தேடுவதற்கேயாகும்‌. இந்த வழியை அடையத்‌ தாமதம்‌ ஏற்படவே, பொது வாழ்வில்‌ புகுவதற்கு ஆரம்பிக்கின்‌றனர்‌. அதில்‌ இறங்கி அதன்‌ மூலம்‌ எப்படியாவது மேலே போய்‌ விட முயற்சிக்கின்றனர்‌. பெற்றோர்களும்‌ தங்கள்‌ குழந்தைகளைக்‌ கல்வி கற்க வைப்பதன்‌ காரணம்‌, தன்‌ பிள்ளை புதீதிசசாலி ஆகவேண்டும்‌, அறிவாளியாக வேண்டும்‌ என்று வெளியில்‌ மட்டும்‌ கூறுவார்களே தவிர, உள்‌ நோக்கமெல்லாம்‌ பையன்‌ உதீதியோகதீ திற்குப்‌ போய்ச்‌ சம்பாதித்தால்‌ நம்‌ வாழ்க்கையைக்‌ கஷ்டமின்றிக்‌ கழிக்கலாம்‌ என்ப தற்குதீதான்‌. பையன்‌ படிதீது முடிந்தவுடன்‌ உதீதியோகதீதில்‌ அமர்ந்தால்‌ அவன்‌ தன்‌ பகுதீதறி வுக்குதீ தகுந்தபடி நடந்துகொள்ள முடியாது. பாதிரி வேலையில்‌ அமர்ந்தால்‌ எப்பொழுதும்‌ கடவுளின்‌ பெருமையை பரப்புவதிலேயே இருக்கவேண்டும்‌. போலீஸ்காரனாக அமர்ந்தால்‌ அவன்‌ சாதீவீகனாக இருந்தாலும்‌, எதிலும்‌ ஆதீதிரதீ துடன்‌ தயவு தாட்சண்யமின்றிப்‌ பிறரைக்‌ கண்டிப்பவனாக இருக்கவேண்டும்‌. அதைப்போன்றே, வேலையைப்‌ பொறுத்து அவன்‌ ஒழுக்கமும்‌ அமைகிறது. யோகீகியன்‌, நாணயஸ்தனாக இருப்பவன்‌ குறைந்த சம்பளம்‌ வரும்‌ உதீதியோகதீதிற்கு வந்தால்‌, அதைக்கொண்டு அவனுடைய குடும்பஜீவனம்‌. நடப்பதற்கு வழி கில்லை. ஆகவே, பகவான்‌ இவ்வளவுதான்‌ கொடுத்தார்‌ என்று சும்மா இருப்பானா? இவன்‌ சும்மா இருந்தாலும்‌ இவன்‌ பெண்டுபின்னைகள்‌ சும்மா இருப்பார்‌ களா? அடிக்கடி ஏதாவது தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பர்‌, இவன்‌ அதீ தொல்லை பொறுக்காமல்‌ முதலாளியிடம்‌ போனஸ்‌ கொடுக்கும்படி கேட்பான்‌. அதிகச்‌ சம்பளம்‌ கொடுத்தால்‌ நல்லதுதான்‌ என்பரன்‌, இப்படி ஒவ்வொன்றாகப்‌ பார்தீ.து அதுவும்‌ போதவில்லையென்றால்‌ எங்கே கிடைக்கிறதோ அங்கங்கே கை நீட்டி வாங்குவதற்கு ஆரம்பித்து விடுகிறான்‌. பிறகு அவன்‌ வாழ்க்கை இலஞ்சதீதிலேயே கழிகிறது. ஒருவன்‌ யோக்கியன்‌, நாணயஸ்தனாக இருக்கவேண்டியது என்ன அவசியம்‌ 8 கடவுள்‌ தண்டிப்பார்‌ என்பதற்காகவா 1 இவைதான்‌ பித்தலாட்டம்‌ என்று கூறுகிறோம்‌. எனவே கடவுளும்‌, மோட்சமும்‌ நரகமும்‌ பித்தலாட்டம்‌ என்று தெரிந்தவன்‌ எதற்கரக யோகீகியனாகவும்‌ நராணயஸ்தனாகவும்‌ இருக்க வேண்டும்‌ என்றால்‌, வாழ்க்கையில்‌ நலை பெயர்‌ ஏடுக்க வேண்டும்‌ ) பிறர்‌ இவனைப்‌ பார்தீது கிவனுடைய நற்குணங்களைப்‌ புகழ்ந்து பேச வேண்டும்‌ ] சுற்றிலும்‌ உள்ளவர்கள்‌ இவனுடைய பெருந்‌ தன்மைகளையும்‌ நல்லொழுக்கங்‌ களைப்பற்றியும்‌ பாராட்டிப்‌ பேசினால்‌ இவனுக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகும்‌. இதற்கென்று நல்லவனாக நடகீகவேண்டியதாக இருக்கிறது வீதியில்‌ ஒருவனிடம்‌ சாமான்‌ வாங்குகிறவன்‌ ரூபாய்க்கு 5 படி தானியம்‌ வாங்கு வதாக வைதீதுக்கொள்வோம்‌. சாமானை விற்பவன்‌ கண்‌ கொஞ்சம்‌ குருடானவனாக இருக்கிறான்‌. வாங்குகிறவனுக்கு அந்தத்‌ தானியமும்‌ அதிகம்‌ தேவையாக இருக்கிறது எனவே சும்மா தருவானா ₹ அவனும்‌ குருடன்‌ ; நமகீகும்‌ தேவை; அண்டை அவயலாருக்குதீ தெரியாமல்‌ முடிந்தவரை பார்க்கலாம்‌ என்ற ஆசை வருவது யாருக்கும்‌ இயற்கை. இதைப்‌ பிசகு என்று கூற முடியாது. இது மனிதனுடைய இயல்பாகவே போய்விட்டது. கிதை யாராவது தப்பு என்று கூறுவானாகில்‌ அது அறிவீனம்‌ என்றுதான்‌ கூற வேண்டும்‌. இவன்‌ செய்தது . குற்றம்‌ ) இவனுக்குத்‌ தண்டனை கொடுக்க வேண்டும்‌ என்று கடவுன்‌ சொல்வார்‌ என்று யாராவது சொன்னால்‌--முதலில்‌, சொல்பவன்‌ முட்டான்‌ என்று ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 விறிவு வளர்ச்சி 1171 தான்‌ கூறுவேன்‌. ஏன்‌ ? கடவுள்தானே விற்பவனையும்‌, வாங்குகிறவனையும்‌ படைத்ததாக அந்தப்‌ பகீதனே கூறுவான்‌. ஏன்‌ விற்பவனைக்‌ குருடனாகவும்‌ வாங்குகிறவனை இப்படி திருட்டுத்தனம்‌ செய்யும்‌ அவசியமுள்ள தரித்திரவானாகவும்‌ படைக்கவேண்டும்‌? இந்த நாட்டில்‌ யோக்கியன்‌, நாணயஸ்தன்‌ இருப்பதாகக்‌ காணமுடியவில்லை. படிப்பாளி என்று கூறப்படும்‌ அத்தனை பேரும்‌ அறிவாளி என்று கூற முடியுமா? அவர்கள்‌ எல்லாம்‌ பெரிய உத்தியோகத்தில்‌ அமர்நீதிருக்கலாம்‌) அதிகச்‌ சம்பளம்‌ வாங்கலாம்‌ $ கொழுத்த பணக்காரர்களாக இருகீகலாமேயன்றி அறிவில்‌ சிறந்தவர்கள்‌ என்று கூற முடியுமா? எனவே, கல்வியென்பது மனிதனைப்‌ பெரிய உத்தியோகஸ்தனாக்கவும்‌, பணம்‌ சம்பாதிக்க ஒரு வழியாகவும்‌ மட்டும்தான்‌ உள்ளது) ஆனால்‌, அறிவாளியாக்கப்‌ போதிய தாக இல்லை. மனிதனுக்குக்‌ கல்வி அவன்‌ அறிவாளியாகும்‌ இலட்சியதீதிற்கு அடிப்படை யாக அமையவேண்டும்‌. மாணவர்கள்‌ பகுத்தறிவைப்‌ பெருக்கிக்கொள்ள வேண்டும்‌. அதற்குப்‌ பள்ளி நேரங்களில்‌ தங்கன்‌ மனம்போன போக்கில்‌ நடதீதல்‌ கூடாது. முதலாவது, வயிற்றுப்‌ பிழைப்பைதீ தேட, பரீட்சையில்‌ பாஸ்‌ செய்ய வேண்டும்‌. அதன்‌ பிறகு தங்கள்‌ அறிவை அத்துடன்‌ வைத்துக்‌ கொள்ளக்கூடாது. தானே எதையும்‌ சிந்தித்து உணரும்‌ பகுத்தறிவைப்‌ பின்பற்ற வேண்டும்‌. நான்‌ கூட மாணவர்களை என்‌ கழகதீதிற்கென்று எதிலும்‌ கிளர்சீசிகளில்‌ கலந்துகொள்ளக்கூடாது--கல்விக்ீகு இடையூறாக எதிலும்‌ ஈடுபடக்‌ கூடாது என்று அடிக்கடி கூறுவதுண்டு, மாணவர்கள்‌ பொதுக்‌ காரியங்களில்‌ சேர: வேண்டாம்‌. நாங்கள்‌ செய்யும்‌ போராட்டங்கவில்‌ சம்பந்தப்படக்கூடாது. அரசியல்‌ சம்பந்தப்பட்ட விவகாரங்களில்‌ சேரக்கூடாது என்றும்‌ கூறுவேன்‌. ஏதாவது உங்களிட மிருந்து கழகம்‌ எதிர்பார்க்குமானால்‌ உங்களால்‌ ஆன மறுப்பைக்‌ காட்டுவதற்கென்று மட்டும்‌ அவசியமுன்ள நேரங்களில்‌ உங்களிடம்‌ கேட்டுக்‌ கொள்வதுண்டு. இந்த அளவில்‌ மட்டும்‌ மாணவர்கன்‌ எங்களுக்கு ஆதரவு தந்தால்‌ போதுமான. [சிதம்பரம்‌ அண்ணாமலை நகரில்‌, 19-2-1956-ல்‌ நடந்த திராவிட மாணவர்கள்‌ கழகக்‌ கூட்டத்தில்‌ சொற்பொழிவு---6 விடுதலை 9 9-3-1956] 5. கேள்வி கேட்கும்‌ பழக்கம்‌ தலைவரவர்களே ! தோழர்களே 1 உங்களுக்குக்‌ கூட்டங்கள்‌ ஒரு சர்வகலாசாலை போன்றதாகும்‌ ) உலக நடப்பையும்‌ மக்கள்‌ யோக்கியதையையும்‌ கண்டறிய ஒரு பரீட்சைக்‌ கருவியாகும்‌, பள்விக்கூடதீதில்‌ இவைகளைப்‌ படிதீதுவிடமுடியாது. பெரிய கலாசாலைப்‌ பட்டம்‌ பெற்றுவிடுவதானாலும்‌, இந்தப்‌ படிப்பு வந்துவிடாது. உலகக்‌ கல்வி வேறு) பகுதீதறிவு வேறு; பட்டம்‌ வேறு, பெரிய டாகீடராய்‌ இருப்பான்‌ $--ஆனால்‌ அவனும்‌, மூதீதிரமும்‌ சாணியும்‌ சாப்பிட்டால்‌ ஒருவன்‌ மோட்சதி அக்குப்‌ போகலாம்‌ என்று நினைப்பான்‌. பெரிய வானசாஸ்திர நிபுணனாய்‌ இருப்பான்‌-- அவனும்‌ பார்ப்பான்‌ மூலம்‌ தன்‌ இறந்த தந்தைகீகு அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவான்‌. ஒருவன்‌ பெரிய உடற்கூறு சாஸ்திரியாய்‌ இருப்பான்‌--அவனு4 தன்‌ மனைவியையும்‌, மகளையும்‌ வீட்டுக்குத்‌ தூரம்‌ என்று வீட்டுத்‌ திண்ணையில்‌ தன்னி மூடி வைத்துவிட்டு, உள்ளே தாழ்ப்பாள்‌ போட்டுத்‌ தூங்குவான்‌. ஆகையால்‌, மனிதனுக்குப்‌ பகுத்தறிவும்‌ உலகக்‌ கல்வியும்‌ அறிய, பள்ளிக்கூடமும்‌ பட்டமுமே போதுமானதாகிவிடா. [நாமச்கல்லில்‌, 12-12-1937-ல்‌ சொற்பொழிவு--6 குடிஅரசு? 19-12-1937] www.thamizham.net - Free £ book No 3031 1172 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ தலைவரவர்களே ! பெரியோர்களே ! தோழர்களே 1 கூட்டங்களில்‌ கேள்வி கேட்பதுபற்றி நான்‌ சில விஷயங்களைக்‌ கூற ஆசைப்படு $றன்‌, பொறுப்பற்ற முறையிலும்‌ கூட்டத்திற்குச்‌ சம்பந்தப்படாத விஷயங்களைப்‌ பற்றியும்‌ பல கேள்விகள்‌ கேட்கப்படுவதால்‌, இதுபற்றி விளக்கம்‌ கூறுவது மிக அவசிய மாகிறது. சொற்பொழிவாளர்‌ பேசிய விஷயங்களைப்பற்றி மட்டும்‌ கேட்கப்படும்‌ கேன்விகள்தாம்‌ ¢ ரெலவென்ட்‌? (Relevent)—Qurmdswrar, சம்பந்தப்பட்ட கேள்வி களாகக கொள்ளப்படும்‌. மற்ற கேள்விகள்‌ நாகரிகமற்றவர்களால்கூட ஞானமற்றவரீகள்‌, காலிதீதனமாகக்‌ கேட்பவர்கள்‌, குழப்பதீதுக்காகக்‌ கேட்பவர்கள்‌, சுலபதீதில்‌ விளம்பரம்‌ பெற ஆசைப்படுபவர்கள்‌, மானத்தைப்பற்றிக்‌ கவலைப்படாதவர்கன்‌ ஆகிய தன்மை கொண்டவர்களின்‌ கேள்விகள்‌ என்றுதான்‌ செல்லப்படக்கூடும்‌. இப்படிப்பட்ட மக்களுக்கெல்லாம்‌ புத்தி கற்பிக்கவே, ஒழுங்காக நடந்துகொள்ளும்‌ வழியைக்‌ காட்டிக்கொடுக்கவே திராவிடர்‌ கழகம்‌ வேலைசெய்து வருவதால்‌, அதிகப்‌ பிரசங்கித்தனமான கேள்விகளைப்பற்றி இங்கு நான்‌ விளக்கிக்‌ கூறவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட பொருத்தமற்ற கேன்விகளைச்‌ சாதாரணமாகத்‌ தலைவர்‌ அனுமதிக்க மாட்டார்‌. எந்தக்‌ கேள்விக்கும்‌ ஏதாவது பதில்‌ சொல்லிச்‌ சமாதானம்‌ செய்யவேண்டு மென்று கருதுவதாலும்‌, இல்லாவிட்டால்‌ கேன்வி கேட்டவர்‌ நம்மை ஜெயிதீதுவிட்டதாகவோ அதற்குச்‌ சமாதானம்கூற நம்மால்‌ இியலவில்லையென்றோ தப்பாக நினைதீதுக்கொண்டு போவார்‌ என்பதற்காகவும்‌ திராவிடர்‌ கழகம்‌ ஒன்றுதான்‌ இதுவரை எப்படிப்பட்ட கேள்விகளையும்‌ அனுமதிதீதுப்‌ பதில்‌ சொல்லி வருகிறது. நீங்கள்‌ பத்திரிகையில்‌ பார்க்ீகலாம்‌-சொற்பொழிவாளர்‌ பேசியது சம்பந்தமான கேள்விகள்‌ கேட்கப்பட்டால்கூட காங்கிரஸ்‌ தோழர்களும்‌, கம்யூனிஸ்ட்‌ தோழர்களும்‌, மந்திரிகள்‌ உட்பட, பதில்‌ சொல்லாமல்‌ கூட்டத்தைச்‌ சீக்கிரம்‌ முடித்துக்கொண்டு நமுவி விடுவதை ! கேள்வி கேட்பதும்‌ அதற்குப்‌ பதில்‌ கூறப்படுவதும்‌ மேல்நாட்டுப்‌ பழக்கம்‌. அங்கு மன்னரைத்‌ தவிர்தீத யார்‌ பேசினாலும்‌, சொற்பொழிவாளர்‌ தனது பேச்சை முடித்து உட்கார்ந்ததும்‌, தலைவர்‌ கேள்விக்கு 10 நிமிஷம்‌ அல்லது ஒரு நேரம்‌ ஒ.துக்கப்பட்டிருப்ப தாகக்கூறி, கேள்வி கேட்கும்படி சொல்வார்‌. கூட்டத்தில்‌ நடந்த சங்கதிகளைப்பற்றிக்‌ கேட்பதுதான்‌ ஒழுங்கான கேள்வி என்று கருதப்படும்‌. உதாரணமாக, இப்போது நான்‌ பேசியதைக்‌ கேட்ட பின்பு, என்‌ சொற்பொழிவு முடிந்ததும்‌, ¢ திராவிட நாட்டு ஜனதீ தொகை 5 கோடி என்றிரே, 43 கோடிதானே ! என்றும்‌, ¢ திராவிடரை எப்படிப்‌ பிரிப்பது 8 என்றும்‌ நீங்கள்‌ கேட்கலாம்‌ ) இிது பொருதீதமானதாகக்‌ கருதப்படும்‌. அல்லது, ¢ முன்பு, கோவைக்‌ கூட்டத்தில்‌ திராவிட நாடு ஒரிஸ்ஸா மாகாணத்திலும்‌ ஒரு பகுதியையுடையது என்று கூறினீர்களே; இன்று சென்னை மாகாணம்தான்‌ என்று கூறுகிறீர்களே, எது சரி? என்று கேட்கலாம்‌. இதுவும்‌ பொருத்தமான கேள்விதான்‌. இதைவிட்டு, * உங்களுக்குத்‌ தாடி ஏன்‌ 8) ¢ அது ஏன்‌ வெளுப்பு 1? என்று நீங்கள்‌ இந்தக்‌ கூட்டத்தில்‌ கேட்பீர்களானால்‌ இது பொருதீதமற்றதாகவும்‌, குறும்புத்தனமானதென்றும்‌ கருதப்படும்‌. அல்லது, எவனுக்காவது தவறான வழியில்‌ மதிப்பு, விளம்பரம்‌ வாங்கிக்‌ கொடுக்க, ¢ குப்பனை ஏன்‌: கூட்டிவரவில்லை ₹, * சொக்கன்‌ எங்கக காணோமே 1 என்று கேட்பது வெட்கங்கெட்டு விளம்பரம்‌ தேடும்‌ கேள்வியாகும்‌. ஆகவே, தோழர்களே ! இனி, கேன்விகேட்கும்போது சற்று யோசிதீது, கூட்டதீதில்‌ பேசப்பட்ட விஷயதீதைப்‌ பொறுதீதிருகீகிறதா--உங்கள்‌ கேள்வி என்பதை முடிவு செய்து கொண்டு, கேள்வித்தாளை அனுப்பும்படிக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. கேள்வி உரிமையைப்‌ பாழாகீகிவிடாதீர்கள்‌ ] கேள்வி உரிமை இருந்தால்தான்‌ பேசுகிறவர்கள்‌ நாணயமாகப்‌ பேச முடியும்‌. . அதைக்‌ கெடுதீதுவிடாதீர்கள்‌, ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 தை கைதும்‌ அறிவு வளர்ச்சி 1173 நான்‌ கூட்டத்தில்‌ பேசாத விஷயங்களைப்பற்றி உங்களுக்குச்‌ சந்தேகங்கள்‌ இருக்குமானால்‌ அவற்றைத்‌ தனிமையில்‌ கேட்டு அறிந்து தெனிவடையவேண்டுகிறேன்‌. மாணவர்கள்‌ கனவான்களாக ஆகவேண்டும்‌) தறுதலைகளாக; அதிகப்‌ பிரசங்கிகளாக ஆகக்கூடாது. கூட்டத்தின்‌ மதிப்பைக்‌ கெடுத்துக்கொள்ளக்கூடாது. நான்‌ எந்தக்‌ கேள்விக்கும்‌ எனக்குப்‌ பட்டதைப்‌ பதிலாகச்‌ சொல்லிவிடுகிறேன்‌. அதனால்‌ பலர்‌. பாதிக்கப்படக்கூடும்‌) அதனால்‌ அவர்களுக்கு வேண்டியவர்கள்‌ மனம்‌ புண்படும்‌. ஆதலால்‌, சொற்பொழிவுக்குப்‌ பொருதீதமற்றதைக்‌ கேட்காதீர்கள்‌ | [சன்னையில்‌, 25-10-1947- சொற்பொழிவு-- குடி அரசு? 29-11-1947] 2. அயல்நாட்டு அனுபவங்கள்‌ 1. நமது மலாய்நாட்டு விஜயம்‌ நாம்‌ இவ்‌ வாரம்‌ மலாய்நாடு போகும்‌ விஷயம்‌ பதீதிரிகைகள்‌ மூலம்‌ வெளி வந்திருப்பதை வாசகர்கள்‌ அறியலாம்‌. மலாய்நாட்டிலுள்ள சுயமரியாதை இயக்கத்தில்‌ ஈடுபட்ட அன்பர்களும்‌ தொண்டர்களும்‌ வெகுநாட்களாக விரும்பியதற்கும்‌ நாமும்‌ சுயமரியாதை இயக்கதீதின்‌ அடிப்படையான கொள்கைகள்‌ உலகில்‌ உள்ள எல்லர மக்களிடையிலும்‌ பரவி நன்மை பயக்க வேண்டுமென எதிர்பார்தீதிருநீததற்கும்‌ ஏற்ப, நாம்‌ மலாய்நாடு செல்கிறோம்‌. நாம்‌ இப்போது அங்கே போவது நமது நாட்டிலுள்ள. வேலைகளை எல்லாம்‌ நாம்‌ முடிதீதுவிட்டோம்‌ என்ற கருதீதிலல்ல. பின்‌ என்னவெனில்‌, இந்த அய்ந்தாறு ஆண்டுகளாகச்‌ சுயமரியாதை இயக்கதீதின்‌ மூலமாக, மக்களிடையில்‌ இருக்கின்ற புரட்டுகளையும்‌ மூடநம்பிக்கைகளையும்‌ எப்படி இங்கு எடுத்துரைத்தோமோ அதேபோல்‌ மலாய்நாட்டில்‌ குடியேறியுள்ள தமிழ்‌ மக்களிடத்திலும்‌ நமது இயக்கத்தின்‌. கொள்கைகளை நேரில்‌ எடுத்துச்‌ சொல்லவேண்டுமென்ற ஆசையினால்தான்‌, நாம்‌ இப்போது மலாய்நாடு செல்கிறோம்‌. தாய்நாட்டிலிருநீது கிதர இடங்களாகிய மலேயா, தென்னாப்பிரிக்கா முதலான அயல்நாடுகளுக்கு ஜீவனதீதிற்காகக்‌ குடியேறிய நமது ஏழை மக்களோடு கூடவே பார்ப்பனியமும்‌ குடியேறி இருக்கிறது. என்பதை வாசகர்கள்‌ ஆஹாபகதீதில்‌ வைக்கும்படி கோருகிறோம்‌. தேக உழைப்பினால்‌ பாடுபட்டுச்‌ சம்பா திதீதும்‌ பாமர மக்களுடைய ஊதியத்தை மதம்‌, கடவுள்‌, வேதம்‌, சாதீதிரம்‌, புராணம்‌ என்ற பெயர்களினால்‌ கொள்ளையடித்து, நகதீதில்‌ அழுக்குப்படாமல்‌ ஏமாற்றி, வயிறு வளர்க்கக்‌ கூடிய பார்ப்பனர்கள்‌ நமது நாட்டில்‌ எவ்வளவு தீங்குகளை இழைத்திருக்கின்றார்களோ: அதேமாதிரி ஏனைய நாடுகளில்‌ குடியேறிய மக்களையும்‌ முன்னேறவிடாமல்‌ அழுத்திக்‌ கொண்டு இருக்கின்றார்கள்‌ என்பதை நாம்‌ நன்கு அறிவோம்‌. உதாரணமாக, நான்‌ இப்போது போகக்கூடிய மலேயாநாடுகளில்‌ மசீகளின்‌. முன்னேற்றத்திற்குத்‌ தடையாகப்‌ பார்ப்பனர்கள்‌ செய்துவரும்‌ இடைஞ்சல்களை நாம்‌ அடிக்கடி கடிதங்கள்‌ மூலமாகவும்‌, பதீதிரிகைகள்‌ மூலமாகவும்‌, தெளிவாய்‌ அறிந்திருக்‌ கிறோம்‌. சுயமரியாதை இயக்கத்தின்‌ தத்துவங்களையும்‌ அதன்‌ முற்போக்கான. கருத்துக்‌ களையும்‌ மக்கள்‌ நன்குணர்ந்து அதன்படி நல்லறிவுபெற்று மூடநம்பிக்கைகளையும்‌, குருட்டுத்தனமான பழக்கங்களையும்‌ கொஞ்சங்கொஞ்சமாய்‌ ஒழித்து, சகலசாதி மக்களும்‌ ஒற்றுமைப்பட்டு வருவதைப்‌ பொறுக்காத பார்ப்பனர்களும்‌ அவர்களது கூலிகளும்‌ சில மாதங்களாகத்‌ தவறான முறைகளில்‌ எல்லாம்‌ சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்க ஆரம்பிதீதிருக்கிறார்கள்‌. உதாரணமாக, பார்ப்பனியமும்‌, புரோகிதமும்‌, அர்த்தமற்ற சடங்குகளும்‌ இல்லாமல்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ முறைப்படி நடக்கும்‌ எண்ணிறந்த www.thamizham.net - Free £ book 14௦ 3031 1174 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ திருமணங்கள்‌ சட்டப்படி செல்லாதவைகள்‌ என்று ருசுப்படுதீதுவதற்கும்‌ தங்களுடைய ஆதிக்கத்தை எப்போதும்போல்‌ மக்களிடத்தில்‌ நிலைநாட்டுவதற்கும்‌ பார்ப்பனர்கள்‌ செய்துவரும்‌ முயற்சிகள்‌ கொஞ்சமல்ல. அவர்களுடைய முயற்சிகள்‌ பலன்தரலாம்‌ என்று எதிர்பார்‌ தீத நாட்களெல்லாம்‌ போய்‌ மக்களுக்குப்‌ பகுதீதறிவு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால்‌ இத்தகைய சூழ்ச்சிகளை மக்களே எதிர்தீதுப்‌ போராடி வென்றுவிடுவார்கள்‌ என்ற பூரண நம்பிக்கை நமக்குண்டு. ஏனெனில்‌, வெகுநாட்களாக ஏமாற்றிக்கொண்டே வந்த ஒருவன்‌ தான்‌ ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னுங்கூட, மேலும்‌ மேலும்‌ ஏமாறிக்கொண்டே இருப்பதற்கு அவனது அறிவு இிடங்கொடாது என்பது நமகீகுதீ தெரியும்‌. இந்தமாதிரி சூழ்ச்சிகள்‌ ஒருபக்கம்‌ இருக்க, சுயமரியாதை இயக்கத்தை அழிப்பதற்கு: என்றே சில இந்‌துமதச்‌ சங்கங்கள்‌ எனப்படுபவை ஏற்படுதீதப்பட்டிருக்கின்‌ றனவென்றால்‌ சுயமரியாதை இயக்கம்‌ எவ்வளவு தூரம்‌ மலாய்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்களையும்‌ அவர்களது கூலிகளையும்‌ பாதிக்கிறது என்பதை நன்கு உணரலாம்‌. இதர தமிழ்‌ ஆங்கிலப்‌ பதீதிரிகை களைவிட மிகவும்‌ அதிகமாக நமது ¢ குடிஅரசு? மலாய்‌ நாடுகளில்‌ பரவி இருந்தாலுங்கூட அதுமாதீதிரம்‌ போதாமல்‌, அவ்விடத்திலேயே * முன்னேற்றம்‌? போன்ற பத்திரிகைகளை நமது அன்பர்கள்‌ ஆரம்பித்து, அவைகளும்‌ ஏற்பட்ட சில மாதங்களுக்குளன்ளாகவே ஆயிரக்‌ கணக்காய்ப்‌ பரவ ஆரம்பிதீதிருக்கின்‌ றன என்றால்‌, சுயமரியாதை உணர்ச்சி மக்களிடத்தில்‌ எவ்வளவு தூரம்‌ செலாவணி ஆகியிருக்கிறது என்பதை வாசகர்களே ஊகிதீதுகீ கொள்ளலாம்‌. நமது இயக்கதீதிற்கு இிதீதகைய எதிர்ப்புகள்‌ வருவதால்‌ நமகீகுச்‌ சற்றும்‌ கவலை யில்லை. அவைகளினுடைய கதி என்னவாகும்‌ என்பது நமது நாட்டில்‌ செவ்வாய்க்கிழமை தாலிகட்டி புதன்கிழமை அறுதீதுப்போன ஆதீதிகச்‌ சங்கத்தை உணர்நீதவர்களுக்கு நன்கு தெரியும்‌. செங்கற்பட்டில்‌ கூடிய முதலாவது சுயமரியாதை மாநாட்டின்‌ தீர்மானங்‌ களையும்‌ அவைகளை நடைமுறையில்‌ நடத்தி ஆதரவளித்த எண்ணிறந்த மக்களையும்‌ பார்தீதுதீ திகலடைந்த பார்ப்பனர்கள்‌, சில கூலிகளைப்பிடிதீது ஆதீதிகச்‌ சங்கம்‌ என்பதாக ஒன்று ஸ்தாபித்து, அவர்களது கைகள்‌ ஒயும்வரையும்‌ நம்மையும்‌ நமது அன்பர்களையும்‌ கண்டவாறெல்லாம்‌ தூஷிதீதும்‌ அவதூறாகதீ தூற்றியும்‌ பார்‌ தீது, ஒருவாறாக அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து விட்டார்கள்‌. கடவுள்‌ உண்டு என்பதை ஸ்தாபிப்பதற்காக ஏற்படுதீதப்‌ பட்ட ஒரு சங்கதீதின்‌ நிலைமை இவ்வாறு ஆகியிருக்கிறது என்பதை வாசகர்கள்‌ எப்போதும்‌ ஞாபகத்தில்‌ வைதீதிருக்குமாறு விரும்புகிறோம்‌. இதே மாதிரியாகத்தான்‌ மலாய்‌ நாட்டிலும்‌ இந்துமதம்‌ என்பதைக்‌ காப்பாற்று வதற்காக ஏற்படுதீதப்பட்டிருக்கும்‌ சங்கங்களைப்பற்றியோ அவைகளின்‌ கர்தீதாக்களைப்‌ பற்றியோ நமகீகுச்‌ சற்றேனும்‌ கவலையில்லை. ஏனெனில்‌, இந்து மதம்‌ யாருக்காக ஏற்பட்டது, யார்‌ ஏற்படுத்தியது, எப்போது, எந்தக்‌ கருதீதினால்‌ ஏற்படுத்தப்பட்ட தென்பதை நமது மக்கள்‌ வெட்டவெளிச்சமாகத்‌ தெரிந்துகொண்டு விட்டார்‌ களாதலால்‌, மதம்‌ போச்சு. என்ற பொய்க்‌ கூசீசலின்‌ மூலமாய்‌ இனி மக்களை ஏமாற்றவோ அடிமைப்‌ படுத்தவோ ஒருவராலும்‌ மூடியாது என்ற உறுதியான நம்பிக்கை நமக்குண்டு, பராசரஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகளிலும்‌ இந்து மததீதிற்கு ஆதாரமான வேதங்‌ களிலும்‌ தற்காலதீதிற்கு ஏலாததும்‌ மனிதனது பகுத்தறிவுக்கு முரண்பட்டதுமான கருதீதுக்களே அடங்கி இருக்கின்றன என்பதை நிச்சயமாய்‌ அறிந்துகொண்ட நமது மக்களிடம்‌ இந்து மதம்‌ என்ற பூச்சாண்டியைக்‌ காண்பிதீது இனியும்‌ ஏமாற்றலாம்‌ என்று யாராவது எண்ணியிருப்பார்களானால்‌ அவர்களுக்காக நாம்‌ பெரிதும்‌ இரங்குகிறோம்‌. இந்துமதம்‌ என்பதற்கு அடிப்படையாகச்‌ சொல்லப்படுகின்ற வேதங்கள்‌ ஸ்மிருதிகள்‌ இவைகளின்‌ நிலைமையே ததீதவிதீதுக்கொண்டு இருக்கும்போது, அவைகளின்‌ மேற்‌ கட்டடமாகிய இந்து மதத்தின்‌ கதி என்னவாகுமென்று நாம்‌ சொல்லவேண்டியதில்லை, www.thamizham.net - Free £ book 14௦ 3031 அவ்வக்‌ வவ வடிவு கண்வ எவ வாலா வவ அறிவு வளர்ச்சி 175 ஆகையால்‌, இந்து மதத்தைக்‌ காப்பாற்றுவதாகச்‌ சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கப்‌ புறப்பட்டிருக்கும்‌ கூட்டத்தார்கள்‌ இனியாகிலும்‌ காலதேச வர்தீத மானதீதை உணர்ந்து, யோக்கியமான முறையில்‌ உழைதீதுதீ தங்கள்‌ வாழ்க்கையைப்‌ பரிசு தீதமான வழிகவில்‌ தடதீதவேண்டும்‌. தவறுவார்களானால்‌ மக்களுக்குள்‌ அனாவசிய மான வேறுபாடுகளும்‌ மதப்‌ பூசல்களும்‌ சாதிச்‌ சண்டைகளும்‌ உண்டாகி, அதனால்‌ மனித சமூகதீதின்‌ முன்னேற்றமும்‌ தடைப்படும்‌ என்று எச்சரிக்கை செய்கிறோம்‌. கடைசியாக, நமது மலாய்‌ நாட்டுப்‌ பிரயாணதீதைப்பற்றிய விஷமப்‌ பிரசீசாரங்‌ களைப்‌ பற்றியும்‌ சிறிது உறுதியாய்க்‌ கூற விரும்புகிறோம்‌. நாம்‌ மலாய்‌ நாடு போவதாலும்‌ அவ்விடதீதில்‌ நமது இயக்கதீதின்‌ கொள்கைகளை எடுத்து மக்களுக்குச்‌ சொல்வதாலும்‌ சில சுயநலக்‌ கூட்டதீதார்கீகு ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த சிலர்‌, தங்களுடைய ஆதிக்கதீதிற்கு அழிவுகாலம்‌ கிட்டிவிட்டதென்று பயந்து, நம்மை அவ்விடம்‌ வரவொட்டாது தடுக்ீகவேண்டிய முயற்சிகளைப்‌ பல வழிகளிலும்‌ செய்யதீ தொடங்கி இருப்பதாகவும்‌ அறிகிறோம்‌. இந்த நாட்டில்‌ உள்ளதுபோலவே அங்கும்‌ சர்க்காருக்கு உள்‌ உளவாய்‌ இருக்கின்ற பார்ப்பனர்கள்‌, சர்க்கார்‌ மூலமாக நம்மைப்பற்றிப்‌ பொய்யும்‌ புரட்டும்‌ சொல்லி நம்மைதீ தடுப்பதற்கு வேண்டிய சூழ்ச்சிகள்‌ எல்லாம்‌ செய்து வருகின்றார்கள்‌ என்று கேள்விப்படுகிறோம்‌. இவைகளெல்லாம்‌ உண்மையாய்‌ இருக்கு மாயின்‌, இத்தகைய மேல்மிரட்டல்கனால்‌ நமது இயக்கத்தின்‌ இலட்சியங்களை நாம்‌ சொல்லாமலோ அல்லது அதன்‌ நன்மைகளை மக்களுக்கு விளக்காமலோ இருக்கப்‌ போவ தில்லை என்பதை மாத்திரம்‌ உறுதியாய்க்‌ கூறுவோம்‌. ஆனால்‌, நான்‌ வெகுநாட்களாகச்‌ சொல்லி வந்தபடி அரசியலைவிடச்‌ சமூக மத விஷயங்களைப்‌ பிரதானமாகக்கொண்டு, நமது சுற்றுப்பயணத்தை முடிதீதுவருவதாக நாம்‌ உத்தேசிதீதிருக்கிறோம்‌. அரசியல்‌ சம்பந்தமான பிரச்சினைகள்பற்றி நமக்குத்‌ தற்போது அதிகக்‌ கவலையில்லை. ஆதலால்‌ அது சம்பந்தமாக நாம்‌ ஒன்றும்‌ பேசப்போவதுமில்லை. ஆனால்‌, சமூக மதச்‌ சீர்திருத்தங்கள்‌ சம்பந்தமாகச்‌ செய்யப்போகும்‌ நமது பிரசீசாரதீதிற்கு மாதீதிரம்‌, பார்ப்பனர்கள்‌ பேச்சைக்‌ கேட்டுக்கொண்டு மலேயா கவர்ன்மென்டார்‌ ஏதேனும்‌ முட்டுக்‌ கட்டையாக இருக்க முயலுவார்களேயானால்‌, அதற்காக நாம்‌ நமது வேலையில்‌ சற்றேனும்‌ பின்வாங்கப்போவதில்லை என்பதை மாதீதிரம்‌ நிசீசயமாய்க்‌ கூறுவதோடு, அதனால்‌ ஏற்படக்கூடிய எவ்விதக்‌ கஷ்ட நஷ்டங்களுக்கும்‌ நாம்‌ தயாராகவே இருக்கின்றோம்‌. என்பதை வாசகர்களுக்கு வணக்கமாய்தீ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. [t குடி அரசு: 3-தலையங்கம்‌--15-12-1929] 2. மலேயா இந்தியர்க்கு சகோதரர்களே | இன்று இங்கு நடந்த மாநாட்டின்‌ நடவடிக்கையைப்‌ பார்த்தேன்‌. இது எங்கள்‌ நாட்டில்‌ காங்கிரசின்‌ ஆரம்பகால நடவடிக்கைகளை ஒதீதிருக்கின்றது. அதாவது, இந்தியப்‌ பொது மகீகளுடையவும்‌, பாமர மகீகளுடையவும்‌ நன்மைகீகரகவென்று தான்‌ ஆதியில்‌ காங்கிரஸ்‌ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால்‌, கிதை ஆரம்பித்தவர்களில்‌, அரசாங்க உதீதியோகதீதை நம்பி ஆங்கிலம்‌ படித்துவிட்டு உதீதியோகத்திற்கும்‌, தங்கள்‌: சொந்த வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ வகை எதிர்பார்‌ தீத மக்களே முதன்மையாய்‌ இருந்தார்கள்‌. அம்‌ மாநாடுகளில்‌ தங்கள்‌ உத்தியோகதீதிற்கு ஏற்ற பல தீர்மானங்கள்‌ செய்துவிட்டு, பாமர மக்களை ஏமாற்ற--ரோடுகள்‌ போடவேண்டும்‌ ) வரி குறைக்கவேண்டும்‌ ; காடு திருத்த வேண்டும்‌--என்பனபோன்ற சில காகிததீ தீர்மானத்தையும்‌ செய்வார்கள்‌. காரியத்தில்‌ சீர்திருத்தம்‌ என்ற பேரால்‌ கொழுத்த சம்பளமுன்ள சில உதீதியோகங்களை அந்தப்‌ படித்த கூட்டத்தினர்‌ அனுபவிக்கவும்‌ அதற்காக வரிகள்‌ உயர்‌ தீதவும்‌ நேர்ந்ததைதீ தவிர, அதற்குதீ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1176 பெரியார்‌ ஈட வெ, ரா, சிந்தனைகள்‌ தகுந்தபடி வரிகளும்‌ உதீதி3யோகங்களும்‌ அரசாங்க அதிகாரங்களும்‌ மற்றும்‌ தொல்லை களும்‌ பெருகினவே தவிர, வேறு யாதொரு பலனும்‌ ஏற்படவில்லை. சம்பளமும்‌ உத்தியோகமும்‌ பெருகினதின்‌ காரணமாய்க்‌ கட்சிகளும்‌ உட்பிரிவுகளும்‌ ஏற்படவேண்டியதாகிவிட்டது. ஏனென்றால்‌, ஸ்தாபனங்களில்‌ முக்கியஸ்தர்களாக இருக்‌ கின்றவர்கள்‌ அதனால்‌ ஏற்படும்‌ உதீதியோகங்கள்‌ எல்லாம்‌ தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும்‌, மற்றவர்களுக்கும்‌ பங்கு கொடுக்காமல்‌ ஏமாற்ற சூழ்ச்சி செய்வதாலும்‌, மற்றவர்கள்‌ பிரிநீதுபோய்‌ வேறு ஸ்தாபனங்கள்‌ ஏற்படுத்திக்கொண்டு தாங்கள்‌ தலைவர்‌ களாவதும்‌, பிறகு அதுபோலவே அதிலிருந்து பலர்‌ பிரிந்துபோவதும்‌, சாத்தியப்படாத வர்கள்‌ சாதி, மத வகுப்புக்களின்‌ பேரால்‌ ஸ்தாபனங்களை ஏற்படுதீதிக்கொண்டு பாதீதியம்‌ கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. எங்கள்‌ நாட்டில்‌ உள்ள இவ்வளவு அரசியல்‌, மதவியல்‌, சாதி வகுப்பியல்‌, சமூகவியல்‌ ஆகியவைகளின்‌ பேரால்‌ ஏற்பட்டதான கட்சி களும்‌ ஸ்தாபனங்களும்‌, காங்கிரஸ்‌ ஏற்பட்டதினாலும்‌ அதில்‌ உள்ளவர்கவின்‌ சூழ்சீசியாலும்‌ அவர்களைப்‌ பின்பற்றியும்‌ ஏற்பட்டதேயொழிய வேறில்லை. ஆகையால்‌, இந்த மாநாடு எங்கள்‌ நாட்டுக்‌ காங்கிரசைப்‌ பின்பற்றாமல்‌, அரசாங்கதீதாரே-உதீதியோகமும்‌ பதவியும்‌ கேட்காமல்‌, நாட்டின்‌ நலனுக்கும்‌ பொதுமக்கள்‌ நன்மைக்குமான முறையில்‌ ஆட்சி செலுத்தும்படி அவர்களைக்‌ கட்டாயப்படுதீதும்‌ மாதிரியில்‌ நடந்துகொள்ளவேண்டும்‌. அதற்கு மார்க்கம்‌, மக்களை ஒன்றுபடுத்தி'அவர்களுக்கு அறிவையும்‌ சுயமரியாதையையும்‌ உண்டாக்குவதே தவிர, உதீதியோகங்களை இந்திய மயமாக்கவேண்டும்‌ என்பதல்ல என்பதே எனது அபிப்பிராயம்‌. இந்தியர்கள்‌ என்பவர்களாகிய நாம்‌ ஒரு மதம்‌, ஒரு சாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம்‌ என்று சொல்லிக்கொள்ளக்‌ கூடிய நிலையில இல்லைஃ முதலாவது, இலட்சியதீதை ஒன்றுபடுத்திக்கொண்டாலொழிய ஒரு காரியமும்‌ செய்ய முடியாது. ஆதலால்‌, நீங்கள்‌ ஏதாவது எங்கன்‌ காங்கிரசைப்‌ பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும்‌ இந்தியாவைப்போல்‌ பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி வரும்‌ ஏழை களுக்கும்‌ தொல்லை விளைவித்து, அவர்களை இங்கிருந்து கினி வேறு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவீர்களோ என்று பயப்படுகிறேன்‌. [சிங்கப்பூர்‌ டவுன்‌ ஹாலில்‌, 26-12-1929-ல்‌ நடந்த மலேயர்‌ இந்தியன்‌ அசோசியேஷன்‌ மாநாட்டில்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 2-2-1930] 8. அயல்‌ நாட்டு அனுபவங்கள்‌ மலாய்‌ பிரயாணத்தைப்பற்றி நாம்‌ சிறிதும்‌ நினைதீதிருக்காத நிலையில்‌ திரு. சாமி அற்புதானந்தா அவர்களால்‌ எழுதப்பட்ட ஒரு கடிதம்‌ வந்தது. அக்‌ கடிததீதில்‌ மலாய்‌. நாட்டில்‌ சுயமரியாதை இயக்கக்‌ கொள்கை உணர்ச்சி விசேஷமாய்‌ பரவி வருகின்ற தெனினும்‌, சில விஷமகீகாரர்கள்‌ சுயநலதீதின்‌ காரணமாய்‌ இந்துமதத்தின்‌ பேரால்‌ தொல்லை விளைவிக்கின் றார்கள்‌ எனவும்‌, சுயமரியாதைக்காரர்களுக்கு, * இந்துக்களைப்‌ புதைக்கும்‌ சுடுகாட்டில்கூட இடம்‌ கொடுக்கக்கூடாது? என்று இந்துமதச்‌ சங்கத்தில்‌ தீர்மானங்கள்‌ கொண்டு வந்ததாகவும்‌, சுயமரியாதைக்‌ கல்யாணங்களைச்‌ சர்கீகார்‌ ஒப்புக்‌ கொள்ளக்க.டாரது என்று விஷமம்‌ செய்கின்றார்கன்‌ எனவும்‌, ஒருமுறை வந்துபோனால்‌ மிக்க அனுகூலமாய்‌ இருக்குமென்றும்‌ பொருள்பட எழுதி இருந்தார்‌. இதைப்‌ பார்த்ததும்‌ அதுசமயம்‌ போய்தீதான்‌ பார்க்கலாமா என்பதாக ஒரு எண்ணம்‌ தோன்றியதால்‌, கிது சமயம்‌ சிறிது வேலை இருக்கின்றதென்றும்‌, ஒன்று இரண்டு மாதம்‌ பொறுத்து முயற்சிப்ப தாகவும்‌ ஆனால்‌ அங்குள்ள * முன்னேற்றம்‌? பத்திராதிபரையும்‌ திரு. காளியப்பனையும்‌ கலந்து, அவர்களைக்கொண்டு எழுதும்படியும்‌ பதில்‌ எழுதினோம்‌, இப்படி இருக்க ஒரு மாதம்‌ கழித்து, திடீர்‌ என்று 15 நான்‌ சாவகரசத்தில்‌ புறப்படும்படி நிகழ்ச்சிக்‌ குறிப்புடன்‌: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 வறிவு வளர்ச்சி 1177 ஒரு கடிதம்‌ வந்தது. அக்‌ கடிததீதிற்கு, வர முடியாது என்று எழுதியதுடன்‌ அந்‌ நிகழ்சீசிக்‌ குறிப்புக்கள்‌ மற்ற பதீதிரிகைகளுக்கும்‌ அனுப்பப்பட்டதாய்தீி தெரிந்ததால்‌ அதை பிரசுரிக்க வேண்டாம்‌ என்று தகவலும்‌ அனுப்பிவிட்டோம்‌. தவிர, திருவாளர்கள்‌ சாரங்க பாணி, காளியப்பன்‌ இவர்கள்‌ கடிதமும்‌ இதை அனுசரித்துப்‌ புறப்படும்படியாகவே கிடைத்தது. எல்லாவற்றிற்குமாக ஒரு நீண்ட தந்தி ஒன்றை--சென்னையிலிருந்து *குடிஅரசு? ஆபீசு ஈரோட்டிற்கு மாற்றப்படவேண்டி இருப்பதாகவும்‌ நாகர்கோவில்‌ மாநாட்டிற்காகவும்‌, பார்ப்பனர்‌ அல்லாதார்கீகுள்ளாகவே கட்சிப்‌ பிளவு-தகராறுகள்‌ இருப்ப தாலும்‌, இதுசமயம்‌ கண்டிப்பாய்‌ வருவதற்குச்‌ சவுகரியம்‌ இல்லை என்பதாகத்‌ தந்தி கொடுத்தோம்‌. இதற்குப்‌ பதிலாக; 6000 டாலர்கள்‌ (பதினாயிரம்‌ ரூபாய்கள்‌) செலவழித்துச்‌ செய்த மாநாட்டு ஏற்பாடுகளும்‌, வரவேற்பு ஏற்பாடுகளும்‌ வீணாய்விடும்‌. வராவிட்டால்‌ சுயமரியாதை இயக்கதீதில்‌ ஈடுபட்டவர்களுடைய நிலைமை நெருக்கடியாகிவிடும்‌ ? என்று. திருவாளர்கள்‌ சாரங்கபாணியும்‌ காளியப்பனும்‌ தந்தியடி தீதார்கள்‌, அதைப்பார் தீத இவ்‌: விடதீதிய நமது நண்பர்கள்‌ கண்டிப்பாய்ப்‌ போகவேண்‌ டுமென்றும்‌, இவ்‌ விடதீதிய காரியங்‌ களை எல்லாம்‌ தாங்கள்‌ சரியாய்ப்‌ பார்தீ.துக்கொள்வதாகவும்‌ சொன்னதோடு, கைவல்ய சாமியாரும்‌ கண்டிப்பாய்ப்‌ போகவேண்டுமென்று சொன்னார்கள்‌. இவைகளை அனுசரித்‌ இப்‌ போவதாகத்‌ தீர்மானித்து, ஒரு தந்தியை சிங்கப்பூருக்கு திரு. சாரங்கபாணிக்குக்‌ கொடுத்துவிட்டோம்‌. அதற்குப்‌ பதிலாக திரு. சாரங்கபாணி அவர்களால்‌, நமது வருகைக்கு அவ்விடம்‌ இநீதுசபையார்‌ பெரிய எதிர்ப்பு செய்கிறார்கள்‌ என்றும்‌, அதனால்‌ அவ்விடதீதிய சர்க்கார்‌ நம்மைக்‌ கப்பல்‌ விட்டு கிறங்க அனுமதிகீகமாட்டார்கள்‌ பால்‌ இருக்கின்ற தென்றும்‌, இறங்கவிட்டாலும்‌ பேசவிடமாட்டார்கள்‌ என்றும்‌, தகுந்த ஏற்பாட்டுடன்‌ கண்டிப்‌ பாய்‌ வரவேண்டும்‌ என்றும்‌ தந்தி கொடுத்திருந்தார்‌. இ.து டிசம்பர்‌ மாதம்‌ 9ஆம்‌ தேதி கிடைத்தது. அதைப்‌ பார்தீதபிறகு, கப்பல்‌ ஏறும்நாள்‌ மிகச்‌ சமீபத்தில்‌ இருந்ததால்‌, அதாவது 11ஆம்‌ தேதியாய்‌ இருந்ததால்‌ ஒன்றும்‌ செய்யமுடியாமல்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருந்தோம்‌. இந்த நிலையில்‌ மாநாடு ஒதீதிவைக்கப்பட்டுவிட்டது. கப்பல்‌ ஏற வேண்டாம்‌ ; கடிதம்‌ பார்‌? என்பதாக மாநாட்டு வரவேற்புத்‌ தலைவரான திரு. அய்யாறு அவர்கள்‌ பெயரால்‌ பினாங்கிலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. இதைப்‌ பார்‌ தீததும்‌ கஷ்டம்‌ ஒழிந்தது என்று மெத்த சந்தோஷமாக இருந்தோம்‌. ஆனால்‌, இங்குள்ள நண்பர்களும்‌ நமது தமையனாரும்‌ இந்தத்‌ தந்தி பொய்யாய்‌ இருக்குமென்றும்‌, மறுபடியும்‌ தந்தி கொடுத்துக்‌ கேட்கவேண்டுமென்றும்‌ சொன்னதால்‌ மறுபடியும்‌, இப்படி ஒரு தந்தி கிடைதீ தது) அது உண்மையா?! என்று கேட்டோம்‌. அதற்குப்‌ பதில்‌, பினாங்கு தந்தி பொய்‌; கண்டிப்பாய்ப்‌ புறப்படு) பயணத்தை உறுதிப்‌ படுத்து? என்று பதில்‌ 11ஆம்‌ தேதி கிடைத்தது. இதைப்‌ பார்தீதபிறகு மறுபடியும்‌ கவலை ஏற்பட்டது. ஏனெனில்‌, அவ்‌ விடதீதிய சர்க்கார்‌ நம்மைக்‌ கப்பலைவிட்டு இறக்காமல்‌ பாரிஸ்டர்‌ திரு, மணிலால்‌ அவர்‌ களைச்‌ செய்ததுபோல்‌ செய்துவிட்டால்‌ நாம்‌ என்ன செய்வது என்கின்ற கவலை தவிர வேறு இல்லை. இதன்பேரில்‌ சென்னை அரசாங்க பிரதம அதிகாரிகளைக்‌ கேட்கச்‌ செய்த தில்‌, அவர்கள்‌ மலாய்‌ அரசாங்கத்தில்‌ தாங்கள்‌ பிரவேசிக்க முடியாது என்று ஒரே வார்த்தை யால்‌ முடிதீது விட்டார்களாம்‌. பிறகு எப்படியானாலும்‌ சரி, இவ்வியக்கம்‌ காரணமாக வந்ததை அனுபவிப்போம்‌ என்றே புறப்பட்டோம்‌. நாள்‌ சுருக்கமாக இருந்ததால்‌ 11ஆம்‌ தேதி சென்னையில்‌ கப்பலேற முடியாமல்‌ 13ஆம்‌ தேதி நாகைக்குப்‌ புறப்பட்டு அங்கிருந்து 15ஆம்‌ தேதி கப்பலேறிவிட்டோம்‌, கப்பலில்‌ கம்பியில்லாதீ தநீதி மூலமாய்‌ பல வரவேற்புதீ தந்திகள்‌ கிடைதீதுக்கொண் டிருந்தாலும்‌ சற்றுக்‌ கவலையுடனேயேதான்‌ கப்பல்‌ பிரயாணம்‌ செய்தோம்‌. நாங்கள்‌, பினாங்கு துறைமுகத்திற்கு ¢ மைல்‌ தூரத்தில்‌ கப்பல்‌ நின்றிருக்கும்போதே ஒரு வெள்ளைக்காரச்‌ சாதாரண அதிகாரியும்‌ மற்றொரு இராணுவ உடை தரித்த வெள்ளைக்கார: அதிகாரியும்‌ சில போலீசுக்காரரும்‌ நம்மிடம்‌ வருவதைப்‌ பார்தீததும்‌, ¢ சரி, நமக்குத்‌ தடை 1686—148 www.thamizham.net - Free E book No 3031 1178 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ உதீதரவு வந்துவிட்டது? என்று முடிவு செய்துகொண்டு, மனதில்‌ நம்மையறியாமல்‌ ஏற்பட்ட ஒருவிததீ திகிலுடன்‌, முகத்தை மாத்திரம்‌ சிரிப்பாகக்‌ காட்டிக்‌ கொண்டு நின்றோம்‌, அவர்கள்‌ இருவர்களும்‌ கிட்ட வந்ததும்‌ சலாம்‌ செய்து, ஒருவர்‌ அசிஸ்டண்ட்‌ கண்ட்ரோலர்‌ என்றும்‌, மற்றவர்‌ சார்‌ ஜண்ட்‌ என்றும்‌ தாங்களே அறிமுகம்‌ செய்து கொண்டார்கள்‌. பிறகு பேச ஆரம்பித்ததும்‌ என்னிடம்‌ பேசவேண்டியவைகளை தீ திரு. இராமநாதன்‌ அவர்‌. களிடம்‌ சொல்லும்படி சொன்னோம்‌. பிறகு அவர்‌ பேசும்போதே ஒருவிததீ தைரியம்‌ வந்தது. அதற்குள்‌ பினாங்கிலிருந்து சில சங்கத்து நண்பர்கள்‌ வந்து ஒரு கடிதம்‌ கொடுதீ தார்கள்‌. அதில்‌ இதைப்பற்றிய காரியம்‌ ஒன்றுமில்லாமல்‌ நிகழ்ச்சிக்‌ குறிப்பு கிருந்ததால்‌ அந்தக்‌ கவலை நீங்கிவிட்டது. இதற்குள்‌ மற்றொரு படகில்‌ சாமி அற்புதான ந்தா, சுப்பிரமணியம்‌ முதலியவர்களும்‌ மற்றும்‌ சில இந்து, முகம்மதிய கனவான்களும்‌ வருவதைப்‌ பார்த்தோம்‌. இறங்கவிடமாட்டார்களே என்று நினைத்த எண்ணம்போய்‌, இவ்வளவு ஆடம்பரம்‌ வேண்டாம்‌ என்று சொல்லவேண்டிய நிலைமை வந்துவிட்டது. பினாங்கில்‌ இறங்கியவுடன்‌ பலவிதமான விஷயங்கள்‌ காதுக்கு வந்தன. அவற்றுள்‌ ஒன்று, நம்மைக்‌ கதீதியால்‌ குதீ.துவதற்கு ஒரு நபருக்கு 500 வெள்ளி பேசி ஏற்பாடு செய்‌ திருப்பதாகவும்‌, நாம்‌ போகும்‌ இடங்களிலெல்லாம்‌ கலகம்‌ செய்வதற்கும்‌ துண்டுப்‌ பிரசுரங்கள்‌ போட்டு வழங்கி வருவதற்கும்‌ 500 வெள்ளி பேசி பலரை நியமித்து இருப்பதாகவும்‌, மற்றும்‌ கிறிஸ்குவுக்கு விரோதமாய்ப்‌ பேசின தாகவும்‌ சொன்னதாகவும்‌, முகம்மதுநபிக்கு விரோத மாய்ப்‌ பேசின தாகவும்‌, இந்து மதத்தை ஒழித்து இந்துக்களை முகம்மதிய மதத்தில்‌ சேர்ப்பிக்க முகம்மதியரிடம்‌ பணம்‌ வாங்கிக்கொண்டு மலாய்‌ நாட்டிற்கு வருவதாகவும்‌, பிரிட்டிஷ்‌ அரசாங்கத்திற்கு விரோதமாய்‌ ஒதீதுழையாமைப்‌ பிரச்சாரம்‌ செய்ய வருவ தாகவும்‌, போல்‌ ஷிவிசம்‌ பிரச்சாரம்‌ செய்ய வருவதாகவும்‌ இன்னும்‌ பலவிதமாகத்‌ துண்டுப்‌ பிரசுரங்கள்‌ மூலமாகவும்‌, பத்திரிகை மூலமாகவும்‌ பிரச்சாரம்‌ செய்திருந்த விஷயம்‌ நேரில்‌ பார்தீ3தாம்‌. தவிரவும்‌ அவ்விடதீதிய ஓர்‌ ஆங்கில தினசரிப்‌ பத்திரிகை, அரசாங்கதீதிற்கும்‌ சட்டசபை அங்கத்தினர்‌ களுக்கும்‌ நாம்‌ பெரிய கலகக்காரர்‌ என்றும்‌, நம்மை மலாய்‌ நாட்டில்‌ விட்டால்‌ ஜன சமூகத்தின்‌ சாந்த குணம்‌ கெட்டு, சர்க்காருக்குதி தொல்லை ஏற்படு மென்றும்‌, எச்சரிக்கை செய்வதாக ஒருவாரம்‌ தவறாமல்‌ தலையங்கமும்‌, உபதலையங்கமும்‌ எழுதி வந்தது. கிதுநிற்க, * தமிழ்நேசன்‌? பத்திரிகைக்காரரான ஓர்‌ அய்யங்கார்‌ ஊர்‌ ஊராகச்‌ சுற்றிப்‌ பிரச்சாரம்‌ செய்ததுடன்‌, தனது பதீதிற்கையில்‌, கடவுளுக்கும்‌ மததீதுக்கும்‌ ஆபத்து என்று தினப்படி எழுதிக்கொண்டே வந்தார்‌, தவிர இவ்வளவும்‌ பேசாமல்‌ திரு. வரதராசலு நாயுடுவின்‌ பேப்பரும்‌, மருந்து விற்கும்‌ ஆட்களும்‌ கூலிகளும்‌ விஷமப்‌ பிரச்சாரம்‌, அதாவது, *தோட்டகீகூலிகளைக்‌ கிளப்பிவிட்டுத்‌ தோட்டக்காரருக்குத்‌ தொல்லை விளைவிப்பான்‌) இவன்‌ காந்தி மனிதன்‌ ? என்றும்‌ சொல்லிவந்தார்களாம்‌. மற்றும்‌ ஒரு விசேஷம்‌. அதாவது ¢ இந்து மகாசபைதீ தலைவர்‌, அவ்வூர்‌ போலீஸ்‌ கமிஷனரிடம்‌ ஒரு விண்ணப்பம்‌ கொடுத்துப்‌ பேசுகையில்‌, * இந்தியாவிலிருந்து வரும்‌ & வெ. ராமசாமி என்பவர்‌ எங்கள்‌ கடவுளான இராமரை விபசாரதீதில்‌ பிறந்தவர்‌ என்று சொல்லுகின்றார்‌ ) ஆதலால்‌ அவரை இங்கே வரவிடக்‌ கூடாது? என்றாராம்‌. அதற்கு அந்த போலீஸ்‌ கமிஷனர்‌; * அதற்கு நாம்‌ என்ன செய்யலாம்‌, எங்கள்‌ வெள்ளைக்காரர்‌ களில்‌ சில பேர்‌ இயேசு கிறிஸ்‌ துவையும்‌ இப்படித்தான்‌, அதாவது, அவர்‌ தாயார்‌ விவாகம்‌ ஆவதற்கு முன்‌ அவரைப்‌ பெற்றதால்‌ விபசாரதீதில்தான்‌ பிறந்திருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்கள்‌. கேட்டால்‌, * சயின்சுப்படி ஒரு ஆன்‌ கூடாமல்‌ எப்படி பிள்ளை: பிறக்கும்‌ ? என்கின்‌ றார்கள்‌. ஆகவே, மத விஷயங்களில்‌ இப்படிப்பட்ட அபிப்பிராயங்கன்‌ ஆயிரக்கணக்கான வருடங்களாகவே இருந்துவருகின்றது. அதற்காக யாரையும்‌ தூக்கில்‌ போட முடியாது? என்றும்‌ சொன்னாராம்‌, இப்படியாகப்‌ பலவிதத்திலும்‌ எதி/ப்‌ பிரச்‌ சாரங்கள்‌ செய்தார்கள்‌ என்பது மாத்திரம்‌ நமது காதுக்கு எட்டியதே தவிர, காரியத்தில்‌ பலன்‌ ஒன்றும்‌ காண முடியவே இல்லை. *தமிழ்‌ நேசன்‌? பதீதிரரதிபரரன ஒரு அய்யங்கார்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 விறிவு வளர்ச்சி 1179 சரீகீகாரால்‌ நம்மை மலாய்‌ நாட்டில்‌ இறங்கக்கூடாதென்று உத்திரவு போட்டுவிட்டதாகச்‌ கட்டுக்‌ கட்டிவிட்டதால்‌, அதை நம்பி அனேகம்‌ பேர்‌ கப்பலில்‌ இருந்து நாம்‌ இறங்கமாட்டோ மென்று நினை தீதுக்கொண்டு, இறங்கினால்‌ குத்திவிடுவதாயும்‌ கலகம்‌ செய்வதாயும்‌ பேசி விட்டார்கள்‌. நாம்‌ பினாங்கில்‌ இறங்கியதும்‌ அங்கு துறைமுகத்தில்‌ ஜனங்கள்‌ நடந்து கொண்டதைப்‌ பார்தீத பிறகுதான்‌ யாரும்‌ எவ்வித எதிர்ப்‌ பிரச்சாரங்கன்‌ செய்யாமல்‌ இருந்து விட்டார்கள்‌. நிற்க, எதிர்ப்‌ பிரச்சாரங்கள்‌ செய்வதற்கு ஏற்பட்ட காரணங்கள்‌. என்னவென்று பார்‌ தீததில்‌, பினாங்கில்‌ இந்து மகாசபை என்று ஒரு சபை இருப்பதாகவும்‌, அதைச்‌ சர்க்கார்‌ இந்துக்களுடைய பிரதிநிதி சபை என்று ஏற்றுக்கொண்டிருப்பதாகவும்‌, அச்‌ சபை பிரமுகர்களுக்கு அங்குள்ள இந்துக்களால்‌ சில மரியாதைகளும்‌ வரும்படிகளும்‌ இருப்ப தாகவும்‌, நமது இயக்கத்தால்‌ அவற்றிற்கு மரியாதை குறைந்து வரும்படி குறைவதாகவும்‌, அதனால்‌ நமது இயக்கத்திற்கு வி3ராதமாய்‌ வேலை செய்யவேண்டி வந்ததாகவும்‌ தெரிய வந்தது. ஆனால்‌ அந்த இந்து மகாசபையில்‌ இந்துக்கள்‌ என்பவர்களிலேயே பல வகுப்‌ யாரை அங்கதீதினர்களாகசி சேர்த்துக்‌ கொள்வதில்லை என்கின்ற நிபந்தனை உண்டு, அதாவது, ஆதிதீ திராவிடர்கள்‌, மருதீதுவர்கள்‌ முதலியவர்களை மாதீதிரமல்லாமல்‌, சமீப காலம்‌ வரை நாடார்களையும்‌ சேர்க்க மறுத்து வந்தார்களாம்‌. முதல்‌ முதலில்‌ நாடார்‌ களைச்‌ சேர்க்கும்போதும்‌ அதிகமான பணம்‌ கொடுத்ததால்தான்‌ சேர்தீதார்களாம்‌. இந்த யோக்கியதை உள்ள இந்து மகாசபை கெட்டுப்‌ போகுமென்று சிலர்‌ சதீதம்‌ போட்டதால்‌ தான்‌ அதை யாரும்‌ அந்நாட்டில்‌ மதிக்கவில்லை. தவிர, ¢ தமிழ்நேசன்‌? அய்யங்கார்‌ நாம்‌ போகும்‌ ஒவ்வொரு ஊருக்கும்‌ முதல்நாள்‌ போய்‌ வரவேற்புக்கு எவ்வளவோ இடையூறு செய்துகொண்டு போனதாக அனேகமாய்‌ ஒவ்வொரு ஊர்களிலும்‌ பிரஸ்தாபம்‌ வந்து கொண்டே இருந்தது. இது தவிர, மலாய்‌ நாட்டிலுள்ள சங்கங்களில்‌ எதில்‌ எதில்‌ பார்ப்பனர்கள்‌ அங்கதீதினர்களாக இருந்தார்களோ, அதிலெல்லாம்‌ வரவேற்புக்குக்‌ கூடியவரை எதிர்ப்புகள்‌ செய்து பலமான தோல்விகள்‌. அடைந்த துடன்‌, இரண்டொரு சங்கத்தில்‌ இது விஷயமாய்ச்‌ செய்த விஷமதீதிற்குப்‌ பார்ப்பனர்களிடம்‌ மன்னிப்புக்‌ கடிதம்‌ வாங்கியிருந்ததை எங்களுக்குக்‌ காட்டினார்கள்‌, இப்படிப்பட்ட நிலைமையில்‌ நமது மலாய்‌ நாட்டுச்‌ சுற்றுப்‌$பிரயாணம்‌, நாம்‌ எதிர்‌ பாரீதீததற்கு மேலான அளவு வெற்றிகரமாகவே முடிந்தது. முகம்மதிய கனவான்களும்‌, கிறிஸ்தவ கனவான்களும்‌ அவர்களில்‌ அம்ரோப்பியர்‌ களும்‌, மற்றும்‌ இந்துக்‌ கனவான்களும்‌ இந்தச்‌ சுற்றுப்‌ பிரயாணத்தில்‌ சிறிதும்‌ வித்தியாசம்‌ பாராட்டாமல்‌ எல்லோரும்‌ கலந்து கொண்டதும்‌, வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ போல்‌ தலைமை வகித்து உபசாரங்கள்‌. செய்ததும்‌ நடவடிக்கைகளைப்‌ பார்தீதால்‌ நன்றாய்த்‌ தெரியவரும்‌. திருவாளர்கள்‌ சுவாமி வற்புதானநீதர்‌, கே. சுப்பிரமணியம்‌, காளியப்பன்‌, அய்யாறு, சாரங்கபாணி, ஓ. இராமசாமி நாடார்‌, கோவிந்தசாமி, தாமோதரன்‌, பழனியப்பசி செட்டியார்‌, ஜனாப்புகள்‌ முகம்மது ராவுத்தர்‌, சீனிராவுத்தர்‌, முகம்மது யூசுப்‌ முதலிய கனவான்கள்‌ சிங்கப்பூரிலும்‌, பினாங்கிலும்‌ செய்த ஏற்பாடுகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்‌ தக்கதாகும்‌, இந்த இரண்டு ஊர்களில்‌ 7500 ரூபாய்க்கு மேலாகவே செலவுசெய்து இருக்கின்றார்கள்‌. எவ்வளவு சொல்லியும்‌ அவர்கள்‌ சிறிதும்‌ இலட்சியம்‌ செய்யாமல்‌ எதிர்ப்‌ பிரச்சாரகீகாரர்களுக்குப்‌ புத்தி கற்பிக்க வேண்டுமென்கின்ற காரணத்தைச்‌ சொல்லிக்கொண்டே வீண செலவு செய்தார்கள்‌, எனவே, நமது மலாய்‌ நாட்டுச்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ வெற்றிகரமாக முடிந்தது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன்‌ தெரிவிப்பதுடன்‌, மலாய்‌ நாட்டிலுள்ள இந்தியச்‌ சகோதரர்‌ களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலைச்‌ செலுத்துகின்றோம்‌. . [குடிஅரசு 1-தலையங்கம்‌-9.2-1939] ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1180 4. கெய்ரோ கடிதம்‌ போர்ட்‌ சைட்டிலிருநீது எழுதிய வியாசம்‌ கிடைதீதிருக்கலாம்‌, அதில்‌ ¢ எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டன்‌? என்கின்ற கப்பல்‌ விஷயத்தைப்‌ பற்றி மாத்திரம்‌ எழுதமுடிநீதது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல்‌ புறப்பட்டதற்குப்பின்‌ கண்ட விஷயங்களைப்‌ பற்றிச்‌ சுருக்கமாக எழுதுகிறேன்‌. டிசம்பர்‌ 17-f தேதி காலை புறப்பட்ட கப்பல்‌ 24-நீ தேதி காலை 10 மணிக்கு ஜிபுட்டி என்கின்ற பிரஞ்சு துறைமுகம்‌ வந்து சேர்ந்தது. Dy ஏடனுக்கு எதிர்ப்‌ பாகதீதில்‌ இருப்பதும்‌ பிரஞ்சுக்காரருடைய துறைமுகமுமாகும்‌. நாங்கள்‌ பிரஞ்சுக்‌ கப்பலில்‌. பிரயாணம்‌ செய்ததால்‌ பிரஞ்சுக்‌ கப்பல்‌ அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்‌ காரருக்குச்‌ சொந்தமான தீவாகிய மடகாஸ்கர்‌ என்னும்‌ தீவுக்கு அனுப்பப்படும்‌ சாமான்‌ களும்‌, அத்‌ தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்‌ சாமான்களும்‌ ஜிபுட்டி என்ற துறைமுகத்தின்‌ வழியாகத்தான்‌ வரவேண்டும்‌. இந்ததீ துறைமுகத்தில்‌ நாங்கள்‌ இறங்கினதும்‌ கமாலியர்‌ என்கின்ற ஒரு சரதியார்‌--நீக்ரோவர்களைப்‌ போல்‌ அதிகக்‌ கறுப்பும்‌, மிகவும்‌ சுருண்ட தலைமயிரும்‌ உடையவர்கள்‌ தாம்‌ இந்தத்‌ தேசதீதில்‌ அதிகமாய்‌: இருக்கிறவர்கள்‌ $ இவர்கள்‌ பாஷை அரபு-மதம்‌ இஸ்லாம்‌ ) மிகவும்‌ இளைதீத சரீரமுள்ன வர்கள்‌, பார்வைக்கு விகாரமானவர்கள்‌, ரொம்பவும்‌ ஏழைகள்‌, அழுக்குத்‌ அணியுடைய வர்கள்‌ ] இவர்கள்தாம்‌ இவ்விடத்திய கூலிகள்‌. பெண்கள்‌ விகாரமாய்‌, மலை லம்பாடி சாதியாரைப்போல்‌ நகை அணிந்துகொண்டு, நீண்ட குப்பாயம்‌ போட்டுக்கொண்டிருக்‌ கிறார்கள்‌. இங்கு சில அரபியரும்‌, நம்‌ பக்கதீதிய--அதாவது மரைக்காயர்கள்‌, இராவுத்தர்‌ மார்களைப்போல்‌ சிலர்‌ இருக்கிறார்கள்‌. இவர்கள்‌ நல்ல உடை உடுத்திக்கொண்டு சுத்தமாகவும்‌, நல்ல தோற்றமாகவும்‌ இருக்கிறார்கள்‌. இவர்கள்‌ முதலாளிகளாகவும்‌, சற்று நாகரிக வாழ்கீகைக்காரராகவும்‌ காணப்படுகிறார்கள்‌. ஜிபுட்டி துறைமுகப்‌ பாகம்‌ மாத்திரம்‌ நல்ல உயர்தரக்‌ கட்டடங்களும்‌ நல்ல உயர்‌ தர ஷாப்புக்‌ கடைகளும்‌, பிரஞ்சுக்கார வெள்ளையர்களால்‌ மிகுதியும்‌ குடியிருக்கப்பட்ட மாளிகைகளும்‌ உடையதாகக்‌ காணப்படும்‌. மற்றப்படி ஊருக்கு ஒரு பெண்கூட முகத்தை மூடிக்கொண்டு போனதை நாங்கள்‌ பார்க்கவில்லை, ஆனால்‌, முக்காடு மாத்திரம்‌ போட்‌ டிருக்கிறார்கள்‌. இங்கு பம்பாய்‌, குஜராத்தி வியாபாரிகள்‌ சிலரைப்‌ பார்த்தோம்‌. இங்கு தபால்‌ எழுதிவிட்டு, சில சாமான்கள்‌ சாப்பாட்டுக்கு வாங்கினோம்‌. பிறகு 24-ந்‌ தேதி மாலை 5 மணிக்கு ஜிபுட்டிலிருநீது கப்பல்‌ புறப்பட்டு 29-ந்‌ தேதி சூயஸ்‌ துறைமுகத்துக்கு வந்தது. அத்‌ துறைமுகம்‌ மிக்க அழகானதாகவும்‌, ஊர்‌ மிகவும்‌ புதிய முறையில்‌ ஏற்படுதீதப்பட்டதாகவும்‌ இருந்தது ஜிபுட்டியிலிருந்‌து செங்கடலில்‌ கப்பல்‌ புறப்பட்ட வுடன்‌ தினம்‌ 1-க்கு 3, ¢ கப்பல்‌ வீதமும்‌, சூயசுக்குப்‌ பக்கதீதில்‌ வரவர ஒருமணி ஒன்றுகீகு ஒரு கப்பல்‌ வீதமும்‌, கடலில்‌ போவதையும்‌ வருவதையும்‌ பார்தீதுககொண்டே இருந்தோம்‌. சூயசுக்குப்‌ பக்கத்தில்‌ வந்தவுடனே சிறிது சிறிதாய்‌ குளிர்‌ அதிகப்பட்டு, சூயசில்‌ நடுங்கும்‌. படியான குளிர்‌ ஏற்பட்டது. ஏனெனில்‌, அங்குதான்‌ முதலில்‌ குளிர்‌ கண்டோம்‌. கப்பலில்‌ எங்களுடைய இடம்‌ 4-வது வகுப்பு (4மல்தட்டு) ஆனதால்‌ அங்கு-சென்னையில்‌ கப்பல்‌ ஏறின து முதல்‌ 4, 5 நாள்‌ வெயிலாலும்‌ மழையாலும்‌ மிகவும்‌ கஷ்டப்பட்ட துடன்‌, சாமான்களுடன்‌ அடிக்கடி மூட்டைகள்‌ இறகீகும்‌ போதும்‌ ஏற்றும்‌ போதும்‌ கடம்‌ மாற வேண்டியதாயும்‌ இருந்தது: புதுச்சேரித்‌ துறைமுகதீதில்‌ எனக்குச்‌ சிறிது காய்ச்சலும்‌, மயக்கமும்‌, தலைவலியும்‌ அதிகத்‌ தொந்தரவு செய்ததுடன்‌, வெயிலிலே இருக்கவேண்டி இருந்ததாலும்‌ சற்று மன வருத்தமும்‌ உடல்நிலையைப்‌ பற்றிக்‌ கவலையும்‌ ஏற்பட்டதால்‌ 4-வது வகுப்பிலிருந்து 9-வது வகுப்புக்கு மாற்றலாம்‌ என்று தீர்மானித்து, பு.துச்சேரியிலிருந்து எங்களைக்‌ காண வந்திருந்த திரு. பாரதிதாசன்‌, திரு. நேயேல்‌, திரு. செல்வம்‌ அவர்களுடைய காரியதரிசி www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1181 ஆகியவர்கள்‌ மூலமாய்க்‌ கப்பல்‌ கமிஷனரிடம்‌ சென்று மாற்றும்படிக்‌ கேட்டதில்‌, அவர்‌ சென்னையில்‌ 3-வது வகுப்புக்காகச்‌ சொல்லப்பட்ட சார்ஜைவிட 2 பவுன்‌ அதிகமாகக்‌ கூட்டி 1 டிக்கெட்டுக்கு ரூ. 120 வீதம்‌ அதிகம்‌ கொடுக்கவேண்டுமென்று சொன்னார்‌. அதற்கும்‌ சம்மதிதீததில்‌ இங்கிலீஷ்‌ பவுண்றோட்டு எடுக்கமாட்டேன்‌ என்று சொல்லி, இந்திய நாணய நோட்டே வேண்டுமென்று கேட்டார்‌. எங்களிடம்‌ இருந்த தொகைகள்‌ எல்லாம்‌ இங்கிலீஷ்‌ நாணய நோட்டாகவே மாற்றப்பட்டு இருந்ததால்‌ புதுச்சேரி டவுனுக்கு இங்கிலீஷ்‌ பவுன்‌ நோட்டை அனுப்பி, இந்திய நாணயமாக மாற்றிக்‌ கொண்டுவந்து கொடுப்பதாகச்‌ சொல்லி, நாணயம்‌ மாற்ற திரு. பாரதிதாசன்‌ அவர்களை புதுச்சேரி ஊருக்குன்‌ அனுப்பினோம்‌. அவர்‌. இந்தியநாணயதீதையும்‌ சில தின்பண்டங்களையும்‌ ஒரு டா7டர்வசம்‌ அனுப்பிக்‌ கொடுத்தார்‌. அதற்குள்‌ எனக்குச்‌ சற்று குணமாயிரு ந்த தாலும்‌, டாக்டர்‌ பரீட்சை பார்த்து சில பக்குவம்‌ சொன்னதாலும்‌ 9-வது வகுப்புக்கு மாறாமல்‌ 4-வது வகுப்பி3லயே இருந்து கொண்டோம்‌. பிறகும்‌ 2, 3 நாள்‌ கஷ்டப்பட்டோம்‌. கப்பலில்‌ நாங்கள்‌ மூட்டைகளைவிடக்‌ கேவலமாக நடத்தப்பட்டோமானாலும்‌ 4-ம்‌ நாள்‌ ஒரு கீழ்தீதட்டில்‌ சாமான்களை வைத்துக்‌ கொள்ள கப்பல்‌ கமிஷனர்‌ அனுமதிகொடுதீதார்‌. அந்தக்‌ கீழ்தி தட்டானது மூட்டைகள்‌ போடவும்‌ ஒரு பக்கம்‌ பிரஞ்சு சோல்ஜர்கள்‌ இருக்கவும்‌ ஏற்பட்டது. அதில்‌ 50 சோல்ஜர்கள்‌: இருக்க இடமுண்டு. 50 சோல்ஜர்கள்‌ ஏற்கனவே இருந்தார்கள்‌. நாங்கள்‌ மூட்டை களின்மேல்‌ இருந்தோம்‌. ' இரண்டொரு நாள்‌ சோல்ஜர்கள்‌ எங்களுடன்‌ பழகிவிட்டதாலும்‌, 3 தமிழ்‌ பிரஞ்சு இந்திய சோல்ஜர்கள்‌ மிக்க பழக்கமாகிவிட்டதாலும்‌ பிரயாணம்‌ சிறிதுகூட கஷ்டமாகத்‌ தோன்றவில்லை. ஆகாரம்‌ இந்த சோல்ஜகளுக்குக்‌ கொடுக்கப்பட்ட ஆகாரமேதான்‌ எங்களுக்கும்‌ கொடுக்கப்பட்டது. அதாவது, தினம்‌ 2 வேளை வேகவைத்த உருளைக்கிழங்கும்‌ கொள்ளு அல்லது அவரை, கடலை முதலிய ஏதாவதொரு தானியமும்‌ வேகவைத்துக்‌ கொடுப்பதுடன்‌, உருண்டை ரொட்டி 8-ம்‌, , இதுகளும்‌ மாட்டு மாமிசத்‌ அண்டும்‌ சாராயமும்‌ கொடுக்கப்படுவது பழக்கம்‌. காலையில்‌ பால்‌ இல்லாத காப்பியும்‌ ரொட்டியும்‌ உண்டு. இவற்றுள்‌ சாராயம்‌, மாட்டு மாமிசம்‌ ஆகியவைகளை நாங்கள்‌ உபயோகிக்கவில்லை. மற்றதுகளுடனும்‌ கொளும்பிலும்‌, சென்னையிலும்‌, புதுச்சேரியிலும்‌ வாங்கின பிஸ்கட்‌, ஆரஞ்சுப்‌ பழம்‌ ஆகியவைகளுடனும்‌ காப்பி, டீயுடனும்‌ சரிப்படுத்திக்‌ கொண்டோம்‌. சூயசிலிருநீ.து 29-நீ தேதி பகல்‌ 2 மணிக்குக்‌ கப்பல்‌ சூயஸ்கால்வாய்‌ வழியாக போர்ட்‌ சைட்டுக்குப்‌ புறப்பட்டது. இந்தக்‌ கால்வாயானது செங்கடலுக்கும்‌ மத்தியதரைக்‌ கடலுக்குமாக சுமார்‌ 100 மைல்‌ நீளம்‌ மணல்‌ தரையில்‌ வெட்டப்பட்ட கால்வாயாகும்‌. இதன்‌ அகலமெல்லாம்‌ சுமார்‌ 150 அடிதானிநகீகும்‌. நமது வாய்க்கால்‌ போலவே இரு பக்கம்‌ கரையில்‌ நடக்கும்‌ ஜனங்களுடன்‌ பேசிக்கொண்டே கப்பலில்‌ போகலாம்‌. ஆனால்‌, 40 ஆயிரம்‌, 50 ஆயிரம்‌ டன்‌ கனமுள்ள கப்பல்கள்‌ எல்லாம்‌ தாராளமாய்ப்‌ போகதீதகுந்த ஆழம்‌ வெட்டப்பட்டிருக்கின்‌ றது. கால்வாய்‌ வேலைகள்‌ இன்னமும்‌ நடந்து கொண்டே தான்‌ இருக்கின்றன. எதிரில்‌ கப்பல்‌ வந்தால்‌ ஒதுங்கி நிற்க ஆங்காங்கு வசதி இருக்கின்றது. கால்வாய்க்கு நெடுக வாட்சுமேன்களும்‌, காவல்களும்‌, பந்‌தோபஸ்‌ துகளும்‌ உண்டு. இந்தக்‌ கால்வாய்‌ சூயஸ்‌ கால்வாய்‌ கம்பெனியார்‌? என்கின்ற ஒரு கம்பெனி யாரால்‌ முதல்போட்டு வெட்டப்பட்டு, ஒவ்வொரு கப்பலுக்கும்‌ சுங்கம்‌ வாங்குவதன்‌ மூலம்‌ பங்குக்காரர்களுக்கு இலாபம்‌ கிடைத்து வருகின்றது. ஒரு கப்பலுக்கு சுமார்‌ 10000 (பத்தாயிரம்‌), 15000 ரூபாய்‌ போல்‌ சுங்கம்‌ வசூலிக்‌ கப்படுவதாகக்‌ கேள்‌ விப்பட்டோம்‌. சூயசி லிருந்து போர்ட்‌ சைட்டுக்குப்‌ போவதற்குள்‌ குளிர்‌ அதிகப்பட்டுக்‌ கொண்டே வந்துவிட்டது. 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கப்பல்‌ போர்ட்சைட்டுகீகு வந்தது. இரவு 11 மணிக்கே பிரயாணிகளைக்‌ கப்பலை விட்டு இறக்கிவிட்டார்கள்‌. துறைமுகம்‌ சென்னையைப்‌ போலவே கப்பலிலிருந்து தரையில்‌ கால்‌ வைக்கலாம்‌. ஸ்தல யாதீதிரைகளில்‌ எப்படிப்‌ பண்டாரங்களும்‌, அர்ச்சகர்களும்‌, யாதீதிரை வழிகாட்டிகளும்‌ இரயிலிலேயே வந்து www.thamizham.net - Free £ book 14௦ 3031 1182 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ தொநீதரவு செய்வார்களோ அதுபோல்‌, Guide என்று சொல்லப்படும்‌ வழிகாட்டிகள்‌ கப்பலுக்குள்ளாகவே வந்து சூழ்நீது கொண்டு கிம்சைப்படுத்திவிட்டார்கள்‌, பிறகு ஒருவன்‌ எங்களுடன்‌ விடாப்பிடியாய்தீ தொடர்ந்து வந்து எங்கள்‌ சாமான்களைக்‌ கப்பலி லிருந்து போட்டில்‌ ஏற்றிக்கொண்டு எங்களை கஸ்டம்‌ ஆபீஸ்‌, டாக்டர்‌ சாதனை, சாமான்‌: சோதனை முதலியவைகளை நடதீதிக்கொடுதீது ¢ அக்ராப்போல்‌ ? என்கின்ற ஒரு ஓட்டலில்‌ கூட்டிக்கொண்டுவந்து இரவு 12 மணிக்கு விட்டான்‌. இங்கு ஓட்டல்‌ என்பது தங்குமிடம்‌ மட்டுந்தான்‌. அதாவது, ஓர்‌ அறையில்‌ சாமான்‌ வைத்துப்படுத்துக்கொள்ளலாம்‌. கட்டில்‌, நாற்காலி, மேசை உண்டு. சாப்பாட்டுக்கு வேறு ஏற்பாடுதான்‌ செய்துகொள்ளவேண்டும்‌. இந்த ஓட்டலில்‌ நாள்‌ ஒன்றுக்கு 3 பேருக்கு தங்குவதற்கு தினம்‌ 3 ரூ. வீதம்‌ பேசி ஒரு வாரம்‌ இருந்தோம்‌. சாப்பாடு சொந்தத்தில்‌ செய்து கொண்டோம்‌. வழிகாட்டி 7 @ வாங்கிவிட்டான்‌. வழிகாட்டிகளின்‌ கஷ்டத்தைத்‌ தவிர வேறு கஷ்டமில்லை. பாஷை தெரியாதவர்கள்‌ இந்தக்‌ கஷ்டம்‌ அனுபவிதீதுத்தான்‌ ஆகவேண்டும்‌. போர்ட்‌ சைட்‌ ஊரானது சூயசைப்போலவே புதிதாக உண்டாக்கப்பட்ட சிறிய பட்டணம்‌ $ மூன்று புறமும்‌ தண்ணீர்‌ சூழ்நீதது. இங்குள்ள மகீகன்‌ பெரும்பாலும்‌ எகிப்தியர்கள்‌. அனேகமாக 100-கீகு 90 இஸ்லாம்‌ மதகீகாரர்கள்‌. மற்ற பல தேசதீதாரும்‌ இங்கு இருக்கிறார்கள்‌. துறைமுகம்‌ என்பதைத்‌ தவிர இதற்கு வேறுபெருமை கிடையாதா னாலும்‌ பெரியபெரிய ஷாப்புகளும்‌ அலங்கார சாமான்‌ கடைகளும்‌ தாராளமாய்‌ உண்டு. சரி பகுதி காப்பிக்‌ கடைகள்‌ இருக்கும்‌. சாமான்கள்‌ நிலவரம்‌ எல்லாம்‌ நமது ஊர்களில்‌ உள்ளது போலவவயொழிய அதிகமில்லை. ஆனால்‌, கடைகளில்‌ சாப்பிட்டால்‌ செலவு அதிகம்‌, ஜனங்கள்‌ பார்வைக்கு வெள்ளைக்காரர்‌ களைப்போலவே இருக்கிறார்கள்‌. எகிப்திய இஸ்லாம்‌ பெண்களுக்கும்‌ அய்ரேப்பியப்‌ பெண்களுக்கும்‌ வித்தியாசம்‌ கண்டு பிடிப்பது கடினம்‌. கிறிஸ்தவர்களுக்கும்‌, இஸ்லாமியர்களுக்குங்கூட அடையாள வித்தியாசம்‌ கிடையாது: 9-ல்‌ 2 பாகம்‌ பெண்கள்‌ அய்ரோப்பிய உடையுடனும்‌ தொப்பி யுடனுமே திரிகிறார்கள்‌. ஆண்கள்‌ எல்லாம்‌ அய்ரோப்பிய உடைதான்‌. சில ஏழைக்‌ குடும்பப்‌ பெண்களும்‌ சில கிராமக்‌ குடும்பப்‌ பெண்களும்‌ மாதீகிரம்‌ உள்ள அய்ரோப்‌ ய உடை அணிந்து, மேலே கருப்புத்‌ துணியினால்‌ போர்த்துக்‌ கொண்டு, வாய்‌ மாத்திரம்‌ மறையும்படி ஒருவித வலைத்‌ துணி கட்டிக்கொள்ளுகிறார்கள்‌. (நெற்றி, கண்‌, மூக்கு எல்லாம்‌ தெரியும்‌) ஆண்கள்‌ அய்ரோப்பிய உடையுடன்‌ சிலர்‌ அய்ரோப்பியதீ தொப்பியும்‌ தருக்கித்‌ தொப்பியும்‌ அணிகிறார்கள்‌. தாடி என்பது கிடையவே கிடையாது. கிறிஸ்தவர்‌: களையும்‌, இஸ்லாமியர்களையும்‌ கிங்கு அடையாளம்‌ கண்டுபிடிக்கவே முடியாது. கந்த ஊர்‌ ஜனங்கள்‌ எல்லோருக்கும்‌ இந்தத்‌ துறைமூகதீதிற்கு வந்துபோகும்‌ பிரயாணக்காரர்‌: களால்தான்‌ வியாபாரமும்‌ பிழைப்பும்‌ நடக்கவேண்டியதே தவிர வேறில்லை. எகிப்திய இஸ்லாம்‌ பெண்களின்‌ டான்சு தினமும்‌ நடக்கும்‌. பலர்‌ உடம்பெல்லாம்‌ பலவித பச்சை குத்திக்‌ கொள்ளுகிறார்கள்‌. போர்ட்சைட்டில்‌ ஒருவாரம்‌ இருந்துவிட்டு ஜனவரி மாதம்‌ 5-நீ தேதி காலை 8 மணிக்கு கெய்ரோவுக்குப்‌ புறப்பட்டு ரயிலேறி 5-ந்தேதி பகல்‌ 1 மணிக்கு கெய்ரோவுக்கு வந்தோம்‌. 150 மைல்‌ தூரம்‌ 3-வது வகுப்புக்கு மைலுக்கு அரையணா இரயில்‌ சார்ஜ்‌ விகிதம்‌, இரயில்‌ வண்டிகள்‌ எல்லாம்‌--5.1.1% சின்ன வண்டிகளில்‌ இரண்டு இரண்டு பேருக்குப்‌ பெஞ்சுகள்‌ இருப்பதுபோலவே, எல்லா வண்டிகளிலும்‌ இருக்கின்றது) வண்டிகள்‌ எல்லாம்‌ பெரிய வண்டிகள்‌. முதல்‌ வண்டியிலிருந்து கடைசி வண்டிவரை வண்டி நடுவில்‌ நடந்து போகலாம்‌. கெய்ரோ பட்டணமானது ஆப்பிரிக்கா தேசதீதிலேயே பெரிய பட்டணமாகும்‌, இதில்‌ 10 இலட்சம்‌ ஜனங்கள்‌ வசிக்கிறார்கள்‌. இது ஈஜிப்ட்‌ தேசதீதின்‌ தலைநகரமாகும்‌. எகிப்திய தேசம்‌ என்பது உலகதீதில்‌ உன்ன பழமையான தேசங்களில்‌ எல்லாம்‌ மிகப்‌ பழமையான த. www.thamizham.net - Free £ book 14௦ 3031 Sl வளர்சீசி 1183 நாகரிகங்களிலும்‌ எகிப்திய நாகரிகமே மிகப்‌ பழமையானது. இது உலகுக்கு மதீதிய தேசமு மாகும்‌. இவ்விடத் திய சீதோஷ்ணநிலை குளிர்காலத்தில்‌ பெங்களூரைப்‌ போலவும்‌, -வெயில்‌ காலதீதில்‌ நமது ஊர்களைப்போலவும்‌ இருக்கும்‌. இங்குன்ள மலைகள்‌ அனேகமாய்‌ மணல்‌ மலைகளேயாகும்‌. நிலங்கள்‌ பெரும்பாகம்‌ வெறும்‌ மணல்‌ பூமிகளாகவே இருக்கும்‌. கெய்ரோவில்‌ ஒரு பெரிய நதி ஓடுகின்றது. அதற்குப்‌ பெயர்‌ நைல்‌ (Nile) நதி என்பது. இது உலகத்திலேயே பெரிய நதியாகும்‌. இதன்‌ நீளம்‌ 3500 மைல்‌. இதில்‌ கப்பல்கள்‌ தாராளமாகப்‌ போகின்றன. இதற்குப்‌ பல வாய்க்கால்களும்‌, தாராளமாகப்‌ பாசனங்களும்‌ உண்டு. இங்கு மழை என்பதே கிடையாது. ஒட்டகம்‌, குதிரை, கோ3வறு கழுதை, கழுதை ஆகியவைகளால்தாம்‌ எல்லாவேலையும்‌ செய்யப்படுகின்றது. பசுமாடு பால்கறக்கவும்‌, காளைமாடுகள்‌ சாப்பிடவும்தான்‌ பயன்படுகின்றன. உருளைகீகிழங்கு, முட்டைக்கோஸ்‌, முதலிய குளிர்‌ தேசக்‌ காய்கறிகளே தான்‌ அதிகம்‌. எல்லோரும்‌ கோதுமை ரொட்டியும்‌, சப்பாதீதியும்‌ தான்‌ அதிகம்‌ சாப்பிடுகிறார்கள்‌. உடை விஷயங்கள்‌ நம்மூர்‌ உடைகளைவிட அதிகம்‌ தேவை இருக்கிறதுடன்‌ அதிகமாகவே உபயோகிக்கிறார்கள்‌. அவற்றின்‌ விலைகள்‌ எல்லாம்‌ நமது பக்கதீதைவிட நயமாகவே இருக்கின்‌ றன. பொதுவாகக்‌ கிராமங்கள்‌ எல்லாம்‌ மண்சுவர வீடுகளாகவும்‌, மேற்கூரைகள்‌ எல்லாம்‌ மரம்போட்டு, பலகை போட்டு, மண்‌ பரப்பியதாகவுமே இருக்கின்றன. மழை இல்லாததால்‌. கூரையைப்பற்றி இவர்‌ கள்‌ கவலைப்படுவதில்லை. பட்டணங்‌ களில்‌ வீடுகள்‌ 3, 4,5, 6, 7 மாடி வரையில்‌ இருக்கின்றன; 3, 4 மாடிகளே அதிகம்‌. பொதுவாக; பம்பாய்‌ கட்டடங்கள்‌ போலவே காணப்படும்‌. நிற்க, நான்‌ இதுவரை உடைகளை மாற்றிக்‌ கொள்ளவில்லை. தலைகீகு மாதீதிரம்‌ ஒரு கம்பளி குளிர்‌ (மங்கி கேப்‌) குல்லாய்‌ போட்டுக்கொண்டேன்‌. ஆகாரம்‌ ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தாம்‌ முக்கியமாய்‌ உபயோகிக்கிறேன்‌. முட்டை இவ்விடம்‌ மிக மலிவு 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது. இந்தப்‌ பக்கதீதுக்காரர்களுக்கு நான்‌ ஒருவனே தாடி வைத்தவனாகவும்‌, ஒரு புதுமாதிரி மனிதனாயும்‌ காணப்படுவதால்‌ யாரும்‌ குறிப்பாய்ப்‌ பார்ட்பதும்‌, மற்றும்‌ மரியாதை செய்வதுமாய்‌ இருக்கிறார்‌ கள்‌. கூடுமானவரையில்‌ ஜனங்கள்‌: நமது ஜனங்களைவிட நல்ல குணமுள்ளவர்களாகவும்‌ விவேகிகளாகவும்‌ இருக்கிறார்கள்‌ ] £இந்தீயன்‌ ? என்றால்‌ மிகப்‌ பிரியமாய்ப்‌ பேசுகிறார்கள்‌ ] அய்ரோப்பியரிடம்‌ வெறுப்பாய்‌ இருக்கிறார்கள்‌. இவ்விடதீதிய பெண்கள்‌ மிகவும்‌ சுலுசுறுப்பாகவும்‌, சுதந்திர உணர்ச்சியும்‌, தைரியமும்‌, துணிவும்‌ உள்ளவர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. குழந்தைகள்‌ சிறுவர்கள்‌ ஆகிய வர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளைவிட அதிக புதீதியும்‌ ௬தந்திர உணர்ச்சியும்‌ இணிவும்‌ இருக்கின்றன. மற்ற அரசியல்‌, மதவியல்‌ சம்பந்தமான விஷயங்கள்‌ பின்னால்‌ எழுதுகிறேன்‌. இன்னும்‌ இரண்டு மூன்று தினத்தில்‌ * ஏதன்௬ு 7கீகுப்‌ (கிரீஸ்‌ தேசம்‌) போவோம்‌. [¢ குடி அரசு 1-௧ தம்‌--7-2-1932] 5. ஈஜிப்ட்‌ கடிதம்‌ சூயஸ்‌ துறைமுகதீதில்‌ ஒரு பெரிய கப்பலை 29-12-1931 தேதியில்‌ நாங்கள்‌: பார்த்தோம்‌. அதன்‌ பெயர்‌ *எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டன்‌? (Empress of Britain). நேற்றைக்கு முந்திய தினம்‌ கனடியன்‌ பசிபிக்‌ ரெயில்வே கம்பெனியாரால்‌ அக்‌ கப்பலின்‌ மேல்‌ தளத்தில்‌ ஒரு விருந்து கொடுக்கப்பட்டது. அதுசமயம்‌ மேன்மை தங்கிய பிரதம மநீதிரியவர்‌ களும்‌, மேன்மை தங்கிய ஹை கமிஷனர்‌ அவர்களும்‌ பிரதம விருந்தினராய்‌ இருந்தனர்‌. மேற்படி கப்பலைப்‌ பற்றிய சில ருசிகரமான விவரங்கள்‌ கீழ்வருமாறு : உலகத்திலேயே அதிசயமான.தும்‌, பெரியதும்‌ பிரிட்டிஷ்‌ சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக்கூடியதுமான கனடியன்‌-பசிபிக்‌ போக்குவரவுக்‌ கப்பலான ¢ எம்பரஸ்‌ ஆப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1184 பெரியார்‌ # வெ. ரா, சிந்தனைகள்‌ பிரிட்டன்‌? என்ற இந்தக்‌ கப்பலைதீ தவிர, வேறு ஒன்றையும்‌ கூறமுடியாது. பிரிட்டிஷார்‌ கடல்‌ வியாபாரதீதில்‌ மிகவும்‌ கியாதி வாய்ந்தவர்கள்‌ என்ற பரம்பரைப்‌ புகழை இந்த அதி உன்ன தக்‌ கப்பல்‌ ஒருபடி அதிகம்‌ உயர்த்தி கிருக்கிறதென்றே சொல்லலாம்‌. இது 800 அடி நீளமும்‌ 100 அடி அகலமும்‌ உள்ளது) மணி 1-க்கு 20 மைல்‌ வேகம்‌ போகக்கூடியது ) மொத்தம்‌ 42,500 டன்‌ எடையுள்ளது;) பிரகாசமான வெள்ளை வர்ணதீதால்‌ பூசப்பட்டும்‌, மேல்தட்டின்‌ பகுதிகளில்‌ நீலநிறப்‌ பட்டைகள்‌ அழகாகத்‌ தீட்டப்பட்டும்‌, இதனை ஊடுருவிச்‌ செல்லும்‌ மூன்று பெரிய புகை போக்கிகள்‌ பழுப்பு நிறதீதோடும்‌ திகழ்வது கண்ணைக்‌ கவரதீதகீக காட்சியாகும்‌. அதன்‌ அடிப்‌ பாகத்தில்‌ தீட்டப்பெற்றுள்ள பச்சை நிறப்‌ பட்டைகள்‌ அட்லாண்டிக்‌ சமுத்திரத்தின்‌ அலைகளின்‌ நிறத்தைத்‌ தோற்கடிப்பனவாய்‌ இருக்கின்றன. மேல்‌ தளத்திலிருந்து சுமார்‌ 208 அடி உயரத்தில்‌ பறக்கும்‌ கொடிகளும்‌, கப்பல்‌ அசையும்போது காற்றினால்‌ அலைக்கப்பட்ட அக்‌ கொடிகள்‌ அசையும்‌ கம்பீரமும்‌ தூரத்திலிருந்து காண்போருக்கு ஓர்‌ மிகப்‌ பெரிய உன்னத; நவீன கிராஜமாளிகையே தண்ணீரில்‌ மிதப்பதுபோல்‌ தோன்றும்‌. * எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டன்‌? முதல்‌ வகுப்பும்‌ பிரயாணிகள்‌ மூன்றாம்‌ வகுப்பு அறையும்‌ உடையதாயிருக்கிறது. கிதை உண்டாக்கும்‌ போதே ஒன்று மட்டும்‌ முக்கியமாய்க்‌ கவனிக்கப்பட்டது. அதாவது; மற்ற எந்தக்‌ கப்பலிலும்‌ இல்லாத மாதிரி ஒவ்வொரு பிரயாணிக்கும்‌ அதிகமான கிடவசதி அளிக்கத்‌ தக்கதாய்‌ இருக்க வேண்டுமென்பதே. மற்ற அதிக எடையுள்ள கப்பல்களைக்‌ காட்டிலும்‌ இதில்‌ குறைந்த பிரயாணிகளே இருக்கக்‌ கூடியதாய்‌ இருக்கிறது. சுமார்‌ 1195 பிரயாணிகன்‌ மட்டும்‌ இிதிலிருக்கலாம்‌. ஆனால்‌, கப்பல்‌ மாலுமிகள்‌ 714 பேர்‌ இருக்கிறார்கள்‌. பிரயாணிகளது உபபோகதீதிற்காக ஒன்பது தட்டுகள்‌ விடப்பட்டிருக்கின்‌றன. சலூன்‌ பிரயாணிகளின்‌ உபயோகத்திற்காக 11 பொது அறைகளும்‌, ஒரு சிசு போஷண சரலையும்‌ யாதீரீகர்களுக்கு 3 பொது அறையும்‌ ஒரு சிசு போஷண சாலையும்‌, 3-ம்‌ வகுப்புப்‌ பிரயாணிகளுக்கு 2 பொது அறைகளும்‌ ஒரு சிசு போஷண சாலையும்‌ ஒதுக்கப்‌ பட்டிருக்கிறது. *ஏ? தட்டிலும்‌ பி? தட்டிலும்‌ பிரயாணிகள்‌ உலாவவும்‌, காற்று வாங்கவும்‌ தகுந்த திறந்தவெளிகள்‌ இருக்கின்றன. மற்றும்‌ * ஏ? தட்டில்‌ ஒரு பாகம்‌ நடனதீதிற்காக ஒதுக்கி விடப்பட்டிருக்கிறது. *பி? தட்டு மிகவும்‌ அலங்காரமாகவும்‌, முதல்‌ வகுப்புப்‌ பிரயாணிகள்‌ சவுகரியமாய்‌ இளைப்பாரதி தக்கதாயும்‌ இருக்கிறது. சலூன்‌ பிரயாணிகளின்‌ சவுகரி யதீதை முன்னிட்டு டென்னிஸ்‌ முதலிய விளையாடுமிடங்கள்‌ கொண்ட படகுதட்டு ஒன்றும்‌ இணைக்கப்பட்டிருக்கிறது. *டி? தட்டில்‌ இரண்டு பெரிய சாப்பிடும்‌ அறைகளும்‌, அதிலிருந்து ஏணி வழியாக மேலே * எப்‌? தட்டுக்குச்‌ சென்றால்‌ அங்கு நீந்தும்‌ குளமும்‌, சிற்றுண்டிச்‌ சாலையும்‌ தேகாப்பியச இடங்களும்‌, மனோரம்மியமான காட்சியவிப்‌ பனவாய்‌ இருக்கின்றன. ஜனங்கள்‌ சவுகரியமாய்‌ உட்கார்ந்து பார்க்கதீ தக்க காலரிகள்‌ நிறைந்த டென்னிஸ்‌: பந்து விளையாடுமிடமும்‌, அதன்‌ சமீபதீதிலேயே சிற்றுண்டிச்‌ சாலையும்‌ நிர்மாணிக்கப்‌ பட்டிருக்கின்றன. *எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டனின்‌? இன்னொரு முகீகிய காட்சி என்னவெனில்‌, ஒவ்வொரு தட்டிலுள்ளவர்களும்‌ நீந்துவதற்குக்‌ கொண்டுள்ள ஆர்‌ வமே. தண்ணீர்‌ மட்டத்தில்‌ அவர்கள்‌ எல்லோரும்‌ நீந்‌.துவது கண்டுகளிக்கவேண்டிய ஆச்சரியக்‌ காட்சியே யாகும்‌. கை, கால்‌ முதலிய அங்கங்கலைப்‌ பரீட்சை செய்து, வேண்டிய சிகிச்சை செய்ய ஏற்பட்ட தனி அறைகள்‌ * பி? தட்டின்‌ மதீதியில்‌ இருக்கிறது. ஜி? தட்டில்‌ பற்பல புதிய காட்சியளிக்கும்‌ பல அறைகள்‌ சுமார்‌ 30 அடி அகலதீதில்‌ அமைக்கப்பட்டிருக்கின்‌ றன மேற்சொன்ன பல நவீனங்களோடு * எப்‌? தட்டில்‌ டர்கிஷ்‌ பாதி (Turkish Bath) என்று சொல்லப்படும்‌ ஒருவித ஸ்நானதீதிற்குரிய சாதனங்களெல்லாம்‌ அமைக்கப்பெற்றிருக்‌ கின்றன www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1185 இத்தகைய பெரிய கப்பலின்‌ அலங்காரம்‌ மிகவும்‌ நூாதனமானவை. ஒவ்வொரு இடத்திலும்‌ அலங்காரங்கள்‌ ஒழுங்காயும்‌, நவீனமாயும்‌, மேனாட்டுப்‌ புராதன சித்திர வேலைப்பாட்டுடன்‌ நவீன கொள்கைகளைப்‌ புகுதீதி எங்கும்‌ வளைவுகளாகவும்‌, கோணங்க வாகவும்‌; சரி கோடுகளாகவும்‌ உள்ள அலங்காரம்‌ பார்க்கப்‌ பார்க்கப்‌ பரவசமாக இருக்கிறது. பல கற்றுத்தேர் ந்த நிபுணர்களின்‌ மேற்பார்வையில்‌ எவ்விதக்‌ குறைபாடுமில்லாது செவ்வனே அலங்கரிக்கப்பட்ட தோற்றம்‌ போற்றக்‌ கூடியதே. முதல்‌ முதல்‌ நமது கண்களைக்‌ கவர்வது ¢ எம்பரஸ்‌ அறை? என்ற நடன அறையே யாகும்‌, இதை மிகவும்‌ பிரக்யாதி பெற்ற எம்பயர்‌ நடனசாலைக்கு அடுதீதபடியாகச்‌ சொல்லலாம்‌, இருண்ட நீலநிற மேற்கூரையும்‌ அதன்‌ வழியாக மின்சார சாதனதீதால்‌ தோன்றி மறையும்‌ நட்சதீதிரங்களின்‌ ஒளியும்‌, அவற்றைச்‌ சுற்றிய வெண்ணிறமான சுவாகச்‌ சதுரத்‌ தூண்களும்‌, மெல்லிய சிறகுகளால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்தம்பதீதின்‌ பீடங்‌ களும்‌, சரிகை வேலைப்பாடமைந்த இளஞ்‌ சிவப்பான வெல்வட்‌ பட்டினால்‌ தொங்கவிடப்‌ பட்ட சன்னல்‌ திரைகளும்‌, மற்றொரு மூலையில்‌ மேடையின்‌ பின்புறம்‌ சன்னல்‌ திரை: களையும்‌ தோற்கடிக்கக்கூடிய சிங்காரத்தோடு தொங்கவிடப்பட்ட திரையின்‌ பிரகாசமும்‌ ஒருங்கே சேர்ந்து மனோரம்மியமான காட்சியளிப்பதோடு இஃதோர்‌ வாதீதியக்காரர்‌ மேடையோ, அன்றிப்‌ பேசும்‌ படக்காட்சி சாலையோவென்ற அய்யத்தை உண்டாக்காதிராது. அடுத்தாற்போல்‌, பசும்‌ சலவைக்‌ கல்‌ தூண்களும்‌, கண்ணாடியில்‌ கூரையும்‌ கொண்டு சிவப்பும்‌ நீலமும்‌ கலந்த வெல்வெட்‌ பட்டுத்‌ திரைகள்‌ தொங்கவிடப்பட்டதுமான களைப்‌ பாறம்‌ கூடம்‌ காணப்படுகிறது. விலையுயர்தீத மரத்தினால்‌, தூண்களே இல்லாது நுண்ணிய வேலைப்பாடு களமைந்து இரண்டு பாகமாகத்‌ தடுக்கப்பட்ட சாப்பிடும்‌ மண்டபத்தின்‌ சுவரில்‌ காணப்படும்‌ சித்திரங்கள்‌ ஆச்சரியப்படத்‌ தக்கனவாய்‌ இருக்கின்றன. ஒருபுறம்‌ புஷ்பங்கள்‌, பறவைகள்‌ முதலிய சித்திரங்களும்‌ மற்றொரு புறம்‌ வானமும்‌ நட்சதீதிரங்களைப்‌ போலும்‌ சித்திரிக்கப்‌ பட்டிருக்கிறது. சுமார்‌ 40 அடி அகலமும்‌ தூண்கள்‌ தாங்கிய கண்ணாடிக்‌ கூரையும்‌ பளிங்கு போன்ற தண்ணீரும்‌ கொண்ட நீந்தும்‌ குளமும்‌ மிகவும்‌ அழகானது. அக்‌ கண்‌ ணாடிக்‌ கூரையின்‌ வழியாகச்‌ செயற்கைச்‌ சூரிய ஒளி செலுத்தப்படுகிறது. அதன்‌ ஒரு பாகதீதிலிருநீது படிக்கட்டுகளின்‌ வழியாக மேல்‌ தளதீதுக்கும்‌, சிற்றுண்டிச்சாலைக்கும்‌, உடைமாற்றிக்கொள்ளும்‌ அறைக்கும்‌ செல்ல வசதி ஏற்படுதீதப்பட்டிருக்கிறது. * எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டனில்‌? பிரயாணிகள்‌ இரண்டு கண்டதீதிலிருந்தும்‌ ஆகாய வசனியின்‌ உபயோகதீதால்‌ ஆனந்தமடைகிறாரீ்கள்‌, சேமிக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து சுமார்‌ 10 அல்லது 12 ஒலிபெருக்கும்‌ கருவியின்‌ மூலம்‌, மேல்‌ தட்டுகளுக்கும்‌ முக்கியமான பொது அறைகளுக்கும்‌ நிகழ்ச்சிகள்‌ கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ¢ எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டனில்‌? உள்ள பிரயாணிகள்‌ வெளிவேவிடும்‌ சுவாசக்‌ காற்று ஒவ்‌ வொரு 7 நிமிஷதீதுக்கு ஒரு தரம்‌ சுதீதமாக்கப்பட்டு, புதிய ஆரோக்கியக்‌ காற்று நிரப்பப்‌ படுகிறது. ஓர்‌ நூதன சாதனதீதால்‌ கடற்காற்று ஓரிடத்தில்‌ சேகரிக்கப்பட்டு, பின்னர்‌ கால நிலைக்குதீ தக்கவாறு உஷ்ணமோ அல்லது குளிர்ச்ிசியோ ஆக்கப்பட்டு, பொது அறை கலிலும்‌, மண்டபத்திலும்‌ பொருதீதியிருக்கும்‌ விசைகளை அமுதீதுவதின்‌ மூலம்‌ எல்லா விடங்கவிலும்‌ சுதீதக்‌ காற்று நிரப்பப்படுகிறது. மற்றும்‌ தனிப்பட்ட நபர்களின்‌ விருப்பத்‌ திற்கேற்றவாறு இளங்‌ காற்றாகவோ அல்லது பெருங்‌ காற்றாகவோ; தாங்கள்‌ விரும்பிய அறைகளுக்கும்‌ இடத்திற்கும்‌ வரவழைத்துக்‌ கொள்ளலாம்‌. * எம்பரஸ்‌ ஆப்‌ பிரிட்டன்‌ ? எல்லா வகையிலும்‌ இணையற்ற தாகும்‌. 42,500 டன்‌ எடை யுள்ளதாகப்‌ பதிவு செய்யப்பட்டிருக்கும்‌ இக்‌ கப்பல்‌, பிரிட்டிஷ்‌ ஏகாதிபதீதியதீ துறைமுகங்‌ கவின்‌ மதீதியில்‌ செல்லும்‌ கப்பல்களுக்கெல்லாம்‌ பெரியது) அய்ரோப்பரவுக்கு செயின்ட்‌ 1686-19 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1186 பெரியார்‌ ஈ, வெ, ரா, சிந்தனைகள்‌ லாரென்ஸ்‌ வழியாகப்‌ பிரயாணம்‌ செய்யும்‌ கப்பல்களிலெல்லாம்‌ பெரியது] உலகப்‌ போக்கு வரவுக்‌ கப்பல்களிலே பெரியது. இலண்டன்‌ துறைமுகதீதிலேயே பெரியதெனப்‌ பதிவு செய்யப்பட்டது. மகா யுதீததீதிற்குப்‌ பிறகு இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ கிது போன்று கட்டப்படாத கிணையிலாதது;) செயின்ட்‌ லாரென்ஸ்‌ வழியிலேயே அதிக வேக மானது) கக்‌ கப்பலின்‌ முக்கிய அம்சமாகக்‌ கவனிக்கப்பட்ட கரைக்கும்‌ கப்பலுக்கும்‌ டெலிபோன்‌ சம்பந்தம்‌ இணைக்கப்பட்ட து) ராயல்‌ கழகதீதினராலேயே அலங்கரிக்கும்‌ பெருமை வாய்ந்த முதல்‌ கப்பல்‌ Dg ஒன்றே. இன்னும்‌ சில்லரை விஷயங்களைப்பற்றி எழுதவேண்டுமானால்‌ விரிந்துகொண்டே போகும்‌. மேற்கூறப்பட்ட காரணங்களால்‌ இக்‌ கப்பலின்‌ தனிச்‌ சிறப்பு தெள்னென விளங்குகிறது. [8 குடிஅரசு 3-கடிதம்‌--24-1-1932] 6. அயல்நாட்டு நடப்புக்கள்‌ திரு. 7 வெ. இராமசாமி அவர்கள்‌ சிலோன்‌ ¢ டெய்லி நியூஸ்‌? பதீதிரிகைப்‌ பிரதிநிதி யொருவருக்குப்‌ பேட்டி கொடுத்துப்‌ பேசியபோது குறிப்பிட்டதாவது i— * நான்‌ ஓர்‌ நாதீதிகனல்ல$ தாராள எண்ணமுடையோன்‌. நான்‌ ஒரு தேசிய வாதியுமல்ல ; தேசாபிமானியுமல்ல $ ஆனால்‌ தீவிர ஜீவரக்ஷா எண்ணமுடையவன்‌. எனக்கு சாதி என்பதோ, சாதியென்பதின்‌ பேரால்‌ கற்பிக்கப்படும்‌ உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்‌ தகைய எண்ணத்தையே நான்‌ எதிர்ப்பவன்‌$ ஆதரிப்பவனல்ல. தாங்கன்‌ மேல்‌ சரதியார்‌, உயர்ந்தவர்கள்‌ என்று சொல்லிக்கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமை களாகிய தெருவில்‌ நடத்தல்‌, கோவிலுகீகுன்‌ செல்லல்‌ முதலியவற்றை மறுதீ.துக்கொண்டு, ஏனையோரர்க்கும்‌ சமதீ துவம்‌ வேண்டுமென்று செய்கிற முயற்சியைக்‌ கண்டிக்கி3றன்‌. காலமெல்லாம்‌ பண்டையப்‌ பழக்க வழக்கங்களும்‌, மூடக்கொள்கைகளும்‌ நிலைத்தே நிற்கவேண்டுமென்றால்‌ ஒரு பறையன்‌ என்று சொல்லப்படுகின்‌றவனோ, அல்லது சகீகிலி என்று சொல்லப்படுகின்‌றவனோ மிருகதீதைவிடக்‌ கேவலமாக நடதீதப்பட்டே வர, எப்படி இந்தியா அவன்‌ தாய்நாடுதான்‌ என்று எண்ணமுடியும்‌ ? ஒரு பொதுச்‌ சேவைக்கு அவர்களை நம்மோடு ஒதீ.துழைக்க எதிர்பார்க்க முடியுமா கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள்‌ அரசாங்கதீதை நடதீது8ன்றவர்களாயிருக்க வேண்டும்‌. ஜனங்களின்‌ நன்மைக்காக, ஜனங்களாலேயே நடதீதப்படுகின்‌ற அரசாங்கமா யிருதீதல்‌ வேண்டும்‌) இந்தியாவைப்‌ பற்றியுன்ள வறுமையை அகற்றக்கூடிய அரசாங்கமா யிருக்கவேண்டும்‌. பிரான்ஸ்‌, ஜெர்மனி, கிரீஸ்‌, அய்க்கிய தேசம்‌ முதலியனவெல்லாம்‌ குடியரசு நாடு களாகவே இருக்கின்றன. ஆனால்‌, எங்கும்‌ வேலையில்லாத்‌ திண்டாட்டம்‌ தலைவிரித்தாடு கிறது. ரஷ்யா ஒன்றில்மட்டும்‌ வேலையில்லாத்‌ திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள்தான்‌ இருக்கிறார்கள்‌. அவர்களெல்லாம்‌ வயது சென்றவர்களும்‌, அங்க வீனர்களுமே. அவர்களை அரசாங்கம்‌ போஷிக்கிறது. உண்மையில்‌ அது ஒரு புதிய உலகம்‌. அதுபோல்‌ முன்னொருபோதும்‌, எந்நாட்டிலும்‌ சீர்திருத்தம்‌ நடந்தேறியதே யில்லை. அந்நாடு தொழிலாளர்‌ மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல்‌ தொண்டமான்‌. ஈறாக எல்லோரும்‌ அரசாங்கத்‌ தொழிலாளராகவே கருதப்படுகின்றனர்‌. அங்கு எல்லா மனிதரும்‌ சமமாகவே கருதப்படுகின்றனர்‌. மகீகளுகீகுள்‌ உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம்‌, தொழில்‌, வர்தீதகம்‌, கல்வி முதலிய சமூக அபிவிருதீதிக்காண தொழில்களெல்லாம்‌ அரசாங்கப்‌ பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன. விவசாயம்‌ அய்க்கிய முறையில்‌ அரசாங்கப்‌ பொறுப்பில்‌ பரிபாலிக்கப்பட்டு வருகிற துஃ www.thamizham.net - Free £ book No 3031 விறிவு வளர்சீசி 3187 அங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது. ஜனசமூக நன்மையே சமயம்‌ $ அதுவே சன்மார்க்கம்‌. கிறிஸ்துவக்‌ கோயில்களுண்டு) அதற்கு அரசாங்கத்தார்‌ எவ்விதப்‌ பண உதவியும்‌ செய்வது கிடையாது. அவர்களுக்கு கடவுளைப்‌ பற்றியோ, மதத்தைப்‌ பற்றியோ கவலையோ, விசாரமோ கிடையாது குற்றம்‌ செய்தவர்களை அரசாங்கம்‌ ஒரு நவீனமுறையில்‌ தண்டிக்கிறது. அவர்‌ களுக்குச்‌ சகல சவுகரியங்களும்‌ செய்து கொடுக்கப்பட்டாலும்‌ அவர்கள்‌ சம்பளத்தில்‌ ஒரு பாகம்‌ அபராதத்‌ தொகையாகப்‌ பறிமுதல்‌ செய்யப்படுகிறது. பலமுறை குற்றம்‌ செய்தவர்களைச்‌ சுகாதார நிலையத்ீதிற்கனுப்பி அங்கு அவர்களது மனோநிலை மாறதீதக்க சிகிச்சைகள்‌ கெய்யப்படுகின்‌ றன. பாடசாலைகள்‌ மூலமாயும்‌, சினிமாக்கள்‌ மூலமாயும்‌, இதுவரை சுற்றிராத பாமர: மக்களுக்கும்‌ தொழில்‌ முயற்சியை அஸ்திவாரமாககீகொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும்‌ பின்பற்றாத அரசாங்கம்‌ மத எதிர்ப்பு சங்கதீதிற்குப்‌ “போதிய உதவி யவிதீது வருகிறது. நான்‌ இதீ தேசத்தைப்‌ பார்வையிடச்‌ சென்றதின்‌ நோக்கமெல்லாம்‌, அங்குள்ள: நிலைமைகளைச்‌ சரிவர அறியவும்‌, அதீ தேசதீதைப்பற்றிப்‌ பெருமிதப்படுதீதிக்‌ கூறும்‌ கதைகள்‌ உண்மையாவென்று அறியவு3மயாகும்‌. அரசாங்கம்தாம்‌ தேசத்தை புனருதி தாரணம்‌ செய்யவேண்டுமென்பதிலேயே தீவிர கவனம்‌ செலுத்துவதால்‌, கடவுளைப்‌ பற்றியோ மதத்தைப்பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. எகிப்து நாட்டில்‌ பரீதா (கோஷா) முறை அனேகமாக அழிந்துவிட்டதென்றே சொல்லலாம்‌ ) சில வயோதிகக்‌ கிழவிகள்‌ மட்டும்‌ அதை விடவில்லை. எகிப்தியப்‌ பெண்கன்‌ ஆங்கில மாதரைப்‌ போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள்‌, அருக்கி தேசதீதில்‌ அதிதீவிரமான மாறுதல்கள்‌ ஏற்பட்டுள்ளன. சமூக முன்னேற்றத்தில்‌ துருக்கி மாதர்‌ அதிகப்‌ பிரயத்தனம்‌ எடுத்து வருகிறார்கள்‌. சமிபத்தில்‌ ஒரு அரக்கி மாது போலீஸ்‌ சூப்பரெண்டெண்டாக நியமனம்‌ பெற்றிருக்கிறார்‌. [குடி அரசு? 80-10-1932] 7. ' தோழர்‌ ? என விளியுங்கள்‌ ! தோழர்களே, எனது மேல்நாட்டுச்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ ஒருவாறு வெற்றியுடன்‌ முடிந்து, 11-11-1932-நீ தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன்‌. நீண்ட பிரயாண தீதினால்‌ நான்‌ சிறிது களைப்புற்றிருநீதாலும்‌ சமீபத்தில்‌ களைப்பு நீங்கி, இயக்க வேலையை மும்மூரமாய்தி தொடங்க உறுதிகொண்டிருக்கி2றன்‌. என்னுடன்‌: கூடவநீ்த தோழர்‌ இராமநாதன்‌ அவர்கள்‌, எண்ணை மார்செயில்ஸில்‌ இந்தியாவுக்குக்‌ கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்குச்‌ சென்று இருக்கிறார்‌. அங்கு சில விஷயம்‌ அறிந்து 2 அல்லது 8 மாதத்தில்‌ இந்தியா திரும்புவதாகச்‌ சொல்லிப்‌ போயிருக்கிறார்‌. அதற்குள்‌, கூடிய சீக்கிரம்‌ நமது இயக்கத்‌ தோழர்கள்‌ பலரைக்‌ கூட்டிக்‌ கலந்துபேசி ஒரு வேலைத்‌ திட்டத்‌ அடன்‌ தீவிரப்‌ பிரச்சாரம்‌ நடத்த உத்தேசிதீதிருக்கி3றன்‌. சீக்கிரத்தில்‌ எனது சுற்றுப்பயணதீதின்‌ விருதீதாநீதங்களையும்‌, காட்சிகளையும்‌, அதனால்‌ நான்‌ கொண்ட கருத்துக்களையும்‌, அதை எந்த அளவுக்குப்‌ பின்பற்றவேண்டும்‌ என்பதையும்‌ விளக்கிப்‌ பதீதிரிகைகளில்‌ வெளியிடவும்‌ உத்தேசித்து இருக்கிறேன்‌. நான்‌ இங்கு இல்லாதபோது இயக்கத்தைத்‌ தொடர்ந்து முன்னிலும்‌ பல மடங்கு அதிகமாக எழுத்தாலும்‌, உபன்யாசங்களாலும்‌, மாநாடுகள்‌ கூட்டியும்‌ மக்களுக்கு உண்மையுணர்ச்சி களை ஊட்டிதீ தீவிரமாய்‌ வேலை செய்துவந்த தோழர்கள்‌ யாவருக்கும்‌ நான்‌ என்‌ மனப்‌ பூர்வமான நன்றியறிதலைதீ தெரிவித்துக்கொள்ளுகிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1188 பெரியார்‌ w. வெ. ரா. சிந்தனைகள்‌ இயக்கதீ தோழரீகளும்‌, இயக்க அபிமானதீ தோழர்களும்‌ இனி ஒருவருக்கொருவர்‌ அழைதீதுக்கொள்ளுவதிலும்‌, பெயருக்கு முன்னால்‌ பின்னால்‌ மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும்‌ ஒர மாதிரியாக--* தோழர்‌ ? என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும்‌ என்றும்‌, மகா-௱ஃஹஜீ, திருவாளர்‌, திரு, தலைவர்‌, பெரியார்‌, திருமதி, னீஜதீ என்பனபோன்ற வார்த்தைகளைச்‌ சேர்தீதுப்‌ பேசவோ--எழுதவோ கூடாது என்றும்‌ வணக்கமாய்‌ வேண்டிக்கொள்ளுகிறேன்‌. ¢ குடி அரசிலும்‌ அடுத்த வாரம்‌ முதல்‌ அந்தப்‌ படியே செய்யவேண்டுமென்று தெரிவிதீதுக்கொண்டிருக்கிறேன்‌. (¢ குடி அரசு 3-குறிப்பு--13-11-1932] 8. நானும்‌ நண்பர்களும்‌ தோழர்‌ கிராமநாதன்‌ அவர்கள்‌ அய்ரேோப்பாவிலேயே தங்கிக்கொண்ட விஷயதீதைப்‌ பற்றிப்‌ பல பதீதிரிகைகள்‌ பலவிதமாக எழுதிப்‌ பொதுஜனங்களுகீகுள்‌ ஒருவித தப்பு அபிப்‌ பிராயத்தை உண்டுபண்ண முயற்சிப்பதாகதீ தெரியவருகின்றது. அது என்னவெனில்‌ : 1. தோழர்‌ இராமநாதனின்‌ கையில்‌ ஒரு காசுகூடக்‌ கொடுக்காமல்‌, அவரைக்‌ கரயலாவுடன்‌ பிரான்ஸ்‌ ஆஸ்பதீதிரியில்‌ விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டதாக ஒரு கூற்று. 2. தோழர்‌ இராமநாதனை மார்சேய்ல்ஸ்‌ நடுத்‌ தெருவில்‌ கையில்‌ ஒரு காசுகூட இல்லாத நிலையில்‌ விட்டுவிட்டு வந்ததாக மற்றொரு கூற்று. 3. தோழர்‌ இராமநாதனை மார்சேய்ல்ஸ்‌ தெருக்களில்‌ ஒரு காசுகூடகீ கொடுக்காமல்‌ விட்டுவிட்டு வந்.துவிட்டதாகவும்‌, ஆனால்‌ தன்‌ கையில்‌ தன்‌ தங்கை எவ்வளவோ கஷ்டப்‌ பட்டுச்‌ சேர்தீது வைத்திருந்ததை அனுப்பியிருப்பதாகவும்‌ அது, சிறுதொகை--செலவுக்குப்‌ போதாத,து போலவும்‌ குறிப்பிட்டு, கிங்கு ஒரு கனவானால்‌ தனக்குக்‌ கடனாக 300 ரூபாய்‌ அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருப்பதாய்‌ மற்றொரு கூற்றும்‌, இன்னும்‌, பல. மேற்கண்ட இவைகளையெல்லாம்‌ நிரூபிக்க தோழர்‌ இராமநாதனால்‌ எழுதப்பட்ட கடிதங்கள்‌ என்பதாகச்‌ சில பதீதிரிகைகளில்‌ பிரசுரிக்கப்பட்ட கடிதங்களேயாகும்‌. அவை யாவன ₹ 1, 4-11-1932ஆம்‌ தேதி ¢ தாருல்‌ இஸ்லாம்‌ ? உப தலையங்கம்‌ $ *எமது நண்பர்‌ ஒருவருக்கு திரு. எஸ்‌. இராமநாதன்‌ அவர்கள்‌ எழுதிய கடிததீதி லிருந்து, அவர்கள்‌ ஜினிவாவில்‌ (ஸ்விட்ஜரீலாநீ,து) இருப்பதாகவும்‌, பிரான்சில்‌ அவரை ஆஸ்பத்திரியில்‌ விட்டுவிட்டு, தோழர்‌ ஈஃ வெ. ராஃவும்‌ ராமுவும்‌ ரஷியா போய்விட்ட தாகவும்‌ செய்தி எட்டியது மற்றொன்று ஜினிவாவிலிரு நீது, 2. * நாயக்கரது வருகையைப்‌ பற்றித்‌ தெரிந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்‌. கையில்‌ ஒரு காசுகூட இல்லாத நிலைமையில்‌ அவர்‌ மார்சேய்ல்ஸ்‌ வீதிகளில்‌ என்னை விட்டுவிட்டு வந்துவிட்டார்‌ $ அது அவருடைய சுபாவம்‌ $ ஆகையால்‌ அதைப்பற்றிக்‌ குறை கூறுவதற்கில்லை. என்னுடைய சகோதரி சேகரிதீ து அனுப்பக்கூடிய சிறிய தொகையைக்‌ கொண்டு கஷ்டதீதுடன்‌ நாட்களைக்‌ கழிதீது வருகிறேன்‌. தங்களுக்கு வேறு பலவித செலவிருக்குமென்பது தெரிந்தாலும்‌, தாங்கள்‌ இதுசமயம்‌ ரூ. 300 கடனாகக்‌ கொடுக்கக்‌ கடமைப்பட்டுள்ளீர்களென்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தத்‌ தொகையைதி தங்களால்‌ அனுப்ப முடியாதிருந்தால்‌ கூடுமானதையாவது அனுப்ப வேண்டுகிறேன்‌ ? என்பதாகும்‌. இவற்றைச்‌ சிலர்‌ நம்பியும்‌, சிலர்‌ நம்பாமலும்‌, கதன்‌ உண்மைதான்‌ என்னவாய்‌ இருக்கக்கூடும்‌ என்பதை அறிய ஆசைப்பட்டும்‌ கிருப்பதாகத்‌ தெரியவருகிறது. www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1189 இதைப்பற்றி கி.துசமயம்‌ மிகச்‌ சுருக்கமாகவே விளக்கினால்‌ போதும்‌ என்று கருது கிறேன்‌. ஏனெனில்‌, தோழர்‌ இராமநாதன்‌ இங்கு பக்கத்தில்‌ ஆஜர்‌ கில்லை என்பது ஒருபுற மிருந்தாலும்‌, மேற்கண்ட கூற்றுக்களைப்‌ பொறுதீதவரையில்தான்‌ பொதுஜனங்களும்‌ உண்மை அறிய ஆசைப்படுவார்கள்‌ ஆனதினாலும்‌, பத்திரிகைகளில்‌ காணப்பட்ட மேற்‌ கண்ட கூற்றுக்கள்‌ அவை தானாகவே ஒன்றுக்கொன்று முரணாய்‌ இருப்பதை வாசகர்கள்‌ கூர்ந்து கவனித்தாலே ஒருவாறு உண்மை உணரலாம்‌ ஆனதினாலும்‌ மற்றும்‌ அதைப்‌ பரப்ப முயற்சிக்கின்‌றவர்களின்‌ மனப்போகீகைக்‌ கவனித்துப்‌ பார்த்தால்‌ என்ன கருத்‌ இடன்‌ இந்தப்‌ பிரச்சாரம்‌ செய்யப்படுகின்றது என்பது தெளிவாகுமான தினாலும்‌ வெகு சுருக்கதீதிலேயே இருப்பது நலம்‌ என்று கருதுகிறேன்‌. தோழர்‌ இராமநாதன்‌ காயலாவுடன்‌ எந்த ஆஸ்பதீதிரியிலும்‌ விட்டுவிட்டு வரப்பட வில்லை என்பு, அவர்‌ கடிதங்கள்‌ என்பவைகள்‌ ஒன்றிலிருந்தே வெளிப்படுகின்ற. அவர்‌ கையில்‌ ஒரு காசுகூட இல்லாமல்‌ விட்டுவிட்டு வரப்படவில்லை என்பதும்‌ அவரது கடிதங்கள்‌ என்பவைகளில்‌ மற்றொன்றில்‌ இருந்து விளங்குகின்றது. ஆகவே, பிரசாரதீதிற்கு ஆதாரமான இரண்டு கூற்றுக்களும்‌ உண்மை இல்லை என்பதை நான்‌ எடுதீதுக்‌ காட்ட வேண்டியதில்லை. ஆனால்‌ தோழர்‌ கிராமநாதனால்‌ எனக்கு எழுதப்பட்ட இரண்டு கடிதங்‌ களை இதில்‌ பிரசுரிக்கிறேன்‌. அவ்விரண்டு கடிதங்களையும்‌ பார்‌ ததால்‌, ஒன்று தோழர்‌ இராமநாதன்‌ இந்தி யாவுகீகு வர இஷ்டப்படவில்லை என்பதும்‌, நாம்‌ அழைத்தும்‌ அதை மறுதீதிருப்பதும்‌, என்னை மாத்திரம்‌ தனியாய்‌ இந்தியாவுக்குப்‌ போகும்படி வலியுறுத்தி இருப்பதும்‌ விளங்கும்‌. “(இதன்‌ காரணம்‌ அவரது குடும்பதீதாருக்கும்‌ நெருங்கிய நண்பர்களுக்கும்‌ தெரியும்‌.) மற்றொன்று, நான்‌ இந்தியா வந்து சேர்ந்த பிறகு தோழர்‌ கிராமநாதனால்‌ ஜினிவாவில்‌ இருந்து எழுதியிருப்பது விளங்கும்‌. அவையாவன $-- 1 Madrid Hospital 17--8--32 நமஸ்காரம்‌, எனக்கு உடம்பு கொஞ்சம்‌ சவுக்கியமாய்விட்டபடியால்‌ உடுப்பு தேவையாய்‌ இருக்‌ கிறது. அதற்கு சவுகீகாரம்‌ போடாதவைகளை வீட்டுக்காரியிடம்‌ கொடுதீ.து போடச்சொல்லி காயவைத்து ஒரு செட்பூட்ஸ்‌ Socks உடன்‌ அனுப்பிவைக்க வேண்டுகிறேன்‌. கைப்‌ பையில்‌ Brush, 1௨௧1௦, சவரம்‌ பண்ணிக்கொள்ள கத்தி, பெட்டி, சோப்பும்‌, கடிதம்‌ எழுத காகிதம்‌, கவர்‌, பென்சில்‌, ஸ்டாம்பும்‌ அனுப்பவேண்டுகிறேன்‌. அவ்விடமுள்ள என்‌ புஸ்தகதீதில்‌ Bertrand Russel அனுப்புவது நலம்‌. தாங்கள்‌ எனக்காகக்‌ காலம்‌ கடத்தாமல்‌ மேற்கொண்டு Curals சரி என்று மறுபடியும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. இங்கு வேலைக்காரர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழகீகமாகையால்‌ சில்லரை: கொஞ்சம்‌ அனுப்பவேண்டுகிறேன்‌ இராமநாதன்‌ குறிப்பு:--இிந்த ஆஸ்பத்திரி மாட்ரிட்டுக்கு 6 மைல்‌ தூரத்தில்‌ ¢ Tetuau Victorias?® என்ற இடத்தில்‌ கட்டப்பட்டது. அங்கிருந்து மாட்ரிட்டுக்கு எழுதப்பட்டது. www.thamizham.net - Free £ book No 3031 1190 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ I S. RAMANATHAN, 0௦ Thomas Cook Geneva, Switzerland 26—10—32 அன்புள்ள அய்யா, மேற்கண்ட எனது விலாசத்திற்கு, ₹ குடி அரசு? பத்திரிகை அனுப்பிவர வேண்டு கிறேன்‌. மததீதைப்பற்றிய புதீதகம்‌ வெளியிட்டிருநீதால்‌ நான்கு பிரதிகள்‌ அனுப்பவும்‌. பரீனிலில்‌ இருந்த ராமு, இந்தியாவுகீகுதீ திரும்புவதாகச்‌ சொல்லிவிட்டு இங்கிலாந்து போன தாகக்‌ கேள்விப்படுகிறேன்‌. அவ்விடம்‌ திரும்பிவந்த விபரம்‌ எழுத வேண்டுகிறேன்‌. தங்கள்‌ அன்பன்‌ இராமநாதன்‌ இந்தக்‌ கடிதம்‌ நரன்‌ இந்தியாவுக்கு வந்தது மேல்‌ 13-11-1932 தேதியில்‌ ஈரேடு விலாசதீதிற்குக்‌ கிடைதீதது. இந்தக்‌ கடிதங்கள்‌ தோழர்‌ இராமநாதனின்‌ நிலையையும்‌, என்ன நடந்திருக்கக்‌ கூடும்‌ என்பதையும்‌ தானாகவே சொல்லும்‌. தவிர, தோழர்‌ இராமநாதன்‌ கையில்‌ பணமில்லை என்பது உண்மை அல்ல என்பதை அவர்‌ மற்றொரு நண்பருக்கு எழுதியிருப்பதாகச்‌ சொல்லப்படும்‌ கடிதங்கள்‌ ஒன்றின்‌ மூலமாகவே விளங்குமானாலும்‌ அதைப்‌ பற்றியும்‌ சற்று விளக்குவோம்‌. அவர்‌ இந்தியாவுக்குத்‌ திரும்புவதில்லை என்கின்ற விஷயத்தைத்‌ தனது சகோதரிக்கு சூசனையாய்க்‌ காட்டி எழுதி, செலவுக்கு அனுப்பும்படி எழுதிய கடிததீதின்மீது அவ்வம்மையார்‌ வருதீதப்பட்டு அவசியம்‌ திரும்பி வரும்படி கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொண்டும்‌ மற்றும்‌ அவர்‌ கேட்டபடி 300 ரூபாய்‌ அனுப்பியிருந்த தொகையின்‌ செக்கு ஒன்று என்னை அவர்‌ பயணம்‌ அனுப்பும்‌ முதல்‌ நாள்‌ வரையில்‌ மாற்றாமல்‌ வைத்திருந்து அன்றுதான்‌ மாற்றிக்கொண்டார்‌. இதோடு அவர்‌ இந்தியாவுக்கு வருவதில்லை என்று சொன்ன பிறகும்‌ அவர்‌ தனகீகுப்‌ பணம்‌ தேவையில்லை என்று சொன்ன பிறகும்‌, அவர்‌ கப்பலை விட்டு இறங்கும்போது நான்‌ கொடுத்த 5 பவுனும்‌ மற்றும்‌ அவரிடம்‌ சில்லரையாய்‌ இருந்த தொகையும்‌ சேர்த்துச்‌ சற்றேறகீகுறைய ரூ. 400 (நானூறு) போல்‌ அவர்‌ கைவசம்‌ இருந்தது. அவரது தங்கை அனுப்பிய ரூபாய்‌ சுமார்‌ ஒரு மாதகாலமாய்‌ செக்கு மாற்றாமலும்‌ அதிலிருந்து செலவழிக்கச்‌ செய்யாமலும்‌ இருக்கும்படி வற்புறுதீதியவன்‌: நானேயாகும்‌. அன்றியும்‌, அவர்‌ ஜினிவாவுக்குப்‌ போவதாய்ப்‌ பயணம்சொல்லிக்‌ கொண்டு கப்பல்‌ விட்டு இறங்கும்போது, * எப்பொழுதுதான்‌ இந்தியாவுக்கு வருவதாக உத்தேசம்‌ P என்று நான்‌ கேட்டதற்கு ¢ அதைப்‌ பற்றி நான்‌ முடிவு செய்யவில்லை; இரண்டு மூன்று மாததீதில்‌ திரும்பலாம்‌ என்று யோசிதீதிருக்கிறேன்‌ ? என்று சொன்னார்‌. *₹ எப்படியாவது இந்தியர்‌ வுக்குதீ திரும்பி வருவதுதான்‌ கிரமமாகும்‌! என்றும்‌ சொன்னேன்‌. கப்பல்‌ புறப்பட இருந்ததால்‌ என்னிடம்‌ ரூபாய்‌ பெற்றதும்‌, ¢ ஆகட்டும்‌? என்று சொல்லிக்‌ கொண்டு அவசரமாய்கீ கப்பலை விட்டு இறங்கினார்‌. ஆகவே, கையிலும்‌ பணமிருக்க, நானும்‌ கொடுதீது வந்திருக்க, இந்தியாவுக்கு வருவதானால்‌ இனியும்‌ பணம்‌ அனுப்பச்‌ செய்கிறேன்‌ என்று சொல்லியும்‌ வந்திருக்க, தோழர்‌ இராமநாதனை கையில்‌ ஒரு காசு இல்லாமல்‌ நோயுடன்‌ ஆஸ்பத்திரியில்‌ விட்டு வந்ததும்‌ எவ்வளவு தூரம்‌ உண்மையாயிருக்கக்கூடும்‌ என்பதை நாம்‌ விளக்க வேண்டியதில்லை. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1101 நேரில்‌ நடந்த வார்தீதைகள்‌ என்பது எப்படி இருந்தாலும்‌ இதில்‌ பிரசுரிக்கப்பட்ட எல்லாக்‌ கடிதங்களிலிருந்‌தும்‌ பொது ஜனங்கள்‌ கருத வேண்டிய விஷயம்‌ மூன்றேயாகும்‌. 1. தோழர்‌ இராமநாதன்‌ அவருடைய இந்திய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்‌ என்பவை கற்பனைக்‌ கடிதங்களாக இருக்குமா 2. அல்லது, எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள்‌ என்பவை கற்பனையாக இருக்குமா 1 8, எல்லாக்‌ கடிதங்களும்‌ தோழர்‌ இராமநாதன்‌ அவர்களால்‌ உண்‌ மையாகவே எழுதப்பட்டிருக்குமானரால்‌ அவர்‌ நிலைமைதான்‌ என்னமாய்‌ இருக்கக்கூடும்‌ என்பவைகளே யாகும்‌. இது விஷயதீதில்‌ எப்படி வேண்டுமானாலும்‌ கருதிக்‌ கொள்ளவோ முடிவு செய்து கொள்ளவோ வாசகர்களுக்குப்‌ பூரண சுதந்திரமும்‌ போதிய அனுபவமும்‌ உண்டு என்றே கருதி இது சமயம்‌ இதீ.துடன்‌ முடிக்கின்றேன்‌ . ஈ.வெ.ரா. (¢ குடிஅரசு 8 27-11-1932 9. இங்கிலாந்தில்‌ ஈ, வெ. ரா. சொற்பொழிவு தலைவரவர்களே | தோழர்களே | இந்தியர்களாகிய எங்களை நீங்கள்‌ ஒரு பரிகசிகீகதீ தகுந்த சமூகமாககீ கருதலாம்‌. ஆனால்‌, நாங்கள்‌ பிரிட்டிஷ்‌ தொழிற்கட்சியை மிகமிகப்‌ பரிகசிக்கத்‌ தக்க விஷயமாய்கீ கருதுகிறோம்‌ என்பதைத்‌ தெரிவிதீதுக்கொள்ளுகிறேன்‌. ஏனெனில்‌, தொழிற்கட்சித்‌ தலைவராகிய தோழர்‌ லான்ஸ்பரி அவர்கள்‌ சிப்பாய்கள்‌ சுடுவதையும்‌, கொல்லுவதையும்‌ தான்‌ சிறிதும்‌ விரும்புவதில்லை என்று பெருமை பேசிக்‌ கொள்ளுகின்றார்கள்‌. ஆனால்‌ எங்கள்‌ கார்வாத்‌ (Gharwath) சேனைகள்‌ நிராயுதபாணி களான மக்களைச்‌ சுடுவதற்கு மறுத்ததற்காக, தோழர்‌ லான்ஸ்பரியின்‌ தொழிற்கட்சி கவர்‌ மெண்டானது--அந்தச்‌ சிப்பாய்களுக்கு 15 வருஷ கடினகாவல்‌ தண்டனை விதிதீதிருக்கிறது என்பதை ஞாபகப்படுதீதுகின்றேன்‌.. 2. தொழிலாளர்‌ சங்கமாகிய டிரேட்‌ யூனியனை (Trade Union) ஆதரிப்பதாகவும்‌, அதில்‌ சேர்ந்து உழைப்பதாகவும்‌ பறைசாற்றுகிறீர்கள்‌. ஆனால்‌, எங்கள்‌ ஏழை இந்தியச்‌ சுரங்க வேலைக்காரர்களும்‌, மற்றும்‌ தொழிலாளிகளும்‌ சேர்ந்து ஒரு டிரேட்‌ யூனியன்‌ 3 சங்கம்‌ ஸ்தாபிப்பதற்காக அதன்‌ அதிகாரிகளையும்‌, அதற்கு உதவிசெய்த பிரிட்டிஷ்‌ தோழர்களையும்‌ வெளியில்‌ இருக்கவிடாமல்‌ உங்கள்‌ தொழிற்கட்சி அரசாங்கமானது மீரதீது சிறையில்‌ அடைத்துப்‌ போட்டுவிட்டது 3. தோழர்‌ லான்ஸ்பரி அவர்கள்‌ இந்தியர்கள்‌ விஷயத்தில்‌ மிக்க அனுதாபம்‌ இருப்பதாகவும்‌, இந்தியர்கள்‌ சடப்படுவதையும்‌, அடிக்கப்படுவதையும்‌, சிறையில்‌ அடைக்கப்படுவதையும்‌ தாம்‌ விரும்புவதில்லை யென்றும்‌ சொல்லிக்கொள்வதாகக்‌ கேள்விப்‌ பட்டேன்‌. ஆனால்‌, தோழர்‌ லான்ஸ்பரியுடைய தொழிற்கட்சி அரசாங்க ¢ கேபினட்‌ £டானது சுமார்‌ 80 ஆயிரம்‌ பேர்‌ வரை இந்திய ஆண்‌ பெண்களை ஜெயிலில்‌ அடைத்திருக்கிறது ; ஆயிரக்கணக்கான மக்களைச்‌ சுட்டுதீ தள்ளிக்கொண்டிருக்கிறது. ஆப்ரிக்கன்‌ கிராமங்களின்மீது ஆயிரக்கணக்கான 'தடவை ஆகாயப்‌ படை மூலம்‌ கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பர்மியர்களையும்‌ கிராமதீதரரையும்‌ சுட்டுக்‌ கொன்றிருக்கிறார்கள்‌. இதற்கு என்ன பதில்‌ சொல்லுகிறீர்கள்‌ ₹ ‘www.thamizham.net - Free £ book 1௦ 3031 1192 பெரியார்‌ #. வெ. ரா. சிந்தனைகள்‌ 8, இந்தியச்‌ சுரங்கங்களில்‌ பதீதுமணி நேர வேலைக்கு எட்டணா கூலிக்கு இந்தியர்‌ களிடம்‌ வேலை வாங்கப்படுகின்றது. சுமார்‌ நாற்பதாயிரம்‌ பெண்கள்‌ தினம்‌ அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள்‌ வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்‌. இந்தக்‌ கொடுமையையும்‌ ஆபாசதீதையும்‌ நிறுத்தத்‌ தொழிற்கட்சி அரசாங்கம்‌ என்ன. செய்தது ₹ 5, தோழர்‌ லான்ஸ்பரி அவர்கள்‌ இங்கிலாந்தில்‌ தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டு மென்று பேசுகிறார்‌ ] ஆனால்‌, இநீதியர விஷயத்தில்‌ தோழர்‌ காந்தியையும்‌ இர்வின்‌. பிரபுவையும்‌ கொடுமையான வட்டமேஜை மாநாட்டையும்‌ ஆதரிக்கிறார்‌. அவ்வள வோடு. மாத்திரமல்லாமல்‌ இந்தியாவானது இந்திய அரசர்களும்‌, ஜமீன்தார்களும்‌, முதலானி மார்களும்‌, அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம்‌ வகிக்கும்படியான தும்‌--தொழிலாளி களுக்கும்‌, குடிதீதனக்காரர்களுக்கும்‌ பாதீதியமும்‌, பொறுப்பும்‌ கில்லாததுமான ஒரு அரசியல்‌ சபை மூலம்‌ இந்திய நிர்வாகம்‌ நடகீகும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்‌. இதற்கு என்ன பதில்‌ சொல்லுகிறீர்கள்‌ 9 6. தோழர்‌ லான்ஸ்பரி அவர்கள்‌ யுத்தத்தையும்‌, யுத்த முஸ்தீபையும்‌ வெறுக்‌ கிறதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. ஆனால்‌, இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ்‌ துருப்புக்களையும்‌, பிரிட்டிஷ்‌ வைசிராயை யும்‌ திருப்பி அழைதீதுக்‌ கொள்ள மறுக்கிறார்‌. 7. கடைசியாக, இந்தத்‌ தொழிற்கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷகாலதீதில்‌ அனுப்பிய ஆகாய சண்டைக்‌ கப்பல்களையும்‌, வெடிகுண்டுகளையும்‌, மோட்டார்‌ பீரங்கி வண்டிகளையும்‌, கவசம்‌ செய்த மோட்டார்‌ வண்டிகளையும்‌, எந்திரதீ துப்பாக்கிகளையும்‌, பிரிட்டிஷ்‌ பட்டாளங்களையும்‌ கணக்குப்‌ பாரீதீதால்‌, பால்ட்வின்‌ அரசாங்கமானது தனது அய்ந்து வருஷ ஆட்சியில்‌ அனுப்பப்பட்டதைவிட அதிகமாக3வ இருக்கிறது. தோழர்களே! இவற்றிலிருந்து பிரிட்டிஷ்‌ * தொழிலாளர்‌ பார்ட்டி? என்று சொல்லப்படும்‌ சமதர்ம பார்ட்டியின்‌ யோக்கியதையை அறிந்துகொள்வது என்பது எங்களுக்கு மிகக்‌ கஷ்டமாகவே இருக்கிறது. ஆதலால்‌--யார்கீஷையர்‌ தொழிலாளர்களே! நீங்கள்‌ இந்தப்‌ போலிக்‌ கட்சிகளையும்‌, கொள்கைகளையும்‌ நம்பாமல்‌ மனித சமூக விடுதலைக்கும்‌ சுதநீதிரதீதிற்கும்‌ சமத்து வதீதுக்கும்‌ உண்மையாகவே போராட உலகத்‌ தொழிலாளர்களின்‌ ஒற்றுமையை எதிர்‌ நோக்கிக்கொண்டிருங்கள்‌ | இங்கிலாந்தில்‌ மேகீஸ்பரோ (பரன்சிலே) ¢ லேக்‌ பார்க்‌ கில்‌, [20-6-1928% கூடிய கூட்டத்தில்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 18-12-1932] 10. ரஷ்ய நீதி ரஷ்ய தேச ஆட்சியின்‌ கொள்கை உலகம்‌ முழுவதிலுமே வெறுக்கப்பட வேண்டு மென்கின்ற எண்ணத்தோடு பிரச்சாரம்‌ செய்துவருவதாய்கீ காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால்‌, சுயமரியாதை இயக்கக்‌ கொள்கைகள்‌ பெரிதும்‌ பார்ப்பனர்‌ களுக்கு விரோதமாய்‌ இருந்ததால்‌--பார்ப்பனர்களின்‌ செல்வாக்கால்‌ அது ஒரு காலத்தில்‌ எப்படி எல்லா மக்களாலும்‌ வெறுக்கப்படவேண்டுமென்று பிரச்சாரம்‌ செய்வதாய்க்‌ காணப்பட்டதேோ அதுபோல்‌. ரஷ்ய ஆட்சிக்‌ கொள்கையானது, சுருக்கமாகச்‌ சொல்லப்படவேண்டுமானால்‌- அது, உலகப்‌ பணக்காரர்களுக்கு விஷம்‌ போன்றதும்‌-ஏழை மக்களுக்குச்‌ ¢ சஞ்சீவி? போன்றதுமாகும்‌. கின்றைய உலகம்‌ பணக்காரர்கள்‌ கையில்‌ சிக்குண்டு, பணக்காரர்‌ களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின்‌ ஆதிக்கதீதின்கீழ்‌ கிருப்பதால்‌ பணக்காரர்கள்‌: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1193 100-க்கு 10 பேர்களேயாயினும்‌, அவர்களே உலக மக்களாகக்‌ காணப்படுவதும்‌, ஏழை மக்கள்‌ 100-க்கு 90 பேர்களாயினும்‌ அப்படி ஒரு கூட்டம்‌ இருப்பதாக உலகுக்கு ஞாபகதீதுக்கே வரமுடியாமலும்‌ இருந்்‌துவருகின்றது. ஆனால்‌, ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல்‌ பணக்கார ஆதிக்கம்‌ ஒழிந்து, ஏழை மக்கள்‌ பணக்காரர்கள்‌ கையினின்று விடுபட்டுச்‌ சுதந்திரம்‌ பெற்று, ஏழை-பணக்காரன்‌, முதலாளி-தொழிலாளி என்கின்ற வேற்றுமையில்லாமல்‌ எல்லோரும்‌ ஒரே இனம்‌ (அதாவது மனித இனம்‌) என்கின்ற தலைப்பில்‌ எல்லோரும்‌ ஓர்‌ குடும்ப மக்களாய்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌. இந்த நிலை பணக்காரர்கள்‌, புரோகிதர்கள்‌ ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையான தினால்‌, பணக்கார உலகம்‌ ரஷ்யாவைதி தூற்றவும்‌, பழிக்கவும்‌, வெறுக்கவும்‌, விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்யவும்‌ ஆன காரியங்களில்‌ தீவிரமாக ஈடுபட்டிருப்பதில்‌ அதிசய மொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருட காலமாக ரஷ்யாவைப்‌ பற்றிப்‌ பலவாறு-- அதாவது ரஷ்ய மக்களுக்குப்‌ போதிய ஆகாரமில்லையென்றும்‌, கோடிக்கணக்கான மக்கள்‌ அங்குப்‌ பட்டினியால்‌ வாடி மடிகின்றார்கள்‌ என்றும்‌, கொடுங்கோன்மை முறையால்‌ ஆளப்பட்டு வருகிறதென்றும்‌, அந்நாட்டு ஆட்சியில்‌ நீதியென்பதே கிடையாது என்றும்‌, மற்றும்‌ பலவிதமாக அதைத்‌ கூற்றிப்‌ பழித்து, இழித்துப்‌ பிரச்சாரங்கள்‌ செய்யப்‌ பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள்‌ மேன்மைகள்‌ எவையாயினும்‌ அவற்றைப்‌ பரிசு தீதமாய்‌ வடிகட்டினாற்போல்‌ மறைத்தும்‌ வந்தன. அப்படி இருந்தும்‌--எவ்வளவு விஷமப்‌ பிரச்சாரம்‌ செய்தும்‌, சூரிய வெளிச்சத்தை உள்ளங்‌ கையால்‌ மறைக்க முடியாதது போல; ரஷ்ய நிலைமை இப்‌8பாது உலக மகீ்களுகீகு வெளியாகின்றது. வரவர ரஷ்யச்‌ சேதிகளின்‌ உண்மையை வெளிப்படுத்தும்‌ விஷயத்தில்‌ ஜனங்களுக்குள்ள பயம்‌ நீங்கியும்‌ வருகின்றது. அது மாத்திரமில்லாமல்‌, இந்த 4, 5 மாத காலமாக ரஷ்யசி சேதிகளின்‌ உண்மையை வெளிப்படுத்‌ துவது ஒரு நாகரிகமாயும்‌, ரஷ்யச்‌ சேதிகளைப்‌ பற்றிப்‌ பேசுவது ஒரு சதீகாலட்சேபமாகவும்‌ ஏற்பட்டுவிட்டது. இதன்‌ பயனாய்‌, இப்போது ரஷ்யச்‌ சேதிகள்‌ இல்லாத பத்திரிகைகளும்‌, ரஷ்யப்‌ பிரஸ்தாபமில்லாத பிரசங்கங்களும்‌ மிக மிக அருமையாகப்‌ போய்விட்டன என்பதை நாம்‌ எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே, ரஷ்யப்‌ பூசீசாண்டிதீ திரை நீக்கப்பட்டு, வெட்ட வெளிச்சத்தில்‌ வெள்ளைக்‌ கண்ணாடி மூலம்‌ பார்க்கக்கூடியதாக இருநீதுவருகின்றது. சமீப காலதீதில்‌ ரஷ்யாவைப்பற்றி ஒரு பரபரப்பு கருநீதுவந்தது நேயர்களுக்குதி தெரிந்திருக்குமென்றே எண்‌ ணுகின்றோம்‌. அதாவது, ரஷ்ய ஆட்சியானது சில பிரிட்டிஷ்‌ பிரஜைகளின்மீ து*குற்றம்‌ சாட்டிசி சிறைபிடித்து வைத்திருப்பதாயும்‌, அது பழிவாங்கும்‌ எண்ணதீதுடன்‌ கற்பனையாய்சி செய்யப்பட்டிருப்பதாயும்‌, ஆனதினால்‌ ரஷ்யாவுடன்‌ பிரிட்டிஷ்‌ எவ்வித சம்பந்தமும்‌ வைதீதுக்கொள்ளக்கூடாதென்றும்‌, வியாபாரதீ துறையில்‌ ரஷ்ய வியாபாரத்தை நிறுத்தி அந்தச்‌ சரக்கு பிரிட்டிஷுக்குள்‌ வராமல்‌ தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்‌ களைச்‌ செய்தும்‌-அதன்‌ மூலம்‌ ரஷ்ய வியாபாரத்தைப்‌ பகிஷ்கரிக்கவும்‌ முயற்சிதீது வந்தது யாவருமறிவார்கள்‌. விஷயம்‌ என்ன வென்றால்‌, ரஷ்யாவில்‌ இயந்திரத்‌ தொழில்முறை விருதீதிகீகு அனுகூலமான மின்சாரவிசை நிலையங்கள்‌ கொஞ்ச காலமாக ஒன்றன்பின்‌ ஒன்றாய்ப்‌ பழுது ஆகிக்கொண்டு வந்ததுடன்‌, அதனால்‌ ரஷ்யத்‌, தொழில்முறை கெட்டுப்‌ பெரிய நஷ்டம்‌ ஏற்பட்டும்‌ வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள்‌ இதைப்பற்றிச்‌ சந்தேகப்பட்டு அதன்‌ காரணத்தைக்‌ கண்டுபிடிக்க முயன்றதில்‌, சில பிரிட்டிஷ்‌ கம்பெனிக்காரர்களின்‌ நன்மைக்காக, ரஷ்யாவிலுள்ள சில பிரிட்டிஷ்‌ இன்ஜினியர்கள்‌, சில ரஷ்யர்களுகீகு இலஞ்சம்‌ கொடுத்து அவர்களைக்‌ கைவசப்படுத்தி, அதன்மூலம்‌ அங்குள்ள மின்சார 168-150 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1194 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நிலையங்களுக்குகீ கெடுதியை விளைவிதீது வந்தார்கள்‌ என்பதாகக்‌ கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பிரிட்டிஷ்‌ இன்ஜினியர்களையும்‌, அதற்கு உளவாயிருந்த ரஷ்யச்‌ சதிகாரர்களையும்‌ கண்டுபிடித்துச்‌ சிறைசெய்து, அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை நடதீத ஏற்பாடு செய்திருந்தார்கள்‌. இந்த விஷயத்தைப்‌ பிரிட்டிஷ்‌ முதலாளி வர்க்கம்‌ அறிந்து, இதனால்‌. தங்களுக்குப்‌ பெரிய உலகப்‌ பழியும்‌ அவமானமும்‌ வந்துவிட்டதே என்று கருதி, இச்‌ செயல்களை மறைக்க ஆசைப்பட்டு, பிரிட்டிஷ்‌ அரசாங்கத்தின்‌ மூலம்‌ ரஷ்யரை மிரட்டிப்‌ பார்‌ தீததல்லாமல்‌ ரஷ்யாவின்மீது பழியும்‌ சுமதீதினார்கள்‌. ஆனால்‌, ரஷ்யர்கள்‌ இவை எதற்கும்‌ பயப்படாமல்‌ தைரியமாய்‌ அது விஷயத்தில்‌ தாங்கள்‌ செய்யவேண்டிய காரியத்தைச்‌ செய்து, உலகத்தின்‌ முன்பு தங்களுடைய திறனையும்‌, தைரியத்தையும்‌, நியாயம்‌ வழங்கும்‌ முறையையும்‌ காட்டிக்கொண்டார்கள்‌. எப்படி என்றால்‌, இந்தச்‌ சதிக்‌ குற்றத்தில்‌ சம்பந்தப்பட்ட 18 குற்றவாளிகளில்‌ 6 பேர்கள்‌ பிரிட்டிஷ்காரர்கள்‌ (இவர்கள்‌ ஆறு 3பர்களும்‌ பிரிட்டிஷ்‌ இன்ஜினீயர்களாவார்கள்‌)) மீதி ரஷ்யக்‌ குற்றவாளிகள்‌ 12 பேர்கள்‌. கந்தப்‌ பதினெட்டுப்‌ பெயர்களையும்‌ நீதிமன்றத்தில்‌. நிறுத்தி வெளிப்படையாய்‌ எதிரிகளுகீகுதீ தகுந்த வக்கீல்களை வைத்து வாதாடச்‌ சந்தர்ப்பம்‌ கொடுத்து, அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும்‌ விசாரணையின்‌ யோக்‌ யதையைக்‌ கவனிக்கவும்‌ தக்கவண்ணம்‌ பிரிட்டிஷ்‌ பிரதிநிதிகள்‌ வந்து கோர்ட்டில்‌ ஆஜராகச்‌ சம்மதிதீதும்‌ விசாரணை நடதீதிவந்தார்கள்‌. இந்த விசாரணையால்‌ பிரிட்டிஷ்‌ இன்ஜினியர்‌ களான குற்றவாளிகளில்‌ சிலர்‌ தங்கள்‌ குற்றங்களைத்‌ தங்கள்‌ வாய்மூலமாக ஒப்புக்‌ கொள்ளவும்‌ நேர்ந்துவிட்ட துடன்‌, சாட்சிகள்மூலம்‌ குற்றங்கள்‌ தாராளமாய்‌ ,ரஜுவும்‌ ஆகிவிட்டன. இதன்மீது ரஷ்ய நீதிபதியானவர்‌, பிரிட்டிஷ்‌ குற்றவாளிகள்‌ 6 பேர்களில்‌ ஒருவருக்கு விடுதலையும்‌, இருவருக்கு முறையே 3 வருஷம்‌, 2 வருஷம்‌ வீதம்‌ தண்டனையும்‌, மூவருகீகு தேசப்‌ பிரஷ்டமும்‌ செய்துவிட்டு-ரஷ்யக்‌ குற்றவாளிகள்‌ பன்னிருவர்களில்‌ ஒருவரை: விடுதலை செய்துவிட்டு பாக்கிப்‌ பேர்களை 10 வருஷம்‌, 8 வருஷம்‌, 3 வருஷம்‌, 2 வருஷம்‌ வீதமும்‌--இதில்‌ ஒரு பெண்ணும்‌ இருந்ததால்‌ அவளுக்கு 13 வருஷமும்‌-தண்டனை விதித்தார்கள்‌) அப்பீலுக்கும்‌ இடம்‌ கொடுதீதிருக்கிறார்கள்‌. இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும்‌ முறையை ஒருவாறு உணரலாம்‌. இந்தக்‌ குற்றங்களைச்‌ சாதாரணக்‌ குற்றம்‌ என்று யாரும்‌ சொல்லிவிட முடியாது. இதன்‌ உள்‌ எண்ணமும்‌, இதனால்‌ ஏற்படக்கூடிய நஷ்டமும்‌ எவ்வளவு கடுமையானது என்பதை நாம்‌ விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம்‌ ரஷ்யர்கள்‌ பிரிட்டிஷுகீகுன்‌ வந்து: செய்திருந்தால்‌ அது எப்படிப்‌ பாவிக்கப்பட்டு எவ்விதத்‌ தண்டனை அளிக்கப்பட்டிருக்கும்‌ என்பதை அவரவர்கள்‌ சொந்தமுறையில்‌ யோசிதீதுப்‌ பார்‌ தீதால்‌ தெரியவரும்‌, இப்படிப்‌ பட்ட இந்தக்‌ கடுமையான சதிக்‌ குற்றத்திற்கு இருவருக்கு 2 வருஷம்‌, 3 வருஷம்‌ தண்டனை: யும்‌, மற்ற மூவருக்கும்‌ தங்கள்‌ நாட்டைவிட்டு அவர்களது சொந்த நாட்டிற்குப்‌ போய்விடும்‌ படியும்‌ தீர்ப்புச்‌ செய்திருக்கிறார்கள்‌ என்றால்‌, இதற்கு மேலான காருண்யமும்‌, அருளும்‌ உள்ள நீதி இந்த உலகத்தில்‌ எங்காவது கிடைக்கமுடியுமா என்பதை யோசிதீதால்‌-ரஷ்ய நீதியின்‌ பெருமை விளங்கும்‌. இந்த நீதி * இராம ராஜ்ய! தீதிலோ அல்லது சுயாட்சி தேசத்திலோகூட எதிர்பார்க்க முடியுமா என்பதும்‌ யோசிக்கத்‌ தக்கதாகும்‌. இது இப்படியிருக்க, இதன்‌ உண்மையையும்‌ யோக்‌ 8யதையும்‌ பார்தீதபிறகு ஒரு முடிவுக்கு வரலாம்‌ என்கின்ற யோசனை சிறிதுமின்றி, வேண்டுமென்றே அவசரப்பட்டு ரஷ்யர்கள்மீ.து உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி தூற்றிப்‌ LRSS, சில பகிஷ்கார முறைகளைக்‌ கையாடினஆம்‌ பிரிட்டிஷாரின்‌ புத்திசாலித்‌ தனதீதையோ, இராஜதந்திர முறையையோ, நல்ல எண்ணத்தையே காட்டுவதாக இல்லாமல்போனது குறித்தும்‌ யாரும்‌ வருந்தாமல்‌ இருக்கமுடியாது www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வலர்ச்சி 1195 எப்படியிருநீதபோதிலும்‌, இந்தத்‌ தடபுடல்‌ விஷமப்‌ பிரசீசாரதீதின்‌ பயனாய்‌ ரஷ்யா வுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. எப்படியெனில்‌, ரஷ்யாவின்‌: நீதியை உலகம்‌ அறிய ஒரு சந்தரீப்பம்‌ ஏற்பட்டது என்பதேயாகும்‌. நிற்க) ரஷ்யாவின்‌ மீது எப்படியாவது ஒரு சமயதீதில்‌ ஏதாவது ஒரு சாக்கை வைதீக (* நீ இல்லாவிட்டாலும்‌ உன்‌ தந்தையாவது செய்திருப்பான்‌ ? என்கின்ற ஆட்டுக்‌ குட்டி-ஓநாய்‌ கதையைப்போல்‌) ஒரு குற்றம்‌ சுமதீதி, அதனிடம்‌ வம்புச்‌ சண்டைக்குப்‌ போயாவது ரஷ்யாவில்‌ இன்று நடைபெறும்‌ பொதுவுடைமை ஆட்சியை--ஏழை மக்களுக்கும்‌ தொழிலாளிகளுக்கும்‌ அனுகூலமான ஆட்சியை ஒழிதீது-மற்ற நாடுகளில்‌ நடைபெறுவதுபோன்ற பணக்கார ஆட்சியை ஏற்படுதீதவேண்டும்‌ என்கின்ற எண்ணம்‌ இந்த உலகில்‌ இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல்‌ எல்லாத்‌ தேசத்து ஆட்சியாளர்‌ களிடமும்‌ இருந்த வருகின்றது) அதற்கு ஆல்காங்குள்ள முதலாளிகளாலும்‌, பாதிரி, புரோகிதர்ீகளாலும்‌ தண்ணீர்‌ விடப்பட்டுப்‌ பாதுகாத்தும்‌ வரப்படுகின்றது. ஆனாலும்‌, ஏழை மச்கள்‌--சரிரதீதால்‌ பாடுபட்டுத்‌ தொழில்செய்து: வாழும்‌ மக்கள்‌: கண்விழித்துச்‌ சுய மரியாதை உணர்ச்சி பெற்றுவிட்டதால்‌ முதலாளி ஆட்சியின்‌ எண்ணங்கள்‌. கருகிவாடி வருகின்‌ றன அன்றியும்‌, ரஷ்ய ஆட்சி, 6 முதலாளிதீதுவ ஆட்சிகளின்‌ தயவினாலோ அல்லத கருணையினாலோ நாம்‌ வாழலாம்‌ ? என்கின்ற எண்ணத்தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால்‌, அதற்குப்‌ பதிலாக, இந்த உலக முதலாளிகள்‌ மாதீதிரமல்லாமல்‌ இன்னும்‌, ¢ செவ்வாய்‌ மண்டல? முதலாளிகளின்‌ எதிர்ப்பையும்‌, அவர்களது: சக்தியையும்‌, சூழ்ச்சியையும்‌ நன்றாய்‌ அறிந்து, எந்த நேரமும்‌ எதிர்பார்தீது நின்றுகொண்டு இருக்‌ கின்றது. அது எப்படிப்பட்ட யுதீதத்தையும்‌ வரவேற்று, ஒரு கை பார்தீதுவிடத்‌ துணிந்து இருப்பதுடன்‌, உலகம்‌ முழுமைக்கும்‌ தன்னுடைய ஆட்சிக்‌ கொள்கையை உவந்தளித்து உதவிபுரியக்‌ காதீதும்‌ இருக்கின்றது ஆனால்‌, ஏழை மக்களுக்கும்‌, கஷ்டப்பட்டுப்‌ பாடுபடும்‌ தொழிலாளி மக்களுக்கும்‌, தாழ்தீதப்பட்டவர்களுக்கும்‌ உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்கவேண்டி யதுதான்‌ இப்பொழுது பாக்கியிருக்கின்றதுஃ [குடி அரசு. 3-தலையங்கம்‌--23-4.1933] 11. மேல்நாடும்‌ கீழ்நாடும்‌ தலைவரவர்களே ! தாய்மார்களே ! சகாக்களே 1 நான்‌ இந்த ஊருக்கு வந்து எதிர்பாராத விதமாய்‌ இங்கு அய்ந்து, ஆறு நாட்கள்‌ தங்கும்படி நேர்ந்தது. இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ அகஸ்மாதீதாகச்‌ சந்திக்க நேர்ந்த இந்தக்‌ கலைஞான சங்கக்‌ காரியதரிசி, தோழர்‌ சங்கர்‌ அவர்களும்‌, நண்பர்‌ சர்தார்‌ சோம்நாத்‌ அவர்களும்‌, இந்த ஊரில்‌ நான்‌ ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றிச்‌ சொற்பொழிவாற்ற வேண்டுமென்று சொன்னார்கள்‌. *மிகவும்‌ வைதிகத்‌ துறையில்‌ பேர்பெற்ற இந்தப்‌ புண்ணிய சேதீதிரம்‌ என்பதில்‌, சன்னியாசிகளாலும்‌, சா.துக்களாலும்‌, வானப்பிரஸ்தாஸ்ரமதீதில்‌ இருப்பவர்களாலும்‌ நிறைந்துள்ள மக்கள்‌ முன்‌--நான்‌ எந்த விஷயத்தைப்பற்றிப்‌ பேசமுடியும்‌? என்று சொன்னேன்‌. அதற்குத்‌ தோழர்‌ சோம்நாதி அவர்கள்‌, * இங்குக்‌ கூட்டம்‌ போட்டுப்‌ பேசியதே கிடையாது. ஆதலால்‌, நீங்கள்‌ உங்கள்‌. இஷ்டப்படி எதுபற்றி வேண்டுமானாலும்‌ பேசலாம்‌ ! என்று சொன்னார்கள்‌. நான்‌, குறிப்பிட்ட எந்த விஷயத்தையும்பற்றிப்‌ பேசாமல்‌, ¢ மேல்நாடும்‌ கீழ்நாடும்‌ £ என்பதைப்பற்றிப்‌ பேசுகி3றன்‌ என்று சொன்னேன்‌. அவர்‌ சரியென்று ஒப்புக்கொண்டார்‌. ஆகவே; இன்று அதைப்பற்றி நான்‌ பேசுவதில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1196 பெரியார்‌ ஈட, வெ ரா. சிந்தனைகள்‌ நீங்கள்‌ ஏதோ ஒரு கதை கேட்பதுபோல்‌ கருதவேண்டுமே ஒழிய, நான்‌ எதையும்‌ வலி யுறுதீதிச்‌ சொல்வதாகக்‌ கருதக்கூடாது. ஏனெனில்‌, மிக வைதிகப்‌ பற்றும்‌, தமிழ்ப்பற்றும்‌ உள்ள உங்களுக்கு, அங்கு நடக்கும்‌ விஷயங்கள்‌ பல, திருப்தியில்லாதவைகளாகதீ தோன்றலாம்‌. ஆதலால்‌, நான்‌ அதை வலியுறுதீதுவதாகக்‌ கருதாமல்‌--* அங்கு அப்படி நடக்கிறது, இங்கு இப்படி நடக்கிறது? என்கின்ற அளவில்‌ மாத்திரம்‌ கொள்ளவேண்டுமாய்க்‌ கேட்டுக்கொள்ளுகிறேன்‌. நான்‌ பேசப்போகும்‌, * மேல்நாடும்‌ கீழ்நாடும்‌? என்ற தலைப்பின்‌ கருத்து, அய்ரோப்பாவும்‌ இந்தியாவும்‌ என்பதாகும்‌. இரண்டு நாட்டு நடப்புகளையும்‌ எடுத்துச்‌ சொல்லுவதில்‌ இரண்டு நாட்டிலும்‌ இருந்துவரும்‌ மதம்‌, கல்வி, அரசியல்‌, பொருளாதாரம்‌, சமுதாயம்‌, தொழில்‌, வாழ்க்கைத்‌ திட்டம்‌, சுகாதாரம்‌ முதலிய விஷயங்களைப்‌ பற்றிச்‌ சொல்லுவது பொருத்தமாக இருக்கும்‌ என்று நினைக்கி 2றன்‌ஃ அய்ரோப்பிய நாடு என்பது சற்றேறக்குறைய இந்தியாவைப்போன்ற விஸ்தீரணமும்‌, ஜனதீதொகையும்‌ கொண்ட நாடாகும்‌. அதோடு மதம்‌, கலை, நாகரிகம்‌, சீதோஷ்ண நிலைமை; நடை, உடை, ஆகாரம்‌ முதலியவைகளில்‌ பேதம்‌ இல்லாமல்‌ இருக்கும்‌ நாடாகும்‌, இப்படியெல்லாம்‌ இருந்தும்‌ இப்போது சுமார்‌ 30 தனித்‌ தேசங்களாகப்‌ பிரிக்கப்‌ பட்டு, தனித்தனிச்‌ சுதந்திர நாடுகளாகவும்‌, ஒன்றுக்கொன்று எவ்வித சம்பந்தமுமில்லாத பூரண சுயேச்சை நாடுகளாகவும்‌ இருந்து வருகின்றன. அப்படிப்‌ பிரிக்கப்பட்டிருப்ப தற்குக்‌ காரணம்‌--நான்‌ அறிந்த வரையில்‌ பாஷையைதி தவிர வேறு ஒன்றும்‌ சொல்ல முடியவில்லை. ஒரு பாஷை பேசும்‌ நாட்டுக்கும்‌ மற்றொரு பாஷை பேசும்‌ நாட்டுக்கும்‌ எவ்வித சம்பந்தமுமில்லாமல்‌ செய்யப்பட்டிருக்கிறது. மதம்‌ ஒன்றாக இருந்தாலும்‌, ஒரு நாட்டான்‌ மற்றொரு நாட்டானை * ஒரு சமுதாயதீதான்‌? என்று அங்குக்‌ கரு துவ தில்லை. அந்த மக்கனை உண்மையில்‌ எந்த நாட்டினர்‌ என்றுகூடக்‌ கண்டுபிடிக்க முடியாது. அங்கு எந்த நாட்டிலும்‌ மக்களுக்குள்‌ உயர்வு-தாழ்வு என்பது இல்லவே இல்லை. எந்த நாட்டானும்‌ எந்த நாட்டுப்‌ பெண்ணையும்‌ மணம்‌ செய்துகொள்ளுவான்‌, இப்படி எல்லாம்‌ இருந்தும்‌, அவர்கள்‌ ஒரு நாட்டுக்கு ஒரு நாடு எவ்வித சம்பந்தமு மில்லாமல்‌, பிரவேசிக்க முடியாதபடியும்‌, ஒரு நாட்டுச்‌ சாமான்‌ மற்றொரு நாட்டுக்குள்‌: சுங்கமில்லாமல்‌ வரமுடியாதபடியும்‌, தனித்தனி இராணுவ முஸ்தீபுகளுடனும்‌ இருந்து வருகிறார்கள்‌. அ3னகமாக அந்தந்த நாட்டுக்குத்‌ தேவையான வஸ்துக்களை அங்கங்கு உற்பத்தி செய்துகொள்வதையே ¢ தேசியம்‌ ? என்று கருதுகிறார்கள்‌. ஒரு மொழிக்காரன்‌ மற்றொரு மொழிக்காரன்மீது ஆதிக்கம்‌ செலுத்துவதையோ, ஒரு நாட்டான்‌ மற்றொரு நாட்டான்மீது ஆதிக்கம்‌ செலுத்துவதையோ அடிமைத்தனம்‌ என்று கருதுகிறான்‌. b உதாரணமாக; இங்கிலாநீதுக்காரன்‌ அயர்லாந்து மக்கள்மீது ஆதிக்கம்‌ செலுத்து வதையும்‌, இங்கிலாந்துச்‌ சாமான்‌ அயர்லாந்தில்‌ இறக்குமதி ஆவதையும்‌ அடிமைத்தனம்‌ என்றும்‌, வியாபாரக்‌ கொள்ளை என்றும்‌ அயர்லாநீதுக்காரன்‌ கருதுகிறான்‌, ஜெர்மன்‌: குடியாய்‌ இருந்துகொண்டு ஜெரீமன்‌ மக்களை யூதர்கள்‌ சுரண்டுவதை * யூதர்‌ கொள்ளை? என்று ஜெர்மானியன்‌ கருதுகிறான்‌. இப்படியே நாட்டுக்கு நாடு-மொழிக்கு மொழி-- இனத்துக்கு இனம்‌ எவ்வித சம்பந்தமும்‌ வைத்துக்கொள்ளாமல்‌ தனித்து நின்று தங்கள்‌ சமுதாயத்தையும்‌, தங்கள்‌ நாட்டையும்‌, தங்கள்‌ பொருளாதாரத்தையும்‌ காப்பாற்றிக்‌ கொள்ளுகிறார்கள்‌. இந்த விஷயங்களில்‌ இந்தியாவுக்கு ஒரு கொள்கையும்‌ இல்லை. இந்தியாவின்‌ சீதோஷ்ண நிலை வெவ்வேறு; இந்திய மக்கள்‌ பல இனதீதினர்‌) பல மதத்தினர்‌. அம்‌ மதங்களும்‌ ஒன்றுக்கொன்று மாறானவை. இந்தியாவின்‌ தனிப்பட்ட மொழிகள்‌ பல; நடை, உடை, ஆகாரம்‌ பலவிதம்‌, இந்திய மக்களுக்குள்‌ சாதி வகுப்புக்கள்‌ பல) இந்தியாவில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1107 மனிதனுக்கு மனிதன்‌ உயர்வு-தாழ்வு என்பது சொல்லமுடியாததும்‌ சகிகீகமுடியாததும்‌ ஆகும்‌. ஒரு வகுப்புக்குள்‌ ஒரு வகுப்பு மணம்‌ செய்துகொள்ள முடியாத பேதமும்‌, ஒரு சாதி. யாரை ஒரு சாதியார்‌ ஆதிக்கம்‌ செலுத்துவதும்‌, ஒரு சாதியை ஒரு சாதி சுரண்டுவதும்‌, ஒரு நாட்டை மற்றொரு நாடு வற்ற அடிப்பதும்‌, சுரண்டுவதும்‌ அளவிட முடியாததாகும்‌. ஒரு நாட்டுக்கு ஒரு நாடு, எதில்‌ ஒற்றுமை என்றும்‌, எந்த விஷயத்தில்‌ பொது இலட்சியம்‌ கொண்டது என்றும்‌, எதில்‌ ஒன்றுபோல்‌ நடக்கிறார்கள்‌ என்றும்‌, எதில்‌ பொது உணர்ச்சி கொண்டவர்கள்‌ என்றும்‌ சொல்லி ஆதாரம்‌ காட்டுவது சுலபத்தில்‌ முடியாது. இந்தியா சுமார்‌ 500 வருஷங்களுக்குமுன்‌ வரையில்‌--ஏன்‌ வெள்ளையன்‌ வருகிற வரையில்‌ சில சந்தர்ப்பங்கள்‌ தவிர கனம்‌, மொழி, சீதோஷ்ண நிலை, பூர்விக நாடு முதலிய வைகளுக்கு ஏற்றபடி தனித்தனி நாடுகளாக இருந்து வந்த நாடாகும்‌. இப்படி எல்லாம்‌ இருக்கக்கூடிய இந்தியநாடு, எவ்வித நன்மைக்கும்‌ பயன்படாத வகையில்‌ ஒரே நாடாகப்‌ பிணைக்கப்பட்டி ருக்கிறது. பிணைக்கப்பட்டிருப்பதும்‌ அல்லாமல்‌ எவ்வித அவசியமும்‌ இல்லாமல்‌ ஒரு மொழி, ஒரு இனம்‌ ஒரு நாகரிகம்‌-கலை உள்ள நாட்டைப்‌ பல நாடுகளாகப்‌ பிரித்து வேறுபடுத்தியும்‌ இருக்கிறது. இம்‌ மாதிரிப்‌ பொருத்த மில்லாதவற்றை ஒன்றுபடுத்தி இருப்பதற்கும்‌, பொருதீதமுள்ளதை வேறுபடுத்தி இருப்‌. பதற்கும்‌ சரித்திர சம்பந்தமான தோ; அல்லது அவசிய சம்பந்‌ தமானதோ ஆகிய காரணம்‌, அவ்வப்போது படையெடுதீதது வந்து வென்ற அரசர்கள்‌ ஒன்ற சேர்ந்ததும்‌ பிரிந்ததும்‌ தவிர வேறு ஒரு காரணமும்‌ தென்படவில்லை. ஜெர்மனியும்‌ இங்கிலாந்தும்‌ ஒரு மதம்‌, ஓர்‌ இரத்தக்‌ கலப்புள்ள நாடுகள்‌, அவை ஒன்றுக்கொன்று எவ்விதத்திலும்‌ ஒன்றின்‌ ஆதிக்கம்‌ ஒன்றின்மேல்‌ இருக்கக்கூடாது என்‌ பதற்காக-அழிந்து போகிறவரையில்‌ போராடிப்‌ பார்ப்பது என்று கங்கணம்‌ கட்டிக்கொண்டு இன்று யுதீதகளதீதில்‌ மடிகின்‌றன. இதன்‌ பயனாய்‌ மற்றும்‌ பல நாடுகளும்‌ இதே காரணத்‌ அுக்காகப்‌ போராட்டதீதில்‌ கலந்து தொல்லைப்படுகின்‌றனஃ நம்‌ நாட்டின்‌ சில ஜில்லாக்களைப்‌ போன்ற விஸ்தீரணம்‌ உள்ள நாடுகள்‌ தம்நாட்டு உணர்ச்சியின்‌ பயனாகவே போராட்டத்தில்‌ கலந்து தொல்லைப்படுகின்‌ றன. அவைகளுக்கு நல்ல ஆட்சியை விட தம்‌ நாட்டு உணர்சீசி3ய பிரதானமாய்‌ இருந்து வருகிற இதனால்‌ அவைகள்‌ கல்வி, செல்வம்‌, கைத்தொழில்‌, பாதுகாப்பு, தனி நாட்டு நன்மைக்கு ஏற்ற ஆட்சி முதலியவை உல$லேயே யாருக்கும்‌ இளை தீதிருக்காத சமநிலை அடையமுடிகிறதுஃ பழைய கால ஆட்சி முறை எப்படி இருந்தது என்பதைப்‌ பற்றிச்‌ சிந்திக்கக்கூட அவர்கள்‌ நேரம்‌ செலவழிப்பதில்லை, பிற்கால ஆட்சி எப்படி கிருக்க வேண்டும்‌ என்பதே அவர்கள்‌ சிந்தனையாக இருந்துவருகிறது. மேல்‌ நாட்டில்‌ மக்கள்‌ மதத்துக்கும்‌ வாழ்க்கைக்கும்‌ சம்பந்தமில்லாமல்‌ ஆச்கிக்‌ கொண்டிருக்கிறார்‌ கள்‌. அவர்களுடைய நடை, உடை, ஆகாரம்‌, கல்வி, பவனை, மணம்‌, சடங்கு முதலிய காரியங்களில்‌ மததீதுக்குப்‌ பெரிதும்‌ இடமில்லை. மதம்‌ சரீரதீதுக்கு உள்‌. பக்கமே தவிர; சரீரதீ.துக்கு வெளியில்‌ ஒன்றும்‌ தெரியாது. வாழ்க்கையில்‌ மதத்தைப்‌ புகுதீதமாட்டார்கள்‌. அய்ரோப்பா பூராவும்‌ ஒரு மதந்தான்‌ ) அதற்கு ஒரு ¢ பைபிள்‌ தான்‌; அதற்கும்‌ *ஒரே சர்தீதர்‌ தான்‌) அதைப்பற்றி அவர்களுக்குள்‌ சண்டை இல்லை. அவற்றைக்‌ காப்பாற்ற அவர்கள்‌ தொல்லைப்படுவதுமில்லை. கீழ்நாட்டில்‌ மதம்‌ அப்படி இல்லை. அது வாழ்க்கையின்‌ ஒவ்வொரு முறையையும்‌ ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. தலை மயிர்‌ மூதல்‌ கால்‌ செருப்பு வரை, மதத்துக்குச்‌ சம்பந்தப்பட்டிருக்கின்‌றன. நடை, உடை, ஆகாரம்‌, பாவனை, கல்வி, மரணம்‌, வாழ்வு; தொழில்‌, பணம்‌ சேர்த்தல்‌, பணம்‌ செலவழித்தல்‌, தர்மம்‌ எல்லாம்‌ மத ஆதிக்கத்தில்‌. மதப்‌ பிரவேசதீதில்‌ இருக்கின்றன. இங்கு ஒரு மனிதனைக்‌ கண்டவுடன்‌ கவன்‌ இன்ன www.thamizham.net - Free £ book 14௦ 3031 1198 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இன்ன மததீதவன்‌ என்று சொல்லும்‌ வண்ணம்‌--அவனுக்கு ஒரு தனி வேஷம்‌ வேண்டி யிருக்கிறது. சரீரதீதுக்குள்‌ இருக்கும்‌ மத உணர்சீசியைவிட, சரீரத்தின்‌ வெளியில்‌ காட்டப்படும்‌ மத உணர்ச்சியே சிறந்ததாகக்‌ கொள்ளப்படுகிறது. நம்‌ நாட்டு-அ தாவது கீழ்நாட்டு மததீகுக்குப்‌ பெயரிலேயே தர்க்கம்‌) அந்தப்‌ பெயருக்கும்‌ ஆதாரம்‌ கிடையாது. மத ஆதாரத்துக்கும்‌ தர்க்கம்‌) அவை எல்லோருக்கும்‌ ஒன்ற.போல்‌ இல்லை. மத கர்த்தர்‌ ஒருவரல்லர்‌ ) மதக்‌ குறி ஒன்றல்ல; மதப்‌ பிரார்த்தனை ஒன்றுபோல்‌ இல்லை. மதக கடவுள்கள்‌ பல | அவைகளின்‌ சரிதீதிரங்கள்‌ விபரிதம்‌. அதன்‌ பயனாய்‌ மனித சமூகம்‌ பிரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஒன்றுபடுதீதப்படவில்லை. சடங்குகள்‌ பிரார்தீ தனைகள்‌ முதலியவை பொருளாதாரக்‌ கேட்டுக்கும்‌, ஒருவரை ஒருவர்‌ சுரண்டுவதற்கும்‌ ஏற்ற வண்ணமே வழங்கப்பட்டு வருகிறதனால்‌--ஒரு வகுப்பு உயர்வும்‌ ஒரு வகுப்பு தாழ்வும்‌ ஆகி வருகிறது) மததீதால்‌ நாடு கெட்டது. மனித சமுதாயம்‌ கீழ்‌ நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரித்து வருகிறது மதத்தைக்‌ காப்பாற்றுவதன்‌ பயனாய்‌ மக்கள்‌ ஜீவனை இழக்கும்படியான தொல்லை அனுபவிக்‌ என்றனர்‌. சுருங்கக்‌ சொன்னால்‌, மததீதால்‌ வேறுபாடும்‌, குரோதமும்‌ ஏற்பட்டு மனிதாபிமானம்‌ இல்லாமல்‌ நாடு துன்பத்தை அனுபவிக்கிறது மேல்‌ நாட்டின்‌ கல்வி பெரிதும்‌ பகுதீதறிவையும, விஞ்ஞானத்தையும்‌, ஆராய்ச்சியையும்‌ பொறுத்து உள்ளது என்பதோடு, அவைகளுக்கு அனுகூலமான கல்வியே அங்கு நடைபெறுகிறது. அதுவும்‌ அங்கு 100-கீகு 65 முதல்‌ 80 பேர்‌ வரை கல்வி பெற்றிருக்‌ கிறார்கள்‌. அப்படிக்‌ கற்றிருப்பதிலும்‌ மததீதையோ மத பக்தியையோ கொண்டு வந்து அக்‌ கல்வியில்‌ புகுதீ.துவதில்லை. அங்கு, படிதீதவன்‌ என்று சொல்லப்படுபவன்‌ ஒரு பகுதீதறிவாளியாகவும்‌, உலக ஞானமுள்ளவனாகவும்‌, விஞ்ஞானியாகவும்‌, ஆராய்ச்சிக்‌ காரனாகவும்‌ இருப்பானே ஒழிய--மத பண்டிதனாகவும்‌, மூட நம்பிக்கைக்காரனாகவும்‌, மத ஆராய்ச்சிக்காரனாகவும்‌, குறுகிய புதீதி உள்ளவனாகவும்‌ இருக்கவே மாட்டான்‌. படிப்பின்‌ மூலம்‌ பொது ஞானதீதை விருத்தி செய்து கொள்ளத்தக்க சவுகரியம்‌ ஏந்படும்‌ படியான படிப்பே பெரிதும்‌ கொடுக்கப்படும்‌. அங்குள்ள கலாசாலை, சர்வ கலாசாலை என்‌: பவை உலகப்‌ பொது அறிவு, பண்டிததீ தன்மைக்குப்‌ பயன்படுபவைகளாகவே இருக்கும்‌. பாடப்‌ புதீதகங்களில்‌ மூட நம்பிக்கைச்‌ சரிதீதிரங்களோ, மத பக்திக்‌ கலைகளோ ஆதிக்கம்‌ செலுத்தாமல்‌ இருக்கும்படியாய்‌ இருக்கும்‌. எப்படிப்பட்ட கல்வி ஆனாலும்‌ அறிவுக்கும்‌, வாழ்க்கைக்கும்‌ எவ்வளவு பயன்படும்‌ என்பதைப்‌ பொறுத்து இருக்குமே ஒழிய இது: ஆத்திகமா, நாதீதிகமா)$ மத உணர்ச்சி இருக்குமா, போகுமா$ Bg பழைய கால நிலையை அனுசரிதீததா, புதிய முறையைப்‌ புகுத துவதா-என்கின்ற கவலை கொண்டதாக இருக்காது: பழைய கால நிலையைப்‌ போதிக்கும்‌ கல்வியானது விஷயத்தைத்‌ தெரிந்து கொள்ள மாதீதிரம்‌ பயன்படதீதக்‌கதாக இருக்குமே ஒழிய, பழைய கால நிலைக்கு நம்மைக்‌ கொண்டுபோகும்படியான தாக இருக்காது. கல்வியின்‌ தொகுப்பே பெரிதும்‌ பரிசுத்தமான பகுத்தறிவையும்‌, விஞ்ஞானத்தையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டதாக இருக்கும்‌. அங்கு கொடுக்கப்படும்‌ கல்வி புதிய ஆயுதங்களைக்‌ கண்டுபிடிக்கதீ தக்கதாய்‌ இருக்கும்‌ ) மனித வாழ்க்கையை நாளுக்கு நாள்‌ சவுகரியப்படுதீ துவதாகவும்‌, முற்போக்கு, அளிக்கதீதக்க தாகவும்‌, மனிதனுடைய அறிவிலும்‌ முயற்சியிலும்‌ நம்பிக்கை அளிக்கத்‌ தக்கதாகவும்‌ இருக்கும்‌. அதனால்‌ அறிவாளிகளும்‌, முயற்சியாளர்களும்‌ அங்கு அதிகம்‌. அவைகள்‌ அந்‌ நாட்டுக்குப்‌ பல நன்மைகன்‌ உண்டாக்கின. பல அற்புதங்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டிருக்‌ கின்றன. இந்தியாவின்‌ கல்வி, பகுத்தறிவை இலட்சியம்‌ செய்வதில்லை, உலகப்‌ பொது ஆராயிச்சிக்கு மதிப்பு வைப்பதில்லை. அவைகளுக்கு ஏற்ற கல்வி இங்கு தொ.ருக்கப்படவே இல்லை; கல்வி கொடுக்கப்பட்டிருப்பதும்‌ பெரும்பான்மை மக்களுக்கு 6, 7 பேர்களுக்குதீ www.thamizham.net - Free £ book 14௦ 3031. விறிவு வளர்ச்சி 1199 தான்‌. அப்படிப்பட்ட கல்வியின்‌ ஒவ்வொரு துறையிலும்‌ பகுதீதறிவுகீகுப்‌ பொருந்தாத மதம்‌ தாண்டவமாடும்‌. மததீதுக்காகக்‌ கல்வி என்றும்‌, கல்வியினால்‌ மத பக்தி ஏற்பட வேண்டுமென்றும்‌ கருதப்பட்டு, அவைகளின்‌ ததீதுவங்களே கல்வியில்‌ பெரிதும்‌ புகுத்தப்‌ பட்டிருக்கின்றன. இங்கு மத சம்பந்தமான நிபுணதிதுவமும்‌ உணர்ச்சியும்‌ உள்ளவன்தான்‌ படிதீதவ னாகவும்‌, பண்டி தனாகவும்‌ கருதப்படுகிறான்‌. இந்த நாட்டுப்‌ பண்டிதனுக்கு, உலக சரிதீதிர ஆராய்ச்சியோ விஞ்ஞான அறிவோ பெறவேண்டும்‌ என்கின்ற கவலை இல்லை. அது இல்லாமலே பண்டிதனாகி விடுகிறான்‌. நல்ல பண்டிதன்‌ என்பவன்‌ பெரிதும்‌ நல்ல மூட நம்பிக்கைக்காரனாகவும்‌, பகுதீதறிவில்‌ இலட்சியமிஃலாதவனாகவும்‌, குறுகிய பிடி வாதக்காரனாகவுமே இருக்கிறான்‌. படிப்புத்‌ திட்டத்தைத்‌ தொகுப்பவர்களுக் குப்‌ படிப்பின்‌ மூலம்‌ பொது அறிவும்‌ பகுதீதறிவும்‌ ஏற்பட வேண்டும்‌ என்கின்ற கவலை இருப்பதில்லை. தங்களுக்கென்று ஏற்‌ பட்ட பழைய வழக்கம்‌, மததீ ததீதுவம்‌ முதலியவைகள்‌ தான்‌ மிகுதியும்‌ கவனிக்கப்பட்டு, அவைகளுக்கு ஏற்றபடி பாடங்கள்‌ தொகுக்கப்படுகின்‌ றன. சிறு பிள்ளைகளுக்குக்‌ கொடுக்கும்‌ பாடப்‌ புதீதகங்களிலேயே மூட நம்பிக்கை கொண்ட புராணக்‌ கதைகள்‌ புகுதீதப்பட்டு விடுகின்றன. இங்கு கல்வி கொடுப்பவர்கள்‌, இந்தக்‌ கல்வியானது பிள்ளைகளின்‌ அறிவு வளர்சீசிக்கோ, வாழ்க்கைக்‌ கோ எவ்வளவு பயன்படும்‌ என்பதை முக்கியமாய்கீ கவனிப்ப: தில்லை, எந்தக்‌ கல்வியை எடுத்தாலும்‌ இது ஆதீதிகமா, நாதீதிகமா? இதனால்‌ மத உணர்ச்சி அதிகம்‌ உண்டாகுமா, குறையுமா? இது நம்‌ பழைய கால நிலை--நாகரிகதீ திற்கு ஏற்றதா, அல்லது இது புதிய உலகமாக்கிவிடுமா, என்று பயந்து நடுங்கி ஆத்திகம்‌ மதம்‌, பழைய காலநிலை ஆகியவைகளை முக்கியமாய்‌ நினைதீது, அதற்கேற்ற கல்வியையே மகீஃளுக்குள்‌ புகுதீதப்‌ பார்ப்பார்கள்‌, இங்கு, கல்வி கற்றவன்‌-விஞ்ஞானக்‌ கல்விப்பட்டம்‌ பெற்றவன்‌ உடனே பழைய கால நிலைக்குப்போக ஆரம்பிச்கிறான்‌, * அது சரியா, தப்பா ¥ என்று ஆராயுங்‌ கல்வி, ¢ கூடாத கல்வியாக மதிக்கப்படுகிறதுஃ சகலத்திலும்‌ பகுத்தறிவைப்‌ பயன்படுத்தும்‌ துணிவும்‌ சுதந்திரமும்‌ உண்டாக்கும்‌ கல்வியை இங்கு நாதீதிகமாகவும்‌, மத வி3ராதமாகவும்‌, தேசியத்துக்கு விரோதமாகவும்‌ கருதுகின்றனர்‌. இந்‌ நாட்டுப்‌ பழங்கால நிலை, பழங்கால மதம்‌, பழங்காலப்‌ பெருமை முதலியவை களில்‌ நிபுணர்களான எந்தப்‌ பண்டிதர்களிடம்‌ இருந்தும்‌ நாளது வரை ஒருவிதமான புதிய உணர்ச்சியோ, அற்புதங்களோ, முன்னேற்றதீதுக்கான சாதனமோ ஒன்றும்‌ கண்டு பிடிக்கப்படவில்லை. இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள்‌ எல்லாம்‌ முன்னோர்கள்‌ செய்த நூல்கள்‌ என்பவைகளுக்குப்‌ புதிய உரைகளும்‌, புதிய கருதீதுக்களும்‌, புதிய தத்து வார்‌ தீதங்களும்‌, புதிய பெருமைகளுமே அல்லாமல்‌--எவ்விதப்‌ புதிய கருத்துக்கள்‌ கொண்ட தாகவோ, புதிய கருதீதுக்கள்‌ கண்டுபிடிக்கும்‌ எண்ணத்தைக்‌ கொண்டதாகவோ காணப்‌ படவில்லை. இந்த நாட்டுக்‌ கல்வியின்‌ பயனாய்‌ வாழ்க்கையின்‌ எந்தத்‌ துறையிலும்‌ பழமை யிலிருந்து எவ்வித மாறுத லா, எவ்வித சவுகரியமோ, சுருக்கமோ ஏற்படவில்லை. ஏதாவது ஏற்பட்டிருந்தால்‌ அது புரட்சியின்‌ பயனாலேயே ஒழிய கல்வியால்‌ என்று சொல்லதி தக்கதாய்‌ இல்லை. இவ்விடதீதிய கல்வி மனிதனுடைய சொந்த அறிவுக்கு மதிப்புக்‌ கொடுப்பதில்லை. * முன்னோர்கள்‌ சொன்னதைப்‌ பகுத்தறிவைக்‌ கொண்டு ஆராய்ச்சி செய்யக்‌ கூடாது ? என்பதே பல விஷயங்களில்‌ கல்வியின்‌ பயனாக இருக்கிறது. இவ்விடத்திய படிப்பின்‌. நிலை; தொட்டதை எல்லாம்‌ கடவுன்‌ செயல்‌ என்னு சொல்லி முயற்சியை அலட்சியப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1200 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ படுதீதவும்‌, சோம்பேறியாக உட்காரவுமே பயன்படுகிறது. அதனால்‌ சோம்பேறிகளும்‌, சாதுக்களும்‌, சன்னியாசிகளும்‌ இங்கு அதிகமாக ஆகிவிடுகிறார்கள்‌. இவர்களால்‌ பொருளாதார வீண்‌ செலவும்‌ முன்னேற்றத்‌ தடையும்‌ அல்லாமல்‌ வேறு காரியம்‌ ஆவதில்லை. மேல்‌ நாடுகளில்‌ ஒவ்வொரு நாட்டிலும்‌ ஏதோ சில கொள்கையின்மீது அரசியல்‌ கட்சிகளும்‌, போராட்டங்களும்‌ நடைபெறுகின்றன. ஏனெனில்‌, அங்கு வேறு வகுப்புசள்‌, மதங்கள்‌, கீழ்‌-மேல்‌ பிறவி பேதங்கள்‌ முதலியவை இல்லாததால்‌--வெறும்‌ அரசியல்‌ கொள்கைகளை மாத்திரம்‌ வைதீதுகீ கட்சிகள்‌ நடதீதவும்‌ ) கட்சிகள்‌ பதவிக்கு வந்தாலும்‌ அங்கு அந்‌ நாட்டுக்கு, நன்மையான கொள்கைகளைப்‌ பற்றி மாதீதீரம்‌ ஆட்சிநடத்ீதவும்‌ ] வாதம்‌ பிரதிவாதம்‌ உண்டாகவும்‌) வெளிநாட்டான்‌ சுரண்டலும்‌, வெளிநாட்டான்‌ கைப்‌ பற்றாமலும்‌ இருக்கும்படியான பொருளாதாரம்‌, கைத்தொழில்‌, இராணுவம்‌ முதலியவை களைப்பற்றிச்‌ சிந்திக்கவும்‌ ) பொதுமக்களின்‌ பொருளாதாரம்‌ வாழ்கீகைநலம்‌ ஆகியவை களைப்‌ பற்றித்‌ திட்டங்கள்‌ வகுக்கவும்‌, தேடவுமான காரியங்கள்‌ நடைபெறுகின்றன. யாவரும்‌ ஒரே இனம்‌; யாவர்க்கும்‌ ஒரேமொழி; அவைகளுக்கேற்ற கண்டிப்பான எல்லை. ஆகியவை இருப்பதால்‌, பிறவி-வகுப்புஉணர்ச்சி முதலியவைகளுக்கு இடமில்லாமல்‌ ஆட்சி நடந்து, பொருளாதாரமும்‌ வாழ்சீகை நலமும்‌ யாவர்க்கும்‌ ஒன்றுபாலவே பெருகிக்‌ கொண்டேவருகின்‌ றன. இதற்கான.கொள்கைகளே கட்சிப்‌ போராட்டத்திற்கு அஸ்திவாரமாய்‌ இருந்துவருகின்‌றன. ஒவ்வொரு நாட்டாரும்‌ மிக்க சிறு தொகையினராக இருந்தும்‌ மற்ற நாட்டு ஆதிக்கம்‌, மற்ற நாட்டான்‌ தலைமை எதிலும்‌ இல்லாமல்‌ பார்‌ தீதுக்கொள்வதும்‌ அரசியல்‌ காரியமாக இருந்துவருகிறது. இந்நாட்டு அரசியல்‌ கிளர்ச்சி என்பது ஏற்பட்டு 50 வருடகாலமானாலும்‌--அது, பெரிதும்‌ உத்தியோகம்‌ ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடம்‌ வருவதற்காகவே செய்யப்பட்டதாக இருந்து, அதன்‌ பயனாக மத, வகுப்பு; சாதிச்‌ சச்சரவுகள்‌ ஏற்பட்டு, இன்று அரசியல்‌, வகுப்புக்கொள்கையைப்‌ பற்றியதும்‌, பிறவி சாதியைப்பற்றியதும்‌, மததீதைப்பற்றியதுமாக விளங்கிவருகிறது. அரசியல்‌ கட்சிகளைப்பற்றிப்‌ பேசும்போது, சாதிமத வகுப்புக்களைப்‌ பற்றித்தான்‌ பேசமுடிகிறதே தவிர, கொள்கைகளைப்‌ பற்றிய பேச்சு முக்கியமானதாக இல்லை. இங்கு காங்கிரஸ்‌ என்று சொல்லப்படுவதை இந்துக்களே பொதுமக்கள்‌ சபை என்று ஒப்புக்கொள்ளாமல்‌, ¢ இந்து மகா சபை? ஒன்றை இந்துக்கள்‌ பொது அரசியல்‌ சபையாகக்‌ கொண்டாடுகிறார்கள்‌, இந்த இரண்டையும்‌ ஒப்புக்கொள்ளாத பார்ப்பனரல்லாதார்‌ சபை, * திராவிடர்‌ கழகம்‌? என்று ஒன்று சென்னை; பம்பாய்‌, மதீதியமாகாணம்‌ ஆகியவைகளில்‌ இருந்து வருகிறது. இதன்‌ மத்தியில்‌ ஆதிதி திராவிடர்‌ என்று தாழ்த்தப்பட்ட தீண்டாத வகுப்பைச்‌ சேர்ந்த பல கோடி மக்களுக்கு, ஒரு தனி அரசியல்‌ சபை இருக்கிறது. வருணாசிரமக்‌ காரர்கள்‌ -அதாவது, பெரிதும்‌ பார்ப்பனர்கள்‌, தங்களுக்கு வேறு ஒரு அரசியல்‌ சபை வைத்‌ திருக்கிறார்கள்‌. கிறிஸ்‌ தவர்கள்‌; சீக்கியர்கள்‌ முதலியவர்களுக்குதீ தனித்தனியே அரசியல்‌ ஸ்தாபனங்கள்‌ இருக்கின்றன. இவ்வளவும்‌ தவிர்‌ தீது, கிவ்வனவுக்கும்‌ மாறுபட்டவராக 9, 10 கோடி முஸ்லிம்களுடைய சபை--ஒரு தனி அரசியல்‌ ஸ்தாபனமாக இருக்கிறது. இவற்றின்‌. கொள்கைகளில்‌ பெரிதும்‌ மற்ற ஸ்தாபனங்களுடன்‌ தங்களுக்கு உள்ள சாதி, மத முரண்‌: பாடுகளைக்‌ காட்டுவதுதான்‌ முக்கியமானவைகளாக இருக்கின்றன. அவற்றுள்‌ மதம்‌, சாதி, வகுப்பு உணர்ச்சிகளே தலைசிறந்து நிற்கும்‌. காங்கிரஸ்காரர்கன்‌ தங்கள்‌ ஸ்தாபனதீதைப்‌ பொது அரசியல்‌ ஸ்தாபனம்‌ என்று பாத்தியம்‌ கொண்டாடினாலும்‌, காங்கிரஸ்காரர்கள்‌ வேண்டுவது *ராம ராஜ்யம்‌? அல்லது * இந்து ராஜ்யம்‌ ? என்று சொல்லப்படுகிறது. இத்து மகா சபையாரும்‌ அதையே சொல்லு www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1201 கிறார்கள்‌. இதன்‌ wwerrsd திராவிடர்கள்‌ தனிதீதுக்‌ கொள்ள வேண்டியவர்களாகி விட்டார்கள்‌. முஸ்லிம்களும்‌ அப்படியே தனிதீதுக்கொள்கிறார்கள்‌. தீண்டப்படாத மக்கள்‌ சங்கதீதுக்குப்‌ பணம்‌, படிப்பு, சமுதாய சமதீதுவம்‌ இல்லாததால்‌ அது சரியான வகுப்புரிமை அடிப்படையின்‌ மேல்‌ இருந்தாலும்‌--போ.துமான செல்வாக்கு இல்லாமல்‌ இருக்கிறது. இது போலவே கிறிஸ்தவர்களும்‌ எண்ணிக்கையில்‌ மிகக்‌ குறைந்தவர்கள்‌ ஆனதால்‌ தனிச்‌ சங்கம்‌ வைதீதிருந்தாலும்‌ சமயம்போல்‌ ஒவ்வொரு சமயம்‌ ஒவ்வொன்றைதீ தழுவிப்‌ பயன்‌: அடைவது நல்லது என்று கருதுகிறார்கள்‌. வருணாசிரமகீகாரரும்‌, மிகச்‌ சிறு கூட்டக்‌ காரராகக்‌ கருதப்பட்டாலும்‌ இந்து மகாசபை, காங்கிரஸ்‌ இவற்றின்‌ மறைவான ஆதரவால்‌: சமுதாயத்‌ துறையில்‌ தங்களுக்குள்ள உயர்வைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வதையே அரசியல்‌ கொன்கையாகக்‌ கொண்டுள்ளனர்‌. இவற்றில்‌ ஒன்றாவது ¢ பிரிட்டிஷ்‌ கவர்மெண்ட்‌? இந்த நாட்டை விட்டுப்போய்விட வேண்டுமென்று சொல்ல முன்‌ வருவதில்லை. ஏனெனில்‌, பிரிட்டிவ.காரன்‌ இந்தியாவை விட்டுப்‌ போய்விட்டால்‌ உள்நாட்டில்‌ மத, வகுப்புத்‌ தொல்லை ஏற்படாமலும்‌, வேறு ஒரு நாட்டான்‌ இந்தியாவைக்‌ கைப்பற்றாமல்‌: காப்பாற்றிக்கொள்ளவும்‌ முடியுமா என்பதற்கும்‌ எநீதக்‌ கட்சியும்‌ பதில்சொல்ல முடிவதில்லை. பிரிட்டிஷாரிடமிருந்து சில அதிகாரங்களைதி தங்களுக்கு மாற்ற வேண்டும்‌ என்பதிலுங்கூட, எல்லாக்‌ கட்சிகளும்‌ ஒன்று சேருவதற்கில்லாமல்‌, கொடுக்கும்‌ அதிகாரங்கள்‌ ஒரு வகுப்புக்கு--மததீதிற்குப்‌ போய்விட்டால்‌, மற்ற மத; வகுப்புக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே என்கின்ற பயதீதால்‌, அதையும்‌ யாரும்‌ நியாயமாய்க்‌ கேட்பதில்லை. ¢ தங்கள்‌ தங்கள்‌ வகுப்பு மதங்களுக்குச்‌ சரியானபடி அதிகாரம்‌ வேண்டும்‌? என்று கேட்கிறார்கள்‌. இதற்கு, சிறுபான்மையாக இருந்து அதிக பாகம்‌ அனுபவிப்பவர்கள்‌ முட்டுக்கட்டை போடுகிறார்கள்‌. ஆதலால்‌, பாமர மக்களை வசப்படுத்த மாதீதிரம்‌ * பிரிட்டிஷ்‌ கவர்மெண்டை 16 குற்றம்‌ சொல்லிவிட்டு, காரியத்தில்‌ தங்கள்‌ தங்கள்‌ வகுப்பு, மததீதுகீகு ஆதிக்கம்‌-- உதீதியோகம்‌ வரும்படியான நடப்பு முறைகளாலேயும்‌, வேண்டுதல்களாலேயும்‌ ஒருவருக்‌ கொருவர்‌ போராடிக்‌ கொள்ளும்‌ முறைகளையே கொள்கைகளாகக்‌ கொண்டிருக்கின்றனர்‌. இதனரலேயே பெரிதும்‌ இந்தியா எந்தத்‌ துறையிலும்‌ முன்னேற்றமில்லாமலும்‌, பொது இலட்சியம்‌ இல்லாமலும்‌ இருந்துவருகிறது. இந்தச்‌ சங்கங்களால்‌ பிரிட்டிஷாரிடமிரு ந்து இதுவரை இந்த 50 வருடமாகப்‌ பெறப்‌ பட்ட கிலாபமோ, சுதந்திர2மோ--* சில வகுப்புக்காரர்கள்‌ பெருத்த சம்பளமுள்ள பதவிகள்‌: அனுபவிக்கிறதை !தீதவிர வேறு நன்மை கிடைதீதிருப்பதாகச்‌ சொல்வதற்கில்லை. இன்றுள்ள மாகாண நிர்வாக நிலை 1910ஆம்‌ வருஷதீதுக்கு மூன்‌ எப்படி இருந்ததோ அந்த நிலைக்குப்‌ போய்விட்டது. பொறுப்பும்‌ செல்வாக்கும்‌ உள்ள எந்த ஸ்தாபனமும்‌ இன்று அதை மாற்றும்படி கேட்க முன்வர முடியாமல்‌ இருக்கிறது. இதன்‌ காரணமெல்லாம்‌, இந்திய அரசியல்‌ கொள்கை என்பது வகுப்பு, மதவாதக்‌ கொள்கைகளே என்பதல்லாமல்‌ வேறொன்றுமின்றி இருப்பதேயாகும்‌. மேல்‌ நாட்டின்‌ பொதுமக்கள்‌ சமுதாயநிலையை எடுத்‌ துக்கொண்டால்‌ அங்கு சமுதாயத்தில்‌ பிறவி பேதமே இல்லை] யாவரும்‌ சமமேயாகும்‌. அங்கு பொதுமக்களை மதிப்பதில்‌ பிறவி உயர்வு, தாழ்வு என்கின்ற உணர்ச்சியே கிடையாது, யாவருக்கும்‌ எவ்வித சமுதாய உரிமையும்‌ உண்டு) எவனுக்கும்‌ பிறவி காரணமாக எவ்வித அசவுகரியமோ இழிவோ ஒன்றும்‌ கிடையாது. மனிதனை மனிதன்‌ தீண்டக்கூடாது என்றும்‌ கிட்டே வரக்கூடாது என்றும்‌ கருதுகின்ற--சொல்லுகின்ற கொடுமை அங்கு இல்லை. கோவிலானாலும்‌, உண்டிச்‌ சாலையானாலும்‌ வேறு எந்தப்‌ பொது ஸ்தாபன மானாலும்‌ எல்லோருக்கும்‌ சம உரிமையே தவிர; விதீதியாசம்‌ பாராட்டுவதே கிடையாது. 1686—151 www.thamizham.net - Free E book 14௦ 3031 1202 பெரியார்‌: ஈ.வெ. ராஃ சிந்தனைகள்‌ பிறவியின்‌ காரணமாகக்‌ கல்வியோ, அந்தஸ்தோ, புரோகிதம்‌, பூசாரி, மதகுருவோ, ஏற்பட்டு ஒருவரை ஒருவர்‌ சுரண்டும்‌ வழக்கம்‌ ஏற்பட்டிருக்கவில்லை. யாரும்‌ எந்தக்‌ கல்வியும்‌, எந்த வேலையும்‌, எந்தப்‌ பதவியும்‌ அடையலாம்‌. இந்தக்‌ காரணங்களால்‌ அங்கு ஒரே சமுதாயமாகவும்‌, மக்கள்‌ யாவரும்‌ சம உரிமை உடையவர்களாகவும்‌ இருப்பதால்‌ அந்த நாட்டாருக்குள்‌ ஒற்றுமையும்‌ கட்டுப்பாடும்‌ பொது இலட்சியமும்‌ வளர்ச்சிபெற்று, அந்‌ நாடு சமுதாயத்தால்‌ முன்னேற்றமடைந்து பூரண சுயேச்சை சமூகமாக இருக்கிறது. இந்த நாட்டின்‌ சமுதாயம்‌ பிறவியின்‌ பேரிலேயே வருகீகப்பட்டிருக்கிறதுஃ அதனால்‌ இந்த நாட்டில்‌ பல வகுப்புகளாக மக்கள்‌ பிரிக்கப்பட்டு விட்டார்கள்‌. யாரை மதிப்பதிலும்‌ அவனுடைய பிறவியைப்பற்றிகி கருதுவதே கிங்கு முதல்‌ வேலையாக இருக்கிறது. சமுதாயத்தில்‌ பிறவியைப்‌ பார்தீது அந்தஸ்து கொடுக்சப்பட்டிருக்கிறதுஃ பிறவி காரணமாக மனுதனுக்கு அனேக அசவுகரியங்கள்‌ ஏற்பட்டிருக்கின்றன. யோக்கியதையில்‌ எப்படிப்பட்டவனாக இருந்தாலும்‌ பிறவி காரணமாக இழிவுபடுதீதப்படவும்‌ உயர்தீதப்படவும்‌ ஆகிவிடுகிறான்‌) வேறு எவ்வித காரணமும்‌ இல்லாமலே மனிதன்‌ பிறவியையும்‌ சரதியையும்‌ உத்தேசித்து, தீண்டப்படாதவனாகவும்‌ பார்க்கப்பட தவனாகவும்‌ மதிக்கப்படுகிறான்‌. ஒரு மனிதன்‌ தொடுவதோ சாப்பிடுவதோ பாவமாகக்‌ கருதப்படுகிறது. ஒரு மதத்தைச்‌ சேர்ந்த கோவில்‌, குளம்‌ உண்டிச்சாலை ஆகியவற்றில்‌ அவற்றை ஏற்படுத்‌ தியவனுக்குக்கூட சம உரிமை இல்லை. இந்திய சமூகத்தில்‌, கல்விகூட வகுப்புக்குதீ தகுந்தபடி பிரிக்கப்பட்டுவிட்டது. உத்தியோகம்கூட இதை அனுசரித்தே பிரிந்துவிட்டது. ஒரு வகுப்புக்கு மேல்‌ உத்தியோகம்‌) ஒரு வருப்புக்குக்‌ கீழ்‌ உத்தியோகம்‌. பொது இலட்சியம்‌ என்பதாக ஒன்று இந்நாட்டில்‌ இல்லவே கில்லை. எதைப்‌ பொது கிலட்சண மாகக்‌ கருதினாலும்‌--அது, ஒரு: வகுப்புக்கு நலனையும்‌, மற்ற வகுப்புக்குக்‌ கேட்டையும்‌ கொடுக்கக்கூடியதாகவே வந்து முடிகிறது. ஒரு மனிதனை ஒரு மனிதன்‌ பிறவியின்‌ காரணமாகத்‌ தொடக்கூடாது என்றால்‌, மகீகளிடையே அன்பும்‌, ஒற்றுமையும்‌ எப்படி வளரும்‌ 8 பிறவி வெறுப்பும்‌, பிறவி வேற்றுமையும்‌ ஒவ்வொரு வகுப்புக்குள்‌ தோன்றி, வேறுபாடு வளர்‌ நீத வண்ணமாக கிருக்கிறது. ஒருவன்‌ பிற மததீதவனை மதிப்பதைவிட தன்‌ மததீதவனையே இழிவாகவும்‌, கேவலமாகவும்‌, எதிரியாகவும்‌, வஞ்சகமாகவும்‌ மதிக்கிறான்‌. ஒரு மதத்தைச்‌ சேர்‌ நீதவர்களுக்குள்ளகவே--ஒரு சாதி இன்னொரு சாதியைச்‌ சுரண்டும்படியான ஏற்பாடுகள்‌ அனேகம்‌ செய்யப்பட்டிருக்கின்‌றன. இதனால்‌ ஒரு சாதி மேன்மையும்‌ செல்வமும்‌ வாழ்வும்‌ அடையவும்‌, மற்ற சாதிகள்‌ கீழ்மையும்‌, தரிதீதிரமும்‌, கஷ்ட வாழ்வும்‌ அடையவுமான நிலைமை ஏற்பட்டு கிருநீகு.வருகின்றது இந்தப்‌ பேதங்களால்‌ ஒற்றுமை இல்லை என்பது மாத்திரமல்லாமல்‌ பொது இலட்சியம்‌ இல்லாமல்‌ இருப்பதோடு--பொது முன்னேற்றம்‌ என்பது வகுப்புத்‌ துவேஷமாகக்‌ கருதப்‌ படுகிறது. இதன்‌ காரணமாகவே, இந்நாடு அனேக காலமாகத்‌ தேக்கம்‌ அடைந்திருப்ப தோடு, கேடும்‌ அடைந்து வருகிறது. ஆகவே, இந்த நாட்டு முன்னேற்றத்‌ தடைக்கும்‌, விடுதலைத்‌ தடைக்கும்‌ ஜன சமுதாய அமைப்பே முக்கிய காரணம்‌ என்று சொல்லத்தக்க வண்ணம்‌ திந்நாட்டுச்‌ சமுதாயம்‌ இருந்து வருகிறது. மேல்நாட்டு வாழ்க்கைத்‌ திட்டமானது அனுபவத்தை ஒட்டியும்‌, முன்‌ யோசனைப்‌ படியும்‌, மக்கள்‌ மன தீதிருப்திக்கு அனுகூலமாகவும்‌ அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனிதன்‌ வாழ்க்கையில்‌ தினப்படி சாதாரணமாய்‌ நேரிடும்‌ சம்பவங்களையும்‌ அசவுகரியங்‌ களையும்‌ கவனித்து, அவைகளால்‌ எந்த விதத்திலும்‌ எதிர்பாராத அசவுகரியமோ மனக்‌ கசப்போ தாட்சண்யக்‌ கேடோ யாருக்கும்‌ ஏற்படுவதற்கு இடமில்லாமல்‌, கூடியவரை: யோசிதீதுத்‌ தக்க திட்டங்கள்‌, பழக்க வழக்கதீதிலேயே புகுத்தப்பட்டிருக்கின்‌றன. www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்சீசி 1203 எவ்வளவு ஏழைக்‌ குடும்பமானாலும்‌, சாதாரண மனிதக்‌ குடும்பமானாலும்‌, உயர்‌ குடும்பமானாலும்‌ ஒருவர்‌ வீட்டுக்கு முன்னதாகச்‌ சொல்லி அனுப்பாமல்‌ வரமாட்டார்கள்‌ ) அசவுகரியமான சமயதீதில்‌ வரமாட்டார்கள்‌) தாங்கள்‌ போவதால்‌ அந்த இடதீதுக்கோ, வீட்டுக்கோ திடீரென்று எவ்வித அசவுகரியமூம்‌ ஏற்பட இடம்‌ கொடுக்க மாட்டார்கள்‌ $ தாட்சண்யதீதுக்காக எவ்வித அசவுகரியமும்‌ ஏற்படச்‌ சம்மதிக்கமாட்டார்கள்‌. தன்னால்‌, பிறருக்கு எவ்வித ஏமாற்றமோ, மனதீ தாங்கலோ வரும்படி நடந்துகொள்ள மாட்டார்கள்‌. அதாவது, ஒருவன்‌ ஒரு காரியதீதுக்காக ஓர்‌ இடத்திற்குப்‌ போகிறான்‌, அல்லது காதீதிருக்‌ கிறான்‌ என்று வைதீதுக்கொண்டால்‌, அடுத்தாற்போல்‌ அதுபோல்‌ போகிறவன்‌ முன்‌ சென்றவனுக்குப்‌ பின்னால்தான்‌ நிற்பானே ஒழிய, அந்த இடதீதுக்காரனுக்குதி தெரியும்‌ படியாகக்கூட நிற்கமாட்டான்‌. முன்னே போவதோ; அவசரப்படுவதோ அநாகரிகமாகக்‌ கரு கப்படும்‌, இரயிலில்‌ டிக்கெட்‌ வாங்கப்‌ போனால்‌ முன்னால்‌ இருப்பவனுக்குப்‌ பின்னால்‌, ஒருவர்‌ முதுகை ஒருவர்‌ பார்தீத வண்ணமாகவே நிற்பார்கள்‌. ஆயிரம்‌ பேரானாலும்‌ அப்படியே ஒருவருக்குப்‌ பின்னால்‌ ஒருவர்தான்‌ நிற்பார்கள்‌, சாமான்‌ வாங்கும்‌ கடை யானாலும்‌, ¢ பாங்கி? ஆனாலும்‌ ¢ தபாலாபீசு* ஆனாலும்‌, நாடகம்‌, வேடிக்கை பார்க்க டிக்கட்‌? கொடுக்கும்‌ இடமானாலும்‌ அப்படியேதான்‌--வந்த வரிசைக்‌ கிரமப்படியே நிற்பார்கள்‌. * டிராம்‌ ? வண்டி, *பஸ்‌? முதலியவை வரும்‌ இடதீதில்‌ நிற்பவர்கள்‌ அந்த இடத்தில்‌ வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள * நெம்பர்‌ சிட்டை வந்தவுடன்‌எடுத் துக்‌ கொண்டு நிற்பார்கள்‌. பஸ்‌, கார்‌ வந்தவுடன்‌ அந்த வரிசை எண்படிதான்‌ வண்டியில்‌ ஏறுவார்கள்‌. ஒருவர்‌ மீது ஒருவர்‌ மோதமாட்டார்கள்‌. ஏதாவது சாமான்‌ வினியோகிக்கும்போதும்‌ * நோட்டீசு ? பட்டுவாடா செய்யும்போதும்‌ இடம்விட்டு இடம்‌ நகரமாட்டார்கள்‌ ] கைநீட்ட மாட்டார்கள்‌. ஒருவருடன்‌ ஒருவர்‌ பேசிக்கொண்டிருக்கும்போது மதீதியில்‌ யாரும்‌ பேச ஆசைப்பட்டு, பேசுபவர்கள்‌ கவனதீதைதீ தங்கள்‌ பக்கம்‌ திருப்ப முயலமாட்டார்கள்‌. எவ்வளவு அவசரமிருந்தாலும்‌ அந்தச்‌ சம்பாஷணை முடிந்தபின்‌ தாங்கள்‌ பேச ஆரம்பிப்‌ பார்கள்‌. மிக்க அவசரமாய்‌ இருந்தால்‌ தங்களுக்கு முந்திய உரிமைக்காரனைக்‌ கேட்டுக்‌ கொண்டு--அவன்‌ சம்மதம்‌ பெற்று, அவனுக்கு நன்றி செலுதீதிவிட்டுதீதான்‌ தாங்கள்‌ முன்‌ போகவோ; பேசவோ ஆரம்பிப்பார்கள்‌. எதிர்பாராத விருந்தானியோ, போதிய அவகாசம்‌ கொடுக்காத விருந்தாளியோ, சிநேகிதனோ, பநீதுவோ, தாய்‌, தகப்பன்‌, மகன்‌, சகோதரர்கள்‌ யாருமே எந்த வீட்டுக்‌ குள்ளும்‌ வரமாட்டார்கள்‌. எவ்வளவு கஷ்டம்‌ வந்தாலும்‌, வாகீகுதீ தவறவோ, சொன்னபடி நடந்து கொள்வதைத்‌ தவறவோ இசையவே மாட்டார்கள்‌, குறிப்பிட்ட காலத்தில்‌ குறிப்‌ பிட்டதைச்‌ செய்வார்கள்‌ $ குறிப்பிட்ட காலத்தில்‌ வந்து விடுவார்கள்‌, வந்த கிரமப்படி அமருவார்கள்‌. ¢ இரயில்வே ஸ்டேஷன்‌ ? முதலிய பொது கிடங்களில்‌ நிற்கும்‌ கூலி ஆள்‌, வண்டி வரகனக்காரர்‌ முதலியவர்கள்‌, பிரயாணிகளை வரிசையாகதீதான்‌ அமர்தீ திக்கொள்வார்கள்‌. தன்‌ வரிசை வரும்வரை எவனும்‌ பேசவோ, கூப்பிடவோ, முன்வரவோ மாட்டான்‌. கூலி, வாடகை எல்லாம்‌ முன்னமயே ஏற்படுத்தப்பட்ட குறிப்பிட்ட விகிதமாகவே இருக்கும்‌, அதிகம்‌-குறைவு என்கின்ற பேச்சே இருக்காது. கடைகளிலும்‌ சாமான்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்குமே ஒழிய, வியாபாரம்‌ பேச இடம்‌ வைகீக மாட்டார்கள்‌. சில காரியங்களுக்கும்‌ ¢ மூனிசிபாலிட்டியார்‌ ? விலையும்‌ விகிதமும்‌ ஏற்படுத்தி விடுவார்கள்‌. கூலி வண்டி அமர்த்திக்‌ கொண்ட பிறகு தகராறுக்கு இடமிருக்காது. எந்த விஷயத்திலும்‌ தாட்சண்ய சங்கடமோ, தயவுக்‌ குறைவோ ஏற்பட இடம்‌ தரவே மாட்டார்கள்‌. அப்படி கடம்‌ தருவது எல்லாவற்றையும்‌ விட அநாகரிகமாய்‌ மதிக்கப்படும்‌. பெண்கள்‌, வயதான கிழவன்‌ மார்கள்‌, சிலுபாலர்கள்‌ ஆ 8யவர்கன்‌ விஷயத்திலும்‌ யாவரும்‌ சலுகை காட்டி முன்‌ கடம்‌ கொடுத்துச்‌ சவுகரியம்‌ செய்வார்கள்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 1204 பெரியார்‌ ௨. வெ. ரா. சிந்தனைகள்‌ பெண்களிடத்தில்‌, மனைவியரனாலும்‌, வேலைகீகாரியானாலும்‌ நயமாய்‌ நடந்து கொன்வதைக்‌ கொள்கையாய்‌ அனுசரிப்பார்கள்‌. ஒருவர்க்கொருவர்‌ மரியாதையாய்ப்‌ பேசு. வார்கள்‌ ; ஒருவர்க்கொருவர்‌ உதவி செய்ய ஆசைப்படுவார்கள்‌. ஒரு மனிதன்‌ தனியாய்‌ ஏங்கி நிற்பதைத்‌ தெருவில்‌ போகிற ஒருவன்‌ பார்தீது விட்டால்‌, ¢ என்ன 8 உமக்கு ஏதாவது உதவி செய்யும்‌ பாக்கியம்‌ எனக்குக்‌ கிடைக்குமா P என்று கேட்காமல்‌ போகமாட்டான்‌. எவ்வளவு அவசரமாய்த்‌ தெருவில்‌ போகிற ஆணாக இருந்தாலும்‌--பெண்ணாக இருந்தாலும்‌, ஓரீ அன்னியன்‌ ஏதாவது விஷயம்‌ கேட்டால்‌ நின்று, பொறுமையாய்‌ இருந்து பதில்‌ சொல்லுவார்கள்‌. அதை ஒரு பெருமையாகவும்‌ நினைப்பார்கள்‌. ஏதாவது ஒரு தெருவையோ, இடத்தையே காட்டும்படி ஒருவனைக்‌ கேட்டால்‌, உடனே கூட வந்து காட்டுவான்‌. அல்லது, தன்னால்‌ கூடிய அளவு அதற்கு உதவி செய்துவிட்டு, தெரிந்த மற்றவனிடம்‌ ஒப்புவித்து, அந்த வேலையைச்‌ செய்யும்படி சொல்லிவிட்டுப்‌ போவான்‌. அவ்விடத்திய கிராம ஜனங்களின்‌ வாழ்க்கைத்‌ திட்டமான து இிதைவிடதீ தாராளமாக இருக்கிறது. தங்களுக்குத்‌ தெரியாத விஷயதீதைப்பற்றி யாராவது கேட்டுவிட்டால்‌ தெரிந்த வனைப்‌ பிடித்து ஒப்புவித்து விட்டுப்‌ போவார்கள்‌. தங்களுக்குச்‌ சம்பந்தமில்லாத விஷயத்‌ தில்‌ தாங்களாகச்‌ சிறிதும்‌ கவலை செலுதீதமாட்டார்கள்‌ ; காதும்‌ கொடுக்கமாட்டார்கள்‌. ஆனால்‌ நம்‌ நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில்‌ எவ்விததி திட்டமும்‌ கிடையாது. அவ்வப்போது சம்பவிப்பதை அனுபவிக்கப்‌ பழகி இருக்கிறார்களே ஒழிய, அசவுகரியமோ, அதிருப்தியோ, தாட்சண்யக்‌ கஷ்டமோ நேராமல்‌ இருக்கும்படி முயற்சி செய்வதே இல்லை. முன்பின்‌ தகவல்‌ கொடுக்காமல்‌, எதிர்பாராத நிலையில்‌ வந்து இறங்‌ கவிடுவரர்கள்‌ $ அகாலதீதில்‌ வந்து சுதவைத்‌ தட்டுவார்கள்‌) சாப்பாட்டு வேளையில்‌ வந்து சாப்பாட்டு விஷயதீதுக்கு வீட்டுகாரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி விடுவார்கள்‌ ] வீட்டுக்காரர்‌. சாப்பிடப்‌ போகும்போது வந்து உட்கார்நீதுகொண்டு தொல்லை தருவார்கள்‌. தாங்கள்‌ யாரிடம்‌ போகவேண்டுமென்று நினைக்கிறார்களோ அவருடைய சவுகரியம்‌ எப்படி இருக்கும்‌, அவர்‌ வேறு வேலையில்‌ ஈடுபட்டு கிருப்பாரோ என்பதைப்‌ பற்றிக்‌ கவனிக்காமல்‌ அங்கு போய்ச்‌ சங்கடதீதை உண்டுபண்ணுவார்கள்‌. இங்கு, கரண்டு பேர்‌ ஏதோ தனி விஷயத்தைப்‌ பற்றிப்‌ பேசிக்கொண்டிருக்கிறார்கள்‌ என்று தெரிந்தும்‌ அதில்‌ போய்க்‌ கலந்து கொள்வார்கள்‌ ; அல்லது, அங்கு உட்கார்ந்து தங்கள்‌ காரியமும்‌ நடக்காமல்‌, அவர்கள்‌ பேச்சும்‌ நடக்கவொட்டாமல்‌ மூன்று பேருமாய்ப்‌ பேசாமல்‌ உட்கார்ந்திருப்பார்கள்‌ ; அல்லது, அனாவசியமாய்க்‌ கலந்து கொண்டு சங்கடத்தை உண்டு பண்ணுவார்கள்‌. எதிரி சொல்லுவதைக்‌ கேட்காமல்‌ தாங்களே பேசிக்கொண்டு இருப்பார்கள்‌. ஒருவரை ஒருவர்‌ கேட்டால்‌, மற்றொருவர்‌ பதில்‌ சொல்லித்‌ தன்‌ பக்கம்‌ இழுதீதுக்கொள்வார்‌. இரண்டு பேர்கள்‌ பேசிக்கொண்டு இருக்கும்போது அவர்களுக்குத்‌ தொந்தரவு உண்டாகும்படியும்‌ அவர்கள்‌ பேசுவது ஒருவருக்கொருவர்‌ காது கேட்காதபடியும்‌ வேறு இரண்டு பேர்‌ உரக்கப்‌ பேசிக்‌ கஷ்டம்‌ கொடுப்பார்கள்‌. பேசுவதில்‌ ஒழுங்குமுறை அனுசரிக்கிற வழக்கம்‌ இங்கு மிகமிக அருமை, முன்னால்‌ சென்றவர்‌, பின்னால்‌ சென்றவர்‌ என்கின்ற வரிசை ஒழுங்கைக்‌ கவனிக்காமல்‌, ஒருவன்‌ ஒரு கிடதீதுக்கு முன்னதாகவே சென்று காதீதிருப்பவனாய்‌ இருந்தாலும்‌ அதை இலட்சியம்‌ செய்யாமல்‌ அவனுக்கு முன்னாஃபோய்‌ நின்றுகொண்டு தங்கள்‌ காரியத்தை முதலில்செய்து கொள்ளப்‌ பார்ப்பார்கள்‌. இரயில்‌, கார்‌, பஸ்‌ முதலிய பிரயாண இடங்களில்‌, முன்னால்‌ வந்தவன்‌-பின்னால்‌ வந்தவன்‌ என்கின்ற முறையில்லாமல்‌, பின்னால்‌ வந்தவன்‌ முன்னால்‌ வந்தவனைதி தள்ளிவிட்டு ஏறிக்கொண்டு, முன்வநீதவனுகீகு இடமில்லாமல்‌ செய்து விடுவான்‌. இரயில்வே டிக்கட்‌ வாங்குகிற இடத்தில்‌ உள்ள டிக்கட்‌ கொடுக்கும்‌ அவாரதீதில்‌ 2 பேர்‌, 3 பேர்‌ கையை விட்டுக்கொண்டு எடுக்கமாட்டாமல்‌ தொந்தரவுபடுவார்‌ கள்‌, இரயில்‌ www.thamizham.net - Free £ book No 3031 Sifley வளர்ச்சி 1205 வண்டியில்‌ 2 பேர்‌, 3 பேர்‌ உட்காரும்‌ இடதீதை ஒருவன்‌ எடுதீதுக்கொண்டு, மற்றவன்‌ இடமில்லாமல்‌ நிற்பதைப்‌ பார்‌ தீதுக்கொண்டே அவனை நிற்கவைப்பான்‌. குழந்தைகள்‌, பெரியவர்கள்‌, பெண்கள்‌ என்கின்ற கவலையில்லாமல்‌ தாராளமாய்தீ தாங்களே அதிக இடத்தையும்‌ அதிக சவுகரியத்தையும்‌ அனுபவிப்பார்கள்‌. மக்கள்‌ உட்கார இடமில்லாத போது சசமான்களை இருக்கைகளின்மீதும்‌ பரப்பி வைதீதுக்கொள்வார்கள்‌. மற்றொரு அன்னியன்‌ வண்டியில்‌ ஏறும்போது, உட்கார்நீதிருப்பவன்‌ சட்டென்று நீட்டிப்‌ படுத்துக்‌ கொண்டு தூங்குகிறவன்‌ போல்‌ கண்ணை மூடி, குறட்டைவிட ஆரம்பிப்பான்‌. உட்கார்ந்‌ திருக்கும்‌ வண்டியில்‌ காரி உமிழ்வதும்‌, குழந்தைகளை மலஜலம்‌ கழிக்கவிடுவதும்‌, குப்பை செத்தைகள்‌ ஆக்குவதும்‌, தண்ணீரைக்கொட்டி ஆபாசமாக்குவதும்‌ நம்மவர்களால்‌ வெகு சகஜமாகச்‌ செய்யப்படும்‌. நாடகம்‌, வேடிக்கை பார்க்குமிடம்‌, பொதுக்கூட்டம்‌ நடைபெறும்‌ இடம்‌ முதலியவை களில்‌ பின்னால்‌ இருப்பவர்களுடைய சவுகரியத்தை அனுசரிக்காமல்‌, தலைதூக்கி மறைப்‌ பதும்‌, நின்று கொண்டு மறைப்பதும்‌, பேசிக்கொண்டு தொந்தரவு செய்வதும்‌ ஆகியவைகள்‌ சாதாரணமாக நிகழும்‌. ஏதாவது சாமான்‌ வினியோகிக்கும்‌ போதும்‌, ¢ காகித நோட்டீஸ்‌? முதலியவை வினியோகிக்கும்‌ போதும்‌, கும்பலாக எழுந்து கொள்வதும்‌, எனக்கு உனக்கு என்று சப்தமும்‌ கலாட்டாவும்‌ செய்வதும்‌, 10, 20 கைகள்‌ நீட்டப்படுவதும்‌, கொடுப்ப வனுக்கும்‌ சபைக்கும்‌ தொல்லை உண்டாகும்படி செய்வதும்‌, வினியோகிக்கப்படும்‌ சாமான்‌ கீழே கொட்டப்படும்படியும்‌, நழுவி விழும்படியும்‌ செய்வதும்‌ 100-க்கு 75 வினியோக இடங்களில்‌ பார்க்கலாம்‌. தான்‌ வருவதாகச்‌ சொன்ன காலதீதில்‌ வரமாட்டார்கள்‌ $ காதீதிருக்கச்‌ செய்து ஏமாற்றமடையும்படி செய்வதைப்பற்றியும்‌ கவலைப்படமாட்டார்கள்‌. கூலிகள்‌, வாடகை வண்டிகள்‌ அமர்தீதப்படும்‌ இடங்களுக்கு ஒரு மனிதன்‌ போனால்‌, அவனைச்‌ சூழ்ந்து கொண்டு, பிய்தீதுப்‌ பிடுங்கிவிடுவார்கள்‌. சாமான்களைப்‌ பிடுங்குவார்கள்‌ ) கண்டபடி கூலி விகிதம்‌ கேட்பார்கள்‌. போட்டி போட்டு வாடகையை மிகக்‌ குறைதீதுச்‌ சொல்வார்கள்‌, கூலி, வாடகை பெறும்போது கலகம்‌, அதிருப்தி, ஏகதேசமாய்ப்‌ பேச்‌ச இல்லாமல்‌ இருக்கவே முடியாது. கடைகளில்‌ சாமான்களில்‌ சாமான்‌ தெரிந்தெடுத்து வாங்கும்‌ நேரத்தைவிட விலைகளைப்‌ பற்றி வியாபாரம்‌ பேசும்‌ நேரமே அதிக நேரமாய்‌ இருக்கும்‌. விலைகளில்‌ ஒரு ஒழுங்கில்லாமல்‌, ¢ ஏமாற்றிய வரையில்‌ இலாபம்‌ ? என்றே வியாபாரிகள்‌ கருதுவார்கள்‌. ஒருவனுக்கு ஒருவன்‌ உதவி செய்வது என்பது மிக அருமையாக இருக்கும்‌. மக்க ளிடம்‌--மக்கள்‌ அதிகாரமாகவே பேசிப்‌ பெருமை கொள்ளப்‌ பார்ப்பார்களே ஒழிய, தன்மை யாகவே? நயமாகவோ பேசவே மாட்டார்கள்‌. அப்படி நயமாகப்‌ பேசுவதைக்‌ கவுரவக்‌ குறைவாக நினைப்பார்கள்‌. ஒருவனுக்கு--அவன்‌ போகுமிடதீதுகீகு வழி காட்டுவதோ, கேட்ட விவரங்களுகீகுப்‌ பதில்‌ சொல்வதோ, பிறரீ உதவியை எதிர்பார்‌ தீதுக்‌ கொண்டிருப்ப வனை விசாரிதீது உதவி செய்வதோ இங்கு சிறிது கூட நாகரிகமாய்க்‌ கருதப்படுவதில்லை; அலட்சியப்படுத்‌ துவதுதான்‌ நாகரிகமும்‌, கவுரவமுமாகக்‌ கருதப்படுகிறது. ஒரு மனிதனிடம்‌ மற்றொரு மனிதன்‌; ¢ இது கேட்டால்‌ வருதீதப்படுவானே, தாட்சண்‌: யதீதால்‌ சங்கடப்படுவானே ? என்கின்ற யோசனையில்லாமல்‌ தன்‌ காரியத்தையே பிரதான மாகக்‌ கருதி மற்றவர்களின்‌ சமய சந்தர்ப்பதீதைக்‌ கவனிக்காமல்‌ கண்ட விஷயங்களைக்‌ கேட்டுச்‌ சங்கடப்படுதீ துவது, பல விஷயங்களில்‌ அன்னியனை ஏமாற்றமும்‌ அதிருப்தியும்‌ அடையும்படி செய்வது இங்கு மிக சகஜமாக நடக்கும்‌. பெண்களை நயமாக நடதீதாமல்‌ முரட்டுத்தனமாக நடதீ.துவார்கள்‌. பெண்களிடம்‌ பேசுகையில்‌ மரியாதைப்‌ பதங்களை உபயோகிப்பதில்லை. பொதுவாகச்‌ சொன்னால்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 1206 பெரியார்‌ ஈட வெ. ரா, சிநீதனைகள்‌ ஒருவருக்கொருவர்‌ உதவி செய்கிற உணர்ச்சியோ, நயமாக நடந்துகொள்ளுவதோ, நம்மைப்‌ போல்தானே அன்னியன்‌ என்கின்ற எண்ணமோ, மற்றொருவனைச்‌ சங்கடப்படுத்தக்‌ கூடாது-ஏமாற்றம்‌ அடையச்‌ செய்யக்கூடாது என்கின்ற கவலையோ, மற்றவர்கள்‌ சவுகரி யதீதைப்‌ பற்றி யோசிப்பதோ நம்மில்‌ மிக அருமையாகவே இருக்கும்‌. பொதுவாகப்‌ பேசுமிடதீக; நாகரிகம்‌ என்பதெல்லாம்‌ ஒரு மனிதனிடம்‌ ஒரு மனிதன்‌ நடந்துகொள்ளும்‌ விதத்திலேயே பெரிதும்‌ அடங்கியிருக்கும்‌. அதை எடுத்துக்கொண்டு பார்ப்போமானால்‌ நம்‌ நாட்டுக்கும்‌ மேல்‌ நாட்டுக்கும்‌ ஏராளமான வித்தியாசம்‌ இருந்து வருகிறது. [யடநாட்டுச்‌ சுற்றுப்பிரயாணம்‌ சென்றராலை, அரித்துவாரம்‌ கன்கல்‌ கலைஞான சங்கத்தில்‌, அரித்‌ துவாரம்‌ குருகுல காங்கிரி கம்பேரடிவ்‌ ரிலிஜன்‌ புரபசர்‌ (Comparative Religion Professor) அரிதத்‌ வித்யாலங்கரர்‌ தலைமையில்‌) ¢ மேல்நாடும்‌ கீழ்நாடும்‌ ? என்பதுபற்றி ஆற்றிய சொற்பொழிவு--4குடிஅரசு? 9-11-1946 நூல்‌ s மேல்நாடும்‌ கீழ்நாடும்‌ ; குடிஅரசுப்‌ பதிப்பகம்‌, ஈரோடு] 12. வெளிநாட்டு அனுபவம்‌ தலைவரவர்களே 1 பெரியோர்களே | தோழர்களே 1 நான்‌ தற்சமயம்‌ சென்றுவந்த பர்மா, மலேயா நாடுகளைவிட அதிக தூரத்திலுள்ள நாடுகள்‌ பலவற்றிற்கும்‌ சென்றிருக்கிறேன்‌. அய்ரோப்பாவில்‌ பல நாடுகளுக்கும்‌, எகிப்து, கெய்ரோ, இருக்கி போன்ற நாடுகளுக்கும்‌ சென்றிருக்கிறேன்‌. இந்திய நாட்டில்‌ வட கோடி யிலிருந்து தென்‌ கோடி வரை மூன்று நான்கு தடவைகள்‌ பிரயாணம்‌ செய்துள்ளேன்‌. இவைகளைவிட அதிசயமல்ல-நான்‌ இப்பொழுது சென்றுவந்த நாடுகள்‌, இருந்தாலும்‌, இதை ஒரு காரணமாகக்‌ கொண்டு உங்களின்‌ எல்லை மீறிய உள்ளத்தின்‌ ஆர்வ உணர்ச்சி யானது இப்படிப்‌ பல இடங்களிலும்‌ வரவேற்பளிக்கவும்‌, புகழ்‌ மாலைகள்‌ சூட்டவும்‌ காரணமாய்‌ உள்ளது. இதிலிருந்து பெரும்பான்மை மக்கள்‌ என்னுடைய கழகத்தின்‌ கொள்கைகளை உணர்ந்து விட்டார்கள்‌ என்றும்‌, அதன்படி நடக்கச்‌ சிதீதமாயுன்ளனர்‌ என்பதும்‌ விளங்குகிறது. வெளிநாடுகள்‌ பலவற்றிற்கும்‌ நான்‌ சென்று வந்ததால்‌ பெரும்பமனை அடையும்‌ படியான வாய்ப்பும்‌ ஏற்படுகிறது. கந்‌ நாட்டிலேயே கிருநீதுகொண்டு, இங்குள்ள பழக்க வழக்கங்களையே கைக்கொண்டு இருப்பதால்தான்‌, நான்‌ கூறும்‌ கருதீதுக்கள்‌ யாவும்‌ மக்களுக்குப்‌ பெரும்‌ புரட்சியாகதி தோன்றுகின்றன. ஆனால்‌, எனக்கு அக்‌ கருத்துக்கள்‌ சர்வ சாதாரணமாகத்‌ தோன்றுகின்றன. ஏனெனில்‌, நான்‌ வெளிநாடுகளின்‌ நிலைமை யையும்‌, அங்குப்‌ பல துறைகளிலும்‌ மக்கள்‌ வாழும்‌ விதங்களையும்‌ அறிந்தவன்‌. சுமார்‌ 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள்‌ கொண்ட உலகத்தில்‌ மிகச்‌ சிறிய அளவாகிய 6,7 கோடி மக்கள்‌ உள்ள இந்‌ நாட்டிலேயே பழகிக்கொண்டிருக்கும்‌ நம்‌ மக்களுக்கு மற்ற மக்களின்‌ வாழ்க்கைத்‌ திறனை எப்படி உணர முடியும்‌ 8 நேரில்‌ சென்று பார்‌ தீதாலன்றி' வேறு எவ்வித வழிகளிலும்‌ உலக அனுபவத்தை உணர முடியாது என்‌ போன்றவர்களைதீ தவிர வேறு யாரும்‌ கூறமுடியாது: எத்தனையோ பேர்கள்‌ பற்பல துறைகளில்‌ கல்வி கற்கவும்‌, அரசாங்க அலுவ லாகவும்‌, உல்லாசப்‌ பிரயாண தீதிற்கென்றும்‌ வெளி நாடு செல்கின்றனர்‌. அவர்களெல்லாம்‌ அவரவர்களுக்கு வேண்டியவைகளை மட்டும்‌ கற்று, அதன்‌ சம்பந்தமாய்ப்‌ பட்டம்‌ பெற்று வருகிறார்கள்‌. அன்றியும்‌ அரசாங்க சம்பநீதமாகச்‌ செல்கின்றவர்களும்‌ அங்குள்ள மக்கள்‌. எவ்விதம்‌ வாழ்கிறார்கள்‌ ? சமுதாயத்துறை எப்படி நடக்கிறது ? கடவுள்‌, மதம்‌ கிவைகள்‌: அங்கு எப்படி உள்ளன ₹-என்பதை அறிந்து வருவதில்லை. ஏதோ ஓரிரு அரசியல்‌ உத்தியோகஸ்தர்களைப்‌ பேட்டி கண்டதாகவும்‌ வரவேற்புப்‌ பெற்றதாகவும்தான்‌ அங்கு www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1207 சென்றதன்‌ பலன்‌ கிடைக்கிறது. இதைதீ தவிர வேறு பொது நலதீதிற்கென்றும்‌--அந்‌ நாடு களில்‌ உள்ளதைப்போல்‌ இந்நாட்டு மக்களும்‌ வாழ்வதற்கு எவை வழிகளே அவைகளை உணர்‌ நீது வருவதில்லை. அப்படி உணரீந்துவரும்‌ ஓரிருவரும்‌ அங்குள்ள மதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌ கிவை: களைப்பற்றிப்‌ பேசுவதே கிடையாது. ஏதாவதொன்று கூறவேண்டுமானால்‌, ¢ இலண்டனில்‌. கூட பிள்ளையார்‌ கோயில்‌ உள்ளது) அமெரிக்கா வில்கூட அனுமார்‌ கோவில்‌ இருக்கிறது? என்றுதான்‌ கூறுவார்கள்‌. ஆனால்‌, அதன்‌ யோக்கியதை அங்கு எப்படி உள்ளது என்பதை விவரமாகக்‌ கூறமாட்டார்கள்‌. நான்‌ சென்று பார்தீதேன்‌--ரஷ்யாவில்‌ நம்முடைய கடவுள்‌ ஒன்றின்‌ யோக கியதையை. ரஷ்யாவில்‌ உள்ள * மியூஸியம்‌ ? ஒன்றில்‌ கிருஷ்ண லீலையின்‌ சின்னம்‌ ஒன்றை, பொம்மை உருவதீதில்‌ செய்துவைதீதுள்ளனர்‌. குளித்‌ துக்கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ ஆடைகளைதீ தூக்கிக்கொண்டு புன்னை மரதீதில்‌ உட்கார்ந்திருக்கும்‌ கிருஷ்ணன்‌ சிலையும்‌, அம்‌ மரத்தடியில்‌ பல கோபியர்கள்‌ நிர்வாணமாகக்‌ கைகளை உயர்‌ தீதி, அங்கங்கள்‌ யாவும்‌ தெரியும்படி நின்றுகொண்டு உள்ளதும்‌, அந்தக்‌ காட்சியைக்‌ கண்ட கண்ணபிரான்‌ புன்முறுவலுடன்‌ இருக்கும்‌ காட்சியும்‌ போதாது என்று--அதன்‌ அடியில்‌, ¢ இதுதான்‌ இந்திய நாட்டு இந்துமதக்‌ கடவுள்‌ கண்ணபிரானின்‌ திருவிளையாடல்‌ களில்‌ ஒன்று? என்று அடிக்‌ குறிப்பும்‌ எழுதப்பட்டிருக்கிறது. அதைக்‌ காண்கின்ற அந்‌ நாட்டு மக்களும்‌, அயல்நாட்டு மக்களும்‌ நாம்‌ எவ்வளவு ¢ முட்டாள்கள்‌ ? என்பதை உணரதீதான்‌ அது வழியாக இருக்கிறது இவ்விதம்‌ நம்‌ கடவுள்களின்‌ யோகீகியதையும்‌ நம்முடைய முட்டாள்‌ தனமும்‌ அயல்‌ நாடுகளிலும்கூடப்‌ பரவிவிட்டன. ஆனால்‌, இதைக்‌ கண்டுவரும்‌ பார்ப்பனரோ ¢ ரஷ்யாவில்‌ கிருஷ்ணன்‌ கோயில்‌ உள்ளது? என்று கூறுவார்களே தவிர, அதன்‌ யோக்கியதை எப்படி உள்ளது என்பதைக்‌ கூறமாட்டார்கள்‌. எனவே, உலகத்தைச்‌ சுற்றி வருவதால்‌ மட்டும்‌ உலக விஷயங்களை உணர்நீதவர்க சென்று கூறமுடியாது. அங்குள்ள மத சம்பந்தப்பட்டவைகளையும்‌, அரசியல்‌, சமுதாய இயல்‌, பொருளியல்‌ முதலியவைகளையும்‌ ஆராயவேண்டும்‌. அவைகள்‌ அந்‌ நாடுகளில்‌ உள்ள நிலைமையையும்‌, நம்‌ நாடுகளில்‌ உள்ள நிலைமையையும்‌ ஒப்பிட்டு, இரண்டிற்கும்‌ உள்ள தாரதம்மியதீதை உணரவேண்டும்‌. இதனால்தான்‌, மனிதனின்‌ அறிவு வளர்ச்சி யடைய முடிகிறது. இவ்விதம்‌ எல்லாதி துறைகளின்‌ நிலைமையையும்‌, சந்தேகமின்றி உணருபவனே அறிவாளி எனப்படுவான்‌. உலகத்தின்‌ விஷயங்களையும்‌ எங்கிலுமுள்ள இயற்கையின்‌. நிலைமையையும்‌ ஆராய்ந்து உண்மையை உணர்ந்தவன்‌ தான்‌ அறிவாளி. இதன்றி ஒருவன்‌ பி. ஏ. படிதீதாலும்‌, எம்‌. ஏ. படிதீதாலும்‌ அறிவாளி ஆகமுடியாது. டாக்டர்‌ தொழிலிலும்‌, கிஞ்ஜினியர்‌ தொழிலிலும்‌ வெற்றியடைந்து பட்டம்பெற்றதாலும்‌, மந்திரித்‌ தொழில்‌ பார்ப்பதாலும்‌ அறிவாளி.என்று கூறமுடியாது. பட்டம்‌ என்பது பாராயணம்தான்‌. தொழில்‌ துறைப்‌ பட்டம்‌ பெறுவதனால்‌ அந்தத்‌ துறையில்மட்டும்‌ ஓரளவு அறிவுபெற்றிருக்கலாம்‌. ஆனால்‌, உலகப்‌ பொதுவிஷயத்தில்‌ அறிவுபெற, அவர்களுக்கு வாய்ப்புக்‌ கிடையாது. எனவே, பட்டம்பெற்றவர்களும்‌ கூட, பார்ப்பனரின்‌ பிதீதலாட்டத்தைச்‌ சிறிதும்‌ ஆராய்வதில்லை. கல்வியறிவில்லாத பாமர மக்கள்‌ ஒருபுறமிரூந்தாலும்‌, ¢ நான்‌ படிதீதவன்‌$ பட்டம்பெற்றவன்‌? என்று கூறிக்‌ கொள்பவர்கள்கூடக்‌ கோயிலைக்‌ கண்டதும்‌ கால்பூட்ஸைக்‌ கழற்றிக்கொண்டே கன்னத்தில்‌ அறைந்துகொள்கின்றனர்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1208 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இங்குள்ளதைப்‌ போன்று மேல்நாடுகவில்‌ மூடப்‌ பழக்க வழக்கங்கள்‌ கிடையா, இதைப்போன்று பார்ப்பனரின்‌ பித்தலாட்டங்களால்‌ அநாகரிகம்‌ அங்கு வனரவில்லை. அவ்வித நிலையை உணர்ந்தவர்கள்‌ ¢ நாமும்‌ அப்படி மனித உணர்சீசியுடனும்‌ பகுத்தறி வுடனும்‌ வாழவேண்டும்‌ ? என்று ஆசைப்படுகிறார்கள்‌. நான்‌ பிள்ளையாரை உடைப்பதும்‌, இராமனைத்‌ தூளாக்குவதும்‌, கிராமாயணதீதைச்‌ சாம்பலாகீகுவதும்‌ எதற்காக? இதைப்‌ போன்ற ஆபாசங்கள்‌ விஞ்ஞானிகள்‌ நிறைந்த நாட்டில்‌ இல்லாததை உணர்ந்ததால்தான்‌. அவர்களுக்கில்லாத பிள்ளையாரும்‌, இராமனும்‌ நமகீகிருந்து என்ன நன்மைகள்‌ செய்தன 8 ஆயிரக்கணக்கான கடவுள்கள்‌ இருந்தும்‌ எந்தவிதத்தில்‌ நாம்‌ அவர்களைவிட உயர்நீதவர்‌ களாக இருக்கிறோம்‌ ₹ அல்லது, அவர்களுக்குச்‌ சமமான அறிவையாவது அடைந்‌ திருக்கிறோமா? இவைகளையெல்லாம்‌ சிந்திகீகும்பொழுது ஒரே ஒரு காரணந்தான்‌ தென்படுகிறது. இங்குள்ளதைப்போன்று பாரீப்பனர்கன்‌ அங்கே கிடையாது. இவர்கள்‌ ஏற்படுத்திய மதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌, கடவுன்களைப்போன்று அந்‌ நாடுகளில்‌ கிடையாது. ஆகவே, இங்கும்‌ இவர்கள்‌ இல்லாமல்‌ ஒழிக்கப்படுவரேயானால்‌, அந்‌ நாடுகளின்‌: நிலைமை--இங்கும்‌ ஏன்‌ உண்டாகாது? எனவே, நம்மை இழிவுபடுதீதவந்த மதமும்‌, அதற்கு ஆதாரமாய்‌ உள்ளவைகள்‌ யாவும்‌ அழிக்கப்பட வேண்டும்‌. [சின்னசேலத்தில்‌, 18-4-1955-ல்‌ சொற்பெரழிவு---6 விடுதலை ? 1-5-1955] 18. கண்காட்சியின்‌ பயன்‌ பெரியோர்களே ! ஆசிரியப்‌ பெருமக்களே ! மாணவ ஆசிரியர்களே ! முதலாவதாக; கண்காட்சி என்கின்ற பெயர்‌ பொருத்தமாக இருக்கிறதா அல்லது வேறு பெயர்‌ வைக்க வேண்டுமா என்கின்ற விஷயம்‌ வேறு இருக்கிறது. ஏன்‌ என்றால்‌, கண்‌ அழகுக்காக Dy வைக்கப்படவில்லை; இதிலிருந்து மனிதன்‌ தனக்குதி தேவையான பல அருமையான கருதீதுக்களை அறிந்துகொள்ள வைகீகப்படுவதாகும்‌. மனிதனுடைய அறிவுக்கு, ஆராய்ச்சித்‌ திறனுக்கு, நல்ல படிப்பினைக்கு, வாழ்க்கைக்கு, மற்றும்‌ பல வகையிலும்‌ பயன்படுவதற்குக்‌ கண்காட்சியானது பயன்படுகிறது. இதீதனை நல்ல காரியங்களையும்‌, மகீகளின்‌ அறிவையும்‌ கெடுதீது மக்களைக்‌ கெடுப்பதற்காகவே, இதற்கு நேர்மாறாக ஏற்படுதீதப்பட்டவைகள்தாம்‌ இந்தக்‌ கோயில்கள்‌, விழாக்கள்‌, உற்சவங்கள்‌, பண்டிகைகள்‌ என்பவைகள்‌ ஆகும்‌. இவைகள்‌ மக்களுக்கு ஒன்றும்‌ பயன்‌ தருவதில்லை. ஏதோ பல காரியங்களை முன்னிட்டுக்‌ கூட்டம்‌ சேர்கிறது. ஆண்கள்‌ பெண்களைப்‌ பார்க்கவும்‌, பெண்கள்‌ ஆண்களைப்‌ பார்க்கவும்தரன்‌ இவை பயன்படுகின்றன. கதைதி தவிர எவனும்‌ அங்கு போய்ப்‌ பார்தீ.துப்‌ புதிதாக-வாழ்க்கைக்குப்‌ பயன்படுகின்ற அறிவுக்‌ கேற்ற புதிய சங்கதி ஒன்றும்‌ தெரிந்‌ துகொண்டு வரமாட்டான்‌ ) இவற்றின்‌ மூலம்‌ அறிந்து கொள்ளவும்‌ முடியாது. ஆனால்‌, கண்காட்சியைப்‌ பார்ப்பதின்‌ மூலம்‌ பல விஷயங்களைதி தெரிந்துகொண்டு அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்‌. நாம்‌ அறிந்திருக்க முடியாத பல புதிய விஷயங்களையும்‌--நாம்‌ வாழ்க்கையில்‌ பல பொருள்களை அனுபவித்து, அதனால்‌ நன்மைகள்‌ அடைந்து வந்தும்‌ அவை எப்படிச்‌ செயல்படுகின்றன என்பது நமக்குத்‌ தெரிந்திருக்காமல்‌ இருப்பதையும்‌ இந்தக்‌ கண்காட்சி என்பதிலிருந்து நாம்‌ தெரிந்து கொள்ள முடியும்‌, ஆனால்‌, நம்மவர்கன்‌ பெரிய புண்ணிய சேத்திரங்களுக்குச்‌ சென்று பார்க்கிறார்களே தவிர, இது மாதிரியான அறிவுக்‌ கண்காட்சியை அவ்வளவு சிரத்தையுடன்‌ சென்று பார்ப்பது கிடையாது. உலகத்தில்‌ உள்ள கண்காட்சிகளை எல்லாம்‌ பார்ப்பவன்‌ உலக அறிவு பெற்றவனரவான்‌. உலகதீதில்‌ இருக்கும்‌ பல்வேறு கண்காட்சிகளும்‌ ஒரு பல்கலைக்‌ கழகம்போல்‌ அமைக்கப்பட்டு இருக்கின்றன. www.thamizham.net - Free £ book 14௦ 3031 வறிவு வளர்ச்சி 1209 அங்கு (வெவிநாடுகவில்‌) இதைக்‌ கண்காட்சி என்பதற்குப்‌ பதிலாக, ¢ மந்திராலயம்‌ ? 6 தந்திராலயம்‌? என்று கூறுவார்கள்‌. மந்திராலயம்‌ என்றவுடன்‌ நீங்கன்‌ ஆச்சரியப்‌ படுவீர்கள்‌. இங்கு * மந்திரம்‌? என்ற சொல்‌ தப்பாகப்‌ பயன்பட்டுத்‌ தவறான அர்த்தம்‌ கூறப்பட்டு வருகிறது. உண்மையில்‌ மன்‌ என்பது மனிதன்‌ என்பதாகும்‌ ; திரம்‌-என்பது மனிதனுடைய வல்லமை--மனிதனுடைய சக்தி என்பது ஆகும்‌. அதாவது, மந்திரம்‌ என்பதற்குப்‌ பொருள்‌ மனிதனுடைய சகீதி, அவனுடைய வல்லமை எவ்வளவு உள்ளது என்பதை அறிவதுதான்‌ ஆகும்‌. அதுபோல்‌ அடுத்தது தந்திரம்‌) அது தனி மனிதனுடைய வலிமையைக்‌ காட்டுவதாகும்‌. தன்‌--என்பது தன்னுடைய--தனி ஒரு மனிதனுடைய என்றும்‌, ¢ திரம்‌? என்பது அவனுடைய சக்தி, வலிமை எவ்வளவு என்பதைக்‌ காட்டும்‌ அளவுகோல்‌ என்றும்‌ ஆகும்‌. மந்திரம்‌ என்பது ஒரு பொதுவான சொல்‌. எல்லா மனிதர்களுடைய அறிவை, திறமையை, சாமர்தீதியத்தைக்‌ காட்டுவதாகும்‌. ஒரு மனிதனுடைய அறிவு வலிமையால்‌ ஒரு புதிய கண்டுபிடிப்பு நடக்கிறது என்றால்‌, அதைப்‌ பிற மக்களும்‌ அறிந்து தங்களுடைய அறிவை வளர்தீதுக்‌ கொள்ளலாம்‌, பயன்‌ பெறலாம்‌. ஒரு இரயில்‌ கண்காட்சியைப்‌ போய்ப்‌ பார்ப்பதாக வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. முதலில்‌ போனவுடன்‌ மொதீதமாகக்‌ குவிதீதுக்கிடக்கும்‌ மரங்களையும்‌, இரும்புத்‌ துண்டுகளையும்‌ பார்க்கலாம்‌. அடுத்தபடிச்‌ சென்றால்‌ ஆணி அடிப்பதும்‌ பலகைகளை வெட்டுவதும்‌ போன்று இருக்கும்‌. இப்படி ஒவ்வொன்றாக; வரிசைக்‌ கிரமமாக இருக்கும்‌ ; பார்த்துக்‌ கொண்டே சுற்றி வந்தால்‌, அங்கு இரயில்‌ தயாராக இருக்கும்‌. மனிதனுடைய மூட நம்பிக்கைத்‌ தன்மையானது ஒழிந்து அறிவு வளர்ச்சி அடைய வேண்டும்‌ என்பதற்காகவே கண்காட்சி வைத்து இருக்கிறார்கள்‌. எவ்வளவுதான்‌ முரட்டுத்தனமான மூடநம்பிக்கை யுள்ளவனும்‌ இம்‌ மாதிரி ஒரு கண்காட்சியைச்‌ சுற்றிப்‌ பார்‌ தீத விட்டுக்‌ கடைசியில்‌ கீழே இறங்கிப்‌ போகும்போது, அவனுடைய மனம்‌ சிறிது சிந்திக்கத்தான்‌ செய்யும்‌. அவனுடைய மனத்தில்‌ மாற்றம்‌ அடைய வேண்டியதன்‌ காரணமும்‌ சிறிது காணமுடியும்‌, 6 ஒர்கீஷாப்‌ ? கண்காட்சிகளைப்‌ பார்தீதால்‌ இரும்பை வைத்து ஒரு பக்கம்‌ ஆணி அடிப்பான்‌ ; இன்னொரு பக்கம்‌ ¢ போல்ட்‌? செய்வார்கள்‌. இப்படியாக எஞ்சின்‌ என்றால்‌ அதற்கு என்ன தேவையோ அதையெல்லாம்‌ ஒவ்வொரு இடத்திலும்‌ ஒவ்வொன்றாகச்‌ செய்வார்கள்‌. பின்னர்‌ இணைக்கும்‌ இடங்கவில்‌ எஞ்சினை உருவாக்குவார்கள்‌. கட்டை வண்டிகள்‌ கண்காட்சியைப்‌ பார்த்தால்‌ நன்றாகத்‌ தெரியும்‌--100 வண்டிப்‌ பட்டறைகளில்‌ செய்யக்‌ கூடிய வேலையை ஒரு இயந்திரம்‌ செய்யும்‌. நம்‌ நாட்டில்‌ உழைக்கிறார்களே தவிர உழைப்பைச்‌ சுருக்கிப்‌ பயனை அதிகரித்துக்‌ கொள்ள எண்ணுவதில்லை, ௮ம்‌ மாதிரியான காரியங்களிலும்‌ நம்‌ மக்கள்‌ ஈடுபடுவதில்லை. மனிதன்‌ உழைக்கதீதான்‌ பிறந்தான்‌ என்று கருதி, பெரிய பெரிய கடின வேலைகளை: எல்லாம்‌ செய்கிறார்கள்‌, பெரிய கல்லையும்‌, பாறையையும்‌ மனிதன்‌ கஷ்டப்பட்டு உடைப்‌ பதைவிட இயந்திர தீதின்‌ மூலம்‌ அதிகக்‌ கஷ்டம்‌ இல்லாமல்‌ சுலபத்தில்‌ உடைக்கலாம்‌. இங்கெல்லாம்‌ ஏதோ ஒரு மாதம்‌ இரண்டு மாதம்‌ என்றுதான்‌ கண்காட்சி இருக்கும்‌. ஆனால்‌, இலண்டன்‌ போன்ற இடங்களில்‌ பொருட்காட்சியானது ஆண்டுக்‌ கணக்கில்‌... எப்பொழுதும்‌ இருந்துவரும்‌. தினம்‌ பேய்ப்‌ பார்தீ.து அறிவுபெற்று வரலாம்‌. தினம்‌ கோயிலுக்குச்‌ சென்றால்‌ நாம்‌ தினசரி அங்கு காண்பது அந்த ஒரே சாமி யைதீதான்‌ ; வேறு ஒன்றும்‌ காண முடியாது. ஆனால்‌, இலண்டன்‌ பேன்ற இடங்களில்‌: உள்ள பொருட்காட்சியில்‌ தினம்‌--அடிக்கடி வேறுபல புதிய கண்டுபிடிப்புகள்‌ விடமபெறும்‌. இந்த வாரம்‌ கிருந்த; அடுத்த வாரம்‌ இருக்காது) வேறுபல-புதிதாகக்‌ கண்டுபிடிக்கப்‌ பட்ட பொருள்கள்‌ வரும்‌. அம்‌ மாதிரிப்‌ புதிதாக வந்தவுடன்‌, என்ன என்ன வந்திருக்கிறது என்பதை விளம்பரம்‌ மூலம்‌ தெரிவிப்பார்கள்‌. மக்களும்‌ தினம்பேரய்ப்‌ பார்ப்பார்கள்‌. 1686—152 www.thamizham.net - Free E book 14௦ 3031 1210 பெரியார்‌ ஈட வெ. ராஃ சிந்தனைகள்‌ இங்கு எப்படி சினிமா பைதீதியம்‌ பிடிதீதுத்‌ தினமும்‌ போய்‌ அதைக்‌ காண்கிறார்களோ-- அதுபோல்‌ அங்கு பொருட்காட்சி. ஆனால்‌, அதைக்‌ காண்பதின்‌ மூலம்‌ அவர்களது அறிவு வளர்வது.டன்‌ வாழ்க்கைக்கு வேண்‌ டிய பல விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள்‌. நான்‌ அங்கு பார்த்தேன்‌, பழைய இரும்புகளை எல்லாம்‌ மலைபோல்‌ கொட்டி வைத்திருக்கிறான்‌, இருபதுக்குப்‌ பதினை நீது (205615) அடி அளவில்‌ பெரிய உலை கட்டி வைத்திருக்கின்‌றான்‌, பெரிய கிரேன்‌? ஒன்று கீழே இறக்கப்படுகிறது) அதில்‌ தட்டம்போல்‌ பரவலாக வைத்துள்ளான்‌ ) ஒரு விசையை அழுத்தி, அதீ தட்டத்தை இரும்புக்‌ குவியலின்‌ மேல்‌ விடுகிறான்‌. அது அந்த இரும்பின்‌ மேல்‌ விழுந்ததும்‌, கொட்டிக்‌ கிடக்கும்‌ இரும்பு எல்லாம்‌ டக்‌, டக்‌ என்று அந்தத்‌ தட்டத்திலே ஒட்டிக்கொள்கிறது--அதாவது ஒன்றன்கீழ்‌ ஒன்றாக ஒட்டிதீ தொங்குகிறது. அவ்வளவு சக்தி உள்ள காந்தம்‌ அதிலே வைத்து கருக்‌ கிறான்‌. ஒரு அந்தர்‌, ஒன்றரை அந்தர்‌ எடை உள்ள இரும்புகள்‌ கூட ஒட்டிக்கொண்டு, ஆடிக்கொண்டே மேலே போகின்றன. மேலே தேவையான இடத்திற்குப்‌ போனவுடன்‌ மற்றொரு விசையை அமுத்தி அந்தத்‌ தட்டிலே உள்ள காந்த சக்தியை * வாபஸ்‌ ? வாங்கு கிறான்‌, உடனே அதிலே ஒட்டிக்கொண்டிருக்கும்‌ இரும்புத்‌ துண்டுகள்‌ தொப்‌, தொப்‌ பென்று அங்கே இருக்கும்‌ உலையில்‌ விழுகின்றன. அப்புறம்‌ ஒரு பொத்தானை அழுத்தினால்‌ அவ்வளவு இரும்பும்‌ தண்ணீராய்‌ உருகிவிடுகிறது. அதிலே உள்ள குழாயில்‌ அந்ததீ தண்ணீர்‌ விழுந்து, அதற்குரிய இடத்தில்‌ போய்‌ * மோல்‌? பண்ணி அச்சு வார்ப்பில்‌ அது உருவமாக ஆகிறது. அது ஆறியவுடன்‌ அதைவிட்டு எடுக்கிறான்‌. ஆயிரம்‌ மனிதன்‌ செய்யக்கூடிய காரியமானது ஒரு மனிதனுடைய வல்லமையாஃ-சகீதியால்‌ அறிவின்‌ திறமையால்‌ நடைபெறுகிறது. சமுத்திரத்தை ஆழமாக வெட்ட வேண்டும்‌ என்று கருதி வெட்டுகிறான்‌. எப்படிச்‌ செய்கிறான்‌ ₹ படகின்‌ கீழே கிரேன்‌? வைத்து விசையை அழுத்‌ துகிறான்‌. பலகை போன்று இருந்தது, வாயைத்‌ திறப்பது போல இரண்டாகப்‌ பிரிந்து செல்கின்றது. ஆழமாக்க வேண்டிய பகுதியில்‌ செலுதீதி, பிறகு ஒரு விசையை அழுத்தினால்‌ பிள நீதுள்ள இருபகு திகளும்‌ ஒன்றாகச்‌ சேருகின்றன. அப்படிச்‌ சேரும்போது அதற்கிடையில்‌ உள்ள மண்ணை மேலே கொண்டுவந்து போடுகிறது. இப்படி கரண்டு மூன்றுதடவை வெட்டினால்‌ ஒரு படகு நிரம்பிவிடுகிறது. இப்படியாக, பள்ளமாக்க வேண்டிய இடத்தில்‌ வெட்டி-- மேடாக்க வேண்டிய இடத்தில்‌ அதைக்‌ கொட்டி மேடாக்குகிறார்கள்‌, இரண்டுமணி நேரத்தில்‌ 20 ¢ வாகன்‌? மண்‌ வெட்டி எடுக்கிறார்கள்‌. இது அய்ந்நூறு ஆன்‌ செய்தாலும்‌ இரண்டு மணி நேரதீதில்‌ செய்யமுடியாது. இது நம்முடைய அறிவுக்கு அற்புதமாக- அசாத்தியமாகதீ தெரியுமே தவிர, அறிவாளிகள்‌ கண்ணுக்கு கிது சாதாரணமானதாகும்‌. ஒரு பஞ்சசலையை எடுதீதுக்கொள்ளுங்கள்‌. ஒரு பக்கம்‌ பஞ்சுகளைக்‌ கொட்டு கிறான்‌ ; மறுபக்கம்‌ அதை ஆவி ஆவியாக அடிதீதுவிடுகிறது. அந்த ஆவியானது ஒரு சந்திலேபோய்க்‌ காற்றில்‌ கலந்து முறைப்படி சுற்ற, அதற்கேற்ற மெல்லிய நூலாக ஆகிறது. மற்ற நாடுகள்‌ வளர்வதற்குக்‌ி காரணம்‌ இதுதான்‌. அவர்கள்‌ அதிசய அற்புதங்‌ களைக்‌ கண்டுபிடிக்கிறார்கள்‌. அந்த எண்ணம்‌ நமகீகு வரவேண்டும்‌. அந்த எண்ணம்‌ நமக்கு வரவேண்டுமானால்‌, அதற்கு மாறான காரியங்களை நாம்‌ வெறுக்கவேண்டும்‌. இம்‌ மாதிரியான கண்‌ காட்சிகளைப்‌ பார்தீது நாம்‌ அறிவு பெறவேண்டும்‌. பட்டிக்காட்டில்‌ உள்ளவனுக்கு, தாலுக்கா ஒரு கண்காட்சி) தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு, ஜில்லா ஒரு கண்காட்சி; ஜில்லாவில்‌ இருப்பவனுக்கு, மாநிலத்தின்‌. தலைநகர்‌ ஒரு கண்காட்சி ஆகும்‌ ]$ தலைநகரில்‌ இருப்பவனுக்கு, பம்பாய்‌ - இலண்டன்‌ போன்ற பெரிய நகரங்களைப்‌ பார்ப்பதும்‌ ஒரு கண்காட்சி போன்றதுகான்‌ ஆகும்‌. இரயிலை விட்டு இறங்கி, வண்டியில்‌ ஏறி, தாஜ்‌ மகால்‌ ஓட்டலில்‌ இறங்கித்‌ தங்கிவிட்டு வந்தால்‌ விஷயம்‌ தெரியாது. www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1211 விஷயம்‌ தெரிய வேண்டுமானால்‌, வீதியில்‌ நன்றாகதி திரியவேண்டும்‌. அப்போது தான்‌ அந்த நாட்டு மக்கள்‌ என்ன கருதுகிறார்கள்‌, அவர்களது நிலை என்ன ? வாழ்க்கை முறை எப்படி 4--என்பவைகள்‌ தெரியும்‌. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான்‌ போன்ற பல நாடுகளைச்‌ சுற்றிப்‌ பார்‌ தீதவன்‌ பி.ஏ. படிப்பாளிக்குச்‌ சமமாவான்‌ ; வேண்டுமானால்‌ ஆங்கிலம்‌ பேச எழுத காலேஜில்‌ பயிலவில்லை எனலாம்‌. ஆனால்‌, இச்‌ சுற்றுப்‌ பயணத்தி னால்‌--தானே; சிறிது சிறிதாக அந்த அறிவு ஏற்பட்டுவிடும்‌. பி.ஏ. படிப்பாளிகூட இவ னுக்குச்‌ சமமாக மாட்டான்‌. இங்கு நம்‌ நாட்டில்‌ கண்‌ காட்சியைப்‌ பார்தீது அறிவு பெறு வதும்‌ கிடையாது ; அதற்குச்‌ செல்வாக்கும்‌ இல்லை. ஆனால்‌, அதற்கு மாறானவற்றிற்குதீ தான்‌ செல்வாக்கு இருக்கிறது ஆசிரியர்கட்கு இதுபோன்ற கண்காட்சிகள்‌-மிகவும்‌ அவசியமானவையாகும்‌, இங்கு பயிற்சி பெறும்‌ மாணவர்கள்‌ நாளை மாணவர்களுக்குப்‌ படிப்புச்‌ சொல்லித்‌ தரப்போகிற வரீகள்‌ ஆவார்கள்‌, இங்கேயே இதைப்‌ பார்தீது அறிந்து சென்றால்‌ நாளை நல்ல வண்ணம்‌. மாணவர்களுக்கு விஷயங்களை எடுத்துச்‌ சொல்ல முடியும்‌. இநீ நாட்டில்‌ பல கண்காட்சிகள்‌ நடத்தப்படுகின்‌றன. அதில்‌ பார்த்தால்‌ £ரிப்பன்‌? தான்‌ இருக்கிறது. பெண்கள்‌ பார்தீது ஆசைப்படுகின்ற சாமான்கள்தான்‌ இருக்கின்றன 3 சட்டிப்‌ பானை; சோப்பு, பாத்திரங்கள்‌ இவைதாம்‌. இதற்குத்தான்‌ கண்காட்சி என்று கூறுவதா தப்பித்‌ தவறி ஒன்றிரண்டு நல்லதாக வந்தாலும்‌ அதை எல்லோரும்‌ பார்க்க முடியாமல்‌ போய்விடுகிறது. நல்ல கண்காட்சி வந்தால்‌ பன்ளிக்கூடத்தை ஒருநாள்‌ விடு முறை விட்டாவது மாணவர்களை அழைத்துச்‌ சென்று காண்பிக்க வேண்டும்‌. இது ஒரு நல்ல படிப்பினை ஆகும்‌. எப்படி ஒரு மாணவனை இரண்டும்‌ இரண்டும்‌ எத்தனை என்று கேட்டால்‌ விடை அளிக்கும்‌ நேரதீதைவிட--முதலில்‌ இரண்டு கோலிகளையும்‌ பிறகு இரண்டு கோலிகளையும்‌ போட்டு எத்தனை என்று கேட்டால்‌ விரைவில்‌ நான்கு என்று விடை அளிப்பானோ, அதுபோல்‌--கண்காட்சியானது மாணவர்கள்‌ விஷயங்களை: நல்ல. வண்ணம்‌ அறிந்துகொள்ளப்‌ பயன்படும்‌. [தருச்சி, பெரியார்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌, 31-1-1960+b சொற்பொழிவு! விடுதலை 6.2-1960] 14, பார்வைக்‌ குறிப்பு *4 பாய்லர்‌ தொழிற்சாலை இந்தியாவிலேயே மிகப்‌ பெரிய சாதனைகளில்‌ ஒன்று என்பதையும்‌ அதன்‌ நிர்வாகமும்‌, திறமையும்‌ மேல்நாட்டு வாய்ப்புகளுக்கு எந்த விதத்திலும்‌ குறைநீததல்லாத அதி. சயப்படும்‌ தன்மையில்‌ நடந்து வருவது கண்டு மிகமிக மகிழ்ச்சியும்‌, அந்த வாய்ப்புக்‌ கிடைதீததற்குப்‌ பெருமையும்‌ அடைகிறேன்‌. [திருச்சி, 4 உங்கள்‌ தொழிற்சசலை செய்தி ?3-ஏப்ரல்‌, 1973] Periar visits the Plant: ¢ The Boiler Plant is one of India’s biggest achieve- ments. Iom very very happy and proud to have had the opportunity to see this plant which with its wonderful management and efficiency is equal to Western standards in every aspecti...?” An extract from EVR’s entry in the Visitor’s Book on 6th March, 1973 [*Boiler Plant & You » April, 1973) www.thamizham.net - Free E book No 3031 1212 3. பட்டி 1. பெரியாறின்‌ பதில்கள்‌ கேள்வி? நேருவின்‌ நடுநிலை அவரோடு மறைந்து போயிற்று எனச்‌ சிலர்‌ கூறி வருகிறார்களே ! அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌ ₹ பதில்‌? இதைப்பற்றி நான்‌ சிந்திக்கவே இல்லை. கேள்வி? நமது நாடு விடுதலை பெற்றபின்‌ பொருளாதார ரீதியில்‌ முன்னேறி இருக்கிறதா, இல்லையா? பதில்‌ 8 நம்நாடு விடுதலை பெற்றபின்‌ பொருளாதாரத்‌ துறை 100-க்கு 200 முதல்‌, 800-க்கு மேற்பட்ட சதவீதம்‌ முன்னேறி இருக்கிறது. கேள்வி: நேரு, கென்னடி ஆகியோரின்‌ மறைவிற்குப்‌ பின்னும்‌, குருச்சாவின்‌ பதவித்‌ துறப்பிற்குப்‌ பின்னும்‌ உலகில்‌ சமாதான ஆர்வம்‌ அதிகரித்திருக்கிறதா, குறைந்‌ திருக்கிறதா ? பதில்‌ £ நேரு, கென்னடி ஆகியோரின்‌ மறைவிற்குப்‌ பின்னும்‌, குருச்சாவின்‌ பதவிதீ இறப்பிற்குப்‌ பின்‌ னும்‌ உலகில்‌ சமாதான ஆர்வம்‌ அதிகரிதீதிருக்கிறதுஃ கேள்வி? நமது நாட்டில்‌ நின்று நிலவும்‌ சாதிக்கொடுமையை அறவே ஒழிகீகச்‌ சிறந்த வழி என்ன ? பதில்‌ 8 சரியான அளவுப்படி வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீதுவம்‌ சர்க்கார்‌ துறை களிலும்‌, சர்க்கார்‌ ஆதரவு, அனுமதி, மேற்பார்வை உரிமைகள்‌ உள்ள எல்லாத்‌ துறை களிலும்‌ அவித்து விட்டால்‌ நம்‌ நாட்டில்‌ நின்று நிலவும்‌ சாதிக்‌ கொடுமை அறவே ஒழிந்து போகும்‌. கேள்வி: சமுதாயத்தின்‌ பல துறைகளிலும்‌ இலஞ்சம்‌, ஊழல்‌, கன்ள வணிகம்‌ போன்ற ஒழுக்கக்‌ கேடுகள்‌ வேகமாகப்‌ பரவி வருகின்றனவே--அவற்றைதீ தடுத்து நிறுத்தத்‌ தாங்கள்கூறும்‌ யோசனைகள்‌ என்ன ₹ பதில்‌ 8 பார்ப்பனருக்கு உதீதியோகங்கள்‌ கொடுப்பதை நிறுதீதிவிட்டால்‌ இலஞ்சப்‌ பழக்கம்‌ நின்றுபோகும்‌. ஏனென்றால்‌, பார்ப்பனர்களுக்குத்‌ தேவை அதிகம்‌) சலுகை அதிகம்‌ ; அதனால்‌ அவர்களுக்கு இலஞ்சம்‌ வாங்கித்தீர வேண்டியிருக்கிறது. அவர்களைப்‌ பார்தீ.து மற்றவர்களும்‌ வாங்கிப்‌ பழகிவிடுகிறார்கள்‌. சன நாயகதீதின்‌ பேரால்‌ பதவிக்கு வரும்‌ மந்திரிகள்‌ ஆட்சியில்‌ ஊழல்கள்‌ இருந்து தான்‌ தீரும்‌. கண்ட்ரோல்‌, லைசென்சு முறை இருக்கும்‌ இடங்களில்‌ கள்ளவணிகம்‌ தவிர்க்க முடியாததாகும்‌. கேள்வி? வகுப்புவாதக கட்சிகள்‌ தடைசெய்யப்படவேண்டும்‌ எனசி சிலர்‌ கூறி வருகிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌ 8 பதில்‌? வகுப்புப்‌ பிரிவுகளையும்‌, பிரிவினைபேதங்களையும்‌, அவற்றின்‌ ஆதாரங்‌ களையும்‌ ஒழிக்காமல்‌ வைதீதுக்கொண்டு-வகுப்புவாததீதை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுவதும்‌, கட்சிகளைத்‌ தடை செய்யவேண்டுமென்று சொல்லுவதும்‌ பித்தலாட்டம்‌- அல்லது, அறியாமையேயாகும்‌. கேன்வி 1 சமீபகாலமாக நமது மாணவர்களிடையே கட்டுப்பாடின்மை அதிகரித்து வருகிறதே, அதற்குக்‌ காரணமென்ன ₹ பதில்‌ 1 அரசாங்கதீதின்‌ பலவீனமும்‌, தாட்சண்யமுமே நமது மாணவர்களிடையே கட்டுப்பாடின்மையும்‌, காலித்தனமும்‌ பெருகுவதற்குக்‌ காரணமாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்சீசி 1213 கேள்வி$ தமிழில்‌ ஆக்க இலக்கியங்கள்‌ (Creative literature) போதுமான அளவு தோன்றவில்லை என்று கூறப்படுகிறதே, அதைப்பற்றி உங்கள்‌ கருதீது என்ன? பதில்‌ 8 தமிழில்‌ ஆக்க இலக்கியங்கள்‌ தோன்றவில்லை என்பது மட்டுமல்ல $ ஆகீக இலக்கியங்கள்‌ அனேகமாக இல்லவே இல்லை. காரணம்‌, புலவர்களுக்குப்‌ பகுதீதறிவு பெறும்‌ வாய்ப்பும்‌, பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப்‌ பிழைப்புக்‌ி காரணமாக அணிவும்‌ இல்லாமல்போகும்படியான நிலைமை இருப்பதால்‌--தமிழில்‌ ஆக்க இலக்கியங்கள்‌ தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமற்போய்விட்டது. கேள்வி? நமது இளைஞர்களின்‌ சீர்கேட்டிற்குத்‌ திரைப்‌ படங்களும்‌ ஒரு காரணம்‌ என்று கூறப்படுவதை ஏற்கிறீர்களா ¥ பதில்‌ ஓரளவிற்கு இளைஞர்களின்‌ சீர்கேட்டிற்குதீ திரைப்படங்கள்‌ காரணம்‌ என்‌: பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்‌. கேள்வி 8 கல்லூரிகளில்‌ தமிழ்‌ பயிற்சி மொழியாக வேண்டும்‌ ? என்ற கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌ ¥ பதில்‌ 1 கல்லூரிகளில்‌ தமிழ்‌ பயிற்சி மொழியாக வேண்டுமென்றால்‌ இன்றைய ஆங்கிலக்‌ கல்லூரிகள்‌ தேவை இல்லை. தமிழ்க்‌ கல்லூரிகளை விரிவுபடுத்தி அதில்‌ கலைத்‌ துறைப்‌ பாடங்களைப்‌ புகுதீதிவிட்டாலே போதும்‌. புலவர்‌, வித்வான்‌ என்கின்ற பட்டங்‌ களும்‌ போதும்‌. B.A, 14.& பட்டங்கள்‌ தேவை இல்லை. [டீதுரை; ¢ குறிஞ்சி? வாரஇதழ்‌--15-1-1965] 2. செயற்கரிய செய்தார்‌ நிருபர்‌ 5 (மாறன்‌) வணக்கம்‌ அய்யா பெரியார்‌ ¢ வணக்கம்‌. மாறன்‌ £ உங்களைப்‌ பார்தீததிலே ரொம்ப மகிழ்ச்சி, நம்முடைய தமிழகதீதிலே செயற்கரிய காரியம்‌ செய்து, இந்த சமுதாயத்தினுடைய உருவதீதையே மாற்றியிருக்கீங்க. பெரியார்‌ $ உம்‌. மாறன்‌ 8 ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு: முன்னாலே பாரி தீதோமானால்‌, பிறப்பினால்‌ உயர்வு தாழ்வு எல்லாம்‌ ரொம்ப மிஞ்சியிருந்தது. அந்த விதமான ஒரு நிலை மாறி, தப்போ ஒரு நல்ல சூழ்நிலையைப்‌ பார்க்கி2றாம்‌. இப்படிப்பட்ட ஒரு பெரிய மாறுதலைச்‌ செய்த தங்களைக்‌ கண்டு பேசுறதிலே ரொம்ப மகிழ்ச்சி. தங்களுக்கு இந்த மாதிரியான புரட்சி செய்யும்‌ நோக்கம்‌ எப்படித்‌ துவங்கியது? தாங்கள்‌ எப்படிப்‌ பொதுப்‌ பணியில்‌ ஈடுபட்டீர்கள்‌ என்று சொன்னால்‌ நல்லது பெரியார்‌ $ உங்களுடைய பாராட்டுதலுக்கு மிகவும்‌ நன்றி. மாறன்‌ £ வணக்கம்‌; அய்யா பெரியார்‌ £ ஏதோ நான்‌ செய்ததாகச்‌ சொல்லப்படுவதெல்லாம்‌ காலப்போக்கிலே நடைபெறுகிறது. என்றுதான்‌ கருதுகிறேனே தவிர, நானே செய்தேன்‌ என்றில்லைஃ ஆனாலும்‌ என்‌ பிரச்சாரத்திற்கு மூலப்பொருள்‌ பகுதீதறிவேயாகும்‌. மாறன்‌ 1 அதுதானே முக்கியம்‌. பெரியார்‌ ₹ அதாவது-மக்களை எதையும்‌ பகுதீதறிவோடு சிந்திக்கும்படி வேண்டிக்‌ கொள்வதும்‌, மூடநம்பிக்கையைக்‌ கைவிடும்படி$கேட்டுக்கொள்ளுவதுமே என்‌ பிரசீசாரதி தின்‌ ததீ.துவமாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1214 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மாறன்‌ £ ஆமரம்‌. பெரியார்‌ £ இப்போ, மகீகன்‌ ஏரானமாகப்‌ படிக்கிறார்கள்‌. ஏராளமாக எங்கள்‌ பிரசீசரரத்தைக்‌ கேட்கிறார்கள்‌. மாறன்‌ 8 அப்போது அப்படியில்லை. பெரியார்‌ ₹ அப்போது கொஞ்சம்‌ எதிர்ப்பு இருந்தது. என்‌ பிரச்சாரம்‌ வெளிநாடு களுக்குப்‌ பயன்படாவிட்டாலும்‌ தமிழ்நாட்டுக்கு நல்ல வண்ணம்‌ பயன்படுமென்று கருது கிறேன்‌. எங்கள்‌ பிரச்சாரத்தால்‌ சில மக்கள்‌ மூடநம்பிக்கைகளைக்‌ கைவிட்டாலும்‌, அவற்றால்‌ ஏற்படும்‌ சில உணர்ச்சியைப்‌ பெறாமல்‌--௬யநலம்‌ காரணமாக மூடநம்பிக்‌ கையில்‌ ஈடுபடுகிறார்கள்‌. ஆனாலும்‌ இயற்கைப்‌ போக்கும்‌, விஞ்ஞான வளர்ச்சியும்‌ விரைவில்‌ எங்கன்‌ கொள்கைக்கு வெற்றியளிக்கும்‌ என்று கருதித்‌ தொண்டு செய்து வருகிறேன்‌. மாறன்‌ £ ஆமாம்‌, அய்யா, இப்படி நீங்கள்‌ திரும்புவதற்கு ஏதாவது முக்கிய சம்பவம்‌ உண்டா அதாவது, தமிழகத்திலே இப்படித்‌ தீவிரமாக இந்தப்‌ புரட்சி ஏற்படுத்த வேண்டுமென்று. பெரியார்‌ ¢ சாதாரணமாகச்‌ சொல்கிறேன்‌. நான்‌ வந்து நல்ல குடும்பத்திலே பிறந்திருநீதா.லும்கூட, என்‌ தாயாரீ-தகப்பனார்‌, எனக்கு முன்னே பிறந்த குழந்தையை வெருநான்‌ பின்ளையில்லாமல்‌ பிறந்ததினால்‌ ஆதரிப்பதற்காக வேண்டி, என்னை என்‌ தகப்பனாருடைய சிறிய தாயாருக்குக்‌ கொடுதீதுவிட்டார்கள்‌ஃ மாறன்‌ 8 உங்கள்‌ சரிதீதிரதீதிலே வருது இது. பெரியார்‌ $ அந்த அம்மாள்‌; தம்‌ பிள்ளையாகவே என்னை வளர்தீதார்கள்‌. அந்த வீட்டுக்கு நாதியில்லே) அத்தம்மாள்‌ மட்டுந்தான்‌. அதனாலே நான்‌ கேள்வியற்ற தறுதலைப்‌ பிள்ளையாய்ப்‌ போய்விட்டேன்‌ ) இரண்டு நாள்‌, மூன்று நாள்கூட வீட்டிற்கு வரமாட்டேன்‌ ) கண்டபடி சாப்பிடுவேன்‌; எச்சில்‌, கிச்சில்‌ ஒன்றும்‌ எனக்கு இலட்சிய மில்லை. அந்தச்‌ சின்னப்‌ பருவத்திலேயே முஸ்லிம்‌ வீட்டிலே சாப்பிடுவேன்‌ ; குறவர்கள்‌ வீட்டில்‌ சாப்பிடுவேன்‌ $ கண்டபடி சாப்‌பட்டுவிட்டேன்‌. அப்புறம்‌ எங்க வீட்டிற்குப்‌ போனேன்‌. மறுபடியும்‌ என்னைக்‌ கூப்பிட்டுக்கொண்டார்‌, என்‌ தாயார்‌. போனவுடன்‌ நான்‌ பள்விக்கூடதீதை விட்டுவிட்டு பத்தாவது வயதிலேயே கடைக்குப்‌ போய்விட்டேன்‌ $ அவ்வளவுதான்‌. மாறன்‌ £ அவ்வளவுதான்‌ படிப்பு. பெரியார்‌ ₹ ஆமாம்‌; திண்ணைப்‌ பள்ளிக்கூடம்‌ தான்‌ ; ஏடு எடுதி துக்கொண்டுதான்‌ எழுதுவோம்‌ ; அப்புறம்‌ முனிசிபாலிடி பள்ளிக்கூடம்‌ ) கரண்டு வருடம்‌ அதில்‌ படித்தேன்‌, உடனே கூப்பிட்டுக்கொண்டார்கள்‌. எங்க வீட்டிற்கு நிறையப்‌ புலவர்கள்‌, பரதேசிகள்‌, சன்னியாசிகள்‌ வருவதுண்டு. அது சர்வ சாதாரணம்‌. காரணம்‌ என்ன வென்றால்‌, அவர்கள்‌ கொஞ்சம்‌ கஷ்டப்பட்டவங்க...எங்களுக்குப்‌ பணம்‌ அதுபாட்டுக்கு மளமளன்னு வர ஆரம்பிச்சுது. அதுபோல பக்தி வேறே அவங்களுக்கு வளர்ந்துபோச்சு. மாறன்‌ £ அய்யாவோடே தகப்பனாரெல்லரம்‌ ரொம்ப பகீதிமான்கன்னு கேள்விப்‌ பட்டிருக்கிறேன்‌. பெரியார்‌ ₹ ரொம்ப பகீதி! ரொம்ப பக்தி! இவாளோட பேசறதும்‌, வீட்டிலே வந்து கதை பேசறதும்‌, புரசணம்‌ படிக்கிறதும்‌, இதெல்லாம்‌ எனக்கு விரோதம்‌. நான்‌ அவங்கனை' யெல்லாம்‌ கேன்வி கேட்பேன்‌. மாறன்‌ ₹ உங்க மனப்பான்மையே அப்படிஃ www.thamizham.net - Free £ book 14௦ 3031 ன்றிவு வளர்ச்சி 1215 பெரியார்‌ ₹ அதேதான்‌, அந்தக்‌ கேள்விமூலமே எனக்கும்‌ அறிவு வளர்ந்துபோச்சு ; எண்ணங்களும்‌ உறுதியாய்ப்‌ போச்சு. அவங்கள்லே எவனும்‌ சரியான பதிலே சொல்லற தில்லே. மாறன்‌ 8 நீங்க விடாம கேள்வி கேட்பீங்க பெரியார்‌ s ஆமா... நான்‌ சும்மா அவங்களைக்‌ கேள்வி கேட்பேன்‌. கடவுளைப்‌ பதிதி-மதத்தைப்‌ பத்தி... இதைப்பத்தி யெல்லாம்‌ கேள்வி கேட்டா, சிரிச்சுகிட்டே, ¢ கெட்டிக்கார பிள்ளேப்பா ன்‌ னு சொல்வானே தவிர--பதில்‌ சொல்லமாட்டான்‌. மாறன்‌ 8 சமாளிச்சுக்கிறது.ஃ பெரியார்‌ ₹ அவ்வளவுதான்‌ ; அப்படியே இருந்தது. மாறன்‌ 8 அப்படி ஆராய்ச்சி பண்ணினீங்க நீங்க பெரியார்‌ £ தானா வந்தது ஆராய்ச்சி, நான்‌ பண்ணவேண்டியது மொதல்லே இல்லை; நான்‌ அவ்வளவா ஆராய்சீசிலே கவலைகொள்ளலே. அவங்களோடு பேச ஆஅரம்பிச்சதுதான்‌ பிறகு தர்கீகம்‌, கிர்க்கம்னு ஆரம்பிச்சவுடனே, ஆதாரங்கள்‌ தெளிவாப்‌ போச்சு. மாறன்‌ $ அதைப்‌ பிரசிசாரம்‌ பண்ணனும்னு நினைச்சீங்க? பெரியார்‌ $ அதுவேதான்‌, பிறகு அரசியலுக்கு வந்தபிறகு, இந்தச்‌ சாதியேதான்‌. இன்னைக்கு நம்மை ஆளுதே தவிர--உள்ளபடி ஒரு அரசாங்கமோ அல்லது அரசியல்‌ கொடியோ நம்மை ஆளலே) சாதியைக்‌ காப்பாதுறதை அடிப்படையாவைத்து, ஆட்சிமூலம்‌ நடத்துறாங்க. மாறன்‌ £ சமுதாயத்‌ தொண்டுவந்துஃஅப்படி இந்தக்‌ கட்சிக்குப்‌ போனவுடனே மேல்‌, கீழ்ன்னு அதிகமாகத்‌ தோன்ற ஆரம்பிச்சிட்டுது. பெரியார்‌ $ ரொம்ப ஆச்சு... மேலே மேலே வளர்ந்து வந்தது. பிறகு அதைக்‌ கேட்டபடியே நான்‌ என்‌ அரசியல்‌ கொள்கைகளை ஏற்பாடு பண்ணிக்கிட்டு--நான்‌ ஒன்றும்‌ அரசியலுக்குப்‌ போறதில்லே, எந்த எலகீஷனுக்கும்‌ நிக்கிறதில்லே. இவுங்க 1939-40-லே மந்திரி சபையை விட்டுவிட்டுப்‌ போனபோது கவரீனரும்‌, வைஸ்ராயும்‌ என்னைப்‌ பதவியை ஏற்கச்‌ சொன்னாங்க. மந்திரி எபையை அமைக்கச்‌ சொன்னாங்க. மாறன்‌ 5 பதீதிரிகையிலே யெல்லாம்‌ வந்தது அப்போ. பெரியார்‌ ₹ ஆமா... அதுக்கு நான்‌ சொன்னேன்‌-மநீதிரி சபை அமைசீசா என்‌ வேலை கெட்டுப்‌ போகும்னு. அதைக்‌ காப்பாதீ.துற வேலைதான்‌ எனக்குச்‌ சரியாய்‌ இருக்கும்னேன்‌.. மாறன்‌ £ உங்களுடைய இலட்சியமெல்லாம்‌ வேறே. பெரியார்‌ $ ஆமா, ஆனால்‌, நான்‌ உதவி செய்றேன்‌-- அப்படின்னு சொன்னேன்‌) ரொம்ப நல்ல உதவி பண்ணினேன்‌, அரசாங்கத்துக்கு... சைமன்‌ கமிஷனை உலகமே எதிர்தீதது$ நான்தான்‌ ஆதரிச்சேன்‌ ) அதற்கு வரவேற்புக்‌ கொடுக்கிறேன்னு போய்‌ நின்னேன்‌. நான்‌ ஆதரவு தந்த ஜஸ்டிஸ்‌ கட்சி என்னைக்‌ கெஞ்சாத கெஞ்ச கெஞ்சியது-- ¢ நீ சைமன்‌ கமிஷனை ஆதரிக்கிறாயே. நாளைக்கு ஓட்டே வராதே. எங்களுக்கு உதவி பண்ணுவேன்னுதானே வந்தாய்‌. நீ இப்படி பண்ணுறியே ன்னாங்க. உங்களுக்காக நான்‌ வரலே? பொது நலத்துக்காகதீதான்‌ வந்தேன்‌-- அப்படின்னு சொல்லி, அப்படியெல்‌ லாம்‌ புரட்சி செய்துகிட்டே வந்தேன்‌. மாறன்‌ 3 உங்களுடைய சுயநலமற்ற சேவையினாலேதானே எல்லோரும்‌ முன்னேறி யிருக்காங்க www.thamizham.net - Free £ book 14௦ 3031 1216 பெரியார்‌ &, வெ. ரா. சிந்தனைகள்‌ பெரியார்‌ £ முன்னேறினாங்களோ என்னவோ... இல்லாட்டா சாதிகள்‌ இன்னும்‌ வளர்ந்திருக்கும்‌ அவ்வளவுதான்‌] அவ்வளவுதான்‌ சொல்லுவேன்‌. அதையெல்லாம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமா மாத்தினேன்‌--ஜனங்கள்‌ எண்ணத்திலே. மாறன்‌ 8 நானறிய முப்பது, நாப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே-* தீண்டாதவன்‌- தூர எட்டிப்‌ போ ன்னு சொல்லக்கூடிய நிலைமையெல்லாம்‌ இருந்தது. பெரியார்‌ £ அய்யா, நாங்களே தண்ணிப்‌ பந்தல்‌ வைப்போம்‌, வெயில்‌ காலத்திலே. அப்போ அது ஒரு பெருமை) தரீமம்னு பேரு. என்ன தர்மம்‌! அதிலே திருடுறது எங்களுக்குத்‌ தெரியும்‌. நானே வியாபாரியாயிருந்து எவ்வளவு திருடியிருக்கேன்னு எனக்குத்‌ தெரியும்‌, ஆனால்‌ தண்ணிப்‌ பந்தல்‌ வைக்கிறது ஒரு பெருமை. அப்படித்‌ தண்ணிப்‌ பந்தல்‌ வைதீதால்‌ சாதிக்குதீ தகுந்தபடி மூங்கில்‌ குழாய்‌ வைப்போம்‌--அதிலே குடிச்சுட்டுப்‌ போகணும்னு ;) சாதிக்குத்‌ தகுந்தபடி ¢ டம்ளரை? வைப்போம்‌. மாறன்‌ $ இப்போ அதைக்‌ கற்பனை கூடப்‌ பண்ண முடியலையே | பெரியார்‌ £ தடையில்லியே ! இப்படிக்‌ கொடுமை யெல்லாம்‌ இருந்தது. இதை யெல்லாம்‌ அழிக்கிறதுன்னு ஆரம்பிச்சோம்‌. அப்புறம்‌ ரயில்வே ஸ்டேஷனுக்குப்‌ போய்‌ * பிராமணாள்‌-சூதீதிரான்‌ ? போர்டை அழிச்கிறதுன்னு ஆரம்பிச்சோம்‌, ஓட்டல்லே சாதிப்‌ பெயரெல்லாம்‌ இருக்கக்கூடாதுன்னு சொன்னோம்‌. மாறன்‌ 8 எவ்வளவு துணிச்சலான காரியம்‌ அதெல்லாம்‌. பெரியார்‌ ₹ ஏதோ செய்தோம்‌. மாறன்‌ 1 பிறராலே முடியல்லையே ! பெரியார்‌ ₹ முடியுதா, முடியவில்லையோ, அவ்வளவு ஆசையிருந்தது) அவ்வளவு ஆத்திரம்‌ இருந்தது. மாறன்‌ £ ஆசைமட்டும்‌ இருந்தாப்‌ போதாதில்லே ] துணிச்சலும்‌ வேண்டுமல்லவா 1 அது உங்களிடத்திலே மாத்திரம்தான்‌ இருந்தது. அதனாலேதான்‌ நாடு முன்னேறிச்சுஃ பெரியார்‌ $ முன்னேறணும்‌--முன்னேறிச்சுன்னு சொல்ற துக்கில்லே. இல்லாவிட்டா இன்னும்‌, இப்பவும்‌ எவ்வள வோ ஆகியிருக்கும்‌. மாறன்‌ £ அப்போ தங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்‌ என்னென்ன வெல்லாம்‌ ₹ சில முக்கியமான எதிர்ப்பெல்லாம்‌ சொல்ல முடியுமா ? பெரியார்‌ ₹ எல்லாம்தான்‌. மாறன்‌ ₹ அதாவது சமுதாயதீதிலே எதிர்ப்பு. பெரியார்‌ $ ஆமா. பதீதிரிகையிலே எதாவது என்னைப்பத்தி வந்தா எனகீகு விரோதமாகதீதான்‌ எழுதுவாங்களே தவிர), அனுகூலமானது வராத இப்படி விளம்‌ பரத்துக்கு இடமில்லாம ஏதோ ஒண்டியாய்‌ இருந்து செய்துவர்றோம்‌. இதுக்காகத்தான்‌ அரசாங்கத்தையும்‌ கொஞ்சம்‌ ஆதரிச்சு, நம்ம எண்ணம்‌ உள்ளவனோ அல்லது நமக்கு எதிரியாக இல்லாதவனோ வருகிற அரசாங்கத்தை ஆதரிக்கலாம்‌ என்று நான்‌ ஆதரிக்கிறது- நமகீகு ஒன்றும்‌ அரசியலிலே பற்று இல்லை. மாறன்‌ $ அந்தக்‌ காலத்திலே உங்களுக்கு ஆதரவு அபூர்வமா இருந்ததே. முக்கியமான ஆதரவு எது? பெரியார்‌ 1 பிள்ளைகளைதீதான்‌ சேர்த்துக்கொண்டு சதீதம்‌ போட்டேன்‌. பெரிய மனுசங்க ஒருதீதரும்‌ எங்களுக்கு ஆதரவில்லே ] உண்மையா எல்லாம்‌ பையங்கதான்‌. மத்தவங்க, ரொம்ப *ரிலிஜியஸ்‌ ? வேஷம்‌ ) பயநீதவங்க--அரசியலிலே தங்களுக்கு ஓட்டு www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1217 வேணும்‌ என்கிறவங்க ஆகையினாலே ஆதரவு கம்மிதான்‌, பிள்ளைகள்‌ உற்சாகமா பின்னாலே வருவாங்க. இப்ப பணம்‌ கொடுத்து கூப்பிடறாங்களே--அப்படி, எங்க பணம்‌ தான்‌ செலவு; கல்லடியெல்லாம்‌ அடிச்சிருக்காங்க இங்கே அடிச்ச அடி இந்தக்‌ கையை ட்டி விட்டுட்டுது. மாறன்‌ 1 எந்த இடத்திலே, எந்த ஊரிலே அய்யா$ பெரியார்‌ 8 ம்‌...சின்னாளப்‌ பட்டின்னு, தேவாங்கர்‌ இருக்கிற ஓர்‌ ஊரு. மாறன்‌ ₹£ ஆமா. அது நெசவுக்குப்‌ பேர்‌ போன கடம்‌. பெரியார்‌ $ அடியோட அவங்க காங்கீரசு அப்போ. போனேன்‌. மாறன்‌ ₹ ஆமா. Dg எதீதனை வருஷதீதுகீகு முன்னாலே இருக்கும்‌ 8 பெரியார்‌ 8 நாற்பத்தி அஞ்சு, நாற்பத்தி நாலு. £ற்பதீதி அஞ்சாயிருக்கும்‌. நல்லா அடிசீசுட்டாங்க மாறன்‌ £ அப்போகூட நல்லா பகுதீதறிவு பரவலே? பெரியார்‌ £ ஜனங்களுக்கு எங்கே பரவிசீசு, சட்டுன்னு சொல்றான்‌ பாருங்க ¢ சாமி இல்‌லங்கிறான்‌ ] கடவுள்‌ இல்லேங்கிறான்‌ ] மதம்‌ இல்லேங்கிறான்‌ ] பறையனோட ஒண்ணா சாப்பிடனுங்கிறான்‌ ?! அப்படின்னு சொன்னா--நம்ம ஜனங்களுக்கு ஒரு வெறுப்பு.அப்படியெல்லாம்‌ பண்ணினாங்க. நான்‌ பிரச்சாரம்‌ பண்ணப்‌ மாறன்‌ 8 இப்ப அதெல்லாம்‌ சொல்ல முடியாது? பெரியார்‌ $ இப்ப சில பெரியவங்க பேசறபோது, ¢ மன்னிக்கணும்‌... எனக்குக்‌ கொஞ்சம்‌ கடவுள்‌ நம்பிக்கையிருக்குது! அப்படின்னு என்னை மன்னிப்புக்‌ கேட்டுட்டு பேசறாங்களே. மாறன்‌ ¢ ஒரு கேள்வி கேட்கலாமா ? பெரியார்‌ $ கேளுங்க அய்யா. மாறன்‌ £ அதாவது, இப்ப மத நம்பிக்கை உடையவங்ககூட, உங்களிடதீ்திலே உங்களுடைய கொள்கைகளை நம்பி உங்களுக்கு ஆதரவாக இருக்காங்க, பெரியார்‌ 8 சிலபேர்‌ இருக்காங்க உண்மையிலேயே. மாறன்‌ ¢ ஆகையினாலே மத நம்பிக்கையைப்‌ பதீதி, நீங்கள்‌ அதைப்பற்றி அதிக மாகப்‌ பிரச்சாரம்‌ செய்யாமல்‌, அது பற்றி அவநம்பிக்கை எதிர்ப்பு சொல்லாமல்‌ இந்த சாதி ஒழிப்பை மட்டும்‌ செய்து வந்தா? பெரியார்‌ : அது பிரிக்க முடியாதுங்களே, அய்யா. மதம்‌ வேறே, சாதி வேறேன்னு பிரிக்கவே முடியாதே. மாறன்‌ $ இன்னொரு கேள்வி. இப்போ இந்தக்‌ காலத்திலே ஒழுக்கம்‌ குறைஞ்சு வருது, அப்படின்னு எல்லோரும்‌ சொல்றாங்க. அரசாங்கத்தின்‌ தண்டனைக்குப்‌ பய மிருக்கணும்‌ ; அல்லது ஒருவிதமான ஆண்டவன்‌ நம்பிக்கையிருந் து பயப்படணு3, இந்த ரெண்டும்‌ இல்லாமப்‌ போயிட்டுதே இப்போ. இந்த ஒழுக்கம்‌ நல்லா இருக்கிறதுக்கு என்ன வழி? பெரியார்‌ 1 மன்னிக்கணும்‌, அய்யா, இதை ஒன்றும்‌ கட்டுப்படுத்தமூடியாது. இனிமேல்‌ எந்தக்‌ காரணம்‌ சொல்லியும்‌ மக்களைக்‌ கட்டுப்படுத்தவே முடியாது. ஒரு மட்டம்‌ தாராளமாகப்‌ போயி, மறுபடியும்‌ அவங்க ஏதாவது இதுக்கு என்ன பண்றதுன்னு திரும்பினா உண்டே தவிர; இப்ப ஒழுக்கமா, நாணயமா, நேர்மையா மனுசன்‌ யாராவது 1686—153 நல்லா கேளுங்க ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1218 பெரியார்‌ ௬. வெ. ரா. சிந்தனைகள்‌ சிந்திக்க இப்ப வாய்ப்பு இில்லை.ஃஎல்லோருக்கும்தான்‌. அரசியலிலே ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும்‌ மததீதிற்கும்கூட, காட்டிக்க முடியுதே தவிர, ததீதுவப்படி நடக்க எவனாலும்‌ முடியலே. ஒழுக்கம்னு இன்‌ னொருதீதனுக்குச்‌ சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக்‌ கிடைச்சா நாமும்‌ அந்தத்‌ தவறு பண்ணத்‌ தயாராயிருக்கோம்‌. அனுபவத்தில்‌ சொல்றேன்‌. நான்‌ அப்படியிருக்கிறபோது சும்மா ஒழுக்கம்னு சொல்லி, கன்னொருத்தனை ஏய்க்கிறதிலே என்ன லாபம்‌, சொல்லுங்க மாறன்‌ £ ஒரு சமுதாய நல்வாழ்வுக்கு. பெரியார்‌! என்ன நல்வாழ்வு 1 சமுதாயதீதிற்கு என்ன நல்வாழ்வு வரும்‌? நீங்க பணக்காரன்‌) நான்‌ ஏழை, இவங்களுக்கு நல்வாழ்வு எங்கேவரும்‌ 6 இதையெல்லாம்‌ காப்பாதீ துறதா இருந்தா அதைத்தான்‌ ஒழுக்கம்னு நினைக்கிறோம்‌. உங்ககிட்டே, பணம்‌ திருடக்கூடாது நான்‌. நீங்க வியாபாரி) என்னை மோசம்பண்ணிப்‌ பணம்‌ சேர்தீ திடலாம்னு நினைக்கிறீங்க அப்ப எப்படி ஒழுக்கம்‌ வரும்‌ 1 மாறன்‌ $ அதனாலே, உங்களைப்போல சுயநலமற்றவரதியரக இருந்தர நல்லா யிருக்கும்‌. பெரியார்‌ 8 எங்கே முடியுது, அய்யா? மாறன்‌ £ ஒரு வழி. பெரியார்‌ £ வழியில்லே. நாடு இன்னும்‌ கீழேபோகும்‌) ரொம்பக்‌ கீழேபோகும்‌. நாமெல்லாம்‌ இவ்வளவு பந்தோபஸ்தா இருக்கமுடியாது, இன்னும்‌ பதினைந்து வருஷதீ திலே பாருங்களேன்‌. இப்போ கென்னடியைச்‌ சுட்டான்‌ ) வீதியிலே போனா அடிக்கிறான்‌ ; தெருவிலே போனர உதைக்கிறான்‌ ) மந்திரிங்க போனா காவாலிப்பசங்க எல்லாம்‌ கருப்புக்‌ கொடியைத்‌ தூக்கிக்கிட்டு ஒழிக என்கிறான்‌ ] அரசாங்கதீதுக்கிட்டே அதீது இல்லேன்னா எப்படி ஒழுக்கம்‌ வரும்‌ i மாறன்‌ £ ஆனா நம்முடைய தமிழ்நாடு வந்து பழைய காலதீதிலேரூந்தே நல்ல பண்பாட்டோட இருக்கிறதினாலே சுய சிந்தனை அதிகமாயிருக்கு. பெரியார்‌ £ வரணும்‌. தமிழ்‌ நாட்டிலே தமிழனைக்‌ கெடுதீதுட்டு2த--இநீததீ தமிழ்‌ இலக்கியங்கள்‌ ! மற்ற நாட்டானைப்போல முன்னேற வேண்டிய அளவுக்கு முன்னேற விடாம தமிழ்‌ இலக்கியங்கள்‌ நம்மைப்‌ பரழாக்கிட்டுது மாறன்‌ 8 இலக்கியம்‌ வந்துஃ பெரியார்‌ £ ஒண்ணுமில்லே 1 மாறன்‌ 8 தமிழ்‌ இலக்கியம்‌ எந்த வகையிலே கெடுக்கு துன்னு சொல்றீங்க 7 பெரியார்‌ £ இலக்கியமே இல்லியே நமக்கு. இன்றைக்குப்‌ பயன்படும்படியா என்ன இருக்கு 1 நீங்க தெரிஞ்சுகொள்ளாதது என்னயிருக்கு 1 நாளைக்கு நம்ம நடந்துக்க வேண்டியதுக்கு என்ன இருக்கு ₹ அப்படி ஆகிப்‌ போச்சுங்க, அது. வெள்ளைக்காரனுக்கும்‌ நமக்கும்‌ உள்ள வித்தியாசம்‌ என்னன்னா, அவன்‌ பழசை நினைக்காம, புதுக்‌ கருத்தோட புதுசு, புதுசா எங்கெங்கேன்று போவான்‌. இங்கே எவ்வளவு பெரிய புலவனாயிருந்தாலும்‌ பழைய குப்பையைத்தேடி அதிலேநந்து பெரியவனா ஆயிடலாம்னு பார்க்கிறானே தவிர; தன்‌ கருத்‌ துன்னு சொல்றது ஒண்ணுமே கிடையாதே. மாறன்‌ 5£ அது உண்மை தாங்க. பெரியார்‌ 1 இல்லே நமக்கு, எந்தக்‌ கருத்தைச்‌ சொல்றதுக்கு எந்தப்‌ புலவன்‌ இருக்கிறான்‌ ₹ மாறன்‌ 8 சமாதிக்குதீதான்‌ கும்பிடு போட்டுக்கிட்டே இருக்கான்‌ 1. www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1219 பெரியார்‌ ₹ அவ்வளவுதான்‌. இன்றையவரைக்கும்‌ ஒருத்தன்கூட புதுக்‌ கருத்தை சொல்லவே இல்லையே. மாறன்‌ £ அய்யாவைதீ தவிர பெரியார்‌: என்னமோ வச்சுக்கங்க, சொல்லப்‌ பயப்படறான்‌. ஒரு புலவனைக்‌ கேட்டா அவன்‌ படிச்சதைதீதான்‌ சொல்றான்‌--இராமாயணம்‌ படிச்சேன்‌, பாகவதம்‌ படிச்சேன்‌, புராணம்‌ படிச்சேன்‌ அப்படின்னு, அதிலேதான்‌ அவன்‌ புலவனானேதவிர; அறிவிலே அவன்‌ ஒண்ணும்‌ புலவன்‌ ஆகலே. என்னமோ பல தொல்லைகள்‌ இருக்குது; வளர்ச்சிக்குப்‌ பல தடங்கல்‌ இருக்குது நம்ம நாட்டிலே. மாறன்‌ ₹ ஆனால்‌ ஒரு காரியம்‌ அய்யா ! பல நாடுகளி23ல பகுதீதறிவுவாதிகள்‌ தோன்றியிருக்காங்க ஆனா மதவாதிகள்‌ வந்து அவங்களுடைய பிரச்சாரம்‌ வெளிவர விடாமல்‌ செய்திருக்காங்க. பொதுமக்களின்‌ அறிவுக்கு திரையிட்டிருக்கரங்க. ஆனால்‌, நம்முடைய தமிழ்‌ நாட்டிலே உங்களுடைய பிரசீசாரம்‌ நல்ல பலன்‌ அளிச்சிரு&9றது. அது மட்டுக்கும்‌ தமிழக மக்கள்‌ நல்ல பகுத்தறிவு உடையவர்கள்‌. நல்ல பண்பாடுடையவர்கள்‌- அதனால்தான்‌ முன்னேற முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன்‌. பெரியார்‌ ₹ யாரு முன்னேறியிருக்‌ றாங்க? ஒரு மனுசனைச்‌ சொல்லுங்க நம்ம நாட்டிலே...மன்னிக்கணும்‌-- நீங்க கோவிச்சுக்கக்‌ கூடாது. இந்த நாட்டிலே முன்னேற்றக்‌ கருதீ.துள்ளவர்‌ யாரு? மாறன்‌? அதாவது, முன்னேயிருந்த நிலைமையைவிட இப்பே௫ இருக்கிற நிலைமை. பெரியர்‌ $ அதிலே விதீதியாசம்னு சொல்லிக்கலாமே தவிர, இன்னாருடைய கருத்து ஏற்கத்‌ தகுந்த துன்னு சொல்ல ஒரு ஆளைச்‌ சொல்லுங்க; எவன்‌ இருக்கிறான்‌ ? சொல்றதுக்கே பயப்படறான்‌. ஒவ்வொருத்தருக்கும்‌ ஒரு இலட்சியம்‌) அந்த இலட்சியத்‌ அக்கு மாறில்லாமல்‌ இருக்கவேணும்னா அவனுடைய வாழ்வு அப்படித்தான்‌ இருக்கும்‌. நாம்‌ என்ன கதியானாலும்‌ சரி, சொல்வோம்ங்ற மாதிரிக்கு, ஒரு ஆள்கூட இல்லையே! அது மாதீதிரமில்லே. இப்ப நம்ம நிலைமை எப்படி ஆயிப்போசீசுன்னா, தமிழ்‌ நாட்டிலே இன்றைக்கு ஒரு பெரிய மனுஷனே இல்லியே, நீங்க ஒரு காரியம்‌ நடதீதணும்னா, ஒரு பெரிய மனுஷனைக்‌ கூப்பிட்டு வைக்கணும்னா உங்களுகீகு யார்‌ இருக்கிறா ? இல்லியே! மாறன்‌ £ அப்படி ஒருவன்‌ உண்டாகணும்‌. அதற்கு ஒருத்தன்‌ முயற்சிபண்றான்னு ற ஒரு றா வையுங்க, அதுக்கு என்ன செய்யணும்‌ 7 பெரியார்‌ 1! அவனுக்கு சர்வாதிகாரம்‌ வேணும்‌, அவன்‌ ஒண்ணுக்கும்‌ கட்டுப்படாத சர்வா திகாரியா வரணும்‌. கேட்டா கேளு, கேட்காட்டி போடான்னு சொல்ற மாதிரி இருக்‌ கணும்‌, அவனுக்கு ஒரு காலத்திலே ¢ சான்ஸ்‌? அடிச்சா அடிக்கும்‌. மாறன்‌ 8 சுயநலம்‌ இருக்கக்கூடாது) ஒருத்தருக்கும்‌ கட்டுப்படக் கூடாது; அப்படிப்‌ பட்ட சிந்தனை உள்ளவன்‌ வந்து ஒரு நல்ல பெரிய காரியம்‌ செய்யறவனாகலாம்‌. பெரியார்‌ $ ஆகலாம்‌. ஆனா இப்ப ஒண்ணும்‌ அப்படி ஆக மூடியலே. அப்பே பெரிய மனுஷன்‌ என்கிற உலகமே வேறே. அவன்‌ பணக்காரனா; அவன்‌ ஏதாவது தர்மம்‌ பண்றானான்னு...அப்ப வேற மாதிரி இருந்தது. இப்ப பணக்காரனைக்‌ கண்டா சுதீத மோசம்னு நினைக்கிறோம்‌. தர்மம்‌ பண்ணினான்னா, பெரிய திருட்டுப்‌ பய, பெருமைக்‌ காகப்‌ பண்றான்னு சொல்றோம்‌. மாறன்‌ 5 ஆமாம்‌. அப்படித்தானே இருக்கு. பெரும்பகுதி அப்படியிருக்குட பெரியார்‌ 3 எப்படியோ வைச்சுகீகிங்க, அது தெரியா திருந்த காலத்திலே ஏற்பட்‌ டரனுங்க பெரிய மனுஷன்‌. இன்னைக்கு நமக்கு ஆனே இல்லியே 1 எந்த புஸ்தகம்‌ படிச்சா www.thamizham.net - Free £ book No 3031 1220 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ தேவலே? ரொம்ப நாம்‌ சண்டை போட்டுக்கணுமானா, குறள்‌ ஒன்று என்னமோ இருக்கு: அதை எடுத்து வைச்சிட்டா, வேறே எது படிச்சா தேவலே ? வளர்ச்சிக்கு என்ன இருக்குது? அந்தமாதிரி ஆயிப்‌ போசீசுங்களே. மாறன்‌ 8 கல்வி முன்னேறணும்‌. பெரியார்‌ £ கல்வி முன்னேறணுமானால்‌, அதனுடைய போக்கையே தடுத்துக்‌ கிட்டிருக்காங்களே ! மாறன்‌ £ இப்ப அய்யா பெயராலே கல்லூரியெல்லாம்‌ வந்திருக்கு, அப்படிப்பட்ட நல்லகாரியம்‌ செஞ்சிருக்கீங்கஃ பெரியார்‌ £ நானும்‌ ஏதோ செய்யறேன்‌, நிறைய கட்டிடம்‌ கட்டிகிட்டு ஜனங்களுக்கு ஏதோ செய்யறேன்‌. என்ன செய்யறதுன்னே தோணலியே. ஒரு பிச்சை கொடுக்கிறதா இருந்தா, என்னடா சோம்பேறியை வளர்க்கிறோமேன்னு கருதறோம்‌. மாறன்‌ £ அய்யா, ஏதாவது பிச்சை கிச்சை கொடுதீதிருக்கீங்களா? அப்படிக்‌ கேள்விப்பட்டதே இல்லையே ! பெரியார்‌ $ அது சரி. உள்ளபடியே அப்படித்தான்‌. மாறன்‌ $ உங்களைப்‌ பதீதி ஜி. டி. நாயுடு இருக்காங்களே--விஞ்ஞான மேதை; அவங்க உங்களைப்‌ பத்தி ஒண்ணு சொன்னாங்க, சிக்கனதீதுகீகு ஒரு மாபெரும்‌ உதாரணம்‌ வேணும்னா அய்யாவைப்‌ பற்றித்தான்‌ சொல்லணும்‌ அப்படின்னு சொன்னாங்க. இப்போ, ஒரு மனிதன்‌ சிக்கனமா வாழ்க்கை நடதீதணும்னா, அப்படி வாழ்க்கை நடத்து வதற்கு என்னென்ன செய்யணும்‌; ஒரு தனி மனிதன்‌ ₹ பெரியார்‌ $ சிக்கனம்ங்கறது ஒண்ணுமில்லே. எல்லோருக்கும்‌ பணக்‌ கவலை: இருக்குது. வியாபார முறையா, தாராளமா இருக்கிறாங்களே தவிர, வேறே இல்லை. நமக்கு எப்படின்னா, பணத்தை என்ன பண்றதுன்னு தெரியலே. எதுக்குக்‌ கொடுக்‌ கிறதுன்னு தோணலே. தவிர; நாம வியாபாரதீதிலே பத்து வயசிலேயே இருந்துட்டோம்‌ $ ரொம்ப *சுக்காஞ்செட்டியா ? இருந்துட்டோம்‌ ) அதனாலே காசை இழுத்துப்‌ பிடிக்கிறோம்‌. இழுத்துப்‌ பிடிக்கத்தான்‌ தெரியுமேதவிர, அதை என்ன பண்றதுன்னு இன்னும்‌ நான்‌ முடிவு பண்ணலே. இதை நான்‌ எழுதியிருக்‌் கிறேன்‌ -அது ஒரு ¢ ஹேபிட்‌? (Habit) அவ்வளவுதான்‌. அது ஒரு புதீதிசாலித்தனம்னு நான்‌ நினைக்கலே. மாறன்‌: அந்த மாதிரி மதீதபேருக்கு நீங்க புதீதி சொல்லலே. அதாவது, மதீத பேரும்‌ சிக்கனமா இருக்கணும்னு? பெரியார்‌ s சிக்கனம்னு எதை சொல்றேன்னா-வரவுகீகு அடங்கி நடப்பா; வரவுகீகுமேலே போகாதே $ அவ்வளவுதான்‌. அதுதான்‌ சிக்கனம்‌. மாறன்‌ 8 அய்யா, இன்னொரு கேள்வி கேக்கணும்னு ஆசை. இப்ப தற்காலத்‌. துலே இந்த மாணவர்கள்‌ இருக்கிறாங்கல்ல, அவங்க கட்டுப்பாடு இல்லாமே ஒரு குழப்பமான நிலைமையிலே இருந்து வர்றாங்க. நாம்‌ பார்க்கிறோம்‌ ) பல கல்லூரிகவிலே பார்க்கிறோம்‌, இந்தக்‌ கட்டுப்பாடு குலைஞ்சதுக்குக்‌ காரணம்‌ என்ன 1 பெரியார்‌ 8 என்‌ கருதீ.கு, உங்களுக்குப்‌ பிடிக்குமோ என்னமோ? இந்த ஜனநாயகம்‌ வந்தபிறகுதான்‌ எல்லோருடைய ஒழுக்கமும்‌ கெட்டுப்போச்சு. பள்ளிகூடத்துப்‌ பிள்ளைங்க மாதீதிரமல்ல) தொழிலாளிகளெல்லாம்‌ கெட்டுப்போயிட்டாங்க $ அதிகாரிகளெல்லாம்‌ கெட்டுப்போயிட்டாங்க, இவனுங்கமட்டும்‌ என்ன? பதவிக்கு வர்றவனும்‌ கெட்டுப்‌ போயிட்டான்‌. அவன்‌ தன்‌ இஷ்டத்துக்குத்‌ தகுந்தபடி நடக்கிறான்‌. மாறன்‌ £ வருங்காலதீதிலேகூட நல்ல மாறுதல்‌ N www.thamizham.net - Free E book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1223 பெரியார்‌ £ ஜனநாயகம்‌ உள்ளவரை முடியாதுங்க மாறன்‌ £ அப்போ, ஜனநாயகம்‌ அவ்வளவு நல்லதில்லேங்கிறீங்களா? பெரியார்‌ £ நல்லதில்லேன்னு நான்‌ ஆரம்பத்திலேயே சொன்னேன்‌--* காலிகள்‌ prusbgrdr ஜனநாயகம்‌ னு பெயர்‌ அப்படீன்‌னுட்டு. இது.வந்து ஜனநாயகம்னு நினைக்கிறதுக்கு முன்னே--சிலபேரு அதைப்பதீதிப்‌ பேசிக்கிட்டிருந்தாங்க அப்பவே சொல்லியிருக்கேன்‌. மாறன்‌ £ ஜனநாயகம்‌ வநீததினாலே கட்டுப்பாடு குலைஞ்சுதுன்னு சொல்றீங்க. பெரியார்‌ £ கட்டுப்பாடு குலைஞ்சதுஃ மாறன்‌ 8 எல்லாத்‌ துறைகவிலேயும்‌.ஃ பெரியார்‌ $ எல்லாத்‌ துறைகளிலும்‌ இப்ப இருக்கிறதுக்கு எல்லாம்‌. ஒழுகீகம்னா என்னா? கீழே இருக்கிறவங்க மேலே இருக்‌ $றவங்களுக்குக்‌ கட்டுப்பட்டு நடக்கணும்‌. உங்களிடதீதிலே உண்மையான அன்பு வச்சிருக்கணும்‌) அது இல்லையே! மேலே இருக்கிறவனைக்‌ கவுக்கப்‌ பார்க்கிறான்‌, கீழே இருக்கிறவன்‌. மாறன்‌ £ உண்மை. அய்யா. பெரியார்‌ ₹£ தனக்கு வேண்டியபடி நடக்கவில்லையானர எதிரியாகவே நினைக்‌ கிறான்‌. மாறன்‌ ? அல்லது சூழ்ச்சி பண்ணி. பெரியார்‌ £ அதுதான்‌ சொல்றேனே. அப்பறம்‌ என்ன பண்றது? மாணவங்க கெட்டுப்போன .துக்குக்‌ காரணம்‌ அரசியல்காரங்க. தங்களுக்குப்‌ பயன்படுதீதிக்கிறாங்க. மாறன்‌? ஆமாஃ பெரியார்‌ 8 அப்ப எப்படி வரும்‌ ஒழுக்கம்‌ மாறன்‌ $ அதான்‌ காரணம்‌. அவங்க சீர்திருநீதுவதற்கு உங்களுடைய யோசனை: என்ன § பெரியார்‌ £ அவன்‌ படிக்கவநீதவன்‌ ; அவனை நாம்‌ உபயோகப்படுதீதிகிட்டா, அவன்‌ கெட்டவன்‌ ஆயிடறான்‌. மாறன்‌ 8 நம்ம பிள்ளைங்கதானே 1 பெரியார்‌ 1 யாரு சொல்றாங்க அப்படி ? நான்தானே சொல்லவேண்டியதாயிருக்கு 8 நம்ம பின்ளைகளாக நினைக்கிறவன்‌ நான்தான்‌, நீங்க என்ன நினைக்கிறீங்க, உங்க மகனைப்பதீதி மாத்திரம்‌ நினைக்கிறீங்க--மதீதவங்களைப்பதீதிக்‌ கவலையே இல்லை, மாறன்‌ £ அய்யா. உங்களைப்‌ போல அவ்வளவு பரந்த மனப்பான்மை எல்லாருக்கும்‌ வருமா பெரியார்‌ $ இல்லே, சொல்றேன்‌. அதனாலே பலன்‌ அவ்வளவு ஆயிருக்கு. இப்ப இருக்கிற அரசியலை நம்‌ த்தான்‌ மாணவங்க நடந்துக்கிறாங்க) வண்டியிலே கல்லு போடறாங்க. என்னையே ரகளை பண்றாங்க. மாறன்‌ ₹ அதனாலே திருதீதறது எப்படி t பெரியார்‌ $ முடியாது. இந்த ஜனநாயகம்‌ இருக்கிறவரைகீகும்‌ நாடு இன்னும்‌ கீழேதான்‌ போயிக்கிட்டு இருக்கும்‌. மாறன்‌ 1 இன்னொரு கேள்வி அய்யா, தாழ்தீதப்பட்டவர்கள்னு முன்னாலே சொல்லப்பட்டவர்கள்‌ இப்போ கொஞ்சம்‌ முன்னேறி வர்றாங்க, www.thamizham.net - Free £ book No 3031 1222 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிநீதனைகள்‌ பெரியார்‌ $ ஆமாங்க, மாறன்‌ 8 அவர்கள்‌ எப்படியெப்படி நடநீதுகொள்ளணும்‌ ? பெரியார்‌ ? அவங்க முன்னேறி வர்றாங்கன்னா, அவர்களாலே முன்னேற முடியலே. மாறன்‌ ? சரி பெரியார்‌ ₹ தாழ்தீதப்பட்டவங்க முன்னேர்றாங்கன்னா ஏதோ அவங்களுக்கு ஏற்பாடு பண்ணின சில நல்ல வாய்ப்புகளினாலே சிலபேரு முன்‌ னேறினாங்க. மாறன்‌ $ அவங்களுக்கு அரசாங்கம்‌ வாய்ப்பு அளிக்குது? பெரியார்‌ 8 வாய்ப்பு அளிக்குதுன்னா, அரசாங்கம்‌ தயவினாலேதான்‌ வாய்ப்‌ பவிக்குதுஃ மாறன்‌ £ ஆமா. பெரியார்‌ £ இப்ப ஒருத்தனுக்கு ஒரு உத்தியோகம்‌ கொடுக்கணும்னா, அவன்‌ தன்னைப்‌ பறையன்னு ஒதீதுக்கிட்டாத்தானே உத்தியோகம்‌ கொடுக்கிறாங்க? தன்னை: சக்கிலியன்னு ஒதீதுகிட்டாதீதானே கொடுக்கிறாங்க T அதற்கு அவன்‌ வேணும்னே பறையன்‌ ஆகறான்‌. வேணும்னே சக்கிலியன்னு சொல்லிக்கொள்கிறான்‌. அந்த மாதிரியான. நிலைமையில்லாம எல்லோரையும்‌ சமமாகக்‌ கருதும்படியா-வாய்க்கால்‌ தண்ணி எல்லாருக்கும்‌ சமமா, தானாகப்‌ பாயற மாதிரி அரசியல்‌ அமைப்பிலேவச்சுட்டோமானா, ஒருத்தன்‌ கின்னொருத்தன்‌ தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம்‌ வராது, அதைப்‌ பண்ணவே மாட்டாங்க. எல்லோரும்‌, தங்களை வந்து கெஞ்சிக்கிட்டிருக்கிறவங்களுக்குத்‌ தான்‌ ஏதாவது செய்யணும்கிறாங்களே தவிர, வேறே இல்லே. அப்ப யாரு அதுலே பக்குவம்‌ உடையவங்களாக ஆவாங்க! எத்தனை நாளைக்குத்தான்‌ இவங்களுக்கு சுதந்திரம்‌ கொடுத்துக்கிட்டே இருந்தாலும்‌ இவங்க எப்படி * இண்டிபெண்டன்டா?' வளர்றதுக்கு வாய்ப்பிருக்கு ₹ மாறன்‌ $ வந்திருக்காங்களே$ எவ்வளவோ முன்னேறி இருக்கிறதைப்‌ பார்க்‌ கிறோமே நாம. பெரியார்‌ 8 சில பேர்‌ வந்துகீகிட்டிருக்காங்க அவ்வளவுதான்‌ செல்வேன்‌. மாறன்‌ £ ஆகையினாலே படிப்படியா... பெரியார்‌ ¢ அதிலே பாருங்க இப்ப. நேதீது சொன்னான்‌, உதவி பத்து வருஷதி அக்குன்னான்‌ ] பதீ து வருஷம்‌ ஆச்சு, இன்னும்‌ ஒரு பதீது வருஷம்னான்‌. இவங்க எல்லாம்‌ ரகளை பண்றதினாலே மறுபடியும்‌ ஒரு பதீ.து வருஷம்னு சொல்றான்‌. இப்படியே பதீது வருஷம்‌, பத்து வருஷம்னு இவங்களுக்குப்‌ போனாத்தான்‌ வாய்ப்ப: தவிர, நிறுத்திப்‌ போட்டா என்ன ஆகறது அவங்களுக்கு? இப்ப ஒருத்தர்‌ தயவினாலேதான்‌ வாழ முடியறதே தவிர, தாங்களாகவே வாழும்படியான வாய்ப்பு இல்லே... மாறன்‌ £ அந்த நிலை வரணும்‌. பெரியார்‌ ₹ ஆமா. அந்த நிலை வரணும்‌. மாறன்‌ $ அய்யா! தொழிலாலேதானே உயர்வு தாழ்வு:இருக்குது₹ பெரியார்‌ $ ஆமா! மாறன்‌ 1 இப்ப, அந்த தாழ்தீதப்பட்டவர்கள்னு சொல்லப்படு நறவங்களுக்கு சலுகை இருக்கு. அதே போல, மேலே உள்ளவர்களுக்கு சாதாரண வேலைகளுக்கு ஒரு சலுகை கொடுத்தால்‌ ! அவர்கள்‌ இறங்கி வந்தால்‌ 8 பெரியார்‌ ? அவங்க இறங்கவே மாட்டாங்க, www.thamizham.net - Free £ book 14௦ 3031 e விறிவு வளர்ச்சி 1228 மாறன்‌ $ இறங்கிவர்றதுகீகு ஒரு வாய்ப்புக்‌ கொடுத்தால்‌ 8 பெரியார்‌ : அவங்க இறங்கி வர்றதுக்கு என்ன பண்ணணும்னா, அவங்களுக்கு இவ்வளவுதான்னு சொல்லிடணும்‌, ¢ நீங்க இவ்வளவுதான்‌ இருக்கிறிங்க,ட உங்களுக்கு இவ்வளவுதான்‌ உண்டு? அப்படீன்னு, அந்த விகிதாச்சாரம்னு சொல்லிட்டா இறங்குவாங்க அன்னிக்கு முதற்கொண்டு மத்தமத்த தொழில்களை எல்லாம்‌ கைப்பதீதறதுகீகு. மாறன்‌ ₹ அப்புறம்‌, ஒரு தனிப்பட்டவர்‌ வந்து பொதுநலப்பணி செய்யணும்னு இறங்குகிறார்‌. அவருக்கு நீங்க சொல்லக்கூடிய யோசனை 8 பெரியார்‌ £ அதுதான்‌ சொன்னேனே-தனிப்பட்டவர்கள்‌ பொதுநலப்‌ பணிகள்ங்‌ கிறது ப்போ ரொம்ப அருமையாப்‌ போசீசு. ஏன்னா, எல்லாரும்‌ பொழைப்புக்குப்‌ பொது நலப்‌ பணியையே உபயோகப்படுதீதிக்கிறாங்க) பதவிக்கு, சம்பாதீதியதீதுக்குஃ மாறன்‌ £ ஆமா, ஆமா. சுயநலம்தான்‌ வருது. பெரியார்‌ ₹ பொ.துநலப்‌ பணின்னா, அது இப்ப வாழ்வுக்கு ஒரு வழின்னு ஆயிப்‌ போச்சு. மாறன்‌ $ ஆனா உண்மையாக ஒருத்தர்‌ பெரியார்‌ £ உண்மையாக ஒருத்தன்‌ வரவேணும்னா, அவன்கிட்டே ரெண்டு குணம்‌ இருக்கணும்‌. பொதுநலதீதினாலே பிழைக்கிறோம்னு.ஃ மாறன்‌ 5 லாபம்‌ சம்பாதிக்கக்‌ கூடாது, பெரியார்‌ 1 ஊஹும்‌ ! அதிலே சாப்பிடறோம்‌ என்கிற நிலைமை இருக்கக்கூடாது. இரண்டாவது, பொதுநலதீதினாலே ஒரு சின்ன பலன்கூட அடைந்ததாக இருக்கக்கூடாது. மாறன்‌ £ அவனுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகன்‌ இருக்கணும்‌. பெரியார்‌ $ அதுக்கு வேறே ஏற்பாடு பண்ணிக்கணும்‌, அதுலே சாப்பிடற துன்னு ஆரம்பிச்சா வழுக்கிவிட்டுடும்‌ அவனை. மாறன்‌ $ நல்ல புத்திமதி, ஆகையினாலே தனக்குச்‌ சாப்பாட்டுக்கு இருக்கிறவன்‌ தான்‌ பொ.துநலப்‌ பணியிலே இறங்கணும்‌ ) ஒண்ணு. அத்தகு, இந்தப்‌ பொதுநலப்‌ பணியினாலே லாபம்‌ சம்பாதிக்கணும்னு நினைக்கக்‌ கூடாது. பெரியார்‌ ₹ பயன்‌ அடையணும்னு நினைக்கக்கூடாது. லாபம்‌ மாதீதிரம்‌ இல்லே, ஒரு பதவிக்குப்‌ போகணும்‌) அந்தஸ்து சம்பாதிக்கணும்‌ ; குடுபதீதுகீகு ஒரு பெருமை உண்டாக்கணும்னு பார்க்கக்கூடாது. எல்லாம்‌ அது மூலமாகத்தான்‌ ஒவ்வொருத்தனும்‌ எதிர்பார்க்கிறான்‌ஃ மாறன்‌ ₹ அய்யா, இதீதனை காலமா பணி செய்து வர்றீங்க. இந்தப்‌ பதவி என்கிற போது வெறுதீதுத்‌ தன்றீங்க, இந்த மாதிரியா இருக்கணும்‌! பெரியார்‌ 1 சுயநலதீதுகீகுப்‌ பயன்படுத்தக்‌ கூடா குன்னுதான்‌ சொல்றேன்‌. பதவிக்‌ குப்போனா அது வந்திடுமேன்னு பயப்படுகிறேோமே நாம்‌ ! மத்தவங்களும்‌ அதைப்‌ பயன்‌ படூத்தாமப்‌ பார்‌ தீதாத்தான்‌ நல்லாயிருக்கும்‌. மாறன்‌ 8 அப்படிப்பட்டவர்கன்‌ நல்ல பொதுநலப்‌ பணி செய்யலாம்‌. பெரியார்‌ 3 முடியுது. அது செய்ய முடியுது. அவங்களும்‌ சுதந்திரத்தோடு இருக்க முடியும்‌. சுதந்திரமாகப்‌ பேசிக்கொள்ள எல்லாம்‌ முடியும்‌. இல்லாவிட்டால்‌. காற்றடிதீத பக்கம்‌ சாயவேண்டிய துதான்‌. மாறன்‌ 5 அப்படிப்பட்டவங்க தமிழ்நாட்டிலே? www.thamizham.net - Free £ book 14௦ 3031 1224 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ பெரியார்‌ £ நம்‌ நாட்டிலே யாரு இருக்காங்க, அய்யர? யார்‌ இருக்காங்கன்னு சொல்லட்டும்‌ நான்‌ 1 முடியலையே, எவனைப்‌ பக்குவம்‌ பண்ணினாலும்‌ ரெக்கை முளைசீசா ஓடிடறான்‌. மாறன்‌ ₹ இந்தக்‌ காலத்து சமுதாயம்‌ நல்ல வழிக்குத்‌ திரும்பணுமானா--ஒருதீதன்‌ என்னென்ன முறைகளைக்‌ கையாளனணும்‌, அய்யா ? பெரியார்‌ $ முதல்ல அவன்‌ பகுதீதறிவுவாதியாக ஆயிடணும்‌] அப்படி ஆயிட்‌ டரன்னா அவனுடைய போக்குக்கெல்லாம்‌ நியரயம்‌ கிடைக்கும்‌. மாறன்‌ £ ஓகோ. பெரியார்‌ £ அப்படி ஆகாமெ நமக்காக அவன்‌ இருக்கான்னா, சும்மா ஏதோ வேப்பெண்ணை குடிக்கிறாப்போல ஏதோ சாப்பிட்டுக்‌ ட்டு-இந்த வேஷம்‌ போட்டுக்கிட்டுத்‌ தான்‌ இருக்கமுடியும்‌ ) மனசு தெளிவாயிடணும்‌ அவனுக்கு. வேறே ஒண்ணும்‌ கிடையாது. மாறன்‌ £ நாம்‌ நல்லது செய்தால்‌ அதைத்‌ அணிஞ்சு செய்யணும்‌, ஒண்ணுக்கும்‌ பயப்பட்டோ அல்லது ஆசைப்பட்டோ செய்யவேண்டியதில்லை. பெரியார்‌ 1 செய்யவேண்டியதில்லே. இன்பமும்‌ இல்லே, துன்பமும்‌ இல்லே ; பெருமையும்‌ இல்லே, சிறுமையும்‌ இல்லே--காரியம்தான்‌, அப்படின்னு எண்ணம்‌ வந்ததுன்னா அவனாலே ரொம்பத்‌ தாராளமாய்‌ முடியும்‌. மாறன்‌ £ அதனாலே இந்த சமுதாயமும்‌ பயன்பெறும்‌ 1 பெரியார்‌ £ அதான்‌) பொதுத்‌ தொண்டுன்னா சமுதாயத்‌ தொண்டுதானே1 அதில்லாம சும்மா, அலங்காரமா வெளிப்பார்வைக்கு நானும்‌ செய்யறேன்னா? மாறன்‌ £ அது வேடிக்கைக்‌ கூதீதாயிடும்‌. பெரியார்‌ £ அவ்வளவுதான்‌. மாறன்‌ £ அய்யா, ரொம்ப முக்கியமான கருதீதுக்ீகளெல்லாம்‌ சொன்னீங்க. எதீதனையே விஷயங்கள்‌ சொன்னீங்க. பெரியார்‌ 5 ஒண்ணுமில்லே. மாறன்‌ 8 ரொம்ப நன்றிங்க, பெரியார்‌ $ நான்‌ சொல்றேன்‌. இது என்‌ கருதீதுன்னு (சொல்றேனே தவிர, இதுதான்‌ முதீதிரைன்னு கொள்ளக்கூடா துன்னு கேட்டுக்கொள்‌ கிறேன்‌. மாறன்‌ £ இல்லை அய்யா. இந்தத்‌ தலைமுறையிலே நீங்கள்தான்‌ பகுதீதறிவு வாததீதை இப்படி நல்லாச்‌ சொல்றீங்க. பெரியார்‌: என்னமோ சொன்னேன்‌ (சிரிப்பு) மாறன்‌ 1 அய்யா, இந்தத்‌ திருமண முறைகளிலே எல்லாம்‌ ரொம்ப மாறுதல்‌ பண்ணி எவ்வளவோ புரட்சிகள்‌ செய்திருக்கீங்க. அந்தக்‌ காலத்திலே எத்தனையே பணத்தை செலவழிச்சு, எத்தனையோ குடும்பங்கள்‌ கெட்டுப்போச்சு. அதோடுகூட அந்த மூடநம்பிக்கைகளை எல்லாம்‌ சேர்த்து வைச்சிருந்தாங்க-விழாக்கள்‌, குடும்பதீதில்‌ நடக்கிற கைங்கரியங்களிலே எல்லாம்‌. இப்ப அதெல்லாம்‌ நீங்கிவருது. ஆ பல விதத்திலே தாங்கள்‌ இந்த நாட்டுக்குப்‌ பணி செய்து, நல்லா முன்னேறி இருக்கிறோம்‌; நாடும்‌ முன்னேறியிருக்கு த. பெரியார்‌ 1 அது சரி. அப்படி ஒண்ணும்‌! இல்லே. மாறன்‌ i அவர்களுடைய சார்பிலே உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. பெரியார்‌ ¢ ரொம்ப என்னுடையவாழ்தீதுக்கள்‌. மாறன்‌ 8 வணக்கங்க1 [5-1-1970-ஸ்‌ திருச்சி வானொலி ஒலிபரப்பு] ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1225 8. பெரியாருடன்‌ பேட்டி [எழும்பூர்‌ பெரியார்‌ திடலிலுள்ள ¢ விடுதலை? அலுவலகதீதை ஒட்டி அமைந்துள்ள இருக்கையில்‌ பெரியார்‌ ஈ. வெ. இராமசாமி அவர்கள்‌ கட்டிலில்‌ அமர்‌ ந்திருக்கிறார்‌. * கலை மகன்‌ ? பற்றி அருகிலுள்ள விடுதலை? நிருவாகி திரு. சம்பந்தத்திடம்‌ விசாரித்தவாறு என்னை அன்புடன்‌ வரவேற்று, ¢ உட்காருங்க? என்றார்‌. பனியனுக்குமேல்‌ தமக்குப்பிடி தீத கறுப்புச்‌ சட்டை அணிந்திருகீகிறார்‌. வெண்மையான முடியும்‌, தாடியும்‌ இவரது சிவந்த மேனிக்கு அளிக்கும்‌ கம்பீர்யமே அலாதிதான்‌. வட்டமான மூக்குக்‌ கண்ணாடியின்‌ வழியே ஊடுருவிப்பார்‌ தீது, ¢ என்ன கேக்கப்போறீங்க ? கேளுங்க ? என்கிறார்‌.] ¢ நீங்கள்‌ எதுவரை படித்திருக்கிறீர்கள்‌ 1 என்று கேட்கி3றன்‌. * எட்டு, ஒன்பது வயசு வரைக்கும்‌ ஈரோட்டிலே திண்ணைப்‌ பள்ளிக்கூடத்திலே படிச்சேன்‌, அப்புறம்‌ ஒரு ரூபாய்‌ கொடுதீது அம்மை குத்திக்கொண்டு மாடல்‌ ஸ்கூல்‌'லே சேர்ந்து படிச்சேன்‌. நாலாவது அதாவது போர்தீ ஸ்டாண்டர்ட்‌ வரைக்குந்தான்‌ படிச்சேன்‌. அதுக்குமேலே படிக்கமுடியல்லே. கடைக்கு வந்துட்டேன்‌. * உங்கள்‌ தகப்பனாரின்‌ கடையா P * ஆமாம்‌. கடையிலே மூட்டைக்கு விலாசம்‌ போடறது முதலான எல்லா வேலை களையும்‌ கவனிச்சுக்கிட்டிருந்தேன்‌.” * உங்கள்‌ அண்ணா அதிகம்‌ படிதீதாரா? *அவரு படிச்சாரு, லோயர்‌ போர்தீ பாரம்‌ வரை படிசீசாரு. அந்தக்‌ காலத்திலே * அப்பர்‌ போர்தீ பாரம்‌ ? படிச்சிருந்தா தாசில்தார்‌ பதவி வரைக்கும்‌ போகலாம்‌. * தினமும்‌ குளிப்பதில்‌ உங்களுக்கு அவ்வளவாக விருப்பம்‌ கில்லை என்று சொல்லு கிறார்களே ) அது மெய்தானா i ¢ குளிக்கவேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன்‌. இப்ப நான்‌ குளிச்சு ஆறுநாள்‌ ஆச்சு. அந்தக்‌ காலத்திலே, நான்‌ சின்னப்‌ பையனா இருந்தப்போ, எங்க வீட்டிலே எல்லாரும்‌ தவறாமே குளிப்பாங்க, சந்தைக்குப்‌ போய்‌ வந்தா குளிப்பாங்க போன இடத்திலே பல பே/மேலே பட்டிருப்போமே, தீட்டா யிருக்குமே என்று குளிப்பாங்க, ஏன்‌ ₹ கக்கூஸ்‌ போயிட்டு வந்தாக்கூடக்‌ குளிப்பாங்கஃ * தீட்டு? தொடக்கூடாது! என்பதிலெல்லாம்‌ அவ்வளவா லட்சியமில்லை எனக்கு, வீட்டிலே என்னை அடக்கிப்‌ பாத்தாங்க. முடியல்லை.? ¢ நீங்கள்‌ எவ்வாறு நாதீதிகரானீர்‌ கள்‌ 9. ¢ நான்‌ அதுக்காகன்னு ஒண்ணுமே படிக்கல்லே) ஆராய்ச்சி பண்ணலே. பக்குவம்‌. அடையல்லே. என்‌ பகுதீதறிவுக்கு எட்டினதைச்‌ சொல்றேன்‌.” * கடவுள்‌ இல்லை? என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிற மாதிரி, ஆத்திகர்‌ களுக்குக்‌ ¢ கடவுள்‌ இருக்கிறார்‌ ? என்று சொல்லவும்‌ உரிமை உண்டல்லவா? பின்‌ எதனால்‌ ¢ கடவுளை நம்புகிறவன்‌ காட்டுமிராண்டி? என்றெல்லாம்‌ கூறுகிறீர்கள்‌ 4 *எதனாலே கடவுள்‌ இருக்கிறார்னு நீங்க சொல்றீங்க? சம்பாதிச்சவன்‌, லாபம்‌ அடைஞ்சவன்‌ எவனும்‌ எல்லாம்‌ கடவுளாலே கிடைச்சு, துன்னு சொல்றதில்லையே ! தன்னுடைய திறமையாலே கிடைச்சுதுன்னுதானே நினைக்கிறான்‌ ₹ கடவுளை நம்பி மேன்மை அடைஞ்சவன்‌, * இதெல்லாம்‌ கடவுள்‌ சக்திரன்னு சொல்லுறானா? திருட்டுப்‌ போனால்‌ போலீசுக்குத்‌ தகவல்‌ சொல்லுகிறோம்‌, பணம்‌ இருந்தால்‌ பெட்டியிலே வச்சுப்‌ பூட்டறோம்‌. இதெல்லாம்‌ கடவுள்‌ செயலா 8 இதுக்கெல்லாம்‌ கடவுள்‌ எதுக்கு? கடவுள்‌ இருக்காருன்னு செல்ல உரிமை உண்டுங்கிறீங்க, சோறு திங்க உரிமை உண்டு; சாணி 1686—154 ‘www.thamizham.net - Free E book 14௦ 3031 1226 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ தீங்க உரிமை உண்டான்னு கேட்கிறேன்‌, இருக்கிறவரைக்கும்‌ கடவுள்‌, சாமின்னு சொன்னவங்க என்ன சுகத்தைக்‌ கண்டாங்க 1 * கடவுள்‌ உண்டா, இல்லையா ? என்ற வாததீதுக்கு முடிவேது? எனவே இதைத்‌ி தொடர்ந்து வாதிப்பது உசிதம்‌ அல்ல! என்று கருதி, இந்தப்‌ பிரச்சினையை விடுத்து அடுத்த கேள்விக்கு வருகிறேன்‌. * ஈரோட்டில்‌ உள்ள ஒரு பிள்ளையார்‌ கோயிலுக்கு நீங்கள்‌ ¢ டிரஸ்டி? என்று சொல்‌ கிறார்களே ) அது உண்மைதானா? ¢ ஆமாம்‌. அது முதல்லே பிள்ளையார்‌ கோயிலா அமையலே, எனக்குக்‌ குழந்தை இல்லையே என்று பெரியவங்க நாகப்‌ பிரதிஷ்டை செய்தாங்க, 1898ஆம்‌ வருஷம்‌. அரச மரதீதுகீகும்‌ வேப்ப மரத்துக்கும்‌ கலியாணம்‌ செய்து வச்சாங்க. குழந்தை பிறகீகல்லே. அங்கே அப்புறந்தான்‌ பிள்ளையார்‌ வந்தது.” * உங்களுக்கு மிகவும்‌ நெருங்கிய நண்பர்கள்‌ யார்‌ 8 * எல்லாருமே ;) என்னோடு நெருங்கிப்‌ பழகிய எல்லாரும்‌ எனசீகு நண்பர்கள்‌, நண்பர்கள்‌ கூட்டத்திலே நான்‌ தலைவன்‌, ராஜாஜியுடனும்‌ நெருக்கம்‌ அதிகம்‌, அப்புறம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியோடு தொடர்பு ஏற்பட்டது. அதீலே பலபேர்‌ நண்பர்கள்‌. குறிப்பிட்டு யாரைச்‌ சொல்றது ¥ நான்‌ எல்லாருக்குமே நண்பன்தான்‌. * சமீபத்திலே, கல்‌.லூரிகளையெல்லாம்‌ மூடிவிடவேண்டுமென்று சொன்னீர்கள்‌ இல்லையா ¢ ஆமாம்‌. சொன்னேன்‌? ¢ நீங்களே லட்சக்கணக்கிலே பணம்‌ உதவி, திருசீசியிலே ஒரு கல்லூரி ஏற்பட உதவி செய்தீர்கள்‌. அதை எல்லாருமே ஒருமுகமாகப்‌ பாராட்டுகிற நிலையிலே, கல்லூரிகளை மூடிவிடவேண்டுமென்று ஏன்‌ சொன்னீர்கள்‌ I? € நான்‌ எதிர்பார்‌ தீதது நடைபெறவில்லை. படிச்சவனுகீகு வேலை கிடைக்‌ கல்லியே ! ஒரு பையன்‌ எட்டாம்‌ வகுப்பு வரைக்கும்‌ படிச்சா, உடல்‌ உழைப்பிலே அவன்‌ நம்பிக்கை இழக்கிறான்‌. வேலையில்லாத்‌ திண்டாட்டம்‌ அதிகமாயிடுதீது. உதாரணம்‌ சொல்றேன்‌, 1940-ல்‌ கம்மானுகீகு 9 அணா, 10 அணா கூலி கொடுத்‌2தன்‌. கொல்லதீதுக்காரனுக்கு ஒரு நாள்‌ சம்பளம்‌ 12 அணா. பெண்‌ பின்ளைகீகு ஒரு அணாதான்‌ கூலி. இன்னிக்கு எட்டு ரூபாய்‌, 10 ரூபாய்‌ கூலி கேட்கிறாங்க, காரணம்‌, ஜனங்க எண்ணம்‌ படிப்பிலே ஈடு பட்டது. கொஞ்சம்‌ படிச்சவன்‌ மண்வெட்டி கையிலே எடுக்கிறது கவுரவக்‌ குறைச்சல்னு நினைக்கிறான்‌. வேலைக்கு ஆள்‌ இல்லை. இன்னொரு பக்கம்‌ படிச்சவனுக்கு வேலை இல்லை) வேலையில்லாத்‌ திண்டாட்டம்‌. காலேஜ்‌ இருந்து என்ன உபயோகம்‌ ¥ என்று உணர்ச்சி வசப்பட்டுக்‌ கேட்கிறார்‌ பெரியார்‌. (அப்பொழுது எங்கள்‌ இருவருக்கும்‌ காபி வழங்கப்படுகிறது. ' சாப்பிடுங்க ?. என்கிறார்‌ பெரியார்‌.) ¢ நீங்கள்‌ தினமும்‌ எவ்வளவு தடவை காபி சாப்பிடுவீர்கள்‌ ! உங்களுடைய அன்றாட உணவுப்‌ பழக்கம்‌ எப்படி * காலையிலே * பெட்காபி? சாப்பீடுவேன்‌. ஆறரை மணிக்கு எழுந்திருப்பேன்‌. யாராசீசும்‌ வந்தாப்‌ பேசிக்கீட்டு இருப்பேன்‌ ) &ல்லேன்னா படிப்பேன்‌. அப்புறம்‌ இரண்டு இட்லி சாப்பிடுவேன்‌. ரெண்டு மலைப்பழம்‌ சாப்பிடுவேன்‌. காபி சாப்பிடமாட்டேன்‌. மத்தியானம்‌ புலால்‌ உணவு ; ஒரு கப்‌ தயிர்‌. கரண்டு வாழைப்பழம்‌. மாலையிலே ஒரு கப்‌ காபி சாப்பிடூவேன்‌. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை காபி. அப்புறம்‌ கிரவிலே கரண்டு www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1227 இட்லி) மலைப்பழம்‌. ஒரு நாளைக்கு ஆறு மலைப்பழம்‌ சாப்பிடுவேன்‌. கூட்டம்‌ ஏதும்‌ இல்லாதபோனா எட்டு எட்டரை மணிக்குப்‌ படுப்பேன்‌.” ¢ நீங்க எப்பொழுதுமே, எந்தக்‌ கட்சி பதவிக்கு வருகிறதோ அதைதீதான்‌ ஆதரிக்‌ கிறதென்று ஒரு கொள்கை வைத்துக்‌ கொண்டிருப்பதாகப்‌ பலர்‌ கருதுகிறார்கள்‌. அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்‌ 3 ¢ ஆளும்‌ கட்சியை நமக்கு வசப்படுதீதப்‌ பார்ப்பேன்‌. நம்ம கொள்கையை அவர்கள்‌ ஏற்றுக்கொண்டால்‌ தொடர்ந்து ஆதரிப்பேன்‌, எதிர்தீதால்‌ ஒழிக்க முயற்சி செய்வேன்‌.” ஒனிவுமறைவின்றிக்‌ கூறுகிறார்‌. மதுவிலக்குக்‌ கொள்கை பற்றி வினவுகிறேன்‌. பளிச்சென்று பதில்‌ வருகிறது திரா விடத்‌ தந்தையிடமிருந்து. * குடிப்பது தவறில்லை. கன்‌ குடிச்சுச்‌ செதீதவங்க எவ்வளவு பேர்‌, சொல்லுங்‌ களேன்‌? நான்‌ குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப்‌ பழக்கம்‌ எனக்கு ஏற்படாமே இருந்‌ திருக்கு, ஆனால்‌ நண்பர்களுக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறேன்‌. கள்ளுக்கடை எல்லாம்‌ மூடி இருந்தாங்களே, அப்போ குடிக்காம இருந்தாங்களா ? குடிச்சுக்கிட்டுதான்‌ இருந்தாங்க ஒருத்தரும்‌ அப்போ குடியைத்‌ தடுக்கல்லே. வருமானம்‌ குறைஞ்சதுதான்‌ மிச்சம்‌. திரட்‌, டூத்தனமாகக்‌ குடிச்சாங்க. திருட்டுப்‌ போறதைதீதான்‌ நான்‌ சொல்லுவேன்‌, பிடித்கக்‌ கொடுக்கிறது என்‌ வேலையில்லையே ! ஜனங்க சோம்பேறியாய்‌ ஆனதற்குக்‌ காரணமே மது ஒழிப்புத்தான்‌. கூலி உயரக்‌ காரணம்‌ இதுதான்‌. சினிமாவுக்குப்‌ போறதைவிட இது நல்லதுதான்‌.” 6 வரதட்சிணைக்‌ கொடுமை இப்போது எல்லாச்‌ சாதியினரிடதீதிலும்‌ மிகவும்‌ பரவி யுள்ளதே, இதை ஒழிக்க நீங்கள்‌ ஏன்‌ பிரசாரம்‌ செய்யக்கூடாது? * படிச்சவன்‌, படிக்காதவன்‌ என்ற பேதம்‌ உள்ளவரைக்கும்‌ இந்த நிலை மாறாது. பெண்‌ படிச்சவனை விரும்புகிறாள்‌. ஆண்‌ பிள்ளை படிச்ச பெண்ணைத்‌ தேடறான்‌. படிச்சவங்களுக்குக்‌ கிராக்கி ஏற்பட்டுப்‌ போச்சு. போட்டி உண்டாயிடுதீதுட அதனாலே வரதட்சிணை வாங்குறது இயற்கையாயிடுதீது. பணம்‌ வாங்கக்‌ கூடாதுன்னா, முப்பது பவுன்‌ நகை போடச்‌ சொல்லுகிறான்‌. நம்ம பொருளாதார அமைப்பு அப்படி ஆயிட்டுது. அப்போதெல்லாம்‌ பார்ப்பனர்களுக்கு மட்டுந்தான்‌ வர தட்சிணை கொடுக்க வசதி இருந்தது. இப்ப எல்லாரும்‌ படிக்கிறாங்க. பெண்களும்‌ இப்போ நிறையப்‌ பேர்‌ படிக்கிறாங்க, வேலைக்குப்‌ போறாங்க. கொடுக்க வசதி இருக்கிறதாலே இது பரவலாயிடுச்சு. 22 வய வரைக்கும்‌ பெண்களுக்குக்‌ கலியாணம்‌ செய்யாமல்‌ இருந்தால்‌ வரதட்சிணைக்‌ கொடுமை யும்‌ குறைஞ்சு போயிடும்‌. வயசு ஆயிட்டாப்‌ பெண்களே புருஷனைத்‌ீ தேடிப்பாங்க, வரதட்சிணை மறைஞ்சு போயிடும்‌. முன்னெல்லாம்‌ ரொம்பச்‌ சின்ன வயசிலே பெண்‌ களுக்குக்‌ கலியாணம்‌ செய்து வந்தசாலேதான்‌ இது வளர்ந்து பெருகிப்‌ போச்சு. பெண்கள்‌ ஆண்களை நம்பித்தான்‌ வாழணுங்கிற நிலைமை மாறணும்‌. அப்போ இது சரியாயிடும்‌. சட்டம்போட்டா மட்டும்‌ போதாது. அதைக்‌ கண்டிப்பாய்‌ நிறை2வத்தணும்‌. அமுலாக்க வேணும்‌.” * இன்றைய சமுதாயம்‌ முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த நிலையி லிருந்து மாறுபட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கிளைஞரகளிடையே முற்போகீ கான கொள்கைகள்‌ பரவி வருகின்றன. சாதிவேறுபாடுகள்‌ குறைந்து வருகின்றன. இருந்தும்‌, தமிழைத்‌ தாய்மொழியாகக்‌ கொண்டவர்களையே அவர்கள்‌ பிராமணர்கள்‌ என்ற காரணத்துக்காகதீ ¢ தமிழர்‌ அல்லர்‌? என்று சொல்லுகிறார்கள்‌. * கைபர்‌ கணவாய்‌ வழி: வந்தவர்கள்‌ ! என்‌ றுகூடப்‌ பேசுகிறார்களே | இதை நீங்கள்‌ ஆதரிக்கிறீர்களா i www.thamizham.net - Free £ book 14௦ 3031 1228 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இதைக்‌ கேட்ட பெரியார்‌ சிரித்தவாறு, * ஏன்‌ என்னையே தமிழன்‌ இல்லேன்னு சொல்றாங்களே! என்‌ தாய்மொழி கன்னடம்‌ என்பதாலே சொல்றாங்க, பெரும்பாலானவங்க என்னைத்‌ தெலுங்கர்‌-- நாயுடு என்றே நினைக்கிறாங்க ஜஸ்டிஸ்‌ பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக்‌ கொள்கைக்குத்தானே! அதை ஆரம்பிச்சது யார்‌ சர்‌. பி. டி. செட்டியார்‌--தெலுங்கர்‌. டி. எம்‌. நாயர்‌-- மலையாளி. நான்‌--கன்னடக்காரன்‌. தமிழன்‌ யார்‌ இதைச்‌ செய்தான்‌ ¥ என்று கேட்கிறார்‌. பெரியாருக்குதீ தமிழ்‌ தவிரக்‌ கன்னடமும்‌ தெலுங்கும்‌ நன்றாகத்‌ தெரிந்த மொழிகள்‌. கன்னடமொழியில்‌ பேச இவருக்கு அதிக வாய்ப்பில்லை. ¢ நான்‌ தெலுங்கில்‌ பிரசங்கம்‌ செய்வேன்‌. ஆனால்‌ அந்த அளவுக்குத்‌ தாய்மொழி கன்னடத்தில்‌ பிரசங்கம்‌ செய்ய முடிவதில்லை ? என்கிறார்‌. * விடுதலை? இதழை நீங்கள்‌ தானே அவகீகீனீர்கள்‌ ? எந்த வருஷம்‌? * விடுதலை ஆரம்பிதீது முப்பத்தஞ்சு வருஷம்‌ ஆச்சு. 1936-ல்‌ காலணா விலையில்‌ ¢ விடுதலையை ஆரம்பிச்சேன்‌, அதற்கு முன்னால்‌ ¢ திராவிடன்‌? நானே நடத்தினேன்‌. (1920). பிறகு; 1925-ல்‌ குடி அரசு? ஆரம்பிச்சேன்‌. * விடுதலை? ஆரம்பிச்ச சாலத்திலே பொப்பிலி ராஜா மாசம்‌ ரூ. 250 கொநதீதுவந்தார்‌. நஷ்டஈடு மாதிரி, மாதம்‌ மாதம்‌ செக்‌ கொடுத்துவிடுவார்‌. சில மாதங்களிலேயே பத்திரிக்கை நல்லா ஓடவும்‌ அப்புறம்‌ அது. தேவைப்படலே? * விடுதலையை விடுதலை? என்று நீங்கள்‌ எழுதக்‌ காரணம்‌... £ தமிழில்‌ எழுத்துக்கள்‌. அதிகம்‌, லை, (னை? “ண? இந்த மாதிரி பல எழுதீ.துகள்‌ தேவையே இல்லாதவை. இதுமாதிரி எழுத்துக்கள்‌ அதிகமா இருக்கிறதாலே தான்‌ தமிழ்‌ மற்ற மொழிகளைவிடக்‌ கஷ்டமாயிருக்கு. இங்கிலீஷ்காரன்‌ சமஸ்கிருத சுலோகங்ளைக்கூட ஒப்பிக்கிறான்‌) ஆனால்‌ தமிழ்ப்‌ பாட்டுகளை அவனாலே படிச்சு ஒப்பிக்க முடியல்லே. எனக்குத்‌ தெரிந்த கலெக்டர்‌ ஒருதீதர்‌--இங்கிலீஷ்காரர்‌-தெலுங்கு நல்லாப்‌ பேசுவாரு. ஆனால்‌ அதுமாதிரி அவராலே தமிழ்‌ பேசமுடியாது. தமிழ்‌ எழுதீதுக்களில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியது அவசியம்‌. எழுத்துக்களின்‌ எண்ணிக்கை கொறைஞ்சால்‌ படிக்கிறது சுலபமாகும்‌. ¢ தமிழைக்‌ ¢ காட்டுமிராண்டி பாஷை? என்று நீங்கள்‌ குறிப்பிட்டீர்களே...? ¢ ஆமாம்‌, சொன்னேன்‌. என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன்‌ சண்டை போட்டுக்கிட்டுத்‌ தமிழிலே திட்டறானே ..எப்படிதீ திட்டறான்‌ ? சண்டைக்காரனைமட்டுமா திட்டறான்‌ ₹ அவன்‌ அம்மா, அக்கா, பொண்டாட்டி--எல்லாரையும்னா இழுக்கிறான்‌ ₹ (இந்த இடத்தில்‌ சில நடைமுறைத்‌ தமிழ்‌ வசவுகளை உதாரணத்துக்குக்‌ குறிப்பிடுகிறார்‌ திரு. பெரியார்‌. அவற்றை நான்‌ எமுதாமலே வாசகர்கள்‌ புரிந்து கொள்ளக்‌ கூடுமே?) அதேமாதிரி சண்டைவந்து இங்கிலீஷ்லே திட்டினா * பூல்‌£னு திட்டலாம்‌; ¢ இடியட்‌£னு திட்டலாம்‌. தமிழிலே திட்டறமாதிரி அவ்வளவு கேவலமாகத்‌ திட்டறதுண்டா ? அதுவும்‌, கிராமங்களிலே பெண்பின்ளைங்க சண்டைபோட்டுக்கிறதைக்‌ கேட்டா நான்‌ சொல்லறது புரியும்‌? என்று பெரியார்‌ கூறும்போது, அருகிலுள்ள தி ந. என்‌. என்‌, சம்பந்தம்‌, ஏன்‌ அய்யா ! இங்கே சென்னையிலேமட்டும்‌ என்ன வாழுது? அதைவிட மோசமாயிருக்கு ! என்கிறார்‌. பெரியார்‌ தலையாட்டியவாறே; *₹ உம்‌) அப்படியா? அப்போ நான்‌ சொன்னதிலே என்ன தப்பு? இந்திமேலே இருந்த துவேஷம்‌ தமிழ்மேலே அன்பா மாறித்து. அதுதான்‌ உண்மை. குழந்தைகளெல்லாம்‌ வீட்டிலேயே இங்கிலீஷில்‌ பேசவேணும்‌. அது நல்ல நாகரிகத்தையும்‌ கொண்டு வரது. ஏன்‌ * குறளை? எடுத்துக்குங்க! நான்‌ மட்டுந்தான்‌. குறளைக்‌ கண்டிக்கிறேன்‌. - - ‘www.thamizham.net - Free E book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1229 6 ஏன்‌ கண்டுக்கிறிர்கள்‌ P ¢ குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றிவிடுமேன்னுதான்‌. குறள்‌ இரண்டாயிரம்‌ வருஷதீதுக்கு மூந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாகீகிவிட்ட து. பெண்‌ ஒழுக்கம்‌ பற்றி எவ்வளவு சொல்லி இருக்கு ¢ குறள்‌ லே ஆண்‌ ஒழுக்கம்பத்தி...? 6..தாம்‌ வீழ்வார்‌ 2 அன்ற குறளைப்‌ பாருங்க அதுதான்‌ மோட்சம்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌. அந்தக்‌ காலத்து நாகரிகம்‌ அப்படி. இந்தக்‌ காலத்‌ துக்குக்‌ குறள்‌ கருதீ.துக்கள்‌ எல்லாமே ஒதீகுவர முடியுமா T நான்‌ குறள்மாநாடு நடத்தியதாலே சில பேர்‌ என்னைக்‌ கண்டிச்சாங்க. கலைஞர்கூட * அதை (குறள்‌) ஒண்ணையாவது விட்டுவிடக்‌ கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி. அடிகளாரும்‌ கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம்‌ வருஷதீதுக்கு முந்தியது குறள்‌. அதை அப்படியே இப்பவும்‌ நாம்‌ ஏதீ.துக்கணும்னா...! தம்‌ மனதுக்குச்‌ சரியென்று படாத எந்தக்‌ கருத்தையும்‌ யார்‌ சொன்னாலும்‌ ஏற்றக்கொள்ளுவதில்லை பகுதீதறிவுத்‌ தந்தை. கட்டுப்‌ பாடுகளை அறவ வெறுப்பவர்‌ திரு. ஈ. வெ. ரா. அதுபற்றி அவர்கூறுகிறார்‌ ₹ * கட்டுப்பாடு எதுவுமே தேவை இல்லை என்பவன்‌: நான்‌. இளமையிலேயே நான்‌ எதிலும்‌ கட்டுப்பட்டதில்லை. திருடக்கூடா துன்னா, ஏன்‌? என்று யோசிப்‌3பன்‌, அப்பவே. திருடறது *பாவம்‌!னா ஒப்புக்கமாட்டேன்‌, மதத்தின்‌ பேராலே மக்களுக்குக்‌ கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க அதனாலே ஜனங்கள்‌ பிரீயாக (தந்திரமாக) இருக்கமுடியல்லே. என்‌ வீட்டிலே வளர்ற இந்த சின்னப்‌ பிள்ளைங்க, என்னை ¢ அப்பான்னு கூப்பிடறாங்க, அன்பா இருக்காங்க. நாளைக்கு இவங்க வளர்ந்து பெரியவங்க ஆனா, சாமி கும்பிடுவாங்களா ? மாட்டாங்க ! எந்தக்‌ கட்டுப்பாடும்‌ தேவை இல்லை. உணவுக்‌ கட்டுப்பாடுந்தான்‌ ! உடம்புக்குக்‌ கெடுதி செய்கிற எதையும்‌ திங்க வேண்டாம்‌. ஆனா ஆடுதின்னறவன்‌ மாடுதின்னக்‌ கூடாதா? ஆரும்‌ புல்தான்‌ தின்னறது. மாடும்‌ புல்தான்‌ தின்னறது. மாடு தின்னாப்‌ * பாவம்‌ னு சொல்றாங்க. காரணம்‌, மதக்‌ கட்டுப்பாடுதானே | மனித சமுதாயத்தின்‌ மனத்தை மாத்தவேணும்‌, திருடினாப்‌ பாவம்னு சொன்னாப்‌ போதாது. திருடவேண்டிய அவசியம்‌ இல்லாத வகையிலே சமுதாய நிலையை மாத்தணும்‌. ஆழ்ந்து சிந்தித்துத்‌ தெளிந்து அவர்‌ கூறும்‌ கருதீதுக்கள்‌ நம்மையும்‌ சிந்தனையில்‌ ஆழ்த்துகின்றன. தமது சொற்பொழிவுகளில்‌ அவர்‌ *சாதி?யைக்‌ குறிப்பிடுவதுண்டு. அதுபற்றிக்‌ கேட்டகற்கு ' மதம்‌, கடவுள்‌ எல்லாம்‌ இரண்டாயிரம்‌ வருஷங்களுக்கு முன்னே ஏற்பட்டது. அதையே பின்பற்றுவதால்‌ இன்றைய உணர்ச்சி ஜனங்களுக்கு வரவில்லை. நாளடை விலே மக்கள்‌ அதிகம்‌ சிந்திப்பாங்க அவங்க சீர்திநந்‌ கவேண்டுமே என்பதுதான்‌ என்‌ நோக்கம்‌. துவேஷம்‌ இல்லை. துவேஷ அடிப்படையில்‌ சொன்னால்தான்‌ ஜனங்கள்‌ சிந்திப்பாங்க ; சீர்திருந்துவாங்க? என்றார்‌ பெரியார்‌. 6 இராஜாஜிபற்றி உங்கள்‌ கருத்து என்ன என்று வினவுகிறேன்‌. இராஜாஜி அவர்கள்‌ அமரர்‌ஆகிய மூன்றாவதுநாள்‌ நிகழ்ந்த பேட்டி கிதுஃ ¢ நான்‌ ¢ விடுதலை?யிலே நேத்து தலையங்கம்‌ எழுதி இருக்கேன்‌. அதைப்‌ பாருங்‌ களேன்‌? என்று பெரியார்‌ கூறுகிறார்‌. விடுதலை நிருவாகி திரு. சம்பந்தம்‌ 26-12-72 தேதியிட்ட * விடுதலை ? கிதழ்‌ ஒன்றினை என்னிடம்‌ கொடுத்து ¢ அய்யா கைப்பட எழுதிய தலையங்கம்‌ இது? என்கிறார்‌. *அந்தக்‌ கையெழுத்துப்‌ பிரதி இருக்கிறதா? என்று கேட்டு அதனையும்‌ வாங்கிப்‌ பெரியாரின்‌ கையெழுத்தைப்‌ பார்க்கிறேன்‌. அமரர்‌ இராஜாஜிபற்றிப்‌ பெரியார்‌ எழுதிய தலையங்கத்தின்‌ கையெழுத்துப்‌ பிரதியில்‌ முதல்‌ பக்கத்தை வாசகர்களின்‌ பார்‌ வைக்கு அப்படியே சமர்ப்பிக்கிறோம்‌. அதனைப்‌ படித்துப்‌ புரிந்துகொண்டு அ2சுக்‌ கோப்பது * விடுதலை? அலுவலகதீதினருக்கு எளிது என்று கூறுகிறார்‌ திரு. சம்பந்தம்‌. ஆனால்‌ நமது வாசகர்களுக்கு அப்படி கிராதெனத்‌ தோன்‌ றவதால்‌ அதன்‌ வாசகம்‌ இதோ: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1230 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ இராஜாஜியின்‌ மறைவு: ¢ தமிழ்நாட்டில்‌ ஒப்பிலா மணியாய்‌ வாழ்ந்து அரும்பெரும்‌ காரியங்களைச்‌ சாதித்த பெரியார்‌ இராஜாஜி 95 ஆம்‌ வயதில்‌ முடிவெய்தி மறைந்துவிட்டார்‌, அவரது பெருமைக்கு ஓர்‌ எடுதீகுக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால்‌ இராஜாஜி இல்லாது இருந்திருந்தால்‌ மகாதீமா காந்தியே இருந்திருக்கமாட்டார்‌. கி.து மாத்திரமல்ல. இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது தலையங்கத்தின்‌ இறுதியில்‌ பெரியார்‌ கையெழுதீதிட்டுள்ளார்‌. இது போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில்‌ அவரே கைப்பட எழுதுகிறாராம்‌. நிரம்பப்‌ படிப்பதும்‌ உண்டாம்‌. இராஜாஜி வயதில்‌ பெரியவரா அல்லது நீங்களா? என்று பெரியாரைக்‌ கேட்கிறேன்‌. பலருக்கு இந்த அம்யம்‌ உண்டல்லவா * அவர்தாம்‌ பெரியவர்‌, அவர்‌ கவர்னர்‌ ஜெனரலா இருந்தபோது ஒரு சமயம்‌ நான்‌ அவருடைய வயதைக்‌ கேட்டேன்‌. அப்போ தெரிஞ்சுது அவர்தான்‌ மூதீதவர்னு. அவர்‌ டிசம்பர்‌ 1878. நான்‌ பிறந்தது 17-9-1879. கிட்டத்தட்ட ஒன்பது மாசம்‌ அவர்‌ என்னை விடப்‌ பெரியவர்‌? என்று விளக்குகிறார்‌ பெரியார்‌. அமரர்‌ இராஜாஜி * பெரியவர்‌ 2] திரு. ஈ. வெ. ரா ¢ பெரியார்‌.” விடைபெறுமுன்‌ * மக்களுக்கு நீங்கள்‌ கூற விரும்பும்‌ சேதி ஏதாகிலும்‌ உண்டா P என்று கேட்கிறேன்‌. ¢ இன உணர்ச்சி, காலித்தனம்‌ கூடாது ? என்கிறார்‌ பெரியார்‌, பெரியாருடன்‌ உரையாடுவது ஒரு சுகமான அனுபவம்‌. என்ன கேள்வி கேட்டாலும்‌ * வெட்டு ஒன்று, துண்டு இரண்டு? என்ற வகையில்‌ எதையும்‌ பூசி மெழுகாமல்‌ நறுக்குதி தறித்தாற்போல்‌ பதிலிற க்கிறார்‌. ¢ சிந்தனைகீகுத்‌ தெளிவாகாத விஷயங்களை நம்புவதை நான்‌ ஏற்க முடியாது? என்று கூறும்‌ இந்தப்‌ பகு தீதறிவாளர்‌, குழந்தை உள்ளம்‌ படைத்‌ தவர்‌. தொண்ணூற்று நான்கு வயதிலும்‌ தெளிவாக ஆழ்ந்து, சிந்தித்துத்‌ தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல்‌ கருதீதுக்களை வெளியி கிறார்‌. இப்படிச்‌ சொன்னால்‌ எதிராளி என்ன நினைப்பானோ என்று அவர்‌ கவலைப்படுவதே இல்லை. இவருடைய மேடைப்‌ பேச்சுக்களில்‌ அடிக்கடி * வெங்காயம்‌? என்ற சொல்‌ அடி படுவது வழக்கம்‌. இந்தப்‌ பேட்டியின்‌ போது ஒருமுறைகூட அந்தச்‌ சொல்லினை அவர்‌ கையாளவில்லை. நூறு நிமிஷங்கள்‌ ஓடின தே தெரியவில்லையே | [27-12-1972-ல்‌ திரு, பாணன்‌ அவர்களின்‌ பேட்டி---4 கலைமகள்‌ ? பிப்ரவரி) 1973] 4, என்‌ வாறிசு யார்‌ ? கேள்வி $ உங்களுடைய அரசியல்‌ வாரிசு யார்‌ 1 பதில்‌ 1 ஏனக்கு அரசியல்‌ வாரிசு என்று யாரும்‌ கிடையாது) என்னுடைய கொள்கை களும்‌ கருதீதுக்களும்தான்‌ வாரிசு $ வாரிசு என்பது தானாகவே ஏற்படவேண்டும்‌. கேள்வி 8 உங்களுடைய கொள்கைகள்‌, கருதீ.துக்கள்‌, எண்ணங்கள்‌, கோட்பாடுகள்‌. இவைகளைப்‌ பரப்ப ஊர்‌ தோறும்‌ பகுத்தறிவுப்‌ பிரச்சார நிலையங்கன்‌ அமைக்கப்‌ போகிறீர்களா? பதில்‌ 8 இதற்கான முயற்சிகள்‌ செய்யப்பட்டு வருகின்றன. ஆனால்‌ என்னென்‌ னவோ செய்ய வேண்டும்‌ என்று திட்டமிட்டு இருந்தேன்‌. ஆனால்‌, இப்போதுள்ள சூழ்‌ நிலையில்‌ விடுதலைப்‌ போராட்டம்தான்‌ முக்கியமாகத்‌ தெரிகிறது. www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1231 சேள்வி 8 முன்பு ஒரு முறை திருச்சியில்‌ நடந்த சிலை திறப்பு விழாவில்‌? * தமிழ்‌? காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே ! அப்படியானால்‌ தமிழர்கள்‌: காட்டுமிராண்டிகளா ? பதில்‌ £ * தமிழ்‌? காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக்‌ காரணம்‌-இன்றைக்ரும்‌, 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப்‌ பழக்கவழக்கங்களில்‌ இருந்து வந்தோமோ, அதில்‌ தானே கீன்னும்‌ இருந்து கொண்டு இருக்கிறோம்‌. அந்தப்‌ பழக்க வழக்கங்களில்‌ இருந்து நம்மை இன்னும்‌ நாம்‌ மாற்றிக்கொள்ளாமல்‌, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணங்கள்‌ காட்டிக்கொண்டு; கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால்‌ அதற்கு என்ன பொருள்‌? கேள்வி ? தமிழ்‌ இலக்கியங்களை நீங்கள்‌ குறை கூறுவது ஏன்‌ ? பதில்‌ 8 தமிழ்‌ இலக்கியங்களை எழுதிய புலவர்கள்‌ அவற்றைக்‌ கடவுளோடும்‌, மதத்‌ தோடும்‌ இனதீதோடும்‌ இணைத்து எழுதி வைத்திருக்கிறார்களே தவிர, தமிழ்‌ வளர: வேண்டும்‌ என்பதற்காக என்ன செய்து வைத்திருக்கிறார்கள்‌ ! தமிழ்‌ என்றாலே சைவம்‌, மதம்‌, கடவுள்‌ என்று நினைக்கிறானே தவிர; மக்கள்‌ வாழ்க்கைக்கு, வளருவதற்கு எவனும்‌ எ.துவுமே சொல்லவில்லையே 1 அதை எப்படி நம்முடைய வளர்ச்சிக்குப்‌ பயன்படுத்த முடியும்‌, ஏற்றுக்கொள்ள முடியும்‌? இன்னமும்‌ அரசியல்‌ சட்டதீதிலும்கூட, மதமும்‌ இனமும்‌ சாதியும்‌ வளர்க்கப்‌ படுகிறதே தவிர, அதை மாற்ற எவன்‌ என்ன வழி சொல்லியிருக்கிறான்‌ ¥ [மாலை முரசு8--16-9.1973] 5. என்‌ பழக்கங்கள்‌ கேள்வி 8 தங்களைப்‌ போல்‌ 95 வயது வரையிலும்‌ வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்‌? பதில்‌ £ எப்போதும்‌ ¢ ஆக்டிவாக ? (சுறுசுறுப்பாக) இருக்கவேண்டும்‌. கேள்வி? இந்த வயதிலும்‌, தாங்கள்‌ பல மைல்கள்‌ சுற்ஜ.ப்‌ பயணம்‌ செய்கிறீர்களே, உடல்நலம்‌ பாதிக்காதா 8 பதில்‌ $ வயதிற்கும்‌, இதற்கும்‌ எந்தவிதச்‌ சம்பந்தமும்‌ இல்லை. என்னைப்‌ பொறதீத வரை சும்மா இருக்கப்‌ பிடிக்காது. சுற்றுப்பயணம்‌ செய்தால்தான்‌ நன்றாக இருக்கிறது. கேள்வி ₹ எத்தனை மணி நேரம்‌ தூங்குகிறீர்கள்‌ 4 பதில்‌ 1 சாதாரணமாக இரவு 8, 9 மணிக்குத்‌ தூங்கிவிடுவேன்‌. பொதுக்கூட்டங்கள்‌, நிகழ்ச்சிகள்‌ இருந்தால்‌, இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு மேல்‌ தூங்குவேன்‌. எப்படியும்‌, 8 மணி நேரம்‌ தூங்கிவிடுகிறேன்‌. கேள்வி 8 தங்கள்‌ உணவுப்‌ பழக்கம்‌ என்னென்ன 1 பதில்‌ 1 எப்பொழுதும்‌, காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன்‌. 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம்‌ சாப்பிடு$வன்‌. முன்பெல்லாம்‌, 4, 3 வாழைப்‌ பழங்கள்‌ சாப்பிட முடிந்தது. ஆனால்‌ இப்போது ஒரு பழதீதிற்கு மேல்‌ சாப்பிட முடியவில்லை. அதன்‌ பிறகு, பார்வையாளர்‌ களைச்‌ சந்திப்பேன்‌. இடையிடையே சிறிது காப்பி, பால்‌ அருநீதுவேன்‌. மதியம்‌ 12 - 1 மணிக்குள்‌ ஒரு கரண்டி சாதம்‌, சிறிதளவு மாமிசம்‌, தயிர்‌, குருமா, ஒரு வாழைப்‌ பழம்‌ இதுதான்‌ ஆகாரம்‌. மாமிசம்‌ சாப்பிடாவிட்டால்‌, அவ்வளவு திருப்திகரமாக இருக்காது www.thamizham.net - Free £ book 14௦ 3031 1232 பெரியார்‌ & வெ. ரா. சிந்தனைகள்‌ நிருபர்‌ ¢ மாமிசம்‌ சாப்பிடுவதால்‌ ஜீரண சதீதி பாதிக்கப்படவில்லையா ? பதில்‌ $ என்னைப்‌ பொறுத்தவரை, மற்ற உணவுப்‌ பதாரீதீதங்களைவிட மாமிசம்‌ சாப்பிட்டால்‌ ஜீரணமாகிவிடுகிறது. அதனால்‌ எந்தவிதத்‌ தொந்தரவும்‌ கிடையாது. மாமிசம்‌ இலலாவிட்டால்தான்‌ தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிஃகுள்‌ 2 இட்டிலி, ஒரு வாழைப்‌ பழம்‌, ஒரு டம்லர்‌ பால்‌, அத்துடன்‌ சரி. கரப்பியும்‌, பாலும்தான்‌ முக்கிய உணவு: கேள்வி : பொதுக்கூட்டங்கள்‌, மற்ற நிகழ்சீசிகள்‌ உள்ள நாட்களில்‌ என்ன செய்வீர்கள்‌ 3 பதில்‌ ₹ பொதுக்கூட்டங்கள்‌, இரவு 10 - 11 மணிக்கு முடிந்ததும்‌ அதன்‌ பின்பு தான்‌ சாப்பிடுவேன்‌. கேள்வி? ஒரு நாள்‌ பொழுதை எப்படிக்‌ கழிக்கிறீர்கள்‌ ? பதில்‌ 8 முன்பெல்லாம்‌ நிறையப்‌ புத்தகங்கள்‌ படிப்பேன்‌ ] எழுதுவேன்‌, ஆனால்‌ இப்போது படிக்கக்‌ கஷ்டமாக இருக்கிறது. எழுதுவதற்குச்‌ சலிப்பாக இருக்கிறது. யாராவது கட்டுரைகள்‌ கேட்டால்‌ எழுதித்‌ தருவேன்‌. அதீதுடன்‌ முன்பு மாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டுச்‌ சிந்திக்க வேண்டி இருக்கிற து. முன்பெல்லாம்‌ ஒன்றைப்‌ பற்றித்‌ தொடர்ச்சியாக வரும்‌, ஆனால்‌ இப்பொழுது நினைவாற்றல்‌ குறைந்துவருகிறது. கேள்வி: மது அருந்தும்‌ பழக்கம்‌ பற்றித்‌ தங்கள்‌ கருத்து என்ன ? தங்களுடைய அனுபவத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகி3றன்‌. பதில்‌ $ இது நாள்‌ வரை நான்‌ மதுவை அருந்தியதே யில்லை. ஆனால்‌ என்னைப்‌ பொறுத்தவரை பலருக்கு வாங்கீக்கொடுத்து இருக்கிறேன்‌. மது அருந்துவதால்‌ கெடுதி இல்லை. அளவுக்கு மேல்‌ போனால்தான்‌ எதுவுமே கெடுதலே தவிர, அள$வாடு இருந்தால்‌ எந்தவிதக்‌ கெடுதலும்‌ இல்லை, 100-க்கு 90 பேர்‌ அளவோடுதான்‌ குடிக்கிறார்கள்‌. கேள்வி 8 முன்பெல்லாம்‌ மாலை நேரங்களில்‌ கார்‌ மூலம்‌ உலாவப்‌ போவீர்களே, இப்போது போவதுண்டா ₹ பதில்‌ $ என்றைக்காவது ஒரு நாள்‌ போவேன்‌. முன்புபோல்‌ இப்போது போக முடிவதில்லை. பொழுது போகவே கஷ்டமாகதீதான்‌ இருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில்‌ போவதுண்டு கேள்வி $ கிளர்ச்சி, போராட்டம்‌ நடத்த வேண்டும்‌ என்கிறீர்களே, அது எப்படி இருக்கும்‌ 1 பதில்‌ ₹ என்‌ உடல்‌ வேண்டுமானால்‌ தளர்‌ நீதிருக்கலாம்‌. ஆனால்‌, நான்‌ அவற்றில்‌ நேரடியாகவே ஈடுபட நினைக்கி3றன்‌, நான்‌ என்ன சொல்லுகி?றனோ, அதை நானே முன்னின்று செய்தால்தானே நன்றாக இருக்கும்‌ 8 ஒ.துங்கிக்கொள்வது என்பது எனக்குப்‌ பிடிக்காது. கேள்வி : ஒரு குறிப்பிட்ட இனதீதாரீமீது தங்களுக்கு வெறுப்பு ஏற்படக்‌ காரணம்‌, தாங்கள்‌ அரசியலில்‌ ஈடுபட்ட சமயத்தில்‌ முதல்‌ முதலாக ஒரு விருந்தில்‌ தாங்கள்‌ அலட்சிய மாக நடதீதப்பட்டதுதான்‌ என்று சொல்லப்படுகிறதே, அதுதான்‌ உண்மையா? . பதில்‌ ₹ எனக்கு; யார்‌ மீதும்‌ வெறுப்புக்‌ கிடையாது. நான்‌ எதையும்‌ லட்சியம்‌ செய்யாமல்‌, முரட்டுத்தனமாக யதேச சையாகத்‌ திரிந்தேன்‌. அந்தச்‌ சமயத்தில்‌ எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும்‌ சமுதாயத்தில்‌ கிருந்த மூடப்பழக்க வழக்கங்களும்‌ தான்‌ காரணமே தவீர, வேறு காரணம்‌ எகுவுமில்லை. ஆனால்‌, அந்தக்‌ காலத்தில்‌ விருந்துகளில்கூட நம்மை மிக கிழிவாகவும்‌, தரக்‌ குறைவாகவும்‌ நடத்தி ஒதுக்கிய வந்தார்கள்‌. [மாலை முரசு 1--16-9.1973] www.thamizham.net - Free £ book No 3031 1233 4. அறிவுரை 1. ஆசிரியர்களுக்கு சகோதரிகளே! சகோதரர்களே | இன்று நீங்கள்‌ எனக்குச்‌ செய்த வரவேற்பு, ஆடம்பரம்‌, உபசாரம்‌, வரவேற்புப்‌ பதீதிரம்‌ முதலியவைகளைக்கண்டு எனது மனம்‌ மிகவும்‌ வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான்‌ எந்த விதத்தில்‌ தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மாநாட்டுக்கு, அக்‌ கல்வியை ஒரு சிறிதும்‌ பயிலாத நான்‌ எவ்விததீதில்‌ தகுதி யுடையவனாவேன்‌ ? உங்களின்‌ அன்பான வேண்டுகோளை மறுக்கப்‌ போதிய தைரிய மில்லாத காரணதீதாலேயே ஒருவாறு இப்‌ பதவியை ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன்‌. என்னுடைய வாழ்நாளில்‌ சுமார்‌ 2 வருஷ காலந்தான்‌ நான்‌ பன்ளியில்‌ படிதீதிருப்பேன்‌. அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில்‌ நான்‌ பாடம்‌ படிதீத காலதீதைவிட உபாதீதியாயரிடம்‌ அடிபட்ட காலந்தான்‌ அதிகமா யிருக்கும்‌. இதையறிந்த என்‌ பெற்றோர்கள்‌, * இவன்‌ படிப்புக்கு இலாயக்கில்லை என்பதாகக்‌ கருதிதீ தாங்கள்‌ செய்துவந்த தொழிலாகிய வர்தீதகதீதில்‌ என்னுடைய 11-வது வயதிலேயே ஈடுபடுதீதிவிட்டார்கள்‌. இந்த 2 வருஷக்‌ கெடுவிலேயும்‌ என்‌ கையெழுத்துப்‌ போடத்தான்‌ கற்றுக்கொண்டேன்‌ என்று சொல்லலாம்‌. ஆகவே, கல்வி முறையிலும்‌ உங்கள்‌ குறைகளைப்பற்றியும்‌ நான்‌ உங்களுக்கு எந்த விஷயத்தையும்‌ சொல்லக்கூடிய சக்தி என்னிடதீதில்‌ இல்லை. ஏதோ என்‌ புதீதி அனுபவதீதிற்கெட்டியவரையில்‌ சில வார்தீதைகளைச்‌ சொல்லுகிறேன்‌. தற்கால ஆசிரியர்கள்‌ தாங்கள்‌ ஏற்றுக்கொண்டிருக்கும்‌ ஆசிரியதி தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக்‌ கருதிப்‌ பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும்‌, அதீ தொழிலுக்குரிய கடமைகளைச்‌ சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில்‌ இருந்துகொண்டு, அத்‌ தொழிலைத்‌ தங்கள்‌ வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய்‌ இருக்கிறது. ஆசிரியர்கள்‌ இம்‌ மாதிரி மகாநாடுகள்‌ கூடிப்‌ பேசுவதும்‌, தீர்மானிப்பதும்‌, தங்களுக்குச்‌ சில சவுகரியத்தை உண்டாக்கிக்‌ கொள்ளவும்‌, தங்கள்‌ சம்பளத்தை அதிகப்படுத்திக்‌ கொள்ளவுமே யல்லாமல்‌ தங்களால்‌ மக்களுக்குச்‌ செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக்‌ கொள்ளவோ, தேச முன்னேற்றதீதிற்கு அனு கூலமான கல்வியைப்‌ போதிக்கும்‌ சக்தியை யடையவோ ஒரு பிரயதீதனமும்‌ செய்ததாக நான்‌ அறியவே இல்லை. முதலாவது, நீங்கள்‌ படித்த கல்வியும்‌ நீங்கன்‌ கற்றுக்கொடுக்கப்போகும்‌ கல்வியும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கு ஓர்‌ ஆதாரமாகக்‌ கருதிக்‌ கற்கவும்‌, கற்பிக்கப்படவும்‌ ஏற்பட்டிருக்‌ கிறதேயல்லாமல்‌, மக்கள்‌ அறிவுத்‌ ததீ.துவதீதிற்கோ, தேசதீதிற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும்‌ அளிக்க முடியாததாய்‌ இருக்கிறது என்பது நீங்கள்‌ அறிந்த விஷயமேதான்‌. ஆரம்பக்‌ கல்வி முதல்‌ உயர்தரக்‌ கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும்‌ கவனிதீதால்‌, தற்காலம்‌ அடிமைத்‌ தன்மையையும்‌, சுயமரியாதையற்ற தன்மையையும்‌ உண்டாக்கிக்‌ கொடுமையான ஆட்சிமுறைகொண்ட ஒரு அரசாங்கதீதிற்கு உதவிசெய்து வயிறு வளர்க்கும்‌ தேசத்‌ துரோகிகளை உற்பதீதி செய்யும்‌ இயந்திரங்களாகத்தானே ' இருக்கிறதே யல்லாமல்‌ வேறென்ன இருக்கிறது? சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள்‌ என்ற பெயரையே யாருக்கு உபயோகப்‌ படுதீதலாமென்றால்‌, முதலில்‌ நமது பெண்மக்களுகீகுதீதான்‌ உபயோகப்படுதீதலாம்‌. ஏனெனில்‌, நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள்‌ அவர்களுடைய தாய்மார்களாகிய 1696-1558 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1234 பெரியார்‌ ஈட, வெ. ரா, சிந்தனைகள்‌ நமது பெண்களேயாவார்கள்‌. அக்‌ குழந்தைகளுக்கு 6, 7 வயதுவரையிலும்‌ தாய்மார்களே. தான்‌ உபாதீதியாயர்களாக இருக்கிறார்கள்‌, மேல்நாட்டுப்‌ பழக்க வழக்கங்களிலும்‌ இவைதான்‌ காணப்படுகின்றன. எனவே, இரண்டாவதாகதீதான்‌ நீங்கள்‌ ஆசிரியர்கள்‌ ஆவீர்கள்‌, நீங்களிருவரும்‌ எப்படிப்‌ பிள்ளைகளைப்‌ படிப்பிக்கின்றீர்களனோ அப்படியே அவர்கள்‌ தேசத்திற்கும்‌, தேச நன்மைக்கும்‌, ஒழுக்கதீதிற்கும்‌ உரிய மக்களாய்‌ வாழக்கூடும்‌. எனவே தேசம்‌ மக்களாலும்‌, மக்கள்‌ ஆசிரியர்களாலும்‌ உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால்‌, அப்பேர்ப்‌ பட்ட ஆரம்ப ஆசிரியரீகளாகிய பெண்களோ நமது நாட்டில்‌ பிள்ளைபெறும்‌ இயந்திரங்க ளாக இருக்கின்றார்கள்‌. அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம்‌ இடங்கொடுத்தா லல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால்‌ முடியும்‌? ஆகவே, அந்த முதலாவது ஆரம்ப ஆசிரியர்களின்‌ யோக்கியதை இப்படியாய்விட்டது ! அடுத்தாற்போலுள்ள, இரண்டாவது ஆரம்ப ஆசிரியர்களாகிய உங்கள்‌ யோகீகிய தையோ உங்கள்‌ வயிற்றுப்பாட்டுக்கு * கான்பரன்ஸ்‌? கூட்டவேண்டியதாகப்‌ போய்‌ விட்டது. உங்கள்‌ இருவர்களாலும்‌ கற்பிக்கப்படப்போகிற பிள்ளைகள்‌, எப்படித்‌ தக்க யோக்கியதை அடையமுடியும்‌ ? கல்வியென்பது வயிற்றுப்‌ பிழைப்புக்காக மாத்திரமல்ல $ அது அறிவுக்காகவும்‌ ஏற்பட்டது என்பதாக நாம்‌ எடுதீதுக்கொண்டால்‌, மக்கன்‌ சுயமரி யாதையோடும்‌, சுதநீதிரதீதோடும்‌, மற்ற மக்களுக்கு இன்னல்‌ விளைவிக்காமலும்‌, அன்பு, பரோபகாரம்‌ முதலியவைகளோடும்‌ கண்ணியமாய்‌ உலக வாழ்க்கையை நடதீததீ தகுந்த ஞானமும்‌ உண்டாகதீ தக்கதாக இருக்கவேண்டும்‌. இவைகளை அறிந்தே வள்ளுவரும்‌ * உலகதீதோடு ஒட்ட ஒழுகல்‌ பல கற்றும்‌ கல்லார்‌ அறிவிலாதார்‌? என்றும்‌, ¢ தாம்‌ இன்புறுவது உலகின்புறக்‌ கண்டு காமுறுவர்‌ கற்றறிந்தார்‌? என்றும்‌, * ஒத்ததறிவான்‌. உயிர்‌ வாழ்வான்‌ மற்றையான்‌ செதீதாருன்‌ வைக்கப்படும்‌? என்றும்‌ சொல்லி இருக்‌ கின்றார்‌. இதற்கேற்ற கல்விக்கு நீங்கள்‌ என்ன செய்கிறீர்கள்‌? நாய்க்கு நாலு கால்‌, பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதவன்‌ குருடன்‌, திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக்கொடுப்பதினால்‌ என்ன பலன்‌ ஏற்பட்டுவிடக்கூடும்‌? இவைகள்‌ எல்லாம்‌ குழந்தைகள்‌, தானாகவே படிதீதுக்கொள்ளும்‌. ஒருவனை அடிதீதால்‌ அவன்‌ திரும்பி அடிதீதுவிடுவான்‌ $ ஒருவனை வைதால்‌ அவன்‌ திரும்பி வைதுவிடுவான்‌ ] திருடினால்‌ பிடிதீ.து நன்றாக உதைதீதுவிடுவார்கள்‌ என்பதும்‌, நாயும்‌ பூனையும்‌ கண்ணில்‌ பார்க்கும்‌ போதே கால்‌ எவ்வளவு என்பதும்‌, வாலுண்டென்பதும்‌ தெரிநீதுகொள்ளுவார்கள்‌ இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும்‌, பணச்செலவும்‌, மெனக்ீகெடும்‌ வேண்டிய தில்லை என்பதே நமது அபிப்பிராயம்‌. நீங்கள்‌ முதலில்‌ மக்களுக்குச்‌ சுயமரியாதை இன்னதென்பதைக்‌ கற்றுக்கொடுக்க வேண்டும்‌) மானம்‌, ஆண்மை இன்னதென்பதைக்‌ கற்றுக்கொடுக்க வேண்டும்‌ ; சமத்து வத்தைக்‌ கற்றுக்‌ கொடுக்கவேண்டும்‌) மக்களிடத்தில்‌ அன்பு இருக்கக்‌ கற்றுக்கொடுக்க வேண்டும்‌] தேசாபிமானதீதைக்‌ கற்றுக்‌ கொடுக்கவேண்டும்‌. இவைகளில்‌ ஏதாவது உங்களால்‌ கற்பித்துக்‌ கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள்‌ மனதையே கையை வைதீதுகீ கேட்டுப்‌ பாருங்கள்‌. நீங்கள்‌ மாத்திரமல்ல, உங்களைவிடப்‌ பெரிய சகலகலா வல்லபர்களிடதீதில்‌ படிதீது, எம்‌. ஏ, டாக்டர்‌ முதலிய பட்டங்கள்‌ பெற்ற பையன்களும்‌, ஒரு காப்பிக்‌ கடைக்குப்‌ போனால்‌ தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில்‌ கிண்ணம்‌ தூக்குபவனைக்‌ கண்டு சாமி ஒரு கப்‌ காப்பி கொண்டு வா? என்று கூப்பிடுகிறான்‌. தான்‌ மோட்சத்திற்குப்‌ போவதற்கு மற்றொருவன்‌ கையில்‌ பணத்தைக்‌ கொடுத்து அவன்‌ காலில்‌ விழுந்து கும்பிடுகிறான்‌ ) தன்‌ தேசதீதையும்‌, மக்களையும்‌ காட்டிக்கொடுத்து வயிறு: வளர்ப்பதில்‌ போட்டி போடுகிறான்‌. இந்தப்‌ பட்டமெல்லாம்‌ கல்வியாகுமா? இதைப்‌ பெற்றவர்களெல்லாம்‌ படிதீதவர்களாவர்களா 8 வண்ணான்‌, அம்பட்டன்‌, தச்சன்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 விறிவு வளர்ச்சி 1235 கொல்லன்‌, சக்கிலி முதலியோர்‌ எப்படித்‌ தங்கள்‌ தங்கள்‌ தொழிலைக்‌ கற்றுத்‌ தேர்ந்திருக்‌ கிறார்களோ, அப்படியே தற்காலம்‌ பி.ஏஃ எம்‌.ஏ, என்ற படித்தவர்கள்‌ என்போர்களும்‌ அந்தப்‌ பாடத்தைக்‌ கற்றவர்களாவார்கள்‌. வண்ணானுக்கு எப்படிச்‌ சரிதீதிர பாடம்‌ தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந்‌ தொழில்‌ தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப்‌ பூகோளப்‌ பாடம்‌ தெரியாதோ, அப்படியே எம்‌.ஏ. படிதீதவனுக்குப்‌ பிறருக்குச்‌ சவரம்‌ செய்யத்‌ தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும்‌ வேத வியாக்கியானங்களும்‌ தெரியாதோ, அப்படியே விதீவான்களுக்கும்‌ சாஸ்திரிகளுக்கும்‌ செருப்புத்‌ தைக்கத்‌ தெரியாது. ஆகவே வண்ணான்‌; அம்பட்டன்‌, சக்கிலி முதலியோர்‌ களைவிட பி.ஏ. எம்‌.ஏ. விதீவான்‌; சாஸ்திரி முதலிய பட்டம்‌ பெற்றவர்கள்‌ ஒரு விதத்திலும்‌ உயர்‌ நீதவர்களுமல்லர்‌ ; அறிவாளிகளுமல்லர்‌ ) உலகதீதிற்கு அனுகூலமானவர்களுமல்லரீ. இவைகளெல்லாம்‌ ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும்‌ படித்தவர்கள்‌ முட்டாள்களாகவும்‌, சுயநலக்காரர்களாகவும்‌, சுயமரியாதையற்றவர்களாகவும்‌ இருக்கலாம்‌. இவ்வளவும்‌ படியாதவர்கள்‌ பரோபகாரிகளாகவும்‌, அறிவாளிகளாகவும்‌, சயமரியாதையுள்ளவர்களாகவும்‌ இருக்கலாம்‌. எனவே, இவைகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா ₹ நமது நாட்டின்‌ கேட்டிற்கும்‌ நிலைமைக்கும்‌ முதல்‌ காரணம்‌ தற்காலக்‌ கல்வி முறை என்பதே எனது அபிப்பிராயம்‌, முற்காலத்தில்‌ பனை ஓலையில்‌ எழுதித்‌ திண்ணைப்‌ பள்ளிக்கூடதீதில்‌ உட்கார்ந்து படிதீத படிப்பைவிடதி தற்காலப்‌ படிப்பு மக்களுக்கு என்ன. நன்மை செய்துவிட்டது ₹ ஓலைச்‌ சுவடியும்‌ எழுத்தாணியும்‌ ஆற்றுமணலும்‌ போய்‌, காகிதக்‌ குப்பைகளுக்கும்‌ பெரும்பெரும்‌ புதீதகங்களுக்கும்‌ இங்கி, பெட்டி, பேனா; பென்சில்‌ களுக்குமாக நமது பணங்கள்‌ சீமைக்குப்‌ போக ஏற்பட்டிருக்கிறதே யல்லாமல்‌ வேறு பலனுண்டா ? ¢ படிப்பில்லாத ? என்கிற முற்காலத்து மக்களைவிட, ¢ படிப்புள்ள ? என்கிற தற்காலத்து மக்கள்‌ ஒழுக்கத்தில்‌ எவ்விதம்‌ உயர்ந்திருக்கிறார்கள்‌ 6 படிப்பில்லாத காலத்தைவிட அன்பில்‌, அன்னியோன்யத்தில்‌, நம்பிக்கையில்‌ படிப்புள்ள மக்கள்‌ என்ன ஒத்திருக்கிறார்கள்‌ ₹ முன்காலதீதில்‌ ஒருவன்‌ வாங்கின கடனைக்‌ கொடுக்காவிட்டால்‌ அவன்‌ வீட்டு வாயிலில்‌ ஒரு பசுவையும்‌ அதன்‌ கன்றையும்‌ தீனி போடாமல்‌ கட்டிவிடுவது வழக்கம்‌. இந்தப்‌ பட்டினியின்‌ பாவதீதிற்கு அஞ்சி பெண்சாதியின்‌ தாலியை விற்றாவது கடனைக்‌ கொடுத்துவிட்டுதீதான்‌ வீதிப்புறம்‌ நடப்பான்‌ என்று எனது தகப்பனார்‌ சொல்லி இருக்கிறார்‌. கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது ௮ம்‌ மாதிரிச்‌ செய்தால்‌ படித்தவர்கள்‌ என்கின்ற வக்கீல்கள்‌, * பாலைக்‌ கறந்துவந்து நமக்குக்‌ கொடுதீது விடு) பாவம்‌ வந்து உன்னை என்ன செய்‌துவிடும்‌ பார்க்கலாம்‌? என்று தைரியம்‌ சொல்லி ஏமாற்றி வழிகாட்டி. வருவார்கள்‌, இதனாலேயே தற்காலம்‌ எத்தனை மாஜிஸ்ட்ரேட்‌ கச்சேரி, எதீதனை: முன்சீப்‌ கோர்ட்டு, எத்தனை செஷன்ஸ்‌, அய்க்கோர்ட்‌, எத்தனை போலீஸ்‌ கச்சேரி ஏற்‌ பட்டிருக்கிறது, பாருங்கள்‌ | இவைகளெல்லாம்‌ ¢ படிப்பில்லாத ? என்கிற முற்காலத்தில்‌ இருந்‌ தனவா ? படிப்பு என்னும்‌ தற்காலக்‌ கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஈன: மாக நடக்கத்‌ தூண்டி, அல்லல்படுதீதி, நாட்டையும்‌ சமூகத்தையும்‌ பாழ்படுதீதிவருகிறது 1 அறிவுக்‌ கல்வியின்‌ யோக்கியதை இப்படியானால்‌ தொழிற்‌ கல்வியின்‌ யோக்கியதை இதைவிட மோசமாக இருக்கிறது. தொழிற்கல்வி என்னும்‌ பெயரால்‌ தற்காலம்‌ நமது பணமும்‌, நேரமும்‌ மகீகளின்‌ அறிவும்‌ வீணாவதல்லாமல்‌ வேறென்ன பலனைக்‌ கண்டோம்‌ T தற்காலப்‌ பள்ளிக்கூடங்களில்‌ தொழிற்கல்வி என்ற பெயருடன்‌ கற்றுக்கொடுக்கும்‌ தொழிற்‌ கல்வி முறையும்‌ கொஞ்சமும்‌ சரியானதல்ல கொஞ்ச காலமாகத்‌ ¢ தேசியக்‌ கிளர்ச்சி? ஏற்பட்டதின்‌ பலனாய்‌ ஒவ்வொரு பள்ளிக் கூடங்களிலும்‌ தொழிற்கல்வி என்பதாகச்‌ சொல்லி, தச்சுவேலையும்‌, விவசாயமும்‌, இராட்டினம்‌ சுற்றுதலும்‌, நெசவு நெய்தலும்‌ முதலிய வேலை களுக்கென்று அனாவசியமாய்ப்‌ பணத்தையும்‌ நேரத்தையும்‌ பாழ்படுதீதுகின்‌றனரி வகீகீல்‌ மகனுக்கும்‌, ஜட்ஜ்‌ மகனுக்கும்‌, மிட்டாதார்‌ மகனுக்கும்‌, வியாபாரி மகனுக்கும்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3031 1236 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ பெரிய நிலசீசுவான் தார்கள்‌ மகனுக்கும்‌, ஒருங்கே உட்காரவைத்து சில மணி நேரம்‌ தச்சு வேலை கற்றுக்‌ கொடுப்பதாலும்‌, இராட்டினத்தைச்‌ சுற்றச்‌ சொல்வதாலும்‌, என்ன பயன்‌ விளையக்கூடும்‌ ? எல்லாத்‌ தொழிலும்‌ கற்றிருக்கட்டும்‌ என்பதற்காகவே சொல்வோமானால்‌, இந்த இரண்டு மூன்ற தொழிலாலேயே உலகதி தொழில்‌எல்லாம்‌ தெரிந்து விடுமா ₹ ஜீவனோ பாயதீதுக்கு என்று சொல்வோமானால்‌ மேற்கண்ட பிள்ளைகளெல்லாம்‌ இந்தத்‌ தொழிலை ஜீவனோபாயத்திற்காக ஏற்று ஜீவிக்க முடியுமா 8 ஆகவே, அறிவுக்காவது, ஜீவனத்திற்‌ காவது இந்தத்‌ தொழில்கள்‌ இப்‌ பிள்ளைகளுக்கு உபயோகப்படுகிறதா ₹ உயர்தரப்‌ பாடசாலை என்பவைகளில்‌ ¢ சயன்ஸ்‌! என்றும்‌, சரித்திரம்‌ என்றும்‌ எதைஎதையோ பணத்தையும்‌, காலத்தையும்‌ செலவழிதீதுச்‌ சொல்லிக்‌ கொடுத்து, உருப்போடச்‌ செய்து கற்றுத்‌ தேர்ந்த பிறகு, 30 ரூபாய்க்கு ஏவினவேலைசெய்து, படிப்பினுடைய சக்தியையும்‌ அறிவையும்‌ கொண்டல்லாமல்‌ மேல்‌ எஜமானனுக்ீகு மானத்தையும்‌ மனச்‌ சாட்சியையும்‌ விற்று நல்ல பிள்ளையாவதன்மூலம்‌ சம்பனதீதை உயர்தீதி, வாங்கிய சம்பளதீதில்‌ வாழ்ந்து தன்‌ காரியத்தைப்‌ பார்தீதுக்‌ கொண்டதோடு சாவதல்லாமல்‌, வேறு ஏதாவது பல்‌ குதீதுகிற இரும்புக்காவது உதவப்படுகிறதா ₹ அல்லது, அந்தத்‌ தொழிலுக்காவது இந்தப்‌ படிப்புகள்‌ உபயோகப்படுதீதப்படுகிறதா? அதுபோலவே, இக்‌ கைதீதொழில்களும்‌ வாழ்வுக்கோட பிழைப்புக்கோ உபயோகப்படாமல்‌ போகிறது. கைதீதொழில்‌ கற்றுக்‌ கொடுப்பதென்றால்‌ கூடுமானவரையில்‌ பிள்ளைகளின்‌ இயற்கை அறிவிற்கும்‌, வாழ்விற்கும்‌, வாழ்க்கைக்கும்‌ தக்கபடி தரந்‌ தரமாகப்‌ பிரித்து, அததுகளுக்குதி தகுந்த தொழில்களைச்‌ சொல்லிக்‌ கொடுத்து அதை அவர்களுக்கு உபயோகப்படும்படி செய்யவேண்டும்‌. பெண்களுக்கு இராட்டினம்‌ சொல்லிக்கொடுக்கவேண்டியது மிகவும்‌ அவசியமாகும்‌. ஆண்‌ பின்னைகளுக்குக்‌ கதரைக்‌ கட்டச்செய்வதும்‌, கதரை ஆதரிக்கவேண்டிய அவசியத்தைச்‌ சொல்லிக்‌ கொடுப்பதும்‌ இராட்டினத்தைவிட முக்கியமானதாகும்‌. அதை விட்டுவிட்டு, உபாதீதியாயரும்‌ கதர்‌ கட்டாமல்‌ பிள்ளைகளையும்‌ கதர்‌ கட்டச்‌ செய்யாமல்‌, இவர்களின்‌ எஜமானர்களாகிய தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு முதலிய தலைவர்களும்‌ அங்கதீதினர்களும்‌ கதரைக்‌ கட்டாமல்‌ பொதுமக்களின்‌ வரிப்‌ பணத்தை அள்ளி வெறும்‌ இராட்டின தீதை வாங்கி, பிள்ளைகளின்‌ நேரதீதையும்‌ பஞ்சையும்‌ வீணாக்கி நூலைக்‌ குப்பையில்‌ போடுவதில்‌ இலரபமென்ன? கதர்‌ கட்டுவதின்‌ அவசியத்தை அறியாத ஒரு பையன்‌ இராட்டினம்‌ சுற்றுவதில்‌ பிரயோஜனமென்ன ! கதரைக்‌ கட்டாத உபாதீதியாயர்கள்‌ கதரைக்‌ கட்டும்படி உபதேசம்‌ செய்வதில்‌ பிரயோஜனமென்ன ¢ 1000 பொய்‌ இராட்டினம்‌ சுற்றி நூல்களைக்‌ குப்பையில்‌ போடுவதை விட, 100 பிள்ளைகள்‌ கதர்‌ கட்டுவது மேலான தர்மம்‌. ஆகவே, இம்‌ முறைகள்‌ காரியதீதுக்கு உதவரததாகவும்‌, உண்மைத்‌ தொழில்‌ ததீதுவமற்றதாகவும்‌ நடைபெறுகின்‌ றது. அறிவும்‌ தொழிலும்‌ இப்படியானால்‌, உபாதீதியாயர்களுக்கும்‌ பிள்ளைகளுக்கும்‌ இருக்கிற பொறுப்பும்‌, பற்றுதலும்‌, பக்தியும்‌ இதைவிட மோசமானதென்றே சொல்ல வேண்டும்‌. சாதாரணமாய்‌, ஒரு உபாதீதியாயருகீகும்‌ ஒரு மாணாக்கனுக்கும்‌ உள்ள பற்று தலையும்‌ பகீதியையும்விட, ஒரு தாசிக்கும்‌ அவளுடைய அன்றன்றைய நாயகனுக்கும்‌ உள்ள பக்தியும்‌, பற்றுதலும்‌ மேலான தென்றே சொல்லலாம்‌. எப்படியெனில்‌, ஒரு தாசிக்கு ஓர்‌ கரவு முழுவதாவது ஒரு நாயகன்‌ இருக்கக்கூடும்‌. நமது மாணாக்கர்களுக்கோ மணிக்கு இரண்டு உபாதீதியாயர்கள்‌ வருகிறார்கள்‌. ஒகு நிலையான உபாதீதியாயரிடமிருந்து ஒரு பொறுப்பான விஷயங்களை உணரக்‌ கூடிய சந்தர்ப்பங்களே கிடையாது. உபாத்தியாயர்‌ களும்‌ சம்பளம்‌ உயர்ந்த பன்ளிக்கூடங்களுக்குப்போவதும்‌, மாணாக்கர்களும்‌ தங்களுக்குச்‌ சவுகரியப்பட்ட பள்விக்கூடதீதிற்குப்போவதும்‌ சயேச்சையாகி விட்டது. பிள்ளை படிக்க வேண்டியதும்‌, உபாதீதியாயர்‌ அவனைதீ தேறச்செய்ய வேண்டியதும்‌ அவரவர்கள்‌ இஷ்டதீதைப்‌ பொறுத்ததாகவே போய்விட்டதே யல்லாமல்‌, பொறுப்பும்‌ கவலையும்‌ ஒரு வருக்கும்‌ கட்டுப்பட்டதல்லாததாகவே இருந்து வருகிறது: www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1237 கல்வி, அறிவு, தொழில்முறை, குருபக்தி ஆகியவற்றின்‌ யோக்கியதை இப்படி என்றால்‌ உபாதீதியாயர்களின்‌ காலட்சேபமோ நினைப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. முன்காலதீதில்‌ உபாதீதியாயர்‌ களுக்கு காலட்சேபதீதைப்பற்றிய கவலையே இருந்ததில்லை: உபரதீதியாயர்களுக்கு ஒரு சிறுகுடிசை இருந்தால்‌ போதும்‌. பிள்ளைகளுக்கு அக்‌ குடிசைக்கு முன்னால்‌ ஒரு பநீதலோ, கொட்டகையோ இருந்தால்‌ போதும்‌. பிள்ளைகள்‌ படிப்பதற்கு அய்ந்தாறு மட்டை பனை ஓலையும்‌, அரை வண்டி மணலும்‌ இருந்தால்‌ போதும்‌. எழுது கோலாக ஒரு கூர்மையான ஆணி இருந்தால்‌ போதும்‌. மற்றபடி உபாதீதியாயர்களுடைய காலட்சேபதீதைப்பற்றி உபாதீதியாயர்களுக்குக்‌ கவலையே இருந்தது கிடையாது. வெள்ளாமை காலதீதில்‌ பையன்களிடம்‌ சொல்லிவிட்டால்‌ கூடைகூடையாய்தீ தானியங்கள்‌ வந்து குவிந்து விடும்‌. உபரதீதியாயரே போட்டுவைக்க இடமில்லாததால்‌--* பேரதும்‌ ? என்று சொல்லி விடுவார்‌. எண்ணெய்‌, விறகு முதலியவைகள்‌ மாதத்துக்கு ஒருதடவையும்‌, காய்கறி பதார்தீதங்கள்‌ தினமும்‌ தானாகவே பிள்ளைகள்‌ மூலம்‌ வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும்‌. பண்டிகைகளுக்கு வேஷ்டித்‌ துணிகளும்‌, மேற்செலவுக்கு இனாம்‌ பணங்களும்‌ தானாகவேவந்து சேர்ந்து விடும்‌. உபாத்தியாயர்‌ வீட்டில்‌ நடக்கும்‌ கல்யாணம்‌, கார்த்திகை, நன்மை, தீமை முதலிய சடங்குகளுக்கு அவ்வப்போது பெற்றோர்களும்‌, பையன்‌ களுடைய சுற்றதீதார்களும்‌ தாராளமாகக்‌ கொடுதீது நடதீதிவிடுவார்கள்‌. பையனுடைய படிப்புக்கு உபாத்தியாயர்‌ ஐவாப்தாரியாகவும்‌, உபாத்தியாயர்‌: களுடைய காலட்சேபதீதிற்குப்‌ பிள்ளைகளின்‌ பெற்றோர்கள்‌ ஐவாப்தாரிகளாகவும்‌ பரஸ்பரம்‌ பொறுப்பை ஏற்றுககொள்ளுவார்கள்‌. ஒரு பையன்‌ வீட்டில்‌ ஏதாவது குற்றஞ்செய்து விட்டாலும்‌, அவன்‌ படிதீததாகச்‌ சொல்லும்‌ பாடங்களில்‌ கேட்ட கேன்விகளுகீகுச்‌ சரியான. பதில்‌ சொல்லா விட்டாலும்‌ உபாதீதியாயருக்குக கொடுப்பதில்‌ குறைத்து விடுவார்கள்‌. உபாதீதியாயர்கள்‌ பெயரைச்‌ சொன்னால்‌ பையன்கள்‌ நடுங்குவார்கள்‌. சாப்பாட்டுக்‌ கவலை யென்பதே உபாதீதியாயர்களுக்குத்‌ தெரியவே தெரியாது. உபாத்தியாயர்‌ வீட்டுப்‌ பெண்‌: களோடு குடும்பக்‌ கவலை நின்றுவிடும்‌. எவ்விதத்திலும்‌ அவைகள்‌ உபாத்தியாயர்‌ காதுக்ரு எட்டவே எட்டாது: அக்‌ காலதீதிய படிப்புச்செலவு இப்போதைய செலவுகளில்‌ பதினாறில்‌: ஒரு பங்குகூட இருக்காது. இப்பொழுதோ பிள்ளைகள்‌ கொடுக்கிற பணம்‌ கணக்கு வழக்கில்லை, புத்தகம்‌, காகிதம்‌, பேனா, பென்சில்‌, சிதீதிரசாமான்‌, விளையாட்டுக்‌ கருவி, இரசாயன சரமான்‌; பெஞ்சு, நாற்காலி, மேசை கட்டடங்கள்‌ இவைகளுகீகாகும்‌ செலவுகளே மக்கள்‌ தாங்க முடியாததாகப்‌ போய்விடுகிறது. இதன்மேல்‌ உபாதீதியாயர்களுக்குக்‌ கொடுப்பதும்‌ தாங்கமுடியாததாகவே ஏற்பட்டு விடுகிறது. சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள்‌ என்போருக்குக்‌ கொடுக்கப்படும்‌ சம்பளம்‌ சில ஆபீஸ்களில்‌ பியூன்களுக்கும்‌, போலீஸ்காரர்களுக்கும்‌ கொடுக்கப்படுவதைவிடக்‌ குறை. வாகதீதானிருக்கிறது. குழந்தை குட்டிகளோடு வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு 30 ரூபாயாவது இருந்தால்தான்‌ கவலையில்லாமல்‌ தன்‌ காரியத்தைக்‌ கவனிக்கக்கூடும்‌. அதுகூட இல்லாமல்‌ கஷ்டப்படுகிறதைப்‌ பார்க்கும்பொழுது நமக்கு மிகவும்‌ பரிதாபகரமாகதீதானிருக்கிறது. * பசுவைக்‌ கொன்று செருப்புதீ தானம்‌ செய்வதுபோல்‌? நமது அரசாங்கதீதார்‌ கள்‌, சாராயத்தை விற்று அதில்வரும்‌ இலாபத்தை எடுதீது கல்விக்காகச்‌ செலவு செய்கிறார்கள்‌. ஆகவே இன்னும்‌ கொஞ்சம்‌ கல்வி சவுகரியமும்‌, சம்பளச்‌ சவுகரியமூம்‌ வேண்டுமானால்‌ இன்னுங்‌ கொஞ்சம்‌ அதிகமாகக்‌ கள்‌, சாராயம்‌ குடிதீது, அதனால்‌ அதிக வரும்படியை உண்டாக்கும்‌ பொறுப்பை நம்‌ தலையில்‌ வைத்திருக்கிறார்கள்‌. இம்‌ மாதிரிக்‌ குடியில்‌ வரும்‌ இலாபதீதினால்தான்‌ படிப்புக்குச்‌ செலவு செய்யவேண்டும்‌ என்று ஏற்படுமானால்‌, மக்கள்‌ படிக்காமல்‌ தற்குறியாக இருந்தாவது, உபாதீதியாயர்களெல்லாம்‌ தெருவில்‌ கல்லுடைத்து ஜீவனம்‌ செய்து கொண்டாவது, கன்‌ குடியை நிறுத்துவதே மேலானதென்பது என்‌ அபிப்பிராயம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1238 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌: இம்‌ மாதிரிப்‌ படிப்பு வலுதீததின்‌ பலனாய்‌ படிப்பின்‌ அவசியமில்லாமல்‌ வேறு வழியில்‌. வாழக்கூடிய பெருதீத குடும்பங்களெல்லாம்‌ பாழாகிப்‌ போய்கொண்டே வருகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு உயர்தரப்‌ பள்ளிக்கூடங்களென்பது அதிகமாய்க்‌ கொண்டு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில்‌ படிதீத பெரும்பான்மைப்‌ பிள்ளைகளின்‌ குடும்‌ பங்கள்‌ கெட்டுக்கொண்டே வருகின்றன. உதாரணமாக, பூமிகளின்‌ சொந்தக்காரர்களின்‌ பெயர்களைக்‌ காட்டும்‌ ¢ செட்டில்‌ மெண்ட்‌ ரிஜிஸ்டர்‌? என்னும்‌ பதிவுப்‌ புத்தகத்தை வாங்கிப்‌ பார்‌ தீதீர்களானால்‌, அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்‌, 40, 50 வருஷங்களுக்கு முந்திய செட்டில்மெண்ட்‌ ரிஜிஸ்டரி! லுள்ள பூமிக்குச்‌ சொநீதக்காரரின்‌ பெயர்களை 10 வருஷதீதுக்கு முன்னுள்ள புத்தகத்தைப்‌ பார்ப்பீர்களானால்‌ 100-க்கு 75 பாகம்‌ மாறிப்போய்தீ தானிருக்கும்‌. அக்‌ காலதீதில்‌ கவுண்டர்‌, நாயக்கர்‌, பிள்ளை, படையாட்சி, ரெட்டி, நாயுடு என்றிருப்பது போய்‌, இப்பொழுது அய்யர்‌, அய்யங்கார்‌, ஆச்சாரியார்‌, செட்டியார்‌ முதலிய உத்தியோகஸ்தர்கள்‌, வக்கில்கள்‌, வியாபாரிகள்‌ ஆகியவர்கள்‌ பெயருக்கே மாறியிருக்கும்‌. காரணமென்னவென்றால்‌, உயர்‌ தரப்‌ பள்ளிக்கூடம்‌ வந்தவுடனே எல்லாப்‌ பிள்ளைகளும்‌ அதில்‌ படிக்கச்‌ சேர்நீது விடுகிறார்கள்‌. குடியானவர்களும்‌ தங்கள்‌ பிள்ளைகளை அதிலேயே சேர்தீதுவிடுகிறார்கள்‌, அந்தப்‌ பிள்ளைகளுக்குப்‌ படிதீ.துதீதான்‌ ஜீவனம்‌ செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லாததாலும்‌, 6 இந்தக்‌ கூட்டங்களும்‌ படித்து விட்டால்‌, உத்தியோகங்கொண்டே வாழவேண்டியவர்‌ களாகிய நம்ம கூட்டதீதார்‌ வாயில்‌ மண்‌ விழுந்து விடுமே? என்கிற பயங்கொண்ட உபாதீதி யாயர்களாலும்‌, இப்‌ பிள்ளைகள்‌ சரியாகப்‌ படிக்க முடியாமல்‌ 5, 6 வருஷம்‌ பெஞ்சுக்கு வாடகை கொடுத்ததோடு தலை மயிரைக்‌ கதீதரிதீ.துக்‌ கொண்டும்‌, சிகரெட்‌, பீடி பிடிதீதுக்‌ கொண்டும்‌, வேடிக்கை உடைகள்‌ தரித்துக்‌ கொண்டும்‌, பொறுப்பும்‌ ஒழுகீகமுமற்ற சம்பாஷணைகள்‌ பழகிக்கொண்டும்‌, உல்லாசமாய்த்‌ திரிந்து 2, 3 தடவை பரீட்சையில்‌ தோல்வியுற்று கடைசியாய்‌, ¢ இனி படிப்பு வராது? என்கிற முடிவுடன்‌ வீடுபோய்ச்‌ சேரு கின்றார்கள்‌. இந்தப்‌ பட்டணவாசப்‌ பள்ளிப்‌ பழக்கமானது பட்டிக்காட்டு வாசதீதுகீகுச்‌ சவுகரிய மில்லாமல்‌ வீடு, வாசல்களும்‌, விவசாயப்‌ பண்ணைகளும்‌ தங்களுக்குப்‌ பிடிதீதமில்லாததாகி, நோக்கமெல்லாம்‌ பட்டணங்களிலேயே கொண்டுபோய்‌ விடுகிறது. அல்லது; சிலருக்குப்‌ பட்டிக்காட்டிலேயே பட்டணங்கள்போல்‌ வீடுவாசல்‌ கட்டி சுகமனுபவிக்க ஆசை ஏற்பட்டு விடுகிறது, இதன்மூலம்‌ தங்கள்‌ விவசாயம்‌ கெடுவதோடும்‌ தங்களுக்குக்‌ கிரமமாய்‌ வரும்‌ பொருள்‌ வருவாயும்‌ கெடுவதோடு, அதிகச்‌ செலவும்‌ ஏற்பட்டு அதன்மூலம்‌ கடன்காரர்களாகி வீண்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டுக்‌ கடைசியாய்‌ இகீ குடும்பச்‌ சொத்தானது விவகாரதீதில்‌ அதிகாரிகளுக்கு இலஞ்சதீதின்‌ மூலமாகவும்‌, வக்கீல்களுகீகுப்‌ ¢ பீசிரன்‌ மூலமாகவும்‌, லேவாதேவிக்காரர்களுக்கு வட்டியின்‌ மூலமாகவும்‌ போய்ச்சேர்நீது விடுகிறது. இந்தக்‌ காரணங்களால்‌ இவர்கள்‌ பூமிகள்‌ அவர்கள்‌ பேருக்குப்‌ பட்டா மாறுவதும்‌ அல்லது அவர்கள்‌: விலைக்கு வாங்குவதுமாய்‌ முடிந்து விடுகிறது. இனியும்‌ ஒரு 50 வருஷத்திற்கு இக்‌ கல்வி முறை இப்படியே இருக்குமானால்‌ நமது பூமிகளெல்லாம்‌ உத்தியோக வக்கீல்‌ கூட்டத்‌ தாருக்கும்‌, லேவாதேவிக்‌ கூட்டதீதாருக்குமே போய்ச்‌ சேர்ந்துவிடும்‌. இப்பொழுதுள்ள மிராஸ்தாரர்களின்‌ பிள்ளைகளெல்லாம்‌ அந்தக்‌ கூட்டதீதாரிடம்‌ பண்ணையரட்களாகவும்‌, குடிவாரக்காரர்களாகவும்‌ போய்ச்‌ சேரவேண்டியதுதான்‌. அரசாங்கதீதாரும்‌ கல்விக்காகக்‌ கோடிக்கணக்கான ரூபாயைச்‌ செலவு பண்ணு கிறார்கள்‌. அவ்வளவும்‌ உபாதீதியாயர்களுக்குப்‌ போவதாயிருந்தால்‌ உபாத்தியாயர்‌ களுக்குக்‌ கஷ்டமே இருக்காது. பணத்தையெல்லாம்‌ கல்வியின்‌ பெயரால்‌ மேற்சொன்னபடி சாமான்களுக்கும்‌, கட்டடங்களுக்கும்‌, மற்றும்‌ பாதிரிமார்களுக்கும்‌ உயர்ந்த சம்பளம்‌ பெறும்‌ உபாதீதியாயர்களுக்கும்‌, இவற்றை மேற்பார்வை பார்ப்பது என்பதாகப்‌ பல பெரிய ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு aarfdd 1239 பெரிய சம்பளமுள்ள உதீதியோகஸ்தர்களுக்குமே போய்விடுகிறது. இவ்வளவு செலவு களையும்‌ அனாவசியமாய்ச்‌ செய்துவிட்டு, ஆரம்ப ஆசிரியர்களையும்‌ பட்டினி போட்டு விட்டு, கந்த ஆசிரியர்களை ஆடுமாடுகளைவிடக்‌ கேவலமாகவும்‌ மதிக்கிறார்கள்‌. ஜனப்‌ பிரதிநிதிகள்‌ என்கின்ற சட்டசபை அங்கத்தினர்கள்‌ முதலிய அரசியல்‌ வாழ்வுக்காரர்களோ உங்களிடம்‌ வரும்போது உங்களிடத்தில்‌ ரொம்பவும்‌ அனுதாபம்‌ உள்ளவர்கள்போல்‌ காட்டிக்கொண்டு, * உங்களுகீகுச்‌ சம்பளம்‌ 40 ரூபாய்‌ வேண்டும்‌ ; 50 ரூபாய்‌ வேண்டும்‌? என்ற ஆசை வார்தீதை சொல்லி உங்களை தீ திருப்திசெய்து, உங்களால்‌ தங்களுக்குக்‌ கிடைக்கக்கூடிய ஓட்டுகளைப்‌ பெற்றுக்கொண்டு போய்விடு கிறார்கள்‌. பொது ஜனங்களிடம்‌ போகும்போது அவர்களைப்‌ பார்தீது, சர்க்காரார்‌ அதிக வரி வசூல்‌ பண்ணுகிறார்கள்‌. அனாவசியமாய்‌ அதிகமான ஆன்‌ அம்புகள்‌ வைத்து அரசாங்கச்‌ செலவைப்‌ பெருக்கி விட்டார்கள்‌ ) நாங்கள்‌ போய்ச்‌ சம்பளத்தையும்‌ செலவையும்‌ குறைத்து உங்களுக்கு வரியைக்‌ குறைக்கிறோம்‌? என்று மேடைமேல்‌ நின்று பேசிவிடு கிறார்கள்‌, உங்களிருவரையும்‌'ஏமாற்றி, சட்டசபையில்‌ போயிருந்‌துகொண்டு, சட்டசபையில்‌ உட்கார்ந்‌ துகொண்டு, உங்களுக்கும்‌ அவர்களுக்கும்‌ திருப்தி ஏற்படும்படியாக ஏதோ இரண்டு கேள்வி கேட்டதாகப்‌ பாவனை காட்டிவிட்டு, உங்களையும்‌ பொது ஜனங்களையும்‌ வஞ்சிக்கிற காரியங்களுக்காகச்‌ சர்கீகாருகீகு உள்‌ உளவாய்‌ இருந்து தங்களுக்குப்‌ பெரு மையும்‌, உதீதியோகங்களும்‌, 'பதவியும்‌ கிடைப்பதற்கும்‌ தங்கள்‌ சொந்தக்‌ காரியங்கள்‌ ஏதாவது சாதித்துக்‌ கொள்ளுவதற்கும்‌ ஆளாகி விடுகிறார்கள்‌. வரி குறைப்பதும்‌, சம்பளம்‌ கூட்டுவதும்‌ ஒன்றுக்கொன்று பொருந்தாத விஷயம்‌. வரியையும்‌ குறைதீது, உங்கள்‌ சம்பள தீதையும்‌ உயர்தீத வேண்டுமானால்‌ பெரிய உதீதியோகஸ்தர்களுடைய சம்பளதீ தையும்‌, நான்மேலே சொன்ன வீண்‌ செலவுகளையும்‌ குறைக்கும்படி சொல்லுவதற்கு இவர்களுக்குத்‌ தைரியம்‌ வேண்டும்‌. இவர்களே மாதம்‌ 2000, 3000, 4000, 5000 சம்பளம்‌ வாங்கிக்கொண்டு மந்திரி, தலைவர்‌ முதலிய பதவிகளுக்கு ஆசைப்‌ பட்டுக்கொண்டும்‌,. இவர்களே இப்பேர்ப்பட்ட பதவிகளை மற்றவர்களுக்கு வாங்கிக்‌ கொடுத்து, அவர்களை ஆதரித்தும்‌ அதன்மூலம்‌ தாங்கள்‌ பிழைக்கப்‌ பிரயதீதனப்‌ பட்டுக்கெொண்டும்‌, இவர்களுடைய செலவுக்கே தினம்‌ 10, 15, 40, 50 வேண்டுமென்று சர்க்காரைக்‌ கேட்டுக்கொண்டும்‌,. இவர்கள்‌ போக்குவர தீ துக்கே முதலாவது, இரண்டாவது வகுப்பு, இரட்டைப்‌ படிகள்‌ வாங்கிக்‌ கொண்டும்‌, இவர்கள்‌ நடவடிக்கை நடத்தும்‌ கூட்டங்களுக்கே 2 இலட்சம்‌, 3 இலட்சம்‌, 2 கோடி, 4 கோடி அனுமதிதீதுக்கொண்டு கிராஜபோகமனுபவிப்பவர்கள்‌ ) வேறுயாருடைய எந்தச்‌ செலவைக்‌ குறைத்து, வரி உயர்தீதாமல்‌, உங்களுக்குச்‌ சம்பளத்தை அதிகப்படுத்தக்‌ கூடும்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆகவே, இவ்வித அரசியல்‌ புரட்டுகள்‌ நமது நாட்டிலுள்ள வரையிலும்‌, உங்களைப்‌ போன்றவர்கள்‌ இவைகளை ஆதரிதீது இப்‌ புரட்டர்‌ களை மரியாதை செய்கிறவரையிலும்‌ உங்களுக்கு மாதீதிரமல்ல-இந்த நாட்டுக்கே விமோ சனம்‌ இல்லையென்பதுதான்‌ என்‌ அபிப்பிராயம்‌. இனியாவது இந்த அரசியல்‌ புரட்டர்களின்‌ சூழ்ச்சிகளிலிருந்து தப்புவீர்களென்று எதிர்பார்க்கிறேன்‌.. எனவே, இவை ஒவ்வொன்றையும்‌ இன்னமும்‌ கிளற; கிளற,மிகவும்‌ மோசமாகவேதான்‌ வநீது கொண்டிருக்கும்‌, இம்‌ மகாநாட்டைப்‌ பொறுத்த வரையிலும்‌ இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப்‌ பொறுத்த வரையிலும்‌-உங்களுக்கிருக்கும்‌ கஷ்டங்களையும்‌, குறை களையும்‌ அறிந்து நான்‌ மிகவும்‌ அனுதாபப்படுகி2 றன்‌. உங்களுக்கு இன்னும்‌ சம்பளம்‌, மரியாதை முதலியன உயரவேண்டுமென்பதை நான்‌ ஒப்புக்கொள்ளுகிறேன்‌. அதற்காக நீங்கள்‌ செய்யும்‌ கிளர்ச்சிகளில்‌ கலந்துகொள்ள எனக்கும்‌ ஆசையிருக்கிறது, ஆனால்‌ அந்நோக்கங்களையும்‌ கிளர்ச்சிகளையும்‌ உங்கள்‌ சுய நன்மைக்கு மாதீதிரமென்றில்லாமல்‌, நமது மக்களின்‌ உண்மையான ஆரம்ப ஆசிரியராய்‌ இருக்க வேண்டுமென்று வேண்டிக்‌ கொள்ளுகிறேன்‌. கல்வி விஷயத்தில்‌ நமது நாட்டுக்கு ஏற்படவேண்டிய திருதீததீதில்‌ உங்களுடைய உதவியும்‌, தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலியவற்றின்‌. www.thamizham.net - Free £ book No 3031 1240 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ உதவியும்‌ ரொம்பவும்‌ வேண்டியிருக்கிறது. உண்மையான தேசாபிமானக்‌ கண்ணோடு பாரீப்பீர்களானால்‌, உங்களுக்கு இவைகளெல்லாம்‌ விளங்காமற்போகா து. இங்கு விஜயம்‌ செய்திருக்கும்‌ தாலுக்கா, ஜில்லா போர்டு அங்கத்தினர்களையும்‌ தலைவர்களையும்‌ இவ்‌ விஷயங்களை யெல்லாம்‌ கவனித்து உங்களுக்கு அனுகூலமாய்‌ இருக்கும்படி கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. என்னை நீங்கள்‌ ஒருபொருட்டாய்‌ மதிதீ.துத்‌ தலைவனாகத்‌ தேர்ந்தெடுத்த தற்கு என்‌ மனதில்‌ சரியென்று பட்டதை உங்கள்‌ முன்‌ கொஞ்சமும்‌ ஒளிக்காமல்‌ பேசியிருக்‌ கிறேன்‌. இவற்றுள்‌ கொள்ளதீ தக்கதும்‌, தன்ளதீ தக்கதும்‌ இருக்கலாமென்றே நினைக்‌ கிறேன்‌. ஆதலால்‌ உங்களுடைய அறிவையும்‌, ஆற்றலையும்‌ இவைகளுள்‌ செலுதீதி, தள்ளதீ தக்கதைத்‌ீ தள்ளி, கொள்ளத்‌ தக்கதைகீ கொண்டு அமுலில்‌ கொண்டுவர வேண்டுகிறேன்‌. [போளூரில்‌, 2&-8-1927-ல்‌ நடந்த ஆரம்ப ஆசிரியர்கள்‌ மகாநாட்டில்‌ சொற்பொழிவு ர குடி அரசு ¥ 1-5-1927] 2. மாணவர்களுக்கு பெரியோர்களே ! தோழர்களே 1 நான்‌ அடிக்கடி மாணவர்களுக்குச்‌ சொல்லுவேன்‌, *மாணவர்களே ! நீங்கள்‌ படிப்பை ஒழுங்காகக்‌ கவனித்துப்‌ படியுங்கள்‌ ) உங்கள்‌ பெற்றோர்கள்‌ கடன்‌ வாங்கி, எப்படியாவது நீங்கள்‌ படித்து முன்னுக்கு வரவேண்டும்‌ என்கிற ஆசையால்‌ செலவழித்து, உங்களைப்‌ படிக்கவைகீகிறார்கள்‌] மற்ற மேல்சாதிக்காரர்களைப்போல--பார்ப்பனர்களைப்போல உங்களுக்கு யாதொகுவிதமான வசதியும்‌ கில்லை; நீங்களாகவேதான்‌ படிதீது முன்னுக்கு வரவேண்டும்‌) அப்படி இருக்கும்போது நீங்கன்‌ படிப்பைத்‌ தவிர வெளி விஷயங்களில்‌: கலந்துகொள்ளாதீர்கள்‌) அவைகளில்‌ எப்போது வேண்டுமானாலும்‌ கலந்துகொள்ளலாம்‌. முதலில்‌ உங்கள்‌ படிப்பில்‌ முமுக்கவனம்‌ செலுத்தி நன்றாகப்‌ படியுங்கள்‌ ? என்றெல்லாம்‌ சொல்லுவேன்‌. எந்தக்‌ காரியத்திற்கும்‌, அனேகமாக நான்‌ மாணவர்களையே அழைக்கமாட்டேன்‌. அவர்களைக்‌ கூப்பிடுவதென்றாலே மிகவும்‌ யோசிப்பேன்‌. ஏனென்றால்‌, அவர்கள்‌ எவ்வளவோ கஷ்டங்களையும்‌ எதிர்ப்பையும்‌ தாண்டிப்‌ படிக்க வேண்டியவர்கள்‌. இந்தச்‌ சந்தர்ப்பதீதில்‌ நாமும்‌ புகுந்து அவர்களைக்‌ கெடுப்பது என்றால்‌ என்ன நியாயம்‌ என்ற கருதித்தான்‌, மாணவர்களை வெளி விஷயங்களில்‌ கலந்துகொள்ள வேண்டாமென்று கூறுவேன்‌. ஆனால்‌, இன்று அவர்கவின்‌ படிப்புக்கே ஆபதீது வந்துவிட்டது என்கிறபோது அவர்களின்‌ படிப்பையே ஒழிதீதுக்கட்ட வேண்டுமென்று ஒரு கராஜ்யதீது முதல்‌ மந்திரியும்‌, கல்வி மந்திரியும்‌, வாதீதியார்களும்‌ முயல்கிறார்கள்‌ என்கிறபோது என்ன. செய்வது இந்த அநியரயதீதை, அக்கிரமத்தை எதிர்த்து மாணவர்கள்‌ கிளர்ச்சி செய்து தானே ஆகவேண்டும்‌ ₹ சாதாரணமாக, மாணவர்களைக்‌ கிளர்ச்சிக்கு அல்லது மற்ற காரியங்களுக்குதி தூண்டுவதே தவறு. அவர்கள்‌ உலக அனுபவம்‌ இல்லாதவர்கள்‌] எதையும்‌ எளிதில்‌ நம்பிவிடுவார்கள்‌) இளம்‌ உள்ளதீதின்‌ வேகத்தில்‌ எதுவும்‌ செய்துவிடுவார்கள்‌. அவர்களை இநீத முறையில்‌ பழக்கி அவர்களைச்‌ சிலர்‌ கேடு அடையச்‌ செய்யக்கூடாது. அது பஞ்சுக்குப்‌ பகீகதீதில்‌ ¢ பெட்ரோல்‌ ? வைதீது நெருப்புப்‌ பற்றவைப்பதுபோல ஆகும்‌. மாணவர்களை, மாணவர்களுடைய காரியத்தின்‌ அளவுக்குமட்டும்‌ பயன்படுதீதிக்கொண்டு--அதிலும்‌ அளவுக்குமீறிப்‌ போகாமல்‌ கட்டோடு இருக்கச்‌ செய்துகொண்டு, மற்றபடி அவர்கள்‌ கலந்துகொள்ளாதிருக்க விட்டுவிடவேண்டும்‌ ; இப்படித்தான்‌ செய்யவேண்டும்‌. [சென்னையில்‌ 5-12-1952-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை 3 13-12-1952] www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்சீசி 1241 பெரியோர்களே 1 மாணவத்‌ தோழர்களே | வணக்கம்‌. திராவிட மாணவர்களுக்குப்‌ பகுத்தறிவு ஊட்டப்பட வேண்டும்‌ என்பதற்காக இக்‌ கழகம்‌ ஏற்படுதீதப்பட்டது. மேலும்‌, கின உணர்ச்சியைத்‌ திராவிட மாணவர்களுக்‌ கிடையே புகுதீதவும்‌ D மாதிரியான கழகம்‌ அவசியமாகும்‌. பொதுவாக; நம்‌ நாட்டு மாணவர்கள்‌ கல்விப்‌ படிப்பினால்‌ எந்தவிதமான பகுதீதறி வையும்‌-எதையும்‌ ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும்‌ அடையமுடிவதில்லை;$. அவர்கள்‌ படிக்கின்ற படிப்பினால்‌ பிற்கால வாழ்க்கையைத்‌ தரிதீதிரமின்றி நடத்தவேண்டும்‌. அதற்காக, ஏதாவது உதீதியோகத்‌ துறையிலோ, வேறு பணம்‌ சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும்‌ என்பதற்காகவே படிக்கிறார்கள்‌. பெற்றோர்களும்‌ தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளரவேண்டும்‌ என்ற காரணதீதிற்காகப்‌ பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப்‌ பட்டம்‌ பெற்று வந்ததும்‌ ஜீவனதீதுக்கு வேண்டிய முறையில்‌ எங்காவது உத்தியோகம்‌ கிடைக்குமா என்ற நோக்கதீதோடேயே பெற்றோர்கள்‌ முயற்சிக்கிறார்கள்‌. இவர்களும்‌ இதற்குத்தான்‌ முயற்சிக்கிறார்கள்‌ என்றால்‌ மாணவர்களும்‌ அந்த நோக்கத்தைத்‌ தான்‌ எதிர்பார்தீ.துதீ தம்முடைய பள்ளிப்‌ படிப்பைக்‌ கற்றுப்‌ பட்டம்‌ பெறவேண்டும்‌ என்ற ஒரே எண்ணம்‌ கொண்டவர்களாக இருக்கிறார்கள்‌. ஆகையால்‌, அவர்கள்‌ பள்ளிக்கூடங்களில்‌ ஆசிரியர்கள்‌ கூறுகின்ற ஒவ்வொன்றையும்‌ அப்படியே மனப்பாடம்‌ செய்து, அதையே பிறகு அவர்கள்‌ கேட்கும்பொழுது சொல்லு வதாலும்‌, எழுதுவதாலும்‌ தேர்வில்‌ வெற்றி பெறுகிறார்கள்‌. இந்த முறையில்‌ ஒரு மாணவன்‌ எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும்‌, அவனுக்குப்‌ போதிய பொதுஅறிவும்‌, உலகியலில்‌ தகுந்த ஞானமும்‌ அடைந்தவனாகக்‌ கருதப்பட மாட்டான்‌. ஏனெனில்‌, அம்‌ மாணவன்‌ தனது புத்தகத்தைப்‌ படித்து, அதில்‌ உண்டாகும்‌. சந்தேகங்களையும்‌, மற்றும்‌ அறிவுக்குப்‌ பொருத்தமற்றதான செய்திகளையும்‌, தனது ஆசிரியர்களிடம்‌, ஏன்‌ 1 என்ன? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக்‌ கேட்டுத்‌ தெரிநீ.குகொள்வதில்லை. அப்படிக்‌ கேட்டாலும்‌ அம்‌ மாணவன்‌ வகுப்பில்‌ ¢ மிகவும்‌ அதிகப்‌ பிரசங்கியாக நடநீதுகொள்கிறான்‌? என்பதாக ஆகிவிடும்‌. ஆகவே, ஆசிரியர்‌ சொல்லு வதைதீதான்‌ கேட்கவேண்டும்‌) புதீதகதீதிலுள்ளதைதீதான்‌ மனப்பாடம்‌ செய்து திரும்பவும்‌ ஒப்புவிக்கவேண்டும்‌ என்பது நம்‌ நாட்டுக்‌ கல்வி முறை. இக்‌ கல்வி முறையினால்‌ மரணவர்‌ களுக்கு அறிவு புகட்டப்படுவதால்‌ அவர்கள்‌ பிற்காலப்‌ பழக்கவழக்கங்களுக்கும்‌, நல்லொழுக்‌ கதீதிற்கும்‌ தகுதியுடையவர்களாக ஆகமாட்டார்கள்‌. ஆனால்‌, பலர்‌ பலவிதமாக அறிவு, ஞானம்‌ என்பதைக்‌ கருதுகிறார்கள்‌, பெரும்‌ பரலோர்‌ ஞானம்‌ என்பதும்‌, அறிவு என்பதும்‌ கடவுளைக்‌ காண்கிறதும்‌, மோட்சத்தை அடைவதும்தான்‌ என்று நினைக்கிறார்கள்‌. இந்த எண்ணம்‌ குழந்தையிலிருந்தே நம்‌ பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால்‌, மேன்மேலும்‌ ஒரு மாணவன்‌ தெளிவற்றவ னாகவே ஆக்கப்படுகிறான்‌. பொதுவாகவே மாணவன்‌ அதற்கு இடம்‌ கொடுக்காமல்‌ தன்னை இன்னான்‌ என்றுணர்ந்து--* நம்‌ பருவம்‌ எதையும்‌ அறிந்துகொள்ளுகின்றதும்‌, தெரியா தவைகளைக்‌ கேட்டுத்‌ தெரிநீதுகொள்ளுகிறதுமான மாணவப்‌ பருவம்‌? என்பதை உணரவேண்டும்‌. இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான்‌ பிற்காலதீதில்‌ எதையும்‌ அறிந்த அறிவாளியாக விளங்கமுடியும்‌, மேல்நாட்டு மாணவர்கள்‌ எல்லோரும்‌ இவ்வித எண்ணம்‌ கொண்டவர்களாக இருப்ப தாலும்‌, அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான்‌ அவர்கள்‌ எதையும்‌ ஆராயும்‌ தன்மையுள்ளவர்களாகவும்‌, மென்மேலும்‌ ஒவ்வொன்றையும்‌ எடுத்துக்கொண்டு இது ஏன்‌ ₹ எப்படி! எதற்காக? இிதனால்‌ என்ன செய்யமுடியும்‌? என்று இப்படிப்‌ பலவித மான கேள்விகளுக்குப்‌ பதில்‌ தெரிந்துகொண்டே பார்தீததால்‌--இன்றைக்கு அவர்கள்‌. அறிவாளிகளாகவும்‌, விஞ்ஞானிகளாகவும்‌ விளங்குகிறார்கள்‌. மற்றும்‌, பல பொது விஷயங்‌ 1686--156 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1242 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கலிலும்‌ நம்‌ நாட்டு மக்களைப்போல்‌ இல்லாது, எவ்விடத்திலும்‌ பிறருடன்‌ நன்முறையில்‌ பழகுகிறார்கள்‌. குறிப்பாகப்‌ புகைவண்டி நிலையத்திற்குச்‌ சென்றால்‌, அங்கு டிக்கட்‌ கொடுக்குமிடத்தில்‌ அதிக மக்கள்‌ வரிசைக்‌ கிரமத்தில்‌ சுமார்‌ § பர்லாங்‌ வரையில்‌ காத்திருநீ தாலும்‌ அங்கு வருகின்ற தலைநரைதீது வயதுசென்ற கிழவருக்கும்‌, சிறு குழந்தைக்கும்‌, பெண்களுக்கும்‌ முதலில்‌ டிக்கட்‌ வாங்குவதற்கு அத்தனை பேர்களும்‌ அனுமதிப்பார்கள்‌. நான்கு பேர்கள்‌ ஏறுகின்ற வண்டியில்‌ 5-வது ஆள்‌ ஏறுவதற்கு வெட்கப்படுவான்‌. ஒருவன்‌ ஆடையின்றி நிர்வாணமாகக்‌ கடைவீதியிஃ செல்லுவதற்கு எவ்வளவு வெட்க மடைவானோ, அன்றியும்‌ அவன்‌ பிறரால்‌ எப்படி ஏளனம்‌ செய்யப்படுவானோ, அதற்குச்‌ சமானப்பட்டவனாய்‌ அச்‌ சமயம்‌ தன்னைக்‌ கருதுவான்‌. பொது இடங்களிலும்‌ அன்றி, தனிப்பட்ட கணவன்‌-மனைவி இருவரு£கும்‌ உள்ள பழக்கதீதில்கூட நம்‌ நாட்டிற்கும்‌ மேல்நாட்டிற்கும்‌ வித்‌ தியசமுண்டு. அயலூர்‌ சென்ற கணவ 2னா, மற்றும்‌ குடும்பதீதவர்களோ, உறவினர்களோ தன்‌ வீடு வருவதாய்‌ இருந்தால்‌, முதலில்‌ தாங்கள்‌ வரும்‌ நேரத்தையும்‌, தேதியையும்‌ முன்பாகவே தந்தி மூலமோ, கடிதம்‌ மூலமோ தெரிவிதீ துவிட்டுத்தான்‌ வருவார்கள்‌. வீடுவந்து சேர்ந்ததும்‌ வீட்டினுள்‌. இருப்பவள்‌ தன்‌ சொந்த மனைவியாக இருந்தாலும்‌, உடனே அவன்‌ உன்ளே நுழைய மாட்டான்‌. முதலில்‌ அவன்‌, தான்‌ வந்திருப்பதைதி தெரிவித்து அவள்‌ எஸ்‌? (yes) என்று அனுமதித்தவுடன்‌ தான்‌ உள்ளே நுழைவான்‌. இந்த முறையில்‌ ஒவ்வொன்றிலும்‌ மேல்நாட்டார்‌ பழகுகிறார்கள்‌ என்றால்‌ மாணவப்‌ பருவத்தில்‌ அடைந்த அறிவின்‌ குணமென்பதே காரணம்‌. ஆனால்‌, நம்‌ நாட்டு மாணவர்களுக்குப்‌ பொது அறிவைப்‌ புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள்‌ ஒன்றும்‌ இல்லாததாலும்‌, நம்‌ நாட்டுக்கல்வி முறையில்‌ இவை கற்பிக்கப்படாத தாலும்‌ அவர்கள்‌ வயதுவந்தவர்களான.தும்‌ பொதுவிடங்களிலும்‌, உலகதீதோடும்‌ நன்முறையில்‌ பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம்‌ சென்றால்‌ எவன்‌ ஒருவன்‌ முதலில்‌ டிக்கட்‌ வாங்குகிறானா, அவன்தான்‌ சமர்தீதன்‌ என்று புகழப்படுகிறான்‌, புதிய சினிமா இன்றுதான்‌ முதலில்‌ வெளியிடப்படு$றது என்றால்‌--அன்றைக்கு முதல்‌ படத்திற்கு, முதல்‌ டிக்கட்‌ வாங்குகிறவன்‌ அதிபராக்கிரம புதீதிசாலி என்று போற்றப்படு கிறான்‌. ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம்‌ பொய்களைக்‌ கூறித்‌ தப்பித்துக்‌ கொண்டால்‌--அவன்‌ அறிவிற்‌ சிறந்தவன்‌) அவன்‌ கூறியது பொய்யானாலும்‌ தன்‌ புத்தியின்‌ யூகதீதால்‌ வெகு சாமர்‌தீதியமாகதீ தப்பித்‌துக்கொண்டான்‌ என்றுதான்‌ கூறுவர்‌ நன்னடத்தை என்பது என்னவென்று பார்தீதால்‌--ஒரு மனிதனிடம்‌ நீங்கள்‌ என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள்‌ மகிழ்சீசியடையவும்‌, திருப்தியடையவும்‌ அவன்‌ என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில்‌ நீங்களும்‌ பிறரிடம்‌ பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும்‌, திருப்தியையும்‌ உண்டாக்கும்படியான வழியில்‌ நடந்துகொள்வதாகும்‌. உங்களிடம்‌ ஒருவர்‌ நடநீதுகொன்வதிலிருநீ்து உங்களுக்குக்‌ கஷ்டத்தையும்‌, மனக்‌ கலக்கதீதையும்‌ அதிருப்தியையும்‌ உண்டாக்குகிற முறைகள்‌ எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிடவேண்டும்‌. இது ஒரு சுலபமான கருதீதுஃ இதை யாவரும்‌ கைக்கொள்ளுவதால்‌ நல்லறிவும்‌, பொது அறிவும்‌ அடைந்தவர்களாகலாம்‌. இப்‌ பழக்கங்களை மாணவப்‌ பருவம்‌ முதற்கொண்டே, பழகினால்‌ சுலபமாகக்‌ கடைப்‌ பிடிக்கவும்‌ நீடித்திருக்கவும்‌ ஏ.துவாகும்‌. திராவிட மாணவர்‌ களாகிய யாவும்‌ இதையே பின்பற்றி நடக்கவேண்டுமென்றும்‌, எதையும்‌ ஆராயுந்‌ தன்மையுடனும்‌, எவ்விதக்‌ கேள்வி களுக்கும்‌ பதில்‌ தெரிந்து சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்வதே மாணவப்‌ பருவம்‌ என்பதன்‌ நோக்கம்‌ என்பதையும்‌ உணர்நீது கொள்ளவேண்டும்‌. [திருச்சியில்‌ 7:13-195&க சொற்பொழிவு--1 விடுதலை 8 12-11-1934) www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1243 நான்‌ மாணவர்களைப்பற்றி பேசும்பொழுதெல்லாம்‌ அடிக்கடியும்‌ குறிப்பிடுவதுண்டு அதாவது, யாரும்‌ மாணவர்களை நம்பி மோசம்‌ போகக்கூடாது என்று கூறுவேன்‌. ஏனெனில்‌, மாணவர்கள்‌ சுலபத்தில்‌ நெருப்புப்‌ பிடிக்கும்‌ பண்டங்களுகீகுச்‌ சமமானவர்கள்‌. பஞ்சு, மண்ணெண்ணெய்‌, பெட்ரோல்‌ இவைகளை எரியும்படி செய்வதற்கு அதிக உஷ்ணம்‌ தேவை இல்லை. சூரியனின்‌ ஒளிக்கதிர்‌ பட்டாலே எரியக்கூடிய தன்மையும்‌ உண்டு. அப்படிப்பட்ட மெல்லிய உள்ளமும்‌, தெளிவான மனத்தையும்‌ கொண்டவர்கள்‌ மாணவர்கள்‌. கெட்டியான வஸ்துக்கள்‌ சுலபத்தில்‌ தீப்பற்றுவதில்லை; தீப்பற்றிவிட்டால்‌ சுலபத்தில்‌ அணைவதில்லை ;$ நெடுநேரம்‌ நின்று எரியும்‌ சக்தி உள்ளவை. சீக்கிரத்தில்‌ தீப்பிடிக்கும்‌ வஸ்துக்களோ கெட்டியான வஸ்‌ துக்களைப்போல்‌ அதிக நேரம்‌ எரிவதில்லை. சிறிது நேரதீதிலே5ய அணைந்து போகும்‌. அப்படிப்பட்ட தன்மைக்குச்‌ சமமாக மாணவர்‌: களைக்‌ கூறலாம்‌. எதையும்‌ உடனே நம்பும்‌ சுபாவம்‌ மாணவர்களுடையது. மாணவர்‌ களின்‌ உள்ளம்‌ கெட்டியானது அல்ல$ இலேசானதாக இருக்கும்‌ ] அதுவும்‌ தூய்மையான. தாக இருக்கும்‌ ) பட்டதும்‌ பிடிக்கக்கூடிய தன்மை உள்ளது. அந்த மனம்‌ கெட்டிப்படும்‌ வரை அடுத்தடுத்து வருகிறவைகளைக்‌ கவ்விக்கொண்டு, முன்னே பற்றியதைக்‌ கக்கிவிடும்‌), சரியான பக்குவம்‌ இல்லாததால்‌ ஒரு நிலையில்‌ நிலைத்து நிற்கும்‌ தன்மை கிடையாது. இன்றைக்கு நான்‌ சொல்வதைக்‌ கேட்டு அப்படியே நம்பிவிடும்‌. சரி நம்பி விட்டார்களே என்று நான்‌ நினைதீதுக்கொண்டிருக்கும்போது நாளைகீகு யாராவது ஒன்றைக்‌ கூறினால்‌, நான்‌ சொன்னதை விட்டுவிட்டு, மற்றவர்‌ கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள்‌, மனது பக்குவம்‌ அடைய வேண்டும்‌. இதனால்‌ நான்‌ மாணவர்களுக்கு அறிவில்லை, அல்லது மாணவர்கள்‌ ஒன்றும்‌ தெரியாதவர்கள்‌ என்பதாகக்‌ கூறுகி3றன்‌ என்று யாரும்‌ நினைக்க வேண்டாம்‌. மாணவர்கன்‌ அறிவுள்ளவர்கள்‌ தாம்‌. இருந்தாலும்‌, அந்த அறிவு முற்ற வேண்டும்‌. பிஞ்சு அறிவு கொண்டவர்கள்‌ ! அந்த அறிவு முற்றும்‌ வரை அவர்களுக்கு எதிலும்‌ உறுதியான எண்ணம்‌ பிறக்காது. அறிவு முற்றும்‌ வரையில்‌ எதையும்‌ கற்பதிலேயே மாணவர்கள்‌ மனத்தைச்‌ செலுத்த வேண்டும்‌. மாணவ வாழ்க்கையில்‌ அவர்கள்‌ கடைப்பிடிக்கவேண்டியது எதையும்‌ கற்பதி லேயே மனதீதைச்‌ செலுத்திக்‌ கற்றுத்‌ தெரிந்துகொள்வதிலேயே இருக்கவேண்டும்‌. படித்‌ அப்‌ பரீட்சையில்‌ தேர்ச்சி பெறுவதி லேயே முழு முயற்சியும்‌ காட்டவேண்டும்‌. [சிதம்பரம்‌ அண்ணாமலை நகரில்‌, 19-2-1956-ல்‌ சொற்பொழிவு--6 விடுதலை 3 9-3-1956) 8. பகுத்தறிவாளர்களுக்கு தமிழ்‌ நாட்டில்‌ பல இடங்களில்‌ பகுதீதறிவாளர்கள்‌ சங்கம்‌ தோற்றுவிக்கப்பட்டிருக்‌ கின்றது) மேலும்‌ பல இடங்களில்‌ பகுதீதறிவுக்‌ கழகம்‌ தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது ) மேலும்‌ பல இடங்களில்‌ பகுதீதறிவுக்‌ கழகம்‌ தோற்றுவிக்கும்‌ முயற்சிகள்‌ நடைபெற்று வருவதாகத்‌ தெரியவருகிறது. இந்த நிலை தமிழர்களுக்கு மிகுதியும்‌ போற்றதீதக்கதும்‌, பாராட்டத்‌ தக்கதுமாகும்‌. இவ்விளைவினால்‌ தமிழர்‌ சமுதாயம்‌ சமதீதுவமும்‌, முன்னேற்றமுமடைநீது உலக மக்களால்‌ பாராட்டத்தக்க நிலையடையும்‌ என்பதில்‌ சந்தேகமேயில்லை, இவ்வியக்கம்‌ பயனுள்ளதாகவும்‌, பாராட்டத்‌ தகீகதாகவும்‌ வளர்சீசியடையத்‌ தக்கதாகவும்‌ ஆக வேண்டு மானால்‌ இவ்வியக்கதீதில்‌ அரசியல்‌, ' மத இயல்‌, சமூக இயல்‌ புகுதீதப்படக்கூடாது. அங்கத்தினர்கள்‌ நிர்பாணியான ஒருவனைப்‌ பார்தீது எப்படி அவனது சாதி, மதம்‌ கண்டு பிடிக்க முடியாதோ அதுபோல்‌ பரிசுத்த உணர்வோடும்‌, தோற்றத்தோடும்‌ விளங்க வேண்டும்‌. www.thamizham.net - Free £ book No 3031 1244 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அதாவது, எந்தவித மதக்‌ குறிப்பும்‌, மதச்‌ சின்னமும்‌ அணிந்தவராக இருக்கக்‌ கூடாது. களைய, எடுத்துவிட, மாற்றமுடியாத நிரந்தர சின்னதீதைதி தடையாகக்‌ கொள்ளாமல்‌ பார்‌ தீதுக்கொள்ள வேண்டும்‌. அங்கத்தினர்கள்‌ குறைவாக இருந்தாலும்‌ பகுத்தறிவுக்கு மாறான சாதி, மத சின்னங்கள்‌, குறிகள்‌ இல்லாமல்‌ (கண்டிப்பாய்‌) பார தீ.துக்கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்‌. [8 விடுதலை 8--30.11.1970] 5. நமது ஆராய்ச்சி மனப்பான்மை 1. புலவர்களின்‌ தன்மை நம்‌ புலவர்‌, பண்டிதர்‌, தமிழறிஞர்‌ என்பவர்களுகீகுத்‌ தமிழ்‌ மொழி பற்றிய இலக்கியம்‌, இலக்கணம்‌ என்னும்‌ துறைகளில்‌ ஏதாவது அறிவுப்‌ பயிற்சி இருந்தால்‌ இருக்க முடியுமே யொழிய--உலகம்‌, சரித்திரம்‌, பூகோளம்‌, பகுதீதறிவு, விஞ்ஞானம்‌ என்னும்‌ துறைகளில்‌ அறிவோ ஆராய்ச்சியோ இருக்க முடியுமா என்பது பெரிதும்‌ ஆலோசிக்கதீ தக்கதாகும்‌. இதைச்‌ சொன்னால்‌ நம்‌ புலவர்களுச்கு&்‌ கோபம்‌ வருவதில்‌ குறைவில்லை. ஆனால்‌, அப்‌ புலவர்கள்‌ தங்களைப்பற்றிச்‌ சிறிது யோசிதீதுப்‌ பார்க்கட்டும்‌ ! தங்களால்‌ நாட்டுக்கோ, சமுதாயதீதுக்கே சிறிதாவது பயன்‌ ஏற்படும்படியான காரியம்‌ செய்‌ கிறார்களா? செய்யத்‌ தகுநீத அறிவோ; சக்தியோ இருக்கிறதா ₹ அப்படிக்கில்லாமல்‌ புராணங்களை உருப்போட்டுக்கொண்டும்‌, புராணங்களுக்குப்‌ புதிய கருதீது சொல்லிக்‌ கொண்டும்‌, உலக தற்கால நிலையை உணராமல்‌ பார்ப்பனர்களைப்போல்‌ வேடம்‌ போட்டுக்‌ கொண்டு--தங்களை மெல்சாதியார்‌ என்று பிறர்‌ மதிக்கவேண்டும்‌ என்கின்ற ஆசையோடு திரிவதும்‌ புலவர்‌ தன்மை ஆகுமா ₹ புலவன்‌ என்றாலும்‌, பண்டிதன்‌ என்றாலும்‌, வித்வான்‌ என்றாலும்‌ அறிவுடையவன்‌ என்பதுதான்‌ கருதீதாகும்‌. பண்டிதன்‌, வித்வான்‌ என்கின்ற சொற்கள்‌ தமிழ்‌ அல்ல என்றே கருதுகிறோம்‌. புலமையை உடையவனே புலவன்‌ ஆவான்‌. நம்‌ புலவர்களுகீகுள்ள புலமைதி தன்மை என்னவென்று பார்தீதால்‌, புராணப்‌ புலமையும்‌, தமிழ்‌ மொழி இலக்கணப்‌ புலமையும்‌ அல்லாமல்‌ அவர்களுக்கு வேறு எதில்‌ புலமை இருக்கிறது? எனவே, மேற்கண்ட புலவர்கள்‌ ஒரு துறையில்‌ பயிற்சி உள்ளவர்கள்‌ என்பதைத்‌ தவிர--பொது அறிவு பெறவோ, பொதுமக்களுக்கு வழிகாட்டும்படியான தன்மை பெறவோ, முன்னேற்றதீதிற்கு வழி கோலவோ,; புதுமையைச்‌ சிதீதிரிக்கவோ இன்றையப்‌ புலவர்கள்‌ என்பவர்களுக்கு ஏதாவது பயிற்சி இருக்கிறதா ? எனவே, ஒரு துறையில்‌ பயிற்சி பெற்றவர்கள்‌ பொதுத்‌ துறையில்‌ வந்து கலந்துகொள்ளுவதும்‌, அதைப்பற்றிப்‌ பேசதீ தங்களுக்கு அருகதை உண்டு என்பதும்‌ தங்களது குறைபாட்டைக்‌ காட்டிக்‌ கொள்வதே யாகும்‌, உலக இயற்கை மாறுபாட்டைக்‌ கொண்டதாகும்‌. மாறுபாட்டிற்கு அடிமைப்‌ படாது எதுவுமே இல்லை எனலாம்‌, புலவர்கன்‌ அல்லது அறிஞர்கள்‌ என்பவர்களுக்கு, அம்‌ மாறுபாட்டை--முன்னேற்றதீதிற்கு ஏற்ற வண்ணம்‌ அமைத்துக்‌ கொடுக்கவேண்டியது கடமையாகும்‌. - ஆனால்‌, நம்‌ புலவர்கள்‌ மாறுபாட்டை விரும்பாதவர்கள்‌? அது மாதீதிரமல்லாமல்‌, 1000, 2000, 3000, 5000 வருடங்கட்கு முன்னிருந்த நிலைமையை நிலைநாட்ட: முயற்சிப்‌ www.thamizham.net - Free £ book No 3031 அறிவு வளர்ச்சி 1245 பவர்கள்‌. புலமைக்கும்‌ பகுதீதறிவிற்கும்‌ எந்தவித சம்பந்தமும்‌ கிடையாது என்பவர்கள்‌ பகுதீதறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளிலே நம்பிக்கையும்‌ பக்தியும்‌ கொண்டு அவற்றை உருப்போட்டு மக்களுக்குள்‌ புகுதீ.துகிறவர்கள்‌. இவர்களைக்‌ கொண்ட நாடோ மக்களே எப்படி முன்னேற்றமடைய முடியும்‌ 1 இவர்களுக்குப்‌ பொது வாழ்வில்‌ மதிப்பு இருக்கும்‌. பட்சம்‌ முன்னேற்றத்திற்கு இிடமுண்டா? பொதுவாகவே ஒரு மொழியில்‌ இலக்கண இலக்கியங்களைப்‌ படிதீதவர்களையும்‌-- மத சம்பந்தமான பயிற்சியும்‌ நம்பிக்கையும்‌ உடையவர்களைப்‌ புலவர்கள்‌ என்று அழைப்பதும்‌ கருதுவதுமே பொது அறிவையும்‌, அறிவு வளர்ச்சியையும்‌ கொலை செய்வதற்கு ஒப்பாகும்‌. முன்னேற்றத்‌ தன்மையான விஷயங்களிலும்‌ மகீகளைச்‌ சீர்திருதீ.தும்‌ விஷயங்‌ களிலும்‌, மொழிப்‌ புலவர்களுக்கும்‌ மதப்‌ புலவர்களுக்கும்‌ மதவாதிகளுக்கும்‌ இடம்‌ கொடுப்பது, கலந்துகொள்ளச்‌ செய்வது முதலியன முட்டுக்கட்டையான காரியங்களே யாகும்‌ மொழித்‌ துறைக்கும்‌, மதத்‌ துறைக்கும்கூட முற்போக்கு வேண்டுமானால்‌ பொது அறிவுள்ள புலவர்கள்‌ வேண்டுமே தவிர; ஒரு மொழி, ஒரு மதம்‌ என்பதில்‌ புலமை கொண்ட வர்கள்‌ பெரிதும்‌ ௮ம்‌ முன்னேற்றதீதிற்குதீ தகுதியற்றவர்கள்‌ என்றே சொல்லுவோம்‌. ஏனெனில்‌, அவர்கள்‌ தாங்கள்‌ கற்றதையும்‌, அந்தக்‌ கற்பிலிருநீது தாங்கள்‌ கொண்டதையும்‌ தான்‌ குரங்குப்‌ பிடியாய்‌ வலியுறுதீதுவார்களே தவிர; திருதீதப்பாட்டிற்குச்‌ சிறிதும்‌ சம்மதிக்கமாட்டார்கள்‌. இவற்றை நாம்‌ திடீரென்று சொல்ல வரவில்லை, புலவர்களிடம்‌ 40, 45 வருட காலமாய்ப்‌ பழகி வந்த அனுபவங்களைக்‌ கொண்டே சொல்லுகிறோம்‌. உதாரணமாக, எந்தப்‌ புலவராலாவது--எந்ததீ துறையிலாவது இதுவரை ஏதாவது ஒரு முன்னேற்றகர மான--அறிவுக்கு ஆதரவான காரியம்‌ நடந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று பார்த்தால்‌ உண்மை விளங்கிவிடும்‌. ஆகவே, சீர்திருதீதக்காரர்களும்‌ முன்னேற்றகீகாரர்களும்‌ தங்கள்‌ வேலைகளுக்குப்‌ புலவர்களைச்‌ சேர்தீதுக்கொள்ளக்‌ கூடாது என்பதோடு, அவர்களுக்குப்‌ பாமர மக்களிடம்‌ மதிப்பு இருக்கும்படியாகவும்‌ இடம்‌ கொடுக்கக்கூடாது என்று சொல்லுகிறோம்‌. அவர்‌ களுக்கு மதிப்பு இருப்பதால்‌ நமக்கு இருக்கும்‌ தொல்லைகளுக்கும்‌ நம்‌ காரியங்களுக்கு இருக்கும்‌ முட்டுக்கட்டைகளுக்கும்‌ ஒரு உதாரணம்‌ சொல்லவேண்டுமானால்‌, பெரியபுராண: மும்‌ கம்பரரமாயணமும்‌ பாமர மக்களுக்குள்‌ பரவாமல்‌ இருக்கத்‌ தக்கவண்ணம்‌ அவற்றை வெறுகீ்கச்‌ செய்யவேண்டும்‌ என்று நாம்‌ சொன்ன உடனே; நாம்‌ எதற்காக வெறுக்கச்‌ சொல்லுகிறோம்‌ என்று எடுத்துக்‌ காட்டும்‌ காரணங்களுக்கு எவ்வித சமாதானமும்‌ சொல்‌ லாமல்‌, அவற்றை முன்னிலும்‌ தீவிரமாகப்‌ பரப்பும்‌ வேலைகளையும்‌, அப்படிச்‌ சொல்லுகிற வனை ஆண்மையும்‌ நேர்மையும்‌ அற்றமுறையில்‌ குறைகூறும்‌ வேலைகளையும்‌, மற்றும்‌ இக்‌ காரியங்களைச்‌ செய்ய நம்‌ பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின்‌ காலுக்குள்‌. நுழையும்‌ துணிவையும்‌ கொள்ளுவது என்றால்‌--புலவர்களின்‌ இழிதன்மைக்கும்‌, பொது அறிவுடைமைக்கும்‌ வேறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌? மொழிப்‌ பயிற்சி வேறு, கலைப்‌ பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுகீகுத்‌ தெரிவதில்லை. மொழி, கலை, சமயம்‌ ஆகிய மூன்றையும்‌ ஒன்றாய்ப்‌ போட்டுக்‌ குழப்பி-நம்‌ புலவர்கள்‌ தங்கள்‌ பொதுஅறிவு, புத்தியைப்‌ பாழ்செய்து கொண்டார்கள்‌. அதனாலேயே மொழியைத்‌ திருத்தவும்‌, சமயத்தைப்‌ பரிசுதீதம்செய்யவும்‌ இன்றையத்‌ தன்மைக்கு ஏற்ற கலைகளைப்‌ புதுப்பிக்கவும்‌ வெகுகாலமாகவே ஒரு புலவராலும்‌ முடியாமல்‌ போய்விட்டது. இன்றுள்ள மொழிப்‌ புலவர்கள்‌ யாருக்காவது சமயத்தையோ, ஆண்‌-பெண்‌ காதலையோ சம்பந்தப்படுத்தமல்‌ இயல்‌, இசை; நாடகம்‌ என்கின்ற முத்‌ துறைகளிலும்‌, ஏதாவது www.thamizham.net - Free £ book 14௦ 3031 1246 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ செமியவோ, சொல்லவோ தெரியுமா ? சொல்லியோ செய்தே இருக்கிறார்களா என்று சிந்தித்துப்‌ பார்க்க வேண்டுகிறோம்‌. ஆகவே, நமது நண்பர்கள்‌, நாம்‌ புலவர்களைக்‌ குறைகூறுகின்றோம்‌ என்று கருதாமல்‌ அவர்களைப்‌ பாராட்டும்படியான காரியம்‌ என்ன இருக்கிறது என்பதைசி சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும்‌ என்பதற்காகவே இதை எழுதுகிறோம்‌. இப்பொழுது சிறிது காலமாக சில வாலிப மொழிப்‌ புலவர்கள்‌ நம்‌ கருத்தைச்‌ சிந்தித்துப்‌ பார்தீ.துச்‌ சிறிது அளவுக்கு மாற-பழம்பெரும்‌ புலவர்கள்‌, முதிய புலவர்கள்‌ ஆகியவர்களிடமிருநீது மாறுபட்டு, நம்‌ கொள்கையை ஆதரிக்க முற்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்‌ ] என்றாலும்‌ சில வாலிபப்‌ புலவர்கள்‌ துணிவாய்‌ வெளியில்‌ வந்து வேலை செய்ய வேண்டும்‌ என்று ஆசைப்படுகின்றோம்‌. (¢ குடிஅரசு -தலையங்கம்‌--15-1-1944] 2. நமது ஆராய்ச்சி மனப்பான்மை அக்கிராசனர்‌ அவர்களே 1 சகோதரிகளே ! சகோதரர்களே 1 மனிதன்‌ அடுத்த 500 வருடத்தில்‌ அடையக்கூடிய முற்போக்கு இப்போதே நிர்ணயிக்கப்படுகின்றதுஃ ஆனால்‌, நம்மைச்‌ சுற்றியுள்ள உலகம்‌ இந்‌ நிலையிலிருக்க நாமோ நமது ஆராய்ச்சிக்‌ காரர்களால்‌ 3000 வருடத்திற்கு முன்னால்‌ நாம்‌ இருந்த நிலையை அடைய வேண்டு மென்று தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்பட்டுப்‌ பெருமை அடைகின்றோம்‌. அப்படிப்‌ பட்ட தொல்காப்பியம்‌ 2000 வருஷதீதிற்கு முந்தியதா, 3000 வருஷதீதிற்கு முந்தியதா என்‌ கின்ற ஆராய்ச்சி இன்னமும்‌ நமக்குள்‌ முடியவில்லை. ஆராய்ச்சிக்காரர்கள்‌ யோக்கியதை இப்படி என்றால்‌, நமது பண்டி தர்களுடைய யோக்கியதையோ சமணர்கள்‌ கமுவேற்றப்‌ பட்டார்களா அல்லது தாமாகக்‌ கழுவேறினார்களா என்பதற்குச்‌ சமயம்போல்‌ பேச ஆதாரம்‌ தேடிக்கொண்டிருக்கிறார்‌ கள்‌, இவர்களில்‌ தேசியப்‌ பண்டிதர்களின்‌ யோக்கி யதையோ--தேசிய மேடையில்‌ ஏறி, தாயைப்‌ புணர்ந்தும்‌ தகப்பனைக்‌ கொன்றும்‌ மோட்சதீதிற்குப்போன புராணத்தையும்‌, பெண்சாதியைக்‌ கூட்டிக்கொடுத்து மோட்சதீ திற்குப்‌ போன புராணத்தையும்‌ படித்தால்‌ சுயராஜ்யம்‌ வநீதுவிடுமென்ற தேசியப்‌ பிரச்சாரம்‌ செய்கின்றார்‌ கன்‌. சென்னை பிரம்ம சமாஜத்தில்‌, 19-10-1929-ல்‌ சொற்பொழிவு-- 6 குடிஅரசு 27-10-1929] [ அக்கிராசனர்‌ அவர்களே! சகோதரிகளே ! சகோதரர்களே ! மேல்‌ நாட்டில்‌ ஒவ்வொரு மனிதனும்‌ அறிவாளிகள்‌ சொன்னபடி கேட்டுத்தெரிந்திருக்‌ கிறார்கள்‌, இந்த நாட்டில்‌ ஒவ்வொருவனும்‌ அய்யர்‌ என்ன சொல்லுகிறார்‌ 9? சமயம்‌ என்ன சொல்கிறது ₹ சாஸ்திரமென்ன சொல்கிறது? என்று பார்‌ தீ.துக்கொண்டிருப்பதோடு, கடவுள்‌ வந்து சொப்பனத்தில்‌ சொல்வார்‌ என்றும்‌ கரதீதுக்கொண்டிருக்கிறார்கள்‌. 20 வருடங்களுக்கு முன்‌ ஒரு வெள்ளைக்காரப்‌ பெண்‌ அணிந் துவந்த உடை சுமார்‌ 20 கஜதீதிற்கு மேலாகவே இருக்கும்‌. பெரிய வீட்டுப்‌ பெண்கள்‌ நடந்தால்‌; துணி பூமியில்‌ இழுபடாமல்‌ தூக்கிக்கொண்டு போவதற்கு ஆள்‌ வைப்பார்கள்‌. அவயஉங்களைப்‌ பெரிதாகக்‌ காட்டுவதற்கு முயற்சிப்பார்கள்‌. இன்றைய தினம்‌ அவர்களுடைய உடை 2 கஜம்‌ துணியில்‌ முடிந்துவிட்டது. எவ்வளவு குறுக்கவேண்டுமோ அவ்வளவு குறைதீதுவிட்டார்கள்‌. நாம்‌, எதைச்‌ ௬ருக்கினாலும்‌ கடவுள்‌ கோபிதீதுக்கொள்வாரோ என்று நடுங்குகி3றோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 அறிவு வளர்ச்சி 1247 வெள்ளைகீகாரர்களுடைய ஆராய்ச்சி அடுத்த வருஷதீதிற்கு என்ன மாறுதல்‌ செய்வ தென்று துடித்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஆராய்ச்சி 2000 வருஷதீதிற்கு முன்‌: எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கவேண்டுமென்று கருதி அதைக்‌ கண்டுபிடிக்கத்‌ தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது. எனவே, வெள்ளைக்காரனுடைய முற்போக்குக்‌ குதிரை முன்னாலும்‌, நமது குதிரை பின்னாலும்‌ போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய முட்டாள்தனமான காரியங்கட்கெல்லாம்‌ அவசியத்தையும்‌ காரணத்தையும்‌ சொல்லாமல்‌ பகவான்‌ சொன்னார்‌ ; மனு சொன்னார்‌ $ ஆகமம்‌ சொல்லிற்று) ஆழ்வார்‌ சொன்னார்‌ $. ஆச்சாரியார்‌ சொன்னார்‌ என்று சொல்வதைத்‌ தவிர வேறுஒன்றும்‌ சமாதானம்‌ இல்லைஃ ஆகவே, நாம்‌ எந்தக்‌ காலத்திலோ, எவனோ, எதையோ, எதற்கோ சொன்னான்‌ ; அதைப்‌ பற்றி நமக்கு என்ன கவலை என்று கருதி, இந்தக்‌ காலதீதுகீகுதீ தகுநீததைச்‌ செய்யாமல்‌--- வாளாயிருப்போமானால்‌ மனிதர்களாக வாழமுடியாது. எப்படி, பஞ்சாட்சரம்‌ ஜெபிதீதால்‌--விபூதி பூசினால்‌ மோட்சம்‌ வரும்‌ என்று மூடநம்பிக்கையைக்‌ கருதிக்கொண்டு துன்பப்படுகிறோமோ அதுபோலவேதான்‌, தகீளி சுற்றினால்‌-உப்புக்‌ காய்ச்சினால்‌ விடுதலை வரும்‌ என்று மூடநம்பிக்கையால்‌ கஷ்டப்‌ படுகிறோம்‌, பஞ்சாட்சரதீதிலும்‌, விபூதியிலும்‌ நமக்குள்ள மூடநம்பிக்கைதான்‌ தகீளியிலும்‌ உப்புக்‌ காய்ச்சுவதிலும்‌ திருப்பி விட்டுவிட்டதே தவிர வேறில்லை. அதில்‌ நாம்‌ கடுகளவு ஆராய்சீசியாவது செய்திருப்போமானால்‌ இதிலும்‌ அணுவளவாவது ஆரரய்சீசி செய்யப்‌ புத்தி புகுந்திருக்கும்‌, பரம்பரையாய்‌ நமக்குள்ளிருந்த மூடநம்பிக்கை நம்மை ஆட்சி செய்துகொண்டு சிறிதும்‌ முண்னேறவொட்டாமல்‌ தடுக்கின்றது. இப்போது நீங்கள்‌ இந்தக்‌ கூட்டதீதிலிருந்து வெளியில்‌ போகும்போது உங்களிற்‌ சிலர்‌, ¢ இராமசாமி சரியாய்தீதான்‌ பேசினான்‌] அதில்‌ என்ன தப்பிருக்கிறது!! என்று ஒருவருக்கொருவர்‌ பேசிக்கொள்வீர்கள்‌. ஆனால்‌, பக்கதீதில்‌ ஒரு பார்ப்பான்‌ நின்று கொண்டு உங்களைப்‌ பார்தீது, ¢ நன்றாய்‌ நாதீதிகப்‌ பிரச்சாரம்‌ கேட்டீர்களா? பாகவதத்தில்‌ இத்தனையாவது ஸ்காந்ததீதில்‌ கிம்மாதிரி இன்ன இடதீதில்‌ இத்தனை மணிக்கு இன்னான்‌. வந்து இந்த மாதிரி நாதீதிகம்‌ பேசுவான்‌. ஜனங்கள்‌ அறிவில்லாமல்‌ கேட்டுக்கொண்டிருப்‌ பார்கள்‌. அதுதான்‌ கலி வந்ததற்கு அடையாளம்‌. அது சமயம்‌ ஜாக்கிரதையாய்‌ இருந்து அதை மறக்கடிக்க ஒவ்வொருவராக முயல வேண்டுமென்று பகவான்‌ திருவாய்‌ மலர்ந்தருளி. யிருக்கிறார்‌. ஆதலால்‌, அவற்றை நம்பாதீர்கள்‌? என்று சொல்லுவான்‌. நீங்களும்‌ திடுக்கிட்டு, *ஆ ! என்ன பிசகு செய்தோம்‌ !? எனக்‌ கருதி இந்தச்‌ செய்தியைக்‌ கேட்டதற்‌ காக உங்கள்‌ காதுகளைக்‌ கழுவிக்கொள்வீர்கள்‌. இப்படியேதான்‌ உங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏமாற்றி வைத்திருக்‌ கிறார்கள்‌. ஆகையால்‌, எந்த விஷயத்தையும்‌ கண்மூடிதீதனமாய்‌ நம்பிவிடாமல்‌ உங்கள்‌ அறிவைக்கொண்டு நன்றாய்‌ ஆராய்ச்சி செய்து பார் தீது அதன்‌ முடிவின்படி நடவுங்கள்‌. [திருவாரூரில்‌, 5-6-1930-ல்‌ சொற்பொழிவு--* குடி அரசு ? 15-6-1930] அகீகிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1 நமது நாட்டில்‌ சுதந்திரம்‌ என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள்‌ சுதந்திரத்தைக்‌ கெடுப்பது என்றுதான்‌ பலர்‌ கருதிக்கொண்டிருக்கிறார்கள்‌. இந்த மனப்பான்மை அடிமைத்‌ தன்மையின்‌ வாசனையினால்‌ ஏற்பட்டதாகுமே தவிர ஒருகாலும்‌ சுயேச்சைத்‌ தன்மை உடையதாகாது- எங்களுக்காக ஏன்‌ ஒருவர்‌ பயப்படவேண்டும்‌ ? நாங்களும்‌ மனிதர்கள்தானே 1 எந்த மனிதனுடையவும்‌, எந்த அரசாங்கதீதினுடையவும்‌ தனிப்பட்ட காரியங்கள்‌ எதிலும்‌ நாங்கன்‌ பிரவேசிப்பதில்லையே ! பொதுப்பட்ட காரியங்களில்‌, பொதுமக்கள்‌ நன்மை தீமைகளில்‌ மற்ற எல்லாருக்கும்‌ உன்ளதுபேரன்ற உரிமை எங்களுக்கும்‌ உண்டு என்பதில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1248 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌: நாங்கள்‌ சிறிதும்‌ விட்டுக்கொடுக்க இசையோம்‌. எங்கள்‌ கருதீதுகளுக்கு மாறுபட்டவர்கள்‌ தக்க பதிலையும்‌ ஆதாரத்தையும்‌ உடையவர்களானால்‌, நாங்கள்‌ பேசுவதைத்‌ தடுக்கவோ எங்கள்மீது ஆதீதிரப்படவோ சற்றும்‌ அவசியம்‌ ஏற்படாது. ஆதாரமற்றவரீகள்‌, தந்திரத்தில்‌ வாழ்பவர்கள்‌] அதட்டலிலும்‌ மிரட்டலிலும்‌ மக்களை ஏமாற்றிக்‌ காலம்‌ கழிப்பவர்கள்‌ ஆகியோருக்குத்தான்‌ எங்களைப்பற்றிப்‌ பயம்‌ ஏற்படக்கூடும்‌ ) கோபமும்‌ ஆத்திரமும்‌ வரகீ கூடும்‌. ஆனால்‌, அதற்காக நாங்கள்‌ என்ன செய்வது? அஸ்திவார மற்றவைகளும்‌ புரட்டுகளும்‌ என்றைக்கு இருந்தாலும்‌ ஒரு நாளைக்குச்‌ சாய்நீது விழுந்துதான்‌ தீரும்‌, அன்றியும்‌, அதைக்‌ காப்பாற்ற முயற்சிக்கும்‌ நாளெல்லாம்‌ வீண்நாளே. வெகு நாளையப்‌ புரட்டு என்பதாலேயோ, கோபக்காரர்கள்‌, முரடர்கள்‌, தந்திரக்காரர்கள்‌: ஆதரிக்கிற அபிப்பிராயங்கள்‌ என்பதாலேயோ எதுவும்‌ நிலைத்திருக்க முடியாது. அவை யெல்லாம்‌ இனிப்‌ பலிக்கவும்‌ பலிக்காது. சுதந்திர உணர்ச்சி என்பது இதீ தேசத்தில்‌ இல்லையானாலும்‌, சுற்றுப்‌ பக்க தேசங்களில்‌ இருந்துவந்து புகுந்துவிட்டது. கினி அதை வெளியில்‌ தள்ளிவிட முடியாது. ஆதலால்‌, தடைப்படுத்த முயற்சிப்பதிலோ கோபிப்ப திலோ பயனில்லை. அசரீரி சொல்லிற்று, அருள்‌ சொல்லிற்று, ஆகாயவரணி சொன்னாள்‌, ஆண்டவன்‌ சொன்னான்‌ என்று ஏதோ ஒன்றைக்‌ கற்பித்து எழுதிவைத்துக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டுமென்று மக்களைக்‌ கட்டாயப்படுத்திக்கொண்டு இருப்பதும்‌ 3 அவற்றில்‌ ஏதாவது ஒன்றைப்பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம்‌ கேட்டால்‌ அவர்மீது கோபிப்பதும்‌, வைவகும்‌, பழிசுமதீ.துவதும்‌, கலகமாகிவிடுமென்று மிரட்டுவதுமான காரியங்கள்‌ எப்படி மனிதத்‌ தன்மையானவையும்‌ நியாயமான வையும்‌ ஆகும்‌ ¥ அசரீரி, ஆண்டவன்‌, அருள்‌, ஆகாசவாணி சொன்னவைகளானால்‌ அதற்குப்‌ புதீதகம்‌ எதற்கு 8 ஒருவருக்கு மற்றொருவர்‌ சொல்லுவதெதற்கு? காதில்‌ உபதேசிப்பதெதற்கு T ததீதுவாரீதீதங்கள்‌ எதற்கு ? அறிமுகப்‌ படுதீதுவதெதற்கு ? என்பவைகளை மக்கள்‌ சிறிதும்‌ யோசிப்பதில்லை ஏதாவதொன்றை ஆண்டவன்‌ சொன்னான்‌ என்று சொல்லிவிட்டால்‌, ¢ ஆண்டவன்‌ எப்படிச்‌ சொன்னான்‌ ? ஆண்டவன்‌ சொன்னதாக யார்‌ சொன்னார்‌ ₹ என்றுகூட கேட்கப்‌ படாதென்கிறார்கள்‌. தப்பித்தவறி யாராவது கேட்டுவிட்டால்‌ வசவும்‌, பழியும்‌ மிரட்டலுடந்‌ தான்‌ பதிலரயிருக்கின்றனவே யொழிய, சமாதானமான பதிலென்பதே கிடையாது. ஆகவே, மனிதர்கள்‌ முதலாவதாக இந்த இடதீதில்‌ தங்களது அறிவைப்‌ பயன்படுத்தச்‌ சுதந்திரம்‌ பெற்றாலல்லாது ஒருநாளும்‌ மனித சமூகம்‌ முற்போக்கடைவதற்கே இடமில்லாது போய்‌ விடும்‌. ஏனெனில்‌, உலகத்தில்‌ சிலர்‌ பலரை ஏமாற்ற, ஆதிக்கம்‌ செலுத்த தங்கள்‌ தங்களது புரட்டுகளையும்‌ பித்தலாட்டங்களையும்‌ ஆரம்பித்த கிடமே இந்த இடந்தான்‌ என்று நாம்‌ காணுவதால்‌, அந்தப்‌ புரட்டை முதலில்‌ வெளியாக்கி விடவேண்டும்‌. ஆதலால்‌, அந்த இடத்தை நன்றாய்ப்‌ பரீட்சிக்க வேண்டுமென்று மேலும்‌ மேலும்‌ வலியுறுதீ.துகிறோம்‌. இன்று உலகதீதிலுள்ள பெரும்பான்மை மதக்காரர்கள்‌ தங்கள்‌ தங்களுக்கென பற்பல விதமான வாசகங்களை வைத்துக்கொண்டு, அவற்றை ஆண்டவன்‌ சொன்னான்‌ என்று சாதித்துக்‌ கொண்டு, அவற்றைப்‌ பாமர மக்களிடம்‌ பலவந்தமாகச்‌ செலுதீதிவிட்டார்கள்‌. அதனாலேயே மக்களுள்‌ பற்பல பிரிவுகள்‌, அபிப்பிராய பேதங்கள்‌ மக்களின்‌ ஒற்றுமையைக்‌ குலைப்பதோடு, ஒருவரையொருவர்‌ சந்தேகிக்கவும்‌, வெறுக்கவும்‌, அலட்சியமாய்க்‌ கருதவும்‌, எதிர்க்கவும்‌, வஞ்சிக்கவும்‌ அடக்கி ஆளவும்‌ பயன்படுகின்றன. இந்த உணர்ச்சியையும்‌ செய்கையையும்‌ உலகத்தில்‌ செல்வாகீகுப்பெற விட்டுக்‌ கொண்டிருக்கும்வரை மனித சமூகத்திற்குள்‌ ஒற்றுமையும்‌ ஓய்வும்‌ ஏற்படுவதற்கு கிடமே இல்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3031 Sy வளர்ச்சி 1249 நாம்‌ இப்போது எந்த மதகீகாரர்களுடைய கொள்கைகளையும்‌ உபதேசங்களையும்‌ எடுத்துக்‌ கொண்டு அவை சரியா தப்பா என்பதாகவோ, ஆண்டவன்‌ சொல்லா என்ப தாகவோ வாதாடவரவில்லை, நம்முடைய வேலையும்‌ கவலையும்‌ அதுவல்ல. எல்லா மதக்‌ காரர்களும்‌ பெரிதும்‌ ஒரே ஆண்டவன்தான்‌ உண்டென்று ஒப்புக்கொள்ளுகின்றவர்‌: .களானதால்‌, ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ தங்கள்‌ கொள்கைகளையும்‌ உபதேச வாசகங்களையும்‌ அந்த ஆண்டவனே சொன்னான்‌ என்று சொல்லுவதால்‌ இவர்களுக்குள்‌ எந்த மதக்காரர்கள்‌ சொல்வது உண்மையென்றும்‌, எந்த அவதார புருஷர்கள்‌ எந்தத்‌ தூதர்கள்‌ சொன்னது உண்மையாய்‌ இருக்கக்கூடியதென்றும்‌ கண்டுபிடிப்பதெப்படி ₹ கிதற்கு என்ன பரீட்சை இவைகளையெல்லாம்‌ ஆண்டவன்‌ சொன்னான்‌ என்று நம்பும்படி கட்டாயப்‌ படுதீதுவதால்‌ ஆண்டவன்‌ எந்த ரூபத்தில்‌, எந்த நிலையில்‌, எங்கு இருந்துகொண்டு, என்ன மொழியில்‌ சொன்னார்‌ என்பதில்‌, எந்த மதக்காரர்கள்‌ உண்மை சொல்லுகின்றார்கள்‌ என்று கண்டுபிடிப்பதுமேயாகும்‌. மேலும்‌, ஆண்டவன்‌ என்பவர்‌ தான்‌ சொல்லவேண்டுமென்ற கொள்கையையோ, உபதேசத்தையோ தானே ஒருவர்‌ மூலம்‌ சொல்லிய பிறகு, மற்றவர்களால்‌ எடுத்துச்‌ சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கு உள்ளாயிருப்பதைப்‌ பார்க்கும்போது-- உண்மையிலேயே அவை ஆண்டவனால்‌ சொல்லப்பட்டிருநீதால்‌ அவைகள்‌ ஒவ்வொரு மனிதனுடைய காதிலும்‌ விழும்படியாக3வா, அல்லது மனதீதிலும்‌ பதியும்படியாகவோ-- அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்டவன்தான்‌ சொன்னான்‌ என்று கருதும்‌ படியாகவோ--ஏன்‌ அந்த ஆண்டவனால்‌ செய்யமுடியவில்லை என்றும்‌, இது ஆண்டவனால்‌ முடியாத காரியமா என்றும்‌ யோசிக்கப்‌ புகுந்தால்‌, அதிலிருந்தே அவைகள்‌ எல்லாம்‌ ஆண்டவனால்‌ சொல்லப்பட்டவை என்று சொல்லப்படுவது உண்மையாய்‌ இருக்க முடியுமா என்னும்‌ சந்தேகங்கள்‌ தோன்றுவதற்கு) என்ன சமாதானம்‌ சொல்லுவது என்பதேயாகும்‌. புதுச்சேரியில்‌, 1-9-1931-ல்‌ சொற்பொழிவு--1 குடி அரசு? 8-3-1981] அக்கிராசனர்‌ அவர்களே! சகோதரிகளே ! சகோதரர்களே 1 முயற்சி விஷயத்தில்‌ மேல்‌ நாட்டாரோ இமயமலை உச்சியைக்‌ கண்டுபிடிக்க வேண்டும்‌ என்றும்‌, அதிவேகமாய்ப்‌ பறக்க முயற்சிக்க வேண்டும்‌ என்றும்‌ அவ்வித முயற்சியினால்‌ மரணமடைந்தாலும்‌ பரவாயில்லை என்றும்‌ மேல்‌ நோகீகிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ நமது இந்தியாவிலோ ஒன்றுமே இல்லை. ஏனெனில்‌, தைரியமும்‌ வீரமும்‌ நமக்கில்லை. உதாரணமாக, ரூ. 400, 500 இலஞ்சம்‌ முதலியன செலவு செய்து ஒரு லைசென்சு வாங்‌8 துப்பாக்கி வாங்கியிருந்தாலும்‌, அதீ இப்பாக்கியின்‌ குதிரையானது கெட்டுப்போய்‌, குதிரையைக்‌ கம்மாளனிடம்‌ கொடுத்து விட்டுக்‌ கட்டையை மூலையில்‌ வைதீதிருக்கும்பொழுதுகூட நமது குழந்தைகள்‌ அதன்‌ பக்கமாய்ச்‌ சென்றால்‌, ¢ துப்பாக்கி! துப்பாக்கி! கிட்டே போகாதே-போகாதே ! என்று சத்தமிடுகின்றோம்‌. ஏன்‌? நமக்குப்‌ பயமே அதிகமாக இருக்கின்றது) தைரிய உணர்ச்சி என்பது சிறிதுகூட இல்லை. இதனால்‌ நமது அறிவு எவ்வளவுதூரம்‌ முதிர்ச்சி அடைந்‌ திருக்கின்றது என்பது புலப்படுகிறது. நாம்‌, வீணாய்‌ ¢ நாளை; நாளை! என நாட்‌ களைக்‌ கழிதீ.துக்கொண்டுதான்‌ செல்கின்றோமேயல்லாது வேறில்லை; விஷயங்களை உணரக்கூடிய சக்தியுமில்லை. அப்படி யாராவது உணர்ந்து சொல்ல வந்தாலும்‌, ¢ நமது முன்னோர்கள்‌ எவ்வளவு பெரியவர்கள்‌--அவர்களுக்குத்‌ தெரியாத சங்கதியா இவர்களுக்குத்‌ தெரிந்துவிட்டது? இவன்‌ நேற்று வந்த பயல்தானே ! அவரைவிடவா இவன்‌ பெரியவன்‌ 7. என உரைப்பதிஃஇருக்கிறோம்‌. இதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌, நமது அடிமைத்தனம்‌ நம்முடைய தலையின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது) அது நமது அறிவைக்‌ கூரில்லாமல்‌ செய்துவிட்டது. நமது நாட்டில்‌ இருக்கக்கூடிய அறிவாளிகளும்‌, தீர்க்கதரிசி 1686—157 www.thamizham.net - Free E book 14௦ 3031 1250 Qufiurg ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ களும்‌, கவிவாணர்களும்‌ பழைமையைக்‌ குரங்குப்‌ பிடியாய்ப்‌ பிடிதீதுக்கொண்டிருக்‌ கின்றார்கள்‌. பழைமையிலிருந்து அவர்கள்‌ சிறிதேனும்‌ நழுவுவார்களேயானால்‌ அவர்‌ களுடைய கவிகளை அரங்கேற்ற முடியவே முடியாது. மக்கள்‌ ஒவ்வொன்றையும்‌ யோசனை செய்து புதிது புதிதாக ஒவ்வொன்றையும்‌ கண்டுபிடிப்பதற்குதீதான்‌ ஆராய்ச்சி எனப்பெயர்‌. ஆனால்‌, நாமோ நமது முன்னோர்கள்‌ என்ன செய்து கொண்டிருநீதார்கள்‌ என்பதை ஆராய்ச்சி செய்வதிலும்‌, அதை நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டுமென்பதை ஆராய்வதிலுந்தான்‌ ஆராய்ச்சிதீதுறையில்‌ இருந்துவருகின்‌றோமே யல்லாது, அதாவது, பின்னால்தான்‌ திரும்பிப்‌ பார்தீ.துக்கொண்: ஒருக்கிறோமே தவிர, முன்னோக்கிப்‌ பார்ப்பது இலலை. மேல்நாட்டுக்காரன்‌ ஏதாகிலும்‌ ஒன்றைப்‌ புதிதாகக்‌ கண்டுபிடித்தால்‌ மென்மேலும்‌ ஆராய்ச்சி செய்து, 1930-ல்‌ இப்படி இருந்தால்‌, 1940-ல்‌ இது எப்படி இருக்கும்‌ ) 1950-ல்‌ இப்படி இருந்தால்‌, 1960-ல்‌ எப்படி இருக்கும்‌ என்பதையே அறிந்துகொள்ள முயற்சிக்கிறான்‌. இதுதான்‌ அவர்களுக்கும்‌. நமக்கும்‌ உள்ள வித்தியாசம்‌. உதாரணமாக, ஒரு (போர்டு மோட்டார்‌? வண்டியை எடுதீதுக்கொண்டால்‌ 20 வருடங்‌ களுக்கு முன்பிருந்த உருவம்‌ இப்போது இல்லை. அப்போது மணி ஒன்றுக்கு 18 மைல்‌ சென்றால்‌ இப்போது 90 மைல்‌ வீதம்‌ செல்கிறது. மோட்டாரில்‌ காணப்படும்‌ கோளாறு களை குறைத்துக்கொண்டே முன்னேறிக்கொண்டு வருகிறான்‌. அவனுக்கு மனிததீ தன்மை, உணர்ச்சி, ஊக்கம்‌, முயற்சி, கவலை ஆகியவைகள்‌ இருக்கின்‌றன. நமக்கோ அவை இல்லை. எதை எடுதீதாலும்‌ நமது நாட்டில்‌ பழமை வந்து குறுகீகிடுகின்றது. நமக்குக்‌ கவலை இல்லை$ ஊக்கமில்லை;$ முயற்சி இல்லை] முற்போக்கடைய ஆசையுமில்லை. நாடு முற்போக்கு அடைந்துவிட்டால்‌ சோம்பேறிகளுக்கு கிடமிருக்காது. நாம்‌ ஒவ்வொன்‌: றையும்‌ புராணக்‌ கதைகளை ஒப்பிட்டுத்‌ திருப்தி அடைகிறோம்‌. நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய்‌ இிருப்பவைகளில்‌ முதன்மையான து மூடப்‌ பழக்கவழக்கமேயாகும்‌. நாம்‌, இங்குதான்‌ * பாரத வீரர்கள்‌, பீமன்‌ சந்ததிகள்‌? என்று மேடையேறிப்‌ பேசுகிறோமே தவிர; ஒரு அராபி தேசத்தவனை ஒரு நடுத்‌ தடத்தில்‌ பார்‌ தீ.துவிட்டால்‌-- நமது மக்கள்‌ ஆண்‌; பெண்‌ அடங்கலும்‌ நடுங்குகின்றனர்‌ ; காலுடன்‌. மூதீதிரம்‌.பெய்துகொன்‌ கின்றனர்‌. வெளி தேசத்திலிருந்து எவன்‌ வந்தாலும்‌ அவனைக்‌ கண்டால்‌ இப்படித்தான்‌ நடுங்குகின்றோம்‌. வெளிநாட்டுக்காரன்‌ இங்குவந்து சம்பாதிதீதுப்‌ போவத, ற்குக்‌ காரணமே, நமக்கு வீரமும்‌ நாணயமும்‌ அற்ற தன்மையாலேயாகும்‌. நமது கிராமங்களில்‌ ஒரு. அராபிதீ தேசதீதுக்காரன்‌ 4 ரூபாய்‌ பெறும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்குக்‌ கொடுத்துவிட்டு 6 மாதம்‌ பொறுதீதுவந்து பணம்‌ கேட்டால்‌, வெற்றிலை, பாக்குத்‌ தட்டில்‌ வைத்து, சங்கராச்‌ சாரிக்குக்‌ காணிக்கை கொடுப்பதுபோல்‌ பயபக்தியுடன்‌. கொடுத்‌ தவிடுகின்றோம்‌;) அவனைக்‌ கண்டால்‌ நடுங்குகின்றோம்‌. உள்ளூர்வாசியிடம்‌ கடன்பட்டிருநீதரலோ அவனுடைய கடனைக்‌ கொடுக்க மறுப்ப துமல்லாமல்‌, * பண்ணுவதைப்‌ பண்ணு? என்றும்‌ சொல்லு கிறோம்‌. இதற்குக்‌ காரணம்‌ என்ன ? ஒரு இரயில்வண்டியில்‌ ஆப்கன்‌: தேசத்தான்‌ ஒருவன்‌: இருந்து அவ்வண்டி முழுமையும்‌ காலியாக இருந்தாலுங்கூட நாம்‌ அவ்‌ வண்டியில்‌ ஏறமாட்டோம்‌. நாம்‌ 10 பேர்வரை ஒரு அறையில்‌ உட்கார்‌ ந்து அவ்வண்டியில்‌ கடமில்லர திருந்தபோதிலுங்‌ கூட, வடதேசதீதான்‌ ஒருவன்‌ தைரியமாக வந்து உட்காருவான்‌. நாமும்‌ உடனே வண்டியைக்‌ காலிசெய்துவிடுவோம்‌. ஆனால்‌, நாம்‌ காளி, வீரன்‌; கருப்பன்‌, சடையாண்டி, முதலிய வீரம்‌? பொருந்திய தெய்வங்களை வணங்குபவர்களாகவும்‌ இருக்கிறோம்‌. எதற்காக இவற்றைக்‌ கும்பிடுகி3றோம்‌ என்றால்‌, அதீ தெய்வங்களுக்குன்ன தைரியம்‌ நமக்கும்‌ வரவேண்டும்‌ என்றுதான்‌ கும்பிடு www.thamizham.net - Free £ book No 3031 விறிவு வளர்ச்சி 1251 கிறோம்‌. ஆனால்‌, நாம்‌ அதனால்‌ தைரியமுடையவர்களாக வாழ்கின்றோமா என்று பார்‌ தீதாலோ அப்படியுமில்லை. நமது தைரியமெல்லாம்‌ முதலில்‌, 6 அடி பார்க்கலாம்‌ 3 என்பதிலும்‌, அடிவிழுந்தால்‌ ¢ ஓடுவதற்குள்‌ என்ன அவசரம்‌ 1 என்பதிலேயேதான்‌ இருக்‌ கின்றது. யார்‌ அடித்தாலும்‌ திருப்பி அடிக்ககீகூடிய நிலையில்‌ நாம்‌ இன்று இல்லை. [திண்டுக்கல்‌ சித்தையன்‌ கோட்டையில்‌, 22-6-1931-ல்‌ சொற்பொழிவு-- குடி அரசு? 28-6-1931] தோழர்களே ! விவகாரம்‌, நியாயம்‌ என்ற இரண்டு வார்தீதைகளையும்‌ உபயோகப்படுத்தும்‌ விதத்தைச்‌ சரியாக உணர்ந்துகொள்ளும்படி கோருகிறேன்‌. நியாயம்‌ வேறு--விவகாரம்‌ என்பதும்‌ வேறு. விவகாரம்‌ என்பது வலுதீதவன்‌ ஆதிக்கத்தையும்‌, தநீதிர சூழ்ச்சிகளையும்‌, பணச்‌ செல்வாக்கையும்‌ பொறுத்து முடிவுபெற்றுவிடும்‌. ஒருவன்‌ தன்னிடம்‌ சக்தியில்லாத காரணதீதால்‌--பேசும்‌ திறமை, எடுதீதுக்காட்டும்‌ அனுபவம்‌ ஆகியவை இல்லாத காரணத்‌ தால்‌ ஒரு விஷயத்தைப்‌ பற்றி வாதித்துத்‌ தோல்வியுற்றுவிட்டால்‌ அது நியாயம்‌ கண்டுபிடிதீததாகிவிடுமா? அதுபோல்‌, உங்கள்‌ வாய்‌ அடங்கும்படி நான்‌ பதில்‌ சொல்லி விட்டதாலேயே நான்‌ சொன்னது சரி என்று சொல்லிவிடமுடியாது, உங்களுக்கு எடுத்துச்‌ சொல்லி மெய்ப்பிக்க முடியா ததாலேயே நான்‌ சொன்னது தப்பு என்றும்‌ சொல்லிவிட முடியாது. ஆதலால்‌, எனக்குத்‌ தெரிந்த பதில்‌ சொல்லுகிறேன்‌. அதை ஆராய்ச்சி செய்து பிறகு தகீக ஒரு முடிவுக்கு வாருங்கள்‌, [ஈரோடு, லண்டன்‌ மிஷன்‌ பள்ளியில்‌ சொற்பொழிவு--* புரட்சி ! 31-12-1933] 8. பழந்‌ தமிழன்‌ பெருமை பழநீ தமிழன்‌ யார்‌ ¥ அவன்‌ கொள்கை என்ன ? அதற்கு ஆதாரம்‌ என்ன § அதற்கு இன்று அவசியம்‌ என்ன ₹-என்பன போன்ற கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல இன்று ஆளைக்‌ காணோம்‌. வீணாக அந்தப்‌ பெயரின்பேரில்‌ பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச்‌ சுரண்டவோ, தங்கள்‌ எண்ணத்திற்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளவோ அது பயன்படுத்தப்‌ படுகிறது. பழநீ தமிழன்‌ யாராயிருந்தால்‌, எனக்கு என்ன 1 உங்களுக்குத்தான்‌ என்ன காரியம்‌ ஆகும்‌ ! அவன்‌ கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய்‌ இருந்தாலும்‌ இங்கு, இன்று நமக்கு அதனால்‌ என்ன இலாபம்‌ என்பதுதான்‌ என்‌ கேள்வி, பழந்தமிழர்‌ நிலையைப்பற்றிப்‌ பேசுபவர்கள்‌ பகுதீதறிவுவாதிகளானால்‌, பகுதீதறிவுக்கு மதிப்புக்‌ கொடுக்கும்‌ அறிவாளிகளானால்‌, நடுநிலைமைக்காரர்களானால்‌-அவர்களை: ஒன்று கேட்கிறேன்‌. அதாவது, காட்டுமிராண்டி வாழ்க்கைக்‌ கால மனிதனைவிட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன்‌ சிறந்தவன்‌ அல்லவா என்பதும்‌) அதுபோலவே 4000, 5000 வருஷ காலத்திற்கு முன்‌ இருந்த மனிதனைவிட இன்று 20-வது நூற்றாண்டில்‌ வாழும்‌ மனிதன்‌ சிறிதாவது மேலான அனுபவமும்‌, அனுபவம்பெற சவுகரியமும்‌, ஆராய்ந்து பார்கீகும்‌ வசதியும்‌ உடையவனர அல்லவா என்பதோடு, அந்தக்‌ காலதீதில்‌ வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணதீதைவிட வேறான வாழ்வும்‌, வேறான எண்ணங்கள்‌ கொள்ளவேண்டிய வனாய்‌ இருக்கின்றானா இல்லையா என்பதுமே ஆகும்‌, இன்று வாழும்‌ மனிதனுடைய எந்தக்‌ காரியதீதிற்குப்‌ பழந்‌ தமிழனுடைய வாழ்க்கைக்‌ குறிப்பும்‌ நினைவுக்‌ குறிப்பும்‌ நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணகச்கமாகச்‌ கேட்கிறேன்‌ வீணாகப்‌ பழந்தமிழர்‌ கொள்கை என்பதும்‌, பழந்‌ தமிழர்‌ வாழ்க்கை நிலை என்பதும்‌ அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில்‌ மூழ்கவோதான்‌ பயன்படக்கூடியதாச ஆகி www.thamizham.net - Free £ book No 3031 1252 பெரியார்‌ ஈ, வெ ரா. சிந்தனைகள்‌ விட்டன. இனி நம்முடைய எந்தச்‌ சீர்திருதீததீதிற்கும்‌ அந்தப்‌ பேச்சு வராமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டியது பகுதீதறிவுவாதியின்‌ கடமையாகிவிட்ட து. பழநீ தமிழன்‌ வந்து போதிக்கத்‌ தகுந்த நிலையில்‌ இன்று நமது மனித சமூகம்‌ இல்லை. பழந்‌ தமிழன்‌ கொள்கை எதுவும்‌ இன்று எந்த மனித சமூகதீதிற்கும்‌ அவசியமும்‌ இல்லை. மனிதன்‌ காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால்‌ மடையர்களைதீ தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌, சாது மக்களை ஏமாற்ற அதைப்‌ பயன்படுத்தவிடக்கூடாது என்பதோடு, அவ்வளவு மடையர்களாகவும்‌ நாம்‌ இல்லை. இன்று நம்‌ பண்டிதர்‌ பலருக்குப்‌ பகுத்தறிவு இல்லாமல்‌ போனதற்குக்‌ காரணமே பழந்தமிழர்‌ வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும்‌. பழந்‌ தமிழர்‌ பேச்சைப்பேசி இனி ஆகவேண்டிய காரியம்‌ எதுவும்‌ இல்லை. ஆதலால்‌, பொதுமக்கள்‌ பழந்‌ தமிழர்‌ கொள்கைப்‌ பேச்சுப்‌ பித்தலாட்டத்திற்கு. இடங்கொடாமல்‌ பார்‌ தீதுக்கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும்‌. அன்றியும்‌ பழந்‌ தமிழர்‌ கொள்கை என்பது விவகாரத்திற்கு இடமாய்விட்டது. [¢ @Y அரசு3-கட்டுரை--10-1-1943] 4. சிந்திக்காததால்‌ கேடு தலைவரவர்களே ! பேராசிரியர்களே ! மாணவர்களே 1 சிந்திக்கும்‌ அறிவை 500, 1000 ஆண்டுகளுக்கு மூன்‌ மனிதன்‌ பயன்படுத்தி இருந்தால்‌ எவ்வளவோ முன்னுக்குப்‌ போய்‌ இருக்கலாம்‌. ஜன்மமே துக்கம்‌) வாழ்வே துன்ப சாகரம்‌--என்று எண்ணியும்‌, அறிவுகொண்டு எதையும்‌ சிந்திக்காமலும்‌ மனிதன்‌. அடங்கிக்‌ கிடந்தானே ஒழிய, 1000, 500 ஆண்டுகளுக்கு முன்‌ எவனும்‌ அறிவைப்‌ பயன்‌: படுத்தவே இல்லை. மனிதன்‌ தனது முயற்சியால்‌ இரு வேறுவகை நாய்களைச்‌ சேரவைதீதுச்‌ சிறந்த புதிய கினதீதை உண்டாக்குகிறான்‌ $ புளிப்பு மாங்காயைச்‌ சர்க்கரை மாங்காயாக மாற்ற இரு வேறு மரக்‌ கிளைகளை ஓட்டுகிறான்‌. ஆனால்‌, மனிதனை எந்த முறையில்‌ திருத்தி முன்னேற்றலாம்‌ என்று எண்ணவே இல்லை. எனகீகு உள்ள கவலை-மனிதனுக்கு இந்த எண்ணம்‌ ஏற்படும்படியான சாதனம்‌ இந்தப்‌ படிப்பு அல்ல, இருந்திருந்தால்‌ மனிதன்‌ எவ்வளவோ முன்னேறியிருப்பான்‌. மனிதனைச்‌ சீர்‌ SB35 முன்னுக்குக்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று எண்ணுபவர்கள்‌ மிகமிகக்‌ குறைவு: மக்கள்‌ அறிவின்‌ பெருமையை உணருவதற்கு முதுகைப்‌ பார்தீதுதீதான்‌ பழகி யிருக்கிறார்‌களே ஒழிய, முன்னே பார்தீதுப்‌ பழகவில்லை. கடவுள்‌ சொன்னது, மகான்‌ சொன்னது, ரிஷிகள்‌ சொன்னது, அவதார புருஷர்கள்‌ சொன்னது என்று பார்க்கிறானே ஒழிய--தன்‌ புதீதி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதேயில்லை. மனிதன்‌ குழந்தைப்‌ பருவத்தைக்‌ காட்டிலும்‌--3, 4 வயதில்‌ அறிவில்‌ சிறிது முன்னேறுகின்றான்‌ ] அதைவிடப்‌ பள்ளிப்‌ பருவத்தில்‌ முன்னேற்றம்‌ அடைகின்றான்‌. பிறகு திருமணமான பிறகு குழந்தை குட்டிகளைப்‌ பெற்ற க்கொண்டும்‌ பல புது அனுபவங்‌ களைப்‌ பெறுகிறான்‌. மற்றும்‌ கால மாறுதல்‌, சுற்றுச்‌ சார்பு, அக்கம்‌ பக்கம்‌ இவைகளுக்‌ கேற்பவும்‌ மாறுதல்‌ அடைகிறான்‌. . www.thamizham.net - Free E book No 3031 அறிவு வளர்ச்சி 1253 வாழ்வுக்கு, பெரறுப்புக்கு, பகீகுவதீதுக்கு ஏற்ப அறிவு மாறும்போ.து--1000, 2000 வருடங்களுக்கு முன்பு, ¢ ச.தர்யுகங்களுக்கு முன்பு, நமது முன்னோர்கள்‌ எப்படி நடந்‌ தார்கள்‌, நமது கடவுள்‌-சாஸ்திரங்கள்‌ என்ன சொல்லுகின்றன, அதன்படிதான்‌ நடக்க வேண்டும்‌ என்றால்‌ என்ன நியாயம்‌ 8 சென்ற நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்களைவிட நாம்‌ சிறந்தவர களாக உள்ளோம்‌, இது இப்படி இருக்க, 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன்‌ எப்படி அறிவுள்ளவனாக; இன்றைய மனிதனைவிட எதில்‌ சிறந்தவனாக இருக்கமுடியும்‌ ? கிராமதீ.து அறிவைவிட நகரதீது அறிவு சிறந்து கிருக்கின்றது. சென்னை போன்ற பெரிய இடங்களில்‌ நகரத்து அறிவைவிட அதிகம்‌ பெறமுடிகிறது. நமது நாட்டு அறிவைவிட லண்டன்‌, அமெரிக்கா அறிவு சிறந்து நிற்கின்றது) இந்த லண்டன்‌, அமெரிக்காவைவிட--ரஷ்யா அறிவில்‌ மேலோங்கி நிற்கின்றது. இவைகளை யெல்லாம்‌ கண்டு--நாம்‌ இதுவரை எதை எதை அறிவு வளர்ச்சி பெற்ற இடங்கள்‌ என்று எண்ணி இருந்தோமோ--அதை, அதைவிட அதிக வளர்ச்சி பெற்ற இடங்கள்‌ உண்டு என்பதை உணர்ந்து, நமது தவறான கருத்துக்களை எல்லாம்‌ மாற்றிக்கொள்ளுகின்றோம்‌. இவ்வளவு பிரதீதியட்சதீதைகி கண்ட பிறகும்‌ நாம்‌ கீழ்நிலையிலேயே இருக்‌ கின்றோம்‌. நமக்கு அறிவு இருந்தாலும்‌, பகுத்தறிவை-உணர்ச்சியைத்‌ தூண்ட அறிவு சாதனங்களும்‌ இல்லை; நமக்கு வழிகாட்ட ஆளளேயில்லை. எவனைப்‌ பார்தீதாலும்‌ பின்னாலே போகச்‌ சொல்லுவானே ஒழிய, முன்னுக்குக்‌ காட்ட ஆளே கல்லை. எதற்கு எடுத்தாலும்‌-சாஸ்திரதீதைப்‌ பார்‌ ! புராணத்தைப்‌ பார்‌ ! புலவர்களின்‌ இலக்கியத்தைப்‌ பார்‌ ! என்கிறார்களே ஒழிய, உன்‌ புத்தி என்ன சொல்லுகிறது என்று சிந்திதீதுப்‌ பார்‌ என்பதே இல்லை. மனிதன்‌ நடந்து கொள்ள வேண்டிய முறைகள்‌, ஒழுக்கங்கள்‌ என்ன என்றால்‌ அந்த முனி அப்படிச்‌ சொன்னார்‌) இந்த ரிஷி இப்படிச்‌ சொன்னார்‌ என்று கூறுகிறானே ஒழிய, அந்தப்‌ பயல்கள்‌ எல்லாம்‌ யார்‌, அவர்கள்‌ வாழ்ந்ததாகக்‌ கூறுகின்‌றாயே--அநீ்த 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு என்ன புதீதியிருந்திருக்கும்‌ என்று: எண்ணிப்‌ பார்ப்பதே இல்லை. தோழர்களே ! நமது கோர்ட்டுகளில்‌ சட்டதீதிற்கு வியாக்கியானம்‌ செய்யும்போது மேற்கோள்‌ காட்டி விளக்குகையில்‌--அகதீதியர்‌ என்ன சொன்னார்‌ ? நாரதர்‌ என்ன சொன்னார்‌ i வசிஷ்டர்‌ என்ன சொன்னார்‌ ₹ என்றுதான்‌ பார்கீகப்படுகிறது. நீங்கள்‌ நன்கு சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. அப்படிக்‌ கூறப்படுபவர்களெல்லாம்‌ யார்‌? அவர்கள்‌ பிறப்பு, வளர்ப்பு என்ன ? என்பதை எண்ணிப்‌ பார்தீதால்‌-நாம்‌ எவ்வளவு மோசமாக நடக்கின்றோம்‌ $ நமது சட்டம்‌ எவ்வளவு முட்டாள்தனமானது என்பது விளங்கும்‌. இந்த ரிஷிகள்‌ பலர்‌ மனிதர்களுக்கே பிறக்கவில்லை. கலைக்கோட்டு முனி- மானுக்கும்‌ ) ஜம்புகர்‌--நரிக்கும்‌, கவுதமர்‌--மாட்டுக்கும்‌, மாண்டவியர்‌-தவளைக்கும்‌, காங்கேயர்‌--கமுதைக்கும்‌, கணநாதர்‌-கோட்டானுக்கும்‌, சவுனகர்‌-- நாய்க்கும்‌, ௬ுகர்‌-- கிளிக்கும்‌, ஜாம்பவந்தர்‌--கரடிக்கும்‌, அஸ்வத்தாமா--குதிரைக்கும்‌ பிறந்தார்கள்‌ என்று புராணங்களில்‌ எழுதிவைத்துக்கொண்டு இருக்கின்றனர்‌. இவர்கள்‌ தாம்‌ நம்‌ வரழ்வுக்கும்‌ நடப்புக்கும்‌ ஒழுக்கமுறையைக்‌ கற்பிக்க எடுத்துக்காட்டாகக்‌ கூறப்படுபவர்கள்‌, எனவே; மாணவர்கள்‌ அறிவில்‌ நம்பிக்கை வைத்து; எந்தக்‌ காரியத்தையும்‌ அருவித்‌ அருவிப்‌ பார்க்கவேண்டும்‌ ) மூன்‌ னோர்கள்‌ பக்கம்‌ திரும்பிப்‌ பார்க்கவேகூடாது. இப்படி அறிவில்‌ நம்பிக்கை வைக்க வேண்டும்‌-சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌ என்று கூறுபவர்களை இவர்கள்‌] நாத்திகர்கள்‌ என்று ஒரு வார்‌ தீதையில்‌ கூறிவிடுகின்‌ றனர்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3031 1254 பெரியார்‌ ஈ, வெ. ரா சிந்தனைகள்‌ நாத்திகன்‌ என்றால்‌ ஞானி, அறிவாளி என்றுதான்‌ பெயர்‌ $ கடவுன்‌ இல்லை என்பவர்‌ என்பது பொருன்‌ அல்ல. ஞானி என்றால்‌ முனிவர்‌ என்பது அல்ல--ஞானம்‌ உடையவன்‌ $ அறிவு உடையவன்‌ என்பது பொருள்‌. எவன்‌ ஒருவன்‌ அறிவை உபயோகப்‌ படுத்‌. துகிறானோ--எவன்‌ ஒருவன்‌ அறிவுகொண்டு எதையும்‌ விவகாரம்‌ பண்ணுகிறானோ அவன்‌ நாதீதிகன்‌ என்று கூறப்படுகிறான்‌. ஆத்திகன்‌ என்றால்‌ அறிவில்‌ நம்பிக்கை வைகீகாமல்‌-சாஸ்திரம்‌, புராணங்கள்‌ முதலியவைகளை அப்படியே ஒப்புக்கொண்டு, ஆராயாமல்‌ நடப்பவன்‌ என்று பொருள்‌. தோழர்களே ! இராமாயணதீதிலேயே ஓர்‌ இடத்தில்‌ நாத்திகனைப்‌ பற்றிக்‌ குறிக்கும்‌ போது, * எவன்‌ ஒருவன்‌ நீதியில்‌ நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ அவன்‌ நாத்திகன்‌ 1 என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில்‌ நம்பிக்கை வைதீது நடக்க வேண்டும்‌ என்று சொன்னவர்கள்‌ எல்லாம்‌ ஒழிகீகப்பட்டே இருக்கின்றனர்‌. அதன்‌ காரணமாகவே இந்தத்‌ துறையில்‌ இறங்கிப்‌ பாடுபட எவருமே முன்‌ வருவதில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்‌ புதீதர்‌ தோன்றிப்‌ பாடுபட்டார்‌. * உன்‌ அறிவு என்ன: சொன்னதோ அதன்படி நட; முன்னோர்கள்‌--பெரியவர்கள்‌ சொன்னார்கள்‌, வெகு காலதீ.துக்குமுன்‌ சொல்லப்பட்ட கருதீதாயிற்றே என்று நம்பாதே 1! மோட்சம்‌, நரகம்‌ என்பது எல்லாம்‌ பிதீதலாட்டம்‌? என்று எடுதீதுக்‌ காட்டி விளக்கினார்‌. அவருடைய இயக்கம்‌ காஷ்மீர்‌ முதல்‌ கன்னியாகுமரி வரை பரவி இருந்தது என்றாலும்‌, புதீதருக்குப்‌. பிறகு அது ஒழிக்கப்பட்டு, சின்னாபின்னமாகீகப்பட்டுவிட்டது. பிறகு யாரும்‌ வரவில்லை. நாங்கள்‌ தான்‌ பாடுபடுகின்றோம்‌. மாணவர்களாகிய நீங்கள்‌ நல்ல வாழ்வில்‌ நம்பிக்கை வைக்கவேண்டும்‌. அறிவில்‌ நம்பிக்கை வைதீது ஒழுக வேண்டும்‌. [மதுரை தியாகராயர்‌ கல்லூரியில்‌, 13-3-1961-ல்‌ சொற்பொழிவு”! விடுதலை 8 4-4-1961] www.thamizham.net - Free £ book 14௦ 3031 பகுதி VIII கலைகள்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 * www .thamizham.net - Free E book No 3031 1. கலைகள்‌ 1. நமது இலக்கியம்‌ தலைவரவர்களே ! மாணவத்‌ தோழர்களே ! தாய்மார்களே | தமிழனைப்‌ பற்றிச்‌ சிந்திதீது இலக்கியம்‌ பற்றி ஏதாவது பேசுவதாக இருந்தால்‌, முதலில்‌ எதற்காக இலக்கியம்‌, அதனால்‌ நமக்கு என்ன பயன்‌ என்று யோசிக்க வேண்டும்‌. நம்‌ புத்திக்கு எட்டிய முறையில்‌ தமிழர்‌ பண்புக்கு, கலைக்குதீ தகுந்தவாறு ஏதாவது இருக்கிறதா என்றால்‌ ஒரு இலக்கியங்கூட இல்லை. இருந்தால்‌ யாராவது சொல்லட்டுமே! எல்லா இலக்கியங்களும்‌ ஆரியர்‌ பண்புக்கு, கலைக்கு, நடதீதைக்குத்தான்‌ இருக்கின்றன. வேண்டுமானால்‌, ¢ குறள்‌ இருக்கிறதே? என்று சிலர்‌ சொல்வார்கள்‌. நான்‌ சொல்வேன்‌, * குறளில்கூட தமிழருக்குதி தகுந்தவாறு 50 சதம்‌ தான்‌ இருக்கிறது? என்று, நாட்டில்‌ இலக்கியங்கள்‌ இருந்தால்‌ அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும்‌. ஆனால்‌, நம்‌ நாட்டு இலக்கியங்களோ புலவர்களும்‌ மதவாதிகளும்‌ ஆரியரும்‌ பிழைக்கத்தான்‌ இருக்கின்றன. * வடமொழி வேதங்கள்‌: ஆரியருக்‌ கென்றால்‌ தேவாரம்‌, திருவாசகம்‌, பிரபந்தங்கள்‌ தான்‌ நமது வேதங்கள்‌? என்று ஒரு தடவை மறைமலையடிகள்‌ சொன்னார்கள்‌. கடவுளைக்‌ கண்ணே, 'மணியே! ! என்று பிரார்த்தித்தால்‌ அது வேதமாகுமா? இலக்கியமாகுமா? மூடத்தனமான பக்திப்‌ பாடல்‌ களைத்‌ தவிர நமக்கு இலக்கியமில்லை மேல்நாட்டு இலக்கியங்களைப்‌ பாருங்கள்‌ ! மேல்நாட்டு இலக்கியங்களை எடுத்துப்‌ பாரீதீதால்‌ நான்‌ சொல்வதன்‌ உண்மை விளங்கும்‌, நம்‌ நாட்டில்‌ இருக்கும்‌ இலக்கியங்களை எடுத்துப்‌ பார்தீதால்‌ அதில்‌ மதம்‌ தலைவிரித்தாடும்‌. ஆத்திகம்‌ ஆதிக்கம்‌ செலுத்தும்‌, ஆரியம்‌ அதை அடிமை கொண்டதாக இருக்கும்‌. இன்றைக்குத்‌ தொல்காப்பியம்‌ இருக்கிறது. அதுவும்‌ இலக்கியந்தான்‌, அது புலவர்‌ கையிலும்‌, பட்டதாரி கையிலும்‌ சிக்கியதே தவிர பாட்டாளிகள்‌ கையில்‌ சிக்கவில்லை. என்றாலும்‌, அதிலும்‌ ஆரியம்‌ புகுநீ திருக்கிறது. விளம்பரமாகியிருக்கும்‌ மற்ற இலக்கியங்கள்‌ இராமாயணம்‌, பாரதம்‌, பெரியபுராணம்‌, தேவாரம்‌, திருவாசகம்‌ இவைதாம்‌. பெரும்பாலானவை வடமொழியி லிருந்து காப்பியடிக்கப்பட்ட நூல்கள்‌. மற்றவை அவற்றை அனுசரித்துச்‌ செய்யப்‌ பட்டவை, ஆரியர்‌ வருகைக்கு முன்பு தமிழர்‌ பண்பு எப்படி இருந்தது, இன்றைக்கு எப்படி இருக்கவேண்டியதாகும்‌ ஏன்பதைக்காட்ட நமக்கு இலக்கியம்‌ இருக்கிறதா? ஏதாவது ஒன்று இருந்ததாகக்‌ காட்டவாவது முடியுமா? ஆரியர்கள்‌ இதில்‌ செல்வாக்குப்‌ பெற்றிருந்த காரணதீதால்‌, மக்கள்‌ இதைப்பற்றிக்‌ கவலைப்பட வில்லை; சிந்திக்கக்கூட இல்லை. ஆங்கில இலக்கியங்களைப்‌ படித்தவர்கள்‌ பிழைப்புக்காக உதீதியோகதீதிற்குப்‌ போய்விட்டார்கள்‌. அவர்கள்‌, அதை வேறு எவருக்கும்‌ கற்றுத்‌ தரவில்லை; பயன்‌ படுத்த வில்லை. அதனால்‌ நல்ல மேல்நாட்டு இலக்கியங்களும்‌ நம்‌ மக்களிடம்‌ பரவவில்லை. அறிவோடு ஆராய்ந்து பார்த்தால்‌, நமக்கு இலக்கியம்‌ இருந்ததா என்பதுபற்றிக்கூட நினைக்க நியாயமில்லை. ஆரியர்களுக்கே இலக்கிய சுதந்திரம்‌, ஆக்க சுதந்திரம்‌ இருந்ததோடு அழிக்கும்‌ சுதந்திரமும்‌ இருந்தது. நமக்கென இருந்தவை எல்லாம்‌ அழிக்கப்பட்டுவிட்டன. அக்‌ காலத்தில்‌ கிராமபோன்‌ இல்லை; அச்சு இயந்திரம்‌ இல்லை $ ஓலை ஏடுகள்தான்‌ இருந்தன. ஏடு நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. கரையான்‌ அரிதீதுவிடும்‌ ) பூச்சிகள்‌ தின்றுவிடும்‌. ஆரியம்‌ இலக்கியத்‌ துறையிலே ஆதிக்கம்‌ கொண்டிருந்தபொழுது அதனுடன்‌ போட்டிபோடதீ தக்க சாதனங்கள்‌ இல்லாமலிருந்தன. 1686-1568 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1258 பெரியார்‌ & வெ, ரா, சிந்தனைகள்‌ முதலாவது, நம்மவர்களுக்குப்‌ படிப்பில்லை. சிறிது படிதீதவர்கள்‌ இருந்தால்‌ அவர்கள்‌ பக்தர்களாக ஆகிவிடுகிறார்கள்‌. அப்‌ பகீதர்கள்‌ ஆரியத்தைப்‌ பரப்பும்‌ அடிகளார்களாக ஆகிவிடுகிறார்கள்‌. இலக்கியம்‌ என்றாலே பகீதி நூல்கள்‌ ) புலவர்கள்‌ என்றாலே பக்தர்கள்‌. இப்‌ புலவர்களால்‌ இலக்கியம்‌ எப்படி வளரமுடியும்‌? ஆகவே, பொதுவாக நமக்கு இலக்கிய மில்லை. இன்று புலவர்கள்‌ என்பவர்கள்‌ நிறைய இருக்கிறார்கள்‌ என்றாலும்‌ அவர்கள்‌ ஆரிய இலக்கியங்களை விற்று வயிறு வளர்கீகிறவர்கள்‌ தான்‌, கலைவாணர்கள்‌ என்பவர்களும்‌ ஏராளமாய்‌ இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ 100-க்கு 100 பேரும்‌ ஆரியப்‌ பண்புள்ள இலக்கியங்‌ களைக்‌ கலைக்குள்‌ புகுதீதி, ஆரிய அடிமைகளாக இருந்து, வயிறு வளர்கீகிறவர்கள்‌ தான்‌. அவர்கள்‌ கல்லூரிகளிலும்‌, உத்தியோகங்களிலும்‌, பள்ளிகளிலும்‌ இநநீதுகொண்டு புத்தகம்‌ போட்டுப்‌ பணம்‌ சம்பாதிக்கிறார்கள்‌. நமக்கு, நம்‌ பண்புக்கு வேண்டிய இலக்கியங்களை எழுத யாரும்‌ இல்லை. இரண்டொரு ஸ்தாபனங்கள்‌ தான்‌ இதற்காகப்‌ பாடுபடுகின்‌ றன. அவற்றுக்குச்‌ செல்வாக்கு இல்லை. சிறிது செல்வாக்கு இருந்தாலும்‌ அதை எதிரிகள்‌ மட்டந்தட்டியபடி இருக்கிறார்கள்‌. அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும்‌ இலக்கியமே தேவை. ஆகவே, இனிமேல்தான்‌ நமக்கான இலக்கியம்‌ தோன்றவேண்டும்‌. அதில்‌ இந்துமதம்‌, ஆதீதிகம்‌, ஆரியம்‌ மூன்றும்‌ இருக்கக்கூடாது. அறிவு, ஒழுக்கம்‌, விஞ்ஞானம்‌ இவைதான்‌ இருக்கவேண்டும்‌. அறிவு, ஒழுக்கம்‌, விஞ்ஞானம்‌, ஆராய்ச்சி என்றால்‌ அவை நம்‌ நாட்டில்‌ நாத்திகம்‌, மதவெறுப்பு என்றாக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே நம்‌ நாட்டில்‌ நல்ல பயன்படும்‌ இலக்கியம்‌ இல்லை என்பதோடு தோன்றவும்‌ இல்லை. காவியங்கள்‌ என்ற பெயரால்‌ சில இலக்கிய நூல்கள்‌ இருக்கின்றன. அவை எதற்கு உதவும்‌ என்பதே எவருக்கும்‌ தெரியாது. அவை மக்களிடம்‌ பரவவும்‌ இல்லை. உண்மையில்‌ தமிழருக்கு உகந்த ஒரு கலக்கிய நூல்கூட இல்லை. சிலப்பதிகாரதீதில்‌ ஆரியம்‌, மடமை கலக்காமல்‌ இருக்கும்‌ பத்து வரிகளைக்‌ காணமுடியாது. இப்படித்தான்‌. மற்றவையும்‌. ஆரியப்‌ பண்பு வேறு) நமது பண்பு வேறு. ஆரியர்‌ வேறு ; நாம்‌ வேறு, ஆரியம்‌ வேறு, திராவிடம்‌ வேறு என்ற உணர்ச்சியும்‌ எண்ணமும்‌ இப்போது 50 ஆண்டு களாகதீதான்‌ மக்களிடம்‌--அதவும்‌ வெகு சில மக்களிடம்‌ காணமுடிகிறது. நேற்றுவரை இலக்கியங்களைக்‌ கையாண்டவனும்‌, தோற்றுவிதீதவனும்‌ ஆரியன்தான்‌. ஆரியப்‌ பிரச்சாரதீதிற்கும்‌ ஆதிக்கத்திற்குந்தான்‌ அவற்றைத்‌ தோற்றுவித்தான்‌. நம்‌ முயற்சியால்‌ தமிழில்‌ ஏதோ சில நூல்கள்‌ தோன்றின. பத்திரிகைப்‌ பிரச்சாரம்‌ செய்யப்‌ பலர்‌ வசதி பெற்றுள்ளனர்‌. என்றாலும்‌, அவர்களில்‌ ஆரியத்திற்கு அடிமையாகிப்‌ பணம்‌ திரட்டும்‌ ஈனப்‌ பிறவிகளாக$வ அதிகம்‌ பேர்‌ இருந்து வருகிறார்கள்‌. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்‌: இருந்த தமிழ்ப்‌ புலவர்கள்‌ இவ்வளவு துரோகிகளாக இல்லாவிட்டாலும்‌ மடமையில்‌, பொய்யில்‌ ஊறியவர்கள்‌. பட்டமரம்‌ தழைக்கப்‌ பாடுவார்கன்‌. அறம்‌ பாடி மிரட்டுவார்கள்‌. பிச்சை எடுக்கக்‌ கவி பாடுவார்கள்‌, ஆரிய புராண இலக்கியத்தைப்‌ பரப்பிக்‌ கூலி பெறுவார்கள்‌. இந்தக்‌ கோவிலில்‌ முக்கியம்‌ என்ன என்று ஒருவனைக்‌ கேட்டால்‌ அதுவா, அது கன்ன ஆழ்வாரால்‌ மங்களாசாசனம்‌ பெற்ற கோவில்‌ ; இன்ன நரயன்மாரால்‌ பாடப்‌ பெற்ற கோவில்‌ என்பது தான்‌ பெருமை. பழங்காலத்தில்‌ ஏதோ சிறிது படித்தாலும்‌ பெரும்‌ புலவனாகிவிடுவான்‌. அக்‌ காலத்தில்‌ வசனம்‌ இல்லை. பெரிதும்‌ பாட்டுத்தான்‌. அந்தப்‌ பாட்டும்‌ எதுகை, மோனையை அவசியமாகக கொண்டவையாக இருக்கும்‌. அதைத்‌ தெரிந்தவன்‌ ஒன்று பிச்சைகீகுப்‌ பாடுவான்‌, அல்லது பகீதிக்குப்‌ பாடுவான்‌ ! பக்திக்குப்‌ பாட ஆரம்பித்தால்‌ சுவாமிகள்‌, அடிகள்‌, நாயன்மார்‌, ஆழ்வார்‌ ஆகிவிடுவார்கள்‌. அவர்கள்‌ அதிகமாகப்‌ பிச்சை எடுதீதுக்கொண்டு திரிந்த பக்கத்தில்‌ உள்ள கடவுள்களைப்பற்றிப்‌ பாடிய பாட்டுக்கள்‌ பிரபந்தங்கன்‌ ஆகிவிடுகின்றன. அக்‌ கோவில்கள்‌ பாடல்பெற்ற கோவில்‌-- www.thamizham.net - Free £ book No 3031 கலைகள்‌ 1259 * ஸ்தலங்கள்‌ ஆகிவிடுகின்றன. பாட்டு, ¢ தேவ ஆரங்கள்‌? ஆகிவிடுகின்றன. யாரோ: ஒரு சில புலவர்கள்‌--வள்ளுவர்‌, அவ்வை, கபிலர்‌ போன்றவர்கள்‌ நீதிநூல்‌, நீதி மஞ்ஈரி, கொன்றைவேந்தன்‌, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம்‌, நாலடி முதலிய பல நீதிகளைப்பற்றியும்‌ ஒமுக்கம்பற்றியும்‌ கூறப்பட்டுள்ள இலக்கியங்கள்‌ பலவற்றைபி பாடியிருக்கிறார்கன்‌, 60,70 ஆண்டுகளுக்கு முன்‌ நான்‌ திண்ணைப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ பொழுது கிவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பை மேட்டிற்குப்‌ போகச்‌ செய்யப்பட்டுவிட்டன. அந்த இடங்களைப்‌ புராணங்கள்‌, இதிகாசங்கள்‌, கைப்பற்றிவிட்டன. மக்களுக்குள்‌ 50 ஆண்டுக்கு முன்பிருந்த ஒழுக்கம்‌ இன்று ஏன்‌: இல்லை என்றால்‌, ஒழுக்கத்தைப்‌ போதிக்கும்‌ இலக்கிய நூல்‌ எங்கே இருக்கிறது ! ஒழுக்கத்‌ திற்காக இலக்கியம்‌ இல்லை என்பது மாத்திரமல்லாமல்‌, ஒழுக்கதீதிற்கான கல்வியும்‌ இல்லை) ஒழுக்கத்திற்கான மதமும்‌ இல்லை) ஒழுக்கத்திற்கான அரசும்‌ இல்லை. ஒழுக்கக்‌ கேட்டிற்கும்‌, மோசடி-வஞ்சகதீதிற்கும்‌, து$ராகத்திற்கும்‌ கல்லூரி, சகல கலரசாலை என்று சொல்லதீதக்க வண்ணமே இவைகள்‌ இருக்கின்றன. [திருச்சி பெரியார்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌, 29-8-1956-ல்‌ சொற்பொழிவு-- விடுதலை! 3-9-1956] 2. குறளும்‌--நானும்‌ பேரன்பு படைத்த தலைவர்‌ அவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே ! வணக்கம்‌, . வள்ளுவர்‌ குறளையும்‌, அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்‌. எல்லாவற்றையும்‌ குறை சொல்லும்போது, பலர்‌ என்னிடம்‌, ¢ எல்லாம்‌ போய்விட்டால்‌, நமக்கு எதுதான்‌ நூல்‌ 11 என்று கேட்பார்கள்‌, நான்‌, ¢ இங்கே இருக்கிற மலத்தினால்‌ கெட்ட நாற்றம்‌ வீசுகிறது) அதை எடுத்துவிடு என்று கூறினால்‌ அந்த இடத்தில்‌ என்ன வைப்பது என்றா கேட்பது$? என்று பதில்‌ கூறுவேன்‌. ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில்‌ மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்‌ கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம்‌ புரிந்து வந்தேன்‌. பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு--அறிவாளி என்றால்‌ பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்சீசி மிக்கவர்களோடு-நம்‌ உணர்சீசியுள்ள அறிவாளிகளோடு பழகியடோது குறளின்‌ மேன்மை பற்றி அவர்கள்‌ எடுத்துக்‌ கூறினார்கள்‌, நான்‌, * இப்படிச்‌ சொல்லப்பட்டிருக்கிற3த, இந்த கிடத்தில்‌ இப்படி யிருக்கிறதே! என்று கேட்டேன்‌. ₹ அது பரிமேலழகரின்‌ உரை; அது குறளாசிரியர்‌ கருத்தல்ல? என்று எடுத்துக்‌ கூறி உண்மை உரையினைச்‌ சொன்னார்கள்‌, அந்தக்‌ காலதீதில்‌ பரிமேலழகர்‌ உரைதான்‌ சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர்‌ மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார்‌. பின்னர்‌ வந்த அறிவாளிகள்‌ அதைக்‌ கண்டித்து, குறளின்‌ உண்மைக்‌ கருத்தை எடுதீதுக்‌ காட்டினார்கள்‌. அதிலிருந்துதான்‌ நான்‌ குறளைப்‌ பற்றிப்‌ பேசுகி3றன்‌. அதுவும்‌ அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்‌ கொண்டல்ல;$ ¢ நான்‌ சொல்லுகிற கருதீ.து--அதிலும்‌ இருக்கிறது பார்‌ 1 என்று கூறிவந்தேன்‌. சிறிது குறை இருந்தாலும்‌ இப்போதைக்கு இது இருக்கட்டும்‌ என்று கருதினேன்‌. புராணக்‌ கருதீதுகீகளிலும்‌, மூட நம்பிக்கைகளிலும்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ நம்‌ மக்க ளுக்குப்‌ பகுத்தறிவு உளர்ந்தபின்‌, மூடக்‌ கருத்துக்கள்‌ ஆட்டம்‌ கண்ட பின்தான்‌ குறளின்‌” பொருளை உணரும்‌ அறிவு மக்களுக்கு உண்டாகும்‌ என்று கருதி, முதலில்‌ மூடக்‌ கருத்து களை அகற்றும்‌ பணியில்‌ பிரசீசாரம்‌ புரிந்து வந்தேன்‌. இன்று மக்களுக்குக்‌ கொஞ்சம்‌ அறிவுத்‌ தெளிவு-பகுதீதறிவுதி தன்மை வளர்ந்து இருக்கிறதால்‌ கின்று குறளைப்‌ பற்றிப்‌ பேசுகிறேன்‌. - www.thamizham.net - Free £ book 14௦ 3031 1260 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ¢ குறளில்‌ இப்படியிருக்கிறதே ! நீ ஏன்‌ இப்படி நடக்கிறாய்‌?” என்று கேட்காதீர்கள்‌. நான்‌ சொல்லுவது அதில்‌ இருக்கிறது என்ற அளவில்தான்‌--நான்‌ குறளை ஆதரிக்கிறேன்‌ அதை அப்படியே முழுவதையும்‌ ஒத்துக்‌ கொள்ளமாட்டேன்‌. உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர்‌ மிக வன்மையாகக்‌ கண்டிக்‌ கிறார்‌ $ கொல்லாமையின்‌ உயர்வு @iy வெகுவாக எழுதியிருக்கிறார்‌. குறளிலேயே அப்படிச்‌ செொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான்‌ மாமிச உணவு உட்கொள்ளாமல்‌ இருக்கமுடியுமா மக்களுக்கும்‌ எல்லா நடவடிக்கைகளுகீகும்‌ குறள்தான்‌ ஆதாரம்‌ என்று சொல்லவில்லை. குறளிலிருநீது உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌. வேண்டாததைதீ தள்விவிடுங்கள்‌ என்றுதான்‌ கூறுகிறேன்‌. ஒரு கடையில்‌ எல்லா சாமான்களும்‌ கிடைக்கும்‌ என்றால்‌, அந்தக்‌ கடையில்‌ உள்ள எல்லா சாமான்களையும்‌ நாம்‌ வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத்‌ தேவையான சாமான்களை மாதீதிரந்தான்‌ வாங்கிவருவோம்‌. அது போலவே, குறளில்‌ வேண்டியதை எடுத்துக்‌ கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள்‌ என்று கூறுகிறேன்‌. குறனில்‌ ஏதோ சில குறைகள்‌ இருக்கலாம்‌) இருக்க முடியும்‌. ஏனென்றால்‌, அது 1950-வது வருடதீதிய (இன்றைய) மாடல்‌ அல்ல, 2000 வருடத்திற்கு மூந்திய சங்கதி. திருவள்ளுவர்‌ திரிகால முணர்ந்த மூனிபுங்கவரென்‌ றோ, ஞானியென்றோ நாம்‌ கொள்ள வில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர்‌ ஒருவன்‌ எவ்வளவு அறிவானியாய்‌ இருந்தாலும்‌ எலக்ட்ரிக்‌ லைட்‌, ஒலிபெருக்கி, மோட்டார்‌ முதலியவைகளைக்‌ கண்டிருப்பானா ₹ மதவாதிகள்‌ வேண்டுமானால்‌, ¢ எல்லாக்‌ காலத்தையும்‌, முக்காலத்தையும்‌ உணர்ந்த மகான்‌: இவர்‌? என்று பலரை விளம்பரப்படுதீதலரம்‌. ஆனால்‌, அது பகுதீதறிவுக்கு ஒவ்வாதது. நாம்‌ திருவள்ளுவரை மகான்‌ என்றோ அவதார புருஷரென்றோ ஒதீ.துக்கொள்ளமாட்டோம்‌. திருவள்ளுவர்‌ நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர்‌. அந்தக்‌ காலத்தில்‌ மக்களிடம்‌ பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர்‌ என்ற அளவில்தான்‌ ஒத்துக்‌ கொள்ள முடியும்‌. அந்தப்படியிருக்க, 2000 ஆண்களுக்கு முன்னதாகத்‌ திருவள்ளுவர்‌ சொன்னவை எல்லாம்‌ அப்படியே இன்றைக்கும்‌ ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான்‌. பேசும்‌ கொள்கைகள்‌ சரி) என்‌ திட்டங்கள்‌ சரி என்றால்‌ எனக்குப்‌ பிறகும்‌, இன்னும்‌ 100, 200, 1000 வருடங்களுகீகுப்‌ பிறகும்‌ என்‌ கொள்கைகள்‌--நான்‌ வகுத்த திட்டங்கள்‌ கொஞ்சங்கூட மாற்றப்படாமல்‌ அப்படியே இருக்கவேண்டும்‌ என்பது என்ன நியாயம்‌ i அந்தப்படி இருக்க முடியுமா? \ காலதீதிற்கு ஏற்ற முறையில்தான்‌ எண்ணங்களின்‌ விரிவும்‌, கொள்கை, திட்டங்‌ களும்‌ இருக்க முடியும்‌. போர்‌ முறை பற்றித்‌ திருவன்ளுவர்‌--வில்‌, வாள்‌, வேல்‌, கேடயம்‌ என்ற ஆயுதங்களை வைதீதுதீதானே எழுதியிருக்கிறார்‌ ! இன்று எழுதப்பட்டால்‌ அணு குண்டைப்‌ பற்றி எழுதுவார்கள்‌ ] நாளைக்கு வேறொன்று, இந்தப்‌ படியாகதீதானே மாறிக்‌ கொண்டே போகும்‌ | அப்படியிருக்க, எதையும்‌ மாற்றக்கூடாது என்பது என்ன நியாயம்‌ ₹ ஆரியக்‌ கருதீ.துகள்‌, தத்துவங்கள்‌ நம்‌ நாட்டில்‌ நுழையாதிருந்தால்‌, நமக்குக்‌ குறளே ஆதாரமாக-குறனே நம்முடைய மதமாக இருந்திருக்கும்‌. ஆரியர்கன்‌ திருவள்ளுவரை முதலிலேயே--பிறப்பிலேயே கிழிநீதவராக ஆக்கிவிட்டார்கள்‌. இந்து மததீதில்‌ எந்தக்‌ காரியங்களைச்‌ செய்தவராக இருந்தாலும்‌, அதிசயமான அற்புதமான--நடைமுறைகீகு ஒவ்வாத கருத்‌ துக்களை அவர்களின்‌ பிறவியில்‌-வரலாற்றில்‌ புகுதீ.துவார்கள்‌. இவன்‌ குதிரைக்குப்‌ பிறந்தான்‌ ) இவன்‌ குரங்குக்குப்‌ பிறந்தான்‌ )$ இவன்‌ யானைக்குப்‌ பிறந்தான்‌ ) இவன்‌ செதீதுப்போனவனை உயிர்‌ மீட்டு எழச்செய்தான்‌) இவன்‌: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1261 மண்ணைச்‌ சர்கீகரையாகீகினான்‌ ] குருடனுக்குக்‌ கண்‌ கொடுதீதான்‌--என்பது போன்ற அதிசயங்களைப்‌ புகுதீதி விடுவார்‌ கள்‌. ஏனென்றால்‌, அப்போதுதான்‌ அதிலிருக்கும்‌ குற்றங்‌ குறைகள்‌ பற்றி--ஆபாசங்கள்‌ பற்றி யாரும்‌ கேள்விகள்‌ கேட்க மாட்டார்கள்‌ என்ற கருத்தோடு ! ஆனால்‌, குறளில்‌ அப்படிப்பட்ட அதிசயம்‌ ஒன்றையுங்‌ கூறாவிட்டாலும்‌ திருவள்ளுவரைதீ தெய்வீகப்‌ பிறவியாக ஆக்காவிட்டாலும்‌--அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக்‌ கூறிவிட்டார்கள்‌. வள்ளுவரின்‌ தாயை ஒரு விபசீசாரியாகக்‌ கற்பனை செய்து விட்டான்‌, வள்ளுவர்‌ பிறப்பைப்பற்றி எழுதும்‌ போது பறைச்சிக்கும்‌ பார்ப்பானுக்கும்‌ வள்ளுவர்‌ பிறந்தார்‌ என்று எழுதுகிறான்‌, இதில்‌ புத்திசாலித்தனம்‌ என்ன வென்றால்‌--குறளைப்‌ போன்ற நீதி நெறிகளை; மக்களின்‌ உயர்‌ ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப்‌ போதிக்கதீதக்க தகுதியும்‌ அறிவும்‌ வள்ளுவருக்கு வந்ததற்குக்‌ காரணமே, அவர்‌ பார்ப்பனருக்குப்‌ பிறந்த தால்தான்‌ ஆகும்‌ என்ற கருதீதில்‌ இந்தக்‌ கதையை எழுதியிருக்கிறார்கள்‌. இந்தப்படி பறைச்சியுடன்‌ பார்ப்பான்‌ கூடினான்‌ என்பது, பார்ப்பனர்களுக்கு தர்மப்படி எவ்வளவு கேவலம்‌ என்பதை மறநீதுவிட்டார்கள்‌. அக்‌ காலதீதில்‌ அறிவாளிப்‌ பார்ப்பான்‌ எவ்வளவு அயோகீகியதீதனமாக நடந்திருக்கிறான்‌ என்பதைக்‌ காட்டுகிறது. இந்தப்படியாக முதல்‌ எடுத்தவுடனேயே குறளையும்‌, அதன்‌ ஆசிரியரையும்‌ இழிவு படுத்தி விட்டார்கள்‌. நாட்டில்‌ புராணங்களைப்பற்றியும்‌, திராமன்‌-சீதை தொடர்புபற்றியும்‌, கந்தன்‌- வள்ளி காதல்‌ லீலைகள்பற்றியும்‌, கிருஷ்ணனின்‌-பிள்ளை விளையாட்டு, கோபிகள்‌ லீலைகள்‌ பற்றியும்‌ எல்லோருக்கும்‌-பாமரர்கள்‌, பாட்டாளிகள்‌, படிக்காதவர்கள்‌, கூலிகள்‌ முதற்‌ கொண்டு பெரிய, பெரிய சீமான்கள்‌ வரை தெரியும்‌ ) தெரிந்திருப்பார்கள்‌. ஆனால்‌, குறள்‌ பற்றிப்‌ பெரிய பணக்காரர்‌ களுக்கும்‌ தெரியாது) தெரிய வாய்ப்பும்‌ இல்லை. இந்தப்படியசகக்‌ குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ-மகீகன்‌ மனத்தில்‌ குறளின்‌ கருதீதுக்கள்‌ புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள்‌ செய்து விட்டார்கள்‌. நான்‌, ஆரியக்‌ கருதீதுக்களெல்லாம்‌--அதன்‌ ததீ.துவங்கள்‌, கொள்கைகள்‌ ஆகியவை கவெல்லாம்‌ ஒரு கூட்டத்தின்‌ உயர்வுக்கும்‌, வேறொரு கூட்டம்‌ வேதனைப்‌ படவுமான முறையில்‌ அமைக்கப்பட்டிருக்கின்‌றன என்று கூறி--அவைகளை; ஆரியக்‌ கருதீதுக்களை- அவைகளுக்கு ஆதாரமாய்‌ இருக்கின்ற மதம்‌, கடவுள்‌ தன்மை, புராணங்கள்‌ போன்ற வைகளை ஒழிக்க வேண்டும்‌ என்றும்‌ பிரச்சாரம்‌ புரிந்து வருவதால்‌ எனக்கு வள்ளுவர்‌ உள்ளமும்‌, அவர்‌ நூலின்‌ உண்மைக்‌ கருதீதும்‌ தெளிவாகத்‌ தெரிகின்றது. ஆகவேதான்‌; நாம்‌ வள்ளுவரை, அவர்‌ இயற்றிய திருக்குறளைப்‌ போற்றுகிறோம்‌. வள்ளுவர்‌ யார்‌, எந்தக்‌ குலத்தைச்‌ சோநீதவர்‌ என்று நிச்சயமாய்க்கூற முடியாது. வன்ளுவர்‌ ஆரியத்தை எதிர்ப்பவர்‌ ) ஆரியக்‌ கருத்துக்களைக்‌ கண்டிப்பவர்‌ ) அவைகளை வெறுப்பவர்‌ என்று தான்‌ நமக்குத்‌ தெரிகிறது. அத்தோடு, வள்ளுவர்‌ எந்த மதத்தையும்‌ சார்‌ நீதவராகதீ தெரியவில்லை. சாதாரணமாக சைவ, வைணவ, சமணர்கள்‌ விவாதங்களில்‌ சமணர்கள்‌ தான்‌ வெல்லுவார்கள்‌. பெரிய புராணம்‌ எழுந்ததே சமணர்களை ஒழிப்பதற்‌ காகதீதான்‌. ஆரியக்‌ கருத்‌ துக்களை சமணர்கள்‌ ஏற்கவில்லை என்பதற்காக அவர்கன்‌ வெறுக்கப்பட்டார்கள்‌. அதன்‌ விளைவாகப்‌ பலப்‌ பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்‌ பட்டார்கள்‌ சமணர்கள்‌. இன்றுங்கூட மதுரையில்‌ 8000 சமணர்களை கமுவேற்றின திருவிழா கொண்டாடப்படுகிறது. அவ்வளவு தூரம்‌ ஆரியக்‌ கருதீ.துக்களை எதிரீதீது, அதற்காக இன்னல்கள்‌ பல பட்டிருக்கும்‌ சமணர்களும்‌-திருக்குறளை ஆ தரிக்கிறார்கள்‌. சைவ சமயதீதவரும்‌, வைணவ மததீதாருங்கூட திருக்குறளை மாபெரும்‌ நூல்‌ என்று ஒத்துக்‌ கொள்ளுகின்றனர்‌. இஸ்லாம்‌ மதத்தைச்‌ சேர்நீதவர்களும்‌, கிறிஸ்துவ மதத்தின்‌ கீழிருப்பவர்களும்‌ திருக்குறளைப்‌ www.thamizham.net - Free £ book No 3031 1262 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ போற்றுகிறார்கள்‌, இந்தப்படி எல்லோரும்‌ போற்றுவதால்தான்‌ திருக்குறள்‌ ஒரு மதத்தைத்‌ தமுவியோ, ஒரு மததீதின்‌ உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல்‌ என்றில்லாமல்‌, மக்களின்‌ வாழ்க்கைக்கு, மக்கள்‌ தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வண்டிய வழி வகைகள்‌ பற்றி எழுதப்பட்ட நூல்‌ என்று ஆகிறது. குறளாசிரியர்‌ காலத்தில்‌ * இந்து மதம்‌? என்பது இல்லை. இந்து மதம்‌ என்று இருந்திருந்தால்‌ திருக்குறளில்‌ ஒரு இடத்திலாவது * இந்து? என்ற சொல்லைக்‌ குறிப்பிட்டிருக்கலாம்‌. ஆனால்‌, 1330 பராட்டுக்களிலும்‌ ஒரு இடத்திலாவது இந்து! என்ற சொல்‌ காணப்படவே இல்லை. அது மட்டுமல்ல, குறளாசிரியர்‌ கடவுளையும்‌, மோட்ச நரகத்தையும்‌ ஒதீதுக்‌ கொள்ள வில்லை. சூறளில்‌ நீங்கள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌ என்ற அளவில்தான்‌ காணமுடியுமே தவிர--* வீடு? ¢ மோட்சம்‌ ? பற்றி அவர்கூறி கிருப்பதாக இல்லை. அறம்‌, பொருள்‌, இன்பம்‌ என்றுதான்‌ முப்‌ பிரிவுகளைக்‌ கூறுகிறார்‌, மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு. திருவன்ளுவர்‌ கடவுளைப்பற்றிக்‌ கவலைப்படவில்லை என்று கூறினேன்‌. திருக்‌ குறளின்‌ முதல்‌ அதீதியாயதீதில்‌, * கடவுள்‌ வாழ்த்து? என்று ஒரு அதிகாரம்‌ இருக்கிறது. அதில்‌ உருவ வணக்கக்‌ கொள்கைகள்‌ இடம்‌ பெறவில்லை. மேலும்‌, இந்து மதக்‌ கடவுள்‌ களைப்‌ பற்றிய ¢ புகழாரம்‌? அந்தப்‌ பதீதுப்‌ பாட்டுக்களிலும்‌ கிடையாது. சிலர்‌ கூறுகிறார்கள்‌, ¢ குறளில்‌ முதல்‌ அதீதியாயதீதில்‌ இருக்கும்‌ கடவுள்‌ வாழ்தீதுப்‌ பாக்கள்‌ கடைச்‌ செருகல்‌? என்று $ சிலர்‌, ¢ அப்படியெல்லாம்‌ இல்லை; வள்ளுவர்‌ பாடியது தான்‌? என்று கூறுகிறார்கள்‌. நம்மைப்‌ பொறுத்த வரையில்‌ கடவுள்‌ வாழ்தீதுப்‌ பாக்கனை வள்ளுவரே பாடினதாக வைதீதுக்கொண்டாலும்‌ ஒன்றும்‌ கெட்டுப்‌ போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப்‌ போன்ற கடவுள்களுகீகா வள்ளுவர்‌ வாழ்தீதுக்‌ கூறினார்‌ ₹ இல்லை. கடவுள்‌ வாழ்தீதுகீ கூறப்படும்‌ பத்துப்‌ பாட்டிலும்‌, ஒரு பாட்டிலாவது வள்ளுவர்‌ கடவுள்‌? என்ற சொல்லைக்‌ கையாளவில்லை. திராவிட மக்களுக்கு * எல்லாம்‌ வல்ல, *₹ எங்கும்‌ நிறைந்த? என்பதாகக்‌ கடவுளைக்‌ குறிக்க ¢ கடவுள்‌? என்ற ஒரு சொல்லைத்‌ தவிர வேறு சொல்‌ கிடையவே கிடையாது. அந்தச்‌ சொல்லையே வள்ளுவர்‌ தமது குறளில்‌ கையாளவில்லை ! கடவுள்‌ வாழ்தீது என்ற அதிகாரத்தில்‌ கையாளவில்லை என்பதோடு மாதீதிரமல்ல. குறள்‌ முழுவதிலுமே--1330 பாடல்களிலுமே ஒரு இடத்தி லாவது வள்ளுவர்‌ ¢ கடவுள்‌ ? என்ற சொல்லைக்‌ குறிப்பிடவில்லை. தமிழ்‌ மொழியில்‌ உள்ள நல்ல சொற்களையெல்லாம்‌-உயர் நீத சொற்களையெல்லாம்‌ தமது நூலில்‌ பயன்படுத்திய வள்ளுவர்‌, ¢ கடவுள்‌ ? என்ற சொல்லை மட்டும்‌ பயன்‌ படுத்தவில்லை. இரண்டாவது, கடவுள்‌ வாழ்தீது? என்பதே கேலிகீகுரியது) மிகவும்‌ தவறான சங்கதியாகும்‌. 6 சர்வ வல்லமையும்‌ படைத்த--நம்மையெல்லாம்‌ காக்கும்‌ கடவுளுக்கு: * கடவுள்‌ வாழ்தீது ? என்று நாம்‌ போய்‌ வாழ்தீதுக்‌ கூறுவதா? வள்ளுவரை நாம்‌ மாபெரும்‌ அறிவாளி, ஆராய்ச்சிக்காரர்‌ என்று கூறுகிறோம்‌. அதற்குத்‌ தக்க ஆதாரங்களும்‌ இருக்‌ கின்றன அவர்‌ போய்‌ இந்தப்படி கடவுள்‌ ? என்று நாம்‌ கருதுவதற்கு வாழ்த்துப்‌ பாடல்‌ வாசிப்பாரா? வள்ளுவர்‌ கடவுள்‌ வாழ்தீதுப்‌ பாடியிருப்பதெல்லாம்‌ ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்கவேண்டும்‌ என்பதற்காகவே பதீதுப்‌ பாட்டிலும்‌ பத்து விதமான குணங்களைக்‌ கூறினார்‌. சர்வ வல்லமையுடைய சர்வேசுவரனைப்‌ பற்றிப்‌ பாடுவ தென்றால்‌ இரண்டு, மூன்று பாட்டுக்களோடு குறளை நிறுதீதியிருப்பார்‌. அதை விட்டு அவ்வளவு பாட்டுக்கன்‌--அவைகள்‌ ஒவ்வொன்றிலும்‌ ஒவ்வொரு நற்குணத்தைப்‌ போதிக்‌ கிறார்‌ என்றால்‌ என்ன பொருள்‌? மனிதன்‌ எப்படியிருக்க வேண்டும்‌ என்பதைக்‌ காட்டுவ தற்காகத்தான்‌-வாழ்விண்‌ வகையை, நிலையை உணர்தீதுவதற்காகத்தான்‌ எட்டு, ஒன்பது கருத்துக்களை வைத்து வள்ளுவர்‌ கடவுள்‌ வாழ்த்துக்‌ கூறியிருக்கிறார்‌. [உ விடுதலை 1905-1950] www.thamizham.net - Free £ book 14௦ 3031 க்லைகள்‌ . 1263 4 spppserrd ஆய பயன்‌ என்கொல்‌ வால்‌அறிவன்‌ நற்றாள்‌ தொழாஅர்‌ எனின்‌ ஒரு மனிதன்‌. நல்ல அறிவுடையவனாய்‌ இல்லாதிருந்தால்‌, நல்ல அறிவுக்கு ஆட்பட்டிருக்க வில்லையானால்‌-அறிவாடு நடந்துகொள்ளாவிட்டால்‌, அவன்‌ எவ்வளவு படிதீது கிருந்தாலும்‌ என்னதான்‌ அந்தப்‌ படிப்பில்‌ அவனுக்குப்‌ பயன்‌ ஏற்பட்டது என்று கூறமுடியும்‌ ¥ ¢ வேண்டுதல்‌ வேண்டாமை இலான்‌ அடி சேர்ந்தார்க்கு யாண்டும்‌ கீடும்பை இல. விருப்பு, வெறுப்பு இரண்டும்‌ இருக்காதவனுகீகுதீதான்‌--மன அமைதி இருக்கும்‌ $ விருப்பு, வெறுப்பு இருந்தால்‌ மனிதனுக்கு மன அமைதி இருக்காது என்று கூறுகிறார்‌. அடுத்து, ¢ தனக்கு உவமை இல்லாதான்‌ தான்‌ சேர்ந்தார்க்கு அல்லால்‌. மனக்கவலை மாற்றல்‌ அரிது. என்ற பாட்டை, கடவுளடியைச்‌ி சேர்ந்தாலொழிய நன்னிலை இல்லை $ பரமனின்‌ திருவடியினை அடைந்தால்தான்‌ பாபங்கள்‌ ஒழியும்‌] மோட்ச வாழ்வு கிட்டும்‌ என்ற அர்‌ தீதத்திலா வள்ளுவர்‌ கூறுகிறார்‌ ? இல்லை. ஒரு மனிதன்‌ தன்‌ நிலையைப்‌ பூரணமாக-குறைவற்றதாக நினைதீதுக்கொள்ள வேண்டும்‌ ; தனக்கு மேலாக ஒருவனது நிலை இருப்பதாகக்‌ கருதி, குறைபாடு உணர்ச்சி கொள்ளலாகாது. அதாவது, ஆசை கூடாது. உள்ளதைக்‌ கொண்டு முழுத்‌ திருப்தி அடைந்த வனுக்கு மனத்தில்‌ கவலை உண்டாகாது என்பது அதன்‌ கருத்தாகும்‌. மனிதனுக்குக்‌ கவலை எதனால்‌ ஏற்படுகிறது? தன்னைவிட மேல்‌ நிலையில்‌ ஒருவன்‌ இருக்கிறான்‌ $ அவன்‌ உலகத்தில்‌ உள்ள பல பொருள்களை உல்லாசமாக அனுபவிக்கிறான்‌ ) அதற்கான வசதி வாய்ப்பு அவனுக்கு இருக்கிறது? நமக்கு அவ்‌ வசதிகள்‌ இல்லையே என்று மனிதன்‌: தன்னைவிட உயர்‌ ந்தவனாக ஒருவனைக்‌ கருதி, அவனைப்‌ பார்கீகும்போதுதானே கவலை கொள்ளுகிறான்‌ 1 அந்தக்‌ கவலை இல்லாமல்‌, ¢ நான்‌ ஏழைதான்‌ ; படிக்காதவன்தான்‌ ) பல நூல்களைக்‌ கற்றறியாதவன்‌ தான்‌ ) பணத்தைத்‌ தொட்டறியேன்‌ என்றாலும்‌ அதைப்பற்றி எனக்குக்‌ கவலை இல்லை; இப்பொழுது நான்‌ இருக்கும்‌ நிலையே எனக்கு உயர்ந்தது? என்று மனத்‌ திருப்தி அடைந்துவிட்டானானால்‌ மனக்‌ கவலை ஏது அவனுக்கு ? மனிதனுக்குக்‌ கவலைகள்‌ நீங்கி, திருப்தி எண்ணம்‌ ஏற்பட வேண்டுமானால்‌, பொது உடமைதான்‌ அதற்கு மருந்து என்று கூறப்படுகிறது. ஏனென்றால்‌, பொது உடமைதி திட்டத்தில்‌ மனிதர்‌ களுக்குள்‌ பேதம்‌ இல்லாமல்‌ செய்யமுடிகிறது. பேதமல்லாத இடத்தில்‌ மனிதன்‌ யாரையும்‌ பார்தீதுப்‌ பொறாமையுற முடியாது ; ஆகவே, மனிதன்‌ மனத்‌ திருப்தியடைகிறான்‌. இக்‌ கருத்தைத்தான்‌ வள்ளுவர்‌ அக்‌ குறவில்‌ கூறுகிறாரி. அதைப்பற்றிப்‌ பரிமேலழகர்‌, வடவர்களுடைய-ஆரியர்களுடைய 32 அறங்களை: வைத்துக்‌ கூறினார்‌. ஆனால்‌, வள்ளுவர்‌ அறம்‌ என்று சொல்வது என்ன வென்றால்‌, மக்களுக்குள்‌ அன்பு, ஒழுக்கம்‌, அருள்‌ இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌. மேலும்‌, வன்ளுவர்‌ மேலுலகதீதைப்‌ பற்றியும்‌, கடவுளைப்‌ பற்றியும்‌ அவர்‌ மரியாதை செய்யவில்லை ; ஏற்றுக்‌ கொள்ளவுமில்லை. ஒரிடத்தில்‌ கூறுகிறார்‌ * மேலுலகம்‌ இல்லையெனினும்‌ ? என்று--அதாவது, ₹ உனக்கு மேலுலகம்‌ கிடைக்க வில்லை யென்றால்‌ கூட அதைப்‌ பற்றிக்‌ கவலைப்படாதே; உனக்கு மேலுலகம்‌ கிடைக்காது என்றாலும்‌ நீ பிறருக்கு அருன்‌ கூர்ந்து நட? என்று கூறுகிறார்‌. கடவுளைப்‌ பற்றிச்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1264 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ சொல்லுகிறபோதுகூட, மனிதனின்‌ வாழ்வுக்கு வசதியில்லாவிட்டால்‌, நம்மையெல்லாம்‌ படைத்துக்‌ காதீதுக்கொண்டிருப்பதாகக்‌ கருதப்பட்டு வருகின்‌ ற கடவுளை ஒழிக்கவேண்டும்‌); வது இல்லாவிட்டால்‌ குற்றமில்லை என்று கூறுகிறார்‌. ஏனென்றால்‌, மனிதனின்‌ கஷ்ட நஷ்டங்களுக்கும்‌, அவனுக்கு ஏற்படுகின்ற இலாபதீதிற்கும்‌, அவன்‌ வாழ்வில்‌ தென்படுகிற இன்ப அன்பங்களுக்கும்‌ கடவுன்‌ காரணமில்லை என்பதை உணர்தீதவே அப்படிக்‌ கூறுகிறார்‌. இன்னும்‌ வள்ளுவர்‌ ஆரியத்தை எந்தெந்த வகையில்‌ எதிர்க்கிறார்‌ என்றால்‌, ¢ பிறப்பொக்கும்‌ எல்லாவுயிர்க்கும்‌ சிறப்பொவ்வா செய்தொழில்‌ வேற்றுமையால்‌? என்று--பிறப்பினாலே பேதம்‌ இல்லை; பேதம்‌ கற்பிக்கவும்‌ கூடாது) அடுத்து செய்கின்ற தொழிலாலும்‌ பேதங்கள்‌ கற்பிக்கக்‌ கூடாது என்று-ஆரியக்‌ கொள்கையின்‌ அடிப்படைக்கே அடி கொடுக்கிறார்‌. ஆரியர்கள்‌, ¢ மனிதனின்‌ பிறப்பிலே--ஆண்டவனின்‌. முகத்திலே பிறந்தவன்‌ உயர்ந்தவன்‌ ] காலிலேயிருந்து வந்த (நாம்‌, இழிந்தவர்கள்‌? என்று பிறப்பில்‌ பேதங்களை ஏற்படுத்தி, செய்கின்ற தொழிலாலும்‌,-அதாவது நம்மவர்‌ செய்கின்ற தொழில்களை-உழவுதீ தொழில்‌ உட்பட-கேவலமான ஈனசாதித்‌ தொழில்‌ என்று ஆக்கி யிருக்கிறார்கள்‌. அதைதீதான்‌ வள்ளுவர்‌ வெகுவாகப்‌ பிறப்பிலும்‌, தொழிலிலும்‌ பேத மில்லை என்று கண்டிக்கிறார்‌. மனித சமுதாயத்தின்‌ தேவைகீகாகதீதான்‌ பல தொழில்களும்‌ இருக்கின்றன. வண்ணான்‌ செய்யும்‌ தொழில்‌, நாவிதன்‌ செய்யும்‌ தொழில்‌, தோட்டி செய்யும்‌ தொழில்‌ நமகீகு அத்தியாவசியத்‌ தேவையில்லையென்று கூறிவிடமுடியுமா? கக்கூஸ்‌ எடுக்கிறவன்‌: ஒரு நாளைக்கு வேலை நிறுத்தம்‌ செய்தால்‌ நம்‌ கதி என்னாவது? இந்தப்படியாக சமுதாயத்தின்‌ தேவைக்காகதீதான்‌ பல தொழில்கள்‌ இருக்கின்றன. அதில்‌ போய்ப்‌ பேதங்‌ கற்பிப்பது என்றால்‌ என்ன நியாயம்‌ ? கிவைகளைச்‌ செய்ய யாவருக்கும்‌ பங்கும்‌ உரிமையும்‌ இருக்கவேண்டும்‌. அடுத்தபடியாக, வள்ளுவர்‌, ஆரியர்‌ செய்யும்‌ வேள்வியைக்‌ கண்டிக்கிறார்‌. ¢ அவி சொரிந்து ஆயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றின்‌ உயிர்‌ செகுதீ துண்ணாமை நன்று? அதாவது, கடவுள்‌ பெயர்‌ கூறி உயிர்க்கொலை புரியுங்‌ கொடுஞ்செயலைக்‌ கண்டிக்‌ கிறார்‌. நாட்டிலே நாலு வருணதீதை நிலைநிறுதீ.துவதற்காகவும்‌, ஆரியர்களின்‌ உயர்‌ வாழ்வுக்கு ஆதாரமாயும்‌ இருந்துவரும்‌ வேதங்களையும்‌-அதாவது, வேதத்தைப்‌ படிக்கர விட்டாலும்‌ குற்றமில்லை $ ஒழுக்கமாக நடக்க வேண்டும்‌ என்று வன்ளுவர்‌ வேதியதி தன்மையைக்‌ கண்டிக்கிறார்‌ இந்தப்படியாக மதம்‌, கடவுன்‌, வேதம்‌, வேள்வி ஆசய அத்தனையையும்‌ ஆரியதீதின்‌ உயர்வுக்கும்‌ நம்மவர்‌ இழி நிலைக்கும்‌ காரணமாய்‌ நின்று நிலவும்‌ அவைகளை வள்ளுவர்‌ வெகு தீவிரமாகக்‌ கண்டிக்கிறார்‌. இந்தப்படியக வள்ளுவர்‌ ஆரியக்‌ கருத்துக்களை எதிர்தீதுவிட்டு, கண்டிதீதுவிட்டுத்‌ தனக்கு என்று யாதொரு * புதுமத உபதேசமும்‌ ? அவர்‌ புரியவில்லை. * உன்‌ அறிவைக்‌ கொண்டு சிந்தித்து, ஆராய்ந்து, உண்மை கண்டு, உலகம்‌ ஒப்ப நடந்துகொன்‌? என்கிறார்‌. யாரவர்‌ ஒருவர்‌, £ உன்‌ அறிவின்படி, உலகம்‌ ஒப்ப நட? என்கிறாரோ அவர்‌ எந்த மதத்தையும்‌ சேர்ந்தவராகார்‌. ¢ குடிசெய்வார்க்கு இல்லை பருவம்‌ மடிசெய்து: மானம்‌ கருதக்‌ கெடும்‌ * என்று கூறுகிறார்‌. அதாவது, ஒரு மனிதன்‌ தன்‌ கினதீதவருக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்‌ என்று நினைதீதானானால்‌--அதாவது, பொதுநலதீதுக்குப்‌ பாடுபட www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1265 வேண்டும்‌ என்று முன்வந்தால்‌, அவன்‌ அந்தக்‌ காரியதீதுக்கு ஏற்ற நல்ல காலம்‌ வரட்டும்‌ என்று எண்ணிக்‌ காத்திருக்கக்கூடாது. கிரண்டாவதாக, ¢ நாம்‌ இந்தக்‌ காரியத்தில்‌ இறங்குகி$றறோமே ) இதனால்‌ இன்னின்ன கஷ்டங்கள்‌ வருமே! நமக்குப்‌ பலவிதத்திலும்‌ அவமானம்‌ ஏற்படு2ம--மானம்‌ போய்விடுமே ! என்று கவலைப்படக்‌ கூடாது. அந்தப்‌ படியாகவெல்லாம்‌ பார்தீ.துக்கொண்டிருந்தால்‌ பொதுவாழ்வில்‌ நாம்‌ செய்யப்‌ புகும்‌ காரியமே கெட்டுவிடும்‌ என்று மிகப்‌ புரட்சிகரமாகக்‌ கூறுகிறார்‌. ஏன்‌ புரட்சிகரமாகச்‌ சொல்லுகிறார்‌ என்று கூறுகிறேன்‌ என்றால்‌, மற்றொரு இடத்தில்‌ காலம்‌ பார்தீ.துச்‌ செய்தால்‌ ஞாலமும்‌ கைகூடும்‌ என்று கூறுகிறார்‌. இன்னொரு இடத்திலே, * மயிர்‌ நீப்பின்‌ உயிர்வாழாக்‌ கவரிமான்‌ ? போன்று மானம்‌ நீங்குமானால்‌--மனிதன்‌ இறநீதுவிட வேண்டும்‌ என்று கூறுகிறார்‌. மானமிழந்தால்‌ மரணதீதைதி தமுவவேண்டும்‌ என்று வள்ளுவர்‌ கூறுவது ஏன்‌: என்றால்‌, மனிதனுடைய தனி வாழ்வில்‌, அவனது சொந்த வாழ்வில்‌ அவனுக்கு அவமானம்‌ நேரிடின்‌ உயிர்விட வேண்டும்‌. உயிரைவிட மானதீதைப்‌ பெரிதென மதித்து நடக்க வேண்டும்‌ என்பதற்காகச்‌ சொல்லுகிறார்‌. இந்தக்‌ குறள்‌ பொது வாழ்வு பற்றியதாகும்‌. பொதுவாழ்வில்‌ எந்த மக்களின்‌ நல்வாழ்விற்காக--முன்னேற்றதீதிற்காகப்‌ பாடுபடுகிறானோ, அந்த மக்களாலேயே வெறுக்கப்படலாம்‌ ) பல தொல்லைகட்கும்‌ ஆளாக நேரிடலாம்‌. ஆனால்‌, தாம்‌ படுகின்ற. பாடுகள்‌--அடைகின்ற அல்லல்கள்‌ நன்மைக்காகதீதான்‌ என்று கருதி வேலை செய்தால்‌. தான்‌, அவன்‌. எண்ணிய காரியம்‌ ஈடேறுமேயொழிய, மானத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தால்‌ காரியம்‌ கைகூடிவராது என்று கூறுகிறார்‌. இந்தப்படியாக வன்ளுவர்‌ மகீகளுகீகு நல்வாழ்விண்‌ வழியையும்‌, நல்லொழுக்‌ கதீதையும்‌ கூறுகிறார்‌. இன்றையதினம்‌ திராவிடர்களுக்கு ஒழுக்க நூல்‌ குறன்தான்‌. மற்ற வேறு எந்த நூலும்‌--பகவத்‌ கீதை, இராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌, பெரிய புராணம்‌ முதலியவையும்‌ அவை போன்ற நூல்களும்‌ திராவிடரின்‌ ஒழுக்கதீதிற்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள்‌ அல்ல அவைகளெல்லாம்‌ ஆரியர்கள்‌ தங்களின்‌ உயர்வுக்காக-- தங்களின்‌ மேல்சாதித்‌ தன்மையை நிலைநிறுத்தி அதனால்‌ இலரபம்‌ அடைவதற்காக ஏற்பட்ட வருணாசிரம தர்மத்தை வலியுறுத்தி எழுதி வைத துக்கொண்டவையல்லாமல்‌, பொதுவாக மனிதர்கள்‌ --உலக மக்களின்‌ நலனுக்கு ஏற்றமுறையில்‌ எதையுங்‌ கூறவில்லை. பித்தலாட்டங்கள்‌ பல புரிந்தும்‌ தங்கன்‌ காரியத்தை, தங்களுக்கு இலாபதீதைத்‌ தரக்கூடிய காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்‌ என்பதற்காகவும்‌ பஞ்ச தந்திரக்‌ கதைகள்‌ போலச்‌ சொல்லி--அந்தப்படி சொன்னவைகளைக்‌ கடவுளோடு சம்பந்தப்படுத்திவிடுவார்கள்‌. நமக்கு ஒரு அளவுக்காவது ஒழுக்கத்தைக்‌ கற்பிக்கக்கூடிய நூல்களாக இராமாயணம்‌, பாரதம்‌ முதலியவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா ₹ உதாரணமாக, சாணக்கியன்‌ எழுதிய அர்த்த சாஸ்திரத்தை நம்முடைய பொருளாதார ஒழுக்க நூல்‌ என்று நம்மால்‌ எப்படி ஒதீதுக்கொள்ள முடியாதோ, அதே போல்‌--இவைகளை நம்‌ ஒழுக்க நூல்களாக ஏற்றுக்‌ கொள்ள முடியாது. அர்தீத சாஸ்திரதீதில்‌, சாணக்கியன்‌, அரசனுக்கு வருமானம்‌ பெருக வேண்டுமானால்‌ அவன்‌ கள்ளுக்‌ கடைகளைத்‌ திறக்கவேண்டும்‌ என்றும்‌, கோவில்களை: வைத்து அதற்கு நிறையத்‌ திருவிழாக்களையும்‌ நடத்தி அந்தத்‌ திருவிழாகீகளுக்கு மக்கள்‌ அதிகமாக வருவதற்காக அழகிய பெண்களை நாட்டியமாடச்‌ செய்ய வேண்டும்‌, அப்போது கோவிலுக்கும்‌ திருவிழாவுக்கும்‌ வருகிறவர்களிடமிருநீது நிறையப்‌ பொருள்‌ கிடைக்கும்‌ என்றும்‌ ) கோவில்கவில்‌ அதிசயம்‌ அற்புதம்‌ நடப்பதாக ஜாலம்‌ தந்திரம்‌ செய்ய வேண்டும்‌ 1686—159 ்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 1266 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ என்றும்‌ சொல்லுகிறார்‌, இதை நாம்‌ ஏற்றுக்கொள்ள முடியுமா ? இது அரசருக்கு-செல்வ வான்களுக்குதீதான்‌ பயன்படும்‌. அதுபோல்தான்‌ புராண-கிதிகாச-சாஸ்திரங்கள்‌ ஆரியருக்கு உயர்வும்‌, திராவிடருக்கு இழிவுமாகும்‌. இயற்பகை நாயனார்‌ கதையைப்‌ படிதீதால்‌--அதில்‌ இயற்பகை நாயனார்‌ ஒரு பார்ப்பனனுக்குதி தன்னுடைய மனைவியைக்‌ கொடுத்தார்‌ என்றும்‌ அதனால்‌ அவருக்கு மோட்சம்‌ கிடைத்தது என்றும்‌ சொல்லப்படுகிறது. இக்‌ கதை பக்திக்கோ, ஒழுக்கதீதிற்கோ ஏற்றதாகுமா 8 இன்று மோட்சம்‌ மோட்சம்‌ என்று கத்திக்கொண்டு திரியும்‌ பிரசங்கிகள்‌ அல்லது மோட்சம்‌ அடையவேண்டும்‌ என்று நினைப்பவர்களெல்லாம்‌ இயற்பகை நாயனார்‌ செய்ததுபோல--தன.து மனைவியைப்‌ பார்ப்பானுக்குக்‌ கூட்டிக்‌ கொடுக்கத்‌ தயாரா? மற்றும்‌ * பரி?க்குப்‌ பதிலாக ¢ நரி/யைக்‌ கொண்டுவந்து அரசனின்‌ இலாயதீதில்‌ இருந்த மற்ற குதிரைகளையுங்‌ கொன்று விட்டார்‌, ஒரு நாயனார்‌. ஒரு கோவிலை இடித்து மற்றொரு கோயிலைக்‌ கட்டினார்‌ ஒரு ஆழ்வார்‌, பலபேரை அடித்துத்‌ திருடிக்‌ கோவில்‌ கட்டினார்‌ மற்றொருவர்‌. இந்தப்படியாக வரிசையாகச்‌ சொல்லிக்‌ கொண்டு போகிறார்கள்‌ நாயன்மார்களைப்‌ பற்றியும்‌, ஆழ்வார்களைப்‌ பற்றியும்‌, இவைகளெல்லாம்‌ ஒழுக்கத்திற்கு ஏற்றவையா ₹ பக்தி என்பது, எவ்வளவு அயோக்கியதீதனங்களைசி செய்தாலும்‌, அவைகளை யெல்லாம்‌ மறைதீது மோட்சதீதைச்‌ சம்பாதித்துக்‌ கொடுக்கும்‌ என்பது அல்லாமல்‌, வேறு என்ன ? கடவுள்‌ இதற்கெல்லாம்‌ மோட்சம்‌ கொடுப்பாரா ? [பெங்களூரில்‌ 22, 23-5-1950-ல்‌, சொற்பொழிவு-- விடுதலை 1 1-6-1950] 8. மன்னர்களும்‌ இலக்கியமும்‌ தோழர்களே 1 இன்றைய தினம்‌ நாம்கூடப்‌ பேசுகி?றாமே--தமிழ்நாட்டு மூவேந்தர்கள்‌ என்று 1 இந்தத்‌ தென்னாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியன்‌ என்று சொல்லுகிறோமே-- இவர்கள்‌ எல்லோரும்‌ அரசர்களாக இருந்ததற்குக்‌ காரணமே ஆரியர்‌ களுக்கு அடிமைகளாய்‌ இருந்ததால்தான்‌ ) அவர்களுக்குக்‌ கோவில்‌ கட்டி மானியம்விட்டதால்தான்‌ ! இல்லா திருந்தால்‌ அவர்களுடைய வாழ்வு &வ்வளவு விளம்பரத்திற்கு உன்னாகி இருக்குமா என்பது சந்தேகம்தான்‌ நம்‌ அரசர்கள்‌ எல்லோரும்‌ ஆரியர்களுக்கு அடிமைகளாக இருந்து, அவர்கள்‌ ஆதிக்கத்துக்கு வேண்டிய காரியங்களை நிரந்தரமாகச்‌ செய்து, அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார்கன்‌. இந்தக்‌ காஞ்சிநாட்டை எடுத்துக்‌ கொண்டாலும்‌ சரி-மற்ற எந்த நாட்டை (தென்னாட்டை) எடுத்‌ துக்கொண்டாலும்‌ சரி--இந்த நாட்டிலே இருக்கின்ற கோவில்கள்‌, குளங்கள்‌, ஸ்தல புராணங்கள்‌ முதலியவைகளை எல்லாம்‌ நீங்கள்‌ பார்‌ தீதால்‌ சகலமும்‌ ஆரியர்களுக்கு ஆதரவாக இருக்குமே தவிர, திராவிடர்களுடைய மனிதத்‌ தன்மைக்கு, மான உணர்ச்சிக்கு; பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்காது. அப்படிக்‌ காண்பது ௮ கருக்கும்‌ குமையாக ரூச்கூப LanesAurd Ay 7-4-1951.& சொற்பொழிவு விடுதலை? 19-4-1951) 4. உதவாக்கரை இலக்கியங்கள்‌ தலைவரவர்களே! தோழர்களே 1 தாய்மார்களே 1 நமது பிரச்சாரத்தால்‌ பாரத, கிராமாயண; மனுதர்ம சாஸ்‌ திரங்களுக்கும்‌ மதிப்புக்‌ குறைந்துவிட்டதால்‌ மனுதர்மத்தையும்‌, ஆரிய தர்மத்தையும்‌, பெரிதும்கொண்ட சிலப்பதிகார த்தைதீ தலையில்‌ தூக்கிக்கொண்டு, ஊர்ஊராய்தீ தீரிந்து பிரச்சாரம்‌ செய்ய ஒகு கூட்டம்‌ கிளம்பியிருக்கிறது. www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ ) 1267 இந்தச்‌ சிலப்பதிகாரம்‌ எப்படி அமைந்திருக்கிறது என்றால்‌ ஆபாச மூடநம்பிக்கை, ஆரியக்‌ கருத்துக்களை உட்கருதீதாகக்‌ கொண்டு, நல்ல தமிழ்‌ அமைப்பு உடையதாகக்‌ கொண்டு தேவடியாளுக்குச்‌ சமமாக--அ தாவது, தேவடியாள்‌ எப்படிப்‌ பார்ப்பதற்கு அலங்காரமாய்‌ இருப்பாளோ, ஆனால்‌ உள்ளேபோய்ப்‌ பார்‌ த்தால்‌ உள்ளமெல்லாம்‌ வஞ்சகம்‌ நிறைநீகும்‌ உடலெல்லாம்‌ நோய்கொண்டும்‌ வளையல்‌ அணியால்‌ மக்களை ஏய்த்துப்‌ பிழைதீதுக்கொண்டிருப்பதாகக்‌ி காணப்படுகின்றாளோ அதுபோலத்தான்‌ இந்தச்‌ சிலப்‌ பதிகாரம்‌ ஆகும்‌. பாரத, இராமாயணம்‌ போல்‌--அது ஒரு நாவல்‌; சித்திரக்‌ கதை. அதுவும்‌ குறிப்பிட்டகொள்கை இல்லாமல்‌ எழுதின கதைகள்‌. ஆரியம்‌ தலைதூக்கி நம்‌ அரசர்கள்‌ ஆரியத்திற்கு அடிமைகளாய்‌, தாசரீகளாய்‌ இருந்த காலத்தில-பகுதீதறிவும்‌, இன உணர்ச்சியும்‌ இல்லாமல்‌ சிதீதிரித்த கதையாகும்‌. அது மூடநம்பிக்கைக்‌ களஞ்சியம்‌ ) ஆரியக்‌ கோட்டைக்கு அரண்‌, இப்படிப்பட்டதைதீ ¢ தமிழ்ப்‌ பண்புக்கு? என்று பிரச்சாரம்‌ செய்தால்‌ இது மான முடைமை ஆகுமா? ஆதிமுதல்‌ அந்தம்வரை-எட்படிப்‌ பார்ப்பானை, பார்ப்பனீயத்தைப்‌ புகுத்தி அமுல்‌ படுத்தவேண்டும்‌ $ எப்படி எப்படி நாம்‌ நடக்கவேண்டும்‌ என்பதைக்‌ காட்டுறது. நான்‌ ஒன்றும்‌ பயந்‌ துகொண்டு பேசுகிறேன்‌ என்றோ, பொய்‌ பேசுகிறேன்‌ என்றோ நினைக்கவேண்டாம்‌. அந்தக்‌ கதைகளில்‌ உள்ள கருத்தை அப்படியே எடுத்துக்‌ காட்டுகிறேன்‌. ஆகவே, கவனமாகக்‌ கேளுங்கள்‌. சிலப்பதிகாரம்‌, போன ஜென்மம்‌, வருகிறஜென்மம்‌ என்று தலைவிதியைக்‌ காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும்‌ ஆளாகச்‌ செய்கிறது) பார்ப்பான்‌ சொல்லு படி) அவன்‌ எ.துகேட்டாலும்‌ எடைக்‌ குஎடை கொடுக்கவேண்டும்‌ என்று சொல்லுகிறது; ஆரூடம்‌, சோசியம்‌, பில்லிசூனியம்‌ ஆகியவைகளைப்‌ பற்றிச்‌ சொல்லுகிறது. முட்டாள்‌ தனமான. கற்பையும்‌, பெண்‌ அடிமையையும்‌ பெருமைப்படுத்தகிறதுஃ கோவலனை அரசன்‌ தண்டித்த மாதிரியான து, நம்‌ நாட்டு கராஜாக்களுக்கே ரொம்பவும்‌ அவமானம்‌ தருவதாகும்‌. இராஜா வீட்டுச்‌ சிலம்பு எங்கோ போய்விட்டது ; கோவலன்‌ சிலம்பு வைதீதிருப்பது இராஜாவினுடையது என்று பொய்க்‌ குற்றம்‌ சாட்டப்‌ பட்டதன்‌ உண்மையைக்‌ கண்டுபிடிக்க முடியாத அரசன்‌, கோவலனை வெட்டிக்‌ கொல்லச்‌ சொல்லுகிறான்‌ ] கோவலன்‌ இறந்து போகிறான்‌. இதை அறிந்த அம்பாள்‌ கண்ணகிக்குப்‌ பெரும்‌ கோபம்‌ வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச்‌ சுட்டுச்‌ சாம்பலாக்கினாள்‌. இந்த அம்மாளின்‌ கற்பைப்‌ பற்றிச்‌ சொல்லுவதாயிருந்தால்‌, தேவடியாள்‌ வீட்டிற்குக்‌ கணவன்‌ போனதை அறிந்தபோது, அந்தத்‌ தேவடியாளை ஏதாவது செய்து இருக்க வேண்டும்‌. தாசி மாதவி, கோவலன்‌ கண்ணகியின்‌ கணவன்‌ என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள்‌. தேவடியாளுக்கு இதுவா தர்மம்‌ ₹ அப்படிப்பட்டவளுக்குக்‌ கண்ணகி பொருள்‌ கொடுக்க வசதி செய்யலாமா ₹ கோவலன்‌ ஒழுக்கமற்றவன்‌ $ தாசி ஒழுக்க மற்றவள்‌ ; கண்ணகி மடப்பெண்‌. அகலிகை; சீதை, துரோபதை, தாரை எல்லாம்‌ கற்புக்கரசிகளாய்‌ இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாதீதிரம்‌ முட்டாள்‌ தனம்‌ வேண்டுமா? மற்றும்‌ இந்த அம்மாளுக்குக்‌ கோபம்‌ வந்ததும்‌, தன்‌ மார்பைத்‌ திருகி எறிகிறாள்‌. இது என்ன புதீதி? மார்பைக்‌ கையால்‌ திருகினால்‌ அது வந்துவிடுமா ? இந்தப்படி நடந்த சங்கதியும்‌ அனுபவமும்‌ சிலப்பதிகாரம்‌ தவிர வேறு எதிலும்‌ எங்கும்‌ காணக்கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப்‌ பீடுங்கின மார்பு (மூலை) வீசி எறிந்தால்‌ அது நெருப்புப்‌ பற்றிக்கொள்ளுமா? அதில்‌ ¢ பாஸ்பரஸ்‌ £ இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக்‌ கற்பனையானது, என்ன பயனைக்‌ கொடுக்கிறது 8 இதனால்‌ கண்ணகிக்கு வீரம்‌ இருந்ததாகக்‌ கூறமுடியுமா அக்கினி பகவானுக்கு, கண்ண, * பார்ப்பனர்‌ களைதீ தவிர மற்றவர்களைசி சுடு! என்று கட்டனை இட்டாளாம்‌. அதுபோல்‌ பார்ப்பனர்களைதீ தவிர மற்றவர்கள்‌ சாம்பு www.thamizham.net - Free £ book 14௦ 3031 1268 பெரியார்‌ ட வெ. ரா. சிந்தனைகள்‌ லானார்களாம்‌] மதுரைநகரம்‌ சாம்பலாயிற்றாம்‌ ! இதுதான்‌ கண்ணகியின்‌ கற்பின்‌ பெருமையா 1 அவள்‌ புத்தியின்‌ பெருமையா? அக்கினி பகவானுக்குப்‌ புதீதி வேண்டாமா? ஒரு பெண்பிள்ளை முட்டான்‌தனமாக உளறினால்‌ நிரபராதிகளைச்‌ சுடலாமா? ஒரு பட்டணத்தைக்‌ சொ.ளுதீதலாமா என்கின்ற அறிவு வேண்டாமா ₹ பார்ப்பனர்களை எதற்காக மீதம்‌ விடவேண்டும்‌ ₹ ஆகவே, வருணாசிரம தர்ம மனுநூல்‌, கிராமாயணம்‌, பாரததீதிற்கும்‌ இதற்கும்‌ என்ன வித்தியாசம்‌ இராமன்‌ பார்ப்பனன்‌--ஆகவே குதீதிரனைக்‌ கொன்றான்‌ என்பது இராமாயணம்‌ | பார்ப்பனனை மட்டும்‌ காப்பாற்றவேண்டுமென்பது சிலப்பதிகாரம்‌ ! எவ்வளவு முட்டான்‌ தனமான கொடுமை செய்தாலும்‌ பார்ப்பனர்களைக்‌ சாப்பாற்றினால்‌ அவள்‌ பதிவிரதை ஆகி விடுவாள்‌ என்பது சிலப்பதிகாரம்‌ ! பாண்டியன்‌ விசாரணை செய்து அவனுக்குக்‌ கிடைத்த உண்மைமீது கோவலனுக்குதி தண்டனை விதித்தான்‌. ஆனால்‌, கண்ணகி ஒரு விசாரணையும்‌ செய்யாமல்‌, ஒரு குற்றமும்‌ காணாமல்‌ நிரபராதிகளான மக்களை, பெண்களைச்‌ சுட்டு எரித்துக்‌ கொன்றான்‌. அவள்‌ கற்புக்கரசி] வணங்கத்‌ தக்கவள்‌$ தெய்வமானவள்‌ | பாண்டியன்‌ ¢ குற்றவாளி ?--இதுதானே சிலப்பதிகாரக்‌ கதை ? இதுதான்‌. தமிழர்‌ பண்பாம்‌ ! எவ்வளவு முட்டாள்‌ தனம்‌-தஇந்த மாதிரியான ஆபாசமும்‌, அதீதியும்‌ நிறைந்து இருக்கும்‌ கதைகளை நாம்‌ வைத்துக்‌ கொண்டு, நமக்குச்‌ சொந்தம்‌ என்றா. சொல்வது ₹ இவைகளைதீதான்‌ நாம்‌ ஒழிக்கவேண்டும்‌ என்று சொல்லுகிறோம்‌ ) நெருப்பு வைக்க வேண்டும்‌ என்று சொல்லுகிறோம்‌ ] சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்‌ ! சிலப்பதிகார அன்பர்கள்‌ கண்ணகிதான்‌. கற்புடையவள்‌ என்கிறார்கள்‌. அப்படி யானால்‌, அப்பொழுது--மற்றவர்‌ களெல்லாம்‌ கற்பு இல்லாதவர்களா? இது மனிதத்‌ தன்மைக்கே பொருத்தம்‌ இல்லையே! ஆனால்‌, அந்த மாதிரி நடந்ததை நாம்‌ பார்த்து இருக்கவும்‌ முடியாது. இந்தக்‌ கதையைச்‌ சொல்லியே நம்‌ நாட்டுப்‌ பெண்கள்‌ எல்லாம்‌ கண்ணகிகளாகத்‌ திகழவேண்டும்‌) அவள்போசல்‌ கற்புக்கரசியாக வேண்டும்‌ என்று பிரச்சாரம்‌ செய்கின்றவர்‌ களின்‌ பின்னை குட்டிகள்‌--முதலாவது, இம்‌ மாதிரி நடந்தால்‌ பொறுப்பார்களா என்று கேட்கிறோம்‌. இந்தப்‌ பிரச்சார ¢ பிரம்மா ?கீகளின்‌ மாப்பின்னைமார்கள்‌ தேவடியாள்‌ வீட்டில்‌ போய்‌ இருந்தால்‌, இவர்கள்‌ பெண்கள்‌ தாசி வீட்டிற்குப்‌ பணம்‌, நகை எல்லாம்‌ அனுப்பச்‌ சம்மதிப்‌ பார்களா ₹ இப்படி நடந்தால்‌ ஆண்கள்‌ ஒழுக்கமுள்ளவர்களாக ஆவார்களா1 இது ஒழுக்கத்தைக்‌ கற்பிக்கும்‌ நூல்‌ ஆகுமா ? ஆகவே, இதுபோன்ற கதைகள்‌ பெண்களுடைய அடிமைதீதனதீதிற்கு அடிகோலுவ தாகும்‌. முட்டாள்‌ தனதீதிற்கு மூல ஆதாரமாகவும்‌, பிற்போகீகிற்கு வழி அமைப்பதாகவும்‌, பார்ப்பனர்‌ களுடைய உயர்வைக்‌ காப்பாற்ற வதாகவும்‌ செய்யப்பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும்‌ செய்யப்பட்ட இலக்கியங்களா 9 ஆகவே, நமக்கு இருக்கிற இலக்கியங்களின்‌ நிலைமை பெரிதும்‌ மோசமானது. உண்மையிலேயே நமக்கு ஏதாவது கடவுள்‌ உண்டா ? மதம்‌ உண்டா? சாஸ்திரங்கள்‌ உண்டா? அவர்கள்‌ சொல்லுவதைதீதானே ஒதீதுகி கொண்டு வந்திருக்கி றாம்‌, ஆகையால்தான்‌; நாம்‌ கீழ்ச்‌ சசதியாகவும்‌, பார்ப்பான்‌ மேல்‌ சாதியாகவும்‌ இருப்பதற்கு ஆன நிலைமை ஏற்பட்டு விட்டதுஃ [௫ேலத்தில, 22.7-1951-ல சொற்பொழிவு---! விடுதலை 29.7.1931] www.thamizham.net - Free £ book 14௦ 3031 1269 5. கோவில்‌ தோழர்களே 1 புத்தருடைய முயற்சிக்கு நேர்‌ விரோதமாக--அது அடியோடு அழிக்கப்படுவதற்குதீ தான்‌ ஏறக்குறைய நஃ முடைய நாட்டிலே இருந்த அரசர்கள்‌ இவ்வளவு கோவில்களைக்‌ கட்டினார்கள்‌. சரிதீதிரதீதிலே சரித்‌ திரக்காரர்கள்‌ சொல்லுகிறார்கள்‌, புதீதருக்குப்‌ பின்னர்‌ தான்‌ இந்தக்‌ கோவில்கள்‌ ஏற்பட்டன என்று | தமிழ்‌ நாட்டுக்‌ கோயில்கள்‌ எதை எடுத்துக்‌ கொண்டாலும்‌ அவைகள்‌ அத்தனையும்‌ புதீதருக்குப்‌ பின்னர்‌ தான்‌ ஏற்பட்டன என்று சொல்லுகிறார்கள்‌. இது எப்படியோ இருந்‌ தாலும்‌, அவைகளின்‌ ஒரே கருதீது--ஆரியர்களுடைய வருணாசிரம தர்மத்தை நிலை நிறுதீதுவதே $ வருணாசிரம தர்மத்திற்கு நிரந்தரமான பிரச்சார ஸ்தாபனமாக இருப்ப தற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்‌ தாம்‌ இந்தக்‌ கோவில்கள்‌, இவைகள்‌ தாம்‌ நமகீகுக்‌ கடவுள்‌ கதைகளாக, மதங்களாக, பண்டிகைகளாக, தினந்‌ தோறும்‌ நாம்‌ நடந்து கொள்ளும்‌ நடவடிக்கைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. இவைகள்‌ தாம்‌ நமக்குப்‌ படிப்பாகவும்‌ இயக்கமாகவும்‌, சங்கீ தமாகவும்‌, நாடகமாகவும்‌, நாட்டியமாகவும்‌ இருக்கின்றன. வருணாசிரம தர்மத்தை நீக்கிய ஒரு இலக்கியம்‌ நமச்கு வேண்டுமானால்‌ மிக்க கஷ்டம்தான்‌. கண்டு பிடிப்பதே மிகவும்‌ கஷ்டம்‌. ஏதோ சொல்கின்‌றார்கள்‌-தொல்‌ காப்பியம்‌ இருக்கிறது, குறள்‌ இருக்கிறது என்று ! தொல்காப்பியத்திலும்‌ ஆரியம்‌ புகுந்து இருக்கிறது ) குறளில்‌ அவ்வளவாகச்‌ சொல்லக்‌ கூடியது இல்லை என்பது என்கருத்து அதிலும்‌ அதிகம்‌ இருக்கலாமோ, என்னவே 1 அப்பொழுது தோன்றிய பெரியவர்கள்‌ எல்லாம்‌ ஆரிய தரீமங்களைப்‌ பின்பற்றி, இந்த ஆதாரங்களை நம்பிப்‌ பக்தி செலுத்தினார்கள்‌. அவர்கள்தான்‌ இன்றையதினம்‌ நமக்குப்‌ பெரியவர்களாகக்‌ காணப்படுகிறார்கள்‌. தவிர, அவர்கள்‌ எல்லாக்‌ கொடுமை களையும்‌ சகித்துக்‌ கொண்டவர்களாகக்‌ காணப்படுகிறார்‌களே தவிர, மற்றபடி அவைகளை எதிர்‌ தீதார்கள்‌ என்று சொல்லுவதற்கு மிகக்‌ குறைந்த அளவு ஆதாரம்‌ கூடக்‌ கிடைப்பது இல்லை. எனவே, இரண்டாயிரம்‌ ஆண்டுகளாக கடவுள்‌, கலை, இலக்கியம்‌ காவியங்களாக இருக்கும்‌ பலம்‌ பொருந்திய ஒரு கொள்கையை ஒழிப்பதற்காக, நாம்‌ இன்றையதினம்‌. போராடுகின்றோம்‌. இன்றையதினம்‌ சமுகாயதீதிலும்‌, அரசியலிலும்‌, பொருளாதாரதீ திலும்‌, கலைத்‌ துறையிலும்‌ பக்தித்‌ துறையிலும்‌ நாம்‌ போராட வேண்டியவர்களாக இருக்‌ கின்றோம்‌. இது மிகவும்‌ கஷ்டமான காரியம்‌. நம்முடைய மதம்‌ என்று நாம்‌ சொல்லுவது, அன்னியனுடைய உயர்வுகீகு--நம்‌ முடைய இழிவுக்கு) நம்முடைய கடவுள்கள்‌ என்று நாம்‌ சொச்லுவது--அன்னியனை வளர்ப்பதற்கு ஏற்ற கடவுள்கள்‌. அவைகள்‌ நம்மை அடக்கி, ஒடுக்க ஏற்படுதீதப்பட்டவை, இத்தனை துறைகளில்‌, இவ்வளவு தொல்லைகளில்‌ இருந்து வருகின்ற சுரண்டலை நாம்‌ ஒழிக்க வேண்டும்‌. [காஞ்சிபுரத்தில்‌ 7-4-1951-ல்‌ சொற்பொழிவு--6 விடுதலை 3 19-4.1951] 8. அரசர்களின்‌ இழிசெயல்‌ தோழர்களே 1 நமது அரசர்கள்‌ கோயில்‌, குளங்கள்‌, மடங்கள்‌ முதலியன கட்டி அதன்‌ பேரால்‌ பார்ப்பானைக்‌ கொழுக்க வைக்கவும்‌, நம்மைக்‌ கல்லில்‌ முட்டிக்கொண்டு மடையர்கள்‌ ஆகவும்‌ ஆக்கித்தானே போனார்கள்‌ | நான்‌ ஒன்றும்‌ விளையாட்டுகீகாகவோ, அவர்களைத்‌ திம்டவேண்டும்‌ என்பதற்‌ காகவே இப்படிக்‌ கூறவில்லை. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1270 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ தஞ்சை மாவட்டதீதில்‌ திருவிடைமரு தூர்‌ என்ற ஊர்க்‌ கோயிலில்‌ போய்ப்‌ பார்‌ தீதால்‌ தெரியும்‌. வரகுண மகாராஜன்‌ என்ற பாண்டியன்‌ தான்‌ மோட்சம்‌ அடைவதற்காகத்‌ தன்‌ மனைவியை பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்தது சித்திரமாகச்‌ சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவபக்தியின்‌ மேலீட்டைப்பற்றிப்‌ பட்டினதீதார்‌ பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகாராஜன்‌ தன்‌ மனைவியைப்‌ பார்ப்பானுக் கக்‌ கொடுத்ததைப்‌ புகழ்ந்து பாடியுள்ளார்‌. அந்தப்‌ பாண்டியன்‌, சேர-2சாழர்களையெல்லாம்‌ வென்ற பராக்கீரமசாலி என்று சரித்திரம்‌ கூறுகின்றது. அப்படிப்பட்டவன்‌ தான்‌ இப்படிக்‌ கேவலமாக, மானமற்று நடந்துகொண்டான்‌. அடுத்தாற்போல, திருவண்ணாமலையில்‌ ஒரு அரசன்‌ ஆண்டுள்ளான்‌. அவன்‌ பெயர்‌ வல்லாள மகாராஜன்‌ என்பது. அந்த மடையனு?, தான்‌ மோட்சமடையவேண்டிதீ தன்‌ மனைவியைப்‌ பார்ப்பானுக்கு விட்டுக்‌ கொடுத்து இருக்கின்றான்‌. இந்த அரசர்கள்‌ எல்லாம்‌ பார்ப்பான்‌ சுகவாழ்வு வாழவும்‌, நாம்‌ என்றென்றைக்கும்‌ இழிமக்களாக இருக்கவுமே மனு (அ) நீதி முறைப்படி ஆட்சிசெலுத்தி இருக்கின்றனர்‌. இவர்களைப்பற்றிக்‌ குறிப்பிடும்போதெல்லாம்‌ ¢ இவன்‌ மனுமுறை தவறாது ஆண்டவன்‌ ? என்றும்‌ புகழ்ந்து கூறப்படுகின்றது ! அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள்‌. என்றாலும்‌--அவர்களும்‌ மக்களுடைய குறைபாடுகள்‌, மற்றும்‌ தேவைகள்‌ என்ன என்று ஆராய்ந்து--அதற்மாகப்‌ பரிகாரம்‌ தேடியவர்கள்‌ அல்லர்‌, நமது தற்குறி நிலைமையைப்‌ போக்கவும்‌, நமது இழிவுகள்‌ போக்கவும்‌ பாடுபடவேயில்லை. அடூத்து வெள்ளைச்காரன்‌ ஆண்டான்‌. அவனாவது நமது கிழி நிலையினைப்‌ போக்கவும்‌, நமது தற்குறித்‌ தண்மையினைப்‌ போக்கவும்‌ வேண்டும்‌ என்ற கருத்தை வைத்து ஆண்டானா? இல்லையே 1 [ஜோலர்பேட்டையில்‌, 16-4-1961-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை? 394-196 1) 7. ஓவியம்‌, சிற்பம்‌ தோழர்களே 1 சுயமரியாதை இயக்கதீதார்‌ மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்து கின்ற காலத்தில்‌ அதற்குச்‌ சரியான சமாதானம்‌ சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள்‌, தாங்கள்‌ தப்பித்துக்கொள்வதற்காகப்‌ பழைய கலைகள்‌ என்னும்‌ சாக்௰ின்‌ பேரில்‌-- அதன்‌ நிழலில்போய்‌ மறைந்துகொண்டு, * சுயமரியாதை இயக்கத்தார்‌ பழைய கலைகளை நாசம்‌ செய்கின்றார்கள்‌! என்று பழி சுமதீதுவதன்‌ மூலமே அவைகளைக்‌ காப்பாற்றப்‌ பார்கிறார்கள்‌. ஆகவே, இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையையும்‌, பயங்காளித்‌ தன்மையையும்‌ வேறுவழியில்‌, சமாதானம்‌ சொல்லச்‌ சக்தியற்ற தன்மையை யுமே காட்டுவதாகின்றது. கோவில்களைக்‌ குற்றம்‌ சொல்லி, அவற்றில்‌ உள்ள விக்ரகங்களின்‌ ஆபாசங்களை எடுத்துக்‌ காட்டி, இம்‌ மாதிரிக்‌ காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும்‌, இந்த ஆபாசதீ்திற்காக இவ்வளவு பணச்‌ செலவும்‌ நேரச்‌ செலவும்‌ செய்யலாமா என்றும்‌ கேட்டால்‌--ஓவியம்‌ என்னும்‌ நிழலில்‌ புகுந்துகொண்டு ¢ அவைகள்‌ அவசியம்‌ இருக்கவேண்டும்‌? என்றும்‌, ¢ அவைகள்‌ அழிந்தால்‌ இத்திய ஓவியக்‌ கலை அழிந்துவிடும்‌? என்‌ றும்‌, *சாமி பக்திக்காகத்‌ தாங்கள்‌ கோவில்களைக்‌ காப்பாற்றுவதில்லை! என்றும்‌, * ஓவியக்‌ கலை அறிவுக்கரகக்‌ கோவில்கள்‌ காப்பாற்றப்பட வேண்டும்‌? என்றம்‌ சொல்லுகின்றார்கள்‌. www.thamizham.net - Free £ book No 3031 கலைகள்‌. 1271 இதுபோலவே, புராணங்களைப்‌ பற்றிய ஆபாசங்களை எடுத்துச்‌ சொல்லும்‌ போதும்‌, இ$த பண்டிதர்கள்‌, ₹ புராணக்‌ கதைகளை நாங்கள்‌ மதிப்பதில்லை? என்றும்‌, * அப்‌ புராணங்களில்‌ உள்ள இலக்கண இலக்கியக்‌ கலைகளையே காப்பாற்ற முயற்சிக்‌ கின்றோம்‌! என்றும்‌, * கம்பன்‌ கவிச்‌ சுவையும்‌ சேக்கிழார்‌ தமிழ்ச்‌ சுவையும்‌ இவ்வுலகில்‌ வேறு எங்கும்‌ காண முடியாது? என்றும்‌, ஆதலால்‌ அவைகள்‌ காக்கப்படவேண்டும்‌? என்றும்‌ பேசுகின்றார்கள்‌. ஆகவே, நமது பண்டிதர்களின்‌ ஓவியக்‌ கலையும்‌, காவியக்‌ கலையும்‌ போகின்ற போக்கைப்‌ பார்த்தால்‌, அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக்‌ கலை எவ்வளவில்‌ இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும்‌. மக்களுக்கு ஓவியம்‌ வேண்டுமானால்‌, இந்தியக்‌ கோவில்‌ ஓவியமும்‌ இந்துக்‌ கடவுள்கள்‌ ஓவியமும்‌, கடுகளவு அறிவுள்ள மனிதனும்‌ ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள்‌ என்பதோடு, அவை மனிதத்‌ தன்மையும்‌ பகுதி தறிவும்‌ உள்ள மக்களால்‌ உண்டாக்கப்பட்ட ஓவியம்‌ என்று சொல்ல முடியாததான நிலையில்‌ இருப்பதையும்‌ காணலாம்‌. எப்படியெனில்‌, இந்திய ஓவியம்‌ என்பது இந்து மத சம்பந்தமான கடவுள்‌ புராணம்‌ ஆகியவைகளைப்‌ பற்றியதைதீ தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப்‌ பற்றியது மிக மிச அருமை என்றே செல்ல வேண்டும்‌. அது மாத்திரமல்லாமல்‌, அவைகளில்‌ இயற்கைக்கு மூரண்பட்டவையே 160-சீகு 99 ஓவியங்கள்‌ என்றும்‌ சொல்ல வேண்டும்‌. சாதாரணமாக மனிதனும்‌ மிருகமும்‌ புணர்வதும்‌, மிருக முகதீ. துடன்‌ மனிதன்‌ இருப்பதும்‌, மிருகங்கள்‌ பறப்பதும்‌, மிருகங்களின்மீ து அளவுக்கு மீறின மக்கள்‌ இருப்பதும்‌, பட்சி களின்‌ மீது மக்கள்‌ இருப்பதும்‌, மக்கள்‌ பறப்பதும்‌) 4 கைகளும்‌ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அந்து, ஆறு முகங்களும்‌) சிறிய உருவத்தின்‌ மீது பெரிய உருவங்கள்‌: இருப்பதும்‌, தாமரைப்‌ பூவின்‌ மீது ஒரு பெண்‌ நிற்பதும்‌, கன்னமும்‌ இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாதீதியமற்றதான உருவங்க8ள இன்று ஓவியமாகக்‌ கருதப்படுகின்‌ றன. சாதாரணமாக, மேல்‌ நாட்டு ஓவியங்களைப்‌ பார்தீதால்‌ இது ஓவியமா, உண்மைதி தோற்றமா என்று மருளும்படியாகவும்‌, அவைகளுடைய சாயல்‌ முதலியவைகளிலிருந்தே குணம்‌, காலம்‌, இடம்‌, நடவடிக்கை முதலியவைகள்‌ தெரிந்துகொள்ளும்படியாகவும்‌, அவைகள்‌ பிரதீதியட்சமாக இயங்கிக்கொண்டிருப்பது போலவும்‌, எவ்வளவோ அநமையான: காரியங்கள்‌ வெகு எளிதில்‌ மிகச்‌ சாதாரண தன்மையில்‌ அறியும்படியாகவும்‌, நாமே பார்தீத மாத்திரத்தில்‌ சுலபத்தில்‌ பழகிக்‌ கொள்ளும்படியாகவும்‌ இருப்பதைக்‌ காணலாம்‌. இவற்றிற்காக ஒரு தம்பிடியாவது செலவில்லாமலும்‌ பூசை, நைவேத்தியங்கள்‌ செய்வதின்‌ மூலம்‌ நேரத்தையும்‌ அறிவையும்‌ பறிகொடுக்காமலும்‌ அனுபவிக்கலாம்‌. ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும்‌, சிதீதிரங்களையும்‌, புதுமை களையும்‌ விட்டு விட்டு-அ நாகரிகமும்‌, காட்டுமிராண்டிதீதனமுமான, மிருகப்‌ பிராயமூம்‌ கொண்டதான உருவங்களை வைத்துக்‌ கொண்டு கொஞ்சமும்‌ வெட்கமில்லாமல்‌ | அவைகளுக்குப்‌ பணம்‌, காசு, நேரம்‌ ஆகிபவை செலவு el g, கீழே விழுந்து அவைகளிடம்‌ பக்தியையும்‌ காட்டிக்கொண்டு, ¢ ஓவியக்‌ கலைக்காக--அக்‌ கலையைக்‌ காப்பாற்றுவதற்காக அவைகளிடம்‌ இப்படிச்‌ செய்கின்றோம்‌? என்றால்‌, இதுபகுத்தறிவும்‌ யோக்கியக்‌ குணமும்‌ படைத்த மனிதர்‌ என்பவர்களின்‌ செய்கையாகுமா-பேச்சாகுமா என்று கேட்கின்‌ றோம்‌, ஆகவே, இவர்களைத்‌ தவிர மற்ற கோடிக்கணக்கான மக்கள்‌ அவற்றை என்னவாகக்‌ கருதுகின்றார்கள்‌ ₹ அதைப்‌ பார்‌ தீதபின்‌, கேட்டபின்‌, எப்படி நடந்துகொள்ளுகின்றார்கள்‌ என்‌ கின்ற விஷயங்கள்‌ இந்தப்‌ பண்டிதர்களுக்குத்‌ தெரியாதா ? கம்ப ராமாயணத்தின்‌ கவி அழகையும்‌, சேக்கிழார்‌ புராணதீதின்‌ தமிழ்‌ அழசையும்‌ பண்டிதர்கள்‌ எடுத்துச்‌ சொல்லும்பொழுதே, புதீதகதீதின்முன்‌ தேங்காய்‌, பழம்‌ உடைத்து www.thamizham.net - Free £ book 14௦ 3031 1272 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிநீதனைகள்‌ கற்பூரம்‌ பநீறவைதீது, பூசை செய்து கீழே விழுந்து கும்பிட்ட பிறகு, (னீமத ராமானுஜாய நமஹ? என்றும்‌, * நமப்‌ பார்வதீபதே ) அரகர சம்போ மகாதேவா ? என்றும்‌ செல்லி விட்டு, பிறகு கண்மூடி கைகூப்பி, காப்புச்‌ சொல்லி அருள்‌ உண்டாக்கிக்கொண்டு-பிறகு தான்‌ கவி படித்துப்‌ பொருள்‌ சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்‌. அதுவும்‌ யார்‌ முன்னிலையில்‌, எப்படிப்பட்ட ஆண்‌ பெண்‌ முன்னிலையில்‌ என்பதைப்பற்றி நாம்‌ விவரிக்க வேண்டியதில்லை. ஆகவ, இந்த நிலையில்‌ புராணங்கள்‌, காவியங்கள்‌ ஆகியவைகள்‌ இலக்கியத்‌ திற்கும்‌, இலக்கணதீதிற்கும்‌ பயன்படுகின்‌றனவா--பயன்படுதீதப்படுகின்‌ றனவா, அல்லது மக்களை இலக்கண இலக்கிய அறிவற்ற மக்களாக்கப்‌ பயன்படுத்தப்படுகின்‌ றறவர என்பதைச்‌ சிந்தியுங்கள்‌. இந்த இடத்தில்‌ நாம்‌ முக்கியமாய்கீ குறிப்பிடுவது என்னவென்றால்‌, நமது பண்டி தர்கள்‌ என்பவர்களின்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌, புத்தக வியாபாரத்திற்கும்‌, வாழ்க்கை நிலைமைக்கும்‌ இம்‌ மாதிரிக்‌ காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும்‌ ஓவியங்களுமல்லாமல்‌ வேறுவகை ஒன்றில்லாமல்போனதால்‌, அவர்கள்‌ இத்தனை மோச மான பொய்யையும்‌, புரட்டையும்‌ வஞ்சகதீதையும்‌ சொல்லிக்கொண்டு, இவைகளைக்‌ காப்பாற்ற வேண்டிய அவசியம்‌ வந்துவிட்டது. ஆகவே, கம்‌ மாதிரி ஆபாசமும்‌ அநாகரிகமுமான காவியமும்‌, ஓவியமும்‌ அழிக்கப்படவேண்டுமானால்‌, முதலாவதாக நமது பண்டிதர்கள்‌ என்பவர்களுடைய வயிற்றுப்‌ பிழைப்புக்கு-வாழ்கீகை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக்‌ கொடுக்கவேண்டியது பகுத்தறிவையும்‌ நாகரிகத்தையும்‌ விரும்பும்‌ பொதுமக்கள்‌ கடமையேயாகும்‌. மேல்நாட்டுப்‌ பண்டிதர்களுக்கு அவர்களுடைய கல்வியானது பகுத்தறிவை உண்டாக்கக்கூடியதாய்‌ இருப்பதால்‌, அவர்கள்‌ அநாகரிகப்‌ பழங்‌ காவியங்களுடையவும்‌ ஓவியங்களுடையவும்‌ உதவி சிறிதும்‌ இல்லாமலேயே உயிர்வாழ சவுகரியமடைந்து இருக்கிறார்கள்‌. ஆனால்‌, நமது பண்டித1கள்‌ பரிதாபகரமான நிலைமையில்‌ இருப்பதால்‌ அவர்களைக்‌ குற்றம்‌ செல்லுவதிலும்‌ பயனில்லை. [8 குடி அரசு 8-கட்டுரை--26-4-1931] 2. இசை 1. சங்கீதம்‌ சங்கீதம்‌ என்னும்‌ கலையானது மிக்க மேன்மையானதென்றோ அல்லது இன்றைய நிலையில்‌ மனித சமூகதீதிற்கு அது மிக்க இன்றியமையாததென்‌ றோ கருதவியலாது. உலகதீதில்‌ மக்களுக்குள்ள அனேக விதமான உணர்ச்சித்‌ தோற்றங்களில்‌ இதுவும்‌ ஒன்றே தவிர, இதற்கு எவ்விதத்திலும்‌ ஒரு தனி முக்கியத்துவம்‌ கிடையாதென்பதே நமது அபிப்பிராயம்‌. உதாரணமாக, சங்கீதம்‌ என்பது தேசதீதிற்குதீ தகுந்தபடியும்‌, அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத்‌ தகுந்தபடியும்‌, அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத்‌ தகுந்தபடியும்‌ இருப்பத தவிர--ஒரே சங்கீத முறையானது உலகதீதிற்கெல்லாம்‌ பொருதீதமானதென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டுச்‌ சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாய்‌ இருப்பது, மற்றொரு நாட்டு விதீவானுக்குப்‌ புரியாததாகவே இருக்கும்‌. மேல்‌ நாட்டுச்‌ சங்கீத இன்பம்‌, கீழ்‌ நாட்டான்‌ அனுபவிக்க முடியாதது) அதுபோலவே, கீழ்‌ நாட்டானின்‌ சங்கீதம்‌ மேல்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ . 1273 நாட்டானுக்கு இன்பம்‌ தராது. ஆனால்‌, பொதுவில்‌ சங்கீதத்தில்‌ உலக மக்களுக்கெல்லாம்‌ ஒருவித போக்கிய அனுபவமிருக்கின்றது என்பதை மாதீதிரம்‌ காணலாம்‌. ஆனால்‌, ஒருவர்‌ அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார்‌ ; மற்றொருவர்‌ அதைச்‌ சாதாரணமாகக்‌ கருதுவார்‌ எப்படி இருந்தாலும்‌ உலகிலுள்ள பல கலைகளில்‌ அதுவும்‌ ஒன்றாயிருக்கிறதுஃ நாம்‌ சங்கீத மாநாட்டில்‌ கலந்துகொள்ள ஆசைப்பட்டதன்‌ முதல்‌ காரணம்‌, சங்கீத ஞான தீதிற்காகவோ, சங்கீதக்‌ கலை வளர்சீசிக்காகவோ மாத்திரம்‌ அல்ல என்றும்‌ $ பார்‌ ப்பனர்‌--பார்ப்பனரல்லாதார்‌ என்னும்‌ உயர்வு தாழ்வு விஷம்‌ சங்கீததீதிற்குள்ளும்‌. புகுந்து, அதன்‌ மூலம்‌ பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்‌ கம்‌ விரோதமாயிருக்கும்‌ கொடு மையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. (¢ குடி அரசு3-தலையங்கம்‌--20-4-1930] 2. தமிழிசையும்‌ நாடகமும்‌ கல்விப்‌ பெரியாரும்‌ அறிவுப்‌ பெரியாருமான தலைவர்‌ அவர்களே 1 ஆசிரியர்களே ! மாணவியர்களே ! மாணவர்களே ! தமிழ்‌ அன்பர்களே | இன்று எனசீகு உங்கள்முன்‌ பேசும்படியான வாய்ப்புக்‌ கிடைதீதிருப்பதை நான்‌: ஒரு பேறு என்றே கருதுகி3றன்‌, தலைவர்‌ அவர்கள்‌ என்னைப்பற்றி மிக மிக அதிகமாகப்‌ புகழ்ந்து கூறி அறிமுகப்படுத்தினார்‌. அவை என்மீது அவருக்குள்ள அன்பையும்‌ அவர்கள்‌ கொண்டுள்ள மதிப்பையும்‌ காட்டுகின்றன வே ஒழிய, அவை பெரிதும்‌ என்னால்‌ ஏற்றுக்கொள்ளக்கூடியனவல்ல என்பதோடு சிலவற்றைப்‌ பற்றி நான்‌ வெட்கமுமுறுகி3 றன்‌ தோழர்களே ! இன்று உங்களிடையே சொற்பொழிவாற்றுவது எனக்கு மகிழ்ச்சிக்‌ குரியதாயினும்‌, சொற்பொழிவின்‌ தலைப்பு எனக்கு அத்தனை மகிழ்ச்சிகீகுரியதாயில்லை, * தமிழ்‌இிசை? என்பது பற்றிப்‌ பேசவேண்டியது இன்று மிக்க அவசியமாகி விட்டது என்றாலும்‌, அது எனக்கும்‌ மிக்க உற்சாகமான தலைப்பே ஆனாலும்‌, எப்படியோ அந்ததி தலைப்பும்‌ சேதிகளும்‌ இன்று விவாதத்துக்கு இடமுள்ள தாகப்‌ போய்விட்டதால்‌ முதல்‌ முதல்‌-அதுவும்‌ கட்டுப்பாடான தும்‌ உங்களுக்குச்‌ சுதநீதிரமற்றதுமான ஒரு ஸ்தாபனத்தில்‌, விவாததிதுக்கு இடமான விஷயத்தைப்‌ பற்றிப்‌ பேசினால்‌ அது எனக்கும்‌ உங்களுக்கும்‌. மகிழ்ச்சியாய்‌ இருந்தாலும்‌, சிலருக்காவது விரும்பதீ தகாததாக ஆகக்கூடும்‌. அப்படி ஏற்பட்டால்‌ அது அவ்வளவு நன்மையான காரியமாகாது. என்றாலும்‌, இன்று நாட்டில்‌ இத்‌ தலைப்பு ஒருவித உணர்ச்சியைக்‌ கொண்டதாக இருப்பதால்‌ நீங்கள்‌ அதை விரும்புகிறீர்கள்‌ என்று கருதி அதுபற்றிய என்‌ கருத்தைச்‌ சொற்பொழிவு வழியாகச்‌ சொல்லுகி3றன்‌, நீங்கள்‌ நடுநிலைமையில்‌ இருந்து கேட்டு, கொள்வன கொண்டு, தன்ளுவன தள்ள வேண்டிக்கொள்கிறேன்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌, தமிழன்‌ தான்‌ நுகரும்‌ இசையை, தமிழில்‌ இசை, தமிழிஃ பாடு, தமிழர்களைப்‌ பற்றித்‌ தமிழர்களுக்கு ஏற்றதைத்‌ தமிழ7களுக்குப்‌ பயன்படுமாறு பாடு? என்கின்றான்‌. இதை யார்தான்‌ ஆகட்டும்‌, ஏன்‌ ஆட்‌2சபிக்க வேண்டும்‌? ஏன்‌: குறை கூறவேண்டும்‌ என்று கேட்கிறேன்‌. அதிலும்‌ தமிழன்‌ இப்படிக்‌ கேட்பதை தமிழனால்‌ தமிழனல்லாதவன்‌ என்று கருதப்பட்டவன்‌, ஏன்‌ மறுக்கவேண்டும்‌ ? இது மிக மிக அதிசயமானகும்‌, தமிழனால்‌ மிக மிக வருந்தத்‌ தக்கதுமாகும்‌. தமிழன்‌-தமிழ்மக்கள்‌, தமிழில்‌ பாட்டுக்‌ கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்‌. பணம்‌ கொடுப்பவன்‌; தனக்குத்‌ தமிழ்ப்‌ பாட்டுப்‌ பாடப்படவேண்டுமென்று ஆசைப்படுகிறான்‌; பாட்டுக்கேட்பவன்‌: தமிழில்‌ பாட்டுப்‌ பாடவேண்டும்‌ என்று ஆசைப்படுகிறான்‌. இந்த ஆசையில்‌ பழந்‌ தமிழர்‌ அல்லாதார்‌ அதை மறுக்கவோ, குறைகூறவோ, குற்றம்‌ சொல்லவேர எப்படி உரிமையுடை யவர்கள்‌ என்று கேட்கி2றன்‌ஃ 4686-10 www.thamizham.net - Free £ book No 3031 1274 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ¢ தமிழரென்றும்‌, தமிழரல்லாதவர்‌ என்றும்‌ பேதம்‌ பாராட்டகீகூடாது? என்பதாகத்‌ தமிழர்களுக்கு அறிவுரை கூறும்‌ இந்தப்‌ பெருமான்‌ களே; ¢ தமிழில்‌ பாடவேண்டும்‌ என்பது பொதுநலதீதக்குக்‌ கேடு, கலைக்குக்‌ கேடு, கலை நலதீதுக்குக்‌ சேடு? என்று சொல்ல வந்தால்‌--இவர்கள்‌ உண்மையில்‌ தமிழர்‌-தமிழரல்லாதவர்‌ என்கின்ற உணர்ச்சியைக்‌ குறையச்‌ செய்பவரீகளா, அல்லது நெருப்பில்‌ நெய்யை ஊற்றி எரியச்‌ செய்யும்படியான. மாதிரியில்‌ வளரச்‌ செய்பவர்களா என்று கேட்கிறேன்‌. அன்றியும்‌, இப்படிப்பட்ட இஉர்கள்‌ தங்களை தீ தமிழர்களென் று சொல்லிக்கொள்ளக்கூடுமா ? தமிழில பாடினால்‌ இசை கெட்டுப்‌ போகும்‌ என்றால்‌, மேற்கூறிய தமிழர்‌ அல்லாத தோழர்களைவிட இராஜா சர்‌. அண்ணா மலை செட்டியார்‌, சர்‌. சண்முகம்‌ செட்டியார்‌ போன்றவர்கள்‌ குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள்‌ என்பது இவர்கள்‌ எண்ணமா என்று கேட்கிறேன்‌. காது, கண்‌, மனம்‌ ஆகியவை எல்லா விஷயங்களுக்கும்‌ எல்லோருக்கும்‌ ஒன்றுபோல்‌ இருக்கமுடியாது என்பது அறிஞர்‌ ஒப்பமுடி ந்த விஷயமாகும்‌. * தமிழில்‌ பாடு 1 என்றால்‌, சிலர்‌-அதுவும்‌ ஒரு வகுப்பாரே பெரிதும்‌ ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, “தமிழ்‌ இசை இயக்கம்‌? வகுப்புத்‌ து3வஷதீதையும்‌ உண்டுபண்ணக்‌ கூடிய இயக்கமாகவும்‌, பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ்‌ இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும்‌ ஆகவேண்டியதாய்‌ விட்டது. * இத்தனை பெரியவர்கள்‌ எதிர்ப்பும்‌, தமிழரல்லாதவர்களிண்‌ பதீதிரிகைகளின்‌ எதிர்ப்பும்‌ ஏற்பட்ட பிற3கதான்‌ இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும்‌, சில இடங்களில்‌ பாட்டுப்‌ பிழைப்புகீகாரர்களை நிர்ப்பந்தப்படுத்தி, பயமூறுத்தித்‌ தமிழில்‌ பாடச்‌ செய்ய வேண்டியதாயும்‌, பாட்டுப்‌ பிழைப்புக்காரர்கள்‌ சில இடங்களுக்குப்‌ போகும்பேது பந்தோபஸ்துக்கு ஆட்களைக்‌ கூட்டிக்கொண்டு போகவேண்டியதாயும்‌ ஏற்பட்டுவிட்டது. பாட்டுப்‌ பிழைப்புக்காரராண சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படியாக நேர்‌ நீதுவிட்டது, கூடிய சீக்கிரத்தில்‌ இசைக்‌ கலை வியாபாரம்‌ தமிழர்கள்‌ அல்லாதவர்களை விட்டு விலகினாலும்‌ விலகிவிடலாம்‌ ) அல்லது, அவர்களே அதை விட்டு விலகினாலும்‌ விலகிவிட நேரிடலாம்‌ என்றுகூடக்‌ கருத3வண்டியதுமாகி விட்டது. பொதுவாகச்‌ சொன்னால்‌, இந்த நிலையானது நாட்டின்‌ நலதீ துக்கும்‌ ஒற்றுமைக்கும்‌ ஏற்றதல்ல என்றே சொல்லுவேன்‌. இன்று தமிழனின்‌ நிலைமை * தமிழன்‌ அன்னிய மொழியைக்‌ கற்கவேண்டும்‌? என்று சொல்லுவது தேசாபிமானமும்‌ நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருதீதியுமாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத்‌ தெரியாத--புரியாத மொழியில்‌ தமிழன்‌ பாட்டுக்‌ 3கட்கவேண்டும்‌ ) இதற்குப்‌ பேர்தான்‌ கலை வளர்ச்சியாம்‌ ! மற்றும்‌, * தமிழனுக்குத்‌ தமிழ்‌ வேண்டும்‌ ; தமிழ்‌ இசை வேண்டும்‌! என்பது தேசத்‌ துரோகமாகவும்‌, கலைத்‌ இரோகம்‌ வகுப்புத்‌ துவேஷம்‌ என்பதாகவும்‌ ஆகிவீடுகிறது. காரணம்‌, பெண்‌ களூக்கு ஆண்கள்‌ ஒழுக்க நூலும்‌, கற்பு நூலும்‌ எழுதுவதுபோல்‌- தமிழனுக்குத்‌ தமிழனல்லாதவன்‌ - தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக்கொண்டிருப்‌ பவன்‌--தேசாபிமானம்‌, மொழியபிமானம்‌, கலையபிமானம்‌ முதலியவை கற்பிப்பவ னாய்ப்‌ போய்விட்டதேயாகும்‌. தமிழ்நாடும்‌, தமிழ்மொழியும்‌, தமிழன்‌ தன்மானமும்‌ விடுதலை பெற்று வளர்ச்சி யடைய வேண்டுமானால்‌, தமிழன்‌ காரியத்தில்‌ தமிழனல்லாதவன்‌--அவன்‌ எப்படிப்பட்டவ னானாலும்‌, தலையிடூவது முதலில்‌ ஒழிந்தாகவேண்டும்‌. இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்‌. அறிஞகளே ! நமகீகுப்‌ பாட்டுக்‌ கேட்கக்கூடத்‌ தெரியாது என்றும்‌, நம்‌ மொழி யான. பாட்டு கிசைக்கக்கூடப்‌ பயன்படாது என்றும்‌ சொன்னால்‌, இந்த இழிமொழி- நம்‌ உயிரைப்‌ போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகி3றன்‌ தமிழ்த்‌ துரோகத்தால்‌ வாழவேண்டியவனும்‌, வவ்ளுவர்‌ சொன்னதுபோல்‌--* குலத்திலே. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1275 அய்யப்‌"படவேண்டிவனுமான தமிழ்‌ மகன்களூக்கு, இது எப்படி இருந்தாலும்‌ அவர்களது வாழ்வும்‌ நம்‌ எதிரிகளின்‌ புகழுமே அவர்களுக்கு அணியாகவும்‌ அலங்காரமாகவும்‌ முக்கிய இலட்சியமாகவும்‌ இருக்கும்‌. ஏன்‌, நம்‌ எதிரிகளுக்கு இருக்கும்‌ செல்வாக்கால்‌ நம்மில்‌ அரோகிகள்‌ பெருகிவிட்டார்கள்‌ ) இன்னும்‌ பெருகுவார்கள்‌ என்பதும்‌ உண்மைதான்‌, ஏனெனில்‌, மானங்கெட்ட தமிழ்மக்கள்‌ பலர்‌ இப்படிப்பட்ட இனத்‌ துரோகிகளை அறியாமை யாலும்‌, சுயநலதீகுக்காகவும்‌ ஆதரிக்கிறார்கள்‌ என்பதை நாம்‌ பிரதீதியட்சதீதில்‌ காண்‌ கிறோம்‌, ஆனால்‌, நாம்‌ இப்படிப்பட்டவர்களையும்தான்‌ முதலில்‌ நன்றாய்‌ வெறுக்க வேண்டும்‌ ) அவர்களைத்‌ தமிழர்‌ சமுதாயத்தில்‌ இருந்து ஒதுக்கித்‌ தள்ளவேண்டும்‌. எப்படியோ ஒரு அளவில்‌ நம்‌ எதிரிகளின்‌ எதிர்ப்பையும்‌, நம்‌ இனதி துரோகிகளின்‌ சதிச்‌ செயலையும்‌ தாண்டித்‌ தமிழிசை வெற்றி வழியில சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு நம்‌ வள்ளல்‌ இராஜா சர்‌. அண்ணாமலையாரும்‌ நம்‌ அறிஞர்‌ சர்‌. சண்முகனாரும்‌ ஒரு அளவுக்குப்‌ பெருங்‌ காரணஸ்தர்களாவார்கள்‌. அவர்களுக்குதீ தமிழ்மக்கள்‌ நன்றி என்றும்‌ உரித்தாகுக. ஆனால்‌, இனித்‌ தமிழிசைக்‌ கிளர்ச்சி அடுத்தாற்போல்‌ செய்யவேண்டிய தென்ன என்பது யோசிக்கத்‌ தக்கது தமிழ்‌ இசையை நாம்‌ ஏன்‌ வேண்டுகிறோம்‌? எதற்காக நமக்குத்‌ தமிழிஃ இிசை வேண்டுமமன்கிறோம்‌? தமிழ்மொழியை ஏன்‌ வேண்டுகிறோம்‌? ஸ்காந்தத்தை-1 கந்த புராணம்‌! என்றும்‌, கிருஷ்ணனை-* கிருட்டிணன்‌? என்றும்‌, ஹோம்‌ நமஹா என்பதை-ஓம்‌ நமோ! என்றும்‌, நரசிம்ஹமூர்தீதி என்பதை-! சிங்கமுகக்‌ சடவுள்‌? என்றும்‌, தசகண்ட இராவணன்‌ என்பதை பத்துதீதலை இருட்டுத்‌ தன்‌ மையன்‌ ? என்றும்‌ மொழிபெயர்த்துக்‌ கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்னு கேட்கிறேன்‌. தமிழிசைக்கு நாம்‌ கிளர்ச்சி செய்ததானது விணாகவில்லை. தமிழிசைத்‌ தொழி லாளர்கள்‌ தமிழில்‌ இசை கற்று வரு3றார்கள்‌ ) பெரும்பாலும்‌ தமிழில்‌ பாடு றார்கள்‌, இசையை நுஈர்வோரும்‌ தமிழில்‌ இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள்‌, தினி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும்‌ செல்வவான்களும்‌, நுகர்வோர்களும்‌ தமிமுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும்‌ வரை இந்த உணர்சீசி வலுதீதுக்கொண்டே போகும்‌. தமிழிசை நமது நல்வாழ்வுக்குப்‌ பயன்படும்படி செய்யவேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில்‌ இருந்த இசை (பாட்டுகள்‌), தமிழில்‌ பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌, நமக்குத்‌ தமிழினிடம்‌ ஏற்பட்ட உணர்ச்சி3ய யாகும்‌. இது ஒரு பெரிய மாறுதல்தான்‌. இசை; நடிப்பு ஆகியவை எதற்குப்‌ பயன்படு8ன்‌றன ₹ ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக்‌ காட்டுவதற்கும்‌, அதை மனத்தில்‌ பதிய வைப்பதற்கும்‌ அது வெறும்‌ வாக்கியத்தில்‌ இருப்பதை இசை இன்பத்தோடும்‌, நடிப்பு இன்பத்தோடும்‌ மனத்திற்குள்‌. புகுதீ.துவதற்கும்‌ ஆகவே முக்கியமாய்‌ இருந்து வருகின்றன. அடுத்தபடியாக இரண்டாவதாகதீதான்‌ அவற்றில்‌ இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும்‌ நடிப்புக்கும்‌ கருத்தும்‌ செய்திகளும்‌ பிரதானமாகும்‌) அடுத்ததாகவே சுவை பிரதானமாகும்‌. அதன்‌ உண்மையான அனுபவமும்‌ அப்படியேதான்‌ இருந்து வருகிறது. ஆனால்‌, நுகர்வோரும்‌ இசைத்து நடிப்போரும்‌ செய்தியையும்‌, சுவையையும்‌ பற்றிக்‌ கவலையில்லாமல்‌ நுகர்வோர்கள்‌ நேரப்‌ போக்குக்கும்‌, வேறு பல காட்சி இன்பதீ திற்கும்‌ அதைச்‌ சாக்காக வைத்து நுஃர்வதாலும்‌, இசைத்து நடிப்போர்கள்‌ பொருளுக்கும்‌, வேறு சுயநலதீதுக்கும்‌ பயன்படுத்துவதாலும்‌ அதற்கு உண்டான பயன்‌ ஏற்படாமல்‌ போய்‌ விடுகிறது. நம்நாடும்‌ நாமும்‌ எவ்வளவோ குறைபாடுகள்‌ உடையவர்களாக இருக்கிறோம்‌, அ௮& குறைபஃடுகள்‌ ஒழிக்கப்படுவதற்கு எவ்வளவோ முயற்சிகள்‌ செய்கிறோம்‌. இம்‌ முயற்சியின்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1276 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மூலம்‌ எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள்‌ அனுபவிதீதுவருகிறோம்‌. இவற்றை யாராலும்‌ மறுக்க முடியாது. அப்படி இருக்க நம்முடைய கலைகள்‌, நாம்‌ அனுபவிக்கும்‌ நுகரும்‌ சாதனங்கள்‌, இன்பத்‌ தன்மைகள்‌ ஆகியவை எப்படியிருக்கவேண்டும்‌ என்பதைச்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌. சாதாரணமாக பொருள்‌ நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல்‌ நடைபெறும்‌ காரியங்கள்கூட, நம்‌ நலத்துக்கு ஏற்றதாகவும்‌, தீமை ஒழியத்‌ தக்கதாகவும்‌ 'இருக்கவேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின்‌ தலையாய பண்பாகும்‌, அவற்றில்‌ நமக்குப்‌ போதிய கவலை இல்லாததாலேயே நம்‌ நலதீதுக்கு மாறாண சேதிகளும்‌ உணர்ச்சிகளும்‌ கொண்ட காரியங்கள்‌ வளர்‌ந்துவர ஏற்பட்டு விட்டதுடன்‌, அவைகளையே பொருள்‌ கொடுத்தும்‌, காலத்தையும்‌ ஊக்கத்தையும்‌ செலவழித்தும்‌ நுகர்ந்து, அறிவும்‌ மானமும்‌ கெட்டு, முற்போக்கும்‌ தடையுற்றுக்‌ கீழ்நிலைக்கு வரவேண்டியவர்களானோம்‌. இன்றைய நம்‌ நிலை என்ன ? முதலாவது, சமுதாயத்தில்‌ நாம்‌ கீழான நிலையில்‌ இருக்கிறோமா, இல்லையா ? இந்தக்‌ கீழான நிலை ஏழைகளுக்கும்‌ மடையர்களுக்‌ கும்‌, இரந்துண்போர்களுச்கும்‌, சோம்பேறிகளுக்கும்‌, கயவர்களுக்கும்‌ இருந்தால்‌ நமக்குக்‌ கவலையில்லை: (ஏனெனில்‌, இது தனி உடைமை நாடு) ஆனால்‌, கோடீசுவரரும்‌, கோணாத கை-கொடைவள்ளலும்‌, மிக்க மதிவாணருமான இராஜா சர்‌ அண்ணாமலை அவர்களும்‌ ; பேரறிஞரூம்‌, மலையாடும்படியான வாயாடி களும்‌, கருதீதாளர்களும்‌ மெச்சும்‌ மதி அரசர்‌ சர்‌. சண்முகம்‌ அவர்களும்‌ நம்‌ சமுதாயத்தில்‌ 4 ஆம்‌ சாதி, 5 ஆம்‌ சாதியாக மதிக்கப்படவும்‌, அவ்வாறே பெரிதும்‌ நடத்தப்படவும்‌ காரணம்‌ என்ன ? ஏன்‌ நடத்தப்பட வேண்டும்‌ ? சம மனிதராய்க்‌ கருதப்படாததற்கு இவர்களிடம்‌ உள்ள குறை என்ன ? குற்றம்‌ என்ன? என்று கேட்கிறேன்‌. இந்தக்‌ கொடுமை இன்றா நேற்றா! இவர்களுக்குள்ள பொருள்‌, செல்வாக்கு, மதி, திறமை, ஊக்கம்‌, உணர்ச்சி ஆகிபவை உண்மையில்‌ எதற்காகச்‌ செலவிடப்பட்டு வரவேண்டும்‌? எதற்காகப்‌ பயன்படுத்‌ தப்பட்டிருக்க வேண்டும்‌? இப்படிப்பட்டவர்கள்‌ பிறந்த நாட்டிலே, இவர்கள்‌ இருக்கும்‌ காலத்திலே மனித சமுதாயத்துக்கம்‌-ஏன்‌, இவர்களுக்குமே, சமுதாயப்‌ பிறவி இழிவும்‌, குறைபாடும்‌ நீக்கப்பட வில்லையானால்‌, நீக்கப்பட இவர்கள்‌ உழைகீகவில்லையானால்‌, நீக்கப்பட இவர்களது அறிவு, ஆற்றல்‌, உணர்ச்சி, ஊக்கம்‌ செலவழிக்கப்படவில்லையானால்‌--மற்றும்‌ வேறு யாருடைய காலத்தில்‌ நாம்‌ எதிர்பார்க்க முடியும்‌ என்று கேட்கிறேன்‌. சென்ற மாதம்‌ சென்னையில்‌ நடந்த தமிழ்‌ இசை மாநாட்டை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. 10 நாட்கள்‌ ஒரு பெரிய திருநான்போல்‌ நடந்தது) பல பதினாயிரம்‌ ரூபாய்‌ செலவிடப்பட்டுப்‌ பல ஆயிரக்கணக்கான மக்கன்‌ தினம்‌ 4, 5 மணி நேரம்‌ செல வழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப்‌ போனார்கள்‌. வள்ளல்‌ அண்ணாமலையார்‌ உணர்ச்சியும்‌ ஊக்கமும்‌ ஆழ்ந்த சிந்தனையும்‌, அவர்களது பந்துமித்திரக்‌ குழாங்களும்‌, அறிஞர்‌ சண்முகம்‌ அவர்களது அறிவுரைகளும்‌ ஆற்றல்களும்‌ எல்லையின்றிப்‌ பயன்‌: படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள்‌ சம்மட்டியால்‌ அறையப்பட்டன. வெற்றிக்‌ கொடி ஆகாயத்தை அளாவிப்‌ பறந்தது. சென்னை நகர்‌ முழுவதுக்கும்‌ ஒரு புதீதுணர்ச்சி கிளம்பியது. சரி, கவை பாராட்டத்‌ தக்கன, போற்றத்‌ தக்கன ஆனால்‌, விளைந்த பயன்‌ என்ன 1 ஏற்பட்ட படிப்பினை என்ன ₹ இம்‌ மாநாடு-- பண்டிதர்களைத்‌ தமிழில்‌ பஜனைப்‌ பாட்டுகளை தீ தொடுக்க வைத்தது ) இசைவாணர்களை (பாட்டுத்‌ தொழில்காரர்‌களை) வீட்டில்‌ தனிமையில்‌ உட்கார்ந்து பாட்டுகளைப்‌ பாடிப்பாடிப்‌ பழக்கம்‌ செய்து கொள்ளச்‌ செய்தது) இந்தப்படியான தமிழ்‌ பஜனைப்‌ பாட்டுப்‌ பாடத்‌ தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்கவேண்டும்‌ என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கன்‌ பலருக்கு ஊட்டியது; இசை நுகரச்‌ செல்லும்‌ மக்கள்‌ பலருக்கும்‌ (இந்த இசைவாணர்‌) தமிழில்‌ இசை இசைக்கிறாரா, அல்லது வேறு மொழியில்‌ இசைக்கிறாரா- வேறு மொழியில்‌ இசைதீதால்‌ கலவரம்‌ செய்யலாமா என்கின்ற சிந்தனையைச்‌ சிலருக்கு www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1277 ஊட்டிற்று--என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைதீதுக்‌ கொள்ளலாம்‌. இவற்றால்‌ சகல உயர்வும்‌, தகுகியும்‌ இருந்து-ஒரு சிறு கீழ்‌ மக்கள்‌ குமுவால்‌ இழி மக்களாய்க்‌ கருதப்‌ பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க்‌ கிடக்கும்‌ தமிழ்‌ மக்களுக்கு) இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன்‌ ஏற்பட்டதா என்று வணக்கத்‌ தோடு கேட்கிறேன்‌. நலம்‌ பெறுவதற்கு வழி சிறிதும்‌ இல்லாவிட்டாலும்‌ கேட்டிற்கவது சரிவு வழி ஏற்படாமல்‌ போயிற்றா என்று கேட்கிறேன்‌. என்‌ மீது ஒரு சிலர்‌ மூனிவு கொள்ளலாம்‌ ) ஆத்திரப்பட்டு வஞ்சினம்‌ கூடக்‌ கூறலாம்‌) அதை நடதீதுவிக்கவும்‌ முனையலாம்‌. இவற்றால்‌ பொதுநலம்‌ என்ன ஏற்படக்கூடும்‌ ₹ தனி நலம்தான்‌ என்ன ஏற்படக்கூடும்‌ i இப்‌ பெரியார்களிடத்தில்‌ இந்த விண்ணப்பம்‌ கொடுக்க எனக்கு உரிமை இல்லையா ? சர்‌, சண்முகம்‌ அவர்கள்‌ ஒரு பெரிய பொருளாதார நிபுணர்‌ ; இவ்விஷயத்தில்‌ அரசர்‌: களும்‌ மதிக்கதீ தகுந்தவர்‌ ; எதிரிகளும்‌ கண்டஞ்ஈதீ தக்கவர்‌. வள்ளல்‌ அண்ணாமலையார்‌ பொருளாதார நிபுணதீத வத்தையே உருவாய்க்‌ கொண்டவர்‌. இவ்விருவரின்‌ பொருளாதார நிபுணதீ துவம்‌ இந்தத்‌ தமிழ்‌ இசை மாநாட்டில்‌, தமிழ்‌ இசைக்‌ கிளர்ச்சியில்‌ எப்படிப்‌ பயன்‌ படுகிறது என்று பாருங்கள்‌ | தமிழிசைக்‌ கிளர்ச்சிக்காக இவர்கள்‌ செலவழித்த பொருளும்‌, மற்ற தமிழ்‌ மக்கள்‌ செலவழித்த பொருளும்‌ தமிழ்நாட்டுப்‌ பொருளல்லவா ? தமிழர்களுடைய பொருளல்லவா ₹ நிலை குலைந்து தரிதீதிரர்களாய்‌ வயிற்றுப்‌ பசிக்கு எசீசல்கலையைதி தேடித்‌ திரியும்‌ ஈன மக்களாய்க்‌ கருகப்படும்‌ தமிழ்‌ உயிர்களுடைய செல்வமல்லவா ₹ இதற்குச்‌ செலவழித்த உணர்ச்சியும்‌ ஊக்கமும்‌ ஆற்றலும்‌ காலமும்‌ இவர்களுடையவை அல்லவா என்று கேட்‌ பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்‌. இவ்வளவு பொருளும்‌, ஆற்றலும்‌, மதியும்‌, மற்றதும்‌ செலவழிதீ கதற்கு நாம்‌ கண்ட பயன்‌ என்ன? நண்பர்களே; சிந்திதீதுப்‌ பாருங்கள்‌ ! நாட்டில்‌ உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப்‌ பொருள்தந்து வரவழைதீது--ஒரு காலைத்‌ தூக்கி ஆடிக்கொண் டிருக்கும்‌ நடராஜ உருவத்தின்முன்‌ தீப தூப நைவேத்தியத்துடன்‌ உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப்‌ பஜனைப்‌ பாட்டுக்கள்‌ பாடச்‌ செய்வதும்‌, அதன்‌ மூலம்‌ மக்களுக்குப்‌ பக்தி புகட்டுவதுநீதானா ? இது யார்‌ செய்யவேண்டிய காரியம்‌ # எதற்கு ஆகச்‌ செய்ய வேண்டிய காரியம்‌? இதனால்‌ ஏற்படும்‌ பலன்‌ யாருக்கு நலனைத்‌ தரும்‌ 8 நிலைகுலைந்து, இிழிவடைந்து தரிதீதிரர்களாய்‌, மடையர்களாய்‌, கீழ்மச் களாய்‌, சரண்டப்பட்டவர்களாய்‌ வாடும்‌ மக்களுக்கு என்ன பலனைத்‌ தரும்‌ 8 அவர்கள்‌ குறையைப்‌ போக்கிக்கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா ? அல்லது, முயற்சியைத்‌ தடுக்குமா? மறு முறையும்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌. இதில்‌ பொருளாதார ஞானம்‌ இருக்கிறதா என்று. பஜனைப்‌ பாட்டுக்கள்‌ தமிழில்‌ இருந்தால்‌ என்ன, தெலுங்கில்‌ இருந்தால்‌ என்ன, இந்தியில்‌ இருந்தால்‌ என்ன--அல்லது ஜப்பான்‌; ஜெர்மனி பாஷையில்‌ இருந்தால்தான்‌ என்ன கடவுளுக்கு எந்தப்‌ பாஷை தெரியாது ₹ நாட்டினுடைய செல்வம்‌, அறிவு, ஊக்கம்‌, உணர்ச்சி--இந்தப்‌ பஜனைகீகாகவா இப்படிச்‌ செலவழிக்கப்‌ படவேண்டும்‌ ? இதைக்‌ காணும்‌ அயலான்‌ எவனாவது இத்த நாட்டு மக்களுக்குத்‌ தன்மான உணர்ச்சியோ, இழிவையும்‌ கீழ்மையையும்‌ கண்டு உடல்‌ துடிக்கும்‌ சொரணையோ இருக்கிறது என்று கருதமுடியுமா 8 நாட்டு மக்களுக்கு இதில்‌ பிரவேசித்து, இந்தத்‌ தன்மான தீதுக்குக்‌ கேடு செய்யும்‌ தன்மையைப்‌ பற்றிச்‌ சிந்திக்கவோ) விளக்கவோ, தடுக்கவோ உரிமை இல்லையா என்று கேட்கி3றன்‌. தமிழிசைக்‌ கிளர்ச்சிக்குச்‌ செலவாகும்‌ பணத்தையும்‌, நேரத்தையும்‌, ஊக்கத்தையும்‌ பார்‌ தீதால்‌ அதன்‌ பயன்‌ இந்தப்‌ பஜனையில்‌ முடிவதானால்‌ மானமும்‌ அறிவும்‌ உள்ள எவனுக்குதீதான்‌ வயிறு எரியாது என்று கேட்கிறேன்‌. ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1278 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ பல்‌ விளக்கச்‌ சோம்பேறித்தனப்பட்ட மருமகனைப்‌ பார்தீது ஒரு மாமியார்‌, பல்‌ விளக்கும்படி மருமகனுக்குச்‌ சொல்ல வெட்கப்பட்டு, கரும்பு சாப்பிட்டால்‌ பல்‌ வெள்ளை யாகும்‌ எனக்‌ கருதி, மறைமுகமாய்‌ * மாப்பிள்ளை ! இந்த ஊர்க்‌ சரும்பு நல்ல ருசியாக இருகும்‌) ஒரு கட்டுக்குக்‌ கரும்பு வாங்கிச்‌ சாப்பிடுங்கள்‌? என்று சொல்லிக்‌ காசு கொடுத்தால்‌--மாப்பின்ளை அதை வாங்கிக்கொண்டு போய்‌ எள்ளுப்‌ பிண்ணாக்கை வாங்கிச்‌ சப்பிட்டுவிட்டுப்‌ பல்லை இன்னும்‌ கேவலமாகீகிக்கொண்டு கரும்‌ எண்‌ ணெய்ப்‌ பசையுடன்‌ வந்தால்‌, மாமியாருக்கு எப்படி இருக்கும்‌ என்று நினைத்துப்‌ பாருங்கள்‌ ! அது போலல்லவா இந்தத்‌ தமிழிசைக்‌ கிளர்ச்சி இந்‌ நாட்டில்‌ நடந்துவருகிறது என்று கருத வேண்டியிருக்‌ றது: இதுபோலவே, நம்‌ தமிழ்நாட்டிற்கும்‌, தமிழ்‌ மக்களுக்கும்‌ மாபெரும்‌ கேடாய்‌ இருந்து வரும்‌ மற்றொரு காரியம்‌ சினிமா, நாடகம்‌ முதலிய நடிப்புக்‌ காட்சிகளாகும்‌. இவை இசையைவிடக்‌ கேடானவையாகும்‌ என்பது என்‌ கருதீது. மானமுள்ள நாடாக மான தீதில்‌ கவலையுள்ள மக்களைக்‌ கொண்ட நாடாக இருந்திருக்‌ கமானால்‌ இந்த நாடகம்‌ சினிமா மூதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப்‌ போயிருக்கும்‌ இதை நான்‌ வெகு காலமாகச்‌ சொல்லிவருகிறேன்‌. இசையினால்‌ காது மூலம்‌ உடலுக்கு விஷம்‌ பாய்கிறது. நடிப்பினால்‌ காது, கண்‌ ஆகிய இரு கருவிகள்‌ மூலம்‌ உடலுக்குள்‌ விஷம்‌ பரவி இரதீததீதில்‌ கலந்துபோகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும்‌, இழிவும்‌ உள்ள மக்களுக்கும்‌-- இன்று கடவுள்‌ பஜனையும்‌, கடவுள்‌ திருவிளையாடல்‌ நடிப்புந்தானா விமோசனத் துக்கு வழியாய்‌ இருக்கவேண்டும்‌ $ நாடகம்‌ எதற்கு? அது படிப்பிக்கும்‌ படிப்பினை என்ன? புராணக்‌ கதைகளை நடிப்பினால்‌ அனுபவிப்பதால்‌ மூடநம்பிக்கை, ஒழுக்க ஈனம்‌, கட்டுதீதிட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாதீதிரதீதில்‌ காம நீர்‌ சுரகீகும்படியாகப்‌ பெண்‌ மக்கள்‌ தங்களை அலங்கரிதீகுக்‌ கொள்ளுதல்‌ முதலியன பிடிபடுவதல்லாமல்‌ வேறு என்ன ஏற்படுகிறது 6 இரணியன்‌ ? நாடகத்தில்‌, விஷ்ணு தூணிலிருந்து வெளிவரும்போது கூத்து பார்கீகும்‌ மக்கள்‌ கைகூட்பிக்‌ கும்பிடுகிறார்‌ கள்‌. *வள்ளி திருமணம்‌ ? நாடகதீதில்‌, வள்ளியை சுப்பிரமணியன்‌ காதலித்து காதல்‌ சேட்டை செய்யும்போது, பல ஆண்கள்‌ பெண்கள்‌ பக்கமும்‌, பல பெண்கள்‌ ஆண்கள்‌: பக்கமும்‌ திரும்பிப்‌ பார்த்துக்‌ கண்ணோடு கண்ணை முட்டவைப்பதுபோல்‌ ஆ மூர்சீசையாகி விடுகிறார்கள்‌. ஒரே கதை, நாடகமும்‌ சினிமாவுமாக ஒரு மாதம்‌, இரண்டு மாதம்‌, மூன்று மாதம்‌ ஆடுவதின்‌ காரணம்‌ என்ன ? முதலிரண்டு மூன்று நாட்களிலேயே பல பெண்களும்‌ பல ஆண்களும்‌ நாடகக்‌ கொட்டகையைத்‌ தங்கள்‌ * சங்கேதஸ்தலம்‌ £ (அதாவது பார்வையால்‌, சந்திப்பால்‌ ஒரு அளவு காதலைதிீ தீர்த்துக்‌ கொள்ளவும்‌, காதல்‌ குறியைக்‌ கண்டு அனுபவிப்பதால்‌ ஒரு அளவு இன்பங்‌ கொள்ளவும்‌ அனுகூலமான கடம்‌) ஆக ஆகீ9ிக்‌ கொள்ளுகிறார்கள்‌. வெறும்‌ சாதாரண நிலையில்‌ ஆண்‌ பெண்‌ சந்தித்துக்கொள்வதைவிட நல்ல உடை, நல்ல நடை, நல்ல அலங்கரிப்பு, நல்ல சாயலோடு செல்ல உரிமை இருக்கிற இடங்கள்‌-- இவைகளோடு அதற்கேற்ற சைகைகள்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ சந்திப்பு வைத்துக்‌ கொள்வகுடி உண்மையி 2லயே யாருக்கும்‌ ஒரு இன்பத்தையும்‌ திருப்தியையும்‌ கொடுத்துத்‌ தான்‌ தீரும்‌. இது இயற்கையே ஆகும்‌. ஆனால்‌, நாம்‌ இதை வளர்க்கச்‌ செய்யலாமா ] இளம்‌ வயதாகவும்‌, தங்களைக்‌ காப்பாற்றிக்கொள்ளப்‌ போதிய சக்தி இல்லாதவர்களாகவும்‌ இருக்கிற சிறுடீர்‌ சிறுமிகளுக்கும்‌, மனோபலமற்றவர்களுக்கும்‌ இதை ஒரு பழக்கமாகச்‌ செய்யலாமா என்று பாருங்கள்‌. அப்படிச்‌ செய்வதானாலும்‌ அதிலிருந்து சிறிது அறிவும்‌ மானமும்‌ பெரும்படியாகவாவது அத்த நடிப்பைத்‌ திருப்பவேண்டாமா? அதை விட்டுவிட்டு காட்டுமிராண்டிகள்போல்‌ மூடநம்பிக்கையும்‌ காமமும்‌ காதலுமே நமது கலைகளை நிரப்பி www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1279 வருவதானால்‌--கலையினால்‌ மனிதன்‌ அறிவாளியாவரனா, மடையனாவானா? சிந்தித்துப்‌ பாருங்கள்‌ | * நந்தனார்‌ சரிதீதிரதீ தால்‌ தீண்டாமை ஒழியுமா, நிலைக்குமா யோசித்துச்‌ சொல்‌ அங்கள்‌, பார்க்கலாம்‌ 1 ¢ கிருஷ்ண லீலை?யால்‌ விபச்சாரித்தனம்‌ வளருமா, குறையுமா சொல்லுங்கள்‌, பார்க்கலாம்‌ ! திருவிளையாடல்‌ புராண ¢ சிய லீலை யால்‌ ஒழுக்க ஈனங்களும்‌ அயோக்கியதீதனங்களும்‌ வளருமா, குறையுமா என்று கூர்ந்து பாருங்கள்‌. இராமாயணதீ தினால்‌ அடிமைத்தனமும்‌ சூழ்ச்சிகளும்‌ வளருமா, குறையுமா என்று பாருங்கள்‌ ! இப்படிப்‌ பட்ட புராண சம்பந்தமான கதைகளின்‌ நடிப்பு ஏதாவது ஒரு நல்ல காரியதீதிற்குப்‌ பயன்‌: படுகிறதா என்று கேட்கி 2றன்‌. இப்படியே ஒவ்வொரு புராணக்‌ கலையிலும்‌ கே இருப்ப தோடு, நாட்டுக்குப்‌ பெருமித நட்டமும்‌ முன்னேற்றத்‌ தடையும்‌ இருந்துவருகின்றனஃ வாலிபர்கள்‌-ஆண்களும்‌, பெண்களும்‌ முன்வந்து இந்தக்‌ கேட்டை ஒழிக்கவேண்டும்‌, நாடகங்களில்‌ போய்‌ உட்கார்நீதுகொண்டு இப்படிப்பட்ட காதல்‌ வரும்‌ சந்தர்ப்பங்கள்‌ வரும்போது, * வெட்கம்‌, வெட்கம்‌, மானங்கெட்ட பெண்கள்தான்‌ இதைப்‌ பார்தீதுகீ கொண்டு இருப்பார்கள்‌. மானமும்‌ ஒழுக்கமும்‌ உள்ள பெண்கன்‌ இந்த நாடகங்களை எட்டிக்கூடப்‌ பார்கீகமாட்டார்கள்‌ ? என்றும்‌) மூட நம்பிக்கை வரும்‌ சந்தர்ப்பங்களில்‌, € வெட்கம்‌, வெட்கம்‌, பகுதீதறிவற்றவர்களும்‌ காட்டுமிராண்டிகளும்‌ தான்‌ இந்தக்‌ காட்சி களைக்‌ காண வருவார்கள்‌ ) அறிவும்‌ மானமும்‌ உள்ளவன்‌ இதைத்‌ திருத்ததீதான்‌ முற்படு வான்‌ ! என்றும்‌ சொல்லவேண்டும்‌. அதுபோலவே, இசையரங்குகளிலும்‌ பஜனைப்‌ பாட்டுகள்‌ வரும்போது அவை காதுகளில்‌ 3கட்காதபடி, *யாயர யாயாயா? என்று கூப்பாடு போட்டு. அந்தச்‌ சப்தம்‌ மற்றவர்கள்‌ காதுகளில்‌ கேட்காமல்‌ இருக்கும்படி செய்யவேண்டும்‌. யுத்தத்தின்‌ காரண: மாக நமது சர்க்கார்‌, ரேடியோவில்‌ ஜப்பான்‌, ஜெர்மன்‌ பேச்சுக்கள்‌ வரும்போது வேறு யாரோ ஒருவர்‌ அப்பேச்சுக்கள்‌ நம்‌ காதுகளில்‌ விழாமல்‌ இருப்பதற்காக ¢ யாயா..யாயாயா என்று சொல்லச்‌ செய்கிறார்கள்‌ அல்லவா--அ துபோலதீதான்‌ நானும்‌ சொல்கிறேன்‌. நாம்‌ நம்‌ சமூதாய முன்னேற்றதீதிற்கு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுடன்‌ எவ்வளவு நாட்களாக--எவ்வளவு பாடுபட்டு வருக3றாம்‌? அந்தப்‌ பலன்கன்‌ நாம்‌ செய்த சிறு காரியத்தையும்‌ கெடுக்கவும்‌, யாரோ சுயநலக்காரர்‌ சுரண்டுவதற்குந்தானா பயன்பட வேண்டும்‌ i நமக்கு ஒருவர்‌ உதவி செய்யாவிட்டாலும்‌ நம்‌ காரியம்‌ கெட்டுப்போகாமல்‌ இருக்குப்படியா கவாவது பார்தீதுக்கொள்ள நமக்கு உரிமை இல்லையா என்று கேட்கி3றன்‌. இந்தப்‌ பஜனைப்‌ பாட்டும்‌, இந்தப்‌ புராண நாடகமும்‌ இருக்கும்‌ வரை நம்‌ முட்டான்‌ தன மும்‌, இழிவும்‌, மானமற்ற கீழ்மையும்‌, ஒழுக்க ஈனமும்‌ ஒழிக்கப்பட முடியவே முடியாது என்பேன்‌. [சிதம்பரம்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌, 7-2-1948-ல்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 19-2-1944) 8. தமிழிசை தமிழிசை முயற்சி அல்லது கிளர்சீசி என்றால்‌ என்ன ? தமிழ்நாட்டில்‌ தமிழர்கன்‌ இடையில்‌ இசைத்‌ தொழில்‌ வாழ்க்கை நடதீதவோ அல்லது பொருள்‌ திரட்ட ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத்‌ தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும்‌ பொருள்‌ கொடுப்பவனும்‌ இசையை அனுபவிப்பவனுமானவன்‌, ¢ இசை என்‌ விருப்பத்திற்கு ஏற்றவண்ணம்‌ இருக்கவேண்டும்‌! என்று சொல்லி விரும்புவ2தயாகும்‌. இதில்‌ எவ்வித விவாதமோ, வெறுப்போ ஏற்படச்‌ சிறிதும்‌ இடமில்‌ லை. இந்த முயற்சியும்‌, கிளர்ச்சியும்‌, இத்தனை நாள்‌ பொறுத்து ஏற்பட்டதேன்‌. என்பதுதான்‌. அதிசயக்கதி தக்கதாகும்‌. அன்றியும்‌ எங்களுக்கு இப்படிப்பட்ட கிசைச்‌ சரக்குதீதான்‌ இருக்க 3வண்டும்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 1280 பெரியார்‌ ஈட வெஃ ரா. சிந்தனைகள்‌ என்று, கொள்வோரும்‌ நுகரீவோரும்‌ கேட்டால்‌ அதைத்‌ தர்க்கிதீது, £ நீ இதைதீதான்‌ கொள்ளவேண்டும்‌! என்று சொல்லுவது இசைப்‌ பிழைப்பாரின்‌ ஆதிக்கத்தையும்‌, இசை வியாபாரியின்‌ ஆதிக்கத்தையும்‌-கொள்வோரின்‌ இழிதன்மையையும்‌, வலிவற்ற மானமற்ற தன்மையையும்‌ காட்டும்‌ அறிகுறியாகும்‌. தமிழன்‌ காதுக்கும்‌, மனதீதுகீகும்‌ வேண்டிய உணவுக்கு--இந்ததீ தமிழர்‌: அல்லாதவர்‌ என்று கருதப்பட்டவர்‌ கள்‌ பக்குவமும்‌, நோட்டமும்‌, சுவையும்‌ சொல்லவநவது அவர்களது அதிகப்‌ பிரவேசதீ தனத்தையும்‌, அகம்பாவத்தையும்‌, தமிழர்களை இழிவாய்க்‌ கருதி இருக்கும்‌ சிறு குணத்தையும்‌ காட்டுவதல்லாமல்‌--அதற்கு வேறு என்ன்‌ பெயர்‌ சொல்லக்கூடும்‌ ? [6 குடி அரசு -கட்டுரை 19-2-1948] 2. நாடகம்‌ 1. நவிீண நாடகம்‌ நாடகம்‌ என்பது ஒரு விஷயத்தை, ஒரு சம்பவத்தை, ஒரு கற்பனையை நடிதீதுக்‌ காட்டுவது என்பது பலரின்‌ துணிபு என்றாலும்‌, அது மக்கள்‌ சமூக நன்மைக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்‌ முறையென்றும்‌ கருதப்பட்டு வந்திருக்கிறது. அதோடு மாத்திரமல்லாமல்‌, ஜனசமூக நல்வாழ்கீகைக்கு ஏற்ற விஷயங்களையே நடிதீதுக்காட்ட ஏற்பட்டது என்றும்‌ சொல்லிக்கொள்ளப்படுகின்றது. ஆனால்‌, இன்றைய நாடக உலகில்‌ நடைபெறும்‌ தொழில்‌ முறைகளில்‌ இம்மூன்று கருதீ.துக்களுக்கும்‌, ஏதாவது ஆதாரமிருக்‌ 9ன்றதாவென்று வெறுப்பு விருப்பு இல்லாமல்‌ கூர்ந்து பார்க்கும்படி நாடக அபிமானிகளை வேண்டிக்கொள்ளுகிறேன்‌. முதலாவது, நடிப்பு என்பது தற்சொரூபம்‌ என்பதுமாறி, நடிப்போர்‌ என்பவரின்‌ இசீசைப்படி உருவகம்‌ கொடுத்துத்‌ தன்போக்குப்படியும்‌, பார்ப்பவர்‌ கள்‌ கிஷ்டப்படியும்‌-- அதாவது எப்படி எப்படி நடித்தால்‌ மக்கள்‌ ஏற்பார்கள்‌ என்ற கவலைமீதும்‌, நடிப்பதைய முக்ய கொள்கையாய்க்கொண்டு, உண்மை நடிப்பு என்பதன்‌ ஜிவனையே இழந்து, நடை உடை, பாவனை, ரசபேதம்‌ முதலியவைகளைத்‌ தலைகீழாகக் கொண்டு நடிக்கப்படுகின்றதுஃ மற்றும்‌, நடிப்பவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ கொள்கைக்கு ஏற்றபடி திருத்தப்பட்ட வசனங்களைக்‌ கொண்டும்‌, அ$னக சந்தர்ப்பங்களில்‌ பொருத்தமற்ற பாவனைகளைக்கொண்டும்‌, பாட்டு களைக்கொண்டும்‌, பொருத்தமற்ற வசனங்களைக்கொண்டும்‌ நடிக்கின்றார்கள்‌. ஒன்று ? இரண்டு நடிப்புகள்‌ எல்லா அம்சங்களிலும்‌ ஒழுங்காய்‌ இருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நான்‌ பெரும்பான்‌மையாய்க்‌ காணப்படுகின்ற விஷயங்களைக்‌ குறிப்பிடுகின்‌ றேன்‌. இரண்டாவது 8 நாடகங்கள்‌ பொதுஜன நன்மைக்காக நடிக்கப்படுகின்றன என்பதையும்‌ முழுவதும்‌ ஒப்புக்கொள்ள முடியா தவனாகயிருக்கி றன்‌. ஏனெனில்‌, இன்று எப்படி உலகில்‌ பல்வேறு பொது ஸ்தாபனங்களில்‌ இருந்‌ துகொண்டு, மனித சமூக பொது நலத்திற்கு என்று நடைபெற்று வருபவைகள்‌ அவ்வளவும்‌ அனேகமாய்‌ அவற்றின்‌ ஒவ்வொரு காரியங்களும்‌ அவற்றில்‌ ஈடுபட்டிருக்கும்‌ ஒவ்வொரு தனி மனிதனுடையவும்‌; அவனது தனி வகுப்பினுடையவும்‌ சுயநலத்திற்கே பெரிதும்‌ நடைபெற்று வரதீ தக்கதாய்‌ இருக்கின்றதா அதேபோல்தான்‌--நாடக உல$லும்‌ அதில்‌ ஈடுபட்டவர்களுடைய--அதைத்‌ தங்கன்‌ வாழ்க்கைக்கு ஆதாரமாய்‌ ஏற்படுத்தீக்கொண்டவர்களுடைய சுயநலதீதிற்காகவே www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌. 1281 கைக்கொண்ட தொழில்முறையாகதீதான்‌ நடைபெற்று வருகின்றன. அந்த மாதிரியில்‌ வியாபாரம்‌ நடதீதும்‌ முதலாளிகளின்‌ மனப்பான்மையையே அஸ்திவாரமாக வைத்துத்தான்‌ நாடகதீதொழிலும்‌ வியாபாரமுறையில்‌ நடந்துவருகின்றது என்று சொல்லுவதற்கு நான்‌: வருந்துகிறேன்‌. மூன்றாவது $ மக்கள்‌ சமூகதீதிற்கு நன்மையான காரியங்களை வைதீதுக்காட்டு வதற்காக நாடகம்‌ ஏற்பட்டது ? என்று சொல்லப்படுவது; இவ்விஷயதீதிலும்‌ நாடக உலகம்‌ நேர்மையைக்‌ கடைப்பிடி தீது ஒழுகுவதாகச்‌ சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்‌. ஏனெனில்‌, இன்றைய நாடக உலகதீதில்‌ உள்ள நாடகங்களின்‌ மூலக்‌ கதைகள்‌, கற்பனைக்‌ கதைகள்‌ முதலியவைகள்‌ எல்லாம்‌ பெரிதும்‌ மனித சமூகதீதிற்கோ அல்லது: அவர்களது நல்வாழ்க்கைக்கோ, முற்போக்குக்கோ, விடுதலைக்கோ, சுதநீதிரத்திற்கோ சிறிதும்‌ பயன்‌ அளிக்காததும்‌ பிற்3பாக்கானதும்‌, மனிதனை மிருகபிராயதீதிற்கு, காட்டு மிராண்டிப்‌ பிராயத்திற்கு அழைத்துச்‌ செல்லக்கூடியதுமான விஷயங்களையே நடித்துக்‌ காட்டப்படு8ன்ற துடன்‌, மனித சமூகதீதைப்‌ பிரித்து வேற்றுமையும்‌, துவேஷமும்‌ பெருகு வதற்கு அனுகூலமாய்‌ இருப்பவைகளே பெரிதும்‌ நடிக்கப்படுகின்‌றன. மனித சமூகதீதிற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும்‌, குறைபாடுகளுக்கும்‌, மானமற்ற தன்மைக்கும்‌, மததீதின்‌ பேரால்‌, நீதியின்‌ பேரால்‌, தர்மத்தின்‌ பேரால்‌, அரசின்‌ பேரால்‌ எ.த௭து ஆதாரமாய்‌ இருந்து வருகிறதோ அதுவேதான்‌ இன்றைய நாடக உலகத்தின்‌. நடிப்புகளுக்கு மூல ஆதரவாய்‌ இருந்து வருகின்றது. உதாரணமாக, மதசம்பந்தமான.தும்‌, ஒழுகீக சம்பநீதமானதும்‌ என்று சொல்லப்‌ படுகின்ற அரிச்சந்திரன்‌ கதையின்‌ நடிப்பையே எடுத்‌ துக்கொள்வோம்‌. இது * சதீதியத்தை நிலை நிறுதீதுவதற்குப்‌ படிப்பினையாக நடித்துக்‌ காட்டப்படுவதாகச்‌ சொல்லப்படுவ்‌ தாகும்‌. ஆனால்‌, இதிலுள்ள தத்துவங்கள்‌ என்னவென்று பாருங்கள்‌: (1) பெண்‌ அடிமை (3) பிறவித்‌ தீண்டாமை (3) பிறவி வருணாசிரமப்‌ பிரிவு (4) சாதிபேத உயர்வு, தாழ்வு (5) வைதீகர்‌ ஆதிக்கம்‌ (6) மூடநம்பிக்கை (7) முதலாளி-தொழிலாளி கொடுமை; (8) எஜமான்‌ அடிமைத்‌ தன்மை முதலிய குணங்கள்‌ மிதந்து நிற்கிண்றனவா, இல்லையா i ஊன்றிப்‌ பாருங்கள்‌. இவை அனைத்தும்‌ உண்டா இல்லையா என்று விவரிகீகக்கூட அவசிய மில்லாமல்‌ பிரதீதியட்சமாய்‌ இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்‌. ஆனால்‌, இகீ கதையின்‌ முகீகிய கருதீது என்று சொல்லப்படும்‌ ¢ சதீதியம்‌? என்பது அக்‌ கதையில்‌ எங்கு இருக்கின்றது என்று தேடிப்பிடிக்க வேண்டியதாய்தீதான்‌ இருக்கிற து. தேடிப்பிடித்ததாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ அது விவகாரதீதிற்கு இடமில்லாமல்‌ எங்கும்‌ சதீதியம்‌ .துலங்கியதாகச்‌ சொல்லமுடியாது என்று நான்‌ கருதுகிறேன்‌. என்றாலும்‌, விவகாரதீதிற்காக ஒப்புக்கொண்ட போதிலும்‌ இந்தப்படி ஒருசிறு நன்மைக்கு பெருந்‌ தீமைகளைக்‌ கொண்டிராத சரித்திரங்‌ களோ; கதைகளோ எவ்வளவு நடிக்கப்படுகின்றது என்று சிந்திதீதுப்‌ பாருங்கள்‌. இதை விரிக்கிற்‌ பெருகும்‌. அன்றியும்‌, அது மனதிற்கு சந்தோஷதீதைக்‌ கொடுக்கக்கூடாத விஷய மாகவும்‌ கருக்கும்‌. ஆதலால்‌, கிவ்வளவோடு நிறுதீதிக்கொள்ளுகிறேன்‌. _ நிற்க, மனிதனுக்குச்‌ சதீதியம்‌ பிரதானமா 1 மானமும்‌ அன்பும்‌, சமதீதுவமும்‌, சுதந்திரமும்‌ கொண்ட வாழ்க்கை பிரதானமா என்று பார்த்தால்‌, சதீதியதீதின்‌ பிரதானம்‌. - சுலபமாய்‌ விளங்கி விடும்‌. சத்தியம்‌ என்பதே என்ன என்பதற்கும்‌ விவகரிதீதுதி தீர வேண்டிய நிலையில்‌ இருந்துவருகிறது. ஆதலால்‌, இனி வரப்போகும்‌ நாடக உலகமானது இதுவரை இருந்ததுபோலவே இல்லாமல்‌, உண்மையிலேயே மனித சமூகதீதிற்குப்‌ பயன்படக்கூடியதாயும்‌ அதாவது; மக்கள்‌ யாவரும்‌ சமம்‌--பகுதீதறிவே பிரதானம்‌--உலக இயற்கைப்‌ போக்குகள்‌, இன்ப துன்பங்கள்‌ யாவர்க்கும்‌ பொது) இவற்றை யாரும்‌ சரிசமமாய்‌ அனுபவிக்கக்‌ கடமைப்பட்ட வர்கள்‌] அதற்கேற்ற கொள்கைகளே வாழ்க்கை முறையாகவும்‌ ஆட்சி முறையாகவும்‌ 1686—161 ‘www.thamizham.net - Free E book No 3031 1282 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இருக்கவேண்டும்‌) இவற்றிற்கு வி2ராதமாய்‌ இருப்பவைகள்‌ எல்லாம்‌ அழித்து ஒழிந்து மறையவேண்டும்‌ என்‌9ன்ற கருத்துக்கு அனுகூலமாகவு, வழிகாட்டியாகவும்‌ இருக்க வேண்டுமென்று விரும்பி, இன்றையக்‌ கொடுமையும்‌ பட்சபாதமும்‌ நிறைந்த உலகத்தை அன்பும்‌ சமதீதுவமூம்‌ கொண்ட உலகமாய்ச்‌ செய்ய உதவிபுரிய வேண்டுமென்று ஆசைப்‌ படுகிறேன்‌. குற்றமுள்ளதைத்‌ தள்ளி, குணமுள்ளதைக்‌ கொள்ளக்‌ கோருகி2றன்‌. [¢ வெடிகுண்டு !-கட்டுரை--10-8-1933] 2. இரணியன்‌ நாடகம்‌ தலைவரவர்களே ! தோழர்களே ! சென்னை சீர்திருத்த நாடக சங்கதீசாரால்‌ நடிக்‌ கப்பட்ட இந்த முதல்‌ நாடகதிதுக்குதி தலைமை வகிக்கும்‌ பெருமை எனக்கு அளித்ததற்கு நன்றி செலுத்துகிறேன்‌. நாடகம்‌ என்பது ஒரு விஷயத்தைத்‌ ¢ ததீரூபமாய்‌ ? நடித்துக்‌ காட்டுவது என்பதோடு அதைப்‌ பெரிதும்‌ மகளின்‌ நடத்தைக்கு வழிகாட்டியாகவு, ஒழுக்கங்கள்‌ கற்பிக்கப்‌ படுவதற்கும்‌ பயன்படுத்தப்படுகின்றது என்று சொல்லப்படுகின்ற துஃ ஆனால்‌, அது அந்தப்படி ததீரூபமாய்‌ நடத்திக்‌ காட்டப்படுவதும்‌ இல்லை; மக்கன்‌: ஒழுகீகதீதுக்கும்‌, நடப்புக்கும்‌ வழிகாட்டியாய்‌ நடப்பிப்பதும்‌ கில்லை என்று சொல்வதற்கு நாடக அபிமானிகள்‌ மன்னிக்க வேண்டுகிறேன்‌. ததீரூபம்‌ என்பதில்‌ விஷயங்களின்‌ இரசபாவங்களும்‌, உண்மையாய்‌ நடந்திருக்கும்‌. என்று நினைக்கும்படியான எண்ணமும்‌ ஜனங்களுக்கு விளங்கவேண்டு3 அந்தப்படி இல்லாமல்‌, நமது நாடகங்கள்‌ பெரிதும்‌ சங்கீதக்‌ கச்சேரி போலவும்‌, காலட்சேப சபை போலவும்‌, விகடசபை போலவும்‌, நகைகள்‌-உடுப்புகள்‌ காட்சிசாலைகள்‌' போலவும்‌, விஷயங்களுக்குப்‌ பொருதீதமில்லாத பேச்சுக்களை அடுக்கி பேசும்‌ பேச்ச வாதசபை போலவும்‌ விளங்குகின்றது என்று தான்‌ சொல்லவேண்டியிருக்கிறது. நாடகங்களுக்கு நடிப்புகளில்‌ மிக விசேஷ சமயங்களில்‌, அலலது அசல்‌ விஷியதி திலேயே பாட்டுவரும்‌ சந்தர்ப்பங்களில்‌ தவிர, மற்ற சமயங்கவில்‌ பாட்டுகள்‌ பொருத்த மற்றது என்பது நமது அபிப்பிராயம்‌. உதாரணமாக, நெருப்புப்‌ பிடிதீ துவிட்ட சமயத்தைக்‌ காட்ட, நடிக்‌ கவேண்டியவர்‌ தடபுடலாய்‌ ஆதீதிரப்பட்டுக்‌ குளற படியாய்‌ இருப்பதுபோல்‌ நடிக்க வேண்டுமா 1 அல்லது தாளம்‌, சுதி, இராகம்‌ முதலியவைகளைக்‌ கவனித்து, சங்கீத இலட்சியத்தில்‌ திரும்பி, ஜனங்களுடைய கவனத்தையும்‌ சங்கீதத்தில்‌ திரும்ப விட்டுவிட்டால்‌ நஷப்பு சரியானதாக இருக்கமுடியுமா என்று கேட்கி3றன்‌. அது போலவே, நடிப்புக்‌ குப்‌ பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவைகளுடன்‌ விளங்கினால்‌ விஷயம்‌ நடந்ததாகத்‌ ததீரூபமாய்க்‌ கருதப்பட முடியுமா? மேல்‌ நாடுகளில்‌ கரச பாவங்களுக்காகவும்‌, ததீரூபமாய்‌ நடந்ததாகக்‌ காட்டப்படும்‌ நடப்புக்காகவும்‌ நடத்தப்படும்‌ * டிராமாக் களில்‌ ! பாட்டு என்பதே மிகமிக அருமையாய்தீ தான்‌ இருக்கும்‌. சங்கிததீதுக்காக நடக்கும்‌ விஷயத்தை அங்க ¢ ஆபரா? (Opera) என்று சொல்லப்படுமே தவிர, டிராமா? என்று சொல்லப்படமாட்டாது. இங்கு சங்கீத வித்வான்‌௧ளே நாடக மடையைக்‌ கைப்பற்றி& கொண்டதானது நாடகக்‌ கலையைச்‌ி சங்கீதம்‌ அழித்துவிட்டது என்றும்‌, மக்களது நாடகாபிமானமும்‌ சங்கீதத்தில்‌ திருப்பப்‌ பட்டுவிட்டது என்றும்தான்‌ கருதவேண்டும்‌. நாடகம்‌ நடிக்கப்படும்‌ கதைகள்‌ விஷயமும்‌, தற்கால உணர்ச்சிக்கும்‌ தேவைக்கும்‌ சீர்திருத்த முறைக்கும்‌ ஏற்றதாயில்லாமல்‌ பழைமையைப்‌ பிரச்சாரம்‌ செய்யவும்‌, மூட ‘www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1283 நம்பிக்கை, வருணாசிரமம்‌, சாதிவிதீதியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத்‌ தன்மை முதலிய விஷயங்களைப்‌ பலப்படுத்தவும்‌, அவைகளைப்‌ பாதுகாக்கவுந்தான்‌. நடிக்கப்படுகின்‌றதே ஒழிய வேறில்லைஃ அரிச்சந்திரன்‌ கதை, நந்தனார்‌ கதை முதலாகியவற்றை எடுதீதுக்கொள்ளுங்கள்‌, அரிச்சந்திரன்‌ கதையில்‌ சத்தியம்‌ பிரதானம்‌ என்று சொல்லப்பட்டாலும்‌, சதீதிய-அசதீதீய விஷயம்‌ நடக்காமல்‌ கதையில்‌ அலட்சியமாய்‌ இருக்கிறது. சாதி வித்தியாசம்‌, தீண்டாமை, பெண்ணடிமை, பார்ப்பன ஆதிக்கம்‌, பணக்காரத்‌ தன்மை, எஜமானத்‌ி தன்மை ஆகியவைகள்தாம்‌ தலைதூக்கி இருக்‌ ன்றன. அதுபோலவே, நந்தன்‌ கதையிலும்‌, ஆன்‌ நெருப்பில்‌ விழுந்து வெந்துபோன துதான்‌ மிளிர்ின்றதே தவிர, உயிருடன்‌ தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. இராமாயணமும்‌, சீதையைப்‌ படுதீதினபாடு-- பெண்‌ ஒரு சொதீதுபோல்‌ பாவிக்கப்படுகிறதும்‌ விளங்கும்‌. இப்படிப்பட்ட கதைகள்‌ ஒழிக்கப்படவேண்டும்‌ ) சுயமரியாதையும்‌, சீர்திருத்த வேட்கையும்‌ உள்ளவர்கள்‌ அதை நடிக்கக்கூடாது. இரணியன்‌ கதையில்‌ வீர ரசம்‌, சூழ்ரீசிதீ திறம்‌, சுயமரியாதை ஆகெவைகள்‌ விளங்கினதோடு பருதீதறிவுக்கு நல்ல உணவாகவும்‌ இருந்தது. ஆனால்‌, சில விஷயங்‌ களில்‌ தலைகீழ்‌ மாறுதலாகவும்‌, கடின வார்த்தையாகவு b காணலாம்‌. சீர்திருத்த நாடகம்‌ என்றாலே மாறுதல்‌ இருந்துதான்‌ தீரர்‌. மாறுதலுக்கு அவசியமானதும்‌, பதிலுக்குப்‌ பதிலான துமான வா/தீதைகள்‌ இருந்தால்தான்‌ பழைமை மாற சந்தர்ப்பம்‌ ஏற்படும்‌. அப்படிக்கி4லாமல்‌ இருந்தால்‌ தகுந்த மாறுதல்‌ ஏற்பட இடமிருக்காது. ஆரிய புராணங்‌ களில்‌ ஆரியர்களல்லா தவர்களை--குரங்கு, அசுரன்‌, இராட்சதன்‌, சண்டாளன்‌, பறையன்‌ என்பன போன்ற வார்‌ தீதைகளையும்‌, அவை உப யாகிக்கும்‌ முறைகளையும்‌, பழக்கத்தில்‌ இருந்துவரும்‌ மாதிரியையும்‌ urtdsrd இந்தச்‌ சரித்திரம்‌ படிப்பதில்‌ அவசியமான மாறுதல்‌ ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகந்தான்‌. நிற்க, இச்‌ சரிதீதிரம்‌ உண்டாக்கிய தோழர்‌ புதுவை பாரதிதாசனை நாம்‌ போற்றிப்‌ பாராட்ட வேண்டும்‌. அவர்‌ உண]சீசியுடன்‌ உண்டாக்கி இருகிறார்‌, இன்னமு Dg போல்‌ பல நாடகங்களை உற்பதீதி செய்யவேண்டும்‌. பாதீதிரர்களுந்குக்‌ கற்பித்த தஞ்சை தோழர்‌ டி. என்‌. நடராசன்‌ அவர்களின்‌ ஆசிரியத்‌ தன்மை மிகவு போற்றத்‌ தக்கது, அவர்‌ 20 வருடமாய்ப்‌ பொதுநல சேவையில்‌ இருந்துவருகிறார்‌ ) ஜெயிலுக்கும்‌ சென்றவர்‌. அவர்கள்‌ இருவருக்கும்‌ இந்த இரண்டு பதக்கங்களைச்‌ சீர்திருத்த நாடக சங்கதீதார்‌ சார்பாய்ச்‌ சூட்டுகிறேன்‌. [சென்னையில்‌, 9-9-1954-ல்‌ தலைமையுரை--- பகுத்தநீவு? 16-9-1938] 8. நாடகக்‌ கலை தோழர்களே ! இதுவரை நம்‌ நாட்டிலே நடந்துவந்த நாடகங்கள்‌ எல்லாம்‌ வள்ளி திருமணம்‌, கிருஷ்ண லீலா, இராமாயணம்‌ இவைகள்‌ தானே! இவைகளினால்‌ மக்கன்‌ அடையும்‌ பயன்‌ என்ன வள்ளியும்‌ சப்பிரமணியரும்‌ எப்படிக்‌ கொஞ்சினார்கள்‌] கிருஷ்ணன்‌. பெண்களை எப்படிக்‌ கற்பழித்தான்‌) அவனுடைய லீலைகள்‌ எவை எவை-- இவைகள்‌ தானே மக்சளுக்குக்‌ சாட்டப்பட்டன 8 மக்கள்‌ சமுதாயம்‌ முன்னேற்ற அடைய, இந்தக்‌ கருத்துக்களையா சொல்லிக்‌ கொடுக்க3வண்டும்‌8 உள்ளபடியே கூறுக3றன்‌--இந்த சர்க்கார்‌ மக்களின்‌ முன்னேற்றத்தில்‌ கவலை எடுத்திருக்குமானாஸ்‌, கண்டிப்பாக மேறி கூறிய நாடகங்களை நாட்டில்‌ நடத்த விடாமல்‌ தடை விஜிதீதிருக்க வேண்டாமா 1 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1284 பெரியார்‌ ஈ. வெ. ராஃ- சிந்தனைகள்‌ ரஷ்யா போன்ற நாடுகளிலே இந்த மாதிரியான நாடகங்கள்‌ நடதீதப்படுகிறதா என்றால்‌, காணவே முடியாது: அங்கே, மக்களின்‌ மூடக்‌ கொள்கையை நீக்கக்கூடிய கருத்‌ தக்கொண்ட நாடகம்‌ ) சர்க்கார்‌ எப்படி நடந்தால்‌ மக்களின்‌ வாழ்க்கைக்கு நல்லது என்பதை எடுதீதுக்காட்டும்‌ படங்கள்‌, நாடகங்கன்‌ போன்‌றவைகள்தான்‌ நடத்தப்படும்‌. ஒரு சிலர்‌ கூறுவதைப்போல்‌ நான்‌ கூறவில்லை. அங்கு நேரிலே போய்‌ எத்தனையோ நாடகங்களை நான்‌ பார்தீ.து இருக்கிறேன்‌. அவைகள்‌ எல்லாம்‌ இப்படியேதான்‌ இருந்தன. ராதாவின்‌ நாடகம்‌ 5 மக்களின்‌ நன்மைக்காக ஆடப்படும்‌ ஒரு நாடகத்தைப்‌ பார்தீதுச்‌ செல்லும்போது நல்ல புத்தியோடு போவார்கள்‌. நல்ல அறிவுரைகள்‌ நாடகத்தில்‌ இருந்தால்‌, பார்‌ தீதுச்‌ சென்ற மக்கள்‌ மனதீதில்‌ அது ஓரளவு நிலைத்து நிற்கும்‌ எனவே அதுபோன்ற- நடிகவேள்‌ ராதாவின்‌ நாடகம்‌ போன்றவைகளுக்கு சர்க்கார்‌ முதல்‌ ஸ்தானம்‌ அளிக்க வேண்டும்‌. மனித சமுதாயத்தில்‌ நல்‌ வாழ்வுக்கும்‌, மூன்னேற்றதீதிற்கும்‌, நல்லறிவு பெறுவ தற்கும்‌ நம்‌ நாட்டிலே இலக்கியம்‌, நாடகம்‌ முதலியவைகள்‌ தேவை. [கருரில்‌, 27-3-19520 சொற்பொழிவு--* விடுதலை 9-4-1952) 4. வெலியீடுகள்‌ 1. பத்திரிகைகள்‌ நமது நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ ஆதிக்கதீதை நிலைநாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது, ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம்‌, வேதம்‌, கடவுன்‌, மோட்சம்‌ என்னும்‌ பெயர்களால்‌ பலவித ஆதாரங்களையும்‌ ஏற்படுதீதிக்கொண்டு, அதன்‌. மூலம்‌ தாங்கள்‌ உயர்ந்தோர்களாயிருந்‌துகொண்டு, நம்மை ஏய்தீதுதீ தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல்‌ அரசியல்‌ சுயராஜ்யம்‌, தேசியம்‌, தேசியப்‌ பத்திரிகை, தேச சேவை என்கிற பெயராலும்‌ பலவித இயக்கங்களையும்‌ பத்திரிகைகளையும்‌ உண்டாக்‌ 8க்கொண்டு, அதன்‌ மூலம்‌ தாங்களே தேசபக்தி உள்ளவர்கள்‌ என்றும்‌, தங்களுடைய பதீதிரிகைகளே தேசியப்‌ பத்திரிகைகள்‌ என்றும்‌ நமது பணதீதிலேயே விளம்பரப்படுதீதிக்கொண்டு நம்மைதீ தாழ்தீதி, மிதித்து, மேலேறி பல வழிகளிலும்‌ வயிறு வளர்க்க ஆதிக்கம்‌ தேடி வைத்துக்கொண்டு விட்டார்கள்‌. இவை எல்லாவற்றையும்விட நமக்குப்‌ பெரிய ஆபத்தா யிருப்பது பார்ப்பனப்‌ பத்திரிகைகளே 1 அப்‌ பதீதிரிகைகளின்‌ செல்வாக்கு நம்‌ நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக்‌ கொண்டிருக்கிறது. பாமர மகீகள்‌ மட்டுமல்லாமல்‌, தங்களைப்‌ போதிய அறிவுள்ள மக்கள்‌: என்று சொல்லிக்கொள்ளும்‌ பலரும்‌ அப்‌ பத்திரிகைகளின்‌ மூலம்‌ ஏமாறுவதும்‌, அப்‌ பத்திரிகைகளின்‌ மூலம்‌ பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும்‌ வளர்ந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டு மக்கள்‌ இப்‌ பார்ப்பனக்‌ கொடுமை முற்றுகையிலிருந்தும்‌ அன்னிய ஆட்சிக்‌ கொடுமை முறைகலிலிருநீதும்‌ தப்பவேண்டுமானால்‌ இப்‌ பார்ப்பனப்‌ பத்திரிகை களைப்‌ பார்தீது ஏமாறுவதையும்‌ அவற்றிற்கு அடிமைகளாவதையும்‌ ஒழிதீதாலல்லது கண்டிப்பாய்‌ முடியவே முடியாத நிலையில்‌ இருக்கிறோம்‌. அவைகள்‌ செய்யும்‌ அக்கிரமங்களை நினைக்கும்போது நமது மக்கள்‌ மனிதர்கள்தானா? மனிதப்‌ பிறவிகள்‌ தானா ? இப்‌ பிறப்புக்கு மானம்‌, வெட்கம்‌ என்கிற தன்மைகள்‌ இருக்கின்றனவா? என்று சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது. நமது கெடுதிக்காகவே இப்‌ பார்ப்பனப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1285 பத்திரிகைகள்‌ நடநீதுவருவதையும்‌, பார்ப்பன ஆதிக்கப்‌ பிரச்சாரமே அதன்‌ கொள்கைகளாக இருப்பதையும்‌ நாம்‌ சந்தேகமற-மனப்‌ பூர்வமாகத்‌ தெரிந்திருந்தும்‌, இப்‌ பிரசீசாரங்‌ களுக்குப்‌ பணம்‌ கொடுத்து நாம்‌ நாசமாய்ப்‌ போவதற்காக இப்‌ பத்திரிகைகளை வாங்கிப்‌ படிப்பதென்‌ றால்‌ யாராவது நம்மை அறிவு; புத்தி, ஒழுக்கம்‌, மானம்‌, வெட்கம்‌, சுயமரி யாதை உள்ள சமூகம்‌ என்று சொல்லக்கூடுமா என்பதை நன்றாய்‌ யோசித்துப்‌ பார்த்தால்‌ விளங்காமல்‌ போகாது. பிறரைக்‌ குற்றம்‌ சொல்லும்போது மாத்திரம்‌ * கன்‌, சாராயம்‌ குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும்‌ அதைக்‌ குடிக்கிறொர்களே ! என்ன புதீதி கெட்ட ஜனங்கள்‌ ] மானங்கெட்ட ஜனங்கள்‌ ! என்கிறோம்‌. ஆனால்‌, அந்தப்‌ புத்தியும்‌ மானமும்‌ நமக்கு இருக்கிறதா என்பதைப்‌ பார்ப்பவர்கள்‌, நம்மில்‌ 1,000-க்கு ஒருவரைக்கூட காணோம்‌. பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய கிழிவுக்கும்‌ தாழ்மைக்கும்‌ அழிவுக்கும்‌ நடத்தப்படுகின்றன என்பதனை அறிந்திருந்தும்‌ அதைப்‌ பணங்கொடுத்து வாங்கிப்‌ படிப்பவர்களுக்குப்‌ புதீதியும்‌ மானமும்‌ இருக்கின்றதா என்பதைக்‌ கவனிப்பதில்லை. உதாரணதீதிற்காக ஒரு பதீதிரிகையை எடுத்துக்‌ கொள்வோம்‌ : சாதாரணமாக சுதேசமித்திரன்‌? என்னும்‌ பத்திரிகை பெரும்பாலும்‌ பார்ப்பன ரல்லாதாருடைய பணத்தையே மூலதனமாகக்‌ கொண்டது. அதன்‌ பத்திராதிபர்கள்‌, உப பதீதிராதிபர்கள்‌, மேனேஜர்கள்‌ முதலியவர்கள்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனர்கள்‌, அவர்கள்‌: சம்பளமோ மாதம்‌ ரூ. 1,500, ரூ. 1,000, ரூ. 800, ரூ. 600--இப்படி அனுபவிக்கிறார்கள்‌. அப்‌ பதீதிராதிபர்‌ பார்ப்பனரல்லாதாரை ஒழிதீதுப்‌ பார்ப்பனராதிக்கம்‌ தேடுகிற பிரச்சாரம்‌ தவிர, வேறு வேலை ஏதாவது செய்வதைப்‌ பார்தீதிருக்கிறீர்களா ? நம்மை நாமே கெடுத்துக்‌ கொள்ள நமது பணமே உதவ வேண்டுமா? அதற்கு விளம்பரம்‌ கொடுப்பவர்கள்‌ பெரும்‌ பாலும்‌ பார்ப்பனரல்லாதார்களே ! அதை வாங்கிப்‌ படிதீதுக்‌ கெடுகிறவர்களும்‌ பார்ப்பன ரல்லாதார்களே ! இதில்‌ ஏதாவது இரகசியம்‌ இருக்கிறதா ₹ அல்லது, இப்‌ பார்ப்பனர்கள்‌ எதையரவது இரகசியமாகச்‌ செய்கிறார்களா 8 நேருக்கு நேராக நம்மைப்‌ பார்த்து, ¢ நீங்கள்‌ முட்டாள்‌ கள்‌) உங்களுக்கு மானம்‌, வெட்கம்‌, சுயமரியாதை; அறிவு, புதீதி இவைகள்‌ கிடையாது) ஆதலால்‌ நாங்கள்‌ உங்களை ஏமாற்றுகிறோம்‌. உங்களால்‌ என்ன செய்ய முடியும்‌? உங்களில்‌ யாரோ சிலர்‌ கத்தினால்‌ கதீதட்டும்‌-எங்களுக்குக்‌ கவலை இல்லை ; இதற்காக நாங்கள்‌ கொஞ்சமும்‌ பயப்பட்டு எங்கள்‌ கொள்கைகளை மாற்றிக்‌ கொள்ளப்‌ போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்களையும்‌ முட்டாள்களையும்‌ நாங்கள்‌ சுவாதீனம்‌ செய்துகொண்டு உங்கள்‌ கதீதல்களை ஒழிக்க எங்களுக்குத்‌ தெரியும்‌. ஒருகை பார்க்கலாம்‌, வாருங்கள்‌ ! என்று தைரியமாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இதற்கொன்றும்‌ மார்க்கமில்லையா என்றுதான்‌ கேட்கிறோம்‌. 6 குடிஅரசு? தோன்றிய பிறகு ¢ மித்திரன்‌ சுமார்‌ 2000 சநீதாதாரர்களுகீகு மேலாக இழக்க நேரிட்டும்‌--இன்னமும்‌ பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குதாரர்களை இரகசிய மாகச்‌ சேர்த்துப்‌ பணம்‌ சம்பாதிக்கப்பட்டு வருகிறது. நம்மவர்கள்‌ முன்னேற்றத்திற்‌ கென்றே நடத்தப்பட்டு வருகிற பத்திரிகைகளைக்‌ கையில்‌ தொடுவதற்கும்‌ நமது மக்கள்‌ அஞ்சுகிறார்கள்‌ என்றால்‌, நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது ? சாதாரண மாக ¢ திராவிடன்‌ ? பத்திரிகை எவ்வளவு கஷ்ட, நஷ்டங்களுக்கு இடையில்‌ நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா? இது யாருடைய நன்மைக்கு நடத்தப்‌ படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா ? யாரையாவது போய்‌, * அய்யா, திராவிடன்‌ பத்திரிகை தங்களுக்கு வருகிறதா 8 இல்லையானால்‌, ஒன்று வரவழையுங்கள்‌)$ அதைப்‌ படிதீதுப்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சியையும்‌ அதனால்‌ நம்மவர்களுக்கு ஏற்படும்‌ கஷ்டத்தையும்‌ உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங்கள்‌ ? என்றால்‌--* திராவிடனா? அதிலென்ன இருக்கிறது? அதைப்‌ பார்தீதாலே என்னமோபோல இருக்கிறதே! அந்தப்‌ பெயரே நமக்குப்‌ பிடிக்‌ கவில்லையே !’ என்று சொல்லி விடுகிறார்கள்‌, இதைதி தங்களுக்குத்‌ தோன்றுகின்றபடி வாஸ்தவமாகதீதான்‌ சொல்லுகிறார்கள்‌ என்றே வைத்துக்‌ கொள்ளு www.thamizham.net - Free £ book No 3031 1286 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ வோம்‌. கட்டின பெண்சாதியை விட்டு, தாசி வீட்டுக்குப்‌ போய்ச்‌ சொத்தைப்‌ பாழாக்கி வியாதி கொள்கிறவர்களைப்‌ பார்தீகுட £ என்னப்பா, கட்டின பெண்சாதியை வீட்டில்‌ வைத்துவிட்டு, தாசி வீட்டுக்குப்‌ போய்ச்‌ சொத்தையும்‌ பாழாக்கி வியாதியும்‌ கொள்கிறாய்‌ ¥ என்‌ றால்‌, * வீட்டில்‌ என்ன இருக்கிறது? அவளைப்‌ பாரீதீதா3ல எனக்குப்‌ பிடிப்பதில்லை அவள்‌ நடந்துகொள்கிற மாதிரியே மனதீதிற்கு அசிங்கமாகப்‌ படுகிற த. கட்டி லுண்டா 8 மெத்தையுண்டா? வாசனையுண்டா? கடிப்பதுண்டா? கிள்ளுவதுண்டா? சட்டிபானை கழுவுகிறவள்‌ தானே ! என்று ஆரம்பித்து விடுகிறானேயல்லாமல்‌- இதெல்லாம்‌ எதற்காகச்‌ செய்யப்படு றது, பின்னால்‌ நம்முடைய கதி என்னாகும்‌ என்கிற கவலையே இல்லாமல்‌ அறிவீனமாய்‌ நடந்து கொள்கிறான்‌. அப்படிபோல்‌ நம்மை மயக்கி, ஏய்த்து, நம்மைப்‌ பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும்‌ பத்திரிகைகள்‌ நாம்‌ ஏமாறதீ தகுந்த மாதிரியாகத்‌ தான்‌ நடத்தப்படும்‌. ஒருநாள்‌ பூரா படிப்பதற்கு விஷயமிருக்கலாம்‌. ஆனால்‌, அது பெரும்‌ பாலும்‌ என்ன விஷயம்‌? நம்மைக்‌ கமுதீதறுக்கும்‌ விஷயமும்‌, பொழு து போக்கும்‌ விஷயமு மாகத்‌ தானே இருக்கும்‌! அதனால்‌ மானமுன்ள மக்கள்‌ நமது சொந்தப்‌ பெண்டை அன்னி யன்‌ குற்றம்‌ சொல்லும்படியாகவும்‌, கஞ்ரிக்குத்‌ திண்டாடுமபடியும்‌ விடாமல்‌ காப்பது எப்‌ படித்‌ தனது கடமையாக நினைப்பாரீகளோ அ துபோல, ¢ திராவிடன்‌ ? பத்திரிகையை ஆத ரிப்பதோ, கட்டின பெண்டைத்‌ தெருவில்‌ அலையவிட்டு, தாசிவீடு காத்துத்‌ திரிவதுபோல்‌ ¢ திராவிடனை ? விட்டுப்‌ பார்ப்பனர்‌ பதீதிரிகைகளைக்‌ கட்டி அழுவதை மறந்து-நமது மான தீதைக்‌ காப்பாற்ற உதவி செய்ய வேண்டுமென்பதாகத்‌ தாழ்மையோடு கேட்டுக்‌ கொள்ளு றோம்‌, இத்த மார்க்கந்தான்‌ நமது பாமர மக்களைக்‌ காப்பாற்றவும்‌ நமது மக்கள்‌ எல்லோருக்கும்‌ சுயமரியாதை ஏற்படவும்‌ சரியான மார்க்கமாகும்‌. [ குடி அரசு?-தலையங்கம்‌--30-1-1927 ; ¢ திராவிடன்‌ ? தினசரி, 7-5-1927) 2. தமிழரும்‌ பத்திரிகைகளும்‌ 14-12-1956-ம்‌ தேதி விடுதலை யில்‌ அழகுக்கரசு என்பவரால்‌ எழுதப்பட்ட கடிதம்‌ ஒன்று பிரசுரிக்கப்பட்டிருப்பதைப்‌ பார்‌ த்தேன்‌. அது இந்தச்‌ சமயத்தில்‌ வெளியிடத்தக்க கடிதம்‌ அல்ல 3 £ தமிழ்நாடு? பதீதிரிகையும்‌ ¢ நவ இந்தியா? பதீதிரிகையும்‌ இன்று தமிழ்நாட்டில்‌ உலவுவது தமிழர்களுக்கு மகதீதான ஒரு நல்வாய்ப்பேயாகும்‌. அவை என்ன கொள்கையைக்‌ கொண்டு எப்படி நடப்பதானாலும்‌ தமிழர்கள்‌ உண்மையான தமிழர்கள்‌ யாவரும்‌ அவற்றின்‌ வாழ்வுக்கும்‌ வளர்ச்சிக்கும்‌ பாடுபட வேண்டியது கடமை ஆகும்‌. அவற்றின்‌ உரிமையாளர்களின்‌ உள்ளம்‌ எனக்கு ஓரளவுக்குதீ தெரியும்‌. அவர்கள்‌ தமிழர்களின்‌ நலத்தைக்‌ கோருபவர்‌ களே. இந்த இரண்டு பத்திரி கைகள்‌ இல்லாமல்‌ இருந்தால்‌ ஆரியப்‌ பத்திரிகைகளின்‌ அட்டு.தியம்‌ தமிழர்களுக்கு எவ்வளவோ கேடுகளைச்‌ செய்திருக்கும்‌. தமிழ்‌ மக்களை நாம்‌, ¢ பார்ப்பனர்களின்‌ பத்திரி கைகளைக்‌ சண்டிப்பாக வாங்கக்கூடாது! என்கிறோம்‌. * விடுதலையின்‌ நிலைமை நமக்குத்‌ தெரிந்ததே. இந்த நிலையில்‌ தமிழர்கள்‌ எதை வாங்கிப்‌ படிதீ.து விஷயங்களை அறிய முடியும்‌ ₹ ¢ தினதீதந்திரயைப்பற்றி அடிக்கடி குறை எழுதுவதுகூட எனக்குப்‌ பிடிப்பதில்லை. நான்‌ பேசுகிறபோது அவைகளைக்‌ கண்டிக்கிறேன்‌ என்றாலு்‌ அவைகளை ஆதரிக்கும்படி மக்களை வேண்டிக்‌ கொள்கிறேன்‌. ஆதலால்‌, இத்தப்‌ பத்திரிகைகளை அதீதியாவசியம்‌ கண்டாலொழிய குறைகூறுவது கூடாது என்பது எனது கருத்து. www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1287 ¢ நவ இந்தியா? சென்னை வந்தது தமிழர்‌ களுக்கு ஒரு பெரும்பேறு, ¢ தமிழ்நாடு? பத்திரிகையும்‌ சென்னைக்கு வரவேண்டுமென்பது எனது பேரவா. தமிட்மக்கன்‌ கண்டிப்பாகப்‌ பார்ப்பனர்‌ பத்திரிகைகளை வாங்கக்‌ கூடாது. கண்டிப்பாகத்‌ தமிழ/களால்‌ நடத்தப்படும்‌ பதீதிரிகைகளையே வாங்கிப்‌ படிக்க வேண்டுமென்று சிரம்‌ வணங்கி வேண்டிக்கொள்ளுகிறேன்‌. [8 விடுதலை 8-அறிக்கை--16-12-1956] 8. நூல்கள்‌ தோழர்களே 1 இந்தப்‌ புதீதக வியாபார நிலையத்தின்‌ துவக்கவிழா ஆற்றுவதில்‌ நான்‌ மிகுதியும்‌ மகிழ்சீசியடைகி3றன்‌, தோழர்‌ சண்முக வேலாயுதம்‌ அவர்கள்‌ என்னை வேண்டிக்‌ கொள்ளும்போது இப்‌ புத்தக வியாபார நிலையம்‌ சுயநல இலாபதீதை--பண வருவாயை e 3750858 துவக்கப்பட்டதல்லவென்றும்‌, நம்‌ இயக்க நூல்களையும்‌, சீர்திருத்த இயக்க நூல்களையும்‌, பத்திரிகைகளையும்‌, கண்டுப்‌ பிரசுரங்களையும்‌ மக்களுக்குப்‌ பரப்ப வேண்டும்‌ என்ற பொக:.நல நோகீகதீதையே முக்கயமாய்கீ கருதிதீ துவக்குவகாகவும்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்டு நான்‌ மிகுதியும்‌ மகிழ்ச்சிபடைந்தேன்‌. இந்தப்‌ பணி ஆற்று கிறவர்‌ கள்‌ நமது நாட்டில்‌ இதுவரை எங்கும்‌ குணிந்து இம்‌ மாதிரி முன்வந்த தில்லை$ முன்வந்தாலும்‌ இலாபத்துக்காக--அதாவது, ஏதாவது ஒரு கயக்கதீதுச்காவது, ஏதாவது ஒரு கொள்கைக்காவக;, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கேற்பட்டால்‌ அந்தப்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு, அந்கக்‌ கொள்கையைச்‌ சொல்லிக்கொண்டு, அந்த மனிதனைப்‌ பின்பற்றுவதாகக்‌ கூறிக்கொண்டு. அவன்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்க முன்வருபவர்களும்‌, தன்‌ வாழ்வை அமைத்துக்‌ கொள்பவர்களும்‌-- அந்த இயக்கத்தை, கொள்கையை, மனிதனை வைவதில்‌ செல்வாக்‌ 3கற்பட்டால்‌ உடனே வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ வாழ்க்கை நலதீதுக்குமாக அவைகளை வைத்துக்கொண்டு வயிறு பிழைப்பவர் களும்‌, அல்லது இந்தக்‌ காரியங்களுக்குக்‌ கூலி பெற்றுக்கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும்‌ எங்குமுண்டு என்றாலும்‌ நம்‌ நாட்டில்‌ அதிகம்‌, ஏனெனில்‌, இங்கு மனி தீ தன்மையை உணர்ந்த-மனிதத்‌ தன்மையில்‌ கவலை கொண்ட மக்கள்‌ அரிது. அதாவது, தங்களுடைய சுய இலாப நஷ்டம்‌, பெருமை, சிறுமையே &லட்சியமென்பதில்லாமல்‌ பொதுநலக கொள்கைகளுக்காக ஏன்று வெளிவந்து தொண்டாற்றும்‌ மக்கள்‌ மிகமிக அ நமையாகும்‌. பெரிய ஜனக்கூட்டங்களில்‌ அல்லது சந்தைகளில்‌, நாடக இடங்களில்‌, காப்பிக்‌ கடை ஓட்டல்கள்‌, சோடா, லெமன்‌, லட்டுக்‌ கடைகள்‌ வைத்து விற்பனை செய்பவர்கள்‌ பெரிய பொதுநலத்‌ தொண்டர்கள்‌, தியாகிகள்‌ என்றால்‌--முந்திய ஆட்களும்‌, பெரிய பொதுநலதீ தொண்டர்‌ களும்‌, தியாகிகளுமாவார்கள்‌ என்கின்ற நிலையில்‌ உள்ளவர்கள்‌ அ$னகர்‌. சந்தை, நாடகம்‌ கலைந்தவுடன்‌ காப்பிக்‌ கடை, ஓட்டலை மூடிவிட்டு வேறு வேலைக்குப்‌ போவதுபோல்‌ இந்தக்‌ கூட்டங்களும்‌ இயக்கதீதுக்கோ, அதன்‌ கொள்கைகளுக்கோ, தலைவனுக்கோ கொஞ்சம்‌ செல்வாக்குக்‌ குறைந்தவுடன்‌ அவற்றின்மீது ஆளுக்கொரு கல்லை எறிந்துவிட்டு ஓடபவர்களாவார்கள்‌. அது3பால்தான்‌ சிலர்‌ இன்று நம்‌ கூட்டங்‌ களிலும்‌ வந்து பகுத்தறிவு நூல்கள்‌ வெளியிடுவதும்‌, சீர்திருத்த நூல்கள்‌ வெளியி வதும்‌, விற்பகுமாக இருக்கிறார்கள்‌. இந்த நபர்கள்‌ உற்சவம்‌, வேறு பெருங்கூட்ட இடம்‌ முதலிய வைகளில்‌ சென்று, அங்கு புராணங்கள்‌, விபூதி, ரூதீதிராட்சம்‌, துளசி மாலை, சாமி படம்‌ விற்பவர்‌ களாகவும்‌ இருப்பார்கள்‌, மற்றும்‌ நாடகக்காரர்களும்‌ இப்படித்தான்‌ ] ஒரு ஊரில்‌ சீர்‌ திருத்த நாடகம்‌, புரட்சி நாடகம்‌, என்று ஆடுவார்கள்‌ ) மற்றொரு ஊரீல்‌ பக்தி நாடகம்‌, கடவுள்‌ திருவிளையாடல்கள்‌ நாடகம்‌ என்று ஆழ்வார்கள்‌) சிலர்‌ இரண்டும்‌ கலந்துகொண்டு இரு கூட்டத்தாரிடையும்‌ செல்வாக்குப்‌ பெற்று, இருகூட்டப்‌ பிரச்சாரகர்களையும்‌ விலைக்கு www.thamizham.net - Free £ book 14௦ 3031 1288 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ வாங்கிப்‌ பொதுமக்கள்‌ காசைக்‌ கறந்துகொள்வார்கள்‌. ஆகவே, இப்படி யாவும்‌ வியாபார முறையில்‌ இயக்கம்‌, கொள்கை, நபர்கள்‌ கொண்டாடப்படுவதும்‌, வெறுக்கப்படுவதும்‌, தொண்டாற்றப்படுவதும்‌ அ$னகம்‌ காண்கிறோம்‌. நூல்‌ வியாபார நிலையங்கள்‌ எநீத மாதிரி நூல்‌ நிலையமானாலும்‌ இனி நஷ்டப்பட வேண்டிய அவசியமேற்படாது. நாட்டில்‌, படிச்கும்‌ மக்கன்‌ அதிகமாகி வருகிறார்கள்‌. படிதீத மக்கள்‌ அதிகமாகப்‌ பெருகிவிடவில்லையென்றாலும்‌ படிதீக மக்கள்‌ கொஞ்சம்‌ பேரும்‌ எதையாவது படிக்கவேண்டும்‌ என்கின்ற ஆர்வமுன்னவர்களாக ஆகிவருகிறார்கள்‌. அப்படியானால்‌ குப்பைகூளப்‌ பத்திரிகைகளும்‌) ஒன்றுமற்ற அதீதான்‌; அம்மாஞ்சி, மன்னி, மதனி ஆரியப்‌ பழக்ீகவழக்க உரையாடல்களும்‌ ; வெறும்‌ காதல்‌ கதைகளும்‌ ; நேரப்‌ போக்கு, போதைக்கேற்ற பிதீதலாட்டக்‌ கட்டுரைகளும்‌ ) ரிஷிகள்‌, மகான்கள்‌, பாபாக்கன்‌ விளம்பரங்கள்‌ செய்து மக்களை வஞ்சிக்க ஏமாற்றுச்‌ செய்திகளும்‌-இவ்வளவு ஏராளமாய்‌ விற்பனையாகுமா ! இவைகளுக்காகவும்‌, கொள்கை இல்லாமல்‌ ஈசல்கள்‌ போல்‌ பொல பொல வென்று தோன்றுமா? மக்களைப்‌ படிக்கச்‌ செய்யாமல்‌ செய்து வைதீதிருந்தார்கள்‌ ஒரு கூட்டத்தார்‌) அதை மீறிக்கொண்டு எப்படியோ மக்களுக்குள்‌, எதையாவது படிக்க வேண்டும்‌ என்கின்ற ஆர்வம்‌ வந்துவிட்டது. இது யாரால்‌ ஏற்பட்டிருந்தாலும்‌ இந்த ஆர்‌ வத்தை, முன்‌ தடைசெய்து வைத்திருந்த கூட்டதீதார்‌--மூடநம்பிக்கைகீகும்‌, மானமற்ற தன்மையை விரும்புவதற்கும்‌ பித்தலாட்ட வஞ்சகர்களுக்ீகு மக்களை அடிமையாக்கு வதற்கும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளப்‌ பார்க்கிறார்கள்‌. அதற்கு நாம்‌ இடம்‌ விடுவதென்றால்‌ இது மகா மோசமான காரியமேயாகும்‌. இந்த நாடு, இன்று, சிறப்பாக நம்‌ மகீகள்‌--படியமையைவிட படிதீததாலேயே பெரிதும்‌ மானமற்றவர் களாகவும்‌, இன்னும்‌ சொல்லவேண்டுமானால்‌ அயோக்கியர்‌ களாகவும்‌, பாமர மக்களைச்‌ சுரண்டிப்‌ பிழைப்பதிலேயே இன்பம்‌ அனுபவிப்பவர்களாகவும்‌ அனேக ராகிவிட்டார்கள்‌ என்றால்‌ அதைச்‌ சுலபத்தில்‌ மறுக்க எவராலும்‌ முடியாது என்பேன்‌. படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன்‌ மனிதத்‌ தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய்‌--தொல்லை கொடுக்காதவனாய்‌--நாணயமாய்‌ வாழ்வதற்கு என்‌ பதல்லாமல்‌ வேறு எதற்கு என்று சொல்லுவோம்‌? ஆனால்‌, தோழர்களே ! இன்று நீங்கள்‌ படித்தவர்கள்‌ என்பவர்களைப்‌ பாருங்கள்‌. * படித்த கூட்டத்தில்‌? நான்‌ மேலே சொல்லியபடி பயன்படுகிற ஒரு படித்தவனைக்‌ காட்டுங்கள்‌, பார்க்கலாம்‌. இமயம்‌ முதல்‌ குமரிவரை உங்களுக்கு நன்றாய்‌ அனுபவதீதில்‌ தெரிந்த எவனாவது ஒரு படிதீதவணை இந்ததீ தன்மையில்‌-அதாவது, * படித்ததால்‌ இந்தத்‌ தன்மை ஏற்பட்டது! என்று காட்டுங்கள்‌) சொல்லுங்கள்‌ ! சாதாரண மனிதனில்கூட இல்லாவிட்டாலும்‌ பெரிய மகான்‌ கள்‌, பேரறிவாளர்கள்‌, பிரபுக்கள்‌, இராஜாக்கள்‌, ஆச்சாரியார்கள்‌, குருமார்கள்‌, ரிஷிகள்‌, மகாதீமாக்கள்‌, தெய்வீக சக்தி பொருந்தியவர்கள்‌, சாமியாடிகள்‌, அருள்‌ வாக்‌ காளார்கள்‌, தியாகிகள்‌, வீரர்கள்‌ முதலிய எந்தக்‌ கூட்டத்திலாவது ] ஜட்ஜுகன்‌, வியாபாரிகள்‌, உத்தியோகஸ்தர்கள்‌, குமாஸ்தாக்கள்‌, வாதீதியார்கள்‌, விதி துவரன்களன்‌, வக்கீல்கள்‌ முதலிய எந்தக்‌ கூட்டத்திலாவது காட்டுங்கள்‌ பார்க்கலாம்‌ 1! ஆனால்‌, இதன்‌ காரணத்தாலேயே மக்களைப்‌ பிறவி அயோக்கியர்கள்‌ என்று யாராவது சொல்லக்‌ கூடுமா ? ஒருநாளும்‌ யாரும்‌ சொல்ல மாட்டார்கள்‌. அப்படியானால்‌, படிதீத மக்கள்‌ என்பவர்கள்‌ பெரிதும்‌ 100-க்கு 99 பேர்‌, ஏன்‌ உபகாரிகளாக இல்லை என்றால்‌--இதற்கு என்னுடைய பதில்‌, ¢ அவர்கள்‌ படிப்பு அப்படிப்பட்டதாகும்‌ ? என்பதைத்‌ தவிர வேறொன்றும்‌ என்னால்‌ சொல்ல முடியவில்லை. இன்றைக்கு நாம்‌ அனுபவிக்கும்‌ தொல்லைகளுகீகு--அதாவது, மக்களால்‌ மக்கன்‌ அனுபவிக்கும்‌ தொல்லைகளுக்குப்‌ படிதீதவர்கள்‌, படிப்பு காரணம்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. ஆடு நரிக்குப்‌ பயன்படுவதுபோல்‌, படிக்காதவன்‌ படிதீதவர்கட்கு உணவாய்ப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3031 கலைகள்‌ 1289 பயன்படுகிறான்‌. நன்றாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, படித்தவன்‌ படிக்காதவனை ஏமாற்றிச்‌ சுரண்டுகிறான்‌ என்பதைதீ தவிர; படிப்பு என்பது எதற்குப்‌ பயன்படுகிறது ? அப்படி யானால்‌, படிப்பு கூடாது என்று நான்‌ சொல்லுகிறேனா ? அல்லது, நான்‌ சொல்லுவதி லிருந்து படிப்பது தப்பு என்று அர்த்தமா? இரண்டும்‌ அல்ல. மற்றென்னவென்றால்‌, நம்‌ நாட்டில்‌ ஆரியர்‌ ஆதிக்கம்‌, வருணமுறை ஏற்பட்டகாலம்‌ முதல்‌ நமக்களிக்கப்படும்‌ படிப்பு- நாம்‌ படிக்க முடிகிற படிப்பு அப்படிப்பட்டது. எப்படிப்பட்டது என்றால்‌, பெரிதும்‌ அயோக்கியத்தன தீதுகீகு, பித்தலாட்டத்துக்கு, மற்றவனை ஏமாற்றிப்‌ பிழைப்பதற்குதீ தாண்டுவது, நடத்துவது தவிர வேறொன்றுக்கும்‌ பயன்படாதது என்றுதான்‌ பொருன்‌ கொள்ள வேண்டும்‌. அரசியலில்‌ மூதீத அரசாங்க அதிகாரிகளைப்‌ பாருங்கள்‌. எவ்வனவு சம்பளம்‌ கொடுத்‌ தாலும்‌ அயோக்கியதீதனமாய்‌, ஆணவமாய்‌ நடக்காத ஒரு அதிகாரியைக்‌ காட்டுங்கள்‌. அதிகாரி என்றால்‌ அவர்கள்‌ இலஞ்சம்‌ வாங்கினாலும்‌ மக்களுக்கு எஜமானதீதனம்‌ செய்‌ வதையே பிழைப்பாய்க்‌ கொண்டவன்‌ என்பதல்லாமல்‌ மக்களுக்கு நாணயமாக, நடுநிலை யாகத்‌ தொண்டாற்றுவது, தயவு தாட்சண்யம்‌, அனுதாபம்‌ ஆகியவைகளுடன்‌ மக்களிடம்‌ நடநீதுகொள்ளுவது என்கின்ற ததீதுவதீதில்‌ நடப்பவர்‌ யார்‌8 அடுத்த படித்தவர்‌ என்பவர்கள்‌ அரசியலில்‌ தலைமை வகிக்கும்‌ வக்கீல்கள்‌ என்பவர்கள்‌. இந்தக்‌ கூட்டத்தார்‌ தான்‌ இப்போது மகாதீமா முதல்‌, அரசியல்‌ தலைமை மந்திரி, அய்க்கோர்ட்‌ ஜட்ஜு முதலிய இடங்களைக்‌ கைப்பற்றிக்கொண்டவர்கன்‌. இவர்களால்‌ மனித சமுதாயத்திற்கு தாசி, வேசி, சூது; கள்‌, சாராயக்‌ கடை, வழிப்பறி, தீவட்டிக்கொள்ளை, பிக்பாக்கெட்‌ முதலியவைகளால்‌ மக்களுக்கேற்படும்‌ கேடுகள்‌, மோசங்கள்‌, ஆகியவைகளைவிட அதிகமாக ஏற்படுகின்றன என்பதல்லாமல்‌--அதில்‌, அவர்கள்‌ பணிகளில்‌ உள்ள பொதுநலம்‌ என்னவென்று சொல்லுகிறார்கள்‌, பார்க்கலாம்‌. வக்கீல்களும்‌, வக்கீல்‌ ஜட்ஜுகளும்‌ இல்லாமலிருந்தால்‌ மக்களுக்குள்‌ இவ்வளவு சரந்தியற்ற தன்மை, நாணயக்‌ குறைவாய்‌ நடப்பதால்‌ இன்பம்‌ (என்பவை) ஏற்பட்டிருக்குமா? அடுதீதபடியாகப்‌ படிதீதவர்கள்‌, கல்வித்‌ துறையில்‌ வாத்தியார்கள்‌. இவர்கள்‌ வாழ்க்கை எதற்குப்‌ பயன்படுகின்றது என்று: பார்தீதால்‌, இவர்களிடம்‌ படிதீதவர்கள்தாம்‌ அல்லது இதற்குத்‌ தகுந்த படிப்பை மக்களுக்குள்‌ புகுதீத சாதனமாய்‌, ஆயுதமாய்‌ இருந்தவர்கன்தாம்‌ வாத்தியார்கள்‌ என்றால்‌ யார்‌ மறுக்க முடியும்‌? படித்தவர்களில்‌ பெரும்பாலோர்‌ யோக்கியர்களாய்‌ இல்லை யென்றால்‌, வாதீதியார்கள்‌ வாழ்வு, வாத்தியார்கள்‌ தொண்டு எப்படி யோக்கியமானதென்று கூறமுடியும்‌ ? கினி, பொதுஜன ஊழிய குமாஸ்தாக்கள்‌ நிலையோ சொல்லவே வேண்டாம்‌. அவர்கள்‌ கழுகுகள்‌ அல்லது கதீதிரிக்கோலால்‌ வாழ்கின்றவர்கள்‌ என்பதல்லாமல்‌ அதில்‌ பொதுநலம்‌, பொதுநல உணர்ச்சி என்பது என்ன இருக்கிறது? இனி, பண்டிதர்கள்‌. இவர்கள்‌ ஒழுக்க இயலைச்‌ சேர்‌ நீதவர்கள்‌. இவர்களை எதற்குச்‌ சமமாய்ச்‌ சொல்லலாம்‌ 1 மலக்‌ குழியைக்‌ கலக்கி விடுகிறவர்கள்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. மக்களுக்குத்‌ தெரியாத அயோக்கியத்தனத்தை--சுலபதீதில்‌ தெரிந்துகொள்ள முடியாத அயோக்கியத்தனத்தை--மூடத்தனத்தை--ஒருவரை ஒருவர்‌ சுரண்டுவதற்குக்‌ காட்டிக்கொடுப்பவர்கள்‌ என்பதல்லாமல்‌ வேறு என்ன சொல்ல முடியும்‌ ₹ பதீதிரிகைக்‌ காரர்கள்‌; புதீதகம்‌ எழுதுகிற எழுத்தாளர்கள்‌, மகான்கள்‌, புராணப்‌ பிரசங்கிகள்‌, மதவாத அறிஞர்கள்‌ முதலிய இவர்கள்‌ தொண்டில்‌ இருக்கும்‌ பொதுநலம்‌, நாணயம்‌, முன்னேற்றத்‌ தன்மை, அறிவு விரியும்‌ நிலை, நல்ல சங்கதிகள்‌ தெரியும்‌ தன்மை என்ன இருக்கின்றன ₹ பதீதிரிகைக்காரர்கள்‌--மக்களை முட்டாள்களாக்கவும்‌) அவர்கள்‌ மானம்‌ பெறாமல்‌ இருக்கவும்‌ ) முன்னையக்‌ கூட்டத்தாருக்கு அடிமையாக இருக்கவும்‌] தாங்கள்‌ கொள்ளை கொள்ளவும்‌) மனிதனின்‌ மான உணர்ச்சியை, முற்போக்கு உணர்ச்சியை மழுங்க வைதீதுப்‌ பொய்யையும்‌, ஏமாற்றத்தையும்‌ அறிவிக்க அறிவுக்‌ களஞ்சியமாக மக்களுக்குள்‌. 1686-12 www.thamizham.net - Free £ book 14௦ 3031 1290 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நிரப்பவுமல்லாமல்‌--அவர்களது தொண்டால்‌ மக்களுக்கு ஏற்பட்ட பயண்‌ என்ன § சயின்ஸ்‌- விஞ்ஞானம்‌ படித்த தனி நிபுணர்கள்‌ என்பவர்களும்‌ மக்களை ஏமாற்றித்‌ தன்னைப்‌ பெரிய மேதாவி என்று கருதிக்கொண்டு, அகம்பசவமாய்‌ மற்றவர்களை முட்டாள்கள்‌ என்று அவமதிப்பதல்லாமல்‌ அவர்களால்‌ ஏற்பட்ட விஞ்ஞான நலம்‌ என்ன? உதாரணமாக; இந்த மேசைமேலிருக்கும்‌ ரேடியோ என்பது 4, 5 வருடங்களுக்கு முன்‌ பே 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள்‌. இதுவரை இலட்சக்கணக்கான மக்கன்‌ கேட்டிருப்பார்கள்‌ $ கண்டிருப்‌ பார்கள்‌. நமது நாட்டில்‌ இலட்சக்கணக்காக ரேடியோ இருக்கின்றது. அப்படியிருந்தும்‌ லிது எப்படி ஒலிகளைக்‌ கொண்டு வந்து எப்படிப்‌ பரப்புகிறது என்பது இதுவரை எத்தனைப்‌ பேருக்குத்‌ தெரியும்‌ கம்பியில்லாத்‌ தந்தி எப்படிச்‌ சேதி சொல்லுகிறது ¥ கிராம போன்‌ எப்படிப்‌ பாடுகிறது; பேசுகிறது என்பது எத்தனைப்‌ பேருக்குத்‌ தெரியும்‌ ₹ புராணம்‌ எழுதி அச்சுப்‌ போட்டு விற்றது எத்தனையோ இலட்ச லட்சப்‌ பதிப்பு களும்‌, கோடிகோடி ரூபாய்களுமிருக்கும்‌. அதில்‌ ஏற்பட்ட நல்லறிவை நல்ல படிப்பை (அதில்‌ கில்லை; இருந்தால்‌) தெரிந்துகொண்டவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌ இருக்கிறார்கள்‌ ₹ தோழர்‌ திரு. வி. கலியாணசுநீதர முதலியார்‌, டி. கே. சிதம்பரநாத முதலியார்‌, நாமக்கல்‌ இராமலிங்கம்‌ பின்ளை, மகா மகோபாதீதியாய கதிரேசன்‌ செட்டியார்‌, மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளை போன்ற திராவிடர்கள்‌ பலர்‌--பார்ப்பனர்களால்‌ புலவர்கள்‌ என்று மாபெரும்‌ விளம்பரம்‌ பெற்றவரீகளாவர்‌. இவர்களால்‌ இதுவரை ஏற்பட்ட மூடநம்பிக்கையில்லாத-- மானமற்ற தன்மை அல்லாத அறிவு நூல்‌ ஒன்றைக்‌ காட்டுங்கள்‌, உயர்ந்த கலைகன்‌ என்பவை, மக்களை எசீசில்கலையாக ஆக்குகின்றன. மற்ற எழுத்தாளர்கள்‌ என்பவர்கள்‌ பதிப்பித்த புத்தகங்களில்‌ உண்மையை-பகுதீதறிவை மனித முன்னேற்றத்தை-- மானதீதைக்‌ குறியாகக்‌ கொண்ட, வீரதீதைக்‌ கிளப்பும்‌ புத்தகம்‌ ஒன்றைக்‌ காட்டுங்கள்‌ | படித்தவர்கள்‌ கூட்டத்திலுள்ள திராவிடன்‌ கதியே இப்படியிருநீதால்‌, இனி ஆரியன்‌: எழுதும்‌ பத்திரிகை, பிரசுரிக்கும்‌ புத்தகம்‌, பாடும்‌ பாட்டு, ஆடும்‌ நாடகம்‌, எழுதும்‌ நாவல்‌, கதை எப்படியிருக்கும்‌? கடவுளையும்‌, காதலையும்‌ இன்னது என்று புரிந்து கொள்ளா தவர்களே கலை உலகில்‌ புகுந்து, கொலை செய்கிறார்கள்‌. இவைகளுக்கெல்லாம்‌ காரணம்‌, 6 இவர்கள்‌ படித்த படிப்பு அப்படிப்பட்டது? என்றுதான்‌ நான்‌ சொல்லுவேனேயொழிய, இவர்கள்மேல்‌ குற்றம்‌ சொல்லவில்லை. இன்றையப்‌ படிப்பின்‌ தொல்லைகளில்‌ மாபெரும்‌ தொல்லை ¢ சம்பளம்‌ போதாது? என்பது இது மகா அக்கிரமம்‌. ஏனெனில்‌, உழைப்புக்குக்‌ கணக்குப்‌ பார்த்துச்‌ சம்பளம்‌ கேட்பதில்லை. படித்தால்‌, படிப்பைப்‌ பார்த்துக்‌ கேட்கப்படுகிறது. மாதம்‌ 15 ரூபாய்க்‌ காரரும்‌ சம்பளம்‌ பற்றாது என்கிறார்‌) 30 ரூபாய்க்காரரும்‌ பற்றாது என்கிறார்‌ 3 100 ரூபாய்க்காரரும்‌ அதற்கு மேற்பட்டவரும்‌ பற்றாது என்கிறார்‌. இதற்கு அர்த்தம்‌ என்ன? படித்தால்‌ மேல்‌ வாழ்வு வாழ வேண்டும்‌) படிதீதிருக்கும்‌ குடும்பத்துக்கு அதிகச்‌ செலவு செய்யவேண்டும்‌, ஆதலால்‌ அதிகச்‌ சம்பளம்‌ வேண்டும்‌ என்பதல்லசாமல்‌ வேறு: என்ன 8 மற்றவன்‌ படிக்காதவன்‌--அவனுக்கு மேல்‌ வாழ்வு தேவையில்லை;$ அவன்‌: குடும்பத்துக்கு அதிகச்‌ செலவு தேவையில்லை--20 அல்லது 30 ரூபாய்‌ போதும்‌; அதுவே கொடுக்கக்கூடாது என்பதுபோல்தானே--குறைந்த சம்பளதீதுக்குக்‌ காரணம்‌ சொல்லப்‌ படுகிறது. சம்பனப்‌ போராட்டம்‌, படிதீதவர்கவிடையில்‌ இப்படியிருக்க--இலஞ்சம்‌, கொள்ளை இலாப வியாபாரம்‌, புரட்டு இத்தனையும்‌ படிதீதவர்கன்‌ என்பவர்களிடையில்‌ தான்‌ இருக்கின்றன. சம்பளம்‌ உயர வேண்டுமானால்‌, சர்கீகார்‌ பொக்கிஷதீ துக்கு வரியின்‌ மூலம்தான்‌ பணம்‌ வரவேண்டும்‌ ] வரியென்றால்‌ அது பெரிதும்‌ படிக்காத உழைப்பாளி மக்களின்‌: உழைப்பில்‌ இருந்துதான்‌ கசக்கிப்‌ பிழியப்படவேண்டும்‌. அந்த உழைப்பாளியின்‌ வாழ்க்கைத்தரம்‌, துணிமணி செலவு, பின்னைகுட்டி படிப்பு, சினிமா, டிராமா, பெண்டு www.thamizham.net - Free £ book No 3031 கலைகள்‌ 1291 பின்ளை அலங்காரம்‌, காபி, உப்புமா; சீர்‌ ஆகிய ஒன்றைப்பற்றியும்‌ கவலைப்பட்டு சம்பள தீ திட்டம்‌ போடுவதில்லை. ஏன்‌ 1 உழைப்பாளி-படியாதவன்‌ ) உழைக்காமல்‌ பேனாவில்‌, பாட்டில்‌, கூதீதில்‌, பிரசங்கதீதில்‌, கவியில்‌ வாழ்வு நடதீதுகிறவன்‌-படிதீதவன்‌, இதுதவிர, இரு கூட்டத்துக்கும்‌ வேறு வித்தியாசம்‌ என்ன சொல்லமுடியும்‌ i எனவே, இன்றையப்‌ படிப்பு வருணாசிரம தர்மத்தை அனுசரித்து ஏற்படுத்தப்‌ பட்டது என்பதோடு, ஒருவன்‌ உழைக்க வேண்டும்‌ ) ஒருவன்‌ உழைக்காமல்‌ ஏமாற்றி வாழவேண்டும்‌) இதற்காக ஒரு கூட்டம்‌ இதற்கேற்ற படிப்பு படிதீதிருகீக வேண்டும்‌ $ ஒரு கூட்டம்‌ படியாமல்‌ முட்டான்௧ளாக-அப்பாவிகளாக வைகீகப்பட்டிருக்க வேண்டும்‌) இதுவும்‌ படிப்படியாய்‌ வருணாசிரம தர்மம்போல்‌ இருக்கவேண்டும்‌ என்பதையே அடிப்படையாய்க்‌ கொண்டு இருக்கிறது. ஆகையால்‌, இப்போது உண்மையாகப்‌ பொ.துநலதீதுக்கு ஏதாவது உழைக்க வேண்டும்‌ என்பவர்கள்‌--இந்தப்‌ படிப்பு மாறும்படியான காரியதீதுகீகு; இந்தப்‌ படிப்பால்‌ ஏற்பட்ட கேடுகள்‌ மாறும்படியான காரியதீதுக்கு ஏற்ற படிப்பினை உண்டாக்க வேண்டும்‌; அதற்கேற்ற பிரசுரங்கள்‌ ஏற்பட வேண்டும்‌) அவை எப்படியாவது மக்களுக்குள்‌ பரப்பப்பட வேண்டும்‌. இவையெல்லாம்‌ பிரசங்கதீதாலேயே முடிந்துவிடாது. இவற்றிற்கு உதவும்‌ படியான பிரசுரம்‌ தெளிவாகக்‌ குறைந்த விலையில்‌ சவுகரியமாக யாருக்கும்‌ கிடைகீகும்படிச்‌ செய்யப்பட வேண்டும்‌. இப்போதுள்ள பிரசுரம்‌--100-க்கு 99 பேர்‌ மோசடிக்கும்‌, கொள்ளை யடிப்பதற்குமே பயன்படுகின்றது இது சமயத்தில்‌, பொதுமக்களுக்கு ஒரு வார்‌ தீதை, அறிவியக்க நூல்கள்‌--சீர் திருத்த நூல்கள்‌ என்றால்‌ ஒவ்வொன்றையும்‌ வாங்கி வீட்டில்‌ நிரப்பிக்கொள்ள வேண்டுமென்பது அர்த்தமல்ல, வாங்கிப்‌ படிதீதுவிட்டு, படிதீதுமுடித்தவுடன்‌ முக்கால்‌ விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிடவேண்டும்‌. மறுபடி வேறு வாங்கவேண்டும்‌. புதீதக வியாபாரியும்‌ தான்‌ விற்ற புத்தகத்தை அரை விலைக்குக்‌ கொண்டுவந்து கொடுதீதால்‌, நலுங்காம லிருந்தால்‌ வாங்கிக்கொள்ள வேண்டும்‌. இதுதான்‌, மேல்‌ நாடுகளில்‌ புத்தகம்‌, பிரசுரம்‌ முதலியவை விஷயங்களில்‌ இருந்துவரும்‌ பழக்கம்‌. வாங்கினால்‌ படிக்கவேண்டும்‌ $ படித்தவுடன்‌ விற்றுவிடவேண்டும்‌ $ * முக்கிய புதீதகம்‌?, * கிடைக்காதது? என்றிருந்தால்‌ வைதீதுக்கொள்ளலாம்‌. அதிகம்பேர்‌ படிக்கவேண்டும்‌ என்பதுதான்‌ யோக்கியமான பொதுநல ஆசிரியர்களின்‌, பொதுநல வியாபாரிகளின்‌ இலட்சியமாய்‌ கருக்கும்‌. [ஈரோட்டில்‌, 22.1.1947. செற்பொழிவு--* விடுதலை? 25-1-1947) 4. அச்சுக்‌ கலை தலைவரவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே 1 நமது நாட்டில்‌ சுமார்‌ 200 ஆண்டுகளுக்குமுன்தான்‌ அசீசகம்‌ ஏற்பட்டது. அதற்கு முன்பு ஏடுகள்‌ (ஓலைகள்‌)தான்‌. அது பொதுவாகக்‌ கல்வி வளர்சீசிக்கே பெருந்தடையாக இருந்தது. பிறகு அச்சகம்‌ வளர்நீததன்‌ காரணமாகவே படிப்பு வளர்ந்தது. நான்‌ பன்னியில்‌ சேர்ந்த காலதீதில்‌ திண்ணைப்‌ பன்வியில்‌ ஏடு, எழுதீதாணிதான்‌ இருந்தது. பிறகு, முனிசிபல்‌ பன்விக்கு வந்தபோதுதான்‌ புதீதகம்‌ கொடுத்தார்கள்‌. நமது இலக்கி யங்கள்‌, புராணங்கள்‌ எல்லாம்‌ முன்பு ஏடாகதீதான்‌ இருந்தன. இன்றைக்கு 100-க்கு 35, 40 பேர்கள்தான்‌ படிதீது உள்ளோம்‌) மற்றவர்களும்‌ படிக்க அச்சகம்‌ பெரிதும்‌ வளர்நீதாக வேண்டும்‌. மேல்நாடுகளில்‌ அசீசாகின்ற புதீதகங்கள்‌ அடிக்கடி மாறாது. தகுதிவாய்ந்த அறிவு நூல்கள்தரன்‌ வெளியிடுவார்கள்‌, அதனைப்‌ பிளேட்டில்‌ வார்தீது 20, 30 ஆண்டுகள்கூட www.thamizham.net - Free £ book No 3031 1292 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ வைதீது இருப்பார்கள்‌ ; தேவையானபோது பிரிண்ட்‌ செய்து கொள்வார்கள்‌, நமது நாட்டில்‌ கல்விக்‌ கொன்கையில்‌ ஒரு நிலை இல்லாத தன்மை இருப்பதால்தான்‌ அவ்வப்போது மாற்றுகின்றார்கள்‌. அசிசுதீ தொழிலுக்கு கம்பாஸிட்டர்கள்‌ பெரிய தொல்லையாக இருக்கின்றார்கள்‌ ; அவர்களுக்குச்‌ சம்பளம்‌ ரூ. 3 அல்லது 4 என்று குறைந்த அளவில்தான்‌ உள்ளது. மண்‌: எடுக்கின்ற ஒட்டனுக்கும்‌ ரூ. 4; கம்பாஸிட்டருக்கும்‌. நாலு ரூபாய்‌ என்றால்‌ என்ன நியாயம்‌ 8 இது மாறவேண்டும்‌. வேலை இல்லாத இளைஞர்களுக்கு கம்போசிங்‌ பள்ளிகள்‌: துவக்கி அசீசுக்களைக்‌ கோகீகக்‌ கற்றுக்‌ கொடுக்கவேண்டும்‌. அச்சாபீஸ்காரர்கள்‌ ஜாப்‌ வேலையையே பிரதானமாகக்‌ கருதாமல்‌ புதீதகங்கள்‌, பெரிய வேலைகள்‌ முதலியன செய்யவேண்டும்‌, v 1979ஆம்‌ வருஷதீதில்‌ நமது நாட்டில்‌ 35, 40 பேர்கள்தான்‌ படிதீது இருக்கின்றார்கள்‌ என்றால்‌ பெரிய அவமானம்‌ ) அரசாங்கம்‌ போதிய கவனம்‌ எடுதீ.து மக்களுக்குக்‌ கட்டாயக்‌ கல்வி அளிப்பதோடு, தொழிலுக்கு வழிவகைகள்‌ செய்து தரவேண்டும்‌, தமிழ்நாடு, கேரளம்‌, பம்பாய்‌, டில்லி தவிர மற்ற மாநிலங்களில்‌ எல்லாம்‌ 100-க்கு 80 பேர்கள்கூடப்‌ படிக்கவே இல்லையே [ ஆண்கள்‌ பெண்களுக்கு 50 பேர்‌ அளவிற்குச்‌ சாப்பாடுபோட்டு, அச்சுத்‌ தொழில்‌ கற்றுக்கொடுக்கலாம்‌, இது வேலைஇல்லாதி திண்டாட்‌ டத்தை ஓரளவுக்குக்‌ குறைக்க உதவும்‌. நண்பர்‌ ஆனைமுத்து திராவிடர்‌ கழகம்‌ சம்பந்தமாகவும்‌, பகுதீதறிவுக்‌ கொள்கை சம்பந்தமாகவும்‌ நல்ல தேர்சீசி பெற்றவர்‌. அவர்‌ இப்படி அச்சகம்‌ அவங்குவது பாராட்டத்‌ தக்கது. அவருக்கு அச்சுத்‌ துறையில்‌ அனுபவம்‌ உண்ரடு. இன்றைக்கு அரசாங்கம்‌ மக்கள்‌ நன்மையைக்‌ கருதி அனேகக்‌ காரியங்கள்‌ எல்லாம்‌ செய்து வருகின்றது. மக்கள்‌ காலித்தனம்‌, ரகளைகளுக்கு இடம்‌ தராமல்‌ ஆட்சிக்குப்‌ பாதுகாவலாக இருக்கவேண்டும்‌. இன்றைக்கு மாணவர்களும்‌, ஆசிரியர்களும்‌ ஸ்டிரைக்‌, ரகளை; காலிதீதனதீதிற்கு முற்பட்டுவிட்டது வேதனை அளிக்கின்றது. நமது நாட்டுக்‌ கல்வி முறையானஅ மாற்றி அமைக்கப்பட்டாக வேண்டும்‌. இன்றையக்‌ காலிதீதனதீதிற்குக்‌ காரணமே கல்வியின்‌ அஜீரணம்தான்‌. பட்டப்‌ படிப்புக்குப்‌ பதிலாகத்‌ தொழில்‌ கல்வி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய அரசாங்கம்‌ ஆவன செய்யவேண்டும்‌. [திருச்சியில்‌, 17-8-1978-ல்‌ சொற்பொழிவு விடுதலை? 25-8-1973) www.thamizham.net - Free E book 14௦ 3031 -~ PART IX DRAVIDASTAN SEPARATION www.thamizham.net - Free E book No 3031 | E book No 3031 1. SEPARATE ELECTORATES Mr. E. V. Ramaswami Naicker has issued the following statement to the Press i— I am surprised to read the statement that Mr. A. Ramaswami Mudealiar has issued on the question of separate electorates. The statement க்க obviously made by Mr. Mudaliar in his personal capacity and not as a representative of the Non-brahmin party, though ¢The Hindu’ and other Madras Journals have utilised it to their advantage by publishing it under such headlines as ¢ Non-brahmin Leader’s views’. Communal representation in all matters is still the creed ௦8 the Non-brahmin party. The party was nourished and brought up on this principle. The party has gained a large adherence among the masses owing to the steadfastness shown in the realisation of this principle. It remains to be seen how far the party would maintain its strength among the people 18) according to the advice of Mr. Ramaswami Mudaliar, it throws to the four winds this demand for separate electorates as well as for reservation of seats in joint constituencies. The case for separate electorates, says Mr. Ramaswami Mudaliar, was negatived once and for ever by the Joint Parliamentary Committee in 1919. 1௩௦ question cannot bere-opened because, Mr. Mudaliar remembers, the Non-brahmins tolerated the decision of the Joint Parliamentary Committee. The Non-brahmin party which was in its infancy at that time, had not the strength to resist that decision and had therefore to make the best of the bad situation in which it found itself. But now that the party has grown in srtength and the people at large have realised the 67118 of the decision of 1919, it would be absurd to impose the decision of two years ago as the laws of the Medes and the Persians. Again, in Mr. Mudaliar’s opinion, the question cannot be reopened unless an extraordinarily strong case has been made out for doing so. I would like to know what, according to Mr. Mudaliar, would constitute ¢ an extraordinarily strong case’”. To say that ௨௦ point has been made out for reopening this all important question is to give away the whole case for Non-brahmins, Mr. Ramaswami Mudaliar has himself drawn vivid pictures in the columns of the ¢Justice’ ௦8 the grievous wrongs that the Non-brahmin community is still suffering as regards both official and non-official repre- sentation. The monopolists still hold undisputed sway in all walks of life. After ten years of ¢toleration’ of the decision of the Joint Parlia- mentary Committee, the position of the Depressed Classes, the Mussal- mans, the Christians, and other Non-brahmin Communities has not only not improved but has visibly deteriorated. www.thamizham.net - Free E book 14௦ 3031 iv THOUGHTS OF PERIYAR E. V. R. In view of the retrograde recommendations of the Nehru Committee and in view of the reactionary evidence that the Bombay Government tendered through Messera Turner and Griffiths, I see a grave danger ahead of the Non-brahmin cause being lost not only before the Simon Commission but before the bar of public opinion. I therefore appesal to all Non-brahmins and particularly to leaders like Mr. Ramaswami Mudaliar to bestir themaselves and educate the public in favour of separate electorates and proportionate representation in the services. [¢ Rovolt *—Press Statement, Vol. 1, No. 1. Dated 7th November 1928, Erode.] 2. DRAVIDASTAN SEPARATION The Editor wanted me to write on ¢ The Black Shirt Movement 79, There is ௨௦ movement atall by that name. Those who are dissatisfied with and affected by the movement and those who are inimical towards it have named it so. Evidently the Editor has meant the ¢ Dravidastan Move- ment.” For it is improper 6௦ call a great national movement by the kind or oolour of the dress worn by its followers. I won’t call the Congress movement ¢ khaddar shirt movement.” The black shirt is worn by us as a symbol of the darkness and degradation in which the Dravidians of this great sub-continent are plunged. It is a symbol of our social and economic bondage. We ௦8 the movement are proud to wear it, just as a true Congressman is proud to wear khaddar. The idea is entirely mine and is not borrowed from any foreign party or organisation. Black is usually associated with death and sorrow. We the Dravidians are worse than the dead. We are Shudras. So say the Puranas, Ithibasas, Smiritis and other Hindu scriptures. Hindu Law perpetuates it even today. Hindu temples are monuments of this ignominy. Even the Temple Entry Act (௦8 which Congressmen are so proud today) does not allow us to approach the Sanctum Sanctorum. Our (Dravidian) languages are anathema to the so-called Goda! I could cite innumerable examples to show our ignoble and shameful position in society. In order toindicate to the public and also to remind ourselves of our sorrowful plight in all spheres of life, I have prescribed the black shirt as a symbol. Those who wear it are as proud of it as Mr. Gandhi was, when he donned the South African prisoner’s cap on his head. Have not his followers honoured that வற by calling it the ¢ Gandhi ஹே. In spite of the fact that the black shirt is an ordinary symbol, the Provincial Government chose to ban the so-called ¢Black-shirt Movement”, The mistake was pointed out at once to the Government and we continue to wear it even though the ban does not appear to have been removed technically. ButIshould thank the Government for the impetus given to the black-shirt apirit by imposing a ban on it. www.thamizham.net - Free E book 14௦ 3031 DRAVIDASTAN SEPARATION v So much for the so-called ¢ Black-shirt Movement . It is well known that the Justice Party was founded in 1916 by the two great South Indian leaders, Dr. T. M. Nair and Sir P. Tyagaroya Chettiar, both of whom had been for a long time in the Congress. Before the year 1920 the Congress organisation was chiefly concerned with the securing of big jobs for Indians, most of which were in the hands of foreigners. This resulted in almost ௨11 the key jobs being filled up by the privileged few. I mean the Brahmins. With a view, therefore, to securing equal rights and opportunities for the rest of the communities of South India, and securing political, educational and economic equality for the down-trodden non-Brahmin community, the Justice Party was started by these two great leaders. In those days, not even 10 per cent of the non-Brahmins were educated and not even 5 per cent were in Govern- ment and other public services. And in the domain of politics their influence was elmoat nil. In the legislatures, in the 1௦௦௨1 bodies, and in almost all spheres of life the non-Brahmins were completely neglected. Almost all the lucrative jobs, say above Rs. 100, were denied to the non- Brahmins who form 97 per cent of the population. High posts carrying salaries of thousands of rupees per month could not even be dreamt of. As the result of this, a great community was suppressed in all walks of life, and even the educated and efficient few could not come up. 11௩௦௦ the birth of the South Indian Liberal Federation (Justice Party). The Congress was dominated by South Indian Brahmins and also North Indian leaders who knew nothing of South Indian conditions or who willingly ignored the welfare of South Indians. And naturally the Congress turned its attention to the South Indian movement. As the entire Press was in the hands of the Congress and the Brahmins and their sympathisers (this holds good even today) a tearing propaganda was carried on throughout the length and breadth of the land insisting that the Justice Party was anti-national and pro-British, The main reason for such propaganda was the agitation of the Justice Party, and not without success, to capture the Government and secure certain high posts in Government. This mischievous propaganda was readily believed by the illiterate masses. After 1920 the Congress movement threw off its moderate programme (it should be remembered that in pre-1920 Congress conferences the British National Anthem used to be sung) and adopted a virulent, anti-British, non-co-operation idealogy. And therefore it was nothing unnatural that the Justice Party, which was wedded to constitutional methods of agitation for securing equal rights in the administration of the country was decried as an anti-national organisation. In addition to this there was a split in the Justice Party on account of scrambles for ministrial jobs. Though such splits are an annual ocourrence in the Congress Ministries of 1686—162 A www.thamizham.net - Free E book 14௦ 3031 vi ‘THOUGHTS OF PRRIYAR 8. V. ௨9 today, and not regarded as very serious by the public, it was not 8௦ in those days. To cut a long story short, the emergence of the Swaraj Party, the subsequent defsats of the Justico Party in the elections, coupled with the treachery of ௨ few non-Brahmin leaderas brought about the ruin of the Justice Party as a political entity. Split with Congress Between 1923-26, those of us who knew the ins and outs of the Congress move, I mean a few non-Brahmins including me, had to leave the Congress. But I didn’t join the Justice Party immediately ; 1 was a nationalist to the core. But I agreed with the principle of communal representation which was the bedrock of the Justice Party. Even as a staunch Congressman and no-changer, and a strong lisutenant of (now His Excellency the Governor-General of India) Mr. C. Rajagopalachariar, I was fighting for communal representation and equality of rights and privileges. I even made the Madras Congress Party accept this principle and set apart 50 per cent of places for the non-Brahmin communities. I and other nationalist non-Brahmins started the Madras Presidency Association and made this Association also accept this principle. Besides this, 1 also atarted the Nationalist Association which included not a fow Brahmin nationalists, and made this too accept this principle of communal repregentation. All this I say, in order to emphasise my ardent belief in this principle being the only practical way for the upliftment of the non- Brahmin community. How I brought a resolution for the acceptance of communal representation at the Provinocial Congress Conference at Conjee- varam, and how it was ruled out by the Presidentand how I walked out of the Conference along with my friends, aro all too well known to bear repetition here. I wao then the Provincial Secretary and had beon the President of the Provincial Congress Committee twice before. If, in spite of my responsible position in the Congress, I was treated so badly, how could any one with an ounce of self-respect in him continue in that communal organisation any longer? 8௦ I had to sever my connection with the Congress after having served in it for ten years and having made many a sacrifice, including the jail-going of those days. Thia resulted in the birth of the Self-Respect Movement. Now about the great national organisation of South India. I mean the Dravida Kazhagam. The old South Indian Liberal Federation, popularly known as the Justice Party of whichIwas elected the leader in 1939, (29-12-1938, Ed.) assumed this new historio name as a result of the resolution passed at the Annual Confederation held at Salem in 1944. The movement was given a new orientation by virtue of the well-known Self- Respect Moverent (of which 1 am the founder) merging in it. www.thamizham.net - Free E book 14௦ 3031 DRAVIDASTAN SEPARATION vid The Dravidians have a distinot origin in society, their languages are independent and belong to a separate class. The terms ¢ Aryan’ and ¢ Dravidian " are not my inventions. They are historical realities. They can be found in any school boy's text book. That the Ramayana 18 an alle- gorio representation of the invading Aryansand the domioiled Dravidians, has been accepted by all historians including Pandit Nehru and all reformers inoluding Swami Vivekananda. My desire is not to perpetuate this difference; but to unify the twoopposing elements in society. Iam not a believer in the race theory as propounded by the late Nazi leader of Germany. None oan divide the South Indian people into two races by means of any bload test. It is not only suicidal but most reactionary. But the fundamental difference between two different cultures, Aryan and Dravidian cannot be refuted by anyone who has closely studied the daily life habits ஹல்‌ customs and literature of these two distinct elements in South India. Tho Dravidian Movement is essentially a socio-religious organisation whose aim நக to reconstruct society on a human and rational basis. It wants to destroy caste root, and branch. It does not believe in easy doses or injections ! It is all out for the amputation of the diseased limb. It wants to bring together all Dravidians irrespective of political or religious affiliations. Though its ultimate aim is to destroy religions as popularly understood and practised, it is not so virulently anti-religious a8 is represented by the interested few. The Dravidians in the இக place hate the title Shudras (born of prostitutes) conferred on them by the so-called high caste. Demand for separate state The Dravidian Movement does not stop with this socio-roligious revolution. On the economic side, the movement wants to cut itself away from the North. 1 mean the Contral Government. The South should not be exploited by the North. It should notbe bartered away to the Birlas, Goenkas, Tatas, Dalmias and Hirachands. We who belong to the South should not rest satisfied with the mere change of masters. When I say that we should not allow ourselves to be dominated by the North, I do not mean that Dravidastan when it comes into being, will be a thorn in the flesh of the North. We can be even more friendly and helpful than Ceylon and Burma. A separate independent State for the South would merely mean economic self-sufficiency and independence. South India had been a separate State up to the time of the British occupation. Even Akbar and Asoka dared not interfere with the indepen- dence of the South. We have about 1,500 miles of sea coast; plenty of forest ; a network of rivers ; and enormous underground wealth. And our manpower is incomparable in skill and efficiency. Are we not proud of www.thamizham.net - Free E book 14௦ 3031 viii ‘THOUGHTS OF PERIYAR E: V. 0 having lent to the North, a Governor-General, a couple ௦8 Finance Ministers and last but not least, the first Commander-in-Chief ¥ The proposed Dravidastan or Dravidanadu can in no way be worse than a Switzerland, a Ceylon or Burma. If these small stretches of land could be separate, independent countries, why not we with a vast area of about 1,25,000 கழ miles and six crores of people, and plenty of natural resouroces ¢ The Dravidastan movement is not a communal organisation. Itisa national movement. It is only an attempt of a great historic people to throw off their age-long social and religious bondage and to cut off the two-century chain put on its feet by e foreign bureaucracy. (Courtesy : % The Hindu » Republic Dey Number, 26-1-1950, Madras-2) www.thamizham.net - Free E book 14௦ 3031 பக்கம்‌ வரி 713 13 717 33 719 7 720 16 725 6 726 28 728 42 743 13 753 42 770 25 776 36 795 9 825 30 841 38 842 31 856 36 801 33 874 2 889 36 41 927 1 932 4 933 34 974 2 1095 கட்டுரை 1099 கட்டுரை 1108 கட்டுரை 1115 3 1119 7 1121 8 1135 1 1146 38 1164 10 1180 12 1187 9 பிறை நிருத்தம்‌ பிழை பலம்‌ செய்கிறார்கள்‌ சங்தியான யோக்கியமில்லாவர்கள்‌ உச்தேசிதீது அவசியன்‌ எப்படியனில்‌ தயது இதில்‌ மோகம்‌ வருதையும்‌ பது மாதிரியான எனபதாகும்‌ ஏற்டடும்‌ சொல்லை மலைடோல கிளர்சிக்காரர்கள்‌ பார்ட்பனருக்கும்‌ அல்வாரத்தோடு டாமர ஏற்படுத்தட்பட்ட வகுப்பவாரி கொடுட்பதையே 20 14, ¢ நான்‌? 15. ஆத்திகம்‌-நாதீதிகம்‌ 16. நாத்திகம்‌ அவிவேகமான சூதீதிரர்களக புத்தகதீதிலிருந்து குருநாதளாவானா 1 வாழக்கை சகாப்பத்திற்கு சரதியார்‌. கெய்யப்படுகின்‌றன திருத்தம்‌ பலன்‌ செய்கிறார்கள்‌ சங்கதியான யோக்கியமில்லா தவர்கள்‌ உத்தேசித்து அவசியம்‌ எப்படியெனில்‌ யோகம்‌ வருவதையும்‌. புது மாதிரியான என்பதாகும்‌. ஏற்படும்‌ தொல்லை மலைபோல கிளர்ச்சிக்காரர்கள்‌ பார்ப்பனருக்கும்‌ அஸ்திவாரத்தோடு பாமர ஏற்படுத்தப்பட்ட வகுப்புவாரி கொடுப்பதையே 2 13. ¢ நான்‌? 14. ஆதீதிகம்‌-நாதீதிகம்‌ 15. நாத்திகம்‌ அதிவேகமான சூதீதிரர்களாக மறுத்தலும்‌ பகுதீதறிவும்‌ புத்தகதீதிலிருந்து குருநாதராவானா § வாழ்க்கை சகாப்தத்திற்கு சாதியார்‌ செய்யப்படுகின்றன www.thamizham.net - Free £ book 14௦ 3031 என்ற www.thamizham.net - Free E book 14௦ 3031 _