← Home Periyar Archive

Thoughts of Periyar E.V.R. — Vol. 2, Part 2

Anaimuthu's Periyar Collection
பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் Thoughts of Periyar E.V.R. போன்:0422 - 2572635 செல்: 9362970121 பொறியாளர் கு.ம. சுப்பிரமணியன் பி.ஈ., எம்.பி.ஏ., எஃப். ஐ.ஐ. (மருத நாடன்) தலைமைப் பொறியாளர் மி.வா. (ஓய்வு) தலைவர்: சிந்தனையாளர் கழகம் தமிழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அமைப்பாளர்: தொழில் நுட்ப வல்லுநர் குழுமம் 18/127, அண்ணாநகர், ஆறுமுகம் லேআउট், பூளைமேடு (அஞ்சல்), கோயமுத்தூர் - 641 004. இன்று கோவையில் பொறியாளர் கு.ம.சுப்பிரமணியம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவர் மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் திரு வே ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும் பெரியாரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு ஆகும். பெரியாரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும் இந்த நூல் போற்றப்படுகிறது. பொறியாளர் கு.ம.சுப்பிரமணியம் எழுதிய கவிதை நூலை இணையத்தில் வலையேற்றுவதற்காக அவரைச் சந்தித்தபோது பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற நூலைப்பற்றி அவரிடம் பேசினேன். அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர் விளக்கினார். நூல் வெளியீட்டிற்காகப் பட்டபாடுகள் என் கண்முன் நிழலாடியது. அவர் காட்டிய தந்தை பெரியாரின் உருவம் என் முன் நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத் தன்வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்த அவரது உறுதி தெரிந்தது. பெரியார் ஈ வெ ரா சிந்தனைகள் தொகுப்பினை இணையத்தில் வலையேற்றினால் உலகமக்கள் வலைஇறக்கிப் படித்து மகிழ்வார்களே என்று சொன்ன பொழுது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர் கழகத்தின் தலைவர் திரு. கு.ம. சுப்பிரமணியம் அவர்கள் மகிழ்வோடு தன் கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப் படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார். இணையத்தில் வெளியிடுங்கள், அய்யாவின் கருத்துகள் உலகம் முழுவதும் பரவட்டும் என்று அவர் கொடுத்தபோது நான் பெருமகிழ்வு அடைந்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது தாராபுரம் நூலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாகப் படித்து நெஞ்சில் பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான் படவடிவக் கோப்பாக்கும் வாய்ப்பு கிடைத்தது கண்டு நெஞ்சு நெகிழ்ந்தேன். ஆனைமுத்து அய்யா அவர்கள் பெருமுயற்சியில் திரட்டிச் சேகரித்த பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என்ற இந்த மூன்று தொகுதிகளும் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மக்களுக்கும் இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும் என்று நம்புகிறேன். பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் (பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்) இரண்டாம் தொகுதி பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து வெளியீடு:சிந்தனையாளர் கழகம் தெப்பக்குளம் திருச்சிராப்பள்ளி-2 THOUGHTS OF PERIYAR E. V. R. (Speeches and Writings of Periyar E. V. Ramasami) VOLUME II Compiled and Edited by V. ANAIMUTHU Published by THINKERS' FORUM Teppakulam Tiruchirappalli-2 Thoughts of Periyar E. V. R—Volume II First Edition, Published on 1-7-1974 All rights reserved Kabeer Printing Works, Madras—600003 பகுதி - III வரும்புரிமை 1. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வகுப்புவாரி உரிமைபற்றிக் கொஞ்ச காலத்திற்கு முன்பு நமது 16-8-1925குடி அரசுஇதழில்சித்திர புத்திரன் எழுதிய ஒரு கட்டுரையை வாசகர்கள் பார்த்திருக்கலாம். இன்று நடக்கப்போகும் காஞ்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் வருகிறதாயத் தெரிகிற படி, அதன் அவசியத்தைப்பற்றி வாசகர்கள் மறுபடியும் அறியுமாறு சில வாக்கியங்கள் எழுதுகின்றோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்த நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத் தாழ்வின்றி சமமாய் அடையவேண்டியதென்பதுதான். இதை அரசாங்கத்தாரும் குடிமக்களுக்குச் சரியாய் வழங்குவதாய் 1840-ம் வருடத்திலேயே ஒப்புக்கொண்டு (போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125 மூலமாம்) வெளியிட்டுமிருக்கிறார்கள். ஆதலால், இந்தியர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் ஏற்பட்டதன் பிறகா, சீர்திருத்தங்கள் ஏற்பட்டதன் பிறகோ, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற பேச்சு பிறந்ததல்ல. ஆனால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டால் யாருடைய செல்வாக்கும், போகங்களும், ஆதிக்கங்களும் குறைந்துவிடுமோ, அவர்கள் வசமே அரசாங்கத்தின் ஆதிக்கமிருந்ததால் அவர்களே அனுபவித்துக்கொண்டே வந்ததனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது சர்க்கார் உத்கரவளவிலும், காகித அளவிலும் நின்றுபோய்விட்டது. அதன் பலனாய் பிரிவுகளும், வேற்றுமைகளும், துவேஷங்களும், தந்திரங்களும், பகைமைகளும் வளர்ந்துகொண்டே வந்து, இப்போது அவைகள் பலனளிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்பித்து இருக்கும் முறையைப் பார்த்தால் இதனுடைய முடிவு என்னவாகுமோ என்று எண்ணுகிறபோது பயமாகவே இருக்கிறது. இந்தியா ஒழிந்த மற்ற நாடுகளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிக அவசியம் இல்லாதபோதிலும் சிற்சில இடங்களில் தொகுதிகள் பேராலும், வகுப்புக்களின் பேராலும் இருந்துகொண்டுதான் வருகிறது. குடியேற்ற நாடுகளிலும் இவ்வழக்கம் இருந்துகொண்டுதான் வருகிறது. நமது நாட்டில் சிலர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்தால் ஜனங்களைப் பிரிக்கிவிடும் என்று சொல்லுறார்கள். நமது நாட்டில் முகமதியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டதின் பிறகு என்ன பிரிவினை புதியதாய் ஏற்பட்டுப்போய்விட்டது?பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 150 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் தீண்டாதாராகிய ஏழு கோடி மக்களுக்கு இராஜீய வாழ்வில் சுதந்திரம் பெற யோக்கியதை இல்லை யென்றுதானே சொல்லவேண்டி இருக்கிறது. அதன் பலனாய் அவர்கள் அத்தனை பேரும் அரசாங்கத்தையே நதிக்கொண்டிருக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. பிராமணரல்லாதார் என்னும் 24 கோடி இந்துக்கள் இராஜீய வாழ்வில் சம உரிமை பெறுவதற்கில்லாமல், பிற்போக்கான வகுப்பில் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தாரையும், பிராமணர்களையும் நதிக்கொண்டுதானே இருக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.இதற்குக் காரணம் என்ன? பிறவியிலேயே அவர்களுக்கு இவ்வுரிமையைப் பெற யோக்கியதை இல்லாததா?அல்லது, அவர்கள் இவ்வுரிமை பெறவொட்டாமல் உயர் பதவியிலிருக்கிறவர்கள் தங்கள் செல்வாக்கால் கொடுமைப்படுத்தி முன்னேறவொட்டாமல் அடக்கிவைத்திருப்பதா? குறைந்தது 50 வருடங்களுக்கு முன்பரவது பிராமணரல்லாதாருக்கும், தீண்டாதாருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் இன்றைய தினம் இவர்களிருவரின் நிலைமையும் இப்படியிருக்குமா? ஜீமான்கனான பி. என். சர்மாவுக்கும், சி. பி. இராமசாமி அய்যருக்கும் கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஜீமான்களான எம். சி. இராஜாவுக்கும், ஆர். வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்க மாட்டார்களா? சி. பி. இராமசாமி அய்யர் அவர்கள் இருக்கும் உத்தியோகத்தில் ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் இருந்தால் பாலக்காடு தெருவில் நடக்க 144 ஏற்பட்டிருக்குமா?கோயிலுக்குப் போனதறியாகத் தண்டனை அடைந்திருக்க முடியுமா? என்ன காரணத்தால் இவர்களுக்கு அந்த உத்தியோகம் கிடைக்காமல் போய்விட்டது? யோக்கியதை இல்லாததாலா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததாலா? ஜনாப் சர், முகமது அபிபுல்லா சாயபுக்கும், டாக்டர் முகமது உஸ்மான் சாயபு அவர்களுக்கும் 5000, 6000 சம்பளம் கிடைக்கூடிய பதவிகள் எப்படிக் கிடைத்தது? இப்பொழுதுதான் அந்த ஸ்தானத்திற்கு அவர்கள் யோக்கியதை உடையவர்களாகிவிட்டார்கள் என்கிற காரணத்தாலா?வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையின் வாசனையினாலா? இவற்றைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்தால், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்ட வகுப்பார்கன் என்று கருக்கப்பட்டவர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படிச் சமத்துவம் ஏற்படும் என்பதை அறிவார்கள். இப்போது பிற்பட்ட வகுப்பார் என்று அழைக்கிற வகுப்பாரெல்லாம், பிரிட்டிஷ் நம் நாட்டுக்கு வரும் போது பிற்பட்ட வகுப்பாராகவா இருந்தார்கள்? பல பிராமணர்கள் அரசாங்கத்திற்கு அனுகூலமாயிருந்ததாலும் மற்றவர்கள் அப்படியில்லாததாலும் அரசாங்கத்தார் பிராமணர்களுக்கே சகல சவுகரியமும் உரிமையும் கொடுத்ததனால் பிராமணர்கள் முற்பட்ட வகுப்பாராகவும் பிராமணரல்லாதவர்கள் பிற்பட்ட வகுப்பாரளாகவும் ஏற்பட்டுப் போய்விட்டது. இந்தப் பிற்பட்ட வகுப்பார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் வேறு எந்த வழியில் முற்பட்டவர்கள் ஆககூடும்? இப்போது அவர்களுக்குப் புத்தி இல்லையா? சக்திஇல்லையா? கல்வியில்லையா? ஏன் தங்கள் தொகைக்குத் தகுந்த உரிமை அடையர் திருக்கிறார்கள்?இந்தியர்கள் அனக சாதியார்கள்நாள் போகப்போக உரிமை வளர்ந்துகொண்டே போகும்;பிறகு எத்தனை பேருக்குக் கொடுப்பது?என்று சிலர் பேசுவார்கள். ஆனால், தற்காலம் அரசாங்கத்தில் தென்னாட்டில் ஐரோப்பியர் ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர், முகமதியர், பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் என எட்டு வமையாயத்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர், முகமதியர் இவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தாய்விட்டது. இவர் நீங்கிய மற்றவர்களான பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் என மூன்று வகுப்பாரையும் முகமதியரல்லாதார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமலிருக்கிறது. இம்மூன்று வகுப்பாருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு, மேலும் உள் வகுப்புக்கள் ஏற்படுமே என்ற பயமிருக்குமானால் அதற்கும் நாம் தயாராயிருக்கவேண்டியதுதான். உத்தியோகங்களுக்குப் பெருத்த சம்பளங்கள் கொடுப்பகை நிறத்திக் கொண்டோமேயானால் எத்தனை வகுப்புக்களுக்கு வேண்டுமானாலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதில் நமக்குக் கஷ்டம் ஏற்படாது. மேல் நாடுகளில் பார்லிமெண்ட் முதலிய சபைகளுக்கு 500, 1000 என்கிற கணக்குல்ள மெம்பர்கள் இருந்து காரியம் நடத்தவில்லையா? அது செய்வது நமக்குக் கஷ்டமே இருக்காது. சண்டை வருவதெல்லாம் பெரும் சம்பளத்தை உத்தேசித்துத்தானே?சம்பளமில்லாத அதிகாரத்தை அனேகமாய் எல்லோரும் விரும்பமாட்டார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளமாட்டார்கள். ஒருவரைக் கெடுக்க ஒருவர் தந்திரங்கள் செய்யமாட்டார்கள். தேசம் நம்முடையது என்கிற எண்ணமும் தேசத்தின் பொது நலத்திற்கு எல்லோரும் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்ற எண்ணமும் தானாகவே ஏற்படும். இப்போது ஜனங்களுக்கு இருக்கும் வேற்றுமைகள் ஒழியும்,ஒருவரைவிட்டு ஒருவரைக் கொடுமைப்படுத்தச் சொல்லமுடியாது. ஆதலால், தேச நலத்திலும், சமூக நலத்திலும் அக்கமைபுள்ளவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுகிறோம். [குடிஅரசு - அறிக்கை - 22-11-1925] 2. ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி காஞ்சிபுரம் மாநாடு நடந்து 2 வாரங்களாகிவிட்டது. மாநாட்டின் சம்பவங்களும் பழைய கதைகளாகி விட்டன. ஆனால், அம் மாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுகாங்கிரஸ் ராஜீய நாடகத்தில் பிராமணரல்லாதார்களின் சார்பாக, ஜீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர் ஆபி இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும் அடிக்கடி விசேஷமாயத் தோன்றும். இம் மூவர்கள்தான் காங்கிரசில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரசைப் பிராமணரல்லாதார் ஆமோதிகிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். அது மாத்திரமல்லாமல், காங்கிரஸ் என்பது பிராமண ராஜ்ய ஸ்தாபிக்கத்துக் சாதனம் என்றும், சுயஆட்சி என்பது பிராமண ஆட்சிதான் என்றும் கருதிய பெரியாரகளான டாக்டர் டி. எம். நாயர், ஸர். பி. தியாகராயச் செட்டியார் போன்ற தேசாபிமான மும், அனுபவ ஞ்ஞமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரசை ஒதுக்கி, தென்னிந்திய மக்கள் நலவுரிமைச் சங்கம் என்பதாக ஓர் சங்கத்தைக் கண்டு, அதன்மூலமாய் பிராமணரல்லாதார் நன்மைக்கென ஜஸ்டிஸ திராவிடன்‌ என்கிற இரண்டு பத்திரிகை களையும்‌ தோற்றி, தீவிரப்‌ பிரச்சாரங்களைச்‌ செய்து, அதுகாலையில்‌ பிராமண/கள்‌ வயப்‌ பட்டுக்கிடந்த பெருவாரியான பல அதிகாரங்களையும்‌, பதவிகளையும்‌ பிராமணரல்லாதார்‌ தங்கள்‌ உரிமைக்குதி தகுந்த அளவு அடையவேண்டும்‌ எனக்‌ கருதிப்‌ பிரச்சாரமும்‌ தொடங்கினார்கள்‌. அ9சமயத்தில்‌, மேற்படி சங்கமம்‌ பிரச சாரங்களு%, தென்னிந்திய மக்கள்‌ பிரதிநிதிக்‌ துவம்‌ வாய்ந்த தல்லவென்றும்‌, ஏதோ சில] அரசாங்கத்தின்‌ வயப்பட்டு அவர்கள்‌ தூண்டு கோலால்‌ நடைபெறுகிற சங்கமென்றும்‌, இதில்‌ பிராமணரல்லாதார்‌ கலந்து கொள்ளக்கூடா தென்றும்‌, தென்னிந்திய பிரரமணரல்லாத மக்களுக்கு நன்மை செய்யவும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீ துவ உரி கம அளிக்கவும்‌ சென்னை மாகாணச்‌ சங்‌ மென்பதாக ஒரு சங்கத்தைத்‌ தோற்றுவிதீதிருக்கி றாம்‌ ) அதில்‌ பிராமணர்கள்‌ யாரும்‌ கலப்பில்ஸை, அதன்‌ தத்துவமே காங்கிரஸ்‌ மூலமாகச்‌ சுயராஜ்யம்‌ பெறுவதும்‌, பிராமணரல்லா தாருக்கு வசுப்புவாரிப்‌ பிரதி நிதிக்துவம்‌ பெறுவதும்தான்‌ முக்கியமானது என்றும்‌. அதின்‌ அ ராசனா தபதி திவான்‌ பகதூர்‌ பி. கேசவப்‌ பிள்ளையாகவும்‌, உப அக்ராசனாதிபதி னீமான்‌ ஈ, வெ. இராமசாமி நாயக்கர்‌ முதலியோராகவும்‌, காரியதரிசி ஜரீமான்‌ டாக்டர்‌ பி. வரதராஜுலு நாயுடு அவர்‌ களாகவும்‌, கிதற்குப்‌ பிரசாரப்‌ பத்திரிமைகள்‌ ¢ இந்தியன்‌ பேட்ரியட்‌? என்ற ஆங்‌ லப்‌ பத்திரிகையையு3்‌ *தேரபக்தன்‌! என்ற தமிந்ப்‌ பத்திரிகையையும்‌, கிவற்றிற்கு திவான்பகதூர்‌ சி. கருணாகர மேனன்‌, திரு. வி. கலியாண௬ந்தர முதலியார்‌ ஆகியவர்‌ கன்‌ முறைய பத்திரிகை ஆர்ரியர்களாகவும்‌ இருந்து நடத்தி வரப்பட்டதோடு, இதன்‌: பலனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குப்‌ பிராமணரல்லாத பாமர ஜஅங்களிடத்தில்‌ செல்வாக்கில்லாமல்‌ செய்தகுடடை சாங்கி) ஸ்‌ நான்‌ தேச விடுதலைக்குச்‌ சாஜனமென்றும்‌, சென்னை மாகாணச்‌ சங்கம்தான்‌ பி)ரமணரல்லாதாரின்‌ நன்மையைக்‌ கருதககூடியதென்றும்‌ சென்னை மாகாண தீதிலுள்ள பிராமணரல்லாத மேற்கண்ட முக்கியஸ் ர்‌ டன்தாம்‌ தென்னாட்டுப்‌ பிராமணரல்லாதார்‌ பி) திதிதிகளென்றும்‌ சன்னது கிடைத்தாய்‌ விட்டது. www.thamizham.net - Free £ book 14௦ 3026 904 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இதோடு மாதீதிரமச்லாமல்‌, தென்னிந்திய நலஉரிமைசீ சங்கதீதாரும்‌ சென்னை மாகாணச்‌ சங்கத்தாரும்‌ போட்ட வருப்புவாரீப்‌ பிரதிநிதித்துவக்‌ கூசீசல்களினால்‌, கிறிஸ்‌ தவர்‌, முகமதியர்‌, ஆங்கிலோ இந்தியர்‌ முதலிய வ௫ுப்பாருக்கு வருட்புவாரிப்‌ Srd நிதிக்‌ துவமும்‌, விவசாயிகள்‌, லேவாதேவிகீ சாரர்‌, இந்திய வியாபாரிகள்‌, அய்ரோட்பிய வியாபாரிகள்‌ முகலிய தொழிலாளிகளுக்குத்‌ தொழிஃவாரிப்‌ பி திநிதித்துவமும்‌, தேர்தல்‌ களில்‌ கொடுக்கப்பட்ட3தாடஎ்லாமல்‌, பிராமணரல்லாதாருக்கெனப்‌ பல ஸ்தானங்களையும்‌ ஒதுக்கி வைக்கப்பட அரசாங்கத்தில்‌ ஏற்பாடு செய்பப்பட்டது. இது இப்படி இருச்க, ராஜீய சபைகளான காங்கிரஸ்‌ முதலிய சபைகளிலும்‌ முகமதியர்‌, கிறிஸ்தவர்‌ முதலீயோருகீகு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுக்கவேண்டு மென்று அடர்‌ களோடு ஒப்பந்தமும்‌ செய்த கொள்ளப்பட்டது. இதுமாச்திரமேயல்லாமல்‌ காங்கிரஸ்‌ ஸ்தாபனங்களிலும்‌, உதாரணமாக; எல்லா இந்திய காங்கிரஸ்‌ கமிட்டியிலும்‌ முகமதியர்‌ களுக்கு இித்கனை ஸ்தானம்‌ ; கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்சானம்‌ ] தீண்டா தாருக்கு கித்கனை ஸ்தானம்‌ ; இவை நீங்கிய மற்றவர்களுக்கு இத்தனை ஸ்தானம்‌ என மாகாண வாரியாக ஒதுக்கிவைக்கப்பட்டு, அந்தப்படி இப்‌ பாமுது காங்‌ ிரசிலும்‌ அமுலில்‌ நடந்து வருகிறது. கவ்வளவிநந்தும்‌ மேலும்‌ மேலும்‌ இவை போதாதென்றும்‌ இன்னும்‌ சில ஸ்தாபனங்களிலும்‌ வகப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்படவேண்டுமென்றும்‌ ராஜீய காங்கிரசிலும்‌, கான்பரன்ஸ்களிலும்‌ கிளர்ச்சிகளும்‌, முயற்சிகளும்‌ செய்துகொண்டே வரப்‌ பட்டிருக்கிறதுஃ உதாரணமாக, காகீகிநாடா காங்கிரசில்‌ இனமான தாஸ்‌. அவர்களால்‌ கொண்டுவரப்‌ பட்டு ஜனீபான்‌ நராஜகோடாலாசீசாரியாரால்‌ ஆமோதிக்கப்பட்ட ¢ கல்கத்தா பேகீடி னாலும்‌, (அது தோற்றத்திற்கும்‌ ஒரு காரணம்‌ உண்டு) ஆனால்‌ இரகசியம்‌; டாக்டர்‌ அன்ஸாரி, லாலா லஜபதிராய்‌ முதலியோர்களை இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமைக்கு வழிகாண ஓர்‌ ஏற்பாடு கண்டுபிடிக்கும்படி காக்கிநாடா காங்கிரசில்‌ ஏற்படுத்திய கமிட்டியினாலும்‌, அதன்‌ குறிப்புகளினாலும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. இன்னமும்‌ தமிழ்நாட்டில்‌ நடந்த மாகாண கான்பரஸ்களின்‌ போதெல்லாம்‌ நடந்த பிராமணரல்லாத தனிக்‌ கூட்டங்களாலும்‌ நன்றாய்‌ விளக்கலாம்‌. அதாவது . - 1919-ம்‌ வருடத்தில்‌ திருசீசியில்‌ நடைபெற்ற 25-வது ராஜீய மாகாண கான்பரன்சின்‌. போது, அதே கொட்டகையில்‌ ஜீமான்‌ சோமசுந்தர பாரதியாரின்‌ அக்கிராசணத்தின்‌ கீழ்‌ இதைப்பற்றீப்‌ பேசி, ஈரோட்டில்‌ சென்னை மாகாணச்‌ சங்கத்தை நடத்கவேண்டுமென்றும்‌, அதில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவதி தீர்மானத்தை வலியுறுத்த வேண்டுமென்றும்‌ தீர்மா னிக்கப்பட்டு, அதுபோலவே தீர்மானமும்‌ நிறை 3வற்றியுமி ருக்கிறது. 1920-ம்‌ வருடம்‌ திருநெல்வேலியில்‌ நடநீத 26-வது ராஜீய மாகாண கான்பரன்சின்‌ போது பிரதிநிதிகள்‌ சாப்பாட்டு விடுதீயில்‌ ஜீமான்‌ m வி. இராமசாமி நாயக்கருடைய அக்கிராசன தீதின்‌ கீழ்‌ ¢ பிராமணரல்லாதார்‌ கூட்டம்‌ ? ஒன்று கூடி, *சட்டசபைசள்‌ முதலிய தேர்தல்‌ ஸ்தானங்களுக்கு வகுப்புவாரீப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்படுத்‌.௮வதோடு, அரசாங்க உத்தியோகத்திலும்‌ வகுப்பு ஜனசங் கைக்குத்‌ தகுந்தபடி வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுக்க வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்‌ என்கிற தீர்மானத்தைக்‌ காலஞ்‌ சென்ற ஜரீமான்‌ சோமசுந்தரம்‌ பிள்ளை, ஜரீமான் கள்‌ வி. ஓ. சிதம்பரம்‌ பின்னை, தண்டபாணி பிள்ளை மற்றும்‌ திருதெல்வேலி, ஜ8ரீவைகுண்டம்‌ முதலிய ஸ்தலங்களிலுள்ள சில வக்கீல்களும்‌ ஆகச்‌ சேர்ந்து, உடனே வீஷயாலோசனைக்‌ கமிட்டிக்கு அனுப்பிய அதி தீர்மானத்தை மான்‌ ஈடவி. இராமசாமி நாயக்கர்‌ பிரேரேபிகக, ஹிீமான்கள்‌ வி. ஓ. சீ.தம்பரம்‌ பிள்ளை, தண்டபாணி' பின்ளை முதலி£யோர்கள்‌ ஆமோதிக்க, காலஞ்‌ சென்ற ஜீமான்‌ எஸ்‌. கஸ்தூரி ரெங்கய்யர்‌ எழுத்து-வீதாசாரம்‌ (Percentage) என்கிற www.thamizham.net - Free £ book 14௦ 3026 வகுப்புரிமை 905 வார்தீதைகீகுப்‌ பதிலாக ' போதுமான ? என்னும்‌ அர்தீதத்தைக்‌ கொடுகீகதீதகுநீத (Ade- quately) * அடிகுவேட்லி ! என்கிற பதத்தைப்‌ போட்டுக்‌ கொள்ளும்படி ஒரு திருத்தப்‌ பிரர3ரபணை கொண்டுவந்தார்‌. இந்த * அடிகுவேட்லி! என்ற பததீதிற்கு என்ன பொருள்‌ என்று னீமான்‌ இராமசாமி நாயக்கர்‌ அம்‌ மாநாட்டுக்கு அக்கிராசனாதிபதியா. யிநந்த னீமான்‌ எஸ்‌. ஜனீனிவாசய்யங்காரவர்களைக்‌ கேட்க, அவர்‌ இரண்டும்‌ ஒரே அர்தீதந்தான்‌ $ ஆனால்‌ பெர்சன்டேஜ்‌ என்பதைவிட அடிகுவேட்லி என்பது நல்ல. வார்த்தையென்று சொல்லித்‌ தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்‌. இது சமயம்‌ ஜீமான்‌ இிராஜககாபாலாச்சாரியார்‌ முதலியோர்களும்‌ அக்கூட்டத்தில்‌ ஆஜராகித்தானிருந்தார்கள்‌, அதோடு, இராஜாங்கக்‌ கல்வித்‌ துறைகளில்‌ சமஸ்கிருதகீ கல்விப்‌ பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும்‌, செய்முறையும்‌ தமிழ்க்‌ கல்விக்கும்‌ இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம்‌ ஜீமான்‌ ' ராமசாமி நாயக்கரால்‌ பிரேரேபிக்கப்பட்டு, ஜரீமான்‌ வி. 9. சிதம்பரம்‌ பிள்ளையால்‌ ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால்‌, விஷயாலோசனைக்‌ கமிட்டிக்‌ கூட்டம்‌ முடிந்ததும்‌ வெளியில்‌ வந்து னீமான்‌ ஈட, வே. இராமசாமி நாயக்கர்‌ சில ஆங்கிலம்‌ படித்தவர்களைக்கண்டு ¢ அடிகுவேட்லி? என்பதற்கும்‌ 4 பெர்சன்டேஜ்‌! என்பதற்கும்‌ என்ன வித்தியாசம்‌ என்று கேட்டபோது, அவர்கன்‌ அடிகுவேட்லி என்பது &ருபொருன்‌ கொண்டதென்றும்‌ அதாவது, * யோகீகியதைக்குதீ தகுந்த! என்ற பொருள்கூடக்‌ கொள்ளலாமென்றும்‌ பெர்சன்டேஜ்‌ என்கிற வர்த்தைதான்‌ மிகத்‌ தெளிவான து என்றும்‌ சொன்னார்கள்‌. பிறகு மாநாட்டில்‌ வத்தீர்மானம்‌ வரும்போது பெர்சன்டேஜ்‌ என்கிற வார்‌ தீதையையே போட்டுக்கொள்ள வேண்டுமென்று, ஹீமான்கன்‌ நாயக்கரும்‌, தண்டபாணி பின்னையும்‌ அக்கிராசனரீ னீமான்‌ னீனிவாசய்யங்காரிடம்‌ சொன்னார்கள்‌. அவரும்‌ அப்படியே ஆகட்டும்‌ என்று ஒப்புக்கொண்டார்‌. கடைசியாக மாநாட்டில்‌ இது தவிர மற்ற தீர்மானங்கள்‌ முடிந்தவுடன்‌ அக்ராசனாதிபதி எழுந்து திடீ ரென்று தமது முடிவுரையை ஆரம்பிதீதுவிட்டார்‌. @fordr தண்டபாணி பிள்ளை தன்‌: னுடைய வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ தீர்மானம்‌ என்ன ஆயிற்றென்று அக்கிராசனரைக்‌ கூட்டத்தில்‌ கேட்டார்‌. அக்கிராசனர்‌ ஜீமான்‌ ஜரீனிவாசய்யங்கார்‌ அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமானதால்‌ அதை ஒழுங்கு தவறானதென்று தீர்மானித்து விட்டதாகச்‌ சொல்லிவிட்டார்‌. உடனே ஜீமான்‌ தண்டபாணி பிள்ளை எழுந்து விஷயாலோசனைக்‌ கமிட்டியில்‌ நிறைவேற்றப்பட்ட தன்‌ தீர்மானம்‌ இங்கு எப்படி ஒழுங்குத்‌ தவறு என்று கேட்டார்‌. அப்போது அங்கிருந்த பிராமணர்கள்‌ னீமான்‌ பிள்ளையை உட்காரும்படி கூச்சல்போட்டு அடக்கி விட்டார்கள்‌. கடைசியாக முடிவுரையில்‌ னீமான்‌ அய்யங்கார்‌ காஞ்சி மாநாட்டில்‌ னீமான்‌ முதலியாரைக்‌ கொண்டு சமாதானம்‌ சொல்லச்‌ சொன்னது போல்‌ வருத தப்படுவதாகப்‌ பொய்‌ வேஷம்‌ போட்டு மறைத்து விட்டார்‌. பின்னர்‌ 1921-ம்‌ வருஷம்‌ தஞ்சையில்‌ நடந்த 27-வது தமிழ்‌ மாகாண மாநாட்டில்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா பிரநிநிதிகள்‌ கொட்டகையில்‌ ஜமான்‌ சர்க்கரைச்‌ செட்டியார்‌ அக்கி ராசனத்தில்‌ தமிழ்நாடு பிராமணரல்லாதார்‌ கூட்டம்‌ ஒன்‌ து கூடி, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்து வத்தைப்‌ பற்றிப்‌ பேசி, னீமான்கள்‌ சென்னை சிங்காரவேலு செட்டியார்‌, கலியாண சுந்தர முதலியார்‌, சர்க்கரைச்‌ செட்டியார்‌, வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர்‌ ஆகியவர்கள்‌. அடங்கிய கமிட்டி ஒன்னு நியமிதீது, வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீதுவத்திற்கு வேண்டிய வேலை செய்யவும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குப்‌ போட்டியாய்‌ ஆரம்பித்த சென்னை மாகாண மாநாட்டைக்‌ கூட்டவும்‌ தீர்மானிக்கப்பட்ட து 1929ஆம்‌ வருஷம்‌ திருப்பூரில்‌ கூடிய 28-வது மாகாண மாநாட்டிலும்‌ நாடார்கள்‌ முதலியோர்க்கு ஆலயப்‌ பிரவேசம்‌ கொடுக்க வண்டும்‌ என்றும்‌, அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும்‌ பழைய ஆசார வழக்கங்களையும்‌ மாற்ற3வண்டும்‌ என்றும்‌ ஜரீமான்‌: ஈ, வெ. இராமசாமி நாயக்கரால்‌ பிரேரேபிக்கஃப்பட்டு விஷயாலோசனைக்‌ கூட்டத்தில்‌ இர்மானமான தை வெவி, மாநாட்டில்‌ பிரே ரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள்‌ செய்தும்‌ 1686—114 ‘ 906 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ கடைசியாக பெரிய தகராறின்‌ பேரில்‌ ஜரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌ பிரேரேபிக்க ஈ. வெ. இராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதன் பேரில் ஹரீமான்கள் எஸ். சதீதிய மூர்ந்தி, மதுரை ஏ. வைதீயநாய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆட்சேபித்து கூச்சல்களையும், கலகத்தையும் உண்டாக்கி, எப்படியோ அத் தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல், அதன் ஜீவநாடியை எடுத்துவிட்டு, ஒரு சொத்த தீர்மானத்தை நிறைவேற்றினார். அன்று சமயம் ஹரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு"மதில்மேல் பூனை போலவே நடந்து கொண்டார்"என்கிற பழியும் வந்ததுஃ 1923-ம் வருஷத்திய மதுரை கிராமநாதபுரம் மாநாட்டிலும் பிராமணர்-பிராமணர் அல்லாதார் தகராறு ஏற்பட்டது. ஐமான் சோமக நீதர பாரதியார் இதில் சிக்கிக்கொண்டு வெகு பாடுபட்டார். பிறகு 1923-ம் வருஷத்தில் திருச்சியில் டாக்டர் இராஜன் வீட்டில் கூட்டிய மாகாண காங்கிரஸ் கமிட்டி கூட்ட வில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஜமான் பி. வரதராஜுலு நாயுடு ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அத் தீர்மானத்தை அடுத்த மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று ஜமான் சி. கிராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய் தள்ளி வைத்துவிட்டார். 1929-ம் வருஷம் சேலத்தில் கூடிய 29-வது தமிழ் மாகாண மாநாட்டு விஷய லோசனைக் கமிட்டியில் ஜமான் வரதராஜுலு நாயுடு அந்த சமயம் இல்லா விட்டாலும் அவருக்காக அவர் நண்பர்கள் ஜமான்கள் தண்டபாணி பிள்ளையோ, அல்லது பவানி சிங்கோ கத த தீர்மானத்தைப் பிரேரேபித்தபோது ஜமான் சி. கிராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள்"இது சமயம் ஒத்துழையாமையே போய்விடும்போல் வருக்கிறது;டெல்லி மாநாடு தீர்ந்த பிறகு வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லி அதை நிறுத்தச் செய்து விட்டார்கள். பின்னர் கூடிய 1924-ம் வருடத்திய திருவண்ணாமலையில் கூடிய 30-வது தமிழ் மாகாண மாநாட்டில் அக்கிரাசனம் வகித்த ஜமான் ஈ. வெ. இராமசாமி நாயக்கருடைய அக்கிரাசனப் பிரசங்க வில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றி விசேஷமாய் சொல்லப்பட்டிருக்கிறது. பெல்காமில் கூடிய ராஜிய காங்கிரசின் போதும் பிராமணர் அல்லாதாருக்கெனத் தனி யாக ஒரு மாநாட்டைக்கூட்டி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றிப் பேசியதோடு ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றியும் தீர்மானம் செய்திருக்கிறது. அதே சமயம் மகாத்மாவினிடமும் வறை பற்றி விரிவாய் எடுத்துச்சொன்னதோடு ஜமான்கள் ஆர். கே. சண்முகம் செட்டியார், பி. வரதராஜுலு நாயுடு, ஈ. வெ. இராமசாமி நாயக்கர் முதலியவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றிச் சொல்லியும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் யோசித்துத் தக்கது செய்வதாய்ச் சொல்லியுமிருக்கிறார். இந்த வருஷம் தஞ்சையில் ஜமான் ஆதிநாராயண செட்டியார் உட்பட பிரதிநிதிகளாய் இருந்த தேசிய பிராமணர் அல்லாதார் மாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலி யுறுத்திக்கொ இருக்கிறது. இன்னும் எத்தனையோ விஷயங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சரித்திரத்தைப் பற்றியும் தலைவர்கள் என்று சொல்லப்படுவோரின் தந்திரம், சூழ்ச்சி, குட்டிக்‌ கரணம், குலத்தைக் கெந்க்கும் கோடரிக் காம்புத்தன்மை முதலியவற்றைப் பற்றியும் விரிவாய் எழுத்துச்சொல்ல அறுத்த சத்தர்பத் தை எதிர்யார்க்கிறாம். அல்லாமலும் பிராமணர் அல்லாதார் வகுப்பைச் சேர்த்த உண்மைத் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என் பதையும் அடுத்தாற் போல் எழுதலாம் என்று நினைக்கிறோம். [குடி அரசு - தலையங்கம் - 6-12-1925] www.thamizham.net - Free e-book 1403026 907 8. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏன்? அக்கிரাசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!"தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசிய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்பந்தமான சகல பதவிகளிலும், இந்து சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதவர், தீண்டாதார் என்போர் ஆகிய இம் மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனதொகையை அனுசரித்துப் பிரதிநிதி ஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாகாண மாநாட்டைக் கூட்டுக் கொள்வதோடு, இத் தீர்மானத்தை மாகாண மாநாடு மூலமாய் காங்கிரஸையும் வலியுறுத்தும்படி தீர்மானிக்கிறது" என்னும் தீர்மானத்தைப் பிரேரேபித்துப் பேசியதாவது:நாம் ஒவ்வொருவரும் சுயராஜ்யம் அடையப் பாடுபடுவதாய்ச் சொல்கிறோம். அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கின்றோம். சுயராஜ்யம் கிடைத்தால் அதுபொதுமக்கள் ராஜ்யமாய்இருக்கவேண்டாமா?நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால், சுயராஜ்யம் என்பது பிராமண ராஜ்யம்தான் என்னும் பயம், இப்பொழுது மக்களிடையே உண்டாகிவருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி புரிகிற இக் காலத்திலேயே மனிதர்களைத் தெருவில் நடக்க விடக் கூடாது, குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்க விடக்கூடாது என்னும் பல கொடுமைகள் நடைபெறுகிறபோது, ராஜ்य அதிகாரம் ஒரு வகுப்பார் கைக்கே வந்துவிடுமானால் இனி என்ன கொடுமைகள் செய்ய அஞ்சுவார்களென்று ஜனங்கள் பயப்படுகின்றார்கள். தேச விடுதலைக்குத் தியாகம் தேவையாய் இருந்த காலத்தில் புறமுதுகு காண்பித்து ஓடிப்போன ஆசாமிகள் எல்லாம், ஏதோ சிலர் செய்த தியாகத்தினால் ஏற்பட்ட பலனை அனுபவிக்க வெட்கமில்லாமல் முன்வந்து சூழ்ச்சிகள் செய்து பலன் அடைவதைப் பார்க்கின்றபோது இவர்களை எப்படி நம்பமுடியும்?"வெட்கங்கெட்டவன் சொந்தக்காரன்"என்பது பால் விவசாயத்தற்ற ஒரு கூட்டத்தார் தேசத்திலிருந்து கொண்டு, தேசத்தைப் பாழ் பண்ணிக்கொண்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். சாதுக்கனான ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட ஒரு பெரிய கூட்டம் மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதையும் பார்த்துவருகிறோம். இப்படி ஏன் இருக்கவேண்டும்?அந்தந்தக் கூட்டத்திற்குத் தகுந்த அளவு, அவரவர்களுக்கு அரசியல் முதலிய உரிமைகளை ஒதுக்கி விடுவோமேயானால், சாதுக்களெல்லாம் மிருகங்களாகவும் அமோக்கியர் களெல்லாம் சுவாமிகளாகவும் ஆகிவிடமுடியுமா?கட்டுதிட்ட அளவிற்சாததனால், கையில் வலுத்தவன் காரியம் என்பதுபோல, ஏமாற்றச் சக்தியுள்ளவனும், செல்வாக்கு உள்ளவனும் மேலே வந்துவிடுகிறான். இதனால் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையில்லாமலும், ஒற்றுமையிலாமலும், இவர்களை எப்படி ஏமாற்றலாம் என்பது ஒரு கூட்டத்தாருடைய ஜன்மக கூறாகவும், இவர்கள் தந்திரத்திலிருந்து எப்படித் தப்புவது என்பது மற்றக் கூட்டத்தாருடைய கவலையாகவும் போய்விகிறது. இந்த நிலைமை, அரசாட்சி புரிபவர்களுக்கு வெகு அனுகூலமாய் ஏற்பட்டுப் போய்விடுகிறது. அதாடு மாத்திரமல்லாமல், அரசாங்கத்தை நடத்துவிக்க வகுப்புகளுக்கு வகுப்பு போட்டிபோட்டுக்கொண்டு ஒற்றர்களாகவும், அடிமைகளாகவும் அரசாங்கத்தையே நாடுவதாய் ஆகிவிடுகிறது. இக் கணங்கள் நமது நாட்டைவிட்டு அகல வேண்டுமானால், ஒரு வகுப்புக்கு மற்றொரு வகுப்பு நம்பிக்கை ஏற்படும்படியும், ஒருவர் பாதிக்கையத்தில் மற்றொருவர் பிரவேசிக்காதபடியும் பந்தோபஸ்து ஏற்பட்டுப் பாக வேண்டும். அவ்வித பந்தோபஸ்துதான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது. நான் பிரேரேபித்திருக்கிற தீர்மானத்தில் இந்தத் தத்துவம்தான் அடங்கி இருக்கிறது. அது இப்பொழுது மாத்திரம் ஏற்பட்டதல்ல. நீண்ட நாளாகவே இக் கிளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டிருந்தாலும் எப்படி எப்படியோ அதை ஒரு வகுப்பார் கட்டுப்பாடாய்ச் சூழ்ச்சிகள் செய்து, சமயத்திற்கேற்றவாறு நடந்து, பாமர ஜனங்களை சுவாதீனப் படுத்திக்கொண்டு, வெளிக்கு தெரியாமல் அடக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆகையால், நீங்களெல்லோரும் நன்றாய் யோசித்துப் பார்க்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறன். [காஞ்சிபுரத்தில், 21-11-1925-ல் சொற்பொழிவு - குடிஅரசு - 6-12-1925] www.thamizham.net - Free e-book 1403026 908 9. வகுப்புவாரி உரிமை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி வலியுறுத்த ஆரம்பித்த பிறகு தமிழ்நாடு ராஜ்য உலகில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டதோடு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு அனுகூலமாய் இருக்கும் சில தேச பகுதிகளுக்குக் காங்கிரசில் செல்வாக்கு இல்லாமல் அடிப்பதோடு காங்கிரஸையே பிராமணமயமாக்க அவசியம் ஏற்பட்டதும், பிராமணர் அல்லாதாரில் யாருக்காவது காங்கிரஸில் பெயரைச் சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் பிராமணர்கள் தயவுபெற வேண்டியிருப்பதால் பிராமணர்களுக்குப் பயப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதும் நீயர்களுக்குத் தெரிந்த விஷயமே ஆகும். வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை ஒரு நாளும் பிராமணர்கள் ஓபட்புக்கொள்ளமாட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எங்கு ஏற்பட்டுப் போகுமோ என்கிற பயத்தால்தான் பிராமணர்கள் சர்க்காரைத் தாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பதும், ஒரு சர்க்கார் இவர்களுக்கு விரோதமாய் இருந்தால் வேறொரு சர்க்காரைத் தயார் செய்வதுமாய் இருந்தார்கள். அதற்குப் பயந்துகொண்டுவரும் சர்க்காரும், பிராமணர்களுக்குச் சுவாதீனமாய்ப் போய்விடுகிறார்கள். நம் நாடு ஏதாவது ஒரு காலத்தில்இயற்கைக்கு விரோதமாய் நம் நாட்டார்களாலேயே ஆளப்படுகிறது என்கிற யோக்கியதை அடையுமானால், அது கண்டிப்பாய் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டால்தான் முடியும் என்று வைரக்கல்லில் எழுதிவைப்போம். அது ஏற்படும்வரை இந்தியாவை இந்தியர் ஆட்சி புரிவதென்பதைத் தூரத் தள்ளி வைத்துவிட வேண்டியதுதான். நமது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பிராமணர்கள் மாত்திரம் விரோதிகளல்லர், அன்னிய அரசாங்கத்தார்ம் விரோதிகளே. ஏனென்றால், எவ்வளவுக்கெவ்வளவு நமக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவாய் இருக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அன்னிய ஆட்சியின் எல்லை நீண்டுகொண்டிருக்கும். நமக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்து, நாம் எல்லோரும் உதீயோக தகுதிக்கும் பதவிக்கும் சண்டை போட்டுக் கொள்ளாமல், அவரவர் களுக்குள்ளது அவரவர்கள் அடையும்படிசெய்து, ஒருவரை ஒருவர் தின்னாமல் செய்து விட்டால் பிறகு எல்லோரும் ஒற்றுமையாய்ப் போய்விடுவார்கள். இதனால் அன்னிய ஆட்சிக்கு ஆபத்து. ஆதலால், இந்தத் தத்துவம் எப்பொழுதும் அன்னிய அரசாங்கத்திற்கு விரோதமானது."பெருங்கூட்டத்தைச் சிறு கூட்டம் ஆளவேண்டுமானால், சிறு கூட்டத்தார் பெருங்கூட்டத்தை ஒருவருக்கொருவர் பொறாமையும் துவேஷமும் ஏற்படும்படிசெய்து, பிரிதுவை தள்ளி வைத்துக் கலகத்தை உண்டாகீக விட்டால் தாராளமாய் ஆளலாம்"என்று ஒரு பழமொழி உண்டு. அதுவே சர்க்காரின் நடவடிக்கை. அதுவே நமது பிராமணர் கவின் நடவடிக்கை. இதை நம்மில் பலர் அறிவதில்லை. அறிந்தாலும் எப்படிப் பிராமணர்களுக்கு நல்ல பணியாளாகலாம் என்பதில்தான் அதிகக் கவலை. ஆங்கில அரசாங்கத்தின் 150 வருடத்திற்கு மேற்பட்ட ஆட்சியின் பலனாய், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததின் பலனாய்ப் பிராமணர் அல்லாத வகுப்புகள் எவ்வளவு முற்போக்கு அடைந்து இருக்கிறது என்று பார்த்தால், உண்மை பிராமணர் அல்லாத இரத்தம் ஓடும் மனிதன் துடிக்காமல் இருக்க மாட்டான். நம் தென்னாட்டு அரசாட்சியில், பிராமணர் அல்லாதவர் நிலை எப்படி இருக்கிறது, பிராமணர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதுபற்றிக் கீழ்க்கண்ட கணக்குகளால் அறிந்துகொள்ளக் கோருகிறோம். நமது அரசாங்கத்தில் 35 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட உதীயோகங்களில், அதாவது வாசல் கூட்டுவது, மேஜை துடைப்பது, பங்கா இழுப்பது, அதிகாரிகளுக்குக் கைகால் அழுத்துவது முதலிய வேலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் 87,125 பேர்கள் இருக்கிறார்கள். பிராமணர்கள் 1810 பேர் மாத்திரமே இருக்கிறார்கள். இவர்களும் சம்பளம் குறைவாய் இருந்தாலும் தালுக்காய் மேலதிகாரிகளை ஏமாற்றி, மேலே கண்ட வேலைகள் பார்க்காமல் அதிகாரம் செலுத்திவருகிறார்கள். ரூ. 35-க்கு மேற்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் உள்ள உதீயோகத்தில் பிராமணர் அல்லாதவர் 7003 பேர்கள். பிராமணர்களோ 10,934 பேர்கள். இந்த இடத்திலே நம்மைவிடப் பிராமணர்கள் 4000 பேர்கள் அதிகமாகிவிட்டார்கள். ரூபாய் 100-க்கு மேற்பட்டு சுமார் 250 ரூ. வரை உதீயோகங்களில் பிராமணர்கள் 2679 பேரும், பிராமணர் அல்லாதவர் 1666 பேருமாய் இருந்தனர். இந்த இடத்தில் பிராமணர் அல்லாதாரைவிடப் பிராமணர்கள் 1000 பேர் அதிகமாய் இருக்கிறார்கள். 250 ரூபாய்க்கு மேற்பட்ட உதீயோகங்களில் பிராமணர்கள் 594; பிராமணர் அல்லாதவர் 280 பேர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றுக்கு இருமடங்குகளுக்கு மேல்‌ போய்விட்டார்கள்‌, கலெக்டர்‌ உத்தி யோகத்தில்‌ 11 பேர்‌ இந்தியர்கள்‌ வரப்பதில்‌, 9 பேர்‌ பார்ப்பனர்கள்‌, இந்த இடத்தில்‌ ஒன்றுக்கு அய்நீதாய்‌ விட்டார்கள்‌. ரிவின்யூபோர்‌ உல்‌ உள்ள ஒரு இந்திய மெம்பர்‌ உத்தி யோகத்தில்‌ பிராமணர்‌ தான்‌ இருக்கிறார்‌. இந்தியருக்குக்‌ கொடுக்கப்பட்ட கைத்தொழில்‌ டைரகீடர்‌ வேலையில்‌ பிராமணரே இருக்கிறார்‌. அரசாங்கக்‌ காரியதரிசி வேலையில்‌ உள்ள இந்தியரும்‌ பிராமணரே. 200 ஜில்லா முன்சீப்களில்‌ 150 பேர்‌ பிராமணர்கள்‌, 61 சப்‌ ஜட்ஜுகளில்‌ 45 பேர்‌ பிராமணர்கள்‌, ஜில்லா ஜட்ஜுகளில்‌ 7 பேர்‌ பிராமணர்கள்‌. அதாவது, எடுபிடி உத்திமோகங்‌ களில்‌ பிராமணரல்லா தவரும்‌ ரூ. 100, 500, 1000, 2000, 3000 மாதசி சம்பளம்‌ உள்ள உத்தியோகங்களில்‌ பிராமணர்களும்‌ அனுபவிக்கிறார்கள்‌. வகுப்புவாரிப்‌ பிர திறிதிதீதுவம்‌ வேண்டாம்‌ என்று சொல்லும்‌ ஜீமான்‌ திரு. வி. கலியாணசுந்தர முதலியார்‌” அவர்களை நாம்‌ ஒரு கேள்வி கேட்கின்றோம்‌. அதாவது: இவ்விதம்‌ 1000, 2000, 3000 ரூபாய்‌ சம்பளம்‌ உள்ள உதீதியோகங்கள்‌ பிராமண ரல்லாத இந்துக்கள்‌ என்போரா8ய 100-ல்‌ 70 பேருக்கு மேலாக இருக்கும்‌ பிராமணரல்லர தாருக்குக்‌ குறைவாய்‌ இருப்பதற்கும்‌, 100-4 8 பேராயிருக்கும்‌ பிராமணர்‌ களுக்கு ஏகபோக மாய்‌ இருப்பதும்‌ யோக்கியதை இல்லாததாலா $ வகுப்புவாரிப்‌ பிர திநிதித்‌ துவம்‌ இல்லாத தாலா; என்று கேட்பகோடு--னீமான்‌ முதலியார்‌ கோரும்‌ சுயராஜ்யமோ, சீர்திருத்தமோ: பிராமணர்களுக்கு உதீதி?யாகப்‌ பெருக்கமாகுமா, அல்லது ஏழைகளுக்கு வரி குறைந்து தொழிலாளிக்குத்‌ தொழில்‌ கிடைக்குமா என்று கேட்கிறோம்‌. [குடி அரசு?-தலையங்கம்‌--18--1926] அக்கிராசனர்‌ அவர்களே! சகோதரர்களே! மகாத்மா காநீதியின்‌ ஒத்‌ துழையாமைக்‌ காங்கரஸ்காரன்‌, அதிலும்‌ வைதிக ஒதீதுழை யாமைக்காரன்‌, மாறுகல்‌ வேண்டாதவன்‌ என்று சொல்லப்பட்ட ஒருவன்‌, வகுப்பைப்‌ பற்றிப்‌ பேசுவது பொருத்தமா என்று சிலருக்குத்‌ தோன்றலாம்‌. வைதிக ஒதீ.துழையாமைக்‌ காரன்‌ என்றால்‌, ஒருவன்‌ கழுத்தை ஒருவன்‌ அறுக்கும்போது பார்த்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌ என்பவனல்லன்‌ ) ஒருவன்‌ சொத்தை ஒருவன்‌ கொள்ளையடித்துக்‌ கொண்டு போனால்‌ வழியைத்‌ திறநீ.துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டு மென்பவனல்லன்‌. என்பதை முதலில்‌ அவர்களுக்‌ குதி தெரியப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. அல்லாமலும்‌, மகத்‌ மாவின்‌ காங்கிரஸும்‌ அவரது ஒதீதுழையாமையும்‌, நிர்மாண தீதிட்டமும்‌ காங்கிரஸிலிருந்து வெளிப்பட்டு மறைந்ககொண்டும்‌ வருகிறது. நிர்மாணத்‌ி திட்டங்கொண்ட ஒத்கழை யாமைக்‌ காங்கிரஸின்போது வகுப்பு விஷயத்தைப்பற்றி யாரும்‌ யோசிக்கவேயில்லை., அதில்‌ உயர்வு தாழ்வு என்ற வித்தியாசமே இல்லாமல்‌, எல்லா வகுப்புக்கும்‌ சமத்‌ தவமும்‌ சுயமரியாதையும்‌, ஏழை பணக்காரர்‌ என்கிற வித்தியாசமே இல்லாமல்‌ எல்லோருக்கும்‌ சம யோக்கியதையும்‌ உண்டாக சவுகரியம்‌ இருந்ததால்‌, என்போன்றவர்கள்‌ வகுப்பு எண்‌ ணத்தை மறந்து மகாதீமா காங்கிரசிலும்‌, ஒத துழையாமையிலும்‌, நிர்மாண த்‌ திட்டத்திலும்‌ உழைத்துவந்தோம்‌. மகாதீமா காங்கிரசுக்கு முன்பே நான்‌ வகுப்பு முன்னேற்றத்தில்‌ கவலை உள்ளவ னாகத்தான்‌. இருந்தேன்‌. அதாவது, பிராமணரல்லாதாருக்காக இப்பொழுது உள்ள www.thamizham.net - Free £ book 14௦ 3026 910 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ என்பது போன்ற, ஏறக்குறைய இதே கொள்கை உடைய 6 சென்னை மாகாணச்‌ சங்கம்‌? என்ற ஒரு சங்கம்‌ இருந்ததும்‌ அதில்‌ என்‌ போன்றவர்கள்‌. முக்கிய பங்கெடுத்து உழைதீதகும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌. அது எதற்காக இருந்தது? பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்திற்குக்‌ காங்கிரஸ்‌ போதாது என்றும்‌, நமக்கென்று தனி யான இயக்கம்‌ இருக்கவேண்டுமென்றும்‌ இப்பொழுது காங்கிரஸிலுள்ள பிராமணரல்லாதார்‌. எல்லோரும்‌ ஒன்ற கூடித்தான்‌ அச்‌ சங்கத்தின்‌ மூலம்‌ பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்‌ திற்கு உழைதீததும்‌, நமது முன்னேற்றத்திற்காக வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ முதலிய வைகளை நாம்‌ வலியுறுத்தி வந்ததும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌. இன்னும்‌ என்‌ அபிப்பிராயம்‌ என்னவென்றால்‌, நமது நாட்டில்‌ காங்கிரஸ்‌ என்கிற ஒரு இயக்கம்‌ இல்லாவிட்டால்‌ நமக்கு வகுப்பு முன்னேற்ற இயக்கமே தேவையில்லை என்றே சொல்லுவேன்‌, நமது நாட்டில்‌ என்று காங்கிரஸ்‌ ஏற்பட்டதோ அன்றே பிராமணரல்லா தாருக்குச்‌ * சனியன்‌ பிடித்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில்‌ காங்கிரஸ்‌ வருவதற்கு மூன்‌ பெரிய மனிதர்கள்‌ என்போரும்‌, படித்தவர்கள்‌ என்‌ போரும்‌, தலைவர்கள்‌ என்‌ போரும்‌, தேசபக்தர்கள்‌ என்போரும்‌ பிராமணரல்லாதார்‌ களாகவே இருந்தார்கள்‌. ஜில்லா முனி சீப்புகள்‌, சிரஸ்தார்கள்‌, தாசில்தார்கள்‌, இன்ஸ்பெக்டர்கள்‌ ஆகிய இவ்வுதீதியோகங்கள்‌ தாம்‌ அக்‌ காலத்தில்‌ இந்தியர்களுக்கு அதிகமாய்‌ வழங்கப்பட்டன. இவைகளில்‌ நூற்றுக்கு 99 பேர்‌ நாயுடு, முதலியார்‌, பிள்ளை, சாயபு ஆகிய இவர்கள்‌ தாம்‌ இருப்பார்கள்‌. இவர்கள்‌ உத்தியோக கண்ணியமும்‌, தர்பாரும்‌ இக்‌ காலதீதிலுள்ள ஒரு கலெக்டருக்காவது, நிர்வாக சபை மெம்பருக்காவது கிடையாது. எனக்குத்‌ தெரிய ஒரு நாயுடு இந்த ஜில்லா சிரஸ்தாரராயிருந்தார்‌, அவரை; * கலெக்டர்‌ கூப்பிடுகிறார்‌ 9 என்று யாராவது கூப்பிட்டால்‌, * பத்து நிமிஷத்தில்‌ வருகிறேன்‌? என்றுதான்‌ சொல்வார்‌ 15 நிமிஷம்‌ கழித்து மெத்தைக்குப்‌ போவார்‌ ) காலில்‌ ஜோடும்‌, ஒரு கையில்‌ தடியும்‌, மற்றொரு கையில்‌ சுரூட்டுமாய்‌ மெத்தை ஏறுவார்‌. கலெக்டர்‌ முன்னால்‌ மேஜையின்மேல்‌ தடியையும்‌) சுருட்டையும்‌ வைத்‌ துவிட்டு, * என்னைக்‌ கூப்பிட்ட விஷயம்‌ என்ன 1 என்று கேட்பார்‌, காரியம்‌ முடிந்ததும்‌ சுருட்டையும்‌ தடியையும்‌ எடுத்துக்கொண்டு கீழே வருவார்‌. போலீஸ்‌ எட்குவாட்டர்‌ இன்ஸ்பெக்டராக நாயுடு ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌, கலெக்டர்‌ சூப்பரின்‌ டெண்டு முதலிய வெள்ளைக்கார அதிகாரிக ளுடன்‌ சினேகிதர்‌ போலப்‌ பேசுவார்‌ § உறவாடுவார்‌. நாயுடுவைதீ திடீரென்று கூப்பிடமுடியாது. நாயுடுவின்‌ சந்தர்ப்பம்‌ தெரிந்துதான்‌ கூப்பிட வேண்டும்‌. இக போலவே, அக்‌ காலத்தில்‌ தக்க குடும்ப பரம்பரை: யும்‌, யோக்கியமும்‌, அந்தஸ்தும்‌, கண்ணியமும்‌ உள்ளவர்கள்‌ பெரிய உத்தியோகம்‌ வகிப்‌ பார்கள்‌. அப்போதைய உதீதியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதை இதுதான்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகு உதீ தியோகத்தின்‌ யோக்கியதை அடியோடு மாறிவிட்டது. முனிசிபாலிட்டி விளக்கு வெளிச்சதீதில்‌ படித்தவனானாலும்‌ சரி, பஞ்சாங்கம்‌ சொல்லிப்‌ பிச்சை எடுத்தவன்‌ மகனானாலும்‌ சரி, தூது சென்று பிழைப்பவன்‌ மகனானாலும்‌ சரி, உருப்போடத்‌ தெரிந்து, கிராமபோன்‌ மிஷின்போல பார்த ததை உருப்போட்டு எழுகதீ தெரிந்து மற்ற விஷயத்தில்‌ எப்படிப்பட்டவனானாலும்‌ சரி, அவன்தான்‌ உத்திமோகதீதிற்கு இலாயக்கு உள்ளவனாகப்‌ போய்விட்டான்‌. இதனால்‌ தெருப்பிச்சை எடுப்பவர்‌ களெல்லாம்‌ உதீதியோகதீதிற்கு இலாயகீகுள்ளவர்‌ களாகப்‌ போய்விட்டார்கள்‌. பரம்பரையாய்ப்‌ பெருங்‌ குடும்பமாய்‌, தேசத்தையே கோட்டை கொத்தனங்களோடு அரசாண்டவர்களாய்‌, சுயமரி யாதையோடு உள்ள பிராமணரல்லாதார்‌ குடும்பங்கள்‌ பின்னடைய ஏற்பட்டுவிட்டண. இதன்‌ பலனாய்‌ உத்தியோகங்களுக்கும்‌ மதிப்புக்‌ குறைந்துவிட்டது. காங்கிரஸின்‌ ஆதி சூழ்ச்சியே, பிராமணர்கள்‌ எவ்வாறு உதீதியோகம்‌ சம்பாதிப்பது என்கிற அஸ்திவார த்தின்‌ மேல்‌ கட்டப்பட்ட தாகும்‌. அதற்கு ஏற்றாற்போல்‌ அந்தச்‌ சாதிக்‌ குச்‌ சுபசவமாய்‌ உள்ள உருப்போடும்‌ வித்தையை உத்தியோகதீதிற்கு யோக்கிதையாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3026 வகுப்புரிமை 911 வைதீது, அதற்கேற்ற பள்ளிக்கூடங்களை விருதீதி செய்தார்கள்‌. இதன்மூலம்‌ உத்தியோகம்‌ பெற்ற பிராமணர்களால்‌ வெள்ளைக்காரர்களுக்குப்‌ பலவிதத்திலும்‌ உபபோகமி ந்ததால்‌ அவர்களும்‌ இந்தப்‌ பிராமணர்களுக்கு அனுகூலமான உத்தியோக யோக்‌ 9யதையையே பரப்பிவிட்டார்கள்‌, இப்போது வரவர மேற்படி உதீதியோகங்களின்‌ யோக்கியதையும்‌ குறைந்துவிட்டது. பெரும்பாலும்‌ வெள்ளைக்கார அதிகாரிகளுக்குளன்ள சகல தேவைகளையும்‌ நிறை வேற்றி வைக்கக்கூடியவர்களும்‌, சுயமரியாதை அற்றவர்‌ களும்‌, மனச்சாட்சியை இழந்தவர்‌ களுந்தான்‌ நல்ல டிப்டி கலெக்டர்‌, நல்ல முன்‌ பு, நல்ல தாசில்தார்‌, நல்ல மாஜிஸ்டிரேட்‌, நல்ல இன்ஸ்பெகீடர்களாக விளங்குகிறார்கள்‌. இந்த உத்தியோகதீதிற்கே இவ்வளவு யோக்கியதை வேண்டுமானால்‌ இன்னும்‌ பெரிய உத்தியோகதீதிற்கு எவ்வளவு யோக்கியதை வேண்டும்‌! இந்த முறையில்‌ பிராமணரல்லாத வகுப்பார்‌ உத்தியோகம்‌ பெற அஞ்சு கிறார்கள்‌. துணித்து யாராவது ஒப்புக்கொண்டாலும்‌ மேற்படி யோக்கியதை இல்லாத காரணதீதால்‌ நல்ல உதீதி யாகஸ்தர்களாக ஆகமுடிவதில்லை. இம்‌ மாதிரி காங்கிரஸ்‌ நம்‌ நாட்டில்‌ ஏற்படாதிருநீதால்‌ நமது ஜனங்களின்‌ யோக்கியதை இவ்வளவு கேவலமாய்ப்போய்‌ இருக்காது. உதீதியோகங்களின்‌ யோக்கியதை களும்‌ கீவ்வளவு இழிவான நிலைமைக்ீகுப்போய்‌ இருக்காது. வெள்ளைக்காரர்களும்‌ இவ்வளவு கொடுமையான முறையில்‌ ஆளத்துணிந்திருக்க மாட்டார்கள்‌. ஆதலால்‌, பிராமணரல்லாதார்‌ நிலைமையை இவ்வளவு கேவலத்திற்குக்‌ கொண்டுவந்துவிட்டதற்கு முக்கிய காரணங்களில்‌ இந்தக்‌ காங்கிரஸும்‌ பிரதானமானது. காங்கிரஸ்‌ என்பதே உத்தியோகம்‌ பெற ஏற்பட்டதுதான்‌. அது நமது நாட்டுப்‌ பிராமணர்களால்‌ வளர்க்கப்‌ பட்டதால்‌ பிராமணர்கள்‌ உத்தியோகம்‌ பெறதீதக்க வழியில்‌ நிலைநின்று விட்டது. எந்த அந்தஸ்தும்‌, எந்த உத்தி யோகமும்‌, எந்தப்‌ பதவியும்‌ எத்தப்‌ பெரிய உத்தியோகங்‌ களையும்‌ எடுத்துக்‌ கொண்டீர்களேயானால்‌ அந்தப்‌ பதவியும்‌ உத்தியோகமும்‌ காங்கிரசின்‌: பலனாக ஏற்பட்டதாகதீதானிருக்கும்‌. கினி பிராமணரல்லாதார்‌ சமூகதீதிற்கு ஏதேனும்‌ யோக்கியதை உண்டாகவேண்டு மானால்‌, இந்தக்‌ காங்கிரஸ்‌ ஒழியவேண்டும்‌. கிது உள்ளவரை பிராமணரல்லாதார்‌. உருப்படியாக முடியாது. மகாதீமா காங்கிரஸ்‌ உண்டாக வேண்டும்‌. [கோயம்புத்தூரில்‌ சொற்பொழிவு--! குடிஅரசு? 13-6-1926] 6. வகுப்பு உரிமையை ஒழிக்கச்‌ சதி வகுப்புவாரிப்‌ பிர திநிதிதீ.துவம்‌ என்பது, இந்திய மக்களில்‌ பார்ப்பனர்‌ தவிர மற்றெல்லா வகுப்பார்‌ களும்‌ வெகு எலமாக; அதாவது இந்தியப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ என்கிற வார்தீதை என்றைக்கு ஏற்பட்டதோ அதுமுதல்‌ அரசாங்கதீதாரிடம்‌ கேட்டு வரப்படும்‌ ஒரு கோரிக்கை ஆகும்‌. இக்‌ கோரிக்கை ஏற்பட்ட காலம்‌ முதல்‌ இந்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌, குறிப்பாய்‌ தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ பல வழிகளிலும்‌, தந்திரங்களிலும்‌, சூழ்ச்சிகளிலும்‌ அது கடறாமலிருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக்கிறார்கள்‌. என்ன பாடுபட்டும்‌ அரசியல்‌ இயக்கங்களான காங்கிரசும்‌, அரசாங்கமும்‌ இதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில்‌ வரவும்‌ ஏற்பாடு செய்தாகிவிட்டது. உதாரணமாக; இந்தியாவிலுள்ள இந்திய மக்களில்‌ முகமதியர்களுக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌, முகமதியர்‌ அல்லாதாருக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌, சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும்‌, கிறிஸ்தவர்‌ களுக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌, முகமதியர்‌ அல்லாதாரில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்கள்‌ என்றும்‌, பார்ப்பனர்‌-பார்ப்பனரல்லாதாருக்குப்‌ பொதுவில்‌இத்தனை ஸ்தானங்கள்‌ என்றும்‌ பிரிக்கப்பட்டு, 6, 7 வருஷ காலமாய்‌--அதாவது மூன்று தேர்‌ தலாய்‌ அமுலுக்கு வந்தாகிவிட்டது. அதுபோலவே, காங்‌ரசிலும்‌ கிறிஸ்தவர்‌ களுக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌, முகமதியர்களுக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌, தீண்டாத வகுப்பார்‌ என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை ஸ்தானங்கள்‌ என்றும்‌ ஒதுக்கப்பட்டு அதுவும்‌ சுமார்‌ 5, 6 வருஷமாக அமுலில்‌ இருந்து வருகிறது என்பதும்‌ எல்லோரும்‌ அறிந்த விஷயமே. இப்போது அதில்‌ பார்ப்பனர்‌, பார்ப்பனர்‌ அல்லாதார்‌ என்கிற விஷயத்தில்‌ வருவதிருக்கும்‌ முறையானது காரியத்தில்‌ பிரயோசனப்படாததையும்‌, ஒற்றுமைக்கும்‌ மன்னேற்றத்திற்கும்‌ இடையூறாக இருப்பதால்‌ அதையும்‌ தெளிவுபடுத்தி விடுவதே இப்போது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பதன்‌ பொருளேயல்லாமல்‌, புதிதாக ஒன்று ஏற்பாடு செய்யவோ அல்லது கண்டுபிடிக்கவோ யாரும்‌ கோரவில்லை. இக்‌ கொள்கைகளை அரசாங்கத்தாரும்‌ சுமார்‌ 85 வருஷங்‌ களுக்கு மூன்னாலேயே ஒப்புக்‌ கொண்டு; 1810-ம்‌ வருஷத்தின்‌ 125ஆவது ஸ்டாண்டிங்‌ ஆர்டரில்‌ விவரமாகச்‌ சொல்லி இருக்கிறார்கள்‌. ஆனால்‌, சகல உத்தியோகங்களும்‌ பதவிகளும்‌ அரசாங்கத்‌ அரில்‌ கைவசமாக இருந்து அவர்களே ஏறக்குறைய சரிவர வினியோகித்து வந்ததால்‌ அதற்காக யாரும்‌ கொள்கை ஒன்று ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமே இருந்துவரவில்லை. ஆனால்‌, காங்கிரஸ்‌ என்பதாக ஒரு ஸ்தாபனத்‌ அைச்‌ சிருஷ்டித்துக்கொண்டு, அதை தேசப்‌ பிரதிநிதিత்துவம்‌ பொருந்தியது என்று சொல்லி, அரசாங்கத்தை மிரட்டி, அவர்கள்‌ மூலம்‌ சில பதவிகளும்‌ பிரதிநிதित்துவங்களும்‌ அதிகமாய்‌ விநியோகிக்கச்‌ செய்ததில்‌ அவைகள்‌ காங்கிரசில்‌ உழன்று கொண்டிருக்கிற பார்ப்பனர்களான ஒரு கூட்டத்திற்கே போய்ச்சேருவதைப்‌ பார்‌ த்தவுடனும்‌ மற்றவர்கள்‌ காங்கிரசில்‌ ஆதிக்கம்‌ பெற முடியாமலும்‌ மற்றவர்களுக்குப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைக்க முடியாமலும்‌ கட்டுப்பாடாய்ப்‌ பிராமணர்கள்‌ சூழ்ச்சி செய்ததின்‌ பலனாகவும்‌ காங்கிரசில்‌ விசேஷ தீவிரவாதிகளாயிருந்த பார்ப்பனரல்லாதார்களில்‌ வடநாட்டில்‌ முகமதியர்களும்‌, தென்னாட்டில்‌ முகமதியரல்லாதாருமான பார்ப்பனரல்லாதாரும்‌ காங்கிரசில்‌ ஏற்படும்‌ உத்திமோகங்களையும்‌ பதவிகளையும்‌ பிரதிநிதித்‌துவங்களையும்‌ எங்களுக்கும்‌ சமமாய்‌ விகிதாசாரம்‌ பங்கு கொடுக்கவேண்டும்‌ என்றும்‌, இல்லாவிட்டால்‌ காங்கிரசுக்கு விரோதமாயிருந்து அரசாங்கத்திடமிருந்து நேரிடையாகப்‌ பெற பிரயத்தனம்‌ செய்வோம்‌ என்றும்‌ வாதாடியதில்‌, காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள்‌ முகமதியர்களுக்கு மாத்திரம்‌ ஒப்புக்‌ கொண்டு மற்றபடி முகமதியரல்லாத பார்ப்பனரல்லாதாருக்கு ஒப்புக்கொள்ளாமல்‌ ஆட்சே பணை செய்தார்கள்‌. இதன்‌ பலனாய்‌ அப்‌ போது அரசியல்‌ வாழ்விலும்‌ காங்கிரசிலும்‌ பிரதான ஸ்தானங்களிலும்‌ அனுபோகத்தில‌ம்‌ இருந்த ஜீமான் கன्‌ டாக்டர்‌ நாயர්‌, தியாகராச செட்டியார்‌ போன்றவர்கள்‌,'தென்னிந்தியர்‌ களின்‌ நல உரிமைச்‌ சங்கம்‌' என்பதாக ஒன்றை ஏற்பாடுசெய்து, அதில்‌ தென்னிந்தியாவிலுள்ள எல்லாப்‌ பார்ப்பனரல்லாத மக்களையும்‌ ஒன்றுசேர்த்து, காங்கிரஸ்‌ என்பது பார்ப்‌ பனர்‌ முன்னேற்றத்திற்கு ஏற்படுத்திய ஆயுதமேயொழிய ஜனப்‌ பிரதிநிதित்துவம்‌ பொருந்தியதா அல்லது எல்லர மக்களும்‌ சமஉரிமை அடையத்தக்கதோ அல்ல என்றும்‌, சுயராஜ்யம்‌ என்பது பார்ப்பனராஜ்யமேயல்லாமல்‌ பொதுமக்கள்‌ ராஜ்யம்‌ அல்ல என்றும்‌ பிரசாரம்‌ செய்ததின்‌ பலனாய்க்‌ காங்கிரஸ்‌ ஆதிக்கமும்‌ குலையத்‌ தலைப்பட்டது. இதை அறிந்த பார்ப்பனர்கள்‌ ஒன்றுகூடி ஆலோசித்து ஒரு தீர்மானம்‌ செய்தார்கள்‌, அதென்னவென்றால்‌, ஜீமான்‌ கள்‌ சர்க்கரைச்‌ செட்டியார்‌, ஆரியா, ஈ. வெ. ராமசாமி நாயகர்‌ முதலிய காங்‌ ரசிலீடுபட்டிருந்‌ தவர்களின்‌ அபிप்பிராயத்தையும்‌, அவர்களது பத்திரிகைகளையும்‌ எதிர்க்க எப்படி ஜீமான்கள்‌ மயிலை கீரத்தினசபாபதி முதலியார்‌, பாவலர்‌ சூப்புசாமி முதலியார்‌ என்‌ கிற பெயருள்ளவர்களைத்‌ தலைவர்களாகியும்‌, 'தேசபந்து!' என்கிற பேர்‌ கொண்ட பத்திரிக்கையை உண்டுபண்ணவும்‌ முயற்சி செய்தார்களோ, அதுபோலவே அப்போதும்‌ ஜீமான்‌ கலியாணசுந்தர முதலியாரும்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்களும்‌ பார்ப்பனர்கள்‌மேல்‌ பிணக்குக்கொண்டு காங்கிரஸ்‌ நிர்வாகத்திலிருந்து விலகுவதாய்‌ மிரட்டியும்‌,'நீங்கள்‌ போனால்‌ வேற ஒரு மூதலியாரையும்‌, நாயுடுவையும்‌ சேர்த்‌ துக்கொள்ளக்‌ தெரியும்‌?' என்று சொல்லி வெளியிலே அனுப்பிவிட்டுத்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதையும்‌ உலகம்‌ அறியும்‌. இதுபோல, பார்ப்பனரல்லாத சங்கத்திற்கு அனுகூலமாய்‌ சாட்சி சொல்ல சீமைக்குப்‌ போன டாக்டர்‌ நாயர்‌, ஜீமான்‌ எல்‌. கே. துளசிராம்‌ இவர்களுக்கு மாறாக ஜீமான்களான ஒரு சர்க்கரைச்‌ செட்டியாரையும்‌, ஒரு செஞ்சையாவையும்‌ சீமைக்குப்‌ பணம்‌ கொடுத்து அனுப்பிவைத்தார்கள்‌. இப்போது இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ யோக்கியதையை அறிந்து ஜீமான்‌ சர்க்கரைச்‌ செட்டியார்‌ அவர்களை விட்டு விலகியதும்‌ அதற்குப்‌ பதிலாக ஒரு ஓ. கந்கசாமிச்‌ செட்டியார்‌ என்பவரையும்‌, முன்‌ பார்ப்பனரல்லாதாருக்குச்‌ சாட்சி சொல்ல சீமைக்குப்‌ போயிருந்த எல்‌. கே. துளசிராம்‌ என்பவரையும்‌ ஆசைவார்த்தைகள்‌ சொல்லி தங்கள்‌ பக்கம்‌ சேர்த்‌ துக்கொண்டு, அப்போது ஜீமான்‌ சர்க்கரைச்‌ செட்டியார்‌ செய்த வேலையை இவர்‌ களைக்கொண்டு செய்துவருவதோடு, அவருக்குப்‌ பதிலாய்‌ இவர்களை உபயோகித்துக்‌ கொள்ளப்போகிறார்கள்‌. இவ்வளவு தீவிரமாகவும்‌, இவ்வளவு பிரயத்தனமாகவும்‌, இவ்வளவு செலவு செய்துகொண்டும்‌ இதுசமயம்‌ இந்தப்‌ பார்ப்பனர்‌ கள்‌, பார்ப்பனரல்லாத இயக்கத்திற்கு விரோதமாய்க்‌ கட்சி சேர்த்திருக்கிறதன்‌ முக்கிய நோக்கம்‌ என்ன வென்றால்‌, 1920 ஆம்‌ வருடத்தில்‌'சில சீர்திருத்தங்கள்‌' அரசாங்கத்‌ அார்‌ நமக்கு வழங்கி யிருப்பதாய்ச்‌ சொன்ன யாதாஸ்தில்‌,'இன்னும்‌ 10 வருஷம்‌ சென்றவுடன்‌ இப்போது கொடுத்த சீர்திருத்தத்தை எப்படி உபயோகித்திருக்கிறீர்‌ கள்‌'மேற்கொண்டு உங்களுக்கு சீர்திருத்தம்‌ கொடுத்தால்‌ அதைச்‌ சரியாய்‌ உபயோகித்துக்‌ கொள்ளக்கூடிய யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா, கில்லையா என்பதைப்‌ பரீட்சித்துப்‌ பார்த்து, கின்னும்‌ சில சீர்திருத்தங்கள்‌ கொடுப்போம்‌' என்று சொல்லியிருக்கிறார்கள்‌. அதன்படி சர்க்கார்‌ வழக்கம்போல்‌ 1928-லோ, 1929-லோ ஒரு கமிஷனை நியமிக்கப்‌ போகிறார்கள்‌, அந்தக்‌ கமிஷனில்‌ நமது பார்ப்பனருக்கு மேற்கொண்டு 'சீர்திருத்தம்‌' கொடுத்தாலும்‌ சரி, கொடுத்திருப்பதையும்‌ பிடுங்கிக்கொண்டாலும்‌ சரி, அதைப்‌ பற்றியெல்லாம்‌ நமக்குக்‌ கொஞ்சமும்‌ கவலையில்லை. எப்படியாவது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பதை ஒழித்‌ துவிட்டால்‌ அதுவே பார்ப்பனர்களுக்குச்‌ சுயராஜ்யமளித்த மாதிரியாகும், அதை ஒழிக்கக்‌ கட்சியும்‌ பலத்தையும்‌ சேர்க்கதான்‌ இவ்வளவு தந்திரங்களும்‌ சூழ்ச்சிகளும்‌ பணச்‌ செலவும்‌ செய்வதே தவிர வேறில்லை. அதனால்தான்‌ பார்ப்பனப்‌ என்கின்ற கூட்டமே அடியோடு ஆண்‌, பெண்‌ அடங்கலும்‌ கட்சிபேத-அபிப்பிராய பேதமின்றி ஒன்றுசேர்ந்‌ திருக்கிறார்கள்‌. இதற்காகவே ஜீமான்‌ கராஜ காபாலசாரியாரும்‌ அடிக்கடி பட்டணம்‌ போவதும்‌, ஸ்ரீமான்‌ ஜீநிவாச அய்யங்கார்‌ வெற்றிக்காகக்‌ கோஷம்‌ இடுவதும்‌, அவர்கள்‌ கூட்டங்களில்‌ பேசுவதும்‌, வகுப்பு வாதங்கள்‌ மாத்திரம்‌ கூடாதென்பதும்‌ ஆய தந்திரங்‌ கலைச்‌ செய்துவருவதும்‌, ஜீமான்‌ ஜநிவாச சாஸ்திரிகள்‌ வகுப்புவாதம்‌ கூடாதென்ப்‌ தம்‌ பார்ப்பனரல்லாதாரிலும்‌, முகமதியர்களிலும்‌, கிறிஸ்தவர்களிலும்‌, தீண்டாதார்‌ என்னும்‌ வரப்புகளிலும்‌ கூலிகொடுத்து ஆட்களைப்‌ பிடித்து, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அரசியலில்‌ பேசக‌ கூடாதென்று சொல்லச்‌ செய்வதுமான காரியங்களைச்‌ செய்து வருகிறார்‌ கள்‌. ஆதலால்‌, தமிழ்மக்கள்‌ இது சமயம்‌ ஏமாந்துபோகாமல்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ அவசியத்தையும்‌, அதற்கெதிராய்ப்‌ பார்ப்பனர்‌ செய்யும்‌ பிரச்‌ சாரத்தின்‌ நோக்கத்தையும்‌ அவர்களுடைய யோக்கியதைகளையும்‌ முன்பின்‌ அபிப்பிராயங்‌ களையும்‌ பாமர மக்கள்‌ சரியாக உணரும்படி பிரசாரங்களைச்‌ செய்து, எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச்‌ செய்யவேண்டி வற்புறுத்துகிறோம்‌.(குடி அரசு-தலையங்கம்‌- 21-11-1926) நமது நாட்டில்‌ தற்சமயம்‌ உண்மையானும்‌ சுயநலமற்றதுமான பொதுநலசேவை செய்கின்‌ நர்‌ கள்‌ முக்கியமாய்‌ கவனிக்கவேண்டியது, நமது நாட்டு மக்களுக்குள்‌ கற்பிக்கப்‌பட்டிருக்கும்‌ பிறப்பு உயர்வு-தாழ்வை ஒழித்து, சமத்துவத்தை ஏற்படுத்தி, அவர்களைச்‌ சுயமரியாதையுடன்‌ வாழச்‌ செய்யவேண்‌ டியதாகும்‌. இதை நாம்‌ பல தடவைகளில்‌ எடுத்துக்‌ காட்டி வந்திருக்கின்‌ றோம்‌. எனினும்‌, மக்களுக்குள்‌ சமத்துவமும்‌, சுயமரியாதை உணர்ச்சியும்‌ ஏற்பட்டு விட்டால்‌ வாழமுடியாத நிலையில்‌ நமது நாட்டில்‌ சில சமூகமும்‌, சில தனிப்பட்ட மக்களும்‌ இருப்பதால்‌ அவர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையை இலவ்வித்தியாசத்தின்மீதே நிலைநிறுத்திக்‌ கொண்டதால்‌, அவர்கள்‌ மற்றவர்களின்‌ சமத்துவத்திற்கும்‌, சுயமரியாதைக்கும்‌ விரோதமாக இருந்தே தங்கள்‌ வாழ்நாளைக்‌ கழிக்கவேண்டியதான நிலைமை, அவசியம்‌ அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம்‌ மறைத்தப்‌ பேசுவதில்‌ பயனில்லை. எந்த நாட்டிலும்‌ எந்தக்‌ காலத்திலும்‌ இப்படிப்பட்ட ஒரு கூட்டம்‌ இருந்தே வந்து தங்கள்‌ சுயநலத்தின்‌ பொருட்டு மக்களின்‌ நலத்தைப்‌ பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும்‌. எனினும்‌, சமத்துவமும்‌ சுயமரியாதையும்‌ பெற்று முன்னேற்றமடைந்து வரும்‌ நாடுகளின்‌ சரித்திரங்களைப்‌ பார்ப்போமேயானால்‌, முதலில்‌ இக்‌ கூட்டத்தன்‌ டன்‌ போர்‌ புரத்து அவர்களை அழித்த‌ பிறகுதான்‌, நாட்டினுடைய மக்களுக்குச்‌ சமத்துவம்‌ கொடுத்து, சுயமரியாதையைக்‌ காப்பாற்றி, தங் பார்ப்பனர்களாய்‌ தங்கள்‌ தங்கள்‌ நாட்டை முன்னுக்குக்‌ கொண்டுவந்து இருப்பதாக அறியக்கிடக்கும்‌. ஆதலால்‌, நம்நாட்டிலும்‌ பொதுநலத்தொண்டில்‌ ஈடுபடுப வர்கள்‌ இக்‌ கூட்டத்தின்‌ தொல்லைக்குத்‌ தலைகொடுதீதுத்தான்‌ ஆகவேண்டியவரீகளா யிருக்கின் றார்கள்‌. அனேகமாக, மற்ற நாட்டின்‌ சமதீதுவதீதிற்கும்‌ சுயமரியாகைக்கும்‌ தடை வேலைக்‌ காரர்களாயிருநீது தீர 8வண்டியவர்கள்‌ பெரிதும்‌ மததீதின்‌ பேரிலேயே தங்கள்‌ தடை வேலைகளைச்‌ செய்துவந்த தாகக்‌ காணலாம்‌. ஆனால்‌, நமது நாட்டில்‌ சமதீ தவத்தையும்‌ சுயமரியாதையையும்‌ எதீர் தீது நிற்பவர்கள்‌ பெரிதும்‌ அரசியலின்‌ பேரால்‌ தடைக்‌ கல்லாய்‌ நிற்கின்றார்கள்‌. மதக்காரர்கன்‌ என்பவர்களைவிட அரசியடகாரர்கள்‌ என்பவர்களே தொல்லை கொடுக்கின்றார்கள்‌ என்பதற்கு உதாரணம்‌ என்னவென்றால்‌, நமது நாடு இப்போது மததீதிற்குக்‌ கட்டுப்பட்டிருப்பதைவிட அரசாங்கச்‌ சட்டத்திற்கே அதிகமாய்க்‌ கட்டுப்பட்டிருப்பதாகும்‌. எனவே, எந்தச்‌ சமதீ.துவமூம்‌ சுயமரியாதையும்‌ இப்போது பெரிதும்‌ அரசாங்கச்‌ சட்டத்தைக்‌ கொண்டே செய்யப்டட வேண்டிய நிலையில்‌ இருக்கின்றது. அதனால்‌ நாம்‌ அரசாங்கச்‌ சட்டமுறையில்‌ சமதீ.துவம்‌ கேட்கும்போது, எதிரிகள்‌ அரசியலின்‌ மூலமாகதீ தான்‌ எதிர்தீதாக வேண்டும்‌. எனவே, அதை அரசியலின்‌ பேரால்‌ வாழ்பவர்கள்‌ தாம்‌ எதீர்தீதாக வேண்டும்‌. அன்றியும்‌, மதக்காரர்‌ களின்‌ எதிர்ப்புக்கு நமது நாட்டில்‌ மதிப்பும்‌ குறைந்‌ துவிட்டதால்‌, அரசியலின்‌ பேரால்‌ தடைவேலை செய்பவர்களுக்கு மதக்காரர்களின்‌ பின்‌ பலமும்‌ தாரானமாய்‌ இருக்கும்‌ என்பதில்‌ சந்தேகமி நகீகாதுஃ நிற்க, நம்‌ டைய நாட்டிலுள்ள உயர்வு-தாழ்வு முதலிய வித்தியாசங்களைப்‌ போக்க நம்மவர்‌ கன்‌ எடுத்துக்கொண்ட முயற்சிகளும்‌ அதற்காகப்பட்ட கஷ்டங்‌ களும்‌ இந்நாட்டில்‌ உள்ள யாவரும்‌ அறிந்ததேயா தம்‌. அவர்கள்‌ வேறு எந்த விதத்திலும்‌ முயற்சி செய்து முடியாததனாலேயேதான்‌ நம்நாட்டு முதிர்ந்த அனுபவசாலிகளும்‌ சுயநஃமற்ற பெரியார்‌ களுமாகிய பஃர்‌ சேர்ந்து, சமத்துவத்தையும்‌ சந்ரர்ப்பத்தையுமே முக்கிய கொள்கைகளாகக்‌ கருதி, அதற்காக நமது நாட்டு அரசியல்‌ தொகுதிகளில்‌ வ தப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பெறுவ$த முக்கிய நோக்கமாகக்கொண்டு, பார்ப்பன ரல்லாஜார்‌ என்கின்ற பெயருடன்‌ ஒரு ஸ்தாபனங்‌ கண்டு, அதற்காகவே பலர்‌ தங்கள்‌ தங்கள்‌ உயிரையுங்‌ கொடுத்து வேலை செய்துவந்தார்‌ கன்‌ என்‌ பதும்‌, பலர்‌ உயிரைக்‌ கொடுக்க இருக்கிறார்கள்‌: என்பதும்‌ வெள்ளிடைமலை. www.thamizham.net - Free E 5௦011௦ 3026 வகுப்புரிமை 915 அதுபோலவே, அவ்வியக்கதீதை, நாம்‌ மேலே சொன்னதுபோல்‌ உயர்வு-தாழ்வு வித்தி யரசதீதாலேயே தங்கள்‌ வாழ்வையும்‌ பிழைப்பையும்‌ நிலை நிறுத்திக்கொண்ட சமூகமும்‌ அவர்களுக்கு அனுகூலமாயிருந்‌ ௮ உாடிவேண்டியவர்களாண சில தனி நபர்களும்‌ சேர்ந்து அக்‌ கொள்கைகளை ஒப்புக்கொண்டதுபோல்‌ வேஷம்‌ போட்டுப்‌ பல சூழ்ச்சிகள்‌ செய்து எதிர்த்தும்‌, இப்போது நேராகவே வெளிவந்து வருப்புவாரிப்‌ பிரதிநிதிக துவத்தை அரசிலியன்‌ பேராலும்‌ எ தீர்ப்பதும்‌ வெள்ளிடைமலை. இவ்வளவ எ திர்ப்புகளையும்‌ தாண்டி அந்த வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌.௮ுவம்‌ என்பதும்‌ ஒருவாறு வெற்றிபெற்று இந்தியா முழு வதிலும்‌ அமுலில்‌ இருப்பதும்‌ தெரிந்ததே. அதனால்‌ அவ்வரிமை பெற்ற சமூகங்கள்‌ ஒவ்வொன்றும்‌ ஒருவாறு சமதீ துவமும்‌, சம சந்தர்ப்பமும்‌, சுயமரியாதையும்‌ உணர்ச்சியும்‌ பெற்றிருப்பதும்‌ வெள்ளிடை மலையே யாம்‌. ஆனாலும்‌, இப்‌8பாது அதை மேலும்‌ கேட்பகை மறுப்பதற்கும்‌ உள்ளதையும்‌ ஒழிப்பதற்கும்‌ மேற்கண்ட கூட்டமே அரசியலின்‌ பேரால்‌, அதாவ க, சர்வகட்சி மாநாட்டின்‌ பேராலும்‌ தேசத்தின்‌ பேராலும்‌ செய்யும்‌ சூழ்ச்சியும்‌ நமக்குத்‌ தெரிந்ததாகும்‌. நிற்க, தற்காலம்‌ இந்தியாவுக்கு அளிக்கப்படப்‌ போகும்‌ அரசியல்‌ சுதந்திரம்‌ எப்படிப்‌ பட்டகாயிருக்க வேண்டும்‌ என்பதை விசாரித்தறிவதற்கென்று பிரிட்டிஷ்‌ பார்லிமெண்டார்‌ நியமித்தனுப்பிய சைமன்‌ கமிஷனை பகிஷ்கரிப்பது என்கின்ற ஒரு சூழ்சீசியையும்‌ குறிப்‌ பாக இந்த வகுப்பவாரிப்‌ பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவேண்டும்‌ என்ற எண்ணம்‌ சொண்டே ஆரம்பித்து மக்களை ஏமாற்றுவதும்‌, தாங்கள்‌ மாத்திரம்‌ தங்களுடைய இஷ்டப்படி வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ முறையை ஒழிக்க ஒரு அரசியல்‌ சுதந்திரதீ திட்டத்தை ஏற்பாடு செய்துகொண்டு, அதைப்‌ பொதுஜனங்களின்‌ பேரால்‌ சைமன்‌ கமிஷ க்குத்‌ தெரியப்படுத்‌ துவதான வேலையில்‌ ஈடுபட்டிருப்பதும்‌ வெள்ளிடை மலையேயாகும்‌. இந்த நிலையில்‌ இந்திய மக்களின்‌ பொது அபிட்பிராயம்‌ என்ன என்பதை அக்‌ கமிஷனுக்கு. ,வெளிப்படுத்கப்‌ பொதுஜனங்களும்‌ குறிப்பாக முகமதியர்களும்‌, கிறிஸ்தவர்களும்‌, பார்ப்‌ பனரசலாதார்களும்‌, தாழ்த்தப்பட்டவர்‌ களும்‌, ஒடுக்கப்பட்டவர்‌ களும்‌, தீண்டப்படா தவர்கள்‌ என்று விலக்கப்பட்ட மக்களும்‌ மிகுதியாகக்‌ கடமைப்பட்டிருக்கிறார்கள்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்பவர்களில்‌ யாரும்‌ இதுவரை அது கூடாது என்பதற்குச்‌ சரியான காரணமோ அல்லது எல்லா மக்களுக்கும்‌ சமதீதுவமும்‌ சம சந்தர்ப்பமும்‌ கிடைக்கும்படியான வேறு மார்க்கமோ எடுத்துச்‌ சொன்னவர்களும்‌ இல்லை. பல கூலிகள்‌ மாதீதிரம்‌, மக்கள்‌ வருப்புவாரிப்‌ பிரதிநிதிதீ. துவம்‌ கேட்பதைப்பற்றி, தென்னாட்டில்‌ ஒரு பகுதியில்‌ பார்ப்பனர?லாதார்‌ என்கின்ற பேரால்‌, யாரா சிலர்‌ மாத்திரம்‌ தான்‌ வருப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கின்றார்கள்‌) பொது மக்கள்‌ கேட்க வில்லை! என்கின்ற ஒரு மந்கிரத்தையே சொல்லிக்கொண்டு, இதைப்‌ பொதுமக்கள்‌. நம்பும்படி பிரச சாரம்‌ செய்து, இதனாலேயே சைமன்‌ கமிஷன்‌ கண்ணிலும்‌, பொதுமக்கள்‌ கண்ணிலும்‌ மண்ணைப்‌ போட்டுத்‌ தெரியாமல்‌ செய்துவிடலாம்‌ என்பதாக மனப்பால்‌ குல த்துக்கொண்டு, நமது நாட்டில்‌ ஒரு வயிற்றுப்‌ பிழைப்புப்‌ பிரச்சாரம்‌ செய்து வருகின்றார்கள்‌. ஆனால்‌, இவர்களுக்குதீ தக்க பதில்‌ கீழ்க்கண்ட வார்‌ த்தைகள் தாம்‌. அதாவது, எட்டுக்‌ கோடி மக்கள்‌ கொண்ட முகமதியர்கள்‌ வகுப்புவாரிஃ பிரதிதிதிதீ துவம்‌ கேட்கிறார்களா, இல்லையா என்பதும்‌, அய்ந்து கோடி ஜனசமூகங்‌ கொண்ட தீண்டாதவர்கள்‌ என்பார்கள்‌ எல்லோரும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌துவம்‌ கேட்கிறார்களா, இல்லையா என்பதும்‌, பார்‌ ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ வகுப்புவாரி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்‌ என்பதை அடிப்படையாகக்‌ கொண்டதா; கில்லையா என்பதும்‌, www.thamizham.net - Free £ book No 3026 916 பெரியார்‌ ஈட வெ. ரா. Hpgoarads கிறிஸ்தவர்களும்‌, அய்ரேரப்பியரும்‌, ஆங்கிலோ இந்தியரும்‌ வகுப்புவாரிப்‌ பிரதி நிதிதீ. துவம்‌ கேட்கின்றார்‌ களா, இல்லையா என்பதுமேயாகும்‌. [குடி அரசு !-தலையங்கம்‌--15-12-1928] இந்தியாவில்‌ முதன்முதலாக அரசியல்‌ கிளர்ச்சி உண்டாகீகப்பட்டதன்‌ உத்தேசமே இந்திய ஆட்சி உத்தியோகம்‌ முழுவதும்‌ ஆங்கிலேயர்‌ கையிலே இருப்ப தால்‌, இந்தியர்‌ களுக்கும்‌ இந்திய அரசாட்சியில்‌ சரியான பிர திநிதிதீதுவம்‌ கொடுக்கப்பட வேண்டும்‌ என்கின்ற கருத்தைக்‌ கொண்டேதான்‌ ஏற்படுத்தப்பட்டது என்ப து எல்லா அரசியல்‌ வாதி களாலும்‌ ஒட்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்‌. இப்படிக்‌ கிளர்ச்சி செய்யவேண்டிய அவசியம்‌ எப்படி ஏ ந்பட்டதென்றால்‌, ஆங்கில அரசாட்சியின்‌ பயனாக நமக்குச்‌ சற்று கல்வி, அன்னியநாட்டு வர்த்தமானம்‌ முதலியவைகள்‌ மூலம்‌ அரசியல்‌ விஷயங்கன்‌ அறிய வசதி ஏற்பட்டதேயாகும்‌. ஆகவே, அவர்களது ஆசையானது அரசாட்சி உத்தியோகங்களில்‌ புகுந்து அதை அடைவதற்கு அரசியல்‌ ஸ்தாபனம்‌ என்பதை ஏற்படுத்திக்கொண்டு, அதன்‌: மூலமாய்த்‌ தங்களுக்கு கன்ன இன்ன உத்தியோகங்களில்‌ உரிமை கொடுக்க வேண்டும்‌ என்றும்‌, பிறகு அதில்‌ இத்தனை இத்தனை இடங்கள்‌ தங்களுக்கே (வந்தியர்களுக்கே) வேண்டுமென்றும்‌, அதற்குப்‌ பிறகும்‌ அது கன்ன இன்ன மாதிரியில்‌ கிடைக்கக்கூடியதாய்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌ கேட்கப்பட்டது போலவே, அரசாங்கதீதாரும்‌ சம்மகிதீ s நானா வட்டத்தில்‌ கொடுக்கப்பட்டும்‌ வந்திருக்கின்றது. அது போதாதென்று கேட்கப்பட்டு வரு$ன்‌ றதுஃ என வ, மேற்கண்டமாதிரியான பிரதி S துவமும்‌ சுதந்திரமும்‌ மக்களுக்குக்‌ கிடைத்ததில்‌ அவைகள்‌ பெரும்‌ பெரும்‌ பதவிகளாகவும்‌, பெரும்‌ பெரும்‌ வருவாய்‌ உள்ள தாகவும்‌, பெரும்‌ பெரும்‌ அதிகாரங்கள்‌ உள்ளவைகளாகவும்‌ மக்களுக்கு அவை கவுரவமும்‌ புகழையும்‌ உடையவைகளாகவும்‌ ஏற்பட்டுவிட்டதால்‌ அவைகள்மிது எல்லா மக்களுக்கும்‌ ஆசை ஏற்பட்டு, ஒவ்வொருவரும்‌ அதை அடைய முயற்சிசெய்ய வேண்டிய தாய்விட்டதுஃ இதன்‌ பயனாம்ப்‌ பதவிகள்‌ எல்லாம்‌ அரசியல்‌ ஸ்தாபனங்களில்‌ முன்னணியில்‌ இருப்பவர்‌: களுக்குக்‌ கிடைக்கக்‌ கூடியவைகளாய்விட்டபடியால்‌, அரசியல்‌ ஸ்தாபன தீதின்‌ மூலமாய்தீ தங்களுக்குக்‌ கிடைக்காது என்று கருதினவர்களுக்கும்‌, அந்த ஸ்தாபனங்களில்‌ செல்வாக்‌ குப்‌ பெற முடியாமல்‌ தடுக்கப்பட்டிருந்தஉர்களுக்கும்‌ தங்களுக்கென்று தனி ஸ்தாபனங்கள்‌ ஏற்படுத்திக்‌ கொள்ளவேண்டிய அவசியங்கள்‌ ஏற்பட்டு விட்டன. ஆன தினால்‌, அதற்காகப்‌ பதவி-அதிகாரம்‌, உத்தியோகம்‌ ஆகிப ஆசை கொண்டவர்கள்‌ ஒரே ஸ்தாபனத்தை நம்பிக்‌ கொண்டிருக்க முடியாமல்‌, தனித்‌ தனியாகப்‌ பிரிந்துபோய்‌ ஸ்தாபனங்களை ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இவர்கள்‌ தங்கள்‌ ஸ்தரபனங்களுக்கு ஏதாவது ஒரு கொள்கையும்‌ கண்டுபிடிக்க வேண்டியவர்கள்‌ ஆனார்கள்‌. இதனால்‌ அவசியமில்லாத கொள்கைகளை உண்டாக்கவும்‌, அவசியமான கொள்கைகளை மறுக்கவும்‌, மறைக்கவு ! வேண்டிய அவசியம்‌ அரசியல்வாதி களுக்கு ஏற்பட்டது. ஆகவே, இந்த வேலைகள்‌ சற்றுப்‌ படிதீதவர்‌ களுக்கே வேண்டியிருந்த தாலும்‌, படி தீதவர்கள்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனர்களாகவே இருந்ததாலும்‌, பார்ப்பனரல்லாத படித்தவர்கள்‌ மிகச்‌ சுருக்கமாக இருந்ததாலும்‌, பார்ப்பனரல்லாத பொதுமக்கள்‌ டாமர மக்களாக இருந்ததாலும்‌ பார்ப்பன சூழ்ச்சியை வென்று அரசியல்‌ ஸ்தானதீதின்‌ உத்தி யோகங்கவிலும்‌ பதவிகளிலும்‌ பங்குபெற முடியாத பார்ப்பனரல்லாதார்கன்‌ அரசியல்‌ துறையை விட்டு, சமூகத்‌ துறையின்‌ பேரால்‌ ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்‌ கொண்டு, அதன்‌ மூலம்‌ மக்களைதி தங்கன்‌ வசப்படுத்த) அரசியலில்‌ பங்குபெற முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்‌. இந்தக்‌ காரணத்தால்‌ ஏற்பட்டதுதான்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌. இந்த ஸ்தாபனக்காரர்கள்‌ முன்கூறியதுபோல்‌ தங்களுக்கும்‌ ஏதாவது @y கொள்கையைக்‌ கண்டு www.thamizham.net - Free £ book No 3026 வருப்புரிமை 917 பிடிக்கவேண்டியிருநீததால்‌ தங்காளக்குக்‌ கிடைக்கும்‌ உதீதியோகதீதையும்‌, பதவியையும்‌ எசிலா வரப்பு மக்களுக்கும்‌ எண்ணிக்கைப்படி பங்கு போட்டுக்‌ கொடுப்ப தாவும்‌ தங்களுடன்‌ பார்ப்பனர்களைச்‌ சேர்தீ.துக்கொள்வதில்லை என்றும்‌ சொன்ன தாடு, புகிகாக ஏற்படுத்கப்‌ பட்ட இயக்கமாதலால்‌ அதற்குச்‌ சற்று பலம்‌ வேண்டும்‌ என்று கருதி, பிரிட்டிஷ்‌ ஆட்சிக்கு உட்பட்ட சுயராஜ்யம்‌ அடைவது என்கின்ற பேரையும்‌ வைத்‌ துக்கொண்டு, ஒவ்வொரு கூட்டத்திலும்‌ இராஜவிசுவாசப்‌ பல்லவியும்‌ பாடிவரலாயினர்‌. கராஜ விசுவாசம்‌ என்பது காங்கிரஸ்‌ ஆரம்பித்த காலம்‌ முதற்கொண்டே எந்கக்‌ கூட்டத்திலும்‌ முதன்‌ முதல்‌ செய்யுந்‌ தீர்மானமும்‌, கூட்ட முடிவில்‌ பாடும்‌ கராஜ வாழ்த்துப்‌ பாட்டுமாகும்‌. ஆகையால்‌, பார்ப்பனரல்லாதார்‌ கட்சியாரும்‌ அதையே பின்பற்ற வேண்டியதாயிற்று. எனவே, இந்தப்‌ புதிய கட்சி எல்லோருக்கும்‌ பங்கு கொடுக்கச்‌ சம்மதிதீதுப்‌ பார்ப்பனர்களை விலக்கியதாகதீ தெரிந்தவுடன்‌ எல்லோரும்‌ இதில்‌ சேர்ந்தனர்‌, இதைக்‌ கண்ட பார்ப்பனர்கள்‌ இதை ஒழிக்கக்‌ கருதி, வகுப்புத்‌ துவேஷக்‌ கட்சியென்றும்‌, தேதி குரோகக்‌ கட்சி என்றும்‌, உத்தியோக வேட்டைக்‌ கட்சி என்றும்‌ தூற்ற ஆரம்பித்தார்கள்‌. என்ன தூற்றியும்‌ புதிய கட்சிக்குக்‌ கூட்டம்‌ அதிகமாகிவிட்ட தால்‌ அதை வேறு விதத்தில்‌ ஒழிக்கக்‌ கருதி, பார்ப்பனரலிலாதார்களிலே சிலரை--உத்தியோகதீதிற்குதி தக.தி இல்லாத ஆட்களையும்‌ தனி சுயநலவா திகளையும்‌, போ துமான புகீதியில்லாத ஆட்களையும்‌ பிடித்து மற்றொரு பார்ப்பனரல்லாதார்‌ கட்சியொன்று ஆரம்பித்‌ க-- அதாவது அவர்கள்‌ *தென்‌ இந்தியர்‌ நல உரிமைச்‌ சங்கம்‌? என்று பேர்‌ வைத்தால்‌, இவர்கள்‌ அதை வேறு வார்‌ கீதையில்‌ சென்னை மாகாண மக்கள்‌ சங்கம்‌ ? என்று பேரிட்டு, இதிலும்‌ வருப்புவாரிப்‌ பிரதிநிதித்க வம்‌ கொடுப்பதாயும்‌, பார்ப்பனர்‌ களைச்‌ சேர்ப்பதில்லை என்றும்‌ கொள்கைகள்‌: வைதீக, இராஜவிசுவாசத்தை மாத்திரம்‌ மாற்றி, சங்கதீதை நடத்தினார்கள்‌. கடைசியாக அந்தப்‌ புதிய இயக்கமும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌துவத்தைப்‌ பலமாக வலியுறுத்‌ தியவுடண்‌: பார்ட்பனர்கன்‌ தாங்களாகவே அதை அழித்துவிட்டு, அதிலிருந்த சில ஆட்களை கொண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிராகப்‌ பிரசாரம்‌ செய்ய வைதீசார்கள், இதிலிருந்துதான்‌ காங்கிரசில்‌ ஒத்‌ துழையாமையில்‌ இருந்த பார்ப்பனரல்லாதாருக்குள்ளும்‌ அபிப்பிராய பேதம்‌ தொடங்கலாயிற்று। [* குடி அரசு -தலையங்கம்--19-4-1931] இந்தியர்களின்‌ அடிமைத்‌ தன்மைக்கும்‌, இழிநிலைக்கும்‌, மதமும்‌, சாதியும்‌, வகுப்பம்‌ அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும்‌, வெறிகளும்‌, சடங்குகளும்‌ இவற்றிற்காக ஒருவரை ஒருவர்‌ அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும்‌. இதன்‌ காரணமாய்‌ மக்கள்‌ வலுவிழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று, நடைப்‌ பிணங்களாகவும்‌ பகுத்தறிவற்ற மிருகத்‌ தன்‌ மையிலும்‌ கேவலமாகவும்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌. இதற்கு உதாரணமாக சென்னை மாகாணம்‌ எடுத்துக்‌ கொண்டால்‌, சுமார்‌ 3 கோடி மக்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ 385 சாதிகளாகவும்‌ மற்றும்‌ பல உள்பிரிவு சாதிகளாகவும்‌ பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள்‌. நாளேற நாள்‌ நாகரிகத்தின்‌ காரணமாகவும்‌ சல்வ தலையின்‌ காரணமாகவும்‌ இன்னும்‌ அதிகமான சாதிப்‌ பிரிவுகளும்‌ ஏற்படும்‌. நிலையிலேயே தேசம்‌ போய்க்கொண்டிருக்கின்றதே தவிர, ஒன்றுபடத்தக்க முயற்சியே அறிகுறியோ இல்லை। இந்தியாவில்‌ 8-ல்‌ ஒரு பாகம்‌ கொண்ட சென்னை மாகாணத்திலையே 385 சாதிகள்‌ என்றால்‌, மீதி 7 பாக மக்கட்தொகையில்‌ எத்தனை சாதிப்‌ பிரிவுகள்‌ இருக்கக்கூடும்‌!இந்த சாதிப்‌ பிரிவுகள்‌ மாத்திரமல்லாமல்‌ உயிரினும்‌ தொத்திதும்‌, முக்கியமாய்‌ கருதவேண்டியதானஐய்‌ பாஷைப்‌ பிரிவுகள்‌ எவ்வளவு!www.thamizham.net - Freebook No 3026 918 பெரியார்‌ ஈ. வெ. ரा. சிந்தனைகள்‌ இவ்வளவு சாதியும்‌ தாய்‌ பாஷையும்‌ தங்களுக்குள்‌ பிரிக்கப்பட்டு இருக்கின்றன. என்று மாத்திரம்‌ நினைகொண்டிருக்காமல்‌, தங்களுக்குள்‌ ஒன்றுக்கொன்று உயர்வு-தாழ்வு என்று எண்ணிக்கொண்டிருக்கின்‌ற உள்‌ எண்ணமும்‌, வெளி நடவடிக்கைகளும்‌, வெறுப்பும்‌, துவேஷமும்‌ எவ்வளவு?இவற்றையெல்லாம்‌ கவனிக்காமலும்‌, இதை நேர்படுத்த முயற்சிக்காமலும்‌ யாரோ சில சோம்பேறிகளும்‌ சுயநலக்காரரும்‌"தேசியம்‌" என்று சொல்லி, மக்கள்‌ கண்களில்‌ மிளகாய்ப்‌ பொடியைப்‌ போட நினைத்தால்‌, நாடு எப்படி கூஷிமம்‌ அடையும்‌! கொஞ்ச நாளைக்கு மாத்திரம்‌தான்‌ இந்தத்‌ தேசிய வயிற்றுப்‌ பிழைப்பு, வியாபாரம்‌, நடத்திமுடியுமே யொழிய கிது என்றும்‌ நிலைத்திருக்க முடியாது. வர்க்கப்புவாதம்‌ சொல்லக்கூடாது என்‌ பதன்மூலம்‌ ஏதாவது சில பயங்காளிகளையும்‌, வேறு வழியில்‌ பிழைக்க வழியற்ற தேசியவாதிகளையும்‌, உத்தியோகம்‌-பதவிப்‌ பிரியர்‌ களையும்‌ மிரட்டலாமேயொழிய, வகுப்புப்‌ பிரிவுகளாலும்‌ உயர்வு-தாழ்வு விதிவாசங்‌ களாலும்‌ உள்ள கஷ்டத்தையும்‌ கேட்டையும்‌ ஒழிக்க முடியுமா? வர்க்கவாதம்‌, மதவாதம்‌, சாதிவாதம்‌ பேசி, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பவர்‌ களால்‌ தேசத்தின்‌ விடுதலை கெட்டுப்போகின்றது என்று திப்பிலி, தோற்றம்‌, சதகுப்பை இவைகளெல்லாம்‌ பேசவும்‌ எழுதவும்‌ தொடங்கிவிட்டதைக்‌ கண்டு நாம்‌ சிறிதும்‌ இலட்சியம்‌ செய்யவில்லை. அந்தப்படி பேசும்‌, எழுதும்‌ யோக்கியர்களில்‌ 100-கு அரைப்‌ பேராவது தங்கள்‌ மதத்தையும்‌, உள்‌ மதத்தையும்‌, சாதியையும்‌, வகுப்பையும்‌ விட்டுவிட்டவர்கள்‌ உண்டா என்று பந்தயம்‌ கட்டிக்‌ கேட்கின்றோம்‌. ஆகவே, தேசியம்‌ என்பதும்‌, தேசியப்‌ பிழைப்பு என்பதும்‌ மக்களை எவ்வளவு அயோக்கியர்‌களாக்கவும்‌ செய்து விடுகிறது?எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம்‌, ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட? தா, பின்பு--அவன்‌ தனது மதம்‌, சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில்‌ என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்‌?வகுப்பு வாதம்‌, மதவாதம்‌, சாதிவாதம்‌ கூடாது என்கின்ற யோக்கியர்கள்‌ ஒருவ ராவது மதத்தையும்‌, சாதியையும்‌, வகுப்பையும்‌ அழிக்கச்‌ சம்மதிக்கிறார்களா?அது மாத்திரமல்லாமல்‌, பார்ப்பனர்‌ முதல்‌ பறையர்‌ வரை அவரவர்‌ வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும்‌ என்‌ கொர்களே ஒழிய, ஒருவராவது சாதிமத வகுப்புகளைக்‌ குழி தோண்டிப்‌ புதைக்க வேண்டும்‌ என்று சொல்லுகின்றவர்களைக்‌ கண்டுபிடிக்க முடியுமா?வகுப்பையும்‌, மதத்தையும்‌, சாதியையும்‌ ஒருபுறம்‌ காப்பாற்றிக்கொண்டு--மந்தொரு புறத்தில்‌ சாதி, மத, வகுப்புப்‌ பிரতிநிதித்துவம்‌ கேட்பதை அயோக்கியத்தனம்‌ என்று சொன்னால்‌, அப்படிச்‌ சொல்வது ஆயிரம்‌ மடங்கு அயோக்கியத்தனமும்‌, இரண்டாயிரம்‌ மடங்கு இழிதன்‌ மையும்‌, வஞ்சகத்‌ தன்மையும்‌ இரோகத்‌ தன்மையும்‌ ஆசாதா என்‌ பதாடு இது தங்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌, வாழ்வுக்கும்‌ என்ன வேண்டுமானாலும்‌ செய்யலாம்‌ என்கின்ற கீழ்மக்கள்‌ தன்மையல்லவா அது? தேசம்‌, உயிரினங்களுக்குப்‌ பொதுவானதாகும்। தேச ஆட்சியும்‌ மக்களுக்குப்‌ பொதுவானதாகும்‌. எந்த மனிதனுக்கும்‌ ஆட்சியில்‌ அவன் து கிஷ்டத்தைத‌ தெரிவிக்கவும்‌, ஆட்சியில்‌ பங்குபெறவும்‌ உரிமை உண்டு என்பதை எந்த மூடனும்‌ மறுக்க முடியாததாகும்‌. ஏதோ சில வஞ்சககாரர்‌களது செல்வாக்குக்‌ காலத்தில்‌ அவர்களது கோசக்கில்‌ விழுந்த முட்டான்‌ மன்னர்‌களான, ஒழுக்க ஈனமுள்ள அரசர்கள்‌ காலத்தில்‌ ஏற்பட்ட அக்கிரமங்‌களும்‌, கொடுங்கோன்மைகளாலும்‌ சாதி த வகுப்பு ஆணவங்கள்‌ ஏற்பட்டு, ஒரு சாதி மத வகுப்பை, மற்றொரு சாதிமத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும்‌, ஒரு சாதிமত வகுப்பு உழைப்பில்‌ மற்றொரு சாதிமত வகுப்பு சோம்பேறியாய്‌ இருந்துக‌கொண்டு உண்டு வாழும்‌ படியாயும்‌ செய்யப்பட்டு விட்டதனாலேயே, எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லா அரசாட்சிகளும்‌ அப்படிப்பட்ட வஞ்சகரளுக்கு உதவியாகவே இருக்க வேண்டுமா என்றும்‌, யாரோ சிலருக்குப்‌ பிழைப்பதற்கு வேறு வழியில்லாததனாலேயே அந்த ஈனர்களுக்குக்‌ கூலியாய்‌ இருக்கும்‌ இழிதகைமையை மற்றவர்‌ களும்‌ அடைய வேண்டுமா? ஏதாவது ஒரு மனிதன்‌, தன்னுடைய மதம்‌ சிறுபான்‌ மையானது என்றும்‌, தன்‌ னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும்‌, தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டது என்றும்‌ சொல்லி, அதன்‌ காரணமாக ஆட்சியில்‌ தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத‌ தெளிவாய்ச்‌ சொல்லி, "என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்து விடு!" என்று சொல்வதில்‌ என்ன தப்பு? இதற்குப்‌ பதில்‌ சொல்லாமல்‌ அப்படிக்‌ கேட்பது"குலாம்‌ தன்மை?" என்றும்‌, தேசத்‌ அரோகத்‌ தன்மை" என்றும்‌ சொல்லுவதானால்‌ அப்படிச்‌ சொல்லுபவர்களை எப்படிச்‌ சொல்லுவது? "வயிற்றுப்‌ பிழைப்புக்கு எச்சில்‌ இலை பொறுக்கும்‌ இழிதன்மை?" என்று ஏன்‌ சொல்லக்கூடாது? தன்‌ பங்கைத‌ தனக்குக்‌ கொடு என்று கேட்டவுடன்‌ கொடுக்க மறுத்த குடும்பங்கள்‌ எல்லாம்‌ நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும்‌ மறுத்து ஏமாற்றப்‌ பார்‌ த்தால்‌ கண்டிப்பாக அந்த நாடு கேடுவது திண்ணம்‌. [* குடிஅரசு 1-தலையங்கம்‌--8-11.1931] வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்‌ தைக்‌ கோருவதே பார்ப்பனரல்லாத சமூகத்தின்‌ (ஜஸ்டிஸ்‌ கட்சி) அரசியல்‌ கிளர்ச்சியாகவும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்‌ தை எதிர்ப்பதே பார்ப்பன சமூக (காங்கிரஸ்‌ கட்சி) அரசியல்‌ கிளர்ச்சியாகவும்‌ இருந்துவருகின்றது என்பதை அனேக ஆதாரத்‌ துடன்‌ எடுத்துச்சொல்லலாம்‌. இன்று இந்நாட்டின்‌ மதங்களின்‌ பேரால்‌ உள்ள இந்து, முஸ்லிம்‌, கிறிஸ்துவ, சீக்கிய ஸ்தாபனங்களும்‌ வகுப்புக்களின்‌ பேரால்‌ உள்ள மேல்‌ சாதி, நடு சாதி, கீழ்‌ சாதிகள்‌ என்று சொல்லப்படும்‌ பார்ப்பனர்‌, பார்ப்பனரல்லாதார்‌, தாழ்த்தப்பட்டவர்‌ கள்‌ என்று சொல்லப்‌ பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்‌ தையே கண்‌ ணாகக்கொண்டு கிளர்ச்சிகள்‌ செய்வதை யாரும்‌ மறுக்கமுடியாது. [* குடி அரசு ?-தலையங்கம்‌--1-9.1935] 1939 ஆம்‌ வருஷத்‌ தில்‌ காங்கிரஸ்‌ ஆட்சியில்‌ தயாரிக்கப்பட்ட இம்‌ மாகாண சர்க்கார்‌ நிர்வாக அறிக்கையில்‌ உள்ள உத்தியோக பட்டியலில்‌ குறிப்பிட்டிருக்கும்‌ புள்ளி விவரம்‌:சம்பளம்‌ (உத்தியோகம्) பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் 1. கெஜட்டட्‌ ஆபீசர்‌ என்னும்‌ சற்றேறக்குறைய மாதம्‌ ரூ. 300-க்கு மேல्‌ 5000 ரூபாய्‌ வரை சம்பளமுள्ள நீதி நிर्வாக இலாக्கா பெரிய உத्தியோகங்களில्‌: 609 9982. மாதம्‌ ரூ. 100-க्கு मेற्पட्ट उत्तीयोगங्களिल्‌: 1091 2492 3. माथम्‌ रु. 35-क्कु मेріपट्ट குमाস्தா मुथलिय उत्तीयोगङ्गळिल्‌: 9183 8042 4. माथम्‌ रु. 35-क्कुक्कु कीजப्पट्ट पियून्‌, पंका इजुच्चल्‌, एडुपिडि वेलै आकिय उत्तीयोगङ्गळिल्‌ माथ्थिरम्‌: 1513 33662ஆகவே, ப்‌ புள்ளி விவரங்களிலிருந்து மேல்‌ வேலைகளில்‌ கொழுத்த சம்பளங்களுள்ள வைகளில்‌, 100-க்கு 3 பேராய்‌ உண்ண பார்ப்பனர்கள்‌ சரி பகுதிக்கு மேலாகவும்‌,ஒன்றுக்கு இரண்டாகவும்‌ இருந்துவருவதும்‌ கீழ்த்तर, இழிவான, குறைந்த சம்பள உத்तியோகங்களில்‌ பெரும்பான்மை மக்களாய்‌ பார்ப்பனரல्லाதாசே ஆயிரக்कணக்காக இருந்துவருவதும்‌ விளங்கும்‌. இப்படி இருந்தும்‌ நாம्தாம्‌ உத्திய़ோக வேட்டைக்கார்‌ ஆகம्‌, பार्ப्पनर्‌ தாம्‌ तেशीयवादीगलाय्‌ तेशथिरुक्कु०ग्कच्‌ शकलमुम्‌ तियागम्‌ सेय्த तुरवीगळागु विळम्परम्‌ सेय्यपडुगिरതु. [थिरुवारुरिल्‌, 24, 25-8 1949-ल्‌. ज़स्टिस्‌ कट्टि मनाटुथ्‌ तळेमयुरै--कुडि अरसु? 25-8-1940] कडेशियाय नान्‌ कुरुवतु नमक्कु अझिवयुम्‌ कीझथ्तनमैयुम्‌ वसथैनमै यायुम्‌ कोडुक्‌ रण इथ सातीगळ्‌ ओझिन्दु, मक्कळुक्कच्‌ समनाय तनमै वरुम्‌ वरै; इप्पोतै पिर्पट्ट वगुप्पिनरुक्कु अरिvu வలर्न्दु नागरीकम्‌ अडैन्दु अरसीयलिल्‌ कलन्दुकोळवथिरुकक्‌ गलवि, उत्तियोगम्‌ मुथलियवैगळिल्‌ अवरवरळ इन्निकोइ अडतै तयुंथपडी विगिथासीरम्‌ अलिक्‌ eppडवेंडुम्‌ एन्पतुथान्‌. इन्थ नाट्टिल्‌ पार्पपनरगल्‌ 100-क्कु 3 पेराय् आयुम्‌ आदिथ्‌ तिरावीडरगल्‌ 16 पेराय्‌, पार्ट्पनरल्लातार्‌ 100-क्कु 72 पेराय् इरुक्किरार्कळ्‌. इन्थ एणिक्कै पडी गाने अवरवरळुक्कु उत्तियोग विगिथास्सारम्‌ कोडुक्कवेंडुम्‌! अथै विट्टुविट्टुथ्‌ तकुथै, तिरमै एन्र पेराइच्‌ सोल्ली पल कुरैकळिल्‌--"एल्लावरुम्‌ नानै एडुत्तुकोळ्वेन्‌, उनक्कु ओन्रुमिल्लै" एन्रु पार्पपनर्‌ गल्‌ कूरिनाल्‌, अगै नाम्‌ एप्पडि ओत्तुक्कोळ मुडियुम्‌? ओरु कूट्टु वियापारथिल्‌ कडेशiyल्‌ वरुगिर इलापथिल्‌ अवरवरगल्‌ पोट्ट मुथलुक्कु एरीरवाथुганे पगु पिरिक्कवेंडुम्‌? अथै विट्टु, एल्लावरुम्‌ ओरु वन एडुथुक्कोळ्वतु एन्पतु एन्न नियायम्‌? नम्मवर्‌ गळुक्कुळे साथियिनpडै वेंडुमेन्रАल्‌ एडुत्तुकोळ्लटु. एन्‌? इथैк् कूरुगिरेन्‌ एन्रал्‌, साथीगळै ओझिक्कामल्‌ अवैगळै विट्टु वैथुक्‌ कोंडु, इथिले मट्टुम्‌ साथिथ्‌ तनमै कुडातु एन्पतिले एथावु अर्थम्‌ करुक्किरतא? नाम्‌ वरि कोडुक्किनром्‌. नमक्कुथ्‌ तकुंथपडी कोडुक्कव 3பராயும்‌ இருக்கிறார்கள்‌. இந்த எண்ணிக்சைப்படி காணே அவரவர்களுக்கு உத்தியோக விகிதாச்சாரம்‌ கொடுக்கவேண்டும்‌ 1 அதை விட்டுவிட்டுத்‌ தகுதி, திறமை என்ற பேரைச்‌ சொல்லி பல குறைகளில்‌--* எல்லாவற்றையும்‌ நானே எடுத்துக்கொள்வேன்‌, உனக்கு ஒன்றுமில்லை? என்று பார்ப்பனர்‌ கள்‌ கூறினால்‌, அகை நாம்‌ எப்படி ஒத்துக்கொள்ள முடியும்‌? ஒரு கூட்டு வியாபாரதீதில்‌ கடைசியில்‌ வருகிற இலாபத்தில்‌ அவரவர்கள்‌ போட்ட முதலுக்கு ஏற்றவாதுகானே பங்கு பிரிக்கவேண்டும்‌ ₹ அதைவிட்டு, எல்லாவற்றையும்‌ ஒருவ8ன எடுதீதுக்கொள்வது என்பது என்ன நியாயம்‌ ? நம்மவர்‌ களுக்குள்ளேயு b சாதியின்படி யே வேண்டுமென்றால்‌ எடுத்துக்கொள்ளட்டும்‌. ஏன்‌: இதைக்‌ கூறுகிறேன்‌ என்றால்‌, சாதிகளை ஒழிக்காமல்‌ அவைகளை விட்டு வைத்துக்‌ கொண்டு, இதிலே மட்டும்‌ சாதித்‌ தன்மை கூடாது என்பதிலே ஏதாவது அர்த்தம்‌ கருக்‌ கிறதா? நாம்‌ வரி கொடுக்கின்றோம்‌. நமக்குத்‌ தகுந்தபடி கொடுக்கவேண்‌ நம்‌ என்று கேட்பது வகுப்புவாதமா 1 சுயராஜ்யம்‌ வந்தபின்‌ உத்தரவு போடட்டுமே-சாதி கில்லை யென்று. அதை விட்டுவிட்டு, மதச்‌ சார்பற்ற சர்க்கார்‌ என்று விளம்பரப்படுத்திக்கொண்டு, ஸ்டாம்பில்‌ கோபுரத்தை; நடராசர்‌ உருவத்தை வைதீதக்கொண்டிருப்பது என்றால்‌ என்ன நிடாயம்‌ ₹ 100-க்கு 80 பேராக இருக்கும்‌ நமகீகு 45 விகிதம்தான்‌ உதீதியோகம்‌. ஆனால்‌ 100-கீகு 3 பேராய்‌ இருக்கும்‌ பார்ப்பனருக்கு 15 விதம்‌ கொடுக்கிறார்கள்‌. நமக்கு ஆனுக்கு $ வீதம்‌, பார்ப்பனருக்கு மட்டும்‌ ஆளுக்கு 5 வீதமா$ இதைக்‌ கேட்பது வகுப்பு வாதமா? [குன்னத்தில்‌, 2-4-1950 ல்‌ செஃற்பொழிவு--4 விடுதலை 1 9-4.1550] நாம்‌ நம்மடைய உரிமைகளைப்‌ பெறுவது என்றாலே என்ன அர்த்தம்‌ என்றால்‌, நம்முடைய உரிமைகளைப்‌ பறித்து அனுபவித்து வருகிற எதிரிகளின்‌ ஆதிக்கம்‌ அழிவு என்றுதான்‌ ௮) தீதம்‌ ஆகும்‌. அவர்களுடைய அழிவின்மீதுதான்‌ நாம்‌ நம்முடைய உரிமை களைப்‌ பெறமுடியும்‌. அந்த அளவுக்கு அவர்கள்‌ நம்மீது நம்‌ உரிமைகளைப்‌ பெறுவதறி கில்லாமல்‌ ஆதிக்கம்‌ பெற்று இருக்கிறார்கள்‌. ஆனால்‌, இந்தக்‌ காரியம்‌ சுலபமானதல்ல] சாதாரணமாகச்‌ சாதிதீது விடலாம்‌ என்கிறதான தன்மையில்‌ இல்லை. இது மிகப்பெரிய காரிடம்‌ என்‌ பதோடல்லாமல்‌ மிகமிகப்‌ பயங்கரமான--பலர்‌ பலிடாக வேண்டிய காரியமாகும்‌. நம்முடைய எ தீரிகளுக்கு கிருக்கிற வசதிகளும்‌, பக்கபலமும்‌ மிகமிக ஏராளமான வைகள்‌. மதமும்‌, கடவளும்‌, சாஸ்தீரங்களும்‌ $ ஆட்சியும்‌, அதனைச்‌ சார்ந்தவைகளும்‌ அவர்கள்‌ பக்கம்‌ இருக்கின்றன என்‌ பதன்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3026 வகுப்புரிமை 931 தம்முடைய எதிரிகளைப்‌ பாதுகாப்பதற்கு ஆகவே, நம்முடைய எதிரிகளின்‌ ஆதிக்கத்தை நிலைநிறுதீதுவதற்காக வென்றேதான்‌ அவைகளோடுகூட சர்க்காரும்‌ இருந்துவருகிறது. ' எதிரீதீதுப்‌ போராடுகிற நம்‌ எதிரிகளுக்கு ஒற்றுமை அதிகம்‌ ) நமக்கு எவ்வித பலமும்‌ கிடையாது ] நமக்குள்‌ ஒற்றுமையும்‌ கிடையாது; இரோகிகளும்‌ அதிகம்‌, ஆனாலும்‌ நாம்‌, பலமிக்க வலுவுற்றிருக்கும்‌ நம்முடைய எதிரிகளை எதிர்தீதுப்‌ போராடியாக வேண்டும்‌. இதற்கு மனதீதுணிவு வேண்டும்‌, (வாடிப்பட்டியில்‌, 20-5-1951- சொற்பொழிவு! விடுதலை! 30-5-1951) இந்தியா சாதிப்‌ பிரிவாக அமைந்த நாடு. இந்த சாதி, மதத்தின்‌ அடிப்படையிலும்‌, மத தரீம அடிப்படையிலும்‌ இருநீது வருவ துடன்‌, ஆட்சிக்கொள்கையும்‌ ¢ சாதி-மத-தர்ம அடிப்படையில்‌ கைவைக்கக்கூடாது? என்ற தன்மையில்‌ இருந்து வருகிறது. இது மாதீதிரமல்லாமல்‌, பல நாடுகள்‌ சேர்ந்த உபகண்டமாக இந்தியா இருப்பதால்‌, நாடுகளின்‌ உரிமைகளும்‌ பாதுகாக்கப்படவேண்டியதாய்‌ இருக்கிறது. வெகுகாலமாக இந்திய மக்களுக்குக்‌ கல்வி அறிவும்‌, உரிமை உணர்ச்சியும்‌ இல்லாம லிருந்த காரண தீதினால்‌ கையில்‌, சூழ்ச்சியில்‌, ஏமாற்றும்‌ சக்தியில்‌ வலுத்த கூட்டத்தினர்‌ சகல துறைகளையும்‌ தங்கள்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ வைத்துக்கொண்டு சாதியில்‌, கீழ்த்‌ தரத்தில்‌ உள்ள 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்களை 100-க்கு 3 பேராக உள்ள மக்கன்‌ மத தர்ம காரணமாய்‌ மேல்சாதி ஆக நேர்ந்த வாய்ப்பை வைதீதுக்கொண்டு, எந்த விதத்திலும்‌ தலைதூக்கவிடசமல்‌ அமுத்தி வைத்துக்கொண்டே வந்தார்கள்‌. அன்னியன்‌ ஆட்சி காரணமாய்‌ ஏதோ ஒருவகையில்‌ கல்வியும்‌ உரிமையும்‌ பெறத்‌ தகீக உணர்ச்சி கொண்டுவிட்டப்டியால்‌, போராடிப்‌ பெறவேண்டிய தகுதிக்குத்‌ தமிழர்கள்‌. வந்துவிட்டார்கள்‌. தமிழருக்கு என்றைய தினம்‌ இந்த உணர்ச்சி ஏற்பட்டதோ அன்று முகல்‌ பார்ப்‌ பனர்‌ அறிவிழந்து அள்ளிக்குதிதீது, அவர்கள்‌: வசமிருந்த எல்லா ஆதிக்கத்தையும்‌ பாழாக்கி வருகிறார்கள்‌. தமிழ்நாட்டில்‌, தமிழர்கட்கு வகுப்பு உணர்ச்சி ஏற்பட்ட காலமான 1920ஆம்‌ ஆண்டு முதல்‌ நாட்டில்‌ ஒழுக்கம்‌, நாணயம்‌, அமைதி, கண்ணியம்‌, நீதி, நேர்மை முதலிய எல்லர நற்குணங்களையும்‌ ஒழியும்படி செய்துவிட்டார்கள்‌. யோக்கியன்‌, அயோக்கியன்‌ என்ற பேதமே கில்லாமல்‌ செய்‌.துவிட்டார்கள்‌. மனிதனுக்கு மனிதன்‌ தான்‌ எப்படிப்பட்ட ஈனதி தன்மையான காரியங்களைச்‌ செய்தாவது வாழவேண்டியதுதான்‌ மனிதப்‌ பண்பு என்று: ஆக்‌ விட்டார்கள்‌. - ஆண்களோ; பெண்களோ யாரும்‌ ஒழுக்கத்தைப்பற்றியோ, நாண யத்தைப்பற்றியோ சிந்திப்பது முட்டான்‌ தனமென்றே ஆக்கிவிட்டார்கள்‌. ~ . இன்றைய நிலைமைச்‌ ஒரு கிராணுவ ஆட்சி ஏற்பட்டுச்‌ சர்வாதிகார அரசு ஏற்‌ பட்டால்‌ ஒழிய, மக்களுக்குப்‌ பாதுகாப்பு ஏற்படாது ; நல்வாழ்வு ஏற்படாது என்கின்ற நிலையை உண்டாக்கிவிட்டார்கள்‌. காரணம்‌; ¢ தங்கள்‌ நிலை பாதுகாப்பாய்விட்டது ] மற்ற எவன்‌ எகீகேடு கெட்டால்‌ தான்‌ நமக்கென்ன 1? என்கின்ற முடிவுதான்‌. இப்பொழுது இந்த ரண்டு ஆண்டு காலமாக இந்தியாவில்‌ நாடு முற்றும்‌ ஒவ்வொரு நாட்டிலும்‌ எளிதில்‌ அடக்கமுடியாத காலித்தனங்கள்‌ தாண்டவமாடுகின்‌ றன, அதுவும்‌, உலக அறிவு அற்ற, பொறுப்பு அற்ற இளைஞர்களைக்‌ கொண்டு துவக்கச்செய்து, காலிகளை ஏராளமாகச்‌ சேர்தீதுக்கொண்டு காலிதீதனங்கள்‌ நடைபெறச்‌ செய்துவருகிறார்கள்‌. 1686—116 ‘ 922 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ மனுதரீமதீதிற்கு மாறான தன்மையைக்‌ காங்கிரஸ்‌ கொள்கையாகக்‌ கொண்டவுடன்‌ நாட்டை அன்னியன்‌ வசப்படுதீதியாவது, தங்களைப்‌ பாதுகாதீதுச்கொள்ளதி துணித்து விட்டார்கள்‌. நாட்டில்‌ இமயம்‌ முதல்‌ குமரிவரை உள்ள எல்லாச்‌ செல்லாக்‌ காசுகளையும்‌, கீழ்த்தர மக்களையும்‌, சமுதாய எதிரிகளையும்‌, எதைச்‌ செய்தாவது வயிறு பிழைக்குநீ தன்மையில்‌ உள்ளவர்களையும்‌ தேடிப்பிடிதீ.துத்‌ தங்கள்‌ வசமாகீகிக்கொண்டு, பேடி யுத்தம்‌ நடத்துகிறார்கள்‌. இந்த நிலையில்‌ பொறுப்பும்‌, நேர்மையும்‌ உள்ள மக்கள்‌ எல்லாம்‌ பயநீதுகொண்டும்‌ மறைந்துகொண்டும்‌ வாழவேண்‌ டியவர்கள்‌ ஆவிட்டார்‌ கன்‌. நாட்டின்‌ நிலைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு காட்டூவ தானால்‌, அண்மையில்‌ நடந்த தேர்தலையே பபர்க்கலாம்‌. தேர்தலில்‌ அபேட்சகர்‌ ஒரு லட்சம்‌, ஒன்றரை லட்சம்‌) இரண்டு லட்சம்‌ ரூபாய்வரை செலவு செய்து இருப்ப துடன்‌, இட்படிச்‌ செலவு செய்தஉர்கள்‌. சிலர்‌ தோற்றும்‌ போயிருக்கிறார்கள்‌ என்பதும்‌, சில காலிகள்‌ மதர்தலில்‌ நின்ற தன்மூலம்‌ 10, 20. 30 ஆயிரம்‌ ரூபாய்‌, ஒரு லட்ச ரூபாய்வரை பணம்‌ சேர்தீதுக்கொண்டார்கள்‌ என்று கூடச்‌ சொல்லும்படியான அளவுக்குக்‌ காரியம்‌ நடந்‌ திருக்கிறது என்கிறார்கள்‌. காமராசரைதீ தோற்கடிப்பதற்காக இரண்டரை இலட்சம்‌, மூன்று இலட்சம்‌ செலவு ஆயிற்று என்று சொல்லுகிறார்கள்‌ 1 இந்த நிலைபற்றி நான்‌ சொல்லுவது அ?பட்சசர்களைப்‌ பொறுதீ3தா, கட்சிகளைப்‌ பொறுத்3தா, அரசியல்‌ தன்மையைப்‌ பொறுதீ3தா மாத்திரம்‌ அல்ல) மக்களைப்‌ பொறுத்துமேதான்‌ கூறுகிறேன்‌. இப்படிப்பட்ட நாட்டில்‌ பொதுத்தொண்டு, அரசியல்‌ தொண்டு, சமுதாயத்தொண்டு என்று எதைச்‌ செய்கிறது என்பது நமக்குத்‌ தோன்றவில்லை. முதலாவது, நம்மைத்‌ திருத்திக்கொண்டுதான்‌ எந்த வேலையையும்‌ சிந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலை இப்படியே இருக்குமானால்‌, நமது எதீர்காலம்‌ மிகமிக மோசமாகப்‌ போய்விடும்‌. ஆனதால்‌, இப்போது உள்ள வசதியைக்கொண்டு நமது வகுப்பு வி 8தொசீசார உரி மையை நாம்‌ முதலில்‌ பெற்று ஆகவேண்டும்‌. அதற்குப்‌ பல சங்கடங்கள்‌ ஏற்படலாம்‌ என்றாலும்‌ எதிரிகள்‌ கையாளும்‌ எல்லா முறையையும்‌ நாம்‌ கையாளப்‌ பின்‌ வாங்கக்‌ கூடா 5l மற்றும்‌, மூடநம்பிக்கைகளை ஒழிக்கும்‌ வேலையில்‌ நாம்‌ தீவிரமாய்‌, அதிதீவிரமாய்‌ ஈடுபட்டாக 3வண்டும்‌.. 30 ஆண்டுகளுக்கு முன்‌ நாம்‌ சென்ற அளவில்‌ நமது சுய மரியாதைக்‌ கொள்கைகளைப்‌ பரப்புவதில்‌ கவலை எழிதீதுக்கொள்ள வேண்டும்‌. கிதன்‌. மூலம்தான்‌ பாமர மக்கள்‌, இளைஞர்கள்‌ நம்மிடம்‌ பற்றுக்கொன்ளுவார்கள்‌. அரசியல்‌ பணிக்குக்‌ கருதீது வேற்றுமை, கொள்கை வேற்றுமை போட்டி உண்டு மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு இவை கூறுக்கிடாது) பர்ப்பனரும்‌, &மி?டஷன்‌ பார்ப்பனரும்‌ தவிர, மற்ற மக்கன்‌ யாவரும்‌ நம்முடன்‌ சேருவபர்கள்‌ ) ஆதரவளிப்பார்கள்‌ $ அதற்கு இது தக்க சமயம்‌ $ தக்க வாய்ப்பு என்றே கருதுகி3றேன்‌. நாம்‌ இந்த எண்ணம்‌ கொண்டுதான்‌ காங்கிரசை ஆதரித்‌ தாம்‌. ஆனால்‌, காங்கிரஸ்‌ நம்மை ஆதரிக்கவில்லை; சிறிதுகூட ஆதரிக் வில்லை. அரசியல்‌ தன்மையில்‌ நெ நங்‌ கிளதால்‌ பாமர மக்கள்‌ நம்மீது பற்றுக்கொண்டிருந்தம்‌ நம்மை ஆதரிக்கவில்லை. கடைசியாய்ச்‌ சொல்லுகிறேன்‌. எனக்கு வயது 88. &னி நான்‌ எவ்வனவு நாளைக்கு இருக்க ஆசைப்படமுடியும்‌ 1 எவ்வளவு நாளைக்குத்தான்‌ இருக்க முடியும்‌! என்‌ நிலை எனக்குதி தெரிவும்‌. அதனால்தான்‌ சொல்லுகிறேன்‌, வகுப்புரிலமை பெற்றே ஆகவேண்டும்‌ என்று. [ விடுதலை !-தலையங்கம்‌--38-3-1967] வகுப்புரிமை 923 பதவிகள்‌ வழங்குவதில்‌, உத்தியோகம்‌ வழங்குவதில்‌ அரசாங்கம்‌ எநீதசி சரதியாருக்கும்‌, எந்த மதத்தினருக்கும்‌ பாரபட்சம்‌ காட்டக்கூடாது. ஒவ்வொரு சாதிக்கும்‌, ஒவ்வொரு மதத்திற்கும்‌ அதைச்‌ சேர்ந்த மக்கன்‌ எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ அந்த எண்ணிக்கை விகிதப்படி பதவி, உத்தியோகம்‌ முதலியவைகளை வழங்கவேண்டும்‌. தகுதி, திறமை என்பதெல்லாம்‌ எல்லா சாதி-மக வகுப்பிலும்‌ சமமாக இருந்து வருகின்றன. ரொம்பவும்‌ தாழ்த்தப்பட்ட, பிற்‌ படுகிகப்பட்ட வகுப்புக்கள்‌ என்பவை களுக்குத்‌ தகதியிலேயே சலுகை காட்டப்பட்டு வருகிறது ) அதுவும்‌ சட்டப்படியே காட்டப்‌ பட்டு வருகிற து. இப்படிக்‌ காட்டப்பட்டு வருவதால்‌ அதன்‌ காரணமாய்‌ நிர்வாகம்‌, நாணயம்‌, பண்பு, நேர்மை ஆகியவற்றில்‌ ஒன்றுக்கொன்று பேதம்‌ காணும்படியாக எதுவும்‌ தென்படவில்லை. மேல்‌ சாதியாரில்‌, மேல்‌ நிலையிஃ அம்‌. சி. எஸ்‌. (1.௦.8 )b உள்ளவர்களில்‌ நாணயக்‌ குறைவு, ஒழுக்கக்‌ குறைவு, பண்புக்‌ குறைவு இருந்திருக்கிறது என்றால்‌, அது பெருவாரி எண்ணிக்கையுள்ள மற்ற சாதி வகுப்பாரை விடச்‌ சிறு எண்ணிக்கையுள்ள பார்ப்பனச்‌ சாதியில்தான்‌ அதிகமாக இருந்‌ துவந்திருக்கிறது. அதுபோலவே, கூடுதலாக எண்ணிக்கை யுள்ள இந்து மதக்காரர்களைவிடக்‌ குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள்‌, கிறிஸ்த வர்கள்‌ என்கின்ற மதஸ்தர்களில்தான்‌ அதிக விகிதாச்சாரப்படி நடந்திருக்கிறது. சலுகை, சிபாரி ௬, அந்தந்த இனதீகாரின்‌ பிரவேசம்‌, மேல்‌ பதவி களில்‌, நீதிபதிகளில்‌ அந்த இனத்தார்‌ இருப்பது ஆ 9ய காரணங்களால்‌ பெருமளவு அவை மறைக்கப்பட்டு விடு 9றதானாலும்‌, பெருவாரியாக உள்ள மக்கள்‌ விகிதாச்சராதீதிற்கும்‌ அதிகம்‌ என்று சொல்லலாம்‌ ஆனாலும்‌, தயவாய்க்‌ கொள்வதனால்‌ குறைந்ததல்ல என்றே சொல்லலாம்‌. கிவை ஏன்‌ சொல்லப்படுகிறதென்றால்‌, மொத்த ஜனத்தொகை விதத்தில்‌ தகுதி திறமை, நாணயம்‌, நேர்மை, ஒழுக்கம்‌ காரணமாக எந்த சாதி, மத வகுப்பு மக்களும்‌ ஒரு சதம்‌, அரை சதவிகிதம்‌ கூட அதிகமாகவோ குறைவாகவோ பெறத்‌ தகீகவர்‌ யாரும்‌ இல்லை என்பதற்காகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில்‌ மிகச்சிறு எண்ணி $கையுடைய 100-கீகு 2, 3 என்கின்ற கிறிஸ்தவர்‌ களும்‌, பார்ப்பனர்‌ களும்‌ விகிதாச்சார எண்ணிக்கைக்கும்‌ மேல்‌, கொள்ளை விகிததீதில்‌ ஒன்றுக்குப்‌ * பத்தாக, ¢ இருபதாக? என்கின்ற அளவில பெற்றிருப்பதும்‌) அது போலவே முஸ்லிம்களும்‌ தங்கள்‌ எண்ணிக்கை விரததீதிற்குக்‌ குறைவில்லாமல்‌, அதுவும்‌ உயர்‌--டாப்‌ (Top) பகவிகளை அடைந்திருப்பகும்‌, நாட்டிற்கு உடையவனான தமிழன்‌ அதுவும்‌ மொதிகதீதில்‌ 100-க௫ூ 61, 70 விதெத்திந்கு மேற்பட்டவன்‌ த்‌ 935385 குப்‌ பகுதிகூட எட்டமுடியாமல்‌ தவித்துக்‌ கொண்டிருப்ப ஐம்‌ என்றால்‌, பதவி விணியோகதீதில்‌, உத்தியோக வினியோகத்தில்‌ எவ்வளவு மோடி; வஞ்சகம்‌; சூது, வாது நடக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது ₹ தமிழனே மெஜாரிட்டியாக, பெருவாரியாக வெறும்‌ தமிழனாகவே ஆட்சித்‌ தலைமையிலிருக்கும்‌ ஆட்சியில்‌ கப்பட நடக்கின்றது என்றால்‌, தமிழனின்‌ இிழிதன்மைக்கு இதைவிட வேறு ஆதாரம்‌ என்ன வேண்டியிருக்கிறது ₹ பதவி, உத்தியோகம்‌ வழங்குவ இல்‌ சாதி, மதம்‌ பார்க்கக்கூடாது என்பதாகச்‌ சட்டம்‌ இருக்கிறது என்றால்‌ அந்தச்‌ சட்டத்தின்‌ கருத்து குறைந்த சாதி, மத வகுப்புக்கு அதிக எண்ணிக்கை கொடுக்‌ வேண்டும்‌ என்பதும்‌ சாதி-மத வகுப்பில்‌ அதிக எண்ணிக்கை உள்ளவ! களுக்குக்‌ குறைந்த விகித பதவி-உத்தியோகம்‌ வழங்க வேண்டுமென்பதும்தரன்‌ அர்த்தமா www.thamizham.net - Free £ book 14௦ 3026 924 பெரியார்‌ ஈட வெ. ரர. சிந்தனைகள்‌ அப்படியில்லாவிட்டால், பார்ப்பனர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என்பவர்களுக்கு மாத்திரம் இவ்வளவு அதிகமாகவும், குறைவில்லாமலும் எப்படிக் கிடைக்க முடிகிறது? இது ஆட்சியிலிருப்பவர்களின் கவலையற்றதும், சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்கின்ற தன்மையுமல்லாமல் வேறு என்ன? இவற்றையெல்லாம்விட தீர்தமிழனுக்கு ஒரு பெரும் கேடு என்னவென்றால், தமிழர்களிலேயே பாடுபடாத ஒரு வர்கம் ("நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்,மண்வெட்டி தொடமாட்டோம் ஆதலால் நாங்கள் சைவர்கள்;பார்ப்பனருக்கு அடுத்தவர்கள்") நாங்கள் சமுதாயத்தில் 100-க்கு அரை (நூற்றுக்கு அரை) பேராக இருந்தாலும் எங்களுக்கும் பார்ப்பனர் போல் அதிகப் பங்கு இருக்கவேண்டும் என்று உரிமை கொண்டாடி, பார்ப்பனருக்கு அடுத்தபடியாக பதவி, உத்தியோகம் பெற்றிருப்பதாகும். இந்தக் காரணத்தால்தான் இந்தக் கூட்டம் இன உணர்ச்சி அற்று இருப்பதுடன், இவர்களுக்கு வாய்ப்பு வந்தால் பார்ப்பனர், கிறிஸ்தவர் கிடைக்காவிட்டால் மலையாளிகள் ஆகியவர்களுக்குப் பதவி வழங்கி உழைப்பாளி தமிழனை அழுதிவைப்பதுமாகும். என்னைப் பொறுத்த வரையில் நான் ஒரு சமுதாய சீர்திருத்தத் தொண்டன். இன்றல்ல, நேற்றல்ல 60, 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பனரை வெறுத்து வருபவன்(அதாவது, திரு. பா. வெ. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் இஞ்சினியராயிருந்த 1902-ல் கிருந்தே). இது நாமக்கல் திரு. இரராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கே நன்றாய் தெரியும். நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனிய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்திறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது. இந்தச் சமுதாய சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி, உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் A.B, C, D. ஆகிய கொள்கைகளைக் கொண்டேன்--கொண்டோம். ஆனதினாலேயேதான் நான் வகுப்பு வாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவமாகவே இருந்து வருகிறேன். 50, 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் முழுக் கதமிழர் ஆட்சி ஏற்படும் வாய்ப்புக் கிட்டிய பிறகு கூட தமிழன் தன்னாட்டுப் பதவி, உத்தியோகம் முதலியவைகளில் தமிழின் ஏகபோகமாக, அதிகமாக அனுபவிக்காவிட்டாலும், அவனது விகிதாச்சாரமும் அனுபவிக்க முடியவில்லையானால், தமிழன் எதில், எங்கே முன்னேறி இருக்கிறான் என்று கேட்கிறேன்?மான உணர்ச்சி பெற்றவ இருக்கிறான். ஆதலால், இன்றைய மந்திரிகள் இதுபற்றிக் கூடிப் பேச வேண்டும்!என்னென்ன முறையை, வழியைக் கொண்டால் தமிழன் தன் உரிமை பெற்றவனாக ஆகமுடியும் என்று சிந்திக்கவேண்டும். உண்மையான காங்கிரசாரன் யாராய் இருந்தாலும் அவன் தமிழனாகவே இருக்க முடியாது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பனின் கூலியாகத்தான் இருக்கமுடியும். இன உணர்ச்சி இல்லாதவனுக்குத்தான் காங்கிரசாரன் என்று பெயர், தேச பகுதன், தேசியவாதி என்றாலே (என் அகராதிப்படி) கினதி துரோகி என்பதுதான் பொருள். காங்கிரசாரர்களால்--காங்கிரஸினால் தமிழன் ஒருநாளும் சமுதாயத்தில் உயர முடியவேமுடியாது. காங்கிரஸ் என்றால் பதவிவேட்டை என்றுதான் சொல்லியுசகவேண்டும். அதன் தோற்றத்தில் இருந்து சிந்தித்தால்தான் இது விளங்கும். நான் சொல்லுகிறேன் இந்தத் துறையில் தி.மு.க. ஆட்சிக்கூட மக்களை ஏய்ப்பலாம். ஆனால், அதன் பலனை அடையாமல் இருக்கமுடியாது. ஆதலால், தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையெழுத்துப் போடும்போதும் பார்ப்பனா, கிறிஸ்தவனா, முஸ்லிமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்து. தி.து.தான் கையெழுத்துப் போடவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டால், தமிழனைப் பலி கொடுத்ததாகத்தான் பொருள். காமராசர் தமிழனுக்குக் கண் கொடுத்தார்;தி.மு.க. தமிழனை எழுந்து நடக்க செய்யவேண்டும். கண்ணிருந்தும் குருடனாய் இருப்பதில் ஜீவனுக்குப் பயன் என்ன?நான் இவ்வளவு வேண்டுகோள் செய்வது முதல் மந்திரிக்கு மாত்திரமல்ல; முக்கியமாக மற்ற பத்து மந்திரிமார்களுக்குமேயாகும். ஆகவே, கவனிக்கவேண்டும்! கவனிக்கவேண்டும்! கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும்.[குடி அரசு -தலையங்கம்--5-3-1969] கல்வித் துறையில் அரசாங்கம் பெரியபார்ப்பனியம்செய்துவருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்টिफிகேட்டில் "காலேஜில் சேர-சேர்க்கப்பட்டுக்கொள்ளத் தகுதி உடையவன் (Eligible for College Course)" என்று எழுதிக் கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, கார்யத்தில்"மார்க்கு! பார்த்து-திறமை பார்த்துப் புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்கவேண்டும்" என்று உத்தரவு போடுவதும், தராதரம் பார்க்காமல் சேர்க்கக் கூடாது என்பதும் பார்ப்பனியமா, அல்லவா?ஏனென்றால், இவை பார்ப்பனின் மூளையில் தோன்றியவைதானே?பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?கல்வித் துறை அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார்--தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்திற்குக்கூட வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு! பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு! வரி கொடுப்பதில் யார் 1-க்கு 3 ஆக, 4 ஆக வரி கொடுக்கிறார்கள்?ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்?நாளைக்கு பதவிக்கு நீர்வாகள் ஆசைப்பட்டால் ஓட்டர்கள் இதை எண்ணிப் பார்க்கமாட்டார்களா?கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்தன் பலன் இதுதானா?இராஜாஜி, பகவதசலனர் உத்தரவுகளுக்கும்-கற்றுக்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்? உத்தியோகத்திற்குத்("தகுதி-திறமை?"பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று, 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடிவருகிற நான், பாஸ் செய்தவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்க வேண்டுமென்றால், பெரிதும் "சாதி தரம்"தவிர வேறு தரம் என்ன என்று கேட்கிறேன். ("நாம்தான் பாஸ் பண்ணாதவனை"பெயில்?" ஆக்குகிறோமே!"தகுதி திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே!")நான், மனித சமுதாயத்தின்"தகுதி?","திறமை?","தரம்?" என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடையவன். அவைகளைப் பற்றி நான் எழுதிவந்த கருத்துக்கள் இன்னமும்இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்காக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்காக உழைத்து வந்தவன்--வருபவன் நான், மந்திரிகள் முதல்--அவர்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் ஆகிய் தீர வேண்டும் என்பவன். கல்வி விஷயத்தில்--இந்த ஆட்சியைவிடக் காமராசர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆகிவிடக்கூடாது. பாஸ் செய்த பின்பு--"தகுதி, திறமை, தரம்?" எதற்காகப் பார்க்கப்படுகின்றது? அது எற்காக வேண்டிய? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில்"தரமுள்ளவர்" கள்ஆல், "திறமை" உள்ளவர் கள்ஆல் ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன?"தகுதி, திறமை, தரம்?" அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அத்தியாபகம், உத்தியோகங்களிலும் வதப் உள்வகுப்பு, உட்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாக்கா மூலம் வருவாய் கடைத் திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்க வேண்டும். கண்டிப்பாய் அரசாங்க அகராதியில்"தகுதி, திறமை, தரம்?" என்ற சொற்களை எடுத்துவிடவேண்டும். இது என் சொந்தக் கருத்து: [விடுதலை -தலையங்கம்--18-7-1972] வகுப்புவாரிப் பிரதிநிதிக்கவம் பார்ப்பனுக்கு விரோதமாகிவிடுகிறது என்பதற்காக சர்க்காரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்பதை 1950-ல் எடுத்துவிட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சிகளின் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். பதவி, உத்தியோகம், சமுதாயம் ஆகியவற்றில் பின் தங்கியவர் களுக்குச் சலுகை காட்டதீ திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டத்தில் எழுதியிருக்கிறார்கள். அரசியல் திட்டத்தால் ஆதித் திராவிடருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிற்றாய் இருக்க, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதித் திராவிடர்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறிக்கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித் திராவிடர் களால்) ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வனவேச செய்தோம். அப்படி இருந்தும் பிராமணர்கள் தொல்லை, சாதி இந்துக்களால்தான் எங்களுக்குத் தொல்லை!--என்று ஆதித் திராவிடர்கள் கூறுகிறார்கள். இது நன்றியற்ற பேச்சு. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் யார்?பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிந்த நிலையும் அவர்கள் படிப்புத் துறையில் முன்னேற வழிகாட்டியவர் கள்தான் நாங்களே. ஆதித் திராவிடர்களின் கோயில், தெரு நுழைவுக்கு முதல் முதல் போராடிய வர்கள் நாங்கள் தாம். ஆதித் திராவிடர்கள் படித்தவர் களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர் களாலா?இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிஆகாமல் இருக்கவேண்டாமா?[சென்னை பெரியார் நகரில், 17-9-1956-ல் செற்பொழிவு"-4 வீடுதலை? 21-9-1956] 2. வகுப்புவாதம், சமுதாயவாதம் 1. இந்துமகாசபையும் வகுப்புவாரி உரிமையும் இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக் கப்பட்ட சாலத்திலேயே, இது பிராமண: ஆதीனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும், பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்தியதாய் முடியும் என்றும், இந்தியாவின் ஜன சமூகத்தின் நான்கில் ஒரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் முহம்மதிய சகோதரனின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக் கூடியதாகும் என்றும், இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, முহம்மதிய சகோதரர்களின் நடவடிக்கைகளைத்தான் முக்கிய காரணமாகச் சொல்லிவருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் ஒற்றுமை அடியோடு மறைந்துபோகுமே என்றும், நமது "குடிஅரசு" இன் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறோம் நாம். அது மாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில் இந்து மகாசபைக்குக் கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம், வருணாசிரம தர்ம வியாதிபர்களும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்களென்று சொல்லிக்கொள்பவர்களும், அக்கிராசனாதிபதிகளாகவும், கார்ய தர்ம நிர்ணেতাக்‌களாகவும் நியமுகம் பெற்றிருக்கிறார்கள் என்பது அனுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையிலிருக்கும்போது தீண்டாமை ஒழிய வேண்டும் என்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது, அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையைக் கூட்டி, அதிலும் உட்கார்ந்துகொண்டு தீண்டாமை வேத சம்மतமென்றும், மனுதர்ம விதி என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்வதையும் நாம் பார்க்கின்றோம். சென்னை மாகாணத்தில் இந்து மகாசபையின் கிளைத் தலைவர் ஜீமான் டி. ஆர். இராமச்சந்திர அய்யர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கையுடையவும், பிறவியில் தான் உயர் நீத பிராமண சாதி என்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக் கூடாது, கண்களில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். இத்தகைய மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டினம், கோயமுதூர் முதலிய இடங்களில் உள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு நஞ்சை வர்கள், கும்பகோணம் இந்து மகா சபையிலே்ய தீண்டாமை சாஸ்திர சம்மதமான தென்றும், அதை ஒழிக்கக் கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகம் இருக்கிறது. இப்படி இருக்க, இந்து மகாசபையை நாட்டில் பரப்புவது, எப்படி இந்து மதத்திற்கு நன்மை பயப்பதாகும்? ஓர் கொள்கைக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால், அத்தகைய கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர் களாவது அந்த ஸ்தாபனம் தாம் நடத்துகிறவர்களாய்க் நடதீதுகிறவர்களாய்‌ கிருக்‌ s வேண்டாமா ₹ ஜீமான்‌ இராமச்‌ சந்திர அய்யர்‌ தீண்டாமையை ஒழிபபமைக்‌ கொள்கையாகக்‌ கொண்ட ஒரு சபைக்குத்‌ தலைவராக அங்கம்‌ வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்‌ சபையின்‌ யோஃகியதையைக்‌ காட்டுவதாகுமா 1 அல்லது, அசசபையின்‌ புரட்டுகளைகீ காட்டுவதாகுமா 8 நமது நாட்டிலுள்ள சில வைதிகர்கள்‌ எப்படிப்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி ஆதிக்கம்‌ பெறலாஃ என்கிற கொள்மைக்கு ஸ்தாபனங்‌ கண்டுபிடிக்கக்‌ கநதீதாய்‌ இருக்கின்றார்களே யல்லாமல்‌, உண்மையாக ஓர்‌ காரியத்தைச்‌ செய்வதற்கு ஒருவரும்‌ கல்லை. இந்து மகா சபையின்‌ ஸ்தாபகர்‌ ஜீமான்‌ மாளவியா அவர்களே, தீண்டாதாரைப்பற்றிப்‌ பேசும்போது, கண்களில்‌ ஜலம்‌ விடுகின்‌ நாரேயல்லாமல்‌, பிறவியில்‌ தளக்கும்‌ தீண்டாதாருக்கும்‌ வித்தி யாசம்‌ கல்லை என்பதை ஒப்புக்கொள்வதே கல்லை. தன்னைப்‌ பெரிய வருணாசிரம தர்மியாக த்தான்‌ ஓப்புக்கொள்கின் றார்‌. முஸ்லிம்களின்‌ உபத்திரவங்‌ காரணமாக கந்து www.thamizham.net - Free £ book 14௦ 3026 928 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ மகாசபை ஏற்படுத்‌ துவதாயிற்று என்று சொன்ன 'காரணதீகால்‌, பஞ்சாபில்‌ முஸ்லிம்கள்‌: செய்கையால்‌ அதிருப்தி கொண்ட லாலா லஜபதி ராய்‌ அவர்களும்‌, இந்து மகாசபையில்‌ சேர்ந்து, கிநீது மகாசபைக்கு உழைக்க முன்வர வேண்டியதாயிற்று. இந்துக்கள்‌ அதிகமாய்‌ இருக்கிற பாகங்களில்‌, இநீதுக்களல்லாதவர்களைதீ தாழ்மை யாகக்‌ கருதுவதும்‌, இந்துக்களில்‌ பிராமணர்கள்‌ அதிகமாய்‌ இருக்கிற பாகங்களில்‌, பிராமணரல்லாதாரைதீ தாழ்மையாகக்‌ கருதுவதும்‌, முகமதியர்கள்‌ அதிகமாக இருக்கிற பாகங்களில்‌ முகமதியரல்லாதாரைத்‌ தாழ்மையாகக்‌ கருதுவதும்‌ கிறிஸ்தவர்கன்‌ அதிகமாய்‌ இருக்கிற பாகங்களில்‌, கிறிஸ்தவர்களல்லாதாரைத்‌ தாழ்மையாகக்‌ கருதுவதும்‌ பெரும்‌ பாலும்‌ உலக சுபாவமாகவே கரு துகி3றோம்‌. அதோடு கொஞ்சம்‌ செல்வாக்கு உள்ள வர்‌: களும்‌, செல்வாக்கு இல்லாதவர்களைதீ தாழ்மையாக வ கருதுவதும்‌ சபாவமாகதீதான்‌ இருக்கிறது. உதாரணமாக, இந்துக்கள்‌ முகமதியர்களையும்‌, கிறிஸ்தவர்களையும்‌ மிலேச்சர்கள்‌ என்று சொல்லுவதையும்‌, முகமதியர்களை தீ தொட்டால்‌, தொட்டபாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச்‌ சொல்லிவந்ததையும்‌ ) இந்துக்களுள்‌ பிராமணரல்லாதவர்‌: மிலேச்சர்‌ என்று அகராதியில்‌ எழுதியிருப்பதையும்‌ ] பிராமணர்‌ பிராமணரல்லாதாரை விபச்சாரி மகன்‌, வேசிமகன்‌, சூத்திரன்‌ என்று எழுதிவைதீதுக்‌ கொண்டிருப்பதையும்‌ ; முகமதியர்‌ இந்துக்களை ¢ காபிர்‌? அதாவது, ¢ நாத்திகர்‌? என்று சொல்வதையும்‌ ; கிறிஸ்த வர்கன்‌ இந்துகீகளை அஞ்ஞானிகள்‌! என்று சொல்லுவதையும்‌ தினமும்‌ பார்தீதும்‌ கேட்டும்‌ வருகின்றோம்‌. இந்தத்‌ ததீ.துவத்தினாலேதான்‌, இன்றைய தினம்‌ நாம்‌ நமது இராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச்‌ செய்து கொள்ளாமல்‌, பிரிட்டிஷ்‌ அரசாங்கமாகச்‌ செய்து வைத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. நமது பொய்க்‌ கிளர்ச்சியின்‌ பலனாக ஒருசமயம்‌ பிரிட்டிஷ்‌ அரசாங்கம்‌ தொலைந்தாலும்‌, ஜெர்மனி அரசாங்க 8மா, ஜப்பான்‌ அரசாங்கமா, அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல்‌, ஒருகாலும்‌ இந்திய அரசாங்கம்‌ ஏற்படும்‌ என்று கருதவதற்‌ 2௧ வகையில்லாமல்‌ இருக்கிறது. லாலா லஜபதி ராய்‌. அவர்கன்‌ தமது பிரசங்கத்தில்‌, முஸ்லிம்கள்‌, முஸ்லிம்‌ இராஜ்யம்‌ ஸ்தாபிக்க வேண்டும்‌ என்று ஏதோ ஒரு பத்திரிகை எழுதுவதாகவும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீ.துவம்‌ கேட்பதாகவும்‌ ஆதலால்‌ இடங்கொடுக்ககீகூடா தென்றும்‌ வெகு எளிதில்‌ சொல்லிவிட்டார்‌. இந்திய அரசாங்கதீதில்‌, இந்திய ஜனங்களில்‌ நான்கில்‌ ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகதீதாராகிய முகமதிய சகோதரர்களுக்குப்‌ பங்கு உண்டா, இல்லையா? அவர்கள்‌ ஏழரைக்கோடிப்பேரும்‌ கினிமேல்‌ இந்தியாவை விட்டுப்போக முடியுமா 9 அவர்கள்‌ சுயமரியாதையுடன்‌ வாழவேண்டுமானால்‌, கிராஜ்ய விஷயத்திலும்‌, மத விஷயத்‌ திலும்‌ நமக்குச்‌ சரியான அந்தஸ்‌ துப்‌ பெற்றுத்தானே ஆகவேண்டும்‌? வகுப்புப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாவிட்டால்‌, அவர்களுக்குச்‌ சம உரிமை கிடைத்து விடுமா? வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீதுவம்‌ முகமதியரீகளுக்கு ஏற்படாததற்கு முன்‌, முகமதி யர்கள்‌ கொஞ்சமாய்‌ உள்ள எந்தப்‌ பிரதேசதீதிலாவது, தேர்‌ தல்களில்‌ ஒழுங்கான பிரதி நிதிதீதுவம்‌ பெற்று இருக்கிறார்களா! உதாரணமாக, நம்‌ நாட்டிலுள்ள தீண்டா கார்‌ என்று சொல்லப்படுவோரை நாம்‌ எப்படி வைத்திருக்கிறோம்‌ 8 பிரிட்டிஷ்‌ அரசாங்கம்‌ ஏற்பட்டு 200 ஆண்டுகளாகியும்‌, ஒரு தீண்டாதானாவது தேர்தல்‌ கவில்‌ நின்‌ று, இந்தியனுடன்‌ போட்டி போட்டு ஜெயம்பெற சகீதியுண்டாகி இருக்கின்றானா! எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும்‌ நமது சமூகத்தில்‌ மூன்றில்‌ ஒரு பங்கு எண்ணிக்கை உள்ளவன்‌ தானே-அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய வோட்டைக்‌ கொடுத்து, நமது அரசியல்‌, சமூகவியல்‌ இவைகளில்‌ அவனுக்குன்ன பங்கைக்‌ கொடுக்கவேண்டுமென் று ீமான்‌ கள்‌ மாளவியா, லஜபதி ராய்‌ போன்ற யாராவது அனுபவத்தில்‌ காட்டியிருகி கிறார்களா? மனிதனாகப்‌ பிறந்த ஒவ்வொருவரும்‌ சம ௬தநீதிரம்‌ அடைவதோடல்லாமல்‌, உயர்‌ நீத நிலைமையையும்‌ அடைய ஆசைப்படுவது, ஒவ்வொரு ஜீவனின்‌ சுபாவமாகும்‌ www.thamizham.net - Free E 5௦011௦ 3026 வகுப்புரிமை 929 அப்படி இருக்க * உன்னுடைய சமதீதுவதீதிற்கு நானும்‌ பிரயதீதனப்படமாட்டேன்‌. நீ பிரயத்தனப்பட்டால்‌ அதையும்‌ ஒழிப்பதற்கு நான்‌ பிரயத்தனப்படுவேன்‌ ? என்று சொல்லுவது சமதீதுவ மனித தர்மமாகுமா? இந்தியாவில்‌ இந்‌ துக்களும்‌, கிறிஸ்தவர்களும்‌, முகமதியர்களும்‌, இந்குக்களினால்‌ தீண்டப்படாதவர்களுக்‌ ஒருவருக்கொருவர்‌ பரஸ்பர நம்பிக்கையும்‌, சம உரிமையும்‌ பெற்றால்‌ அல்லாது, Dp Hur விடுதலை அடையும்‌ என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம்‌ என்றே சொல்லுவோம்‌. சம உரிமையும்‌, நம்பிக்கையும்‌ ஏற்படவேண்டூமானால்‌, வநருப்புவாரிப்‌ பிரதிநிதிதீ.துவம்‌ மனம்‌ ஒப்பிக்‌ கொடுப்ப துதான்‌ ஏற்ற மருந்தாகும்‌. வகுப்புஷாரிப்‌ பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பிவிடலாம்‌ என்று நினைப்பது, சரீரத்தில்‌ ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்து போடாமல்‌ மூடிவைத்து விடுவதனால்‌ அது ஆறிப்போகும்‌ என்று நினைப்பது போல்தான்‌ முடியும்‌. கிந்துமகா சபைக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ விரோதம்‌ என்று சொல்வதனால்‌ அவ்‌ இந்துமகா சபை, நமது தேசத்தின்‌ ஒற்றுமைக்‌ குறைவுக்கும்‌, துவேஷத்திற்கும்‌ ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான்‌ சொல்லவேண்டும்‌. வகுப்புவாரிப்‌ பிர திநிதிதீதுவத்தைப்‌ பற்றி *இந்து£ பத்திரிகை என்னும்‌ பிராமணப்‌ பதீதிரிகை எழுதியிருப்பதை வாசகர்கள்‌ கவனிக்கவேண்டும்‌. அதாவது $-- *வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஜனங்களிடையே சுயமதிப்பை உண்டுபண்ணி யிருக்கிறதென்பதையும்‌, சமுதாய முன்னேற்றதீதிற்குக்‌ காரணமாய்‌ இருக்றெது என்பதையும்‌, அது ஏற்படுவதற்குமுன்‌ இராஜ்ய வாழ்வில்‌ அலட்சியமாய்‌ இருந்த வகுப்பினர்‌ களுக்கு இராஜ்ய அறிவு புகட்டுவதற்சான வசதிகளை அது உண்டுபண்ணி யிருக்கிறது என்பதையும்‌ மறுக்கமுடியாது? என்று எழுதியிருக்கிற துஃ இந்தக்‌ குணங்களை வகுப்புவாரிப்‌ பிர தி நிதித்துவம்‌ உண்டாக்கி இருக்குமேயானால்‌, இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங்‌ ளையும்விட வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதீ.துவம்‌ அதிக பலன்‌ அளித்து இருக்கிறது என்பதில்‌ சந்தேகம்‌ உண்டா ! ஆதலால்‌, இந்துமகா: சமூகமானது ஒரு கூட்டத்தாரின்‌, ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அனுகூலமானதே யல்லாமல்‌, தேசப்‌ பொது நன்மைக்கு உற்றதல்ல என்பதையும்‌ ; வகுப்புவாரிப்‌ பிரதிநிதிதி இவந்தான்‌ தேச ஒற்றுமைக்கும்‌, சமூக முன்னேற்றதீதிற்கும்‌ பரஸ்பர நம்பிக்கைக்கும்‌ சஞ்சீவி என்பதையும்‌ நாம்‌ உறுதியாகச்‌ சொல்லலாம்‌. [குடி அரசு £-தலையங்கம்‌---13-12-1923] 2. நாட்டுநலம்‌ வேறு ; வகுப்புநலம்‌ வேறா? தற்கால இராஜீய உலகத்தில்‌ எவனாவது ஒருவன்‌ தன்‌ வகுப்பு முன்னேற்றத்தைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌, மற்றம்‌ தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப்பற்றிப்‌ பேசுவதும்‌ தேசதி *ரோகமெனவும்‌, ஆண்மைத்‌ கரோகமெனவும்‌ மதிக்கப்பட்டுப்‌ போகிறது. இந்நிலை நமது “நாட்டின்‌ பிற்பட்ட வகுப்பாருடையவும்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பாருடையவும்‌ ஈன: ஸ்திதியை விளகீகுவதோடு, முற்பட்ட வகுப்பாருடையவும்‌ உயர்ந்த வகுப்பாருடையவும்‌ ஆதிக்கத்தையும்‌ எடுத்துக்‌ காட்டுகிறது. தமிழ்நாட்டில்‌ நல்லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள்‌ மிகுந்திருந்த போதிலும்‌, அவைகள்‌ முற்பட்ட வகுப்பாருக்கும்‌, உயர்ந்த வகுப்பாருக்கும்‌ பபநீதுகொண்டு வரப்பு நலனை நாடுவதும்‌, கல்லாண்மையாக்கிக்‌ கொள்ளுவதும்‌, நல்லாண்மை ஆகாதென்றும்‌ சொல்லித்‌ தங்கள்‌ பத்திரிகைகளை நடதீதி வருகின்றன. நாட்டில்‌ ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும்‌ தங்கள்‌ தங்கள்‌ ஆண்மைகளை அடையவும்‌ நாட்டு நலன்களில்‌ சமஉரிமை அடையவும்‌ மார்கீகமிஸ்லாதிருக்கும்போது தேச உரிமையும்‌, நாட்டு உரிமையும்‌ யாருக்கு? வகுப்புரிமை பெற்றால்‌ வகுப்புச்‌ சச்சரவுகளை உண்டாக்கும்‌ எனச்‌ சொல்லிக்கொண்டு பல வகுப்புரிமைகளையும்‌ நாசமாக 8 ஒரு வகுப்பார்‌ சகல உரிமைகளையும்‌ அடைந்து முன்னிற்பதை, மற்ற வகுப்பார்‌ பார்‌ தீ.துக்கொண்டு அவர்கட்கு அடிமையாயிருக்க 8வண்டும்‌ என்று சொல்லுவதில்‌ எவ்வளவு யோக்கியமிருக்கும்‌? 1686—117 \ www Miamizhamnet - Fres E book Ne 3026 930 பெரியார்‌ ஈட, வெ, ரா, சிந்தனைகள்‌ நமது நாட்டில்‌ பல வகுப்புக்களிருந்தபோ திலும்‌ ஒவ்வொரு வகுப்பையும்‌ கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா 1 தேசத்தில்‌ வரும்‌ ஆக்கம்‌ பல வகுப்புக்களுக்கும்‌ சரிவரப்‌ போய்ச்‌ சேர மார்க்கமிருக்கின்றதா என்பதைக்‌ கவனித்து, வேலை செய்தால்‌, அது தேசத்தையே முன்னுக்குக்‌ கொண்டு வந்ததாகும்‌, அப்படிக்‌ கன்றி, முன்னாலிருக்கிற வகுப்பாரை மாதீதிரம்‌ கூட்டிக்கொண்டு அவர்கள்‌ மெச்சும்படி அவர்கள்‌ பின்னாலும்‌ திரிந்துகொண்டு நாட்டுநலம்‌, நாட்டுநலம்‌ எண்று சொல்லிக்கொண்டும்‌, வகுப்பு நலத்தைத்‌ தேடினால்‌ நாடு கெட்டுப்போகும்‌ என்றும்‌, சொல்லிக்கொண்டு திரிந்தால்‌ ஒரு நாடு என்பது ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் நலதீபையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் நலத்தை மாத்திரம் பொறுத்தசா? உண்மையான நாட்டு நலத்தைத் தேடுவோர், தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும் பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமே யொழிய, வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல.வகுப்பு நலன் தேடுவது என்றால், நமது நாடு பல வகுப்புக்களையுடையதாயிருக்கிறது. ஆதலால், பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்;அப்போது அது முடியாத காரியமாகிவிடும். ஆதலால், நாட்டு நலம், நாட்டு நலம் என்று பொதுவாய்ச் சொல்லிக்கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்ட தாகவே, எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப்போய் விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்துகொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை!நாட்டு நலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்கவேண்டும். தற்போது நமது நாட்டில் பிரிவு என்று சொல்லக் கூடிய மாதிரியில், வர்ணப்பிரிமைக்கு ஆவலும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையராயும் இருப்பது மூன்று வகுப்புக்கள்தாம். அவை பிராமணர், பிராமணரல்லாத இந்துக்கள், பஞ்சமர் என்று சொல்லக்கூடிய மூன்று வகுப்பாரகள் தாம். கிழக்கு எல்லோருமே—சர்க்கார் உட்பட, நாட்டு உரிமை தேடுவார் உட்பட—எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர், தமிழர், கர்ணாटகர், கேரளர் என்கின்ற பிரிவைச் சொல்லி ജனங்களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனியாகவே பிரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரசிலும் அதுபோலவே பிரிதாகிவிட்டது. ஆதலால், அதைப்பற்றிக் கவலையில்லை. எனவே, மேற்சொன்ன மூன்று வகுப்பாரகள்தாம் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிமை வழங்கிவிட்டால் இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புக்கள் கிளம்பும் என்று சொல்லி, ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும் சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத் தகுந்த திட்டம் போடுவதற்கு முடியாதென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புக்களுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களும், ஸ்தானங்களும் அமைக்கவும் சுகரியமிருக்கிறது. 31 கோடி ஜனங்களுள்ள இங்கிலாந்து பார்லிமெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜ்யபாரம் செய்கிறார்கள், ஆதலினால், நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ஆட்சிபாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல், மூன்றாவது வகுப்புப் படிச் செலவும், 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப்போகும். அப்போது அதிகப் பட்டதிருக்காது. ஆதலால், வகுப்புரிமையைப்பற்றிப் பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமாகப் பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோம்மே யல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை.பிராமணர்களும், தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் குரங்கூதிரர்—பஞ்சமர் என கரண்டு வகுப்புக்கள் தான் இருப்பதாக ஒப்புக்கொள்ளுறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பெண்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப்பென்றும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக்கொருவர் வித்தியாசமிருப்பதாக் கற்பித்துக் கொள்ளுவதால், இம் மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாகும்படி தகு உரிமைகள் ஏற்படவேண்டியது மிகவும் அவசியமான தாகும். இம் மூவரும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு-தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்.மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள்—தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப்புரிமையைப்பற்றிய கவலையே வேண்டியதுமில்லை. வகுப்பின் பேரால் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல், பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால் அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பாரகள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்டவர்கள் என்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும்—கண்ணில் தென்படவும் அறுகர்களல்லவென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப்படுகின்றபோது, வகுப்புரிமையைக் கவனிக்காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல்லுவது நல்வாண்மையல்லாததும், அக்கிரமமில்லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். [குடி அரசு ?-தலையங்கம்—14-2-1926] 8. வகுப்புவாதமா?சமூகவாதமா? வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்பது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வரகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடி அரசு! தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அவர்களல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது; வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும்சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள். உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்கவேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்கவேண்டும்.பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு. சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது.எவ்வித சட்டமும் செய்யக் கூடாது—என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகன் அல்லாதவர்கள். பொரு.ங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களைப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்கரையும் தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும், இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமதுவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தசமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதேயாகும். [குடி அரசு!-தலையங்கம்—19-5-1929] 4. வகுப்புரிமையா?வகுப்புத் துவேஷமா? வகுப்பவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப்பற்றிச் சந்தோஷப்படத் தகவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேશ துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்து நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம். இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்த, குழந்தைகளும், குட்டிகளும், மாடங்களும், மாளிகைகளும் நாசமானாலும் கூட,'ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன்!' என்று சொல்லுவதன் கருத்து, அவன் வர்ணப் புணர்ச்சியின்—வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும். நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியா, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான்;'ஏன் சண்டை போடவேண்டும்?விட்டு விட்டுப் போக லாமே?' என்கின்ற ஞானமும்,'யார் ஜெயித்தால்தான் என்ன?'என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துக்களும் நேருவது மாத்திரமல்லாமல், இந்த நாட்டு மக்களாகிய நாம்—நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம். மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா?பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல்—ஊர் பாதீர்மமோ, குலமுறை பாதீர்மமோ சொல்லிக்கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா?அப்படிப்பட்ட வர்கள்—நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால்'வகுப்புவாதி!' என்றும்—'தேசத்துரோகி!' என்றும் உத்தியோக வேட்டைக்காரர்கள்என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும். நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்!ஆம் என்றே வைத்துக்கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ—ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால், யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புதுரோகி என்றுகூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால்—ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பான ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்?உத்தியோகம் யார் அப்பன்வீட்டுச் சொத்து? உத்தியோகத்தீ தைக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து! உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டுக்கார்க ஒரு வர்க்கர் அல்லது ஒரு வகுப்பான் தெரிந்து கொள்வான் எனில்—மற்ற நாட்டுக்கார் அல்லது ஒரு வகுப்பான் தெரிந்து கொள்வான் எனில்—மற்ற நாட்டுக்காரோ, மற்ற வர்க்கத்தாரோ, மற்ற வகுப்பாரோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்கமாட்டானா என்று கேட்கிறேன். [சென்னையில் 8-9-1940-ல் செரற்பொழிவு—விடுதலை 29-8-1950] வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது வகுப்பு நீதி வழங்குதல் என்ற கருத்தைக் கொண்டதே தவிர, தேசியத்துக்கு விரோதமானதோ, சுதந்திரத்துக்கு எதிரானதோ, விடுதலையைக் கெடுப்பதோ அல்ல என்பதே அறிவுள்ளவர் கருதுவதாகும். இந்த இந்திய உப கண்டமானது பல சாதி, பல மதம், பல வகுப்புக்கள் கொண்ட பிரதேசமாக இருந்துவருவதால் இந்திய அரசியல் ததைத்துவம் என்பது சாதியை, மதத்தை, வகுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்துவருகிறது. உதாரணமாக; காங்கிரஸ் ஸ்தாபனம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமே மத அடிப்படையைக் கொண்டதேயாகும். காங்கிரஸிற்கு முன் வடநாட்டில், பெரிதும் உத்தியோகம் ஆதிக்கம் முதலியவை பெரும்பாலும் முஸ்லிம்களின் கையில் இருக்க நேர்ந்தது. அதை மாற்றவே காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, சுயராஜ்யத்துக்காகவோ, வெளிநாயனை விரட்டுவதற்காகவோ, சமுதாய-பொருளாதார நலனுக்காகவோ அல்ல என்பது காங்கிரஸ் சரித்திரம் தெரிந்த அறிவாளிகளுக்குத் தெளிவாய் விளங்கும். மற்றும், காங்கிரஸைப்பற்றிச் சொல்லலேண்டுமானால் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழவும், பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் நன்றி செலுத்தி ஆராஜவிஸ்வாசம் காட்டவும், பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவில் நீடூழிகா நீடூழிகாலம்‌ இருந்‌ து வருவ.கம்தான்‌ காங்கிரசுக்கு முக்கிய கொள்கையாய்‌ முக்கிய தீர்மானங்களாய்‌, காங்கிரஸ்காரர்களின்‌ மக்கிய கடமையாய்‌ இருந்துவந்தது எனலாம்‌. இந்தியரின்‌ இந்தக்‌ கடமைக்குப்‌ பரிகாரமாக முஸ்லிம்‌ அல்லாதாருகீகு ஏரரளமான புதுப்புது; பெரிய பெரிய உதீதியோகங்கள்‌, பதவிகள்‌ கிடைதீதுவந்தன. பிறகு நாளாக, நாளாக இந்த உதீதியோகங்களில்‌, பதவிகளில்‌ பங்குபெற' ஆசைப்‌ பட்டே இந்திய அரசியலின்‌ பேரால்‌ நாட்டில்‌ பல கட்சிகள்‌ தோன்றின. இத்தனைக்‌ கட்சிகளுக்கும்‌ பதவியும்‌ உத்தியோகமும்‌ பங்குபோடவேண்டி இருந்தாலும்‌, காங்கிரஸ்‌ முதல்முதல்‌ ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனமானதால்‌ அது மற்ற கட்சிகளைக்‌ குறைகூறும்‌ தன்மையில்‌ தனது இலட்சியத்தையும்‌ திட்டத்தையும்‌ வெறும்‌ தந்திரத்ீதையே அடிப்படையாய்‌ வைதீகப்‌ பித்தலாட்டமாக மக்களுக்குக்‌ காட்டியதோடு, அந்த மாதிரியான பித்தலாட்ட தீன்மைகளை மற்றவர்கள்‌ பின்பற்ற முடியாமல்‌ இருக்கும்படி மிக்க கீழ்கீதரமான காரியங்களைக்‌ கையாடி, மற்ற கட்சியாருக்குத்‌ தொல்லை கொடு: பதையே முக்கிய காரியமாகச்‌ செய்துவந்த து. இதன்‌ பயனாகவே, இன்று நாட்டில்‌ சுமார்‌ 40, 50 வருடங்களுக்கு முன்பு இருந்த நாணயம்‌ ஒழுக்கம்‌, அன்பு முதலியவைகள்‌ ஒழிந்து பலாத்கார-மிருகப்பிராயதீதுக்கு மக்கன்‌ ஆளாக்கப்பட்டுவிட்டனர்‌. எது எப்படியானாலும்‌, இந்திய மக்கள்‌ இலட்சியம்‌ உத்தியோகம்‌, பதவி என்பது வளர்ந்து, பெருகி நிலை தின்று விட்டது என்பதுடன்‌, அதற்காகப்‌ டோராடி ஜனசமூகம்‌ மடியப்போகின்‌ ற து என்கின்ற நிலையை அணு8க்‌ கொண்டு போகிறது. சாதி, மத வகுப்புகளால்‌ இந்நிலை ஏற்பட்டவைகள்‌ தாமே ஒழிய, அரசியல்‌ சுதந்‌ .திரமோ, சுயராஜ்யமோ &ல்லாததால்‌ ஏற்பட்டவைகளன்‌ அல்ல. ஒரு சமயம்‌ பூரண சுயு www.thamizham.net - Free £ book No 3026 934 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ ராஜ்யம்‌ இல்லாததால்‌ என்று யாராவது சொல்லுவதானாலும்‌ அந்தப்‌ பூரண சுயராஜ்யம்‌ என்பதும்‌ இந்த சாதி மத; வகுப்புத்‌ தொல்லைகளாலேயே தடைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறது என்பதை எவரும்‌ மறுக்கமுடியாது. அம்ரோப்பிய யுதீதம்‌ நேசக்‌ கட்சியாருகீகு வெற்றியாக முடிந்தவுடன்‌, நேசகீ கட்சி யாராகிய பிரிட்டன்‌, அமெரிக்கா, பிரெஞ்சு ஆகியவர்கள்‌ தங்கள்‌ ஆ திக்கத்தின்கீழ்‌ இருக்கும்‌ அன்னிய நாடுகளை விட்டுத்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை-ஆட்சியை விலக்கிக்‌ கொள்கி றாம்‌ என்று உலகதீதாருக்கு வாக்குக்‌ கொடுத்தபடி விலகிக்‌ கொள்ளுகிற வேலையில்‌ முனைந்து விட்டாச்கள்‌. அ?மரிக்கர்‌ பிலிப்பைன்‌ முதலிய தீவுகளைப்‌ பூரண ச௬யேசீசையுள்ள நாடு களாக ஆக்கிவருகிறார்கள்‌. இதில்‌ பிலிப்பைன்‌ தீவுக்காரர்களே நம்பிக்கை கொண்டு திருப்தி அடைந்து வருகிறார்கள்‌. பிரெஞ்சுக்காரர்களும்‌ அதைப்‌ பின்‌ பற்றுகிறார்கள்‌. பிரிட்டி, ஷாரும்‌ அதற்குத்‌ தகீக ஏற்பாடுகனை உண்மை உள்ளத்தோடு நாணயமாக நடத்தி வருகிறார்கள்‌. நாட்டுக்கு நாடு அதிகார ஆதிக்கப்‌ பேராசை இல்லாமல்‌ அதைதீ தனிதீதனியாய்ப்‌ பிரித்து விட்டுவி)வதாய்‌ இருந்தால்‌ கலகமே விளைய இடமில்லை என்பதும்‌ ) வகுப்புக்கு வகுப்பு-சாதிக்குச்‌ சாதி ஆதிக்கம்‌, அதிகாரம்‌ செய்யச்‌ சூழ்ச்சி செய்யாமல்‌ விகிதாசாரம்‌, கல்வி, பொருளாதார வசதி, உத்தியோகம்‌, பதவி இருக்கும்படி செய்து விட்டால்‌, உன்‌. மாகாணக்‌ கலவரங்கள்‌, கட்சிப்‌ போராட்டங்கள்‌, அரசியல்‌ பித்தலாட்டங்கள்‌ நடப்பதற்கு இடமே ஏற்படாமல்‌ போய்விடும்‌ என்பதும்‌ உறுதியாகும்‌. உதாரணமாக; திராவிட நாட்டை எடுதீதுக்‌ கொண்டால்‌ இங்கு நடப்பது அரசியல்‌ கட்சிப்‌ போராட்டமா ₹ அல்லது, ஒரு சாதியின்‌ பேரசசை, சூழ்ச்சிப்‌ பித்தலாட்டத்தால்‌ விளைந்த விளைவுப்‌ போராட்டமா § திராவிட நாட்டில்‌ பதவிகள்‌, பெரும்‌ உதீதி3யாகங்கள்‌ பாடுபடாமல்‌ சராசரி வரும்‌ படிக்கு 100-க்கு 100 பங்குக்கு மேலாகக்‌ கொள்ளை அடித்து உயர்‌ வாழ்வு வாழும்‌ வாழ்க்கைப்‌ போகபோக்கியங்கள்‌ ஆகியவை பார்ப்பனர்‌ கன்‌ என்‌ கின்ற ஒரு சா தியாருக்கே பெரிதும்‌ ஏகபோகமாய்‌ இருந்து வருவது தேசியமாய்‌ இருக்கக்‌ காரணம்‌ என்ன? இப்படி இருந்தால்‌ மற்ற சாதி வகுப்பார்கன்‌ ஆத்திரப்பட மாட்டார்களா? கட்சி ஏற்படுத்த மாட்டார்களா 1 வங்காளம்‌, பீகார்‌, நவகாளி போல்‌ திராவிட நாடும்‌ ஒரு நாளைக்குப்‌ பார்ப்பனர்‌ திராவிடர்‌ என்கின்‌றதான கலவரங்களுக்கு அடிமை ஆகாதா? அந்தந்த சாதி வகுப்புக்கு எண்ணிக்கைக்குதீ தக்கபடி அதிகாரம்‌, பதவி, உத்தியோகம்‌, கல்வி, வருவாய்‌ முதலியவை * களைப்‌ பிரித்து விடுவதனால்‌ எப்படிதி தேசியம்‌ கெட்டுப்போகும்‌ 1 இன்று தமிழ்நாட்டில்‌ உள்ள கிறிஸ்தவர்‌ களும்‌ முஸ்லிம்களும்‌ திராவிட மக்களேயாகும்‌. அவர்களுடைய புத்தி, திறமை, சகீதியாவும்‌ திராவிடர்களுக்குச்‌ சராசரி எவ்வளவோ, அவ்வனவையே கொண்ட தாகும்‌. அப்படி இருக்க, இங்கு சென்னை மாகாணத்தில்‌ இந்த இரு கூட்டதீதாருகீகு மாத்திரம்‌ அஉர்கள்‌ ஜன எண்ணிக்கைக்குதி தகுந்தபடியும்‌-மேலாகவும்‌ முறையே அனு பவிக்கக்‌ கொடுத்துவிட்டு, திராவிட மக்களை ஏமாற்றி, ஆதித்‌ திராவிடர்களை வஞ்சித்கு, அடியோடு அவ்வளவையும்‌ பெரும்பாகமாகப்‌ பார்ப்பனர்கன்‌ மாத்திரம்‌ அனுபவிக்கக்‌ காரணம்‌ என்ன § மக்கள்‌ எண்ணிக்கைப்படியும்‌ மேலும்‌ விகிதாசாரம்‌ பெற முஸ்லிம்களுகீகும்‌ கிறிஸ்த வரீகளுக்கும்‌ சக்தி, திறமை, தகுதி இருக்கும்போது, திராவிடர்‌ களுக்கு ஏன்‌ இல்லாமல்‌ போய்விட்டது . _ [* கட அரசு?-தலையங்கம்‌--30-11-1946] 935 6. சுதந்திரத்தால்‌ பார்ப்பனர்‌ இலாபக்கொள்ளை சுதந்திரம்‌ வந்தாலும்‌ வந்தது-பார்ப்பனர்‌ களுக்குதீதான்‌. இலாபத்துக்குமேல்‌ இலாபமாக வநீதுகொண்டிருக்கிறது! வெள்ளைக்காரர்கள்‌ இருக்கும்போது நிர்வாகத்‌ திற்காக என்று அம்‌. சி. எஸ்‌. பரீட்சை வைதீதிருந்தார்கள்‌. அந்தப்‌ பட்டம்‌ பெறுவதற்கு. கலண்டனு குச்‌ சென்று படிதீதுவிட்டு வரவேண்டும்‌. அப்போதெல்லாம்‌ அந்த அம்‌.சி.எஸ்‌. பட்டதாரிகளில்‌ 50, 60 பேர்‌ பார்ப்பனர்களாகதீதான்‌ இருப்பார்கள்‌, இங்கிருந்து இலண்ட னுக்குப்‌ போய்ப்‌ படிக்க அனுப்பப்படுபவர்கள்‌ பெரும்பாலும்‌ அவர்களாகவே அருப்பார்கள்‌, ஏனெனில்‌, அவர்கள்‌ படிப்புச்‌ செலவுக்கு சர்க்கார்‌ பணம்‌ கொடுக்கும்‌. ஆதலால்‌, பார்ப்‌ பனர்களே அதைக்‌ கைப்பற்றி விடுவார்கள்‌. அதைப்‌ பெறப்‌ பார்ப்பனர்கள்‌ என்னவேண்டு மானாலும்‌ செய்வார்கள்‌, மற்ற வகுப்பாரைச்‌ சேர்க்கவேண்டுமென்றால்‌--ஒரு மலையாளி, ஒரு கிறிஸ்தவர்‌, ஒரு முஸ்லிமைச்‌ சேர்தீதுக்கொள்வார்கள்‌. இவர்களையெல்லாம்‌ சேர்த்துத்தான்‌, *பார்ப்பனரல்லாதார்‌ ! என்று கணக்குப்‌ போடுவார்கள்‌, அவர்களை மட்டும்‌ சேர்த்துக்‌ கொள்கிற காரணம்‌ என்ன வென்றால்‌, அவர்கள்‌ பதவிக்கு வந்தால்‌ அவர்களுக்குப்‌ பார்ப்பன ரல்லாதார்‌ உணர்ச்சி இருக்காது. தங்கள்‌ இன நலத்‌3தாடு இருந்துவிடுவார்கள்‌ ; பார்ப்‌ பனர்களுக்கு விரோதமாக இருக்கமாட்டார்கள்‌ ) இருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஆனால்‌, நம்மவர்கள்‌-- திராவிடர்கள்‌ வந்தால்‌ அவர்களுக்குத்‌ தன்மான உணர்ச்சி ஏட்பட்டுவிடும்‌ ; அதனால்‌, அவர்கள்‌ தங்களுக்குத்‌ தொல்லையைக்‌ கொடுத்துக்கொண்டிருப்‌ பார்கள்‌ என்றுதான்‌ நம்முடைய ஆட்கள்‌ வரமுடியாமல்‌ செய்தார்கள்‌, ஒவ்வொரு வகுப்பாருக்கும்‌ இத்தனை உத்தி யோகங்கள்தாம்‌ என்று திட்டவட்டமாக வரையறுத்‌துவிட வேண்டும்‌. அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்டு எவராவது, எந்த வகுப்பினராவது ஓர்‌ ஆன்‌ அதிகமாக உத்தியோகம்‌ பார்த்தால்‌ அவர்மீது அராக்கிரத. ஆக்கிரமிப்புக்‌ குற்றம்‌ சாட்டப்பட்டு, அவனுக்கு வேலை கொடுத்தவனுக்கு நாணயக்‌ குறைவுக்‌ குற்றம்‌ சாட்டியும்‌ அதற்கான தண்டனையும்‌ கொடுக்கவேண்டும்‌, அப்போது தான்‌ அனைவரும்‌, எல்லா வகுப்பினரும்‌ சமநிலை எய்தமுடியும்‌, இல்லையேல்‌, மேலே இருப்பவர்கள்‌. இன்னும்‌ உயர உயரப்‌ போய்க்கொண்டே இருக்க--தாழ்‌ந்த நிலையில்‌, சமுதாயத்தின்‌ அடித்‌ தளத்திலே வாதனையுறுவோர்‌, மேலும்‌ மேலும்‌ தாழ்ந்து அழிந்து போகவேண்டிய நிலைமைதான்‌ ஏற்படும்‌. . [இம்பூரல்‌ 23-8-1950-ஃ சொற்பொழிவு-! விடுதலை 3 1/-E-1950] 6. எஸ்‌. முத்தையா முதலியார்‌ வாழ்க ! நம்து மந்திரி திருஃஎஸ்‌. மூதீதையா முதலியார்‌ அவர்கள்‌ தமது ஆதிக்கத்தில்‌ உள்ள மூகீகிய இலாக்காவில்‌ வகுப்புவாரிப்‌ பிர திநிதித்துவக்‌ கொள்கையை நிலைநாட்டிவிட்டார்‌, அதாவது, பதீதிரப்‌ பதிவு திலாக்கா உத்தி $யாகதீதிற்கு நபர்களை நியமிப்பதில்‌, அடியிற்‌ கண்ட வகுப்புவாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவவேண்டும்‌ என்பதாக ஒரு விகி ஏற்டடுதீதி, அதை கவர்னர்‌ பிரபுவாலும்‌, மற்ற மந்திரிகள்‌, நிரவாக சபை அங்கத்தினர்கள்‌ முதலியவர்‌ களாலும்‌ சம்மதம்‌ பெற்று, அமுலுக்குக்‌ கொண்டுவர வேண்டியதான சட்டமாக்கி விட்டார்‌. அதாவது, பத்திரப்‌ பதிவு இலாக்கா உதீதியோகதீதிற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள்‌ 12 இருக்குமானால்‌ அவைகளில்‌ : பார்ப்பனரல்லாத இந்துக்கள்‌ என்பவர்‌ களிலிருந்து 5) பார்ப்பனர்களிலிருந்து 2) முகமதியர்களிலிருந்து 2) அய்ரோப்பிய, ஆல்‌ கிவோ-வந்தீயர்கள்‌ அடங்கிய கிறிஸ்‌ தஉர் களிலிருந்து 2) தாரி.தீதப்பட்டவர்களிலிருந்து 1 ஆக 12 நபர்களை வகுப்புவாரி முறையில்‌ தெரிந்தெடுத்து நியிக்கவேண்டும்‌ என்கின்ற சட்டம்‌ செய்திருக்கிறார்‌. எனவே, மேற்படி திலாக்காவுக்கு எவ்வளவு பேர்‌. தேவை இருந்தாலும்‌, 936 பெரியார்‌ me வெ. ரா, சிந்தனைகள்‌ இந்த விகிதப்படியே நியமிக்கப்படவேண்டு? என்பதாகும்‌. இந்தத்‌ திட்டத்தின்‌ விகிதங்‌ களில்‌ 100-க்கு 3 வீதம்‌ ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம்‌ வீதமும்‌, 100-சகு 20 வீதத்திற்கு மேற்பட்ட முகமதியர் களுக்கு 100-க்கு 16 வீதமும்‌, 100-4, 20 வீதம்‌ உள்ள தாழ்தீதப்பட்டவர்‌ கன்‌ என்கின்ற வருப்பாருக்கு 100-க்கு 8 வீதமும்‌ உதீதியோகங்கள்‌ பங்குபிரித்துக்‌ கொடுத்திருப்பதான து மிகவும்‌ அநியாயமான தென்றே சொல்லுவோம்‌. ஒருசமயம்‌ உத்தியோகதீதிற்கு ஏற்ற நபர்கள்‌ குறைவான பங்கு கொடுக்கப்‌ பட்டிருக்கும்‌ வகுப்பு களில்‌ கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம்‌ சொல்ல வருவார்‌: களானால்‌--அது, அந்த வகுப்பார்களுக்கு உத்தி யாகங்கள்‌ கொடுப்பதில்‌ அவர்களுக்குச்‌ செய்திருக்கும்‌ கொடுமையைவிடப்‌ பலமடங்கு மேற்பட்ட கொடுமையாகும்‌. என்னவெனில்‌, உத்தியோகப்‌ பங்கில்‌ மண்ணைப்‌ போட்டதல்லாமல்‌, அந்த வகுப்புகளை உத்தியோகதீ திற்கு இலாயக்கில்லை என்று அவமானப்படுகீதியதாகும்‌. இந்தத்‌ திட்டத்தை முகமதியர்‌ களும்‌, தாழ்தீதப்பட்டவர்களும்‌ ஒப்புக்கொள்வதான.து--! பிச்சை போடாவிட்டாலும்‌ கவலையில்லை, தயவு செய்து நாயைப்‌ பிடிதீதுக்‌ கட்டுங்கள்‌ !’ என்றபடி--ஒரு வீட்டில்‌ பிச்சைக்குப்போன ஒருவர்மீது வீட்டு $காரர்‌ நாயை அவிழ்தீதுவிட்டு£ கடிக்கச்சொன்ன போத--எஜமானனைப்‌ பார்த்து அந்தப்‌ பிச்சைக்காரர்‌ கெஞ்சின துபோல்தான்‌ ஆகும்‌. எனவே, யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதைத் தீர்மானிக்கும் விஷயத்தில் சற்று கஷ்டமோ அதிருப்தியோ இருந்தாலும், சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொதுச் சொத்து என்பதையும் அதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக்கொண்டு பங்கு பிரித்துக் கொடுக்கவும், பங்கு பிரித்துக்கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக்கொள்ள கடம் கிடைத்ததே--இது சமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும். இதுபோலவே, மற்ற இலாக்காக்களுக்கும் ஒரு விதி ஏற்பட்டுவிடுமானால் நமது நாட்டைப் பிடித்த கேட்டில் பெரும்பாகம் தொலைய மாறுமேற்பட்டுவிட்டது என்றே சொல்லுவோம். இந்த முறைக்கு ஒரு சமயம், அதிகப் பக்குகளுக்குப் பல வழிகளிலும் முயற்சித்துக் கொள்ளை அடித்து அனுபவித்துவரும் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டாலும், நமது அரசாங்கத்தார் ஒப்புக்கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். நமது நாட்டில் வெள்ளைக்கார ஆட்சியானது இந்நாட்டு மக்களின் இவ்வளவு அதிருப்தியின் மீதும் கவலையற்று, பொருத்தமற்ற கொடுங்கோன்மை முறையில் நடைபெற்று வருவதற்குக் காரணம்--ஒரு வகுப்பை இன்னொரு வகுப்பாரை ஏமாற்ற கையில் வலுத்தவன் காரியம் என்பதுபோல்--வலுத்தவன் ஏகபோக உரிமை அடையும் படியான மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கும் தன்மையே என்றே சொல்லுவோம். இத்தன்மையே உள் கலகங்களுக்கும்,சச்சரவுகளுக்கும், ஒற்றுமையின்மைக்கும் இடமாய் இருந்து வருகின்றது. எனவே, அவர்களுக்குள்ள இந்த சௌகரியமான தன்மையை மாற்றிவிடக் கூடியதும், அடியோடு கவிழ்த்துவிடக் கூடியதுமான வகுப்பு உரிமை கொடுத்துவிட்டால் எப்படி ஏகபோக உரிமை போய்விடுமோ அதைப் போல், ஏகபோக ஆட்சியும் போய்விடும். ஆதலால், ஏகபோக ஆட்சியை எதிர்பார்க்கும் எந்த அரசாங்கத்தாரும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோசாமர்த்தியமாகவோ, தந்திரமாகவோ, நமது திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விதி ஏற்படுத்திக் கொண்டதுபோல் மற்ற மந்திரிகளும், நிர்வாகசபை அங்கநர்களும் ஒரு விதி செய்து கொண்டார்களானால், அதிலும் முக்கியமாக--திருவாளர்கள் கிருஷ்ணன் நாயர் அவர்களும், முகம்மது உஸ்மான் அவர்களும் தங்கள் தங்கள் கலாக்காவுக்கு திரு. முத்தையா முதலியாரைப் பின்பற்றி இம்மாதிரி ஒரு ஏற்பாடு செய்து வைப்பதில் கவனம் எடுத்து வெற்றி பெறவார்களாயின்--அதுவே அவர்களது உத்தியாக காலத்தை வெற்றி பெற நடத்தியதாகும் என்பதை அவர்களுக்குத் தெரியப்பட்டிக் கொள்ளுகின்றோம். அப்படிக்கிலாமல், 30 நாளை எண்ணிக் கொண்டிருப்பதும், அது எண்ணி முடிந்தவுடன் ரூ. 5333-5-4 எண்ணுவதும், ரூ. 5333-5-4 எண்ணி ஆனவுடன்மறுபடியும் 30 நாட்களை எண்ணுவதும், மீதி ஏதாவது கொஞ்சநஞ்சம் நேரமிருக்குமானால் தங்கள் அண்ணன், தம்பி, மாமன், மைதுனன், சிநேகிதன், அடிமை முதலியவர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதிலும், மறுபடியும் தங்களுக்கு மேல் உத்தியோகங்கள் கிடைப்பதற்குத் தந்திரமும் சூழ்ச்சியும் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதில் செலவழிப்பதுமான காரியத்தைச் செய்து கொண்டிருந்தால், அவர்களை என்னவென் நழைப்பது என்பதைப் பொது ஜனங்களுக்கே விட்டுவிடுகிறோம். இந்த நிலையில் பசு சைப் பார்ப்பனப் பத்திரிகையாகிய சுதேசமித்திரன் 8-11-1928 தேதி தலையங்கத்தில்,"வகுப்புப் பித்தம் தலைக்கேறி விட்டதா?"என்கின்ற தலைப்புக்கு கொடுத்து தனது ஆதிர விஷத்தைக் கக்கியிருக்கின்றான். அதாவது எடுப்பிலேயே,"ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகளாக இருந்த காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை, எஸ். முத்தையா முதலியார் செய்யத் துணிந்து விட்டார்?"என்று ஆரம்பித்து,"இது சட்ட விரோதமான காரியமாகும்?"என்று முடித்திருக்கிறான்."மித்திரனின்சாதிப் புத்தி இதுதான் என்பது ஏற்கனவே எல்லோரும் அறிந்ததுதான். என்னவெனில், பார்ப்பனருக்கு இஷ்டமில்லாத எந்தக் காரியமானாலும் அதைப் பற்றி உலகமே முழுகிப்போய்விட்டதுபோல முதலில் கூப்பாடு போடுவார்கள்;அது பலிக்கவில்லையானால், பிறசட்டத்தைக் கொண்டுவந்து சட்டம்பேச ஆரம்பிதீ்விடுவார்கள். மனுதர்ம சட்டத்தைப் போலவே வெள்ளைக்காரர் சட்டமும் பார்ப்பனர்கள் பிழைப்புக்குத் தக்கபடி ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது--என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதால் அவர்களுக்குச் சட்டம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எப்படியும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இனி இந்த நினைப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. நம் நியாயத்திற்கு விரோதமாய் இருக்கும் எந்தச் சட்டத்தையும் மண்டையில் அடித்து உடைத்துச் சுட்டுப் பொசுக்கத் தயாராயிருக்கவேண்டும்."மித்திரன்"ஜஸ்டிஸ் கட்சியைப் புகழ்ந்ததற்கும் ஆதாரம் இல்லாமற் போவில்லை. ஏனென்றால், சென்ற தேர்தலில் பார்ப்பனர்களின் விஷமப் பிரச்சாரத்தால் ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல சூடு கிடைத்துவிட்டதால், இந்தத் தேர்தலிலும் அப்படி ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தில் சூடு பட்டவர்கள்--பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகலாம் என நினைத்துக் குட்டிக்கரணம் அடித்து வருகின்றார்கள். இதன் பலன்களில் ஒன்றுதான் திரு. கிராமசாமி முதலியார் அவர்கள், தலை ஒருவருக்கும் வால் ஒருவருக்கும் காட்டுவது.இதன் பலன்தான்--திரு. பாதேரோ அவர்கள் சமூக சீர்திருத்திற்குச் சட்டம் செய்யக் கூடாது என்றது. இதன் பலன்தான்--இப்பேர்ப்பட்ட திரு. பாதேரோ அவர்களை, பங்களூர் அரசர் சைமன் கமிட்டি மெம்பராக்கினதும் அவரை அக் கமிட்டிக்குத் தலைவராக்கினதும் ஆகும். இதன் பலன்தான்--தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் சற்றும் கவனம் கொள்ளாமல், தங்கள் ஆதிக்கத்தின் பெருமையில் அலட்சியமாயிருந்ததும் இன்னும் இதுபோன்ற பல இரகசியங்களும் ஆகும். எனவே, இதன் சக்தியில் இன்னும் நடப்பதைப் பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம். எது எப்படியானாலும்,"மித்திரன்"சாதி என்ன சொன்னாலும், ஜஸ்டிஸ் கட்சி எப்படி"அந்தர்" அடித்தாலும் நமது மக்கள் தைரியத்தை விடாமல் அதிகாரத்திலும் பதவியிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நமது வீரர் முத்தையா முதலியார் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.[குடிஅரசு --தலையங்கம்--11-11-1928]**7. ஜஸ்டிஸ் கட்சி சாதனை** வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அதிவிர காங்கிரஸ்வாதியாகவும், அதிவிர தேசியவாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சரீ பி. திய்கராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதற்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கியக் கொள்கையாகக் கொண்டதால் அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும் ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று. இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம்முயற்சியின் வெற்றியும், வெகு காலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும் அவர்களது ஆதிக்கத்திற்கும் சிறிது தடையும் ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்பிற்கும், துவேஷத்திற்கும், விஷமப் பிரசாரத்திற்கும் ஆளாகவேண்டியதாய் இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பிரிவினையையும் கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாயிற்று. எது எப்படி இருந்தபோதிலும், பல காரணங்களால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கச் செய்துவிட்டது. இந்த நிலையானது இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம்ஒழிந்துவிட்டாலுங்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசபங்கத்தார் உணர்ந்துவிட்டார்கள். ஆதலால், அக் கொள்கை இனி மாற்றப் படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது. பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்துவரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் குறைவாக இருக்கின்றது. என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக்கொள்ளப்பட்டாகிவிட்டது என்பதும் எவரும் மகிழ்ச்சியடையக்கூடிய செய்தியே ஆகும். ஹைகோர்ட் ஆட்சிக்குட்பட்ட இலாக்காக்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை கையாளப்படாததற்குக் காரணம், ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையே ஆகும். ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ள தாக இருந்து, அக் கட்சித் தலைவர்கள் பொதுநலத்தைவிட சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாக இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்களேயானால் 4-5 வருடங்களுக்கு முன்பாகவே, ஹைகோர்ட் இலாக்காவிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அமுலுக்கு வந்திருக்கும். கட்சிக்குப் பலமும் ஒற்றுமையும் இல்லாது இருந்ததால் ஹைகோர்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்த தைரியம் இல்லாமல் போய்விட்டது. என்றாலும், இப்பொழுது பொது ஜனங்களுடைய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டு விட்டதாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும் இனி அதை யாராலும் அசைக்க முடியாது என்ற நிலை பெற்றுவிட்டதாலும், இப்போது அஹைகோர்டாரையும் இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அதாவது, தென்னிந்திய இரயிலை நிர்வாகத்திற்கு 84 கினார்க்குகள் வேண்டியிருக்கிறது. அவற்றுள்பார்ப்பனரல்லாதார் 42, முகமதியர் 17, இந்தியக் கிறிஸ்தவர்கள்,ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் ஆகியவர்கள் 17, தீண்டப்படாத வகுப்பார் உட்பட மற்ற வகுப்பார் 8. ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியதாயிருக்கிறது என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். [இது 11-6-1935ந்தேதி ஜஸ்டிஸ் பத்திரிக்கையில் இருக்கிறது.]"ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது?" என்று கேட்பவர்கள், இதைச் சிறிது கவனித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டும் என்று ஆசைப்படுகிறேன். [குடிஅரசு--தலையங்கம்---23-6-1935] **8. கேபினட் மெம்பர்கள் கவனிப்பார்களா?** சென்னை அரசாங்கத்தில் உத்தியோகஸ்தர்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவிற்கு சேர்ந்தது என்று சொல்லப்படுமானாலும்--அவை பெரிதும் கவர்னர் பிரபுவின் ஆலோசனை சபை அங்கனர்களான போலீஸ், லா, ரெவினியூ ஆகிய இலாக்காக்கான் தலைவர்களுக்கே நேரிட்ட பொறுப்பும், மேற்பார்வையும், அதிகாரமுமாக இருந்து வருகின்றன. மந்திரிமார்களோ, உத்தியோக நியமன விஷயங்களில் யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்து வருகிறார்கள். மந்திரிமார்கள் கையிலுள்ள உத்தியோகங்களோ மிகச் சிலவேயாகும். அதுவும் ஸ்தல ஸ்தாபனங்கள் இலாக்கா சம்பந்தப்பட்ட வரையில்தான் அவர்களது அதிகாரம் செல்லலாம். எனினும், இந்த இலாக்காவிற்கும் செக்ரடரிகள் என்னும் ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் குறுக்கிட்டு அவற்றை மந்திரிகள் இஷ்டப்படி நடைபெறாமல் செய்யவும் இடம் வைக்கப்பட்டிருக்கின்றபடியால், அந்த அதிகாரமும் பலனற்றது என்றே சொல்லவேண்டும். மற்றபடி, போலீஸ்-லா-ரெவினியூ இலாக்காக்களுக்குத் முன்னைய மந்திரி சபையின் பயனாய் ஒரு அளவுக்கு பல வகுப்புக்களையும் கவனித்து நியமனம் செய்யும்படியான வகுப்புவாரி முறை புகுத்தப்பட்டிருந்தும், மேற்படி இலாக்காக்கான் தலைவர்களின் இலட்சியக் குறைவால் அம் முறையாலும் தக்க பயன் ஏற்படாமல், பழையபடியே அரசியல் உத்தியோகம் ஒரு வகுப்பாரின் கைக்கே--அதாவது, பார்ப்பனர் கைக்கே போகும்படியாய் இருந்து வருகின்றது. கதை நாம் துவேஷத்தின்மீதோ, பொறாமையின்மீதோ சொல்ல வரவில்லை. உண்மை நிலையைக் கண்டு புள்ளி விவரங்களைக் காட்டியே சொல்லுகிறோம். அன்றியும், சுமார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு பிரெஞ்சு பாதிரியாகிய ஆபே டுபாய் என்பவர் இந்திய அரசாங்க உத்தியோகத்தைப் பற்றியும், பார்ப்பனர்களின் யோக்கியதையைப் பற்றியும் கூறி இருப்பதைப் பார்த்தால், இன்றைய நிலையைப் பற்றி நாம் எடுத்துச் சொல்லுவதை எவரும் துவேஷம் என்று சொல்லிவிட முடியாது. அவர் குறிப்பிடுவதாவது:"இந்தியாவைத் தற்போது ஆண்டுவரும் ஐரோப்பியர்களைப் அய்ரோப்பியர்களைப்‌ பார்ப்பனர்கள்‌ வெகு சாமர்‌ தீதியமாகதீ தம்‌ வசப்படுத்திக்கொண்டார்கள்‌. பல ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார்‌ உத்தியோகங்களில்‌ உயர்‌ ந்தவைகளையும்‌, அதிக வருமானம்‌ வரக்கூடியவை களையும்‌, நீதி கிலாகீகாக்களையும்‌ மற்றும்‌ சகல பதவிகளையும்‌ பார்ப்பனர்களே கைப்பற்றி இருக்கிறார்கள்‌. உண்மையில்‌ சர்க்கார்‌ உதீதியோகங்கள்‌ எதுவும்‌ அவர்கள்‌ இல்லாவிட்டால்‌ நடவாது என்கின்ற தன்மையை உண்டாக்கிக்கொண்டார்கள்‌.? *மேலும்‌ சப்‌-கலெக்டர்களாகவும்‌, குமாஸ்தாகீகளாகவும்‌, மொழிபெயர்ப்பாளர்‌: களாகவும்‌, கஜசன்சிகளாகவும்‌, மற்ற சிப்பந்திகனாகவும்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனர்களே நிரம்பி இருக்கிறார்கள்‌, இவர்கன்‌ உதவி இல்லாமல்‌ எதையும்‌ செய்வது கஷ்டமான ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 940 Qufiurg ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ காரியமாக அவர்கள்‌ சாமர்தீதியதீதால்‌ செய்துகொண்டார்கள்‌. மேலும்‌, இந்‌ நாட்டு மக்களின்‌ அபிப்பிராயத்தையும்‌, அதைத்‌ திருப்புவதற்குள்ள வழிகளையும்‌ பார்ப்பனர்கள்‌. நன்கு அறிந்திருப்பதும்‌, பிறப்பினால்‌ பார்ப்பனர்களுக்‌ கேற்பட்ட உயரிய அந்தஸ்தும்‌ பார்ப்பனர் களுக்கு எளிதில்‌ உதீதியோகங்களைக்‌ கைப்பற்றிக்‌ கொள்வதற்கு அனுகூலமாக இருந்து வருகின்றன. மற்ற சாதியார்‌ பார்ப்பனர்களுக்கு மதிப்பையும்‌, கவுரவத்தையும்‌ கொடுப்பதனால்‌, இவர்களை உதீதியோகதீதுக்கு நியமிப்பதால்‌ அரசாங்கக்‌ காரியம்‌ பெருமையாக நடக்கும்‌ என்ற அபிப்பிராயம்‌ ஏற்பட இடமுண்டாயிற்று ; இப்‌ பார்ப்பனர்‌ களின்‌ தன்மையை ஊன்றிக்‌ கவனிக்காமல்‌ அவர்கள்மீது பூரண நம்பிக்கை வைப்பதால்‌ அய்ரோப்பியர்கள்‌ இடர்ப்படப்‌ போகிறார்கள்‌ என்பதில்‌ அய்யமில்லை. இவ்வளவு தூரம்‌ பார்ப்பனர்களுக்கு அய்ரோப்பியர்கள்‌ இடம்‌ கொடுப்பதால்‌ தங்கள்‌ உத்தியோகங்களுக்கே ஆபத்து தேடிக்கொண்டவர்களாகிதீ தங்கள்‌ உத்தியோகங்களை இழக்கக்கூடிய நிலை மைக்கு வரப்‌ போகின்றார்கள்‌. 1 (என்று 1816ஆம்‌ வருஷதீதிலேயே பிரெஞ்சுப்‌ பாதிரியாரான ஆபேடுபாய்‌ எழுதி யிருக்கிறார்‌. இது ஆலயப்பிர வேச உரிமை, 8 ஆம்‌ அதீதியாயம்‌, 52-வது பக்கம்‌) இவை போதாமல்‌, சர்‌. சி. பி. இராமசாமி அய்யர்‌ அவர்கள்‌ 6, 7 வருடங்களுக்கு முன்‌: லா மெம்பராகவும்‌, போலீஸ்‌ மெம்பராகவும்‌ இருந்த காலத்தில்‌ அந்த இரண்டு இலாகாகீ களையும்‌ பரிசுதீதமான அக்கிரகாரமாகவே ஆக்கிவிட்டுப்‌ போனார்‌. ரெவினியூ இலாக்காவில்‌ அய்ரோப்பியர்‌ இருந்துவந்தும்‌ அந்த இலாக்கா முக்காலே மூன்றுவீசம்‌ அக்கிரகாரமாகவே ஆக்கப்பட்டு வந்திருக்கிறது. கதற்கு& காரணம்‌, பெரிதும்‌ செக்கரட்டேரியேட்டில்‌ உள்ள பார்ப்பன ஆதிக்கமும்‌, சூழ்ச்சியும்‌ என்று சொல்லப்‌ பட்டாலும்‌, மந்திரிமார்‌கன்‌ எவரும்‌ இதைப்பற்றிக்‌ கவனிக்காத குற்றம்‌ ஒரு அளவுக்குக்‌ காரணம்‌ என்று சொல்லாமல்‌ இருக்கமுடியவில்லைஃ ஆறு; ஏழு வருடம்‌ சர்‌. கிருஷ்ணன்‌ நாயர்‌ லா மெம்பராய்‌ இருந்தார்‌. ஏழு, எட்டு வருட காலம்‌ சர்‌ மகமத்‌ உஸ்மான்‌ சரயயு அவர்கள்‌ போலீஸ்‌ மெம்பராகவும்‌, ஹோம்‌ மெம்பராகவும்‌ இருந்தார்‌. இவர்கள்‌ சர்‌. சி. பி. இராமசாமி அய்யர்‌ கட்டி விட்டுப்‌ போன. அக்கிரகாரக்‌ கோட்டை அஸ்திவாரத்தைக்‌ கடுகளவாவது அசைத்தார்கள்‌ என்று சொல்லு வதற்கு யோக்கியதை இல்லாமலே--ஆள்‌ ஒன்றுக்கு 3 இலட்சம்‌, 5 இலட்சம்‌ என்பதாக ரூபாய்களைச்‌ சேர்தீ.துக்கொண்டு வீடுயபோய்ச்‌ சேர்ந்தார்கள்‌. சர்‌. கே. வி. ரெட்டி நாயுடு, லா மெம்பராகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது ; இவர்‌: போகிற இடங்களில்‌ எல்லாம்‌ வகுப்பு நீதி, கிராஜபக்தி ஆகியவைகளைப்பற்றிப்‌ பேசுவதில்‌ சிறிதும்‌ குறைவில்லை. ஆனால்‌, இந்த ஒரு வருட காலத்தில்‌ நீதி இலாக்காவில்‌ எங்கும்‌ அக்கிரகாரமயமாய்‌ இருப்பதை மாற்ற ஒரு கடுகளவு முயற்சியாவது எடுதீததாகதி தெரிய வில்லை. முன்பெல்லாம்‌ சப்‌ ஐட்ஜுகளாகவும்‌, ஜில்லா ஜட்ஜுகளாகவும்‌, அய்க்கோர்ட்‌ ஐட்ஜுகனாகவும்‌ வக்கீல்‌ கூட்டங்களிலிருந்து நேரடியாக நினை தீதபடி பார்ப்பனர்க ள நியமிக்கப்‌ படவில்லையா ₹ மாதம்‌ 200, 300 ரூபாய்கள்‌ கூட வரும்படி இல்லாத வக்கில்கள்‌: பார்ப்பனர்‌ என்கின்ற காரணத்தைத்‌ தவிர வேறு எவ்வித யோக்கியதையும்‌ இல்லாமல்‌ இருந்தும்‌, ஜில்லா ஜட்ஜாகி இன்று அய்க்கோர்ட்‌ ஜட்ஜாக ஆக்கப்படவில்லையா ₹ இன்று லா டிபார்ட்மெண்டில்‌, நீதி இலாக்காவில்‌ ஜில்லா ஜட்ஜுகன்‌ இந்துக்கள்‌ 18 பேர்களில்‌ 11 பேர்கள்‌ பார்ப்பனர்கள்‌, 4 மலையாளிகள்‌, 3 பார்ப்பனரல்லாத தமிழர்களே இருப்பதும்‌ ; சப்‌-ஐட்ஜுகன்‌ இந்துக்கன்‌ 66 பேர்களில்‌ 51 பார்ப்பனர்களும்‌, 11 மலையாளிகளும்‌, 4 ரபர்களே பார்ப்பனரல்லாத தமிழ்‌ மக்களாக இருப்பதுவும்‌) 169 இந்து முன்சீப்புகளில்‌ 115 பார்ப்பனர்கள்‌; 17 மலையாளிகள்‌ போக 37 பேர்களேதான்‌ பார்ப்பனரல்லாத தமிழ்‌ மக்களாய்‌ இருப்பதும்‌ பார்‌ தீதால்‌-வகுப்பு நீதிக்காக உத்தியோகம்‌ பார்க்கும்‌ மெம்பர்‌, வெட்கப்பட வேண்டிய காரியமா, அல்லவா என்று கேட்கின்‌ றாம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3026 வகுப்புரிமை 941 லா மெம்பர்‌ தோழர்‌ சர்‌. கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள்‌ 5 வருடம்‌ மந்திரியாகவும்‌, 8 வருடம்‌ சவுத்‌ ஆப்பிரிக்கா ஏஜென்டாகவும்‌ மற்றும்‌ இப்போது இன்னும்‌ 2, 3 வருடங்‌ களுக்கு மாதம்‌ ரூ. 5333-5-4 சம்பளம்‌ வாங்கும்‌ லா மெம்பரரகவும்‌ இருந்தும்‌ இவரால்‌ இந்த சமூகம்‌ அடைந்திருக்கும்‌ நிலைமை இகுவானால்‌, * பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ என்று சொல்லப்படுவதானது அச்‌ சமூகதீதில்‌ ஏதோ இரண்டொருவர்‌ தொப்பையை நிரப்பு வதற்குதீதான்‌ பயன்படுத்தப்படுகிறது! என்று சொல்லுபவர்களின்‌ கூற்றை எப்படி மறுக்க முடியும்‌ என்று கேட்கின்றோம்‌. உண்மையைச்‌ சொல்ல வேண்டுமானால்‌, சமீப காலத்தில்‌ நடந்த இந்திய சட்டசபைத்‌ தேர்‌ தல்களில்‌ பார்ப்பனரல்லாத வக்கில்கள்‌ 100-க்கு 97 பேர்கள்‌ பார்ப்பனர்‌ களுக்கு (காங்கிரசுக்கு) அனுகூலமாகவே வேலை செய்தார்கள்‌ என்பதை எவரும்‌ மறுக்கமுடியாது பார்ப்பனர்களின்‌ உள்‌ எண்ணமும்‌, காங்கிரசின்‌ சூழ்சீசித்‌ தன்மையும்‌, நாணயக்‌ குறைவான தன்மையும்‌ பார்ப்பனர்களுக்கு வேலைசெய்த பார்ப்பனரல்லாத வக்கில்களுக்குதீ தெரியாது என்று யாரும்‌ சொல்லிவிட முடியாது. அந்தப்படி யாராவது சொன்னால்‌, அது பார்ப்பனரல்லாத வக்கீல்களை மூடர்கள்‌ என்ற சொல்வதற்கு ஒப்பாகும்‌. மற்றபடி இவர்கள்‌. ஏன்‌ பார்ப்பனர்களுக்குக்‌ கூலிகளாக இருந்தார்கள்‌ என்பதற்கு நாம்‌ காரணம்‌ சொல்ல வேண்டியதில்லை. எனவே, லா மெம்பர்‌ பார்ப்பனரல்லாத கட்சியின்‌ நன்மையைக்‌ கருதினவர்‌ என்று சொல்லப்படுமானால்‌, இந்த சர்வ வல்லமையுள்ள நீதி இலாக்காவில்‌ பார்ப்பனரல்லாதார்‌ களுக்கு நீதி வழங்கினாலொழிய மற்றபடி எப்படி அந்த வார்தீதை உண்மையாகும்‌ என்று கேட்கின்றோம்‌. ஆகவே, கனம்‌ லா மெம்பர்‌ அவர்கள்‌ குறைந்தது ஒரு 50 சப்‌ ஜட்ஜையும்‌, 10 ஜில்லா ஜட்ஜுகளையுமாவது நேரே தெரிந்தெடுக்கும்படியன ஒரு சட்டத்தைச்‌ செய்கு, பார்ப்பனரல்லாத வக்கில்களுக்குச்‌ சுதந்திர புத்ிதியை உபயோகிக்க இடம்‌ கொடுக்காத வரையில்‌, அடுத்த பொதுத்‌ தேர்தலில்‌ தோல்விக்குக்‌ கனம்‌ லா மெம்பர்‌ சர்‌. கே. வி. ரெட்டி நாயுடு அவர்களே முக்கிய காரணஸ்தராகிவிடுவார்‌. என்பதை இப்பொழுதே எச்சரிக்கை செய்துவிடுகிறோம்‌. அது போலவே, போலீஸ்‌ மெம்பர்‌ கனம்‌ பன்னீர்‌ செல்வம்‌ அவர்கள்‌ போலீஸ்‌ மெம்பர்‌ ஆனதும்‌ அனேக தோழர்கள்‌ அவர்‌ அந்த இலாகீகாவில்‌ ஏதோ பிரமாதமாய்ச்‌ சாதிதீதுவிடுவார்‌ என்று எதிர்‌ பார்தீதார்கள்‌. ஏனெனில்‌, அவர்‌ தஞ்சை ஜில்லா போர்ட்‌ பிரசி)டண்டாய்‌ இருந்த காலத்தில்‌ வேறு எந்தப்‌ பிரசிடெண்டும்‌ செய்யமுடியாத அவ்வளவு பெரிய காரியங்களில்‌ பார்ப்பனரல்லாதார்களுக்கு நீதி செய்திருக்கிறார்‌. தஞ்சை ஜிலலா பார்ப்பன ஆதிக்கம்‌ உள்ளத என்பதோடு, அ?னக தர்ம சொத்துக்களைப்‌ பார்ப்பனர்களே ஏக போகமாய்‌ வெகுகாலமாக அனுபவித்து வந்ததுமாகும்‌. அந்த ஜில்லா, இந்த மாகாணப்‌ பார்ப்பனர்களுக்கே ஒரு கோட்டையாகவும்‌ இருந்தது. அப்படிப்பட்ட ஜில்லாவில்‌ கனம்‌ செல்வம்‌ அவர்கள்‌ பெரிய மாறுதல்கள்‌ செய்து ஒரு அளவுக்கு பார்ப்பன: ரல்லா தாருக்கு மனிதத்தன்மையை உண்டாகீகினார்‌. இதை யாரும்‌ மறுக்க முடியாது. சுயமரியாதை இயக்கம்‌ கிறிஸ்துவ மதத்தைப்பற்றிப்‌ பேசாதிருந்த வரையில்‌ அச சங்கதி அக்கு உபதலைவராகவும்‌ இருந்தார்‌. இவைகளை எல்லாம்‌ உத்ீதேசித்தே அவர்‌ போலீஸ்‌ இலாக்கா தலைவர்‌ ஆனவுடன்‌ ரொம்பக்‌ காரியம்‌ செய்துவிடுவார்‌ என்று கருதி னார்கள்‌. ஆனால்‌, அவர்‌ வந்து சுமார்‌ 10 மாத காலமாகியும்‌ இனிக்‌ கொஞ்ச காலமே ஆயுள்‌ இருப்பதை உணர்ந்தும்‌ போலீஸ்‌ இலாக்கா பலமான ஒரு அக்கிரகாரமாகவே மேலும்‌ மேலும்‌ ஆகிக்கொண்டு வருவதைதீதான்‌ பார்க்க முடிகின்றதே யொழிய, சிறிதாவது நியாயதீதுக்கு ஒத்து இருக்கிறது என்று சொல்லுவதற்கே இடம்‌ ஏற்படவில்லை, வரவர * ஒட்டக்கூத்தன்‌ பாட்டுக்கு இரட்டைத்‌ தாழ்ப்பாள்‌? என்பது போல்‌ அதாவது, ஒரு ஊரில்‌ .டிப்டி சூபரிண்டென்டென்ட்‌ பார்ப்பனர்‌, இன்ஸ்பெக்டர்‌ பார்ப்பனர்‌, www.thamizham.net - Free £ book No 3026 942 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ சப்‌ இன்ஸ்பெகீடர்‌ பார்ப்பனர்‌ என்பதாகி மும்மூர்‌ தீதிகளும்‌ அவர்களாகவே ஆகிக்கொண்டு வருகிறார்கள்‌. இன்ஸ்பெக்டர்‌, சப்‌ இன்ஸ்பெக்டர்‌ உத்தியோகம்‌ சிறியதேயாயினும்‌ அவர்‌ களுக்கு இந்த வகுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டால்‌, அவர்களால்‌ எவ்வளவு விஷயங்கள்‌ செய்யக்கூடும்‌ என்பதை நினை தீதுப்‌ பார்தீதால்‌, எவருக்கும்‌ அதன்‌ தொல்லைகள்‌ நன்றாய்‌ விளங்கும்‌. இந்த கலாகீகா ஒரு சாயபு இடம்‌, அதுவும்‌ வேறு எவ்வித யோகீகியதையும்‌ முகீகிய மாய்‌ இல்லாமல்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்‌ என்‌ கின்ற ஒரு யோக்கி/ிதையை முன்னிட்டே அடைந்த ஒரு சாயபு இடம்‌ 6, 7 வருட காலம்‌ இருந்து வந்தும்‌-கின்று இவ்வளவு மோசமான யோகீகியதையில்‌ அந்த இலாகீகா இருக்குமானால்‌ அக்கட்சி உருப்ப டாததற்கு இவர்கள்‌ போன்றவர்கள்‌ தாம்‌ காரணம்‌ என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும்‌ என்றும்‌ கேட்கின்றோம்‌. பொதுஜனங்கள்‌ மாத்திரம்‌ அல்லாமல்‌, சர்க்காரும்‌-- * ஜஸ்டிஸ்‌ கட்சி ஒரு கட்டுப்பாடில்லாத (டிமாரலைஸ்டு)-10௨௨௦௨118௦4 கட்சி? என்று சொல்லவேண்டிய நிலைக்கு வந்ததற்குக்‌ காரணமும்‌ இந்த--கனம்‌ மெம்பர்களாவார்கள்‌. பார்ப்பனர்கள்‌ ஒரு சிறிய உதீதியோகதீதில்‌ இருந்தாலும்‌ ஊசி விரியன்‌ பாம்புபோல்‌ தங்கள்‌ விஷத்தைப்‌ பரப்பிக்‌ காரியத்தைச்‌ சாதிதீதுதீ தங்கள்‌ கட்சியைப்‌ பலப்படுத்திக்‌ கொள்ளுகிறார்கள்। பார்ப்பனரல்லாதார்களோ மலைப் பாம்பு கன்போல் இரை பொறுக்க மாத்திரம்தான் கவலையே ஒழிய; எதிரிகளைப்பற்றிக் காரியத்தில் கவலையே கிடையாது। அவர்கள் வயிறு நன்றாக நிரம்பிவிட்டபடியால் மற்றவர்கள் பசியைப் பற்றிக் கவலையே இல்லாமல் அஜீரணத்தோடு வீடுபோய்ச் சேர்ந்துவிடுகிறார்கள்। தோழர் கனம் பன்னீர் செல்வது என்பதின் காரியம் அப்படியிருக்காது என்றும், ஏதாவது செய்வார் என்றும், பார்ப்பனரல்லாதாரில் அவருடைய எதிரிகனும் கூட நினைத்தார்கள்। இப்படி ஆகிவிட்டது வருந்தத் தக்கதாகும்। ரெவினியூ மெம்பர் என்று சொல்லப்படும் ஐரோப்பிய மெம்பர்களோ இராஜதநீதி முறைப்படி தங்கள் காரியம் தவிர அதாவது, சர்க்காருக்கு எவ்வித கஷ்டமும் அসௌகரியமும் இல்லாமல் எப்படி நடக்க வேண்டுமோ அதைத் தவிர, மற்றபடி ஜனங்களின் கஷ்ட நிலைமை அவர்களுக்கு முக்கிய இலட்சியமாக இருப்பதில்லை। உதாரணமாக, ஐ.எம்.சி.எஸ். கலெக்டர்கள் உத்தியோகம் 57 இந்துக்கள் பார்ப்பதில்--40 பார்ப்பனர்களும், 10 மலையாளிகளும் போக; ஏழே பேர்கள் தான் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்। அதுபோலவே டிப்டி கலெக்டர்களிலும் 81 உத்தியோகங்கள் இந்துக்கள் பார்க்கிறார்கள். என்றால், அவற்றில் 45 பேர்கள் பார்ப்பனர் களாகவும், 9 பேர்கள் மலையாளிகளாகவும் போக, 27 பேர்களேதான் பார்ப்பனரல்லாத தமிழர்களாக இருக்கிறார்கள். மற்றும் இந்த இரண்டு உத்தியோகமும் பொது ஜனங்கள் மீது எவ்வளவு ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொள்ளமுடியும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை। இந்தப்படி ரெவினியூ இலாக்கா தலைமை ஸ்தானங்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள்ானால் அந்த இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன இருக்கமுடியும்? கணக்குப்பின்ளை, மணியக்காரர்கள் எந்த சாதியானாலும் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பார்கள்। ஆகவே, இந்த மூன்று மெம்பர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியுடையவும் கிளர்ச்சியினுடையவும் ஆதரவிலும் ஆமோதிப்பிலும் கிருந்துகொண்டு--அந்தச் சமூக விஷயத்தில் இவ்வளவு அலட்சிய புத்தியுடன் இருந்தால் இத் நாட்டில் ஜஸ்டிஸுக்கும், நீதிக்கும் சுதந்திரத்துக்கும் எப்படி இடம் ஏற்படும்! மத விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்றுஊசிமேல் நின்று தவஞ்செய்யும் இந்தியாவானது பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகுகூட அரசியல் விஷயத்திலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாகும்படியாக ஏற்பட்டால், மக்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை இந்த மெம்பர்களே யோசித்துப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்।ஆகவே, கனம் ரெவினியூ மெம்பர் குறைந்தது ஒரு 50 பேர்களையாவது பார்ப்பனரல்லாதாரிலிருந்தே நேராக டிப்டி கலெக்டர்களாகவும், 100 பேர்களையாவது தாசில்தார்களாகவும் தெரிந்தெடுத்து, தற்சமயமுள்ள குறைகளையாவது உடனே சரிப்படுத்தவேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். நிற்க, மூன்று மெம்பர்களும் ஒன்றுசேர்ந்து அவரவர்கள் இலாக்கா உத்தியோகங்களுக்கு ஒரு ஜாபிதா தயாரித்து, ஒவ்வொரு டிவிஷனிலும், தலைநகரங்களிலும் எல்லা உத்தியோகமும் ஒரே வகுப்பாராய் இல்லாமல்-- உதாரணமாக டிப்டி கலெக்டர் பார்ப்பனராய் இருந்தால் தாசில், மேஜிஸ்ட்ரேட் ஆகிய வேலைகளில் பார்ப்பனரல்லாதாராயும் பார்ப்பனர் போலீஸ் டிப்டி சூபரிண்டென்டாய் இருந்தால் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பார்ப்பனரல்லாதாராகவும்மற்ற இலாக்காவும் இதுபோல் கலந்து இருக்கும்படியும்வகுப்பு எண்ணிக்கையை அனுசரிதும் சரியானபடி பிரதிநிதித்வம் இருக்கும்படி செய்ய வேண்டியது அவசரமானதும் முக்கியமானதுமான கடமையாகும்। பல ஊர்களில் இருந்துவரும் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை விவர ஜாபிதாக்களில் நமக்கு வந்திருக்கும் கணக்குகளைப் பார்த்தால், சரீரத்தால் பாடுபடுகின்ற உத்தியோகங்கள் போக பாக்கி எழுத்துவேலை, மூளைவேலை முதலிய--ஜனங்களிடம் செல்வாக்குப்பெறும் உத்தியோகங்களில் 100-கு 25 கூட பார்ப்பனரல்லாதார்களுக்கு இல்லை என்று சொல்லும்படியான நிலையில் இருக்கின்றன. இதைக் கவனித்துப் பார்த்தால் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மூளையில்லையென்றோ அல்லது பார்ப்பனரல்லாதாரை நம்பக்கூடாதென்றேயோ கருதி இருக்கிறார்களா என்ன என்று தான் கேட்கவேண்டி இருக்கிறது। பார்ப்பனரல்லாத சில பெரிய பதவிகளாரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் அவர்கள் சமூகத்திற்கு விசுவாசமில்லாத துரோகிகளாய் ஆகிவிட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமேயொழிய--மூளை இல்லை என்றும், நம்புவதற்கு இல்லையென்றும் ஒழுக்கமில்லை என்றும் சொல்லும்படி பார்ப்பனர்களைவிட அதிகமாக இதுவரை பார்ப்பனரல்லாதார் எவரும் நடநீதுகொள்ளவில்லை। அரசாங்கத்தாரும் மெம்பர்களும் இதைக் கவனித்துத் தக்கது செய்யவில்லையானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம்வேறு வழியில் திரும்ப வேண்டிவரும் என்பதை எச்சரிக்கை செய்கின்றோம்। மந்திரிமார்களும் இதைக் கவனித்துத் தக்கது செய்யக் கடமைப்பட்டிருக்கிறார் கள் என்பதைச் சொல்லாமல் இருகமுடியவில்லை। [குடிஅரசு -தலையங்கம்--19-5-1935]3. வகுப்புரிமையின் வரலாறு 1. பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தேசத் துரோகமும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங் கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100-க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயணாளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது।தென்னிந்தியாவில் போலீஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுற மிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூதுமிரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது। ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல--மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலீசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்। ஆனால், உத்தியோகம்தான் பெரிதா? தேசம் பெரிதா? என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்.பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள்। உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் பேசி வரும் இரகசியம் பார்ப்பனரல்லாததேசாபிமானிகள் பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம். இன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பின்ளை குட்டிகள் பேத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இறுதिவாழ் கின்றார்கள்--வளர்க்கப்படுகின்றார்கள் என்றால் எஸ்.எஸ்.சி., ஐ.ஏ., பி.ஏ.; பி.எல்.; எம்.எல். முதலிய படிப்புக்கள் படிக்கவைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது। பார்ப்பனர்கள் சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும்--வெறும் புதிதிக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்। ஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம்--உத்தியோகத் திலேயே 100-க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நதிக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம்-- அதற்காகவே தங்கள் பின்ளைகுட்டி, பேத்துப் பிதிர்களைத் தற்புதி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம்,'உத்தியோகம் பெரிதா? தேசம் பெரிதா?'என்று உத்தியோகத்தில் 100-கு 25 பேர்கள் கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்பா, நாணயமோ; கடுகளவாவது இருக்க முடியுமா என்று கேட்பதோடு, கிதைக் கடுகளவு அறிவாவது இருக்கும் மனிதன் நம்பமுடியுமா என்றும் கேட்கின்றோம்। இந்தச் சூழ்ச்சிகளை வெகு காலமாக அனுபவத்தில் தெரிந்து அனுபவித்து வந்த சர் தியாகராயர், டாக்டர் நாயர் போன்ற மேதாவி அறிஞர்கள்தாம் உத்தியோகத்தில் விচிதாச்சாரம் கிடைக்கவேண்டும் என்கின்ற கொள்கையோடு இந்த ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்தார்களே ஒழிய, மற்றபடி வெள்ளைக்காரர்களே எல்லா உத்தியோகத்திலும் இருக்க வேண்டும் என்றோ, இந்த நாட்டை என்றைக்கும் வேறு நாட்டாரே ஆள வேண்டும் என்றோ கருதி அல்ல என்பது நமது அபிப்பிராயம்। இந்த இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்கனே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமான்மாய் இருந்திருந்தது யாரும் அறியாததல்ல। உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், ஐ.கோர்ட் ஜட்ஜுகளாகவும்; நிர்வாகசபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்। ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது இப்பொழுது கூலிக்கு மாரடிக்தம் பசீசோந்திகளுக்கும் தேசபக்தர் களுக்கும்'அரை-டிக்கட்' தேசபக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும்--ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர்--பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவனும் அறிந்ததேயாகும்। ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கன் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும், அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்। அது தேசத்து துரோகக் கட்சியாக ஆயினும் சரி; சர்க்கார் தாசர்கள்'குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமெ தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர் களுக்குப் பயந்து கொண்டு'எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் எங்களுக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இ னனீதால் போதும், நாங்களும் பெரிய தேசபக்தர் கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தாம்'என்றால் அதைவிட ஈனத் அரோகமான கட்சி உலகில் வேறு இல்லையன்றுதான் சொல்லுவோம்।['பகுத்தறிவு -தலையங்கம்--23-12-1938] 8. தென்னாட்டில் அரசியல் கிளர்ச்சி எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும் போரும் மதம், வகுப்பு, சாதி ஆகியவைகளில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக்கின்றன-- நடைபெறுகின்றன என்றுதான் சொல்லவேண்டுமேயொழிய, மற்றபடி எல்லாப் பொது மக்களின் நன்மையைப் பொறுத்தும், விடுதலையைப் பொறுத்தும் நடந்திருப்பதாகச் சொல்லுவதற்கில்லை। சாதாரணமாக, நம் நாட்டில் சிறப்பாகத் தென்னாட்டில் நடக்கும் கிளர்ச்சி அரசியல் கிளர்ச்சி என்பதாக முன்சொன்னேன். ஆனால், அது இன்று மாத்திரமல்லாமல் சரித்திர காலம் முதல் நடந்து வருகிறது. அதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், வேதம், ஸ்மிருதி, யுத்தரணம் முதலியவைகளைப் பாருங்கள். வேதம், வேதகாலம் பெரும்பாலும் வெள்ளையர்--கறுப்பர் சண்டையாகவே இந்த வதந்து இருக்கிறது என்பதை வேதம் அறிந்த யாரும் உணரலாம்।வேதத்தில் கடவுளையோ அல்லது ஆரியர் தலைவரான இந்திரனையோ பிரার்த்திக்கும் பிரার்த்தனைகள்--பிரার்த்তனைகள் எல்லாம் கறுப்பு நிறக்காரர்கன் தங்களுக்குக் கொடுமைகள் செய்கின்றார்கள் என்றும், தங்கள் சுகபோகங்களுக்குப் பங்கானிகளாய் இருக்கின்றார்கள் என்றும், தங்கள் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றார்க இருக்கின்றார்கள்‌ என்றும்‌, ஆதலால்‌ கறுப்பர்களை அடி யாடு அழிக்கவேண்டும்‌ என்றும்‌, ஒழிக்கவேண்டும்‌ என்றும்‌ பிரார்‌ தீதிப்பதசகவே காணலாம்‌. மற்றும்‌, ஸ்மிருதி என்பவைகளைப்‌ பார்த்தாலும்‌ பார்ப்பனர்‌ கன்‌ என்பவர்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும்‌ உயர்வும்‌ சவுகரியமும்‌, பார்ப்பனரல்லாதவர்கன்‌ அல்லது 1686—119 946 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ கறப்பு நிறக்சாரர்கள்‌ என்பவ! களுசீகு ஏற்படுதீதியிருக்கும்‌ கழிவும்‌ சொடுமையும்‌, அதை ஆதரிக்கும்‌ அரசர்களைதீ தவிர, மற்றவர்களைப்‌ பார ப்பனர்கள்‌ அழித்து வந்திருக்கிறதும்‌ காணலாம்‌. அது போலவே, புராணங்களைப்‌ பார்தீதாலும்‌ எங்கும்‌ பூசுரர்கள்‌-அசுரர்கள்‌ சண்டையும்‌, தேவர்கள்‌-இராட்சதர்கள்‌ சண்டையும்‌, பூதேவர்கள்‌-அரக்கர்கள்‌ சண்டையும்‌ மலிந்து கிடப்பதைக்‌ காணலாம்‌. அதே சண்டைகள்‌, கிளர்ச்சிகள்‌ ஆகியவைகள்தாம்‌ இன்று தேச பகீதர்கள்‌-தேசதீ துரோகிகள்‌ என்னும்‌ பேரால்‌ நடைபெறுகின்‌ றன. அந்தக்‌ காலதீதில்‌ புரரணங்களில்‌ நடந்ததாகச்‌ சொல்லப்படும்‌ சூழ்ச்சிகள்‌ எல்லாம்‌. இந்தக்‌ காலத்திலும்‌ இக்‌ கிளர்ச்சிக்கு நடைபெறுகின்றன. இந்திரப்‌ பட்டம்‌ பெற?வா (பார்ப்பனர்களைத்‌ தவிர) வேறு யார்‌ தவம்‌ (பாடு பட்டாலும்‌) செய்தாலும்‌, அவர்‌ களை ஒழிக்க எவ்வளவு சூழ்சீசிகள்‌--கிழிவான வஞ்சனை யான காரியங்கள்‌ செய்திருக்கிறார்கள்‌ என்பதைப்‌ பார்‌ தீதால்‌, இன்றையக்‌ காரியங்களைப்‌ பார்த்து யாரும்‌ ஆச்சரியப்பட முடியா துஃ தவம்‌ செய்பவ! களின்‌ தவத்தைக்‌ கெடுக்க அனேக தடவைகளில்‌ பெண்களை விட்டே முயக்கிக்‌ கெடுத்திருக்கிறார்‌கள்‌. இராவணனுடைய தபசின்‌ மகிமையை எவ்வளவு சூழ்ச்சி செய்து கெடுத்திருக்கின்றார்கள்‌. இரணியன்‌ தபசின்‌ மகிமையை எவ்வளவு சூழ்ச்சி செய்து கெடுதீதிருக்கிறார்கள்‌. பதீமாசூரன்‌ தவத்தின்‌ மகிமையை எப்படிப்பட்ட தந்திரத்தால்‌ கெடுதீதிருக்கிறார்கள்‌ | இவைகளெல்லாம்‌ உண்மையல்ல என்றும்‌, பொய்கீ கதைகள்‌ என்றும்‌, மிகைப்படுத்தி மாற்றிக்‌ கூறப்பட்டவை என்றும்‌ சொல்லப்படூவ து உண்மையானாலும்‌ கூட--பார்‌ ப்பன ரல்லரதாரை எப்படி நடத்தவேண்டும்‌, எப்படி வஞ்சிக்க வேண்டும்‌, எப்படி அவர்களைத்‌ தலையெடுக்க வொட்டாதபடி அழுதீதிவைக்க வேண்டும்‌, கலை எடுதீதவர்களை எப்படி ஒழிக்கவேண்டும்‌ என்பதற்கு இவை வழி கட்டியாகும்‌ என்பதை யாரும்‌ மறுக்கமுடியாது: அந்த முறையில்தான்‌ இன்று பா?ப்பனர்‌-பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற கிளர்ச்சி. அரசியலின்பேரால்‌ தேச பக்தி, தேசாபிமானம்‌ என்பதீன்பேரால்‌ நடைபெறுகிறது. இந்திய சரிதீதிரங்களினாலும்‌ சரி, புராணங்களினாலும்‌ சரி, முன்காலதீதில்‌ தேசாபி மானம்‌ என்கின்ற பேச்சே, கிளர்ச்சி8யோா இநுந்துவந்தகாகக்‌ காண்பதற்கில்லை. தேச பக்தி, தேசாபிமானம்‌ என்கின்ற வார்த்தை மேல்நாட்டிலிருந்து வந்ததாகும்‌. ட நம்நாட்டில்‌ இராஜாக்களுக்கும்‌-இரரஜாகீகளுக்கும்‌ மகதீதான சண்டைகள்‌ நடந்‌ திருக்கின்‌ றன. அது விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும்‌, ஒரு வகுப்பாஃர ஒழிக்கவுமேயல்லாது .தேச நன்மைக்கு என்று, தேசபக்தி பூண்டு அரசர்களுடன்‌ பொது மக்கன்‌ போர்‌ புரிந்தாகச்‌ சரித்திரம்‌ இல்லை. “ மேல்நாட்டுத்‌ தேசாபிமான தீதுக்கும்‌ நாம்‌ இங்கு இன்று கற்பிக்கிற அர்த்தம்‌ இருந்த தி&லை. அங்குள்ள தேசாபிமானதீதாலும்‌ தேச பக்தியாலும்‌ எந்தத்‌ தேச மக்களுக்கும்‌ விடுதலை ஏற்பட்டதாக ஆதார3மா, அனுபவமோ இருந்ததும்‌ இல்லைஃ சாதாரணமாக, இத்த நாட்டைப்‌ பாரத தேசம்‌ என்று சொல்லுவ துகூட யோக்கிய மான பெயராகாது. பரதன்‌ என்கின்‌றவன்‌ ஆண்டதால்‌ பாரத 3தசம்‌ என்று சொல்லப்படு மானால்‌, அதற்கு மூன்‌ ஆண்டவர்கள்‌ பெயர்‌ ஏன்‌ சொல்லக்கூடாது! அதற்குப்பீன்‌ ஆண்டவ/கள்‌, ஆளு$ன்றவர்கள்‌ பெயர்‌ என்ன கதியாவது₹ எந்தத்‌ தேச தீதிலாவது, எப்போதோ ஒரு காலத்தில்‌ ஆண்டவன்‌ பெயர்‌ சொல்ஃப்படுகின்றதா 1 இந்தப்‌ பெயர்‌ ஆரிய www.thamizham.net - Free £ book 14௦ 3026 வகுப்புரிமை 947 ஆதிக்கத்தைக்‌ குறிப்பதே தவிர வேறில்லை. அகீ சாலதீதிய அரசர்களை: நாம்‌ மதிப்ப தாவோ பாராட்டுவகாகவோ சொல்லுவதும்‌, பழங்கால அரசர்கன்‌ ஆட்சி போன்ற- அரசியல்‌ முறை வேண்டுமென்று சொல்லுவதும்‌ பெரிதும்‌ சுயமரியாதை அற்றதும்‌ முட்டாள்‌ தனமான துமான காரியமாகும்‌. படிங்கால அரசர்களின்‌ இராஜ விசாரணை, இராஜநீதி என்பவை என்ன என்ப தற்கு அக்‌ கால ஆ காரங்கள்‌ சரித்திரங்கள்‌ அல்லாமல்‌, அவர்களைப்போல்‌ நடிக்கும்‌ நாடகங்‌ களைப்‌ டார்தீதாலும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. உதாரணமாக, ஒரு அரசன்‌: கிராஜசபைக்கு வந்தவுடன்‌ மந்திரியை என்ன கேட்கிறான்‌ 1 ¢ பிராமணர்களுக்கு மான்யம்‌, அன்ன சதீதிரம்‌, வேத பாடசாலை (இலவசப்‌ படி ப்பு ஆகியவைகள்‌ தாராளமாய்‌ வழங்கியிருககிறாயா 1 அவர்கள்‌ மனம்‌ நோகாமல்‌ சந்தோஷதீ தோடு வாழ உதவி செய்து வருகிறாயா P என்று கேட்டுவிட்டு, ¢ மற்ற வகுப்பார்‌ பிராமணர்‌ களுக்கு இட்ட கருமப்படி நடந்து வருகிறார்களா! என்றுதான்‌ கேட்கிறானேயொழிய, வேடு என்ன? அதாவது, வருணாசிரம இராஜ்ய பாரந்தானே இதுவரை நடந்துவந்திருக்‌ கிறதே ஒழிய, வேறு என்ன ¥ . [திருச்சி) திண்டுக்கல்‌, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில்‌ பேசிய சொற்பொழிவின்‌ சுருக்கம்‌ குடிஅரசு ! 8-9-1935] நம்முடைய கட்சியாகய இந்த கென்னிந்திய நலவுரிமைச்‌ சங்கமானது 25 வருடதி திற்கு முன்பாகவே, முக்கியமாய்த்‌ தென்னாட்டுத்‌ திராவிட மக்கள்‌ அரசியல்‌, சமுதாயம்‌, கல்வி, பொநளாதாரம்‌ முகலிய துறைகளில்‌ தலையெடுக்க முடியாமல்‌ தாழ்தீதட்பட்டுக்‌ கிடக்கும்‌ நிலையிலிருந்து மீட்கப்படச்‌ செய்வதற்காகவே ஏற்படு க தப்பட்டதாகும்‌. அக்கட்சி: யினுடைய முக்யமான கொள்கைகள்‌ எல்லாம்‌ அரசியல்‌ ச முதாய விடுதலையும்‌, அரசியல்‌: தனித்‌ தொகுதிப்‌ பிரதிநிதித்துவ உரிமையும்‌, அரசாட்சி, உத்தியோகம்‌, பதவி ஆகியவை கனில்‌ வ குப்புவாரிப்‌ பிர திநிதித்துவமும்‌ ஆகும்‌. [திருவாரூரில்‌, 24 25-8-1940-ல்‌ நடந்த ஜஸ்டிஸ்கட்சி மாநாட்டின்‌ தலைமையுரை--1 குடிஅரசு! 25-8-1945] 8. வகுப்புரிமை--தோன்றிய வரலாறு நம்முடைய நாட்டிலே 1916, 1917-ல்‌ தான்‌ வகுப்புவாரிக்‌ கோரிக்கை ஆரம்பமானது என்றாலுங்கூட, வடநாட்டில்‌ வகுப்புவாரி உரிமை முழக்கம்‌ 1900-லிருத்ே எஃுப்பப்‌ பட்டது. தங்களுடைய வகுப்பின்‌ எண்ணிக்கைகீகுத்‌ி தக்கவாறு தங்களுக்கு விகிகாசி சாரப்படி எல்லாத்‌ துறை எிலேயும்‌ சேர்க்கப்பட வேண்டும்‌ என்று முஸ்லிம்கள்‌ 1900- லிருந்தே கிளர்ச்சி செய்து வந்தார்கள்‌. நம்மில்‌ பலருர்கு இந்தச்‌ சங்கதி தெரியா திருத்‌ திருக்கலாம்‌, கொஞ்சம்‌ வயதானவர்களுக்கு இதைப்‌ பற்றி நன்றாகக்‌ தெரிந்திருக்கும்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கோரி முஸ்லிம்கள்‌ செய்துவந்த கிளர்ச்சியைக” காங்கிரஸ்காரர்‌ கன்‌ எதிர்‌ தீதார்கன்‌. ஆனால்‌, அவர்கள்‌ எதீர்ப்புச்‌ சற்றும்‌ பயன்படாமல்‌ போய்விட்டதோ 3 மாத்திரமல்லாமல்‌, முஸ்லிம்களுக்காக வகுப்புவாரித்‌ திட்டத்தையும்‌ நிறைவேற்றினார்கள்‌. அப்‌5பாது இந்தியாவின்‌ மதீதிய சர்க்கார்‌ கல்கத்தாவில்‌ இருந்து வந்தது. கல்கத்தாவில்‌ பெருவாரியானவர்கள்‌ முஸ்லிம்கள்‌ என்பதால்‌, வெள்ளையர்‌ களாலீட முஸ்லிம்களுடைய கோரிக்கைகளை: மறகீகமுடியாமற்‌ போயிற்று. எனவே அவர்கள்‌ காங்கிரஸ்‌ எதிர்ப்பைப்‌ பற்றிச்‌ சிறிதும்‌ இலட்சியம்‌ கொள்ளாமல்‌ முஸ்லிம்களுக்கு வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்தார்கள்‌. எனவே, காங்கிரஸ்‌ காரர்கள்‌ 1907-% சுதேசி இயக்கம்‌? என்ற பேரால்‌ முஸ்லிம்களை: எதிர்ப்பதற்காக என்றே--அதாவது அவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட தனித்‌. தொகுதி 948 பெரியார்‌ ஈட வெட ரா, சிந்தனைகள்‌ முறை, அவர்களுச் காகச்‌ செய்த வங்காளப்‌ பிரிவினை கூடாது என்பதற்காகவே, ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்கள்‌. - நம்முடைய மக்களும்‌ பிரமாதமாக அந்த இயக்கத்தால்‌ சாதித்து விடமு௩யும்‌, தங்களுக்கு ஏதோ பெரிய இலாபம்‌ ஏற்படும்‌ என்று கருதி, ¢ சுதேசி இபக்கதீதில்‌ ! பெரும்‌. பங்கு கொண்டார்சன்‌. ஆனால்‌, அவர்களுக்கு இந்த இபக்கத்தின்‌ உள்நோக்கம்‌ முஸ்லிம்‌ களுக்கு அளிக்கப்பட்டி ருக்கும்‌ தனித்தொகுதி முறையை--பிரிவினையை ஒழிக்கவேண்டும்‌ என்பதற்காகவே. ஆரம்பிக்கப்பட்ட து என்று தெரியாது. ஏனென்றால்‌, இன்றைய தினம்‌ நம்முடைய மக்கன்‌ எப்படிப்‌ பாமர மக்களாய்‌, அரசியல்‌ என்ப2த இன்ன நு என்று தெரியாத வர்களாய்‌, யார்‌ எதைச்‌ சொன்னாலும்‌ நம்பிக்‌கொள்வது என்ற தன்‌ மையில்‌ இருப்பது போலவேதான்‌ அன்றைய தினமும்‌ இருர்து வந்தார்கள்‌. அவர்களுக்கு சுதேசி இயக்கம்‌!- அது தேச பக்தர்கள்‌ ! இயக்கம்‌ என்‌ றுதான்‌ தெரியுமே தவிர, அந்த இஃக்கத்தினுடைய உட்கருதீதும்‌, நோக்கமும்‌ தெரியாது. ஆனாலும்‌, முஸ்லிம்கள்‌ கட்டுப்பாடாக நின்று காங்கிரஸ்காரர்களுடைய பல தொல்லைகளையும்‌ எதீர்ப்பையும்‌ சமாளித்துக்‌ கொண்டு தங்கன்‌ கொள்கையில்‌ வெற்றிபெற்றார்கள்‌. 1910 ஆம்‌ ஆண்டிலேயே முஸ்லிம்களுக்கு என்று தனித்‌ தொகுதியும்‌, இந்துக்‌ களுக்கு என்று தனித்‌ தொகுதியும்‌ பிரிக்கப்பட்டது. அந்தப்படி பிரிக்க நேர்ந்தபோது 6 இந்துக்கள்‌! தொகுதி என்று பிரிக்க முடியாமற்‌ போய்‌-- முஸ்லிம்கள்‌ தொகுதி £, * முஸ்‌ லிம்கன்‌ அல்லாதார்‌ தொகுதி? என்று பிரித்தார்கள்‌. முஸ்லிம்களுக்குத்‌ தனித்‌ தொகுதி கொடுப்பதை எதிர்தீ.துவந்த காங்கிரஸ்‌ இந்தக்‌ காரியதீதினால்‌ படுதோல்வியுந்றது ஆனாலும்‌, தங்களது தோல்வியை வெளியே சொல்லுவதற்கு காங்கிரஸ்‌ வெட்கப்பட்டது. இந்த நேரத்தில்‌ வெள்ளையர்களுக்கு ஒரு புதிதான யோசனை சொன்னார்கள்‌. அதாவகடி காங்கிரசார்‌ முஸ்லிம்களுடைய தனித்‌ தொகுதி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌; அதற்குப்‌ பதிலாக, வங்காளத்தை இரு மாகாணங்களாகப்‌ பிரிக்கும்‌ திட்டத்தை வெள்ளை யர்கள்‌ கைவிட்டுவிட வேண்டும்‌ என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ்‌ ஒதீதுக்கொண்டது. எனவே, 1910 ஆம்‌ ஆண்டிலேயே முஸ்லிம்கள்‌ செய்த கிளர்ச்சியின்‌ பயனாய்‌ அவர்களுக்குத்‌ தனித்தொகுதி முறை ஏற்பட்டது. அதன்‌ பின்னரும்‌ காங்கிரஸ்‌ முஸ்லிம்களை மறைமுகமாக எதிர்தீது வந்தது) எது சொன்னாலும்‌ அதை மறுதீது ஒரு பலமிக்க எதிர்க்‌ கட்சியாக வினங்கியதுஃ முஸ்லிம்களுக்கு எதிராகக் காங்கிரஸ் செய்த எத்தகைய முயற்சிகளும் பலிக்க வில்லை என்பதோடு, முஸ்லிம்கள் கட்டுப்பாடாக மேலும் மேலும் பலமடைந்துவந்தார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியிலேயே அந்தக் காலத்தில் இந்திய அரசியலில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய அன்னி பெசன்ட் அம்மையாரின் மூலமாக முஸ்லிம்களிடம் சரணாகதி அடைந்தது. அதற்குப் பெயர்தான்"லக்னோ பாக்ட்" (லக்னோ உடன்படிக்கை) என்று நினைக்கிறேன். இதுதான்"இந்து-முஸ்லிம் ஒப்பந்தம்" என்பதாகும். அந்த ஒப்பந்தம் இன்று முஸ்லிம்களுக்குத் தனி நாடு அளித்துவிட்டு. இந்தப்படியாக, வடநாட்டில் முஸ்லிம்கள் வெற்றிபெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டதைக் கண்ட பிறகுதான், நம்முடைய நாட்டவர்களுக்கும் நமக்கும் வகுப்புவாரி விகிதாச்சாரம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்களே ஒரே மூச்சாக, கட்டுப்பட்டாக போராடியதன் மூலமாக எல்லாத் துறைகளிலேயும் அவர்களுக்கு இவ்வளவு என்று பங்கு பிரிக்கப்பட்டது. அவர்கள் தனித்தொகுதியும் பெற்றுவிட்டனர். அந்தப்படி இருக்கும்போது இந்த நாட்டில் 100-க்கு 90 பேராய் இருக்கக்கூடிய நாம் எல்லா உத்தியோகங்களையும் சகல அதிகாரங்களையும் 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்குக் (அடையுமாறு விட்டுவிட்டு) நாம் வாடுவதா? எல்லாத் துறைகளிலேயும் பிற்பட்ட,வகுப்புரிமை இல்லாத, மக்களாய், பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய் இருந்து வரும் நிலைமையிருக்கலாமா என்று தியாகராயச் செட்டியார், நாயர் போன்ற வர்கள் எண்ணினார்கள். தியாகராயர் காங்கிரசிலே மிகப் பிரபலமிக்க வராய் இருந்து வந்தார், சென்னையிலே நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டுவரை தியாகராயரும் நாயரும் எதிர் எதிர்க் கட்சியாய் இருந்துகொண்டு, ஒருவரையொருவர் மிக மோசமாகத் தாக்கிக்கொண்டு இருந்தார்கள். இப்படி இருந்தவர்கள்தாம், தாங்கள் இரண்டு பேரும் போட்டுக்கொள்கிற சண்டையினால் மற்றொரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் நலம் அடைகின்றார்கள்;தங்கள் இருவருக்கும் சண்டை ஏற்படுத்திவிட்டு அதன் மூலம் தங்கள் நலத்தைத் தேடிக்கொள்ளுறார்கள் என்பதை அறிந்தார்கள். அதன் பின்னர்தான், அவர்கள்"தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்" என்ற பெயரால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் துவக்கினார்கள். அப்போது திராவிடர் என்கிற பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ சொல்லத் தைரியமில்லாததால் அவர்கள் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்கிற பெயரால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்திற்கு அந்த இயக்கத்தினுடைய நியாயமான கொள்கையின் காரணத்தால் நச்ச செல்வாக்கு ஏற்பட்டது. அப்போது நடந்த தேர்தலிலேயும் அந்த இயக்கம் வெற்றிபெற்றது. அப்போதெல்லாம் நான் காங்கிரசிலேயே இருக்கிறேன். தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்திற்கு ஏற்பட்ட செல்வாக்கு கண்டு இங்குள்ள பார்ப்பனர்கள் வெகுவாக அஞ்சினார்கள். ஆகவே, அவர்கள் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தை ஒழிப்பதற்காக முயற்சி செய்ய வேண்டியவர்களாகி காந்தியாரிடத்தில் சரணாகதி அடைந்தார்கள். [சென்னை பெரம்பூரில், 13-8-1959 சொற்பொழிவு - 4 விடுதலை, 15.8.1950] இந் நாட்டில் நீண்ட நாட்களாகப் பார்ப்பனரும், பார்ப்பனரல்லாதாரும் எவ்வளவோ ஒற்றுமையாகத் தங்கள் சாதி இழிவைக்கூட கருதாமல் பார்ப்பனர்களிடம் எவ்வளவோ அமைதியாகவும், பகீமையாகவும், மரியாதையாகவும் இருந்துவந்த நிலையானது இந்தப் படிப்புக் குறைவையும், உத்தியோகக் குறைவையும் கருதியே விளர்ச்சி செய்ய ஆரம்பித்துட அதற்காக ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டு வேலை செய்ய முற்பட்டதாலும்,அந்த முயற்சியைப் பார்ப்பனர் எதிர் தடுத்து வந்ததாலும் கிரிஹஸ்த மக்களுக்கும் வேற்றுமை உணர்ச்சி ஏற்பட்டு, அது இன்று இரு வகுப்புகளுக்கும் வகுப்பு வேற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் சாதி வகுப்புக் காரணமாகவே வெறுப்பும், அதிருப்தியும் கொள்ள வேண்டியவர்களாகவும் ஆக்கியிருப்பதை இந்தக் கனவான்கள், மற்றும் பார்ப்பன தலைவர்களும் அவர்களது பத்திரிகை ஆசிரியர்களும் பார்ப்பன சமுதாயமும் அறியாத விஷயமா? இப்படியிருக்க, இந்தத் துவேஷமும், வெறுப்பும், அதிருப்தியும் வளரும்படியாகவே பார்ப்பன தலைவர்கள் மேலும், மேலும் அகம்பாவமாகவும், ஆணவமாகவும், தந்திர மாகவும் சூழ்சியாகவும், வஞ்சகமாகவும் காரியங்களைச் செய்து வருவது பார்ப்பன சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் காரியமாக இருக்கமுடியுமா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.சசதரரணமாக, இந் நாட்டைப் பிரிட்டிஷ்காரன் ஆளும்போது கிருந்த நிலையை விட இன்று அவன் ஒழிந்து, இந் நாட்டை இந் நாட்டாளர்களாய் ஆளுகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டவுடன் திராவிடர்களுக்குப் பார்ப்பனர்களிடம் துவேஷமும் வெறுப்பும், பார்ப்பனர்களுக்குத் திராவிடர்களிடம் துவேஷமும் வெறுப்பும் அதிகமாக வளர்ந்தவண்ணமாகவே இருந்து வருகின்ற தொழிய வேறு என்ன? உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பார்ப்பனர்கள் இன்று இந் நாட்டில் தங்களுக்கு ஒரு ஆதரவும் இல்லாமல் செய்துசொண்டார்கள். சகலத்திற்கும் வட நாட்டாரையே நம்பி, தங்கள் பாதுகாப்புக்காக இந் நாட்டை வடநாட்டான் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்து. இந் நாட்டு ஆட்சி ஆதிக்கம் முழுமையும் அவன் காலடியில் ஆக, இந் நாட்டுச் செல்வம் யாவற்றையும் அவனே சுரண்டிக் கொண்டு போகும்படி விட்டு, அதன் மூலம் தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுவர்கள். இதன் பின்விளைவைச் சற்றும் கவனியாமல், தங்களது இன்றைய மேன்மையையும் நலத்தையுமே கருதுகின்றார்கள். இதன் பின்விளைவை நினைக்கும்போது நமக்கு உண்மையிலேயே பயமாக இருக்கிறது. இதுவரை இந்தப் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக இருந்து வந்த காங்கிரஸ் திராவிடர் களிலிருந்து சிறிது சிறிதாக வேறுபடுவதாகத் தெரிகிறது. மற்றும், இந்தப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கும் கடவுள்கள் வெகு சீக்கிரத்தில் அழிந்து விடப் போகின்றன என்பது நமது உறுதி. அவற்றில் ஏதோ சிறிது மீதியானாலும் அவைகளில் பார்ப்பனர்களுக்குச் சிறிதும் ஆதிக்கம் இல்லாமல் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்றியும், பார்ப்பனர்களுக்கு அவர்களது ஆதிக்கத்திற்கு அனுகூலமாக இருந்த நம் சாஸ்திர, ஐதிஹ்ய, புராண, இதிகাச சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அவற்றின் வாழ்வும் வெகு சீக்கிரத்தில் இனி ஒரு 50 வருடங்களுக்குள்ளாக அனேகமாக ஒழிந்துபோகும் என்பது உறுதி. ஏன் இப்படி உறுதி கூறுகிறோம் என்றால், பார்ப்பனர்களின் மீது திராவிடர்களுக்கு இன்று உள்ள துவேஷமும் வெறுப்பும், மக்களை அவர்களது (பார்ப்பனர்களது) மதம், கடவுள், சாஸ்திரம் வকையரா தங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதையும்,அதனால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட ஆதிக்கத்தையும், தங்களுக்கு ஏற்பட்ட இழிவையும் நன்றாய் அறியச் செய்து விட்ட துடன், கடவுளுக்கும், கோவிலுக்கும், அதிலுள்ள உருவங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதையும், பதிவுக்கும் சாஸ்திர புராண இதிகாசங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் இன்றைய இளைஞர்களையும், இளைமங்கையர்களையும் நன்றாக உணரச் செய்து விட்டது. இன்று துவர்க்கப்பட்டிருக்கும் இந்த வகுப்புவாரி உரிமைக்கிளர்சியானது வகுப்புரிமையை மாத்திரம் பொறுத்த கிளர்ச்சி அல்ல என்பதே நம்முடைய கருத்து. மற்றும், எதைப் பொறுத்தது என்றால் - இந் நாட்டில் பார்ப்பனரல்லாத - திராவிடர் 400-க்கு 90-க்கு மேம்பட்டிருந்தும் இந் நாடு திராவிடர்களுடையதாக இருந்தும், இந் நாடு திராவிடர்களுடைய உழைப்பின் மீதும், அவர்களது தான தருமத்தின் மீதும் இருந்து வந்தும், இந் நாட்டைவெள்ளையனுக்குமுன் ஆண்டு வந்தவர்களும் திராவிடர்களாகவே இருந்திருந்தும், இன்று அப்படிப்பட்ட பார்ப்பனரல்லாத திராவிட சமுதாயம் பார்ப்பனர்களிடம் அதுவும் இந் நாட்டுக்குப் பிழைக்க வந்து இந்நாட்டு மக்களது தான தருமங்களாலேயே மனிதர்களாக, பார்ப்பனர்களிடம் சிக்கிக்கொண்டு இப்படி அலைந்து திரிந்திரிபடவும், இழிந்திரிபடவும், தங்கள் உரிமைக்கு விகிதாச்சாரத்திற்கு பார்ப்பனர்களைத் தொங்க வேண்டியவர்களாக - பார்ப்பனர்கள் திராவிடர்களைப் பார்த்து, உங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை; நீங்கள் அடிமை வேலைக்குத்தான் தகுதி என்று சொல்லலாம் என்ற நிலைஎதனால் - எது எதனால் ஏற்பட்டதோ அதைக்கு அதை அதையெல்லாம் வேரோடு கண்ணிப்பிட்டு அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கிளர்ச்சி தோன்றியதாகும். 1939-ல் இந்தியக் கிளர்ச்சி தோன்றிய காலத்தில் இம் மாகாணத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்த நிலை என்ன! அப்போது ஆச்சாரியார் சி. ஆர். வெ. ரா. அவர்கள் முடிசூடா மன்னராக இருந்தார்"திராவிட மக்களை இப்படிக் கொடுமைப்படுத்தலாமா" என்று கேட்ட www.thamizham.net - Free £ book 14௦ 3026 L@ froje பம ட ல மழட மும்‌ f1mhiTe0 ஈதர்‌ 6 ஒப < fo 18I ரமாஜுலஸ்‌ GusnuIE L “1௮ குழுமி widFYdm Jumyng மீறாடுக மழு ம-1961-- வகுப்புரிமை 981 தற்கு அவர்,"நடு இரவில் திருடன் புகுந்து விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க வேண்டியதுதானே!"என்றார். அந்த ஆணவச் சொல்லானது தமிழுக்கு எவ்வளவோ ஆக்கத்தைக் கொடுத்தது; தமிழர்களை ஒரு அளவுக்காவது பார்ப்பனச் சூழ்ச்சியை உணரச் செய்து, நல்ல அளவுக்குப் பார்ப்பன வெறுப்பை உண்டாக்கிற்று. அதனால் மந்திரி சபையில் அவர்களுக்கு மரியாதையே இல்லாமல் செய்துவிட்டது. கடைசியாக, அந்த ஒரு காரணமே ஆச்சாரியாருக்கு இந் நாட்டில் மரியாதையுடன், பெருமையுடன் வாழ இடமே கல்லாமல் போய்விட்டது. அதாடு மாத்திரமல்லாமல் கட்டாய இந்தியும் ஒழிந்தது. அதுபோலவேதான் - ஏன், அதற்கு மேலாகவேதான் இந்த வகுப்புவாரி உரிமைக்கிளர்ச்சி பயன்படப் போகிறது, அதில் யாருக்கும் எந்த பார்ப்பனருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. பார்ப்பனர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சியும், தந்திரமுமே ஆயுதமாக இருக்கிறது ஒழிய, மற்றபடி அவர்களுக்கு வேறு ஆயுதம் கிடையாது; நல்ல பின் புத்திதியும் கிடையாது. திராவிடர் நிலை அப்படி அல்ல, திராவிடர் மாத்திரம் 100-க்கு 25 பங்கு ஒன்றுபட்டுவிட்டால் பார்ப்பனியத்தைச் சித்திரத் கிரகூட, கண்காட்சிக் கூடத்தில் கூடக் காணமுடியாது;"திராவிடர்கள் ஒன்றுசேரமாட்டார்கள்!" என்கிற தைரியம் இனி பார்ப்பனருக்கு வேண்டாம் என்றே சொல்லுகின்றோம். இனி, காங்கிரஸ் திராவிடர்களுக்கும் திராவிடர் கழக திராவிடர்களுக்கும் இனை வேற்றுமை உணர்ச்சி இருக்கவேண்டிய அவசியமே இல்லை. அதுபோலவே கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட் திராவிடர்களும் வேற்றுமை உணர்ச்சி கொள்ளவேண்டியதில்லை. அதுபோலவே, தொழிலாளத் தோழர்களும் எந்த விதத்திலும் வேற்றுமை உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. தொழிலாளத் தோழர்கள் உலகம் உள்ள வரை தாங்கள் தொழிலாளர்களாவே இருக்கப்போவதாகக் கருதிக்கொண்டு இருக்கிறார்களா என்று கேட்கிறோம். இந்தக் கிளர்ச்சி தொழிலாளர்களுக்கே அதிகமான பயன் கொடுக்கக் கூடியதாகும். தொழிலாளி - முதலாளி ஆகிய இரு வகுப்பையும் இந்தக் கிளர்ச்சி ஒழித்துவிடும்; ஆதலால், அவர்கள் முழு மூச்சுடன் கிளர்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். [விடுதலை கட்டுரை - 14-8-1950] ஆ. பிறந்தநாள் அறிக்கை என்னுடைய 76ஆவது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டுமென்று என் தோழர்கள் கேட்டுக்கொண்டார்கள், அதை அனுசரித்து இன்றைக்கு முக்கிய பிரச்சினை யென்றும், இனி நாம் அதிகமாகக் கவலை செலுத்தவேண்டிய பிரச்சினை யென்றும் கருதுகிற நீண்ட விஷயத்தைப்பற்றிப் பொதுமக்களுக்கு என்ற வேண்டுகோளாகத் தெரிவிக்கலாமென்று கருதுகிறேன். தோழர்களே!தமிழ்நாட்டை வடநாடு பொருளாதார துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு, தமிழ்நாட்டைப் பொருளாதார துறையிலும், தொழில் துறையிலும் தலைமையெக்கவொட்டாமல் மடந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்திற்குக்காகவே வட நாட்டான் அரசியலிலும் தமிழ்நாட்டைத் தனக்கு அடிமைப்படுத்தி, தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந் நாட்டுப் பார்ப்பனர்கள், தங்களுக்குக் கனி இந் நாட்டில் ஆதிக்கம் பெறவா, இதுவரையிலும் வாழ்ந்ததுபோன்ற ஆதிக்க வாழ்வு வடிந்து போய்விடப்பாடாம் என்று கருதி, வடநாட்டானுக்கு அவனது அரசியல் நலாதாரணாய் ஆதிக்கத்திற்குத் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு உடந்தையாகவும் உன்னதமான ஆளாகவும் இருப்பதுவருகிறார்கள். இந்தக் காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி, சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டுமென்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் பிழைக்கும் சமுசாமமாகிய பார்ப்பன சமுதாயத்தைத் தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக தமிழ்நாட்டிலிநந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும்‌ நான்‌ உறுதியாகக்‌ கருதி என்னாலான முயற்சிகளைத்‌ திராவிடர்‌ கழகதீதின்‌ மூலம்‌ தொண்டாற்றி வருகிறேன்‌. இது ஒருபுறமிருக்க, இந்தச்‌ சநீதர்ப்பதீதையும்‌ நடப்புகளையும்‌ ஆதரவாகக்கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்‌ கூட்டங்கள்‌ சோன்றி-வசதிப்பட்ட அளவுக்குக்கூட, தமிழனைத்‌ தலையெடுக்கவொட்டாமல்‌ செய்.துவநகின்‌ றன. இங்குச்‌ சற்று விவரமாகச்‌ சொல்லவேண்டியிருக்கிறது. இந்க நாட்டு அரசியலில்‌ வெள்ளையன்‌ இருந்த காலம்‌ முதற்கொண்டே பார்ப்பனர்கள்‌ ஏகபோக ஆதிக்கம்‌ பெற்று, தமிழர்களுக்குச்‌ சிறிதும்‌ நல்வாய்ப்‌ ல்லாமல்‌ தமிழர்கள்‌ அழுதீ கப்பட்டு வந்திருப்பதைக்‌ கண்டிக்கும்‌ முறையில்‌ இந்‌ நாட்டுத்‌ தமிழ்‌ மகீகளால்‌-நான்‌ அறிய, 1890-ஆம்‌ ஆண்டி லிருந்தே பெருங்கிளர்சீசி செய்யப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, 1892-லும்‌, 1893-லும்‌ சென்னை மாகாணத்தில்‌ கவரனராயிருந்ந லார்டு வெள்லக்‌ துரையவர்களுக்கு இந்‌ நாட்டுதீ தமிழ்‌ :திராவிட)ப்‌ பெருங்குடி மக்களின்‌ பெயரால்‌, * கவ]னருக்குப்‌ பகிரங்கக்‌ கடிதம்‌! என்பதாகக்‌ குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள்‌ எழுதப்பட்டிருக்கின்றன. அவை களின்‌ நகல்‌ என்‌ கைவாமிநக்கின்றன. அக்‌ கடிதங்களில்‌, சமுதாயத்‌ துறையிலும்‌ அரசியல்‌ துறையிலும்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கத்தையும்‌ கொடுமையையும்‌ ஆதாரபூர்‌வமாகப்‌ புன்ளிவிவரங்களோடு எடுத்துக்‌ காட்டப்பட்டிருக்கின்‌ றன. மற்றும் அக கடிதத்தில்‌ அவற்றை அனு:ரித்து மெயில்‌? முதலிய பத்திரிகைகளின்‌ கருத்துக்களையும்‌, டாகீடர்‌ மில்லர்‌ போன்ற பெரியோர்களின்‌ கருத்துக்களையும்‌ எடுத்கப்போட்டுக்‌ காட்டப்பட்டிருக்கின்‌ றன. இதை எதற்காகக்‌ குறிப்‌ 9ட்டேனென்றால்‌--பார்ப்பன ஆதிக்கமும்‌ கொடுமையும்‌ பற்றிச்சொல்வது ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம்‌ ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும்‌ 1890-லேயே நம்மவர்கள்‌ உணர்ந்து முறையிட்டிருகீ கிறார்கன்‌ என்பதை எடுத்துக்‌ காட்டுவதற்காகவே, நிற்க, இத்தொல்லைகள்‌ அல்லாமல்‌ தமிழர்களுக்குத்‌ தமிழ்‌ நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அதன்னவென்றால்‌, உத்தியோகதி குறையில்‌-- தமிழின்‌, * பார்ப்பனரல்லாதான்‌ ! என்கிற பெயரால்‌ தனக்குரிய பங்கை வலி யுறுத்த ஆரம்பித்த பிறகு, பார்ப்பனர்‌ அதை எதிர்த்து ஒடுக்கும்‌ வகையில்‌ தங்களால்‌ ஆனவற்றையெல்லாம்‌ செய்து ஒடுக்கிய பின்‌, மீதி-அதாவது பார்ப்பனரல்லா தவருகீகு ஏதாவது சலுகை காட்டிப்‌ -பதவி கொடுத்துத்தான்‌ தீரவேண்டும்‌ என்ற நிலைமை திர்ப்பந்தம்‌ ஏற்பட்ட: சந்தர்ப்பத்தில்‌, பார்‌ ப்பனரல்லாதார்‌ என்று" சொல்லிகொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்குக்‌ கொடுப்பதும்‌ )] அவனுக்குக்‌ கொடுப்பது மக்களுக்கு கிஷ்ட, மில்லையென்றால்‌ வெளி மாகாணக்காரர்‌ களுக்குக்‌ கொடுப்ப தும்‌ )- அவர்களுக்குக்‌ கொடுப்‌ படும்‌ . சாத்தியப்படாத சந்தரீப்டங்களில்‌ கிறிஸ்தவர்‌-முஸ்லிம்கன்‌ ஆ&யவர்களுக்குகி கொடுப்பதும்‌) அது சாதீதிடப்படாத சந்தர்ப்பங்களில்‌ ஆந்திர, மலையாளி, கர்‌ நாடகர்‌: ஆ$யவர்களுக்குக்‌ கொடுப்பது மாய்ச்‌ சூழ்ச்சி செய்து, தமிழ? களுக்கு எவ்வளவு கொடுமை யும்‌ குறைபாடும்‌ செய்யவேண்டுமோ அந்த அளவுக்கச்‌ செய்துவந்தார்கள்‌. வெள்ளையன்‌ அரசாங்கமும்‌ இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்3பாது வெள்ளையன்‌ ஆட்சி ஒழித்‌ துவிட்டது; இந்தியன்‌ ஆட்சி என்று ஏற்பட்டு விட்டது அதோடு, நாடும்‌ பலவிதத்திலும்‌ வடநாடு-தென்னாடு என்று பிரிந்துவிட்டது அது மாதீதிரமேயல்லாமல்‌, மொழிவாரி காடு என்னும்‌ பேரால்‌ ஆந்திர நாடும்‌ தமிழ்நாட்டை விட்டுப்‌ பிரிந்துவிட்டது. ்‌ www.thamizham.net - Free £ book No 3026 வகுப்புரிமை 953 இதனால்‌ ஆந்திரர்கள்‌ தொல்லை அரசியலிலும்‌ உதீதியோகங்களிலும்‌ ஒரு அளவுக்கு ஒழிந்துவிட்டது என்றாலும்‌, கிறிஸ்தவர்கள்‌, முஸ்லிம்கள்‌, மலையாளிகள்‌, கர்‌ நாடகர்கள்‌ என்பவர்களது தொல்லை அரசியல்‌ ஆதிகீகதீதிலும்‌ உதீதியோகங்கவிலும்‌ ஒழிந்த பாடில்லை. இதை ஏன்‌ சொல்கிறேனென்றால்‌, தமிழ்நாடு மொத்த ஜனசங்கியையில்‌ பார்ப்பனர்‌: 100-க்கு 23-ம்‌, கிறிஸ்தவர்‌ 100-க்கு 4-ம்‌, முஸ்லிம்கள்‌ சுமார்‌ 100-க்கு 5-ம்‌, மலையாளிகன்‌ சுமார்‌ 100-கீகு 8-ம்‌, கர்‌ நாடகர்கள்‌ 100-க்கு 5-ம்‌ (இவைகள்‌ உத்தேசமான புள்ளிகள்‌) இவ்வளவு பேரும்‌ சேர்ந்து, ஜனசங்கியையில்‌ தமிழ்நாட்டார்‌--தமிழர்‌ அல்லாதவர்கள்‌, 100-கீகு 25 பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே யிருந்தாலும்‌, இந்தக்‌ கூட்டத்தினர்‌ ஒவ்வொருவரும்‌ சாதாரண உதீதியோகங்களில்‌--நீதி நிர்வாகத்‌ தலைமை உதீதியோகங்‌ களில்‌ சுமார்‌ 100-க்கு 60 பேரீ களாகவும்‌, முக்கியமான உயர்ந்த உதீதியோகங்களில்‌ 100-க்கு 75 பேர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. இதை ஏன்‌ பிரிதீதுக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டுகிறேன்‌ என்றால்‌, தமிழ்நாட்டிலே தமிழர்‌ களைதி தவிர--அதாவது மேற்படி கூட்டத்தினர்‌ தவிர்த்த, தமிழர்களைப்‌! பற்றியாவது தமிழர்களின்‌ பழக்க வழகீக-கலாசீசாரக்‌ குறைபாடுகளைப்‌ பற்றியாவது, சமுதாயதி துறையில்‌ அவர்களுக்குள்ள இழிவைப்பற்றியாவது, அரசியல்‌, கல்வி, பொருளாதாரத்‌ .துறையிலாவது மேலே காட்டிய இந்தக்‌ கூட்டதீதாருக்குச்‌ சிறிதும்‌ கவலையில்லை என்பதோடு, பெரிதும்‌ மாறுபட்டவர்கள்‌ என்றும்‌ சொல்லவேண்டியிருக்கிறது. தமிழர்கள்‌ சமுதாயத்‌ துறையில்‌ கீழான சாதியாராக-* சூதீதிரர்களாக? இருப்பதைப்பற்றி இவர்கள்‌ யாருக்கும்‌ கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு, தங்கள்‌ விகிததீதுக்கு மேற்பட்ட எண்ணிக்கை யளவு பதவிகள்‌ கிடைப்பதனால்‌, தமிழன்‌ கதி எக்கேடு கெட்டாலும்‌ இவர்கள்‌: இலட்சியம்‌ செய்பவர்‌ களல்லர்‌ ; அவரவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ சமூகதீதுக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும்‌ இலட்சியமாகக்‌ கொண்டவர்கள்‌ ஆவார்கள்‌ அப்படியே இருந்தும்‌ வந்திருக்கிறார்கள்‌. அதனால்தான்‌, எந்த விதத்திலும்‌ தங்களை விடத்‌ தனிப்பட்ட மேலான யோக்கியதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும்‌ தமிழர்களைவிட இவர்கள்‌ மூன்று பங்கு ஆதிக்கதீதில்‌--பதவியில்‌ இருந்து வருகிறார்கள்‌. இதில்‌ குறிப்பாகக்‌ கூறவேண்டுமேயானால்‌, மலையாளிகளின்‌ தொல்லையே மாபெரும்‌ தொல்லையாகும்‌. அவர்கள்‌ பெரும்பாலும்‌ ஆரிய கலாசீசாரதீதையும்‌, ஆரிய மொழியையும்‌, ஆரிய வருணாசிரம தரீமதீதையும்‌ ஆதரிக்கிறவர்கள்‌. ஆனதனால்‌, வகுப்பு வாரி உரிமையில்‌ மலையாளிகளைப்‌ பார்ப்பனரல்லாத ¢ இந்துக்கள்‌? என்கின்ற பிரிவில்‌ பார்ப்பனர்கள்‌ சேர் தீ.துக்கொண்டு, பார்ப்பனரல்லா தாருக்கு என்கின்ற கணக்கில்‌ ஏராள மான மலையாளிகளுக்குக்‌ கொடுப்பதையே--அவர்கள்‌ தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள்‌ ஏற்றுக்கொள்கிறார்கள்‌ ] அனுமதிக்கிறார்கள்‌. அதன்‌ காரணத்தால்‌, ஏறக்‌ குறைய பார்ப்பனர்‌ இல்லாத பெரும்‌ பதவிகளிலும்‌ மலையானிகளே அமர்தீதப்பட்டிருக்‌ கிறார்கள்‌. முதலில்‌ ஒரு சில உதாரணங்கள்‌ கூறுகிறேன்‌. சென்னை அரசாங்க நிர்வாகதீதின்‌ தலைமைப்‌ பீடாதிபதியான, சீப்‌ செக்ரட்டரி 8 திரு. கே. ராமுண்ணி மேனன்‌ சீப்‌ எஞ்சினியர்‌ : திரு கே. கே. நம்பியார்‌. சூப்பரின்‌டெண்டிங்‌ எஞ்சினியர்கள்‌ :--(1) திரு. நாயக்‌ (2) திரு. காமத்‌ வைதீதிய இலாகீகா$--எழும்பூர்‌ பிள்ளைப்பேறு ஆஸ்பதீதிரி சூப்பரின்டெண்‌: டெண்டு £ திரு. ஆர்‌. கே. கே. தம்பான்‌] அசிஸ்டெண்ட்‌ சூப்பரின்டெண்டெண்ட்‌ £ திரு, கிருஷ்ணமேனன்‌ ; ஸ்டான்லி ஆஸ்பதீதிரி சூப்பரின்டெண்‌ டெண்ட்‌ : திரு. கே. என்‌. பிஷரொட்டி) பெண்கள்‌ ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின்டெண்டெண்ட்‌ s திருமதி. பாருகுட்டிராமன்‌. 1686—120 ‘ 954 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ கல்வி இலாக்கா 5--பிரசிடென்சி கல்லூரி பிரின்ஸ்பால்‌ 1 திரு, பாலகிருஷ்ண நாயர்‌ ; குவீன்‌ மேரிஸ்‌ கல்லூரி: திருமதி. கோமன்‌ ) லேடிவெலிங்டன்‌ ? திருமதி. வர்கிஸ்‌; சட்டக்‌ கல்லூரி டைரெக்டர்‌ £ திரு. குன்னிராமன்‌. இவை--ஒரு சில நிர்வாக அடிப்படைப்‌ பதவிகளிலுன்ன மலையாளிசளை உதாரணத்துக்கு எடுத்துக்‌ காட்டப்பட்டன. இனி மாவட்டத்‌ (ஜில்லா) தலைமைப்‌ பதவிகளனிலுள்ள மலையாவிகள்‌ எண்ணிக்‌ கையைக்‌ காட்டுவதற்குப்‌ போலீஸ்‌ இலாக்கா ஒன்றை மாத்திரம்‌ உதாரணமாக எடுத்துக்‌ காட்டுகிறேன்‌. இவைகளிலிருந்து மற்ற இலாகீகாகீகளையும்‌ தெரிந்துகொள்ளுங்கள்‌, போலீஸ்‌ இலாக்கா :--இதில்‌ 13 ஜில்லாக்களோடு சென்னையைச்‌ சேர்த்தால்‌ 14 ஆகும்‌. இவற்றில்‌, சென்னையில்‌ கமிஷனர்‌ : திரு. பார்‌ தீதசாரதி அய்யங்கார்‌ என்ற ஒரு பார்ப்பனர்‌ இருப்பது மாதீதிரமல்லாமல்‌ அடுத்த பதவியான டிப்டி கமிஷனர்‌ என்பதில்‌ மூன்றிலும்‌ மூன்று மலையாளிகள்‌ இருக்கிறார்கள்‌ அவர்கள்‌ 5-- 1) திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்‌), (2) திரு. தாமோதரன்‌ (கிரைம்‌), (3) திருஃ சுகுமாரன்‌ (ட்ராஃபிக்‌), அய்‌. ஜி.கீகு அசிஸ்டெண்ட்‌ 5--திரு. வி. பி, நாயர்‌: அசிஸ்டெண்ட்‌ கமிஷனர்கள்‌ : 1. திரு. சே.துமாதவ.மேனன்‌ (லா அண்டு ஆர்டர்‌), 2. திரு. சேதுமாதவ நாயர்‌ $ (புரொகிபிஷன்‌) இனி ஜில்லாகீகளில்‌ போலீஸ்‌ சூப்பரின்டெண்டெண்டுகள்‌ 3--திருச்சி ¢ திரு. விஸ்வ நாத நாயர்‌) மதுரை (வ): திரு. ஏ. சி. நம்பியார்‌) திருநெல்வேலி? திரு. மாப்ள அப்துல்லா] வடஆர்க்காடு1 திரு. ஷெனாய்‌) சேலம்‌ உ திரு. பாலகிருஷ்ணமேனன்‌; நீலகிரி$ திரு. மாப்ளா ரூக்கி, இவை தவிர மற்ற ஜில்லாகீகளிலும்‌ அய்யர்‌, அய்யங்கார்கள்‌. அதாவது :--மதுரை (தெ): திரு. கிருஷ்ணசாமி அய்யர்‌) இராமநாதபுரம்‌? திரு. நரசிம்ம அய்யங்கார்‌) மலபார்‌: திரு. கிராமானுஜ அய்யங்கார்‌) தென்‌ கன்னடம்‌ § திரு. முத்துசாமி அய்யரிஃ மீதியுள்ள ஜில்லாகீகளில்‌ இரண்டில்‌ ஆங்கிலோ கிறிஸ்தவர்களும்‌, ஒரே ஒரு ஜில்லாவில்‌ தென்‌ ஆர்க்காட்டுக்கு மட்டும்‌ திரு. பாலகிருஷ்ண உடையார்‌ என்ற தமிழரும்‌ இருந்து வருகிறார்கள்‌, இவர்‌ பதவியும்‌ ஆட்டதீதில்‌ இருக்கிறது. இவை தவிர, அரசரங்க பேரலீஸ்‌ இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகதீ தலைமையில்‌, செக்ரட்டரி £ திரு. ஆர்‌. ஏ, கோபால்சாமி அய்யங்கார்‌ ; டிப்டி செக்ரட்டரி 3 டி. ஏ. சுப்புசாமி அய்யர்‌ ஆகிய இரண்டு பார்ப்பனர்‌ இருப்பது போக, மற்றும்‌ கரண்டு டி.ப்டி செகீரட்டரிகள்‌ 5-- 1. திரு. ஒய்‌, சிவராம மேனன்‌, 3. திரு. சி. ஆர்‌. பணிக்கர்‌ மற்றும்‌ பப்னிக்‌ பொலிடிகல் என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமை ஸ்தானங்களில் - தலைமை டிப்டி செக்ரட்டரி:திரு. டி. என். இலட்சுமி நாரயண அய்யர்; அண்டர் செக்ரட்டரிதிரு. ஆர். பாலசுப்ரமணிய அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தাபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை உதாரணங்களாக எடுத்துக் காட்டப்பட்டசிலவேயாகும். மற்ற களத்தில் 100-கீ 90 பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக் காரர்களே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.வகுப்புரிமைஇந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும், இவ்வளவு மோசமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலீஸ் முதலியவற்றில் இவ்வளவு மோசமான நிலைமை திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்கவேண்டும் - தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே?தமிழனைப் பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில், பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்யவேண்டியது அவசியமாகிறது. சமீப காலத்தில் திருவാங்கூர்- கொச்சி இராஜ்யத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்நாட்டு மலையாளிகள் நடத்திய மாதிரியைப் பார்த்தால், குறைந்த அளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத் தோன்றுகின்றன. ஆகவே, தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன்மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.---1. எழுத்துச் சீர்திருத்தம் 1. தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் தமிழ்ப் பாஷை எழுத்துக்கள் வெகுகாலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன. உலகிலுள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம், எழுத்துக்கள் குறைப்பு, அவசியமான எழுத்துக்கள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றன. கால வர்தீமானங்களுக்கு ஏற்ப சப்தங்களும், பாஷைகளும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பேயாகும். வாரிதைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவை என்பது போலவே, எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற்பட்டவைகளேயாகும். ஆனால், நம் பண்டிதர்களுக்குத் தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம், பழக்க வழக்கம் ஆகியவைகள் குறிக்கிட்டுவிட்டதால், எழுத்துக்களுக்கும், அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்கவேண்டிய அவசியமேற்பட்டு, எழுத்துக்களையே தெய்வமாகவும் - தெய்வ வடிவமாகவும் கருதவேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டுவிட்டது. தற்காலம் எத்தனையோ புதிய வார்த்தைகள் வந்து நமது தமிழ்ப் பாஷையில் புகுந்துகொண்டன. அவைகளை இனி விலக்க முடியவே முடியாது; விலகுவதும் புத்திசாலித்தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துக்கள் இல்லாமல் பாஷையையும், உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம். விஷ்ணு என்பதை விட்ணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம்; பாஷாபிமানப் பட்டமும் பெறுகின்றோம்;அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம்;அதோடு, சப்தங்கள் மாறிவிடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்றும் கருதுகிறோம். அதுபோலவே, சில எழுத்துக்கள் பழைய பழக்கம், வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத்துக்காக மாற்றவேண்டியது அவசியம் என்றால், அறிஞர்கள் அதற்கு இடம் கொடுத்தாக வேண்டும். சுமார் 70, 80 வருடங்களுக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துக்களிலும் ணு என்கின்ற எழுத்தானது ண எழுத்தையே மேலே சுழித்த - வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது. இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்திய கல் எழுத்துக்கள்அனேகம், வேறு வடிவத்தில் இருந்துவந்திருக்கின்றன. இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாருமில்லை;சொல்லுவாருமில்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப்போனதாகக் குறை கூறுவாரும் காணப்படவில்லை. அதுபோலவே, இப்போதும் சில எழுத்துக்களை மாற்றவேண்டியதும், சில எழுத்துக்களைக் குறைக்கவேண்டியதும், சில குறிகளை மாற்றவேண்டியதும் அவசியம் என்றும், அனுகூலமென்றும் பட்டால் அதைச் செய்யவேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய, அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடைமையராகாது என்பது தமது கருத்து.ஆகவே, இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துக்களும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துக்களும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துக்களைப் போலும், டை, நை, ழை முதலிய எழுத்துக்களைப் போலும் - ஆகாரத்துக்கு ': குறியையும், அய்காரத்துக்கு 'ο' குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி, ணா, றா, னா; ணை, லை, ளை, னை போல உபயோகித்துப் பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம். இதன் பலனாய் அச்சுக் கோப்பதற்கு எழுத்துக் கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றன என்பதோடு, பிள்ளைகளுக்கும் இந்த ஏழு எழுத்துக்களுக்குத் தனி வடிவம் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாமல்போகும் சவுகரியம் ஏற்படுகின்றன. இன்னும், தமிழ்ப் பாஷை எழுத்துக்களில் அனேக மாறுதல்கள் செய்யவேண்டியிருந்தாலும், இப் பாதைக்கு இந்தச் சிறுமாறுதலை அனுபவத்திற்குக் கொண்டுவரலாம் என்று கருதி, அந்தப்படியாகவே எழுத்துக்களை உபயோகித்து, அடுத்தாற்போல் பிரசுரிக்கப்போகும்'குடி அரசு'பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இதை வாசகர்களும், மற்றும் தமிழ் மொழி பத்திரிகைக்காரர்களும், தமிழ்ப் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். தமிழ்ப் பாஷை எழுத்துக்கள் விஷயமாய்ப் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியதுபோல் பெரிய பண்டிதர்களில் கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள். தமிழ் எழுத்துக்களைப்பற்றி அழுக்கு மூட்டைப் பண்டிதர் என்ன தத்துவார்த்தம் சொன்னாலும், அது எவ்வளவேச விஷயத்தில் சீர் திருத்தமடைய வேண்டும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுன்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும். உதாரணமாக, நெருப்புக்கு - சுமார் நூறாயிரம், பதினாயிரம் வருஷங்களுக்கு முந்திய சக்கி முக்கி கற்கள் தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது ஒருகடவுளால் ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாசமலையில் இருந்தோ கண்டு பிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால், இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அழுத்துவதோ, ஒரு முளையைத் திருப்பு வதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது. இதுபோலவே, பஞ்ச பூதங்களிலும், அவைகள் உற்பத்தி, சேர்க்கை, அனுபவம் ஆகியவைகளிலும் நாளுக்குநாள் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது, இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கின்றன என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதும் தெரிந்தால் - கேவலம் ஒரு புராதன பாஷை எழுத்துக்கள் என்பதில் எவ்வளவு சீர்திருத்தம் அவசியமிருக்கும் அல்லது செய்யக்கூடும் என்பது தானாய் விளங்கும். சாதாரணமாய், 500 வருஷத்திற்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும், அவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்துக்கும் - இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.இதனால், பூர்வீக மக்களை மடையர்கள் என்றே சொல்லலாம் வேண்டும் என்பதாக நான் சொல்லவரவ்ல்லை. ஆனால், பூர்வீக மக்கள் என்பவர்கள் விஷயங்களையும், ஞானங்களையும், அல்லது திருத்தங்களையும் எவ்வளவு தூரத்தில் கொண்டுவந்துவிட்டுப்போனார்களோ - அதிலிருந்தே, அதற்குப் பிற்காலத்து மக்கள் அவ்விஷயங்களை ஆரம்பித்துவைக்க ஏது இருந்ததால், அதைவிடச் சற்று அதிக முற்போக்கு நிலமைக்கு அவ்விஷயங்களைக் கொண்டுவந்து விட்டுப்போக முடிந்தது. அதுபோலவே, இப்போதும் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றபடியால், அது இன்னும் விசேஷமான மாறுதல்களாக முடிகின்றது. அதுபோலவே, இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால் இன்றைய நிலையிலிருந்து இன்னும் எவ்வளவோ தூரம் மாற்றம் அடைந்த முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். அதனால், இந்த நூற்றாண்டு மக்களைக் காட்டுமிராண்டிப் பிராயமுள்ள மக்கள் என்றுகூடச் சொல்லும்படி ஏற்பட்டாலும், ஏற்படலாம். அதற்காக வேண்டி இன்னும் 300 வருஷத்திற்குப் பின் எப்படி இருக்கவேண்டிவரும் என்று கருதி கிப்பொழுதே கண்டுபிடித்துச் செய்துவிடமுடியாது. முன்னேற்றம், மாறுதல் என்பவை கால தேச வர்த்தமানத்தையும், அன்று உள்ள அறிவு விருத்தியையும் பொறுத்தே ஒழிய - மதவெறியர்கள் சொல்லுவது போன்ற தீர்க்க தரிசனத்தைப் பொறுத்தல்ல என்பதே நமது அபிப்பிராயம். முக் காலத்துக்கும் ஏற்ற தீர்க்கதரிசனம் என்பது ஆராய்ச்சியற்ற அறிவீனர்களின் வசனமேயாகும். விபூதி வைত்துக்கொள்ளுவதற்காக் கடவுள் மனிதனுக்கு நெற்றியை நீளவசத்தில் மூன்று விரல் உயரத்தில், 6 அங்குல அகலத்தில் ஏற்படுத்தினார்என்று சொல்வது எவ்வளவு தீர்க்க தரிசனமும், தத்துவார்த்தமும் கொண்டதோ, அதுபோல்தான் முக் கால தீர்க்க தரிசனமும் ஆகும். ஆதலால், உலக விஷயங்களில், மனித சமூக வாழ்க்கை சம்பந்தப்பட்டவைகளில் - தீர்க்க தரிசனத்தையும், தெய்வீக தத்துவார்த்தங்களையும் கொண்டுவந்து கலக்கிக் கொண்டு, குரங்குப் பிடியாய்ப் பழமையையே கட்டிக் கொண்டு அமுவதினாலோ, அல்லது மாறுதல்கள் வரும்போதெல்லாம் சீறிவிழுந்து கோபிப்பதினாலா யாதொரு பிரயோசனமும் ஏற்பட்டுவிடாது என்பதோடு, அது சாதியப்படக் கூடியது என்றும் சொல்லமுடியாது. பழையதை மாற்றக்கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டவை என்பதும் - பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ, பழைய மாதிரிகளோ, பழைய உபதேசங்களோ முக் காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியான தீர்க்கதரிசனத் தோடு தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டவை என்று சொல்லப்படுமானால் - அவைகளை மத வெறியர்களுக்கும், பழைமையில் பிழைகக் காத்துக் கொண்டிருக்கும் சோம்பேறிச் சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டு விடவேண்டுமே ஒழிய, அவற்றைப் பொதுஜன - சாதாரண நிதீதிய வாழ்க்கையில் கொண்டு வந்து கலக்கி - முற்போக்குக்கும், சவுகரியத்துக்கும் தொல்லை விளைவிக்கக் கூடாது. எவ்வளவு மதவெறியனும், குரங்குப் பிடிவாதகாரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்துகொண்டும், மாற்றத்தை ஏற்றுக்கொண்டுந்தான் இங்கு வாழ்ந்துவருகிறானே ஒழிய, எவனும் தெய்விகத்துக்கு மாறுபட்டதென்றோ, தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ கருதி எதையும் விட்டுவிட்டுக் காட்டுக்கு ஓடிப்போகவில்லை; அல்லது தற்கொலை செய்துகொண்டு'ஆண்டவனை' அடைந்துவிடவும் கில்லை. ஆகையால், மாறுதலைக்கண்டு அஞ்சாமல் அறிவுடமையோடும், ஆண்மையோடும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டியது பகுத்தறிவ கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும் - அதன் பயனாய் இன்றையத் தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப்பற்றிப் பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள்.'இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா?' என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம்;அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என்செய்வது?தவம் செய்வதா?அல்லது ஜெபம் செய்வதா?தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. எழுத்துக்கள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துக்கள் கல்லிலும், அந்தச் சரதம் ஓலையிலும்‌ எழும்‌ காலம்‌ போய்க்‌ காகிதத்தில்‌ எழுதவும்‌, அச்சில்‌ வார்த்துக்‌ கோக்கவும்‌ ஏற்பட்ட காலந்தொட்டு இன்றுவரை, அவற்றில்‌ யாதொரு மாற்றமும்‌ ஏற்பட்டதாகத்‌ தெரியவில்லை. ஆதலால்‌, யாராவது ஒருவர்‌ துணிந்து கிறங்க வேண்டியதாயிற்று. புதிய மாறுதல்களால்‌ -அதாவது, போகீகுவரதீது வசதியின்‌ காரணதீதால்‌ ஏற்பட்ட பலதேச மக்கள்‌ கூட்டுறவாலும்‌, பலதேச பாஷைச்‌ சொற்களும, பலதேசப்‌ பொருள்களும்‌ கலரும்படி ஏற்பட்ட சம்பவங்களாலும்‌ இன்று அ3னக வார்த்தைகள்‌ உச்சரிப்புகள்‌ தமிழில்‌ சர்வசா தாரணமாய்க்‌ கலந்‌, துவிட்டன. அவைகளை உச்சரிக்கும்‌ போதும்‌ எழுதும்போதும்‌ தமிழ்ப்‌ பாஷையும்‌ தமிழ்‌ எழுத்தும்‌ விகாரமாய்‌ வெட்கப்பட வேண்டுயிருக்கிற தன்மையில்‌ இருக்கின்றன (அதற்குத்‌ ததீகுவார்‌ தீதமும்‌, விதியும்‌ இருக்கலாம்‌). ஆதலால்‌, சில எழுத்துக்கள்‌ வேறுபாஷைகளில்‌ இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதுகூட மிக அவசிய மாகும்‌. அதற்குவெட்கமாய்‌” இருக்கும்‌ பட்சத்தில்‌ புதியதாகவாவது எழுத்துக்களை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்‌. இவைகள்‌ ஒருபுறம்‌ இருக்க, இப்போது உயிர்மெய்‌ எழுதீதுக்கள்‌ என்று சொல்லப்‌ படும்‌ 18 எழுத்துக்களிலும்‌ ஒவ்வொன்றுக்கும்‌ உள்ள இஃகரம்‌, ஈ--காரம்‌, உ-கரம்‌, ஊ-- காரம்‌ ஆகிப நான்கு சப்தங்கள்‌ கலந்த எழுத்துக்கள்‌ தனித்தனி வடிவம்‌ கொண்டு அதாவது 8, &; @ கூ என்பது மாதிரி$ய 18 எழுத்துக்களும்‌ தனித்தனி உருவம்‌ பெற்று 18X4= ஆக மொத்தம்‌ 72 எழுதீதுக்கள்‌ அதிகமாக, அனாவசியமாக இருந்து வருகின்றன. இந்தத்‌ தனித்தனி வடிவங்கள்‌ எதற்காக இருக்கவேண்டும்‌ எல்லா உயிர்மெய்‌ எழுதீதுக்களுக்கும்‌ ஆ-காரம்‌, ஏ-காரம்‌ ஆய சப்தங்க ளுக்கு 1, G, ஆகிய குறிப்புக்களைச்‌ சேர்தீது எப்படி கா, கே, என்று ஆக்கிக்‌ கொள்ளுகின்‌்றோாமோ அதுபோலவே, மேற்கண்ட க, கீ) கு, கூ முதலிய சப்தங்களுக்கும்‌ ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன்‌ சேர்த்துக்‌ கொல்ளக்கூடாது என்பது மிகவும்‌ யோசிக்கதீதக்க விஷயமாகும்‌. உதாரணமாக ஐ; ஷ முதலிய கிரந்த அட்சரங்கள்‌ என்று சொல்லப்படுபவைகளுகு, இன்றும்‌ உ-கரம்‌, ஊ-காரம்‌ சப்தங்களுக்கு @ கூ என்கின்ற மாதிரி தனி எழுத்துக்கள்‌ இல்லாமல்‌, உ-காரத்துக்கு ு இந்த மாதிரிக்‌ குறிப்புகளையும்‌, ஊ காரத்திற்கு © இந்த மாதீரிக்‌ குறிப்புகளையும்‌ சேர்த்து ஜு, ஜூ) ஷு, ஷு; ஸு, ஸு) ஹு; W என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்‌. அதுபோல்‌, தமிழ்‌ எழுதீதுக்களிலும்‌ கி, & கு, கூ ஆகியவை களுக்கு =, O என்பது டோன்‌ நவைககளயோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்‌ தீதால்‌--அச்சில்‌ 72 தனி எழுதீதுக்கள்‌ தேவையில்லை என்பதோடு-பிள்ளைகள்‌ தமிழ்‌ கற்பதற்கும்‌ 72 எழுத்துக்களைத்‌ தனியாக ஞாபகம்‌ வைதீதுக்கொள்ளவேண்டிய அவசிய மில்லாத சவுகரியமும்‌ ஏற்படும்‌. மற்றும்‌, எழுத்துக்‌ குறைவால்‌ அச்சில்‌ சவுசரியம்‌ ஏற்படுவது போலவே தமிழ்‌ எழுதீது டைப்ரைட்டிங்‌! என்ற அச்சடிக்கும்‌ இயந்திரம்‌ செய்வதிலும்‌ மிகந்த சவுகரியமும்‌, விலை சகாயமாய்ச்‌ செய்யக்‌ கடிய நிலைமையும்‌ ஏற்படும்‌. www.thamizham.net - Free £ book No 3026 மொழி 963 எழுதீதுக்கள்‌ உருவம்‌ மாற்றுவது, குறிப்புகள்‌ ஏற்படு கீ.துவ து, புதிய எழுகீககி களைச்‌ சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை, அதாவது அவசியமில்லாத எழுதீதுக்களைக்‌ குறைக்வேண்டியதும்‌ அவசியமாகும்‌. உதாரணமாக, உயிரெழுதீதுக்கள்‌ என்பவைகளில்‌ B, ஒள என்கின்ற இரண்டு எழுதீதுக்களும்‌ தமிழ்‌ பாஷைக்கு அவசியமில்லை என்பதே எனது வெகுநாளைய அபிப்‌ பிராயமாகும்‌. 89-காரம்‌ வேண்டிய எழுதீதுக்களுக்கு டை இந்க அடையாளத்தைச்‌ சேர்ப்‌ பதற்குப்‌ பதிலாக--ய்‌ என்ற எழுத்தைப்‌ பின்னால்‌ சேர்தீ கக்‌ கொண்டால்‌, 89-கார சப்தம்‌ தானாகவே வந்துவிடு 8றது. உதாரணமாக கை? என்பதற்குப்‌ பதிலாக *கய்‌! என்று எழுதினால்‌ சப்தம்‌ மாறவதில்லை என்பது விளங்கும்‌, அதுபோலவே, ஒள-காரதீ துக்கும்‌ கெள! என்பதற்குப்‌ பதிலாக கவ்‌? என்றோ கவு? என்றோ எழுதினால்‌ சப்தம்‌ மாறுவதில்லை. கெளமதி--கவ்ம தி--கவுமதி என்கின்ற சப்தங்கன்‌ ஒன்று போலவே உச்சரிப்பதைக்‌ காணலாம்‌. இந்த வகையில்‌ B, ஒள என்ற இரண்டு எழுத்துக்களை உயிரெழுதீதுக்களிலேயே குறைதீ.துவிட்டால்‌ அதனாலும்‌ பெரிதும்‌ அனுகூலம்‌ உண்டு. ஆகவே, கி-கீ, கு-கூ என்கின்ற சப்தங்களுகீகுதீ தனிக்‌ குறிப்பு வடிவங்கள்‌ ஏற்படுத்‌ துவதன்‌ மூலம்‌ குறிப்புகள்‌ அதிகமானாலும்‌, B, ஒள குறிப்புகள்‌ குறைவுபடுவதன்‌ மூலம்‌ கிட்டத்தட்ட சரிப்பட்டுப்‌ போக கடம்‌ ஏற்படும்‌. கையெழுத்து எழுதுவதற்கும்‌ அசவுகரிய மிருக்காது- தமிழ்‌ எழுதீதுக்களில்‌ மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள்‌ எல்லாம்‌ செய்யப்படுமானால்‌ அப்பொழுது தமிழில்‌ மொதீத எஃழுதீதுக்கள்‌ 46-ம்‌, 7 குறிப்பு எழுத்துக்‌ களும்‌ ஆக 53 எழுதீதுக்களில்‌ தமிழ்ப்‌ பாஷை முழுவதும்‌ அடங்கிவிடும்‌. அதாவது உயிர்‌ எழுதீது 10) உயிர்‌ மெய்‌ எழுதீது 18) ஒற்றெழுத்து 19; எழுத்துக்‌ களின்‌ குறிப்புகள்‌ (அதாவது 1, >, “8; ட கிவைகள்‌ பால) 7; ஆக மொத்தம்‌ 54 எழுத்‌ ஆக்களுன்‌ அடங்கிவிடும்‌. அச்சுக்கும்‌ 54 அறைகள்‌ (கேஸ்கள்‌) இருந்தால்‌ போதுமானதாகும்‌. பின்ளைகளுக்‌ கும்‌ இந்த 5t எழுத்துக்கள்‌ ஞாபகமிருந்தால்‌ போதுமானதாகும்‌. ஐ; ஸ. ஷ, ஹ, க்ஷ என்கின்ற கிரந்த அட்சரங்களான எழுதீதுக்களையும்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டுமானால்‌ அதில்‌ குற்றெழுத்து உட்பட ஒரு பத்து எழுத்து அதிகமாகி 64 எழுதீதுக்களாகலாம்‌. ஆனால்‌, இப்பொழுதோ மேற்படி 64 எழுதீதுக்களுக்குப்‌ பகிலாக, சுமார்‌ 150-க்கு மேல்‌ 160 எழுதீதுக்கள்‌ வரை இருநீதுவருகின்றன என்பதும்‌ குறிப்பிடத்தக்கதாகும்‌. பசஷையின்‌ பெருமையும்‌, எழுதீ.துக்களின்‌ மேன்மையும்‌ அவை சுலபதீதில்‌ தெரிந்துகொள்ளக்‌ கூடியதாகவும்‌, கற்றுக்கொள்ளக்‌ கூடியதாகவும்‌ இருப்பதைப்‌ பொறதீ தீதை ஒழிய, வேறல்ல. ஆதலால்‌ இந்த மாற்றங்கள்‌ நாளாவட்டத்தில்‌ செய்யக்கூடியவை என்று சொல்லுவதானாலும்‌ ணா, ண முதலிய 7 எழுத்துக்களைப்‌ பொறுத்த வரையில்‌ உள்ள மாற்றத்தை வாசகர்கள்‌ இப்போது முதலே அனுமதிப்பார்‌ கள்‌ என்று கருதுகின்றோம்‌, இதுவரை பல தோழர்கள்‌ ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும்‌ எழுதியிருப்பததும்‌, இப்பொழுதே செய்யவேண்டுமென்று குறிப்பிட்டிருப்ப.தும்‌ நமக்குக்‌ தைரியத்தைக்‌ கொடுக்‌ கின்றது. அவர்களுக்கு நமது நன்றியும்‌ பாராட்டுதலும்‌ உரியதாகுகஃ [¢ குடி அரசு ?-தலையங்கம்‌--20-1-1935] www.thamizham.net - Free £ book 14௦ 3026 964 2. மொழி-எழுத்து தலைவர்‌ அவர்களே ! தோழர்களே ! 6 மொழி? என்பது பற்றிப்‌ பேச, சிறிதும்‌ அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான்‌-* மொழி? என்பது குறித்தப்‌ பேசத்‌ துணிந்தது, மொழித்‌ ததீ.துவத்திலுள்ன என்‌ னுடைய ஆசை மிகுதியின்‌ பொருட்டேயாகும்‌. நான்‌ கூறப்போகும்‌ ததீ.துவங்களை இலக்கண; இலக்கிய ஆதாரங்களுடன்‌ விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம்‌, அதற்கு வேண்டிய இஃக்கிய, இலக்கணங்களில்‌ பாண்டிதீ தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. ஆராய்ச்சியாளர்‌ மேற்கோள் களையும்‌ என்னால்‌ காட்ட இயலாது. எனக்குத்‌ தோன்றிய, என்‌ அனுபவதீதுக்கு எட்டிய விஷயங்களை தீதான்‌ நான்‌ உங்களுக்கு எடுத்துச்‌ சொல்லப்போகிறேன்‌. அவற்றில்‌ பெரும்பாலும்‌, உங்களுக்குக்‌ குற்றமாகப்‌ படலாம்‌. ஆகவே, நான்‌ கூறுவதை நீங்களும்‌, உங்கள்‌ அறிவையும்‌, அனுபவத்தையும்‌, மற்றும்‌ இது விஷயதீதில்‌ அனுபவமும்‌ ஆராய்ச்சியும்‌ உள்ள பெரியோர்கள்‌ கருத்தையும்‌ கொண்டு சிந்தித்துப்‌ பார்தீது ஏற்கக்கூடியதை ஏற்றும்‌, ஏற்கக்‌ கூடாததைத்‌ தள்ளியும்‌ தெனிவுபெற வேண்டுகிறேன்‌. * மொழி? என்றால்‌ என்ன? அது எதற்காகப்‌ பயன்படுகிறது 1 என்று முதலில்‌ கவனிக்கவேண்டும்‌. ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குதி தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்துவருகிறது. அது ஒலி மூலமாக$வ பெரிதும்‌ இருக்கிறது, மேலும்‌, இச்‌ சாதனம்‌ மனிதர்‌ களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்‌ களும்‌, பட்சிகளும்கூட சில செய்கைக்‌ குறிப்புகளாலும்‌, சிலவித சப்தங்களாலும்‌ தம்‌ கருத்தைத்‌ தமக்குன்‌ பரிமாறிக்கொள்கின்‌றன. ஆனால்‌, அவற்றை மொழி? என்று கூறாவிட்டாலும்‌, * ஒலிக்‌ குறிப்பு என்று கூறலாம்‌. பறவை, மிருகம்‌, சிறு பிராணி ஆகியவை பேசிக்கொள்வது எனக்குத்‌ தெரியும்‌. உதாரணமாகக்‌ கோழியை எடுதீதுக்கொன்வோம்‌. தன்‌ குஞ்சுகளைதி தூக்கிக்‌ கொண்டு போகக்கூடிய அடப்பான்‌, கழுகு, கருடன்‌ இவை சமீபத்தில்‌ பறப்பதைக்‌ கண்டதும்‌ தாய்க்‌ கோழியானது ஒருவிதமான ஒலியைக்‌ கொடுக்கிறது. அந்த ஒலியைக்‌ கேட்டதும்‌ குஞ்சுகள்‌ தமக்கேதோ ஆபதீதென்று உணர்ந்து ஓடோடியும்‌ வந்து தாய்க்‌ கோழியின்‌ விரிந்த சிறகுகவின்‌ கீழ்ப்‌ பதுங்‌சக்கொள்ளுன்‌றன. குரங்குகளையும்‌ நான்‌ கவனிதீதிருக்கிறேன்‌. தாய்க்‌ குரங்கு தொலைவிலுள்ள தன்‌ குட்டியைத்‌ தானாக அடையக்‌ கூடாதபோது அதைத்‌ தன்னருகில்‌ அழைக்க நினைதீதால்‌, அது சிறிது தன்‌ பற்களைக்‌ காட்டிதீ தன்‌ மேல்‌உதட்டையும்‌, கீழ்‌உதட்டையும்‌ சேர்தீது ஏதோ முணுமுணுப்பதுபோல்‌ குறிப்பும்‌, சிறிது இலேசான சப்தமும்‌ கொடுக்கும்‌. அதைக்‌ கண்டதும்‌ குட்டியான து நேரே தன்‌ தாயை வந்தடையும்‌, இது போலவேதான்‌, ஒரு ஆண்‌ குரங்கின்‌ இப்படிப்பட்ட சைகையால்‌ பெண்‌ குரங்கும்‌ வந்து சேருகிறது. இதுபோல்‌, காக்கைக்கு நல்ல சோறு வைக்கும்போதும்‌, *பிதிர்‌£ச சோறு வைக்கும்போதும்‌ கவனித்திருக்கிறேன்‌. நல்ல சோறு வைக்கும்போது நாம்‌, *கா! கா! என்று கூப்பிடுறோம்‌. முதலில்‌ ஏதோ ஒரு காகம்‌ வருகிறது ) சிறிது பயந்துகொண்டே சாதத்தைத்‌ தொட்டுப்‌ பார்தீ.துவிட்டு தன்‌ இனத்தைக்‌ கூவி அழைக்கிறது. அவையும்‌ சப்தம்‌ கேட்டுவந்து சாதத்தை உண்ணுகின்றன. பிதிர்ச்‌ சோறாயிருந்தால்‌ அக்‌ காகம்‌ வேறுவிதமான சப்தம்‌ போட்டதும்‌, மற்றக்‌ காகங்களும்‌ அதை ஏதோ ஒரு பொறி? என்று நினைத்து அத ஒலி கொடுதீது, எந்தக்‌ காகமும்‌ அந்தச்‌ சசரததீதை உண்ணாதபடி செய்கின்றன. பிறகு ஒரு காகம் கிட்டவந்து மோந்து பார்த்தது, ஆபத்து இல்லை என்னு தெரிந்தால் மற்றவைகளும் கலந்து சாப்பிடுகின்றன எறும்புகளைக்கூட கவனித்திருக்கிறேன். எறும்பு சரமாக போய்க்கொண்டிருக்கும் போது நாம் ஒன்றிரண்டு எறும்புகளைக் கொன்றுவிட்டு, மற்றொரு எறும்பைச் சிறிது நசுக்கிவிட்டால், அது வேகமாகச் சென்று தனக்கு எதிர்ப்படும் எறும்புகளுக்கெல்லாம் அத்த இடத்தில் உண்ண ஆபத்தை எப்படியோ தெரிவிக்கிறது. மற்ற எறும்புகள் யாவும்எவ்வளவோ வேகமாக வந்துகொண்டிருந்தாலும் உடனே வந்த வழியே திரும்பிப்போய் எறும்புக் குழியில் இருக்கும் எறும்புகளுக்கும் தெரிவித்து அடங்கி விடுவதாம். இப்படி ஏதோ சில குறிப்புகளின் மூலம் மற்றும் சில ஜீவராசிகளும் தம் கருத்தை ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்வதுதான் தெரிகிறதே ஒழிய, நமக்கிருப்பதுபோல் அவற்றிற்கு "மொழி" என்று ஒன்று இருப்பதாகத் தெரியக் காணோம். ஒருவரைப் பார்த்து, "உங்கள் மொழி என்ன?"என்று கேட்பதற்கு,"நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக்கொள்கிறீர்கள் என்றுதான் பொருள். ஆக, மேலே தெரிவிக்கப்பட்டதிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது. மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சாதனம் மொழி என்றால், அம் மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பலமொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்ட தல்லவென்றும் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன். தரிமபுரியானும், கொங்குநாட்டுக் கிராமத்தானும், யாழ்ப்பாணத்தானும்—இவர்கள் யாவரும் பேசுவது தமிழ்தான். ஆனால் தரிமபுரி தமிழன், யாழ்ப்பாணத்தான் கூறுவதை இரண்டு முறை திருப்பிக் கூறினால்தான் தெரிந்துகொள்ளுவான். அதேபோல், கொங்கு நாட்டுக் கிராமத் தமிழன் தான் கூறுவதை மூன்றுமுறை திருப்பிச் சொன்னால் தான், தரிமபுரியான் அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, யாழ்ப்பாணத்தான், "அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள்?"என்று கூறுவதை, திருநெல்வேலியான்,"அவர அப்பமே வந்தா?" என்பான்;கிராமத்தான்,"அவியொ அப்பளையே வந்தாங்கோ?" என்பான். இப்படி ஒரே மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன?அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்துகொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரிக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உண்மையும் ஆகிய இவைதான் காரணம். நம் நாட்டில் சில மலைவாசிகள் இருக்கிறார்கள்.அவர்கள் பேசுவதும் தமிழ் என்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதைக் குறிப்புகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர; விளக்கமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். பின் ஏன் அவர்கள் நம்மைப் போல் பேச முடியவில்லை?அவர்களை நம்மோடு தொடர்பு கொள்ள முடியாமல் செய்த அம் மலைவாசம்தானே காரணம்?அவர்களுக்கு வேண்டிய அளவு ஏதோ குறிப்புகள் வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்;நமக்கு வேண்டிய அளவு நாம் ஏதோ குறிப்புகள் வைத்துக்கொண்டு நாம் வாழ்க்கை நடத்துகிறோம். இதுதானே நமக்கு உள்ள வித்தியாசம்?நம்முடன் தொடர்பு வைத்துக்கொண்டு அம் மலைவாசிகள் கொஞ்சகாலம் வாழ்ந்தால் நம்மைப்போல் அவர்களும் பேசுவார்கள் அல்லவா? மற்றும், மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத்திற்கேற்பவும், அவரவர் களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க; பண்பு; குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி (Energy) செலவிடாமல் சுலபமாய்ப் பேசக்கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தாடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்கக் காண்கிறோம். உதாரணமாக, வடமொழியிலுள்ள "ஹூ" போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து கூச்சொலிக்கும் தூலைத்துக் கொண்டு வருவதுபோல் ஒலிக்கிறது. அவர்கள் கொஞ்சிப் பேசிக்கொள்வதுகூடச் சில சமயங்களில் ஏதோ சண்டை போட்டுக்கொண்டு கோபமாய்ப் பேசிக்கொள்வதுபோல் நமக்கு ஒலிக்கிறது. சீதோஷ்ண நிலையானதுமக்களின் மொழியை அவ்விதம் மாற்றியமைக்கிறது. ஒரே மொழியைக் குளிர்ப் பிரதেசத்திலுள்ளவன் ஒரு விதமாயும், உஷ்ணமான பாலைவன தேசத்திலுள்ளவன் ஒரு விதமாயும் பேசுவதைக் காணலாம். உதாரணமாக; ஆங்கிலேயனை எடுக்கொள்வோம். அவன் சாধாரணமாக குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரான காரணமாக அவனுக்கு "ஹா", "ஹு" என்கின்ற—பெரும் காற்றைத் தள்ளிக்கொண்டு உச்சரிக்கவேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்க சுலபமாக அம்மொழியும், ஏன்—அ போன்ற வடமொழியும் பேசமுடிகிறது. ஆனால், என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ழ, ள—இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. எங்களூரில் தமிழில் விधार்థ பட்டம் பெற்ற பாதிரியார் "பாப்லி" என்றொருவர் இருக்கிறார். அவரால் "மகாஜனங்களே!" என்றுதான் கூறமுடிகிறதே தவிர,"மகாஜனங்களே!"என்று உச்சரிக்க முடியாது. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பதுதான் காரணம். நம்கூரிலிருந்து சிலர் வடநாடு சென்று நான்கு, ஐந்து ஆண்டுகள் சுற்றிவிட்டு பைராகி போல் வேஷம் போட்டுக்கொண்டு இங்கு வந்து சுற்றுவார்கள். அவர்களின் வடமொழி உச்சரிப்பைக் கவனித்தால் அவர்கள் இவ்வூர்க்காரர் என்று சுலபமாய்க் கண்டு பிடித்து விடலாம். நான் சிலரைக் குறிப்பாகக் கண்டுபிடித்து,"ஏம்பா, இந்த ஊரிலிருந்து போனவன் தானே நீ?"என்று கேட்டதுண்டு. அவர்களும்,"ஆமாம், எஜமானே!" என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டுச் சீதோஷ்ணத்திற்கு ஏற்பப் பழகிய—அமைக்கப் பட்ட நாக்கால் வடமொழிச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடிவதில்லை. அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டு மொழிகளைச் சரிவர உச்சரிக்க முடிகிறதென்பதும், வேற்று நாட்டு மொழிகளைச் சரிவர உச்சரிப்பது அனேகருக்குக் கஷ்டமாயிருக்கிறதென்பதும், தம் நாட்டிற்கு ஒப்பான சீதோஷ்ணமுள்ள வேறு ஒரு நாட்டு மொழியைச் தம்மால் சரிவர உச்சரிக்க முடிகிறதென்பதும் எதைக் காட்டுகிறது? அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அந்தந்த நாட்டு மக்களின் மொழி ஒலி அமைந்திருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது? அந்தந்த இடத்திற்கேற்பவும், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்பவும் மொழிகள் பிரிந்திருக்கின்றன என்பது மேலே கூறியதிலிருந்து பெறப்படுகிறது. இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக்கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது, அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து, அந்தக் கருத்து இருந்ததில்லை என்பதுதான். அந்தக் கருத்து அவர்களிடத்து ஏற்படவேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் அதற்குக் காரணம். எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக்கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழிபேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப்படித்தால், அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு மொழியை ஏற்பதும், தன்மாகூடிய மொழியாகவும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின்பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்துத் தான் இருக்கிறது.ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாறது. சுலபமாகக் கற்றுக்கொள்ளப்படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக்கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். இதுவுமன்னியில், மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாயிருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவின் றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடைய தாயினும், அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் என்பது கண்கூடு. ஆங்கில மொழிக்கு நம் நாட்டில் செல்வாக்கு ஏற்படக் காரணமே, அது அரசாங்க மொழியாய் இருந்து வருவதுதான். இதுவரை பொதுவாக"மொழி" என்பது பற்றியும் அதன் அமைப்பு, சிறப்பு, வளர்ச்சி என்ற பல வான தன்மைகளைப் பற்றியும் ஒரு சிறிது ஆராய்ந்து பார்த்தோம். இனி நமது தகுமையால் தமிழைப்பற்றிச் சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்."தமிழ்" என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து—மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா?அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுச்சும், மக்களுச்கும், தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா? என்ற கேள்விகள்—தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியதா? முட மென்றுதான் என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும், தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பொருட்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ்மொழி —என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாக திராவிடம், திராவிடர், திராவிடமொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும், அந்தக் கருத்தைக் கொண்டே"திராவிடம்" என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகு காலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கிலும் கொண்டுவந்திருக்கிறோம். வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறாம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள் நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல்—தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள்;சிலர் மறுக்கவும் செய்கிறார்கள். காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச்சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவகளாகப் பிரிந்துசென்று ஆங்காங்கு குடிவாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக் காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றொர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகிமைவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியைஅதிகமாக உபயோகப்படுத்தும்படி செய்து, அதன்மூலம் தமது கலை; ஆச்சார அனுஷ்ठானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிற ஏற்பட்டிருக்கிறது. ஆனால்‌, என்‌ சிற்றறிவிற்கு, என்‌ அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குதீ தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌ ஆகிய நான்கும்‌ தனித்தனி மொழிகலென்றோ, அல்லது தமிழ்‌ தவிர மற்ற மூன்றும்‌ தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரேமொழி அதாவது தமிழ்தான்‌ நான்கு இடங்களில்‌ நான்கு விதமாகப்‌ பேசப்பட்டு வருகிறது என்றே நான்‌ அபிப்பிராயப்படுகிறேன்‌. உதாரணமாக, இங்கு (சென்னையில்‌) * தோட்டத்‌ திற்குப்‌ போகிறேன்‌ ! என்றால்‌, * வயலுக்கு, விளை நிலதீகுக்குப்‌ போகி3றன்‌? என்று அர்த்தம்‌. * கொல்லைக்குப்‌ போகி3றன்‌ ! என்றால்‌, * கக்கூசுக்குப்‌ போகிறேன்‌ ! என்று அர்த்தம்‌. சோழநாட்டில்‌ தோட்டத்துக்குப்‌ போவதென்றால்‌, கக்கூசுக்குப்‌ போவதாகவும்‌, கொல்லைக்குப்‌ போவதென்றால்‌ வயலுக்குப்‌ போவதாகவும்‌ அர்த்தம்‌ செய்து கொள்ளு வார்கள்‌. ஒரே தமிழ்ச்சொல்‌ இரண்டு இடங்களில்‌ வெவ்வேறு பொருளில்‌ வழங்குகிற துஃ ஒரு பொருளுக்குப்‌ பல சொற்கள்‌ இருந்தால்‌, ஒவ்வொரு சொல்லும்‌ ஒரு மொழியாகிவிடுமா ₹ முன்பு-சுமார்‌ 50 ஆண்டுகட்கு முன்பு, நான்‌ மலையாளதீதுக்கு வியாபார விஷய மாய்ச்‌ சென்றபோதெல்லாம்‌ நான்‌ சிறிது அழுத்தியும்‌, குறுக்கியும்‌, மடிதீதும்‌ பேசிய தமிழை அங்குள்ளவர்கள்‌ புரிந்துகொண்டுதான்‌ இருந்தார்கள்‌. நான்கு மொழிகளிலும்‌ தேர்ச்சி பெற்ற பண்டி தர்களைக்‌ கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்தீதைகள்‌ அத்தனையையும்‌ நீக்கிவிட்டுப்‌ பார்த்தால்‌, எஞ்சி நிற்கும்‌ வார்த்தைகள்‌ அத்தனையும்‌ அனேகமாகதீ தமிழ்ச்‌ சொற்களாகவே இருக்குமென்று என்னால்‌ அறுதி யிட்டுக்‌ கூறமுடியும்‌ 3 அகராதிகொண்டு மெய்ப்பிக்கவும்‌ முடியும்‌. சமீபகாலம்‌ வரையிலும்‌ கூடஅவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள்‌ சமீப காலம்வரை தமிழ்ச்‌ சப்ததீதில்தான்‌ நாலாயிரப்‌ பிரபத்தத்தையும்‌, திநப்பாவையையும்‌, தெலுங்கு எழுத்தில்‌ படித்துப்‌ பாடி வந்தி நக்கின்றனர்‌. அந்தப்‌ புதீதகங்கன்‌ தெலுங்‌ கெழுத்தில்‌, தமிழ்ச்‌ சப்ததீதிபதான்‌ அச்சிடப்பட்டிருக்கின்‌றன. கன்னடியர்களுக்கும்‌, மலையாளிகளுக்கும்‌ முதல்‌ நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும்‌, வடமொழி மோகமும்‌ குறையக்குறைய ஆந்திரர்‌ களும்‌, மலையாளிகளும்‌, கன்னடியர்களும்‌ தம்‌ தாய்‌ மொழி * தமிழ்‌ தான்‌ என்பதைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள்‌. என்பதில்‌ எனக்குத்‌ திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள்‌, பண்டி தர்கள்‌ சிலர்‌ இன்று ஓரளவு கந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்கள்‌ என்பது நமக்கு மேலும்‌ நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. கிதீ தமிழ்‌ மொழியின்‌ வளர்ச்சிக்குப்‌ புத்துயிர்‌ அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான்‌ நடத்தினேன்‌. அதாவது, ¢ தமிழ்‌ மொழி தாய்மொழியாக உன்ள இந்நாட்டில்‌, இந்தியைப்‌ புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி. செய்தேன்‌. அது என்‌ தாய்மொழிப்‌ பற்றுதலுக்காக என்று அல்ல) அது என்‌ நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவ9பருமானால்‌ பேசப்பட்டது என்பதற்காக அல்ல;$ அகத்திய முனிவரால்‌ திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திரசகீதி நிறைந்தது) எலும்புக்‌ கூட்டைப்‌ பெண்ணாக்கிக கொடுக்கும்‌ என்பதற்காக அல்ல; பின்‌ எதற்காக? தமிழ்‌ இந்‌ நாட்டுச்‌ சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப்‌ பிற எம்மொழியை யும்விடதீ தமிழ்‌ நாகரிகம்‌ பெற்று விளங்குகிறது. தூய தமிழ்‌ பேசுதல்‌-மற்ற வேற்று மொழிச்‌ சொற்களை நீக்கிப்‌ பேசுவதால்‌ நம்மிடையேயுள்ள இழிவுகள்‌ நீங்குவதோடு, மேலும்‌ மேலும்‌ நன்மையடைவோம்‌ என்பதோடு, நம்‌ பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 மொழி 969 மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப்‌ புகுதீதிக்கொள்வதன்‌ மூலம்‌ நம்‌ அமைப்புக்‌ கெடுவதோடூ, அம்‌ மொழியமைப்பிலுள்ள நம்‌ நலனுக்குப்‌ புறம்பான கருத்துக்கள்‌, கேடுபயகீகும்‌ கருதீதுக்கள்‌ நம்மிடைப்‌ புகுந்து நம்மை கிழிவடையச்‌ செய்கின்றன. என்பதால்தான்‌. வடமொழியில்‌ நம்மை மேலும்‌ மேலும்‌ அடிமையாக்கும்‌ தன்மை அமைந்திருப்ப தால்தான்‌ அதையும்‌ கூடாதென்கிமேன்‌. நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி- தமிழைவிட மேலான ஒரு மொழி இந்‌ நாட்டிலில்லை என்பதற்‌ காகவே தமிழை விரும்புகிறேனே தலிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்‌ கூடியது என்பதற்காக அல்ல. இம்மொழியில்‌ பாடி. அதிசயங்கள்‌ விளைவிதீதகாகப்‌ புராணங்கள்‌ கூறுகின்றன. ஆனால்‌, அந்தக்‌ கருத்து நமக்குத்‌ தேவைபில்லை. ஏன்‌ 1 ஆயிரம்‌ முதலையை வைதீதுக்கொண்டுதான்‌ பாடிப்‌ பாருங்களேன்‌ $ அவைகளில்‌: எ.துவாவது, தான்‌ தின்ற ஒரு மீனையாவது ககீகுகிறதா என்று ! தாழ்ப்பானிட்ட சிற்றறை யின்‌ முன்னின்றுதான்‌, இலக்கணட்படியே மனம்‌ உருகிப்‌ பாடுங்களேன்‌-சிறிதாவது தாழ்ப்பாள்‌ அசைகிறதா என்று ! அற்புத சக்திகள்‌ நிறைந்த மொழி என்று பிடிவாதம்‌ செய்வது அறியாமைதான்‌ அது தமிழ்ட்பண்புகூட அல்ல. தமிழில்‌--அதிசயம்‌, மந்திரம்‌, சகீதி முதலிய சொற்களே இல்லை. இதேபோல்‌, தாய்மொழி என்று பிடிவாதம்‌ செய்வதும்‌ அறியாமைதான்‌. ஏன்‌ 1.நம்‌ தாய்‌ நம்மைப்‌ பெற்றெடுதீததும்‌ நம்மைத்‌ தெலுங்கன்‌ வீட்டிலோ, தருக கயன்‌ வீட்டிலோ விட்டிருந்தால்‌ நாம்‌ தெலுங்கோ அல்லது உருதுமொழியோ பேசுவோமா ? அல்லது, நம்‌ தாய்‌ தமிழ்‌ பேசியதன்‌ காரணமாக, நம்மைப்‌ பீறிட்டுக்‌ கொண்டு நம்‌ நாவிலிருந்து தமிழ்‌ தானாக வெளிவருமா? இன்னும்‌ கவனிப்போம்‌. நம்‌ தாய்‌ குழந்தையாக இருந்தபோது ,பேசியதென்ன 1 * பாய்ச்சி குடிக்கி1, சோச்சி தின்னு, ¢ மூத்தா பேய்‌, ¢ ஆய்க்கு போ? என்றுதானே பேசியிருப்பாள்‌! இப்போது நாம்‌ பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி--என்றர பேசுகிறோம்‌? இந்சக்‌ காலத்தில்‌ நம்‌ தாய்கள்‌ பேசுகிற மொழியே அதிஈயமாயிருக்கும்‌. ஆதலால்‌, தாய்மொழி என்று பிடிவாதம்‌ செய்வதும்‌ அறியாமை என்று தோன்றவில்லையா ? ஆதலால்‌, ஒரு மொழியின்‌ தொடர்பு நமசீகு நல்லதா கெட்டதா என்று சிந்திக்கும்‌ போது நமது இடத்திற்கும்‌, சீதோஷ்ணத்திற்கும்‌ பொருந்தியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்‌. பிறகு அம்‌ மொழியிலுள்ள கருத்துக்கள்‌ நம்‌ தன்மானத்தையும்‌, மேன்மையை யும்‌, நலத்தையும்‌, தகுதியையும்‌ காகீகக்கூடியதா? அதிகப்படுத்தக்‌ கூடியதா? அவற்றைக்‌ கெடுக்கக்கூடியதா ? என்றும்‌ சிந்திதீதுப்‌ பார்க்க வேண்டும்‌. உதாரணமாக; தமிழ்மொழியின்‌ வடமொழித்‌ தொடர்பால்‌ நமகீகேற்பட்டுள்ள, ஏற்படப்போகும்‌ கெடுதிகளைப்‌ பார்ப்போம்‌. நம்மிடையேயுள்ள. சாதிப்‌, பிரச்சினையை எடுத்‌ துக்கொள்ளுவோம்‌. சாதி! என்ற வடமொழிச்‌ சொல்லைத்‌ தமிழிலிருந்து எடுத்து விட்டால்‌ அதற்குச்‌ சரியான தமிழ்ச்சொல்‌ ஒன்று கூறுங்களேன்‌ ! பண்டிதர்கள்‌ தான்‌. கூறட்டுமே. வார்தீதை இல்லையே ! 'ஆதலால்‌, நம்‌ மக்களிடையே ஆதியில்‌ சாதிப்‌ பிரிவினை இல்லை என்பதும்‌, இது வடநாட்டுத்‌ தொடர்பால்தான்‌ ஏற்பட்டது என்பதும்‌ தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால்‌ சாதிபேத உணர்ச்சி அற்றப்போகுமா, இல்லையா 1 கூறுங்களேன்‌. தபோல்‌ திவசம்‌, திதி, கலியாணம்‌, வைகுந்தம்‌, சொர்க்கம்‌, மோட்சம்‌, நரகம்‌ ) சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்‌ வார்தீதைகள்‌--வடமொழியா ? தமிழா? இவ்ார்‌த்தைகளின்‌ தொடர்பால்‌ நம்‌ புத்தி தெனிந்ததா? இருந்த புத்தியும்‌ போனதா ? சிந்தித்‌ துப்பாருங்கள்‌. தாரா முகூர்தீதம்‌, கன்னிசாதானம்‌ என்ற பேர்கள்‌ வந்த பிறகுதானே நம்பெண்கள்‌ கணவனின்‌ கைப்‌ பொம்மைகள்‌ ஆனார்கள்‌ 1 அதன்‌ பிறகுதானே, சிறிது சசீசரவு தேர்ந்து 1686—122 ‘ 970 பெரியார்‌ ஈ, வெ. ர. சிந்தனைகள்‌ தன்‌ வீட்டுக்கு வந்த தன்‌ மகளைப்‌ பார்தீது, ¢ ஆமாம்மா! உன்னைக்‌ கன்னிகாதானம்‌ செய்தாயிற்றே ] உன்னை உன்‌ புருஷனுக்குக்‌ கொடுத்துவிட்டோம்‌ ) தானம்‌ செய்து விட்டோமே ! இனி, உனக்கு தடம்‌ அவன்‌ இருப்‌ டம்‌ தானம்மா? என்று கூறும்‌ தகப்பன்மார்‌ தோன்றினார்கள்‌ | கன்னிகாதானம்‌ என்பதற்குத்‌ தமிழ்‌ வார்திதை ஒன்று கண்டுபிடியுங்களேன்‌. திருவள்ளுவர்‌ * வாழ்க்கைத்‌ துணை? என்றுதானே கூறுகிறார்‌. அதாவது, புருஷனும்‌ மனைவியும்‌ சிநேகிதர்கள்‌, நண்பர்கள்‌ என்றுதானே அதற்குப்‌ பொருள்‌. எவ்வளவு கருத்து வேறுபாடு பாருங்கள்‌. * மோட்சம்‌? என்பதற்குத்‌ தமிழ்‌ வார்த்தை ஏது! மோட்சத்தை நாடி எத்தனை தமிழர்‌ காலத்தையும்‌, கருத்தையும்‌, பொருளையும்‌ வீணாக்கு கறார்‌ கன்‌, கவனியுங்கள்‌. மதம்‌ என்பதரீ குத்‌ தமிழில்‌ மொழியே து? மதம்‌ என்ற வார்‌ த்தையரல்‌ ஏற்பட்டதுதானே மதவெறி ₹ நெறி, கோன்‌ என்றால்‌. வெறி ஏது? *பதிவிரதாத்‌ தன்மை? என்பதற்காவது தமிழில்‌ வாரீதீதையுண்டா 1 'பதிவிரதம்‌ என்ற வார்த்தை இருந்தால்‌--சதி விரதம்‌? அல்லது மனைவி விரதம்‌? என்கின்ற வார்த்தையும்‌ வருக்கவேண்டுமே ! இதுவும்‌ வடமொழித்‌ தொடர்பால்‌ ஏற்றவினைதான்‌. *ஆதீமா! என்ற வார்த்தைக்குத்‌ தமிழில்‌ மொழியேது ! ஆதீமாவால்‌ எவ்வளவு மூட நம்பிக்கைக்‌ களஞ்சியங்கன்‌ நம்‌ புலவர்‌ கன்‌, அறிஞ கனிடையேயும்‌ புகுந்து விட்டன 8 தமிழ்நாட்டு மக்களின்‌ வழக்கங்கள்‌ மாவும்‌ பெரிதும்‌ ஆண்‌, பெண்‌ இருபாலார்கீகும்‌ சம உரிமை என்ற அடிட்படையின்‌ மீம்‌, பகுத்தறிவு என்ற அடிப்படையின்‌ மீதும்‌ அமைந்‌ திருக்கக்‌ காண்கிறோம்‌. ம்‌ நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருதி, துக்சகனின் செமுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்த் என்ற உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆசாரங்கள், தர்மங்கள், ஆசார சங்கள் முற்றிலும் நமக்கு மாறபட்டவை. அவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள அவர்களது மொழியே அவர்களுக்கு உயர்வான தாகவும் நமது மொழி அவர்களுக்குத் தாழ்வான தாகவும் தோற்றுவது சகஜம். ஆனால், நாமும் அவர்கள் நம் மொழியை மட்டமாக கருதுகிறார்களே என்பதற்காக நம்மொழியை மட்டம் என்று கருதிவிடலாமா? அப்படிக் கருதி வடமொழியை ஆதரிக்கப் புகுந்துதானே நாம் பல மூட நம்பிக்கைகளுக்கும், பல திழிவுகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிறோம். வடமொழியில் நம்முக்குப் பெயர் சூத்திரன். நாம் ஏன் சூத்திரர்கள் என்று, இன்று கேட்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு நம் தமிழ் மொழியிலிருந்து ஒரு ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஒன்றுகூட இல்லையே!வடமொழியை ஏற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு ஆதாரங்கள்!கடவுள் வாக்குகளே அதற்கு ஆதாரமாய் வந்துவிடுகிறது! தற்போது தமிழில் வந்து புகுந்துகொண்டிருக்கும் வடமொழி வார்த்தைகளை எடுத்துவிட்டால் நம் குறைகள், தொல்லைகள் எவ்வளவு நீங்குமென்பதும்,தொடர்பை ஏற்றுக்கொண்டால் எவ்வளவு இழிநிலைக்கு ஆளாகவேண்டியிருக்கிற தென்பதும் புரிகிறதல்லவா!வடமொழித் தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும், அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவ நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. நமது வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளுவதற்கான பல அரிய மார்க்கங்களை ஆங்கல நூல்களிலிருந்தே நாம் பெரும்பாலும் அறிந்துவருகிறோம். நகர்ந்தோம்மாயும் கூறின், "அடிமை வாழ்வே ஆனந்தம்!" என்று நினைத்திருந்த மத்திய இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவ தான் என்று கூறினால் மிகையாகாது. "ராஜா வேண்டாம், குடியரசு காண் வேண்டும்" என்கிற அறிவு, சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என்கிற அறிவ, ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவ ஆகிய சகல அரசியல்-பொருளாதার முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது. தந்திரியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமান தீ.யையும், ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயொழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்கவந்த வடமொழியா அல்ல. வடமொழித் தொடர்பு சாஸ்திர, புராண, இதிகாச மூட நம்பிக்கைகள் நம் பகுத்தறிவை அடிமைப்படுத்தின. ஆங்கில மொழி நம்மை அவ்வடிமைத் தளையிலிருந்து விடுத்தி, எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கப் பார்க்கும்படி செய்தது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிரத்যட்சம் அனுபவத்திற்கு ஒவ்வாத, சரித்திர காலத்திற்கு உட்படாத எதையும் நம்ப வேண்டியதில்லை என்று உணர்த்தியது ஆங்கில மொழிதான். அதைப் பேசிய மக்களைத் தமிழைக் காட்டிலும் வெகு வேகமாக அறிவு உலகத்தை நோக்கி அமைத்துச் செல்கிறது. ஆங்கிலேயன் சந்திரகிரகத்தினிடமிருந்து ஒலி கேட்கிறான்!வடமொழியாளன் இங்கு அதில் ஏறும் பதினாலு லோகங்களைக் காட்டியு தீ.வா மந்திரம் படிக்கிறான். எவ்வளவு வேற்றுமை பாருங்கள்!காரணம் என்ன?நம் மக்களுக்குப் புத்தி இல்லையா? அல்லது, நம் மூளை களிமண்ணால் செய்யப்பட்டதா? அட்படியொன்றும் இல்லையே!அறிவு வளர்ச்சிக்குப் பெரும்பாலும் சுற்றுச் சார்புதான் காரணம். ஒரே தகப்பனுக்கு இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும், ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்துப் பாருங்கள்! இதன் உண்மை விளங்கும். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனைவிடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனாயிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான்!இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான். அவனவன் வளர்ந்த இடத்தில் உள்ள பழக்கவழக்கங்களை ஒட்டி அவனவனுடைய அறிவுத் தன்மையும் மாறுபட்டிருக்கிறது. உதாரணமாக, நமது இரண்டு கைகளை எடுத்துக்கொள்ளுவோம். இரண்டுக்கும் நரம்பு, தசை, எலும்பு இவற்றின் அமைப்பும் ரத்த ஓட்டமும் ஒரே மாதிரி தன்மையாக தான் அமைந்திருக்கிறன. இவை இரண்டும் ஒரே தாயின் கர்ப்பத்திலிருந்து தான் உணர் தாயின் இரண்டும் ஒரே தகப்பனுடைய சக்தியால் தாண் உண்டாயிருக்கின்றன. என்றாலும், ஒரு கையால்தான் எழுத முடிறது! மற்றொரு கையால் எழுத முடிய வில்லையே! ஏன்? ஒரு கையை எழுதும் வேலைக்கே மற்றும் மேலான செய்திறம் வேலைக்கே பயன்படுத்தி விட்டோம். மற்றொரு கையைக் கேவலமான வேலைக்கே, மலம் அலம்பும் வேலைக்கே பயன்படுத்தி, வேறு வேலைக்குப் பயன்படுத்தாமல் வலிவற்றதாக ஆக்கிவிட்டோம். எது எந்த வேலைக்காகப் பயன்படுத்தப்பட்டதோ அந்த வேலையில் அது பழக்கப்பட்டுப் போயிற்று, வலிவற்ற ஆகவும் ஆகிவிட்டது. ஆகவே, எதற்கும் பழக்கம்தான் காரணமே ஒழிய அமைப்பல்ல முக்கிய காரணம். தமிழும் ஒரு காலத்தில் வளங்கொன்ற மொழியாகதான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பின்பத்தப்பட்டுவிட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ்மொழி சிக்கிக்கொண்டதுதான். தமிழ் சைவமொழி ஆக்கப்பட்டதால் தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாகத் தமிழ் நாட்டில் புகத் தொடங்கின. தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக்கொண்டதால், அம்மதக் கருத்துக்களை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள ஆரம்பித்தனர். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால் நாம் அறிந்துகொள்ள முடியாமல் நமக்கு பழந்த கிளை கிடைத்துவிடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவனவெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய, தமிழ்மொழி நூல்களில், தற்சமயம் நம் நாட்டில் இருந்துவரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பது இங்கு கவனிக்கத்தக்கது.இம்மதம் ஒழிய, பெரும்பாலும் பழமை விரும்பிச்சாலான பண்டிதர்களே பெருத்த தடையாக இதுகாறும் இருந்து வந்திருக்கிறார்கள். தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப் பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப்போல் உச்சிக் குடுமி வைத்துக்கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு, கவையக்குதவாத கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்துவிட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு நம் குழந்தைகளுக்கு திருவிளையாடல் புராண அறிவையும், தேவார-திருவாசக அறிவையும், பாரத-இராமாயண அறிவையும் பரப்பிவிட்டனர்! சிந்தித்தவர்கள் தவறினார்கள். சிலப்பதிகாரத்தைத் தலைசிறந்த நூலென்று இன்றும் போற்றி வருகிறார்கள். அதில் கண்ணூ என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு!உடனே மதுரை பற்றிக்கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு. இன்று எந்த ஒரு பெண்ணாவது அவள் எவ்வளவுதான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம் மாதிரிக் காரியம் நடந்திருச்குமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணையிடுகிறாள்:"பார்ப்பனரை அழிக்காதே!" என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரியப் பெண்ணாக இருப்பாளா?தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடாத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை! ஒரு எடிசன் தோன்றமுடியவில்லை! ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மொழியில் இல்லாத ஒரு கருத்தை, நம் மொழியில் ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது அக் கருத்துக்குண்டான வார்த்தைகளைத் தோற்றுவிப்பதில் நாம் மிக ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும். நாம் கண்டுபிடிக்கும் அல்லது உண்டாக்கும் வார்த்தை, நாம் கூறவேண்டிய கருத்தைத் தெளிவாகவும் விளக்கம் செய்வதாகவும், சுலபமாக உச்சரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக,"காப்பி?" என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இப்போது நம்மில் பெரும்பாலோர்க்கு இந்தப் பானம் அவசியமாகிவிட்டது. நமது மொழியில் இதற்கு வார்த்தை கிடையாது. இப்போது அதற்கு வேறு வார்த்தை உண்டாக்குவதைவிட வழக்கிலிருந்துவரும் அதே வார்த்தையை நாம் தமிழில் ஏற்றுக்கொள்ளலாம். நமக்குத் தேவையான விஞ்ஞானக் கருத்துக்களுக்கு வேறு வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும்போதும் ஆங்கில வார்த்தைகள் தமிழ் மொழி உச்சரிப்புக்குச் சுலபமாக இருக்குமானால், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுவதுதான் நலமாகும். கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியார் கண்டுபிடித்துள்ள வார்த்தைகளைப் பாருங்கள்: Electrolysis, Hydrogen, Disinfectant, என்பவற்றிற்கு, முறையே-வித்யுக்தி யோகம், ஆப் ஜனகம், பூதி நாசினி என்று புது வார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளார்கள். ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக வடமொழி வார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளனர். இதைவிட சென்னைத் தமிழ்ச் சங்கத்தார் கண்டுபிடித்துள்ள, முறையே-மின் பருக்கை, நீரகம், நச்சு நீக்கி என்ற வார்த்தைகளே சிறந்தனவாக இருக்கின்றன. காரணம், சென்னைத் தமிழ்ச் சங்கத்தாருக்கு ஏற்பட்டுள்ள தமிழ்ப் பற்று, கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியாருக்கு இல்லாமல் போன துதான்! நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தாண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடிய தமாகும். எம்மொழியிலிருந்து நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடிய கம், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக்கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவேகூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறதுகு. வேற்றுமொழிக் கலப்பின் றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள். கடைசியாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்காக, அதில் செய்யப்படவேண்டிய சில சீர் திருத்தங்களைக் குறித்து எனது கருத்துக்களைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். தமிழ் முக்கியமாக நம் முற்போக்குகர்க்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும்!மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும்! பயனுள்ள பரந்த மொழியாகப்பட வேண்டும்."இன்றையத் தமிழ் மிகவும் பழைய மொழி; வெகு காலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப்போல் திருத்தப்படாதது"என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறைவாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்?பழமை எல்லாம் அனேகமாக மாற்றமாகி இருக்கிறது, திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும், திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ, குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும், திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய-பண்டைக்கால த்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப்போவோம்!பின் தங்கிப்போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும்! போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும். அவ்வப்போது கண்டுபிடிக்கப் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம்மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும், சுப்பிரமணியனும் பேசிய மொழி, உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும், சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க் கருவிகள் இன்று நம் மக்களுக்குப் பயன்படுமா? அவைகளை நாம் இன்று பயன்படுத்துவோமா? அல்லது, அவர்களே இன்று போரிட நேர்ந்தால் அவைகளைப் பயன்படுத்துவார்களா? சிந்தித்துப் பாருங்கள்! இயற்கையின் தத்துவம் நமது அறிவ வளர்ச்சிக்கேற்ப மாற்றுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வ தியளிக்கக் கூடியதே யாகும். சிவன் கோலும், மழுவும், கத்தியும், வேலும், ஆலமும் கொண்டுதான் சண்டை பிடித்து இருக்கிறாராம். விஷ்ணு வந்தபிறகே வில் வந்திருக்கிறது. அதன்பிறகே கப்பாக்கியும், அதிலிருந்து பீ இ, பீரங்கியும்‌, மிஷின்‌ பீரங்கியும்‌ ஏற்பட்டு இன்று அணுகுண்டு வரை போர்க்‌ கருவிகள்‌ முன்னேற்றமாகி இருக்கின்‌ றன. இன்று நாமோ நம்‌ கடவுன்க 8ளர போரிடநேர்‌ ந்தால்‌--வில்லும்‌, வேலுமா உபயோகிப்போம்‌? ஆக$வ, போர்க்‌ கருவிகள்‌. மாற்றமடைந்திருப்பது போல்‌, நமது மொழியும்‌ மாற்றம்‌ அடையவேண்டாமா? போர்க்‌ கருவிகளில்‌ மாற்றத்தை அனுமதித்த கடவுள்கள்‌--மொழி மாற்றத்தைமட்டுமா அனுமதிக்க மாட்டார்கள்‌ 8 ஆகவ, பிறர்‌ சுலபமாகத்‌ தமிழ்மொழியைக்‌ கற்றுக்கொள்வதற்காகவும்‌, சுலபமாக வச்சுக்‌ கோக்கவும்‌, டைப்‌ அடிக்கவும்‌ தமிழ்‌ எழுதீதுக்கவில்‌ சில சீர்‌ திருத்தங்கள்‌ செய்யப்‌ படுவது நலம்‌ என்று நினைக்கிறேன்‌. தமிழில்‌ எழுத்துக்கள்‌ அதிகம்‌, ஞாபகத்தில்‌ இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துக்கள்‌ அதிகம்‌. மொத்த எழுத்துக்கள்‌ 216 வேண்டு யிருச்கிறது என்றால்‌, இதில்‌ 135 எழுத்து உருவங்கள்‌ தனித்தனியாக ஞாபகத்தில்‌ வைக்கவேண்டியிருக்‌ கிறது. தமிழ்‌ எழுதீதுக்கள்‌, ஆங்கிலம்‌ முதலிய சில அன்னியமொழி எழுதீதுக்களைவிட, எழுத்துக்‌ கூட்டுவதற்கு ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிய நேர்முறையைக்‌ கொண்ட: ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 974 பெரியாரி ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ தானாலும்‌ எழுதீதுக்களைக்‌ கற்கவேண்டியது கஷ்டமாகிறது. ஆங்கிலத்தில்‌ 26 எழுத்‌ 'அக்கள்‌ உள்ளன. அவைகளில்‌ உயிர்‌ எழுதீகுக்கள்‌ 5) மெய்யெழுதீதுக்கள்‌ 20 எனலாம்‌ $. அவை எல்லாம்‌ தனி எழுத்துக்களே) உயிர்மெய்‌ எழுதி துக்கள்‌--அ தாவது, உயி ரும்‌ மெய்யும்‌ கூடிய எழுத்துக்கள்‌ கிடையாது) வெகு சுலபமாக அவ்வெழுதீ துகீகளைக்‌ கற்றுகி கொள்ளலாம்‌. ஆனால்‌, இலக்கணமுறை; உசீசரிப்பமுறை ஒரு பொது வரையறைச்குக்‌ கட்டுப்பட்ட தல்ல. தமிழில்‌, அப்படியல்ல. எழுத்துக்‌ கூட்டுதலும்‌, உச்சரிப்பும்‌, அதன்‌: இலக்‌ கணமும்‌ பெரிதும்‌ இயற்கையையே அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. அட்படிப்பட்ட மொழியை, நாம்‌ ஏன்‌ நவீன முயற்சிக்கு ஏற்றவண்ணம்‌ செப்பனிடக்‌ கூடாது சாதாரணமாக; தமிழ்‌ உயிர்‌ எழுதீக க்களில்‌ B, ஒள ஆ8ய இரண்டு எழுதீதுகீ களைக்‌ குறைத்துவிடலாம்‌) இந்த இரண்டும்‌ தேவையில்லாத எழுதீதுக்கள்‌. மேலும்‌, இவைகள்‌ கூட்டெமுதீ தக்ீகளே ஒழிய தனி எழுதீதக்கள்‌ அலை. இவை இல்லாமல்‌ எந்ததீ தமிழ்ச்‌ சொல்லையும்‌ எழுதலாம்‌) உச்சரிக்கலாம்‌. இவைகளை எடுதீதுவிட்டால்‌ சொற்களின்‌ உசீசரிப்‌ லோ, பொருளிலோ இலக்கணதீதி லோ எவ்வி 34 குறையும்‌, குற்றமும்‌. ஏற்பட்டுவீடும்‌ என்ற தோன்றவில்லை. சுமார்‌ 40 வருடங்களுக்கு முன்னால்‌ இருந்தே நான்‌ இதை சுவனித்துவருகிறேன்‌ ! இந்தப்படி எழுத்குக்கோதிது அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறன்‌ புதீககதீகையும்‌ நான்‌ 40 வருட தீதிற்கு முன்பே பார்‌ தீதிநகீகி2 றன்‌. இப்படிச்‌ செய்வதில்‌ மொதிததீதில்‌ 38 எழுத்துக்கள்‌ (அதாவது உயிரெழுத்‌ s B, ஒள ஆய 2-ம்‌) அவை ஏறும்‌ மெய்யெழுதீ தக்களில்‌ 2X18=36-b ஆக 9642௨8) ஞாபகத்திற்கும்‌, பழக்கத்திற்கும்‌ தேவை இல்லாத எழுதீதுக்‌ கண்‌ ஆகிவிடும்‌. (8௨ அய்‌) ஒள அவ்‌ என எழுதலாம்‌). இவை தவிர உயிர்‌ ய்‌ எழுதீதுக்‌ களில்‌ தனிமாற்றம்‌ பெற்றிருக்கிற ணா. றா. னா ஆகிய மூன்று எழுதீதுக்களுக்கும்‌ தனி உருவம்‌ தேவை இல்லாமல்‌ ணா, றா, னா Curd— ஆகீகிவிடலாம்‌. மற்றும்‌, மெய்யெழுதீதுக்களில்‌ இகரம்‌, ஈகாரம்‌, உகரம்‌, ஊகாரம்‌ ஆகிய நான்கு குறில்‌, நெடில்‌ எழுத்துக்கள்‌ கொண்ட (4X18=72) தனி உருவ எழுத்துக்களை நீக்கி விட்டுத்‌ தனிச்‌ சிறப்புக்‌ குறிப்பை--அதாவது ககரதீதிற்கு ஆகார நெடில்‌ உருவம்‌ காட்ட ஒரு ‘1’ (கால்‌) போட்டு விடுவ துபோல்‌, ககரதீதுக்கு எகரம்‌, ஏகாரம்‌ காட்ட ஒற்றைச்‌ சுழிகீ கொம்பு, இரட்டைச்‌ சுழிக்கொம்பு ¢ @, 8 போடுவ துபோல--மற்ற, இகர, ஈகாரதீ துக்கும்‌, உகர, ஊகாரத்துச்கும்‌ சில குறிப்புக்களை உண்டாக்கி, உயிர்‌ 10, மெய்‌ 18, குறில்‌, நெடில்‌ குறிகள்‌ 9, ஆய்தம்‌ 1 ஆகிய 38 தமிழ்‌ எழுதீதுக்களாகச்‌ சருக்கிவிடலாம்‌. இதைப்பற்றி மற்றொரு சொற்பெருக்கல்‌ தெவிவாக்க இ௫&83றன்‌. இநீதமாறு தல்கள்‌ செய்வதால்‌ நம்‌ மொழிக்‌2கா, பொருளுக்கோ, இலக்கணதீதுக்கோ எவ்விதக்‌ குறை பாடோ, கேடோ செய்தவர்களாக ஆகமாட்டோம்‌. துருக்கியில்‌ கமால்‌ பாட்சா அவர்கள்‌ எழுதீதுக்களின்‌ அடிப்படையையே மாற்றி விட்டார்‌. அதாவது, இருந்த எழுதீதுக்களையே ஒழித்துவிட்டு வேற்றுமொழி (ஆங்கில) எழுத்துக்களை எடுத்துக்கொண்டார்‌. அதனால்‌ கற்க மிக வசதியும்‌, கலகுவும்‌ ஏற்பட்டு விட்டது. அய்ரோப்பாவில்‌ நான்‌ சுற்றுப்பிரயாணம்செய்த ரஷ்யா முதல்‌-போர்சீசுகல்‌ வரை, சுமார்‌ 10,15 நாடுகளிலும்‌ எத்தனையோ மொழிகள்‌ இருந்தும்‌, அத்த மொழிகளுச்குப்‌ பெரிதும்‌ ஒரே மாதிரி.26 மூதல்‌ 32 எழுத்‌ ஓக்கள்தாம்‌ பயன்ப தீதப்படுகின்றன. சில புதிய தனி * ஒலி? கொண்ட மொழிகள்‌ இருச்‌ குமானால்‌, அவற்றிற்கு giu 2 அல்லது 3 பதிய உருவ எழுதீதுக்களைச்‌ சேர்தீதுக்கொண்டிருக்கிறார்கள்‌. அமெரிக்காவில்‌ சமீப காலத்தில்‌ உ எழுதீகுக்கூட்டும்‌ முறையை மாற்றிக்கொண்ட தாகச்‌ சொல்லப்படு 9ற.து. ஆகவே, மேல்‌ நாடுகளில்‌ எழுத்துக்கள்‌, எழுதீகுக்கூட்டும்‌ முறைகள்‌ இவைகளில்‌ மாற்றம்‌ செய்வதால்‌, இலக்கணதீதிஃ, உச்சரிப்பில்‌, பொருளில்‌ மாற்றம்‌ ஏற்படுவதாயிருந்தாலுங்கூடத்‌ அணி வாக மாற்றிக்கொண்டிருக்‌ றார்கள்‌. ஆனால்‌, நான்‌ சொல்லும்‌ மாற்றங்களுக்கு அட்படிப்‌ பட்ட குற்றங்‌ குறைகள்‌ இல்லையென்றே கருதுகிஃறன்‌. www.thamizham.net - Free E 5௦011௦ 3026 மொழி 975 நமது தமிழ்ப்‌ பண்டிதர்கள்‌ இம்‌ மாற்றங்களுக்கு ஒப்புகிகொள்ள வேண்டுமே, அதுவன்றோ பெரிய கஷ்டம்‌ ! மேல்நாடுகளில்‌ பண்டிதர்கள்‌ என்றால்‌ புதீ.துலகச்‌ சிற்பி களாயிருப்பார்கள்‌, நம்‌ நாட்டிலோ பண்டிதர்கள்‌ என்றால்‌ பழமைக்கு இழுத்துக்கொண்டு போகும்‌ பாட்டிக்‌ கதை வீரர்களாக இருக்கிறார்கள்‌. * பண்டு! என்ற சொல்லிலிரு நீ.து--- அதாவது பண்டையர்கள்‌ என்‌ பதுதான்‌ பண்டிதர்கள்‌ என்ற சொல்லாகதி திரிந்தது என்று மூலம்‌ கண்டுபிடிக்கத்‌ தகீகவர்களாக இருக்கிறார்கள்‌ ! எழுத்து, மொழிச்‌ சீர்தி நத்தத்தில்‌ எனக்குத்‌ தெரிய எந்தப்‌ பண்டிதரும்‌ பாடுபட்டிருப்பதாகக்‌ காண முடியவில்லை. காலஞ்‌ சென்ற பா. வே. மாணிக்க நாயக்கர்‌ அவர்கள்‌ அகீ காலத்தில்‌ சிறிது பாடுபட்டார்‌. ஆனால்‌, அவர்‌ சமயத்தை (ஓங்கார தீதை)தீி தலையாக வைத்துக்கொண்டு பாடுபட்டார்‌. ஆதலால்‌, அக்‌ காலத்தில்‌ அவரிடம்‌ எனக்குப்‌ பற்றிருநீதம்‌, எனக்கு ஓங்காரதீதில்‌ இருந்த வெறுப்பு அவரது முயற்சியையும்‌ அறிவுத்‌ திறனையும்‌ அனுபவிக்க முடியாதபடி செய்துவிட்டது. அவர்‌ கிப்போது இருந்திநந்தால்‌ எவ்வனவோ செய்திருப்பார்‌. அடுத்தபடியாக, மெய்யெமுதீதுக்களில்‌ £த, ௩, ஞூ ஆகிய மூன்று எழுத்துக்களையும்‌ எடுத்‌ துவிடலாம்‌. ன்‌ *தந!) ன்‌ கங்‌!) என்4 சள? என்று ஆக்கிலிடலாம்‌. எனவே மெய்யெழுதீதில்‌ ந, ங, ஞ ஆகிய மூன்றையும்‌ குறைக்கலாம்‌) இவை தனித்தனி யாகத்‌ தேவையில்லை என்‌3ற தோன்றுகிறது. உயிரெமுதீதுக்களில்‌ * யும்‌, * ஒளவும்‌ எட்படிக்‌ கூட்டெழுத்துக்களோ, அப்படி-- உயிர்‌ மெய்யிலுளள கூட்டெழுதீதுக்கள்‌ தான்‌: கந்த'ந, ஞூ, ங என்ற மூன்றும்‌. பந்து என்ற வார்தீதையையும்‌, பங்கு என்ற வார்‌ த்தை யையும்‌, பஞ்சு என்ற வார்தீதையையும்‌ எடுதீதுக்கொள்ளு வாம்‌. ந, வையும்‌, 6, வையும்‌, @ வையும்‌ எடுதீதுவிட்டால்‌ * பன்து, *பன்கு?, *பன்‌௬ 1 என்று எழுதவேண்டியிருக்கும்‌. இந்தச்‌ சொற்களின்‌ உச சரிப்பை முதலில்‌ சொல்லிக்‌ கொடுத்துவிடலாம்‌) அல்லது, சாதாரண மாக உச்சரிப்புப்‌ பழக்கதீதிலேயே விருந்துவ ம்‌. பொதுவாகவே ¢ திவுக்கு முன்வந்தால்‌. இப்படி உச்சரிக்கமவண்டும்‌ ) *க!வுக்கு முன்‌ வந்தால்‌-அப்படி உச்சரிக்கவேண்டும்‌ என்று சொல்லிக்கொடுத்துவிட்டால்‌, பிறகு உச்சரிப்பதில்‌ கஷ்டமிருக்காது. ஆங்கிலத்தில்‌ கம்‌ மாதிரி பல உச்சரிப்புகள்‌ இருக்கின்றன. உதாரணமாக Put (பி-யு-டி) ¢ புட்‌! என்றும்‌, But (பி-யு-டி) * பட்‌? என்றும்தான்‌ உச்சரிப்பார்கள்‌, இந்த வார்த்தைகள்‌ முதலில்‌ அறிமுக மாகாதிநந்தால்‌, ஒரே மாதிரிதான்‌ உச்சரிக்கவேண்டியிருக்கும்‌. ஒரு. எழுத்கச்கு பல சப்தங்கள்‌ வருட்பது தமிழுக்குப்‌ புதிதல்ல. * o’ என்னு: எழுத்து தடி? என்‌ ற சொல்லில்‌: ஒருவிதமாகவும்‌, * பதம்‌ ' என்ற சொல்லில்‌ வேறுவிதமாகவும்‌ ஒலிக்கவில்லையர 1 அதேபோல்‌ ன? என்ற எழுதீதுகீ3க ¢ ந? சப்தமும்‌, (வ சப்தமும்‌, ¢ ஞூ சப்தமும்‌ இருந்தால்‌ ஒன்றும்‌ கெட்டுவிடாது. தந்தச்‌ சீர்திநத்தங்களைச்‌ செய்தால்‌ தமிழ்த்‌ தனி உருவ எழுதீதுக்கள்‌ வெகு சொற்பிமாகிவிடும்‌. உயிர எழுத்துக்கள்‌--10, நெட்டெழுதீ துக்கள்‌ எல்லாவற்றிற்கும்‌, ‘1’ (கரமல) போட்டுவிடு கால்‌ அய்ந்து உருவ எழுதிதுக்கள்‌ தாம்‌ இருக்கும்‌. அதாவது (ஆங்கில :வவ்வல்கள்‌ !3பால்‌) அ, இ, உ, எ; ஓ நெட்டெழுத்துக்கள்‌- அர, கா, ௨, ௭, ஒா என்‌3ற எழுதலாம்‌. மெய்யெழுதீதுக்கள்‌ 18-ல்‌ 3 எழுத்துக்கள்‌ (ந, ங்‌, @) எடுக்கப்பட்டால்‌ 15 எழுத்துக்களையும்‌, மேல புள்ளி வைக்காமல்‌ பகீஃத்தில்‌ ஒரே ஒரு கோடு இழுப்பதன்‌ மூலம்‌ காட்டலாம்‌. அதாவது, s |, ௪ |.ட],ண[, 8| வஃவன | என்றபடி எழுதினால்‌-க்‌, சிஃஃஎன்று அர தீதப்படுத்திப்‌ படிக்கலாம்‌, ஆக சிறப்புக்‌ குறிகளில்‌ இந்தக்‌ கோடு டி ஆரம D—p=l, m—p=l, e—v=l, உர---6 ௨1, ௭-1, ar—G=1. ஆக 8 சிறப்புக்‌ குறிகளில்‌ இகர, இரகாரதீதிற்கும்‌) உகர, உசாரத்திற்கும்‌ 4 குறிகள்‌ புதிதாகத்‌ தோற்றுவிக்‌கப்படவேண்டும்‌. ஒகரதீதிற்கும்‌ ஓகாரதீதிற்கு்‌ எகர, ஏகா)க்‌ குறிப்புக்களே பயன்‌ பட்டு விடுவதால்‌ அவற்றிற்காஃதி தனிக்‌ குறிப்பு வேண்டிய தில்லை. அல்லது ட C, என்ற இந்தக்‌ கொம்புகளை வேறு வகையில மாற்றிப்‌ பேரட்ருக்‌ கொள்ளலாம்‌. கடைசியரக; ஆய்தம்‌ L இருக்கலாம்‌. . 976 பெரியார்‌ ஈ, வெ: ரர்‌. சிந்தனைகள்‌ இப்போது உயிர்‌ 5, மெய்‌ 15, சிறப்புக்குறி 8, ஆய்தம்‌ 1--மொதீதம்‌--29 29 உருவ எழுதீ.துக்களி ₹லயேகூட தமிழ்‌ எழுதீதுக்களுக்கு எண்ணிக்கையையும்‌ (தமிழ்‌ மொழியை) அடக்கிவிடலாம்‌. அல்லது, சிலர்‌ கரு.துவதுபோல்‌, 12 உயிரெழுதீதுக்‌ களில்‌ B, ஒள தவிர மற்ற பத்தில்‌ * அ? வை அப்படியேயும்‌ ¢ ஆ £வுக்குப்‌ பதிலாக £? வையும்‌, “எ, ஏ? வுக்குப்‌ பதிலாக 691, 66 என்ற குறிப்புக்களையும்‌ வைத்துக்கொண்டு இ, ஈட, உ, ஊ, ஒ, ஓ என்ற ஆறு எழுத்துக்களுக்கு, ஆறு புது எழுத்துக்களை உற்பத்தி செய்துகொண்டு, இவற்றையே உயிர்மெய்யாக்க மெய்யோடு சேர்த்துப் படிப்பதானால்: அப்போது உயிர் 10, மெய் 15, ஆய்தம் 1, மெய்குறிப்பு 1 ஆக 27 எழுத்துக்களாகும். இந்த 27 எழுத்துக்களைக் கொண்டே நமது சகல சொற்களையும் அதி சுலபமாக எழுதி விடலாம். பிறமொழிச் சொற்களை நம் மொழியால் எழுதுவதற்குத் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு வேறு எழுத்துக்களையும் உண்டாக்கிக் கொள்ளலாம். அறிஞர்களும் பண்டிதர்களும் தீர்க்கமாய்ச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். எப்படியும் தமிழ்மொழி எழுத்துக்கள் குறைக்கப்பட்டாக வேண்டும். அச்சுக்கோப்பதற்கும், டைப் அடிப்பதற்கும் ஆங்கிலத்தைப்போல் இலகுவாக்கப்படவேண்டும் என்பதும், கற்கும் பிள்ளைகளுக்கும் 3 மாதத்தில் படிக்கத் துவக்கலாம் என்பதும்தான் நமது ஆசை. இப்போது இதோடு முடிக்கின்றேன். இது முடிவல்ல, அறிஞர்களுக்கு விண்ணப்பம். [மொழி எழுத்துஎன்னும் பொருள்களைப்பற்றி குडमकோணம் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தெரிப்பு--நூல் "மொழி-எழுத்து"(தமிழன் பிரஸ், ஈரோடு)] 2. நமக்குள் 1. தமிழ் மொழி தலைவர் அவர்களே!தோழர்களே! நான் தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவனல்லன். தமிழைப்பற்றித் தமிழ் மக்களின் நலம், தமிழ் மக்களின் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்லன். தமிழுக்காக என்று எவ்விதத் தொண்டும் புரிந்தவனுமல்லன்.முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும்.தமிழுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தன்னிவைக்க வேண்டும். மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணமூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது. உதாரணமாக, "மக்கள் தேவர் நரகர் உயர்திணை"என்றால் என்ன! நரகர்கள் யார்?தேவர்கள் யார்?இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இனி, பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியங்களுக்குப் புத்தகங்கள் எவை? சம்பராமாயணம்,பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின்உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாகீகுச் செய்யும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல்--வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுன்றனவா! இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞான தத்துவத்திடப் புராண ஞானங்கள் தானே அதிகமாய் இருக்கின்றன. மேல்நாட்டு அறிவாளிகள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமன்னியில்--கடவுள் சம்பந்தமன்னியில் பெருக்கும் செய்துவைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும், பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள். கீழ்நாட்டில்--குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியங்கள் உலகத்தால் மதிக்கப் படுகின்றன?எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்பட்டுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்காகப் போற்றப்படலாம். மதம்--கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞான தத்துவத்தைப்பற்றிய இலக்கியம், யாவரும் மறக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம்--ஆகிய வைகள் மூல மூலமாகத்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை யடையும் மூடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞான முடையவர் களாவார்கள். கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்?ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும், மலத்திலிருந்து அரிசி பொறுக்குவானா?அது போல்தானே, கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது? அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?தமிழரின் சரித்திர காலத் எதிரிகள் எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்! இன்று கம்பராமாயணத்தால் தமிழ்மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா, கிழிவு பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசிக்குப்பாருங்கள். தமிழ்ப் பாஷையின் பெருமை பரமசிவனுடைய தமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷையென்றோ சொல்லி விடுவதாலும்--தொண்டர் நாதனைத் தூதி கடவிடுதல்லலும், "முதலை உண்ட பாலனை அழைத்ததாலும்,"எலும்பைப் பெண்ணாக்கி" தாலும்,"மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மை உற்றதாகிவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்க தீதான் பயன் படும். பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால், வைணவனும் துருகனும் தமிழைப் படிப்பது பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால், பார்ப்பான் தமிழ் மொழியைச் சூதிர பாஷையென்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானச என்று யோசித்துப்பாருங்கள்!மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன!எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள்!ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்து விட்டார்கள்;புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய 'ஸ்பெல்லிங்' முறையை மாற்றிவிட்டார்கள். துருக்கியில் அரபிக் மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எழுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். தமிழர்கள், தமிழ்ச் சாக்--நமக்கு விவரம் தெரிந்த காலமாய்--என்ன காரியம் செய்தார்கள்! காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவர் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். "முன்னேற்றம் என்பது மாறுதல்" என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான். தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அனேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களே, ஆனால் ஒருவராவது என் முயற்சிக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல. இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தகுதியுள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறைகூற வா, திரு தவோ முயற்சிப்பதன் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இது யாரும் அதை இலட்சியம் செய்ய வில்லை. ஆனாலும், நான் அம்முறையிலேயே இரண்டு, மூன்று பத்திரிக்கைகள் நடத்துகிறேன். அம் முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னமும் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கிறது. [சென்னை பச்சையப்பன் கல்லூரியில், 13-1-1936ல் சொற்பொழிவு--"குடி அரசு" 26-1-1936] 2. திராவிட மொழிகள் தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்.தமிழை அறியாதவன்.ஆரியத்திற்குச் சோரம் போனவன்.நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கம்தேட முயற்சிப்பவன். இவை நான்கும் வேறுவேறு மொழி என்று கூறுபவர்கள்"தமிழர்" என்று தம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்; கருதிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறலாமே தவிர--இவர்களை தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட போகிறது. அதுதான் பிரிந்து போகட்டும் என்றால், மொழிவாரிக்கு கவிஞர்கள் நியமிக்கப்பட்டு, மொழிவாரி இலக்கணங்களும் செய்யப் பட்டு, திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே! இந்த நான்கு மொழிகளும் ஒரே மொழிதான் என்ற கருத்து மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கியதும், ஆரிய ஆதிக்கம் அதைக் கெடுக்க--"அவை ஒன்றல்ல, தனித்தனி!"என்று பிரித்துக் காட்ட முற்பட்டுவிட்டதே!நமது பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை,ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கை, தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பிதৃலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத் திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகன் தான்; அதுதான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம்நான்கு பெயரிட்டு அழைக்கிறோம். நான்கு கடலில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிற தை ஒழிய, நான்கிலிலும் பேசப்படுவது தமிழ்தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக, நமது அறியாமையால் கருதப்பட்டுவருகிறது. கதை நிரூபித்துக் காட்டவும் என்னால் முடியும். நான்கு தனிய இடங்களில் வாழ்ந்துவந்த மக்களுக்குள் போக்குவரவும், அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பமும் முன் காலத்தில் இல்லாததால், ஆங்காங்குள்ள மக்கள் தமிழைப் பேசி வந்த முறை சிறிது வேறுபடவும், அதைச் சாதகமாக வைத்துக்கொண்டு, நம்மை நான்கு சாதியாக பீரித்துவைத்த ஆரியம், நம் மொழியையும் நான்காக பிரித்து, வேண்டும் அளவும் வடமொழியை அவற்றுள் புகுத்தி, அதற்கேற்ற வண்ணம் எழுத்து, இலக்கணம் முதலியவற்றை உண்டாக்கி, சிறிது வேறு உச்சரிப்பாக இருந்த தமிழைத் தனித்தனி மொழியென்று சொல்லும்படி செய்குவிட்டது. தமிழ் மக்கள் தங்களுக்குள் என்ன வகுப்புவேற்றுமையால், இக் குறைபாட்டைப்பற்றிச் சிந்திக்காமல், இதன் உட்காரணத்தையும் கண்டுபிடிக்காமல், தமிழ் நாட்டிலுள்ள தமிழைத் தவிர, மற்றைய மூன்றும் கிளைமொழி என்றும், நாட்டுப் பெயரைத் தொ மொழிக்குத் தக்க கொடுத்துப் பிரித்துவிட்டார்கள். அன்றையத் தமிழ்ப் பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடிமைப் பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்களல்லர். இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரியமோகம் தீர்ந்தபாடில்லை. ஒன்று நான்காக வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றிலிருந்து நான்கு பிறந்தன, கிளைத்தன என்பதற்கும் வேற்றமையுண்டு. ஆகவே, தமிழ், நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காக பிரிந்திருக்கிதே, அல்லாமல் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல; உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர் உணரவேண்டும். இந்த உண்மை தெரிந்துகொண்டாலொழிய, கந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமையுணர்வு தோன்றாமலிருக்காது. இந்த நான்கும் தமிழ் மொழியேதான் என்பதற்குச் சிறிதும் அய்யமில்லை. ஆரிய மோகமற்ற நான்கு மொழிப் பண்டிதர்களும் ஒன்றாக உட்சாரணை நூது, நான்கு மொழியாகரங்களையும் வைத்துக்கொண்டு, ஆரியனல்லாத ஒரு வடமொழிப் பண்டிதனை நீதிபதியாய் வைத்துக்கொண்டு, தமிழ் தவிர்த்த மற்ற மூன்று அகராதிகளிலுமுள்ள வடசொற்களையும், பிறசொற்களையும் நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பவை அத்தனையும் தமிழ்ச் சொற்களாகவே இருப்பதைக் காணலாம். நூற்றுக்கு ஐ நூடுகூட, தமிழ் அல்லாத சொல்லாக இருக்காது. அதற்குள்ள நீட்டலையோ, குறுக்கலையோ நீக்கி விட்டுப் பார்த்தால், அவையும் தமிழாகவே முடியும். அவ்வாறு அயற்சொற்களை நீக்கிய பிறக நூற்றுக்கு எண்பது, இன்றுள்ள வழக்கத் தமிழ்ச் சொற்களாகவும்,பத்து தற்போது வழக்கத்திலில்லாமல் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்துவரும் சொற்களாகவும்தான் இருக்கும். இன்று வேண்டுமானால் நீங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் அச்சிட்ட ஒரு மொழிவாரிச் சொல்நூலை (ஒக்காபுலேரி) எடுத்துப் பாருங்கள். எல்லாம் தமிழ்ச் சொற்களாகவே இருப்பதைக் காணலாம். அதைச் சுருக்கமாகச் சில உதாரணங்களால் விளக்குகிறேன். நாம் குடியிருக்கும் இடத்திற்குத் தமிழில்"வீடு, இல், மனை, பொறை" என்று பெயர். ஒரு தெலுங்கனும்"இல்" என்றுதான் சொல்லுகிறான்; ஒரு கன்னடியன் "மனை" என்கிறான்;ஒரு மலையாளி "பொறை" என்கிறான். தமிழன் தாகதிக்குக் குடிப்பதை "நீர்" என்கிறான்;தெலுங்கன் "நీலు" என்கிறான்;கன்னடியன்"நீரு" என்கிறான்;மலையாளி"வெள்ளம்" என்கிறான்."ஆற்றுவெள்ளம்!" எனவே, வெள்ளம் என்பதும் தமிழ்ச் சொல்தான். வீடு, இல், மனை, பொறை, நீர், நீலு, நீரு, வெள்ளம் இவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் தானே!நாம்"எனக்கு" என்று தமிழில் கூறுவதைத் தெலுங்கில் "నాక్కు" என்றும்;கன்னடியன் "ನೆನಕ್ಕಿ" என்றும்;மலையாளி "എനകീകി" என்றும் கூறுவான். பார்ப்பான் "नেक्कु" என்று கூறுவான். நேக்கு? என்பது. அதைப்போலவே,"உனக்கு" என்பது தமிழ்; "நीక్కు" என்பது தெலுங்கு; "नোक్కు" என்பது பார்ப்பன்தமிழ்."அவர்கள்","அவர்" என்பதைத் தெலுங்கர் "వాళ్ళు, వారు" என்கிறார்கள்;கன்னடியர் "అవರు" என்கின்றனர்;பார்ப்பனர் "అవా, ఇవా, వంದా, పోనా" என்று మొణ్ణையாகவே, மொக்கையாகவே பேசுகிறார்கள். நம்மில் பலரும்‌ அதைப்‌ பெருமை யாக நினைத்து ௮ம்‌ மாதிரியே பேசிவருகிறார்கள்‌ * அகத்துக்கு? என்பதைப்‌ பார்ப்பனர்‌ * ஆத்துக்கு? எனதீ திரித்துக்‌ கூறி வருகிறார்கள்‌. இந்த நேக்கையும்‌, நோக்கையும்‌, ஆதீதையும்‌, அவா, இவையும்‌. தமிழென்று கூறும்போது--தில்‌, மனை; பொறை, நீளு, நீரு, வெள்ளம்‌, நாக்கு, நெனக்கி, www.thamizham.net - Free £ book 14௦ 3026 980 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ எனகீகி என்று கூறும்‌ மக்களைத்ீதானா--* வேறுமொழி பேசுவோர்‌? என்று ஒதுக்க வேண்டும்‌! தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனரையெல்லாம்‌ ஒரு தனியிடதீதில்‌ வைத்‌ வவிட்டால்‌ இவர்கள்‌ பேசுவது தெலுங்கு, கன்னடம்‌, மலையயாளத்தைவிட வேறு மொழியாகதீதரனே கொள்ளவேண்டியிருக்கும்‌ ! நாம்‌ ¢ அங்கே? என்பதை ஒருவன்‌ ¢ அக்கடே? என்றும்‌, ஒருவன்‌ ¢ அவடே? என்றும்‌ கூறுகிறான்‌. இச்‌ சிறு வேறுபாட்டின்‌ காரணமாக இவை வெவ்‌2வறு மொழியாகீகப்‌ படலாமா ? ¢ அங்கிட்டு? என்று வழங்கும்‌ தமிழர்‌ வேற்று மொழியாளாரா ₹ நாம்‌ *ஆ? என்பதைதீதான்‌ தெலுங்கன்‌ £ஆவு? என்றும்‌ ] கன்னடியன்‌ அ? என்னும்‌ ) மலையாளி ¢ ஆல்‌? என்றும்‌ கூறுகிறான்‌. * ஆன்‌ ! என்ப துதான்‌ ¢ ஆல்‌? என்று திரிந்திருக்கும்‌. இச்‌ சிறு மாற பாட்டினாலர இவை நான்கு மொழிகளாக்கப்பட வேண்டும்‌ ₹ தமிழ்நாட்டில்‌ ஒரு கோட்டத்தில்‌ (ஜில்லா) இருக்கும்‌ சொல்‌, மற்றொரு கோட்டத்தில்‌ இலலை] ஒரு கோட்டத்தில்‌ ஒரு பொருளுக்குப்‌ பயன்படுத்தும்‌ சொல்லை மற்றொரு கோட்ட தீதில்‌ வேறு பொருளுக்குப்‌ பயன்படுதீதுகிறார்‌கள்‌. ஒரே கோட்டத்தில்‌ வெவ்வேறு ஒலியாக உச்சரிக் கிறார்கள்‌. வழிக்கு - வெட்டி; பாட்டை என்னும்‌ சொற்கள்‌ கோவையில்‌ இல்லை. கொல்லை” என்ற சொல்‌ தமிழ்நாட்டில்‌ சில இடங்களில்‌ *கக்கூசு'க்கு வழங்கப்படு கிறு $ சில இடங்களில்‌ வீட்டின்‌ பின்வாசலுக்கு வழங்கப்பட்டு வருகிறது) சீல இடத்தில்‌ விளை நிலத்தைக்‌ குறிக்கிறது. தமிழ்நாட்டில்‌ கோவைக்‌ கோட்டதீதில்‌ நகர மக்கள்‌ பேச்சு, நாட்டு மக்களால்‌ எளிதில்‌ புரிந்துகொள்ள முடிவதில்லை. தமிழிலுள்ள ஒரு பொருட்‌ பல சொற்களே ஒவ்வொரு நாட்டிலும்‌ தனித்தனியாக . வழங்கி வெவ்வேறு மொழியாக நிற்கின்‌றனஃ எனவே, இவை நான்கும்‌ ஒரே உதரதீதிலிருந்து உதித்து எழுந்தவையல்ல. அந்த உகரமேதான்‌ இவை நான்கும்‌, என்னருந்‌ தமிழே 1 நீயேதான்‌ தெலுங்கு ! நீயேதான்‌ கன்னடம்‌ ! நீயேதான்‌ மலையாளம்‌ ! என்றுதான்‌ நான்‌ கூறுவேன்‌. இதை நமது மக்களுக்கு உணர்த்தி ஒரேநாடு, ஒ$ரமொழி, ஒ?ரமக்கள்‌ என்ற ஒன்றுபட்ட நிலையை உண்டாக்க வேண்டும்‌. தமிழர்களுக்கு, குறிப்பாகத்‌ தமிழ்ப்‌ பண்டிதர்‌ களுக்குச்‌ சிறிதாவது இனப்பற்று இருந்திருக்குமானால்‌ ஆரியர்‌ களுடைய இந்கதீ தந்திரம்‌, சூழ்ச்சி வெற்றி பெற்று--நம்‌ மக்கன்‌ இவ்வளவு பிரிவினைக்கும்‌, வேற்றுமைக்கும்‌ ஆட்பட்டிருக்‌ க முடியாத தெலுங்கர்‌, கன்னடியர்‌, மலையாளிகட்குள்ள மொழிப்‌ பற்றில்‌, உணர்ச்சியில்‌ தமிழ்ப்‌ பண்டிதர்களுக்கு நூற்றில்‌ ஒரு பங்கு கூட இல்லைஃ அவை வெவ்வேறு மொழிகளாய்‌ இருப்பதால்‌ நமக்கென்ன கேடு எனின்‌, தமிழ கதீதைச்‌ சுற்றி மூன்று புறதீதிலுமூன்ன மகீஈள்‌ ஆரியமயமாய்‌ இருந்தால்‌ அது நமக்சதி தொல்லையாகவும்‌, பல குறைகனில்‌ தடையாகவும்‌ இருக்காகா? * திராவிட நாடு திராவிடருக்கு? ஆனால்‌ இந்தக்‌ குறைபாடுகளை எளிதில்‌ தீர்தீதுக்கொள்ள முடியும்‌. மற்றும்‌ தெலுங்கர்‌, கன்னடியர்‌, மலையாளிகளைதி தமிழர்களாக ௨ வேண்டுமானால்‌, £திராவிடர்‌? என்று சொல்லித்தான்‌ ஆக்க முடியும்‌. *திராவிடமே தமிழ்‌ ) தமிழே திராவிடம்‌? என்னும்‌ புத துணர்ச்சியைதீ திராவிட மக்கள்‌ பெறுவார்களாக ! [நூல்‌ s ¢ மொழியாராய்ச்சி 1--(1948) வள்ளுவர்‌ பதிப்பகப்‌, பவானி] 8. திராவிட மொழி தமிழே ! நாண்‌ மொழிப்‌ பிரச்சினையைப்ப ந்றிப்‌ பேசும்போதெல்லாம்‌ திராவிட மொழி என்பது, தமிந மொழி என்பதுதான்‌ என்றும்‌, தமிழ்‌ தவிர்த்த கன்னடம்‌, தெலுங்கு, மலையானம்‌ என்பதாகத்‌ தனி மொழியோ, சார்பு மொழியோ கிடையாதென்றும்‌, தனி. www.thamizham.net - Free £ book No 3026 மொழி 981 மொழி என்று கருதிக்கொண்டு சொல்லப்படுவதும்‌, போப்படுவதுமான மேற்கண்ட கெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌ என்று சொல்லப்படும்‌ மொழிகள்‌ தமிழ்‌ மொழிதானே ஒழிய வேறு மொழி அல்லவென்றும்‌, ட பேதம்‌, போக்குவரத்து வாதி8 குறைவு காரண மாக ஆங்காங்குள்ள ஈக்கள்‌ தமிழைப்‌ பேசிய முறைகான்‌, அகாவத தமிழ்‌ மொழியை உச்சரித்த மாதிரிதான்‌ இப்போதைய சிறு பேததீதகீகுக்‌ காரண $மயொழிய, அவை தனித்‌ தனியாக உண்டாக்‌ க பட்ட அல்லது ஏற்பரதீ தப்பட்ட மொழிகன்‌ அல்லவென்றும்‌ பல நாட்களாக வலியுறுத்தித்‌ தொடர்ந்து பேசி வந்திருக்‌ றேன்‌. அதன்‌ விளக்கம்‌ என்னவென்றால்‌-இப்பொழுது நமக நாட்டிலே பாரீப்பனரீகள்‌ தமிழ்‌ பேசும்போது எனக்கு உனக்கு என்பதை * நேக்கு, 6 நோக்கு! என்று பேசுவதை யும்‌, அவர்கன்‌ இவர்கள்‌ என்பதையும்‌, வந்தார்கள்‌ போனார்கள்‌ என்பதையும்‌, ¢ அவா, இவா? வந்தா போனா! என்றும்‌ உச்சரிப்பதையும்‌ பார்க்‌ 8 றாம்‌. நமீமில்‌ சிலரும்‌, சில தாசிகளும்‌ பார்ப்பனர்‌ பால்‌ பேசி பெருமை சம்பாதிப்பதற்காக அந்கட்படியே உச்சரிப்பதையும்‌ காண்கி 8றாம்‌. ஆனால்‌, சொற்களின்‌ அடிப்படையி3ல மாற்றமில்லை. அன்றியும்‌, சில சொற்களில்‌ மாற்றம்‌ இருகீகிறக என்று காணகீகூடியதாய்‌ இருந்‌ தாலும்‌-அதாவது தமிழில்‌ * வீடு! என்பது கன்னடத்தில்‌ மனை என்றம்‌, தெலுங்கில்‌ இல்லு என்றும்‌ சொல்லப்பட்டாலும்‌ அவையும்‌ நம்‌ தமிழ்‌, தனித்‌ தமிழ்‌ மொழியே தவிர வேறு மொழி அல்ல. ஒரு சமயம்‌ ஏதாவது ஒரு பொருளுக்கு, ஒரு காரியத்திற்கு, ஒரு குண தீதிற்கு தமிழ்‌ அல்லாத வேற சொல்‌ இருகீகிறக என்று எடுத்துக்‌ காட்டப்படுமானால்‌ அவையும்‌, பெரிதும்‌ வடமொழிச்‌ சொற்களை, தமிழில்‌ எப்படிப்‌ பலவற்றைக்‌ கலகப்‌ பேசுகிறோமோ அதுபோல்‌ தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌ என்கிற மொழிகளிலும்‌ வடமொழியைக்‌ கலக்‌ 8 அல்லது புகூதீகப்பட்டுப்‌ பேசட்படும்‌ சொற்களாகவும்‌, அல்லது அப்போதுள்ள அரசாங்கம்‌, சமயம்‌, ஆரிய செல்வாக்கு அல்லு பக்கத்துச்‌ சார்பு, நாட்டு மொழிக்‌ கலப்பு ஆகியவைகளால்‌ கலத்து பேசப்பட நேர்‌ ந்த சொற்களே தவிர, அப்படிட்பட்‌ டவை கன்னடம்‌, தெலுங்கு, மலையான மொழிகளுக்கு ஏற்பட்ட தனிச்‌ சொற்கன்‌ ஆகமாட்டா. மற்றும்‌ ஒன்று, இரண்டு, முன்று, மாதம்‌, வாரம்‌, நாள்‌ ஆகியவைகளக்கும்‌ ; வண்டி, வாகனம்‌ முதலியவைகளுக்கும்‌ தமிழ்ச்‌ சொற்களே பிற திராவிட மொழிகளிலும்‌ பயன்படுதீதப்படுகின்‌ றனஃ எனவே, இந்த நமது கூற்றகீகு எடுத்ககீகாட்டுகீகாக இந்‌ நான்கு மொழிகளிலும்‌ இருந்‌ துவரும்‌, வழங்கிவரும்‌ சில சொற்களை இதன்‌ கீழே குறிப்‌ I @S றேன்‌. இதை வாசகர்கள்‌ ஊன்றிப்‌ படி தீ கட மற்றும்‌ மேலே கண்ட நமது கூற்றகீகு ஏற்றவண்ணமே மற்ற மொழிகளும்‌ பெரிதும்‌ இருக்கின்றனவா, இல்லையா என்பதையும்‌ கூர்ந்து, ஆராய்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்‌. திராவிட மக்களைப்‌ பிரித்‌ ஐப்‌ பாழ்படுத்திய து போலவே திராவிட மொழியையும்‌ பலவாறாகப்‌ பிரிதீ.துப்‌ பாழ்படுத்தி, அதற்கு எழுத்து, இலக்‌ கணம்‌ எல்லாம்‌ ஆரியமடய மாக்‌ 9, திராவிட மக்‌எனக்கு நாட்டுப்‌ பற்றும்‌, மொழிப்‌ பற்றும்‌ இல்லாமல்‌ ப குப்ப ஆரியர்கள்‌ செய்துவிட்டசோடு, திராவிட நூல்களையும்‌, கலாச்‌ சாரங்களையும்‌ பாழ்படுத்தி ஆரிய நூல்களும்‌, ஆரிய கலாசீசாரங்களுமே திராவிடர்களிடையில்‌ தலைசிறந்து விளங்கும்படி, திராவிடம்‌ அடிமைப்படுதீதப்பட்டாகிவிட்ட து. இதைப்‌ பற்றிப்‌ பாமர மகீஈள்‌ சிந்திப்பதைவிட, திராவிடப்‌ புலவர்களையே சிந்தித்துப்‌ பார்க்கும்படி மிகவும்‌ தாழ்மையோடு வேண்டிக்‌ கொள்கிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3026 982 பெரியார்‌ ஈ, வெ. ரர. சிந்தனைகள்‌ தமிழ்‌ தெலுங்கு கன்னடம்‌ மலையாளம்‌ தாய்‌ தல்லி தாய்‌ தள்ளே தகப்பன்‌ தன்றி தந்தை அச்சன்‌ அண்ணன்‌ அன்ன அண்ணா சேட்டன்‌: தம்பி தம்புடு தம்பி அனுசன்‌ கணவன்‌: மொகுடு கெண்ட பர்தீதா மகன்‌: குமாரடு ws gy ஆண்குட்டி பாட்டன்‌ தாத தாத மூப்பன்‌ உடல்‌ ஒள்ளு மய்யி தேகம்‌ மனைவி பெண்ட்லாமு எண்டதீதி பாரிய மகள்‌: குமாரத்தி மகளு பெண்குட்டி அக்காள்‌ அக்க அக்க சேட்டச்சி மாமன்‌ |! மாம மாவ அம்மாவன்‌ மருமகன்‌ |. அல்லுடு அளிய மருமான்‌: பாட்டி | அவ்வ தாத்தி முத்தி எது எதி எது எது அது அதி அது அது இது இதி இது லது இங்கே இக்கட இல்லி. இவடே அங்கே அக்கட அல்லி அவடே எங்கே எக்கட எல்லி எவடே இப்போது இப்புடு ஈவாக இப்போள்‌ அப்போது அப்புடு ஆவாக அப்போன்‌ எப்‌3பாது எப்புடு ஏவாக எப்போன்‌ சிறிய சின்ன சிக்க சிறிய பெரிய பெத்த தொட்ட வலிய நெருப்பு நிப்பு பெங்கி தீ கொடு ஈய்‌ கொடு கொடு மழை வான மளெ மழ இரவு ராத்திரி ராத்திரி ராதீதிரி பகல்‌ பகலு அகலு பகல்‌ யார்‌: எவரு யாரு யாரானு ஊர்‌ ஊரு ஊரு ஊரி ஊருக்கு ஊரிக்கி ஊர்க்கே ஊரிலே சோறு அன்ன ஊண்ட ஊணு சேலை சீரா சேலை முண்டு நீர்‌ நீன்னு நிறு வெள்ளம்‌ கண்‌ கன்னு கண்ணு கண்ணு மூக்கு மூக்கு மூங்கி மூக்கு காது செவ்வு கிமி செவி வாய்‌: நோரு பாயி வாயி தலை தல தலெ தலை வர ரா பா வரி: பசு. ஆவு வஅசுவு பசு எருது எத்து எத்து கான சொல்லு செப்பு ஹேளு பர ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 மொழி 983 தமிழ்‌, தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌ என்பவை தனிதீதனி மொழியா ? இந்தப்படி மொழி பேசுகிறவர்கள்‌ தனித்தனித்‌ தேசிய இனமா? இதற்காக அவர்கள்‌ பிரிந்து வாழ வேண்டுமா அறிஞர்கள்‌ சிந்திக்‌ 51 [உ விடுடலை8-தலையங்கம்‌--27-11-1948; 2-2-1953) &. தமிழ்‌ நமது நாட்டில்‌ வேறுவழியில்‌ பிழைகீகமுடியாதவர்‌ கன்‌ தமிழின்‌ பெயரால்‌ பிழைக்கதி அடிக்கொர்கள்‌. அவர்கள்‌ தடிதுடிப்புத்தான்‌. * தமிழைக்‌ காக்கவேண்டும்‌, தமிழுக்கு உழைப்பேன்‌, தமிழுக்காக உயிர்‌ விடுவேன்‌? என்பது போன்ற கூட்பாடுகள்‌ஃ இதில்‌ மற்ற மகீகள்‌ சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது. நான்‌ தமிழை அறியா தவனல்ல ) தமிழ்ப்‌ புலவரீகளை, மேதாவிகளை தீ தெரியாதவன்‌ வல்ல 5 தமிழ்‌ இலக்கியங்களின்‌ தன்மையை உணராதவனல்ல. இன்றையப் புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிটிகல் (Theoretical) புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் (22221601201) பிராக்டிகல் (அனுபவ) தமிழ் அறிவு உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கைதட்டாத தமிழ்ப் புலவர்கள் குறைவென்றே சொல்லுவேன். மீனாட்சி சுந்தரம் பிற்பள்ளையை எனக்குத் தெரியாது; சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும்.சாமி வேதாசலத்தையும் தெரியும்.கலியாணசுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த்தென்றல் களையும் தெரியும். ஒரு சமயத்தில் நாங்கள், காங்கையம் சேஷாசல நாயுடு, முத்துசாமிக் கவிராயர், சங்கரம் பிள்ளை சங்கர தாஸ் ஆனபின் சங்கரதாஸ் இவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது,வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்தப் புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு கூட, கை தட்டினார்கள்!இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். ஒரு வேடிக்கை நிகழ்ச்சி: வே. சரமிநாத அய்யர் நான்பிரபுவாயிருக்கும்போது வந்து புலவர் முறைபடி என்னைப் பார்த்து வட்டுப்போன சில நாட்களுக்குப் பின், ஒருநாள் இரயில் பிரயாணத்தில் அவர் இருக்கும் வண்டியில் நான் ஏறி ஒருபுறம் உட்கார்ந்தேன். வண்டியில் இருந்த மக்கள் என்னைக் கவனிக்கவில்லை. அப்போது அவரிடம்,"நாயக்கர் வந்து ஏறினார்!"என்று சொன்னார்கள். அது ஈரோடு ஸ்டேஷன் ஆனதால் இராமசாமி நாயக்கர் தான் என்று கருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்த உடன் நான் வணக்கம் தெரிவித்தேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார். பார்த்ததும் பொருளாதாரத்தில் எனது நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதிக் கண் கலங்கினார். கலங்கி, "வியாபாரத் தொழில் அப்படித்தான், சகடக் கால் போல்!" என்று கூறிக்கொண்டு,"சவகரியமா?"என்று கேட்டார். அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்றால், அவர் என்னிடம் வந்து பேசிய காலம், என்னைப் பிரபு என்று கருதி வந்து பயப்பெற்ற காலம். அழுத்தாற்போல் இரயிலில், பிரயாணத்தில் என்னை அவர் சந்தித்த காலம் நான் காங்கிரசில் சேர்ந்து கதர் கட்டிக்கொண்டு, சட்டை போடாமல் ஒரு மடிசஞ்சி மூட்டையை வைத்து, அதன்மீது உறைந்துகொண்டிருந்த காலம். பிறகு நான் அன்றைய எனது நிலையைப்பற்றிப் பசிய பிறகு மகிழ்ச்சியுடன் பேசிச் சொண்டு இருந்து, ஈரோட்டுக்கு அடுத்த ஊத்திக்குழி ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டார். அந்தச் சம்பவம் அவர் அவினாசியில் நடந்த ஒரு சமய மாநாட்டுக்கு தலைமை தாங்க சென்ற சமயம். சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும்"பிச்சை" எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு எல்லாம் மாதம் ரூ. 15 முதல் ரூ. 30 வரை சம்பளம்தான் சாதாரணமாக இருக்கும். அவர்களின் தகுதி எல்லாம் "இலக்கணங்கள்" உரு பாட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருளச்செய்த, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும். அந்தக் காலத்தில் எங்கள் குடும்பத்தையும் என்னையும் அறியாத புலவர்கள் தமிழ்நாட்டில் அருமை. புலவரைப்பற்றி என் கருத்து:"புலவர் என்றால் செந்தறிவு இல்லாதவன், புளுகன்!" என்றுதான் உரை கூறுவேன். நா. கதிரைவேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில், "புலவர்களுக்குத் தப்பற்ற பகுதியறிவு கிடையாது" என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு,"உன்னிடம் வந்ததே தவறு!" என்று சொல்லி என்னிடம் வாங்கிக் குடி தீர்த்த பாலை விரலைவிட்டு வாந்தி செய்தார். இதுவரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி, அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்குத் தகுதியான புலவன் கூட இங்கு யாரும் இல்லை. பெரிய பெரிய பேர் வாங்கி இருப்பார்கள். ஆனால், அவர்களால் சின்ன கடுகதீய காரியம்கூட ஆனதில்லை. எல்லாப் புலவர்களும் பழமையைப் பிரச்சாரம் செய்பவர்களே. எந்தப் புலவராலும் இதுவரை நமது நாட்டுக்கு ஒரு சிறு மதிப்பிற்குரிய முன்னுவறற்ற நூலுக்கூட உண்டாக்கப்பட்டதில்லையே!கம்பராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப்பார்கள். இன்று தமிழில்"மேதாவிகள்" டாக்டர்கள் ஏராளமாக ஆகிவிட்டார்கள். பூசை, பொட்டும், நாமமும்தான் அவர்கள் தலையில் விளங்குகிறது.தலையில் இருக்க வேண்டியது அறவ இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள். தமிழின்பெருமையை உணரவேண்டுமானால் இன்று புலவருக்கு உறு துணையாய், பெருமைக்கு ஆதாரமாய் கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும்தானே முதல் வரிசையில் இருக்கின்றன. குறளை "திக்குறனாக"விட்டார்களே புலவர்களும், பக்தர்களும்! புலவர்களுக்குக் கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் இனதீ இராகம், முட்டாள் தனம், மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்குப் பூட்டுப் போடுதல் ஆகிய காரியங்கள் தவிர வேறு என்ன பலனைத் தருகிறது? கம்பராமாயணத்திற்கும், சிலம்புக்கும் இந்த நாட்டில் மதிப்பு திருக்கிறது என்றால், இந்த நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லை, மானமும் இல்லை. இன உணர்ச்சியும் இல்லை என்றுதானே பொருள்?இவைகளின் தன்மையே இப்படி இருந்தால், இவைகளைத் தாங்கி நிற்கும் தேவாரம், திருவாசகம், திருமுறை, திரிபदம், பெரியபுராணம் முதலிய குப்பைக் கூளங்களின் மோசம் எப்படி இருக்கும்! அவைகளைக் கொண்டாடும் மக்கள் குப்பைத் தொழிலாய் பசலி மக்களாக இருக்கிறார்கள் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்!நம் நாட்டிற்கு மீளமுடியாத பெரும் கேடு என்னவென்றால், இந்தக் குப்பைக் கூளங்கள் எல்லாம் சமய நூல்களாக, பகுத்தறிவுக்குச் சாதனங்களாக, ஆலயங்களாக ஆ விட்டது தான். கெட்ட பயனின் என்ன! இந்தக் கடவுள்களும், சமயங்களும் உள்ளவரை இந் நாட்டு மனிதர்கள் உருட்டப்பெறவில்லை என் பதுதானே முடிந்த முடிபு. முதலாவது பெரும் கேடு.இதைச் சொல்லக்கூட இந்த நாட்டில் (என்னைத் தவிர) ஆளே இல்லையே!எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன்,"தமிழைக் காக்க" அல்லவர் புறப்பட்டுவிடுகிறார்கள்!புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல்"பொதுத்தொண்டு" மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு, வெட்கமில்லாமல்,"தமிழைக் காக்கிறேன்"என்கிறார்கள். என்னைக் குடிகாரர்போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டுவிடாது. கையிலுள்ள சரக்கைக் காட்டவேண்டும். திரு. கி. ஆ. பெ. தமிழைக் காக்கவேண்டும் என்று சொல்கிறார் என்றால், அவர் தானாகவே தன்னை ஒரு அனாமதேயம் என்று சொல்லிக்கொண்டு, அந்தப்படி அய்யக் கோர்ட் தீர்ப்பும், சட்டமும் செய்துகொண்டு,"நான் எதையும் உளறுவேன்;யாரும் அதை லட்சியம்செய்து என்னை மதிக்கக்கூடாது" என்ற நிலை எய்திவிட்டார்!அட, பாவமே!மநீதிரி கலைஞர் கருணாநிதி,"தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டுவிடுவேன்" என்று எதற்காகச் சொல்லவேண்டும்? ஏன் அனாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியில் மாட்டிக் கொள்ளவேண்டும்? அப்துல் காதருக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?"ஒழுக்கம், நாணயம் கெட்டால், நீதி கெட்டால், நம்பிக்கை கெட்டால், நன்றி கெட்டால்" என்பதுபோன்ற மனிதத் தன்மை எங்களிடம் இல்லையானால், எங்களால் காப்பாற்ற முடியாவிட்டால் பதவியை விட்டுவிடுவேன், (ஏன்) உயிரையும்கூட விட்டு விடுவேன்என்று கூறலாம், கெப்சாவும் விடலாம். அதை விட்டுவிட்டு,"தமிழைக் காப்பாற்றாவிட்டால், அதற்குக் கேடு வந்தால் பதவியை விட்டு விடுகிறேன்" என்றால், அதற்கா மக்கள் ஓட்டுக்கொடுத்தார்கள்!ஒவ்வொன்றுக்காகவும் மநீதிரி பதவியை விட்டு விடுவேன் என்றால், அப்படி ஒரு மனிதனுக்கு எத்தனை மந்திரி பதவி இருக்கிறது? நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்கீ நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளை தி தமிழில் நடத்திக்கிறாம். சமயத்தை, சமயநூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! சரி! இதற்குமேலும் சனியனசன தமிழுக்கு என்ன வேண்டும்? தமிழ் காட்டுமிராண்டிக் காலத்து மொழி. நாகரிக காலத்திற்கு, பகுத்தறிவு காலத்திற்கு, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற காலத்திற்கு, "யாயும் யாயும் யாராயினரோ" என்ற காலத்திற்குத் தமிழ் பயன்படுமா? வேஷதி தமிழரை அல்ல; உண்மைத் தமிழரைக் கேட்கிறேன். சொல்லுங்கள் (நீங்கள் சொல்லும் சமாதானத்தைப் பல ஆயிரம் புத்தகமாக அச்சுப்போட்டு வெளிப்படுத்துகிறேன்). எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்கிற மந்திரி பதவியில் உட்கார்ந்துகொண்டு,"தமிழுக்குக் கேடு வந்தால் பதவியை விட்டுவிடுகிறேன்"என் கிற மந்திரிக்கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச்சுவராக வேண்டிய கோயில்களை எல்லாம் கட்டிமுடிக்கும் திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் தீரத்தில் என்ன விதியாசம்? நான் இதை மந்திரிமீது குறைகூற எழுதவில்லை. மந்திரிக்கு உள்ள பகுத்தறிவு எனக்கு நன்றாய்த் தெரியும். ஏன், பாமர மக்களுக்கு வழியல்லா வழியில் பயப்படவேண்டும்?என்பதற்காகவே எழுதுகிறேன். தமிழ்பற்றிய இந்தக் கருத்து இன்றையக் கருத்தல்ல. இந்தி எதிர்ப்புக் காலம் தொட்டு எனக்கு இந்தக் கருத்துதான். இது மந்திரிகளுக்கும் தமிமுக்கரக கன்று பாடுபடுபவருக்கும் தெரியும்."அட, கெடுவாய், பல தொழிலும் இருக்கக் கல்வி (தமிழ்) அதிகமென்றே கற்றுவிட்டோம்;அறிவில்லாமல் திடலுமூளமோ கனமாடக் கழைக் கூத்தாடச் செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத் தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச் சனியான தமிழைவிட்டு தையலார் தம் இடமிருந்து தூ.து சென்று பிழைத்தோமில்லை என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே?" தமிழ் படித்ததால் பிச்சைகூட கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பது அடு. இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்துக்காட்டி இருக்கிறார்.["விடுதலை" தலையங்கம்—16-3-1967] **5. மொழி** மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல. அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி, மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு—விஷயங்களைப் புரிந்துகொள்ள வராம்பளிக்கும் அளவிற்குத் தேவையரனதேயொழிய, பற்றுக் கொள்ளுவதற்கு அவசியமானதல்ல. மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய, பொதுவாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல. இந்தக் கருத்துக்களைக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். நமக்குச் சொந்த மொழி என்பது—பிறந்த சாதியின் காரணமாக எனக்குச் சன்னடம்,சிலருக்குத் தெலுங்கு, பெரும்பாலானவர்களுக்குத் தமிழ்,நாட்டுக்கு உரியது தமிழ். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு—தமிழ்நாட்டைப்பற்றி நினைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும், போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது தமிழ்மொழி என்பதாகத்தான் தோன்றும். அது ஓரளவிற்கு நியாயமாகும். ஆனால், நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும், ஆட்சி தமிழர்களல்லாத—அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால், அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்றுசேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கும், வசதிக்கும் ஏற்றபடி ஏதோதே காரணங்களைச் சொல்லிக்கொண்டு, அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும்கூட இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தப்பட்ட படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத் தக்கதான சம்பவமுமாகும். இந்த நாட்டில் மேற்கண்டபடி இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும் என்பதற்கு அரசாங்கமும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், அவர்களின் அருளால் பிழைக்கவேண்டும் என்ற நிலையிலுள்ள பெரும்பாலோரும், எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இந்தியைப் புகுத்தவும் கட்டாயப்படுத்தவும், இவைகளுக்காக தந்திரமான பல வழிகளைக் கோலவும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள். அதுபோலவே, தமிழ்மொழியை அரசியல் மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய ம மொழியாகவும்‌ இன்னும்‌ இலக்கிய மொழியாகவும்‌ இருக்க வேண்டுமென்று தமிழர்களிடையே அரசியல்வாதிகள்‌ என்‌ போர்களும்‌, மற்றும்‌ புலவர்களும்‌ இலக்கிய வாழ்வுக்காரர்களும்‌, மற்றும்‌ மொழிப்பற்று என்பதை சமயப்‌ பற்றுபோல்‌ முக்கிய பற்று என்று கருதுகின்றவர்களும்‌ வலியுறுதீதுகிறாரீகள்‌. கிளர்ச்சி வயப்பட்டவர்கள்‌ இதற்காகக்‌ கிளர்சீசிகளும்‌ செய்கிறார்கள்‌. என்னைப்‌ பொற தீதவரையில்‌, இந்த கிரண்டு மொழிகள்‌ பற்றியும்‌ கவலையில்லை$ பிடிவாதமுமில்லை. இவற்றுள்‌ இந்தி எந்த வகையிலும்‌ நமக்குத்‌ தேவையில்லை என்ப தோடு கண்டிப்பாக நம்‌ நாட்டிற்குள்‌ இந்தியைப்‌ புகவே விடக்கூடாது என்பது எனது கருத்தாகும்‌. எந்தத்‌ துறையில்‌ நமது நாட்டிற்குள்‌ இந்தி புகுந்தாலும்‌, சமஸ்கிருததீ தினால்‌ தமிழர்களும்‌ தமிழ்நாடும்‌ இன்று என்ன நிலைமைக்கு வந்து தொல்லையும்‌ மடமையும்‌ இழிவும்‌ அனுபவிக்கிறார்களோ-சற்றேக்குறைய அந்த நிலைமைக்குத்தான்‌. நம்மைக்‌ கொண்டுபோய்விடும்‌ என்பது எனது துணிபு. இந்தி, தமிழ்நாட்டையும்‌ தமிழனை யும்‌ வட நாட்டானுக்கு-பார்ப்பனருக்கு அடிமைப்படுத்‌ துவதல்லாமல்‌ வேறு எந்தக்‌ காரியத்திற்கும்‌ பயன்படாது. இந்தி ஆட்சிமொழியாய்‌ இருக்கிறதே என்றால்‌, நாம்‌ உலகம்‌ உள்ள அளவும்‌ வட நாட்டானுக்கு அடிமை ஆக இருப்பது என்று முடிவு செய்துகொண்டோமா? தமிழ்நாடு ஒருநாளைக்கும்‌ அன்னியன்‌ ஆதிக்கம்‌ இல்லாத சுதந்திர நாடாக இருக்கக்கூடாது என்பது தான்‌ தமிழ்நாட்டின்‌ நிலையா? அப்படி கில்லை என்றால்‌, இன்றைய அன்னியநாட்டான்‌. ஆதிக்க ஆட்சியைத்‌ தற்கால (தற்காலிக) ஆட்சி என்றுதானே சொல்லவேண்டும்‌? மற்றும்‌ இந்திமொழி, கலாசாலை போதனைக்கோ, இலக்கிய போதனைக்கோ, ஆட்சிமுறை போதனைக்கோ வேறுமொழியில்‌ இருந்து கிந்திமொழியில்‌ மொழிபெயர்தீது நம்‌ நாட்டிற்குன்‌ புகுத்தவேண்டிய அளவில்தான்‌ இருக்கிறதே தவிர-மற்றபடி மூலநிதி (பொக்கிஷம்‌) அதில்‌ என்ன இருக்கறது? இன்று சட்ட அறிவோ, கலை அறிவே, பொறியியல்‌ அறிவோ, வைத்திய அறிவோ); விஞ்ஞான அறிவோ அளிக்கத்‌ தக்க நேரிடைச்‌ சாதனம்‌ இந்திக்கு என்ன இருக்கிறது? நிற்க, தமிழை எடுத்துக்கொண்டாலும்‌ இன்று உலக ஞானத்தில்‌ முற்போக்குத்‌ தன்மையில்‌ தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரம்‌ இல்லை. தமிழனுக்கு அதுபோலவே சமய ஞான சரதனமும்‌ இல்லை. இவை மாத்திரமல்‌ லாமல்‌, தமிழனுக்கு என்று--ஆரிய ஆதிக்கமும்‌ கலப்பும்‌ அற்ற இலக்கியமும்‌ இல்லை, அதாவது, ஆரியர்‌ வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம்‌ விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில்‌ எதுவும்‌ கிடைப்பது மிக்க அருமையாகதீதான்‌ இருக்கிறது. தமிழ்மொழி வேண்டுமானால்‌ ஆரியத்திற்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம்‌. அதுவும்‌ தமிழனுக்கு இன்றளவும்‌ என்ன பலனைக்‌ கொடுத்திருக்கிறது? விஞ்ஞானதீதிற்குச்‌ சிறிதும்‌ பயன்படத்‌ தக்கதாய்‌ இல்லை ;$ அறிவுக்கும்‌ தக்கபடி பயனளிக்க முடியவில்லை. தமிழ்மொழி ஏற்பட்டுப்‌ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள்‌ ஆகியும்‌ அதைத்‌ தாய்மொழி யாகக்‌ கொண்ட தமிழன்‌ இன்னும்‌--இந்த விஞ்ஞானப்‌ பரவல்‌ காலத்திலும்‌ உலகில்‌ எங்கும்‌. இல்லாத அளவுக்கு மூட நம்பிக்கை உடையவனாகவும்‌, மான உணர்ச்சி என்பது 100-கீகு 75 பாகம்‌ இல்லாதவனாகவும்‌ இருந்துவருகிறான்‌. மனித வாழ்விற்கு மொழி முக்கியம்‌ ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 988 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ என்றால்‌--உலகில்‌ மற்ற மொழி நாடுகளைக்‌ காணும்போது தமிழ்‌ நாட்டுக்குத்‌ தமிழ்‌ என்ன பயன்‌ அவித்திருக்கிறது ₹ தமிழை வளர்க்கவேண்டும்‌ என்பதெல்லாம்‌ கலைத்‌ துறையிலோ, விஞ்ஞானத்‌ துறை யிலோ; மற்றும்‌ சில துறைகளிலோ வேறு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட வேண்டும்‌ என்கின்ற நிலைதானே தமிழுக்கு இருந்துவருகிறது ₹ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத்‌ தமிழ்‌ மொழியான து, மொழியில்‌ ஆகட்டும்‌, பொருவிலாகட்டும்‌, எழுதீதிலாகட்டும்‌, வேறு முறையிலாகட்டும்‌ எவ்வித முன்னேற்றமும்‌ மாறுதலும்‌ அடையவில்லை. உலகத்திலே நீதிசிறந்த இலக்கியம்‌-குறன்‌ தமிழில்‌ உள்ளது. அது தருப்பிடிதீ.துவிட்டது. என்‌ அனுபவத்திற்கு எட்டியவரையில்‌ உலகத்திலே சிறந்த துறை அறிவு, தமிழிலுள்ள கணக்குமுறை, அதாவது கிளஞ்சுவடி என்றும்‌ எண்‌ கணக்கு என்றும்‌ சொல்லக்கூடிய இலக்க முறை. அது குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்‌ டையும்‌ கழிதீதுவிட்டால்‌ தமிழில்‌ இருந்து--தமிழன்தெரிந்‌ துகொள்ளத்‌ தக்கதோ தமிழ னுக்குப்‌ பயன்படக்‌ கூடியதோ எதுவும்‌ தென்படவில்லை. தமிழும்‌ தமிழனும்‌ பெரும்பாலும்‌ பழங்காலச்‌ சின்னமாகக்‌ காணப்படுகின்‌ றன. தமிழனின்‌ பேச்சுமொழி, தாய்மொழி--தமிழ்‌ என்பதைத்‌ தவிர, தமிழருக்கு வேறு உலக முக்கியத்துவம்‌ எதுவும்‌ எனக்குத்‌ தென்படவில்லை. மற்றபடி, தமிழ்‌ நாட்டிற்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது-நல்லது $ அரசியல்‌, விஞ்ஞானம்‌, கலை. முதலியவைகளுக்கு ஏற்றது-பயன்படக்கூடியது என்று என்னைக்‌ கேட்டால்‌--எனக்கு, ஆங்கில மொழிதான்‌ சிறந்தது என்று தோன்றுகிறது. இது எனக்கு சுமார்‌ 35 ஆண்டு களுக்கு முன்னமேயே தோன்றிய எண்ணமாகும்‌. நான்‌ 1939-ல்‌ கோவைக்கல்‌லூரியில்‌ அதன்‌ பிரின்ஸிபாலின்‌ தலைமையின்கீழ்‌ கல்லூரி மாணவர்கள்‌ முன்னிலையில்‌ பேசும்போது எடுத்துச்‌ சொல்லியிருக்‌ 8 8 றன்‌, அந்தச்‌ சமயம்‌ நான்‌ இந்தி எதிர்ப்புக்காகச்‌ சிறைசென்று-சிறையினின்று விடுதலையாகி வந்த பிறகு, கல்லூரி மாணவர்களால்‌ அழைக்கப்பட்டு மொழி? என்னும்‌ தலைப்பில்‌ பேசிய பேச்சில்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. அந்தத்‌ தலைப்பில்‌ மொழியின்‌ பயன்‌ என்ன? பயனுக் கேற்ற மொழி எது? என்னு 2 பிரிவுகளாய்ப்‌ பிரித்துக்கொண்டு பேசியிருக்கி3றன்‌. அப்பேச்சில்‌ ஆங்கில எழுத்துக்களையே தமிழ்‌ எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக--அக௧ர வரிசையாக எடுத்துக்கொள்ளலாம்‌ என்றும்‌, தமிழ்‌ உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்‌ து ஆங்கிலத்தில்‌ ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால்‌ அதற்கேற்ற தமிழ்‌ எழுத்தையே எடுத்‌ துக்கொள்ளலா மென்றும்‌ சொன்னதோடு, மற்றும்‌ ஆங்கிலமே தமிழனின்‌ பேச்சுமொழியாக ஆகும்‌ படியான காலம்‌ ஏற்பட்டால்‌ நான்‌ மிகமிக மகிழ்ச்சியும்‌ திருப்தியும்‌ அடைவேன்‌ என்றும்‌ பேசியிருக்கிறேன்‌. சமீபத்தில (1957) நுங்கம்பாக்கத்தில்‌ இந்தி எதிர்ப்புக்‌ கூட்டம்‌ என்பதாக ஒரு கூட்டம்‌ கூட்டப்பட்ட காலத்தில்‌ எல்லாக்‌ கட்சிக்காரர்களும்‌ வந்திருந்‌ தார்கள்‌. அந்தக்‌ கூட்டதீதில்‌ பேசிய திருவாளர்‌ கராஜ காபாலாசீசாரியார்‌ அவர்கள்‌ தமிழ்‌ நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வவண்டும்‌ என்றும்‌ பேசினார்‌ ) ஆங்கிலமே போதனா மொழியாக இருக்கவேண்டும்‌ என்றும்‌ பேசினார்‌. பிறகு நான்‌. பேசும்போதும்‌ அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம்‌ பேச்சு மொழியாக இருந்தாலும்‌ மிகவும்‌ பயன்படும்‌ என்றும்‌ சென்னேன்‌. அதே சமயம்‌ இப்படி நான்‌ சொல்வதால்‌, மொழி வெறியர்கள்‌ சிலர்‌ என்னை; * நீ யாருக்குப்‌ பிறந்தாய்‌ ₹ என்றுகூடக்‌ கேட்டார்கள்‌. * அந்த மொழியைப்‌ பேச வேண்டும்‌ என்று சொல்வதனால்‌ நாம்‌ ஆங்கிலேயனுக்குப்‌ பிறப்பதானால்‌, மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு இரயில்‌, ரேடியோ, ஆகாய விமானம்‌, டெலிபோன்‌, மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து அனுபவிக்கிற நாம்‌-- எத்தனை தடவை ஆங்கிலேயர்களுக்குப்‌ பிறந்தவரகளாவோம்‌ என்பதைச்‌ சிந்தித்துப்‌ பார்தீதால்‌, மொழி பேசுவதனால்‌ ஆங்கிலேயனுக்குப்‌ பிறந்தவனாகமாட்டோம்‌ ? என்று www.thamizham.net - Free E 5௦011௦ 3026 மொழி 989 சொன்னேன்‌. கடைசியாகத்‌ தமிழின்‌ மூலமோ தமிழ்‌ இலக்கியத்தின்‌ மூலமோ, தமிழ்ச்‌ சமயம்‌, தமிழ்ப்‌ பண்பாடு மூலமோ நாம்‌ உலக மக்கள்‌ முன்னிலையில்‌ ஒருநாளும்‌ இருக்க முடியாது. தமிழ்‌ வடமொழியைவிட, இந்தி மொழியைவிடச்‌ சிறந்தது என்பதிலும்‌, பயன்படத்‌ தக்கது என்பதிலும்‌ எனக்கு அய்யமில்லை என்றாலும்‌, நாம்‌ இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால்‌--ஆங்கிலந்தான்‌ சிறந்த சாதனம்‌ என்றும்‌, ஆங்கிலமே அரசியல்‌ மொழியாகவும்‌, போதனா மொழியாகவும்‌ இருந்தாக வேண்டு மென்றும்‌, ஆங்கில எழுத்துக்களே தமிழ்‌ நெடுங்கணக்கு எழுதீகுக்களாவது அவசியம்‌ என்றும்‌, ஆங்கிலமே நம்‌ பேச்சு மொழியாவது நலம்‌ பயக்கும்‌ என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. [நூல்‌ 5 ¢ மொழியும்‌ அறிவும்‌? (1957, 1962) ] இந்தி வேண்டாம்‌? என்பதை நான்‌ 1926ஆம்‌ ஆண்டிலேயே ¢ இந்தியின்‌. இரகசியம்‌ ? என்னும்‌ தலைப்பில்‌ ¢ குடி அரசில்‌ எழுதினேன்‌. அந்தத்‌ தலையங்கம்தான்‌ தமிழ்நாட்டில்‌ மாதீதிரமல்லாமல்‌ இந்தியாவிற்கே இந்தி எதிர்ப்புக்காக எழுதப்பட்ட, தெரிவிக்கப்பட்ட முதலாவது எதிர்ப்புக்‌ கருதீதாகும்‌. பிறகு 1938-ல்‌ இராஜாஜி இந்தியைப்‌ புகுதீ திய காலத்தில்‌ இந்தியாவிலேயே முதல்‌ முதல்‌ கிளர்ச்சி ரூபமாக எதிர்ப்புக்‌ காட்டியது சுயமரியாதை இயக்கம்தான்‌. 2000 பேரை சிறைக்கனுப்பியதோடு நானு 3 ஆண்டு கடுங்காவல்‌ தண்டனை தண்டிக்கப்பட்டேன்‌. அதனால்‌ காங்கிரசும்‌ பதவியிலிருந்து வில$9யது; இந்திக்‌ கட்டாயமும்‌ ஒழிந்தது. பிறகு சுதந்திரம்‌? கிடைத்தது என்னும்‌ பேரால்‌ * இந்தி? தேசிய அரசாங்க மொழியாக ஆக்கப்பட்டது என்றாலும்‌, அதையும்‌ தொடர்ந்து எதிர தீதுவந்தது நமது இயக்கம்தான்‌ எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ்‌ வேண்டும்‌ என்பதற்கோ அல்ல என்பதைத்‌ தோழர்கள்‌ உணரவேண்டும்‌. மற்றெதற்கு என்றால்‌, ஆங்கிலமே பொதுமொழிபாக, அரசாங்க மொழியாக; தமிழ்நாட்டு மொழியாக, தமிழன்‌ வீட்டுமொழியாக ஆகவேண்டும்‌ என்பதற்காகவேயாகும்‌. தமிழன்‌ பழைய தமிழனாகவே இருக்கவேண்டும்‌ என்று கருதுவது--தமிழன்‌ காட்டு மிராண்டியாகவே இருக்கவேண்டும்‌ என்று கருதுவதற்கொப்பாகும்‌. நாம் இவ்வாறு கூறுவது, தமிழன் உலக மனிதனாக--விஞ்ஞான உருவாக--ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மக்களை விஞ்ஞானத்தில் தோற்கடிக்கத் தக்கவனாக ஆகவேண்டும் என்பதற்கேயாகும். நாம் இன்று கிணற்றுத் தவளைகளாக இருக்கிறோம். நமக்கு கம்பனுக்குமேல் புலவன் இல்லை; வள்ளுவனுக்கு மேல் தீர்க்கதரிசி இல்லை. இக் கருத்தில் நாம் உலக மனிதனாக ஆகமுடியாது என்பது எனது பலமான கருத்து. ஆகையால் தமிழர் தோழர்களே!உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்,பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள், தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். எண்ணை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.[விடுதலை! - அறிக்கை - 27-1-1969] www.thamizham.net - Free e-book No 30268. தாய்ப்பால் பைத்தியம் தொட்டதற்கெல்லாம் பழமைப் பைத்தியமே--சனாதனமே? தலைவிரிந்தாடும் போது அந்த மோகத்தில் ஆழ்ந்த மக்களிடையில் பொதுவான முன்னேற்றம்--மாறுதல் ஏற்படுத்த வருகிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் மிக மிகக் கஷ்டமும் தொல்லையும் அனுபவிக்கவேண்டிவரும் என்பதில் மறுப்புக்கு கடம் இருக்காது. இதற்குச் சுருக்கமான ஓர் உதாரணம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகின்றேன். அதாவது, கிறே தமிழ்நாட்டில் தமிழ் மொழியான் அல்லாத ஆங்கில மொழிக்காரன் ஆட்சி வந்த பிறகுதான், அவனது 200 ஆண்டு ஆட்சியில் தமிழ் மக்களில் 100-க்கு 15 பேர் களாவது எழுதுக்களையே அறிய முடிந்தது. இந்த இங்கிலீஷ்காரன் ஆட்சி உச்சநிலையில் இருந்தபோது அதற்கு 'மநீதிரியாக இருந்தவர்கள் இந்நாட்டுப் பார்ப்பனர் களேயாவார்கள். எப்படிஎனில், இந்தப் பார்ப்பனர் கருத்துப்படிதான் சட்டம், சம்பிரதாயம் முதலியவைகளைக்கொண்டு அவர்கள் மனம் கோணாமல் நடத்தினான். அதன்பயனாக எல்லா நீதி நிர்வாகப் பதவிகளும் ஆங்கிலேயர்களுக்கு அடுத்தாற்போல் பார்ப்பானிடம்தான் இருந்தன. இதனை அறியாதவர்கள் உண்மை தெரிந்துகொள்ள முடியாதவர்களேயாவார்கள். இதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால், இவர்கள் இந்தப்படியான ஆட்சியை எதிர்க்கவோ, வேறு மாற்றத்தைச் சொல்லவோ வகை அறியாதவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்கள் இப்படிப்பட்ட தன்மையில், நம்மில் மாத்திரம் அல்லாமல், பொதுவாகவே எழுத்து வாசனை உடைய மக்கள் 100-ககு 15 பேர்களுக்குமாகவேதான் இருந்திருக்கிறார்கள். இந்த 15 பேர் களில் இங்கிலீஷ் கற்றவர்கள் 100-க்கு 2 பேர்கள் இருக்கலாம். இந்த 2 பேர்களில் ஒன்றே முக்காலே மூன்றுவீதம் பேர் பார்ப்பனர்களே ஆவார்கள். இதிலிருந்து, இங்கிலீஷ் படித்த சமுதாயத்தின் வாழ்வு அன்றும் இன்றும்கூட எப்படி இருக்கின்றது?இங்கிலீஷ் படிக்காதவர்களின் வாழ்வு எப்படி இருக்கின்றது? என்று பார்த்தால், அதோடுகூடவே தமிழ் படித்தவர்கள் வாழ்வு எப்படி இருக்கின்றது? படிக்காதவர்கள் வாழ்வு எப்படி இருக்கின்றது?ஏதாவது பேதம் உண்டா? என்று பார்த்தாலும் *இங்கிலீஷின் தன்மை! விளங்கும். அதாவது, இங்கிலீஷ் படித்தவர்கள் தன்மையும், ஒன்றுமே படிக்காதவர்கள் தன்மையும் விளங்கும். மற்றும், இந்தத் தமிழ்நாட்டிலேயே நம் தன்மையும் பார்ப்பனரின் தன்மையும் இருவரின் வாழ்வின் பேத அளவும் விளங்குவதோடு அந்தப் பேதத்துக்குப் பெருங்காரணம் வேறு எது எதுவோ இருந்தாலும், பெரிதும் அந்த ஆங்கிலம் படிக்காததுதான் காரணம் என்பது விளங்கும். இன்றைய தினம் ஆட்சி நம்முடையது என்று சொல்லப்பட்டாலும், இதில் இங்கிலீஷ் படிக்காவிட்டொழிய, அந்த இங்கிலீஷிலும் திறமையான படிப்பாளி? என்கின்ற தகுதி இருந்தால் ஒழிய ஆட்சியில் பங்குபெற முடியாது என்கின்ற நிலை இருந்துவருவதை யாராவது மறுக்கமுடியுமா?மற்றும், இன்றைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப--விஞ்ஞான முன்னேற்றத்திற்கு ஏற்ப--எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் இங்கிலீஷைத் தவிர வேறு எந்த மொழியிலாவது நாடோ, மனிதனோ முன்னேறுவதற்கு ஏற்ற வசதியோ வாய்ப்போ இருக்கிறதா என்று கேட்கிறேன். இந்த அளவைப் பொறுத்த அளவிலாவது தமிழ் மக்கள் என்னும்குழந்தைகளுக்கு தாய்ப் பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன் பட்டு இருக்கின்றதா?பயன் படுமா? தாய்ப் பால் சிறந்தது? என்பதில் தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான். அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும் போது, அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாகமுடியுமா?தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பாலும் ஊறும்!அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?நண்பர் சிவஞானம் கூறும் தமிழ்த் தாய் உண்ட உணவெல்லாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பஞ்ச காவியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பாரதம், இராமாயணம், பாகவதம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய இவைகள் தானே? இவைகளில் சுவை இருக்கலாம்!அழகு இருக்கலாம்; முன்னேற்றத்திற்கான * அறிவு? இருக்கிறதா?இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப் பிணமாய் இருப்பதைத் தவிர அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு--காரியத்திற்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை--ஒரு ஒற்றைப் பிள்ளை--தமிழ் நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால் இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக; அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன். தாய்ப் பாலைக் குடிக்கவேண்டும்; தாய்ப் பாலுக்கு வகை செய்யவேண்டும் (அதாவது சமஸ்கிருதம் கட்டாயமாகவேண்டும்) என்று வரட்டுக் கத்தல் கதிறுகிற எந்தப் பார்ப்பணராவது; * புட்டிப் பால் (இங்கிலீஷ்) வேண்டாம்?என்று தள்ளுகின்றனரா?சொல்கின்றனரா?அப்படிச் சொல்கிறவர்கள் சங்கராச்சாரியார் கள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கிறார்களா?தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்கவேண்டும்?படித்த பிறகு, அது எதற்குப் பயன்படுகிறது?ஒருவருக்கு ஒருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளத்தானே பேச்சு (மொழி) வேண்டும்?பேசப் பழக வேண்டுமானால் அது தானாகப் படிக்காமலேயே வந்துவிடுகிற சாதனமாகுமே! தமிழ் மக்களில் 100-க்கு 60 பேர்களுக்கும்மேல்--தாய்மார்களில் 100-க்கு 80 பேருக்கும்மேல் படிப்பு வாசனை அற்ற தற்குறிகளாக இருக்கிறார்கள். என்றாலும் இவர்களில் யாருக்குதி தமிழ் பேசதெரியாது? ஓர் ஆணையோ, பெண்ணையோ நண்பர்கள் காட்டுவார்களா? எனவே, எதற்காகத் தமிழ் வேண்டும்?மேலும், தாய்ப் பால் குடித்துத் தமிழில் மேதாவிகளாகிய நபர்கள் முதல்--தமிழில் அரைகுறையாக பஜாரி? இலக்கியங்கள் கற்றவர்கள் உட்பட அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலமெல்லாம் மூட நம் பிக்கை என்ற நோய்களுக்கு ஆளாகியதே! அந் நோயைத் தீர்க்க எவ்வனவோ பேதி மருந்து கொடுத்து அவைகளை வெளியாக்கிப் போக்க வேண்டி இருக்கிறது. இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்களாதனே!அப்பப்பா, இந்தத் தாய்ப் பால் குடித்த மக்களிடம் கடவுள், மதம், புராணம், சம்பிரதாயங்கள், பழமை முதலிய நோய்கள் தொடர்நோய்கள் போலவே விளங்குகின்றன என்பது மாத்திரமல்லாமல், பக்கத்தில் உட்கார்ந்தால் சகிக்கமுடியாத வாடை (வெறுப்பு) அல்லவா தோன்றுகின்றது!எவ்வளவு தமிழ்ப் பற்று, தமிழ் மேதைத் தன்மையுள்ள கலைஞர்களை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இடத்தில் அவர்களில் 100-க்கு 5 பேர், 10 பேர்கள் இடத்திலாவது முன்னேற்ற உணர்ச்சி இருக்கின்றதா என்று பார்த்தால் எல்லாம் பழங் குப்பைகளும், அவைகளுக்கு ஏற்ற கற்பனைகளும், ஒழிக்கப்படவேண்டியவைகளும், அழிக்கப்படவேண்டியவைகளும் உருவமாய்க் காணப்படுகின்றன என்பதைத் தவிர, வேறு என்ன இருக்கிறது? www.thamizham.net - Free e-book No 3026992 பெரியார் ஈ.வெ. ரா. சிந்தனைகள் மரியாதைக்கு குரிய--பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க. வரை உள்ள பெரியார் களிடம்--அவர்கள் கருத்துக்களிடம், அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கென்றோ, மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக்கொள்ளத்தக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள்தட்டிக் கூறமுடியுமா?தாய்ப் பால், தாய்ப் பால் என்ற மாத்திரத்தில் மக்கள் ஏமாந்துவிடுவார்களா?தமிழ்த் தாய் யாரிடமாவது அவர்களது பாலைக்கறந்து எடுத்து இரசாயன பரிசோதனை ஸ்தாபனத்தில் கொடுத்தப் பரீட்சிக்குப் பார்த்தால், உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது என்று கண்டுபிடித்துச் சொல்லச்சொன்னால், அப்போது தெரியும்--தாய்ப் பால் யோக்கியதை!அன்றியும், தாய்ப் பாலைப்பற்றிப் பேசுபவர்களாவது அதில் உடலுரத்திற்குள்ள அம்சம் என்ன என்ன என்பதை விளக்கி அதைப்பற்றிப் பேசுவதுதான் தரீமமாகும். அப்படி ஒன்றுமே இல்லாமல், மக்களுக்குத் தாய்ப் பாலால் (தமிழால்) ஏற்பட்ட பழமை என்னும் முட்டான் தனத்தைக் கைமுதலாக வைத்துக்கொண்டு, * தாய்ப் பால்? என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துவதனால் மக்கள் ஏமாற்றப்படுவது அல்லாமல், வேறுயாருக்கு என்ன பலன் ஏற்படும்?மற்றும், நமக்கு இனி வேண்டி இருக்கும் அறிவு என்னும் உடலுரத்திற்குதீ தாய்ப் பால் கண்டிப்பாகப் போதாது என்பது மாத்திரமல்ல, பயன்படாது என்றும் உறுதியாகக் கூறுவேன். இப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ்வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு, இன்றியமையாத தேவைகளுக்கு, மற்ற நாட்டாளனோடு தலை நிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் (தாய்ப்பாலில்) என்ன இருக்கிறது? எதற்குத் தமிழைப் பயன்படுத்துகிறோம்? நமது வாழ்க்கையை எடுத்துக் கொண்டாலும் இதுவரை நாம் அனுபவியாததை, காணாததை, நினைக்காததை அனுபவிக்கிறோம், காண்கிறோம், நினைக்கிறோம். இதன் அடிப்படைகளை ஊமையன் மாதிரி கைஜாடை அல்லது கண்ஜாடை அல்லது புட்டிப் பாலால் (அயல் மொழியால்) உணர்கிறோம், அறிகிறோம். செய்யத் தெரிகிறோமே அல்லாது, தாய்ப் பால் சகீதி பயன் தருகிறதா?பார்ப்பனர்களும் அரசாங்கமும் இந்தத் துறையில் செய்கின்ற அக்கிரமங்கள் சொல்லி முடியாது. ஒரு பொருளுக்கு--தமிழ்ப் பெயர் உண்டாக்கி, தமிழில் சொல்லிவிட்டால் போதுமா?அதன் செயல் முறைக்கும், அதன் பாகங்களுக்கும், அதை ஊடுருவி அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படைக்கும் சொற்கள் வேண்டாமா?மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும், செய்முறையும் வேண்டுமானால் நமது தாய்ப் பாலில் (தமிழ் மொழியில்) என்ன இருக்கிறது?இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால் அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்ப (இங்கிலீஸ்) புட்டிப் பாலில் தானே எண்ணங்கள், செயல்முறைகள், பொருள்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறைகளின் பெயர்கள், அடிப்படைத் தத்துவம் முதலியவைகளை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப் பால் (தமிழ்) இவற்றில் எதற்காவது பயன்படுகிறதா? நாம் மொழியால்தானே தமிழனே தவிர--3000 ஆண்டுகளுக்கு முன்னைய தமிழைப் பேசுகிறோமே ஒழிய--பேச ஆசைப்படுகிறோமே ஒழிய,--வாழ்க்கையில், ஆசாபாசங்களில், வளர்ச்சியில், போக-போக்கியங்களில், நாம் தமிழன் அல்லலே! பேச்சில் * நான் பழந் தமிழன்?என்பதுபோல்-- நடப்பில், வாழ்வில், பழக்க வழக்கங்களில், * நான் பழந் தமிழன்? என்று யாராவது சொல்லிக் கொள்ளமுடியுமா?ஒரு ஊருக்குப் போக நினைப்பவன்; * பஸ்சில் போகவேண்டும்! * இரயிலில் போகவேண்டும்! *டெலிபோன்பேசவேண்டும் என்றால்--* பஸ் ஸ்டாண்டுக்குப் போகவேண்டும்! * இரயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டும்! * பப்ளிக் போனுக்குப் போகவேண்டும் என்றுதான் தமிழ்ப் புலவனும், எந்தத் தமிழ் அனுதாபியும் நினைக்கிறானே ஒழிய இவைகளைச் செய்யவேண்டுமானாலும்--புட்டிப் பால் குடிக்காதவனாலே (இங்கிலீஷ் படிக்காதவனாலே) ஒரு நாளும் செய்ய முடியாது. வண்டி என்பதும் பஸ் என்பதும் எப்பட நடைமுறையில்‌ மணிக்கு 6 மைலும்‌ 60 மைலும்‌ போகக்கூடிய விதீதியாசதீதில்‌ கிருக்கின்றதோ, அதுபோலவே இந்தச்‌ சாதனை களின்‌ செயல்முறைக்கும்‌ தாய்ப்‌ பாலும்‌ புட்டிப்‌ பாலும்‌ அவ்வளவு தூரம்‌ வித்தியாசதீதில்‌ பயன்படுபவையாய்‌ இருக்கின்றன. இதை மறைத்துப்‌ பேசுவதில்‌ என்ன பயன்‌? இதற்குச்‌ சமாதானம்‌ சொல்ல குதர்க்க வழியைப்‌ பின்பற்றுவதால்‌ என்ன பயன்‌ § மேலே குறிப்பிட்டபடி, மொழி என்பது ஒருவர்‌ கருத்தை ஒருவர்‌ அறியப்‌ பயன்படு கின்றதே தவிர, வேறு எதற்குப்‌ பயன்படுவது 1 இதைத்‌ தவிர, மொழியில்‌ வேறு என்ன. இருக்கிறது? இதற்காக--தாய்மொழி என்பதும்‌, தகப்பன்‌ மொழி என்பதும்‌, நாட்டுமொழி என்பதும்‌, முன்னோர்‌ மொழி என்பதும்‌, மொழிப்‌ பற்று என்பதும்‌ ஆகியவைகளை யெல்லாம்‌ எதற்கு மொழிக்குப்‌ பொருதி துவது ₹ நாம்‌, நமக்கு ஒரு 200 மைல்‌, 300 மைல்‌ தூரத்தில்‌ இருக்கிற கன்னட நாட்டுக்கோ, தெலுங்கு நாட்டுக்கோ போனால்‌, நம்‌ தாய்மொழி நமக்குப்‌ பயன்படுமா? நமது நாட்டை விட்டு நாம்‌ வேறு எந்த வெளிநாடுகளுக்குப்‌ போனாலும்‌ எப்படி நம்‌ தாய்மொழி நமக்குப்‌ பயன்படமாட்டாதோ, அது போலவே இன்றைய * நமது நாடு! என்பதே இன்று வேறு நாடாகவே ஆகிவிட்ட ?த ! உதாரணத்துக்கு எடுத்‌ துக்கொள்வோம்‌. 100 வருடதீதுகீகுமுன்‌ ஈரோட்டிலிருந்து செத்துப்போன எனது பாட்டன்‌, மேல்‌ லோகத்தில்‌ இருந்து கின்று தொப்பென்று ஈரோட்டி லேயே குதிப்பதானால்‌--அவனும்‌ அவன்‌ முன்னோர்களும்‌ பிறந்து வளர்ந்த வீட்டைக்‌ கண்டுபிடிக்க முடியுமா? அவன்‌ தனது சாதி ஜனங்களைக்‌ கண்டுபிடிக்க முடியுமா? மற்ற வாழ்க்கை முறை, வாழ்க்கை வசதிகளைக்கண்டு அனுபவிக்க முடியுமா । எல்லாம்‌ யாரோ ஒருவராலாவது சொல்லித்‌ தெரிந்துகொள்ள வேண்டியவனாகதீதான்‌ இருப்பான்‌, காரணம்‌ நாடே, மக்களே; வாழ்க்கையே மாறிவிட்டது. ஆகவே, இங்கு மொழி மாறிவிட்டது என்பது மாதீதிரமல்லவே;) ஊரே மாறிவிட்டது என்பதுதானே பொருள்‌ ! அதுபோல்தானனே; இன்று நமது நாடே மாறியாகிவிட்டது. அதற்கேற்றவண்ணம்‌ மொழி மாறுதலடைய வேண்டியது தான்‌ நியதி ஆகும்‌. நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ முன்னேற்றத்தின்‌ பயன்களை எல்லாம்‌ அனுபவிக்கவும்‌, தாங்கள்‌ முன்னேறவும்‌ இங்கிலீஷ்‌ மொழியை நல்லவண்ணம்‌ பயன்படுத்திக்கொண்டு, மற்ற வர்கள்‌ எங்கு தங்களைப்போலவே முன்னேறிவிடுவார்களோ என்ற பொறாமையினால்‌, கெடுதல்‌ புதீதித்‌ தன்மையால்‌ நமக்கு இந்தியைக்‌ கொண்டுவந்து புகுத்தி, அதை வேண்டாம்‌ என்று சொல்லுவதற்காக நமக்குத்‌ தாய்மொழி, தாய்மொழி என்று பைத்தியம்‌ பிடித்து. அதிலேயே அழிந்துவிடுவோமே ஒழிய, இங்கிலீஷ்‌ என்ற உணர்ச்சி ஏற்படாது என்ற ¢ ஞான திருஷ்டி யினால்‌, நமக்கு வந்ததீ தாய்மொழிப்‌ பைத்தியம்‌ ஏற்படும்படி செய்துவிட்‌ டார்கள்‌. உதாரணமாக; இந்தி கட்டாயம்‌ என்‌றதனால்தான்‌ தமிழ்மொழிப்‌ பைத்தியம்‌ நமக்கு ஏற்பட்டது. இது பார்ப்பனர்களின்‌ திறமையேயாகும்‌. யாராவது சொல்லட்டுமே-- பார்ப்பனர்களில்‌ யாருக்காவது, எங்காவது தாய்மொழிப்‌ பைத்தியமோ, தாய்மொழிப்‌ பற்றோ இருக்கிறதா? அவனுக்கு முதலாவதாக தாய்மொழி என்பதாக ஒரு மொழியே கிடையாது என்பது மாதீதிரமல்லாமல்‌-தாய்நாடு என்பதாக ஒரு நாடே கிடையாதே 1 அவர்கள்‌ மொழிப்‌ பற்று; நாட்டுப்‌ பற்று எல்லாம்‌--அவர்கள்‌ சாதி ஆதிக்கப்பற்று தானே 1 1686—125 ‘ 994 பெரியார்‌ me வெ. ரா. சிந்தனைகள்‌ உதாரணமாக, தமிழ்நாட்டுப்‌ பார்ப்பானுக்குதீ தாய்மொழிப்‌ பற்றோ, தாய்நாட்டுப்‌ பற்றோ இருநீதால்‌ நாட்டுப்‌ பற்றுக்காக ¢ ஜேய்‌ ஹிந்த்‌ ? என்‌ பானா 1 ஜனகணமன ? என்பானா? தாய்மொழிக்காக, வந்தே மாதரம்‌? என்பானா? வணக்கதீதுக்கு, * நமஸ்காரம்‌? என்பானா ¥ ' பாரத தேசம்‌? என்பானா 8 இதெல்லாம்‌ எப்படி தீ தாய்நாட்டுப்‌ பற்றாகவும்‌, தாய்மொழிப்‌ பற்றாகவும்‌ விளங்குகிறது என்பதை அறிவைக்கொண்டு சிந்திதீதுப்‌ பார்க்கட்டுமே ! பார்ப்பான்‌ மாத்திரம்‌ என்ன i நமக்குத்தான்‌ உண்மையான (தாய்ப்‌ பால்‌) மொழி, நாட்டுப்‌ பற்று இருக்கிறதா? எதையோ பேசி எவனையோ காப்பியடித்து நாம்‌ சுதீத சாம்பிராணிகளாகிவிட்டோம்‌, இதுதான்‌ தாய்ப்‌ பாலின்‌ பலன்‌ | [நூல்‌ s ¢ தாய்ப்‌ பால்‌ பைத்தியம்‌ 9] 7. சமஸ்கிருதம்‌ ஏன்‌ ? இன்று இந்‌ நாட்டில்‌ நடைபெறும்‌ ஆட்சியானது, ¢ ஜனநாயகக்‌ குடியரசு! என்ற போலிப்‌ பெயரைக்‌ கொண்டதாயினும்‌, உண்மையாக இது பார்ப்பன நாயகம்‌ என்பதையும்‌, பார்ப்பனர்களது நலத்தைப்‌ பாதுகாக்கின்ற தன்மையில்‌ அவர்களால்‌ நடதீதப்பெற்று வருவதாகும்‌ என்பதையும்‌, நான்‌ பல தடவைகள்‌ எடுதீதுக்கரட்டி வந்திருக்கிறேன்‌) இன்றும்‌ அதைதீதான்‌ செய்துகொண்டு வரு8றேன்‌. இந்த நாட்டில்‌ உள்ள மற்ற அரசியல்‌ கட்சிகள்‌ என்கின்ற யாவும்‌, * இந்த அரசாங்கத்தில்‌ நமக்கு ஏதாவது பங்கு கிடைக்கிறதா 8 நாமும்‌ பொறுக்கித்‌ தின்று வாழ்வதற்கு வகை கிடைக்காதா 1 என்கின்ற தன்மையில்தான்‌-அதனை ஒழிக்கவே போட்டி போடுவதைப்போல்‌ நடிதீது மக்களிடம்‌ ஓட்டு வாங்கிக்‌ கூட்டுக்‌ கொள்ளைப்‌ பங்குபெறத்‌ *டிதீ துக்கொண்டு இருக்கின்‌றன. அரசாங்கதீதினரும்‌ இவர்களுக்கும்‌ பங்கு கிடைக்கவே பல ஏற்பாடுகள்‌ செய்து வைத்து ஆசைகாட்டுகிறார்கள்‌. ஆக 2வ, அவர்களால்‌ (இதில்‌ பங்கு பெறுபவர்களால்‌) இதைப்‌ பார்ப்பன நாயகம்‌? என்பதை ஒருநாளும்‌ ஒப்புக்கொண்டதாகக்‌ காட்டிக்கொள்ள முடியாது. நெஞ்சார உணர்ந்ததை வெளியே சொன்னால்‌ * வயிறு கழுவுவது £, ¢ கரலட்‌ சேபம்‌ நடத்துவது !-கொள்ளைப்பணம்‌ சேர்ப்பது-பதவி பெறுவது பாதிக்கப்பட்டுவிடுமே என்று கருதி அஞ்சி, பயந்து ஒடுங்கி, பார்ப்பான்‌ பாடுகிற--* ஜன நாயக சங்கீதக்‌ கச்சேரி?க்ீகு இவர்கள்‌ பக்கமேளம்‌ வாசிப்பவர்களாக இருக்கிறார்கள்‌. ஏனெனில்‌, இதை ஜனநாயகம்‌ என்று இவர்கள்‌ ஒப்புக்கொள்ளாவிட்டால்‌ இவர்கன்‌ தேர்தலுக்கு நிற்க முடியாது) பதவிக்குப்‌ போட்டிபோடமுடியா து. இது பகுத்தறிவைப்‌ பயன்படுத்துகிற அறிவாளிகளுக்கு வினங்காமற்‌ போகாது இதை எவன்‌ புரிந்து கொள்கின்றனேச அவனால்தான்‌ திராவிடர்‌ கழகத்தின்‌ மகதீதாண: தொண்டின்‌ சக்தி, மகத்துவம்‌, பெருமை என்னவென்று உணர முடியும்‌. இன்று நடைபெறும்‌ ஆட்சி பசீசைப்‌ பார்ப்பன ஆட்சி என்றும்‌, சூத்திரனை-- பிராமணன்‌ மேல்‌ சாதி-கீழ்சாதிக்காரன்‌ என்பவன்‌ அப்படியே நீடித்து நிலைத்து என்‌: றென்றும்‌ ¢ சிரஞ்சீவியாக இருக்கவேண்டும்‌ என்று பாடுபட்டுவரும்‌ ஆட்சி என்றும்‌ காட்டு வதற்கு இதுவரை பலவித ஆதாரங்கள்‌ எடுதீதுகீ காட்டப்பட்டுள்ளன என்றாலும்‌, இன்றும்‌ ஒரு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்‌. இந்த நாட்டில்‌ பல காலமாக ¢ சமஸ்கிருதம்‌? என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர்‌ இந்‌ நாட்டில்‌ புகுதீதி, அதற்குத்‌ ¢ தேவ பாஷை? எனப்‌ பெயரிட்டுக்‌ கடவுவ்கள்‌--தேவர்கள்‌, சமயம்‌, சாதீதிரம்‌ ஆகியவைகளுக்கு அதில்‌ சொன்னால்தான்‌ புரியும்‌- பயன்படும்‌ என்று காட்டி, நமது பரம்பரை கிழிவிற்கு நிரந்தரப்‌ பாதுகாப்பு ஏற்படுதீதிவருகிறார்கள்‌. www.thamizham.net - Free £ book No 3026 மொழி 995 இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில்‌ நாம்‌ தமிழர்கள்‌ 100-8g 97 பேர்கள்‌ வாழ்கிறோம்‌. நமது நாட்டு மொழி தமிழ்‌ மொழி. இந்த நிலையில்‌ நமது மொழிக்கும்‌, நம்‌ கலாச்சாரதீதிற்கும்‌, நம்‌ பழக்க வழக்கங்களுக்கும்‌ சம்பந்தமில்லாத-நம்‌ நாட்டு மக்கள்‌ எண்ணிக்கையில்‌ நூற்றுக்கு 3 பேராக உள்ள--இந்‌ நாட்டிற்குப்‌ பிழைக்க வந்து குடியேறிய ஆரியப்‌ பார்ப்பணர்களுடைய தாய்மொழியாக உள்ளதும்‌, எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம்‌ என்னும்‌ மொழிக்கு இன்று இருந்துவரும்‌ செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர்‌ புகுதலுக்குப்‌ பின்‌ இருந்திருக்கிறதா1 இன்றைய இளைஞர்கள்‌, வாலிபர்கள்‌ பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி ? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன 8 பார்ப்பன மேலோர்‌? மொழியாக- சமஸ்கிருததீதிற்கு கிருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள்‌ தெரியுமா ? தெரியாது என்றே நினைக்கின்றேன்‌. சுமார்‌ 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்‌. முன்பெல்லாம்‌ ஒரு காலேஜில்‌ ஒரு சமஸ்கிருத புரோஃபசர்‌ வாங்கும்‌ சம்பளத்‌ அக்கும்‌, தமிழ்ப்‌ பண்டிதர்‌ (புரோஃபசர்‌) வாங்கும்‌ சம்பள தீ.க கீகும்‌ மலை அளவு வித்தியாசம்‌ இருக்கச்‌ செய்தது. அரசாங்கதீதில்‌ சமஸ்கிருதம்‌ படிதீதவனுக்ீகு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய்‌ சம்பளம்‌ | தமிழ்ப்‌ பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான்‌ சம்பளம்‌. சமஸ்கிருத ஆசிரியருக்குப்‌ பெயர்‌--* புரோஃபசர்‌ 1) தமிழ்‌ ஆசிரியருக்குப்‌ பெயர்‌--ஆசிரியர்‌. காலஞ்சென்ற பேராசிரியர்‌ திரு. கா. நவசீசிவாய முதலியார்‌ அவர்கள்‌ பிரசிடென்ஸி காலேஜில்‌ புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம்‌ ரூபாய்‌ 81 என்பதாகத்தான்‌ ஞாபகம்‌. அதே நேரத்தில்‌ அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்‌) என்பவர்‌ வாங்கின சம்பளம்‌ சுமார்‌ ரூ. 800-க்கு மேல்‌! ஜஸ்டிஸ்‌ கட்சி அரசாங்கத்தில்‌ முதல்‌ மந்திரியாக இருந்த திரு. பனகல்‌ இராஜா அவர்களே இதைக்‌ கண்டு மனம்‌ கொதித்து என்னிடத்தில்‌ நேரில்‌ சொல்லி, ¢ நீங்கள்‌ இதைக்‌ கண்டித்து ஒரு தலையங்கம்‌ எழுதுங்கள்‌ ? என்றும்‌ சொன்னார்‌. அவர்‌ சமஸ்கிருதம்‌ படித்தவர்‌) புலமை வாய்ந்தவர்‌. என்றபோதிலும்கூட அந்தமாதிரி-அந்தஸ்திலும்‌, சம்பள தீதிலும்‌ வேறு படுத்திய கொடுமையைக்‌ கண்டித்தார்‌. பிறகு அரசாங்க உதீதரவு போட்டு அதன்மூலம்‌ இவ்வேற்றுமையை ஒழித்தார்‌. அன்று நாங்கள்‌ போட்ட கூப்பாடும்‌, ஜஸ்டிஸ்‌ மந்திரி சபையின்‌ உதீதரவும்‌ இல்லாதிருந்தால்‌ இன்றும்‌ தமிழ்ப்‌ பண்டிதர்கன்‌ இதே நிலைமையில்‌ தான்‌ இருக்கக்கூடும்‌. பிறகு, திரு. கிராஜகோபாலாசீசாரியார்‌ அவர்கள்‌ 1937-ல்‌ இந்தியைக்‌ கொண்டு வந்ததன்‌ உள்நோக்கமே சமஸ்கிருததீதுக்குச்‌ செல்வாக்கு கொஞ்சம்‌ கொஞ்சமாகக்‌ சரிந்து வருவதைத்‌ தடுத்து அதை உயர்தீதவும்‌, அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்‌ கவுமேயாகும்‌. இதை அவர்‌ வெளிப்படையாகவே பல கூட்டங்களில்‌ பல சொற்பொழிவு களின்‌ மூலம்‌ வெளிப்படுத்தி இருக்கிறார்‌. இதை நாம்‌ இப்பொழுது விட்டால்‌ நமது இனதீ திற்கும்‌, தன்மான தீதிற்கும்‌, உரிமைக்கும்‌ பேராபதீது என்று கருதித்தான்‌, ஆச்சாரியாரின்‌ கட்டாய இந்தித்‌ திணிப்பைப்‌ பலமாக எதிர்தீதுப்‌ போராட்டம்‌ துவக்கி சுமார்‌ 2000 பேர்‌: களைச்‌ சிறைக்கு அனுப்பியதோடு, நானும்‌ மூன்று ஆண்டு கடின காவல்‌ தண்டனை பெற்‌ றன்‌. இன்று தமிழ்நாட்டில்சமஸ்கிருதம்என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவை தானா? எதற்காவது பயன்படுகிறா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை, பொருள் ஏதுவகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். www.thamizham.net - Free £ book No 3026 996 பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?மற்றும் தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா?தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதானால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை.மனிதனின் சக்தி (Energy) அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர் நாட்டு மொழி சமஸ்கிருதம்ஆகவ, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும். ஒரு மொழியின் தேவை, முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரியஇலக்கிய காவியங்களையும்,தெய்வீகத் தன்மையும் தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக்கொள்ளப்படுவதானாலும், அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும். உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது என்றால், அது"புரதன மொழி" என்பதோ அல்லது தெய்வாம்சம் உள்ள மொழி என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வனப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும். 1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். 2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும். 3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது. இம் மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் (Beauty) வைத் துக்கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டு (Utility) அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்குரிய யோগியத்தாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா?அதிலும் குறிப்பாக, தேவ பாஷை யான சமஸ்கிருதத்திற்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே,"இல்லை" என்ற பதில் கிடைத்துவிட்டது. அது"பேசீசு வழக்கு இல்லாத" ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம்"தாய்பாஷை"?எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?பார்ப்பனர்கள் வகுத்த அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 14 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று என்று சர்வ ஜாக்கிரதையாக எழுதிவைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவே பெரிய மோசடி எண்ணத்தின் விளைவு என்பேன்."சமஸ்கிருதம் பேசுகின்றவர்கள் இந்தியாவிலேயே மொத்தம் 441 பேர், அதாவது சுமார் 500-க்கும் குறைந்தவர்கள்"என்ற புள்ளி விவரத்தை திரு. பி. ஜி. கேர் தலைமையில் ஏற்படுத்தப் பட்ட இந்திய ஆட்சி மொழிக் கமிஷனின்"ரிப்போர்ட்" (Official Language Commission Report) தெரிவிக்கிறது. கிதுகூடப் புரட்டு என்றுதான் கூறவேண்டும். சமஸ்கிருதத்தை வழக்கில் பேசுகின்றவர்கள் இந்த நாட்டில் யாருமே கிடையாது. இந்திய சர்க்காரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும், "இந்தியா ஆண்டு வெளியீட்டில்" (India Year Book 1960) உள்ள புள்ளி விவரம், பக்கம் 45-ல தரப்பட்டிருப்பதானதைக் கீழே பாருங்கள்:எண்ணிக்கை மொத்தத்தில் மொழி இலட்சத்தில் சதவிகிதம் இந்தி1,499 46.3 உருது 463 — लन्दुस्तानी — — பஞ்சாபி 830 25.6 தெலுங்கு102 — மராத்தி 270 8.3 தமிழ் 265 8.2 வங்காளி 251 7.8 குஜராத்தி 163 5.0 கன்னடம் 145 4.5 மலையாளம் 134 4.1 ஒரியா 132 4.1 அஸ்ஸாமி 50 1.5 காஷ்மீரி 0.405 — சமஸ்கிருதம் 0.01 — இந்தப் புள்ளிவிவரங்களின்படி மிகமிகக் குறைந்த மக்கள், 6 மைக்ரோஸ்கோபிக் (பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டிய அளவு) மைனாரிட்டியினர் மொழியாகத் தான், (நாம் இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்புக்கொண்டே பேசுவதானாலும் கூட) அது இருக்கிறது. அப்படி இருந்துங்கூட, மேலே பலநூறு இலட்சக் கணக்கான மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்குக் கிடைக்காத சலுகை இன்று இதற்குத் தரப்படுகிறதே, காரணம் என்ன?சமஸ்கிருதமொழி ஒரு செதில்மொழி என்ற உண்மை (Dead language) பல்லோராலும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அதை உயிர் ஊட்டுவதற்காகப் பார்ப்பனர்களைக் குடியாட்சித் தலைவர்களாகவும், மந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும் கொண்டுள்ள இந்த ஆட்சியினர், சமீபகாலமாகச் செய்துவரும்"பகீரதப்" பிரயத்தனங்களும் அதற்காக மற்ற மக்களிடத்தில் கசக்கிப் பிழிந்துவாங்கும் வரிப் பணத்தைக் கரியாக்குவதையும் பற்றி இந்த நாட்டில் உள்ள"பொதுமக்கள் தலைவர்" களோ, மொழிவல்லுநர்களோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவே இல்லை. எடுத்துக்காட்டாக, அக்டோபர் 1956-ல் சமஸ்கிருதக் கமிஷன் என்ற ஒன்றை இந்திய சர்க்கார் நியமித்தார்கள். இந்தக் கமிஷனின் நோக்கங்கள் யாவை என்பதையும் அரசாங்கத்தினர் சொன்னார்கள். அதன் நோக்கம் பல்கலைக்கழகங்களிலும், வெளியிலும் சமஸ்கிருதத்தை, சமஸ்கிருத கல்வியைப் பரப்புவதும், அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதுமேயாகும். இந்தக் கமிஷன் தனது அறிக்கையை டிசம்பர் மாதம் 1957-ஃ் சமர்ப்பித்தது. இதன் சிபாரிசுகளை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தனது திட்டமாகச் செயல் படுத்திக் கொண்டு வருகிறது. இந்த ஆட்சிக்குப் பெயர் ஜனநாயகமாம்!நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு கமிஷன் என்றால் அதற்குப் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் செலவு, வீண்விரயம் என்று அர்த்தம். இதனால் யாருக்காவது"காதொடிந்த ஊசியளவாவது" பிரயோசனம் உண்டா? விரயம் செய்யப்பட்ட பணம் அத்தனையும் நம்மிடத்திலிருந்து வரியாகக் கோடிக் கணக்கில், டில்லி சர்க்காரால் பகற்கொள்ளையரைப்போல் எடுத்துச் செல்லப்படுவதுதானே!பார்ப்பனரிடம் இருந்து போகும் வரிவிகிதாசாரம் என்ன?நம்மிடம் இருந்துபோகும் வரியின் விகிதாசாரம் என்ன?"அண்டைவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்கின்ற தன்மையில், இலட்சக் கணக்கில் இப்படி வாரியிறைக்கப் பெற நாசமாக்கக் கொண்டிருப்பதை, நாம் இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறுதான் இருக்கவேண்டுமா?"சமஸ்கிருதக் கமிஷன்"சிபாரிசுப்படி மத்திய சர்க்காரிலேயே"மத்திய சமஸ்கிருத போர்டு" (Central Sanskrit Board) என்ற ஒரு அமைப்பு 1957 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு, முன்னாள் சுப்ரீம் கோர்ட் சீப் ஜஸ்டிஸ், திரு. பதஞ்சலி சாஸ்திரி தலைவர்,மற்றும் 8 பேர் உறுப்பினர்கள், மூன்று வருடங்களுக்கு இவர்கள் பதவியில் இருப்பார்கள்.("மெயில்" தேதி 1-7-1959) இந்தப் போர்டினது பிரதான நோக்கம் எல்லாம், சமஸ்கிருதத்தை இந்தியர முழுவதிலும் எப்படிப் பரப்புவது என்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து மத்திய சர்க்காருக்கு அவ்வப்போது ஆலோசனை கூறவேண்டிய துதானாம். சமஸ்கிருதக் கமிஷனின் சிபாரிசுகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல இலட்ச ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டதாம். (Bhavan's Journal 14-6-1959) இப்படிப் பல இலட்ச ரூபாயைக் கரியாக்குவதன் மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும்!அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற 13 மொழிகளுக்குக் காட்டாத சலுகை, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்ன தேவை? அப்படிச் சமஸ்கிருத இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஊக்கம் அளிப்பது என்றால், அதைத் தனிப்பட்டவர்களான பிர்லா, கே.எம். முன்ஷி போன்றவர்களால் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகின்ற, பாரதீய வித்யாபவனம், பாரத இதிகாச சமிதி, சமஸ்கிருத விசுவ பரிஷத் போன்றவைகள் செய்துகொள்ளலாம் அல்லவா? மத்திய சர்க்கார் மாத்திரம் இதற்கு ஏன் இவ்வளவு சலுகை காட்டவேண்டும்? இது மாத்திரம் அல்ல, மத்திய சர்க்காரின் ஆதரவுள்ள"சாகித்திய அ ௨டமி"யின் ஆதரவில் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கென்றே ஒரு பத்திரிகையும் (Journal) துவங்கப்பெற்றுச் சில மாதங்களாக நடந்து வருகின்றது. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் உள்நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத்தையும் ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும். சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மைக் கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும், அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக, விழிப்போடு காரியம் செய்துவருகிறார்கள். இல்லாவிட்டால், உலகம் பூராவும் சுற்றி வருகிற சுயாதீனத் தமையாடிய சரீ. சி. பி. இராமசாமி அய்யர், "சமஸ்கிருதநான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்கவேண்டும்" என்று பேசிவருவாரா?அதுமட்டுமா?தமிழைத் தாய்மொழி என்று கூறுகின்ற பார்ப்பனரை காணமுடிவதில்லையே!தப்பித் தவறி எங்காவது ஒன்று இரண்டு சுட்டிக்காட்டுவீர்களானால் அது வயிற்றுப்பிழைப்பைக் கருதி அப்படி உதட்டளவில் கூறிய பார்ப்பனனாக இருக்கும், அவ்வளவுதான்."சமஸ்கிருத விஸ்வ பரிஷத்தின் கூட்டம் புதுடெல்லியில் பாபு இராஜேந்திரபிரசாத் தலைமையிலே, அதுவும் இராஷ்டிரபதி பவனத்தில் நடக்கிறது. அதில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்:"அரசாங்கத்திடம் சொல்லி, சமஸ்கிருதப் படிப்புக்கு என ஒதுக்கி இருக்கும் தொகையைச் செலவழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதமல்லாதவற்றிற்குச் செலவிடக் கூடாது; அது சம்பந்தமாகச் சட்டங்கள் செய்யப்படுவதோ, உத்தரவு போடப் படுவதோ தடுக்கப்படவேண்டும்"என்று கூற ஒரு கமிட்டி ஏற்படுத்தி, அதில் உறுப்பினர்களாக, இந்திய பார்லிமெண்டின் சபாநாயகர் திரு. அனந்தசயனம் அய்யங்கார், இன்றைய சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதி திரு. பி. பி. சின்ஹா போன்ற சிலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். (பவன்ஸ் ஜர்னல், 23-3-1959) சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் பணம் செலவாக வழியில்லை என்றால்கூட, வேறு காரியத்திற்குச் செலவிடப் படக்கூடாதாம்!எவ்வளவு பரந்த மனப்பான்மை!இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பார்ப்பனரின் காலைக் கமுவிய திரு. இராஜேந்திர பிரசாத், குடியாட்சித் தலைவரின் தலைமையின் கீழாகும். இதைப் போய், மதச் சார்பற்ற அரசாங்கம் என்றும், பார்ப்பன அரசாங்கம் அல்ல என்றும் சொல்லுவது, மனிதன் உடனே சாகக்கூடிய மாதிரியில் கடிக்கின்ற பாம்புக்கு"நல்ல பாம்பு" என்று பெயர் வைத்திருப்பது போன்றதல்லவா?"ரிட்டயர்ான"ஒவ்வொரு பார்ப்பன ஜட்ஜ், அதிகாரி, தலைவர் எல்லோருக்கும் எப்படி சமஸ்கிருதத்தைப் பரப்புவது என்பதில்தான் கவலை. அது பரவினால், ஆழ வேரூன்றினால்தான் பார்ப்பன சாதித் திமிருக்கு உரம் போட்டதுபோல வாகும் என்பதை நன்றாக உணர்ந்துதான் அவர்கள் இவ்வாறு தீவிரமாக இதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய மக்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல்,"நாம் எவனுக்கு வைப்பாட்டி மக்களாக இருந்தால்தான் என்ன?வயிறு நிரம்பவேண்டியதுதானே!"என்று இருக்கிறார்கள். நம்முடைய புலவர்கள், அறிஞர்கள் எல்லோரும் இதைப்பற்றியே நினைக்க நேரில்லாத மாதிரி காட்டிக்கொண்டு, பார்ப்பானின் காலைக் கழுவி "கதி மோட்சம்" பெறுவதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஓட்டு, பதவி வேட்டைக்காரர்களோ,"நாய் விற்ற காசு குலைக்காது", "கருவாடு விற்ற காசு நாறாது" என்கின்ற தன்மையில், "எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்"என்று எண்ணித் தமிழ் மக்களது மானத்தைப் பார்ப்பனரிடம் அடகுவைத்துக் கூலிபெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். இந்நிலையில் இதையெல்லாம் எடுத்துக்கூறிப் பேசித் திரிவதற்கு--அதன்‌ விளைவு களைச்‌ சநீதோஷதீ தோடு ஏற்பதற்கு என்னைத்‌ தவிர, எனது கழகத்தைத்‌ தவிர இன்று இந்த நாட்டில்‌ யார்‌ இருக்கிறார்கள்‌ 8 யார்‌ இருக்கிறார்கள்‌ ? யார்‌ இருக்கிறார்கள்‌ i— எனக்குப்‌ பிறகு $ எங்களுக்குப்‌ பிறகு, சிந்தியுங்கள்‌ 1 (¢ விடுதலை -கட்டுரை--15-2-1960] www.thamizham.net - Free £ book 14௦ 3026 1000 8. மொழித்‌ தொல்லை நமது நாட்டில்‌ சாதித்‌ தொல்லை பெருந்‌ தொல்லையாக நீண்டநாளாகவே இருந்து வருகிறது. மதத்‌ தொல்லையும்‌ இருந்து வந்தாலும்‌ அது இத்தியா தேசம்‌ என்று கருதப்‌ படுகிறபோ துதான்‌ ஏதோ காணப்படுகிறதே அல்லாமல்‌ சாதித்‌ தொல்லைபோல்‌, தமிழ்‌ நாட்டைப்‌ பொறுத்து என்று சொல்லப்படுகிற அளவுக்கு இந்தியாவில்‌ மற்ற நாடுகளில்‌ இல்லை என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. அதன்கேடு, அதாவது சாதித்‌ தொல்லையால்‌ ஏற்படும்‌ கேடு இந்திய தேசிய நலத்தைகீகூட பெரும்‌ அளவிற்குப்‌ பாதிதீ.து வளர்ச்சியைக்‌ கெடுத்துவருகிறது. இப்போது மொழித்‌ தொல்லையைப்பற்றி எழுதத்‌ தொடங்கியதால்‌ சாதித்‌ தொல்லையை ஒதீதி வைத்துவிட்டு மொழித்‌ தொல்லையைப்‌ பற்றியே சிந்திப்போமாக | இந்த மொழித்‌ தொல்லை--இந்திய தேசம்‌ முழுவதிலும்‌ பலநாடுகளுகீகுச்‌ சேர்நீது ஒரே ஆட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால்‌ ஏற்பட்டிருக்கிறதே யல்லாமல்‌ இயற்கை யாக ஏற்பட்ட தொல்லை அல்ல என்றே சொல்லலாம்‌. வெள்ளையர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ மொழித்‌ தொல்லை இல்லை என்று சொல்லப்‌ படுமானால்‌ அவன்‌ ஒருமொழியை ஆட்சிக்காகப்‌ பொது மொழியாக்கி வைத்துவிட்டான்‌. ஆதலால்‌ மொழித்‌ தொல்லைக்கு இடமில்லாமல்‌ போய்விட்டது. அந்த மொழி வெள்ளையனுடைய சொந்த மொழியாக இருந்தாலும்‌, இந்திய மகீகன்‌ அதை விரும்பி மேல்விமுநீது கற்கவும்‌, பயன்படுத்திக்கொள்ளவும்‌ போட்டிபோட ஆரம்‌ பித்ததால்‌, அம்மொழியினால்‌ மக்கன்‌ நன்மை அடைந்தார்கள்‌ என்பதைத்‌ தவிர, சிறிதும்‌ தொல்லையடையவில்லை. வெள்ளையனுக்குப்‌ பிறகும்‌ முன்பு கிருந்த பொதுமொழியையே, பொதுமொழியாகப்‌ பயன்‌ படுத்திக்‌ கொள்ளப்பட்டிருந்தால்‌ இன்று இந்தியா ஒட்டிலும்‌ (முழுவதும்‌) காணப்‌ படுகிற பினவு நிலையும்‌, பேத உணர்ச்சியும்‌ பெரும்‌ அளவுக்கு இல்லாமலிருக்கும்‌ என்றே. சொல்லலாம்‌. ஆனால்‌, வெள்ளையன்‌ ஆட்சி இந்த நாட்டில்‌ திருக்கும்போதே அன்னிய மொழியை, அதாவது (இந்தியாவில்‌ அந்தந்த நாட்டில்‌ இருந்துவந்த மொழியைத்‌ தவிர்தீதுப்‌ பொது மொழியாய்‌ இருந்துவந்த ஆங்கிலத்தின்‌ மீது துவேஷத்தை ஏற்படுத்தி) பெரும்பாலான நாட்டுக்கு அன்னிய மொழியாய்‌ இருந்துவந்த இந்தியைக்‌ கொண்டுவந்து பலாத்காரமாய்‌ புகுத்தியது (ஆங்கிலத்திற்கு முக்‌ யத்துவம்‌ கொடுத்து) ஆங்கிலதீதினால்‌ பிழைத்து வந்த இந்தப்‌ பார்ப்பனர்களே யாகும்‌. பொதுவாக, இந்தியாவில்‌ உன்ள மக்கள்‌ 100-கீகு 99 பேர்‌ மூடநம்பிக்கைகீகாரர்க ளாய்‌,முட்டாள்களாய்‌ இருப்பதற்கே காரணம்‌ அவரவர்கள்‌ மொழியேயாகும்‌ என்பது எனது பலமான கருத்து. நம்‌ மனிதருக்கு இதுவரை படிப்பு இல்லை என்பது ஒரு காரண மானாலும்‌, அவரவர்‌ பேசும்‌ மொழியிலாவது அறிவிற்கான சொற்கள்‌ இருக்கிறதா என்றால்‌ கிடையாது. படிப்பதாக இருந்தாலும்‌ அறிவிற்கான நூல்கள்‌, இலக்கியங்கள்‌, மத சம்பிரதாய ஆதாரங்கள்‌ எதுவுமே கிடையாது! பிறந்த குழந்தை பேசவேண்டுமானாலே தாய்‌ தந்தையர்‌ கற்றுக்கொடுத்துதீதானே ஆகவேண்டும்‌! அறிவுக்கு ஏற்ற சொல்‌ இல்லை) மொழி இல்லை) நூல்‌ இல்லை] சமயமில்லை. இப்போது இருப்பவை எல்லாம்‌ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்‌ ஏற்பட்டவை. இவைகளில்‌ எதையும்‌ மாற்றக்கூடாது என்பது குரங்குப்‌ பிடிவாத!மேயாகும்‌. மக்களுக்குள்‌ செலுத்துவதிலும்‌ மூடநம்பிக்கையோடும்‌ *கற்பு*கீகு இருக்கிற நிபந்தனையோடுமே செலுத்தப்பட்டு வருகிறது 1 இவற்றுள்‌ சாதி உணர்ச்சி வேறு; மக்களுக்குள்‌ புகுந்து ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 மொழி 1001 வக்கீலுக்கு எப்படி புரட்டு, பித்தலாட்டம்‌ அவசியமோ, அதுபோல சாதி உணர்ச்சிக்கும்‌ மக்களுக்கு புரட்சி, பித்தலாட்டம்‌ அவசியமாகி, அவைகள்‌ மூலமே காப்பாற்றப்பட வேண்டி யது ஆகிவிடுகிறது. சர்‌, இராதா 8ருஷ்ணன்‌; சரீ. சி. வி. இராமன்‌ ஆகிய * படித்த? பெரியோர்களைப்‌ பார்தீதாலே சாதி உணர்ச்சி எவ்வளவு தூரம்‌ பகுத்தறிவைக்‌ கெடுதீதுவிடுகிறது என்பது தெரியும்‌. இப்படியாக இந்தத்‌ தன்மையில்‌ உள்ள மொழிகளை இந்த முறையில்‌ புகுதீதப்பட்டு வந்தால்‌ மனிதனுக்கு மொழியினால்‌ அறிவு எப்படி வளரமுடியும்‌? புதிய உலகில்‌ வாழ்கின்ற, வாழவேண்டிய மக்களுக்கு மொழிப்‌ பைத்தியம்‌ எதற்கு 1 அதுவும்‌ சாதிபோன்ற, மதம்போன்ற மொழிப்‌ பைத்தியம்‌, மொழிவெறி என்பது எதற்கரக இருக்கவேண்டும்‌ ₹ பார்ப்பனர்கள்‌ தாங்கள்‌ மைனாரிட்டி (Minority) என்கின்ற காரணதீதால்‌ தங்கள்‌: பாதுகாப்புக்கென்று இந்தியாவை, இந்திய யூனியன்‌ ஆட்சியை நமது நாடாகவும்‌, நமது ஆட்சியாகவும்‌ செய்ததை நாம்‌ ஒப்புக்கொண்ட, ஏற்றுக்கொண்ட மாபெரும்‌ முட்டாள்‌ தன தீதால்‌, ஏமாளித்‌ தனதீதால்‌ இந்தியும்‌, மூடநம்பிக்கை மடமையால்‌ இருந்து வரும்‌ தாய்மொழி வெறியும்‌ என்றென்றைக்கும்‌ நாம்‌ அறிவுபெற முடியாமலும்‌ செய்து விட்டது ) செய்துவருகிறது. உலகம்‌ உள்ளவரை நாம்‌ இந்த இந்திய யூனியன்‌ என்னும்‌ நரகக்‌ குழியில்‌ கருக்க வேண்டியவர்களா? போதாக்குறைக்கு, * பெரியார்‌ கல்ஜாரியில்‌ படித்தவர்கள்‌? என்றும்‌, நாங்கள்‌ * பகுதீதறிவுவாதிகள்‌ ? என்றும்‌ சொல்லிக்கொள்ளும்‌ இன்றைய மந்திரிகள்‌ ¢ தமிழுக்கு, தமிழ்மொழிக்குக்‌ கேடுவந்தால்‌ நாங்கள்‌ பதவியைவிட்டு வெளியேறிவிடுவோம்‌ ! என்று சொல்லுகிறார்கள்‌ என்றால்‌, இதில்‌ என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன ¢ பெரியார்‌ ? வாசனை இருக்கிறது? உயர்தரப்‌ படிப்புக்களை யெல்லாம்‌, கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆகீகுகிறோம்‌ ! என்றால்‌ ¢ மக்களை முட்டாள்களாக்குகி3றோம்‌ 2 என்றுதானே பொருள்‌ ? இப்படியான நிலை ஏற்பட்டால்‌ இது முக்‌ கொலை என்றுதானே ஆகும்‌ ₹ தமிழ்‌ மொழியும்‌ கெட்டு, பாடவிஷயமும்‌ பொருளும்‌ கெட்டு, ஆங்கிலமும்‌ கெடும்படி ஆவதால்‌ மூன்று கொலை செய்ததாகதீதானே முடியும்‌? இதுதானா இந்த சிப்பாய்கள்‌ வேலை? இந்த நாடு முன்னேற வேண்டுமானால்‌, எந்த மொழியிலானாலும்‌ சரி, விஞ்ஞான அறிவு, விஞ்ஞான வாழ்வு இவற்றால்தான்‌ முடியும்‌ ! இந்தியோ, தமிழோ காப்பாற்றப்படவேண்டும்‌ என்ற கூப்பாடு எத்த அடிப்படையில்‌ கிளப்பப்படுகிறது ? 6 நமது முன்னோரீகளால்‌ ஏற்பாடு செய்யப்பட்ட பண்‌ பாடுகளை கலாசாரங்களைப்‌ பாதுகாகீகவேண்டும்‌! என்பதற்காகவே அல்லாமல்‌ வேறு எதற்காக? இன்று இநீதியாவிலேயே ஆயிரதீதுக்கு ஒரு மனிதன்கூட பேசாத, எங்கும்‌ பேச்சு வழக்கில்‌ இல்லாத, எந்த ஒரு காரியத்திற்கும்‌ பயன்படாத சமஸ்கிருததீதிற்காக பார்ப்பனர்‌. இமாலயப்‌ பிரயத்தனம்‌ செய்து பள்ளிகளில்‌, கல்லூரிகளில்‌ எல்லாம்‌ பாடமாக, பரீட்சையாக வைத்து, பல கோடிக்கணக்கான ரூபாய்களை இவற்றிற்காகச்‌ செலவுசெய்து பாழாக்குவது எதற்காக ₹ பார்ப்பான்‌ ¢ மேல்சாதி மகன்‌? என்பதைப்‌ பச.துகாக்க, அதற்கேற்ற கலாசாரதீ தையும்‌ பண்புகளையும்‌ நிலைநிறுதீதத்தானே அல்லாமல்‌ வேறு எதற்காக? ¢ அவன்‌ தம்பி அங்கதன்‌ ? என்ற கருதீதிற்கு இணங்க தமிழ்‌, இந்தி, வெங்காயம்‌ என்பதும்‌, ஆங்கிலம்‌ விலக்கப்பட வேண்டும்‌ என்பதும்‌ அல்லாமல்‌ வேறு என்ன கருத்து அதில்‌ இருக்கிறது t 1686—126 1002 பெரியர்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ நம்மைத்‌ தமிழும்‌ இந்தியும்‌ படிக்கச்‌ செய்துவிட்டு, பார்ப்பானும்‌ பணகீகாரனும்‌ ஆங்கிலமும்‌ ஆங்கில கான்வென்டிலும்‌ படிதீதப்‌ பதவிக்குப்‌ போய்விடுவார்கள்‌. பிறகு நம்‌ கதி என்ன ? தமிழ்மொழிக்‌ களஞ்சியங்களான “மாணிக்கவாசகர்‌ காலம்‌? எழுதிய காலஞ்சென்ற மறைமலை அடிகள்‌, பெரிய புராணதீதிற்கு புது உரை எழுதிய திரு. வி. கலியாணசுந்தரம்‌ முதலியோர்‌ வாழ்வில்‌, முக்கியத்துவத்தில்‌ என்ன தரத்தில்‌ இருந்து சென்றார்கள்‌ 8 * சைவத்தை நிலைநிறுத்திய? மூடநம்பிக்கைக்‌ களஞ்சியங்களாகதீதானே முடிவெய்தி னார்கள்‌! காலம்‌ செல்லாத இன்றையத்‌ தமிழ்க்‌ களஞ்சியங்கள்‌ தி பொ. மீனாட்சிசு ந்தரனார்‌, டாக்டர்கள்‌ சிதம்பரநாதன்‌ செட்டியாரீ, மு. வரதராசனார்‌, இராஜமாணிக்களனார்‌ மற்றும்‌ ஒரு டஜன்‌ உருப்படிகளின்‌ இன்றைய நிலை என்ன i அவர்களால்‌ அவர்கள்‌ ஓர்‌ அளவுக்கு நன்றாய்ப்‌ பிழைக்கிறார்கன்‌ என்பதைத்‌ தவிர நாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்‌ ₹ அன்னகீகாவடி பஞ்சாங்கப்‌ பார்ப்பான்‌ மகன்‌ ஆங்கிலம்‌ படிதீது சுப்ரீம்‌ கோர்ட்‌ நீதிபதி ஆகிறான்‌ 1 பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற உணர்ச்சிப்‌ போராட்டம்‌ இல்லாதிருந்தால்‌ இந்த மேதாவி டாக்டர்கள்‌ * மகான்‌ கன்‌ நிலை இன்று எப்படி இருக்கும்‌ 8 கிறுக்கன்‌ பாரதிக்கு இருக்கிற மதிப்பில்‌ நூற்றில்‌ ஒன்றுகூட கவர்களில்‌ எவருக்கும்‌ இன்று கல்லையே | இவர்கள்‌ தரதிதைவிடக்‌ குறைந்த தரமுள்ள ஆங்கிலத்தில்‌ பேர்‌ பெற்றவர்கள்‌, சரதாரண அளவு ஆங்கிலப்‌ படிப்பாளிகள்‌ எவ்வளவு மேல்நிலையில்‌ இருக்கிறார்கள்‌ ! எதிர்காலதீதிலாவது இந்த நிலை மாறும்‌ என்று கனவு காண முடியுமா? கல்விக்கு ஏதாவது மாற்றம்‌ ஏற்பட்டால்‌ இந்த மந்திரி சபையினால்தான்‌ ஏற்படவேண்டும்‌. இதுவே * உருண்டைக்கு நீளம்‌, புலிப்புக்கு அவனப்பன்‌? என்றால்‌ நம்‌ கதி என்ன ? இது (இவர்கள்‌) ஒழிந்தால்‌ பக்தவத்சலம்‌, வெங்கட்ராமன்‌ அல்லது ககீகன்ட மன்றாடியார்‌ மந்திரி சபை அல்லது அவர்கள்‌ போன்றோர்‌ மந்திரிசபைதானே ஏற்படும்‌ ? ஆதலால்‌, நான்‌ வேண்டிக்கொள்கிறேன்‌, இன்றைய தினம்‌ ஆங்கிலத்திற்குன்ன எந்த நிலையிலும்‌, எந்த அமைப்பிலும்‌ கை வைக்காதீர்கள்‌ என்று 1 5 வருடமானால்‌ உங்களை யாரும்‌ எந்த மந்திரியாய்‌ இருந்தீர்கள்‌ என்று கேட்க மாட்டார்கள்‌. என்ன செய்தீர்கள்‌ என்றுதான்‌ கேட்பார்கள்‌. ¢ நரங்கன்‌ காலேஜ்களில்‌ ஆங்கிலத்தை ஒழித்தோம்‌! என்றால்‌ என்ன ஆகும்‌ இத கேள்வி 10 வருஷத்தில்‌ நீங்கள்‌. என்ன செய்தீர்கள்‌ என்று கேட்டால்‌, காமராசர்‌ என்ன செல்லுவார்‌ ₹ நாங்கள்‌ ரூபாய்கீகு ஒரு படி அரிசி அளந்தோம்‌ என்றா சொல்லுவார்‌ 1 * உன்‌ மகஅனக்‌ கேள்‌ ) உன்‌ மகளைக்‌ கேள்‌; அவள்‌ உத்தியோகதீதைப்‌ பார்‌) அவர்கள்‌ பேசுகிற பேச்சைப்‌ பார்‌ ? என்பார்‌ | [6 விடுதலை -தலையங்கம்‌--5-4-1967]. www.thamizham.net - Free £ book 14௦ 3026 பகுதி V தலைவர்கள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3026 1. தலைவர்களுடன்‌ சந்தீப்பு 1. காந்தியாரும்‌ பெரியாரும்‌ 1927ஆம் ஆண்டு பெங்களூரில் காந்தியார் விடுதியில் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்களும், தோழர் தேவதாஸ் காந்தியவர்களும் கீழே இருந்து வரவேற்று, காந்தியாரிடம் தனி அனுமதிபெற்று தந்தை பெரியார் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவ்வமயம் அங்கு காந்தியாருக்கும், பெரியாருக்கும் நடந்த சொல்லாடலின் ஒரு பகுதி:பெரியார்:இந்துமதம் ஒழிந்தாக வேண்டும். காந்தியார்:ஏன்? பெரியார்:இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. காந்தியார்:இருக்கிறதே!பெரியார்:இருக்கிறதாகப் பார்ப்பனர் கற்பிதீர்து, அதை மக்கள் மனத்தில் அப்படி நினைக்கும்படி செய்திருக்கிறார்கள். காந்தியார்:எல்லா மதங்களும் அப்படித்தாமே!பெரியார்:அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரர்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய கொள்கைகளும் உண்டு. காந்தியார்: இந்துமததிற்கு அப்படி ஒன்றும் இல்லையா?பெரியார்: என்ன இருக்கிறது?ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன் என்கிற இந்தப் பேத, பிரிவுத்தன்மையல்லாமல் வேறு என்ன பொது கொள்கைகள், பொது ஆதாரங்கள் இருக்கின்றன?அதுவும், பிராமணன் உயர்ந்தவன்;சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்பதுதவிர வேறு என்ன இருக்கிறது? காந்தியார்:சரி, அந்தக் கொள்கையாவது இருக்கிறதே! பெரியார்:இருந்தால் நமக்கு இலாபமென்ன?அதனால் பார்ப்பனர் பெரியசாதி; நீங்களும் நாங்களும் சின்னசாதி என்பதாக அல்லவா இருந்துவருகிறது? காந்தியார்:நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்னசாதி, பெரிய சாதி என்பது இல்லை. பெரியார்:இது தாங்கள் வாயால் சொல்லலாம்;காரியத்தில் நடவாது. காந்தியார்:காரியத்தில் நடத்தலாம். பெரியார்:இந்துமதம் உள்ளவரை ஒருவராலும் நடக்க முடியாது. காந்தியார்:இந்துமதத்தின் மூலம்தான் செய்யலாம். பெரியார்:அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது? காந்தியார்:நீங்கள்தான், இந்துமததிற்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே!பெரியார்:நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை என்றேன். மதத்தை ஒப்புக்கொண்டால்; ஆதாரத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?காந்தியார்:மதத்தை ஒப்புக்கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே? பெரியார்:அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக்கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்றமுடியாது.காந்தியார்:நீங்கள் சொல்லுவது மற்ற மதங்களுக்குச் சரி; இந்துமததிற்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத்தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்;உங்களை ஆட்சிப்பிக்க எவனாலும் முடியாது. பெரியார்:அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்?அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள், அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்லலாம்? காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அதாவது, இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆதலால்தான்; நாம் ஒரு இந்துமதஸ்தன் என்பதை ஒப்புக் கொண்டு, நம் இஷ்டம்போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக்கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் உலகத்திலேயே சொல்லுகிறேன், மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால்,இந்துமதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது. ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கை வைத்தால், கையை வெட்டிவிடுவார்கள். கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதாகச் சொல்லும் பைபின் என்ன சொல்லுகிறதோ, அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும். முகமது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ, அப்படிதான் முஸ்லிம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும். மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்லலாம். உள்ளே இருந்து சொன்னால் ஒழித்துவிடுவார்கள், இததான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால் அந்த மததின்பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்து மதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக்கொண்டே அனேக சீர்திருத்தங்களை இந்தக்கால மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடி செய்யலாம். பெரியார்: மன்னிக்கவேண்டும்--இதுதான் முடியாது. காந்தியார்: ஏன்? பெரியார்:இந்துமதத்தில் உள்ள சுயநலக் கும்பல் அதற்குச் சற்றும் கடம் கொடுக்காது. காந்தியார்:ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? இந்து மததில் தீண்டாமை இல்லை என்று சொல்லுவதை இந்துமததினர் யாவரும் ஒப்புக்கொள்ளவில்லையா?பெரியார்:ஒப்புக்கொள்வது என்பது ஒன்று, ஒப்புக்கொண்டபடி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது. காந்தியார்:நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 45 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?பெரியார்:உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை. தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு வேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக்கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத்தி தாங்கள் நம்புகிறீர்கள். காந்தியார்:(சிரித்துக்கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்?பெரியார்:பார்ப்பனர்கள் யாவரும்தான்! காந்தியார்:எல்லாப் பார்ப்பனருமா?பெரியார்:ஆம். ஏன்? தங்கன்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும்தான்.காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கை இல்லையா?பெரியார்:நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. காந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பெரியார்:அவர் நல்லவர்; உண்மையானவர்;தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு, அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது. காந்தியார்:இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணனூக கூட யோগ்யன் இல்லை என்பது உங்கள் கருத்தா? பெரியார்:இருக்கலாமோ என்னமோ?எனக்குத் தென்படவில்லை. காந்தியார்:அப்படிச் சொல்லாதீர். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே. பெரியார்:அப்பாடா!தங்கன் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப் பெரிய உலகில் ஒர் ஒர் பிராமணன் தென்பட்டு இருந்தால், எங்களைப்போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டிருக்க முடியும்?காந்தியார்:(சிரித்துக்கொண்டே) உலகம் எப்போதும் 'இண்டலிஜன்சியா' (படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகதான் இருப்பார்கள். ஆதலால், அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மற்றவர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும். பெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்துமதத்தில் மாத்திரமே, பார்ப்பனரே யாவரும் இண்டலிஜன்சியாவாக–படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்ற வர்கள் அனேகமாக 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் படியாதவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே 'இண்டலிஜன்சியா'வாக–ஆதிக்கக்காரர்களாக இருக்க முடியும் என்றால், அந்த மதம், அந்த சாதி தவிர்த்த மற்ற சாதியாருக்குக் கேடானதல்லவா?ஆதலால்தான், நான் அந்த மதம் பொய் மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது. ஆதலால், ஒழியவேண்டும் என்கிறேன். காந்தியார்:உங்கள் கருத்து என்ன?இந்துமதம் ஒழியவேண்டும், பிராமணர்கள் ஒழியவேண்டும் என்பதாக நான் கருதலாமா?பெரியார்:இந்துமதம், அதாவது இல்லாத–பொய்யான–இந்துமதம் ஒழிந்தால் பிராமணன் இருக்கமாட்டான், இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக்கிறான். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது. காந்தியார்:அப்படி அல்ல, நான் இப்போது சொல்லுவதை பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே நாம் யாவர்களும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா? பெரியார்:தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங் கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்துவருவதை இப்போது தாங்கள் மாற்றுவதுபோல், இன்று தாங்கள் செய்ததை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.காந்தியார்:எப்படி மாற்றக் கூடும்? பெரியார்:தாங்கள் தான் இந்துமதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களை நடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதேபோல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்துமதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?காந்தியார்: இனி வரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது. பெரியார்:நான் சொல்லுகிறேன். தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்துமதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது; பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். காந்தியார்:உங்கள் மனத்தில் பிராமணர்மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இ.துவிஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2, 3 தடவை சந்திப்போம். பிறகு நாம் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கலாம்--என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் தன் தலையை உருட்டித் தடவினார். [1927-ல், பெங்களூரில் காந்தியர்--பெரியார் சந்திப்பு--நூல்: இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்(1948)–வள்ளுவர் பதிப்பகம், பவானி] 2. பெரியார்–ஜின்னா–அம்பேத்கார் சந்திப்பு பம்பாயில் 8-1-1940 ஆம் தேதி ஜனாப் ஜின்னா அவர்களையும், டாக்டர் அம்பேத்கார் அவர்களையும் பெரியார் கண்டு பேசியது பற்றிய அறிக்கை: நான் பம்பாயில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் முகமதுஅலி ஜின்னாவையும், ஆதிதிராவிட சமூகத் தலைவர் டாக்டர் அம்பேத்காரையும் சந்தித்துச் சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம்விட்டு தாராணமாகச் சம்பாஷித்தேன். நாங்கள் காங்கிரசின் ஆரம்பம் முதல், அரசியல் நிர்வாகத்து திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள்பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்காரும் காங்கிரஸைப்பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தனவாகவே இருந்தன. நாங்கள் மூவரும் காங்கிரஸ் செல்வாக்கினால் ஏற்படும் தீங்குகளை அகற்ற ஒன்றுகூடி முயற்சிப்பதென முடிவு செய்தோம்."காங்கிரசின் செயல்களும், அதில் அங்கம் வகிப்பவர்களும், கொள்கைகளும், தீவிர மாறுதலும் காங்கிரஸ் எப்போதும் ஓர் அரசியல் ஸ்தாபன மென்று கூறமுடியாதென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன,"என்று ஜனாப் ஜின்னா கூறினார். "காங்கிரஸ் சுயநலங்கொண்ட சில தனிப்பட்ட நபர்கள்டங்கியது. அது பொது மக்களின் உணர்ச்சியில் விளையாடும் முறையில் நடந்துவருகிறது. காங்கிரசாரும் பொது மக்களின் பிரதிநிதிகளெனத் தங்களைக் கூறிக்கொண்டு, அவர்களிடம் கிடைத்ததை எல்லாம் விழுங்கி, தங்கன் குலப்பெருமையை பலப்படுத்திக்கொள்ளுகின்றனர்." பலப்படுத்திக்கொள்ளுகின்றனர்‌ஃ மலர நன்னி வ ராஹ கமழ foe QEpn எழு HEeD froe பம தை வ நராழாடு முபடற்மறம @ o "மம டு ல famynp nFEnewiep D19 புட எல்‌ பதலை [ங௪ படபட? ஓ FnedD மழட மடுமாளா தலைவர்கள்‌. 1009 காங்கிரஸ் விஷயத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் நடந்துகொள்ளும் முறைகள் பற்றியும் விவாதம் நடைபெற்றது. பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரஸைத் தட்டிக்கொடுப்பதையே இலாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதுகின்றதென்று நாங்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டோம். ஏனெனில், வேறெந்த ஸ்தாபனமும் காங்கிரஸைப்போன்று இராஜ விஸ்வாசமாகவும் பூரணமாகவும் பிரிட்டிஷ் சர்க்காரின் பாட்டுக்குத் தாளம்போட முடியாது. மேலும், காங்கிரஸைப்போல் வேறெந் காங்கிரசைப்போல்‌ வேறெந்தக்‌ கட்சியும்‌, பிரிட்டிஷாரின்‌ வசதிக்காகப்‌ பொது மக்களின்‌ உணர்ச்சிகளைக்‌ கருணையற்ற முறையில்‌ புண்படுத்த முற்படாது. பிரிட்டிஷ்‌ நலன்களுக்குதீ தீங்கு செய்யாததும்‌, அவ்வாறு செய்ய நினையாத துமான ஒரே ஒரு கட்சி காங்கிரஸ்தான்‌. ஒருக்கால்‌ பிரிட்டிஷ்‌ சர்க்காரின்‌ கருதீ.தும்‌ இவ்வாறுதான்‌ இருக்குமெனக்‌ கருதவேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாவிடில்‌, காங்கிரசிடம்‌ பிரிட்டன்‌ இப்போது நடந்துவரும்‌ தோரணையில்‌ நடந்துவராது. பிரிட்டிஷார்‌ காங்கிரசின்‌ செல்வாக்கு கூ$ணமடைந்து வருவதை நன்கறிவர்‌, ஆனால்‌, அவர்கள்‌ * குரைக்கும்‌ நாய்களுக்கு எலும்பு போடும்‌ ? பழைய கொள்கையை இப்போது அனுஷ்டித்து வருகின்றனர்‌ ) அயல்நாட்டு ஆதிக்கதீதை உண்மையில்‌ வெறுப்ப வர்களைக்‌ குருணையின்றி ஒழித்துவிடும்‌ கொள்கையும்‌ பிரிட்டிஷார்‌ அனுசரித்து வருகின்றனர்‌ ; ஒருவேளை அவர்கள்‌ இதர சில கட்சித்‌ தலைவர்களையும்‌, சமூகதீ தினரையும்கூடப்‌ புறக்‌ கணித்‌ துவிட முயற்சிப்பர்‌ முஸ்லிம்‌ லீக்‌ மதப்‌ பாதுகாப்புக்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனமன்று. இஸ்லாதீதிற்கு இத்தகைய உதவியொன்றும்‌ தேவை இல்லை. இஸ்லாம்‌ மதம்‌ தன்‌ சுயபலதீதோடு நின்று, தன்னைப்‌ பாதுகாதீ துக்கொள்ளும்‌ வல்லமையுடையது. ஆனால்‌, அரசியல்‌ மூஸ்லிம்களுக்காகப்‌ பேசவும்‌, செயல்கள்‌ புரியவும்‌ மூஸ்லிம்‌ லீக்‌ ஒரு ஸ்தாபனதீதுக்கு மட்டும உரிமை இருக்கிறது. முஸ்லிம்‌ லீக்‌ ஒன்றே முஸ்லிம்களின்‌: சுயமரியாதைக்குக்‌ கண்கண்ட பூரண சின்னமாகும்‌. அரசியல்‌ முஸ்லிம்களுக்காக முஸ்லிம்‌ அல்லாதார்‌ பேசுவதை, முஸ்லிம்‌ லீக்‌ ஒருபோதும்‌ சகிதீதுக்கொண்டிராது. முஸ்லிம்‌ லீக்‌ ஒன்றே முஸ்லிம்‌ சமூகத்தின்‌ அரசியல்‌ விஷயங்களில்‌ பிரதிநிதித்துவம்‌ வாய்ந்தது. முஸ்லிம்‌ சமூகத்தின்‌ சார்பாகப்‌ பேசவும்‌, முஸ்லிம்‌ சமூக நன்மைகளை உத்தேசித்து எத்தகைய அரசியல்‌ மாற்றத்தையும்‌ அனுமதிக்கவும்‌ மூஸ்லிம்‌ லீக்‌ ஒன்றுக்கு மட்டுமே உரிமையுண்டு. இந்த உண்மை உணரப்படவேண்டும்‌ ) அங்கீகரிக்கப்பட வேண்டும்‌. அப்போதுதான்‌ முஸ்லிம்‌ லீக்‌, தனது அரசியல்‌ கோரிக்கைகளை இதர அரசியல்‌ கட்சிகள்முன்னும்‌ பிரிட்டிஷார்‌ முன்னும்‌ சமர்ப்பிக்கும்‌. * முஸ்லிம்‌ லீக்‌ தனது உரிமைகளைக்‌ கோருவதற்காக அன்னியருக்குப்‌ பணிந்து விடாது. நமது சமூகதீதின்‌ * இஜ்ஜத்‌ (கண்ணிபத்தை)தை அங்கிகரிக்கக்கூடிய அந்தஸ்தையே-முஸ்லிம்‌ லீக்‌ கோருகிறது. இத்தகைய கண்ணியமான ¢ இஜ்ஜத்‌தைக்‌ கொண்டுவரும்‌ எவரையும்‌ வரவேற்க லீக்‌ தயாராயிருக்கிறது? என்று ஜனாப்‌ ஜின்னா கூறினார்‌. இந்தப்‌ பெருந்தன்மை வாய்ந்த, நியாயமான கூற்றை யாராவது மறுக்க முடியுமா என்று நான்‌ கேட்கிறேன்‌. காங்கிரஸ்‌ ஆட்சியில்‌ சிறுபான்மையினர்‌ நிலைமை சம்பந்தமான பிரச்சினையில்‌ நரங்கள்‌ ஒரே அபிப்பிராயம்‌ கொண்டவர்‌ களாக இருக்கிறோம்‌. *எந்த வகையிலாவது காங்கிரஸ்‌ மீண்டும்‌ பதவிக்கு வர: மூயற்சிக்குமாயின்‌, அம்முயற்சியொன்றே சிறுபான்மையினருக்குப்‌ பாதுகாப்பு வேண்டுவதன்‌ அவசியத்தை உணர்த்திவிடும்‌. இப்‌ பாதுகாப்புகளில்லாமல்‌ எந்த அரசியல்‌ முறையும்‌ திருப்திகரமாக நடைபெறாது ? என்று ஜனாப்‌ ஜின்னா அபிப்பிராயப்படுகிறார்‌. 686-127 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 1010 பெரியார்‌ ஈ.வெ. ரா. சிந்தனைகள்‌ காங்கீரசின்‌ அட்சி, உலக மகீகளுடையவும்‌, பிரிட்டிஷாருடையவும்‌ கண்களைதி திறநீதுவிடும்‌) அப்‌ பாது காங்கிரசின்‌ எதேச்சாதிகாரச்‌ செயல்களிலிருந்து சிறுபான்மை யினர்‌ பாதுகாக்கப்பட வேண்டுவதவசிபமென்ற உண்மை ஸ்வரூபத்தைக்‌ கண்டுகொள்வர்‌. கட்டாய இந்தி சம்பந்தமாக என்‌ கருத்துக்களை ஜனாப்‌ ஜின்னாவும்‌, டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்களும்‌ ஆதரித்தனர்‌, கட்டாய இந்தித்‌ திட்டம்‌, நமது கலைகளுக்கு விரோதமாக-பீராமண மதத்தையும்‌, கலைகளையும்‌ பலப்படுத்தி விஸ்தரிக்கும்‌ ஒரு குறுகிய நோக்குள்ள திட்டாருமென்று நான்‌ அரிப்பிராயப்படுவதுபோன்றே, ஜனாப்‌ ஜின்னாவும்‌, டாக்டர்‌ அம்பேத்காரும்‌ அபிப்பிராயப்பட்டனர்‌. நான்‌ நமது மாகாணத்தில்‌ இந்தி எதிர்ப்புக்‌ கிளர்ச்சி மீண்டும்‌ ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்ட விஷயமாகப்‌ பிரஸ்தா பித்தபோது ஜனாப்‌ ஜின்னா அவர்கள்‌, ¢ நீங்கள்‌ என்‌ பூரண ஆதரவையும்‌ பெறுவீர்கள்‌? என்று கூறினார்‌. இவ்விஷயத்தில்‌ டாக்டர்‌ அம்பேத்காரும்‌ என்‌: அபிப்பிராயத்தை ஆதரிதீதார்‌. இந்தி சம்பந்தமாக எனது கொள்கையை ஜனாப்‌ ஜின்னா அங்சிகரித்ததி லிருந்து, நான்‌ மீண்டும்‌ ஆரம்பி4கப்போகும்‌ இந்தி எதிர்ப்டக்‌ கிளர்ச்சியில்‌ இம்‌ மாகாண: முஸ்லிம்கள்‌ தாராளமாகக்‌ கலந்து உதவி செய்வார்களென நான்‌ நம்புகி2றன்‌. நம்‌ மாகாணதீதில்‌ காங்கிரஸ்‌ மநீதிரிசபையின்‌ செயல்களைப்பற்றி என்னிடமிருந்து முதல்‌ தரமான தகவல்களைக்‌ கேள்‌ விப்பட்டவுடண்‌ அவ்விரு தலைவர்‌ களும்‌, ¢ காங்கிரசாட்சியின்‌ கீழ்‌ நீங்கள்‌ மிக சகிப்புத்‌ தன்மையோடு நடந்‌ துகொண்டதைப்‌ பாராட்டுகிறோம்‌. நீங்கள்‌ இதர மாகாணங்களிலும்‌ சுற்றுப்‌ பிரயாணஞ்‌9சய்‌,து, அங்குள்ள பொதுமக்களுக்கு இவ்வுண்‌ மையை உணர்தீதவேண்டும்‌? என்று ஏகோபித்துக்‌ கூறினார்கள்‌. இந்நாட்டிலுள்ள எல்லா காங்கிரஸ்‌ எதிர்ப்பு ள்‌தாபனங்களையும்‌ ஒன்றுதிரட்ட, நாங்கள்‌ ஏகமன தாக வேலைசெய்வதென முடிவு செய்‌?தாம்‌. இதனைக்‌ ¢ கட்டுப்பாடான வேலையென அவர்கள்‌ கூறுகின்றனர்‌. ஆனால்‌, ஜனாப்‌ ஜின்னாவும்‌, டாஃடர்‌ அம்பேதீ்காரும்‌ அரசியல்‌ நிர்ணய சபையைப்‌ பலமாக எதிர்க்கின்றனர்‌. மாஜி காங்கிரஸ்‌ மந்திரிசபையால்‌ ஏற்படுத்தப்பட்ட படு3மாச வரிகளை ஒழிக்கக்‌ கிளர்ச்சிசெய்யும்‌ விஷயத்தைப்பற்றியும்‌, வேலையற்றிருக்கும்‌ சட்டசபைகளின்‌ அங்கத்தினர்களுக்குக்‌ கம்பளங்கள்‌ அளிக்கப்படக் கூடா தெனக்‌ கிளர்ச்சி செய்யும்‌ விஷயதீதைப்பற்றியும்‌ நாங்கள்‌ மேற்கொண்டு சம்பாஷணை நடத்தினோம்‌. கூடிய சீக்கிரத்தில்‌ இதற்காக ஒரு கூட்டுக்‌ கிளர்ச்சி செய்யத்‌, திட்டம்‌ வகுப்பதென உத்தேசித்துள்ளோம்‌. நாம்‌ நியாயமாகக்‌ கருதுபவைகளை எல்லாம்‌ அழிதீதுக்கொண்டுவரும்‌ விபரீத குணமுள்ள ஸ்தாபனமாகிய காங்கிரசை, கடைசிவரை எதிர்தீதுப்போராட--* காங்கிரஸ்‌. எதிர்ப்பு இயக்கம்‌ £ ஒன்று சமிபத்தில்‌ ஆரம்பிக்கப்படுமென அந்த மாபெருந்‌ தலைவர்‌ களிருவரும்‌ வாக்குறு திகளும்‌, நம்பிக்கையுமனித்தன ரென்பதை நாண்‌ மகிழ்ச்சியுடன்‌ அறிவித்துக்கொள்ளுகி3றன்‌, சீக்கிரதீதில்‌ நான்‌ மீண்டும்‌ பம்பாய்‌ செல்வேன்‌) அதுசமயம்‌ அரசியல்‌ நிலைபற்றி உன்னும்‌ விரிவான விஷயங்கன்‌ விவாதிக்கப்பட்டு, ஒரு திட்டம்‌ வகுக்கப்படுமென நம்புகிறேன்‌. என்‌ சுற்றுப்பிரயாணம்‌ மிகப்‌ பயன்படத்‌ தகீகதாகவும்‌ பேருதவியாகவுமிருந்தது. இதுபோன்ற சந்‌3தாஷமான சந்திப்பு-நமது நண்பர்கள்‌ எதிர்பார்ப்பதைவிடவும்‌, நம்‌ எதிரிகள்‌ பயப்படுவதை விடவும்‌ வெகு சீக்கிரதீதில்‌- ஏற்படுவதற்கு என்‌ நன்றியையும்‌, வந்தனதீதையும்‌ செலுத்திக்கொள்கிகறன்‌. [பம்பாயில்‌, 8-1-1940-ல்‌ ஜின்னா அவர்களையும்‌ டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்களையும்‌ பெரியார்‌ கண்டு பேசியது பற்றிய அறிக்கை--1 குடிஅரசு? 26-1-194)) www.thamizham.net - Free £ book 14௦ 3026 1957-ல்‌, திருச்சியில்‌ வினோபா பாவே அவர்களுடன்‌ இராமாயணம்‌ பற்றி உரையாடி பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்கள்‌ தம்‌ கருத்தை விளக்கினார்‌. அடவ e T அய்ரோப்பிய நாடுகளிலும்‌, ரஷ்யாவிலும்‌ சுற்றுப்பயணம்‌ செய்து திரும்பிய பெரியார்‌: . வெ. ரா. அவர்கட்கு 1932 டிசம்பரில்‌ சென்னையில்‌ நடைபெற்ற பாராட்டுக்‌ கூட்டத்தில்‌-- குடிஅரசு ? 18-12-1932 1011 8. பெரியார்‌-வினோபா பாவே வினோபா பாவே: சாதி ஒழிப்பும்‌ என்னுடைய முக்கியக்‌ கொள்கைகளில்‌ ஒன்று. தேர்தல்‌ சண்டையில்‌ கலந்து கொள்ளாமல்‌ சமுதாயப்‌ பணி செய்வதைப்‌ பாராட்டுகிறேன்‌. நான்‌ இராமாயணம்‌--எந்த நூலையும்‌ பிரமாதமாகக்‌ கொள்வதில்லை. தவறான கருத்‌ க்கள்‌ இருந்தாலும்‌ ஒரு சில நல்ல கருதீதுக்களும்‌ இருக்கின்றன. தவநான கருத்துக்‌ களை விட்டுவிட்டு நல்ல கருதி துக்களை எடுதீகுக்கொள்ளலாம்‌. இராமாயணதீதைச்‌ சாதாரண நூலாகவே நான்‌ கருதுகிறேன்‌. சாதியை ஒழிக்கும்‌ பணியில்‌ உள்ள நீங்கள்‌, இதுபோன்ற நூல்களையும்‌, கடவுள்களையும்‌ ஒழிக்கிறேன்‌ என்கிறீர்கள்‌. நமக்கு முக்ய மான கருதீகுக்களை மாத்திரம்‌ வற்புறுத்தி, மற்றவைகளில்‌ தளர்‌ தீதிக்‌ கொடுப்பதன்‌ மூலம்‌ அதிகக்‌ கூட்டமான மக்கள்‌ நம்‌ பக்கம்‌ திரும்பக்கூடும்‌. நமது குறிக்கோள்‌ சாதியை ஒழிப்பது. அதை மாத்திரம்‌ வற்புறுத்தினால்‌ போதும்‌, கடவுள்களையும்‌ புராண ஆதாரங்‌ களையும்‌ (சாதி ஒழிய வேண்டுமென்பதற்காக) ஒழிக்கக்‌ கிளம்பினால்‌ புராண ஒழிப்பு, கடவுள்‌ ஒழிப்பு வேலையாகவேதான்‌ இருக்க நேரிடும்‌. புராண, இதிகாசங்களில்‌ உள்ள நல்ல கருதீதுக்களை வைத்துக்கொண்டே சாதியை ஒழிக்கலாம்‌, பெரியார்‌ இராமாயணம்‌ நீதிநூல்‌ என்பதற்கு அதில்‌ ஒன்றும்‌ இல்லை; நீதி கற்பிக்கக்கூடிய தன்மையில்‌ அதில்‌ ஒன்றுமே கிடையாது) நல்ல கருதீதுக்கள்‌ இருப்பதாக ஒன்றம்‌ கில்லை. இரண்டொருவருக்கு வேண்டுமானால்‌ நல்ல கருதீதுக்களை மாத்திரம்‌ எடுதீ.துக்கொள்ளமுடியலாம்‌. நாம்‌ பொதுமக்கள்‌ என்பவர்களை மனத்தில்‌ வைத்துப்‌ பார்க்கவேண்டும்‌. விஷதீதின்மீது சர்க்கரை பூசிக்கொடுத்தால்‌ எத்தனை பேருக்கு சர்க்கரையை மட்டும்‌ சாப்பிட்டுவிட்டு விஷத்தைத்‌ துப்பிவிடக்கூடிய சக்தி இருக்கும்‌ மக்களுக்கு நீதிநூல்‌ தேவையென்றால்‌, உங்களைப்‌ போன்றவர்கள்‌ புதிதாக எழுதித்‌ தரலாம்‌. அந்த இதிகாசங்களை எழுதியவர்களும்‌ உங்களைப்‌ போன்ற மனிதர்கள்தானே? அதுவும்‌ அந்தக்‌ காலத்து மனிதர்கள்‌ | சாதியொழிய வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இராமாயணம், பாரதம், மனு போன்ற புராண கীதிகாசங்கள், கடவுள்கள் எல்லாம் ஒழிந்தே தீரவேண்டும். ஒரே ஆண்டவன் என்பவன்கூட சாதிக்கு ஆதாரமாயிருந்தால் ஒழிந்தே தீரவேண்டும். இராமாயணம், பாரதம் போன்ற புராணங்களிலும், இராமன், கிருஷ்ணன் போன்ற கடவுட களிடத் தீதிலும் மற்றும், பதிவிரதை என்று சொல்லப்படுகிறவர்களிடத்திலும் கொஞ்சங்கூட யோகீகியத் தன்மையோ, நாணயமோ காணப்படவில்லை. அதைப் படிக்கின்ற மக்களுக்கும் அதிலிருந்து நாணயமோ, ஒழுக்கமோ வந்தாகவும் இல்லை. நான் கடவுள் என்று ஒன்று உண்டு என்று புரிந்துகொள்ளவும், அந்த ஒரு கடவுளை நம்பவும் முடியாவிட்டாலும், ஒரு கடவுள் உண்டு என்கிறவர் களிடம் இல்லையென்று மறுத்துப் பச வரவில்லை. ஆனால், சாதிக்கு ஆதாரமாக இருக்கற மனுதர்மம் போன்ற சாஸ்திரங்களையும், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற இதிகாசங்களையும், சாதிக்கு ஆதாரமாயிருக்கிற இராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களையும் வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க முடியாது. நான் வால்மீகி, கம்பராமாயணம் போன்ற நூல்களைப் படித்தே கூறுகிறன். (இராமாயணத் தீதிலுள்ள ஆதாரங்களை எடுத்துக் காட்டியபோது) வினோபா:நான் துளசி இராமாயணமும், மராட்டி இராமாயணமும்தான் படிந்தேன். அவைகளில் அப்படி இல்லை. பெரியார்: நீங்கள் ஏழெட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில், எனது சமுகாய மக்களுக்கு, சாதியொழிய வேண்டுமென்ற கருத்தைச் சொல்லிவருவதைக் காண மகிழ்ச்சி யடைகிறேன். இதைப் பத்திரிகைக்காரர்கள் போடுவதேயில்லை; சாதியொழிய வேண்டுமென்ற கருத்தை மறைக்கவே பரர்க்கிறார்கள்.அவரவர்களுக்கு வேண்டிய சங்கதிகளைமாத்திரம் போடுகிறார்கள். நான்தான் எனது பத்திரிகையில் நீங்கள் சொல்லும்--"சாதியொழிய வேண்டும்" என்ற கருத்துக்களைப் போடுகிறேன். வினோபா: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்யவேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்யவேண்டும். பெரியார்:என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் கொண்டுள்ள வேலை அதாவது, சாதி ஒழிப்பு முக்கியமானது. நான் அரசியல் பற்றிக் கவலைகொள்ளாதவன், அரசியலில் ஈடுபடமுடியுமானால் நீங்கள் செய்துவரும் வேலையையும், இனி செய்யப்போகும் வேலையையும் சேர்த்து; சட்டத்தின் மூலம் ஒரே வரியில் உத்தரவு போட்டு விடலாம். ஆனால், சாதி ஒழிப்பு வேலை அவ்வளவு இலேசானதல்ல, அதனால்தான்; அந்த முக்கியமான வேலையை நான் மேற்கொண்டு செய்கிறன். நான் அதையே எல்லா வற்றையும்விட முக்கியமானதாகக் கருதுகிறேன். (திருச்சி மாவட்டத்தில் கால்நடையாகச் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆச்சார்யா வினோபா பாவே அவர்களும், பெரியார் அவர்களும் இன்று (19-1-1957) காலை 10-45 மணிக்கு திருச்சி தேசியக் கல்லூரியில் சந்தித்தார்கள், சுமார் 2 மணி நேரம் உரையாடினார்கள்)(விடுதலை,20-1-1957) 4. அமைச்சர் எஸ். சந்திரசேகர் (வானொலிப் பேட்டி) டாக்டர் சந்திரசேகர்:குடும்பநலத்திட்டப் பிரச்சாரப் பணியில் தாங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இருந்தால்--1920 லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப்பற்றி ஒரு புதியகம் வெளியிட்டு இருந்தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற கருத்து தங்களுக்கு எப்படித் தோன்றியது என்று கூறினால் பரவாயில்லை. பெரியார்:எனக்கு சின்ன வயசிலேயே ரொம்ப செல்லப் பிள்ளை மாதிரி எல்லாரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அதிலே, எனக்குக் கொஞ்சம் ரொம்ப வேகமான கருத்துக்களெல்லாம் தோணும்."அது தப்பு, தப்பு" ன்னு கருத்துக்களெல்லாம் எனக்குத் தோணும், அதை நான் சாதாரணமா, தைரியமா வெளியிடுவேன். அந்த முறையிலே மதசம்பந்தமா, இலக்கிய சம்பந்தமா--அது சம்பந்தப்பட்ட வங்க கிட்டே வாதாடி, வாதாடி ஒரு மாதிரி--பொதுவா சொன்னால், ஒரு வாயாடி என்ற நிலைமைக்குப் பேரு வர்றபடி வாதாடிட்டு இருந்தேன். அதே போக்குலேதான் ஜனங்கட்டை பழகும்போது இந்தப் பிள்ளைக்குட்டி அதிகமாக பெறுகிற்கிற வங்க படற கஷ்டம், நம்மகிட்ட வந்து முறையிடுகிற முறை, புருஷன்--பெண் சாதி சண்டை போட்டுகிட்டா வர்ற கலவரம் இதுகளையெல்லாம் நான்சீரியஸா (Serious) கவனிக்கிறபோது, இந்தப் புள்ளைங்களாலே பெரிய தொல்லை படறாங்க, இயற்கையா இருக்ற தொல்லை தவிர, புள்ளை குட்டிகளல் வேற தொல்லை படறாங்கண்ணு கண்டேன். வேடிக்கையா சொல்றேன். "குடி அரசு" ஆபீசிற்கு எதிர்த்தாப்பலே ஒரு வீடு. அவங்க நம்ம சாதியிலே. எங்களுக்கும் அவங்களுக்கும் பிறக்கு மாதிரியான முறை. அண்ணன்--தம்பி, மாமன்--மச்சான்னு கூப்பிட்டு. அந்த முறையிலே எதிர்த்த வீட்டுக்காரன் ஒருவன் அவன் எனக்கு மாப்பிள்ளையா வேணும். அவன் மனைவிக்கு நான் அண்ணனாவேணும், இந்தமாதிரி இருக்கும். அவனுக்கு நாலு குழந்தை, கைக்குழந்தை ஒன்று. அந்த நிலையில் அவன் கோவம் வந்து பொண்டாட்டியைப் போட்டு அடிச்சுப்பட்டான்.அப்ப நான் இங்கிருந்து சிபாரிசுகிட்டுப்போய், "என்னடা! இந்த மாதிரி பண்றியே, கொள்றியே? குழந்தை குட்டிகளுக்கு இந்தமாதிரி பண்ணுறியே?"அப்படின்னு ரொம்பக் கடினமா கேட்டதுக்கு,"இதைப் பத்தியெல்லாம் நீ கேக்காதே" ங்குற அளவுக்கு வந்துட்டான், அந்தக் சோபத்தினாலே. அந்தம்மா அழுதுபட்டு சொல்றபோது ஒரு வார்த்தை சொன்னா--"இந்த மாதிரி இவருகட்டே இன்றைக்கு நேதிக்கலை--நான் படற அவஸ்தை, கொஞ்ச நாளாகவே ஒதை தின்னு தின்னு எனக்கு ரொம்ப வேதனையா போச்சு। அதனாலே போயி எங்காவது ஆத்தில்--குளத்தில் இறங்கிடலாம்னு முடிவு.இதுகளை வச்சிகிட்டு நான் என்ன பண்ணட்டும்? இல்லாட்டா கிதுகளையும் தள்ளிப் போட்டுல்ல நான் விழவேணும். இந்தக் கொலைக்கு நான் ஏன் பாகப்படணும். இந்த ஆ ன் கிட்டே உதை தின்னுகிட்டிருக்கேன். இல்லாட்டா நான் போய் விழுந்திடுவேன் ஆத்திலே!" அப்படின்னு அவ சொன்னா. வாய்ப்துடுக்கு முறையிலே,"சரி ஏன் இப்படி பெத்தே நீ?உன்னை யாரு இவ்வளவு பெறுக்‍சச் சொன்னா?பெத்துக்கிட்டியே, வேதனைப்படறியே?"அப்படின்னேன். அப்ப, அந்த அம்மா பேச்சோட பேச்சா,"அது நம்ம செயலில்லே, அது பகவான் செயல் அட்படி பண்ணிட்டது. நான் என்ன பண்ணட்டும்?"அப்படின்னு சொன்னா. அப்பதான் அந்த பகவான் செயலைக் கண்டிப்பேன்று போட்டு, நான் அன்னிக்கே வந்து எழுதி யிருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பெத்துகிட்டு சங்கடப்படறாங்க. இப்படி கிணத்திலே விழுந்துட துணிஞ்ச பொம்பளைகூட,"இந்தப் புள்ளைகளை வெச்சுகிட்டு எப்படி நான் விழுகிறது? இதையும் போட்டுட்டு விழுறதுன்னா புள்ளையைக் சொல்ற துன்னா, எனக்கு கிதா இருக்குதே" ன்னு விசனப்படறாண்ணு வேடிக்கையா அப்ப வந்ததுதான். வந்துக் கப்புறம், நாம"சீரியாசா" எழுதிட்டு இருந்தமா,"பிரிட்டிஷ் நியூஸ்" லே வந்தது இந்த சங்கதி--இங்கிலீஷ் பத்திரிகையிலே. அதை எடுத்துத்தான் எழுதிகிட்டி ருக்கன், நம்ம கருத்துக்குச் சரியா இருந்தது. அப்ப எங்கிட்ட இருந்த கிளார்க் ஒருத்தர் கொஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சவர். அவருகிட்டே சொன்னேன்--இதை மொழி பெயர்த்திடலாம்னு. அதைதீதான் முதல் முதல்லே செய்தோம். அப்படியே எண்ணம் வளர்ந்து போச்சு. எனக்கு முதல் மனைவியாயிருந்த நாகம்மை கல்யாணமாகிக் கொஞ்ச வருஷம் ஆன உடனே ஒரு குழந்தை பொறந்து செக்கிற்கு போச்சு. இந்தக் குழந்தையை நான் பார்க்கவுமில்லை; ஐந்து மாதம் ஆச்சு; ஐந்து மாசமா நான் அதைப் பார்க்கக் கூட இல்லை. எனக்கு அவ்வளவுதான். மறுபடியும் அந்தம்மாகிட்டே சொன்னேன்."எனக்குக் குழந்தை இல்லேன்ற பேச்சே நாம் வைச்சுக்கக் கூடாது, இங்கே அப்படி-இப்படின்னு அந்தம்மா கெஞ்சுவாங்க,ஒரு புள்ளே மாதிரம் இருக்கட்டும்!வேறு இல்லாட்டிப் போகட்டும் னு. நம்ம குடும்பத்துக்கு ஒண்ணு என்னா--நூறு புள்ளே நாம எடுத்து வளர்த்திடலாம்னு சொன்னேன். அதனாலே ரெண்டு, மூன்று பிள்ளை வளர்த்தேன். அதுக்கு நான் ரொம்ப உபதேசம் பண்ணினேன்,"நம்மளுக்குக் குழந்தை வேண்டாம்!" னு. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்தது. அந்தக் குழந்தை பெக்கிறது ஒரு 'நியூசன்சு' ன்னு எனக்குப் பட்டது. என்னை ராமேஸ்வர கிற்குக்கெல்லாம் கூட்டிக் கிட்டுத்தான் வந்தாங்க--குழந்தைக்காக) ஆமா. எங்க ஊரிலேகூட கணபதி, அரசமரம்--வேப்பமரம் கல்யாணம் இதெல்லாம் பண்ணியிருக்काங்க. எனக்கு புள்ளே வேண்டாம்னது அப்படியே பழகப்போச்சு. அது என்னவே "பிராக்টிகலா" (Practical) ரொம்ப வளர்ந்து போச்சு அந்த எண்ணம். அமைச்சர்:அந்தக் காலத்திலल குடும்பக் கட்டுப்பாட்டுக்கு என்னமாவது எதிர்ப்பு இருந்திருக்கும், கிடையாக? பெரியார்:எங்க ஜனங்க சொல்வாங்க--"அவனுக்குப் புள்ளையில்லே!அதனாலே அவன் எல்லாத்துக்கும் வேணாம், வேணாம்னு சொல்றான்--அவன் "ரிஷி"யனு--அல்வளவுதான் சொன்னாங்க, கலியாணம் ஆனவங்களையெல்லாம் நான் கேலிபண்ணுவன்;புள்ளை தாச்சி ஆனவங்களையெல்லாம்"அதுக்குள்ளவா ஆயிடுச்சு"அப்படி இப்படின்னுபரிகாசம் பண்ணுவேன். அப்ப, சின்னவங்க எதிர்த்துப் பேசமாட்டாங்க; பெரியவங்களுக்கு இருக்கிறவங்க"அவன் வரடன், வரடன்" னு சொல்லுவாங்க, அதுக்கு-- அமைச்சர்: சர்கீகারு டைய "புரோகிராம்"இருக்கது, பாருங்க. இந்த"பேமிலி பிளானிங்",உலகத்திலேயே பெரிய "புரோக்கிராம்" இதுதான். பணம் செலவு பண்றத் திலையோ, ஆபீசர் சிலா, வேலை பண்றத் திலையோ ஒரு 130 நாடுகளை "சம்பர्"பண்ணி னாக்கா--நம்முடைய புரோகிராம்--டெல்லி கவர்ன் மெண்ட் புரோகிராம்தான் பெரிய புரோகிராம். அதுக்கு உங்க"ஒப்பீனியன்"வேணும். உங்க அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.பெரியார்:ரொம்ப நல்ல காரியம்தான்--இனிமாதிரி அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. சமுதாயத்திலேயே ஒரு பெரிய, ஒரு நல்ல காரியம். ரெம்ப ஜனங்களுக்கு தொந்தரவு இல்லாம; மனசுக்கு சந்தோஷமா வாழ்வு கொடுக்கக்கூடிய ஒரு காரியம்தான். அதுலே இன்னொன்று எனக்கு என்ன தோணுதுன்னா--இந்தப் பெண்களை--இதிலே பிரச்சாரம் பண்றத்துக்கு ரொம்பப் பக்குவப்படூத்திச் சொன்னால் நல்லா இருக்கும் அப்படின்னு. பொம்பளைக்கு சொம்ப ஆசை புள்ளைபெக்க வேணும்னு. ஆம்பிளைக்கு ஒரு அளவிலிருந்தாலும் பொம்பளைக்குக் கூடுதலா இருக்கும் அது. அவங்களண்டை போயி நெருங்க), அந்த விஷயங்களை எடுத்துச் சொல்றாப்பிலே கொஞ்சம் நல்ல பொம்பிளைங்களைவிட்டு அதிகமா பழகிச் சொன்னால், கொஞ்சம் அவங்க கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அமைச்சர்: நாங்க வந்து பெண்களுக்கு சொல்றதுக்கு பொம்பிளைங்களைதீதான். "ட்ரெயின்" பண்ணி "பேமிலி பிளானில்" "ஆபீசர்" ன்னு அனுப்புகிறாம்--அவங்க கிராமத்துக்கும், டவுனுக்கும் போயி சொல்லுவாங்க. ஆண்களை அனுப்பற்றில்லை. பெரியார்:அதோடு கூடவே இந்த"ரிலிஜியஸ் பெயித்தி" (மத நம்பிக்கை) இல்லாத பொம்பிளைங்களையே அனுப்ப வேணும். ஆம்பிளைகளைப் போட்டாலும் கூடுமான வரைக்கும் அவனை பகுதீர்க்கவாதியாகவே போடணும். பெண்ணா போட்டாலும், ஆம்பிளையா போட்டாலும்--மதநம்பிக்கையில்லாதவங்களா பார்த்தப் போடணும். அமைச்சர்:இவ்வளவு பெரிய புரோகிராமிலே, மதநம்பிக்கையில்லாத"ஆபீசரை"கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் எங்களுக்கு, ரெண்டாவது, ஒண்ணு பண்றேன். இப்போ, இப்போ ஆண்கள், பெண்கள் கலியாணம் பண்றககீகு ஒரு வயது லிமிட் ஒண்ணு இருக்கு. அதுக்கு 'ஏஜ் ஆப் கன்சென்ட்' (Age of consent) சொல்றோம். அதுக்குவந்து ஆண்களுக்கு 18, பெண்களுக்கு 15. இது வந்து 1956-லே, இந்த, ஹிந்து கோட்பில் ரெய்ஸ் பண்ணின. எனக்கு அது திருப்தியா இல்லை. ஆண்களுக்கு 21, பெண்களுக்கு அட்லீஸ்ட் 18ஆவது இருக்கணும்னு பண்ணனும். அதுக்கு ஸ்டேட் கவர்ன்மெண்டுக்கு எழுதுகிறோம். 17 ஸ்டேட் கவர்ன்மெண்டும் ஒத்துக்கணும். ஒத்துக்கொண்டால்தான் எங்க மதீய சர்க்காரிலே சட்டம் உண்டாக்க முடியும். அதுக்கு ரொம்ப வாதம் நடக்குது. "யெஸ்", "நோ"சொல்லிக்கொண்டே யிருக்காங்க, "வேண்டாம்!","இருக்கணும்"னு. உங்க அபிப்பிராயம் என்னனु கேக்கறேன். பெரியார்:அய்யா, சொல்றது சொம்ப சரி. 18 வயதுகூட பதாது, பெண்களுக்கு 20 வயசு இருந்தாதான், அது ஏதாவது பயன்படும். 18 வயசுன்னா ஏதோ ஜனப் பெருக்கத் திலே கொஞ்சம் குறையுதுன்னு சொல்றீங்க.அமைச்சர்:இப்ப இருக்கிறதுலே 5 வயசு கூடுது. இப்ப 15 இருக்குது. நான் 18 அச் ஆக்சணும்னு பார்க்கறேன். உத்தரப் பிரதேசத்திலும், மதீய பிரதேசத்திலும் இந்தி பேசும் நாடுகளிலெல்லாம்‌ 12, 13, 14 வயதில்‌ கலியாணம்‌ பண்ணிடறாங்க, பெரியார்‌ 1 அதெல்லாம்‌ பெண்களை ரொம்ப அடக்க$வணும்கிறகக்காக ஏற்பட்ட * ஏஜே! (வயு) தவிர. அது வேறே எந்த ஒரு காரணத்தையும்‌ கொண்டு அது ஏற்படலே, 20 வைதீதோமானால்‌ ரெண்டு காரியம்‌ ¢ சால்வ்‌! (Solve) ஆகும்‌. அவுங்களா பார்த்து ஒரு சுதந்திரமான புஷனைப்‌ பார்தீதுக்குவாங்க. அமைசீசர்‌ 3 பெண்‌ வந்து 20 வயசாசீசுன்னா, படிச்சுட்டு அவளா பார்த்து இஷ்டப்‌ பட்டு கலியாணம்‌ செய்துக்கிடுவா, இப்ப வந்து அப்பா--அம்மா யாராவது தேடிப்புடிச்சுகீ கலியாணம்‌ பண்றாங்க. பெரியார்‌ £ அந்தமாதிரி தேடிப்பிடிப்பாங்க) பெண்களுடைய வாழ்க்கைதீதரம்‌ கொஞ்சம்‌ உயரும்‌. 20 வயசு வரைக்கும்‌ அவங்க படிச்சாங்கன்னா--வேலைக்கு லாயக்கு ஆகறாப்பலே ஒரு படிப்பு அவங்களுக்கு வந்து சேரும்‌, இந்த 18-லே கொண்டு போயிட்டா எஸ்‌. எஸ்‌. எல்‌. சி. பாஸ்‌ பண்ணியும்‌, பெயில்‌ ஆகியும்‌ இருக்கிற நிலைமை வரும்‌. அவங்க, புருஷனுக்கு என்னமா பாடுபட முடியும்‌ i அவங்களுக்கு தொழில்தான்‌ என்ன வரும்‌ ! எனக்‌ கென்னமோ, எவ்வளவு நாளைக்குக்‌ கலியாணத்தைத்‌ தள்ளிப்போடறமோ அவ்வளவும்‌ நல்லதுதான்‌ ]$ பின்னாலேயும்‌ ரொம்ப உபயோகப்படூவாங்க அவங்க. இப்ப என்ன பண்றது? 18-லியே கலியாணம்‌ பண்ணினா 19-லியே குடும்பப்‌ பொம்பிளையா போயிடறா $ குடும்பத்தைக்‌ காப்பாத்தற வேலையே அவளுக்குச்‌ சரியாப்‌ போகுது) 20-லே ரெண்டு புள்ளையாகிப்டோகுது: புருஷனுக்கும்‌ குடும்பத்தைக்‌ காப்பாதீதறதுக்குதீதான்‌ வேலை வேண்டியிருக்குது. சம்பாதனையும்‌ குடும்பத்தைக்‌ காப்பாதீதறதுக்குத்தான்‌. இதுக்குதீ தருந்தபடி தன்னுடைய ஒழுக்கத்தையும்‌ கெடுத்துக்கிறான்‌ அவன்‌. அவன்‌ ¢ கேரக்டரும்‌ (Character) கெட்டுப்போகுது. அதெல்லாம்‌ இல்லாம இருக்கணும்னா ஒரு 20, 22 வயதாவது இருக்கணும்‌. அமைச்சர்‌ ₹ அப்புறம்‌ முன்னே என்ன பண்ணினோம்‌ ? ஒரு 4 வருஷதீதுக்கு முன்னே ஒரு தம்பதிகளுக்கு 2, 3, 4 குழந்தை பெதீதுக்கலாம்‌ ; அவங்களுக்குப்‌ பண மிருந்தால்‌, சவுகரியமிருந்தால்‌ குழந்தைகளுக்குத்‌ துணிமணி கொடுத்து காப்பாத்த முடியு கானா; 5, 6 குழந்தைகூட பெதீதுக்கலாம்னு ஒரு தடவை சொன்னோம்‌. அப்புறம்‌ சொன்னோம்‌ ; அதெல்லாம்‌ முடியாது; ரெண்டு குழந்தைங்க, இல்லேன்னா மூணு. இப்ப நான்‌ கணக்கெல்லாம்‌ போட்டுப்‌ பார்தீதா அதுவும்‌ கொஞ்சம்‌ சாஸ்தியர போச்சு. அப்புறம்‌ நாங்க சொன்னோம்‌--ஒரு ரெண்டு குழந்தை போதும்னு சொல்றோம்‌, அதிலே என்ன கஷ்டம்னா, இப்போ ஒரு ஆண்‌--ஒரு பெண்‌ குழந்தை டொறந்குட்டுதானா கஷ்டமில்லே. ரெண்டும்‌ பெண்ணா போயிட்டதுன்னா இன்னும்‌ ஒன்றுக்கு டிரை (Try) பண்றாரு ஆளு, ஆண்‌ குழந்தை வேணும்னு. அதுக்கு எப்படி அவங்களை ¢ எஜுகேட்‌? பண்றதுன்னு எனக்குத்‌ தெரியலே. பெண்‌ குழந்தை பொறந்தாலும்‌ அதோடு நிறுத்திக்‌ கலாம்‌ ) ஒண்ணும்‌ கஷ்டமில்லே. பெண்ணும்‌ ஆணும்‌ ஒண்ணுன்னு சொல்றதுக்கு நம்மாலே முடியலை; நான்‌ சொல்றது என்னன்னா, 2 குழந்தை இருந்தா போதும்‌, 2 ஆண்‌ குழந்தை இருந்தாலும்‌ நிறுத்திடணும்னு சொல்லணும்‌, அதை எப்படி சொல்றது மக்களுக்கு 2 பெரியார்‌ : நான்‌ சொல்றேன்‌. அந்த எண்ணம்‌ மக்கள்‌ மனசிலேருந்து மாற வேணுமானா 5? சதவீதம்‌ பெண்களுக்கு உத்தியோகம்‌; 50 சதவீதம்‌ ஆம்பிளைக்கு உத்தியோகம்‌. ஒரு ஆபீஸ்‌2ல 100-பேர்‌ உத்தியோகஸ்தர்‌ இிநுந்தா--50 பெண்‌ இருக்காங்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3026 1016 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ களான்னு கேக்கணும்‌ ) இல்லாவிட்டா அதை போடுன்னு சொல்லணும்‌. அப்ப பெதீதவங்‌ களுக்கு-ஆண்‌ இருந்தாலும்‌ ஒண்ணு, பெண்‌ இருந்தாலும்‌ ஒண்ணுன்னு ஆகும்‌. இப்ப ஆம்பிளையெல்லாம்‌ உத்தியோகம்‌ பாக்கறாங்க$) பொம்பளைங்க எல்லாம்‌ வீட்லே இருக்காங்க. அதனாலேயே நமக்கு ஆம்பிளைப்புள்ளை ஒண்ணு வேணும்னு தோணுது) அவன்‌ சம்பாதிக்கிறான்னு தோணுது அதனாலே நாம்‌ * ஈக்வலைஸ்‌? பண்ணிட்டா உத்தியோகத்தை ஆளுக்குப்‌ பாதின்னு? அமைச்சர்‌ 8 அப்போ, ஆம்பிளைங்க கொஞ்சம்‌ ¢ அப்போஸ்‌? பண்ணுவாங்களே; எதிர்ப்பரங்களே ₹ பெரியார்‌ 8 ஏன்‌ எப்படி ¢ அப்போஸ்‌? பண்ணுவாங்க? எப்படி நீங்கதான்‌ அப்‌ போஸ்‌ பண்ணமுடியும்‌? உங்க மகளுக்கும்‌, உங்க தங்கச்சிக்கும்‌, உத்தியோகம்‌ வரும்‌ போது, நீங்க ஏன்‌ ¢ அப்போஸ்‌? பண்றீங்க? அமைச்சர்‌ ரொம்ப சரி. பெரியார்‌ $ இல்லாது போனாதானே வரும்‌ ; யாருக்கோ வரு துன்னா ! உங்களுக்கு வேலையில்லை. உங்க பொண்ணுக்கும்‌ வருது--உதீதியோகம்‌ ) உங்க தங்கச்சிக்கும்‌ வருதுஃ அமைச்சர்‌ 8 ரொம்ப சரி. பெரியார்‌ அதனாலே அப்படின்னு சட்டமே போட்டுநங்க-$8ப்‌$பா ஆதித்‌ திராவிடருக்கு போட்டமாதிரி, 50 சதவீதம்‌ £ பீமேலுக்கு ! (பெண்ணுக்கு) உத்தியோகம்‌ ஒ.துக்கிவைக்கணும்‌ அப்படின்னு கொஞ்சம்‌ ¢ மார்ஜின்‌ ! விடலாம்‌. அமைச்சர்‌ 8 இந்த ¢ சஜஷன்‌ ! (யோசனை) நல்லா இருக்குது. “ஒரிஜினல்‌ சஜஷன்‌? இதை நாங்க எக்சாமின்‌ (பரிசோதனை) பண்ணிப்‌ பார்க்கிறோம்‌, இதை பண்ண முடியு மான்னு. இன்னொன்று கேக்கணும்‌ உங்களை ! இப்ப வந்து, ¢ அபார்ஷன்‌! இருக்குது பாருங்க ¢ கருச்சிதைவு £, இதுபற்றி பெரிய ¢ காண்ட்ரவர்சி? (வாக்குவாதம்‌). சர்க்காரிலே-- நாம்‌ 10 வருஷமா இதைப்பத்தி எழுதிக்கொண்டே வர்றோம்‌. அவங்க சொல்றாங்க, இது ¢ அபார்ஷ ச? லீகலைஸ்‌ (சட்டபூர்‌ வமா க) பண்ணிட்டா பெரியார்‌ £ அது எப்படி? லீகலைஸ்னு எப்படிச்‌ சொல்றது1 அபார்‌்ஷன்னா நேச்சுரல்‌ அபார்ஷனா£ மருந்து சாப்பிட்டா ₹ அமைச்சர்‌ £ மருந்து சாப்பிட்டு -அதாவது * கின்ட்யூஸ்டு அபார்ஷன்‌: 3, அதுவந்து தப்புன்னு சொல்லியிருக்காங்க ஆனா வருஷதீதுல 40 லட்சம்‌ பெண்கள்‌ இந்த மாதிரி சரியான டாகீடர்கள்‌ கல்லாத--கெடுதி டாக்டர்கள்கிட்டே போயிட்டு அவங்க உடம்பை கெடுதீதுட்டு கொலைகூட ஆயிடுது. அந்த மாதிரி ஆகாம ¢ லீகலைஸ்‌ ? பண்ணிட்டா. பெரியார்‌ 5 ஆனா, வேணுங்கிறவங்க செய்துக்கலாம்‌. அமைச்சர்‌ 8 தட்‌ கிஸ்‌ குட்‌! (That 15 good) அதுதான்‌ இருக்கணும்‌. ¢ வாலண்‌ டிரியா 2, தெரியாம கர்ப்பமாயிட்டா, குழந்தை வேண்டாம்னு சொன்னா, சர்க்கார்‌ ஆஸ்பதீ திரியிலே போயி, அந்த ஆபரேஷன்‌ பண்ணிக்கலாம்‌, பெரியார்‌ அதை ¢ லீகலைஸ்‌ ? பண்ணலாமே. அதுல யாருக்கும்‌ தகராறு இல்லே. அமைச்சர்‌ 1 அதுதான்‌, சர்க்காரில்‌ ஒரு பில்‌! (மசோதா) கொண்டு வந்திருக்கோம்‌, அது வந்து ராஜ்ய சபையில்‌ * அப்ரூவல்‌? ஆயி செலக்ட்‌ சமிட்டிக்குப்‌ போயிருக்கிறது $ அப்புறம்‌ லேக்‌ சபாவிற்கு வரும்‌. அப்புறம்‌ பில்‌ வந்‌ து, ¢ ஆக்ட்‌! சட்டம்‌) ஆயிம்‌. பெரியார்‌ 1 என்ன மாதிரி பதில்‌ சொல்லலாம்னா, அட நாம செய்யாவிட்டா அவுங்க செய்துக்க போறாங்க. அதுலே அபாயதீதுக்கு ஆளாவாங்கஃ இப்ப நாம செய்யறதினாலே நல்லதனமா குற்றத்துக்கு இடமில்லரம செய்து- www.thamizham.net - Free £ book 14௦ 3026 தலைவர்கள்‌ 1017 அமைச்சர்‌ 8 சரியான டாக்டர்களை வைதீது சரியான ஆஸ்பிடலை (ஆஸ்பத்திரி) வைச்சு ஒண்ணும்‌ கெடுதியாகாம சரியாக பண்ணனும்னா, ¢ லீகலைஸ்‌ ? பண்ணனும்‌. பெரியார்‌ £ ஆம்‌. அந்த மாதிரி செய்யணும்‌. அமைச்சர்‌ 8 ரொம்ப நன்றி உங்களுக்கு [8-3-1970-, சென்னை வானொலி ஒலிபரப்பு-- பேட்டி? டாக்டர்‌ 8, சந்திரசேகர்‌, மத்திய அரசு அமைச்சர்‌ நூல்‌ 3 வானொலியில்‌ தந்தை பெரியார்‌, பதிப்பு 1970] 2. நலைவர்களைப்பற்றி 1. டாக்டர் நாயர், கிழுவரை தலைவர்‌ அவர்களே 1 தோழர்களே 1 இன்று, நமது காலஞ்சென்ற தலைவர்‌ டாகீடர்‌ நாயர்‌ அவர்கள்‌ உயிர்‌ துறந்த நாளைக்‌ கொண்டாடுகிறோம்‌ என்றாலும்‌ அதீ தலைவரவர்கள்‌ இறக்கவில்லை என்று சொல்லுவேன்‌. அவர்‌ கொள்கைகளும்‌, தொண்டுகளும்‌ இன்னும்‌ இந்‌ நாட்டில்‌ வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆதலால்‌, அவர்‌ இன்னும்‌ உயிருடனிருக்கிறார்‌. டாக்டர்‌ நாயர்‌ ஒரு புரட்சிவீரர்‌) சுயமரியாதை வீரர்‌ $ அவரை ஒரு திராவிட லெனின்‌ என்று சொல்லவேண்டும்‌. நாயர்‌ நாளில்‌ பிறந்திருக்காதவர்களுக்கும்‌, அவர்‌ நாளில்‌ கோவணம்‌ கட்டாத சிறுபிள்ளையாய்‌ இருந்தவர்‌ களுக்கும்‌--இன்று, நாயர்‌ பெருமை யையும்‌ அவரால்‌ தாங்களடைந்த மேன்மையையும்‌ அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில்‌, நாயர்‌ தொண்டாற்றதீ தொடங்கிய நாளில்‌ இந்நாட்டு மக்கள்‌ நிலை எப்படியிருந்தது என்பது அப்போது போதிய அறிவுபெற்றிருந்த மக்களுக்கே விளங்கியிருக்கும்‌. அவர்‌. தொண்டின்‌ பயனாய்‌ இப்போது யோக்கியதைபெற நேர்ந்த மக்கள்‌, நாயர்‌ தேசதீ துரோகி! என்றும்‌ ¢ வகுப்புவாதி ? என்றும்‌ பேசலாம்‌. அப்படிச்‌ சொல்லும்‌ ஒவ்வொரு திராவிடனும்‌ இன்றும்‌ தன்னைப்‌ பற்றி யோசித்துப்‌ பார்ப்பானானால்‌, சிறிது சுயமரியாதை இருந்தாலும்‌, ¢ நாயர்‌ இனியும்‌ கொஞ்ச காலமிருந்து வகுப்புவாததீதைக்‌ கொழுந்துவிட்டெரியச்‌ செய்யாமல்‌ போய்விட்டாரே 1 என்று வருத்தப்‌ படுவான்‌. எப்படியெனில்‌, இன்று எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும்‌, எவ்வளவு பெரிய தேசியவாதியாயிருந்தாலும்‌, வகுப்புவாததீதை எவ்வளவு வெறுத்த மகானாயிருநீதாலும்‌ அவன்‌ திரரவிடனாய்‌ இருப்பானானால்‌--ஆரியனுக்குகீ கீழ்ச்சாதியாயும்‌, சூத்திரனாயும்‌ இழிவுபடுத்தப்படுகின்‌றானாகக்‌ கருதப்படுகின்‌றானா, நடதீதப்படுகின்‌றானா, இல்லையா என்பது விளங்காமல்‌ போகாது. இன்று--இந்த 20-வது நூற்றாண்டில்‌, உலகில்‌ எவ்வளவோ அற்புதங்கள்‌ கண்டு பிடிக்கப்பட்ட விஞ்ஞான வயதில்‌, திராவிடர்கனிலேயே மாபெரும்‌ தலைவர்களும்‌, மகான்‌ களும்‌, தேச பக்தர்களும்‌, தியரகிகளும்‌, தேசியத்‌ தலைவர்களும்‌ இருக்கிறார்கள்‌ என்று ஆரியர்களாலேயே கொண்டாடப்படும்‌ இக்‌ காலத்தில்‌-இன்றும்‌, கிப்போதே-இதோ, தெருக்கள்‌ தோறும்‌ ஒவ்வொரு சோற்றுக்‌ கடை, இட்லிக்‌ கடை, தண்ணீர்ப்‌ பந்தல்‌, கடவுள்‌ சன்னிதானம்‌ என்று சொல்லப்படும்‌ இடம்‌ ஆகியவைகளில்‌ ஆரியனுக்கு வேறு, திராவிடனுக்கு வேறு என்று இடம்‌ பிரிதீதுவைத்து, ஆரியனுக்குப்‌ பிரித்‌துவைத்த கிடத்தில்‌ திராவிடன்‌ பிரவேசித்தால்‌ தோஷம்‌, தண்டனை முதலிய இழிவுகள்‌ ஏற்படுத்திவைக்கப்‌ பட்டிருக்கிறதா, &ல்லையா என்று பாருங்கள்‌, இதைப்‌ பார்த்த--மானமும்‌ மனிதத்‌ 1686—128 1018 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ தன்மையுமுள்ள மனிதனுக்குத்‌ தேசம்‌, அரசியல்‌, சுதந்திரம்‌ என்னும்‌ தேசியத்‌ தன்மையைவிட--சுயமரியாதை, சுதந்திரம்‌ என்னும்‌ சாதீயத்‌ தண்மையே பிரதானம்‌ என்கின்ற உணர்ச்சி ஏற்படாதா? ஏற்பட வேண்டாமா § என்று கேட்கிறேன்‌. டாக்டர்‌ நாயர்‌, கிதுவரை உயிருடன் இருந்திருப்பாரனால், இந்தத் துறையில் வெகுதூரம் நாம் முன்னேறியிருப்போம். அவருக்குப் பிறகு சமுதாய சுயமரியாதையுள்ள சரியான தலைவர்கள் திராவிட சமுதாயத்தில் காணுவது மிகக் கஷ்டமாகப் போய்விட்டது. அதனால்தான், டாக்டர் நாயருக்குப் பிறகு அவருடைய இடத்தைப் பூர்த்திசெய்ய ஆளில்லாமல் போய்விட்டது என்று நான் அடிக்கடி சொல்லுகிறேன். இன்று, அவருக்குப்பின் நமக்கு அரசியல் சுதந்திரம் எவ்வளவோ கிடைத்தது. இதன் பயனாய் நம் மக்கள் பலர், தாங்கள் கனவிலும் நினைத்திருக்க முடியாததும், தங்களுக்குச் சிறிதும் தகுதியில்லாததுமான பல பெருமையும், பதவியும், பணமும், செல்வாக்கும் பெற்றார்கள். என்றாலும், சமுதாயத்தில் அவர்கள் எல்லோருமே கீழ்ச் சாதியாய் இருப்பது கடுகளவாவது மாற்றமடைந்ததா? அதற்காக என்று எந்தத் தலைவராவது பாடு பட்டார்களா? இன்னும் பெரிய பதவிகளும், அதிகாரங்களும், அரசியல் சீர்த்திருத்தங்களும் சர்க்காரால் அளிக்கப்பட்டு அவை நமக்குக் கிடைத்தாலும் என்ன பயன் என்று கேட்கின்றேன். நாம் தலைவராகி என்ன பயன்?மகாத்மாவாகி என்ன பயன்? அரிவரி எழுதுதல் எல்லாம் நம் பெயருடன் தொடர்ந்து வரும்படியான பட்டங்கள் கிடைத்து என்ன பயன்?மகாராஜாவாகி என்ன பயன்?கவர்னராகி என்ன பயன்? சூத்திரனாகக் கீழ்ச்சாதியாகதே தானே இருக்கிறோம்? இருப்போம்!அதுவும், நாம் ஆண்ட—நாம் வாழ்ந்த—நம்முடைய நாட்டில், அதுவும் பிழைக்கவந்த—பாடுபடாத சோம்பேறிக் கூட்டத்தால்—38 பேர்வழிகளால் அம் மாதிரி அழைக்கப்படுகிறோம், நடத்தப்படுகிறோம். ஆனால், யோக்கியதையற்ற, நாணயமற்ற, ஒழுக்கமற்றவன் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அயோக்கியன் ஆரியனாயிருப்பதால் பிராமணன்—மேல்சாதிக்காரன் என்று அழைக்கப்படுகிறான்,நடத்தப்படுகிறான். இன்று, இந்த நாட்டில் நாமே இப்படி இழிவாய் நடத்தப்படுகிறோம் என்றால், இது ஒழியாமல் நமக்குப் பதவியா, உத்தியோகமா, பட்டமா என்று கேட்கிறேன். இந்த நூற்றாண்டில் இந்த இழிவு நீக்கப்படாவிட்டால் இனி என்று நீக்கப்படப்போகிறது என்று கேட்கிறேன். காங்கிரசுக்கு (ஆரியர்களுக்கு) பூரண சுயேச்சை கிடைத்த பின்பா, அல்லது இவர்கள் ஆசைப்படுவதுபோல்—பிரிட்டிஷார் போய், வேறுசாதியார் இந்தியாவை ஆளுகின்றபோதா என்று கேட்கிறேன். ஜஸ்டிஸ் கட்சி என்றால், இந்த மாதிரியான இழிவுகளை ஒழிக்கவே தோன்றிய கட்சி என்கின்ற எண்ணம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும்; மற்றும் கட்சியிலுள்ள ஒவ்வொருவருக்கும் அதுவே முதன்மையும் முக்கியமுமான கடமை என்றும் தோன்றினால் அல்லவா—ஒவ்வொருவரும் அதற்காகப் பாடுபட முற்பட்டால் அல்லவா—இக் கட்சியினால் மக்கள் மானமும் சுயேச்சையும் அடைய முடியும் என்று கேட்கிறேன். எனக்கு முன்னால் பேசியவர்கள் வைசிராய் நம் கட்சித் தலைவர்களைக் கூப்பிட வில்லையென்றும், மற்றக் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டார்கள் என்றும் மிக்க கோபமாகப் பேசினார்கள். அந்தக் கோபத்தில் எனக்குக் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், வைசிராய் நம்மைக் கூப்பிட்டுக் கேட்கும்படியான ஒரு கட்சியாக நம்முடைய கட்சியில்லை என்பது என் அபிப்பிராயம். எதனால் அப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் கட்சிக்குப் பலமில்லை; ஒற்றுமையில்லை; கட்டுப்பாடில்லை; நம்மைக் கூப்பிடா விட்டால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று வைசிராய் நினைத்திருக்கிறார். நம்கட்சியும் அரசியல் பதவிகளுக்கு இருக்கிறதேயொழிய—மற்றபடி ஒரு பெரிய சமுதாய மாறுதலுக்கு இல்லையென்று அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நம் கட்சியார் பலரும் கதை உணரவில்லை. அதனாலேயேதான் வைசிராய் கூப்பிடாததைப்பற்றியும், பதவியைப்பற்றியும் இலட்சியம் செய்யக்கூடாது என்கிறேன்.பதவியில் இலட்சியம் வைத்தால் நமது இலட்சியம், கொள்கையெல்லாம் பறந்துபோக வேண்டிவரும். சமுதாயக் கட்டுப்பாட்டின் பலத்தாலும் மேன்மையாலும் கிடைக்கும் பதவியால்தான் நாம் ஏதாவது பயனுள்ள காரியம் செய்துகொள்ள முடியும். அப்படி இல்லாதவரை, பதவியே நமக்குக் கேடாய் முடிந்தாலும் முடியலாம். நமக்குள் போதிய பலமும் கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் கிடைக்கும் பதவியால் தனிப்பட்ட நபர்கள் பதவியை அனுபவிக்க நேரிடுவதைத் தவிர, சமுதாயத்துக்கு வேலை செய்யும்படியான பலம் ஏற்படாது. அதனால்தான் நான் அப்படிப்பட்ட அதிகாரமில்லாத பதவிக்கூடாது என்கின்றேன். மற்றும், பலமும் கட்டுப்பாடுமில்லாத பதவி நமக்குள் கலகத்தை உண்டாக்கிக்கொண்டே யிருக்கும், நம் எதிரிகளுக்கும், விஷத்தையும் தொல்லையையும் விளைவிக்க சவுகரியத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஜஸ்டிஸ் கட்சி 17 வருடகாலம் ஆட்சியிலிருந்தது. அதற்கு எதிரிகள் தொல்லையைச் சமாளிக்க வேண்டிய வேலையே சரியாயிருந்தது. அந்த தொல்லை இல்லாதிருந்தாமானால் அனேக வேலைகள் செய்திருக்கும். அது, நமக்குச் செய்யவேண்டிய வேலையெல்லாம் செய்துவிட்டதாகச் சொல்லமுடியாது. பதவியின்மூலம் எதிரிகளை அடக்கலாம், ஒழிக்கலாம் என்பது முடியாத காரியம். அதற்குப் பதிலாக, பதவி பெறுவதின் மூலம் எதிரிக்கு ஆக்கமே அதிகம் ஏற்படும். உதாரணமாக, நாம் 17 வருஷகாலம் பதவி வைத்திருந்தது எதிரிகளுக்குப் பலம் சேர்த்துக்கொள்ள மிக சவுகரியமாயிற்று. அது போலவேதான் எதிரிகள் 27 மாத பதவி வைத்திருந்தது, நமக்குச் சற்றாவது பலம் ஏற்பட உதவிற்று. எதிரிகள் பதவி வகிப்பதால் நமக்குச் சில கெடுதிகள் ஏற்பட்டது என்றாலும் அதைவிட இலாபம் என்று மதிக்கத் தகுந்த சில கட்டுப்பாடும் உணர்ச்சியும் ஏற்பட்டது. இப்போது எதிரிகள் பதவியிலில்லாததால் நம் கட்சிக்கு ஒரு உற்சாகமோ உணர்ச்சியோ இல்லாமல் சப்பையாக இருக்கிறது தெரியவில்லையா?அதுபோலவே, நாம் பதவியிலில்லாததால் நம் எதிரிகள் (காங்கிரஸ்) மதிகெட்டுப் பைத்தியம் பிடித்துக் கண்டபடி உளறிதிரிய வேண்டியதாயிற்று. இருவரும் பதவியிலில்லாததாலேயே மக்களுக்கு, இன்று யார் நிர்வாகம் நடத்துகிறவர்கள் என்பதும், அவர்களுக்கு என்னென்ன அதிகாரம் என்பதும்கூட தெரியாது. இந்த மாதிரி சர்க்கார் இருக்கிற காலத்தில் யுத்தம் இல்லாதிருக்குமானால் நாம் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டிருக்கலாம். அல்லது, நம் எதிரிகள் பதவியிலிருந்தாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டாலும் நமக்குள் இனியும் கட்டுபாடும் உணர்ச்சியுமாவது ஏற்பட்டிருக்கும். எப்படியெனில், அப்போதுதான் நமக்குக் கிளர்ச்சி செய்ய உற்சாகம் ஏற்படும். ஆதலால்தான் இப்போது—இது சமயம் மத்திய அரசாங்கமாகிய வைசிராய் நிர்வாக சபையிலாவது, மாகாண அரசாங்கமாகிய கவர்னர் நிர்வாக சபையிலாவது, இப்போது ஜனப்பிரதிநிதிகள் என்கின்ற—உத்தியோகஸ்தர்கள் அல்லாதவர்கள் என்கின்ற நபர்கள் பதவியில் இருக்கக்கூடாது என்றும், இப்போதிருக்கிறபடியே சர்க்கার் உத்தியோகஸ்தர்களைக் கொண்டே நடத்தப்பட்டும் என்றும் சொல்லுகிறேன். சர்க்கார் தங்கள் இராஜதந்திர புத்திയின் பயனாய் பொது ஜனங்களிலிருந்து பொறுக்கி எடுத்த இடங்களில் சிலரைப் போட்டுவிட்டால் அவர்கள் ஒருவருடன் ஒருவரும் பதவியிலிருப்பவர்களும் வெளியில் இருப்பவர்களும் போராடிக் கொண்டிருப்பதில் கவனம் இமுக்கப்பட்டுவிடும்என்றும், இந்தப் போராட்டத்தில் தங்களை (சர்க்காரைப் பற்றி எவரும் கவனிக்காமல் இருப்பார்கள் என்றும், அந்தச் சமயத்தில் தங்களுக்கு வேண்டிய காரியத்தை ஜனப்பிரதிநிதிகள் பேரால் செய்து கொள்ளலாம் என்றும் கருதக்கூடும். ஆனால், அது புத்திசாலித்தனமான யோசனை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். ஏனெனில், இந்தக் காரியம் சர்க்காருக்கும் தொல்லை கொடுக்கக்கூடிய காரியமாகலாம். எந்தக் கட்சியார் பதவிக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கட்சிக்கோ, சமுதாயத்திற்கோ நன்மை செய்யாமல் வெறும் மந்திரியாயிருந்து சம்பளம் பெறுவதைக் கட்சியார் பாரீ கொண்டிருக்க மாட்டார்கள். மற்றும், தங்கள் கட்சிக்கோ, சமுதாயத்துக்கோ ஏதாவது நன்மை செய்துகொள்ள முற்பட்டால் அதனால் பாதகமடையும் மற்றக் கட்சியார் கிளர்ச்சியும் தொல்லையும் செய் யாமல் இருக்க மாட்டார்கள். ஆதலால், இந்தச் சமயத்தில் இப்போது இருக்கிறபடி நடந்து, சீக்கிரம் யுத்தத்தை வெற்றி காணும்படியான முடிவிற்குக் கொண்டுவர முயற்சிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நம் சுட்சிக்குப் பதவி கிடைக்காமல் போகுமே என்கின்ற பயம் வேண்டாம்; கட்சி பலமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப்பெற்றால் பதவி காலடியில் வந்துவிழும். நாம் தேடிப்போய் அடையும் பதவியைவிட நம்மைத்தேடி வந்தடையும் பதவியே பயனுள்ள தாகும். தவிரவும், நாம் மாத்திரம் கட்டுப்பாடாயிருந்தால் பதவியில்லாமலே அனக காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். நம் மக்களுக்கு இன்னமும் தங்களைப் பற்றிய அறிவும், தங்கள் சுயமரியாதையைப் பற்றிய கவலையும் சரியாக இல்லை. நாம் வேறு; ஆரியர் வேறு என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். ஆரியர் சமயம், கடவுள், சாஸ்திரம், கலை, பழக்கவழக்கம் வேறு; திராவிடன் சமயம், கடவுள், சமயாதாரம், கலை, பழக்கவழக்கம் வேறு என்கின்ற எண்ணம் ஏற்பட வேண்டும். நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிறவரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப்போவதில்லை;விடுதலையும் ஏற்படப்போவதில்லை. நாம் முதலில் சமய சমுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப் பட்டதாலேயே—நமக்குச் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது;அதனாலேயே நாம் அரசியல் அடிமைகளாய் வாழ்கிறோம்;கல்வி முதலிய எந்தத் துறையிலும் முன்னேற முடியாமல் தடைப்படுத்தப் பட்டிருக்கிறோம். இன்று திராவிடர்கள் சொல்லிக்கொள்ளும் வைணவம், சைவம் எனப்பட்டதும், மற்றும் பலவுமான சமயங்கள் என்பதெல்லாம்—முதலில் எப்படியிருந்தாலும், இன்று ஆரிய ஆதிக்கத்திற்கும் திராவிடர் அடிமைத்தன்மைக்கும், இழிவுக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருகிறது. நமது அடிமைப் புத்தியின் தடிப்பனது, ஆரிய ஆதிக்க சாதனங்கள் எல்லாம் நம்முடையதென்று உரிமை பாராட்டி, அவற்றிற்கு அடிமைப்படத் துணிந்துவிடச் செய்துவிட்டது. ஆரியக் கடவுள்கள் என்பவைகள் இருக்குமிடங்களில் நமக்கு எவ்வளவு இழிவு ஏற்பட்டாலும் சிறிதும் வெட்கம், மானமின்றி அவைகளிடம் சென்று இழிவை அனுபவிக்க முந்துகின்றோம். ஆரியர்கள் கற்பித்துக் கொண்ட கடவுள்களுக்கு, ஆரியர்கள் கற்பித்து வைத்த கதைகளைத் தமிழில் எழுதிவைத்துக்கொண்டு, அக் கதைகளைச் சொல்லிப் பாடிப் பிரார்த்தனை செய்கின்றோம். இது ஆரிய மதப் பிரச்சாரமா, இல்லையா என்று கேட்கின்றேன். இப்படி ஒரு கூட்டம் நாட்டிலிருக்கும்போது திராவிடர்களுக்கு விமோசனம் எப்போது, எப்படி வரும்? ஆகவே, இப்போது நம் மக்களுக்கு, ஆரியர்—திராவிடர் சமய, சமுதாய பேதங்களை விளங்கச் செய்யவேண்டியது நமது முக்கிய கடமையாகும். இதற்காக ஒரு தனிப் பிரச்சாரமும் ஒரு தனி ஸ்தாபனமும் ஒரு தனிப் படையும் வேண்டும். நமது நிலையை நாமுணர்ந்து, நமது இழிவை நீக்கிக்கொள்ளப் பாடுபடுவது குற்றமாகாது. இதனால் யாரும் குற்றம் சொல்லவும் முடியாது.யுத்தம் முடிந்ததும் நமது வேலை இதுவரகையாக இருக்கவேண்டும். முக்கியமாய்—இதற்காக வேண்டியுமே"திராவிட நாடு திராவிடருக்கு" என்கின்றோம். சர்க்கார் நம் நாட்டைப் பிரித்து நமக்கு ஒரு தனி அரசியல் ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால், நாம் அப் போராட்டத்தில் மடியத் தயாராய் இருக்க வேண்டும். ஒருவனுடைய நாட்டில் வேறு ஒருவன் வந்து ஆதிக்கம் செய்யும்படியாக, நாட்டுக்குடையவனைச் சூத்திரனாகவும்—கீழ்ச் சாதியாகவும் செய்திருக்கும், செய்துவரும் ஆட்சி எப்படிப்பட்டதானாலும் அது கொடுங்கோன்மை ஆட்சியேயாகும். இன்று நமக்குத்"திராவிடர்"என்கின்ற பெயரேயில்லை;"தமிழர்"என்கின்ற பெயரேயில்லை. சூத்திரர், தீண்டப்படாதவர், நாலாம் சாதி, ஐந்தாம் சாதி என்கின்ற பெயர்கள் தானிருக்கின்றன. இது சரியா? இது உங்களுக்குச் சம்மதமா? இது மாற்றப் பட வேண்டாமா? அதற்குத் தேவையான செய்யப்பட வேண்டாமா?வைசிராய் நமது கட்சித் தலைவனைக் கூப்பிடவில்லை என்பது அவமானமாகக் கருதுவதானால் நம் சமுதாய 3% கோடி மக்களை ஒரு அன்னக் காவடி உஞ்சவிருத்திக் கூட்டம்—சூத்திரன், கீழ்ச் சாதி, தொடக்கூடாத சமூகம் என்று கூப்பிடுவதையும், ஒதுக்கிவைப்பதையும் பற்றி எவ்வளவு அவமானப்பட வேண்டும்? இதையெல்லாம் விடவா மந்திரி பதவி, வைசிராய் சபை மெம்பர் பதவி, ஆலோசனையாளர் பதவி, கவர்னர் பதவி ஆகியவைகள் பெரியும் அவசரமும் அவசியமுமானவை என்று கேட்கிறேன்? வயது சென்ற பெரியவர்கள், மானமற்ற செல்வப் பிதர்கள், பதவிப் பித்தர்கள் நிலை எப்படியோ இருக்கட்டும். வாலிபர்களாகிய நீங்கள்—உறுதியுடனும் அணிவுடனும், நம்பிக்கையுடனும் முன் வாருங்கள்‌ ! ஒரு பதீது வருஷதீதிற்குள்‌ பெரியதொரு சமுதாயப்‌ புரட்சி நடத்தி, மானமும்‌ விடுதலையும்‌ பெற்றுவிடலாம்‌. [சென்னை கொகலே மண்டபத்தில்‌, 20-7-1940-ல்‌ நடந்த டாக்டர்‌ நாயர்‌ தினப்கொண்டாட்டத்தில்‌ சொற்பொழிவு--! குடி அரசு ! 28-7-1940] ஓ. திரு. வி. ௧. தோழர்களே | அன்பர்‌ கலியாணசுநீதரனார்‌ அவர்களின்‌ தமிழ்த்‌ தொண்டை நானே நன்றாய்‌ அறிந்தவன்‌. அவரது தமிழ்த்‌ தொண்டிற்கு எடுதீதுக்காட்டு வேண்டுமானால்‌, நானே யாவேன்‌. நான்‌ தமிழ்‌ பேசுவதும்‌, எழுதுவதும்‌ தப்பாக இருந்தாலும்‌, நான்‌ பல பத்திரிகைகள்‌ நடதீ துவதும்‌, சுமார்‌ 50, 60 புத்தகங்கள்‌ வெளியிட்டதும்‌ அன்பர்‌ கலியாண சுந்தரனார்‌ அவர்கள்‌, தமிழ்‌ மொழியில்‌ ¢ தேச பக்தன்‌, ¢ நவ சக்தி? முதலிய பத்திரிகை களின்‌ தொண்டாலேயாகும்‌. திரு. வி. க. அவர்களின்‌ ¢ தேச பக்தன்‌! பத்திரிகைக்குப்‌ பிறகே தமிழ்‌, அரசியல்‌ மேடைகளைக்‌ கைப்பற்றிற்று என்று சொல்லுவேன்‌. அரசியல்‌ தலைவர்களையும்‌ தமிழ்‌ அடிமை கொண்டதற்குக்‌ காரணம்‌ அவர்களது பத்திரிகைகளே யாகும்‌. அப்‌ பத்திரிகைகள்‌ என்னைவிட மோசமானவர்களையும்‌ தமிழ்‌ மொழியில்‌ உணரவும்‌, தமிழ்‌ பேசவும்‌ செய்துவிட்டதால்‌--* தமிழ்‌ மொழியைக்‌ காதால்‌ கேட்டால்‌ தோஷம்‌? என்று கருதும்‌ சாதியாரும்‌ தமிழில்‌ கலந்து கொள்ளவும்‌, தமிழை ஒப்புக்காவது மதிக்கவும்‌ செய்துவிட்டது. [சென்னை பச்சையப்பன்‌ கல்லூரியில்‌, 18-1-1936-ல்‌ நடந்த தமிழ்த்‌ திருநாளின்போதது சொற்பொழிவு. ்‌ உ திராவிட நாடு? 22-8-1943] www.thamizham.net - Free £ book 14௦ 3026 1022 8. காந்தியார்‌ மதவெறிகொண்ட மாபாதக்‌ கூட்டம்‌ சதிச்செயல்‌ புரிந்த, தந்திரமும்‌ வஞ்சனையும்‌ போர்தீது, உலகப்‌ பெரியாருள்‌ ஒருவராண பெரியார்‌ காந்தியாரைப்‌ பலிகொண்டுவிட்ட செய்தியைக்‌ கேட்டுத்‌ திகைதீதவர்‌ பலர்‌ $ திகைப்பால்‌ செத்தவர்கள்‌ சிலர்‌) சாக விரும்பிய வர்கள்‌ சிலர்‌ என்ற செய்திகளையெல்லாம்‌ அவர்‌ மறைந்ததிலிருந்து நாள்‌3தாறும்‌ கேட்டு வநீதிருக்கின்றோம்‌. மனிதத்‌ தன்மை படைத்த எவருமே விரும்பாத, கிழிவான இந்தப்‌ படுகொலையைக்கண்டு, கேட்டு எவருமே பதறாமல்‌ இருக்கமுடியாது. கோட்ஸே கும்பல்கூட அல்ல;$ கோட்ஸே கூட மனம்‌ பதறிதீதான்‌ இருப்பான்‌--தன்னால்‌ கொல்லப்‌ பட்ட காந்தியார்‌ குலைந்து மண்ணில்‌ வீழ்ந்ததைக்‌ கண்டு! ஏன்‌ ? அவனும்‌ மனித உடல்‌ போர்‌ தீதவன்தானே | சுயநலம்‌ சொஞ்சமும்‌ இல்லாமல்‌, தனது முப்பது ஆண்டு வாழ்க்கையையும்‌ இந்தியத்‌ துணைக்‌ கண்டத்து மக்கவின்‌ நன்மைக்காகவே, தன்‌ மனதீதில்‌ எது தன்மை என்று பட்டதோ அவ்வழியி?லயே உழைதீத பெரியார்‌ காந்தியாரீ. பலாத்கார முறைகளில்‌: கொஞ்சமும்‌ நம்பிக்கை இல்லாமல்‌ அகிம்சையையே தன்‌ கருவியாகக்‌ கொண்டவர்‌. மத இயலில்‌, மததீதிற்கு மதம்‌ வேறுபாடில்லை என்றும்‌, மத முடிவுகள்‌ எல்லாம்‌ ஒன்றுதான்‌ என்றும்‌ வற்புறதீதியவரீ, கடவுள்‌ இயலில்‌, கடவுள்‌ ஒன்றுதான்‌ என்றும்‌ அந்த ஒன்றைதி தான்‌ பலரும்‌ பலவாறு கூறிப்‌ போனார்கள்‌ என்றும்‌, ஆனால்‌ எல்லாவற்றையும்‌ ஒன்றாகவே தான்‌ நான்‌ மதிக்கிறேன்‌ என்றும்‌ விளக்கிக்‌ கூறி, கடவுள்‌ வழிபாட்டிற்காக அமைந்த கோவில்களை ' விபச்சார விடுதிகள்‌ ? என்று கூறி, அங்குத்‌ தகனோ, அந்தக்‌ கடவுளுக்குப்‌ பால்‌, பழம்‌, சோறோ வேண்டியதில்லை) திறந்த வெளியே போதும்‌ என்றவர்‌. அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது; பிராரீ தீதனையே போதும்‌ என்று வற்புறுதீதியவர்‌. சமுதாய இயலில்‌ ஒருவரை ஒருவர்‌ சுரண்டுதல்‌ கூடாது$ பரம்பரையாக ஒருவர்‌ உறிஞ்சிப்‌ பிழைக்கவம்‌, அதற்காக மற்றொருவர்‌ நைந்து வாழ்க்கை கசந்து வாழவும்‌, அதற்காக ஒரு கூட்டம்‌ ஒடுக்கப்பட்டவர்‌ கனாய்‌--தாழ்தீதப்பட்டவர்‌ களாய்‌ இருந்துவருவது ஈனம்‌ என்றும்‌ வற்புறுத்தியவர்‌. தேச இயலில்‌ இந்தியத்‌ துணைக்‌ கண்டத்தை ஒரே நாடு என்றும்‌, கந்த நாட்டு மக்கன்‌ அனைவரும்‌ ஒரே நாட்டினர்‌ என்றும்‌ வற்புதுத்தியவர்‌ஃ இவ்வாறான காந்தியாருடைய பல கொள்கைகள்‌, மத வேறுபாடு, சாதி வேறுபாடு நிரம்பிய இந்த நாட்டிற்கு அவைகளைதீ தீர்க்க ஓரளவிற்குப்‌ போதுமானவைகள்‌ என்று கூறத்‌ தகுந்ததாயினும்‌ அக்‌ கொள்கைகளைப்‌ பரப்புவதற்கு அவர்‌ கையாண்டுவந்த முறைகன்‌ நிச்சயமாக விபரீதமான பலனைதீதான்‌. கொடுக்குமென நாம்‌ அடிக்கடி வற்புறுத்தி விளக்கிக்கூறி வந்திருக்கின்றோம்‌ என்பதையும்‌, அதே நேரத்தில்‌ அவரின்‌ பல கொள்கைகள்‌ இந்தப்‌ பிற்போக்கான நாட்டிற்குத்‌ தேவையானவை என்று உணரத்‌ தவற வில்லை என்பதையும்‌ இங்குக்‌ குறிப்பிட்டேயாக வேண்டும்‌. இவ்வாறு இந்தியத்‌ துணைக்‌ கண்டத்தின்‌ நன்மைக்காக, பெருமைக்காக, முன்னேற்‌ நதீதிற்காக உழைதீதுவந்த பெரியார்‌ காந்தியார்‌ என்று சொல்லிக்கொள்ளத்‌ தகுந்த நிலையிலிருந்தாலும்‌, அவருடைய மறைவுக்குப்‌ பிறகும்‌ இந்த நாட்டில்‌ வாழ்ந்தேயாக வேண்டிய மக்கள்‌ எவ்வளவு தூரம்‌ நன்மை, பெருமை, முற்போக்கு அடைந்திருக்கிறோம்‌ ₹ அடையாவிட்டால்‌ அதற்குக்‌ காரணம்‌ என்ன i அடைவதற்கு நாம்‌ என்னென்ன காரியங்கள்‌ செய்யவேண்டும்‌ என்பவைகளைப்பற்றி எண்ணவேண்டுமல்லவா ? அவைகளையடைந்தால்‌ தானே உண்மையில்‌ காந்தியாரின்‌ கொள்கைகள்‌ நிறைவேறியதாக, வெற்றி பெற்றதாக நாமும்‌ சொல்லிக்கொள்ள முடியும்‌] உலகமும்‌ ஒப்புக்கொள்ளும்‌? இந்த நாட்டின்‌ பிற்‌ போக்குச்‌ சக்திகள்‌ என்று காந்தியார்‌ எவற்றைக்‌ குறிப்பிட்டரோ, அவற்றையொழிப்பது தானே உண்மையாக அவரை மரியாதை செய்வதாக இருக்கமுடியும்‌? இதைதி தேசியத்‌ திராவிடர்கள்‌ மட்டுமல்ல] இந்தியத்‌ துணைக்‌ கண்டதீதிலுள்ள, தேசியப்‌ பல்வேறு இனங்‌ களும்‌ இந்த நேரத்தில்‌ எண்ணிப்‌ பார்க்கவேண்டும்‌. www.thamizham.net - Free £ book No 3026 தலைவர்கள்‌ 1023 காந்தியாரை எந்த இந்து மதம்‌ ஒழித்ததோ--அதாவது, எந்த இந்து மதம்‌ காந்தி யார்‌ உயிருடன்‌ வாழ்வது தான்‌ அழிந்துபோவதற்கு ஏ.து என்று கருதியதோ--அந்த இந்து மததீதின்‌ வளர்சீசிக்காகவா அவருடைய மறைவு பயன்படுதீதப்படவேண்டும்‌ 2 தான்‌ பெரிய சாதியாய்‌ இருந்துகொண்டே மற்ற சாதியெல்லாம்‌ தனக்குக்‌ கீழ்ப்பட்ட சாதியென்று சொல்லி அவைகளைத்‌ தலை நிமிரவொட்டாமல்‌ தந்திரதீதாலும்‌ வஞ்சகதீதாலும்‌ சதிச்‌ செயல்‌ புரிந்கு, சாஸ்திரம்‌ என்றும்‌ சடங்கென்றும்‌ கூறி ஏமாற்றி வாழ்ந்துவரும்‌ எதீதர்கள்‌ பிழைப்புக்காகவா, இந்தப்‌ பெரியாருடைய மறைவு பயன்படுத்தப்பட வேண்டும்‌ 1 அறிவற்ற மக்களின்‌ மூடத்‌ தனத்தைப்‌ பெருக்கி, அவர்கள்‌ அந்த மூடதீதனத்தில்‌ இருந்து என்றும்‌ மீளாத வழியாகப்‌ பார்ப்பனியத்தின்‌ காலைக்‌ கழுவிக்‌ குடித்து வாழும்‌ சாதியாக என்றைக்கும்‌ இருப்பதற்காகவா இந்தப்‌ பெரியாரின்‌ வஞ்சகமான படுகொலையை மறைத்து, வேறுவகையில்‌ ஆடம்பரமாக, அனாவசியமாகப்‌ பயன்படுதீதப்படவேண்டும்‌ ? காந்தியார்‌ முடிவிற்குப்‌ பிறகு நாம்‌ நாட்டிலே என்ன பார்க்கின்றோம்‌ 2 உலகத்தின்‌ எல்லா மூலைகளிலிருந் தும்‌ அவரைப்‌ பாராட்டி அவர்‌ முடிவுக்கு வருந்தி, அவரைச்‌ சுட்ட கொலை பாதகப்‌ பார்ப்பனனைக்‌ கண்டித்து ஏராளமான செய்திகள்‌ வெளியாகிவிட்டன. ஒருவன்‌ குற்றம்‌ செய்தால்‌ அவனும்‌ அவனைச்‌ சார்ந்த சொந்தக்காரர்களும்‌, அவன்‌ குலதீ தினருமே ஒழிக்கப்படவேண்டும்‌ என்ற இந்து மததீதின்‌ பழங்கால நீதியை இப்‌ பார்ப்பனன்‌: விஷயத்திலும்‌ கையாளப்படவேண்டும்‌ என்று நாம்‌ கூறவில்லை; விரும்பவுமில்லை ; அது நியாயமுமில்லை. ஆனால்‌, அவனை மொழித்துவிட்டு, அவன்‌ அந்தச்‌ சதிச்‌ செயலைச்‌ செய்ய எந்த இந்துமத வெறியுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இந்து மதச்‌ செழிப்புக்கான காரியங்களைச்‌ செய்வதுதான்‌ நீதியா, நியாயமா என்று கேட்க ஆசைப்படு கின்றோம்‌. இந்தப்‌ படுகொலைக்கு--எந்த, ¢ இந்து மத சாம்ராஜ்ய வெறியுணர்ச்சி 2 காரணமாக இருந்ததோ--அந்த உணர்ச்சியை ஆழக்‌ குழி தோண்டிச்‌ சுட்டுப்‌ பொசுக்கிச்‌ சமாதி வைப்பதல்லவா நீதியாண செயலாக இருக்கமுடியும்‌ என்று கூறவும்‌ ஆசைப்‌ படுகின்றோம்‌. அவர்‌ மறைந்த பதின்மூன்றாம்‌ நாள்‌, அவருடைய சாம்பல்களை எல்லாம்‌ இந்த நாட்டின்‌ * புண்ணிய நதிகளில்‌ கரைதீதுவிடப்பட்ட ஒரு சடங்கையும்‌, அதைப்‌ பக்தி விசுவாசமாகப்‌ பலர்‌ பார்தீதுதீ தரிசித்துச்‌ சென்றனர்‌ என்ற விளம்பரச்‌ செய்திகளையும்‌, அதை அங்கங்கே உள்ளவர்கள்‌ அவை கொண்டுபோகப்பட்டபோதும்‌, கரைதீதபோதும்‌ ஏராளமாகக்‌ கண்டு வணங்கிச்‌ சென்றனர்‌ என்ற செய்திகளையும்‌ பார்க்கும்போது நாம்‌ பெரிகும்‌ வருதீதமடைகின்றோம்‌. காந்தியாரின்‌ படுகொலை விளைவித்த வருத்தத்தைக்‌ காட்டிலும்‌, அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதை செய்யப்படுவது--நமக்குமட்டு மல்ல, பகுதீதறிவுடைய எவருக்கும்‌ அதிக வருத்தத்தையே உண்டுபண்ணும்‌ என்னலாம்‌. இந்தச்‌ செயலால்‌ மக்களுடைய காலமும்‌ பொருளும்‌ வீணாகக்‌ கழிந்தன என்றுகூட நாம்‌ குறிப்பிட ஆசைப்படவில்லை. ஆனால்‌, விலைமதிக்க முடியாததான மகீகளின்‌ அன்புணர்ச்சி) காந்தியார்‌ படுகொலையைக்‌ கேட்டுத்‌ திகைப்படைந்து, இதற்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்‌ என்று பிறந்த தெளிவுணர்சீசி) காந்தியாரிடத்தில்‌ நாம்‌ மரியாதை யுடையவர்கள்‌ என்று காட்டவேண்டும்‌ என்று தோன்றிய நன்றியுணர்ச்சி; பரிதாபமான: முடிவைக்கேட்டு நம்மீது அதிகமான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது, சமுதாய முன்னேற்றதீ திற்கு நம்மாலான தொண்டைச்‌ செய்தேயாகவேண்டும்‌ என்று உண்டான வாரு உணர்ச்சி; *காந்தியார்‌ எலும்பைக்‌ கண்டு தரிசித்தோம்‌ !, ¢ ஆற்றில்‌ சாம்பலைக்‌ கரைக்கும்போது அந்த அருமையான காட்சியைக்‌ கண்டு களிப்படைந்தோம்‌ 1, ¢ இதற்காக எவ்வளவு கஷ்டப்‌ பட்டு எப்படியெப்படியெல்லாமோ போய்‌ ஏதோ ஒரு மாதிரியாய்ப்‌ பார்தீ.து வணக்கதீதைச்‌ செலுத்திவிட்டோம்‌ ? என்று எண்ணி மன திருப்திப்படும்‌ அளவிலா மனதீதிலுண்டான. நல்லுணர்ச்சிகள்‌ எல்லாம்‌ கரைதீதுவிடப்படவேண்டும்‌ என்று கேட்கிறோம்‌. ¢ காந்தியரர்‌: www.thamizham.net - Free £ book 14௦ 3026 1024 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: எலும்பையே காவிரி நதியிலும் மற்ற நதிகளிலும் கொண்டுபோய்க் கலப்பது புண்ணியம் என்றால், அந்த நதிகளில் நம் முன்னோர்களின் எலும்பையும், சாம்பலையும் கொண்டுபோய்க் கலப்பதுதானே நமக்கும் புண்ணியமான தாகும்? இந்த ஏற்பாடுதானே புனிதமானது? என்கின்ற முடிவைத்தானே கிந்தச் செயல்-மக்களைக் கொள்ளச்செய்யும்? அஸ்திகளை ஆற்றிலகரைக்க அய்யருடைய உதவி தேவை என்கிற முடிவில், பார்ப்பனர் வருத்தம் சாஸ்திரங்களும், அவர்களின் வயிற்றுப் பிழைப்பும் பராமரிப்பதற்குதீதான இந்த நடவடிக்கை பயன்படுவதாக இருக்கமுடியும்?இந்திய யூனியன் மதமற்றது என்று கூறப்பட்டாலும், அது இந்து மதத்தைப் பின்பற்றியே நடக்கக் கூடியது என்கிற உண்மையை அரசாங்கம் காட்டும் ஆதரவிலிருந்து மக்கள் தெரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கமுடியும்.இதுதானா காந்தியாருக்குக் குசி செய்யும் நன்றி, மரியாதை? இவ்வாறு தரிசிப்பதும், மலர்மாலை சாதீதுவதும் ஆன காரியங்களால் அவருடைய கொள்கைகள் நிறைவேறிவிட்டன என்று கூறமுடியுமா?இயற்கையை ஏவல்கொண்டு, விரும்பியபடி எல்லாம் ஆட்டிவைக்கும் விஞ்ஞான முறையும், அதன் பயனாய்த் தோன்றிய இயந்திரங்களும் இங்கு இன்றைக்கும் வணக்கதீ திற்குரியவையாக இருக்கின்றனவேயன்றி, வாழ்வின் நலனுக்காகக் கொள்ளப்பட்டவை என்று சொல்லமுடியாத நிலையிலேயே இருக்கின்றோம். அறிவு உயர்ந்தது) அறிவைப் பெருக்குவது கல்வி) கல்வியைத் தருவது ஏடு. அந்த ஏடு வணக்கதீதிற்குரியதாகவே இந்த நாட்டில் இருந்துவருகிறது என்று சொல்லலாமே தவிர, அந்த ஏட்டின் பயனைக் கண்டு அறிவு பெருகி வாழவேண்டும் என்ற போக்கைக் காணோமே!எது எது உயர்ந்தது என்று சொல்லப்படுகின்றதோ அதெல்லாம் வணக்கதீதிற்குரியது ; பூசைக்குரியது என்கிற மனப்பான்மை இந்த நாட்டில் வேரூன்றி--வாழ்வில் அவைகளை ஏற்று நடக்கும் தன்மை இல்லாமல் போனதால்தானே, இந்தப் பழம்பெருமை வாய்ந்த நாடு கேடுகெட்ட நாடாக மாறிவிட்டது!சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையை ருசிபார்க்கும் நடவடிக்கைதானே பல காலமாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது! அந்தப் போக்கைத்தானா இப்பொழுதும் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்கிறோம். பார்ப்பனிய மதமான இந்து மதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலூற்றி வளர்ந்து வந்தார். அப் பாம்பின் கொடுமையைப்பற்றி நாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதிவந்ததால், அதுவும் ஆடிப்பாடிக் குதித்ததால், அதையடக்கித் தன்வழிச் செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக்க நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில்-ஊதத் தேவையில்லை என்று அவர் கருதிய வேளையில், அப் பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையாகக் கொண்டு விட்டது. இப்பொழுது, அந்தப் பாம்பை என்ன செய்வது?என்பதே கேள்வி. அதை நாம் நசுக்கி அழித்துவிட வேண்டும் என்றுகூடச் சொல்லவில்லை. அதனுடைய விஷப் பற்களைமட்டும் பிடுங்கி எறிந்துவிடவேண்டும். இதைத்தான் இங்கு வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறோம். இதற்கு வழி என்ன?அவருடைய நினைவாகப் பெரும் பொருளை நிதியாகச் சேர்த்து,'கஸ்தூரிபாய் நிதி'போலவும்,'கமலாநேரு நிதி'போலவும் சில பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்து விட்டால், அது உண்மையாகவே அவருக்குத் தகுந்த ஞாபகார்த்தமாக ஆடுவிடுமா? அவருடைய உருவச் சிலைகளை அங்கங்கே வைத்துப் பூசை நடத்திவருவதினால் அது அவருடைய தொண்டைச் செய்ததாக முடியுமா? காந்தியார் கழகம் என்று பெயர்வைத்து அவர் எழுதியவைகளையெல்லாம், ஒன்றுசேர்த்து (காலப்போக்கில் பார்ப்பனியப் பிடியில் சிக்கி, நல்லதையெல்லாம் சட்டெரித்துவிட்டு, மாற்றித் திருத்தி வைத்துக்கொண்டு) வெறும் வேதாந்த விசாரணையில் ஈடுபட்டால் அது அவருடைய கொள்கைகளைப் பரப்பியதாகஆகுமா? அவர் எப்படி உண்ணாவிரत மிருந்தாரோ, மவுனவிரத மிருந்தாரோ அவைகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றப் போகின்றோம் என்று சிலபேர் முடிவு கட்டுவதால் அது அவருக்கு உண்மையாகவே நன்றி காட்டியதாக ஆகுமா? அவருடைய நினைவுக்கு அறிகுறியாக'போஸ்டல்முத்திரைகளை அச்சிட்டு வெளியிடுவதோ, அதைப் போன்ற மற்ற செயல்களைச் செய்வதோ காந்தியாரின் கொள்கைகள் இந்த நாட்டில் நிலைபெறுவதற்கு வழிசெய்யும் காரியங்களாகுமா?வெறும் பஜனைபாடும் அளவிலும், பால், பழம், பூ வைத்து நைவேத்தியம் செய்யும் அளவிலும் நின்றால்- அவர் உயர்ந்தவர், ஒரு பெரியார், ஒரு மகாத்மா, ஒரு மகான் என்று பெருமையாகப் பேசிக்கொள்வதற்குப் பேருதவியாக இருக்குமேதவிர அவரால் இந்த நாட்டிற்கு நிலையான பயனேற்பட வழிசெய்ததாகுமா?அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? ['குடிஅரசு'-தலையங்கம்--14.2-1948] 4. காந்தியார் மரணம் பெரியோர்களே!தோழர்களே!திராவிடர் கழகத்தின் நேர்மையான பகுத்தறிவ விளக்கத்தால் தம் சோம்பேறிச் சுக வாழ்வுக்குக் கேடு நேர்வதைப் பொறுக்க முடியாத பார்ப்பனியம்--இன்று அதை அழிக்கத் தனது வஞ்சம் நிறைந்த சூழ்ச்சிகளை எல்லாம் கையாள ஆரம்பித்து விட்டது. காந்தியாரைக் கொன்றவன் பார்ப்பனன் என்ற உண்மையை வெளியிட்டதற்காகப் பார்ப்பனியம் இன்று நம்மீது பாய்கிறது. காரணம், எந்த மக்களுடைய வாழ்வுக்காக அவர் அல்லும் பகலும் உழைத்து வந்தாரோ, எந்த மக்கள் அவர் பேரைச் சொல்லிப் பல பதவிகளைப் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்து வந்தார்களோ, எந்த மக்கள் அவர் பேரைச் சொல்லிச் சுலபமாய் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ந்து வந்தார்களோ-அதே இனத்தைச் சேர்ந்த ஒருவன் தான் காந்தியாரைக் கொன்றான் என்பதையும் அவன் ஒரு பார்ப்பனன் என்பதையும் வெளியிடும்போது அவர்கள் உண்மையாகவே வெட்கப் படுகிறார்கள். எங்கு மக்கள் தம்மீது பாய்ந்து விடுவார்களோ என்று கவலைப்படுகிறார்கள். அதனால், அவ் வுண்மையை வெளியிடும் நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதே பார்ப்பனர்கள்-இந்தக் கொலைக்கு ஒரு முஸ்லிம் காரணஸ்தராயிருப்பாரானால், அதையே காரணமாக வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் அத்தனை பேரையும் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார் கண் அல்லவா?கொலை செய்தவன் ஒரு இந்துப் பார்ப்பனன் என்பது தெனிவாகத் தெரிவிக்கப்பட்டுங்கூடப் பல இடங்களில் மிக மிகக் கேவலமான முறையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கும்போது, கொன்றவன் ஒரு முஸ்லிமாகவே இருந்திருப்பனானால் இதற்குள் முஸ்லிம் சமூகமே இவ்விந்திய யூனியனைப் பொறுத்தமட்டிலுமாவது அழிக்கப்பட்டு இருக்கும். ஆனால், சর்வ সहत்வা படைத்த பார்ப்பனியக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் கொலைசெய்து விட்டதால், இன்னான் தான் கொன்றான் என்று கூறி ஆசை தீர அழுவதற்குக்கூட வசதி இல்லாமல் உத்தரவு கிடக்கப்பட்டிருக்கிறதாம். சட்டவன் பார்ப்பான் என்பதை எடுத்துக் காட்டுவது இன்றைய அடிமை அரசாங்கத்திற்கு வகுப்புவாதம் பேசுவதாகப் படுகிறது. ஆனால், சூட்டவன் ஒரு முஸ்லிம் ஆகவோ ஒரு கறுஞ்சட்டைக்காரணாகவோ இருந்திருநீதால், இதே அரசாங்கம் அவர்களை வேண்டும் படி தாக்க இந்தப் பார்ப்பனர்களையும் அவர்கள் கூலிகளையும் யாதொரு தடையுமின்றி அனுமதித்து இருக்கும். ஆனால், அவன் ஒரு பார்ப்பனனாகப் போய்விடவே, கொலை யுண்ட காந்தியார் இனிதீ திரும்பி வரப்போவதில்லை) ஆகவே, இனி அவரைப்பற்றிப் பேசாதீர்கள்)பேசினால் வகுப்புத் துவேஷமாகக் கருதப்படும் என்று கூறிவருகிறது. இது எவ்வளவு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!வகுப்பு இருக்கலாம்-சட்டப் புத்தகத்தில், வகுப்புக்கோர் நீதி வழங்க. வகுப்பு இருக்கலாம்-சாஸ்திரப் புத்தகத்தில், மக்களைப் பல வகுப்பினராக்கி உயர்வு தாழ்வு கற்பிக்க. வகுப்பு இருக்கலாம்-கடவுளின் தன்மையில், ஒருவன் தலையிலிருந்து தோன்றினான், ஒருவன் காலிலிருந்து தோன்றினான் என்று கூற. ஆனால், ஏன் அப்படிப் பல வகுப்புகள் இருக்கவேண்டும்?ஒரு வகுப்பு மக்கன் ஏன் மற்ற வகுப்பு மக்களின் உழைப்பால் உண்டு கொழுக்கவேண்டும் என்று கேட்டால் அதுதான் வகுப்புத் துவேஷமாகக் கருதப்படுகிறது. வகுப்பு இருக்கலாம், நாட்டில் அந்த வகுப்பு முறையில் தாழ்த்தப்பட்ட சூத்திரர் களாய், பஞ்சமர்களாய், சண்டாளர்களாய் இருக்கலாம்--ஒரு பெரும்பான்மை சமூகத்தார்'ஏன் அய்யா, நாங்கள் உழைத்தும் படிக்கப் பள்ளியின்றி, குடிக்கக் கூழின்றி, இருக்கக் குடிலின்றி, உடுக்கத் துணியின்றி அநாகரிக வாழ்வு வாழவேண்டும்?' என்று கேட்டால் அது வகுப்புத் துவேஷமாம்.'அய்யா, நாங்கள் பஞ்சமர்கள்--சேரியில் வாழ்ந்து கடுமைன்றி இன்னல் படுகின்றோம். ஆகையால், எங்களுக்கு மேலும் இருக்க வசதி செய்து கொடுங்கள்!''அய்யா நாங்கள் இந் நாட்டை ஆண்டவர்கள்) இந் நாட்டுக்கே உரிய வர்கள்)இந் நாட்டின் பூர்வீகக் குடிகள். அப்படிப்பட்ட நாங்களோ இன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய லम்பாடிக் கூட்டத்தாரால் பல சாதிகளாக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு அவர்களுடைய தாசி மக்களாய் வாழ்ந்து வருகிறோம். இக் குறைபாடுகளைப் போக்க ஏதாவது வழி செய்யுங்கள்!' என்று அரசாங்கத்தை நோக்கிக் கூறினால்,'அதெல்லாம் பேசக்கூடாது)மீறிப்போனால் உங்களை வகுப்புத் துவேஷியாய்க் கருதி ஜெயிலில் அடைப்போம்-ஜாக்கிரதை?' என்று ஆட்சியாளர் கூறினால், அதெப்படி நியாயம் ஆரும்?அப்படித்தான் இன்றைய அரசாங்கம் கூறுகிறது. இது என்ன நியாயம்?ஒரு திருடனைப்பற்றிப் பேசாதே என்று கூறப்படுமானால் அத் திருடனைக் காப்பாற்றத்தானே அம் முயற்சி எடுத்தகொள்ளப்படுவதாகக் கருதப்படும். அதேபோல், வகுப்பு பற்றிப் பேசாதே என்றால் அந்த வகுப்பைப் பதீரமாகக் காப்பாற்ற முயற்சி செய்யப்படுகிறது என்றுதானே நாம் கொள்ளவேண்டும்?நாட்டில் வகுப்புப் பேதாபேதங்கள் இருக்கலாம்) வகுப்பின் பேரால் இருந்துவரும் கொள்ளைகளும், ஏய்ப்புகளும், சுரண்டல்களும் இருக்கலாம். ஆனால், அவற்றைப்பற்றி மட்டும் பேசக்கூடாது என்றால்--அதென்ன நியாயம்?நாங்கள் செய்த தீமை என்ன? ['நாகூர்'-28-2-1948-ல் சொற்பொழிவு--'விடுதலை'-8-5-1948] 5. காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமான தாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை:1. இந்தியாவுக்கு,'ஹிந்துஸ்தான்' என்கிற பெயருக்குப் பதிலாக-'காந்தி தேசம்' அல்லது 'காந்திஸ்தான்'என்று பெயரிடப்படலாம். 2. இந்து மதம் என்பதற்குப் பதிலாக--'காந்தி மதம்' அல்லது'காந்தினிசம்'என்பதாக மாற்றப்படலாம். 3. இந்துக்கள் என்பதற்குப் பதிலாக-'மெய்ஞ் ஞானிகள்'அல்லது 'சத்ஞான ஜன்' என்று பெயர் மாற்றப்படலாம். 4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு; வர்ணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்படமாட்டாது. ஞானமும் (அறிவும்) ப்ரেमம் (அன்பும்) அடிப்படையாகக்கொண்டது) சத்து அதாவது சத்தியமே நித்தியமானது என்பதான सत्मार्க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக--'காந்தி ஆண்டு' என்று துவக்கலாம்.இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான்; புத்தர், கிறிஸ்து, முகம்மது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒட்டுபானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும்) உலக மக்களால் நாம் நன்கு மதிக்கப்படுவோம்)இந்தியாவுக்கு சாபக்கேடு என்று என்று சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும். ஆர்யசமாஜ், சீக் சமாஜ், பிரம்மசமாஜ் என்பது முதலிய எத்தனையோ புதிய மார்க்கங்கள் (கொள் கைகள்) ஏற்பட்டும் ஒன்றும் இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை. ஆனால், பவுத்த மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் ஆகியவை வெற்றிபெற்றுவிட்டன. இதன் காரணம், இவை அரசாங்க மதங்களாய் இருந்து வருவதே யாகும். ஹிந்துஸ்தான் முப்பது கோடிக்கு மேற்கொண்ட மக்களைக் கொண்டது. அதன் அரசியல் திட்டமாக--'காந்தியம்' என ஏற்பட்டுவிடுமானால், கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரும். இன்றைய முட்டாள் தனமும், மூர்க்கத்தனமும் ஆன கொலைபாதகப் பேயாட்டங்கள் தினி நடைபெற முடியாமலும் போகும். பெயர் மாறுதல்கள் காரணமாய் மதங்களுக்கும் தேசங்களுக்கும் கொள்கை, பெயர் மாற்றங்கள் ஏற்படுவது சகஜமாகவே இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, புத்தர், அசோகர் காலத்தில் ஏற்பட்ட மத கோட்பாடு மாறுதல்களும், ரஷியா, ஸயாம் முதலிய நாடுகளுக்கு ஏற்பட்ட'சோவியத்லேண்ட்','தாய்லேண்ட்' போன்ற பேர்களும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மற்றபடியாக, சிறு ஊர்களுக்குப் பெயர் மாற்றுவதும் பெருந பெருந்தொகையாகப்‌ பணம்‌ வசூல்செய்து அதன்‌ மூலம்‌ சில பொதுநலகீ காரியங்கள்‌ செய்வதும்‌ காந்தியாருக்கு நாம்‌ ஏதோ நன்றி காட்டினதாகதீதான்‌ வந்து முடியுமே தவிர, காந்தியாரால்‌ உலகத்துக்கு, நம்‌ நாட்டுக்கு-அதாவது, மற்ற நாட்டாரால்‌ தாழ்மையாகக்‌ கருதப்பட்ட சரித்திரப்‌ பிரசிதீதமூள்ள நாட்டுக்கு ஏற்பட்ட மகா மேன்மை யான காரியம்‌ என்னவென்பதற்கு நல்ல ஆதாரம்‌ இல்லாமல்‌ போய்விடுகிறது. ஒருவரை: மகான்‌-- 837 மேன்‌! (Great Man) என்றால்‌--அவரால்‌ ஏற்பட்ட நிரந்தரமான பெரிய காரியம்‌ ஒன்று இருந்தாக3வண்டுமேயொழிய, அவர்‌ காலத்தில்‌ இன்னின்ன காரியம்‌, அற்புதம்‌, அதிசயம்‌ நட ந்தன என்பவை பிற்கால மக்களுக்குப்‌ பயன்படுவ தான தாக ஆகி விடாது. இது எனது தாழ்மையான அபிப்பிராயம்‌ ) கொள்ளவும்‌, தள்ளவும்‌, திருத்தவும்‌, மாற்றவும்‌ உங்களுக்குப்‌ பூரண உரிமையுண்டு. இதற்கு இது ஒரு நல்ல சமயம்‌ $ நல்ல வாய்ப்புக்‌ கிடைதீதிருக்கிறது. இந்தியாவின்‌ ஒரு பாகமாகிய சிந்துவுக்கு இன்று பாகிஸ்தான்‌ என்ற பெயர்‌ ஏற்பட்டிருப்ப துபோல்‌--. இந்தியாவின்‌ பெயரும்‌ மாற்றப்படலாம்‌. இந்து என்பகும்‌ இந்தியா என்பகும்‌-அன்னி யர்கள்‌ நமக்கும்‌, நம்‌ நாட்டிற்கும்‌ கொடுத்த பெயர்‌. (அதுவம்‌ சிந்து நதி காரணமாக ஏற்பட்ட பெயர்‌) என்பகை எல்லா அறிஞர்களும்‌ ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்‌ ; காந்தி யாரும்‌ இதைச்‌ சமீபத்தில்‌ சொல்லியிருக்கிறார்‌. இந்து மதம்‌ என்பதாக ஒரு மதமும்‌ இல்லை. ஆகவே, இந்தப்படியான மாற்றஃ காநீதிபார்‌ உயிர்ப்‌ பலியின்‌ காரணமாக ஏற்பட்டு விடுமானால்‌ இனி இங்கு மத, சமுதாய, சாதி சம்பந்தமாக எந்தப்‌ பிரச்சினையும்‌ சுலபத்தில்‌ காணமுடியாது. 30 கோடி மக்களும்‌ ¢ ஞானவான்‌ களாக 1--ஒரே சமுதாய மக்களாக உலகதீதின்முன்‌ திகழ்வார்கள்‌ [குடி அரசு? 14-2-1948) 6. காந்தியார்‌ நினைவாக காந்தியாரின்‌ ஞாபகார்‌ தீதமாக, இந்தியா தேசதீதிற்கு காந்தி தேசம்‌? என்று பெயரிடலாம்‌ என்றும்‌) கிறிஸ்து ஆண்டு, முகம்மது ஆண்டு என்பதுபோல்‌ காந்தி ஆண்டு? துவக்கலாம்‌ என்றும்‌) கிறிஸ்து மதத்தைப்‌ போல்‌, பவுத்த மதத்தைப்போல்‌, காந்தி மதம்‌ ! என்ற ஒரு புது மதத்தைத்‌ தோற்றுவிக்கலாம்‌ என்றும்‌--நான்‌ யோசனை கூறியிருக்கிறேன்‌. நமக்குத்‌ தெரியாத கலியுக ஆண்டு, பசலி ஆண்டு, கிறிஸ்து ஆண்டு-- www.thamizham.net - Free £ book 14௦ 3026 1028 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ விவரம்‌, தெளிவு கண்டுபிடிக்க முடியாத பிரபவ ஆண்டு முதலியவைகளை ஒப்புக்‌ கொண்டு இருப்பதைவிட, நமக்குத்‌ தெரிந்த ஒரு பெரியாரின்‌ பேரால்‌--அதுவும்‌ ஆயிரம்‌ ஆண்டுகளாக இல்லாத ஒரு பெருமாறுதல்‌ ஏற்பட, ஆண்டு துவக்குவது எப்படிதீ தவறாகக்‌ கருத முடியும்‌? இந்த நாட்டுக்கு என்று ஒரு ஆண்டு வேண்டாமா ₹ அது அவர்‌ பேரில்‌ இருக்கட்டும்‌. காந்தியாரின்‌ கொள்கைகளை வைதீது ஒரு மதத்தைத்‌ தோற்றுவிப்பதுதான்‌ எப்படித்‌ தவறாகும்‌ 8 சதீதியமும்‌, அகிம்சையும்தானே அவருடைய முக்கிய தத்‌ ஐவங்கன்‌ ? சத்தியமே கடவுள்‌ என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம்‌. தனியாக, வஸ்துவாக ஆளாக ஒரு கடவுன்‌ இருக்கிறார்‌ என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லி இருக்கிறார்‌. சதீதியம்தான்‌ கடவுள்‌ என்று அவர்‌ கொண்டு நடந்திருக்கிறபடியால்‌ மக்கள்‌ சதீதியமே கடவுள்‌ என்று நம்பிப்‌ பயப்பட்டு நடந்தால்‌ இன்றையக்‌ கடவுள்களால்‌ ஏற்படும்‌ பயனை விட--எவ்வளவோ நலம்‌ ஏற்படும்‌. பிறகு மற்றதைப்‌ பார்தீதுக்‌ கொள்ளலாம்‌. அகிம்சையையும்‌, அன்பையும்‌ முக்கியத்‌ ததீதுவமாகக்‌ கொண்டதுமான ஒரு மதத்தையும்‌, சதீதியதீதையே கொண்டதான ஒரு கடவுளையும்‌ ஏற்பாடு செய்து துவக்கினால்‌ அதை மக்கள்‌ எல்லோரும்‌ போற்றித்‌ தழுவ மாட்டார்களா? அதன்‌ மூலம்‌ இன்று மக்களிடையே இருந்துவரும்‌ சாதி வேறுபாடுகளும்‌, மதவெறி உணர்ச்சியும்‌ அடியோடு அழிய மார்க்கம்‌ பிறக்காதா? அதன்‌ மூலம்‌ இன்று வரைக்கும்‌ சாதிமத பேதங்களை உண்டாக்கவும்‌, மகீகளைக்‌ காட்டுமிராண்டி காலத்திற்கு அழைத்துச்‌ செல்லவுமே பெரிதும்‌ பயன்‌ பட்டு வந்த இந்துமதம்‌, போலிக்‌ கடவுள்‌ அழிய வழி பிறக்கரதா ₹ மதம்‌ என்பதென்ன--மாற்றியமைகீகக்‌ கூடாததொன்றா ? மதம்‌ என்பத மக்களின்‌ நல்வாழ்வுக்காகப்‌ பெரியோர்களால்‌ ஏற்படுத்தப்படும்‌ நெறி அல்லது மார்க்கம்‌ தானே ? என்றாவது மொட்டையடித்துக்‌ கொள்வதும்‌ சாம்பல்‌ பூசிக்‌ கொள்வதும்‌ மதம்‌ என்றாகி விடுமா? ஆகவே, என்ன காரணம்‌ முன்னிட்டேனும்‌, இன்றையக்‌ கடவுள்‌ தன்மையும்‌, மதத்‌ தன்மையும்‌ மாற்றப்பட்டாக வேண்டும்‌, இன்றைய ஏற்பாடுகள்‌ இன்றைய ஆர்டர்‌? எப்படியும்‌ மாற்றப்பட்டாக வேண்டும்‌. மாற்றப்படாத ' வரையிலும்‌ இன்றைய மக்கன்‌ வாழ்வு பாழாகதீதான்‌ (Waste) போய்க்கொண்டிருக்கும்‌. [8 விடுதலை 8 11-53-1948] தோழர்களே காந்தியாருக்குப்‌ பாமர மக்கன்‌ ஆதரவு அதிகம்‌ இருக்கிறது. அவர்‌ பேரைச்‌ சொல்லி இந்த மாறுபாடுகளைச்‌ சொன்னால்‌ மக்கள்‌ ஏற்றுக்கொள்வதும்‌ சுலபம்‌. ஆக 83 ததீதுவங்களோடு காந்தி மதத்தை ஏற்படுததுவது இன்றையத்‌ தேவைக்கு ஏற்றதாக இருக்கும்‌ என்பதோடு, கரந்தியாரை-புதீதருக்கும்‌ மற்ற பெரியாருக்கும்‌ சமமாகக்‌ கருதிய தாகவும்‌, ஆகீகியதாகவும்‌ ஏற்படும்‌ என்பதையும்‌, இந்த நிலைக்கு இதுவாவது இன்று செய்யவேண்டியது அவசியம்‌ என்றும்‌ தெரிவிதீ.துக்கொள்கிறேன்‌. காந்தி மததீதை ஏற்படுத்துவதால்‌ இந்துமதம்‌ அழிந்துபோகுமே என்று சிலர்‌ வருந்தக்கூடும்‌. அதற்கு காந்தியாரே பதில்‌ அளித்திருக்கிறார்‌. மறைவுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முந்தியே அவர்‌, (இந்து! என்பது இந்நாட்டில்‌ வழங்கிவந்த புராதனச்‌ சொல்‌ அல்லவென்றும்‌ ; அன்னியர்கள்‌ சிந்து நதிக்‌ கரையில்‌ வாழ்ந்துவந்த மக்களை சிந்து? வென்று கூறியது, நாளடைவில்‌ திரிந்து ¢ வந்குவாகியது என்றும்‌ தெளிவாகக்‌ கூறியிருக்‌ கிறார்‌. அதேபோல்‌ ¢ இந்தியா? என்ற பெயரும்‌ தோன்றியிருக்கிற து ஆகவே, இந்தியா என்று இந்‌ நாட்டை அழைப்பதைக்‌ காட்டிலும்‌--சரித்திரம்‌ அறியாத பரதன்‌ பேரால்‌ பாரதபூமி? என்று இந்‌ நாட்டை அழைப்பதைக்‌ காட்டிலும்‌-- உலக மக்களால்‌ பெரிதும்‌ மதிக்கப்பட்டு வந்தவரும்‌, டாராட்டப்பட்டு, புகழப்பட்டு ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 தலைவர்கள்‌ 1029 வந்தவரும்‌, நாம்‌ நன்கு அறிந்தவருமான காந்தியார்‌ பேரால்‌ இந்‌ நாட்டை அழைப்பது மேலல்லவா? சந்துகளுக்கும்‌, பொந்துகளுக்கும்‌, கட்டடங்களுக்கும்‌, பூங்காக்களுக்கும்‌ இவர்‌ பெயரை இடுவதைக்‌ காட்டிலும்‌--இந்‌ நாட்டிற்கே இவர்‌ பெயரை இடுவது பொருத்த மல்லவா! * பார்க்கின்‌! பெயரையாவது அவ்வப்போது மாற்றிவிடலாம்‌) தேசத்தின்‌ பெயரைச்‌ சுலபமாக மாற்ற முடியாதே ! காந்தியாருக்கு ஆங்காங்கு சிலைகள்‌ ஏற்படுத்து வதைவிட, அவர்‌ பேரால்‌, அவர்‌ கொள்கைகளைக்‌ கொண்ட மதத்தை ஏற்படுதீ துவது மேலல்லவா? சிலைகளை எடுத்‌ துவிடலாம்‌) அல்லது, சிலைக்கு ஒரு அர்ச்சகராக உட்கார்ந்து கொண்டு சுலபமாக மக்களை ஏமாற்றிக்‌ கொள்ளையடிக்கலாம்‌. காந்தி தேசம்‌, காந்தி மதம்‌, சத்திய கடவுள்‌ இவற்றைச்‌ சுலபமாக அழிதீதுவிடமுடியாது. இன்று புத்தர்‌ சிலையை யாராவது மதித்துக்‌ கன்னத்தில்‌ போட்டுக்கொள்கிறார்களா? புத்தர்‌ கொள்கைகளை மதிக்காதவர்கள்‌ யாராவது இருக்கிறார்களா ! அகைப்‌ பாரீதீதேனும்‌ காந்தி சீடர்களும்‌, காந்தியார்‌ கொள்கை வாழ்வு வாழ்பவர்களூமான நீங்கள்‌ காந்தி மதத்தை உண்டாக்கப்‌ பாடுபடுங்கள்‌ | [திருவல்லிக்கேணி கடற்கரையில்‌, 7-3-1948-ல்‌ சொற்பொழிவு--* விடுதலை 3 11-3-1948) 7. காந்தியார்‌ மறைவுபற்றி தோழர்களே ! இன்று இந்த ஸ்தானதீதில்‌ இருக்கும்‌ நான்‌ முதலாவதாகப்‌ பேசவேண்டியது பெரியார்‌ காந்தியாரின்‌ மறைவுபற்றி--கொலைபந்றி. பேசவேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம்‌ அல்லாமல்‌ உண்மைப்படியும்‌, கடமைப்படியும்‌ பேச வேண்டியதாகும்‌. காந்தியார்‌ மறைவு திராவிட நாட்டுக்கும்‌, திராவிட மக்களுக்கும்‌ மகத்தான நட்டமும்‌, மாபெரும்‌ ஏமாற்றமடையத்தக்‌ க வாய்ப்புமாகும்‌. காந்தியார்‌ கொலை திராவிட மக்களின்‌ எல்லையற்ற ஆத்திரமும்‌, இரதீதக்‌ கொதிப்பும்‌, திடுக்கிடம்படியான விறுவிறுப்பையும்‌ கொள்ளத்தக்க காரியமாகும்‌. இதைச்‌ சொல்லுகிறபோது என்‌ மனம்‌ பதைக்கிறது) கை நடுங்குகிறது ] நர வறட்சியடைகிறது;) இதயம்‌ துடிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரை எப்படித்தான்‌ கொல்ல, இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனனுக்கு எண்ணம்‌ வந்தது, கை வந்தது என்பதை நினைத்தால்‌ இராமாயணக்‌ கதையில்வரும்‌ ஒரு இடம்தான்‌ சற்று அதை விளக்குகிறது. அதாவது, சம்புகன்‌ என்ற ஒரு சூதீதிரன்‌ பிரார்‌தீதனை (தபஸ்‌) செய்ததற்காக- * சூதீதிரனுக்குத்‌ தபசு செய்ய உரிமை இல்லை? என்கின்ற காரணங்‌ கற்பித்து பார்ப்பனர்‌: களின்‌ தூண்டுதலின்மேல்‌ இராமன்‌ என்கின்ற ஒரு ஆரியனால்‌ கண்டதுண்டமாக்கப்‌ பட்டான்‌ என்கின்ற இடம்தான்‌ இக்‌ கொலையின்‌ காரண தீதுக்குச்‌ சிறிது விளக்கதீதிற்குரிய தாகிறது. ஆகவே, காந்தியார்‌ கொலையானது, ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு புதிய சம்பவமல்ல என்பதும்‌ $ இது ஆரியர்‌-சூத்திரர்‌ (திராவிடர்‌), அல்லது ஆரியர்‌-ஆரிய ரல்லாதவர்‌ என்கின்ற னப்‌ போராட்ட முறை என்றும்‌) அதுவும்‌ இந்துமதப்‌ புராணதி ததீதுவங்களைப்‌ பின்பற்றியதுதான்‌ என்றும்‌ நிச்சயிக்க வேண்டியதாகிறது. ¢ காந்தியார்‌ சம்புக இனதீதாராகவும்‌, கொன்றவன்‌ இராமன்‌ இன தீதானாகவும்‌? இருந்ததுதான்‌ இக்‌ கொலைக்குக்‌ காரணமே ஒழிய--மற்றபடி தனிப்பட்ட மக்கள்மீதோ; தனிப்பட்ட குணங்கள்‌ மீதோ குறைகூறுவது பொருத்தமற்றதாகும்‌. காந்தியார்‌ மறைவை--நான்‌ ஏன்‌ திராவிட நாட்டுக்கு, திராவிட மக்களுக்கு எல்லை யற்ற நட்டம்‌ என்று சொல்லுகி3றன்‌ ₹ இப்படிச்‌ சொல்லுவதன்‌ மூலம்‌ ஏதாவது இலாபம்‌, நலம்‌ அடையலாமென்கிற சமயோசித புதீதியாலா 8 இல்ல3வ இல்லை ! ஒருக்காலும்‌ இல்லை! இப்போ த இப்படிச்‌ சொல்லுவதால்‌ எனக்கோ, நம்‌ கழகதீதுக்கோ எவ்வித நன்மையும்‌ ஏற்படாது $ நம்மவர்களி லயே சிலர்‌ என்னை வெறுக்கக்கூடும்‌; மற்றும்‌, ஒரு கூட்டத்தார்‌, அதுவும்‌ செல்வாக்குள்ள ஒரு கூட்டத்தாரின்‌ வெறுப்புக்குத்தான்‌ நரன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3026 1030 பெரியார்‌ ஈட, 'வெ. ரா. சிந்தனைகள்‌ ஆளாக நேரிடும். பின்னை ஏன் சொல்லுகின்றேன் என்றால், என்னைப் போலவே காந்தியாரும் தாம் ஒரு சூத்திரன்? என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டார்; இந்து மதம் திருத்தமுடியாதது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சிந்து நதியால் இந்தப் பெயர் ஏற்பட்ட தென்றும்; இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குக் கேடாக இருப்பது மத உணர்ச்சியே என்றும்; தீண்டாமை, அரிஜனன் என்பது இந்துமத உணர்ச்சி உள்ளவரை மாற்றம்டைய முடியாதது என்றும்;ஒரே கடவுள்தான் உண்டு—அது தான் அல்லா, கொட் (God) ராம் என்றும்;குரான் இந்துக்கள் படிப்பதற்குரியது என்றும், அதைப் பாராயணம் செய்ய வேண்டும் என்றும்; இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மிக்க தீங்கு இழைத்து விட்டார்கள் என்றும்;அவற்றைப் பரிகரிக்காமல் மேலும் ஒரு காரியம் செய்யத் தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் பச்சையாகக் கூற ஆரம்பித்து விட்டார். பார்ப்பனர் களின் உண்மையான தன்மையை நன்றாய் அறிந்து கொண்டார். தன் பெயரைச் சொல்லிப் பதவிக்கு வந்தவர்களையும், அவர்களின் அக்கிரமங்களை, கொள்ளை, எளையை, ஒழுக்க ஈனமான, நாணய ஈனமான காரியங்களை நன்றாய் தெரிந்துகொண்டார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தான் பல தவறுகள் செய்துவிட்டதாகவும், அவற்றிற்குப் பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம் என்றும் கருதிப் பரிகாரத்தில் பிரவேசித்தார். அப் பரிகாரமானது அவரால் நடைபெற்றே தீரும். அப்பொழுது திராவிடர் கழகக் கொள்கையும், திட்டமும்தான் இந்தியா முழுவதற்கும் ஏற்பட வேண்டியதாகும். நமக்கும் சட்டப்படி, சாஸ்திரப்படி, மதப்படி—சூத்திரப் பட்டம் ஒழியும்; நம் நாடும் பிரிந்து நமக்குக் கிடைக்கும்; இதில் சந்தேகமில்லை. காந்தியார் திடீரென்று தமது பழைய கருதீதுக்களிலிருந்து இப்படித் திரும்பியதற்குக் காரணம், பார்ப்பனர் தன்மையும், தனது முக்கிய சிஷ்யர்கள் யோக்கியதையும் அவருக்கு நன்றாய் விளங்கிவிட்டதுதான். அன்றியும்,இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்? என்றதிலிருந்தும், தானும் குரான் படித்துக்கொண்டு 'ராம்-ரஹீம்!(அல்லாஹ்) பஜனை செய்ததிலிருந்கும், மற்றவர் களையும் செய்யச் செய்ததிலிருந்தும்—சாதிமத சம்பந்தமாக அவர் அடைந்த மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன். தவிரவும், காந்தியார் விக்கிரக ஆராதனைக்கு மாத்திரம் குறை சொல்லாமல், கடவுள் என்பதை மனித உருவாக, வஸ்துவாக, ஒரு தனிப் பொருளாகக் கற்பித்துக்கொண்டு இருக்கிறவர் களுக்குப் படும்படியாக,'எனக்கு, கடவுள் ஒரு வஸ்துவாக—தனிப்பட்ட பொருளாக இருக்கிறது என்பதில் நம்பிக்கையில்லை?' ('I have no belief in personal God') என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சொல்லிவிட்டார். அதாவது, கடவுள் என்பதை நான் ஒரு செயலாக, சக்தியாகக் கருதுகிறேனே ஒழிய, ஒரு மனிதன் செய்கை போலவோ, ஒரு ஜீவன் செய்கை போலவோ கருதவில்லை என்பதாகச் சொல்லிவிட்டார். இதற்கு,'இயற்கை நடப்புதான் கடவுள்?' என்பது பொருளாகும். இந்த எண்ணம் அணு அளவாவது மக்களுக்குள் வருமேயானால், கோவில், விக்கிரகம், உண்டை கட்டி, படையல் அவைகளுக்குக் கலியாணம், உற்சவம் முதலியதான வழிகளில் பார்ப்பனர் பணம் பறிக்கும் தந்திரமும், சோம்பேறி வாழ்வும் அடியோடு நின்றுவிடும்.அப்புறம்'மேல் உலக-கீழ் உலக'பித்தலாட்டங்களும், அவற்றால் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் கொள்ளை வருவாய்களும் ஒழிந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனீயமே பட்டு அழிந்துவிடும். ஆகவே, நமக்கு மாத்திரம் அல்லாமல்இந்திய நாடு முழுவதுமே சமய, சமுதায த குறையில் ஏற்பட இருந்த புரட்சிகரமான அனேக மாறுதல்களதான் காந்தியார் பார்ப்பனரால் கொலை செய்யப்பட நேர்ந்ததற்குக் காரணம். அப்படிப்பட்ட மாறுதலை விரும்பும் நாம் அதற்காக மிக மிகத் துக்கமும் தயரமும் அடைகிறோம். [கர்தர்குரவிர் 8, 9-5-1948-ல் நடந்த 18-வது மாகாண தி.க. மாநாட்டில் தலைமை உரை—'குடி அரசு' 15-5-1948] www.thamizham.net - Freebook No. 3026 1031 8. காந்தியார் மாற்றமும், கொலையும் தோழர்களே!சுதந்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு, வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் திதிலிருந்து, காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டுவந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால், நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளையக்கூடும் என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ, அக் கேடுகள் விளைய நேரிட்டதை உணர்ந்து, காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்;அக் கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார்;அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார்;தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தாம் கருதிவந்தவர்களில் பெரும்பாலோரைப் பற்றி, நான் என்ன மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தேனோ அதேபோல அவரும், அவர்களைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தார்;சுருங்கக் கூறவேண்டுமானால், உண்மையை உணர ஆரம்பித்தார்;தாம் செய்த பல தவறுகளை உணர ஆரம்பித்தார்;அத் தவறுதல்களைத் திருத்திக்கொள்ளவும் ஆரம்பித்தார் என்று கூறலாம். அத் திருத்தங்களைச் செய்யப் புகுந்த தறுவாயில், தமது எண்ணங்களுக்கேற்பச் செயலாற்ற முற்பட்ட தறுவாயில், அவரது முற்போக்கு எண்ணங்களால் தமக்குக் கேடு சூழும் என்று அஞ்சிய சுயநல சோம்பேறிக் கூட்டத்தாரால் கொலை செய்யப்பட்டார், இதுதான் நமக்கு மனவேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட துர்மரணத்திற்கு மட்டும் அவர் ஆளாகாமல் இருந்திருப்பா ரேயானால், இதற்குள்ளாக இந்நாட்டில் எத்தனையே புரட்சிகரமான காரியங்களை அவர் செய்து இருப்பார். இன்று ஏற்பட்டுள்ள கொள்ளைகள், கொடுமைகள், பல அட்டூழியங்கள், அநீதிகள் இவற்றையெல்லாம் நிறுத்தி யிருப்பார்;அல்லது, அடியோடு நிறமுடியாவிட்டாலும், இவற்றிற்கெல்லாம் சரியான பரிகாரமாவது தேடியிருப்பார். குற்றம் பல கண்டதால் காங்கிரஸின் அமைப்பு முறையையே மாற்றியமைக்க ஆரம்பித்தார். நமது கொள்கைகளை நேர்முகமாக ஆதரிக்காவிட்டாலும், மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்;அதுவும், மறுபடியும் நான் அவருடைய சிஷ்யனாக ஆக வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆதரிக்க ஆரம்பித்தார். அப்படி நான் ஏங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கொல்லப்பட நேர்ந்ததுதான் எனக்கு அளவிடற்கரிய துக்கம் உண்டாகக் காரணமாயமைந்தது. அவர் நமது கொள்கையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார் என்பதற்குப் பல காரணங்கள் காட்டமுடியும் என்றாலும், உதாரணமாக ஒன்றிரண்டு காரணங்களை மட்டும் கங்கு கூற ஆசைப்படுகிறேன். 'காங்கிரஸ்காரர்கள் தமது தியாகத்திற்குக் கூலி கேட்க ஆரம்பித்து விட்டனர்; பதவி வேட்டை அவங்கிவிட்டனர்; காங்கிரஸ் சட்டசபை மெம்பர்கள் நீதி நிர்வாகத்தில் அடிக்கடி தலையிடுகின்றனர்!'என்றெல்லாம் குற்றம் கூறினார். இதையெல்லாம் தாமாகக் கூறுவது அழகாக இருக்காது என்று கருதி, தமது நம்பிக்கைக்கும் நன் மதிப்புக்குமுரிய தோழர் கொண்டா வெங்கடப்பையா அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை அப்படியே வெளியிட்டு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் யாவற்றையும் தாம் உண்மையென்றே நம்புவதாகவும், மேற்படி குற்றங்களுக்காக ஒவ்வொரு காங்கிரஸ் காரனும் அவமானப்படவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவைதான்—நான் காங்கிரஸ் பிரமுகர் களைப்பற்றி அடிக்கடி கூறிவந்த கருதீதுக்களாகும். இங்கு திராவிடர் கழகம் வலுப்பெற்று வருவது கண்டு பொறாமை கொண்ட சில பார்ப்பனர்கள் காந்தியாரிடம் காவடி தூக்கிச் சென்றனர். தென்னாட்டில் திராவிடர் கழகம் என்றொரு கழகம் வளர்ந்து வருகிறது என்றும், அதைக் கண்டு காங்கிரஸ் மந்திரிகளே பயப்படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் தம் மக்களுக்குப் பள்ளிக்கூடங்களில் படிக்க இடம் கிடைப்பதுகூட கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறினார்கள். அதைக் கேட்ட காந்தியார் கூறிய பதிலிலதான் நான் கூறிய மனமாற்றம் இருக்கிறது. கவனிக்கப்ட பாருங்கள்!'என்னருமை பிராமணத் தோழர்களே!நீங்கள் கடவுளோடு நேர்தொடர்பு வைத்துக்கொண்டுள்ளவர்களாயிற்றே! அதிலும் மகா புதிசாலிகளாயிற்றே! அப்படியிருக்க, உங்களுக்கு எதற்குப் படிப்பு வேண்டும்?கடவுளை நம்பி, சதா கடவுள் பணிசெய்து கொண்டிருங்களேன்!படியாத முட்டாள்களான அவர்களுக்கு (திராவிடர் களுக்கு) தானே படிப்பு அவசியம்! அவர்கள் படிக்கட்டுமே!உங்கள் பிள்ளைகளுக்கு இடமில்லாமற் போனால் வருத்தப்படாதீர்கள். உங்கள் விகிதாச்சார கடங்களைக்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக விட்டுக்கொடுத்து உதவுங்கள்!' என்று அவர் கூறினார். இதைத்தானே நாமும் இன்றுவரை கூறிவந்தோம். எனவேதான், அவரது மறைவால் நாம் வருத்தப்பட நேரிட்டதே ஒழிய, அவரது பெயரைச் சொல்லி உங்களது நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்தவே இவ்வளவும் கூற நேரிட்டது. [சிதம்பரத்தில், 29-9-1948- சொற்பொழிவு—'விடுதலை' 3-10-1948] 9. காந்தியே காரணம் தோழர்களே!காந்திதான் நமது நாட்டை வடநாட்டுக்குக் கொடுத்தும், பார்ப்பனுக்குமுக்கு ஒப்படைத்து, நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்கு சாஸ்திரம் புராணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுபோல்—நாட்டுப் பிரிவினைக்குக் காந்தி ஒழிய வேண்டும். நம் மக்களும் மற்ற மக்களும் பாடுபட்டு மக்கள் பலம் ஏற்பட்ட பிறகும், வெள்ளைக் காரன் தன் அவசியத்தை முன்னிட்டும் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததால், காந்தி கையில் நாட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான், வெள்ளையன். நாங்கள் அந்தக் காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்சி 'ரிকொக்னைஸ்ட் பார்ட்டி' என்பது சர்க்காருக்கு நன்றாகத் தெரியும், சட்டசபை, பார்லிமெண்ட் வரை திறமை, நாணயம் நன்றாகத் தெரியும். இந்த ஒரு நாட்டை முன்னிட்டு அவர்கள் பிரிவினை செய்தால், அவர்களுக்கு மேலும் பல நாட்டுத் தொல்லை வந்து சேரும். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது மாத்திரம் அல்ல, தங்கள் காரியமும் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்குப் பல பேர்களிடம் ஒப்படைத்தால் தங்கள் காரியம் ஆகாது என்று எண்ணினார்கள், வெள்ளையர்கள். ஆகவே, தங்களுக்கு ஒப்பந்தமாக இருந்து, தங்கள் நாட்டுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக்கொள்ள ஒரே ஆளாக இருந்தால் நல்லது என்று எண்ணினார்கள். அதற்கு, இந்த காந்திதான் உதவியாக இருந்தார். ஆகவே, அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள், வெள்ளையர்கள். இப்போது ஒவ்வொரு அன்னிய நாட்டுக்கும் சுரண்ட உதவிக்கு ஒவ்வொரு நாடு வேண்டியதாக இருக்கிறது. இதில் ஒன்றும் இரகசியமில்லை. இன்று பாகிஸ்தানுக்கு அமெரிக்கா வேண்டியவள்; இந்தியாவுக்கு பிரிட்டன் அந்தரங்கத்தில் நண்பன். தங்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆபத்து வந்துவிடாமல் இருக்கவே வெள்ளைக்காரர்கள் காந்தியிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு அவரிடம் நாட்டை ஒப்படைத்தார்கள். ஒப்படைக்கும்போது நீதி சொல்லிவிட்டு—அதாவது இன்னின்ன மாதிரி சட்டம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.பர்மாவில் 1954 நவம்பரில் நடைபெற்ற'உலக பவுத்த மாநாட்டில்'பங்கு பெற்றபோது டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களுடன்: பெரியார் ஈ.வெ. ரா. அவர்கள் (39-12-1954) தலைவர்கள் 1038 அவர்கள் போகிறவரையில் ஆமாம் போட்டுவிட்டு—அவர்கள் போனதும், உடனே வடநாட்டுக்குச் சாதகமாக அரசியல் சட்டம் செய்துகொண்டுவிட்டார்கள். காந்திக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தவன் வடநாட்டான்;மனிதனுக்கு மேற்பட்ட தெய்வீக சக்தியுடையவர் என்று விளம்பரம் செய்தவன் பார்ப்பான். ஆகவே, அவர்கள் இருவருக்கும் எது சரியோ அந்தப்படி நடக்க காந்தி ஒப்புக்கொண்டுவிட்டார். [சேலத்தில், 16-8-1957-ல் சொற்பொழிவு—'விடுதலை' 22-8-1957] 10. டாக்டர் அம்பேத்கார் தலைவர்களே! তோழர்களே! 1925ஆம் வருஷத்தில் இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்த நாட்டிலே மதத்தை எதிர்த்து, மற்ற பேதங்களை எதிர்த்துக் காரியம் செய்வதென்றால், அவ்வளவு கஷ்டமல்ல; மக்களுக்குள் நீண்ட நாளாகவே அந்த உணர்ச்சி இருந்துவந்திருக்கிறது என்பதால். ஆனால், வடநாட்டில் அப்படியல்ல. வடநாட்டில் இருக்கிற இந்த பேதத்தைப்பற்றி, இழிசாதித் தன்மையைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சூத்திரன், பஞ்சமன் என்றால் ஏதோ'திவான் பகதூர்', 'ராவ் பகதூர்' பட்டம் என்பது போன்ற பட்டம் என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிற மக்கள் வாழும் நாடு அது. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆன ஆனால்‌, அங்கேயே 1927, 1928-லேயே அம்பேத்கார்‌. சுயமரியாதைக்‌ கொள்கைகளைப்‌ பேசியிருக்கிறார்‌. நாசிக்கில்‌ கூடிய ஒரு மாநாட்டிலே இராமாயணத்தைப்‌ போட்டுக்‌ கொளுதீதியிருக்‌ றொர்‌. 1930-லை என்று நினைக்கிறேன்‌ * தாழ்த்தப்பட்ட மகீகள்‌ இநீது மதத்திலே இருப்பது தவறு) இந்து மதந்தான்‌ அவர்களைத்‌ காழ்தீதப்பட்ட வர்களாக்கியது? என்பதாகச்‌ சொல்லி, ¢ அனைவரும்‌ முஸ்லிம்‌ ஆகவேண்டும்‌ ) நானும்‌ முஸ்லிம்‌ ஆகப்போகிறேன்‌ ? என்று அவர்‌ சொன்னார்‌. எவ்வளவோ பெரிய பெரிய ஆட்க ளெல்லாம்‌ அதைக்‌ கண்டித்தார்கள்‌. மாளவியா, விஜயராகவாச்சாரியார்‌ போன்றவர்க ளெல்லாம்‌, ¢ அம்பேத்கார்‌ அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும்‌ பரிசீலனை செய்‌ யுங்கள்‌? என்பதாகத்‌ தந்தி கொடுதீதார்கள்‌. அப்போது தோழர்‌ அம்பேத்கார்‌ அவர்களுக்கு நானும்‌ ஒரு தந்தி கொடுத்தேன்‌. என்னவென்றால்‌, ¢ நீங்கள்‌ ஒண்டியாகப்‌ (தனியாகப்‌) போகக்கூடாது ; குறைந்தது ஓர்‌ இலட்சம்‌ பேரோடு மதம்‌ மாறவேண்டும்‌ ) அப்போதுதான்‌ முஸ்லிமும்‌ மதிப்பான்‌. இல்லா விட்டால்‌, தனியாக அங்கு போனால்‌ அவனும்‌ நம்மைக்‌ கவனிக்கமாட்டான்‌. உங்கள்‌ தாழ்த்தப்பட்ட இனம்‌ நசுக்கப்பட்டுக்கொண்டுதான்‌ இருக்கும்‌. முஸ்லிம்‌ ஆஃவிட்டால்‌ இந்துமதத்தின்‌ இழிவுபற்றி நீங்கள்‌ பேசினால்‌, முஸ்லிம்‌ இந்துமதத்தைப்பற்றிப்‌ பேசுவதா ¥ என்பதாகக்‌ கிளப்பிவிடுவார்கள்‌. ஆகையால்‌, ஒரு இலட்சம்‌ பேரோடு தாங்கள்‌ போகும்போது நானும்‌ ஒரு 10, 20 ஆயிரம்‌ பேர்கள்‌ தருகிறேன்‌? என்பதாகத்‌ தந்தி கொடுத்தேன்‌. அதற்கப்புறநீதானே--பயந் துகொண்டு, ஆதித்‌ திராவிட மக்களுக்கு காங்கிரஸ்காரர்‌ களும்‌ ஏதோ நன்மை செய்வதாக வந்தார்கள்‌ ! *மதம்‌ மாறுவேன்‌ ? என்று மிரட்டிய தோழர்‌ அம்பேத்கார்‌ அவரகள்‌ ஆதித்‌ திராவிட மக்களுக்குப்‌ பெரும்‌ அளவுக்கு நன்மை செய்து கொடுதீதிருக்கிறார்‌. உள்ளபடி சொல்லுகிறேன்‌, இந்துக்கள்‌. யாரிடமாவது வசமாக மாட்டினார்கள்‌ என்றால்‌, அது தோழர்‌ ஜின்னா அவர்களிடமும்‌, தோழர்‌ அம்பேத்கார்‌ அவர்களிடமும்தான்‌, தோழர்‌ ஜின்னாவிடமிருநீது விடுதலை பெற்றுவிட்டார்கள்‌ ) ஆனால்‌ அம்பேதீகாரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை) அவர்‌ அடிக்கடி ஓங்கி அடித்துக்‌ கொண்டேயிருக்கிறார்‌. 1686--130 www.thamizham.net - Free £ book No 3026 1034 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இன்னும்‌, தோழர்‌ அம்பேத்கார்‌ அவர்களின்‌ தைரியதீதுகீகு ஒரு உதாரணம்‌ சொல்லு கிறேன்‌, இலண்டனில்‌ காந்தியார்‌, ¢ நான்‌ இந்திய மக்களின்‌ பிரதிநிதியாக வந்திருக்கிறேன்‌! என்று சொன்னபோது, ¢ நீங்கள்‌ எங்கள்‌ இன தீதின்‌ பிரதிநிதியல்ல? என்று அம்பேத்தார்‌ அவர்கள்‌ சொன்னார்‌. காந்தியார்‌ திரும்பவும்‌, ¢ இந்திய மக்களின்‌ பிரதிநிதியாக வந்திருக்‌ கிறேன்‌ ? என்று சொன்னவுடன்‌, அம்பேத்கார்‌ அவர்கள்‌, * பத்துத்‌ தடவை சொல்லுகிறேன்‌, நீங்கள்‌ எங்கள்‌ பிரதிநிதி அல்ல என்று; திரும்பத்திரும்ப வெட்கமிஃலாமல்‌ பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள்‌ ) நீங்கள்‌ உங்களுடைய மகாதீமா பட்டத்தைத்‌ துஷ்பிரயோகம்‌ செய்‌ கிறீர்கள்‌? என்பதாகச்‌ சொன்னார்‌. காந்தியார்‌ பேசாமல்‌ உட்கார்‌ நீ துவிட்டார்‌. பின்பு, இந்‌ நாட்டுப்‌ பத்திரிகைகள்‌ அம்பேத்காரைக்‌ கண்டபடி தாக்கின. ஆனால்‌, அவர்‌ எதைப்‌ பற்றிக்‌ கவலைப்படவில்லை. அவருடைய தைரியதீதிற்கு இன்னொரு உதாரணம்‌ சொல்லுகிறேன்‌. அவர்‌ மந்திரியாக இருக்கும்போது ஒருதடவை சென்னைக்கு வந்திருந்தார்‌. அப்போது ஒரு கூட்டத்தில்‌ பேசும்போது, ¢ கீ தை-முட்டாள்களின்‌ பிதற்றல்‌! என்று சொன்னார்‌. கீதைக்கு இந்த நாட்டில்‌ எவ்வளவு விளம்பரம்‌ இருக்கிறது என்று உங்களுக்குத்‌ தெரியும்‌. காந்தியாரி லிருநீகுட ஆச்சாரியாரிலிருந்.து--பெரிய பெரிய அய்க்‌3 கார்ட்‌ ஜட்ஜுகள்‌, இன்னும்‌ பெரிய மனிதர்கள்‌ என்பவர்களெல்லாம்‌ கீதையைப்‌ புகழ்வதே வேலையாகக்‌ கொண்டிருக்கிறார்‌ கள்‌. அதுமட்டுமல்ல) கீதைக்கு வியாக்கியானம்‌ கூறுவது, கீதையை ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம்‌ என்பதாக இந்த நாட்டில்‌ இருக்கிறது. அஃபடிப்பட்ட பெரும்‌ விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, * முட்டாள்‌ களின்‌: பிதற்றல்‌? எண்று அம்பேத்கார்‌ சொன்னார்‌. முட்டாள்களுடையது என்றாலே மோசம்‌] அதிலும்‌ அந்த முட்டாள்‌ களுடைய பிதற்றல்‌ என்று கீதையை மிகவும்‌ இழிவுபடுத்திகீ கூறினார்‌. யார்யாரை இதுபோம்ப்‌ பாதிக்கிறது பாருங்கள்‌ ! அவர்‌ அந்தப்படி பேசியபின்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ அவ நடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும்‌ சொல்லாமல்‌, 6 ஒரு மந்திரியாய்‌ கிருப்பவர்‌ இப்படியெல்லாம்‌ பேசலாமா 1 என்று எழுதின. அவ்வளவு தான்‌ அவைகளால்‌ முடியுமே தவிர, அவர்‌ சொல்லுவதை எப்படி எந்த ஆதாரதீதின்மீது மறுக்கமுடியும்‌ 8 டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்கள்‌ இப்போது கொஞ்ச நாட்களாக பவுத்தக்‌ கொள்கையில்‌ சேரப்போவதாகச்‌ சொல்லிவருகிறார்‌. உண்மையில்‌ பவுத்தம்‌ ஒரு உயர்‌ ந்த மார்க்கமாகும்‌, அது ஆரியத்தை-அதன்‌ கலாச்சாரதீதைக்‌ கண்டிப்பதற்கு என்றே எழுந்ததாகும்‌. ஆரியத்தின்‌ சாதிட்பிரிவையும்‌, வேத, புராண, இதிகாசத்தைப்பற்றியும்‌ பவுத்தம்‌ கண்டிக்கிறது) அவைகளை ஒதீதுக்கொள்வதில்லை. அதே மாதிரி, பவுத்தம்‌ கடவுள்‌ என்பதாக ஒன்றைப்பற்றிக்‌ கவலைப்படுவதில்லை. அதுபோலவேதான்‌ ¢ ஆத்மா? என்பதாக ஒன்று இல்லை என்று சொல்லி, ¢ ஆதீமா'வை மறுத்திருக்கிறதுஃ அம்பேத்கார்‌ பவுதீததீதில்‌ சேருகி2 றன்‌ என்று சொன்னவுடன்‌, எப்போதும்‌ போலப்‌ பலர்‌ எதிர்த்தார்கள்‌. ஆனாலும்‌, இஸ்லாம்‌ ஆவது என்றால்‌ பயப்படுகிற அளவுக்கு பவுத்தர்‌ ஆகிவிடூவது என்று சொல்லுவதற்கு, இந்துமதத்தார்கள்‌ (பார்ப்பனர்கள்‌) பயப்பட, மாட்டார்கள்‌. ஏனென்றால்‌, பவுதீதத்தை கிந்‌துமதத்தோடு ஏறக்குறையக்‌ கலரவைதீது விட்டார்கள்‌. [சென்னையில்‌ 13-5-1952-ல்‌ சொற்பொழிவு--! விடுதலை ? 16-5-1952] தலைவரவர்களே ! தோழர்களே ! மறைந்த பாபாசாகிப்‌ டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்களும்‌ நானும்‌ நெடுநாட்களாக நண்பர்கள்‌ என்பது மாத்திரமல்ல $ பல விஷயங்களில்‌ எனது கருதீ ஆம்‌ அவரது கருத்தும்‌ ஒரே மாதிரியாகத்தான்‌ இருக்கும்‌. www.thamizham.net - Free £ book No 3026 தலைவர்கள்‌ 1035 சாதி ஒழிப்பு என்ற விஷயதீதில்‌ மாதீதிர?ம நாங்கள்‌ ஒதித கருதி.துடையவர்கள்‌: என்பது அல்ல. கிந்துமதம்‌, இந்து சாஸ்திரங்கள்‌, இந்துக்‌ கடவுள்கள்‌, தேவர்கள்‌ என்ப வர்கள்பற்றிய--இந்துமதப்‌ புராணங்கள்‌ இவைகளைக்‌ குறித்தும்கூட எங்கள்‌ இரண்டு பேர்களின்‌ கருத்தும்‌ ஒரே மாதிரியாகத்தான்‌ இருக்கும்‌. அதுமட்டுமல்ல, அவைகளைப்‌ பற்றி நான்‌ எவ்வளவு உறுதியாகவும்‌ பலமாகவும்‌ எனது அப்பிராயங்களைக்‌ கொண்டிருக்‌ றனோ அவ்வாறுதான்‌ அவரும்‌ மிகவும்‌ உறுதியாகவும்‌ பலமாகவும்‌ இலட்சியங்களைக்‌ கடைப்பிடி தீதார்‌. உதாரணமாக, பார்ப்பனர்‌ போற்றிப்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ கீத என்‌ பதை, ¢ முட்டாளின்‌ உளறல்‌ ? என்று சொன்னவர்‌ டாக்டர்‌ அம்‌ 3பதீகார்‌ | இப்படிச்‌ சில விஷயங்களில்‌ மாதீதிரமல்ல) பல விஷயங்களில்‌ டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்கள்‌ எந்த அபிப்பிராயத்தைக்‌ கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்‌ தான்‌ எனக்கும்‌ இருந்துவந்தது. பல விஷயங்களில்‌ நாங்கள்‌ ஒருவருக்கொருவர்‌ கலந்‌ துகொள்ளாமலே3ய- அந்தப்படி அபிப்பிராயம்‌ கொண்டவர்களாக இருந்துவந்தோம்‌. சந்தர்ப்பம்‌ கிடைத்த போது நானும்‌ அவரும்‌ எங்கள்‌ கிருவருடைய எண்ணங்களையும்‌, கருதீதுக்களையும்‌ பரிமாறிக்கொள்வதும்‌ உண்டு. உதாரணமாக; பர்மாவில்‌ நடந்த உலக பவுதீதரீகள்‌ மாநாட்டில்‌ கலந்துகொள்ள நாங்கன்‌ போயிருந்தபோது அம்பேத்கார்‌ அவர்கள்‌ என்னைப்‌ பார்‌ தீது, என்ன இராம சாமி, நாம்‌ இப்படிப்‌ பேசிக்கொண்டே இருப்பதால்‌ என்ன பலன்‌ ஏற்பட முடியும்‌ 7 வாருங்கள்‌, நாம்‌ இரண்டு பேரப்‌ புத்தமததீதில்‌ சேர்ந்‌ துவிடவோம்‌ ! என்றார்‌. நான்‌: சொன்னேன்‌; ¢ ரொம்ப சரி; இப்போது முதலில்‌ நீங்கள்‌ சேருங்கள்‌) நான்‌ இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால்‌, தமிழ்நாட்டில்‌ நான்‌ இப்போது சாதி ஒழிப்பைப்பற்றித்‌ தீவிரமாகப்‌ பிரசீசாரம்‌ செய்துவருகிறேன்‌. இந்துக்‌ கடவுள்கள்‌ எனப்படும்‌ விநாயகர்‌, இராமன்‌ சிலைகளை உடைத்தும்‌, படங்களை எரித்தும்‌, இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப்பற்றியும்‌ மக்களிடம்‌ எடுத்துச்சொல்லி இப்போது பிரச்சாரம்‌ செய்வதுபோல்‌ அப்புறம்‌ நான்‌ செய்யமுடியாது) ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப்‌ பேசுவதனால்‌ என்னை யாரும்‌, ¢ நீ அதைச்‌ சொல்லக்கூடாது? என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால்‌, நான்‌ ¢ இன்னொரு மதகீகாரணாக? இருந்தால்‌ அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்கமுடியாது. ஆகவே, நான்‌ வெளியிலிருந்து கொண்டு புத்த மார்க்கத்தைப்‌ பிரச்சாரம்‌ செய்துவருகிறேன்‌ ! என்பதாகச்‌ சொன்னேன்‌. என்‌ பிரச்சார தீதில்‌ சாதி ஒழிய2வண்டுமென்று மாதீதிரம்‌ நான்‌ சொல்லிவரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான சாதி, மதம்‌-ஆகாரம்‌ ஒழியவேண்டும்‌ என்றுதான்‌ நானும்‌ சொல்லி வரு றேன்‌ ] அவரும்‌ அப்படித்தான்‌ சொன்னார்‌. டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்கள்‌ புதீத மார்க்கத்தில்‌ சேரும்போது என்னென்ன பிரமாணம்‌ எடுத்துப்‌ படித்தாரோ, [கிராமனையும்‌, கிருஷ்ணனையும்‌ கடவுள்களாக வணங்க மாட்டேன்‌ என்பன போன்‌ றவைகள்‌] அவைகளைதீதான்‌ நான்‌ கூறுகிறேன்‌. அதன்படி தான்‌ எங்கள்‌ நாட்டில்‌ பதீதாயிரக்‌ கணக்கான மக்கள்‌ இராமனையும்‌ பிள்ளையாரையும்‌ கொளுத்தினார்கள்‌ ; உடைத்தார்கள்‌. இந்தப்‌ பிரமாணத்தில்‌ உள்ள பல விஷயங்கள்‌ எனக்குப்‌ பல வருடங்களுக்கு முன்பே தோன்றிதீதான்‌, அவைகளை நாங்கள்‌ பிரச்சார மாகச்‌ செய்து வருகிறோம்‌, இதைப்‌ படிதீதுவிட்டு நான்‌ செல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படி தீதான்‌ அபிப்பிராயம்‌ தோன்றியது. [டெல்லி பகார்கஞ்சில்‌, 15-2-1959- சொற்பொழிவு--* விடுதலை? 22.2-1959) டாக்டர்‌ அம்பேத்கார்‌ அவர்களுக்குச்‌ சமமாக இந்தியாவில்‌ யாரையும்‌ சொல்ல. முடியாது. இன்றுமட்டுமல்ல $ முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான்‌ கூறிமிகுக றேன்‌. 1930 முதலே எனக்கு அவரைத்‌ தெரியும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3026 1036 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ நமது குடிஅரசில் அவரைப்பற்றிப் ₹ குடிஅரசு ? ஏட்டில்‌ என்னென்ன கருதீதுக்கள்‌ வருமோ அவைகளை எல்லாம்‌ அவர்‌ பேசி இருக்கின்றார்‌. நமக்கு ஏற்ற நண்பர்‌ என்பதை எண்ணி அவரை நான்‌ பாராட்டிவந்தேன்‌. நமது குடி அரசி?ல்‌ அவரைப்‌ பற்றிப்‌ பாராட்டி எழுதியதைப்பார்த்திருந்தான். தாழ்த்தப்பட்டவர்களே அவரை உணர்ந்தார்கள். டாக்டர் அம்பேதீகார் ஆரம்பத்தில் இந்து மதத்தை ஏதாவது திருத்தலாமா என்று எண்ணினார்;பிறகு அதனை திருத்தமுடியாது—அதனை ஒழித்தால் ஒழிய வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். [சென்னையில், 29-5-1972-ல் சொற்பொழிவு—விடுதலை 29-6-1972] 11. இராஜாஜி நாட்டில் அரசியலில் ஆகட்டும், பொது வாழ்வில் ஆகட்டும் (பெருவாரி மக்களால் பாராட்டப்படும்) பெரிய மனிதர் என் பதற்கு ஒரு நபர் கூட இல்லாமல் போய்விட்டார்கள்!இந்த நிலைமையை நாட்டின் பொதுவளர்ச்சிக்கு ஒரு உதாரணம் என்று சொல்லலாம். என்றாலும், அரசியல் வாழ்வில் நமது நாட்டில் பெரியவராகத் தன்னைக் காட்டிக் கொண்டும், தனது இன மக்களால் விளம்பரம் செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் பெரியவர் உயர்திக. இராஜாஜி (ஐரோ.கோபாலாசாரியார்) அவர் கன் ஒரு பெரியவர் என்பதாக இருந்து வருகிறார். அவரைத் தவிர் தீது மற்றொரு விரலை நீட்ட நபரே இல்லை என்று சொல்லுகிறார்கள். என்றாலும், அவரை ஒரு பெரிய மனிதன் என்று சொல்லுவதற்கு அவருடைய வயதைத் தவிர வேறு ஏதாவது தன்மை இருக்கிறதா என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்றாலும், அவரிடம் பொதுத் தொண்டு என்பதாக நேர்மையான தொண்டோ, குணமோ, தன்மையோ எதுவுமில்லை. அவரும் அதைப்பற்றி இலட்சியம் செய்யவில்லை. அவரிடமிருக்கும் தொண்டின் தன்மையெல்லாம்—முதலாவது அவருடைய சமுதாய எதிரிகளை ஒழிக்க வேண்டும்; தமது சமுதாயம் ஒன்றே உயர் நிலையில் வாழவேண்டும் என்ற தன்மையையுடைய தொண்டு ஒன்றுதான் அவரிடம் இருக்கின்றது. இதற்காக அவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. என்னவென்றால் உண்மை, யோக்கியம், நேர்மை, நாணயம், மானம் முதலிய உயிர்போன்ற அருங் குணங்களை எல்லாம் வெகு எளிதில் தியாகம் செய்து விட்டார். தன்னைப்பற்றி மக்கள் என்ன சொல்லுகின்றார்கள், எப்படிக் கருதுகின்றார்கள் என்பது பற்றி இலட்சியம் செய்வது என்பதைச் சிந்திப்பதையே அடியோடு தியாகம் செய்துவிட்டார். இந்தத் தியாகம் சுயநலத்திற்காகவே அல்ல; தமது சமுதாயத்திற்காகவே ஆகும். என்றாலும், செல்வத்தைச் சேர்ப்பதில் மாறு மாறுக்குவிருந்து செல்வங்கள் வெகு பிடிமானமாக இருந்து வளர்ந்துகொண்டே வருகிறார். இந்த இலட்சணத்தோடு இப்போது அவரது தொண்டெல்லாம்—அவரது சமுதாயத்தின் எதிரிகளாகிய நமது சமுதாயத்தை அழித்து ஒழித்துக் கட்டுவது என்பதுதான். இந்தக் காரியத்திற்கு இன்றைய நிலையில் மேற்கண்ட தியாகங்களை எல்லாம் செய்தாக வேண்டும் என்பதாகக் கருதி, துணிந்து செய்துவிட முனைந்து இருக்கிறார். எனக்கு அவரைச் சற்றேறக் குறிப்பாய் 1910-லிருந்தே தெரியும். 1917-ல் நான் ஈரோடு முனிசிபல் சேர்மன்,அவர் சேலத்தில் சேர்மன், அதற்கு முன்னால் அவர் வக்கீலாக இருக்கும்போது முதலே சமுதாய சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவார். www.thamizham.net - Free £ book No 3026C. RAJAGOPALACHARI 60, BAZLULLAN EDU TYAGAMAYANAGAR MADRAS 17 g 1 8.64 ர க ெதவயும்‌ பெரயாடூம்‌ ளாக வின்பார்ந்த சகிரிகள்‌/ எண்‌ ஙண்பஸ்‌ 6ம்‌ ஆண்‌டு றந்த நாளன்து கண்‌ WG58 க்களை பயா அன்புடன்‌ பற்றுக்‌ ககானவார்‌ களாக இக்கல்‌ 2 : : ைை00000000060600006060604 www.thamizham.net - Free £ book 14௦ 3026 am.net - Free E book No 3026 _ தலைவர்கள்‌ 1037 அப்போது அவருக்குள்ள தனிப்பெருமை, சம பந்தி போஜனங்களில் கலந்துகொள்வது தான், அன்றைக்கு (50, 60 ஆண்டுகளுக்கு முன்) அது பெரிய யோக்கியதாம் சமாக இருந்தது. மேற்கண்ட தன்மைகளால் எங்களுக்குள் நட்பு உரிமை வளர்ந்தது. அரசியலில் காங்கிரசிலும் கலந்தோம்; அவர் விஷ்டப்படி காங்கிரசுக்கு அவரைப்போலவே முழு நேரத் தொண்டனானேன்;பிறகு இருவரும் அதீத்யத்த நண்பர்களானோம்; அனேக இரகசியங்களைத் தைரியமாய் மனம்விட்டுப் பேசிக்கொள்வோம். இருவரும் சேர் நீது காந்தியாரின் முட்டாள்தனங்களையும், பிழைத்தலாட்டங்களையும் பற்றிப் பேசுவோம். காந்தியார் புத்திசாலித் தன்மையையும், இராஜாஜியின் புத்திசாலித் தன்மையையும் பற்றி சங்கோஜம் இல்லாமல், பயம் இல்லாமல் அவரும் நானும் பேசுவோம். அவர் என்னைப்பற்றி,"அதிசயமான யோக்கியர்"என்று கருதிப் பேசி இருக்கிறார். நானும் அவரைப்பற்றி, "என் ஆயுள் உள்ளவரையிலும் அவரைத் தலைவராகக்கொண்டு நடப்பது" என்றும் முடிவு பண்ணிக்கொண்டு பேசி இருக்கிறேன். ஜனங்களும் பெரிதும் அவரை அப்படிக் கருதினார்கள். சர்.பி. தியாகராசச் செட்டியாரே,"பார்ப்பனர் எல்லோரும் இராஜூ கோபாலாசாரியார்போல் இருந்தால், பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தேவையில்லை!" என்று பேசியிருக்கிறார். அவர் வேஷத்திற்காக அப்படி நடக்கவில்லை;நானும் உண்மையாகவேதான் நடந்துகொண்டேன். பிறகு எங்களுக்கு உண்மையாகவே சாதி அபிமானம் ஏற்பட்டுவிட்டது. அவர் பார்ப்பனர் நன்மையையே எல்லாக் காரியத்திலும் பேசிலும் கருதுதாய்க் கொண்டார்;நானும் பார்ப்பனரல்லாதார் நன்மையையே கருதுதாய்க் கொண்டு நடந்துவந்தேன். இந்த எங்கள் இருவரின் கருதுக்களுதான் நம் நாட்டின் அரசியல், சமுதாயியல்—ததுவமாக, தொண்டாக, கட்சியாக, மக்கள் கடமையாக நடந்து வருகின்றன. இதில் நியாயம், மறுக்கக்கூடாத தன்மை நம் மிடமிருப்பதால், இராஜாஜி ஓர் அடாவடிப் போக்கில் நடந்துகொள்கிறார். இத்த நடப்புக்குதான் இராஜாஜி சகலதையும் பரித் தியாகம் செய்ய வேண்டியவராகி விட்டார். எப்படி என்றால், நாடகத்தில் ஒரு விபச்சாரி (தாசி) பதிவிரதை வேடம் போட்டால் ஒரு குடும்பப் பெண் எப்படி நடந்துகொள்வாளோ அதுபோல் தனது இலட்சியத்தில் நடந்துகொள்கிறார். இதில் அவருக்கு வெட்கமோ, அவமானமோ, பழிக்கு ஆளாகவேண்டிய தன்மையோ ஏற்பட அவசியமோ இல்லை. என்ன செய்தாவது நம்மை ஒழிக்க வேண்டியதுதான் அவரது தலையாய கடமை. ஆகவே, இராஜாஜிக்கு என்னதான்"புகழ்" இருந்தாலும், அவரைப் பெரியவர் என்று நாம் கருதினால்— பிறர் கருத இடங்கொடுத்தால் நமக்கு அழிவு நெருங்கிவிடும். [விடுதலை—தலையங்கம்—15-11-1972] இராஜாஜி—காங்கிரஸ் ஆட்சியில், பொதுமக்கள் 100-க்கு 7 பேர் படித்திருக்கும் நாட்டில், சுமார் 6000 பள்ளிக்கூடம் உள்ள நாட்டில் 2200 பள்ளிகளை மூடின யோக்கியர் தான் இவர்!1952-ல் மெஜாரிட்டி இல்லாமல் பதவியில் வந்து உட்கார்ந்துகொண்டு 100-க்கு 15 பேர் படித்திருக்கும் நாடான நம் நாட்டில் 12,000 பள்ளிகள் இருந்ததில் 6000 பள்ளிகளை மூட—அதுவும், "மாணவர்கள் ஒரு வேளைதான் படிக்க வேண்டும்; மறு வேளை சாதித் தொழில் செய்யவேண்டும்" என்று உத்தரவு போட்டு, அதனால் அரசியல் வாழ்விலிலிருந்தே வெளி நீறப்பட்டவர்தானே இவர்!இவரது அரசியல் நாணயத்தை எடுத்துக்கொண்டாலும்,"மாதம் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம்" என்று கட்சிக் கொள்கையைச் செய்துகொண்டு அதனால் பதவிக்கு வந்து, மாதம் 20,000 ரூபாய் சம்பளம் வாங்கிப் பல இலட்ச ரூபாய் சொத்துக்காரராக இருக்கும் தியாகிதானே இவர்! இவர் அரசியல், சமுதாய வாழ்வில் எதில் நேர்மையாய், யோக்கியமாய் நடந்துகொண்டிருக்கிறார்!இவர் வந்து பொதுமக்களுக்குஅறிவு சொல்ல, இவருக்கு எதில் என்ன யோக்கியதை இருக்கிறது? அயோக்கியத்தனமான பத்திரிகைகளின் ஆதரவு இருக்கிறது என்பதாலும், தன்னிடம் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதாலும் ஒரு மனிதன் எந்த அயோக்கியத்தன தையும் செய்யலாமா? செய்தாலும் மடையனும், அயோக்கியனும், துரோகிப் பயல்களுமாக இருக்கும் மக்கள்தாம் சரி என்று சொல்வார்கள்;யோக்கியர்கள் இழிதையாகதான் கூறுவார்கள். ஏன் இவ்வளவு வேதனைப் பட்டு எழுதுகிறேன் என்றால், கருணாநிதி ஆட்சி விலகிவிட வேண்டும்; அல்லது விலக்கப்பட வேண்டும்! என்று அவர் சொன்னால், அப்படிச் சொல்லும் கருத்தையும் தெரிந்தால் மனம் பதறுமா, பதறாதா? அயோக்கியத்தன தையில் எல்லை இல்லையென்றால், மனித சமுதாய நல்வாழ்வில் அக்கறை கொண்டவர் களுக்கு மனம் பதறாதா, வெடிக்காதா என்றுதான் கூறுகிறேன். எனவே மக்களே, நீங்கள் அவற்றை மதிக்க மாட்டீர்கள் என்று இருந்தாலும் உங்கள் வெறுப்பை அவர்களுக்குக் காட்டுங்கள் என்று வேண்டி இதை முடிக்கிறேன். [விடுதலை—தலையங்கம்—16-11-1972] 42. பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப்பற்றித் தெளிவாகப் பேசவேண்டுமானால் பகுத்தறிவுக்கு ஊட்டத்தில் தான் பேசமுடியும். அப்படிக்கில்லாது கடவுள், மதம், மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்ட இடத்தில் பேசுவதென்றால் வழவழாக கொழகொழாவென்றுதான் பேச வேண்டிவரும். பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு அடுத்து அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் தோன்றவே இல்லை. தோன்றியவர்களும் தோன்றுகிறவர்களும் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தான் ஆகும். இன்றைக்கு நம் நாட்டில் இவரோடு குறிப்பிடத்தக்க வேறு புலவர்கள் இருந்தார்கள் என்றோ, இருக்கின்றார்கள் என்றோ சொல்லுவதற்கு இல்லை. நமது தமிழ்ப் புலவர்கள் வள்ளுவரைக் கூறுவார்கள்; அடுத்தது சாதிச் செல்வாக்கும் அரசியல் செல்வாக்கும் கொண்ட பாரதியாரைக் கூறுவார்கள். இவர்கள் எல்லாம் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்கள்; பெரியும் மக்களான இன்று ஒதுக்கிக்கொள்ளத்தக்கவோ, பின்பற்றத் தக்கவோ கூடிய கருத்துக்களைக் கூறவில்லை. பாரதிதாசன் அப்படி அல்லவே; அவர் புதுமைக் கருத்துக்களையும், புரட்சிக் கருத்துக்களையும், மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்ம கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு அনுசரணையாகச் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமும் இருந்தன. சுருங்கச் சொன்னால், அவர்போல் தீவிரமான கருத்துக்களை அவருக்கு முன்பும், பின்பும் எடுத்துச் சொன்னவர்கள் இன்னார் என்று எடுத்துக்காட்ட ஆளே இல்லையே! அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூடநம்பிக்கைகள் இவைகளைக் கண்டித்து நன்றாகப் பாடியுள்ளார். பாரதியாருக்கோ, வள்ளுவருக்கோ கொடுக்கப்பட்ட மரியாதை நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் தவறிவிட்டார்கள். காரணம், பாரதிதாசன் புதுமைக் கவிஞர்; புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர் என்பதால்தான்.கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள்.மற்ற கவிஞர்கள் பழைமை விரும்பிகள் ஆன தினால், பழமையில் பற்றுக்கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள்;போற்றுகின்றார்கள். நமது முட்டான் தனத்திற்கு உதாரணமே வள்ளுவரைப் பாராட்டுவது ஒன்றே போதுமே! வள்ளுவர், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும்"எப்பொருள் எதன் மைத்து தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் பாடியுள்ளார். எனவே, அவர் பகுத்தறிவுவாதி; யார் எதைச் சொன்னாலும் அறிவ கொண்டு ஆராய்ந்து உணர வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார் என்று கூறுவார்கள். தோழர்களே!வள்ளுவர் இப்படிக்கூறி இருந்தாலும் அது அவர் கொள்கையல்ல!ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார், அவ்வளவுதான். மற்றபடி, அந்தப் பழைமை விரும்பியே"உலகத்தார் உண்டென்பதை இல்லென்பான் வையத்தில் அலகையா வைக்கப் படும்?" என்று கூறியுள்ளாரே! எனவே மூடநம்பிக்கை முதலியவைகளில் நம்பிக்கை உடையவரே வள்ளுவர். பாரதியாரை எடுத்துக்கொண்டாலோ, அவர் தாவாத சொற்கை இல்லை!கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு முதலிய எல்லாவற்றையும் கூறியுள்ளார். எனவேதான் பழைமை விரும்பிகள் இவர்களை எல்லாம் போற்றுகின்றார்கள். பாரதிதாசன் எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களை எடுத்துப் பாட முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களைத் தணிந்து கூறிய பெரும் புலவர் ஆவார். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத்தக்க சாதனமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன. நமது மக்கள் இப்படிப்பட்டவருக்குப் பாராட்டும், பெருமையும் அவிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது வருந்ததீத்தக்கதாகும். காரணம், அவர் பகுத்தறிவுவாதி யானபடியால் அவருடைய பணிக்குக் கிடைக்க வேண்டிய மதிப்புக் கிடைக்கவில்லை. பாரதிதாசனைப்போன்று புதிய கருத்துக்களை எடுத்துச்சொல்லிப் பரப்ப ஆனவர் இல்லையே!பாரதிதாசன் பால நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்க8ளயானால், நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்துவரும் கிழ நிலை இருந்து வந்திருக்குமா?[சிவகங்கை மன்னர் ராஜா துரைசிங்கம் நினைவுக்கு கல்லூரியில், 8-3-1973-ல் சொற்பொழிவு] www.thamizham.net - Free £ book No 3026 1040 3. தலைவர்களின் கடிதங்கள் ஜீமுகம் ஓ ஈ. வெ. இராமசாமியா 5, சங்கராச்சாரியா கம். ஆ. ஈ.வெ. இராமசாமியாருக்கு ஜீமுகம் சங்கராச்சாரியார்.ஹீசங்கராச்சாரி சமஸ்தானம்—நிஜச் சிருங்கேரி அஞ். நெ. 53. (முகாம் புஷ்பவனம்). அஸ அஸ்மத்‌ பிரிய முக்கிய சிஷ்யரான கோயமுதீதூர்‌ ஜில்லா ஈரோடு கஸ்பா வெங்கிட்ட சாமி நாயுடு குமாரர்‌ ஜீமான்‌ இராமசாமி நாயுடுவினுடைய சமஸ்தீத அய்ஸ்வரிய ஆரோக்கிய அபிவிரு சதியின்‌ பொருட்டு திரிகால அனுஷ்டானதீதிலும்‌ பகவதீ பிரார்தீதனையுடன்‌ ஆசீர்வதித்து எழுதிவைத்தனுப்பிய ஜீமு ம்‌. இங்கே ஆற்காடென்னும்‌ சடாரண்ண கோஷித்திரங்களில்‌ ஒன்றாகிய புஷ்பவனம்‌ என்னும்‌ புதுப்பட்டி கிராமதீதிய ஜீபரத்துவாஜ மகாரிஷி ஆசிரமத்தில்‌ லோகத்தில்‌ எல்லோருடைய கேடுமதீதைக்‌ குறித்து தபஸ்‌ செய்து கொண்டு இந்த மரியாதையை அனுப்பியிருக்கிறோம்‌. சம்பாதி-லோககுரு ஸ்தானமாகிய இதில்‌ பரதகண்டதீதிலுள்ள சனாதன தர்மத்தை கெடுகீசாமலும்‌ எல்லோருக்கும்‌ க்ஷேமம்‌ உண்டாகும்படிக்கும்‌ பாரபக்ஷம்‌ இல்லாமல்‌: படிக்கும்‌ சாஸ்திர எல்லைகள்‌ கடவாமல்படிச்கும்‌ பிபீலகாதி பிரம்மம்‌ பரியந்தம்‌ (எறும்பு முதல்‌ பிரம்மாதிகளிலும்‌) எல்லாவற்றிலுமிருப்பது ஒரே பிரம்மமென்று எல்லோருக்கும்‌ பிரம்மான ந்ததீதை அடையச்செய்யவே ஜெகதீகுரூபீடம்‌ இருக்கிறது. காமகாண்டத்தில்‌ அவரவர்கள்‌ நன்றாய்‌ கடமைகளைச்செய்து நடந்து அதனால்‌ சிதீதமானது சுதீதமாகி அகண்டபிரமானந்த சாக்ஷாத்சாரம்‌ அடையசீ செய்வதே விர தமாகக்கொண்ட இந்த குரு பீடமான து ஜீஆதிசங்கரபகவான்‌ அவதாரம்‌ பரம்பரைக்‌ கிரமமாய்‌ வந்துகொண்டும்‌ குருவா யிருக்கும்போதே சிஷ்யர்களை ஏற்படுத்தி சன்மார்க்க சதாசீசாரத்தில்‌ பழக்கி பீடாதிபதியம்‌ சன்யாசம்‌ அளிப்பது வழக்கமாயிருக்கிறது. கால3த௪ வர்தீதமானத்தை அனுசரித்து சாத்தியமான வரையில்‌ சிஷ்யர்களை சன்மார்க்கதீதிலும்‌ சதாச்சாரதீதிலும்‌ நடத்திச்‌ சந்தோஷமாயிருக்கச்‌ செய்துகொண்டு வருகிறது. இன்னம்‌ காலதேச வர்தீதமானத்தை யோசித்து சாஸ்திரங்கள்‌ இடம்‌ கொடுத்திருக்கும்‌ வரையிலும்‌ தற்கால நிலைமையை அனுசரித்து சிஷ்யர்களுக்கு சில சுவதந்திரங்களையும்‌ இந்த ஜகத்குரு சமஸ்தானம்‌ கொடுக்கவேண்டியது அவசியமாகத்‌ தோன்றி இருக்கிறது நீங்கள்‌ நெடுநாளையப்‌ பாரபக்ஷமின்றியிலும்‌ தாட்சண்யங்களுகீகு உட்படாமலும்‌, ஜீவகாருண்யமுள்ளவராயும்‌ சுவயநன்மையைக்‌ கருதாமல்‌ லோகநன்மையையே முக்கிய மாகக்கருதி சுகதுக்கங்கள்‌ பாராமல்‌ மானாவமானதீதைக்‌ கவனியாமல்‌ ஜென்மமெடுத்தற்கு பரோபகாரமே சாதனமென்று கருதி உங்கள்‌ தர்மபத்தினிசமேதராய்‌ பாடுபட்டுவருவது எங்களுக்கு மிகவும்‌ சந்தோஷதீதை உண்டாக்கி இருக்கிறது. உங்களை நேரில்‌ பார்‌ தீது, உற்சாகப்படுத்தி எங்கன்‌ அபிப்பிராயங்களையும்‌ உங்களுக்குச்சொல்லி தக்க சகாயமும்‌ செய்து அனுக்கிரகிக்க வேண்டுமென்று குருதேவதாப்பி?£ரரணை உண்டாயிருப்ப தால்‌ விவேகியாகிய நீரும்‌ உங்கள்‌ தரீமபதீதினியும்‌ அனாதியாய்‌ உங்களுக்குச்‌ சொந்தபாதீதிய மான இந்த ஐகதீகுருபீடத்தை சிறப்புவிப்பதற்காக இந்த சமஸ்தானதீதிற்கு வந்து னிசாரதாசந்திரமவுளிதரவாமிகள்‌ பிரசாத அனுக்கிரகம்பெற்று இப்போதிலும்‌ அதிகமான சிரேயசை அடைவீர்கள்‌ என்று நம்பி இந்த ஜிமுகம்‌ எழுதிவைத்து அனுப்பலாயிற்றுஃ விவேகிகளுக்கு என்ன எழுத3வண்டி இருக்கிறது. -னபிரஸ்தாவித்தியானந்தநாத பரரதஸ்வாமி சங்கராச்சாரியூ, பு. அ. வெங்கட்டரமணம்‌ சர்வாதிகாரி (என்று கன்னடத்தில்‌) [! குடிஅரசு 2-3-1930] www.thamizham.net - Free £ book 14௦ 3026 ர்த்து e ணை பெரியார்‌ அவர்களின்‌ முதல்‌ துணைவியார்‌. அன்னை e வெ. ரா. நாகம்மையார்‌ தலைவர்கள்‌ 1041 சிருங்கேரி மடாதிபதி உயர்திரு ஜீ ஐகதீகுரு சங்கராச்சாரிய சுவாமிகள்‌ அவர்களிட மிருந்து நமக்கு வத்த ஜீீமுக அழைப்பை இவ்விதழில்‌ வேறொரு பக்கத்தில்‌ பிரசுரிதீதிருக்‌ கிறோம்‌. திரு மடாதிபதி அவர்கள்‌ அந்த னீமூகம்‌ நமக்கு அனுப்பியதற்காகவும்‌ மற்றும்‌ அதில்‌ நம்முடைய நமது மனைவியாருடையவும்‌ ஒரு சிறு தொண்டை மிகுதியும்‌ பாராட்டி, தங்களது மகிழ்ச்சியைத்‌ தெரிவிப்பதற்காகவும்‌ நாம்‌ நம்‌ சார்பாகவும்‌ நமது மனைவியாரின்‌: சார்பாகவும்‌ மனப்‌ பூர்த்தியான நன்றியறிதலைத்‌ தெரிவித்துக்கொள்ளக்‌ கடமைப்பட்டிருக்‌ கிறோம்‌. நிற்க, அந்த ஜீமுகதீதில்‌ சனாதன தர்மத்தைக்‌ கெடுக்காமல்‌ கருமகாண்டத்ீதில்‌ உள்ள அவர்கள்‌ கடமைகளைச்‌ செய்து) சாதீதிரங்கன்‌ இடம்‌ கொடுக்கும்‌ வரையில்‌ என்கின்ற நிபந்தனைகள்‌ கண்டு அதற்கு விரோதம்‌ இல்லாமல்‌ சில சுதந்திரங்கள்‌ அளிக்கப்‌ படும்‌-என்கின்ற வாசகங்கள்‌ காணப்படுகன்‌ றபடியால்‌ நான்‌ அங்கு செல்வதால்‌ ஏதாவது பயன்‌ ஏற்படுமா என்கின்‌ ற விஷயம்‌ நமக்குச்‌ சந்தேகமாகவே இருக்கின்றது. ஆயினும்‌; பொறுப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும்‌ பல கொள்கைகளுக்கு அபிப்பிராய கரீ தீதாவாய்‌ இருப்பவரும்‌ பல மகீ களால்‌ விளங்கிக்‌ கொண்டாடி மதிக்கத்‌ தக்கவராக இருப்பவருமான ஒரு பெரியாரின்‌ அழைப்பை மதித்து அதற்கு இணங்கி அங்குச்‌ சென்று வரவேண்டியது மிக்க நியாயமாகுமென்‌ றே நமக்குத்‌ தோன்றுகின்றது. ஆயினும்‌, நமது நண்பர்களின்‌ விருப்பத்தை அறிந்து சென்று வரலரமென்றே கருதியிருக்கின்றோம்‌. [ஷ அரசு? 2-3-1930] நாகம்மான்‌ அறிக்கை நமது பத்திரிகையின்‌ ஆசிரியர்‌ தோழர்‌ ஈ. வெ. இராமசாமி அவர்கள்‌ மேல்‌ நாட்டுச்‌ சுற்றுப்பிரயாண தீ தின்‌ பொருட்டுப்‌ புறப்பட்டுச்‌ சுமார்‌ நான்கு மாதங்களாகின்றன ; இந்த நான்கு மாதங்களாக நமது குடி அரசுக்குக்‌ கட்டுரைச்‌ செல்வத்திலும்‌ பொருட்‌ செல்வத்‌ திலும்‌ ஒருசிறிதும்‌ வறுமை தோன்றாதபடி இரண்டையும்‌ வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கதீ தோழர்‌ களாகிய.கட்டுரையாளர்களுக்கும்‌ வாசகர்களுக்கும்‌ எனது நன்றியறிதலைதீ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. அடுத்த வாரம்‌ நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்‌ போவதால்‌: நமது இயக்கத்‌ தோழர்களாகிய கட்டுரையாளர்களும்‌ வாசகர்களும்‌ சிறந்த கட்டுரைகளை வழங்கியும்‌, எண்ணற்ற சந்தாதாரர்களைச்‌ சேர்த்துக்‌ கொடுத்தும்‌ பத்திரிகையின்‌ வளர்ச்சியில்‌ பங்கெடுதீதுக்கொள்ள வேண்டுகிறேன்‌. & வெ. ரா. நாகம்மாள்‌. பிரிண்டர்‌ அண்டு பப்ளிஷர்‌ஃ [ஒட அரசு? 24-4-1932) திரு. ஈ. வெ. இராமசாமி அவர்கள்‌ உடல்‌ மெலிவினால்‌ இப்போது ஒரு நிமிஷம்‌ சேர்ந்தாற்போல்‌ ஏதாவது விஷயத்தைப்பற்றிப்‌ பேசினால்‌ தொண்டை சப்தம்‌ குறைந்து இளைப்பு எடுக்கின்றது. எதையாவது சேர்ந்தாற்போல்‌ இரண்டு மூன்று நிமிஷம்‌ எழுதினாலும்‌, படித்தாலும்‌ உடனே தலை வலியும்‌, மயக்கமும்‌ உண்டாகிவிடுகின்‌ றன ஆகாரம்‌ மிகச்‌ Apdy அளவே சாப்பிடவேண்டியிருக்கின்றது. சற்று அதிகமாகச்‌ சாப்பிட்டால்‌ வயிறு வலிக்கின்றது. ஆகையால்‌, அவர்‌ வெளியில்‌ இருந்து ஓய்வு எடுத்துக கொள்ளுவதால்‌ ¢ குடிஅரசு? பத்திரிகை ஆசிரியர்‌ பொறுப்பை திரு. சாமி சிதம்பரனார்‌ அவர்கள்‌ கவனிதீது வருகின்றார்‌ குறைந்தது 2, 3 மாத காலதீதுக்காவது சந்தாதாரர்‌ களும்‌ வாசகர்களும்‌ பத்திரிகையை ஆதரித்து திரு. சாமி சிதம்பரனார்‌ அவர்களை உற்சாகப்படுதீதிவைக்க வேண்டிக்கொள்ளுகிறேன்‌. ஈ. வெ. ரா, நாகம்மாள்‌ [6 குடிஅரசு 15-11-1931] 1686-13 ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 1042 சர்‌. பன்னீர்செல்வம்‌ கடிதம்‌ Air Port, Karachi, 29-2-1940 எனது அன்புள்ள தலைவர்‌ அவர்கட்கு, தேற்று மாலை பம்பாயிலிருந்து இங்குவந்து சேர்ந்தேன்‌. இன்று காலை நான்‌: எந்த பிளேனீில்‌ போகிறதாயிருந்தே?னோ, அந்த பி?ளன்‌ இன்னும்‌ இங்குவந்து சேரவில்லை. அனேகமாய்‌ இன்று மாலை இங்கு வந்துசேரும்‌. நாளைக்‌ காலை 7 மணி சுமாருக்கு நான்‌ இங்கிருந்து கிளம்புவேன்‌, ஆகவே, வரும்‌ திங்கட்கிழமை லண்டன்‌ போய்ச்சேருவேன்‌ என்று எண்ணுகிறேன்‌. இப்படிக்கு, தங்களன்புல்ள, (&, 1, பன்னீர்செல்வம்‌) [! குடிஅரசு? 7-8-1940 ஜின்னா பாராட்டு New Delhi, Feb. 26, 1940 President, 8. 1 L. F., Pycrofts Road, Royapetta, Madras. Congratulate you on behalf of Muslim League Party, Central Legislature Assembly on your success in getting Government of Madras remove compulsory study of Hindi. Your efforts to prevent Congress Government to enforce Hindi upon unwilling people and your sufferings and sacrifices in that atruggle have met with well deserved success. I am sure that those who suffered will have satisfaction that their great sacrifices were not in vain. M. A. JINNA மொழிபெயர்ப்பு 8 கட்டாயப்‌ பாடமாக இந்தி கற்கவேண்டுமென்றிருந்ததைச்‌ சென்னை சர்க்கார்‌ ரத்து செய்யும்படி செய்து, தாங்கள்‌ வெற்றி பெற்றமைக்கு, மத்திய அசெம்பிளி முஸ்லிம்‌ லீக்‌ கட்சியின்‌ சார்பாக நான்‌ தங்களைப்‌ பாராட்டுகிறேன்‌ விரும்பாத மக்கள்மீது இந்தியைக்‌ கட்டாயமாகப்‌ புகுதீதிய காங்கிரஸ்‌ சர்க்காரின்‌ செய்கையைத்‌ தடுக்கத்‌ தாங்கள்‌ எடுத்துக்கொண்ட முயற்சிகளும்‌, பட்டபாடுகளும்‌, அப்‌ போராட்டத்தில்‌ தாங்கள்‌ செய்த தியாகங்களும்‌ வெற்றி பெற்றுவிட்டன. மேலும்‌, அப்‌ போராட்டத்தில்‌ கலந்து பலவித கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள்‌ இப்போது மனங்‌ குவிர்ந்திருப்பார்கன்‌ என்றும்‌, அவர்களின்‌ மகத்தான தியாகங்களெல்லாம்‌ வீணாகவில்லை யென்று உணருவார்கள்‌ என்றும்‌ நம்புகின்றேன்‌. பு.துடெல்லி 26-2-1940 எம்‌. ஏ. ஜின்னா [குடிஅரசு 3-3-1940) ‘www.thamizham.net - Free £ book 14௦ 3026 2-8 அரில்‌ ல ழுது வம்‌ டை ல fimyng மதுர மதித்த FIT s @Eep தண்டா மலையில ஏமுற நீழ ண்‌ b மீச மம NP 1w 2@NgR@INg NEEFN வமிமமாம௰பமஐ( முழாழதிரள ஈடு ண: - — e e e = சர்‌. ஏ. டி. பன்னீர்‌ செல்வம்‌ அவர்கள்‌ பெரியார்‌ ஈ, வெ. ரா, அவர்கட்கு: 29-2-1940-ல்‌ பம்பாயிலிருந்து விடுத்த கடிதம்‌ * குடி அரசு '—7-4-1940 o 1043 பெரியார்‌ ஈ. வெ. ரா. அவர்கட்கு குன்றக்குடி அடிகள்‌ விடுத்தமடல்‌ குன்றகீகுடி, டி௪ 26, 1956 வன்புள்ள பெரியார்‌ அவர்களுக்கு 1 திருவருள்‌ இன்பம்‌ யாண்டும்‌ மலர்க! தாங்கள் 15-12-1956, மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் செய்தியைப் படித்தோம். இது சம்பந்தமாக நாம் இருவரும் திருப்பரங்குன்றிலிருந்து திருநெல்வேலி போகும்வரை பேசிக்கொண்டிருக்கும் நினைவிருக்கலாம். இது சம்பந்தமாகப் பின்னாலும், தாங்கள் வெளியிட்டதாக வந்துள்ள செய்திகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. மேலும், இது சம்பந்தமாக ஆஸ்திகத்தின் பேரில் சிலர் வெளியிட்டுள்ள அருவருக்க தகுந்த அறிக்கையை மறந்துவிடுவதற்குமுடியாது. இது சம்பந்தமாக ஒரு வரையறுத்த முடிவிற்கு வருவது நம்மிருவருடைய கடமையாக இருக்கிறது. அவசியமாகவும் இருக்கிறது. 1. தாங்கள் நடத்த இருக்கும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையையும் திருக்கோயில் வழிபாட்டையும் அடிப்படையாக வைத்திருக்கின்றீரகளா? அல்லது, சிலர் கருதுவதுபோல இனம் அல்லது சாதியின் அடிப்படையில் கிளர்ச்சிதான் நோக்கமா? 2."தமிழன் வழிபாட்டிற்கு நியமிக்கப்பெறவேண்டும்" என்று நிபந்தனை கூறியுள்ளீர்கள். "தமிழன்" என்றால், தாங்கள் யாரைத் தமிழர் என்று கருதுகின்றீர்கள்?இதில் சாதி அல்லது இனம் உணர்ச்சி தலைகாட்டுகின்றதா? இது சம்பந்தமாகத் தாங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். என்றும் வேண்டும் இன்ப அன்பு, தெய்வசிகாமணி, 26-12-1956 குன்றக்குடி அடிகளாருக்கு பெரியாரவர்கள் விடுத்த பதில் மடல்:போற்றுதற்குரிய தவத்திரு அடிகளார் அவர்களுக்கு ஈ. வெ. ராமசாமி வணக்கம். அடிகளாரது 26-ஆம் தேதிய கடிதம் பெற்றேன். செய்தி உணர்ந்தேன்."ஒரு வரையறுத்த முடிவிற்கு வருவது நம்மிருவருடைய கடமையாயிருக்கிறது" என்று எழுதியிருக்கிறீர்கள். எனது கருத்தை என் பிறந்த நாள் விழாவில், அடிகளார் தலைமையில் நான் பேசும்போது விளக்கியிருக்கிறேன். அதுவேதான் எனது நிலைமையும். மற்றும், திருநெல்வேலி செல்லும்போதும் அடிகளாருக்குத் தெரியும்படி சொல்லியிருக்கிறேன். நிற்க. போராட்டத்தின் இலட்சியம் இரண்டு. ஒன்று: தமிழ்நாட்டில், தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும். இரண்டு: தமிழ்நாட்டில், தமிழன் கோயிலுக்குன் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரியமும் கடவுளையும், வழிபாட்டையும் பற்றியது மாதிரிமல்ல. தமிழ் மொழியின் தன்மானத்தையும், தமிழனின் தன்மானத்தையும் பற்றிய விஷயமாகும். கோவிலிலுள்ள கடவுள் என்பதைத் தமிழில் பூசை செய்யாததற்குக் காரணம், வட மொழியிலேயே பூசை செய்வதற்குக் காரணம்--- தமிழ் "மிலேச்ச மொழி" என்பதும், வடமொழி"தேவமொழி"என்பதுமேயாகும். அதுபோலவே, தமிழன் பூசை செய்யக்கூடாது என்பதற்கு,"தமிழன் சூத்திரன், இழிமகன்"என்பதும்; பார்ப்பான் மேல்மகன்"பிராமணன்"என்பதுமே காரணம். இதை அடிகளார் ஒப்புக்கொள்ளாதிருக்கலாம்; ஒப்புக்கொள்ள மறுக்கலாம். அடிகளார் மன்னிக்க வேண்டும். நான் நாம் குறிப்பிடும் கடவுள்களைப் பற்றியதை மத; சம்பிரதாய ஆதாரங்களிலிருந்தும், நடப்பிலிருந்தும் அறிந்ததைச் சொல்லுகிறேன். இவை எப்படியோ இருக்கட்டும். தமிழ் மொழியில் பூசை நடக்கவேண்டுமென்று அடிகளாரும் கூறுகிறார்கள்; நானும் கூறுகிறேன். இதற்காகக் கிளர்ச்சியோ, போராட்டமோ நடத்த வேண்டுமென்பதில் அடிகளாருக்கும் மறுப்பு இருக்க நியாயமில்லை. தமிழன் பூசை செய்யவேண்டும் என்பதிலே அடிகளார் கருத்து எப்படியிருந்தாலும் நான் தீவிரமான ஆசையுள்ளவனாகவே இருக்கிறேன். இவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் அடிகள் எந்த அளவுக்கு அருள்கூர்நீதாலும் அது எனது பேறு ஆகவே கருதுவேன். மற்றபடி, நாம் இருவரும் நட்பு மூறையில் அன்பர்கள் ஆவோம். கொள்கைகளில் ஒன்றுபட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள் என்றாலும்--ஒன்றுபட்ட இலட்சியங்களுக்கு மக்களின் நலனையும் தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டுக் கூடியதைச் செய்வோம். இப்படி எது செய்யினும், அடிகளார் அருளையும் ஆணையையும் முன்வைத்தே கூடியதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை."இந்தப் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நம்பிக்கையும் அடிப்படையா?அல்லது இனம், சாதி அடிப்படையா?"என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள். அடிகளார் அருள்கூர்ந்து முன்னின்று செய்யும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நம்பிக்கையும் உடையவர்களையே கலந்துகொள்ளும்படி பார்த்துக்கொள்கிறேன்.அதில் அடிகளாருக்குச் சங்கடம் வேண்டியதில்லை. தவிர,"தமிழன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?"என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள். நான்"தமிழன்" என்று கருதுவது--பெரிதும் நம் நாட்டில்"சூத்திரர்கள்"என்று சொல்லப்படுகிறவர்களையே ஆகும். இப்பொழுது கோயில்களில் பூசை செய்கிற வர்கள் சூத்திரர்கள் என்று ஒரு சாரார் சொல்லக்கூடும்; அதாவது குருக்கள் சூத்திரர்கள்என்பதே. அது வெறும் பேச்சு. காரியத்தில் குருக்கள் எல்லாம் நம்மைத் தீண்டாதவர்களாகவும் கருதுவதோடு;நம்முடனிருந்து உண்ணக்கூடாதவர்கள் என்றே இருந்து வருகின்றார்கள்.பூணூல் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் சூத்திரர்கள் அல்லது நம்மவர்கள் ஆனால், நாம் பூசை செய்வதற்கு என்ன தடங்கல்?நமக்கேன் அந்த உரிமை கிடைக்கும்படி பாடுபடக்கூடாது? எனவே, அருள்கூர்ந்து எனது முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறேன். குற்றமிருப்பின் மன்னித்தருள்.ஈ. வெ. ராமசாமி [விடுதலை,7-11-1957] www.thamizham.net - Free £ book No 3026 2 UYL w பெய அத கடட, இலக்கம்‌, g உட௪ பவ இல்லற வ பு ச கன்டு கா வக்‌ டம்‌ 1 வடியும்‌ வ செ LadLz மீ ப லயிங்கடு கத்தலை ந்‌ ஹல தெம்‌ ட்‌ வலம்‌ டிட்‌ வ்‌ ல்‌ ண்‌ AN --- ஆட KR, Sof 5, ௦ aah: க்கு இலே உடல க்ஷ கன்ட L @Y A s வீக்க டஃ 8 தர்ப்பண திரக்‌ 5 B3 89 ii“ in gfu»fi\n ல வ்தாகு வ வேதி gol ட வேன்‌ ட்ய்ரீட ) @ இகவ மீண்‌ உடல௧3 ஜெ 6 வல்‌ துக்க கலி மகா ர்‌ ன்‌ மவ கட ற்‌ >, Luwcg’-‘-“;é‘]mn i .}‘flrfiwe த்த ந்‌ நத o Y& b 2407 டக துகில்‌ [டடம தர்கள்‌ 7 ம்‌ த்‌ க்க வே ச பல ன வ 1 அரவும்‌ உய்‌ ற்‌ க un, B:VLQ\JA ம்‌ பதங்கள்‌ லெ | கண்ட த்‌ ந்‌ ந்‌ வ வல்வலயலி க்‌ உவ்க்டூ தெரிக்கும்‌. வடு YT QRS ட்‌. - கக்‌ அண்டி - WeTR Ao ‘ DN e பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் 90-வது பிறந்தநாள் செய்தியினை"விடுதலை"மலரில் (17-9-1968) கண்ணுற்று, அமெரிக்காவில் நியூயார்க் மருத்துவமனையிலிருந்து கா. அண்ணாதுரை எழுதிய மடல்: www.thamizham.net - Free £ book No 3026--- அங்‌ ந்‌ ] சம்ப ரப கா ராப அடு யை " ரு சட வ . வ நன்மை “முரள SO இர froie 10 றை வ [பழகு சிரு ஸ்‌ [2pN@OFD @ ing g Fumwmn பரக ஈழுழயதுர௪ .6 W) . ஹி ந்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3026 1045 முதல்வர் கருணாநிதியின் கடிதம் மு. கருணாநிதி, நியூயார்க். அன்புமிக்க அய்யா பெரியார் அவர்களுக்கு, தங்கள் கருணாநிதி வணக்கம். இன்று நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு, அமெரிக்காவில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் (Thanksgiving day)"நன்றி அறிவிப்பு நாள்" விழாவில் நயாகரா கிளப் விருந்தினராக இருந்துவிட்டு நியூயார்க் செல்லும் வழியில் இந்த மடல் எழுதுகிறேன். தாங்களும் அம்மையாரும் நண்பர் வீரமணியும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களுக்குத் தேவைப்படும் ஓய்வுபற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை. சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் பிரிவில் அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்கு தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இன்றையத் தமிழக அரசு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் தாம் தமிழகத்தில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பதுபோல இருட்டடிப்புச் செய்য முனைகிறார்களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்திலேயே கொள்கைகள் பெற்றுவரும் வெற்றி குறித்தெல்லாம் குறிப்பிட்டேன். பேச்சுக்குப் பிறகு தங்களைப்பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன். கண்ணில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பயணத்தை முடித்துக் கொண்டு தங்களையும், தமிழகத்து அன்பு முகங்களையும் காண டிசம்பர் முதல் வாரத்தில் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞான கூடங்கள் பலவற்றையும் கண்டேன். அவைகளின் சிறப்புக்களை நேரில்தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத, (ஓம்) மு. கருணாநிதி வணக்கம். [விடுதலை, 35-12-1971] www.thamizham.net - Free £ book No 3026