EVRT-Vol-1-Part-3---pp.-339-500

Collection: Anaimuthu's Periyar Collection

போன்‌ : 0422 - 2572635 செல்‌: 936 2970121 st @10 சுப்பிரமணியன்‌ மடவ o மருத நாடன்‌) தலைமைப்‌ பொறியாளர்‌ மி.வா, (ஓய்ஷ்‌ தைவர: சிந்தனையரார்‌ கழகம்‌ மிழ்‌ தமிழர்‌ ஒருங்கிணைப்பாளர்‌ அப்பா) தொழில்நுட்ப லல்றர்‌ குழும 181267, அண்ணாநகர்‌, ஆறுமுகம்‌ லே-அவுட்‌, பூனைமேடு இஞ்சலி, கோயழுத்தூர்‌ - 641 004. இன்று கோவையில்‌ பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ அவர்களை அவரது இல்லத்தில்‌ சந்தித்தேன்‌. இவர்‌ மின்வாரியத்தில்‌ தலைமைப்‌ பொறியாளராகப்‌ பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்‌. தந்தை பெரியாரோடு இணைந்து தமிழகம்‌ முழுவதும்‌ பகுத்தறிவுக்‌ கருத்துகளைப்‌ பரப்பியவர்‌. திருச்சி சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவராக இருந்தவர்‌. இவரது முயற்சியால்‌ திரு.வே: ஆனைமுத்து அவர்கள்‌ தொகுத்த பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2200 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த மூன்று தொகுதிகளும்‌ பெரியாரின்‌ சொற்பொழிவுகளும்‌ கட்டுரைகளும்‌ அடங்கிய தொகுப்பு ஆகும்‌. பெரியாரின்‌ பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகிற அரிய நூலாக இன்றளவும்‌ இந்த நூல்‌ போற்றப்படுகிறது. பொறிஞர்‌. கு.ம.சுப்பிரமணியம்‌ எழுதிய கவிதை நூலை இணையத்தில்‌ வலையேற்றுவதற்காக அவரைச்‌ சந்தித்தபோது பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ என்ற நூலைப்பற்றி அவரிடம்‌ பேசினேன்‌. அந்த நூலை வெளியிட்ட நினைவலைகளை அவர்‌ விளக்கினார்‌ நூல்‌ வெளியீட்டிற்காப்‌ பட்டபாடுகள்‌ என்‌ கண்முன்‌ நிழலாடியது. அவர்‌ காட்டிய தந்தை பெரியாரின்‌ உருவம்‌ என்‌ முன்‌ நிழலாடியது. பகுத்தறிவு விதைப்பிற்காகத்‌ தன்வாழ்நாளின்‌ இறுதிவரை பேசியும்‌ எழுதியும்‌ வந்த அவரது உறுதி தெரிந்தது. பெரியார்‌ ஈ.வெ.ரா. சிந்தனைகள்‌ தொகுப்பினை இணையத்தில்‌ வலையேற்றினால்‌ உலகமக்கள்‌ வலைஇறக்கிப்‌ படித்து மகிழ்வார்களே என்று சொன்ன பொழுது, நூலை வெளியிட்ட சிந்தனையாளர்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திரு. கு.ம. சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ மகிழ்வோடு. தன்‌ கைப்படியாக வைத்திருந்த அந்த முதன்மைப்‌ படியை அன்போடு எடுத்து வந்து கொடுத்தார்‌. இணையத்தில்‌ வெளியிடுங்கள்‌, அய்யாவின்‌ கருத்துகள்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவட்டும்‌ என்று அவர்‌ கொடுத்தபோது நான்‌ பெருமகிழ்வு அடைந்தேன்‌. நான்‌ பத்தாம்‌ வகுப்பு படித்தபோது, தாராபுரம்‌ நூலகத்தில்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொரு பக்கமாகப்‌ படித்து நெஞ்சில்‌ பதிந்து என்னை வழிநடத்திய அந்த நூலை நான்‌ படவடிவக்‌ கோப்பாக்கும்‌ வாய்ப்பு கிடைத்தது கண்டு. நெஞ்சு நெகிழந்தேன்‌ ஆனைமுத்து அய்யா அவர்கள்‌ பெருமுயற்சியில்‌ திரட்டிச்‌ சேகரித்த பெரியார்‌ ஈ.வெ.ரா சிந்தனைகள்‌ என்ற இந்த மூன்று தொகுதிகளும்‌ உலகம்‌ முழுவதும்‌ உள்ள நம்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ இனிவரும்‌ அடுத்த தலைமுறையினருக்கும்‌ வழிகாட்டியாக நின்று பகுத்தறிவூட்டும்‌ என்று நம்புகிறேன்‌. bghs shrpp ௭௮; (09-06-201) JkiHK;t iy (www.thamizham.net) www.thamizham.net - Free E book No 3011 பகுதி 11 இயக்கங்கள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 .net 1. காங்கிரஸ்‌ 1. பாட்னா தீர்மானம்‌ சென்ற மாதம்‌ 22ஆம்‌ தேதி பாட்னாவில்‌ கூடிய அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டி யின்‌ தீர்மானத்தையும்‌, அதைப்பற்றி மகாத்மாவின்‌ தனி: அபிப்பிராயதீதையும்‌ நிதானமாய்‌ யோசனை செய்து பார்த்தோம்‌. அவற்றுள்‌ காணப்படும்‌ தத்துவத்தைச்‌ சுருக்கமாய்சி சொல்ல வேண்டுமானால்‌, மகாதீமா காந்தி அவர்கள்‌ காங்கிரசை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ வசம்‌ ஒப்படைதீதுவிட வேண்டுமென்பதாக முடிவு செய்துகொண்டு அந்தப்படியே ஒப்பு விதீது விட்டாரென்றுதான்‌ சொல்லவேண்டும்‌. தீர்மானதீதின்‌ சாரம்‌ என்னவென்றால்‌, நான்கணா கொடுதீதவரெல்லாம்‌ காங்கிரஸ்‌ மெம்பராகலாம்‌. காங்கிரசில்‌ பதவி வேண்டியவர்கள்‌, காங்கிரஸ்‌ காரிய சமயங்களில்‌ கதர்‌ கட்டிக்கொண்டிருக்க வேண்டும்‌. சட்டசபை முதலிய தேர்தலுக்கு நிற்கிறவர்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சியாரின்‌ தயவைப்‌ பெறவேண்டும்‌. இந்ததீ தீர்மானதீதின்‌ மேல்‌ மகாதீ மாவின்‌ அபிப்பிராயமோ, இதற்குச்‌ சம்மதமில்லாதவர்கள்‌ காங்கிரசைவிட்டு விலகிக்கொள்ள வேண்டுமேயல்லாமல்‌, உள்ளே இருந்துகொண்டு சுயராஜ்யக்‌ கட்சியின்‌. வேலைகளுக்கு இடையூறாயிருக்கக்‌ கூடாதென்பதுதான்‌. அத்துடன்‌, பழைய நிலை ஒன்றும்‌ மாறவில்லை யென்றும்‌, நிர்மாணதீ திட்டம்‌ பாதிக்கப்படவில்லை என்றும்‌ கூறுகிறார்‌. மற்ற விஷயங்‌ களைப்பற்றி நாம்‌ அதிகக்‌ கவலைப்படாவிட்டாலும்‌, நிர்மாணதீ திட்டம்‌ பாதிக்கப்பட வில்லை யென்பதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு வருந்.துகின்றோம்‌. ஏனெனில்‌, பாட்னா காங்கிரசின்‌ அதிகாரத்தை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ கையில்‌ முற்றிலும்‌ ஒப்படைதீதாகி விட்டது என காந்தியடிகளே அக்டோபர்‌ 1-ந்தேதி ¢ யவ்வண இந்தியா?வில்‌ கூறியிருக்‌ கின்றார்‌. சுயராஜ்யக்‌ கட்சியாருக்கோ நிர்மாணதீ திட்டங்களாகிய கதரிலும்‌ தீண்டாமை யிலும்‌ முழு நம்பிக்கையுமில்லை. இந்த நிலைமையில்‌, நிர்மாணதி திட்டம்‌ எப்படி பாதிக்கப்‌ படவில்லை என்பது நமக்குப்‌ புரியவில்லை, சுயராஜ்யக்‌ கட்சியினரல்லாத காங்கிரஸ்வாதி களுக்கோ, சுயராஜ்யக்‌ கட்சிதீ திட்டத்தில்‌ நம்பிக்கையில்லை. இருந்தால்‌, சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்நீதிருப்பார்கள்‌. தங்களுக்கு நம்பிக்கை இல்லாததும்‌ தேச நன்மைக்கு ஏற்றதல்ல என்று நினைப்பதுமான திட்டத்தைத்‌ தேசத்தில்‌ நடதீதுவிப்பதற்கான.: முயற்சிகள்‌ செய்யப்படுவதை, காங்கிரசில்‌ இருக்கவேண்டுமே என்னும்‌ ஒரு காரியதீதிற்‌. காகச்‌ சகிதீதுக்கொண்டிருப்பதைவிட, அதை எதிர்க்கவேண்டும்‌ என்னும்‌ அவசியமுள்ள வர்கள்‌ காங்கிரசைவிட்டு வெளியே போய்தீ தங்கள்‌: மனசாட்சிப்படி நடந்துகொள்ளலாமென: மகான்‌ சொல்லுவதை காங்கிரசும்‌ ஒப்புக்கொள்ளுமானால்‌, அப்படிச்‌ செய்வது மேலான: தென்றே நினைக்கிறோம்‌. அதற்கடுத்தாற்போல்‌, நிர்மாணதீ திட்டத்தில்‌ ஒரு பாகமாகிய கதரை உத்தேசித்து * நூற்போர்‌ சங்கம்‌? ஒன்று தனியாக ஏற்படுதீதப்பட்டிருக்கிறது. இது பெரும்பாலும்‌, மாறுதல்‌ வேண்டாதாருக்கும்‌, ஒத்‌ துழையாதார்‌ என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கும்‌ தேச நன்மையை உத்தேசித்து அதிக திருப்தியைக்‌ கொடுக்கும்‌ என்பதில்‌ ஆட்சேபணை இல்லை. ஆனால்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌ இதையாவது ஒழுங்குபெற நடக்க விடுவார்களா: என்பதுதான்‌ நமது சந்தேகம்‌. நூற்பதில்‌ நம்பிக்கை இல்லாதவர்களும்‌ நூற்பதைக்‌ கேவலமாகக்‌ கருதுபவர்களும்‌, கதரில்‌ நம்பிக்கை இல்லாதவர்களும்‌ உறுதிமொழியில்‌ கையெழுதீதிட்டு, உள்ளே வந்து புகுந்து, இதிலும்‌ சிறிது சிறிதாக மகாதீமாவை விட்டுக்‌ கொடுத்துக்கொண்டே போகச்‌ சொல்லுவார்களோவென்று நாம்‌ சந்தேகப்படாமலிருக்க முடியவில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3011 342 பெரியார்‌ ஈட, வெ. ரா சிந்தனைகள்‌ கடைசியாக ஒரு வார்த்தை? * நூற்போர்‌ சங்கம்‌? ஏற்படுத்தியதால்‌ நிர்மாணதீ திட்டத்தில்‌ ஒரு பாகமாகிய கதர்‌ திட்டம்‌ பாதிக்கப்படவில்லை என்று சொல்வதானாலும்‌, தீண்டாமை விலக்குதீ திட்டம்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ கருதீ.துப்படியே தானே மறைந்து போய்விட்டது. பெல்காமில்‌ மதுவிலக்கு மறைந்தது$ பாட்னாவில்‌ தீண்டாமை விலக்கு மறைந்தது. இனி * கதரின்‌ தலை எழுத்து? எந்த ஊரில்‌ முடியப்போகிறதோ தெரிய வில்லை. ஆனாலும்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌ அதை ஒழிக்கவும்‌ ஒருவாறு மனதில்‌ வைத்துக்‌ கொண்டுதான்‌ இருப்பார்கள்‌. தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரை நாம்‌ செய்யவேண்டியது என்னவென்பதை யோசிக்க வேண்டும்‌. நம்‌ நாட்டில்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரில்லாமல்‌ காங்கிரஸ்காரர்களுக்‌ குள்ளேயே சுயராஜ்யக்‌ கட்சியை ஆதரிக்கிறவர்களும்‌, அதன்‌ திட்டமானது தேசத்திற்குக்‌ கெடுதியை விளைவிக்கக்‌ கூடியதென்று நம்பி காங்கிரஸ்‌ அதன்‌ வழி செல்லவிடாமல்‌ தடுத்து, உண்மையான வழியில்‌ நிறுத்த வேண்டுமென்று அந்தரங்க சுத்தியுடன்‌ வேலை செய்பவர்களுமிருக்கிறார்கள்‌. இதில்‌ யார்‌ பெரும்பான்மையோர்‌, சிறுபான்மையோர்‌ என்பதைப்பற்றிக்‌ கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களிருவருக்கும்‌ காங்கிரசில்‌ இடமிருக்கின்றதா ₹ இல்லையா 8 இரண்டாவதவர்களுக்கு கிடமில்லையென்ற தீர்மானம்‌ ஏற்பட்டால்‌ அவர்கள்‌ என்ன செய்யவேண்டியது என்பதைப்‌ பற்றியும்‌ அல்லது தனிச்‌ சங்க மொன்று கண்டு அதன்‌ மூலமாக உண்மை ஒதீதுழையாமைத்‌ திட்டத்தையும்‌ நிர்மாணதீ திட்டத்தையும்‌ நிறைவேற்ற முயற்சி செய்வதா என்கிற விஷயத்தைப்பற்றியும்‌, காஞ்சி புரம்‌ மகாநாட்டிலும்‌, கான்பூர்‌ காங்கிரசிலுமே நாம்‌ முடிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. இது விஷயத்தை தமிழ்நாட்டிலுள்ள தேசியவாதிகளும்‌, தேசதீ தொண்டர்களு ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமாய்க்‌ கேட்டுக்கொள்கிறோம்‌. . லாலாஜி அவர்களும்‌, தமது * பீபின்‌? பத்திரிகையில்‌, பாட்னா தீர்மானங்களை ஆட்சேபிதீது விரிவாக எழுதி: இருக்கின்றார்‌ [தலையங்கம்‌--* குடி அரசு 1-11-10-1925) 2. காங்கிரஸ்‌ மடிவதே மேல்‌ பெரியோர்களே 1 காங்கிரஸ்‌ முன்னிருந்த நிலைமையையும்‌ இப்போதுள்ள நிலைமையையும்‌ நீங்கள்‌ அறிந்துகொள்ள வேண்டும்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டு 40 வருஷமாகிறது. அதனால்‌ என்ன பயன்‌ கிடைதீதது8 இது ஏற்படாததற்கு முன்பு என்ன பலன்‌ கிடைத்தது? ¢ காங்கிரஸ்‌ இருப்பதா, மடிவதா?” என்று துண்டுப்‌ பிரசுரம்‌ வழங்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்‌. என்னைக்‌ கேட்டால்‌ தற்போதுள்ள காங்கிரஸ்‌ மடிவதே நன்று என்று சொல்லுவேன்‌. இப்போதுள்ள காங்கிரசைக்‌ குழிதோண்டிப்‌ புதைக்கவேண்டும்‌, காங்கிரஸ்‌ ஏற்படாததற்கு முன்பு ¢ பிராமணரல்லாதார்கள்‌? செல்வாக்கும்‌ யோகீகிய தையும்‌ அடைந்திருந்தார்கள்‌. அன்றியும்‌, சகல உத்தியோகங்களையும்‌ நம்மவர்களே நடத்தி ஒற்றுமையாக நடதீதி வைத்திருக்கிறார்கள்‌. நீதி நிர்வாகங்கள்‌ ஒழுங்காக நடந்து வந்தன. முன்பு கேசவலு நாயுடு என்ற ஒரு ¢ சிரஸ்தார்‌ ? (Sherishtadar) இருநீதார்‌ஃ கலெக்டர்‌ அவரைக்‌ கூப்பிட்டாலும்‌, கையில்‌ தடியும்‌ வாயில்‌ சுருட்டும்‌ பிடிதீ.துக்கொண்டே போய்‌ * என்ன? என்று கேட்பார்‌. கலெக்டரும்‌ இவருக்கு மரியாதை கொடுதீதுவந்திருக்‌ கிறார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 18-10-1925 ¢ குடி அரசு? முகப்பு அட்டை. நமக்குக்‌ கிடைதீதுள்ள ஆதாரங்களுள்‌ மிகப்‌ பழமையான து-11-10-1925 இதழ்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 843 முனிசீப்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ எவ்வித உதீதியோகதீதையும்‌ திறமையாக நடத்தி ருக்கிறார்‌. திரு. பெத்தண்ணா என்ற தாசில்தார்‌.இருந்தார்‌. அவருக்கு இங்கி லீஷில்‌ கையெழுத்துப்‌ போடத்தான்‌ தெரியும்‌] ஆனால்‌, வேலையில்‌ திறமைசாலி. அவரை வேறு இடத்திற்கு மாற்றினதற்காகப்‌ பல தடவை இராஜிநாமாச்‌ செய்தார்‌. அப்போது உத்தியோகங்களுக்கு மரியாதையும்‌ கவுரவமும்‌ யோக்கியதையும்‌ ஏற்பட்‌ டிருந்தது: காங்கிரசுகீகுப்‌ பின்‌ தெருப்‌ பிசீசை எடுக்கும்‌ வகுப்பினரெல்லாம்‌ உத்தியோகங்‌ களுக்கு வந்துவிட்டதால்‌ மரியாதையைக்‌ கெடுதீதுவிட்டார்கள்‌. இவர்களை வேலைகளி லிருந்து விலக்கிவிட்டாலோ, அதிகாரிகளுக்குக்‌ கும்பிடு போட்டோ அல்லது அந்த அதிகாரிக்கு வேண்டிய சகல சவுகரியங்களையும்‌ செய்துகொடுத்தோ அந்த வேலையைச்‌ சம்பாதிதீதுக்கொள்வார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டதன்‌ பலனாக பார்ப்பனரல்லாதார்களுகீகுப்‌ பெருத்த கஷ்டமும்‌, நீதி நிர்வாகங்களுக்கு அநீதியும்‌ ஏற்பட்டு விட்டதென்றே சொல்லுகிறேன்‌. காங்கிரஸ்‌ போர்‌ வையைப்‌ போர்‌ தீதிக்கொண்டே நிர்வாக சபை அங்கத்தினர்‌ முதற்கொண்டு கீழ்த்தர உத்தியோகங்கள்வரையில்‌ பார்ப்பனர்களே புகுநீதுவிட்டார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டு முப்பது, முப்பந்தைந்து வருடங்கள்வரை இவ்விதமாகவே நடந்துவந்திருக்கின்றது. காங்கிரஸின்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு ஒரு வருப்பார்‌ எல்லா உத்தியோகங்களையும்‌ அனுபவிதீ துவருவதைக்‌ கண்ட மகாதீமா காந்தி அவர்கள்‌, எல்லோரையும்‌ சமம்‌ செய்யும்‌ உதீதேசதீதோடு ஒத்துழையாமை ஆரம்பிதீது, ¢ ஒருவரும்‌ அரசாங்க உத்தியோகங்களுகீ குப்‌ போகக்கூடாது? என்று உபதேசம்‌ செய்தார்‌. அப்போது இந்தப்‌ பார்ப்பனர்க ளெல்லாம்‌ ஏன்‌ உத்தியோகத்தை விட்டு வெளியே வரவில்லை? [சென்னை வண்ணாரப்பேட்டையில்‌, 29-7-1926-ல்‌ சொற்பொழிவு--1 குடி அரசு? 8-8-1926] \ 8. காங்கிரசும்‌ நானும்‌ பெரியோர்களே ! பொதுமக்களின்‌ சுயமரியாதைக்கும்‌ உரிமைக்கும்‌ விடுதலைக்கும்‌ ஆபத்தான. இயக்கம்‌ என்று எதையாவது நான்‌ கருதினால்‌, அதை அடியோடு அழிக்க நான்‌ பின்வாங்க மாட்டேன்‌. எவ்வித பழியோ, அபகீர்தீதியோ, ஆபதீதோ வருவதானாலும்‌ அவற்றைக்‌ கொஞ்சமும்‌ இலட்சியம்‌ செய்யாமல்‌ என்னால்‌ கூடியதைச்‌ செய்துதான்‌ தீருவேன்‌. நான்‌ பொதுவாழ்வில்‌ உழைக்க ஆரம்பித்த பிறகு--கக்‌ கொள்கையையே, என்னால்‌ கூடியவரை அனுசரிதீதுவந்திருக்கிறேன்‌. உதாரணமாக, ஹோம்‌ ரூல்‌? கிளர்ச்சியின்போதும்‌, ஈரோட்டில்‌ நடந்த கொடித்‌ தகராறில்‌ நானே முன்னணியில்‌ இருந்ததும்‌, என்‌ வீட்டில்‌ கொடி கட்டினதும்‌ ) ஜஸ்டிஸ்‌ கட்சி ஆரம்பித்த காலத்தில்‌, *அது தேசத்‌ துரோகமான கட்சி? என்று நமது பார்ப்பனர்கள்‌ செய்த பிரச்சாரத்தில்‌. ஏமாந்துபோய்‌ அதற்கு எதிராக, சென்னை மாகாணச்‌ சங்கம்‌ ? ஏற்படுத்துவதற்காகக்‌ கூட்டின முதல்‌ கூட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவையும்‌ கொடுப்பதாக வாக்களித்து 1000 ரூபாய்‌ தந்தியில்‌ வாக்களித்து அனுப்பியதும்‌ ) அக்‌ கூட்டத்திற்கு முன்னணியில்‌ இருந்து மகா நாடுகள்‌ முதலியன நடத்தியதும்‌, உப அக்கிராசனாதிபதியாக இருந்ததும்‌; பிறகு, ஹோம்‌ ரூல்‌! கிளர்ச்சியில்‌ உள்ள சில புரட்டுகள்‌ வெளியானதும்‌, அதை ஒழிப்பதற்கு, * நேஷனலிஸ்ட்‌ அசோசியேஷன்‌ ! என்பதாக சென்னையில்‌ ஒரு தேசிய சபை ஸ்தாபிதீத காலத்தில்‌ அதிலும்‌ முன்னணியிலிருந்து அச சபைக்குத்‌ தமிழ்நாடு காரியதரிசியாக இருந்ததும்‌ ) மற்றும்‌ அதற்குப்‌ பிறகும்‌, முன்னும்‌ தேசிய சம்பந்தமான www.thamizham.net - Free £ book 14௦ 3011 344 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌: எல்லா விஷயங்களிலும்‌ (மனப்பூர்வமாய்‌) எவ்விதக்‌ கஷ்டத்தையும்‌ பொருட்படுத்தாமல்‌ ஊழியம்‌ செய்ததையும்‌ நீங்கள்‌ நேரில்‌ பார்தீதிருப்பீர்கள்‌. அப்படிப்பட்ட ஒருவன்‌, இன்று ஏன்‌ தற்கால காங்கிரசால்‌ பார்ப்பனரல்லாத மகீகளுகீகு ஆபத்து என்று சொல்ல வந்திருக்கிறேன்‌ என்பதைச்‌ சற்று யோசியுங்கள்‌ | காங்கிரசால்‌ வரும்‌ பெருமையையோ சுயராஜ்யதீிதையோ அடைய எனக்கு இஷ்ட மில்லாததாலா ₹ அல்லது சுயராஜ்யத்திற்கு விரோதமாக இருந்தால்‌ அரசாங்கதீதாரிடம்‌ ஏதாவது பட்டம்‌ பதவி அல்லது எனது மக்களுக்கு உத்தியோகம்‌ முதலியன பெறலா மென்றா$ இனி எனக்கு எப்பேர்ப்பட்ட பட்டமும்‌ கிடைக்காது) உத்தியோகமும்‌ கிடைக்காது) எனக்குப்‌ பின்ளை குட்டிகளும்‌ இல்லை. மற்றபடி, ஜஸ்டிஸ்‌ கட்சியாரால்‌ ஏதாவது ஜீவனதீதிற்கு ஆதாரமோ அல்லது கவுரவ உதீதியோகங்களோ அடையலாம்‌ என்று நினைக்கிறேன்‌. என்றாலோ--நான்‌ எல்லா உத்தியோகங்களையும்‌ பார்தீது இராஜிநாமா கொடுத்துவிட்டு, ஒத்‌ துழையாமைக்கு வந்தவன்‌. நான்‌ ஆனரரி மாஜிஸ்ட்ரேட்‌ பதவியை ஒன்றரை வருடத்தில்‌ இராஜிநாமா செய்தவன்‌] தாலூகா போர்டு மெம்பர்‌ பதவியை இரண்டு தடவை இராஜிநாமா கொடுத்தவன்‌ ; ஜில்லா போர்டு மெம்பர்‌ பதவியை 2 வருடத்தில்‌ ராஜிநாமா கொடுத்தவன்‌ ) முனிசிபல்‌ சேர்மன்‌ பதவியை ஒன்றரை வருஷதீதில்‌ கிராஜிநாமா கொடுத்தவன்‌, ஆகவே, இனி எந்த உதீதியோகம்‌ பார்க்க நான்‌: ஆசை கொள்ளவேண்டும்‌? ஆசை கொண்டால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி தயவில்லாமல்‌ கிடைக்காதா என்பதை நீங்கள்‌ நடுநிலைமையிலிருந்து யோசித்துப்‌ பாருங்கள்‌! எனது தாலூகா தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாக மாத்திரம்‌ இருக்கிறேன்‌. ஆனால்‌, இது சுமார்‌ 15 வருஷதீதிற்குமேல்‌ பார்‌ தீ.துவருகிற வேலையானதாலும்‌ இதற்கு மற்றொருவர்‌ தயவும்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌, எதை உத்தேசித்து நான்‌ காங்கிரசை வேண்டுமென்று குற்றஞ்சொல்ல நினைப்பேன்‌ என்பதை நீங்கள்‌ யோசனைசெய்து பாருங்கள்‌ | ஆனால்‌, நமது பார்ப்பனர்கள்‌ தங்களது ஆதிக்கத்திற்கு அனுகூலமாய்‌ உழைக்‌ கிறவன்‌ எவ்வித அயோக்கியன்‌ என்றாலும்‌ அவனைத்‌ தேச பகீதன்‌ என்‌ பார்கள்‌. அவர்‌ கன்‌ நன்மைக்குக்‌ கடுகளவு விரோதம்‌ ஏற்படத்‌ தக்கவாறு எவராவது நடந்துவிட்டால்‌ எல்லா பார்ப்பனர்‌ களும்‌ கம்பியில்லாத தந்திபோல்‌, எல்லோருக்கும்‌ ஏககாலத்தில்‌ உதயமாகி எல்லோரும்‌ கூடிக்கொண்டு ¢ தேசத்‌ துரோகி, தேசத்‌ துரோகி? என்று கூறுவார்கள்‌. * காங்கிரஸ்‌? என்பதை நமது நாட்டையம்‌--இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான நமது சங்கத்தையும்‌ அழிக்க வந்த ஒரு * அரக்கன்‌? என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. காங்கிரஸ்‌ என்கீற விஷத்தன்மை நமது நாட்டில்‌ ஏற்பட்டுப்‌ பரவாதிருக்குமானால்‌: முதலாவது நமது நாட்டில்‌ அன்னிய ஆட்சி இவ்வளவு பலமாய்‌ ஆதிக்கம்‌ பெற்று இருக்காது. இரண்டாவது; இந்த அன்னிய ஆட்சி பலமாய்‌ ஆதிக்கம்‌ பெறவும்‌ அதற்கு ஒற்றர்களாயிருந்தும்‌, அஸ்திவாரம்‌ போலும்‌ கண்கள்‌ போஜலுமிருந்தும்‌, அந்த அன்னிய ஆட்சி இந்‌ நாட்டில்‌ இருப்பதாலேயே வாழகீகூடியவர்களான நமது பார்ப்பன ஆதிக்கமும்‌ நமது நாட்டில்‌ இவ்வளவு தூரம்‌ வளர்ந்திருக்காது. இந்தப்‌ பார்ப்பனர்கள்‌, ஒன்று ஆற்றோரங்களில்‌ காலை மாலைகளில்‌ மூக்கைப்‌ பிடி தீது முணுமுணுத்து கொண்டிருந்து விட்டு நம்மிடம்‌ பிச்சை எடுத்து வயிறு வளர்தீ.துக்கொண்டிருக்க வேண்டும்‌. அல்லு, வேறு ஏதாவது ஒரு தேசதீதுக்குப்‌ போய்‌ அத்தேச மகீகளின்மேல்‌ ஆதிக்கம்‌ செலுத்த வேற்றரசர்களைக்‌ கூட்டிக்கொண்டுவந்து வைக்க பிரயதீதனப்பட்டுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. [திருச்சி, தஞ்சை) கும்பகோணம்‌, திருநெல்வேலி ஆகிய இடங்களில்‌ 51-10-1926 முதல்‌ 7-11-1926 மூடிய சொற்பொழிவு--! குடிஅரசு ! 7-11-1926] www.thamizham.net - Free £ book 14௦ 3011 345 4. காங்கிரசும்‌ சுயமரியாதையும்‌ அன்புள்ள தலைவரவர்க$ள ! சகோதரிகளே ! சகோதரர்களே ! இன்று இங்கு சுயமரியாதை வாசக சாலை ஆண்டுவிழாவை உத்தேசித்து நடைபெறும்‌ உபந்நியாசங்களில்‌ நான்‌ ¢ காங்கிரசும்‌ சுயமரியாதையும்‌? என்பது பற்றிப்‌ பேசவேண்டும்‌ என்பதாய்க்‌ குறிக்கப்பட்டிருக்கின் றது. இது விஷயமாய்‌ எனது அபிப்பிராயங்கள்‌ அனேகமாகதீ தமிழ்நாடு முழுவதும்‌ அறிந்ததேயாகும்‌. எப்படியெனில்‌, குடிஅரசு? பத்திரிக்கை வாயிலாகவும்‌, அனேக உபந்நியாசங்கள்‌ மூலமாகவும்‌ சுமார்‌ 5, 6 வருஷங்களாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கின்‌ றேன்‌. அவற்றில்‌ இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும்‌ ஏற்பட்டு விடவில்லை. சமீபகாலத்தில்‌, அதாவது இந்த ஒருவருஷ காலத்தில்‌ காங்கிரசுகீகுச்‌ செய்யப்பட்ட விளம்பரதீதின்‌ காரணமாய்‌ பொது ஜனங்களில்‌ பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப்‌ பற்றி பேசட்படுகின்‌ றது என்பதைத்‌ தவிர வேறில்லை. ஒரு நாட்டில்‌ புதிதாக ஏதாவது விஷயம்‌ தோன்றினால்‌ அதைப்பற்றி எங்கும்‌ பேச்சாய்‌ இருப்பது சகஜமேயாகும்‌, அதுபோல்தான்‌, இப்‌ போது காங்கிரசைப்பற்றியும்‌ பேசப்படுகின்றது. ஆதலாலே யதான்‌, நீங்களும்‌ என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கிறீர்‌ கள்‌ என்று கருதுகின்றேன்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டு சுமார்‌ 45 வருஷமானபோதிலும்‌, அது எதை உதீ?தசித்து, எப்படிப்‌ பட்டவர்களால்‌ ஆரம்பிக்கப்பட்டது என்பது காங்கிரஸ்‌ அனுபவம்பெற்ற யாவரும்‌ அறிந்ததேயாகும்‌, அது இராஜவிசுவாசப்‌ பல்லவியைப்பாடி உகீதி3யாகம்பெற ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபன மேயாகும்‌. உதாரணம்‌ வேண்டுமானால்‌, நமது நாட்டில்‌ இதுவரையிலும்‌, இப்போதும்‌ பெரிய உத்தியோகஸ்தர்‌ கள்‌, பெரிய வக்கீல்கள்‌, பெரிய பட்டதாரிகள்‌ முதலியவர்கள்‌ எல்லாம்‌ காங்கிரசினாலேயே பெரிய மனிதர்களானவர்கள்‌. என்பதைக்‌ கவனித்துப்‌ பார்தீதால்‌ விளங்கும்‌. நானும்‌ 10, 15 வருஷங்களுக்கு முன்பு இரண்டொரு பழைய காங்கிரசுகளுக்கும்‌ சென்றிருக்கி3றன்‌. அப்பொழுதெல்லாம்‌ காங்கிரசின்‌ முதல்‌ தீர்மானம்‌ இராஜவிசுவாசதீ தீர்மானமே யாகும்‌. உதாரணமாக; 1914ஆம்‌ வருஷம்‌ சென்னையில்‌ கூடிய காங்கிரசுக்கு நான்‌: சென்றிருந்தபோது கல்கத்தா திருவாளர்‌ பூபேந்திரநாத்‌ போஸ்‌ தலைமை வகித்திருந்தார்‌., காங்கிரஸ்‌ நடவடிக்கை நடந்குகொண்டிருக்கையில்‌ சென்னை கவர்னர்‌ லார்ட்‌ பெண்ட்லண்ட்‌ துரையவர்கள்‌ காங்கிரசுக்கு விஜயம்‌ ஆனார்‌. அவர்‌ விஜயமானதும்‌ மற்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு திருவாளர்‌ சுரேந்திரநாத்‌ பானர்ஜீ அவர்‌ கன்‌ உடனே எழுந்து ஒரு இராஜவிசுவாசத்‌ தீர்மானத்தைப்‌ பிரரேபித்து, வெகு அழகராக--அதாவது, 6 இந்தியாவுக்கு பிரிட்டிஷ்‌ அரசாங்கம்‌ கடவுளால்‌ அனுப்பப்பட்டது? என்றும்‌ * இந்திய மக்கள்‌ தலைமுறை தலைமுறையாய்‌ இராஜவிசுவாசிகளாய்‌ இருக்கவேண்டும்‌? என்றும்‌ பேசிமுடி தீதார்‌. பலர்‌ ஆமோதித்குப்‌ பேசியபின்‌ 5 நிமிஷ நேர கர 8காஷதீக டன்‌ அதை (கராஜவிசுவாச தீர்மானம்‌) நிறைவேற்றி, சென்னை அமிதவாத தேசியவாதிகளான அய்யங்கார்‌ கூட்டத்தினர்‌ கள்‌ சமீபகாலம்‌ வரை, எட்வர்டு மன்னரும்‌ ஜார்ஜ்‌ மன்னரும்‌ விஷ்ணு அம்சமென்றே பேசி, வேதங்களிலிருந்தும்‌ சாஸ்‌ திரங்களிலிருந்தும்‌ ஆதாரங்கள்‌ எடுத்துக்காட்டி வந்தார்கள்‌. (அதாவது அரசர்கள்‌, விஷ்ணு அம்சமென்று வேதம்‌ கூறுவதாக உரைதீகுக்கொண்டு வந்தார்கள்‌.) கடைசியாக, சமீபகாலந்தொட்டுதான்‌--அ தாவது, காங்கிரசின்‌ பலனை (உதீதியோ கங்களை) ஒரே கூட்டத்தார்‌ (பார்ப்பனர்‌ மாத்திரம்‌) அனுபவிப்பதில்‌ பொறாமைப்பட்ட சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார்‌, *காங்கிரசின்‌ பலன்‌ எல்லோருக்கும்‌ கிரமமாய்‌ பங்கு 1686—44 www.thamizham.net - Free E book No 3011 346 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கிடைக்கவேண்டும்‌? என்று கேட்க ஆரம்பித்தது முதல்‌, அதுபோலவே காங்கிரஸ்‌ பலனும்‌ எல்லோருக்கும்‌ பங்குபோக ஆரம்பித்த பிறகே--இநராஜவிசுவாசம்‌ போய்‌ ஒத்துழையாமை யாகி, கராஜவிசுவாசமாய்‌ இருப்பவர்களை; * தேசத்‌ துரோகிகள்‌ ? என்றும்‌ ¢ சுயநலக்‌ காரர்கள்‌ ! என்றும்‌ ¢ வகுப்புவா திகள்‌ ? என்றும்‌ சொல்லவேண்டியதாகி, வழக்கமாய்‌ அனுப வித்து வந்த பலனை அடையமுடியாமல்‌ போனவுடன்‌; காங்கிரஸ்வாதிகள்‌ (பார்ப்பனர்‌), ¢ தேசீயவா திகளாகப்‌ பரிணமிக்கத்‌ தொடங்கிவிட்டார்கள்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி என்பதாகவும்‌, முஸ்லிம்‌ லீக்‌ என்பதாகவும்‌, மற்றும்‌ வகுப்புச்‌ சங்கங்கள்‌ என்பதாகவும்‌ சில ஸ்தாபனங்கள்‌ தோன்றி காங்கிரஸ்‌ பலனில்‌ (உத்தியோகங்களில்‌) பங்கு கேட்காது இருந்திருக்குமானால்‌ இன்றையதினம்‌ இந்தீயாவில்‌ தராஜவிசுவாசம்‌ என்பது காங்கிரசுக்‌8க சொந்தமான ரிஜிஸ்டர்‌ செய்யப்பட்ட டி ரேட்‌ மார்க்காய்‌- அதாவது, உரிமைசெய்த வியாபாரக்‌ குறியாய்‌ இருந்துவரும்‌. சென்னபட்டணம்‌ ஜார்‌ ஜ்டவுன்‌ ஆனதுபோல்‌ பார்ப்பன மக்கன்‌ பெயரும்‌ ஜார்ஜ்‌ அய்யர்‌, ஜார்ஜ்‌ சாஸ்திரி ஆகி இருக்கும்‌. உதாரணமாக; இராஜா, விஷ்ணு அம்சம்‌ என்பதுகூட பார்ப்பனர்‌ சொல்லி இருக்காவிட்டால்‌ இன்று மற்ற யாருக்குமே தெரிந்திருக்காது என்பதேயாகும்‌. அப்படி அவர்கள்‌ சொன்னதி லிருந்தே இன்னும்‌ பலர்‌ அப்படி நிணைத்துக்கொண்டிருக்கிறார்கள்‌, நிற்க, இன்றும்‌ காங்கிரஸ்‌ என்பதற்கும்‌ ஆறரைக்கோடி தீண்டாதார்‌ என்பவர்களுக்கும்‌ சிறிகும்‌ சம்பந்தமில்லை, அவர்கள்‌ கிராஜவிசுவாசிகள்‌. மேலும்‌ 8 கோடி முகமதியர்‌ என்பவர்களுக்கும்‌ காங்கிரசுக்கும்‌ சம்பந்தமில்லை. இவர்களும்‌ இராஜவிசுவாசிகள்‌. வருணாசிரமம்‌ பேசும்‌ பார்ப்பனர்களும்‌ தங்களை இராஜவிசுவாசிகள்‌ என்றே சொல்லிக்‌ கொள்ளுகிறார்கள்‌. இந்த இரண்டு மூன்று கூட்டத்திலும்‌ 100-க்கு ஒருவர்‌ இருவர்கூட காங்கிரஸ்காரர்‌ களாய்‌ இருக்கிறார்கள்‌ என்று தைரியமாய்ச்‌ சொல்லமுடியாது. ஒருசமயம்‌ முகமதியர்‌ களில்‌ ஒருவர்‌, இருவர்‌ என்கின்ற எண்ணிக்கை இருந்தாலும்கூட, தீண்டப்‌ படாதார்‌ என்‌ பவரீ களில்‌ சுதீதமாய்‌ தேசியவாதிகள்‌ இல்லையென்பதை யாரும்‌ மறுக்க முடியாது, கிறிஸ்தவர்களிலும்‌ மிகச்சிலரே இருக்கக்கூடும்‌. அவர்களும்‌ வயிற்றுப்‌ பாட்டிற்கு சர்சீ௯களில்‌ இராஜவாழ்தீதுப்‌ பாடிவிட்டு, வெளியில்‌ வந்து வேடிக்கைக்‌ கூட்டத்தில்‌ ஜே? போடுபவர்களாகதீதான்‌ இருக்கமுடியுமேயொழிய ¢ இராஜா வேண்டாம்‌ ? என்கின்றவர்கள்‌ இல்லை என்றே சொல்லலாம்‌. மற்றபடி) சென்னை மாகாணத்தை எடுத்துக்கொண்டால்‌ பார்ப்பனர்கள்‌ தவிர பார்‌ ப்பனரல்லாதவர்களில்‌ வயிறாரக்‌ கஞ்சி குடிக்கும்‌ 100-க்கு 95 பேருக்கு மேலாகவே காங்கிரசினிடம்‌ கவலையில்லாதவர்களும்‌ அதை ஒப்புக்கொள்ளாதவர்களுமே இருப்பார்கள்‌. வேண்டுமானால்‌, தேர்தலில்‌ ஓட்டுப்பெற வேண்டியவர்கள்‌ கிரண்டுக்கும்‌ நல்ல பிள்ளைகள்‌ போல்‌ காட்டிக்கொள்வார்கள்‌. மற்றும்‌, இதை ஒரு வியாபாரமாய்க்‌ கருதுகிறவர்கள்‌, அதுவும்‌ இலாபநஷ்டம்‌ பார்த்து, இதைப்‌ பயன்‌ படுத்திக்கொல்‌ பவர்களாகவே இருப்பார்கள்‌, இவற்றைத்‌ தவிர வகுப்பு மகாநாடுகள்‌ என்பவைகள்‌ பெரிதும்‌ இராஜவிசுவாசப்‌ பல்லவி பாடிக்கொண்டுதான்‌ வருகிறது என்றாலும்‌, ஒரு சில வாலிபர்கள்‌ பார்ய்பனரல்லாதாரிலும்‌ காங்கிரசைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு வருகின்றார்கள்‌ என்பதை நான்‌ மறக்கவில்லை. அதுவும்‌ அப்படிப்பட்ட வாலிபர்கவில்‌, ஒரே கொள்கையாய்‌ தொடர்ந்து அதில்‌ இருக்கின்ற வாலிபர்கள்‌ என்பவர்கள்‌ பூதக்‌ கண்ணாடி வைத்துப்‌ பாரீக்கவேண்டியவர்களாகவே இருப்பார்கள்‌. எந்த ஸ்தாபன மானாலும்‌ அது ஒரு சம்பளம்‌ கிடைக்கும்‌ ஸ்தாபனமாகவும்‌ வாழ்வுக்குச்‌ சவுகரியமான ஸ்தாபனமாகவும்‌ விளம்பரதீதுகீகு அனுகூலமானதாகவும்‌ ஏற்பட்டுவிட்டால்‌, பிறகு அதில்‌ கலந்துகொள்ளும்‌ மக்கள்‌ ஏராளமாகிவிடுவார்கள்‌ என்பதையும்‌ அந்த ஸ்தாபனதீதைப்‌ பற்றிப்‌ புராணம்‌ பாடுவார்கள்‌ என்பதையும்‌ நான்‌ உங்களுக்கு எடுத்துச்‌ சொல்லித்தான்‌. தெரிந்துகொள்ளவேண்டும்‌ என்பதில்லை. ஆதலால்‌, அதைப்பற்றியே காங்கிரசின்‌: யோக்கியதையை நிர்ணயிதீ துவிடமாட்டீர்‌ கன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 கியகீகங்கள்‌ 347 ஆகவே, இவை ஒருபுறமிருக்க, காங்கிரசின்‌ கொள்கைகள்தான்‌ என்ன என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. எந்தக்‌ காரணங்களால்‌ இந்த நாடு அன்னிய நாட்டார்‌ என்பவர்களின்‌ ஆட்சிக்கு ஆளாக நேரிட்டதோ, அதுவும்‌ பார்ப்பனர்களின்‌ ஆதிக்கம்‌ தலைசிறக்க நேரிட்டதோ அந்தக்‌ காரணங்களை இள்லாமல்‌ செய்ய இந்தக்‌ காங்கிரசில்‌ ஏதாவது ஒரு கொள்கை இருக்கின்றதாக யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கிறேன்‌. இந்தியாவின்‌ பெருமையைப்‌ பற்றி யார்‌, என்ன பேசுவதாக இருந்தாலும்‌, இந்தியாவில்‌ பல மதம்‌, பல சாதி, பலவித உயர்வு தாழ்வு என்பவைகள்‌ இருந்த வரு கின்றதை யாரும்‌ மறுக்கமுடியாது. இந்தியாவில்‌ தெருவில்‌ நடக்காத, கண்களில்‌ தென்‌ படாத * இழிமக்கள்‌? இருந்துவருவது இரகசியமல்ல. இந்தக்‌ காரணங்களே இன்று அன்னிய ஆட்சி இந்த நாட்டில்‌ இருந்து வருவதற்கும்‌, பார்ப்பனர்கள்‌ பாடுபடாமல்‌: வாழ்ந்து ஆதிக்கம்‌ செலுத்தி வருவதற்கும்‌ காரணம்‌ என்பதையும்‌ ஒப்புக்கொள்ளாதவர்கள்‌ இல்லை. இதைச்‌ சரிப்படுத்த யார்‌ என்ன செய்தார்கள்‌ 8 எந்தக்‌ கொள்கையைக்‌ காங்கிரஸ்‌ திட்ட தீதில்‌ ஏற்படுத்தி இருக்கின்‌ றார்கள்‌ T அல்லது, அன்னிய ஆட்சியை ஒழித்த பிறகாவது இதற்கு என்ன மார்க்கம்‌ செய்வதாகக்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. என்பதைக்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌. சுயராஜ்யதீதில ¢ மதங்கள்‌ ஒழிக்கப்படும்‌? எண்‌றாவகுட *மத ஆதிக்கங்கள்‌ ஒழிக்கப்‌ படும்‌? என்றாவது; அல்லது அதுதான்‌ இல்லாவிட்டாலும்‌ சாதிகள்‌ ஒழிக்கப்படும்‌ என்றாவது, ¢ சாதிப்‌ பாகுபாடுகள்‌ ஒழிக்கப்படும்‌ ? என்றாவது எங்காவது தீர்மான ரூபமாக வாவது எழுதப்பட்டிருக்கின்‌ றதா ₹ எங்காவது, யாருடைய வாயினாலாவது சொல்லப்பட்‌ டிருக்கின்றதா ₹ என்று கேட்கிறேன்‌, மற்றும்‌, மதங்களும்‌, சாதிப்‌ பாகுபாடுகளும்‌ காப்பாற்றப்படும்‌ என்று உறுதி கூறப்படுகிறதா, இல்லையா என்றும்‌ கேட்கிறேன்‌. அதாவது, மததீதில்‌ நடுநிலைமை வகிப்பதாகவும்‌, வருணாசிரமம்‌ காப்பாற்றப்படும்‌ என்பதாகவும்‌, சாதீயில்‌ எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பாருடைய உரிமைக்கும்‌ பங்கம்‌ விளைவிக்கப்படமாட்டாது என்பதாகவும்‌, எந்த மனிதனுடைய மாறுபட்ட அபிப்பிராயத்‌ தையும்‌ புண்படுத்தப்பட மாட்டாதென்பதாகவுமல்லவா ஒவ்வொரு சாதி மத ஆதிக்கக்‌ காரனுகீகும்‌ உறுதி கூறப்பட்டு வருகின்றது. பிரஜா உரிமைத்‌ திட்டத்தில்‌ 14-வதாக ¢ மத விஷயங்களில்‌ சர்க்காரார்‌ தலையிடமாட்டார்கள்‌? அதாவது, மதக்‌ கொள்கைகளை மாற்ற முயற்சிக்க மாட்டார்கள்‌ என்றும்‌, 17-வதாக மாறுபட்ட அிப்பிராயங்‌ கொண்டோர்‌ மனது புண்படும்படியாக எந்தக்‌ காரியமும்‌ செய்யமாட்டார்கள்‌? என்றும்‌, அதாவது ¢ பிராமணர்கள்‌ மனம்‌ புண்படும்படி எ.துவும்‌ செய்யப்படமாட்டா.து ? என்றும்‌ ஸ்பஷ்டமாகக்‌ குறிக்கப்பட்டிருக்கின்‌ றதா, இல்லையா ₹ ஆதியிலும்‌, இந்தக்‌ கொள்கைகளையேதான்‌ நமது பார்ப்பனர்‌ பிரிட்டிஷ்‌ கவர்ன்‌: மெண்டையும்‌ ஒப்புக்கொள்ளச்செய்து, இதையே அரசியலிலும்‌ அனுசரிக்கும்படி சட்ட மாக்கி, சட்டப்படுதீதியதன்‌ பயனாகதீதான்‌ இதுவரை இந்தக்‌ கவர்ன்மெண்டில்‌ சரியான: சீர்திருத்தம்‌ ஏற்படுத்தமுடியாமலேயே இருந்துவருகின்றது. உதாரணமாக, * சாரதா சட்டம்‌! எடுதீதுக்கொள்ளுங்கள்‌) * விபசாரிகள்‌ சட்டம்‌? எடுதீதுக்கொள்ளுங்கள்‌, சர்க்காரால்‌ சட்டமாக்கப்பட்டும்‌ ஒருசில ஜனங்கள்‌ மனம்‌ புண்படுகிறதென்ற காரணம்‌ கொண்டு, அவர்களது முட்டுக்கட்டையாலேயே அதுவும்‌ சரிவர அமுலுக்கு வரமுடியாமல்‌ இருந்துகாண்டு வருகின்றது. பார்ப்பனியத்‌ தொல்லை இல்லாதிருக்குமானால்‌ அவை தானாக அமுலில்‌ இருக்கும்‌. இவ்விஷயத்தில்‌ இன்றும்‌ சட்டத்தை மிறுகின்றவர்கள்‌ ஜனங்களா; சர்க்காரா என்று கேட்கி றன்‌, இந்த நிலைமை புதிய அரசாங்கத்திலும்‌ 1$ 17 பிரிவுகளை வைத்துக்கொண்டு எப்படி மாற்றக்கூடும்‌ என்பதை யோசித்துப்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 348 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகன்‌ பாருங்கள்‌. பாமர மக்கள்‌, பகுத்தறிவற்ற மூடமக்கள்‌ ஏமாறும்படி பேசிவிட்டால்‌ போகமா? உண்மையைப்‌ பகுத்தறிவுடன்‌ யோசித்துப்‌ பார்க்கவேண்டாமா 1 என்று கேட்கிறேன்‌. மத நடுநிலைமை வகிக்கும்‌ சர்கீகாரால்‌-எந்த மனிதனுடைய மனதம்‌ புண்பட சகியாத சரீக்காரால்‌, அது தன்னை எவ்வளவுதான்‌ பூரண சுயேச்சை உடையது என்று சொல்லிக்கொண்டாலும்‌ அதனால்‌ நமக்கு என்ன பலன்‌ உண்டாகக்கூடும்‌ ! வேண்டு மானால்‌, பார்ப்பான்‌ இன்றைய வாழ்வைவிட இன்னும்‌ பல மடங்கு மேலாகவே வாழக்‌ கூடும்‌. ஆனால்‌, தெருவில்‌ நடக்க உரிமை இல்லாத ¢ பறை பன்‌ ! நிலைமையும்‌ சரீரத்தில்‌ பாடுபட்டாகவேண்டுய சூத்திரன்‌? நிலைமையும்‌ என்னவாகும்‌? என்றுதான்‌ கேட்கின்‌ றேன்‌. இப்பொழுதும்‌ பறையன்‌ வீதியில்‌ நடந்தாலே எக்தனை பார்ப்பனர்‌ மனம்‌ புண்படும்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா ₹ ஒருவர்‌ மனமும்‌ புண்பட சகிக்காத சுயராஜ்யம்‌ யாருக்குப்‌ பயன்‌ படக்கூடும்‌ ₹ மற்றும்‌, ஒருசமயம்‌ திரு. ஜவஹர்லால்‌ அவர்கள்‌ பார்ப்பனரிடையே பேசும்போது, 6 யாவருடைய, எந்த வகுப்பாருடைய உரிமையும்‌ சுயராஜ்பதீதில்‌ பறிக்கப்படமாட்டாது ? என்று சொன்னார்‌. ஆனால்‌, உடனேயே மற்றொரு கூட்டத்தில்‌ பேசும்போது, ¢ தீண்டாதாரை அனுமதிக்காத கோவில்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌? என்று சொன்னாரீஃ இவற்றை திரு. காந்தி அவர்களும்‌ ஆமோதித்து வருகிறார்‌. அப்படியானால்‌, மக்களின்‌ மத; சாஸ்திர, பழக்க வழக்கம்‌ சம்பந்தமான உரிமை களை எல்லாம்‌ என்ன செய்வது 8 அவற்றை ஒழிக்க ஆரம்பித்தால்‌ யாருடைய மனதும்‌ புண்படாதா 8 எந்க வகுப்பாருடைய உரிமையாவது இதனால்‌ பாதிக்‌ 5ப்படாதா ? என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. இன்றைய நமது நாட்டு வாழ்க்கையே மேற்கண்ட மதம்‌, சாஸ்திரம்‌) புராணம்‌, பழிக்க வழக்கங்களை ஆதாரமாக கொண்டுதானே இருந்துவரு கின்றது. எனவே, இதிலிருந்து, ஒருவனுடைய உரிமை என்றால்‌ என்ன என்பதைக்‌ கவனித்து முடிவு செய்ய வேண்டாமா $ காங்கிரசில்‌ மனித உரிமை என்பது மதக்‌ கொள்கைப்படி ஏற்பட்ட உரிமையா ? சாஸ்திரத்தில்‌ ஏற்பட்ட உரிமையா ? அல்லது கிது வரை அனுபவத்தில்‌, பழக்க வழக்கத்தில்‌ ஏற்பட்ட உரிமையா 1 அல்லது தேச ஆகாரத்‌ திற்கு ஏற்பட்ட உரிமையா1 மனித இயற்கைக்கு ஏற்பட்ட உரிமையா 1 எதைக்‌ குறிக்கின்றது என்று கேட்கிறேன்‌. மத உரிமை என்றால்‌ இந்து மததீதின்படி மேளமடிக்கவேண்டும்‌. இஸ்லாம்‌ மதத்திற்கு மேளம்‌ கூடாது. என்பது போன்ற உரிமைகளில்‌ எதைக்‌ காப்பாற்றுவது i பார்ப்பனனுக்கும்‌, பறையனுக்கும்‌ உள்ள மதக்‌ கொள்கை உரிமை, சாஸ்திர உரிமை, பழக்கவழக்க உரிமை ஆகியவைகள்‌ என்ன ஆவது 1 மக்களுக்கு மக்கள்‌, சாதிக்கு சாதி, ஊருக்கு ஊர்‌ மாறுபட்ட தேசாச்சார உரிமை என்ன ஆவது 8 மனித இயற்கை உரிமை என்றால்‌, பழக்க வழக்க மத உரிமை என்ன ஆவது? முதலாளி பாதுகாப்பும்‌, ஜமீன்‌ தாரன்‌ பாதுகாப்பும்‌ என்ன ஆவது ? ஆகவே, இவர்கள்‌ இருவரும்‌ இதைக்‌ கேட்கும்‌ மக்களை முமு மூடர்கள்‌ என்று கருதிக்கொண்டே இந்தப்படி-- அதாவது, யாருடைய உரிமையும்‌ காப்பாற்றப்படுமென்று ஒருபுற மும்‌, பறிமுதல்‌ செய்யப்படும்‌ என்று மற்றொரு புறமும்‌ பேசுகின்றார்கள்‌ என்றே நான்‌ கரு.துகின்‌ றேன்‌. ஏனெனில்‌, முதலாவது, திரு. காந்தியும்‌ திரு. ஜவஹர்ீலாலும்‌ கேட்கும்‌ சுயராஜ்யம்‌ ஜன நாயக சுயராஜ்யமா 8 ஏகநாயக சுயராஜ்யமா | என்பதை முதலில்‌ விளக்கட்ப த்திக்‌ கொள்ளுங்கள்‌. ஜன நாயகமானால்‌; ¢ தீண்டாதவர்களைக்‌ கோவிலுக்குள்‌ விடமாட்டேன்‌, குளத்தில்‌ விடு www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 349 மாட்டேன்‌ ? என்று சொல்லுகின்றவர்கள்‌ யார்‌ ? பிறகு, அந்தக்‌ கோவிலையும்‌, குளதீதையும்‌ பறிமுதல்‌ செய்கின்றவர்கள்‌ யார்‌ 8 என்று யோசித்கப்‌ பாருங்கள்‌. ஜனங்கள்‌ விட மாட்டேன்‌ என்று சொன்னால்‌, அந்த ஜனப்பிர திநிதி சர்க்கார்‌-யார்‌ மனதையும்‌ புண்‌: படுத்தாத சர்க்கார்‌ கோவிலை எப்படிப்‌ பறிமுதல்‌ செய்யமுடியும்‌ 8 கோவிலுக்குள்‌. பறையனைவிட கிஷ்டப்படாத ஜனங்கள்‌) கஷ்டப்படும்‌ பிரதிநிதியைத்‌ தெரிந்தெடுப்‌ பார்களா! என்பதை யோசித்குப்‌ பாருங்கள்‌. ஜனங்கள்‌ இஷ்டத்திற்கு விரோதமாய்‌ நடக்கும்‌ இராஜிய பாரம்‌ ஜனநாயக ராஜிய பாரமாகுமா? மற்றும்‌, இந்திய ஜனங்கன்‌ தங்களுக்குள்‌ இருக்கும்‌ சாதி விதீதியாசத்தையும்‌, தீண்டாமையையும்‌ ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜ்யம்‌ வேண்டுமென்றால்‌ இது பித்தலாட்டமா, அல்லவா? என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. இன்றைய தினம்‌ தீண்டாமை ஒழிப்பதை யார்‌ வேண்டாமென்‌: கின்றார்கள்‌ 1 இஸ்லாமானவர்‌ ஆட்சேபிக்கின்றார்களா 8 கிறிஸ்தவர்‌ ஆட்சேபிக்கின்றார்‌ களா 8 அல்லது கிறிஸ்‌ துவ அரசாங்கம்‌ ஆட்சேபிக்கின்றதா 8 ஆரம்பத்திலேயே புரட்டு பேசும்‌ சுயராஜ்ப அதிகாரம்‌ வந்தால்‌ கொடுமை செய்யுமா i நன்மை செய்யுமா i இன்று தீண்டாமை அனுசரிக்கும்‌ ஜனங்களுக்ருச்‌ சர்வ அதிகாரம்‌ வந்தால்‌ தீண்டாமையைப்‌ பலப்‌ படுத்‌ துவார்களா 8 தளர்தீதுவார்களா? எந்த அரசாங்கத்தில்‌ தீண்டாமை இருந்தாலும்‌ தீண்டாமையை அனுசரிக்கின்றவர்கள்‌ இன்று சுயராஜ்யம்‌ கேட்கும்‌ இந்துக்களேயொழிய வேறல்லர்‌ ஆகவே, இந்தமாதிரி வார்தீதைகள்‌ மக்களை ஏய்க்கும்‌ தந்திர வார்தீதை அல்லவா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. சகோதரர்களே ? காங்கிரசில்‌ நான்‌ இருக்கும்போது ¢ காங்கிரசில்‌ சாதி வித்தியாசம்‌ பாராட்டக்கூடாது! என்று ஒரு தீர்மானம்‌ சாங்கிரஸ்‌ கமிட்டியில்‌ நானும்‌ திரு. எஸ்‌. இராமநாதனும்‌ சேர்ந்து எங்கள்‌ சொந்த செல்வாக்கில்‌ நிறைவேற்றி வைத்‌ $தாம்‌. ஆனால்‌ உடனே திருவாளர்கள்‌ சி. ராஜகோபாலாச்சாரி, டாக்டர்‌ இராஜன்‌, டி.வி.எஸ்‌. சாஸ்‌ திரி, என்‌. எஸ்‌. வரதாச்சாரி, கே, சந்கானம்‌ முதலாகிய காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ என்கின்ற பார்ப்பனர்கள்‌ இராஜினாமா செய்தார்கள்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா என்று கேட்கின்றேன்‌. காங்கிரஸ்‌ பணத்தில்‌ காங்கரஸ்‌ பக்தரால்‌ நடத்திய குரு தலதீதில்தானே: எல்லோரையும்‌ சமமாய்‌ வைத்துச்‌ சாப்பாடு போடவேண்டூமென்று நாங்கள்‌ சொன்னதற்கு மேற்கண்ட தலைவர்களே தாம்‌ ₹ அது அவரவர்கள்‌ இஷ்டமேயொழிய யாரையும்‌ கட்டாயப்‌ படுத்தி, யாருடைய மனதையும்‌ புண்படுத்தி, யாருடைய உரிமையையும்‌ பறிக்கச்‌ கூடாது! என்று பதில்‌ சொன்ன?தாடு, அதற்காக அந்தக்‌ குருகல3ம கலைக்கப்பட்டு இப்‌ பாது அதை ஒரு பார்ப்பனர்‌ தனது சொந்தச்‌ சொத்தாக அனுபவிக்கிறார்‌ என்பது உங்களுக்குதி தெரியாதா? என்று கேட்கின்றேன்‌. இந்த விஷயத்தை திரு. காந்தியும்‌ ஒப்புக்கொண்டு அது அவர்‌ தனி அ9ப்பிராயம்‌ என்று செட்டிமார்‌ நாட்டு சுற்றுப்பிரயாணதீதில்‌ சமாதானம்‌ சொல்லவில்லையா ? என்று கேட்கிறேன்‌. இந்த மகாதீமாகீகளும்‌, தியாகிகளும்‌, தலைவர்களும்‌ இதற்குள்ளாக இப்போது புடம்போட்ட தங்கமாய்வீட்டார்களா? அல்லது சலவைசெய்த மக்களாய்விட்டார்களா என்று கேட்கின்றேன்‌. அல்லது; இந்த விஷயங்கள்‌ பொய்யா? என்று கேட்கின்றேன்‌. அல்லக, இன்றைய சுயராஜ்பதீ திட்டத்தில்‌ பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்‌ பட்டுவிட்ட தா, அல்லது இந்த 6 யாருடைய மனமும்‌ புண்படக்கூடாது? என்கின்ற தர்மநீதி எடுத்தெறியப்பட்டு விட்டதா ? என்று கேட்கிறேன்‌. காங்‌ கரஸ்‌ அங்கதீதினரில்‌ சாதிவிதீதியாசம்‌ பாராட்டப்‌ பட்டதில்லை என்று ஒரு நண்பர்‌ சொன்னார்‌. என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கு எடுத்துச்‌ சொல்வதற்கு மன்னிக்‌ வேண்டுகிறேன்‌. அதாவது, நானும்‌ உயர்‌ தி ந. எஸ்‌. சீனிவாசம்யங்காரும்‌ கங்கிரஸ்‌ பிரச்சார - விஷயமாய்‌ திண்டுக்கல்லுக்குப்‌ போனபோது ஒரு: பார்ப்பனர்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 350 பெரியார்‌ ஈட. வெ. ரா. சிந்தனைகள்‌: வீட்டுக்குப்‌ போயிருந்தோம்‌. அந்தக்‌ காலதீதில்‌ நான்‌ வேறாகவைத்தே சாப்பாடு போடப்‌ பட்டேன்‌. ஆனாலும்‌, பகலில்‌ சாப்பிட்ட எச்சில்‌ இலை அப்படியே இருக்க, அதன்‌ பக்கத்தில்தான்‌ இரவும்‌ இலைபோடப்பட்டுச்‌ சாப்பிட்டேன்‌. இது இப்படியிருக்க, மற்றொரு சமயம்‌ நானும்‌ தஞ்சை திரு. வெங்கிடசாமி பிள்ளையும்‌ காங்கிரஸ்‌ பிரசீசாரமாக பெரியகுளதீதிற்குப்‌ போனபோது ஒரு வக்கீல்‌ பார்ப்பனர்‌ வீட்டில்‌ இறக்கப்பட்டோம்‌. அப்போது காலை பலகாரம்‌ சாப்பிட்ட எச்சில்‌ இலைக்குப்‌ பக்கத்தில்‌ பகல்சாப்பாடும்‌, பகல்சாப்பாடு சாப்பிட்ட எச்சில்‌ இலைக்குப்‌ பக்கத்திலும்‌ காலை பலகாரம்‌ சாப்பிட்ட எசீசில்‌ இலைகீகுப்‌ பகீகதீதிலும்‌ இராத்திரி சாப்பாட்டுக்கும்‌ இலை போடப்பட்டு, எறும்புகளும்‌ பூச்சிகளும்‌ ஈக்களும்‌ ஊறிக்கொண் டிருக்கவே சாப்பிட்டுவந்தோம்‌. இவற்றையெல்லாம்‌ இலட்சியம்‌ செய்யாமல்தான்‌ காங்கிரசில்‌ உழைத்தேனானாலும்‌ காங்கிரசில்‌ சாதிவித்தியாசம்‌ பாராட்டப்படுவதில்லை என்பதை நான்‌ ஒப்பமுடியாது என்பதற்காக இதை சொல்லிக்கொள்ளு$ன்‌ றேன்‌. இவ்வளவு தூரம்‌ போவானேன்‌ ? இன்றும்‌ காங்கிரசிலுள்ள காங்கிரசை ஆதரித்துப்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌, மற்றும்‌ ¢ காங்கிரசும்‌ மகாதீமாவும்தான்‌ இந்தியாவுக்கு விடுதலை சமதீதவம்‌ வாங்கிக்‌ கொடுப்பவர்‌ ! என்று சொல்லும்‌ பார்ப்பனரில்‌ 100-க்கு 5 பேராவது சாதிவித்தியாசம்‌ விட்டவர்‌ களா 1 விடத்தயாராக இருக்கின்‌ றவர்களா ? என்று கேட்கின்றேன்‌. பார்ப்பனரல்லாதார்களில்‌ 100-க்கு 10 பேராவது சாதிவிதீதியரசம்‌ விட்டவர்களா? என்று கேட்கிறேன்‌. மூடிவைப்பதில்‌ பயனென்ன 1 * வாய்க்கு ருசியான சாப்பாடு எங்கு கிடைதீதாலும்‌ சாப்பிடலாம்‌? என்கின்ற ஒன்றிரண்டு ¢ துறவிகனைப்‌ பார்தீது முடிவு கட்டலாமா ₹ என்று கேட்கின்‌ றேன்‌. சுயராஜ்யம்‌ வந்தகாலதீதிலும்‌ இந்த மனிதர்கள்‌ தாமே இந்தநாட்டு மக்களாயிரு&க முடியும்‌! இவர்களது பிரதிநிதிகள்‌ தாமே ஜன நாயக ஆட்சி செலுத்துவார்கள்‌ 1 ஆகவே இந்த நிலையில்‌ என்ன மாற தலை ஏற்படுதீதிவிட முடியும்‌ ¥ மற்றும்‌, பொருளாதாரதீ துறையில்‌ செல்வவான்களுக்கும்‌ உதீதியோகஸ்தர்களுக்கும்‌ பார்ப்பனரீகளுகீகும்‌ தவிர மற்றவர்களுக்கு என்ன நன்மைசெய்ய சுயராஜ்யதீதில்‌ திட்ட மிருக்கின்றது என்பதைச்‌ சற்று யோசித்துப்‌ பாருங்கள்‌. பணக்காரனுடைய பணத்தைப்‌ பிடுங்கி மற்றவர்களுக்குப்‌ பங்கிட்டுக்‌ கொடுக்கும்படி நான்‌ கேட்கவில்லை, தேசத்துப்‌ பணமெல்லாம்‌ சர்க்க:ருடையதாவதானால்‌ ஆகட்டும்‌. இல்லையானால்‌, பணம்‌ ஒரே பக்கம்‌ போய்ச்‌ சேருவதற்கு மார்க்கமில்லாமலிருக்க வேண்டும்‌ என்றுதான்‌ சொல்லு கின்றேன்‌. இன்றைய தினம்‌ பணக்காரனுடைய பணத்தைப்‌ பிடுங்கி ஏழைகளுக்குப்‌ பங்குபோட்டுக்‌ கொடுத்துவிட்டால்‌, இந்த ஏழை நாளைக்கு கயா சிரார்தீதமும்‌, மதுரைவீரன்‌ பூசையும்‌, காவடி அபிஷேகமும்‌ பண்டிகையும்‌ செய்து, வீட்டில்‌ உட்கார்‌ ந்துகொண்டே பணத்தைத்‌ தொலைத்துவிடுவான்‌ என்பதும்‌, பிறகு பழையபடி புரோகிதனும்‌ தந்திரக்‌ காரனும்‌ ஏமாற்றுக்காரனும்தான்‌ மறுபடியும்‌ பணக்காரன்‌ ஆகிவிடுவான்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌. ஆதலால்தான்‌, நாட்டுச்செல்வம்‌ ஒரு பக்கமே போய்க்‌ குவியாமல்‌ இருக்கும்‌ திட்டமே போடவேண்டும்‌ என்றும்‌, யாருக்கும்‌ எந்தத்‌ தொழிலும்‌ செய்யவும்‌, எல்லோரும்‌ எதையும்‌ படிக்கவும்‌, சவுகரியமும்‌ அனுமதியும்‌ இருக்கவேண்டும்‌ என்றுந்தான்‌. சொல்லுகிறேன்‌. வருணாசிரம சுயராஜ்யதீதில்‌-யார்‌ மனதையும்‌ புண்படுத்தாத சுயராஜ்யதீதில்‌ g முடியுமா ¥ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. மற்றும்‌, கின்றைய இந்தியநாட்டின்‌ அடிமைதீதனதீதிற்கும்‌, தரிதீதிரதீதிற்கும்‌ ஆதரவாயிருப்பது மதமூம்‌ கோவில்களும்‌ என்பது நீங்கள்‌ எல்லோருமே ஒப்புக்கொண்ட விஷயமாகும்‌. ஆகவே, காங்கிரசினால்‌ இந்த மதமும்‌ கோவில்களும்‌ ஒழியுமா என்று: www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 351 நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌, இன்று நமதுநாட்டில்‌ காங்கிரசில்‌ இருப்பவர்கள்‌ பெரிதும்‌ மதப்‌ புரோகிதக்‌ கூட்டத்தாரும்‌ அவர்களது மக்களும்‌, கோவில்‌ பூசாரி மக்களும்‌ அல்லவா என்று கேட்கின்றேன்‌. காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ என்பவர்கள்‌. இவற்றை ஆதரிக்கின்றவர்கள்‌ அல்லவா ₹ என்று கேட்கின்றேன்‌. மதமும்‌ கோவிலும்‌ போய்விடுவது உண்மையானால்‌ இந்த ஆட்கள்‌, * காங்கிரசுக்கு ஜே” காந்திக்கு ஜே!!! என்று கதீதவார்களா? என்பதையும்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌, ஏதோ பார்ப்பனருக்குக்‌ கையாளாய்‌ இருப்பதன்‌. மூலம்‌ ஏதா ஒருவிததீதில்‌ வாழ்க்கை நடைபெறகின்றது என்பது தவிர, காங்கிரசின்‌ யோக்கியதை அறியாத காங்கிரஸ்‌ பக்தர்கள்‌ யார்‌ இருக்கின்றார்கள்‌ என்பது எனக்குத்‌ தெரியும்‌. ஆகவே, சகோதரர்களே, காங்கிரஸ்‌ பைத்தியம்‌ என்கின்ற பார்ப்பனராட்சி யிலிருந்து விலகி மக்களுக்கு உண்மைச்‌ சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டாலொழிய இந்த நாட்டுக்கோ மக்களுக்கோ எவ்வித பலனும்‌ ஏற்படப்போவதில்லை என்பதுதான்‌ எனது உறுதி. [கொட்டாறு சுயமரியாதை சங்க ஆண்டுவிழாவில்‌, 47-1931-d பெச்சு- குடிஅரசு? 12.7.1951] 6. காந்தியாரும்‌ காங்கிரசும்‌ பெரியோர்களே ! திரு. காந்தியவர்கள்‌ பார்ப்பனப்‌ பிரச்சாரகர்‌ என்றும்‌ பார்ப்பனியதீதிற்குப்‌ பாடு படுபவர்‌ என்றும்‌ சொல்லிவநீதிருக்கிறேன்‌. இந்த அபிப்பிராயம்‌ எனது அனுபவத்தில்‌ பலப்பட்டுக்‌ கொண்டே வந்திருக்கிறது. காங்கிரஸ்‌ ஒரு வகுப்புவாத சபையேயாகும்‌ ) தேசியப்‌ போர்வைபோர்‌ தீதிய வகுப்பு வாதக்‌ குரங்கேயாகும்‌. அதாவது, பிடிவாத வாதமாகும்‌. தேசியம்‌ என்னும்‌ பித்தலாட்ட வார்தீதையைச்‌ சொல்லிக்கொண்டே வகுப்புவாதங்களை--அதாவது, உயர்வகுப்பு உரிமை களைக்‌ காப்பாற்றுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமாகும்‌, எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌, திரு. காந்தியிடம்‌ நாம்‌ சமதர்மதீதை எதிர்‌ பார்க்கக்‌ கருதினோமானால்‌ நாம்தான்‌ மூடர்களாய்தீ தீருவோம்‌. அதாவது, ஆயுள்‌ காலம்‌ முடியும்‌ வரை அவரிடம்‌ சமதர்மதீதையோ, ஒற்றுமையையேர காணமுடியாது. அவர்‌ வடநாட்டுப்‌ பணக்காரர்களையும்‌, தென்னாட்டுப்‌ பார்ப்பனர்களையுந்தான்‌ மனிதராய்க்‌ கருதுகின்றார்‌. அவர்களது சகவாசந்தான்‌ அவருக்கு உண்டு. அவர்களது குறைகளைதி தான்‌ உலகக்‌ குறைகளாகக்‌ கருதுகின்‌ றார்‌, ஆதலால்‌, திரு. காந்தியவர்களின்‌ திட்ட மெல்லாம்‌, அவ்விருவருடைய குறைகளைதீ தீர்ப்பதற்காகத்‌ தான்‌ இருக்குமே ஒழிய ஏழைகள்‌, தாழ்தீதப்பட்டவர்கள்‌ உயரவும்‌ அவருக்கு கரண்டு வழிகள்தாம்‌ தெரியும்‌. ஒன்று, இராட்டினம்‌ சுற்றுவது) இரண்டாவது, * தீண்டாமை பாராட்டூவது பாவம்‌? என்று வாயால்‌ சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக்காரனையும்‌, பார்ப்பானையும்‌ கண்டமாதீதிர தீதில்‌ ததீதுவார்தீதம்‌ சொல்லவேண்டி வரும்‌. [மாயவரத்தில்‌ 17.7-1931 எம்‌) பட்டுக்கோட்டையில்‌ 18.7-1931 gub சொற்பொழிவு! குடிஅரசு ! 26.7.1981) 6. சேரமாதேவி குருகுலம்‌ பெரியோர்களே ! தாய்மார்களே ! அந்தக்‌ காலத்து எங்கள்‌ சக்திக்கு ஒரு சிறு உதாரணம்‌ சொல்லுகிறேன்‌. கேளுங்கள்‌ ! நான்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியாயும்‌, தலைவனாயும்‌ இருந்த காலங்களில்‌ தமிழ்‌ நாட்டு வசலிபர்களை தேசிய வீரர்களாக்கவென்று வி. வி. எஸ்‌, அய்யர்‌ என்னும்‌ ஒரு தேசிய பார்ப்பனர்‌ காங்கிரசை 10,000 ரூபாய்‌ கேட்டபோது, அதற்கு நானே பிரதானமாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 852 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இருந்து ரூபாய்‌ அனுமதித்தேன்‌. அந்தப்‌ பணம்‌, குருகுலம்‌ என்று ஒரு ஆச்சிரமம்‌ வைதீக, அதில்‌ பார்ப்பனப்‌ பிள்ளைகளை வீட்டிற்குள்‌ வைதீவம்‌, பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வெளியில்‌ வைத்தும்‌ சாப்பாடுபோட்டு வருணாசிரம தருமம்‌ கற்றுக்‌ கொடுக்கப்‌ பயன்‌ படுத்தப்பட்ட துடன்‌, அதன்‌ பேரால்‌ தமிழ்மக்களிடம்‌ மற்றும்‌ 20, 30 ஆயிரம்‌. ரூபாய்‌ வசூல்‌ செய்யப்பட்டது. அதற்கு ¢ தமிழ்நாடும்‌ !, ¢ நவசக்தியும்‌? ஆதரவு அளித்தன. இந்தச்‌ சூழ்சீசியான அக8ரமம்‌ ச 9க்காமல்‌ நான்‌, முதலியார்‌ அவர்களிடம்‌ ,மாயவரதீதில வருத்தத்தைத்‌ தெரிவித்துக்கொண்டேன்‌, அப்போது அவர்கள்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ பேரில்‌ புகார்சொல்லி, நாயுடு அவர்கள்‌ ¢ தமிழ்‌ நாடு? பத்திரிகையில்‌ ஆதரிப்பதால்‌ நான்‌ ஆதரிக்கவேண்டியிருக்கின்றது என்றார்‌. இருவரும்‌ நாயுடு அவர்களிடம்‌ தெரிவித்துக்‌ கொண்டோம்‌. அவ்வளவுதான்‌ சங்கதி. உடனே டாக்டர்‌, குருகுலதீ தன்மீது போர்தொடுத்தார்‌. தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தோழர்கள்‌ இராஜகோபாலாச்சாரியார்‌, சீனிவாச அய்யங்கார்‌ உள்பட எல்லோரும்‌ நாயுஒ அவர்‌ களுக்கு விரோதமாய்‌ எவ்வள$வா தொல்லைகள்‌ விளைவிதீதும்‌ பயன்படாமல்‌, கடைசியில்‌ குருகுலம்‌ அடியோடு அழிந்தும்‌ அதில்‌ இப்போது படைக்கள்‌ ளியும்‌, நெருஞ்சில்‌ முள்ளும்‌வளரும்படி; பாம்பும்‌ பூச்சியும்‌ வாமும்படி ஆகிவிட்ட தஃ [ஈரோட்டில்‌ 26-11-1533-ல்‌ சொற்பொழிவு-- புரட்சி? 3-12-1933] 7. காங்கிரஸ்‌-ஒரு வகுப்பு ஸ்தாபனம்‌ பெரியோர்களே | இன்று நாங்கள்‌ இங்கு ஏன்‌ இவ்வளவு ஏராளமாய்க்‌ கூடியிருக் கிறோம்‌ என்பதை யாவரும்‌ அறித்திருப்பீர்கள்‌. 27 மாதங்களாக நம்மை ஆண்டு பல தொல்லைகளுக்‌ குன்ளாக்கிவந்த காங்கிரஸ்‌ மந்திரிகள்‌ ஆட்சி ஒழிந்ததற்காக; மகிழ்ச்சி தெரிவிக்கவேண்டியே கூடிஇிருக்கிறோம்‌. இது இயற்கையேயாகும்‌. மக்களுக்கு ஏற்பட்டிருந்த கொடுமைகள்‌ ஒழிந்தால்‌ அவர்கள்‌ மகிழ்ச்சியடைந்து கொண்டாட்டம்‌ கொண்டாடத்தான்‌ செய்வார்கள்‌. இன்று இந்தக்‌ கொண்டாட்டம்‌ இந்தியா முழுவதும்‌ கொண்டாடுவார்கள்‌. அதுபோல்‌. இங்கும்‌ கொண்டாடுகிறோம்‌. இது சில தோழர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது அதைப்பற்றி “நமக்குக்‌ கவலை இல்லை. இந்க மந்திரிகள்‌ ஆட்சியில்‌ பல கஷ்டங்களையும்‌, தொல்லைகளையுமடைந்த மக்கன்‌ ஏன்‌ விடுதலை நாளைக்‌ கொண்டாடமாட்டார்கள்‌ ₹ இது எங்கும்‌ நடப்பதுதானே ! இதற்கு உதாரணம்‌ வேண்டுமானால்‌, சமீபத்தில்‌ அதாவது, ஒரு மாதத்திற்குமுன்‌, புராணச்கதைப்‌ படி நரகாசூரன்‌ என்ற அசுரன்‌ கொல்லப்பட்டதற்காக தீபாவளி என்று ஒருநாளை வைத்து, அன்று எண்ணெய்‌ தேய்த்துத்‌ தலைமுழுகியும்‌, பலகாரங்கள்‌ செய்து சாப்பிட்டும்‌, புது ஆடைகள்‌ வாங்கிக்‌ கட்டியும்‌ மகிழ்ச்சி கொண்டாடவில்லையா? இதில்‌ ஏமாந்த, அறிவற்ற திராவிடர்களும்‌ கலந்து கொள்ளவில்லையா ! அதுபோல்‌, 27 மாதங்களா உ பலவிதக்‌ கஷ்டங்‌ களையும்‌, தொல்லைகளையும்‌ அடைந்த மக்கள்‌ அப்படித்‌ தொல்லைகள்‌ உண்டாக்கிவந்த வர்கள்‌ ஒழிந்ததற்காக ஏன்‌ விழாக்‌ கொண்டாடமாட்டார்கள்‌ 8 நான்‌ உண்மையாகக்‌ கூறுகி $றன்‌,--தோழர்‌ ஜின்னா அவர்கள்‌ அறிக்கைவிட்டதும்‌ காங்கிரஸ்காரர்கன்‌ பேசாமல்‌ சும்மா இருந்திருந்தால்‌, இவ்வனவு பிரமாதமாக இருக்காது ; www.thamizham net - Free £ book No 3011 இியக்கங்கள்‌. 358 இந்தக்‌ கொண்டாட்டம்‌ எங்கயோ முக்கியமில்லாத இடங்களில்‌ கொண்டாடி இருப்பார்கள்‌) இவ்வளவு ஆர்ப்பாட்டம்‌ இருக்காது. ஆனார்‌, அறிக்கை வெளிவந்ததும்‌ காந்தியார்‌ முதல்‌ பலர்‌, * இது இந்து-முஸ்லிம்‌ கலவரத்திற்கு இடமுண்டாக்கும்‌! என்று அறிக்கைகள்‌ விட்டனர்‌) இதை ஒரு இந்து-முஸ்லிம்‌ கலவரமாக ஆக்கவும்‌ முயற்சித்தனர்‌] அதன்‌ பேரிலேயே, தோழர்‌ ஜின்னா அவர்கள்‌ அறிக்கையை ஆதரித்தும்‌, 22-ந்தேதி “விடுதலை விழா! கொண்டாட வேண்டியது அவசியமென்றும்‌, பார்சிகள்‌, மைசூர்‌ பிராமணர்கள்‌, ஆதித்‌ திராவிடர்கள்‌, திராவிடத்‌ தலைவர்கள்‌, திராவிட ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ பல தனிப்‌ பட்ட பிரபலஸ்தர்கள்‌ ஆகியவர்கள்‌ அறிக்கை விட்டிருக்கிறார்கள்‌. சிலர்‌--தேசியவாதிகள்‌ என்பவர்கள்‌, இந்தக்‌ கொண்டாட்டம்‌ இந்து மததீதிற்கு ரோதமானது என்று குண்டு விளம்பரம்‌ போட்டு வினியாகித்து இருக்கிறார்கள்‌. இது எவ்வளவு இழிவான, போக்கிரித்தனமான காரியமென்று பாருங்கள்‌. இந்து மகாசபையும்‌, இந்து மகாசபைதீ தலைவரும்‌ இதுவரை இதைப்பற்றி ஒன்றும்‌ பேசவில்லை. காங்கிரசில்‌ இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமையைப்பற்றிப்‌ பேசிவந்ததின்‌ பித்தலாட்டம்‌ இப்போதாவது மக்களுக்கு விளங்கி வருக்கும்‌ என்று கருதுகிறேன்‌. தோழர்‌ காந்தியார்‌, பெசன்ட்‌ அம்மையாரையும்‌ திலகரையும்‌ தள்னிவிட்டுத்‌ தாண்‌ அரசியல்‌ தலைவராக வருவதற்கு இந்த இந்க- முஸ்லிம்‌ ஒற்றுமை விஷயத்கைதீதான்‌ மிகப்பிரமாதமாகப்பேசி, அதுவே தனது முக்கிய கொள்கைலென்றும்‌ சுயராஜ்பம்கூட அதற்குப்‌ பிற்பட்டது தானென்றும்‌ பறைசாற்றி, முஸ்லிம்களை ஏமாற்றி, முஸ்லிம்‌ தலைவர்களை சுவாதினப்‌ படுத்திக்கொண்டு தலைவரானார்‌, ஆனால்‌, இப்போது அது என்னவாய்‌ முடிந்தது? சில காலிகள்‌ இந்த விழாவில்‌ கலந்துகொள்‌ ற இந்துக்களைக்‌ கூலிகளென்றும்‌, £ குலாம்‌! களென்றும்‌ துண்டு விளம்பரம்‌ போட்டு இருக்கிறார்கள்‌. அதைப்பற்றி நமக்குக்‌ கவலையில்லை, யார்‌ கூலி என்பது அவரவர்‌ நிலைமையை யோசித்துப்‌ பார்த்தால்‌ விளங்கும்‌. இந்த விழாவில்‌ முஸ்லிம்களைவிட ஆதித்‌ திராவிடர்களும்‌ தமிழர்‌ கழகங்களும்‌ சுயமரியாதைச்‌ சங்கங்களும்‌ ஜஸ்டிஸ்‌ சங்கங்களும்‌ கலந்துகொள்ள உரிமை உண்டு. இந்த விடுதலைவிழாக்‌ கொண்டாட்டத்தைக்‌ கொண்டாடும்படி, நானே ஓர்‌ அறிச்கை விடவேண்டுமென்று எண்ணியிருந்தேன்‌, அதற்காகப்‌ பல ஏற்பாடுகளும்‌ செய்துவந்தேன்‌, ஆனால்‌, ஜனாப்‌ ஜின்னா அவர்கள்‌ முந்திவிட்டார்கள்‌, இந்த நாளைக்‌ கொண்டாடவேண்டு மென்று ஜனாப்‌ ஜின்னா அறிக்கை விட்டதற்காக அவர்மீது காங்கிரஸ்காரர்‌ கோபப்படு கிறார்கள்‌, அவர்மீது ஒருகுறையும்‌ கூறவேண்டியதில்லை. என்மீது வேண்டுமானால்‌: குறைகூறலாம்‌. நான்‌, * காங்கிரஸ்‌ என்பது அரசியல்‌ ஸ்தாபனமல்ல$ அது ஒரு வகுப்பாருடைய நன்மைக்காக உழைக்கும்‌ வகுப்பு ஸ்தாபனம்‌? என்று கருதி 1924 ஆம்‌ வருடத்திலேயே அதைவிட்டு வெளிவந்து விட்டேன்‌, வெளிவந்ததும்‌, * காங்கிரஸ்‌ பார்ப்பனர்கள்‌ நன்மைக்‌ காக உழைப்பது ! என்பதை வெளிப்படுத்திஃனன்‌. 1925 ஆம்‌ வருடம்‌ முதல்‌ வகுப்புவாதி என்ற பட்டமும்‌ சூட்டப்பட்டேன்‌. ஆனாலும்‌, காங்கிரசின்‌ வகுப்பு உணர்ச்சியை நானே முதலில்‌ வெளியாக்கினவனானேன்‌. 1926ஆம்‌ வருடத்திலிருந்து இன்றுவரை திராவிடர்களுக்குக்‌ காங்கிரசினால்‌ ஒரு நன்மையும்‌ ஏற்படா தன்றும்‌, ஏற்படவில்லையென்றம்‌, அது தமிழர்களை அடிமைப்‌ படுத்தி அடக்‌ வைக்க ?வ வேலை செய்து வருகிற ஆரிய ஸ்‌ தாபன மென்றும்‌ கூறியகுடன்‌, £ காங்கிரஸ்‌ ஓர்‌ அரசியல்‌ ஸ்தாபணமல்ல ; அது ஒரு வகுப்பாரின்‌ நன்மைக்காகப்‌ பாடுபடும்‌ QB வகுட்பு ஸ்தாபனம்‌ ? என்றே கூறிவருகிறேன்‌. 1686-5 www.thamizham.net - Free £ book 14௦ 3011 954 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ அதை இன்றும்‌ யாராவது மறுக்கமுடியுமா? இன்று, காங்கிரஸ்‌ யாருடைய ஆதிக்‌ கதீதிலிருக்கிறது? காங்கிரசில்‌ எல்லா உயர்ந்த பதவிகளையும்‌ ஆரியர்களே அனுபவித்து வருகிறார்கள்‌. காந்தியாரும்‌ அதையே தான்‌ ஒதீதுக்கொள்வதோடு;, ¢ ஆரிய ஆட்சிக்கே உழைக்கிறேன்‌? என்று வெளிப்படையாய்ச்‌ சொல்லிவருகிறார்‌. அதாவது, ¢ தான்‌ கோரும்‌ சுயராஜ்யம்‌, இராமராஜ்யத்தை ஸ்தாபிப்பதே! என்று 100 தடவை கூறியிருக்‌ கிறார்‌. அதற்காகவே உயிர்‌ வாழ்வதாகவும்‌ கூறுகிறார்‌. திராவிடர்களாகிய நமக்கு இராமஇராஜ்யத்தால்‌ எவ்வளவு கேடுகள்‌ உண்டாகும்‌ என்பதைச்‌ சற்று யோசித்துப்பார்‌ தீதால்‌ நன்றாக விளங்கும்‌. ஜனாப்‌ ஜின்னாவைப்‌ போல்தான்‌ நாமும்‌ கருதுகிறோம்‌, காங்கிரஸ்‌ என்பது-- திராவிட மக்களைச்‌ சூதீதிரர்களாக ஆக்கி, ஆரியர்களுக்கு அடிமைப்படுதீதுவதற்காகவே இருக்கும்‌ ஸ்தாபனம்‌ என்று கருதுகிறோம்‌. ஆகையால்‌, நமது இருவருடைய வேலையும்‌, என்ன விலைகொடுதீதாவது கரங்கிரசை ஒழிக்கவேண்டுமென்பதில்‌ சந்தேகமில்லை. உதாரணம்‌ வேண்டுமானால்‌ கூறுகிறேன்‌. காங்கிரஸ்‌ பதவிக்கு வந்தவுடன்‌ எதற்காக *வந்தேமாதர£ப்‌ பாட்டைப்‌ பாடவேண்டும்‌ 8 ஒரு மதஸ்தர்களின்‌ மனத்தைப்‌ புண்படும்படி. செய்யும்‌ என்று தோழர்கள்‌ லால்ஜானும்‌, அமீத்கானும்‌ ஆட்சேபித்தால்‌ அவர்களை வெளியில்போகும்படி சொன்னது எவ்வளவு ஆணவமான செயல்‌ என்பதைப்‌ பாருங்கள்‌ 1 வங்காளதீதைச்‌ சேர்ந்த பங்கிம்‌ சந்திரசட்டர்ஜி என்பவரால்‌ எழுதப்பட்ட ¢ ஆனந்த மடம்‌? என்ற புத்தகத்தில்‌ முஸ்லிம்களை எவ்வளவு கிழிவாகவும்‌ கேவலமாகவும்‌ எழுதி இருக்கிறார்‌ என்பதைப்‌ பாருங்கள்‌ 1 அந்தப்‌ புதீதகதீதில்‌ முஸ்லிம்களின்‌ மன தீதைப்‌ புண்படுதீ.தும்படியான பல பாகங்கள்‌ இருக்கின்‌ ற துடன்‌, முஸ்லிம்களைத்‌ தாடிக்காரப்‌ பன்றிகள்‌ என்றும்‌, அவர்களைக்‌ கண்ட விடங்களிலெல்லாம்‌ அடிதீ.துக்‌ கொல்லவேண்டுமென்றும்‌ எழுதப்பட்டு இருக்கிறது. அந்தப்‌ புதீதகதீதிலுள்ள பாடல்களை சட்டசபையில்‌ பாடவேண்டாமென்று கூறினால்‌, சட்ட சபையைவிட்டு வெளியில்‌ போகும்படி கூறினால்‌ அவர்கள்‌ சும்மா இருப்பார்களா? நான்‌ கேட்கி3றன்‌ 1 இன்று சைவர்களில்‌ ஒருவர்‌ விஷ்ணு மதத்தையும்‌ புராணத்‌ தையும்‌ விஷ்ணு கடவுளையும்‌ பற்றி இழிவாகப்‌ புதீதக மெமுதினால்‌, விஷ்ணு பக்தர்கள்‌: சும்மா இருப்பார்களா 1 அதேபோல்‌, சைவமததீதையும்‌ புராணத்தையும்‌ கடவுளையும்‌ பற்றி--புராணங்களில்‌ உள்ளதுபோல்கூட, வைணவர்கள்‌ எழுதினால்‌, சைவர்கள்‌ சும்மா இருப்பார்களா ₹ இன்று காங்கிரஸ்‌ ஆட்சிசெய்த கொடுமைகளைச்‌ சொன்னால்‌ தேசியத்‌ தம்பி களுக்குக்‌ கோபம்‌ வருகிறது. நாம்‌ இப்போது என்னென்ன குறைகளை; கொடுமைகளைக்‌ கூறுகிறோமோ அவைகளை அன்றே எடுதீதுக்காட்டினோம்‌. அப்போது புத்தியில்‌ ஏறவில்லை. சட்டசபையில்‌ எல்லா மதஸ்தரீகளும்‌ கூடியுள்ள ஓர்‌ இடத்தில்‌ ¢ வந்தேமாதரம்‌ ? பாடக்கூடாதென்று கூறியபோது, தோழர்‌ இராஜகோபாலாச்சாரியார்‌ ஆணவமா கவும்‌, யோக்கியப்பொறுப்பில்லாமலும்‌ பதில்‌ கூறினார்‌. கதன்‌ கருத்தென்ன 1 ¢ நாம்‌ பதவிக்கு வந்து விட்டோம்‌) முஸ்லிம்களை ஒழித்து விட்டோம்‌? என்கின்ற எண்ணத்தில்மீது வெற்றிச்‌ சங்கு ஊதுவதாகதீதானே அர்த்தம்‌ 8 அதுதான்‌ போகட்டும்‌. பள்ளிகளில்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ படங்களையும்‌, கட்சிக்‌ கொடிகளையும்‌ தொங்கவிடக்‌ கூடாதென்று ஆட்சேபித்தால்‌, அதைக்‌ காதிலும்‌ போட்டுக்‌ கொள்வதில்லை. பள்ளிக்கூடதீதில்‌-பொதுப்பணத்தில்‌ காந்திபடம்‌ மாட்டுவது என்பதும்‌, முஸ்லிம்களை இழிவுபடுத்தும்‌ மூவர்ணக்கொடியைக்‌ கட்டவேண்டுமென்பதும்‌ அரசியல்‌ கொள்கையா, வகுப்புதீதிமிர்‌ கொள்கையா i என்று கேட்கிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 355 பள்ளிகளில்‌ பலகட்சியாரும்‌, பல வகுப்பாரும்‌ மதஸ்தர்களுமிருப்பார்கள்‌) அங்கு காங்கிரஸ்காரர்கள்‌ மெஜாரிட்டியராக இருப்பதால்‌, மனதீதைப்‌ புண்படும்படி செய்வதுதான்‌ அரசியலா ₹ ஒரு பிரகஸ்பதி கேட்கிறார்‌, * பள்ளிகளில்‌ இராஜா படம்‌ இருக்கும்‌ பாது, அரசியல்‌ தலைவர்கள்‌ படங்கள்‌ ஏன்‌ இருக்கக்கூடாது 1 என்று. இராஜா படம்‌ இருக்கலாம்‌ $ யார்‌ இராஜாவானாலும்‌ அந்தப்படம்‌ இருந்துதான்‌ தீரும்‌. அதற்குக்‌ காரணமிருக்கிறது. அவர்‌ இந்த நாட்டை ஆளுகிறார்‌. நாமெல்லாரும்‌ அவருடைய குடிகள்‌) அதனால்‌ அவர்‌ படம்‌ இருக்கலாம்‌. அந்த கராஜா போய்விட்டால்‌ அடுத்த இராஜா யாரோ அவர்‌ படம்‌ இருக்கலாம்‌. அவர்‌ இந்தியாவிலுள்ள எல்லோருக்கும்‌ சக்கரவரீ தீதி) அவரை யாரும்‌ சக்கரவர்‌ தீதியல்லவென்று சொல்லமுடியாது. நம்மில்‌ அபிப்‌ பிராய பேதமில்லாமல்‌ எல்லோருக்கும்‌ அரசராயிருக்கிறார்‌. ஆனால்‌, காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அவரை இந்தியர்களெல்லோரும்‌ அரசரென்றோ, தலைவ ரென்றோ, பிரதிநிதியென்றோ ஒப்புக்கொள்கிறார்களா 8 காங்கிரஸ்‌ கட்சிக்குத்தானே அவர்‌ தலைவர்‌ ! காங்கிரஸ்‌ கட்சி ஜெயிதீததால்‌ அவர்படம்‌ வைக்க வேண்டுமென்றால்‌-எநீதக்‌ கட்சி தேர்தலில்‌ வெற்றி பெறுகிறதோ, அந்தக்‌ கட்சித்‌ தலைவர்‌ படத்தை--கிராஜா படம்பேரல்‌ பாவிக்கலாம்‌ என்பதைக்‌ காங்கிரஸ்காரர்கள்‌ ஒப்புக்கொள்ளுகிறார்களா ? என்று கேட்கிறேன்‌. முஸ்லிம்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, தாழ்தீதப்பட்ட மக்கள்‌ ஆகியவர்‌ களுக்கு இருந்துவந்த சில உபகாரச்‌ சம்பளத்தில்‌ கையை வைத்துக்‌ குறைதீதுவிட்டார்‌ கள்‌. ஆரம்பப்‌ பள்ளிக்‌ கூடங்களையெல்லாம்‌ மூடிவிட்டார்கள்‌. இதையெல்லாம்‌ கேட்டால்‌, முதல்‌ மந்திரியார்‌-- * வாய்க்கால்‌ கரைகளில்‌ அட்டைகளில்‌ எழுதிப்‌ படித்துக்‌ கொள்ளும்படி ? கூறுகிறார்‌. இது அரசியல்‌ கொள்கையா, பார்ப்பனீயக்‌ கொள்கையா § இந்த நாட்டிலுள்ள தாழ்தீதப்பட்டவர்களை, ¢ ஹரிஜனம்‌? என்ற மதப்பெயரைச்‌ சூட்டி அழைக்கும்படி சட்டம்‌ செய்தார்கள்‌. இது அரசியல்‌ கொள்கையா? மதக்‌ கொள்கையா 1 தமிழ்நாட்டில்‌ * உயர்தி ந, ¢ திருவாளர்‌? போன்ற தமிழ்ப்‌ பதங்கள்‌ வைத்து அழைத்து வந்ததை நீக்கிவிட்டு, ஆரியப்‌ பதமாகிய ரீ ? என்ற பதத்தை உபயோகிக்கும்‌ படி உதீதரவிட்டார்கள்‌. இப்படி இவர்கள்‌ செய்தது அரசியல்‌ வேலையா ₹ பார்ப்பன மத வேலையர 8 என்று கேட்கிறேன்‌. தமிழர்கள்‌ கலையையும்‌ நாகரிகத்தையும்‌ குலைக்க, வடநாட்டுப்‌ பாஷையாகிய இந்தியைக்‌ கட்டாய பாடமாகக்‌ கொண்டுவந்தார்கள்‌, அதை எதிர்த்த 1300 பேர்களைச்‌ சிறையில்‌ வைத்தார்கள்‌. 2 வீரர்கள்‌ சிறையில்‌ இறக்கும்படி செய்தார்கள்‌, இது அரசியலா? பார்ப்பனியமா ¥ விஸ்வப்‌ பிராமணர்களுக்கிருந்த ¢ ஆச்சாரி? யென்பதை எடுத்துவிட்டு, ¢ ஆசாரி! என்று அழைக்கவேண்டு மென்று உத்தரவிட்டார்கள்‌. ஏன்‌ ₹ ¢ ஆச்சாரி? என்றி ந்தால்‌ இவர்களிடம்‌ பங்குகேட்டு விடுவார்களென்றா ₹ * விஸ்வப்‌ பிராமணர்கள்‌?! என்றிருநீதால்‌ இவர்களுக்குக்‌ குதீ.துகின்றதா? குடைகின்றதா 8? அதை எடுத்து * விஸ்வகர்ம? என்று போட வேண்டுமென்று உத்தரவிட்டார்‌. இது அரசியலா ! பார்ப்பனியமா ₹ இவை எல்லாம்‌ பார்க்கும்போது இவை வகுப்பு நலமான காரியமா, அல்லவா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. காங்கிரஸ்‌ மந்திரிகள்‌ பதவியிலிருந்த காலத்தில்‌ பார்ப்பனரல்லாத உதீதியோகஸ்‌ தர்கள்‌ அடைந்த கொடுமைகளை அளவிட்டுக்‌ கூறமுடியாது [ஈரோசட்டில்‌, 22-12-1939 சொற்பொழிவு-4 குடிஅரசு? 14-1:1940] www.thamizham.net - Free £ book 14௦ 3011 356 8. ஏன்‌ காங்கிரசிலிருந்து வெளியேறினேன்‌ ? பேரன்பு படைத்த தலைவர்‌ அவர்களே ! தாய்மார்களே ! பெரியோர்களே ! வ. வே. ௬. அய்யர்‌ என்ற பார்ப்பனர்‌ சேரசாதேலி என்ற இடத்தில்‌ ஒரு குரு குலத்தை வைத்து நடத்திவந்தார்‌. அதற்கு தமிழ்நாடு காங்‌கரசிலிருந்‌து 2 தடவையில்‌ ரூ. 10,000 கொடுப்பதாகச்‌ சொல்லி முதல்‌ முறையாக ரூ. 5000-தீதை அப்‌ $பா.து தலைவனாய்‌ இருந்த நான்‌ கொடுத்‌ $தன்‌. அதோடு, பொதுமக்களிடம்‌ ரூ. 10,0004 குமேல்‌ சேர்ந்தது, இவைகளை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குரு நலத்தில்‌, பார்ப்பான்‌ பின்னை களுக்கு உப்புமாவும்‌ நம்மவர்‌ பிள்ளைகளுக்குப்‌ பழைய சோறும்‌, தனி இடத்தில்‌ (வெளியில்‌) சாப்பாடும்‌ தரப்பட்டன. அவர்கள்‌ பிள்ளைகளுக்கு வேதபாராயணம்‌; நம்மவர்களுக்கு தேவாரம்‌, திருவாசகம்‌ சொல்லிக்கொடுத் துக்கொண்டும்‌) நம்மவர்களுக்குதி தண்ணீர்‌ குடிக்கத்‌ தனிப்‌ பானை அவர்களுக்கு வேறு பானை என்ற நிலையில்‌ நடதீதிவந்தார்கள்‌. அந்தக்‌ குருகுலதீதிலே படிப்பதற்காக அனுப்பப்பட்ட ஓமந்‌ தூர்‌ இராமசாமி ரெட்டியார்‌ அவர்களின்‌ மகன்‌, பார்ப்பனப்‌ பிள்ளை களுக்காக வைக்கப்பட்டிரு ந்த பானையில்‌ தண்ணீர்‌ மோந்து குடித்துவிட்டதற்காக அவன்‌ மிகவும்‌ கடுமையாகத்‌ தண்டிக்கப்பட்டான்‌. இது என்‌ காதுக்கு வந்தது. நான்‌ ஆசீசாரியாரிடம்‌ சொன்‌ ணன்‌. அவர்‌ கோபித்துக்கொண்டு, வ. வே. ௬. அய்யரைக்‌ கூப்‌ ட்டு, இந்த மாதிரி செய்வது சுதீகத்‌ தப்பு? என்று அவரைகி கண்டி தீதார்‌. அதற்கு வ. வே. ௬. அய்யர்‌ அவர்கள்‌, *வைதிகர்கள்‌ வசிக்கிற இடத்தில்‌ இதை ஆரம்பித்து விட்டேன்‌ ) கொஞ்சங்‌ கொஞ்சமாக சரிசெய்துவிடுகிறேன்‌? என்றார்‌. நானும்‌ ஒப்புக்கொண்டேன்‌. பிறகு வ. வே. ௬. அம்யர்‌ பாக்கி 5)00-தீதையும்‌ கேட்டார்‌. ¢ காரியம்‌ முடியட்டும்‌; கொடுக்கிறேன்‌ ! என்று கூறினேன்‌. கோபித்துக்கொண்டு போய்விட்டார்‌. ¢ நாங்கள்‌ 5, 6 பேர்‌ இருந்துகொண்டு, ஜஸ்டிஸ்‌ கட்சியை எதிர்‌ தீதுக்கொண்டு, காங்கிரசுக்குச்‌ செல்வாக்குதீ தேடித்‌ தந்துகொண்டிருக்கிறோம்‌ ) இப்படியெல்லாம்‌ நடந்தால்‌. என்ன நிடாயம்‌₹' என்று கேட்டேன்‌. ஆச்சாரியாரும்‌ என்‌ பக்கம்‌ இருந்தார்‌. சென்னையி லிருந்த காங்கிரஸ்‌ கமிட்டியை ஈரோட்டில்‌ எனது வீட்டிற்கு மாற்றியதிலிருந்தே ஆச்சாரியார்மீ.து மனக்கசப்புக்கொண்ட பார்ப்பனர்கள்‌ இந்தச்‌ சமயத்தில்‌ வெளிப்படை யாகவே ஆச்சாரியாரை எதிர்த்தார்கள்‌. வ. வே. ௬. அய்யருக்காக கஸ்தூரிரெங்க அய்யங்காரும்‌, சுதேசமித்திரன்‌? ரெங்கசாமி அய்யங்காரும்‌, எஸ்‌. சீனிவாசய்யங்காரும்‌, சதீதியமூர்தீதியும்‌ மற்றம்‌ பல பார்ப்பனர்‌ களு & குருகுலத்தை ஆதரித்து எனக்கு எதிர்ப்புப்‌ பிரசீ சாரம்‌ செய்தார்கள்‌, இந்தக்‌ காரிடங்களினால்‌ பயந்துவிட்ட ஆச்சாரியார்‌ தானும்‌ அவர்கள்பக்கம்‌ சேர்ந்து கொண்டதகுமல்லாமல்‌, டாகீடர்‌ வரதராஜுலு நாயுடுவின்மீது நம்பிக்கையில்லாதீதீர்மானமும்‌ கொண்டு வந்தார்‌. நாண்‌ ஆசீசாரியார்பக்கம்‌ இருந்தாலும்‌, வரதராஜுலு சென்னை பார்ப்பனர்‌ பக்கம்‌ இருந்து வந்தாலும்‌ நான்‌ ஆச்சாரியார்‌ தீர்மானதீதை எதிர்‌ த்தேன்‌. எனக்குச்‌ சாதகமாக திரு. வி. &, ஓமாந்தூர்‌ இராமசாமி ரெட்டியார்‌, தங்க பெருமான்‌ பிள்ளை, எஸ்‌. கிராமநாதன்‌ முதலியவர்கள்‌ ஓட்டுச்செய்தார்கள்‌. இராஜன்‌, சந்தானம்‌, வரதாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி, ஆலாசியம்‌, டாக்டர்‌. சாஸ்‌ திரி முதலிய பார்ப்பனர்கள்‌ அவர்பக்கம்‌ ஓட்டுச்செய்தார் கள்‌, எங்களுக்கு 12 ஓட்டும்‌ அவர்களுக்கு 7 ஓட்டும்‌ கிடை தீதன. அவர்களின்‌ தீர்மானம்‌ தோல்வியுற்றது. உடனே ஆசாரியார்‌ பார்ப்பனர்கள்‌ 7 பேரிடத்திலும்‌ கையெழுத்து வாங்கி இராஜிநாமாக்‌ கடிதம்‌ கொடுத்தார்‌. நான்‌ வேண்டாம்‌. என்று கூறினேன்‌ ) முடியாது என்று கிராஜிநாமாவே கொடுத்தார்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 Quéshisdr 857 அதே சாக்கில்‌ மெஜாரிட்டியாக இருந்த நாங்கள்‌, ¢ காங்கரஸ்‌ பொது ஸ்தாபான மாகும்‌. ஆகவே, காங்‌ரசைப்‌ பொறுத்தமட்டிலாவது சாதிபேதம்‌ இருக்கக்‌ கூடாது? என்று தீர்மானம்‌ நிறைவேற்றிவிட்டோம்‌. பார்ப்பனர்கள்‌ கட்டுப்பாடாக வெளி?யறியதுபற்றி காந்தியாருகீகுகீ கடிதம்‌ எழுதி, £ சாதி ஒழியகீகூடாது என்று சொல்லுவது நியாயமா? ? என்று கேட்டோம்‌, காந்தியார்‌ அதை ஆசீசாரியாருக்கு அனுப்பினார்‌. அவர்‌ அதை டாக்டர்‌. ராஜனுக்கு அனுப்பினார்‌. அவர்‌ காந்திக்குப்‌ பதில்‌ எழுதினார்‌. உடனே காந்தியார்‌, * சாதி ஒழியக்‌ கூடாது என்பதல்ல அவர்கள்‌ கருத்து) அந்த மாதிரித்‌ தீர்மானம்‌ போடுவது அவர்கள்‌ மனச்சாட்சியை உறத்துகிறது) ஆகவேதான்‌ எதீர்த்தார்கள்‌ ? என்று எங்களுச்சுப்‌ பதில்‌ எழுதிவிட்டார்‌. அப்போதே எங்களுக்குக்‌ காங்கிரசின்‌ மேல்‌ வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அதற்கப்புறம்‌, பதவிக்குப்‌ போவதற்காக வங்காள தாஸ்‌ (C. R. Das) அவர்களைதி தலைவராகக்‌ கொண்டு * சுயராஜ்யக்‌ கட்சியை ஆரம்பித்தார்கள்‌. சதீதியமூர்த்தி அய்யரும்‌, சீனிவாச அய்யங்காரும்‌, ரெங்கசாமி அய்பங்காரும்‌ அதில தீவிரமாய்ப்‌ பங்கெடுத்து வேலை செய்தார்கள்‌. பதவிக்குப்‌, போவதற்காகக்‌ காங்கிரசின்‌ பெயரைக்‌ கூறி அதன்‌ செல்வாக்கைப்‌ பயன்படுத்திப்போக நினை தீத தக்‌ கண்டித்தோம்‌. ஆனால்‌ காந்தியார்‌, * சட்டசபைக்குப்‌ போ றவர்‌ கள்‌ போகட்டும்‌) வெளியே இருந்து வேலை செய்பவர்கள்‌ செய்பட்டும்‌ ? என்று பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக அனுமதி கொடுத்து விட்டார்‌. நாங்கள்‌ வாதாடிப்‌ பார்தீ2தாம்‌. அதிலும்‌ எங்களுக்குச்‌ சாதகம்‌ கிடைக்கவிஃலை. திரு. வி. ௧. தலைமையில்‌ காஞ்சிபுரதீதில்‌ நடைபெற்ற மாகாண மாநாட்டில்‌, விஷய ஆலோசனைக்‌ கமிட்டியில்‌, * சுயராஜ்யக்‌ கட்சியை எதிர்‌ க்கக்கூடாது] ஒத்துழையாதார்‌ தேர்தலுக்கு நிற்பதில்லை! என்றும்‌; ¢ 100-க்கு 50 பேர்களுக்குக்‌ குறையாமல்‌ பார்ப்பன. R ரல்லாதாருக்கு ஸ்தானம்‌ Qsr@dslusr@s’ என்றும்‌ தீர்மானம்‌ கொண்டுவந்தேன்‌ ஆச்சாரியார்‌, சீ.னுவாசய்யங்கார்‌) ரெங்கசாமி அய்யங்கார்‌, சத்தியமூர்த்தி போன்‌ றவர்கள்‌, £ வேண்டாம்‌) இத்‌ தீர்மானம்‌ கூடவே கூடாது! என்று சொன்னார்கள்‌. எனக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும்‌ என்று கண்ட அய்பர்‌, திரு, வி. க.வையும்‌, நாயுஒவையும்‌ எப்படியோ தங்கள்பக்கம்‌ இழுத்துக்‌ கொண்டார்கள்‌, கமிட்டிக்கு அதி காரம்‌ கொடுத்‌ உவிட்டதால்‌ அதைக்‌ கட்டுப்படுத்தக்‌ கூடாது என்று சொன்னார்கள்‌. நான்‌ முடியாது என்றேன்‌, அப்புறம்‌ 30 பேர்‌ களிடத்தில்‌ கையெழுதீது வாங்கினால்‌ மாநாட்டில்‌ தீர்மானத்தைக்‌ கொண்டு வரலாம்‌ என்றார்கள்‌, ஆனால்‌ 50 பேர்களிடம்‌ கையெழுத்து வாங்கிக்‌ கொடுத தோம்‌. மாநாட்டுத்‌ தலைவராக இருந்த திரு. வி. க, * பொதுஜன நன்மைக்காக இந்தத்‌ தீர்மானத்தை அனுமதிக்க முடியாது? என்று பார்ப்பனருக்குப்‌ பயந்து கூறிவிட்டார்‌. புனர்‌ ஆலோசனை செய்யும்படி வாதாடிப்பார்‌ தீதேன்‌ ) மறுதி துவிட்டார்‌, ஆதலால்‌, அன்றைக்கே--அதே விநாடியில்‌ நான்‌ காங்கிரசிலிருந்து வெளி யறினேன்‌. [மணப்பாறையில்‌, 27-3-1953-ல்‌ சொற்பொழிவு! விடுதலை? 30-3-1950] 9. காங்கிரசில்‌ மனக்கசப்பு பேரன்பு படைத்த தலைவர்‌ அவர்களெ! தாய்மார்களே ! தோழர்களே ! 1921ஆம்‌ ஆண்டில்‌ திருவண்ணாமலையில்‌ என்‌ னுடைய தலைமையின்கீழ்‌ காங்கரஸ்‌ மாகாண மாநாடு கூடியது, அந்த மாநாட்டில்‌ ரெங்கசாமி அய்யங்கார்‌, சீனிவாசய்யங்‌ வார்‌ ஆகியவர்களின்‌ ஆட்கள்‌ தியாகராய செட்டியார்‌: அவர்களையும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 958 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ மோசமாக, அளவுக்கு மீறித்‌ தாக்கிப்‌ பேசினார்கள்‌. இது எனக்கு ஆதீதிரத்தை மூட்டியது. என3வ, அவர்கள்‌ பேசியதற்கு எதிராக நானும்‌, இராமநாதனும்‌ பேச முயன்றோம்‌. மாநாட்டின்‌ தலைவர்‌ என்றதால்‌ நான்‌ பேசமுடியாமல்‌ போகவே, இராமநாதன்‌ அவர்கள்‌ பேச ஆரம்பித்தார்‌. அப்போது நமது ஷாபிமுகமது அவர்கள்‌ இராமநாதனை எதிர்தீது வாய்க்கு வந்தபடிக்‌ கேவலமாகப்‌ பேசினார்‌. அதற்றுப்‌ பிறகு அப்போது நமது ஆட்களா யிருந்த அண்ணாமலைப்‌ பிள்ளையும்‌, தஞ்சாவூர்‌ வெங்கிடகிருஷ்ணப்‌ பிள்ளையும்‌--ரெங்க சரமி அம்யங்காரையும்‌, சீனிவாசய்யங்காரையும்‌ எதிர்‌ தீது, அவர்கள்‌ தியாகராயரைதீ தாக்கியதற்கு வட்டியும்‌ முதலுமாகச்‌ சேர்த்துக்‌ கொடுத்தார்கள்‌. அந்த மாநாட்டிலேயே எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. [பெரம்பூரில்‌, 13-81950 சொற்பொழிவு. விடுதலை! 16-8-19501 10. டாக்டர்‌ நாயர்‌--தியாகராயர்‌-- நான்‌ தோழர்களே 1 நீங்கள்‌ யோசிக்கவேண்டுவது அவசியம்‌. டாகீடர்‌ நாயர்‌ போன்ற பெரியார்‌ ஏன்‌: யாவியாக்கப்பட்டார்‌ 8 நான்‌ ஏன்‌ பாவியாக்கப்பட்டிருக்‌ றேன்‌ T முன்பெல்லாம்‌ டாக்டர்‌: நாயர்‌ வெளியே செல்லு$றார்‌ என்றால்‌ அவரோடு ஒரு துப்பறியும்‌ சப்‌-இன்ஸ்பெக்டரும்‌ மாறுஉடையில்‌ உடன்செல்வாராம்‌, ௮ துசமயம்‌ நான்‌ ஓர்‌ இளைஞன்‌. ஒருசமயம்‌ ஏதோ ஒரு பொது அலுவலாக அவர்‌ ஈரோட்டுக்கு வந்திருந்தார்‌. அவருடைய சாமான்‌ களை எல்லாம்‌ இரயிலடியிலையே விட்டுவிட்டு வந்திருந்தார்‌. அவருடைய நண்பர்‌ ஒருவரீடி * யாருடைய பா.குகாப்பில்‌ சாமான்கள்‌ விடப்பட்டிருக்கின்‌றன P என்று கேட்கவும்‌--தனக்‌ குக்‌ காவலாக ஓர்‌ இரகசிய போலீஸ்‌ இன்ஸ்பெக்டர்‌ அனுப்பப்பட்டிருப்பதாகவும்‌, வேறு நபர்‌ தன்னுடன்‌ இல்லாமையால்‌ அவரிடமே தன்‌ சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்ததாக வும்‌ தெரிவித்தார்‌. ஓர்‌ கீரகசிய போலீஸ்‌ அதிகாரி பின்பற்றும்‌ அளவுக்கு தேசியவாதியாய்‌ இருந்த அவர்தான்‌--பிறகு * தேசதீ துரோ8£யாக்கப்பட்டார்‌. ஆரம்பத்தில்‌ பார்ப்பன ரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப்‌ போர்வையில்‌ பார்ப்பனர்களை ஆதரித்தவர்‌ தான்‌ அவர்‌. நானும்‌ ஆரம்பத்தில்‌ பார்ப்பனர்‌ களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார்‌ தேர்தலை எதிர்‌ தீதவன்‌ தான்‌. பிறகுதான்‌ உண்மை உணர்ந்து நாங்கன்‌ பார்ப்பண ரல்லாதாரோடு ஒன்றானோம்‌. ஜஸ்டிஸ்‌ கட்சிப்‌ பிரமுகரீகளில்‌ மிக முகீசயமானவரான சரீ, பி. தியாகராயச்‌ செட்டியார்கூட ஆரம்பத்தில்‌ தேசியவாதியாக இருந்தவர்‌ தான்‌. 1914-ல்‌ சென்னையில்‌ நடைபெற்ற காங்கிரஸ்‌ மாநாட்டின்‌ காரியதரிசியாயிரு நீது அரும்பெரும்‌ தொண்டாற்றியவர்‌ தான்‌ அவர்‌. பிறகுதான்‌ அவரும்‌ இன உணர்ச்சி பெற்றார்‌. ஆகவ, நாங்களெல்லாம்‌ துவக்கத்திலேயே 6 இராட்சதர்‌ களாக! ஆக்கப்பட்டவர்கள்‌ அல்லர்‌ அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின்‌ கொடுமை தாங்கமுடியாமல்‌, இழிவுபற்றிய உணர்ச்சிபெற்று விழிப்‌ படைந்தவர்கள்‌ தாம்‌ நாங்கன்‌, அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்றபிறகுதான்‌ நாங்கள்‌ ¢ இராட்சதர்களா க்கப்பட்டோம்‌. பிறகுதான்‌ அவர்கள்‌ எங்களை விட்டுவிட்டு வேறு விபீஷணர்‌ களைப்‌ பிடிக்க ஆரம்பித்தார்கள்‌. உத்தியோகத்தில்‌ நம்‌ இன தீதவருக்கு உரிய பங்கு வேண்டும்‌ என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான்‌, காங்கிரஸ்‌ ஸ்தாபனம்‌ வேறுபக்கம்‌ பார்க்க ஆரம்பித்தது: அதுவரை அது வெறும்‌ உதீதியோகக்‌ கோரிக்கை ஸ்தாபனமாகதீதான்‌ இருந்துவந்தது. காங்கிரசின்‌ ஆரம்பகால சரித்திரத்தைப்‌ புரட்டிப்‌ பார்த்தால்‌ இதன்‌ உண்மை விளங்கும்‌. அப்போதெல்லாம்‌ காங்கரஸ்‌ மாநாடுகளில்‌ முதலாவதாக இராஜவிசுவாசப்‌ பிரமாணதீ தீர்மானம்‌ நிறைவேற்றப்படும்‌. வென்ளையரை இற்‌ நாட்டுக்கு அனுப்பிய www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 359 தற்காகக்‌ கடவுளுக்கு நன்றி தெரிவிதிகுக்‌ கொள்ளப்படும்‌. அவர்கள்‌ ஆட்சி நீடூழி காலம்‌ இருக்கவேண்டுமென்று வாழ்தீதச்‌ செய்யப்படும்‌. சென்னையில்‌ 1915-ல்‌ நடைபெற்ற மாநாட்டில்‌ இம்மாதிரி இராஜவிசுவாசத்‌ தீர்மானம்‌ காலை ஒருமுறையும்‌, மாலையில்‌ கவர்னர்‌ விஜயத்தின்போது மற்றொரு முறையும்‌ ஆக கரண்டு முறைகள்‌ நிறைவேற்றம்‌ ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில்‌ இருந்துவருகிறது. ஆகவே, வெள்ளையர்‌ வழங்கிய உதீதியோக சலுகைகளில்‌ நம்‌ இனதீதவருகீகும்‌ உரிய பங்கு வேண்டும்‌ என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான்‌ -வெள்ளையர்களும்‌ கொஞ்சம்‌ நமக்குச்‌ சலுகை தர ஆரம்பித்த பிறகுதான்‌--காங்கிரஸ்‌ இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள்‌ வெளியேறவேண்டும்‌ என்று கூறிற்றே ஒழிய- அதுவரை அது பார்ப்பனர்களுக்குப்‌ பதவி தேடித்தரும்‌ ஸ்தாபனமாகதீதான்‌ இருந்து வந்தது என்பது கண்கூடு. [திருச்சியில்‌, 8-12-1950-ல சொற்பொழிவு--4 விடுதலை? 38-12-1950] 11. காங்கிரசில்‌ பாந்ீப்பனர்‌ ஆதிக்கம்‌ திரு. காமராசர்‌ அவர்கள்‌ செங்கற்பட்டு இளைஞர்‌ காங்கிரஸ்‌ மாநாட்டில்‌ பேசிய பேச்சில்‌ ஒரு அதிசயம்‌ காணலாம்‌. அதாவ, இவ்வளவு தைரியமாக; 35 ஆண்டுகளுக்கு மூன்‌ அதே செங்கற்பட்டு மாவட்டத்தில்‌, காஞ்சிபுரத்தில்‌ நடந்த ஒரு செய்தியைப்பற்றிப்‌ பேசி இருக்கின்றார்‌ என்றாலும்‌, அது நூற்றுக்கு நாறு உண்மையான செய்தியே ஆகும்‌. அதாவது---* பெரியார்‌ அந்தக்‌ காலதீதில்‌ காங்கிரஸ்‌ வைதிக வெறியர்கள்‌ கையில்‌ இருந்துவருகிறது என்பதை உணர்ந்து-இதில்‌ இருந்துகொண்டு தமது மக்களுக்கு ஒரு நலமும்‌ செய்யமுடியாது என்று கருதியே காங்கிரஸை விட்டு வெளியேறினார்‌ ? என்பதாகவும்‌, 6 அதுபோலவே இன்று இராஜாஜி, காங்கிரஸ்‌-இந்திய காங்கரஸ்‌ முழுவதுமே இல்லாவிட்டாலும்‌ சென்னை மாகாணதீதைப்‌ பொறுத்தவரையிலாவது-காங்கிரஸ்‌ வைதிக எதிரிகள்‌ ஆதிக்கதீதில்‌ இருந்துவருகிறது) இதில்‌ இருந்துகொண்டு வைதிக (வேத) தர்மத்‌ தைக்‌ காப்பாற்றமுடியாது என்று தீர்மானம்‌ செய்துகொண்டே (இராஜாஜி) காங்கிரஸை விட்டு வெளியேறி இருக்கிறார்‌ ? என்பதாகவும்‌ துணிவாக உண்மையினைக்‌ கூறிவிட்டார்‌. இராஜாஜிக்கு இன்று காங்கிரசில்‌ ஏற்பட்ட குறை என்ன 1 இராஜாஜி இரண்டு முறைகள்‌ சென்னை இராச்சியதீதில்‌ முதல்‌ மந்திரியாய்‌ இருந்தபோது அவர்‌ செய்யாதது எந்தக்‌ காரியம்‌--இன்று காமராசரை முதல்‌ மந்திரியாகக்கொண்ட ஆட்சியில்‌ செய்யப்பட்டு விட்டது ? அல்லது, அன்று நடக்காத எந்தக்‌ காரியம்‌ இன்று காமராசர்‌ காலத்தில்‌ நடக்‌ கின்றது, அல்லது நடந்துவிட்டது முன்பு காங்கிரஸ்‌ நிலைமை சென்னை இராச்சியத்தில்‌, தமிழ்நாட்டை எடுத்துக்‌ கொண்டால்‌ மாகாண காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌ i— திரு. T. V. வெங்கட்ராம அய்யர்‌, ஜில்லாக்‌ காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்கள்‌ i~ திருநெல்வேலிக்கு — திரு. மகாதேவ அய்யர்‌: மதுரைக்கு திரு. வைத்தியநாத அய்யர்‌ திருச்சிக்கு — திரு. சாமிநாத சாஸ்திரி. தஞ்சைக்கு — திரு. பந்தலு அய்யர்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 560 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ கோவைக்கு திரு. என்‌. எஸ்‌. இராமசாமி அய்யர்‌ சேலத்துக்கு — திரு. இராமராவ்‌ வடஆற்காடுகீகு — திரு. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரி செங்கற்பட்டு தென்னாற்காடு ஞாபகமில்லை மதராசுக்கு திரு. ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌ இந்தப்படி சர்வம்‌ பார்ப்பனமயமாய்‌ அமைந்து இருந்தது தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைமை--மூதன்‌ முதலாக திராவிடர்‌ (பார்ப்பனர்‌ இல்லாதார்‌) என்கின்ற தன்மையில்‌ எனக்குத்தான்‌ கிடைத்தது. உடனே என்மீதும்‌, வ. வே. ௬. அய்யர்‌ என்கின்ற * தேசியப்‌ பார்ப்பனர்‌ நம்பிக்கையில்லாத தீர்மானம்‌ கொண்டுவந்தார்‌. இரண்டாவது தடவையாக; எனது முயற்சியின்மீது டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்களுக்குத்‌ தமிழ்நாடு காங்‌£ரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌ பதவி கிடைத்தது. அப்போதும்‌ திர. 6 இராஜகோபாலாச்சாரியார்‌ அடர்‌ கள்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுமீது நம்பிக்கையில்லாத்‌ தீர்மானம்‌ கொண்டுவந்தார்‌. இதை அன்று தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டிக்‌ காரியதரிசியாக இருந்த நான்‌ எதிர்க்கவேண்டி நேரிட்டது. இந்தத்‌ தீர்மானத்திற்கு ஆதரவாக, திருவாளர்கள்‌ i—C. இராஜகோபாலாசீசாரியார்‌. » டாக்டர்‌ சாமிநாத சாஸ்‌ தீரி ” டாக்டர்‌ 1, 5. 8. ராஜன்‌ (அய்யங்கார்‌) ”» கே. சந்தானம்‌ (அய்யங்கார்‌) ”» ஆலாஸ்யம்‌ அய்யர்‌ ” N. S. வரதாச்சாரி ” சேலம்‌ சுப்பாராவ்‌ ”» O. கிருஷ்ணமாச்சாரி ஆகிய எல்லா காரியக்‌ கமிட்டி பார்ப்பனர்களும்‌ ஓட்டு அளிதீதார்கள்‌. எதிர்ப்பாக, ஈ. வெ. இராமசாமி:(நான்‌). திருவாளர்கள்‌ 3--திரு. வி. கலியாண நீதர முதலியார்‌ ர 8. இராமநாதன்‌: ” தங்கப்‌ பெருமான்‌ ரு O. P. இராமசாமி ரெட்டியார்‌. ” புதுப்பாளையம்‌ ரெதீதினசாமி கவுண்டர்‌ ”» தஞ்சை. டாகீடர்‌ இராமச்சந்திரன்‌ செட்டியார்‌. ' சென்னை சிங்காரவேலு செட்டியார்‌ ”» சேலம்‌ ஆதிநாராயணன்‌ செட்டியார்‌ (என்பது ஞாபகம்‌)--ஓட்டு அளித்தார்கள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 போள்‌ : 41373 8 திருமலை பிள்லை ரோட்‌, B. nai, சென்னை-17 கு. காமராஜ்‌ 6-9-1964. தமிழ்‌ நாட்டில்‌ சமுக சீர்திருத்தங்கள்‌ செய்த, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்த வரும்‌ பெரியார்‌ அவர்கள்‌, அதன்‌ பயனை ஜளநாயக சோஉலிச கொள்க gL பரப்பி, உலகத்திலேயே நம்‌ இந்திய நாடு சமுதாய, பொருளாதார வளர்ச்சிகளில்‌ முன்னேற மேலம்‌ பல ஆன்ருகள்‌ வாழ்ந்து வரவேன்ருமெனத மனமார வாழ்த்துகிறேன்‌. 86 வயதாகியும்‌, தளராது உழைதீது பொதுத்‌ தொன்டு செய்துவரும்‌ அவருடைய மனப்‌ பாங்கை நீம்‌ இளைஞர்கள்‌ ஒரு படிப்பினையாகக்‌ கொள்ளடவனீரும்‌ ஆசா 2 ஆசிரியர்‌ , “1விடுதலை சென்‌ -2, www.thamizham.net - Free £ book 14௦ 3011 www.thamizham.net - Free E book No 3011 இயக்கங்கள்‌ 861 ஆகவே, எனது முயற்சியால்‌ ஆசிசாரியாரின்‌ நம்பிக்கையில்லாதி தீர்மானம்‌ தோற்றது. கிதிலிருந்‌3,த ஆரியர்‌--திராவிடர்‌ பிரிவு காங்கிரசில்‌ வெனிப்படையாய்த்‌ தலை காட்டிவிட்டது. உடனே ஆச்சாரியார்‌ இராஜிநாமா செய்துவிட்டார்‌. அவரோடு பல பார்ப்பன அங்கத்தினர்களும்‌ இராஜி நாமா செய்துவிட்டார்கள்‌, பிறகு அவர்‌ சிறிதுநாள்‌ பொறுத்து காங்கிசுக்குள்ளே வந்து புகுந்து, சென்னை திரு. 8. சீனிவாச அய்யங்காரைத்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ தலைவராக ஆக்கிதீ தானும்‌ காரியக்‌ கமிட்டியின்‌ அங்கத்த்னராக இடம்‌ பெற்றுக்கொண்டார்‌ இப்படியாக, முதலில்‌ சென்னை காங்கிரஸ்‌ முழுக்க முழுக்கப்‌ பார்ப்பனர்களிடம்‌ இருந்து எனது (ஈ. வெ. இராமசாமி) காலத்தில்‌ பகுதி பார்ப்பனர-பகுதி திராவிடர்கள்‌ என்று ஆகி, இன்று காமராசர்‌ காலத்தில்‌ முக்காலே அவரக்கால்‌ பங்கு திராவிடர்‌ -அரைக்‌ கால்‌ பங்கு (ஒன்‌ 3,றா, இரண்டோ) ஆரியர்‌ என்று ஆனதுடன்‌-அதுவும்‌ கின்று ஆச்சாரி யார்‌ கோஷ்டிக்கு கிடமே இஎ்லை என்ற நிலைமையுடன்‌, ஆச்சாரியார்‌ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கரசையே ஒழிக்க, காங்கிரசுக்கு எதிர்ப்பாகப்‌ பிரச்சாரம்‌ செய்து கோஷ்டி கும்பல்‌ சேர்க்கின்றார்‌ என்றால்‌, இன்றைய நிலையில்‌ ஆச்சாரியார்‌ இதைத்‌ தவிர வேறு என்ன செய்யமுடியும்‌ § எப்படியோ, ஒருவகையில்‌ பார்ப்பனரைக்‌! காங்கிரசுக்கு எதிர்ப்பாகக்‌ கட்சி கட்டும்‌ படிச்‌ செய்த தன்மையானது இந்த நாட்டுக்கு, சிறப்பாக திராவிடர்களுக்கு நல்ல (காலம்‌) வாய்ப்பு என்‌.றுதான்‌ சொல்ல வேண்டும்‌. ¢ தர்மம்‌ (என்ன தரீமம்‌ 8 வருணாசிரம தர்மம்‌) காப்பாற்றப்பட வேண்டுமானால்‌, காங்கிரசை ஒழிக்கவேண்டும்‌ ? என்று பார்ப்பனர்கள்‌. முயற்சிப்பதனால்‌-- இந்தச்‌ சமயத்தில்‌ திராவிடர்‌ ஆனின்‌ முக்‌ ய Pupiad கவனம்‌ அப்‌ பார்ப்பனர்கன்‌ அக்‌ காரியத்தில்‌ வெற்றிபெறாமல்‌ இருக்கும்படி பார்தீதுக்கொள்வதே ஆகும்‌. [¢ விடுதலை 3-அறிக்கை--6.1-1960] 12. நானும்‌ காங்கிரசும்‌ தலைவரவர்களே ! தோழர்களே ! தாய்மார்‌ களே ! நான்‌ ஒரு சாதாரண வியாபாரியாக ஈரோட்டில்‌ வியாபாரம்‌ செய்க: காலதீ தில்கூட கொஞ்சல்‌ கொஞ்சமாகப்‌ பொதுநலனில்‌ ஈடுபடத்‌ துவங்கினேன்‌. காங்கிரஸ்‌ 1920ஆம்‌ ஆண்டு காந்தியாருடைய கைக்கு வந்தபிறகு அதற்கு அரசியல்‌ கட்சி என்ற பெயர்‌ இல்லாமற்போய்விட்ட து... ஆகையினால்‌; அதுவும்‌ சமுதாயத்‌ திற்கு--பொது நலனிற்குப்‌ பயன்படும்படியான வேலை செய்யும்‌ என்ற நினைப்புடனே அதில்‌ நான்‌ சேர்ந்தேன்‌. 1920-லே காங்கிரஸ்‌, ¢ சட்டசபைக்குப்‌ போவ? தா, பதவி ஏற்பதோ இல்லை! என்ற தீர்மானம்‌ கொண்டு வந்துவிட்டது. 8 வைகளினால்தான்‌ அன்றைய தினம்‌ காங்கிரஸ்‌ அவ்வளவு செல்வாக்கு உடையதாக இருந்தது. அதனால்தான்‌ நானும்‌ காங்கிரசில்‌ சேர்ந்‌ தால்‌ நாட்டு மக்களுக்குத்‌ தொண்டு புரீயலாம்‌ என்று நினைத்து அதிலே நாட்டம்‌ கொண்டேன்‌. மேலும்‌ அன்று கூறினார்கள்‌, ¢ நாங்கள்‌ சுயராசீசியதீதிற்கு முட்டுக்கொடுக்க மாட்டோம்‌. அப்படியும்‌ கேட்பதாய்‌ இருந்தால்கூட தீண்டாமை, சாதி பேதம்‌ ஆகிய வற்றை ஒழிதீது மக்களைச்‌ சீர்திருத்தின பிறகுதான்‌ கேட்போம்‌ என்றனர்‌, 1686—46 www.thamizham.net - Free E book No 3011 862 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌: ஒரு தடவை காந்தியார்‌ சென்னைக்கு வந்திருந்தபோது பெரிய பெரிய அரசியல்‌ வாதிகளும்‌, நானும்‌, கராஜ?காபாலாச்சாரியும்‌ இன்னும்‌ பல தோழர்களும்‌ காந்தியாரைக்‌ காணச்‌ சென்று இருந்தோம்‌. அப்பொழுது சீனிவாச சாஸ்திரியார்‌ காந்தியாரை ஒரு கேள்வி கேட்டார்‌. அதாவது, * நீங்கள்‌ சுயராச்சியத்தைப்பற்றிக்‌ கவலை இல்லை$ சமுதாயத்திலே மக்களுக்கு இருநீ.துவருகின்ற கஷ்டங்களை நீக்கவேண்டும்‌, தீண்டா மையை அகற்றவேண்டும்‌ என்றெல்லாம்‌ சொல்லுகிறீர்‌ களே ! இந்தச்‌ சமயத்திலே ஒருகால்‌ திடீரென்று வெள்ளைக்காரனுக்குப்‌ புதீதிவந்து, ¢ நீங்கள்‌ இந்த நாட்டை எடுத்துக்கொள்‌: ளுங்கள்‌ ! என்று சொன்னால்‌ நீங்கள்‌ என்ன சொல்வீர்கள்‌ 4 என்று கேட்டார்‌. இப்படிச்‌ சொல்லி முடிக்கும்‌ முன்னரே, * எங்களுக்கு சுயராஜ்யம்‌ வேண்டாம்‌ என்று சொல்லி விடுவோம்‌? என்றார்‌ காந்தியார்‌. * ஏன்‌ ₹ என்று கேட்டனர்‌. * மகீகளிடத்திலே புத்தி இல்லை. மக்கள்‌ கீழ்த்தரமான நிலையிலேயே இருக்கின்‌ றனர்‌ ? என்றார்‌. ஆகவே, இப்படியெல்லாம்‌ கூறினவர்கள்‌, கடைசியாக சட்டசபைக்குப்‌ போவதும்‌, பதவி ஏற்பதும்‌ என்ற முறையிலே வந்தவுடன்‌ தான்‌ நான்‌ அதை விட்டு வில 9னேன்‌. பதவி ஏற்றதும்‌ தாங்கள்‌ சொல்லிய வாக்குறுதிகளை எல்லாம்‌ காற்றில்‌ பறக்க விட்டு விட்டார்கள்‌. சமுதாயத்‌ துறையிலே வேலை செய்ய வேண்டுமானால்‌ அரசியலைக்‌ கைப்பற்றிப்‌ பயன்‌ இல்லை. ஆட்சி பீடத்திலே இருந்துகொண்டு எதையும்‌ செய்துவிடலாம்‌ என்று நினைப்பது மிகவும்‌ மோசமானது. அதனாலேயே நாங்கள்‌ அரசியலைப்பற்றிப்‌ பொது வாகவே கருதுவதில்லை. அரசாங்கத்தைக்‌ கைப்பற்றித்தான்‌ சமூக சீர்திருத்தம்‌ செய்ய முடியும்‌ என்று சொல்வதையும்‌ ஒப்புக்கொள்வதில்லை. [பாண்டமங்கலத்தில்‌, 10-10-1951-ல்‌ சொற்பொழிவு--4 விடுதலை ? 14-10-1951] அன்புக்கும்‌ பெருமைக்கும்‌ உரிய சேலம்‌ நகராட்சி மன்றத்‌ தலைவர்‌ அவர்களே ! அங்கதீதினர்களே ! நிர்வாகி அவர்களே ! பொதுமக்களே ! தாய்மார்களே | நான்‌ காங்கிரஸில்‌ 1920-ல்‌. சேர்ந்தேன்‌. நாங்கன்‌ சேர்ந்து 2 வருடங்களுக்கு அப்புறம்‌ இராஜாஜி, சீனிவாசய்யங்கார்‌, நான்‌ ஆகிய மூவரும்‌ உட்கார்‌ நீது ஒரு பலன்‌ கணக்கிடும்‌ திட்டம்‌--6 பேலன்ஸ்‌ ஷீட்‌ ? (Balance 5௩௦௨6) போட்டோம்‌. அதற்கு முன்‌ னாலோ காங்கிரஸ்காரன்‌ என்று சொல்லிக்கொண்டு வீதியிலே நடக்கமுடியாது. காங்‌ கிரசோ, மேல்சாதிக்காரர்கள்‌ ஆதிக்கத்திலேயே இருந்தது, அப்போதைய மக்கன்‌ அனை வருக்கும்‌ தெரியும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ நல்லவண்ணம்‌ இதை மக்களுக்கு எடுத்துச்‌ சொல்லியிருந்தனர்‌ஃ நால்கள்‌ போட்ட கணக்குப்படி பலன்கள்‌ கிடைத்தன. முதலாவதாக, மேடை ஜஸ்டிஸ்‌ கட்சியினரிடமிருந்து எங்களிடம்‌ வந்தது. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, வ. உ. சிதம்பரம்‌ பின்ளை; திரு. வி. &y நான்‌ இப்படி நாங்கள்‌ பேசினால்தான்‌ கூட்டம்‌ வரும்‌ ) அய்யர்‌, அய்யங்கார்‌ என்று யாராவது பேசினால்‌ கூட்டமே நடக்காது ) நடக்கவும்‌ விடமாட்டார்கள்‌. எனவே, எங்களது உழைப்‌ பைக்‌ கொண்டு காங்கிரஸ்‌ கிங்‌2க நன்கு வளர்ந்தது. காங்கிரஸ்‌ ஒருநாளும்‌ பொது மக்களது ஸ்தாபனமாகவே இருந்தது கிடையாது. அவர்களது இன நலதீதுக்காகவே ஒரு சிலர்‌ அமைத்த ஸ்தாபனம்தான்‌ அது, இன்றைய காங்கிரஸ்காரர்கவிலே பலபேருக்கு இது தெரியாது. வெள்ளைகீகாரர்களைப்‌ பாதுகாப்பதற்காகதீதான்‌ காங்‌ ரஸ்‌ ஸ்தாபனமே அவக்கப்‌ பட்டது. வெள்ளைக்காரன்‌ நேரில்‌ வந்தால்‌ மக்கன்‌ ஏற்கமாட்டார்கள்‌ என்று தெரிந்து தான்‌, அவர்களோடு ஒப்பந்தம்‌ செய்துகொண்டு ஆரம்பித்தான்‌. ¢ ஆனரோரியம்‌ ! வாங்‌ கிக்கொண்ட கங்காணிகள்‌ தாம்‌ ஆரம்பித்தனர்‌. வதை நான்‌ சொல்லவில்லை; காங்கிர www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 363 சக்கு 75 வருஷம்‌ பூர்‌ தீதியாகி இருக்கிறது srdrusrd—our விழா மலர்‌ என்ற ஒரு புத்தகம்‌ காங்கிரசுக்‌ கமிட்டியாரால்‌ வெளியிடப்பட்டுள்ளது ] அதிலேயே இது தெளிவாக இருக்கின்றது. அய்‌. சி. எஸ்‌. உதீதியோகத்திலே இருந்து ¢ ரிட்டைய *ரான--சர்க்காருக்கு செக்ரெட்டரியாக இருந்த ஒரு வெள்ளைக்காரன்‌, இன்னொரு வெள்ளைக்காரன்‌, லார்டு டப்ரின்‌ போன்றவர்கள்‌ ஊர்‌ தோறும்‌ பல பேருக்கு, பல மாகாணதீதிலிருக்கிற ஆட்களுக்கு எல்லாம்‌ கடிதம்‌ எழுதினார்கள்‌. இதற்கு அவ்வளவு அவசியம்‌ என்ன வந்தது என்று கேட்டால்‌, அனுக்கனும்‌, மராட்‌ டியனும்‌ வெள்ளைக்காரனைக்‌ கண்ட கண்ட இடத்தில்‌ உதைக்க ஆரம்பித்தார்கள்‌. ஒரு வெள்ளைக்கார கவர்னரின்‌ தலையைக்‌ சொண்டுவந்தால்‌ ரூ. 500 (அய்நூறு ரூபாய்‌) பரிச தருவதாகப்‌ பகிரங்கமாக விளம்பரப்படுதி துகிற அளவுக்கு வெள்ளைகீகாரன் மேல்‌ வெறுப்பு வளர்நீ.துவிட்டதால்‌, கிதை எப்படியாவது மாற்றவேண்டும்‌ ] இல்லாவிட்டால்‌ முடியாது என்று கண்டுதான்‌--கூலிக்கு ஆள்‌ பிடித்த, இலஞ்சம்‌ கொடுத்து தங்களுக்குத்‌ துதிபாட வைத்தார்கள்‌. லாலா லஜபதி ராய்‌ எழுதியுள்ன * யுவ பாரதம்‌? என்ற புதீதகத்தைப்‌ படித்தால்‌ இது விளங்கும்‌. இப்படி அவன்‌ நாடு பூராவும்‌ எழுதி ஆட்களைச்‌ சேகரிக்க ஆரம்பித்தாலும்‌ தென்‌ னாட்டிலே இருந்து-4, 5 அம்யர்மார்கள்தாம்‌ முன்வந்தார்கள்‌ ! ஜி. சுப்பிரமணிய அய்யர்‌, ரகுநாதராவ்‌, ஆனந்தாச்சார்லு இப்படிச்‌ சில பேர்களை வைதீதுதீதான்‌ இம்‌ முயற்சி துவக்கப்பட்டது. பிறகு, வெள்ளைக்காரன்‌ வைத்த பெயர்தான்‌ ¢ இண்டியண்‌. நேஷனல்‌ காங்கிரஸ்‌? என்பது. இப்பொழுது நேஷனல்‌ என்பதற்கு ¢ தேசியம்‌ ! என்று சொன்றைலும்கூட, அது தேசத்தைக்‌ குறிக்கிற பதம்‌ அல்ல; சாதிஃஎன்பதைதீதான்‌ குறித்து வைக்கப்பட்டதாகும்‌. காங்கிரஸ்‌ ஆரம்பிதீததிலிருந்தே முதல்‌ தீர்மானம்‌ இராஜவிசுவாசம்‌ ; இரண்டாவது தீர்மானம்‌, உலகம்‌ உள்ள அளவுக்கும்‌ இந்தியாவில்‌ வெள்ளையர்‌ நீடித்து நிலைத்திருக்க வேண்டும்‌ என்பது. முதல்‌ காங்கிரசிலே கிராஜ விசுவாசதீ தீர்மானத்தைப்‌ பிரரேபித்ததே திரு. ஜி. சுப்பிரமணிய அய்யர்‌ தான்‌. ¢ இதற்கு முன்னாலே ஏதோ நாங்கள்‌ உங்களை எதிர்தீதிருந்தாலும்கூட--அதை யெல்லாம்‌ மறந்துவிட வேண்டும்‌ என்று மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ்‌ ஆட்சியினருக்குத்‌ தெரிவிக்கிறோம்‌! என்றெல்லாம்‌ கூடப்‌ பேசியிருக்‌ கின்றார்கள்‌. கராஜ விசுவாசத்‌ தீர்மானம்‌ பிரரேபிதீத இந்த சுப்பிரமணிய அய்யருக்கு அய்கோர்ட்‌ ஜட்ஜு பதவி கொடுதீதான்‌--வெள்ளைக்காரன்‌. மேல்‌ நாட்டிற்கும்கூட--இந்த நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ சிலபேரைப்‌ பிடித்து அனுப்பி, இராஜ விசுவாசதீ தீர்மானத்தைப்‌ பரப்பக்‌ சொல்லி, வெள்ளைக்காரன்‌ அதற்குக்‌ கூலி கொடுத்தான்‌) அப்படி அனுப்பப்பெற்றவர் களில்‌ ஒருவர்தான்‌ சீனிவாச சாஸ்திரி) அவருக்கு * ரைட்‌ ஆனரபிள்‌? பட்டம்‌ அதற்குத்தான்‌ வழங்கப்பட்டது. பார்ப்பாணுக்குக்‌ கிடைக்கிற பங்கு பார்‌ தீகுட ¢ எங்களுக்கு இல்லையா 1 என்று அலுக்கன்‌ நினைத்துக்‌ கேட்கவே அவர்களுக்கும்‌ அரசியல்‌ பங்கு தந்தார்கள்‌ வெள்ளைக்காரர்கள்‌. வெள்ளைகீகாரனைப்‌ புகழ்ந்தது என்றால்‌ எப்படி? வெள்ளைக்காரன்‌ மகாவிஷ்ணு வின்‌ அவதாரம்‌ என்றே கூறிப்‌ புகழ்ந்தார்கள்‌. ஒருதடவை சென்னையிலே காங்கிரஸ்‌ நடந்தபோது கிராஜ விசுவாசதீ தீர்மானம்‌ காலை 9 மணிக்கே நிறைவேற்றப்பட்டது. ஆனால்‌, வெள்ளைக்கார கவர்னர்‌ காலை நடவடிக்கையின்‌ போது வரவில்லை; மத்தியானம்‌ கரண்டு மணிக்குமேலேதான்‌ வந்தார்‌. சென்னை காங்கிரஸ்‌ கூட்டத்துக்குத்‌ தலைமை வகித்த திரு எஸ்‌. என்‌. பானரீஜியே கவர்னர்‌ முன்னிலையிலே மாலை 4 மணிக்கு மீண்டும்‌ ஒரு தடவை அந்த கிராஜ விசுவாசதீ தீர்மானத்தைப்‌ பிரரேபித்தார்‌. அந்தக்‌ காலத்தில்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 364 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ காஃ%கிரஸ்‌ மாநாட்டிற்கு வரும்‌ ₹ டெலிகேட்டு? களுக்கெல்லாம்‌ அன்று மாலையே கவர்னர்‌ €பார்ட்டி? கொடுப்பது வழக்கம்‌. இப்படிக்‌ காங்கிரசும்‌ வெள்ளைக்கார ஆட்சியும்‌, ஒரே குடும்பமாக இருந்ததைக்‌ கண்டுதான்‌-முகமதியர்‌ கள்‌ ரகளை பண்ணிப்‌ பங்கு வாங்கினர்‌. இதைப்‌ பார்த்த ஜஸ்டிஸ்‌ கட்சீக்காரன்‌ * பார்ப்பனரல்லாத மக்களுக்கும்‌ கிடைக்கட்டுமே நாம்‌ மாத்திரம்‌ ஏன்‌ gorps விடவேண்டும்‌, நாம்தானே மெஜாரிட்டி? என்று உணர்ந்து அவர்களும்‌ இிராஜவிசுவாசதீ தீர்மானத்தில்‌ இறங்கினார்கள்‌. இப்படி இராஜவிசுவாசதீ தீர்மானத்தில்‌ ஒருவருக்கொருவர்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு தங்களை ஆதரிப்பதைக்‌ கண்ட வெள்ளைக்காரன்‌, ஆளுக்கு ஏதோ கரண்டு கொடுக்க ஆரம்பித்தான்‌. மற்றவர்களுக்கே வாய்ப்பில்லாமல்‌ தாங்களே ஏகபோகமாக அனுபவித்குவந்த பதவி, உத்தியோகம்‌ மற்ற சலுகைகள்‌, வசதிகள்‌ வரவரக்‌ குறைந்து கொண்ட வருகின்றன என்பதை இந்தப்‌ பார்ப்டனர்கள்‌ அறிந்துகொண்டுதான்‌--இந்தகீ கட்டத்தில்தான்‌ -சலித்துப்போய்‌ இராஜ விரோதத்‌ தீர்மானம்‌ போட ஆரம்பித்தனர்‌. இன்றைய ¢ தேசியம்‌ ? இப்படித்தான்‌ உற்பத்தியானது. நானும்‌ இந்தத்‌ தேசியதீதில்‌ மயங்கி, ஏதோ முட்டாள்‌ தனமாக ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிக்க, காங்கிரஸ்‌ கட்சிக்கு உழைத்தேன்‌. பிறகுதான்‌ உணர்ந்‌ 3தன்‌--அ தன்மூலம்‌ நமது இன தீதுக்குப்‌ பெரிய துரோகம்‌ இழைத்து விட்டோம்‌ என்று ! பதவி வேட்டைகீகாகதீதான்‌ காங்கிரசே ஆரம்பிக்கப்பட்டது. பின்னாலே காங்கிரசில்‌ காந்தி வந்த பின்னர்‌, அவர்‌ கொஞ்சம்‌ சன்னியாசி வேஷம்‌ போட்டார்‌. பதவி வேண்டாம்‌--அப்படி, இப்படி என்று! ஆனால்‌, மற்றவர்‌ கன்‌ யாரும்‌ அதைக்‌ கேட்கத்‌ தயாராக நல்லை. உள்ளே நுழைவ?த கூடாது) சட்டசபையைப்‌ பகிஷ்கரிச்‌ கவேண்டும்‌ என்று சொல்லிவநீதவர்‌ கன்‌-பு.து மா திரியான விசித்திரக்‌ காரணத்தைச்‌ சொல்லிக்கொண்டே நுழைய ஆரம்பித்தார்‌ கன்‌. அதாவது, நாம்‌ சட்டசபையில்‌ நுழைவதன்‌ மூலம்தான்‌ நம்‌ எதிரிகளை நுழைய விடாமல்‌ தடுக்கமுடியும்‌ என்று g 35T கூறிவிட்டுப்‌ போனார்கள்‌. 1919-ல்‌ காங்கிரசின்‌ வேலைத்திட்ட அறிக்கையிலேயே கூறப்பட்டு இருக்கிறது * காங்கிரசு பதவிக்கு வருமானால்‌, 100-கீகு 50 பேர்‌ வீதம்‌ பார்ப்பனரல்லாதாருக்குப்‌ பதவிகள்‌ ஒதுக்குவது? என்று. இதோடு மட்டுமல்லாமல்‌, ¢ சென்னை மாகாண அசேரசியேஷன்‌ (Madras Presis dency Association) என்று, ஜஸ்டிஸ்‌ கட்சிக்குப்‌ போட்டியாக ஒன்றைக்‌ காங்கிரஸ்‌ காரர்‌ களே தூண்டிவிட்டு திரு. கேசவப்‌ பிள்ளை தலைமையில்‌ அமைத்தார்கள்‌. அதிலும்‌ இந்த வகுப்புவாரி விகிதாச்சாரம்‌ ஒப்புக்கொள்ளப்பட்டுத்‌ தீர்மானம்‌ போடப்பட்டது. அதில்‌ மட்டும்‌ அல்ல. *சட்ட வரம்புகீகுட்பட்ட கிளர்ச்சி செய்யவேண்டும்‌ ] வெள்ளைகீகாரர்களை எதிர்க்கக்‌ கூடாது? என்பதனால்‌ தகராறு ஏற்பட்ட நிலையில்‌--அ தி தீவிரவாதிகள்‌ எல்லாம்‌ சேர்ந்து ¢ நேஷனலிஸ்ட்‌ அ ?சரசி?யஷன்‌ (Nationalist 48௧௦௦1௨61௦ 7)- அதி தீவிரவாதிகள்‌ சங்கம்‌ ? ஏற்படுத தினோம்‌ ; நண்பர்‌ ஆச்சாரியார்‌ ஏற்படுத்தினார்‌. சேலம்‌ விஜயராகவாச்‌ சாரிதான்‌ அதற்குத்‌ தலைவர்‌. நான்‌ வைஸ்‌ பிரஸி டெண்ட்‌ ; கிராஜாஜி அதன்‌ செக்ரெட்டரி. அதிலேயும்‌ இந்த 50 சதவீதம்‌ தீர்மானம்‌ நிறை 8வற்றப்பட்டு ஒப்புக்‌ கொள்ளப்பட்டது. ¢ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ கள்‌ பதவிக்காகவே பாடுபடுகின்‌ நார்கள்‌ என்று சொல்லுகின்றார்கள்‌$. அதையே நாங்களும்‌ எங்கள்‌ திட்டமாகக்கொண்டு-நாங்கள்‌ பதவிக்கு வந்தால்‌ பார்ப்பன: ரல்லாத மக்களுக்கு 53 சதவீதம்‌ விகிதாசாரப்‌ பங்கு தருகிறோம்‌ ? என்று சொல்லியே ஆதரவு தேடினார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 865 இவ்வளவும்‌ ஆனபிறகு இந்த மூன்று தீர்மானங்களையும்‌ சேர்தீது நல்ல வடிவம்‌ கொடுத்து, காஞ்சிபுரத்தில்‌ காங்கிரஸ்‌ மாநாடு நடக்கையில்‌ கொடுத்தபோ.துகான்‌ ஆச்சாரி யாரும்‌ மற்ற காங்‌ரசுப்‌ பார்ப்பனர்களும்‌ அதை மெல்ல நழுவவிடச்‌ சூழ்ச்சி செய்தார்கள்‌, திரு. வி. கலிடாணசு-ந்தரனாரும்‌, டாக்டர்‌ வர கராஜுலுவும்‌ அவர்‌ கள்‌ கையாட்களாகவே இருந்து சதீசெய்தனர்‌. விஷயாலோசனைக்‌ கமிட்டிக்‌ கூட்டதீதிற்‌3& என்‌ தீர்மானத்தை வைக்காமல்‌ விட்டுவிட்டார்கள்‌. * என்ன இப்படி செய்‌ துவிட்டீர்களே i என்று கேட்டதற்கு, “காங்கிரஸ்‌ மகா ஸ்தாபனத்தில்‌ வரப்பு உரிமைத்‌ தீர்மானம்‌ போட்டால்‌--வரூப்புவாதமாகி விடாதா! அதன்‌ பெருமை என்ன ஆவது? என்று ஏதோ சமாதானம்‌ சொல்ல ஆரம்‌ பித்தார்‌. நேரே, மாநாட்டில்‌ கொண்டுவந்துவிடுங்கள்‌? என்றார்‌. நான்‌ உடனே ¢ அப்பன்‌: வீட்டுப்‌ பெருமையை அண்ணனுக்குத்‌ தங்கை சொன்னது மாதிரியே, காங்கிரஸின்‌ பெருமையை நீங்கள்‌ எனக்குச்‌ சொல்லவேண்டாம்‌] மாலையில்‌ தீர்மானம்‌ கொண்டு வருகிறேன்‌? என்றேன்‌. அதை எதிர்பார்தீதேதான்‌ பார்ப்பனர்‌ கள்‌ அடியாட்களைக்‌ கொண்டுவநீகு திரு வி. க. வை மிரட்டினார்கள்‌. தீர்மான தீதை ¢ அலவ! பண்ணினால்‌ அது *பாசா?கி விடம்‌ என்று தெரிந்தே, அதைக்‌ கடைசி நோதீதில்‌ கலியாணசு நீதர முதலியார்‌ சூதாக, “டிஸ்‌ அலவ்‌? (Disallow) பண்ணுகிறேன்‌! என்‌ றார்‌. நாங்களும்‌ உடனே ஆதீதிரம்‌ அடைந்து, * காங்கிரஸ்‌ பார்ப்பனர்களுடைய ஸ்தாபனம்‌ என்பது மெய்ப்படுத்தப்பட்டு விட்டது) இதை ஒழிப்ப அதான்‌ எங்கள்‌ முதல்‌ பணி? என்று கூறி வெளியேறினோம்‌. (நண்பர்‌ எஸ்‌. இராமநாதனும்‌ என்னுடன்‌ அப்பொழுது வந்தார்‌) அப்போது நண்பர்‌ இராஜாஜி என்னைப்‌ பார்த்துச்‌ சொன்னார்‌ ¢ நாயக்கரே ! நாயக்கரே | அவாரப்படாதீர்கள்‌ ) யோசித்துப்‌ பாருங்கள்‌ $ கல்லிலே மோதிக்‌ கொள்ளாதீர்கள்‌ $ யோசிதீதுப்பாருங்கள்‌ ? என்று சொன்னார்‌. அப்படிச்‌ சொல்லிக்கொண்டு வந்த நான்‌ இன்றையக்‌ காங்கிரசைகீ காப்பாற்ற ஆகவும்‌-- அன்றைக்கு ¢ முடியுமா உங்களால்‌ 1 எனக்‌ கேட்டு, ¢ முடியாது? என்று கருதிய ஆச்சாரியார்‌--* ஒழித்தே தீருவேன்‌ ? என்று இன்று கூறவுமான அளவுக்கு நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. [சேலத்தில்‌ 3-4-1961-0 நகரசபை வரவேற்பில்‌ சொற்பொழிவு-- விடுதலை 1 26-4-1961] 18. நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்துவிட்டேனா ? நான்‌ காங்கிரசில்‌ சேர்நீதுவிட்டேனா என்பதுபற்றி ஏன்‌ எழுதுகி2றன்‌ என்றால்‌, நம்மிடம்‌ எதிர்ப்புணர்ச்சி கொண்டவர்கள்‌ சிலர்‌ செய்யும்‌ விஷமப்‌ பிரச்சாரதீதிற்கும்‌, கூட்டங்களில்‌ சிலர்‌ கேட்கும்‌ கேள்விகளுக்கும்‌ பதில்‌ அறிக்கையாக இருக்கட்டும்‌ என்ற கருத்தில்‌ எழுதுகிறேன்‌. நான்‌ காங்கிரசில்‌ சேர்நீதால்‌-முதலாவதாக காங்கிரசுக்கு நாட்டு.நலனைப்‌ பற்றிய, மக்கள்‌ சமுதாய மாறுதல்‌ பற்றிய-மற்றும்‌ கடவுள்‌, சாதி, மதம்‌, சாஸ்திர, புராண சம்பந்தமான பித்தலாட்டம்‌, மூடநம்பிக்கை இவைகளின்‌ பேரால்‌ நீண்டகாலமாக மக்களை மக்கள்‌ மடையராக்கி, அடிமைப்படுத்திச்‌ சுரண்டுதல்‌ பற்றிய காரியங்களில்‌-அரசாங்கதீ தைத்‌ தேவைக்கு ஏற்ற வண்ணம்‌ கவனிக்கும்படிச்‌ செய்யவும்‌, அவைபற்றி அரசாங்கம்‌ தவறான வழியில்‌ சென்றால்‌, தடுப்புக்‌ கிளர்சீசி, புரட்சி முதலியவை செய்யவும்‌, இன்று இந்நாட்டில்‌ எதிர்க்‌ கட்சியோ, எதிர்ப்புக்‌ கட்சியோ இல்லாமலே போய்விடும்‌, பொதுவாகவே, இந்நாட்டு அரசாங்கம்‌ என்பதும்‌, அரசியல்‌ என்பகும்‌ சுயநலம்‌, பதவி வேட்டை, தனிட்பட்ட மனிதன்‌--இனம்‌ ஆகியவர்களின்‌ வாழ்கீகை நலன்‌ ஆகிய வற்றைப்‌ பொறுத்ததாகவே இருந்து வருகிறதேயல்லாமல்‌ நான்‌ மேலே குறிப்பிட்ட காரியங்களைப்‌ பொறுத்ததாக இல்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3011 366 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ மற்றும்‌, இதீ துறைகளில்‌ தலையிடுபவர்கள்‌ இன்று, இந்நாட்டில்‌ அரசியலின்‌ பேரால்‌ வாழவ முடியாது. ஆதலால்‌, இன்றைய நிலையில்‌ நான்‌ ஒருநாளும்‌ காங்கிரசில்‌ சேர முடியாது, இன்று நான்‌ காங்கிரசில்‌ சேருவது என்றால்‌ 1925 ஆம்‌ ஆண்டில்‌ நான்‌ காங்கிரசில்‌ ¢ பெருந்‌? தலைவனாக இருந்த காலத்தில்‌ நான்‌ அதைவிட்டு வெளியேறியதை &85 முட்டாள்‌ தனமான காரியம்‌ என்றுதானே சொல்லவேண்டும்‌ ₹ அன்றியும்‌, நான்‌ காங்கிரசைவிட்டு வெளியேறி காங்கிரசின்‌ எதிரியாகவே இருநீ.து வந்திருக்காவிட்டால்‌, காங்கிரசில்‌ இன்று நாம்‌ காணும்‌ மாறுதல்கள்‌: காணப்படக்கூடியதாகி இருக்குமா 1 நம்‌ சமுதாய நிலை இன்றுள்ள நிலைக்கு வந்திருக்க முடியுமா ¥ இந்த நிலையில்‌ நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்தாலும்‌ இன்றுள்ள நிலையே நமக்குப்‌ போதுமானது என்று நான்‌ கருதியதாகத்தா2ன ஆவிடும்‌ ¢ இன்னும்‌ நாம்‌ எத்தனை பேர்‌ படிக்கவேண்டும்‌ $ இன்னும்‌ நமக்கு எத்தனை பேருக்கு பதவி, உத்தியோகம்‌ கிடைக்கவேண்டும்‌ 1 கடவுள்‌, மதம்‌, சாகி முதலிய துறைகளில்‌ எவ்வளவு பெரிய மாற்றங்கள்‌ ஏற்படவேண்டும்‌ 1 நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்து விட்டால்‌ இத்‌ துறைகளில்‌ அரசாங்கத்தை எதிர்தீது இணங்கவைக்க ஆள்‌ எங்கே என்று கேட்கிறேன்‌. கம்யூனிஸ்ட்‌, சோஷியலிஸ்ட்‌, கண்ணீர்தீ துளி, நாம்‌ தமிழர்‌, சுதந்திரா முதலிய கட்சிகள்‌ இன்று இருக்கின்‌றன ) இவைகளில்‌ எதற்காவது, நான்‌ மேலே காட்டிய எந்ததீ குறையைப்‌ பற்றியாவது ஒரு சிறு அளவு கவலையோ, திட்டமோ, கிளர்ச்சியோ ஏதாவது ஒன்னு இருக்கிறதா? இருக்கிறது என்று பேச்சு முறைக்காவது அவர்‌ களாலேயே சொல்ல முடியுமா ₹ ஆகையால்‌, £ எல்லா இந்திய காங்கிரசு? உள்ளவரை நான்‌ காங்கிரசுக்கு எதிர்ப்‌ பாளனாகவே இருந்து தீரவேண்டிய நிலையில்‌ இருக்கி 3றன்‌ஃ மற்றும்‌, காங்கிரசின்‌ கள்‌ ஒழிப்பை, கதர்‌ பரப்புதலை, காந்கியதீதை, சாதி-மத- கோவில்‌-சம்பிரதாயப்‌ பாதுகாப்பை நான்‌ ஒப்புக்கொள்ள முடியுமா? இவற்றை9யல்லாம்விட முக்கியமாக, யோசிக்கத்‌ தகுந்த காரியம்‌, 84 துறைகள்‌ பற்றியெல்லாம்‌ காங்கரசுக்குன்‌ புகுந்து ரகஈளையோ, காலித்தனமோ செய்வதன்‌ மூல்மாவது ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணலாம்‌ என்று-நானே மானங்கெட்டோ, ஒழுக்கங்கெட்டோ, நாணயங்கெட்டோ காங்கிரசுக்குள்‌ நுழையலாம்‌ என்று துணிந்தாலும்‌ அவர்கள்‌ என்னைச்‌ சேர்ப்பார்களா ¥ ஒருநாளும்‌ சேர்க்கமாட்டார்கள்‌. ஆகவே, நான்‌ காங்கிரசில்‌ சேராதிருப்பதுதான்‌ நாட்டுக்கு, மக்களுக்கு, காங்கிர சுக்கும்கூட நல்லது. என்பதோடு, எனக்கும்‌ மிகமிக நல்லது என்கின்ற முடிவு கொண்டிருக்கிறேன்‌. [6 விடுதலை !-தலையங்கம்‌--20-7-1961] 14, மதுவிலக்கு கரங்கிரசாரின்‌ போலி மதுவிலக்கு முறையை சென்னை சர்கீகார்‌, வரப்போகும்‌ வருஷம்‌ முதல்‌ மாற்றிவிடக்கூடும்‌ என்பதாகத்‌ தெரிகிறது. இது மிகவும்‌ சரியான காரியம்‌ என்பதோடு, இதை 2, 3 வருஷங்களுக்கு முன்னமேயே செய்திருக்க வேண்டும்‌. இந்தியாவில்‌ வேறு சில மாகாணங்களில்‌ முன்னமேயே மாற்றிவிட்டார்கள்‌. அப்படி இருந்தும்‌, சென்னை சர்க்கார்‌ இந்த கிரண்‌.) வருஷமாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 867 தாமதம்‌ காட்டிவநீது, இந்த வருஷம்தான்‌ அதை ஒழிக்க முனைந்திருக்கிறார்கள்‌. இதன்‌ காரணம்‌, இந்த மதுவிலக்கு விஷயத்தின்மீது, இந்தியா மந்திரி சிறிது. கண்காணிப்பு வைதீதிருந்ததேயாகும்‌. இது மாதீதிரமல்லாமல்‌, காங்கிரஸ்காரர்‌ செய்துவிட்டுப்‌ போன: எந்தக்‌ காரியத்தை மாற்றுவதானாலும்‌, இந்தியா மந்திரி அனுமதி இல்லாமல்‌ செய்யக்‌ கூடாது என்கின்ற கொள்கை மத்திய அரசாங்கதீதுக்கும்‌, மாகாண அரசாங்கங்களுக்கும்‌ இருந்துவந்ததாகதீ தெரிகிறது. அ$த காரணத்தால்தான்‌, கட்டாய இந்தியை உடனே எடுப்பதற்குக்கூட, சென்னை கவர்னர்‌ அவர்கள்‌ சிறிதுநாள்‌ நமக்குச்‌ சமாதானம்‌ சொல்லிக்‌ கொண்டே வந்தார்‌. மற்றும்‌ பல காரியங்களும்‌ மாகாண சர்க்கார்களுக்கும்‌, மத்திய சர்க்காருக்கும்‌ மாற்றவேண்டும்‌ என்கின்ற அவசியம்‌ தோன்றியும்‌ சரியாகச்‌ செய்ய முடியாமல்‌ போன தாகத்‌ தெரிகிறது. இந்த காங்கிரஸ்‌ மதுவிலகீகுதீ திட்டம்‌ மாற்றப்படவேண்டும்‌ என்று நாம்‌ ஆசைப்‌ படுவதிலும்‌ சர்கீகாரை வலியுறுத்‌ துவதி.லும்‌ உள்ள கருத்து என்னவவன்றால்‌, காங்கிரசின்‌ மதுவிலக்குப்‌ போலி முறை ஒழிந்து, சீக்கிரம்‌ ஒரு யோக்கியமானதும்‌, பயன்‌ உள்ளதுமான ஒரு நல்லமுறை ஏற்படவேண்டும்‌ என்பதேயாகும்‌. இன்று நம்‌ மாகாணத்தில்‌ உள்ள 25 ஜில்லாகீகளில்‌ 4 ஜில்லாக்களில்‌ மாதீதிரமே மதுவிலக்கு செய்வதாகக்‌ காங்கிரசார்‌ திட்டம்போட்டு, அந்தப்படி அமுல்‌ நடத்திவந்தார்கள்‌. நாமறிந்தவரை இந்ததீ திட்டம்‌ மகா மகா முட்டாள்தனமாகவே முடிந்தது என்பதோடு, மதுவிலக்குக்‌ கொள்கைக்கே கேடு செய்யும்படியாகவும்‌, உலகோர்‌ சிரிப்புக்கு இடமாகவும்‌ இருந்துவருகிறது என்பதை வலியுறுத்திக்‌ கூறுவோம்‌. ஏனெனில்‌, நமக்கு நன்றாய்தீ தெரிந்த சேலம்‌ ஜில்லாவிலுள்ள மதுவிலகீகுதீ திட்டத்தின்‌ நிலைமை, தெருக்கள்‌ 8தாறும்‌ திருட்டுச்‌ சாராய விற்பனையும்‌, தோட்டங்கள்‌. தோறும்‌ கள்‌ விற்பனையும்‌, தெருவிலே போகு? எந்தக்‌ கூடையை இறக்கிப்‌ பார்தீதாலும்‌ அதில்‌ தெரியும்படியாய்‌ உன்ள சாமான்களுக்கு அடியில்‌ சாராயம்‌, கள்‌ அடங்கிய * பாட்டில்‌!களும்‌ குசீசுகீகாரி வீடுகள்‌ பல கள்‌, சாராயக்‌ கடைகளாகவும்‌ இருந்.துவந்ததால்‌, இலாக்கா சர்க்கார்‌ சிப்பந்‌ திகளுக்கு ஏராளமான வரும்படியும்‌, மணியக்காரர்களுக்குக்‌ கொள்ளை இலாபமாகவும்‌ இருந்‌துவந்தன. இந்த விஷயம்‌ பலதடவை சர்கீகார்‌ தலைமை அதிகாரிகளுக்குத்‌ தெரிவித்தும்‌ அவர்கள்‌ உடனே ஒன்றும்‌ செய்யமுடியாமல்‌ விழித்ததும்‌ நமக்குதீ தெரியும்‌. எனவே, இப்போதாவது கவனித்துத்‌ தக்கது செய்ய முன்வந்தது போற்றதீகக்கதேயானாலும்‌, சர்க்காரின்‌ மதுவிலக்குக்‌ கொள்கை, போலி மதுவிலக்குதீ திட்டதீதை ஒழிப்பது மாதீதிரமாய்‌ இல்லாமல்‌, உண்மையான மதுவிலக்குக்‌ கொள்கைக்கு நல்ல ஒரு யோக்கியமான திட்டத்தை ஏற்படுத்தி, அதை உடனே அமுலுக்கும்‌ கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி வேண்டிக்கொள்கிறோம்‌. அப்படிச்‌ செய்யாவிட்டால்‌, சர்க்கார்‌ தங்களை யாரும்‌ சுலபமாய்க்‌ குற்றம்‌ சொல்ல இடம்‌ கொடுதீதவர்களாவார்கள்‌ என்பதுடன்‌ உண்மையாகவே அது ஒரு குறை சொல்லக்கூடிய காரியமுமாகும்‌. சர்கீகார்‌ Dg விஷயத்தில்‌ என்ன செய்ய வேண்டுமென்றால்‌, நம்‌ மாகாணத்தில்‌ உள்ள மொத்த கள்‌, சாராயக்‌ கடைகளைக்‌ கணக்கு எடுத்து, அந்த எண்ணிக்கையை தாலுகீகாகீகள்‌, சர்க்கின்கன்தோறும்‌ வருஷம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாகக்‌ குறைதீதுவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்‌ இல்லாமல்‌ போகும்படியாகச்‌ செய்துவிடவேண்டும்‌. குடிகாரர்‌ களைத்‌ திடீரென்று * குடி பட்டினி? போட்டால்‌, அவர்கள்‌ திருட்டுத்தனமாய்‌ அதை அடைய முயற்சிக்காமல்‌ போகமாட்டார்கள்‌ ) இது இயற்கை. சிலருக்குக்‌ குடிக்க அனுமதி கொடுத்து சிறிது சிறிதாய்க்‌ குறைதீதுவர வேண்டும்‌ ] இல்லாவிட்டால்‌ அவர்கள்‌ எப்படியாவது குடிப்பார்கள்‌. அதற்கு இவ்வளவு விலை www.thamizham.net - Free £ book 14௦ 3011 368 பெரியர்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ இல்லாமலும்‌ இன்றுள்ளதுபோல்‌ ஒரு இலாக்கா வைத்துக்‌ குடியைப்‌ பெருகீகாமலும்‌ காங்கிரசுக்காரர்‌ களைப்போல்‌ தந்திரம்‌ செய்யாமலும்‌ சர்க்கார்‌ மனப்பூர்வமாய்‌ யோக்கிய மாய்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. இன்றையக்‌ குடியானது மனிதனைப்‌ போதையினால்‌ கெடுப்பதைவிட, விலை அதிகத்தினாலேயே குடிக்கீறவனும்‌ அவன்‌ குடும்பமும்‌ கஷ்டப்படுகிறார்கள்‌. அன்றியும்‌, அதற்‌ கென்று ஒரு இலாக்கா இல்லாவிட்டால்‌, கள்ளில்‌ இவ்வளவு போதை இருக்க நியாயமில்லை. தென்ன த்தோப்பிலேயே போய்‌ உடனே இறக்‌ 83 குடிப்பதால்‌, கடையில்‌ குடிப்பதில்‌ கால்வாசி போதைகூட இல்லை$யன்று நல்ல குடிகாரர்க8ன சொல்லுகிறார்கள்‌. இன்னும்‌ நியாயமான.தும்‌ யோகீ யமான து& அமுலில்‌ பயன்‌ தரக்‌ கூடியதுமான பல திட்டங்கன்‌ இருக்கின்றன. சர்க்கார்‌ கவலை எடுத்தால்‌ வெகு சுலபத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. [6 குடிஅரசு 1-தலையங்கம்‌--6-11-1943] சென்னை இராஜ்யத்தில்‌ மதுவிலக்கு முறையைத்‌ தொடர்ந்து நடதீதுவதென ஆசீசாரியார்‌ ஆட்சி முடிவு செய்துவிட்டது. இதில்‌ பிடிவாதம்‌ தவிர வேறு எந்தவிதமான நீ திவாதமூம்‌ கிடையாது. இந்த மது விலக்குத்திட்டம்‌ ஆச்சாரியார்‌ அவர்களால்‌ கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது என்ப தல்லாமல்‌, மற்றபடி அதற்கு எந்தவிதமான தேவையும்‌, பெருமையும்‌ கிடையாது என்பது நமது கருத்து. ஆபீசில்‌ உளள ஒரு வேலைக்காரன்‌ எவ்வளவு அ$யாக்கியனாக, நாணய மற்றவனாக இருந்தபோதிலும்‌ அவனது நாணயக்‌ குறைவான காரியத்தைப்‌ பலர்‌ அறிய கைப்பிடியாக பிடித்தாலும்‌ அந்த வேலைக்காரன்‌ மேனேஜருக்கு வேண்டியவன்‌, மேனேஜருக்குச்‌ சொந்தக்காரன்‌ என்பதாக இருந்தால்‌ அவன்மீது மற்ற அதிகாரிகள்‌ எவரும்‌ குற்றம்‌ சொல்லமாட்டார்‌ கன்‌ என்பதுமாதீதிரமல்லாமல்‌, அவனுக்குச்‌ சற்று சலுகை காட்டி அவனை மரியாதையாககீ்கூட நடதீத முயலுவார்கள்‌ என்பது இயற்கையேயாகும்‌. அதுபோலவே, மதுவிலக்குதீதிட்டம்‌ ஆச்சாரியாருக்குச்‌ சொந்தமான து--ஆச்சாரி யாரின்‌ அபிமானத்திற்குப்‌ பாதீதிரமானது;$ ஆச்சாரியார்‌ பெரிய காரியம்‌ சாதித்தார்‌ என்பதற்கு ஒரு சின்னமாக விளங்கத்‌ தக்கது. ஆதலால்‌, அது எவ்வளவுதான்‌ பயனற்ற தாகவும்‌, தோல்வி அடைந்ததாகவும்‌, நடதீ கமுடியாததாகவும்‌, அதனால்‌ சர்க்காருக்குப்‌ பெரும்‌ வேலைத்‌ தொந்தரவுடையதாகவு3& இநந்தாலும்‌ மதுவிலகீ தத்திட்டம்‌ இனியும்‌ நடைபெறவேண்டியதுதான்‌ என்பதாகத்‌ தீர்மானம்‌ செய்யப்படவேண்டியதா$விட்டது. உணவு கண்ட்ரோல்‌ எப்படி சரீகீகாரால்‌ ஒழுங்காக நடத்தமுடியாமல்‌ போனதோடு, இது அமுலில்‌ இருப்பதாலேயே மக்கள்‌ நாணயக்‌ குறைவாகவும்‌, ஒழுக்கக்‌ குறைவாகவும்‌ நடந்துகொள்ளவேண்டிய அவசியம்‌ ஏற்பட்டு, பலர்‌ பலவிதமாய்‌ அநியாயக்‌ கொள்ளை இலாபமும்‌, நட்டமூம்‌ அடையும்படி நேர்ந்து இருந்ததோ அதேபோல்‌--மதுவிலக்குதீ திட்டத்தாலும்‌ பெருவாரியான மக்கள்‌ நாணயக்‌ குறைவாக--ஒழுக்கக்‌ குறைவாக நடந்து மது அருந்தவும்‌, அதுபோலவே நடந்து மக்கள்‌ மது உற்பத்தி செய்யவும்‌, அதுபோலவே மக்கள்‌ குறைசொல்லவும்‌ ஏற்பட்டுவருவகுடன்‌, அதிகாரிகளும்‌ ஒரு நல்ல அளவுக்கு நாணயக்‌ குறைவான மக்களாக ஆஇ8வருகிறார்கள்‌. இவை மாதீதிரமல்லாமல்‌ பலர்‌ விஷ சத்தை மதுவாக அருந்தவேண்டியவர்களாக ஆகிறார்கள்‌. மதுவிலக்குத்‌ திட்டத்தைப்‌ பயன்‌ ஏற்படும்படி அமுல்‌ நடத்த முடியாது என்று ஆசீசாரியாரைப்‌ போன்ற மதிப்புள்ன மக்கன்‌--ஆச்சாரியாரைப்‌ போன்ற பொதுஜன www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 369 தன்மையில்‌ கவலையுள்ள மகீகள்‌ ஏராளமானவர்கள்‌ சொல்லிவிட்டார்‌ கள்‌. உண்மையைச்‌ சொல்லப்போனால்‌, நடுநிலைமையில்‌ இருந்து பேசுவதானால்‌--ம,துவிலக் குக்கு இன்று ஆச்சாரியாரைத்‌ தவிர வேறு யார்‌ ஆதரவனிக்கிறார்‌ கன்‌ என்று சொல்ல நபர்‌ கிடைக்க வில்லைஃ இன்றைய மந்திரிசபையில்‌ சில மந்திரிகள்‌ ஆதரிக்கிறார்கள்‌ என்றால்‌, காங்கிரஸ்‌ சட்டசபை மெம்பர்கள்‌ யாவரும்‌ ஆதரிக்கறொர்கள்‌ என்றால்‌, மற்றும்‌ காங்கிரஸ்‌ அல்லாத சட்டசபை மெம்பர்‌ களிலும்‌ சிலர்‌ ஆதரிக்கிறார்கள்‌ என்றால்‌, அது பெரிதும்‌ கட்சிக்‌ கட்டுப்‌ பாட்டிற்கு ஆகவும்‌, பதவிக்கு ஆகவும்‌, மந்திரிசபை தயவுக்கு ஆகவும்‌ அல்லாமல்‌ உண்மைக்கு ஆக அல்லவே அல்ல என்று நன்றாய்க்‌ கூறலாம்‌. மதுவிலக்கு தோல்வி அடைந்‌ துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்‌ தயங்கு 8றவர்‌ களும்‌, 6 மதுவிலக்குதீ திட்டத்தைப்‌ பயன்‌ ஏற்படும்படி நடதீத முடியவில்லை. ஆதலால்‌, இனி மது அருந்தியவர்களுக்கு அதிக தண்டனை விதிப்பதன்‌ மூலமும்‌, மது உற்பத்தி செய்தவனை மாத்தீரம்‌ அல்லாமல்‌, அந்த வீதிக்காரர்களையெல்லாம்‌, அந்த ஊர்க்காரர்‌ களை)யல்லாம்‌ தண்டிப்பதன்‌ மூலமும்‌ பயன்‌ ஏம்படும்படி நடத்தலாம்‌! என்று சென்ற மந்திரி சபையிலுங்கூட, மந்திரிகளே பேசியிருக்கிறார்கள்‌ ; இப்பொழுதும்‌ சட்டசபையில்‌ அதையே பேசியிருக்கிறார்கள்‌. இப்போதே குடிகாரர்கள்‌ மாதீ திரமல்லாமல்‌ விற்பனைகீகாரர்களும்‌ வீடு வீடாக, காடு காடாக, புதர்‌ புதராகக்‌ காய்ச்சுகிறார்‌கள்‌. இதனால்‌ பயன்‌ அடைந்த-- அடைகிற பலர்‌ சட்டசபை மெம்பர்களாக இருப்பதோடு, சிலர்‌ மந்திரியாகவும்‌ இருக்கிறார்கள்‌. சட்டசபை மந்திரிகள்‌ மாதீதிரமல்லாமல்‌ இஉர்களது நண்பர்களும்‌, அதிகாரிகளில்‌ பலரும்‌, போலீஸ்‌ சிப்பநீதிகளில்‌ பலரும்‌ இந்த மது உற்பத்தி வேலையிலும்‌, உற்பத்தியாலரிடம்‌ பங்குபெறும்‌ வேலையிலும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌ என்பது யாராலும்‌ மறுக்கக்கூடிய செய்தியல்ல. இந்த ம.துவிலக்கால்‌ சர்க்காருக்கு 15 மூதல்‌ 20 கோடி ரூபாய்‌ வரை நஷ்டமாவது ஒருபுறமிநந்தாலும்‌--தவறான வழியில்‌ உற்பத்தி செய்கிறவர்கள்‌, பகுதிக்கு மல்‌ இதில்‌ பணம்‌ பெறுகிறார்கள்‌. இயற்கை மத வல்லாத-மற்ற செயற்கை மதுவை அருந்துகற வர்கள்‌ பல கோடி ரூபாய்‌ செலவழித்து போதை அடைகிறார்கள்‌. மற்றும்‌ பல வழிகளில்‌ கேடும்‌ செலவும்‌ ஏற்படுகின்‌றன. இவ்வளவு கேடுகளையும்‌ பொறுத்த க்கொண்டு--தங்களால்‌ முடியாத காரியத்தைச்‌ செய்துதான்‌ தீருவோம்‌ என்று மந்திரிசபை முடிவுசெய்யுமானால்‌, கிது பிடிவாதம்‌ என்பதைத்‌ தவிர வேறு என்ன என்பதாகச்‌ சொல்லமுடியும்‌ 8 அதிலும்‌, இது ஆச்சாரியார்‌ அவர்கவின்‌ பிடிவாதமான தால்‌ அவர்‌ ஒருவரைதீ தவிர வேறு யாருக்கும்‌ அவரவர்கள்‌ மனச்‌ சாட்சிப்படி இஷ்டமில்லாத காரியம்‌ சட்டசபையில்‌ நிறைவேறி கருக்கிறதுஃ இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்‌--ஜனநாயகதீதின்‌ தன்மையையும்‌ மக்கன்‌ பிரதிநிதித்துவத்தின்‌ தன்மையையும்‌, ஆகவே, மதுவிலக்கு வெற்றி மக்கள்‌ வெற்றி அல்ல) ஆச்சாரியார்‌ வெறிறி3யயாகும்‌. மக்கள்‌ தோல்வி) ஒழுக்கம்‌ தோல்வி, உண்மை தோல்வி எல்லாம்‌ ஒருபக்கம்‌ இருந்தாலும்‌, பந்தயத்தில்‌ ஈடுபட்டுத்‌ தோற்றவன்‌ வெற்றிபெற்றவனைப்‌ பாராட்டுவதுபோல்‌ ஆச்சாரியார்‌ அவர்களை இந்த வெற்றிக்கு ஆகப்‌ பாராட்டுகி3றன்‌, . [ விடுதலை -தலையங்கம்‌-18-7-1952] 1686—47 www.thamizham.net - Free E book No 3011 870 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ நரன்‌ காங்கிரசைவிட்டு வந்தபிறகு, சுமார்‌ 30 ஆண்டுகளாகவே இன்று உள்ள மது விலக்குக்‌ கொள்கைக்கு எதிரி, இதற்காக என்னை நான்‌ மதுக்‌ குடங்களைக்‌ காவடிகட்டிச்‌ கமந்து நிற்கிறமாதிரி காங்கிரசுகீகு ஆதரவான பத்திரிக்கைகளில்‌ கேலிச்சித்திரம்‌ போட்டுக்‌ கண்டித்து எழுதியுள்ளார்கள்‌. நான்‌ காங்கிரஸ்‌ மதுவிலக்கைப்பற்றி எதிர்தீது குடிஅரசு? இதழில்‌ எழுதிய தலையங்கங்கள்‌, கட்டுரைகள்‌ ஆகியவற்றில்‌ காங்கிரஸ்‌ மதுவிலக்குக்கு உள்‌எண்ணம்‌ கூடக்‌ கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்‌ ; பேசி வந்திருக்கி3றன்‌. அத்த உள்‌ எண்ணம்‌ என்னவென்றால்‌, 1938-ல்‌ காங்கிரஸ்‌ (இராஜாஜி) பதவிக்கு வந்தகரலத்தில்‌ 6 நமது கல்வி வளர்ச்சியை ஒழிதீதுக்கட்டுவதற்கு ஒரு ஆதாரம்‌ தேட வேண்டும்‌ என்கிற எண்ணத்தின்மீது மதுவிலக்கு ஏற்பாடு செய்யப்பட்டது? என்று எழுதியும்‌ பேசியும்‌ வந்திருக்கிறேன்‌. அதாவது, 100-4g 5 வீத2ம படித்த மக்களாய்‌ இருந்த நாம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு 100-க்கு 7 படித்த மக்களானோம்‌. அதைக்கண்டு ஆத்திரமடைந்த இராஜாஜி தாம்‌ 1938-ல்‌ பதவிக்கு வந்தவுடன்‌ ¢ கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடதீதுவதானால்‌ அரசாங்கதீதினிடம்‌ போதிய பணம்‌ இல்லைஃ ஆதலால்‌, வரவு-செலவைச்‌ சரிகட்ட 2600 பள்ளிகளை மூடவேண்டியது அவசியமாகிவிட்டது! என்பதாக ஒரு சாக்குக்‌ கண்டுபிடிக்கக்‌ கருதியே ¢ மதுவிலகீகினால்‌ ஏற்பட்ட நட்டதீதைச்‌ சரிகட்டினேன்‌ ? என்று சொல்ல வசதி ஏற்படுத்திக்கொண்டார்‌. அது, மதுவிலக்கினால்‌ மது வரும்படி தீதொகை பெரும்‌ அளவுக்குக்‌ குறைந்துவிட்டது என்று கூறிவிடலாம்‌ என்பதாகக்‌ கருதி ஏற்பாடு செய்தார்‌. ஆனால்‌, அந்த மதுவிலக்கு ஏற்பாடு செய்த நாள்‌ முதல்‌ நாளது வரைக்கும்‌ அந்த மதுவிலக்குக்‌ காரணமாக அது குடிசைத்‌ தொழிலாக மாறி, கின்று அது (குடி) ஒரு பிரபுதீ.துவ நாகரிகமாகவே மக்களிடம்‌ பரவி வந்திருக்கிறது. இந்த ம.துவிலக்கினால்‌ குடிகாரர்களின்‌ எண்ணிக்கை ஒரு சிறிதும்‌ குறைந்த பாடில்லை என்பதோடு, அதற்காகக்‌ குடியர்கள்‌ செலவிடும்‌ பணமும்‌, மற்றும்‌ 50 முதல்‌ 100 சதவீதம்‌ உயர்ந்ததே அல்லாமல்‌ ஞுறையவில்லை என்பதோடு, முன்பு மதுக்‌ கடைகளுக்குச்‌ சென்று வாங்கிக்‌ குடித்தவர்களுக்கு இன்று அவர்கள்‌ வீடுதேடிவந்து மதுவிநியோகம்‌ ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மது உற்பத்தித்‌ தொழில்மூலம்‌ நாட்டில்‌ அயோக்கியர்கள்‌, நாணயமில்லாதவர்கள்‌ பெருகி வருகிறார்‌ கன்‌. இது மாத்திரமல்லாமல்‌, கீழ்நிலை போலீஸ்‌ நண்பர்கள்‌ அனேகர்‌ குடிப்‌ பழக்கதீதுக்ீகு ஆனாகி, நாணயம்‌ கெட்டவர்‌ கனரகவும்‌ ஆகிவருகிறார்கள்‌ஃ மற்றும்‌, இந்த மது உற்பத்தி காரணமாக அனேக, அயோக்கியர்கள்‌, காலிகள்‌ போலீசுக்கு நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள்‌. இவற்றையெல்லாம்விட; குடியர்கன்‌ உடல்நிலை மிக மிகக்‌ கேடடைந்து விடுகிறது. மது அருந்தியதற்காக 5 சதவிகிததீதிற்கும்‌ குறைவாண பேர்கள்தாம்‌ குற்றவாளி களாக ஆக்கப்படுகிறார்கள்‌. மற்ற 95 சதவிகிததீதினர்‌ தாராளமாய்‌ முறைப்படி அருந்திக்‌ கொண்டே இருக்கிறார்கள்‌. இன்னும்‌, இவற்றுள்‌ பல இரகசியமான கேடுகள்‌ நிகழ்ந்து வருகின்‌றன. இன்று அரசாட்சி செய்ய ¢ மக்களால்‌ தெரிந்தெடுக்கப்பட்டு? ஆட்சிக்கு வந்திருக்கும்‌ கட்சியார்‌. மதுவிலக்கு விஷயதீதில்‌ சில சீர்திருத்தம்‌ செய்து மதுவிலக்கை நிலைநிறுத்துவோம்‌, தீவிரப்படுத்துவோம்‌ என்பதாகக்‌ கூறி இருப்பதாகதி தெரிகிறது. இப்படி இவர்கள்‌ கூறி இருப்பதற்குக்‌ காரணம்‌, கிராஜாஜியைத்‌ திருப்திப்படுத்த அவருக்குப்‌ பயந்து கூறி இருக்கிறார்கள்‌ என்றுதான்‌ கருதவேண்டி இருக்கிறது. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 971 நம்‌ மகீகன்‌ சகல துறைகளிலும்‌ கேடடைந்து சிலர்‌ கெட்டு உழலவேண்டும்‌ என்பதுதான்‌ பார்ப்பனர்‌ தர்மம்‌. ஆதலால்‌, எந்த நிலையிலும்‌ பார்ப்பனர்‌ நம்‌ யாருக்குமே நல்வழி காட்டமாட்டார்கள்‌. இந்த மதுவிலகீகுதீ துறையில்‌, தேவைப்பட்டவர்களுக்கு எல்லாம்‌ மது கிடைக்கும்‌ படியும்‌ மதுவினால்‌ உடலும்‌ புதீதியும்‌ கெடாதபடியும்‌ இருக்கதீதக்க வண்ணம்‌ மது அனுமதிப்பு ஏற்படுத்தினால்‌ சர்க்காருக்கு நல்லநிதி வரும்படி ஏற்படுவதுடன்‌, பார்ப்பனர்‌ தவிர்தீத மற்ற சகல துறையிலும்‌ உள்ள மக்களில்‌ நல்ல அளவுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும்‌ என்றும்‌ கரு.துகி3றன்‌. [! விடுதலை -தலையங்கம்‌--6-3-1967] 2. தசியம்‌ 1. தேசியம்‌ சகோதரர்களே! சகோதரிகளே! தேசிய நிலைமை என்பதற்கு நமக தேசதீதினுடையவும்‌, தேச மகீகளினுடையவும்‌ நிலைமையைப்‌ பற்றியும்‌, அக்கம்‌ பக்கமுள்ள தேசங்களின்‌ நிலைமைக்கும்‌, நமது தேசங்‌ களின்‌ நிலைமைக்கும்‌ என்ன விதீ தியாசம்‌ என்பதுபற்றியும்‌, அதற்குக்‌ காரணங்கள்‌ என்ன என்பதுபற்றியு2ம நான்‌ பேசவேண்டும்‌ என்று நீங்கள்‌ கருதுவதாக நான்‌ நினைக்கிறேன்‌. சகோதரர்களே! ஒவ்வொரு நாடும்‌ இதுசமயம்‌ தனது பழையநிலையில்‌ இருந்து விடுபட்டு, புதியமுறையில்‌ முன்னேறவேண்டும்‌ என்கின்ற ஆசைகொண்டு அதிலேயே ஈடு பட்டிருக்கின்றன. இவ்வழியில்‌ சிலநாடுகள்‌ கொஞ்ச நாளைக்குமுன்பே இறங்கி வெற்றி பெற்றுப்‌ பழமையைச்‌ சற்றும்‌ இலட்சியம்‌ செய்யாமலும்‌, வெறுதீதம்‌, அழித்தும்‌ புதுமை களில்‌ இறங்கி எவ்வளவோ முற்போக்கு அடைந்துவிட்டன. சில நாடுகள்‌ பழமையை அழிக்கும்‌ வேலையில்‌ இப்போதுதான்‌ இறங்கி, அதிலே3ய வெகுகஷ்டதீ துடன்‌ ஈடுபட்டு வேலைசெய்வதன்‌ மூலம்‌ வெற்றியடைந் ஐம்‌ வருகின்றன. ஆனால்‌, நமது நாடோ பழமையிலிருநீது ஒரு சிறிதும்‌ மாற்றம்‌ அடையக்கூடாது என்னும்‌ குரங்குப்‌ பிடிவாததீதில்‌ இறங்கிப்‌ பழமையைக்‌ காப்பாற்றப்‌ பாடுபடுவதோடு--அதற்கும்‌ முந்தின பழமையைக்‌ கண்டுபிடிக்கும்‌ ஆராய்ச்சியில்‌ இறங்கி வெகுதீவிரமாய்‌ வேலை செய்கின்றது. இந்த உப?யாகமற்றதும்‌, பிற்போக்கான துமான காரியத்திற்குச்‌ சிலர்‌, நமது மக்கள்முன்‌: பெரிதும்‌ பொருளற்றவிததீதில்‌ மதத்தையும்‌ கடவுளையும்‌ கொண்டுவந்து போட்டுக்‌ கொண்டு வெகுபாடுபட்டுக்‌ குழப்பிவரு8ன்றார்கள்‌. இவர்கள்‌ பாமர மக்கள்‌ முன்னிலையில்‌, *மததீதிற்காக எதையும்‌ தியாகம்‌ செய்யவேண்டி உயிரையும்‌ விடு3வன்‌ ? என்று வெறும்‌ ஆவேசப்‌ பேச்சுப்‌ பேசுவதன்‌ மூலமே மக்களின்‌ அறிவைக்கெடுத்து நாட்டின்‌ முற்போக்கை நாசப்படுதீ துவதில்‌ ஈடுபட்டிருக்கின்றார்கள்‌. * கடவுளுக்கு ஆபத்து வந்துவிட்டது) ஆஸ்திக மாநாடு கூட்டுங்கள்‌ ! என்பவர்களும்‌! தர்மங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது] கூட்டுங்கள்‌ வருணாசிரம மாநாடு? என்பவர்களும்‌--1 புராணங்களுக்கும்‌ இதிகாசங்‌. களுக்கும்‌ ஆபதீது வந்துவிட்டது) கூட்டுங்கள்‌ சமய மாநாடு? என்பவர்களும்‌ இப்போது மிகுதீயும்‌ மலிந்துவிட்டார்கள்‌. சாதாரணமாக யோசித்துப்‌ பார்‌ தீ தாமானால்‌, இந்தியாவில்‌ தேசியம்‌ என்கின்ற பதமே தப்பணன வழியிஃ, மக்களை ஏமாற்றிப்‌ பிழைக்க ஒரு கூட்டதீதார்‌-- அதாவது மேல்‌ சாதியார்‌ என்று சொல்லிக்கொள்ளும்‌ பார்ப்பனர்களால்‌ கற்பனை செய்யப்பட்டு, அவர்‌ களுக்குதீ தாசர்களாக இருந்தால்தான்‌ பிழைக்க முடியும்‌ என்று கருதிய சில பார்ப்பன www.thamizham.net - Free £ book 14௦ 3011 372 பெரியார்‌ & வெ. ரா, சிந்தனைகள்‌ ரல்லாத படித்தவர்கள்‌ என்பவர்களால்‌ ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டதீதார்‌ சூழ்சீசியாலும்‌ பாமரமக்களை ஏமாற்றிச்‌ சிலர்‌ பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும்‌ ஒரு பாதகமும்‌ அபாயகரமுமான அர்தீதமற்ற ஒரு வார்தீதையாகும்‌. இன்னு விளக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌, தேசியமென்பது மக்களின்‌ * ஆதீமார்‌ தீத இயல்‌? என்பதில்‌ கடவுள்‌, மோட்சம்‌, நரகம்‌ என்கின்ற வார்‌ தீதைகள்‌ எப்படி அர்‌ தீதமற்றதாகவும்‌ புரோகதக கூட்டமும்‌, பாதிரிக்‌ கூட்டமும்‌, மூல்லாக்‌ கூட்டமும்‌, சந்நியாசிக்‌ கூட்டமும்‌ பாமரமக்களிடம்‌ சமயத்திற்கு ஒரு அர்தீதமும்‌, சநீதர்ப்பத் துக்கு ஒரு கருதீதுமாய்ச்‌ சொல்லி, அவர்களை ஏமாற்றிப்‌ 93484 தின்று, சோம்பேறிகளாய்‌ இருந்து-நோகாமல்‌ வாழ்வதற்காக செய்‌ துகொண்டிருக்க உப 3யாகப்பட்டு வருகின்றனவே அதபயோல்‌ தேசியமென்னும்‌ பதுமம்‌ சரீரப்பிரயாசை ஒருசிறிதும்‌ எடுத்துக்கொள்ள கஷ்ட மில்லாமல்‌ நெஞ்சத்தில்‌ அழுக்குப்படாமல்‌, பாமரர்களை ஏமாற்றிப்‌ பிழைக்கவும்‌ கீர்த்தி பெறவு b கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும்‌. இந்தப்‌ பதமானது, ஆங்கில பாஷையில்‌ நேஷனல்‌ என்கின்ற பதத்தின்‌ மொழி பெயர்ப்பு என்‌8ன்ற முறையில்‌ ஏற்பட்டதே தவிர, மற்றபடி அது இந்தியாவின்‌ வேறு எந்த பாஷையிலும்‌ எந்தக்‌ கருத்திலும்‌ கிருந்ததல்லவென்றே சொல்லலாம்‌. அன்றியும்‌, பத அர்த்த உணர்ச்சியானது தேசத்தின்‌ பொதுவான நன்மைகளை உதீதேசிதீததாகக்‌ காணப்படுவதாயிருந்தாலும்‌ அப்‌ பதத்தின்‌ பேரால்‌ நடைபெற்று வரும்‌ முயற்சிகள்‌ முமுவதும்‌ அரசியல்‌ சம்பந்‌ தமான துறையில்‌ சில உதீதியோகங்களையும்‌, அதிகாரங்களையும்‌ மாத்திரம்‌ கருதி, அவைகளை அரசாங்கதீதாரிடமிரநீ து அடைவதற்‌ காகச்‌ செய்யும்‌ முயற்சி களாகவே இரு b துவரு 9ன்றன வ யல்லாமல்‌ வேறில்லை. உதாரண மாக, சியம்‌ (அதாவது இந்திய காங்‌ ரஸ்‌) ஏற்பட்டு இன்‌ றைக்குக்‌ (1929) கிட்டத்தட்ட 50, 60ஆண்டுகள்‌ ஆகி, அது இன்றைய தினம்‌ செய்திருக்கும்‌வலை என்னவென்று பார்‌ தீதால்‌, அரசாங்க சம்பந்த கான உதீதி3யாகங்‌ களை ஒன்றுக்கு 10 ஆகப்‌ பெருக்கி, அவ்வுத்தியோகங்‌ களு$கெலோம்‌ சதா3வலை இருக்கும்படியாக அனேக புதிய புதிய அதிகாரங்களை உண்டாகி -அவ்புத்தியோகங்களும$, அறிகாரங்களும்‌ மக்களுக்குச்‌ சதா தேவையாய்‌ இருக்கும்படியாக மனித வாழ்க்கையையும்‌ குணங்களையும்‌ ஒழுக்கங்களையும்‌ திருப்பி, இதன்‌ பயனாய்‌ முன்சொல்லப்பட்ட உயர்ந்த சாகியார்‌ என்னும்‌ எல்லாப்‌ பார்ப்பனர்களும்‌. படித்தவர்கள்‌ என்னும்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ போட்டிபோட்டு வாழும்படியாக ஏற்பட்ட தல்லாமல்‌-நாட்டிற்‌ே எ, நாட்டுப்‌ பெரும்பான்மையான மக்களு$8கா ஏதாவது நன்மை ஏற்பட்டிருக்கின்றதா என்பதைச்‌ சிறிதாவது கவனித்தால்‌, நாம்‌ கூறுவதின்‌ தன்மை நன்றாக விளங்கும்‌. ஒரு தோதீதின்‌ தேசியம்‌ முக்கியமாய்‌ எதைப்‌ பொறுதீதிரு&க வேண்டுமென்று பார்ப்போமானால்‌, குறைந்தபட்சம்‌ ஒரு தேசமக்கள்‌ தங்களது மனத்தையும்‌ மனச்சாட்சி யையும்‌ விற்ஈரமலும்‌, விட்டுக்கொடுக்காமலும்‌ வயிறு வளர்க்கும்படியாவது இருக்க வேண்டும்‌. ஈதன்றி, அதர்கு மேற்பட்ட தேசியங்கள்‌ எவ்வள வோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும்‌; கல்வி வேண்டும்‌) ஆராய்ச்சி வேண்டும்‌) கண்ணியமான தொழில்‌ வேண்டும்‌] சமத்துவம்‌ வேண்டும்‌) ஒற்றுமை வேண்டும்‌ ) தன்‌ முயற்சி வேண்டும்‌ உண்மை உணர்வு வேண்டும்‌ ) ஒருவரை ஒருவர்‌ ஏமாற்றிப்‌ பிழைக்‌ காமலிருக்க வேண்டும்‌ § சோம்‌ 3பறிகள்‌ இருக்கக்கூடாது) அடிமைகள்‌ இருக்கக்கூடாது) தீண்டாதவர்கள்‌, தெருவில்‌ நடக்கக்கூடாதவர்கள்‌ முதலியவர்கள்‌ இருக்கக்கூடாது) இனியும்‌ இதுபோன்ற எவ்வன வா காரியங்‌ கன்‌ செய்யப்பட வேண்டும்‌. ஆனால்‌, ¢ இவைகளில்‌ எதனையேனும்‌ இந்த அய்ம்பது வருஷதீதிய தேசியம்‌ செய்திருக்கின்றதா? என்று பொது தேசியத்‌ தலைவர்களையும்‌, தனித்தனி தேசியக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 979 கட்சித்‌ தலைவரீகளையும்‌, இவைகளில்‌ சம்பந்தப்பட்ட தேசிய பகீதரீகளையும்‌, தேசதீ தொண்டர்‌ களையும்‌ கேட்கி3றாம்‌. இந்த 50 வருஷ காலமாக உத்தியோகப்‌ பெருக்கிற்கும்‌, அதிகாரப்‌ பெருக்கிற்கும்‌, அவற்றிற்கு ஏற்பட்ட யோக்கியதாபட்சப்‌ பெருக்கிற்கும்‌, சம்பளப்‌ பெருக்கிற்கும்‌ ஏற்படுத்திக்கொண்டிருக்கும்‌ நூற்ற க்கணக்கான திட்டங்கள்‌ கொண்ட சட்டங்கள்‌ தேசியத்தின்‌ பேரால்‌ நிறைவேற்றப்பட்டிருப்பதுபோஸ்‌, உண்மையாகவே தேச நன்மைக்கேற்றதான மேல குறிப்பிடப்பட்டவைகள்‌' விஷயதீதில்‌--ஏ தாவது சட்டம்‌. செய்ய இந்தத்‌ தேசிய இயக்கமோ தேசியத்‌ தலைவர்களோ ஒரு சிறிது முயற்சியாவது செய்து சட்டம்‌ செய்தார்களா? செய்ய முற்பட்டார்களா ? என்று கேட்பதுடன்‌, அவ்வித சட்டம்செய்ய முன்வந்த வேறு கனவான்கன்‌ முயற்சிக்காவது முட்டுக்கட்டை போடாம லாவது இருந்தார்களா என்‌ று கேட்கிறோம்‌. மகீகள்‌ சாதி பேதத்தையும்‌, மத பேததீதையும்‌ ஒழிக்க தேசியவாதிகள்‌ கவனிக்காம லிருப்பது மாதீதிரமல்லாமல்‌, அவற்றை நிலைநிறுத்தவும்‌ வலுப்படுத்தவும்‌ முயற்சிக்காம லிருப்பதுமில்லை. இன்றையத்‌ தேசிய வாழ்வில்‌ தேவஸ்தான மசோதாவை எதிர்‌ தீதவர்கன்‌. யார்‌ ? சாமிகள்‌ பேரால்‌ பெண்மக்கள்‌ விபச்சாரத்தைதீ தடைபுரியும்‌ ம$சாதாவை எ திர்தீத வர்கள்‌ யார்‌ ₹ மக்கள்‌ எல்லோருக்கும்‌ சமப்பிர திநிதிதீதுவமும்‌ சமசநீதர்ப்பமும்‌ அளிக்க வேண்டும்‌ என்னும்‌ கொள்கைகளை எதிர்ப்பவர்கள்‌ யார்‌ 8 இவைகளை முந்தியவர்கள்‌ யார்‌ என்கின்‌ ற விவரங்களைக்‌ கவனிப்போமானால்‌, ¢ கேசத்‌ துரோகிகள்‌ ! என்பவர்களால்‌ மசோதாக்கள்‌ கொண்டுவரப்படுவதும்‌, ₹ தேசிபவாதிகள்‌? என்பவர்களால்‌ எதிர்க்கப்‌ படுகின்றதேயல்லாமல்‌ வேறு என்னவென்றுதான்‌ கேட்கிறோம்‌, செங்கற்பட்டு மாநாட்டில்‌ நிறைவேற்றிய தீர்மானங்கள்‌ யாரால்‌ கொண்டுவரப்‌ பட்டவை இப்போது அவைகள்‌ யாரால்‌ எதிர்க்கப்படுகின்‌ றன என்று பார்த்தால்‌ அவ்‌. வளவும்‌ தேசியவாதிகள்‌ என்பவர்களா லய எதிர்க்கப்படுவதைக்‌ காணலாம்‌, [பாலக்காட்டில்‌, 9-5-1929-ல்‌ சொற்பொழிவு-- குடி அரசு? 19-5-1929) 2. தேசிய வாதிகள்‌ * பழுதீக தேசாபிமாளிகளும்‌, பிரபல தேசியத்‌ தலைவர்களும்‌ ? ஆகிய திருவாளர்கள்‌. மாளவியா, கேஸ்கர்‌, மூஞ்ே, எம்‌. கே. ஆச்சாரியார்‌, கே. வி. ரெங்கசாமி அய்யங்கார்‌, ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌, மோதிலால்‌ நேரு ஆகியவர்கள்‌ எல்லோருமே இந்த இருபதாவது நூற்றாண்டில்‌ கிடையூறாயிருந்திருக்கிறார்கள்‌ என்றால்‌, இனி எந்கதீ தேசியவாதியின்‌ ஆதரவை எந்தக்‌ காலத்திலாவது எதிர்பார்கீகக்‌ கூடுமா என்பதுதான்‌ கேள்வி, இதில்‌ மற்றொரு விஷயம்‌ என்ன ?வன்றால்‌, மேற்கூறிய எல்லாத்‌ தேசியவாதிகளும்‌ மசோதாவின்‌ (சாரதா மசோதா) ததீ துவத்தை ஒப்புக்கொள்வதாகச்‌ சொல்லிக்கொண்டே ஆட்சேபிதீதிருக்‌ கிறார்கள்‌ என்றால்‌, இனி ஒப்புக்கொள்ள முடியாத விஷயதீதில்‌ இவர்கள்‌ ஆட்சேபணை எப்படி இருக்கும்‌ என்பதை யோசித்துப்பார்‌ தீதால்‌ விளங்காமல்‌ போகாது. திரு. மாளவியா அவர்கள்‌ தனது ஆட்சேபணைக்குச்‌ சொல்லிய காரணம்‌ என்ன வென்றால்‌, ¢14 வயதுக்கு மேற்பட்டுக்‌ கலியாணம்‌ செய்வது நல்லதுதான்‌. ஆனாலும்‌, ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்கவேண்டும்‌? என்பது. திர. மூஞ்சே சொன்ன ஆட்சேபணையைக்‌ கவனிப்போம்‌. இவர்‌ பார்ப்பனர்‌--பார்ப்பன மாணவர்களை மாலிசம்‌ சாப்பிடவேண்டும்‌ என்று சொல்லுபவர்‌--வைதீதியர்‌. இத்துடன்‌ வைதீதிய சாஸ்திரப்‌ படியும்‌, உடற்கூறு சாஸ்‌ திரப்படியும்‌ பெண்களு கு 18 வயதுக்கு மூன்‌ விவாகம்‌ செய்வது கெடுதி என்கின்ற அபிப்பிராய கொண்டவர்‌. அப்படி இருந்தும்‌, இந்த மசோதா விஷயதீதில்‌ 612 வயதுக்குமேல்‌ கலியாண வயது இருக்கக்கூடாது! என்று வாதம்‌ செய்தவர்‌, திரு. மோதிலால்‌ நேரு எந்த மாமிசமும்‌ சாப்பிடுபவர்‌; எந்தப்‌ பரனமும்‌ செய்வார்‌ § www.thamizham.net - Free £ book 14௦ 3011 3874 பெரியார்‌ ஈட, வெ. ரா, சிந்தனைகள்‌ 20 வயதுக்கு முன்னால்‌ தங்கள்‌ குழந்தைகளுக்குக்‌ கலியாணம்‌ செய்வதில்லை என்றும்‌ சொன்னார்‌. அப்படி இருந்தும்‌, அந்த மசோதாவின்‌ ஜீவநாடியைப்‌ பிங்கிவிடக்‌ கருதி சூழ்ச்சி செய்தார்‌. அதாவது, * அவசியமிருக்கின்றவர்கள்‌ 14 வயதுக்குள்ளாகவும்‌ கலியாணம்‌ செய்ய அனுமதிக்க வேண்டும்‌? என்னும்‌ ஒரு திருத்தம்‌ கொண்டுவந்து மசோதாவை அடியோடு கவிழ்தீது விடப்பார்த்தார்‌. திரு. கேஸ்கர்‌, திரு. திலகரின்‌ ஸ்தாபன தீதிற்கு வந்தவர்‌. அவரோ மசோதாவின்‌ தத்துவத்தை ஒப்புக்கொள்வதாய்ச்‌ சொல்லி, ஆனால்‌. வைதிகர்கள்‌ இஷ்டத்திற்கு விரோதமாய்ச்‌ சட்டம்‌ செய்யக்கூடாது? என்றார்‌. இனி சென்னைத்‌ ¢ தலைவர்‌ * களைப்பற்றிச்‌ சொல்லவேண்டிய அவசியம்‌ இருக்காது என்றே நினைக்கிறோம்‌. எனினும்‌, திநவாளர்கள்‌ சேஷயங்கார்‌, கே. வி. ரெங்க சாமி அய்யங்கார்‌, எம்‌. கே. ஆச்சாரியார்‌, எ. ரெங்கசாமி அய்யங்கார்‌ போன்ற ¢ பரம்பரை தேசியவாதி களின்‌ யோக்கியதை, இம்‌ ம3சாதா விஷயத்தில்‌ எப்படி நடந்து கொண்டார்கள்‌ என்பதைக்‌ கூர்மையாய்க்‌ கவனித்து வந்தவர்களுக்கு விளங்காமல்‌ போகாது எனவே, நமது நாட்டிற்கென்றோ, சமுதாயதீதிற்கென்றோ எவ்வித திருத்தம்‌ கொண்டு வந்தாலும்‌ இந்தக்‌ கூட்டத்தவர்களே--அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம்‌ தேசியத்தின்‌ பேராலும்‌, மற்றொருபுறம்‌ மததீதின்‌ பேராலும்‌, மற்றொருபுறம்‌ சாஸ்திரத்தின்‌ பேராலும்‌, மற்றொருபுறம்‌ மனச்சாட்சியின்‌ பேராலும்‌ தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாகவே கவனித்து வருக3றாம்‌, சாதாரணமாய்‌, ¢ வினா அறியாக்‌ குழந்தை களைக்‌ கடவுள்‌ பேரால்‌ பொட்டுக்கட்டி விபச்சாரிகளாக குவதையும்‌, மக்களை விபசீசாரதி தொழிலால்‌ ஜீவனம்‌ செய்யக்‌ கூடாதென்றும்‌ கருதிக்‌ கொண்டுவரப்பட்ட சட்டங்கள்‌ கூட மததீதின்‌ பேராலும்‌, சாஸ்திரங்களின்‌ பேராலும்‌, சாமிகளின்‌ பேராலும்‌ ஆட்சேபிக்கப்‌ படுமானால்‌, அதுவும்‌ பூரண சுயேச்சையை விரும்பும்‌ சங்கக்‌ காரியதரிசியும்‌, கற்ற பண்டிதர்‌ களால்‌ தெரிந்தெடுக்கப்பட்டவருமான தி ந. சதீதியமூர்தீதிப்‌ பார்ப்பனராலேயே எதிர்க்கப்‌ படுமானால்‌. இனி சாதாரண பார்ப்பனர்‌ களாலும்‌ அவர்கன்‌ கலந்த இயக்கங்களாலும்‌, நாம்‌ எந்தவிதமான சீர்திருத்தத்தை சுயராஜ்யதீதில்‌ - கிராமராஜ்பதீதில்‌ எதிர்பார்கீகக்‌ கூடுமென்பது நமக்கு விளங்கவில்லை. பொதுவாக, இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ சர்க்காருக்கு விரோதமாகவும்‌, சர்க்காருடன்‌ ஒத்‌ துழைக்கக்கூடாது--சர்க்காரை ஒழிக்கவேண்டும்‌ என்றும்‌ சொல்வதின்‌ இரகசியம்‌ எல்லாம்‌, எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ கிந்த சர்க்கார்‌ பார்ப்பனரல்லாத மக்களுக்கு வசமாகக் கூடாதென்றும்‌, பார்ப்பனரல்லாத மக்களுக்கு அனுகூலமாக ஏதாவது நன்மையோ, சீர்திநத்தமோ செய்ப இடம்‌ கொடுதீதுவிடக்கூடாது என்பதுமான கெட்ட எண்ணமே தவிர, மற்றபடி சர்கீ காரோடு ஒதீதுழைகீகக்கூடாது என்பதில்‌ ஏதாவது யோக்கியப்‌ பொறுப்பா, தேசியமோ, நாணயமோ கிருக்கின்றதா என்று கேட்கின்றோம்‌. (¢ குடிஅரசு -தலையங்கம்‌--29-9-1529] கிளர்ச்சியினால்‌ அனேகர்கள்‌ தேச பக்தர்களாகவும்‌ தியாகிகளாகவும்‌ ஆகலாம்‌. முயற்சியினால்‌ பலருக்கும்‌ பெரிய பட்டமும்‌, பதவியும்‌, உத்தியோகங்களும்‌ கிடைக்கலாம்‌, இதைத்‌ தவிர, நாம்‌ எதிர்பார்க்கும்‌ காரியம்‌ கிடைக்குமென்று நம்புவதற்கில்லைஃ சைமன்‌ கமிட்டியார்‌ தெரிவித்தபடியும்‌, சக்குரவர்‌ தீதியார்‌ தெரிவிதீதபடியும்‌ இந்தியாவில்‌ அநாதி! காலந்தொட்டு இருந்துவரும்‌ மேல்சாதி-கீழ்சாதி வித்தியாசக்‌ கொடுமையும்‌, ஆண்‌ - பெண்‌ விதீதியாசக்‌ கொடுமையும்‌. பணக்காரன்‌ - ஏழை, மிராசுதார்‌ - உமுபவன்‌ வித்தியாசக்‌ கொடுமைகளும்‌] பொதுவில்‌ மதக்‌ கொடுமையும்‌ ஆகியவைகளை நன்றாய்க்‌ கவனித்த, அஸ்திவாரத்தீல்‌ இருந்தே பறித்துக்‌ களைந்து எறியும்படியான கிளர்ச்சியும்‌ வெற்றியுந்தான்‌ உண்மையில்‌ ஏதாவது பயனளிக்கக்‌ கூடியதாயிருக்குமே தவிர, வேறில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 375 தேசியக்‌ கிளர்ச்சியில்‌ வரும்‌ பூரண சுயேசிசையானாலும்‌, சீரி திருத்தமளிக்க முயற்சி செய்யும்‌ சரீக்காரால்‌ வரும்‌ முழுச்‌ சீர்‌ திருத்தமானாலும்‌ இரண்டும்‌ உயர்ந்த சாதிக்‌ காரன்‌, பணக்காரன்‌, படித்தவன்‌ ஆகிய மூவருக்கும்‌ மாத்திரம்‌ அனுகூலமும்‌ முற்போக்கு மான சுதந்திரமும்‌, சீர்‌ திருதீதமுமாய்‌ இருக்குமே தவிர, 100-க்கு 90 மக்களாய்‌ இருக்கின்ற குடியானவனுக்கும்‌ கூலிக்காரனுக்கும்‌ தாழ்தீதப்பட்டவனுக்கும்‌ வேண்டிய மார்க்கம்‌ அதில்‌ ஒன்றும்‌ இருக்காது என்றே சொல்லுவோம்‌. [6 குடி அரசு? தலையங்கம்‌--23-11-1930] 8. தேசிய வியாபாரம்‌ உலதீதில்‌ மகீகள்‌ தங்கள்‌ தங்கள்‌ வாழ்கீகைகீகு வி8ிதொயங்கள்‌ ஏற்படுத்திக்‌ கொன்‌ வதில--பலர்‌ பொதுநல சேவை என்பதையும்‌ ஒரு மார்க்கமாக உப$யாகப்படுத்திக்‌ கொண்டு வருகின்றார்கள்‌. அந்த முறையிலேதான்‌ இன்று எல்லாவிதமான பொதுநல சேவைகள்‌ என்பவைகளும்‌ ஒரு மனிதன்‌ சுயநல வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும்‌, அடிப்படையாகவும்‌ கொண்டதாகவும்‌ இருந்துவருகின்‌ றன. இந்த நிலைமையானது இந்‌ நாட்டின்‌ மக்களின்‌ உண்மையான பொது நலம்‌ என்பதை அடியோடு கெடுதீதுவிட்டதல்லாமல்‌, இம்‌ மாதிரி நன்மைகளால்‌ பொ. நல வாழ்‌ வானது-உண்மை, ஒழுக்கம்‌, நாணயம்‌ என்பவைகள்‌ சிறிதும்‌ இல்லாத புரட்டுக்கும்‌, பொய்யுக்கும்‌, வஞ்சகதீதிற்கும்‌ நிலையாயுள்ள ஒரு வியாபார சாலைபோல்‌ ஏற்பட்டு விட்டது. இதன்‌ பயனாகவே மக்கள்‌ மிகவும்‌ ஏமாற்றப்பட்டுக்‌ கஷ்ட தீதிற்கும்‌, கொடுமைக்‌ கும்‌ ஆளாகி முற்போக்கடைய இடமில்லாமல்‌ போய்விடுகின்றார்கள்‌. இந்த மாதிரியான. காரியங்கள்‌ சமீப காலம்வரை மதம்‌, கடவுள்‌, மோட்சம்‌, சன்மார்க்கம்‌ முதலாகியவைகளின்‌ பேராலேய பெரிதும்‌ நடந்துவந்திருந்தாலும்‌--கொஞ்ச காலமாய்‌ தேசம்‌, தேசியம்‌, சுயராஜ்யம்‌ என்பவைகளின்‌ பேரால்‌. வியாபாரமாகவே துவக்கப்பட்டு, மக்களுக்குப்‌ பெருத்த இடையூறையும்‌, கஷ்டத்தையும்‌ கொடுத்து வருகின்றது. ஏனெனில்‌, சாகாரணமாக மற்ற பல நாடுகளில்‌ பொதுநல சேவை என்பதில்‌ ஈடுபடு கின்றவர்கள்‌ பலர்‌ கஷ்டத்திற்கும்‌ நஷ்டத்திற்கும்‌ கவலைக்கும்‌ உள்ளாகி, அனேகவித தொல்லைகளை அனுபவிக்8ன் றார்கள்‌. ஆனால்‌, இந்த நாட்டிலோ சிறிதும்‌ கஷ்டமும்‌, நஷ்டமும்‌, தொல்லையும்‌, கவலையும்‌ இல்லாமல்‌--நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோகம்‌, பணம்‌, கீர்த்தி, அதிகாரம்‌ முதலியவைகள்‌ மாற்றப்‌ பண்டமாக அடையப்பட்டு வருகின்‌ றன, இவற்றிற்குக்‌ காரணம்‌, பொது மக்களை மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி, வைத்திருப்பதால்‌, அந்த மூட நம்பிக்கையானது அந்த மக்களைதீ தேசிய வியாபாரிகளிடமும்‌ சிக்கி, ஏமாந்து கஷ்டப்படும்படி செய்‌துவரு8ன்‌ றது, R . இந்த நிலைமையானது நாளுக்கு நாள்‌ பெருகி, அ$னகர்‌ இவ்‌ வியாபாரதீதில்‌ பங்கெடுக்க நேர்ந்ததன்‌ பின்‌, லிமிடட்‌ கம்பெனியாக இருந்தது, ¢ அன்‌-லிமிடெட்‌ கம்பெனி யாகி--அ தாவது ஒரு வகுட்பாருக்கு மாத்திரம்‌ என்று இருந்தது எல்லா வகுப்பா ருக்கும்‌ பங்கு எடுத்துக்கொள்ள சவுகரியம்‌ ஏற்பட்டு-- சிற க, அதற்கு அ 8னக (பிராஞ்சு) கிளை இயக்கங்களும்‌ உண்டாகி, இப்‌ பாது வரவரப்‌ பெருகி, ஏறக்‌ குறைய சிறிது கல்வியும்‌ தந்திரமும்‌ உள்ள எல்லா மக்களும தேசிய வியாபாரத்தில்‌ கலநீது, அளவுக்கு மீறிய அதாவது தங்களது யோக்கியதைக்கும்‌ தகுதிக்கும்‌ எத்தனை3யா பங்கு மீறியதான இலாபத்தை,பயனை அடையும்படியாகச்‌ செய்துவிட்டது. இந்த நாட்டில்‌ பொது மக்களின்‌ நலத்திற்கும்‌ பாதுகாப்பிற்கும்‌, ஒமுகீகதீதிற்கும்‌ விரோதமானது என்று சொல்லதீததுந்த கள்‌, சரராயக்கடை, சூதாடுமிடம்‌, விபச்சாரிகள்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 376 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ விடுதி, கொள்ளைக்கூட்ட தீதார்‌ முதலிய எல்லா ஒழுக்கமும்‌ நாணயமும்‌ கெட்ட துறைகள்‌- இயக்கங்கள்‌ என்பவைகளை யெல்லாம்விட மிக்க மோசமான துறையாகவும்‌ ஸ்தாபன: மாகவும்‌ உள்ள இடத்தை மேற்படி தேசிய வியாபாரம்‌ அடை ந்துவிட்டதுஃ இன்னும்‌ விளக்கமாய்ப்‌ பேசவேண்டுமானால்‌, வேறு எந்தக்‌ காரணதீதாலும்‌ பிழைக்க முடியாதவர்களும்‌ ஒழுக்கமும்‌, நாணயமும்‌ அற்றவர்‌ களும்‌, மக்களை ஏமாற்றி வாழும்‌ மோசக்காரர்களும்‌ கடைசியாம்ப்‌ போய்‌ அடைக்கலம்‌ புகுவதற்கு இன்று தேசிய வியாபார த்தைவிடச்‌ சுலபமான வழி, வேறு ஒன்றும்‌ இல்லை. சென்னை மாகாணதீதைப்‌ பொறுத்தவரை; நமகீகு 3 கிளர்ச்சிகளின்‌ அனுபவமும்‌, 4 தேசிய ஸ்தாபனங்களின்‌ அனுபவமும்‌, அனேக தேசபக்தர்கள்‌ அனுபவமும்‌, 4 மந்திரி சபைகள்‌ அனுபவமும்‌, பல ஜனப்‌ பிரதிநிதிகளின்‌ அனுபவமும்‌, அனேக உதீதியோகக்‌ காரர்களால்‌ ஏற்பட்ட அனுபவமும்‌ உண்டு. இவைகளில்‌ கலந்துள்ள 100 க்கு 99§ பேர்‌. கனீன்‌ யோக்கியமும்‌ நாணயமும்‌ இலட்சியமும்‌ ஒன்‌ றேயாகும்‌. எல்லோரும்‌ ஏழைகளை பாமர மக்களை வஞ்சிதீ.து, கொள்ளை அடிதீதுப்‌ பணம்‌ சம்பாதித்துப்‌ பெரிய மனிதர்கள்‌ ஆகவேண்டும்‌ ; பட்டம்‌ பதவிகள்‌ பெறவேண்டும்‌ ) தங்கள்‌ பிள்ளை குட்டி சந்ததிகளுக்கு உத்த்யோகங்கன்‌ பெறவேண்டும்‌ என்பவைகளையே முக்கிய ததீதுவமாய்‌,--கொள்கை யாய்க்‌ கொண்டவர்கள்‌ என்பதைத்‌ தூக்குமேடைமீது.இிநநீது சொல்லுவோம்‌. இது மாதீதிரமல்லாமல்‌, எந்தவிதமான யோக்கியர்‌ களையும்‌, இன்றையத்‌ தேசிய மானது அமோக்கியர்‌ களாக்கத்‌ தயாராயி நப்பதோடு--வெளியில்‌ இருக்க முடியாமல்‌ உள்ளே இழுதீதுப்‌ போட்டுக்கொள்‌ ளுகின்றதாகவே' இருக்கின்றது. [ குடி அரசு -தலையங்கம்‌--1-3-1931] 4. பார்ப்பனர்களின்‌ தேசியம்‌ பார்ப்பனர்கள்‌ என்ன நோகீகதீதுடன்‌ தேசிபம்‌, தேசியம்‌ என்று கூப்பாடு போடு கிறார்கள்‌ என்‌பதைப்பற்றிப்‌ பல தடவைகளில்‌ நாம்‌ வெளியிட்டிருக்‌ 9றோம்‌. * தேசியம்‌! என்ற சூழ்ச்சிகள்‌ கண்டுபிடிக்‌ கப்பட்டதற்‌ கக்‌ காரணமே பார்ப்பனியமான சனாதன தர்மங்‌ களைப்‌ பலப்படுதீதவே ஒழிய வேறில்லை. தேசியம்‌ என்கின்‌ ற வார்‌ தீதைக்கு அனேகமாய்‌ மக்கன்‌ மனத்தில்‌ இதீ தேசத்தில்‌ பழைய நாகரிகம்‌, சனாதன தர்மம்‌, பழைய பழக்க வழக்கம்‌ என்பவைகளையே பிர தானமாகக்‌ கொள்ளும்படிப்‌ பிரச்சாரம்‌ செய்து வந்ததம்‌, அதற்காக இந்தியப்‌ புராண இதிகாசங்களை ஆதாரமாக எடுதீதக்காட்டிப்‌ பிரச்சாரம்‌ செய்து வந்ததும்‌ வாசகர்கள்‌. அறிந்ததே, இந்தக்‌ கருத்தைக்‌ கொண்டேதான்‌ கராச்சி காங்கிரஸ்‌ சுயராஜ்யதீ திட்டம்‌ ஏற்பாடு. செய்திருக்கிறது. மற்றம்‌, இந்திய நாட்டை பாரதமாதா (பூமிதேவி) என்று அழைப்பதும்‌, பாரத தேசம்‌ என்று சொல்லுவதும்‌ எல்லாம்‌ இக்‌ கருத்தை ஆதாரமாகக்‌ கொண்டதே ஒழிய வேறில்லை. தேசியம்‌ என்‌ பதற்கு அரசியலைச்‌ சம்பந்தப்‌ படுத்திய கருத்தும்‌, இந்தியாவின்‌ பழைய நாகரிகதீதிற்கும்‌ பழக்க வழக்கதீதிற்கும்‌, சனா தன தர்மத்திற்கும்‌ ஏற்ற அரசியலை ஸ்தாபிக்ஃச்செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல. இன்றுகூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப்படி-மனுதர்மப்படி ஆட்சி நடதீதப்படுவதாய்‌ இருந்தால்‌, &ன்றைய தேசியமும்‌, சட்டமறுப்பும்‌, ஒத்‌துழையாமையும்‌ எல்லாம்‌ பறந்தேடடிப்‌ போகும்‌. இந்தக்‌ காரண தீதினாலேயேதான்‌ தோழர்‌ காந்தியும்‌ மகாதீமாவாக்கப்பட்டார்‌. ஆனால்‌, இதுசமயம்‌ காந்தியின்‌ செல்வாக்கு வேறுவழியில்‌ ஓரளவு குறைந்துபோன காரணத்தினால்‌ அதைப்‌ புதுப்பிக்கவும்‌, காந்தியின்‌ பிரயத்தனமோ, தயவோ சிறிதும்‌ இல்லாமல்‌ தீண்டாமை விலக்கும்‌, ஆலயப்பிர வேசமும்‌ கிளர்ச்சி பெற்றதின்‌ காரணமாய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 877 காந்தியார்‌ இதில்‌ பங்குபறக்‌ கருதி, வலியவந்து கலந்துகொள்ளவேண்டியேற்பட்டதாலும்‌ * தேசியவாதி களான பார்ப்பனர்‌ களுக்கு இப்போது சிறிது கஷ்டம்‌ ஏற்பட்டுவிட்டது. சென்னை தேசியப்‌ பார்ப்பனரீ கன்‌ இருக்குமிடம்‌ தெர்‌யவில்லை. தோழர்கள்‌ சத்திய மூர்த்தி, ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌, கே. பாஷ்யம்‌ மற்றும்‌ எத்தனையோ சென்ணை பாரீப்பனர்களுடைய பேச்சையும்‌, மூச்சையும்‌ காணோம்‌, தோழர்‌ சதீதியமூர்‌ தீதியின்‌ விலாசமே கண்டுபிடி ப்பது கஷ்டமாய்‌ இருக்கிறது. அவருடைய முழு3சவையும்‌ தோழர்‌ கராஜா சர்‌. அண்‌ ணாமலையின்‌ குடும்பதீதாருக்குக்‌ கண்ராகீடாய்‌ (சோல்‌ ஏ ஜன்ஸி) விட்டு விட்டார்‌. அவரைப்பற்றிக்‌ கவிபாடவும்‌ அவர்கோரும்‌ பொ.துவாழ்வுக்‌ காரியங்களைக்‌ காங்கிரஸ்‌ பிரதிநிதியாய்‌ கிருந்து நிறைவேற்றிக்‌ கொடுக்க முன்னோடும்‌ பிள்ளையாய்‌ இருப்பதுமே அவருடைய சுயராஜ்யத்‌ தபசாயும்‌, அவரது பிறப்புரிமையாயும்‌ ஆகிவிட்டது. ஆனால்‌, தோழர்‌ இராஜா சர்‌. அண்ணாமலை கொடுக்கும்‌ பணங்கள்‌ எல்லாம்‌ சதீதிய மூர்த்திக்கே சேர்ந்தது. தோழர்‌ ஏ. ரெங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்‌: களை ஆதரித்து அவர்களை மேன்மைப்படுத்‌துவதன்‌ மூலமும்‌, மற்றும்‌ சில பணக்காரர்‌ களை விளம்பரப்படுதீதுவதன்‌ மூலமும்‌ பெருமையும்‌, பணமும்‌ சம்பாதிப்பதே அவருடைய காங்கிரஸ்‌ பிரசீசாரமாகவும்‌, தேசிய பிரசீசாரமாகவும்‌ ஆகிவிட்டது. தோழர்‌ கே. பாஷ்யம்‌ அடுத்த சட்டசபை தேர்தல்வரை தலை நீட்டமாட்டார்‌. குட்டி தேசிபவாதிகளான ஒரு கூட்டம்‌ அதாவது; தோழர்‌ எம்‌. எஸ்‌. சுப்பிரமணிய அய்யர்‌ போன்றவர்கள்‌ மேற்குறிப்‌ பிட்ட தேசியவாதிகளின்‌ உத்தரவுகளுக்கு இணங்க காந்தியின்‌ செல்வாக்கைக்‌ குறைக்கும்‌ வேலையில்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌. இதற்கு உதாரணம்‌ 7-9-1933-ம்‌ தேதி தமிழ்நாட்டில்‌ பிரசுரித்து கருக்கும்‌ தோழர்‌ எம்‌. எஸ்‌. சுப்பிரமணிய அய்யர்‌ பிரசங்கத்தைப்‌ படித்துப்‌ பார்த்தால்‌ தெரியவரும்‌. 855 அவசரத்தில்‌ தோழர்‌ கிராஜகோபாலாச்சாரி, டாக்டர்‌ கராஜன்‌ கூட்டத்தை நான்‌ மறந்துவிட்டதாகச்‌ சிலர்‌ சொல்லக்கூடும்‌. ஒருநாளும்‌ மறக்கவில்லை. முன்கூறிய கூட்டமும்‌ இந்தக்‌ கூட்டமும்‌ சகோதரர்க8ளே ஆவார்கள்‌, முன்‌ கூறிய கூட்டம்‌ வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால்‌, பின்கூறிய கூட்டம்‌ பிரதிவாதிக்கு வக்கீலாய்‌ இருந்து கொன்னை அடிப்பவர்களாவார் கன்‌. வரும்படியைச்‌ சமமாகப்‌ பங்கிட்டுக்‌ கொள்ளுவார்கள்‌. தோழர்கள்‌ இராஜகோபாலாச்சாரியாரும்‌, இராஜனும்‌ எந்த அளவில்‌ சீர்திருத்தக்‌ காரர்கன்‌ என்பதைக்‌ கவனித்தால்‌ யாவருக்கும்‌ சுலபத்தில்‌ உண்மை விளங்கிவிடும்‌. இராஜூகாபாலாச்சாரியும்‌ இரா ஜனும்‌ அவர்களது சாதி உயர்வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு கிருக்கிறார்‌.ளா என்பதைக்‌ கவனிதீதுப்பபாருங்கள்‌. (1) உச்சிக்குடுமி, (2) வடகலை-தென்கலை பிரிவுப்படி நாமம்‌, (3) பூணூல்‌, (8) பஞ்சகச்சம்‌, (5) சந்தியாவந்தனம்‌, (6) நன்மை தீமைகளில்‌ பார்ப்பனர்‌ களுக்குரிய சடங்குகள்‌ முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய்‌ அனுஷ்டிக்கிறார்கள்‌ என்பதும்‌, இவர்‌ கன்‌ பிரசங்கங்களில்‌ பார தம்‌, கிராமாயணம்‌, நாலாயிரப்‌ பிரபந்தம்‌ முதலிய வைணவ மத சாஸ்திர பிரச்சாரங்கள்‌ எவ்வளவு நடைபெறு 9ன்‌றனவென்பதும்‌ கவனித்துப்‌ பார்தீ தால்‌, சதீதியமூர்‌ தீதி-ரெங்கசரமி அய்யங்கார்‌ கோஷ்டிப்‌ பிரச்சார தீ.துக்ீகு இராஜகோபா லாச்சாரி-கிராஜன்‌ கோஷ்டிப்‌ பிரச்சாரம்‌ ஏதாவது கடுகனவாவது வளைத்ததா என்பது விளங்கும்‌. நம்‌ தென்னாட்டில்‌ இன்றையப்‌ பொதுவாழ்வில்‌ முன்னுக்கு வரவேண்டும்‌ என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம்‌ பெறவேண்டும்‌ என்கற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம்‌, பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்களில்‌ அங்கத்தினர்‌. முதலியவை பெற வேண்டும்‌. என்பவர்‌ களுக்கோ அவர்கள்‌ பார்ப்பனராக இருந்தாலும்‌, முஸ்லிம்களாக இருந்தாலும்‌, கிறிஸ்தவர்களாய்‌ இருந்தாலும்‌, பார்ப்பணரல்லா தவர்களாய்‌ கருந்தாலும்‌, இராஜ, சர்களாய்‌ கிருந்தாலும்‌, ஜமீன்‌ தார்‌ களாய்‌ இருந்தாலும்‌, பெரும்பணம்‌ பூமிபடைத்த 1686-48 www.thamizham.net - Free £ book 14௦ 3011 378 பெரியார்‌ ௩. வெ. ரா, சிந்தனைகள்‌ செல்வவான்களாய்‌ இருந்தாலும்‌ இந்த இரண்டு கூட்டத்தில்‌ ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையரனாலொழிய அல்லது வாய்பூசினாலொழிய வெறு மார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டி ௬க்கின்‌றது. இப்படிப்பட்ட இவர்கள்‌ சங்கதியே இப்படியானால்‌, மற்றபடி வயிற்றுச்‌ சோற்றுக்கு வேறுவழி இல்லாமல்‌ எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம்‌ என்ற சில தேசபகீதர்களைப்பற்றி நான்‌ சொல்லவேண்டுமா என்று கேட்கி2றன்‌. ஆகவே, இன்றைய நிலைமையைப்‌ பார்‌ தீதால்‌, பார்ப்பனர்களின்‌ தேசியம்‌ ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்றுதான்‌: சொல்லவேண்டும்‌. காரணம்‌ என்னவென்றால்‌, பார்ப்பனரல்லாத மக்களுக்குன்‌ தலைவர்கள்‌ என்பவர்கள்‌ முதல்‌ வாலர்கள்‌ என்கின்‌ ற வரை, சுயமரியாதை யில்‌ போதிய கவலை இல்லாமல்‌, எப்படியாவது அவரவர்கள்‌ தனித்த முறையில்‌ வாழ்ந்தால்‌ போதும்‌ என்கின்ற சுயநலத்‌ தன்மையானது, அவர்களை மறுபடியும்‌ கீழ்நிலைக்குக்‌ கொண்டுவரும்படி செய்கின்றது. இதற்கு நான்‌ என்ன செய்யமுடியும்‌ ? இந்தக்‌ காரணங்‌. கனால்தான்‌ பார்ப்பான்‌ சாதித்‌ திமிரும்‌, பார்ப்பனரல்லா தவர்‌ களில்‌ உன்ள பணத்‌ திமிரும்‌, மொத்தத்தில்‌ உள்ள படிப்புதீ தீமிபும்‌, உத்தியோக அதிகாரத்‌ திமிரும்‌ எல்லாம்‌ ஒருங்கே அழியவேண்டும்‌ என்று சுயமரியாதை இயக்கம்‌ சொல்லுகின்‌ றதுபோல்‌ தோன்றுகின்றது [சித்திர புத்திரன்‌ ? கட்டுரை-- குடி அரசு? 19-3-1933] 5. ஏன்‌ தோற்றார்‌ ? கேள்வி $ தோழர்‌ காந்தியார்‌ ஏன்‌ தோல்வியடைந்தார்‌ T பதில்‌ ! காந்தியார்‌ அரசியலில்‌ தலையிட்டபோது சமூக சீர்திருதீதத்தைப்‌ பற்றியே பிரதானமாய்ப்‌ பேசி, பாமர ஜனங்களிடம்‌ செல்வாக்ரூப்‌ பெற்றார்‌. அதாவது, தீண்டாமைஒழியாமல்‌ சுயராஜ்யம்‌ கிடைக்காதென்றும்‌ ) இந்து, முஸ்லிம்‌ ஒற்றுமை ஏற்படாமல்‌ சுயராஜ்யம்‌ கிடைக்காதென்றும்‌ ] மதுபானம்‌ ஒழியாமல்‌ சுயராஜ்யம்‌ கிடைக்‌ காது என்றும்‌ சொன்னார்‌. ஒவ்வொரு வீட்டிலும்‌ இராட்டினம்‌ சுற்றப்பட்டாலொழிய சுயராஜ்யம்‌ கிடைக்காது என்றார்‌. நாளாக, நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒருபக்கம்‌ பேசிக்கொண்டு மற்றொருபுறம்‌ வருணாசிரம தர்மதீதை ஆதரித்தார்‌. சாதிப்பிரிவுமறை -சாதிப்படி தொழில்முறை அப்படியே இருக்கவேண்டும்‌ ) ஆனால்‌, சாதிகளில்‌ மேல்‌, கீழ்‌ வித்தியாசம்‌ கூடாது என்று சொல்லிப்‌ பூசி மெழுகினார்‌. பிராமணனாய்ப்‌ பிறந்தாலொழிய பிரசமணனாக முடியாது என்று சொன்னார்‌. அப்புறம்‌ சுயராஜ்பம்‌ கிடைத்துவிட்டால்‌ தீண்டாமை தானே ஒழிந்துவிடும்‌ என்று சொல்ல ஆரம்பிதீதுவிட்டார்‌ கடைசியாக, சுயமரியாதைக்காரர்கள்‌ கிளர்ச்சியால்‌ தீண்டப்படாதவர்கன்‌ என்‌ பவர்‌. களுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்துவிட்ட பிறகு, அதை ஒழிக்க * அரிசன இயக்கம்‌ ? ஒன்றை ஆரம்பித்து, அவர்களைக்‌ கோயிலுக்குள்‌ விடவேண்டும்‌ என்று கிளர்ச்சி செய்து, கடைசியாக அக்‌ கிளர்ச்சியையும்‌ பட்டினியில்‌ ஆரம்பித்து சட்டசபையில்‌ கொண்டு போய்‌ விடப்பட்டாய்விட்டது. இதனால்‌, இனிச்‌ சட்டம்‌ ஏற்படும்வரை கோயில்‌ பிரவேசம்‌ முடியாது என்று தீர்மானமாய்‌ விட்டது இந்து-முஸ்லிம்‌ ஒற்ற மைப்‌ பிரச்சினையும்‌ 21-நான்‌ பட்டினி விரததீதையும்‌ கடந்து, அதுவும்‌ தீண்டாமை ஒழிப்பைப்‌ போலவே, சுயராஜ்யம்‌ கொடுக்‌ கப்பட்டு விட்டால்‌ இந்து- முஸ்ஸிம்‌ ஒற்றுமையும்‌ தானாக ஏற்பட்டுவிடும்‌ என்றும்‌, தோழர்‌ காந்தியாராலேயே செல்லப்பட்டு விட்டது மதுவிலக்குப்‌ பிரச்சினையும்‌ சுயராஜ்யம்‌ கிடைதீதாலொழிய மதுவை விலக்க முடியாது என்று முடிவுகட்டப்பட்டது. இராட்டின விஷயமும்‌ சில வீடுகளில்‌ மாத்திரம்‌ சிறிது நாளே சுற்றிவிட்டு முடிவில்‌ கறையானுகீகும்‌ நெருப்புக்கும்‌ ஆளாயின: www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 979 இராட்டின ததீ.துவமும்‌ மாறிவிட்டது. அதாவது, இராட்டினம்‌ வெள்ளைகீகாரனுடன்‌ சண்டை போட ஒரு ஆயுதமென்றும்‌, கதர்‌ @1 தேசிய உடையென்றும்‌, தேசிய சின்ன மென்றும்‌ சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே, காந்தியாரின்‌ சுயராஜ்ய நிபந்தனைகள்‌ ஒன்றுகூட நிறைவேற்றப்படாமல்‌ போய்‌ விட்டதால்‌, காந்தியார்‌ வாகீகுப்படியே சுயராஜ்யம்‌ கிடைக்காமல்‌ போய்விட்டது. இதனால்‌ காந்தியார்‌ தோல்வியடைய வேண்டியது நியாயமே ஆயிற்று. கேள்வி இப்பொழுது காந்தியார்‌ என்ன செய்யப்போகிறார்‌ ₹ பதில்‌ 8 ஜெயிலுக்குப்‌ போகப்‌ போகிறார்‌. கேள்வி? ஏன்‌ ஜெயிலுக்குப்‌ போகிறார்‌ 9 பதில்‌ 8 வில்லிங்டன்‌ பிரபு பேட்டி அளிக்க மறுதீத பாவதீதிற்குப்‌ பிராயச்சித்தம்‌ செய்து கொள்ளுவதற்காக ஜெயிலுக்குப்‌ போகிறார்‌] இது வெளிப்படையான அர்‌ த்தம்‌, மற்றொரு ததீதுவார்‌ தீதம்‌ என்னவென்றால்‌, அவர்‌ வெளியிலிருந்துகொண்டு என்ன வேலை செய்வது என்பது ஒரு பெரிய பரிசுப்‌ பிரசீசினையாய்விட்ட 5. இரண்டாவது, காந்தியார்‌. வெளியில்‌ இருந்தால்‌ தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும்‌. ஆகையால்‌, ஜெயிலில்‌ இருக்கும்வரை அவரை இந்தக்‌ கேள்வி கேட்க யாருக்கும்‌ சந்தர்ப்பம்‌ வாய்க்காது. அன்றி யும்‌, போர்‌ இன்னும்‌ முடியவில்லை என்கின்ற அர்தீதத்தையும்‌ கொடுக்கும்‌. ஆதலால்‌, ஜெயிலில்‌ இருப்பதே உத்தமம்‌ என்று கருதியிட்டார்‌. கேள்வி £ வில்லிங்டன்‌ பிரபு காந்தியாரை ஜெயிலில்‌ வைதீதுவிடுவாரா ? பதில்‌ ஜெயிலில்‌ வைக்காவிட்டால்‌ சர்க்கார்‌ தோற்றுப்‌ போய்விட்டார்கள்‌, என்னை ஜெயிலில்‌ வைக்க இந்த சர்க்காருக்கு சகீதியில்லை என்று முன்னொருதரம்‌, உப்பு சதீதியாக்கிரகதீதின்‌ போது காந்தியார்‌ பரிகாசம்‌ செய்த துபோல,; இப்போதும்‌ பரிகாசம்‌ செய்வார்‌, அப்போது வில்லிங்டன்‌ பிரபுக்கு ரோஷம்‌ வந்து உடனே ஜெயிலில்‌ வைத்து விடுவார்‌. (வைத்து விட்டார்‌) *யாரை விட்டது காண்‌ ] சுயமரியாதை எவரைவிட்டது காண்‌ ? என்கின்ற பல்லவிப்‌ படி இன்றைய காந்தி--வில்லிங்டன்‌ சண்டையான து, சுயராஜ்யத்தைப்‌ பொறுதீததல்ல ; பின்னை என்னவென்றால்‌, அது முழுச்‌ சுயமரியாதையைப்‌ பொறுதீததேயாகும்‌. எப்படி யெனில்‌, தோற்றுப்‌ போனாலும்‌ பரவாயில்லை, ஊரார்‌ சிரிப்பார்களே--என்பதுதான்‌ கவலையென்று ஒருவர்‌ சொன்னது போல்‌--ரோஷம்‌ தான்‌ பாதிக்கின்றது. கேள்வி 1 அதென்ன அப்படிச்‌ சொல்லுகிறீர்‌ ) சுயராஜ்யம்‌ கிடைக்கவில்லையென்ற கவலை மக்களுக்கு இருக்காதா 7 பதில்‌ ₹ சுயராஜ்யம்‌ என்றால்‌ என்னவென்று எனக்கும்‌ தெரியாது ) உமக்கும்‌ தெரியாது ) காந்தியாரும்‌ இதுவரை விவரிதீததில்லை. ஒத்‌ துழையாமையின்‌ போது ஒருவர்‌ காந்தியாரை * உம்முடைய சுயராஜ்‌ பதீதுக்கு அர்‌ தீதமென்ன1 என்று கேட்டார்‌. அதற்குப்‌ பதில்‌, காந்தியார்‌, *அது இப்போது சொல்லமுடியாது? என்று சொல்லிவிட்டார்‌, கடைசியாகக்‌ காங்கிரசில்‌ முடிவுசெய்யப்பட்ட, ¢ பூர்ண சுயேச்சை, காங்கிரசின்‌ இலட்சியம்‌ ? என்பதுதான்‌ சற்று விளக்கமாக ஜனங்களுந்குதீ தெரிந்தது. அதென்னவென்றால்‌, ஆங்கிலேயர்‌ இந்தியாவை விட்டுப்‌ போய்விட வேண்டியதாகும்‌. கேன்வி $ அப்படியானால்‌ அது எப்பொழுது முடியக்கூடிய காரியம்‌ 9 பதில்‌ 8 அது, காந்தியாரின்‌ மற்றொரு பட்டினி விரததீதுக்குப்‌ ' பிறகுதான்‌. சொல்லமுடியும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 380 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ கேள்வி 1 அதுவரை நாம்‌ என்ன செய்வது ₹ பதில்‌ 8 அகிம்சை, ஆதீமசகீதி, சதீதியம்‌, சத்தியாக்கிரகம்‌ என்‌்8ின்ற கடவுள்‌ தன்மைகளில்‌ நம்பிக்கை இல்லாமல்‌--கையில்‌ வலுதீதவன்‌ காரியம்‌ என்பதில்‌ நம்பிக்கை வைதீது-சாதி, மதம்‌, தேசம்‌ என்கின்‌ ற வித்தியாசமில்லாமல்‌, உலகிலுள்ள ஏழை மக்கன்‌ எல்லோரும்‌ ஒன்றுகூடும்படியான மார்க்கத்தைச்‌ செய்து, ஏமாதீதுகின்றவர்களை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருக்கவேண்டும்‌. காங்கிரஸ்காரன்‌ கேல்வி 1 கடவுள்‌ இல்லை என்று சொல்லுகின்றீர்களே, அப்படி யானால்‌ ஒரு மனிதன்‌ ஏன்‌ பணக்ீகாரனாய்‌ இருக்கின்‌ றான்‌ 1 ஒரு மனிதன்‌ ஏன்‌ ஏழையாய்‌ இருக்கின்றான்‌ 1 சயமரியாதைகீகாரன்‌ பதில்‌ 1 தனிஉடைமைக்‌ கொள்கையை ஒழிதீதுப்‌ பொது உடைமைக்‌ கொள்கையை ஏற்படுதீதாததால்‌ ஒருவன்‌ பணக்காரனாகவும்‌, ஒருவன்‌ ஏழை யாகவும்‌ இருக்கமுடிகின்றத-ஃ [ குடி அரசு '—6-8-1533) 6. இதுதானா தேசியம்‌? மத விஷயங்சளிலுன்ன குற்றங்களும்‌, கொடுமைகளும்‌, ஒழுகீககீகுறைவுகளும்‌ தேசிய விஷயத்தில்‌ இல்லையென்று யாராலும்‌ சொல்லமுடியாது. பொதுவாகவே, தேசியம்‌ என்னு: வார்த்தையே அர்த்தமற்றது என்றும்‌, மோசக்‌ கருதீகக்‌ கொண்டது என்றும்‌, அதிஃ பணக்காரதீதன்மை பிரதிபலிப்பதாடு பணக்காரத்‌ தன்மையை ஆதரிப்பதற்‌ கன்று கற்‌ிக்கப்பட்டதென்றும்‌ பலதடவை கூறிவந்திருக்‌ கிறோம்‌. நாம்‌ மாதீதிரமலலாமல்‌ பல மேல்நாட்டு அறிஞரகளும்‌ தேசியத்தின்‌ தன்மையைப்‌ பற்றிக்‌ குறிப்பிட்டிருக்கிறார்கள்‌. ஜான்சன்‌ என்கின்ற ஒரு மேதாவி ¢ தேசியம்‌ (தேசாபி மானம்‌) என்ப து வடிகட்டின அயோக்கியத்தனம்‌ ? என்று--அதாவது * பிழைப்புக்கு வழி யில்லாதவர்‌ களின்‌, கடைசியான கிழி பிழைப்புக்கு மார்கீகமானது ! என்று கூறி இருக்கிறார்‌. இந்க அபிப்பிராயம்‌ முதன்முதல்‌ தேசியம்‌, தேசாபிமானம்‌ என்‌9ன்ற வார்தீதைகள்‌ எங்கு உண்டானதோ; அங்கு ஏற்பட்ட அிப்பிராயமே தவிர, இந்தியாவில்‌ * தேசிய விஃொதிகள்‌ !, *தோதி துரோகிகள்‌ 1, சர்க்கார்‌ குலரம்கள்‌ ! என்று ¢ தேசாபிமானி ? களால்‌ கருதப்படுகின்றவர்களால்‌ சொல்லப்பட்டதல்ல. இன்று இந்தியத்‌ தேசியவாதிகள்‌, தேராபிமானிகள்‌, தேசியத்‌ துக்கும்‌, தேசாபி மானதீதுக்கும்‌, பத்‌ $ிரிகை நடதீதுஃ பத்திராதிபர்‌ ண்‌, தேசாபிமான தீதில்‌ வயிறு வளர்க்கும்‌ பிறவி-வாழ்க்கை தேசபக்தர்‌ கன்‌ என்பவர்களைப்‌ பற்றிச்‌ சற்று கவனிப்‌ பாம்‌, இன்று. இந்தியாவில்‌ இந்திய சட்டசபைக்குத்‌ தேர்தல்கள்‌ நடக்கின்றன. இது ஒரு அரசியல்‌ விஷயம்‌. இந்திய சட்டசபை அரசியல்‌ மூலம்‌, சாதீய சம்பந்தமான, மனித சமூக வாழ்வு சீர்‌ திருதீக சம்பந்தமான-அ தாவது, சாதி, மத, பழக்க வழக்க சம்பந்தமாக ஒரு காரியமும்‌ செய்யமுடியாது. முடியும்‌ என்றாலும்‌ தேசியவாதிகள்‌, தேசாபிமானிகள்‌ என்று தங்களைசி சொல்லிக்கொள்ளுகிறவர்‌ கள்‌ இதுவிஷயங்களை சட்டசபையில்‌ பேசவோ, சட்டம்செய்யவேோ ஒப்புக்‌ கொள்ளுவதில்லை, ஒப்புக்கொள்ளுவதானாலும்‌, தேசமெல்லாம்‌ ஒரே அபிப்பிராய மாய்‌ அந்தந்த மத; சாதிக்கரார்‌ கன்‌ எல்‌3லாரும்‌ ஒப்புக்‌ கொள்ளத்‌ தக்கதாய்‌ இருக்க வேண்டும்‌ என்கின்றதான ஆகாத நிபந்தனைகளையெல்லாம்‌ சொல்லுகின்றவர்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 981 இந்திய தேசாபிமானம்‌ என்பதே--இன்று, இந்தத்‌ தேச பணகீகாரர்களுடைய சவுகரியங்களைக்‌ குறிப்பாய்க்‌ கொண்டதும்‌, பணக்காரர்‌ கள்‌ பண வருவாய்‌ முறையைச்‌ சிறிதும்‌ மாற்றமுடியாததும்‌, பணக்காரர்களுக்கு பணம்‌ பெரு8க்கொண்டு, வளர்ந்து கொண்டு போவதைதீ தடுக்க முடியாததும்‌, தேசசெல்வம்‌ எல்லாம்‌ ஒருவன்‌ கைக்கே போவதானாலும்‌ ஆட்‌ேபிக்க முடியாததுமான கொள்கைதான்‌ (தேசாபிமானதீதி4) இருந்து வருகிற$த தவிர-தேசம்‌, தேச மக்களுக்குப்‌ பொது தேசத்தின்‌ செல்வம்‌, விளைபொருள்‌, போக்‌ ஒவரதீ து, வர்த்தகம்‌, தொழிற்சாலை ஆகயவைகளின்‌ பலன்கள்‌: இந்தத்‌ தேசதீது எல்லா மக்களுக்கும்‌ பொது--என்று சொல்லக்கூடிய காரியங்கள்‌ தேசாபி மான தீதில்‌ இல்லவும்‌ இல்லை) அதை அதில்‌ சேர்த்துக்கொள்ள மகாதீமாக்‌ கள்‌ என்பவரீ கன்‌ முதல்‌ எந்த 3தச பகீதர்களும்‌ சம்மதிப்பதும்‌ இல்லை. இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள நபர்கள்‌ தாங்கள்‌ சேர்ந்துள்ள ஸ்தாபன தீதையும்‌, தாங்கள்‌ சொல்லும்‌ கொள்கைகளையும்‌ தேசாபிமானம்‌ என்று சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே--தங்களைதீ தேசாபிமானிகள்‌ என்றம்‌, தங்களோடு சேராதவர்கள்‌ எல்லாம்‌ தேசாபிமானிகள்‌ அல்லர்‌ என்றும்‌, தேசதீ துரோகிகள்‌ என்றும்‌, தங்கள்‌ ஸ்தாபனம்தான்‌ குதிரைக்குச்‌ சமானமானது என்றம்‌ மற்றவைகள்‌ கமுதைக்குச்‌ சமானமானது என்றும்‌ சொல்லு றார்கள்‌. இதனாலேயே தேசாபிமானம்‌ என்பது வடிகட்டிய அயோக்கியத்தனம்‌ என்றும்‌ அதில்‌ வாழ்‌ன்றவர்கள்‌ உலகிலுள்ள பிழைப்புக்களில்‌ எல்லாம்‌ மிக இழிவான பிழைப்பில்‌ பிழைக்கின்‌றவர்களா வார்கள்‌ எண்றும்‌ சொன்ன சொல்லைப்‌ பொன்னே போல்‌ போற்றி, பொன்னெழுத்தில்‌ எழுதி, சொன்னவரைப்‌ பொன்னேபோல்‌ வாழ்தீத வேண்டாமா என்று கேட்கின்றோம்‌. இன்று சிறப்பா இந்த நாட்டில்‌ தன்னை ஒருவன்‌ தேோரபிமானி என்று சொல்லிக்‌ கொண்டாலோ, அல்லது அந்த ஸ்தாபனதீதில்‌ சேர்ந்துகொண்டாலோ அலது வேறு வழியில்லாமல்‌ அதன்‌ பயனால்‌ வாழ்வை நடத்‌ க ஆரம்பித்‌ துவிட்டாலோ, அவன்‌ எவ்வளவு அ ச்யாக்கியனாய்‌, இழிபிறப்பாய்‌ ஒழுக்கங்கெட்டவனாய்‌ இருந்தாலும்‌ அவர்களுக்கெல்லாம்‌ மேடை ஏறவும்‌, வாயில்‌ வந்ததைப்‌ பேசவும்‌, மனத்தில்‌ நினைத்ததை எழுதவும்‌, பொய்‌, பிதீ தலாட்டம்‌, போக ரித்தனங்கள்‌ செய்யவும்‌ யோக்கியதைகள்‌ ஏற்பட்டு விடுவது என்றால்‌... இப்படிப்பட்ட தேசாிமான தீதையும்‌, தேசியத்தையும்‌, தேசபக்தியையும்‌ வெட்டிப்‌ புதைக்க வேண்டாமா என்று கேட்கின்‌ றோம்‌. அதற்காக உயிர்‌ போகுமளவும்‌ பாடுபட்டு-- அதற்காக உயிர்விட நேரிடுவதைப்‌ பெரியதொரு; கிடைதீ்ததற்கரியதொரு காரியம்‌ என்று கருத வேண்டாமா என்று கேட்‌ கின்றோம்‌. தோழர்‌ இராசகோபால்‌ சாரியார்‌ நமது பாராட்டு தலுக்குரியர்‌ என்றே கருதுகிறோம்‌. (நமது பாராட்டுதலை அவர்‌ இலட்சியம்‌ செய்யாதிரு நீ தாலும்‌ இருக்கலாம்‌.) அவரை உண்மைதி தியாகிகளில்‌ ஒருவராகவே கொள்ளலாம்‌. அவரது நிலைமையைப்‌ பார்த்தும்‌, அவர்‌ தேசாபிமான தீதால்‌ பிழைக்‌ கவேண்டிய அவசியமில்லாதவர்‌ என்‌ 3ற கூறுவோம்‌. அதோடு கூடவே, ஒவ்வொருவருக்கும்‌ அவரவர்‌ கருதும்‌ வழியில்‌ தொண்டாற்ற, தியாகம்‌ செய்ய, உயிர்விட அவரவருக்கு உரிமை உண்டு என்பதையும்‌ நாம்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறோம்‌. என்றாலும்‌, ₹ காங்கிரஸ்‌ ஒன்றுதான்‌ தேசாபிமான ஸ்‌ தாபனம்‌. காங்கிரஸ்காரர்கள்‌ தாம்‌ கேசாபிமானிகள்‌! என்று சொல்லுவதும்‌) ¢ எவ்வளவுதான்‌ ஒரு மனிதன்‌ தனிப்பட்ட முறையில சொந்த வாழ்வில்‌, எவ்வளவு அயோக்கியனாய்‌, ஈனனாய்‌ இருந்தாலும்‌ அவண்‌ காங்கிரசில சேர்ந்துவிட்டால்‌ அவன்‌ யோகீகியனாய்‌ விடுவான்‌? என்றும்‌] அவனை யோக்கயனாகக்‌ி கருத3வண்டும்‌ என்றும்‌ சொல்ல மேன்னத்துவிபொராளால்‌, பிறகு இவரைப்பற்றி என்ன சொல்வது என்பது நமக்குப்‌ புரியவில்லை, - : www.thamizham.net - Free E book No 3011 882 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ ஒரு சிட்டிகைச்‌ சாம்பலை எடுத்து நெற்றியில்‌ வைத்துக்கொண்டால்‌, பெற்ற தாயாரைப்‌ புணர்ந்த பாவம்‌ நாசமாகி, சிவனுடைய பகீகதீதில்‌ உட்கார்ந்து கொள்ளலாம்‌ என்றும்‌ * ஒரு தடவை இராமா என்றால்‌ பல ஜன்ம பாபங்கள்‌ தீர்ந்து வைகுண்டம்‌ சேரலாம்‌ ! என்றும்‌ சொல்லும்‌ வாக்‌ யங்களுக்கும்‌- இதற்கும்‌ என்ன வித்தியாசம்‌ என்று கேட்கின்‌ றோம்‌. இதனால்தான்‌, இத்‌ தேசத்திலுள்ள அயாக்கியர்கள்‌, இழிதொழிலாளிகள்‌ ஆகிய எல்லோரும்‌ தாங்கள்‌ யோக்கியர்களாகக்‌ கருதப்படலாம்‌ என்று காங்கிரசில்‌ வந்து சேருகிறார்கள்‌ போலும்‌ ! தோழர்‌ இராசகோபாலாசீசாரியார்‌ அவர்கன்‌ தொண்டும்‌, நமககொண்டும்‌ பார்ப்பனர்‌ நன்மை-பார்ப்பனரல்லாதார்‌ நன்மை என்கின்ற ததீதுவங்களின்‌ போட்டித்‌ தொண்டு என்று மாத்திரம்‌ நாம்‌ கண்ணியமாய்‌ எண்ணி இருந்த எண்ணம்‌, இப்போது அயோக்கியர்‌-யோக்கியர்‌ என்கின்ற விஷயத்திலும்‌ போட்டித்‌ தொண்டு! என்று சொல்ல வேண்டியதாகின்றது என்றால்‌ இதற்கு நாம்‌ விசனப்பட வேண்டியதுதான்‌. உலகம்‌ எவ்வளவுதான்‌ தந்திரங்களுக்கு அடிமைப்பட்டுவிட்டதென்றாலும்‌, இன்றைய நிலையில்‌ நாணயத்திற்கும்‌, ஒழுக்கத்திற்கும்‌--அ தாவது, நாணயம்‌, ஒழுக்கம்‌ என்கின்ற வார்தீதைகளுக்கு மதிப்பு இருக்கின்றது என்றே கருதுகின்றோம்‌. ஆதலால்‌, நாணயம்‌ இல்லாதவனும்‌ ஒழுக்கம்‌ இல்லாதவனும்‌ காங்‌ரசிஃ-சேர் ந்தால்‌, ஒழுக்கமும்‌ நாணயமும்‌ ஏற்பட்டுவிடும்‌ என்கின்ற வார்த்தையின்‌ பயனாய்‌ (அறிவுள்ள சமூகத்தில்‌) பிரதிகூலம்தான்‌ ஏற்படு2ம தவிர, அனுகூல ஏற்படாதென்றே சொல்லு 9ன்‌றோம்‌. அன்றியும்‌ மனிதனின்‌ முன்‌ பின்‌ நிலை, திபாகம்‌, ஒழுகீகம்‌, நாணயம்‌ முதலியவை ஒன்றும்‌ கவனிக்கப்படாமல்‌ வெறும்‌ தேசரபிமான தீதையும்‌ அந்தத்‌ தேசாபிமான தீ துக்கும்‌ தாங்கள்‌ கொல்லுவதையே அர்த்தமாக வைத்துக்கொண்டு * காங்கிரஸ்‌--காந்தி ஆதலால்‌ ஓட்டுச்‌ செய்யுங்கள்‌ ? என்று சொல்லுவதென்றால்‌, அதன்‌ தைரியத்தைப்‌ பார்க்கும்போது தங்களைதீ தவிர மற்றவர்கள்‌ எல்லாம்‌ மூழு மூடர்கள்‌, கபோதிகள்‌, களிமண்‌ உருண்டைத்‌ தலைகள்‌ என்று கருதி இருப்பதாகத்தான்‌ நினைக்கவேண்டி இருக்கிறது. இன்றைய தினம்‌ தோழர்‌ இராசகோபாலாசீசாரியார்‌ அவர்களை நாம்‌ ஒரு கேள்வி கேட்கின்றோம்‌. அதாவது, தோழர்‌ சத்தியமூர்த்தி அய்பர்‌ அவர்களுக்கும்‌ இராமசாமி முதலியாருக்கும்‌ எந்த விஷயத்தில்‌, என்ன வித்தியாசம்‌ தோழர்‌ அவினாசிலிங்கம்‌ செட்டியார்‌ என்பவருக்கும்‌ டாக்டர்‌ வர தராஜுலுவுக்கும்‌ எந்த விததீதில்‌, என்ன வித்தி யாசம்‌1 தோழர்‌ குமாரசாமி ராஜா என்பவருக்கும்‌ விருதுநகர்‌ வி. வி. இராமசாமி அவர்‌ களுக்கும்‌ எந்த விஷயத்தில, என்ன வித்தியாசம்‌ 1 தோழர்‌ சாமிவெங்கிடாசலம்‌ செட்டியார்‌ அவர்களுக்கும்‌ சர்‌. ஆர்‌. கே. சண்முகம்‌ அவர்சளுக்கும்‌ எந்த விதத்தில்‌, என்ன வித்தியாசம்‌ ? தோழர்‌ முதீதுரங்க முதலியார்‌ அவர்களுக்கும்‌ தோழர்‌ நடராஜ முதலியார்‌: அவர்‌ களுக்கும்‌ எந்த விதத்தில்‌, என்ன வித்தியாசம்‌ சொல்லக்கூடும்‌ என்று கேட்‌ கின்றோம்‌, 5 ஸ்தானங்களுக்கு காங்கிரசின்‌ பேரால்‌ 5 பேரை நிறுத்திப்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு, காங்கிரசின்‌ பேரால்‌ என்று போடப்பட்ட ஆட்களைப்பற்றியோ, அவர்களின்‌ யோக்கி பதைகளைப்பற்றி யா ஒரு வார்‌ தீதைகூட எடுத்துப்‌ பேச யோக்கியதை இல்லாத நிலையில்‌ இருந்துசொண்டு, * காங்கிரசு, காந்தி, காங்கிரசில்‌ சேராதவன்‌ தேசத்‌ துரோகி; ஆதலால்‌ ஓட்டுச்‌ செய்டங்கள்‌ ! என்றும்‌, ¢ காங்கிரசுக்கும்‌, காந்திக்கும்‌ போர்‌ நடக்கின்றது. ஆதலால்‌ ஓட்டுச்‌ செய்யுங்கள்‌? என்றும்‌ சொல்லுகின்‌றதினசலேயே, இவர்கவ்‌ எப்படி ஜெயித்து விடுவார்கள்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரசின்‌ பேரால்‌ நிறுத்தப்பட்ட கனவான்கள்‌ என்பவர்கள்‌ சாதி மதங்களைக்‌ காப்பாற்றும்‌ வருணாசிரமவரதிகளா, அல்லவா; என்று கேட்கின்றோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இியச்கங்கள்‌ 883 ஒருவர்‌, இருவர்‌ ஒரு சமயம்‌ அரை வருணாசிரமவாதிகளாய்‌ இருக்கலாம்‌ ] அல்லது வெளியில்‌ சொல்லப்படுபவர்களாய்‌ இருக்கலாம்‌. வேறு விதத்தில்‌ மற்றவர்களைவிட காங்கிரஸ்காரர்கள்‌ எப்படி உயர்‌ நீதவர்கன்‌ என்று கேட்கின்‌ றோம்‌. தமிழ்‌ நாட்டுக்‌ காங்கிரஸ்‌ பார்ப்பண ஆதிக்கம்‌ என்பதைதி தோழர்‌ இராசகோபாச்‌ சாரியார்‌ அவர்களும்‌, சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகளும்‌ ஒப்புக்கொண்டிருக்‌ கிறார்கள்‌. ஆனால்‌, ஏன்‌ பாரீப்பனரல்லாதாரில்‌ தகுந்த ஆட்கள்‌ வரக்கூடாது என்று கேட்கின்றார்‌ கள்‌. அது வேறு விஷயம்‌, கந்தப்‌ பார்ப்பனர்களின்‌ கருதீகட தமிழ்‌ நாட்டில்‌ எந்தப்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ தலை எடுக்கக்‌ கூடாது என்பதைத்‌ தவிர வேறு இல்லை என்பது காந்தியார்‌, ஜவஹர்லால்‌: வரையில்‌ எட்டிய உண்மையாகும்‌. இந்தத்‌ தேர்தலில்‌ இவர்‌ களுடைய நோகீகம்‌ எல்லாம்‌ பார்ப்பனரல்லாத சுயபுத்தி உள்ளவர்கள்‌ இந்திய சட்டசபைக்குப்‌ போகக்கூடாது என்பதைதீ தவிர சுருக்கமாகச்‌ சொல்லவேண்டுமானால்‌--தோழர்கள்‌ ஆர்‌. கே. சண்முகம்‌, பி. வரதராஜுலு, ஏ. கிராம சாமி முதலியார்‌ போன்றவர்‌ கள்‌ கண்டிப்பாகப்‌ போகக்கூடாது என்பதைத்‌ தவிர வேறு இல்லை என்று உறுதியாகச்‌ சொல்லுவோம்‌. இம்‌ மூவரும்‌ சென்றால்‌, தமிழ்‌ நாட்டில்‌ பார்ப்பனர்களைவிட ஒவ்வொருவிததீதில்‌ திறமைசாலிகள்‌ பார்ப்பனரல்லா தாரிலும்‌ இருக்கிறார்கள்‌ என்பது உலகத்துக்கு வீளங்கி விடும்‌. இதனால்‌ தாங்கள்‌ (பார்ப்பனர்கள்‌) இது கால வரையில்‌ பார்ப்பனரல்லாதாரைத்‌ தமிழ்‌ நாட்டைவிட்டு வெளி மாகாணங்களுக்குத்‌ தெரியாதபடி பத்திரிக்கை மூலமுமீ, விஷமப்‌ பிரச்சாரம்‌ மூலமும்‌ அடக்கி வைத்திருந்ததின்‌ பயன்‌ வீணாகப்‌ பேரவதுடன்‌-- தங்கள்‌ யோக்கியதைகளும்‌ வெளியாகிவிறுமே என்கின்ற நடுக்கமே அல்லாமல்‌ வேறு ஒரு காரணமும்‌ அல்ல. எனவே, இந்தக்‌ கருதீதை முக்கியமாய்‌ வைதீதுக்கொண்டுதான்‌ ஞானமற்ற, சுய நலகீகார, வேலையில்லாக்‌ கஷ்டதீதால்‌ குன்பப்படுகிற, பொறாமைப்‌ பேய்க்கு அடிமைப்‌ பட்ட, பூதக்‌ கண்ணாடியை வைத்துக்‌ கண்டுபிடிக்கதீதக்க யோக்கியதையுள்ள பார்ப்பன. ரல்லாதார்களைச்‌ சுவாதீனம்‌ செய்துகொண்டு, ¢ காந்தி, காங்கிரஸ்‌, தேசாபிமானம்‌? என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட சூழ்சீசியையும்‌, பிதீ தலாட்டங்களையும்‌ ஆரம்பித்திருக்‌ கிறார்கள்‌ என்பதைப்‌ பார்ப்பனரல்லாத சுயமரியாதையுள்ள மக்கன்‌ உணர வேண்டும்‌ என்று ஆசைப்படுகின்‌ றோம்‌. (பகுத்தறிவு? கட்டுரை--9-9-1934] 7. தேசாபிமானம்‌ நான்‌ ஒரு தேசாபிமானியல்லன்‌, அது மாத்திரமல்ல] தேசாபிமான தீதைப்‌ புரட்டு என்றும்‌, அது தனிப்பட்டவர்‌ களின்‌ வயிற்றுச்‌ சோற்று வியாபாரம்‌ என்றும்‌ சொல்லியும்‌, எழுதியும்‌ வரும்‌ * தேசதீ அரா! யரவேன்‌. ஒரு காலத்தில்‌ 3தசாபிமான தீதுக்காகசி சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாய்‌ இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான்‌ அதன்‌ அனுபவத்தைச்‌ சொல்லுறே ன ஒழிய, வெளியில்‌ இரந்து வேடிக்கை மாதீதீரம்‌ பார்‌ தீ.துவிட்டு நான்‌ &ப்படிச்‌ சொல்ல வரவில்லை. இதனால்‌ பாமர மக்கள்‌ தூஷணைக்கும்‌ பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன்‌. என்றாலும்‌ எனது உறுதியான எண்ணத்தை நான்‌ மாற்றிக்கொள்ள முடியவில்லை. www.thamizham.net - Free £ book 14௦ 3011 884 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ 6 நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும்‌, தோட்டிக்ருப்‌ புல்‌ சுமக்கும்‌ வேலை போகாது? என்பதுதான்‌ தேசாபிமானிகளின்‌-மகாதீமாக்களின்‌ சுயராஜ்ய தர்மமாகும்‌. இந்த சுயராஜ்யம்‌ வருவதைவிட இப்போது இருக்கும்‌ பரராஜ்யமே மேலானது என்பது எனது கருதீதுஃ இன்றைய பரராஜ்யதீதில்‌, தோட்டி புல்‌ சுமக்கும்‌ வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும்‌ செய்யக்கூடும்‌. ஆனால்‌, அவனவன்‌ சாதித்‌ தொழிலையும்‌ பரம்பரைப்‌ பெருமையையும்‌ பழகீக வழக்கங்களையும்‌ காப்பாற்றும்‌ காங்கிரஸ்‌ சுயராஜ்யத்தில்‌, தோட்டி புல்‌ சுமப்பதைவிட வேறு தொழில்‌ ஏற்பட முடியுமா என்று யோசித்துப்பாருங்கள்‌. இந்தக்‌ காரண தீதினால்‌ தான்‌ நான்‌ தேசத்‌ துரோகியாக இருக்கிறேன்‌ $ சுயராஜ்யத்துக்கும்‌ விரோதியாக இருக்‌ கிறேன்‌. ஆனால்‌, பார்ப்பனர்‌ சாதியையும்‌ பறசாதியையும்‌ அழித்து, எல்லோரும்‌ சரிசம மான மனிதர்கள்‌ என்று ஆக்கும்‌ தேசாபிமான தீதிற்கும்‌ சுயராஜ்யதீதுக்கும்‌ நான்‌ விரோதி யல்லன்‌ ; துரோகியுமல்லன்‌ என்பதை ஞாபகத்தில்‌ வையுங்கள்‌. நான்‌ இந்திய சுயராஜ்யம்‌, இந்திய தேசாபிமானம்‌ என்பதைப்பற்றி மாத்திரம்‌ பேசுவதாக நினை தீ.துவிடாதீர்கள்‌, உலகத்தில்‌ உள்ள எல்லா தேசங்களின்‌ தேசாபிமானங்‌ களையும்‌ சுயராஜ்யங்களையும்‌ கண்டும்‌, தெரிந்தும்தான்‌ பேசுகிறேனே ஒழிய கிணற்ற தீ தவளையாய்‌ இருந்தோ வயிற்றுச்‌ சோற்றுச்‌ சுயநல தேசபக்தனாக இருந்தே நான்‌ பேச வரவில்லை. எந்தத்‌ தேசதீதிலும்‌-எப்படிப்பட்ட சுயராஜ்யதீதிலும்‌-குடி அரசு நாட்டிலும்‌ ஏழை-பணக்காரன்‌, முதலாவி-தொழிலாளி வித்தியாசம்‌ இருந்துதான்‌ வருகின்றது நம்‌ நாட்டில்‌ இவைகள்‌ மாத்திரம்‌ அல்லாமல்‌ பார்ப்பான்‌-பறையன்‌, மேல்சாதி-கீழ்சாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும்‌ அதிகப்படியாக இருந்து வருகின்றன. இவைகளை ஒழிக்கவோ அழிக்கவோ இன்றைய தேசாபிமான தீதிலும்‌ சுயராஜ்யதீதிலும்‌ கடுகளவாவது யோக்கியமான திட்டங்கள்‌ இருக்கின்றனவா என்று உங்களைக்‌ கேட்கின்றேன்‌. உலகதீதிலயே மேம்பட்ட செல்வச்‌ செருகீகுடைய நாடான அமெரிக்க நாட்டிலேயே கோடி பேர்களின்‌ குடும்பங்கள்‌ (1914-ல்‌) வேலை இல்லாமல்‌ திண்டாடுகின்றன வென்றால்‌, உலகத்தில்‌ சூரிய அஸ்தமனம்‌ இல்லாத பிரிட்டிஷ்‌ சுயராஜ்ய இங்கிலாந்தில்‌ 20 இலட்சம்‌ பேர்களின்‌ குடும்பங்கள்‌ வேலை இல்லாமல்‌ பட்டினிகிடக்கின்றன வென்றால்‌, சுயராஜ்ய ஜனநாயக ஆட்சிக்கு வேறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌? . சுயராஜ்யம்‌ உள்ள சுதேச சமஸ்தானங்களை எடுதீ.துக்கொள்ளுங்கள்‌. ¢ பிரிட்டிஷ்‌ இத்தியா 3 சின்ன கருப்பன்‌ ஆனால்‌, ¢ சுதேச சமஸ்தான இந்தியா ? பெரிய கருப்பனாய்‌ இருக்கிறது. இப்படிப்பட்ட தேசாபிமானம்‌, ¢ சுயராஜ்யாபிமானம்‌ ! என்கின்ற சூழ்ச்சிகளையும்‌, தந்திரங்களையும்‌ விட்டுவிட்டு * மனித ஜீவ அபிமானம்‌? என்கின்ற தலைப்பின்கீழும்‌ கொள்கையின்‌ கீழும்‌ எல்லோரும்‌ ஒன்று சேருன்ற வரையில்‌ நான்‌ ¢ தேசத்‌ ரோகி யாக இருந்து, தேசாபிமானப்‌ புரட்டையும்‌, சுயராஜ்ஃப்‌ புரட்டையும்‌ வெளியாக்காமல்‌ இருக்க முடியாது: [கோவை டவுன்‌ ஹாலில்‌, 12-10-15346 சொற்பொழிவு. பகுத்தறிவு * 21-10-1934] தேசாபிமானம்‌, தேசபக்தி என்பவைகள்‌ சுயநல சூழ்சீசி என்றும்‌, தனிப்பட்ட வரப்பு மகீகளால்‌ தங்கள்‌ வகுப்பு நலதீதுக்காகப்‌ பாமர மக்களுச்குன்‌ புகுத்தப்படும்‌ ஒரு (வெறி) போதையென்றும்‌ பல தடவைகள்‌ நாம்‌ சொல்லி வந்திருக்கிறோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 383 மற்றும்‌, * தேசாபிமானம்‌ என்பது காலிகளுக்கு ஏற்பட்ட கடைசி ஜீவன மார்ஃகம்‌ £ என்று மேனாட்டு அறிஞர்‌ ஒருவர்‌ கூறியது ஆப்தமொழி என்றும்‌ பல தடவைகள்‌ எடுத்துக்‌ காட்டி இருக்கிறோம்‌. இவற்றை எந்த ஒரு தேசபகீதனும்‌, தேசாபிமானியும்‌ இதுவரை மறுக்கவேயில்லை என்பதோடு, இவ்வாப்த வாக்கியங்கள்‌ நிறைந்த ஆங்கிலப்‌ புத்தகங்கள்‌ பாடப்‌ புத்தகங்‌ களாகவும்‌ வைக்கப்பட்டு வந்திருக்கின்‌ றன, இனியும்‌ யாருக்காவது இவற்றில்‌ ௪ந்தேகங்களிருக்குமானால்‌ இன்றைய அபிசீனியா- இத்தாலி யுத்தமேகங்களையும்‌ இடியையும்‌ மின்னலையும்‌ பார்த்தால்‌, கண்ணாடியில்‌ முகம்‌ தெரிவதுபோல்‌ விளங்கும்‌. மற்றும்‌, தேசாபிமான விஷயமாயும்‌, தேசங்களைக்‌ காப்பாற்றும்‌ விஷயமாயும்‌ பல தேசக்‌ காவலர்கள்‌ ஏற்படுதீதிக்கொண்டிருக்கிற ¢ சர்வதேசப்‌ பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ ? யோக்கியதையைப்‌ பார்த்தாலும்‌ தெரியும்‌. இளை தீதவனை வலுதீதவன்‌: கொடுமைப்படுதீதுவதும்‌ § ஏமாந்தவனை தீ தநீதிரசாலி ஏமாற்றுவதும்‌ இன்று ஆஸ்திகர்‌ களுடைய கடவுள்களின்‌ இரண்டு கண்களாகவும்‌$ தேச பக்தர்கள்‌, தேசாபிமானிகள்‌ என்பவர்களின்‌ ஜீவநாடியாகவும்‌ இருந்துவருகின்‌ றன. இந்த இரண்டு காரியங்களுக்காகதீதான்‌, அதாவது இம்சிதீதல்‌-ஏமாற்றுதல்‌ ஆகிய இரண்டு காரியங்களுக்‌ காகவும்‌--அவை நிரந்தரமாகவும்‌, ஒழுங்காகவும்‌, பதீத தியாகவும்‌ நடைபெறுவதற்காகவேதான்‌ உலகில்‌ கடவுள்‌, மதம்‌, மோட்சம்‌, நரகம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌; அரசு, பிரதிநிதித்துவம்‌, சட்டசபை, சட்டம்‌, போலீஸ்‌, நீதிபதி, சிறைக்கூடம்‌, சதீதியம்‌, நீதி, ஒழுக்கம்‌, ஒழுங்குமுறை, யோக்கியம்‌, பரிசுதீதம்‌, பெரியவர்‌ வாக்கு, மகாத்மாக்கள்‌ சேவை, தெய்வத்‌ தன்மை பொருந்தியவர்கள்‌ அவதாரம்‌ என்பன. போன்ற * சர்க்கரை பூசிய பாஷாணங்கள்‌ 1 இன்று உலல்‌ கற்பிக்கப்பட்டு--இருந்து செல்வாக்குப்‌ பெற்றோ, பெறாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. சைனாவோடு ஜப்பான்‌, போர்தொடுத்தபோது, ஜப்பானுக்கு அதன்‌ வியாபாரப்‌ பொருள்‌ விற்பதற்கு நாடுகள்‌ இல்லை; அதற்குப்‌ போதிய துறை முகமில்லை;$ மற்ற நாடுகளைப்போல்‌ அதற்குக்‌ குடியேற்ற நாடு இல்லை என்பது போன்ற காரணங்கள்‌ தாம்‌ வெளிப்படையாகவே சொல்லப்பட்டன. . அபிசீனியா மீது இத்தாலி போர்‌ தொடுப்பதற்கும்‌, இந்தக்‌ காரணங்கள்தாம்‌ இன்று முக்கியமாகச்‌ சொல்லப்படுகின்‌ றன. பிறகு பிறத்தியாரை ஏமாற்ற ஏதோ நொண்டிச்‌ சாக்குகள்‌ பஞ்சாயத்தில்‌ பேசப்படுகின்‌ றன. சர்வதேசப்‌ பாதுகாப்புச்‌ சங்கத்தில்‌ யுதீததீதுக்குச்‌ சம்பந்தப்பட்ட நாடுகள்போக, மற்ற நாட்டு அங்கத்தினர்களோவெனில்‌ உலகத்துக்கே, தங்களுக்கோ சரியென்று பட்டதை வெளியில்‌ சொல்லவே மயங்குகின்றார்கள்‌. N காரணம்‌ என்னவென்றால்‌, யுதீததீதில்‌ சம்பந்தப்பட்டு வலுவில்‌ தாக்கப்பட்ட நாடுகள்‌ மற்ற பிரதிநிதிகளைப்‌ பார்தீது, * உங்களுக்கு மாதீதிரம்‌ வியாபார தீதுக்குப்‌ பல தாடுகள்‌ இருக்கின்‌ றன. நீங்கள்‌ மாதீதிரம்‌ உங்கள்‌ தேசமல்லாமல்‌ வேறுபல தேசங்களைக்‌ குடியேற்ற நாடாகவும்‌ அனுபவிக்கிறிர்‌ ௪ 8ள--அதுமாதிரி, எங்களுக்கும்‌ வேண்டாமா? என்று கேட்க ஆரம்பித்தால்‌ தலை குனிய வேண்டியவர்களாய்‌ இருக்கவேண்டியிருப்பதால்‌, ¢ நான்‌ நோகாமல்‌ அடிக்கிறேன்‌) நீ ஓயாமல்‌ அழு? என்று சொல்லவேண்டியதாய்‌ விட்டது. சரீவதேச சங்கம்‌ என்பது கண்டித்து, உண்மையான எண்ணதீ தாடு இதீதாலியைப்‌ பாரீ தீது ஓர்‌ உறுமல்‌ உறுமி இருக்குமானால்‌, இன்று கித்தாலி வாலை இடுக்கிக்கொண்டு. அடங்கியிருக்கும்‌, 1686—49 www.thamizham.net - Free E book No 3011 386 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ ஐப்பான்‌-சைனா சண்டையின்‌ போதும்‌ ஜப்பான்‌ இஷ்டம்‌ ஓரளவுக்குப்‌ பூரீதீதியான பின்பே சர்வதேச சங்கம்‌ மிரட்ட ஆரம்பித்தது. அதுபோலவே, இத்தாலியின்‌ உள்‌ எண்ணம்‌ பூர்தீதியான பின்புதான்‌ சர்வதேச சங்கம்‌ மிரட்டும்போல்‌ இருக்கிறது. பொதுவாகவே, சர்வதேச சங்கத்தை நாம்‌ ஓர்‌ உண்மையான உலகப்‌ பாதுகாப்புச்‌ சங்கம்‌ என்று சொல்ல முடிவதில்லை. அதை வலுதீதவர்கள்‌, தந்திரக்காரர்கள்‌ பாதுசப்புச்‌ சங்கம்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. யோக்கியமான ஒரு சர்வதேசப்‌ பாதுகாப்புச்‌ சங்கம்‌ இருக்கவேண்டுமானால்‌, அது உலக எல்லா தேசங்களுக்கும்‌, ஒவ்வொரு பிரதிதிதியைத்‌ தேர்ந்தெடுத்து, அந்தப்‌ பிரதி நிதிகள்‌ அடங்கிய சபைக்கு உலக அரசியல்‌, இராணுவம்‌ ஆகியவை முழுவதையும்‌ ஒப்படை தீ.துவிட்டு, இன்று தனித்தனி இராஜாவாகவோ, சர்வாதிகாரியாகவோ இருப்பவர்‌ களுக்கு ஜீவனாம்சம்‌ கொடுத்து உட்காரவைத்து, அச்‌ சபைக்குத்‌ தலைவராகத்‌ தேசம்‌, சாதி, மதம்‌, கடவுள்செயல்‌ என்கின்ற குறுகிய நோக்கமற்று உலகமெல்லாம்‌ ஒருதேச மாகவும்‌, மக்களெல்லாம்‌ ஒரே (மனித) சாதியாகவும்‌ கரு.துபவராகவும்‌, உலக சொத்துக்கள்‌. எல்லா மக்களுக்கும்‌ சொந்தமானது என்கின்ற சகோதர உணர்ச்சி உள்ளவராகவும்‌ உள்ளவரைத்‌ தலைவராகப்‌ போட்டு ஆட்சி நடத்தப்படுமானால்‌ அது உண்மையான சர்வ தேசப்‌ பாதுகாப்புச்‌ சங்கமாக இருக்கலாம்‌. ்‌ 35 கோடி மக்களுள்ள இந்தியாவுக்கும்‌ 45 கோடி மகீகளுள்ள சைனாவுகீகும்‌ (கிட்டத்‌ தட்ட உலக ஜன சமூகத்தில்‌ சரிபகுதியுள்ள தேசங்களுக்கு) இன்று சர்வதேச சங்கத்தி லிருக்கும்‌ பிரதிநிதிகள்‌ யாரென்பதும்‌, அவர்கள்‌ இந்தத்‌ தேசங்களில்‌ ஏற்பட்ட நெருக்கடி களுக்கு என்ன உதவி செய்தார்கள்‌ என்பதும்‌, சர்வதேச சங்கத்தின்‌ நீதியான ஆட்சியில்‌ இவ்விரு தேசமக்களும்‌ திருப்தியாய்‌, கவலை இல்லாமல்‌, மானத்தோடு வாழ்கின்றார்களா என்பதும்‌ கவனித்துப்‌ பார்தீதால்‌-இன்றைய சர்வதேச பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ யோக்கியதை தானாகவே விளங்கும்‌. ஆகவே, சர்வ தேசாபிமானச்‌ சங்கதீதின்‌ யோக்கியதையே இப்படியிருக்கும்போ த, இனி தனித்தனி தேசாபிமான சங்கத்தின்‌ யோக்கியதையும்‌, அச்‌ சங்கத்தால்‌ ஏற்பட்ட தேசப்‌ பாதுகாப்பு யோக்கியதையும்‌ எப்படியிருக்கும்‌ என்பதைப்பற்றி நாம்‌ அதிகம்‌ வர்ணிக்கவேண்டியதில்லை என்‌3ற சொல்லுவோம்‌, இந்திய தேசாபிமானம்‌, தேசபக்தி என்பது இன்று ஒரு சாதாரண மனிதராகிய காநீதியாரிடம்‌--அதாவது, மகாத்மா என்பவரிடம்‌ மக்கள்‌ வைதீதிருக்கும்‌--வைக்கும்‌ பக்தி, அபிமானம்‌ ஆகியவற்றைப்‌ பொறுத்தே இருக்கிறது. எவனாவது காநீதியாரை முட்டாளென்று சொல்லிவிட்டாலோ, அல்லது அவர்‌ நம்மைப்போல சாதாரண மனிதர்தான்‌ என்று சொல்லிவிட்டாலோ--அதுவே இன்று எந்த மனிதனையும்‌ தேசத்‌ துரோகியென்றும்‌, தேசாபிமானமற்றவரென்றும்‌ சொல்லி விடுவதற்கும்‌, பரீட்சிப்பதற்கும்‌ போதுமான கருவியாய்‌ இருக்கிறது. இன்று இந்தியாவிலுள்ள தேசாபிமானம்‌ பணச்‌ செலவினாலும்‌, பார்ப்பனப்‌ பிரச்சாரத்தாலும்‌ ஏற்படுவதே யொழிய- மற்றபடி மக்கள்‌ சமூகத்துக்குப்‌ பொதுவாகவுள்ள ஏதாவது ஒரு குறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதல்ல. பார்ப்பான்‌ தன்னை மனித சமூகத்தில்‌ இருந்து பிரித்துக்கொண்டு தான்‌ மாத்திரமே மேல்‌ சாதிக்காரன்‌ என்றும்‌, மற்றவர்கன்‌ தனக்குத்‌ தொண்டு செய்யவே கடவுளால்‌ பிறப்பிக்கப்பட்டவர்களென்றும்‌ சொல்லுகிறவன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 387 பணச்காரர்களாய்‌, முதலாளிகளாய்‌ இருக்கிள்றவர்களோ அவர்களுக்கும்‌, அது போலவே தாங்கள்‌ மற்ற சாதாரண மக்களிடம்‌ இருந்து விலகீகப்பட்டவர்‌ களென்றுமீ, மற்ற மகீகளிடம்‌ தமக்கிஷ்டமான வேலை வாங்கிக்கொண்டு தமக்கிஷ்டமான கூலி கொடுக்கவே கடவுள்‌ தங்களைச்‌ சிருஷ்டிதீதுத்‌ தமக்குச்‌ செல்வத்தைக்‌ கொடுத்து, மற்ற மக்களைத்‌ தொழில்‌ செய்யச்‌ சிருஷ்டித்து இருக்கிறாரென்றும்‌ கருதீக்கொண்டிருக்‌ கிறவர்கள்‌. இவ்விரண்டு பேருக்கும்‌ உள்ள விதீதியாசமெல்லாம்‌ பார்ப்பான்‌ கூலி கொடுக்காமல்‌ வேலை வாங்கிக்கொள்ள உரிமையுள்ளவனென்பதும்‌ ; பணக்காரன்‌ ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்கவேண்டும்‌ என்பதும்‌ தவிர--மற்றபடி மற்ற ஜனங்களைவிட தாங்கள்‌ மேலானவர்கள்‌ என்பதிலும்‌, இந்‌ நிலை கடவுளால்‌ அளிக்கப்பட்டது என்பதிலும்‌ வித்தியாசமான அபிப்பிராயம்‌ இல்லவே இல்லை. இப்படிப்பட்ட இந்த இரண்டு கூட்டத்தாரும்‌ சேர்ந்துதான்‌, இந்தியாவின்‌: தேசாபி மானதீதுக்குக்‌ கர்தீதாகீகளாய்‌ இருக்கிறார்கள்‌. எப்படியென்றால்‌, பணக்காரன்‌ பணதீதைபி பல இலட்சக்கணக்காய்க்‌ கொடுக்‌ கிறான்‌) பார்ப்பான்‌ தந்கிரத்தைப்‌ பிரயோகிக்கிறான்‌ ) இருவரும்‌ சேர்ந்து கூலிகளைப்‌ பிடித்துத்‌ தேசாபிமானப்‌ பிரச்சாரம்‌ நடத்தி அதற்குச்‌ செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள்‌. ஆகவே, இந்த இரண்டு கூட்டதீதார்களாலும்‌ இவர்களுடைய கூலிகளாலும்‌ நடதீதப்‌ படும்‌ தேசாபிமானம்‌ பாமர மக்களுக்குப்‌ பயன்படுமா--அல்லது இந்த மூன்று கூட்டத்தையும்‌ வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும்‌ * தேசத்‌ துரோகம்‌! பாமர மக்களுக்குப்‌ பயன்படுமா என்பதை அறிஞர்கள்‌ யோசிக்க வேண்டும்‌, இன்று நம்முடைய பொதுஜனங்கள்‌ அல்லது பாமர ஜனங்கள்‌ என்பவர்களின்‌ யோக்கியதை நாம்‌ அறியாததல்ல, அவர்கள்‌ ஆண்களனில்‌ 100-க்கு 90 தற்குறிகள்‌ ; பெண்களில்‌ 100-க்கு 98 தற்‌ குறிகள்‌. அதோடு மாத்திரமல்லாமல்‌, 100-கீகு 50 பேர்களுகீகுமேல்‌ ஜீவனதீதுக்கு வேறு எவ்வித மார்க்கமும்‌ இல்லாமல்‌, * எந்தக்‌ காரியத்தையும்‌ செய்தாவது ஜீவனம்‌ நடத்த வேண்டும்‌ ! என்கின்ற கவலையும்‌ பசிப்‌ பிணியும்‌ உள்ளவர்கள்‌. என வ, இந்த நாட்டில்‌ நன்மை-தீமை $ யோக்கியன்‌-அயோக்கியன்‌ ; சுயநலக்காரன்‌-பொ.துநலக்காரன்‌ ; சூழ்ச்சிக்‌ காரன்‌-உண்மையானவன்‌ என்கின்ற தன்மைகளைக்‌ கண்டுபிடிக்கச்‌ சரியான அறிவும்‌, யோக்கிதையும்‌ பொதுமக்களுக்கு எப்படி உண்டாகும்‌ ? ஆகவே, ஒரு சில நபர்கள்‌ தாம்‌ உண்மையாகவும்‌, கவலையாகவும்‌, உழைக்கக்‌ கூடியவர்களாகவோ, உண்மையை எடுத்துச்‌ சொல்லக்‌ கூடியவர்களாகவோ கிடைக்கலாம்‌, ஆனால்‌, அவர்கள்‌ பொதுஜனங்களால்‌ மகாத்மா என்றோ, தேசாபிமானி என்றோ, தேச பக்தர்‌ என்றோ, தேசியவாதி என்றோ கருதப்படக்‌ கூடியவர்களாய்‌ இருக்கமுடியா தென்பதோடு அவர்கள்‌, * தேசத்‌ துரோகியாயும்‌, மததீ:துரோகியரயும்‌, நாஸ்திகர்களாயும்‌ 2 தாம்‌ இருக்கமுடியும்‌, அதோடு மாதீதிரமல்லாமல்‌, பொது ஜனங்களால்‌ வசவு கேட்கவும்‌, துன்புறுத்தப்‌ படவும்‌ வேண்டியவர்களாகவும்கூட இருக்கக்கூடும்‌. எப்படி இருந்தாலும்‌ முடிவில்‌ தேோதீ துரோகிகள்‌ எனப்படுபவர்களும்‌, நாஸ்திகர்கள்‌ எனப்படுபவர்களுந்தாம்‌ வெற்றிபெறுவார்களே தவிர--அவர்கள்‌ தாம்‌ வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர, மற்றபடி இந்த ஜால வித்தையான தேசபக்தி வெற்றியடையவோ, மக்களுக்குப்‌ பயண்படவோ போவதில்லை என்பது உறுதி.) (¢ குடிஅரசு ?-தலையங்கம்‌--29-9-1935) www.thamizham.net - Free £ book 14௦ 3011 388 8. பாரத தேசம்‌ இந்தியாவை * பாரத தேசம்‌? என்றும்‌ இந்திய அரசியலை இராம-ராஜ்யம்‌ என்றும்‌ காங்கிரஸ்காரர்கள்‌ (ஆரியர்‌--பார்ப்பனர்‌) சொல்லும்‌ காரணம்‌ என்ன ₹ இவற்றிலிருக்கும்‌ உண்மை என்ன? என்பவை சிந்திக்கப்படத்‌ தக்கவையாகும்‌. நிலப்‌ பரப்புக்கு எடுத்துக்‌ காட்டும்‌ ஆதாரமும்‌ காட்டவேண்டுமானால்‌, பூகோளத்திலிருந்‌ து கையாளப்படவேண்டும்‌. அதுபோலவே, பண்டைய அரசியலுக்கு எடுதீதுக்காட்டும்‌ ஆதாரமும்‌ காட்டப்பட வேண்டுமானால்‌, சரிதீதிரதீதிலிருந்து கையாளப்‌ படவேண்டும்‌. கிதை எப்படிப்பட்ட தர்க்கவரதியும்‌ அறிவாளியும்‌ ஒப்புக்கொள்ளுவர்‌. அதுபோல3வ, மக்களின்‌ சாதி வருப்புக்கு எடுதீதுக்காட்டும்‌ ஆதாரமும்‌ வேண்டுமானால்‌ உடல்கூற்று, இியற்கையமைப்பு ஆகியவைகளிலிருந்தே கையாளப்பட வேண்டும்‌. ஆனால்‌, இன்று காங்கிரசார்‌, அதாவது இந்த நாட்டு மக்களுக்கு அரசியலிலும்‌, ஆதீமார்‌ தீகத்திலும்‌ நாங்களே பிரதிநிதிகள்‌ என்று கொண்டாடும்‌, பலாதீகாரத்தைப்‌ பயன்‌ படுத்தி உரிமைகொண்டாடும்‌ காங்கிரசார்‌ தங்கள்‌ கூற்றுக்கு அதாவது, இந்தியாவை *பாரததேசம்‌? என்பதற்கும்‌, அரசியலை * சுயராஜ்யம்‌? என்பதற்கும்‌ ஏதாவது பூகோளதீதில்‌, சரித்திரத்தில்‌ ஆதாரம்‌ காட்டுவார்களா என்று கேட்கிறோம்‌, இந்தியாவை பாரதநாடு என்று கூறுவதற்குப்‌ புராணக்‌ கதைகள்தான்‌ ஆதாரமாக இருக்கின்றன. பூசோளத்தில்‌ அந்தப்‌ பெயர்‌ எங்கும்‌ காணப்படுவதில்லை. புராணங்‌ களிலும்‌ இந்தியாவை பரதகண்டமென்று, * கண்டமாகக்‌? காட்டப்படுகிறது. அதில்‌ இந்தப்‌ பெயர்‌ வாய்தீததற்குக்‌ காரணம்‌ * பரதன்‌? என்பவன்‌ ஆண்டான்‌ என்கின்ற காரணத்திற்காக இந்தப்‌ பெயர்‌ வழங்கப்படுவதாகத்‌ தெரிகிறது. அந்தப்‌ பரதன்‌ இன்றைய பரதன்கூட அல்லன்‌ என்றே சொல்லப்படுகிறது. அுஷ்யந்தனின்‌ மகனான பரதன்கூட அல்ல என்றும்‌ காட்டப்படுகிறது. மற்றும்‌, யார்‌: என்றால்‌, ஒரு சமணசமயப்‌ பெயரையுடைய * வரிஷிபன்‌ ? என்பவனுடைய மகன்‌ என்றும்‌, அவன்‌ ஒன்பதில்‌ ஒருவன்‌ என்றும்‌, இந்தியாவை நவ கண்டமாகப்‌ பிரித்து ஒன்பது பேருக்கு ஒன்பது பங்குகொடுத்ததில்‌-பரதனுக்கு ஒரு பங்கு வந்ததென்றும்‌ அதற்குத்தான்‌ * பரத கண்டம்‌? என்ற பெயர்‌ என்றும்‌ காணப்படுகிறது. இது பாகவதம்‌ என்னும்‌ புராணத்தில்‌ காணும்‌ கதையாகும்‌. இதற்குக்‌ காலம்‌ ஒன்றும்‌ குறிப்பிடவில்லை, இந்தக்‌ கதையை மெய்‌ யாக ஏற்றுக்கொண்டால்‌, இதுபோன்று அனேக கதைகள்‌ அந்தப்‌ புராணங்களில்‌ உள்ளவை களைப்‌ பொறுத்தே இருந்துவரும்‌ மற்ற சங்கதிகளுக் கு, என்ன சமாதானம்‌ சொல்ல முடியும்‌ ஆண்ட ஒரு அரசனின்‌ பேரால்‌ ஒரு நாடு அழைக்கப்படுவதால்‌ அதற்கு உண்மை, ஆதாரம்‌ ஒன்றும்‌ தேவையில்லையென்பது அறிவு வாதமாகுமா? உண்மையாக இந்த நாட்டை ஆண்ட அரசர்கள்‌, உண்மை சரிதீதிரப்படி எத்தனையோ பேர்கள்‌ இருக்கும்‌ போது--ஆளாததும்‌, அறிவுக்கும்‌, உண்மைக்கும்‌, உரிமைக்கும்‌ மாறுபாடான துமான ஒரு பெயரை மக்கள்‌ அமுலுக்குக்‌ கொண்டுவர வேண்டுமானால்‌ அது எப்படி நியாயமாகும்‌ என்று கேட்கி3றாம்‌. அதிலும்‌ இந்தப்‌ பெயர்களை, போலித்‌ தன்மைகளை வைத்துக்‌ கொண்டு அதன்மூலம்‌ உண்மையான; சரித்திர ஆதாரமான பெயரைகீகொண்டு ஒரு நாட்டை அதாவது திராவிடநாட்டை, ¢ திராவிடநாடு? என்றழைத்து, அது உரிமைபெற வேண்டுமென்று முயற்சிப்பவர்கள்‌ கூட்டத்‌ இல புகுந்‌ துகொண்டு, அக்‌ கூட்டத்தில்‌ குழப்பம்‌, காலித்தனம்‌ விளைவிக்க, பார தநாட்டுக்கு ஜே! * பாரதமாதாவுக்கு ஜே! என்று கூப்பாடுபோடுவது எந்தவிதத்தில்‌ யோக்கியமும்‌, மானமும்‌, உண்மையுமான காரியமாகும்‌ என்று கேட்கிறோம்‌. அதுபோல வ, இந்த நாட்டு அரசியலுக்கு இங்கே * இராம-ராஜ்ய? அரசியல்‌ வேண்டு மென்று சொல்லப்படுகிறது. வது காந்தியார்‌ மாத்திரமல்லாமல்‌ அனேகமாய்‌ காங்கிரஸ்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 389 காரர்கள்‌ எல்லோராலும்‌ சொல்லப்படுகிறது என்றால்‌ அதற்கு ஆதாரம்‌ ஒன்றும்‌ காட்ட வேண்டாமா என்கின்றோம்‌. இந்துதேச சரித்திரம்‌ என்பதானது கிறிஸ்து பிறப்பதற்கு 2000, 3000 வருடங்களுக்கு முன்பிருந்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில்‌ இராமன்‌ ஆண்டதாக * இராம ராஜ்யம்‌? என--ஒருகாலமும்‌ குறிப்பிடப்படவில்லை. 5000 வருடங்களு$கு முன்புள்ள ஒரு அரசியல்‌ முறை, அது உண்மையானாலும்‌--பொய்யானாலும்‌, இன்றைக்குப்‌ பயன்பட முடியுமா என்று கேட்கிறோம்‌. ஆரியர்கள்‌ வேண்டுமென்றே தங்களுக்கு அனுகூலமான, தங்கள்‌ உயர்வுக்கும்‌ இந்‌ நாட்டுப்‌ பழங்‌ குடிமக்கள்‌ இழிவுகீகும்‌ அனுகூலமான ஒரு கட்டுக்‌ கதையை நாணயப்‌ பொறுப்பு கல்லாமல்‌ இந்துதேச சரிதீதிரத்திலும்‌, பள்ளிக்கூடத்திலும்‌ நுழைத்து மக்கள்‌ மூளையில்‌ பதியவைதீதுவிட்டு, இன்று அதை மெய்யாய்‌ நடந்ததாக ஆக்கி, அதன்‌ தன்மை களுக்குக்‌ கட்டுப்படும்படியாக மக்களை இழிதிலைக்குக்‌ கொண்டுபோவதென்றால்‌-- இதை அறிவும்‌, மானமுமூள்ள மக்கள்‌ எப்படி ஒப்புக்கொள்ள முடியும்‌ ! புராணக்‌ கதைகளின்படி பண்டிகைகள்‌ கொண்டாடுவது போலவே, அரசியலும்‌ புராணக்‌ கதைகளுக்கு உள்ளாக்கப்‌ பட்டுவிடுமானால்‌ மக்களுக்கு வளர்ச்சி எங்கே? அறிவு எங்கே என்று கேட்க ஆசைப்‌ படுகிறோம்‌. நம்‌ மக்களின்‌ ¢ ஆதீமார்‌ தீதம்‌? கூட, புராணக்‌ கற்பனைகீகு அடிமைப்படுதீதப்பட்டு விட்டதே தவிர--அதுவும்‌ காங்கிரஸ்‌ காரர்களால்‌ அடிமைப்படுத்தப்பட்டு விட்டதே தவிர அதுவாவது அறிவுக்கும்‌ மானதீதிற்கும்‌ ஏற்றதாக இருக்கவிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டுகிறோம்‌, இன்று இந்தநாட்டில்‌ காந்தியாருக்கு அரசியலில்தான்‌ தலைமை இருக்கிறதே தவிர மத இயலில்‌ ஒன்‌ றுமில்லை. ஏனெனில்‌ அவர்‌ திந்துக்கள்‌, முஸ்லிம்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, சீக்கியர்கள்‌, தாழ்த்தப்பட்ட மக்கள்‌ முதலியவருக்கும்‌ தலைவர்‌ என்கிறார்‌. அந்த உரிமையிலேயே மதிக்கப்படுகிறார்‌, நடத்தப்படுகிறார்‌. அவர்‌ அரசியலில்‌ கிராமபஜனை;, கிராம பிரார்‌ தீதனை செய்வதும்‌, மற்றவர்களையும்‌ செய்யச்சொல்லுவதும்‌, அதையே அவரைப்‌ பின்பற்றும்‌ அரசியல்காரர்கள்‌ பின்பற்றுவதுமென்றால்‌--அதைச்‌ சரியென்று நம்மால்‌ எப்படி ஒப்புக்கொள்ள முடியும்‌ ? ஆகவே, காங்கிரசானது ஆரியர்‌ நலனுக்காகவே ஒரு போலியான, கற்பனையான புராணக்‌ கதைகளின்‌ சேதிகளின்‌ பேரில்‌ கட்டப்பட்டிருக்கும்‌ ஒரு மாயா ஜாலவித்தை யென்றும்‌, ஆகாயக்‌ கோட்டையென்றும்‌ சொல்லுகிறோம்‌. [¢ விடுதலை -தலையங்கம்‌--12-6-1946] 3. காந்தீயம்‌ 4. காந்தியத்தின்‌ கதி தோழர்‌ காந்தியவர்கள்‌ அரசியலில்‌ தலையிட்டுத்‌ தலைமை ஸ்தானத்தை அடைந்த தற்கு முக்கிய காரணம்‌, ஒருபுறம்‌ அவர்‌ போட்டுக்கொண்ட மத சம்பந்தமான வேஷமும்‌, கடவுள்‌ சம்பந்தமான பேச்சும்‌, மற்றும்‌ சதீதியம்‌, அகிம்சை, சத்தியாக்ரகம்‌, ஆத்ம சுத்தம்‌, ஆதீமசக்தி, பரித்தியா ம்‌, தவம்‌ முதலிய வார்த்தைகளும்‌, மற்றொருஃறம்‌ அவரது சிஷ்யர்கள்‌ அரசியலின்‌ பேராலும்‌, தேசியத்தின்‌ பேராலும்‌ தங்கள்‌ வாழ்நாளைக்‌ கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள்‌, தேசியவாதிகள்‌, பதீதிராதிபர்கள்‌ ஆகிய கூட்டதீதார்கள்‌ காந்தியாரைப்பற்றி (அவர்‌ ஒரு) ரிஷி என்றும்‌, முனிவர்‌ என்றும்‌, கிறிஸ்‌து www.thamizham.net - Free £ book 14௦ 3011. 890 பெரியார்‌ & வெ. ரா. சிநீதனைகள்‌ என்றும்‌, நபி என்றும்‌, மகாத்மா என்றும்‌, விஷ்ணுவின்‌ அவதாரம்‌ என்றும்‌ சொல்லி பிரச்சாரம்‌ செய்ததும்‌, இனி ஒருபுறம்‌ காந்தியைக்‌ கடவுளாகவும்‌ விஷ்ணுவரகவும்‌, மற்றும்‌ பலவிதமாகவும்‌ சித்திரங்கள்‌ எழுதிப்‌ படம்‌ போட்டு விளம்பரம்‌ செய்ததும்‌, மற்றும்‌ லவுகீகதீகிலும்‌, வைதீகதீதிலும்‌ விளம்பரம்‌ பெறவும்‌, சுயகாரிய சித்தி பெறவும்‌ ஆசைப்‌ பட்ட பணக்காரர்களும்‌, படித்தவர்களும்‌ முறை 8ய இலட்சகீகணகீகாகதீ திரவிய சகாயமும்‌ பிரச்சாரமும்‌ செய்து வந்தகுமாகிய காரியங்களுமாக எல்லாம்‌ சேர்நீது அவரை அரசியல்‌ சர்வாதிகாரியாக ஆக்கிவிட்டது. இதனால்‌ பாமர ஜனங்கள்‌ தங்களது பகுதீதறிவைசி சிறிதாவது உபயோகப்படுத்தி காந்தியத்தை ஆலோசித்துப்‌ பார்க்கக்‌ கூடாமற்‌ போய்விட்டது. எப்படியெனில்‌, கடவுள்‌ பக்தி, மதபக்தி ஆகியவைகளுக்கு எப்படி ஒரு மனிதன்‌ அடிமைப்பட்டு கடவுள்‌ அற்புதம்‌ மத அற்புதம்‌ ஆகிய பல வகைகளைக்‌ கண்மூடித்தனமாய்‌ நம்புகிறானோ அதுபோலவே காந்தியத்துக்கும்‌ பகுத்தறிவுப்‌ பிரயோகமே சிறிதுகூட இல்லாமல்‌ செய்துவிட்டது. இந்தியாவில்‌ கல்வியற்ற தன்மையும்‌, பாமரதீதன்மையும்‌, மதக்‌ கற்பனையும்‌ எந்த மனிதனை வேண்டுமானாலும்‌, கடவுள்‌ தன்மையுடையவனா கவும்‌, மனித சக்திக்கு மீறின மகாதீமாவாகவும்‌ ஆக்குவதற்கு மிக அனுகூலமாகவே இருந்து வருகின்‌ றன அன்றியும்‌ எந்த விஷயத்தை வேண்டுமானாலும்‌ எடுத்துக்கொண்டு அதற்குத்‌ தெய்வீகப்‌ பூச்சோ, மதப்பூச்சோ சிறிது கொடுதீதுவிட்டால்‌ சுலபத்தில்‌ யாரையும்‌ நம்பும்படி செய்து விடலாம்‌. உதாரணமாக, இதுவரை எதீதனை சாதுக்கள்‌, சிதீதர்கள்‌. ரிஷிகன்‌, மகாதீமாக்கன்‌, துறவிகள்‌, ஞானிகள்‌ முதலியவர்‌ கள்‌: ஏற்பட்டு எவ்வளவோ அபூர்வ காரியங்கள்‌ செய்த தாகவும்‌ பார்தீதகாகவும்‌ இன்றும்‌ இருப்பதாகவும்‌ சொல்லப்படுகின்றன என்பதைக்‌ கவனித்தால்‌ உண்மை விளக்கிவிடும்‌, ஆகையால்‌, இந்திய ஜனங்களிடையில்‌ காந்தியார்‌ அரசியல்‌ தலைமை ஸ்தானம்‌ பெற்றதில்‌ அதிசயமொன் றும்‌ இருக்க ஞாயமில்லை.ஃ தோழியர்‌ பெசன்ட்‌ அம்மையாரும்‌, தோழர்‌ காந்தியைப்‌ போலவே பகவத்கீதைப்‌ பிரசீசாரதீதாலும்‌, கடவுள்களிடதீதிலும்‌ மகாதீமாகீ்களிடதீதிலுந்‌ தான்‌ தினம்‌ பேசுவ தாகவும்‌, மூன்ஜென்மம்‌, பின்ஜென்மம்‌ முதலியவைகள்‌ எல்லாம்‌ தனக்குத்‌ தெரிகின்ற தாகவும்‌ சொன்னதாலும்‌, மற்றம்‌ என்‌ னென்னமோ சொல்லிக்கொண்டதாலும்‌, அந்த அம்மாளும்‌ அரசியலில்‌ தலைமை வகிக்கப்பெற்று, கொஞ்சகாலம்‌ சர்‌ வாதிகாரியாக இருந்‌ 5, இந்தியர மாதீதிரமல்லாமல்‌ ஒரு காலத்தில்‌ உலகம்‌ முழுவதுமே விளம்பரம்‌ பெற்றிருந்த தைப்‌ பார்த்தால்‌, காந்தியதீதிற்கும்‌, பெசன்டீயத்திற்கும்‌ ஒற்றுமை இருப்பதைக்‌ காணலாம்‌. ஆதலால்‌, காந்தியாருக்கு இருந்த செல்வாகீகுகீகும்‌, மதிப்புக்கும்‌ அவரைப்‌ பின்பற்ற ஆட்கள்‌ இருந்துவந்ததற்கும்‌ யாருக்கும்‌ எவ்வித ததீதுவார்தீதமும்‌ தனிக்‌ காரணமும்‌ சொல்லவேண்டியதில்லை. ஆனால்‌, அது இன்று என்ன கெதியில்‌ இருக்கின்றது என்பதுதான்‌ இந்தக்‌ கட்டுரையின்‌ முக்கிய பாகமாகும்‌. பெசன்டீயத்தின்‌ கதியே காந்தியமூம்‌ அடைந்து வருகின்றது. காந்தியார்‌ உலகிலுள்ள மற்ற இயக்கங்களையும்‌, மதங்களையும்‌, மத ஆதாரங்களையும்‌ ஒரு தட்டில்‌ வைத்து, தானும்‌ பகவத்கீதையும்‌ இந்துமதமும்‌ ஒரு தட்டில்‌ இருந்துகொண்டு ஞானம்‌ பேசி வந்ததற்கும்‌, அதற்கு இந்தயா கடம்‌ கொடுத்து வந்ததற்கும்‌ காரணம்‌ என்ன வென்றால்‌, எடுத்ததெற்கெல்லாம்‌ சத்தியம்‌, சதீதியாக்கிரகம்‌, அகிம்சை, ஆதீமதீதம்‌, ஆத்மசக்தி, பரித்தியாகம்‌, கடவுள்‌ கட்டளை ஆகிய அர்த்தமற்ற மொழிகளும்‌, தன்‌ இஷ்டப்படி வியாக்கியானம்‌ செய்வதற்கு இடமுள்ளதும்‌, தந்திரமான துமான வரர்த்தைகளை உபயோகப்படுத்தி வந்ததுமாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 891 இதுவரையில்‌ அவைகள்‌ எப்படி இருந்தபோதிலும்‌, இருந்ததாகச்‌ சொல்லப்பட்ட போதிலும்‌ இன்று அக்‌ காந்தியத்தின்‌ நிலை எப்படி இருக்கின்றது என்று பார்கீக வேண்டியது அறிவுள்ள மனிதனின்‌ கடமையாகும்‌. தோழர்‌ காந்தியாரது சதீதியதீதிற்கும்‌, சதீதியாக்கிரகதீதிற்கும்‌ ஏதாவது யோக்யதை ஏற்பட்டதா 1 அல்லது, அவரது ஆதீமசுத்ததீதிற்கும்‌, தியாகதீதிற்கும்‌, அகிம்சைகீகும்‌, கடவுள்‌ செயலுக்கும்‌ ஏதாவது பயன்‌ உண்டாயிற்றா 7 என்பனபோன்ற காரியங்களைச்‌ சற்றுக்‌ கவனித்துப்‌ பார்ப்போம்‌. தோழர்‌ காந்தியார்‌ யாரிடம்‌ இருந்து பயன்‌ பெறுவதற்காகச்‌ சதீதியமாய்‌ நடந்த, சத்தியாக்கிரகம்‌ செய்தாரோ, அவர்களிடமிருந்து ஒரு காதொடிந்த ஊசியைப்‌ பெறுவ தற்குக்கூட இவரது சத்தியமும்‌ சதீதியாக்கிரகமும்‌ பயன்‌ படாமல்‌ போனது, இன்று யாவருக்கும்‌ தெரிந்த விஷயம்‌, இவரது சதீதியாக்கிரகத்தின்‌ பயன்‌ எல்லாம்‌, * உடும்பு வேண்டாம்‌ ) கையைவிட்டால்‌ போகம்‌? என்கின்ற பழமொழிப்படி, சதீதியாக்கிரகத்தின்‌ பயனாய்‌ சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக சர்க்காரோடு ராஜிபேசி, இனிமேல்‌ சத்தியாக்கிரகம்‌ அல்லது சட்டமறுப்புச்‌ செய்வதில்லை என்று சொல்லி ஒப்பந்தம்‌ பேசி, சதீதியாக்கிரகிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்ததேயாகும்‌. மறுபடியும்‌ செய்த சதீதியாக்கிரகமானது, *சகீதியாக்கிரகி வெளிப்படையாய்‌ நிபந்தனையற்ற மன்னிப்புக்‌ கேட்டுக்கொள்ள வேண்டும்‌, இல்லாவிட்டால்‌ சிறையிலிருக்க வேண்டும்‌? என்கின்ற நிலையில்‌ கொண்டுவந்து விட்டு விட்டது ஆதீம சுதீதிக்காகவும்‌, ஆதீம சகீதிக்காகவும்‌ செய்த காரியங்களெல்லாம்‌ ஆதீம சுத்தியானவர்களையும்‌ ஆதீமசக்தி உடையவர்களையும்‌ கண்ணினால்‌ பார்ப்பதற்கும்‌, பேட்டி கொடுப்பதற்கும்‌, அவர்கள்‌ என்ன சொல்லு$றார்கள்‌ என்று கேட்பதற்கும்கூட வெல்லிங்டன்‌ பிரபுவால்‌ அருகதை அற்றவர்களாகச்‌ செய்து விடப்பட்டன. இவை மாத்திர மல்லாமல்‌, நம்பிக்கையற்றவர்களாகவும்‌, வாக்குத்‌ தந்தபடி நடவாதவர்களாகவும்‌, நம்பிக்கைத்‌ துரோகம்‌ செய்தவர்களாகவும்‌ சர்க்கார்‌ சொல்லும்படி செய்‌ துவிட்டது. இனி என்ன செய்யவேண்டிய பாக்கி இருக்கிறது என்பது நமக்குப்‌ புலப்படவில்லை. நிற்க, சதீதியாக்கிரகம்‌, சட்டமறுப்பு முதலாகிய காரியங்கள்‌ அதில்‌ ஈடுபட்ட மக்களை எல்லாம்‌ தோல்வியடையச்‌ செய்து விட்டதென்றும்‌, இனி அதீ தகைய விஷயங்ளைக்‌ கைவிட்டுவிட்டு வேறு மார்க்கம்‌ தேடவேண்டுமென்றும்‌, தேசியவாதிகளும்‌, தேசியப்‌ பதீதிரிக்கைகளுமே கூப்பாடுபோட ஆரம்பிதீதுவிட்டன. மேலும்‌, சதீதியாகீகிரகதீதினுடையவும்‌, சட்டமறுப்பினுடையவும்‌ உயிர்‌ கடைசி மூச்சில்‌ இருக்கிறதென்றும்‌, அது எப்படியாவது காந்தியார்‌ தோல்வியடையவில்லை என்றும்‌, ராஜி செய்துகொண்டார்‌ என்றும்‌, பொதுமக்கள்‌ நினைக்கும்படி ஒரு சந்தர்ப்பம்‌ ஏற்பட்டால்‌ அதுவே போதும்‌ என்கின்ற ஒரு போலி அபிமானத்திற்காகக்‌ காத்திருக்கிற தென்றும்‌, அப்படிக்‌ காத்திருப்பது சுயமரியாதைகீகும்‌ சதீதியதீதுக்கும்‌ ஏற்றதல்ல வென்றும்‌, சத்தியாக்கிரகம்‌ (தோற்றுவிட்டது) செத்துப்போய்விட்டது என்பதைத்‌ தைரியமாயும்‌ நாணயமாயும்‌ ஒப்புக்கொள்ள வேண்டும்‌ என்றும்‌, தேசியவாதிகளும்‌, தேசீயப்‌ பத்திரிக்கைகளுமே கூக்குரல்‌ கிட ஆரம்பித்‌ துவிட்டன. ஆகவே, இதிலிருந்து ஆதீமசுதீதியும்‌ சதீதியாக்கிரகமும்‌ சதீதியமூம்‌ இதுவரை யாதொரு பலனையும்‌ கொடுக்காமல்‌ இருந்துவந்திருப்பதை யாவரும்‌ அறியலாம்‌. 1921-ம்‌ வருஷ முதல்‌ கள்ளுக்கடை சதீதியாக்கிரகம்‌, அன்னிய ஜவுளிக்கடை சதீதியாக்கிரகம்‌, உப்புக்‌ காய்ச்சும்‌ சத்தியாக்கிரகம்‌, சோவில்‌ சத்தியாக்கிரகம்‌ முதலிய அனேக சதீதியாக்கிரகங்கன்‌ செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அகிம்சையின்‌ பேரால்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 392 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ னகர்‌ அடி, உதை முதலியவைகள்‌ அடைந்தும்‌ வந்தார்கள்‌. ஆதீமசுதீதிக்காகவும்‌, இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமைக்காகவும்‌ சதீதியாக்கிரகிகளுக்குள்‌ தப்பான காரியங்கள்‌ நடந்து விட்டதற்காகவும்‌, மற்றும்‌ பல காரியங்களுக்காகவும்‌, பல பட்டினி விரதங்கள்‌ இருந்துமாய்‌ விட்டன. இவ்வளவும்‌ போதாமல்‌ பல தடவைகளில்‌ காந்தியார்‌ கடவுளிடம்‌ பேசியுமாய்‌ விட்டது. அசரிரி மூலம்‌ காந்தியாருக்குப்‌ பல கட்டளை இட்டும்‌ ஆகிவிட்டன. இவ்வளவும்‌ போதாமல்‌ தினம்‌ பிரார்த்தனைகளும்‌, ஜபங்களும்‌, தபசுகளும்‌, மவனவிரதப்‌ பிரார்த்தனைகளும்‌ முறை தவறாமல்‌ நடந்தும்‌ வருகின்‌ றன. இவைகள்‌ எல்லாம்‌ எதற்காக, யாருடைய நன்மைக்காகவெனச்‌ செய்யப்படுகின்‌ றன வோ, அவர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது 8 அல்லு, யாரிடமிருந்து பெறுவதற்காக, யாருக்கு நல்ல புதீதி வருவதற்காகச்‌ செய்யப்பட்டதோ அவர்‌ களையாவது என்ன செய்துவிட்டது என்று பார்தீதால்‌ ஒன்றும்‌ இல்லை என்பதோடு தோல்வியையும்‌, கிழிவையும்‌ கொண்டுவந்து விட்டுவிட்டது என்றும்‌ சொல்லித்தீர வேண்டியது அவசியமாயி நக்கறது. இதற்கு காநீதியாராகட்டும்‌ மற்றவர்கள்‌ தானாகட்டும்‌ எண்ன காரணம்‌ சொல்லக்கூடும்‌? ஒன்று, சத்தியாக்கிரகதீதுக்கும்‌ சதீதியதீதுக்கும்‌ ஆதீமசக்திக்கும்‌, கோரிய பலனைக்‌ கொடுக்கக்கூடிய சக்தி கில்லை என்று சொல்லவேண்டும்‌ 3 அல்லது, காந்தியாரின்‌ சதீதியத்திலோ, சதீதீயாக்கிரகத்திலோ, ஆதீம சக்தியிலோ, தியாகதீதிலோ, கடவுளைக்‌ கண்டதிலோ உண்மையில்லை என்றாவது சொல்லியாக வேண்டும்‌. பொதுஜனங்கள்‌ பாமரர்களாகயிருப்பதாலும்‌, படிதீதவர்கள்‌ என்று சொல்லக்‌ கூடியவர்‌ களும்‌, பணக்காரர்கள்‌ என்று சொல்லப்படுபவர்‌ களும்‌, தேசியப்‌ பத்திரிக்கை பிழைப்புக்காரர்‌ களுக்‌ அயோக்கியர்களாகவும்‌, சுயநலகீகாரர்‌ களாகவும்‌, பொறுப்பற்ற வர்களாகவும்‌ இருப்பதால்‌, இம்மாதிரி பிரச்சினைகளுக்‌ 2௧ இடமில்லாமல்‌ ஜனங்களை ஏமாற்றிவிடக்கூடும்‌ என்றாலும்‌, பகுதீதறிவுக்காரர்களுக்கு இவ்விஷயங்கள்‌ தெரியாமல்‌ இருக்கும்படி செய்துவிட இனி யாராலும்‌ முடியாது. இந்‌ நிலையில்‌ ஒரு விஷயத்தை மாதீதிரம்‌ நாம்‌ ஒப்புக்கொள்ளப்‌ பின்வாங்கவில்லை. அதென்னவென்றால்‌, தோழர்‌ காந்தியுடையவும்‌, அவருடைய பிரதம சிஷ்யர்களுடையவும்‌ அந்தரங்க எண்ணம்‌ ஓர்‌ அளவு கைகூடி வந்திருக்கின்றது என்‌ பதேயாகும்‌. எப்படியெனில்‌, தோழர்‌ காந்தியின்‌ முயற்சியெல்லாம்‌ பார்ப்பனியமூம்‌, பணக்காரதீ தன்மையும்‌ இந்தியாவில்‌ நிலைத்திருக்க வேண்டும்‌ என்பதேயாகும்‌, இந்த எண்ணமே தான்‌ அவருடைய பார ப்பன-பணகீகார ¢ சிஷ்யர்கள்‌? (நண்பர்கள்‌) உடையதுமாகும்‌. இந்த எண்ணம்‌ அவரிடம்‌ இருப்பதற்கு ௬ஜு என்னவென்றால்‌, (பணக்காரர்கள்‌ பிழைக்க) ஏழைகளுக்கு இராட்டினம்‌ கண்டுபிடி தீதிருப்பதும்‌, பார்ப்பனர்கள்‌ பிழைக்க பகவத்கீதை வருணாசிரமம்‌, சாதிமுறை, தொழில்முறை ஆ8யவைகளைக்காப்பாற்றுவதாகச்‌ சுயராஜ்யத்‌ திட்ட பிரஜா உரிமையில்‌ ஏற்பாடு செய்திருப்பதும்‌, வட்டமேசையில்‌ இந்திய சமஸ்தானாதி பதிகளின்‌ ஆட்சிகளையும்‌ ஜமீன்தார்கள்‌ முதலியவர்களின்‌ நிலையையும்‌ ஒப்புக்கொண்ட மே போதிய காரணங்களாகும்‌. நாம்‌ சொல்வதை நம்புவதற்கு இவ்வளவும்‌ வாசகர்‌ களுக்குப்‌ போ திய திருப்தியைக்‌ கொடுக்கவில்லை என்றால்‌, மற்றும்‌ ஓர்‌ ஆதாரம்‌ எடுத்துக்‌ காட்டுகி3றாம்‌. அதென்னவென்றால்‌, உப்புச்‌ சதீதியாக்‌ கரகம்‌ ஆரம்பித்த காலத்தில்‌ தோழர்‌ காந்தி அவர்கள்‌ தான்‌ எதற்காக உப்புச்‌ சத்தியாச்கிரகம்‌ ஆரம்பித்தார்‌ என்று காரணம்‌ சொல்லும்போது, * நான்‌ இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லையானால்‌ தேசதீதில்‌ பொதுவுடைமைச்‌ கிளர்ச்சி ஏற்பட்டுவிடும்‌! என்று ஒரு காரணம்‌ காட்டியிருக்‌ கிறார்‌. (இதனால்தான்‌ பணக்காரர்கள்‌ காந்தியத்திற்குதி தாராளமாய்‌ பணம்‌ உதவ முன்வர வேண்டியதாயிற்று) அன்றியும்‌, தாழ்த்தப்பட்டவர்களின்‌ தனி முறையை ஒழித்து ஹரிஜன இயக்கம்‌ என்று ஒன்று ஆரம்பித்து, அதற்கும்‌ பிர்லா போன்ற முதலாளி கூட்டத்திலிருநீது 10 இலட்சக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 393 கணக்கான ரூபாய்‌ பெற்று செலவு செய்து, தீண்டப்படாதவர்கள்‌. என்பவர்களிலும்‌ சிலரை விலைக்கு வாங்கி, கோவில்‌ பிர ?வசக்‌ கிளர்ச்சி, புராணப்‌ பிரச்சாரம்‌ முதலியவைகள்‌ செய்ததின்‌ பலனாய்‌, இந்து சமூகம்‌ என்பதில்‌ பிறருக்குப்‌ பாடுபட்டு உழைப்பதற்கு என்று ஒரு பெரிய கூட்டத்தை என்றும்‌ நிலைக்க வைக்கவேண்டிய காரியங்கள்‌ செய்யப்பட்டாய்‌ விட்டது. இந்தக்‌ காரணங்களால்தான்‌ தோழர்‌ காந்தியாரின்‌ அந்தரங்க எண்ணம்‌ ஒருவிதத்தில்‌ பலித்துவிட்டது என்று சொன்னோம்‌. இதே எண்ணம்‌ கொண்ட அவரது அத்தியந்த நண்பர்களின்‌ எண்ணமும்‌ ஒருவாறு பலிதீதுவிட்டது. மற்றபடி, தோழர்‌ காந்தியவர்கள்‌ எதிர்பார்ப்பதாக வெளிப்படையாய்ச்‌ சொன்ன. காரியங்களுக்குத்‌ தோல்வியேற்பட்டது என்பதை யாரும்‌ மறுக்கமுடியாது. நம்மைப்‌ பொறுத்தவரையில்‌, உப்புச்‌ சத்தியாக்கிரக இயக்கம்‌ ஆரம்பித்த காலத்‌ லேயே இதில்‌ நாணயம்‌ இல்லை என்றும்‌, இது கடைசியில்‌ புஸ்ஸென்று போய்விடும்‌ என்றும்‌, இதனால்‌ மக்களுக்கு வீண்தொல்லையே விளையுமென்றும்‌, அதோடு அனேக நல்ல காரியங்கள்‌ செய்யப்படுவதையும்‌ இந்தக்‌ கிளர்ச்சி தடுத்‌ துவிடுமென்றும்‌ பல தலையங்‌ கங்கள்‌ எழுதியும்‌, பல இடங்களில்‌ பேசியும்‌ வந்தி நக்கிறோம்‌. இதற்காகத்‌ தேசியப்‌ பிழைப்புக்காரரிடம்‌ வசவும்‌) பழிப்பும்‌ அடைந்தும்‌ வந்திருக்கிறோம்‌. ஆனால்‌, முடிவில்‌ நாம்‌ பார்ப்பதற்கு மேலாகவே காந்தியத்தின்‌ கதி ஏற்பட்டுவிட்டது. இப்போது காந்தியத்தின்‌ கவலையெல்லாம்‌ காந்தியம்‌ தோற்றுவிட்டது என்பதில்‌ 100-க்கு 96 மக்களுக்கு ஆட்சேபணை இல்லை; என்றாலும்‌ அது தோற்றுவிட்டது என்று. ஜனங்கள்‌ சொல்லாமல்‌ இருப்பதற்கு ஒரு மார்க்கம்‌ கண்டுபிடிக்கவேண்டும்‌ என்பதும்‌, வைசிராய்‌ ராஜிக்‌ கு வரமாட்டேன்‌ என்றார்‌ என்ற பெயரை ஏற்படுத்திவிட்டால்‌, சரீக்கார்மிது இனங்களுக்குக்‌ கொஞ்சம்‌ வெறுப்பு ஏற்பட்டால்‌, அதை உபயோகித்து ஏதாவது செய்ய லாமா என்று யோசிப்பதுமாகும்‌, இதைச்‌ சில காந்தி பக்தர்கள்‌ ஒப்புக்கொள்ளமாட்டார்கள்‌. எனலாம்‌. ஆனால்‌, அவர்களை ஒன்று கேட்கின்றோம்‌. அதாவது, காந்தியம்‌ தோல்வி அடையவில்லை. ஆனாலும்‌ தேசியப்‌ பத்திரிக்கைகள்‌ எழுதுவதுபோல்‌ காந்தியமானது நாட்டிற்குப்‌ பயன்படாமல்‌ போய்விட்டது என்பதையாவது ஒப்புக்கொள்ளுகின்றார்‌ களா? இல்லையா 1 என்பதேயாகும்‌. அதையும்‌ ஒருசமயம்‌ காந்தி பக்தர்கள்‌ ஒப்புக்கொள்ளவில்லை. யானால்‌ அவர்களை மற்றொரு கேள்வி கேட்கின்கி2றாம்‌. அ2தன்னவென்றால்‌, ஒரு வாதியானவன்‌ ஒரு பிரதிவாதியின்மி து தாவாபோட்டு விசாரணை முடிந்த பிறகு பிரதிவாதியிடம்‌ ராஜியாய்ப்‌ போகி$றன்‌ என்று கேட்கப்‌ 8பானால்‌ இதற்கு என்ன அருத்தம்‌! வாதிக்கு விசாரணையின்‌ போக்கி நதீது தன்‌ கேஸ்‌ ஜெயிக்காது என்றும்‌, தோற்றுவிடும்‌ என்றும்‌ தோன்றிவிட்ட காரணமா 8 அல்லது வாதியின்‌ கண்ணியமும்‌ பெருந்தன்மையும்‌ காரணமா ¢ என்று கேட்கின்றோம்‌. நிற்க, இப்போது காங்கிரசுக்காரர்களிலேையே அனேகம்‌ பேர்‌ காந்தியம்‌ தோற்று விட்டதென்றும்‌; சதீதியாக்கிரகமும்‌, சட்டமறுப்பும்‌ செத்துவிட்டதென்றும்‌, ஆதலால்‌ இனி சட்டசபைக்குப்‌ போகவேண்டும்‌ என்றும்‌ தாராளமாய்ச்‌ சொல்ல முன்வந்துவிட்டார்கள்‌., எல்லா தேசியப்‌ பத்திரிகைகளும்‌ அப்படியே எழுதத்‌ அணிந்தும்விட்டன. தோழர்‌ காந்தி வைசிராயைப்‌ பார்க்க அனுமதி கேட்பதுகூட இந்திய தேசிய காங்கிரசுக்குச்‌ சுயமரியாதை யற்ற தன்மையை உண்டாக்கி விட்டதென்றும்‌ எழுதிவிட்டன. இவற்றுள்‌ ஒரு பிரபல தேசியப்‌ பத்திரிகையானது, காந்தியார்‌ தன்னுடைய மரியாதையைக்‌ காப்பாற்றுவதற்காகக்‌ காங்கிரசின்‌ மரியாதையை விற்றுவிட்டார்‌ ? என்றுங்‌ கூட எழுதிவிட்டது. . 1686—50 www.thamizham.net - Free E book No 3011 394 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ காந்தியாரைப்‌ பற்றியோ, சட்டமறுப்பைப்‌ பற்றியோ குறைகூற இனிச்‌ சொல்ல வேண்டிய பாக்கி ஒன்றும்‌ இல்லாமல்‌ எல்லாம்‌ சொல்லி ஆய்விட்டது. நமக்கு இவைகள்‌ எ.துவும்‌ பு.துமையாகத்‌ தோன்றவில்லை. ஏனெனில்‌, இதெல்லாம்‌ நாம்‌ முன்‌ சொன்ன மாதிரி ஆரம்பத்திலே 8ய எதிர்பார்‌ தீததாதலால்‌ அதிசயமொன்றும்‌ இல்லை. காங்கிரசுதீ தொண்டர்கள்‌ என்பவர்கள்‌ இந்த அளவோடாவ.து ஒரு பாடம்‌ கற்றதா க முடிவு செய்து கொண்டு, இனி அப்படிப்பட்ட சூழ்ச்சிக்‌ காரியங்களிலும்‌, பயனற்ற காரியங்களிலும்‌ சம்பந்‌ தப்படாமல்‌ தேசம்‌, சாதி, மதம்‌, ஏழை, பணக்காரன்‌; எஜமான்‌, அடிமை என்பனவாகிய வித்தியாசமில்லாத, உண்மையான சமதர்மதீதுக்கு உழைக்க வருவார்‌ களா? அல்லது செத்த பாம்பை எடுத்து ஆட்டப்போகும்‌ கரந்தியத்‌ திருவிளையாடலில்‌ மறு.படியும்போய்‌ சேரப்போகின்றார்களா $ என்பதேயாகும்‌. [குடி அரசு?-தலையங்கம்‌--23-7-1933] 2. தோழர்களே வாருங்கள்‌ ! காங்கிரஸ்‌ ஸ்தாபனங்கள்‌ மூடப்பட்ட துபற்றியும்‌, காந்தியம்‌ தோற்றுப்போய்விட்டது பற்றியும்‌ பலர்‌ மகா விசனப்படுவதாகத்‌ தெரியவருகிறது. இன்றைய வரையில்‌ காங்கிரசும்‌, காந்தியமும்‌ நம்‌ மக்களுக்கு என்ன விதமான பயனை உண்டாக்கிற்று என்பதைப்பற்றி நாம்‌ அதிகம்‌ எழுதவேண்டியதில்லை.ஃ காங்கிரஸ்‌ ஏற்பட்டு ஏறக்குறைய அய்ம்பது வருஷமாகின்றது எனலாம்‌. அம்ம்பது வருஷ காலத்தில்‌ அரசாங்கத்தாரால்‌ காங்கிரஸ்‌ கேட்டபடி (சீர்திருத்தங்கள்‌ என்னும்‌ பேரால்‌) எவ்வளவோ அதிகாரங்களும்‌ பதவிகளும்‌ இந்திய மக்களுக்குக்‌ கொடுக்கப்பட்டும்‌. இருக்கின்றன. இதன்‌ பயனாய்‌ நாட்டில்‌ கோடீஸ்வரர்கள்‌ பெருகினார்கள்‌. பதினாயிரக்‌ கணக்கான ஏகீகரா பூமிபுடைய ஜமீன்தார்‌ கள்‌, மிராசுதார்கள்‌ அதிகமானார்கள்‌. மாதம்‌ 1க்குப்‌ பல ஆயிரக்கணக்கான ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கும்‌ பெரும்‌ பெரும்‌ பதவியாளர்‌ களும்‌ உத்தியோகஸ்தர்களும்‌ ஏராளமானார்கள்‌. மாதம்‌ 1,000, 10,000 ரூபாய்‌ வரும்படி சம்பா திக்கும்‌ வக்கீல்களும்‌, டாக்டர்களும்‌ இலக்ஷக்கணக்கில்‌ பெருகினார்கள்‌. தவிர மற்றொருபுறம்‌, பாடுபடாமல்‌ தேசத்தின்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு சோம்‌ பேறிகளாய்‌ இருந்து வாழும்‌ மக்கள்‌ பலர்‌ பெருகினொர்கள்‌. அதாவது ¢ வைதிகத்தில்‌? ஒரு கூட்ட மக்கள்‌ எப்படிக்‌ குருமார்களென்றும்‌, பாதிரிமார்களென்றும்‌, சந்நியாசிகளென்‌: இம்‌, சாமியார்‌ களென்றும்‌ சொல்லிக்கொண்டு ஊரார்‌ உழைப்பில்‌ வாழ ஆசைப்பட்டு வேஷம்‌ போட்டுத்‌ திரிகின்‌றார்களோ, அதுபோல்‌ காங்கிரசின்‌ பேரால்‌ ஒரு கூட்ட மக்கள்‌, தேசியத்‌ தலைவர்கள்‌, நேச பக்தர்கள்‌, தேசிய வாதிகள்‌, தேசாபிமானிகள்‌, தேசியத்‌ தொண்டர்கள்‌ என்பதாகப்‌ பல பெயர்களை வைத்துக்கொண்டு யாதொரு வேலையும்‌ இல்லாமல்‌, எவ்விதப்‌ பொறுப்புமில்லாமல்‌ பதவி பெறவும்‌, வயிறு வளர்க்கவும்‌ ஏற்பட்டார்‌ கன்‌ஃ இவைகளைதி தவிர, காங்கிரசானது ஏழை மக்களுக்கும்‌, தாழ்தீதப்பட்ட மக்களுக்‌ கும்‌ மற்றும்‌ நான்‌ ஒன்றுக்கு 14 மணி நேரம்‌, 18 மணி நேரம்‌ மழையிலும்‌, வெயிலிலும்‌, காடுகளிலும்‌, கழனிகளிலும்‌, மலையிலும்‌, சமுத்திரதீதிலும்‌, பட்டறைகளிலும்‌, தொழிற்‌ சாலைகளிலும்‌, வியாபார ஸ்தலங்களிலும்‌ அலைந்து மிருகங்கள்‌ போல்‌. உழைத்துப்‌ போதிய ஆகாரமில்லாமல்‌, சுகாதாரம்‌, வைத்தியம்‌ முதலிய வசதிகள்‌ இல்லாமல்‌ தங்கள்‌ தங்கள்‌ பின்னை குட்டிகளுக்குப்‌ படிப்பு, உடை முதலியவைகளில்லாமல்‌ ஓட்டைக்‌ குடிசைகளில்‌ வதீந்து மடியும்‌ மனித ஜீவன்‌ களுக்கு என்ன பயன்‌ ஏற்பட்டது என்‌ ஜு கேட்கின்றோம்‌ ₹ அல்லது காங்கிரஸ்‌ ஏற்பட்டதற்குப்‌ பின்‌ இவர்கள்‌ விஷயத்தில்‌ என்ன மாறுதல்‌ ஏற்பட்டது என்று கேட்கின்றோம்‌ ₹ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 395 இந்த நிலையில்‌ இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள காங்கிரசான.து மூடப்படுகின்‌ றதே, மறைந்து போன்றதே, செத்துப்‌ போகின்றதே என்று சிலர்‌ விசனட்படுவதைப்‌ பார்த்தால்‌ நமக்கு ஆச்சரியமாகவே தோன்றுகின்றது. இந்த 50 வருஷ காலமாய்‌ காஸ்கிரசினால்‌ நாட்டுக்கு என்ன--என்ன காரியங்கள்‌ ஏற்பட்டதோ--காங்கிரசினால்‌ மக்களுக்கு என்னென்ன உணர்ச்சிகள்‌ ஏற்பட்டதோ அவை களையெல்லாம்‌ இன்று அடியோடு அழித்துத்‌ தீரவேண்டிய அவசியதீதில்‌ உலகம்‌ இருக்கும்‌ போது, அப்படி ப்பட்ட காங்கிரஸ்‌ ஒழிந்து போவதனால்‌ மக்கள்‌ மகிழ்ச்சி அடையவேண்‌ டியதிருக்க எதற்காக விசனப்படுகின் றார்கள்‌ என்பது நமக்கு விளங்கவில்லை, இந்திய தேசீயக்‌ காங்கிரஸ்‌ என்பது ஒரு விபசீசாரிதீதனதீதிற்கொப்பான ஸ்தாபன மாய்‌ இருந்க வந்தது என்று சொன்னால்‌. சமதர்ம ஞானம்‌ உள்ள எவரும்‌ வாய்பேசாமல்‌ ஒப்புக்கொண்டாகவேண்டும்‌ என்றே சொல்லுவோம்‌. ஏனெனில்‌, ஏழை மக்கள்‌ பெயரை யும்‌, பாமர மக்கள்‌ பெயரையும்‌, கஷ்டப்படும்‌ மக்கள்‌ பெயரையும்‌ சொல்லிக்கொண்டு, அந்த ஏழை மக்களுக்கு மேற்கண்ட காங்கிரஸ்‌ ஸ்தாபனம்‌ செய்துவந்த அக்கிரமங்களுக்‌ கும்‌, கொடுமைகளுக்கும்‌, பிதீதலாட்டங்களுக்கும்‌ ஏதாவது எல்லை கட்ட முடியுமா ? என்று கேட்கிறோம்‌. மக்களுகீகு, அவர்களுடைய மனிதத்‌ தன்மைக்கு அடிப்படையான தும்‌, மிகவும்‌ முக்கியமான கமான கல்வி விஷயத்தை எடுத்கக்கொண்டோமானால்‌ முதலாளிகள்‌ குழந்தைகள்‌, ஜமீன்‌ தார்கள்‌ குழந்தைகள்‌, உத்தியோகஸ்தர்கள்‌ குழந்தைகள்‌, மேல்‌ சாதிக்காரர்கள்‌ குழந்தைகள்‌ ஆகியவர்கள்‌ தவிர, மற்றபடி நாட்டில்‌ 109-க்கு 90 பேர்களா யிருக்கும்‌ சாதாரண மக்களின்‌ குழந்தைகள்‌ படிப்பில்‌ பூஜ்யமாகவே இருந்துவருகிறார்கள்‌. கையெழுத்‌ துக்கூடப்‌ போடத் தெரியாதவர்கள்‌ அதிகம்‌ பேர்கள்‌. இருந்து வருகின்றார்கள்‌, சுகாதாரதீதைப்பற்றி எடுத்‌ துக்கொண்டால்‌, அதுவும்‌ மேல்‌ குறிப்பிட்ட வகுப்பாரைத்‌ தவிர மற்றபடி 100-க்கு 90 மக்கள்‌ சுகாதாரமற்று, நோயாளியாகவும்‌ வைதீதிய வசதி அற்றவர்க ளாகவும்‌ மிக்க மெலிந் தவர்‌ களாகவு$ இருந்து, அகாலத்தில்‌ மரணமடைந் க வருகிறார்கள்‌. ஜீவனோபாய விஷயதீதிலு& வயிறார உண்பதற்கும்‌ தங்கள்‌ பிள்ளை குட்டிகளைச்‌ சாதா ரண நிலையிற்கூட போஷிப்பதற்கும்‌ முடியாமலும்‌ 100-க்கு 75 குழந்தைகள்‌ தங்களது €-வது 7-வது வயதிலேயே தங்கள்‌ வயிற்றகீகுக்‌ கூலி வேலை செய்து தீரவேண்டியவர்க ளாகவும்‌ இருந்‌ துவருகிறார்‌ கள்‌. மனிதனுக்கு வேண்டிய முக்கிய காரியங்கனாகிய கல்வி, சுகாதாரம்‌, ஜீவனம்‌ முதலாகிய விஷயங்களில்‌ ஒரு சிறு மாறுதலைக்கூட செய்ய முடியாத ஸ்தாபனங்கள்‌ இருந்தென்ன, செத்தென்ன என்பதை நடுநிலையிலிருந்து யோசிக்கும்‌ எந்த அறிவாளியும்‌, காங்கிரஸ்‌ செத்துப்‌ பாகிறதென்று கடுகளவுகூட விசனப்படமாட்டா னென்றே சொல்லு வாம்‌. கல்வி முதலிய மேற்கண்ட விஷயங்களில்‌ காங்கிரசினால்‌ ஒன்றும்‌ செய்யமுடியாமல்‌ போனதற்குக்‌ காங்கிரஸ்‌ பக்தர்கள்‌ சர்க்கார்‌ பேரில்‌ குறைகூறலாம்‌. ஆனால்‌, அந்தக்‌ காங்கிரஸ்‌ பக்தர்களை ஒன்று கேட்கி3றாம்‌. அதென்னவென்றால்‌, பணக்காரர்‌ கள்‌, மேல்‌. சாதிக்காரர்கள்‌ என்பவர்‌ களுடைய கல்வி, சுகாதாரம்‌, ஜீவ8னாபாயம்‌ முதலிய விஷயங்‌ களிலும்‌ மற்றும்‌ பெரும்‌ பெரும்‌ சம்பளம்‌, அதிகாரம்‌, பதவி பெறுவதற்குத்‌ தகுதியான. கல்வி, சுகாதார ஜீவனோபாய உத்தியோக விஷயத்திலும்‌ இந்த 40, 50 வருஷங்களுகீ குள்ளாக காங்கிரசினால்‌ எவ்வளவு சீர்திருத்தங்கள்‌ அனுகூலங்கள்‌ ஏற்பட்டு, அக்கூட்டதி தார்கள்‌ பயனடைந்து வரு 8ன்றார்‌ களா, இல்லையா 8 உதாரணமாக, வக்கீல்‌, வைத்‌ தியம்‌, கணிதம்‌, இஞ்சினியர்‌, அய்‌, சி. எஸ்‌, பி. சி. எஸ்‌.) முதலிய படிப்பு விஷயதீதில்‌ எவ்வளவு முற்போக்கு, எவ்வளவு சம்பள உயர்வு, எவ்வளவு உத்தியோக அதிகரிப்பு முதலிய காரியங்கள்‌ நடைபெறவில்லையா என்று கேட்கின்‌ றோம்‌ § www.thamizham.net - Free £ book 14௦ 3011 396 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ இவைகள்‌ எல்லாம்‌ எப்படி ஏற்படச்செய்ய முடிந்தது என்று பார்தீதால்‌, காங்கிரஸ்‌ துரோகமும்‌ ஒழுக்க ஈனமும்‌ நன்‌ றாய்‌ விளங்கிவிடும்‌. ஆகவே, ஒரு நாட்டில்‌ செல்வவான்களுக்கும்‌, மேல்சாதிக்காரர்‌ களுக்கும்‌ மாதீகிரம்‌ அனுகூலமாயும்‌ ஏழைகளுக்கும்‌ பாடுபடும்‌ மக்களுக்கும்‌ பிரதிகூலமும்‌, *ரோகச்‌ சிந்தனையும்‌ உள்ள தாயுமுள்ள ஒரு ஸ்‌ காபனம்‌ செத்துப்‌ போகுமேயானால்‌, ஜனங்கள்‌ அதற்காக மகிழ்ச்சியடைவதுடன்‌ எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ அது மறுபடியும்‌ தலை எடுக்காமல்‌ இருக்கும்படி ஆடிக்‌ குழி தாண்டிப்‌ புதைத்து அதன்மீது குத்துக்கல்‌ களை நடவேண்டியது சமதர்ம அறிஞர்களின்‌ கடமையாகும்‌. காங்கிரசின்‌ அயோக்கியத்‌ தனங்களும்‌, துரோகங்களும்‌ பாமர ஜனங்களுக்கு வெளி யாகக்கூடிய நல்ல ஒரு சமயதீதில்‌, அதை மறைக்க தோழர்‌ காநீ தியாரைப்‌ பிடித்து, அவரை மகாதீமாவாக்கி, அவர்‌ மூலம்‌ மத சம்மந்தமான உணர்ச்சிகளை மகீகளுகீகுன்‌ புகுத்தச்‌ செய்து, காங்கிரஸ்‌ பித்தலாட்டங்களுக்கெல்லாம்‌ வேறுவித பாஷ்யம்‌ கூறிட வருணாசிரமமென்றம்‌, பரம்பரைத்‌ தொழில்‌ முறை என்றும்‌, ஏழ்மைத்‌ தன்மையையும்‌ இன்பத்தையும்‌ கஷ்டத்தையும்‌ அனுபவிப்பதே மேல்‌ என்றும்‌ * தத்துவ ஞானம்‌ பேசச்‌ செய்து, மக்களை ஏமாற்றி, மறுபடியும்‌ காங்‌ ரஸ்‌ படுகுழியில்‌ விழும்படியான காரியத்தைச்‌ செய்வித்து வந்தார்கள்‌. * கெட்டிக்காரன்‌ பொய்‌ எட்டு நாளில்‌ தெரிந்துவிடும்‌? என்பது போல்‌ காந்தியத்தின்‌ யோக்கியதை இப்போது இந்த 10 வருஷத்தில்‌ விளங்கிவிட்டதால்‌, இரண்டும்‌ சேர்ந்து மண்‌ வீடு சரிவதுபோல்‌ காங்‌ ரசம்‌, காநீதியமூம்‌ ¢ உன்னால்‌ நான்‌ கெட்டேன்‌. என்னால்‌ நீ கெட்டாய்‌? என்று ஒன்றையொன்று சொல்லிஃகொண்டு மாள வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. இந்திய தேசிய காங்கிரசும்‌, காந்தியமூம்‌ அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல்‌, உலக ஏழைமக்கள்‌ இயக்கதீதிற்கே அதாவது, சமதர்ம உலகதீதிற்கே பெரிய இலாபகரமான காரியமாகும்‌. இந்தியாவில்‌ சமதர்மக்‌ கொள்கை என்றைக்காவது ஒருநாள்‌ ஏற்படும்‌ என்று நினைப்போமேயானால்‌, அது தேசிய காங்கிரசும்‌, காந்தியமூம்‌ ஒழிந்த நாளாகதீதான்‌ இருக்குமே தவிர) அவை ஒழியாமல்‌ ஏற்படாது என்பது உறுதி. இந்தியாவைவிடப்‌ பலமடங்கு அரசியல்‌ கொடுமையும்‌, பணககாரர்‌ கொடுமையும்‌, பார்ப்பனியக்‌ (பாதிரித்தன்மை) கொடுமையும்‌, அநாகரிகக்‌ கொடுமையும்‌, அடிமைதி தன்மைக்‌ கொடுமையும்‌ இருந்துவந்த ரஷியா தேசத்துக்குச்‌ சமதர்ம உணர்ச்சி எப்பொழுது ஏற்பட்டது என்று பார்ப்போமேயானால்‌, அங்கும்‌ டால்ஸ்டாயிசம்‌ என்னும்‌ வை$கப்‌ புடுங்கலீசம்‌ (காந்தியம்‌) ஒழிந்த பிறகுதான்‌ ஏற்பட்டதே ஒழிய வேறில்லை. ரஷிய மகாத்மாவான டால்ஸ்டாய்‌ என்பவரும்‌, தோழர்‌ காந்தியாரைப்‌ பாலவே ஏழ்மை வேஷமும்‌, கடவுளைத்‌ தேடும்‌ தொழிலும்‌, கடவுள்‌ அருளுடன்‌ கலந்திருக்கும்‌ தன்மை மையும்‌ கொண்டவராக இருந்து வந்தவர்‌. அவருக்குச்‌ செல்வாக்கு இருக்கும்வரை, ரஷிய மக்களுக்கு இந்த உலக வாழ்வு விஷயத்தில்‌ கவலை இல்லாமல்‌ * செத்தபின்‌ வாழும்‌ மேல்‌ உலக வாழ்க்கை யிலேயே கவலை உண்டாகும்படி உணர்ச்சியே வலுத்திருந்தது. ஏழை களுடைய கஷ்டம்‌ இன்னது, தொழிலாளிகளுடைய கஷ்டம்‌ இன்னது என்று உணராமலும்‌ அனுபவ ஞானமில்லாமலும்‌, ஏழ்மைதீதன்மையையும்‌ உழைப்பையும்‌ சிலாகிதீதுப்பேசி மக்களுக்குப்‌ பிரச்சாரம்‌ செய்துவந்தவராவார்‌. அப்படிப்பட்ட டால்ஸ்டாயிசம்‌ ஒழிக்கப்பட்டபிறகுதான்‌, முன்சொன்னபடி மக்களுக்குச்‌ சமதர்ம உணர்ச்சி பரவத்தொடங்கி, நாட்டையும்‌ புரட்சிக்குத்‌ தயாராக்கி முதலாளித்‌ தன்மையையும்‌, பாதிரித்தன்மையையும்‌ ஏகா திபத்தி பத்‌ தன்மையையும்‌ இருந்த இடம்‌ தெரியாமல்‌ செய்து கின்றைய ரஷியக்‌ குழந்தைகளுக்கு ஒரு காலத்தில்‌ சார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 397 (sdrat தீதி) என்பவன்‌ இருநீகான்‌) அவனுக்கு முதலாளி என்ற அடிமைகளும்‌, பாதிரி என்ற தரகர்களும்‌ இருந்தார்கள்‌ ? என்று கதை சொள்லும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆதலால்‌, அந்த நிலைமை இந்தியாவில்‌ ஏற்படக்கூடியதின்‌: அறிகுறியாக இருந்த காங்கிரசும்‌, காந்தியமும்‌ அழிவதானால்‌ நாம்‌ மகிழ்ச்சி அடையவேண்டுமேயல்லாமல்‌ யாரும்‌ அதற்காகக்‌ கவலைப்பட வேண்டியதில்லை என்பதைக்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌, காந்தியமும்‌, காங்கிரசும்‌ மறைபடவேண்டியது ஏற்பட்டதற்குப்‌ பணகீசாரரீ களும்‌, பார்ப்பனர்களும்‌, படிதீ துவிட்டு உதீதி யாகத்‌ 5454 காத்திருக்கும்‌ சோம்பேறிகளுந்தாம்‌ விசனப்படவேண்டுமே தவிர, மற்றபடி மனித சமூகத்தினிடம்‌ அன்புகொண்டு சம நோக்குடன்‌ மக்களுக்குச்‌ சேவை செய்ப வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களுக்கு வேலை யில்லாமல்‌ போய்விடுமே என்று எவரும்‌ பயப்படவேண்டியதில்லை. அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத்‌ தொண்டர்களை இரண்டு கையையும்‌ நீட்டி மண்டியிட்டு வரவேற்கச்‌ சமதர்ம இயக்கம்‌ காத்திருக்கிறது. அது உலக மக்கள்‌ எல்லோரையும்‌ பொறுத்த இயக்கம்‌, சாதி, மதம்‌, வருணம்‌, தேசம்‌ என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம்‌ தாண்டிய இயக்கம்‌. பிராமணன்‌, கடி தீதிரியன்‌, வைசியன்‌, சூத்திரன்‌, ஹரிஜன்‌ என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும்‌, எப்பொழுதும்‌, மனிதரே என்று கூவும்‌ இயக்கம்‌. ஏழை என்றும்‌, பணக்காரன்‌ என்றும்‌, முதலாளி என்றும்‌, தொழிலாளி என்றும்‌, எஜ மான்‌ என்றும்‌, கூலி என்றும்‌, ஜமீன்‌ தாரன்‌ என்றும்‌, குடியானவன்‌ என்றும்‌ உள்ள சகல வகுப்புகளையும்‌, வேறுபாடுகளையும்‌ நிரீமூலமாக்கித்‌ தரைமட்டமாக்கும்‌ இயக்கம்‌. மற்றும்‌ @@ என்றும்‌, சிஷ்யன்‌ என்றும்‌, பாதிரி என்றும்‌, முல்லாவென்றும்‌, முன்ஜன்மம்‌, பின்ஜன்மம்‌ என்றும்‌, கர்ம பலன்‌ என்றும்‌, அடிமை யையும்‌, எஜமானனையும்‌, மேல்சாதிக்காரனையும்‌, கீழ்சாதிக்காரனையும்‌, முதலாளி யையும்‌, தொழிலாளியையும்‌, ஏழையையும்‌, பணக்காரனையும்‌, சக்கரவர்தீதியையும்‌, குடிகளையும்‌, மகாதீமாவையும்‌, சாதாரண ஆதீமாவையும்‌, அவனவனுடைய முன்‌ஜன்ம கர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன்‌ தம்‌ கடாட்சப்படி உண்டாக்கினர்‌ என்றும்‌, சொல்லப்‌ படும்‌ அயோக்‌ யத்தனமான சுயநலங்‌கொண்ட சோம்பேறிகளின்‌ கற்பனை உளை எல்லாம்‌ வெட்டித்‌ தகர்தீதுச்‌ சாம்பலாக்‌ 9, எல்லோருக்கும்‌ எல்லாம்‌ சமம்‌, எல்லாம்‌ பொது என்ற நிலையை உண்டாக்கும்‌ இயக்கம்‌. சாதி, சமய, தேசச்‌ சண்டையற்று, உலக மக்கள்‌ யாவரும்‌ தோழர்கள்‌ என்று சாத்தியும்‌ ஒற்றுமையும்‌ அளிக்கும்‌ இயக்கம்‌, இன்று உலக மெங்கும்‌ தோன்றி தாண்டவமாடும்‌ இயக்கம்‌. ஆதலால்‌, அதில்‌ சேர்ந்து e opds வாருங்கள்‌, வாருங்கள்‌, என்று கூவி அழைக்கின்றோம்‌. [8 குடிஅரசு -தலையங்கம்‌--30-7-19:3] 8. காந்தியாரின்‌ விஷம்‌ தோழர்‌ காந்தி அவர்கள்‌ ¢ தீண்டாமைப்‌ பேயை ஓட்டவேண்டும்‌? என்பது, மதத்தைப்‌ புனிதமாக்கவே ஒழிய தீண்டாதவர்களைப்‌ பற்றிய கவலையால்‌ அல்ல என்பது யாவரும்‌ உணரக்கூடியதேயாகும்‌. மதத்தைப்‌ புனிதமாக்குவது என்பது எதற்காக வென்றால்‌, இந்துமதம்‌ குற்றமுடையதாகி--அ து பலராலும்‌ குற்றம்சொல்லும்‌ நிலைமைக்கு வந்து--சீக்கிரதீதில்‌ அழிந்து போகத்‌ தக்க நிலைமைக்கு வந்துவிட்டதனால்‌ அக்‌ குற்றங்‌ களைக்‌ களைந்து, சீக்கிரம்‌ அழித்து போகக்‌ உடுமான நிலைமையில்‌ இருக்கும்‌ இந்து மதத்தைக்‌ காப்பாற்றவேண்‌டும்‌ என்பதற்காக என்பது காந்தியவர்களுடையதும்‌, அவரைக்‌ கூட்டிவந்து வேடிக்கை காட்டும்‌ பார்ப்பனர்களுடையதும்‌, அவ்‌ 2வடிக்கையில்‌ வசூலாகும்‌ பணங்களைக்கொண்டு வயிறு.வளர்க்கும்‌ மத-தேச பகீதர்களுடையவும்‌ கருத்து என்றே வைத்துக்கொள்ளலாம்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3011 398 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ தீண்டாமை விலக்கு ஒரு பொதுஜன தர்மம்‌ அல்லவென்றும்‌, அது இந்துக்களை மாதீதிரம்‌ சேர்ந்த வேலை என்றும்‌ தோழர்‌ காந்தியார்‌ ஆயிரம்‌ தடவைகள்‌ சொல்லி யிருக்கின் றார்‌. இதிலிருந்தே தீண்டாமை விலக்கு என்பது ஒரு மதப்‌ பீரச்சாரம்‌ என்பதாக ஒரு சாதாரண மனிதனுக்கும்‌ விளங்கவில்லையா என்று கேட்கி3றன்‌. காந்தியார்‌ பலதடவைகளில்‌ ஒவ்வொரு சாதியசரையும்‌ பார்‌ தீது சாதிப்‌ பாரூபாடுகள்‌ அவசியம்‌? என்றும்‌, ¢ அவனவன்‌ தகப்பன்‌ செய்த தொழில்‌ [ அவனவன்‌ சாதித்‌ தொழில்‌] அவனவன்‌ செய்யவேண்டும்‌? என்றும்‌ சொல்லி வருவதும்‌, இதை அனுசரித்‌ கத்‌ தனது ஆச்சிரமதீதில இன்றையதினம்‌ கூட தீண்டப்படா சாதியாருக்குத்‌ தோல்பதனிடும்‌ வேலை செய்யவும்‌, பழகவும்‌ வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்துகொடுதீது வருவதும்‌ யாவரும்‌ அறிந்ததாகும்‌. சாதிகள்‌ அழியவேண்டும்‌ என்று நாளதுவரை தோழர்‌ காந்தியார்‌ தன்‌ வாயினால்‌ ஒரு வார்த்தைகூடச்‌ சொல்லவில்லை என்றும்‌, ஆனால்‌ சாதிகள்‌ இருக்கவேண்டும்‌ என்று பல தடவைகள்‌ சொல்லி இருக்கின்றார்‌ என்றும்‌ நான்‌ பந்தயங்கட்டிக்‌ கூறத்‌ தயாராக இருக்கிறன்‌. வருணாசிரம விஷயதிதில்‌ தோழர்‌ காந்தியார்‌, ¢ பிராமணன்‌, க்ஷத்திரியன்‌, வைசியன்‌, சூத்திரன்‌ என்கின்ற நான்கு வரப்புகள்‌ இருக்கவேண்டும்‌! என்றும்‌] 6 அய்ந்தாவதான சண்டாளர்‌ என்கின்ற வகுப்புக்கூடாது? என்றும்‌ ) ¢ அச்‌ சண்டாளர்‌ என்னும்‌ வகுப்பைச்‌ சூத்திரர்‌ என்னும்‌ வகுப்புடன்‌ சேர்க்க வேண்டும்‌? என்றும்‌ சொல்லுகிறார்‌. திண்டாதார்‌ கோயிலுக்குள்‌ போனால்‌ அவர்கள்‌ நிற்கவேண்டிய இடம்‌ எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கும்‌ ) தீண்டாமை என்பது போய்விட்டால்‌ தீண்டாதவர்களாய்‌ இருந்தவர்களுக்கு இந்துமதத்தில்‌ அவர்களுடைய நிலைமை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கும்‌-தோழர்‌ காந்தி அவர்கள்‌, “அவர்கள்‌ [தீண்டப்படாதவர்கள்‌] சூதீதிரர்‌ களுக்குச்‌ சமமாக-அதாவது, சூதீதிரர்கன்‌ இருக்கவேண்டிய இடத்தில்‌ இருக்கவேண்டியவர்களாகப்‌ பாவிக்கப்படுவார்கள்‌ ? என்று சொல்லி இருக்கிறார்‌. தோழர்‌ காந்தியாரைவிட வைதிகர்களும்‌, சனாதனதர்மிகளும்‌ எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்‌ கள்‌ என்பது எனது அப்பிராயம்‌. எப்படியெனில்‌, வைதிகர்‌ களுடைய அக்கிரமம்‌, அ?யாக்கிபத்தனங்கள்‌ எனப்பட்ட விஷமானது நன்றாகக்‌ குருடனுக்கும்‌ மூடனுக்கும்‌ தெரியும்படியாக இருக்கின்றது. காந்தியாரின்‌ விஷம்‌, மேலே சர்க்கரைப்‌ பூசீசுப்பூசி எப்படிப்பட்ட அறிவாளியும்‌? எடுத்துச்‌ சாப்பிடும்படியான மாதிரியில்‌ தயாரிக்‌ கப்பட்டிருக்கிறதுஃ ஆதலால்‌, வைதிகர்களது விஷத்தை யாரும்‌ சாப்‌ இட்டுச்‌ செதீதுப்போக மாட்டார்கள்‌ என்பதோடு, அவ்‌ விஷயங்கள்‌ வைதிகர்களையே கொல்‌ லுவதற்குத்தான்‌ பயன்படும்‌ என்றும்‌ சொல்லலாம்‌. ஆனால்‌, * காந்தியாரின்‌ விஷம்‌? எல்லோரையும்‌ அ ருந்தச்செய்து எல்‌ லா ரையும்‌ கொல்லதீ தக்க மாதிரியில்‌ பூச்சுப்‌ பூசப்பட்டிருக்கிறது என்பதோடு, காந்தியாரை மகாத்மா? வாக்கி பின்‌ சந்ததிகளையும்‌ கொல்லச்செய்யதீதக்கதாகும்‌ என்று சொல்லலாம்‌, ஆதலால்‌, வைதிகப்‌ பிரசீசாரதீதையும்‌ சனாதனப்‌ பிரச்சார தீதையும்‌ பகிஷ்‌கரிப்பதைவிட, காந்தி பிரச்சார த்தைப்‌ பகிஷ்கரிக்கவேண்டியது அவசியமும்‌ அவசரமும்‌ ஆகும்‌. [புரட்சி -தலையங்கம்‌--10-12-1933] www.thamizham.net - Free £ book 14௦ 3011 399 4, நிதி வசூல்‌ தோழர்‌ காநீதியார்‌ அவர்கள்‌ பார்ப்பன ஆதிக்கதீதிற்காக 1920-ல்‌ காங்கிரசின்‌ பேரால்‌ அதாவது, ¢ சுயராஜ்ய நிதி! என்று ஒரு கோடி ரூபாய்‌ வசூல்‌ செய்தகும்‌, அது பெரும்பான்‌ மை பார்ப்பனர்‌ கையிலேயே கொடுக்கப்பட்டுச்‌ செலவான கும்‌ யாரும்‌ அறிந்த 2தயாகும்‌. அதன்‌ பிறகு 1926--27-ல்‌ கதரின்‌ பேரால்‌ *கதர்‌ பண்டு? என்று சுமார்‌: 30 இலட்ச ரூபாய்‌ வரை வசூல்‌ செய்கார்‌. அதுவும்‌ பெரிதும்‌ பார்ப்பன ஆதிக்கத்துக்‌ காகவே--பார்ப்பனர்‌ கள்‌ கையாலேயே செலவுசெய்யப்பட்ட து. மறுபடி 1934-ல்‌ ¢ அரிசன பண்டு ? என்ற பெயரால்‌, தீண்டப்படாதவர்களுகீகு என்று 20, 30 இலட்ச ரூபாய்‌ வரை வசூல்‌ செய்கு, அகவும்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கதீதுக்காகவே- பார்ப்பனர்‌ வசம்‌ கொடுக்கப்பட்டு அவரீகளாலேயே செலவழிக்கப்பட்டும்‌ வந்து அதன்‌ பயனால்‌ இந்திய சட்டசபைத்‌ தேர்‌ தலும்‌ நடத்தப்‌ பட்டாய்விட்டது. முடிவாக சுயராஜ்யம்‌ என்ன ஆயிற்று என்பரைப்பற்றி நாம்‌ யாரையும்‌ கேட்கவேண்டிய தில்லை. எப்படியாவது தோழர்‌ சதீதியரழர் தீதி அய்யர்‌ ஒரு நாளைக்காவது முதல்‌ மந்திரி உத்தியோகம்‌ பார்த்து விட்டுப்‌ போய்விட வேண்டியது என்பதிலும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்களைவிட பிரிட்டிஷ்‌ ஆட்சியே மேல்‌ என்பதிலும்‌ வந்து முடிந்து விட்டதுடன்‌, அரசியல்‌ திட்டத்தில்‌ ஏற்பட்ட பாதுகாப்புக்களுக்கெல்லாம்‌ ¢ நாங்களும்‌, எங்கள்‌ கொள்கைகளுமேதான்‌ காரணம்‌ ? என்று காங்கிரஸ்காரர்கள்‌ பெருமை பேசிக்கொள்ளுவதிலும்‌ வந்து நிற்கிறது. இனி, சமிபதீதில்‌ புதிய அரசியல்‌ திட்டத்தின்படி ஏற்படப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்குச்‌ சில புதிய கொள்கைகளின்‌ பேரால்‌ 10, 20 இலட்சம்‌ ரூபாயாவது புதிய பணமாக வேண்டியிருக்கிறது. அதை ¢ அரசியல்‌ சம்பந்‌ தமில்லாதது? என்று சொல்லிக்‌ கொண்டு, அதன்‌ பேரால்‌ வசூல்‌ செய்யவேண்டியதாக இருக்கிறது. கூடிய சீக்கிரம்‌ அந்த இரகசியமும்‌ முயற்சியும்‌ வெளியாகப்‌ போகிறது. அது என்னவென்றால்‌, அதுதான்‌ * கிராமப்‌ புனருதீதாரணமாம்‌ 1; அதற்காக வேறு பண்டு வசூலிக்கவேண்டும்‌ என்பதாகும்‌, அதற்காக, காந்தியார்‌ அடுத்த மாததீதிலிருந்தே சுற்றுப்‌ பிரயாணம்‌ புறப்படப்‌ போகிறாராம்‌. தேர்தலில்‌ ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கிறோம்‌ என்று காங்கிரஸ்‌ பக்தர்கள்‌: இப்பொழுதிநுந்தே தேர்தல்‌ ஆசை பிடிதீதவர்களிடமும்‌ ஏமாந்த சோணகிரிகளிடமும்‌ பணம்‌ வசூல்‌ செய்ய அஸ்திவாரம்‌ போட்டு வருகிறார்கள்‌. கிராமப்‌ புனருதீதாரணப்‌ பண்டுக்கு வசூலாகும்‌ தொகை சுயராஜ்ய பண்டு, கதர்‌ பண்டு, தீண்டாமைப்‌ பண்டு ஆகிய பண்டுகள்‌ அடைந்த கதிதான்‌ அடையப்போகும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ சந்தேகம்‌ வேண்டியதில்லை. கதர்‌ இன்று என்ன நிலையில்‌ இருக்‌ கின்றது! இத்தனை நாள்‌ பொறுத்து இப்போது தான்‌ காந்தியார்‌, நான்‌ இயந்திரத்துக்கு வி$ராதியில்லை? -ஏன்றும்‌ ; ¢ திராட்டினமும்‌ ஒரு இயந்திரம்‌ தான்‌? என்றும்‌) * மனித வாழ்க்கைக்கு உபயோகமான எல்லா இயந்திரங்களையும்‌ ஆதரிப்பேன்‌ ? என்றும்‌ சொல்லி விட்டார்‌. எனவே, கைராட்டினம்‌, கை நெசவு எல்லாம்‌ இனிப்‌ பறக்க வேண்டியதுதான்‌ ; இதுவே இன்றைய கதரின்‌ நிலையாகும்‌. தீண்டாதார்‌ களுக்காக இதுவரை என்ன காரியம்‌ நடந்தது என்று பார்த்தால்‌, தீண்டாமை விலக்குக்கு இப்போது சட்டம்‌ கொண்டு வரக்‌ கூடாது என்பதோடு முடிந்தது. ஆகவே, கிராமப்‌ புனருத்தாரணம்‌-கைக்‌ குத்து அரிசியும்‌, கை ஆலை வெல்லமும்‌ சாப்பிட வேண்டும்‌? என்ற பிரச்சாரத்தோடு முடியப்‌ போகிறது. இத்‌ நிலையில்‌, இதற்காக ஒரு பண்டு தேவையா என்று கேட்கின்றோம்‌. போனது போகட்டும்‌) 4-வது பண்டு வசூல்‌ விஷயதீதிலாவது உஷாராய்‌ இருங்கள்‌ என்று எச்சரிக்கை செய்கிறோம்‌. [₹ குடி அரசு -அறிக்கை--30-6-1935] www.thamizham.net - Free £ book 14௦ 3011 400 5. காந்தி தோழர்‌ காந்தியார்‌, பார்ப்பனரல்லாதாரைப்‌ பார்தீது நீங்கள்‌ பாடுபட்டு மற்ற மக்களுக்கு உழைத்குப்‌ போட வேண்டுமேயொழிய, உங்கள்‌ பெட்டிகளில்‌ சிறிய வெள்ளி நாணயம்கூட இருக்கக்கூடாது? என்று சொல்லிவருவகும்‌) பழைய வருணாசிரம முறையை அமைக்கவே சுயராஜ்யம்‌ கேட்கிறோம்‌? என்று சொல்லுவதும்‌) * வருண: முறைப்படி அவனவன்‌ தகப்பன்‌ செய்த தொழிலைத்தான்‌ அவனவன்‌ மகன்‌ செய்ய வேண்டும்‌? என்று சொல்லுவதும்‌ ] ¢ அதற்காகவேதான்‌ வார்தா திட்டம்‌ வகுத்திநுக்‌ கிறேன்‌ ! என்று கூறுவதும்‌-அதை அனுசரித்‌3த இன்று மதுவிலக்கு என்கின்ற சாக்கை வைதீதுக்‌ கிராமப்‌ பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு, ¢ ஊர்ச்‌ சாவடியில்‌, கிணற்று மேட்டில்‌, நதீசத்தில்‌--அட்டையில்‌ வாசகம்‌ எழுதிக்‌ கட்டச்செய்து, அதைத்‌ தெருவில்‌ வருகிறவர்‌ போகிறவர்களைக்கொண்டு கேட்டுத்‌ தெரிந்து கொள்வதன்‌ மூலம்‌ பிள்ளைகள்‌ படிக்க வேண்டும்‌ ? என்று சொல்லுவதும்‌ ஆகும்‌. குடிஅரசு *-தலையங்கம்‌--7-8-1938: கு 4. பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ 1. அம்பலத்து அதிசயம்‌ தேச விடுதலை விஷயதீதில்‌ பிராமணரல்லாதார்‌ பொதுநன்மையை உத்தேசித்து, அனேக பிராமணர்களுடைய கொடுமைகளையும்‌, சூழ்ச்சிகளையும்‌ கூட்டாக்காமல்‌ கபடமற்றுப்‌ பிராமணர்களுடன்‌ ஒத்துழைத்து வந்திருந்தாலும்‌, அவர்களுடைய உழைப்பை யெல்லாம்‌ தாங்கள்‌ தங்கன்‌ வகுப்புச்‌ சுயநலதீதிற்கென்று அனுபவிதீதுகீ கொள்வதல்லாமல்‌, உழைக்கின்ற பிராமணரல்லாதாருகீகு எவ்வளவு கெடுதிகளையும்‌ இரோகங்களையும்‌ செய்து வந்திருக்கிறார்‌ களளன்பதை-செய்து வருகின்‌ றார்களென்‌: பதைப்‌ பொறுமையோடு படித்து அறிய3வண்டுமாய்க்‌ கோருகிறோம்‌. முதலாவது, பழங்காலதீ திய தேசியவாதிகளுள்‌ சிறநீதவர்களில்‌ சர்‌. சி. சங்கரன்‌ நாயர்‌ என்கின்ற பிராமணரல்லாதார்‌ முக்கியமானவர்‌ ஆவார்‌, அவர்‌ காங்‌ரசிலும்‌ தலைமை வகித்தவர்‌. அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல்‌ தடுப்பதற்காக, பிராமணர்கள்‌ எவ்வளவோ சூழ்ச்சிகள்‌ செய்துவந்தார்கள்‌. அவருக்குக்‌ கிடைக்கவிருந்த அய்க்கோர்ட்‌ ஜட்ஜ்‌ பதவியைக்‌ கிடைக்கவொட்டாதபடிக்குச்‌ செய்ய எவ்வித பொது நலதீதிலும்‌ தலையிட்டிராத சர்‌. வி. பாஷ்யம்‌ அய்யங்கார்‌ போன்‌ றவர்களும்‌ மற்றும்‌ அனேக பிராமண வகீகில்களும்‌ சீமைக்கெல்லாம்‌ தந்திகொடுதீததோடல்லாமல்‌, அவர்பேரில்‌ எவ்வளவோ பழிகளையெல்லாம்‌ சுமத்திக்‌ கஷ்டப்படுத்தினார்கள்‌. அதன்‌ காரணமாக 4,5 வருடங்கட்கு முன்னதாகக்‌ கிடைக்கவேண்டிய அய்க்கோர்ட்‌ ஜட்ஜ்‌ பதவி வெகுகாலம்‌ பொறுத்துத்தான்‌ கிடைத்தது. டாக்டர்‌ டி. எம்‌. நாயர்‌ அக காலத்திய கேசியவாதிகளில்‌ மிகவும்‌ முக்கியமான பிராமணரல்லாத தேசியவாதி, அவர்‌ எவ்வளவோ பொதுக்‌ காரியங்களில்‌ ஈடுபட்டிருந்தவர்‌ஃ அவரையும்‌ மயிலாப்பூர்‌ பிராமணர்கள்‌ ஓர்‌ முனிசிபாலிட்டியில்கூட அவர்‌ உட்காருவதைப்‌ பொறுக்காமல்‌, அவருக்கு விரோதமாகச்‌ சூழ்ச்சிகளைச்‌ செய்து அவரையும்‌ உபத்திரவப்‌ படுத்தினார்கள்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்படுத்துவதற்கு நமது நாட்டில்‌ ஏற்பட்ட முக்கியமான. காரணங்களில்‌ இவையிரண்டும்‌ முதன்மையான9தன்று ஓர்‌ காங்கிரஸ்‌ பிராமண பிரசிடெண்டே நம்மிடம்‌ செல்லியிருக்கிறார்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 i ட்ட | தராசுக்கொ ப்பட கற்க வப்பட்ட தென்னிந்‌ r (South Indian Loberal Federation) நீதிக்‌ தராசுக்கொடி www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 401 : இவ்விதமான கஷ்டங்களிலிரு $து பிராமணரல்லாதாரைக்‌ காப்பாற்றுவதற்காக | வேண்டு; முக்கிய காங்கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர்‌. நாயர்‌ போன்ற பிராமணரல்லாத தலைவர்களால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியென்று ஓர்‌ ஸ்தாபனம்‌ ஆரம்பிக்கப்பட்ட து. | அதை ஒழிப்பதற்காகப்‌ பிராமணர்கள்‌ சூழ்ச்சிசெய்து அதற்கு எதிரிடையாக பிராமணரல்லாதார்‌ சிலரைப்‌ பிடித்தே சென்னை மாகாணசி சங்கமென்ற ஒன்றை ஆரம்பிக்கச்‌ செய்து, அதற்கு வேண்டிய பொருள தீதனையும்‌ பெரும்பான்‌ மையாக பிராமணரே உதவி, *தேச பக்தன்‌ ! என்ற தமிழ்த்‌ தினசரிப்‌ பத்திரிகையையும்‌ ¢ இந்தியன்‌. பேட்ரியட்‌ ? என்ற ஆங்கில தினசரிப்‌ பத்திரிகையையும்‌-ஜஸ்டிஸ்‌ கட்சியைக்‌ கொல்லுவதற்‌ காகவே பிரச்சாரம்‌ செய்யும்பொருட்டு-ஏற்பாடு செய்துகொடுதீ து, ஜஸ்டிஸ்‌ கட்சித்‌ தலைவர்களுக்கும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்கும்‌ செல்வாக்கு இல்லாமல்‌ அடிதீதார்கள்‌. ¢ இந்தியன்‌: பேட்ரியட்‌ ? பத்திரிகையை தங்கள்‌ வேலையை முடிதீதுக்கொண்டவுடனே ஒழித்து விட்டார்கள்‌, எஞ்சிபிருந்த * தேச பக்தன்‌? பத்திரிகையைத்‌ தேசத்தில்‌ அதற்குக்‌ கொஞ்சம்‌ செல்வாக்கு ஆரம்பித்தவுடனே, அதில்‌ ஹீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌ ஆசிரியரா யிருப்பதை ஒழிக்கவேண்டுமென்னும்‌ முக்கிய கருதீ.துடன்‌, அவருக்கு வி2ராதமாகச்‌ சில பிராமணரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பிராமணர்களும்‌ இரகசியமாக அப்‌ பத்திரிகைக்கு விரோதமாகத்‌ தமிழ்நாட்டில்‌ பிரச்‌ ஈரம்‌ செய்து, ஜரீமான்‌ மு கலியாரவர்களே * தேசபக்தனை ? விட்டு ஓடிப்போகும்படியாகச்‌ செய்கு விட்டார்கள்‌. அதற்குப்‌ பிறகு அப்‌ பத்திரிகைக்குப்‌ பிராமணர்களே ஆசிரியர்களும்‌ எஜமானர்‌ களுமாகி, மெதுவா உ நழுவ விட்டுக்கொண்டார்கள்‌. இதேமாதிரி, சென்னை மாகாண சங்கத்திலும்‌, பிராமணர்‌ களின்‌ சொற்படி நடந்துகொண்டிருந்த சிலர்‌ ஆதிக்கம்‌ பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து, அவர்களைக்‌ கொண்டே தங்கள்காரியமெல்லாம்‌ முடிந்‌ துபோன வுடன்‌ மறையும்படி. செய்துவிட்டார்கள்‌, இவையெல்லாம்‌ பழைய காங்கிரசின்‌ கொள்கைப்படி ஏற்பட்ட திருவிளையாடல்‌ களென்றாலும்‌, ஒத துழையாமை ஏற்பட்ட காலத்தில்‌ பிராமணரல்லாத தேச பக்தர்களுக்குச்‌ செய்த கொடுமைகளில்‌ சிலவற்றைக்‌ கீழே குறிக்கிறோம்‌ ₹ ஒதீதுழையாமை ஆரம்பிப்பதற்குக்‌ கொஞ்ச நாளைக்கு முன்பாக சென்னையில்‌ தேசிய வாதிகளின்‌ சங்கமொன்று (Nationalists Association) என்று ஒன்றை ஆரம்‌ பிதீதார்கள்‌. அதற்கு ஜ்ரீமான்‌ சி. விஜயராகவாசீசாரியார்‌ அவர்கனை அஃரரசனராக வைதீது உப அகீராசனார்‌ ஸ்தானத்துக்கு ஜீமான்‌ வி. ஓ. சிதம்பரம்‌ பிள்ளை அவர்கள்‌ பெயரைப்‌ பிரேரேபிதீதவுடன்‌, அவருக்கு அந்த ஸ்தான த்தைக்‌ கொடுக்க இஷ்டமில்லாதவர்‌. களாகி, அதை அவர்‌. அடையவிடாமல்‌ செய்வதற்கு எவ்வளவோ பிரயதீதனங்களைப்‌ பிராமணர்கள்‌ செய்தார்கள்‌. இதைப்‌ பிராமணரல்லாதாரில்‌ சிலர்‌ தெரிந்து, அப்போதே கூச்சல்‌ போட்டதின்‌ பலனாக, அனேக உப அகராசனாதிபதிகளை ஏற்பாடு செய்கு; அந்த ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பில்லாமல்‌ அடிக்கப்‌ பார்த்தார்கள்‌, இதன்‌ பலனாக, அதன்‌ நிர்வாக சபைகளில்‌ பிராமணரல்லாதாரை அதிகமாகப்‌ போடும்படி நேரிட்டது. இதன்‌ காரணமாக; தேசியவாதிகளின்‌ சங்கமென் பதைக்‌ குழந்தைப்‌ பருவத்திலேயே கழுத்தைதி திருகிக்‌ கொன்று போட்டார்கள்‌. பிறகு, திருப்பூரில்‌ கூடிய தமிழ்நாடு மாகாண கான்பரண்‌ சுக்கு ஜரீமான்‌ வரதராஜுலு நாயுடு அவர்களை அகீராசனம்‌ வகிக்கவேண்டுமென்று சிலர்‌ பிரேரேபித்கார்கள்‌. அதற்கு விரோதமாக “இந்து, சுதேசமித்திரன்‌ !, ¢ சுயராஜ்ய? ஆகிய மூன்று பத்திரிகைகளும்‌ அதுசமயம்‌ நாயுடு அவர்கள்‌ கான்பரன்சில்‌ தலைமை வகிக்கத்‌ தகுதியற்றவரென்று எழுதி வந்ததோடு, பிரேரேதீதவருக்கும்‌ இம்‌ மாதிரி பிரேரேபித்தது தப்பிதமென்று சொல்லியும்‌, அ3னக ஜில்லாக்கள்‌ பெரும்பான்மையாய்‌ ஜரீமான்‌ வரதராஜுலு நாயுடுவையே தெரிந்தெடுத்திருந்தும்‌, ஜீமான்‌ ஆதிநாராயண செட்டியாரவர்களைக்‌ கொண்டும்‌, ஜீமான்‌ ஏ. ரங்கசாமி அய்யங்கார்‌ திருப்பூருக்குச்‌ 1686-51 www.thamizham.net - Free £ book 14௦ 3011 402 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ சென்றதின்‌ பலனாயும்‌, உபசரணைக்‌ கமிட்டியாரை வசப்படுத்தி, இவருடைய தேரீ தலை ஒப்புக்கொள்ளாமல்‌ நிராகரிக்கும்படி செய்துவிட்டார்கள்‌. பிறகு, மாகாண காங்கிரஸ்‌ கமிட்டியார்‌ பிரவேசித்து, அவரை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று தங்களுடைய அதி காரதீதைக்‌ கொண்டு நிர்ப்பந்தட்படுதீதியதின்‌ பேரில்‌, சுயமரியாதையுள்‌ எவர்‌ ஒப்புக்‌ கொள்ள முடியாதவாறு உள்ள ஓர்‌ தீர்மானத்தைப்‌ போட்டு, அவரையே ஒப்புக்கொண்ட மாதிரியாய்தீ தெரியப்படுத்தினார்கள்‌. இத்‌ தீர்மானத்தின்‌ போக்கு யோக்கியதையற்றதா யிருந்தபடியால்‌, ஜமான்‌ நாயுடு அதைத்‌ தமக்கு வேண்டாமென்று நிராகரிக்கும்படி யாயிற்று. பிறகு, திடீரென்று ஜீமான்‌ எம்‌. ஜி. வாசுதேவரய்யரவர்களைக்‌ கொண்டு ௮ம்‌ மாநாட்டை நடதீதிக்கொண்டார்கள்‌. அதற்கு அடுத்தாற்போல்‌, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டிக்கு அகீராசனாதிபதியாகப்‌ பெரும்பான்மையோரால்‌ ஜீமான்‌ ஈ.வி. ராமசாமி நாயக்கர்‌ அவர்கள்‌ தெரிந்தெடுக் கப்பட்ட போது, தெரிந்தெடுக்‌ கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்‌ ஸ்ரீமான்‌ வ. வெ. சு. அய்யரவர்கள்‌ ¢ நம்பிக்கையில்லை ! என்னும்‌ தீர்மானம்‌ கொண்டு வந்தார்கள்‌. அந்தச்‌ சமயத்தில்‌ ஜரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌, இது இராஜீய நோக்கதீ. துடன்‌ கொண்டுவந்த தீர்மானமல்ல வென்றும்‌, அது ஓர்‌ பிராமணரல்லாதார்‌ இந்த ஸ்தானம்‌ பெறுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென்கிற வகுப்புத்‌ துவேஷதீதின்‌ மேல்‌ கொண்டு வந்ததென்றும்‌ பொருள்பட உக்கிரமாய்‌ அப்பொழுதே பேசியிருக்கிறார்‌. இத்‌ தீர்மானம்‌ ஜீமான்‌ வ. வெ. சு. அய்யர்‌ கொண்டு வந்ததின்‌ பலனாய்‌ சில நாட்களுக்குள்‌ ஜீமான்‌ என்‌. சீனிவாசய்யங்காரால்‌ அய்யரவர்களுக்கு குருகுலத்திற்கென்று ரூ. 500 நன்கொடை அளிக்கப்பட்டது. இவ்வருஷம்‌ காஞ்சீபுரதீதில்‌ நடக்கப்போகும்‌ தமிழ்‌ மாகாண மாநாட்டிற்கு ஹீமான்‌ கலியாண சுந்தர முதலியாரை சில ஜில்லா கமிட்டிகள்‌ தெரிந்தெடுத்திருந்தும்‌, அதை வெளியாருக்குத்‌ தெரிவிக்காமல்‌ இரகசியமாய்‌ வைத்துக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்‌ களுக்கு ஆகும்படி இரகசியப்‌ பிரச்சாரங்களும்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னெல்லாம்‌ யார்‌ யாரை எந்தெந்த ஜில்லாக்கள்‌ தெரிந்தெடுத்தன என்பது பதீதிரிகைகளில்‌ வருவது வழக்கம்‌. இப்பொழுது, உபசரணைக்‌ கமிட்டியாரும்‌ தெரிவிக்‌ காமல்‌ பதீதிரிகைக்காரர்களும்‌ தெரிவிக்காமல்‌, இரகசியமாக வைக்கப்பட்டிருகீகிற து. தவிர, கும்பகோணம்‌ காங்கிரஸ்‌ கமிட்டி, ஹரீமான்‌ வரதராஜுலு நாயுடு தமது காங்கீரஸ்‌ கமிட்டி தலைவர்‌ பதவியை இராஜி.நாமா செய்யவேண்டுமென்று தீர்மானமொன்று செய்திருக்கிறது. சென்னை காங்கிரஸ்‌ கமிட்டி, ஜீமான்கள்‌ ஈ, வி. இராமசாமி நாயக்கரையும்‌, சுரேந்திரநாதீ ஆரியாவையும்‌ கண்டித்து ஓர்‌ தீர்மானம்‌ செய்திருக்கிறது. நன்னிலம்‌ பொ.துக் கூட்டத்தில்‌, னுமான் கள்‌ ஈ. வி. இராமசாமி நாயக்கர்‌, கலியாணசுந்தர முதலியார்‌, ஆரியா ஆகிய இவர்‌ களைக்‌ காங்கிரசினின்று வெளியாக்க வேண்டுமென ஹஜீமான்‌ சீனிவரசய்யங்கார்‌ பேசியிருகீ கிறார்‌ஃ சட்டசபையில்‌ காங்கிரஸ்‌ பிராமண மெம்பர்களுடைய வேலை, பிராமணரல்லாத ருடைய ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டுமென்பதும்‌, பிராமணரல்லா தாருக்கு எ திரிடையாய்‌ நிற்க வேண்டுமென்பதுமேயென்று சட்டசபையில்‌ எலெக்‌ஷன்‌ ஆனவுடனேயே ¢ சுதேசமிதீ திரன்‌? பத்திரிகை எமுதியுமிருக்கிறது. சட்டசபையில்‌ ஒரு பிரசமணர்‌, எங்களுக்கு உத்தி யோகம்‌ கொடுக்காவிட்டால்‌ ஒத்துழையாமைக்‌ கட்சியில்‌ சேர்‌ நீ துவிடூவாமென சர்க்காரை மிரட்டியிருக்கிறார்‌. அன்றி, வைக்கம்‌ சதீதியாக்கிரகதீதின்‌ மூலமாய்‌ அடைந்த தண்டனை யிலிருந்து னீமான்‌ ஈட வி. இராமசாமி நாயக்கர்‌ விடுதலையாகி தமிழ்நாட்டுக்கு வந்தவுடன்‌ மறுபடியும்‌ வைக்கம்‌ போகாமலிருப்பதற்காக வேண்டி, ஓர்‌ பிராமண மெம்பரையும்‌, ஓர்‌: பிரரமண அட்வகேட்‌ ஜெனரலையும்‌ கொண்ட கவர்மெண்ட்‌, எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன்னால்‌ பேசிய பழைய குப்பைகளை ஆதாரமாக வைத்து, கராஜ துரோக முதலிய கேஸ்‌ எடுத்து, அதன்‌ மூலமாகக்‌ கைதியாகீகிக்‌ கொண்டுபோனார்கள்‌. பிராமணர்களின்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 403 பொல்லாத வேளையாய்‌, ஓர்‌ பிராமணரல்லாத மாஜிஸ்ட்ரேட்டிடம்‌ அந்தக்‌ கேஸ்‌ நடந்த படியால்‌, கேஸ்‌ ஒன்றும்‌ ௬ுஜுவாகவில்லையென்றும்‌, அவர்‌ கேசை முடித்துக்‌ தண்டிக்‌ காமல்‌ திருப்பி ஓட்டிவிட்டார்‌. இவ்வளவுமல்லாமல்‌, ¢ பிரமணரல்லாத மந்திரிகள்‌, பெரிய உதீதியோசஸ்தர்கள்‌ இலஞ்சம்‌ வாங்குகிறார்கள்‌. இலஞ்சம்‌ வாங்குகிறவர்கள்‌ அது செய்‌ கிறார்கள்‌, இது செய்கிறார்கள்‌! என்று கிராமம்‌ கிராமமாய்‌, ஊர்‌ ஊராய்ப்‌ பிரச்சாரம்‌ செய்‌ வதற்குப்‌ பணம்‌ செலவுசெய்து, ஆட்களை ஏற்படுத்திப்‌ பிரச்சாரம்‌ செய்து, அவர்கள்‌ பேரில்‌ தப்பபிப்பிராயதீதைக்‌ கற்பிதீது வருகிறார்கள்‌. குருகுலம்‌ சம்பந்தமாய்‌ நடந்த மீட்டிங்குகளில்‌ பிராமணர்கள்‌ கல்லெடுதீதுப்‌ போட்‌ டார்கள்‌. சென்னை கார்ப்ப?ரஷன்‌ தேர்‌ தல்களில்‌, ஜீீமான்‌ ஆரியாவை ஆட்களைவிட்டு அடித்தார்கள்‌. பொதுவாய்‌ ஏழைகளுக்கும்‌, முக்கியமாய்‌ பிராமணரல்லாதார்களுக்கும்‌ அவசியமான தாகிய மதுவிலக்கு, தீண்டாமை முதலிய திட்டங்களைக்‌ காங்கிரசை விட்டு ஓட்டிவிட்டார்கள்‌. போதாக்குறைக்குக்‌ கதரும்‌ காங்கிரசில்‌ இருக்கக்‌ கூடாதென்று பூனா பிராமணப்‌ பத்திரிகைகள்‌ இப்பொழுதே எழுத ஆரம்பிதீதுவிட்டன. திதைப்பற்றிச்‌ சென்ற வார3ம ¢ குடி அரசில்‌ ? ஜோசியம்‌ கூறப்பட்டிருக்கிறது. பிரரமணரல்லாதார்‌ தெய்வத்தின்‌ ராலும்‌ கூடஷ்தீதிரங்களின்பேராலும்‌ காணிக்கை, வேண்டுதல்‌ மூலமாகக்‌ கொடுக்கின்ற பணம்‌ ஒழுங்கான வழியில்‌ செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்ட்‌(&௦டான.க, பிராமணர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புக்‌ சளுக்கும்‌ கண்டனங்களுக்கும்‌ தப்பி நிறைவேறி விட்டபடியால்‌, இப்போது அந்த ஆக்ட்டே செல்லாதென்றும்‌, அதை எடுத்கவிட வேண்டுமென்றும்‌, அதை இப்போது அமுலிலில்‌ லாமல்‌ சஸ்பெண்டு செய்வதற்கு இன்‌ ஜங்ஷன்‌ தடை கோரி, அய்க்கோர்ட்டில்‌ மகநீதுக்கள்‌ பேரால்‌ வியாஜ்யம்‌ தொடுதீது இருக்கின்றார்கள்‌. இதற்கு வக்கீல்களோ, ஜீமான்கன்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌, டி. ரங்காசீசாரியார்‌, டி. இராமச்சந்திர அய்யர்‌--மகந்து பக்கமும்‌ இதற்கு எதிர்‌ வக்கீலாய்‌ ஏற்பட்டவரோ அட்வகேட்‌ ஜெனரலான ஜரீமான்‌ டி. ஆர்‌. வெங்‌ கட்டரமண சாஸ்திரீகள்‌ என்ற பிராமணருமே. இந்த ஆக்ட்‌ ஒழிய வேண்டுமென அய்க்கோர்ட்டில்‌ பிராது தொடுதீதிருநீதாலும்‌, இந்த ஆகீட்டின்‌ மூலமாய்‌ ஏற்பட்ட உத்தி யோகங்களெல்லாம்‌ தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீசையும்‌ மந்திரி வீடுகளையும்‌ பிராமணர்கள்‌ சுற்றிக்கொண்டு வருகிறார்கள்‌. இவையெல்லாமிருக்க, மகாதீமாவையே ஒழிப்பதற்காக, ¢ பிராமணன்‌? என்கின்ற ஓர்‌ பத்திரிகையையும்‌ சங்கராசீசாரியார்கள்‌, மகந்துக்கள்‌ மூதலிய பிராமண சிரேஷ்டர்க ளென்போரின்‌ ஆதரவில்‌ ஆரம்பிதீதிருக்கிறார்‌கள்‌. மற்றொரு பக்கம்‌ மகாதீமாவின்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு பதவிகளையும்‌ சட்டசபை ஸ்தாபனங்களையும்‌ பெறுவதற்கு, பிராமணரல்லாதாரை ஏமாற்றியும்‌ அலைந்துகொண்டுமிருக்கிறார்கள்‌. இதற்குச்‌ சில பிரரமணரல்லா தாரையும்‌ மிரட்டி சுயாதீனப்‌ படுதீதிக்கொண்டார்கள்‌. தினசரிப்‌ பத்திரிகைகள்‌ தங்கள்‌ கைகளில்‌ இருக்கிற காரணங்களால்‌, பாமர ஜனங்‌ களை ஏமாற்றித்‌ தங்கன்‌ வசப்படுத்திக்‌ கொள்வதோடு, சில முக்கியமான பிராமணரல்லா தாரைத்‌ தலையெடுக்கவொட்டாதபடி பதீதிரிகைகளில்‌ ஊர்‌, பெயர்‌ தெரியாத பிராமண: ரல்லாதாரின்‌ பொய்ப்‌ பெயர்களையிட்டுத்‌ தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும்‌ $ பிராமண வக்கீல்களிடம்‌ (அப்ரெண்டிஸ்‌)--அதாவது வேலை படிக்கும்‌ பிராமணரல்லாத வக்கீல்களான வாலிபர்களின்‌ கையெழுத்தைப்‌ போடச்செய்து அவர்கள்‌ பெயரால்‌ பிராமண: ரல்லாதாரை வைது பதீதிரிகைகளில்‌ எழுதுவதும்‌ ) வயிற்றுக்‌ கல்லா தவர்‌ களினுடையவும்‌, பணதீதாசை பிடி தீதவர்களினுடையவும்‌ தேச பக்தியையும்‌ விலைக்கு வாங்கிக்கொண்டு, அவைகளைப்‌ பிராமணரல்லாதாருக்கு விரோதமாக வியாசப்படுத்தி பணச்‌ செருக்கால்‌ செய்து வருவதும்‌,--சென்னைத்‌ தேர்தல்களிலும்‌ மற்ற தேர்தல்களிலும்‌ தெரிந்து போயிருக்கிறது. www.thamizham.net - Free £ book 14௦ 3011 404 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ஸ்தல ஸ்தாபனங்களில்‌ பிரரமணரல்லாதாருக்குள்‌ கட்சி! பிரதி கட்சிகளை உணர டாக8, இவர்களைக்‌ கோர்ட்டுக்குச்‌ செல்லும்படி செய்வதும்‌ சில பிராமணர்களேயாகும்‌. பிராமணரல்லாதாருக்குதி தேசியப்‌ பிராமணர்கள்‌ செய்துள்ள கொடுமைகள்‌ இவ்வளவுதானென வரையறுத்துவிட முடியாது. அவர்கள்‌ செய்தவையும்‌, இன்னும்‌ செய்யப்போவதுமான காரியங்கள்‌ எவ்வளவோ இருக்கின்றன. அவைகளை சமயம்‌ நேரும்போது வெளியிட நாம்‌ பின்வாங்கப்‌ போவதில்லை. இவ்வளவெல்லாமிருக்கும்போது, சென்னை காங்கிரஸ்‌ கமிட்டியார்‌, ஏரீமான்கள்‌ இராமசாமி நாயக்கரவர்கள்‌ மீதும்‌, ஆரியா அவர்கள்‌ மீதும்‌ கண்டனத்‌ தீர்மானம்‌ செய்திருப்பதை நாம்‌ கிலட்சியம்‌ செய்யவேண்டிய தில்லை என எண்ணுகிறோம்‌. [தலையங்கம்‌--1 குடி அரசு 18-10:1925) 2. தமிழர்‌ மாநாடுகள்‌ காஞ்சிபுரதீகில்‌ 91-வது இராஜீய மாநாடு நாளது நவம்பர்‌ மாதம்‌ 21, 22 தேதிக ளான சனி, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ சென்னை * நவசக்தி? ஆசிரியர்‌ ஜமான்‌ திரு. வி. கலியாணசு நீதர முதலியாரவர்கள்‌ அக்ராசனத்தின்கீழ்‌ கூடும்‌. அது சமயம்‌ சரீவகட்சியார்‌ களுமடங்கிய பிராமணரல்லாதார்‌ மாநாடு ஒன்றும்‌ கூடும்‌. பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்தில்‌ கரிசனமுள்ள தமிழ்நாட்டுப்‌ பிராமணரல்‌ லாதார்‌ அனைவரும்‌ வந்திருந்து, தங்களது முன்‌2னற்றத்திற்கான ஒரு திட்டத்தைகீ காணவும்‌, அதைச்‌ சரிவர அமுலுக்குக்‌ கொண்டுவரவும்‌ ஏற்பாடு செய்ய வேண்டுமாய்கீ கேட்டுக்கொள்ளுகிறேன்‌. இது விஷயதீதில்‌ ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ இராஜீய அபிப்பிராய பேதங்‌ காரண மாகவாவது, சொந்த அசவுகரியங்‌ காரணமாகவாவது அலட்சியமாய்‌ இ நநீதுவிடாமல்‌ கண்டிப்பாய்‌ வரவேண்டுமாய்‌ மறுபடியும்‌ வினயதீதுடன்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும்‌ முக்கியமான தொரு கடனாகும்‌. ஏனெனில்‌, தீண்டாதார்களின்‌ முன்னேற்றந்தான்‌ பிராமணரல்லாதார்‌. களின்‌ முன்னேற்றமாகும்‌. தீண்டாதார்களின்‌ இன்பந்தான்‌ பிராமணரல்லாதாரின்‌ இன்பமாகும்‌. தீண்டாமை ஒழிவதன்‌ மூலமாய்தீதான்‌ பிராமணரல்லாதார்‌ கடைத்தேற முடியும்‌. தீண்டாமை ஒழிவதன்‌ மூலமாய்தீதான்‌ நாடு சுயராஜ்யமடையும்‌. ஆதலால்‌, தீண்டாமை விலக்கில்‌ கவலையுள்ள வர்களும்‌, தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும்‌ அவசியம்‌ காஞ்சிபுரத்திற்கு வந்து, அதற்கென்று ஓர்‌ மாநாடு கூட்டி, காரியத்தில்‌ பலன்‌ தரதீதக்க திட்டங்களைக்‌ காணவேண்டுமாயும்‌ கேட்டுக்கொள்ளுகிறேன்‌. [அறிக்கை குடி அரசு? 15-11-1925] 8. தமிழ்த்‌ தினசரிப்‌ பத்திரிக்கை இப்போது தமிழ்நாட்டில்‌ பெரும்பாலாராகிய ஆதித்‌ தமிழ்‌ மகீகளுகீகு மிகவும்‌ முக்கியமாயும்‌ அவசரமாயும்‌ வேண்டியது பொதுநோக்குடைய ஒரு தமிழ்த்‌ தினசரிப்‌ பதீதிரிக்கையேயாகும்‌. தமிழ்‌ நாட்டில்‌ தற்காலம்‌ உலவிவரும்‌ தமிழ்த்‌ தினசரிப்‌ பத்திரிக்கைகள்‌ மூன்று, அதாவது * சுதேசமித்திரன்‌ , ¢ திராவிடன்‌ £, * சுயராஜ்ய? ஆகிய இவைகளே. இவற்றில்‌ * சுதேசமித்திரன்‌ ! முதலில்‌ தோன்றியது. இதன்‌ முக்கிய கொள்கை, பழைய காங்கிரஸ்‌ .கொள்கைகளைப்போல்‌--அர சாங்கதீதினிடமிருந்து பதவி களும்‌ உத்தியோகமும்‌ மக்கன்‌ அடையக்‌ கிளர்ச்சி செய்வதாயிருந்தது. கிதன்படி, பதவி www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 405 களும்‌ உதீதியோகங்களும்‌ கிடைக்கக்‌ கிடைக்‌௨ அவையெல்லாம்‌ தங்கள்‌ சமூகமாகிய பிராமணர்களுக்கே கிடைக்கும்படியாகவம்‌, பிராமணர்‌ கள்‌ தாம்‌ உயர்ந்தவர்‌ கன்‌ அவர்கள்‌. தாம்‌ அறிவாளிகள்‌ என்றும்‌, மற்றும்‌ பிராமணமதம்‌ ஆக்கம்பெறவும்‌ உழைதீது வந்கது, கம்‌ மட்டோடல்லாமல்‌, வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும்‌ பதவிகளும்‌ அந்தஸ் துகளும்‌ கீர்தீதிகளும்‌ உண்டாவதைக்‌ கூற்றுவன்‌ பரல்‌ நின்று தடுத்துக்கொண்டேயும்‌ வந்தது இச்‌ சூழ்ச்சி வெகுகாலமாய்‌ பிராமணரல்லாதாருக்குதீ தெரியாமல்‌ இருந்‌ துவிட்டதால்‌, சகல பதவிகளும்‌ அரசாங்க உதீதியோகங்களும்‌ அந்தஸ்தும்‌ கீர்த்தியும்‌ பிராமணர்களுககே கிடைத க, அரசாங்கமே பிராமணமயமாய்ப்‌ போய்விட்டதால்‌, பிராமணரச்லாதார்‌ நிலை தாழ்தீதப்பட்டது. அப்போது படித்திருந்த பிராமணரல்லாதார்‌ சிலர்‌, தாங்கள்‌ எவ்வளவு கெட்டிக்சாரராயும்‌ யோகீ 8யர்களாயும்‌ புதீ திசாலிகளாயும்‌ தேசபக்தி, பரோபகாரம்‌ முதலிய அருங்குணங்கள்‌ நிறைந்தவர்களாயும்‌ இருந்தும்‌, தாங்கள்‌ ஏன்‌ தாழ்தீதப்பட்டுக்‌ கிடக்‌ கின்றோம்‌ என்று யோசனை செய்துபார்‌ தீதில்‌, இப்‌ பிராமணப்‌ பத்திரிக்கைகளும்‌ கட்டுப்‌ பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக்‌ காரணம்‌ என்று கண்டுபிடி தீது, தாங்களும்‌ மற்றவர்களைப்போல முன்னேறுவதற்குத்‌ தங்களுக்குள்‌. ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்‌ என்றும்‌, தங்களுக்கும்‌ பிரச்சாரத்திற்கு ஒரு பதீதீரிக்கை வேண்டும்‌ என்றும்‌ கருதி, ஒரு சங்கத்தையும்‌ ¢ திராவிடன்‌ , 4 ஜஸ்டிஸ்‌! என்கிற பத்திரிக்கைகளையும்‌ ஏற்படுதீதினார்கள்‌, இப்‌ பத்திரிக்கைகளும்‌ சங்கமும்‌, சகலபோக்‌ சயங்களையும்‌ தாங்களே ஏகபோகமாய்‌ அனுபவித் கவந்த ¢ சுதேசமித்திரன்‌? போன்ற பத்திரிக்கைக்கும்‌, அதன்‌: கூட்டத்தாருகீகும்‌ இவை போட்டியாய்க்‌ கண்டதால்‌, இவற்றைச்‌ செல்வாக்கில்லாமலடி த்து ஒழிக்கப்‌ பல தந்திரங்களும்‌ செய்ததினால்‌, இத்‌ தந்திரங்களுக்குத்‌ தாக்குப்பிடிக்க சுதேசமித்திரன்‌ ? போலவும்‌ அதன்‌ கூட்டத்தார்‌ போலவும்‌, ¢ திராவிடனும்‌? அதன்‌. கூட்டத்தாரும்‌ அரசாங்கத்தைத்‌ தமுவநேரிட்டது. என்ன செய்கும்‌ சுதேசமித்திரன்‌ 2 கூட்டத்திற்குள்ள தந்திரசக்தி ¢ திராவிடன்‌ ! கூட்டத்திற்கிலலாததாலும்‌, பிராமணரல்லா தாரில்‌ சிலருக்குத்‌ தங்கள்‌ தனிப்பட்ட ௬யநலத்திற்கும்‌ கி தீதிக்கும்‌ சுதேசமித்திரன்‌! கூட்டம்‌ இடங்கொடுத்ததாலும்‌, இவர்களும்‌ அ3தாடு சேர்ந்து எதிர்ப்‌ பிரசாரம்‌ செய்த தாலும்‌, ¢ திராவிடனு?4கு பாமரஜனங்கள்‌ உண்மையை உணரும்படி செய்யவும்‌, பாமர ஜனங்களிடத்தில்‌ செல்வாக்குப்‌ பெறவும்‌ முடியாமல்‌ போய்விட்டதால்‌, இது தக்க பலனைத்‌ தென்னிந்திய மக்களுக்கு அளிக்கக்கூடியதாய்‌ இல்லாமலிருக்கிறது. இததான்‌ இப்படி என்‌நாலோ, மகாத்மா ஏழை மக்கள்‌ விடுதலையின்‌ பொருட்டு காங்கிரசில்‌ சேர்ந்து ஒத்துழையாமை என்னும்‌ கொள்கையை உண்டாக்கி, நிமாணத்கிட்டம்‌ எனச்‌ சில திட்டங்களைக்கண்டு வேலைசெய்த காலத்தில்‌, ஒத்துழையாமையும்‌ நிர்மாணதி திட்டமும்‌ தங்கள்‌ கூட்டத்தாருக்கும்‌ சுயநலப்‌ புலிகளுக்கும்‌ கஷ்டத்தைக்‌ கொடுப்பதாய்‌. இருந்ததால்‌, ஒத்‌துழையாமையையும்‌ நிர்மாண தீ திட்டத்தையும்‌ மகாத்மா செல்வாக்கையும்‌ அழிக்க சுதேசமித்திரன்‌ ? பிரச்சாரம்‌ செய்துவந்த காலத்தில்‌, ஒதீதுழையாமையிலும்‌ நிர்மாண தீதிட்ட தீதிலும்‌ மகாதீமாவிடமும்‌ ஈடுபட்டிருந்த சிலர்‌ “ச $தேசமித்திர/னால்‌ தேசத்திற்கு ஏற்படும்‌ கெடுதியைதி தடுக்க ஒரு தினசரி ஏற்படுத்த எண்ணினார்கள்‌, அதுசமயம்‌ ஆங்‌ லெ சுயராஜ்ய? பத்திரிக்கை மக்கள்‌ நம்பக்கூடியதுபோல்‌ நடந்‌ வந்த தால்‌, பொதுமக்கள்‌ பணமாகிய 10,000 ரூபாயைத்‌ தூக்கி அதன்‌ மூக்கியஸ்தரான ஜரிமாண்‌: பிரகாசத்தினிடம்‌ கொடுத்து, தினசரி ஆரம்பிக்கச்‌ சொன்னார்கள்‌, கடைசியாய்‌, சுதேசமித்திரன்‌ ? திட்டமும்‌ * சுயராஜ்யா! திட்டமும்‌ வித்தியாசமற்றதா9 இரண்டும்‌ ஒன்றுபடக்‌ கலந்துவிட்ட கால்‌-புதுதீ திருடனைவிட பழைய திருடனே மேல்‌ என்னும்‌ பழமொழி?பால்‌-- இரண்டும்‌ ஒன்று சேர்ந்துகொண்டு, பிராமணர்கள்‌ ஆக்கம்‌ பெறவும்‌, பிராமணரல்லாதாரின்‌ அழிவுக்கும்‌ ஒத்துவேலை செய்கில்‌ றன. இதில்‌ ஒரு விசேஷம்‌, * சுதேசமித்திரன்‌ ! ஒருவிதத்தில்‌ ¢ சுயராஜ்யா?வைவிட யோக்கியன்‌ என்றே சொல்லலாம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 406 பெரியார்‌ ஈட, வெ. ரா. சிந்தனைகள்‌ எப்படி என்றால்‌, *சுதேசமிதீதீரன்‌ சான்‌ ஒரு பிரமணனையே தன்‌ ஆசிரியராகக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்று உண்மையே பேசுகிறான்‌. * சுயராஜ்யா வோ இரண்டு பிராமணரல்லாதாரை ஆசிரியராய்‌ வைதீதிருப்பதாய்ப்‌ பொய்‌ சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றித்‌ தனது அட்டூுமியங்களை நடத்துகிறது. பத்திரிக்கைகள்‌: யோச்கியமாய்‌ நடந்திருந்தால்‌, தென்னிந்தியாவில்‌ ஒத்‌துழையாமை ஒழிந்து, சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சூழ்ச்சி நடந்தேருமா 1 இந்‌ நிலையில்‌, தென்னிந் தியாவுக்கு-தென்னிந்தியர்‌களுகீகு ஒரு நம்பிக்கையும்‌ யோகீகியமுமூள்ன தமிழ்த்‌ தினசரிப்‌ பத்திரிக்கை வேண்டுமா, வேண்டாமா என்று யோசிக்கவேண்டும்‌. வேண்டுமென்றால்‌, சுலபத்தில்‌ நடதீதிவிடமுடியாது. சுதேச மித்திரனின்‌ போட்டியையும்‌ கெடுதியையும்‌ சமாளிப்பது லேசான காரியமல்ல. அதற்குப்‌ பிராமணரல்லாதார்‌ பொருள்களும்‌, பிராமணரல்லாதார்‌ சந்தாதாரர்களும்‌ பிராமணரல்லாத சயநலட்புலிகள்‌ ஆதரவும்‌, சாராய விற்பனை முதலிய விளம்பர வரும்படி களும்‌ மலிநீ.து கிடக்கிறது. ஆதலால்‌, நாம்‌ அரம்பிப்பதானால்‌ தக்க மூலதனதீதுடனும்‌ தக்க ஏற்‌ பாட்டுடனும்தான்‌ ஆரம்பிக்கவேண்டும்‌. குறைந்தது ஒரு லட்ச ரூபாய்‌ மூலதனம்‌ வேண்டும்‌ ) ஒரு வருஷதீதில்‌ 10,000 சந்தாதாரர்கள்‌ சேரவேண்டும்‌. 50,000 ரூபாயாவது இல்லாமல்‌ ஆரம்பிப்பது நிலைபெறத்தக்கதாகாது. குறைந்த அளவு 5 வருஷ காலத்‌ அசீகுக்‌ குறையாமல்‌ பதீதிரிக்கை நடத்தக்கூடிய முஸ்தீபுகளைக்‌ கையில்‌ வைத்துக்‌ கொண்டு ஆரம்பிதீதாலல்லாது எதிர்டார்க்கும்‌ பலனை அடைய முடியாது. ஆதலால்‌, இவைகளைப்பற்றிச்‌ சில sarardrsCar@ யோசனை செய்து பார்‌ தீத கில, அடியிற்கண்ட விஷயங்கள்‌ புலப்பட்டன. அதாவது, பங்கு 1-க்கு 5 ரூபாய்‌ வீதம்‌ 20,000 பங்‌ கு கொண்ட ஒரு லட்ச ரூபாய்‌ மூலதனம்‌ வேண்டும்‌. 50,000 வசூலித்த பிறகுதான்‌ பத்திரிக்கை ஆரம்‌பிக்கவேண்டும்‌. தமிழ்‌ ஜிகலாக்களாகிய 12 ஜில்லாக்களும்‌ ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய்‌ வீதம்‌ மூன்‌ பணம்‌ வசூலித்துக்‌ கொடுக்கவேண்டும்‌. ஒவ்வொரு ஜில்லாவிலும்‌ 1000 ரூபாய்‌ கொடுக்கக்கூடிய இரண்டுபேர்கள்‌ அவசியம்‌ முன்வருவதோடு, பாக்கி மூவாயிரம்‌ ரூபாயையும்‌ வசூலித்துக்‌ கொடுக்க அவர்கள்‌ ஒப்புக்கொள்ளவேண்டும்‌ ஆயிரம்‌ கொடுப்பவர்களும்‌, ஊதியமில்லாமல்‌ உழைக்க வருபவர்களும்‌, நிர்வாகிகளாக இருக்கவேண்டும்‌. பத்திரிக்கையின்‌ கொள்கை, பிராமணரல்லாதாருடையவும்‌ தீண்டாதாருடையவும்‌, சமத்துவமும்‌ முன்னேற்றமுமே முக்கியமானதாய்‌ இருக்கவேண்டும்‌. பத்திரிக்கையின்‌ நேரான நி/வாகமும்‌, பதிப்பும்‌ யோக்கியமான ஒரு சிறு போர்டினிடம்‌ ஒப்படைக்கப்பட வேண்டும்‌. இப்போர்டிலுள்ளவர்கள்‌ பத்திரிக்கை நிர்வாகம்‌, பதிப்பு இவைகளை தீதவிர வேறு எந்தப்‌ பொதுக்‌ காரியங்களிலும்‌ சம்பநீதப்படாதவர்களா யிருக்கவேண்டும்‌. குறைந்தது 5 வருஷதீதிற்கு ஒரு தரம்‌ இந்த போர்டை புதுப்பிக்கத்‌ தக்கதாய்‌ இருக்க வேண்டும்‌. இக்‌ கொள்கைக்கு இதுவரை சில செல்வாக்குள்ள கனவான்கள்‌ ஒப்புக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆகையால்‌, இதைப்பற்றிதீ தமிழ்மக்கள்‌ யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால்‌ தமிழ்‌ மக்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டாகலாம்‌ என்று விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. [தலையங்கம்‌-- 6 குடி அரசு? 2211-1925] &. நமது கடமை சகோதரிகளே, சகோதரர்களே! நான்‌ இந்த ஊரில்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ மகாநாடு நடந்த பிறகு இன்றுதான்‌ முதல்‌ தடவையாக வந்திருக்கிறேன்‌. கந்த காஞ்சீபுரம்‌ நமது சரித்திர புராண காலங்களில்‌ எப்படி முக்கியமான தோ, அதுபோலவே தற்கால அரசியல்‌ சமூகவியல்‌ முதலிய &யக்கங்‌ கவின்‌ சரித்திரதீதிற்கும்‌ முக்கியமானதாக இருநீத.வருகிறது www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 407 ஹீமதி பெசன்ட்‌ அம்மையாரின்‌ 6 ஹோமீரூல்‌ இயகீகம்‌? CsrdHd செல்லுபடி அற்ற தாக ஏற்படுவதற்கும்‌, பெசன்ட்‌ அம்மையாரின்‌ அரசியல்‌ வாழ்வில்‌ மாற்றம்‌ ஏற்படவும்‌ இந்தக்‌ காஞ்சிபுரத்தில்‌ P of சரோஜினி அம்மாள்‌ அக்ரிராசனத்தின்கீழ்க்‌ கூடிய சென்னை மாகாண கான்பரன்சில்தான்‌ அஸ்திவாரம்‌ போடப்பட்டது. அதுபோலவே, காங்கிரஸ்‌ இயக்கம்‌ தேசதீதில்‌ செல்லுபடி அற்றதாகவும்‌ சுயராஜ்ய& கட்சிக்கு உளை மாந்தை வரவும்‌, பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சி வெளியாகவும்‌ இந்தக்‌ காஞ்சீபுரத்தில்‌ wfwrdr கலியாணசு நீதர முதலியார்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கூடிய தமிழ்நாடு மகாநாட்டில்தான்‌ அஸ்திவாரம்‌ போடப்பட்டது. காஞ்சீபுரம்‌ மகாநாட்டிற்கு அப்புறம்‌ தமிழ்நாட்டில்‌ மாதீ திரம்‌ அல்லாமல்‌, இந்திய தேசத்திலேயே அரசியலிலும்‌ சமூக இயல்களிலும்‌ பெரிய மாறு தல்களும்‌ ஏற்பட்டிருப்பது உங்களுக்குத்‌ தெரியாதது அல்ல. பொதுவாகப்‌ பார்க்கும்‌ பொழுது, ஜீமான்‌ திரு. வி. கலியாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ தலைமையின்கீழ்‌ நடந்த மகாநாட்டுச்‌ சம்பவங்கள்‌ நன்மைக்கு ஏற்பட்டது என்றேதான்‌ சொல்லவேண்டும்‌, அப்பொழுது நடந்த சம்பவங்கள்‌ அம்‌ மாதிரி நடந்திருக்கவில்லையானால்‌, நாம்‌ எவ்வளவோ ஏமாந்துபோய்‌ இருப்போம்‌. அச்‌ சம்பவமே நம்‌ எல்லோரையும்‌ கண்விழிக்கச்‌ செய்தது. தவிர] * தற்கால நிலைமையும்‌ நமது கடமையும்‌? என்பது பார்ப்பனரல்லாதவர்களின்‌ தற்கால நிலைமையும்‌, பார்ப்பனரல்லாதார்களாகிய நமது கடமையும்‌ என்பதுதான்‌ இன்றைய விஷயம்‌ ஆதலால்‌, காஞ்சீபுரம்‌ மகாநாட்டிலிருந்‌து நமது நிலைமையும்‌ நமது கடமையும்‌ என்ன என்பதை நீங்கள்‌ நன்றாய்‌ அறிந்திருப்பீர்கள்‌. அம்‌ மகாநாட்டில்‌ ௮ம்‌ மாதிரி நடைபெறாமலிருந்தால்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சி, சுயராஜ்யம்‌, உரிமை ஆகிய வார்த்தைகள்‌ நம்மை ஏமாற்றி, நாம்‌ என்றென்றும்‌ தலையெடுக்க முடியாமல்‌ நமது பார்ப்பனர்‌ களால்‌ அழமுகீகப்பட்டுகீகிடக்க நேரிட்டு இருக்கும்‌. இந்‌ நாட்டின்‌ சுக துக்கதீதிற்குப்‌ பொறுப்பானவர்‌ களும்‌ பெரும்பான்‌்மையானவர்களு மான நாம்‌, காங்கிரஸ்‌ பெயரால்‌ நமது பார்ப்பனர்‌ களாலும்‌ அவர்களது அடிமைப்‌ பிரச்சார கர்களாலு% ஏமாநீது நமது நலனைக்‌ கெடுதீதுக்கொன்வதோடு அல்லாமல்‌, நமது நன்மைக்‌ கென்று ஏற்பட்டதான பிராமணரல்லாதார்‌ இயக்கமாகிய ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌ ஒடுக்கி இருப்பார்கள்‌. தற்கால காங்கிரஸ்‌ நமக்கு எவ்வளவு தூரம்‌ கெடுதி செய்திருக்கிறது என்பதும்‌, அதனால்‌ நமக்கு எந்தக்‌ காலத்திலும்‌ நன்மை இல்லாததோடு நமது சமூகதீ திற்கே அது பெரிய ஆபதீதாய்‌ இருக்கிறதென்பகும்‌ நான்‌ சொல்லாமலே நீங்கள்‌ எல்‌ லோரும்‌ அறிந்த விஷயம்‌. இந்தக்‌ காங்‌ இரஸின்‌ மூலம்‌ நமகீகாவது நமது நாட்டிற்காவது அனுகூலமான திட்டங்கள்‌ ஏதாவது இருக்கின்றனவா என்பதை நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌ அசலாதாரில்‌ சிலர்‌ காங்கிரஸில்‌ சேர்ந்ததும்‌ அதற்காக உழைத்த இம்‌ கஷ்டப்பட்டதும்‌ நஷ்டப்பட்டதும்‌ சிறை சென்றகம்‌ எதை உதீதேசிதீது என்றால்‌, மகாதீமா திட்டங்கள்‌ ஆகிய கதரும்‌, தீண்டாமையும்‌, ஒற்றுமையும்‌, ம.துவிலக்கும்‌ மிகுதியும்‌ பார்ப்பனரல்லதாராகிய நமது சமூகத்திற்கே நன்மை விளைவிப்பதும்‌, தரித்திரத்தை ஒழிப்பதும்‌, சுயமரியாதையையும்‌, சமதீதுவத்தையும்‌ அளிப்பதுமான வழிகளுக்கு அனுகூலமாய்‌ இருந்ததால்தான்‌ நாம்‌ அதில்‌ முழுமனதோடு இறங்‌ 9 உழைதிது வந்தோம்‌. இத திட்டங்கள்‌ நிறைவேறினால்‌ நமது பார்ப்பனர்கள்‌ வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடு மென்று நினைத்து, அவர்கள்‌ இவற்றைக்‌ காங்கிரசிலிருந்து விலக்கப்‌ பிரயதீதனப்பட்டு: அதில்‌ வெற்றியுமடைந்து, இப்போது காங்கிரசையே தங்கள்‌ ஒரு வகுப்புக்கு மாத்திரம்‌ அனுகூலமாகவும்‌ மற்ற வகுப்பாருக்கு ஆபத்து உண்டாக்கதீதக்க மாதிரியாகவும்‌ அமைத்‌ அக்கொண்டார்‌ கள்‌. இப்போதைய காங்கிரசில்‌ நிர்மாணத்திட்டம்‌ ஏதாவது இருக்கிறறா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. கதரை அடியோடு காங்கிரசிலிருநீது ஒழிதீதுவிட்டதோடு, அதை ஒரு கண்ணியக்‌ குறைவாகவும்‌ கருதும்படி செய்துவிட்டார்கள்‌. அதாவது, காங்கி)ஸ்காரர்கள்‌ ஓட்டுக்‌ கேட்கும்போ துமாதீதிரம்‌ கதரைக்‌ கட்டிக்கொள்ள 3வண்டிய மாதிரியில்‌ தீர்மானம்‌ செய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 408 பெரியார்‌ ஈ. வெ. ரா. சித்தனைகள்‌ திருக்கிறார்கள்‌. இதனால்‌, உண்மையிலேயே ஒருவன்‌ கதரிடம்‌ அபிமானம்‌ கொண்டு சட்டி இருந்தாலும்‌, பொதுஜனங்கள்‌ அவனைப்‌ பார்தீதால்‌ சந்தேகிக்கப்படும்படி யாகவும்‌, * இவன்‌ திருட்டு ஆசாமி, பொதுஜனங்களை ஏமாற்றி ஓட்டுவாங்க கதர்கட்டி இருக்கிறான்‌ 2 என்று பொதுஜனங்கள்‌ நினைக்கும்படியும்‌ செய்துவிட்டார்‌ கன்‌. இதனால்‌, எவ்வித அவ மானத்திற்கும்‌ கட்டுப்படத்‌ தைரியமிருக்கிறவர் தான்‌ கதர்‌ கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே, தன்மானத்தில்‌ இலட்சியமூன்ளவர்கள்‌ கதர்‌ கட்டப்‌ பயப்படு றார்கள்‌. தீண்டாமை விஷயமாவது காங்கிரசில்‌ இருக்கிறதா என்று பாருங்கள்‌. தீண்டாதவர்களை யும்‌ நம்மையும்‌ கண்ணில்‌ பார்ப்பதற்கே நமது பார்ப்பனர்கள்‌ சம்மதிப்பதில்லை. இதை குருகுல விவாதத்தில்‌ நன்றாய்தீ தெரிந்திருப்பீர்கள்‌. இரண்டாவது, மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம்‌ செய்தவுடன்‌, ஜரீமான்கள்‌ சி, இராஜ கோபாலாச்‌ சாரியார்‌, கிராஜன்‌, சாஸ்திரி பான்றவர்களே காங்கிரஸ்‌ கமிட்டியினின்றும்‌ இராஜிநாமா செய்துவிட்டார்கள்‌ என்றால்‌, மற்ற பார்ப்பனர்களைப்பற்றி நினைக்கவும்‌ வேண்டுமா ஜீனிவாசய்யங்கார்‌ பேசும்போதெல்லாம்‌ ₹ அரசியலில்‌ தீண்டாமையைக்‌ கலக்காதீர்கள்‌ என்று பேசி வருகிறார்‌. ஜமான்‌ எம்‌. கே. ஆச்சாரியார்‌, ' பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடு வதைப்‌ பார்ப்பனரல்லாத குழந்தை பார்‌ தீ.துவிட்டால்‌ ஒருமாத £ பட்டினி இருப்பேன்‌ ? என்று சொல்லிக்‌ காங்கரஸ்‌ கமிட்டியிலிருந்து ஓடிப்போய்விட்டார்‌, இதிலிருந்து காங்கிரசில்‌ தீண்டாமை விலக்கு இருக்கிறதா என்று பாருங்கள்‌. மதுவிலக்காவது காங்கிர சிலிருக்கிறதா என்றால்‌, ஜீமான்‌ சி. இராஜகோபாலாச்சாரி யார்‌ பாமர ஜனங்களை ஏமாற்றிப்‌ பார்ப்பன நக்கு ஓட்டுவாங்கிககொடுக்கக்‌ கருகிமாதீதிரம்‌ இவ்வருஷம்‌, * மதுவிலக்குச்செய்ய சம்மதித்தவர்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌? என்றார்‌, ஜரீமான்‌ சத்தியமூர்த்தி சட்டசபையில்‌ மதுவிலக்குச்‌ செய்ப முடியாது என்று சொல்லி விட்டார்‌. பிறகும்‌, ஜீமான்‌ ஆச்சாரியார்‌ மதுவிலக்கு என்று சொல்லிக்கொண்டு, மது உற்பத்தி செய்பவர்களுக்கு ஓட்டுவாங்கிக்‌ கொடுக்கப்‌ பிரச்சாரம்‌ செய்தார்‌. இப்பவும்‌ காங்கிரசிலுள்ள தலைவர்களில்‌ 100-க்கு 90 பேர்களில்‌ மது உற்பத்தி செய்கிறவர்கள்‌ சிலரும்‌, விற்பவர்கள்‌ சிலரும்‌, அருந்துபவர்கள்‌ சிலருமாகவே இருக்கிறார்கள்‌, இன்றும்‌ நாளையும்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியான ஜரீமான்‌ ஏ. ரங்கசாமி அய்யங்கார்‌ சாராயம்‌, பிராந்தி விற்பனையில்‌ பணம்‌ சம்பாதித்‌ துக்கொண்டுதான்‌ வரு $றார்‌, இன்னமும்‌ சில சுயராஜ்ய பார்ப்பனர்‌ கள்ளுக்கு மரம்‌ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்‌. ஒற்றுமைக்காகவா வது ஏதாவது திட்டம்‌ காங்கிரசில்‌ இருக்கிறதா என்றால்‌, அதுவும்‌ ஒன்றமில்லைஃ காங்கிரசிலிருந்து * னீமான்கள்‌ இராமசாமி நாயக்கர்‌, வரதராஜுலு, கலியாணசுந்தர முதலியார்‌, ஆரியா, சக்கரை, தண்டபாணி பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள்‌ போய்‌ விட்டதால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்‌ விட்டது! என்கிறார்கள்‌ நமது பார்ப்பனர்கள்‌. அல்லா மலும்‌, னீமான்‌ கள்‌ ஆரியாவையும்‌, ஈ. வெ. இராமசாமி நாயக்கரையும்‌ ஜெயிலில்‌ பிடித்துப்‌ போடவேண்டுமென்று கவர்ன ரையும்‌ பார்ப்பன அதிகாரிகளையும்‌. கெஞ்சுகிறார்கள்‌ விண்ணப்பமும்‌ போட்டிருக்கிறார்கள்‌ நமது பார்ப்பனத்‌ தலைவர்கள்‌, இந்து-முஸ்லிம்‌ ஒற்றுமையாவது இருக்கறதா என்று பார்த்தால்‌, * முகமதியர்களுக்கு சுயராஜ்யம்‌ கொடுக்‌ கக்‌ கூடாது? என்று காக்கிசின்‌ பேராலே 8ய இந்திய சட்டசபையில்‌ ஆட்சேபித்து சர்க்கா ரோடு சேர்ந்து ஓட்டுக்‌ கொந்தீதிருக்கிறா/கள்‌. ஒருவரையொருவர்‌ சந்தேகிக்காமலிருக்கவும்‌, ஒருவரையொருவர்‌ மோசம்‌ செய்யாம லிருக்கவும்‌, எல்லோரும்‌ சம உரிமை அடையவும்‌ தக்க பத்தோபஸ்தான வகுப்புவாரி பிரதி நிதித்துவம்‌ வேண்டுமென்றால்‌, அதைப்பற்றிக்‌ காங்கிசுக்குள்ளாகவே பேசக்கூடாது என்று பார்ப்பனரல்லாதார்களைக்‌ கொண்ட சொல்லிவிட்டார்‌ கள்‌. ஆனால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்டபோது அதைக்‌ கொல்ல எண்ணி, பார்ப்பனரல்லாதாரான ஹீமான்கள்‌ நாயுடு, முதலியார்‌ இவர்களை வசப்படுத்திக்‌ கொண்டு ¢ ஜேசீய பார்ப்பனரல்லதார்‌ சங்கம்‌ * என்பதாக ஒன்றை ஏற்படுத்தச்‌ செய்து, அதன்மூலம்‌ வகுப்புவயி பிரதிதிதித்துவத்தையும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 409 கேட்டுவிட்டு, பார்ப்பனரல்லாதாருக்குள்‌ கட்சி ஏற்பட்டதும்‌, இப்போது பார்ப்பனரல்லா தாருகீ3க பணங்கொடுத்து அதை எதிர்க்கச்‌ சொல்வதோடு, தாங்களும்‌ அனேக சூழ்ச்சி செய்து வருகிறார்கள்‌. ஆகிய இக்‌ காரணங்களால்‌, காங்கிரசில்‌ தேசதீதுக்கு அனுகூலமான திட்டம்‌ ஏதாவது . கொஞ்சமாவது இருக்கறதா என்று நீங்கள்‌ நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌: களுக்கு ஆதிக்கம்‌ வரவும்‌ உதீதியோகம்‌ வரவும்‌, பார்ப்பனரல்லாதார்‌ தாழ்தீதப்படவும்‌ உதீதியோகங்களிலிருந்து விலக்கப்படவும்‌ நாம்‌ காங்கிரசில்‌ சேரவேண்டுமா! காங்கிரஸ்‌ தேசத்திற்கு அனுகூலமாக இருந்தால்‌, காந்தியும்‌ லாலா லஜபதிராயும்‌ ஏன்‌ காங்கிரசுக்கு உழைக்காமல்‌ ஒதுங்கி இருக்கிறார்கள்‌? ஜீமான்கன்‌ நாயுடு, முதலியார்‌, ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலியவர்களும்‌ ஒதுங்கி இருப்பதோடு, என்போன்றவர்கள்‌ இம்‌ மாதிரி, காங்கிரசுக்கு எதிர்ப்‌ பிரச்சாரமும்‌ ஏன்‌ செய்கிறோம்‌! இவற்றை நன்றாய்‌ யோசிதீதுப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்கள்‌ உங்களை ஏமாற்றவே காங்கிரஸ்‌ என்ற ஆயுததீதை உபயோகிக்கிறார்கள்‌. * சம உரிமையும்‌, வகுப்பு சுதந்திரமும்‌, சுயமரியாதை யும்‌ இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ்‌ போன்ற) அரசியல்‌ இயக்கம்‌ இருப்பது அறிவுடைமை யாகாது. அதை ஒழிக்கவேண்டியது அறிவுடையோர்‌ கடமை? என்ற பொருட்பட, * காங்கிரஸ்‌? ¢ காங்கிரஸ்‌? என்று கதறிக்கொண்டு இருந்த ஜரீமான்‌ கலியாண சுந்தர | முதலியாரே எழுதி இருக்கிறார்‌. இனிமேல்‌ தான்‌ அரசியலில்‌ (காங்கிரசில்‌) உழைப்ப தில்லை என்றும்‌, மக்கள்‌ சமதீதுவத்திற்கு உழைப்பதாகவும்‌ விரதம்‌ எடுத்துக்‌ கொண் டிருக்கிறார்‌. இதுவரை அரசியலுக்கு உழைதீததற்காகத்‌ தனது அறியாமையின்‌ பொருட்டு என்னைப்‌ போலவே விசனப்பட்டும்‌ இருக்கிறார்‌. ஆதலால்‌, சகோதரர்களே பார்ப்பனருக்காவது அவர்களால்‌ நிறுத்தப்பட்ட நமது கோடரிக்‌ காம்புகளுக்காவது வரும்‌ தேர்தல்களில்‌ நீங்கள்‌ கண்டிப்பாய்‌ ஓட்டுச்‌ செய்யர. தீர்கள்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி மூலம்‌ நிர்மாணத்‌ திட்டத்தை நடத்தவே நான்‌ பாடுபடுகி3றன்‌. பார்ப்பனர்களின்‌ எதிர்ப்பும்‌ சூழ்ச்சியும்‌ அடக்கப்பட்டுவிட்டால்‌, கண்டிப்பாய்‌ நிர்மாணதீ திட்டதை ஜஸ்டிஸ்‌ கட்சி மூலம்‌ நிறைவேற்றலாம்‌, நிர்மாணதீதிட்டந்தான்‌ முக்கியமாய்ப்‌ பார்ப்பனரல்லா தாருக்கு விடுதலை அளிப்பது. எவ்விதத்திலும்‌ பார்ப்பனர்கள்‌: நிர்மாணத்‌ திட்டத்திற்கு அனுகூலமாய்‌ இருக்கமாட்டார்கள்‌, அதோடு, அதைப்‌ பார்ப்பனரல்லாதார்‌ நடத்தவும்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ இடங்கொடுக்க மாட்டாது. ஆதலால்‌, பார்ப்பன: ஆதிக்கத்தை ஒழிக்க ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு உதவி செய்யுங்கள்‌, அடுத்த தேர்தலில்‌ நீங்கள்‌ உங்கள்‌ முன்னேற்றத்திற்கும்‌ சுயமரியாதைக்கும்‌ மாத்திரமே ஓட்டுக்‌ கொடுங்கள்‌. கண்டிப்பாய்‌ காங்கிரஸ்‌ சுயராஜ்யக்கட்சி என்கிற மாயவலையில்‌ சிக்கி ஏமாந்து போகாதீர்கள்‌ என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்‌. [காஞ்சிபுரத்தில்‌, 20-9-1926-ல்‌. சொற்பொழிவு--ந்குடிஅரசு ! 26-9-1926] மதுரை மகாநாட்டை அனுசரித்து, அதன்‌ திட்டங்களை நிறைவேற்றி வைப்‌ பதற்காக ஜில்லா, தாலுக்கா மகாநாடுகள்‌ நடத்தப்படவேண்டுமென்பதாக, அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக்கொண்டிருந்தோம்‌. அதற்கிணங்க கோயமுத்தூர்‌, சேலம்‌, வடஆர்க்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள்‌ வேண்டிய முயற்சி எடுத்துக்‌ கொள்வதாக அறிவதோடு, கோயமுத்தூர்‌, வடஆர்க்காடு ஜில்லாக்காரர்கள்‌ ஜில்லா மகாநாடு நடத்த கமிட்டி முதலியவைகள்‌ நியமிதீதுத்‌ துரிதமாய்‌ முயற்சி எடுத்துவருகிறார்கள்‌. இம்‌ மகாநாடுகள்‌ அனேகமாய்‌ இம்‌ மாத முடிவிலோ, மார்ச்சு மாத ஆரம்பதீதிலோ நடதீதக்கூடும்‌. மற்ற ஜில்லாக்காரர்‌களும்‌ அதாவது, செங்கற்பட்டு, தென்ஆர்க்காடு, திருச்சி; ராமநாதபுரம்‌, திருநெல்வேலி முதலிய ஜில்லாக்காரர்களும்‌ எதுவும்‌ செய்ததாக நமக்குத்‌ தகவலே இல்லாமலிருக்கிறது. ஆதலால்‌, அவர்களும்‌ சிக்கிரம்‌ முயற்சி எடுத்து, சிக்கிரதீதில்‌ மகாநாடுகள்‌ நடத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடுகள்‌. 3686-52 www.thamizham.net - Free £ book 14௦ 3011 410 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ செய்து வரவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறோம்‌. பார்ப்பனர்கள்‌ பணம்‌ சேர்க்கவோ, தங்கள்‌ ஆதிக்கத்‌ திட்டங்களை நிறைவேற்றவோ, எப்படியாவது தந்திரங்கள்‌ செய்து அவர்கள்‌ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்கிறார்கள்‌. உதாரணமாக, பார்ப்பனர்களின்‌. சர்வஜீவநாடியும்‌ செத்துப்போய்‌ இருக்கும்‌ இச்‌ சமயத்தில்‌ மகாதீமாவைதீ தருவிக்கப்‌ போகிறார்கள்‌, அவர்பெயரால்‌ ஆங்காங்கு நம்மவர்களிலே3ய சில சோணகிரிகளைப்‌ பிடித்துக்‌ கூட்டம்‌ கூட்டி, நம்மையே நம்பசீசெய்து, அடுத்த தேர்‌ தல்வரை தங்களுக்குச்‌ செல்வாக்கு இருக்கும்படியான ஏற்பாடுகளைச்‌ செய்துகொள்ளப்போகிறார்கள்‌. நாம்‌ அதைப்‌ பார்தீதுப்‌ பொறாமைப்‌ படுவதிலோ, அவர்கள்‌ அப்படிச்‌ செய்கிறார்கள்‌, இப்படிச்‌ செய்கிறார்கள்‌ என்று சொல்லிக்கொண்டிருப்பதிலோ, ஒரு பயனும்‌ விளையப்போவதில்லை, உருப்படியான காரியத்தைச்‌ செய்தாலல்லது நமது திட்டங்களை நிறைவேற்றி வைக்க முடியவே முடியாது. நமகீகு இருக்கும்‌ பொறுப்புக்கும்‌ பார்ப்பனர்களுக்கு இருக்கும்‌ பொறுப்புக்கும்‌ எவ்வளவோ வித்தியாசங்கள்‌ இருக்கின்‌ றன. பார்ப்பனர்களின்‌ காங்கிரசும்‌ தேச சேவையும்‌ அவர்கள்‌ ஆதிக்கம்‌ நிலைநிற்கவும்‌, அவர்கள்‌ பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம்‌ சம்பாதிப்பதும்‌ தவிர வேறில்லை. நாம்‌ மகாதீமாவின்‌ நிர்மாணதீ திட்டம்‌ முழுவதையும்‌ நிறைவேற்றி வைக்கவேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறோம்‌. பார்ப்பனர்கள்‌ கூட்டம்கூடி, பாமர ஜனங்கள்‌ ஏமாறும்படி வாயில்பேசிவிட்டு, சட்டசபை, ஜில்லா, தாலுக்கா, முனிசிபாலிட்டி போர்டுகவில்‌ ஸ்தானம்‌ பெற்றுக்‌ கூச்சல்போட்டு விட்டால்‌ அவர்கள்‌ கடமையும்‌, காங்கிரஸ்‌ வேலையும்‌ தீர்ந்துவிட்டது. நமது கடமையோ, முதலாவது இப்‌ பார்ப்பனர்கள்‌ செய்யும்‌ புரட்டுகளை வெளியிட வேண்டியதும்‌, ஒவ்வொரு மனிதனுள்ளதீதிலும்‌ நமது நிலையை உணரும்படி செய்‌ விப்பதும்‌, நமது உண்மையான சுயமரியாதைகீகும்‌ முன்னேற்றத்திற்‌ கமான வழிகளை எடுத்துச்சொல்லி நடக்கச்‌ செய்தலும்‌ ஆகிய அ3னக கஷ்டங்கள்‌ இருக்கின்றன. இவ்வள. வுடன்‌ இவைகளுக்கு எதிரிடையாக வேலைசெய்யும்படியாக நமது பார்ப்பனர்கள்‌ நம்மவர்‌ களிலேயே சிலரைப்‌ பிடி தீது, கூலிகொடுதீது, ஏவிவிட்டுச்செய்யும்‌ உபதீதிரவங்களுக்கும்‌ தலைகொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகையால்‌, நமது பெரறுப்பும்‌ கடமையும்‌ என்ன என்பதை யோசிப்பவர்‌ களுக்குப்‌ பயமாகவே இருக்கும்‌. ஆனால்‌, இவற்றை கிதுசமயம்‌ கவனியாமல்‌ அசார்சமாகவோ, சுயநலதீதில்‌ கவலையாகவோ இருந்து விடூவோமேயானால்‌: பின்னால்‌ சுலபத்தில்‌ மீளமுடியாது என்பதை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும்‌ நன்றாய்‌ கவனத்தில்‌ வைக்கவேண்டும்‌. தவிரவும்‌, மதுரை மகாநாட்டிற்குப்‌ பிறகு நாம்‌ ஆசைப்பட்டது போலவே அனேக மாய்‌ ஒவ்வொரு ஊர்களிலும்‌ உள்ள பார்ப்பனரல்லாத மக்கன்‌ பார்ப்பனரல்லாதார்‌ சங்கங்‌. களும்‌, பார்ப்பனரல்லாதார்‌ வாலிபர்‌ சங்கங்களும்‌, சுயமரியாதை சங்கங்களுமாக ஏற்படுத்து வதிலிருந்கும்‌, ஏற்படுத்த மூன்வருவதிலிருந்தும்‌, இவற்றின்‌ பொருட்டு ஆங்காங்கு செல்லு மிடங்களில்‌ காணப்படும்‌: உற்சாகதீதிலி நந்தும்‌, ஒத்‌துழையாமையின்போது திரிகரண சுதீதியாய்‌ காங்கிரசில்‌ உழைதீதுவந்த பார்ப்பனரல்லாத உண்மைத்‌ தியாகிகள்‌ பலர்‌ ஆங்காங்கு இவற்றில்‌ மனப்பூர்வமாய்‌ உற்சாகத்துடன்‌ கலந்து உழைத்து வருவதினாலும்‌, நமது பிற்கால வாழ்வில்‌ கொஞ்சம்‌ நம்பிக்கைகொள்ள இடமேற்படுகிறது. ஆனாலும்‌, புராண வைராக்கியம்போல்‌, இந்தச்‌ சமயத்தில்‌ மாத்திரம்‌ ஏற்படும்‌ எழுச்சியில்‌ தலைகால்‌. தெரியாமல்‌ திரிந்துவிட்டு, பின்னால்‌ சோதனை ஏற்படுங்காலதீதில்‌ அடியோடு படுத்துப்‌ போய்விடுமோ என்று பயப்படவும்‌ வேண்டி இருக்கிறது. ஆதலால்‌, தொடர்ச்சியாய்‌ இருந்து வேலைசெய்யப்‌ பிரச்சாரங்களும்‌ பதீதிரிக்கைகளும்‌ வேண்டியதற்காகவும்‌ தக்க ஏற்பாடுகளும்‌ செய்யவேண்டி இருக்கிறது. எனவே, இவைகளுக்கெல்லாம்‌ பூர்வாங்க வேலையாக முதலில்‌ ஜில்லா மகா நாடுகளைக்‌ கூட்டுவதிலும்‌, அதன்மூலமாகத்‌ தொகைகள்‌ வசூலிப்பதிலும்‌ ஆங்காங்குன்னவர்கள்‌ கவனம்செலுத்தவேண்டுமாய்‌ மறுபடியும்‌ மறுபடியும்‌ வற்‌ கிறோம்‌. i [தலையங்கம்‌--1 குடிஅரசு 3 6-2-1927) www.thamizham.net - Free £ book 14௦ 3011 41 5. பார்ப்பனரல்லாத வாலிபர்‌ கடமை இளைஞர்களே | இன்றைய தினம்‌ வாலிபர்களாயிருக்கிற உங்களில்‌ இருந்துதான்‌ புத்த பகவானும்‌ மகாதீமா காந்தியும்‌ நாயர்பெருமானும்‌ தியாகராயரும்‌ தோன்ற வேண்டும்‌. இவர்கள்‌ எல்லாம்‌ உங்களைப்போல வாலிபர்களாக இருந்தவர்கள்‌ தாம்‌. எந்தத்‌ தேசமும்‌ எந்தச்‌ சமூகமும்‌ பெரும்பாலும்‌ அவ்வத்‌ தேசதீதில்‌ வாலிபர்களைக்‌ கொண்டுதான்‌ முன்‌ வந்திருக்கிறதே அல்லாமல்‌, பெரியோர்களையும்‌ முதியோரீகளையும்‌ கொண்டல்ல. உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்ட பெரியோர்களிடம்‌ பொதுநலமும்‌ தியாக புத்தியும்‌ காண்பது மிகவும்‌ அரிது ; சுயநலந்தான்‌ வளர்நீதுகொண்டு போகும்‌. அவர்கள்‌ பொதுநலதீதிற்கு உழைப்பதாய்க்‌ காணப்படுவது அவர்‌ களுடைய சுயநலத்தை உத்தேசித்து தீதான்‌ என்று உறுதியாய்ச்‌ சொல்லுவேன்‌. மகாதீமாவைப்‌ போலவும்‌ நாயர்‌ பெருமான்‌, தியாகராயர்‌ ஆகிய இவர்களைப்‌ போலவும்‌ வெகு சிலர்தான்‌ உண்மையான பெரியோர்களாய்‌ இருக்கக்கூடும்‌. உதாரணமாக, நாயர்‌ பெருமானுக்கும்‌ தியாகராயருக்கும்‌ பதிலாக அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியவில்லை என்பதை அனுபவத்தில்‌ அறிந்து விட்டோம்‌. 33 கோடி மக்களில்‌ மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக இன்னொருவரை நினைக்க முடியாமலிருக்கிறது. ஆதலால்‌, உலக வாழ்க்கையில்‌ ஈடுபடாத வாலிபர்களாகிய உங்களுடைய மனந்தான்‌ பொதுநலத்திற்கேற்ற பரிசு நீதமான தன்மையுடையது, உங்களிடம்தான்‌ எவ்வித தியாகத்தையும்‌ எதிர்பார்‌ க்கலாம்‌. ஆனால்‌, இதுபோழ்து நமது நாட்டில்‌ வாலிபர்‌ முன்னிலையில்‌ மிகவும்‌ மலிந்து கிடப்பது * இராஜீய விஷயம்‌ 1 அது உங்களைப்போன்ற வாலிபர்களுக்கு மிகவும்‌ ஆபத்தான காரியம்‌ என்னு எச்சரிக்கை செய்கி3றன்‌. பொதுவாகவே இராஜிய விஷய மென்பது ஒரு நாணயக்‌ குறைவான காரியம்‌, இதைப்பற்றி அனேக பெரியார்‌ கள்‌, * இராஜீிய விஷயத்தில்‌ ஈடுபடுவதென்பதை-மனிதன்‌ எல்லாவித அயோக்கியத்‌ தனமான காரியங்களையும்‌ செய்துபார்தீதுப்‌ பிழைக்க முடியாவிட்டால்‌, கடைசியாகப்‌ பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக்கொள்ளத்தக்க அயோக்கியத்தனம்‌ ஆகும்‌” என்று சொல்லி இருக்கிறார்கள்‌. என்னுடைய ஆ 8றமு வருஷகால அனுபவத்தினால்‌ இது சரியென்றே உணருகிறேன்‌. ஆதலால்‌, உற்சாகமாகப்‌ பேசும்‌ வயிற்றுப்‌ பிழைப்பு அரசியல்வாதிகளைக்‌ கண்டும்‌, அவர்கள்‌ பேச்சைக்‌ கேட்டும்‌ ஏமாந்துபோகாதீர்கள்‌ | உண்மையான அரசியல்‌ சுதந்திரத்திற்கு இருக்கவேண்டிய பக்குவமே வறு. அம்‌ மக்களுக்கு கிருக்கவேண்டிய நிலைமையே வேறு. இந்த நாட்டுக்கு எந்தவிதத்திலும்‌ கிப்போது அரசியல்‌ சுதந்திரம்‌ அவ்வளவு முக்கியமான தல்ல. இந்‌ நாட்டு மனித சமூகத்திற்கு வேண்டியதெல்லாம்‌ முதலில்‌ சுயமரியாதைதான்‌. அதுதான்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ பிறப்புரிமை. பார்ப்பனரல்லாத வாலிபர்கனாகிய உங்களிடமிருந்து உங்கள்‌ சமூகம்‌ இதுசமயம்‌ எதிர்பார்ப்பது எல்லாம்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொடுக்கும்படியாகத்தான்‌. பார்ப்பனரல்லாத சமூகதீதில்‌ பெரிய மனிதர்களானாலும்‌ சரி, அரசியலில்‌ பெரிய உத்தியோகம்‌ பெறுவோர்களானாலும்‌ சரி, சிறிய மனிதர்‌ களானாலும்‌ சரி, துடிக்கும்‌. இரதீதமுள்ள உங்களைப்போல வாலிபர்களானாலும்‌ சரி--தற்போது சுயமரியாதை அற்றுதீதானிருக்கிறார்கள்‌ என்பதை உணருங்கள்‌ ! இன்னும்‌ எவ்வளவு பெரிய அரசியல்‌ உரிமையும்‌ உத்தியோகமும்‌ பதவியும்‌ கீர்த்தியும்‌ பெற்று வாழ்ந்தாலும்‌, அவை எல்லாம்‌ தனித்தனி மனிதன்‌ அனுபவித்து ஒழியதீதகீக8த அல்லாமல்‌, அவர்கள்‌ சாகும்போ 2த அவர்களுடைய சந்ததிகள்‌ சுயமரியாதை அற்றுத்தான்‌ நடைப்‌ பிணமாய்‌ இருந்து சாவார்கள்‌. ஆதலால்‌, உங்கள்‌. உழைப்பும்‌ பொ.துநலமும்‌ தியாகமும்‌ சுயமரியாதை பெறுவதற்குதீதான்‌ இருக்கவேண்டும்‌. ஆனபடியால்‌, நமது நாட்டில்‌ நமது அரசியல்‌ சுதந்திரத்தை விட நமது சுயமரியாதைக்குத்தான்‌ விரோதிகன்‌ அதிகம்‌ இருக்கிறார்‌ கன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 * 412 பெரியார்‌ #. வெ. ரா. சிந்தனைகள்‌ ஆதலால்‌, இவ்வேலையில்‌ இறங்குகையில்‌ அஞ்சாமையும்‌ மன உறுதியும்‌ சலிப்பின்மையும்‌ ஏற்படவேண்டும்‌. ஏனெனில்‌, நமது சுயமரியாதைக்கு எதிரிகள்‌ பெரும்பாலும்‌ நமது நாட்டிலேயே இருக்கும்‌ பார்ப்பனர்களே. ஆதலால்‌, அவர்களை வெல்லுவது சுலபமான காரியமல்ல. இதற்கு ஒற்றுமையும்‌ தியாகமும்‌ வேண்டும்‌. கிவைகளை உங்களிடம்தான்‌ எதிர்பார்க்கலாம்‌. ஆதலால்‌, உங்களுக்குத்‌ தன்னம்பிக்கையும்‌ வேண்டும்‌ ; உங்களுக்குன்‌ இருக்கும்‌ பல குருட்டு நம்பிக்கைகளும்‌ ஒழியவேண்டும்‌. இதற்கு முதலாவது, பிறவி காரணமாய்‌ உங்களை விட உயர்‌ நீத மக்கள்‌ இருக்கிறார்கள்‌ என்பதனையும்‌, உங்களைவிடத்‌ தாழ்ந்த மக்கள்‌ இருக்கிறார்கள்‌ என்பதனையும்‌, உங்கள்‌ மனதீதைவிட்டு அறவே வெளியேற்றவேண்டும்‌. உங்கள்‌ வாழ்க்கைச்‌ சடங்குகளிலும்‌, வைதிகச்‌ சடங்குகளிலும்‌ உங்களைவிடப்‌ பார்ப்பனர்கள்‌ உயர்‌ நீதவர்கன்‌ என்கிற எண்ணம்‌ ஒழியவேண்டும்‌. பார்ப்பனரல்லாதாரில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பதாகச்‌ சொல்லும்‌ வெகு பெரியார்களுக்கு இந்தக்‌ குருட்டு நம்பிக்கை இருக்கிறதை நான்‌ பார்க்‌ கிறேன்‌. உங்கள்‌ கலியாண காலங்களில்‌ பார்ப்பனர்‌ இருந்து நடத்திவைதீதால்தான்‌ செல்லுபடி உள்ளதென்றும்‌, நல்ல வாழ்க்கை ஏற்படும்‌ என்றும்‌ நம்புகின்‌ றீர்கள்‌. உங்கள்‌ சாந்தி முகூர்தீததீதிற்குப்‌ பார்ப்பனர்கள்‌ பக்கத்தில்‌ இருந்து வீட்டிற்குள்‌ தள்ளிக்‌ கதவை மூடினால்தான்‌ நல்ல குழந்தை பிறக்குமென்று நம்புகிறீர்கள்‌. உங்கள்‌ பெரியோர்களை; நீங்கள்‌ பார்ப்பனர்‌ களுக்குப்‌ பணம்‌ கொடுத்து, மோட்சமடையச்‌ செய்யலாம்‌ என்று நம்புகிறீர்கள்‌. இவற்றை ஒழியுங்கள்‌ ! இவற்றை ஒழிக்கப்‌ பிரச்சாரம்‌ செய்யுங்கள்‌. நமக்குத்‌ தாழ்ந்தவர்கள்‌ இருக்கிறார்கள்‌. என்கிற மனப்பான்மை உள்ளவர்கள்‌ இந்தப்‌ பிரசீசாரத்திற்குக்‌ கொஞ்சமும்‌ உதவ மாட்டார்கள்‌. உங்களுக்குள்‌ சரியான கட்டுப்பாடு வேண்டும்‌. ஒவ்வாரு ஊரிலும்‌, * பார்ப்பனரல்லாத வாலிபர்‌ சங்கம்‌ ? ஏற்படுத்தவேண்டும்‌. இதற்கென்றே சிலர்‌ புறப்பட வேண்டும்‌) இதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌. பொருள்‌ இல்லாமல்‌ ஒரு காரியமும்‌ நடக்காது. மகாதீமா காந்திக்கும்‌ ஒரு கோடி ரூபாய்‌ சேர்நீததால்தான்‌ இவ்வளவு காரியங்கள்‌ செய்ய முடிந்தது. இன்னும்‌ ஒரு கோடி அவர்‌ கையில்‌ இருந்தால்‌ இன்னும்‌ ஒரு வருஷத்திற்கு அவருடைய ஒதீ.துழையாமையும்‌ நிலைத்து இருக்கும்‌. ஆதலால்‌, பொருள்‌ மிகவும்‌ அவசியமானது. இதற்காகப்‌ பொருள்‌ சேர்க்கவேண்டும்‌. கடைசியாகப்‌ பிச்சை எடுக்கவும்‌ தயாராக இருக்கவேண்டும்‌. சரியானபடி கணக்கு வைக்கவேண்டும்‌. யார்‌ இதில்‌ மும்முரமாய்‌ வேலை செய்கிறார்களோ அவர்களை ஒழிக்க நமது எதிரிகள்‌ பெரும்‌ பழிகளைச்‌ சுமதீதுவார்கள்‌. அதற்குப்‌ பயப்படுவதனாலும்‌ நாம்‌ ஒரு காரியத்திற்கும்‌ பயன்படமாட்டோம்‌. அனேக கஷ்ட நஷ்டங்களைப்‌ பொறுகீதுக்கொண்டு வேலை செய்‌ வது எப்படித்‌ தியாகத்தில்‌ சேர்நீததோ, அதுபோலவே எதிரிகளின்‌ பழிகளை இலட்சியம்‌ செய்யாமலும்‌, அதனால்‌ நம்முடைய பெயர்‌ கெட்டுப்போகு2ம என்று பயப்படாமலும்‌, கெட்டாலும்‌ அனாவசியம்‌ என்று எண்ணிக்கொண்டு வேலை செய்வதும்‌ ஒரு பெரிய தியாகந்தான்‌. மகாதீமாமீ து என்னென்ன பழிகள்‌ நமது பார்ப்பனர்கள்‌ கட்டிவிட்டார்கள்‌1 அவரது அஞ்சாமையும்‌ பரிசுதீததீ தன்மையுந்தான்‌ எதிரிகளின்‌ பழிகளை எல்லாம்‌ சாம்பலாக்கி விட்டன. உங்களுடைய விடுமுறை நாட்களை வீணாக்காதீர்கள்‌. இச்‌ சங்கத்தின்மீ து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தவிர, வரப்போகும்‌ தேர்தல்களில்‌ உங்கள்‌ சமூகத்தின்‌ சுயமரியாதைக்குப்‌ பாடுபடுபவருக்கு வெற்றி சம்பாதித்துக்‌ கொடுங்கள்‌, பார்ப்பன வாலிபர்கள்‌ தேர்தலில்‌ எவ்வளவு வேலைகள்‌ செய்கிறார்கள்‌ என்பதைப்‌ பாருங்கள்‌. பார்ப்பன ஆதிக்கதீதிற்குப்‌ பாடுபடுபவர்கீகு, அவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ படிப்பைக்கூட விட்டுவிட்டு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கப்‌ பாடுபடுகிறார்கள்‌. ஆதலால்‌, நீங்களும்‌ அவர்களைப்போலவே வீதி வீதியாய்‌, ஊர்‌ ஊராய்தீ திரிந்து உங்கள்‌ சுயமரியாதைக்கு வெற்றியளியுங்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 413 படுக்கையில்‌ இருந்து எழும்போது, இன்று உங்கள்‌ சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்‌ 1! ஒன்றும்‌ செய்யத நாளை வீணாய்ப்‌ போனதாகவும்‌, உங்கள்‌ வாழ்நாளில்‌ ஒன்று குறைந்ததாகவும்‌ நினையுங்கள்‌. ஒவ்வொரு வாலிபரும்‌. தங்கள்‌ கடமையை உணருங்கள்‌. உங்கள்‌ சுயமரியாதைக்கு உங்கள்‌ உயிரைக்‌ கொடுக்கும்‌ பாக்கியத்தை அடைய ¢ தபசு ! இருங்கள்‌. [ சென்னை சர்‌, தியரகராயர்‌ ஞாபகச்‌ சின்னக்‌ கட்டடத்தில்‌ 1926, ஆகஸ்டில்‌ சொற்பொழிவு. குடி அரசு? 12-9-1926] சிலர்‌, *பார்ப்பனரல்லாதார்‌! என்று ஒரு பிரிவு காட்டதீதக்க பெயர்‌ ஏன்‌ என்கிறார்கள்‌, சிலர்‌, இம்மாதிரி பிரித்துக்கொண்டே போனால்‌ உலகநிலை என்னவாகும்‌ என்கிறார்கள்‌ மற்றும்‌ சிலர்‌, பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற பிரிவு உணர்ச்சி வாலிபருக்கு உண்டாகக்‌ கூடாது என்கிறார்கள்‌. இவர்கள்‌ சொல்வதெல்லாம்‌ நமது நாட்டின்‌ உண்மையான நிலை மையைக்‌ கவனியாதவர்களுகீகு வேண்டுமானால்‌ ஒரு சமயம்‌ நியாயமாய்தீ தோன்றலாம்‌. நமது நாட்டின்‌ நிலைமையைக்‌ கவனிக்கின்ற காலத்தில்‌ இந்தப்‌ பிரிவை ஏற்படுத்தியது யார்‌? இது எப்பொழுது ஏற்பட்டது! என்பதைக்‌ கவனிக்க வேண்டும்‌, யோசித்துப்‌ பார்‌ தீதால்‌, ஆயிரக்‌ கணக்கான வருடங்களுக்கு முன்பே இது: ஏற்படுத்தப்பட்டதென்பது விளங்காமல்‌ போகா து. நமது நாட்டை ஆயிரக்கணக்கான பிரிவுகளாக நாம்‌ பிரிக்கவில்லை, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு வகுப்பார்‌ நம்மைப்‌ பிரித்துவைதீது, தங்களை உயர்ந்தவர்கள்‌ என்று சொல்லிக்கொண்டு நம்மைக்‌ கொடுமையாய்‌ நடதீதி வருகின்றார்கள்‌. ஒரு கூட்டத்தாரை மாதீதிரம்‌--அதாவது நம்மை, பார்ப்பனர்கள்‌ என்பவர்களை: நீக்கி மற்றவரீகளை--* பார்ப்பனரல்லாதார்கள்‌ ! என்று பிரித்தது இன்றல்ல; நேற்றல்ல, ஆதலால்‌, நாம்‌ அதற்குப்‌ பொறுப்பாளிகளல்லர்‌. தவிர, சிலர்‌, பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற பெயரைத்‌ தவிர்தீது வேறுபெயரிடக்கூடாதா என்கிறார்கள்‌. கிரமமாக எல்லா மக்களும்‌ ஒப்புக்கொள்ளும்படியாக நமக்கு வேறு ஒரு பெயர்‌ என்ன கொடுக்கமுடியும்‌? கிரமமாக யோசித்தால்‌--ஆதாரப்படி பார்தீதால்‌ ¢ சூத்திரன்‌? என்கிற பெயரைதீதான்‌ கொடுத்தாக வேண்டும்‌. அதை நாம்‌ ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏனெனில்‌, மதக்கொள்கைப்படி, இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ நம்நாட்டு மக்களுக்கு பிராமணர்‌, கூஷதீதிரியர்‌, வைசியர்‌, சூதீதிரர்‌, பஞ்சமர்‌, மிலேச்சர்‌ என்ற பிரிவுகளை ஏற்படுதீதி இருக்கிறார்கள்‌. பிராமணர்கள்‌ என்‌ கிற பெயரைப்‌ பொறுத்தவரையில்‌ ஒருவிதமான தகராறும்‌ இல்லை. ஏனென்றால்‌, பார்ப்பனர்கள்‌. தங்களைப்‌-பிராமணர்கள்‌ என்று சொல்லிக்கொள்கின்றார்கள்‌. கஷிதீதிரியர்கள்‌ என்பதில்‌ அனேக தகராறுகள்‌ ஏற்படுகின்‌ றன. யார்யாரை: க்ஷ தீதிரிய னென்று கூப்பிடுவது? க்ஷதீதிரியன்‌ என்ற பெயர்‌ யாருக்கு உரிமை உண்டென்று சொல்ல முடியும்‌ 1 க்ஷதீதிரியனென்றால்‌ நாட்டை ஆளுபவன்‌; போர்வீரன்‌, காப்பாளன்‌, கதீதி வாளுடன்‌ அமர்க்களதீதில்‌ போர்‌ புரிபவன்‌ என்பதாகப்‌ பொருள்‌ சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முறைப்படி எல்லோரும்‌ க்ஷத்திரியர்கள்‌ தாம்‌. ஏதாவது ஒரு காலத்திலாவது நாட்டை ஆளாதார்‌ யாரிருக்கிறார்கள்‌ ? பட்டாள தீதில்‌ போர்வீரனாயில்லாதார்‌ யார்‌ இருக்கிறார்கள்‌ 8 ஒருகாலத்தில்‌ வேளாளர்‌; நாயுடு, வன்னியர்‌, ராஜுக்கள்‌, நாடார்கள்‌, செட்டியார்கள்‌, குயவர்கள்‌, மறவர்கள்‌, தொட்டியர்கள்‌, பார்ப்பனர்கள்‌, ஒட்டர்கள்‌, முகமதியர்கள்‌ முதலியவர்கள்‌ அரசாண்டிருக்கிறார்கள்‌. இப்பொழுது நம்நாட்டை ஆங்கிலேயர்கள்தாம்‌ ஆள்கின்றார்கள்‌. அந்த முறைப்படி யாரை க்ஷதீதிரியர்‌ என்று கூப்பிடுவது ? ஒரு காலத்தில்‌ அரசாண்டவர்களை க்ஷதீதிரியர்‌ என்பதா? அல்லது இப்போது அரசான்பவர்களை கஷகீதிரியர்‌ என்பதா ஆளு8றவனை மாத்திரம்‌ க்ஷத்திரியன்‌ என்பதா? அல்லது அவன்‌ குடும்பத்தை மாதீதிரம்‌ கஷதீதிரியனென்பதா? அல்லது ஆளுகின்ற www.thamizham.net - Free £ book 14௦ 3011 414 பெரியார்‌ ஈட வெ. ரா, சிநீதனைகள்‌ சாதியையே க்ஷதீதிரியரென்பதா ? இப்படிப்‌ பார்ப்போமானால்‌, ஒன்று--உலகதீதில்‌ உள்ள மகீகள்‌ பூராவையும்‌ க்ஷத்திரியர்கள்‌ என்று சொல்லவேண்டும்‌) அல்லது ஜார்ஜ்‌ சக்கர வர்தீதியை மாத்திரம்‌ க்ஷத்திரியன்‌ என்று சொல்லவேண்டும்‌. ஏனெனில்‌, நாம்‌ காணும்‌ ஒவ்வொரு சாதியார்‌ என்போர்களும்‌ ஒருகாலத்தில்‌ அரசாண்டுதானிருக்கிறார் கள்‌. ஒவ்வொரு வகுப்பாரும்‌ யுத்தத்தில்‌ சேவை செய்துதானிருக்கிறார் கள்‌. அடுத்தாற்போல்‌, வைசியர்‌ என்றாலோ வியாபாரம்‌ செய்வோர்‌ $ ஆகையால்‌, வியாபாரம்‌ செய்வோர்‌ அனைவரும்‌ வைசியர்‌. இக்‌ காலதீதில்‌ எல்லா வகுப்பாரும்‌ வியாபாரம்‌. செய்வதால்‌ யாரை வைசியர்‌ என்று சொல்லுவது? இன்னும்‌ விவசாயம்‌ செய்பவர்‌ வைசியர்‌) மாடுமேய்ப்பவர்‌ வைசியர்‌ என்று சொல்லப்படுகிறது. இத்‌ தொழில்களை எல்லோருமே செய்திருக்கின்‌ றார்கள்‌ ) செய்கிறார்‌ கள்‌. என3வ யாரை வைசியரென்பது ₹ தவிரவும்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌ என்கிற பிரிவுகளைப்‌ பார்ப்பனர்கள்‌ ஒப்புக்கொண் டால்‌ அவர்கள்‌ ஏகபோகமாக அனுபவித்து வருகின்ற உரிமைகளை மூன்று பிரிவாகப்‌ பிரித்து, அதில்‌ அவர்கள்‌ ஒன்று எடுத்துக்கொண்டு பாக்‌ யை க்ஷகீதிரியருக்கு ஒன்றும்‌ வைசியருக்கு ஒன்றுமாகப்‌ பிரிக்கநேரிட்டூவிடும்‌. ஆகலால்‌, இதற்குப்‌ பயந்துகொண்டே வெகு தந்திரமாய்‌, ¢ கலியுகத்தில்‌, உலகதீதில்‌ ¢ பிராமணர்கள்‌, சூத்திரர்கள்‌ ! என்கின்ற இருபிரிவுகள்‌ தவிர வேறில்லை? என்று சொல்லிவிட்டார்‌ கள்‌. எனவே, மதக்கொள்கைப்படி யார்‌ சூதீ ரன்‌ என்று பார தீதால்‌, ¢ பிராமணனின்‌ வைப்பாட்டி மகன்‌, பரம்பரையாக மேல்‌ சாதியாருக்குதி தொண்டுசெய்வதைவிட வேறு தொழில்‌ இல்லாதவன்‌ !--முதலியயோகீயதை உடையவன்‌. இந்தப்‌ பெயரை ஏற்றுக்‌ கொள்ள நம்‌ மனம்‌ பொறுக்குமா? தவிர, மற்றொரு வருப்பார்களென்ற। பஞ்சமர்களை தீ ¢ தீண்டப்படா தவர்கள்‌, சண்டாளர்கள்‌? என்று பிரித்திநப்பதோடு, வேறு மதத்தினர்‌ என்‌ கிறவர்களான கிறிஸ்தவர்களையும்‌, முகமதியர்‌ களையுமாகச்‌ சேர்த்து ¢ மிலேச்சர்‌ * களென்றும்‌ பிரிதீதிருக்கிறார்கள்‌. இவைகளை எல்லாம்‌ நாம்‌ ஏன்‌ சொல்ல நேரிட்ட தென்றால்‌, * பார்ப்பனரல்லாதார்‌ ? என்ற பெயர்‌ தவிர வேறுபெயர்‌ வைக்கமுடியாமலி ப்‌ பதற்கு நேரிட்ட காரணத்தை விளக்குவதற்காகதீதான்‌ என்றும்‌ ); இவ்வித இழிவான பெயர்‌: களையும்‌ கொடுமைகளையும்‌ ஒழிக்கத்தான்‌ அப்பெயர்‌ கொடுக்கப்பட்டது என்றும்‌ காட்டத்‌ தான்‌. தவிர சிலர்‌, ஏன்‌ இவ்வியக்கத்தில்‌ பார்ப்பனர்களைச்‌ சேர்‌ தீ துக்கொள்ளக்கூடாது₹ என்கிறார்கள்‌. பார்ப்பனர்களை எப்போதும்‌ நம்முடன்‌ சேர்க்கக்கூடாதென்ற கொள்கை இதிலில்லை. அவர்கள்‌ இவ்வித வித்தியாசங்களையும்‌ சூழ்ச்சிகளையும்‌ ஒழித்து, சமதீதுவத்தை ஒப்புக்கொண்டு. நல்ல எண்ணத்துடன்‌ செய்கையில்‌ நடந்‌,துவரும்வரையில்‌ நீக்கிவைக்கவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அன்றியும்‌, பார்ப்பனருக்கு என்று மாதீதிரந்தான்‌ எங்கு பார்‌ தீதாலும்‌ ஒரு தனியிட மேற்படுத்திக்கொண்டு, அதில்‌ அவர்கள்‌ ஆதிக்கத்தை உபயோகித்துக்கொள்கிறார்கள்‌. மற்றவர்களுக்கு அவ்வித வித்தியாசம்‌ வேண்டும்‌ என்கிற ஆசை இல்லை. அதோடு, பார்ப்பனர்கள்‌ உயர்‌ நீதவர்கள்‌ ) மற்றவர்‌கன்‌ இழிந்தவர்கள்‌ என்பதை நமது மக்கவின்‌ இரதீதத்திலேயே பாய்ச்சிவிட்டார்கள்‌. எனவே, ஒரு சிறு கூட்டத்தாரின்‌ கொடுமையால்‌ பெரிய சமூகம்‌ சுயமரியாதை கிழந்து பல கஷ்ட நஷ்டங்களுக்கானாகி இருப்பதற்குப்‌ பரர்ப்பனரல்லாதாராகய நாம்‌ காரணஸ்தர்கள்‌ அல்லர்‌. தவிர, சிலர்‌' நம்மைப்‌ பார்தீது ¢ பார்ப்பனரிடம்‌ துவேஷம்‌ வேண்டாம்‌, பார்ப்பனரும்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ கூடி ஒன்று சேர்ந்து கிக்‌ கொடுமையை நிவர்தீதிக்க வழி பாருங்கல்‌ ! என்று நல்ல பின்னைகள்போல்‌ பேசுகிறார்கள்‌. நாம்‌ அவர்களைத்‌ தொடுவதற்கும்‌, ஒன்றாய்‌ இருப்பதற்கும்‌, உண்பதற்கும்‌ ஒன்று சேர்ந்து கடவுளை வணங்குவதற்கும்‌, தெருவில்‌ நடப்பதற்கும்கூட உரிமை கொடாத www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 415 அவர்களா--அல்லது, நடப்பதற்கு வழிவிடுங்கள்‌ என்று கெஞ்சிக்‌ கேட்கின்ற நாமா துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள்‌ என்பது சற்று யோசிப்பவர்களுக்குத்‌ தோன்றாமல்‌ போகாது. அன்றியும்‌, ஒற்றுமையாய்‌ இருந்து துவேஷத்தை ஒழிதீதுக்கொள்ளக்ீகூடாதா என்று சிலர்‌ சொள்லுகின்றார்கள்‌, துவேஷம்‌ ஒழியவேண்டுமானால்‌ துவேஷத்திற்குக்‌ காரணமாயிருப்பவர்களிடம்‌ ஒற்றுமையாயிருக்க முடியவேமுடியாது. இன்றைய தினம்‌ நான்‌: மாதீதிரமல்ல இக்‌ குற்றங்களை எடுத்துக்‌ கண்டிப்பது. ஏறக்குறைய 5000, 6000 வருடங்‌ களுக்கு முன்புள்ள தேச சரித்திரத்தைப்‌ பார்த்தால்‌, நமது முன்னோர்‌ காலத்திலிருந்‌3த மனிதத்‌ தன்மைக்கு விரோதமான தம்‌, இயற்கைக்கும்‌ சத்தியதீதிற்கும்‌ விரோதமான குமான கொடுமைகளை ஒழித்துச்‌ சமத்துவத்தையும்‌ அன்பையும்‌ உலகின்கண்‌ நிலைநிறுத்த நம்மவர்கள்‌ பாடுபட்டிருப்பது விளங்காமலிரா து. 5000 வருடமாகப்‌ பாடுபட்டும்‌, அதுவும்‌ அன்புடனும்‌ ஒற்றுமையுடனும்‌ பாடுபட்டும்‌, இன்னும்‌ அப்‌ பேய்‌ ? தாண்டவமாடுமானால்‌, இனியும்‌ எப்படி அன்பாயும்‌ ஒற்றுமையாயுமிருந்து இப்‌ பொல்லாப்‌ பிரிவினையை நீக்க முடியும்‌ ! என்பதை யோசியுங்கள்‌. இவைகளை நான்‌ ஏன்‌ சொல்லுகி2றன்‌' என்றால்‌, நம்‌ வாலிபர்களிலும்‌ சிலர்‌, * எதற்கு இந்த வித்தியாசம்‌ 8 பாவம்‌, பார்ப்பனர்கள்‌ நம்மிடம்‌ வருகிறார்கள்‌) பிச்சையெடுக்கிறார்கள்‌) பிறகு போய்‌ விடுகிறார்கள்‌) அவர்கள்மீது நமக்‌ கன்‌ வெறுப்பு P என்று தர்ம சாஸ்திரம்‌ பேசி, நம்‌ இயக்கத்திற்கே முட்டுக்கட்டை யாய்‌ நின்றுவிடுகிறார்‌ கள்‌. அவர்களுக்கு நான்‌ மேலே சொல்லியிருக்கும்‌ சமாதான தீதையே சொல்கி 8றன்‌. கொஞ்சம்‌ யோசனை செய்து பாருங்கள்‌, நம்‌ சொந்த இடங்களில்‌ எங்கே யாவது ¢ இது பார்ப்பனர்களுக்கு ? ¢ இது பார்ப்பனர்‌ அல்லாதார்‌ என்கிற சூதீதிரரீகளுக்கு என்று நாம்‌ எழுதி வைத்திருக்கிறோமா? எந்தப்‌ பொது ஸ்தலதீதிலும்‌, எந்த உயர்ந்த கிடதீ திலும்‌, எந்தப்‌ புண்ணிய பூமியிலும்‌-- இது பார்ப்பனருக்கு, இது சூதீதிரருக்கு? என்று எழுதி வைதீதிருப்பதோடல்லாமல்‌, அதை அமுலில்‌ வைதீதுக்கொண்டிருப்பது பார்ப்பனர்‌ களா? அல்லது நாமா? அன்றியும்‌, இப்போதும்‌ அவர்களால்‌ ஏற்படுத்தப்‌ பட்ட ஒவ்வொரு காப்பி ஓட்டலிலும்‌, வெட்டிவைதீத குளக்கரையிலும்‌ * இது பார்ப்பனர்‌: களுக்கு, * இது சூகீதிரர்களுக்கு? என்று எழுதி வைதீதிருக்கிறார்கள்‌. இப்படி எழுதியது தப்பு, இவ்வித வித்தியாசம்‌ இருக்கக்‌ கூடாதென்றால்‌, அது ஒற்றுமைப்‌ பினவாகுமா 8 அல்லது ஒற்றுமைக்கான முயற்சி ஆகுமா? ஒற்றுமையை எப்படி உண்டாக்குவது 9 ¢ நீங்களெல்லாம்‌ ஒற்றுமையாய்‌ இருங்கள்‌ ; இருக்கிற வித்தியாசங்கள்‌ அப்படியே இருக்‌ கட்டும்‌) அவை கடவுளால்‌ உண்டாக்கப்பட்டவை? என்றால்‌, எப்படி ஒற்றுமை நிலவும்‌ 8 இதனால்‌ கடவுளே பிரிதீது வைத்திருக்கிறார்‌ என்றல்லவா ஏற்படும்‌? உண்மையாய்‌ ஒருவருக்கொருவர்‌ ஒற்றுமையாய்‌ இருக்க வேண்டுமென்றால்‌, ஒவ்வொருவர்‌ எண்ணமும்‌ ஒரே மாதிரியாகவும்‌, ஒவ்வொருவரும்‌ மற்றவரால்‌ சமதீ.துவமாக மதிக்கப்பட்டும்‌, ஒவ்வொரு வருக்கும்‌ அன்‌னி3யோன்னிய மும்‌ அன்பும்‌ நம்பிக்கையும்‌ ஏற்பட்டாலன்‌ றி, உண்மையான ஒற்றுமையாய்‌ எப்படி வாழ முடியும்‌ 8 ஒரு புலியினிடதீதில்‌ ஓர்‌ ஆட்டுக்குட்டியை விட்டு, ¢ நீங்களிருவரும்‌ ஒற்றுமையாய்‌ இருங்கள்‌?! என்றால்‌ அவைகள்‌ எப்படி ஒற்றுமையாய்‌ இருக்க முடியும்‌ 8 புலி ஆட்டைக்‌ கொன்று தின்னாமலிருக்க முடியுமா? எலிகள்‌ இருக்கு மிடத்தில்‌ பூனையைக்‌ கொண்டுவந்து விட்டு, எலிகளைக்‌ கூப்பிட்டு, ¢ நீங்கள்‌ எல்லோரும்‌ ஒற்றுமையாய்‌ இருங்கள்‌? என்றால்‌ அவைகள்‌ எப்படி ஒற்றுமையாய்ச்‌ சேர்ந்து வாழ முடியும்‌ கொஞ்ச காலத்திற்குன்‌ எலிகளே காணப்படராதொழியுமா அல்லவா 4 இரண்‌: டுக்கும்‌ நம்பிக்கை உண்டாக்கி, ஒன்றைக்‌ கொன்று ஒன்று வயிறு வளர்க்க வேண்டி யிருக்கிற நிலையை மாற்றாமல்‌, அவைகளை எப்படி ஒற்றுமையாய்‌ இருக்கச்‌ செய்ய முடியும்‌? ஆனால்‌, சிலர்‌ வெகு சுலபமாக, ¢ நீங்களெல்லாம்‌ ஒற்றுமையாயிருங்கள்‌ $. அப்புறம்‌ பார்தீ.துக்கொள்ளலாம்‌? என்று சொல்லிவிடுவார்கள்‌. அவர்கள்‌ பொறுப்பை உணராதவர்கள்‌ ஆவார்கள்‌ என்றே சொல்லு 3வன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 416 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ புழு, பூசீசிகள்‌, பன்றி, நாய்களை விடக்‌ கேவலமாய்‌ நடதீதப்படுவது நாமா ? அவர்‌: களா இப்படிச்‌ சொல்லுகிறவர்கன்‌ நிமிர்ந்து போட்டதென்ன? குனிந்து எடுத்த தென்ன? வெறும்‌ வாய்வேதாந்தம்‌ பேசுகிறவர்கள்தாமே ! சுயமரியாதை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு இதன்‌ கஷ்டம்‌ தோன்றாது. நிதீதிய வாழ்வில்‌ நாம்‌ படும்‌ துயர்‌ யாரே அறிவார்‌ ? தவிர, வேறு சிலர்‌, * வேளாளருக்குள்ளும்‌ மற்றும்‌ பல வகுப்பார்களுக்குள்ளும்‌ இம்‌ மாதிரியான ஒருவரை ஒருவர்‌ தொடக்கூடாதென்றும்‌, உண்ணக்கூடாதென்றும்‌, கலியாணம்‌ செய்யக்கூடாதென்றும்‌ சொல்லுகிறார்கள்‌. அதை முதலில்‌ ஒழியுங்கள்‌. கீழிருந்து ஒழித்‌ துக்கொண்டு வந்தபிறகு மேலுள்ளவர்களை ஒழிக்க முயலுங்கள்‌ ? என்று சொல்லக்கூடும்‌. கீழே காணப்படும்‌ பிரிவினைகள்‌ உண்மையானவையல்ல. இது பார்ப்‌ பானைப்‌ பார் தீது, அவன்போல்‌ நடக்‌ கவேண்டுமென்று ஆசைப்பட்டு, அறியாமையால்‌ * நடித்து? வருகிற வினையின்றிச்‌ சூழ்ச்சிக்காக வேண்டுமென்றே ஏற்படுத்திக்‌ கொண்ட தல்லஃ பார்ப்பனருக்கு முன்‌ நம்நாட்டில்‌ இந்தக்‌ கொடுமைகளும்‌ கூடா ஒழுக்கங்களு மிருந்ததாகச்‌ சொல்ல முடியாது. நான்‌ சிறந்த ஆராய்சீசிக்காரனுமல்லன்‌ ) குறைந்த ஆராய்சீசிக்காரனுமல்லன்‌ ) அடியோடு ஆராய்ச்சி இல்லாதவன்‌. ஆயினும்‌, பல ஆராய்ச்‌ சிக்காரர்களை அடுதீதுக்‌ கேட்டதின்‌ பயன்‌ அறிந்தவ ?னயன்றி வேறல்லன்‌. முதலாவ தாக; இந்த சாதி என்னும்‌ சொல்லே தமிழ்ச்சொல்‌ அல்ல) சாதிக்கு ஆதாரம்‌ இந்து மதம்‌ என்று சொல்லுவது. அந்த இந்து மதம்‌ என்ற சொல்லும்‌ தமிழ்ச்‌ சொல்‌ அல்ல; அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும்‌ மனுதரீமமும்‌ நமக்குச்‌ சம்பந்தப்பட்டவையல்ல $ அவைகள்‌ நம்‌ மொழியில்‌ உள்ளவையுமல்ல $ நம்‌ மக்களால்‌ எழுதியவையுமல்ல $ எப்படியோ அவை நம்‌ தலைக்கு வினையாக வந்து சேர்நீதிருக்கின்றன) இந்து என்ற சொல்‌ எந்த மொழியிலும்‌ கில்லை. ஆராய்ச்சிக்காரர்கன்‌ அதை ஒரு நதியின்‌ பெயர்‌ என்‌ கிறார்கள்‌ $. சிலர்‌ ஓர்‌ இடதீதில்‌ வாழும்‌ குறிப்பிட்ட மனிதர்களைக்‌ குறிப்பது என்கிறார்கள்‌ ] சிலர்‌ * பர்சிய? மொழியில்‌ திருடர்களைக்‌ குறிப்பது என்கிறார்கள்‌. அது மருவி வந்ததென்‌ பார்கள்‌ சிலர்‌ மற்றபடி, வருணாசிரம தர்மம்‌ என்னும்‌ சொல்கூட தமிழ்ச்‌ சொல்‌ அல்ல. நம்‌ நாட்டில்‌ அந்‌ நியமம்‌ இருந்தீருந்தால்‌ நம்மொழியில்‌ அதற்கு வார்த்தை இருந்திருக்கும்‌, சோளம்‌ நம்‌ நாட்டில்‌ விளைகிறது) அதைச்‌ சோளம்‌ என்று சொல்லுகிறோம்‌. ஆங்கிலேயரும்‌ அதைச்‌ சோளம்‌ என்றே சொல்லுவார்கள்‌, ஏன்‌ ₹ அவர்கள்‌ நாட்டில்‌ அது இருந்ததில்லை, அது போலவே, காப்பியை நம்‌ தமிழ்‌ மகீகன்‌ ஆங்கிலேயர்‌ வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால்‌, நம்‌ தமிழ்மொழியில்‌ அதற்கு ஒரு பெயரிடுவதற்கில்லாமல்‌ போயிற்று, ஆதலால்‌, நாமும்‌ அதை அன்னிய நாட்டுப்‌ பெயரால்‌ ¢ காப்பி? என்றே அழைக்கின்றோம்‌. ¢ வருணாசிரம தரீம சாதிப்‌ பாகுபாடு? நம்‌ தமிழ்‌ நாட்டில்‌ ஆரியர்‌ கன்‌ வருவதற்கு முன்பே இருந்திருந்தால்‌, நம்‌ மொழியில்‌ அவைகளுக்குத்‌ தனிப்‌ பெயர்‌ இருந்‌.துதானிருக்கும்‌. அன்றியும்‌, இப்‌ பெயர்களையும்‌ இவ்‌ விதீதியாசங்களையும்‌ நாம்‌ ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம்‌ என்பதற்கு அறிகுறிதான்‌--ஆரியர்களை நாம்‌ மிலேச்சர்கள்‌ என்று சொல்லுவது. எனவே, கிவை ஒழிய சவண்டுமானால்‌, இவ்‌ வாரியதீதன்மை ஒழிய வேண்டும்‌ ) ஆரிய மதம்‌ ஒழிய வேண்டும்‌) ஆரியக்‌ கொள்கை ஒழிய வேண்டும்‌. அப்படிக்கின்றி, அவைகளை ஒழிக்காமல்‌ மகாதீமாவைப்போல்‌ சவுகரியதீதிற்கும்‌ சமயதீதிற்கும்‌ தகுந்தபடி வியாக்கியானம்‌ செய்துகொண்டிருப்பதனால்‌ ஓர்‌ அணுவளவு பயனும்‌ இன்றி, ஆரிய மாய்கையில்‌ விழவேண்டியதாய்தீதான்‌ விடும்‌, அதனால்தான்‌, இவ்வளவு ஆயிரம்‌ வருடம்‌ பாடுபட்டும்‌ கன்னமும்‌ அதே அடிமை நிலையில்‌ நமது நாடு இருந்து வருகின்றதுஃ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 417 தவிர, சிலர்‌ சொல்லுவதுபோல்‌ 83y இருந்து இவ்‌ விதீதியாசங்களைப்‌ போச்கிக்‌ கொண்டு போகவேண்டுமென்பது ஒ ந காலத்திலும்‌ மூடியும்படியான காரியமல்ல, அதற்கு ஆகாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்கால்தான்‌ மறுபடி முளைக்காம லிருக்கும்‌. அப்படிக்கில்லாமல்‌, அதிலிருந்து முளைத்த கிளைகளை மாதீதிரம்‌ வெட்டினால்‌ மறுபடியும்‌ அது நன்றாய்தீ துளிர்தீது, தழைந்துகொண்டுதானிருக்கும்‌. எனவே, உற்பத்தி ஸ்தானமான பார்ப்பனர்களிடமிரநந்து அதை ஒழிக்கவேண்டும்‌. அவர்களால்தான்‌ இவ்‌ வித்தியாசங்கள்‌ பரவுகின்றன. உதாரணமாக, எங்கள்‌ வீட்டிற்குமுன்‌ ஒரு குழாய்‌ இருக்கிறது. அதில்‌ தண்ணிர்‌ பிடிக்க ஒரு பார்ப்பன சகோதரி வரும்போது ஒரு சுண்டைக்காய்‌ பிரமாணம்‌ புளியும்‌ பஞ்ச பாதீதிர தீதில்‌ தண்ணீரும்‌ கொண்டு வந்து, குழாயைப்‌ புளியால்‌ விளக்கிக்‌ கழுவி, பின்பு தண்ணீர்‌ பிடித்‌ துக்கொண்டு போக ஆபம்பிக்கிறாள்‌. கதைப்‌ பார்த்த நம்‌ சகோதரிகள்‌, நெல்லிக்காய்‌ அளவு புளியும்‌ ஒரு தோண்டி தண்ணிரும்‌ கொண்டுவந்து, புளியால்‌ விளக்கிக்‌ கமுவி தண்ணீர்‌ எடுத்துக்கொண்டு போகப்‌ பழ ஐகிறார்கள்‌. இதைக்‌ கண்ணுற்ற நம்‌ முகமதிய சகோதரிகளும்‌ கொளுமிச்சங்காய்‌ அளவு புளியும்‌ முக்கால்‌ குடம்‌ தண்ணி நம்‌ கொண்டுவந்து புளியால்‌ குழாயை விளக்கிக்‌ கழுவித்‌ தண்ணீர்‌ பிடித்து எடுத்துக்‌ கொண்டு போகப்‌ பழகுகிறார்‌ கள்‌. அந்த முகமதிய சகோதரியை அடுத்து, 6 உங்கள்‌ மதத்திற்கு வித்தியாசம்‌ இல்லையே, நீங்கள்கூட ஏன்‌ இப்படிக்‌ கழுவித்‌ தண்ணீர்‌ பிடிக்கின்றிர்கள்‌ ) என்றால்‌, £4 எனக்கு என்ன தெரியும்‌) இப்படித்தான்‌ தண்ணீர்‌ பிடிப்பது வழக்கமோ, என்னமோ என்று கருதி நான்‌ செய்‌ துவருகி $றன்‌ 13 என்கிறான்‌, இவ்வளவுக்கும்‌ காரணமாயிருந்தவர்கள்‌ யார்‌ என்று பாருங்கள்‌ ! பார்ப்பனர்கள்‌ இப்படிச்‌ செய்யாதிருந்தால்‌ இவ்வித வழக்கங்கள்‌ பரவ வழியில்லை. நம்‌ மக்களில்‌ சிலரீ, ¢ அல்லாதார்‌? என்ற பெயர்‌ ஏன்‌ என்பார்கள்‌. அதற்கும்‌ சமாதானம்‌ சொல்லவேண்டியிருக்‌ றது. ஆன்டி-காலரா? (Anti-cholera) மரூந்‌ தென்றால்‌ அம்‌ மருந்து எப்படி காலரா வந்தவுடன்‌ நினைவுக்கு வருமோ, ¢ ஆன்டி-பி3ளக்‌? மருந்தென்றால்‌ பிளேக்‌ வந்தவுடன்‌ அது நினைவுக்கு வருமோ, மூட்டைப்‌ பூச்சிக்கு *எமன்‌ 1 என்றால்‌ எப்படி மூட்டைப்‌ பூச்சி கடித்தவுடன்‌ அம்‌ மருந்து நினைவிருக்குமோ, அது போல்‌--சமதீதுவமில்லாமல்‌ கொடுமையில்‌ பட்டு இழிவை அனுபவிதீதுவரும்‌ மக்களுக்கு அது ஒழிய?வண்டுமானால்‌, அதற்கு ஆதாரமானவர்கள்‌ பெயரும்‌ அவர்களைக்கண்ட அளவில்‌ நினைவிருக்கவேண்டும்‌) கொடுமை செய்தவிதமும்‌ ஞாபகத்திற்கு உடனே வரவேண்டுமெனக்‌ கருதியே “பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌? எனப்‌ பெயர்‌ கொடுக்கபி பட்டதேயன்றி வேறல்ல, இந்தவித இழிவும்‌ கொடுமையும்‌ ஒழிந்து எல்லா மக்களும்‌, சமத்துவம்‌ அடைந்து நாம்‌ ஒற்றுமையானால்‌ இந்த ¢ அல்லாதார்‌ என்ற பெயர்‌-தானாகவே இல்லாமல்‌ போகும்‌. அரசியலிலும்கூட ¢ அல்லாதார்‌? என்கிற பெயரை நீக்கி நாம்‌ வாழ முடிவதில்லை, அது அவமானமில்லை என்றுதான்‌ கருதி இருக்கிறோம்‌. அரசியல்‌ சீர்திருத்தம்‌ என்பதில்‌, தேர்‌ தல்களுநகுக்‌ கிறிஸ்‌ தவர்கள்‌; கிறிஸ்‌ தவர்கள்‌ தொகுதியில்‌ நிற்கிறார்கள்‌ ) ஆனால்‌, நாம்‌ மாத்திரம்‌ முகமதியரல்லாதார்‌ என்கிற தொகுதிக்கு நின்றுதான்‌ இப்பொழுதும்‌ சட்டசபை அங்கத்தினராகிறோம்‌) நாம்‌ முகமதியரல்லாதார்‌ தொகுதியில்‌ தான்‌ ஓட்டர்‌ கலரகவும்‌ இருந்துவருகி றாம்‌. அரசாங்கத்தாருக்கும்‌ இதைத்தவிர வேறுபெயர்‌ கிடைக்கவில்லை. நமக்கும்‌ சொல்லத்‌ தெரியவில்லை, இந்து மத பரிபாலன சட்டம்‌ கொண்டு வந்த காலத்தில்‌, இந்தப்‌ பார்ப்பனர்கள்‌. இந்துமதம்‌ போயிற்‌ றன்று சொன்னார்களே ஒழிய, தங்களுக்கும்‌ ¢ முகமதியரல்லாதார்‌ * என்கிற பெயர்‌ வேண்டாம்‌ என்று சொல்ல$வ இல்லை. ஏன்‌ என்றால்‌ வேறு பெயர்‌ சொல்லுவதற்கு கில்லை; இருந்திருந்தால்‌. வாதாடிப்‌ பார்த்திருப்பார்கன்‌. இவைகளை: 1686-59 www.thamizham.net - Free £ book 14௦ 3011 418 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ எல்லாம்‌ எதற்காகச்‌ சொல்லுகிறேன்‌ என்றால்‌, நமது எதிரிகள்‌ நம்‌ இயக்கத்தைக்‌ கெடுக்க சில்லரை விஷயத்தைச்‌ சொல்லி மக்களை எவ்வளவு தூரம்‌ ஏமாற்றுகின்றார்களென்பதைதி தெளிவுபடுத்தவேயன்றி வேறில்லை. எந்தப்‌ புராணத்திலும்‌ எந்தச்‌ சரித்திரதீதிலும்‌ கந்து மதம்‌ என்பதைப்பற்றி எங்கும்‌ ஒரு வரிகூடச்‌ சொல்லவில்லை. ஆங்லெ அரசாங்கமுள்ள இந்த நாளில்தான்‌ ¢ கந்து? என்ற பெயர்‌, இரயில்வே பிளாட்பாரதீதிலுள்ள ஓட்டல்களில்‌ * இந்து பிரயாணிகள்‌? என்றும்‌, வெளிக்குப்‌ போக உள்ள கக்கூஸ்களில்‌, ¢ இந்து புருஷர்கள்‌,--கிந்து பெண்கள்‌ ? என்றும்‌ எழுதியதைக்‌ காணலாமேயன்றி வேறு காண முடியாது. நீங்கள்‌ என்ன செய்ய வேண்டுமென்பதைப்பற்றிச்‌ சிறிது சொல்லுகிறேன்‌. நாம்‌ சத்தியத்தின்‌ பெயரால்‌ படும்‌ இடையூறுகளை வேருடன்‌ களை ந்தெறியும்வரை பார்ப்பன ரல்லாத வாலிபர்கள்‌ கண்டிப்பாய்‌ அரசியலில்‌ ஒரு?பாதும்‌ தலையிடுதல்‌ கூடாது. அரசியலில்‌ தலையிட ஒரு பக்குவமுண்டு. அந்தப்‌ பக்குவம்‌ உங்களுக்கும்‌ இந்த நாட்டுக்‌ கும்‌ வந்த பின்பு அரசியலில்‌ தலையிட்டால்‌ பயன்படும்‌. நமகீகும்‌ அரசியலுக்கும்‌ தற்பொழுது பொருத்தமும்‌ கவனமும்‌ வைக்கக்‌ கூடாது. நாம்‌ அனைவரும்‌ பொது வாழ்வில்‌ சம சுதந்திரமும்‌ ) பிறவியில்‌ நமது வாழ்வும்‌ துக்கமும்‌, அனைவருடைய வாழ்வும்‌ இக்கமுமாகும்‌ என்றும்‌) பிறவியில்‌ உயர்‌ ந்தவருமில்லை, இழிந்தவருமில்லை என்றும்‌ உணர்ச்சி உண்டாகும்வரையில்‌, அரசியலில்‌ தலையிடுதல்‌ கூடாது. அப்படித்‌ தலை யிட்டால்‌ அது தற்கொலையாகவே முடியும்‌. மக்களுக்கு அன்னியர்‌ ஆளுவது என்பது கஷ்டமாகதீதானிருக்கும்‌. அந்த ஆட்சியை வாங்க நாம்‌ ஆளவேண்டுமென்ற எண்ணங்கள்‌ சாதாரணமாக உண்டாவது இயல்புதான்‌. அன்னியர்‌ என்பவர்‌ யார்‌ ? நாம்‌ என்று சொல்லிக்கொள்பவர்‌ யார்‌ 8 என்று ஆராமப்புகின்‌, அன்னியர்‌ என்பது வெள்ளைக்காரரென்றும்‌, நாமென்பது பிராமணர்‌, சூத்திரர்‌, பஞ்சமர்‌, கிறிஸ்தவர்‌, முகமதியர்‌ மற்றும்‌ பல சாதியாரும்‌ என்றும்‌ எண்ணியிருகீ கின்றோம்‌. பிராமணனை நம்மவர்‌ என்பதில்‌ சேர்க்கும்போது, வெள்ளைக்காரர்களை மாத்திரம்‌ எப்படி அன்னியர்‌ என்று சொல்லக்கூடும்‌ ? பார்ப்பனனைவிட வெள்ளைக்காரன்‌ நமக்கென்ன கொடுமை செய்கிறான்‌? வெள்ளைக்காரன்‌ நமக்குச்‌ செய்துவரும்‌ கொடுமைகள்‌ என்பதெல்லாம்‌ பார்ட்பனனின்‌ யோசனையைக்‌ கேட்டு, பார்ப்பனன்‌ சொல்லுகிறபடி, பார்ப்பனன்‌ உதவியால்‌, அவன்‌ சம்மதத்தின்‌ பேரில்‌ செய்கிறானா 1 அல்லது தானாகவே செய்கிறானா! தவிர, வெள்ளைக்காரன்‌ நீங்கிய மற்றவர்கள்‌ எல்லாம்‌ ஒன்று என்றும்‌, ஒன்றாய்ச்‌ சேர்ந்து சுயராஜ்யம்‌ கேட்கின்றார்கள்‌ என்றும்‌ எப்படிச்‌ சொல்ல முடியும்‌ 1 லார்டு கீர்வின்‌ தரை இங்கு வந்து, ¢ நாங்கள்‌ ஊருக்குப்‌ போகிறோம்‌. இந்த கஜானா சாவி, இந்த முத்தீரை, இந்தப்‌ பட்டம்‌ ஆகிய மூன்றையும்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌? என்று சொல்வதாகவே வைத்துக்கொள்வோம்‌. அதை யார்‌ வாங்கிக்‌ கொள்வது முதலில்‌ அய்யர்‌ வருவார்‌, ¢ நான்‌ தான்‌ படித்திருக்கிறேன்‌. எனக்கு அரசாளும்‌ திறமை வெள்ளைக்‌ காரர்களை அடுத்துக்‌ கற்றுக்‌ கொண்டிருக்கிறேன்‌! என்று நம்மிடத்தில்‌ சொல்லி, வெள்ளைய ரிடம்‌ சென்று, * நீங்கள்‌ இவ்வளவு நாள்‌ இங்கிருப்பதற்கு நாங்களல்லவா உதவியா யிருந்தோம்‌. உங்களை எங்கள்‌ நாட்டாருக்குக்‌ காண்பித்துக்‌ கொடுக்காமல்‌, எங்கள்‌: நாட்டாரை உங்களுக்குக்‌ காண்பித்துக்கொடுத்தோமே, நீங்கள்‌ நன்றியுடையார்‌ என்‌: கிறிர்களே, அப்படியானால்‌ எங்களிடம்‌ கொடு? என்பார்கள்‌. இதற்குச்‌ சம்மதிக்கக்‌ காதீதிருக்கின்‌ றோமா8 வெள்ளைக்கார அரசாங்கம்‌ இருக்கும்போதே, எங்களைச்‌ சூத்திரர்கள்‌ என்று கொடுமைப்படுத்தும்‌ நீங்கள்‌, வெள்ளைக்காரர்கள்‌ போய்விட்டால்‌ என்ன செய்யமாட்டீர்கள்‌ 4 என்று கேட்டுத்‌ தடுப்போமா இல்லையா? இதைக்கேட்ட லார்டு இரவின்‌, * நீங்கள்‌ தான்‌ பெருவாரியாய்‌ இருக்கிறீர்களே, நீங்களாவது வைத்துக்‌ கொள்ளுங்கள்‌? என்று நம்மிடம்‌ கொடுத்தால்‌ பார்ப்பனர்கள்‌ சம்மதிப்பார்‌ களா? ¢ வெள்ளைக்‌ காரர்‌ இருக்கும்போதே பார்ப்பனத்‌ துவேஷம்‌ நிறைந்திருக்கின்‌றது. நீங்கள்‌ போய்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 419 விட்டால்‌ எங்கள்‌ கதி என்ன! என்று சொல்லுவார்களா இல்லையா! இப்பொழுதே, எத்தனையோ உதீதியோகங்கள்‌ தங்களுக்கு இல்லை என்றால்‌ வெள்ளைக்காரர்களுக்குப்‌ போகட்டும்‌ எனப்‌ பார்க்கின்றார்‌ களேயன்‌ றி, நமக்குக்‌ கிடைக்கச்‌ சம்மதிக்கின்றார்களா 8 அதன்‌ இரகசியம்‌ தானே ¢ இரட்டை ஆட்சி? ஒழிய வேண்டுமென்பது. அன்றியும்‌, நாம்‌ இருவரும்‌ சம்மதித்து இராஜியாவதாயிருநீதாலும்‌ முகமதியர்கள்‌ சும்மாயிருப்பார்களா 1 ¢ நாங்கள்‌ இப்பொழுது 7$ கோடி இருக்கில்‌ றோம்‌; இன்னும்‌ நான்கைந்து வருடத்திற்குள்‌ நாங்களே பெருவாரியாக 12 கோடிக்கு வந்துவிடுவோம்‌. அப்பொழுது உங்களையே கூரதீதிவிட எங்களுக்குத்‌ தெரியும்‌. அதுவரை நீங்கள்‌ போகாதீர்கள்‌ ? என்பார்களா இல்லையா 9 அவர்களும்‌ சம்மதித்தார்களென்றே வைத்துக்‌ கொள்ளுவோம்‌ ; கிறிஸ்தவர்கள்‌ சம்மா இருப்பார்களா? ¢ நாங்கள்‌ சில பேர்‌ உங்களை நம்பி கிப்பொழுதுதான்‌ கிறிஸ்தவர்களானோம்‌. அப்படி இருக்க நீங்கள்‌ போவதானால்‌ எங்களுக்காகவும்‌ ஒரு கப்பல்‌ அதிகமாக ஏற்பாடு செய்யுங்கள்‌. நாங்களும்‌ உங்கள்‌. கூடவே வந்துவிடுகின்றோம்‌ ! என்பார்கள்‌. அவர்களும்‌ ஒப்புக்கொண்டதாகவே வைத்துக்கொள்வோம்‌. எம்‌, சி. இராஜா சம்மா இருப்பாரா 8 ¢ அய்யா, எங்களுக்காகத்‌ தானே கடவள்‌ உங்களை இங்கு அனுப்பினார்‌. உங்களால்தானே நாங்கள்‌ மனிதர்களாகி இருக்கிறோம்‌. அப்படி இருந்தும்‌ நீங்கள்‌ இருக்கும்பொழுதே எங்களை வீதியில்‌ நடக்கக்‌ கூடாதென்கிற இவர்கள்‌, நீங்கள்‌ போய்விட்டால்‌ என்ன செய்வார்‌ கள்‌ 8 வண்டியில்‌ கட்டி இட்டமாட்டார்களா என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌ ? என்று சொல்லிக்‌ காலைப்பிடித்‌ தாவது குறுக்காட்டிக்கொள்வார்களா இல்லையா ! இந்த நிலையில்‌ நாம்‌? என்பது யார்‌ என்பதை யோசிதீதுப்பாருங்கள்‌. ஒன்றும்‌ இல்லை--ஒரு மந்திரி என்கிற ஒரு பொறுப்புமில்லாத ஓர்‌ உத்தியோகத்தை நமக்குக்‌ கொடுதீதிருகீகும்போதே, நமது யோக்கியதை இப்படி இருக்கின்றது. வெளியில்‌ செல்ல வெட்கக்கேடு, அன்றியும்‌, அதற்குப்‌ பார்ப்பான்‌ சூழ்ச்சியும்‌ அதற்கு மற்ற சூழ்ச்சியும்‌ எப்படி இருந்துகொண்டு, நாடு சிரித்து, நம்மை மானக்‌ கேடாக்குகின்றது 1 இனி அரசாட்சியே வந்தால்‌ என்ன கதியாகும்‌ என்பதை நீங்களே யோசியுங்கள்‌. நான்‌. வேண்டுமென்றாவது, வெள்ளைக்காரரென்கிற கொள்ளைக்காரருக்கு அனுகூலமாகவாவது, பார்ப்பனருக்கு இடையூறாகவாவது சொல்லவில்லை. நாட்டின்‌ உயிர்‌ நாடியைப்‌ பார்‌ தீ s, உணர்ந்து சொல்கிறேன்‌. எனவே, நம்மில்‌ ஒரு கூட்டத்தாரே ஏகபோகமாய்‌ வகிக்கும்‌ ஆதிக்கம்‌ ஒழிந்தால்‌, ஒருவரிடம்‌ ஒருவருக்கு அன்பும்‌ நம்பிக்கையும்‌ ஏற்பட்டால்‌, வெளிச்‌ சத்தைக்‌ கண்ட இருள்‌ ஓடுவதுபோல்‌, அன்னிய ஆட்சி நம்மைவிட்டு ஓடிவிடும்‌, இதனால்‌ தான்‌ நான்‌ அக வரையில்‌ குறிப்பாக நம்‌ வாலிபர்களுக்கு அரசியல்‌ உணர்ச்சி ஏற்படவே கூடாது என்கிறேன்‌. அதனால்‌ என்ன கெடுதி நேரிட்டாலும்‌ நம்‌ வாலிபர்கள்‌ அரசியலி னின்றும்‌ முற்றும்‌ விலகியிருத்தல்‌ வேண்டும்‌. உதீதியோகத்தால்தான்‌ நமது பார்ப்பன ரல்லாதார்‌ இயக்கத்தில்‌ பிளவேற்பட்டது. நம்‌ பார்ப்பன?! அல்லாதார்‌ இயக்கம்‌ உண்மை யாக உத்தியோகப்‌ பற்றின்றி ஆரம்பித்திருக்கலாம்‌. அதை ஏற்படுதீதிய தலைவர்களும்‌ அதே எண்ணத்துடனிருந்து கிறந்திருக்கலாம்‌. கிப்பொழுதம்‌ பலர்‌ உத்தியோக வெறி பிடியாதவர்களுமிருக்கிறார்‌களென்பதையும்‌ நான்‌ ஒப்புக்கொள்ளுகிறேன்‌. ஆனால்‌, கொஞ்சமிருர்‌ தாலும்‌ பிளவு உண்டாக்குகின்றது. நம்‌ வாலிபர்‌ கருத்‌ தல்லாம்‌ நாம்‌ எப்படிச்‌ சுயமரியாதையடைவது ? நாம்‌ எப்படி விடுதலை அடைவது? என்பதையே கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. [புரசைவாக்கத்தில்‌) 19-1051927-ல்‌ சொற்பொழிவு. குடி அரசு! 30-10-1927] www.thamizham.net - Free £ book 14௦ 3011 420 6. ராயல்‌ கமிஷன்‌ ராயல்‌ கமிஷனைப்பற்றி ஜஸ்டிஸ்‌ கட்சியாரீகள்‌ ஒருவித அபிப்பிராயமும்‌ இி.துசமயம்‌ தெரிவிக்கக்கூடாது என்பதை வணக்கத்துடன்‌ தெரிவித்த க்கொள்ளுகிறேன்‌. பார்ப்பன அரசியல்‌ தந்திரத்தை நாம்‌ பின்பற்றுவதும்‌, அவர்களது இயக்கங்களை நாம்‌ பின்பற்று: வதும்‌ பார்ப்பனரல்லாத சமூகத்தின்‌ தற்கொலையேயாகும்‌. நம்‌ நாட்டில்‌ பார்ப்பனர்கள்‌ சம்பந்தப்பட்ட அரசியல்‌ இயக்கங்கள்‌ என்பது எதுவும்‌ கொஞ்சமும்‌ நாணயமுடையதல்ல, அக்‌ கூட்ட தீதிற்கே இவ்‌ விஷயங்களில்‌ மானம்‌, வெட்கம்‌, நாணயம்‌ முதலியவைகள்‌ கடுகளவும்‌ கிடையாது என்றே சொல்லுவோம்‌. ஏனெனில்‌, இன்று பகிஷ்காரம்‌ என்பார்கள்‌, நாளை ஏற்றுக்கொள்வது என்பார்கள்‌ ) இன்று ஒதீதுழை யாமை என்பார்கள்‌, நாளை ஒதீதுழைப்பு என்பார்கள்‌) இன்று முட்டுக்கட்டை என்பார்‌ கன்‌, நாளை சன்னக்கட்டை போட்டு நடத்திக்கொடுப்பது என்பார்கள்‌ )$ இன்று நம்பிக்கை இல்லை என்பார்கள்‌) நாளை சம்பந்தம்‌ செய்துகொள்ளுவது என்‌ பார்கள்‌) இன்று காங்கிரஸ்‌ கட்டளை என்பார்கள்‌, நாளை காற்றில்‌ பறக்கவிடுவார்கள்‌ ) இன்று வைவார்கள்‌, நாளைக்குப்‌ பல்லைக்‌ காட்டுவார்‌ கன்‌. இவ்வளவும்‌ தங்கள்‌ சுயநலதீதிற்காகவே செய்வார்‌ கள்‌, எனவே, இம்‌ மாதிரிக்‌ கூட்டத்தில்‌ சேர்‌ ந்தால்தான்‌ வாழமுடியும்‌ என்கின்‌ ற பார்ப்பனரல்லா தார்‌ யாராவது இருப்பாரானால்‌, அவர களின்‌ நிலை பெரும்பாலும்‌ இதை விட்டால்‌ நாளைக்கு ஜீவன தீதிற்கு மார்க்கமில்லை என்கின்றவர்களாகதீதான்‌ இருக்க வண்டும்‌. அப்படிப்பட்டவர்களை மாதீதிரம்‌ ஒரு நிபந்தனையின்‌ மேல்‌ பார்ப்பனர்‌ களிடம்‌ செல்ல அனுமதிக்கின்‌ 8றாம்‌. அதாவது, பார்ப்பனர்களைப்போல்‌--எந்தச்‌ சமயத்திலும்‌ தனது சமூகத்தைக்‌ காட்டிக்கொடுத்து வாழாமல்‌, பார்ப்பன] களைப்‌ பற்றி கவிபாடிக்‌ கொண்டோ பார்ப்பனரல்லாதார்‌ சிலரை மாத்திரம்‌ வைதுகொண்டோ வயிறு வளர்ப்பதில்‌ நமக்கு ஆட்சேபணை இல்லைஃ தவிர, இதுசமயம்‌ பார்ப்பனரஃலாதாருக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கின்றதை ன்னமேயே தெரிவி, இருக்கின்றோம்‌. மு: தரிவித்து A ற அதாவது, பெசன்டம்ீமையின்‌ புதிய உபத்திரவம்‌ என்னவெனில்‌, நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ இப்போது தங்களுக்குள்ள சகலநாடிகளும்‌ விழுந்குவிட்ட பிறகு அம்மையைப்‌ பற்றி இருக்கின்றார்கள்‌. இனி அது ஓர்‌ ஆட்டம்‌ ஆடித்தான்‌ நிலைக்கு வந்து சேரும்‌. மாரும்‌ அதில்‌ ஏமாத்துபோய்‌ விழுந்துவிடக்கூடா து என்று எசிசரிக்கை செய்கின்‌ ரோம்‌. கோயமுத்தூர்‌ தீர்மான தீதால்‌ ஏற்பட்ட ஆபத்திலிருந்தே இன்னமும்‌ சரியானபடி நாம்‌ மீளவில்லை. இதே சமயத்தில்‌ மற்றொரு ஏமாற்றம்‌ என்னும்‌ பெசன்டம்மை ஆபத்திலும்‌ யாருடைய சூழ்ச்சியின்‌ பலனாகவாவது மாட்டிக்கொள்வோமானால்‌, பிறகு சல பதீதில்‌ நமக்கு விடுதலை கிடைப்பது என்பது மிகவும்‌ கஷ்டமாகிவிடும்‌. இதுசமயம்‌ நமக்கு யாருடைய தயவும்‌ வேண்டியதிச்‌ லை. நம்முடைய சுயமரியாதை இன்னது என்பது நமக்கு ஞாபகத்திற்கு வந்தால அதுவே போதுமானதாகும்‌. ¢ நாட்டிற்கு நல்லுரை வந்தாலும்‌, தோட்டிக்குப்‌ புல்‌ சுமக்கும்‌ தொழில்‌ டோகாது! என்று ஒரு படிமொழி உண்டு. அதுபோல்‌, இந்நாட்டில்‌ பார்ப்பனரல்லாத மச்கள்‌ பெரும்பான்மையும்‌ தோட்டி நிலையிலேயே இருக்‌ கின்றார்கள்‌. அத்‌ தோட்டி நிலைமாற ஏதாவது மார்க்க முண்டானால்‌ மாத்திரம்‌ எந்ததீ துரையையும்‌ எந்தக்‌ கமிஷனையும்‌ வரவேற்கவும்‌ செய்யலாம்‌) பகிஷ்கரிக்கவும்‌ செய்யலாம்‌. அதில்லாத பட்சம்‌, நாமாகக்‌ தனித்து நின்று ஒரு கை பார்த்து நமது நிலையை மற்றவர்‌ களுக்குச்‌ சமமாக உயர்‌ தீதிக்கொள்ள வேண்டிவரும்‌. ஆதலால்‌, அவசரப்பட்டுக்கொண்டு இப்போது எவ்வித அபிப்பிராயத்தையும்‌ தெரிவித்து விடக்கூடாது என்பகுடன்‌, எந்த அரசியல்‌ கட்சியிலும்‌ சேரக்கூடாது என்று தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. [அறிக்கை குடிஅரசு ? 13-11-1927] www.thamizham.net - Free £ book 14௦ 3011 421 - 7. ராயல்‌ கமிஷனும்‌ சுயமரியாதையும்‌ பிரிட்டிஷாரின்‌ ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள்‌ ஒப்புக்கொண்டு இருக்கிற வரையில்‌, < இம்‌ மாதிரியான ராயல்‌ கமிஷன்களில்‌ இந்தியர்களுக்குப்‌ பதவி அளிக்காதது, நம்மவர்களின்‌ சுயமரியாதையைப்‌ பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது? என்று எண்ணு வதில்‌ கொஞ்சமாவது அர்த்தமில்லை. பிரிட்டிஷ்‌ ஆதிக்கத்தின்‌ ஒரு அம்சமாகவே இந்த கமிஷன்‌ நியமிக்கப்பட்டிருக்‌ கின்றது. இந்தியரின்‌ சுயமரியாதையை அடியோடு அ.இத்ததான பஞ்‌ TG அநீதி$போன்ற காரியங்களில்‌ ஒன்று சேர்ந்து பரிகாரம்‌ தேட சம்மதிக்காத ஒரு கூட்டத்தார்‌, இப்போது பகிஷ்காரதீதைப்‌ பற்றி வீண்‌ கூப்பாடு போடுவது கேலிக்கிடமானதென்‌ ற சொல்ல வேண்டும்‌. உண்மையில்‌ ராயல்‌ கமிஷனை பகிஷ்கரிப்பது என்பது, எந்த அரசாங்கதீதாரால்‌ இந்த ராயல்‌ கமிஷன்‌ ஏற்படுத்தப்பட்டதோ அதே அரசாங்கத்தின்‌ அம்சங்களான சட்டசபைகளையும்‌, மநீதீரி முதலிய பதவிகளையும்‌, உதீதியோகங்களையும்‌ பகிஷ்கரிக்கதீ தக்க கொள்கையுடையதாயிருக்க வண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌, ஒருவிதமான தியாகத்‌ திற்கும்‌ கட்டுப்படவேண்டிய அவசியமில்லாததான வெறும்‌ வார்‌ தீதையளவில்‌ பகிஷ்காரம்‌ என்று கூச்சல்‌ போடுவதான.கடி சுயமரியாதை உள்ள தேசத்தார்‌ என்பவர்களுக்குக்‌ கொஞ்சமும்‌ அழகாகாது. உண்மையிலேயே முழூ விடுதலைக்கும்‌ நம்முடைய நாட்டார்‌ தயாராக இருக்கின்றார்கள்‌ என்‌ கின்ற நிலைமை ஏற்பட்டுவி மானால்‌, அந்தக்‌ காலத்தில்‌ பார்ப்பனரல்லாதாரே முன்னணியில்‌ நின்று விற தலைப்போர்‌ புரிவார்கள்‌ என்பதில்‌ சிறிதும்‌ சந்தேகப்படவேண்டியதீல்‌லை. இராஜ்ய விஷயங்களில்‌ சாதீதியமானவகம்‌, காரியத்தில்‌ நடக்கக்‌ கூடியதுமான துறையில்‌ பாடுபடும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌, வேண்டுமென்றே பொக ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார்‌ செய்யும்‌ சூழ்ச்சிகளில்‌ கலந்துகொள்வது என்பது வஅறிவுடைமையாகாது. கோயமுதீதூரில்‌ கூடிய தென்னிந்திய நலவுரிமைச்‌ சங்க மகாநாட்டில்‌ மாகாண: சுயாட்சி கிடைக்கும்‌ வரையிலும்‌ பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்‌ திருக்கிறார்கள்‌. ஆதலால்‌, முழுசுதந்திரமும்‌ கேட்கக்கூடிய காலம்‌ வரும்வரை, ஜஸ்டிஸ்‌ கட்சிக்‌ காரர்கள்‌ மாகாண சுயாட்சிக்காகவும்‌ நம்‌ நடைய நாட்டிலுள்ள எல்லா வருப்பார்களுக்கும்‌ சமமான நீதியும்‌ பங்கும்‌ கிடைக்‌ கும்படியாகவும்‌, ஒரு வருப்பார்‌ மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தஉரீகள்‌ என்று கொண்டாடு பாத்‌ தியதையை நிராகரிக்கவும்‌ ஒரே நிலையாக இருந்து டாடுபட்டு வர வண்டியவர்களாவார்கள்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிமாரின்‌ வெளிப்படை யான இந்தக்‌ கொள்கையை நம்முடைய தேச மக்களிடமும்‌ மற்றும்‌ அன்னியநாட்டாரிடமம்‌, அவர்களால்‌ ஏற்படுத்தப்படும்‌ சபைகளின்‌ முன்னிலையிலும்‌ ஸ்தாபிக்கக்‌ கடமைப்‌ பட்டிருக்கிறோம்‌. கமிஷன்‌ அங்கதீதினர்களில்‌ இந்திய அங்கத்தினர்கள்‌ ஒருவரும்‌ இல்லாதவ ஒரு கெடுதியாகக்‌ கொள்ளவேண்டிய அவசியமிஸ்லை, கவர்ன்மெண்டார்‌ ஒரு சமயம்‌ இந்தியர்‌ களில்‌ மாரைமாவது நியமிப்பதானால்‌, இப்போதைய நிலைமையில்‌ நியமனம்‌ பெறக்‌ கூடிய இந்தியர்கள்‌, பொதுவாக பிராமணரல்லாதாருக்குத்‌ தீங்கு இழைக்கக்‌ கூடியவர்‌ களாகதீதான்‌ இருக்கமுடியும்‌. தவிர, ஆதியில்‌ *ரவுலட்‌ கமிட்டி யில்‌ இந்தியர்‌ ஒரு அங்கத்தினராக இருந்துங்கூட அக்‌ கமிட்டியின்‌ சிடாரிசானது இந்திய மக்களை அரசாங்கத்தோடு ஒத்துழையாமை www.thamizham.net - Free £ book 14௦ 3011 422 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ செய்யவேண்டிய அளவுக்குக்‌ கொண்டுவந்துவிட்டது. பொதுவாக யோசிகீகுமிடதீது, கமிஷனில்‌ அங்கம்‌ பெறகீகூடியவர்கள்‌ ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர்‌ களாக2வ இருந்‌ துவிடக்கூடும்‌ என்கிறதை நினைக்கும்போ தடி அக்‌ கமிஷனில்‌ இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியமென்றே சொல்லவேண்டும்‌. [செய்தி--4 குடிஅரசு ? 27-11-1927] ராயல்‌ கமிஷன்‌ பகிஷ்காரக்‌ கூசீசல்‌ சுயநல அரசியல்வாதிகளிடை எவ்வளவுக்‌ கெவ்வளவு பலமாகக்‌ கிளம்புகின்றதோ அவ்வளவுக்‌ கவ்வளவு நாட்டிலுள்ள மக்களிடை அதன்‌ புரட்டுக்களும்‌ வெட்ட வெளிச்சமாய்க்‌ கொண்டு வருகின்‌ நனஃ தவிர, பகிஷ்காரதீதிற்கு எதிர்ப்‌ பிரச்சாரமும்‌ பலமாய்‌ ஏற்பட்டு வருகின்றது பகிஷ்கார காரணங்களும்‌ அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. எனவே, கூடிய சீக்கிரத்தில்‌ பகிஷ்கார கூசீசலுக்கு சாவுமணி அடிதீதுவிடும்‌ என்பது திண்ணம்‌. ராயல்‌ கமிஷனில்‌ இந்தியர்‌ களைச்‌ சேர்க்கவில்லை! என்ற கருதீதுடன்தான்‌ ஆதியில்‌ பகிஷ்காரம்‌ ஆரம்பிக்கப்பட்டது. தேரதீதில்‌ இருக்கும்‌ கட்சிப்‌ பிளவுகளையும்‌, ஒருவரை ஒருவர்‌ ஏமாற்றிப்‌ பிழைக்கும்‌ சூழ்ச்சிகளையும்‌ வெளியா க்கி, யாரை நியமிப்பது என்ற கேள்வி பிறந்தபின்‌, அதற்குப்‌ பதில்சொல்ல முடியாமல்‌, இப்போது கமிஷனைப்‌ பகிஷ்கரிப்பதற்கு அது காரணமல்ல என்று சொல்ல முன்வந்‌ துவிட்டார்கள்‌. காங்கிரஸ்‌ சுயராஜ்யக்கட்சி முதலியவற்றிற்குதி தலைவரான பண்டித மோதிலால்‌ நேரு அவர்கள்‌, கமிஷனில்‌ இந்தியரைச்‌ சேர்க்காதது மிகவும்‌ நல்லதென்றே சொல்லிவிட்டார்‌. ஆகவே, பகிஷ்காரத்தின்‌ வேருக்கு சாவுமணி அடிதீதாய்லிட்டது;$ இனி கப்புக்‌ கவறுகளைப்‌ பற்றி நாம்‌ அதிகக்‌ கவலைப்படவேண்டியதில்லை. பகிஷ்காரதீதிற்கு இப்போது முக்கியமாய்ச்‌ சொல்லப்படும்‌ காரணமெல்லாம்‌, இந்தி யாவின்‌ சுயமரியாதையை உதீ?தசித்து பகிஷ்காரம்‌ செய்யவேண்டுமென்பதாகக்‌ கூச்ச லிடப்படு8ின்‌ றது. கமிஷன்‌ நியமித்ததினால்‌ இந்தியாவின்‌ சுயமரியாதை இந்தக்‌ கூட்டத்‌ தாருக்கு எந்தவிததீதில்‌ பாதி 4கப்பட்டுவிட்டது என்பது நமக்கு விளங்கவில்லை, இந்த ராயல்‌ கமிஷன்‌ நியமிக்கப்படும்‌ என்கிற விஷயம்‌ இன்றல்ல, நேற்ற) இன்றைக்கு 8, 9 வருடத்திற்கு மூன்பாசு3வ நமக்கு வழங்கியராய்ச்‌ சொர்லப்பட்ட சீர்திருத்த நிபந்தனை யிலேயே கண்டிருக்கின்றது. அதாவது, இந்தச்‌ சீர்திருத்தத்தை இந்தியர்கள்‌ நன்றாய்‌ நடதீதிக்காட்டி விட்டா] களா என்கின்ற பரீட்சை பார்‌ 4௧, இனி பதீ து வருஷம்‌ கழித்து ஒரு கமிஷன்‌ வைத்து விசாரணை செய்யப்படும்‌ என்கின்ற ததீ துவம்கொண்ட வியாசங்கள்‌ அதில்‌ காணப்பட்டிருக்கின்‌றன. (1920 ஆம்‌ வருஷதீதிய சீர்திருத்தம்‌ போதாத) அது அதிருப்தியும்‌ ஏமாற்றமும்‌ அளிக்கிறதாயிருக்கிறது) ஆதலால்‌ அதைப்‌ பகிஷ்கரிக்க வேண்டும்‌! என்று காங்கிரஸ்‌ சொன்ன காலத்தில்‌ அதை எதி/ தீது, * இந்தச்‌ சீர்திருத்த மான சுயராஜ்யதீதித்கு முதற்படியானது) கீதை நடதீதிககாட்டி, மேலால்‌ சீர்திருத்தம்‌ கேட்கவேண்டுமேயல்லாமல்‌ பகிஷ்கரிப்பது சரியல்ல? என்றும்‌ ¢ இத தீர்மானத்தை நிறை. வேற்றியதா லயே காங்‌ ரஸ்‌ செதீதுப்போய்விட்டது? என்றும்‌ சொல்லிய குடன்‌, சீர்திருத்‌ தத்தை நடத்த தனது சிஷ்ய2காடிகளை ஏவிவிட்டு ஆள்‌ ஒன்றுக்கு மாதம்‌ 5000, 6000 ரூபாய்‌ வீதம்‌ சம்பளம்‌ வரங்கிக்கொடுத்தது இதே பெசன்ட்‌ அம்மையார்தான்‌. அப்படிப்‌ பட்ட அம்மைக்கு மறுபடியும்‌ க கிஷன்‌ நியமித்ததால்‌ இப்போது திடீரென்று சுயமரியாதை ஞானம்‌ எப்படிவந்தது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தியா விண்‌ சுயமரியாதைக்கு ஒரு வெள்ளைக்கார சீமாட்டி அழுவதென்றால்‌ * ஆடு நனைகிறதென்று ஓநாய்‌ ஓலமிட்டமூத? கதையையே ஒக்கும்‌ என்ப3த நமது அபிப்பிராயம்‌. அதிலும்‌, பெசன்டம்மையார்‌ அமுவ9தன்பது, * ஆடு நனைகிறதென்று சிறுத்தைப்‌ புலி அழுவதையே ஓக்கும்‌ ? என்றும்‌ சொல்லு3வாம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌: 428 இந்த அம்மையார்‌ இந்தியாவின்‌: சுயமரியாதை க்காக கவலைப்படுவதின்‌ யோக்கி யதையைப்‌ பொதுமக்கள்‌ அறிய உதாரணம்‌, பஞ்சாப்‌ படுகொலையை ஆதரிதீ தப்‌ பிரச்சாரம்‌ செய்தார்களே அது ஒன்றே போதும்‌ என்றே நினைக்கி றாம்‌. அதாவது *பஞ்சாபியர்கள்‌. செங்கல்‌ போட்டதற் ஐம்‌, ஜனரல்‌ டயர்‌ பீரங்கிக்‌ குண்டு போட்டதற்கும்‌ சரியாய்ப்‌ போய்‌ விட்டது) கிதுதான்‌ அரச தர்மம்‌? என்று சொன்னார்கள்‌, இவ்‌ வம்ீமையாரிள்‌ சுயமரியாகை இலட்சணம்‌ இப்படியானால்‌, அம்யர்மார்‌- அய்யங்கார்மார்கள்‌ சுயமரியாதை உணர்ச்சிக்கு ஏதாவது உதாரணம்‌ வேண்டுமானால்‌, அதே பஞ்‌-ரப்‌ அக்கிரமதீதின்போதும்‌ அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒத்‌ துழையாமையின்‌: போதும்‌ இவர்கன்‌ என்ன செய்தார்கள்‌ என்பதைச்‌ சற்று யோசித்தால்‌ விளங்காமல்‌ போகாது. ஒதி அழையாமைத்‌ தீர்மானம்‌ நிறைவேறியதும்‌ ஜீமான்கள்‌ சுதேசமித்திரன்‌ * ஆசிரியரும்‌ இப்போதைய சாங்கிரஸ்‌ காரியதரிசியுமான எம்‌. ரங்கசாமி அய்யங்காரும்‌, £ இந்து * ஆசிரியரும்‌ தமிழ்நாட்டுத்‌ தலைவராயுமிரூந்த கஸ்‌ தூரி ரங்கய்யங்‌ காரும்‌, பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்படுபவரும்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்‌ காரியதரிசியும்‌ சட்டசபையில்‌ காங்கிரஸ்‌ கட்சி உபதலைவரும்‌, தமிழ்நாடு காங்‌ ரஸ்‌ கமிட்டி காரியதரிசியுமான சதீதிய மூர்த்தி அய்யரும்‌ ராஜி ஈமா சொடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டார்கள்‌. இந்தியத்‌ தேசியதி தலைவரும்‌ எல்லா இந்திய காங்கிரஸ்‌ தலைவரும்‌ *டிகீடேட்டர்‌ ! என்று சொல்லுவதான ஏக தலைவருமான ஜீனிவா சய்யங்கார்‌ அவர்கள்‌ (ஒத்துழையாமை) பகிஷ்காரம்‌ என்பது சட்ட விரோதம்‌ என்று சொன்னார்‌. ஆகவே, பஞ்சாபில்‌ குழந்தை குட்டிகளுடன்‌ கூடியிருந்த ஆயிரக்கணக்கான. மக்களைக்கொண்ட ஒரு பெருங்‌ கூட்டத்தில்‌, முன்பின்‌ எசீசரிக்கை இல்லாமல்‌ பின்புறமாய்‌ வந்து ஓடவிடாமல்‌ தடுதீக, மிஷின்‌ பீரங்கி வைத்து, பட்டாஸ்‌ சுடுவ துபோல சடபுட, சட புட என்று குண்டுகளைப்‌ பொழிந்து மக்களைக்‌ கொன்றதும்‌, தண்ணீர்க்‌ குழாய்களையும்‌ காந்த விளக்குகளையும்‌ நிறுத்தித்‌ தெருவில்‌ மக்கள்‌ வயிற்றினால்‌ ஊர்ந்து போகும்படி சொன்னதும்‌, மக்களை மூக்கை நிலத்தில்‌ தேய்த்த ஐம்‌, முகதீதிஃ்‌ கரும்புள்ளி செம்புள்ளி குத்தினதும்‌, நொண்டி அடித்து நடக்கும்படி கட்டளையிட்டதும்‌, பெண்கள்‌ கற்பை அழித்ததம்‌, சகோதரிகளை நிர்வாணமாக்கி மர்மஸ்தானத்தில்‌ கோலைக்‌ குதீதினதும்‌--- ஆகிய காரியங்களை இந்தியாவின்‌ சுயமரியாதைக்கு பங்கம்‌ என்று நினைக்காமலும்‌ ; வேறு சிலர்‌ அப்படி நினைத்தும்‌ அதற்குப்‌ பரிகாரம்‌ செய்ய ஏற்படுத்திய பகிஷ்காரங்களுக்குக்‌ கட்டுப்படாமலும்‌; எதிரிகளுக்கு உளவாயிருந்து கூலி வாங்கினதுமான இந்தத்‌ துரோகிகள்‌, வஞ்சகர்கள்‌, காட்டிக்கொடுப்பவர்கள்‌, அயோக்கியர்கள்‌. இப்போது தங்களுக்குத்‌ திடீரென்று சயமரியாதை ஞானம்‌ வந்துவிட்டது என்று சொன்னால்‌, கடுகளவு மூளையுள்ளவனாவது இவற்றை நம்பமூடியுமா என்றுதான்‌ கேட்கின்றோம்‌. குறிப்பாகப்‌ பேசுமிடதீதில்‌, இந்தப்‌ பகிஷ்காரத்தைக்‌ கிளப்பியதில்‌ நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தங்களது வயிற்றுப்‌ பிழைப்புக்காக எந்த எந்த வழியில்‌ தங்கள்‌ சுயமரியாதையை விற்றுப்‌ பிழைக்கின்றார்கள்‌ என்பதும்‌, தங்கள்‌ சுயநலங்களுக்காக எந்தெந்த விதத்தில்‌ மதத்தின்‌ பேராலும்‌, அரசியலின்‌ பேராலும்‌ எத்தனை கோடி மக்களின்‌ சுயமரியாதையைக்‌ கெடுத்து வாழ்கின்றார்கள்‌ என்பதும்‌, இந்திய நாட்டுக்கு வந்த எந்த அன்னிய ஆட்சியாவது இந்த பகிஷ்காரப்‌ பார்ப்பனக்‌ கூட்டத்தின்‌ உள்‌ உளவும்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ தன்மையும்‌ இல்லாமல்‌: வர முடிந்ததா என்பதும்‌--அறியாதார்கள்‌ யார்‌ என்றே கேட்கின்றோம்‌. ராயல்‌ கமிஷன்‌ நியமிக்கப்பட்டதானது. எந்த விததீதிலாவது இந்தியாவின்‌. சுயமரியாதைக்கு விரோதமானது என்று இந்தப்‌ பார்ப்பனக்‌ கூட்டத்தாராவது, www.thamizham.net - Free £ book 14௦ 3011 424 பெரியார்‌ ஈட வெ. ரா சிந்தனைகள்‌ பெசன்டமீமைக்‌ கூட்டதீதாராவது, மற்றும்‌ வேறு எந்த யோக்கியராவது உண்மையில்‌ நினைப்பார்‌ களானால்‌, அவர்கள்‌ நடந்துகொள்ள வேண்டிய யோக்கிபதை என்ன என்பதை யாவது சற்று யோசிதீதுப்‌ பாருங்கள்‌ என்று வேண்டிக்‌ கொள்கின்றோம்‌. ராயல்‌ கமிஷன்‌ யாரால்‌ ஏற்படுத்தப்பட்டது 1 பிரிட்டிஷ்‌. பார்லிசெண்டாரால்‌. பிரிட்டிஷ்‌ பார்லிமெண்டார்‌ என்பவர்கள்‌ யார்‌ என்றால்‌, நம்‌ நாட்டை ஆளுவதற்கு ஏற்பட்ட பிரிட்டிஷ்‌ ஜனங்களின்‌ பிரதிநிதிகள்‌. ஆகவே, அவர்களுடைய நடவடிக்சையை நாம்‌ ஒப்புக்கொள்ளவில்லையானால்‌ அல்லது அவர்களது நடவடிக்கை நமக்கு சுயமரிடாதைக்கு விரோதம்‌ என்பதானால்‌ நாம்‌ செய்யவேண்டிய காரியம்‌ என்ன? அவர்கள்‌ ஏற்படுத்திய சட்டசபையில்‌ அரைக்ஷணம்‌ உட்கார்‌ ந்திருக்கலாமா ? அவர்கள்‌ ஏற்படுத்திய உத்தியோகதீ தில்‌, அரை விநாடி இருக்கலாமா 1 அதற்காக அவர்கள்‌ கொடுக்கும்‌ காசில்‌ ஒரு சின்னக்‌ காசு பெறலாமா 8 அவர்களின்‌ இம்‌ மாதிரியான, நமது சுயமரியாதைக்கு விரோதமான ஆட்சியை நடத்த நாம்‌ அடிமையாகப்‌ பதிவு செய்துகொள்ளலாமா ¥ அவர்கள்‌ ஏற்படுத்திய கோர்ட்டுகளில்‌ அந்தக்‌ கூட்டத்தாரால்‌ ஏற்படுத்திய அதிகாரிகளிடதீதில்‌ டோய்‌ நின்று கொண்டு, ¢ கடவுளே ! பிரபுவே | கண்ணியவான்களே ! என்று கும்பிடு போட்டுக்‌ கெஞ்சும்‌ வச்கீல்‌ உத்தியோகத்தில்‌ ஒரு இமை நேரமாவது இருக்கலாமா 1 ஆகவ, இதுபோன்ற வைகளை யோசித்துப்‌ பார தீதால்‌, கிப்‌ பாது பகிஷ்காரத்தை ஒரு வாயில்‌ பேசிக்‌ கொண்டு, மற்றொரு வாயில்‌ மேற்படி காரியங்களைச்‌ செய்துகாண்டு இருக்கும்‌ கூட்டத்தார்‌ யோக்கியர்கள்‌ என்று யாராவது நம்பமூடியுமா என்றும்‌, அப்படி நம்புகிறவர்க ளம்‌ அவர்களைப்‌ பின்பற்றுகின்‌ றவர்களும்‌ அறிவாளிகளாகவும்‌ யோக்கியர்களாகவும்‌ இருக்கக்‌ கூடுமா என்றும்‌ கேட்கின்‌ நாம்‌. பார்ப்பனர்களின்‌ சுயமரியாதை, யோக்கியம்‌, நாணயம்‌” ஆகிய இவைகளின்‌ ததீதுவம்‌, * கவுகத்தி காங்கிரஸ்‌? தீர்மானத்திற்குக்‌ கொடுத்த மதிப்பையும்‌, பார்ப்பன ரல்லாதார்‌ சிலர்‌ காங்கிரசில்‌ சேர எண்ணி வந்தவர்களை நடத்திய மா திரியையும்‌, சென்னை முனிசிபல்‌ தலைவர்‌ தேர்‌ தலையும்‌ கவனித்த எந்தக்‌ கவிமண்‌ உருண்டைக்கும்‌ விளங்காமல்‌ போகாத. சென்னையில்‌ உண்மையைத்‌ தைரியமாய்‌ எடுதீ.துச்‌ சொரல்லவோ, பகுதீதறிவுடன்‌ நடந்துகொள்ளவோ பார்ப்பனரல்லாத பத்திரிக்கைகள்கூடப்‌ பயப்படுகின்‌றனஃ ஆன போதிலும்‌, இது விஷயத்தில்‌ * சைபுல்‌ இஸ்லா மும்‌, 6 நவசகீதி?யும்‌ தைரியமாய்தீ தங்கள்‌ கருதீதை வெளிப்படுத்தி இருப்பதற்கு நாம்‌ மிகவும்‌ நன்றி பாராட்டக்‌ கடமைப்‌ பட்டிருக்கின்றோம்‌. ¢ சைபுல்‌ இஸ்லாம்‌? எழுதியிருப்பதை வேறு இடத்தில்‌ குறிப்பிட்‌ டிருக்கின்றோம்‌. ¢ நவசகீதி ! எழுதுவதாவது i— ¢ பகிஷ்காரம்‌, பகிஷ்காரம்‌ என்று கூசீசலிடுவது :சூழ்ச்சியின்பாற்‌ பட்டதாகும்‌. முன்னே உருக்கொண்ட பல கமிஷன்களில்‌ இந்தியர்‌ சிலர்‌ அங்கம்‌ பெற்றதின்‌ பயன்‌ என்னவாயிற்று 8 பகிஷ்காரம்‌ என்னும்‌ சொல்லைக்‌ கேட்டுச்‌ சகோதரர்கள்‌ ஏமாறலாகாது என்று எச்சரிக்கை வழங்குகின்றோம்‌ ? என்று குறிப்பிட்டிருக்கின்றதுஃ எனவே, நம்‌ நாட்டிடை இதுசமயம்‌ தோன்றியிருக்கும்‌ பகிஷ்கார இயக்கமானது பார்ப்பனர்களின்‌ மற்றொரு சூழ்ச்சி என்பதையும்‌, இதில்‌ கலப்பது மக்களுக்கும்‌ குறிப்டாக பார்ப்பனரல்லாதாருக்கும்‌ தற்கொலையாயிருக்கும்‌ என்பதையும்‌ தெரிவிப்பதுடன்‌, பார்ப்பனரல்லாதாரிலும்‌ சிலர்‌ பார்ப்பனர்‌ ஓலமிடும்‌ பகிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கிறார்கள்‌ என்பதற்கு ஆதாரமான முதீதுரங்கங்கள்‌, கந்தசாமிகள்‌, வரதராஜுலுக்கள்‌ போன்‌ நோர்களை நம்பிக்‌ குழியில்‌ விழுந்‌,துவிடக்கூடாது என்றும்‌ எச்சரிக்கை செய்கின்‌ றோம்‌ [தலையங்கம்‌--* குடிஅரசு ? 27-11-1927] www.thamizham.net - Free £ book 14௦ 3011 425 8. சட்டசபை அங்கத்தினர்களுக்கு புதிய சட்டசபை ௯௭௨ சுமார்‌ ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகதீதிற்குச்‌ சட்டசபையின்‌ மூலம்‌ நிகழ்ந்த நன்மைகள்‌ என்ன வென்று பார்ப்போமானால்‌, ஒன்றுமில்லை என்று சொல்லவேண்டியதுடன்‌, பல கெடுதிகள்‌ நடந்திருப்பதாகவும்‌ சொல்லாமலிருக்க முடியாது. பு. சட்டசபை கூடியவுடன்‌ முதன்‌ முதல்‌ நட நீத சங்கதி பார்ப்பனரல்லாதார்‌ ஆதிக்‌ கத்தில்‌ இருந்த தாலுக்கா, ஜில்லா போர்டுகளைப்‌ பார்ப்பன ஆதிஃகதீதிற்குக்‌ கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதிலும்‌, பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்‌. அடுத்தபடியாக, ¢ ஜஸ்டிஸ்‌? மந்திரிகள்‌ காலத்தில்‌ ஏற்படுதீதப்பட்டிருந்த சர்வ கலாசாலை (University) சட்டத்தைத்‌ திருத்தி, அந்த இலாக்கா முழுவதும்‌ பார்ப்பன மயமாக்க ஜீ சதீதியமூர்‌ தீ தியால்‌ ஒரு சட்டம்‌ கொண்டுவரப்பட்டு சட்டச பையில்‌ இருக்கிறது. மூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்கப்‌ பெரிதும்‌ போராடிப்‌ பரடுபட்டு வருவதாகிய வருணாசிரம த! மதீதிற்குச்‌ சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாக, பிராமணன்‌-பஞ்சமன்‌ என்கின்ற பாகுபாடுகளுக்கு ஆதாரம்‌ கற்‌ 9ககப்பட்டது. கின்னும்‌ இதுபோன்ற மற்றும்‌ பல காரியங்கள்‌ நடைபெற்றிருக்கின்‌றன. இவைகள்‌ அவ்வளவும்‌ பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும்‌, பார்ப்பனரல்லாதார்‌ களுகீகுப்‌ பிர திகூலமும்‌ கொடு மையும்‌ கழிவு கனவை என்பதில்‌ சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார்‌ யாருக்கும்‌ சந்தேகமிருக்காது. இது நிற்க, பாரீப்பனரல்லாதார்‌ களுக்கு அனுகூலமாய்‌ ஹிமதி முதீ துலட்சுமி அம்மாளால்‌ ஒரு தீர்மானம்‌ கொண்டுவரப்பட்டது. அதாவ து, கோயில்களின்‌ பேரால்‌ சில பெண்களுக்குப்‌ பொட்டுக்கட்டி விபச்சார தீதிற்கு விடும்‌ வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம்‌ கொண்டுவரும்படி சர்க்காரைக்‌ கேட்டுக்‌ கொள்ளுகின்றது? என்கின்ற தீர்மானம்‌, இது நிறைவேறி இருந்தாலும்‌, காரியத்தில்‌ ஒரு பலனையும்‌ கொடுக்கத்‌ தக்கதல்லவென்றே சொல்லுவோம்‌. சர்க்கரைக்‌ கேட்டுக்கொள்ளும்‌ காரியம்‌ என்ன பலனடையும்‌ என்பது யாவருக்கும்‌ தெரிந்த த தான்‌, அதுவும்‌ பார்ப்பனர்‌ சட்டமெம்பராய்‌ இருக்கும்‌ காலத்தில என்ன காரியம்‌ நடைபெறக்‌ கூடும்‌ என்பதும்‌ நன்றாய்தி தெரிந்த விஷயந்தான்‌, இத்‌ தீர்‌ மானம்‌ கூடாது என்பதற்குப்‌ பார்ப்பன சூந்ச்சிகள்‌ நடைபெற்‌ றவருகின்றன. இதைத்‌ தவிர, வேறு எவ்வித முக்கிபதி தீர்மானமும்‌ கொண்டுவரப்பட்டதாகவும்‌ தெரியவில்லை. 4, 5 முறை சட்டசபை கூடியாகிவிட்டது. இதற்குள்‌ பார்ப்பனர்‌ களுக்கு ஏற்பட்ட நன்மை, பார்ப்பனரல்லா தாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள்‌ சுமார்‌ 15 பேர்கள்‌ தான்‌ சட்ட சபையில்‌ உண்டு; பார்ப்பனரல்லாதார்‌ புற்றிசல்‌ போல்‌ பலபேர்‌ இருக்கின்றார்கள்‌) இவர்கள்‌. பெரும்பாலும்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ நன்மைக்காகவே சட்டசபைக்குப்‌ போவதாகப்‌ பறை சாற்றிப்‌ பெரிய கிளர்சீசி செய்து. பார்ப்பனரல்லாதாரின்‌ ஓட்டுக்களைப்‌ பெற்றுப்‌ போன வர்கள்‌, இதுவரை என்ன செய்தார்கள்‌ 8 எத்தனை தீர்மானங்கள்‌ கொண்டு போனார்கள்‌ 8 என்று கேட்கின்றோம்‌. மந்திரி வேலைக்குப்‌ பிரயத்கனப்பட்டதும்‌, முடியாமல்‌ போன. பிறகு மந்திரிகளுடன்‌ சண்டை போட்டதும்‌, மந்திரிகளை மிரட்டி நியமனங்கள்‌ பெற்றதும்‌ அல்லாமல்‌ வேறு என்ன காரியம்‌ செய்ய முடிந்தது என்று பாமரமக்கள்‌ நினைக்கும்‌ படியாகத்தானே இருக்கின்றது? அத காரிபங்களைத்தானே பார்ப்பனர்களும்‌ செய்து வருகின்‌ றா/கள்‌ 8 பார்ப்பன சூழ்ச்சிகளை எதிர்த்த வருவதை ஒரு வெற்றியாகச்‌ சொல்லிக்‌ கொள்ளலாம்‌. ஆனாலும்‌, இதவேதானா நமது இலட்சியம்‌ என்று கேட்கின்றோம்‌. எத்தனை மாநாடுகளில்‌ நமது நலத்தைக்‌ குறித்து எவ்வளவு தீர்மானங்கள்‌ செய்யப்‌ பட்டிருக்கின்றன 2 அதீ தீர்மானங்கள்‌ அமுலில்‌ வருவதற்குச்‌ சட்ட சம்பந்தமான ஆதரவுகள்‌ 1686-54 www.thamizham.net - Free £ book 14௦ 3011 426 பெரியார்‌ ஈட வெட ரா, சிந்தனைகள்‌ வேண்டியவைகளுகீகுச்‌ சட்டசபை மெம்பர்கள்‌ ஆதரவுபெற மூயற்சிதீதார்களா 1 ஸ்தல ஸ்தாபனங்களில்‌ நடக்கும்‌ அக்கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா T பார்ப்பன. ரல்லாதார் களுக்குச்‌ சரியான பிரதிநிதித்துவம்‌ இல்லாத இலாக்காக்களில்‌ பிரதிநி திதீ.துவம்‌ கிடைக்க முயற்சித்தார்களா 1 என்று கேட்கின்‌ 3றாம்‌. ஒரு சமூகதீதிற்‌3க பிரதிநிதிகளாகப்‌ போய்‌, தங்கள்‌ காரியங்கனை மாத்திரம்‌ பார்த்துக்‌ கொண்டார்கள்‌ என்று சொல்லும்படி நடந்து கொள்ளுவது யோக்கியப்பொறுப்பாகுமா i டார்ப்பன மெம்பர்கள்‌ வெகு சொற்பமாய்‌ இருந்தாலும்‌ அஉர்களது சமூக முன்னேற்றதீதிற்கும்‌, நமது சமூகத்தின்‌ முன்னேற்ற$தை தடுத்து கழிவு படுத்தவும்‌ எவ்வளவு முயற்சிகள்‌ எடுத்துக்கொண்டு வரு$ன்றார்கள்‌ § அந்த உணர்ச்சி ஏன்‌ பார்ப்பனரல்லாதாருக்கும்‌ இருக்கக்கூடாது என்று கேட்கின்றோம்‌. காங்கிரஸ்‌ 5, * தேசியம்‌ ? என்பவைகள்‌ எப்படிப்‌ பார்ப்பனர்கள்‌ உத்தியோகம்‌ சம்பாதிக்‌ கும்‌ ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ, பார்ப்பன ஆ நிக்கத்துக்கு உபயோகப்படுத்திக்‌ கொள்ளும்‌ ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ, அது போலவே பார்ப்பனரிடம்‌ இருக்கும்‌ உதீதியோகங்களை பார்ப்பனரல்லாதார்களில்‌ யாரா சிலர்‌ கைப்பற்றக்கூடியதாக மாதீதிரம்‌ இருக்கின்றது என்று நமது எதீரிகள்‌ கருதும்படியாகவே நடந்துகொண்டு வந்திருக்‌ கிறார்களே யல்லாமல்‌-பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்கும்‌ சுயமரியாதைக்கும்‌ பாடுபடும்‌ கருதீ.தும்‌ வர வர மறைந்து வருகிறது. எவ்வன3வா ஊக்கமும்‌ எழுச்சியும்‌ உன்ன இந்தக்‌ காலத்தில்கூட ஒரு சாரியமும்‌ செய்யமுடியவில்லையானால்‌ இனி எப்டோ துதான்‌ சாதிக்கமுடியும்‌ 8 ஆதலால்‌, பா/ ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள்‌ ஒரு கூட்டம்‌ கூட்டி, மீதி உள்ள காலத்திற்குள்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டுபோக வேண்டியது என்று ஒரு முடிவிற்கு வந்து, அவைகளை நிறை வேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யவேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகின்றோம்‌. இதுவரை செய்த வேலைகன்‌ கண்டிப்பரய்தீ திருப்தியற்றதென்றும்‌, அடுத்த தேர்தலில்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்று சொல்லிக்கொள்வது மாத்திரம்‌ ஓட்டுப்‌ பெறக்கூடிய யோக்கியதாபாத்திரமாகாதென்றும்‌, செய்த வேலையைக்‌ காட்டவேண்டிய நிலைமை முதலியவைகள்‌ கண்டிப்பாய்‌ நேரிடுமென்றும்‌ கப்‌5போதே எச்சரிக்கை செய்கின்றோம்‌. [அறிக்கை--* குடிஅரசு? 11-12-1927] 9. ஜஸ்டிஸ்‌-பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்க-அதாவது ஜஸ்டிஸ்‌ கட்சி மாகாண மாநாடு அடுத்த மாதம்‌ முதல்‌ வாரதீதில்‌ நெல்லூரில்‌ நடத்தப்படப்‌ போகின்றது. இம்‌ மாநாடானது 1927ஆம்‌ வருஷம்‌ ஜனவரி மாதத்தில்‌ மதுரையில்‌ கூட்டப்பட்ட பிறகும்‌, அ3த ஆண்டு மத்தியில்‌ கோயம்புத்தூரில்‌ விசேஷ மா நாடாகக்‌ கூட்டப்பட்ட பிறகும்‌, சுமார்‌ 2 வருஷம்‌ கழித்து இப்போது கூட்டப்படு 9ன்றதென்றாலும்‌ இவ்வியக்கத்‌ தலைவர்‌ திர. பனக அரசர்‌ காலமா சுமார்‌ 9 மாதத்திற்குப்‌ பிறகு தலைவர்‌ தே] தலையே முக்கிய காரணமாகக்‌ கொண்டு கூட்டப்படுகின்றதாகும்‌. இந்த இபக்கமானது ஆதியில்‌ மக்களின்‌ எல்லா சமூக சமதீ தவத்தையும்‌ உரிமை யையும்‌, சம சந்தர்ப்பத்தையும்‌ அடிப்படையாகக கொண்டு துவக்கப்பட்டது என்பதாகும்‌. எனினும்‌ இவ்‌ வியக்கம்‌ வெற்றிபெற்றால்‌, இந்தியாவில்‌ சமூகதீதுறையிலும்‌ அரசியல்‌ கறை யிலும்‌ உயர்வுபெற்று ஏகபோக ஆதிக்கம்‌ செலுத்திவரும்‌ டார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்துவிடுமே என்ற ஆதீதீரதீதால்‌, பார்ப்பனரகள்‌ எல்லோரும்‌ ஒன்று சேர்ந்து இவ்‌ வியக்கத்தின்‌ கொள்கைகளைதி தீரித்துக்‌ கூறி, இவ்‌ வியக்கத்தினிடம்‌ பாமர மக்க ஞாக்குத்‌ அுவேஷம்‌ உண்டாகும்படி செய்து, 8வ்‌ வியக்கத்‌ தலைவர்களுக்கும்‌ பல வித தீங்குகள்‌ செய்கு, மிக்க தொல்லைகளை விளைவித்து வந்தா/கள்‌. ஆனபோதிலும்‌, இவ்‌ வியக்கத்‌ தலைவர்கள்‌ எதற்கும்‌ பயப்படாமல்‌ உறுதியுடன்‌ நின்‌.ஜு; இவ்‌ வியக்கத்தை அழிய www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 427 விடாமல்‌ காப்பாற்றி வந்த துடன்‌, அதன்மூலம்‌ மக்களுக்குச்‌ சுயமரியாதை உணர்ச்சியை யும்‌ ஊட்டி வந்தார்கள்‌ என்பதை யாரும்‌ மறுக்கமுடியா து. இவ்‌ வியக்கம்‌ வெறும்‌ அரங்க ஊதியத்தை மாத்திரம்‌ கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட உத்தியோக வேட்டை இயக்கம்‌ என்றும்‌, தேசத்‌ துரோக இயக்கமென்றும்‌, சர்க்கார்‌ தாசர்கள்‌? இயக்கம்‌ என்றும்‌ எவ்வனவோ தூற்றப்பட்டும்‌, தென்னிந்திய பாமர மக்களினுடைய செல்வாக்கையும்‌ மதிப்பையும்‌ பின்‌ பற்றுதலையும்‌ பெற்று விளங்கி வருகின்றது. இதற்கு உதாரணம்‌ வேண்டுமானால்‌, தென்னாட்டில்‌ சட்டசபை மந்தீரிகள்‌ முதல்‌ ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள்‌, தலைவர்கள்‌ ஆகியவர்களும்‌, கிராம பஞ்சாயத்து, கூட்டுறவு, முதலிய சாதாரண ஸ்தாபனங்களும்‌ இவ்‌ வியச்கம்‌ ஏற்படு தீ துவதற்கு முன்‌: எல்லாம்‌ பார்ப்பன மயமாகவே இருந்ததானவை, இட்போது இவ்‌ வியக்கத்திற்குப்‌ பிறகு பார்ப்பனரல்லாதார்கள்‌ அவரவர்கள்‌ ஜனத்தொகை விகிதப்படி இ லையானாலும்‌, சற்றேறக்குழையவாவது பங்கு பெற்று ஆதிக்கம்‌ பெற்றிருப்பதே போதுமான தாகும்‌. இதி லிருந்து, அரசாங்கத்‌ தயவி லயே இந்த கியக்கம்‌ இருப்பதாக நமது எதிரிகள்‌ சொல்லுவது எவ்வளவு புரட்டு என்பது இனிது விலங்கும்‌. எப்படி எனில்‌, அரசாங்கத்‌ தயவால்‌ அரசாங்க உதீதியோகங்கள்‌ மட்டுந்தான்‌ கிடைக்குமே ஒழியே, தேர தலில்‌ பொது மக்கள்‌ ஓட்டுகள்‌ பெற்று அடையும்படியான பதவிகள்‌ பெற ஒருகாலமும்‌ முடியவே முடியாது. அன்றியும்‌, இவைகள்‌ தாராளமான பொதுஜன ஆதரவும்‌ அனுதாபமும்‌ இருந்தால்தான்‌ கிடைக்கும்‌. எனவே, இவ்‌ வியக்கம்‌ இப்படிட்பட்ட பொதுஜன தேர்தல்‌ ஸ்தாபனங்களைப்‌ பெற்று அந்த ஸ்தாபனங்களை யெல்லாம்‌ கைப்பற்றி இருப்பதிலிருந்‌ த பொதுஜன ஆதரவு முழுவதும்‌ இவ்‌ வியக்கத்திற்கு இருப்பது தானாக விளங்கும்‌. ஆகவே, ஜஸ்டிஸ்‌ இயக்கம்‌ அதன்‌ எதிரிகள்‌ சொல்லுவது போல்‌ * சர்க்கார்‌ தாசர்கள்‌ ? இயக்கமாக இருந்தால்‌ இவ்வித பொதுஜன ஆதரவு கிடைத்‌ திருக்குமா என்பதையும்‌ யோசித்தால்‌, அறிவாளிகளும்‌ யோக்‌ யர்‌ களும்‌ இதை சர்க்கார்‌ தாசர்‌ கியக்கம்‌ என்று சொல்ல ஒருடோதும்‌ முன்வர மாட்டார்கள்‌. பார்ப்பனரல்லாதார்கள்‌ இனியும்‌ மத சம்பந்தமான புராணங்களிலும்‌, குருட்டு நம்பிக்கைகளிலும்‌ ஈடுபட்டவர்‌ களாவார்கள்‌. எவ்வளவுக்கெவ்வளவு குருட்டு நம்பிக்கை யிலும்‌, புளுகுப்‌ புராணங்களிலும்‌ ஈடுபட்டிருக்கின்‌ றாரகளோ அவ்வளவுக்‌ கவ்வளவு அவர்‌. களை மேதாவிகள்‌ என்றும்‌, பெரியவர்கள்‌ என்றும்‌ நினைத்துக்‌ கொண்டிருப்பார்‌ கள்‌. மத சம்பந்தமாய்‌ எப்படி அவர்கள்‌ குருட்டு நம்பிக்கையில்‌ ஈடுபட்டு, பார்ப்பனர்களையும்‌ அவர்களது கட்டுப்பாடான சூழ்ச்சி இயக்கங்களையும்‌ வழிகாட்டி களாகவும்‌, ஆதாரங்‌ களாகவும்‌ கொண்டு பின்பற்றுகின்‌ றார்க$ளோ, அ2த?பால்‌ அரசியல்‌ விஷயத்திலும்‌ குருட்டு நம்பிக்கை உடையவர்களாகி, அவர்களது சட்டுப்படான கொல்‌ கைகளிலும்‌ சூழ்ச்சி இயக்கங்களிலும்‌ நம்பிக்கை வைத்து, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, கண்மூடி த்தன மாகப்‌ பின்பற்றி வருகின்றார்கள்‌. எனவே, மூடநம்பீக்கையிலிருந்து b, கண்மூடிப்‌ பின்‌ பற்றும்‌ நடவடிக்கைகளிலிருந்து3 என்று விடுதலை பெறுகின்‌ நார்களோ-அன்றுதான்‌, அவர்கள்‌ பார்ப்பண மதப்‌ புரட்டுகளிலிநநீதுஃ அரசியல்‌ புரட்டுகவிலிருந்தும்‌ விடுதலை யடைய முடியும்‌. எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ பார்ப்பனர்‌ களை இவ்‌ வியக்கதீதில்‌ சேர்த்தால்‌ அவ்‌ வியக்கம்‌ அன்றே-தேன்‌ கூட்டில்‌ நெருப்பு வைக்கப்பட்ட துபோல்‌, இயக்கம்‌ செத்கு, பாரீப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய்‌ மாறிவிடும்‌ என்பதைமட்டும்‌ அழுத்தம்‌ திருத்தமாக உறுதியாய்ச்‌ சொல்லுவோம்‌. பார்ப்பனரல்லாத தலைவர்களில்‌ சிலர்‌ &வ்‌ வியக்கதீதில்‌ பார்ப்பனர்‌ களைச்‌ சேர்த்துக்கொள்ள வேண்டிய கற் துப்‌ பலவிதமான அரசியல்‌ காரணங்களைச்‌ சொல்லி, நம்மை வசப்படுத்த முயற்சிக்கக்‌ கூடும்‌. அரசியல்‌ காரணங்களே முக்கியமல்ல. அன்றியும்‌, பார்ப்பனருக்குன்ள அரசியல்‌ பங்கை மோசம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 428 பெரியர்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ செய்யவேண்டும்‌ என்றும்‌ நாம்‌ சொல்வதில்லை, நமது கொள்கைகீகும்‌ நன்மைக்கும்‌ ரோதமில்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கைக்‌ கொடுக்க நாம்‌ தயாராகவே இருக்கின்றோம்‌. அரசியலில்‌ நன்மையான காரியங்களுக்கு அவர்களுடன்‌ ஒதீதுழைக்கவும்‌, அவர்களது ஒதீதுழைப்பை ஏற்றுக்கொள்ளவும்‌ தயாராக இருக்கின்றோம்‌. எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ நமது இயக்கத்தில்‌ பார்ப்பனர்களைச்‌ சேர்தீதுக்கொள்ளாத தாலேயே, அரசியல்‌ ததீ.துவம்‌ கெட்டுப்‌ போவதாயிருந்தால்‌ நமக்கு அதைப்பற்றிச்‌ சிறிதும்‌. கவலையில்லை கடைசிபரக நாம்‌ ஒன்று சொல்லுகின்றோம்‌? அதாவது, பார்ப்பனரல்லாதார்‌. இயக்கத்தில்‌ பார்ப்பனர்களையும்‌ சேரீதீதுக்கொள்ளலாம்‌ என்று தீர்மானிககப்பட்டு விட்டால்‌ அது தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தை மாத்திரம்‌ பாதிப்பது என்பதல்லாமல்‌ சுயமரியாதை இயக்கத்தையும்‌, பார்ப்பனரல்லாதார்‌ வாலிபர்‌ இயக்கத்தையும்‌ சிறிதாவது பாதிக்காமல்‌ போகாது என்ப3த, மேற்கண்ட இவ்விரு இயக்கங்களிலும்‌ பற்றுள்ளவர்‌: களும்‌ பார்ப்பனர்‌ களைச்‌ சேர்க்காமல்‌ பார்த்துக்கொள்வ துடன்‌, மேற்கண்ட இரண்டு கொல்கைகளையும்‌--அதாவது, சுயமரியாதை இயக்கக்‌ கொள்கைகளையு3, வாலிபர்‌ இயக்கக்‌ கொள்கைகளையும்‌ நிறைவேற்ற முயற்சிக்கவேண்டியது முக்கிய கடமையாகும்‌. லையங்கம்‌-- குடி அரசு ! 22-9-1929. [ப இங்கு வாசகர்களுக்கு ஒன்று சொல்லுகிள்‌ றோம்‌. அதாவது, எவை தெய்வங்கள்‌ $ அவற்றில்‌ எந்தத்‌ தெய்வங்களை என்ன குற்றம்‌ சொன்னோம்‌ ? யார்‌ அவதார புருஷர்கள்‌ 1 அவர்களின்‌ எந்தக்‌ குணத்தைக்‌ குறைசொன்னோம்‌ ? எது புனித ஸ்தலம்‌? அதை எப்படிக்‌ குற்றம்‌ சொன்னோம்‌ 8 என்பதைப்பற்றி ஒரு வார்தீதையாவக கூறாமலும்‌, நாம்‌ சொன்ன தாகச்‌ சொல்லப்படும்‌ குற்றங்களுக்கு ஒரு சமாதானமும்‌ சொல்லாமலும்‌, சும்மா பாமர மக்களின்‌ முட்டாள்‌ தனதீ அதயும்‌ வெறியையும்‌ தனக்கு ஆதாரமாக வைத்துக்கொண்டு, தனதுமனதார சூகாய்ப்பேசி பாமர மக்களை நம்மீது ஏவிவிட முயற்சிப்பது.பேடித் கனமா 8 அல்லது, நாம்‌ உள்ளதை உள்ளபடி நினைத்து, நினைத்தபடி வெளியில்‌ ஆதாரங்களுடன்‌ எடுத்துச்‌ சொல்லுவது பேடித்தனமா? என்று யோசித்துப்‌ பார்க்கும்படி வேண்டிக்‌ கொள்கின்‌ றோம்‌. தவிர, ¢ பிராமணர்‌-- 9ராமணரல்லா தார்‌ சண்டை இஃலாவிட்டால்‌ தென்னாட்டுப்‌ பிராமணர்‌ கன்‌ பாலிய விவாகத்‌ தடை மசோதாவை எதிர்தீதிருக்கமாட்டார்கள்‌ ? என்று சொல்லுகின்றார்‌ திரு. இராஜூகாபாலாச்சாரியார்‌. இது உண்மையாக இருக்கு மானால்‌, பிராமணர்களின்‌ மனப்பான்மையின்‌ யோக்கியதையை அறிவதற்கு வேறு ஆகாரம்‌ வேண்டுமா என்று கேட்கின்றோம்‌. அதாவது, நமது நாட்டில்‌ என்ன காரியதீ திற்காகப்‌ பார்ப்பனர்‌--பார்ப்பனரல்லாதார்‌ சண்டை இருக்கின்றதோ, அதற்காகதீதான்‌ பார்ப்பனர்களுடைய சீர்திருத்த எதிர்ப்பும்‌ இருக்கிறது என்று சொல்லுகின்றார்‌. நாமும்‌ இதைத்தான்‌ சொல்லுகின்றோம்‌. பார்ப்பனரல்லாதார்‌, பார்ப்பனருடன்‌ போராடூவதன்‌ முக்கிய தத்துவம்‌, பார்ப்பன ரல்லாதாரைவிடப்‌ பார்ப்பணண்‌ பிறப்பினால்‌ மேலானவன்‌: என்கின்ற ஆதிக்கம்‌ இருக்கக்கூடாது என்பதற்காகவே யொழிய வேறல்ல. திரு. கராஜ கோபாலாச்சாரியார்‌ சொல்லு8ன்றப டியே, பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே--அ தாவது, பார்ப்பனரல்லா தாருக்கு விராதமாகவே எவ்வித சீர்திருதீதங்‌ களையும்‌ எதிர்க்கின்றார்கள்‌ என்றாகிறது. இது தன்னை அறியாமல்‌ சொன்ன உண்மை என்றே கரு.து88றாம்‌. கடைசியாக, பொது ஜனங்களுக்கு ஒன்று சொல்லுகிறோம்‌ ? நாட்டில்‌ எந்தச்‌ சீர்திருக்தமோ, இயக்கமோ ஏற்பட்டாலும்‌ பார்ப்பனர்கள்‌ அதை நாஸ்தி ஈம்‌ என்றும்‌, தெய்வ நிந்தனை என்றும்‌ புண்ணிய ஸ்தல நிந்தனை என்றும்‌, சாஸ்திர நிந்தனை என்றும்‌, தேசத்‌ துரோகம்‌ என்றும்‌, மதத்‌ துவேஷம்‌ என்றும்‌, சாதித்‌ துவேஷம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 429 என்றும்‌ பழிகளைச்‌ சுமதீதி, பாமர மக்களை ஏய்தீதே இதுவரை தங்கள்‌ ஆதிக்கத்தை நிலைநிறு தீதி வருகின்றார்கள்‌. [கலையங்கம்‌--* குடி அரசு ? 27-10-1929] 10. பார்ப்பன ஆதிக்கம்‌ ஒழிப்பு நாள்‌: சுயமரியாதை இயக்கத்தின்‌ சுமார்‌ 10 வருஷ கால வேலையின்‌ பயனாய்‌, பார்ப்பனியம்‌ ஒரு அளவுக்காவது ஆட்டம்‌ கொடுத்துவிட்ட விஷயம்‌ நாம்‌ எடுதீதுக்காட்ட வேண்டிய அவசியம்‌ கில்லையென்றே கரு துகி3றாம்‌. ஆனபோதிலும்‌, சமுகாய விஷயங்களில்‌ பாரப்பனியம்‌ எவ்வளவு பகிஷ்கரிக்கப்‌ பட்டிருக்கின்‌றதோ, அதில்‌ 8-ல்‌ ஒரு பங்குகூட அரசியல்‌ விஷயத்தில்‌ பகிஷ்கரிக்கப்‌ பட்டிருப்பதாகச்‌ சொல்ல முடியா து. அரசியலில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி, பார்ப்பனர்களு$கு விரோதமாய்‌ வேலைசெய்வகு என்று பெயர்‌ வைதீதுக்கொண்டிருந்தாலும்‌, அதன்‌ தலைவர்கள்‌ என்பவர்கள்‌ பலர்‌ தனிப்பட்ட முறையில்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக எதையும்‌ விற்றுக்கொண்டு வந்திருக்‌ றார்கள்‌. தோழர்‌ முத்தையா முதலியார்‌ அவரகள்‌ வருப்புவாரி பிரதி தித்துவத்‌ திட்டம்‌ அரசாங்க உதீசரவு மூலம்‌ போட்ட காரணத்திற்காகவே, பார்ப்பனர்கள்‌ அவரை ஒழிக்கச்‌ செய்த சதியில்‌, சில ஜஸ்டிஸ்‌ கட்சிக்கார! களும்‌ உன்‌ உளவாய்‌ இருந்ததோடு, பார்ப்பண ரல்லாதார்‌ கட்சியின்‌ பயனாய்‌ முதல்‌ மந்திரி ஸ்தானம்‌ பெற்ற தோழர்‌ முனுசாமி நாயுடு அவர்கள்‌ வகுப்புவாரி பிரதிநிதிதீதுவதீதிற்கு விரோதமாய்‌ இருந்து வந்ததுடன்‌, தனது ஸ்தானத்தைக்‌ காப்பாற்றப்‌ பார்ப்பனர்‌ களுக்கு அடிமையாக வண்டிய நிலையும்‌ அடைந்தார்‌] அதன்‌ பபனையும்‌ அடைந்தார்‌ என்றாலும்‌, இப்போது ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ பார்ப்பனர்களைச்‌ சேரீதீதுக்கொள்ளவும்‌ ஏற்பாடா கவருகிறது. இது எப்படியோ இருக்கட்டும்‌. தோழர்‌ முத்தையா முதலியார்‌. அவர்கள்‌ ஏற்படுத்திய வருப்புவாரி பிரதி இதிதீதுவ உத்தரவை ஜஸ்டிஸ்‌ கட்சி அரசாங்கம்‌ இப்போது மறுபடியும்‌ பிரசுரிதீதிருப்பது போற்றத்தக்க 2தயாகும்‌, இன்றையதினம்‌ எந்த ஊரில்‌, டவுளில்‌ எடுத்துக்கொண்டாலும்‌ வாசல்‌ கூட்டி, பியூன்‌ ஆகியவர்கள்‌ போன்ற உதீதியோகம்‌3பாக, பாக்கி உதீதி யாகங்களில்‌ பார்ப்பனர்கள்‌ தாம்‌ 100-க்கு 80 பேர்‌, 90 பேர்கள்‌ இருந்து வரு8றொர்கள்‌, அதிலும்‌, நீதி இலாக்காவாகிய மூளிசீப்ு, சப்‌ ஜ ஜ்‌, ஜிலலோ ஜூல்‌ முகலியவைகளும்‌, நிர்வாக இலாக்காவாகிய போலீஸ்‌ டிப்டி சூஃ்பிரண்‌ டெண்ட்‌, சர்க்கிள்‌ இன்ஸ்பெக்டர்‌, சப்‌-இன்ஸ்‌ பெக்டர்‌ ஆகயவைகளிலும்‌ பார்ப்பன ஆதிக்க 8ம தலைசிறந்து நிற்பதுடன்‌, பார்ப்பண ரல்லாதார்‌ முபற்சியையும்‌ முன்னேற்றதீதையும்‌, ஒழிக்கவும்‌ தடுக்கவும்‌ அவைகளின்‌ மூலம்‌ எவ்வளவு காரியம்‌ செய்ய வண்டு மா அவ்வளவு காரியங்கள்‌, நெஞ் ரில்‌ ஈரமில்லாமல்‌: வன்னெஞ்சதீதுடன்‌, ஆங்காங்கு செய்யப்பட்டு வருகின்‌றதான து எவரும்‌ அறியாத தல்ல, அரசாங்கத்தார்‌ ஒவ்வொரு இடத்திலும்‌ உத்தியோகங்களில்‌ பார்ப்பனர்‌, பார்ப்பன ரல்லாதார்‌ நிலைமை சரிவரக்‌ காக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும்‌. அதிகாரிகளைக்‌ குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார்‌ பிர தி.திதீதுவம்‌ கவனிக்கப்பட இடமிருக்கும்படி பார்தீதுக்கொள்ள வேண்டும்‌, உதாரணமாக, ஒரு ஊரில்‌ டிப்டி-க9லகீடர்‌ பார்ப்பனராயிர ந்தால்‌ தாசிர்தார்‌ பார்ப்பனரல்லாதாராயிருக்கும்படியும்‌, சப்‌-இன்ஸ்பெக்டர்‌ பார்ப்பளராயிருந்தால்‌ சர்க்கின்‌. இன்ஸ்பெக்டர்‌ பார்ப்பனரல்லாதாராயும்‌, ஜில்லா ஜட்ஜ்‌ பார்ப்பனராயிருந்தால்‌ சப்‌ ஜட்ஜ்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 430 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ பார்ப்பனரலீலாதாராயும்‌, மற்றும்‌ இதுபோல்‌ அதிகாரங்கள்‌ இருக்கும்படி பார்தீதுக்‌ கொள்ளவேண்டும்‌. அப்படியில்லாதவரை, அரசியலிலானாலும்‌ தேசியதீதிலானாலும்‌ வகுப்புணர்ச்சி தாண்டவமாடும்‌ இக்‌ காலத்தில்‌ பல வகுப்பு மக்களுக்கு பந்தோபஸ்து இருக்குமென்று: கருதமுடியாது. அரசாங்கம்‌ சம்பந்தமில்லாத வேறு பல விஷயங்களில்‌ கூடியவரை பார்ப்பனரல்லா தார்கள்‌ விழித்‌துக்கொண்டார்கள்‌ என்றே சொல்லலாம்‌. உதாரணமாக, இப்போது நடைபெற்றுவரும்‌ முனிசிபல்‌ எலசீஷனில்‌ பார்ப்பனக்‌ கோட்டைகளாயிருந்த சேலம்‌, திநப்பூர்‌ முதலிய இடங்களில்‌ ஒரு பார்ப்பனர்கூட வர: முடியாமல்‌ போனதைப்‌ பார்த்தால்‌ அங்குள்ள காங்கிரஸ்‌ ஆதிக்கமும்‌ பார்ப்பன ஆதிக்கமும்‌ எவ்வளவு என்பது விளங்கும்‌. பெண்களும்‌ ஆதித்‌ திராவிடர்களும்‌ ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும்‌ ஸ்தானம்‌ பெற்றார்கள்‌ என்றால்‌, அது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின்‌ பெருமையாலேயே அல்லா மல்‌, ஜனங்களுக்கு சமரச உணர்ச்சி ஏற்பட்டல்ல என்‌ பதை ஞாபகத்தில்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌. நாட்டில்‌ வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை யாரும்‌ மறுக்கமுடியாது. அதிலும்‌ தங்களைப்‌ பிறவியிலேயே உயர்ந்த சாதி என்று கருதிக்கொண்டு மற்றவர்களைத்‌ தாழ்ந்த சாதியாகக்‌ கருதிக்கொண்டிருக்கிறவர்களிடதீதில-தாழ்த்த சாதிக்காரர்களாய்க்‌ கருதப்படு கிறவர்கள்‌ துவேஷமும்‌ வெறுப்பும்‌ கல்லாமல்‌ இருக்கக்கூடும்‌ என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமான அஃ உதாரணமாக, ஒரு பிராமணன்‌ என்பவனிடம்‌ ஒரு சூசீதிரன்‌ என்பவன்‌ துவேஷமா யிருக்கிறான்‌ என்பது ஒரு நாளும்‌ ஆச்சரியமான காரியமாகாது. மற்றெது ஆச்சரியமான காரியம்‌ ஆகுமென் றால்‌, ஒரு பிராமணன்‌ என்பவனிடம்‌ ஒரு சூத்திரன்‌ என்று அழைக்கப்‌ படுகிள்‌றவன்‌-தீண்டப்படாதவன்‌ என்று அழைச்கப்படுகிறவன்‌ துவேஷமில்லாமல்‌, வெறுப்பு இல்லாமல்‌ இருந்து வருவதுதான்‌ ஆச்சரியப்படத்‌ தக்கதாகும்‌. ஆதலால்‌, சாதிப்‌ பிரிவு சம்பந்தகான உயர்வு, தாழ்வு இருக்கும்வரை நாட்டில்‌ துரவஷம்‌, வெறப்பு, வகுப்பணர்ச்சி ஆகிப காரியங்களும்‌, ஒரு வகுப்பாரால்‌ ஒரு வகுப்பு கஷ்டமடையும்‌ காரியங்களும்‌ எதிர்பார்‌ தீ.துதான்‌ இருக்க வண்டும்‌. ஒரு பார்ப்பனரல்லாதார்‌ ஆதிக்கமூள்ள ஸ்தாபனங்களிலிருந்து, 5555 ஒழுக்க குறைவுள்பட ஒரு குற்றதீது காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால்‌, அ&9ரகாரம்‌ முதல்‌ கொண்டு சர்க்கார்‌ அ திகாரிகள்‌--அய்‌ 8கார்ட்டு வரை அந்த ஸ்தாபனத்தின்மீது பழிவாக்க நினைக்கிறார்கள்‌. *பிராமணதீ துவேஷம்‌, பிராமணத்‌ து2வஷம்‌? என்று கூப்பாடு போடுகிறார்கள்‌. பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ ஆதி1கத்திஃ இருக்கிற எந்த ஸ்தாபனங்கவிலாவது 100-க்கு 10 விதமாவது பார்ப்பனரல்வாதார்‌ களு$கு வேலை கொடு ககிறார்களா எனப்‌ பார்‌ தீதால்‌, வகுப்பு துவேஷம்‌ யாரிடத்தில்‌ இருக்கறது என்பது விளங்கும்‌. ஆதலால்‌, பார்ப்பனரல்லாத மக்கள்‌ இனியாகிலும்‌ இவ்‌ விஷயங்களை உணர்ந்து, அதற்குக்‌ தரந்தபடி நடந்துகொள்ள முயற்சிப்‌ துடன்‌, காத்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள்‌, ஏகாதிபத்திய ஒழிப்பு நான்‌, மே தினம்‌ என்பது போன்ற நாட்‌ களை வருஷதீதுக்கு ஒருநாள்‌ கொண்டாடுவதுபோல்‌, ¢ பார்ப்பன ஆதிக்கம்‌ ஒழிப்பு நாள்‌ 7 ஏன்பதாக வருஷதீதில்‌ ஒருநான்‌ கொண்டாட ஏற்பா செய்யவேண்‌ இமென்றும்‌--அதை www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 431 அடுத்துவரும்‌ தீபாவளி£கு அடுத்த நாளோ அல்லது முந்திய நாளோ வைத்துக்கொள்வது நல்லது என்றும்‌ அபிப்பிராயப்படுகின்‌ றோம்‌. 84 தினங்களில்‌ ஆங்காங்கு கூட்டம்‌ போட்டு, பார்ப்பன ஆதிக்கக்‌ கொடுமை சமுதாயதீதிலு3 அரசியலிலும்‌ இருப்பதை மக்களுக்கு எடுதீதுக்சாட்டி, தீர்மானங்களை நிறை வற்றி. அர சாங்கத்துக்கும்‌ பத்திரிகைகாளக்கும்‌ அனுப்பவேண்டிய வேலையை அதீ திருநாள்‌ சொண்டாட்ட வேலையாக வைதீதுக்கொள்ளலாம்‌ என்று அபிப்பிராயட்படு கின்றோம்‌. இன்ன நால்‌ என்பதைப்‌ பின்னால்‌ உற திப்படுத் துகிறோம்‌, [தலையங்கம்‌-- பகுத்தறிவு? 30.9.1934] 11. ஜஸ்டிஸ்‌ கட்சி சாதித்தது என்ன? தோழர்களே 1 என்னிடம்‌, இங்குகீ கேட்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்குப்‌ பதில்‌ கூறுகிறேன்‌ : காங்கிரஸ்காரர்‌ 1 நீங்கள்‌ ஆதரிக்கும்‌ 1% K. சண்முகம்‌ செட்டியார்‌ மாதம்‌ 4000 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்குகிறாரா இல்லையா ¥ ஈ.வெ.ரா? ஆம்‌; மேள தாளத்தோடு வாங்குகிறார்‌. காங்‌ £ அதற்குதீதானே அவர்‌ சட்டசபைகீகுப்‌ போகப்‌ பார்க்கிறார்‌ ₹ ஈ.வெ.ரா: ஆம்‌, அதற்கும்‌, அதற்கு மேற்பட்ட பதவிக்கும்‌ போகதீதான்‌ போகிறார்‌. இதில்‌ என்ன தப்பு இருக்கிறது! தோழர்‌ பட்டேல்‌ காங்கிரஸ்காரராய்‌, ஒதீதுழையாதாராய்‌ இருந்து, கிந்திய சட்டசபைக்குப்‌ போய்‌ முட்டுக்கட்டை போட்டுச்‌ சரீக்காரை உடைதீது விடுவதாகப்‌ பொதுஜனங்களிடம்‌ சொல்லி, சத்தியம்‌ செய்து கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கி, அங்கு போனபிறகு மாதம்‌ 4000 ரூபாய்‌ சம்பளதீகுக்கு அடிமையாகி, சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுவதற்குப்‌ பதிலாய்‌ ஒழுங்காக நடத்திக்‌ கொடுப்பதாகவும்‌, இராஜ விஸ்வாசதீதுடன்‌ இராஜபக்தி உள்ளவராய்‌ இருப்பதாகவும்‌ சத்தியம்‌ செய்து கொடுத்து, மாதம்‌ 400 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கினாரா இல்லையா? ஆனால்‌, தோழர்‌ சண்முகம்‌ அப்படிச்‌ செய்யவில்லை. * நான்‌ முட்டுக்கட்டை போடு கிறேன்‌ ! என்று சொல்லி ஓட்டுக்‌ கேட்கவில்லை. * தேச பக்தர்‌ 1, ¢ தேசிய வீரர்‌ £, *தேசாபி மான சிங்கம்‌ ! என்கின்ற தோழர்‌ பட்டேல்‌ வாங்கிய சம்பளத்துக்கு மேல்‌ ஒரு காசும்‌ அதிகம்‌ வாங்கவுமில்லை. இப்பொழுதாவது, காங்கிரஸ்காரர்கள்‌ தாங்கள்‌ இந்திய சட்ட சபைக்குப்‌ போனால்‌ பிரசிடெண்டு ஸ்தானம்‌ (கடைப்பதானால்‌) ஆசைப்படுவதில்லை என்றோ, தாங்கள்‌ பிரசிடெண்‌ டுக்கு யாருக்கும்‌ ஓட்டுச்‌ செய்வதில்லை யென்றோ சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்‌. இன்னமும்‌ இவர்கள்‌ கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லப்‌ போகி 2றன்‌. அவை உங்களுக்கு ஒரு அறிவு விருந்தாகும்‌. அதைக்‌ கேட்டால்‌ உங்களுக்குப்‌ பசி கூட ஏற்படாது. காங்‌: ஜஸ்டிஸ்‌ கட்சி உத்தியோக வேட்டைக்‌ கட்சியாயிற்றே) அதை நீங்கள்‌ ஆதரிக்கலாமா ¢ ஈ.வெ.ரா! ஆம்‌) ஜஸ்டிஸ்‌ கட்சி உத்தியாக வேட்டைச்‌ கட்சிதான்‌, ஆனால்‌, சாங்கிரஸ்காரர்கள்‌ 30, 40 வருடகாலமாய்‌ ஆடிவந்த உத்தியோக வேட்டையைதீதான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ வேட்டையாடிப்‌ பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. ஆனால்‌, காங்கிரஸ்‌ காரியதரிசிகள்‌; காங்கிரஸ்‌ பிரமுகர்கள்‌, தேசாபிமானிகள்‌ ஆகிய சர்‌. சி. பி. இராமசாமி அய்யர்‌, கே. சீனிவாசய்யங்கார்‌, வி. கிருஷ்ணசாமி அய்யர்‌, சர்‌. பி. எஸ்‌. சிவசாமி அய்யர்‌, மகா கனம்‌ சீனிவாச சாஸ்திரிகள்‌ முதலியவர்கள்‌ ஆடிய வேட்டைகளைதீ www.thamizham.net - Free £ book 14௦ 3011 493 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ தான்‌ ஆடுகிறார்களேயொழிய--அவர்கள்‌ வாங்‌8ன சம்பளதீதைதீதான்‌ வாங்குகிறார்களே ஒழியப்‌ புதிய வேட்டையொன்றுமில்லை ; அதிக சம்பளமொன் றுமில்லை, மற்றும்‌ காங்கிரஸ்‌ தேசாபிமானிகள்‌ தங்கள்‌ சாதிக்கு மாத்திரமே உதீதி யாக வேட்டையாடினார்கள்‌. ஜஸ்டிஸ்‌ தேசாபிமானிகள்‌ தங்களுக்கும்‌ பார்ப்பனர்‌ களுட்பட எல்லா மக்களுக்குமாக வேட்டையாடுகிறார்கள்‌. வேட்டையை இந்து, முஸ்லிம்‌, கிறிஸ்‌ sul, தாழ்த்தப்பட்டவர்‌ ஆ 8ய எல்லோருக்கும்‌ பங்கிட்டுக்‌ கொடுக்கிறார்கள்‌. பழைய காங்கிரஸ்‌ வேட்டைக்காரர்கள்‌ இப்போது தங்களுக்கு வேட்டை கிடைக்கவில்லை என்கின்ற காரணத்‌ தால்‌ வேட்டையைப்‌ பரிகாசம்‌ பண்ணுகிறார்கள்‌. இப்‌பாதும்‌ பல காங்கிரஸ்காரர்‌களை எனக்குத்‌ தெரியும்‌. அவர்கள்‌ தங்கள்‌ அண்ணன்‌, தம்பிகளையும்‌, சிற்றப்பன்‌ பெரியப்‌ பனையும்‌, மாமன்‌ மச்சானையும்‌ உத்தியோக வேட்டையாட விட்டுவிட்டு தாங்களும்‌ முயற்சி செய்து பார்‌ தீத--வேட்டைக்கு லாயக்கில்லாதவர்களே பெரிதும்‌ ஜெயிலுக்குப்போய்‌ விட்டு வந்து கங்கு தேசாபிமானிகளா யிருப்பது எனக்குத்‌ தெரியும்‌. காங்‌: ஜஸ்டிஸ்‌ கட்சி என்ன சாதித்தது ஈ. வெ. ரா. 8 ஜஸ்டிஸ்‌ கட்சியானது தோழர்‌ சி. பி. சுப்பையாவை மாகாண காங்‌ கிரஸ்‌ காரியதரிசி ஆக்கிற்று. இதைவிட வேறு என்ன வேண்டும்‌ 8 தோழர்‌ வரதராஜுலு வைத்‌ * தென்னாட்டுத்‌ திலக £ராக்கிற்று. சென்னை மாகாண காங்கிரஸ்‌ காரியதரிசியாகவும்‌, பிரசிடெண்டாகவும்‌ ஆக்கிற்று. இவை தவிர இதுவரை காங்கிரஸ்‌ சரதிதீததையெல்லாம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ சாதித்து வருகின்றது. காங்கிரஸ்‌ பார்ப்பனர்களுக்கே உத்தியோகம்‌, படிப்பு முதலியவை இருக்கும்படி பார்தீது வந்தது ஜஸ்டிஸ்‌ கட்சி பார்ப்பனருக்கும்‌, பார்ப்பனரல்லாதாருக்கும்‌ இருக்கும்‌ படி பார்‌ தீ.து வருகிறது. எல்லா உதீதி3யோகங்களுக்கும்‌, எல்லாப்‌பதவிகளுக்கும்‌ பார்ப்பன ரல்லாதாரும்‌ லாயகீகும்‌ உரிமையும்‌ உடையவர்களே யன்று செய்துகாட்டி மெய்ப்பித்து வருகின்றது. உத்தியோக வேட்டையில்‌ எல்லாருடைய சீட்டையும்‌ ஒன்றாய்ப்‌ போட்டு குலுக்கு கிறது. இன்னும்‌ என்னவேண்டும்‌? காங்‌, $ உதீதியோகம்தான்‌ பெரிதா? R வெ. ரா, ஆம்‌) இதுவரை தேசாபிமானிகள்‌, காங்கிரஸ்காரர்கள்‌, தேசிய வீரர்கள்‌ என்‌ பவர்கள்‌ பெரிதும்‌ உத்தி3யாகதீதை இலட்சியமாகக்‌ கொண்டுதான்‌ உழைதீது வந்திருக்கிறார்‌ கள்‌. இப்போது, பார்ப்பனரல்லாதார்‌ அந்தக்‌ கொள்கையைத்‌ தேசாபி மானமாகக்‌ கொண்டவுடன்‌, பார்ப்பனர்கள்‌ அதைத்‌ தேசத்‌ துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள்‌. பார்ப்பனர்‌ அனுபவித்த காலம்‌ எவ்வளவோ, அவ்வனவு காலமும்‌ அந்த விகிதாச்சார எண்ணிக்கைக்குத்‌ தகீகபடியும்‌, அவ்வளவு பணமும்‌ பார ப்பனரல்லா: தாரும்‌ அனுபவிக்கும்‌ காலம்‌ வந்துவிட்டால்‌, பிறகு ஜஸ்டிஸ்‌ கட்சியே நமது நாட்டிற்கு வேண்டாமென்று நானே சொல்லுவேன்‌. தவிரவும்‌ உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்லக்கூடாது. அதன்‌ சம்பளங்‌ களைக்‌ குறைக்கும்படி சொல்லவேண்டும்‌. உதீதியோகத்தின்‌ மூலம்தான்‌. அரசாங்கம்‌ நடைபெற வேண்டும்‌. அதைப்‌ பெற ஒவ்வொரு பிரஜைகீகும்‌ எந்தக்‌ கட்சியானாலும்‌, எந்தச்‌ சாதியானாலும்‌ உரிமையுண்டு: எலக்‌ஷன்களிலும்‌ உத்தியோகங்களிலும்‌ ஒரு யோக்கியமான முறை இல்லாத காரண தீதால்‌ தான்‌ எலகீஷன்கள்‌ வரும்போதும்‌, உத்தியோகங்கள்‌ வரும்போதும்‌ நாட்டில்‌ கலவரம்‌, கட்சிச்‌ சண்டைகள்‌ நடந்துகாண்டு வருகின்றன www.thamizham.net - Free £ book 14௦ 3011 PR இயக்கங்கள்‌ 433 எப்படியானாலும்‌ வகுப்பு சமரசமிஃலாமல்‌ நடைபெறும்‌ தேசாபி மான Cumesdr— “காந்தியார்‌ நடத்துவதானாலும்‌, யார்‌ நடத்துவதானாலும்‌ நாணயமாயும்‌ நியாயமாயும்‌ உண்மையாயும்‌ நடத்த முடியாது. அது ஏற்படுகின்‌ வரையில்‌ நான்‌ தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்‌, பிற்பட்ட மக்களுக்கும்‌, உத்தியோகத்தில்‌ குறைந்திருக்கும்‌ மக்களுக்கும்‌ அனுகூலமாய்தீ்தான்‌ இருப்பன்‌. அதற்காக ஆயிரம்‌ தேசத்‌ துரோகிகூட ஆவேன்‌. வகுட்பு தியாயம்தான்‌ எனக்கு எல்லாவற்றையும்‌ விடப்‌ பெரியது. ஒருவன்‌ பாடுபட்டும்‌ பட்டினியாய்க்‌ கிடப்பதும்‌, ஒருவன்‌ பாடுபடாமல்‌ வயிறு: புடைக்கத்‌ தின்று புரளுவதும்‌, ஒருவன்‌ பல வேலைகளைக்‌ கைப்பற்றித்‌ தனது தேவைக்கு மேல்‌ பயனடைந்து பாழாக்க, ஒருவன்‌ செய்வதற்குக்கூட வேலையிஃலாமல்‌ தீண்டாடிதீ தெரு பில்‌ திரிய-இிவைகளுக்கு வதப்பு ஆதிக்கமும்‌, வரப்பு வித்தியாசமும்‌ காரணமா யிரப்ப தன்றால்‌, இவற்றை எப்படிச்‌ சகித்துக்கொண்டு, வகுப்பைப்பற்றியே கவலை .யில்லாத தேசாபிமானதீதை ஒரு மனிதன்‌ ஆதரிக்க முடியுமென்று கேட்கி3றன்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியை நான்‌ ஆதரிப்பதைக்‌ கண்டு நீங்கள்‌ வயிற்றெரிச்சல்‌ படுவதில்‌. பயனொன்றுமில்லை.. அது தைரியமாய்‌ வகுப்பு நியாயத்தையும்‌, வகுப்பு உத்தியோகங்‌ களையும்‌, உயர்வு தாழ்வுகளையுக்‌ ஒழிக்கச்‌ சட்டம்‌ செய்வதையும்‌, வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவத்தை அமல நடத்துவதையும்‌ கொள்மையாய்க்‌ கொண்டு வேலை செய்து வருகின்றது. அதன்‌ பயனாய்‌ கின்று இந்த நாட்டில்‌ எல்லா சாதியாரும்‌ உத்தியோகம்‌ அனுபவிக்கிறார்‌ கள்‌. கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்லுகி?றன்‌, அக்‌ கட்சிமீ து பொறாமைப்பட்டுப்‌ பிரயோசனூமான்‌ நுமில்லை. இன்றைய நிலையில்‌ அதை உங்களால்‌ அசைக்க முடியாது. அதற்குக்‌ கெடுதி செய்ய எண்ண எண்ண, அது தேசமெல்லாம்‌ வேரூன்றப்‌ போகின்றது. அதன்‌ பலக்குறைவு-குற்றம்‌ எங்கிருக்கிறதென்பது எனக்குத்‌ தெரியும்‌, அதைக்‌ சரிப்படுத்த நானும்‌ முயற்சிக்கிறனேயமொழிய சும்மா இருக்கவில்லை. ஆனால்‌, அது காங்கிரசில்‌ கல்லையென்று கருதிவிடாதீர்கள்‌. உங்களை ஒன்று கேட்கின்றேன்‌. இந்த மாகாணத்தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியிருநீகு, அது இந்த 0 வநஷ காலமாகச்‌. செய்துவந்த அரசியல்‌-சமுதாய வேலையைவிட ஜஸ்டிஸ்‌ கட்சியில்லாத வேறு மாகாணங்கள்‌ அதிகமாகச்‌ செய்த ஒரு காரியத்தைச்‌ சொல்லுங்கள்‌, பார்ப்போம்‌. மற்ற மாகாணங்களில்லாத கெடுதி கிங்கு ஏதாவது இருக்கிறதா, சொல்லுங்கள்‌ பார்ப்போம்‌. மற்ற மாகாண மந்திரிகள்‌, இந்திய கவர்னர்கள்‌ எல்லோம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்களா 1 க அங்கெல்லாம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்லாததால்‌ கவர்ன்‌மெண்டு ஒழிந்து போய்விட்டதா 1 உதீதியோகங்கள்‌, சட்டசபைகள்‌, நிர்வாக சபைகன்‌ காலியாகக்‌ கிடக்கின்‌றனவா 1 தயவு செய்து யோசிதீதுப்‌ பதில்‌ கூறுங்கள்‌. . . வீணாக இப்படி இந்தச்‌ சூழ்சீசிகளும்‌, விஷமங்களும்‌, துவேஷமும்‌ வலுக்க வலுக்க பார்ப்பனப்‌ பூண்டுகள்‌ உத்தி யோகங்களில்‌ குறைந்து போவ தாடு மாத்திர மல்லாமல்‌ மறைந்து போகவும்‌ நேரிடுமென்று எச்சரிக்கை செய்கிமறன்‌. காங்கிரசின்‌ யோக்கியதையும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ யோக்கியதையும்‌, நாணயமாய்‌ வெளிமாக வேண்டுமானாஸ்‌, கம்பளி&ோட்டு எல்‌. ரம்‌ உட்கார்ந்து ஒரு பொது நியாயா திபதியை வைத்து திருவரும்‌ பேசுவோம்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ அக்கிரமங்களை, நாணயத்‌ தவறு தங்களை நீங்கள்‌ சொல்லுங்கள்‌. காங்கிஸ்‌-பார்ப்பனர்‌ அக்கிரமங்களை, மோசங்‌ ஊளை, நாணயத்‌ தவறுதல்களை நானும்‌ சொல்லுறேன்‌. யார்‌ சொல்லுவது சரியென்று முடிவு செய்யட்டும்‌. இந்த நாட்டுப்‌ பார்ப்ப களுடையவும்‌, பார்ப்பனியதி தினுடையவும்‌, காங்கிரசினுடையவும்‌, அரசியலினுடையவும்‌, தேசாபிமான தீதினுடையவும்‌ 1686-55 www.thamizham.net - Free £ book 14௦ 3011 434 பெரியார்‌ ஈ, வெ. ரர்‌, சிந்தனைகள்‌ 30, 40 வருஷத்திய வண்டவாளமும்‌ கொடிவழிப்பட்டியும்‌ என்னிடமிருக்கிறதேயொழிய, நான்‌ வெறும்‌ ஆன்‌ மாத்திரம்தானென்று கருதிக்‌ கூப்பாடு போட்டு, மிரட்டி ஓட்டி விடலா மென்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்‌. நான்‌ மொட்டை மரம்‌. என்னை மிரட்டுவதற்கு உங்களிடம்‌ சரக்கு கிடையாது. உத்தியோக?மா, பணமோ, வயிற்றுச்‌ சோற்றுக்கு வழியோ, ஒரு பெருமையோ, கவுரவமோ எதிர்பா! தீ கப்‌ பொதுச்‌ சேவையில்‌ இரங்கவில்லை. நான்‌ 6, 7 மூறை ஜெயில்‌ பார்தீதாய்விட்டது. சிவில்‌, கிரிமினல்‌ இரண்டும்‌ பார்‌ தீதாய்விட்டது. பார்ப்பனர்கள்‌: தொல்லைகளையும்‌, அவர்களால்‌ கூடியமட்டிலும்‌ செய்து டார்‌ தீதாய்விட்டதை அனுபவித்து மாய்விட்டவு. காடு வா, வா என்கிறது) வீடு போ, போ என்கிறது. நான்‌ செத்தால்‌ எனக்காக அழுபவர்‌ கள்‌ கூட மாருமில்லை. என்னால்‌ காப்பாற்றப்பட வேண்டியவர்களும்‌ யாருமில்லை. நான்‌ ஒந்றையாள்‌. ¢ நின்ற நாளைக்கு நெடூஞ்சுவர்‌ ; விழுந்தால்‌ குட்டிச்‌ சுவர்‌ 2. முமுகிப்போவது ஒன்ற மில்லை. எலகீஷன்‌ முடிந்த எட்டாம்‌ நான்‌ நான்‌ அரசாங்க விருந்தாளியாய்ப்‌ போகப்போகிறேன்‌. காங்‌ $ அப்படியானால்‌ நீங்கள்‌ ஏன்‌ காங்கிரசில்‌ சேரக்கூடாது ஈ.வெ.ரா! சேருவதற்கு சமயம்‌ பார்‌ தீ.துக்கொண்டுதான்‌ இருக்கிறேன்‌. இந்த பம்பாய்‌ காங்கிரசில்‌ தோழர்‌ காந்தியவர்‌ கன்‌ விலகிப்போய்விடுவதாகச்‌ சொல்லுகிறாராம்‌. அப்படி அவர்‌ விலகவிடுவாரானாலும்‌, எனது திட்டங்களை ஜஸ்டிஸ்‌ கட்சி ஒப்புக்கொள்ளவில்லை யானாலும்‌ நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்து எனது திட்டத்தை நடதீத; முயற்சிக்க உத்தேசிதீ திருக்கிறேன்‌. ¢ இன்று இரவு 8 மணிக்குக்‌ கூட்டத்தை முடித்துக்கொண்டு வருவதாக, ஒரு பெரிய விருந்துக்கு ஒப்புக்கொண்டு இருக்கி 8றன்‌. மணி 85 ஆகிவிட்டது. இனியும்‌ கேள்விகள்‌ இருந்தால கேட்கலாம்‌. இன்னும்‌ 15 நிமிஷம்‌ இங்கிருக்க ஆட்சேபணையில்லை? என்று சொல்லிச்‌ சிறிது நேரம்‌ சும்மா நின்று கொண்டிருந்தார்‌. யாரும்‌-எவ்விதக்‌ கேள்வியும்‌ இல்லாத தால்‌, * கூட்டத்தை முடிதீதுவிடுகிறேன்‌ ? என்றார்‌. [கோவை, டவுன்‌ ஹாலில்‌, 12-10-193-ல்‌ சொற்பெழிவு-- பகுத்தறிவு ? 21-10-1934] 12. எனது திட்டம்‌ தலைவரவர்களே | தோழர்களே 1 * ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌: வேலிலதீதிட்டம்‌? என்று இப்போது என்னால்‌ ஆமோதிக்கப்‌ படும்‌ வேலைத்‌ தீர்மானமானது, சுமார்‌ 2 வருஷத்துக்கு முன்னமேயே என்னால்‌ அக்‌ கட்சிக்குச்‌ சமர்ப்பிக்கப்பட்ட திட்டமாகும்‌. கித்‌ திட்டதீதிற்‌ ஐப்‌ பல சரித்திரங்கள்‌ உண்டு: இத்‌ திட்டம்‌ முதன்முதலில்‌ எப்படி ஏற்பட்டது என்ரால்‌, தோழர்கள்‌ சாந்தியாரும்‌, இராசகோபாலாசீசாரியார்‌ அவர்களும்‌, நானும்‌ ஒத்துழைக்க ஏதாவது சந்தர்ப்பம்‌ ஏக்படக்கூடாதா என்ற பிரச சினை எழுந்த காலதீதில்‌ என்னால்‌ யோசித்து எழுதஃபட்டு நெ நபர்களில்‌ ஒருவர்‌ ஆமோதிப்பும்‌ பெற்று, காந்திபாருக்கு அனுப்பிக்‌ கொடுக்கப்பட்ட திட்டங்களின்‌ தத்துவமாகும்‌. அவற்றை ஏற்றுக்கொண்ட தாக தோழர்‌ சாத்தியாரிடமிருந்து குமிப்பிட்ட காலத்திற்குன்‌ பதில்‌ வராததா$லயே, ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு ர்‌ சமர்ப்பிதீ தன்‌. அவர்கன்‌ அவற்றைச்‌ சில வார்த்தைத்‌ திருத்தங்களுடன்‌ ஒப்புக்கொண்டார்கள்‌. அதன்‌: பின்தான்‌ இதே திட்டங்கள்‌ தோழர்‌ கராசகோபாலா2 சாரியார்‌ அவர்களால்‌, வை பொது வுடைமைதி தீர்மானங்கள்‌ ? என்றும்‌, * இராமசாமியைதீ தங்கள்‌ கட்சியில்‌ சேர்த்துக்‌ கொலள்ளுவதற்காக ஐஸ்டிஸ்‌ கட்சியார்‌ கொடுத்த விலை? என்றும்‌ சொல்லப்பட்டதாகும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 435 மற்றும்‌, பார்ப்பனத்‌ தேசியப்‌ பதீதிரிகைசளாலும்‌ பார்ப்பனக்‌ கூலிகளாலும்‌, £ கராச்சி தீர்மானத்திலிருந்து திருடிய தீர்மானங்கள்‌ ? என்று சொல்லப்பட்டது காகும்‌. இவை பொதுஉடைமை தீ தீர்மானமானாலும்‌ சரி) கராச்சி திட்டதீதிட்‌ இருந்து தி நடியது என்றாலு& சரி, அவற்றால்‌ நமக்கு நஷ்டம்‌ ஒன்றும்‌ இல்லை; கிலாபமேதான்‌. ஏனெனில்‌, காங்‌ ரஸ்காரர்கள்‌ நமக்குத்‌ திட்டமிடலை என்றோ அல்லது நமது திட்டங்கள்‌ பிற்போக்‌ கானவை என்றோ சொலமுடியாதல்லவா ? காரச்சி திட்டத்தை நாம்‌ திருவ க்கொண்டோ மென்றால்‌, அதன்‌ அர்தீதம்‌ என்ன? அதாவது, கராச்சி திட்டத்தை நாம்‌ நமது திட்டமாகக்‌ கொண்டு விட்டோம்‌ என்பதுதானே அர்தீதம்‌ 1 அப்படி இருக்கும்போது, காங்கிரஸ்‌ திட்டமும்‌ நம்முடைய திட்டமும்‌ ஒன்று என்றாவதோடு, அரசியலிஃ காங்கரஸ்‌ திட்டம்‌ என்பதற்கும்‌ ஜஸ்டிஸ்‌ திட்டம்‌ என்பதற்கும்‌ வித்தியாசமில்லை என்பதைக்‌ காங்கிரஸ்‌ காரர்களே ஒப்புக்கொள்கிறார்‌ கள்‌ என்‌ று ஆகிவிடவில்லையா? ஆனால்‌, உண்மையிலேயே நமது திட்டங்களுக்கும்‌ காங்கிரஸ்‌ திட்டங்கன்‌ என்ப தற்கும்‌ உள்ள வித்தியாசம்‌ இரண்டு, அவை முக்கியமான வித்தியாசங்களாகும்‌, காங்கிரஸ்‌ திட்டத்தில்‌ பழைய புராணங்களையும்‌ சாதி-மத விதீதியாசங்‌ ஈளையும்‌ காப்பாற்றவும்‌, அவரவர்‌ சாதி ஆச்சாரங்களை அமுலில்‌ நடதீதிக்கொள்ள உரிை யும்‌, காப்பாற்றிக்கொடுப்பதாக உத்திர வாதமும்‌ அளிக்கிறது. இவற்றை நாம்‌ ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புகீ கொள்ளுவதானால்‌ நாம்‌ சூதீதிரர்களாகவும்‌, தீண்டாத சாதியாராகவும்‌ இருக்க நாமே சம்மதித்து கொண்டவர்‌ களரவோம்‌. அன்றியும்‌, வருணாசிரமதீதையும்‌, பறையன்‌-பி] ரமணன்‌ என்கின்ற உயர்வு தாழ்வையும்‌ ஒப்புக்கொள்ள வேண்டியவர்‌ களாவோம்‌. இன்றைய காங்கிரசின்‌ கிளர்ச்சி எல்லாம்‌ ஷி பிராமணதீ தன்மையையும்‌, பஞ்சமத்‌ தன்மையையும்‌ காப்பாற்ற இருந்துவருகிறதே யொழிய, பொதுவாக மனித சமூகதீதிற்கு எவ்வித நன்மைக்காகவும்‌ இல்லை என்று நாண்‌ 15 வநடகாலமாகச்‌ சொல்லி வருவதற் கட கராச்சி தீர்மானதீதிலுள்ள இந்தத்‌ ததீதுவ8மேதான்‌ காரணம்‌. ஆகவே, இவ்வளவு பெரிய வித்தியாசம்‌ நமது திட்டத்துக்கும்‌, கராச்சி திட்டத்திற்‌ கும்‌ இருக்கும்‌ பாது, கராச்சி திட்டமும்‌, நமது திட்டமும்‌ ஒன்று என்று எந்தப்‌ பைத்தியகீகாரனாவது சொல்ல முடியுமா ? அன்றியும்‌, நமது திட்டத்தில்‌ உள்ள விஷயங்கள்‌ கராச்சி திட்டத்தில்‌ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நமது திட்டத்தில்‌ ¢ அரசியல்‌ உத்தியோகங்கள்‌, பிரதிநிதீ தீதுடங்கள்‌- இந்த இந்த மாகாணத்தில்‌ உள்ள எல்லா வகுப்பார்களுக்கும்‌ (அதாவது முஸ்லிம்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, பார்ப்பனர்கள்‌ பார்ப்பனரல்லாதார்‌, தாழ்தீதப்‌ பட்ட மக்கள்‌ ஆகிய வகுப்பார்களுக்கு) அவர்கள்‌ ஜனதீதொகைப்‌ பெருக்கதீதுக்குத்‌ தகுந்தபடி கிடைக்கும்படியா கச்‌ செய்ய2வண்டும்‌! என்பதாக உள்ள திட்டம்‌, காங்கிரஸ்‌ காரர்களின்‌ கராச்சி திட்டத்தில்‌ இருக்கிறதா என்று கேட்கி3றன்‌. ஆகவே, காங்கிரசுக்கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கும்‌ உள்ள ஒரே ஒரு விதீதியாசமெல்லாம்‌ சாதி, மத; பேதங்கள்‌ ஒழிக்கப்பட வேண்டியதும்‌, அக வரையில்‌ வகுப்புகளின்‌ அளவுக்குத்‌ தகுந்தபடிதான்‌ உத்தியோகமும்‌, பிரதிதிதித்துவமும்‌ இருந்துவர வேண்டும்‌ என்பதுமே யாகும்‌. இந்த இடத்தில்‌ உங்களுக்கு ஒருவிஷயம்‌ விளக்க வேண்டியவனாக இருக்கிறேன்‌. அதாவது, * சாதிபேதம்‌, சாதிப்‌ பிரிவு ஆவை ஒழிய வேண்டும்‌ என்று சொல்லு கின்ற நீங்கள்‌, வகுப்புவாரிப்‌ பிரதிதிதிதீதுவம்‌ கேட்பது-சாதியைக்‌ காப்பாற்றுவது ஆகாதா என்று பார்ப்பன தேரியப்‌ பத்தரிகைகள்‌ என்பனவும்‌, அவர்‌ களது கூலிப்‌ பத்திரிகைகளும்‌, கூலிகளும்‌ எழுதவும்‌, கேட்கவும்‌ செய்கின்றார்கள்‌. இவர்களுக்குள்‌ சிலர்‌ தெரிந்தே விஷமதீதக்காகக்‌ கேட்பவர்களும்‌, சிலர்‌ விஷயம்‌ புரியாமல்‌ பார்ப்பனர்கள்‌ சொல்வதை நம்பிக்‌ கேட்பவர்களும்‌ உண்டு. www.thamizham.net - Free £ book 14௦ 3011 436 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ ஆனால்‌, அதை விளக்கிக்‌ காட்டக்‌ கடமைப்பட்டுள்ளேன்‌. என்னவென்றால்‌, இன்று "கராச்சி திட்டமோ காங்கிர சின்‌ கொள்கையோ, பேதங்களை அடியோடு ஒதிக்துபிவது என்கிறதாக இல்லை. பூரண சுயேச்சை பெற்ற இந்தியாவில்‌ பறையனும்‌, பிராமணனும்‌ இருக்கமாட்டார்கள்‌ என்‌ ரோ, கொடுப்பன கொள்வினைக்கு அருகதையற்ற சாதி மத பேதங்கள்‌ இருக்காது என்றோ ஒரு வாசகம்‌ இருக்குமானால்‌, நாச மாக்திரம்‌ எதற்காக வ௫ுப்புஷாரிப்‌ பிர திநிதிதீதுவமும்‌, வரப்புவா கமும்‌ பேசவேண்டும்‌ என்றுகேட்க காங்‌ ரஸ்‌ காரர்களுக்கு உரிமை உண்டு. சாதி மதத்தில்‌ நிறுநிலைமை வகித்து, பழைய சாஸ்திர புராண தர்மங்களைக்‌ காப்பாற்றிக்‌ கொடுப்பதாக உத்திர வாதமளிக்கும்‌ காங்கிரசிடம்‌, எங்கள்‌ பங்கு என்ன ₹ எங்கள்‌ உரிமை என்ன 1 என்று ஒருவர்‌ கேட்டால்‌ அவர்‌ எப்படி வகுப்புவாதியகவோ, தேசத்‌ துரோகியாகவோ ஆகிவிடக்கூடும்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌ கள்‌ வெகு ஜாகீ 9ரதையாகதீ தங்கள்‌ உயர்வைக்‌ காப்பாற்றிக்‌ கொள்‌ வதற்குக்‌ காங்கரசினிடம்‌ உத்திரவாதம்‌ பெற்றக்கொண்டு, நம்மிடம்வந் து *நமது தாழ்‌ வையும்‌, இழிவையும்‌ நாம்‌ காப்பாற்றிக்கொள்வதாய்‌ உத்திரவாதம்‌ கொடு! என்‌ லு நம்மைக்‌ கேட்டால்‌ நாம்‌ அத்தனை பேரும்‌ முட்டள்களா அல்லது வகுப்பு நலத்தை விற்று வயிறு வளர்க்கும்‌ பார்ப்பனக்‌ கூலிகளா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. நான்‌ இந்தக்‌ காங்கிரசினுடையவும்‌ பார்ப்பனர்‌ களுடையவும்‌. யோக்கியகைகளைத்‌ தெரியாமல்‌ பேசுவதாக நீங்கள்‌ யாரும்‌ கருதிலிடாதீர்கள்‌. காங்கிரசின்‌ யோக்கிபதைக்கு-- சென்னை காங்கிரசுக்கு, தோழர்‌ R K. சண்முகம்‌ அவர்கள்‌ அனு 9ய சாதி வித்தியாச ஓழிப்புதி தீர்மானம்‌ என்ன கதி ஆயிற்‌ ஐ என்பதையும்‌, பார்ப்பனர்கள்‌ $யாக்கிபதை க்கு தோழர்‌ டாக்டர்‌ வரதராஜுலுவால்‌ கிளர்ச்சி செய்பப்பட்ட குந தல சமபந்தி போஜனதீ தீர்மானம்‌ என்ன ஆயிற்று என்பதையும்‌ யோசித்து பாருங்கள்‌. இந்த இரண்டு காரியங்களும்‌ போதுமான ஆ தாரமல்லவா என்று கேட்கிறேன்‌. இந்த நாட்டில்‌ வாழும்‌ கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்கு, இன்று மூதலில்‌ சாதி ஒழிப்பதும்‌, சமமாய்‌ நடத்தப்படுவது கல்லாத வேறு சுயராஜ்பம்‌ என்ன வேண்டியிருக்கிறது, என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. அவற்றை ஒப்பு&9 எள்ளாத காங்‌ கிரசைப்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ ஆதரிக்கிறார்கள்‌ என்றால்‌, பார்ப்பனரல்லாதார்களைச்‌ி சூத்திரன்‌ என்றும்‌, பார்ப்பனர்‌ களின்‌ வைப்பாட்டி மக்களென்றும்‌, பார்ப்பனர்‌ களின்‌ அடிமை என்றும்‌ பார்ப்பனர்‌ கள்‌ சொல்லுவதை மெய்யென்று ஒப்புக்கொண்டதாகத்தானே அர்‌ தீதமாகிறதா அல்லவா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆகையாஸ்‌) நாம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பது, சாதி ஒழியவேண்டும்‌ என்பதற்கு எந்தவிததீதிலும்‌ நரணான காரியம்‌ ஆகாது என்‌ பதுடன்‌--அ திலும்‌ காங்கிர சைக்‌ கேட்பது எப்படியும்‌ எந்தவிதத்திலும்‌ தவறாகாது என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்ளு கிறேன்‌. சாதி பேதங்கள்‌ ஒழிவது சட்டத்தினால்தான்‌ முடிய வேண்டுமே ஒழிய, பொதுஜன சம்மததீதில்‌ என்றால்‌ @ நநாளும்‌ முடியவே முடியாது . ஏனெனில்‌, சாதி காரணமாகப்‌ பாடுபடாமல்‌ கடவுளையும்‌ மோட்சத்தையும்‌ காட்டி, ஊரார்‌ உழைப்பில்‌ வயிறு வளர்க்கும்படியான. சவுகரியம்‌ இருக்கும்டோது, பலாத்சாரதி துகோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல்‌ எவனாவது சாதி ஒழிய சம்மதீப்பானா என்று கேட்கி3றன்‌ ஆகவே, சட்டத்தின்‌ மூலம்‌ சாதிகள்‌ ஒறிகின்றபோது, சட்டத்தின்‌ மூலம்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிடிதித்துவத்தை எழுத்து விடுவது சிறிதும்‌ சிரமமாண காரியமல்ல என்று தெரிவித்துக்கொள்ளுகி3றன்‌. . . . www.thamizham.net - Free E book 14௦ 3011 [இபரியாரம்‌ எ: உ.சியும்‌ கப்பலோட்டிய தமிழரான காலஞ்சென்ற வ.உ. அவர்கள்‌, பார்ப்பனரின்‌ குழ்சிரியைப்‌ பரிந்து தந்தை பெரியார்‌. அவர்களின்‌ 'இன: உரிமைப்‌ போராட்டத்தின்‌ suduges உணர்ந்து, வரவேற்றார்‌ என்பதனை விளக்கும்‌ கடுதம்‌ :-- v. O. CHIDAMBARAM மடய உ Turiconin பப சிடதலர்துத்தடா க அய்ட்லகை i ண > @qmmh”%Mu/a‘M . ௦ 7 0472 ண L/ 8 வல்‌ ஓ < - 57 5025 4G, 22 கழக ம தகித்த கட 8 & 7o o, அரவ வ கேட " ழும்‌ தர ர்சிஸ்‌ 10- எ சல்‌ எனல சாலி சி பகி மத திரைத்‌ எழுதி க வக கற்லிய்‌ பம்பல்‌ உச்சக்‌ கலே ஒஸ்‌ b A5 D @y PN கல்‌ கைச்‌ வதை தல வர சற உவன்‌ அவலது கவ ௮ கலம்‌ O3 LU ல்‌ வரதிசச்க்‌ ey ௪௧௦ நட்பு ஒன்று கிறது தி த்ர ந்த ஜுன்‌ கததி இல்‌ கடல்கள்‌ க்‌ னித மகத ் ம்‌ உத்தி ல சீட ம்வுவல்தை Ly வரக P UL ல்‌ vn 7’6\ 2 B o தலை A;a‘;c@} e கட்க கிகி ந்னு று உல்‌ க ஷி த 2௪௦ அத்து சு ந கிற, வாவல்‌ கண்‌ o Dy திக்க Quo b1 கி உலக துல்‌ திக்‌ சிஸ எல்‌ தன்‌ கற “வத ஓதாது தத்த www.thamizham.net - Free £ book 14௦ 3011 www.thamizham.net - Free E book No 3011 இயக்கங்கள்‌ 437 அன்றியும்‌, காங்கரஸ்சாரர்கள்‌ முயற்சிப்பதாலோ அல்லது சட்டதீதினா?லா வகுப்புகள்‌ இல்லாமல்‌ போகுமானால்‌-பிறகு யாரு$கு நாம்‌ பிரதி 9திதீ துவம்‌ கொடுக்கப்‌ போறோம்‌? ஆகவே, அது தானாகவே மறைந்துவிடும்‌. ஆதலால்‌, சாதி வரப்புகள்‌ உள்ளவரை. வசூப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்ப தும்‌, அதுவும்‌ சாதியைக்‌ காப்பாற்று கின்ற காங்கிரசினிடம்‌ கேட்பதும்‌ குற்ற பா கவோ, சாதியைக்‌ காப்பாற்றியதாகவோ ஆகாது என்பதையும்‌ தெரிவித்‌ துக்கொள்ளுகி 2றன்‌. நமது திட்டத்தில்‌ வியாபாரிகள்‌, தரகர்கள்‌ கொள்ளையும்‌ ஒழிக்கப்படுகின்றது. . இயந்திர முதலாளிகளின்‌ கொடுமைகளும்‌, தொழிலாளர்களின்‌ கஷ்டங்களும்‌ ஒழிக்‌ கப்படு கின்‌ றனஃ மற்றபடி, கல்வி குறைவு, மதுபான கெடுதி, தீண்டாமை கழிவு ஆகியவைகள்‌ நீங்குவதுடன்‌, சகல சாதி, மத வகுப்பு மக்களுக்கும்‌, அரசியல்‌ பிரதிநிதித்துவத்திலும்‌, உதீகியோகங்களிலும்‌ விகிதாச்சார உரிமை கிடைப்பதன்‌ மூலம்‌ சமநிலை ஏற்பட வசதி அளிக்கிறது. வரி விதிப்பு, நிர்வாகம்‌, ஜன சமூகத்துக்கு அனுகூலமான கூட்டுறவு, ஸ்தல ஸ்தாபன நிர்வாகம்‌, சம்பளக்‌ சொள்ளை ஆகியவைகளும்‌ ஒழுங்காக மக்களுக்கு அனுகூல மான வழியில்‌ நடைபெறதீ தக்க வண்ணம்‌ அமைந்திருக்கிறது. நிற்க. நமது தீர்மானங்கள்‌ எப்படிப்பட்டதாக இருந்தாலும்‌--சாங்கிரஸ்காரர்களால்‌ எவ்வளவு குறை சொல்லக்கூடியதாய்‌ இருந்‌ சாலும்‌ நமக்கு அதைப்பற்றிக்‌ கவலையில்லை. ஆனார்‌, இன்று நமது பாமர மக்களுக்கு அவை தேவையானது, போதுமான தும்‌ தானா, அல்லவா என்பதை யாசிதீதப்‌ பாருங்கள்‌. நமது திட்டங்களால்‌ விவசாயிகளின்‌ நிலைமை காப்டாற்றட்படுகிறது. லேவா3தவிக்காரர்களால்‌ ஏற்படும்‌ கொடுமை ஒழிச்கப்படுகிறது. வக்கில்களின்‌ தொல்லையும்‌, விவகாரஙகளின்‌ தொல்லையும்‌ ஒழிக்கப்படுகிறது. இவைகள்‌ அனுபவ சாத்தியமான முறையிலேயே கைகூடும்‌ மாதிரியாகவும்‌ திட்‌ டங்கள்‌ வகுக்கப்பட்டிருக்கின்‌ றன. ஆகவே, நமது திட்டங்கள்‌ எவ்வளவு தீவிர சமத?ம வாதியும்‌ ஒப்புக்கொள்ளக்‌ கூடியதும்‌, இதற்குமேல்‌ எந்த சமதர்ம வாதியாலும்‌ வகுக்கப்படாத*மான அவ்வளவு மேன்‌ மையான வையாகும்‌. இவைகள்‌ செவ்வனே வெற்றிபெற வேண்டுமானால்‌, நமக்குள்‌ ஒற்றுமையும்‌ கட்டுப்‌ பாடும்‌ இருக்கவேண்டும்‌. பார்ப்பனரல்லாத மச்களுக்குள்‌ காங்கிரசின்‌ விஷமும்‌, பார்ப்‌ பனர்களின்‌ சூழ்சீசியும்‌ பரலாதிருக்குமானால்‌ இந்தப்‌ பதினைந்து வருஷ காலதீதிற்குன்‌ ளாக இன்னும்‌ எவ்வளவோ பயனுள்ள காரியங்களைச்‌ செய்திருக்கலாம்‌. ஆனாலும்‌ குற்றமில்லை. இனியாவது ஒற்றுமையாய்‌ இருப்போ மானால்‌ வரப்போகும்‌ சீர்திருத்ததி தைப்‌ பயன்படுத்தி நல்ல வேலை செய்யலாம்‌ என்றே கருதுகிறேன்‌. நாம்‌ பணகீசாரர்களுகீகு அடிமை என்று சாங்கிரஸ்காரர்கள்‌ சொல்லுகிறார்கள்‌. எப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்கள்‌ என்றால்‌, தங்கள்‌ வயிறு வளரிப்பதற்கு காங்கிரஸ்காரர்க ளிடமும்‌ டார்ப்பனர்‌ களிடமும்‌ கூலி பெற்று நம்மைக்‌ குரைக்கும்‌ கூட்டத்தார்‌ கள்‌ தரண்‌ சொல்லுகிறா]களே ஒழிய-த$£கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கு நாணயமான ஒரு மார்க்கத்தை வைதீதுக்கொண்டு நம்மை அடிமை என்று சொல்லுகிறவர்கள்‌ யாருமே கில்லை. ஆதலால்‌, அதைப்பற்றி நாம்‌ கவலைப்பட வேண்டியதில்லை. [வாடிப்பட்டியில்‌ 1986-ல்‌ சொற்பொழிவு. திராவிட நாடு! 30-5-1943) www.thamizham.net - Free £ book 14௦ 3011 438 13. நீதிக்‌ கட்சி நிலைக்க வழி தலைவரவரீ களே ! தோழர்களே ! நம்‌ கட்சியைப்பற்றிப்‌ பேச வேண்டுமென்றும்‌ கட்சியில்‌ கவலையுள்ள. தொண்டர்‌ களுக்கும்‌ சுயநலமில்லாது கட்சிப்பற்றுள்ள பொதுமக்களுக்கும்‌ ஏதாவது உறுதியான வழி காட்ட வேண்டுமென்றும்‌ பல நண்பர்கள்‌ ஆசைப்பட்டார்கள்‌. நான்‌ எதைப்‌ பேசுவது? உண்மையில்‌ இதுவரை நான்‌ நீங்கு என்ன பேசுவதென்பதைசி சிந்திக்கவேயில்லை. ஆனாலும்‌, சென்னையில்‌ இந்திய சட்டசபை எலக்‌ஷனில்‌ நம்‌ கட்சி அபேட்சகர்‌ களுக்குப்‌ படுதோல்வி ஏற்பட்டது என்பது இன்று எங்கும்‌ பேசப்படும்‌ பேசீசாகவும்‌, நம்‌ எதிரிகளான: பார்ப்பனர்களும்‌, பார்ப்பனரல்லா தார்களில்‌ சிலரும்கூட மகிழ்ச்சியடைந்துகொண்டிருக்கும்‌ விஷயமாகவும்‌ இருக்கிறது. ஆனால்‌, அதைப்பற்றி முதலில்‌ பேசுகி3றன்‌ ) பிறகு நம்‌ கட்சியைப்பற்றிப்‌ பேசுகிறேன்‌. £ நாம்‌ ? எலகீஷனில்‌ கோற்றுவிட்டோம்‌. * நாம்‌? என்றால்‌ யார்‌ ₹ ஜஸ்டிஸ்‌ கட்சி யாரா பார்ப்பனரல்லாதாரா 1 நாம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்றால்‌ இன்று ஜெயித்திரந்தால்‌ தான்‌ அக்‌ கட்சிக்கு என்ன இலாபம்‌ வரும்‌! ஜெயிக்காவிட்டால்‌ என்ன முழு9ப்போகும்‌ T அல்லது, நாம்‌ பார்ப்பனரல்லா தார்‌ என்றால்‌ தோழர்‌ கத்தே ரங்கைய நாயுஒவுக்கும்‌, தோழர்‌ சுந்தரராவ்‌ நாயுடுவுக்கும்‌ பார்ப்பனரல்லா தார்‌ என்பதில்‌ என்ன பிரமாத வித்தி யாசம்‌ ! கத்தே நாயுடுகாரு அரசியலிலும்‌ மத இயலிலும்‌ பார்ப்பனருக்கு அடிமை. தோழர்‌ சுந்தரராவ்‌ நாயுடு மத இயலில்‌ பார்ப்பனர்களுக்கு அடிமை. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ முகீிகியகொள்கை சமுதாய மூன்னேற்றமேயாகும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு நான்‌ சொல்லுகபடி ஏதாவது சமுதாயக்‌ கொள்கை இருக்குமானால்‌, அதில்‌ இருப்பவர்கள்‌ எந்த விதத்திலும்‌ டார்ப்பனர்களு $கு அடிமையாய்‌ இல்லாத டாரப்பனரல்லா: தார்களாகவே இருப்பார்கள்‌. ஏனெனில்‌, நாம்‌ கிதுவரை ஜஸ்டிஸ்‌ கட்சியைப்‌ ¢ பார்ப்பன: ரல்லாதார்‌ கட்சி? என்றே சொலி வருகிறோம்‌. அதனாலேயே நம்மை ¢ நான்‌-பிராமின்‌ ? (Non-Brahmin) கட்சி என்று சொல்லிக்கொள்கிறோம்‌. அதற்காகவே திருவாரூர்‌ மாசாண மாநாட்டில்‌, *₹ பார்ப்பனரல்லா காராய நாம்‌ இந்துக்கள்‌ அல்லர்‌ என்றும்‌, நாம்‌ திராவிடர்கள்‌ என்றும்‌, நமது மதம்‌ இந்து மதம்‌ அலை? என்றும்‌ தீர்மானம்‌ செய்தோம்‌. இதை எதற்காகச்‌ செய்தோம்‌ ₹ பார்ப்பனரிடமி நந்து நாடு, மதம்‌ ஆதியவைகளில்‌ பிரிந்தவர்கள்‌ என்று காட்டுவதற்கேயல்லவர 1 இதை எந்தப்‌ பார்ப்பனரல்லா சாராவது, எந்த ஜஸ்டிசாராவது சாரியதீதில்‌ ஏற்று நடந்துசொன்னுகிறார்‌ களா ₹ நாம்‌ ஒரு சிலர்‌ தொண்டை கிழிய, நம்‌ குடும்பம்‌ கெட, உடலழிய, ¢ ஆரியநா--திராவிடநாடு £, * ஆரியர்‌--திராவிடர்‌ 1, *டார்ப்பனர்‌--பார்ப்பன ரல்லாதார்‌? என்று கத்துவதும்‌ சாகப்‌ போவதுமாய்‌ ஒருபுறம்‌ நடந்துசொண்டிருக்க, மற்றொருபறம்‌ நம்மிஃ முக்கிய தலைவர்‌ என்போர்‌ களும்‌, நாளை மந்திரி ஆகப்‌ போகிறவர்‌ களும்‌, நீர்வாக சபை மெம்பர்‌, மந்திரிகளின்‌ காரியதரிசி, ஜில்லா போர்டு, முனிசிபாலிடி தலைவர்‌, மற்றும்‌ பட்டம்‌; பதவி, சட்டசபை மெம்பர்‌, உதீதி யாகம்‌ முதலாகியவை இந்தக்‌ கட்சியின்‌ பேரால்‌ அடை நீதவர் களும்‌, அடையப்போகிறவர்களும்‌, அடையத்‌ தவம்‌ கிடப்‌ பவர்களும்‌-ஆரியர் களுக்கு ஆக்கமளிக்கும்‌ தேசம்‌, மதம்‌, 6 யில்‌, குளம்‌, சட்டம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌, இதிகாசம்‌ ஆகியவைகளை ஏற்படுதீதிக்கொண்டும்‌, சாப்பாற்றிக்‌ கொண்டும்‌, சாப்பாற்றப்‌ பிரச்சாரம்‌ செய்து காண்டும்‌, அவைகளுக்கு அடிமைகளாக நடந்து தங்கள்‌ செல்வங்களையும்‌, அறிவுத்‌ திறனையும்‌, ஊக்கத்தையும்‌ அவற்றிற்குச்‌ செலவு செய்து கரண்டுமிருந்தால்‌, நம்‌ கட்சிக்கோ நம்‌ முயற்சிக்கோ ஏதாவது பயன்‌ விளையுமா 8 என்று கேட்கிறேன்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 66௭-116 ௬0௪ ௬௮ [லா QTF ர டை உ நமாமி ராடை ௨௫ S @1 ண்‌ 26 “ரச முறுகமழுழுஸ்‌ கிராத PFIDw ரதத எறிய o ipey ம-696ர- ர டன்றபமா பசக [ங௪ JumgsEd GUsNIIG 0 “ரம மஜத sEF fro ஈட்டு க ரணி es சாசாறு எம மல்‌ வனத்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 www.thamizham.net - Free E book No 3011 இயக்கங்கள்‌ 439 இப்படிப்பட்டவர்கள்‌ ஒன்று, ¢ இந்த மருந்து எங்களுக்குஜீரணம்‌?ஆகாது$ குடல்‌ வெந்துபோகும்‌] வேண்டாம்‌? என்று அடியோடு இம்‌ முயற்சிக்‌ குழுவிலிருந்து விலகிக்‌ கொள்ள வண்டும்‌, அல்ல.கடி உன்‌ வைத்தியம்‌ எனக்குப்‌ பிடிச்காது) நீ உன்‌ அடைப்பத்தைக்‌ கட்டிக்கொள்‌] வேறு வைத்தியனைப்‌ பார்தீ துக்கொள்கிறோம்‌! என்று தைரியமாய்ச்‌ சொல்லவேண்‌ ஆம்‌, இல்லாமல்‌, ¢ நான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி, ¢ நான்‌ பார்ப்பன ரச்லாதார்‌ கட்சி? என்று சொல்லிக்கொண்டு இருந்தால்‌ இதற்கு என்னதான்‌ அர்த்தம்‌ என்று கேட்கிறேன்‌. *பார்ப்பனரல்லாதார்‌ ! என்றால்‌ பார்ப்பனர்‌ களு&கும்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்பவர்‌ களுக்கும்‌ ஏதாவது நடைமுறையில்‌, வேஷத்தில்‌, உள்ளத்தில்‌, உணர்ச்சியில்‌, பாவனையில்‌: வித்தியாசம்‌ இருக்கவேண்டாமா ? பார்ப்பனன்‌ பார்ஃகும்‌ உத்தியோகத்தில்‌ ஆத்திரப்‌ படுகிறோம்‌. ஆளால்‌, அவனை நடுவில்வைத்து மனைவியுடன்‌ நமஸ்கரிக்கிறோம்‌ $ காலில்‌ விழுகிறோம்‌ ) நம்‌ செல்வத்தைக்‌ காணிக்கையாகக்‌ கொடுக்கிறோம்‌. ஆகையால்‌, இந்நிலையில்‌ பார்ப்பனர்‌ களுக்கும்‌, பார்ப்பனர்‌-அல்லாதாருக்கும்‌. அப்படி எந்த வித்தியாச தீதை அவர்களைவிட்டுப்‌ பிரிந்திருப்பதற்குக்‌ குறிப்பிட முடியும்‌ T உண்மையில்‌, நாம்‌ பார்ப்பனரஸ் லாதார்‌ என்றால்‌ பார்ப்பனர்‌ களு கும்‌ நமக்கும்‌ சமயக்கோட்பாடு என்னும்‌ ததீ s வத்தில்‌ பேதம்‌ என்று காட்டவேண்டியதைதீ தவிர, வேறு எதில்‌ பேதம்‌ காட்டினால்‌--நாம்‌ அவர்‌ களிலிருந்து வேறுபட்டவர்கள்‌ என்று காட்டமுடியும்‌ ₹ முஸ்லிமுக்கும்‌ நமக்கும்‌ அல்லது கிறிஸ்தவருக்கும்‌ நமக்கும்‌ இன்றுள்ள பேதம்‌ சமயக்கொள்கை தவிர வேறு எதில்‌ இருக்கிறது 8 இதுபோல்‌, பார்ப்பனருக்கும்‌ நமக்கும்‌ சமயதீ துறையில்‌ பேதம்‌ இல்லையானால்‌ “காட்ட ஓடியவில்லையானால்‌, வேறு எதில்‌ காட்டமுடியும்‌ 8 எதற்காக நாம்‌ பார்ப்பண ரல்லாதார்‌ என்று சொல்லிக்கொள்ள வேண்டும்‌ ! இதுவரைச்‌ சற்றேறக்குறைய 25 வருஷ காலதீதுக்குமேல்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ என்பதாக ¢ ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சொல்லிக்‌ கொண்டு வந்திரநக்கி றாம்‌. ஆனால்‌, இன்றுவரை அக்‌ கட்சியில்‌ ஒரு பத்துபேர்கள்‌ கூட உண்மையான பாரீப்பனரல்லாதாராக இருக்கமுடியவில்லையானால்‌, இந்தக்‌ கட்சியைப்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி என்று சொல்லுவது வெட்கக்கேடும்‌ பித்தலாட்டமும்‌ அல்லது மடமையும்‌ அல்லவா என்று கேட்கிறேன்‌. அரசியலில்‌ இக்‌ கட்சி என்ன ஆதிகீகம்பெற்றும்‌ என்ன பயன்‌ ? பார்ப்பனரல்லாதார்‌ என்றால்‌ நியாயமாக அது மத இயலையும்‌, சமுதாய இயலையும்‌ அடிப்படையாகக்‌ கொண்ட தாகும்‌. அதற்காகவே அப்பெயர்‌ ஏற்பட்டதாகும்‌. அந்தத்‌ துறையில்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ என்ன செய்தது? ஐஸ்டிஸ்கட்சி அரசியல்‌ துறையில்‌ சிறிதாவது சில நாட்களாவது வெற்றிபெற்றதென்றே சொல்லலாம்‌. அதனால்‌ பட்டங்கள்‌, பதவிகள்‌, அதிகாரங்கள்‌ பெற்றது என்றே சொல்லலாம்‌ இதனால்‌ நமது நாட்டுக்கோ, நமது சமுதாயதீதுக்கோ ஏற்படவேண்டிய நன்மை என்ன ஏற்பட முடிந்தது! சர்‌, கே. வி. ரெட்டி நாயுடு கவர்னர்‌ வேலை பார்க்கவில்லையா? சரீ. பனகால்‌, சர்‌. 1. 1, இராசன்‌, சர்‌ குமாரசாமி ரெட்டிடாரீ, சர்‌, பாத்‌ ரா, சர்‌. முத்தையா செட்டியார்‌ முதலியவர்கள்‌ மந்திரிவேலை பார்க்கவில்லையா? சர்‌. கிராமசாமி முதலியார்‌ இன்னும்கூட வைசிராய்‌ நீர்வாகசபையில்‌ இருக்கவில்லையர 8 இவர்களில்‌: எவராவது அந்தப்‌ பதவிகளின்‌ மூலம்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமயதீதுக்கோ, சமுதாயதீதுக3கா, திராவிட நாட்டுக்கோ செய்த நன்மை என்ன? அவர்‌ களால்‌ என்ன செய்யமுடிந்தது 8 பார்ப்பனர்களால்‌ நமக்குச்‌ சூட்டப்பட்ட சூத்திரர்‌, தாசி www.thamizham.net - Free £ book 14௦ 3011 440 பெரியார்‌ . வெ. ரா, சிந்தனைகள்‌ மக்கள்‌ என்கின்ற இழிவுப்‌ பட்டம்‌ 'நீச்கப்பட முடிந்ததா? பார்ப்பனர்‌ உயர்ரீத சாதி என்பதையாவது மாற்றமூடிந்ததா i நாளைக்காவது நீக்க முடியுமா ? என்று கேட்கிறேன்‌. மேலே காட்டிய இ.தீதனை கனவான்‌ களிலும்‌ யார்‌. பா/ப்பனர்கள்‌ ஆதிக்கத்திற்குப்‌ பயன்‌: படவே ஏற்பட்ட சாதனை களை--கொள்‌ கைகளை வெறு தீதவர்கள்‌ இருக்கிறார்‌ கள்‌ ₹ சென்னையில்‌ தோழர்‌ சந்தரராவ்‌ நாயுடு சாரீ யாகக்‌ கூட்டப்பட்ட கூட்டத்தில்‌ நான்‌ 6 அந்தக்‌ கட்சித்‌ தலைவன்‌ £ என்கின்ற ஓதாவில்‌ பேசும்போது ஒரு விஷமத்தனமான பதீதிரிகைக்குப்‌ பதில்‌ சொல்ல நேர்ந்தது அதாவது, முதல்‌ நாள்‌ கோகலே ஹாலில்‌ நான்‌ தலைமை வகிதீதுப்‌ பேசும்போது, 6 காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ நமது சமுதாயக்‌ கொள்கைகளையும்‌, பொருளாதாரக்‌ கொள்கை களையும்‌ ஒப்புக்கொள்ளுவா? களானால்‌ நான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி அபேட்சகரை உடனே பின்‌ வாங்கீக்‌ சொள்ளச்‌ செய்யமுடியும்‌! என்று சொன்னேன்‌. இதற்கு இப்‌ பத்திரிகை, ¢ இராமசாமி நாயக்கரின்‌ சமுதாயக்‌ கொள்கை ஒரு பெண்ணுக்கு இரண்டு புருஷனும்‌, ஒரு புருஷனுக்கு கரண்டு பெண்டாட்டியும்‌ கட்டிக்கொள்ள வேண்டும்‌ என்பதுதானே ! இதை ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ ஒப்புக்‌ சொள்ளுகிறார்களா 13 என்று எழுதி இருந்தது. இதற்குச்‌ சமாதானமாக நான்‌ சொன்னது என்னவென்றால்‌, . 6 அய்யா, இகை நான்‌ சொல்லவில்லை. இந்து சமூகத்தில்‌ இக்‌ கொள்கை வெகு காலமாக இருந்துவருகிறது. துரோபதை 5 புருஷன்‌ கட்டி 6-வது புருஷன்‌ மீதும்‌ சாதலாக இருந்தான்‌ என்றும்‌, தசரதன்‌ 60003 பெண்டாட்டிகளைக்‌ சட்டிக்கொண்டிருந்தான்‌ என்றும்‌ இந்துக்களின்‌ வேதங்கள்‌ என்னும்‌ தெய்வீகச்‌ சரித்திரத்தில்‌ இருக்கிறதுடன்‌, இப்படி நடந்துகாண்ட பெண்ணுக்கும்‌ ஆணுக்கும்‌ கோயில்‌ கட்டி எத்தனையோ மூடர்கள்‌ இன்றும்‌ பணம்‌ கொடுத்துக்‌ கும்பிட்டு வருகிறார்கள்‌ என்றும்‌, ஆதலால்‌, ஒரு பெண்‌ புருஷன்‌ செத்துப்போனால்‌, மறு புருஷன்‌. கட்டிக்சொன்ளலாம்‌ என்று நான்‌ சொன்னதில்‌ இவர்கள்‌ யோக்கியதைக்கு ஒன்றும்‌ குறைந்துபோகாது! என்றும்‌ சொன்னேன்‌. இதற்கு அக்‌ கூட்டத்தில்‌ தலைமை வகித்த தலைவர்‌.குறுகீ கிட்டு, இப்படிப்‌ பேசினால்‌ ஓட்டுக்‌ கிடைக்காது என்பதாகச்‌ சொன்னார்‌. எனக்குப்பின்‌ பேசியவர்‌ களில்‌ ஒருவரான டாக்டர்‌ கிருஷ்ணசாமியும்‌ இதற்காக வருத்தப்பட்டார்‌. இந்நிலையில்‌ பார்ப்பனரல்லா தார்‌ என்று நம்மை நாம்‌ எப்படிச்‌ சொல்லிக்‌ கொள்வது . ¢ நாங்கள்‌ பார்ப்பணரல்லாதார்‌ என்னும்‌ பேரால்‌ பதவிக்குப்‌ போனால்‌, மந்திரி யானால்‌ இன்னது செய்வோம்‌? என்று கொள்கையைத்‌ சைரியமாய்‌ வெளியில்‌ சொல்ல வேண்டாமா ? காங்கிரஸ்‌ ாரர்கள்‌ எவ்வளவு தைரியமாய்‌, ¢ நாஃகள்‌ சுயராஜ்யம்‌ பெற்றால்‌ இராம ராஜ்யத்தை ஸ்தாபிப்போம்‌ ! என்கிறார்கள்‌ ₹ கிராம ராஜ்யம்‌ என்றால்‌ பார்ப்பன இராஜ்யம்தா னே1 - மூஸ்லிம்கள்‌, ¢ நாங்கள்‌ சுயராஜ்யம்‌ பெற்றால்‌, இஸ்லாம்‌ தர்மத்தை உலகெங்கும்‌ நிலை நாட்டுவோம்‌ 3 என்கீறாரீகள்‌ஃ பார்ப்பனரலீலாதார்‌ கட்சியார்‌ சுயராஜ்யம்‌ பெற்றால்‌ எதையாவது நாட்டுவதாகச்‌ சொல்ல வேண்டாமா 8 அப்படி நாட்டுவதற்கு ஒன்றும்‌ இடர்‌ களுக்குத்‌ தனியாக. இல்லை யானால்‌ வேறு எதோடாவது-பார்‌ ப்பன3ராடாவது முஸ்லிம்களோடாவது சேர்ந்து கொள்ள வேண்டாமா 1 இரண்டும்‌ கெட்ட-அதாவகு, தனிக்‌ கொள்கை; குறி இல்லாத நமச்குத்‌ தனிக்‌ கட்சி. எதற்கு என்‌.றுதான்‌ கேட்கி றன்‌. அல்லது பார்ப்பனரல்லாதாருக்‌ குன்ளாகலாவது நமக்கும்‌ காங்கிர சிலுள்ள பார்ப்பனரல்லாத நக்கும்‌ ஏதாவது சமுதாயத்‌ திட்டத்தில்‌ வித்தியாச மிரக்க வேண்டாமா என்று கேட்கிறேன்‌. i காங்கிரஸ்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ ஜஸ்டிஸ்‌ பா] ப்பனரல்லாதாரும்‌ சமுதாயத்‌ துறையில்‌ எதில்‌ மாறுபட்டவர்கள்‌ 1 அவர்களும்‌ கோயில்‌ குளங்கள்‌, கிராமாயணம்‌, பாரதம்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 441 புராணங்கள்‌ முதலியவைகள்‌ சாப்பாற்றப்பட வேண்டும்‌ என்றும்‌, பார்ப்பானை வைத்தே திதி, திவசம்‌, கலியாணம்‌, கருமாதி முதலியவைகள்‌ நடத்தவேண்டும்‌ என்றும்‌ சொல்லு கிறார்கள்‌. ஐஸ்டிஸ்‌ அல்லது பார்ப்பனரல்லாதார்‌ கட்சிப்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ அப்படியே சொல்லுகிறார்கள்‌. கட்டாயமாக அப்படியே எல்லாத்‌ தலைவர்களும்‌ நடந்து காட்டு கிறார்கள்‌. இதனால்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்குப்‌ பலமில்லாமல்‌ போகிறது; மதிப்பு மில்லாமல்‌ போகிறது) நாணயம்‌ இல்லாமல்‌ போகிறது என்று சொல்வதில்‌ தப்பு என்ன. இருக்கிறது? நான்‌ உண்மையில்‌ இக்‌ கட்சிகீகுதி தொண்டாற்ற வந்தது, என்னுடைய கொள்கைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, இப்படிப்பட்ட ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌ அதன்‌. தலைவர்களையும்‌, பார்ப்பனரல்லாதாருக்குச்‌ சமய, சமுதாயத்‌ துறையில்‌ பயன்படாததும்‌ பொறுப்பிருக்க முடியாததுமான பதவி பெறத்‌ தொண்டு புரியவா என்று சிந்தித்துப்‌ பாருங்கள்‌. எனகீகு வயதாகிவிட்டது. வரவரத தலைவர்களாகவும்‌ பதவிகீகுரியவர்களாகவும்‌ இருக்கும்‌ ஒருவரிடதீதில்கூட உண்மைப்‌ பார்ப்பனரல்லாதார்‌ உணர்ச்சி இருப்பதாக என்னால்‌ காணமுடியவிள்லை. என்‌ வியாபாரத்‌ தொழிலில்‌ அல்லது என்‌ எஸ்டேட்‌ கவலையில்‌ நான்‌ இருந்திருப்‌£பனானால்‌ நானும்‌ பணக்காரத்‌ தலைவர்கள்‌ கூட்டத்தில்‌ மாலைகள்‌ சுமப்பவனாக இருந்திருப்பேன்‌. அல்லது, சுயமரியாதை இயக்கதீதோடேயே இருந்திருப்பேனேயானால்‌ தோல்வி என்கிற பேச்சே காதில்‌ கேட்பதற்கில்லாமல்‌ பல தலைவர்கள்‌ பயப்படும்படியான நிலையில்‌ இருந்திருப்பேன்‌. இப்போது வெறும்‌ மரக்ீகட்டையாக இருக்கிறேன்‌. சிறிது அதிகப்‌ பணமும்‌ பதவியும்‌ பெற்றவர்கள்‌ நம்மைத்‌ கரும்பாக மதிக்கும்படியும்‌ தங்கள்‌ மார்பைப்‌ பார்தீது ஆகாயத்தைப்‌ பார்க்கும்படியும்‌ இருப்பதை நான்‌ உணருகிறேன்‌. என்‌ தொண்டு ஏன்‌ வீணாகப்‌ போகவேண்டும்‌ § சுயமரியாதைக்‌ கட்சிப்‌ பெயரையோ ஜஸ்டிஸ்‌ கட்சிப்‌ பெயரையோ சொல்லிக்‌ கொள்ள இஷ்டமில்லாதவர்கள்‌, என்னைக்‌ குற்றம்‌ சொல்வதை ஒரு கவுரவமாகக்‌ கருது கிறார்கள்‌, பார்ப்பனால்லாதார்‌-ஐஸ்டிஸ்‌ கட்சியார்‌ என்கின்றதன்‌ நிழலில்‌ நிற்கா விட்டால்‌ பொதுவாழ்வில்‌ தூசியும்‌ இலட்சியம்‌ செய்யப்படத்‌ தகுதி இல்லாதவர்களும்‌ பார்ப்பனரல்லா தார்‌ கொள்கைப்படி நடக்கச்‌ சிறிதும்‌ கவலையோ, அவசியமோ இல்லாத வர்களும்‌ பார்ப்பனரல்லா தார்‌ இயக்கத்துக்கும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்கும்‌ புதீதி சொல்ல வருகிறார்கள்‌. இதை என்னால்‌ பொறுக்க முடியாது. நீங்கள்‌ இப்படிப்பட்ட சுயநல சமய சஞ்சீவிகளை இனி வெறுகீக வேண்டும்‌. உங்களுக்குப்‌ பார்ப்பனர்களை வெறுப்பது ஒன்று மாதீதிரமே போதாது. பார்ப்பனர்‌ களுக்கும்‌ உங்களுக்கும்‌ என்ன பேதம்‌, எதற்காக வெறுக்கிறீர்கள்‌ என்பதைத்‌ தெளிவாய்‌ நாட்டுக்கும்‌ அரசாங்கதீதிற்கும்‌ காட்டவேண்டும்‌. அந்த பேதத்தை ஒப்புக்‌ கொள்ளுகிறவர்களையும்‌ அதன்படி நடக்கிறவர்களையும்‌ தவிர--மற்றவர்களுச்குக்‌ கட்சி யில்‌ இடமிருக்கக்கூடாது. அவர்கள்‌ பணதீநினால்‌, செல்வாக்கினால்‌ கட்சிக்குள்ளே புகுந்து கொண்டால்‌, கட்சியைப்‌ பயன்படுதீதிக்கொள்ள வந்தால்‌ நீங்கன்‌ அவர்களிடம்‌ உள்ள வெறுப்பைத்‌ தைரியமாய்க்‌ காட்டவேண்டும்‌. எண்ணிக்கை குறைந்தால்‌ கவலை இல்லை, நன்றாய்‌ வெறுக்கத்‌ தெரிந்தவனும்‌, வெறுக்கத்‌ துணிந்தவனுமே வெற்றி பெறுவான்‌. இதுவரை நடந்துவந்த முறை வெற்றி கொடுக்கவில்லையானால்‌ புது முறையைக்‌ கையாள வேண்டாமா என்பதற்காகவே இதைச்‌ சொல்லுகிறேன்‌. நாம்‌ இன்று தொடுதீதுள்ள கிராமாயணம்‌, பெரிய புராணம்‌ வெறுப்பு என்பது *நாம்‌ பார்ப்பனரல்லாதார்‌ ? என்பதை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும்‌ உணரும்படி செய்ய ஒரு மார்க்கமாகும்‌ $ பா] ப்பனருக்கும்‌, டார்ப்பனரல்லாதாருக்கும்‌ ஒரு வித்தியாசம்‌ காட்ட 1686-56 www.thamizham.net - Free £ book 14௦ 3011 442 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌: அறிகுறியாகும்‌. இராமாயணமோ, பெரிய புராணமோ பார்ப்பனரல்லாதார்க்குச்‌ சிறிதும்‌ சம்பநீதப்பட்டதல்ல. அதில்‌ தமிழர்கள்‌ அல்லது பார்ப்பனரல்லாதார்கன்‌ ஆகியவர்‌: களுடைய பழைய கொள்கைகளோ அல்லது ஏற்ற கொள்கைகளோ ஒன்றும்‌ இல்லை. மூடநம்பிக்கை, முட்டாள்‌ தனம்‌, இழிதன்மை என்பவை எந்த முறையிலும்‌ பார்ப்பன ரல்லாதாருக்கு இருக்கக்கூடாது. இராமன்‌ நடந்துகொண்டதும்‌, (நாயன்மார்கள்‌) தொண்‌: டர்கள்‌ நடந்து கொண்டதும்‌ பார்ப்பனரல்லாதாருகீகு ஏற்றது என்றால்‌-பார்ப்பன. ரல்லாதார்‌ சமுதாயம்‌ ஒழிந்து போவதே மேல்‌) அல்லது, பார்ப்பனருக்கு அடிமையாய்‌ இருப்பதே மேல்‌. இப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார்‌ சமயம்‌, சமுதாயம்‌ நமக்கு வேண்டாம்‌. இவை எல்லாம்‌ ஆரியர்‌ நலனுக்காக வேண்டியே ஏற்பட்டவைகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டவைகளுமாகும்‌. இவற்றாலே3ய பார்ப்பனர்‌ நிலை இவ்வளவு கெட்டியாய்‌ இருக்கிறது. இந்தச்‌ சமயத்தை விட்டு நீங்கிய தமிழர்கள்‌ வாழமுடியவில்லையானால்‌ மானமுள்ளவர்கள்‌ வேறு சமயத்தைதீ தழுவிக்‌ கொள்வதே மேலாகும்‌. இராமாயணத்தை யும்‌ பெரியபுராணதீதையும்‌ நீக்கிவிட்டு, அதில்‌ காணும்‌ கடவுள்களையும்‌ இகழ்ந்து ஒதுக்கி விட்ட நம்‌ திராவிட மக்களில்‌ ஒரு சார்பாரான இஸ்லாமியர்கள்‌ மான வாழ்வும்‌, ஒற்றுமை வாழ்வும்‌ வாழாமல்‌ போய்விடவில்லை. ஆகவே, இதீதனை நாட்களைப்போல்‌ அல்லாமல்‌, தீவிரமாய்‌ யோசிக்கவேண்டிய காலம்‌ ஏற்பட்டுவிட்டது. சண்டை முடிந்தால்‌ நம்‌ கதி என்ன ? நம்மை அரசியலில்‌ யார்‌: இலட்சியம்‌ செய்கிறார்கள்‌ ? யார்‌ செய்யப்‌ போகிறார்கள்‌ ! செய்யும்படியாக “எங்கே, நாம்‌ காட்டிக்‌ கொள்கிறோம்‌ 1 இவைகளை நன்றாய்க்‌ கவனியுங்கள்‌ ! கட்டுப்பாடாய்ப்‌ புரட்சி மனப்பான்மை கொள்ளுங்கள்‌, [வேலூர்‌ வ.ஆ)) நகர மண்டபத்தில்‌, 0-6-1943-ல சொற்பொழிவு--4 திராவிட நாடு! 20-6-1943] 14. தலைவர்‌ அறிக்கை ஜஸ்டிஸ்‌ கட்சியானது சிறிது காலமாக அதன்‌ பிரசீசாரதீதாலும்‌, வேலைத்திட்டங்‌ களாலும்‌ பொதுமக்கள்‌ கவனத்தை ஈர்தீதுச்‌ சற்று செல்வாக்குப்‌ பெற்றிருப்பது வாசகர்கள்‌ அறிந்ததேயாகும்‌. இதைக்கண்ட ஒருசிலரீ--அதாவது, தோழர்கள்‌ சர்‌. ஆர்‌. கே. சண்முகம்‌ செட்டியார்‌, சர்‌, பி. டி. இராஜன்‌, பி. ராமச்சந்திர ரெட்டியார்‌ முதலியவர்கள்‌ கட்சியின்‌ பேரால்‌ வாழ்க்கை நடத்தும்‌ மக்களாகிய தோழர்‌ பி. பாலசுப்பிரமணியம்‌ முதலியவர்களையும்‌ அப்படிப்பட்டவர்‌ களுடைய பத்திரிக்கைகளாகிய ¢ சண்டே அப்சர்வர்‌? முதலியவற்றையும்‌ கையாளாக வைத்துக்கொண்டு, மற்றும்‌ நம்‌ கட்சிக்கும்‌ கொள்கைகளுக்கும்‌ இன நலதி திற்கும்‌ மூமு எதிரிகளாகிய பார்ப்பனர்‌ மூதலியவர்களுடைய * தேசிய? பத்திரிக்கை களினுடையவும்‌ ஆதரவைப்‌ பிடித்துக்கொண்டு, தாங்களேதாம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்கள்‌ என்றும்‌, தோழர்‌ பி. ராமச்சந்திர ரெட்டியார்‌ அதன்‌ தலைவர்‌ என்று ஒருதடவையும்‌, அவர்‌ தற்காலத்‌ தலைவர்‌ என்‌ று ஒருதடவையும்‌, ஆக்டிங்‌ (பதில்‌) தலைவர்‌ என்று ஒரு தடவையும்‌, தோழர்‌ பாலசுப்பிரமணிய முதலியார்‌ காரியதரிசி என்று ஒரு தடவையும்‌, அவர்‌ கட்சி நிர்மாணஸ்தர்‌ என்று ஒருதடவையும்‌, மெம்பர்‌ அல்லாத தோழர்‌ சர்‌. ஆர்‌. கே. சண்முகம்‌ செட்டியார்‌ அவர்கள்‌ நிர்வாகசபை மெம்பர்‌ எனவும்‌, ராவ்பகதூர்‌ ஏ. துரைசாமி முதலியார்‌ அவர்கள்‌ கூட்டங்களையும்‌, மாநாடுகளைபும்‌ கூட்டுவிப்பவர்களாகவும்‌ பலவிதமான பெயர்‌ களை அவர்களாகவே உற்பத்தி செய்து கொண்டும்‌, உரிமையாக்கிக்கொண்டும்‌ சமீபத்தில்‌ தாங்கள்‌ ஐஸ்டிஸ்கட்சி மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டப்‌ பாவதாகவும்‌, பதீதிரிக்‌ கைகளில்‌ சேதியாகவும்‌, அறிக்கையாகவும்‌ வெளியாகி வருவதைப்‌ பார்க்கிறேன்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 | ! ரப வ மங and Mis உ with Me K V. Ramastami Naicker. இவய and எலல an theie arrival in Madras thic morning. ப்‌ பய! னிட the National Democratic விசய்‌ மல assotsatan o Canzress parties and groups fa democratize India’s war எனில்‌ நலம்‌ ( freking 1 fatm கற்கக்‌ அழிவுச்‌ Minkstries in the Pravinces ரஷ்ய நாட்டில்‌ லெனின்‌ அவர்களுடன்‌ பணியாற்றிதீ திரும்பிய இந்திய நாதீதிக அறிஞர்‌ எம்‌. என்‌. ராய்‌ அவர்களை சென்னையில்‌ பெரியார்‌ ஈ. வெ. ரா, வரவேற்றபோது. (1941 பிப்ரவரி) இயக்கங்கள்‌ 443 ஆதலால்‌, நான்‌ இந்தப்‌ பெரியோர்களின்‌ இந்த அறிக்கையும்‌ சேதியும்‌ சவுதி இந்தியன்‌ லிபரல்‌ பெடரேஷன்‌! என்று ஆங்கிலத்திலும்‌, ¢ தென்‌ இந்திய நலஉரிமைச்‌ சங்கம்‌? என்ற பெயரோடு தமிழிலும்‌ இருந்‌ துவநீது (27-8-1944-4) சேலம்‌ ¢ ஜஸ்டிஸ்‌ கட்சி கான்பிரன்ஸ்‌! என்னும்‌ மாநாட்டில்‌ முறையே, ¢ திரவிடியன்‌ ஃபிடரேஷன்‌ 2, * திராவிடர்‌ கழகம்‌ ? என; பெயர்‌ மாற்றப்பெற்று நடந்துவரும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குச்‌ சம்பந்தப்பட்ட தல்ல வென்றும்‌ தெரிவிப்பதோடு, இம்‌ மாதிரி பெயர்களை உபயோகிதீதுக்கொண்டு தங்கள்‌ கூட்டங்களை ஜஸ்டிஸ்‌ கட்சி நிர்வாக சபைக்‌ கூட்டமென்றும்‌ சொல்லிக்கொண்டு இவ்வித நடவடிக்கை செய்ய அவர்களுக்கு எவ்வித உரிமையும்‌ இல்லையென்றும்‌ பொது மக்களுக்குத்‌ தெரிவித்துக்கொள்ளுகிறேன்‌. [குடிஅரசு 1-அறிக்கை--16-12-1944] 315. வடநாடும்‌ தென்னாடும்‌ அன்புள்ள தோழர்களே | உங்களைப்‌ பெருங்கூட்டமாக இங்குக்‌ காணவும்‌, உங்கள்‌ எல்லோரையும்‌ கண்டு பேசவும்‌, அறிமுகப்படுதீதிக்கொள்ளவும்‌ சந்தர்ப்பம்‌ ஏற்பட்டதைக்‌ கொண்டு நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌. உங்களுடைய உணர்ச்சியையும்‌, உற்சாகத்தையும்‌, என்னைக்‌ கண்டதும்‌ நீங்கள்‌ செய்த ஆரவாரதீதையும்‌ பார்தீது நான்‌ மிகப்‌ பெருமையடைவதோடு எனது ஆசையைப்பற்றி மிகவும்‌ நம்பிக்கை அடைகிறேன்‌. மொழி பேததீதாலும்‌, நம்‌ பழக்க வழகீகங்களாலும்‌ நம்‌ இருவர்‌ நாட்டிற்கும்‌ ஏற்பட்டிருக்கிற அதிகத்‌ தாரதீதாலும்‌ நாம்‌ ஒருவருக்கொருவர்‌ நெருங்கிப்‌ பழகுவதற்கு இல்லாமலும்‌, நம்‌ இருநாட்டார்‌ நலதீதிற்‌ காகவும்‌ ஒன்றுபட்டு வேலைசெய்து போராட்டம்‌ துவக்கமுடியாமலும்‌ இருந்து வருகி றாம்‌. இவை ஒருபுறம்‌ இருக்க, நம்‌ எதிரிகளின்‌ கையாயுதங்களாகிய போலி தேசிய மென்‌: பதும்‌ தேசிய பத்திரிக்கைகள்‌ என்பவையும்‌ நம்மை ஒருவருடன்‌ ஒருவர்‌ சேர ஒட்டாமல்‌ செய்வதோடு, நமக்கு எவ்வளவு கேடுசெய்யவேண்டுமோ அவ்வளவையும்‌ செய்து வருவதல்‌ லாமல்‌, நமது முயற்சிகளை?யல்லாம்‌ திரிதீ.துக்கூறி, நம்மைப்‌ பிரித்து வைத்து, அடக்கி, ஆதரவற்றவர்‌ களாக ஆக்கி வருகின்றன. என்றாலும்‌, இன்று இங்கு @ 5 கூட்ட வாலிபர்‌ களும்‌, பட்டம்‌ பெற்ற வக்கீல்களும்‌, காவி உடைதரித்த சில சாமியார்களும்‌ எனது கொன்‌ கைகள்‌, ஆசைகள்‌ சம்பந்தமான பெரும்பாலான பிரச்சினைகளை ஆதரிக்கும்‌ அறிகுறி யோடு கிளதீதும்‌ ஒலிகளும்‌, காட்டும்‌ அன்பும்‌, ஆரவாரமம்‌ நம்‌ இருவருடைய நிலை மையும்‌ ஒன்று என்பதையும்‌, ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்‌ என்ற முயற்சிகளையும்‌ காணநேர்நீததை உண்மையிலேயே ஒருபெரும்‌ பேறாகவே கருதி அளவிலா. ஆனந்தம்‌ கொள்ளுகிறேன்‌. எப்படி ஒரு அன்னிய அரசாங்கமானது ஒருநாட்டு மகீகளைதி தங்கள்‌ நலனுக்கு ஏற்றவண்ணம்‌ அடக்கி ஆள வேண்டுமானால்‌, * பிரிவினை செய்து ஆளவேண்டும்‌ ? என்பதைக்‌ கொள்கையாகக்‌ கொண்டு இருக்கிறதோ, அதேபோல்‌ இந்த நாட்டிலுள்ள பழங்குடி மக்களாகிய நம்மை ஒரு அன்னிய நாட்டு ஆரிய இனமானது நம்நாட்டில்‌ பிரவே சித்து, நம்மை அடக்கி, நம்மீது நிரந்தரமாய்‌ ஆதிக்கம்‌ செலுத்துவதற்காகவே கடவுள்‌, மத; வேத, சாஸ்திரங்கள்‌ என்பவற்றின்‌ பேரால்‌ நம்மைப்‌ பல. வகுப்புகளாக பிரித்துவைத்து விட்டார்கள்‌. இதனால்தான்‌, இந்தநாட்டுப்‌ பழங்குடி மக்களும்‌ சகல விததீதிலும்‌ செல்வமும்‌ வீரமும்‌ உள்ள சக்தி பொருந்திய பெரும்பான்மையுள்ள மக்களுமாகிய நாம்‌ பிற்பட்ட மக்களாகவும்‌, தாழ்த்தப்பட்ட மக்களாகவும்‌, தொடக்கூடாத மக்களாகவும்‌ மனிதப்‌ பிறவி உரிமைக்கு உரியதல்லாத மக்களாகவும்‌ நம்முடைய நாட்டிலேயே நாம்‌ ஆக்கப்பட்டு கருக்‌ கிறோம்‌. இதை நம்மில்‌ இதுவரை ஒரு சிலராவது அறிந்திருப்பதாக எனகீகுத்‌ தோன்ற வில்லை; www.thamizham.net - Free £ book 14௦ 3011 444 பெரியர்‌ ஈட, வெ. ரா சிந்தனைகள்‌ கடந்த பல நாட்களாக நம்முடைய ஈனநிலையைக்‌ குறிவைத்து விளக்கிச்‌ சொல்லிக்‌ கொண்டு, சமுதாய சீர்திருத்தம்‌ என்னும்‌ பெயரைவைத்து எத்தனையோ பேர்‌ எவ்வளவோ வேலை செய்திருக்கிறார்கள்‌ என்பது உன்மைதான்‌. என்றாலும்‌, அவர்களில்‌ எவரும்‌ வெற்றி பெறாமலேபோயிருக்கிறார்கள்‌. ஏன்‌ என்றால்‌, அவர்கள்‌ அத்தனைபேரும்‌ இருக்கிற குறைபாடுகளை நீக்கவேண்டும்‌ என்று கருதுகிறார்களள யொழிய, அவை ஏற்படுவதற்கு அடிப்படையான மூலகாரணம்‌ என்ன என்பதைப்‌ பற்றிச்‌ சிந்தித்து அதைக்‌ கண்டுபிடிக்க முயற்சிக்கவே இல்லை. ஆகையால்‌, இன்று நான்‌ சொல்வது என்னவென்றால்‌, நமது சமுதாயத்திலுள்ள இழிவுகளையும்‌ குறைபாடுகளையும்‌ ஒழித்து, நம்மை மனிததீ தன்மைக்கு அருகதை உடையவர்களாக ஆக்கவேண்டும்‌ என்று கருககிறவர்‌ கள்‌, 6 இந்‌ நிலைக்குக்‌ காரணம்‌ என்ன எதனால்‌ நாம்‌ இக்‌ கேவலமான நிலையை இந்தப்‌ பகுத்தறிவு, சமதர்மக்‌ காலத்திலும்‌ சுமந்துகொண்டு இருக்கிறோம்‌ ? என்பதைக்‌ கண்டு பிடிக்க முயலவேண்டும்‌ என்பதேயாகும்‌. எனகீகு வயது இன்று 67. நான்‌ சென்ற 40 வருஷகாலமாக நமகீகுன்ன சமுதாயக்‌ குறைகளையும்‌, இழிவுகளையும்‌ ஒழிக்க வேண்டுமென்ற துறையில்‌ உழைத்து வந்திருக்‌ கிறேன்‌. எனது குடும்பமும்‌ ஒரு வைதிகக்‌ குடும்பமாகும்‌. குடும்பத்தில்‌ எவ்வளவோ கோவில்‌ கட்டுதல்‌, சதீதிரம்‌ கட்டுதல்‌, அன்னதானம்‌ செய்தல்‌ முதலிய பல காரியங்கள்‌ செய்திருப்பதோடு, இந்தத்‌ தர்மங்களுக்குச்‌ சொதீதுக்களும்‌ எழுதி வைதீதிருக்கிறார்கள்‌. என்றபோதிலும்‌, அப்படிப்பட்ட குடும்பதீதில்‌ பிறந்த நான்‌ இன்று பல மக்களால்‌ ஒரு புரட்சிக்கார னென்றும்‌, தீவிரக்‌ கிளர்ச்சி செய்கிறவன்‌ என்றும்‌ சொல்லப்படுகி3றன்‌. காரணம்‌ என்ன வென்றால்‌, நம்முடைய நிலைமைக்குக்‌ காரணமாய்‌ இருக்கும்‌ அடிப்படையில்‌ நான்‌: கையை வைப்பதால்தான்‌. அது என்னவெனில்‌, எவ்வளவு காலத்திற்கு நாம்‌ இந்து மதத்‌ தையும்‌, இந்துக்‌ கடவுள்களையும்‌, இந்து சாஸ்திரம்‌, புராணம்‌, வேதம்‌, இதிகாசம்‌ முதலி யவைகளையும்‌ நம்பிப்‌ பின்பற்றிக்கொண்டு இருக்கிறோமோ அதுவரையில்‌, நாம்‌ தாழ்தீ தப்பட்டவர்களாகவும்‌, பிற்படுத்தப்பட்டவர்களாகவும்‌ சம உரிமைக்கு அருகதை அற்றவர்‌ களாகவும்‌ இருப்பதிலிருந்து தப்பித்‌ துக்கொள்ள முடியவே முடியாது. அந்த மாதிரிஅவை களில்‌ இருந்து வெளியேறாமல்‌ அவைகளை நம்பிப்‌ பின்பற்றி நடந்து வந்தவர்களில்‌ ஒருவராவது, அவர்கள்‌ வேறு வழிகளில்‌ எவ்வளவு முயற்சித்தவர்‌ களாய்‌ இருந்தாலும்‌, எவ்வளவு பெரியவர்களாக ஆகி இருந்தாலும்‌ அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்த க்கொண்டவர்கள்‌ இல்லவே இல்லை என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்ப வனும்‌ நன்றாக உணரவேண்டும்‌ என்று சொல்லி வருகி2றன்‌. இதனாலேயே நான்‌ நாத்திகன்‌ என்றுகூட சொல்லப்படுகிறேன்‌. தோழர்களே ! நான்‌ ஏன்‌ இப்படிச்‌ சொல்லிவருகிறேன்‌ என்றால்‌, சாதி முறைகள்‌ என்பவைகள்‌ எல்லாம்‌ இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும்‌, இந்துக்‌ கடவுள்‌ கன்‌ பெயராலும்‌, சாஸ்திரங்கள்‌ பெயராலுமேதான்‌ அவை நிலை நிறுத்தப்படுகின்றன- LGS தறிவற்ற சில சமுதாய சீர்‌ திருத்தக்காரர்‌ என்பவரி கள்‌ இப்படிப்பட்ட கடவுல்‌, மத சாதீ திரங்களுக்கும்‌, இந்து மதத்திற்கும்‌, வேதாந்தமும்‌ ததீதுவார்தீதமும்‌ சொல்லி, இதை ஏற்படுதீதினவர்களுக்கு நல்ல பின்ளைகளாக ஆவதற்கு முயற்சிப்பார்‌ கள்‌. இந்த அறி வீனமும்‌, மோசமும்‌, தந்திரமூம்‌ ஆள காரியங்களால்‌ தாங்கள்‌ மாத்திரம்‌ மரியாதை யடையலாமே தவிர, சமுதாயத்தின்‌ இழிநிலை போக்க ஒரு கடுகளவும்‌ பயன்படாது. ஆகையால்‌, உங்களுக்கு முதலாவதாக நான்‌ என்ன சொல்லுகிறேன்‌ என்றால்‌, நீங்கள்‌ உங்களுடைய நிலையைச்‌ சிறிதாவது மாற்றிக்கொள்ள வேண்டும்‌ என்று உண்மையாய்‌ ஆசைப்படுவீர்களானால்‌, இந்து மதம்‌ என்பதையும்‌ அது சம்பந்தப்பட்ட கடவுள்‌ மத, புராண; சாத்திர, இதிகாசம்‌ ஏன்பவைகளையும்‌ உதறித்‌ தள்ளி அவற்றிலிருந்து வெளி www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 445 வாருங்கள்‌. அதைச்‌ சொல்லவதான்‌ நான்‌ இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்‌ கிறேன்‌. நீங்கள்‌ அதைச்‌ செய்யவில்லையானால்‌ இனியும்‌ ஓர்‌ ஆயிரம்‌ ஆண்டிற்குக்கூட நீங்கள்‌ எப்படிப்பட்ட மாநாடுகளும்‌, சங்கங்களும்‌, பிரச்சாரங்களும்‌, கிளர்ச்சிகளும்‌ நடத்தினாலும்‌, எவ்வளவுதான்‌ அரசியல்‌ சுதந்திரமும்‌, பொருளாதார முன்னேற்றமும்‌ பட்டம்‌ பதவிகளும்‌ பெற்றாலும்‌ உங்கள்‌ சமுதாயத்திற்குள்ள இழிவு நீங்கப்போவதில்லை. இது உறுதி) உறுதி, உங்களுக்கு முன்‌ முயற்சித்தவர்கள்‌ செய்த தவறுகளையே நீங்களும்‌ செய்துகொண்டிருநீதால்‌ உங்கள்‌ வாழ்நாட்களும்‌ அவர்களைப்‌ போல வ தவறு செய்யத்தான்‌ முடியுமே ஒழிய, திருத்தம்‌ காண முடியவே முடியாது. மலைக்‌ காய்ச்சலால்‌ அவதிப்படும்‌ மக்கள்‌ கொய்னா சாப்பிடுவதையே அதற்குப்‌ பரிகாரம்‌ என்று கரு துவார்‌ களேயானால்‌ அம்‌ மக்களுக்கு மருந்து சாப்பிடுகிற வேலையும்‌, மருந்து வியாபாரிகளுக்கு இலாபம்‌ கிடைக்கிற வேலையும்தான்‌ நடைபெறுமே தவிர, அவர்களுக்கும்‌ அவர்களது சந்ததிகளுக்கும்‌ மலைக்‌ காய்ச்சல்‌ ஏற்படுவது தடுக்கப்படமாட்டா து. உண்மையில்‌ மலைக்‌ காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால்‌ மலைக்‌ காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பதீதி செய்கிற கொசுப்‌ பூச்சிகள்‌, விஷக்‌ காற்றுகள்‌ முதலியவை களை ஒழிக்கவேண்டும்‌. இவைகள்‌ ஒழிக்கப்படவேண்டுமானால்‌, மறுபடியும்‌ அவைகள்‌: உற்பதீதியாகாவண்ணம்‌ கசுமாலங்களையும்‌ குப்பைக்கூளங்களையும்‌ நெருப்பு வைத்து எரிதீ.து, அழுகீகுதீ கண்ணீர்க்‌ குட்டைகளை மூடி ஆகவேண்டும்‌. அதுபோலவேதான்‌, நம்‌ சமுதாய இழிவுக்குக்‌ காரணங்களாய்‌ இருக்கிற எப்படிப்பட்ட மகதீதையும்‌, கடவுள்‌ களையும்‌, ஆதாரங்களையும்‌ நாம்‌ அடியோடு அறுத்தே தீரவேண்டியவர்களாய்‌ இருக்கிறோம்‌. இந்து மததிதையோ, அது சம்பந்தமான கடவுள்‌, மதம்‌, சாஸ்திரம்‌, இதிளசம்‌, புராணங்களையோ சீர்‌ திருதீதிவிடலாம்‌ என்று நினைப்பது வெறும்‌ கனவும்‌, வீண்‌: வேலையும்‌, கடைந்தெடுத்த முட்டாள்‌ தனமுமேயாகும்‌. சரியான வழி--புதீதிசாலித்தனமான வழி என்னவென்றால்‌, அதிலிருந்து தப்பித்துக்‌ கொள்வதுதான்‌. அதாவது, இந்து மதத்தைவிட்டு நாம்‌ வெளியேறிவிட வேண்டியதுதான்‌. அதாவது, இந்து மதம்‌ என்பகற்கு வேறு வார்தீதை சொல்ல வேண்டுமானால்‌ அரியம்‌, பார்ப்பனியம்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. உங்களுக்குச்‌ சந்தேகமிருந்தால்‌ அகராதிப்‌ புத்தகங்களையும்‌, அறிஞர்களால்‌-ஆராய்ச் சி நிபுணர்களால்‌ எழுதப்பெற்ற ஆராய்ச்சிக்‌ குறிப்புகளையும்‌ பார்‌ தீ.துதீ தெரிந்துகொள்ளுங்கள்‌. இதை நீங்கள்‌ யாவரும்‌ நன்றாய்‌ ஞாபகத்தில்‌ வையுங்கள்‌, ஆஷாடபூதிகளைக்‌ கண்டு ஏமாந்துவிடாதீர்கள்‌. புத்தர்‌, சங்கரர்‌, ராமானுஜர்‌ போன்றவர்களின்‌ முயற்சிகள்‌ என்ன ஆயின:-2 புத்தரை ஒழிக்கவே இராமன்‌, கிருஷ்ணன்‌, இராமாயணம்‌, கீதை) புராணங்கள்‌, அவை சம்பந்தப்‌ பட்ட கோளில்கள்‌ முதலியவை கற்பிக்கப்பட்டன. இராமாயணதீதையும்‌, கீதையையும்‌, பிற சாதீதிரங்களையும்‌, ஆதரித்துப்‌ பிரச்சாரம்‌ செய்யவே சங்கரர்‌, இராமானுஜர்கள்‌ முயன்று வந்தார்கள்‌. அவர்களைப்‌ பின்பற்றித்தான்‌ ஆழ்வார்களும்‌, நாயன்மார்களும்‌, பக்தர்களும்‌, தாசரீ களும்‌, மகாதீமாக்களும்‌, ஆன ந்தாக்களும்‌, சுவாமிகளும்‌ தோன்றினர்‌. இதை உணர்ந்தவர்கள்தாம்‌ இன்ற இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்ததீதிற்கு ஒரு கடுகளாவாவது தகுதியுடையவர்‌ களாவார்கள்‌. சமீபதீ 8ல்‌ தோழர்‌ அம்பேத்கார்‌ அவர்கள்‌ சென்னை வந்திருந்தபோது என்னிடத்‌ தில்‌ இது சம்பந்தமாக நீண்ட நேரம்‌ பேசிக்கொண்டிருந்ததிலிருந்தும்‌ பஞ்சாப்‌ லாகூரி லிருந்து * ஜாத்பாத்‌ தோரக்‌ மண்டல? தலைவர்‌ சாந்தராம்‌ அவர்களும்‌, முன்பு காரிய தரிசியாய்‌ கிருந்த ஹரிபவன்‌ அவர்களும்‌ உங்களைப்பற்றி எனக்கு: எழுதிய சில கடிதங்களி' லிருந்தும்‌ உங்கள்‌ காரியதரிசி எழுதின சில. குறிப்புகளிலிருந்தும்‌ நீங்கள்‌. நான்‌ சொல்லும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 446 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ இந்த வார்த்தைகளைப்‌ பொறுமையாய்க்‌ கேட்கக்கூடியவர்களென்றும்‌ நடுதிலைமை யிலிருந்து கவலையாய்‌ சீர்‌ திருந்தக்கூடியவர்கள்‌ என்றும்‌ தெரிந்ததினால்‌ இவ்வளவு ஆயிரம்‌ பேர்‌ கொண்ட இந்த மாபெரும்‌ கூட்டத்தில்‌ இதை நான்‌ சொல்லுகி $றன்‌. எங்கள்‌. நாட்டில்‌ நான்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவனாய்‌ இருந்த 1922-வது வருடதீதி லேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ்‌ மகாநாட்டில்‌, ¢ இராமாயணம்‌ கொளுதீதப்பட்டா லொழிய தீண்டாமை ஒழியாது? என்று சொல்லியிருக்கி2 றன்‌, வெகு பேர களுக்கு அன்று ஆத்திரமாய்‌ இருந்தது. இன்று எங்கள்‌ நாட்டில்‌ இப்படிப்‌ பேசுவதும்‌ கொளுதீதுவதும்‌ சரீவசாதாரணமாய்‌ o 89 L g, இராமாயணத்தைக்‌ கொளுத்த ஒரு கூட்டமும்‌, அதை ஆதரிக்க ஒரு கூட்டமும்‌ தினமும்‌ பொதுக்கூட்டம்‌ கூட்டிப்‌ பேசிவருகிறார்‌ கள்‌. மற்றும்‌, பதினாயிரக்‌ கணக்கான சுயமரியாதைகீகாரர்கள்‌ இந்துமததீதைவிட்டு வெளியேறிவிட்டார்கள்‌ என்றே சொல்லலாம்‌. தங்கள்‌ வடமொழிப்‌ பெயர்களை எல்லாம்‌ மாற்றிக்கொண்டார்கள்‌ ] இந்துமத அறிகுறியாய்‌ இருக்கிற சின்னங்களையெல்லாம்‌ விட்டு விட்டார்கள்‌. உச்சிக்‌ குடுமிகளை எல்லாம்‌ தாங்கள்‌ கத்தரிதீ.துக்‌ கொண்டதுமல்லாமல்‌ பிறருக்கும்‌ கதீதரித்‌ துவிட்டார்கள்‌, அனேகர்‌ புராணப்‌ பண்டிகைகளையும்‌ உற்சவங்‌ களையும்‌ கொண்டாடுவதில்லை. இதற்குமுன்பு ஏழைகள்‌ பணத்தை வஞ்சித்துக்‌ கொள்ளை: யடி தீத பணக்காரர்கள்‌ இதற்குமுன்பு கோயில்‌ கட்டிவந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம்‌ முதலிய காரியங்களில்‌ செலவிட்டுவருகிறார்கள்‌. சென்சஸில்‌ தாங்கள்‌ இந்துக்கள்‌ அல்ல வென்று அனேகம்‌ பேர்‌ சொல்லிவிட்டார்‌ கள்‌. புராண நாடகங்களையும்‌, சினிமாக்களையும்‌, பஜனைப்‌ பாட்டுகளையும்‌ ஜனங்கள்‌ வெறுக்கத்‌ தொடங்கிவிட்டார்கள்‌. கூடிய சீக்கிரத்தில்‌ பெரும்‌ கிளர்சீசிகள்செய்து ஜெயிலுக்கும்‌ ஆயிரக்கணக்கான வாலிபர்கள்‌ போகதீ தயாராய்‌ இருக்கிறார்கள்‌. எங்கள்‌ நாட்டார்‌ பலர்‌ எங்கள்‌ திராவிடநாடு, வடநாட்டு சம்பந்தத்தி லிருந்து பிரிந்து தனியாக இருக்கவிரும்பும்‌ முக்கிய காரணங்கூட இந்துமததீதால்‌ ஏற்பட்ட இழிவும்‌, ஆரிய ஆதிக்கத்திலிருக்கும்‌ இழிவும்‌ சுரண்டலும்‌ ஒழியவேண்டும்‌ என்பதற்கு மாகும்‌. தாழ்த்தப்பட்ட மக்களின்‌ தலைவர்களாகிய டாக்டர்‌ அம்பேத்கார்‌, ராவ்பக தூர்‌ சிவராஜ்‌ போன்றவர்கள்‌ எல்லாம்‌, தாங்கள்‌ இந்து மதஸ்தர்கள்‌ அல்லவென்றும்‌, தாங்கள்‌. இந்துக்கள்‌ அல்லவென்றும்‌, தங்கள்‌ சமூகத்தார்‌ இந்துமததீதிலிருந்து விலகவேண்டும்‌ என்றும்‌, 15 வருடத்திற்கு மூன்பிருந்தே சொல்லிவருகிறார்கள்‌. * இந்துமதத்தை விட்டு விட்டால்‌ எங்களை என்ன மதம்‌ என்று சொல்லிக்கொள்வது? என்று கேட்கலாம்‌. உங்களுக்குத்‌ துணிவு இருந்து நீங்கள்‌ வேறு எந்க மதத்தின்‌ பேரை சொல்லிக்கொண்டால்‌ சமுதாயத்தில்‌ உங்களைத்‌ தீண்டாமையும்‌, இழிவும்‌ அணு காதோ அதைச்‌ சொல்லுங்கள்‌, அப்படிச்‌ சொல்லிக்கொள்ளுவதில்‌ உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால்‌ நீங்கள்‌ திராவிடர்கள்‌ என்றும்‌, திராவிடர்‌ சமயதீ தவர்கள்‌ என்றும்‌ சொல்லிக்கொள்ளலாம்‌. அதிலும்‌ கஷ்டமிருந்தால்‌, சமரச சமயத்தார்‌, மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளலாம்‌. பொருள்‌ இல்லாததும்‌, பித்தலாட்டமான தும்‌, இழிவையும்‌ அன்னிய ஆதிக்கத்தையும்‌, சுரண்டலையும்‌ தருவதுகான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின்‌ பேரைச்‌ சொல்லிக்கொள்வது என்பது வெட்கக்கேடான காரியமாகும்‌. மதம்‌ வேண்டுமானால்‌ மதம்‌ வேண்டும்‌ என்பவர்கள்‌ மததீ 54 துவங்களையும்‌ அவசியத்தை யும்‌ ஆராய்ச்சி செய்துபார்தீ.து, ஒரு மதத்தைத்‌ தழுவுவது என்பது அறிவுடைமையா நம்‌. அப்படி இல்லாமல்‌, தான்‌ ஒரு மதத்தில்‌ பிறந்துவிட்டான்‌ என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால்‌ அது வருணாசிரமத்தை மற்றொரு முறையில்‌ பின்பற்றுவத யாகும்‌. பகுத்தறிவுவாதி என்று சொல்லுவது எல்லா மததீதிற்கும்‌ தாய்‌ மதம்‌ என்று சொல்லிக்‌ கொள்வதை ஒக்கும்‌. நீங்கள்‌ திராவிடர்கள்‌ என்பதை உணராவிட்டாலும்‌ நீங்கள்‌ ஆரியர்கள்‌ அல்லர்‌. ஆரிய சம்பிரகாயத்திற்குக்‌ கட்டுப்பட்டவர்கள்‌ அல்லர்‌ என்றும்‌, ஆரியர்கள்‌ இந்த நாட்டிற்குக்‌ குடியேறிவந்த ஒரு அன்னிய இனதீதவர்கள்‌ என்றும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 447 அவர்களுடைய ஆதிக்கதீதிற்கு ஏற்பட்ட கடவுள்‌, மத, சாதீதிர, புராண; இதிசாசங்களைச்‌ சுமந்துகொண்டிருப்பதன்‌ பயனாகவே இந்த இழிநிலையில்‌ இருக்கின்றீர்கள்‌ என்றும்‌ தெரிந்தால்‌ எனக்கு அதுவே போதுமானதாகும்‌. தோழர்களே ! முன்னுரையாக அதிகநேரம்‌ பேசிவிட்டேன்‌. அனேக காரியங்கள்‌ நடக்கவேண்டி இருப்பதால்‌ மா நாட்டுக்‌ காரிய நடவடிக்கை ஆனபிறகு சில வார்‌ தீதைகள்‌ சொல்லுகிறேன்‌. நான்‌ சொன்ன இவற்றை நீங்கன்‌ நன்கு ஆலோசனை செய்துபார்தீது ஒரு முடிவுக்கு வாருங்கள்‌. [கான்பூரில்‌, 23, 30, 81-12-1944-ல்‌ நடந்த இந்திய பிற்படுத்தப்பட்ட இந்துவகுப்பார்‌ சங்க மாநாட்டுத்‌ தலைமை உரை..-1 குடி அரசு? 13-1-1945] 46. என்‌ மாற்றங்கள்‌ நான்‌ எப்போதும்‌ எந்தக்‌ கட்சிக்கும்‌ ஆதரவு கொடுக்க முந்‌.துபவன்‌ அல்லன்‌ $ முந்தியதே கிடையாது. என்னை அணுகுகிறவர்களுக்குத்தான்‌ ஆதரவு கொடுத்து வந்திருக்கி3றன்‌. எனக்கு எந்தக்‌ கட்சி ஆதரவும்‌ தேவையில்லை. ஜஸ்டிஸ்‌ கட்சி என்னை அடைந்ததால்‌ அதற்கு ஆதரவு கொடுத்தேன்‌ ) நானே ஜஸ்டிஸ்‌ கட்சியானேன்‌. யாரையும்‌ போய்‌ ஆதரவு தேடாமல்‌ இன்று ஜஸ்டிஸ்‌ கட்சியே அதாவது, திராவிடர்‌ கழகமே (முன்னேற்றக்‌ கழகமே) ஆட்சி செய்யும்படியான நிலைமைக்கு அதை ஆக்கியிருக்கிறேன்‌. மற்றும்‌, அந்தக்‌ காலதீதில்‌ காங்கிரஸ்‌ ஒழிக்கப்பட்ட 1939-ல்‌, அரசாங்கமே வந்து, இரண்டு கவர்னர்‌ ஜெனரல்கள்‌ என்னை வேண்டியும்‌--நான்‌ இணங்காமல்‌ வெளியில்‌ நின்றேன்‌ ] அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து காங்கிரசை அடக்கினேன்‌. வெள்ளையர்‌ அரசாங்கம்‌ நாட்டைக்‌ காலி செய்துவிட்டுப்‌ போனவுடன்‌ வேறு கதியில்லாமல்‌ காங்கிரஸ்‌ பார்ப்பனர்‌ கைக்கு வந்தவுடன்‌, அவர்கள்‌ எவ்வளவு என்னை வேண்டியும்‌ நெருங்காமலிருந்து, பார்ப்பனரைப்‌ பதவியிலிருந்து வெளியேற்றினேன்‌. பிறகு பதவிக்கு aps பார்ப்பனரல்லாத தமிழர்‌ திரு. காமராஜர்‌, அவரே விரும்பியதற்‌ கிணங்க அவரை ஆதரித்தேன்‌. அவர்‌ ஆட்சி மாறி ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌, திராவிடர்‌ கழகதீதின்‌ ஒரு பிரிவான-திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ பதவிக்கு வந்தது என்றாலும்‌, அது பார்ப்பனர்‌ ஆதரவு தங்களுக்கு அபாயத்தைக்‌ கொடுக்கும்‌ என்று கருதி, பிரிவுபட்ட ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ (தி.மு.க.வின்‌) தலைவரான அண்ணா அவர்களே நேரில்‌ என்‌ வீட்டிற்கு வந்து, * உங்களிடம்‌ ஒப்படைக்‌ கிறேன்‌ ) நீங்களே எங்களை நடத்துங்கள்‌ ! என்று சொன்னதால்‌ ஜஸ்டிஸ்‌ (திராவிடர்‌ கழக) கட்சியின்‌ ஆதரவில்‌ நடந்து வருகிறது. இந்த ஜஸ்டிஸ்‌ கட்சி சேலம்‌ மாநாட்டில்‌ அண்ணா அவர்களின்‌ பிரேரணையின்‌: மீதுதான்‌, ¢ திராவிடர்‌ கழகம்‌ ? என்ற பெயர்‌ கொண்டதாயிற்று. அதற்கு மற்றொரு ஆதாரம்‌ ஜஸ்டிஸ்‌ (தி.க) கட்சிக்‌ கொள்கையாகிய பரார்ப்பனரல்லாதாராலேயே இன்று ஆளப்பட்டு வருகிறது [¢ விடுதலை ?-தலையங்கம்‌--24-10-1972] www.thamizham.net - Free £ book 14௦ 3011 448 5. சுயமரியாதை இயக்கம்‌ 1. சுயராஜ்யமா ? சுயமரியாதையா 2 நமது நாட்டிலுள்ள பொதுமக்கள்‌ ஒருவருக்கொருவர்‌ தங்கள்‌ சூழ்ச்சிகளாலும்‌, தந்திரங்களினாலும்‌ ஒருவரையொருவர்‌ திழிவுபடுத்தியும்‌, அடி மைப்படுத்தியும்‌ கொடுமை செய்து வருவதன்‌ பலனாய்‌ அன்னிய அரசாங்கத்தின்கீழ்‌ ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம்‌, இத்‌ துன்பம்‌ நமக்கு ஒழியவேண்டுமானால்‌ நாம்‌ பிறருக்குச்‌ செய்யும்‌ துன்பம்‌ ஒழியவேண்டும்‌. அன்னிய அரசாங்கதீதார்‌ நமக்குச்‌ செய்யும்‌ கொடுமையை ஒரு தட்டில்‌ வைத்து, நம்‌ நாட்டில்‌ சிலர்‌ நமக்குச்‌ செய்யும்‌ கொடுமையையும்‌, நம்மைக்கொண்டு மற்றவர்களுக்குச்‌ செய்யச்‌ செய்யும்‌ கொடுமையையும்‌ ஒரு தட்டில்‌ வைத்துத்‌ தூக்கிப்‌ பார்தீதால்‌ அரசாங்கத்தின்‌ கொடுமையைவிட நம்மவர்களின்‌ கொடுமையே பெரிய பளு வானதாயிருக்கும்‌. நமது நாட்டில்‌ சில. வேஷகீகாரர்கள்‌, சுயராஜ்யம்‌ என்கிற பதமும்‌, சுதந்திரம்‌ என்கிற பதமும்‌, உரிமை என்கிற பதமும்‌ வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில்‌ பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில்‌ அழுக்குப்படாமல்‌ காலங்கழிக்க பார்க்கின்‌றார்களே யல்லாமல்‌, அதற்காகச்‌ செய்யவேண்டிய காரியங்களில்‌ தங்களுக்குச்‌ செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும்‌, வேறு யாராவது செய்தாலும்‌ தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமே என்கிற பயத்தால்‌, அதற்கு வேண்டிய முட்டுச்‌ கட்டைகளைப்‌ போட்டுத்‌ தாங்களே முன்னணியிலிருக்கவேண்டிய மாதிரியில்‌ இராஜீயவாதிகளென்னும்‌ பெயரால்‌ வாழ்ந்து வருகின்றார்கள்‌. நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரி யாதையா 1 சுயராஜ்யம்‌ எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப்‌ பிழைக்‌ கின்ற அனேகர்‌, சுயராஜ்யம்‌ இன்னதென்பதைப்பற்றி ஒரு வார்‌ தீதையாவது சொன்னவர்‌ களல்லர்‌, அதை ஜனங்கள்‌ அறியாதிருக்கும்படி எவ்வள 2வா சூழ்ச்சிகள்‌ செய்து வருகின்றார்கள்‌. மகாதீமா காந்தி அவர்கள்‌ சுமார்‌ அய்ந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம்‌ ஓர்‌ கூட்டதீதில்‌ பேசும்போது, * என்னுடைய சுயமரி யாதையைக்‌ காப்பாற்றிக்கொள்ள யோக்கியதை இல்லாமலிருக்குமானால்‌ நான்‌ சுயராஜ்‌ யத்தை விரும்புவதில்‌ அர்தீதமேயில்லை ? என்று சொல்லியிருக்கிறார்‌. மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும்‌ தன்மானதீதைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ளுவதுதான்‌ பிறப்புரிமையேயல்லாமல்‌, அரசியலான இராஜீயமென்னும்‌ சுயராஜ்யம்‌ ஒருகாலும்‌ பிறப்புரிமையாக மாட்டாது. கிராஜீய பாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும்‌, விளக்குப்‌ போடுவதும்‌, காவல்‌ காப்பதும்‌ எப்படிச்‌ சேவையா யிருக்கிற3தா, அதுபோலவே இராஜீய பாரமென்பதும்‌ ஒரு சேவைதான்‌. தேசத்தில்‌ அவனவனது வாழ்க்கைக்கும்‌ அல்லது பொது நன்மைக்கும்‌ எப்படிப்‌ பல தொழில்கள்‌ இருக்கின்‌ றனவோ, அதுபோல்‌ இராஜீய பாரமென்பதும்‌ ஒரு தொழில்தான்‌. இத்தொழிலை இன்னார்தான்‌ செய்யவேண்டுமென் prag, இன்னாருக்குதீதான்‌ உரிமையென்றாவது கடவுள்‌ என்பவரால்‌ யாருக்கும்‌ பிரிதீ.து& கொடுக்கப்படவில்லை. மனிதராகப்‌ பிறந்தவர்கள்‌ எல்லோரும்‌ ஊமை, கூன்‌; குருடு, செவிடு உட்பட அதற்கு அருகர்கள்‌ தாம்‌. ஆதலால்‌, அவ்வுரிமையை எல்லோரும்‌ சமமாய்‌ அடையவேண்டியதுதான்‌. ஆனபோதிலும்‌, மனித ஜென்மத்திற்கு இக்‌ கேவலஆட்சியைப்‌ பிறப்புரிமை என்று சொல்லமுடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும்‌, பரோபகார மென்பதுதான்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 449 சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம்‌ அவசியமே இல்லாததாகும்‌. சுயராஜ்யம்‌ இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதே யாகும்‌. சுயமரியாதையற்றவனைப்‌ பிணமென்றுதான்‌. சொல்லவேண்டும்‌, அப்படிப்‌ பார்க்கின்றபோது, நமது தேசத்தில்‌ சுயமரியாதை அற்று பூச்சி, புழுக்கள்போலும்‌, நாய்‌, பன்றிகள்போலும்‌, பிசாசுகள்‌, அரக்கர்கள்போலும்‌ வாழும்‌ ஜனங்கள்‌ கோடிக்கணக்காய்‌ இருக்கிள்றனர்‌) இலட்சக்கணக்காய்‌ தினமும்‌ பிறக்கின்றனர்‌. இச்‌ சமூகதீதிற்கு சுயராஜ்யம்‌ எதற்கு உதாரணமாக, மனித உடல்‌ தாங்கிய ஒருவன்‌, அவனுடைய தெய்வத்தைக்‌ காண தரிசிக்க உரிமையற்ற ஒருவன்‌, எப்படிச்‌ சுயமரியாதை யுள்ளவனாவான்‌ 8 அந்தச்‌ சமூகதி திற்கு சுயராஜ்யம்‌ எதற்கு ? எந்த இராஜ்பமிநந்தால்தான்‌ அவர்‌ களுக்குக்‌ கவலை என்ன ₹ இம்மாதிரி, ஓர்‌ சமூகத்தாரை ஒடுக்கிச்‌ சுய ரியாதையற்று வைத்‌ கிருக்கும்‌ ஒரு ¢ இராட்சச! சமூகத்தார்‌ சுயராஜ்யமடைவது, மற்ற சமூகங்களுக்கு நன்மையைத்‌ தருமா ? அல்லது, ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும்‌ சேர்‌ ந்‌ அதான்‌ சுயராஜ்யம்‌ தேடுவது என்று சொல்லுவோ மானால்‌, அவர்கள்‌ தங்கள்‌ தெய்வங்களைக்‌ காணவும்‌, தரிசிக்கவும்‌ முடியா தபடியும்‌, தெருவில்‌ நடக்‌ கவும்‌, கண்ணில்‌ தென்படவும்‌ முடியாதபடியும்‌ வைத்திருப்பதற்குக்‌ காரணம்‌ சுயராஜ்யம்‌ இில்லாமைதானா i அன்னிய இராஜ்யம்‌ நமது ஜனங்களை இம்மாதிரிக்‌ கொடுமையாக நடதீதும்படி நமக்குச்‌ சொல்லவே இல்லை. எந்தக்‌ காரணத்கைக்‌ கொண்டோ அன்னிய இராஜீய பாரங்கள்‌ நமது நாட்டிற்கு ஏற்படாமலிருந்தி நக்‌ குமேயானால்‌, இந்தச்‌ சுயமரியாதை இன்னதென்று உணருவதற்குக்கூட நமக்‌ குச்‌ சவுகரியம்‌ கிடைத்திருக்காது. நமக: நாட்டு மக்களின்‌ சுயமரியாதைக்கு விரோதமாயிநப்பது, நம்‌ நாட்டார்‌ சிலரின்‌. ஆதிக்கத்தினாலே யல்லாமல்‌, அன்னிய அரசாங்கத்தின்‌ ஆதிக்கத்தினாலல்ல. ஆனால்‌, நமது நாட்டில்‌ பெரும்‌ பாலோர்‌ சுய ரியாதையற்றிருக் குந்‌ தன்மை, அன்னிய அரசாங்கத்தாருக்கு அனுகூலமா யிருப்பதனால்‌ கிக்‌ கொடுமைகளைப்‌ டோக்க அவர்களுக்கு அதிகக்‌ கவலையில்லை. ஆனபோதிலும்‌, அவர்களுடைய தத்துவம்‌ ஒருநாளும்‌ இவ்வித சுயமரியாதைக்‌ கேடுக்கு அனுகூலமாயிருப்பதிஸ்லை, ஒரு தேசம்‌ சுதந்திரமடைய வேண்டும்‌ என்ற உண்மையான கவலை இருக்குமானால்‌, அக்‌ கவலைக்கு அவர்கள்‌ அநுகர்களா, இல்லையா என்பதைப்‌ பரீட்சிக்கவேண்டுமானால்‌ அவர்கள்‌ சுயமரியாதை உள்ளவர்களா; இல்லையா என்பதிலிருந்துதான்‌ அவர்களுடைய அருகதை வெளிப்படும்‌. அஃதில்லாமல்‌, சுதந்திரதீதிற்காகச்‌ செய்யப்படும்‌ எவ்வித முயற்சிகளும்‌ தனிப்‌ பட்டவர்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்பிற்கும்‌, வாழ்க்கை நலத்திற்கும்‌ சுய மரியாதையில்லாத நிலைமையைப்‌ பலப்படுத்தவும்தான்‌: ஆகுமேயல்லாமல்‌, வேறொன்றுக்கும்‌ உதவாது அதை உத்தேசித்தேதான்‌ மகாதீமா காந்தியும்‌ சுதந்திரம்‌ பெறுவதற்காக ஏற்படுத்திய திட்டங்களையே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப்‌ போட்டு விட்டார்‌, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொல்வதும்‌, கதர்‌ அணியவேண்டுமென்று சொல்வ தும்‌ நம்‌ நாட்டு மக்களின்‌ சுயமரியாதையின்‌ ஜீவ நாடிகள்‌, ஒரு மனிதனை மற்றொரு மனிதன்‌ தெருவில்‌ நடக்கவும்‌, பக்கத்தில்‌ வரவும்‌, கண்ணில்‌ தென்படவும்‌, அவனது தெய்வத்தைக்‌ கண்டு தரிசிஃகவும்‌ முடியாதபடி வைத்திருக்கிற வரையில்‌, சுயமரியாதை இல்லையென்றும்‌, அப்படிப்பட்டவனுக்குச்‌ சுதந்திரமன்பது அர்த்தமில்லாத வார்த்தை என்றும்‌, ஒரு மனிதன்‌ தன்னுடலில்‌ போதிய அளவு சக்தியிருந்தாலும்‌ ஜீவனதி திற்கு வேண்டிய அளவு தொழிவில்லாமல்‌ வைதீதிநப்பதனால்‌ அவன்‌ எவ்விதத்திலும்‌ சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும்‌, ஜீவனதீதிற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கதீதான்‌ நேரிடுமென்றும்‌ கருதியே பெரும்பான்மையான ஏழை களுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும்‌ வற்புறுத்தி வந்தார்‌. மற்றவர்களை 1686-57 www.thamizham.net - Free £ book 14௦ 3011 450 பெரியார்‌: ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ அடிமைப்படுத்தி வைதீதிருப்பதினாலேயே வாழமுடியும்‌ என்கிற நிலைமையடைந்த நமது நாட்டிலுள்ள ஒரு சமூகதீதார்‌, இத்திட்டத்தை அடியோடுஒழித்து, பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்திக்‌ கொள்ளத்‌ தகுந்த மாதிரியில்‌ ஜெயம்‌ பெற்று வருகிறார்‌ கன்‌ஃ இந்நிலைமையில்‌ *சுதநீதிரம்‌?, *சுயராஜ்யம்‌, உரிமை! என்கின்ற வார்தீதைகள்‌ தேச ஜனங்களுக்குப்‌ பெரிய இழிவுக்கும்‌, கொடுமைக்கும்‌ ஆதாரமானவைதான்‌. ஆதலால்‌, நமது தேசம்‌ உண்மையான உரிமை அடையப்‌ பாடுபட வேண்டுமானால்‌, மக்களின்‌ சய மரியாதைக்காகத்தான்‌ முதலில்‌ பாடுபடவேண்டும்‌. [குடிஅரசு ?-தலையங்கம்‌--24-1-1926] ஓ. சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ திருவாங்கூர்‌ சமஸ்தான தீதைச்‌ சேர்ந்த சுசீந்திரம்‌ என்‌ னுமிடத்தில்‌ சத்தியாக்கிரகம்‌ நடைபெறும்‌ விஷயதீதைப்பற்றி இதற்குமுன்‌ நமது பத்திரிகை மூலமாகத்‌ தெரியப்படுத்தி யிருப்பதை வாசகர்களறிவார கள்‌. அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின்‌ விஷயத்தையும்‌ இந்த இதழ்‌ 9-வது பக்கம்‌ பிரசுரித்திருக்கிறோம்‌. வைக்கம்‌ சத்தியாக்கிரகம்‌ முடிவடைந்து வெகு நாட்களாகிவிடவில்லை, அதற்‌ குள்ளாக மற்றோரிடத்தில்‌ சமத்துவத்தை நிலைநாட்டத்‌ தோன்றியுள்ள சதீதியாக்கிரகதீ தைக்‌ காண நாம்‌ மகிழ்ச்சியுதகிறோம்‌. அநீதியும்‌ அக்கிரமமும்‌ தொலைய வேண்டு மானால்‌, வெறும்‌ சட்டங்களாலும்‌, எழுத்தாலும்‌, பேச்சாலும்‌ முடியா9தன்றும்‌, சத்திமாகீ கிரகமும்‌, தியா கமுமே உற்ற சாதனமாகுமென்றும்‌ பலமுறை வற்புதுத்தியிருக்கி3றாம்‌. நமது நாட்டில்‌ சாதிக்‌ கொடுமையும்‌, பிறவியினால்‌ உயர்வு-தாழ்வு என்னும்‌ அகங்காரமும்‌ உடனே தொலையவேண்டியது அவசியமாகும்‌. கிக்‌ கொடுமைகளை ஓர்‌ பக்கத்தில்‌ வைத்துக்கொண்டே--ஐம்பமாக தென்‌ ஆப்பிரிக்கா இந்தியருக்காகப்‌ பரிந்து பேசுவதும்‌, எழுதுவதும்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின்‌ நன்மையையே பெரிதும்‌ கவனிப்பது பால நடித்து நீலிக்‌ கண்ணீர்‌ விடுவதும்‌, தன்‌ மனச்சாட்சி அறிய செய்யும்‌ மகத்தான அக்கிரமமே யன்றி வேறல்ல. மேலும்‌, இவர்கள்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு பொதுஜனங்களை ஏமாற்றுவதும்‌, எலெக்ஷன்‌ பிரச்சாரம்‌ செய்வதும்‌ மிக மோசமான செய்கையாகும்‌. தாங்கள்‌ பிழைக்க ~ வேண்டும்‌) தங்கள்‌ மக்கள்‌ நன்றாயிருக்கவேண்டும்‌, தங்கள்‌ சமூகத்தார்‌ மேன்மையான ஸ்திதியில்‌ இருக்கவேண்டும்‌, மற்றவர்கள்‌ அவர்களுக்குக்‌ கீழ்ப்பட்டிருக்கவேண்டும்‌ என்ற எண்ணமுடையவர்களாய்‌ சாஸ்திரங்களையும்‌ புராணங்களையும்‌, இதிகாசங்களையும்‌, மனுதர்ம சாஸ்திரம்‌ என்னும்‌ அயோக்கிய நூலொன்றையும்‌ காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன்‌, தங்கள்‌ கட்சியைப்‌ பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற,), ஆண்மை யற்ற சிலரைச்‌ சேர தீதுக்கொண்டு செய்யும்‌ சூழ்ச்சிகள்‌ எல்லாம்‌ நொறுக்கப்படவேண்டு மாயின்‌, பொதுமக்கள்‌ சர்வஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்‌. இவைகளையெல்லாம்‌ சுட்டிக்காட்டவல்லது சுயமரியாதையும்‌, சதீதியாக்‌ கிரகமும்‌, உண்மையான தியாகமுமே என்று கூறலாம்‌. நமது நாட்டிலேயே பிறப்பால்‌ மனிதர்களாயிருந்தும்‌, தாழ்தீதப்பட்டவர்கள்‌--- கண்ணில்‌ தென்படக்கூடாதவர்கள்‌--தங்கள்‌ தெய்வங்களைத்‌ தரிசிக்கக்‌ கூடா தவர்கள்‌-- தங்கள்‌ வேதத்தைப்‌ படிக்கக்‌ கூடாதவர்கன்‌ என எத்தனையோ இலட்சம்‌ பேர்களை ஒதுக்கிவைதீதிருக்கிறோம்‌. நாய்களுக்கும்‌, பன்றிகளுக்கும்‌ கொடுத்துள்ள உரிமையைக்‌ கூட அவர்களுக்கு அளிக்க மதுக்கின்றோம்‌, இந்‌ நிலைமையில்‌ நமக்கு சுயராஜ்யமும்‌, விடுதலையும்‌ அதீதியாவசியமா 1 அல்லது, முன்‌ கூறியவர்களின்‌ முன்னேற்றமும்‌ சுயமரி யரதையும்‌ அத்தியாவசியமா 1 என்பதைப்‌ பொது மக்களே சிந்திக்கவேண்டும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 451 சமதீதுவம்‌, சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள யாவருக்கும்‌ ஏற்பட்டா லன்றி அதற்கு முன்னர்‌ கிடைக்கும்‌ சுயராஜ்யம்‌ ஓர்‌ சாதியார்‌ பிழைப்பிற்கு ஆதாரமா யிருக்குமேயல்லா து, வேறல்ல. சுயராஜ்யம்‌ கிடைக்குமுன்‌ நம்மவர்களுச்குள்‌ எவ்‌ விஷயத்திலும்‌ ஒற்றுமை, சமதீதுவம்‌, சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச்‌ செய்துகொள்ள வேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமதீதுவம்‌ ஏற்படுமானால்‌ ¢ பிராமணர்கள்‌? பாடு திண்டாட்டம்‌ ஆகிவிடுமென்பது உண்மையே. முன்னர்‌ கூறிய நூல்களைக்‌ காட்டிக்‌ கொண்டு பிராமணர்கள்‌ வயிறு வளர்ப்பது நின்றுபோய்விடும்‌. சுயமரியாகை உண்டாகி விடுமானால்‌, பிராமணர்கள்‌ நிலை இப்போது இருப்பதுபோலிராமல்‌ கீழ்‌ நிலையடையலாம்‌. இங்ஙனம்‌ நேரிடுமென்‌ பதைக்‌ கருதீதாகக்கொண்டே, இராஜீய பிராமணர்களாகட்டும்‌, சில சர்க்கார்‌ உத்தியோக பிராமணர்களாகட்டும்‌, அவர்கள்‌ மிதவாதிகளோ, சயேச்சைக்‌ கட்சியோ, ஆச்சாரியாரோ, அய்யங்காரோ, அய்யரா, பநீதுலுவோ, எவராயிருந்த போதிலும்‌ சரி, ஒன்றுகூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை--தமிழர்களை எதிர்த்து நிற்கின்‌ றார்கள்‌, நிற்க, பிராமணர்கள்‌ அநியாயம்‌ தமிழ்‌ நாட்டில்‌ மட்டுமல்ல $ திருவிதாங்கூரிலும்‌ அதிகமாக இருக்கிறதை வைக்கம்‌ சதீதியாக்கிரகத்தின்‌ மூலமாய்‌ யாவரும்‌ அறிவார்கள்‌, திருவாங்கூர்‌ கவர்ன்மெண்டார்‌ இவ்வநியாயங்களுச்கு உடந்தையாயிருக்கின்‌றார்களே எனச்‌ சிலர்‌ சந்தேகிக்கக்கூடும்‌, திருவிதாங்கூர்‌ இராஜ்யதீதிலுள்ள பொது ரஸ்தாக்களும்‌, பொதுக்‌ குளங்களும்‌ சாதி, மத விதீதியாசமில்லாமல்‌ பொது ஜனங்கள்‌ அனுபவிக்கலாம்‌ எனச்‌ சில வருடங்களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்‌றனர்‌. ஆஃ, கவர்ன்மெண்‌ டார்‌ பேரில்‌ குற்றமில்லை. பிராமணர்கள்‌ தவிர்த்த ஏனைய சாதிகளாகிய நாயர்‌ முதலான வர்கள்‌ தங்கள்‌ சமூக மாநாடுகளில்‌ பொது ரஸ்தாக்களிலும்‌, பொதுக்‌ குளங்களிலும்‌ சாதி, மத வித்தியாசக்கள்‌ காட்டலாகாது எனத்‌ தீர்மானம்‌ செய்திருக்கின்‌ றனர்‌, செய்து வருகின்‌ னர்‌. ஆக, பொது ஜனங்களின்ச மதீதுவத்திற்கும்‌, சுயமரியாகைகீகும்‌ இடைஞ்சலாயிருப்‌ பவர்கள்‌ பிராமணர்களேயாவார்கள்‌. இதிலும்‌ மலையாள நம்பூதிரி பிராமணர்‌ களைவிட, அங்கு பிழைக்கவும்‌, அங்குள்ள கோயிஃ சோற்றைச்‌ சாப்பிடவும்‌ சென்றுள்ள தமிழ்நாட்டுப்‌ பிராமணர்களே அதிக இடைஞ்சல்‌ செய்பவர்களென்று கூறத்தக்க ஆதாரமுண்டு. இவர்களின்‌ இடைஞ்சல்களும்‌, தொந்தரவும்‌ தொலையவேண்டுமானால்‌ சத்தியக்‌ கிரகந்தான்‌ சிறந்த வழி. ௬சீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ ஆரம்பிக்கப்பட்டிருக்கும்‌ நோக்க மெல்லாம்‌ சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்‌. தமிழ்‌ நாட்டினர்‌, வைக்கம்‌ சதீதியாக்கிரகதிதிற்கு எவ்வாறு பணம்‌ கொடுத்தும்‌, ஆட்கள்‌ உதவியும்‌ ஒத்தாசை செய்தார்களோ, அவ்வாறே சுசீந்திரம்‌ சதீதியாகீகிரகதீ திற்கும்‌ தாங்கள்‌ நன்கொடையளித்தும்‌, ஆட்கள்‌ உதவியும்‌ முழு ஒத்தாசையும்‌ அளிப்‌ பார்களென்று நம்புகிறோம்‌, பிராமணர்கள்‌ பலரும்‌, மற்ற வகுப்பாரைச்‌ சார்ந்த சில சயநலகீகாரர்களும்‌ இச்‌ சதீதியாக்கிரகதீதிற்கு எதிரிடையாய்‌ இருப்பார்களென்பது உண்மையே, இத்தகைய குறுகிய நோக்கமுடையோர்‌ வெகு சிலரேயானபடியால்‌ பொதுமக்கள்‌ இவர்களைப்பற்றிக்‌ கவனிக்கவேண்டிய அவசியமே இல்லை. தங்கள்‌ கடமை எதுவோ, எது நியாயமெனதீ தங்கள்‌ மனதீதில்‌ படுகிறதோ, அதை மாத்திரம்‌ கெட்டியாகப்‌ பிடித்துக்‌ கொண்டு, இப்படிப்‌ பட்ட சமயத்தில்‌ இத்தகைய சதீதியாக்கிரகத்கிற்கு ஆதரவு அளிக்கவேண்டுமெனக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. தமிழ்‌ நாட்டு.த 3தசிய வரலிபர்‌களானாலும்‌ சரி) மற்றும்‌ எநீதகி|கட்சியைச்‌ சேர்ந்த எவரேயானாலும்‌ சரி, அனைவரும்‌ சதீதியாக்கிரகத்திற்குத்‌ தொண்டு செய்ய அவசியமேற்படும்போது தயாராயிருக்கவேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்ளுகிறேரம்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3011 452 பெரியார்‌ ஈ, வெ. ரா, சிந்தனைகள்‌ . தமிழ்‌ நாட்டார்‌ சுசீந்திரத்தில்‌ உரிமைப்‌ போர்‌ நடப்பதற்குத்‌ தங்களாலியன்ற நன்கொடையைக்‌ கொடுக்கவும்‌ தயாராயிருக்கவேண்டுமென்பதே நமது வேண்டு கோளாகும்‌. சுசீந்திரம்‌ சதீதியாக்கிரகம்‌ வெற்றி பெறுமாகுக ! [கடி அரசு? அறிக்கை--31-1-1926] 8. சுயமரியாதை இயக்கம்‌ ஏன்‌ ? சென்ற வருஷம்‌ காஞ்ரீபுரதீதில்‌ நடந்த தமிழ்நாடு அரசியல்‌ மாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக்‌ காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம்‌ வேண்டும்‌ என்பதாகப்‌ பல முறை பேசியும்‌ எழுதியும்‌ வந்திருக்கிறேன்‌. அவற்றை நீங்கள்‌ எல்லோரும்‌ ஏகமனதாக ஒப்புக்கொண்டதாலும்‌, வரவேற்பதாய்தி தெரிந்தகொண்டதாலும்‌ என்னுடைய அபிப்‌ பிராயம்‌ மூன்னிலும்‌ பலப்பட்ட,து. அதை உதீகேசித்துத்தான்‌ உங்கள்‌ விருப்பத்திற்கு இணங்கி வந்திருக்கிறேன்‌. இச்‌ சங்கத்தின்‌ நோக்கங்களையும்‌ கொள்கைகளையும்‌, இதற்கு முன்‌ இரண்டொரு சமயங்களில்‌ இவ்விடம்‌ வந்த காலத்திலும்‌ சுருக்கமாக எடுத்துச்‌ சொல்லி யிருக்கிறேன்‌. இந்தத்‌ தோதீதில்‌ 22 கோடி மக்களுக்கும்‌ மேலாக இருக்கும்‌ நாம்‌, வெகு சொற்ப மான எண்ணிக்கையுள்ளவர்களால்‌, நாம்‌ எவ்விதத்திலும்‌ பொறுப்பாளிகளாய்‌ இல்லாத பிறவி காரணமாய்‌ எவ்வளவு இழிவாயும்‌ தாழ்மையாயும்‌ கருதப்பட்டு விலங்கு; பூசீசி, புழுகீ களிலும்‌ கேவலமாய்‌ நடத்தப்படு9றோம்‌ என்பதை ஒவ்வொருவரும்‌ அறிந்தே இருக்‌ கிறோம்‌, இதைப்‌ போக்கிக்‌ கொள்வதற்காக நமது முன்னோர்கள்‌ ஆயிரக்கணக்கான வருஷங்களாக எவ்வளவோ முயற்சிசெய்து வந்திருக்கிறார்கள்‌. நமது இழிவையும்‌ தாழ்வையும்‌ நீக்கி நமக்கு சுயமரியாதையும்‌, சமதீதுவமூம்‌ அளிப்பதற்கென்றே கபிலர்‌, புதீதர்‌, கிராமாநுஜர்‌ போன்ற எவ்வளவோ பெரியார்‌ கள்‌ அவதாரமும்‌ செய்து, இதற்காகவே உயிரையும்‌ விட்டார்கள்‌. இவ்வளவு செய்தும்‌ நமது இழிவினாலும்‌ தாழ்மையினாலும்‌, சுய மரிடாதையில்‌ இலட்சியம்‌ இன்‌ மையினாலும்‌, வாழ?வண்டிய இயற்கைநிலை படைத்த நமது எதிரிகள்‌ (பார்ப்பனர்கள்‌) அவ்வப்போது அதற்குத்‌ 5355 சூழ்ச்சிகள்‌ பெய்து நம்மில்‌ சிலரையே தமது ஆயுதமாகக்கொண்டு, ௮ம்‌ முயற்சிகளையெல்லாம்‌ அழித்துக்‌ கொண்‌ ட வந்திருக்கிறார்‌ கள்‌. எவ்வளவு அழித்தாலும்‌, எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும்‌, எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும்‌ மேலும்மேலும்‌ இவ்விழிந்த தன்மைகளான கொடுமையி லிருந்து நீங்கவேண்டுமென்கிற அவா மாதீதிரம்‌ நமக்கு நாளுக்குநாள்‌ வளர்ந்துகொண்டே வருகிறதேயல்லாமல்‌ குறையவே கில்லை. அ$தாடு, பொதுஜன அபிப்பிராயமும்‌ ஒன்று போலவே இருந்துவருகிறது. ஆதலால்‌ இவ்‌ விழிவுகளை நீக்கி, நம்‌ சுயமரியாதையைப்‌ பெறுவதற்கும்‌ காப்பதற்கும்‌ இதுவே தக்க சமயம்‌. இது விஷயத்தில்‌ நாம்‌ எல்லோரும்‌ ஒற்றுமையுடன்கூடி ஒரே அபிப்பிராயமாக இருந்து தீவிர முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்‌. நமது முயற்சிக்கும்‌ உழைப்புக்கும்‌ பலவித எதீர்ப்புகளும்‌ பழிப்புகளும்‌, பொய்க்‌ கற்பனைகளும்‌, பழிகளும்‌ நமது சுயமரியாதையின்‌ எதிரி களால்‌ (பார்ப்பனர்களாலும்‌ அவர்‌ களின்‌ கூலிகளாலும்‌) ஏற்படும்‌. அதாவது, நம்மிலேயே பலர்‌ அவர்களோடு சேர்ந்து கொண்டு தமது வாழ்விற்கும்‌ வயிற்றுப்‌ பிழைப்பிற்குமாக--* தேசாபிமானம்‌? என்னும்‌ போர்வையைப்‌ போர்தீதுக்கொண்டு-நமது இயக்கதீதிற்குக்‌ கேடு சூழ எதிரிகளுக்கு அனுகூலமாயிருப்பார்கள்‌. இவைகளையல்லாம்‌ நாம்‌ பொருட்படுத்தக்கூடா க நாம்‌ யாருக்காவது கெடுதி செய்ய நினைகீக3றாமா 1 யாருடைய கிரமமான உரிமையாவது பறிக்கிறோமா 8 நமது சுயமரியாதைக்குப்‌' பாடுபடுகிறோமே யல்லாமல்‌, www.thamizham.net - Free £ book 14௦ 3011 2 டவ்‌ ல்‌ ண்கள்‌ ன்‌ 18-4-1926 ¢ குடி அரசு ? முகப்பு அட்டை தலைப்பில்‌ ¢ மகாதீமா காந்தி வாழ்க? என: உள்ளது. m.ne Buéshisdr 453 மற்றவர்‌ சுயமரியாதைக்கு நாம்‌ விரோதிகளாக இருக்கி3றாமா ? நமது வீட்டுப்‌ பொருள்கள்‌ கொள்ளை போகாமல்‌ நமது வீட்டுக்‌ கதவைத்‌ தாளிட்டு பந்தோபஸ்து செய்தால்‌, நமது வீட்டுப்‌ பொருள்களைக்‌ கொள்ளைகொண்டே பிழைக்கச்‌ காத்திருக்கும்‌ திருடர்களுக்கு நாம்‌ கெடுதி செய்தவர்களாவோமா? இவர்களைப்‌ பட்டினிபோட்ட பாவதீதிற்காளா: வோமா ? இதனால்‌ மற்றொருவரை மோசம்‌ செய்து உயிர்‌ வாழ்வது வாழ்வல்லவென்றும்‌ திருடிப்‌ பிழைப்பது ஒரு பிழைப்பல்லவென்றும்‌ திருடனுக்குத்‌ தோன்றும்படி செய்து அவனைக்‌ கண்ணியமாக தனது உழைப்பினால்‌ வாழும்படி தூண்டுவதாகாதா?! இதற்‌ காகதீ திருடன்‌ நம்மேல்‌ கோபிதீதுக்கொண்டால்‌, அதற்கு நாம்‌ என்ன செய்வது? நாம்‌ சுயமரியாதை அடைய வேண்டுமா, வேண்டாமா ? நமது இழிவுகளும்‌ தாழ்வுகளும்‌ ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்பதைதீதான்‌ நாம்‌ கவனிக்க வேண்டுமேயொழிய - அவர்‌ என்ன சொல்னுகிறார்‌, கவர்‌ என்ன சொல்லுகிறார்‌ என்பதைப்பற்றி நாம்‌ அதிகக்‌ சுவனம்‌ செலுத்தக்‌ கூடாது. இப்போது சர்க்கார்‌ சட்ட மெம்பராக இருப்பவரும்‌, தமது சரீரத்தின்‌ ஒவ்வொரு அணுவும்‌, ஒவ்வொரு மூச்சும்‌ பார்ப்பன மயமாயிருப்பவருமான சர்‌, சி. பி, இராமசாமி அய்யர்‌ என்கிற ஒரு பார்ப்பன ரே சென்ற வருஷம்‌ நாடார்‌ மகாநாட்டில்‌ அக்கிரா சனம்‌ வகித்துப்‌ பேசுகையில்‌ குறிப்பிட்டிருப்பதாவது 8 ¢ இராஜரீகதீதிலும்‌, வியாபார விவகாரங்களிலும்‌ அய்ரோப்பியர்‌ கள்‌ நமக்கு மேலா னவர்கள்போல நடக்கவிடக்‌ கூடாது என்றும்‌, சமதீதுவமாகவே நடக்கச்செய்யவேண்டும்‌ என்றும்‌ இந்தியர்களாகிய நாம்‌ கூறி வருகின்றோம்‌. காங்கிரசும்‌ முஸ்லிம்‌ லீகும்‌ ஆரம்ப முதற்கொண்டே இந்த இலட்சியத்தைப்‌ பல வழிகளிலும்‌ எடுத்துரைத்து அரலுக்குக்‌ கொண்டு வர முயற்சிக்‌ 8ன்‌ றன. அப்படி இருச்கும்போது, அதுபோலவே தற்செயலாகவோ கரதிருஷ்டவசமாகவோ நம்மில்‌ தாழ்ந்தவர்களாகக்‌ கருதப்பட்டவர்கள்‌ உயர்ந்த வகுப்‌ பார்களுடன்‌ போராடி, தாங்களும்‌ அவர்களுக்குச்‌ சமமானவர்கள்‌ என்பதை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்‌. இந்தப்‌ போராட்டம்‌ கட்டாயம்‌ நடக்கவேண்டியதுதான்‌ ) இது மிகவும்‌ அவசியமான துமாகும்‌. ஆரம்ப தசையில்‌ ஒரு சமூகம்‌ மற்றொரு சமூகத்தின்‌ மீது குரோதம்‌ கொண்டு அதனைதி தாக்கவும்‌ வேண்டிவரும்‌. வழக்கம்‌ என்னும்‌ பேரால்‌ இருந்‌ கவரும்‌ இம்மாதிரி அனுஷ்டானங்களை மாற்றித்‌ தங்கள்‌ தங்கள்‌ உரிமைகளை ஸ்தாபித்தக்கொள்ள முயலு! போ து, ஒருவருக்கொருவர்‌ மனஸ்தாபங்களும்‌ சச்சரவுகளும்‌ ஏற்படுவது சகஜூம, சமூக சமத்‌ துவங்களுக்கு இந்‌ நிலை இன்றியமையாத க என்பதைதீ தீர்க்கதிருஷ்டி உடையவர்கள்‌ உணர்ந்த தீருவார்கள்‌ ? என்று பேசி இருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌, உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசதீதாரும்‌, ஒவ்வொரு சமூகதீதாரும்‌ தங்கள்‌ தங்கள்‌ குறைகளை நீக்கிக்கொள்ளவும்‌ முன்‌ னேற்றமடையவும்‌ தங்கள்‌ தங்கன்‌ தேசத்தின்‌ பெயராலோ, மததீதின்‌ பெயராலோ ஒவ்வொரு இயக்கத்தை ஏற்பாடு செய்து கொண்டு, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ மூன்‌ னறி ஆதிக்கம்பெற முயற்சித்து. வருவதை நாம்‌ பார்தீ.துவருகி றாம்‌. உதாரணமாக; ஆசியா, அய்ரோப்பா, அமெரிக்கா, ஜப்பான்‌ முதலிய தேசதீதார்‌ தங்கள்‌ தங்கள்‌ நாட்டின்‌ பேரால்‌ பல இயக்கங்களும்‌ $ முகம்மக) கிறிஸ்து, புத்தர்‌ முகலிய மதஸ்தர்கள்‌ தங்கள்‌. தங்கள்‌. மதத்தின்‌ பேராலும்‌--உதாரணமாக முஸ்லிம்கள்‌, * முஸ்லிம்‌ லீக்‌! 6 ஜெமேயதீதுல்‌ உலாமா? முதலிய சங்கங்களும்‌ ] கிறிஸ்தவர்கள்‌, எல்லா இந்திய கிறிஸ்‌ துவ சங்கம்‌, ¢ புராட்டஸ்டண்டு லீஃ ? முதலிய சங்கங்களும்‌ வைத்து இருப்பதை நாம்‌ பார்த்‌ துவருகிறோம்‌. அதுபோலவே, நமது நாட்டில்‌ அரசாங்கதீதாரால்‌ ¢ முகமதியரல்லாதார்‌?! எண: அழைக்கப்படும்‌ டார்ப்பனரீ-பார்ப்பனரல்லாதார்‌ என்று சொல்லிக்கொள்ளும்‌ வகுப்பார்‌ களுக்குள்ளும்‌ பொதுவில்‌ என ¢ இந்து மகாசபை? என்றும்‌ ) பார்ப்பனர்களால்‌ ¢ பிராமண மகாசபை? என்றும்‌, * ஆரிய தர்மபரிபாலன சபை? என்றும்‌, * வருணாசிரம தரும www.thamizham.net - Free £ book 14௦ 3011 454 பெரியார்‌ ஈட வெ. ரா, சிந்தனைகள்‌ பரிபாலன சபை? என்றும்‌ பல ஸ்தாபனங்களும்‌ ஸ்தாபிக்கப்பட்டு மாநாடுகளும்‌ நடதீதப்‌ பட்டு வருவதையும்‌) அதில்‌ தமது உயர்வகளையும்‌ ஆதிக்கத்தையும்‌ நிலை நிறத்த கொள்கைகளையும்‌ திட்டங்களையும்‌ தீர்மானித்து *பிராமணன்‌' முதலிய பல பத்திரிகைகள்‌ மூலம்‌ பிரச்சாரத்‌ துடன்‌ அமுலில்‌ நடத்தி வருவதையும்‌ பார்த்‌ துவருகிறோம்‌. அவர்‌ களுக்குள்‌ உள்‌ வகுப்பில்‌ ¢ ஸ்மார்‌ தீத பிராமணர்‌ 3, *மாதீதுவ பிராமணர்‌ ?, * மசாராஷ்டிர பிராமணர்‌ 8, * விஸ்வப்‌ பிராமணர்‌? எனச்‌ சங்கங்களும்‌ ஏற்படுத்தி பிரச்சாரங்கள்‌ செய்து வருவதையும்‌ பார்‌ தீதுவருகிறோம்‌. அதுபோலவே பார்ப்பனரல்லாதார்‌ (திராவிடர்‌, தமிழர்‌) களுக்குன்ளும்‌ பொதுவில்‌ ¢ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ என்றும்‌, ¢ பார்ப்பனரல்லா: தார்‌ சங்கம்‌ ? என்றும்‌ ஸ்தாபனங்கள்‌ ஸ்தாபித்து, மகாதாடுகள்‌ கூட்டி அதற்கேற்ற கொள்‌ கைகளையும்‌ திட்டங்களையும்‌ வகுத்துப்‌ பிரசக்கங்‌ கள்‌ மூலமாகவும்‌, 'ஜஸ்டி ஸ்‌, *திராவிடன்‌? முதலிய பத்திரிகைகள்‌ மூலமாகவும்‌ பிரச்சாரங்கள்‌ செய்து வருவதையும்‌ ) * சைவ சமய சங்கம்‌, வைணவ சமயச்‌ சங்கம்‌? என்றும்‌ மற்றும்‌ உள்‌ வகுப்புகள்‌ பெயரால்‌ *ஆதிதிராவிட சங்க!மென்றும்‌, ¢ சோழிய வேளாள சங்க!மென்றும்‌, ¢ தொண்டைமண்டல வேளாள சங்க? மென்றும்‌, ¢ கொங்கு வேளாளர்‌ சங்க!மென்றும்‌, ¢ வன்னியகுல க்ஷகீதிரிய சங்க!மென்றும்‌, 'பலிஜவாரு சங்க!மென் றும்‌) ¢ கம்மவாரு சங்க!மென்றும்‌, * பார்க்கவ குல சங்கமென்றும்‌, ஈமுதீதிரிய சங்க!மென்றும்‌, * சேனைத்‌ தலைவர்‌ சங்க!மென்றும்‌, * அருந்ததியர்‌ சங்க! மென்றும்‌, * மருத்துவர்‌ சங்க!மென்றும்‌, £ குலாலர்‌ சங்க! மென்றும்‌, * இந்திர குலாதிபர்‌ சங்க!மென்றும்‌ * இரசபுத்திரர்‌ சங்க!மென்றும்‌, * தன வைசிய சங்க'மென்றும்‌, * ஆரிய வைசிய சங்க!மென்றும்‌, 'காசுக்கார செட்டியார்‌ சங்க! மென்றும்‌, ¢ பன்னிரண்டாம்‌ செட்டியார்கள்‌ சங்க!மென்றும்‌, * அய்நூற்றான்‌ செட்டியார்‌ சங்கமென்றும்‌, ¢ அறபத்தி நாலு மனை செட்டியார்‌ சங்க!மென்றும்‌, < இருபத்திநாலு குல செட்டியார்‌ சங்கிமன்றும்‌, £விஸ்வசர்ம சங்க)மென்றும்‌, *சிவாச்சார்கள்‌ சங்க!மென்றும்‌, இன்னும்‌ இதுபோன்ற எத்தனையோ வஞுப்பார்கள்‌ சங்கங்களை ஸ்தாபித்துக்கொண்டு தங்களது குறைகளைப்‌ போக்கிக்கொள்ளவும்‌, அன்னியர்‌ களால்‌ தங்களுக்கு இழைக்கப்படும்‌ கொடுமைகளிலிருநீது தப்பித்‌ துக்கொள்ளவும்‌, தங்களது சுயமரியாதைக்கும்‌ சமதீதுவத்திற்கும்‌ தடையாயிருக்கும்‌ சாதனங்களை விலக்கவும்‌ முயற்சித்து வருவதையும்‌ பார்தீ.துவருகிறோம்‌. இப்படிச்‌ செய்துவருகிற காரியங்கள்‌ சில சமயங்களில்‌ மற்றொரு சமூகதீதாருக்கு அதிருப்தியைக்‌ கொடுக்கக்கூடியதாகவுமி நக்கலாம்‌. அதற்காக மற்றவர்கள்மேல்‌ குற்றஞ்‌ சொல்வதில்‌ பொருளில்லை. உதாரணமாக, ஆரியர்‌ களாகிய பார்ப்பனர்கள்‌ ஆரிய தர்ம பரிபாலன சபை மலமாயும்‌, வருணாசிரம தருமபரிபாலன சபை மூலமாகவும்‌ என்ன கோருவார்கள்‌ ? வருணாசிரம தர்மம்‌ நிலைக்கவேண்டுமென்றும்‌, தாங்கள்‌ உயர்ந்த சாதியார்கள்‌ என்றும்‌, மற்றவர்கள்‌ சூத்திரர்கள்‌ (தங்களது வைப்பாட்டி-வேசி மக்கள்‌) என்றும்‌, பஞ்சமர்கள்‌ (சண்டாளர்கள்‌) என்றும்‌ உள்ள தர்மம்‌ நிலைத்திருக்க வேண்டும்‌ என்றும்‌ ; இச்‌ சூதீதிரர்களும்‌, பஞ்சமர்களும்‌ வருணாசிரம தர்மத்திற்கு விரோதமாய்‌ சுயமரியாதை அடைய விரும்புவதும்‌ சமதீதுவமும்‌ சுதந்திரமும்‌ அடைய விரும்புவதும்‌ தங்கள்‌ ஆரிய தர்மத்திற்குக்‌ கெடுதி என்றும்‌ ) வருணாசிரம தர்மமும்‌, ஆரிய தரீ மமும்‌ காப்பாற்றப்‌ படவேண்டுமென் றும்‌ § சூத்திரத்‌ கன்மையும்‌ பஞ்சமதீதன்‌ மையும்‌ மறையவிடக்‌ கூடாது என்றும்‌) அதை மறையச்‌ செய்ய ஏற்படுத்தப்படும்‌ இயக்கங்களுக்கும்‌, முயற்சி களுக்கும்‌ விரோதமாயிருந்து பலவித சூழ்ச்சிகளாலும்‌ தந்திரங்களாலும்‌ அவ்வியக்கங்‌ களையும்‌ முயற்சிகளையும்‌ அழிக்கவேண்டும்‌ என்றும்‌ பேசி, அதற்கு வேண்டிய தீர்மானம்‌ செய்வார்களேயொழிய ¢ வருணாசிரம தர்மம்‌? கெட ஒருகாலும்‌ சம்மதிக்கமாட்டார் கள்‌. அதுபோலவே, மற்ற வருப்பார்‌ களும்‌ முன்னேறி தங்களது பிறப்புரிமைகளால்‌ சுயமரியாதையையும்‌ சமதீதுவத்தையும்‌, வேண்டுமானால்‌ அதற்கெதிராயுன்ள ஆரிய தர்மமும்‌ வருணாசிரம தர்மமும்‌ தங்கள்‌ தோளில்‌ ஏறாமலும்‌, அதனால்‌ தங்களுக்குக்‌ கெடுதி ஏற்படாமலும்‌ எவ்வளவு தூரம்‌ தடுக்கவேண்டியதோ அவ்வளவு தூரம்‌ தடுக்க www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌: 455 வேண்டியதுதான்‌. ஆரிய தரீமக்‌ சொள்கைகளும்‌, வருணாசிரம தர்மக்‌ கொள்கைகளும்‌ நமது சுயமரியாதைக்கும்‌ சமதீதுவதீதிற்கும்‌ எவ்வளவு தூரம்‌ கொடுமை இழைக்கிறது என்பதை வெளியிலெடுத்துச்சொல்லவேண்டியதுதான்‌. இதனால்‌ ஒருவரையொருவர்‌ துவேஷமென்றோ துரோகமென்றோ சொல்லிக்கொள்வது கொஞ்சமும்‌ பொருந்தாது. ஆனால்‌, செல்வாக்கில்லாதவர்களின்‌ சுயமரியாதைக்‌ கொள்கை, செல்வாகீகுள்ளவர்‌: களின்‌ சுயநலக்‌ கொள்கைக்கு விரோதமாயிருக்குமானால்‌, அச்‌ செல்வாக்கின்‌ மூலம்‌ செல்‌ வாக்கில்‌ லாஓவர்‌ களுக்குப்‌ பலவித இடையூறுகளும்‌ கெடுதிகளும்‌ ஏற்படுவது சகஜம்தான்‌. உண்மையாக சுயமரியாதைக்கும்‌ சமதீதுவத்திற்கும்‌ உழைப்பவர்கள்‌ இவைகளுக்குப்‌ பின்‌ வாங்கக்கூடாது) வருவது வரட்டுமெனதீ தைரியமாகதி தலைகொடுக்க வேண்டும்‌. உதாரணமாக, நமது சுயமரியாதைக்‌ கும்‌ சமதீதுவதீதிற்கும்‌ என்று கவலை எடுத்து, அதிலுள்ள கஷ்டங்களை நாம்‌ வெளியிலெடுத்துச்‌ சொல்ல ஆரம்பித்தவுடன்‌ பார்ப்பனர்‌ களால்‌ பிராமண துவேஷிகள்‌ என்றும்‌, வருப்புவாதகீகாரர்கள்‌ என்றும்‌, தேசத்‌ துரோகிகள்‌ என்றும்‌ நாஸ்திகர் கள்‌ என்றும்‌ குற்றம்‌ சொல்லப்பட்டு விட்டோம்‌. இதையும்‌ நமது பாமர ஜனங்கள்‌ நம்பும்படியாகிறது. காரணம்‌ என்னவென்றால்‌, தற்கால அரசியலிலும்‌ வைதிகதீதிலும்‌ பார்ப்பனர்களுக்குச்‌ செல்வாக்கும்‌ ஆதிக்கமும்‌ இருப்பதுதானே யொழிய வேறில்லை. அச்‌ செல்வாக்கும்‌ ஆதிக்கமுமே நமக்கு இவ்வளவு கொடுமைகள்‌ இழைக்க இடம்‌ கொடுக்கின்‌ றன. முதலாவது, வகுப்பு வாதமும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ நம்மிடம்‌ எங்கே இருக்கிறது? பிராமணர்‌, பிராமணரல்லாதார்‌ என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று ₹ கோவில்களிலும்‌, தீர்தீதங்களிலும்‌, நதிகளிலும்‌, பள்ளிக்‌ கூடங்களிலும்‌, வாசம்‌ செய்யும்‌ தெருக்களிலும்‌, ஓட்டல்களிலும்‌ காப்பிக்‌ கடைகளிலும்‌, ¢ பிராமணர்‌ 2, சூத்திரர்‌? என்கிற பிரிவும்‌) முறையே உயர்வு தாழ்வு என்கிற பாகுபாடுகளும்‌ பார்ப்பனரல்லாதாராகிய நம்மால்‌ ஏற்பட்டதா, அல்லது பார்ப்பனர்களால்‌ ஏற்பட்டதா என்று யோசிதீதால்‌-நம்மை, யாராவது வகுப்புத்‌ துவேஷி என்றோ வகுப்புவாதக்காரர்‌ என்றோ சொல்ல முடியுமா 8 பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ உயர்வையும்‌ ஆதிக்கத்தையும்‌ உண்டாக்கிக்‌ கொள்வதும்‌ நம்மைத்‌ தாழ்ந்த இலையிலும்‌ இழிதன்மையிலும்‌ இருக்கும்படி செய்வதும்‌ கொஞ்சமாவது குற்றமென்று அவர்கள்‌ நினைக்கவில்லை. ஆனால்‌, நாம்‌ அவர்களால்‌ தாழ்மையாயும்‌ இழிவாயும்‌ கருதப்படாமல்‌, சமதீ.துவமாய்‌ சுயமரியாதையுடன்‌ நடதீதப்பட வேண்டுமென்று நினைப்பது மாத்திரம்‌ குற்றமாய்விடு றது. 1. எப்படியெனில்‌ ஆரிய தர்ம பரிபாலனம்‌, வருணாசிரம தரீம பரிபாலனம்‌ இதனால்‌, தீண்டாமை, சூத்திரன்‌ இவைகளை நிலைத்திருப்பது ஆகியவைகள்‌ தெய்வீக இயக்கம்‌, ஆஸ்திக இயக்கம்‌ என்கிறார்கள்‌. சூத்திரன்‌, தீண்டாமை ஆகியவைகள்‌ ஒழிக்கும்‌ இயக்கம்‌ நாஸ்திக இயக்கம்‌, பிராமணத்‌ துவேஷ இயக்கம்‌ என்று சொல்லுகிறார்கள்‌. 2. நம்முடன்‌ அவர்கள்‌ பேசுவதும்‌, நம்மை அவர்கள்‌ பாரிப்பதுவும்‌ அவர்களுக்குப்‌ பாவம்‌, தோஷம்‌ என்கிறார்கள்‌. ஆனால்‌, நாம்‌ அவர்கள்‌ காலில்‌ விழுவதும்‌, சாமி என்று கும்பிடுவதும்‌ நமக்குப்‌ புண்ணியம்‌ என்‌ கிறார்கள்‌. 3, நாம்‌ தொட்டதையோ பார்தீததையோ, நமக்குக்‌ கொடுதீதபிறகு அவர்களுக்குக்‌ கொடுப்பதையோ தோஷம்‌ என்கிறார்கள்‌. அவர்கள்‌ எச்சிலையோ, கால்‌ கழுவின தண்ணீரையோ நாம்‌ சாப்பிடுவது மோட்சம்‌ என்கிறார்கள்‌. 4. நம்மோடு அவர்கள்‌ பேசும்போது அவர்கள்‌ பூணூலைக்‌ காதில்‌ சுற்றிக்‌ கொள்வார்கள்‌. (ஏனென்றால்‌ பார்ப்பனர்கள்‌ மலஜலம்‌ கழிக்கும்‌ 3பா.து அவர்களது சரீரம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 456 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ அசுதீசமாகிவிடுகிறபடியால்‌ அசுதீதப்பட்ட சரீரத்தில்‌ பூணால்‌ தரிப்பது தோஷம்‌. அதனால்‌ காதில்‌ சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு, தேக பரிசு தீதமானபின்பு தோளில்‌: போட்டுக்‌ கொள்வார்கள்‌. அதுபோலவே, சூதீதிரனாகிய நம்முடன்‌ பேசும்போதும்‌ அவர்கள்‌ தேகம்‌ அசுதீதப்படுகிறதாம்‌.) நாம்‌ அவர்களுடன்‌ பேசும்போது வாயைப்‌ பொதீதிக்‌ கொள்ள வண்டும்‌. (ஏனென்றால்‌ வாயிலிருந்து வெளிவரும்‌ காற்று அவர்கள்மீது பட்டுத்‌ தீட்டாகிவிடுமாம்‌.) இம்‌ மாதிரியான ஆயிரக்கணக்கான உதாரணங்களைக்‌ காணலாம்‌. இந்திலையில்‌ நம்‌ மூன்னேற்றத்தின்‌ எதிரிகள்‌ நம்மை வகுப்புத்‌ துவேஷிகள்‌ என்றோ நாஸ்திகர்கள்‌ என்றோ சொல்லுவார்களே எனப்‌ பயந்து, நது ஜீவாதாரமான உரிமைகளை அறியச்‌ செய்ய3வண்டிய கடமைகளில்‌ இருந்து கொஞ்சமும்‌ பின்வாங்கிக்‌ கொள்ளக்கூடாது. அரசியல்‌ விஷயங்களில்‌ நமது தற்கால யோக்கியதை என்ன என்பதைக்‌ கவனிதீதுப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌ கன்‌ உத்கியோகம்‌ சம்பாதிப்பதற்காக ஏற்படுத்திக்கொண்ட இயக்கத்தை, அஉர்கன்‌ தேசிய இயக்கம்‌ என்பதாகப்‌ பெயரை வைதீதுக்கொண்டு--நம்‌ பேராலேயே நமது நாட்டுக்கும்‌ நமது வகுப்புக்கும்‌ கேடானவற்றைச்‌ செய்து, அரசாங்கதீ திற்கு அனுகூலம்‌ செய்துகொடுத்து--1000, 2000, 5000, 7000 ரூபாய்கள்‌ மாதச்‌ சம்பன மூள்ள உத்தியோகங்களையும்‌ சம்பா திதீதுக்கொண்டும்‌, கோர்ட்டுகள்‌ என்றும்‌ பள்ளிக்‌ கூடங்கள்‌ என்றும்‌ அரசாங்கத்திற்கும்‌ தங்களுக்கும்‌ அனுகூலமான ஸ்தானங்களையும்‌ அரசாங்கத்திற்குள்‌ உளவாயிருந்து ஏற்பாடு செய்துகொண்டு அவற்றின்‌ மூலமாய்ப்‌ பிழைத்து வருகிறார்கள்‌. நாம்‌ ஏதாவது இவற்றில்‌ ஆசைப்பட்டால்‌, நமகீகு யோக்கியதை இல்லை என்று சொல்லிவிறுகிறார்கள்‌. யோக்கியதை உண்டாக்கிக்‌ கொள்ளலாம்‌ என்று நாம்‌ பிரயத்தனப்‌ பட்டால்‌-* தேசத்‌ துரோகி, ' வகுப்புத்‌ துரோகி? என்று சொல்லிவிடுவார்கள்‌. ஆதலால்‌, இவ்விதக்‌ கஷ்டங்களில்‌ இருநீதுவரும்‌ நமது சமூகத்திற்கும்‌ நாட்டிற்கும்‌ சுயமரியாதையும்‌ விடுதலையும்‌ ஏற்படவும்‌ நமக்கென்று ஒரு தனி இயக்கம்‌ இருந்துதான்‌ ஆகவேண்டும்‌. அவ்‌ வியக்கதீதில்‌ நாம்‌ எல்லோரும்‌ ஈடுபட்டு ஒற்றுமையாய்‌ உழைக்கவேண்டும்‌. [திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய இடங்களில்‌ 28-11-1926 முதல்‌ 83-12-1926 முடிய சொற்பொழிவு--1 குடி அரசு ¢ 19-12 1926] தோழர்களே 1 மனிதனுக்கு வெட்கமும்‌ ரோஷமும்‌ ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம்‌ ஏற்பட்டது. சுயமரியாதை கியக்கம்‌ மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும்‌. இந்தக்‌ காரியம்‌ ஒரு சமூகப்‌ புரட்சியில்‌ ஏற்பட 3வண்டிய3தயொழிய சிரிப்பு, விளையாட்டில்‌ ஏற்படக்கூடியதில்லை. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்கவேண்டிவரும்‌. அனேக காரியங்களில்‌ மற்றவர்களால்‌ நாம்‌ துன்பமும்‌ இழிவும்‌ அடையாமல்‌, நம்‌ மாலேயே நாம்‌ &ழிவுக்கும்‌, கீழ்நிலைமைக்கும்‌ ஆளாகிவருகின்‌ றோம்‌. நம்மை நாம்‌ திருத்திக்கொள்ளாமல்‌, நமக்குன்‌ ஒரு பெரிய மன மாறுதல்‌ ஏற்படாமல்‌ நமது சமூகம்‌ மாறுதலடைதல்‌ என்பது ஒரு தாளும்‌ முடியாத காரியமாகும்‌. சமூகதீதில்‌ மேல்‌ சாதி, கீழ்‌ சாதி, அடிமை சாதி என்பவர்கள்‌ இருப்பதோடு ஆண்‌- பெண்‌ தன்மைகளில்‌ உயர்வு தாழ்வும்‌ இருந்துவருகின்றது. இவை தவிர ஏழை-பணக்‌ காரன்‌, முதலாளி-தொழிலானி தன்மைகளும்‌ கிருந்துவருகின்‌ றன. இவற்றுள்‌ சில இயற்கையாக ஏற்பட்டவையாகவும்‌, இவ்வளவுக்கும்‌ காரணம்‌ மனிதன்‌ அல்லவென்றும்‌, சரீவ வல்லமையும்‌, சர்வ வியாபகமும்‌ பொருந்திய கடவுளால்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 457 ஏற்பட்டவை என்றும்‌ சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்‌ நிலையில்‌ உள்ளவனும்‌, கீழ்‌ நிலையில்‌ உள்ளவனும்‌ நம்பிக்கொண்டிருக்கிறான்‌. மூடநம்பிக்கைகள்‌ தாம்‌ வெகுகாலமாக மனித சமூகதீதில்‌ எந்தவித மாறுதலும்‌ ஏற்‌ படுவதற்‌ கில்லாமல்‌ தடுத்துக்‌ கொண்டு வருகின்றன. சாதி வித்தியாசங்களுகீகும்‌ சாதிக்‌ கொடுமைகளுக்கும்‌ கடவுள்‌ தான்‌ காரணம்‌ என்று எண்ணிய பிறகு யாரால்தான்‌ பரிகாரம்‌ செய்யமுடியும்‌ 8 எந்த மனிதனும்‌ மற்ற சாதியைப்பற்றிச்‌ சந்தேகப்‌ பட்டாலும்‌, தன்‌ சாதியைப்பற்றி நம்பிக்கையாகவும்‌ மேன்மையாகவும்‌ கற்பித்துக்‌ கொண்டு, மற்றவர்களைத்‌ தாழ்த்திப்‌ பெருமையடைகிறான்‌. இந்தக்‌ குணம்‌ பாரீப்பானிடத்தில்‌ மாத்திரமல்ல, எல்லா சாதி யாரிடமும்‌ இருந்து வருகின்றது. சாதிபேதம்‌ ஒழிவதை இழிவாய்க்‌ கருதுகிறான்‌ உ சாதிக்‌ கலப்பை விபச்சாரித்‌ தனமாக எண்ணுகிறான்‌. கந்த மனப்டான்மை சாதி ஒழிப்புக்கு எமனாய்‌ இருக்கிறது. அஸ்திவாரதீதில்‌ கையை வைத்து சாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில்‌ சுயமரியாதை இயக்கம்தவிர வேறு எந்த இயக்கமும்‌ இல்லையென்பதை நன்றாய்‌ ஞோாபகதீதீல்‌ வையுங்கள்‌. திருவள்ளுவர்‌, கபிலர்‌, இராமானுஜர்‌ முதலிய புராணகீசாரர் களும்‌, பிரம்மசமாஜம்‌, ஆரிபசமாஜம்‌ முதலிய மத சம்பந்தமான சில புதிய முயற்சிகளும்‌ எல்லாம்‌ உண்மை யறியாமலும்‌, உலகமொப்புக்கும்‌ தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும்‌ செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில்‌ பிறவியின்‌ பேரால்‌ உள்ள சாதிபேதம்‌ அடியோடு இழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள்‌ அல்ல. ஆதலால்‌, சாதியை அடியோடு ஒழிக்க எவரும்‌ முயற்சித்ததில்லை. மற்ற பல சாதிமக்களின்‌ முயற்சிகள்‌ எப்படி இருக்கின்றன என்று பார்த்தா லா, அவைகளும்‌ தாங்கள்‌ எப்படியாவது மேல்சாதிக்காரர்கள்‌ என்று மதிக்கப்படவேண்டும்‌ என்‌ கிற முயற்சிகளாக வ இருக்கின்றன. சாதியில்லா தவர்களும்‌ கலப்பு சாதிக்காரர்களும்‌ தாங்‌ கன்‌ ஒரு கலப்பற்ற சாதியைச்‌ சொல்லிக்கொள்ள முடியாமல்‌ போய்விட்ட என்று வெட்கப்‌ படுகிறார்களே மொழிய, தங்களைப்‌ பொறுத்தவரை சாதியொழிந்ததே என்று யாரும்‌ திருப்தியடைவதில்‌ லை. இந்தத்‌ தொல்லைகள்‌ அடியோடு ஒழியவேண்டுமானால்‌ சுயமரியாதை இயக்கதீதில்தான்‌ இடமிருக்கிறது) சுயமரியாதை இயக்கதீதால்தான்‌ முடியும்‌. மற்றபடி எப்படிப்பட்ட சீர்‌ திருதீதவா தியானாலும்‌ காரியத்திற்கு உதவவேமாட்டான்‌. [பட்டுக்கோட்டையில்‌, 23-3-1936-ல்‌ செரற்பொழிவு--4 குடி அரசு ? 5-4 1936) முஸ்லிம்களில்‌ கூடச்‌ சிலர்‌ சுயமரியாதை இயக்கம்‌ நாதீதிக இயக்கம்‌ என்று பயப்‌ படுவதாகதீ தெரிகிறது. அப்படிப்பட்டவர்களில்‌ பலர்‌ தங்களுக்கு ஒன்றும்‌ பயமில்லா விட்டாலும்‌ மற்றவர்கள்‌ தங்களை ஏதாவது சொச்லிவிடுவார்களோ என்று பயந்து பந்‌ தா பஸ்துக்காக &ந்த அணையைக்‌ கட்டிக்கொள்கிறார்கள்‌. சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்‌ கவோ தமுவவோ வரும்‌ முஸ்லிம்களுக்கும்‌ மற்றவர்களுக்கும்‌ இயக்கத்தின்‌ பேரால்‌ நான்‌ ஒன்று சொல்லு £றேன்‌. அதாவது, இந்த இயக்கத்துக்கு என்று வகுத்திருக்கும்‌ கொள்கைகளில்‌ நாத்திகம்‌ ஒரு கொள்கையாக குறிப்பிடப்பட்டிருச்‌ கவில்லை. சுயமரியாதை இயக்கத்தில்‌ சகல மதக்‌ ஈரருக்கும்‌, சகல அபிப்பிராயக்காரருக்கும்‌ இடம்‌ உண்டு. அதன்‌ கொள்கை இவ்வளவுதான்‌. * மனித சமூகத்தில்‌ உள்ள குருட்டுப்‌ பழக்க வழக்சங்களையும்‌ மூடநம்பிக்கைகளையும்‌ விளக்கமறியாச்‌ சடங்குகளையும்‌ அவற்‌ றிற்காகச்‌ செய்யப்படும்‌ செலவுகளையும்‌ st S 1686-58 www.thamizham.net - Free £ book 14௦ 3011 458 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ * சாதி, மதம்‌, வகுப்பு ஆகியவைகளின்‌ பேரால்‌ ஏற்பட்டுள்ள பேதங்களையும்‌ சமூகத்‌ துறையிலும்‌, பொருளாதாரத்‌ துறையிலும்‌ இருந்துவரும்‌ உயர்வு தாழ்வுகளையும்‌ அகற்றி மக்கன்‌ யாவரும்‌ ஒ3ர சமூகமாகவும்‌ சகோதர தீதுவமாகவும்‌ சமமாக வாழும்படி செய்தல்‌. * பகுதீதறிவுக்கும்‌ சுயமரியாதைக்கும்‌ கட்டுப்பட்டு நடக்கும்படி மக்களுக்குச்‌ சுயமரி யாதை உணர்ச்சியை உண்டாக்குதல்‌. இதை நடத்தி வைக்கவேண்டிய காரியத்திற்கும்‌, ஆதீதிஉ-நாத்திகத்துக்கும்‌ என்ன சம்பந்தமி ருக்கிறது? ஆத்திகமும்‌, நாத்திகமும்‌ அவரவருடைய அபிப்பிராயமும்‌ ஆராய்ச்சித்‌ திறமுமாகும்‌, இன்று முஸ்லிமும்‌, தமிழனும்‌ ஒத்துழைத்குச்‌ சாதிக்கவேண்டிய காரியத்துக்கும்‌ ஆதீதிக-நா தீதிகப்‌ பிரச்சினைகளுக்கும்‌ எவ்வித சம்பந்தமும்‌ தொடர்பும்‌ இல்லை. [ஆம்பூரில்‌ 28-11-1937-& சொற்பொழிவு-! குடி அரசு ? 5-12-1937) தோழர்களே 1 சுயமரியாதை இயக்கம்‌ இந்‌ நாட்டு மகீகளுகீகு மான உணர்சீசி ஏற்படவும்‌ எல்லா மக்களையும்‌ சமூகம்‌, பொருளாதாரம்‌ ஆகியவற்றில்‌ சமப்படுத்தி ஒன்றுசேர்க்கவும்‌ ஏற்பட்ட தாகும்‌. மற்றும்‌ பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும்‌ மற்றபடி அது நம்‌ எதிரிகள்‌ சொல்வதுபோல மதங்களையும்‌ கடவுள்களையும்‌ எதிர்ப்பதற்கென்‌ றே ஏற்பட்டதல்ல. நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இச்லாமல்‌ போனதற்கும்‌, ஒற்றுமையும்‌ சமதீதுவமும்‌ இல்லாமல்‌ போனதற்கும்‌ ஏற்பட்டுள்ள தடைகள்‌ யாவும்‌ ஒழிக்கப்பட வேண்டு மென்று சொல்லுவதிலும்‌, அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும்‌ உண்மையிலேயே சுயமரி யரதை இயக்கம்‌ சிறிதும்‌ ஒளிவு மறைவு இல்லாமல்‌ பாடுபடுகிறது. இந்தக்‌ காரியங்கள்‌ செய்வதில்‌ மதங்களோ, கடவுள்களோ, வேறு எவைகளானாஜலும்‌ சரி, அத்‌ தொண்டிற்குத்‌ தடையாய்‌ இருந்தால்‌ அவற்றையும்‌ ஒழிப்பதில்‌ சுயமரியாதை இயக்கம்‌ பின்வாங்கா து [நாமக்கல்லில்‌, 12-12-1937-ல்‌ செரற்பொழிவு--* குடிஅரசு ! 19-12-1937] தாய்மார்களே ! தோழர்களே | சூதீதிரர்களுக்கும்‌, பார்ப்பனரல்லாத மக்களுக்கும்‌, சண்டாளர்களுகீகும்‌ இதன்‌ அரு மையும்‌ பெருமையும்‌ தெரியாது. ஏனெனில்‌, இப்படிப்பட்டவர்கள்‌ மனிகத்‌ தன்மை, சமதீ துவஉணர்ச்சி ஏற்பட்டதற்குப்‌ பிறகு, அறிவு பெற்றவர்‌ களும்‌-கருப்பந்‌ தரித்தவர்களு மாவார்கன்‌. ஆதலால்‌, அவர்கள்‌ பிறக்கு முன்பு, அறிவு பெறுமுன்பு அவர்கன்‌ சமூகதீ திற்கும்‌ அவர்களது பெற்‌ றார்களுக்கும்‌ என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்‌ களுக்குத்‌ தெரியாது. ஒரு சிறு உதாரணம்‌ சொல்லுகிறேன்‌. சுமார்‌ 30, 35 (1948) வருடங்‌ களுக்கு முன்பு எனது தகப்பனார்‌ ஈரோட்டில்‌ முனிசிபல்‌ கவுன்சிலர்‌, பிரபல வியாபாரி. சுமார்‌ 10௦, 150 ரூபாய்‌ “இன்கம்‌ டாக்ஸ்‌! கட்டிவந்தவர்‌. அவரை அக்‌ காலதீதில்‌ 123 ரூ 15 ரூ. மாதச்‌ சம்பளம்‌ உள்ள முனிசிபல்‌ *பில்‌ கலெக்டர்‌ பார்ப்பனன்‌, வரி விதிப்பு விஷய மாக ஒரு விண்ணப்பத்தை தேரில்‌ பார்தீது பைசல்‌ செய்ய மண்டிக்‌ கடைக்கு வந்து கூப்பிடு வான்‌, அப்படிக்‌ கூப்பிட வந்தால்‌ அவனைக்‌ கண்டதும்‌ என்‌ தகப்பனார்‌ எழுந்து, ¢ ராவால ரசவால தேவடா 1-- வரவேணும்‌ வரவேணும்‌ ஸ்வாமி ? என்று கீர கைகூப்பிக்‌ கும்பிட்டு, உட்காரச்‌ சொல்லிவிட்டு, நின்‌றுகொண்டே இருப்பார்‌. அப்‌ பார்ப்பன ¢ பில்‌ கலெக்டர்‌ ? தலையை ஆட்டிவிட்டு உட்கார்‌ நீதுகொண்‌ டு, * ஏமிரா, வெங்கிட்ட நாயுடு! போத்தாமா ஆ இண்டினி சூசேதானிக்கி '—* ஏண்டா, கெங்கிட்ட நாயுடு அந்த வீட்டைப்‌ பார்க்கப்‌ போக லாமா 5 என்று கூப்பிடுவான்‌. என்‌ தகப்பனார்‌ * ஆஹா 1 என்று சொல்லி வஸ்திரத்தை www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 459 தலையில்‌ கட்டிக்கொண்டு, அவன்‌ பின்னால்‌ புறப்பட்டுவிடுவார்‌ சுற்றிவிட்டு வந்தவுடன்‌ மஞ்சள்‌, மிளகாய்‌, கருப்பட்டி, வெல்லம்‌ எல்லாம்‌ ஒரு சாக்கில்‌ கட்டி ஒரு பையனிடம்‌ கொடுத்து, ¢ சுவாமிகள்‌ வீட்டில்‌ கொடுதீதுவிட்டு வா ? என்று சொல்லி வழி அனுப்புவாரி கிதை நான்‌ நேரில்‌ பார்‌ தீதிருக்கிறேன்‌. இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும்‌ ஒரு வகீசீல்‌ குமாஸ்தா பார்ப்பான்‌, நாயிலும்‌ கீழாக மதித்து அடா, புடாவென்று பேசுவான்‌. இதுவும்‌ நான்‌ கண்ணால்‌ பார்தீ ததேயாகும்‌. அந்த நிலைமைக்கும்‌ இன்றைய நிலைமைக்கும்‌ உள்ள வித்தியாசத்தைப்‌ பாருங்கள்‌ 1 சுயமரியாதை இயக்கதீதுகீகு முன்பு பார்ப்பனர்கள்‌ நிலையும்‌, மத உணர்ச்சியும்‌ எப்படி கிருந்தன, இப்போது எவ்வளவு மாற்றமடைந் துள்ளன என்பவைகளை உணர்ந்த வர்களுக்குத்தான்‌ நன்கு தெரியும்‌. [காஞ்சிபுரத்தில்‌ 1-3-1938-ல்‌ தலைமையுரை--* குடி அரசு * 63.1938] &. பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கு விண்ணப்பம்‌ சென்னை மாகாணத்தில்‌-சிறப்பாகத தமிழ்‌ நாட்டில்‌ சுமார்‌ 10 வருஷங்களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார்‌ சங்கம்‌ ஏற்பட்டதும்‌, அதை ஏற்படுத்த ஜமான்‌ டாக்டர்‌ நாயர்‌ அவர்கள்‌ முதன்மையாகவும்‌, சர்‌- தியாகராச செட்டியார்‌ உதவியாகவும்‌ இருந்து, அதை உலகினர்‌ ஒப்புக்கொள்ளும்படி செய்து, தங்களது. கொல்கையை நிலை நி.துத்தியதும்‌ உலகறிந்த விஷயம்‌, ஆனால்‌, இன்றைய தினம்‌ நம்மில்‌ பெரும்பான்மையான மக்கன்‌ அக்‌ கட்சியின்‌ பெயரைச்‌ சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறார்கள்‌. காரணமென்ன ₹ தமிழ்நாட்டில்‌ இக்‌ கட்சியின்‌ கொள்கைகளைப்‌ பிரச்சாரம்‌ செய்யப்‌ பணமில்லா திருந்ததா ₹ பத்திரிக்கை இல்லாதிருந்ததா 1 உத்தியோகமும்‌ அதிகாரமும்‌ இல்லாதிருந்‌ தனவா 1 எல்லாமுமிருந்தும்‌ இக்‌ கதி ஆவானேன்‌ 1 எதிரிகளின்‌ சூழ்ச்சிகளும்‌; தந்திரமும்‌ என்று சொல்லலாம்‌, ஜீமான்கள்‌ நாயரும்‌, செட்டியாரும்‌ உள்ள காலத்திலும்‌, இவ்வெதிரிகள்‌ இருந்தவர்கள்‌ தானே i இப்பொழுது மாத்திரம்‌ ச்சூழ்ச்சி பலிப்பா3னன்‌ T ஒரு சமயம்‌ நமக்குன்ளாகவே எதிரிகள்‌ ஏற்பட்டுவிட்டார்‌ கள்‌ என்று சொல்லலாம்‌. அப்படியானால்‌, இனிமேலாவது நமகீகுள்ளக எதிரிகள்‌ ஏற்படாமலிருக்க இப்போது என்ன செய்யப்போகிறோம்‌ 1 இனிமேலாவது எதிரிகளின்‌ சூழ்சீசிகளிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யப்போகிறோம்‌ ? மகாநாடு கூடிக்‌ கலைந்தால்‌ மட்டும்‌ போதுமா? முதலாவது, நமது இலட்சியம்‌ என்ன என்பதைப்‌ பாமர மக்கள்‌ அறியும்படி செய்‌ திருக்கிறோமா ! பாமர மக்களின்‌ அனுதாபத்தைப்பெற நாம்‌ ஏதாவது வழிசெய்தோமா? கவலையாவ து கொண்டோமா ₹ நமது மக்களின்‌ உண்மையான தேவை என்பதிலாவது நாம்‌ அபிப்பிராயபேதமில்லாமல்‌ இருக்கிறோமா? நமது நாட்டினிடமாவது, நமது மக்களிடமாவது அபிமானம்‌ உள்ளவர்கள்‌ என்பதற்கு நம்மிடம்‌ ஏதாவது ஒரு அடையான மிருக்கிறதா 8 உதீதியோகங்கள்‌ பெற்றோம்‌, பட்டங்கள்‌ பெற்றோம்‌, பதவிகள்‌ பெற்றோம்‌ இதனால்‌ நமது மக்களுக்கு அடிப்படையான நன்மை என்ன செய்தோம்‌! பார்ப்பன ஆதிக்கம்‌ வளராமல்‌ இருக்க இவைகளைப்‌ பயன்படுதீதிக்கொண்டோம்‌ என்கிறவரையில்‌ இவற்றைப்‌ பெற்றது சரி. பாமர ஜனங்கள்‌ மூட நம்பிக்கையுடையவராய்‌, ஏழை 'ஜனங்களாய்‌, தொழிலாளர்‌ களாய்‌, கூலிகளாய்‌ உள்ள நமது மக்களின்‌ குறைகளை நீக்க என்ன நன்மையைச்‌ செய்‌ தோம்‌ i பார்ப்பன மாயையில்‌ மூழ்கி விவகரரத்தில்‌ சிக்கி, அல்லல்பட்டு அழியும்‌ குடியா www.thamizham.net - Free £ book 14௦ 3011 460 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ னவர்களுகீகு நாம்‌ என்ன . செய்தோம்‌ 1 அறிவினதீதில்‌ மூழ்‌ 89, மதுவரூநீதி, ஒழுகீகங்‌ கெட்டு நாசமாகும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு என்ன பந்தோடஸ்து செய்தோம்‌? உத்தி யோகம்‌ ஒப்புக்கொண்ட அளவில்‌ உதீதியோகத்தைக்கொண்டு எவ்வளவு செய்யக்கூடுமோ அவ்வளவு செய்திருக்கிறோம்‌ என்ற பதில்‌ போதுமா? உதீதி3யோகதீதிற்கு வெளியில்‌ செய்யக்கூடிய வேலைகளில்‌ ஏதாவது செய்தோமா$ நம்‌ மனத்தை நாம்‌ கேட்டுப்‌ பார்ப்போம்‌. நமது எதிரிகளான பார்ப்பனர்கள்‌ தேசத்தின்‌ பெயரையும்‌, காங்கிரசின்‌ பெயரையும்‌ சுயராஜ்யம்‌, உரிமை என்கிற பெயர்களையும்‌ வைத்துக்கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி, உத்தியோகமும்‌ பதவியும்‌ பெற்று, தங்கள்‌ ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்திக்கொன்‌: கிறார்களே அது போலவும்‌, நம்மில்‌ பல கூலிகள்‌ பார்ப்பனருக்கு ஒதீதுப்‌ பாடி, அவ/களும்‌ தேசம்‌, சுயராஜ்யம்‌, தேசியம்‌ என்பவைகளைச்‌ சொல்லி உயிர்‌ வாழ்கிறார்களே அது போலவும்‌) நாமும்‌ செய்தால்‌ பார்ப்பனரல்லாத மக்கள்‌ முன்‌ £ணறி விடுவார்களா? இவற்றை மாநாட்டுக்கு வரும்‌ பொக ஜனங்கள்‌ நன்றாய்‌ யோசிக்க விரும்புகிறோம்‌. உத்தியோகப்‌ பதவி, பட்டம்‌ பெறவேண்டாம்‌ என்று நாம்‌ இப்போது சொல்ல வரவில்லை. ஆனால்‌, இதுவே நமது இலட்சியமல்ல என்பதையும்‌ அதனாலயே நமது குறைகள்‌ முழுதும்‌ நிவர்த்தியாகி விடாது என்பதனையும்‌ தெரிவிதீதுக்கொள்ளாமலிருக்க முடியவில்லை. ஆதலால்‌, உண்மையில்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்‌னேற்றத்திற்குதி தகுந்த கொள்கைகளும்‌ திட்டங்களும்‌ வகுத்துப்‌ பாமர மக்களிடையே தாராளமாய்ப்‌ பிரச்‌ சாரம்‌ செய்யத்‌ தகுநீத ஏற்பாடுகள்‌ செய்யவேண்டும்‌. உத்தமமான தலைவர்களையும்‌, உண்மை மான தொண்டர்களையும்‌, உறுதியான கொள்கையையும்‌, யோக்கியமான பிரச்சாரகர்களை யும்‌ கொண்டு சரியானபடி ஒரு வருஷத்திற்கு வேலை செய்தால்‌, நமது சமூ கம்‌ சுயமரியா தையையும்‌ சுதந்திரத்தையும்‌ அடைந்துவிடலாம்‌. இதற்கு முகலாவது எல்லோரும்‌ கதரை ஒப்புக்கொள்ள வேண்டும்‌. தீண்டாமை விஷயத்தில்‌ வெளிப்படையாய்ச்‌ சொல்லி விடவேண்டும்‌--அதாவ க; மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு-தாழ்வு இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும்‌. இந்த இரண்டு விஷயங்‌ களில்‌ ஆட்சேபணை உடையவர்கள்‌ சுதந்திரத்திற்கும்‌ சுயமரியாதைகீகும்‌ விரோதிகள்‌ என்றே சொல்லுவோம்‌, அங்கத்தினர்‌ உறுதிமொழிப்‌ பதீதிரதீதிலேயே இவைகள்‌ குறிக்கப்பட வேண்டும்‌. மற்றபடி; * ஒத்துழையாமையோ, ஒத்துழைப்போ) * பரஸ்பர ஒதீதுழைப்போ, முட்டூக்‌ ட்டையோ?) * சட்ட வரம்பிற்குட்பட்ட கிளர்ச்சியோ, வெளிப்பட்ட கிளர்ச்‌ சியோ?) * பிரிட்டிஷ்‌ குடைக்குள்‌ சுயராஜ்பமோ, குடைக்கு வெளியில்‌ சுயராஜ்யமோ 1) 6 இரட்டை ஆட்சியோ, ஒற்றை ஆட்சியோ?) * சாதாரண சுயராஜ்பமோ, பூரண சுயராஜ்யமோ அவரவர்கள்‌ கொள்கை அவரவர்களுடனேயே இருக்கட்டும்‌. இது சமயம்‌ இவைகள்‌ எல்லாம்‌ அடியோடு புரட்டு என்‌ ஐும்‌-பார்ப்பனர்‌ களும்‌, ஆங்கிலம்‌ படித்தவர்‌ களும்‌, பாமர ஜனங்களையும்‌ சர்க்காரையும்‌ ஏமாற்றி வயிறு வளர்க்கச்‌ செய்யும்‌ தந்திரங்கள்‌ என்றும்‌ நாம்‌ உறுதியாய்‌ நம்புவதால்தான்‌, அதைப்பற்றி யாருக்காவது கெடுதியோ நன்மையோ ஒன்றும்‌ ஏற்படப்‌ போவதில்லை. ஆதலால்‌, அவைகள்‌ ஒவ்வொரு மனிதனின்‌ தனித்தனி அபிப்பிராயமாய்‌ கிருத்து கொள்ளலாமே தவிர, சங்கத்தின்‌ கொள்கைகளில்‌ கலக்க வேண்டியதில்லை. சுயமரியாதையும்‌ சுதந்திரமும்‌ பெறுவது என்பதை இலட்சியமாக வைத்துக்‌ கொண்டாலே போதுமென்று நிணைக்‌ றாம்‌, ஏனெனில்‌, பார்ப்பனரல்லா தார்‌ என்றால்‌ பா]ப்பனரல்லாதார்‌ சமூகத்தில்‌ 100-ர்கு 90 பேர்‌ களாயிருக்கும்‌ பாமர மக்களையம்‌ ஏழை மக்களையும்‌ குறி கும அல்லாமல்‌, 100-4 5 5 பேர்‌ கூட இல்லாத இராஜாக்களையும்‌, ஜன்‌ தார்களையும்‌, பிரபுக் களையும்‌, வகீரீல்களையுட மாத்திரம்‌ குறிக்காது என்பதனையும்‌ தெரிவித்துக்‌ கொள்கி றோம்‌] பார்ப்பனரல்லா தார்‌ முண்ேற்றம்‌ என்பதும்‌ 100-க்கு 90 பேர்களின்‌ முன்னேற்றத்தையும்‌ சேர்த்துக்‌ குறிக்குமே www.thamizham.net - Free £ book 14௦ 3011 13-8-1926 ¢ குடி:அரசு ? முகப்பு அட்டை www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 461 யல்லாது 100-கீகு 5 பேர்களின்‌ முன்னேற்றத்தை wrdfrd குறிக்காது என்பதையும்‌ தெரிவிதீதுக்‌ கொள்கிறோம்‌, இச்‌ சங்கம்‌. உண்மையான பார்ப்பனால்லாதார்‌ முன்னேற்றச்‌ சங்கமா அல்லது யாரோ சில குறிப்பிட்ட நபர்களின்‌ முன்னேற்றச்‌ சங்கமா என்பது வெளியாக இது ஒரு தக்க சமயமாய்‌ ஏற்பட்டு விட்ட தால்‌, ஒவ்வொரு தலைவரும்‌ பொறுப்‌ புடனும்‌, புக்திசாலித்தனதீதுடனும்‌ நடந்துகொள்ளவேண்டும்‌ என்பதாக விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. (¢ குடி அரசு -தலையங்கம்‌--26.12-1926)] 6. நமது பத்திரிக்கை நமது குடிஅரசு! ஆரம்பமாகி கரண்டு வருஷம்‌ முடிந்து மூன்றாவது வருடத்தில்‌ முதல்‌ இதழ்‌ இன்று வெளியாகிறது. குடி அரசு ' ஆரம்ப இதழில்‌ * குடி அரசு? என்று ஒரு தலையங்கமும்‌, ஆறுமாதம்‌ கழிந்து * நமது பத்திரிக்கை? என்று ஒரு தலையங்கமும்‌, ஒரு வருஷம்‌ முடிந்‌,து ரண்டாவது வருஷ ஆரம்பத்தில்‌, ¢ நமது பத்திரிக்கை? என்று ஒருதலை யங்கமும்‌ எழுதி இருக்கிறோம்‌. இப்போது இரண்டு வருஷம்‌ முடிநீது, மூன்றாவது வருஷ ஆரம்ப முதல்‌ இதழிலும்‌ அவ்வாறே ¢ நமது பத்திரிக்கை? என்று தலையங்கமிட்டு ஒருகுறிப்பு எழுத ஆசைப்படு கிறோம்‌. நமது நாட்டு மக்களுக்குள்‌ சுயமரியாதையையும்‌ சமதீ தவத்தையும்‌ சகோதாதீ வதி தையும்‌ உண்டாக்க * குடி அரசு! என்னும்‌ ஒரு பத்திரிக்கையை ஆரம்பிக்கவேண்டும்‌ என்பதாக முதல்முதல்‌ நானும்‌ எனது நண்பர்‌ ஜமான்‌ தங்கபெருமாள்‌ பிள்ளையும்‌ 1322-ல்‌ கோயமுதீ தூர்‌ ஜெயிலில்‌ சிறைவாசம்‌ செய்யும்போதே நினைத்‌ தோம்‌, அதுபோலவே, வெளியில்‌ வந்த கொஞ்ச நாட்களுக்குள்‌, * குடி அரசு? என்று ஒரு வாரப்‌ பத்திரிக்கையும்‌, கொங்கு நாடு! என்று ஒரு மாதாந்திரமும்‌ நடத்தப்போவதாய்‌ 19-1-1923 தேதியில்‌ சர்க்காரில்‌ ரிஜிஸ்டர்‌ செய்யப்பட்டது. இவ்விஷயத்தை முதலில்‌ ஜீமான்‌ திரு. வி, கலியாணசு நீதர முதலியார்‌ அவர்களிடம்‌ சொன்னேன்‌. அவர்‌ எனது கொள்கையைக்‌ கேட்டவுடன்‌ சந்தோஷப்பட்டு ¢ இப்படி ஒரு பத்திரிக்கை வேண்டியதுதான்‌) அதற்கு நீயே சரியானவன்‌. நீ ஆரம்பித்தால்‌ தமிழ்‌ நாட்டிலேயே பதினாயிரக்‌ கணக்கான சந்தாதாரர்கள்‌ சேருவார்கள்‌. ஆனால்‌, அதிக நாள்‌ நிலைக்காது) ஒரு கூட்டத்தார்‌ எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள்‌ ஆனாலும்‌ நடந்தவரை லாபம்‌ )$ நடத்துங்கள்‌ ? என்றார்‌, பிறகு னீமான்‌ வரதராஜுலு நாயுடு அவர்களிடம்‌ சொன்னேன்‌, அவரும்‌ மிகச்‌ சந்‌$தாஷப்பட்டுச்‌ சீக்கிரதீதில்‌ வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும்‌, வெளியாகத்‌ தாமதமேற்பட்டால்‌ அதுவரை தனது பத்திரிக்கையில்‌ வேண்டுமானாலும்‌ எழுதி வரும்‌ படியும்‌ சொன்னார்‌. பிறகு ஜீமான்‌ சி. இராஜகோபாலாசீசாரியார்‌ அவர்களிடம்‌ சொன்னேன்‌. அவர்‌, £ இந்தச்‌ சமயம்‌ இப்டடிப்பட்ட பத்திரிக்கை கூடாது. அல்லாமலும்‌, மகாத்மா ஜெயிலில்‌ இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப்‌ போவது சரியல்ல. உன்‌ னுடைய சேவை இதுசமயம்‌ மிகவும்‌ அவசியமான த. ஆனதால்‌, கண்டிப்பாய்ப்‌ போகக்‌ கூடாது? என்று சொல்லிவிட்டார்‌. அதன்‌ பேரில்‌ அந்த எண்ணத்தை ஒத்திவைதீதுவிட்டு, மறுபடியும்‌ ஒதிதுழையாமைக்காகவே உழைத்தேன்‌. தற்செயலாய்‌ வைக்கம்‌ சதீதியாக்‌ கிரகம்‌ ஏற்பட்டது. ஜமான்‌ ஜார்ஜ்‌?ஜாசப்‌ அவர்களும்‌ வைக்கத்திலிருந்து, * என்னைப்‌ பிடிக்கப்‌ போகிறார்கள்‌ ; நான்‌ இி2தா ஜெயிலுக்குப்‌ போகிறேன்‌ ) வேறுயாரும்‌ இல்லை $ www.thamizham.net - Free £ book 14௦ 3011 462 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ நீ வந்து ஒப்புக்கொன்‌? என்று எழுதின கடிதமும்‌, தநீதியும்‌ என்னைக்‌ குடும்பத்‌ துடன்‌ * வைகீகதீதிற்குப்‌ போகும்படி செய்‌ துவிட்டது. அங்கு ஜெ பிலில்‌ இருக்‌ தம்போது இதே எண்ண ந்தான்‌, அதாவகு, ¢ வெளியில்‌ போனதும்‌ பத்திரிக்கை நடத்தவேண்டும்‌! என்கிற ஆவல்‌ அதிகமாயிற்று, அதுபோலவே, வெளியில்‌ வந்ததும்‌ பத்திரிக்கை ஆரம்பிக்கத்‌ தீர்மானித்து விட்டேன்‌. அதற்கேற்றாற்போல்‌ திருப்பாப்புலியூர்‌ ஞானியார்‌ மடாதிபதி ஸ்ரீவி சிவசண்முக மெய்ஞ்ஞான சிாச்சார்ய சுவாமிகளும்‌ கோயம்புகி காருக்கு வந்திருக்‌ கிறார்கள்‌ என்று கேள்விப்பட்டு, அவர்களை இங்கு அழைத்து அவர்களைக்‌ கொண்டே ஆரப்‌ பவிழா நடதீதிவிடலாம்‌ என நினைத்து, கோயம்புதீதூர்‌ சென்று அழைத்ததும்‌ யாதொரு ஆட்சேபணையும்‌ சொல்லாமல்‌ அவர்கள்‌ ஒப்புக்கொண்டு, ஈரோட்டிற்கு வந்து, ஆரம்ப விழா நடதீதீக்‌சொடுத்தார்கள்‌. அதுசமயம்‌ பத்திரிக்காலயத்தைத்‌ திறந்துவைக்‌ கும்படி ஞானியர்‌ சுவாமிகளைக்‌ கேட்டுக்‌ கொண்டபோது, நான்‌, ¢ அனேக பத்திரிக்கைகள்‌ நமது நாட்டிடை இருந்தாலும்‌ அவைகள்‌ தங்கள்‌ மனச்‌ சாட்சிக்கு உண்மை என்று பட்டதைதீ தெரிவிக்க அஞ்சுகின்‌றன. அதனால்தான்‌ நான்‌ இப்‌ பத்திரிக்கையை ஆரம்பிக்கிறேன்‌. மற்றப்‌ பத்திரிக்கை போலல்லாமல்‌ மனதில்‌ பட்டதைத்‌ி தைரியமாய்‌, பொதுமக்களுக்கு உள்ளது. உள்ளபடி தெரிவிக்க வேண்டு மென்பது எமது நோக்கம்‌ ? என்று செல்லி இருக்கிறேன்‌. ஞானியார்‌ சுவாமிகளும்‌ பதீதிரிக்காலயத்தைதி திறக்கும்போது, *€ நமது நாட்டில்‌ பல பத்திரிக்கைகள்‌ இருந்தும்‌ இப்‌ பதீதிரிக்கைபோன்ற கருதீ இடைய பத்திரிக்கை வேறொன்றுமில்லை, இன்று உயர்வு-தாழ்வு என்‌ 9ற ஆணவம்‌ மிகுநீ திருக்கிறது. சமத்துவம்‌ என்ற உணர்ச்சி எங்கும்‌ பரவவேண்டும்‌. ¢ குடிஅரசி£ன்‌ கருத்து இதுவே என நான்‌ அறிந்துகொண்டேன்‌. சமயத்திலிருக்கும்‌ கேட்டை முதலில்‌ ஒழிக்க வேண்டும்‌. இவை * குடிஅரசிரன்‌ முதல்‌ கொள்கையாய்‌ விளங்கவேண்டும்‌. இப்‌ பத்திரிக்கை யில்‌ ஜீமான்‌ நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும்‌ உண்டு? என்று ஆசீர்வதித்து இருக்கிறார்‌. முகல்‌ இதழ்‌ தலையங்கதீதிலும்‌, நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கதீதிலும்‌ நாம்‌ குறிப்பிட்டிருப்பதாவது 3 * ஒவ்வொரு வகுப்பும்‌ முன்‌னே நவேண்டும்‌. இதை அறமீவ விடுத்து வெறும்‌ * தேசம்‌? ¢ தேசம்‌ ? என்று கூக்‌ தூரலிடுவது எமது பதீதிரிக்கையின்‌ நோக்க மன்று. மக்களுக்குள்‌ சுயமரியாதையும்‌ சமத்துவமும்‌ சகோதர தீ துவமும்‌ ஓங்கி வளரல்‌ வேண்டும்‌. உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சி$ய நமது நாட்டில்‌ வளர்நீதுவரும்‌ ஜாதிச்‌ சண்டை என்னும்‌ நெருப்புக்‌ கு நெய்யாக இருப்பதால்‌, கவ்வுணர்ச்சி ஒழிந்து அனைதீ தயிர்‌ ஒன்றென எண்ணும்‌ உண்மை அறிவு மக்களிடம்‌ வளரவேண்டும்‌... இன்னோரன்ன பிற நறுங்குணங்கள்‌ நம்‌ மக்கள்‌ அடையப்‌ பாடுபடுவது நமது நோக்கமாகும்‌.” * எவர்‌ எனக்கு இனியர்‌ $ எவர்‌ எனக்கு இன்னார்‌ என்ற விருப்பு வெறுப்பு இன்றி, நகுதற்‌ பொருட்டன்று நட்டல்‌, மிகுதிக்கண்மேற்‌ சென்றிடித்தற்‌ பொருட்டு! என்ற வாக்கைக்‌ கடைப்பிடித்து, நண்பரேயாயினும்‌ ஆகுக, அவர்‌ தம்‌ சொல்லும்‌ செயலும்‌ கேடு சூழ்வ தாயின்‌ அஞ்சாது கண்டு தீ தொகுக்கப்படும்‌ ? என்று எழுதி கிருக்கிறோம்‌. இவை யாவும்‌ 2-5-1925 தேதி ¢ குடிஅரசில்‌ காணலாம்‌. அடுத்தபடி, ஆறு மாதம்‌ முடிந்த இதழில்‌, ¢ நமது பத்திரிக்கை ? என்னும்‌ தலையங்‌ கதீதிலும்‌, ** குடிஅரசு? குறிப்பிட்ட சருதீதைப்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ பத்திரிக்கையே அல்லாமல்‌ வெறும்‌ வர்தீதமானப்‌ பத்திரிக்கை அல்லவாதலால்‌ பிர திவாரமும்‌ ¢ குடி அரச? தனது ஆத்மாவை வெளிப்படுத்தும்‌ (தத்‌ தவத்தை விளக்கும்‌)போது கண்ணீர்‌ கொட்டாமலிருக்க முடி வதே இல்லை. இதன்பலனால்‌, உயர்ந்தோர்‌ என்று சொல்லிக்‌ கொள்வோராகிய பிராமணர்‌ முதலிய சமூகதீதாருக்கும்‌, ராஜீயத்‌ தலைவர்‌ என்று சொல்வோ ராகிய பல ராஜதந்திரிகளுக்கும்‌ விரோ தியாகவும்‌, அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும்‌ நமது www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 463 £ குடிஅரசு ? ஆளாக ?வண்டி இருப்பதால்‌ இது சீக்கிரத்தில்‌ பாமர ஜனங்களின்‌ செல்வாக்‌ கைப்பெற முடியாமலிருப்பது ஆச்சரியம்‌ அல்ல! என்றும்‌ 8 * உண்மையில்‌ * குடி அரசுக்கு எந்தப்‌ பிராமணனிடதீதும்‌ குரோதமோ, வெறுப்போ கிடையாது) ஆனால்‌ பிராமணன்‌ உயர்‌ ந்தவன்‌ என்றும்‌, மற்றவர்கள்‌ தீண்டாதவர்கள்‌, தெருவில்‌ நடக்கக்‌ கூடாதவர்கள்‌ என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும்‌ பாத்திர மில்லாதவர்கள்‌ என்று எண்ணிக்கொண்டிக்கும்‌ எண்ண தீதினிடத்திலும்‌ ) தங்கள்‌ வகுப்‌ பார்தான்‌ முன்னணியில்‌ இருக்கவேண்டும்‌, மேன்மை யுடன்‌ பிழைக்‌கவேண்டும்‌, மற்ற வர்கள்‌ என்றென்றைக்கும்‌ தங்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும்‌ என்று எண்ணிக்‌ கொண்டு அதற்காகச்‌ செய்யும்‌ சூழ்சீசிகளிடத்திலும்தான்‌ ¢ குடிஅரசு.1க்குக்‌ குரோதமும்‌ வெறுப்பும்‌ இருப்பதுடன்‌ அதை அடியோடே களைந்தெறியவேண்டும்‌. என்ற ஆவல்‌: கொண்டு உழைத்து வருகிறது! என்றும்‌ ; * குடிஅரசு ? ஏற்பட்டு, ஆறு மாதகாலமாகியும்‌ இதுவரை ஆயிர தீ.துசீசில்லரை சந்தா தார்களே சேர்‌ந்திருக்கிறார்கள்‌ ) அதனைப்‌ படிக்கவேண்டிய அளவு ஜனங்கள்‌ படிக்க வில்லையென்றும்‌, பாமர ஜனங்கள்‌ சரியானபடி ¢ குடிஅரசை ? ஆதரிக்க வில்லையானால்‌, அது தானாகவே மறைந்து8பாக வேண்டியதுதான்‌ அதன்‌ கடமையே அல்லாமல்‌, வியாபார தோரணையாய்‌ நடந்துவராது? என்றும்‌ எழுதியிருந்தது. கிதை 1-11-1925 இதழிற்‌ பார்க்கலாம்‌. பிறகு ஒருவருஷம்‌ முடிநீ.து கிரண்டாவது வருஷ ஆரம்ப இதழில்‌, ¢ நமது பத்திரிக்கை? என்ற தலையங்கத்திலும்‌, ¢ இதுவரை நமக்குள்ள 2000 சந்தாதாரர்களில்‌ நால்வர்‌ அதிருப்திக்கே ஆளாகிறோம்‌! என்று எழுதிவிட்டு, £ குடி அரசு? எவருடைய தயவுக்கோ, முகஸ்‌ துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்தீதிக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய்‌, உண்மையாய்‌ நடக்கக்கூடிய காலம்வரை நடக்கும்‌. அவ்விதம்‌ நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால்‌ அது தானேமறைந்‌ துவிடுமே யல்லாமல்‌, மானங்‌ கெட்டு விலங்குகளைப்‌ போல்‌ வாழாது. ¢ குடி அரசு? தோன்றியபிறகு, அதனால்‌ ராஜிய உலகத்திலும்‌, சமூக உலகதீதிலும்‌ பெரிய மாறு தல்‌ ஏற்பட்டிருக்‌ றது என்று பலர்‌. நமக்கு எழுதி இருப்பதை நாமும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளுகிறோம்‌! என்றும்‌ எழுதி இருக்கிறோம்‌. ஆகவே, இப்போது கரண்டுவருடங்கள்‌ முடி நீது மூன்றாவது வருட ஆரம்ப இதழில்‌ அதே தலையங்கத்‌ துடன்‌ ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகி றாம்‌. முதலாவதாக, ஒரு விஷயத்தைத்‌ தெரியப்படுத்துகிறோம்‌. அதாவது, குடி அரசு!க்ீகு ஆறு மாதத்தில்‌ ஆயிரம்‌ சந்தா தாரர்களும்‌, ஒரு வருஷதீதில்‌ இரண்டாயிரம்‌ சந்தாதாரர்‌ களும்‌, இப்போது இரண்டு வருஷதீதில்‌ நாலாயிரத்து அய்ந்நூறு சந்தாதாரர்‌ களும்‌ இருப்பதால்‌, கூடுமான வரையில்‌ தமிழ்மக்களின்‌ ஆதரவைப்பெற்று இருக்கிறது என்பதைச்‌ சந்தோஷதீக.டன்‌ தெரிவித்துக்கொள்ளு கிறோம்‌. ஆரம்பதீதிலிருந் து இதுவரை, முன்னால்‌ குறிப்பிட்ட கொள்கைகளில்‌, அது ஒரு சிறிதும்‌ தவறாமல்‌ ஏற்றுக்கொண்டபடி நடந்துவந்திருக்கெது என்பதையு % மெய்ப்பித்து விட்டோம்‌. ஆகவே குடி அரசு! குறைந்தது ஒரு பதினாயிரம்‌ பிரதிகளாவ.து அச்சிட்டு வெளியா கவேண்டும்‌ என்கிற ஆசை நமக்கு இருந்தாலும்‌, இந்நாலாயிர தீது அய்ந்நூற்றைக்‌ கொண்டு நான்‌ சந்‌ தாஷமடைகிறேனே தவிர; ஒருசிறிதும்‌ அதிருப்தி அடையவில்லை. அன்றியும்‌ எமது விருப்பத்தை நிறைவேற்ற அனேக நண்பர்கள்‌ காத்குக்கொண்டிருக்‌ கிறார்கள்‌ என்பகும்‌ எனக்குத்‌ தெரியும்‌, 250 சந்தாதாரர்களை ஏற்படுத்திக்‌ கொடுத்கும்‌ இனியும்‌ இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில்‌ சேர்ப்பதாய்‌ வாக்களித்த சிங்கப்பூர்‌ நண்பர்களுக்கும்‌, மற்றும்‌ 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும்‌ மலேயா நண்பர்‌ களுக்கும்‌ எமது மனமாரீநீத நன்றியைச்‌ செலுத்துகிறேன்‌. தமிழ்நாட்டிலும்‌ ஊர்கள்‌ தோறும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 464 பெரியார்‌ ஈட வெ.ரா. சிந்தனைகள்‌ ¢ குடி அரசி! ன்‌ வளர்சீசியையும்‌, பரவுதலையும்‌ எம்மைவிட அதிக கவலைகொண்டு எதிர்‌ பார்க்கும்‌ நண்பர்கள்‌ பலர்‌ இருக்கிறார்கள்‌ என்பதும்‌ எமக்குத்‌ தெரியும்‌. அவர்கள்‌ “குடி அரசுக்காக உழைத்து வந்ததற்கும்‌, சந்தாதாரர்களைச்‌ சேர்த்துக்‌ கொடுத்த தற்காகவும்‌, குடி அரசு? கொள்கைகளைப்‌ பரப்பப்‌ பாடுபட்டதற்கும்‌ நான்‌ மனப்பூர்வமாய்‌ நன்றி செலுத்துகிறேன்‌. குடி அரசுக்கு இரண்டாவது வருஷத்தில்‌ நஷ்டமில்லை மூதல்‌ வருஷகீதின்‌ நஷ்டம்‌ அடைபடவேண்டும்‌. ஆனால்‌, இன்னமும்‌ கொஞ்சம்‌ நல்ல இதழில்‌ இன்னும்‌ நாலுபக்கம்‌ அதிகப்படுத்த வேண்டும்‌ என்கிற ஆவல்‌ இருந்‌ தவரு 9ற 3. 84 காரியங்களுக்கு, இப்போது ஆகும்‌ செலவைவிட இன்னமும்‌ வருஷம்‌ ஒன்‌ க்கு 2000 ரூ. அதிகமாகச்‌ செலவு பிடிக்கும்‌. இனியும்‌ கொஞ்சம்‌ சந்தாதாரர்கன்‌ அதிகமானால்‌ இவைகளைச்‌ செய்ய சவுகரியமாய்‌ இருக்கும்‌. இவ்வருடம்‌ புதிதாகச்‌ சொல்வதற்கு ஒன்றும்‌ அதிகமாய்‌ இல்லை என்றே நினைக்‌ கிறேன்‌. டொகுவாக, நமது பிரசங்கதீதினாலும்‌, * குடி அரசு வினாலும்‌ நான்‌ செய்‌ துவந்த பிரச்சாரத்தில்‌ அரசியல்‌ இயக்கங்கள்‌ என்பவைகளைக்‌ கண்டித்தேன்‌ ) அரசியல்‌ தலைவர்கள்‌ என்பவர்‌ களைக்‌ கண்டித்‌3தன்‌ ) மதம்‌ என்பதைக்‌ கண்டிதீ2தன்‌) மததீ தலைவர்கள்‌ என்பவர்களைக்‌ கண்டித்தேன்‌) மதச்‌ சடங்கு என்பவைகளைக்‌ கண்டித்திருக்‌ கிறேன்‌ ; குருக்கள்‌ என்பவர்களைக்‌ கண்டித்திருக்‌ 93றன்‌ ) கோயில்‌ என்பதைக்‌ கண்டிதீ திருக்கிறேன்‌ 5 சாமி என்பதைக்‌ கண்டிதீதிருக்கிறேன்‌ ) வேதம்‌ என்று சொல்வதைக்‌ கண்டித்திருக்கிறன்‌ ] சாஸ்திரம்‌ என்பதைக்‌ கண்டிதீதிருக்கிறேன்‌ ) புராணம்‌ என்பதைக்‌ கண்டிதீதிருக்‌ 93றன்‌ ] பார்ப்பனியம்‌ என்பதைக்‌ கண்டித்திருக்கி2றேன்‌ ) ஜாதி என்பதைக்‌ கண்டிதீதிருக்கி2றன்‌ ) அரசாங்கம்‌ என்பதைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ; உத்தியோகம்‌ என்பவைகளைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ] நீதி ஸ்தலம்‌ என்பதைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ] நியாயா திபதி என்பவர்களைக்‌ கண்டி தீதிருக்கிறேன்‌ ) நிர்வாக ஸ்தலங்கள்‌ என்பவைகளைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ) ஜனப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பதைக்‌ கண்டிதீதிருக்க றன்‌ ; பிரதி நிதிகள்‌ என்பதைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ) தேர்தல்‌ என்பதைக்‌ கண்டிதீதிருக்கிறேன்‌ ] கல்வி என்பதைக்‌ கண்டித்திருக்கிறேன்‌ ) சுயராஜ்யம்‌ என்பதைக்‌ கண்டு தீ திருக்கிறேன்‌. ஜ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முகலிடார்‌, வரதராஜுலு நாயுடு, சி. கராஜ 8காபாலாச்‌ சாரியார்‌ முதலிய ஒரே துறையில்‌ வேலை செய்துவந்த நண்பர்களைக்‌ கண்டித்திரு4கி றன்‌. இன்னும்‌ என்னென்னவற்றையோ, யார்யாரையோ கண்டிதீதிருக்கிறேன்‌ ) கோபம்‌ வரும்படி வை.ுமிருக்‌ 83றன்‌. எதைக்‌ கண்டித்தீருக்கிறேன்‌, எதைக்‌ கண்டிக்கவில்லை, யாரை வையவில்லை என்பது எனக்கு ஞாபகதிதிற்கு வரமாட்டேன்‌ என்‌ கிறது. கன்னமும்‌ ஏதாவது எழுதலாம்‌ என்று பேனாவை எடுத்தாலும்‌, பேசலாம்‌ என்று வாயைத்‌ திறநீ தாலும்‌ கண்டிக்கவும்‌, வையவும்‌, துக்கப்படவுமான நிலைமை ஏற்படு தே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்‌ தகாத, வையத்‌ தகாத இயக்கமோ, திட்டமோ அபிப்பிரயமோ என்‌ கண்களுக்குப்‌ படமாட்டேன்‌ என்கிறது: இவைகளன்றி, எனது வார்த்தைகளும்‌, எழுதீதுக்களும்‌, செய்கைகளும்‌, தேசத்‌ தரோகமென்றும்‌, வகுப்பு துவேஷமென்றும்‌, பிராமண துவேஷம்‌ என்றம்‌ மானநஷ்ட மென்றும்‌, அவதூறு என்றும்‌, ராஜ துரோகமென்றும்‌, ராஜ துவேஷமென்றும்‌, நாஸ்திக மென்றும்‌, மத தூஷணை என்றும்‌, சிலர்‌. சொல்லவும்‌, ஆத்திரப்படவும்‌ ஆளானேன்‌. அரசியல்‌ தலைவர்கள்‌, தேசாபிமானிகள்‌, தேசபக்தர்கள்‌ என்பவர்கள்‌ என்னை வையவும்‌, என்னைக்‌ கண்டித்து ஜெயிலில்‌ வைக்கும்படி அரசாங்கத்தைக்‌ கெஞ்சவும்‌ ஆளானேன்‌. இந்த இன்பமற்ற சாரியங்களை நான்‌ ஏன்‌ செய்யவேண்டும்‌ ? சிலருக்காவது மனவருதி தத்தையும்‌ அதிரப்‌ தியையும்‌ சொடுக்கத்‌ தக்க காரியத்தை ஏன்‌ செய்யவேண்‌ டம்‌ ! என்று நானே யோசிப்பது உண்டு. சிற்சில சமயங்களில்‌ யாரோ எப்படி £யா போகட்டும்‌. நாம்‌ ஏன்‌ இக்‌ கவலையும்‌ இவ்வளவு தொல்லையும்‌ அடையவேண்டும்‌? நமக்கென்ன கிதனால்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 கியகீகங்கள்‌ 465 ஜீவனமா ? பணம்‌, புகழ்‌, கீர்தீதி சம்ப£தனையா? ஏன்‌ நமக்கு இத்தனை எதிரிகள்‌ ?. ஒரு பத்திரிக்ககயாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? ¢ இமயமலை வெயிலில்‌ காய்கிறது என்று குடை பிடிப்பது போல்‌! இருக்கிறது என்பதாகக்‌ கருதி, விலகி விடலாமா என்று யோசிப்பதுண்டு, ஆனால்‌ விலகுவதில்தான்‌ என்ன லாபம்‌? ஏறக்குறைய நமது ஆயுள்காலமும்‌ தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால்‌ பதீ.துவயது காலமா இருக்கலாம்‌, இந்தக்‌ கொஞ்ச காலத்தை ஏன்‌ நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக்கூடாது 8 விலகிதீதான்‌ என்ன பெரிய காரியம்‌ செய்யப்‌ போகிறோம்‌? என்பதாகக்‌ கருதி மறுபடியும்‌ இதிலேயே உழன்‌ றுகொண்டிருக்கி2றாமே அல்லாமல்‌ வேறில்லை. உண்மையில்‌, நாம்‌ முன்‌ சொன்ன அரசியல்‌, மத விஷயம்‌ முதலியவைகளைக்‌ - கண்டிக்க நேரிட்டபோது உண்மையான அரசியல்‌, மதூயல்‌ இவைகளை நாம்‌ கண்டிகீ கவே இல்லை. எதைப்‌ பார்த்தாலும்‌ புரட்டும்‌, பித்தலாட்டமும்‌, பெயரைப்பார்‌ தீது ஏமாறதி தகுநீததா கயிருக்கிறதேயல்லாமல்‌--ததீ தவங்கள்‌ எல்லாம்‌ நமக்கும்‌ நமது நாட்டுக்‌ கும்‌ ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும்‌, கொஞ்சங்கூட *ரிப்பேர்‌? செய்வதற்கில்லாமல்‌ அடியோடு அழித்து மறுபடியும்‌ புதிதாய்‌ உண்டாக்கவேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில்‌ இவை திருதீதப்பாடடையும்‌ என்கிற நம்பிக்கை கொஞ்சமும்‌ இல்லாவிட்டாலும்‌, வேறு யாராவது மகாதீமாவைப்‌ 8பான்ற மகான்கள்‌ வந்தால்‌ அவர்களுக்குப்‌ பக்குவம்‌ செய்து வைத்திருக்கக்‌ கூடாதா? என்றும்‌ அதுவும்‌ முடியாவிட்டால்‌ பலன்‌ எப்படி யானாலும்‌ கடமையைச்‌ செய்யவேண்டியதுதானே என்கிற முடிவும்‌ கிடைக்கிறது. ஆகவே, இக்‌ கஷ்டமானதும்‌, மனதுக்கு இின்பதீதைக்‌ கொடுக்கக்‌ கூடியதுமான இக்‌ காரியத்தில்‌ இறங்கிவிட்டோம்‌. உலகம்‌ ஒப்புக்கொண்டாலும்‌ சரி, தள்ளிவிட்டாலும்‌ சரி நமக்கு அதைப்பற்றிக்‌ கவலை இல்லை. நமது கடமையை எப்படி நாம்‌ பிரதானமாய்கீ கருதியிருக்கிறறோமோ, அதுபாலவே பொகு ஜனங்களும்‌-அதாவது இக்‌ கடமையை சரி என்று எண்ணியவர்கள்‌ தங்கள்‌ தங்களது கடமையையும்‌ எண்ணி அக்‌ கடமையைச்‌ செலுத்துவார்கள்‌ என்று நம்புகிறோம்‌. [£குடி அரசு 8-தலையங்கம்‌--1-5-1927] 6. எத்தனை காலத்துக்கு ? பெரியோர்களே ! நமது நண்பரும்‌, அரசியல்‌ தலைவருமான திருவாளர்‌ வி. ஓ. சிதம்பரம்‌ பிள்ளை: அவர்கள்‌ என்னைப்பற்றிச்‌ சொல்லியவைகள்‌ யாவும்‌ என்னிடம்‌ உள்ள அன்பினாலல்லாது அவ்வளவும்‌ உண்மை என்று தாங்கள்‌ நம்பிவிடக்‌ கூடாது என்று தங்களைக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. என்னை அவர்‌: ¢ தலைவர்‌? என்று சொன்னதற்காக, நான்‌ மிகுதியும்‌ வெட்கப்படுகிறேன்‌. அவர்‌ வங்காளப்‌ பிரிவினையின்‌ போது தமிழ்நாட்டில்‌, சிறப்பாக இந்த ஜில்லாவில்‌ அரும்பெரும்‌ தலைவராயிருநீது நடத்திய பெருங்கிளர்ச்சியின்போது, நான்‌: உல்லாசதீ.துடன்‌ விடலைப்‌ புருஷனாய்‌ விளையாடிக்கொண்டிருந்தேன்‌. அவரையும்‌ அவர்‌ போன்றாரையும்‌ கண்டே பொதுத்‌ தொண்டில்‌ இறங்கினவன்‌, அன்றியும்‌, சிவஞான யோகிகள்‌ வாசித்துக்‌ கொடுத்த உபசாரப்பத்திர வாக்கியங்களுக்கும்‌ நான்‌ ஒருசிறிதும்‌ பொருத்தமுடையவன்‌ அல்லன்‌. ஆகிலும்‌ அப்‌ பதீதிரதீதில்‌ எனது கொள்கைகளைப்‌ புகழ்ந்‌ திருக்கும்‌ விஷயங்களைப்‌ பொறுத்தவரை அக்‌ கொள்கைக்கு அதை ஒரு நற்சாட்சிப்‌ பத்திரமாக எடுத்துக்கொண்டு) அதற்காக எனது நன்றியைச்‌ செலுத்துகிறேன்‌. இத்‌ திராவிட சங்கம்‌ 18-வது ஆண்டுவிழா என்று சொல்லப்படுவதால்‌, இதற்கு 18 ஆண்டு முடிந்திருக்கிறது. நமது நாட்டில்‌ திராவிடர்‌ முன்‌3னற்ற சம்பந்தமாய்‌ ஏதாவது இயக்கங்கள்‌ மூலம்‌ பேசுவதாயிருந்தால்‌, நமது எதிரிகள்‌, * உத்தியோகத்திற்கு. 1686-59 www.thamizham.net - Free £ book 14௦ 3011 466 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ ஆசைப்பட்ட யாரோ சில பாரீப்பனரல்லாதாரால்‌, சமீபத்தில்‌ திராவிடர்கள்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயநல இயக்கம்‌? என்று சொல்லி வருவது உங்களுகீகுதீதெரியும்‌, ஆனால்‌, இக்‌ கழகம்‌ அப்பேர்ப்பட்டவர்களால்‌ ஆக்கப்பட்டதா என்பதும்‌, சுவாமி சிவஞான யோகிகள்‌ ஏதாவது உத்தியோகம்‌ ஆசைப்பட்டுக்‌ கிடைக்காமல்‌ போன தற்காக ஆரம்பிதீதாரா என்பதையும்‌, அவருக்கு ஏதாவது உத்தியோகம்‌ வேண்டி யிருக்கிறதா என்பதையும்‌ ] திருவன்ளுவருக்கு உத்தியோகம்‌ வேண்டி இருந்ததா? புத்தருக்கு உத்தியோகம்‌ வேண்டி இருந்ததா: கபிலருக்கு உத்தியோகம்‌ வேண்டி இருந்ததா ₹ அவ்வைக்கு உத்தியோகம்‌ வேண்டி இருந்ததா? என்பதையும்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. அன்றியும்‌, சுவாமி சிவஞான யோகிகன்‌ காலத்தில்‌ மாதீதிரம்‌ இம்‌ மாதிரி முயற்சிகள்‌ தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா 1 என்று DEsprigd ஆரியர்கள்‌ கால்‌ வைத்தார்களே அன்று முதலே அரியர்‌, திராவிடர்‌ என்கிற வேற்றுமையும்‌, ¢ ஆரியர்‌ சங்கம்‌ 1, ¢ திராவிடர்‌ சங்கம்‌? என்கிற இயக்கங்‌ களும்‌, சுயமரியாதைக்‌ கிளர்ச்சிகளும்‌ நாட்டில்‌ ஏற்பட்டுக்கொண்டுதான்‌ இருக்கின்‌ றன. இவைகளை எவ்வனவோ பாடுபட்டு நமது எதிரிகள்‌ மறைக்க முயன்றாலும்‌ இயற்கைத்‌ ததீ.துவம்‌ மறைக்க முடியாமல்‌ செய்துவருகிறது. எ.துவரையில்‌ ஆரியர்‌ வேதம்‌ என்பது நமது நாட்டில்‌ இருச்குமோ, எதுவரை ஆரியர்‌ ஆதிக்கம்‌, ஆரிய தர்ம பிரச்சார சபை, வருணாசிரம தர்ம பிரசீசாரசபை நமது நாட்டில்‌ இருக்குமோ அதுவரை, நமது இயக்கம்‌-- அதாவது ¢ திராவிடர்‌ முன்னேற்ற இயக்கம்‌ 5, ¢ சுயமரியாதை இயக்கம்‌ 1, ¢ சமரச இயக்கம்‌ ? இருந்து தீரவேண்டிய துதான்‌. சமீப காலதீதில்‌ ஆரியர்களால்‌ தஞ்சை ஜில்லா தூவார்‌ என்கிற கிராமத்தில்‌ கூட்டப்‌ பட்ட ¢ பிராமண சம்மேளனம்‌! என்னும்‌ கூட்டத்தையும்‌, அதன்‌ நடவடிக்கைகளையும்‌ பாரீ தீதவர்‌ களுக்கு, இம்மாதிரி இருக்கப்பட்ட சங்கங்கள்‌ அவசியமா, கில்லையா என்பது யாவருக்கும்‌ தெரிந்திருக்கும்‌. மேலும்‌, நமதுநாட்டில்‌ மதம்‌ அடங்கிய வேதம்‌, சாஸ்திரம்‌, ஸ்மிருதி, ஆகமம்‌, புராணம்‌ முதலியவைகளின்‌ பேரால்‌, ஆரிய பிரச்சாரம்‌ செய்துவரும்‌ வரையில்‌ நாம்‌ இம்மாதிரி முயற்சிகளில்‌ ஈடுபட்டு இருந்து தீரவேண்டிய துதான்‌. எனவே, இம்முயற்சிகள்‌, வெற்றிபெற 3வண்டும்‌ என்று பிரார்தீதிப்பதுடன்‌ எனது முகவுரையை நிறுதீதிவிட்டு, மற்றும்‌ நான்‌ ஏதாவது சொல்லிக்கொள்ளவேண்டிய விஷயங்கள்‌ ஏற்பட்டால்‌ அவற்றை எனது முடிவுரையில்‌, சொல்லிக்கொள்ளுகிறேன்‌. [கோவில்பட்டி திராவிடர்‌ கழகத்தில்‌, 19-6-1927-ல்‌ சொற்பொழிவு குடிஅரசு ? 26-6-1927 7. நமது வேலை 6 குடிஅரசு 3 பத்திரிக்கை தோன்றி 27 மாதங்கள்‌ ஆகின்றதெனினும்‌ அதன்‌ மூலம்‌ தேசத்திற்கும்‌ சமூகத்திற்கும்‌ நமக்குச்‌ சரியென்று தோன்றிய வழியில்‌ நம்மால்‌ கூடிய தொண்டை ஆற்றி வந்திருக்கிறோம்‌. எனினும்‌, செய்யவேண்டிய வேலை எவ்வளவேர பாக்கி இருக்கிறது. முன்னொரு சமயம்‌ நாம்‌ எழுதியதுபோல்‌, ¢ குடி அரசு ? பத்திரிக்கை வேலை மாத்திரம்‌ அல்லாமல்‌, அதன்‌ கொள்கையைப்‌ பரப்ப மக்கள்‌ மனதில்‌ பதியச்செய்ய ஊர்‌ ஊராய்தீ திரிந்து பிரச சாரமும்‌ செய்யவேண்டிய பொறுப்பு இனியும்‌ எவ்வனவேச மடங்கு அதிகமாயிருந்தது வருகிறது கோவை மாநாட்டுத்‌ தீர்மானங்களின்‌ மூலம்‌, பார்ப்பனரல்லாதாருக்குன்‌ இனி அபிப்பிராய பேதம்‌ இருக்காது என்றும்‌, பார்ப்பனரல்லாத தலைவர்கள்‌ என்போர்களும்‌ பார்ப்பனரல்லாத பத்திரிக்கைகளும்‌ நமது கொள்கைகளைப்‌ பிரசீசாரம்‌ செய்யும்‌ என்றும்‌, நமக்கும்‌ போதிய ஓய்வு கிடைக்கும்‌ என்றும்‌, பல நண்பர்கள்‌ கருதினார்கள்‌. இப்போது -அவைகன்‌ ஒரு விநாடிக்‌ கனவுபோலவே முடிந்துவிட்டன. பார்ப்பனரல்லாதார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 467 கட்சியிலேயே யார்‌ யாரை நமது சமூக முன்னேற்றதீதிற்கும்‌ உண்மையான தேசு முன்னேற்றதீதிற்கும்‌ உதவி செய்வார்கள்‌ என்று எண்ணி இருந்தோமோ, அவர்கள்‌ எல்லோரும்‌ இப்போது காங்கிரஸ்‌ பேரில்‌ நாட்டம்‌ கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்‌. வஅரசியல்‌ புரட்டும்‌, தேர்தல்‌ பைதீதியமும்‌ மக்களை அவ்வழி இழுக்கிறது. கோவை தீர்மானமானது 6 யாரோ கரண்டொருவர்‌ காங்கிரசில்‌ சேர இஷ்டப்படுகிறவர்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டும்‌? என்று இருந்தாலும்‌, ஏறகீகுறைய பார்ப்பனரல்லாத பிரமுகர்கள்‌ யாவருமே அதில்‌ போய்ச்சேர தீர்மானித்‌துக்கொண்டதாகவே தெரியவருகிறது. இது நிற்க, காங்கிரசிலிருந்து புதிதாகச்‌ சிலர்‌ பார்ப்பனரல்லாத கட்சியில்‌ வந்து சேர்ந்து கிக்‌ கட்சிக்கு உதவி புரிவார்கள்‌ என்று எண்ணி இருந்தவர்கள்‌, மகாநாட்டின்‌: போது மாதீதிரம்‌ பொதுமகீகள்‌ மனம்‌ திருப்‌தியடையும்படி பேசினார்‌ களேயொழிய, அவரவர்கள்‌ ஊர்‌ போய்ச்‌ சேர்‌ நீதவுடன்‌ ¢ வேதாளம்‌ மறுபடியும்‌ முருங்கை மரதீதில்‌ ஏறிக்‌ கொண்டது ? என்பது போல்‌, பழையபடியே பார்ப்பனரல்லாத கட்சியை வைவதன்‌ மூலம்‌ பலனடைவதும்‌, நமது எதிரியைப்‌ புகழ்வதும்‌, 6 நான்‌ இன்னமும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியில்‌ சேரவில்லை? என்று சொல்லிக்கொள்ளுவ துமாய்‌ இருக்கிறார்‌ கன்‌. பார்ப்பன ரல்லாதார்‌ பத்திரிக்கைகளும்‌ கிக்‌ கட்சியை வைதால்தான்‌ நாட்டில்‌ தமக்குச்‌ செல்வாகீகு உண்டு என்று எண்ணும்படி ஆகிவிட்டதாகவே அறியக்கிடகீகின்றது. இவற்றைப்‌ பார்க்கும்போது, நாம்‌ இதுவரை என்னதான்‌ மகாநாடுகள்‌ கூட்டி இருந்தாலும்‌, எவ்வளவு தான்‌ பிரச்சாரங்கள்‌ செய்திருந்தாலும்‌, பொதுவாகவே பார்ப்பனரல்லாதாரில்‌ பல பிரபுகீ களுகீகும்‌, பொது வாழ்க்கையில்‌ இறங்கி இருப்பவர்களுக்கும்‌, பதீதிரிக்கைக்காரர்களுக்கும்‌ பார்ப்பனர்‌ களிடம்‌ உன்ன பயம்‌ இனியும்‌ நீங்கவில்லை என்றேதான்‌ சொல்லவேண்டி இருக்கிறது. உதாரணமாக; ¢ தமிழ்நாடு? பத்திரிக்கையின்‌ ஆசிரியர்‌ னீமான்‌ வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ கோவை மகாநாட்டிற்கு வந்து தனது அபிப்பிராயதீதைச்‌ சொல்லிப்‌ பார்ப்பனரல்லாதாருக்கு உழைக்கும்‌ கட்சி இதுதான்‌ என்பதை ஒப்புக்கொண்டு தானும்‌ இதில்‌ சேர்நீதுவிட்டதாக எல்லாரையும்‌ நம்பும்படியாகச்‌ செய்து--இவ்வளவும்‌ ஆனபின்‌ மறுபடியும்‌, * தமிழ்நாடு? பதீதிரிக்கையில்‌ இன்னமும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியை ஜஸ்டிஸ்‌ என்னும்‌ பேரால்‌ வைவதற்கு இடம்‌ வைதீதுக்கொண்டும்‌, அதற்கு ஏதேதோ வியாக்கியானம்‌ செய்துகொண்டும்‌, ¢ ஜஸ்டிஸ்‌ கட்சியாரோடு தேசியவாதிகள்‌ ஒருநாளும்‌ ஒத்துழைக்க முடியாது? என்றும்‌ ஒரேயடியாய்‌ எழுதிவிட்டார்‌. இவற்றைக்‌ கவனிக்கும்‌ போது, இதுவரையிலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியைப்பற்றி எப்படித்‌ தூற்றிவநீதாரோ அதே மாதிரிதான்‌ இப்போதும்‌ தூற்ற ஆரம்பிதீதிருக்கிறாரே அல்லாமல்‌, கோவை மகா நாட்டால்‌ ஜமான்‌ வரதராஜுலு நாயுடு அவர்களின்‌ நிலைமையில்‌ ஒன்றும்‌ மாற்றமில்லை. என்றே நினைக்கும்படி இருக்கிறது. ஜஸ்டிஸ்‌ அரசியல்‌ கொள்கையில்‌ இவருகீகுள்ள வித்தியாசம்‌ என்ன என்பதை எழுதி இருந்தால்‌ அது நன்றாய்‌ இருந்திருக்கும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியாரானாலும்‌ சரி, தென்னிந்திய நலவுரிமைச்‌ சங்கதீதாரானாலும்‌ சரி, அவர்கள்‌ உத்தியோகம்‌ ஏற்றுக்கொண்டிருந்த காலத்திலும்‌ னீமான்‌ வரதராஜுலு நாயுடுக்கு அக்‌ கட்சியினது அரசியல்‌ திட்டம்‌ பிடிக்கவில்லை; கவர்ணருடன்‌ சிநேகமாயிருந்த காலத்திலும்‌ அரசியல்‌ திட்டம்‌ பிடிக்கவில்லை] இப்போது உத்தியோகம்‌ பெற்றுக்கொள்ளுவதில்லை என்று தீர்மானிதீதிருப்பதும்‌ பிடிக்கவில்லை] கவர்னரிடம்‌ நம்பிக்கையில்லையென்று தீர்மானித்திருப்பதும்‌ பிடிக்கவில்லை. இனி இகீ கட்சி எப்படி நடந்து கொண்டால்‌ னுமான்‌ வரதராஜுலு நாயுடுக்குப்‌ பிடிக்குமோ, நமக்குத்‌ தெரியவில்லை. தவிரவும்‌, மேட்டூர்‌ புரட்டுகளைப்பற்றி மகாநாட்டில்‌ பேசும்போதும்‌, தீர்மானிக்கும்‌ போதும்‌ அதன்‌ ஆபாசங்களைப்‌ பற்றி ¢ ஜஸ்டிஸ்‌. ¢ திராவிடன்‌, * குடிஅரசு? ஆகிய வைகள்‌ கலம்‌ கலமாய்‌ எழுதி வரும்போதும்‌ பார்தீதுக்கொண்டு சும்மா இருந்த னீமான்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 468 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ வரதராஜுலு நாயுடு, திடீரென்று னீமான்‌ சரீ.சி.பி. அய்யருக்கு வகீகாலதீது வாங்கிக்‌ கொண்டார்‌ என்றால்‌, இதற்கு நாம்‌ என்னதான்‌ செய்து அவருக்கு உண்மை அறியும்படி செய்யமுடியும்‌ என்பது நமக்குப்‌ புரியவில்லை. Wordr கலியாணசுந்தர முதலியார்‌ அவர்களும்‌ இதே மனப்போக்கையே காட்டி இருக்கிறார்‌ என்றே சொல்லவேண்டி இருக்கிறது. * வகுப்புவா தமிட்டுக்கொண்டிருந்த ஐஸ்டிஸ்‌ கட்சியார்‌, காங்கிரசில்‌ நுழைய முன்‌: வந்துள்ளனர்‌! என்றும்‌, * ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ நேரிய நெஞ்சுடன்‌ காங்கிரசில்‌ சேர வேண்டும்‌? என்றும்‌, * சமுதாய சீர்திருதீததீதில்‌ பற்றுடைய ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌, நாட்டிலெழும்‌ அரசியல்‌ கட்சிக்கு இடையூறு செய்யாமல்‌ தன்னந்தனிபராய்தீ தமது தொண்டை நிகழ்தீதுவாரக? என்றும்‌ எழுதி இருப்பதிலிருந்தே அன்னாருடைய மனப்பான்மை வெளியாகிறது. ஜீமான்‌ ஆர்‌. கே. சண்முகம்‌ செட்டியாருடைய விளக்க உரையை னஜீமான்‌ முதலியார்‌ நன்றாய்க்‌ கேட்டுக்கொண்டிருந்கார்‌ என்பது அவரே ஒப்புகீ கொள்ளக்கூடிய விஷயம்‌. ஜீமான்‌ செட்டியாரவர்களது சொற்பொழிவில்‌ காங்கிரசுக்கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கும்‌ கொள்கையில்‌ வித்‌ தியாசமில்லை என்றும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி 3கட்கும்‌ சுயராஜ்யம்தான்‌ காங்கிரஸ்‌ கேட்கிறது என்றும்‌, காங்கிரஸ்‌ மற்ற வகுப்பாருக்குக (அதாவது மகமதியர்‌, கிறிஸ்‌ தவர்‌ களுக்கு) கொடுதீதி நக்கும்‌ வகுப்புவாரி உரிமையைத்தான்‌ gevgsh கட்சி கேட்கிறதென்றும்‌, இதற்குப்‌ பார்ப்பனர்களே முட்டுக்கட்டையாய்‌ இருக்கிறார்கள்‌. என்றும்‌ நன்றாய்‌ எடுத்துரைத்தார்‌. இவைகளை நன்றாய்‌ அறிந்தும்‌, தெரிந்தும்‌, மனப்‌ பூர்வமாகதீ தானும்‌ ஒப்புக்கொண்டும்‌, தனது வாக்காலேயே இன்னும்‌ என்ன என்னவே பேசியும்‌ ஆனபின்‌, ஊர்போய்ச்‌ சேர்‌ நீதவுடன்‌, ¢ ஜஸ்டிஸ்‌ கட்சி வகுப்புவாதக்‌ கட்சி; அரசியல்‌ கிளர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது? என்‌ கற பழைய பல்லவியைப்‌ பாடிக்‌ கொண்டு இருப்பாரானால்‌, இதற்கு நாம்‌ என்ன சமாதானம்‌ சொல்லக்கூடும்‌ ₹ தேசிய அரசியல்‌ கிளர்ச்சிக்கோ, அல்லது காங்கிரஸ்‌ அரசியல்‌ ந8ளர்ச்சிக்‌3கா, ஜமான்‌ முதலியார்‌. போற்றும்‌ மகாத்மாவின்‌ அரசியல்‌ கிளர்ச்சிக்கோ ஜஸ்டிஸ்‌ கட்சி எந்த விததீதில்‌ மற்ற கட்சிகளைவிட இடையூறு செய்யக்‌ கூடியதாக இருக்கிறது? இடையூறு செய்த கட்சிகளுக்‌ கெல்லாம்‌, தான்‌ ஆக்கமளித்ததை அடியோடு மறந்துவிட்டு இப்படிப்‌ பேசவும்‌ எழுதவும்‌ ஆரம்பித்‌ துவிட்டால்‌ நாம்‌ என்ன செய்யலாம்‌ 1 இதுபோல$வ, னீமான்‌ ஜோசப்பு போன்ற சில காங்‌ ரஸ்காரர்கள்‌ என்பவர்களும்‌ இதே பாடத்தைப்‌ படிக்கிறார்கள்‌, முன்‌ எழுதியது போலவே, பல பார்ப்பனரல்லாத பதீதிரிக்கைகளும்‌ அப்படியே நடக்கிறார்கள்‌. ஆகவே, இக்‌ கட்சிக்கு உள்ள கஷ்டம்‌, * காங்கிரஸ்‌ பார்ப்பனரல்லாதார்‌ களுக்குள்ளாகவே எவ்வளவு ஏற்படுகிறது என்பதும்‌, கக்‌ கட்சிக்காரர்‌ பலர்‌ காங்கிரஸ்‌ அரசியல்‌ வேஷம்‌ போட்டுக்‌ கொண்டதின்‌ பயனாய்‌ ஏற்படக்கூடிய கஷ்டம்‌ எவ்வளவு என்பதும்‌ நாம்‌ எடுத்துக்கூற வேண்டியதில்லை. ஆகவ, கோவை மகாநாட்டால்‌ நமக்கு நன்மை ஏற்பட்டதா, தீமை ஏற்பட்டதா என்பதை ஒருவாறு இதன்‌ மூலம்‌ ஊகிதீதுக்கொள்ளலாம்‌. இது எப்படியோ இருக்கட்டும்‌. இனிச்‌ செய்யவேண்டியது என்ன! தலைவர்கள்‌ என்போர்களை நம்புவதில்‌ பயனில்லை. பாமர மக்களுக்குப்‌ பகுதீதறிவு வரும்வரை தலைவர்கன்‌ யோக்கியமாய்‌ நடந்துகொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்‌. எனவே, நாம்‌ இனி பாமர மகீகளைக்‌ கண்விழிகீகச்‌ செய்யவேண்டிய ஏற்பாடுகள்‌ செய்யவேண்டியதுதான்‌ உண்மையான தொண்டு. இதற்காகப்‌ பிரயாசைப்பட போதிய பத்திரிக்கை இல்லை$ ஆட்கள்‌ இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான்‌ வேண்றும்‌. நமது நாட்டில்‌ உள்ள. பத்திரிக்கைகள்‌, ஆட்கள்‌, பணம்‌ ஆகியவை எல்லாம்‌ போலி தேசியதீதிற்கும்‌, போலி சுயராஜ்யத்திற்கும்‌ உபயோகப்படுத்தும்‌ முறையில்‌ வாழ்வும்‌, கீர்த்தியும்‌ அடையக்‌ கூடியதாய்‌ இருக்கிற3தயொழியட, உண்மைக்கு உதவகீகூடியதாக ஒன்றும்‌ தென்படுவது www.thamizham.net - Free £ book 14௦ 3011 * இயக்கங்கள்‌... _ 469 இல்லை: புதிதாக நமக்கு ஆட்களும்‌, பதீதிரிக்கை உதவிகளும்‌ சேர்க்கத்‌ தக்க காலம்‌ இன்னும்‌ வரவில்லையானாலும்‌, கிருப்பவைகளையாவது நமுவவிடாமல்‌ வைதீதிருக்க வேண்டியதாக இருக்கிறது. சுமார்‌ 4 மாததீதிற்குமுன்‌ ¢ குடிஅரசு'வில்‌, ¢ வேண்டுகோள்‌ ! என்னும்‌ தலைப்பின்‌: கீழ்‌ ¢ திராவிடன்‌ ! பத்திரிக்கையை ஒப்புக்கொள்ளலாமா என்பதைப்பற்றி ஒரு தலையங்கம்‌ எழுதி இருந்ததும்‌, அதற்கு 500 கனவான்கள்வரை பதில்‌ எழுதி இருந்ததும்‌, அவர்களுள்‌ 20 கனவான்கள்‌ தவிர மற்றவர்கள்‌ ஒப்புக்கொள்ளும்படி எழுதி இருந்ததும்‌ அதன்பேரில்‌ சில நிபந்தனைகளின்படியானால்‌ ஒப்டுக்கொள்ளக்‌ கூடுமென்று * தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தா?ருக்கு நாம்‌ எழுதி இருப்பதாக எழுதி இருந்ததும்‌ வாசகர்களுக்கு ஞாபகம்‌ இருக்கலாம்‌. அந்‌ நிபந்தனைகளுக்கு இப்போதுதான்‌ பதில்‌ வந்திருக்கிறது. நமது நிபந்தனைகளில்‌ முக்கியமானது என்னவென்றால்‌, ¢ குடிஅரசு? கொள்கைப்படி தான்‌ £ திராவிடனை£யும்‌ நடதீத முடியும்‌ என்றும்‌, தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கதீதையோ, ஜஸ்டிஸ்‌ கட்சியையோ அதன்‌ கொள்கைகளையோ அதில்‌ சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர களையோ கண்டிக்க வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டால்‌ கண்டிக்கத்‌ தகுந்த உரிமை நமக்கு இருக கவேண்டுமென்றும்‌ எழுதி இருந்தோம்‌. நாம்‌ ஏன்‌ அப்படி எழுத நேர்ந்தது என்றால்‌, * தேசியம்‌ 7, * சுயராஜ்யம்‌? என்கிற அரசியல்‌ புரட்டுப்‌ பதங்கள்‌. அக்‌ கட்சிக்‌ கொள்கையிலும்‌ கலந்திருப்பதால்‌ அதன்மூலம்‌ அக கட்சியார்களும்‌ காங்கிரஸ்‌. காரர்களைப்போல்‌, பாமர மக்களை ஏமாற்றும்‌ வழியில்‌ செல்ல நேரிட்டால்‌--அம்‌ மோசத்தி லிருநீ.து பாமர மக்களைத்‌ தப்புவிக்க யார்யாரை அல்லது எந்த எந்தக்‌ கட்சியைக்‌ கண்டிக்க வேண்டுமானாலும்‌ கண்டிப்பதற்கு பாதீதியமிருக்கவும்‌, மற்றும்‌ சர்க்கார்‌, அதன்‌ உத்தியோகஸ்தர்கள்‌ முதலியவர்‌ களைக்‌ கண்டிக்கும்‌ விஷயதீதில்‌ எவ்விதத்‌ தடையும்‌ இருக்கக்கூடாது என்பதற்காகவு?ம அந்‌ நிபந்தனை எழுதி இருந்தோம்‌. அதற்குப்‌ பதில்‌ எழுத ஏறக்குறைய 2 மாதத்திற்கு மேலாகிவிட்டது. இப்போது பதில்‌ வந்திருக்கிறது. அதாவது, நம்மிஷ்டம்‌3பால்‌ நடத்த ஒப்புக்‌ கொண்டதாகவும்‌, காலவரையறை கட்டியும்‌ ஒரு தீர்மானம்‌ நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள்‌. ஆகஸ்டு முகல்‌ தேதி முதலே ஒப்புக்கொள்ளும்படியாகவும்‌ அதில்‌ குறிப்பிட்டிரு க்கிறார்கள்‌. அனேக நண்பர்கள்‌ ஒப்புக்கொள்ளும்படியும்‌ எழுதியிருக்‌ கிறார்கள்‌. இரண்டொரு கனவான்கள்‌ மாதம்‌ ஒன்றுக்கு 100, 200 ரூபாய்‌ வீதம்‌ நஷ்டதீ திற்கு உதவுவதாகவும்‌ வாக்களிதீதிருக்கிறார்கள்‌. சில நண்பர்கள்‌ ஊதியம்‌ எதிர்பாராமல்‌ தொண்டு செய்வதாகவும்‌ ஒப்புக்கொள்ளுறொர்கள்‌. ஆகவே, இந்‌ நிலையில்‌ சிறிது காலத்திற்காவது நாமும்‌ அதை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம்‌ என்பதாகவே கருதுகிறோம்‌. ஆனால்‌, முக்கிய நண்பர்களில்‌ பலர்‌ உடல்‌ நிலையைக்‌ கவனிக்கும்படிகீகும்‌, ஓய்வெடுத்துக்கொள்ளும்படிக்கும்‌ எழுதி வருகிறார்கள்‌. ஓய்வெடுதீ துக்கொள்ள வேண்டிய சமயம்‌ நமக்குத்‌ தெரியும்‌. அதாவது, நமது தொண்டு நாட்டிற்கு உதவாது என்றாவது, நமது தொண்டை நாட்டார்‌ ஏற்பதில்லை என்றாவது நமகீகுதீ தெரிந்தால்‌ யாரிடமும்‌ சொல்லாமல்‌ நாமே ஓய்வெடுதீதுக்கொள்‌ வோம்‌, அதுவரை எடுத்துக்கொள்ளும்‌ ஓய்வு உண்மையான ஓய்வாகாது: அப்படிக்‌ கடுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டுதான்‌ ஆகவேண்டும்‌ என்கிற முறையில்‌ நமது உடலில்‌ கோளாறு ஒன்றும்‌ இிதுசமயம்‌ இல்லை என்றே நினைக்கிறோம்‌. தனவைசிய நாட்டுச்‌ சுற்றுப்பிராயணம்‌ முடிந்தவுடன்‌ ஒரு வாரதீதில்‌ ¢ திராவிடன்‌ ? சம்பந்தமான ஏற்‌ பாடுகளைப்பற்றி முடிவு செய்ய சென்னைக்குச்‌ செல்லவேண்டியிருக்கும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 470 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இது விஷயத்தில்‌ நண்பர்கள்‌ தங்கன்‌ தங்கள்‌ கடமையைச்‌ செய்யத்‌ தவறமாட்டார் கள்‌ என்றே முடிவு செய்துகொண்டு இம்‌ முயற்சியில்‌ ஈடுபடலாமெனக்‌ கருதுகிறோம்‌. [அரசு !-தலையங்கம்‌--17-7-1927] 8. சமூகத்‌ தொண்டும்‌ அரசியல்‌ தொண்டும்‌ சமூகத்‌ தொண்டிற்கும்‌ அரசியல்‌ தொண்டிற்கும்‌ ஒன்றுக்கொன்று சம்பந்தம்‌ வைதீதுக்கொள்வதான கு, சமூகத்‌ தொண்டிற்குப்‌ பெருத்த கேடு சூழ்வதேயாகும்‌. அரசியல்‌ தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும்‌, அது அவ்வளவும்‌ புரட்டு என்பது8ம நமது அபிப்‌.]ராயம்‌. அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில்‌ வெல்லலாமானாலும்‌, அது கண்டிப்பாய்‌ இது சமயம்‌ நமது நாட்டிற்குத்‌ தேவை கல்லாதது என்றே சொல்லுவோம்‌. நம்மைப்‌ பொறுதீ தவரை அரசியலின்‌ பேரால்‌ கூடுமானவரை உழைதிதாகிவிட்டது; கண்டது ஒன்றும்‌ இல்லை) அயோக்கியர்களை உற்பதீதி செய்து அவர்கள்‌ மூலம்‌ பாமர: மக்களை வஞ்சிக்கச்‌ செய்ததே அல்லாமல்‌ வேறில்லை. அதை விட்டுதிதொலைதீது சமூகத்‌ தொண்டையே பிரமாதமாய்க்‌ கருதி அதற்கென உழைத்தாலும்‌, அடிக்கடி சறுக்கி அரசியல்‌ சேற்றில்‌ விழவேண்டியதாக நேரிட்டுவிடுகிறதுஃ இது சகவாசதேோஷமே அல்லாமல்‌ வேறல்ல, இனி, அடியோடு அரசியலை உதறித்‌ தசளிவைதீதுவிட்டு, மக்களுக்கும்‌ அதிலிருகீ கும்‌ மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத்‌ தொண்டில்‌ சேர்தீது, எல்லா மக்களையும்‌ சமூகதி தொண்டையே பிரதானமாய்க கருதும்படி செய்வதை முக்கிய தொண்டாக வைதீதுக்கொள்வதே நலமெனதீ தோன்றுகிறது. அரசியலில்‌ உழல்வதென்ப க என்றைக்கு இருந்தாலும்‌ ஒரு நாளைக்காவது மனிதன்‌ தன்னை அயோகீகியனாகீகிக்‌ கொள்ளாமலும்‌, தேசத்தையும்‌, சமூகத்தையும்‌ காட்டிக்‌ கொடுக்காமலும்‌ வாழும்படி செய்யவே முடியாது. கி.து நமது அனுபோகத்திற்குச்‌ சந்தேக மறதி தோன்றிவிட்டது. சமூகத்‌ தொண்டில்‌ ஈடுபட விருப்பமுன்ளவர்களிடம்‌ அரசியலில்‌ அதைக்‌ கண்டிப்‌ பதைதீதவிர, மற்றபடி, தான்‌ 3நரில்‌ கலப்பதில்லை என்பதாக உறுதி பெற்றே அவர்களைச்‌ சேர்தீதுக்கொள்ளும்‌ நிபந்தனை ஏற்படுத்தினால்தான்‌ சமூகத்‌ கொண்டு இயக்கம்‌ நடை பெறவும்‌, வெற்றி பெறவும்‌ மூடியுமென்றே இப்போது நினைக்கவேண்டி இருக்கிறது பார்ப்பனரல்லாதார்‌ இயக்கமாகிய ¢ தென்‌ இந்திய நல உரிமைச்‌ சங்க இயக்கம்‌ கூட இரண்டு பாகமாய்ப்‌ பிரிக்கப்பட்டால்‌ நன்மையென்றே கருதுகி 8றாம்‌, ¢ தென்‌ இந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ ? என்பதாக உன்ளதில்‌ அரசியல்‌ கலந்த சமூக யல்‌, தனி சமூகஇயல்‌ ஆகிய இரண்டு பேருக்கும்‌ இடமூன்ளதாக்கி, தனி சமூக இயல்காரரும்‌ அதனுள்‌ ஒரு உன்‌ பிரிவாக ஒன்றை ஏற்படுதீதிவிடுவது நலமென்றே தோன்றுகிறது. ஏனெனில்‌, அரசியல்‌ கலந்தால்‌ எப்பேர்ப்பட்டவர்‌ களும்‌ நாணயக்‌ குறைவுள்ளவர்களாகப்‌ போய்விடுகிறார்கள்‌. மகாதீமா இயக்கம்கூட எவ்வளவு புனிதமானதாகக்‌ கருதப்பட்டும்‌, அரசியலில்‌ பகிஷ்‌. காரத்தை மாற்றி சட்டசபை உள்‌ நுழைவை அது என்று ஏற்றதோ அன்றே விதிவிலக்கு இல்லாமல்‌ எல்லோரிடமும்‌ நாணயக்‌ குறைவு தோன்ற வழி ஏற்பட்டுவிட்டது. ஆதலால்‌, அதைப்பற்றி இனி சந்தேகப்பட வேண்டியதில்லை. தனி சமூகத்‌ தொண்டில்‌ ஈடுபட்ட வர்கள்‌ தங்களுக்கு இஷ்டமான ஓர்‌ அரசியல்காரரை ஆதரிக்கலாம்‌ ] ஆதரிக்க சிபாரிசு www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 47 செய்யலாம்‌ என்பதாக ஒரு கொள்கை மாதீதிரம்‌ வைத்து கொள்வதானால்‌ (அதுவும்‌ அவசி யமானால்‌--அதாவது, நமது சமூகத்‌ தொண்டுக்கு அரசியலால்‌ தடை ஏற்படாமல்‌ இருக்கும்‌ அளவுக்கு அனுகூலம்‌ கிடைக்கும்போல்‌ இருந்தால்மாதீதிரம்‌) வைத்துக்கொள்ளலாம்‌. நமது அபிப்பிராயதீதில்‌, ¢ அந்த அளவுகூட ! மணிதனை அயோக்கியனாக்கிவிடும்‌ என்றே பயப்‌ படவேண்டி இருக்கிறது. இந்த அடுதீ.துவரும்‌ ஆகஸ்ட்‌ மாததீதிய சட்டசபைக்‌ கூட்டம்‌ முடிந்தவுடன்‌, வட ஆர்க்காடு ஜில்லாவில்‌ கூடப்போகும்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஜிஃலா மகாநாட்டில்‌ இதைப்‌ பற்றித்‌ தொண்டர்கள்‌ ஒன்றுகூடி யோசிக்க வேண்டும்‌ என்றே நினைச்கிறோம்‌. அதாவது, எநீதவிததீதிலாவது சர்க்கார்‌ சம்பந்தமான உத்தியோகம்‌, கவுரவ உத்தியோகம்‌, பட்டம்‌, பதவி முதலியவைகள்‌ எதுவும்‌ இல்லாதவர்களும்‌, கினி பெற்றுக்கொள்வதில்லை என்கிற உறுதி உள்ளவர்கள்‌ மட்டுமடங்கியதாகவே ஓர்‌ அமைப்பை ஏற்படுத்தவேண்டும்‌ என்பதே தான்‌, அந்தப்படி இல்லாமல்‌, என்னதான்‌ வேலை செய்தாலும்‌ பயன்‌ பெறமுடியாது. ¢ தாடி நெருப்புப்‌ பற்றி எரிகிறபோ.ு அதில்‌ சுருட்டுப்‌ பற்றவைக்க நெருப்புக்‌ கேட்பது போல்‌ ? நமது மக்களின்‌ நிலை தாழ்நீது கிடப்பதையும்‌, சிறுமைப்படுவதையும்‌, அயோக்கி யர்களால்‌ கொடுமைப்‌ படுதீதப்படுவதையும்பற்றிக்‌ கொஞ்சமும்‌ கவலை எடுத்துக்கொள்‌: ளாமல்‌ இருப்பதோடு, மற்றவர்கள்‌ யாராவது கவலை எடுத்துக்கொண்டாலும்‌ அதையும்‌ கெடுத்து, அதன்‌ பலனையும்‌ தங்கன்‌ சுயநலத்திற்கு உபயோகப்படுதீதிக்கொள்ளப்‌ பார்க்கிற மக்களை வைத்துக்கொண்டு என்னதான்‌ செய்யமுடியும்‌ என்பது நமக்குத்‌ தோன்றவில்லை. ஆகையால்‌, உண்மைத்‌ தொண்டர்கள்‌ இது விஷயத்தில்‌ போதிய கவலை எடுதீது, யோசித்து இது சமயம்‌ ஒரு முடிவுக்கு வரவேண்டியது மிகவும்‌ அவசியம்‌ என்பதை இப்போதே தெரியப்படுதீதிக்கொள்ளுகிறோம்‌. இதில்‌ சேர வருகிறவர்‌ கல்‌ கூடுமானவரை கஷ்டம்‌ அனுபவிக்க நேர்‌ ந்தால்‌ அனுபவிக்கவும்‌, தியாகம்‌ செய்யவும்‌, தன்னலத்தை அடி யோடு மறுக்கவும்‌ தயாராய்‌ இிருக்கவேண்டுமென்பதையும்‌ ஞாபகத்தில்‌ வைத்துக்கொண்டு யோசிக்க வேண்டும்‌ என்பதையும்‌ தெரியப்படுதீதிக்கொள்ளு£றோம்‌. [6 குடிஅரசு 8-தலையங்கம்‌--31.7-1927] 8. மனுதர்ம சாஸ்திரம்‌ சுயமரியாதை இயக்கம்‌ ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்தீதாலும்‌ மனிதரின்‌ இயமரியாதைகீகு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில்‌ கவலையும்‌ ஊக்கமும்‌ அதிகமாகி வருகின்றது. சென்னை, வட ஆர்க்காடு, சேலம்‌, தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில்‌ கூடிய பல மாநாடுகளில்‌ ¢ வருணாசிரம தர்மம்‌? என்பதைக்‌ கண்டிதீ திருப்பதுடன்‌ அதற்கு ஆதாரமான புதீதகங்களையும்‌ பகிஷ்கரிக்கதி தீர்மானங்களும்‌ ஏகமன தாய்‌ நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மாநாடுகள்‌ மனுதர்ம சாஸ்‌ திரத்தை நெருப்பில்‌ கொளுதீதி சாம்பலைக்‌ கரைதீதும்‌ வந்திருக்கின்‌ றன. - அரசாங்கமும்‌, சட்டசபை மெம்பர்‌ களும்‌ இதைக்‌ கவனிக்கப்‌ போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயி நக்குமானால்‌, இம்‌ மாதிரிப்‌ பெரும்பான்மை யான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ உணர்சீசியை மதித்து, அரசாங்கமானது வருணாசிரம தருமத்தை அழித்துச்‌ சட்டம்‌ செய்திருக்கும்‌ என்பதோடு, வருணாசிரமக்‌ கொள்கைக்‌ காரர்களைக்‌ கழுவிலேற்றி இருக்‌ தம்‌ என்றுகூடச்‌ சொல்லலாம்‌. ஏனெனில்‌, நிரபராதிக ளான 8,000 சமணர்கள்‌ கழுவேற்றப்பட்டதாகச்‌ சொல்லும்‌ சரித்திரத்தைப்‌ பார்க்கும்போது, இவ்வளவு அக்கிரமமும்‌--ஜீவ காருண்யமும்‌ அறிவும்‌ அற்ற தன்மையான கொடுமையை சகித்துக்கொண்டிருக்கும்‌ என்று யாரும்‌ சொல்லமுடியாது. நமது அரசாங்கங்கள்‌ பழைய www.thamizham.net - Free £ book 14௦ 3011 472 பெரியார்‌ ஈ.வெ, ரா சிந்தனைகள்‌ கால அரசாங்கங்களைப்‌ பின்பற்றிக்‌ கழுவேற்றாவிட்டாலும்‌, சட்டம்‌ மூலம்‌ கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம்‌. ஒருக்கால்‌, *மத விஷயதீதில்‌ தலையிட முடியாது? என்று சொல்வார்களானால்‌. மத விஷயங்களையாவது கவனித்து மதத்தில்‌ எப்படிச்‌ சொல்லியிருக்‌ கன்றதோ, யார்‌ யாருக்கு என்னென்ன வேலை இடப்பட்டிருக்கின்‌றதோ, யார்‌ யாரின்‌ நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்‌றதோ, அப்படியாவது நடக்கும்படி பார்க்கவேண்டும்‌. அப்படியுமில்லாமல்‌ இப்படியுமில்லாமல்‌-பார்ப்பானும்‌, வெள்ளைக்‌ காரனும்‌ மாத்திரம்‌ பிழைக்க என்னென்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படியெப்படி சீர்திருத்தம்‌ செய்யவேண்டுமோ, அப்படியெல்லாம்‌ சூழ்ச்சிகள்‌ செய்துகொண்டு, மதவிஷ யத்தில்‌ பிரவேசிக்க மாட்டோம்‌ ! என்று சொல்லுவது வடிகட்டின அயோக்கியதீதனமாகும்‌ என்றே சொல்லுவோம்‌. இச்‌ சூழ்ச்சிகளைப்‌ பார்க்கும்போது, இதுசமயம்‌ முகம்மதிய அரசாங்கதீதில்‌ வாழும்‌ யோக்கியதையாவது நமகீகுக்‌ கிடைக்காதா என்று ஆசைப்படவேண்டியதாயிருக்‌ கிறத. காரணமென்னவென்றால்‌, ஒரு அரசு விசாரணைக்கு ¢ குர்‌ஆனை? ஆதாரமாகக்‌ காட்டியபோது; வீரர்‌ கமால்‌ பாஷா அவர்கள்‌, அது அக்காலத்திய சங்கதி; இக்‌ காலதீ திற்குச்‌ செல்லாது? என்று கூறி அதைப்‌ பிடுங்‌8 வீசி எறிந்தாராம்‌. குர்‌ ஆன்‌ வாச்கியம்‌ செதுக்கப்பட்ட கிடங்களையெல்லாம்‌ அழிதீது, ¢ சுயமரியாதையையும்‌. கைதீதொழிலையும்‌ கவனியுங்கள்‌ ? என்று எழுதி வருகிறாராம்‌. மகம்மதியரைவிட வெள்ளைக்காரர்களுக்கும்‌, பார்ப்பனர்களுக்கும்‌ மதபக்தி இருக்கின்றது என்று சொன்னால்‌ எந்தப்‌ பைத்தியக்கார ரசவது நம்பமுடியுமா என்று கேட்கின்றோம்‌. எனவே, மதம்‌ என்கின்ற புரட்டுகளையும்‌, மதாசீசாரியர்கள்‌ என்கின்ற அயோக்‌ கியர்‌ களையும்‌ சாஸ்திரம்‌, வேதம்‌, புராணம்‌ என்பவைகளாகிய அகர்ம, அக்கிரம ஆதாரங்‌ களையும்‌ குருட்டுத்தனமாய்‌ பின்பற்றாமல்‌, அன்பு, ஜீவகாருண்யம்‌, அறிவு, சதீதியம்‌ என்பவைகளை ஆதாரமாய்‌ வைத்து, அவற்றிற்கு விரோதமாய்‌ உள்ளவைகளையெல்லாம்‌ அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியதுதான்‌ பகுத்தறிவுள்ள மனிதன்‌ கடமை. ஆதலால்‌, அதற்கு ஒவ்வொருவரும்‌ முற்பட வேண்டும்‌ என்று வேண்டிக்கொள்ளு கின்றோம்‌. [* குடி. அரசு தலையங்கம்‌--4-12-1927] 10. சுயமரியாதைச்‌ சங்கக்‌ கொள்கை அக்கிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே 1 இயக்கம்‌ ஆரம்பித்த காலத்தில்‌ எதிர்ப்புகள்‌ பலமாய்‌ கிருந்தன. இன்னும்‌ வரும்‌ ஏகமன தாய்‌ ஆதரிப்பதாகவும்‌ எண்ண இடமில்லை, இன்னும்‌ அதிக எதிர்ப்பு இருக்கிறத ஆயினும்‌, இத்தகைய மகான்கள்‌ எல்லாம்‌ ஆதரவு அளித்து வருவதைக்‌ கண்டு மிகதீ தைரியம்‌ கொண்டு அந்த ஆசையின்‌ மீது அவர்கள்‌ உரையை நான்‌ சகித்துக்‌ கொண்டிருக்‌ கிறேன்‌. *குடிஅரசை3ப்‌ பற்றி மிக அதிகமாகக்‌ கூறினார்கள்‌, அதிலுள்ள குற்றமெல்லாம்‌ எனக்குக்‌ தெரியும்‌. அதிலுள்ள மெல்லினம்‌, வல்லினம்‌ போன்ற பல இலக்கணப்‌ பிழை களும்‌ மற்றும்‌ பல பிழைகளும்‌ எனக்குதீ தெரியும்‌. இதற்காக நான்‌ இலக்கணம்‌ கற்கப்‌ போவதில்லை. இவ்வாண்டுவிழாவிற்கு எனக்குக்‌ கடிதம்‌ அனுப்பாவிட்டாலும்‌ எங்கிருந்‌ தாலும்‌ ஓடிவநீ.துவிடுவேன்‌. இந்த நிலையில்‌ உன்ள என்னையே தலைமை வகிக்க வேண்டும்‌ என்று கூறியது எனது பாக்கியமேயாகும்‌. சிறந்த கல்வியாளர்களும்‌, பெரியார்‌ களும்‌ நிறைந்த இந்த ஜில்லரவாசிகளான நீங்கள்‌ இவ்வியக்கதீதுக்கு இவ்வளவு ஆதரவைக்‌ காட்டி வருவதைக்‌ கண்டு நான்‌ பெருஃமயடைவது மட்டுமல்ல; மற்ற ஜில்லரவாசிகளும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 பிப U et o மெல்‌ 2 = S அட்‌ ன்‌ s it s கல்வ 2 மக்கான்‌ o ங்கம்‌ 18-12-1927-ல்‌ ¢ @ அரசு! முகப்பு அட்டை. தலைப்பில்‌ “கதர்‌ வாழ்க! என உள்ளது. “ ஆசிரியர்‌ 8 ஈ. வெ. இராமசாமி நாயக்சர்‌ ? என வெளியிடப்பட்ட கடைசி குடி அரசு? கதழ்‌ டிவி v e (25 : Akl e 7 kT அம்கிளும்வ “ ஆசிரியர்‌ 8 ஈ, வெ. ராமசாமி 1 எனக்‌ குறிக்கத்‌ தொடங்கிய * குடி அரசு ? முதல்‌ இதழ்‌ - குடி அரசு ? 25-12-1927 ) www.thamizham.net - Free E book No 3011 ஜ்யக்கங்கள்‌ 479 உங்களுடன்‌ போட்டியிட்டுத்‌ தங்கள்‌ சுயமரியாதையை நிலை நிறுத்துவதில்‌ கண்ணுங்‌ கருத்துமாய்‌ இருக்கவேண்டுமென்று மீண்டும்‌ அறிவித்துக்‌ கொள்ளுகி3 றன்‌, சுயமரியாதை இயக்கம்‌ என்றோரியக்கம்‌ தோன்றிய காலத்தில்‌ பலர்‌ பலப்‌ பலவித மாகப்‌ பேசிய கண்டு. ஆனால்‌, கிட்பொழுதோ எனில்‌ இவ்வியக்கம்‌ பலரால்‌ ஒப்புக்‌ கொள்ளக்கூடியதாயும்‌, மனிதனுடைய வாழ்விற்கும்‌, உலக முற்போக்குக்கும்‌ இன்றி யமையா ததென நம்‌ மக்கள்‌ உணர ஆரம்பித்‌ துவிட்டார்கள்‌ ) உணர்ந்தும்‌ வருகிறார்கள்‌. கீப்பொழுது எங்கு பார்த்தாலும்‌ சுயமரியாதைப்‌ பேச்சாகதீதானிருக்கிறது. நம்நாடு, வெளி நாடு தேசியவா திகளுங்கூட இச்‌ சுயமரியாதை என்னும்‌ வார்தீதையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்‌. னீ காந்தீயும்‌ சுயமரியாதையைப்பற்றிப்‌ பேசுகிறார்‌. ஒத்துழை யாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்‌ பத்திற்காக அல்ல. இப்‌ பொழுது கொஞ்ச காலமாய்‌ நமது நாட்டில்‌ நடந்து வரும்‌ ராயல்‌ கமிஷன்‌ ! பகிஷ்காரம்‌ என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைகீகாகதீதான்‌ என்று சொல்லுகிறார்கள்‌. 82 சுயமரியாதைச்‌ சங்கத்தின்‌ கொள்கைகள்‌ என்னவெனிலோ பிறப்பில்‌ உயர்வு- தாழ்வு இல்லை என்பதும்‌ மேல்‌-கீழ்‌ இல்லை9யன்பதுந்தானேயல்லாமல்‌, எந்தத்‌ தனி வருப்பாரையும்‌ இழிவுபடுத்த அலை என்பதையும்‌ உங்களுக்கு நினைப்பூட்டுகின்றேன்‌, ஆனால்‌, நம்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தங்களை ஏதோ துவேஷிப்பதாகக்‌ கூறி வருகின்றனர்‌. இது அக்‌ கூட்டத்தாரின்‌ யோசனையின்மையாலும்‌ பேராசையாலு?ம ஏற்படுகிறது. ஆனால்‌, தாழ்த்தப்பட்டவர்‌ களென்று சொல்லிக்கொள்ளுகிறவர்கட்கும்‌, நமக்குச்‌ சுயமரி யாதைத்‌ ததீதுவம்‌ எவ்வளவு பயன்படுகிற3தோ அதைவிட அதிகமாகப்‌ பார்ப்பனர்களுக்கும்‌ பயனுண்டு பார்ப்பனரல்லாதாராகிய நாம்‌ எவ்வளவு தூரம்‌ இழிவுபடுத்தி வைக்கப்பட்டிருக்‌ கின்றோமோ, அந்த அளவுக்குப்‌ பார்ப்பனர்கள்‌ சுகம்‌ அனுபவித்து வருகிறார்கள்‌; நாம்‌ எவ்வளக்கெவ்வளவு கொடுமையுடன்‌ நடத்தப்படுகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்‌ களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின்‌ பயனால்‌ நாம்‌ மாத்திரம்‌ சுகப்‌ படுவதல்லாமல்‌, பார்ப்பனர்‌ களும்‌ இதன்‌ மூலமாய்தீ தங்கள்‌ இழிவைப்‌ போக்கிக்கொள்ளுகிற வர்களாகிறார்கள்‌. உண்மையாக, கடைசியாக இவ்வியக்கதீதால்‌ யாருக்காவது கடுகள வாவது துன்பம்‌ நேரிடுமா என்றால்‌, இல்லவே இல்லை. ஆனால்‌, அரசாங்கதீதாருக்கு மாத்திரம்‌ கொஞ்ச காலத்திற்குக்‌ கஷ்டமாகதீதானிருக்கும்‌. ஏனெனில்‌, நாம்‌ எவ்வளவு தூரம்‌ சுயமரியாதையற்றிருக்கின்‌ றாமோ, அவ்வளவு தூரம்‌ நம்மை இழிவுபடுத்தி, நம்மிட மிருந்து அவர்கள்‌ கொள்ளையடி தீதுக்கொண்டு இருப்பார்கள்‌. ஆனால்‌, அவர்களுக்குக்‌ கூட கொஞ்ச நாளைக்குள்‌ புத்தி வந்துவிடும்‌. எத்தனை நாளைக்குத்தான்‌ தூங்குகிறவன்‌: தொடையில்‌ கயிறு திரிப்பதென்று சொல்லி விலகிவிடுவார்கள்‌, பின்னர்‌ யாவரும்‌ சுதந்தரதி துடன்‌ வாழலாம்‌. ஆகையால்‌, வாழ்க்கையின்‌ பரிசுத்தத்திற்கும்‌ சுயமரியாதையே அடிப்‌ படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள்‌ கூறியிருக்கின்‌ றனர்‌. ¢ கவரிமான்‌ ஒரு மயிரிழப்பின்‌ உயிர்‌ வாழாது! என்பதுபோல்‌, மனிதனும்‌ மானம்‌ இழந்து வாழ விரும்பான்‌. ஆகவே, நம்‌ மானத்தை நாம்‌ காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால்‌, மனித தன்மையோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால்‌ சுயமரியாதைதான்‌ வேண்டற்பாலதுஃ [திருநெல்வேலியில்‌, 28-11-1927-ல்‌ சொற்பொழிவு--* குடி அரசு? 44-12-1927] 11. சய மரியாதை சுயமரியாதை இயக்கம்‌ தோன்றிச்‌ சுமார்‌ மூன்று வருஷ காலதீதிற்குன்‌ தமிழ்‌ நாட்டில்‌ அது அனேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும்‌ இழுத்திருப்பதாடு, இவ்வியக்க விஷயமாய்‌ அனேகரைக்‌ கூர்‌ நீது கவனிக்கும்படிக்கும்‌ கவலைப்படும்படிக்கும்‌ செய்து வந்திருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது 4686-60 www.thamizham.net - Free £ book 14௦ 3011 474 பெரியார்‌ ஈட வெ. ரா. சிந்தனைகள்‌ இந்த இயக்கம்‌ ஆரம்பமானது முதல்‌ இதற்கு அனேக ததீதுக்கள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக வந்துகொண்டு இருந்தாலும்‌, ஒருவாறு அவ்வளவையும்‌ சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும்‌ மறுக்க முடியாது. இதற்கு உதாரணம்‌, இவ்வியக்க ஆரம்பகாலத்தில்‌ காங்கிரஸ்‌, இதைத்‌ துவேஷ இயக்க மென்றும்‌, பிறகு டார்‌ ப்பனத்‌ துவேஷ &யக்கமென்றும்‌, பின்னால்‌ தேசத்‌ துரோக இயக்க மென்றும்‌, பிறகு சர்க்கார்‌ பிரச்சார இயக்கமென்றும்‌, பிறகு வைணவ துவேஷ இயக்க மென்றும்‌, பிறகு சைவத்‌ துவேஷ இயக்கமென்றும்‌, பிறகு நாஸ்திக இயக்கமென்றும்‌, பிறகு நிரீச்சுவரவாத ஃயக்கமென்றும்‌-மற்றும்‌ அனேகர்‌ அனேகவிதமாய்‌ இதன்மீது பழி சுமத்தி, கிதற்குப்‌ பொதுமக்களிடம்‌ எவ்வளவு தூரம்‌ வெறுப்பும்‌ துவேஷமும்‌ ஏற்படச்‌ செய்ய வேண்டுமோ அவ்வனவு தூரம்‌ ஏற்படவேண்டி பலவழிகளிலும்‌ பெரு முயற்சிகன்‌ செய்தாகிவிட்டன என்றாலும்‌-- இவ்வளவு செய்தும்‌ இதன்‌ முன்னேற்றம்‌ சிறிகும்‌ குந்தகப்‌ படாமல்‌ மேலும்‌ மேலும்‌ முன்னேறுவதைப்‌ பார்க்கின்றபோது, இவ்வியக்க எதிரிகள்‌ வேறு சமாதானம்‌ சொல்ல முடியாமல்‌, * இது கினி எத்தனை நாளைக்கு நிற்கப்போகின்றது i அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய்‌ விட்டது, இதுதானா வாழப்‌ போகின்றது! ஏதோ பார்ப்பனர்கல்‌ மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும்‌ துவேஷதீ தினால்‌ சிலர்‌ ஆதரிக்கின்றார்கன்‌. நாயக்கருக்கு இருக்கும்‌ சொந்த செல்வாக்குக்கும்‌ அரசாங்க செல்வாகீகுக்கும்‌ பயந்து சிலர்‌ ஆதரிக்கின்றார்‌ கள்‌, இதெல்லரம்‌ எத்தனை நாளைக்கு நிற்கும்‌ என வம்‌ மாதிரியாகச்‌ சொல்லிக்கொள்வதன்‌ மூலம்‌ தங்கள்‌ பொறாமைகளை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு, இர கசியமாய்தீ தங்களால்‌ கூடிய கெடுதியையும்‌ செய்துகொண்டே வருகின்றார்கள்‌ என்பதும்‌-- இவ்வளவையும்‌ தாண்டி தமிழ்‌ நாட்டில்‌ உள்ள ஒவ்வொரு முக்கிய இடத்திலும்‌ மற்றும்‌ வெளியிடங்களிலும்‌ சுயமரியாதைச்‌ சங்கங்களும்‌, மகா நாடுகளும்‌, பிரச்சாரங்களும்‌ நடந்துவருவதும்‌, அதன்‌ கொல்‌ கைகளில்‌ பல, சற்றும்‌ எதிர்ப்பின்றிக்‌ காரியத்தில்‌ அனுஷ்டிக்கப்படுவதுமே போது மான உதாரணங்களாகும்‌. அது மாத்திரமல்லாமல்‌, இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும்‌ சுயமரியாதைக்‌ கொள்கைகள்‌ கொண்ட தீர்மானங்களேதாம்‌ நிறை3வற்றப்பட்டு வருவ *டன்‌ சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள்‌ மகாநாடு, பார்ப்பனரல்லாதார்‌ மகா நாடு சீர்திருத்த மகா நாடு-ஏன்‌, சில அரசியல்‌ மகாநாடுகன்‌ ஆகியவைகவிலெல்லாம்‌. மேற்கண்ட தர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில்‌ இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக, ரஷ்யா, ஜப்பான்‌, சைனா, இருக்கி, ஈஜிப்ட்‌, ஆப்கானிஸ்தானம்‌ முதலிய நாடுகள்‌ வழிகாட்டியும்‌ வருகின்றதைப்‌ பார்‌ தீதால்‌, அவ்வியக்கம்‌ தளர்ந்துவிடும்‌ என்றோ மறைந்துவிடும்‌ என்‌ 2றச நினைப்ப வர்கள்‌ கண்டிப்பாய்‌ ஏமாந்‌துவிருவார்கள்‌ என்பது தெவிவாகாமல்‌ போகாது. அன்றியும்‌, நமது நாட்டு அரசியல்‌ தலைவர்கள்‌ என்பவர்களும்‌ அனேகமாக கிக்‌ கொள்கைகளை உச்‌ சரிப்பதின்‌ மூலமாகவே 9சல்வாக்குப்‌ பெறுவதையும்‌ பார்க்கும்போது, இக்‌ கொள்கை கனின்‌ ததீ.துவம்‌ எவ்வளவு மேன்மையானது என்பதும்‌ விளங்காமல்‌ போகாது. இவ்வளவும்‌ தருந்தாலும்‌, இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும்‌ பிரச்சார பலமும்‌ ஏற்படுத்த 3வண்டியது மிகவும்‌ முக்கியமான வேலை என்று நமக்குப்‌ படுகின்றது. மேல்‌ நாடுகளிலும்‌ ஒவ்வொரு தேசதீதிலும்‌ இக்‌ கொள்கைகள்‌ கொண்ட இயக்கம்‌ அதிகமான அஸ்திவார த்தின்‌ மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில்‌ பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வருகி றது உதாரணமாக, லண்டனில்‌ ‘R. P. A’ என்னும்‌ பகுத்தறிவாளர்கள்‌ சங்கமும்‌, அமெரிக்காவில்‌ * பிரி திங்கரஸ்‌ அசேசசியஷன்‌ ? என்னும்‌ ¢ தாராள எண்ணக்காரர்கன்‌ ! (அறிவு எவ்வளவு www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 475 தூரம்‌ செல்லுமோ அவ்வளவு தூரம்‌ செலுத்துவது) என்‌௰ின்ற சங்கமும்‌, ரஷ்யாவில்‌ *ஆன்டி காட்‌ சொசைட்டி ! (கடவுள்‌ உற்சவம்‌, வணக்கம்‌ ஆ 8யவைகள்‌ அவசியமில்லை) என்கின்ற (ரஷ்ய கவர்ன்மெண்டாராலும்‌ ஆதரிக்கப்பட்ட) சங்கமும்‌, சைனாவில்‌ யங்‌ சைனீஸ்‌? அதாவது * வாலிப சைனாக்காரர்கள்‌ ! என்கின்ற சங்கமும்‌, மற்றும்‌ ஆப்கானி ஸ்தானம்‌; தருக்கி முதலிய சர்க்கார்களால்‌ அனேக இடங்களில்‌ குருட்டு நம்பிக்கை க்கு மூடப்‌ பழக்க வழக்கங்களையும்‌ ஒழிக்கும்‌ வேலைகளும்‌ நடைபெற்று வரு ன்றன. அதுபோலவே, நமக்கு நமது அரசாங்கம்‌ அடியோடு நமது இயக்கத்தின்‌. சுவாதீனதீ திற்கு வருமளவும்‌--அதாவது, சுயமரியாதை அரசாங்கம்‌ ஏற்படும்வரை--நமகீகுதீ தக்க ஆஸ்பதம்‌ வேண்டியிருக்கின்றது. அனேகமாய்‌ இவற்றை உத்தேசித்தே அருத்த மாதம்‌ 2-வகு, 3-வது வாரவாக்கில்‌ செங்கற்பட்டில்‌ தமிழ்‌ மாகாண சுயமரியாதை மகாநாடு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக் கின்றது. அம்‌ மகாநாட்டிற்கு சைமன்‌: கமிஷனும்‌ ? அழைக்கப்‌ பட்டிருக்கின்றது. மற்றும்‌ அம்‌ மகாநாட்டில்‌ அனேக பெரியார்களும்‌ செல்வாக்குக்காரர்‌ களும்‌ உண்மைத்‌ தொண்டர்களும்‌ செல்வந்தர்களும்‌ பங்கெடுத்துக்கொள்ளச்‌ சம்மதித்து இருக்கிறார்கள்‌. இதுவரை சுமார்‌ 10 ஆயிரம்‌ ரூபாய்‌ போல்‌ வசூல்‌ செய்யப்பட்டிருக்கிறது. திருவாளர்‌ கள்‌ ராவ்பகதூர்‌, எம்‌. கே. ரெட்டியார்‌, ஜி. ஜெயராம நாயுடு காரு, கே. வி. மேனன்‌, கண்ணப்பர்‌ முதலியவர்களும்‌ உழை தீ.கவருகின் றார்கள்‌. சுமார்‌ இருபதீ தையாயிரம்‌ மக்களுக்குக்‌ குறையாமல்‌ கூடக்கூடும்‌ என்று எ திர்பரர்க்கப்படுகின்றது. இம்‌ மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்க$வண்டும்‌ என்கின்ற எண்ணத்தோடு சிலர்‌ இரகசியமாய்‌ கட்சி சேர்ட்பதாகவும்‌ தெரியவருகின்றது. எப்படியானானும்சரி, நமக்கு அதைப்பற்றிக்‌ கவலையில்லை. நமது நிலைமையையும்‌, உண்மையென்று நாம்‌ நினைப்‌ பதையும்‌ வெளிப்படுத்தி, அதற்கு ஏற்ற நடவடிக்கைகள்‌ நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும்‌, பிரச்சாரமும்‌ ஏற்படுத்தவேண்டும்‌ என்பதுதான்‌ நமது கவலை. ஆதலால்‌, நாட்டின்‌ சேமத்திலும்‌ மக்களின்‌ முன்னேற்றதீதிலும்‌ கவலையுள்ள மகீகள்‌ யாவரும்‌ அங்கு வந்து கூடி, தங்கள்‌ கடமையைச்‌ செலுத்த வேண்டியது மிகவும்‌ அவசியமாகும்‌. ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும்‌ அவசியமான து என்பதை மிகவும்‌ அழுதீதமாய்தீ தெரிவித்துக்‌ கொள்ளுகின்றோம்‌. தனிப்பட்ட பெண்களும்‌, தங்களை விதவைகள்‌ என்றோ, வேசிகள்‌ என்றோ நினைத்துக்‌ கொண்டிருப்பவர்களும்‌ அவசியம்‌ வரவேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறோம்‌. தவிர, அரசாங்க உதீதியோகஸ்தர்களும்‌ அதிகாரிகளும்‌ கண்டிப்பாய்‌ வர வேண்டியது அவசியமாகும்‌ என்று தெரிவிப்பதோடு, இந்த மகாநாடு எவ்வழியிலும்‌ அரசியல்‌ மகாநாடு என்பதல்ல என்றும்‌ அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம்‌. அன்றியும்‌, அரசாங்க சட்ட மெம்பர்‌ திவான்பக தூர்‌ கனம்‌ கிநுஷ்ணநாயர்‌ அவர்களும்‌ மற்றும்‌ பல பெரிய அதிகாரிகளும்‌ வரச்‌ சம்மதித்து இருக்கின்றார்கள்‌, முக்கியமாக இம்‌ மகாநாட்டில்‌ யோசித்துதீ தீர்மானிக்கப்படும்‌ விஷயங்கள்‌ யாவை என்றால்‌--சமதீ துவம்‌, சம உரிமை, சம சந்தர்ப்பம்‌, சிக்கனம்‌) அன்பு; கக்கம்‌, ஒழுக்கம்‌ ஆகியவைகள்‌ ஏற்படவும்‌ $ குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம்‌, தீண்டாமை, பெண்‌ அடிமை ஆகியவைகள்‌ எடுபடவும்‌) எளியோரை வலியோர்‌ அடக்கி ஆளாமலும்‌ ; பாமரர்‌ களைப்‌ படித்தவர்கள்‌ ஏமாற்றாமலும்‌, ஏழைகளைச்‌ செல்வந்தர்‌ கொடுமைப்‌ படுத்தாமல்‌ இருப்பதற்கும்‌) பகுத்தறிவு வளர்ச்சிபெறவும்‌) தன்‌ முயற்சியில்‌ நம்பிக்கை உண்டாக வுமான தன்மைகள்‌ போன்ற விஷயங்க ளதாம்‌ அங்கு நடைபெறும்‌. ஆகையால்‌, இவைகளை அரசியல்‌ விஷயமென்று யாரும்‌ சொல்லமுடியாது. அரசியல்‌ விஷயம்‌ என்று ஏதாவது சொல்லவந்தால்‌ அது மேற்கண்ட விஷயங்கன்‌ நிறைவேறி அமுலுக்குவர அரசாங்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 476 பெரியார்‌ ஈட வெ: ரச சிந்தனைகள்‌ கத்தின்‌ உதவி ஏதாவது வேண்டியிருந்தால்‌ அந்த அளவக்கு,--அதுவும்‌ அரசாங்கதீதின்‌ ஆதரவை எதிர்பார்க்கும்‌ அளவுக்கு--ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும்‌ நடை பெறாது என்று உறுதி கூறுகிறோம்‌. ரஷ்ய தேசத்தில்‌ கொஞ்ச நாளைக்கு முன்பிருந்‌3த கடவுளைப்பற்றிப்‌ பிரசங்கங்‌ களோ, உபதேசங்களேோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம்‌ ஏற்பட்டு, அது தாராளமாம்ப்‌ பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாய்க்‌ கொண்டாடக்‌ கூடாது என்று வெகு பலமான பிரச்‌ சாரம்‌ செய்யப்பட்டு வந்ததில்‌ முழுவதும்‌ வெற்றியடைய முடியாமல்‌ போனதால்‌, அடுத்து வரும்‌ £ஈஸ்டர்‌? உற்சவத்தை யாரும்‌ கொண்டாடாமல்‌ இருக்கும்படி இப்பொழுதிருந்தே வேண்டிய பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வரு 9ன்றதாம்‌. இதற்கு அங்குள்ள சர்க்காரும்‌ இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்தரவு போட்டு, சர்க்கார்‌ மூலமாகவும்‌ பிரசீசாரம்‌ செய்யப்பட்டு வருகின்‌றதாம்‌. இதற்காக அனேக பிரபுக்கள்‌ இலட்சக்கணக்காக ரூபாய்கள்‌: கொடுத்து உதவியிருக்கின்றார் களாம்‌. எனவ, கடவுள்‌ பிறந்த நாளையும்‌ மறபடியும்‌ உயிர்த்து எழுந்த நாளையும்‌ கொண்டாடக்‌ கூடாது என்று சொல்லுவதும்‌, சர்க்கார்‌ மூலமாக3வ அவற்றைப்‌ பிரச்சாரம்‌ செய்வதும்‌ அங்கு நாஸ்திகம்‌ என்று கருதப்படுவதில்லை. நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப்‌ போகும்‌ உற்சவம்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌! சமணரைக்‌ கழுவேற்றும்‌ உற்சவம்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்‌ திகம்‌ ! குடம்‌, குடமாய்‌ நெய்யையும்‌ வெண்ணெயையும்‌ கொண்டுபோய்‌ நெருப்பில்‌ போட்டு வீணாக்கும்‌ கார்‌ தீதிகைத்‌ தீப உற்சவம்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌ ! வெடி மருந்துக்கும்‌ அடுப்புக்‌ கரிக்கும்‌ காசைப்‌ பாழாக்கும்‌ தீபாவளி உற்சவம்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌ ! இளங்‌ குழந்தைகளைப்‌ பாலில்லாமல்‌ கஷ்டப்பட வைத்து விட்டு, குடம்‌ குடமாய்ப்‌ பாலைக்‌ கொண்டுபாய்கீ கல்லின்மீ.து கொட்டும்‌ பாலாபிஷேக உற்சவம்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌ 1 அரசனிடம்‌ குதிரை வாங்க என்று பணம்‌ பெற்றுத்‌ தன்னிஷ்டப்படி செலவழிதீது விட்டு-அரசன்‌ குதிரை எங்கே 1! என்று கேட்டால்‌, நரியைக்‌ கொண்டுவந்து குதிரை என்று காட்டி, அந்‌ நரி அரசனுடைய பழைய குதிரைகளையும்‌ கடித்துக்‌ கொன்றுவிட்ட குடன்‌ அரசனும்‌ அடிபட்ட உற்சவமும்‌ வேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌! வேறு ஒரு மதக்காரர்‌ (பவுத்தர்‌) கோவிலை இடத்து, விக்ரகத்தைதீ திருடிக்கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடதீதவேண்டாம்‌ என்றால்‌, அது நாஸ்திகம்‌ | எனவே, நமது நாட்டுக்கு எந்தக்‌ காரியம்தான்‌ நாஸ்திகம்‌ அல்லாதததோ நமக்குதீ தெரியவில்லை. [குடி அரசு -தலையங்கம்‌--13-1-1929] உலகதீதில்‌ உயிரையுங்கூட கொடுதீதுப்‌ பெறவேண்டியதாக அவ்வளவு மதிப்பும்‌ விலையும்‌ பெறுமானமுமுள்ள & சுயமரியாதையே யாகும்‌ என்றாலும்‌--சிலரால்‌, தங்களுக்கு அவ்‌ வார்த்தையே பிடிக்கவில்லை என்றும்‌ ] சிலரால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி இருக்கும்போது சுயமரியாதை கியக்கம்‌ ஒன்றுதனியாக எதற்கென்றும்‌ ) மததீதிலும்‌, மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும்‌ கை வைப்பது தங்களுக்குப்‌ பிடிக்கவில்லை என்றும்‌ ) சுய மரியாதை இயக்கத்தால்‌ நாஸ்திகம்‌ பரவுவதாகவும்‌, அரசியல்‌ கெட்டுப்போன தாகவும்‌) தேசியம்‌ தடைப்படுவதாகவும்‌ இன்னும்‌ பல மாதிரியாகவும்‌ பேசிக்‌ கொள்ளப்படுகிறது இவற்றிற்கு நமக்குத்‌ தோன்றிய பதிலைச்‌ சொல்ல ஆசைப்படுகிறோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 477 ஒரு இயக்கதீதிற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும்‌, அது காதுக்‌ கினிமையாக இருப்பதற்காகவா, அல்லது இயக்கத்தின்‌ ததீதுவதீதிற்காகவா என்றும்‌ கேட்கின்றோம்‌. சுயமரியாதை இயக்கம்‌ என்றால்‌, * சுயமரியாதை இல்லாதவர்களின்‌. இயக்கம்‌ என்று பிறர்‌ கருதமாட்டார்களா1? என்கின்றார்கள்‌. அப்படியானால்‌, நாம்‌ அவர்களை, சன்மார்க்க இயக்கம்‌ என்றால்‌ அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம்‌ என்றால்‌ அது ஜீவசாருண்யமில்லாத சகாப்புக்‌ கடைக்காரர்கள்‌ இயக்கமென்றாகிவிடுமா? சைவ சித்தாந்த இயக்கம்‌ என்பது அசைவர்கள்‌ கூட்டமாகி விடுமா? அதுபோலவே, ஜஸ்டிஸ்‌ இயக்கம்‌ என்பது ¢ இன்ஜஸ்உஸ்‌ ! காரர்கள்‌ இயக்கம்‌ என்றா கவிடுமா 8--என்று கேட்கின்றோம்‌. ஒருசமயம்‌ அப்படியே அர்‌ தீதமாகிவிடும்‌ என்று சொல்வதானாலும்கூட, சுயமரியாதை இயக்கம்‌ என்பதற்குப்‌ பொருள்‌ சுயமரியாதை இல்லாதவர்கள்‌, அதை அடைய ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்‌? என்பது நமக்கு ஆட்சே பணை இல்லை என்‌ றே சொல்லுவோம்‌. இதற்கு உதாரணம்‌, முதலாவ, சுயமரியாதை இயக்கம்‌ என்கின்ற பெயர்‌ பிடிக்க விள்லை என்று சொல்லுகின்றவர்கள்‌ தங்களைய-அ தாவது, தங்கள்‌ உருவத்தைக்‌ கண்ணாடியில்‌ பார்தீது, * உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா 1 என்பதாக ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு, தனது உருவம்‌, நடை, உடை, குறி, கொள்கை இவைகளை வெளிப்‌ பார்வையிலும்‌) தனது எண்ணம்‌, நம்பிக்கை, தான்‌ நடந்துகொண்டமுறை, நடந்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகியவைகளை உள்ளுக்குள்ளாகவும்‌ ) தான்‌ கட்டுப்பட டிருக்கும்‌ ஆட்சி, தான்‌ பின்பற்றி வரும்‌ மதம்‌, மத உணர்ச்சி, மதச்‌ சடங்கு, மதக்‌ கொள்கை ஆகியவைகளை அனுபோகதீதைக்‌ கொண்டும்‌) மற்றும்‌ தங்களைப்பற்றி மற்றவர்கள்‌. என்ன பேசிக்கொள்ளுகின்றார்கள்‌ என்பதையும்‌ சற்று யோசித்துப்‌ பார்‌தீதால்‌ எவ்வளவேர மோசமானவர்களாகவும்‌ எவ்வளவோ சுயநலகீகாரர் களாகவும்‌ இருப்பவர்களுக்குங்கூட தங்களின்‌ சுயமரியாகையற்ற தன்மை-சூரிய வெளிச்சம்‌ போல்‌ விளங்காமல்‌ போகாது என்றே நினைக்கின்‌ றோம்‌. மற்றம்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி இருக்கும்போது இது எதற்கு? என்பவர்கள்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ மூலம்‌ 10 வருடகாலமாய்‌ விளைந்து வந்த உணர்ச்சிகளையும்‌ சுயமரியாதைக்‌ கிளர்ச்சியில்‌ இந்த இரண்டு வருடத்தில்‌ விளைந்த உணர்ச்சியையும்‌ கவனித்துப்‌ பார்க்க வேண்டுகிறோம்‌. சமீபகாலம்‌வரை, ஐஸ்டிஸ்‌ கட்சி அரசியலில்‌ மாதீ திரம்‌ மிகவாதம்‌, அமிதவாதம்‌ என்கின்ற முறையில்‌ மிதவாதிகளின்‌ கொள்கைகள்‌ என்பனவற்றைப்‌ பின்பற்றிக்கொண்டு, பார்ப்பனரிடமிருந்து உதீதியோகங்களைப்‌ பிடுங்கி எல்லோருக்கும்‌ பங்கிட்டுக்‌ கொடுக்கும்‌ வேலையில்‌ மாதீதிரம்‌ ஒருவாறு வெற்றிபெற்று வந்த க ஒழிய, மற்றவைகளில்‌ தாராளமாய்‌ முன்னேற முடியா தபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச்‌ சொல்லப்‌ போனால்‌, பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற ஒரு குறிப்பிடதீதகுந்த சமூகம்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கும்‌ சங்கதியே வெளி மாகாணங்களுந்குத்‌ தெரிய முடியாமல்‌ இருந்தது என்றும்‌, கொஞ்ச நஞ்சம்‌ தெரிந்தாலும்‌ அது தேசத்‌ துரோகிகள்‌, முட்டாள்கள்‌, காட்டுமிராண்டிகள்‌ என்று கருதும்படியாகச்‌ செய்துவந்த எதிரிகளைச்‌ சமாளிக்க முடியாமல்‌ கஷ்டப்பட்டுக்‌ கொண்டிருந்ததும்‌ யாரும்‌ மறுக்க முடியாது. அன்றியும்‌, அரசாங்கதீதாராலும்‌ இது ஒரு தனி வகுப்புவாதகீ கட்சியென்று மாத்திரம்‌ மதிக்கப்பட்டு, அவர்களால்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக Dg உபயோகப்படுதீதப்பட்டு வருவதாகவே கருதியும்‌ வந்திருந்தார்கள்‌. ஆனால்‌, இப்போது அவர்கள்‌ இதே ஐஸ்டிஸ்‌ கட்சியை மதிக்கின்றார்கள்‌ என்பதற்கும்‌, அதற்கு எவ்உளவு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள்‌ என்பதற்கும்‌, கி.து வெளி மாகாணங்களில்‌ எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 478 பெரியார்‌ ஐ, வெ. ரா. சிந்தனைகள்‌ இந்த வருஷதீதிய--அதாவது 1927-28ஆம்‌ வருஷதீதிய இந்திய கவரீன்மெண்ட்‌ ரிப்போர்ட்டைப்‌ பார்‌ தீதால்‌ விளங்காமல்‌ போகாது. சமூக விஷயத்திலும்‌ மக்களின்‌ உணர்சீசி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும்‌, மதுரை மகாநாடு முதல்‌ இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார்‌ மகா நாட்டு நடவடிக்கைகளையும்‌, தீர்மானங்களையும்‌, கவனிப்பவர்‌ களுகீகு விளங்காமல்‌ போகாது. அரசியலில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை சர்க்கார்‌ தாசரீகன்‌ என்று நமது எதிரிகள்‌ சொல்லி வந்ததைக்‌ கோயமுத்தூர்‌ தீர்மானத்தின்‌ மூலமாகவும்‌, அதற்குப்பின்‌. அரசாங்கதீதில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குன்ன மதிப்பின்‌ மூலமாகவும்தான்‌ பொது ஜனங்களுக்குப்‌ பொய்ப்பித்‌*கீ காட்ட முடிந்தது. ஆகவே, சுயமரியாதை கியகீகம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிகீகு எவ்வளவு ஆதரவை தந்திரக்‌ கின்றது என்பதைக்‌ கவனித்தால்‌, எந்த வகையிலும்‌ அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே முடியாது என்று சொல்வோம்‌. மதம்‌ என்பது மனிதனின்‌ வாழ்க்கை நலக்‌ கூட்டுறவுக்கும்‌ ஒழுக்கதீதிற்கும்‌ தேவை யானதே ஒழிய, மதத்திற்கு மனிதன்‌ தேவையில்லை என்றே சொல்வோம்‌. ஆனால்‌, இப்போது வாழ்க்கை நலக்‌ கூட்டுறவுக்கும்‌, ஒழுக்கதீதிற்கும்‌ ஆதாரமான எந்த மதத்தில்‌ அது பிரவேசித்து என்ன கெடுதியைச்‌ செய்தது, அல்லது அதனால்‌ என்ன விளைந்தது? யாராவது எடுத்துக்காட்ட முடியுமா 8 என்று கேட்கின்றோம்‌. அன்றியும்‌, கூட்டுறவு நலத்திற்கும்‌, ஒழுக்கத்திற்கும்‌ சமரச உணர்ச்சிக்கும்‌ விரோதமாக எது இருந்தாலும்‌ அதை அழிக்கவேண்டாமா என்றுதான்‌ தாம்‌ கேட்கின்றோம்‌. எந்த விஷயத்தையும்‌ மனிதன்‌ தன்‌ அறிவைப்‌ பொறுதீது ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா? என்று கேட்கின்றோம்‌. நமது இயக்கக்‌ கொள்கைகளை நடைபெறவொட்டாமல்‌ தடுப்பதற்காகக்‌ கடவுள்‌ என்பதைக்‌ கொண்டுவந்து தடையாகவோ முட்டுக்‌ கட்டையாகவோ போடச்‌ சூழ்ச்சி செய்தால்‌, அதற்குச்‌ சற்றும்‌ இடம்கொடுக்க முடியாது என்பதுதான்‌ சுயமரியாதை இயக்கத்தின்‌ உறுதியான கொள்கையாகும்‌. அறிவையும்‌, தன்னம்பிக்கை யையும்‌, தன்‌ முயற்சியையும்‌, அன்பையும்‌, ஒழுக்கத்தையும்‌ தன்னகத்தில்‌ கொண்ட எந்த சமயதீதினுடையவும்‌ ஒத்துழைப்பை, சுயமரியாதை இயக்கம்‌ வலிய வரவேற்கும்‌ என்றும்‌ உறுதி கூறு8றோம்‌. மக்களின்‌ சுயமரியாதைக்காகதீதான்‌, மக்கள்‌ மானத்‌ தாடு வாழ்வதற்காகதீதான்‌. அரசாங்கமும்‌, தேசியமும்‌ வேண்டுமே ஒழிய, மற்றபடி, கேவலம்‌ இவைகள்‌ மனிதன்‌ வயிறுவளர்க்க மாத்திரம்‌ வேண்டியது என்றால்‌, அதற்காக எந்த அரசாங்கமும்‌ அரசியலும்‌, தேசியமும்‌ கண்டிப்பாய்‌ வேண்டியதில்லை என்‌3ற சொல்லுவோம்‌. இதுவரை நமது நாட்டில்‌ ஏற்பட்டிருக்கின்ற எந்த அரசியல்‌ இயக்‌ மாவது, தேசிய உணர்ச்சியாவது மக்கள்‌ சுயமரியாதைக்‌ 3கற்றதாண திட்டங்களுடன்‌ அமைக்கப்பட்டிருந்தனவா என்று அரசியல்‌ வாதிகளையும்‌ தேசியவாதிகளையும்‌ கேட்கின்றோம்‌. எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத்‌ தோன்றிவிட்டால்‌ அதுவே அரசியலையும்‌, தேசியத்தையும்‌, மற்றும்‌ மத இயலையும்‌ தானாகவே சரிப்‌ படுத்திக்கொள்ளும்‌. அப்போது சுயமரியாதை வேறு; அரசியல்‌ வேறு; தேசியம்‌ வேறு; மத இயல்‌ வேறு) ஒழுக்க இயல்‌ வேறு i அன்பு கியல்‌ வேறு என்கின்ற பாகுபாடுகளும்‌ பிரிவுகளும்‌ கண்டிப்பாய்‌ மறைந்தோடி விடும்‌. உதாரணமாக, நமகீகு மேலானதும்‌ கீழான துமான ஒருவகுப்பு இருக்கக்‌ கூடாது என்று சொன்னால்‌--அந்த வார்‌ தீதையி லயே, நமக்‌ க மேலானதாக ஒரு அரசாங்கமும்‌ ஆட்சியும்‌ இருக்கக்‌ கூடாது என்பது உதயமாகிவிடும்‌. அதுபோலவே, நமக்கு மேலாகவோ, கீழரகவோ ஒரு நாடு இருக்கக்‌ கூடாத.என்பதும்‌ தோன்றிவிடும்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 479 பொதுவாக, சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப்‌ பலப்படுத்தி, சரியாக ஓடத்‌ தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்‌ துவிட்டால்‌, பிறகு எந்த எந்திரத்தைக்‌ கொண்டுவந்து அகோடு இணைத்துத்‌ தோல்பட்டையை மாட்டிவிட்டாலும்‌ அது தானாகவே ஓடும்‌, அது இன்ன விதமான இயத்திரமாகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என்கின்ற கவலை யாருக்கும்‌ வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம்‌. மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும்‌ விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும்‌ மதிக்கத்‌ தக்கதுமாகும்‌ என்பதின்‌ ததீ.துவத்தை உணர்‌ ்தவர்களுக்கு இந்த இயக்கத்தில்‌ உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம்‌ வேண்டுமானால்‌ ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன்‌ போராடதீ தோன்றியதாகத்‌ தோன்றலாம்‌, இ துவே அல்ல அதன்‌ இலட்சியம்‌. ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில்‌ சுற்றும்‌ சிறு வேகம்போல்‌, இன்று ஒரு சிறு வகுப்பார்‌ உணர்ச்சி யோடு போராடுவதாகக்‌ காணப்படுவது ; மற்றபடி, பின்னால்‌ அது உலகத்தையே ஒன்று படுதீத--உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச்‌ செய்யும்‌ முயற்சியின்‌ போகு தான்‌ அதன்‌ உண்மை சக்தியும்‌ பெருமையும்‌ வெளியாகும்‌. அன்றியும்‌, அது கிளம்பிவிட்டால்‌ யாராலும்‌ அதை அழிக்கவோ, அல்லது சந்றாவது அடக்கிவைக்கவோ கண்டிப்பாய்‌ முடியாது என்பதுடன்‌, அடிக்க அடிக்க எழும்‌ பந்‌ துபோல்‌, எதிர்க்க எதிர்க்க வளர்ந்துகொண்டே போகும்‌ சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும்‌, எந்த விதத்திலும்‌ எல்லோரும்‌ எவ்வித அபிப்பிராயமுடையவர் களும்‌ இதில்‌ இன்றைக்கில்லாவிட்டாலும்‌ நாளைக்காவது அல்லது எதிர்காலதீதிலாவது சேர்ந்‌ துதான்‌ ஆகவேண்டும்‌ என்பதும்‌ நமது பலமான உறுதியாகும்‌. அன்றியும்‌, இவ்வியக்கம்‌ ஒவ்வொன்‌ றையும்‌--* பெரிதும்‌ வேண்டாம்‌? என்று சொல்லும்‌ விரக்தியைப்பற்றி இருக்‌ கின்றதே ஒழிய--* வேண்டும்‌? என்று சொல்லும்படியான ஆசையைப்‌ பற்றி இல்லை, ஆதலால்‌, இதில்‌ யாரும்‌ ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும்‌, இதற்குள்‌ போட்டி களுக்‌ கும்‌ கிடமில்லை. மற்றபடி, இதைப்பற்றி சர்க்கார்‌ எப்படி நிணைத்துக்‌ கொண்டாலும்‌ நமக்கு அதைப்பற்றிச்‌ சற்றும்‌ கவலையில்லை. உலக வாழ்க்கையில்‌ இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும்‌ சம்சாரவாதி களிடமிரூ நீது நமகீகு யாதொரு உதவியும்‌ ஒத்துழைப்பும்‌ தேவையில்லாததாலும்‌ ; பெரிதும்‌ பரிசுத்தமானதும்‌ ௬யநலமற்றதம்‌ எதற்கும்‌ எவ்விதத்‌ தியாகத்திற்கும்‌ தயாராயிருக்கும்‌ இளங்‌ காளைகளிடதீதிலும்‌ இளம்‌ கன்னிகைகளிடத்திலும்‌ திக்கற்றவர்களிடத்திலும்‌ நமது இயக்கதீதிற்குப்‌ பெரிதும்‌ உதவி எதிர்பார்க்கின்‌ றபடியாலும்‌ ) அவர்களும்‌ தாராளமாய்‌ உதவி அளிக்கத்‌ தயாராய்‌ மேல்‌ விழுந்து வருவதாலும்‌, நாமும்‌ இதன்‌ முடிவைப்பற்றிச்‌ சற்றும்‌ கவலை கொள்ள: மல்‌ கடமையையே பின்பற்றிக்‌ கொண்டிருப்பதாலும்‌ இந்த இயக்கத்தின்‌ மூலம்‌ எவ்வித .நஷ்டமாவது, கஷ்டமாவது அடையவேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சீறிதும்‌ கொல்ளாமலிருக்கிறோம்‌. [¢ குடி அரசு !-தலையங்கம்‌--17-2-1929] 12. சுயமரியாதை இயக்கம்‌ சுயமரியாதை இயக்க ஸ்தாபனமானது, சென்னையில்‌ பொது ஸ்தாபனப்‌ பதிவுச்‌ சட்டப்படி பதிவுசெய்யப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்துவரப்படுகின்றன. அது முடிந்தவுடன்‌ (@y அரசு, *ரி3வாலட்‌? ஆகிய வாரப்‌ பத்திரிகைகளும்‌ 'பகுத்தறிவு? என்னும்‌ மாதப்பதீதிரிகையும்‌ சுயமரியாதைச்‌ சங்க சார்பாகவே பிரசுரிக்கப்படும்‌. ¢ தீராவிடன்‌ ? தினசரி பதீதிரிகையும்‌ அதன்‌ நிர்வாகப்‌ பொறுப்பும்‌ நம்மிடம்‌ இருக்கும்வரை இச்‌ சங்கச்‌ சார்பாகவே பதிப்பித்து வரப்படும்‌. சுமார்‌ இரண்டுவருஷ காலமாகவே பத்திரிகைகள்‌ நடத்தும்‌ பொறுப்பை யார்‌ வசமாவது ஒப்பு வித்து. விடுவதற்கு மிகுதியும்‌ முயற்சி செய்து வந்தது, நாம்‌ பல நண்பர்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 480 பெரியார்‌ ஈ. வெ. ரா. சிந்தனைகள்‌ களிடம்‌ நேரில்‌ தெரிவிதீ.துக்கொண்டதாலும்‌ பத்திரிகையின்‌ ஒவ்வொரு ஆண்டுத்‌ தொடக்‌ கதீதில்‌ எழுதிவரும்‌ தலையங்கதீதாலும்‌ நன்றாய்தீ தெரிந்திருக்கலாம்‌. பத்திரிகை நடத்து வதில்‌ உள்ள கஷ்டம்‌--அ துவும்‌ ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தின்‌ பிரசீசாரதீதிற்காக நடத்தப்‌ படும்‌ பத்திரிகைகளுக்கு இருக்கும்‌ கஷ்டம்‌ அதை அனுபவிப்பவர்‌ களுக்குத்தான்‌ தெரிய வரும்‌, உதாரணமாக, ஜஸ்டிஸ்‌, திராவிடன்‌! பத்திரிகைகள்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கச்‌ சார்பாக 12 வருஷங்கட்கு மேலாகவே நடந்துவருகின்றன. அவற்றுக்கு, இந்த மாகாணத்திலுள்ள பெரிய பெரிய பிரபுக்களும்‌, இிராஜாக் களும்‌, ஜமீன்தார்களும்‌ மற்றும்‌ 100-க்கு 97 வீதம்‌ உள்ள பொகுஜனங்களும்‌ ஆதரித்தும்‌ பதினாயிரக்கணக்காகப்‌ பணம்‌ கொடுத்தும்‌ வந்திருக்கிறார்கள்‌. அச்‌ சங்கத்தார்‌ அதிகார ஆதிக்கம்‌ பெற்ற காலத்திலும்‌ அதாவது மந்திரிகளாய்‌ இருந்த காலத்திலும்‌ மாதம்‌ 1-க்கு ரூ. 3000 வீதம்‌ உதவி வந்தார்‌ கள்‌. இந்தமாதிரி உதவி செய்ததன்‌ மூலம்‌ சுமார்‌ 2 இலட்ச ரூபாய்கள்‌ வரை இப்‌ பத்திரிகை களுக்குப்‌ பண உதவி கிடைத்தும்‌ இன்றைக்கும்‌ தம்‌ காலில்‌ நிற்க முடியாமல்‌, மாதம்‌ கிரண்‌ டாயிரம்‌ ரூபாய்போல்‌ நஷ்டத்தில்‌ நடைபெற வேண்டியி நக்கிறது. இவ்வளவு ஜனக்கட்டும்‌, பணக்கட்டும்‌, செல்வாக்கும்‌ இருக்கும்‌ பத்திரிகைகளின்‌ கதியே இப்படியானால்‌, நம்‌ போன்றவர்கள்‌, அதிலும்‌ செல்வாக்குள்ள கொள்கைகளுக்கு எதிராகவும்‌, ஆதிக்கமும்‌ அதிகாரமும்‌ சூழ்ச்சியுமூன்ள சமூகங்களுக்கு விரோதமாகவும்‌ ஒரு பத்திரிகையைத்‌ துவகீ கினால்‌ அதில்‌ எவ்வளவு கஷ்டம்‌ இருக்கும்‌ என்பதை யோசித்தால்‌ தெரியும்‌. அதோடு மாத்திரமல்லாமல்‌, சந்தாவும்‌ வெகு சுருக்கமான தொகை. அதாவது, வருடத்திற்கு 3 ரூபாய்‌. 20 பக்கமுள்ள பதீதிரிகையின்‌ காகிதக்‌ கிரயம்‌, அசீசுக்‌ கூலி, ஸ்டாம்பு செலவு முதலியவை களுக்‌ 38 சந்தா தொகை போதும்‌ போதாத நிலையில்‌ இருக்கின்றது. இதில்‌ நிலுவை பாக்கி, வீண்செலவு ஆகியவைகளும்‌ ஆசிரியக்‌ கூட்டத்திற்கும்‌, கணக்கு நிர்வாகதீதிற்கும்‌ கைப்‌ பெரறுப்பு என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. இந்த நிலையில்‌ பத்திரிகை ஆரம்பித்த 4 வருஷ காலதீதில்‌ ஒரே ஒரு தலையங்கம்‌ மாதீதிரம்‌--அதுவும்‌ காயலாவாய்‌ படுத்த படுக்கையில்‌ இருந்த சமயம்‌ தவிர, urdd எல்லாத்‌ தலையங்கங்களும்‌ நம்மாலேயே எழுதப்பட்டு வந்திருக்கின்‌றன. ஆரம்பத்தில்‌ ஒவ்வொரு வாரமும்‌ 12 பக்கமும்‌ நாமாகவே எழுதி வந்திருக்கிறோம்‌. இந்த நிர்ப்பந்ததீதில்‌ வாரம்‌ 2, 3 நாட்களுக்குக்‌ குறையாமல்‌ வெளியூர்ப்‌ பிரயாணம்‌ செய்து வந்திருக்கிறோம்‌. இதன்றி பிரச்சாரகர்‌ களையும்‌ பல இடங்களுக்கு அனுப்பியும்‌ வந்திருக்கின்‌ றோம்‌, இம்‌ மாதிரி எவ்வளவோ கஷ்டமும்‌ நஷ்டமூம்‌ அடைந்துகொண்டு இப்பதீதிரிக்கையை நடதீதி வந்திருக்கின்றோமென்றாலும்‌--சாதாரணமாக, இந்தத்‌ தொண்டில்‌ பெருத்த இலாபம்‌ இருப்பதாகவும்‌ ; மாதம்‌ 1000, 2000 வரும்படி வருகின்றதென்றும்‌ உண்மை யாகவே பலர்‌ நம்பி இருக்கின்றார்கள்‌. சமீபத்தில்‌ எமது குடும்பத்தில்‌ கட்டப்பட்ட வீட்டைப்‌ பார்தீதுப்‌ பெண்கள்‌, குழந்தைகள்‌ எல்லாம்‌--பதீதிரிகை இலாபத்தாலும்‌, பிரசீசாரதீதிற்குப்‌ போகிற இடத்தில்‌ கிடைக்கும்‌ இலாபதீதாலும்‌ அவ்வீடு கட்டப்பட்ட தென்றே, நமது காதுக்கு எட்டும்படியாகப்‌ பேசிக்கொண்டு போகின்றார்கள்‌. இதை எதற்காக எழுதுகின்றோமென்றால்‌, பொது நலச்சேவையில்‌ உண்மையாகக்‌ கஷ்டமும்‌ நஷ்டமும்‌, கெட்டபேரும்‌, பழியும்‌ அடைகின்ற மக்களைப்‌ பார்த்தால்‌ பெருத்த கலாப மடையும்‌ சுயநலக்காரர்களைப்‌ போலத்‌ தோன்றுவதும்‌) பொது வாழ்க்கையின்‌ பேரால்‌ பணலாபமும்‌, சுகமும்‌, கீர்த்தியும்‌ பெறுகின்றவர்களைப்‌ பார்‌ தீதால்‌ பெரிய தியாகிகள்‌ போலவும்‌ கஷ்ட நஷ்டம்‌ அனுபவிப்பவர்கள்‌ போலவும்‌ காணப்படுவதும்‌ உலக இயற்கை களில்‌ ஒன்றாயிருக்கின்‌ றது என்பதைக்‌ காட்டவே எழுதினோம்‌. தவிர, நமது இயக்கதீநை அழிக்க நமது எதிரிகள்‌ கைக்கொண்ட சூழ்ச்சி ஆயுதம்‌ இரண்டே இரண்டுதாம்‌. அதாவது, நாம்‌ மதத்திற்கு விரோதி என்பதும்‌) மக்களுக்குக்‌ கடவுள்‌ உணர்ச்சியைக்‌ கெடுக்கின்றோம்‌ என்பதும்‌ ஆகியவைகளே. இவ்விரண்டு காரியங்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌. 481 களையும்‌ நாம்‌ செய்கின்றோமோ, கல்லையோ என்பது ஒரு பகீகமிருநீதாலும்‌, அவர்கள்‌ சொல்லும்‌ மேற்படி இரண்டு காரியங்களும்‌ இப்போது உலகத்தில்‌ காட்டுத்‌ தீபோல்‌ பரவி வருகின்‌ றன. இன்று அய்ரோப்பா நாட்டிலுள்ள மாஸ்கோ என்கின்ற நகரில்‌ கடவுள்‌ மறுப்பு மகா நாடு ஒன்றுகூடி, உலகத்தில்‌ பல பாகங்களிலிருநீதும்‌ ஏராளமான பிரதிநிதிகளும்‌ காட்சி யாளர்களும்‌ வந்து, கடவுளையே மறுத்துப்‌ பல தீர்மானங்கள்‌ செய்திருக்கிறார்கள்‌. கடவுள்‌ மறுப்புக்கு ஆதாரமாய்‌ அ?னக கண்காட்சிகளையும்‌ வைத்துக்காட்டி, அதை உலகமெல்லாம்‌ பிரச்சாரம்‌ செய்ய கமிட்டிகள்‌ ஏற்பரடு செய்திருக்கின்‌ றார்கள்‌, அது மாதீதிரமல்லாமல்‌, அந்தத்‌ தேசதீதில்‌ உற்சவங்கள்‌ கூட நடத்தக்கூடாது என்று அரசாங்கத்‌ தின்மூலம்‌ உத்தரவுகள்‌ போடசீ செய்ததோடு, அதைப்‌ பிரச்சாரமும்‌ செய்து வரு8ன் றார்கள்‌. இவை நிற்க, நமது நாட்டிலேயே பம்பாய்‌ மாகாணதீதில்‌ சென்ற சடவுள்‌ பூசைகீகாக சர்க்கார்‌ கொடுத்‌ தவரும்‌ 6 மோகினித்‌ தொகையை நிறுதீதிவிடவேண்டுமெனதீ தீர்மானம்‌ செய்‌ திருப்பதுடன்‌, இராமாயணம்‌, பாரதம்‌, மனுஸ்மிருதி முதலிய மக ஆதாரங்கள்‌ என்பவை களைப்‌ பறிமுதல்‌ செய்ய வேண்டுமென்றும்‌ தீர்மானித்திருக்கிறார் கள்‌, இவ்வளவும்‌ ஒரு புறம்‌ இருந்காலும்‌, 'மீரத்‌ சதி வழக்கில்‌? எதிரிகளின்‌ பேரில்‌ சர்க்கார்‌ வக்கீல்‌ குற்றம்‌ சாட்டுகின்ற முறையில்‌, எதிரிகள்‌. கடவுளை நம்பாதவர்கள்‌? என்றும்‌, * கடவன்‌ நம்பி கையை ஒழிக்கப்‌ பிரச்சாரம்‌ செய்கின்றவர்கள்‌ ? என்றும்‌ சொல்லி இருக்கின்‌ றார்‌, எதிரிகளுடைய வக்கீலும்‌, கடவுளை மறுப்பதும்‌ கடவுள்‌ நம்பிக்கையை ஒழிக்கப்‌ பிரச்சாரம்‌. செய்வதும்‌ குற்றமாகாதென்றும்‌ ) அதற்கும்‌ இக்‌ குற்றத்திற்கும்‌ சம்பந்தமில்லை என்றும்‌ வாதாடினா ர ஒழிய--அது உண்மை அல்ல என்று சொல்ல3வ இல்லை. இதுவும்‌ தவிர, ஆப்கன்‌ அரசர்‌ அமானுல்லா அவர்கள்‌, அவர்‌ நாட்டுக்கு மூல்லாக களின்‌ ! சூழ்ச்சியால்‌ நாத்திகர்‌ என்றும்‌, இஸ்லாம்‌ மத விரோதி என்றும்‌, மதத்‌ துரோகி என்றும்‌ பழிசுமதீதப்பட்டு அரசைத்‌ குறக்கச்‌ செய்திருந்தாலும்‌-நமது மாகாணதீதில்‌ அய்‌ கார்ட்‌ ஜட்ஜாகவும்‌ வங்காள மாகாண மந்திரியாகவுமிருநீத சர்‌. அப்துல்‌ ரகீம்‌ அடர்கள்‌ மேற்படி அமீரைப்பற்றி வெகு பரிதாபப்பட்டு என்ன சொல்லுகின்றார்‌ என்றால்‌, ¢ அமீரின்‌ ததீதுவங்களை ஆப்கானியர்கள்‌ ஒப்புக்கொள்ளாததிலிருந்து, அதீ தேசத்தில்‌ தேசிய உணர்ச்சி சிறிதும்‌ இல்லை என்பதாகத்‌ தெரிகின்றது. அமீருக்கு விரோதமாக இருந்த வர்கள்‌ தேசத்‌ துரோகியும்‌, கிராஜதீ துராகியுமாவார்கள்‌. அமானுல்லாவைப்‌ போன்ற தேசபக்தர்‌ வேறு எத்தேசதீதிலும்‌ பிறக்கவில்லை பண்டைய மூடநம்பிக்கைகளை ஒழிக்‌கவேண்டியது அவசியம்‌. அவ்வண்ணம்‌ கொண்டவர்கள்‌ மிகவும்‌ ஊக்கமாகவே இருப்பர்கள்‌. அமீரின்‌ கொள்கைகள்‌ வெற்றி பெற்றால்‌ முஸ்லிம்‌ நாடு உலகத்தில்‌ ஒரு சிறந்த நாடாய்‌ இருக்கும்‌ ? என்று பேசி இருக்கின்றார்‌. என3வ, திந்த மாதிரியாக s &டங்கவிலிருந்து நமது இயக்கத்திற்கு ஆதரவு தாராளமாய்க்‌ கிடைத்துவருவதைப்‌ பார்க்க, நாம்‌ எய்‌.தும்‌ மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஃ ஆதலால்‌, நமது வாலிப நண்பர்கள்‌ நமது வேலையை ஒப்புக்கொண்டு நமக்கு வேண்டிய உதவிபுரியக்‌ மகேட்டுக்கொள்கி3றாம்‌. [ குடிஅரசு 1-தலையங்கம்‌--16-6-1929] சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின்‌ பேரால்‌ நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப்‌ போலல்லாமல்‌, அன்‌ னியர்‌ களிடம்‌ இருந்து யாதொருவிதமான எலு விஷயதி தையும்‌ எதீர்பாராமல்‌, மக்களின்‌ அறிவை விலக்கி அவரவர்களின்‌ மனப்பான்மையை மாற்றுவதன்‌ மூலம உண்மையான விடுதலையையும்‌, சமத்துவத்தையும்‌, தன்‌ மத்ப்பை யும்‌ உண்டாக்கக்‌ கூடியதான ஒரு &யக்கமாகும்‌. 1686-61 www.thamizham.net - Free £ book 14௦ 3011 482 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இவ்‌ வியகீகதீதின்‌ முக்கிய கொள்கையெல்லாம்‌; கட்டுப்பட்டு அடைக்கப்பட்டிருகீகும்‌ அறிவுக்கு விடுகலையை உண்டாகீகுவதேயாகும்‌. ஆதலால்‌; சுயமரியாதை இயக்கம்‌ என்பதை அறிவு விடுதலை இயக்கம்‌ என்றே சொல்லலாம்‌. இதன்‌ உண்மை விலங்க வேண்டுமானால்‌, ஒரு நேர்மையான மனிதன்‌ தனது அறிவுக்கும்‌ ஆராய்ச்சிக்கும்‌ உள்ள கட்டுப்பாட்டையும்‌ நி/ப்பந்ததீதையு$பற்றி நாம்‌ நினைத்துப்‌ பார்ப்போமானால்‌ இவ்வியக்‌ கதீதின்‌ பெருமை தானாக விளங்கும்‌. சாதாரணமாக, இவ்வியக்கம்‌ தோன்றி 3, 4 வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு இது உண்டாக்கி இருக்கும்‌ உணர்ச்சியைப்‌ பார்‌ தீதாலும்கூட, இவ்‌ வியக்கம்‌ அறிவு விடுதலை இயக்கமா, அல்லவா என்பது நன்றாய்‌ விளங்கும்‌. நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும்‌ ஆற்றலினாலும்‌ பிழைக்க முடியாமல்‌ அன்னியர்களின்‌ முட்டான்‌ தன தீதிலேயே பிழைத்துக்கொண்டிருந்தவர்‌ களான அரசியல்‌ தேசியக்‌ கூட்டத்தார்‌ கள்‌ என்பவ/ களும்‌, சமய இயல்பில்‌ வைதிக பண்டி தகீ கூட்டதீதார்கள்‌ என்பவர்களும்‌ இவ்வியக்கதீதால்‌ தங்களுடைய வாழ்விற்கும்‌ பெருமைக்கும்‌ ஆபத்து வந்துவிட்டதாய்க்‌ கருதி, &வ்வியக்கத்தைப்‌ பாமர மக்களுக்குதி திரித்துக்‌ கூறிட அதாவது, & ம. இயக்கம்‌ தேசத்‌ துரோக இயக்கமென் றும்‌, சமயத்‌ துரோக இயக்க மென்றும்‌, நாத்திக இயக்கம்‌ என்றும்‌ சொல்லிக்கொண்டு எவ்வளவோ முயற்சியும்‌ கட்டுப்‌ பாடுமான சூழ்ச்சிகளும்‌ செய்துங்கூட, இவ்வளவுக்கும்‌ சுயமரியாதை இயக்கம்‌ ஒரு சிறிதும்‌ பின்னடையாமல்‌--அடிக்க அடக்கப்‌ பந்து எழுவதுபோல, விஷமப்‌ பிரசீசாரம்‌ செய்யச்‌ செய்ய இப்போது இந்தியா தேசம்‌ முழுவதும்‌ * பஞ்சில்‌ நெருப்புப்‌ பிடிப்பது போல்‌! மக்களிடம்‌ பரவிக்கொண்மீட போகின்றது. இவ்‌ வியக்கம்‌ ஆரம்பித்த காலம்‌ முதல்‌ இதற்கு எதிரிடையாக நமது நாட்டில்‌ வேலை செய்த பத்திரிகைகள்‌ எவ்வளவு என்பது யாவருக்கும்‌ தெரியும்‌. அதாவது; அந்தக்‌ காலத்தில்‌ நாட்டில்‌ செல்வாக்காயிருந்த *சுதேச மித்திரன்‌, * இந்து, *சுயராஜ்யா 7, £ தமிழ்‌ நாடு £, ¢ நவசக்தி £, ¢ லோகோபகாரி ?, ¢ ஊழியன்‌ ? முதலிய தேசியப்‌ பத்திரிகைகள்‌ என்பவைகளும்‌ ; மற்றும்‌ பல குட்டிப்‌ பத்திரிகைகளும்‌, கூலிப்‌ பத்தீரிகைகளும்‌--மனதார, நடந்தவைகளைத்‌ திரித்துக்‌ கூறுவதும்‌, கருதீதுக்களை மாற்றிக்‌ கூறுவதும்‌ பொது மக்க ஞாக்குத துவேஷமும்‌ வெறுப்பும்‌ உண்டாக்கும்படி எழுதுவதுமான காரியங்களில்‌ வெகு மும்மூரமாக ஈடுபட்டிருந்தன. மற்றும்‌, பிரச்சாரம்‌ செய்வதிலும்‌ தேசியத்‌ தலைவர்கள்‌, பிரச்சாரகர்கள்‌ என்பவர்கள்‌ எல்லோருமே ஒரேமுகமாய்‌ சுயமரியாதை இயக்கம்‌ தேசதீ துரோக இயக்கமென்றும்‌, நாத்திக தியக்கமென்றும்‌ இதைக்‌ கொல்லுவதற்கு ¢ ஆண்டவன்‌ அருன்கொண்டு? குணித்துவிட்டோமென் றும்‌ ) கடவுள்‌ துணைகொண்டு இறங்கிவிட்டோ மென்றும்‌ ; கிருஷ்ண பகவானே துணை என்றும்‌ கர்ச்சித்துக்கொண்டு தொண்டை கிழியப்‌ பேசியும்‌ பார்த்தார்கள்‌. அவர்களுக்குள்‌ வருணாசிரம மகா நாடு, சைவ மகாநாடு முதலிய மகாநாடுகள்‌ கூட்டிதி தீர்மானித்தும்‌ பார்த்தார்கள்‌. மற்றம்‌, புராணப்‌ பண்டிதர்கள்‌, புத்தகக்‌ கடைக்காரர்கள்‌, பூசாரிகள்‌, குருக்கள்‌, மடாதிபதிகள்‌ முதலிய கூட்டத்தார்களும்‌ தேசிய மேடையிலும்‌, * சுயமரியாதை இயக்கம்‌ சமயத்தைப்‌ பாழ்பண்ணி வருகின்றது; இதை ஒழிக்கவேண்டும்‌? என்று கூட்டங்கள்‌ போட்டுக்‌ கூவிப்‌ பார்த்தார்கள்‌. இவ்வளவும்‌ போதாமல்‌ வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள்‌ காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக்‌ கொண்டுவந்து கிதற்கு எதீரிடையாகப்‌ பிரச்சாரம்‌ செய்தும்‌ பார்த்தார்கள்‌. இனியும்‌ இரகசியமாகச்‌ செய்த கீழிதகைப்‌ பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில்‌, நம்முடைய தனிப்பட்ட நாண யத்தைப்பற்றியும்‌, நடவடிக்கை களைப்பற்றியும்‌, ஒழுக்கங்களைப்பற்றியும்‌ எவ்வளவோ கேவலமாகப்‌ பேசியும்‌, கூலி கொடுத்துக்‌ காலிகளை ஏவிவிட்டுப்‌ பேசச்செய்தும்‌ செய்யப்பட்ட இழி பிரச்சாரதீதிற்கு அளவே கல்லை. இவ்வளவும்‌ போதாமல்‌ நம்மைக்‌ கொன்றுவிடுவதாகவும்‌; குத்திவிடுவ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 483 தாகவும்‌, சுட்டுவிடுவதாகவும்‌ மற்றும்‌ பலவிதமாய்‌ அவமானப்படுதீ திவிடுவதாகவும்‌ கண்டு எழுதிய அநாம3யக்‌ கடிதங்களுக்கும்‌, பொய்க்‌ கையெழுத்திட்ட கடி தங்களுக்கும்‌ கணக்கே இல்லை. மற்றும்‌, நமக்குன்‌ இருந்த தொண்டர்களைக்கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும்‌ அளவே இல்லை, இவ்வளவு சங்கடங்களையும்‌ தாண்டி இவ்வியக்கம்‌, இன்றைய தினம்‌ ஒருவாறு தமிழ்நாட்டிலுள்ள பொது மேடைகளையெல்லாம்‌ கைப்பற்றி-தேசியத்‌ தலைவர்கள்‌ என்பவர்களை எல்லாம்‌ முக்காடிட்டு, மூலையில்‌ உட்கார வைதீதும்‌) பெரிய பெரிய பண்டிதர்கள்‌, சாஸ்‌ திரிகள்‌ சமயவாதிகள்‌, சமயத்‌ தலைவர்கள்‌ என்‌ பவர்களை எல்லாம்‌ வெளியில்‌ தலைகாட்டுவதற்கு இல்லாமல்‌ செய்துவிட்ட துடன்‌, சாதி இறுமாப்பையும்‌ சமய இறுமாப்பையும்‌ பண்டித கிறுமாப்பையும்‌ ¢ ௧௪௧௪ வென்று ந௬க்கிக்கொண்டு வருகின்றது. இன்றைய தினம்‌ நமது இயக்கத்திற்குத்‌ தமிழ்நாட்டில்‌ விரோதமாக ஏதாவது ஒரு அரசியல்‌ கட்சி என்பதற்குச்‌ செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால்‌, இது?பாது நாட்டில்‌ நடந்துவரும்‌ தேர்தல்களையும்‌, அவற்றின்‌ முடிவுகளையும்‌ கவனித்துப்‌ பார்த்தாலே டோதுமானதாக இருக்கும்‌. அது மாத்திரமல்லாமல்‌, தேசியதீதின்‌ பேராலும்‌, ஆஸ்திகத்தின்‌ பேராலும்‌ தேர்தலுக்கு நிற்க ஆட்களே இல்லாமற்‌ போனது, * நாத்திகத்தின்‌! செல்வாக்குக்கும்‌ வெற்றிக்கும்‌ ஒரு பரீட்சையாகும்‌. * காங்கிரசே பெரிது! என்ற காங்கிரஸ்‌ தலைவர்‌ திரு. அய்யங்கார்‌ தேர்தலைப்பற்றித்‌ தான்‌ ஒன்றுமே கவனிக்கப்‌ டோவதில்‌ லை என்று சொல்‌ பிவிட்டார்‌. * தேசமே பெரிது? என்ற கட்சித்‌ தலைவர்‌ திரு. வெங்கட்ராம சாஸ்திரியார்‌, வேலைபோன மந்திரிகள்‌ ஆகியவர்கள்‌ இருக்குமிடமே தெரியவில்லை. * உத்தியோகமே பெரிது? என்ற பின்பற்று வார்‌ இல்லாத குட்டித்‌ தேசியக்‌ கட்சி ஸ்தாபகரும்‌ தானே தலைவருமான திரு. வரதராஜுலு, காங்‌ ரஸ்‌ தோல்வியுற்ற சந்தோஷதீதிலும்‌ அய்யங்கார்‌ மூலையில்‌ அடங்கிய சந்தோஷத்திலும்‌ மூழ்‌ 84 கிடக்கின்றாமீர அல்லாமல்‌, தன்னைப்பற்றி நினைக்‌ கவோ; உலகம்‌ என்ன பேசிக்கொள்கிறது என்பதைக்‌ கேட்க3வா, நாட்டில்‌ தனது நிலைமை என்ன என்பதைப்‌ பார்க்கவோ, தனது கட்சியின்‌ யோக்கியதை என்ன என்ப தைப்பற்றி யோசிக்கவோ சிறிதும்‌ நோமில்லாமல்‌ இருக்கின்றாரீ, மற்றும்‌, சைவ சமயமே பிரதானம்‌, சமய ஆச்சாரிகளே தனது உயிர்‌ என்ற திந, கல்யாண௬ுந்தர முதலியார்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்களிடம்‌ சென்று ¢ சுயமரியாதைக்‌ கட்சியில்‌ சேர்ந்தால்‌ உங்களுக்கு ஓட்டுக்‌ கிடைக்காது? என்று மிரட்டுவதும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு விரோதமாய்‌ ஓட்டர்கள்‌ வீட்டுக்கு இரகசியமாய்‌ நடந்து நாஸ்திகக்‌ கட்சிக்கு ஓட்டு செய்யாதீர்கள்‌ என்று சொல்லிப்‌ பார்ப்பனர்‌ களுக்குச்‌ சில ஓட்டுகளை வாங்கிக்‌ கொடுத்துவிட்டதுடன்‌, அவர்‌ வேலை முடிந்‌ துவிட்டதாக நினைத்‌ துக்கொண்டிருக்$ன்றார்‌. மற்றபடி, ஆஸ்திகக்‌ கூலிகளோஃ வாங்கின பணம்‌ சரிவர ஜீரணம்‌ ஆயிற்றா, இல்லையா! என்பதையுங்கூடக்‌ கவனிக்‌ காமல்‌, இனியும்‌ ¢ பணம்‌, பணம்‌ ! என்று கூவிக்கொண்டு, ! கொடுக்கின்றாயா, அல்லது எதிர்க்‌ கட்சியில்‌ சேர்.தீதுகொள்ளட்டுமா என்று திரு. அய்யங்காரை மிரட்டிக்கொண்: டிருக்கின்றார்கள்‌. செங்கற்பட்டு தீர்மானங்கள்‌ என்னவென்று பார்ப்போமானால்‌, அவைகளில்‌ (1) மக்கள்‌ பிறவியில்‌ சாதி பேதம்‌ கீடையாது என்பது. (2) சாதிபேதம்‌ கற்பிக்கும்‌ மதம்‌, வேதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌ இவைகளைப்‌ பின்பற்றக்கூடாது என்பது. (1) வருணா சிரமப்‌ பிரிவுப்படி பிராமணர்‌; கூஷ்தீதிரியர்‌, வைசியர்‌, சூதீதிரர்‌, பஞ்சமர்‌ என்கின்ற பிரிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது. (1) மக்களுக்குள்‌ திண்டாமை என்பதை ஒழித்து, பொதுக்‌ குளம்‌, கிணற; பாடசாலை, சதீதிரம்‌, தெரு, கோயில்‌ முதலியவைகளில்‌ பொதுஜனங்களுக்குச்‌ சம உரிமை இருக்கவேண்டும்‌ என்பது. (5) இவை பிரசீசாரதீதால்‌ நிறைவேற்றி வைக்கமுடியாதபடி சில சுயநலக்‌ கூட்டத்தார்‌ தடைசெய்வதால்‌, சர்க்கார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 484 பெரியார்‌ & வெ. ரா. சிந்தனைகள்‌ மூலம்‌ சட்டம்‌ செய்து, அச்‌ சட்டத்தின்‌ மூலம்‌ அமுலில்‌ நிறைவேற்ற முயற்சிக்‌ கவேண்டும்‌ என்பது. (6) சாதிமத வித்தியாசங்களால்‌ மக்களின்‌ ஒற்றுமையும்‌, டொது நன்மை உணர்ச்சியும்‌ பாதிக்கப்படுவதால்‌, அதை உத்தேசித்து, சாதிமத வித்தியாசத்தைக்‌ காட்டும்‌ பட்டம்‌, குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மச்களைக்‌ கேட்டுக்‌ கொள்கின்றது என்பது (7) பெண்கள்‌ விஷயத்தில்‌, கலியாண வயது 16-க்குமேல்‌ இருக்க வேண்டும்‌) கணவனுக்கும்‌ மனைவிக்கும்‌ ஒற்றுமையின்‌ றேல்‌ பிரிந்துகொள்ள உரிமை வேண்டும்‌ ? விதவைகள்‌ மறுவிவாசம்‌ செய்துகொள்ளவேண்டும்‌ i கலப்பு மணம்‌ செய்து கொள்ளலாம்‌ ) ஆண்‌; பெண்‌ தாங்களே ஒருவரை ஒருவர்‌ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்‌ என்பது. (8) சடங்குகள்‌ விஷயத்தில்‌, கலியாணம்‌ முதலிய சடங்குகள்‌ மிகச்‌ சுருக்க மாகவம்‌, அதிகச்‌ செலவில்லாமலும்‌, ஒரே நாள்‌ சாவகாசத்திற்கு மேற்படாமலும்‌, ஒரு விருந்துக்கு மேற்படாமலும்‌ செய்யவேண்டும்‌ என்பது. (9) கோயில்‌ பூசை விஷயத்தில்‌, சேரயில்‌ களின்‌ சாமிக்கென்றும்‌, பூசைகீகென்றும்‌ வீணாகக்‌ சாசைச்‌ செலவழிக்கக்கூடாது$ சாமிசிகும்‌ மனிதனுக்கும்‌ மத்தியில்‌ தரகனரவது, மொழிபெயர்ப்பாளனாவது கூடாது) புதிதாகக்‌ சோயில்‌ கட்டுவதில்‌ பணத்தைச்‌ செலவழிக்கக்‌ கூடாது) கோயிலுக்கும்‌, சதீதிரத்திற்கும்‌, வேதம்‌ படிப்பதற்கு என்றும்‌ விட்டிருக்கும்‌ ஏராளமான சொத்துக்களைக்‌ கல்வி ஆராய்ச் கி, கைத்தொழில்‌ கற்றுக்கொடுத்தல்‌ முதலாகிய காரியங்களு$குச்‌ செல வழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்வது] உற்சவங்களில்‌ செலவழிக்கப்படும்‌ பண தீதையும்‌ நேர தீதையும்‌, அறிவு வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான காட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில்‌ செலவிடவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்வது என்பது. (10) மூடப்பழக்க வழகீசங்களை ஒழிப்பது) அதற்கு வி?ராதமான புத்தகம்‌, உபாதீதி யாயரீ ஆகியவர்களை ப்‌ பகிஷ்கரிப்பது என்ப ௧ (11) பெண்‌ உரிமை விஷயதீதில்‌ பெண்‌ களுக்குச்‌ சொத்துரிமை அளிப்பது) உத்தியாக உரிமை அளிப்பது) உபாத்தியாயர்‌: வேலை முழுவதும்‌ அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பத. (12) ¢ தீண்டப்படா தார்‌ ! விஷயத்தில்‌ உண்டி, உடை, புத்தகம்‌ ஆயவைகளைக்‌ கொடுத்துக்‌ கல்வி &b It பது) 'தர்க்கரஸ் து? நிலங்களை அவர்களுக்கே சடுப்பது என்பது. (13) பார்ப்பனரல்‌. லாத இளைஞர்களுக்குக்‌ கல்வி விஷயதீதிலிருக்கும்‌ கஷ்டங்களையும்‌ தடைகளையும்‌ நீக்க ஏற்பாடு செய்வது என்பது. (14) கல்வி விஷயத்தில்‌, தாய்‌ பாஷை, அரசாங்க பாஷை இரண்டைதி தவிர மற்ற கல்விக்குப்‌ பொதப்‌ பணத்தைச்‌ செலவிடக்கூடாது) அதுவும்‌ ஆரம்பக்‌ கல்விக்கு மாத்திரம்‌ பொதுநிதியைச்‌ செலவழித்துக்‌ கட்டாயமாய்க்‌ கற்பிக்க வேண்டும்‌; உயர்தரக்‌ கல்விக்குப்‌ பொதுதிதி எதுவும்‌ செலவழிக்கக்‌ கூடாகு. சர்க்கார்‌ காரியதீதிற்குத்‌ தேவையாய்‌ இருந்தால்‌ வகுப்புப்‌ பிரிவுட்படி மாணாகீகர்களைதீ தேர்ந்‌ தெடுதீ துப்‌ படிட்பிக்கவேண்டும்‌ என்பது. (15) சிற்றுண்டி, ஓட்டல்‌ முதலிய இடங்கவில்‌ விதீதியாசம்‌ கூடாது என்பவைகளாகும்‌. மேலும்‌, இவைகளும்‌ அனேகமாக ¢ சிபாரிசு செய்வது, ¢ கேட்டுக்‌ கொள்ளுவது 2, (முயற்சிக்க வேண்டியது? என்கின்ற அளவில்‌ தீர்மானிக்கப்பட்டிருக்கின்‌ றனவே அல்லாமல்‌, திடீரென்று நிர்ப்பந் தமாய்‌ தீர்மானிக்கப்படவில்லை. எனவே, இவற்றுள்‌ எவை எவை நாத்திகம்‌ என்றும்‌, எவை எவை அன்னிய சார்க்காரை ஆதரிப்பவை என்றும்‌, எவை எவை தேசியதீதிற்கும்‌ காங்கிரசுக்கும்‌ விரோதமானவை என்றும்‌ கூற எந்த யோக்கியமான தேசியவாதியோ அல்லது ஆதிக்கவாதியோ வீரத்துடன்‌ வெளிவரட்டும்‌ என்றுதான்‌. அறைகூவி அழைக்கின்றோம்‌. உண்மை விஷயங்களைச்‌ சொல்லாமல்‌ பொதுப்பட சுயநலப்‌ பார்ப்பனர்கள்‌ சொல்லிக்‌ கொடுத்‌ தபடி--கிளிப்‌ பின்ளையைப்‌ போலும்‌, பிறவி அடிமையைப்‌ போலும்‌ கூப்பாடுபோடுவதனாலேயே, சு. ம, இயக்கத்தின்‌ எதிர்ப்பு, கோழைத்தன்மை உடையதென்றும்‌ சுயநலமும்‌ கூலித்‌ தன்மையும்‌ கொண்ட கீழிதகைமையது என்றும்‌ அறிவினர்க்குதி தெற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்‌. எ.து எப்படி. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 485 இருந்தபோதிலும்‌, விதவை மணம்‌, கலப்பு மணம்‌, கல்யாண ரதிது, 546 வயது மணம்‌, பட்டம்‌-குறிவிடுதல்‌, பெண்கல்வி, தீண்டாமை விலக்கல்‌, சுருக்கக்‌ கல்யாணம்‌, வகுப்பு உரிமை, மூடப்‌ பழிக்கங்கள்‌ ஒழித்தல்‌, கோவில்‌ கட்டுவதையும்‌ உற்சவங்கள்‌ செய்வதையும்‌ நித்தி அந்தப்‌ பணத்தைக்‌ கல்விக்கும்‌ ஒழுக்கதீ திற்கும்‌ செலவிடுதல்‌--முதலாகிய காரிடங்கள்‌, சுயமரியாதை இயக்கத்தின்‌ பலனாய்ச்‌ சமீப காலத்திற்குன்‌ இவ்வளவு தூரம்‌ காரியத்தில்‌ பரவிவந்திரு க்கின்றன, வருகின்றன என்பதும்‌ இவ்‌ விஷயங்களில்‌ பொது மக்களுக்கு எவ்வளவு தூரம்‌ மனம்மாறுதல்‌ சமீப காலத்தில்‌ ஏற்பட்டிருக்கின்ற து என்‌ பதும்‌ $ இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்‌ எவ்வளவு தூரம்‌ தா மாகவே அழிந்‌ தபட்டு வருகின்‌ par என்பதும்‌ பொதுவாழ்கீகையைக்‌ கவனித்து வருபவர்களுந்கு நாம்‌ எடுதீதுச்‌ சொல்லாமலே. விளங்கிவருகின்றதுஃ அன்றியும்‌, இவ்‌ வியசீகதீதிற்கும்‌ கொள்கைகளுக்கும்‌ நாட்டில்‌ இருக்கும்‌ ஆதரவைப்‌ பரீட்சிப்பதற்கும்‌ இவ்வியக்க சம்பந்தமான பத்திரிக்கைகள்‌ வளர்ச்சியையும்‌, ஜில்லாக்கள்‌ தோறும்‌ தாலுக்காக்கள்தோறும்‌ நடைபெலம்‌ மாநாடுகளும்‌, அங்கு கூடும்‌ கூட்டங்களும்‌, அக்‌ கூட்டத்திற்கு வரும்‌ மக்களின்‌ யோக்கியதைகளும்‌, அவற்றில்‌ ஏகமன தாய்‌ நிறைவேறும்‌ தீர்மானங்களும்‌ ஆகியவற்றையும்‌--இவைகளுக்கு எதிரிடையாக இருக்கும்‌ கட்சிகளின்‌ கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும்‌ மக்களுடைய யோக்கியதைகளையும்‌ நிலைமைகளையும்‌ கவனித்து, நடுதிலையிலி ந்து சீர்தூக்கிப்‌ பார்த்தால்‌ எது மதிக்கப்‌ படுகின்றது என்பதைச்‌ சிறு குழந்தையும்‌ அறியமுடியும்‌, நிற்‌ தற்போது உலகத்தில்‌ முன்னேறிவரும்‌ எதீ தேசதீதிலாவது மேலே குறிப்‌ பிட்ட கொள்கைகள்‌ இல்லாமலிருக்கிள்றனவா? யாராவது சொல்ல முடியுமா ! அன்றியும்‌, மேற்கண்ட கொள்கைகள்‌ நமது நாட்டில்‌ அதற்கு மூன்‌ பல பெரியார்களாலும்‌, சீர்‌ திருத்தக்‌ காரர்களாலும்‌ சொல்லப்பட்டும்‌, உபதோம்‌ செய்யப்பட்டும்‌ வந்தவைதாமா அல்லது நம்‌ மால்‌ மாத்திரம்‌ இப்‌ பாது புதிதாய்ச்‌ சொல்லப்படுகிள்‌ றனவா என்று கேட்கிறோம்‌. பொதுவாக, இப்போது புதிதாக உள்ள விதீதியாசமெல்லாம்‌ முன்னுள்ளவர்கள்‌. வாயினால்‌ சொன்னார்கள்‌ ) புத்தகங்களில்‌ எழுதினார்கள்‌. ஆனால்‌, நாம்‌ இப்போது அவைகளைக்‌ காரியத்தில்‌ கொண்டுவர மூயற்சிக்கின்றோம்‌. நம்முடைய ஆயுளிலேயே முழுகும்‌ அமுலில்‌ நடைபெற$வண்டுமென்று உழைக்கின்றோம்‌. அவற்றுள்‌ சிறிது பாகமாவது நடைமுறையில்‌ காணப்படுகின்றது. &வைகளைத்‌ தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள்‌ சொல்லக்கூடும்‌ என்று கேட்கிறோம்‌. [குடி அரசு ?-தலையங்கம்‌--25.8-1929] சகோதரிகளே ! சகோதரர்களே! இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும்‌ கொண்டுவந்து போட்டு, ஏடு ஏடாய்ப்‌ புரட்டிப்‌ பார்‌ தீதாலும்‌ அழகும்‌ பொருளும்‌ சக்தியும்‌ நிறைந்த வார்‌ தீதையாகிய சுய மரியாதை! என்‌ கற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும்‌ கண்டுபிவக்‌ உ முடியாது. இந்த வார்த்தையான து, நமது நண்பர்‌ களிலேயே சிலர்‌, * கொள்கைகளெர்லாம்‌ நமக்குப்‌ பிடிக்கின்றன. ஆனால்‌, சுயமரியாதை என்ற சொல்‌ மாத்திரம்‌ பிடிக்கவில்லை? என்று சொல்லும்‌ மேதாவிகளுக்குதி தக்க பதிலாகும்‌. இந்த இயசீகமானது இன்றைய தினம்‌ பார்ப்பனரையும்‌, மதத்தையும்‌, சாமியையும்‌, பண்டிதர்களையும்‌ வைதுகொண்டு--மூடப்‌ பழக்க வழக்கங்களை எடுதீதுக்காட்டிக்‌ கொண்டு, மக்களைப்‌ பரிகாசம்‌ செய்துகொண்டிருப்பது போலவே என்றைக்கும்‌ இருக்கு மென்றோ, அல்லது இவைகள்‌ ஒழிந்தவுடன்‌ இவ்‌ வியக்கதீதிற்கு வேலையில்லாமல்‌ போய்‌ விடுமென்றோ யாரும்‌ கருதிவிடக்கூடாதுஃ www.thamizham.net - Free £ book 14௦ 3011 486 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ மேற்சொன்னவைகளவின்‌ ஆதிக்கங்கள்‌ ஒழிவதோடு, ஒருவன்‌ உழைப்பில்‌ ஒநவன்‌: நோகாமல்‌ சாப்பிடுகிறது என்கிற தன்மை இருக்கும்வரையிலும்‌;) ஒருவன்‌ தினம்‌ ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றிப்‌ பட்டினிகிடந்து சாவகம்‌, மற்‌9றாருவன்‌ தினம்‌ 5 வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத்‌ தடவிக்கொண்டு சாய்மான நாற்காலியில்‌ சாய்ந்‌ தகொண்டிருக்‌ கிறதுமான தன்மை இருக்கிறவரையிலும்‌] ஒருவன்‌ இடுப்புக்கு வேஷ்டி இல்லாமல்‌ திண்டாடுவதும்‌, மற்றொருவன்‌ 3 வேஷ்டி போட்டுக்‌ கொண்டு உல்லாசமாகதீ திரிவதான. தன்மை இருக்கின்‌ றவரையிலும்‌; பணக்காரர்கள்‌ எல்லாம்‌ தங்கள்‌ செல்வம்‌ முழுவதையும்‌ தங்களது சுயவாழ்வுக்கே என்று எண்ணிக்கொண்டிருக்கிறவரையிலும்‌ சுயமரியாதை இயக்கம்‌ இருந்தேதான்‌ தீரும்‌. மேற்கண்ட தன்மைகள்‌ ஒழியும்‌ வரை இவ்வியக்கத்தையும்‌ ஒழிக்க யாராலும்‌ முடியாது. [ஈரோட்டில்‌, 11-5-1930-ல்‌ சொற்பொழிவு--* குடி அரசு ? 1-6-1930] பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும்‌ கலப்பு உண்மையைவிட அதிக மான அதிரப்தியைக்‌ கொடுக்கக்கூடியதாகவே இருக்கும்‌. உண்மையை மறைத்துப்‌ பேசுவது என்பகு, எப்போ தும்‌ பேசுகின்‌ றவனுக்கும்‌, பேசீசுக்‌ கேட்பீர்களுக்கும்‌ திருப்தி யைக்‌ கொடுக்கக்கூடியதாகவே இருக்கும்‌, திருப்தி உண்டாகும்படியும்‌ செய்துகொள்ள லாம்‌. ஆனால்‌, உண்மை பேசுவதன்மூலம்‌ அப்படிச்‌ செய்ய முடியா துஃ இன்ன மதநீதான்‌ சுயமரியாதை இயக்கம்‌ என்பதாக நான்‌ ஒரு காலமும்‌ சொல்ல: மாட்டேன்‌. அந்தப்படியும்‌ என்னால்‌ ஒப்புக்கொள்ள முடியாது, இன்று காணப்படும்‌ எந்த மதமும்‌ அவசியம்‌ இல்லை என்கின்ற கொள்கையுடைய சுயமரியாதை இயக்க மானத--எப்படித்‌ தன்னை ஏதாவது ஒரு மததீ குடன்‌ பிணைத்துக்கொள்ளமுடியும்‌ $ ஏனெனில்‌, சுயமரியாதை இயக்கமானது ஒருநாளும்‌ யாரோ ஒருவர்‌ சொன்னார்‌ என்ப தற்காக எதையும்‌ ஒப்புக்கொள்ளக்கூடியது அன்று) யார்‌ எதைச்‌ சொன்னாலும்‌, பகுத்தறி வுக்குப்‌ பொருத்தமாக இருக்கின்றதா என்பதைப்‌ பார்தீது, திருப்தி அடைந்த பிறக எதையும்‌ ஒப்புக்கொள்ளவேண்டும்‌ என்கின்‌ ற கொள்கையுடையது, அன்றியும்‌, அது அந்தக்‌ கொள்கையோடு--அதன்‌ நிபந்தனைக்குட்பட்டு யார்‌ எதைச்‌ சொன்னாலும்‌ அதை யோசிக்கத்‌ தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல்‌, எந்த மதமாவது எந்த நபராவது, தான்‌ அனுசரிக்கும்‌ கொள்கையும்‌ தான்‌ சொல்லுவதும்‌ இன்ன காலத்தில்‌ இன்னார்‌ மூலமாக இன்னார்‌ சொன்னது என்பதாகவும்‌, கடவுளே சொன்னதாகவும்‌, அதற்கு யாரும்‌ விரோதமாக எதையு சொல்லக்கூடாது என்பதாகவும்‌, அதை யாரும்‌ பரிட்சிக்கவும்‌ கூடாது, அதைப்பற்றிச்‌ சந்‌ 2தக மும்‌ படக்கூடாது என்ப தாகவும்‌ யாராவது சொல்ல வந்தால்‌--அது எந்த மதமானாலும்‌, அது எப்படிப்பட்ட உண்மையானாலும்‌ அதைச்‌ சுயமரியாதை இயகீகம்‌ ஒருநாளும்‌ ஒப்புக்கொள்ளமுடியாது. பழைய அபிப்பிராயங்கள்‌ எல்லாம்‌, அது எதுவானாலும்‌ அடியோடு பரிசாதிக்கப்‌ படவேண்டும்‌; பரிசோதிக்கச்‌ சற்றும்‌ பயப்படக்கூடாது. அப்படிப்‌ பரிசோதிப்ப திலும்‌ தடுநிலைமையிலிருந்தே பரிசோதிக்‌ கவேண்டும்‌. அந்தப்படி பரிசோதிக்கப்‌ பின்வாங்கு கின்றவன்‌ யாராயிருந்தாலும்‌ கோழையேயாவான்‌. நமக்கு முன்னால்‌ இருந்த மனிதர்களைவிட நாம்‌ விசேஷ அனுபவமும்‌ ஞானமும்‌ உடையவர்களென்று சொல்லிக்கொள்ள பா த்தியதையுடையவர்கள்‌ என்பதை ஞாபகத்தி லிறுத்தாதவன்‌, மனிதத்‌ தன்மையுடையவனாகமாட்டான்‌. அன்றியும்‌, இந்தக்‌ காலம்‌ ¢ அனுபவத்தின்‌ மேல்‌ அனுபவம்‌ ? என்‌ கின்ற முறையில்‌ புதிய புதிய ததீ.துவங்கள்‌ வளர்நீது வந்த காலமுமாகும்‌. மேலும்‌, இப்போதுள்ளவர்கள்‌ பல வழிகளில்‌ இயற்கையாகவே முற்போக்கும்‌, அறிவு விளக்கமும்‌, அனுபவப்‌ பயிற்சியும்‌ பெற்.றுவருகிற சந்ததியில்‌ பிறந்த வர்களுமாய்‌ இருக்கிறார்கள்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 487 ஆகவே, இயற்கையாகவும்‌, செயற்ை யாகவும்‌, முன்னோர்களைவிட நாம்‌ எவ்விதத்‌ ' திலும்‌ அறிவிலா, ஆராய்சீசியிலோ, இளைத்தவர்கள்‌ அல்லர்‌ என்பதையும்‌, கால வேறு பாட்டிற்கும்‌ காட்சி வேறுபாட்டிற்கும்‌ தகுந்தபடி கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும்‌ அவசியமும்‌ உடையவர்கள்‌ என்பதையும்‌ நாம்‌ நன்றாக உணரவேண்டும்‌. இந்த நிலையில்‌ இருந்துகொண்டு பார்த்தோமானால்‌, முன்னோர்‌ சொன்னவைகள்‌ என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம்‌ என்பது தானாகவே விளங்கிவிடும்‌. முன்னோர்‌ கருதீ துக்கு அடிமையாய்‌ இருந்தோமானால்‌, உண்மையையும்‌ அறிவு வளர்ச்சியையும்‌ நாம்‌ அடியோடு கொன்றுவிட்டவர்களாவோம்‌. [சென்னை மவுன்ட்‌ ரோடில்‌) 22-3-1931-ல்‌ சொற்பொழிவு--* குடிஅரசு! 29-53-1931] நம்மைப்பொறுதீதவரை நாம்‌ தைரியதீதை விடவில்லை. நம்‌ அபிப்பிராயங்களில்‌ | சந்தேகமில்லை. நம்பிக்கையில்‌ குறைவேற்படவில்லை. எதற்கும்‌ முயற்சியையும்‌ ஊக்கத்‌ தையும்‌ சிறிதும்‌ தளர்தீதிக்கொள்ளவில்லை. ஒரு பத்தாண்டுகள்‌ பொறுதீதாவது மக்கள்‌ நம்‌ கருதீதுக்களை ஏற்றுக்கொள்ளுவார்கள்‌. கோயில்‌, குளம்‌, உற்சவம்‌ முதலியவைகன்‌ எவ்வளவு அநாகரிகமானவையாயும்‌ ஒழுக்கக்‌ குறைவானவையாயும்‌ நாட்டுக்குக்‌ கேடு உள்ளனவாயுமிருந்தாலும்‌ சரி--பூசாரி களும்‌, புரோகிதரும்‌, புலவரும்‌, புத்தகக்‌ கடைக்காரரும்‌ உள்ளவரை எப்படி அவை ஒழிய மாட்டாவோ, அதேபோல்‌ காங்கிரசும்‌ காந்தியமும்‌ கதரும்‌ தேசியம்‌, சுயராஜ்யம்‌ என்ப வைகளும்‌ எவ்வளவு பித்தலாட்டமானவையானாலும்‌, நாட்டு முற்போக்குக்கு விரோதமாண வையானாலும்‌, சுதநீதிரதீதிற்கும்‌ சமதீதுவத்திற்கும்‌ முட்டுக்கட்டை போடுவன வானாலும்‌ “அவை பலரின்‌ சுயநல வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌, வாழ்விற்கும்‌ பயன்படுவதனால்‌ பார்ப்ப னர்களும்‌, பண்டிதர்களும்‌, வக்கீல்களும்‌, பதவி பட்டம்‌ பெற ஆசைப்பட்டவர்களும்‌, பத்தி ரிக்கைப்‌ பிழைப்புக்காரரீ களும்‌, தேசிய பக்தர்களும்‌, தொண்டர்களும்‌, கதர்‌ வியாபாரி களும்‌, தொண்டர்களும்‌ உள்ளவரை நிலைத்துதீதான்‌ தீரும்‌. அவற்றை ஒழிப்பதும்‌ சுலப மான காரியமல்ல. ஆகையால்‌, எதிர்ப்‌ பிரச்சார அளவுக்கு உடனே பயன்‌ எதிர்பார்க்க முடியாது: ஏதோ ஒரு வழியில்‌ நாம்‌ மகீகளுகீகுப்‌ பகுதீ கறிவை உண்டாகீகிவிட்டோமானால்‌, பிறகு அவர்கள்‌ எல்லாவற்றையும்‌ ஒரே கண்ணாடிகொண்டு பார் தீது, உண்மையை உணரக்‌ கூடியவர்களாகிவிடுவார்கள்‌. பாம்பையும்‌ மரதீதையும்‌ வணங்கி, பேயையும்‌ பிசாசையும்‌ கள்ளும்‌ சாராயமும்‌ வைதீதுப்‌ பூசித்து, ஆண்‌ பெண்‌ குறிகளை சிலையாகப்‌ பூசனை9சய்து அதை அடையாள மாய்‌ நெற்றியில்‌ தரிதீ.துக்கொள்ளுவதாய்‌ கிருக்கின்ற மதம்‌ எந்த மதம்‌ ? . கடவுள்‌ என்பது ஒரு விளையாட்டூச்‌ சாமான்‌ ; சுவர்க்கம்‌, மோட்சம்‌ என்பவைகள்‌, | தின்பண்டங்கள்‌ $ நரகம்‌ என்பது பூச்சாண்டி. &ம்‌ மாதீரிக்‌ கற்பனைகள்‌ எல்லா மததீதிலும்‌ உண்டு. சுயமரி பாதை இயக்கம்‌ எந்த மதத்தையும்‌ தனிப்பட்டுத்‌ தாக்கவில்லை. மதம்‌ ஒழிந்தால்‌ சமூகம்‌ முன்‌ னேறும்‌. ஆனால்‌, இந்து மதம்‌ மிகவும்‌ மோசமானது. திலகருக்கும்‌, தாசருக்கும்‌ இறுதிச்‌ சடங்குகள்‌ வெகு ஆர்ப்பாட்டமாய்ச்‌ செய்யப்‌ பட்டன. மோதிலால்‌ நேரு காயத்தீரி மந்திரம்‌, பஜனை முதலியவை நடத்தி மோட்சதீ திற்கு அனுப்பப்பட்டார்‌ ) அவரது குமாரர்‌, தகப்பனாரின்‌ அஸ்தியைப்‌ பிரயாகையில்‌ விட்டார்‌ | | | www.thamizham.net - Free £ book 14௦ 3011 488 பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ இவைகளை நடதீதமுடியாத கோடிக்‌ கணக்கான மக்கள்‌ நரகதீகிற்குப்‌ போகின்‌ நார்களா? மகாதீமாக்களும்‌, தலைவர்களுமே இக்‌ கதிடானால்‌ பாமர மக்களின்‌ கதி என்ன? கர்மாவை நம்பினவன்‌ கடைதீதேறமாட்டான்‌, விதியை நம்பினவன்‌ மதியை இழப்‌ பான்‌. மூடநம்பிக்கைகளை அகற்றவே சுயமரியாை க இயக்கம்‌ கங்கணம்‌ கட்டிக்கொண் டிருக்கிறக ஓவியம்‌ என்கின்ற பேரால்‌ கோவில்களில்‌ கொடுமைகளும்‌ புராண ஆபாசங்‌ களும்‌ நிலைதீதுநிற்கின்‌ றனஃ [ @t அரசு !-தலையங்கம்‌-12-4-1931] சகோதரிகளே ! சகோதரர்களே! சுயமரியாதை இயக்கம்‌ தோன்றிய இந்த 5, 6 வருடங்களாக நாட்டில்‌ ஏற்பட்டிருக்கிற உணர்ச்சிகன்‌ என்ன என்பதைப்‌ பற்றியும்‌, அதனால்‌ ஏற்பட்ட காரியங்கள்‌ என்ன என்பதைப்‌ பற்றியும்‌, சுயமரியாதை இயக்கத்தின்‌ பேரால்‌ சொல்லப்பட்ட அபிப்பிராயங்‌ களெல்லாம்‌ முதலில்‌ கேட்பவர்களுக்கு அதிசயமாயும்‌ தலைகீழ்ப்‌ புரட்சியாகவும்‌ காணப்‌ பட்ட போதீலும்‌ பின்‌ செல்வாக்குப்பெற்று எல்லா ஜனங்களாலும்‌ சகித்துக்கொண்டு வரப்படுகிறதென் னும்‌, பார்ப்பனர்‌ களுடைய ஆதிக்கத்திலும்‌, பார்ப்பனியப்‌ பிரசீசார கரின்‌ ஏகநாயகத்‌ தன்மையிலும்‌ இருந்துவந்த காங்கிரஸ்‌ முதலிய அரசியல்‌ இயக்கங்களும்‌, மத இயக்கங்களும்‌, சமுதாய வகுப்பு கயக்கங்களு3 இப்பொழுது கந்த அபிப்பிராயங்‌ களையே சொல்லத்‌ தொடங்கிவிட்டன என்றும்‌-- இவைகளுக்கெல்லாம்‌ காரணம்‌, நாம்‌ ஆரம்பித்த எடுப்பிலிருந்து ஒரு சிறிகும்‌ எந்தக்‌ கொள்கையிலும்‌ பின்போகாமல்‌ நாளுக்கு நாள்‌ முன்னேறிக்கொண்டு வந்ததோடு, யாருடைய பழிப்புக்கும்‌ பகைமைக்கும்‌, தாட்சண்‌ யத்திற்கும்‌ பயப்படாமல்‌ உறுதியுடனிருந்ததோடு, யாரானாலும்‌ எப்படிப்பட்டவர்‌ களானாலும்‌ நமது கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லையானால்‌ நமக்கு அவர்களைப்‌ பற்றிக்‌ கவலை இல்லை என்றும்‌ அலட்சியமாயிருந்ததோடு சிறிதும்‌ ராஜிக்கு கடம்‌ கொடுக்காமலிருந்து வந்ததுமே யாகும்‌. நம்மைப்பற்றீப்‌ பலர்‌ குற்றம்‌ சொன்ன காலத்திலும்‌, நமது இயக்கம்‌ என்ன சாதித்தது என்று கேட்கவந்த காலத்திலும்‌ நாம்‌ அவர்களை இலட்சியம்‌ செய்து பதில்‌ சொல்லிக்கொண்‌ டிராமல்‌ நமது இலட்சியத்திலே ய கவலை வைத்துக்கொண்டு, நாம்‌ அப்படித்தான்‌ செய்வோம்‌ ) இஷ்டமிருந்தால்‌ பின்பற்றி வார. இல்லாவிட்டால்‌ உன்‌ வேலையைப்‌ பார்தீ தக்கொண்டு போ! அதன்‌ பேரில்‌-நமது கொள்கையின்‌ 3பரிலோ, நமது செய்கையின்‌ பேரிலோ ஆதிக்கம்‌ செலுத்த வேறு யாருக்கும்‌ உரிமை இல்லை? என்று சொல்லிக்கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான்‌ நல்லதோ, கெடுதி3யா நமது இயக்கதீதின்‌ தற்கால நிலைமைக்குக்‌ காரணமாக இருந்து வருகிறது. ஏனெனில்‌, நாம்‌ யாரிடதீதி.லும்‌ நமது இயக்கத்திற்காக ¢ இப்படிச்‌ செய்‌83றன்‌ அப்படிச்‌ செய்கி3றன்‌ ? என்று வியாபாரம்‌ பேசி ஒப்பந்தம்‌ செய்து ¢ அட்வான்ஸ்‌ ! வாங்க வில்லை. ஒருவருக்கும்‌ கட்டுப்பட்டு எவரையும்‌ ஏதாவதொரு விஷயத்தை நம்பச் செய்து, அதனால்‌ நஷ்டத்தை அடையுங்கள்‌ என்று யாருக்கும்‌ நஷ்டத்தை உண்டுபண்ணவோ, யாருடைய தயவையும்‌ எதிர்பார்க்கவோ இதுவரையில்‌ வைதீதுக்கொள்ளவில்லை: நாம்‌ செயல்லுவதற்கும்‌ செய்வதற்கும்‌, சொல்லாததற்கும்‌ செய்யாத தற்கும்‌ நம்மையே பொறுப்‌ பாளியாக்கீக்‌ கொண்டிருக்கிறோம்‌. இதில்‌ கலந்து ஒத்துழைத்ததாகச்‌. சொல்லக்கூடிய உர்கள்‌ எல்லாரும்‌ நமது கொள்கையும்‌ அவர்களது கொள்கையும்‌ ஒன்றாய்‌ இருக்கிற முறையில்‌ நம்முடன்‌ சேர்ந்து இருக்கிறவர்களே தவிர, அவை சிறிது மாறினவுடன்‌ 94 5 eI வேண்டியவர்களே யாகையால்‌, கொள்கை மாறாமல்‌ இருக்கும்‌ வரையிலுத்தான்‌. யாரும்‌ ஒதீதுழைக்க வேண்டியவர்களென்று கருதிச்‌ சேர்ந்து வேலை செய்துகொண்டு வந்தவர்‌ களென்று நினைத்‌ 2தாமேயொழிய, யாரையும்‌ கூட்டு வியாபார ஒப்பந்தமாக www.thamizham.net - Free £ book 14௦ 3011 ஊஊ. ல்யச்கங்கள்‌. 489 ஒருவருக்கொருவர்‌ எப்படி இருந்தாலும்‌ ஒத்துப்‌ போகவேண்டிய நிர்ப்பநீதமூஃடய குடும்ப வாழ்க்கைக்‌ காரியமாகக்‌ கருதவே இல்லை. அன்றியும்‌, நாமும்‌ இதுவரை என்ன செய்துவிட்டோமென்று கவலைப்‌ படவில்லை. ஏனெனில்‌, நமது இலட்சியம்‌ மிகப்பெரிது. இதற்காக நாம்‌ செய்யும்‌ முயற்சி மிகச்சிறிது, இதனுடைய நஷ்டம்‌ நமக்ரூப்‌ பெரிதல்ல. அன்னியருக்கும்‌ நம்மால்‌ ஏற்பட்ட கஷ்டமோ நஷ்டமோ சிறிதும்‌ கணகீகிடத்‌ தகுந்ததேயல்ல. ஏதா நமக்குத்‌ தோன்றியதைப்‌ பேசுவது, எழு கவது, ஊரூராய்ச்‌ சுற்றுவது என்பதைத்தவிர நாம்‌ செலவழிக்கும்‌ பொருளோ ஊக்கமோ எதிர்பார்கீகும்‌ காரியத்திற்கு எத்தனையோ மடங்கு சிறியதேயாகும்‌. மலை போன்ற காரியத்தைக்‌ கொண்டு வருவதற்காக, தலைமுடி போன்ற அற்ப சங்கதியைக்‌ கொண்டு கட்டியிழக்கப்‌ பார்க்கிறோம்‌. வந்தால்‌ மலைபோன்ற கொள்கைகள்‌ வரட்டும்‌; அறுந்து போனால்‌ முடிபோன்ற நமது அற்ப முயற்சிகள்‌ வீணாய்ப்‌ போகட்டும்‌. நமக்கு அதைப்பற்றிப்‌ பெரிய கவலை ஒன்றும்‌ கில்லை. இதனால்‌ பெரிய நஷ்டம்‌ இல்லை. ஏனெனில்‌, இவ்வளவு பெரிய இயக்கத்திற்கும்‌ நமது மன உறுதியு நிர்‌ தீதாட்சண்ய முந்தான்‌ ஆஸ்தியாகவும்‌, மூலப்‌ பொருளாகவும்‌ இருக்கின்றன 3வ தவிர வேறில்லை. எந்தக்‌ காலத்திலும்‌ எந்த இயக்கமோ, எந்த அபிப்பிரயமோ, செல்வாக்கு உடையதாக இருந்தால்‌ காரண காரியங்களைக்‌ கவனியாமலும்‌, அவ்‌ வியகீகதீதின்‌ பிரமுகர்‌ களது நடவடிக்கைகளையும்‌ அபிப்பிராயங்களைக்‌ கவனியாமலும்‌ வந்து-தெரிந்தோ தெரியாமலோ வந்து புகுந்து கொள்வதும்‌, பிறகு ஏதாவது செல்வாக்கு உன்ள இயக்கமோ, அிப்ிரரயமோ, தோன்றினால்‌ அதில்‌ பாய்ந்து விடுவதும்‌, அந்தப்படி பாய்ந்து விட்ட தற்குப்‌ பிறருக்குச்‌ சமா கானம்‌ சொல்வதற்காக தாங்கள்‌ முன்பு போய்ச்‌ சேர்ந்த கயகீகதீ தையோ அபிப்பிராயத்தையோ அல்லது அது சம்பந்தமானவர்களையோ குற்றம்‌ சொல்லு வதின்மூலம்‌ சமா தானம்‌ சொல்லப்பார்ப்பதும்‌ உலக மக்களில்‌ பலரது இயற்கையேயாகும்‌. மற்றும்‌ ஒரு கயக்கதீதிற்குதீ தாராள செல்வாக்கு இருக்கும்‌ வரையிலும்‌-- அதாவது ஒரு வண்டி பள்ளத்தில்‌ தானாக உருண்டுபோவதராயிருந்தால்‌ வண்டியைத்‌ தொங்கிக்‌ கொண்டே வண்டிக்குப்‌ பின்னால்‌ ஓடுவதும்‌, அப்படி இல்லாமல்‌ மிக்க பாரதீதோடு ஒரு வண்டி சேற்றில்‌ புதைந்து கொண்டோ, மேட்டில்‌ ஏற வேண்டியதாகவோ ஏற்பட்டபோது அதைத்‌ தோள்‌ கொடுத்துத்‌ தள்ளிவிட வேண்டிய கஷ்டதீதிற்குப்‌ பயந்துகொண்டு கழி போட்டுக்கொண்டு தொல்லைகொடுப்பதும்‌, விட்டுவிட்டு ஓடப்பார்ப்பதும்‌ சில சாதாரண: மக்களுக்கு சகஜ ?மயாகும்‌. இதைக்‌ கண்டு இயக்கதீதில்‌ பொறுப்பு உடையவர்கள்‌ பயப்‌ படாமலும்‌, தங்களிடம்‌ ஏதாவது மாறுதல்‌ குணம்‌ ஏற்பட்டிருக்கின்றதா என்பதை மட்டும்‌ பார்‌ தீதுக்கொண்டு தைரியமாகவும்‌ உறுதியாகவும்‌ இருக்கவேண்டும்‌. ஒரு கியக்‌கதீகையோ ஒரு காரியதீதையோ செய்வதனால்‌ ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும்‌ ஏற்படலாம்‌. பெருமையைக்‌ கண்டு சந்தோஷ மடைபவன்‌ சிலுமையைக்‌ கண்டு துக்கப்பட வேண்டியதுதான்‌. எப்படி இருந்தபோதிலும்‌ இவ்விரண்டையும்‌ உத்‌ 8தசிதீது உறுதியான கொள்கைகளிலிருநீது பிறழாமல்‌ இருப்பானே யானால்‌, அவன்‌ ஒரு வகையில்‌ காரிய சித்தி அடைந்தவனேயாவான்‌. ஒவ்வொரு மனிதனும்‌ தான்‌ செய்யும்‌ காரியம்‌ தனது சொந்த இலாப நஷ்டதீதிற்கா, அல்லது பிற நலதீதிற்கா ஏன்பதை யேசசித்து, இலாப நஷ்டதீதிற்குத்‌ தயாராக இருக்கவேண்டும்‌. [தரங்கம்பாடியில்‌, 25-5-1931-ல்‌ தலைமையுரை--* குடி அரசு? 31-5-1931) சகோதரர்களே 1 சுயமரியாதைக்கு, கடவுன்‌ தயவே தேவை இல்லை. அந்தக்‌ கடவுனைப்பற்றிய கவலையும்‌ இல்லை. சகலமும்‌ சுயமுயற்சியோடு ஆகவேண்டும்‌ என்றும்‌ சொல்லப்‌ படுவதாகும்‌. . 1686—62 www.thamizham.net - Free E book No 3011 4% பெரியார்‌ ஈ, வெ. ரா. சிந்தனைகள்‌ அது மாதீதிரமச்லாமல்‌, சுயமுயற்சியை விட்டுக்‌ கடவுன்‌ தயவுக்கும்‌ கடவுள்‌ செய. இக்கும்‌ இதுவரை எதிர்பார்‌ தீதிருந்‌ கதன்‌ பலனே நமது நாட்டுக்கு இன்று சுயமரியாதை, இவ்வளவு இன்றியமையாத அவசியமாய்ப்‌ போய்விட்டது. சுயமரியாதை இயச்கம்‌, சுயராசீசிய முயற்சியைப்போல்‌ எல்லாப்‌ பொறுப்பையும்‌. வென்ளைக்காரன்மீது சுமத்தி, அவனைப்பற்றிப்‌ பேசுவதிலேயே காலம்கழிதீது, அவனுக்குக்‌ கஷ்டம்‌ கொடுப்பதிலேயே நமது ஊக்கத்தையும்‌ முயற்சியையும்‌ செலவழிப்பதில்லை. சியில்‌, 17-5:1921-) சொற்பெழிவு-- குடி அரசு ॥ 24.5.1931 வு-- கு சகோதரிகளே ! சகோதரர்களே ! புதிய சங்கதி எதுவானாலும்‌ காதை மூடிக்கொள்ளவே நமது மக்கன்‌ கற்பிக்கப்‌ பட்டிருக்கின்றார்கள்‌. குழந்தைப்‌ பருவத்தில்‌ நமது உள்ள தீதில்‌ எது எது பதிக்கப்பட்டு விட்டனவோ அவையெல்லாம்‌-தேர்‌ ந்த ஞானிகளாலும்‌ அவதார புருஷர்களாலும்‌ சொல்லப்‌ பட்ட உண்மைகள்‌ என்ற உறுதியுடனே புகுதீதப்பட்டிருக்கின்‌றன. ஆகையால்‌, புதிய நோக்கங்களையும்‌ தோற்றங்களையும்‌ காணச்‌ சகிக்காதவர்களாக நாம்‌ இருக்கின்றோம்‌. உலகப்போக்கை நாம்‌ தெரிய நேர்ந்தாலும்‌, பார்க்க நேர்ந்தாலும்‌ அதன்‌ அனுபவத்‌ தின்‌ மேன்மையை அடையவும்‌, பாராட்டிப்பேசவும்‌ தயாராய்‌ இருக்கின்‌ றாமே யல்லாமல்‌, அதை நமது வாழ்க்கையுடன்‌, நமது நாட்டு எண்‌ ணங்களுடன்‌ பொருதீதீப்‌ பார்ப்பதற்குச்‌. சிறிதும்‌ எண்‌ ணுவதே கிடையாது. நமது மக்களின்‌ கிம்‌ மாதிரியான நிலையைப்‌ பார்த்தப்‌ பார்தீது மனம்‌ கஷ்டப்பட்டதால்தான்‌ நாங்கன்‌ இத்துறையில்‌ இறங்கவேண்டியவர்‌ களானோம்‌. சுயமரியாதை இயக்கக்‌ கொள்கைகள்‌ ஒன்றும்‌ புதிதானவையோ, ஏதாவது அதிசய மானவையோ என்று நீங்கள்‌ மலைக்கவேண்டியதில்லை. அது மனிதன்‌ அறிவு பெறவும்‌, சமத்துவம்‌ அடையவும்‌, சுதந்திரம்‌ பெறவும்‌ பாடுபடுகின்‌ றது. இவற்றிற்கு எதிராயும்‌ தடையாயும்‌ இருக்கும்‌ எதையும்‌ அடியோடு ஒழிக்கத்‌ தைரியம்‌ கொள்ளுகின்றது. இந்த நிலையில்‌, மக்களின்‌ மூடத் தன தீதினாலும்‌, தாழ்வினாலும்‌, அடிமைத்‌ தனதீ னாலும்‌ பயனடைந்து வாழ்‌ 8ன்றவர்களுக்குச்‌ சுயமரியரதை இயக்கம்‌ ஒரு கோடாரியாய்க்‌ காணப்‌ படுவதில்‌ அதிசயமில்லை. எதிர்ப்புக்கும்‌, தொல்லைக்கும்‌ பயந்தால்‌ ஒரு காரியமும்‌. நடவாமல்‌ போவதோடு பிற்போக்கும்‌ ஏற்பட்டுவிடும்‌. இந்த மா திரியான பாமர உணர்ச்சியும்‌, பயங்காவித்தனமும்‌, வைதீததைச்‌ சுமக்கும்‌ மிருக சுபாவமும்‌ &நீநாட்டு மக்களின்‌ உயர்‌ குணங்களாகப்‌ பாவிக்கப்பட்டு வருவதாலேயே உலகத்தில்‌ இந்திய நாடு மாதீதிரம்‌ வெகுகாலமாகவே அடிமை நாடாகவே-சுயமரியாதை யும்‌, அறிவும்‌ அற்ற நாடாகவே இருந்து. வருகின்றது. இதற்குக்‌ காரணம்‌ இன்னதுதான்‌ என்று கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு கன்னமும்‌ அறிவு ஏற்பட்டு விடுவதில்லை... ஒருநாய்‌ வளர்க்கின்‌ றவன்‌ தன்‌ நாயை மற்றவன்‌ மேல்‌ ஏவி விடுவதுபோல்‌--நம்மை-யார்‌ சூழ்ச்சி செய்து 84 கதிக்கு ஆளாக்கினர்களோ அவர்களேதாம்‌ அச்‌ சூழ்ச்சியை ஒழிக்க வரும்‌ ஆட்கள்‌ மேல்‌ உசுப்பிவிடுவதால்‌, உண்மையை உணரக்‌ கவலைகெரள்ளாமல்‌ அவர்கள்‌ கைகாட்டின பக்கம்‌ திரும்பிக்கொண்டு கதீதுகின்றோம்‌, நமது.நாட்டு அடிமைத்தனம்‌ எத்தனை காலமாய்‌ இருந்து வருகின்றது என்பதை தினைத்துப்‌ பாருங்கள்‌. தர்மராஜ்யம்‌, கிராம ராஜ்யம்‌, சதீதியகீர்தீதி அரிச்சந்திர ராஜ்யம்‌, முதலிய அவதார ராஜ்யம்‌ முதல்‌-தெம்வீகத்‌ தன்மை பொருந்திய மூவேந்தர்‌ முதலிய சரித்திர ராஜ்யம்‌ வரை; இந்திய மக்கள்‌ நிலைமையைச்‌ சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையைக்‌ கண்டு பாருங்கள்‌, அந்த நிலைக்கு கந்த நிலை மேலானதா, கீழானதா என்று சுயமரியாதைக்‌ கண்ணாடி மூலம்‌ பாருங்கள்‌. அறிவுக்‌ கண்ணாடிமூலம்‌ பாருங்கள்‌. - www.thamizham.net - Free E book No 3011 இயக்கங்கள்‌ . 49 நீங்கள்‌ erpst பார்ப்பனரையும்‌ கேட்டுப்‌ பாருங்கள்‌. தங்கள்‌ நிலை இன்றைய நிலையைவிட; அன்று--அதாவது அவதார ஆட்சியிலும்‌ மூவேந்தர்‌ ஆட்சியிலும்‌ மேலா யிருந்தது) ஆனால்‌, இன்று கீழாயிருக்கின்றது என்றுதான்‌ சொல்லுகின்றார்கள்‌. ஆனால்‌; அவர்கள்‌ தவிர மற்ற மக்களாகிய சூதீதிரர்கள்‌, பெண்கள்‌; தாழ்த்தப்பட்ட சாதியார்கள்‌ என்று கிழிவுபடுதீதப்பட்டிருக்கிற நம்மில்‌ 100-க்கு 99 பேர்களைக்‌ கேட்டுப்‌ பாருங்கள்‌. நெஞ்சில்‌ கையை வைதீது நினைத்துப்‌ பாருங்கன்‌. அன்றுக்கு இன்று எவ்வளவே மேலாக இருக்கின்றோம்‌. . இந்த நிலையோடு திருப்தி அடையாமல்‌ இன்னும்‌ மேலே போக வேண்டுமானாலும்‌. நானும்‌ கூடவே வரப்‌ பாடுபடுகின்றேன்‌. ஆனால்‌, பழைய நிலையே மேல்‌, அதற்குப்‌ போக வேண்டுமென்று சொன்னால்‌ அதைச்‌ சகிக்க முடியவில்லை. அரை நிமிஷங்கூட அதை ஆதரிக்கமுடியாது. அறிவு, பொருள்‌ முதலிய அகதீதிலும்‌ புறத்திலும்‌ சமத்துவத்தை அடைய உலகம்‌ தீர்மானிதீதுவிட்டது. இந்தியர்மட்டும்‌ மூடர் களாய்‌, அடிமைகளாய்‌ நீழி மக்களாய்‌ இருக்கும்‌ அவதார ராஜ்யத்திற்குப்‌ போகவேண்டுமென்றால்‌, இந்‌ நாடு அடியோடு அழிந்துபோவதே மேல்‌, உலகத்தை ஒரு கண்ணில பார் தீது, இந்தியாவை மற்றொரு கண்ணில்‌ பாரீதீது இரண்டுக்கும்‌ உள்ள வித்தியாசத்தை உணருங்கள்‌ ! நம்‌ கல்வி, செல்வம்‌, வாழ்வு, விவ சாயம்‌, வீரம்‌, மானம்‌, அறிவு, ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள்‌ எல்லாம்‌ எப்படி இருந்தன ; மற்ற நாடுகளில்‌ எப்படி இருந்தன, இருக்கின்‌ றன என்பவைகளைச்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌. [பழைய கடலூறில்‌, 13-9-1931-ல்‌ சொற்பொழிவு--1 குடி அரசு ! 20-9-1251] திரு. காந்தியால்‌ 1921ஆம்‌ வருஷம்‌ ஆரம்பிக்கப்பட்ட ஒதீதுழையாமை இயக்க மானது அரசியல்‌ கொடுமைகளை ஒழிப்ப தாடு, பார்ப்பனக்‌ கொடுமைகளையும்‌ ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில்‌ சில கொள்கைகள்‌ கொண்டிருந்ததாலும்‌ நம்போன்றவர்களின்‌ ஆசைக்கும்‌ அவசரத்திற்கும்‌ தக்கபடி அது காணப்பட்டதை முன்‌ னிட்டூம்‌, அவ்‌ விஷயத்தில்‌ கலந்து மனப்பூர்‌வமாக நாலைந்துகால வருஷம்‌ உழைதீததின்‌ மூலமும்‌, அகுசமயம்‌ பார்ப்பனர்ீகளுடைய நெருங்கிய சம்பந்தம்‌ இருக்க நேர்ந்ததின்‌ மூலமும்‌, அதன்‌ பலர பலன்களை நாமும்‌ ஒரு பங்கு அனுபவிக்க நேர்‌ ந்ததின்‌ மூலமும்‌, அந்த இயக்கத்தின்‌ போக்கைப்‌ பார்ப்பனர்கள்‌ எந்த வழியில்‌ திருப்பி அதன்‌ பலனை எட்படி அடைய மூயற்சித்தாரீகள்‌--முயற்சிக்கின்‌ றார்கள்‌ என்பதை நன்றாய்‌ அறிய நமக்குச்‌.சந்தர்ப்பம்‌ கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும்‌ ஒருவகையில்‌ ஒன்றுபடுத்தி ஒரே வழியில்‌ திருப்பி யோசிக்கவேண்டிய அவசியமூண்டாயிற்று, அங்ஙனம்‌ யோசித்ததன்‌ பலனாக நமக்குக்‌ கிடைத்த பலன்‌ என்னவென்றால்‌, நமது மகீகள்‌ அரசியல்‌ விஷயமாய்ச்‌ கூச்சல்‌ போடுவதும்‌ முயற்சிகள்‌ செய்வதும்‌ சற்றும்‌ நமக்குப்‌ பயன்படுவனவல்ல. என்பதும்‌, (இவைகள்‌) பார்ப்பனர்‌ கள்‌ நம்மீது செலுத்திவரும்‌ தங்கள்‌ உயர்வையும்‌, ஆதிக்கத்தையும்‌ நிலை நிஐுதீதிக்கொள்ளும்‌ சூழ்சீசிக்கே இவை உண்டாக்கப்பட்டிருக்கின்‌றனவே தவிர வேறல்ல வென்றும்‌, இன்றைய நிலையில்‌ நமது மக்களுக்கு வேண்டியவைகளிலெல்லரம்‌ பகுதி தறிவும்‌, மானமுமே முக்கியமானதென்றும்‌, இன்றையப்‌ பார்ப்பண ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமும்‌, அன்னிய ஆட்சியின்‌ கொடுமைக்குக்‌. காரணமும்‌, நமது மக்களுக்குப்‌ பகுதீதறிவும்‌, தன்மதிப்புணர்ச்சியும்‌ தடைபட்டிருப்பதேதானென்றும்‌ கண்டுபிடி தீ தாம்‌, ஐது மாத்திரமல்லாமல்‌, நமது சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கும்‌, சமதீ துவதீதிற்கும்‌ வேண்டிய வேலையல்லாம்‌ செய்தும்‌ பார்‌ தீதுவிட்டோம்‌. அதாவது, பணம்‌ கொடுதீ சதாம்‌; ௬க சவுக்கியம்விட்டோம்‌.) சிறை சென்றோம்‌. இன்னும்‌ மனிதனால்‌ உயிரை தீ தவிர வேறு! www.thamizham.net - Free £ book 14௦ 3011 492 பெரியார்‌ ௪ வெ ரா சிந்தனைகள்‌ ன்னென்ன சாதனங்களை அலட்சியமாய்கீ கருதமுடியுமோ, அவ்வளவும்‌ செய்தோம்‌. இப்படிச்‌ செய்ததால்‌ ஒருவரல்லர்‌, இருவரல்லரீ; ஆயிரக்கணக்கான பேர்‌, இலட்சக்கணக்‌ கான ரூபாய்களையும்‌ நட்டமடைந்து--ஒரு தடவை மாதீதிரமல்லாமல்‌ பல தடவைகள்‌ சிறையும்‌ சென்றோம்‌. இவ்வளவு செய்ததின்‌ பலனாகவும்‌ கடுகளவும்கூட முற்போக்கு அடைய முடியாமல்‌ போனதையும்‌ கண்கூடாகக்‌ கண்டோம்‌. அதன்‌ பிறகு, மற்ற நாட்டு விடுதலை நிகழ்ச்சிகளை ஆராயத்‌ தொடங்கியதில்‌, அவற்றிலும்‌ அனேகமாய்‌ ஒவ்வொரு நாடும்‌ நம்மைப்‌ போலவே வேறு பல முயற்சிகளை எவ்வனவேர செய்ததுபார்‌ தீதும்‌ முடியாமற்‌ பான காலங்களில்‌, எந்த முடிவைக்‌ கண்டுபிடி தீது அந்த முயற்சியில 8ய இறங்கிக்‌ கடைசியாக விடுதலை பெற்று சமதீதுவம்‌ அடைநீததாகக்‌ கண்டோமோ--அதையே நாமும்‌ பின்பற்ற ஆசைப்பட்டோம்‌. அன்றியும்‌, பெருமையும்‌ வலிமையும்‌ கொண்ட நாடு என்று சொல்லப்பட்ட அய்ரோப்பா, அமெரிக்க முதலிய தேசங்கவின்‌ உன்னத நிலைமைக்கு அவற்றின்‌ பகுத்தறிவு வளர்சீசியும்‌, சுயமரியாதை உணர்ச்சியுமே முக்கியமானதென்பதையும்‌ கண்டோம்‌. சமீப காலம்‌ வரை கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இருக்கி, சைனா, ஜப்பான்‌ முதலிய தேசங்கள்‌ வல்லரசுத்‌ தன்மை பெற்றதற்கு அவற்றின்‌ சுயமரியாதை உணர்ச்சியே காரணம்‌ என்பதையும்‌ கண்டோம்‌. அதன்‌ பிறகே, நாமும்‌ நமது தத்தின்‌ விடுதலைக்கும்‌, சமதீகவதீதிற்கும்‌ பகுதீதறிவும்‌, தன்மதிப்புமே பிரதானம்‌ என்பதாகக்‌ கருதி, அதன்‌: முயற்சிக்கு, * சுயமரியாதை இயக்கம்‌? எனப்‌ பெயரிட்டோம்‌. இந்த இயக்கம்‌ எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிற்கோ, சமூகத்திற்கோ என்பதாக கல்லாமல்‌, பொதுவாகத்‌ தாழ்த்தப்‌ பட்டம்‌, இழிவு செய்யப்பட்டும்‌, தன்மான உணர்ச்சி உண்டாகாமல்‌ அமுதீதப்பட்டும்‌, பகுத்தறிவு வளர்சீசி செய்யாமல்‌ தடை செய்யப்பட்டும்‌ இருககும்‌ எல்லா மக்களுக்கும்‌, கொடுங்கோன்மையில்‌ அடக்‌ 9 ஆளப்பட்டு வரும்‌ மக்களுக்கும்‌ பயன்படும்படியான முறையில்‌ அமைக்க விரும்பியே இதில்‌ வீறு நடை போடுகிறோம்‌. பகுத்தறிவிற்கு மதிப்புக்‌ கொடுதீகு, மக்கன்‌ எல்லோரும்‌ சமத்துவம்‌ என்‌8ன்ற உண்மையான மனிதத்‌ தன்மைக்குதீ தாராளமாய்‌ இடங்‌ கொடுக்கின்ற ஒவ்‌வொருவருக்கும்‌ இடம்‌ ஒதுக்கி வைக்கும்‌. எண்ணங்‌ கொண்டே இம்‌ முயற்சியில்‌ ஈடுபட்டோம்‌. இம்‌ முயற்சி மிகவும்‌ கஷ்டமானது என்றும்‌ அளவுக்கு மீறிய இன்பத்தையும்‌ தொல்லைகளையும்‌ கொடுக்கக்கூடியது என்றும்‌ நாம்‌ நன்றாய்‌ உணர்கிறோம்‌. எனினும்‌, இது வெற்றிக்கு வநீதாலொழிய நமது சமூகம்‌ மாதீதிரமல்ல; நமது நாடு மாத்திரமல்ல, உலக முழுவதும்‌, உலக சமூகம்‌ எல்லாவற்றிற்கும்‌ நிர்ப்பயமான: விடுதலையா, சாத்தியமோ, ஓய்‌3வா இல்லையென்கின்ற முடிவினாலும்‌ இம்‌ முயற்சி இன்றைய பெரியோர்கள்‌ எனப்படும்‌ வயது சென்றவர்‌ களுடைய ஒதீ துழைப்பும்‌, ஆதரவும்‌ பெற முடியாவிட்டாலும்‌ பெரும்பான்மையான பரிசுதீதத்‌ தன்மையுடைய வாலிபர்களின்‌ கூட்டுறவும்‌ அனுதாபமும்‌, ஆதரிப்பும்‌ மலிநீதுகிடப்பதாலும்‌ குணிந்து கிறங்கி விட்டோம்‌. முடிவில்‌ இதனுடைய வெற்றி தோல்வியைப்‌ பற்றி நாம்‌ அதிகமான கவலையெடுதீதுக்‌ கொள்ளாமல்‌, இந்த முயற்சி சரியா, தப்பச என்பதைப்பற்றி மாத்திரம்‌ தீர யோசித்து தைரியமாய்‌ இறக்கியிருக்கிறோம்‌. [8 குடிஅரசு? கட்டுரை--1-5-1932] 13. முதல்‌ மாகாண சுயமறியாதை மகாநாடு தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாட்டை, செங்கற்பட்டு ஜில்லாவில்‌ கூட்டவேண்டு மென்று செங்கற்பட்டு ஜில்லா பிர முகர்கன்‌ முடிவுசெய்திருப்பதாகப்‌ பதீதீரிக்கைகவில்‌: காண நரம்‌ மிகுதியும்‌ மகிழ்ச்சியுடன்‌ அவ்‌ வபிப்பிரயதீறை வரவேற்கின்றோம்‌. www.thamizham.net - Free £ book 14௦ 3011 ௪௨ ஐய 5) றலை [மம dFa மைர ம oY ல fimgng முண்பமனீறள முதஸ்‌ Fwimgame Loipin woisey மழட மன ehongoegsy ஒழு ௭-௨ ‘LT இயக்கங்கள்‌ 493 தற்காலம்‌ அரசியல்‌ புரட்டாலும்‌ மதவியற்‌ புரட்டாலும்‌ கஷ்டப்பட்டும்‌, பார்ப்பனர்‌ களாலும்‌ அவர்களது கூலிகளாலும்‌ வஞ்சிக்கப்பட்டும்‌, பகுதீதறிவும்‌ தன்மதிப்பும்‌ கிழந்து தவிக்கும்‌ நாட்டிற்கும்‌ பாமர மச்களுகீகும்‌ சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளிதீது வருகின்றது. என்பது நடுநிலைமைகொண்ட அறிஞர்களால்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்ட விஷயமேயாகும்‌. அப்பேர்ப்பட்ட இயக்கத்தை நாடு முழுவதம்‌ பரவச்‌ செய்வதன்‌ மூலம்‌ மக்களுக்கு உண்மையை உணர்த்தி, தூக்கதீதிலிருந்து தட்டி எழுப்பி, ஊஃகமூட்டி, நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும்‌, அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள்‌ கூட்டிக்‌ குறைகளை வெளிப்படுதீதியும்‌, பல அறிஞர்களின்‌ உபதேசத்தைக்‌ கேட்கச்‌ செய்தும்‌ நாட்டில்‌ தீவிர பிரச்சாரம்‌ செய்யவும்‌ வேண்டியது மிகவும்‌ அவசியமானது என்பதும்‌, இது ஆங்காங்குள்ள தலைவர்‌ களுடையவும்‌ பிரமுகர்களுடையவும்‌ கடமை யான.துமான காரியம்‌ என்பதும்‌ நாம்‌ சொல்லாமலே விளங்கும்‌. இதவரை பல ஜிஃலாகீகளிலும்‌, தாலுக்காக்களிலும்‌ ஜில்லா, தாலு£$கா மகாநாடுகள்‌ கூட்டப்பட்டிருக்கின்‌றதானாலும்‌ தமிழ்நாட்டுக்கே ¢ தமிழ்‌ மாகாண பொதுவான மகாநாடு ? கூட்டப்படவில்லை. இதற்காகச்‌ சுமார்‌ 4, 5 மாதமாய்‌ சில ஜில்லாக் காரர்கள்‌ முயற்சி செய்து வருவதாகத்‌ தெரிந்தாலும்‌, நமது செங்கற்பட்டு ஜில்லாவில்‌ தீவிர முயற்சிசெய்து, ரூபாய்‌ 5000-க்‌ த மேல்‌ வசூல்‌ செய்யப்பட்டு, வரவேற்பு சபை முதலியவைகளும்‌ ஏற்படுத்தி வரவேற்புசபை அக்கிராசனரையும்‌ தெரிந்தெடுதீதாய்விட்ட தாகத்‌ தெரியவருகின்றது. மகாநாட்டுச்கு தலைவரைத்‌ தேர்ந்தெடுப்பதில்‌ தக்க கவனம்‌ செலுதிதி, சுயமரியாதை இயக்கத்தில்‌ மிகுதியும்‌ கவலையும்‌ உறுதியும்‌ கொண்ட கனவான்களாகவும்‌ சுயமரியாதை எல்லோருக்கும்‌ மிக அவசியமானதெனக்‌ கருதும்‌ கனவான்களாகவும்‌ பார்த்துத்‌ தெரிந்தெடுக்க வேண்டும்‌ என்றே விரும்புகின்றோம்‌. திருவாளர்கள்‌ சவுநீதரபாண்டிய நாடார்‌, எம்‌. கிருஷ்ணன்‌ நாயர்‌, பி. சுப்பராயன்‌, சரீ, கே. வி. ரெட்டி நாயுடு, எம்‌. கே. ரெட்டி, பன்னீர்செல்வம்‌, குமாரசாமி ரெட்டியார்‌, ராஜன்‌, சண்முகம்‌ செட்டியார்‌ முதலியவர்‌ களைப்‌ போன்றவர்களையே தெரிந்தெடுத்தால்‌ மிகுதியும்‌ பொருதீதமான தாக இருக்கும்‌ என்பதை நாம்‌ சொல்ல வேண்டியதேயில்லை. நிற்ச, தஞ்சாவூரும்‌ மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடதீத முயற்சிப்பதாய்தீ தெரிகின்றது தமிழ்நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில்‌ செங்கற்பட்டும்‌, தஞ்‌ சாவூரும்‌ உறுதியானதும்‌ பயமற்றதுமான தன்மையுடன்‌ பார்ப்பணரல்லாதார்‌ நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கது. அதற்குக்‌ காரணம்‌, இந்த இரண்டு ஜில்லாபோர்டு தலைவர்‌ களையும்‌ எப்படியாவது ஒழிக க3வண்டுமென்று பார்ப்பனர்கள்‌ தலைகீழாகப்‌ பாடுபடுவதே போதியதாகும்‌. பார்ப்பனப்‌ பத்திரிக்கைகளும்‌, அவர்களின்‌ கூலிகளும்‌ இவர்‌ களைப்பற்றித்‌ தூற்றாத--விஷமப்பிரச்‌ சாரம்‌ செய்யாத நாட்களைக்‌ சாண்பது மிகவும்‌ அரிதாகும்‌. சென்னை மாகாணம்‌ முழுவதற்கும்‌ பார்ப்பனர்கள்‌ கண்களுக்கு, நமது பனகல்‌ அரசர்‌ எப்படி ஒரு பெரிய * இராட்சதராக!க காணப்படு8ன்றாரோ, அதுபோல்‌ தஞ்சை; செங்கற்பட்டு ஜில்லாப்‌ பா/ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள்‌ டி, பன்னிர்செல்வம்‌ அவர்களும்‌, எம்‌. கே. ரெட்டி அவர்களும்‌ ¢ இராட்சதர்‌? களாகக்‌ காணப்படுகிறார்கள்‌. [இராட்சதர்கள்‌ என்றால்‌, பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத்‌ தோன்றியவர்கள்‌ என்பது ததீதுவார்தீதம்‌.] கந்த நிலையில்‌ அவர்கள்‌ சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும்‌ அதிசயமாய்த்‌ தோன்றாது. தஞ்சை ஜில்லாவில்‌ * பார்ப்பனரல்லா தார்‌ மாகாண மகாநாடு? கூட்டும்‌ முயற்சியில்‌ மாத்திரம்‌ இருந்துகொண்டு, ¢ சுயமரியாதை மகாநாட்டை? செங்கற்பட்டு ஜில்லாவிற்கு: விட்டுவிட வேண்டு 83நாம்‌. செங்கற்பட்டு ஜில்லா பிரமுகர்கள்‌ இந்த முயற்சிக்குதீ தாராளமாய்‌ வெளியில்‌ வந்து வேண்டிய உதவிசெய்யக்‌ கோருகின்றோம்‌. [ ஒடுஅிரசு ! அறிக்கை 16-12-1928] www.thamizham.net - Free £ book 14௦ 3011 494 பெரியார்‌ ஈஃ வெ. ரா. சிந்தனைகள்‌ (தலைவரை முன்மொழிந்து உரை) சகோதரிகளே ! சகோதரர்களே 1 இப்பொழுது இந்த மகாநாட்டுக்குத்‌ தலைவரைதி தேர்‌ நீதெடுக்கவேண்டி என்னை, எனது நண்பர்‌ திரு. சவுநீதரபாண்டிய நாடார்‌ அவர்களைப்‌ பிரேரேபிக்கும்படியாக நமது வரவேற்பு அக்ராசனர்‌ அவர்கள்‌ கட்டளையிட்டிருக்கிறார்‌. அதற்கிணங்கி நான்‌, இப்போது அவர்களை உங்கள்‌ சார்பாகப்‌ பி3ரரேபிக்கப்போகிறேன்‌. (கரகோஷம்‌) இப்படிப்‌ பிரேரேபிப்பதில்‌ ஒரு விஷேசமிருக்கிறது. என்ன ₹ திரு. நாடார்‌ அவர்கள்‌ சுமார்‌ 13 மாததீதிற்கு முன்பாகவே வரவேற்புக்‌ கமிட்டியாரால்‌ தேர்‌ ந்தெடுக்கப்பட்டு, அவர்‌ களுடைய சம்மததீதையும்‌ வெகு நிர்ப்பந்ததீதின்‌ பேரில்‌ பெற்று, உங்களுக்கும்‌ எல்லோ ருக்கும்‌ வெளிப்படுதீதியாய்விட்டது. இனிமேல்வந்து இங்கு அவரை ஒருவர்‌ பி3ரரேபிக்‌ கவோ, ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும்‌ அதிகாரமும்‌, யோக்கியதையும்‌ கிடை யாது. பிரேரேபணை யோ, ஆ3மாதிப்பதோ, ஆதரிப்பதோ கொஞ்சமும்‌'அ வசியமே இல்லை. ஆனால்‌, பின்‌ ஏன்‌ இப்படி ஒரு வழிமுறை இருந்துவருகின்றது என்பதாகப்‌ பல நண்பர்‌ களுக்குச்‌ சந்தேகம்‌ தோன்றலாம்‌. என்ன அதனுடைய கருத்து ரகசியம்‌ ? இப்பேர்ப்பட்ட பெரிய மகாநாட்டில்‌ தலைமை வகிக்கும்‌ பெரியாரைப்பற்றி அறிமுகப்படுதீ,துவான்‌: வேண்டியும்‌ அவருடைய அருமை பெருமைகளையும்‌ தெரியப்படுதீகு.வான்‌ வேண்டியும்‌ சில வார்த்தைகளைச்‌ சொல்‌ லுவதற்காகவே இந்தர்‌ சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்‌ தவிர வேறு காரணம்‌ ஒன்றும்‌ இல்லை. மேலும்‌, இந்த மகாநாடு விஷயமாகவும்‌ சில வார்‌ தீதைகள்‌ சொல்லுவதற்கும்‌ இந்தச்‌ சந்தர்ப்பம்‌ இடங்கொடுக்கிறது. அந்த முறை யில்தான்‌ நான்‌ அப்‌ பெரியாரைப்பற்றிச்‌ சில வார்தீதைகள்‌ சொல்.லு93றன்‌ஃ நம்முடைய மகாநாட்டுதீ தலைவராக இருக்கிற திரு. நாடாரவர்‌ களைப்பற்றி நான்‌: உங்களுக்கு அதிகமாக எடுதீ தசீசொல்ல முன்வருவது, பகலில்‌ சூரியனைக்‌ காட்டுவதற்குதீ தீவட்டி பிடி தீததுபோலாகும்‌. அவர்‌ இரண்டாவது தடவை நம்முடைய சென்னை மாகாண சட்டசபைக்கு நம்முடைய பொதுமக்கள்‌ பிரதிநிதியாக நியமிக கப்பட்டவர்‌ அது மாத்திரமல்லாமல்‌, நம்முடைய அரசாங்கத்தை நடத்தும்‌ கவர்ன்மெண்டாகிய மந்திரி கட்சியாருடைய முக்கிய (பீரதம) அங்கத்தினர்‌ அவரே) பெரிய தனவந்தர்‌. இவைக ளெல்லாம்‌ போதுமா--ஒரு பெரிய மகாசபைக்கு அக்கிராசனப்‌ பதவிக்குத்‌ தெரிந்தெடுப்ப தற்கு என்று கேட்கலாம்‌. இவைகளைப்போல்‌ பணக்காரரும்‌ உண்டு. பத்ததீ தடவை சட்டசபை மெம்பராக ஒட்டிக்கொள்‌ கிறவர்‌ களுமுண்டு (சிரிப்பு), தலைமுறை தலைமுறை யாய்‌ ஜிசலா, தாலுக்கா போர்டு பிரசிடெண்டாயிருக்கிறவர்களு முண்டு. போதுமென்று நான்‌ சொல்லவில்லை. ஆனால்‌, இன்னும்‌ அதைவிட அருமையான குணங்கள்‌ அவர்‌ களிடதீதில்‌ என்ன இருக்கின்றது என்று கேட்பீர்களானால்‌, என்னைப்‌ பொறுத்தவரையிலும்‌ நான்‌ கொஞ்சங்‌ குறைவாகவே சொல்லக்கூடும்‌. என்ன 8 எந்தக்‌ காரியத்தை உத்தேசித்து இந்த மகாநாட்டைக்‌ கூட்டி இருக்கிறோமோ, அந்த இயக்கத்திற்காக என்ன விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்குக்‌ கூடியிருக்கி3 றாமோ, அதன்‌ கொள்கைகளில்‌ மூழ்கினவர்‌ஃ அது மாத்திரம்‌ போதாது, மனப்‌ பூர்த்தியக அதை ஒப்புக்கொண்டு ஒழுகுகின் றவர்‌, அனுபவத்தில்‌ அனேக உபத்திரவங்கள்‌ குறுக்கே இருந்தாலும்‌ அவர்‌ திரணமாக நினைக்கிறாரென்றே திடமாய்ச்‌ சொல்லுகிறேன்‌. அந்தக்‌ கொள்கைகளின்‌ தத்துவங்களை ஒப்புக்கொண்டு உணர்ந்து, அதன்படி நடப்பதிலும்‌ மற்றவர்‌ களும்‌ இம்‌ மாதிரி நடப்ப தற்குத்‌ தன்னுடைய உடல்‌, பொருன்‌, ஆவி மூன்றையும்‌ தத்தஞ்செய்து அவரால்‌ கூடியவரை நாட்டில்‌ பிரச சாரம்‌ செய்யவேண்டுமென்று தொண்டு செய்வதற்கும்‌ தயாரா யிருக்கிறார்‌ என நான்‌ மனப்பூர்‌ தீதியாய்ச்‌ சொல்லுகிறேன்‌. ஒரு சமயம்‌ நான்‌ சொல்லுவது தவறாயிருநீதால்‌ நான்‌ ஜவாப்தாரியலல (கரகோஷம்‌) ) அந்த எண்ணத்தினால்‌ எவ்வனவு உறுதியாய்‌ கிருக்கி3றன்‌ என்பதுதான்‌ இப்பொழுது கேள்வி, அப்‌பர்ப்பட்ட பெரியார்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 495 நமக்குக்‌ கிடைக்கதீகக்கது கண்டிப்பாய்‌ நாம்‌ வெற்றியுறுவோம்‌ என்பதற்கு அறிகுறி. என்றுதான்‌ சொல்லமுடியும்‌. நீங்கள்‌ அடுத்தாற்போல்‌ இந்த இயக்கத்தைப்பற்றி எதிர்பார்ப்பீர்கள்‌. வாஸ்தவத்‌ தில்‌ இந்த இயக்கத்தின்‌ ததீதுவத்தைப்பற்றி எனக்குக்கூட போதுமான பதில்‌ சொல்லத்‌ தெரியாத அளவு, இன்றைய தினம்‌ ஆரம்பத்தில்‌ டாக்டர்‌ சுப்பராயன்‌ அவர்‌ கள்‌ விளக்கமாக எடுத்துக்காட்டி இருக்கிறார்‌. அதற்கு மேலாக அதைப்பற்றி அதிகம்‌ சொல்லவவேண்டியதே கில்லை. இதற்கு சுயமரியாதை இயக்கம்‌ எனப்‌ பெயரிட்டது, மூடப்‌ பழக்‌ உ வழக்கங்களை ஒழிக்க வேண்டியும்‌, மததீதைப்‌ பொறுத்த வரையிலும்‌, வாழ்க்கையைப்‌ யொறுத்தவரை யிலும்‌ ஒழுங்குபடுத்த வேண்டியும்தான்‌. எல்லா வாழ்க்கைக்கும்‌ சயமரியா தை வேண்டியது தான்‌. அரசியலில்‌ அமிழ்ந்து கிடப்பதற்கு முக்கிய காரணம்‌ சுயமரியாதை இன்மையே. கதைப்பற்றிச்‌ சொல்லிய டாக்டர்‌ சுப்பராயனின்‌ புத்திமதிகள்‌ பொன்னேபோல்‌ போற்றத்‌ தக்கன. சுருக்கமாக கீரண்டொரு வார்த்தை சொல்லு83றன்‌, இந்த இயக்கம்‌ ஒரு தனி சமூகத்திற்கு விரோதமாகவோ, அனுகூலமாகவோ தனி அரசாங்கம்‌, வகுப்புக்கு வி3ராத மாகவோ, அனுகூலமாகவோ இருக்‌ கிறது என்று நினைப்பீர்களானால்‌ நாம்‌ எல்லோரும்‌ ஏமாந்து போடவோம்‌. இப்பொழுது நமது விதிகளின்‌ விஷமப்‌ பிரசீசாரதீதால்‌ அரனகம்‌ பொய்ப்‌ புரட்டுகள்‌ பரவி, இது பார்ப்பனர்களுக்கு விமராதமான இயக்கம்‌ ] அவர்களை ஒழிக்கவேண்டும்‌ என்பதற்காக ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்‌) மதத்தையே ஒழிக்க வந்த இயக்கம்‌ ) நாஸ்திக இயக்கம்‌ ; அரசாங்கத்தோடு இரகசியமாகச்‌ சண்டை போடுவகு போல வாலைப்‌ பிடிதீ.துக்கொண்டிருக்கிற இயக்கம்‌--என்று பழிக்கப்பட்டிருக்‌ கிறது. ஆனால்‌ இதன்‌ ததீ.துவமென்ன § உலகிடை இப்பொழுது உயர்வுக்கும்‌ தாழ்வுக்கும்‌ சண்டை நடக்கிறது (கரகோஷம்‌), கொடுங்கோன்மை' அரசாட்சி--சாதுக்களான. குடியானவர்கள்‌ சண்டை; மதம்‌ பிடித்த முதலாளிகள்‌--ஏழைக்‌ கூலித்‌ தொழிலாளர்‌ கன்‌ சண்டை, இவர்கள்‌ இரண்டு பேர்களும்‌ இத்து வாழ வேண்டுவதே இதன்‌ நோக்கம்‌. முதலாளிகளை யா, பார்ப்பனர்களை 3w, வெள்ளைக்‌ ரர களையோ ஒழிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இந்த இயக்‌ கதீதை ஆரம்பிப்‌3பாமானால்‌ ஏமாத்து பாய்‌, பின்னால்‌ போய்விடுவோம்‌. பின்‌ என்ன அதன்‌ அம்சம்‌? அவர்களும்‌ நாழம்‌ சம)மன்ற உணர்ச்சி ஏம்படவேண்டு&, சீக்கிரத்தில்‌ அது ஏற்படத்தான்‌ கூடும்‌. அதன்‌ மூலம்தான்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ பலமற்றுப்‌. போகும்‌. நாளைய திளம்‌ இது வேண்டிய அவசியமிர ந்தால்‌ உங்கள்‌ எல்லோரையும்‌ விட நான்‌ சந்தோஷப்படுவேன்‌. ஆனால்‌, இந்த சுயமரியாதை இயக்கம்‌ உலகதீகை சீரிட்டுக்‌ கொண்டிருக்கவண் டும்‌. உலகத்திலுள்ள ஆணவம்‌, அகம்பாவம்‌, அறியாமையை ஒழிக்கவேண்டியி 548 p 5. அதன்‌ மூலமாக எல்லா மக்களையும்‌ சமதீதுவமாகச்‌ செய்வ இதற்குச்‌ சாத்தியமாகும்‌. டாக்டர்‌ சுப்பராயன்‌ சொன்னமாதிரி வேறுவேறுவிதமாக இவ்வியக்கம்‌ ஆயிரக்கணக்‌ கான வருஷங்களாக ஏற்பட்டிரு க்கிறது. பிராமண ஆதிக்கம்‌, பெண்களை அடிமைப்‌ படுதீதுதல்‌ முதலியவை எல்லாம்‌ ஒழியவேண்டும்‌. ஆர்‌ ஜன்னியமாக ஒரு மேக வெள்ளம்‌ தலை விரித்தாடுகின்றது. அதற்கு இப்போது கொஞ்சம்‌ சக்திபெற்று உலகத்தை நடத்துகிற சக்தி ஏற்படக்கூடும்‌. என்னைப்போல்‌ சில விளையாட்டுப்‌ பின்னளைகளிருந்தாலும்‌ இன்னும்‌ மகா பெரியோர்கள்‌ வந்து தங்கள்‌ சக்தியைக்‌ காட்டுவார்கள்‌ (கரகோஷம்‌), எந்தெந்தக்‌ குணங்கள்‌ எதிரிடையாக நம்முடைய நாட்டுக்கு, மனிதத்‌ தன்மைக்கு விரத மாக விருக்கிறமதா அதை ஒழித்து வருகி 3றாம்‌. அதனால்தான்‌ கிப்பொழு து, முன்னால்‌ நம்‌ முகத்திலே விழித்ததற்கு எவ்வளவு தரம்‌ குளித்தார்களோ--அவர்கள்‌ இப்போது கா3தாடு காது கேட்க அவ்வளவு பொறுமை ஏற்பட்டிருக்கிறது. எனக்கு மிஃவும்‌ சந்தோஷம்‌. இப்பேர்ப்பட்ட மாநாடுகள்‌: கூட்டுவதற்குச்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்ததற்கு www.thamizham.net - Free £ book 14௦ 3011 496 பெரியார்‌ ஈ. வெ. ரா, சிந்தனைகள்‌ உங்கள்‌ சார்பாக அக்கிராசனரைப்‌ பிரேரேபிக்க ஏற்பட்ட சந்தர்ப்பத்தைக்‌ குறித்து நான்‌ பெருமை பாராட்டுகின்‌ றேன்‌, மனப்பூர்‌ தீதியாக நீங்களும்‌ ஆதரிக்க வேண்டுமென்று உங்களைக்‌ கேட்டுக்கொள்ளுகிறேன்‌. [செய்கற்பட்டில்‌, 37-2-1929-ல்‌ முதலாவது சுயமரியாதை மகாநாட்டில்‌ சொற்பொழிவு--- « திராவிடன்‌ ! 19-2-1929] (¢ சைமன்‌ கமிஷன்‌ ? ஆதரிப்புத்‌ தீர்மானம்‌) அககிராசனர்‌ அவர்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே | இப்பொழுது சைமன்‌ கமிஷனைப்‌ பகிஷ்காரம்‌ செய்வதற்கு மூன்று காரணங்கள்‌ சொல்லுகிறார்கள்‌. 1 இந்தியர்கள்‌ அதில்‌ சேர்க்கப்படவில்லை. 2 இந்திபர்களுடைய நிலைமையை விசாரிப்பதற்கு அவர்களால்‌ ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கிறது. 3 அது தங்கள்‌ சுயமரியாதைக்கு விரோதம்‌. இவ்வாறு சொல்லுவதில்‌ உண்மை ஒன்றுமே இல்லை. இம்‌ மூன்றுக்கும்‌ சமாதான முறையில்‌ இத்‌ தீர்மானம்‌ பி3ரரேபிக்கப்பட்டிருக்கிறது. முதலா வதாக, இந்தியர்களைச்‌ சேர்க்காததற்குக்‌ காரணம்‌, அவர்களே * உங்களில்‌ ஒரு மனப்பட்ட அபிப்பிராயமே இல்லை. பல வகுப்புக்களும்‌, சாதிக்‌ கலகமும்‌ உயர்வு தாழ்வு என்று ஒற்ற மை இல்லாமலும்‌ போராட்டத்தில்‌ இருக்கிறபோது யாரை நம்புகிறது! என்று பதில்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. நாமே, பார்க்கிறபோது, நம்‌ நாட்டிலே இந்துக்களென்றும்‌, முஸ்லிம்களென்றும்‌, பார்ப்பனர்களென்றும்‌, பார்ப்பனரல்லாதாரென்றும்‌, உயர்ந்தோ ரென்றும்‌, தாழ்ந்தோரென்றும்‌ இருந்துவந்.து, ஒருவருக்கொருவர்‌. அபிப்பிராய பேதங்களில்‌ பல வித்தியாசங்கள்‌ வைத துக்கொண்டு போராடிக்‌ கொண்டிருக்கிற சமயதீதில்‌-யாரைதீ திருப்திப்படுத்துவது1 நம்‌ இஷ்டம்போல்‌ ஒரு திட்டம்‌ அமைக்கவோ அதைத்‌ திருத்தி அமைக்கவோ இப்போது சர்க்கார்‌ ஒரு சந்தர்ப்பம்‌ கொடுதீதிரு க்கிறார்கள்‌. அப்படியே நம்மில்‌ சிலர்‌ சேர்ந்திருந்தாலும்‌, அவர்கள்‌ தான்‌ நம்மைக்‌ காட்டிக்கொடுக்கிறார்கள்‌. ரவுலட்‌ ஆக்ட்‌, ஆயுத ஆக்ட்‌, ஜெயிலில்‌ விதீதியாசத்தோடு நடத்தவேண்டுமென்று சொல்லுவது நம்முடைய ஆட்கள்‌. தொழிலாளிகளுக்குக்‌ கடுமையான சட்டங்கள்‌ இயற்றுவது நமது ஆட்கள்‌, அவர்கள்‌ நம்மை ஏமாற்றி; நம்மீது பெரிய பிழைகளைப்‌ போடுகிறார்கள்‌. இவைகளை எல்லாம்‌ யோசித்துத்‌ தக்க சமாதானம்‌ சொல்ல இப்பொழுது நமக்கு நல்ல சந்தர்ப்பம்‌ ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, நம்நாட்டில்‌ 1050 கட்சிகள்‌, அிப்பிராய பேதங்கள்‌ இருக்கின்றன. காங்கிரசில்‌ மிதவாதிகள்‌, அமிதவாதிகள்‌) அமிதவாதிகளுள்‌ காங்கரஸ்‌ கட்சியார்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌, பார்ப்பனர்‌, பார்ப்பனரல்லாதாரெனப்‌ பலவிதமான கட்சிப்‌ பிளவுகள்‌ இருக்கின்றன. ஜஸ்டிஸ்‌ கட்சியிலும்‌ சந்தர்ப்பத்துக்கேற்றதுபோல்‌ அனேக பெயர்‌ களிருக்‌ கின்றன. இன்னும்‌ எந்தக்கட்சியை எடுத்துக்கொண்டாலும்‌ வித்தியாசங்களிருக்கின்‌ றன. இவைகளினால்சான்‌, நாமே யோக்கியதை இல்லாமலிருக்கிறோம்‌. அதலால்‌ இதற்கும்‌ சரியான காரணமில்லை. மூன்றாவதாக, சுயமரியாதைக்கு விரோதம்‌ என்கிறார்கள்‌, இது விரோதம்‌-ஆனால்‌ இன்னொருவன்‌ நம்மீது உட்கார்ந்து, நம்‌ கஷ்டத்திற்கு விரோதமாக ஆட்சிசெய்கிறது விரோதமில்லையா 8 அப்படி இல்லாவிட்டாலும்‌ இதை ஒப்புக்கொள்ளலாம்‌. விடிந்தெமுந்‌ திருந்தால்‌ வெள்ளைக்காரன்‌ முகதீதில்‌ விழிக்கிறவர்கல்‌ நீங்களே) அதிகாரிகளும்‌ நீங்களே) அந்த ஆட்சிக்காக இருக்கிற சட்டச பைகளிலும்‌ நீங்களே) அதை நடதீதவதற்கு ஒப்புக்‌ கொண்டு, நடதீதுவதற்குப்‌ பாடுபடுபவர்களும்‌ நீங்களே. இப்படியிருக்க) அந்த அரசாங்‌ கத்துக்கு நம்முடைய இஷ்டங்களைச்‌ சொல்லுவது சுயமரியாதை கல்லையென்று சொன்‌: ல்‌ ஒன்றுக்கொன்று உண்மை இருக்கிறதா, பாருங்கள்‌. இப்படி இங்கு சொல்லிவிட்டு, கோர்ட்டில்‌ சலாமிட்டு ¢ துரையே? என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைப்‌ போட்டுக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 197 கொண்டிருக்கிறார்‌ கள்‌. கவுன்சில்களிலும்‌, இந்திய சட்டசபைகளிலும்‌ மாகாண சட்ட சபைகளிலும்‌ உட்கார்நீ g, அரசாங்கத்தை நடத்துவதற்கு உதவியாக இருந்து வர அவர்கள்‌ முன்னே வாக்குக்கொடுதீது, ¢ நாங்கள்‌ இப்பொழுது போகிறோம்‌] நீங்கள்‌ பிற்பாடு வாருங்கள்‌ ! என்று சொல்லுவதுதான்‌ சுயமரியாதையோ ₹ ¢ கவர்ன்மெண்டார்‌ நம்‌ மதம்‌ சம்பந்ததீதில்‌ பிரவேசிக்‌ கக்கூடா'தென்று சொல்லு8றார்கள்‌. விபச்சாரமும்‌, பொட்டுக்‌ கட்டுவதும்‌ கூடாதென்று சொன்னால்‌- நம்மால்‌ ஒருவருக்கொருவர்‌: சண்டையிடுவதற்குப்‌ பிர வேசிக்கவில்லை;) அப்பேர்ப்பட்ட கொள்கைகளை மாற்றவேண்டுமென்றே அரசாங்கத்‌ தார்‌ முயற்சி செய்ய வேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது, பகிஷ்காரம்‌ செய்ய வேண்டுமென்று இன்றைய தினம்‌ சொல்லுகிறவர்‌ களும்‌, அங்கே போய்‌ தங்கள்‌ கொள்கைகளைச்‌ சமர்ப்பிக்கவில்லையா 8 பெசன்ட்‌ அம்மை யார்‌ காமன்வெல்த்‌ பில்‌ என்றும்‌, நேரு கமிட்டியார்‌ இந்தியாவின்‌ பேராலும்‌, காங்கிரசின்‌ பேராலும்‌ ஒரு ரிபோர்ட்டும்‌ அளித்து, வருணாசிரம தர்மக்காரரீகளும்‌ சைமன்‌ கமிஷன்‌: முன்போய்‌ தம்‌ குறைகளைப்‌ போக்கவேண்டிய முயற்சிகளும்‌ செய்துகொண்டிருக்‌ கிறார்கள்‌. அப்படியே நாம்‌ வெளிப்படையாக ஏன்‌ நமது கஷ்டங்களைதீ தெரிவிக்கக்‌ கூடாது? நீங்கள்‌ சொல்லுகிற தீர்ப்பை ஒப்புக்கொள்ளுகி3றாம்‌. எங்கள்‌ கஷ்டங்களை நீங்கள்‌ அறியச்‌ செய்துவிட்டோம்‌. நீங்கள்‌ என்ன செய்யப்போகிறீர்கள்‌ என்று ஓர்‌ எச்சரிக்கை யிறுத்தி இந்தத்‌ தீர்மானத்தைப்‌ பி3ரரேபிக்கி3றேன்‌. நீங்களும்‌ ஆதரிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளுகி3றன்‌. [செங்கற்பட்டில்‌ சுயமரியாதை மரகாண முதல்‌ மகாநாட்டில்‌ சைமன்‌ கமிஷன்‌ ஆதரிப்புத்‌ தீர்வான உரை-- திராவிடன்‌ ! 20-2-1929) (பாராட்டுரை) வாலிபர்கள்‌ தீவிரப்‌ பிரசீசாரம்‌ செய்யவேண்டும்‌. தற்சமயம்‌ சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்‌ காலிலும்‌ சமயப்‌ பித்து கிருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்‌ வேண்டுவது அத்தியாவசியம்‌. எல்லாவற்றிற்கும்‌ நம்பிக்கை யாடு உழைக்கவேண்டுஃ, ஒழுக்கம்‌, அறிவு, ஆசை எல்‌ லாருக்கும்‌ உண்‌ டென்பது உண்மை. இவைகளினால்‌ இந்தியாவி அள்ள 33 கோடி ஜனங்களுள்‌ 16] கோடி பெண்களும்‌ அடிமையாய்‌ இருந்து, சந்தைக்குப்‌ போய்‌ மாடு வாங்குவதுபோல்‌ நடத்தப்படுவது ஒழியவேண்டும்‌, சிலருக்கு கிக்‌ காரியங்கள்‌ செய்ய சாதீதியப்படாவிட்டால்‌ சும்மாவாவது இருக்கவேண்டும்‌. அவர்கள்‌ முதலில்‌ தங்கள்‌ வாழ்க்கையை ஊன்றிப்‌ பார்தீதுப்‌ பிறகு உலகத்தைப்‌ பார்க்கவேண்டும்‌. சுயமரியாதை இயக்கம்‌ வாலிபர்கள்‌ கையிலிருக்கிறது. பெண்களும்‌ இந்தப்‌ பிரச்சாரதீதில்‌ ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்தீதவேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்ளுகி3றன்‌. . [செங்கற்பட்டில்‌ முதலாவது சுயமரியாதை மகாநாட்டில்‌ பாராட்டூரை--4 திராவிடன்‌ 8 21-2-1929] (பனகல்‌ படத்திறப்பு. நன்றியுரை) அகீகிராசனரவர்களே ! சகோதரிக3ள ! சகோதரர்களே ! இந்தப்‌ பெருமைதங்கிய நமது காலஞ்சென்ற தலைவர்‌ திரு. பனகல்‌ அரசருடைய உருவப்‌ படத்‌ திறப்புவிழாக்‌ கொண்டாட்டத்திற்கு நன்றி செலுததும்படியாக எனக்குக்‌ கட்டளையிட்ட, நான்‌ மிகவும்‌ பெருமை பாராட்டிக்கொள்ளுகி3றன்‌. வந்தக்‌ கொண்டாட்டமானது செங்கற்பட்டு ஜில்லாபோர்டுக்குச்‌ சம்பந்‌ தப்பட்டது. நமது தலைவர்‌. அவர்களுடைய உருவப்படம்‌ செங்கற்பட்டு ஜில்லா 8பார்டு பிரஸிடெண்டாயிருக்கும்‌ நம்முடைய நண்பரும்‌, உண்மையான சுயமரியாதை வீரர்களில்‌ ஒருவரு மகாண திரு. எம்‌. க. ரெட்டி அவர்களுடைய தகப்பனாரால்‌ செங்கற்பட்டு போர்டுக்கு அளிக்கப்‌ 1686-63 www.thamizham.net - Free £ book 14௦ 3011 498 பெரியார்‌ #. வெ. ரா. சிந்தனைகள்‌ பட்டது. அதை இன்றைய தினம்‌ நம்முடைய பெரியார்கள்‌ திரு. இராமசாமி முதலியாரவர்‌ களுடைய அக்கிராசனத்தின்கீழ்‌ திரு. எம்‌. கே. நாயர்‌ அவர்களால்‌ திறப்புவிழா நடத்தப்‌ பட்ட து. செங்கற்பட்டு ஜில்லரபோர்டு பிரஸிடெண்டு அவர்கள்‌ இம்‌ மாதிரி முயற்சிகளில்‌ பொதுக்‌ காரியங்களுக்காகப்‌ பாடுபட்டு உழைக்கின்‌ றவர்‌ களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறாரீ கன்‌ என்பதும்‌, அப்பேர்ப்பட்ட பெரியார்களை மரியாதை செய்வதின்‌: பொருட்டும்‌, அவர்களுடைய அருமையான காரியங்களுக்கு நன்றி செலுத்துவதின்‌ பொருட்டும்‌ @f உண்மையான மனிதன்‌ செய்யவேண்டிய காரியத்தை அவர்கள்‌ இன்று செய்திருக்கிறார்கள்‌ என்று சொல்லுவதும்‌ மிகையாகாது. திரு. பனகல்‌ அரசரவர்களைப்‌ பற்றி முன்னே பேசிய இரண்டுபேர்‌ அவ்வளவும்‌ பேசி இருக்கிறார்கள்‌) அதுமாத்திரமல்ல) அவர்களைப்‌ பற்றிப்‌ பேசுவதற்கு எல்‌ லோரைக்‌ காட்டிலும்‌ அவர்களுக்கே அதிக உரிமை உண்டு; அதிக சங்கதியும்‌। தெரியும்‌, அக்கிராசனர்‌: திரு. இராமசாமி முதலியார்‌ அவர்கள்‌ திரு. பனகல்‌ அரசரவர்களுக்கு வலக்‌ கை போல்‌ இருந்தவர்‌. திரு. பனகல்‌ அரசரவரீகளுக்கு வந்த பெருமையெல்லாம்‌ அவரைச்‌ சார்‌ ந்தாலும்‌, ஏதாவது சில தப்பாவது; தப்புகனரவது சொல்லகீகூடியவரிருந்தால்‌ அவ்வளவையும்‌ வாங்கித்‌ தம்‌ தலையியில்‌ போட்டுக்கொள்ளக்கூடிய பெரியவர்‌ நம்‌ மடைய இராமசாமி முதலியார்‌. அவர்களை அறியாமல்‌ ஒரு காரியமும்‌ நடந்திருக்காது என்றே சொல்லலாம்‌. சாதாரணமாக விந்துக்‌ கோயில்‌ விக்கிரகங்களுக்குச்‌ சொல்லுவதுபோல்‌ திரு. பனகல்‌ அரசரவர்களை * மூல விக்கிரகம்‌? என்று சொன்னால்‌, திரு. இராமசாமி முதலியாரை * உற்சவ விக்கிரகம்‌? என்று சொல்லலாம்‌. இவ்வளவு தூரம்‌ அவர்கள்‌ இரண்டறக்‌ கலந்து ஒன்றாக நமது நாட்டினுடைய நன்மையைக்‌ குறித்து, நம்முடைய மக்கள்‌ சுயமரியாதையைக்‌ குறிதீது மனமாரப்‌ பாடுபட்டவர்கள்‌. அப்பேர்ப்பட்ட ஒருவர்‌ அப்பெரியாருடைய படத்திறப்பு விழாவிற்குத்‌ தலைமை வகிப்பது மிகவும்‌ பொருத்த மானது. அதிலும்‌ அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ எத்துணையோ அவசரக்‌ காரியங்கவி னிடையே இக்‌ காரியத்தைச்‌ செங்கற்பட்டு போர்டாரவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டவுடனே-- யாதொருவிதமான ஆட்சேபணையும்‌ சொல்லாமல்‌ உடனே இன்றைய தினம்‌ விஜயம்‌ செய்குடி இந்தக்‌ காரியத்தை நடத்தித்‌ தலைமை வகித்ததற்‌ ஐ, செங்கற்பட்டு போர்ஷன்‌ சார்பாகவும்‌, காலஞ்சென்ற தலைவர்‌ அபிமானத்தால்‌ நன்றி செலுத்திய மக்கன்‌ சார்பாகவும்‌ என்னுடைய மன மார்‌ நீத நன்றியறிதலைச்‌ செலுத்துகி3றன்‌. நமது பெரியார்‌ கிருஷ்ணன்‌ நாயர்‌ அவர்களைப்பற்றி, அதிகம்‌ சொல்ல வேண்டியதே இல்லை. இன்றைய தினம்‌, அவர்‌ ஒருசமயம்‌ தற்கால அதிகாரியாக இருக்கிறாரே என்ற கரரணதீதால்‌, கொஞ்சம்‌ குறைத்துச்‌ சொல்ல3வண்டி இருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஏன்‌ 1 அதிகாரத்திற்காக அதிகமாகப்‌ புகழ்நீதுவிட்டார்‌ என்று நினைப்பார்களே என்றுதான்‌. நம்முடைய நாட்டிலே குறிப்பாக நம்‌ தமிழ்‌ நாட்டிலே, பார்ப்பனரல்லாதாருக்காக ஏற்பட்டிருக்கிற ஒரு கட்சியிலே ஆதிமுதற்கொண்டு கொஞ்சமும்‌ கட்சியினிடத்தில்‌ பிணக்குக்கொள்ளாமலும்‌, தமது காரியங்களுக்காக வேண்டி தமது கட்சிக்‌ கருதீதுக்களைதீ திருத்திக்‌ கூறாமலும்‌ ஒரே பிடிவாதமாக இருந்துவரும்‌ சில நண்பர்களில்‌ மிகமிக முதன்மையானவர்‌. அப்‌3பர்ப்பட்ட அருமையான பெரியாரோடு சேர்ந்தாற்போல்‌ விரலை நீட்டுவதற்‌ கு, மனம்‌ நீண்டாலும்‌ அது மாட்டேன்‌ என்கிறது. அவர்‌ கட்சியின்‌ தலைவர்‌ கனிலே மிகவும்‌ சிறப்பானவர்‌. மிகவும்‌ நுட்பமாய்த்‌ தாம்கொண்ட அபிப்‌ பிராயத்தை எந்தச்‌ சமயத்திலும்‌ தைரியமாய்‌ வலியுறுதீதும்‌ ஒரு பெரியார்‌. வேறு தாட்சண்யத்திற்காகவோ, அல்லது ஏதாவது போதிய காரியங்களுக்காகவோ, அவர்‌ களுடைய மனப்பூர்‌ தீதியான அபிப்பிராயத்தை எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ மாற்ற சிறிதும்‌ சம்மதியார்‌. அதோடு மாத்திரமல்ல, காலஞ்சென்ற பெரியார்‌ பனகல்‌ அரசருக்கு மந்த்ரியாய்‌ இருந்தார்‌ என்றும்‌ சொல்லவேண்டும்‌. அ னக சமயங்கவில்‌ இவர்க. நடத்தினார்களென்றும்‌ சொல்லலாம்‌. அந்த முறையில்‌ அவர்கள்‌. திரு. பனகல்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 இயக்கங்கள்‌ 499 அரசருடைய குணாதிசயங்களைப்பற்றிப்‌ பேசவும்‌, அவருடைய படதீதைதி திறந்து வைக்கவும்‌ எல்லோரையும்விட மிகவும்‌ உரிமை உடையவரென்றும்‌ சொல்லுவது மிகை யாகாது: அப்‌ ?பர்ப்பட்ட ஒரு பெரியார்‌ செங்கற்பட்டு ஜிஃலாபோர்டு மெம்பர்க ளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி யாதொரு விதமான ஆட்சேபணை சொல்லாமல்‌ உடனே ஒப்புக்கொண்டு இந்தக்‌ காரியத்தைச்‌ செய்து கொடுத்ததற்காகப்‌ பலவிததீதிலும்‌ நன்றி செலுத்தக்‌ கடமைப்பட்டிருக்கி றாம்‌. வேற பல காரணங்களால்‌ இந்தக்‌ காரியத்தைப்‌ பற்றிப்‌ பலர்‌ பலவிதமாகதி திரித்துக்‌ கூறியிருந்த போதிலும்‌, ¢ இவர்‌ அரசாங்கதீதைச்‌ சார்ந்த அதிகாரி, இந்த மாதிரியான பொதுக்‌ காரியங்களில்‌, கட்சி சம்பந்‌ தமாண காரியங்‌ கவில்‌ தலைமை வகிக்கலாமா?! என்றும்‌, வேறுவிதமான பிரசீசாரங்கள்‌ நடந்திருந்தும்‌ அவர்‌ லட்சியம்‌ செய்யாமல்‌ மனசாட்சியையே பிரதானமாகக்‌ கருதி, ஜில்லா பார்டு அழைப்‌ பிற்கணங்கி, அவர்களுடைய ஆசையை நிறை?வற்ற வேண்டுமென்ற ஆசையின்‌ பேரில்‌ தைரியமாகவந்து இந்தக்‌ காரியத்தை நிறைவேற்றி வைத்திரு க்கறொர்கள்‌. ஆகையால்‌, அவர்களுக்கும்‌ நம்முடைய மனப்பூர்‌ தீதியான நன்றியறிதலைச்‌ செலுத்துகிறோம்‌. அடுத்தாற்போல்‌, செங்கற்பட்டு போர்டார்‌ அவர்களு£கும்‌, செங்கற்பட்டு போர்டு தலைவர்‌ அவர்களுக்கும்‌ இப்பேர்ப்பட்ட அருமையான காரியத்தைச்‌ செய்ததற்கும்‌, இம்‌ மாதிரியான பெரியரர்களின்‌ தொண்டுகளை மதித்து அவர்களுக்கு நன்றி செலுத்திய தற்கும்‌, பொது ஜனங்கள்‌ சார்பாகவும்‌ நன்றி செலுத்தக்‌ கடமைப்‌ பட்டிருக்கிறோம்‌. மேலும்‌, இம்‌ மாநாடு விஷயத்தில்‌ செங்கற்பட்டு போர்டார்‌ அவர்களும்‌, இந்த ஜில்லா பிரதி நிதிகளும்‌, பெரியார்‌ தலைவர்‌ ரெட்டியார்‌ அவர்களும்‌ எவ்வளவு பிரயத்தனம்‌ எடுத்துக்‌ கொண்டு, இவ்வளவுபெரிய காரியங்களில்‌ பொறுப்பு எடுதீதுக்கொண்டு செய்துவருகிறார்கள்‌ என்பதைப்‌ பார்தீதால்‌, இந்த பனகல்‌ அரசருடைய படத்திறப்பு விழா சாதாரண மென்று தான்‌ சொல்லலாம்‌. நம்முடைய ரெட்டியாரவர்கள்‌ ஜில்லாபோர்டு பிரஸிடெண்ட்‌ உலகதி திற்கும்‌, ஸ்தல ஸ்தாபன உலகத்திற்கும்‌ ஒரு வழிகாட்டி எனச்‌ சொல்லுவது மிகையாகாது. எந்தக்‌ காரியத்தை அவர்‌ நினைத்த போதிலும்‌ தைரியமாக நடதீது றவர்‌. இந்த மகாநாடு ஆரம்பித்த காலத்திலே திரு. பனசுல்‌ அரசர்‌ அவர்கன்‌ உயிருடன்‌ இருந்தவர்தான்‌, அவரைக்கேட்டுக்கொண்டு இந்த விஷயங்களை எல்லாம்‌ தெரியப்படுத்தி இம்மாதிரி ஒரு மகாநாடு நடக்கப்போகிறதென்றும்‌, இதைப்பற்றிய நடவடிக்கைகள்‌ இன்னின்னதென்றும்‌ இரண்டு மூன்று தடவைகள்‌ விளம்பரங்களில்‌ அவர்‌ காதார, கண்ணாரக்‌ கேட்டும்‌ பார்தீதம்‌ ஆனந்தம்‌ கொண்டிருந்தவ1, இப்பொழுது இதை வந்து பார்தீது இதை நடத்துவதற்கு நமக்கு வேண்டிய சக்தியையும்‌, மார்க்கங்களையும்‌ சொல்லிக்‌ கொடுத்து நடத்திவைக்கும்‌ திறமையை நாம்‌ அடையமூடியாமல்‌ போய்விட்டோம்‌. இப்போது அவருடைய உருவம்‌ நம்‌ முன்னா 3o இருந்துகொண்டு பின்னால்‌ ஒவ்வொரு காரியத்‌ தையும்‌ அவரே நடதீதுகிறா9ரன்று மனதிற்கொண்டு, நம்முடைய காரியத்தைச்‌ செய்யத்‌ துணிச்ச லோடு தயாராக இருக்கி றாம்‌ என்று நினைக்கிறேன்‌. மற்றும்‌, இந்தக்‌ கொண்டாட்டத்திற்கு இங்கு விஜயஞ்‌ செய்திருக்கிற அ3னக பெரியார்‌ களுக்கும்‌ நன்றிசெலுத்தக்‌ கடமைப்பட்டிருக்‌9றோம்‌. நமது அரசாங்க மந்திரி மார்கள்‌ தி.ந. டாக்டர்‌ சுப்பராயன்‌ அவர்களும்‌, கனம்‌ சே.துரதீதினம்‌ அய்யர்‌ அவர்களும்‌, கனம்‌ முத்தையா முதலியார்‌ அவர்களும்‌ இன்றையதினம்‌ விஜயஞ்‌ செய்திரூப்பதற்கு நாம்‌ மனப்பூர்தீ தியாக நன்றி செலுத்‌ கவேண்டும்‌. சென்னை மாகாண மந்திரிமார்கள்‌ மாத்திரம்‌ அல்ல, மதீதிய மாகாண மந்திரிமார்‌ களில்‌ ஒருவராகிய ராகவேந்திர ராவ்‌ நாயுடு அவர்கள்‌. இங்கு வருவதற்‌்கென்றே வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிங்கு ஆஜராயிருக்கிறார்‌ என்பதற்கும்‌ நாம்‌ நன்றிசெலுத்தக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌. இன்னும்‌, மைசூரிலிருந்து சட்டசபை மெம்பராகிய நீல 8 சஞ்சீவி அய்யா அவர்களும்‌ இன்னும்‌ இரண்டு மாகாணங்‌ களிலிரு நீது அனேக கனவான்களும்‌, பெரியார்களும்‌, எங்கள்‌ ஜில்லா பிரமுகராயிருக்கிற பட்டக்காரர்‌ அவர்களும்‌, இன்றையதினம்‌ இந்த மாநாட்டுக்கு வந்திநரப்பதற்காக நம்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011 500 பெரியரர்‌ ஐ. வெ. ரா. சிந்தனைகள்‌ செங்கற்பட்டு போர்டார்‌ சார்பாகவும்‌, இந்தக்‌ கூட்டத்திலுள்ள மகாஜனங்கள்‌ சார்பாகவும்‌, என்னுடைய சார்பாகவும்‌ ; ஒரு சந்தில்‌ வேண்டுமென்று ஒளிந்‌துகொண்டிருக்கிற கைவல்ய சாமியார்‌ அவர்களுக்கும்‌, இங்கு திரள்‌ திரளாக விஜயஞ்‌ செய்திருக்கிற நம்முடைய தாய்மார்‌ களுக்கும்‌ நம்‌ மனப்பூர்‌ தீதியான நன்றியைச்‌ செலுத்துகிறோம்‌. எனவே, என்னுடைய சொந்த முறையிலே செங்கற்பட்டு போர்டு தலைவருக்கும்‌ இந்தச்‌ சிறிய தொண்டை எனக்குக்‌ கொடுத்தற்காக வேண்டியும்‌, கவுரவப்படுத்த வேண்டுமென்ற ஆசையில இதை அளித்த தற்காக வேண்டியும்‌ நானும்‌ என்‌ சரர்பகவே என்னுடைய நன்றியை அவிகீ கிறேன்‌. [செங்கற்பட்டில்‌, 17-2-1929-ல்‌ நன்றியுரை-- திராவிடன்‌ 9 18-2-1929) 14. வேலைத்‌ திட்டக்‌ கூட்டம்‌ இந்த மாதம்‌ 28, 29 தேதி புதன்‌, வியாழக்கிழமைகளில்‌ ஈரோட்டில்‌, சுயமரியதை இயக்கத்தின்‌ 1933 வருஷத்திய வேலைதீ திட்ட தீதைப்பற்றி யோசிக்க ஒரு கூட்டம்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அதற்காக சுயமரியாதை இயக்கத்துப்‌ பிரமுகர்களும்‌, தீவிர பிரச்சாரகர்களும்‌ அபிமானிகளும்‌ ஆதரவளிப்பவர்களுமான தோழர்‌ பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேரசமலோ, அல்லது அனுப்பத்‌ தவறிப்போயோ இருந்தாலும்‌ இருக்கலாம்‌. அவற்றை யெல்லாம்‌ இலட்சியம்‌ செய்யாமல்‌ இயக்க அபிமானிகள்‌ உட்பட யாவரும்‌ விஜயம்செய்து ஒரு வேலைத்‌ திட்டம்‌ நிரீணயிக்க உதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கின்றோம்‌. இதுவரை சுயமரியாதை இயக்கம்‌ பெரிதும்‌ பிரச்சார நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும்‌, அது தோன்றியது முதல்‌ நாளுக்கு நாள்‌ முற்போக்கான கொள்கைகளையே படிப்படியாய்க்‌ கைக்கொண்டு பிரசீசாரம்‌ செய்துவந்திருப்பதன்‌ மூலம்‌ பெரிகம்‌ தமிழ்நாட்டு மக்களின்‌ உள்ள தீதில்‌ ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி இருப்பதுடன்‌, குஐகிய நோக்கமும்‌ சுயநலப்‌ பிரதானமும்‌ கொண்டவர்கள்‌ உள்ளத்தில்‌ பெரும்‌ அச்சத்தையும்‌ ஆத்திரத்தையும்‌ உண்டாக்கி வந்திருக்கிறது. தீவிர மூற்போக்குகள்‌ ஏற்படுகின்ற எந்தத்‌ தேசத்திலும்‌, எந்தக்‌ காலத்திலும்‌ சயநலமக்களுக்கு இவ்வித அச்சமும்‌ ஆதீகிரமும்‌ தோன்றி, சிறிது காலம்‌ புத்தி தடுமாறி தாறுமாறாய்தீ திரிந்துவிட்டுக்‌ கடைசியாய்‌ உன்‌ நுழைந்துகொள்வது இயல்பேயாகும்‌, ஆனால்‌, உண்மையான கவலையோடு மக்களின்‌ முற்‌ போக்கிற்கு உழைக்கின்‌ றவர்கள்‌ இவற்றை இலட்சியம்‌ செய்யாமல்‌ பு.துப்பு.துக்‌ கொள்கைகளுடன்‌ மேலை மேலே போய்க்‌ கொண்டிருப்பார்களேயானால்‌ பழைய கொள்கைகள்‌ என்பவை எதிரிகளால்‌ சகிக்கக்கூடிய தாகவும்‌, சாதாரணமானதாகவும்‌ கருதக்கூடியதாகி, புதுக்கொள்கைகளோடு மாத்திரம்‌ போரிடுபவர்களாக ஆகிவிடுவார்கள்‌. அப்படிக்கில்லாவிட்டால்‌, குறிப்பிட்ட கொள்கையைப்‌ பற்றியே விவகாரம்‌ நடத்திக்கொண்டிருக்க நேரிட்டு, முயற்சிகளுக்கு முன்னேற்றமென்ப திலலாமல்‌ தேகீகமுண்டாய்‌ விடும்‌. ஒரு விஷயத்தைப்பற்றிச்‌ சரியோ; தப்‌3பா என்பதைக்‌ கவனிக்காமல்‌, எதைச்‌ சொன்னாலும்‌ ஏட்டிக்குப்‌ போட்டியாய்‌ வம்பளந்து வயிறு வளர்ப்‌ பதையே வாழ்க்கையாய்க்‌ கொண்ட மக்கள்‌ உலகம்‌ எங்கும்‌ இருந்துதான்‌ வருகின்றார்கள்‌. இவர்களுடைய உதவி யாருக்கும்‌, எவ்வளவு குறைந்த விலைக்கும்‌ கிடைக்கக்‌ கூடும்‌. ஆதலால்‌, முற்போகீகால்‌--புதுக்‌ கொள்கைகளால்‌ சுயநலப்‌ பங்கமடையக்‌ கூடிய மக்கன்‌ இக்கூட்டத்தாரின்‌ உதவியால்‌ ஒரு சாதாரண விஷயத்திற்கெல்லாம்‌ ஆகாயம்‌ இடிந்துவிழப்‌ போவதைதி தடுக்கவேண்‌ டியவர்கள்‌ போல்‌, மாய்மாலக்‌ கூப்பாடு போட்டு அங்கும்‌ இங்கும்‌ திரிந்து பாமர மக்களை ஏமாற்றி ஆதரவுதேட அலைவார்கள்‌. நிற்க, மக்கன்‌ நலதீதில்‌ கவலைகொண்டு, பொதுக்காரியத்தில்‌ மூனை நீதிருப்பவர்கள்‌. சிறிதாவது ஏதாவதொரு காரியத்தைச்‌ செய்து சாதிக்க3வண்டும்‌ என்று கருதுவார்களே (டுக்‌ www.thamizham.net - Free £ book 14௦ 3011